உடலுக்குள் புகுந்த கடுமையான ஆவி ஒடுங்கிய விதம்

Spiritual circle

உடலுக்குள் புகுந்த கடுமையான ஆவி ஒடுங்கிய விதம்

 

ஒரு சமயம் நான் (ஞானகுரு) மங்களுரில் இருக்கும் போது ஒரு நண்பர் வீட்டுக்குப் போனேன்.
1.அவருடைய சம்சாரம் எப்பொழுது பாத்தாலும் அவரைப் பறண்டிக் கொண்டே இருக்கும்.
2.அது எதற்கெடுத்தாலும் சும்மா நய்…நய்… என்று அழுது கொண்டே இருக்கும்.

அவர்கள் எங்கே போனாலும் ஒன்றும் செயல்படுத்த முடியாது. அவர்கள் வீட்டில் எந்தத் தொழில் செய்தாலும் நஷ்டமாகிக் கொண்டே இருக்கும்.

எனக்குத் தோசை வாங்கிட்டு வாடா.. அது வாங்கிக் கொண்டு வாடா.. இதை வாங்கிக் கொண்டு வாடா..! என்று சொல்கிறது. எத்தனை மணியாக இருந்தாலும் வாங்கிக் கொண்டு வர வேண்டும்.

அது வரை இங்கே உட்கார விடுவதில்லை…! உன்னை நான் கெடுத்தே போடுவேன். நீ எந்தத் தொழில் செய்தாலும் உன்னால் முடியாதுடா…! என்று சொல்லிக் கொண்டே இருக்கும்.

இப்படி இருக்கும் போது இந்தப் பேயை ஒட்ட வேண்டும் என்று பல முயற்சி எடுத்தார்கள். முனியப்பன் கோவில் அந்தக் கோவில் இந்தக் கோவில் என்று பல கோவில்களுக்குச் சென்று பல ஆடுகளை எல்லாம் பலி கொடுத்தால் இதை நிறுத்தி விடலாம் என்று பார்த்தார்கள். ஆனால் முடியவில்லை.

கடைசியில் என்ன ஆனது..? ஒரு மந்திரவாதியிடம் போன உடனே அவர் நான்கு கோழியை வாங்கிக் கொண்டு வரச் சொன்னார். அதில் மூன்று கோழியை அடுப்பாக வைத்தார்.

ஒரு கோழியை அறுத்து அதன் மீது வைத்துச் சமைத்தார்கள். நெருப்பை வைத்து எரிக்கிறார்கள். மேலே வைத்தது வேகுகிறது. வெந்த பின்பு அதை எடுத்து அப்படியே வீசினால் அந்த பேய் எல்லாவற்றையும் இழுத்துக் கொண்டு அப்படியே போய்விடுமாம்…!

நிலைமை என்ன ஆனது…? பத்து ஆயிரம் செலவழித்தது தான் மிச்சம். இது போக இராஐஸ்தானுக்குப் போய் அங்கேயும் என்னென்னமோ செய்து பார்த்திருக்கின்றார்கள். ஆனால் ஒன்றும் ஆகவில்லை.

கடைசியில் நான் (ஞானகுரு) சித்தாகி அங்கே போயிருக்கும் போது அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு வந்தது.

இந்த எட்டிச் செடி அது இது எல்லாம் போட்டால் சரியாப் போகும் என்று “மந்திரவாதிகள் சொல்கிறார்கள்…!” என்றார்கள். அது எல்லாம் முடியாது…! என்று சொன்னேன்.

காய்ந்த மிளகாயைப் பொடி செய்து எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று சொன்னேன். நெருப்பைக் கொண்டு வாருங்கள் என்று சொன்னேன். அந்த நெருப்பிலே இந்த மிளகாயைப் போட்டு அந்த நெடிக்கு நேராக அந்த அம்மாவின் முகத்தை வைக்கச் சொன்னேன்.

மிளகாய்க்கு மேலே நேராக முகத்தை வையம்மா…! என்று சொன்னேன்.

எனக்கு எல்லாம் தெரியும்… நீ வை பார்க்கலாம்…! என்று என்னிடம் சொல்கிறது.

இந்த மிளகாயைப் பொடி செய்து போட்டோம் அல்லவா..! அந்த நெடி தாங்காமல் எங்கே இருந்த எல்லோரும் ஓடுகிறார்கள். பக்கத்தில் இருந்தவர்களும் விலகி ஓடுகிறார்கள். என்ன இந்த மாதிரி போடுகிறீர்கள்…? என்று சண்டைக்கு வந்துவிட்டார்கள்.

ஆனால் அந்த அம்மா அதற்கே நேரே முகத்தைக் காட்டிக் கொண்டு “இன்னும் போடு…! எல்லாம் ஓடட்டும்..!” என்று சொல்கிறது.

அப்புறம் அவர்களுக்கு விளக்கத்தைச் சொன்னேன். ஒரு ஆவியின் உணர்வு உடலுக்குள் சென்று விட்டால் அதை உங்களால் அப்புறப்படுத்த முடியாது என்றேன்.

உன் மனைவி உடலில் இருப்பது “உன் அண்ணனின் ஆன்மா தான்…!” என்று சொன்னேன். உன் அண்ணனை நீ எந்தந்த அளவுக்கு இம்சித்தாயோ பழி தீர்க்கும் உணர்வோடு உன் சம்சாரத்துக்குள் இருக்கிறது என்று விபரத்தைச் சொன்னேன்.

1.இந்த உடலை விட்டுச் சென்ற பிற்பாடு (அண்ணனின் உயிரான்மா) அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து
2.உடல் பெறும் உணர்வுகள் கரைந்து ஒளி பெறும் சரீரமாகப் பெற வேண்டும்.
3.இந்த உடலிலேயே நீ உயர்ந்த சக்தி பெற வேண்டும். அந்த உயர்ந்த சக்தியைப் பெற வேண்டும் என்று
4.இந்த பெண்ணை நீ இந்த உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று தியானியுங்கள்..! என்று சொல்லி இந்த உணர்வைப் பதிவு செய்தேன்.

நான் பதிவு செய்தபடி அவர் அதைச் செய்த பின் அந்த அம்மாவிற்கு எல்லாம் நல்லதாக ஆனது. நிறைய உதவிகள் வந்தது. அந்த ஆளுக்கு ஜே..ஜே..! என்று எல்லாம் வந்தது.

அந்த வளர்ச்சிகள் வளரப்படும் போது அந்த ஆளுக்குப் புத்தி என்ன ஆனது…! பணம் வர ஆரம்பித்ததும் தவறுகள் நிறையச் செய்ய ஆரம்பித்தார். “நானே தான் ராஜா…!” என்று சொல்ல ஆரம்பித்தார்,

அண்ணணாவது… கத்திரிக்காயாவது..! அவன் தான் என்னைக்கோ இறந்து போய்விட்டானே… நீ என்ன பெரிய இது…? என்றார். அவ்வளவு தான் மறுபடியும் வந்துவிட்டது.

1.உடலுக்குள் ஆன்மா இருந்தால் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைச் செருகேற்றி அதை வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.
2.அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலம் அடைய வேண்டும் என்ற உணர்வைச் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

ஆனால் அதைச் செய்யாதபடி அதனின் உணர்வுக்குக் கொஞ்சம் இடம் கொடுத்தவுடன் என்ன ஆனது. மறுபடியும் அது பிடித்துக் கொண்டது.

எது எது எல்லாம் நல்ல வழியில் வளர்ச்சிக்கு வந்ததோ மறுபடியும் அதை எல்லாம் வடிகட்ட ஆரம்பித்து விட்டது. எல்லாச் செல்வங்களும் கரைய ஆரம்பித்தது.

ஆக ஒரு ஆவி உடலுக்குள் வந்தால் அதனின் இயக்கங்கள் இப்படித்தான் இருக்கும்…! என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் வரும் இன்னல் கஷ்டம் முதலியவைகளை நாம் கண்டிப்பாக மறந்து பழக வேண்டும்

mind-powers

வாழ்க்கையில் வரும் இன்னல் கஷ்டம் முதலியவைகளை நாம் கண்டிப்பாக மறந்து பழக வேண்டும்

 

1.யாம் (ஞானகுரு) கொடுத்த சக்தியின் துணை கொண்டு,
2.தொழில்களிலோ, மற்றவைகளிலோ சந்தர்ப்பத்தால் ஏற்படும் தீமைகளைப் பார்த்து,
3.“இப்படித் தீமையாக இருக்கின்றதே…!” என்ற உணர்வை நமக்குள் வலுப்படுத்தி விடக் கூடாது.

அருள் ஒளியின் உணர்வை நாங்கள் பெறவேண்டும் என்று இதனின் உணர்வைக் கட்டாயப்படுத்தினால் இந்த வாழ்க்கையில் வரும் துன்பத்தை நீக்கும் வலிமை பெருகுகின்றது.

நம்முடைய எண்ணத்திற்கு வலிமை கிடைக்கின்றது. இதன் துணை கொண்டு உங்களுடைய வாழ்க்கையைச் சீராக அமைக்க வலிமையான உணர்வுகள் கிடைக்கின்றது.

1.இதை வைத்து எத்தகைய தீமைகளையும் மாற்றலாம்.
2.எத்தகைய பகைமையை மாற்றலாம்.
3.கடுமையான நோய்களையும் போக்கலாம்
4.அருள் ஞானத்தின் உணர்வை, நமக்குள் அறிவாகத் தெரியலாம்.

தீமையின் உணர்வுகள் பல நமக்குள் இருப்பினும் துருவ நட்சத்திரத்தினையும் சப்தரிஷி மண்டலங்களையும் கட்டாயப்படுத்தி ஒரு பத்து நிமிடமாவது எண்ணுங்கள்

அந்த எண்ணமே, அதனின் உணர்வின் தன்மைகளை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள உதவும். ஏனென்றால்
1.எண்ணியதைத்தான் உங்கள் உயிர் உருவாக்குகின்றது.
2.யாரோ செய்வார்… எவரோ செய்வார்…! என்ற எண்ணங்களை முதலில் விடுத்துப் பழகுங்கள்.

நாம் எண்ணியது எதுவோ அதை நாம் நுகர நேரும் பொழுது அதன் உணர்வின் அறிவாக அறிகின்றோம். நுகர்ந்த உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் உருவாக்குகின்றதென்ற நிலையைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கையில், குருநாதர் காண்பித்த அருள்வழியில், குரு அருளை நீங்கள் துணையாகக் கொண்டு, உங்களுடைய வாழ்க்கையில் பேரின்பமும் பெருவாழ்வும் பெற வேண்டுமென்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் நம்முள் அருள் ஞானத்தைப் பெருக்குவோம். அருள் ஆனந்தத்தைப் பெருக்குவோம். இனிப் பிறவியில்லா நிலை அடைவோம்.

பிறவியில்லா நிலையை அடையும் அருள் வாழ்க்கையாக, நாம் இந்த வாழ்க்கையை அமைப்போம்.

தியானம் செய்ய விரும்புவர்கள் “முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது…!”

telepathy meditation

தியானம் செய்ய விரும்புவர்கள் “முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது…!”

 

தியானத்தில் உட்கார்ந்ததும்,
1.இது முடியவில்லை…!
2.அது முடியவில்லை…!
3.உட்கார முடியவில்லை…! என்று எண்ணிக் கொண்டே உட்கார்ந்தால் இதுதான் வளரும்.

எப்படியும் ம்கரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று கட்டாயப்படுத்தி உட்கார்ந்து பாருங்கள். இந்த உணர்வுகள் உங்களுக்குள் வலுப்பெறும் பொழுது உங்களைச் சும்மா இருக்க விடாது.

அந்த நேரத்தில் இதனின் உணர்வை எடுக்கச் சொல்லும். இந்த உணர்வு வரும் பொழுது பிறருடைய தீமைகளை அகற்றும் வலிமையினைப் பெறுகின்றோம். தீமைகள் வராதபடி தடுக்கவும் முடியும்.

மனிதர்களான நாம் இந்தச் சரீரத்திற்குப் பின், இனி ஒரு பிறவியில்லை என்ற நிலையில் முழுமை பெறவேண்டும்.

முழுமை பெறும் நிலையாக மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காண்பித்த அருள் வழியில்
1.“துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும்”
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற உணர்வுகளை மட்டும்,
3.நீங்கள் கூட்டி வளர்த்துக் கொண்டால் போதும்,

அகண்ட அண்டத்தையும், இந்தப் பிண்டத்தையும் இவைகளின் இயக்கத்தின் உண்மைகளையும் அறியும் தன்மை வரும். தீமைகளை அகற்றும் சக்தியும் வரும்.

நமது உயிர் நாம் எதை நுகர்கின்றோமோ, அதன் உணர்வை வளர்த்து அதன் உணர்ச்சியின் தன்மை கொண்டுதான் இந்த உடலை இயக்குகின்றது.

சந்தர்ப்பத்தால் நுகர்ந்த தீமையின் உணர்வுகள் நமக்குள் நுகரப்படும்போது தீமையின் நிலைகளில் அந்த அணுக்கள் நமது உடலில் வளர்ந்து விட்டால் அதனின் உணர்ச்சிகளைத் தூண்டி அது தன் இனத்தைப் பெருக்குகின்றது.

தீமைகளை வென்ற அருள் உணர்வின் தன்மையை நமக்குள் உருவாக்கி விட்டால் அதன் தன்மை கொண்டு தீமைகள் வராது காக்கும் நிலையினை நம்முள் உருவாக்குகின்றது.

ஆதி சக்தியின் விஸ்வரூபம் பற்றியும் மூவுலகம் பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது

Adi sakthi eswara

ஆதி சக்தியின் விஸ்வரூபம் பற்றியும் மூவுலகம் பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழிலின் செயல்களை அகண்ட அண்டத்திலும் சரி… பூமிக்குள்ளும் சரி… ஒரு உயிரணுவிற்குள்ளும் சரி… படைப்பின் இயக்கங்களைப் பற்றிப் பகர்ந்திட வேண்டும் என்றால் சொல் நாமப்படுத்தித்தான் கூறிட முடியும்.

அந்தச் சொல் நாமப் பொருளின் சூட்சமத்தை அறிந்து தெளிந்திட தியான வளர்ப்பில் மனம் ஒருமைப்படும் செயலில் ஒவ்வொரு உயிராத்மாவும் உணர்ந்து அறிந்து கொள்ள முடியும்.

மூல சக்தியான ஒளி காந்தத்திற்குள் நீர் அமில சக்தியையும்
1.அதனுள் கோடானு கோடி வண்ணமிலம்
2.கோடானுகோடி குண அமிலம்
3.கோடானு கோடி மண அமிலம் என
4.முத்தொடரையும் தன்னுள் ஐக்கியம் கொண்டு “விஸ்வரூப சக்தியாகக் காட்டப்பட்டதே ஆதிசக்தி…!”

பால்வெளி சூட்சமத்தில் எங்கும் நிறைந்திருக்கும் ஆதிசக்தியின் செயல் நிகழ்வுகள் கோடானு கோடியாக குணங்களும்… மணங்களும்… நிறங்களுடன்.. ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு செயல்படும் செயலாக உள்ளது.

அதன் மூலம்
1.பிறிதொன்றை உருவாக்கியும்
2.ஈர்ப்பின் தொடர்பில் தன்னை வளர்ச்சிப்படுத்தியும்
3.அதே தொடர்பில் பிறிதொன்றை வளர்த்துக் கொண்டும் பரந்து செயல்படும் அந்தச் செயலை
4.மூவுலகம் என்ற சூட்சமப்படுத்திக் காட்டியதை முழுமையாக யாராலும் விளக்க முடியாது.

உதாரணமாக ஒரு உயிரணு மூன்று நட்சத்திரத்தின் சக்திகளைக் கொண்டதாக இருந்தாலும் அதில் எது வீரியமோ அதுவே உயிரின் சக்தியாகவும் மற்ற இரண்டும் குண வளர்ப்பிற்குத் துணையாகவும் இயங்குகிறது. உயிரணு தனக்குள் ஈர்த்திடும் செயல் நிலைக்கொப்ப பிறப்பிற்கும் (சரீரமாக) வருகிறது.

அதனின் இயக்கங்களையும் செயல்களையும் சித்தர்களால் பெயர் நாமப்படுத்தி விளக்கப்பட்டுள்ளது. தன்னைத்தான் உணரும் பக்குவத்தில் தன் உயிருக்குள் இயங்கும் மூல சக்திகளை தியானத்தின் மூலம் உணரலாம். உயிரை அறிந்திட மனதில் உள்ள சஞ்சலங்களை எல்லாம் அகற்றிடும் வைராக்கிய சிந்தனை வேண்டும்.

“ஆட்டுவிக்கும் சக்தி…!” என்பது கண்ணுக்குப் புலப்படாத நிலையில் வளர்ச்சி கொண்டிடும் பரவெளியின் செயலைத்தான் மூவுலகம் என்று சொன்னார்கள் மகா ஞானிகள்.
1.ஒவ்வொரு உயிரணுவும் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும் செயலுக்கும்
2.அதே தொழில் புரியும் மற்ற மற்ற நிலைகளுக்கும் நாமத்தில் வேறுபாடே தவிர செயல் அனைத்தும் ஒன்றே…!

மூவுலகம் என்பது எவை…?
1.கோடானு கோடி நிறங்கள் ஓர் உலகமாக
2.கோடானு கோடி மணங்கள் ஓர் உலகமாக
3.நிறம் மணம் குணம் என்றிட்ட அமிலத் தன்மைகளுடன் கலந்து வியாபித்துச் செயல்படும் நிலையில்
4.உயிரணுக்கள் சரீரம் கொண்ட பிறகு முத்தொழிலின் செயல்பாடு ஒவ்வொரு சரீரத்திலும் உண்டு.

மூவுலகம் என்றால் அதல.. சுதள… பாதாளம்…! என்ற எண்ணமா…?

இவைகள் எல்லாம் உலகிற்கு நீதியைப் புகட்டி… நற்பண்பின் வளர்ப்பில் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள… மனதின் திறனை வலுக் கொள்ளச் சொல்லப்பட்ட தத்துவங்களாக விளங்கிடல் வேண்டும்.

சிவ சக்தி என்பது ஆண் பெண் சரீரத்திற்குள்ளும் சிவ சக்தியின் தொடர்பை அறிந்து கொள்பவன்
1.தாய்க்குகந்த சக்தி அனைத்தையும்
2.இந்த மனித சரீரப் பிண்டத்திற்குள்ளேயே (தனக்குள்) அறிந்திட முடியும்.

குழந்தைகள் பள்ளி மாணவ மாணவிகளுக்குள் இயங்கும் விசித்திரமான செயல்களுக்குண்டான காரணம் என்ன…?

Soul Alive.jpg

குழந்தைகள் பள்ளி மாணவ மாணவிகளுக்குள் இயங்கும் விசித்திரமான செயல்களுக்குண்டான காரணம் என்ன…?

அமெரிக்காவில் ஒரு ஐந்து வயதுக் குழந்தை “கணக்கு ரொம்பத் தெளிவாகப் போடுகிறது…!” என்று சொல்வார்கள்.

கணக்கின் தன்மை போட்ட ஒரு நிலையில் ஒருவர் இறந்து விட்டால் அந்த ஆன்மா சந்தர்ப்பவசத்தால் ஒரு குழந்தையின் உடலுக்குள் சென்று விட்டால்
1.கணக்குகளைத் தன்னாலே ஒன்றுமே பார்க்காது
2.மள…மள… என்று போட்டுக் கொண்டே இருக்கும்.

இதைப் பார்க்கும் மற்றவர்கள் என்ன சொல்வார்கள்…? போன பிறவியில் இந்த மாதிரி இருந்தது. அதனால் இந்தப் பிறவியில் இப்படிக் கணக்குப் போடுகின்றது…! என்பார்கள்.

ஆனால் ஒரு ஆன்மா இந்த உடலுக்குள் சென்ற பின் தான் இது எல்லாம் நடக்கும். இன்னொரு ஆவி உடலுக்குள் போய்விட்டால் அது கற்றுணர்ந்த உணர்வுகளை அந்த உடலிலே செயல்படுத்திக் காட்டும்.

பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளிடம் இதைப் பார்க்கலாம். பள்ளியில் படிக்கும் போது மாணவர்கள் இரண்டு பேர் சந்தோசமாகப் பழகுகிறார்கள்.

சந்தோசமாக இருந்த மாணவர்களுக்குள் ஒரு மாணவன் தன் குடும்பத்தில் ஏதோ காரணத்தால் குறையாகி மனது வேதனைப்பட்டு அதனால் விஷத்தை உணவாக உட்கொண்டு இறந்து விடுகின்றான்.

அதைக் கேள்விப்பட்ட அவனுடைய நண்பன் பாசத்தால் “போய்விட்டாயே நண்பா…!” என்று எண்ணினால் விஷம் குடித்து இறந்த ஆன்மா இவன் உடலுக்குள் புகுந்துவிடும்.

ஆக அவன் எப்படித் தன் குடும்பத்தில் வெறுப்பின் தன்மை அடைந்து விஷத்தை குடிக்கச் சென்றானோ இந்த உணர்வுகள் எல்லாம் நண்பனுக்குத் தோன்றும்.
1.அவனும் தாய் தகப்பனை வெறுக்க ஆரம்பிப்பான்.
2.விஷத்தைக் குடிக்க வேண்டும் என்ற உணர்ச்சிகள் தோன்றும்
3.இப்படி மாணவ மாணவிகள் நிறையப் பேர் உண்டு.

அதே போல ஒரு தீய மாணவனுடைய உணர்வுகள் உடலிலே புகுந்து விட்டால் அவன் என்னென்ன குற்றச் செயல்களைச் செய்தானோ அதே குற்றத்தை இயக்கும் அணுக்கள் புகுந்த உடலுக்குள் இங்கேயும் விளைந்துவிடும்.

அவன் விடும் சுவாசத்தை இவனும் வளர்ப்பான். ஏன் என்றால் பாசத்தால் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் இதை வளர்க்கும். இது எல்லாம் இயற்கையின் நியதிகள். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறோம்.

மகரிஷிகளின் அருள் மணங்களையும் அவர்கள் வெளிவிட்ட மூச்சலைகளையும் நாம் தியானத்தின் மூலம் பெறவேண்டும்

அருள் ஞானி ஆகுங்கள்

மகரிஷிகளின் அருள் மணங்களையும் அவர்கள் வெளிவிட்ட மூச்சலைகளையும் நாம் தியானத்தின் மூலம் பெறவேண்டும்

 

நாம் ஒரு வேலை செய்யும் பொழுது கையிலே அழுக்குப்படுகின்றது. ஆனால் அதைத் துடைத்துவிட்டுத் தான் உணவு உட்கொள்ளுகின்றோம். அடுத்த காரியத்தைத் தொடர்கின்றோம்.

ஏனெனில் நாம் கையிலே அழுக்கானபின் தொழில் செய்தபின் அதைத் துடைக்காதபடி மற்றொரு இடத்தில் செயல்பட்டால் அதுவும் மாசு பட்டுவிடும்.

இதைப்போல ஒருவருடைய நிலைகள் நாம் பார்த்துக் கொண்ட பின் அவர்களைக் காப்பாற்றும் எண்ணம் கொண்டு காப்பாற்றினாலும் அதைத் துடைக்கும் நிலை நமக்கு வரவேண்டும். அதைத் துடைத்திடும் உணர்வு நமக்குள் உண்டு.

ஒரு குழந்தைக்குத் தலைவலி வந்து விட்டால் பச்சிலை இங்கிருக்கின்றது என்றால் நாம் எப்படி தேடிச் சென்று, கொண்டு வந்து அதைக் குழந்தைக்குக் கொடுக்கின்றோம். நம் ஆறாவது அறிவு இப்படி வேலை செய்கிறது.

இதைப் போலத் தான் தீமைகள் வரும் பொழுதெல்லாம் தன் உணர்வின் எண்ணத்தால் “மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும்…!” என்ற ஏக்க உணர்வு கொண்டு எண்ணி நமக்கு முன் சுழன்று கொண்டு இருக்கும் அருள் ஞானியின் உணர்வைத் தனக்குள் எடுத்துத் துடைத்துப் பழக வேண்டும்.

அந்த மெய் ஞானிகள் அனைவரும்
1.தன் வாழ்க்கையில் வந்த எதிர் நிலைகள் அனைத்தையும்
2.தனக்குள் தீமைகள் விளைவித்த அந்தச் சக்தியை அவர்கள் துடைத்துப் பழகி,
3.நஞ்சினை அடக்கி உணர்வினை ஒளியாக்கி,
4.ஒளியின் சிகரத்தால் பொருள் கண்டு உணரும் ஆற்றல் பெற்று
5.மற்ற எந்த சக்தியானாலும் தெரிந்திடும் ஆற்றல் பெற்று
6.தெரிந்து கொள்ளும் உணர்வின் தன்மையை வளர்த்து
7.தங்கள் உணர்வு அனைத்தையும் ஒளியாக மாற்றிச் சென்றவர்கள்.

இதைத்தான் ஏழாவது அறிவு சப்தரிஷி என்று சொல்வது. இதைச் சப்தரிஷி மண்டலம் என்று சொல்வார்கள்.

மனிதனாக வளர்ந்து அந்த மெய் ஞானி அவன் தெளிந்து நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி,
1.அவன் உடலிலே விளைய வைத்த ஆற்றல்களும்
2.அவன் உடலில் வெளிப்பரப்பிய மணமும் மூச்சலைகளும்
3.அவன் எண்ணத்தால் வெளியிட்ட உணர்வும் இந்தச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்துள்ளது.

இப்பொழுது, உங்களுக்கு யாம் உபதேசிக்கும் பொழுது அவர்கள் உடலில் விளைய வைத்த மணங்களை நீங்கள் நுகர நேருகின்றது.

அந்த மணங்களை நீங்கள் நுகரும் பொழுது உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த வேதனைகளையும் மனக்கவலையையும், நீக்கிடும் சக்தியாக அமையும்.

மேலும் அந்த மகரிஷிகளின் அருள் மணங்கள் ஆற்றல்மிக்க சக்தியாக உங்களுக்குள் இணைந்து உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய வினைகளை சாப வினைகளை பாவ வினைகளை பூர்வ ஜென்ம வினைகளை நீக்கிடும் உங்களுக்கு மன ஆறுதலும் மன பலமும் மனத் தெளிவும் ஏற்பட்டு மகிழ்ந்த உணர்வுகளை உங்களுக்குத் தூண்டிக் கொண்டே இருக்கும்.

சைவத்தை வளர்ப்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

soul powers

சைவத்தை வளர்ப்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சைவ சித்தாந்தத்தின் உண்மை நிலை என்ன…?
1.ஒளி நிலையாக ஒளிர்வது அனைத்தும் சைவமாகவும்
2.சைவத்தை வளர்க்கும் மாற்றுத் தன்மை யாவும் அசைவமாகவும் ஆகின்றது.
3.இந்த உயிர் சைவம்…. உடலோ அசைவம்…!
4.பூமி அசைவம்… பூமி பெறும் ஒளியோ சைவம்…!

இருள் இருந்தால் தான் ஒளியைப் பாய்ச்சி உண்மையை அறிய முடியும். ஆகவே அசைவமான உணர்வைச் சைவமாக்கிடும் சித்தம் கொண்டு ஒளியின் ஒளியாக ஒளி நிலையை வளர்க்க வேண்டும். அசைவமான உடலிலிருந்து அழியா வளர் சக்தியான சைவைத்தை வளர்த்திடல் வேண்டும்.

ஜீவ பிம்ப சரீர அசைவ உணர்வினால்
1.சைவ ஆத்மாவை எண்ணத்தின் சித்தம் கொண்டு
2.சிவ சக்தி நிலை பெறச் செய்ய வேண்டும்.

அசைவமான உடலிலிருந்து தான் உயர்வான எண்ணங்களைச் சமைத்துச் சைவமான இந்த உயிராத்மாவை வளரும் நிலைக்குக் கொண்டு செல்ல முடியும்.

ஏனென்றால் ஜீவனற்ற ஆத்ம உயிர்களினால் எண்ணத்தின் சமைப்புத் தன்மைக்கு அசைவ நிலை இல்லாததினால் வளரும் நிலைக்கு வழியில்லை.
1.சமைக்கப்படுவது அனைத்தும் அசைவம்.
2.வளர்வது அனைத்தும் சைவம்.

மாறு கொண்டு சுழலும் நிலையிலிருந்து பகுத்தறியும் ஆற்றலின் சித்தத்தினால் இந்த உயிராத்மாவையே சைவ சித்தமாக்கிடல் வேண்டும்.

இந்தக் கலியான உலகில் யாம் சொல்லும் முறைப்படி தியானித்தால் அன்று சித்தர்கள் மகரிஷிகள் கண்டுணர்ந்த இயற்கையின் பேருண்மைகளை அறியலாம். அணுவுக்குள் அணு மாறுபடும் நிலைகளையும் பூமியின் உள் நிலை மற்ற கோளங்களின் செயல் முறைகளையும் அறிந்திடலாம்.

சைவத்தின் சித்தத்தால் தன் நிலை உணர்ந்து அனைத்து நிலையையும் அறியும் அந்த அருள் ஞான சக்தி மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு உயிராத்மாவிற்கும் உண்டு.

அதை உணர்த்துவதே சைவ சித்தாந்தம்…!

உங்களுக்கு யாம் முழு நம்பிக்கையுடன் கொடுக்கும் உன்னதமான சக்தி…!

 

உங்களுக்கு யாம் முழு நம்பிக்கையுடன் கொடுக்கும் உன்னதமான சக்தி…!

1.உலக மக்கள் அனைவரும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்ற
2.இந்தச் சக்தியை நாம் முதலில் பெற வேண்டும்.

குடும்பங்களில் கணவன் மனைவி இருவரும் ஆத்ம சுத்தியை அவசியம் செய்ய வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியை அவர் ஜீவாத்மா பெற வேண்டும் என்று கணவன் மனைவியை நினைக்க வேண்டும். அதே போல் மனைவி கணவனை நினைக்க வேண்டும்.

இந்த உணர்வின் நிலைகள் இருவருடைய நிலைகள் ஒரு நிலை கொண்டு சரியான முறையில் யாம் சொல்லும் தியானத்தைச் செய்து வந்தால் இதில் நீங்கள் சொர்க்க பூமியைக் காணலாம்.

ஒரு குடும்பத்திற்குள் கணவன் மனைவி இரண்டு பேருமே மகிழ்ச்சியாக இருந்தால்தான் அது சொர்க்கலோகம். ஆகவே கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து ஒற்றுமை என்ற நிலைகளை இங்கே உருவாக்க வேண்டும்.

குழந்தைகளிடம் சில குறைபாடுகள் இருப்பினும் அவர்கள் மகரிஷிகளின் அருள் உணர்வு பெறவேண்டும் மலரைப் போல் மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெறவேண்டும் என்று குழந்தைகளுக்கு இந்த ஆசியை ஊட்ட வேண்டும். நம்முடைய நினைவு அதுவாகத்தான் இருக்க வேண்டும்.

1.குழந்தைகள் கல்வியில் சிறந்த திறன் இல்லை என்றாலும்
2.மகரிஷிகளின் அருள் உணர்வு அவன் பெறவேண்டும்
3.கல்வியில் சிறந்தவனாக அவன் வளர வேண்டும் வாழ வேண்டும் என்ற உணர்வை அவன் மேல் கூர்மையாகப் பாய்ச்சி
4.அதைப் போல் அந்தக் குழந்தைகளையும் எண்ணி ஏங்கும்படிச் செய்ய வேண்டும்.

அம்மா அப்பா அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்… நாங்கள் கல்வியில் சிறந்த நிலைகள் பெறவேண்டும் என்று குழந்தைகளை எண்ணச் செய்து அந்த உணர்வை ஒன்று சேர்த்து இணையுங்கள்.

அப்படி இணைக்கக் கற்றுக் கொண்டால் இந்த உணர்வின் சக்தி நிச்சயம் குழந்தைகளுக்குள் கல்வியில் சிறந்த ஞானமாக வளரும். கருத்தறிந்து செயல்படும் திறன் பெறுவார்கள். ஆகவே குழந்தைகள் மீது இப்படித்தான் நாம் பாசம் வைக்க வேண்டும்.

காரணம் இன்று தெரிந்தோ தெரியாமலோ விஞ்ஞான அறிவிலே சிக்குண்ட நாம் ரேடியோ டி.வி. இதைப் போன்ற நிலைகளை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
1.குறிப்பாகக் கர்ப்பமுற்றிருக்கும் காலங்களில்
2.பகைமை உணர்வுகளையும் குரோத உணர்வுகளையும் மற்ற தீமையின் உணர்வுகளையும் அதிகமாகப் பார்க்க நேர்ந்தால்
3.ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் பதிவாக்கி விட்டால்
4.பிறக்கக்கூடிய குழந்தைகள் நாம் உற்றுப் பார்த்துப் பதிவாக்கிய (டி,வி.மூலம்) நிலைகளைத்தான் செய்யும்.

ஆகவே ஞானக் குழந்தைகளை உருவாக்க வேண்டும் என்றால் கர்ப்ப காலங்களில் டி.வி. பார்ப்பது போன்ற நிலைகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்
2.அகஸ்தியன் கண்ட மெய் உணர்வுகள் எல்லாம் என் கருவிலிருக்கும் குழந்தையிடம் வளர வேண்டும்
3.வியாசகர் எப்படி விண்ணுலக ஆற்றலைக் கண்டாரோ அந்த உணர்வுகள் அனைத்தும் கருவிலே விளைய வேண்டும்
4.இதை எல்லாம் குழந்தை அதை அறியும் ஆற்றல் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஆதியிலே அகஸ்தியன் எவ்வாறு வான இயல் புவி இயல் உயிரியலை அறிந்தானோ அந்த உணர்வுகள் அனைத்தும் கருவிலே விளைய வேண்டும் என்று அதிகாலை துருவ தியான நேரத்தில் விண்ணை நோக்கி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

அந்த உணர்வை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள். கர்ப்பத்தில் இருக்கும் கருவுக்குள்ளும் இதை ஊட்டுங்கள்.
1.கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
2.அந்த உணர்வுகள் கருவில் இருக்கும் குழந்தைக்கும் அது பாயும்.
3.நம் உடலில் வளர்ச்சியாகும் அணுக்களும் இந்தச் சக்தியைப் பெறும்.

நம் கண்ணின் பார்வைக்கு அந்த வீரிய ஆற்றல் (ANTENNA POWER) உண்டு. அது தான் பரமாத்மா என்பது.
1.நம்முடைய நினைவை இந்தப் பிரபஞ்சத்திற்குள் எங்கே செலுத்தினாலும்
2.அதை ஈர்க்கும் சக்தி நம் கண்ணுக்கு உண்டு.
3.அத்தகையை ஈர்க்கும் சக்தியைத்தான் உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கின்றோம்
4.ஆகவே உங்கள் நினைவின் ஆற்றலை விண்ணிலே செலுத்தி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறப் பழகிக் கொள்ளுங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு (ஞானகுரு) அதைக் கொடுத்ததால்தான் அந்த வலிமை கொண்டு அதைப் பெறும் சக்தியும் அதை அறிந்திடும் உணர்வையும் அதை வளர்த்திடும் உணர்வையும் பெற்றேன்.

அதை நீங்கள் எல்லோரும் பெற முடியும்…! என்ற “முழு நம்பிக்கையுடன்…” உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். ஆகவே
1.நாம் அந்த மகரிஷிகளின் ஆற்றல்களைப் பெற்று
2.நம்மைச் சார்ந்தோரின் பகைமை உணர்வுகளையும் தீமை உணர்வுகளையும் அகற்றும் சக்திகளைப் பெறுவோம்
3.பேரானந்தப் பெரு நிலை பெறுவோம்.

மகரிஷிகளின் மெய் ஞான வித்து

Gnanaguru blessings (2)

மகரிஷிகளின் மெய் ஞான வித்து

ஒரு உணர்வுக்கு ஒரு வித்தைக் கொடுக்கின்றோம். அந்தச் செடி வளர்ந்தால்தான்
1.அந்த வித்தின் ரூபம்
2.மலரின் தன்மை,
3.மணத்தின் தன்மை தெரியும்.

இப்பொழுது, இங்கு ஒரு ஞானவித்தை யாம் உங்களுக்குக் கொடுக்கிறோம். அப்படியென்றால் உங்களுக்குள் பதிவு செய்து, ஈர்க்கக் கூடிய சக்தியைக் கொடுக்கிறோம்.

அப்பொழுது அதில் நாம் ஒன்றியிருக்க எத்தனையோ கஷ்டங்களும் நஷ்டங்களும் இருக்கும். இதையெல்லாம் பிளந்துவிட்டு உள்ளுக்குள் கொண்டு போக வேண்டும். அந்த உணர்வை நமக்குள் வளர்க்கக் கூடிய சக்தி நமக்குள் உண்டு.

1.நாம் வளர்ந்தோம் என்றால் அடுத்தவர்ளையும் வளர்க்கலாம்.
2.அடுத்தவர்களின் வேதனை வளர்ந்தால் அதைக் கேட்டோம் என்றால் நாமும் அந்த வளர்ந்த வேதனையை நமக்குள் வளர்த்துக் கொள்ளலாம்.
3.இப்பொழுது எது தேவை…? சிந்தியுங்கள்..!

அதனாலே சில உண்மையின் உணர்வுகள் உங்களுக்குள் வரும் பொழுது, ஞானம் வளர்ந்து கொண்டே இருக்கும். நீங்கள் தொடர்ந்து இந்த உணர்வுகளை உங்களுக்குள் எடுத்து வளருங்கள்.

ஒரு வித்தை உங்களுக்குக் கொடுத்துவிட்டால் அதைப் பாதுகாக்கும் உணர்வுக்குச் செலுத்த வேண்டுமா…! இல்லையா..? அந்த ஞானத்தின் வித்தின் தன்மை… அது அடர்த்தியானது அந்த “ஆதிசக்தியினுடைய உணர்வுகள்”.

அகண்ட அண்டம் எப்படி இருக்கிறது…? என்று “வட்ட வட்டமாக”, “மோதி…மோதி, மோதி…மோதி” எப்படிப் பல நிலைகள் மாறுகிறது என்று நன்றாகத் தெரியும். அதை நாம் நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதை உங்களுக்குள் பதிவு செய்வது.

1.ஒரு கண்ணாடி சுத்தமாக இருந்தால் நம் உருவத்தைத் தெளிவாகக் காட்டும்.
2.அதில் கொஞ்சம் அழுக்குப் பட்டால் அதில் உருவத்தைத் தெளிவாகக் காணமுடியாது.
3.அந்த அழுக்கைத் துடைத்தால்தான் சரியாக வரும்.

அந்த அழுக்கைத் துடைக்கக் கூடிய உணர்வைத்தான், யாம் கொடுத்துக் கொண்டே இருக்கின்றோம். நம் ஆன்மாவில் இதைப் போன்ற அழுக்குகள் இருக்கின்றது. இதன் வழி கொண்டுதான் நாம் பார்க்க முடியும்.

அதில் அழுக்குப் பட்டிருக்கும் பொழுது
1.அழுக்குப் படவில்லை என்று நாம் சொன்னால் என்ன செய்யும்?
2.அந்த அழுக்குகள் ஒன்று ஒன்றாகக் கூடிக் கொண்டேதான் இருக்கும்.
3.இந்த அழுக்குகளை நாம் சுத்தப்படுத்தியே ஆகவேண்டும். அப்பொழுது, நிச்சயம் இந்தத் தெளிவை அடைகின்றோம்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…?

அகஸ்தியன் நுகர்ந்த மூலிகைகளின் மணங்களை நுகர்ந்து தீமைகளை அடக்கும் வழி

Agastyar meditation

அகஸ்தியன் நுகர்ந்த மூலிகைகளின் மணங்களை நுகர்ந்து தீமைகளை அடக்கும் வழி

 

அகஸ்தியன் நஞ்சினை வென்றிட்ட அந்தப் பேரருள் நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து இந்த உணர்வினை நுகர்ந்து, உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.

அகஸ்தியன் பெற்ற பேரருள் எங்கள் அனைவரது உடல் முழுவதும் படர்ந்து, இரத்த நாளங்களின் கலந்து, எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று இந்த உணர்வின் தன்மையும், உங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியனுடைய தாய் தந்தையர் பெற்ற அந்தத் தாவர இனத்தின் மணங்களை நீங்கள் இப்பொழுது உங்களுக்குள் நுகரும் சக்தி பெறுங்கள்.
1.உங்கள் உடலுக்குள் அந்த உணர்வுகள் செல்லச் செல்ல
2.ஒரு வித்தியாசமான உணர்ச்சிகள், உங்கள் உடலிலே தோற்றுவிக்கும்
3,நுகரும் மணத்தில் வித்தியாசமான மணங்கள் வரும்.
4.இப்பொழுது நம் வாழ்க்கையில் காணும் மணத்தைக் காட்டிலும் இந்த மணங்கள் வித்தியாசமாக வரும்.

சில உடல்களில், நோய்களின் தன்மை இருந்தால், இந்த உணர்வுகளை நுகரும் பொழுது
1.அது ஓடி ஒடுங்குவதை உங்கள் உடல்களில் பார்க்கலாம். உணரலாம்.
2.இப்பொழுது பல பல மணங்கள் வரும்.

உங்கள் உடலில், இதற்கு முந்திய எதிர்நிலையான அணுக்களுக்கு மாறாக, இப்பொழுது நாம் சுவாசிக்கும் மணங்கள் எதிர் நிலைகளை அதை ஒடுக்கும்.

அகஸ்தியனின் உணர்வை நீங்கள் நுகரப்படும் பொழுது உங்கள் உடல்களில் பலவிதமான வித்தியாசமான நல்ல உணர்வுகளும், அந்தத் தாவர இனத்தின் மணமும் உங்களுக்குள் கடும் வெறுப்போ, வேதனையோ, இதைப் போல அவைகளை அடக்கும் உணர்ச்சிகள் உங்கள் உடலுக்குள் ஊடுருவும்.

இப்பொழுது, அகஸ்தியனின் உணர்வுகள் உங்களுக்குள் பட்டபின், யாம் இதற்கு முன்னாடி சொன்ன “ஆதிசக்தியின் உணர்வின் தன்மையை”,
1.அந்த உயர்ந்த உணர்வினை அறிந்திடும் உணர்வும் ஆனந்த நிலையும் பெருவீர்கள்.
2.அருள் உணர்வுகள் உங்களுக்குள் உருவாகும் கருவாக இப்பொழுது உருவாகின்றது.

இப்பொழுது இந்தக் காற்றிலும், ஒரு அற்புதமான, ஒரு தென்றலின் மணம் வரும். அகஸ்தியன் காலத்தில் நுகர்ந்த, அந்த மூலிகையின் மணங்கள் இப்பொழுது உங்களின் சுவாசத்திற்கு வரும்.

இது உங்கள் உடலில் படரப்படும் பொழுது, பல வித்தியாசமான உணர்வுகள் தோன்றும். வெறுப்பு, சலிப்பு, சஞ்சலம், என்ற நிலையை அடக்கும். சிந்திக்கும் ஆற்றலை ஊட்டும்.

யாம் இந்நேரம் வரையில் சொன்ன அகண்ட உணர்வுகளுக்கு உங்கள் எண்ணத்தைச் செலுத்துங்கள். அகஸ்தியன் அறிந்த பேருண்மையை, நீங்கள் அறியும் ஆற்றலை இப்பொழுது பெற்றுக் கொண்டிருக்கின்றீர்கள்.

1.இப்பொழுது உங்களைச் சுற்றி ஒரு ஒளி வரும்.
2.இப்பொழுது பதிவு செய்த உணர்வுகள் அனைத்தும் அகஸ்தியனின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் அனைவரும் வாழ்கின்றோம்.