கையை வைத்து உடல் வலிகளை நமக்கு நாமே போக்கிக் கொள்ளக்கூடிய பயிற்சி

கையை வைத்து உடல் வலிகளை நமக்கு நாமே போக்கிக் கொள்ளக்கூடிய பயிற்சி

 

உதாரணமாக காலில் மூட்டில் வலி இருக்கிறது… நடக்க முடியவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்…?

1.ஈஸ்வரா…! என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
2.கொஞ்ச நேரம் கையை அந்த மூட்டில் வைத்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.காலில் இருக்கக்கூடிய மூட்டு வலி நீங்க வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும்
4.அந்த வலி நீங்க வேண்டும்… நல்லதாக வேண்டும் என்று நினைத்துப் பாருங்கள்.

அந்த வலி குறைய ஆரம்பிக்கும்.

இதே போன்றுதான் இருதயத்திலோ மற்ற இடங்களிலோ வலி இருந்தால் இதே மாதிரி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அந்த உணர்வை எடுத்து “அங்கே கையை வைத்து… இந்த உணர்வுகளைப் பாய்ச்சுங்கள்…”

அங்கே சளி இருந்தாலும் இரண்டு கையையும் நெஞ்சிலே வைத்து அந்தச் சளி நீங்க வேண்டும் என்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று பாய்ச்சிப் பழகுங்கள்.

1.சொல்லிக் கொடுக்கின்றோம்… ஆனால் இதை நீங்கள் செய்ய வேண்டும்
2.ஒரு நாளைக்கு வைத்துவிட்டு அப்படியே விட்டு விடக்கூடாது தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும்.
3.(ஏனென்றால் முதலில் ஆர்வமாக கேட்பார்கள் பின்னாடி அதைச் செயல்படுத்துவதில்லை)

எங்கே வலி இருக்கின்றதோ அந்த இடத்திலே மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று நினைத்துக் கையை வைத்து அந்த வலி குறைய வேண்டும் என்று உணர்வுகளை
1.இதன் வழி பாய்ச்சி அந்த எண்ணத்தைக் கொண்டு வாருங்கள்
2.வலி குறைவதைக் காணலாம்…!

உதாரணமாக சங்கடமாக இருந்து ஒரு காயையோ அல்லது குழம்பையோ சமையல் செய்து பாருங்கள்… அது ருசி கெட்டுப் போகும். சந்தோஷமாக இருக்கும் பொழுது செய்து பாருங்கள்… நன்றாக இருக்கும்.

காரணம்,,, அன்றன்று உள்ள குணத்திற்குத் தக்க மாதிரித் தான் இதனுடைய செயல்கள் நடக்கும். நீங்கள் சலிப்போடு அரிசியை வேக வைத்துப் பாருங்கள்… சாதம் தண்ணீர் பட்டுப் போகும். இதெல்லாம் நீங்கள் பார்க்கலாம்.

சங்கடமாக இருந்து சமையல் செய்தால் அந்தக் காய்கறிகளை சல…சல… என்று ஆகிவிடும்… குழம்பின் ருசியே மாறிவிடும்.

யாம் (ஞானகுரு) சொல்லும் வழிகளில் நீங்கள் செயல்பட்டால் உங்கள் உடல் நலமாக உதவும். இந்த உடல் நமக்குச் சதமானது அல்ல…! அவ்வப்போது மனது அமைதி பெறுவதற்கு… மகரிஷிகளின் அருள் சக்தியால் உடல் வலி நீங்க வேண்டும் என்று இந்த எண்ணங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஐயோ… எனக்கு அங்கே வலிக்கிறது இங்கே வலிக்கிறது என்று அதைச் சொல்ல வேண்டியதில்லை.
1.எழுந்திருக்க முடியவில்லை நடக்க முடியவில்லை என்று சொல்லாதபடி
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… வலி நீங்க வேண்டும்
3.நான் எழுந்து நடக்க வேண்டும்… நடக்கக்கூடிய சக்தி பெற வேண்டும் என்று
4.வலி வரும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தியைச் சுவாசித்து நன்றாக வேண்டும் என்று எண்ணி
5.இதைக் கூட்டிக் கொண்டு வாருங்கள்… அந்த வலிகள் நீங்குகிறதா இல்லையா என்று நீங்கள் பாருங்கள்.

சாமி…! நீங்கள் சொன்ன தியானத்தைத் தான் நாங்கள் செய்கிறோம் என்று இப்படித்தான் எண்ணுகின்றார்களே தவிர “தியானம் என்றால் என்ன…?” என்று முதலில் அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா…!

நீங்கள் சொன்னீர்கள்… ஆனால் நடக்கவில்லை நடக்கவில்லை என்று அந்த இராகத்தைப் பாடக்கூடாது.
1.உடலின் இச்சைக்கு நாம் செல்லக்கூடாது.
2.அருளைப் பெருக்கும் பொழுது இந்த இருள் நிச்சயம் நீங்கும்.

இன்று சுயமாகச் சிந்திக்கும் ஞான நிலையே அற்றுப் போய் விட்டது

இன்று சுயமாகச் சிந்திக்கும் ஞான நிலையே அற்றுப் போய் விட்டது

 

நம்மைச் சுற்றியுள்ள பல ஒலிகளிலும்… நம்முடன் எதிர் கொண்டு கலந்துறவாடிப் பேசுபவர்களின் ஒலி அலையிலும்… நம் எண்ண ஈர்ப்பைச் செலுத்தும் நிலையில்… அதற்குகந்த சுவாச… அணு… வளர்ப்பு… உணர்வு சக்திகளைத்தான்… இவ்வாத்ம உயிர் சேமிக்கின்றது. நம் வளர்ச்சித் தன்மையின் குணப்பிடியே இதில் தான் உள்ளது.

அது மட்டுமல்லாமல்
1.நாம் வாழக்கூடிய இல்லங்களிலும் நாம் அதிகமாக இருக்கக்கூடிய இடங்களிலும்
2.ஜீவனுடன் கூடிய உணர்வின் எண்ண ஒலி நாதம் வெளிப்படுத்தும் அலைத் தன்மையின் ஈர்ப்புத் தன்மை
3.எவ் ஒலி கொண்ட எண்ணத்தின் செயலாக குண நிலை சுவாசம் பதியப்பட்டதோ
4.அந்தந்த குணங்களின் அலைகளை இல்லங்களின் சுவர்களும் தரையும் ஈர்த்து
5.அவ்வொலி அலையின் எதிர் அலை சுழற்சி அவ் இல்லத்தில் சுழன்று கொண்டே தான் இருக்கும்.

அதை எல்லாம் சீர்படுத்தத்தான் பழங்கால மனையியல் சாஸ்திரங்களில் தெரிந்தோ தெரியாமலோ சில “நிலைக்கற்களை…” இல்லங்களில் பதிய வைப்பதிலிருந்து.. சுவருக்குப் பூசும் “கலவை…” முதல் கொண்டு சில விதிமுறை வழி நிலை ஏற்படுத்தினர்.

பூமியின் தன்மை எப்படி அதன் குண ஈர்ப்புக்குகந்த அமில வெக்கையை வெளிப்படுத்துகின்றதோ அதைப் போன்றே
1.எண்ணத்தில் வெளிப்படுத்தும் உணர்வு குண நாத அலைகள்
2.இல்லங்களில் வாழ்பவர்களின் குண அலையின் எதிர் ஒலி ஒளி
3.அங்கே பரப்பிக் கொண்டே தான் இருக்கும்.

தன் வளர்ப்பின் ஞானச் செயலை வளர்க்க இந்த மனித ஆத்மாவானது தான் வளர்ந்து வெளிப்படுத்திய அலைத் தொடர்பிலிருந்தும் தன்னுடன் வாழும் சுற்றத்தின் உணர்வுத் தன்மையின் ஈர்ப்புப் பிடி குண நிலையிலிருந்தும் மீட்டுக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் சமம் கொண்ட ஈர்ப்பலை எண்ண உணர்வுடன்
1.உயர் ஞானிகளிடம் தொடர்பு கொண்ட நிலையில்
2.தன் ஜெப ஞானம் அவசியம் இருக்க வேண்டும்.

இதை எதற்காகப் பகர்கின்றேன் என்று அறிந்து கொள்ளுங்களப்பா…!

இன்றைய விஞ்ஞான செயற்கை யுகத்தாரால் இக்காற்று மண்டல முழுமைக்குமே இக்காந்த மின் அலையைப் பிரித்தெடுத்து ஒலி அலையாகச் செயற்கை முறையில் பல செயலுக்காக எடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள்.

1.ஒளிக் காட்சி… வானொலி… மற்றும் பல ஒலி அலைகளின் அரசியல் ஒலித் தன்மை தொடர்பு நிலைக்கும்…
2.அரசாங்க வழி நிலைக்கு உகந்த சில அலைத் தொடர்பு சாதன நிலையினாலும்…
3.இக்காற்று மண்டலத்தில் பல விதமான அலைகளைப் படரவிட்டுள்ளார்கள்.
4.இன்று… இது இல்லாத இடமே இல்லை…! என்று கூடச் சொல்லலாம்.

ஆகையினால் ஜீவ சக்தி கொண்ட மனித உணர்வின் எண்ணமே இவ்வலைத் தொடர்பைக் கேட்பதினால் சுயமாகச் சிந்திக்கும் ஞான நிலையற்று விட்டது.

1.இத்தகைய செயற்கை அலையையே இன்று அனைவரும் சுவாசிப்பதால்
2.தன் உணர்வின் ஞான எண்ண ஈர்ப்பே… தன் ஞானத்தைத் தான் வளர்க்கும் செயலற்ற தன்மையினால்
3.மின் அலைத் தொடர்பு கொண்ட செயற்கை நாத மோதலினால்
4.ஜீவத் துடிப்பு நாதமே தன் நிலை மழுங்கிய உணர்வு செயலாகச் செயற்கையுடன் சிக்குண்ட மனித ஞானம் தான் பேசுகின்றது இன்று…!

தன் வளர்ப்பின் உண்மை ஆத்ம ஞானத்தை உணர்ந்து இப்பிடி உணர்வின் இறுக்கத்திலிருந்து தன் வளர்ப்பை வளர்க்கும் உண்மை நிலை உணர்ந்து உயர் ஞானிகளுடன் தொடர்பு கொள்ளுங்கள்…!

நம்முடைய எல்லை மீண்டும் பிறவிக்கு வருவதற்கு அல்ல…!

நம்முடைய எல்லை மீண்டும் பிறவிக்கு வருவதற்கு அல்ல…!

 

இன்று நாம் இருக்கக்கூடிய இந்தச் சூரிய குடும்பம் எப்பொழுது செயல் இழக்கும்…! என்று சொல்ல முடியாது.
1.மனிதர்கள் வயதாகி உடலை விட்டுப் பிரிவது போன்றுதான்
2.இந்தச் சூரிய குடும்பமும் முதுமை அடையக் கூடிய காலம் வந்து விட்டது… அதனுடைய சத்து எல்லாம் போகிறது.

பிரபஞ்சம் செயல் இழந்தால் இந்தப் பூமியும் அனாதையாகத் தான் செல்லும். ஏற்கனவே 30 வருடங்களுக்கு முன் பிற சூரியக் குடும்பத்தில் இருந்து செயல் இழந்த பூமி… அது எப்படி நம் வியாழன் கோளிலே விழுந்து பஸ்பமாகியதோ அதே போன்று இந்தப் பூமியையும் திக்கெட்டுச் செல்லும்.

அது போகும் வேகத்தில் மற்றதுடன் உராய்ந்து கரைந்துவிடும்… அமிலமாக மாறும். எதிலேயாவது போய் விழுந்து மடிந்துவிடும்.

ஆனால் இதிலே இருக்கும் உயிரணுக்கள் அனைத்தும் பிரபஞ்சத்தில் மீண்டும் பரவும்.
1.உயிரினங்கள் வாழக்கூடிய கோளுக்குள் நாம் வந்தால் மனிதனாகப் பிறக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது
2.ஆனால் பூமியே கெட்டுப் போனது என்கிற பொழுது என்ன செய்ய முடியும்…?

மற்ற சூரியக் குடும்பத்திலே ஏதாவது பூமி உருவானால் அங்கே போய்ச் சேரும். அங்கே போய் மனித உடல் பெறும் வரை இந்த உயிரிலே நரக வேதனைப் பட வேண்டியது தான்.

இதை இன்றைய விஞ்ஞானம் கண்டுபிடிக்கின்றது…!

ஒரு உயிரணுவின் தன்மை அடைந்தால் அந்த அணுவிற்குள் இருக்கக்கூடிய எதிர்மறையான துடிப்பினால் அது எவ்வளவு வேதனைப்படுகிறது…? என்று அதற்கென்று சாதனங்களை வைத்துக் கம்ப்யூட்டர் மூலமாக உணர்வின் இயக்கங்களை அறிகின்றார்கள் விஞ்ஞானிகள்.

ஆனால் அன்று மெய் ஞானிகள் சொன்னது… (இறந்த பிற்பாடு) உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும் “அதனுடைய கடைசி நேரம்…” எந்த வேதனைப்பட்டதோ அதே நிலைகள் கொண்டு அது நரக வேதனைப்படுகிறது. “சாகாக்கலை…” என்று அதைத் தெளிவாகக் காட்டினார்கள்.

இப்போது மனித உடலுடன் இருக்கும் பொழுது மாற்றிக் கொள்ளலாம்.
1.ஆனால் உடலை விட்டுச் சென்றால் உயிரோடு ஒன்றி இருக்கும் போது
2.அந்த வேதனைகள் அனுபவிப்பதை இவ்வளவுதான்…! என்று சொல்ல முடியாது.

செத்துப் போனால் என்ன தெரியப் போகிறது…? செத்த பிற்பாடு ஒன்றும் தெரியாது…! என்று நினைப்போம். ஆனால் அந்த ஆன்மா மனித உடலுக்குள் சென்றால் எத்தனை வேதனைகள் படுகிறது,,,? எத்தனை வேதனைகள் கொடுக்கிறது…! என்று பார்க்கலாம்…!

பேய் பிடித்து விட்டது என்று சொல்கின்றோம். மருந்து குடித்துச் செத்தது என்றால் அந்த ஆன்மா அடுத்த உடலுக்குள் சென்றால் இதே வேலையை அங்கேயும் செய்யும்.

ஒரு சமயம் நான் (ஞானகுரு) சுற்றுப்பயணம் செய்யும் பொழுது கோயம்புத்தூரில் பீளமேடு என்ற இடத்தில் இருந்தேன். ஆவிகள் என்ன செய்கிறது…? நோய்கள் எப்படி வருகிறது…? என்று இதையெல்லாம் அறிந்து கொள்வதற்காக ஆரம்பத்திலே சுற்றி வந்ததுதான்.

அப்பொழுது அங்கே ஒருவரைக் கூட்டிக் கொண்டு வந்தார்கள். குடம் குடமாக அவர் வாயிலிருந்து தண்ணீர் வருகின்றது. குருநாதரை நினைத்து இது எப்படி..? என்கிற வகையில் தியானித்தேன்.

வந்த ஆளோ ஊமை பேசுவது போன்று தான் பேசுகின்றார். ஆனால் அவர் நன்றாகப் பேசக் கூடியவர் தான். இதைச் சரி செய்வதற்குப் பல இடங்களுக்குச் சென்று ஒன்றும் முடியவில்லை என்கிற பொழுதுதான் இங்கே வருகின்றார்கள்.

அவர்களிடம் நான் விசாரித்தேன். அவர் வசிக்கக்கூடிய இடத்திலே ஒரு ஊமைப் பெண் மாடு மேய்த்துக் கொண்டிருக்கின்றது. அவர்கள் வீட்டில் ஏதோ திட்டி விட்டார்கள் என்று ஓடிப் போய் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்கின்றது.

கிணற்றில் விழுவதை இவர் பார்த்து அதைக் காப்பாற்ற வேண்டும் என்று அந்தப் பெண்ணைக் கிணற்றிலிருந்து தூக்கியிருக்கிறார். வண்டிச் சக்கரத்தில் வைத்துச் சுற்றி அது குடித்த தண்ணீரை எல்லாம் வெளியேற்றுகின்றார்.

இருந்தாலும் அந்தப் பெண் இறந்து விட்டது…!

இவர் எந்த அளவுக்குக் காப்பாற்ற வேண்டும் என்று முயற்சித்தாரோ இவர் உடலுக்குள்ளேயே அந்த ஆன்மா வந்து விட்டது.

உடலுக்குள் ஆவி வந்த பின்…
1.அது தன் உடலுடன் இருக்கப்படும் பொழுது கடைசி நேரத்திலே எவ்வளவு நீரைக் குடித்ததோ
2.இந்த உடலுக்குள் வந்த பின் அந்த அணுக்கள் காற்றிலிருந்து அந்த நீர் சக்தியை இழுத்து
3.அதே உணர்ச்சியை ஊட்டித் தண்ணீராக வருகிறது.

ஒரு குடம் நீர் வருகின்றது. அடுத்து நான்கு மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு குடம் தண்ணீர் வருகிறது. இப்படிக் குடம் குடமாக வந்து கொண்டே இருக்கிறது.

இது நடந்த நிகழ்ச்சி.

ஒவ்வொரு குடும்பத்திலும் என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்கிறது…? இறந்தபின் ஆவி அடுத்த உடலுக்குள் சென்றால் என்னென்ன எல்லாம் செய்யும்…? என்று பார்ப்பதற்குத் தான் பல இடங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்யச் சொன்னார் குருநாதர்.

திரைப்படம் போல் தான் நம் மனதிற்குள் ஓடுகிறது… எதனால்…?

திரைப்படம் போல் தான் நம் மனதிற்குள் ஓடுகிறது… எதனால்…?

 

நாம் சுவாசத்தால் எடுக்கும் மணத்தைக் கொண்டு தான் இவ்வுயிராத்மா அவ்வலையைச் சேமிக்கின்றது என்று முதல் பாடத்திலிருந்தே சொல்லி வருகின்றேன்.

1.அமிலத்தின் மோதலின் நாத ஈர்ப்பு உயிரணுத் தன்மை
2.எந்தெந்த அமிலமுடன் எவ்வலைச் சேர்க்கை சேர்ந்து அதன் நாதமாகப் பிறக்கின்றதோ
3.அந்த நாதத்திற்குகந்த சேமித அணுத் தன்மை தான்
4.எக்கூட்டுச் சேர்க்கை சேர்ந்ததோ அதன் வளர்ப்பு அணுவாகப் பிறக்கின்றது.

இவ்வுடல் பிம்பத்தின் எண்ண உணர்வில் எடுக்கும் சுவாச நாதத்தின் மோதலின் அணுத் தன்மையால் தான் இஜ்ஜீவ பிம்ப உடல் வளர்ந்து அதன் மூலம் இந்த ஆத்மா வலுக் கொள்கின்றது.

இப்பிம்ப உடலின் உணர்வு அணுக்களின் வளர் தன்மையில்
1.நாதத்தின் இனிமையான இசையின் (சங்கீதம்) தன்மையால் மகிழ்ச்சியானாலும்
2.அதிர்வு… வெடி… இடி.. இவற்றைப் போன்று பயங்கர ஒலி ஏற்பட்டால்
3.ஈர்ப்பின் நிலை செவிக்கு ஏற்கும் மோதலைக் கொண்டு
4.இச்சுவாச அலை உணர்வில் அச்சப்படக்கூடிய அணுக்களைத் தன் ஈர்ப்பில் வளர்க்கின்றது.

இந்த மனித ஆத்ம நாத… ஒலி… ஈர்ப்பு… செவி செயல் தன்மை… மற்றெல்லா ஜீவராசிகளைக் காட்டிலும் ஒலி ஈர்ப்பு விகித வீரியத் தன்மை கொண்டது.

மற்ற ஜீவராசிகள் “ஒளி பாய்ச்சி… சுவாச மண நுகர்வுத் தன்மை கொண்டு தான்” அதன் ஈர்ப்பு நாதத் தன்மை உள்ளது.

பார்வையின் ஒளி பட்டு… சுவாச மணத்தின் நுகர் தன்மை மனிதனைக் காட்டிலும் மிருக நிலைக்கு (சிலவற்றுக்கு) கூடி இருந்தாலும்… மனிதனை ஒத்த செவி ஈர்ப்பு நாத வளர் சக்தி மற்ற மிருகங்களுக்குக் குறைவு.

1.உணர்வால் எடுக்கும் எண்ண நிலைக்கொப்ப
2.சுவாச மோதல் வளர்க்கும் அணு வளர்ச்சி அலை சக்தியால் தான்
3.இந்த உடலைச் சுற்றியுள்ள ஆத்மா வலுப் பெறுகின்றது.

ஆத்மாவின் நிலைக்கொப்ப உணர்வுகளைத் தான் இந்த உடல் வெளிப்படுத்துகின்றது.
1.ஆத்மாவின் உணர்வையும்
2.உணர்வின் ஆத்மாவையும்
3.இவ்வெண்ணத்தின் ஈர்ப்பு நிலை கொண்டு ஒளி பாய்ச்சி… ஒலி கேட்டு…
4.இந்த மனித ஆத்மா மாற்றி அமைக்க முடியும்.

ஒளி பாய்ச்சி ஒலி ஈர்ப்பின் நிலைக்கொப்ப இவ்வண்ணக்கலவை (படம்) அமில வளர்ப்பு மோதலின் பிம்ப நிலையை எப்படிக் காண்கின்றோமோ அதைப் போன்றே
1.இவ்வொளி பாய்ச்சி ஒலி ஈர்க்கும் எண்ணத்தின் ஓட்ட நிலையை
2.இந்தப் பிம்பமல்லா ஆவி அணுச் சேர்க்கையின் நிலை முறையை
3.பிம்பத் தன்மை மாறிய அமிலக்கூட்டின் ஆத்ம வடிவுகளை
4.அமில உருவாக பிம்பமில்லாத் தன்மையில் நிழல் பட உருவத்தில் காண முடியும்.

இவ்வொளி பாய்ச்சி ஒலி ஈர்த்து இவ்வெண்ண ஓட்ட நிலைக்கொப்ப எதனையுமே அறியும் ஆற்றல் சப்தரிஷிகளுக்கு உண்டு.

எத்தகைய ஜீவ பிம்ப மாற்றம் கொண்ட ஆவி அமிலச் சேர்க்கை ஆத்ம உயிர்களையும்… அருகிலுள்ள இடங்களையும்… அல்லது எண்ணத்தில் செலுத்தும் எந்த இடமாக இருந்தாலும் இவ்வெண்ணத்தைச் செலுத்திச் செயல் முறைப்படுத்தும் நிலையில் காண முடியும். ஞானத்தின் வழித் தொடரில் இது சாத்தியமே…!

இதைப் போன்றே அச்ச அதிர்வு நிலையினாலும் ஒலி ஒளி படங்களைக் காண முடியும்…! சில ஆத்மாக்களின் அலைத் தொடர்புடன் இது வரும்.

அதாவது ஒளி ஒலி ஈர்ப்புத் தன்மையில்… அச்ச உணர்வுடன் உடலை விட்டுச் சென்ற ஆவி உலக உயிரின் தொடர்பில்… சில கோவில் விழாக்களில் எழுப்பப்படும் சில மண ஒலி ஈர்ப்புத் தன்மையில் அதே உணர்வு கொண்ட அலை உணர்வு மோதல் எற்பட்டவுடன்… என்ன நடக்கின்றது…?

உடல் இல்லாத ஆத்மாவின் மோதலும் உடலுடன் உள்ள ஜீவ பிம்ப ஆத்மாவின் மோதலும் ஒன்றுபட்டவுடன் அதன் தன்மையில்
1.அது சேமித்து வாழ்ந்த நிலைக்குகந்த தன்மை உணர்வு செயல் எல்லாவற்றையும் இங்கே இயக்கப்பட்டு
2.உடலுடன் உள்ளவர் தன்னையறியாமல் ஆடி அதன் நிலை எல்லாம் பேசத் தொடங்கும்.
3.பல மொழிகளிலும் பேசும்
4.அதன் சுவைக்குகந்த உணவை எல்லாம் கேட்டு அதை உட்கொள்ளும்
5.தெய்வமே வந்து தனக்கு உணர்த்தியதைப் போல் பேசும்.
6.(சாமியாடி அருளாடி மருளாடி வாக்கு சொல்வது எல்லாம் இது தான்)

கடைசியில் இவ் ஈர்ப்பலையின் நிலைக்கொப்ப ஆத்ம எண்ணம் சென்று விட்டால் “தன் நிலை மறந்து…” எவ்வலைத் தொடர் ஆத்மாக்களின் எண்ணத்தையெல்லாம் எடுத்ததோ அவ்வாத்மாவின் நிலைப்படி தான் இந்த ஜீவ ஆத்மா (உடலுடன் உள்ளவர்) வாழ முடியும்.

ஆகவே இந்நாதத்தால் எடுக்கப்படும் உருவங்கள் தான் அனைத்துமே…! இந்நாதச் சேர்க்கை எண்ணத்தை உணர்ந்து மெய் ஒலி பெற்று மெய் ஒளியாக உருவாகுங்கள்.

மகரிஷிகள் நடத்திய யாகம்

மகரிஷிகள் நடத்திய யாகம்

 

ஏழு வகைக் குணச் சேர்க்கையில் அமிலத் தன்மை கொண்ட இந்தப் புவியின் நாத ஈர்ப்பு வளர்ச்சியின் உண்மையறிந்த ரிஷிகள் தன் ஞானத்தின் தொடர் சித்து நிலை கொண்ட காலத்திலேயே இவ்வொலி நாதத்தின் ஈர்ப்பைத் தன் ஆத்ம உயிர் சேமிதம் கொள்ள “யாக பூஜை முறை” மேற்கொண்டார்கள்.

இப்புவியின் மணம்.. சுவை… உலோகம்… இவற்றைப் போன்று ஏழு தன்மை கொண்ட வஸ்துக்களை அதிகமாக யாகக் குண்டத்தில் செலுத்தி அதிலிருந்து வரும் புகையினால் தன் சுவாச ஈர்ப்பிற்கு எடுக்கும் நிலையைப் பக்குவப்படுத்தினார்கள்.

1.இப்புகை மண்டலத்தின் அமில விகித நிலையைக் கொண்டு
2.எந்தெந்த அமிலச் சேர்க்கையின் புகை சுவாச நிலையைத் தன் ஈர்ப்பிற்கு எடுக்கின்றதோ
2.அதே மந்திர ஜெபத்தை ஜெபித்துக் கொண்டே அவ்வலைத் தொடரைக் கவர்ந்து
4.அதன் மூலம் மற்ற மண்டலங்களின் வழித் தொடர் அலை ஈர்ப்பைப் பெறுவதற்கு
5.உடல் பிம்ப இயந்திர அணுக்களின் வளர்ப்பை இயங்கச் செய்து
6.உயிராத்மாவின் செயலைக் கொண்டு அவ்வலைத் தொடரின் சக்தியை
7.தன் ஜீவ சக்தியுடன் கூடிய அணு மண்டல ஆத்ம உயிரின் வளர்ப்பிற்கு வலுவாக்கிக் கொண்டார்கள்.

வீணையின் நாதத்தில் சேர்க்கப்படும் அத்தந்திகளின் நிலையைக் கொண்டு எப்படி ஒலி மாறுபடுகின்றதோ… அதைப் போன்றே இவ் எண்ண ஒலி நாதத்தில் ஜெபிக்கப்படும் ஜெப ஒலியின் தன்மை கொண்ட அதனதன் தொடர் குண வலுவை எல்லாம் இந்த ஆத்ம உயிர் எடுத்துக் கொள்கின்றது.

1.ரிஷிகளும் சித்தர்களும் ஜெபமெடுத்த உண்மைத் தன்மைகளை எல்லாம்
2.பூஜை யாக வழித் தொடரில் நம் முன்னோர்கள் நமக்குச் சுட்டிக் காட்டியிருந்தாலும்
3.அதன் உண்மைகளை அறிய முடியாத நிலையில் தான் இன்று நாம் உள்ளோம்.

இப்புவியின் வளர்ப்பிலிருந்தே தன் ஜீவ பிம்பத்தின் தன் ஞான வளர்ப்பை அறிந்து கொள்ளும் செயல் யாவையுமே இந்தப் பூஜை வழிபாட்டில் இம்மந்திர நாதத்தால் பல சக்திகளைப் பெற்றனர்.

நாற்பத்தி எட்டு நாள் விடாமல் யாகம் செய்தார்கள்…! என்றும் சில ரிஷிகள் சில குறிப்பிட்ட மரங்களில் நதி ஒரங்களிலிருந்து ஜெபமிருந்தார்கள் என்றும் அறிந்திருப்பீர்கள்.

1.அந்த ஞானிகள் தன் வலுவின் சக்தியை வலுப்படுத்திக் கொள்ள
2.தன் உயிராத்மாவின் வளர்ப்பிற்கு பல அலைத் தொடர்புகளை எடுத்து
2.வலுவாக்கிக் கொள்ளும் வளர்ப்புக்குத் தானப்பா இந்த வழிபாட்டுத் தன்மையை ஜெபம் கொண்டு எடுத்தார்கள்.

இஜ்ஜெபத்தால் ஓதிய தியான ஈர்ப்பின் வலுத் தன்மை சேர்க்கையாக… தன் உடல் கூறு அமில வளர்ப்பே அவ்வலைத் தொடர்பின் வளர்ப்பாக தன் உயிராத்மா வளர்ந்த பிறகு… அவர்கள் சொல் நாதத்தின் வாக்குத் தன்மையின் பலிதமும்… இப்பார்வையின் தன்மையிலேயே நினைத்த நினைப்பு நடைபெறும் வலுவைக் கூட்டிக் கொள்கின்றனர்.

அவர்கள் பார்வை பட்டாலே… எந்தக் குணத்தில் அப்பார்வை செலுத்துகின்றனரோ அவ்வமில ஈர்ப்பு… இச்சுவாசத்தின் அலையினால் அந்த இடத்தில் பாய்ந்து அதன் தன்மை தான் அங்கே நடக்கும்.

இஜ்ஜெபத்தால் தியானம் கொண்டு தன் வலுவை வளர்த்துக் கொண்ட ஆத்மாக்களின் (மகரிஷிகள் சித்தர்கள் ஞானிகள்) ஈர்ப்பு நிலையானது
1.நேராக மேலிருந்து வரும் விண்ணின் ஆற்றல் மிக்க அலைத் தொடரை
2.உடலின் மேல் சிரசில் படச் செய்து
3.இந்த உயிர்த் துடிப்பின் வளர்ப்பைக் கொண்டு சுவாச இயந்திரம் இயங்குகின்றது.
4.அப்பொழுது பூமியின் ஈர்ப்பு பிடிப்பு குறைந்து விடுகின்றது.

ஏனென்றால் பூமியின் கீழ் நோக்கிய சுவாச எண்ண அலையுடன் வாழும் தன்மையில் பல எண்ண மோதலின் சிக்கலுடன் இந்தக் கனம் கொண்ட சுவாசம் எடுக்க எடுக்க இப்புவிப் பிடிப்பின் சுழல் பிடிப்பாகத் தன் இருக்க முடியும்.

இதிலிருந்து விடுபடத்தான்… சப்தரிஷிகள் தன் ஞானத்தால் தன் வலுவின் சக்தியைப் பார்வையிலும்… சொல்லாற்றலிலும் எத்தன்மையையும் வளர வைத்தனர்.

இந்தப் புவியில் வாழும் ஆத்மாக்களான நாமும் இந்த வலுத் தன்மையை வலுவாக்கிக் கொண்டோமானால் அதன் வளர் தன்மையில் செயல் வழித் தொடராக அவர்கள் வாழும் இடத்தை அடையலாம்.

1.இந்நாத ஈர்ப்பின் வீரிய சக்தி கொண்ட
2.மனித ஆத்மாவின் செயலினால் மட்டும் தான் (நம்மால்)
3.இந்த வலுவின் வலுவைக் கூட்டிக் கொள்ள முடியும்.

குருநாதர் எமக்குக் கொடுத்த “அழியாச் சக்தி”

குருநாதர் எமக்குக் கொடுத்த “அழியாச் சக்தி”

 

1.குருவிடம் சிக்கிக் கொண்டோம்…
2.காடு மேடெல்லாம் அலைய வைக்கின்றார்… பல துன்பங்களைக் கொடுக்கின்றார்
3.என்ன வாழ்க்கை…? என்று நான் (ஞானகுரு) வெறுக்கின்றேன்.

என் குழந்தைகள் என்ன செய்யும்…? அவர்களையெல்லாம் விட்டுவிட்டு குருநாதர் பின்னாடி வந்து விட்டோமே…! என்று மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்படி ஒரு இக்கட்டான நிலை…!

ஏனென்றால்
1.முதலிலே ஒரு மலை மீது ஏற்றி வைத்தார்
2.இரண்டாவது இமயமலையில் சீனா பார்டர் அருகிலே கொண்டு என்னை நிற்க வைத்து விட்டார்.
3.இந்தப் பக்கமும் வர முடியாது… அந்தப் பக்கமும் செல்ல முடியாது.

இரண்டு மலைகளுக்கு மத்தியில் உறை பனி அதிகமாக இருக்கின்றது. நான் முதலில் அதை தாண்டித் தான் இந்தப் பக்கம் வந்தேன். இருந்தாலும் அந்தப் பனிப்பாறைகள் அனைத்தும் திடீரென்று திடு…திடு… என்று இடிந்து விழுந்தது.

வந்த பாதையைக் காணவில்லை…!

நான் நடந்து வந்திருக்கும் போது விழுந்திருந்தால் என்ன ஆகியிருப்போம்…? என்று பயம் வருகிறது. பயந்து கொண்டிருக்கும் பொழுது வீட்டு மேல் ஞாபகம் வருகின்றது.

பிள்ளைகளுக்கு என்ன ஆனதோ…? ஏதானதோ…? பெண்டு பிள்ளைகள் என்ன ஆனார்கள்…? என்று இந்த எண்ணங்கள் வருகின்றது.

அந்தப் பனிப்பாறைகளில் நடந்து செல்லும் போது குளிர் பாதிக்காமல் இருப்பதற்காக
1.குருநாதர் சில இதுகளைச் சொல்லி நீ இதைத் தியானி.
2.இந்த பனியின் குளிர் தெரியாதபடி உன் உடலில் சூடு உருவாகும்.

இப்படி நான் (ஈஸ்வரபட்டர்) உனக்குச் சொன்ன நிலைகளில்
1.நீ எதை எதையெல்லாம் எண்ணுகின்றாயோ “அந்த உணர்வுகள் உனக்குள் வளர்ந்து”
1.அந்த அருள் சக்தி கொண்டு எதிர்காலத்தில் உன்னைக் காத்துக் கொள்ளலாம் என்று பல முறை எனக்குச் சொல்லி உள்ளார்.

இருந்தாலும் நடந்து வந்த பாதை இடிந்து விழுந்த பின் எந்னுடைய எண்ணங்கள் குழந்தை மீதும் குடும்பத்தின் மீதும் செல்கிறது. நான் நடந்து வரும் போது இடிந்து விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்…? என்று சிந்தனைகள் வருகின்றது

இப்படி எண்ணும் பொழுது உடலில் கிர்..ர்ர்ர்… என்று ஒரு இன்ஜின் ஓடினால் எப்படி இரையுமோ என் உடல்… இருதயம்… எல்லாம் இரைய ஆரம்பித்து விட்டது. கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது ஒரு நிமிடம் ஆனால் மொத்தமாக இன்ஜின் ஆஃப் ஆவது போல ஆகிவிடும் போல இருந்தது.

அந்த நேரத்தில் குருநாதர் என் வீட்டில் நடப்பதையும் காட்டுகின்றார். அந்தக் காட்சி தெரிகிறது.

என் பையன் சிறியவன் ரோட்டில் முச்சந்தியிலே உட்கார்ந்து கொண்டு இரத்த இரத்தமாக அவனுக்கு வெளியே செல்கின்றது அவன் நானா… நானா… என்று என் பெயரைச் சொல்லி அவன் இருந்து கொண்டிருக்கின்றான்.

என் மனைவியோ அப்பொழுதுதான் அது நோயிலிருந்து விடுபட்டது. தன் குழந்தையைத் தேடி வந்து பார்க்கக்கூடிய நிலைகள் முடியாது இருக்கிறது. கவலையோடு மற்றதை எண்ணிக் கொண்டிருக்கிறது.

இவனுக்கு இங்கே ரோட்டில் இரத்தமாகப் போய்க்கொண்டிருக்கிறது இதை எல்லாம் நான் காட்சியாகக் கண்டபின் எனக்கு உணர்வுகள் மாறுகின்றது.

பனிப் பாறைகளுக்கு மத்தியில் அந்தக் குளிர் பாதிக்காது இருப்பதற்கு குருநாதர் எடுக்கச் சொன்னதை மறந்து விட்டேன். பின் இந்த உடல் இரையும் போது உயிரே போய்விடும் போலிருக்கிறது.

இப்பொழுது நான் யாரைப் போய்க் காப்பது…?

குருநாதர் காட்சி கொடுக்கின்றார்…! மனமே இனியாகிலும் மயங்காதே பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே…! மனமே இனி மயங்காதே…! மனமே இனி மயங்காதே…! என்று பாடலைப் பாடுகின்றார்.

உன் உயிர் போய்விட்டால் சொத்து சுகம் எல்லாம் எங்கே போகப் போகின்றது…? பல எண்ணங்கள் கொண்டு வாழ்ந்தாலும் இந்த உடலை விட்டு ஒரு நாள் போய்த் தான் ஆக வேண்டும்.

இந்த உடல் நமக்குச் சொந்தம் அல்ல… செல்வமும் சொந்தமல்ல ஆகவே நீ எதைச் சொந்தமாக வேண்டும்…? என்று வினா எழுப்புகிறார்.

1.எல்லோரையும் நலமாக்க வேண்டும் என்றும்
2.எல்லோருக்கும் அந்த அருள் உணர்வுகள் கிடைக்க வேண்டும் என்றும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெற வேண்டும் என்றும்
4.அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்றும்
5.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அழியாச் செல்வமாகக் கூட்டி
6.அனைவரும் அதைப் பெற வேண்டும் என்ற வலுவைக் கூட்டினால் இது மறைவதில்லை.
7.உன் உடல் மறைகின்றது… ஆனால் உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது
8.நீ பிறவியில்லா நிலை அடைகின்றாய்… ஆகவே நீ அதைப் பெறு.

இந்த உடலே சதம் அல்ல நீ தேடிய செல்வங்கள் எப்படிச் சதமாகும்…? அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை உனக்குள் பெருக்கி… அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை வளர்த்து…
1.அனைவரும் நலம் பெறுவர்… அனவரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை உனக்குள் வளர்த்துக் கொள்.
2.இது தான் உனக்குச் சதமும் சொந்தமும் எல்லாமே…!

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் பல இன்னல்கள் படுகின்றனர் அத்தகைய நிலையில் இருந்து “அவர்களை மீட்ட வேண்டும்… அவர்கள் மீள வேண்டும்…” என்ற உணர்வை வளர்த்துக் கொள்…! என்று அடிக்கடி சொல்வார்.

மலைப்பகுதியில் அழைத்துச் சென்று பல துயரங்களை ஒவ்வொரு நிமிடம் எனக்கு ஊட்டித் தான் இந்த உண்மைகளை உணர்த்தினார் குருநாதர்.

ஞானிகள் யாகத்தைச் செய்ததன் நோக்கம்

ஞானிகள் யாகத்தைச் செய்ததன் நோக்கம்

 

நாதத்தால் வளர்ந்த விந்துவின் ஜீவ வளர்ப்புத்தான் இப்புவி வளர்ப்பு யாவையுமே…!

பால்வெளி மண்டலத்தின் வளர் தன்மை கொண்ட அமில மோதல் நாத முதற் கொண்டு… இப்புவியின் சுழற்சி நாதக் காற்று வளர்ப்பு ஒலி ஒளி நீராகி… இத்திடம் கொண்ட சத்துத் தன்மையின் நாத ஈர்ப்பின் சுழற்சியால் புவியில் இப்புவியின் வெக்கை அலை வெளிப்படுகிறது.

அந்த வெப்ப அலையால் ஈர்க்கப்படும் ஒலி நாதமான ஓ..ம் என்ற நாதத்தின் குணத் தன்மை ஒலியாகி.. ஒளியாகி… நீரான வளர் சுழற்சியில்..
1.ஓ..ம் எனக் கொண்ட நாத ஒலியின் தொடர் நாத விந்து வளர்ப்பு தானப்பா
2.இப்புவி நாத வளர்ப்பு தானப்பா… யாவையுமே…!

விளக்கம்:-
இந்தப் புவி வளர்த்த நீரில்… சூரியனின் அலை ஈர்ப்பை இப்பூமி ஈர்த்து…
1.நீரின் மேல் சூரிய ஒளி பட்டு இப்பூமி ஈர்த்து
2.இப்பூமி வெளிப்படுத்தும் ஆவியான வெக்கை நிலை (வெப்பம்) மேல் நோக்கிச் செல்கிறது.

அதைப் போன்றே எரிக்கப்படும் எரி பொருளின் புகையானது மேல் நோக்கிச் செல்கின்றது.
1.இப்புவியில் வளரும் யாவும் மேல் நோக்கி வளர்கின்றது.
2.ஆனால் கனம் கொண்ட வளர்ப்பு யாவும் புவி ஈர்ப்பின் பிடியுடன் கீழ் நோக்கி வளர்கின்றது.

புவி வளர்ப்பா…? பால்வெளி மண்டலத்தின் வளர் தன்மையா இவ்வளர் நிலை யாவையும்..?

இந்தப் புவியில் வளரும் தன்மையின் வளர் சக்திக்கு நாதத்தின் வித்துத் தன்மையின் செயலுக்கே ஜீவ நாடி… இந்த “ஓ…ம்…” என்ற புவி நாதம் தான்.

இந்தப் பால்வெளி மண்டலத்தின் செயல் தன்மையில்… அந்தந்த மண்டல ஈர்ப்பு ஒலித் தன்மை கொண்டு நாதச் சேர்க்கையின் வளர் உயிரணுக்கள் ஒவ்வொரு மண்டலத் தன்மைக்குகந்த நிலையில் வளர்கின்றது.

மண்டலச் சுழற்சிக்கு மாறுபட்டுள்ள பால்வெளி மண்டலத்தில் காற்றுத் தன்மையே இல்லாத மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் எத்திசை…? என்ற செயலற்ற நிலையில் உள்ள இடங்களிலும் சில ஜீவராசிகள் பிறந்து மடிந்து வாழ்கின்றன.

காற்றுத் தன்மையே இல்லா நிலையில் ஜீவன்கள் எப்படிப் பிறக்கின்றன..?

இவ்வமிலத்தின் சேர்க்கை நிலையில் சிறு சிறு அமிலக்கூட்டின் மோதலின் ஒலி ஈர்ப்பின் ஜீவனாகி இவ்வொளியின் நாதமுடன் வளர்ச்சி கொண்ட வளர் நிலைக்குகந்த மிகக் குறுகிய கால சில அபூர்வச் செயல் கொண்ட ஜீவத் தன்மைகள் தோன்றி அதன் கனம் உந்தித் தள்ளப்பட்டு பிறப்பெடுத்தவுடன் மடிந்து கனம் கொண்ட அப்பிறப்பு அமிலக் கூட்டுச் சேர்க்கை உந்தித் தள்ளப்பட்ட நிலையில் தான் தனக்குகந்த மண்டல ஈர்ப்பின் வளர்ப்புத் தன்மைக்கு வலு நிலை கொண்ட வளர்ப்பு அமிலச் சத்து கிடைக்கின்றது.

1.இந்தப் பால்வெளி மண்டல செயல் வளர்ப்பு நிலை இல்லாவிட்டால்
2.மண்டல ஈர்ப்பு வளர்ப்பு செயல்படாது.

சூரிய மண்டலம் ஜீவராசிகள் வாழ முடியாத இடம். ஜீவ வளர்ப்பே இல்லா நிலை என்றெல்லாம் உணர்த்துகின்றனர். ஆனால் இந்த அண்டகோடி அனைத்து வார்ப்பு நிலைகளிலும் “இந்நாத விந்தற்ற நிலை இல்லா இடம் எதுவுமே இல்லை…!”

வளர்ப்பின் வளர்ப்புத் தன்மை கொண்ட வளர் வளர்ச்சி செயலுடன் ஒன்றின் செயல் தொடர் வளர்ப்பு “நாத விந்துக்கள் தான்” இம்மனிதனும் இம்மற்றெல்லா மண்டலங்களுமே…!

1.இந்நாத ஈர்ப்பு மோதலில் துடிப்பில்லா விட்டால்
2.எச்செயலின் வளர்ப்பு வளர்படுவதில்லை
3.வளர்ப்பின் வளர்ப்பே இந்நாதம் தான்.

எண்ணத்தால் எடுக்கும் நாதத்தை உயர் நாதச் செயலாகச் சேமிக்கும் பொழுது தான் இந்த உயிர் காந்தத் துடிப்பின் சக்தியை இவ்வாத்ம சேமித்து அதன் வளர்ப்பிற்குகந்த அணு வளர்ச்சியின் வலுவைத் தன் வலுவாக்கி ஜீவ சக்தி வாழ முடிகின்றது.

இதன் தொடர்பில்…
1.தனக்குச் சாதகமான வலுத் தன்மையைக் கூட்டிக் கொள்ள
2.இந்த மனித எண்ண நாதத்திற்குத் தான் உண்டு.
3.இதன் தன்மையை உணர்ந்தவர்கள் தான் நம் ஞானிகளும்.. சித்தர்களும்… மகரிஷிகளும்…!

அந்தத் தத்துவ ஞானச் செயல் மணிகளாகப் பல ஞானிகள் இஜ்ஜெப முறையின் நாத ஒலி கொண்ட சில மந்திர ஒலிச் சேர்க்கையின் செயல் கொண்டு செயல்படுத்தினர்.

அதன் மூலம் அச்செயல் வளர்ப்பின் தன்மை கொண்ட
1.பல கோடி ஆண்டுகளாக வளர்ச்சி கொண்ட…
2.இச்சூரிய குடும்பமல்லா பல சூரியனின் வளர்ச்சி பெற்ற ரிஷி அலையின் தொடர் நிலை பெற
3.இந்த மந்திர நாத யாக ஜெப பூஜை வழிபாட்டில் ரிஷித் தன்மை வளர்ப்பு ஞானிகளாக ஒளிர்ந்தனரப்பா…!

பல வருட காலமாக யாம் சொன்ன உண்மைகளை “இனிமேல் தெரிந்து கொள்வீர்கள்…”

பல வருட காலமாக யாம் சொன்ன உண்மைகளை “இனிமேல் தெரிந்து கொள்வீர்கள்…”

 

விஞ்ஞான முன்னேற்றத்தின் அணு விசைகளால் வெளிப்படுத்தப்பட்ட கதிரியக்கங்கள் சூரியனுக்குள் சென்று விட்டது. அதன் விளைவாக எத்தனையோ கடும் புயல்கள் அங்கே அடிக்கடி உருவாகி விஷமான அலைகளைக் கக்கிக் கொண்டுள்ளது. பூமிக்குள்ளும் அது பரவி வருகிறது.

அதனின் விளைவுகள்… உதாரணமாக மின்சாரம் செல்லும் இரண்டு வயர்கள் இரண்டும் சேர்ந்து விட்டால் எப்படி ஒரு எர்த் ஆகி… இரு மடங்கு மின் அழுத்தம் கூடி அனைத்தையும் கருக்கிவிடுகிறதோ இதைப் போல
1.உலகெங்கிலும் உயிரணுக்களிலும் மற்ற அணுக்களிலும் இது படரப்படும் போது
2.வயர்கள் கருகி பல்புகள் ஃப்யூஸ் ஆவது போன்று மனிதனின் சிந்தனைகள் சிதறும் தன்மை
3.இனி எப்பொழுது வேண்டுமென்றாலும் வரலாம்.

அதற்கு முன் நீங்கள் எதைச் சேமிக்க வேண்டும்…? என்று முடிவு செய்து கொள்ளுங்கள்…!

அருள் ஞானிகள் உணர்வைச் சேமித்துக் கொண்டால் அது உங்களைக் காக்கும். கடுமையான நஞ்சுகளையும் வென்றவன் அகஸ்தியன். அவன் துருவனாகி துருவ மகரிஷியாகி… துருவ நட்சத்திரமாக ஆனது.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியினை நீங்கள் நுகர்ந்து இத்தகைய கொடுமையிலிருந்து மீள நீங்கள் முற்படுங்கள்.

இல்லையென்றால் இந்த விஷத்தின் தன்மை… அன்று அணுகுண்டினால் (கதிரியக்கங்கள்) ஜப்பானில் அழிந்தது போன்று… மனிதர்கள் முழுமையாக வளராதபடி இன்றும் எப்படி இயக்கிக் கொண்டுள்ளதோ…
1.அதிலே தாக்கப்பட்டு இறந்தவர்கள் விஷப் பூச்சிகளாக உருவாகி
2.பல கோடிச் சரீரங்களைக் கடந்து தான்… அந்த விஷங்களை வடிகட்டிய பின்பு தான் மீண்டும் மனிதனாக வர முடியும்.

இனி வரக்கூடிய உலக யுத்தமும் அது போன்றது தான். ஒருவரை ஒருவர் அழிக்க வேண்டும் என்ற நிலையில் அந்த அணு விசைகள் வெளிப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அதே போன்று மின்சாரத்தை அதிகமாகத் தயாரிப்பதற்காக வேண்டி பல அணு உலைகளை உருவாக்கி வைத்துள்ளார்கள். அதனுடைய கசிவுகளும் பரவப்பட்டு சூரியனுடைய காந்த சக்தி அலைகளாக மாற்றிக் கொண்டே உள்ளது.

ஆகவே விஷத்தன்மை கொண்ட அணுக்கதிரியக்கங்கள் இந்தக் காற்று மண்டலம் முழுவதும் படர்ந்து மனிதனுக்குள் அதிகரித்து அதிகரித்து மனிதனல்லாது உருப்பெறும் சக்திகளாக வளரப் போகின்றது.
1.இதிலிருந்து மீள வேண்டும் என்று நீங்கள் எண்ணினால்
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் சக்திகளை எடுத்து உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும்
1.இருவருமே நினைவை விண்ணிலே செலுத்தி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளை வளர்த்துக் கொண்டால் இரு உயிரும் ஒன்றாகின்றது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வின் கருவாக உருவாக்கி உங்களுக்குள் சக்தி வாய்ந்ததாக அதைத் தயார் செய்து கொள்ளுங்கள்.

தன் உடலையே சொந்தமாக்க முடியாத நிலைகள் வரும் போது இப்போது சம்பாரிக்கும் எந்தச் செல்வமும் நம்முடன் வரப்போவதில்லை.
1.ஆனால் அந்த அழியாச் செல்வமான அருள் ஒளியைச் சேர்த்துக் கொண்டால்
2.விஞ்ஞானத்தின் மூலம் எதிர்பாராதபடி விபரீதமான நிலைகள் ஏற்பட்டாலும்
3,நாம் எடுத்துக் கொண்ட துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம்மைப் பாதுகாக்கும் சக்தியாக வருகின்றது.

அன்று தான் தெரியும் இப்பொழுது யாம் (ஞானகுரு) சொன்னதை ஏன் செய்யவில்லை என்று…! – செய்யத் தவறியவர்களுக்கு…!

“ஓ………ம்” என்ற தெய்வீக நாதத்தின் பயன்பாடு

“ஓ………ம்” என்ற தெய்வீக நாதத்தின் பயன்பாடு

 

எங்குமே… எதிலுமே… “எல்லாமே…” ஒலியின் தன்மை கொண்டு உருவாக்கப்படுவது தான்…! உருவாக்கப்படும் “நற்சக்தியும்… தீய சக்தியும்… எதுவாக இருந்தாலும்…” இந்த ஒலி கொண்டு தான் பிறக்கப்படுகின்றது.

இவ்வொலி நாதம் கொண்டு அமையப்படுவது தான் உயிரணுக்கள் யாவையுமே.
1.இந்த நாத விந்துச் சேர்க்கை செயலில் எடுக்கப்படும்
2.சுவாசத்தின் நிலைக்கொப்பத்தான் உயிராத்மாவின் செயலும் உள்ளது.

நெற் பயிரில் அந்தப் பலன் தருவாயிலும் “இக்காற்றலையின் நாதச் சேர்க்கையைத் தன் ஈர்ப்பில் சேமிக்கப்படும் நிலைக்கொப்பத்தான்” அக்கதிரின் மணியில் அரிசியின் நிலை வளர்கின்றது.

ஒரு கதிரில் வரும் நெல் விதையில் எல்லாமே மணியாக இருப்பதில்லை… பதர்களும் உண்டு…!

அதைப் போன்றே கனிகளாக உருவாகும் பொழுதும் ஒரு செடியில் பூக்கும் பூக்களிலும் ஒன்றை ஒத்த நிலையில் ஒன்றில்லாமல் ஒரே செடியில் பூக்கும் பூக்களிலும் சில சிறுத்துக் கரடு தட்டிய நிலையில் வரும்.

இதைப் போன்றே உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் அது எடுக்கும் நாதத்திற்குகந்த விந்துத் தன்மை தான் வளர்கின்றதப்பா…!

இந்நாதத்தால் எடுக்கும் உருவகத் தன்மையில் நம் சித்தர்கள் காட்டிய செயல் முறையின் “ஆரம்பத் தன்மை தான்…” பக்தியால் ஜெபிக்கும் “ஜெப நாதப் பாடல்கள்…!”

1.அன்பென்ற பக்தி பூண்டு
2.ஆசை என்ற நாத இனிமையைக் கூட்டி ஜெபப்படுத்தும் முறை தான்…
3.இவ்வுயிராத்மாவிற்குச் சக்தியைக் கூட்டும் “ஆரம்பச் சேர்க்கை வழி காட்டி முறை…!”

இப்புவியின் வளர்ப்புடனே நல் வளர்ப்பாக பல நாயன்மார்கள் இப்பாடலின் நாதத்தில் சுழல் விகிதத்தில் செயல்பட்ட முறை தான் பக்தியின் நாத ஜெப முறை.

இஜ்ஜெப முறையின் வளர்ச்சியால் நம் பூமியின் சுழல் நாதமான ஓ…ம் என்ற நாதத்தை… உள் நாதமான ஓமுக்குள்.. ஓ…ம் ஆக… நம் உயிராத்மாவின் நாதத்தை… இப்புவிக்கே நாதம் தந்த சகல ரிஷிகளின் நாத அலையுடன் கலக்கவிட வேண்டும்.
ஓ…ம் க்குள்… ஓ…ம் ஆக இருந்து…
1.அவ்வலை நாதத்துடன் தியானத்தில் எண்ணத்தைச் செலுத்தி
2.அவ்வலைத் தொடரின் தொடர்பலையை நம் சுவாசத்தால்
3.எந்தச் சப்தரிஷியின் அலைத் தொடர்புடனும் தொடர் கொள்ள முடியும்.

எண்ணத்தால் செலுத்தும் சுவாச நாதம் கொண்டு அவ்வலையின் தொடர்பை நம் ஆத்ம உயிர் தன் ஈர்ப்பின் வளர்ச்சிக்கு எடுத்து அதை வளர்த்துக் கொள்ள முடியும்.

ஒவ்வொன்றின் தன்மையும்
1.“தனித் தன்மை கொண்ட உயர் நாதச் செயலாகத் தான்”
2.ரிஷித் தன்மையின் “வளர் வளர்ப்பு…” செயல் நிலை செயல்படுகிறது.

அவர்கள் வளர்ப்பாக நாம் உருவாக வேண்டும் என்றால்… அது உயிர் வழியாக எடுக்கும் தியானத்தின் சுவாச அலைத் தொடரின் வழி முறைச் செயலினால் தான் முடியும்.

தியானத்தில் எடுக்கும் இந்தச் சக்தியால் இப்பிம்பக் கூட்டின் ஜீவ சக்தி அணு வளர்ச்சிச் சேர்க்கையின் செயல் கொண்டு நம் எண்ணத்தால் எடுக்கும் சப்தரிஷிகளின் அலைத் தொடர்பின் சக்தியை இவ்வுயிராத்மா வளர்த்துக் கொள்ள முடியும்.

“காந்த ஈர்ப்பு சக்தி கொண்டது தான் இவ்வுயிராத்மா…” என்று ஏற்கனவே தெளிவாக்கினேன்.
1.எண்ணத்தின் செயலைக் கொண்டு எடுக்கும் இந்தத் தியான நிலையின் தொடர் நிலைக்கொப்ப
2.இப்புவி ஈர்ப்பின் பிடியிலிருந்து ஞான வளர்ச்சிச் செயலையும் சித்துத் தன்மை வளர்ப்பையும்
3.இவ்வலைத் தொடர்பின் எண்ண நாதச் சேர்க்கையைக் கொண்டு
4.உடல் என்ற இயந்திரத்தின் உதவியால்
5.இவ்வுயிராத்மாவையே உயர் ஞானக் கூட்டு ஆத்மாவாக உயர்த்த முடியும்…
6.“இவ்வெண்ண நாதத்தால்…!”

மனிதனின் கடைசி நாள்களில் செல்வத்தால் நிம்மதி கிடைப்பதில்லை… இருந்தாலும் ஆசை அவனை விடுகிறதா…?

மனிதனின் கடைசி நாள்களில் செல்வத்தால் நிம்மதி கிடைப்பதில்லை… இருந்தாலும் ஆசை அவனை விடுகிறதா…?

 

கோடிச் செல்வம் சம்பாதித்து வைத்திருப்போருக்கும்
1.இன்று அவர்களுக்கு நிம்மதி இருக்கின்றதா…? என்றால் இல்லை..!
2.தேடி வைத்த செல்வத்தைச் சீராக அனுபவிக்கின்றார்களா…? என்றால் அதுவும் இல்லை.

செல்வத்தைக் கண்டு அதனால் வெறுப்பும் வேதனையும் அதிகமாக வளர்த்துக் கொள்ள முடிகின்றதே தவிர இந்த உடலில் அமைதி பெரும் உணர்வைப் பெறும் சக்தியினை இழந்து விடுகின்றார்கள்.

இந்த உடலே நமக்குச் சொந்தமில்லை என்கிற பொழுது நாம் தேடும் செல்வம் நமக்கு எப்படிச் சொந்தமாகும்…?

ஏனென்றால் கோடிக்கணக்கில் செல்வத்தைத் தேடி வைத்திருப்பினும்
1.நமக்குப் பின் குழந்தைகள் அதைச் சீராகப் பயன்படுத்த முடியாதபடி
2.வேறு யார் யாருக்கோ சென்று விடுகின்றது.

சேலத்தில் இது நடந்த நிகழ்ச்சி…! கணவன் மனைவி ஒரு குடும்பத்தில் அவர்களுக்கு வயது 80 க்கு மேல் இருக்கும்… செல்வங்கள் இருக்கின்றது… அவர்களுக்குக் குழந்தை இல்லை கடைசி நேரம்… ஆனால் மன நிம்மதி இல்லை.

கையில் 10 லட்சம் பணம் இருக்கின்றது. யாரிடமாவது கொடுத்தால் அதைக் கொண்டு சென்று விடுவார்களோ…? அல்லது ஏமாற்றிவிடுவார்களோ…? என்று இதே சந்தேக நிலையில் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.

என்னைப் பற்றி விசாரித்து இதற்குண்டான வழி வேண்டும் என்று எம்மிடம் கேட்டார்கள்.

அதே சமயத்தில் ஒரு சொந்த வீடும் அவர்களுக்கு இருந்தது. 25 லட்ச ரூபாய் பெருமானம் உள்ளது. முக்கியமான ரோட்டிலே அந்த வீடு இருக்கின்றது.

அதை விற்கச் செல்லும் பொழுது ஒருவர் அந்த வீட்டை வாங்க மூன்று லட்சம் ரூபாய் முன் பணம் கொடுக்கிறார். ஆனால் மொத்தத்தையும் கொடுத்து வீட்டை உடனே வாங்கவில்லை… நாளாகிவிட்டது…!

இதையும் என்னிடம் சொல்லிக் கேட்டார்கள்… ஆசீர்வாதம் கொடுங்கள்…! என்று கேட்டார்கள். பின் வீட்டை விற்று அந்தப் பணம் எப்படியோ அது வந்து சேர்ந்தது.

குழந்தை இல்லை என்று சொல்கிறீர்கள். ஒரு சிறு ஆசிரமத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏழைக் குழந்தைகளை அதில் வளர்ப்பதற்குக் கூடுமானவரை முயற்சி செய்யுங்கள். பண வசதி இல்லாத குழந்தைகளுக்குக் கல்வியும் ஞானமும் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்… என்று சொன்னேன்.

சரி… சரி…! என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு டிரஸ்ட் போன்று அமைத்து ஆசிரமத்தை ஏற்பாடு செய்து அதற்கென்று ஒரு ஆசிரியரை வைத்துக் குழந்தைகளைப் பராமரித்துக் கொள்ளுங்கள். நீங்களும் அங்கே ஒரு இடத்தில் அமர்ந்து சமையல் செய்து சாப்பிட்டுக் கொண்டு இருங்கள் என்று சொன்னேன்.

சரிங்க சாமி… சரிங்க சாமி…! என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

மொத்தம் 35 லட்சம் ரூபாய் கையிலே வந்த பின் அவர்களாகவே ஆலோசனை செய்து நான் சொன்னபடி செய்வதற்குப் பதிலாக ஒரு “கல்யாண மண்டபத்தைக் கட்டலாம்…” என்ற முடிவுக்கு வந்தார்கள்.

தன் பெயரைப் போட்டு மண்டபத்தைத் தொடங்கலாம் அதில் நிறையத் திருமணங்கள் நடக்கும் என்று அப்படிச் செய்து விட்டார்கள்.

அதற்குண்டான முயற்சிகளை மற்றவர்களிடம் சொல்லி எடுக்கும் போது உங்கள் பேரை வைத்து டிரஸ்ட் என்று அமைத்தால் சரியாக இருக்காது என்று சொல்லி விட்டார்கள்.

பணத்தைக் கையில் வாங்கும் வரை இவர்களைச் சமாதானப்படுத்தி வைத்துவிட்டு அவர்கள் கைக்குப் பணம் வந்தபின்
1.நீங்கள் இங்கே வேலை செய்து சாப்பிட்டு கொள்ள வேண்டியது தான்.
2.பொதுவாகத்தானே இதைச் செய்திருக்கின்றீர்கள்
3.நாங்கள் டிரஸ்ட் அமைத்து எத்தனையோ பேரைச் சேர்த்து இருக்கின்றோம்
4.பணத்தை வசூல் செய்திருக்கின்றோம் என்று சொல்லி இவர்களை “அம்போ…” என்று ஆக்கிவிட்டார்கள்.

நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். உன் மனைவி பேரில் ஒரு லட்சம் ரூபாயாவது பத்திரப்படுத்தி வை…! என்று சொல்லி இருந்தேன்… ஒரு பாதுகாப்புக் கிடைக்கும் என்று சொல்லியிருந்தேன்.

அது எல்லாம் வேண்டியதில்லை… சாப்பாடு போடுவார்கள்… நாங்கள் பிழைத்துக் கொள்வோம்…! என்று நான் சொன்னதைக் கேட்காமல் செய்தார்கள்.

கடைசியில் மண்டபம் முடிந்தபின் சோற்றுக்கு வழியில்லாமல் போய்விட்டது இரண்டு மூன்று நாட்கள் சென்ற பின் “இப்படி ஆகிவிட்டதே…!” என்று மனது விரக்தி ஆகி இறந்து விட்டார்கள்.

சம்பாதித்த பணம் யாருக்குச் சென்றது…? இத்தனையும் இறுக்கிப் பிடித்து வேதனையைத் தான் வளர்க்க முடிந்தது. கோடிக்கணக்கில் இவ்வாறு செல்வத்தைச் சேர்த்தாலும் இந்த நிலை தான் ஆகின்றது.

உடலே நம்முடன் வருவதில்லை… செல்வம் நம்முடன் வருமா…? ஆனாலும் பணத்தின் மீது நமக்கு ஆசை விட்டபாடில்லை…!

இப்படி… செல்வத்தைத் தேடும் எண்ணத்திலேயே தான் நாம் மனித வாழ்க்கையை வாழ்கின்றோமே தவிர வேறும் ஒன்றும் இல்லை. இருந்தாலும்
1.செல்வத்தைக் காக்கும் நிலைக்கு நமக்கு ஞானம் தேவை
2.ஞானம் இல்லை என்றால் செல்வத்தைக் காக்க முடியாது.

செல்வத்தை வைத்து ஞானத்தைப் பெற வேண்டும் என்றால்
1.செல்வம் இருக்கும் பொழுது செருக்கின் தன்மை தான் வரும்.
2.ஞானத்தின் நிலைகள் வருவது கொஞ்சம் சிரமம் தான்.

இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நம்மை ஆட்டிப் படைக்கும் சில உணர்வுகளில் இருந்து நம்மை நாம் காக்க அந்த மகரிஷியின் அருள் சக்திகளை நுகர்ந்து அவைகளைத் தணித்துப் பழக வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நுகர்ந்தால் தான் எத்தகைய நிலையையும் சீராக்க முடியும். நம்மைக் காக்கும் சக்தி அது தான்…!