ககனமணி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ககனமணி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மனிதன் ஞானியாக… தன் அறிவின் ஞானம் கொண்டு ஞானப் பாதையின் வளர்ச்சியில் உயர் ஞான எண்ணச் செயல்களைச் செயல்படுத்த வேண்டும் என்றால் அவன் கடைப்பிடிக்க வேண்டிய “சத்தியத்தின் சக்தி” என்பது எதுவப்பா…?

உயர் ஞானத் தத்துவப்படிச் செயல்படும் அனைத்திலுமே எண்ணம் சொல் செயல் செயலில் ஒரே நேர்கோடாகச் சத்தியத்தின் செயலாகப் பரிணமிக்க ஞானி தன் ஆக்கத்தின் ஆக்கமாகிய ஊக்கத்தில் செயல்படும் பொழுது சிவத்தைப் பெறுகின்றான். அந்தச் சிவம் என்பதே அன்பு தான்.

சத்தியத்தையும் சிவத்தையும் (அன்பையும்) கடைப்பிடிக்கும் செயலில் தன் உயிர் ஆன்ம ஜோதியை வளர்த்துக் கொள்ளும் மனப் பக்குவம் கொண்டிட்டால் அத்தகைய அழகு தான் சுந்தரம் என்பது.

சத்தியம் சிவம் சுந்தரம் பெறுதல் என்பதெல்லாம்… தான் கடைப்பிடித்து வரும் வழியில் “உயர்விற்கு வழி காட்டிடும் மார்க்கம் இது தான்…” என எண்ணத் தெளிவு கொண்டிடல் வேண்டும்.

உயிரான்மத் தத்துவத்தில் சரீரத்துடன் ஒட்டித் தன்னுள் சுற்றி ஓடும் ஒளி வட்டத்தின் பரிணாமம் தான்
1.“உயிர் சக்தியின் சக்தி ஓட்ட முறை…” என்பதை அறிந்து
2.உச்சி முதல் உள்ளங்கால் வரையிலும் மேலிருந்து கீழுமாக கீழிருந்து மேலுமாக
3.ஒரே சீரான ஒளி வட்ட அணுவின் சிவ பிம்பமாகச் சரீரத்தின் சுற்று வட்டக் குறுக்கோட்டத்தில் செயல்படும் மெய் ஒலி நாதத் தொடர்பில்
4.உள்ளிருந்து காந்த அமிலம் சக்தியாகச் சுழன்றிடும் ஓட்டச் செயல் உயிர் ஆன்ம ஒளி சக்தி – சுற்றி ஓடும் அந்த ஒளிக் காந்தத்தின் தொடரை அறிந்து
5.தன்னுடைய ஈர்ப்பின் வலுவால் எண்ணத்தின் வீரியம் கொண்டு புவி ஈர்ப்பை விடுத்து
6.காற்றில் எழும் சக்தியின் தொடர் கொண்டு இந்தச் சரீரத்தையே மிதக்க வைக்கும் தன்மை தான் “வாயு ஸ்தம்பம்…!”

சித்தர்களால் கண்டு பிடிக்கப்பட்ட அந்த நிலையில் இந்தப் புவி ஈர்ப்பின் பிடிப்பை விடுத்துச் சூட்சமம் கொண்டு விண்ணுக்குச் செல்லும் செயல் முறைக்குக் ககனமணி உள்ளதப்பா…!

இந்தச் செயல் முறையில் வானத்தில் ஒரு மண்டலமாக தனித் தன்மை வாய்ந்த… பிரகாசமான சக்தி கொண்டு… ஒளி பெற்று ஈர்த்து வளர்த்து சுழன்று ஓடி… “ஆதி சக்தியின் சக்தியாகச் செயல் கொண்டிடலாம்…!”

அலை வீசாத கடல் என்ற பால் வெளி மண்டல சூட்சமத்தில் வாழையடி வாழை என உயிரினங்களை வளர்க்கச் செயும் பூமிகள் உருவாகி அவை தன் ஈர்ப்பின் செயலுக்கு ஞானச் செல்வங்களை (மனிதர்களை) வளர்ச்சிப்படுத்துகின்றது.

தன்னையும் வளர்த்துக் கொண்டு உயர் ஞான ஆன்மாக்களை வளர்ச்சியுறச் செய்வதன் தொடர் நிலை எல்லாம் மூலத்தின் மூலத்தில் கலப்பதற்கே ஆகும்.

உடலில் உள்ள ஒளி காந்த சக்தியின் ஈர்ப்பின் வலுவால் விண் கோள்கள் விண்மீன்கள் அனைத்தையும் நேரடியாகத் தொடர்பு கொண்டு ஒலி கொண்டு ஒளி பாய்ச்சி ஒளி ஈர்த்திடும் அந்தச் செயல் முறைக்கும் சூட்சமம் உள்ளது.

1.சரீரம் ஈர்த்துச் சமைத்து வெளித் தள்ளும் சுழல் ஓட்ட வட்டச் செயலில்
2.தன் சரீரத்தைச் சுற்றிலும் ஒரு கவசமாக வீரிய காந்த வலுவை உள் நிறைத்து
3.வெளியிலிருந்து வரும் காற்று நம் சுவாசத்திற்குள் வந்து
4.அத்தகைய எண்ண அலைகள் தன் சரீரத்தின் ஈர்ப்பில் மோதிடாது ஒரு பக்குவத்தை ஏற்படுத்தி
5.வெற்றிடமாம் பூதியை (ஆவியாக) உருவாக்கிடும் செயலில் நம் உடலையே அது மிதக்கச் செய்திடுமப்பா.

உடலில் உள்ள கோடானு கோடி அணுக்களின் செயல் தன்மையால் பூமியின் ஈர்ப்பின் தொடர்புடன் இருக்கும் நிலையையே புவி ஈர்ப்பிலிருந்து விடுபட்டு மிதக்கும் தன்மையாக்க வான இயலின் சூட்சமப் பாடம் உள்ளது.

விண்ணிலே விஞ்ஞானத்தின் செயலில் (ISS) சுற்றி வரும் மனிதன் தன் உடலைப் பாதுகாத்திட தனக்கென்று ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திச் செல்கிறான் அல்லவா…! அந்தப் பாதுகாப்பு இல்லாமல் அங்கே இருக்க முடியுமா…?

அதே போல் கடலுக்குள் ஆழப்பகுதியில் செல்லும் மனிதன் தக்க பாதுகாப்புக் கவசத்தின் உதவி இல்லாமல் சென்றால் என்ன நடக்குமப்பா..?

நீரின் மேல் உள்ள காற்றழுத்தமும் நீரின் உள் அழுத்தக் கன பரிமாணமும் பூமியின் ஈர்ப்பு சக்தியும் இவன் உடலிலே மோதிவிட்டால் சரீரமே வெடித்துச் சிதறிவிடுமப்பா..! எவ்வளவு பாதுகாப்பு…? என்று பார்த்தாயா…!

அதைப் போன்று தான் வாயு ஸ்தம்பம் கொள்ளுதல் என்பது ஒரு பாதுகாப்புக் கவசமப்பா..! நம் உடலில் உள்ள உயிரணுக்களை ஒலி நாதம் கொண்டு தன் வசப்படுத்திடும் பக்குவ நிலைப்படுத்த வேண்டும்.

அவ்வாறு பெற்று விட்டால் நாம் செயல்படுத்தும் ஞானச் சித்துக்கள் தான் எத்தனை எத்தனை…? எல்லாவற்றையும் கடந்து ஒலியின் ஒளியாகப் பேரொளியாக மாறலாம்.

மகிழ்ச்சியாக இருக்கும் குடும்பத்திலோ அல்லது நண்பர்களிடமோ பகைமை எப்படி வருகிறது…?

மகிழ்ச்சியாக இருக்கும் குடும்பத்திலோ அல்லது நண்பர்களிடமோ பகைமை எப்படி வருகிறது…?

 

வாழ்க்கையில் குடும்பம் என்ற நிலையில் எவ்வளவோ அன்புடன் பண்புடன் வளர்ந்தாலும் சந்தர்ப்பத்த பேதத்தால் ஒருவர் ஒரு தவறைச் செய்து விடுகின்றார். உடனே சுர்.. என்று கோபம் வருகிறது.
1.ஒரு தடவை இப்படிக் கோபம் என்று நமக்குள் பதிவாக்கி விட்டால்
2.அடுத்த தரமும் அதே தவறைச் செய்தால் கோபம் எல்லை கடந்து விடுகிறது.

வேதனைப்படும் நிலைகள் ஆகி… நாசமாகப் போகிறவனே… ஏண்டா இந்த மாதிரிச் செய்கிறாய்…? என்று நம்மை அறியாமலே சாபமிடும் நிலை வந்துவிடுகின்றது. அவனைக் கெடுக்கும் உணர்வுகள் நமக்குள் வளர்ந்து விடுகின்றது.

இதைப் போன்று நம்மை அறியாது நம் குடும்பத்தில் வளர்ந்து விடுகிறது. இதிலிருந்து நாம் மீள்வது எப்படி…?

அதே போல்… தொழிலின் நிமித்தம் நாம் ஒருவருக்கு உதவி செய்கிறோம். கடனாகக் கேட்கிறார் என்று பணத்தைக் கொடுத்து உதவி செய்கிறோம்.

இத்தனை நாள்களுக்குள் திரும்பக் கொடுக்கின்றேன் என்று சொல்கிறார். ஆனால் மாதக் கணக்காகி விடுகின்றது. அப்பொழுது நம் மனதில் பணத்தைக் கொடுப்பானா… கொடுக்க மாட்டானா…? என்று எண்ணத் தொடங்குகிறோம்.

நம்முடைய இந்தச் சந்தேக உணர்வு அங்கே அவனுக்குள் இயக்கப்பட்டு நண்பரின் தொழில் வளர்ச்சியையும் தடைப்படுத்தும்.
1.அவனுடைய சந்தர்ப்பம் வருவாய் வருவதைத் தடுக்கும்.
2.பணத்தைக் கொடுக்க வேண்டுமே என்ற வேதனையும் வரும்.

கொடுக்க முடியவில்லை என்று ஏங்கிக் கொண்டிருக்கும் போது நாம் என்ன செய்கிறோம்.

இத்தனை நாளைக்குள் தருகிறேன் என்று பணத்தை வாங்கிச் சென்றாயே…! ஏம்ப்பா…! இன்னும் பணத்தைக் கொடுக்கவில்லை..? என்று வேகத்துடன் கேட்போம்.

சொல்லி வாங்கிச் சென்றாயே…! ஏன் இன்னும் உன்னால் கொடுக்க முடியவில்லை…? என்ற எண்ணத்துடன் கேட்போம். இந்த வெறுப்பின் தன்மை அடையப்படும் பொழுது பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் வேதனையை வளர்த்துக் கொள்கிறான்.

அதை நுகரப்படும் பொழுது நமக்குள்ளும் வேதனை உணர்வே வளர்ந்துவிடுகிறது. அப்போது நண்பனக இருந்தாலும் பகைமையாகி விடுகின்றது.

பகைமை உணர்வுகள் நமக்குள் வளர்ந்த பின் நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றிவிடுகின்றது. இதைத் தான் இந்திரலோகத்திற்குள் இரண்யன் புகுந்து இத்தகைய நிலைகளைச் செயலாக்குகின்றான் என்று காவியத்தில் காட்டுகின்றார்கள்.

அதை மாற்ற அதோ வருகிறான் நாரதன்…! என்று கண்ணன் (கண்கள்) காட்டிய வழிப்படி “ஈஸ்வரா…” என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

பின் நம்மிடம் கடன் வாங்கிச் சென்றவரை எண்ணி…
1.மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடல் முழுவதும் படர வேண்டும்.
2.அவருடைய தொழில்கள் வளம் பெறவேண்டும்
3.அவருக்கு நல்ல வருமானம் வர வேண்டும்
4.பணத்தைத் திரும்பக் கொடுக்கும் எளிதான நிலைகள் வர வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணினால் நம் எண்ணம் அவனைக் காக்கின்றது. அதே சமயத்தில் அவனின் உணர்வும் வலுவாகின்றது. பணத்தைத் திரும்பச் செலுத்தும் நிலை வருகின்றது.

இது போன்ற நிலைகளைக் கூட்டுத் தியானத்தில் கூட்டமைப்பாக நாம் எண்ணித் தியானித்து வலு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின் அதிகாலை துருவ தியானத்தில் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் பெற வேண்டும் என்று வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அடுத்து நம் வாழ்க்கையில் யாரை எல்லாம் பார்த்தோமோ அவர்கள் குடும்பங்களில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் வைரத்தைப் போல் அவர்கள் குடும்பம் ஜொலிக்க வேண்டும் அவர்கள் தொழில்கள் ஜொலிக்க வேண்டும். அவர்கள் குடும்பங்கள் நலம் பெறவேண்டும் என்று அவர்களை நாம் எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் அவர்கள் உணர்வெல்லாம் நம் உடலில் இருக்கின்றது. நமக்குள் அந்த உனர்வின் தன்மை விளையப்படும் போது அவர் பணம் திரும்பக் கொடுக்கவில்லை என்ற நிலையில் நம் உடலில் உருவான வேதனை அணுக்களுக்கு ஆகாரம் கிடைப்பதில்லை.

இதைப் போன்று ஒவ்வொரு நிமிடத்திலும் அந்த மகரிஷிகளின் ஆற்றலை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது நம் ஆன்மாவைத் தூய்மையாக்குகின்றோம்.

ஒவ்வொரு நாளும் நாம் வெண்மையான (தூய்மையான) உடையைத் தான் உடுத்துகின்றோம். ஆனால் காற்றிலிருக்கும் தூசி அதிலே பட்டபின் அதை இருளடையச் செய்துவிடுகின்றது.

இதைப் போன்று தான்…
1.நாம் நல்ல எண்ணம் கொண்டு வந்தாலும் பிறருடைய தீமையின் உணர்வை அறியத் தான் செய்கின்றோம்.
2.அந்தத் தீமையின் உணர்வுகள் நம் உடலுக்குள் சென்றால் தீமை செய்யும் அணுக்களாக விளைகின்றது.
3.இது இயற்கையின் நியதிகள்…!

ஆனால் மனிதனானவன் பிரம்மாவைச் சிறை பிடித்தான் என்ற நிலையில் இது போன்ற தீமைகளை அகற்றிவிட்டு தீமைகளை அகற்றிய அருள் ஞானியின் உணர்வை நமக்குள் நுகர்ந்து நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.

இதனைக் காட்டுவதற்குத்தான் விநாயகர் கையில் அங்குசத்தைக் கொடுத்தனர்… அங்குசபாசவா…! கார்த்திகேயா மனிதனான பின் ஆறாவது அறிவு கொண்டு இதை அடக்க முடியும். இதன்படி நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்த வேண்டும்.

ஆகவே எல்லோருடைய நிலைகளையும் மகரிஷிகளின் ஒளி கொண்டு நமக்குள் சமப்படுத்தும் போது நம் எண்ணங்கள் ஒன்றாகின்றது. தீமைகளை நீக்கிவிடுகின்றது…!

நச்சுத் தன்மையிலிருந்து விடுபடும் ஔஷதங்களை அன்றே கண்டுணர்ந்து வெளிப்படுத்தியவர் போகமாமகரிஷி – ஈஸ்வரபட்டர்

நச்சுத் தன்மையிலிருந்து விடுபடும் ஔஷதங்களை அன்றே கண்டுணர்ந்து வெளிப்படுத்தியவர் போகமாமகரிஷி – ஈஸ்வரபட்டர்

 

பேரண்ட பூமியின் சுழல் ஓட்டச் சக்தியில் (எண்ணிலடங்காத சூரியக் குடும்பங்கள்) தன்னுடைய ஈர்ப்பின் தொடருக்கு சுவாசத்தின் வலுவால் மேலும் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ள… சிருஷ்டியின் தத்துவமாக “ஈஸ்வர அனுபூதி லீலையில்… உயிர் அணுக்கள் தோன்றுகின்றது…!”

உயிரணுக்கள் தோன்றிய பின் அந்தந்தச் சூரியக் குடும்பங்களில் உள்ள பூமிகளில் அது சந்தர்ப்பத்தால் உடல் பெற்ற நிலையில் பரிணாம வளர்ச்சியின் எண்ணம் கொண்டு பல கோடிப் பிறப்புகளாக வளர்கின்றது.

அந்த வளர்ச்சியின் முதிர்வில் பேரானந்த சக்தியில் கலந்துவிடும் அறிவாற்றல் பெற்றிட்ட மனித குல வாழ்வில் சத்சங்கம் என்ற (உயர்ந்த படைப்பு) சரீரம் என்ற பிண்டத்தில்
1.தன்னைத் தான் உணர்தலும்
2.உணர்ந்த அந்த வழியில் தன்னை அறிந்திடும் ஆற்றலும்
3.அண்டத்தையும் (சகலத்தையும்) அறிய முயலும் செயலில் இயற்கையுடன் ஒன்றி
4.அந்த இயற்கையின் சகல சக்திகளையும் தன்னுள் ஈர்த்தே
5.தன்னையே பிரம்ம சக்தி ஸ்வரூபமாக வளர்ச்சிப்படுத்திக் கொண்டு
6.மூல சக்தியின் கருப்பொருளாகவே அது உருவாகின்றது.

ஆக… மனிதப் பிறப்பிற்குத்தான் இந்தத் தகுதி உண்டு…!

அவ்வாறு வளர்ந்ததன் பொருளே… “ஈஸ்வர சிருஷ்டியின் ஆதி சக்தி மூல வலு…” தன்னை வலுவாக ஆக்கிக் கொள்ள நடைபெறும் செயலாகும்.

இந்த அத்தனை செயல் நிகழ்வுகளிலும் தன் ஆறாவது அறிவால் ஏழாவது நிலையாக… “ஒளியாகும் அறிவாற்றல் பெற்ற நிலையில்…”
1.படைப்பின் படைப்பில் செயல்படும் சகல கோடி ஜீவியர்களும் (மகரிஷிகள்) ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டே
2.சக்தியை வலுக்கூட்டும் சூட்சமம் அறிந்துணர்ந்து தெளிந்திட்ட பக்குவமே “அனுபவ விசேஷம்…!” ஆகும்

இயற்கையுடன் ஒன்றி வளரும் தாவர இனங்களின் ஓர்மித்த சுவாச அலை ஈர்ப்பில் அதனதன் அமில குணத் தன்மைகளின் பாகுபாட்டையும் அதனின் சூட்சமங்களையும் அறிந்தவர்கள் தான் அன்றைய ஞானிகள்.

அவர்கள் பெற்ற உயர் ஞான வலுவின் மூலம் இயற்கை மூலிகை ஔஷத இரகசியங்களை அறிந்து கொண்டனர். அதனின் வளர்ச்சியில் வளர்ச்சியுற்ற நிலை தான் “விஷ வைத்திய சாஸ்திரம்…” பிறந்ததன் காரணம்.

இந்த உலகத்தில் உள்ளோர் நல் வாழ்வு வாழ்ந்திட… தீமையானதையும் நல்லவைகளாக மாற்றித் தரும் அத்தகைய மகான்கள் அளித்த வைத்திய பொக்கிஷங்கள் எல்லாம் மறை பொருளாக்கப்பட்டு விட்டது.

காரணம்… நன்மைகளையே எதிர்மறைகளாக உணர்ந்து தீய எண்ணத்தை வலுவாக்கிக் கொண்ட “இன்றைய மனித குலத்தின் நஞ்சான எண்ணத்தால் தான்…!”

போகர் பெற்ற அனுபவ ஞானத்தால் கசாங் என்ற பெயர் நாம சித்தனாக உலகிற்கு நன்மைகள் புரிய முனைந்த பொழுது அன்றைய அரசாங்கமே அதை எல்லாம் மக்களுக்குக் கிடைத்திடாத வண்ணம் தடுத்து கசாங் சித்தரையே அழித்துவிட முனைந்தது.

அவர்கள் எய்த விஷ அம்பு சரீரத்தில் தைத்துவிட்ட கோலத்தில் அடர்ந்த கானகத்துக்குள் தப்பி ஓடினார். காட்டில் பைராகிகள் (துறவிகள்) தொடர்பு ஏற்பட்டு திட வைராக்கிய சிந்தனை கொண்டு எவ்வளவு எதிர்ப்பு நிலை இருந்த போதிலும்
1.உலகு உய்ய மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த உள்ளத்தின் பாங்கில்
2.தன்னை மாமகரிஷியாக வளர்ச்சிப்படுத்திக் கொண்டார்.
3.அந்த போகமாமகரிஷியின் அருள் சக்தியை நாம் பெற வேண்டுமப்பா..!

பைராகிகளின் உதவியுடன் விஷ வைத்திய முறைகளைக் கற்றுணர்ந்தார் போகர். அதே தொடரில் விஷ மூலிகைகளைப் பக்குவப்படுத்தும் முறை கொண்டு விண்ணிலே பறந்தும் காட்டினார் போகர்.

அதன் பிறகு தியான ஈர்ப்பின் செயல் மூலம் “இந்தச் சரீரத்தையே மிதக்கச் செய்யும் செயலாகக் காட்டியது…” காளாஞ்சி நாதரின் (காலிங்கநாதர்) தொடர்புக்குப் பின் தான். அதுவே “வாயு ஸ்தம்பம்…!”

மகரிஷிகள் பெற்ற அனுபவ ஞானங்களை வெளியிடுவது கூட அவர்களின் சம்மதம் என்ற அருளாசி பெற்றுத்தான் சொல்லுக்கே கொண்டு வந்திட முடியும். போகர் அளித்திட்ட சம்மதத்துடன் அவருடைய அருளாசியுடன் கூறுவதில் இனி தடை ஏதுமில்லை…!

போகநாதர் பெற்ற ஞான வளர்ச்சியை இதைப் படிப்போர் அனைவரும் பெற எமது அருளாசிகள்…! (ஈஸ்வரபட்டர்)

மற்றவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய நல்ல வாக்குகள்

மற்றவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய நல்ல வாக்குகள்

 

இன்றைய உலக சிக்கல்களிலிருந்து மீள ஒவ்வொரு மனிதனும் அருள் ஞான சக்தியைக் கூட்டி இருளைத் தனக்குள் சேராத நிலைகள் பாதுகாத்துக் கொள்ள மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளைப் பெற்று அருள் மகரிஷிகளின் அருள் உணர்வு பெற்று அனைவரும் பிறவி இல்லா நிலைகள் அடைய வேண்டும்.

ஆகையினால் இந்த உபதேசத்தைக் கேட்டுணர்ந்தோர் அனைவரும் உபதேசித்த கருத்துக்களை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நிமிடமும் அதை வளர்த்துக் கொள்ள முற்படுங்கள்.

ஒரு சிரமமான நேரங்களில் ஒருவருக்கு உதவி செய்கிறீர்கள் என்றால்…
1.இந்த அருள் உணர்வுகளை எடுத்துச் சொல்லி…
2.இதன் வழிகளில் மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள்… உங்கள் உடல் நலம் பெறும்…
3.குடும்பத்தில் கஷ்டம் நீங்கும்… உங்கள் தொழில்கள் வளம் பெறும் என்ற வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

இந்த வாக்கினை ஏற்றுக் கொண்டோர் உணர்வுகளில் அந்த உணர்வுகள் பதிவாகி அவர்கள் நினைவாற்றல் அவர்களைக் காக்க உதவும். நோய்களை அகற்றவும் இது உதவும்.

உதாரணமாக ஒருவர் மிகவும் வேதனைப்படுகின்றார் என்றால் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி உங்கள் உயிரை வேண்டுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஒரு பத்து நிமிடமாவது ஏங்கித் தியானித்துக் கொள்ளுங்கள்.

யார் நோய் என்று சொன்னார்களோ அவர்களிடம்… மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடல் முழுவதும் படரும்… உங்கள் உடல் வலி குறையும்…! என்று நீங்கள் சொல்லிப் பாருங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும் நோயின் வலிமை குறைய வேண்டும் அருள் ஒளி அங்கே படர வேண்டும் என்று இப்படி எண்ணிப் பாருங்கள்.

சொன்ன வாக்கின்படி அவர்களும் மகரிஷிகளின் அருள் சக்தியால் “என் நோய் குறைய வேண்டும்…” என்று எண்ணினால் அவர்கள் உடலில் அந்த வலி குறைவதையும் நோய் நீங்கும் சக்தியும் பெறுகிறார்கள்.

ஏனென்றால் உங்களுக்கு இந்தச் சக்தி இருக்கிறதா… இல்லையா…! என்று இப்படிப் பரீட்சித்துப் பாருங்கள். உங்களுக்குண்டான ஆற்றலை நீங்கள் பார்க்கலாம்.

அதே போல் யாம் கொடுக்கும் பிராசத்தில் உள்ள காசை உங்கள் வீட்டில் பூஜை அறையில் விநாயகருக்கு அருகில் வைத்துக் கொள்ளுங்கள். பாலும் தீர்த்தமும் வைத்து யாம் சொன்ன முறைப்படி தியானித்து விட்டு முடிந்த பின் பாலையும் தீர்த்தத்தையும் எடுத்துப் பாருங்கள்.

1.நீங்கள் தியானத்தில் கவர்ந்து கொண்ட அலைகள் அதிலே படரப்படும் போது
2.அந்தப் பாலிலேயும் இந்தச் சக்தி படர்ந்திருக்கும்
3.அது நீங்கள் வைத்த பாலாக இருக்காது. அது சுவை கொண்ட பாலாக மாறும்.
4.தீர்த்தமும் நீங்கள் வைத்த தண்ணீராக இருக்காது… சுவை கொண்ட தீர்த்தமாக மாறும்.
5.ஏனென்றால் நாம் எடுத்த அந்த மகரிஷிகளின் அலைகள் அங்கே படர்கிறது.

இதைப் போல் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்க எடுக்க நம் வீட்டுக்குள் இருக்கும் தரைகளிலும் சுவர்களிலும் மற்ற உடமைகளிலும் இந்த அலைகள் படரும். அப்பொழுது தீமைகள் அகற்றும் சக்திகள் கிடைக்கின்றது.

நாம் அனைவரும் இதைப் போல் ஒருக்கிணைந்து அந்த அருள் உணர்வுகளைப் பெற முற்பட்டால்
1.இந்த வாழ்க்கையில் அனைவரும் நலம் பெற உதவுகின்றோம்.
2.நமக்குள் இருக்கும் அனைத்துக் குணங்களிலும் நலம் பெறும் சக்தியாக மாற்றிடும் நிலை வருகின்றது.

ஆகவே ஒவ்வொருவரும் உங்களை நீங்கள் நம்புங்கள். உங்கள் உயிரை ஈசனாக மதியுங்கள். உங்கள் உடலைச் சிவமாக மதியுங்கள்.. ஈசன் வீற்றிருக்கும் ஆலயமாக அதை மதித்துப் பழகுங்கள்.

மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றுமே ஒன்றி வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுவீர்கள்.

கோபத்தை விலக்கலே உயர் ஞானத்தின் முதல் படி – ஈஸ்வரபட்டர்

கோபத்தை விலக்கலே உயர் ஞானத்தின் முதல் படி – ஈஸ்வரபட்டர்

 

கோப குணத்திற்குச் சிறிதளவு சக்தியை ஊட்டிவிட்டால் அது நாம் பெற்ற தியான சக்தியின் சேமிப்பைத் தனக்குகந்த ஆகாரமாகச் சாப்பிட்டுத் தன் வலுவை… தன் கோப குணத்தை மீண்டும் வலுக் கொள்ளச் செய்துவிடும்.

கோபத்தை விலக்கலே உயர் ஞானத்தின் முதல் படி…! கோபத் தன்மை இருந்தால் அது தீய வினைகளுக்குத் தான் அடிகோலும்.

ஆணவம்.. மோகம்… உலக மயக்கம் என்னும் மாயை…! இவைகளை ஞானச் செல்வங்களால் வென்று காட்டியதைத்தான்
1.வேலின் வடிவமாக
2.வேல் விண்ணிலே பறந்து சென்றது…! என்று சூட்சமாகக் காட்டப்பட்டது.

முருகன் ஆணவத்தை அடக்கிவிட்டார்… மோக குணத்தை வென்றிட்டார்… உலகோதய மாயை என்னும் விஷ நாகத்தை அடக்கி விட்டார்… என்பதெல்லாம் உலக மக்களுக்குப் படிப்பினையாகச் சொல்லப்பட்டது.
1.அந்த நல் வழியக் கண்டுணர்ந்து செயல் கொண்டால்
2.“வேல் விண்ணிலே பறந்ததின் சூட்சமம் புரிந்துவிடும்…!”

மயிலிற்கும் பாம்பிற்கும் பகை என்ற நிலை போல உலகோதய இன்பம் பெறுபவன் கூட ஆணவம் கொண்டிட்டால் பகை என்ற எதிர் மறை நிலைதான் செயல் கொள்ளும்…! என்ற உண்மையை அறிந்துணர வேண்டும்.

ஆகவே ஆணவத்தை அடக்கிச் செயல் கொண்டாலும் உலகோதயச் செயல் தத்துவத்தில் தேவையை அழித்திடல் ஆகாது. (ஏனென்றால்) “அது தான் உயிர் சக்தி…!”

அதுவும் ஞான வழித் தொடருக்கு வழி காட்ட மயிலிற்கும் பாம்பிற்கும் பகையாக இருந்தாலும் ஆணவத்தை நீக்கி ஞானம் பெற்றுவிட்டால்
1.இரண்டுக்கும் உள்ள பகை நீங்கி
2.மயிலின் காலடியில் பாம்பு எப்படி வாழ்கின்றது…! என்ற உண்மை ஞானம் தெளிவுபடும்.

மோகக் குணத்தைப் பேரின்ப ஞான குணத்திற்கு எப்படி வழி வகுப்பது என்றால் மோக குணத்தை அதன் ஆங்காரக் குணத்தை ஓங்காரமாக்கும் செயலாகச் சேவல் கூவுகிறது என்ற பொருளில்
1.நம்மைக் காக்கும் சக்தியாக மாற்றி
2.அறிவின் ஞானத்தைப் பெருக்கும் வேலாயுதமாகப் பயன்படுத்தினால்
3.”உலகோதயம் நம் காலடியில்…!” என்ற பொருளை உணரலாம்

உயிரால் வளர்க்கப்பட்ட பிள்ளையை உனது… எனது… என்று போர் செய்யாதே…!

உயிரால் வளர்க்கப்பட்ட பிள்ளையை உனது… எனது… என்று போர் செய்யாதே…!

 

ஒரு வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்தால் நம் நல்ல குணத்தை அது வங்கிட்டுக் கொள்கிறது. அதைச் செயலற்றதாக மாற்றுகின்றது.

அதை மாற்ற மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ணினால் அவர்கள் வேதனையை வென்றவர்கள். அந்த வேதனையை அது அடக்கி விடுகின்றது.

இதை நாம் கற்றுக் கொள்வதற்காக ஆற்றங்கரையில் விநாயகரை வைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.

நம் வாழ்க்கையில் பிறர் வேதனைப்படுவதை உற்றுப் பார்த்து அதை நுகர்ந்தால் அந்த விஷத்தின் தன்மை நம் நல்லதை அடக்கிடாது அடுத்த கணமே
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…
2.எங்கள் இரத்த நாளங்களில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கலக்க வேண்டும்
3.எங்கள் ஜீவான்மா ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்தால் அதை நம் உயிர் ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி அந்த அணுவாக மாற்றும் கருவாக உருவாக்கி விடுகின்றது நம் இரத்தத்தில்.

ஒரு பத்து நாளைக்கு வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்து பாருங்கள். அடுத்து உங்கள் இரத்தத்தை எடுத்துப் பரிசோதித்துப் பாருங்கள்.
1.விஷத்தை ஊட்டும் விஷ அணுக்கள் இருக்கிறது என்று காண்பிப்பார்கள்
2.நன்றாக இருந்தது… இப்படி மாறி இருக்கிறது என்பார்கள்.

அதே மாதிரி கோபப்படுவோரை நீங்கள் அடிக்கடி பார்த்து அந்தக் காரமான உணர்வைச் சுவாசித்திருந்தால்
1.அந்த உணர்வின் தன்மை இரத்தக் கொதிப்பிற்குண்டான நிலைகளாக உருவாகி இருக்கிறது என்று
2.லேபரட்டரியில் வைத்துப் பரிசோதித்து எந்தெந்த அளவில் இருக்கிறது
3.இதற்கு என்னென்ன மருந்து கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கண்டுபிடிப்பார்கள்.

இதை எல்லாம் வராது தடுக்க வேதனைப்பட்டால் உடனே அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கி நம் உடலுக்குள் செலுத்தினால் இதனை அது அடக்குகிறது… இதை மாற்றுகின்றது. அது தான் மகிழ்வாகனா…!

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு கார்த்திகேயா…! வேதனைப்படுகிறான் என்று தெரிகிறது… வேதனை வென்றவன் துருவ மகரிஷி என்றும் தெரிகிறது…! அந்த உணர்வை நுகர்ந்து இந்த வேதனையை அடக்க வேண்டும்…!

எத்தகைய நிலைகள் நமக்குள் வந்தாலும் ஆறாவது அறிவால் இதை அடக்க முடியும் அங்குசபாசவா என்ற நிலை தெளிவாக்கப்பட்டுள்ளது. இதற்குத் தான் விநாயகர் பக்கம் அரச மரத்தை வைத்துள்ளது. அகஸ்தியன் துருவ நட்சத்திரமான நிலையைக் குறிக்கவே அரச மரத்தைக் காட்டுகின்றனர்.

அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் குளித்து விட்டுக் கரையேறி வந்த பின் விநாயாகரை உற்றுப் பார்க்கின்றோம்.

நம் உயிர் பல கோடிச் சரீரங்களைக் கடந்து இன்று நம்மை மனிதனாக உருவாக்கி உள்ளது என்று கணங்களுக்கெல்லாம் ஈசா கணேசா…! என்று உயிரை வணங்க வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.

பல கோடிச் சரீரங்களில் தழைத் தாம்புகளைத் தின்றோம் புல்லைத் தின்றோம் காய் கனிகளைத் தின்றோம். இன்று மனிதனான பின் சுவைமிக்க உணவைப் படைத்துச் சாப்பிடும் இந்த மனித உடலைப் பெற்றோம் இந்தப் பிள்ளை யார்…? என்று கேள்விக் குறி எழுப்புகின்றார்கள்…!

1.உயிரால் வளர்க்கப்பட்ட பிள்ளை…
2.நீ உனது எனது என்ற நிலைகளில் போர் செய்யாதே…!
3.அவனால் ஒன்றி வாழும் அணுக்கள் இது…!
4.அதை எப்படி வளர்க்க வேண்டும்….? என்பது தெளிவாக்கப்படுகின்றது.

தீமையைக் கண்டுணர்ந்த நிலைகள் கொண்டு உயிரால் வளர்க்கப்பட்ட இந்த மனித உடலைச் சீர்குலைக்கச் செய்து விடாதே…! அருள் ஒளி பெற்ற மகரிஷிகளின் உணர்வை “உனக்குள் செலுத்து…!” என்பதைத் தான் அங்கே எண்ணி எடுக்கும்ப்படி காட்டுகின்றார்கள்.

குளித்து விட்டு வந்து விநாயகரைப் பார்த்த பின் மண்ணுலகில் நஞ்சினை வென்று துருவ நட்சத்திரமாக உருவாகிய துருவ மகரிஷியின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியும் நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கி நின்று அந்தச் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று இதை எண்ணி எடுக்கும்படி செய்கிறார்கள்.

இவ்வாறு நமக்குள் எடுத்துப் பழக வேண்டும். சாமி (ஞானகுரு) சொல்கின்ற சக்தியை நான் பெற வேண்டும்… என்று உங்களுக்குள் “இறுக்கிப் பிடித்து வைத்துக் கொண்டால்…” இதை வளர்க்கச் செய்யும்…!

சத்தியம் சிவம் சுந்தரம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சத்தியம் சிவம் சுந்தரம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மனிதனான நமக்குள் பல பல எண்ணங்கள் இருந்தாலும் இந்த உடல் வாழ்க்கையில் மோதும் உலகோதய உணர்வுகளிலிருந்து உயர் ஞான வழியின் வழியை உணர்ந்து செயல்படும் பக்குவம் பெற வேண்டும்.

1.நான் என்ற ஆணவம் ஒரு மலம்
2.காமம் என்ற சபல குண மோகம் ஒரு மலம்
3.உலகோதய ஆசை என்னும் மாயை மூன்றாவது மலம்.

இந்த மூன்றையும் அறிந்து அந்த மும்மலத்தையும் நீக்க வேண்டும் என்றால் சத்தியம் சிவம் சுந்தரம் என்ற கருத்தின் பொருளைக் காண வேண்டும்.

மெய் ஞானிகள் உணர்வுடன் தொடர்பு கொண்டு மனத் தெளிவு பெற்று சத்தியம் என்பதன் உண்மைப் பொருள் விளங்கி நம் எண்ணம் சொல் செயல் மூன்றும் நேர்கோடாகப் பரிணமித்தல் வேண்டும். சத்தியம் என்ற அந்த மெய் ஞானமே உண்மை ஞானமாக அறிந்து செயல்பட வேண்டும்.

சத்திய வழி சிவம் பெறுதல் என்பது என்ன..? சிவத்தை எங்கிருந்து பெறுவாய்…?
1.உன்னிடத்தில் உள்ளதடா சிவம்… என்று
2.சித்தன் காட்டிய வழியில் “உன்னை உணர்ந்து பாரப்பா…!”

காமம் என்பதே உயிர்களுக்கு அன்பு. காமம் சமமான பக்குவத்தில் இருந்தால் அதுவே சிவமாகும். அந்த அன்பு தானப்பா “சிவம்…!”

மனதில் அன்பு கொண்டு விட்டால் உயிரான்மாவின் சக்தியின் வலுவிற்குச் சுலபமான வழி கிட்டிவிடும். அதுவே சுந்தரம்…! சுந்தரத்தைப் பெறுவது என்றால் “அழகு” என்று பொருள் கொள்வாய்.
1.அந்த அழகு என்பது எதுவப்பா..?
2.நீ நினைக்கும் உடல் அழகு அல்ல…!

அழகு என்பது ஆன்ம வலுவின் ஒளி காந்த சக்தி கொண்டு “சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஜோதித் தத்துவம் ஆகும்..!” அதைப் பெற வேண்டும் என்றால் மும்மலம் நீக்கப்பட வேண்டும்.

அதை நீக்கிய பிறகு மெய் வழி கண்டு மெய் வழி அறிந்து மெய் ஞானம் மலர்ந்து
1.விரிந்து மணம் வீசும் ஒரு மலர் போல
2.ஆன்ம சக்தியின் சத்தியம்.. சிவம்… சுந்தரம்… என்ற எண்ணத்தில்
3.கடைப்பிடிக்கும் அந்தச் சத்தியத்தை நிலை நிறுத்தி அதை மேன்மைப்படுத்தினால்
4.அன்பு என்ற சிவத்தைப் பெறுகின்றாய்.

அன்பாம் சிவ ஈர்ப்பின் வலுச் செயலினால்… சுந்தரமாம் ஆன்ம அழகின் ஜோதியாக… ஜோதியின் சக்தியே பிரகாசமாக… பிரகாசத்தின் ஒளி நிகழ்வாக… “மூலத்தின் மூலமாகச் செயல் கொண்டிடலாம்…!”

சிற்றின்ப போகத்தையே பேரின்பப் போகமாக்கிய போகநாதர் சத்தியம் சிவம் சுந்தரத்தைப் பெற்றது… மும்மலத்தை மாற்றியமைத்து நற்குண வழிச் செயல் ஆக்கத்தின் ஆக்கம் பெற்றதால்தான்…!

முருகனுக்கு மயிலையும் சேவலையும் காட்டி நாகம் வேல் என்ற தொடரையும் காட்டுகின்றார்கள். அதன் சூட்சமம் அறிந்தோமா…? போகப்பெருமான் வளர்த்துக் கொண்ட அனுபவ ஞானத்தை நாமும் அறிந்து கொண்டால் நம்முடைய வளர்ச்சி நல் வழி ஆகுமப்பா..!

விநாயகர் ஞானக்கனியைப் பெற்றார். இடும்ப குண வசத்தால் முருகனுக்குக் அது கிடைக்கவில்லை என்ற கதையின் தத்துவத்தில் உள்ள உண்மையையும் தெளிந்து கொள்ள வேண்டும்.

வினையின் நாயகன் அந்த விநாயகனே நாம் தானப்பா…! நாம் எப்படி ஞானக்கனி பெறுவது..?

உயிரின் மூலமாகிய “சிவ சக்தி…!” என்று சொரூபப்படுத்திக் காட்டிய
1.சுழற்சியின் வேகமான சிவத்திற்குள்… சக்தி உருக்கொள்ளும் தன் உயிர் சக்தியை
2.தன்னைத் தான் உணர்ந்து தன்னுள் அந்தச் சிவ சக்தியைக் கண்டு
3.வலுக் கொண்ட செயலின் ஆக்கமாகத் தன்னைத் தான் அறிவதே ஞானக்கனி பெறுவது என்பது.

(சூட்சமப்படுத்திக் காட்டிய நிலையில்) தன்னுள்ளே சிவ சக்தியைக் கண்டு அதைச் சுற்றும் வழித் தொடரில் அதை வலம் வந்து அந்த வினையின் நாயகனாக நாம் பெறுவதே “ஞானக்கனி…!”

அகஸ்திய மாமகரிஷியின் தொடர்பு கொண்டு… போகப் பெருமானின் குரு காளஞ்சி நாதர் (காலிங்கநாதர்) சொன்ன முறைப்படி
1.இருந்த இடத்திலேயே (வெளியிலே தேடிக் கொண்டிருக்காமல்) ஞானக்கனி பெறுதல் என்பதில் அந்த ஞானம் கனிந்து விட்டால்
2.அதனின் சுவையைப் பெற்று விட்டால்
2.அந்தச் சுவையின் “மூலம் அறிய…” வழி பிறக்கும்.

இப்படித் தத்துவங்களையெல்லாம் காட்டி… சூட்சமங்களை எல்லாம் உள் புகுத்தி… மும்மல நீக்கத்திற்கு வழி காட்டி… வாழையடி வாழை என வரும் ஞானச் செல்வங்கள் தன் சக்தியை வளர்த்துக் கொள்வது என்பது… “மகரிஷிகள் கண்டுணர்ந்த மெய் வழியாகும்…”

இரத்தத்தில் சுழன்று கொண்டிருக்கும் ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் பற்றிய விளக்கம்

இரத்தத்தில் சுழன்று கொண்டிருக்கும் ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் பற்றிய விளக்கம்

 

ஒவ்வொரு நாளும் நமக்குள் எத்தனையோ உணர்வுகளைக் கவர்ந்திருந்தாலும் தினமும் அதிகாலை துருவ தியான நேரத்தில் ஈஸ்வரா என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று இரத்ததில் அந்த அரும் பெரும் சக்திகளைக் கலக்கச் செய்ய வேண்டும்.

ஜீவ அணு:
ஜீவ அணு என்றால் உதாரணமாக ஒரு பாம்பை நாம் அடிக்கின்றோம் என்றால் அந்த அணுக்கள் (பாம்பு வேதனைப்பட்ட) நம் உடலில் ஜீவ அணுக்களாக இரத்தத்திலே வளரும். உடலில் உள்ள உறுப்புகளில் போய் இணையும்.

அதற்குச் சாப்பாடு தேவை. வேதனைப்பட்ட அலைகளை எடுத்துத் தான் அது சாப்பிடும். நமக்கு வேதனையைக் கொடுக்கும்.

ஜீவ ஆன்மா
அந்தப் பாம்போ (பாம்பின் உயிராத்மா) மனிதனை உருவாக்கிய இந்திரீகத்தில் அது கருவாகப் போய்ச் சேர்ந்து விடும் அடுத்த உருவைப் பெறுவதற்கு…!

அந்த உருவைச் சேர்த்த பின் அந்தப் பாம்பின் தன்மை கொண்டு அந்த அணுவாக நமக்குள் உருவாகும். அதற்கு மாற்றத் தெரியாது. அதே உணர்ச்சிகளைத் தான் தூண்டிக் கொண்டிருக்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்றால்
1.அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள்
2.அதற்குள்ளும் சேர்கின்றது (பாம்பின் ஆன்மா ஜீவான்மாவாக உள்ளதுக்கு).
3.மனிதனாகும் அந்த உணர்வுகள் கருக்களிலும் இந்த உணர்வை மாற்றும் வல்லமை பெறுகின்றது.
4.அந்த அணுக்கள் இந்தச் சக்தியைப் பெறும் போது இதுவும் நமக்குள் ஒத்தாசையாக வருகின்றது.

ஏனென்றால் நமக்குள் வந்து மனிதனாக உருப்பெறும் உணர்வை அங்கே வளர்த்திருக்கின்றது. ஆனால் அருள் ஒளியின் தன்மையை நாம் கூட்டும் போது இதுவும் அந்த ஒளியின் சுடராக மாறுகின்றது.

இந்த உணர்வின் தன்மை வளர்த்துக் கொண்ட பின் இந்த உடலை விட்டு நாம் சென்றாலும் அது வளர்த்துக் கொண்ட உணர்வுகள் நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாறுகின்றது.

அதற்குத்தான் அதிகாலை துருவ தியான நேரத்தில் நாம் பார்த்தவர்களுக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணச் சொல்வது..!

வைரத்தைப் போன்று எங்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் எங்கள் செயல் எல்லாம் ஜொலிக்க வேண்டும் எங்கள் சொல் ஜொலிக்க வேண்டும் நாங்கள் பார்த்தோர் குடும்பமெல்லாம் வைரத்தைப் போன்று ஜொலிக்க வேண்டும் அவர்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் அவர்கள் தொழில்கள் ஜொலிக்க வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்
1.என்று எத்தனை தடவை சொல்கிறீர்களோ
2.அது வரை உங்களுக்கு நன்மை தரும்.

இராமாயணத்தில் காட்டுகின்றனர்… ஜனகச் சக்கரவர்த்தி தன் வளர்ப்பு மகளான சீதாவைத் திருமணம் செய்ய சுயம்வரத்தை ஏற்படுத்துகின்றார். அங்கே வருவோர் அவரவர்கள் திறமைகளைக் காட்டும்படி சொல்கின்றனர்.

வந்தவர்கள் அனைவரும் அங்கிருக்கும் வில்லை எடுத்து அதில் அம்பை ஏற்றிக் குறி வைத்துத் தாக்குகின்றனர்… அவரவர்களுக்குத் தகுந்த மாதிரி..!

ஆனால் இராமன் வந்தவுடன்… அவன் உணர்வுப்படி தீமை செய்யும் அந்த வில்லையே ஒடித்து விடுகின்றான். ஏனென்றால்…
1.தீமை செய்யும் எண்ணத்தை நீக்கிய பின்
2.சீதா அந்த மகிழ்ச்சி பெறும் குணத்தைத் தன் உடலுடன் அரவணைத்துக் கொண்டான்.
3.அதைத்தான் கல்யாணராமா என்பது…!

ஒவ்வொரு நாளும் தீமை செய்யும் உணர்வுகளை நீக்கிக் கொண்டே வந்தால் தான் நமக்குள் மகிழ்ச்சி என்ற நிலையை உருவாக்க முடியும். எதிரி என்றும் எதிர்ப்பு என்றும் இல்லாதபடி ஏகாந்தமாக வாழ முடியும்.

இந்த உடலுக்குப் பின் யார் ஈர்ப்பிலும் சிக்காது நம் உயிரான்மா அழியா ஒளிச் சரீரம் பெறும். இதைத்தான் இராமாயணம் தெளிவாக்குகின்றது.

தன்னைத் தான் அறிந்த மெய் ஞானிகள் விண் சென்ற முறை

தன்னைத் தான் அறிந்த மெய் ஞானிகள் விண் சென்ற முறை

 

நிறம், மணம், நீர் அமிலம் என்ற முத்தொடர் மூலத்திலிருந்து ஒன்றுடன் ஒன்று கலந்து கோடானு கோடி உயிரணுக்கள் செயல்படும் அமில குணத் தன்மைகளை பூமியிலிருந்து வானத்தைப் பார்க்கும் பொழுது காண முடிகிறது.

அதாவது இரவிலே இருள் என்ற கரிய வண்ணமும் (பேரண்ட இருள் பால்வெளி சூட்சமம்) சூரிய ஒளி பூமியின் ஈர்ப்பில் படர்ந்திடும் பகல் பொழுதில் நீல வண்ணக் குணத் தொடரிலும் பார்க்கலாம்.

ஆனால் அவைகளுக்கு அருகாமையில் நெருங்கிச் சென்று… உணர்வால் சுவாசத்தால் ஈர்த்தெடுத்து உணர்ந்திடும் பொழுது
1.உயிரணுக்கள் பெற்றிட்ட நீல வண்ண குணத் தன்மை உட்சென்று
2.உணர்ந்து அறியும் செயலில் தூய வெண்ணிற ஒளி தான் புலப்படும்.

ஏனென்றால் மூல சக்தியின் செயலில் நடை பெறும் கிரியைகளை நாம் மனிதர்கள் உணர்ந்து அறிதலே சிறப்பு. அது தான் தனித்துவ சக்தி நிலை பெறும் “உயர் ஞான வளர்ப்பின் ஆக்கம் ஆகும்…!”

சொல் நாம சூட்சமத்தை விளக்கிடும் செயலில் செவிப்புலன் அறிவு என்பதில்
1.அகத்தின் பொருளைச் செவிமடுக்கும் தன்மை கொண்டு செயற்படுதல் உயர்ந்தது தான் என்றாலும்
2.சிந்தனை வசமாகத் தானே தன்னில் அறிந்து உணர்ந்து தெளிதலே அதி மேன்மையாகும்.

வாயு ஸ்தம்பம் என்றிட்ட ஸ்தூல சரீரத்தையே மிதக்க வைத்திடும் செயலுக்கும் பொருள் உண்டு.

பைராகிகளின் தொடர்பில் போகப் பெருமான் வைத்திய சாஸ்திரங்களை தாவரங்களின் ஈர்ப்பில் இயல் தன்மைகளைக் கொண்டு அறிந்தாலும் அதை அறிந்து கொண்டபின் அனுபோக முறை (அனுபவத்தால்) மருத்துவ ஸ்வரூபம் காட்டியது “அவர் பெற்ற உயர் ஞான வளர்ச்சியால் தான்,..”

மூலிகையின் சாறு கொண்டு ஏற்றப்படும் அகல் விளக்கில் வேறு சில மூலிகைகளில் பதப்படுத்தப்பட்டுப் பக்குவமாக விளக்கிற்குத் திரி என்ற அமைப்புச் செயலில் ஏற்றப்படும் ஒளி தீபமும் அதனுள் இருந்து வெளிப்படும் புகை காற்றின் அடர்வை மெலிதாக்கி மேல் நோக்கிக் கிளப்பும் சூட்சமம் உணர்ந்து உலோகக் கூண்டுகளில் அதை உள் நிரப்பி அக்கூண்டுகளை வான்வெளியில் பறக்கச் செய்திட்ட செயலில் அந்தக் கூண்டுகளுடன் இணைக்கப்பட்ட தூளியில் அமர்ந்து காற்றின் போக்கில் வான்வெளியில் சஞ்சரித்தனர் அன்றைய மெய் ஞானிகள்.

1.பூமித் தாய் சக்தியை இன்றைய விஞ்ஞானம் (அணுக்கதிரியக்கம்) கேடாக்கும் செயலைப் போன்று அல்லாமல்
2.அன்றைய மெய் ஞானிகள் இயற்கை முறையில் அதைச் செய்வித்தனர்.

இப்படிப்பட்ட அறிவின் ஞானம் கொண்டு அன்றைய சித்தர்கள் செயல் வெளிப்படுத்திய சூட்சமங்களே இன்றைய விஞ்ஞானத்திற்கு மூலம்.

மெய் ஞானம் கொண்டு உயிரான்மாவின் சக்தியை வலுக் கொண்டு சரீரத்தையே மிதக்க வைத்த… செயல் சிவஸ்வரூபத்தைத் தன்னுள் கண்டு தெளிந்து… சிவஸ்வரூபத்தின் மூலத்தை அறிந்து… அதனுள் அதுவாக ஒன்றி தான் வேறல்ல ஈசன் வேறல்ல என்ற மனப்பக்குவம் மனத் தூய்மை கொண்டு… அகத்தின் பொருள் கண்டறிந்து பரம் பொருளை அறியும் மார்க்கம் தான் மெய் ஞானிகள் கண்டறிந்து உரைத்தது..!

இதை எல்லாம்…
1.சொல்லால் வெளிப்படுத்துவ்தை அறிந்து கொண்டால் மட்டும் போதாது
2.அறிந்ததை உணர்ந்து கொண்டு தானே ஈஸ்வரனுடன் ஒன்றும் நிலையாக
3.பிரம்ம சாயுஜ்யம் (ஈசன் வேறல்ல நாம் வேறல்ல) பெறும் ஆனந்த லயத்தை அனுபவிக்கும் எண்ண வலுவிற்கு வலுக் கூட்ட வேண்டும்.

மிருகங்கள் பறவை முதற் கொண்டு ஐந்தறிவு பெற்ற அனைத்து ஜீவன்களுக்கும் ஞானம் உண்டு. இயற்கையுடன் ஒன்றி அறியும் திறனுண்டு. ஆனால் ஐந்தறிவு படைத்த மனிதன் பகுத்தறியும் அறிவாற்றல் பெற்ற திறன் உடையவன் ஆகின்றான்.

இயற்கை ஞானத்தை வளர் ஞானமாக்கும் பக்குவத்தில் அண்டங்களின் செயல்பாட்டை… மூலச் சக்தியை அறிந்து கொள்ள… மகரிஷிகளால் ஊட்டப்படும் பேரருள் பேரொளியைப் பெற்றிடும் பக்குவத்திற்கு வர வேண்டும்.

மனிதச் சரீரம் என்ற இந்தப் பிண்டத்தைக் கொண்டு
1.உலகோதய ஆசை என்ற மாய வலைக்குள் சிக்காவண்ணம்…
2.அகத்தின் எண்ணச் செயலில் தூய்மையும்…
3.வாக்கு வன்மையும் பெற்று… அன்பின் வழித் தொடரில் கனிவும்…
4.செயலில் பரம்பொருளை அறிந்து கொள்ளும் வைராக்கியமும் பெற்றிடும் பாத்திரமாக
5.தன்னை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

மூவுலகை ஆட்டுவிக்கும் மூல சக்தியின் செயலை உணர வேண்டும் என்றால் தன்னைத்தான் உணரும் செயலில் தான் அதை அறிந்து கொள்ள முடியும்.

தன்னைத் தான் அறிந்திடும் நிலையை மக்களுக்கு ஞானிகள் ஊட்டிய வழி முறை

தன்னைத் தான் அறிந்திடும் நிலையை மக்களுக்கு ஞானிகள் ஊட்டிய வழி முறை

 

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் தன்னைக் காட்டிலும் வலுக் கொண்ட உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து நம்மை மனிதனாக உருவாக்கியது நம் உயிர்.

இதை உணர்த்துவதற்காகதான் சிவ ரூபத்தைக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

சிவனுக்குப் போட்டிருக்கும் ஆடைகளைப் பார்த்தால் யானைத் தொலி (தோல்) புலித் தொலி மான் தொலி என்று காட்டியிருப்பார்கள். நாம் அந்தந்தச் சரீரத்தை எல்லாம் பெற்றுத் தான் இந்த மனித உடலாக வந்தோம்.

சிவன் கையிலே திரிசுலம் இருக்கும்… அதிலே உடுக்கையும் இருக்கும்.
1.சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம் என்ற இதனின் இயக்கத்தில் தான்
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் எது எது இணைகின்றதோ அது “ஒலியாகின்றது…” (திரிசூலத்தில் உடுக்கையை வைத்தது இதற்குத் தான்)
3.முதலில் மோதும் இசைகள் அதனுடன் ஒடுங்கி விடுகிறது
4.மீண்டும் மற்றொன்றின் ஒலிகள் இணைந்த பின் மறுபடியும் சுருதிகள் மாறுகின்றது.
5.சிவன் உலகை ஆட்டிப் படைக்கின்றான் என்று காட்டுகின்றார்கள்.

ஆக சிவ உருவத்தைக் கண்ணுற்றுப் பார்த்தாலே உண்மையின் இயக்கங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதைக் காட்டுகின்றார்கள்.

சிரசில் பட்டைகள் மூன்று இருக்கும். விபூதியால் பூசப்பட்டிருப்பினும் சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம் இந்த மூன்றும்
1.தனக்குள் கவர்ந்து கொண்ட உணர்வின் தன்மையை
2.அது தனக்குள் அங்கீகரித்துக் கொள்கிறது… தன் நிலையை மாற்றிக் கொள்கிறது என்ற நிலையை
3.நாம் அறிவதற்காக இவ்வாறு வைத்துள்ளார்கள்.

சிவனின் சிரசில் கங்கையும்… சிவன் பாதி சக்தி பாதி என்றும் காட்டுகின்றனர். ஒவ்வொரு அணுவிலும் வெப்பம் கலந்தே இருக்கும். அந்த வெப்பத்தின் இயக்கத்தால் தான் அனைத்தும் இயங்குகிறது என்று பராசக்தியாகக் காட்டி “இந்த வெப்பம் சர்வத்தையும் உருவாக்கும்…” என்ற நிலையை இங்கே தெளிவாக்குகின்றார்கள்.

சிவன் உடல் முழுவதிலும் பாம்பைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள். ஜடா முடியிலும் இந்த விஷப் பாம்பு இருக்கும்.
1.ஒவ்வொரு அணுக்களிலும் உள்ள இந்த விஷமே
2.இயங்குவதற்கு மூல காரணம் என்ற நிலையைத் தெளிவாக்குகின்றனர்.

இப்படி ஒரு உருவத்தைக் காட்டி அருவ நிலையின் செயலாக்கமும்… சேர்ந்த பின் இந்த உருவத்தின் நிலைகள் எவ்வாறு…? (உருப் பெறுகிறது) என்று தெளிவாக்குகின்றது நம் வேதங்கள்.

வேதங்களின் மூலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ரிக் சாம அதர்வண யஜூர் என்று முழுமையாக யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி அறிந்து கொண்டால்
1.எப்படி எல்லாம் உருவாகி இன்று மனிதனாக வந்துள்ளோம் என்று தன்னை அறிந்திட முடியும்.
2.தன்னைத் தான் அறிந்தவன் (ஞானிகள்) வெளிப்படுத்திய உணர்வு தான்
3.சூட்சமத்தில் நடப்பதை உருவமாக எப்படி வருகிறது என்பதனை உருவத்தை அமைத்துத் தெளிவாக்கினார்கள் ஞானிகள்.

ஜடாமுடியில் கங்கை சிவன் பாதி சக்தி பாதி என்று உடலில் சரி பகுதி வைத்துள்ளார்கள்… அர்த்தநாரீஸ்வரர். சிரசிலே பிறைச் சந்திரன்.

காரணம் ஒரு பொருளுடன் ஒரு பொருள் இரண்டறக் கலந்து விட்டால் அதுவும் இதுவும் கலக்கப்படும் போது சரி பகுதியாக மாறுகின்றது. இதன் ஒளியும் மங்குகிறது… அதன் ஒளியும் மங்குகிறது.

இப்படி மாறுவதைக் காட்டுவதற்குத்தான் சிவனின் சிரசிலேயும் பிறைச் சந்திரனைப் போட்டுள்ளார்கள்.

இதை எல்லாம் ஞானிகள் தன் இன மக்களுக்குத் தன்னை அறிந்து செயல்படும் வல்லமை வர வேண்டும் என்பதற்குத் தான் அருவத்தை உருவமாக்கிக் காட்டினார்கள்.

1.நாம் மனிதனாக எப்படிப் பிறந்தோம்…?
2.அணுக்களின் செயலாக்கங்கள் எது…? என்ற நிலையைத் தான்
3.வேதங்களில் நான்கு மறைக்குள் உலகமே அடங்கியுள்ளது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.