உடலை விட்டுப் பிரிந்தவர்களின் ஆன்மா ஒரு மண்டலத்திற்குள் எங்கே செல்கிறது..?

consciousness-creates-reality.jpg

உடலை விட்டுப் பிரிந்தவர்களின் ஆன்மா ஒரு மண்டலத்திற்குள் எங்கே செல்கிறது..? 

ஒரு மனிதன் நோயால் மிகவும் வாடுகின்றான். அவன் வேதனைப்படுகின்றான். ஆக நல்ல உடலாக ஆரோக்கியமாக இருக்கும் நிலையில் சந்தர்ப்பத்தால் குடும்பத்திலோ அல்லது மற்ற வகைகளிலோ எதிர்பாராத நிகழ்ச்சிகள் நடந்து அதனால் வேதனை என்ற விஷங்கள் அதிகரித்து விட்டால்
1.நல்ல உடல் அதனுடைய வலுவை இழக்கின்றது.
2.உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் சுருங்கத் தொடங்குகின்றது.

காரணம் விஷத்தின் ஆற்றல் உடலில் அதிகரித்து விட்டால் நல்ல உணர்வின் சத்தைக் கவர்ந்த உறுப்புகள் அனைத்தும் நலியத் தொடங்குகின்றது.

அந்த நோயாளி மீது அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அதிகப் பற்று வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருடைய நோயை எண்ணி நுகர்ந்தறியும் பொழுது இரத்தங்களில் அந்த விஷத் தன்மைகள் கலந்து நோயாளியின் உடலில் வந்த அதே நோய்.. “பற்று கொண்டவர் உடலிலும் வரத் தொடங்குகின்றது…”

உதாரணமாக ஒரு நூறு பேர் அந்த நோயாளியைப் பார்க்கிறார்கள். “அவர் நல்லவர்… ஆனால் இப்படி ஆகிவிட்டார்…!” என்ற உணர்வை நுகர்ந்து அறிந்து அவருக்கு உதவிகளும் செய்கின்றனர்.

ஆனாலும் அந்த நூறு பேரில் ஒருவர் அவர் மேல் அக்கறை அதிகரித்து அவருக்கு வேண்டிய உபகாரத்தைச் செய்து கொண்டிருந்தால் நோயாளியின் உடலை விட்டுப் பிரிந்து செல்லும் ஆன்மா எங்கே செல்லும்..?

குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டால் நாம் என்ன செய்கிறோம்…? நாற்பத்தெட்டு நாள்களுக்கு (ஒரு மண்டலம்) அல்லது சிறிது நாளைக்காவது இறந்தவர் விரும்பிச் சாப்பிட்ட உணவை எல்லாம் படைத்து அவரை நினைத்து அழுவார்கள்.
1.ஏனென்றால் அவர் நம்முடன் வாழ்ந்தார்
2.அவருக்கு நாம் கொடுக்க வேண்டும் என்று அப்படிச் செய்வார்கள்.

அவர் உடலுடன் இருக்கும் பொழுது உட்கொண்ட அதே நினைவு கொண்டு மற்றவர்களும் பந்துக்களும் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் அந்தப் பதார்த்தங்களை வைத்து இறந்தவரின் நினைவு நாளைக் கொண்டாடுகின்றார்கள்.
1.எங்களுடன் இருந்தீர்கள்…! ஆனால் இன்று போய்விட்டீர்கள்…!
2.அதனால் நான் உங்களுக்கு இதை எல்லாம் (படையல்) செய்கின்றேன் என்று எண்ணுவார்கள்.

இதெல்லாம் எந்தக் காலத்தில் செய்வார்கள்…? அமாவாசைக் காலங்களில் தான் பெரும்பகுதி செய்வார்கள். அந்த நாளில் சூரியனின் கதிரியக்கங்கள் அதிகமாக வராது.

சூரியனின் கதிரியக்கங்கள் அவருடைய உடலில் விளைந்த நோயின் உணர்வைக் கவர்ந்து இந்தப் பூமியில் அலைகளாகப் பரவச் செய்து வைத்துள்ளது.

ஒரு மான் தன்னைத் தாக்க வரும் புலியின் உணர்வை அதிகமாக நுகர்ந்த பின் அந்த மானின் உடலை விட்டுப் பிரியும் உயிரான்மா புலியின் உடலுக்குள் சென்று புலிக் குட்டியாக மாறுகின்றது.

அதைப் போன்று அந்த நோயாளியின் வேதனையான உணர்வுகள் வலுவானது. அவருடைய குடும்பத்தைச் சார்ந்தோர்களோ அல்லது நண்பர்களோ
1.அவர் மேல் அதிகப் பற்று கொண்டு அவரின் உணர்வுகளை அதிகமாகச் சேர்த்திருந்தால்
2.அவர் இறந்த நாற்பத்து எட்டு நாளுக்குள் அவரை நினைத்துக் கும்பிடுகின்றேன்…! என்ற நிலையில்
3.அந்த ஆன்மா இவர் உடலுக்குள் வந்துவிடும்.
4.ஆனால் முதலில் தெரியாது… அது சிறுகச் சிறுக விளையும்.

அந்த நோயாளி இறக்கப்படும் பொழுது எந்தத் தெய்வத்தை அதிகமாக நேசித்து வந்தாரோ… அர்ச்சனை அபிஷேகம் எல்லாம் செய்தாரோ அந்த உணர்வுகள் எல்லாம் அவர் உடலில் இருக்கின்றது.

கடைசி நிமிடத்தில் அவர் இறக்கப்படும் பொழுது அவர் எந்தெந்த தெய்வத்தை நேசித்தாரோ அந்தத் தெய்வத்தின் உணர்வுடனே அந்த உயிர் வெளியே செல்லும்.

அப்பொழுது அந்தத் தெய்வத்தின் பேரைச் சொல்லி “இன்னார்…!” எனக்குத் தக்க நேரத்தில் நல்ல உதவிகளைச் செய்தார் என்ற உணர்வுடன் கடைசி நிமிடம் அந்த ஆன்மா வெளியிலே வந்தால் யார் அதிகமாக அவரை நேசித்தாரோ அந்த உடலுக்குள் வந்துவிடும்.

அப்படி வந்த பின் அவர் உடலில் வந்த நோயெல்லாம் இங்கேயும் உருவாக்கி அவர் தெய்வ பக்தி கொண்டது போல் இவர்களையும் பக்தி கொள்ளச் செய்து அதே நோயை விளைவித்து இவர் மீண்டும் இறந்து விட்டால் இந்த உயிரான்மா இவரைச் சார்புடையோர் உடல்களுக்குள் போகின்றது.

இப்படி ஒவ்வொரு உடலிலும் சேர்க்கும் விஷங்கள் அதிகரித்த பின் அடுத்து மனிதனாக வராது. பாம்பு வகைகளை எடுத்துக் கொண்டால் ஆயிரக் கணக்கில் உண்டு. புலிக்கு ஒரு விஷம் மாட்டுக்கு ஒரு விஷம் மானுக்கு ஒரு விஷம் யானைக்கு ஒரு விஷம் என்ற அந்த உணர்வின் கலவைகள் கொண்டு அதற்குத்தக்க உடலைப் பெறுகின்றது.

1.அதாவது மனித உடலை விட்டு வெளியே வரும் அந்த உயிரான்மா
2.தான் சேர்த்துக் கொண்ட வேதனைக்கொப்ப (விஷத்திற்கொப்ப)
3.எந்த உடலில் அந்த விஷம் இருக்கிறதோ அந்த உடலுக்குள் சென்று
4.அந்த உணர்வைக் கருவாக்கி பாம்பு என்றால் பாம்பினம். புலி என்றால் புலி இனமாக மாறிவிடும்.

இதை எல்லாம் மாற்றுவதற்காகத்தான் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் ஒரு ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தாலே அந்த நாற்பத்தி எட்டு நாளைக்குள் அந்தக் குடும்பத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்து அவரைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்கிறோம்.

அவரும் ஒளி நிலை அடைகின்றார். அவருக்குப் பின்னாடி நாமும் அந்த ஒளி நிலை அடையலாம். மெய் ஞானிகள் காட்டிய வழியே இது தான்.

“ஈஸ்வரபட்டர் சொன்னது…” என்று இங்கே பதிவாக்கும் கருத்துக்களைப் பற்றிய உண்மைகள்

Sages network connection.jpg

“ஈஸ்வரபட்டர் சொன்னது…” என்று இங்கே பதிவாக்கும் கருத்துக்களைப் பற்றிய உண்மைகள்

“மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் (ஈஸ்வரபட்டர்) சொன்னது…!” என்று அவருடைய கருத்துக்களை இங்கே தொடர்ந்து பதிவு செய்து கொண்டு வருகின்றோம்.

இதைப் படிக்கும் அனைவருக்கும் சிலவற்றைத் தெளிவுபடுத்த வேண்டியதுள்ளது.

1.சிலர் தமிழில் புரியும்படியாக எளிய நடையில் பதிவு செய்யுங்கள் என்று அடிக்கடி கேட்கிறார்கள்.
2.அதே சமயத்தில் எந்தப் புத்தகத்திலிருந்து இதைப் பதிவு செய்கிறீர்கள் என்றும் கேட்கின்றார்கள்.

இந்தக் கருத்துக்கள் அனைத்தும் முழுக்க முழுக்க அவரால் வெளிப்படுத்தப்பட்டது தான். 1977லிருந்து 1985 வரையிலும் ஈஸ்வரபட்டரால் தியானத்தின் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் தான் இவை எல்லாம்.

கருத்துக்கள் கடினமாக உள்ளதே…! என்று அவரிடம் கேட்ட வினாவிற்கு
1.மெய் உணர்வுகளையும் சித்தர்கள் மகரிஷிகள் கண்ட இரகசியங்களை அப்படித்தான் கொடுப்போம்.
2.புருவ மத்தியில் ஈஸ்வரா என்று எண்ணி தியானத்தின் மூலம் என்னிடம் (ஈஸ்வரபட்டரிடம்) நினைவைச் செலுத்தினால்
3.எந்தக் கேள்வியாக இருந்தாலும் தக்க விடை கொடுக்கப்படும்..
4.நானே வந்து உணர்த்துவேன்…! என்று அவரே சொல்லியுள்ளார் (1985 ஆம் ஆண்டு)

ஆகவே புரியவில்லை… தமிழாக இல்லை… சமஸ்கிருத வார்த்தைகள் உள்ளது… என்று யாரும் குழம்ப வேண்டியதில்லை. தெரிய வேண்டும்… புரிய வேண்டும்… உணர வேண்டும்.. என்ற எண்ணம் வலுவாக இருந்தால் நிச்சயம் ஈஸ்வரபட்டருடைய தொடர்பு கிடைக்கும்.

அவருடைய நேரடித் தொடர்பு கிடைத்தால் தெரிந்து கொள்ள வேண்டிய எல்லா விஷயங்களையும் உணரலாம்.

ஆகவே அவருடைய கருத்துக்களை இங்கே பதிவு செய்வதன் நோக்கமே இதைப் படிப்போர் அனைவருக்கும்
1.ஈஸ்வரபட்டரின் தொடர்பு கிடைக்க வேண்டும்
2.அந்த மகரிஷிகளின் தொடர்பு கிடைக்க வேண்டும்
3.அவர்களுடன் ஒவ்வொருவரும் கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பது தான்.
4.இந்தக் கருத்தும் அவர்கள் சொன்னது தான் (நான் சொல்லவில்லை)

அவர்களுடைய தொடர்பு வேண்டும் என்பவர்களுக்கு இதனுடைய உட்பொருளை நிச்சயம் உணர முடியும். படித்து அறிய வேண்டிய விஷயம் அல்ல. சுவாசித்து அறிய வேண்டிய விஷயம்.

அதாவது வாசித்து அல்ல… சுவாசித்து…!

பதிவு செய்யப்படும் ஈஸ்வரபட்டரின் கருத்துக்களை நான்கு அல்லது ஐந்து முறை வாசித்து அதன் பின் பதிவாக்கி அதன் பின் சுவாசித்து அதன் பின் தியானித்தால் “கடும் தவமிருந்தாலும் உணர முடியாத விஷயங்களை இங்கே காணவும் உணரவும் முடியும்…!”

என்னுடைய அனுபவம் இது தான்…!

குருவின் துணையை நாம் நாட வேண்டிய முறை

sivalingeswarans

குருவின் துணையை நாம் நாட வேண்டிய முறை 

 

மனிதன் தன்னாலே சிந்திக்கத் தலைப்பட்டுத் தன்னுள் எழுந்த வினாவாக “நான் என்பது யார்…?” என்றே தன்னைத் தான் அறிந்து கொண்டிடும் முயற்சியாகத் தான் கண்டுணர்ந்த வழி வகைகளை மெய் உணர்வுகளை மறைபொருளாக்குபவர்களும் உண்டு.

ஏனென்றால் மேன்மேலும் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ள மனித எண்ணத்தின் செயல்பாட்டில் “விதி முறைகள்…!” என்றே சூட்சமப்படுத்தி அப்படி இருக்கக்கூடாது… இப்படிச் செய்யக் கூடாது… அது தீட்டு… இது தோஷம்… இது பாவம்…! என்பார்கள்.

இப்படி உணர்த்திக் கொண்டு அவ்வாறு உபதேசிப்பவனையே (தன்னையே) எண்ணும்படியும்… தன்னையே ஜெபித்திடும் நிலைகளுக்கும்… ஏற்படுத்திக் கொண்டு
1.குரு என்ற பெயரில் குருவின் சரீரத்தையே எண்ணி ஜெபித்திடும்
2.பிற ஆத்மாக்களின் எண்ணத்தின் செயல்பாட்டின் வலுவைத் தான் ஒருவனே பெற்று
3.தன்னை உயர்த்திக் கொள்ளச் செயல்படும் அனைத்துப் புறச் செயல்களில் “உருவ வழிபாடும் ஒன்று…”

“நான் என்பது எண்ணத்தின் செயல்பாடு..” என்றால் அந்தச் செயல்பாட்டின் உந்துதல் கொண்டு எதை வளர்ச்சிப்படுத்துதல் வேண்டும்…?

பழி தீர்க்கும் உணர்வு கொண்டு மற்ற ஆன்மாக்களைத் தன்னுடன் இணைக்கும் செயலாகத் (மாந்திரீகமும் தாந்திரீகமும் செய்யும் சில சாமியார்கள்) தன் எண்ணத்தின் ஆசைகளை நிறைவேற்றும் பொருட்டு உலவிடும் ஆவி ஆத்மாக்களின் தன்மைகளையும் இறப்பின் பின் அதன் தன்மைகளையும் பல முறை விளக்கி வந்துள்ளேன்.

உடலுடன் உள்ள பொழுதே சரீர பக்தியெனும் போர்வையில் தான் கொண்ட எண்ணத்தையே ஊட்டி
1.தன் சரீர பிம்பத்தையே… தன் உருவத்தை எண்ணி ஜெபிப்போரிடம் பதிவு நிலைப்படுத்திக் கொண்டு
2.தன் ஆன்மாவிற்குப் பிற ஆன்மாக்களையும் அடிமையாக்கிக் கொண்டு
3.உபதேசிகன் ஒருவன் தன்னை உயர்த்திடும் செயல்…
4.அன்றைய “பாஷாண்டகம்..!” எண்ணத்தின் செயல்பாட்டில் இருவிதம் உண்டு.

பிறிதொன்றின் ஈர்ப்பில் ஒன்றுவது ஒன்று… மற்றொன்று தன் உயிராத்ம சக்தியை வலுக்கூட்டும் “தன் நல வளர்ப்பு…”

நான் என்பது எண்ணத்தின் செயல்பாட்டில் பிறிதொருவன் சக்தியை ஈர்த்துக் கொண்டு தனக்களித்துத் தான் வளர்வது என்ற தன் எண்ணம் தன்னுள் வளர்ந்து விட்டால் அந்த எண்ண வளர்ச்சியின் முதிர்வே சூட்சமப் பொருள் பதிந்த பாஷாண்டகமாம்.

1.தன் ஆன்மாவைத் தான் வளர்க்க…
2.உயிர் கொண்ட உடலே கருவிகளாக..
3.உணர்வு கொண்ட தியானத்தின் வழியாக…
4.எண்ணத்தின் செயல்பாடே நான் என்று உணரும் பொழுது…
5.இருவிதச் செயல் நிலைகளை ஆங்கு தெளிந்து கொண்டால்
6.நான் என்பது உடலா…?
7.நான் என்பது உயிரா…?
8.நான் என்பது உணர்வா…?
9.நான் என்பது எண்ணமா…? ஆத்மாவா…? என்ற வினாக்களுக்கும்
10.தன்னுள் தெளிந்த தெளிவைப் பெற்றிடலாம்…!

ஆத்ம முலாமின் வலுவை வலுவாக்கிக் கொண்டு
1.“தான்..” என்பதே ஆத்மாவாக உயிருடன் ஒன்றியே.. உயர் நிலை பெற்றே…
2.எண்ணத்தின் செயல்பாட்டில் நானும் வேண்டுமப்பா…!
3.ஒவ்வொரு உயிராத்மாவும்… ஒன்றுடன் ஒன்று ஒன்றி…!
4.ஒன்றில்லாமல் ஒன்றில்லை… ஒன்றுடன் ஒன்றியே பல வளர்ந்து… சக்தி ஈர்த்தல்…! என்று கூறியதிலும்
5.அதற்குள் இருக்கும் உண்மைகளை அறிந்து… உணர்ந்து கொண்டால்
6.தன் உயிராத்மாவின் சுய வளர்ச்சி நிலை “மிக மிகத் தெளிவு பெறும்…!”

சுவாசத்தின் மூலம் நோய் எப்படி வருகிறது…?

lungs protection

சுவாசத்தின் மூலம் நோய் எப்படி வருகிறது…?

 

உதாரணமாக ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் பயமும் கோபமும் நுகரப்படும் பொழுது அந்தப் பயத்தினால் சிந்திக்கும் தன்மை இழந்து அதனால் வேதனை என்ற உணர்வாகின்றது.

அதே சமயத்தில் வேதனை என்ற உணர்வுகளுடன் கோபம் என்ற உணர்வு அதிகமாகப்படும் பொழுது உடலில் உள்ள உறுப்புகள் சீராக இயங்காதபடி திணறல் வரும் பொழுது தான் அது “ஆஸ்த்மா…” நோயாக வருகின்றது.

ஏனென்றால் அவர் தாய் கருவில் சிசுவாக இருக்கும் பொழுது தாய் அதே போல் உணர்வை எடுத்திருக்கும்.
1.வேதனை வெறுப்பு சலிப்பு சஞ்சலம் கோபம் என்ற உணர்வுகளை அந்தத் தாய் சுவாசித்து
2.சுவாசித்த உணர்வுகள் தாய் உடலில் இரத்தங்களில் கலக்கப்படும் பொழுது
3.அங்கே ஒரு குணத்திற்கும் மற்றொரு குணத்திற்கும் ஒத்துக் கொள்ளாது போர் முறைகள் வரப்படும் பொழுது
4.கருவில் இருக்கக்கூடிய அந்தக் குழந்தைக்கும் இத்தகைய ஆஸ்த்மா நோய் வரக் காரணமாகின்றது.

அந்த நோய் அந்தத் தாய் உடலில் ஒரு தடவை வளர ஆரம்பித்தாலும் அடுத்த குழந்தை அந்தத் தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது
1.வேறு வலுவான நல்ல உணர்வை அந்தத் தாய் எடுத்திருந்தால்
2.அந்த வலுவான உணர்வுகளைக் அந்தக் குழந்தையும் பெற்றிருந்தால்
3.அந்தக் குழந்தையின் குடும்பத்தில் இந்தப் பாரம்பரிய ஆஸ்த்மா நோய் வராது.

ஆக அந்தக் குடும்பத்தில் நான்கு குழந்தைகளில் ஒருவர் தாய் கருவில் இருக்கும் பொழுது வலிமை பெற்று அந்த ஆஸ்த்மா நோய் வராதபடி வலிமையான நிலைகள் பெற்றாலும் அவன் வளர்ந்து வரப்படும் பொழுது இந்தக் குடும்பத்தின் பாரம்பரிய நிலைகள் கொண்டு அவனுடைய எண்ணம் அந்தக் கலந்த உணர்வு கொண்டு அடுத்து அது திருமணமானால் அங்கே கருவில் வரக்கூடிய அநக் குழந்தைக்கு ஆஸ்த்மா வரும்.

அது எப்படி…?

ஏனென்றால் அடிக்கடி குடும்பத்தில் வந்த அந்த ஆஸ்த்மா நோயைப் பற்றிப் பேசத் தொடங்கினால் போதும்…!
1.நான் அவரைப் பார்த்தேன் இப்படி இருந்தார்கள்…. இவரைப் பார்த்தேன் இப்படி இருந்தார்கள்…! என்றும்
2.எங்கள் பாட்டிக்கு ஆஸ்த்மா இருந்தது எங்கள் தாத்தாவிற்கு இப்படி இருந்தது என்றும்
3.அந்த நோய்களைப் பற்றி எண்ண ஆரம்பித்தால் அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால்
4.அந்தப் பாரம்பரிய நோய் அவர்களின் குழந்தைக்கு நிச்சயம் வந்துவிடும்.
5.அதாவது அவருடைய தாய்க்கு ஆஸ்த்மா நோய் இருக்கும் இவருக்கு அந்த நோய் இருக்காது ஆனால் அவருடைய குழந்தைக்கு அந்த நோய் வரும்.

சொல்வது அரத்தமாகிறதல்லவா…!

இதைப் போலத் தான் நாம் நுகரும் உணர்வுகளுக்கொப்ப நம்முடைய உடல்கள் மாற்றம்… குணங்கள் மாற்றம்… இதைப் போன்ற நிலைகள் எல்லாம் அதிகரித்துவிடுகின்றது.

தாய் கருவில் பெற்ற உணர்வுகள் எப்படி எல்லாம் நம்மை இயக்குகிறது என்பதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

சந்தர்ப்பத்தால் வரும் இத்தகைய தீமைகளை எல்லாம் மாற்றி அமைப்பதற்குத்தான் நம் குருநாதர் காட்டிய மெய் வழியை உங்களுக்கு உணர்த்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உங்களைப் பெறும்படி செய்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் படர வேண்டும் என்று அடிக்கடி ஆத்ம சுத்தி செய்து வந்தால் அத்தகைய நோய்களையும் தீமைகளையும் அகற்ற முடியும்.

குரு பலம் பெற வேண்டியது மிகவும் அவசியம்

Blessing of Gnanaguru.JPG

குரு பலம் பெற வேண்டியது மிகவும் அவசியம் 

தியானத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு அன்பர் ஞானத்தின் வழியில் சென்று கொண்டிருக்கும் நிலையில் தனக்குள் தீமையின் பயன்கள் அதிகமாகப் பெருகுகிறதே…! என்ற நிலையில்
1.அதிலிருந்து நாம் எப்படியாவது விடுபட வேண்டும்
2.இனி நாம் பிறவி இல்லா நிலை தான் அடைய வேண்டும். என்ற ஏக்கத்தில்
3.தன் உயிரை ஈசனாகத் துணிவுடன் மதிக்கத் தொடங்கினார்.

இந்த உயிரான ஈசன் வெளியே சென்று விட்டால் தன் உடலான சிவம் இது சவம் தான்…! அதற்கு எந்த விதமான மதிப்பும் இல்லை என்பதை அவர் உணர்ந்தார்.

இந்த உயிரின் நிலைகளில் தான் நுகர்ந்த உணர்வு கொண்டுதான் இந்த உடலை அமைத்தது. தன் உடலுக்குள் வேதனை பயம் சஞ்சலம் சலிப்பு போன்ற பல உணர்வுகள் வரப்படும் போதுதான் இந்த உடலான சிவத்தில் (தன் உடலில்) கடுமையான நோய்களும் பல இன்னல்களும் வந்தது என்பதை அவரே உணர்ந்தார்.

1.நாளுக்கு நாள்… நாளுக்கு நாள்…! உயிரை நாம் எப்படி மதித்தல் வேண்டும் என்றும்
2.தீமை என்ற நிலைகளை எப்படி அகற்ற வேண்டும் என்றும்
3.தன் ஆன்மாவை எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும் என்றும்
4.யாம் (ஞானகுரு) கூறிய வழிப்படி தியானம் இருந்தார்… தன் உயிரை மதித்தார்.

ஆகவே இந்த உடலில் அதாவது சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை என்ற உணர்வுகளை அதிகமாக நுகர நேர்ந்தால் அதனால் தன் உடலில் எப்படி நோயின் தன்மை வலிமை பெறுகின்றது என்பதை நாளுக்கு… நாள் நாளுக்கு… நாள் நாளுக்கு… நாள் உணர…உணர… தனது வயதின் நிலைமையையும் உணர்ந்து தன்னுடைய குழந்தைகளை அவர் எண்ணிப் பார்க்கவும் செய்தார்.

அப்போது என்னைத் தேடி வந்து உபதேசம் கேட்பார்…! அதற்கு நான் அவரிடம் சொன்னது..

நான் (ஞானகுரு) இருக்கிறேன் என்றால் ஈஸ்வரபட்டரை நான் சந்திப்பதற்கு முன்னாடி… இந்தத் தியானத்தை நான் செய்வதற்கு முன்னாடி… “என் உடலில் எத்தனையோ விதமான உணர்வுகள் உண்டு…!”

என்னை எத்தனையோ பேர் சந்தித்து அவர்கள் கஷ்டம்… நஷ்டம்… துன்பம்.. வேதனை.. சங்கடம்.. என்று எல்லாவற்றையும் சொல்கிறார்கள். அதை எல்லாம் காதில் கேட்ட உடனே அந்த உணர்வுகள் என்ன செய்கிறது…?

உடலில் உள்ள அந்த வெறுப்பான அணுக்களும் தீய அணுக்களும் அதனால் ஏற்பட்ட உணர்வுகள் அது உணவாக எடுத்து அது பெருகத் தொடங்கிவிடும்.

அந்த மாதிரி ஆகாதபடி ஈஸ்வரபட்டர் எனக்கு உபதேசித்த வழிப்படி உடனைக்கு உடனே மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து அதை எப்படி குறைக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.

அப்படிக் குறைத்து நல்லதாக்கிய என்னுடைய அனுபவத்தை அவருக்கு எடுத்துச் சொன்னேன். அதே வழியில் நீங்களும் கடைப்பிடியுங்கள்…! என்று சொன்னேன்.

அதன் வழியினை அவரும் கடைப்பிடித்து
1.மகரிஷிகளின் அருளும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் குரு அருளும் எங்கள் குடும்பத்தில் அனைவரும் பெற வேண்டும்
2.அவர்கள் பொருள் அறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.
3.எங்கள் குடும்பத்தில் உள்ளோர் தெளிந்த மனம் பெறவேண்டும் தெளிவான வாழ்கை வாழ வேண்டும் என்பார்
இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கும் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். குரு காட்டிய அருள் வழியில் நடந்து அந்த நெறியைத் தவறாது பின்பற்றும் அந்தச் சக்தி பெறவேண்டும் என்று அடிக்கடி என்னிடம் கேட்பார்.

தன் வாழ்கையில் வந்த கடுமையான நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்றும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை அனைவரும் பெற வேண்டும்… பெற வேண்டும் என்றும்
1.திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் அவருக்குள் விளைகின்றது.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் அவருக்குள் பெருகுகின்றது.
3.இந்த உடலில் பற்று வராது அருள் உணர்வுகளை அவர் பற்றுடன் பற்றினார்.

சில நேரங்களில் அவருக்குக் கோபம் வரும்… வெறுப்பான உணர்வு வரும்… வீட்டில் சண்டை வரும்..! ஏதாவது தவறாகச் சொல்லி விட்டால் உடனே கோபம் வரும்.

அப்பொழுது அந்தக் கோபம் வந்துவிட்டதே…! என்று என்னிடம் வந்து சாமி எனக்கு இந்த உடல் பற்று வருகிறது…! அதை மாற்ற வேண்டும்… என்று கேட்பார்.

வெளியிலே யாராவது ஏதாவது தவறுகள் செய்தாலும் உடனே அவருக்குக் கோபம் வரும். உடனே என்னிடம் வந்து சொல்வார் அந்தக் கோபம் என்னை இயக்குகிறது.
1.அதிலிருந்து நான் தப்பிக்க வேண்டும்.
2.அதற்கு குருநாதரின் அருள் சக்தி எனக்கு அதிகமாக வேண்டும்.
3.குரு அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நான் அதிகமாகப் பெற்று
4.எனக்குள் இருக்கும் அந்த இருள் எல்லாம் நீங்க வேண்டும்.
5.நான் ஒளியின் சரீரம் பெற வேண்டும்.

இது தான் அவர் என்னிடம் பேசும் பேச்சு…!

இந்த உடல் பற்று இருக்கும் போது அதை மாற்றச் சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்திகளை எடுக்க வேண்டும் என்ற நிலையில் ஒரு அரை மணி நேரமாவது தியானம் செய்து அதைக் குறைக்க வேண்டும் என்ற அந்த முயற்சி எடுப்பார்.

சாதாரணமாக நம் கையில் ஒரு அழுக்குப் பட்டால் உடனே அதை நாம் துடைக்கின்றோம் அல்லவா…! இதைப் போல தான் அவர் வாழ்கையில் ஏற்கனவே பதிவு செய்த உணர்வுகள் அதீதமான நிலைகள் இருந்தாலும் அதைத் தடைபடுத்தி நல்லதாக்கும் முயற்சிகளை அவர் எடுப்பார்.

1.தன் உடலில் முதலில் உருவான தீமை செய்யும் அணுக்கள் தன் உணவுக்காக உணர்ச்சிகள் உந்தப்படும் போது
2.அந்த உணர்வுகள் அதிகரித்து விட்டால் இவருடைய நல்ல சிந்தனைகள் குறைவதும்
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற முடியாத நிலை வருவதும்
4.அதை உணர்ந்து கொண்ட நிலையில் அதை எப்படித் தெளிவாக்கி நல்லதாக்கிக் கொள்ள வேண்டும் என்று உடனே என்னிடம் நேரடியாக வருவார்.
5.இப்பொழுது எனக்குள் என்ன நடக்கிறது…? இதை நல்லதாக மாற்ற உடனே நான் என்ன செய்ய வேண்டும்…? என்று கேட்பார்.

நீங்கள் அங்கே இருந்த இடத்திலிருந்தே இந்த அருள் சக்தியை எடுக்கலாம் என்று நான் சொன்னேன்.

இருந்த இடத்திலிருந்து எடுக்கிறேன். ஆனாலும் குருவிடம் (ஞானகுரு) வந்து இன்னொரு தரம் நல்ல வாக்கைக் கேட்டோம் என்றால் எனக்கு அந்த வலிமை கிடைக்கும். “அதற்குத் தான் நான் வந்தேன்…!” என்பார்.

கோபம் வரும்போதெல்லாம் நீங்கள் சொன்ன முறைப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிப்பேன். அந்த அருள் சக்தி என் உடலில் படர வேண்டும் என்று வலுவேற்றிக் கொண்டு எனக்குள் வரக்கூடிய கோபத்தையோ சலிப்பையோ சஞ்சலத்தையோ நான் குறைப்பேன் என்பார்.

இந்த மனித உடலில் எண்ணியபடி நடப்பதும் எண்ணாமலே இயற்கையாக நடப்பதும் “ஆன்மாவின் தொடர்பில்லாமல் நடக்கின்றதா…?”

light stone.jpg

இந்த மனித உடலில் எண்ணியபடி நடப்பதும் எண்ணாமலே இயற்கையாக நடப்பதும் “ஆன்மாவின் தொடர்பில்லாமல் நடக்கின்றதா…?”

 

1.மொழி அமைப்பின் கோர்வையில் பொருள்களின் நுட்பங்களைக் கற்பவரும்
2.கற்றறிந்து… பொருள் புரிந்து… அறிந்து… தெளியும் வகைகள் புலப்பட எழுத்தில் வடிக்கும் ஆசானும்
3.தன்னுடைய அறிவியல் தொடர்பில் தான் பெற்ற அனுபவ ஞானத்தையும் இணைத்தே
4.ஏட்டின் வாயிலாக வெளிக் கொணர்ந்து அளித்த தன்மைகளில்
5.கற்றுக் கொண்ட அறிவு… கற்றவர் அளித்திட்ட பிற பட்டங்கள் (GRADUATION) இவை எல்லாம் எதற்குத் துணை போயின…?

கற்ற கல்வியைப் பறைசாற்ற பெரும் விவாத மேடையன்றோ அமைக்கின்றான் மனிதன்…! ஆய்ந்து அறிதல் என்பது எண்ணத்தின் செயல்பாட்டில் எந்த நிலை பெற்றுள்ளது..?

எண்ணத்தின் செயல்பாடு தான் “நான்…” என்றால் வெறும் உலகோதய நடைமுறைகளின் புகழ் தேடிச் செல்லும் நிலைக்கன்றோ சென்று விட்டது “அறிவு…”

எண்ணத்தின் செயல்பாடு அனைத்தும் ஆத்மாவின் சிந்தனை வசமானால்
1.ஆத்மாவா…. நான் என்பது…?
2.எண்ணத்தின் அலையே சுவாசமாகி…
3.சுவாசத்தின் உணர்வே ஆத்மாவாகி…! என்று பாடுகின்றோம்.

ஜீவ பிம்ப சரீரம் கொண்ட பிறகு நான் என்பது யார்…? என்ற முயற்சியாக வினா எழுந்துள்ளது. எண்ணத்தின் செயல்பாட்டிலும் பொருள் உள்ளது. அது மாத்திரம் “நான்” ஆகிவிடாது.

சரீரம் பெற்ற நிலையில் அன்றாடம் செயல் கொள்ளும் காரண காரியங்களில் பஞ்சேந்திரியங்கள் செயல்படும் தொழிலுக்கு “நொடிக்கும் குறைவான நேரத்தில்…” மனிதர்கள் எத்தனை எத்தனை செயல்கள் புரிகின்றார்கள்…?

இந்த ஜீவ பிம்ப சரீரத்தைக் கொண்டு உண்ணுவதும்… உறங்குவதும்… புறத் தொழில் புரிவதும்… கழிவுகளை நீக்குவதும்… பார்த்தல்… கேட்டல்… நுகர்தல்… சுவைத்தல்… ஸ்பரிசித்தல்… அனைத்துக் காரியங்களும் தொழிற்படு வினையாக
1.எண்ணத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்ட அந்தக் காரியங்கள்
2.எண்ணாமல் என்பதே… இயல்பாக… “இயற்கையாகச் சரீரத்தின் நடைமுறைச் செயல் அனைத்திலும்…”
3.ஆத்மாவின் தொடர்பின்றி நடந்தனவா…?

சரீரத்தின் உட்பொருளாகச் செயல்படும் நாடிகளின் சுவாச அலைகளில் எண்ணம் கொண்டு செயல்பட்டது எது…?

எண்ணத்தின் அலையே சுவாசமாக சுவாசத்தின் உணர்வே ஆத்மாவாகி என்ற அந்த எண்ணச் செயல்பாட்டின் மூலத்தையே அறிந்து கொள்ள வேண்டும்.

சுவாசத்தின் நல்வினைச் செயல்பாடே ஒளி தான். “நான்…” என்பதே எண்ணத்தின் செயல்பாடு என்றால் அதைத் தெரிந்து கொண்ட பின் அங்கு ஆத்மாவைக் கைக்கொள்ள வேண்டும்.
1.நாம் ஆத்ம பலம் பெறவேண்டும்..!” என்று
2.உரைத்த சொல்லின் உண்மையை உணர்ந்து பார்க்க வேண்டும்.

ஆத்மா பலம் பெற்று விட்டால் உள் நிறைந்த சக்தி எந்த மூலச் சக்தியுடன் கலந்து செயல்பட… மூல சக்தியாகச் சக்தி பெற்ற ஆத்மா
1.தான் கொண்ட உயிருடன் இணைந்து
2.பேரின்ப லயத்தில் திளைத்துக் கலந்துவிடும் சூட்சமம் தான் “நான்…!”

இப்பொழுது நான்…! என்பது யார் என்று புரிந்ததா…?

அமாவாசைப் பக்கம் உடலை விட்டுப் பிரிவோரின் உண்மை நிலைகள்..!

Polaris and sabdharisi mandalam

அமாவாசைப் பக்கம் உடலை விட்டுப் பிரிவோரின் உண்மை நிலைகள்..!

 

வேதனை என்றாலே விஷம் தான்…!

ஆக இந்த மனித வாழ்க்கையில் “வேதனை… வேதனை…” என்று எதை எடுத்தாலும் துயரப்படும் நிலைகள் கொண்டோர் உணர்வுகளில்
1.அதாவது அத்தகைய விஷத்தின் தன்மை கொண்டோர் அனைவருமே
2.பெரும் பகுதி “அமாவாசைப் பக்கம்” தான் ஜாஸ்தி இறப்பார்கள்.
3.அந்த விஷ அலைகள் பரவும் நேரங்கள் தான் அந்த ஆன்மா வெளியிலே செல்லும்.

இந்த உடலை விட்டு அப்படி வந்தது என்றால் பாம்பு எப்படி விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை உணவாக எடுத்துக் கொள்கிறதோ அதைப் போல் அந்த விஷமும் இங்கே இந்த உடலில் சேர்த்துக் கொண்ட விஷமும் ஒத்த நிலைகளாகின்றது.

1.அதன் வழி கொண்டு இந்த மனித உடலைச் சவமாக்கி
2.விஷத்தின் தன்மை கொண்ட உணர்வின் அணுக்களாகப் படும் இந்த உயிர்
3.அந்த பாம்பின் ஈர்ப்புக்கு அழைத்துச் சென்று நம்மை பாம்பாகச் செயல்படுத்தும்.

அதே சமயத்தில் ஆடு மாடு மற்ற இவைகள் எல்லாம் ஓர் விஷத்தின் தன்மையைத் தனக்குள் உடலாக்கி அதாவது தான் உணவாக உட்கொண்ட நிலைகளில் இருக்கும் நஞ்சை உடலாக்கிக் கொண்டு அதனுடைய சாணத்தை நல்லதாக மாற்றுகிறது.

இத்தகைய தன்மையில் இந்த மனித உடலில் வேதனை என்ற உணர்வுகள் அதிகமானால் விஷத்தின் உணர்வைக் கவர்ந்து அதன் வலிமையின் தன்மை கொண்டு மாடு ஆடாகவோ பிறக்கச் செய்யும்.

ஆனால் மிகவும் அதிக விஷமானால் விஷத்தை பாய்ச்சும் வலுக் கொண்ட பாம்பாகும் நிலை வருகிறது.
1.ஒருவர் வேதனைப்படுவதைப் பார்த்து மற்றொருவர் ரசித்துச் சந்தோஷப்பட்டால்
2.நிச்சயம் அவர்கள் அடுத்துப் பாம்பாகத் தான் பிறப்பார்கள்.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் அல்லது வேதனைப்படுவோரைப் பார்க்க நேர்ந்தால் அடுத்த கணமே அந்த வேதனையை மறக்க “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் உயிரை எண்ண வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று வேதனைகளை அடக்கிய நஞ்சை வென்று ஒளியாக மாற்றிடும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். புருவ மத்தியில் தடுத்துப் பழக வேண்டும்.

அதே போல் வேதனைப்படுவோர் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற்று அதிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுதல் வேண்டும்.

வேதனைப்படும் சமயங்களில் எல்லாம் இத்தகைய உணர்வின் வலுவை எடுத்து வலுவாக்கிக் கொண்டால்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் நமக்குள் வலு கூடி
2.நம் உயிரான்மாவில் அது பெருகி
3.இந்த உடலை விட்டு நாம் எப்பொழுது சென்றாலும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குச் செல்கிறோம்.
4.அழியாத ஒளி உடல் பெறுகின்றோம்.

உண்மையான மௌனத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

inner soul conversation

உண்மையான மௌனத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

யாம் கூறி வரும் தியானத்தின் வழியாக “மௌனம் கொண்டே சக்தி பெற்று வளர்த்திடுங்கள்…!” என்று உணர்த்தி வருவதெல்லாம் உயிராத்மாவின் சக்தி வலுவைக் கூட்டிட வேண்டும் என்பதற்காகத்தான்.

ஒவ்வொரு உயிராத்மாவும் பெற்ற தனித்துவத் தன்மையில் மேலும் வளர்ச்சி கொள்ளத் தான் கடைப்பிடிக்கும் தியானமாக உயிராத்மாவை எண்ணி
1.ஆத்ம பலம் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்ற சிந்தனையின் வசமாக
2.ஒளிப் பிரவாகத்தினுடைய தொடர் நிலை பெற்றிடவே மௌனம்.

மௌனம் என்றால் என்னப்பா…?

1.ஆத்மாவை எண்ணியே சக்தி வலுக் கூட்டும் சம்பாஷணையே (உரையாடல்) மௌனம்…!
2.மௌனம் என்றால் பேச்சு என்ற வாய்ச் சொல் உரை அல்ல.

கல்லாவின் பால் என்று கூறுவதெல்லாம் ஆத்மா பெற்றிடும் சக்தியின் பரிபூரணத்தைத்தான்…!
1.ஏடறிவின் வழி கற்றவர் அன்றி படிப்பறிவில்லாத எவரும்…
2.தன்னை எண்ணிடும் சிந்தனையின் வசமானால் கலலா அறிவு சித்திக்கும்.

கல்லா அறிவின் தொடரில் அண்ட சராசரங்களையும் அறிந்து கொண்டே “தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும்…” எண்ணத்தின் செயல்பாட்டிற்கு வர வேண்டும்.

அதற்குச் சக்தி ஊட்டிடும் செயலாக அந்தச் சக்தியின் வளர்ப்பாகத் தன்னை வளர்த்து ஆதி சக்தியின் சக்திக்கே சக்தியூட்டி அதனுடன் ஒன்றிடும் செயல்பாட்டின் நிகழ்வாக ஆக்கம் பெற வேண்டும்.

உயிரணு குழந்தையாகப் பிறப்பிற்கு வந்த பின் தன் முன் தொடர் அறியாத் தன்மையில் அதே உயிரணு எண்ணம் கொண்டு ஆத்மாவாகும் சூட்சமங்களை யார் விளக்கிடுவார்…?

சகலத்திலும் சகலமாகக் கலந்துள்ள அண்டம்… பால்வெளி எங்கும் வியாபித்துள்ள… ஒளி காந்த சக்தியாக நிறைவு பெற்றுள்ள “மூல சக்தி…!” அதை அறியத்தானே சப்தரிஷிகளும் முயலுகின்றனர்.

1.ஆதி சக்தியின் சக்தியாக ஒன்றிச் செயல் கொண்டிடும் சப்தரிஷிகளின்
2.ஒலி ஒளியாகச் செயல் கொள்ளும் சூட்சமங்களை எல்லாம்
3.மெய் ஞான விழிப்பறியும் “ஞானச் செல்வங்கள்” அறிந்து கொண்டு
4.என் நிலைக்கும் உயர்ந்து வாருங்கள்…! என்றே அழைக்கின்றேன்.

ஆத்மாவாக உதித்திடும் ஆதி சக்தியின் மூல சக்தி உயிரணுவின் எண்ணத்தின் ஈர்ப்பில் வலு வீரியத்தின் தின்மைக்கொப்ப ஒளி காந்தமாக ஒன்றி உயிராத்மாவாகப் பிறப்பிற்கு வந்திட… எண்ணமே வலுவாகப் பிறந்த பின்… தன்னை உணர்ந்து “நான் என்பது யார்..?” என்ற வினாவில்
1.கற்ற கல்வி உரைக்கின்றதே எண்ணத்தின் செயல்பாடு என்றால்…
2.அந்த எண்ணத்தில் எது செயல்பட வேண்டும்…?

ஆத்மாவின் பலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தின் செயல்பாட்டில் ஆத்மா என்பது யார்…? என்ற நிலையில் உயிர் மீண்டும் பிறப்பிற்கு வராத் தன்மை செயல் கொள்ள வேண்டும்.

மூலச் சக்தியின் பிம்பமாம் ஆத்மா வலுக் கொண்டு உயிரணுவில் ஒன்று கலந்து சூழ்ந்தே “பிரகாசிக்கும் ஜோதியாக ஆக வேண்டுமப்பா…!”

சிவ தனுசு விஷ்ணு தனுசு – விளக்கம்

dhanush

சிவ தனுசு விஷ்ணு தனுசு – விளக்கம்

 

நமது வாழ்கையில் இந்த உடலின் இச்சையின் வாழ்கையில் நுகர்ந்த உணர்வெல்லாம் அந்தந்த உணர்வின் எண்ணங்களாக நமக்குள் பாய்கின்றது.

ஒருவனைக் கெடுக்க வேண்டும் என்றால் இது உடலில் இருந்து ஏற்பட்ட அந்த எண்ணத்தின் உணர்வுகள் நினைவாக்கப்படும் போது அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது. இதற்குப் பெயர் சிவ தனுசு. அந்த உணர்ச்சியின் இயக்கமாக மற்ற ஒருவனைத் தாக்கும் நிலை வருகின்றது.

ஆக சிவ தனுசு என்றால்… இந்த உடலைப் பாதுகாக்கும் நிலைகள் பரசுராம். எந்தக் குணத்தின் உணர்வைப் பெருக்கினோமோ இந்த உடலின் வாழ்க்கைக்கு வேண்டிய செல்வத்தைத் தேடவும் அதே சமயத்தில் தீமைகளில் இருந்து தன்னைப் பாதுகாத்து கொள்ளும் உணர்வுகள் வருகின்றது.

அத்தகைய உணர்வுகள் வரப்படும் போது அது நமக்குள் செயலாக்கி அந்தச் சொல்லையும் அந்தச் செயலையும் செயல்படுத்தச் செய்து சிவ தனுசாக மாறுகின்றது.

1.சிவம் என்றால் நமது உடல் என்றும்
2.எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்ச்சிகள் நமக்குள் பாய்ந்தும்
3.அது இயக்கச் செய்யும் பொழுது தனுசு என்றும் காட்டினார்கள் ஞானிகள்.

தன்னைக் காத்துக் கொள்ள மற்றவர்களுக்குத் தொல்லை கொடுப்பதும் அவர்களை நம்மிடம் அணுகாத நிலைகள் செயல்படுத்துவது தான் சிவ தனுசு என்றும் இராமாயணத்தில் தெளிவாகக் கொடுக்கபட்டுள்ளது.

இதைப்போல அன்று அரசர்கள் தனுர் வேதத்தைப் பயன்படுத்தினார்கள். தனுர் வேதம் என்றால் இன்னொரு மனித உடலில் இருந்து அந்த உணர்வுகளைப் பிரித்து அந்த உணர்வின் தன்மையைத் தான் நுகர்ந்து மற்றவர்கள் மீது பாய்ச்சுவது தான்.

1.யாக வேள்விகளை நடத்தி அதர்வண வேத அடிப்படையில் மந்திரங்களைச் சொல்லி ஏவுவதும்
2.மந்திர ஏவலால் மற்றவர்களைச் செயல் இழக்கச் செய்வதும்
3.மற்றவர்களைச் செயலற்றவராக மாற்றுவதும் போன்ற நிலைகளைச் செயல்படுத்தி வந்தார்கள் அரசர்கள்.

அந்தத் தனுர் வேதம் இல்லாதவர்கள் எந்தப் போர் முறைகளையும் வெற்றி பெற முடியாது என்ற நிலை தான் அக்காலங்களில்.

கொடூர நிலைகளும் கொதித்து எழும் உணர்வுகளும் பிறரை இரக்கமற்றுத் தாக்கும் உணர்வுகளை மனிதனின் வாழ்க்கையில் இந்த உணர்வுகளை வளர்க்கப்படும் போது இது சிவ தனுசாக மாறுகின்றது.

உடலில் இருந்து எழும் உணர்ச்சிகள் அந்த உடலை வீரியமாக இயக்கச் செய்து அந்த வீரிய உணர்வு கொண்டு ஒரு மனிதரைத் தாக்குவதும் அவனை மடியச் செய்வதும் அல்லது அவனைக் காணாமல் போகச் செய்வதும் அவர் சொத்துக்களை விரயமாக்குவதும் அவர்களுக்குத் தொல்லை கொடுப்பதும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலை தான் அது…!

உலக நாடுகளை எடுத்துக் கொண்டால் அமெரிக்கா தன் ஆயுத நிலைகள் கொண்டு மற்ற நாடுகளை அடக்கி ஆட்சி புரிய வேண்டும் என்றும் அவர்களைப் பலவீனப்படுத்தினால் தான் “தன் நாடு காக்கப்பட முடியும்…!” என்று இன்று செயல்படுகிறது.

இதைப் போன்று சீனாவும் அதனைக் காட்டிலும் வல்லமை கொண்டது என்றும் அதே போன்று ரஷ்யாவும் அடுத்து மற்ற உலக நாடுகள் அனைத்தும் ஒன்றைப் பார்த்து ஒன்று
1.தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வலிமை கொண்டு
2.பிறரை வலிமை இழக்கச் செய்ய வேண்டும்..! என்றும் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

இத்தகைய உணர்வுடன் மனிதன் இயங்கி கொண்டு இருக்கும் நிலையில் விஞ்ஞான அறிவு கொண்டு கடும் விஷத் தன்மைகளை எப்படிப் பரப்புவது…? ஒவ்வொரு நாட்டையும் எப்படி அழிப்பது…? மக்களை எப்படிச் செயலற்றவர்களாக மாற்றுவது…? என்று இன்று வந்து விட்டார்கள்.

ஒரு மனித உடலுக்குள் இருக்கும் உணர்வினை எடுத்து அதை மந்திரங்களாகச் சொல்லிப் பாய்ச்சி ஏவுதல் அழித்தல் கொலை செய்தல் என்று இத்தகைய நிலைகளை வைத்துத் தான் அன்றைய அரசுகள் செய்து வந்தனர்.

இன்று அந்த அரசுகள் எல்லாம் மடிந்து விட்டது. ஜனநாயகம் என்ற மக்கள் ஆட்சி வந்து விட்டது.

அரசர்கள் வீழ்ந்து மக்கள் ஆட்சி என்று வரப்படும் போது ஆட்சி பீடத்திற்குத் தான் வந்த பின்
1.அந்த ஆட்சியில் தனக்கு அடிமை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
2.தான் தான் எப்போதும் உயர்ந்து இருக்க வேண்டும்
3.உலக நிலைகளிலேயே நாம் புகழ் பெற வேண்டும் என்று போற்றித் துதிக்கும் உணர்ச்சிகள் அங்கே தூண்டப்பட்டு
4.நாட்டு மக்களைச் சீர்படுத்தும் நிலைகள் அற்று அவர்களைச் சீர் கெடச் செய்து அதற்குக் கீழ் அவர்களை வலு இழக்க செய்து
5.அதன் வழியில் அவர்கள் ஆட்சிகள் புரியும் காலமாக வந்து விட்டது… இது சிவ தனுசாக உருவாகும் இந்த நிலை.

இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் விஷ்ணு தனுசைப் பயன்படுத்த வேண்டும். நமது உயிர் விஷ்ணு.

விஷ்ணு என்ற நிலையில் இந்த உயிரின் தன்மை கொண்டு உயிரைப் போன்று உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரத்திரமாக இருக்கும் அதனின்று வரும் உணர்வுகள் சூரியனின் காந்தச் சக்தியால் கவரப்பட்டு அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் பிரபஞ்சத்தில் பரவுகிறது.

அப்படிப் பரவி வரும் அந்த அலைகளை நான்கு மணியில் இருந்து நமது பூமி துருவப் பகுதியின் வழியாகக் கவர்ந்து நமது பூமிக்குள் பரவச் செய்கின்றது. அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று நாம் எண்ணத்தால் ஏங்கும் போது அந்த உணர்வுகள் நம் உயிரிலே படுகின்றது. இதற்குப் பெயர் தான் விஷ்ணு தனுசு.

1.துருவ நட்சத்திரத்தின் வீரிய உணர்வுகள் தீமைகளை அழிக்கும் சக்தி கொண்டது. நஞ்சினை வென்றிடும் சக்தி பெற்றது.
2.இந்த உணர்வினை நாம் நுகர்ந்து அறியப்படும் போது அதன் வீரிய உணர்வுகள்
3.நம் உடலுக்குள் தீமை செய்யும் உணர்ச்சிகளை அடக்கவும் தீமையான செயல்களைத் தடைபடுத்தவும்
4.அருள் ஒளியைப் பெருக்கச் செய்யவும் என்று அந்த அருள் வழியில் அது வருகின்றது.

பரசுராமன் சீதாராமன் இருவருக்கும் போர் நடந்தது என்றும் பரசுராமன் உடலைச் சமப்படுத்தும் சிவ தனுசை எடுத்தான் என்றும் இராமன் உயிருடன் ஒன்றி ஒளியாக்கும் விஷ்ணு தனுசை எடுத்ததால் இராமன் வென்றான் என்றும் காட்டினார்கள்.

வாழ்க்கையில் வரும் தீமையான உணர்வுகளை மாற்றி ஒளி என்ற ஒரே நிலையில் மாற்றுவது தான் விஷ்ணு தனுசு. ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்றது தான் நமது உயிர்.

நமது ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் உருவாக்கி உடலுக்குள் அதைப் பெருக்கினால் இது விஷ்ணு தனுசு.

பூமிக்குள் பரவி வரும் விஷத் தன்மைகளை நமக்குள் வராது தடுத்து நமது உடலில் உள்ள ஜீவ அணுக்கள் அனைத்தையும் உயிரைப் போல ஒளியின் தன்மையைப் பெறச் செய்து
1.ஒரு கூட்டமைப்பாகத் துருவ நட்சத்திரத்திம் ஒளிர்வது போல
2.நாமும் இந்த உடலுக்கு பின் ஒளிரும் நிலை பெறுதல் வேண்டும்.

“கல்வி அறிவு…” “கல்லா அறிவு…” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Education and Gnana

“கல்வி அறிவு…” “கல்லா அறிவு…” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மனிதன் கொண்ட அறிவின் ஞானம் மொழி அறிவால் கற்றறிந்து உணர்கின்ற வகையில் உள்ளது.

மொழி அறிவென்பது மருத்துவம் மனோதத்துவம் உயிரியல் புவியியல் வானியியல் சித்தாந்தம் வேதாந்தம் வாழ்வியல் பொருளாதாரம் என்ற ஒவ்வொரு வகையின் தன்மைகளிலும் மனிதன் தான் கொண்ட அனுபவ ஞானத்தால் சமுதாய அமைப்பு முறை பெற்றுள்ளது. அதிலே மேன்மேலும் கற்ற அறிவின் வளர்ச்சி உயர வழி வகை காட்டியது எந்த நிலையப்பா..?

அன்று ஆண்ட அரசர்கள் காலம் தொட்டே உண்மை நிலை அறியாத் தன்மையில் சமுதாய அமைப்பில் குறிப்பிட்ட ஓர் பிரிவினர் மட்டும் “தங்களைக் கடவுளின் குழந்தைகள்…” என்றே பறைசாற்றி வந்தனர்.

மக்கள் என்றுமே மாக்களாக இருந்திட்டால் தங்கள் குலம் வாழ வழியுண்டு…! என்ற கருத்தாய்வாகக் கொண்டு அரசனுக்கு அரசியல் சாசனங்களை வழியமைத்துத் தந்தனர். சித்தர்களும் மகரிஷிகளும் கொடுத்த உண்மைகளை அறியவிடாது அதைச் சீர் கெடுத்துவிட்டனர்.

மொழியறிவின் வளர்ச்சிக்கு ஏற்படுத்தப்பட்ட அசை நூல் (இலக்கண நூல்) வகையினைப் பின்பற்றுகின்றார்கள்.

ஆனால் அசை நூலாலும் விளங்கிக் கொள்ளா தன்மையாகக் காரணப் பெயர் காட்டிப் பொருள்களுக்கெல்லாம் மறைபொருளாகச் சித்தர்களால் இடுகுறிப் பெயர்கள் இடப்பட்டு மனித குலத்திற்கு மிக மிகத் தேவையான மருத்துவ முறைகள் கூறப்பட்டது.

ஆனால் மனிதர்களால் அந்தப் பொருள்களின் குணங்களை உலகோதய எண்ணத்தினால் அறிந்து கொள்ள வகையின்றி அவை அனைத்தும் மறைந்து விட்டன என்றே எண்ணுகின்றார்கள்.

1.அசை நூல் கொண்டே உரையும் உரை நடையும் மற்றும் கவிப் பாடல்கள் பலவற்றை அறிந்திட்டாலும்
2.கற்ற கல்வியின் செருக்கால் இலக்கண நூல் கொண்டு ஆயிரம் விளக்கங்களைக் கூறினாலும்
3.மறை பொருள் தன்மையின் காரணங்களை அறியாதது இவன் கொண்ட செருக்கினாலயே ஆகும்.
4.அந்தச் செருக்கு என்பது உண்மை ஞானத் தொடருக்குப் பகையப்பா…!
5.செருக்கின் தொடரில் எழுந்திடும் கோபம் உண்மை ஞானத்தை உணர்ந்து கொள்ள வழி காட்டாது.
6.உணர்வில் கோப குணத்தை வளர்ச்சிப்படுத்திக் கொண்டால் உணர்விலேயே கோபமுள்ளவன் உண்மையை உணர்வது எதுவப்பா..?

மெய்யறிவே வாலறிவாக்கும் செயலுக்குக் கற்ற கல்வியும்… அந்தக் கல்வியினால் பெற்ற அனுபவமும்… ஆத்திரம் கொண்டு புறப் பொருள் குணத் தன்மைகளை அதைச் சரீரத்தினுள் ஏற்றுக் கொண்டால் மாத்திரம் “உயர் ஞானம் சித்திக்குமா…?”

ஒரு மருத்துவன் நோயின் குணத்தை அறிந்து அதற்குண்டான மருத்துவத்தைச் செய்தாலும்
1.நோய்வாய்ப்பட்டவன் தான் பிழைத்தெழ வேண்டும்…! என்ற எண்ணத்திற்கு உணர்வுகள் கூட்டிக் கொள்ள வேண்டும் அல்லவா..?
2.அதற்கு எது முக்கியம்..?
3.நோய்வாய்ப்பட்டவன் அவனுக்குள் இருக்கும் பயத்தையும் விரக்தியையும் விலக்கிக் கொள்ள மன உறுதி தேவை.
4.ஏனென்றால் அனைத்திற்கும் மூலம் கோபமே.

கல்வி அறிவு என்பது பல நூல்களைக் கற்று அந்த நூல்களில் உள்ள கருத்துக்களின் உட்பொருளை அறிந்து… தெளிந்து… கற்ற கல்வியின் நீதி போதனைகளைத் தன்னுள் ஏற்று அந்த வழி நல் வழியாக இருந்தால் அதைக் கைக் கொள்ளுதல் (கடைப்பிடித்தல்) என்ற வகையில் தான் கொண்ட குணங்களுக்கொப்ப கற்ற கல்வி அறிவின் செயல் கொண்டிடும்.

ஏட்டின் வாயிலாகக் கற்ற கல்வியின் தொடரில் சிந்தனையின் தெளிவில் பெற்றிடும் ஞானம் நற்பண்புகளைக் காட்டுமேயானால்
1.ஏட்டின் வழி அறிந்து கொண்டிடா…
2.கல்லா அறிவின் வாயில் திறந்தே… சிந்திக்க வேண்டியது என்பது வள்ளுவ நாயனாரின் வாக்கு.

செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்…! என்பதில்
1.செவிக்குணவு என்பதே இன்றைய கால கட்டத்தில்
2.உண்மையின் பொருளை ஆராய்ந்து ஆய்வின் வழி உண்மையை உரைத்தல் என்பதெல்லாம் மாறு கொண்டு
3.”பட்டிமன்றங்கள்…” என்ற பெயரில் கற்ற கல்வியின் செருக்கைத் தான் கொண்ட புலமையையும் சொல்லின் ஆற்றலையும் வெளிப்படுத்தி
4.பெரும் ஆரவாரப் புகழ் தேடிடும் வழியாக்கிக் கொண்டதே வெறும் ஏட்டுக் கல்வியினால் கற்ற ஞானம்.

செவிக்கு உணவு வயிற்றுக்கு உணவு என்பது போன்றே
1.உயிருக்கு ஊட்ட வேண்டிய உணவை அறிந்து கொள்ள
2.கற்ற கல்வியின் ஞானம் செயல் கொள்ள வேண்டும்.

கல்லா அறிவை ஏடறிவின் அளவுகோலால் அளந்திட முடியாது. ஆனால் கல்லா அறிவை ஆய்வதற்கு ஏடறியும் ஒரு நிலைக்களன் என்பதிலும் பண்பு வேண்டும் என்பதற்காகக் கல்வியின் செருக்கால் ஏற்பட்ட “நான்” என்பதை நீக்கி விட்டால் பகை இல்லையே…!

பகை என்பது என்ன..? தான் கொண்ட எண்ணமே பகையாகும்.

வாய்மொழியால் யாரையும் தூசித்திடல் ஆகாது. வாய்மை மொழியே தான் கொண்ட எண்ணத்தின் பண்பு நிலையால்
1.கல்லா அறிவு என்னும் மெய் ஞானம் பெற்ற மகான்களை எண்ணி
2.அவர்களிடம் ஆசி பெற வேண்டும்.