நம்முடைய கேஸ் நீதிமன்றத்திலே ஜெயமாக வேண்டும் என்றால் எப்படித் தியானிக்க வேண்டும்…?

court case

நம்முடைய கேஸ் நீதிமன்றத்திலே ஜெயமாக வேண்டும் என்றால் எப்படித் தியானிக்க வேண்டும்…?

 

ஒரு காரியத்திற்கே செல்கிறோம் என்றால் நாம் நல்ல ஒழுக்கங்களுடன் நடந்துள்ளோம். ஆனால் அதே சமயத்தில் அபகரிக்கும் நோக்கத்துடன் வருபவர்கள் பல தவறுகளைச் செய்து தங்களை நியாயப்படுத்துகின்றனர்.

செல்வத்தை அபகரிக்கும் நிலையில் அவர்கள் நியாயப்படுத்தும் பொழுது “உண்மைக்குப் புறம்பாக நடக்கின்றாரே…!” என்று நாம் வேதனையை நுகர்ந்து விட்டால்
1.அது நம்முடைய ஞானத்தை குறைத்து…
2.சிந்திக்கும் திறன் அற்ற நிலையில் செயலிழந்து
3.இருள் சூழும் நிலைக்குக் கொண்டு சென்று விடுகின்றது.

நாம் சிந்திக்கும் ஆற்றல் பெற்றிருந்தாலும் ஒரு விஷத்தை உணவாக உட்கொண்டால் நம் நல்ல குணங்கள் உணர்வுகள் எப்படி இருள் அடைகின்றதோ இதிலிருந்து வரக்கூடிய சொல்லை நாம் பிறரிடம் சொன்னால் அவருடைய உணர்வும் இருளடையும் நிலையே வருகின்றது.

உதாரணமாக நமக்காக வாதாடும்… நமக்காகச் செயல்படும் வக்கீலின் உணர்வுகளையும் இது செயலற்றதாக மாற்றிவிடுகின்றது. இது எல்லாம் “நம்மிலிருந்து தோன்றும் நிலைகள்…”

1.நம்மை எண்ணித்தான் நமக்காக வாதாடுபவர்களும்.. செயல்படுபவர்களும் செய்வார்கள்.
2.ஆனால் நம்முடைய வேதனைப்பட்ட உணர்வுகள் அந்த வேதனையின் இயக்கமாக அவர்களையும் இயக்கிவிடும்.

ஏனென்றால் தவறு செய்பவர்களின் வலிமை அதிகமாகிவிட்டால் இப்படி நடக்கிறதே…! என்ற வேதனையை நாம் எடுத்தால் நமக்குள் இருக்கும் வலிமை இழக்கப்பட்டுவிடுகின்றது.

ஒரு பாம்பினம் எப்படி மற்றொன்றின் மீது விஷத்தைப் பாய்ச்சி அதனின் வலுவை இழக்கச் செய்து விழுங்குகின்றதோ இதைப் போல
1,அவர்கள் விஷத்தைப் பாய்ச்சிய உணர்வுகள் நமக்குள் இயக்கப்பட்டு
2.நாம் அவர்களுக்கு இரையாகக்கூடாது… இரையாகி விடக்கூடாது.

தீமையின் உணர்வின் இயக்கத்தால் நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களை இரையாக்காது காக்க அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நாம் பெறவேண்டும் என்ற வலிமையைக் கூட்ட வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து இரத்த நாளங்கள் முழுவதும் கலந்து உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் படர வேண்டும் என்று சிறிது நேரமாவது ஏற்றுக் கொள்ளுங்கள்.

பின் கோர்ட்டுகளில் வியாஜ்யமோ மற்றதுகள் நடந்தால் இதே நினைவை எண்ணி “உங்கள் பார்வை” அனைத்தையும் அவர்கள் பால் செலுத்துங்கள்.

நீதிக்காக வாதாடும் அவர்களுக்குள் நல்ல உணர்வுகள் விளைய வேண்டும் என்ற எண்ணத்தைச் செலுத்துங்கள். உங்களுக்காக யார் வாதாடிச் செல்கின்றனரோ அவர்களுக்கு
1.அந்த ஆற்றல்மிக்க சக்தி பெறவேண்டும்
2.அவர்கள் பேச்சும் மூச்சும் ஆக உண்மையின் உணர்வை உணர்த்தும் சக்தி பெறவேண்டும்
3.உண்மைகள் வெளிப்பட வேண்டும்… உண்மையின் நிலைகள் அங்கே நிலைநாட்ட வேண்டும்
4.அவர்களுக்கு அந்த மன பலம் வேண்டும் என்றும்
5.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் உண்மையின் உணர்வுகளை உணர வேண்டும் என்று எண்ணினால் போதும்.

நம் வக்கீல் அங்கே இருந்தாலும் ஜட்ஜ் அங்கே இருந்தாலும் நம் பக்கம் நியாயம் இருக்கிறது என்றால் நாம் இங்கிருந்தே இந்த உணர்வினைப் பாய்ச்சினால் அங்கே அந்த நல்ல தீர்ப்புகள் வரும்.

பதட்டமும் பயமும் கொண்டு என்ன ஆகுமோ…? என்ற உணர்வை எடுத்தால் “என்ன ஆகுமோ…?” என்ற வலுவை நாம் எதிரிக்கே வலு கொடுக்கின்றோம்.

அத்தகைய வலு உருவாக்கி விட்டால் எதிரி தான் வெல்ல முடியுமே தவிர நாம் வெல்ல முடியாது. ஏனென்றால்
1.வேதனைப்படுத்தும் விஷங்கள் அவர்கள் உடலிலும் கலந்த பின்
2.அந்த விஷத்தை உணவாக உட்கொள்ளும் அந்த உணர்வே வரும்.
3.அதன் வழி நமக்குள் நல்ல உணர்வுகளை எதிர்ப்பார்ப்பது கடினம்.

இதைப் போன்று நாம் ஒவ்வொரு காரியங்களிலேயும் நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உடலுக்குள் சிறிது நேரம் செலுத்திக் கொள்ளுங்கள்.

பின் எந்தக் காரியங்களுக்குச் சென்றாலும் அது ஜெயம் பெறவேண்டும்… எங்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெறவேண்டும்… நாங்கள் உற்பத்தி செய்யும் ஆடைகளை அணிவோர் நலம் பெறவேண்டும்… பொருளை உட்கொள்வோர் நலம் பெறவேண்டும்… என்னிடம் தொழில் செய்வோர் நலமும் வளமும் பெறவேண்டும்.. என்ற உணர்வினை நீங்கள் எடுங்கள்.

1.நமக்குள் சீராக்கும் உணர்வுகள் நிச்சயம் வரும்
2.அச்சுறுத்தும் உணர்வுகள் அணுக்களின் தன்மைகள் குறையும்
3.அருள் ஒளி பிறக்கும் உணர்வின் அணுக்கள் நமக்குள் வரும்.

எதனையுமே நாம் சீர்படுத்தும் உணர்வுகளை அந்த மகரிஷிகளின் உணர்வுடன் ஒன்றி இதைச் செயல்படுத்துவோம் என்றால் “வேகா நிலை” என்ற நிலையை நமக்குள் உருப்பெறச் செய்ய முடியும்.

“அகத்தின் அழகை முகத்தில் காணலாம்…” என்பதன் பொருள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

health and beauty

“அகத்தின் அழகை முகத்தில் காணலாம்…” என்பதன் பொருள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஒலி கொண்டு தான் ஒளி கொண்டு உருவான உணர்வு சக்தியில் இவ்வொலியின் உணர்வில் தான் உழல்கின்றது… உலகச் சுழற்சியும்… ஜீவ சக்தியும்… உயிர் அணுத் துடிப்புகள் யாவுமே…!

இவ் ஒலி ஈர்ப்பின் தாக்குதலுக்குகந்த உணர்வின் சுழற்சி ஈர்ப்புப் பிடியில் பிடிபட்டுள்ள வளர்ச்சி தான் ஒவ்வொரு வளர்ச்சியுமே.

1.இனிமையான இசைக்கு இவ்வுணர்வின் எண்ண ஈர்ப்பு செல்லும் பொழுது
2.இனிமையின் நாத ஒலி ஜீவ சக்தி ஒவ்வொன்றின் அலையிலும் மோதுண்டு
3.அதன் தொடர்பு கொண்ட வளர்ப்பு சக்தி ஒவ்வொன்றிலும் கூடுகின்றது.

அதிர்வு… இடி… மின்னல்… காட்டாற்று வெள்ளப் பெருக்கின் வேக ஒலி… இந்நிலை மோதும் பொழுது இவ்வுடலே அவ்வுடலின் “அச்ச உணர்வுடன்” செல்வது போன்ற உணர்வின் பயம் ஏற்படுகின்றது.

அருவியில் அமைதியாகச் சலசலப்புடன் அந்நீரின் ஒலி மோதலைக் கேட்கும் பொழுது அவ் இனிமையுடன் கூடி நம் உணர்வின் எண்ணமும் மயங்குகிறது.

மாலை நேரப் பட்சிகளின் அமைதியான ஒலி நம் உணர்வின் இனிமை உணர்வைக் கூட்டுகின்றது.

ஒலியின் ஈர்ப்பு எந்நிலை கொண்டு கால நிலையில் உணர்வின் மோதலில் மோதுகின்றதோ அதற்குகந்த வளர்ச்சி மனித உடலின் உணர்விற்கும் ஜீவராசிகள் தாவரங்கள் கனி வளங்கள் ஒவ்வொன்றின் வளர்ச்சிக்குமே இவ் ஒலியுடன் ஒலி கூடும் ஒலித் தன்மை கொண்டு வளர்ப்பு நிலை கூடுகின்றது.

இவ்வொலியின் செயற்கை அதிர்வில் சுற்றுப் புறத் தாவர இன வளர்ச்சிக்கும் நகர்ப்புறத்தைத் தாண்டி வரும் தாவரங்களின் வளர்ச்சிக்கும் மாறு கொண்ட வளர்ப்பு விகித நிலை இருக்கும்.

1.இவ் ஒலி உணர்வில் சேமிக்கும் அச்ச உணர்வின் ஈர்ப்பே
2.மனித உணர்வில் ஒவ்வொரு நொடிக்கும் இம்மரண பயம் என்ற பிடி ஈர்ப்பில் சிக்குண்டு வாழும் தன்மை
3.இன்றைய நாகரீக செயற்கைப் பிடி வாழ்க்கையில் உள்ளது.

இயற்கைச் சுழற்சியில் இயற்கையிலிருந்து மாறுபட்டு இப்பேராசைப் பிடியில் நாகரீகச் செயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியையும் இந்த மரண பயம் என்ற பிடியுடன் சிக்கித்தான் இன்று வாழும் நிலை உள்ளது ஜீவ சக்தி அனைத்திற்குமே.

உருவத்தில் பெருத்த யானையும் உணர்வில் மரண பயத்தை வளர்த்துக் கொண்டு
1.தன் இரு செவிக்குள்ளும் எவ் எறும்பும் பூச்சிகளும் ஏறா வண்ணம்
2.தன்னைத்தானே செவியை விசிறிக் கொண்டே காத்து வாழுகின்றது.

இந்த எறும்பின் ஊர்தல் அதன் செவி மட்டத்தில் உள்ள ஜவ்வில் பட்டவுடன் ஏற்படும் இரைச்சல் அவ் யானையின் உணர்விற்கு மரண பயத்தின் அச்சத்தை ஏற்படுத்தி அவ் எறும்பின் ஊர்தல் செவிக்குள் பாய்ந்தவுடன் தன்னை அறியாமல் வெறி கொண்டு மிகவும் பதட்டம் ஏற்பட்டு அந்த உணர்வின் பிடியிலேயே சிக்குண்டு மாய்கின்றது, இன்னும் சில யானைகள் அவ்வுணர்வின் மதம் பிடித்துக் கொள்கிறது.

இவ்வுணர்வால் எடுக்கும் அச்சத்தால் விளையும் பயம் தான் இந்த மரண பய உணர்வு.

எண்ணத்தால் இவ்வுணர்வின் பிடியை மாற்றிக் கொண்டு… உயர் ஞான வழி ஈர்ப்பு வளர்ச்சிக்கு எண்ணம் செல்லும் வாழ்க்கை இருந்தால் இப்பிம்ப உடலில் ஏற்படும் அச்ச உணர்வின் நிலை மாறும்.

எச்சக்திக்கும் சக்தி பெற இந்த உடல் பிம்பம் தேவை. ஆனால்
1.இந்த உடல் பிம்ப உணர்வில் ஏற்படும் மாற்றங்களும் நலிவுத் தன்மையும்
2.இந்த உடல் பிம்பத்தைப் பேணி வளர்க்கும் ஈர்ப்பலையும்
3.இந்த உடல் பிம்பத்தின் சுகம் காணும் ஆரோக்கிய வாழ்க்கையின் ஆவல் உணர்வும்
4.பிம்ப உடலின் அழகின் ஆசையிலும் இவ்வுணர்வின் ஈர்ப்பை எண்ணம் செலுத்தி வாழும் வாழ்க்கையைக் காட்டிலும்
5.உணர்வின் எண்ணம் உயர்ந்த குணத்தின் ஈர்ப்பில் செல்லும் உணர்வால்
6.இந்தப் பிம்ப உணர்வும் ஆரோக்கிய அழகும் தானாக வளரும்.
7.அகத்தின் அழகை முகத்தில் காணலாம் என்பதின் பொருளும் அதுவே.

மரண பயம் என்ற அச்சத்தை விட்டு இந்த உடல் கூட்டின் அழகு ஆரோக்கியம் இவற்றைப் பேணிக் காக்கும் உணர்வு ஈர்ப்பை விட்டு
1.நல்ல ஞான வளர்ச்சி வாழ்க்கையுடன் நாம் வாழ்ந்தால்
2.அமைதி கொண்ட வாழ்க்கையும் ஆரோக்கிய உடல் நிலையும்
3.வாழ்க்கையில் செய்யப்படும் தொழில் நேர்மையும் அதற்குகந்த வருவாயும் இன்பமும் நமக்குக் கிட்டும்.

உணர்வின் சுழற்சி இந்த நிலையில் சுழன்றால் தான்… வளர்ச்சியின் “ஆத்ம சொத்தை” வளர்க்க முடியும்.

கஷ்டம் என்று நினைத்தால் எல்லாமே கஷ்டம் தான்..! “நம்மால் முடியும்…!” என்று எண்ண வேண்டும்

be positive

கஷ்டம் என்று நினைத்தால் எல்லாமே கஷ்டம் தான்..! “நம்மால் முடியும்…!” என்று எண்ண வேண்டும் 

 

ஒரு புதிய சாதனத்தை உருவாக்க வேண்டும் என்ற நிலையில்
1.அதற்குள் இன்னென்ன அளவில் அதற்குண்டான பொருளைச் சேர்த்தால்
2.அதனின் இயக்கச் சக்தி அது இந்த இடம் வலு தாங்கக்கூடியது என்று உணர்கின்றார் விஞ்ஞானி…
3.அதன்படி சீராக வேலை செய்யும் அந்தச் சாதனத்தை உருவாக்குகின்றார்.

அந்த விஞ்ஞானி அவர் கற்றுணர்ந்த நிலைகளை எல்லாம் தன்னிடம் சீடனாக வருபவரிடம் கற்பிக்கின்றார். அவர் கற்றுணர்ந்த வழியை அவருக்குள் காட்டப்படும் பொழுது சீடரும் கற்றுணர்ந்து வருகின்றார்.

அதன் வழியில் சீடர் வந்தாலும் அவர் எதைப் போதித்தாரோ அதன் வழிகளில் அவர் சீராகச் செயல்படுவார் என்றால் அவர் அதிலே வெற்றி பெறுகின்றார்.

1.ஆனால் கற்றுக் கொடுக்கும் பொழுது “கடினம்…” என்று எண்ணி அந்த்க் கல்வியைக் கற்க நேர்ந்தால்
2.ஒவ்வொரு எண்ணங்களிலும் அந்தக் கடுமை வந்துவிடும்
3.சீடனாக வருபவர் சிந்திக்கும் திறனும் வலு இழக்கப்படும்.

அவர் ஒரு இன்ஜினியராக வந்தாலும் எப்படியோ அவர் பாட நிலைகளை எண்ணி உயர்வுக்கு வந்தாலும்
1.அந்தப் பாட நிலை தான் மீண்டும் அவருக்கு வரும்.
2.ஆனால் மூலக்கூறுகளை அறிய முடியாது.
3.ஏனென்றால் அவரவர்கள் எடுத்த உணர்வு கொண்டு தான் அது இயக்கும்.

அதைப் போல மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் அருள் ஞானத்தைப் பெறும் தகுதியை உங்கள் உணர்வுடன் இணைத்து விட்டால்… அந்த உணர்வை நீங்கள் நுகரும் பொழுது… அந்த அறிவின் ஞானமாக வளருகின்றது.

1.அது ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்பதற்குத்தான்
1.ஒவ்வொரு குணங்கள் உருவாவதும்
2.அதனின் சிறப்பின் தன்மையை நினைவு கூறும் பொழுது
3.அதனதன் கருக்கள் உங்களுக்குள் உருவாகின்றது.

அந்த ஞானிகளின் நினைவாற்றலின் தன்மை உங்களுக்குள் வருவதற்கு ஊழ்வினை என்ற வித்தாக உங்கள் எலும்புகளுக்குள் இருக்கும் ஊனுக்குள் பதிவாக்குகின்றோம். இந்தப் பதிவினை நீங்கள் மீண்டும் மீண்டும் நினைவாக்க வேண்டும்.

அவ்வப்பொழுது உங்கள் வாழ்க்கையில் வரும் வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் என்ற உணர்வுகளை மாற்றியமைக்க
1.இந்தப் பதிவான நிலைகள் நீங்கள் நினைவு கொண்டு
2.உங்கள் வாழ்க்கையில் அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை வளர்த்துக் கொண்டே வந்தால்
3.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து நீங்கள் பிறவி இல்லா நிலைகள் அடைய இது உதவும்.

இல்லை என்றால் இந்த வாழ்க்கையில் நாம் எடுக்கும் உணர்வுகள் வளர்ச்சி அடைந்தால் மீண்டும் இதனுடைய உணர்வுகள் நம்மை இன்னொரு பிறவிக்குள் அழைத்துச் சென்றுவிடும்.

மனிதனான பின் பிறவி இல்லா நிலைகள் அடைவதே… சப்தரிஷி மண்டலத்துடன் இணைவதே கடைசி நிலை…!

இறவா வரம் வேண்டுமா…? பிறவா வரம் வேண்டுமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

DEATH fear

இறவா வரம் வேண்டுமா…? பிறவா வரம் வேண்டுமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

“மரண பயம்…!” என்ற உணர்வு மனிதனுக்கு மட்டுமல்ல. ஜீவ பிம்பம் அனைத்திற்குமே உண்டு. பிறப்பில் நாம் எடுக்கும் சுவாச உணர்வின் அலைத் தொடரில் பிறந்த குழந்தைக்கும்… ஏன்… கருவில் இருக்கும் குழந்தைக்குமே… மரண பயம் என்ற அச்ச உணர்வு உண்டு.

பிறந்த குழந்தைக்கு அந்தக் குழந்தையின் உடலில் கடிக்கும் கொசுவினால் வலி ஏற்பட்டாலும்… உலுக்கும் தன்மை கொண்டு உலுக்கி விழுந்து சில குழந்தைகள் வீர்…! என்று அழவும் செய்யும். அதிர்வு நிலை ஏற்பட்டவுடன் இக்குழந்தைகள் அழுகும்.

கருவிலேயே மரண பயம் என்ற அச்ச உணர்வுடனேதான் கருவே உருவாகின்றது. அதன் வழியில் கரு வளர்ச்சியின் நிலை கூடி வருவதினால் இவ்வுணர்வின் அச்சம் மாறி “மரண பயத்தை எப்படி விட முடியும்…?”

1.மரண பயம் என்ற உணர்வின் பிடியில் வாழ்க்கை உள்ளதனால்தான்
2.மனித வாழ்க்கையில் சோர்வும் இன்னலும் கலகங்களும் கோபத் தன்மையும்
3.பொறாமை உணர்வும் போட்டி நிலைகளும் பேராசை நிலையும் புகழ் நிலையும் ஏற்படுகின்றன.

ஆனால்
1.”பிறவா வரம் வேண்டும் இறைவா…!” என்று இறை சக்தியை இறைஞ்சி
2.இன்னமுதுடன் இனிதிசை கொண்ட இல்லற இன்ப இல்வாழ்க்கை என்ற இனிய வழித் தொடரில்
3.ஈன்றெடுக்கும் இறைச் செல்வ மக்களுடன் இயற்கை வழி இனிய ஒளி இன்பம் பெற
4.பிறவா வரம் பெறும் இறை ஞானம் நிலையுடன்தான்…
5.வாழ்க்கை நிறைவு செ(ய்)ல்வது “பிறவா வரம் பெறும் நிலை…!”

பிறவா வரம் பெறும் உணர்வு கொண்டு சேமிக்கும் உணர்வின் எண்ணத்தில் கூடும் அமிலச் சாற்றில்
1.மரண பயம் என்ற உணர்வுடன் வளரும் பருவக் காலமும் வளர்ந்த வாழ்க்கைக் காலமும்
2.மனிதனின் உணர்வில் இவ் அச்ச உணர்வினால் தான் இப்பேராசை புகழ் போட்டி பொறாமை எல்லாமே வருகிறது.

ஆறிலும் சாவு… நூறிலும் சாவு…! என்ற பயத்தையும் ஊட்டி… பின் பிறவா வரம் என்ற இயற்கை உணர்வுடன் நாம் ஒன்றிச் சென்றால் இல்லறம் இன்பம் கொள்ளுமா…! இயற்கை வாழ்க்கையும் நமக்குக் கூடுமா…? நாளை… நாளை…! என்ற உணர்வே மனிதனுக்கு உழன்று கொண்டு உள்ளது.

தாவரங்களைப் போன்றும் பூமிக்கடியில் வளரும் கனி வளங்களைப் போன்றும்…
1.பூமியின் ஈர்ப்புப் பிடியுடன் வளராமல்
2.எங்கும் சென்று எதனையும் செயலாற்றக்கூடிய நிலையில் நடந்தோடும் செயலைக் கொண்ட ஜீவ பிம்ப மனிதனுக்கு
3.இன்றைய நாகரீகச் சுழற்சிப் பிடிப்பு வாழ்க்கையில்
4.தன் ஜீவனுக்குப் பிறகு சேமிக்கும் பேராசை பொருள் செல்வச் செயலினால் தான்
5.இன்றைய ஜீவ சக்திகளின் மரண பய உணர்வு ஒவ்வொரு நொடிக்கும் அதிகப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் தான் உண்ணும்… உடுக்கும்… வசிக்கும்… வாழ்க்கைப் பிடியில் சிக்கி… தேவைக்கு மேல் அடையும் பேராசை குணத்தினால் தன் வாழ்க்கையையே மரண பயத்திற்கு அடகு வைத்து விட்டான் இன்றைய கலி மனிதன்.

அதிலிருந்து இஜ்ஜீவ பிம்ப உடலை மீட்டத் தெரியாத அச்ச உணர்வில் இருக்கும் வரை
1.உண்ணும் உணவையும் உணரும் காம இச்சையின் இன்பத்திலும்
2.செயற்கை வாழ்க்கை முறையிலும் தான் இன்பம் உள்ளது என்று ஏங்கியே வாழ்ந்து
3.இதன் தொடர் நிலையிலேயே நீடிக்க அதற்கு வேண்டிய பொருளை ஈட்டவும்
4.அதிலே தவறு ஏற்படும் பொழுது செய்த தவறை மறைக்கப் பிறிதொரு தவறின் நிலைக்குச் சென்று
5.பொருள் (சொத்து செல்வம்) என்ற சேர்க்கை இருந்தால் தான் எந்த இன்பத்தையும் அடையலாம்
6.எந்தச் செயலையும் செய்யக்கூடிய “வல்லுனரையும்” பணத்தால் சேவகம் (அடிமையாக்க) செய்ய வைக்க முடியும்..! என்ற குணமும்
7.முன்னேறிய இன்றைய அரசியல் ரீதியிலும் பொருள் என்ற பிடியில் புகழ் என்ற இன்பம் காணவும்… சென்று விட்டதால்
8.உயர்ந்த ஞான சக்தி கொண்ட ஞான வித்தகர்களின் ஞான போதனையே இவ்வாயிரம் ஆண்டு காலத்தில் அற்றுப்போய் விட்டது.

ஒவ்வொரு மனிதனும் தன் ஜீவ சக்திக்குத் தகுந்த தேவையின் செயல் கொண்டு வாழாமல்
1.உடல் குன்றி விட்டால்… நாளை என்ன செய்வோம்…?
2.செய்யும் தொழில் நசிந்து விட்டால்… நாளை என்ன செய்வோம்…? என்ற எண்ணத்துடனே வாழும் நிலை உள்ளது.

இன்று வாழும் சுக வாழ்க்கைக்காக வேண்டி “அன்றன்று சேமிக்கும் பொருளே பிரதானம்…!: என்ற எண்ணத்தின் பேராசைப்பிடியில் மரண பயம் என்ற அச்ச உணர்வுடனே உள்ளார்கள்.

ஆகவே…
1.பக்தி என்ற முறையில் ஆண்டவனை வணங்குவதிலிருந்தும்
2.எதிர்காலத்திற்காகச் சேமிக்க வேண்டிய பொருளின் சேர்க்கையிலிருந்தும்
3.மரண பயத்தைத் தன்னுள் ஏற்றிக் கொண்ட மனிதனுக்கு
4.எப்படியப்பா மரண பயத்தை விட்டு விட்டு
5.ஞான வளர்ச்சியையோ தெய்வ சக்தியையோ வளர்த்துக் கொள்ள முடியும்…? அல்லது பெற முடியும்…!

விஞ்ஞானத் துறையில் எடுத்துக் கொண்டாலும் அதிலே பல செயல்களை ஆராயும் மனிதர்கள் எல்லாம் தற்கொலை என்ற தன்னை மாய்த்துக் கொள்ளும் முடிவிற்கு ஏன் செல்கிறார்கள்…?

பிறவா வரம் பெறும் இனிய சக்தி கொண்ட ஞானிகள்… தன் உடலைப் பாதுகாக்க இந்த வாழ்க்கையில் உள்ள பொழுதே உடல் என்ற கூட்டின் முதுமை உணர்ந்து.. பிறவா சக்தி கொண்ட நிலையில் உடலைச் சமாதி நிலைப்படுத்திக் கொள்கின்றனர்.

அதனால் அவர்களுக்கு இந்த உணர்வின் மரண பயம் என்ற அச்ச உணர்வு இருப்பதில்லை. ஆனால் நமக்கு…?

நாம் செய்யும் தவறை மறைத்தால் ஏற்படும் தீமையான விளைவுகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்…!

Hiding things

நாம் செய்யும் தவறை மறைத்தால் ஏற்படும் தீமையான விளைவுகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்…!

 

இன்று மனிதனின் வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் அன்புடன் பண்புடன் பழகுகிறோம் எல்லாம் செய்கிறோம். இருந்தாலும்…
1.வெளியிலே தெரியாதபடி நமக்குள் குறைகளை வளர்த்துக் கொண்டால்
2.வெளியிலே நாம் பேசும்போது அல்லது கேட்கும் பொழுது
3.எனக்கும் அவருக்கும் ஒரு குறையும் இல்லை…! என்று நாம் மறைத்துப் பேசினாலும்
4.நம் உயிருக்குள் அதை மறைக்க முடியாது.

அதே சமயத்தில் நாம் ஒரு தவறையே செய்துவிட்டோம் என்றால் அந்தத் தவறின் தன்மை பிறருக்குத் தெரிந்தால்
1.நம்மைக் குற்றவாளியாக்கி விடுவார்களே…! என்று
2.இதற்காக வேண்டி நாம் பலதுகளைப் பொய்யாகச் சொல்லி மறைப்போம்.

ஆனால் மறைத்தால் என்ன ஆகும்…?

இப்படி மறைத்திடும் உணர்வுகளை நமக்குள் வளர்க்க வளர்க்க நமக்குள் வளரும்… வளர்க்க வேண்டிய உண்மையை… மறைத்திடும் நிலை வருகின்றது.

1.அப்படி மறைத்திடும் நிலை வரப்படும் பொழுது இருள் சூழ்ந்த நிலைகளே நமக்குள் வரும்
2.பின் சூனிய நிலைகளாக அது விளையும்… நம் சிந்திக்கும் திறனையே இழக்கச் செய்யும்
3.கடைசியில் இருள் சூழும் தன்மையையே உருவாக்குகின்றது.

நாம் தவறு செய்யவில்லை. நாம் நுகர்ந்த உணர்வுகள் இப்படியெல்லாம் அந்த உணர்ச்சியை ஊட்டுகின்றது… அதன் உணர்வின் செயலாக நம்மை இயக்குகின்றது…!

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்..?

ஆனால் இதை அடக்கும் ஆறாவது அறிவைக் கொண்டு மாற்றி அமைத்துச் செயல்படுத்த முடியும். விநாயகர் கையில் என்ன வைத்திருக்கின்றது…? அங்குசம்.

1.நாம் நுகர்ந்த உணர்வுகள் அதனின் உணர்ச்சிகளை ஊட்டி
2.தவறான பாதைகளுக்குச் செல்லும் உணர்ச்சிகளை ஊட்டி
3.நம்மை அழைத்துச் செல்லும் அதனின் இயக்க நிலையை மாற்றிட
4.நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்று ஏங்கி எடுத்து அதை அடக்க வேண்டும்.

அதனால் தான் ஆறாவது அறிவைக் கார்த்திகேயா… சேனாதிபதி…! என்று ஞானிகள் காட்டினார்கள். மகரிஷிகளின் அருளை நாம் நுகர்வோம் என்றால் நம்மை அறியாமல் தவறு செய்யும் உணர்வுகளை அது அடக்குகின்றது.

பின் இந்த உணர்வின் தன்மை இப்படி அடக்கிப் பழகிவிட்டால்
1.எப்பொழுது அந்த உணர்வுகள் தவறு செய்ய அல்லது மறைக்கத் தூண்டினாலும்
2.அடுத்த கணம் இந்த மகரிஷிகளின் அருள் உணர்வை இணைத்தே
3.அந்த உணர்வின் தன்மை உணவாக எடுக்கும் அந்த (ஒளியான) அணுக்கள்.
4.அப்பொழுது நமக்குள் அந்த உணர்ச்சிகளைத் தடுக்கும் அணுக்களாக இது விளையும்.

அத்தகைய அணுக்கள் விளைந்தால் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி நம் மனதைத் தூய்மைப்படுத்தி மன நோயாகவோ உடல் நோயாகவோ மாற்றாதபடி நம்மை மகிழ்ந்து வாழச் செய்யும்.

இது எல்லாம் நம் வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டும்.

புறப் பொருளால் சாதனை செய்யும் விஞ்ஞானத்தை விட மனித உடலுக்குள் சேமிக்கும் சக்தி கொண்டு செயற்கரிய செயலைச் செய்ய முடியும் – ஈஸ்வரபட்டர்

mystic meditation

புறப் பொருளால் சாதனை செய்யும் விஞ்ஞானத்தை விட மனித உடலுக்குள் சேமிக்கும் சக்தி கொண்டு செயற்கரிய செயலைச் செய்ய முடியும் – ஈஸ்வரபட்டர்

பாலில் சேர்க்கப்படும் பொருளைக் கொண்டு அதன் சுவையும் மணமும் நிறமும் எப்படி மாறுகின்றதோ அதைப் போன்று தான்
1.இந்த மனிதப் பிம்ப உடலில் சேர்க்கப்படும் உணர்வின் எண்ண சுவாச அமிலத்தால்
2.பிம்பக் கூட்டின் உருவ நிலையும்… குண நிலையும்… சொல் வடிவமும்… அமைகின்றதப்பா…!

நல் உணர்வு சுவாச முறையால்… நாம் எடுக்கும் ஜெப சக்தி காந்த மின் அலைச் சுவாசத்தால்…
1.உடல் பிம்பக் கூட்டில் உள்ள ஒவ்வொரு அணுக்களையும்
2.சக்திவாய்ந்த ஒளியில் வளப்படுத்த முடியும்.

இந்த உடல் பிம்ப ஜீவக் கூட்டிலிருந்து… ஜீவ சக்தியுடன் கூடிய இவ்வலை ஈர்ப்பின் குணத்தின் சக்தி கொண்டு தான்..
1.சகல சக்தியையும் அறியவல்ல ஆற்றலையும் செயல் முறையும்
2.என்றுமே அழியா வண்ணம் பல படைப்பைப் படைக்கவல்ல படைப்பின் சக்தியும்
3.இந்தப் பிம்பக் கூட்டிற்கு உண்டு

இந்தப் பிம்பக் கூட்டில் எடுக்கும் இச்சக்தியினால் எச்சக்தியையும் அடையலாம் என்று உணர்த்துகின்றீரே…! அப்படியானால் நீரிலும் நெருப்பிலும் குதிக்க முடியுமா…? என்ற வினா எழும்பலாம்.

கடும் உஷ்ண அலையைக் கக்கும் நெருப்புக் குண்டத்தில் இஜ்ஜீவ பிம்ப உடலுடன் அமர்ந்திருக்க முடியுமா..? என்றால் முடியுமப்பா…!

1.தான் எடுக்கும் உயர் சக்தி அலையின்… “ஒளியுடன் ஒளியாகும் ஒளி சக்தி பெற்றால்…”
2.தணல் விட்டு எரியும் நெருப்பில் அமர்ந்தாலும்
3.இந்த உடல் பிம்ப ஈர்ப்புச் சக்தியிலிருந்து வெளிப்படுத்தும் ஒளி அலையைப் பாய்ச்சினால்
4.அந்த நெருப்புக் கோளம் தான் அணையுமே தவிர இந்தப் பிம்ப உடலைப் பாதிக்காது.

இயற்கையின் சீற்றமுடன் விளையாடுவதற்கல்ல உயர் ஞான சக்தி. ஆனால் உள்ள சக்தியை உணர்த்துவதற்காக இதைச் சொல்கிறோம்.

ஆழ் கடலாக இருந்தாலும்… பூகம்பமோ… சூறாவளியாகவோ.. இருந்தாலும் ஒலியின் சக்தியுடன் ஒளிரும் சக்தி கொண்டு எந்த வகையான இயற்கையின் சீற்றத்திலிருந்தும் பிம்ப உடலையும் தப்ப வைக்க முடியும்.

திராவகத்தில் போடப்படும் மற்ற உலோகங்கள் கரைந்தாலும் தங்கத்தின் குணம் எப்படிக் கரைவதில்லையோ அதைப் போன்று
1.இந்த உணர்வால் எடுக்கும் எண்ணச் சுவாசத்தால்
2.ஒலி கொண்டு ஒளி பெற்றோமானால்
3.உயர் ஞான சக்தியை வழி கொண்ட எச்சக்தியாகவும் நாம் ஆக முடியும்.

பூமியின் ஜீவ சக்தியைக் கொண்டு வளர்த்த சக்தியின் தாதுப் பொருள்களில் பிரிந்த திரவக சக்தியிலிருந்து (பூமிக்கடியில் இருக்கும் எண்ணை – CRUDE OIL) ஒன்றைக் கொண்டு பலவாகப் பெட்ரோலியப் பொருள்களைப் பல வகையிலும் பிரித்து பல சாதனைகளைப் புரிகின்றோம் அல்லவா…!

அதைப் போன்று..
1.இந்த உணர்வின் சுவாசத்தால் எடுக்கும் இஜ்ஜீவ சக்தியைக் கொண்டு
2.இப்பேரண்டப் பெருநிலையின் வளரத் தக்க முறைதனையும்
3.ஒவ்வொரு மண்டலங்களிலிருந்தும் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்றோன்று உருவாகும் முறைதனையும்
4.அணுவுக்குள் அணுவாக ஊன்றி அணுச் செயல் தொடர்பனைத்தையும்
5.ஒலியையும் ஒளிக் காட்சிகளையும் மணத்தையும் சுவை குணத்தையும் அவை மாறும் செயற்கை வடிவையும்
6.இவ்வெண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் சுவாசத்தால் எடுக்கவும் உணரவும் நமக்குள் வளர்த்திடவும் முடியும்.

இந்நிலையெல்லாம் பெறுவதற்கு மனித உணர்வில் ஊன்று கோலாக நிலைத்துள்ள “மரண பயம்” என்ற இந்த வித்தை முதலில் அகற்ற வேண்டும்.

உடல் உறுப்புகளுக்குள் ஏற்படும் புண்கள் பற்றியும் தலையில் உருவாகும் செல்கள் (பேன்) பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது

Infection in body

உடல் உறுப்புகளுக்குள் ஏற்படும் புண்கள் பற்றியும் தலையில் உருவாகும் செல்கள் (பேன்) பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.அணுவுக்குள் அணு வளர்க்கும் வளர் தன்மை எத்தகையது…?
2.அணு வளர்ப்பின் இயற்கைக் குணம் ஜீவ சக்தியுடன் எப்படி மாற்றம் கொள்கிறது…?

இயற்கை வளர்ப்பில் வளர்ந்த கனிகளில் சாதாரணமாக வாழைப்பழத்தின் பழுத்த நிலைக்குப் பிறகு அக்கனியைப் பூமியின் ஈர்ப்பில் அப்படியே விட்டு விட்டால் என்ன ஆகின்றது…?

1.அந்தக் கனியானது அழுகிய தருவாயில்
2.பூமியின் வெக்கை அதன் மேல் பட்டு பூமி மீண்டும் ஈர்த்து
3.அக்கனியின் சுவை அமிலமுடன் இந்த உஷ்ண அலை ஈர்ப்புப்பட்டு வெளி வரும் பொழுது
4.அதன் அழுகிய தன்மையில் பல அணுக்கள் தோன்றுகின்றன.

தோன்றிய உயிரணுக்கள் எவ் அமிலத்தில் எச்சுவை கொண்டு அவ்வணு வளர்ந்ததோ அதன் தொடர்பு கொண்ட அணு வளர்ச்சி உருவத் தொடர்கள் “புழுக்களாக…” வளர்கின்றன.

இதன் நிலையை உணர்த்துவது எதற்கு…?

மனித பிம்ப உடலுடன் இந்தப் பூமியின் ஈர்ப்புப் பிடியில் வாழும் நாம் இந்தப் பிம்பக் கூட்டின் சுவாச அலையில்
1.எப்படி வாழைக் கனியிலிருந்து அதன் வெக்கையில் பட்ட உயிரணு தோன்றியதோ அதைப் போன்று தான்
2.ஒவ்வொரு ஜீவ சக்தியிலும் உணர்வின் சுவாசம் எடுக்கும் நிலையில் ஏற்படும்
3.வெக்கை உயிரணுக்கள் தான் உடல் பிம்பக் கூட்டிலும் வளர்கின்றது.
4.எடுத்து வெளியிடும் சுவாசத்திலும் அதன் தொடர்பு கொண்ட அணுக்களின் வளர்ச்சி தான் வளர்கின்றது.

ஒவ்வொரு ஜீவ சக்தியின் தொடர்பிலும் அணுவுக்குள் அணு வளரும் தன்மையில் அந்தந்த இனக் கலவை உயிரணுக்கள் வளர்வதுடன் பிறிதொரு அமில உயிரணுக்களின் செயல் எப்படிக் கூடுகின்றது..?

மனிதனின் உடலில் வளரும் புழுக்களும் தலையில் வரும் பேன்களும் எப்படி உருவாகின்றன…?

அமைதியுடன் ஆரோக்கியமான சந்தோஷ வாழ்க்கையில் உள்ள மனிதர்களுக்கு அது அதிகம் வருவதில்லை.

ஆனால் சலிப்புப்பட்டு சோர்வுப்பட்டு சங்கடம் போன்ற வறுமையில் வாழும் இன்னல்படும் ஆத்மாக்களின் உணர்வில்
1.அவர்கள் எடுக்கும் இச்சுவாச அலையின் வெக்கையானது
2.ரோமக் கால்களில் வெளிப்படும் அமிலக் கசிவில்
3.உடல் வெக்கையின் உஷ்ண அலையின் விகிதத்தைக் கொண்டு
4.இச்சஞ்சலமான நிலையில் உள்ளவர்களின் அலைகளில் இந்தப் பேன் வளரும்.

உடல் உறுப்புகளில் இவ் உணர்வின் கசிவில் வெளியில் உள்ள தூசிகளோ சில அழுக்குகளோ படும் பொழுது என்ன மாதிரியான பாதிப்பு வருகின்றது…?

1.உடலில் ஏற்படும் வெக்கையினால் வெளிப்படும் வியர்வையின் அமிலத்தின் மேல்
2.காற்றலையில் உள்ள சில உயிரணுக்கள் படும் பொழுது
3.அவற்றின் வளர்ப்பாக அணுவுக்குள் அணு வளர்ந்து
4.அவை பெருகி ஏற்படுவது தான் உடல் உறுப்புகளில் ஏற்படும் சில கட்டிகளும் புண்களும்.

அவற்றின் கசிவு வளர்ப்பு அணுக்களினால் படரும் தொடர் நிலையை அவற்றை அழிக்கக்கூடிய சக்தி கொண்ட சில மருந்துகளால் வைத்தியத்தின் மூலம் மாற்றுகின்றார்கள்.

அணுவுக்குள் அணு வளரும் தன்மையில் இன்று விஞ்ஞான ரீதியில் தாவரங்களையும் மிருக இனங்களையும் சில கலப்புகளைச் சேர்த்து மாற்றி அமைக்கின்றார்கள்.

நாய் நரி இவற்றை மாற்றியதைப் போல் மனிதனுக்குச் சேவை செய்யக் கொரில்லாக்கள் போன்ற இன விருத்தியை குரங்கின் இனத்துடன் மனித அமிலத்தைச் சேர்த்து வளர்த்த மனிதர்களே இன்று அவை வளராவண்ணம் தடுத்தும் விட்டனர்.

இதை எல்லாம் உணர்த்தும் முறை எதற்கு…?

உடல் என்ற பிம்ப உணர்வு அமிலக்கூட்டில்…
1.பல கோடி ஆண்டுகளாக அணுவுக்குள் அணு தோன்றி உரு மாறி மாறி
2.ஒவ்வொன்றின் உருவச் சேமிப்பின் முலாமுடன்
3.இன்று வழித் தொடர் கொண்டு வளர்ந்து வாழ்ந்து கொண்டுள்ள நாம்
4.எச்சக்தியும் செயலாக்கக்கூடிய எண்ண ஆற்றலின் ஞான வளர்ச்சிக்கு
5.எண்ணத்தால் எடுக்கும் உணர்வலையின் நற்சுவாசத்தால்
6.இந்த உடல் அமிலத்தில் ஏற்கனவே உரு மாறி மாறி ஒவ்வொரு தொடர்பிலும் சேமித்த அமிலக்கூட்டில்
7.நற்சக்தியுடன் கூடி வந்த தீய குண அமிலத்தையும் உயர்ந்த சக்தியாகவும் ஆக்கிட முடியும்.

அணு தோன்றி… அணு வளர்ப்பின் வளர் தொடர் வள்ர்ப்பின் அணுக்கள் தான்… தொடர் அணு வளர்ச்சி நிலை…!
1.ஆகவே அணுவுக்குள் அணுவாக மகரிஷிகளின் உணர்வலைகளை ஊன்றி
2.உயர் உணர்வின் ஞானத்தில் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தியானத்தைக் கடைப்பிடிக்கும் நீங்கள் அகஸ்தியராக ஆக வேண்டும்..!

Legend of Agastyan

தியானத்தைக் கடைப்பிடிக்கும் நீங்கள் அகஸ்தியராக ஆக வேண்டும்..!

 

இந்த வாழ்க்கைக்காகச் செல்வம் தேவைப்படுகின்றது, ஆனாலும் நாம் சேர்த்து வைக்கும் செல்வம் எதுவுமே நம்முடன் கடைசியில் வருவதில்லை.

பொருளில்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை… அருளில்லாதவருக்கு அவ்வுலகம் இல்லை…! என்கிற பொழுது அருளை வளர்க்கப்படும் பொழுது அந்த உலகம் அமைகின்றது. பொருள் இருக்கும் பொழுது இந்த உலகத்தில் மகிழ்ச்சியின் தோற்றம் வருகின்றது.

1.பொருள் குறைந்து விட்டாலோ மதிப்பு இழக்கப்படுகின்றது
2.அன்றே நமக்குள் சோகம் குடிகொண்டு விடுகின்றது
3.வேதனை என்ற உணர்வே வளர்கிறது.
4.இதைப் போன்ற நிலைகளில் இருந்தெல்லாம் நாம் கடந்து பழக வேண்டும்.

இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் மக்களுக்கு இந்த அருள் ஞானத்தைப் பற்றி எடுத்துச் சொல்தல் வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும்…
1.நம் குருநாதராக மாற வேண்டும்
2.அகஸ்தியராக மாற வேண்டும்
3.துருவ மகரிஷியாக மாற வேண்டும்
4.துருவ நட்சத்திரமாக அந்த ஒளிச் சரீரம் பெறும் தகுதி பெற வேண்டும்.

ஆகவே இதன் வழிப்படி உங்கள் வாழ்க்கையை வாழுங்கள். ஏனென்றால் இன்றைய உலகம் மிகவும் விஷத் தன்மை கொண்டதாகப் பரவிக் கொண்டிருக்கின்றது… மனிதனை அழிக்கும் நிலையாக வந்து கொண்டிருக்கின்றது.

அந்த விஷம் நம்மை வீழ்த்தி விடாதபடி இனி இந்த உடலே ஒளியின் சரீரமாக… என்றென்றும் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி வாழும் தன்மை வர வேண்டும்.

1.இந்த விஞ்ஞானத்தின் விளைவுகளால் உலகம் தவிக்கப் போகின்றது.
2.மனிதனுடைய சிந்தனைகள் காட்டு விலங்குகளைப் போன்றே சிந்தனைகள் வந்துவிடப் போகின்றது
3.(இதை ஞானகுரு உபதேசித்த வருடம் 1997 – இன்று அந்த நிலை வந்துவிட்டது)

இதிலே எல்லாம் நாம் சிக்கிடாதபடி ஒவ்வொருவரும் அகஸ்தியராகிடல் வேண்டும்… ஒவ்வொருவரும் துருவ மகரிஷியாகிடல் வேண்டும். மக்களுக்கு நல் உணர்வுகளை எடுத்துச் சொல்லத் தயங்கக் கூடாது.

அவர்கள் எப்படியும் வளர வேண்டும் என்ற எண்ணங்களை நாம் எடுக்க வேண்டும். நாம் இந்தத் தியானத்தை எடுத்துக் கொண்ட பின்
1.வாய் கொண்டு சொல்லக்கூட வேண்டியதில்லை.
2.அவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அருள் ஞானம் பெறவேண்டும்
3.அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெறவேண்டும் என்ற எண்ணங்களை எடுத்துப் பாய்ச்சி
4.நமக்குள் வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.

நாளடைவில் வளர்க்கப்படும் பொழுது அவர்களும் நம்மை அணுகுவர். அவர்கள் அணுகினால் அவருக்கு இலாபம். அணுகவில்லை என்றால் நாம் “வருத்தப்பட வேண்டியதில்லை…”

1.ஆகவே அவர்கள் எப்பொழுதும் பெறுவார்கள்…! என்ற உணர்வை மட்டும் நமக்குள் வளர்த்துக் கொண்டால் போதும்.
2.இந்த நல்ல செய்தியை யாரும் எடுத்துக் கொள்ள மாட்டேன்..! என்கிறார்கள் என்ற எண்ணத்தை
3.நமக்குள் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை.

அனைவரும் பெறும் தகுதியைப் பெறும் காலம் வரும்…! என்ற முழுமையான நிலையை… “அந்த நம்பிக்கையுடன்…” நாம் இருத்தல் வேண்டும்.

பொதுவாகப் பெண்கள் நீங்கள் ஒவ்வொரு இடத்திலேயும் அணுகும் பொழுதெல்லாம் நீங்கள் அகஸ்தியராக மாறவேண்டும். குறைகளை வளர்த்திடவே கூடாது. குறைகள் இருந்தால் அதை நீக்கும் நிலைகளை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து கொண்டு அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படும் பண்புகளை வளர்க்க வேண்டும். அவர்கள் எல்லாம் அப்படித்தான்…! என்ற நிலைகளில் உடனே சொல்லிவிடக்கூடாது.
1.குறைகளை நாம் கேட்டாலும்..
2.மனதில் அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் ஒருவர் நம்மிடம் ரொம்பவும் பழகி விட்டார் என்றால் அவர் சொல்வதை மட்டும் அதிகமாக வைத்துக் கொள்வோம். அப்புறம் அவர் சொல்வதை வைத்து அடுத்தவரைக் கணித்தோம் என்றால் அவரைக் குற்றவாளியாக்குவோம்.

ஆகவே அவர்கள் இருவருக்குள்ளும் ஒற்றுமை ஏற்படும் உணர்வையே நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். “ஒன்றி வாழும் நிலையே வளர வேண்டும் ஈஸ்வரா…! என்று இப்படிப்பட்ட உணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நாம் எல்லாம் ஒன்று என்ற நிலைகள் உணர்தல் வேண்டும். யாரும் பிரிந்து வாழவில்லை.

நண்பர் நன்றாக இருக்க வேண்டும்…! என்று நாம் எடுத்துக் கொண்டால் அந்த நல்ல சக்தியும் வளர்கின்றது.

ஆனால் நண்பர் இப்படித் தியான வழியில் இருந்தும் குறையாகி விட்டார்…! என்று அந்தக் குறையின் உணர்வை நாம் எடுத்துக் கொண்டால் அந்தக் குறையின் உணர்வே நமக்குள்ளும் வளர்கின்றது.

1.நண்பர் உயர வேண்டும்…!
2.அதன் வழி குரு அருள் அங்கே அவருக்குக் கிடைக்க வேண்டும்
3.தியானத்தின் மூலம் அவர் எடுத்துக் கொண்ட நல்ல பலன் அவருக்குக் கிடைக்க வேண்டும் என்பதை
4.இப்படித்தான் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நல்லதையும் கெட்டதையும் சமமாக்கி ஒளியாக மாற்றியவன் அகஸ்தியன்

good or bad

நல்லதையும் கெட்டதையும் சமமாக்கி ஒளியாக மாற்றியவன் அகஸ்தியன்

கேள்வி:
சமமான உணர்வு எண்ணச் சுவாச நிலை என்றால் என்ன…?

பதில்:
மனிதனுடைய முக்கியமான குணங்கள் பன்னிரெண்டு. அதிலே ஆறு நல்ல குணங்கள். ஆறு தீய குணங்கள்.

1.வெறும் நல்ல குணங்களை வைத்து நல்லதை வளர்க்க முடியுமா என்றால் முடியாது.
2.ஆக அந்த நல்லதை மேலும் மேலும் உயர்த்த மீதம் உள்ள ஆறு தீய குணங்கள் தேவைப்படுகிறது.

ஒரு குழம்பை வைக்கின்றோம் என்றால் அதிலே இனிப்பைப் போட்டு வைக்க முடியாது. புளிப்பு கரிப்பு கசப்பு காரம் துவர்ப்பு நமநமப்பு எல்லாம் இணைத்தால் தான்
1.“அதாவது சமமான நிலைகளில்…!” அந்தச் சேர்மானம் இருந்தால் தான்
2.அது மிகவும் சுவையாக இருக்கும்.
3.உமிழ் நீர் அதிகமாகச் சுரக்கும்.
4.சாப்பாடு உடனே உள்ளுக்குள் போகும்.

ஆனால் மேலே சொன்ன சுவையில் ஏதாவது கூடி மற்றது குறைந்து விட்டால் உமிழ் நீர் கூடாது… வாயிலே வைத்துக் கொண்டே இருப்போம். உள்ளே போகாது.

இதைப் போன்று தான் அன்றாட வாழ்க்கையில் வரும் எத்தனையோ நிலைகளில் “நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத…!” அந்தத் தீமைகளை எல்லாம் குழம்பிலே பலசரக்குகளைப் போட்டுச் சமமாக்குவது போல் சமமாக்கி விட வேண்டும்.

வாழ்க்கையில் வருவதைச் சமமாக்குவது எப்படி…?

ஏனென்றால் அதைச் சமப்படுத்தியவர்கள் மகரிஷிகள். நல்ல மணமாகவும் நல்ல சுவையாகவும் மாற்றியவர்கள் மகரிஷிகள்.

ஆனால் மனிதர்களான நாம்…
1.நல்லதுக்காக ஏங்குவதும்.
2.கெட்டது வந்தால் சோர்வடைவதும் அல்லது ஆத்திரப்படுவதும் போன்ற நிலையிலேயே நின்று விடுகின்றோம்.
3.அதைச் சமப்படுத்த வேண்டும் என்ற எண்ணமே வருவதில்லை.

நல்லதையும் கெட்டதையும் ஒரே நிலையில் பார்த்து அதை இரண்டையும் இணைந்து வாழச் செய்யும் பக்குவமாக நம் சுவாசம அமைதல் வேண்டும்.

அது தான் சமமான உணர்வு… சமமான சுவாசம்….!

நல்லதையும் கெட்டதையும் ஒரே உணர்வுடன் பார்க்க ஒரே நிலையில் சீரான சுவாசமாக்க வேண்டும் என்றால் மகரிஷிகளின் உணர்வை எடுத்தால் தான் அது முடியும்.

நல்லது என்றும் கெட்டது என்றும் மகரிஷிகள் பார்வையில் எதுவும் இல்லை. நாம் குழம்பில் போடும் புளி காரம் உப்பு போல்…! அதை இணைத்தால் தான் குழம்பிற்குச் சுவை. தெரிந்தே தானே நாம் மிளகாயைப் போடுகின்றோம்…!

எந்தச் சந்தர்ப்பத்திலும் நம் சுவாசம் தடையாகக் கூடாது. ஒரே சீராக இருக்க வேண்டும்.

நல்லது நடந்தாலும்… கெட்டது நடந்தாலும்… அகஸ்தியன்
1.வாதாபியை ஜீரணித்தது போலவும்
2.அவனுடைய சகோதரனை ஒளியாக மாற்றியது போலவும் நம்முடைய செயல்கள் இருந்தால்
3.வருவது அனைத்தும் உணவாகவும் முழுமையான வளர்ச்சியாகவும் இந்த வாழ்க்கை நிச்சயம் அமையும்.

அகஸ்தியன் தான் இந்தப் பூமியையே சமப்படுத்திவன். அந்த அகஸ்தியன் உணர்வை நுகர்ந்தால் நாமும் நிச்சயம் சமப்படுத்த முடியும்.

“முழு முதல் படைப்பு…” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

first god

“முழு முதல் படைப்பு…” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆதியிலே… மண்டலங்கள் சுழன்று… வளர்ந்து… ஆவியாகி… குளிர்ந்து… மீண்டும் ஆவியாகி… அந்தந்த மண்டலங்கள் விடும் சுழற்சி ஈர்ப்பு வெக்கை உணர்வில்… தன் வளர்ப்பின் வளர்ப்பிற்குத் தன் சுவை ஈர்ப்பை வளர்த்துக் கொண்டே வந்தது.

அவை அவை எடுத்துச் சமைத்துக் கக்கிய… பல சுவை கொண்ட பல மண்டலங்களின் தொடர்பு கொண்டு… பல அலையின் ஈர்ப்பின்… தொடர் அலைச் சேர்க்கை… சுவை அமில குண ஈர்ப்பு நிலை ஏற்பட்ட பிறகு தான் “சூரிய குடும்பமாகவும் அதிலே பூமியாகவும்” மண்டலங்கள் வளர்ந்தன.

அவை எடுத்த சுவை குண சமைப்பு அமிலத் தொடரினால் பல பல வளர் மாற்றத்தின் கூட்டுக் கலவையில் சமைத்த சத்துத் தன்மையின் சக்தி குணம் இந்தப் பூமியில் படர்ந்து தாவர இன வளர்ச்சியானது.

பின் ஜீவ சக்தி வளரக்கூடிய காற்றமில வளர்ச்சி உற்பத்தி வளர்ப்பு நிலை கொண்ட பிறகுதான்… இந்தக் காற்றான ஆவி குணத்தின் ஜீவ சக்தி வளரக்கூடிய தன்மை வளர்ந்து… பலவில் பலவாக ஆனது.

ஜீவ வளர்ச்சியின் பல பல மாற்ற சுழற்சி ஈர்ப்பின் சுழல் வட்டத்தில் மோதுண்டு மோதுண்டு ஒவ்வொரு ஈர்ப்பு மாற்றத்திலும்… ஒவ்வொரு மாற்றத்தின் சக்தியும்… ஒவ்வொரு வளர்ச்சியாக அந்த உயிரணு கூட்டிக் கொண்ட பல சுவை அமில வளர்ப்புடன் வார்ப்பாகி ஜீவ பிம்ப நிலை கொள்கிறது.

இஜ்ஜீவ பிம்பத்தில்…
1.சுவைக்கும் நிலையும்
2.செயலாற்றக் கூடிய அங்க அவயங்களும்
3.ஒளி ஈர்த்துச் செயலாற்றும் திறமையும் பல வார்ப்பில் மாறி மாறி
4.ஒவ்வொரு நிலை கொண்டு மோதுண்ட சுழற்சி வழித் தொடரில் ஒலி ஒளியாகி
5.வழித் தொடர் கொண்டு உயர் சக்தி நிலை பூண்டு மனிதப் பிம்பக் கரு ஞானம் கூடியது.

சூரியனைச் சேர்த்து நாற்பத்தி எட்டு மண்டலங்களும் ஒன்றாக இயங்கித் தன் வளர்ப்பின் வளர்ப்பாக பல நட்சத்திரங்களை வளர்த்துச் செயலாகும் சக்தியில் உருவான உரு நிலை தந்த மனித ஞான பிம்பம் வளர்ந்ததப்பா…!

மண்டல ஈர்ப்பின் சுழற்சி கதியில் நேர்ப்பார்வையில் செயல் வழியில்
1.இயற்கைத் தன்மையில் சுழலும் சக்தியையே
2.இந்த மண்டலச் சந்திப்பு நிலைதனைத் திசை திருப்பும் நிலைதனை ஏற்படுத்துகின்றனர் சப்தரிஷிகள்.

இந்தப் பூமியில் உள்ள மனிதனைக் காட்டிலும் “ஞான சக்தியில் வளர்ந்த மனிதக் கரு உரு நிலை” இந்த நாற்பத்தி எட்டுக் மண்டலங்களில் இல்லா நிலை… மற்ற சூரியக் குடும்ப மண்டலங்களில் உண்டு.

இந்தப் பேரண்ட பெரு நிலையின் வளர்ப்பு செயல் எவை…? என்று எப்படி அறிய முடியும்…?

உயிரணு தோன்றி… ஈர்ப்பு நிலையில் சிக்குண்ட செயல் வழிக்கு… முடிவில்லா உருமாற்ற நிலை வளர்ப்புச் சுழற்சியின் முடிவே இல்லை.
1.வளர்ப்பின் வளர் நிலையை உயர் வளர்ப்பின் வளர்ப்பாக்கி
2.உன்னத வளர்ப்புகளை வளர்க்க ஆரம்ப உயிரணு தான் வித்தப்பா…!

இந்த மனித பிம்ப உடல் சேமித்த பதம் கொண்ட பக்குவ நிலைதானப்பா வளர்ப்பின் வளர்ப்பை வளர்க்கும் நிலை. இதை உணர்ந்து உயர் ஞான அலையின் வழி சென்றோமானால்… “உருவாகும் உருவ சக்திக்கே நாம் உருவம் தரலாம்…!”

மனிதப் படைப்பு என்பது முழு முதல் கடவுள்…!