“இயற்கையின் விதி” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

HUMAN TO GOD

“இயற்கையின் விதி” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இப்புவி ஈர்ப்பு மட்டுமல்லாமல் உருவாகும் அனைத்து அணுத் தன்மையும் அணுத் தோன்றி அணு வளர்க்கும் வளர்ச்சியிலேயே மோதுண்டு மோதுண்டு வளர்ந்து வருகின்றது.

முதலில் அந்த அணு தாவரமாக வளர்ந்தாலும் அல்லது அணுவாக உலோகம் வளர்ந்தாலும் எத்தொடர் வழி அணுக் கொண்டு எதன் எதன் தொடர்பெல்லாம் அந்த ஆரம்ப உயிரணு மோதுண்டு வழி பெறும் தன்மை பெற்றதோ
1.அந்த அவ்வுயிரணுவின் அமில ஆத்மக் கலவையில் அதனின் வளர்ச்சித் தொடர்
2.ஒவ்வொரு சக்திக் கலவை வழி கொண்டு
3.அதன் சேர்க்கை உருவ அமைப்பை (MOULD) வளர்த்துக் கொள்கின்றது.

ஆரம்ப உயிரணுத் தோன்றி இவ்வீர்ப்பில் புல்லாக “புல் செடியாக” வளர்ந்து அப்புல் செடியானது மக்கி மடிந்து விடுகின்றது.

மடிந்தாலும் அது வளர்த்த அவ்வுயிரணு அப்புல் செடியாக வளர்ந்த கலவையின் முலாமுடன் பிறிதொரு வளர்ப்பிற்கு அவ்வுயிரணு வித்து அமிலத் தன்மை வளரும் பொழுது
1.புல்லாகிய முதல் உயிரணு
2.பிறிதொரு வளர்ப்பிற்கு வரும் பொழுது “வலுவான செடித் தன்மை” கொண்ட பிறப்பை எடுக்கின்றது.

இப்பிறப்புத் தன்மை செடி மக்கிய அவ்வுயிரணு அச்செடி வளர்ப்பில் பல அணுக்களை வளர்த்துத் தன் வலுவைக் கூட்டிக் கொண்டு இசெடியின் முலாமான அமிலக் கூட்டுத் தொடர்புடனும் பிறிதொரு வளர்ப்பில் இதற்கு மேல் “வலுவான பூவாகும்” வளர்ப்பாகின்றது.

இத்தொடர் கொண்டு ஒவ்வொரு வளர்ச்சியின் ஈர்ப்பிலும்…
1.எச்சுவை கொண்டு… எவ்வழித் தொடர் வளர்ப்பிலெல்லாம் ஓர் உயிரணு வழித் தொடர் கொண்டு
2.தன் கூட்டுக் கலவையின் வளர்ச்சி மோதலுக்குகந்த முலாமான அமிலத்தைச் சேமிக்கும் வலுக் கொண்டு
3.அவ்வுயிரணு உயிராத்மாவாக புவிஈர்ப்புப் பிடியில் சிக்குண்டு
4.வளரும் தாவர நிலை மாறி ஜீவ சக்தி பெறக்கூடிய நடக்கும்… பறக்கும்… ஊரும்.. நீந்தும்… நிலை பெறுகின்றது.

இந்த வழித் தொடர் எல்லாமே இயற்கையின் நியதிகள்.

ஆக… இந்த மனித உயிராத்மாவின் சக்தி மற்றெல்லா ஜீவ சக்தியினைக் காட்டிலும் உயர்ந்த ஈர்ப்பு சக்தி கொண்டது.
1.ஆத்ம உயிரைச் செயல்படுத்தும் தன்மை கொண்டு தான்
2.இந்தப் பிம்ப உடல் ஆரோக்கியமும் ஞான வளர்ச்சியும் வலுக் கொள்கின்றது.

அப்படி என்றால் உயிராத்மாவை வலுப் பெறும் தன்மைக்கு நம் உணர்வலையின் எண்ணத்தை எப்படிச் செயல்படுத்துவது…?

உடலுடன் கூடிய உயிராத்மாவை…
1.எப்பிம்பத்தில் இவ்வுயிர் ஆத்மக் கலவை செயல்படுகின்றதோ
2.அதே பிம்பத்திலிருந்து தான் இவ்வுயிராத்மாவையும் வலுப் பெறச் செய்ய முடியும்.

குயவன் செய்யும் பானையின் உருவிற்கு அவன் சேர்க்கும் மண்ணும்… அவன் வடிக்க எண்ணிய அச்சின் வடிவாகவும் தான்… பானை அமைகின்றது.

அதைப் போன்று ஒவ்வொரு உயிரணுவும் எப்புவி ஈர்ப்பில் ஜீவன் கொண்டு எதிலேயெல்லாம் மோதுண்டு மோதுண்டு உருவாகி வலுப்பெற்றதோ அதன் தன்மை போன்று
1.நம் உயிராத்மாவானது இந்தப் பிம்ப அச்சுக்கூட்டில் இருக்கும் பொழுது
2.ஆத்ம உயிர் வித்தை உயர்ந்த வித்தாக்க வேண்டும்.

இப்பொழுது நாம் வாழும் இந்தப் பிம்பக் கூட்டிலிருந்து தான் அந்த நிலை பெறவேண்டும் என்பதை உணர்ந்து கிடைத்த “இந்தப் பாக்கியத்தை நழுவ விடாதீர்கள்…!”

Leave a Reply