அகஸ்தியனிடமிருந்து வெளிப்பட்ட ஒளிக் கதிர்கள்

அகஸ்தியனிடமிருந்து வெளிப்பட்ட ஒளிக் கதிர்கள்

 

அகஸ்தியன் மூன்று வயதுக்குள் இயற்கையின் உண்மை நிலைகளை அறியும் சக்தி பெறுகின்றான். உயிர் அணுக்களின் தோற்றங்களையும் அதனின் உண்மைகளையும் அறிகின்றான்.

விஷத்தின் தன்மையை அடக்கி… அந்த அருள் ஒளியின் தன்மை கொண்டு தான் எடுக்கும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றான்.

ஒரு மின்னட்டாம் பூச்சியை எடுத்துக் கொண்டால்… மற்ற பூச்சிகளைக் காட்டிலும் அது உணவாக உட்கொள்ளும் பொழுது…
1.பின் பாகம் உணர்வின் மூச்சலைகள் வரப்படும் பொழுது பளீர்…. பளீர்… என்று மின்னும்.
2.இது எடுத்துக் கொண்ட உணவுகள் மெர்குரியாக மாறுகின்றது
3.இது போன்றுதான் அகஸ்தியன் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஒளிக்கதிர்களைப் பாய்ச்சுகின்றது.

இதைக் கண்ட அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்கள் அகஸ்தியனை “மகரிஷி” என்ற நிலையிலும் ஒரு “தெய்வீகப் பிறவி” என்றும் “கடவுள்” என்றும் “உயர்ந்த சக்தி வாய்ந்தவன்” என்றும் அவனைப் பின் தொடர்ந்து செல்கின்றனர்.

காட்டுக்குள் அவன் செல்லப்படும் பொழுது விலங்குகளும் இவனைக் கண்டு அஞ்சி ஓடுகின்றது… விஷ ஜந்துக்களும் அஞ்சி ஓடுகின்றது.

இப்படிப் பெற்றவன் தான் ஐந்தாவது வயது வரப்படும் பொழுது பூமிக்குள் துருவத்தின் வழி வரும் சக்திகளை எல்லாம் நுகர்ந்தறிகின்றான். துருவத்தின் ஆற்றலைப் பெறுகின்றான்.

அப்போது அவனுக்குத் துருவன் என்று காரணப் பெயர் அக்காலத்தில் வைக்கின்றார்கள்… அகஸ்தியன் துருவன் ஆகின்றான்.

ஐந்தாவது வயதில் வானுலக இயக்க உண்மைகளையும் அவன் கவர்ந்து… அதை உணர்வைத் தனக்குள் எடுத்து இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள சக்திகளைப் பெறுகின்றான்.

பதினாறாவது வயது வரும் பொழுது அவனுக்குத் திருமணம் செய்து வைக்கின்றார்கள்.
1.தான் பெற்ற சக்திகள் அனைத்தும் தன் மனைவி பெற வேண்டும் என்றும்
2.கணவனால் பெற்ற அந்தச் சக்தி கணவனுக்கு அது மேலும் கிடைக்க வேண்டும் என்று மனைவி எண்ணுவதும்
3.இப்படி இருவருமே உணர்வுகள் ஒன்றாகி இரு உயிரும் ஒன்றாகி உணர்வினை ஒளியாக மாற்றும் தன்மை பெறுகின்றார்கள்.

எந்தத் துருவப் பகுதியைக் கூர்மையாகப் பார்த்து… எதை எல்லையாக வைத்தனரோ… அந்த எல்லையில் நிலை கொண்டு துருவ நட்சத்திரமாக இருக்கின்றனர்.

மனிதனில் தீமைகளை வென்று… பிறவியில்லா நிலை அடைந்து ஒளிச் சரீரம் பெற்ற… அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்களைப் பெறச் செய்வதற்குத் தான் பயிற்சி கொடுக்கின்றோம். அது தான் துருவ தியானம்…!
1.அந்தப் பயிற்சியின் பிரகாரம்…
2.யாரெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை முறைப்படுத்தி
3.தனக்குள் எடுத்து வளர்த்துக் கொள்கின்றனரோ அவர்கள் இந்த உடலில் பிறவி இல்லா நிலை அடைகின்றனர்.
4.மனிதனான பின் தான் அதைச் செயல்படுத்த முடியும்.

ஆகவே… நாம் சொந்தமாக்க வேண்டியது உயிருடன் ஒன்றி அருள் ஞானிகள் உணர்வை “அருள் செல்வமாக… ஒளிச் செல்வமாக…” நமக்குள் பெருக்கிப் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்.

மனித வித்தின் வளர்ப்பின் முற்றல் “ஒளிச் சரீரமாகத் தான் இருக்க வேண்டும்”

மனித வித்தின் வளர்ப்பின் முற்றல் ஒளிச் சரீரமாகத் தான் இருக்க வேண்டும்

 

அணு தோன்றி எத்தகைய வித்தான உயிரின் தாவரமாக வளர்ந்தாலும் அந்த வித்து துளிர் கொண்ட இலை விட்டு அதன் மூலம் ஈர்த்து வளரும் தன்மைக்கு வருகின்றது.

1.அந்த இலை பசுமையாக இருக்கும் அதன் காலத்திற்கு உகந்த அமிலச் சேர்க்கையின் வளர்ப்பு
2.அவ்விலை ஈரப்பசை கொண்ட வளர்ப்பின் முற்றிய நிலையில் தன் சக்தியை
3.தண்டுப் பாகத்தில் வளர்ப்பு வலு எடுத்த பிறகு
4.அந்த முற்றிய இலை உதிர்ந்து விடுகிறது “சருகாக…!”

வித்திட்ட அந்த விதையின் வளர்ப்பு தன் வளர்ச்சியிலே விழுதுகளாகி
1.அவ்விழுதின் வலுவைத் தன் வளர்ப்பின் வலுவாக்கி
2.வித்தின் வளர்ப்பின் வளர்ப்புகளை வளர்க்கின்றது.

ஆக சிறு வித்து பல வித்தாக வளர்ப்பெடுத்து மாறு கொண்ட வளர்ப்பை உருவாக்குகிறது.

இப்படி ஒவ்வொரு அணு வளர்ச்சியின் வளர்ப்பிலும் தொடர் வளர்ச்சி வளர்வதைப் போல் இந்தப் புவி மட்டுமல்லாது… ஒவ்வொரு மண்டலமுமே… தன் வளர்ப்பின் வளர்ப்பை வளர்த்துக் கொண்டே உள்ளது…!

சூரியக் குடும்பத்தின் வளர்ப்பைப் போன்றே ஒவ்வொரு மண்டல வளர்ப்பின் வளர்ப்பு வளர்ந்து கொண்டே தான் உள்ளது. அதாவது
1.மனித இனப் பெருக்க சுழற்சியைப் போன்றே
2.ஒவ்வொரு செயலும் தன் வளர்ப்பின் வளர்ப்பை வளர்த்துக் கொண்டே தான் உள்ளது.

சுழற்சி ஈர்ப்பு வளர்ப்பின் நிலைக்கொப்பச் சுழலவிடும் வளர்ப்பிலேயே
1.வளரும் தன்மை ஒன்றொன்றின் தொடர்ச்சி கூடக் கூட
2.வளர்ச்சியின் தன்மை வலு அதிகமாகின்றது.

தங்கத்தின் வளர்ப்பானது அவை வளரும் இடங்களில் ஆரம்ப இடத்தைக் காட்டிலும் அடுக்கடுக்காக அந்தத் தங்க வளர்ப்பு மண்ணானது சிறிது சிறிதாக வலுப் பெற்று அதன் தொடர்ச்சியில் கிடைக்கப்பெறும் இந்த உலோகச் சேர்க்கை வடிவமைப்பு மிகவும் உயர்ந்ததாகக் கிடைக்கின்றது.

அதைப் போன்றே இந்த உயிராத்மாவிற்கு சேமிக்கப்படும் சேர்க்கையின் தன்மை…
1.இந்த உடல் பிம்ப ஜீவனுக்கு அளிக்கப்படும் உணவிலிருந்தும்
2.சுவாசத்தால் எடுக்கும் எண்ணத்திலிருந்தும்… உணர்வின் தன்மை கொண்டும்
3.வளர்ச்சி பெறும் அணுக்களின் காந்த ஈர்ப்பு நிலைக்கொப்ப இந்த ஆத்மா அது வளர்கின்றது.

எண்ணத்தால் எடுக்கும் ஞான வளர்ச்சியின் வாழ்க்கை நெறி முறைச் செயல் உணர்வுகளில்… “எண்ண ஈர்ப்பை” நாம் செலுத்தும் உணர்வின் வலு அணுக்களைத்தான் இந்தப் பிம்பக் கூடு வளர்த்து “அந்த வளர்ப்பின் வலுவைத்தான்…” இந்த ஆத்மா பெறுகின்றது.

1.செடியின் ஆரம்ப வித்துத் தன்மை வளர வளர அதனின் பலன் பலவாக முற்றித் தருவதைப் போல
2.எண்ண ஈர்ப்பால் நாம் எடுக்கும் வலுத் தன்மையை இந்த ஆத்ம உயிரும் எடுத்துக் கொள்கின்றது.

இந்த ஆத்ம உயிரின் வலுத் தன்மையானது உணர்வின் ஈர்ப்புச் செயல் நிலைக்கொப்ப எல்லாம் வலு ஏறுகின்றது. நாம் சொல்லக்கூடிய ஜெப முறையாலும் தியான முறையாலும் மட்டும் வலு ஏறுவது என்பதல்ல.

இவ்வாத்ம உயிரின் வலு இவ்வுணர்வின் எண்ண ஈர்ப்பின் செயல் வலுவை எதன் வழியில் செலுத்தி வீரிய குணம் பெற்றிருந்தாலும் அதன் குண நிலைக்கொப்பவே வளரும்.

ஆக… தீய வழிகளில் செல்லும் ஆவேச அலை ஈர்ப்பில் உள்ளவர்களின் உயிராத்மாவின் வலுத் தன்மையும்… இதன் ஈர்ப்புப் பிடியில் வலுவாகிச் செயல் கொள்கின்றது.

அதே போல இந்த உணர்வின் ஈர்ப்பு வீரத்தின் செயலைச் சாந்த குண ஞான வழிக்குச் செலுத்தினாலும்… அசுர குண வஞ்சனையில் இவ்வீரத்தைச் செலுத்தினாலும்… இவ்வலை ஈர்ப்பு காந்த சக்தியின் வலுத் தன்மையை இவ்வுயிராத்மா எப்படி வலுவாக்கிக் கொள்கின்றதோ அதைப் போன்ற அசுர குண ஈர்ப்பு நிலைக்கும் வலு கூடுகின்றது.

இதை உணர்ந்து..
1.இந்த மனித உடலில் நாம் வாழும் காலத்தில்
2.நம் ஆத்ம உயிருக்குச் சேமிக்க வேண்டிய உயர் ஞான சக்தியை எடுத்து விளையச் செய்து
3.அந்த முற்றலாக நாம் ஒளி சரீரத்தைப் பலனாக எடுக்க வேண்டும்.

புவி ஈர்ப்பின் பிடியிலிருந்து விடுபட வேண்டும்

புவி ஈர்ப்பின் பிடியிலிருந்து விடுபட வேண்டும்

 

இப்புவியின் நாதம் ஓ…ம்… என்ற நாதம் அமிலமானது… சுவை கொண்டு பால்வெளி மண்டலத்தில் மிதந்துள்ள அமிலத்தின் சுவை சேர்க்கையின் கனம் கொண்டு தன் ஈர்ப்பின் சுழற்சி சக்தியிலேயே அந்தச் சுவையின் ஒளி பிறக்கின்றது.

அமிலச் சுவையின் ஒளி ஈர்ப்பாகி ஒளியாகின்றது. உயிர் அணு பிறக்க சுவையின் ஒளி கொண்ட ஒளியான அணு பிறக்கின்றது.

இந்த வழித் தொடரின் நிலைக்கொப்பச் சுவை.. குணம் வளர்ச்சியின் ஒலி கொண்டு ஒளியாகி… வழி பெறும் ஒவ்வொரு தன்மையிலுமே… இயற்கை வளர்ச்சி ஒவ்வொன்றின் ஈர்ப்பிற்கும் அந்தத் துடிப்பின் நாதம் பிறக்கின்றது.

சுவையில் எப்படி ஒன்றை ஒத்து ஒன்று இல்லையோ அதைப் போன்றே இவ்வொலியும் ஒன்றுக்கொன்று மாறிய நாதமாகத்தான் பிறக்கின்றது.

செயற்கையின் சேர்க்கைப் பொருள் கொண்டு வாகனங்களில் அதனதன் உலோகச் சேர்க்கையின் நிலைக்கொப்ப மாட்டு வண்டிக்கும் புகை வண்டிக்கும் மிதி வண்டிக்கும் விமானத்திற்கும் நாத ஒலி மாறுபடுகின்றது.
இது ஒவ்வொன்றையும் பிரித்துக் காட்டுவதன் பொருள்…
1.செயற்கைச் சேர்க்கைப் பொருளைப் போன்றே
2.இயற்கைச் சேர்க்கையின் ஒலி நாதமும் மாறுபடுகின்றது.

ஞான வளர்ச்சிக்கு ஆத்ம ஜெபத்தால் உயர் ஞான தியானமாக ஒவ்வொரு சக்தி அலையின் ஒலி அலையையும் இந்த ஆத்ம உயிருக்கு எடுக்க வேண்டியுள்ளது.

அணுவுக்குள் அணுவாக பல சுவை முலாமைச் சித்தர்கள் தன் உயிராத்மாவிற்குச் சேமிக்கின்றனர் என்று ஏற்கனவே சொன்னேன்.

அதே போல் எண்ணத்தால் எடுக்கும் ஒலியின் நாதத்தைத் தியானத்தில்
1.சப்தரிஷிகளின் அவரவர்களுக்கு உகந்த சூட்டப்பட்ட நாமகரணத்தின் நாதத்தை
2.அகஸ்தியர் போகர் வியாசகர் வான்மீகி கொங்கணவர் கோலமாமகரிஷி இவர்கள் பால் எண்ணத்தைச் செலுத்தி
3.நாம் எடுக்கும் ஜெபத்தால் அவர்களின் நாத ஒலியை நம் ஆத்ம உயிரும் எடுத்துக் கொள்கின்றது.

மேலும் நம் சூரிய குடும்ப வளர்ச்சி கொண்ட உயர் சக்திகளின் மண்டல ஈர்ப்பின் ஒலியையும் எண்ணத்தின் ஈர்ப்பு கொண்டு எடுக்கும் சுவாசத்தால் அந்தந்த மண்டலங்களின் அதற்குகந்த ஒலிகளையும் நம் ஆத்ம உயிர் சேமித்துக் கொள்கின்றது.
1.நாம் எடுக்கும் ஜெபத்தால் இவ்வுயிராத்மாவின் சக்தி கூடினால் தான்
2.“எந்த மண்டலத்திற்கும் செல்லலாம்…!” என்று ஏற்கனவே சொன்னேன்.

ஆக எண்ணத்தால் எடுக்கும் ஒலி சேமிப்பின் தொடர் வளர்ச்சி விகிதத்திற்கொப்பத்தான் இந்தப் புவி ஈர்ப்பின் பிடியிலிருந்து எந்த மண்டலத்திற்கும் செல்லத்தக்க சக்தி இவ்வொளி ஈர்ப்பினால் (தியானத்தில்) கிட்டுகின்றது.

மெய் ஞான ஈர்ப்பின் பக்தி பூண்ட பெரியோர்களின் ஆத்ம உயிரின் சேமித ஒளி சக்தியினால் தான் சிலரின் சொல்லாற்றல் சக்தியே… உயர்ந்த சொல்லாக வெளிப்பட்டு அந்தச் சொல்லின் செயல் நடப்பது பலிதம் கொள்வது எல்லாமே…!

சுவையின் தன்மைக்கே இவ்வொலிச் சேர்க்கை கொண்டு தான் வலுக்கூடுகின்றது.
1.எந்தெந்த எண்ணத்தில் எல்லாம் சுவாசம் எடுக்கின்றோமோ
2.அச்சுவாசத்தால் பிறக்கும் ஒலி.. ஒளியைக் கொண்டுதான்
3.இவ்வாத்ம உயிரின் நிலை உயருகின்றது.

இதன் நிலைக்கொப்பத்தான்… ஜெப முறை கொண்டு தியானத்தில் எண்ணத்தை எவ்வலை ஈர்ப்பு செயலில் செலுத்துகின்றார்களோ… அதன் ஒலி ஈர்ப்பைச் சித்து நிலை பெற்ற தன்மை கொண்டு… உடலுடன் வாழும் காலத்திலேயே ஒவ்வொரு மண்டலத்தின் ஒலி ஈர்ப்பையும்… தன் எண்ணத்தால் செலுத்தும் தியானத்தால்… ஆத்ம உயிரின் வளர்ச்சிக்கு ஒலி முலாமை ஏற்றார்கள் அன்றைய சித்தர்கள்.

இப்பொழுது உணர்த்தப்படும் முறைகள் எல்லாமே… ஒவ்வொரு மனிதனும் இந்தப் புவி வாழ்க்கைதான் வாழ்க்கை என்ற “இச்செயற்கைப் பிடியிலிருந்து… மீண்டிடக் காட்டப்படும் முறைகள் ஆகும்…!”

ஞானிகள் வைத்த காரணப் பெயர்கள் – கடவுள் தெய்வம் ஆண்டவன் இறைவன்

ஞானிகள் வைத்த காரணப் பெயர்கள் – கடவுள் தெய்வம் ஆண்டவன் இறைவன்

 

புருவ மத்தியில் இருக்கும் உயிர் நமக்குள் நின்று ஓ..ம். என்று இயங்கிக் கொண்டே உள்ளது. அந்த இயக்கத்திற்குப் பெயர் தான் ஓம் என்று ஞானிகள் காட்டினார்கள்.

நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அதையும் ஓ என்று ஜீவணுக்களாக மாற்றி நம் உடலாக… நமதாக… சிவமாக… இணைத்து விடுகின்றது. அதனால் தான் ஓம் நமச்சிவாய என்று சொல்வது.

நமது உயிர் ஓ…ம் என்று இயங்கிக் கொண்டிருப்பினும்
1.நாம் எண்ணும் எண்ணங்கள் அனைத்தும் ஓம் என்று அதுவும் இயங்கத் தொடங்குகிறது
2.நம் உடலுக்குள் ஓ…ம் ஓ…ம் ஓ…ம் என்று எண்ணிலடங்காத ஜீவணுக்கள் இயங்கிக் கொண்டே உள்ளது
3.ஜீவான்மாக்களும் இயங்கிக் கொண்டே உள்ளது என்று மெய் ஞானிகள் தெளிவாகக் காட்டினார்கள்.

ஆகவே கடவுள் என்பதையும் தெய்வம் என்பதையும் குரு என்பதையும் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதே நலம்.

நமது உயிர் நமது உடலுக்குள் நின்று ஓ…ம் என்று இயங்கி நாம் எண்ணியது அனைத்தும்
1.“உள் நின்று” (கட+வுள்) ஒவ்வொன்றையும் உருவாக்கிக் கொண்டே உள்ளது.
2.ஆகவே நமக்குள் “கடவுளாக…” இயங்குகின்றது என்று காரணப் பெயரைச் சூட்டுகின்றார்கள் மெய் ஞானிகள்.

அதே சமயம் நாம் எந்தெந்தக் குணங்களை எடுக்கின்றோமோ அந்தக் குணத்தின் தன்மை நமக்குள் இயங்கத் தொடங்கும் பொழுது அந்தக் குணத்திற்குப் பெயர் “தெய்வம்…” என்றும்
1.அந்தத் தெய்வ சக்தியாக நமக்குள் இயக்குகிறது என்றும்
2.நம்முள் நின்று அக்குணத்தின் தன்மையாக இயங்குவதை கடவுள் என்றும் காரணப் பெயரைச் சூட்டி உள்ளார்கள் ஞானிகள்.

நமது உயிர் ஓ…ம் என்று இயங்கி நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தையும் நம் உடலாக ஆக்கினாலும் எத்தனையோ வகையான குணங்கள் நமக்குள் பதிவு உண்டு

அந்தக் குணங்கள் அனைத்திற்கும் உயிரே “குருவாக…” நின்று இயக்கிக் கொண்டுள்ளது..
1.இந்த உடலுக்குள் இருக்கும் அனைத்து குணங்களையும் இயக்கிக் கொண்டிருப்பதும்
2.அதை ஆண்டு கொண்டிருப்பதும் நமது உயிர்… “ஆண்டவா…!”

ஆக நம்மை ஆள்வது யார்…? நமது உயிர்…! ஆண்டவா என்று அந்தந்தஸ் சந்தர்ப்பத்திற்கு ஒப்ப நமது ஞானிகள் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள் நாம் அறிந்து கொள்வதற்கு…!

நாம் எண்ணும் எண்ணங்கள் நம் உயிருக்குள் அது இயக்கப்பட்டு ம்… என்று உடலாக அமையப்படும் பொழுது “இறைவா…!”

நாம் எண்ணியது அனைத்தும் இறை(ரை)யாகி அந்த உணர்வின் செயலாகத் தெய்வமாக நமக்குள் இயங்குகின்றது என்பதை உணர்த்துவதற்கு இறைவா…! என்றும் அதனின் செயலாக்கங்கள் எதை இறையாக்குகின்றதோ அந்தக் குணத்தின் செயலாக்கத்தைத்தான் தெய்வம்…! என்றும் தெளிவாகக் கூறியுள்ளார்கள் மெய் ஞானிகள்.

கடுமையான நஞ்சுகளையும் முறிக்கும் சக்தி

கடுமையான நஞ்சுகளையும் முறிக்கும் சக்தி

 

கருடன் என்ற பறவையை எடுத்துக் கொண்டால் அதனுடைய கூட்டிலே நாம் ஒரு இரும்புச் சங்கிலியை “விலங்கு போடுவது போல்” முடிந்து வைத்து விட்டால் அது என்ன செய்யும்…?

கூட்டிலிருக்கும் தன் குஞ்சுகளை மீட்டுவதற்காக அலைந்து திரிந்து
1.சில செடிகளின் விழுதுகளை அல்லது அந்தக் காம்புகளை எடுத்து அந்தச் சங்கிலி மீது வைத்து அதைத் தெறிக்கச் செய்துவிடும்.
2.இது கருடன் கண்ட உபாயம்… இரும்பு உலோகங்களைக் கத்திரிக்கும் திறன் பெற்றது.

ஆனால் கருடனுக்கு இந்தச் சக்தி எப்படிக் கிடைத்தது…?

புழுவிலிருந்து மனிதனாக வளர்ச்சி பெற்று மனிதனாக ஆன பின் மீண்டும் மடிந்து மடிந்த நிலைகளிலிருந்து “அவன் பட்சிகளாக உருவானால்…” இவனுக்குள் உருவாகிய இந்த உணர்வின் அணுக்கள் அது உணவாக உட்கொள்ளும் பொழுது “அந்த உணர்வின் ஞானங்கள்…” அங்கே கிடைக்கின்றது.

மனிதனாகிப் திருப்பிப் பட்சியாக வந்த பின்…! மனிதனுக்குண்டான சிந்தனைகள் எல்லாம் அந்தப் பட்சிக்கு உண்டு.

எப்படி…?

காடுகளில் மனிதன் ஒரு விஷத்தால் தாக்கப்பட்டுத் தேய்பிறையாகி அவன் மடிந்து கிடந்தால் அந்த உடலிலிருந்து வந்த விஷத்தின் தன்மை மற்ற தாவர இனங்களில் இது கலந்துவிடும்.

விஷம் தீண்டி மடிந்த இவன் உடலில் இருந்து வெளிவரக்கூடிய உணர்வின் அலைகள் படர்ந்து வருவதைச் சூரியனுடைய காந்த சக்தி எடுத்து கவர்ந்து வைத்துக் கொள்கிறது.

அதே சமயத்தில்
1.மற்ற சாந்தமான தாவர இனங்களின் சத்து சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டுப் பரவி வருவது இதைக் கண்டு அஞ்சி ஓடுவதும்
2.இன்னொரு விஷமான செடியின் மீது அது மோதும் சந்தர்ப்பத்தில் சுழற்சி ஆகுவதும்
3.சுழற்சியான பின் தனக்குள் கவர்ந்து கொண்டு புது விதமான தாவர இனச் சத்தாக செடியாக விளைகின்றது.

ஏனென்றால்… பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக ஆனபின் ஒரு விஷம் தீண்டி மனிதன் மடிந்தால் இவன் உடலில் இருந்து வரக்கூடிய மணம் மற்ற தாவர இனச் சத்துக்களுடன் கலக்கப்பட்டு… இரண்டறக் கலந்து ஒரு வித்தாக உருவாகி நிலத்தில் பட்டு விட்டால்… கடும் விஷத்தையே முறிக்கும் சக்தி பெறுகின்றது.

இதைத் தான்… அந்த விஷத்தை முறிக்கக் கூடிய சக்தியைக் கருடன் கண்டுள்ளது. அதாவது.. உலோகங்களில் இந்த்த் தாவர இனத்தின் சத்து பட்டபின் அது பலவீனமாகி… அந்த உலோகம் தெறிப்பதையும் அது கண்டுள்ளது.

ஏனென்றால் மனிதனாக ஆன பின் இவனுக்குள் விளைய வைத்த சத்துக்கள் தாவர இனத்துடன் கலக்கப்பட்டு இது பட்சியானாலும் கூட…
1.அதற்குள் இருக்கக்கூடிய உணர்வு (ஞானம்) சிக்கலில் இருந்து தீர்க்கும் நிலையாக வருகின்றது
2.இது பட்சி இனமாகத்தான் இருக்கின்றது… ஆனால் இதற்கு எப்படி இந்த அறிவு வந்தது…? என்று குருநாதர் காட்டுகின்றார்.

இதே போல் தான் கீரிப்பிள்ளை மீது பாம்பின் விஷம் தீண்டப்பட்ட பின் அது ஓடிச் சென்று அதை முறிக்கும் அந்தத் தாவர இனத்தில் பிரள்கிறது. அந்த மணங்களை நுகர்கிறது. நுகர்ந்து அந்த விஷத்தை நீக்கிய பின் அந்தப் பாம்பினை மீண்டும் அது தாக்குகிறது.

இது போன்று தான்
1.”ஒரு உயிரணு” தனக்குள் கவர்ந்து கொண்ட உணர்வின் அணுக்கள்
2.மாறி மாறிப் பல விதமான ஒரு சக்திகள் பெற்று வளர்ச்சிக்கு வருகின்றது.

இப்படி எல்லாவற்றையும் கடந்து மனிதனாக உருப்பெற்ற பின் இத்தகைய தாவர இனங்களுடைய சக்திகளைப் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் காடுகளில் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் கண்டறிய நேர்கிறது.

அந்த வழியில் தான் அகஸ்தியன் சர்வ நஞ்சுகளையும் ஒடுக்கிடும் சக்திகளைப் பெற்றான்… ஒளியாக மாற்றிக் கொண்டான்.

எண்ணத்தைக் கொண்டு எந்த மண்டலத்திற்கும் தன் உயிரைச் செலுத்த முடியும்

எண்ணத்தைக் கொண்டு எந்த மண்டலத்திற்கும் தன் உயிரைச் செலுத்த முடியும்

 

விக்கிரமாதித்தனின் கதையில் வரும் நிலை யாவையுமே கதையல்ல… உண்மைத் தன்மை உடையது…! விக்கிரமாதித்தன் பூஜித்த உஜ்ஜயினி காளியானவள்… பெண்ணாகப் பிறப்பெடுத்து ஞானத்தால் வளர்த்த சப்த காளியப்பா அவள்.

அவளின் வழித் தொடரைப் பிடித்தவன் தான் விக்கிரமாதித்த மகாராஜா. அக்கதையில் உள்ள யாவையுமே ஒரு சில மாறியிருந்தாலும் உண்மை நடப்புகள் தானப்பா அவை யாவுமே…!

அரசாண்டவனின் ஞானம்… சித்து நிலை பெற வழி வந்ததின் தன்மை பக்தி பூண்டு… பூஜித்துப் பூஜிப்பின் பலனால் அக்காளியின் ஞான அலைத் தொடர்பைப் பெற்று… அக்காளியின் செயலாகவே சித்து நிலை பல பெறும் தன்மைக்கே விக்கிரமாதித்தன் ஆளானான்.

காடாறு மாதம்… நாடாறு மாதம்… என்ற நிலையில் காடுகளில் வாழ்ந்த காலத் தன்மையில் தன் ஆத்ம உயிருக்கு வேண்டிய வலுத் தன்மையை… ஞானத்தின் வழியான சித்து மார்க்கம் பெறுவதற்காகவும் பல செயல்களை அறியவும் அணுவுக்குள் அணுவாக அணுவின் தன்மை முலாமை எல்லாம் தன் உயிராத்ம வலுவுக்கு ஏற்றிக் கொண்டான்.

இந்தப் பூமியின் கனி வள விகிதமானது ஏழு குணத் தன்மை கொண்டது. அதன் வளர்ச்சி கனி வளங்களின் தன்மை ஒவ்வொன்றில் பலவாக வளர்ந்துள்ளது.

வண்ணமும் ஏழு… சுவை குணங்களும் ஏழு… என்று சொல்கிறோம். இந்த ஏழின் தன்மை எதன் குண நிலை அடிப்படையில் கலவை பூண்டது…?

ஆவியாகிக் கனம் கொண்டு ஜீவனாகிச் சுழலும் இயற்கைத் தன்மையில் இவ் ஈர்ப்பின் இயற்கை நிலைச் செயலுக்கொப்ப
1.பால்வெளியின் கூட்டுக் கலவை அமிலத்தின் “குறிப்பிட்ட செயல் சேர்க்கையின் தன்மையில்”
2.சக்தி பெற்ற சப்தரிஷி மண்டலம் என்று உணர்த்துகின்றார்கள் அல்லவா…!
3.அவர்களின் ஈர்ப்பு வளர்ப்பு நிலை தான் (படைப்பு) இந்தப் பூமியின் தன்மை குணம்.

சுவையும்… வண்ணமும்.. மணமும் ஏழாக… ஈர்ப்புக் கூட்டுக் கலவைச் சேர்க்கை ஜீவன் கொண்ட சிவ சக்தி என்ற ஆண் பெண்ணின் செயல் கொண்டு உருவானது தான் இந்தப் பூமி.

பூமியின் குணத்தைச் சிருஷ்டித்து வழி நடத்தும் ரிஷிக் குணத்தில் ஒவ்வொருவர் பெற்ற தனித் தன்மையின் சக்தியை ஒன்றாக்கி வளர்த்த தன்மை தான் இந்தப் பூமியின் தன்மை.

1.இப்படி எத்தன்மை பூண்டு இந்தப் பூமி உருவானதோ…
2.அதன் கலவைக் கூட்டில் எல்லாம் தன் ஆத்ம உயிரைச் செலுத்தி
3.தன் வலுவை இந்தப் புவி ஈர்ப்பின் வலுவிலேயே தன் வலுவைக் கூட்டி
4.எந்த வலுத் தொடர்பைத் தந்து ஏழு குணச் சேர்க்கையில் இந்தப் பூமி உருவானதோ – அந்த ஏழில் முலாம் பெற்ற சித்தன்
5.இவ்வேழுக்கு மேல் சக்தி கொண்ட வலுச் சக்தியான பிற மண்டலங்களின் சக்தியுடன்
6.எந்தச் சக்தியையும் உருவாக்க வல்ல பத்தாவது நிலையான ரிஷித் தன்மை கொள்கின்றான்.

கங்கைத் தீர்த்தம் புனிதமானது… என்றும் இதை ஒட்டிய ஒவ்வொரு தீர்த்தத்திலும் தான் குளித்தெழுந்தால் புண்ணியம் என்றும்… புண்ணியத் தீர்த்தங்களை நாடி மனிதன் சென்று அங்கே குளித்து இந்த உடல் பிம்பத்திற்குப் புனிதம் என்று நீராடி வருகின்றான். இது பக்தி மார்க்க முறை.

ஆனால் இந்த எண்ணத்தை
1.இந்தப் பூமியின் சக்தி அலையான அமிலத் தீர்த்தத்தில்
2.தன் ஆத்ம உயிரையே குளிக்கச் செய்தானப்பா அன்றைய சித்தன்.

பக்தி மார்க்கமும் ஜெப முறையும் வழி காட்டிகள் தான். வழியின் வலு அறிந்து தியானத்தால் ஞானம் பெற வேண்டும்.

ஆகவே இந்தப் புவியில் பிறந்த பல கோடி எண்ண ஆத்ம உயிர்களின் ஈர்ப்புப் பிடி அலைச் சுழற்சியில் இருந்து…
1.இந்தப் புவி ஈர்ப்பின் உணர்வில் சிக்காத வண்ணம்
2.தன் ஆத்ம உயிரின் ஈர்ப்பிற்குத் தன் உணர்வின் எண்ணமானது
3.நாம் எடுக்கும் தியானத்தால் உயர் ஞானம் கொண்டு மாமகரிஷிகளின் அலை ஈர்ப்பின் செயலாக ஒன்றிட வேண்டும்.

இந்த மனித பிம்ப ஆத்ம உயிரின் நுண்ணிய காந்த ஈர்ப்பின் அலை சக்தி வளர்ப்பினால் இந்தப் புவி ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபட்டுச் சென்ற மகரிஷிகளின் அலைத் தொடர்பில் வலுத் தொடர்பு கொண்ட பின்
1.தன் எண்ணத்தைக் கொண்டு
2.எந்த மண்டலத்திற்கும் தன் உயிரைச் செலுத்த முடியும்.

சப்தரிஷி மண்டலத்துடன் இணையும் ஆற்றல்

சப்தரிஷி மண்டலத்துடன் இணையும் ஆற்றல்

 

அகஸ்தியனும் அவர் மனைவியும் இருவருமே நம் பூமியின் துருவத்தின் வழி வரும் உணர்வுகளை அது தாவர இனங்களாக மாறுவதற்கு முன் அதன் உணர்வின் ஒளி அலைகளை நுகர்ந்தறிகின்றனர்.

1.துருவத்தில் எண்ணத்தைச் செலுத்தி… பிரபஞ்சத்திலிருந்து வரும் உணர்வினைத் தனக்குள் பெற்று
2.தன் வளர்ச்சியின் முதுமையில் இருவரும் ஒன்றாக இணைந்து
3.அவருடைய தாய் தந்தையரின் உயிரான்மாக்களும் இவர்களுடன் இணைந்து
4.உடலை விட்டுச் சென்ற பின் “ஓர் குடும்பமாக… முதல் துருவ நட்சத்திரமாக அமைக்கப்படுகின்றது…!”

இருவரின் உயிரான்மாக்களும் அங்கே சென்றபின் இவர்கள் உடலுடன் இணைந்த தாய் தந்தை உயிரான்மாக்களும் துருவத்தைச் சென்றடைகின்றனர். அடைந்தபின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சேர்க்கப்படும் போது ஆறாவது அறிவின் தன்மை… ஏழாவது நிலைகள் அடைந்து “சப்தரிஷி மண்டலங்களாக அமையப்படுகின்றது…”

அவர்கள் முதலில் துருவ நட்சத்திரமாக ஆனபின் அவர் ஆற்றலின் துணை கொண்டு தாய் தந்தையர்களும் அவருடைய ஈர்ப்பு வட்டத்திலேயே சுழலத் தொடங்குகின்றார்கள்.

அதன் வளர்ச்சி கொண்டு அக்காலங்களில் துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகளை நுகர்ந்தவர்களும்… அதைப் பின்பற்றியோரும்… உடலை விட்டுப் பிரிந்த பின் அவர்கள் செய்தது போன்றே இவர்களும் சப்தரிஷி மண்டலங்களாக அமைந்து வளர்ச்சி பெற்று (முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களாக) வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால்…
1.இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் இவை அனைத்தும்… ஏன் நான்காயிரம் ஆண்டுகள் என்று கூடச் சொல்லலாம்
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணையும் சக்திகள் மனிதனில் குறைவாகி குறைவாகி குறைவாகித் தேய்பிறையாக ஆகி… இன்று மறைந்து விட்டது.
3.வான்மீகி வியாசகர் போன்றவர்கள் கடைசியாக விண் சென்றார்கள்.
4.அதற்குப்பின் ஒன்றொன்றாகக் குறையப்பட்டு… விண்ணுலகம் செல்லும் தன்மைகள் குறைந்து விட்டது.

அரசர்கள் என்ற நிலை முதலில் உருவானதும் அவர்கள் இட்ட சட்டங்களைத் தான் பின் வந்தோர் சிற்றரசர்கள் பேரரசர்கள் என்று உலகெங்கிலும் பரவத் தொடங்கியது.

மனித உடலின் இச்சைக்கும் சுகபோகங்களுக்கும் இது மாற்றப்பட்டு… அதற்குப் பின் விண்ணுலகம் செல்லும் ஆற்றலைப் பெறும் தகுதிகள் இழக்கப்பட்டு விட்டது.

மனிதனில் உயர்ந்த நிலை பெற்றவர்கள்…! என்று
1.அதிலே மந்திரங்களைச் சொல்லித் தன் வாழ்க்கையில் பெருக்குபவர்களை…
2.கடவுளாக எண்ணியும் ரிஷிகளாக எண்ணியும் திசைகள் மாற்றப்பட்டு
3.இன்றளவிலும் விண்ணுலகம் செல்லும் நிலைகள் மறைந்தே போய் விட்டது.

நமது குருநாதர் இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்தவர்…!

அன்று அகஸ்தியன் துருவ மகரிஷியாகி விண்ணுலகம் எவ்வாறு சென்றார்…? என்ற நிலைகளை அறியும் வாய்ப்புகள் பெற்ற பின்… அதன் வழி கொண்டு அவருக்குண்டான உணர்வின் துணை கொண்டு
1.விண் செல்லும் மார்க்கங்களை எனக்கு (ஞானகுரு) உபதேசித்து
2.எவ்வாறு விண் சென்றார்…? என்ற அந்த முறைகளையும் எனக்கு உபதேசித்தார்.

குருநாதர் உடலை விட்டுப் பிரியும் சமயம் உற்றுப் பார்க்கும்படி செய்தார் குருநாதர்…!
1.சப்தரிஷி மண்டலத்துடன் அவர் இணையும் ஆற்றலையும்
2.அவர் உடல் பெறும் உணர்வுகள் அங்கே எவ்வாறு கரைகின்றது…? என்பதையும் காட்டுகின்றார் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்.

இப்பொழுது தற்காலத்தில் (1971) விண் சென்றவர் தான் நம் குருநாதர்…!

அவர் உயிரான்மா எவ்வாறு விண் செல்கிறது…? என்று விண் செல்லும் மார்க்கங்களை உபதேசித்தார். அதற்கு என்ன உபாயங்களைச் செய்ய வேண்டும்…? என்றும் சொன்னார்.

அவரைப் பின் தொடரும் நிலையாக… இதை எப்படித் தனக்குள் பெருக்க வேண்டும்…? என்று அவர் காட்டிய அருள் வழிப்படி செய்கின்றேன்.

அன்று அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆன… அதன் வழிகளில் வெளிப்பட்ட உணர்வுகள் இங்கே உண்டு. அதைப் பின்பற்றியோர் சப்தரிஷி மண்டலங்களாக உருப்பெற்ற உணர்வுகளும் உண்டு

அதை எல்லாம் எப்படிப் பெற வேண்டும்…? என்று குரு உபதேசித்த வழிப்படி நுகர்ந்தறிந்து எனக்குள் விளையச் செய்தேன்.
1.அதன் உணர்வின் எண்ண அலைகளைப் பரப்பப்படும் பொழுது உங்கள் செவிப்புலனில் இது ஈர்க்கப்பட்டு
2.அதன் உணர்வின் துணை கொண்டு நீங்கள் அந்த விண்ணுலக ஆற்றலைப் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

மனிதனில் உயர்ந்து சென்ற அந்த மெய் ஞானிகள் தீமைகளை அகற்றிட்ட… அந்தத் தீமைகளை அகற்றும் உணர்வுகளை நுகரப்படும் போது தான்
1.நம் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறி
2.என்றென்றும் பிறவி இல்லை என்று அடையச் செய்யும் உணர்வுகள் இங்கே உருப்பெறுகிறது.

உயர்ந்த சக்திகளைப் பெறுவது என்பது “உயிர் வழி தான்…”

உயர்ந்த சக்திகளைப் பெறுவது என்பது “உயிர் வழி தான்…”

 

அன்ன பிண்ட உடலாக இஜ்ஜீவ உடலை வளர்த்துள்ள மனித இனச் சக்தியின் ஞானமும் அதன் செயற்கைப் பிடிப்புடனே சமைத்துண்டு இயற்கையின் பிடிப்பின்றி காற்று மழை வெயில் எதுவுமே தன்னைத் தாக்காமல் காத்துக் கொள்ள உறைவிடம் அமைத்து வாழத்தக்க வளர்ச்சி நிலையில் தான் இன்றைய (விஞ்ஞானம்) மனிதச் செயலே இருக்கின்றது.

ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதனுக்குகந்த பகுத்தறியும் ஞானத்தில் வளர்ந்து வந்ததையே
1.செயற்கையின் செயலின் வழியில் சில நூறு ஆண்டுகளாக வார்ப்புப் படுத்திவிட்டதனால்
2.இயற்கை உணர்வின் தன்மையைத் தன் ஞான உணர்வால் ஈர்க்க முடியவில்லையப்பா “இன்றைய மனிதனுக்கு…!”

சேவலிலிருந்து சில பட்சிகளும் நாய் நரி பூனை அனைத்துமே உலகச் சுழற்சியின் தன்மையைத் தன் சுவாச உணர்வில் அறிந்து கொள்ளும் திறன் கொண்டது தான். ஜாமக் கோழி கூவுகின்றது. அதே போல் அதிகாலையில் துயில் எழுந்து இரை தேடச் செல்கின்றன பறவை இனங்கள்.

சூரிய ஒளி உதயமாவதற்குள்ளேயே ஒளியின் தன்மையை மழை மேகம் மறைத்திருந்தாலும் இந்தப் பட்சிகள் எப்படி விடியலை அறிகின்றன…?

ஏனென்றால்…
1.இந்தப் பூமி சுழலும் சுழற்சித் தன்மையை மனிதனைக் காட்டிலும்
2.தன் உணர்வின் சுவாசத்தாலேயே அறியவல்ல தன்மை
3.சில தாவரங்களுக்கும் பட்சிகளுக்கும் பிராணிகளுக்கும் உண்டு.

ஐந்தறிவு கொண்ட மற்ற இனங்கள் சொல்லாற்றலும் செயலாற்றலும் இன்றி… இயற்கையுடன் ஒயற்கையாக ஒன்றி… இயற்கை உணர்வை அறிந்து கொள்கின்றன.

ஆறறிவு கொண்ட மனிதன் என்றுரைக்கப்படுபவன்.. செயலாற்றும் திறமை கொண்டவன்… சொல்லாற்றல் உடையவன்… விஞ்ஞான சக்தியைக் கொண்டு மனிதக் கருவையே தாயின்றி வளர்க்கச் செய்பவன்…
1.என்றெல்லாம் சொல்லப்படும் இன்றைய கலி மனிதன்
2.இந்த இயற்கைச் சுழற்சியைச் செயற்கைக் கருவிகள் கொண்டு தான் உணர்கின்றான்.

ஆனால் ஞானத்தால் உயர்ந்த அன்றைய சித்தர்கள் அணுவுக்குள் அணுவாகச் சித்து நிலை பெறத் தன் பிம்ப உடலின் ஆத்ம உயிரைப் பல மிருகங்களின் பல பட்சிகளின் ஆத்மாவுடன் இவ்வாத்மாவைக் கவசம் போல் அதன் ஈர்ப்பில் சென்று அதன் உடல் அமிலக் கூட்டின் முலாமையும் தன் உயிராத்மாவிற்குச் சேமிதம் செய்து வைத்துக் கொண்டார்கள்.

இதை உணர்த்தும் விதமாகத் தான் அந்தத் தெய்வீகக் குணத்திற்காகச் சிலை உருவிற்கு நாமகரணமிட்டு பல பல சிலையின் வடிவங்களைக் காட்டினார்கள்.

1.குண சக்தியின் வழியில் தெய்வ ஞானத்தை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு
2.அந்த அவதார மூர்த்திகளுக்குப் பாம்பையும் மயிலையும் சேவலையும் பசு பன்றி சிங்கம் புலி இவைகளையும்
3.இன்னும் பல பிராணிகளையும் வாகனமாகக் காட்டினார்கள்.

தன் உடலுக்குள் விளைந்த அமில முலாம் குண வளர்ச்சியின் ஈர்ப்பு விகித எண்ணச் செயலைக் காட்டிலும் இந்தப் புவி ஈர்ப்பின் வளர்ச்சி பெற்ற பல உயர்ந்த அமிலத் தன்மையின் வார்ப்புடன் தன் செயலைச் செய்விக்க
1.தன் ஆத்ம உயிரை அணுவுக்குள் அணுவாகச் சென்று
2.பிற வார்ப்பில் உள்ள அமிலச் சுவை முலாமையும் எடுத்து
3.தன் உயிராத்மாவிற்கு வலுவாக்கிக் கொள்கின்றான் ஞானத்தில் வளர்ந்த சித்தன்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இது நாள் வரை உணர்த்தியதெல்லாம் ஜெப முறையும் தியான வளர்ச்சிக்குகந்த ஞான வளர்ச்சி முறையும் தான்.

ஞானத்தால் உயர் ஞானம் கொள்ள இந்த உடல் முழுமைக்கும் உள்ள ஒவ்வொரு அணுவையுமே தன் ஞான வளர்ச்சியின் வழி செயல் வளர்க்க “ஆத்ம உயிரின் துணை கொண்டு தான்…” செயல்படுத்த வேண்டும்.

இவ்வாத்ம உயிரின் உயர் காந்த மின் அலை ஈர்ப்பு வளர்ச்சிக்கு
1.துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் வரும் அலைகளை
2.நேரடியாக உயிராத்மாவிற்குப் பாயத்தக்க செயலாக வழியமைத்தால்
3.அதன் மூலம் இந்தப் பிம்ப உடல் அணு வளர்ச்சியின் செயலாத்மாவாக இந்த உயிராத்மா உட்கொள்கின்றது.

மந்திர ஒலிகள் உருவாக்கப்பட்டதன் நோக்கம்

மந்திர ஒலிகள் உருவாக்கப்பட்டதன் நோக்கம்

 

அன்றைய அரசர்கள்… ஞானிகள் கொடுத்த வேதங்களைத் திரிபு செய்து விட்டார்கள். எப்படி…?

மழைக்காகக் குடை பிடிப்பது போன்று… “கடவுளுக்கு உரியவன்…” என்றும் உருவாக்கக் கூடியவன் “அவன் பிரம்மன்” என்றும் காரணப் பெயரைச் சூட்டி விட்டனர்.
1.அவன் மந்திரங்களை ஓதி ஒரு மனித உடலில் உருவாக்கத் தெரிந்து கொண்டவன்
2.அப்படி உருவாக்கிய பின் அவனே பிரம்மம் ஆகின்றான்
3.அவன் சொல்லை… அந்த மந்திரத்தை யாரொருவர் கேட்கின்றனரோ அதை அங்கே உருவாக்குகின்றான்.

அது உருவாக்கிய பின் அதே மந்திர ஒலி கொண்டு பல பல வேலைகளைச் செய்கிறான்.

நாம் எப்படி வெயிலுக்கும் மழைக்கும் ஒரு குடையைப் பிடித்து அந்த நேரத்தில் அதைத் தடுக்கின்றோமோ
1.இந்த வாழ்க்கையில் மந்திரத்தின் துணை கொண்டு
2.மற்ற மனித உடலிலிருந்து கட்டாயப்படுத்தி அந்த உணர்வுகளைத் தனக்குள் எடுத்து அதை இன்னொரு உடலில் பாய்ச்சி
3.அவன் உடலில் இருக்கக்கூடிய தீமைகளைச் “சிறிது காலம் அடக்க முடியும்…”
4.மீண்டும் மழை வந்தால்… குடையைப் பிடிப்பது போன்று தீமைகளை நீக்க அதே மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.

மந்திர ஒலிகள் கொண்டு அரசனால் உருவாக்கப்பட்ட நிலைகள் தான் அது. வாமன அவதாரம்… பிரம்மம் சிருஷ்டிக்க வல்லவன்…! என்று காரணப் பேரைச் சூட்டினார்கள் அரசர்கள்.

வேதங்கள் ஓதப்படும் பொழுது அதன் உணர்வின் ஒலிகளை நமக்குள் பதிவாக்கி விட்டால் “அவர்கள் சொன்னது…” நமக்குள் உருப்பெற்று விடுகின்றது.

அது நமக்குள் பதிவான பின் இறந்து விட்டால் அதே மந்திரத்தைச் சொன்னால் கட்டாயப்படுத்தித் தனக்குள் ஆன்மாவைக் கைவல்யப்படுத்திக் கொள்வார்கள். அவனுக்குத் தேவைப்படும் பொழுது… அரசன் தன் எதிரிகளை அழிக்க ஏவல் செய்கின்றான்.

பகைமை உணர்வு கொண்ட நிலையில் “குண்டர்களைத் தயார் செய்கின்றார்கள்…” இந்த நாடு உனக்குச் சொந்தம்…! என்றும் இந்த உணர்வின் ஒலிகள் உனக்குச் சொந்தம்…! என்று அமரச் செய்து மந்திர ஒலிகளைப் பாய்ச்சுகின்றான்.

இந்த நாட்டை நீ காவல் காக்கக்கூடியவன்… கருத்துக்களை நீ மேற்கொள்ளக் கூடியவன்… உன்னால் முடியும்…! என்ற உணர்வுகளை அவனுக்குள் ஓதி… “விஷத்தைக் கலந்து கொடுத்து…” அவன் வளர்ந்து வரும் போது தன் நாட்டின் பண்புகள் இது தான்…! என்று ஊட்டுகின்றார்கள்.

1.அவன் மரணம் அடையப்படும் பொழுது
2.இவனுக்குள் ஒலித்த மந்திரத்தைக் கொண்டு மீண்டும் அந்த மந்திரத்தால் ஜெபிக்கப்படும் பொழுது…
3.அவன் உடலில் விளைந்த உணர்வின் ஆற்றலை எடுத்து எதிரிகள் வரப்படும் பொழுது இந்த உணர்வுகளை ஏவல் செய்து
4.எப்படி இந்த உடலில் விஷத்தன்மை பாய்ந்ததோ இதைப் போன்று
5.உணர்வின் அலைகளை மற்ற மனிதர்கள் மேல் இந்த ஒலிகளை பாய்ச்சி அவர்களைச் செயலிழக்கச் செய்கின்றனர்.

இந்த வழிப்படி தான் ஆலயங்களில் யாகங்களைச் செய்வதும் மந்திரங்களைப் பதியச் செய்து அந்தப் பதிவின் தன்மையை எடுத்த பின் “தெய்வம் செய்யும்…” என்ற நம்பிக்கையை நமக்குள் ஊட்டும் பொழுது இது வசியம்…!

அவர்கள் சொன்னபடி நமக்குள் பிரம்மமாக உருவாகிறது. அப்படி உருவாக்கிய உணர்வுகள் எதுவோ அதன் செயலாகவே நம் எண்ணங்கள் உருவாகும்.

நாம் எதை எண்ணுகின்றோமோ… அதை நமது உயிர் அந்த உணர்வின் அணுவாக உருவாக்கப்படும் பொழுது… அந்த அணு மீண்டும் தன் இனத்தை உருவாக்கும்.

எதைப் பெருக்கியதோ அந்த உணர்வின் ஆற்றலை நமக்குள் பெருக்கப்படும் பொழுது அதனின் செயலாக பிரம்மமாக உருவாக்குகின்றது.
1.தெய்வத்தின் பெயரால்தான் இதை எல்லாம் செயல்படுத்துகின்றார்கள் நமக்குள் பதிவாகின்றது
2.யாகம் நடக்கும் இடத்தில் உட்காரப்படும் போது நமக்குள் அது பதிந்து விட்டால் அது நமக்குள் உருவாகி விடுகிறது.

அதே எண்ணத்தில் ஏங்கும் பொழுது “தெய்வம் செய்யும்…!” என்று அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்யப்படும் பொழுது…
1.நாம் எதைப் பெற வேண்டும்…?
2.நாம் எதை நீக்க வேண்டும்…? என்ற நிலைகளை மறந்து
3.அந்தச் சிலைக்கு நாம் இதை உணவாகக் கொடுத்தால் நமக்கு நன்மை செய்யும் என்ற எண்ணத்தைத் தான் கருத்தில் கொண்டு வந்திருக்கின்றோம்.

சாங்கிய சாஸ்திரங்களாக அரசன் வகுத்த நிலைகளில் குலதெய்வம் என்று அந்த வழிப்படித் தான் நாம் இயங்கிக் கொண்டுள்ளோம்.

ஞானிகள் காட்டிய வழியில் நாம் செல்லவில்லை…!

சாதாரண மனிதனுக்கு அவன் அவன் எடுக்கும் குணமே நல்லெண்ணமாக இருக்கும்… ஆனால் ஞானிகளுக்கு அப்படி அல்ல…!

சாதாரண மனிதனுக்கு அவன் அவன் எடுக்கும் குணமே நல்லெண்ணமாக இருக்கும்… ஆனால் ஞானிகளுக்கு அப்படி அல்ல…!

 

ஆரம்பப் பாட நிலையிலிருந்து உணர்த்தி வந்த முறையில் உயிரணுத் தோன்றி உயர் நிலை பெறும் வழித் தொடரிலெல்லாம்… எந்த உயிரணு எச்சுவை கொண்டு வளர்ச்சி பெற்றதோ… அதன் தொடர் நிலை கொண்டு ஒவ்வொரு வளர்ச்சி நிலையுடன் மோதுண்டு… அந்த உயிரணுவின் பலம் கூடி ஆதம நிலை கொண்டாலும்… “அதன் ஆரம்ப உணர்வின் சுவை கொண்ட எண்ண வழித் தொடரில் தான் அதனதன் குண நிலை அமைகிறது…” என்று உணர்த்தி வந்தேன்.

காரத்தின் சுவை… இனிப்பின் சுவை… புளிப்பின் சுவை… பல சுவை கொண்ட அதனதன் வளர்ப்பு உயிரணு மாறி வரும் ஈர்ப்பு வட்டத்திலும் தன் உணர்வின் வட்டத் தொடர்ச்சியிலே தான் வளர்ச்சி பெறுவதைப் போல் இவ்வடிமைத்த வளர்ப்புத் தொடரின் உணர்வெண்ண ஜீவ சக்தியிலும் குணத்தைக் கொண்ட வழித் தொடர் முலாமுடைய தன் தன் உணர்வின் எண்ண நிலை எந்தக் குணம் கொண்ட ஆத்மாவானாலும் “தன் வளர்ப்பின் உணர்வெண்ண குணம் தான்…”
1.அவரவர்களுக்கு அவர்கள் எடுக்கும் குணமே நல்லெண்ணமாக இருக்கும்.
2.எந்த ஆத்மாவும் தன் குண எண்ணத்தைத் தீயது என்றும் நியாயமற்றது என்றும் எண்ணுவதில்லை.
3.அவ்வார்ப்பின் ஜீவ உடல் உணர்வு குணம் தான் அவ்வுயிரணுவின் ஆத்ம வலுவால்
4..ஆரம்ப ஈர்ப்பு வழி முதல் கொண்டே வலுப் பெறுகின்றதப்பா…!
5..அவர் குணத்தை… அவர் நன்மையாகக் கருதிச் செயல்படுகின்றார்.
6.ஒவ்வொரு ஆத்மாவின் தன்மையும் இதுவே தான்…!

ஈர்ப்பலையின் உணர்வு சுவை கொண்ட தாவரமானது எண்ணப் பரிமாற்றம் அற்றது. ஒலி ஈர்ப்பு.. மற்றும் நடமாட்ட நிலை அற்றது.

மிருகங்களின் நிலையில் ஒலி பரிமாற்றச் செயல் இருந்தாலும் மனிதனின் நிலையை ஒத்த எண்ணப் பரிமாற்ற உணர்வு ஞான வளர்ச்சி செயல் முறை தாவரத்திற்கும் பிராணிகள் தன்மைக்கும் இல்லை.

தன் தன் உணர்வின் எண்ண குண நிலைக்கொப்ப பிறப்பிற்கு வந்தாலும் குழந்தைப் பருவம் முதல் கொண்டே தாய் காட்டும் பரிவும் தந்தை காட்டும் அன்பும் உடன் பிறப்புகளின் பாச உணர்வின் ஊட்டமுடன் ஆத்ம எண்ணத்திற்கு முந்தைய கால முன் ஜென்ம உணர்வு எண்ணமானது பிறப்பிற்கு வந்தவுடனே மனிதனுக்கு மறைந்து விடுகிறது.

அதனால் எப்பிறப்பு எடுத்து எத்தாய் தந்தை உணர்த்தி உருவாக்குகின்றார்களோ அதன் கூட்டு எண்ண உறவின் வழித் தொடரினால் பிறப்பெடுத்த நாள் கொண்டு வளர்ச்சிக் காலமெல்லாம் படிக்கும் பருவமும் விளையாடும் காலமும் தொழில் அறியும் முறையிலும் மண வாழ்க்கை உறவிலும் பெற்றெடுக்கும் செல்வங்களின் வளர்ப்பிலும் ஒவ்வொரு மனித ஆத்மாவும் இவ்வெண்ணப் பரிமாற்ற வளர்ச்சியுடன் ஒன்றியே வருகிறது.

இப்படி வருவதனால் தன் வார்ப்பின் குணத்தையே பிற எண்ணத்தின் வார்ப்புக் குணமுடன் பகுத்தறியும் செயலுடைய மனிதன்… தன் குணத்தில் தன் எண்ணத்தால் நன்மை என்று செய்வதையும் பிற எண்ணமுடன் தன் எண்ணம் மோதுண்டு தன் உணர்வின் ஈர்ப்பைச் செலுத்தித்தான் தன் வாழ்க்கையை நடத்திச் செல்கிறான்.

மனித வாழ்க்கையின் நிலை உள்ளதோடு மட்டுமல்லாமல் வழி வழியாக வந்த சமுதாய இனப் பிணைப்புகளும்… அதன் வழித் தொடர் கட்டுப்பாடுகளும்… அரசியல் சட்ட திட்டங்களின் ஒழுங்கு முறை விகிதப்பிடியிலும் தான்… மனிதனின் எண்ணப் பரிமாற்ற உணர்வு ஒன்றியுள்ளது.

இத்தர்ம நியாய சத்திய முறைகளை உயர்ந்த குணமாக்கி… உணவு உடை உறவு ஒவ்வொன்றிலுமே ஒழுக்க முறை வழித் தொடர் கொண்டுள்ள சமுதாயத்துடன் ஒன்றிய வாழ்க்கை கொண்ட மனிதன்…
1.தன் குண முறையையே நற்குண வழியில் செலுத்தினால்
2.நற்குணம் என்று சமுதாயத்தினால் வழிகாட்டப்பட்ட முறை வழித் தொடரின் வழி வந்த மனிதன்
3.குண முறையில் அவன் குண நிலைக்கொப்ப எண்ணத்தைச் செலுத்தினால் சமுதாயமே ஏற்பதில்லை.

இதை ஒத்த நிலையில் தான் அன்றைய காலத்திலேயே ஒவ்வொரு சித்தனும்… தன் உணர்வின் எண்ணத்தை ஞான வழி பூண்டு… சித்து நிலை பெறும் தன்மை கொண்டான்.

சித்து நிலையின் செயல் முறை எது…?

ஞான வழியில் எப்படி எண்ணத்தின் வளர்ச்சியால் ஞான வளர்ச்சி மோதலில்… எண்ணத்தைப் பலவற்றின் வாழ்க்கைச் செயல் ஒன்றி… தன் உணர்வின் ஈர்ப்பின் எண்ணத்திற்கு நற்குண வழித் தொடரினால்… ஞான ஈர்ப்பு எண்ண வளர்ச்சியில் செலுத்துகின்றோமோ அதைப் போன்று
1.சித்துத் தன்மையில் அணுவுக்குள் அணுவாக அணு ஈர்ப்புக் கலவைக் கூட்டுடன்
2.தன் உயிர் ஆத்மக் கலவையைப் பிற அணுக்களின் நிலையுடன் ஊடுருவி
3.அவற்றின் சக்தி வீரிய குண முலாமைத் தன் வலுவுக்கும் ஏற்றிக் கொள்கின்றான் சித்தன்.