சமீபத்தில் விண் சென்ற கோலமாமகரிஷியின் அருள் சக்தியை நாம் அனைவரும் பெறுவோம்

சமீபத்தில் விண் சென்ற கோலமாமகரிஷியின் அருள் சக்தியை நாம் அனைவரும் பெறுவோம்

 

அம்மா அப்பா அருளால்… மிகவும் சக்தி வாய்ந்த சப்தரிஷிகளின் அருள் சக்தியையும் கோலமாமகரிஷி வளர்த்த அந்த அருள் சக்தியையும் நமக்கு முன் படர்ந்திருப்பதை நாம் கவர்ந்து நம்மில் இணைப்போம்.

அந்தத் தத்துவ மகரிஷி உலக இயல்புகளை எவ்வாறு கண்டுணர்ந்தார்…? அவருக்குள் எவ்வாறு விளைய வைத்தார்…? என்று
1.அவரில் விளைந்த அருள் ஞான வித்தை நமக்குள் பதிவு செய்து
2.உண்மையான மெய் உலகில் அவர்கள் சஞ்சரித்த அந்த இடங்களுக்கு நாமும் சென்றடையத் தியானிப்போம்.
3.அதற்குத் தான் கொல்லூருக்கு வந்து தியானிப்பது.

அகஸ்தியன் சந்தர்ப்பத்தால் தனக்குள் கண்டறிந்தது. ஆனால் கோலமாமகரிஷியோ அழியாப் பெரு வாழ்வு என்ற நிலையைப் பெற வேண்டும் என்று அவர் எண்ண வலுவால் தனக்குள் நுகர்ந்தறிந்தார்.

இன்னொரு சரீரம் வேண்டியது இல்லை என்ற வலுவான எண்ணத்தை அவர் எடுத்துக் கொண்டு… என்றும் அந்தச் சப்தரிஷிகளுடன் இணைந்து விட வேண்டும் என்ற தன் எல்லையை வகுத்துக் கொண்டார்.

தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றி மெய் ஞானிகள் உணர்வைத் தனக்குள் வளர்த்து அவர் விண்ணுலகம் சென்றார்.
1.மிகக் குறுகிய காலத்தில் இவையெல்லாம் 2000 – 3000 ஆண்டுகளுக்குள் நடந்த நிகழ்ச்சிகள்.
2.சமீபத்தில் அவருக்குள் விளைந்த உணர்வுகள்… எங்கெங்கு அவர் தவம் இருந்தாரோ
3.அந்த அலையின் தன்மை இங்கே பரவி உள்ளது… அதை நாம் பருகுவோம்.

கோலமாமகரிஷியை எண்ணி அவர் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் ஏங்கித் தியானிப்போம்.

அவர் தன் உடலில் பெற முடியாத அச்சக்தியை தொக்கியுள்ள காலத்தில் அதைப் பெறும் தகுதியாக ஆதிசங்கரர் உடலில் புகுந்து எஞ்சிய சக்தியைத் தான் பெற்று விண்ணுலகம் சென்றடைந்தார்… சப்தரிஷி மண்டலத்துடன் கலந்தார். அந்தச் சக்திகள் இங்கே படர்ந்துள்ளது.

1.தீவினைகளை நீக்கி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்ட
2.அவருடைய சக்தியை நாம் அனைவரும் பெறுவோம்.

சப்தரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… கோலமாமகரிஷி பெற்ற அந்தச் சக்தி வாய்ந்த அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி நாம் தியானிப்போம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.