நம் உயிரே சொர்க்கவாசல்

gateway to heaven

நம் உயிரே சொர்க்கவாசல்

 

நமது வாழ்க்கையில் எத்தனையோ பேருக்கு நாம் உதவி செய்கின்றோம். உதவி செய்தாலும் அவர்கள் தீமைகளை எல்லாம் கேட்டுணர்ந்த பின் தான் அந்த நன்மைகள் செய்கின்றோம்.

ஆனாலும் நம்மால் நன்மைகள் பெற்றோர் அந்த நன்மையை மறந்து நமக்கே தீமை செய்யும் நிலைகள் வரும் போது நாம் என்ன நினைக்கின்றோம்…?

1.இப்படி எல்லாம் அவர்களுக்கு உதவி செய்தேனே…
2.என்னை இப்படித் துன்புறுத்துகின்றார்களே…! என்று தான் எண்ணுவோம்
3.மீண்டும் மீண்டும் எண்ணி அதையே பிடிவாதமாகப் பிடித்து நமக்குள் வளர்ப்போம்.

ஆனால் இப்படி அவன் செயலை எண்ணி நமக்குள் உருவாக்கப்படும் பொழுது
1.அவன் செய்யும் தீமையின் உணர்வே நமக்குள் வந்து
2.நம் உடலுக்குள்ளும் தீமைகளாக விளைந்து விடுகின்றது என்பதனை நாம் மறந்துவிட்டோம்.

அவன் தீமை செய்கின்றான்…! என்று முதலில் உணர்கின்றோம்.

இருந்தாலும் அவன் இப்படிச் செய்கின்றான் என்று தொடர் வரிசையில் அவன் செயலை நாம் நுகரப்படும்போது அவன் உணர்வு நமக்குள் ஆகி தீமையின் அணுக்களாக உருவாகி நம் உடலையே நலியச் செய்து விடுகின்றது என்பதனைத் தெளிவாக்குகின்றது நமது சாஸ்திரம்.

இதனை மாற்ற வேண்டும் என்றால் நம் கண்ணின் நினைவை வானை நோக்கி எண்ணி அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று நம் உயிரை வேண்டி உணர்வினை நம் உடலுக்குள் பரப்ப வேண்டும்.

பல கோடிச் சரீரங்களைக் கடந்து தான் மனிதனாக இன்று வந்துள்ளோம். தீமையை அகற்றும் சக்தியாக மனித உடலை உருவாக்கிய உயிரை நாம் மதித்து நடக்கத் தெரிய வேண்டும்.

1.நம் உயிரை மதிக்கத் தவறினால்
2.நுகர்ந்த உணர்வு கொண்டு இந்த உடல் தான் நமக்குச் சொந்தம் என்ற நிலையில் வாழ்ந்தால்
3.அந்தந்த சந்தர்ப்பத்தில் நாம் எண்ணிய உணர்வுகளை எல்லாம் உயிர் உடலாக்கி
4.வேதனை உணர்வாக நம்மை நரகலோகத்திற்கே அழைத்துச் செல்லும்.
5.உடல் பற்றே மிஞ்சும்… இந்த நல்ல மனித உடலை இழக்கச் செய்யும்
6.மனிதனல்லாத உடலாக மாற்றியமைத்துவிடும் நமது உயிர்.

ஆனால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் உணர்வை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமக்குள் எடுத்து வளர்த்து… அருள் ஒளியின் சுடராக நாம் மாறினால் நமது உயிரே சொர்க்கவாசலாக அமைகின்றது.

எதைக் கூர்மையாக எண்ணி வளர்த்தோமோ அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து சொர்க்கலோகம் அடைகின்றோம்.

உண்மையான ஞானமார்க்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

true divien marg

உண்மையான ஞானமார்க்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஞான மார்க்கத்துக்குச் சென்ற அவ்வாத்மீக வழியின் ஞானத் தொடருக்கு வந்தவர்களும் சித்தர்களும் முனிவர்களும் அவர்கள் தியானம் பெறுவதற்கு மலைக் குகையையும் சோலைகள் அடர்ந்த காட்டுப் பகுதிகளையும் இப்பூமியின் மட்டத்திற்கு மேல் உயர்ந்த இடமான மலைச் சிகரங்களுக்கும் சென்று அமர்ந்து தியானம் புரிவதின் உண்மை நிலையென்ன…?

இன்று நாம் வாழ்ந்திடும் ஊர்களிலும் நகரங்களிலும்… இம்மனித ஜீவாத்மாக்கள் நிறைந்து வாழ்ந்திடும் இடத்திலும்… மற்ற ஆலைகள் உள்ள இடங்களிலும்… அங்குள்ள காற்று…
1.அங்கு வாழும் மக்களின் அவர்கள் ஈர்த்து வெளியிட்ட எண்ண நிலை கொண்ட சுவாசமாகவும்
2.ஆலைகளில் இருந்து வெளிப்படும் கழிவுப் புகைகளாகவும்
3.காற்றுடனே அந்நிலை கொண்ட அவ்விடத்திலேயே சுற்றிக் கொண்டுள்ளன.

அந்நிலையில் அமர்ந்து தியானம் பெறும் பொழுது அவர்களின் எண்ணமுடன் இவ்வெண்ணத்தின் அலைகள் மோதும் பொழுது அவர்கள் ஈர்க்கும் சக்தி நிலையில் சில தடங்கல்கள் ஏற்படுகிறது.

ஆகையினால் இக்காற்று மண்டலத்தைச் சுத்தப்படுத்தும் தாவர வர்க்கங்கள் அடர்ந்த காட்டுப் பிரதேசத்தில் அமர்ந்து தியானம் செய்கின்றனர். அப்பொழுது அத்தியானத்திற்குப் பல நல்லுணர்வுகளும் அவர்களின் ஆத்மாவிற்கு நற்பயனும் கிட்டுகின்றன.

இதைப் போன்றே இப்பூமி மட்டத்திற்கு மேல் ஓர் அளவு கொண்ட உயரத்திற்கு மேல் மலைகளில் அமர்ந்து தியானம் செய்யும் பொழுது அசுத்தமான காற்று அவர்கள் செய்யும் தியானத்திற்கு வந்து அண்டுவதில்லை.

மலைக் குகைகளில் அமர்ந்து தியானம் செய்யும் பொழுதும் இப்பூமிக்கு அடியில் இவ்வசுத்தக் காற்று வந்து தாக்குவதில்லை. இதன் உண்மை நிலை இதுவே. “வாழ்க்கையிலிருந்து மீண்டு துறவறம் கொண்டவர்களினால்” இந்நிலைக்குச் சென்று இத்தியானம் பெறுவது எளிது.

1.ஆனால் வாழ்க்கையுடன் ஒன்றிய நம் நிலைக்கு
2.நம் வாழ்க்கையையே… நாம் வாழும் நிலையையே தியானமாக்கி
3.வாழும் பக்குவ நிலைதான் நமக்குகந்த உன்னத நிலை.

உடல் உபாதை உறும் பொழுது எந்நிலை கொண்ட உபாதை பெற்றோமோ அந்நிலையை அடக்கும் அதற்கு மேல் சக்தி கொண்ட வீரியமுற்ற மருந்தை உண்டால்தான் அந்த உபாதை மறைகிறது.

அதைப் போல் இவ்வாத்மீக வழியில் நல்லுணர்வு கொண்ட ஜெப நிலைக்கு வரும் பொழுது இக்காற்றுடன் கலந்துள்ள நல் சக்திக்கு மேல் தீய சக்திகளின் தாக்குதலில் இருந்து நாம் விடுபட்டுப் பழகுதல் வேண்டும்.

நாம் செல்லும் பாதையில் பல மேடு பள்ளங்கள் வரத்தான் செய்யும்…!

பள்ளம் உள்ள இடத்தையும் கல் தடுக்கும் இடத்தையும் அவற்றில் விழுந்தோ தடுக்கியோ செல்லும் அபாயத்திலிருந்து எப்பாதை சரியான பாதை என்று நாம் உணர்ந்து செல்கின்றோமோ அதைப் போன்றே
1.வாழ்க்கையில் வரும் இன்னல்களிலிருந்து நாம் மீண்டு சென்று
2.ஆத்மீகப் பாதையை அடையும் ஞான மார்க்கம் தான் உயர்ந்த ஞான மார்க்கம்.

இம்மார்க்கத்தை வெறுப்புடனோ… சலிப்புடனோ… சஞ்சல நிலை கொண்ட நிலையிலோ… நம்மைத் தாக்கிடும் இன்னல்களிலிருந்து பயந்தோ… செல்வது முறையல்ல…!

1.வரும் தடங்கலுக்கு வருந்திடாமல்…
2.அவற்றிலிருந்து அமைதியுடன் மீண்டு ஆத்மீக வழிக்குச் செல்வதுதான்
3.நாம் செல்லும் ஞான மார்க்கத்திற்கு உயர்ந்த நிலை.

இந்த ஞான மார்க்கத்தை நம் முன்னோர் பல நிலைகளில் சூட்சுமம் கொண்டு இவ்வுலகம் முழுவதுமே வெளிப்படுத்தியுள்ளனர். ஏற்று வழி நடந்து வந்திடுபவர் “கோடியில் ஒருவராகத்தான்…!” இன்று இவ்வுலகில் உள்ளனர்.

ஞான வழியையும் இத்தெய்வீக வழியையுமே இம் மனித ஜென்மங்கள் அடைய முடியாத நிலை…! என்று உணர்ந்து அந்த வழிக்குச் செல்வதற்கே பயந்த நிலை கொண்டு வாழ்கின்றனர்.

உயிரணுவாய் மனிதனாகத் தாயின் கர்ப்பத்தில் பிறந்த சிசுக்கள்தான் நாம் ஆண்டவராக வணங்கிடும் பல பல தத்துவ ஞானிகளும்…!

அவர்களைப் போன்றே… நாமும் நம் வாழ்க்கையின் இருளைப் போக்கி அச்சக்தியின் சுடரின் தொடர்பினை நம்முள்ளும் ஏற்றி நற்சக்திகளாய் ஆத்மீக நெறி கொண்ட ஞான வாழ்க்கையின் நெறியை நம் வழியாக ஏற்று வழிப்படுத்தியே சென்றிடுவோம்.

சப்தரிஷி மண்டலம் தான் நமக்கு உகந்த இடம்…!

big dipper - sapdharishi mandalams

சப்தரிஷி மண்டலம் தான் நமக்கு உகந்த இடம்…!

 

நம் சூரியனுடைய நிலைகள் அழிந்தாலும் இந்தச் சப்தரிஷி மண்டலம் ஒருக்கிணைந்து அகண்ட வெளிப்பாதைக்குச் (COSMOS) செல்லும் திறன் பெற்றது

அகண்ட வெளிப்பாதைக்குச் சென்றாலும் நஞ்சினை ஒடுக்கி உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி ஒன்று சேர்த்த நிலைகள் கொண்டு மகிழ்ந்து வாழும் நிலைகள் கொண்டது… அழிவே இல்லாது என்றும் நிலையானது தான் சப்தரிஷி மண்டலம்.

ஆகவே பரிணாம வளர்ச்சியில் மனிதனானபின் முழுமைப்படுத்தும் உணர்வுகள் கொண்டு தீமைகளைச் சமப்படுத்தும் நிலைகள் பெற்றவர்கள் அது தான் பரசுராம்.
1.எண்ணங்களால் சமப்படுத்தி
2.எண்ணத்தின் உணர்வை ஒளியாக்கி
3.உணர்வின் தன்மை என்றும் ஒளியின் சரீரமாகப் பெறும் தகுதி பெற்றது.

ஆகவே.. நாம் இந்த மனித உடலை இழப்பதற்கு முன் அருள் ஒளி என்ற உணர்வைக் கூட்டி இந்த உடலை விட்டு அகன்றால் என்றும் பதினாறு என்ற நிலையில் அகண்ட வெளியில் நாம் பிறவியில்லா நிலை கொண்டு மகிழ்ந்து வாழும் அந்தப் பேரின்பப் பெருவாழ்வு பெற முடியும்.

அந்த நம்பிக்கையுடன் வாழ வேண்டும்…!

1.எத்தனையோ கோடிச் செல்வம் இருப்பினும்
2.கோடி நண்பர்கள் இருப்பினும் அந்தக் கோடி நண்பர்கள் பால் நாம் பழகியிருப்பினும்
3.அந்த உணர்வுகள் எல்லாம் நாம் இந்த உடலில் வாழும் வரை தான்… என்றும் நிலைத்ததல்ல…!

இந்த உடலில் நாம் எத்தகைய நிலைகள் அதிகமாக வளர்த்திருக்கின்றோமோ அதன் வழியில் தான் இந்த உடலை விட்டு உயிரான்மா செல்கின்றது.

ஆகவே நாம் சேர்க்க வேண்டிய அழியாத செல்வம்… அருள் செல்வமான அந்தத் துருவ மகரிஷியின் நிலைதான்.
1.நம்முடைய பற்று துருவ நட்சத்திரம்தான் என்ற நிலையில் முடிவாக்கி
2.இந்த வாழ்க்கையில் என்றும் அழியாப் பருவம் பெற வேண்டும் என்று
3.இந்த உடலில் சேர்த்தால் அது அழியாத செல்வமாக வருகின்றது.

இந்த உடலைவிட்டு நாம் எந்த நேரம் சென்றாலும்… அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையும் பருவத்தைப் பெற வேண்டும்.

நமக்குள் அந்த அருள் வழியின் தன்மையை நாம் கூட்ட கூட்ட கூட்ட அதை இரத்த நாளங்களில் பெருக்க பெருக்க அனைத்தும் ஒன்றென்ற நிலையில் ஒளியாகின்றது.

அதனின் தொடர் வரிசையில் நம் எண்ணங்களை அந்தத் துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்திடல் வேண்டும். காலம் குறுகி இருப்பதினால் இவ்வாறு சொல்கிறேன் (ஞானகுரு).

முன்பு சூரியனைப் பார்க்கச் சொன்னேன்… சூரியனின் ஒளிக் கதிர்களைப் பார்க்கச் சொன்னேன். அக்காலம் அது வித்தியாசமாக இருந்தது.

சூரியனில் நச்சுத் தன்மைகள் அதிகரித்து விட்டது என்ற காரணத்திற்காகத்தான் இனி அதிலெல்லாம் தொடர்பு கொள்ளக் கூடாது என்று நிறுத்தியது.

காலங்கள் நெருங்கி வரப்படும் பொழுது…
1.இனி நாம் தொடர்பு கொள்ள வேண்டியது அந்தத் துருவ நட்சத்திரத்துடனே என்ற நிலையில்
2.அதனுடன் ஒன்றி வாழ்ந்திட வேண்டும் என்ற நிலைக்கு ஒவ்வொர்வரும் வருதல் வேண்டும்.

இந்தப் பூமியில் அகஸ்தியன் உருப்பெற்றதன் நிலையும் அவன் துருவனான நிலையும் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான இந்த நிலை இருப்பதனால் அந்த அடிப்படை வரிசையிலேயே நாம் நுகர்ந்து நம் உடலில் இரத்த நாளங்களில் அந்தச் சக்திகளைப் பெருக்குவோம்.

“இந்த வரிசைப்படுத்தி…” நம் குரு காட்டிய அருள் வழியில்
1.அகஸ்தியன் பாதையில் நாம் செல்வோம்
2.வாழ்க்கையில் அறியாது வந்த இருளை அடக்குவோம்
3.என்றுமே ஒளிச் சுடராக வாழ்வோம்
4.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் என்றும் ஒன்றி வாழ்வோம் என்று நிலைப்படுத்தி
5.நாம் அந்த நிலையான உணர்வுடன் ஒன்றியே வாழ்வோம் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

மெய் ஞானிகள் உணர்த்திய உண்மைகள் காலத்தால் மறைந்ததன் காரணத்தை அறிந்து கொள்ளுங்கள்

soul-is-sole-god

மெய் ஞானிகள் உணர்த்திய உண்மைகள் காலத்தால் மறைந்ததன் காரணத்தை அறிந்து கொள்ளுங்கள்

 

பக்தி எது என்று முழுமையாக உணராது அஞ்ஞான வாழ்க்கையே வாழ்கின்றோம். ஆன்மீக வாழ்க்கை என்றாலும் இன்று அந்த ஆன்மீகமும் அரசியல் வாழ்க்கையாகவே மாறிக் கொண்டு வருகின்றது.

ஒருவன் ஒரு ஆன்மீகத்தைப் பற்றிப் பேசினால் மற்றவர் ஒன்னொன்றைச் சொல்ல அதற்கும் இதற்கும் கலக்கம் உண்டாகின்றது.

மெய் ஞானிகள் காட்டிய அருள் வழிகளைக் காலத்தால் அரசர்கள் கைப்பற்றிக் கொண்டு அதை எல்லாம் அவர்களுக்குகந்ததாக மாற்றி விட்டனர்.

உதாரணமாக நம் ஊரிலே ஒரு நல்ல பேச்சாளி இருக்கின்றார். அதே போல் ஒரு போக்கிரியும் இங்கே இருக்கிறான் என்றால் திறமைசாலியான பேச்சாளியாக இருப்பினும் இந்தப் போக்கிரியைக் கண்டு அஞ்சித் தான் இருக்க வேண்டும்… அவனுக்கு ஒடுங்கித் தான் பேச முடியும்.

1.இதைப் போன்ற போக்கிரியாக இருந்தவர்கள் தான் அன்றைய அரசர்கள்…
2.இன்று வரையிலும் அப்படித்தான் உள்ளது
3.அவனை எதிர்ப்போரை வீழ்த்துவதுதான் நியாயம் தர்மம் என்ற நிலைகள் அரசனுடைய வாழ்க்கை.

அன்றைய அரசன்… தான் வாழ தனக்கென்ற ஒரு மதத்தை உருவாக்குகின்றான். அவன் இயற்றும் சட்டத்தை அவனை அணுகிய மக்கள் அதை அதைப் பதிவாக்கினால் அந்தப் பதிவே கடவுளாகின்றது.

1.அவர்கள் இட்ட சட்டத்திற்கு மாறாக நடந்தால்
2.இது தெய்வத்தின் குற்றம் அல்லது ஆண்டவனின் குற்றம் என்று சட்டங்களை இயற்றப்பட்டு
3.அரசன் காட்டிய நெறிகளுக்கு மாறாக நடந்தால் அவனுக்கு மரண தண்டனை கொடுத்தனர்.

இப்படித் தான் ஞானிகள் அல்லது மகரிஷிகள் அவர்கள் கண்டுணர்ந்த உண்மையின் உணர்வுகளை மக்களுக்குக் கிடைக்காது தடைப்படுத்தித் தன் சுயநலங்களுக்குக் கொண்டு சென்று விட்டனர்.

இன்றைக்கும் பார்க்கலாம்.. “வள்ளுவன் குறள் வையகமெல்லாம் ஓங்கி வளர வேண்டும்…” என்று சொல்வார்கள்.

ஆனால் திருவள்ளுவர் செய்த காரியம்…
1.அரசர்கள் தன்னாட்சியாக செயல்படும் நிலைகளில் இருந்து மீட்டிட
2.மனிதன் மனிதனை எப்படி மதிக்க வேண்டுமென்ற நிலையைத் தெளிவாக்கினார்.

“அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு…” என்ற பாடலைப் பாடியுள்ளார்.

ஏனென்றால் அனைத்திற்கும் மூலமாக… முதலாக உள்ளது… இவ்வுயிரே தான் காரணம்…! என்ற நிலைகளில் அவர் அந்தப் பாடலின் மூலம் பதிவாக்கினார்.

இதை எல்லாம் அவர் அன்றே சொல்லியிருந்தாலும் அன்றைய அரசர்கள் சட்டப்படி இப்படிச் சொல்வோரைக் குற்றவாளி என்றே பறைசாற்றும் நிலைகள் வருகின்றது.

ஞானிகள் கொடுத்தது எல்லாம் இப்படித்தான் மாற்றப்பட்டது. மாற்றப்பட்ட நிலைகள் கொண்டு தான் நாம் இன்று நல்லதைத் தேடிக் கொண்டே உள்ளோம்.

இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்திய உண்மைகளை உணர்த்துகின்றோம்.

இடி மின்னல்கள் எப்படி வருகிறது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

thunder and lightnings

இடி மின்னல்கள் எப்படி வருகிறது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பால்வெளி மண்டலம் சூனிய மண்டலம் என்கின்றனர். பால்வெளி மண்டலமும் பல மண்டலங்களில் இருந்து வெளிப்படும் சக்தியினைத் தன்னுள் வைத்துக் கொண்டேதான் சுற்றிக் கொண்டுள்ளது.

இப்பால்வெளி மண்டலத்தில் இருந்து மழை வரும்போது இடியும் மின்னலும் எந்நிலையில் வருகின்றன…?

பால்வெளி மண்டலத்தில் பல சக்திகள் சுற்றிக் கொண்டுள்ள நிலையில் மேகம் அடர்ந்து மழை பெய்யும் பொழுது பல அமில சக்திகள் சுற்றிக் கொண்டுள்ள நிலையில் மழைத் துளிகள் அதன் மேல் பட்டவுடன் இரண்டு வெவ்வேறு நிலை அமிலங்கள் ஒன்றின் மேல் ஒன்று மோதும் பொழுது ஏற்படும் நிலைதான் இடியும் மின்னலும்… மழை வரும் காலங்களில் ஏற்படுவதெல்லாம்.

இரண்டு தன்மை கொண்ட சக்திகள் மோதுண்ட நிலையில் ஒன்றை ஒன்று ஏற்காத நிலையில் பூமி எப்படிப் பூகம்பத்தை நிலநடுக்கத்தை வெளிப்படுத்துகின்றதோ அந்நிலை போலத்தான் இப்பால்வெளி மண்டலத்தில் இந்தச் “சத்ரு… மித்ரு” நிலை மோதுண்ட நிலையில் இடியும் மின்னலும் வருவதெல்லாம்.

இடியும் மின்னலும் வரும்போது பூமியில் உள்ள எவ்வமிலத்தன்மை கொண்ட சக்தி இப்பூமியில் அது தாக்கும் இடத்தில் உள்ளதுவோ அதனுடன்தான் இம்மின்னலுடன் வெளிவரும் அமில சக்தி வந்து கலக்கின்றது.

சில வகை மரங்கள் இவ்வமிலத்தன்மை கொண்டதாக உள்ளன. அவற்றின் மேல் இந்த மின்னல் தாக்கும் பொழுது அம்மரம் இதனைத் தன்னுள் ஈர்த்துக் கொள்கின்றது. தன் சக்திக்குகந்த அணு சக்தியைத் தான் அச்சக்தியின் நிலை கொண்ட மரங்கள் ஈர்க்கும்.

எப்படிப் பூமியில் பல நிலை கொண்ட தாவரங்களும் கனி வர்க்கங்களும் திரவங்களும் இக்காற்றினில் உள்ள அணுக்களைத் தனக்கு வேண்டியதைத் தன் நிலைக்கு ஒத்த அணுவை… தான் ஈர்த்து வளர்ந்து கொண்டே உள்ளனவோ அவை போல் தான் இப்பால்வெளி மண்டலத்திலும் சுற்றிக் கொண்டுள்ள அமில சக்திகளும் அதனதன் இனத்துடன் சுற்றிக் கொண்டே உள்ளன.

அதன் மேல் நீர்நிலை படும்போது ஒன்றுடன் ஒன்று மோதுண்ட நிலையில் வெளிப்படுகின்றது இடியுடன் கூடிய மின்னல்.

இம்மின்னல் வரும் பொழுது…
1.ஓர் இடத்தில் அப்படரும் ஒளி ஆரம்பித்தவுடன்
2.ஒரே நேர் கோடுபோல் நீண்டு அப்பட படக்கும் ஒலி ஒலித்துக் கொண்டே
3.அச்சக்திகள் உள்ள தூரம் வரை அப்படப்படக்கும் ஒலியுடன் கூடிய ஒளியின் மின் காற்றும் ஒலித்து வருகின்றது.

அம்மாறுண்ட சக்திகள் மோதுண்டு வரும் வரைதான் இடியின் ஒலியும் மின்னலின் ஒளியும். இடி இடிக்கும் பொழுது அதிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் இப்பூமிக்குள் வந்து… “அதன் சக்திகுகந்த தாவரங்களின் நிலையுடன் வந்து கலந்து விடுகின்றது…”

அதிகமான மேகங்கள் கூடி மழை பெய்யும் காலங்களில் நம் முன்னோர்கள் மரங்களின் கீழ் நிற்கக் கூடாது என்று சொல்லி வந்ததன் உண்மை இது.

இன்றைய விஞ்ஞானத்தில் மின்னலைத் தாங்கும் கருவிகளைக் கண்டுணர்ந்து மின்னலில் இருந்து மனிதரைக் காக்கும் நிலையில் அச்சக்தியை ஈர்க்கும் கருவிகளைப் பதித்து வைத்துள்ளார்கள்.

சில வகைத் தாவரங்களுக்கு இம்மின்னலை ஈர்க்கும் சக்தி நிலையுண்டு. மனிதரின் மேலும் மற்ற ஜீவராசிகளின் மேலும் மாடு மனை இவற்றின் மேலும் விழுந்தால் அந்நிலையில் தாங்கும் சக்தி இருப்பதில்லை.

ஆனால் இந்நிலையில் சக்தி கொண்ட தாவரத்தின் மேல் அம்மின்னலின் ஒளிக்கதிர்கள் தாக்கினாலும் அவை ஈர்த்தே வளர்கின்றன. சில தாவரங்கள் மரங்கள் இந்த இடி மின்னல் பட்டவுடன் கருகும் நிலையும் பெற்றுள்ளன.

இடியும் மின்னலும் எந்த நிலை பெற்று வருகின்றதோ அந்த நிலை போலத்தான் இவ்வான மண்டலங்களில் பல பல சக்தி நிலைகள் மாறு கொண்டு சுற்றிக் கொண்டுள்ளன.

குரு காட்டிய நெறியை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் – நடந்த நிகழ்ச்சிகள்

guru and disciple

குரு காட்டிய நெறியை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் – நடந்த நிகழ்ச்சிகள்

 

அன்று எஸ்.எஸ்.எம். இருக்கும் போது உட்லண்ட்ஸ் ஓட்டலில் ஒரு ஆன்மீகம் பற்றி விளம்பரம் செய்தார், பத்திரிக்கை நிருபர்கள் எல்லோரையும் கொண்டு வந்துவிட்டார்.

ஆன்மீகத்தில் உள்ள பெரிய பெரிய ஆள்களையும் அங்கே கூட்டிக் கொண்டு வந்து விட்டார்.

சாமி… நீங்கள் சும்மா இருங்கள்… எல்லாவற்றுக்கும் விடை அளிக்கிற மாதிரி மட்டும் எனக்குக் கொஞ்சம் சொல்லிக் கொடுத்து விடுங்கள்…! என்றார்.

தன்னைப் பெரிய மனிதனாகக் காட்டுவதற்காக வேண்டி என்னிடம் இப்படிச் சொல்கிறார். நான் பேசாமல் “கம்…” என்று உட்கார்ந்து விட்டேன்.

வந்தவர்கள் என்ன கேட்பார்கள்…? எப்படிக் கேட்பார்கள்…! என்று யாருக்குத் தெரியும்…? அவர்கள் கேட்பதற்கெல்லாம் இவரால் (எஸ்.எஸ்.எம்.) ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை.

நான் தான் எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறேன் அல்லவா.. சொல்லுங்கள்…! என்றேன்.

நீங்கள் சொல்லிக் கொடுத்ததைக் கேட்கவில்லை… வேறு ஏதோ கேட்கிறான். இதற்கு என்ன பதில்…? என்று கேட்கிறார்.

நீங்களே சொல்லுங்கள்… உங்களுக்கு விடை வரும்…! என்றேன்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெரியவர் தொண்ணூறு வயதுக்காரர் கேள்வி கேட்க ஆரம்பித்தார். பதில் அவரால் (எஸ்.எஸ்.எம்.) சொல்ல முடியவில்லை.

அதே சமயம் என்னைப் பார்த்ததும் சாதாரணமாக நினைத்து விட்டார். அப்புறம் அவரிடம் (தொண்ணூறு வயதுக்காரரிடம்) நான் கேட்டேன். கிரேதா யுகம் எது…? திரேதா யுகம் எது…? துவாபர யுகம் எது..? கலியுகம் எது…? கல்கி யுகம் எது…?

அது நாலாயிரம் ஆண்டு… அது ஐயாயிரம் ஆண்டு… பத்தாயிரம் ஆண்டு… என்று சொல்லிக் கொண்டே வந்தார்.

இது எல்லாமே உங்களுக்குள் இப்பொழுது நடக்கிறது…! என்றேன்.

1.நீங்கள் கவர்ந்து கொண்ட உடல் (கிரகித்துக் கொண்டது) கிரேதா யுகம்…
2.இந்த உடலுக்குள் திரேதா யுகத்தில் (திரேதா என்றால் சரீரம்) சுவையின் உணர்வுக்கொப்ப (சுவாசித்தது) எண்ணங்கள் வருகிறது…
3.துவாபர யுகத்தில் சாந்தமாக நாம் இருந்தாலும் ஒரு வெறுப்பான உணர்வு வரப்படும் போது அது நம்மை மாற்றுகிறது கலி.
4.அதாவது சாந்தமாக இருந்தாலும் நல்லதைத் தெரிந்து கொள்ளும் நிலையில் விஷம் என்ற நிலைகள் மோதும் போது இருள் சூழ்கிறது. இது கலி யுகம்.

5.இதிலிருந்து மீள வேண்டும் என்று வரும் போது கல்கி யுகம். தீமையை நீக்கக்கூடியது ஆறாவது அறிவு கார்த்திகேயா. இதை வைத்து மீளக்கூடியது கல்கி யுகம்.

உயிர் ஒளியாக இருக்கிறது. எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து மனிதனாக வந்த பிற்பாடு எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளக்கூடியது நம் ஆறாவது அறிவு கார்த்திகேயா.

ஆகவே எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு தீமை என்று தெரிந்து அதை நீக்கி ஒளியாக்கி ஒன்றாகச் சேர்க்கும் போது கல்கி யுகம்.

அப்புறம் ரிக் சாம அதர்வண யஜூர் என்ற நான்கு வேதங்களுக்கும் விளக்கம் கொடுதேன்.

இதை எல்லாம் சொன்னவுடனே அந்தத் தொண்ணூறு வயது பெரியவர் என் காலில் அப்படியே விழுந்து விட்டார்.

உங்கள் பாதம் எனக்குக் கொடுக்க வேண்டும். எனக்கு நீங்கள் ஆசீர்வாதம் கொடுக்க வேண்டும் நான் தெரியாமல் தவறு செய்து விட்டேன்… உங்களைச் சாதாரணமாக நினைத்து விட்டேன்.

நான் படித்த நூல்களில் விளக்கம் தெரிய விரும்பிய அத்தனையும் விளக்கமாகச் சொல்லி விட்டீர்கள். நூல்களில் தெரிந்து கொள்ள முடியவில்லை… ஆனால் உங்கள் மூலமாக இப்பொழுது தெரிந்து கொண்டேன். ஆகையினால் “என்னை மன்னித்தேன்…” என்று சொன்னால் நான் எழுந்திருப்பேன்.

நான் உங்களைப் பரீட்சித்தேன் என்று கோப அலைகள் விட்டதினால் என் மனது துடிக்கின்றது… என்று சொல்லிக் காலில் விழுந்தவர் அவர் எழுந்திருக்கவில்லை.

ஏனென்றால் சாம வேதத்தைப் பற்றி அவருக்கு விளக்கமாகக் கூறி வைத்தியரீதியில் எப்படிப் பயன்படுத்துகின்றார்கள்…? மனிதனுக்குள் எப்படி மாற்றி அமைக்கும் நிலையாக வருகிறது…? என்று எல்லா விளக்கங்களையும் தெளிவாகச் சொன்னேன்.

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ…? நான் தெரியாமல் தப்பு செய்து விட்டேன்.. ஏனென்றால் அகராதித்தனமாகக் கேட்கிறேன் என்றால் சாபத்திற்கு ஆளாக நேரும். என்னைச் சபித்து விடாதீர்கள் என்றார். ஆக அவர் விஷயம் தெரிந்த ஆள்..! இது அங்கே நடந்த நிகழ்ச்சி.

அதே போல் இங்கே ஆடிட்டர் ஒருவர் செய்தார்.

குரு என்கிற போது அதை மதிக்க வேண்டும். நாம் எல்லோருக்கும் பரந்த மனதுடன் தான் கொடுக்கின்றோம். அதைச் சுயநலத்திற்குப் பயன்படுத்தினால் சரியாகுமா…?

உங்களுக்கு ஞானிகளின் சக்தியைக் கிடைக்கச் செய்வதற்கு உங்களை உயர்த்துவதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதிலே நன்மை இருக்கிறது.

ஆனால் இதை ஒரு கருவியாக வைத்து உங்களிடமிருந்து நான் பறித்துச் சாப்பிட ஆரம்பித்தால் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எனக்கு அப்படிக் கொடுக்கவில்லையே…!

அவர் (ஆடிட்டர்) அறியாமல் அப்படிச் செயல்பட்டாலும்… மனிதனின் மனங்கள் எப்படியெல்லாம் மாறுகிறது…? என்பதை அனுபவபூர்வமாகத் தெரிந்து கொண்டோம்.

1.இதை நீங்கள் அடுத்தவருக்கு எடுத்துச் சொல்வதற்குப் பயனுள்ளதாக இருக்கும்.
2.அல்லது நம்முடைய மனமே மாறப் போகும் போது… நாம் திரிந்து வாழ இவருடைய செயல் உபயோகமாக இருக்கும்.

தவறுகளில் ஆசை வைத்தால் அது நாம் போகும் ஞானப் பாதையை எப்படித் திசை திருப்பும்…? அன்று எல்லோரும் தெரிந்து கொள்ள இந்த சம்பவம் உதவியாக இருக்கும்.

ஏனென்றால் எல்லாமே சந்தர்ப்பம் தான்…!

அதனால் நான் அவரைக் குற்றமாக எண்ணவில்லை. இனி அது தவறில்லாத நிலை வரட்டும். மற்றவர்களையும் உஷார்படுத்திக் கொள்ளலாம்.

ஏனென்றால் இந்த உடல் ஆசையைக் கூட்டப்படும் போது அந்த நிலை ஆகிவிடும். ஆகவே நம் ஆசை எதுவாக இருக்க வேண்டும்…?

பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்ற இந்த ஆசை இருக்க வேண்டும்.

உயிருக்குள் உலகமும் உலகுக்குள் உயிரும் – ஈஸ்வரபட்டர்

ultimate spirituality

உயிருக்குள் உலகமும் உலகுக்குள் உயிரும் – ஈஸ்வரபட்டர்

 

இன்று நாம் வாழும் வாழ்க்கையில் நாம் உண்ணும் உணவும் நாம் எடுக்கும் சுவாசமும் விஷம் கலந்ததாக உள்ளது. அதனால் பல புதிய வியாதிகளை நாம் ஏற்க வேண்டிய நிலையும்… அது நம்மைத் தாக்கும் நிலையும் உள்ளது.

இவை தவிர இன்றைய இக்கலியில் வாழ்ந்த நம்மில் வாழ்ந்த உடலில்லா ஆத்மாக்களின் எண்ணத்தில் செயலில் இருந்து நம்முடன் வாழும் மனிதர்களின் எண்ணத்தில் செயலில் இருந்தும் தப்ப வேண்டியுள்ளது.

இவைகளின் தாக்குதலில் இருந்தெல்லாம்…
1.நம்மையும் நம் மனோநிலையையும் நம் உடலையும் காத்திட வேண்டும் என்று ஒவ்வொருவரும் உணர்ந்து
2.ஆத்மீக வழியைப் பின்பற்றி வாழும் நிலைக்குப் பக்குவம் பெற்று வந்திடல் வேண்டும்.
3.நம்மை நாம் காத்து வாழ்வதற்கே இவ்வாத்மீகம் ஒன்றுதான் வழி.

ஓங்கி நிற்கும் “தனியான தெய்வம் ஒன்றில்லை…” என்பதனை உணர்ந்து… நாமும் நம்மைப் போல்தான் இவ்வுலகமும் மற்ற அனைத்து உலகங்களுமே என்றுணர்ந்திடல் வேண்டும்.

ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் அதனதன் உடல் தன்மை எந்தெந்த நிலை கொண்டெல்லாம் ஒவ்வொரு நாளும் செயல்படுகின்றதோ அந்நிலை கொண்டே இப்பூமித்தாயும் உயிருடன் உணர்வுடன் வாழ்கின்றாள்.

இப்பூமியில் வளர்ந்து வாழும் நாம் ஜீவன் கொண்டு எப்படி வாழ்கின்றோமோ அப்படியே தான் இவ்வுலகத் தாயும் வாழ்கின்றாள்… வளர்க்கின்றாள்… காக்கின்றாள்… அனைத்து சக்தியையும் வளர விடுகின்றாள்…!

உயிரணுக்கள் ஒவ்வொன்றுக்கும் எந்நிலை கொண்ட உணர்வுத் தன்மை உள்ளதோ அந்நிலையின் உணர்வுடனே இவ்வுலகத் தாயும் வாழ்கின்றாள்.

இவ்வுலகத் தாயின் உணவாக இவ்வுலகத் தாய்க்குச் சூரியனிலிருந்தும் மற்ற மண்டலங்களிலிருந்தும் கிடைக்கப் பெறும் அமுது தான் பல சக்திகள் கொண்ட இக்காற்றினில் வந்து சேரும் இப்பூமித்தாய் ஈர்க்கும் பல அணுக்களும் நீருமே.

இப்பூமித்தாய் உண்ணும் நீரும் அணுவும்தான் அவள் உண்டு அந்த அமுதை நமக்கும் அளிக்கின்றாள். அவள் பெற்ற செல்வங்களுக்கு இந்நீர் இல்லாவிட்டால் இவ்வுலகுக்கே ஜீவனில்லை.

இவ்வுலகிலுள்ள உலோகங்கள் தங்கம், தாமிரம், வைரம், நிலக்கரி இன்னும் பல நிலை கொண்ட உலோகங்களும் கல்லும் மண்ணும் மரமும் செடியும் எவையுமே
1.இப்பூமியிலிருந்து வளரும் எவையுமே நீர் இல்லாவிட்டால் வளர்ந்திடாது.
2.இப்பூமியும் நீர் இல்லாவிட்டால் வாழ்ந்திட முடியாது
3.நீரையே ஜீவனாகப் பெறும் இவ்வுலகிற்கு உணரும் தன்மை அனைத்தும் உண்டு.

இவ்வுலகில் பல இடங்களில் எரிமலையும் வெளிப்படுகின்றது பனி மலையும் வளர்கிறது பாலைவனங்களும் உள்ளன. “பாலைவனங்களுக்குச் சக்தி இல்லை…” என்று எண்ண வேண்டாம்.

பாலைவனங்கள் தான் மற்ற நிலையில் உள்ள சோலைகளுக்கு உயிர் நாடி. சோலைவனங்களும் மலைகளும் கடலும் சில பள்ளத்தாக்குகளும் இப்படி இவ்வுலகிலேயே ஒன்றுபோல் இல்லாமல் ஒவ்வொர் இடத்திற்கும் ஒவ்வொரு மாறுபட்ட தன்மைகளை இப்பூமித்தாய் தான் ஈர்த்து வெளிக்காட்டிடும் நிலையில் வளரச் செய்கின்றாள்.

பல சக்திகள் இக்காற்றில் சுற்றிக் கொண்டே உள்ளன.

அனைத்து சக்திகளுமே மனிதனுக்கெப்படி துடிப்பு நிலை சுவாச நிலை ஈர்த்து வெளிப்படுத்திக் கொண்டே உள்ளனவோ அந்நிலை போல்தான் இப்பூமியும் ஈர்த்துத் துடிப்புடனே வெளிப்படுத்திக் கொண்டே உள்ளது.

இவ்வுடலுக்கு நாம் உண்ணும் ஆகாரங்கள் அமிலமாகி அவை ஜீரணித்து நமக்கு வேண்டிய சக்தியைப் பெற்று நமக்கு வேண்டாத நிலையை வெளிப்படுத்துகின்றது.

நாம் எடுத்துக் உண்ட உணவையே இவ்வுடல் ஏற்று உதிரமாகவும் சிறுநீராகவும் மலமாகவும் காற்றாகவும் வியர்வையாகவும் ஆக்குகின்றது. இவற்றில் உதிர சக்தியை மட்டும் உடல் ஏற்று மற்றவைகளை வெளிப்படுத்துகின்றது.

அந்நிலை கொண்டுதான் இப்பூமித்தாய் ஈர்க்கும் நீரையும் அணுவையும் எந்தெந்த நிலைகளில் எச்சக்தி கொண்ட அணுவான அமிலத்தை ஈர்த்தனளோ அவ் ஈர்த்த சக்தியின் நிலை கொண்டே அச்சக்தியின் நிலை பெற்று அந்நிலையில் வளர்ச்சி பெறுகிறது.

அப்படி வளரும் நிலைகேற்ப சக்தியை அளிக்கும் (கொடுக்கும்) நிலையில் இப்பூமியின் உள் நிலையில் பல நிலை கொண்ட அமிலச் சக்திகள் தங்கி ஈர்க்குங்கால் அந்நிலையில் அவை சுற்றிக் கொண்டுள்ள தன்மையில் ஒரு சக்தியுடன் ஒரு சக்தி என்பது ஒரு நிலை கொண்ட அமிலத்துடன் மற்றொரு சக்தி நிலை கொண்ட அமிலம் மோதும் பொழுது (சத்குரு, மித்குரு நிலை) ஒன்றுக்கொன்று ஏற்காத நிலையில் அவை வெடிக்கும் தன்மையில் தான் பூமி அதிர்வு ஏற்படுவதெல்லாம்.

நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கு முதலிலேயே இன்றைய விஞ்ஞானத்தில் கண்டுபிடிக்கும் நிலையை உணர்ந்துள்ளார்கள்.

ஆனால் இந்நிலை அதிர்வு பூகம்பம் இவை எல்லாம் எந்நிலையில் ஏற்படுகின்றன…? என்பதனை உணர்த்தி விட்டால் இனி விஞ்ஞானத்திற்கு இன்னும் பல வழிகள் புலப்பட்டிடும்.

1.பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் அனைத்து சக்திகளையும்
2.இக்காற்றிலிருந்து இழுத்துத் தன் சுவாசத்திற்கு ஈர்த்திடும் ஆற்றல்
3.இந்த உலக ஜீவராசிகள் அனைத்திற்கும் உண்டு.

ஆனால் அவையவை எடுத்த சக்தியின் நிலை கொண்டு குறைந்தும் அதிகரித்தும் மாறுபட்ட தன்மையுண்டு. உலோகங்களில் மாறுபட்ட தன்மை உள்ளது போல் ஜீவராசிகள் ஈர்த்து வெளிபடுத்திடும் சக்தியிலும் மாறுபட்ட சக்தி நிலையுள்ளது.

ஒன்று போல் ஒன்றில் சக்தி நிலை ஒன்றுபட்டு எவற்றுக்குமே இருந்திடாது. கனி வர்க்கங்களிலும் ஒரே மரத்தில் காய்க்கும் கனிக்கும் மாறுபட்ட சுவையும் மாறுபட்ட சக்தியும் மாறுபட்ட அளவு நிலையும் இருந்திடும் சிறிதளவேனும்.

ஒரே செடியில் பூக்கும் புஷ்பங்களின் நிலையும் இவை போன்றே. இவ்வுலக நிலையும் இவை போன்றே.

சுற்றிக் கொண்டே உள்ள உலகில் அவை ஈர்த்து வெளிப்படுத்திய சக்தியில்தான் எத்தனை மாற்றங்கள்…? எத்தனை நிலை கொண்ட தன்மைகள்…?

இவை போல்தான் ஒவ்வொரு மண்டலத்தின் நிலையுமே.

இவ்வான மண்டலத்தின் நிலையும் ஜீவன் கொண்டேதான் சுற்றிக் கொண்டு உள்ளது. பால்வெளி மண்டலம் சூனிய மண்டலம் என்றெல்லாம் செப்புகின்றோம். எவை சூனிய மண்டலம்…?

1.சூனிய மண்டலம் என்ற தனித்த மண்டலம் ஒன்றில்லை.
2.இப்பால்வெளி மண்டலம் என்ற மண்டலத்திற்கே ஜீவன் உண்டு.

இந்த அருள் ஞான வழியில் நாம் பயணம் செய்யக் காரணமாக இருக்கும் நம் தாய் தந்தையரைக் கடவுளாக மதித்தல் வேண்டும்

first and foremost god

இந்த அருள் ஞான வழியில் நாம் பயணம் செய்யக் காரணமாக இருக்கும் நம் தாய் தந்தையரைக் கடவுளாக மதித்தல் வேண்டும்

 

மனிதனாக உருப்பெறக் காரணமாக இருந்த நம் தாய் தந்தையை முதலில் அவர்களைக் கடவுளாக நாம் மதித்துப் பழகுதல் வேண்டும்.

ஏனென்றால் எத்தனையோ தொல்லைகள் பட்டுத்தான் அவர்கள் மனிதரானார்கள். ஆனால் நாம் ஈயாக எறும்பாக தேளாக பாம்பாக இருந்திருப்போம்.

அதை அடித்திருப்பார்கள். அந்த உயிர் அவர் உடலில் ஈர்ப்புக்குள் சென்றது. அவர் உடலில் சேர்த்த அந்த உணர்வைக் கவர்ந்தது. நம் உயிர் அவர் உடலுக்குள் சென்றால் அவர் வளர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையை அது கவர்ந்தது… மனிதனாக உருப்பெரும் சந்தர்ப்பமாகின்றது.

தாய் கருவில் இருக்கக்கூடிய காலத்தில்… தாய் நல்லதைப் பற்றி ஏங்கியிருந்தால் நல்ல உணர்வாகக் கருவுக்குள்ளும் சேர்த்து நல்ல உடலாக உருவாக்குகிறது.

ஆனால் நாம் கருவிலே இருக்கப்படும்போது
1.தாய் வேதனையும் துயரமும் அதிகமாக எடுத்திருந்தது என்றால்
2.நம் உடலில் பல நோய்களும்… ஊனமான உடலாக உருவாக்கும் தன்மை கூட வருகின்றது.

ஆகவே நம்முடைய சந்தர்ப்பம்… கருவில் இருக்கும்போது தாய் எடுத்துக் கொண்ட மகிழ்ந்த நிலை உணர்வுக்குத்தக்க தான் நம்மை நல்ல மனிதனாக உருவாக்கியது… சிந்தித்துச் செயல்படும் திறனாகவும் பெற்றது.

தாயின் உணர்வால் நாம் நல்லவராகவும் சிந்திக்கும் தன்மையும் பெற்று இப்பொழுது நல்ல உபதேசங்களைக் கேட்கும் அருளும் கிடைக்கிறது.

1.தாயின் உடலில் கருவாக இருக்கும் பொழுது அத்தகைய நல் உணர்வை எடுத்தவர்கள் தான்
2.அந்த வலுக் கொண்டு இதைக் கேட்கும் சக்தியுடன் இங்கே அமர்ந்திருப்பார்கள்
3.அந்த உணர்வின் தன்மை இருந்தால் தான் கவர முடியும்.

அப்படிப்பட்ட பூர்வ புண்ணியம் இல்லாதவர்கள் உபதேசம் கேட்டுப் பார்ப்பார்கள்.
1.அதிலே தனக்கு வேண்டியதை எதிர்பார்ப்பார்கள்
2.அது இல்லையென்றால் போய்க் கொண்டே இருப்பார்கள்.

அது மட்டுமல்ல…! நல்ல உணர்வு பெற வேண்டுமென்ற தாய் எடுத்த உணர்வின் தன்மையே உங்களை இங்கு அமர்ந்து இதைக் கேட்கும்படி செய்கிறது.

1.எத்தனை தொல்லைகள் இருப்பினும்
2.எத்தனை துயரங்கள் இருப்பினும்
3.இந்த அருள் உணர்வை நீங்கள் பெறும் தகுதி ஏற்படுத்துவது உங்கள் தாயே.

ஆகவே உங்கள் தாயை நீங்கள் கடவுளாகவும் தெய்வமாகவும் மதித்துப் பழகுதல் வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு நொடியிலும் எத்தகைய இன்னல்கள் வந்தாலும் நம்மை எத்தனையோ வகையில் நாம் பிறந்த பின் நம்மைக் காத்தருளிய தெய்வம் அது. நமக்கு நல் வழி காட்டிய குருவும் நம் தாயே.

தாய் கருவில் இருக்கப்படும்போது எடுத்துக் கொண்ட உணர்வே நம்மை நல்லவனாக்குவதும் கெட்டவனாக்குவதும்…!

ஆகையினால் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உங்கள் தாய் தந்தையர் உயிரைக் கடவுளாக மதித்து அவர்களைத் தெய்வமாக மதித்து இந்த வாழ்க்கைப் பயணத்தை நீங்கள் செயல்படுத்துங்கள்.

ஒவ்வொரு சமயமும் உபதேசத்தை உணர்த்தும் பொழுதெல்லாம் நம் குரு காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் ஆழப் பதிவு செய்து கொண்டே வருகின்றோம்.

இதை மீண்டும் மீண்டும் நினைவு கொண்டால் அந்த அருளைப் பெறலாம். உங்களுக்குள் அறியாது புகுந்த இருளைப் போக்கலாம். தெளிந்த மனம் பெறலாம்… தெளிவான வாழ்க்கை வாழலாம்.

நச்சுத்தன்மையின் வீரியம் தான் இன்றுள்ள காற்று மண்டலத்தில் ஓங்கி நிற்கின்றது… ஜெப நிலை பெற்றால் தப்பலாம் – ஈஸ்வரபட்டர்

herbal power of agastyar

நச்சுத்தன்மையின் வீரியம் தான் இன்றுள்ள காற்று மண்டலத்தில் ஓங்கி நிற்கின்றது… ஜெப நிலை பெற்றால் தப்பலாம் – ஈஸ்வரபட்டர்

 

நல் உணர்வுடைய நற்செல்வங்களை (குழந்தைகளை) நாம் பெற்றே சமமான நிலையில் வாழ்ந்திட்டாலும் வாழும் நிலையில் சூழ்ந்துள்ள அசுத்தத் தன்மை வாய்ந்த மூச்சுக் காற்றுகளும் நல் நிலையில் வாழ்பவரையும் வந்து தாக்குகின்றது. ஆரோக்கிய நிலையும் மாறுபடுகின்றது.

1.இக்காற்றில் கலந்துள்ள சக்தியில் நச்சுத்தன்மையின் வீரியம் தான் இப்பொழுதுள்ள நிலையில் ஓங்கி நிற்கின்றது
2.இதிலிருந்து மீண்டு ஜெப நிலை பெற்றே வாழ்ந்திட வேண்டும்.

சில உபாதைகள் இக்காற்றிலிருந்து நாம் ஈர்க்கும் சுவாசத்துடன் நம்மை வந்து அணுகத்தான் செய்கின்றன. அந்நிலையிலிருந்து நாம் மீள… சில வைத்திய முறைகளை ஏற்க வேண்டியுள்ளது.

இக்காலநிலை மாறும் தன்மையிலும் இவ்வுடல் நிலை மாறும் தன்மையிலும் சில நிலை கொண்ட மாற்றங்கள் உடல் நிலைக்கும் வரத்தான் செய்கின்றன.

இந்நிலையில் இருந்தெல்லாம் நம் உடல் ஆரோக்கியம் பெறச் சாதாரண வாழ்க்கை நிலையிலுள்ள நாம் சில மருந்துகளை உட்கொள்ள வேண்டியுள்ளது.

சித்தர்களும் முனிவர்களும் ஞானிகளும் ரிஷிகளும் போல் இக்காற்றிலிருந்தே உடலில் ஏற்படும் பிணிகளை மாற்றும் சக்தி கொண்ட காற்றினை ஈர்த்து வாழும் பக்குவ நிலை பெற்றவர்கள். அத்தகைய நிலையை நாமும் பெறப் பழகிக் கொள்ள வேண்டும்.

சிறு குழந்தைகளுக்கும் சரி… பிறந்த சிசுவுக்கும் சரி.. தாயின் கர்ப்பத்திலிருந்து இவ்வுலகில் வாழ வந்த நாட்களில் அதைப் பேணிப் பாதுகாக்கப்
1.பிறந்த நாளிலிருந்தே சில மருந்துகளை நம் முன்னோர்கள் அதற்கு ஊட்டித்தான்
2.வளரும் பக்குவத்தை நமக்கும் வழிகாட்டித் தந்தார்கள்.

ஆனால் இன்று வாழும் மனிதர்களோ… உணவைப் போலவே மருந்தையும் உட்கொண்டே வாழும் நிலையில் உள்ளார்கள்.

ஏனென்றால் இக்காற்றின் அசுத்தத் தன்மையினால் வளரும் பயிரின் செழிப்பும் குறைந்து விட்டது. மக்கள் தொகையும் பெருகி விட்டது.

நாம் உண்ணும் உணவுத் தானியங்களைப் பெருக்கிட வேண்டும் என்றால்… இன்றைய விஞ்ஞான உலகத்தில் பல இரசாயன நிலை கொண்ட உரங்களைச் செலுத்தியே உணவுத் தானியங்களின் உற்பத்தியை வளரச் செய்து நாம் அதை உண்ண முடிகின்றது.

1.இயற்கையின் உரங்கள் செலுத்தி வளரச் செய்த காலங்கள் மாறி
2.செயற்கையான உரங்கள் செலுத்தித்தான் இன்றைய உணவு உற்பத்தி நிலையை நாம் பெற முடிகின்றது.

இந்த இரசாயன உரங்களை ஈர்த்து வளர்ந்த பயிர்களில் இருந்து நாம் பெற்று உண்ணும் தானியங்களின் மூலம் நம்மையும் அந்நிலை கொண்ட சத்து நிலை (இரசாயணங்கள்) வந்து தாக்குகின்றது.

இயற்கையில் வளரும் தன்மை இன்றுள்ள இக்கால நிலையில் முடியாததினால் இச்செயற்கையின் வளர்ச்சியில் வந்த செயற்கையான தானியத்தையே உட்கொள்ள வேண்டியுள்ளது.

ஆகவே செயற்கையுடன் ஒன்றி நாம் வாழ்வதால் இவ்வுடல் மாற்றத்திற்கு இன்று புதிய புதிய மருத்துவத்தைச் செயல்படுத்தி நமக்கு ஏற்கத்தான் வேண்டியுள்ளது.

1.நம் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டிய பல மூலிகைகளை இன்று இக்கால நிலையில் தவற விட்டுவிட்டோம்
2.மூலிகையில் உள்ள மகத்துவத்தை நாம் எடுக்கும் நிலையில் இல்லை
3.அதை ஏற்கும் மனோ நிலையும் நம்மிடம் இல்லை.

சித்தர்கள் நமக்கு உணர்த்திய பல மூலிகைகளை நாம் பெறுவதற்கும்… இன்றைய மனிதனின் மன வளர்ச்சியில் எதையும் துரித நிலை கொண்டு செயலாக்கும் மன வளர்ச்சியில்… “இன்றைய மனிதனுக்குப் பொறுமை நிலையும் இல்லை…!”

இதில் வந்த வினைச் செயலால் தான் இன்று இத்தேசத்தில் அன்று உணர்த்திய பல உன்னத மூலிகைகளின் பொக்கிஷமெல்லாம் மறைந்து சிதைந்து விட்டதின் நிலை.

ஞானத்தையும் தியானத்தையும் தெய்வீகத்தையுமே மிஞ்சும் “விஞ்ஞானம்…” என்னும் துரித நிலையில் சென்று கொண்டுள்ளான் இன்றைய மனிதன்.

அன்றன்ற தேவையை மட்டும் உணர்ந்து வாழும் மனிதன் தன் ஆத்மா என்ற ஆண்டவனை எண்ணி வாழ்வதில்லை.

துரிதமுடன் செயற்கைக்கு அடிமைப்பட்ட இன்றைய மனிதனால்
1.இவ்வாத்மீக வழியும் ஜெப வழியும் அறிந்து வாழ்ந்திட்டால்
2.தன் வாழ்க்கையின் முழுமை எங்குள்ளது…? என்பதனையே அறிந்திடலாம்
3.காற்று மண்டல நஞ்சிலிருந்து விடுபடவும் செய்யலாம்…!

நமக்குப் பிறக்கும் செல்வங்கள் எல்லாம் “அறிவின் சுடராக வந்து பிறந்திட வேண்டும்…” – ஈஸ்வரபட்டர்

intelligent child

நமக்குப் பிறக்கும் செல்வங்கள் எல்லாம் “அறிவின் சுடராக வந்து பிறந்திட வேண்டும்…” – ஈஸ்வரபட்டர்

 

“கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்…” என்ற பொருள்படி கம்பராமாயணத்தை கம்பர் எழுதும்கால் அவரின் எண்ணம் நினைவு எல்லாமே அவர் எவ்வெண்ணத்தை ஈர்த்துச் செயல்படுத்துகிறாரோ அவ்வெண்ணத்தின் சுவாசக் காற்றுத்தான் அவர் உள்ள இடம் தனில் சுற்றிக் கொண்டிருக்கும்.

எவ்வில்லத்தில் எவ்வெண்ணத்தின் செயலுடன் துரிதமாகச் சுற்றிக் கொண்டுள்ளதோ அந்த நிலைக்கொப்பத்தான் அந்தந்த இடத்தில் உள்ள எல்லா நிலைகளும் நடந்திடும்.

அவ்வில்லத்தில் வாழ்பவரின் எண்ணமும் இவ்வெண்ணத்தின் சுவாசக் கலப்பினால் ஒவ்வோர் இல்லத்திலும் எச்சக்தியின் எண்ண நிலை ஓங்கி நிற்கின்றதோ அந்நிலை கொண்ட செயல்தான் நடந்திடும்.

கவி பாடும் கவிஞரின் இல்லம் மட்டுமல்ல…! ஒவ்வொரு குடும்ப நிலையிலும் அக்குடும்பத்தில் உள்ள தனித்தன்மையின் நிலை அக்குடும்பத்தில் உள்ளோரின் நிலையும் ஒன்றுபட்டதாகவே இருந்திடும்.

பிறக்கும் குழந்தைகளில் நல்லறிவு கொண்ட குழந்தைகளும்… சில குழந்தைகள் நல்லறிவு வளர்ச்சி பெறாமல் பிறப்பதுவும் கண்டிருப்பீர்.

முன் ஜென்மத்தில் செய்த வினைப்பயன் மட்டும் கொண்டு அனைத்து குழந்தைகளும் பிறப்பதில்லை. பிறக்கும் ஒவ்வொரு சிசுவுக்கும் முன் ஜென்மத் தொடர் தொடர்வதில்லை.

ஆதியில்… ஆதியில் என்பது இவ்வுலகம் கல்கியில் பிறந்த நாளில் இருந்த உயிர் அணுவிற்கும் இப்பொழுதுள்ள உயிரணுவிற்கும் பல கோடி கோடி நிலைகள் அதிகரித்துள்ளன.

அந்நிலையில் இப்பொழுது வாழும் அனைவருக்குமே முன் ஜென்மத்தில் வாழ்ந்ததின் தொடர் நிலைகள் எந்நிலையில் வந்திடும்…?

புதிய புதிய உயிரணுக்கள் தோன்றிக் கொண்டே உள்ளன. முன் பாடத்தில் சொல்லியபடி ஒரு மனிதன் இறந்த பிறகு அவன் உடலை அடக்கம் செய்த நிலையில் அவ்வுடலில் இருந்து பல உயிரணுக்கள் தோன்றி சுற்றிக் கொண்டு உள்ளன என்றேனல்லவா…?

1.அந்நிலை கொண்ட உயிரணுக்களெல்லாம் தாயின் கர்ப்பத்திற்கு ஜீவன் பெற வந்திடும் பொழுது
2.அவ்வுயிரணுக்களுக்கு எண்ண நிலைகளும் செயல் திறமையும் முழுமை பெறாததால்
3.அத்தகைய உயிரணுக்கள் தாயின் கர்ப்பத்திற்கு வரும் பொழுது தான்
4.சில குறைப் பிரசவங்களும் கருச்சிதைவுகளும் உண்டாவதெல்லாம்.

இவ்வுயிர் அணுக்கள் தன் ஜீவன் பெறும் துடிப்பில் எத்தாயின் கர்ப்பத்திற்கும் வந்து பிறக்கும் நிலையில் பிறப்பிற்கு வருகின்றது.

மனித உடலிலிருந்து உண்டான உயிரணுக்கள் எல்லாமே மனித சுவாசம் நிலை கொண்ட மனித கர்ப்பத்திற்குத்தான் வருகின்றது. மிருக நிலையும் இதைப் போன்ற நிலை கொண்டதுவே.

இப்புதிய உயிரணுக்கள் ஜீவன் பெற தாயின் வயிற்றில் உதித்து வளரும் பொழுது… எக்கரு எத்தாயின் வயிற்றில் வளர்கின்றதோ…
1.அத்தாயின் நிலை சமமான நிலை கொண்ட சஞ்சலம் கொள்ளாத நிலையிலிருந்தால்
2.அத்தாயின் ஆரோக்கிய நிலையும் நல் நிலையிலிருந்தால்
3.அத்தாயின் வயிற்றில் உள்ள கருவும் அத்தாயெடுக்கும் சுவாச நிலை கொண்ட புத்தியின் வளர்ச்சி நிலைக்கும்
4.அத்தாயின் வாழ்க்கையுடன் கலந்துள்ளவரின் சுவாச நிலைக்கும் அக்கருவையும் தன்னுள் வளர்த்துக் கொண்டு
5.நல் நிலை கொண்ட சிசுவாக வந்து பிறக்கின்றது.

இன்னும் பல சிசுக்கள் தாயின் கர்ப்பத்தில் உள்ள பொழுதே அத்தாயின் எண்ண நிலை கொண்டு அந்நிலையின் தாக்குதலினால் இச்சிசுக்கள் பிறந்தவுடன் பிறவியிலேயே பல நிலை கொண்ட வியாதியின் அணுவைத் தாங்கியே பிறக்கின்றது.

இவ்வுலகத்தாய் பெற்றெடுத்த தாயானவள் “தான் பெற்றெடுக்கும் சிசுக்களை…” நல்ல அறிவுள்ள பொக்கிஷமாகப் பெற்றெடுக்க சூலுண்ட நிலையில் உள்ள ஒவ்வொரு தாயும் தன் எண்ணத்தை அன்புடனும் ஆசையுடனும் பண்பாக்கிச் சம நிலையில் கொண்ட நிலையில் வாழ்ந்தே “அறிவுடன் கூடிய அன்புச் செல்வங்களை பெற்றெடுத்து மகிழ்ந்திடுங்கள்…”

சூலுண்ட நிலையில் அன்பு, ஆசை, பண்பு என்ற ஆண்டவன் ஜெபம் கொண்ட அமுதுண்டே அழகுடனே பெற்றிடுங்கள் அரும் செல்வங்களை.

1.ஆண்டவன் வந்து அளிப்பதல்ல நாம் பெறும் செல்வங்களை…!
2.நம்மை நாம் பக்குவம் கொண்டு வாழ்ந்திட்டாலே அவ்வாண்டவனின் செல்வம் நம்முள் வந்து பிறந்து
3.நாம் பெற்றெடுக்கும் செல்வமும் அவ்வாண்டவனின் சக்தி கொண்டு நமக்கு வந்து பிறக்கும்.
4.நமக்குப் பிறக்கும் செல்வங்கள் எல்லாம் “அறிவின் சுடராய் வந்து பிறந்திட வேண்டும்…” என்ற ஜெப நிலை கொண்டே பெற்றெடுங்கள்.