ஜீவான்மாவைத் தூய்மையாக்கும் வழி

divine-cleaning-of-soul

ஜீவான்மாவைத் தூய்மையாக்கும் வழி

வேதனை கோபம் ஆத்திரம் என்ற அணுக்கள் நம் உடலுக்குள் அதிகமான வளர்ச்சி அடைந்தால் கடுமையான நோய்கள் வரும்.

தேடிய செல்வம் எது இருப்பினும் வைத்தியத்திற்குச் செலவழித்து உடலைப் பாதுகாத்தாலும்
1.உங்கள் உடலில் அந்தக் கடைசி நிமிடம் எது உணர்வோ
2.அதன் வழி இந்த உயிர் அழைத்துச் சென்று வேறொரு உடலை அதாவது கீழான பிறவியாக மாற்றிவிடும்.

ஆகவே இந்த உடலில் இருக்கும் பொழுதே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை வளர்த்து வளர்த்துப் பிறவியில்லா நிலை அடைவதே நம்முடைய கடைசி எல்லையாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் வரும் கஷ்டங்களையோ நஷ்டங்களையோ எண்ணி வளர்க்கக் கூடாது.
1.பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை என்று வேதனைப்படுவதோ
2.தொழிலில் சிறிது குறைபாடுகள் இருந்தாலோ
3.குடும்பத்தில் ஒற்றுமை இல்லாதிருந்தாலோ
4.அதைப் போன்ற மற்ற உணர்வுகளை நுகர நேர்ந்தாலோ உடனே அதை எல்லாம் மாற்றிப் பழக வேண்டும்.
5.எதை வைத்து…? – நம் ஆறாவது அறிவை வைத்து.

ஆறாவது அறிவு “கார்த்திகேயா…!” என்றாலும் அது சேனாதிபதி. இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர வேண்டும்.
1.புருவ மத்தியில் உயிரின் நிலைகளில்
2.அதை இணைக்கப் பழகிக் கொள்ள வேண்டும்

வாழ்க்கையில் வரும் மற்ற உணர்வுகளைக் கண் வழி கவர்ந்தாலும்
1.கண்ணின் நினைவை உயிரிலே இணைக்கப்படும் பொழுது
2.உயிர் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஈர்க்கும் திறன் வரப்படும் பொழுது
3.மூக்கு வழி செல்லும் (சுவாசத்தின் மூலம்) தீமையான உணர்வுகளைத் தடைப்படுத்துகின்றது.

பின் நம்முடைய நினைவாற்றலை உடலுக்குள் செலுத்தி துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எல்லா அணுக்களுக்கும் செலுத்தப்படும் பொழுது அதுவும் வலுப் பெற்றுவிடுகின்றது.
1.நம் உடலுக்கு முன் முகப்பில் உள்ள விஷத் தன்மைகளைத் தூர ஒதுங்கிச் செல்லும்படித் தள்ளிவிடுகின்றது.
2.நம் ஆன்மா தூய்மையாகி விடுகின்றது.

அதே சமயத்தில் நம் உடலுக்குள் இருக்கும் ஜீவ அணுக்கள் ஒவ்வொன்றுக்கும்
1.ஒரு ஆன்மா உண்டு.
2.ஒரு வட்டம் உண்டு
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வால் அப்பொழுது அந்த ஜீவான்மாக்களும் சுத்தமாகின்றது.
4.அந்த அணுக்கள் எல்லாம் உயிரைப் போலவே ஒளியின் அறிவாக ஒளியான அணுக்களாக வளர்ச்சி பெறும் சக்தி பெறுகின்றது.
அப்பொழுது அந்த உணர்வுகள் முழுவதும் ஒளியாக்கப்படும் பொழுது உயிருடன் இணைந்து பேரொளியாக மாறுகின்றது.

இப்படி நம் உடலில் இருக்கும் எள்லா அணுக்களையும் சிறுகச் சிறுக மாற்றி இந்த உடலுக்குப் பின் நாம் ஒளியின் உடலாக மாறுவதே கடைசி நிலை.

நாம் எந்தத் துருவத்தின் வழி துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தோமோ அதன் ஈர்ப்புக்கே நம்மை அழைத்துச் செல்லும் நம் உயிர்.

பரம்பரையாக வரும் நோயை எப்படி மாற்றுவது…?

Alcor-Mizar

பரம்பரையாக வரும் நோயை எப்படி மாற்றுவது…? 

நம் வீட்டிற்குள் எதிர்பாராதவிதமாக ஒரு பாம்பு வந்துவிடுகின்றது என்று வைத்துக் கொள்வோம்.
1.அந்தச் சந்தர்ப்பத்தில் பாம்பை அடித்தால்
2.பாம்பின் உயிர் அடித்தவர் உடலுக்குள் வந்து மனிதனாகப் பிறக்கும் சந்தர்ப்பம் வருகின்றது,

அதே சமயத்தில் பாம்பு மனிதனைத் தீண்டிவிட்டால் அந்தச் சந்தர்ப்பம் விஷம் உடல் முழுவதற்கும் பரவி விடுகின்றது. எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து இன்று மனிதனாக வந்த நிலையில் பாம்பின் விஷத் தன்மை மனிதனுக்குள் கலந்து விடுகின்றது.

உடல் முழுவதற்கும் விஷம் படர்ந்த பின் இந்தச் சந்தர்ப்பம் மனித நினைவே இழந்து பாம்பின் நினைவே ஆக்கிரமிக்கின்றது.
1.மனித உடலை உருவாக்கிய இந்த உயிரில் விஷம் கலந்ததனால் நினைவு இழந்து
2.பாம்பின் ஈர்ப்புக்குள் சென்று மனிதன் பாம்பாகப் பிறக்கும் சந்தர்ப்பமாக வருகின்றது.

இதே போல மனிதனின் வாழ்க்கையில் கடும் வேதனையால் ஒருவருக்குக் கேன்சர் நோய் வந்துவிடுகின்றது. மற்றவர்கள் அவருடன் நெருங்கிப் பழகப்படும் பொழுது அந்தச் சந்தர்ப்பம் வேதனை என்ற விஷங்கள் அது தொடர்ந்து இந்த உடலில் படரப்படும் பொழுது நாளடைவில் இந்தக் குடும்பத்திலும் பரம்பரை என்ற நிலையில் கேன்சர் நோய் வளரத் தொடங்குகின்றது.

ஒரு இரத்தக் கொதிப்பு நோய் உள்ளவரின் உணர்வுகளை அதிகமாக உற்றுப் பார்த்துக் கவர நேர்ந்தால் அந்தப் பரம்பரை என்ற இரத்தக் கொதிப்பு வந்து விடுகின்றது.

ஆஸ்த்மா போன்ற நோய்கள் வந்தால் அது தொடர்ந்து வரப்படும் பொழுது பரம்பரை என்ற நிலைகள் கொண்டு ஆஸ்த்மா நோய் வந்துவிடுகின்றது.

அதே சமயத்தில் ஒரு குடும்பத்தில் சர்க்கரைச் சத்து அதிகமானால் இது பரம்பரையாக வந்து அந்தக் குடும்பத்தில் சர்க்கரைச் சத்துகள் தொடர்ந்து விடுகின்றது.
1.இதுகள் எல்லாம் தொடர் வரிசைகளில்…
2.இப்படி வருவது எல்லாமே சந்தர்ப்பம் தான்.

காரணம்… நமது சந்தர்ப்பம் சொந்த பந்தம்… நண்பர்கள்.. மற்ற பந்துக்கள் என்ற நிலையில் பழகப்படும் பொழுது பாசத்தால் அவர்கள் சிரமப்படும் உணர்வை நாம் நுகர்கின்றோம்… உதவியும் செய்கின்றோம். ஆனால் இத்தகைய உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது.

பந்துக்களானாலும் சரி… நண்பர்களானாலும் சரி.. சந்தர்ப்பம் சந்திக்கும் பொழுது இதைப் போன்ற உணர்வுகளை நமக்குள் நுகர்ந்து விட்டால் நம்மை அறியாமலேயே பல நோய்களுக்கும் அது காரணமாகின்றது.

ஆனால் உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம்முடைய முன்னோர்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்களை நம் குருநாதர் காட்டிய தியான வழியின் முறைப்படி விண்ணிலிருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தால் அவர்கள் எல்லோரும் ஒளி உடல் பெறுகின்றார்கள்.

எப்படித் தான் இருந்தாலும் பழக்க தோஷத்தில் நாம் எல்லோருடனும் நாம் பழகித் தான் ஆகின்றோம். உடலை விட்டுப் பிரிந்தவர்களின் குடும்பத்தைச் சார்ந்தோரும் அவருடன் பழகியிருப்பவர்களும் முறைப்படி தியானித்து அந்த அருள் உணர்வுகளை எண்ணி எடுக்கும் பொழுது தீமைகள் வராதபடி பாதுகாத்துக் கொள்ள முடியும்.

1.அதே சமயத்தில் நம் முன்னோர்கள் சப்தரிஷி மண்டலத்தில் ஒளியின் உடலாக இருப்பதனால்
2.அங்கிருந்து வரும் உணர்வை நமக்குள்ளும் பெருக்கி உயிருடன் ஒன்றிடும் நிலையாக
3.நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாறும் திறனாக மாற்றும் இதுவும் ஒரு சந்தர்ப்பம் தான்.
4.இதன் வழி குடும்பத்தில் அனைவரும் சென்றால் அந்த அகஸ்தியனைப் போன்று
5.என்றுமே ஏகாந்தமாக ஒளியாக வாழ முடியும்.

காம குணங்களுக்கும் மோக குணங்களுக்கும் மூலகாரணம் எது…?

AGATHIAR3

காம குணங்களுக்கும் மோக குணங்களுக்கும் மூலகாரணம் எது…? 

நாம் எடுத்த வினைக்கு நாயகன் இந்தச் சரீரம் என்றால் முழுமையின் பொருள் விளங்கிடுமா…? உருவத்தில் மனித உடலையும் யானையின் தலையையும் சித்தர்கள் காட்டியதன் சூட்சமப் பொருள் என்ன…?

மனித மனம் தீய குணத்தின் வசம் ஆட்படும் பொழுது எடுக்கும் எண்ணச் செயல் சோர்விற்குப் பின் உணர்வுகளின் உந்துதல் காமத்தின் வழி மோகமாகின்றது. அந்தச் சூட்சமப் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

1.விநாயகருக்குப் பெரிய வயிற்றினைக் காட்டி
2.சகல உலகமும் அதனுள்…! என்று தத்துவம் கூறினால் புதிர் விடுபடுமா…?

உணவாக உட்கொள்ளும் உணவின் அந்த அமில குணங்கள்
1.சலிப்பின் செயலுக்கு மனித மனத்தின் உணவின் மாறுபாட்டால்
2.பத்துத் தலைகள் கொண்ட உருவம் உதித்தது… என்பதுவே
3.”உணவினால் உண்டாக்கப்பட்ட மோக குணங்கள் தான்…”

அந்த மோகத்தின் செயலைச் சித்தரிக்கவே எலியை வாகனமாகக் காட்டினார்கள். பூமிக்குள் மறைந்து வாழும் எலியைப் போல்
1.மனித மனத்தில் புதைந்து கிடக்கும் காமமும்
2.உணவின் செயலால் உணர்வுகள் கிளர்ந்தெழுந்த மோகமும் உள்ளது என்ற வகையில் உண்மையை உணர வேண்டும்.

வினையின் நாயகனே விநாயகர் என்று சொன்னதன் உட்பொருள் என்ன…?

எண்ணம் கொண்டு எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப உருவான இந்தச் சரீரமான நாயகனைக் கொண்டு தன் உயிராத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்பதே…!

பூமியின் ஈர்ப்பில் வாசனை கொண்டு எடுத்துக் கொண்ட எண்ணம் கொண்டு தன்னை அறியும் பக்குவ கதிக்காக வேண்டி
1.அன்று சித்தனால் வழியமைத்துக் காட்டிய
2.சூட்சம உருவகப்படுத்திக் காட்டப்பட்டதே விநாயக உருவம்.

இந்தச் சரீர பிம்பத்தில் இருக்கும் கோடானுகோடி உயிரணுக்களும் வினையின் நாயகன் செயலுக்கு தியான ஈர்ப்பின் தொடரில் ஆட்கொள்ளப்பட்டுச் சக்தி ஈர்த்துச் சக்தி அளித்திடும் செயல் வழியின் உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்திடல் வேண்டும்.

அதை உணர்ந்தால் உலகோதய வாசனைப் பிடிப்பில் வாழும் நாம் ஒலி கொண்டு ஒளி பெற்றிடும் நிலையில்
1.உயிர் குரு (நம் உயிராத்மா) தன் தனித்துவச் சக்தியைப் பெற்றுக் கொள்ள
2.கணங்களாகிய இந்தச் சரீரத்தில் உள்ள உயிரணுக்களுக்கு ஒளி சக்தியை ஊட்டி
3.அந்தக் கணங்களின் கூட்டத்தில் “பதியாக” ஓர் சிறப்பிடத்தை உயிராத்ம சக்தி பெற்று
4.தன் வலு ஈர்ப்பின் சக்தி கொண்டு வலுவின் வலு வீரியமாகத் தன்னை வளர்ச்சிப்படுத்திட முடியும்.

இப்படி ஒவ்வொரு உயிரும் ஆத்ம சக்தியின் கலப்பில் தன்னைத் தானே வளர்ச்சிப்படுத்திக் கொண்டிட முடிந்திடுமே அல்லாது “பிறிதொருவர் அளிப்பது அல்ல எந்த ஜெப சக்தியையுமே…!”

மகரிஷிகளால் சூட்சமம் கொண்டு உணர்த்திட வருவதெல்லாம்…
1.தங்களின் வழித் தோன்றல்கள் வாழையடி வாழையாக வரும் உயிராத்மாக்கள்
2.”நன் நிலை பெற வேண்டும்…” என்ற பாச உணர்வினால் தானப்பா…!

இந்தச் சரீரத்தின் செயலில் அகத்தியர் அன்று காட்டினார் “வாதாபி ஜீரணம்…” என்று. வாதாபி ஜீரணம் என்றால் என்னப்பா…?

அறிந்து கொண்டிருக்கும். அனைத்தையும்… உணர்ந்து கொண்டிருக்கும் நிலையில்… அறியாத நிலையில் அசுர குணங்கள் மனிதனின் எண்ணத்தில் ஆட்கொள்ளும் பொழுது உடலில் சோர்வும் ஜீரண அவஸ்தையும் ஏற்படுகின்றது.

அதன் பின் அந்த அசுர குணங்களினால் இந்தச் சரீரம் கொண்டு செயல்படுத்திட முற்படும் மோக உணர்வுகளையும்… அந்த மோக உணர்வுகளைத் தூண்டிடும் உயிரணுக்களையும்… “ஞானாக்கினியான எண்ணம் கொண்டு சுட்டெரித்ததே வாதாபி ஜீரணம்…!”

பத்துத் தலைகள் என்று காட்டியதெல்லாம் மோகத்தின் கிளைகளே…!

“உணவின் மாறுபாடும்…” மோக உணர்வுகளைக் கூட்டும். அதைச் சுட்டிக் காட்டுவதே விநாயக உருவத்தில் சிவப்புத் திலகமிட்டுக் காட்டப்பட்டது.

எடுக்கும் எண்ண வலுவில் ஈர்த்து ஒளியைக் கூட்டிக் கொள்ளும் ஜெப நிலை பெற்றவன் மனிதச் சரீரம் கொண்டே உயிராத்ம சக்தியை உயர்த்திடல் வேண்டும் என்றால் “நாவின் சுவைக்கு…” அடிபணிந்திடாத பக்குவத்திற்கு வர வேண்டும்.

1.உணர்வுகள் கிளர்ந்திடும் மூலமே “வயிறு…” என்றும்
2.மோகத்தின் கிளர்தலின் மூலமும் அங்கு தான் என்றும்
3.அந்த மோகத்தின் கிளைகள் வலுப் பெற்றுவிட்டால் அறிவின் ஆற்றல் சிதைந்து விடும் என்ற
4.அந்த உண்மையின் கருப்பொருளை உணர்த்திடவே ஞானக்கண் என்றும் செந்தூரத் திலகம் என்று காட்டினார்கள் சித்தர்கள்.

நாம் கொள்ள வேண்டிய உயர் ஞான வலுவைப் பெற்று விட்டால் உரப்புயலாக எழுந்த அந்த மோக குணங்கள் அனைத்தும் ஞான அக்கினியில் பொசுங்கிவிடும்.

“எண்ண வலு கொண்ட ஜெப சக்தி பெற்றவனால்…” உணவின் உயிரணுக்களையும் அதனின் மோக குணங்களையும் மாய்க்க முடியும்.
1.அவைகளையும் தன் சரீர ஒளி உயிரணுக்களுடன் ஒன்றச் செய்து
2.அவைகளுக்கும் சக்தி அளித்திட முடியும் என்பதன் பொருளை
3.ஆய்ந்து தெளிந்து செயல்பட வேண்டும் என்பதே இந்தப் பாடத்தின் சிறப்பு.

எண்ணத்தில் பீடித்துள்ள நோய்களை நீக்க நற்சுவாசம் என்ற பரிசுத்தம் (பரிபூரணம்) தேவை என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

mindful-bliss.jpg

எண்ணத்தில் பீடித்துள்ள நோய்களை நீக்க நற்சுவாசம் என்ற பரிசுத்தம் (பரிபூரணம்) தேவை என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சரீரத்தில் தாக்கப்படும் நோயை நீக்க மருத்துவ அறிவின் எண்ணமானது நோயின் குணத் தன்மைகளை நாடி அளவறிந்து “மருந்து கொடுப்பது…” என்பது அணுபோக முறைப்படி செயல்படுத்த வேண்டும்.

சரீரத்தில் செயல்படும் தன்மைகளை நாடிகளின் துடிப்பலையால் காலம் அறிந்து அந்த நோயின் தன்மைகளை அறிந்து கொண்டு நோய் கடிந்திடும் செயலின் மூலம் மருத்துவப் பொருள்களைச் “சூரணம்…” செய்து கொடுத்து நற்பயன் விளைவித்தனர் அக்காலங்களில்.

அப்படிக் கொடுக்கப்பட்ட வைத்திய முறையில் மனப்பக்குவம் பெற்றிடும் வழி முறைகளுக்கு
1.“நாவின் அதி சுவை குணங்களை…” நீக்கிடும் எண்ணத்திற்கே
2.மருத்துவத்தின் தன்மைக்கொப்ப விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டன.

ஆனால் இன்றைய விஞ்ஞான மருத்துவத்தில் நோயின் குணங்களைச் சரீரத்தில் கண்டவுடன் அந்த நோயை நீக்கிடும் செயலுக்கு அதி தீவிர செயல் புரிந்திடும் மருந்துகளைச் சரீரத்தினுள் செலுத்தி நோயைக் கண்டவுடனேயே மருத்துவத்தால் குணமாக்கினாலும்… “பல்கிப் பெருகிடும் புதிய புதிய நோய்கள் ஏற்படக் காரணம் என்ன…?”

1.மாறு கொண்ட எண்ணங்களால் நற்குணங்களையே சூரணம் செய்து
2.தீமையான குணங்களுக்கு அவைகளையே உரமாக்கிக் கொள்ளும் எண்ணம் செயல்படுவதால்
3.ஜீவாத்மா பிறவி என்ற நோயில் அகப்பட்டு வதைப்படுகிறது.
4.இத்தகைய செயலுக்கு மூல காரணம் யார்…?

ஆனால் ஆத்ம பலத்தில் பரிபூரணம் பெற்றிட வேண்டும் என்றால் உலக வாழ்க்கைச் சூழலில் நம்மை மோதிடும் எதிர் நிலைகளுக்கு நம் எண்ணத்தைச் செலுத்திடலாகாது… அதற்கு அடிமையாகிவிடக் கூடாது.

1.இந்த உண்மையின் முழுமையைக் கொண்டு ஆக்கம் பெற்றிடவும்
2.எண்ணத்தில் பீடித்துள்ள பிணிகளை நீக்கிச் செயல் கொள்ளவும்
3.நற்சுவாசப் பரிசுத்தம் கொள்ள வேண்டும் என்றே உரைக்கின்றேன்.
4.ஞானச் செல்வம் பெற்றிட வேண்டும் என்றே கூறுகின்றேன்.

பேரருள் சக்தியாகத் தன்னுள் “மெய் ஞான விழிப்பு…” கண்டால் எண்ணத்தின் பரிசுத்தத்தால் ஈஸ்வரரின் ஆசி கொண்டு மகரிஷிகளின் அருளாசி பெற்றிடலாம்.

சிலவற்றை மறைத்தே உரைத்திட வேண்டியதுள்ளது. பேரருள் உலகோதயச் செல்வத்தை அளித்திடும் நிலையில் இன்று இல்லை.

இன்றை மனிதனின் எண்ணத்தின் மாறுபாடே காரணம் என்றால் சூட்சமங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
1.எண்ணத் தூய்மை கொண்ட இந்தத் தியானத்தின் வழியிலேயே பேரருள் ஆசி பெற்று
2.வாழ்க்கை நிலையையும் கூட உயர்வு பெற முடியும்.

இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்திகளை நுகர்ந்தால் உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றும் சந்தர்ப்பம் வருகின்றது

27 Star Constellations.jpg

இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்திகளை நுகர்ந்தால் உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றும் சந்தர்ப்பம் வருகின்றது

இருபத்தியேழு நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத்தான் பாதரசமாக மாற்றி இந்த உலகையே ஒளிமயமாக ஆக்குகின்றது சூரியன்.

அதே போல இருபத்தியேழு நட்சத்திரத்தின் உணர்வுகளால் விளையப்பட்ட தாவர இனங்களின் உணர்வையெல்லாம் எடுத்து இந்த உயிர் என்ன செய்கிறது…? உணர்வின் ஒளியாக மாறுகின்றது.

இருபத்தியேழு நட்சத்திரத்தின் உணர்வால் விளைந்த தாவர இனத்தின் உணர்வை உயிர் உணர்ச்சியின் எண்ணங்களாக ஆக்கப்பட்டு உணர்ச்சிக்கொப்ப நாம் இயங்குகின்றோம். (மனிதனாக்கப்பட்ட நிலை)

1.இருபத்தியேழு நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து ஒளியின் உணர்வாக மாற்றியவன் அகஸ்தியன்.
2.விஷத்தின் தன்மையை முறித்தவன்,
3.உணர்வின் தன்மையை ஒளியாக்கி ஒளி உடலாகத் துருவ நட்சத்திரமாக ஆனவன் அகஸ்தியன்.
4.மனிதனாகப் பிறந்த ஞானிகள் அகஸ்தியன் வழியில் இருபத்தியேழு நட்சத்திரங்களின் கதிரியக்கங்களைத் தங்கள் உடலிலே சேர்த்துக் கொண்டனர். ஒளி உடல் பெற்றனர்.

இருபத்தியேழு நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து ஒளியின் உடலான அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாமும் எடுத்து நமக்குள் இருக்கும் தீமைகளை நீக்கிக் கொள்ள வேண்டும்.

இருபத்தியேழு நட்சத்திரங்களின் உறுதுணை கொண்டது வியாழன் கோள். அதே இருபத்தியேழு நட்சத்திரத்தின் சக்திகளையும் முழுமையாகப் பெற்றது சூரியன்.

இந்த இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தி பெற்று அதனின் உணர்வை இணைத்துத் தான் நம் பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழச் செய்யும் சக்தி பெற்றது.

இருபத்தியேழு நட்சத்திரத்தின் சத்தை முழுமையாக எடுத்துப் பாதரசமாக சூரியன் மாற்றி உலகை உருவாக்குவது போன்றுதான் இதே உயிர் பலவிதமான உணர்வுகளை எடுத்து மனிதனாகும் பொழுது அது முழுமை அடையும் பருவத்திற்கு வருகின்றது.

ஆனால் மனிதனின் நிலைகள் வேதனை என்ற விஷத்தின் தன்மை அதிகரித்து விட்டால் மனித நிலையிலிருந்து இழி நிலையான சரீரமாக உயிர் மாற்றிவிடும்.

ஆகவே அதைப் போன்று ஆகாதபடி
1.இருபத்தியேழு நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று
2.ஒளியின் உடலாக இருக்கும் அதனை நாம் சிறுகச் சிறுக நுகர்ந்து
3.நம் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் செலுத்திப் பழகுதல் வேண்டும்.
4.அவ்வாறு செய்தால் ஒளியின் உடலாக உயிரின் துணை கொண்டு உணர்வை ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.
5.மகரிஷிகளைப் போன்று நாமும் ஒளி உடல் பெற முடியும்.

அகத்தியர் உணர்த்திய கணபதியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Lord ganapathy

அகத்தியர் உணர்த்திய கணபதியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மனித குலம் உண்மையை உணர்ந்து வாழவும் அந்த வாழ்வில் உயர் ஞானச் செயலின் சிறந்த பேறு பெறும் வழியாகவும் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய குணங்களின் விசேஷத் தன்மைகளைச் சிலை வடிவில் சித்தர்கள் அன்று உணர்த்தினார்கள்.

அந்தச் சித்தர்களின் மனித குல உயர்விற்கு வழி காட்டிய தெய்வச் சிலைகளின் தத்துவத்தையே கேடுறச் செய்து ஆர்ப்பரித்துப் பகட்டைக் காட்டிடும் நிலைக்கு இன்று வந்து விட்டார்கள்.

சித்தன் படைத்த செயலையே மனிதன் பகட்டிற்காகவும் கௌரவ வாழ்விற்கும் பயன்படுத்திச் சீர்குலைத்து விட்டனர். அப்படிச் சீர்குலைக்கப்பட்டதால்
1.வாழையடி வாழையாக வழி வரும் மெய் ஞான உயர் சக்தி பெற விழைந்த ஆத்ம ஞானிகளால்
2.உட்பொருள் வெளிப்படுத்தும் எண்ணமின்றி மறைக்கப்பட்டு விட்டது.

விநாயகர் உருவத்தைக் காட்டி ஆற்றங்கரையில் வைத்த நிலை எல்லாம் இன்று கேலிக்குரிய நகைச்சுவைப்படுத்தி ரசித்து மகிழும் நிலைக்குச் சென்று விட்டது.

இன்றைய மனித மனங்கள் உட்பொருளை நாடி அறிந்து கொள்ளத் தயங்குதுவும்… பயம் என்ற போர்வை கொண்டு பக்தி என்ற குளிர் போக்கத் தானும் நடுநடுங்கி… அறிவொழிந்து…! அதிலிருந்து விடுபட முடியாத நிலை ஆகிவிட்டது.
1.ஜோதி என்ற தன் உயிர்க்கனலின் நெருப்பே
2.பக்தி என்ற குளிரை விரட்டும்…! என்று அறியாமல் போனதென்ன…?
3.அந்தக் குளிரை நீக்க வந்தவனும் உட்பொருளை அறிந்ததில்லை…!

ஆவியான நீர் அமிலங்கள் எல்லாம் தன் செயலில் தான் நெருங்கி… ஒன்றோடொன்று கண பரிமாணம் கொண்டு… பிறிதொன்றின் சேர்க்கையில் நீர்த் திவலையாகும் நிலையில் “அதுவே சிவமாகின்றது” (திடமாகி உருவமாகின்றது).

அது பூமிக்குள் வரும் காரிய நிலை கொண்டு சுழலும் தன்மையிலே சக்தியாகவும்… பூமியில் படிந்து பின் எழும் செயலின் தொடர்பில் மீண்டும் நீராகவும்… அதுவே எழும் தொடரில் ஆவி நீர் அமிலமாகவும் செயலுறும் தொடர்புகளை அறிந்து கொள்தலே “பிரம்மம்…!”

அத்தகைய பேருண்மைகளை அறிந்து கொண்டவர் தான் “அகத்தியர்…!”

அவர் உயிரணுவின் செயல் சுழலும் சக்தியாகப் பரிணமித்துப் பூமிக்கு வந்த காரியத்தில் வினையான தன்மைக்கு நாயகனாக இந்தச் சரீரம் பெற்றார்.

வினையின் நாயகனே விநாயகர் என்று தன் உயிர் ஆன்ம சக்தியையே உயர்த்திக் கொள்ளும் வழியாக
1.எல்லா உயிர்த் தொகைகளுக்கும் உயிரணுக்கள் பொதுவாகவும்
2.அது பெறும் வீரியத்தில் வித்தியாசமும்… அதுவே பின் எண்ணத் தொடரில் சரீரமாகவும்
3.தன் அமில குண நிலைக்கொப்பத் தனக்குகந்த… தான் பெற்ற தன்மை கொண்டு… ஞான வழியில் “ஒவ்வொரு சரீரமும் பெறுகிறது…” என்றார் அகத்தியர்.

அத்தகைய உயிரணுக்களுக்குள் வீரிய சக்தி கொண்டது “யானை…” என்றும் அது பெற்ற சக்திக்கு அதன் “சுவாசமே…” காரணம் என்று தெளிவாக உணர்த்தினார்.

மனித குலம் ஞானத்தில் உயர்வடைய வேண்டும் என்றால் தான் எடுக்கும் எண்ண ஓட்ட சுவாச கதியை உயர்வாக்க வேண்டும் என்பதற்காக விநாயகரை உருவகப்படுத்திக் காட்டினார் அந்த அகத்தியர்.

நீர்ச் சக்தியைத் தன் எண்ண ஓட்ட கதியுடன் ஒன்றுபடுத்திக் கண்ட அந்த அகத்திய மாமகரிஷி “சுவாச வழியில் வீரியம் பெறும் நிலையைப் புகட்டினார்…!”
1.வினைக்கு நாயகனே விநாயகன் என்று
2.தன் உயிர் குருவைக் கண்டு கொண்ட பின்
3.அவர் சென்ற வழியின் உயர்வே “கணபதி…”

கணங்களை ஆளக்கூடிய தலைவன் “கணநாதன் என்ற உயிர்ச் சக்தியானது” தன்னுள் உள்ள கணம் என்ற கூட்டமாகிய அனைத்து உயிரணுக்களுக்கும் நாயகனாக வினையின் நாயகனாகச் செயல்படுகிறது.

1.கணங்களுக்கெல்லாம் (உயிரணுக்களுக்கெல்லாம்) அதிபதியாக ஒரு வழிகாட்டியாக
2.உயிர் ஆத்ம சக்தி தான் சக்தி பெறும் மார்க்கமாகச் சக்தி பெற்று
3.தான் பெறும் சக்தியையே சரீர உயிரணுக்களுக்கும் ஊட்டிடும் நிலையே கணங்களின் பதியான கணபதி ஆவான் என்று
4.உயிர் பெறும் உயரிய தன்மைக்குச் சித்தனால் காட்டப்பட்டதே விநாயகர் என்பதை அறிந்துணர்தல் வேண்டும்.

நம் எண்ணங்களும் குணங்களும் ஒரே நிலையில் இருக்க என்ன செய்ய வேண்டும்…?

MEDITATION - CONCENTRATION.jpg

நம் எண்ணங்களும் குணங்களும் ஒரே நிலையில் இருக்க என்ன செய்ய வேண்டும்…?

ஒரு கருடன் தன் இரைக்காகப் பாம்பை எடுத்துத் தூக்கிச் செல்கின்றது. ஏற்கனவே அது விஷம். இருந்தாலும் இந்தக் கருடன் அந்தப் பாம்பைத் தூக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக வேதனைப்படும்படி செய்து அதை உணவாக எடுத்துச் சாப்பிடுகின்றது.

ஆனால் பாம்போ கூர்மையாக அந்தத் கருடனையே உற்றுப் பார்த்து வேதனை உணர்வைக் கவர்ந்து தன் உடலில் உள்ள அணுக்களுக்குள் அதிகமாகச் சேர்கின்றது.
1.மரணம் அடையும்போது இந்தப் பாம்பின் உயிரான்மா கருடனுக்குள் சென்று
2.அதன் உணர்வைக் கவர்ந்து அதற்குத் தக்கவாறு கருடனாக மாறுகிறது.

அதனால் தான் இந்த மாதிரி விஷத் தன்மையான உணர்வுகளைக் கருடன் சாப்பிட்டாலும்
1.இந்தக் கருடனாக உடல் மாறும் பொழுது
2.விஷம் கொண்ட பாம்புகள் அதைத் தீண்டினாலும் கருடன் மடிவதில்லை.

அதே சமயத்தில் அது உடலில் இருந்து எடுத்துக் கொண்ட உணர்வுகள் உதாரணமாக… ஒரு பாம்பு கீழே போகிறது என்றால் கருடன் பறக்கும் போது அதனுடைய இறக்கையின் காற்றலைகள் பட்டாலே அந்தப் பாம்பிற்கு ஒரு மாதிரி மயக்கம் வரும். இதைக் குருநாதர் காட்டியுள்ளார்.

இதைப் போன்று தான் நம் உடலில் எத்தனையோ பல உணர்வுகள் உண்டு. அதிலே வேதனையான உணர்வுகளை உடலில் உள்ள அணுக்கள் அதிகமாகச் சேர்த்துக் கொண்டு இருக்கும் போது அடுத்து நாம் நல்ல உணர்வின் தன்மை பெற்றாலும் கூட நம்மால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அதாவது ஒருவர் மிகவும் வேதனைப்படுகிறார்… சங்கடப்படுகிறார் சலிப்பான நிலைகளில் இருக்கிறார்…! என்றால் அவர்களிடமிருந்து வெளிப்படும் அந்த உணர்வுகளை நாம் நுகர்ந்தோம் என்றால் நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு நிச்சயம் மயக்கம் வரும்.
1.ஏனென்றால் நாம் சுவாசித்த உணர்வுகள் உடலுக்குள் சென்று அது வாயுவாக மாறுகின்றது.
2.அந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதும் பரவுகின்றது.

அது பரவப்படும் பொழுது நம் உடலில் உள்ள நல்ல அணுக்களில் இந்த விஷத்தின் தன்மை அதிகமாகும் போது விஷத்தின் இயக்கமாக இருப்பினும் அதிகமான விஷத்தின் தன்மை வரப்படும் போது நல்ல அணுக்கள் மயங்கத் தொடங்கி விடுகின்றது.

ஆக கருடனுடைய உணர்வுகள் பரவப்படும் போது பாம்பினம் கீழே செல்லப்படும் போது அதனுடைய காற்றலைகள் பட்டவுடன் பாம்புக்கு மயக்கம் வருவது போல நமக்கும் அந்த நிலைகள் ஏற்படுகின்றது.

நம் உடலில் உள்ள உணர்வுகள் வேதனைப்படுவோரைக் கூர்மையாகப் பார்த்து அந்த விஷத்தின் தன்மையைக் கவர்ந்த பின்
1.அது நம் உடலில் முட்டையாகின்றது… வேதனை என்ற உணர்வுகள் அந்தக் கருத்தன்மை வளர ஆரம்பிக்கிறது.
2.வேதனைப்படும் உணர்வுகளை அதிகமான ஆகாரமாக அந்தக் கருக்கள் எடுக்கும் பொழுது
3.அது வேதனையான அணுக்களின் பெருக்கங்களாக ஏற்படுகிறது.

அதைக் குறைப்பதற்காக வேண்டித்தான் அந்த மகரிஷிகளின் உணர்வின் சக்தியை உடலுக்குள் சேர்த்துச் சிறுகச் சிறுகக் கலக்கும்படி செய்கின்றோம்.

உதாரணமாக வர்ணங்கள் கொடுக்கும் இடங்களில் ஒரு கலருடன் பல விதமான கலரைச் சேர்க்கின்றோம். அதிலே எந்தக் கலரை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அந்தக் கலரின் ரூபங்களாக மாற்றுகின்றது.

நீலமும் மஞ்சளும் சேர்க்கப்படும் போது அது ஒரு விதமான பச்சைக் கலராக வரும். நீலமும் ஆரஞ்சும் சேர்த்தால் காப்பிக் கலராக வரும். அதனுடன் வெள்ளையைச் சேர்க்கும் பொழுது வித்தியாசமாக வரும்.
1.இதைப் போன்று தான் நமது சுவாசங்களில் கலர்களின் ஓட்டங்கள்
2.வித்தியாசமாகக் கலந்து பல பல நிலைகள் மாறும்.

அப்படிக் கலக்கப்படும் பொழுது நம் உடலில் உள்ள அணுக்களுக்கு எதிர் நிலையான மாற்றமாகி
1.நம் அணுக்களும் வித்தியாசமாக மாறும்.
2.நம் குணங்களும் வித்தியாசமாக மாறும்.

எந்தெந்த குணங்கள் அதிகமாகின்றதோ அதெல்லாம் நம் ஆன்மாவில் சேர்ந்து விடுகின்றது. மொத்தமாகச் சேர்த்துச் சுவாசிக்கும் பொழுது எதன் வலு அதிகமாக இருக்கிறதோ அதன் வழி நம் உடல்களில் வித்தியாசங்கள் வந்து கொண்டே இருக்கும். அப்பொழுது நம் குணங்களும் வித்தியாசமாக மாறும்.

இதையெல்லாம் மாற்றுவதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்துப் பழக வேண்டும்.
1.உபதேச வாயிலாகக் கொடுத்த சக்தியை வைத்து
2.அவ்வப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலில் சேர்த்துச் சேர்த்து
3.உடலுக்குள் வரும் உணர்வுகளை மாற்றப்படும் போது
4.தீமையான அணுக்களை அதிகமாக வளர விடாது தடுக்க முடியும்.

நம் குணங்களும் எண்ணங்களும் மாறாது எப்பொழுதும் நல்ல உணர்வாக ஒரே நிலையாகக் கொண்டு செல்ல முடியும்.

உபதேசிக்கும் தகுதி குருவிற்கு எப்பொழுது கிடைக்கிறது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

gurujis.JPG

உபதேசிக்கும் தகுதி குருவிற்கு எப்பொழுது கிடைக்கிறது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

பரவெளியில் படர்ந்துள்ள ஒளியான மின் அணுக்கள் காந்தத்தின் உள் நிகழ்வாக அசையும் நிலை சூட்சமமாக அதற்குள் இருந்தாலும் சஞ்சலமில்லாத மனத்திறன் கொண்டு வைராக்கியப் பற்று கொண்டோன் நல் ஆக்கத்தின் செயலுக்காகத் தன்னைத் தான் உணர்கின்றான்.

உணர்ந்து தெளிந்த வழியின் ஈர்ப்பினால் சகலத்தையும் தன்னுள் சக்தியாகக் கூட்டும் செயலாகப் “பேரருள்…” என்ற மூலத்தில் கலக்கின்றான்.

சகலத்தையும் அறிந்து கொள்வது என்பது நடைமுறைச் சாத்தியம் இயலாது என்றாலும்
1.தனக்குள் தானே நல் வழி ஆக்கத்திற்காகச் செயல்படும் விதம்
2.ஒவ்வொருவரும் தன் ஆத்மாண்டவனை உயர்த்தும் செயலே கடமை விதி.

அதே போல் சரீரத்துடன் கலந்து எண்ணிடும் செயல் அனைத்திற்கும் ஓர் வரைமுறைக்கு உட்படுத்தப்பட்ட செயலைக் காட்டும் கடமை விதியும் உண்டு.

உலகோதய நடைமுறை வாழ்க்கை நெறியில் தன் சிந்தனையைத் தெளிவாக்குவதற்காகக் குருவை நாடுகின்றான். குரு என்றால் என்னப்பா…?

குரு என்றாலே “ஒளி நிலை…” என்பது பொருள்…!

1.தனக்குத் தானே உபதேசத்தை ஏற்றுக் கொண்டவன் தான்
2.பிறருக்கு உபதேசிக்கத் தகுந்தவன்.

அவ்வகையில் கூறும் குரு எண்ணம் சொல் செயல் அனைத்தும் நேர்கோடாகப் பரிணமிக்கத் தன் செயல் நடைமுறைகளால் குருவாகின்றார்.

கடமை விதி சிஷ்யர்களாகிய அனைவருக்கும் உண்டு என்றாலும் குருவிற்கும் உண்டு.
1.கடமை விதி… உலகோதய நிலை விடுத்துப் பேரருள் தெய்வத் தன்மை நிலை அடைவதற்கு
2.ஓர் வழி காட்டும் அமைப்பே குரு.

பேரருள் சூட்சமம் அறிந்த கோடானுகோடி உயிராத்மாக்கள் நல்லாக்கச் செயல் நிகழ்வுகளில் மூலத்தில் கலந்து வாழ்கின்றனர்.
1.ஆனால் சிலரே அனைத்து உயிர்களும்
2.அந்தப் பேரானந்த லயத்தில் இன்புறுதல் வேண்டும் என்று கண்டுணர்த்தினர்.

அவர்கள் காட்டிய அன்பு நெறிகளில் “நான்…!” என்ற நிலை இல்லையப்பா…!
1.நான் என்ற சொல்லும்
2.நான் தான் பெற்றுத் தருவேன்…! என்ற சொல்லும் எதற்கப்பா…?

“தனித்துவமான சக்தி…” பெறும் நிலையன்றோ நாம் புகட்டியது.

ஒவ்வொரு உயிராத்மாக்களும் நல் நிலை பெறவேண்டும் என்று எமக்குள்ள ஆசையால் தானே எல்லாமுள் எல்லாமாக விளங்கும் பேரருள் சக்தியுடன்… மாமகரிஷிகளின் ஆசியுடன்… “மறைக்கப்பட்ட இந்த உண்மை நிலைகளை…” இங்கே எடுத்து இயம்பிக் கொண்டிருக்கின்றோம்.

1.இதில் நான் என்ற நிலை எங்கே உள்ளது…?
2.பரப்பிரம்ம நிலைதனில் சகல உயிர்களையுமே
3.அந்த ஈஸ்வரனாக எண்ணிச் செயல் கொள்ளும் அன்பு வழியைத்தானே இங்கே காட்டுகின்றோம்.

குருவே உன் உயிராக ஆத்மாவில் இயக்கும் செயலில்… சரீரம் கொண்டு செயல்படும் நிலையில் எல்லாம்… கடமை விதி என்பது பக்தி நிலை தானே தவிர “நீ உன்னை உயர்த்தும் சிங்கார அழகு எங்கே…?”

1.குருதேவர் (ஈஸ்வரபட்டர்) ஊட்டுவார்…! குருதேவரே ஊட்டட்டும் என்று
2.உன் முயற்சியின் வழியை விலக்கினால்
3.உன் உயிராத்மா உயர்ந்த சக்தி பெறும் அந்த ஒளியின் அழகு சுயப்பிரகாசமாக வளர்வது எங்கே…?
4.யாம் விரும்புவதே ஒவ்வொரு ஆத்மாக்களின் சுய முயற்சிதான்.
5.அதுவே நல்லாக்கத்தின் வழி.
6.வினைக்கு நாயகன் விநாயகன்..! என்று தன்னைத்தானே அறிந்து கொள்வதே குரு காட்டிய கடமை விதி.

உன்னை நீ உணர்ந்து சித்தன் காட்டிய விநாயகரின் உருவத்தில் மனித உடலும் யானையின் தலையும்…? எதற்காக என்ற வினாவிற்குரிய தெளிவை அறிவின் துணை கொண்டு தெளிதலே நல்லாக்கத்தின் வழி.

தெளிந்த பின் தன் உயிராத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் செயலும் வேண்டும்.

அதிகாலையில் நாம் செய்ய வேண்டிய அர்ச்சனை

souls-cleaning.jpg

அதிகாலையில் நாம் செய்ய வேண்டிய அர்ச்சனை

ஒரு நோயாளியை உற்றுப் பார்த்து “இப்படி ஆகிவிட்டதே…!” என்று அதை நுகர்ந்தறிந்து அவருக்கு உதவி செய்தாலும் அவன் உடலில் வந்த நோயின் விளைவுகள் இங்கே காற்றிலே உண்டு. நமக்குள்ளும் பதிவாகி இருக்கின்றது.

மீண்டும் அவனை எண்ணும் பொழுதெல்லாம் அந்த உணர்வுகள் நமக்குள் விளைந்து நமக்கும் நோயாகின்றது. இதை மாற்ற வேண்டும் அல்லவா…!

நோயாளியைப் பார்த்து உதவி செய்தோம். மற்றவர்கள் வேதனைப்படுகின்றார்கள் என்று பார்த்து அதை அறிந்து கொள்கின்றோம். அப்படிக் கஷ்டப்படுபவர்களுக்கு எல்லம் நாம் உதவி செய்து கொண்டே தான் இருக்கின்றோம். (அந்த வேதனைகளை நாம் துடைப்பதில்லை)

1.ஆனால் அவர்கள் உடலிலுள்ள வேதனைகளைத் தெரிந்து கொண்ட பின்
2.இப்படி ஒரு பத்துப் பேருடைய கஷ்டங்களையும் துயரங்களையும் அறிந்து உதவி செய்தால்
3.உதவி செய்தவருக்கே அந்த நோய் வருகிறது.

உதவி செய்தவருக்கு நோய் வந்த நிலையில் கடைசியில் என்ன சொல்வார்.
1.நான் எல்லோருக்கும் உதவி செய்தேன்
2.என்னை ஆண்டவன் சோதிக்கின்றார்..! என்பார்.

ஏனென்றால் நாம் எண்ணிய உணர்வைத்தான் நம் உயிர் இயக்குகின்றது. நாம் எண்ணியதை எல்லாம் உடலாக்குகின்றது. அதைத்தான் நம் உயிர் ஆண்டவனாக இருந்து ஆள்கின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்.

1.ஆண்டவன் எங்கேயோ இருக்கின்றான்…! என்ற நிலையில் சாங்கியங்களைச் செய்து… அர்ச்சனை செய்து…
2.அவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான்…! என்றால் அது அல்ல அர்ச்சனை.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அந்த உணர்வைச் சுவாசிக்கும் பொழுது
1.உயிரிலே படுகின்றது… அபிஷேகம் நடக்கின்றது.
2.அந்த உணர்ச்சியின் ஒலி அலைகள் உடலிலே உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கி எடுத்த உணர்வுகள் அந்த உணர்ச்சியின் அலைகளாக நமக்குள் சேர்கின்றது.
4.இது தான் உண்மையான அர்ச்சனை.

மனிதனின் வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்று ஞானிகள் கற்பித்த இந்த உணர்வுகளை நாம் எப்படிப் பழகுதல் வேண்டும்…?

நம் பூமியின் வடதுருவப் பகுதியில் விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளி வரும் உணர்வலைகளைச் சூரியனின் காந்தப்புலன் கவர்கின்றது. அலைகளாக மாற்றி வருவதை நம் பூமி துருவத்தின் வழி கவர்கின்றது. நமக்கு முன்னாடி இங்கே வருகின்றது.

அவ்வாறு வரும் அந்த உணர்வின் தன்மைகளை நுகர்ந்து நம் உடலிலே சேர்க்க வேண்டும். ஆகவே அதிகாலையில் நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் அந்தத் துருவ தியான நேரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எண்ணி ஏங்கிப் பெற்றுப் பழகிக் கொள்ள வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்.. எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெறவேண்டும் என்று ஏங்கி உடலுக்குள் செலுத்தி அதை பல முறை தியானிக்க வேண்டும்.

அப்பொழுது அந்த அகஸ்தியன் எதைக் கண்டானோ அதை எல்லாம் நாம் நுகர்கின்றோம். இப்படி அந்த அருள் சக்திகளை அதிகாலையில் பெற்றுப் பழகிக் கொண்டால்
1.அதற்குப் பின் எப்பொழுது வேண்டும் என்றாலும்
2.அதை எடுத்து நல்லதாக நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

அறிவு… காரணம்… ஆனந்தம்…!

bliss-ocean-world

அறிவு… காரணம்… ஆனந்தம்…! 

 

ஒவ்வொரு உயிராத்மாவும் தன்னைப் பற்றிய உண்மையை உணரச் சிந்திக்கும் தொடரில் “நான் என்பது யார்..?” என்கிற வினா எழும் பொழுது தன் சுயத்தின் வளர்ப்பாகத் தியானத்தின் வழியாக உணர்ந்து கொள்ளும் பொழுது “ஆத்மாவின் முழுமை” புலப்படும்.

உடலுக்கு உயிர் குரு. உயிரின் குரு சூரியன் என்ற விளக்கத்தின் பொருளில் ஆத்மா என்பதே மறை பொருளாக்கப்பட்டு விட்டது.

எண்ணத்தின் செயல்பாட்டில் செயல்பாட்டின் வினைப் பொருள் எதுவோ அதுவே விளை பொருளாக ஆக்கம் பெறுகிறது
1.எண்ணத்தின் செயல்பாட்டில் “நான்…” என்பது வினையானால்
2.அந்த வினையின் விளை பொருள் விளைப் பொருளாக ஆக்கும் “சக்தி”
3.வலுக் கொண்டு ஒன்றுவது எங்கே..? என்ற வினாவின் மூலத்தை ஊன்றிப் பார்க்க வேண்டும்.

ஆத்ம பலம் பெற வேண்டும் என்று சொல்வது எதற்கப்பா…?

எண்ணத்தின் செயல்பாடு நான் என்பது புகழ் தேடும் வழியாக உபதேசித்தல் என்பது… விளைப் பொருள் ஆக்கும் செயல் கொண்ட எண்ணத்தின் “மாறுபாடே…!”

அஞ்ஞானத்தின் செயல்பாட்டில் வினைப்பொருள் செயல் கொள்ளும் எண்ணமாக எதை எண்ணி வலுக்கூட்டும் செயல் நிகழ்வோ அதுவும் ஆத்மாவில் பதிவு நிலை பெறுகின்றது.

1.செயல்பாட்டில் நான் என்பதில் உரைத்திட்ட
2.வேறுபாட்டின் பொருளில் செயல்பாட்டில் கொள்ள வேண்டிய நான்
3.ஆத்மாவின் மூலச் சக்தியாக நான் என்பதற்கு வலுக்கூட்டும் நானாக அமைவு பெற்றால் இரண்டும் ஒன்றே.

ஒன்றில்லாமல் ஒன்றில்லை உரைத்த உரையில்… இயற்கையின் கதியில் சூரியனை மையம் கொண்டே சுழன்றோடும் கோளங்களும்… ஒன்றுடன் ஒன்று ஒளி காந்த ஈர்ப்பில் சக்தி பெற்றுப் பரிணாம வளர்ச்சி கொண்டு வளர்ந்திடும் செயலை ஒவ்வொரு உயிராத்மாவும் தன் வளர்ப்பின் சக்தியில் முழுமை பெற்றிட
1.அந்த இயற்கையின் கதியில் ஒன்றி
2.சுய சக்தி வளர்ப்பாக்கும் நிலைக்கு வளர வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் ஒரு உயிராத்மா மற்றொரு உயிராத்மாவை எண்ணியே சக்தி பெறும் பாஷாண்டகம் – பிற ஆத்மாக்களை அடிமை கொண்டு தன் உயிராத்மாவின் சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் செயலுக்குச் சென்றால் இறந்த ஆவி ஆத்மாக்கள் செயல் கொள்ளும் நிலைக்கே செல்ல வேண்டி வரும்.

1.உண்மையின் சக்தி…
2.என்றும் நிலை பெறும் பரிபூரணத்துவ…
3.அகண்ட… பிரகாச… பேரின்ப ஜோதியாக…
4.ஆத்மாவாக – உயிராத்மாவாகச் செயல் கொள்ளும் செயலுக்கு
5.ஆத்மாவிலிருந்து பெற்றிடும் ஒளியே அறிவின் செயல்பாட்டின் காரணமாக
6.அந்தக் காரணத்தின் உண்மையை உணர்ந்து கொண்டிடும் செயலில் ஆனந்தமும்
7.இவைகளின் செயல்பாட்டில் எண்ணத்தின் வலுவாக வினையின் பொருள் நான் என்பதே ஆத்மா என்று உணர்ந்திடும் பக்குவத்தில்
8.அறிவு… காரணம்… ஆனந்தம்…! அனைத்துச் செயல்பாட்டின் நிகழ்வில் ஒன்றுடன் ஒன்று ஒன்றி
9.ஆத்மாவிலிருந்து ஒளி பெற்று வளர்ச்சியின் வலுவை எப்படிக் கொண்டதோ…
10.அந்த வலுவே ஒளியாக மீண்டும் ஆத்மாவின் வலுவை வலுவாக்கும் சூட்சமமே மூல சக்தி…!

ஆக மொத்தம் பேரானந்தப் பேரருளின் ஒளியின் ஒளிக் கதிர்களில் “ஒரு ஒளிக் கதிர் தானப்பா ஓர் ஆத்மா என்பது…!”