
நம் வாழ்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நல்லதாக்கித் தருவதே… குருநாதர் காட்டிய அருள் வழி
நம்முடைய குழந்தையை வளர்க்கின்றோம். செல்லமாக வளர்த்துக் கொண்டும் நேரத்தில் “அவன் குறும்புத்தனம் செய்கின்றான் பார்…” என்று சொல்வோம்.
அவனை நல்லவனாக்குகின்றோம்.
1.ஆனால் அவனுடைய குறைகளை நாம் சொல்லிக் கொண்டே வருகின்றோம்.
2.அதைப் பரிபக்குவமாக எடுத்துச் சொல்லும் நிலை வர வேண்டும்.
குடும்பம் வீடு என்று இருக்கும் பொழுது சில நேரங்களில் குறைகள் வருகின்றது. அதைப் பரிபக்குவமான நிலைகளில் நிவர்த்தி செய்யப் பழகிக் கொள்ள வேண்டும்.
பக்குவம் தவறி விட்டால் சொல்கள் மாறிவிடும். வாருங்கள் என்று கனிவுடன் வரவேற்பதற்குப் பதில் “வாங்கள்…..” என்ற சொல் அழுத்தமாக வரும். அது குற்றமாகிவிடும்.
ஆகவே பக்குவத்தின் நிலைகள் என்பது
1.ஒன்றை நல்லதாக்குவதும் கெட்டதாக்குவதும்
2.உணர்வுகளை மாற்றுவதும் குணங்களை மாற்றுவதும்
3.எதிரிகளாக்குவதும் நண்பனாக்குவதும்
4.இது எல்லாம் நம்முடைய உணர்வுகள் வெளி வரும் அதனின் பக்குவத்தைப் பொறுத்துதான் இருக்கின்றது.
ஆக நாம் தொழில் செய்தாலும் சரி மற்ற எதிலும் சரி… பக்குவ நிலை அவசியம் தேவை. சில கஷ்டங்கள் வந்து விட்டாலும் ஓரளவுக்கு நாம் பக்குவமான நிலைகள் கொண்டு சிந்தித்தோம் என்றால் அதிலிருந்து விடுபட்டு அதை நிவர்த்திக்கும் தன்மை வருகிறது… பகைமைகளைக் குறைக்கலாம்.
இதைப் போல வாழ்க்கையில் பரிபக்குவ நிலைகளை நாம் கொண்டு வருதல் வேண்டும். மற்றவருடைய குறையான உணர்வுகள் நமக்குள் வராதபடி தடுக்கத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து அதை வைத்துத் தடுத்து நிறுத்தினால் அதன் வேகத்தையும் துடிப்பையும் நிறுத்தி உணர்வின் அறிவாக நமக்குள் சிந்தித்துச் செயல்படும் சக்தி வரும்.
1.யாரும் கெட்டவர்கள் அல்ல…
2.சந்தர்ப்பத்தில் தான் இத்தனை நிலைகளும் வருகின்றது. அந்தச் சந்தர்ப்பம் கெட்டவராக மாற்றுகின்றது.
3.அதிலிருந்து மீட்டிடும் வழியே நமது குருநாதர் காட்டிய அருள் வழி.
ஆனால் அதே சமயத்தில் அதற்காக வேண்டி ஒரு முரடனிடமோ குடிகாரனிடமோ பக்குவமாகப் பேசினால் அவன் கேட்பானா…? நாம் அந்த இடத்தில் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்… அது தான் முக்கியம்.
நம்முடைய பக்குவத்தை அங்கே அவனிடம் எடுத்துச் சொன்னால் அவன் கேட்க மாட்டான். அவன் தவறு செய்ய விரும்புகின்றான்… நாம் அதற்குப் பக்குவம் சொன்னால் அவன் கேட்க மாட்டான்.
1.திருடனிடம் சென்று “ஏண்டா இந்த மாதிரிச் செய்கிறாய்…?” என்று பக்குவம் சொன்னால் கேட்பானா…? கேட்க மாட்டான்.
2.அந்த இடத்தில் அவனுடைய உணர்வுகள் நமக்குள் வராதபடி நம்மை நாம் பக்குவப்படுத்த வேண்டும்.
நல்ல பொருள்களை வைத்திருக்கிறோம் என்றால் அதிலே தூசி அதிலே படாதவாறு நாம் பாதுகாக்க வேண்டும். அதைப் பத்திரமாக மூடி வைக்க வேண்டும்.
தீமை நமக்குள் புகாதபடி தடுக்க வேண்டும். ஆனால் அதற்காக வேண்டிப்
1.போக்கிரியையும் திருடனையும் பார்த்த பின் நாம் பக்குவமாக நடந்து கொண்டிருந்தால் எல்லாம் தலைக்கு மேல் சென்று விடும்.
2.நம்முடைய பக்குவமெல்லாம் தலைகீழாகக் கவிழ்ந்து விடும்.
அவன் செய்யும் தவறு நமக்குள் வந்து விடாது… அதனால் நாம் தவறு செய்யாது பக்குவமாக அதைத் தடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவன் தவறு செய்கிறான் என்றால் “இவன் இப்படித் தவறு செய்கின்றானே…” என்று அந்தத் தவறான உணர்வு நமக்குள் வந்தால் அதைத் தான் நம்மையும் செய்யும்படி வைத்துவிடும்.
இதைப் போல
1.நமது வாழ்க்கையில் நடந்து கொள்ள பரிபக்குவ நிலைகள் தேவை.
2.எந்தெந்த இடத்திற்கு எவ்வாறு தேவையோ… அப்போதெல்லாம் நம்மை நாம் பக்குவப்படுத்திப் பழக வேண்டும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.