தியானத்தைக் கடைப்பிடிக்கும் நீங்கள் அகஸ்தியராக ஆக வேண்டும்..!

Legend of Agastyan

தியானத்தைக் கடைப்பிடிக்கும் நீங்கள் அகஸ்தியராக ஆக வேண்டும்..!

 

இந்த வாழ்க்கைக்காகச் செல்வம் தேவைப்படுகின்றது, ஆனாலும் நாம் சேர்த்து வைக்கும் செல்வம் எதுவுமே நம்முடன் கடைசியில் வருவதில்லை.

பொருளில்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை… அருளில்லாதவருக்கு அவ்வுலகம் இல்லை…! என்கிற பொழுது அருளை வளர்க்கப்படும் பொழுது அந்த உலகம் அமைகின்றது. பொருள் இருக்கும் பொழுது இந்த உலகத்தில் மகிழ்ச்சியின் தோற்றம் வருகின்றது.

1.பொருள் குறைந்து விட்டாலோ மதிப்பு இழக்கப்படுகின்றது
2.அன்றே நமக்குள் சோகம் குடிகொண்டு விடுகின்றது
3.வேதனை என்ற உணர்வே வளர்கிறது.
4.இதைப் போன்ற நிலைகளில் இருந்தெல்லாம் நாம் கடந்து பழக வேண்டும்.

இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் மக்களுக்கு இந்த அருள் ஞானத்தைப் பற்றி எடுத்துச் சொல்தல் வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும்…
1.நம் குருநாதராக மாற வேண்டும்
2.அகஸ்தியராக மாற வேண்டும்
3.துருவ மகரிஷியாக மாற வேண்டும்
4.துருவ நட்சத்திரமாக அந்த ஒளிச் சரீரம் பெறும் தகுதி பெற வேண்டும்.

ஆகவே இதன் வழிப்படி உங்கள் வாழ்க்கையை வாழுங்கள். ஏனென்றால் இன்றைய உலகம் மிகவும் விஷத் தன்மை கொண்டதாகப் பரவிக் கொண்டிருக்கின்றது… மனிதனை அழிக்கும் நிலையாக வந்து கொண்டிருக்கின்றது.

அந்த விஷம் நம்மை வீழ்த்தி விடாதபடி இனி இந்த உடலே ஒளியின் சரீரமாக… என்றென்றும் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி வாழும் தன்மை வர வேண்டும்.

1.இந்த விஞ்ஞானத்தின் விளைவுகளால் உலகம் தவிக்கப் போகின்றது.
2.மனிதனுடைய சிந்தனைகள் காட்டு விலங்குகளைப் போன்றே சிந்தனைகள் வந்துவிடப் போகின்றது
3.(இதை ஞானகுரு உபதேசித்த வருடம் 1997 – இன்று அந்த நிலை வந்துவிட்டது)

இதிலே எல்லாம் நாம் சிக்கிடாதபடி ஒவ்வொருவரும் அகஸ்தியராகிடல் வேண்டும்… ஒவ்வொருவரும் துருவ மகரிஷியாகிடல் வேண்டும். மக்களுக்கு நல் உணர்வுகளை எடுத்துச் சொல்லத் தயங்கக் கூடாது.

அவர்கள் எப்படியும் வளர வேண்டும் என்ற எண்ணங்களை நாம் எடுக்க வேண்டும். நாம் இந்தத் தியானத்தை எடுத்துக் கொண்ட பின்
1.வாய் கொண்டு சொல்லக்கூட வேண்டியதில்லை.
2.அவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அருள் ஞானம் பெறவேண்டும்
3.அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெறவேண்டும் என்ற எண்ணங்களை எடுத்துப் பாய்ச்சி
4.நமக்குள் வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.

நாளடைவில் வளர்க்கப்படும் பொழுது அவர்களும் நம்மை அணுகுவர். அவர்கள் அணுகினால் அவருக்கு இலாபம். அணுகவில்லை என்றால் நாம் “வருத்தப்பட வேண்டியதில்லை…”

1.ஆகவே அவர்கள் எப்பொழுதும் பெறுவார்கள்…! என்ற உணர்வை மட்டும் நமக்குள் வளர்த்துக் கொண்டால் போதும்.
2.இந்த நல்ல செய்தியை யாரும் எடுத்துக் கொள்ள மாட்டேன்..! என்கிறார்கள் என்ற எண்ணத்தை
3.நமக்குள் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை.

அனைவரும் பெறும் தகுதியைப் பெறும் காலம் வரும்…! என்ற முழுமையான நிலையை… “அந்த நம்பிக்கையுடன்…” நாம் இருத்தல் வேண்டும்.

பொதுவாகப் பெண்கள் நீங்கள் ஒவ்வொரு இடத்திலேயும் அணுகும் பொழுதெல்லாம் நீங்கள் அகஸ்தியராக மாறவேண்டும். குறைகளை வளர்த்திடவே கூடாது. குறைகள் இருந்தால் அதை நீக்கும் நிலைகளை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து கொண்டு அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படும் பண்புகளை வளர்க்க வேண்டும். அவர்கள் எல்லாம் அப்படித்தான்…! என்ற நிலைகளில் உடனே சொல்லிவிடக்கூடாது.
1.குறைகளை நாம் கேட்டாலும்..
2.மனதில் அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் ஒருவர் நம்மிடம் ரொம்பவும் பழகி விட்டார் என்றால் அவர் சொல்வதை மட்டும் அதிகமாக வைத்துக் கொள்வோம். அப்புறம் அவர் சொல்வதை வைத்து அடுத்தவரைக் கணித்தோம் என்றால் அவரைக் குற்றவாளியாக்குவோம்.

ஆகவே அவர்கள் இருவருக்குள்ளும் ஒற்றுமை ஏற்படும் உணர்வையே நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். “ஒன்றி வாழும் நிலையே வளர வேண்டும் ஈஸ்வரா…! என்று இப்படிப்பட்ட உணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நாம் எல்லாம் ஒன்று என்ற நிலைகள் உணர்தல் வேண்டும். யாரும் பிரிந்து வாழவில்லை.

நண்பர் நன்றாக இருக்க வேண்டும்…! என்று நாம் எடுத்துக் கொண்டால் அந்த நல்ல சக்தியும் வளர்கின்றது.

ஆனால் நண்பர் இப்படித் தியான வழியில் இருந்தும் குறையாகி விட்டார்…! என்று அந்தக் குறையின் உணர்வை நாம் எடுத்துக் கொண்டால் அந்தக் குறையின் உணர்வே நமக்குள்ளும் வளர்கின்றது.

1.நண்பர் உயர வேண்டும்…!
2.அதன் வழி குரு அருள் அங்கே அவருக்குக் கிடைக்க வேண்டும்
3.தியானத்தின் மூலம் அவர் எடுத்துக் கொண்ட நல்ல பலன் அவருக்குக் கிடைக்க வேண்டும் என்பதை
4.இப்படித்தான் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply