சப்தரிஷி மண்டலம் தான் நமக்கு உகந்த இடம்…!

big dipper - sapdharishi mandalams

சப்தரிஷி மண்டலம் தான் நமக்கு உகந்த இடம்…!

 

நம் சூரியனுடைய நிலைகள் அழிந்தாலும் இந்தச் சப்தரிஷி மண்டலம் ஒருக்கிணைந்து அகண்ட வெளிப்பாதைக்குச் (COSMOS) செல்லும் திறன் பெற்றது

அகண்ட வெளிப்பாதைக்குச் சென்றாலும் நஞ்சினை ஒடுக்கி உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி ஒன்று சேர்த்த நிலைகள் கொண்டு மகிழ்ந்து வாழும் நிலைகள் கொண்டது… அழிவே இல்லாது என்றும் நிலையானது தான் சப்தரிஷி மண்டலம்.

ஆகவே பரிணாம வளர்ச்சியில் மனிதனானபின் முழுமைப்படுத்தும் உணர்வுகள் கொண்டு தீமைகளைச் சமப்படுத்தும் நிலைகள் பெற்றவர்கள் அது தான் பரசுராம்.
1.எண்ணங்களால் சமப்படுத்தி
2.எண்ணத்தின் உணர்வை ஒளியாக்கி
3.உணர்வின் தன்மை என்றும் ஒளியின் சரீரமாகப் பெறும் தகுதி பெற்றது.

ஆகவே.. நாம் இந்த மனித உடலை இழப்பதற்கு முன் அருள் ஒளி என்ற உணர்வைக் கூட்டி இந்த உடலை விட்டு அகன்றால் என்றும் பதினாறு என்ற நிலையில் அகண்ட வெளியில் நாம் பிறவியில்லா நிலை கொண்டு மகிழ்ந்து வாழும் அந்தப் பேரின்பப் பெருவாழ்வு பெற முடியும்.

அந்த நம்பிக்கையுடன் வாழ வேண்டும்…!

1.எத்தனையோ கோடிச் செல்வம் இருப்பினும்
2.கோடி நண்பர்கள் இருப்பினும் அந்தக் கோடி நண்பர்கள் பால் நாம் பழகியிருப்பினும்
3.அந்த உணர்வுகள் எல்லாம் நாம் இந்த உடலில் வாழும் வரை தான்… என்றும் நிலைத்ததல்ல…!

இந்த உடலில் நாம் எத்தகைய நிலைகள் அதிகமாக வளர்த்திருக்கின்றோமோ அதன் வழியில் தான் இந்த உடலை விட்டு உயிரான்மா செல்கின்றது.

ஆகவே நாம் சேர்க்க வேண்டிய அழியாத செல்வம்… அருள் செல்வமான அந்தத் துருவ மகரிஷியின் நிலைதான்.
1.நம்முடைய பற்று துருவ நட்சத்திரம்தான் என்ற நிலையில் முடிவாக்கி
2.இந்த வாழ்க்கையில் என்றும் அழியாப் பருவம் பெற வேண்டும் என்று
3.இந்த உடலில் சேர்த்தால் அது அழியாத செல்வமாக வருகின்றது.

இந்த உடலைவிட்டு நாம் எந்த நேரம் சென்றாலும்… அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையும் பருவத்தைப் பெற வேண்டும்.

நமக்குள் அந்த அருள் வழியின் தன்மையை நாம் கூட்ட கூட்ட கூட்ட அதை இரத்த நாளங்களில் பெருக்க பெருக்க அனைத்தும் ஒன்றென்ற நிலையில் ஒளியாகின்றது.

அதனின் தொடர் வரிசையில் நம் எண்ணங்களை அந்தத் துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்திடல் வேண்டும். காலம் குறுகி இருப்பதினால் இவ்வாறு சொல்கிறேன் (ஞானகுரு).

முன்பு சூரியனைப் பார்க்கச் சொன்னேன்… சூரியனின் ஒளிக் கதிர்களைப் பார்க்கச் சொன்னேன். அக்காலம் அது வித்தியாசமாக இருந்தது.

சூரியனில் நச்சுத் தன்மைகள் அதிகரித்து விட்டது என்ற காரணத்திற்காகத்தான் இனி அதிலெல்லாம் தொடர்பு கொள்ளக் கூடாது என்று நிறுத்தியது.

காலங்கள் நெருங்கி வரப்படும் பொழுது…
1.இனி நாம் தொடர்பு கொள்ள வேண்டியது அந்தத் துருவ நட்சத்திரத்துடனே என்ற நிலையில்
2.அதனுடன் ஒன்றி வாழ்ந்திட வேண்டும் என்ற நிலைக்கு ஒவ்வொர்வரும் வருதல் வேண்டும்.

இந்தப் பூமியில் அகஸ்தியன் உருப்பெற்றதன் நிலையும் அவன் துருவனான நிலையும் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான இந்த நிலை இருப்பதனால் அந்த அடிப்படை வரிசையிலேயே நாம் நுகர்ந்து நம் உடலில் இரத்த நாளங்களில் அந்தச் சக்திகளைப் பெருக்குவோம்.

“இந்த வரிசைப்படுத்தி…” நம் குரு காட்டிய அருள் வழியில்
1.அகஸ்தியன் பாதையில் நாம் செல்வோம்
2.வாழ்க்கையில் அறியாது வந்த இருளை அடக்குவோம்
3.என்றுமே ஒளிச் சுடராக வாழ்வோம்
4.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் என்றும் ஒன்றி வாழ்வோம் என்று நிலைப்படுத்தி
5.நாம் அந்த நிலையான உணர்வுடன் ஒன்றியே வாழ்வோம் என்று வேண்டிக் கொள்கின்றேன்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply