மனித (உடல்) வாழ்க்கையின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

abstract of human soul

மனித (உடல்) வாழ்க்கையின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.இயற்கையுடன் ஒன்றி வளரும் உருமாற்ற வளர்ச்சித் தொடரும்
2.உருவாகும் கால நிலையும்… உருண்டோடும் ஈர்ப்புச் சுழற்சியும்… உருவாகும் தன்மை கொண்டு
3.உருளுகின்ற உயிரணுவின் சேர்க்கை கொண்டு உருவாவது தான்..
4.பிம்ப உடல்களின் அங்க அவயங்களும்… உருவ பிம்ப அச்சும்…!

இந்தப் பிம்ப ஜீவ உடலின் உயிராத்மாவிற்கு எத்தகைய எண்ணங்களை எல்லாம் ஈர்ப்பில் எடுத்து நாம் சேமிக்கின்றோமோ அந்த நிலைக்குத்தக்க உயிராத்மா வித்து தான் பிறிதொரு கூட்டுச் சேர்க்கை வளர்ப்பு ஜீவனுக்கு வழி காட்ட முடியும்.

இவ்வாத்ம ஜீவ உயிரானது காந்த சக்தி கொண்டது…!
1.நாம் எடுக்கும் சுவாசமானது
2.கவன நரம்பில் மோதுண்டுதான் நெற்றிப் பொட்டில் ஈர்க்கப்பட்டு
3.சிறு மூளையின் செயலுக்குச் சென்று இந்தப் பிம்ப உடல் ஜீவிக்கின்றது.
4.ஆகவே “காந்த சக்தி” கொண்டது தான் நம் உயிராத்மா…!

எந்த எண்ண சுவாசத்தை நாம் எடுக்கின்றோமோ… அதன் நிலைக்கொப்ப வலு சக்தி கொண்ட முலாமாக… இந்த உயிர் காந்த ஆத்மாவுக்கு அது வலு ஏறுகின்றது.

நாம் பூசிய முலாமின் ஈர்ப்பு காந்த உயிரணுவின் செயலானது இவ்வுடலில் இருக்கும் காலத்தில் சேமித்த தன்மை கொண்டுதான் பிறிதொரு ஜென்மப் பிறப்பு (அடுத்த) உடலுக்கு இந்த வித்தின் கலவைக் கூட்டுச் சேர்க்கைக்குகந்த பிறப்பெடுக்க முடிகின்றது.

தாவரங்களின் புவி ஈர்ப்புப் பிடியுடன் ஒன்றி வளர்ந்த உயிரணுக்களும்… இந்தப் புவியுடன் ஒன்றிய கனிவள உயிரணுக்களும்… ஒன்றிலிருந்து ஜீவன் பிரிந்து மற்றொரு ஜீவ சக்தி எடுப்பது என்பது இப்புவி ஈர்ப்புடன் ஒன்றிய பிறப்பில் இருந்ததால் குறுகிய காலத்தில் தொடர் பிறப்பின் பிறப்பு வளர்கின்றது.

அதுவே ஆத்ம பிறப்பெடுக்கும் இவ்வுயிராத்மா.. அது சேமிக்கும் முலாமின் அமில வளர்ச்சியின் சக்தி வலு இக்காந்த ஈர்ப்பு சக்தி கூடி விடுகின்றது,

அப்படிக் கூடி விடுவதனால் அவ்வுயிர் ஆத்ம வலுவினால் ஜீவ சக்தி கொண்ட வளர்ப்பாகும் தன்மைக்குத் தன் சேமித கலவைக் கூட்டு அமிலத் தன்மைக்கொப்ப ஈர்ப்பு நிலையின் “உயிர் வித்தின் ஈர்ப்பில் தான்… பிறப்பெடுக்க முடியும்…!”

நெல் விதையைப் பக்குவப்பட்ட நஞ்சை நிலத்தில் போட்டால் தான் அது வளர்கின்றது. அதையே மேடு காடுகளில் போட்டால் அந்த நிலப் பகுதியில் நெல்லுக்குத் தேவையான பக்குவத் தன்மை இல்லாததால் இதன் வளர்ப்பு வளர்வதில்லை.

அதைப் போன்று இந்த உயிராத்ம சக்திக்கு…
1.எந்த ஈர்ப்பு அமிலக்கூட்டு முலாமாக மோதுண்டு
2.வாழும் காலத்தில் அதனின் வளர்ப்பு வளர்ந்ததோ
3.அதன் ஈர்ப்புப் பிம்பத்திற்கே செல்கிறது.

இயற்கைச் சுழற்சித் தன்மையில் சுழன்று வாழும் உயிராத்மாக்கள் “சுழற்சி ஈர்ப்பின் சுழலாகச் சுழலும் சுழற்சியையே…” (இயற்கையின் இயக்கம்) தன் உணர்வால் எடுக்கும் எண்ணம் மனிதனுக்குத் தான் உண்டு.

இப்படிப்பட்ட ஜீவன் கொண்ட பகுத்தறிவும் செயலாற்றும் பிம்ப உடலின் உயிராத்மா காந்த சக்தியினால்தான்
1.உருவாகும் இயற்கை கோளங்களையும்
2.உருவாகும் சக்திக்கே உரு நிலை தரும் சக்தியும்
3.இந்த மனித பிம்பத்திற்குத்தான் உண்டப்பா…!

அப்படிப்பட்ட தகுதி கொண்ட இந்த மனித உயிராத்மாவிற்கு நாம் சேமிக்கும் எண்ண உணர்வால்
1.நாம் எடுக்கும் “சுவாசத்தின் முலாம்” கொண்டுதான்
2.இந்த உயிராத்மாவின் உயர்வை நாம் காண முடியும்.

வேதனையுடன் வாழ்ந்து… வேதனையைக் கொண்டு செல்வதைக் காட்டிலும் “வேதனையை நீக்கும்” அழியாச் சக்தியைக் கொண்டு செல்ல வேண்டும்

blissful-lights

வேதனையுடன் வாழ்ந்து.. வேதனையைக் கொண்டு செல்வதைக் காட்டிலும் “வேதனையை நீக்கும்” அழியாச் சக்தியைக் கொண்டு செல்ல வேண்டும்

 

விநாயகர் தத்துவத்தில் கூறப்பட்டுள்ளபடி ஆதிமூலம் என்ற உயிர் பல கோடி உடல்களில் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்… விடுபட வேண்டும்… என்று சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக தீமைகளிலிருந்து விடுபடும் உடலாக மனிதனை உருவாக்கியது “விநாயகா… கணங்களுக்கெல்லாம் ஈசா கணேசா…!” என்று உயிரை வணங்கும்படிச் செய்கின்றனர்.

நம் உடல் நஞ்சை மலமாக மாற்றிய பின் எதையுமே உருவாக்கும் சக்தி பெற்ற மனிதனாக உருவானது. இது எல்லாம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னாடி அகஸ்தியன் கூறிய பேருண்மைகள்.

1.நாம் நுகர்ந்த உணர்வுகள் சிவமாகி
2.அந்த உணர்வின் இயக்கம் வினையாகி
3.வினைக்கு நாயகனாக வாழ்க்கையாகி
4.அதன் உணர்வின் தன்மை உடல்களை மாற்றி
5.இன்று நஞ்சினை மாற்றிடும் திறன் பெற்ற மனிதனை உருவாக்கியது.

சூரியனுக்கெல்லாம் சந்தர்ப்பத்தால் ஏற்படும் நிலைகள் தான் உருமாற்றங்களும் உணர்வுகள் மாற்றம் எல்லாமே. அதே போல் தான் செடிகள் மாற்றம் கொடிகளின் மாற்றங்களும். (இவைகள் எல்லாம் தானாக எதையும் மாற்றிட முடியாது)

எத்தனையோ கோடிச் செடிகள் ஒன்றுடன் ஒன்று கலந்து ஒன்றை ஒன்று தாக்கப்படும் பொழுது உணர்வுகள் மாறுகின்றது.. அதனின் சத்துகளும் ரூபங்களும் மாறுகின்றது.

அதே போல் எது வலு கொண்டதோ உயிரினங்கள் ஒன்றுக்கொன்று கொன்று சாப்பிடுகின்றது. ஆனால் அதே சமயத்தில் உணர்வுகள் பரிணாம வளர்ச்சி அடைகின்றது,

ஆனால் மனிதனான நாம் முழு முதல் கடவுள்…!

ஏனென்றால் இன்று புதிதாக ஒரு உயிரினத்தையே உருவாக்கக்கூடிய அளவுக்கு விஞ்ஞானிகள் வந்துவிட்டார்கள். உயிரணுவின் நிலையையே மாற்றும் தன்மைக்கு வந்துவிட்டார்கள்.

1.ஒவ்வொரு உடல்களிலும் உள்ள அணுக்களை மாற்றுகின்றான்.
2.ஒரு உயிரணு கருவிலே இருந்தாலும் அந்தக் கருவிலேயே இவன் நேரடியாக
2.அந்தக் கருவுக்குண்டான நிலைகளை மாற்றி உருவத்தையே மாற்றுகின்றான்..
3.இப்படி உயிரினங்களையே மாற்றும் தன்மைக்கு வந்துவிட்டான் விஞ்ஞானி.

மனிதனுக்கு நோய் வந்தால் அந்த உடலில் உள்ள எந்தெந்த திசுக்கள் பலவீனம் அடைகின்றதோ அவைகளுக்கு இஞ்செக்சன் மூலம் மருந்தைச் செலுத்தி திசுக்களை செருகேற்றி மாற்றிக் கொண்டு வருகிறார்கள்.

ஒரு உறுப்பில் குறைகள் ஏற்பட்டாலும் அதையே மீண்டும் அந்தத் திசுக்களை வலு கொண்டு மாற்றும் தன்மைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.
1.திசுக்களை மாற்றி மாற்றி
2.இன்று ஒரு மனிதனை ஆயிரம் ஆண்டுகள் கூட வாழ வைக்க முடியும் என்று
3.அணுக்களின் தன்மையைக் கூட்டிச் செயல்படுத்துகின்றனர்.

ஆனால் ஆயிரம் ஆண்டு காலம் இப்படி வாழ்ந்து வந்தாலும் அதற்குப் பின் எங்கே செல்வது…?

உயிர் ஒளியானது அதற்கு அழிவில்லை.. வேகா நிலை கொண்டது. ஆனால் உடல்கள் கருகுகின்றது. இது மெய் ஞானிகள் கண்டது. ஆகவே உயிரைப் போல நாம் வேகா நிலையை அடைதல் வேண்டும்.
1.அப்படி அடைந்தவன் தான் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனது
2.அதைப் பெறுவது தான் “நமது கடமையாக..” இருக்க வேண்டும்.

ஏனென்றால் எத்தனையோ கோடித் துன்பங்களிலிருந்து மீட்டி நம்மை மனிதனாக உருவாக்கிய உயிரை ஈசனாக மதித்து அவனால் இந்த மனித உடலைப் பெற்று ஆறாவது அறிவால் அறிந்து கொள்ளும் சக்தியும் பெற்றிருக்கின்றோம்.

அதை எல்லாம் இப்பொழுது உபதேசித்தாலும்
1.அதைக் கேட்டுக் கொள்ளும் அறிவும்
2.கேட்டுக் கொள்ளும் அறிவிருந்தாலும் அதை மாற்றிக் கொள்ளும் அறிவும் உங்களுக்கு உண்டு.

இப்படித் தீமைகளை மாற்றி நல் உணர்வுகளை நாம் சேர்த்துக் கொண்டோம் என்றால் நம் வாழ்க்கையை அமைதியான வாழ்க்கையாகக் கொண்டு வரலாம்.

இந்த லௌகீக வாழ்க்கையில் எப்படி வேதனைப்பட்டாலும் நாம் கடைசியில் கொண்டு போவது என்ன…? வேதனையைத்தான் கொண்டு போக வேண்டும்.

1.வேதனையை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற்றுப் பழகினோம் என்றால்
2.அந்த வேதனையை நீக்கும் சக்தியாகப் பேரொளியாக நமக்குள் வளர்கிறது.
2.அந்த உணர்வை நம்முடன் சேர்த்துக் கொண்டு வரும் பொழுது நாம் பிறவி இல்லா நிலையை அடைகின்றோம்.

இதைப் பெறுவதற்குண்டான முயற்சிகளை நீங்கள் எடுங்கள்… எமது அருளாசிகள்…!

“இயற்கையின் விதி” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

HUMAN TO GOD

“இயற்கையின் விதி” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இப்புவி ஈர்ப்பு மட்டுமல்லாமல் உருவாகும் அனைத்து அணுத் தன்மையும் அணுத் தோன்றி அணு வளர்க்கும் வளர்ச்சியிலேயே மோதுண்டு மோதுண்டு வளர்ந்து வருகின்றது.

முதலில் அந்த அணு தாவரமாக வளர்ந்தாலும் அல்லது அணுவாக உலோகம் வளர்ந்தாலும் எத்தொடர் வழி அணுக் கொண்டு எதன் எதன் தொடர்பெல்லாம் அந்த ஆரம்ப உயிரணு மோதுண்டு வழி பெறும் தன்மை பெற்றதோ
1.அந்த அவ்வுயிரணுவின் அமில ஆத்மக் கலவையில் அதனின் வளர்ச்சித் தொடர்
2.ஒவ்வொரு சக்திக் கலவை வழி கொண்டு
3.அதன் சேர்க்கை உருவ அமைப்பை (MOULD) வளர்த்துக் கொள்கின்றது.

ஆரம்ப உயிரணுத் தோன்றி இவ்வீர்ப்பில் புல்லாக “புல் செடியாக” வளர்ந்து அப்புல் செடியானது மக்கி மடிந்து விடுகின்றது.

மடிந்தாலும் அது வளர்த்த அவ்வுயிரணு அப்புல் செடியாக வளர்ந்த கலவையின் முலாமுடன் பிறிதொரு வளர்ப்பிற்கு அவ்வுயிரணு வித்து அமிலத் தன்மை வளரும் பொழுது
1.புல்லாகிய முதல் உயிரணு
2.பிறிதொரு வளர்ப்பிற்கு வரும் பொழுது “வலுவான செடித் தன்மை” கொண்ட பிறப்பை எடுக்கின்றது.

இப்பிறப்புத் தன்மை செடி மக்கிய அவ்வுயிரணு அச்செடி வளர்ப்பில் பல அணுக்களை வளர்த்துத் தன் வலுவைக் கூட்டிக் கொண்டு இசெடியின் முலாமான அமிலக் கூட்டுத் தொடர்புடனும் பிறிதொரு வளர்ப்பில் இதற்கு மேல் “வலுவான பூவாகும்” வளர்ப்பாகின்றது.

இத்தொடர் கொண்டு ஒவ்வொரு வளர்ச்சியின் ஈர்ப்பிலும்…
1.எச்சுவை கொண்டு… எவ்வழித் தொடர் வளர்ப்பிலெல்லாம் ஓர் உயிரணு வழித் தொடர் கொண்டு
2.தன் கூட்டுக் கலவையின் வளர்ச்சி மோதலுக்குகந்த முலாமான அமிலத்தைச் சேமிக்கும் வலுக் கொண்டு
3.அவ்வுயிரணு உயிராத்மாவாக புவிஈர்ப்புப் பிடியில் சிக்குண்டு
4.வளரும் தாவர நிலை மாறி ஜீவ சக்தி பெறக்கூடிய நடக்கும்… பறக்கும்… ஊரும்.. நீந்தும்… நிலை பெறுகின்றது.

இந்த வழித் தொடர் எல்லாமே இயற்கையின் நியதிகள்.

ஆக… இந்த மனித உயிராத்மாவின் சக்தி மற்றெல்லா ஜீவ சக்தியினைக் காட்டிலும் உயர்ந்த ஈர்ப்பு சக்தி கொண்டது.
1.ஆத்ம உயிரைச் செயல்படுத்தும் தன்மை கொண்டு தான்
2.இந்தப் பிம்ப உடல் ஆரோக்கியமும் ஞான வளர்ச்சியும் வலுக் கொள்கின்றது.

அப்படி என்றால் உயிராத்மாவை வலுப் பெறும் தன்மைக்கு நம் உணர்வலையின் எண்ணத்தை எப்படிச் செயல்படுத்துவது…?

உடலுடன் கூடிய உயிராத்மாவை…
1.எப்பிம்பத்தில் இவ்வுயிர் ஆத்மக் கலவை செயல்படுகின்றதோ
2.அதே பிம்பத்திலிருந்து தான் இவ்வுயிராத்மாவையும் வலுப் பெறச் செய்ய முடியும்.

குயவன் செய்யும் பானையின் உருவிற்கு அவன் சேர்க்கும் மண்ணும்… அவன் வடிக்க எண்ணிய அச்சின் வடிவாகவும் தான்… பானை அமைகின்றது.

அதைப் போன்று ஒவ்வொரு உயிரணுவும் எப்புவி ஈர்ப்பில் ஜீவன் கொண்டு எதிலேயெல்லாம் மோதுண்டு மோதுண்டு உருவாகி வலுப்பெற்றதோ அதன் தன்மை போன்று
1.நம் உயிராத்மாவானது இந்தப் பிம்ப அச்சுக்கூட்டில் இருக்கும் பொழுது
2.ஆத்ம உயிர் வித்தை உயர்ந்த வித்தாக்க வேண்டும்.

இப்பொழுது நாம் வாழும் இந்தப் பிம்பக் கூட்டிலிருந்து தான் அந்த நிலை பெறவேண்டும் என்பதை உணர்ந்து கிடைத்த “இந்தப் பாக்கியத்தை நழுவ விடாதீர்கள்…!”

உயிராத்மா – ஞானகுரு

soul guru - gnanaguru

உயிராத்மா  – ஞானகுரு 

 

ஒன்று பலவாகும் வித்தை வளர்க்கும் சக்தி எத்தொடர்பின் வளர்ப்பில் வளர்கின்றதப்பா…? தான் பெற்ற சக்தியைப் பலரும் பெறவல்ல வழித் தொடர் வளர்க்கும் முறை எப்படி…?

மனித எண்ணத்தின் பகுத்தறியும் உணர்வு ஞானம் வளரும் ஈர்ப்பலைக்கு ஞானிகளின் வழி வகுத்து குடும்ப வாழ்க்கை முறையில் பல நெறி முறைகளைக் காவியக் கதைகளில் உணர்த்திச் சென்றார்கள்.

அதன் வழித் தொடரில் பக்தியை ஊட்டி மனித ஆத்மாக்களின் எண்ணச் சிதறலை வழி வகுத்து
1.மனிதன் தன்னை மறந்து சில தேவையின் இச்சையில் தன் உணர்வையே இழக்கும் நிலைக்குச் செல்வதை
2.அன்றே காவியங்களில் கதையாக – தெய்வங்களான நிலைக்குக் கதை உருவங்கள் தந்து செயல்படுத்தினார்கள்.

உடல் உறுப்புகள் செயலிழந்தாலும் கை கால்கள் முடம் ஏற்பட்டாலும் மனிதன் பகுத்தறியும் ஆற்றலினால் செயற்கை உபகரணத்தால் தன் தேவையை அமைத்துக் கொள்கின்றான்.

தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயற்கையின் மாறுபாட்டுக்கு ஏற்ப வெயில் குளிர் மழை காற்று இவைகளைத் தாங்கக்கூடிய வீடுகளை அமைத்துக் கொள்கின்றான்.

அதை எல்லாம் செய்தாலும்… இந்தப் புவியில் வாழும் மனிதன்
1.தன் வளர்ச்சியால் ஆத்ம பலம் கொண்டு
2.பூமியின் ஈர்ப்பலையில் இருந்து விடுபடும் உணர்வின் செயலுக்கு
3.தன் ஆத்ம ஞானத்தை வளர்த்துக் கொண்டால் தான் மனிதனின் ஆத்ம பலம் கூடும்.

ஞானத்தால் சக்தி கொண்டு
1.தான் பெற்ற சக்தியைப் பிறிதொரு ஆத்மாவும் பெறவல்ல போதனையால்
2.எச்சக்தி கொண்டு நம் ஆத்ம ஞானம் வளர்ந்ததோ
3.அதற்கு வலுவான ஆத்ம வலு அலைச் சக்தியை நம் ஆத்மாவும் பெற்று வலுப் பெறகின்றது.

ஏனென்றால் காந்த மின் ஈர்ப்பு ஜீவ உயிர் இது…!

இந்த உயிர்த் துடிப்பின் ஆத்ம ஈர்ப்பின் வலு கூட்ட இவ்வுணர்வின் எண்ணத்தைப் பக்குவம் கொண்டு ஞானம் வளர்த்து ஞானத்தால் அறியும் உயர் ஞான வழி முறையை
1.ஞானம் வளர்க்கப் பிறிதொரு ஆத்ம சுழற்சி எண்ணத்தில் செலுத்தி
2.அந்த வலு சக்தியை நம் உயிராத்மா பெறவேண்டும் (இது முக்கியம்).

உயிர் தந்தாய்… உடல் தந்தாய்… குருதியினைப் பாலாக்கி வளர்த்திட்டாய்… என்று அன்னையை முதல் தெய்வமாக குருவாக வணங்குகின்றோம். ஒவ்வொரு மனிதனுக்கும் குரு யார்…?

தன் உயிராத்மா தான் முதல் குரு. தாயானவள் நம் ஈர்ப்பிற்கு ஜீவன் பெற வழி தந்து வளர்ச்சி தந்து முதல் குருவானாலும் இந்த ஆத்ம குரு வளர்ப்பினால் தானே அக்குருவை நாம் அடைய முடிகின்றது.

குருவின் உண்மை நிலை என்ன..? போதனையால் பெறுவது குரு அல்ல…!

1.குருவின் போதனையை குரு காட்டியை போதனையாக நம் ஆத்ம குரு ஏற்கும் பொழுது தான்
2.எக்குருவின் போதனையையும் இந்தக் குரு செயலாக்கி வழிப்படுத்தும் முறைக்கு வருகின்றது

நம் ஆத்ம குரு வளர்ந்தால் தான் குரு சிஷ்யத் தன்மை வளர்கின்றதப்பா…! இக்குரு முறை அனைத்து நடை முறைச் செயல்களுக்கும் ஒன்றியது தான்.

இவ்வாத்ம குருவை… ஞானம் வளர்க்கும் நற்குருவின் செயல் குருவாக… இவ்வாத்ம குரு வளர்வது தான் குருத் தன்மை பெறும் நிலை.

1.ஒவ்வொரு ஆத்மாவும் தன் உயிர்க்குருவை உயர் குருவாக
2.இந்தப் புவி ஈர்ப்புப் பிடி சுழற்சியிலிருந்து விடுபட்டு
3.இந்த உயிராத்மாவை ஞான குருவாக்குங்கள்.

ஆன்ம ஞானத்தில் உன்னத நிலை பெற விரும்புபவர்கள் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

power of Meditation

ஆன்ம ஞானத்தில் உன்னத நிலை பெற விரும்புபவர்கள் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

உணர்வால் உந்தப்படும் அச்சமுடன் கூடிய எண்ணத்தால் ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுக்கும் சுவாச முறை கொண்டு
1,வாழ்க்கை நெறி வழியிலும்
2.குடும்பச் சுழற்சிச் செயலிலும்
3.பந்த பாசச் சுற்றத்தாரின் உணர்வுடன்
4.இந்த உணர்வின் எண்ணத்தையே வெளிப்படுத்தினால்
5.வைத்தியனால் பலரின் உணர்வு எண்ணமுடன் கலந்து
6.அவர்களின் வியாதிக்கு இவர் எண்ணத்தைச் செலுத்திச் செலுத்தி அதனுடன் கூடிய சுவாசத்தை எடுப்பதனால்
7.இந்த வைத்தியனுடைய உணர்வே அவ் ஈர்ப்பின் பிடியில் சிக்குண்டு
8.அவ்வலைத் தொடர் எண்ணம் கொண்ட செயலுடனேயே ஒன்றிவிடும்.

ஆகையினால் வைத்தியர்களின் பெரும்பாலோரின் வாழ்க்கை நிலை அமைதி கொண்ட இன்ப இல்லற குடும்ப வாழ்க்கை அமையாமல் அவர்களின் வாழ்க்கையே அமைதியற்ற நிலையில் தற்கொலைக்குத் தன்னை ஆட்படுத்திக் கொள்ளக்கூடிய சுழற்சியுடன் ஊன்றிவிடுகின்றது.

அதே போன்று விஞ்ஞானத்தில் தன் ஞானத்தை வளரவிடுபவர்களும் எவ் அலை ஈர்ப்பில் தன் உணர்வின் எண்ணத்தைச் செலுத்தி தன் ஞானத்தை எவ் விஞ்ஞானச் செயல் கண்டு எவ் ஒரு மாற்றப்படைப்பைத் தன் அறிவின் ஞானம் கொண்டு உருவாக்க முற்படுகின்றார்களோ அதே ஈர்ப்பின் சுழற்சி வட்ட அலைத் தொடருடன் எண்ணத்தை ஒன்றிவிடுகின்றனர்.

தன் அறிவின் ஞானத்தால் அறியும் புதிய விஞ்ஞான அலையில் சிக்குண்டு அதனுடனே ஒன்றி தன் உணர்வின் எண்ணச் சுவாசத்தால் தன் ஆத்ம ஞானமும் அதுவாகவே உட்பட்டு விடுகின்றனர்.

அப்படிப்பட்ட விஞ்ஞானனி தன் குடும்ப வாழ்க்கையையோ உற்றார் சுற்றார் மற்றோரின் எண்ண அலையை மனிதச் சுழற்சி நெறி முறை பழக்க வழக்கங்களையும் அறியும் தன்மை அற்று விடுகின்றனர்.

எந்த ஆராய்ச்சி ஈர்ப்பின் பிடி அலையில் சிக்குண்டனரோ பசி தாகம் மற்றெல்லா உணர்வுகளையும் மறந்து அவற்றின் பிடிக்குத் தன் ஞான அறிவின் ஆத்மாவையே செயலாக்குபவனுக்கு
1.வாழ்க்கையில் ஏற்படும் எவ் எதிர் நிலையான எதிர்ப்பையும் ஏற்க முடியாத் தன்மையில்
2.விஞ்ஞானத்தால் தன் அறிவின் ஞானம் கொண்டு பல புதிய செயற்கைச் செயல்களைச் செய்விக்கும் அந்த விஞ்ஞானி
3.தன் உணர்வின் ஞானத்தில் அமைதி கொண்ட வாழ்க்கையை அமைக்க முடியாமல்
4.தற்கொலைப் பிடிப்பில் தன்னையே மாய்த்துக் கொள்கின்றான்.

ஆகவே உணர்வால் செலுத்தும் எண்ணம்…
1.எவ் ஈர்ப்பலையையும் தன் உடலுடன் எடுத்துக் கொள்ளும் செயலாக ஒன்றாமல்
2.தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் செயலாக இவ்வெண்ணம் செயல்பட வேண்டும்.

ஒன்றைக் கொண்டு பலவற்றை வளர்க்க வேண்டும் என்றால் அவ் ஒன்றான விதையை புழு பூச்சி அரிக்காமல்… சொத்தைப் பட்டு வெடிப்பு ஏற்படாமல்… விதை நன்றாக இருக்க வேண்டும்.

அப்படிப் பாதுகாக்கப்பட்ட அந்த விதையைத் தான் பக்குவப்படுத்திய நிலத்திலிட்டுப் பயிராக்கி அதன் மகசூலாகப் பல விதையை எடுக்க முடியும்.

அதைப் போன்று மனித வித்தின் வளர் வித்து ஆத்மாவை எப்படியப்பா வளர்ப்பது..?

நம் ஆத்ம ஜீவனை… இஜ்ஜீவனுடன் கூடிய உடலின் உணர்வால்
1.எண்ணத்தில் எடுக்கும் செயல் கொண்டு
2.நற்சத்தான வித்தாக்கி வித்தைக் கொண்டு
3.பல வித்துக்களை எடுக்க வேண்டும்.

ஆக… பிறந்தோம்… வளர்ந்தோம்… மணந்தோம்.. பிள்ளைகளைப் பெற்றோம்… என்ற வழித் தொடரில் வளர்ப்பதல்ல ஆத்ம வித்தின் சக்தியை…!

செல்வச் செழிப்புடன் மகிழ்ந்து வாழச் செய்யும் தியானம்

 

நீங்கள் ஒரு தொழிலோ, வியாபாரமோ, விவசாயமோ செய்பவர்களாக இருக்கலாம்.

அவ்வாறு நீங்கள் செய்து கொண்டிருக்கும் நிலைகளில் சலிப்பையோ சோர்வையோ வெளிப்படுத்துகின்றீர்கள் என்றால் அந்தச் சலிப்பான சோர்வான உணர்வுகள் தொழில் செய்யும் இடங்களில் பதிவாகின்றன.

உங்கள் தொழிலில் சேவையைப் பெறும் வாடிக்கையாளர்களை அந்தச் சலிப்பான சோர்வான உணர்வுகள் தாக்கி அவர்கள் வாங்கவிருக்கும் பொருள்களில் அதிருப்தியை உண்டாக்கி உங்களுடைய தொழிலைப் பாதிப்படையச் செய்துவிடுகின்றன.

நீங்கள் வெளிப்படுத்தும் சலிப்பான சோர்வான உணர்வுகள் எவ்வாறு பாதிப்படையச் செய்கின்றது என்பதை அனுபவபூர்வமாக உணரவேண்டும் என்று விரும்பினால் அதை ஒரு சிறு சோதனையின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்

,நாம் வெளிப்படுத்தும் உணர்வலைகளின் இயக்கங்கள்

நான்கு பூந்தொட்டிகளை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரே இனத்தைச் சேர்ந்த நான்கை தொட்டிக்கு ஒன்றாக பதியுங்கள். பிறகு அவைகளை ஒரே சூழலில் வைத்துப் பராமரிக்கப்ப்டும் பொழுது வெவ்வேறு உணர்வுகளுடன் அதை அணுகுங்கள்.

அதாவது ஒரு செடியைப் பார்க்கும் பொழுது அது செழித்து வளர வேண்டும் என்ற எண்ணத்துடன் நீரை ஊற்றுங்கள். மற்ற செடிகளை அணுகும் பொழுது சலிப்பு, வேதனை, வெறுப்பு போன்ற எண்ணங்களுடன் நீரை ஊற்றிப் பாருங்கள்.

செழிப்பின் உணர்வு கொண்டு நீரை ஊற்றிய செடி செழிப்பாக வளர்வதைக் காணலாம். அதே சமயத்தில் சலிப்பு, வேதனை வெறுப்பு கொண்டு பார்த்த செடிகள் வாடி வதங்குவதையும் காணலாம்.

இவ்வாறு வெவ்வேறு விதமான உணர்வுகளுடன் அந்தச் செடிகளைப் பராமரிக்கப்படும் பொழுது அந்தச் செடிகளின் வெவ்வேறு விதமான வளர்ச்சி செழிப்பு அவைகளை வைத்து வெவ்வேறு விதமான உணர்வின் செயல்களை அறிய முடியும்.

தாவர இனத்தின் உணர்வுகள் நமக்குள் உண்டு அதனின் மணத்தின் உணர்வு நமக்குள் எண்ணத்தைத் தூண்டுகின்றது. அந்தக் குணத்தின் சிறப்பு எதுவோ அது நமக்குள் உண்டு.

உயர்ந்த குணங்களை எண்ணி எந்தத் தாவர இனமோ அதனுடன் நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நமக்குள் இணைக்கப்பட்டு உணர்வின் அலைகளை கண் ஒளிகளால் அதன் மேல் பாய்ச்சப்படும் பொழுது இந்த நினைவலைகளின் எண்ணங்கள் அதனுடன் இரண்டறக் கலந்து அந்தத் தாவரங்கள் செழித்து ஓங்குவதைக் காணலாம்.

இதைப் போன்று சங்கடமும் சலிப்பும் இருந்தால் நீங்கள் விளை நிலங்களுக்குச் சென்றாலே உங்கள் உணர்வலைகள் கண் பார்வை பட்டபின் செழித்த தாவர இனங்களாக இருந்தாலும் உடனுக்குடன் உணர்வலைகள் சோர்வடைந்தது போன்றே அங்கே விவசாயமும் குன்றிவிடும்.

நீங்கள் சோர்வான உணர்வலைகள் கொண்டு எந்தத் தொழில் செய்து வந்தாலும் அந்தச் சோர்வு உங்களுடைய வாடிக்கையாளர்களையும் சோர்வடையச் செய்து அவர் எந்தப் பொருளை வாங்க வந்தாரோ அந்தப் பொருள்களைக் காண்பிக்கப்படும் பொழுது அந்தப் பொருள் அவர்களைத் திருப்தியடையச் செய்யாது அதன் மீது அதிருப்தியை உண்டாக்கிவிடுகின்றது.

மேலும் இது தொடர்ந்து நடந்ததென்றால் உங்கள் வியாபாரம் மந்தமாகிவிடும். இதிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்?

உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உங்கள் உடலை ஆலயமாக மதித்து உங்கள் உடலிலுள்ள நல்ல உணர்வுகளைத் துருவ நட்சத்திரத்துடன் கலக்கச் செய்து அறிந்தோ அறியாமலோ செய்த தீமைகளை அகற்றிடும் சக்தியாக வளர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அவ்வாறு எண்ணி இந்த மனித வாழ்க்கையில் முழுமையடைந்து உயிருடன் ஒன்றிய ஒளிச் சரீரம் அடைய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தை எடுக்க வேண்டும்.

உங்கள் நல்ல உணர்வில் கலந்த சோர்வு வெறுப்பு வேதனை போன்ற உணர்வுகளை நீக்குவதற்கு கீழ்க்கண்டவாறு ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை உடல் முழுவதும் படரவிடுங்கள்.

பயிரினங்களை வாழ வைக்க விவசாயிகள் செய்ய வேண்டிய முறை

ஆத்ம சுத்தி செய்து கொண்டபின் உங்கள் விவாசாய நிலங்களை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

விவாசாய நிலங்கள் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்ந்து அதில் பயிரிடப்பட்டுள்ள பயிரினங்களில் அறியாது கலந்துள்ள தீய அணுக்கள் அகன்றிட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் பயிரினங்களை வாழ வைக்கும் அணுக்கள் அங்கே உருப் பெற்று அந்த அணுக்களின் மலங்களால் பயிரினங்கள் செழிந்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் நினைவினைக் கூட்டி பல முறை சுவாசித்து அந்த அலைகளை அங்கே பாய்ச்சுங்கள்.

உங்கள் விளை நிலத்திற்குச் சென்று இந்த முறைப்படி செய்து தியானித்து அந்த அலைகளை அங்கே படரச் செய்யுங்கள்.

அந்த உணர்வுடன் உங்கள் பார்வையைப் பயிரினங்கள் அனைத்திலும் செலுத்துங்கள். பயிரினங்கள் செழித்து ஓங்கி வளர்வதைக் காணலாம்.

பயிரிடப்பட்ட விளைச்சலை உணவாக உட்கொள்ளும் அனைவரும் ஆரோக்கிய நிலை பெறவேண்டும் என்று எண்ணுங்கள். அதைப் பயன்படுத்துபவர்கள் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

மருந்து உதவுவதைக் காட்டிலும் உங்கள் எண்ண அலைகள் பயிர்களில் படர்ந்து தீமைகள் விளைய வைக்கும் அணுக்களைத் துரத்திவிடும்.

உங்கள் பயிர்கள் செழிக்கும். உங்கள் மனமும் செழிக்கும். உங்கள் மனம் செழிப்பானால் உங்கள் குடும்பமும் செழிக்கும்.

 

வியாபாரம் செய்பவர்கள் ஆத்ம சுத்தி செய்ய வேண்டிய முறை


துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் தொழில்கள் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா. எங்கள் பொருள்கள் முழுவதிலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் படர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

எங்கள் பொருள்களைப் பயன்படுத்துவோர் வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் எல்லா நலமும் வளமும் பெறவேண்டும். அவர்கள் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

தொழிலாளர்களுக்கு ஆத்ம சுத்தி செய்ய வேண்டிய முறை

எங்களிடம் வேலை செய்யும் தொழிலாளிகள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் அவர்கள் அனைவரும் மன வளம் மன பலம் பெறவேண்டும், சகோதர உணர்வுடன் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும்.

எங்கள் தொழிலாளிகள் குடும்பம் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்ந்து அவர்களும் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று தியானிக்க வேண்டும்.

கொடுக்கல் வாங்கலில் ஆத்ம சுத்தி செய்ய வேண்டிய முறை

உங்கள் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் ஏதாவது தடை இருந்தால் அதை நினைவில் கொள்ளாதீர்கள். எவரால் அந்தத் தடைகள் இருக்கின்றதோ முன்னதாகக் கூறியபடி ஆத்ம சுத்தி செய்யுங்கள்.

பின்பு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் குடும்பம் முழுவதும் படர்ந்து அவர்கள் தொழில்கள் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் அவர்கள் வியாபாரம் பெருகி செல்வம் பெருகி எங்களுக்குக் கொடுக்க வேண்டிய பணம் வரவும் அதைச் சீராகக் கொடுக்கும் திறன் அவர்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று இப்படித்தான் எண்ண வேண்டும்.

இதைப் போல் செய்தால் அவர்களுக்கு நல்ல நிலை ஏற்படும். பணமும் தடையில்லாது வரும். அனுபவத்தில் பாருங்கள்.

பணி புரிபவர்கள் ஆத்ம சுத்தி செய்ய வேண்டிய முறை

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. எங்களுக்கு நல்ல எண்ணமும், எங்களைப் பார்ப்பவர்களுக்கு எங்கள் மீது நல்ல எண்ணமும் எங்கள் வழி நல்ல வழியாகவும் இருந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு ஐந்து நிமிடம் ஏங்கித் தியானியுங்கள்.

அதற்குப் பின் உங்கள் அலுவல்களையோ வேலைகளையோ தொடங்குங்கள். எல்லாமே சீராகும்.

எந்தத் துறையாக இருந்தாலும். எந்த வேலை செய்தாலும், அந்தந்தத் துறை சம்பந்தப்பட்ட பொருள்கள், இயந்திரங்கள், உற்பத்தியாகும் பொருள்கள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் படர செய்யுங்கள். வாடிக்கையாளர்களும் பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

அனைத்திலுமே இப்படி துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளைச் சம்பந்தப்படுத்தி இணைத்துக் கொண்டு வந்தோம் என்றால் அதனால் ஏற்படும் அருள் விளைவு எல்லோருக்கும் நலமாகும்.

 

நலம் பெறுக வளம் பெறுக

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரும் பெறுக.

ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தின் முக்கியத்துவம்

SOUL CLEANING WEAPON

ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தின் முக்கியத்துவம்

 

இந்த உடலை வளர்க்கத் தான் எல்லா இதுகளும் முயற்சிக்கின்றது. ஏனென்றால் எது உருவானதோ அதற்கு அந்த உணவு தேவை. அது கொடுக்கவில்லை என்றால் அது சோர்வடையும்.

இப்படித்தான் வழக்கத்தில் இருந்து கொண்டே உள்ளது.

இருப்பினும்…
1.பரிணாம வளர்ச்சியில் தீமைகளை நீக்கி நீக்கி வளர்ச்சி அடைந்து வந்த நாம்
2.மீண்டும் வேதனை வெறுப்பு சலிப்பு சஞ்சலம் சங்கடம் இனம் புரியாத நிலைகளைச் சேர்த்துக் கொள்கின்றோம்.

நாம் படிப்படியாக வளர்ச்சிக்கு வந்து மனிதனாக வந்தோமோ அதே போல் தேய்பிறையாகும் பொழுது படிப்படியாக எடுத்துக் கொண்ட நிலைக்கொப்ப
1.நம் ரூபங்களை மாற்றிக் கொண்டேயிருக்கும் நம் உயிர்.
2.அது ஒன்று மட்டும் மாறுவதில்லை.

ஆக இந்த உடலில் உள்ள உணர்வுகள் மாறுகின்றது. இந்த உணர்வுக்கொப்ப அடுத்த சரீரம் அமைகின்றது.

வேதனையை நீக்கும் சக்தி பெற்ற மனித உடலாக வேதனையை நீக்கும் எல்லா ஞானமும் இருக்கின்றது. அவ்வப்பொழுது அந்த நொடியிலேயே தீமைகளையும் துயரங்களையும் நீக்கிக் கொண்டால் நமக்கு அந்த நோய் வராது.

அத்தகைய நோய் வந்தாலும் கூட… நாம் அதை மறக்க இந்த முறைப்படி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெறவேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று
4.இப்படி நாம் ஆத்ம சுத்தி செய்து மாற்றிக் கொண்டு வர முடியும்.

ஏனென்றால் அந்த வேதனையை மறக்க இதை நாம் எடுத்தால் அது மறைகின்றது. துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் சிறுகச் சிறுகப் பெருகுகின்றது.

விஷத்தின் தன்மையை நீக்கியது அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமாக ஆனது. மனிதனில் மிக உயர்ந்த நிலைகள் பெற்றது தான் அந்தத் துருவ நட்சத்திரம்.

ஒரு சமயம் சூரியனே அழியலாம். ஆனால் இந்தத் துருவ நட்சத்திரமும் அதன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலங்களும் என்றும் அழிவதில்லை. வருவதை எல்லாம் ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்கும்.

இந்த மனித உடலில் உயிரைப் போலவே இருளை நீக்கி உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிச் சென்றவன் அகஸ்தியன்.

நாம் எப்படிப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்தோமோ… அதே போல்
1.பரிணாம வளர்ச்சியில் வளர்ந்த அந்த அகஸ்தியனின் உணர்வை நாம் எடுத்தோம் என்றால்
2.அவன் ஒளியாக மாற்றிச் சென்ற பாதையில் வளர்ந்து செல்ல முடியும்.

வெறுப்பையும் கோபத்தையும் சங்கடத்தையும் சலிப்பையும் குரோதத்தையும் வளர்த்துக் கொண்டே வந்தால் நாம் மீண்டும் தேய்பிறையாகி இதை எல்லாம் நோயாகி தேடி வைத்த செல்வத்தையும் பாதுகாக்க முடியாதபடி செல்கின்றோம்.

1.ஆனால் செல்வமும் கூட இருக்கும்
2.இருந்தாலும் நன்றாகச் சாப்பிடக்கூட முடியவில்லையே என்ற இந்த வேதனை வந்துவிடுகின்றது.
3.ஆக நம் உடலில் முடியாது போய்விடுகின்றது.

இதை எல்லாம் கொஞ்சம் யோசனை செய்து… தியானம் ஏன் செய்ய வேண்டும்…? என்பதை நன்றாகப் புரிந்து கொண்டு செயல்படுங்கள்.

யாம் சொல்லும் இந்தத் தியானத்தின் மூலம் அடிக்கடி வரும் சலிப்பையோ சங்கடத்தையோ வெறுப்பையோ வேதனையையோ நமக்குள் நிலைத்திருக்காது அதைத் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இதற்கு முன்னாடி நமக்குள் மற்ற உணர்வுகள் விளைந்திருந்தாலும் அதனுடைய வலிமையும் அதிகம் தான்.

இருந்தாலும்… இப்பொழுது ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தின் மூலம்
1.உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும் நேரடியாகவே
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது
3.முந்தைய அணுக்களும் நல்ல அணுக்களாக மாற்றமடையும்.

எது எப்படி இருந்தாலும் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கடைப்பிடித்து வந்தால் சிந்திக்கும் ஆற்றல் கிடைக்கின்றது… மன உறுதி கிடைக்கின்றது… வாழ்க்கையில் எப்படிச் சீர்படுத்தலாம் என்ற சிந்தனையும் கிடைக்கின்றது.

அதனால் இந்த ஆத்ம சுத்தி செய்வோர் அனைவரும் மன அமைதிப்படுத்தி அமைதியான வாழ்க்கை வாழலாம். என்றுமே ஏகாந்த நிலையில் அமைதியான துருவ நட்சத்திரம் இருப்பது போன்று நாமும் அந்த ஏகாந்த நிலை பெற முடியும்.

ஏனென்றால் மனிதனின் கடைசி நிலை இது…!

ஒ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்றால் எங்கே… யாரை… எப்படி நினைக்க வேண்டும்…?

eswara and guru eswarapattar

ஒ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்றால் எங்கே… யாரை… எப்படி நினைக்க வேண்டும்…?

 

நம் உயிர் நமக்குள் “ஓ… ம்…” என்று இயங்கிக் கொண்டேயுள்ளது. நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்கிக் கொண்டே உள்ளது.

உயிர் ஓ… என்று இயக்கி ம்… என்று நம் உடலாக்கப்படும் பொழுது அவை அனைத்திற்கும் நம் உயிரே குருவாகின்றது… குருவாக இருந்து வழி நடத்துகிறது.

இந்த மனித வாழ்க்கையிலிருந்து என்றும் ஒளிச் சுடராக வளர்ந்திடும் அந்த உணர்வினை உயிரில் உருவாக்கிப் பெற்ற நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரபட்டர் அருளை நாம் இப்பொழுது ஏங்கிப் பெறுவோம்.

1.ஈஸ்வரபட்டரை எண்ணி ஏங்கித் தியானிக்கும் பொழுது நம் உயிர் அதை அணுவின் கருவாக்குகின்றது.
2.அப்படிக் கருவாக்கப்படும் பொழுது
3.நமக்குள் உருவாக்கும் ஈசனாக “நம் குரு வருகின்றது…!”

ஆக அவர் பெயரும் ஈசன் என்றும் ஈஸ்வரன் என்றும் பெயரை வைத்தார்கள். அவர் வளர்த்த அருள் சக்தியைத் தான் இங்கே உபதேச வாயிலாகக் கொடுக்கின்றோம்.

குருவாக உபதேசித்த அந்த உணர்வுகளைப் பதிவாக்கும் பொழுது
1.அது குருவாக இருந்து அரூப உணர்வை நமக்குள் உணர்த்தி
2.அவர் (ஈஸ்வரபட்டர்) பெற்ற வழியில் நம்மையும் அருளானந்தம் பெறும் நிலைகளுக்கு
3.அது குருவாக நம்மை அழைத்துச் செல்லும்.

அகஸ்திய மாமகரிஷியை நம் குருநாதர் கண்டுணர்ந்த அருள் வழியில் நஞ்சினை வென்றிட்ட அந்த உணர்வைப் பெற்ற குரு அருள் நமக்குள் உறுதுணையாக இருக்கும்.

உறுதுணையாக இருக்கும் நம் குருவின் துணையால்…
1.அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்தியைக் கவரும் தன்மை பெற்று
2.இருளை வென்று ஒளியை உருவாக்கும் உணர்வின் சக்தியைப் பெறும் தகுதிக்கே
3.இந்தத் தியானத்தை மேற்கொள்கின்றோம்.

ஆகவே ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று எண்ணும் பொழுதெல்லாம்
1.நமது உயிரும் நம் குருவும் இணைந்தே வருகின்றார்கள்.
2.இந்த இணைந்த உணர்வுடனே குரு அருளை நமக்குள் பெறுவோம் என்ற
3.ஏக்க உணர்வுடனே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் தியானிப்போம்.

பலம் பொருந்தியவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் கூட மரண பயம் ஏன் வருகிறது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Big and Little Dippers

பலம் பொருந்தியவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் கூட மரண பயம் ஏன் வருகிறது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

காற்றலையில் புவி ஈர்ப்பின் பிடியில் வாழும் நாம்… நம் உணர்வில் உணர்வில் உந்தப்படும் எண்ணத்தில் உணர்வின் செயலைக் கொண்டு மட்டும் உடல் சேர்க்கை அமிலக்கூட்டு வளரவில்லை.

எறும்பு கொசு தேள் பாம்பு மூட்டை இதைப் போன்ற உயிரினங்கள் சந்தர்ப்பத்தால் நம்மை அவை கடிக்கும் பொழுது அவை சேமித்த விஷ நிலை கொண்ட அமில உணர்வானது அதன் கடி உணர்வை நாம் அறியும் பொழுது அதன் ஈர்ப்பு குண அமிலம் முழுவதையும் நம் உடல் பிம்ப உணர்வலையின் அமிலத்துடன் எடுத்துக் கொள்கின்றோம்.

வாழ்க்கையில் சில ஜீவராசிகளான இந்தப் பூச்சிகள் நம்மைக் கடிக்காமல் இருக்குமா…?

இவற்றின் ஈர்ப்பலையின் உணர்வின் அச்சம் நம் எண்ணமுடன் மோதும் பொழுது
1.அதனுடைய விஷம் நம் உடலில் ஏறிக் கடிக்கும் பொழுதும்… தாக்கும் பொழுதும்… நசுக்கும் பொழுதும்…
2.அதற்கு ஏற்படும் மரண பயம் நம் உடலிலும் ஏறிவிடுகின்றது.

எவ்வமில குண ஜெந்துவின் கடிபட்டதோ அதனுடைய உணர்வையும் நாம் பெற்று அவற்றின் விஷ உணர்வின் தீய அமிலங்களும் நம் உடலுக்குள் சேர்ந்து விடுகின்றது.

நம் உடல் அமிலத்துடன் அப்படிச் சேரும் பொழுது அதனுடைய வழித் தொடர் கொண்ட எண்ண குணத்தை இந்த உடலைக் கடிக்கும் சில ஜீவ ஜெந்துக்களின் நிலையை நாம் அடைகின்றோம்.

இதிலிருந்து தப்பும் முறை எப்படி..?

1.ஒவ்வொரு மனிதனுக்கும் எதிரி யார்…?
2.ஞானத்தை வளர்க்க விடாமல் இருப்பதும் எல்லா நிலைகளுக்கும் தடை ஏற்படுத்தும் எதிரி யார்,,,?
3.இந்த மனிதனுக்கு நற்குண வழிக்குச் செல்ல வழி காட்டும் நண்பன் யார்…?
4.அன்பான எதிர் அலையின் உணர்வை அடையவல்ல சக்தி நண்பன் யார்…?

எதிரியான நிலையை ஏற்படுத்துவதும் இந்த உடல் பிம்பக்கூடுதான்… நற்சக்தியின் ஞான அலையைப் பெறவல்ல தன்மையைச் செயல்படுத்தவல்ல நண்பனும் இந்த உடல் பிம்பக் கூடுதான்…!

ஆகவே தீய குணத்தின் எண்ணத்தை மேற்கொள்ளும் பொழுது தீய சக்தியின் நிலையை ஏற்படுத்துவதும் இந்த உடல் பிம்ப வீட்டினுள் வாழும் உணர்வின் எண்ணச் செயல் தான்.

நல்ல வழிக்கு வழி நடத்திச் செல்வதுவும் இந்த உணர்வின் எண்ணச் சக்தி கொண்ட நல் அலையின் சக்தியினால் தான்.

உணர்வில் எடுக்கும் எண்ணத்தின் செயல் எத்தன்மை கொண்டுள்ளதோ அத்தன்மை கொண்ட ஒவ்வொரு மனிதனையும் அந்தந்த நிலைக்கு உட்படுத்துவது இந்த உடல் என்ற பிம்பக்கூடு தான்.

விஞ்ஞானிகளும் பல மருத்துவர்களும் தற்கொலையின் செயலில் ஈடுபடுவதும் அவற்றின் வளர்ப்புத் தன்மையும் எதனால் ஏற்படுகின்றது…?

மருத்துவர்கள் சந்திக்கும் ஆத்மாக்களின் உணர்வில்…
1.பெரும்பகுதி எண்ணத்தின் வியாதியான “மரண பயம்…” கலந்தே வருவதால்
2.அத்தகையவர்களின் எண்ணத் தொடர்புடனே இவர்களின் வாழ் நாள் செல்ல நேர்கின்றது.
3.இப்படி அந்த அச்ச உணர்வின் பிடிக்கு இவர்களின் உணர்வலையும் செல்வதினால்
4.இதே சுழற்சி வட்டத்தால் இவர்கள் உணர்வுடன் இந்த மரண பயம் உந்தப்பட்டுவிடுகிறது.

அதனால் இவர்களின் உணர்வின் எண்ணமே இந்த மரண பய ஈர்ப்புப் பிடியில் சிக்குண்ட நிலையில் பலரின் செயல் இதே உணர்வுடன் செயல் கொள்கிறது…. தன்னால் அதைத் தாங்க முடியாது போகின்றது.

அகஸ்தியன் அன்று நுகர்ந்த மகா பச்சிலைகளின் மணங்களைப் பெறச் செய்யும் தியானப் பயிற்சி

herbal power of agastyar

அகஸ்தியன் அன்று நுகர்ந்த மகா பச்சிலைகளின் மணங்களைப் பெறச் செய்யும் தியானப் பயிற்சி

 

அகஸ்தியன் வாழ்ந்த அக்காலங்களுக்கு உங்கள் நினைவைச் செலுத்தி அகஸ்தியன் கண்டுணர்ந்த அந்தப் பச்சிலையின் மணங்கள் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள். அந்தப் பச்சிலையின் மணங்கள் இப்பொழுது வரும்.

சிலர் கிடைக்கவில்லை என்றால் “எனக்குக் கிடைக்கவில்லை…!” என்று விட்டுவிடாதீர்கள். ஏனென்றால் சிலருடைய எண்ணங்கள் சில நேரங்களில் உங்களை அறியாதபடி வேறொரு பக்கம் திசை திருப்பும்.

இந்தப் பேருண்மையின் உணர்வை நமக்குள் எடுக்கப்படும் பொழுது இடைமறித்தே..
1.தொல்லைப் பட்டவர்கள் தொல்லையின் நிலைகளைச் சிலர் எண்ணும் பொழுது
2.“நமக்குக் கிடைக்குமா…?” என்ற சில உணர்வுகளும் ஊடுருவும்.

அப்படி ஊடுருவும் நிலை வரும் பொழுது நாம் தியானிக்கும் பொழுது அந்த நேரத்தில் கிடைக்காமல் இருக்கலாம். அந்த அகஸ்தியன் பெற்ற மணங்களை அறியவிடாமலும் செய்யலாம்.

அப்படி அறிய முடியவில்லை என்றால் அது கிடைக்கவில்லையே…! என்று சோர்வடைய வேண்டாம். ஆக அதை நாம் உணர முடியவில்லை என்று தான் வருகின்றது.

உபதேச வாயிலாகப் பதிந்த உணர்வுகள் கொண்டு நீங்கள் தியானித்தாலும் அகஸ்தியன் உணர்வை உணரும் தடையை ஏற்படுத்தும் பொழுது அதை உங்களால் நீக்கிட முடியும் என்ற நம்பிக்கையில் நீங்கள் செயல்படுத்திப் பாருங்கள்.

1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற முடியும்
2.அவர் உடலுக்குள் நஞ்சினை வென்றிடும் உணர்வை விளைய வைத்த அந்த அருள் சக்தியை
3.எங்களுக்குள் வளர்க்க முடியும் என்று வலுவாக எண்ணுங்கள்.

இப்பொழுது கிடைக்கவில்லை என்றாலும் இரவு தூங்கும் பொழுது கூட இந்த உணர்வின் உண்மையை நீங்கள் உணர்ந்திட வேண்டும். அதை வளர்த்திட வேண்டும்.

கிடைக்கவில்லை என்று சோர்வடைய வேண்டாம்.
1.நிச்சயம் உங்கள் அனைவருக்கும் அகஸ்தியன் பெற்ற மூலிகைகளின் மணங்கள் கிடைக்கும்
2.அதை நீங்கள் எப்படியும் பெறவேண்டும்
3.நீங்கள் ஒவ்வொருவரும் அகஸ்தியராக மாறவேண்டும்
4.உங்களுடைய சொல்லும் பேச்சும் மூச்சும் கேட்போர் உணர்வுகளில் நோய்கள் பறக்க வேண்டும்
5.அருள் ஞானம் அங்கே உதயமாக வேண்டும்
6.இன்றைய விஞ்ஞான உலகில் தீமைகள் பரவி வரும் நேரத்தில்
7.தீமைகளை அகற்றும் சக்தியும் தீமைகள் புகாது தடுக்கும் சக்தியும் நீங்கள் பெறவேண்டும் என்ற நோக்குடன் தான் இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

தீமைகளைத் தடுக்கும் சக்தி உங்களுக்குள் வளர்ந்து உங்கள் சொல்லைக் கேட்போர் உணர்வுகளிலும் இது பதிவாகி அவர்களும் தீமைகளை வென்றிடும் சக்தி பெறவேண்டும் அவர்கள் உடலிலும் அது விளைய வேண்டும் என்பதே குருநாதர் (ஈஸ்வரபட்டர்) காட்டிய அருள் வழி.

ஏனென்றால் ஒன்றில் விளைந்து தான் ஒன்றிலிருந்து வருகின்றது.
1.குருவின் சக்தியில் விளைந்தது
2.அதற்கு முன் அகஸ்தியனின் சக்தியில் விளைந்தது.
3.அகஸ்தியன் சக்தியை குருவின் சக்தி விளைய வைத்தது
4.அந்த உணர்வின் சக்தியை எமக்குள் (ஞானகுரு) விளைய வைத்தார்.

விளைந்த வித்தினை உங்களுக்குள் உபதேச வாயிலாகப் பதிவாக்கி அதை விளையும் பருவத்தினையும் ஏற்படுத்துகின்றோம்.

அப்படிப் பதிவான வித்தின் துணை கொண்டு அந்த அகஸ்தியரின் அருள் உணர்வுகளை நீங்கள் எவ்வாறு பருக வேண்டும்…? எதனை வளர்க்க வேண்டும்…? எதனை உருவாக்க வேண்டும்…? என்ற உணர்வினையும் உங்களுக்குள் விளக்க உரைகளாகக் கொடுக்கின்றோம்.

அதன் துணை கொண்டு… அகஸ்தியன் பெற்ற அருள் சக்திகளை எல்லாம் நாங்கள் பெறுவோம் என்ற உறுதியுடன் நீங்கள் செயல்படுத்துங்கள்.

சிறிது தடைப்பட்டாலும்.. அகஸ்தியனின் அருளாற்றல் மிக்க சக்தியை
1.எனக்குள் நுகர்வேன்
2.அதை வளர்ப்பேன்
3.அருள் வழியில் செல்வேன்
4.அருளானந்தத்தைப் பெறுவேன் என்ற உணர்வை ஏங்கிப் பெறுங்கள்.

அந்த அகஸ்தியனின் அருள் சக்திகள் இங்கே நமக்கு முன்னாடி மிதந்து கொண்டுள்ளது. அதை நாம் அனைவருமே பெறமுடியும்.

அகஸ்தியனால் வளர்க்கப்பட்ட சக்திகள் பரவிப் படர்ந்து கிடந்த நிலையைத்தான் வியாசகன் தனக்குள் பெருக்கிக் கொண்டு அந்த உணர்வின் நிலையை மீண்டும் உருவாக்கப்பட்டு உண்மையின் உணர்வை வெளிப்படுத்தினான்.

வியாசகனுக்குப் பின் அந்த அரசர்கள் தங்கள் உடலின் இச்சைக்கே சக்திகளை வளர்த்துக் கொண்டவர்கள். ஆக இந்த உடல் இச்சைக்கு நமக்குத் தேவையில்லை.

உயிரின் உணர்வின் தன்மை கொண்டு என்றும் மரணமில்லாப் பெருவாழ்வு என்றும் இனி ஒரு பிறவி இல்லை என்ற நிலையும் அருளானந்த நிலை என்றும் அடைவதே வைகுண்ட ஏகாதசி – ஏகாந்த நிலை.

“வைகுண்டம்,,,” என்பது எங்கே அது உருவானதோ அதன் உண்ர்வின் தன்மையை நாமும் எடுத்துக் கொண்டால் ஏகாந்த நிலைகள் கொண்டு என்றும் நாம் மகிழ்ந்து மகிழ்ந்து வாழும் உணர்வின் ஒளியின் சரீரமாகப் பெறுகின்றோம்.

அந்த ஏகாந்த நிலை பெறும் தகுதியை உருவாக்கத்தான் இந்த உபதேசமே…!

அந்த அகஸ்தியன் பெற்ற அருளானந்தத்தை நீங்களும் பெற்று அவன் துருவனாகி அந்தத் துருவ நட்சத்திரமாக ஆன நிலையை நிச்சயம் அடைய முடியும்.

அந்த அகஸ்தியன் பெற்ற அருள் சக்திகளையும் அவன் நுகர்ந்தறிந்த நஞ்சினை வென்றிடும் மகா பச்சிலைகளின் மணங்களையும் தியானிக்கும் பொழுது நீங்கள் அனைவரும் அந்த மணத்தைப் பெறுவீர்கள்.

மகிழ்ச்சி பெறும் உணர்வின் அணுக்கள் உங்களுக்குள் விளையும்…!