சைவம்… அசைவம்… சைவ சித்தம்…! பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

saiva sidhdhandam

சைவம்… அசைவம்… சைவ சித்தம்…! பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஒன்றை ஒன்று அழித்துத்தான் ஒன்று வளர்கின்றது. சைவத்திற்கு எதிர்ப்பதம் ஒன்றுண்டு. ஏனென்றால் அழியும் மாறு கொண்ட நிலை இல்லாவிட்டால் “வளர்ப்பிற்கே வழியில்லை…!”

ஜீவ ஆத்ம உடலும் ஒவ்வொரு அணு வளர்ப்பு முறையும் இரண்டும் ஒன்றாகி வளரும் தன்மையில் உடல் பிம்பங்கள் அனைத்துமே அசைவம் தான்.

1.இந்த உடல் என்ற கோளத்தில் நாம் உட்கொள்ளும் உணவும்
2.எண்ணத்தால் எடுக்கும் உணர்வும் இரண்டும் சமைக்கப்படும் பொழுது அணுத் தன்மையாக மாறுகிறது
3.அது அனைத்தும் சைவத்திற்கு எதிர் நிலை அசைவமாகின்றது.

ஆதி சக்தியின் படைப்புகள் அனைத்தும்
1.அமிலம் ஆண் சக்தியாகவும்
2.திடம் கொண்டு செயல்படும் ஜீவ சக்தி பெறுவது பெண் சக்தியாகவும்
3.சிவ சக்தி வளர்ப்பான ஆதிமூலம் (விநாயகர்) முதல் உணர்வு நிலை கொண்டு வழித் தொடர் வளர்கின்றது.

அண்ட கோளங்கள் அனைத்திலுமே – தான் எடுக்கும் அல்லது தனக்குள் சேரும் நிலைக்கொப்ப தொடரின் செயல் நிலை வளர்கின்றது. வளர்ப்பின் வளர் தன்மையில் எடுக்கக்கூடிய ஒலிக்கொப்ப ஒளித் தன்மை பெறுகின்றது.

ஒளியின் வளர்ப்பில் ஒலி ஒளி சுழற்சியில்… ஒன்றின் தொடர் கொண்டு ஒவ்வொன்றின் மோதலில் பலவாகி… தான் எடுக்கும் எண்ணத்திற்கொப்ப வழிப்படுத்தும் வளர்ச்சியில் “உயர்வு நிலை கொண்டவன் தான் மனிதன்…!”

மனித உடலுக்குள் “சைவமான எண்ணத்தை… அந்தச் சித்தத்தை வளர்க்கும் ஞானமாக… அதை வளர்க்கும் நிலைக்குச் “சைவ சித்தம்” வளர வேண்டும்.
1.சைவம் என்றால் வளர்ப்பு
2.சித்தம் என்றால் உண்மையின் உயர்வு நிலை

ஆகவே உயர்வை வளர்க்கும் சைவ சித்தமாக எண்ணத்தைப் பகுத்தறியும் வழி முறைக்கு வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உடல் என்ற கோளத்தில்
1.எண்ணத்தில் எடுக்கும் உணர்வை நற்குணச் சமைப்பாக்கி
2.உடல் கோளத்தில் உயிர் குருவைச் சைவ சித்தமாக்கி
3,மெய் ஒளியைப் பெறும் நிலையாகத் தன் ஆத்ம ஜோதியை ஒளியாக்க வேண்டும்.

சலிப்பு சோர்வு கோபம் அதி காமம் வெறி குரோதம் இந்த இச்சையில் உணர்வுகளும் எண்ணங்களும் கூடும் பொழுது உடலின் ஒவ்வொரு அங்க அவையங்களும் உடல் அணுக்கள் ஒவ்வொன்றும்
1.தன் சைவ சித்தத்தை வளர்க்காமல் அசைவத்தின் அழிவு நிலைக்குச் செல்கிறது.
2.ஆகவே சரீர உணர்வில் எடுக்கும் தீய குணத்தால் தன் சித்தத்தை அழிக்கும் தன்மைக்குச் செல்லக் கூடாது.

அன்பு பாசம் பரிவு வீரம் ஞானம் சாந்தம் என்ற நற்குணங்கள் கொண்டு வளரும் வழித் தொடரில் சித்தமாகி மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்தும் ஒளி சக்திகளை ஆத்ம குருவை வளர்க்கும் தொடருடன் செயல்படுத்தினால்
1.ஒளி நிலைக்குச் சென்று வளர்க்கும் வழித் தொடரில்
2.சைவ சித்த சத்திய உண்மையை
3.ஆதி சக்தியின் சிவ சக்தியாக
4.ஆத்ம ஒளி உயரும் வழிக்கு உயர்வு கொள்ள முடியும்.

தான் செய்வது தான் சரி…! என்ற எண்ணம் இன்று எல்லோருக்கும் வருவதன் காரணம் என்ன..?

kali-purush.jpg

தான் செய்வது தான் சரி…! என்ற எண்ணம் இன்று எல்லோருக்கும் வருவதன் காரணம் என்ன..?

அகஸ்தியன் கண்டுணர்ந்த மெய் உணர்வுகளை அகஸ்தியனுக்குப் பின் அதிகம் வெளிப்படுத்தியவர் வியாசகர்.

அவருக்குக் கல்வி அறிவு இல்லை எனும் பொழுது அவர் வெளிப்படுத்திய உண்மையின் உணர்வுகளை பிருகு.. அத்திரி… என்று ஏழு பேர் பாட நூல்களாக எழுதுகின்றார்கள்.

பிருகு நட்சத்திரத்தின் ஒளிக் கதிரை எடுக்கும் பொழுது அந்த உணர்வின் தன்மையை அவர் நுகர்ந்து அதைப் பற்றும் நிலைக்கு அவர் செல்கின்றார்.

அத்திரியோ ஆலம் விருட்சம் போன்று மற்ற நிலைகளைக் கூட்டி தன் அரசை எப்படி நடத்துவது…? என்று அவர் திட்டம் போடுகின்றார். தன் அரசைக் காக்கும் வழிகளும் மந்திர ஒலிகளை வைத்து எதைப் பெற வேண்டும் என்று இப்படித் தான் செயல்படுத்தினார்கள் பிருகும் அத்திரியும்.

ஆக வியாசகர் கண்டுணர்ந்து வெளிப்படுத்தியதை ஒவ்வொருவரும் தங்கள் உடலின் இச்சைக்காக மாற்றி அதன் வழியில் அமைக்கப்பட்ட நிலைகள் கொண்டு தான் இன்று அரசுகளாக வந்தது.

மனிதனின் உடலில் ஆசைப்படும் உணர்வுகள் எப்படி எல்லாம் வந்தது என்றால்
1,மந்திரங்கள் தந்திரங்களை மனிதனுக்குள் பாய்ச்சுவதும்
2.அவர்கள் ஆன்மாக்களைக் கைப்பற்றுவதும் கைவல்யப்படுத்துவதும் என்ற நிலைகள் கொண்டு
3.தங்கள் அரசாட்சிகளை நடத்தும் நிலைகளுக்குக் கொண்டு சென்றனர்.

அவர்கள் செய்த நிலை தான் இன்று உலகம் முழுவதற்கும் மதங்களாக உருவாக்கப்பட்டதும் மதங்களுக்குள் இனங்களாக உருவாக்கப்பட்டதும்,

1.ஆதியிலே அன்று அகஸ்தியரால் தோற்றுவித்த உணர்வுகளை மற்றவர்கள் கவர
2.அந்த உணர்வின் தன்மை அவர்கள் சொல்ல இவர்கள் தனக்குகந்த சாதக நிலையைக் கொண்டு வர
3.அதன் பின் இந்த மூலத்தைத் தேட வேண்டும் என்று இன்று தேடிக் கொண்டும்
4.சாதுக்களாகக் குடும்பத்தைத் துறந்து வருவதும் மதங்களுக்கு மத குருவாக வருவதும் மதத்தைக் காக்கும் சாமியார்களாக வருவதும்
5.இதைப் போன்ற நிலைகளையே பெரும் பகுதி உருவாக்கப்பட்டு
6.ஆட்சி செய்த அரசனை நிலை நாட்ட விழுதுகளாகப் பாய்ச்சப்பட்டு
7.பெரும்பகுதியான நிலைகள் இன்று உலக நாடுகள் அனைத்தும் சிதைவுண்டும்
8.மனிதன் மீண்டும் தேய்பிறையான நிலைகள் செல்லும் கலியின் தன்மையில் உள்ளோம்.

கலி என்றால் அவரவர்கள் உருவாக்கும் தன்மைகள். அவரவர் உருவாக்கிய நிலைகள் கொண்டு நான் தான் கடவுள்… நான் தான் கடவுள்… நான் தான் கடவுள்… நான் தான் கடவுள்…! என்ற நிலைகளில்
1.”நான்” என்ற அகங்கள் உருவாக்கப்பட்டு
2.தான் செய்தது தான் நல்லது… தான் செய்வது தான் சரி.. மற்றவர்கள் செய்வதெல்லாம் தவறு…! என்ற நிலைகளில்
3.இப்படி உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இதைப் போன்ற தீமைகளை நீக்கும் நிலைகளே நரசிம்மா…! என்பது.

வாழ்க்கையில் வரும் பகைமை உணர்வுகளைத் தனக்குள் புகாது எவர் தடுத்தனரோ… அதைத் தடுப்பதற்கு என்ன வேண்டுமோ.. அதை முறைப்படிச் செய்வோர் தான் அங்கே விண் செல்ல முடியும்… பிறவி இல்லா நிலையை அடைய முடியும்.

தியானம் செய்தால் நல்லதாகும்…! என்று சொன்னாலும் காசைச் செலவழித்து வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறார்கள்

Power of dhiyaanam

தியானம் செய்தால் நல்லதாகும்…! என்று சொன்னாலும் காசைச் செலவழித்து வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறார்கள்

நமது குருநாதர் ஈஸ்வராய குருதேவர் கொடுத்த அனுபவத்தின் தன்மையை ஏராளமான பேரைச் சொல்லலாம்.

இந்த மாதிரி அனுபவத்தை எனக்குக் கொடுத்து, ஒவ்வொரு நிலைகளிலும் உங்களை நீங்கள் நம்புங்கள்…! என்று பலருக்குச் சொல்லி வந்தாலும் கூட என்ன செய்கின்றார்கள்…?

அடுத்தாற்போல் தொல்லை வந்தால்…
1.யாம் சொன்ன பிரகாரம் ஆத்ம சுத்தி செய்வதை விட்டுவிட்டு
2.(இவர்கள் எண்ணி எடுப்பதை விட்டுவிட்டு),
3.ஏதாவது சாமியாரைத் தேடியோ அல்லது ஜோதிடக்காரரிடமோ தான் சென்று விடுகின்றார்கள்.

சாமி (ஞானகுரு) அன்று சொன்னார் நன்றாகியது. இன்று அவர் சொல்வதை எண்ணி, அந்த அருள் உணர்வுகளை எடுத்து நாம் மாற்றி அமைப்போம் என்ற அந்த மனது வருவதில்லை.

மனிதருடைய மனோ நிலை இன்று எப்படி இருக்கிறது..?

தியானத்தை சிரமப்பட்டு எடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், அதற்குப் பதில் சாமியாரிடமோ, ஜோதிடக்காரரிடமோ சொல்லி காசைக் கொடுத்துவிட்டு மாற்றலாம் என்றுதான் இவர்களின் மன நிலைகள் வருகின்றது.

1.நம் எண்ணத்தால் வரும் தீமைகள் நமக்குள் விளைவதை, நம் எண்ணத்தால் எப்படி மாற்றுவது? என்பதை,
2.அந்த மாற்றிக் கொள்ளக்கூடிய சக்தியை,
3.ஆத்ம சுத்தி என்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தை உங்களிடம் கொடுத்தால்,
4.பயன்படுத்தத் தெரியாத நிலைகளில் சோம்பேறித்தனமாக இருப்பதால்தான் இந்த நிலை வருகின்றது.

உங்களை நீங்கள் நம்புங்கள் என்றுதான் சொல்கின்றேன். சாமியாரை நம்புகின்றீர்கள், ஜோதிடத்தை நம்புகின்றீர்கள்.

ஏன் இதையெல்லம் நீங்களே செய்யக்கூடாது?

யாம் சொல்லும் முறைப்படி இந்த அருள் உணர்வுகளை தியானத்தையும், ஆத்ம சுத்தியையும் நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள் என்றால்,
1.உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.
2.உங்களுக்கு நல்லதாகும் என்பதற்குத்தான் இதையெல்லாம் சொல்கின்றோம்.

தரணியின் இயக்கத்தை அறிந்து… அதிலே முதிர்ச்சி பெற்றவர்கள் தான் சப்தரிஷிகள்

RISHI PATHNI

தரணியின் இயக்கத்தை அறிந்து… அதிலே முதிர்ச்சி பெற்றவர்கள் தான் சப்தரிஷிகள் 

 

கேள்வி:-
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தாய் சக்தி… ரிஷிபத்தினி சக்தி.. இரண்டையும் பெற்று மகரிஷி என்ற நிலையை அடைய முடியும் என்கிறார். அந்தச் சக்திகளை நம்முள் எப்படி வளர்ப்பது என்பது குறித்து விளக்கம் வேண்டும்.

பதில்:-
1. தாயின் சக்தி:
ஒரு தாய் தன் வாழ்க்கையில் எத்தனையோ ஆசைகள் வைத்திருந்தாலும் தனக்குள் பல கனவுகள் இருந்தாலும் “தன் குழந்தைகள்…!” என்று வரும் பொழுது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அந்தப் பாசமே தனி.
1.அதை யாராலும் ஈடு செய்ய முடியாது.
2.சாதாரணமாக அந்தப் பாசத்தை மாற்றவும் முடியாது.

அதிலேயும் குறிப்பாகத் தனக்கு ஒன்றுக்கு மேல் குழந்தைகள் இருந்தால் அதிலே எந்தக் குழந்தை சிரமப்படுகின்றதோ அதன் மீது தாய்க்கு அதிகப் பாசம் வரும். (அந்தக் குழந்தை தவறான வழியில் சென்றாலும் கூட)

ஏனென்றால் நன்றாக இருக்கும் குழந்தைகள் எப்படியோ பிழைத்துக் கொள்வார்கள். ஆனால் தவறான வழியில் செல்லும் குழந்தை “கடைசியில் சிரமப்படுமே…!” என்று அந்தத் தாயின் பாச உணர்வு அதிகமாக வேதனைப்படும்.

தாய்ப் பாச உணர்வின் இயக்கமே இப்படித்தான் இருக்கும்…! மனிதனுக்கு மட்டுமல்ல. இயற்கையும் அப்படித்தான்…!

இப்படிப்பட்ட தாயின் பாச உணர்வை யாரெல்லாம் புரிந்து கொண்டு
1.தாயையும் காத்து (எந்தச் சூழ்நிலையிலும்)
2.தவறின் பாதையில் செல்லும் அந்தக் குழந்தைக்கும் நல் வழி காட்டிட உறுதுணையாகத் தாயுடன் இணைந்து செயல்படுகின்றார்களோ
3.அவர்களுக்கெல்லாம் தாய் சக்தி அபரிதமாகக் கிடைக்கும்.

ஏனென்றால் ஒரு தாயற்ற குழந்தைக்குத் தாயாக இருந்து வளர்க்கும் பாசத்தின் செயலே “இந்தத் தரணியின் இயக்கம்…!”

அந்தத் தரணியின் இயக்கத்தைப் போல் நம்மைப் பெற்று… தன் இரத்தத்தையே பாலாகக் கொடுத்து வளர்த்து… ஆளாக்கி… மெய் ஞானப் பாதையைப் பெறும் சந்தர்ப்பத்தையும் உருவாக்கிக் கொடுத்த
1.அந்தத் தாய் தெய்வத்தை உள்ளபூர்வமாக நாம் நேசித்து
2.அவர்கள் உயிரான்மா உயர்ந்த நிலை பெறவேண்டும் என்றும்
3.அவர்கள் என்றுமே எங்களுக்கு நல்லாசி வழங்கிட வேண்டும் என்றும்
4.ஒவ்வொரு நிமிடமும் செயல்படுத்திக் கொண்டு வந்தால் தாய் சக்தியை நாம் முழுமையாகப் பெற முடியும். (தாய் உடலுடன் இருந்தாலும் சரி… உடலுடன் இல்லை… என்றாலும் பெறலாம்)

2. ரிஷிபத்தினியின் சக்தி:
எங்கேயோ பிறந்து வளர்ந்து வந்திருந்தாலும் திருமணம் என்ற பந்தத்திற்குப் பின் கணவன் மனைவியாக ஆன நிலையில்
1.மனைவியின் உணர்வைத் தனக்குள் இணைத்துக் கொண்டு
2.தன் மனைவியை உயர்த்தும் பேரன்பு கொண்டு கணவன் ஒவ்வொரு நாளும் செயல்பட்டால் “பத்தினி…” என்ற நிலைக்கு வரும்.

தாய்க்கு எப்படித் “தன் குழந்தை…” என்று ஒரு பாசம் இருக்கிறதோ அதே போல் மனைவிக்குக் கணவன் மீது ஒரு தனிப் பாசம் இருக்கும். அந்தப் பாசத்தை அன்பாக… பேரன்பாக… கணவன் பக்குவப்படுத்தினால் மனைவியின் சுவாசம் என்றுமே கணவனுக்கு உறுதுணையாக இருக்கும்.

1.கணவன் மனைவி மீது செலுத்தும் அந்தப் பேரன்பும்
2.அதன் மூலம் இணைந்த நிலையில் வரும் மனைவியின் சுவாசமும்
3.இருவர் உடலுக்குள்ளும் கருவாக உருவாகும் பொழுது
4.இரு உணர்வும் ஒன்றாகும்… இரு மனமும் ஒரு மனமாகும்… இரு உயிரும் ஒன்றாகும்…!
5.அதாவது ஆணும் பெண்ணும் சேர்ந்து புறத்திலே குழந்தையை உருவாக்குவது போல்
6.இரண்டு உயிரும் ஒன்றாகக் கருவாகும்… பேரொளியாக மாறும்… மிகப் பெரிய பாதுகாப்புக் கவசமாகும்…!
7.அது தான் சிவசக்தியின் சொரூபம் என்று சொல்வது…! ரிஷிபத்தினி என்பது இது தான்…!

சப்தரிஷிகளாக இருப்பவர்கள் அனைவருமே இந்த நிலையில் தான் உள்ளார்கள்.

வேதனைப்படாமல் உடலை விட்டு உயிரை ஞானிகள் எப்படிப் பிரித்தார்கள்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

kundalini energy

வேதனைப்படாமல் உடலை விட்டு உயிரை ஞானிகள் எப்படிப் பிரித்தார்கள்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.தன்னையே தான் அறிந்து உணரும் செயல்பாட்டில்
2,அண்டத்தையே அறிந்து கொண்டிடும் அந்தத் திறனில்
3.இந்தப் பிண்டத்தையும் அறிந்து கொள்ள மனித மன ஞான எண்ண வழிச் செயல் முறையின் முயற்சியே
4.மகரிஷிகள் அருள் உணர்வுடன் ஒன்றி சக்தியளித்துச் சக்தி பெற்றிடும் சூட்சமத்தில்
5.தன் ஆன்மா வீரிய வளர்ச்சி பெற்று உயர் ஞானம் கொண்டிடும் பக்குவத்திற்கு
6.இந்தச் சரீரத்தின் (எலும்புகள்) மூலம் சேமிக்கும் சேமிப்பு அவசியமாகும்.

மகரிஷிகளின் ஆற்றலை ஈர்த்துச் செயல் கொள்ளும் உடல் உறுப்புகளில் “எலும்புகளின் அமில குண சக்தி வளர்ச்சியின் முதிர்வு…!” ஒரு பாதுகாப்புக் கவசமாகச் செயல்படுகின்றது.

பிராணிகளில் ஊர்வனவாக இருக்கும் நத்தை, ஆமை, சிப்பி, சங்கு இத்தகைய உயிர்த் தொகைகள் தனது உயிர்ச் சக்தி வளர்ச்சிக்கு ஆயுட்காலம் எப்படி உள்ளது…?

உருவின் செயல் சிறு வடிவில் இருக்கும் சங்கு
1.ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீரின் சக்தியில் வளர்கிறது.
2.தன் வளர்ச்சிக்குகந்த சுவாச அமில குணத் தன்மைகளை ஆகாரமாக ஈர்த்திடும் நிலையில்
3.”பரணி நட்சத்திரத்தின்…” சக்தியையும் சேமித்து வளர்ச்சிப்படுத்திக் கொள்கின்றன.

மனித உடல் வளர்ச்சி தாயின் கருவிலே உருக் கொள்ளும் நிலையில் சரீரமாகி வெளியில் வந்து தன் வாழ்க்கையில் உலகோதய நடை முறைக்கு ஆற்றல் கொண்டிடும் பக்குவமே தாயின் கருவில் சிசுவாக இருக்கும் பொழுது பெறும் “பரணி நட்சத்திரத்தின்…” ஆதிக்க வலுவின் மூலம் கிடைக்கும் எலும்புகளின் வளர்ச்சி தான்.

ஆகவே உயிர் சக்தியின் வலுவுக்கு வலுக் கொண்டிடும் சேமிப்பாகப் பரணி நட்சத்திரத்தின் அமில குண ஆதிக்க எலும்புகளில் சத்தாகப் பேராற்றல் கொண்டிடும் பக்குவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

1.நான் (ஈஸ்வரபட்டர்) சுட்டிக் காட்டும் இந்தத் தியான வளர்ப்பின் மூலம்
2.எலும்பின் வீரிய குண விரியத்தை உணர்ந்து
3.சுண்ணம் என்றிட்ட அமில குணங்கள் அடர்வு கொண்டு
4.தன் வளர்ச்சியின் சிறப்பிடத்தைப் பெறும் பொழுது
5.இருபத்தியேழு நட்சத்திரங்களின் ஒளியையும் சேமிக்கும் சக்தியாக அந்த எலும்புகள் செயல்படும்.

சரீரம் தன் வினைப்பயனை அனுபவிக்கும் பொழுது உடல் நலம் குன்றி… உயிர்ச் சக்தி இந்தக் கூட்டினை விட்டுப் பறக்கும் பொழுது… “சரீரம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு யார் மூல காரணம்…?” வேதனைப்படாமல் எப்படி உடலை விட்டுப் பிரிவது…?

1.நம்மை நாம் உணர்ந்து கொண்டு
2.நல்வினைப் பயனாக ஆக்கச் செயலுக்குண்டான எண்ணம் கொண்டு செயல்படும் பொழுது
3.உடலில் உள்ள எலும்புகள் மகரிஷிகள் பெற்ற ஒளி காந்த சேமிப்பைப் பெற்றிருக்கும் பொழுது
4.மூலாதாரம் தொடங்கி எழும் வீரியச் சக்தி முதுகுத் தண்டுவடம் வழிப்போந்து நெற்றிப் பொட்டை அணுகித் தாக்கி
5.உயிர் பறிக்கும் அந்தச் செயலை சரீர அவஸ்தை இன்றி எந்தவிதத் தடங்கலும் இன்றி உயிரை வெளியேற்றலாம்.
6.ஞானிகள் கபாலம் மூலம் தன் உயிர் சக்தியை வெளியேற்றுவர்.

மனித உடலை அவஸ்தையிலிருந்து காப்பவைகள் எலும்புகளின் தொடர்பே. இருந்தாலும் அந்த எலும்புகளில் முற்றிய நோய் இருந்தால் சரீரத்தில் குறைவுபட்டிருக்கும் பரணியின் அமில குணத்தை கொங்கணவ மாமகரிஷியை எண்ணி ஈர்த்துத் தியானிப்பதன் மூலம் அதைச் சொஸ்தப்படுத்த முடியும்.

1.பரணி நட்சத்திரத்தை எண்ணி ஈர்த்திடும் பொழுதே
2.இந்தத் தொடரினை வழி காட்டிய கொங்கணவ மாமகரிஷியையும் எண்ணி
3.சரீரக் கட்டளைக் கேந்திரத்தில் செயல் கொண்டிடும் கார்த்திகை நட்சத்திரத்தையும் எண்ணி
4.ரச மூல அமிலச் சுக்கிரனையும் (வியாழன்) எண்ணி
5.இந்த முத்தொடரையும் சூரியச் சமைப்புடன் பெற்றிட்டால் எலும்புகளின் வலுக் கூடும்.

சப்தரிஷி மண்டலத்தில் இருக்கும் எண்ணிலடங்காத ஒளியான உயிராத்மாக்கள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

Sabdharishi mandalam.PNG

சப்தரிஷி மண்டலத்தில் இருக்கும் எண்ணிலடங்காத ஒளியான உயிராத்மாக்கள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

கணவன் மனைவியாக வாழ்பவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி இருவருமே தியானிக்க வேண்டும். ஏனென்றால் நம் உயிரும் சிவ சக்தியாகத் தான் வாழ்கின்றது.

கணவன் தான் பெற்ற அந்தச் சக்தியைத் தன் மனைவிக்குக் கொடுக்க வேண்டும் அதே போல் மனைவி தான் பெற்ற சக்தியைக் கணவனுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்.
1.ஒருவருக்கொருவர் பெற வேண்டும் என்று இரண்டு பேருமே இவ்வாறு எண்ண வேண்டும்.
2.உயர்ந்த சக்திகள் பெற வேண்டும் இரண்டு பேருமே ஏங்கி எடுக்கும் உணர்வுகள் கருவாகின்றது.

இன்றும் பார்க்கலாம்…! சாதாரணமாக மந்திரவாதிகள் – குடுகுடுப்புக்காரர்கள் இருப்பார்கள். கணவனும் மனைவியும் சேர்ந்து தான் இந்த மந்திரத்தின் நிலைகளில் செயல்படுத்துவார்கள்.

மந்திரத்தால் கணவனுக்கு ஏதாவது ஆனாலும் உடனே மனைவி அதை எடுத்து அதைச் சரி செய்யும். அதாவது ஏவல் பில்லி சூனியங்களால் கணவன் தாக்கப்பட்டால் உடனே மனைவி எடுத்துச் சரி செய்வார்கள்.

இரண்டு பேரும் அந்த மந்திரம் கற்றுக் கொள்ளவில்லை என்றால் அங்கே ஒன்றும் வேலை ஆகாது. தன் மாமன் மச்சானிடம் கொடுக்க மாட்டார்கள். இது மந்திரத்தின் செயல்கள்.

இதைப் போன்று தான் அக்காலத்தில் கணவனும் மனைவியுமாக வாழ்ந்த அகஸ்தியனும் அவர் மனைவியும் பூமியின் துருவத்தை உற்று நோக்கி (வானிலே) துருவத்தின் வழியாக வரும் உணர்வின் தன்மை இருவருமே தனக்குள் பெற்று வானவியலின் உணர்வையே மேற் கொண்டு பார்க்கும் நிலைகள் வருகின்றது.

1.இருபத்தியேழு நட்சத்திரத்தின் தன்மையைத் தனக்குள் கவருகின்றார்கள்.
2.அந்த உணர்வின் வலிமையைப் பெறுகின்றார்கள்.
3.அது மற்ற கோள்களுடன் கலந்து வருவதையும் அதைச் சூரியன் பெறுவதையும் கணவன் மனைவி இரண்டு பேருமே நுகர்கின்றார்கள்.

அப்படிப் பெற்ற உணர்வுகள் தான் நம் பிரபஞ்சத்தின் இயக்கத்தை முழுமையாக அறிந்து அதைத் தனக்குள் பெருக்கி வளர்த்து கொண்டார்கள்.

இரண்டு உயிர்களும் இரண்டு உடல்களும் இரண்டு பேருமே ஒன்றாகச் சேர்க்கப்படும் போது தான் வசிஷ்டரும் அருந்ததியுமாக அவர்கள் வளர்ந்தனர். நளாயினியைப் போல ஒருவரை ஒருவர் மதித்து நடந்தனர்.

கணவன் மனைவியை மதித்து நடப்பதும் மனைவி கணவனை மதித்து நடப்பதும்
1.இந்த இரு உணர்வும் வந்தவுடனே “சத்தியவான் சாவித்திரி…!”
2.இந்த உயிர் சத்தியமாகின்றது
3.தன்னுள் இணைந்து கொண்ட சக்தி அது உண்மையின் உணர்வாக ஒளியாக மாறுகின்றது.
4.அதைத் தான் சத்தியவான் சாவித்திரி என்று சாவித்திரி எமனிடம் இருந்து தன் கணவனை மீட்டினாள் என்று காட்டப்பட்டது.

(இன்று ரொம்பப் பேர் வீட்டிலே பார்க்கலாம். சத்தியவான் சாவித்திரி நிறையப் பேர் இருப்பார்கள். ஒருவரை ஒருவர் உதைத்துக் கொண்டு நீயா…? நானா…? என்ற வகையில். இன்று இதைத் தான் அதிகமாகப் பார்க்க முடிகின்றது. அகஸ்தியனும் அவன் மனைவியும் பெற்ற நிலைகள் இல்லை)

அகஸ்தியனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றென இணைத்து இன்னொரு உடலுக்குள் சேராதபடி உணர்வுகளை ஒன்றாக இணைந்து எந்தத் துருவத்தைக் கூர்மையாக உற்றுப் பார்த்து நுகர்ந்தார்களோ அந்த உணர்வின் தன்மை வலிமை கொண்டு இந்த உடலை விட்டுச் சென்ற பின் அந்த எல்லையை அடைந்தார்கள்.

நம் பூமிக்கு வரும் உணர்வினை ஒளியாக மாற்றி ஒளிக் கதிராகத் துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்கள். இது ஒரு குடும்பம். அகஸ்தியனுடைய தாய் தந்தை அவர் உடலிலே இருந்தார்கள். அவர்களும் அதே ஒளியின் சரீரமாக அவனுடன் இருக்கின்றார்கள்.

அகஸ்தியனைப் பின்பற்றிச் சென்றவர்கள் அவருடைய ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள். அன்னை தந்தை அரவணைப்பில் ஒளியாகச் சென்று சப்தரிஷி மண்டலங்களில் இருப்போரும் பல உண்டு.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் அன்னை தந்தையரின் உயிரான்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும். அவர்கள் உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் என்று சொன்னவர்கள்
1.அவர்கள் தனித்துச் சென்றாலும் அந்தக் கூட்டமைப்பில்
2.சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்தில் அழியா ஒளியின் சரீரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

இதைப் பார்க்கலாம்…! அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் நம் கண்ணுக்கு புலப்படாத எண்ணிலடங்காத ஒளியான நிலைகள் நிறைய உண்டு.

1.டெலஸ்கோப் (TELESCOPE) வைத்து நீங்கள் பார்த்தாலும் ஒரு சில தான் தெரியும்.
2.அதைக் காட்டிலும் நுண்ணிய அலைகள் அந்த காலத்தில் அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில் சென்றவர்களும் அவன் பின் சென்றவர்களும் பல உண்டு.

சப்தரிஷி மண்டலமே மனிதன் அடைய வேண்டிய கடைசி எல்லை..!

துருவ தியானத்தின் முக்கியத்துவம் என்ன…?

dhuruva-meditation

துருவ தியானத்தின் முக்கியத்துவம் என்ன…? 

(1) அகஸ்தியன் இளம்பிஞ்சு வயதில் வானுலக ஆற்றலை நுகருகின்றான்

அகஸ்தியன் தன் தாய் கருவில் இருக்கும் பொழுதே அவன் சந்தர்ப்பம் விஷத்தை ஒடுக்கிடும் ஆற்றல்களைப் பெற்றான். அவன் பிறந்த பின் வானை நோக்கிப் பார்க்கும் பொழுது வானில் உருவாகும் நஞ்சினைப் பார்க்கின்றான். அந்த நஞ்சினைப் பார்க்கும் திறன் அவனுக்குள் வருகின்றது.

சூரியனிலிருந்து வரும் அந்த அல்ட்ராவயலெட் என்ற நஞ்சினை அதனுடைய இயக்கத்தின் தொடரில் அவன் காணுகின்றான்.

சூரியன் பிரிக்கும் அந்த உணர்வையும் இந்த நஞ்சுகள் பரவி வரப்படும் போதும் நட்சத்திரத்திலிருந்து பிற மண்டலங்களிலிருந்து வரும் நஞ்சினை சூரியனின் காந்த சக்தி அணுக்களாக பரவச் செய்து அது பிரபஞ்சத்தில் பரவுவதையும் பார்க்கின்றான்.

தன் இளம் வயதில் அவன் அறியாதபடி இதையெல்லாம் அகஸ்தியன் காணுகின்றான். ஆனால் சொல்லால் சொல்ல முடியவில்லை, நுகர்ந்தறிகின்றான். அறிவின் தன்மை உணர்கின்றான்.

அவனுடைய வளர்ச்சியில் வரவர இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தின் தொடரை உணர்கின்றான். அவன் ஐந்தாவது வயது வரப்படும் போது அவன் தாய் தந்தையர்கள் மடிந்து விடுகின்றார்கள்.

அவர்கள் தாய் தந்தையர்கள் நஞ்சினை தன் உடலில் அதிகமாக சேர்த்துக் கொண்டதனால் நஞ்சினை அதிகமாகச் சுவாசித்ததால் அவர்கள் உடலிலே வளர்த்த நல்ல அணுக்கள் மடியத் தொடங்கிவிடுகின்றது.

ஏனென்றால், நஞ்சின் தன்மை அதிகமான நல்ல அணுக்களுக்குள் இணைக்கப்படும் போது அந்த உடல் அது மடிந்து விடுகின்றது.

ஆனால் கருவில் வளர்ந்த அகஸ்தியனுக்குள் நஞ்சின் நிலைகள் இணைந்து, நஞ்சினை உணவாக எடுத்து அந்த நஞ்சினை தனக்குள் ஜீரணித்து அடக்கிடும் சக்தியாக அது விளைகின்றது.

1.பிறந்தபின் அகஸ்தியன் என்றும் அணுவின் ஆற்றலை அறியக்கூடிய சக்தியும்,
2.விண் உலகத்தை உணர்வின் அறிவாக தனக்குள் அறிந்திடும் உணர்வுகளும் பெறுகின்றான்.
3.அவ்வாறு தன் அறிவின் துணை கொண்டு வான்வீதியில் வானுலக இயக்கத்தைக் காணுகின்றான்.

(2) ஐந்தாவது வயதில் துருவத்தின் ஆற்றலை அறிகின்றான்

தனது ஐந்தாவது வயதில் வானயியல் தத்துவத்தை அவன் அறிந்து கொள்ளும் சக்தி பெற்று, விண்ணிலிருந்து வரும் சக்திகளை பூமி தன் துருவப் பகுதியின் வழியாகக் கவருவதை உணர்கின்றான்.

ஆனால் தாய் கருவில் இருக்கும் பொழுது பெற்ற நஞ்சை அடக்கும் இந்த உணர்வுகள் அகஸ்தியனுக்குள் விளைந்திருப்பதால் துருவப் பகுதியில் வரும் அந்த நஞ்சு கலந்த அணுக்கள் வருவதை இவன் கண்ணால் பார்க்கின்றான்.

பார்த்து இந்த உணர்வின் அலையை அவன் நுகர்ந்தாலும், நஞ்சினை அடக்கிடும் உணர்வுகள் இவனுக்குள் விளைகின்றது. அகஸ்தியன் தன் ஐந்து வயதில் துருவத்தின் ஆற்றலை அறிந்ததால் அவனுக்குத் துருவன் என்று காரணப் பெயரையும் வைக்கின்றார்கள்.

துருவத்தை நுகர்ந்தறிந்து வானயியல் தத்துவத்தை சொல்லால் வெளிப்படுத்துகின்றான். அவனிடமிருந்து வெளிப்பட்ட உணர்வின் எண்ணங்களை சூரியனின் காந்தசக்தி கவர்ந்து நமது பூமியில் அலைகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றது.

அலைகளாக மாற்றிய அந்த சக்திகள் இன்றும் உண்டு.
1.அதனைப் பெறும் தகுதியாக
2.நமது குருநாதர் அவர் பெற்ற சக்தியை எமக்குள் அது பதிவு செய்து
3.அதை உணரும்படியும் அதை நுகரும்படியும் அதை எமக்குள் வளர்க்கும்படியும் செய்தார்.

அவ்வாறு அவர் காட்டிய உணர்வின் அந்த அருள்ஞான வித்தை எமக்குள் பதிவாக்கப்படும் போது குரு காட்டிய அருள்நெறி கொண்டு அதன் உணர்வை யாம் நுகர முடிந்தது

அன்று துருவனால் வெளிப்பட்டதும் துருவனின் தாய் தந்தையர்கள் தனக்குள் பெற்ற அந்த உணர்வின் அலைகளும் இந்த பூமியில் படர்ந்து பரவி உள்ளதை குருகாட்டிய அந்த உணர்வின் வித்தால் அதை நுகர்ந்தறிந்து இப்போது உங்களுக்குள்ளும் யாம் உபதேசிக்கின்றோம்.

யாம் உபதேசிக்கும் அந்த உணர்வின் ஆற்றல்கள் வெளி வருவதை சூரியனின் காந்தசக்தி கவர்வதும் அதை நீங்கள் நுகரும்போது அதன் அறிவாக அந்த அணுவின் தன்மை உங்கள் உடலில் உருவாகின்றது.

(3) நஞ்சினை வென்ற துருவனின் உணர்வை, உணவாக உட்கொள்ளும் அணுவாக உங்களுக்குள் உருவாக்கச் செய்கின்றோம்

அப்படி உங்களுக்குள் உருவாகும் அந்த அணு எதிலிருந்து உருவானதோ, (துருவன் நஞ்சினை வென்ற) அந்த உணர்வை உணவாக உட்கொள்ளும் அணுவின் தன்மை அடைகின்றது. அந்த நிலை அடையச் செய்வதற்குத்தான் துருவ நேரத்தில் இந்த உபதேசம்.

அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்தறிந்து, இந்த மண்ணுலகில் வந்த நஞ்சினை வென்று, நம் பூமியின் துருவப் பகுதியில் நிலை கொண்டு இன்றும் விண்ணுலக ஆற்றலை தனக்குள் மாற்றிக் கணவனும் மனைவியும் இணைந்து துருவ மகரிஷியாகி நஞ்சினை ஒளியாக மாற்றிடும் சரீரத்தைப் பெற்றார்கள்.

ஆறாவது அறிவின் துணை கொண்டு நஞ்சினை ஒளியாக மாற்றிடும் திற9னை தனக்குள் உருவாக்கினார்கள். அதாவது, ஆறாவது நிலைகள் கொண்டு ஏழாவது நிலைகள் அடைந்ததை சப்தரிஷி என்றும், ரிஷித்தன்மை அடைந்ததை துருவ மகரிஷி என்றும் துருவத்தை நுகர்ந்து அறிந்ததனால் துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.

கணவன் மனைவி இருவரும் இன்று நம் பூமிக்கு வரும் அனைத்தையும் மாற்றி, அதை ஒளியின் சுடராக அவர்கள் உருவாக்கிக் கொண்டே உள்ளார்கள்.
1.தன் இனப் பெருக்கத்தை ஒளிச்சுடராக மாற்றிய அந்த உணர்வலைகள்
2.இன்று நமது பூமியில் பேரருள் பேரொளியாகப் பரவிக் கொண்டுள்ளது.
3.அவ்வாறு துருவப் பகுதியிலிருந்து வரும் அத்தகைய ஆற்றலைப் பருகுவதற்குத்தான் இந்தத் துருவ தியான உபதேசம்.

அவர்கள் எப்படி நஞ்சினை வென்று இந்த உடலிலேயே ஒளியாக மாற்றும் உணர்வுகள் பெற்றார்களோ அதை நாம் நுகர்ந்தோம் என்றால் இந்த வாழ்க்கையில் நம்மையறியாது எத்தனையோ விஷத் தன்மைகளை நாம் நுகர நேர்ந்து விஷ அணுக்கள் நமக்குள் உருவாகி இந்த மனிதனின் உடலை கரையச் செய்யும் அல்லது மாற்றி அமைக்கும் நிலைகளிலிருந்து நாம் தப்ப முடியும்.

வராகன் தீமைகளை வென்றிடும் உணர்வு பெற்று எப்படி மனிதனாக உருவாக்கியதோ இதைப்போல மனிதனானபின் தீமையை வென்றிடும் அந்த உணர்வின் எண்ணம் கொண்டு, நாம் அந்த தீமையை வென்றிட்ட அந்த துருவ மகரிஷியின் ஆற்றலை நாம் பெற்றுவிட்டால் இந்த உடலை விட்டு நாம் செல்லும் போது அதன் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்றடையலாம்.

ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்திலிருந்து வருவதை சந்தர்ப்பத்தால் நுகர்ந்தவர்கள் அனவரும் ஏழாவது நிலை அடைந்து, இன்று சப்தரிஷி மண்டலமாக சுழன்று கொண்டு உள்ளார்கள்.

அதனின்று வெளிப்படும் உணர்வினை, இன்று சூரியன் காந்த சக்தி கவர்ந்து துருவப்பகுதியின் வழியாக நம் பூமிக்குள் பரவிக் கொண்டிருக்கின்றது, பரவச் செய்து கொண்டிருக்கின்றது.

(4) செவிவழி உணர்ச்சியை ஊட்டி, கண் வழி கவரச் செய்கின்றோம்

அதைப் பருகும் நிலையாகத்தான் நமது குருநாதர் ஈஸ்வராய குருதேவர் எந்தத் தருணத்தில் எமக்குள் உபதேசித்து அந்த உணர்வைக் கவரும்படி செய்தாரோ அதைப்போல் இந்தத் தருணம் துருவ தியான நேரத்தில் உங்களுக்குள் அதைப் பதியச் செய்கின்றோம்.

1.துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் வந்து கொண்டிருக்கும் உணர்வை
2.சூரியன் காந்தசக்தி கவர்ந்த அலைகளாக மாற்றித் துருவத்தின் வழியாக நம் பூமிக்கு வரும் இந்த நேரத்தில்
3.அந்த அருள்ஞானிகளின் உணர்வுகளை நீங்கள் அனைவரும் பெற உங்களுக்குள் இப்பொழுது அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்கின்றோம்.
4.அதாவது செவி வழி இந்த உணர்வின் தன்மை உணர்ச்சிகளை ஊட்டி
5.நினைவின் ஆற்றல் கொண்டு கண்களின் வழி அதை ஈர்க்கச் செய்வதற்குத்தான்
6.இந்தத் துருவ நேரத்தில் உபதேசிக்கின்றோம்.

(5) துருவத்தின் வழியாக துருவ மகரிஷியின் உணர்வை அனைரும் நுகர்வதற்கே துருவ தியானம்

1.அந்தத் துருவப் பகுதியில் துருவ நட்சத்திரத்துடன்
2.உங்கள் எண்ணங்களைச் செலுத்துங்கள்

ஆகவே அந்த உணர்வுகளைத் தூண்டச் செய்கிறோம். அதிலிருந்து வெளிப்படும் உணர்வுகளை உங்கள் கண்களில் நினைவாக்கப்படும்போது கண்களின் கருவிழி அந்த நினைவின் ஆற்றலை (அந்த துருவத்தின் ஆற்றலை) உங்கள் உடலுக்குள் ஊனுக்குள் பதிவாக்குகின்றது. உங்கள் கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன்கள் அதைக் கவரச் செய்கின்றது.

சூரியனின் காந்த சக்தி கவர்ந்து, நம் பூமிக்கு துருவத்தின் வழியாக வரும்
1.அந்தத் துருவ மகரிஷியின் உணர்வுகளை நீங்கள் நுகர்வதற்கும்
2.நுகர்ந்து அதை உங்களை சுவாசிக்கச் செய்வதற்கும்
3.உயிரின் துணை கொண்டு அந்த நஞ்சினை வென்றிடும் உணர்வின் அணுக்களாக உங்களுக்குள் உருவாக்கச் செய்வதற்காகவும்தான்
4.இந்தத் துருவ தியானத்தை அமைத்துள்ளோம்.

இந்த துருவத் தியானத்தை நமது குருநாதர் எவ்வாறு இத்தருணத்தில் எமக்குள் உருவாக்கச் செய்தாரோ அதே போன்று உங்களுக்குள்ளும் உருவாக்கச் செய்வதற்குத்தான் இந்தத் துருவ தியானத்தை வைத்தது.

தாவர இனங்கள் சிலவற்றுக்குள் இருக்கும் “அபூர்வ சக்திகள்”

cornivorus

தாவர இனங்கள் சிலவற்றுக்குள் இருக்கும் “அபூர்வ சக்திகள்”

 

தாவர இனங்கள் மேல் ஒரு சில பூச்சிகள் பட்டாலே மடிந்துவிடும். அதே சமயத்தில் சில உயிரினங்களை நுகர்ந்து அதனால் உருவான செடிகளின் மீது குருவியோ மற்றொன்று ஏதாவது உட்கார்ந்தால் அப்படியே “பட்…!” என்று மூடி விடும்.

மின்சாரம் பாய்ந்தால் எப்படி இழுத்துக் கொள்கிறதோ அதைப் போல் அதில் உள்ள காந்தப் புலன் அறிவு எடுத்துக் கொள்ளும். அதற்கு அந்தச் சக்தி உண்டு.
1.காந்தத்தின் சக்தியை எடுத்துக் கொண்டால் அந்தக் குருவி மடிந்து விடுகின்றது.
2.காந்தத்துடன் கலந்த இரத்தத்தையும் எடுத்து விடுகின்றது.

ஆனால் இந்த மாதிரி அதிசயத்தை எல்லாம் நீங்கள் பார்க்க முற்பட்டு விடாதீர்கள். காடு மேடெல்லாம் நான் (ஞானகுரு) கஷ்டப்பட்டுப் பார்த்தேன். இதை உங்களிடம் வந்து சொல்கிறேன்.

இமயமலை அஸ்ஸாம் பகுதி வங்காளம் இந்தப் பக்கம் எல்லாம் அத்தகைய செடிகள் உண்டு. அஸ்ஸாம் காட்டுப் பகுதியில் அதிகமாக உண்டு. அக்காலங்களில் இத்தகைய தாவர இனங்கள் நிறைய உண்டு.

பச்சைப் பாம்பை எடுத்து விளக்கெண்ணெய் வித்தோடு சேர்த்து இந்த இரண்டு நிலைகளை ஊற வைத்து அதற்குப் பின் இந்த வித்தை முளைக்க வைத்து அதிலிருந்து வரும் வித்தை ஆட்டி எண்ணெயைக் கொடுத்தீர்கள் என்றால் எங்கே பார்த்தாலும் பச்சைப் பாம்பாகத் தெரியும்.

இதே மாதிரி பல பல கலவைகளைச் சேர்த்து அதிசயப்படுகிற மாதிரி எத்தனையோ செய்து காட்டலாம். அப்புறம் சாமி (ஞானகுரு) பெரிய சக்தி வாய்ந்தவராக மாறி விடுவார். அதிசயத்தையும் காட்டுகிறார் அற்புதங்களையும் காட்டுகிறார் என்று எல்லாம் போற்ற முடியும்.

ஏனென்றால்
1.சில வித்துக்களில் சில உயிரினங்களின் செல்களை எடுத்து அதை இணைத்து அதனுடைய வளர்ச்சிக்குத் தக்கவாறு செய்தோம் என்றால்
2.இதன் மணத்தை நுகர்ந்தாலே மடியும் தன்மை வருகின்றது.
3.மயக்கப்படும் நிலையும் வருகின்றது.
4.அந்த உருவமும் வருகிறது.
5.இது எல்லாம் தாவர இனங்களில் உள்ள வீரிய சக்தியின் நிலைகள்.

அத்தகையை சக்திகளைத்தான் ஒரு உயிரணு அதை நுகர்ந்து அது வளர்ச்சி பெற்ற அணுவாக மாறுகின்றது. அந்த விஷச் செடியை அது உணவாக உட்கொண்டு விஷத்தையே தான் ஆட்கொள்ளும் சக்தியாக அது வளர்கின்றது.

இப்படி அந்த உயிரணு எதை நுகர்ந்து தன்னுடைய நிலைகளை வளர்த்ததோ அதன் வரிசையில் எப்படி வளர்கின்றது…? என்ற நிலையைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட பின் தான்
1.உங்களுக்குள் இந்த உபதேசத்தையே பல காலம் பல வருடம் கழித்து
2.சிறுகச் சிறுக சிறுகச் சிறுக உங்களிடம் சொல்லுவது.

அது தான் ஓ..ம் நமச்சிவாய…. சிவாய நம ஓ..ம்..!

யாம் உபதேசிப்பதை எல்லாம் நீங்கள் கேட்டால் “ஓ..ம் நமச்சிவாய…!” அந்த உணர்வின் தன்மையை அதிகமாக வளர்த்துக் கொண்டால் சிவாய நம ஓ…ம்.
1.இந்த உண்மையின் உணர்வை நீங்கள் அறியலாம்.
2.பிறருடைய தீமையை போக்கவும் உங்களால் முடியும்.
3.நான் (ஞானகுரு) மட்டும் கெட்டிக்காரர் அல்ல.

குருநாதர் கொடுத்தார். அந்த உணர்வை வளர்த்தோம். அதே உணர்வை உங்களுக்குள்ளும் வளர்க்கச் சொல்றோம். வளர்த்துக் கொண்டால் நீங்களும் அதைச் செய்யலாம்.

ஏனென்றால்
1.பிறர் தீமையில் இருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வை நீங்கள் வளர்த்தால்
2.உங்களுக்குள் தீமையை நீக்கிடும் சக்தி வளர்கின்றது.

பிறருக்குத் தீமை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை எண்ணினால் அந்தத் தீமையின் உணர்வு நமக்குள் நல்ல அணுக்களை கொல்கின்றது. அப்பொழுது அந்தத் தீமை செய்யும் உணர்வே நமக்குள் விளையும்.

தீமை செய்பவனை வேடிக்கையாகப் பார்த்து அந்த உணர்வின் தன்மை நமக்குள் வந்தாலே அந்தத் தீமை செய்யும் அணுவின் தன்மை விளைகின்றது.

ஆக வேடிக்கையாகப் பார்த்தாலும் அந்தத் தீமை செய்யும் அணுக்கள் நமக்குள் வரும் போது அதற்கு ஆகாரம் தேவை. அந்த உணர்வை நுகரும் போது உயிரிலே பட்டு அந்த எண்ணங்கள் வந்து அதே செயலைத்தான் நாமும் செய்வோம்.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள். தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.

சுகமாக வாழ்வது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Siva meditating.jpg

சுகமாக வாழ்வது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

கண்டெடுத்த இரசாயணத்தைக் கண்ணாடியில் பூசித் தன் பிம்பத்தைத் தானே காணும் நிலையை அறிந்துள்ளீர்கள்.

மாயக் கலியில் அவதரித்த செயற்கை யுகம் கொண்ட மனிதர்கள் எல்லாம்
1.தன் எதிரில் உள்ள பிம்பத்தைத்தான் அந்தக் கண்ணாடியில் காண்கின்றார்கள்.
2.ஆனால் எல்லாவற்றையும் அன்றே கண்ணால் (எந்தக் கருவியும் இல்லாது) கண்டான் சித்தன்.

உலக நிலையையும்… மற்ற மண்டலங்களின் நிலையையும் அறிந்து வாழ்க்கைக்கு என்ன பயன்..? என்றும் சிலர் எண்ணிடலாம்.
1.ஆத்ம நிலையைத் தன் வழிக்கு ஏற்க வந்தவர்களுக்கு அறிந்திடத் தான்
2.இந்தப் பாட நிலையையே கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
3.மனிதச் சக்தியில் எந்த நிலையில் சக்தி நிலை கலந்துள்ளது என்று அறிந்து கொள்ளுங்கள்.

இந்தப் பூமி எப்படிச் சூரியனிலிருந்து வரும் அணுக் கதிர்களைத் தன் சக்தியில் ஈர்த்துப் பல நிலைகளை நமக்களிக்கின்றாளோ… பூமித் தாயின் அந்த நிலையான சக்தி எல்லாமுமே இந்தப் பூமியில் வாழ்ந்திடும் நமக்கும் “அந்த ஈர்க்கும் தன்மை எல்லாமே உள்ளன…!”

1.சூரியனிலிருந்து வெளிப்படும் தன்மை எல்லாவற்றையுமே நாம் நேராகவே நம் நிலைக்கு ஈர்த்திடலாம்.
2.நம் உடலில் வரும் நோய்களை நீக்கவும் அந்தச் சூரியனிலிருந்தே
3.பல வகை மூலிகைகள் கொண்ட மருந்தின் நிலையை நம் உடலுக்கு நாம் ஈர்த்திடலாம்.
4.நம்மைச் சுற்றியுள்ள ஒலிகள் நம் செவியில் பட்டுக் கேட்பதைப் போல் நாம் காணாத இடத்திலுள்ள ஒலிகளையும் ஈர்த்திடலாம்.

நாம் எடுக்கும் சுவாசத்தில் அந்த ஒலியுடன் கலந்துள்ள ஒளியை நாம் ஈர்க்கும் பொழுது எங்கெங்கும் நடக்கும் நிலையையும் நாம் ஈர்க்கும் தன்மை கொண்டு
1.அந்த ஒளியின் பிம்பம் படும் நிலையில் உள்ள எல்லாவற்றையுமே
2.இருந்த இடத்திலிருந்தே நாம் கண்டிடலாம்.

இந்த மனித சக்திக்குக் கால நிலை… பூகம்பம் வரும் நிலை… பெரும் மழை வரக்கூடிய நிலை…! இது எலலாவற்றையுமே உணரும் தன்மை நம் உடலில் இருக்கின்றது. நம் நினைவை மாற்றி விடுவதால் இதை எல்லாம் அறிந்திடாமல் தவற விடுகின்றோம்.

பூமிக்கு எப்படி ஈர்ப்பு நிலை என்னும் காந்த சக்தி உள்ளதுவோ அதைப் போல் இந்தப் பூமியில் உதித்த உயிர் அணுக்கள் எல்லாவற்றுக்குமே உள்ளன என்றாலும்
1.மனித உடல் பெற்ற ஆத்மாக்களுக்கு அனைத்தையுமே அறிந்திடும் சக்தி உள்ளது.
2.செயல்படுத்தும் தன்மை வாய்ந்த உறுப்புகளும் உள்ளன.

இந்த மனிதன் உண்டு… உடுத்தி… உறங்குவது தான் வாழ்க்கை…! என்ற சுகத்தை எண்ணுகின்றான்.

இந்தச் சுகம் எத்தனை நாளைக்கு…?
1.தன் எண்ண சுகத்தைக் கொண்டே ஆத்மாவைச் சுகமாக்கிடாமல்
2.இந்த உடல் சுகத்தைத்தான் பெரிதாக எண்ணி வாழ்கின்றான்.

ஆகவே இந்த உடல் என்னும் கூட்டிற்கு அனைத்துச் சக்திகளையும் அறிந்து வாழும் சக்தி உள்ளது என்பதை உணர்ந்து நமக்கு முன் வாழ்ந்த பெரியவர்கள் சித்தர்கள் ஞானிகள் மகரிஷிகள் அடைந்த பேரானந்த நிலையை அடைய முற்படுங்கள்…!

ஒரு நொடிக்குள் நாம் பெறவேண்டிய உன்னத சக்தியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Agasthiyar G

ஒரு நொடிக்குள் நாம் பெறவேண்டிய உன்னத சக்தியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஒவ்வொரு உயிர் அணுக்களின் (உயிரினங்கள்) உயர் அமில வீரிய குணச் செயலின் தொடர் என்பது சுழல் சக்தி எண்ணமாக… பிரம்மத்தின் பிம்பமாக… சரீரச் செயல் வாழ்க்கையாகப் பூமியின் ஈர்ப்பில் செயல்படுகிறது.

அந்த உயிரினங்கள் தன் வாசனை குணத்திற்கொப்ப ஈர்ப்பின் பக்குவமாக வளர்ச்சிப்படுத்திக் கொண்டு செயல்படும் அனைத்திலுமே
1.இரு குண அமிலங்கள் சந்திக்கும் நேர் தொடரில் கலந்து
2.சத்ரு…மித்ரு… என்ற செயல் நடக்கிறது.

அதனால் அந்த இரு குண அமிலங்களில் எது வீரியத் தன்மையோ அதன் குணத்திற்கொப்ப மற்றொன்று அதனுள் கலந்து மற்றொன்றாக உருவாக்கிடும் செயல் நடக்கின்றது.

இப்படிப்பட்ட எதிர் மோதல்களை எல்லாம் தன் வாழ்க்கை நடை முறையில் சந்திக்கும் பொழுது
1.அந்த நேரத்தில் அந்த எண்ண மோதல்களை
2.அறிந்து உணர்ந்து செயல் கொண்டிடும் அவகாசக் காலம் ஒரு நொடிப் (நொடிக்குள்) பொழுதின் காலம் தான்.

அந்த நொடிப் பொழுதில் அறிந்ததை உடனே தெளிதலும் தெளிந்ததின் பொருள் விளங்கி எதிர் மோதல் குணங்களை தன்னைப் (ஆன்மா) பாதித்திட வண்ணம் காத்துக் கொள்ளும் நிலைக்கு வருகின்றது.

அது மட்டுமல்ல…!
1.அந்த எதிர் மோதல் குணங்களையே மாற்றியமைத்து நற்குண நீர் பாய்ச்சி
2.தன்னுள் எதிர் மோதல் குணங்களையே அமுதமாக உட்கொண்டுவிடும் வல்லமை பொருந்தியவர்கள் தான்
3.”சித்சத்துவ பரமார்த்த புருஷர்கள்…!”

பிராணிகளில் மான் தன் குட்டிக்குப் பாலைப் புகட்டும் பொழுது அது எடுக்கும் உணர்வின் தன்மை எப்படிப்பட்டது…?

பாலை ஊட்டும் பொழுதே இயற்கையாகச் செயல் கொள்ளும் தொடரில் தன்னைப் புசிக்க வரும் கொடிய விலங்குகளின் உணர்வுகள் காற்றிலே அலைகளாக வரும் பொழுது தன் மீது வந்து மோதியவுடன் அந்த வாசனையை அறிந்து கொள்கிறது.

1.உடனே தன் சுவாசத்தின் ஈர்ப்பினால் எதிர் மோதல் குணங்களை அறிந்து
2.தான் சுரந்திடும் பாலைத் தடைப்படுத்தி நிறுத்தி விடுகிறது.

தன் குட்டிக்கும் அதே உணர்வை ஊட்டி ஒரு நொடிக்குள் நடைபெறும் இயற்கையின் சூட்சம உணர்வில் அது எடுக்கும் அச்ச உணர்வு கொண்டு விரைந்து தப்பி ஓடிவிடும்.

ஏனென்றால் அதற்குள் இருக்கும் குண அமிலச் சுரப்பிகள் இயற்கையின் வழி வரும் (மற்ற கொடிய மிருகங்கள்) அந்த வாசனைக்கொப்ப உணர்வு கொண்டு அந்தச் (மானின்) சரீரத்தைச் செயல்படுத்தச் செய்கிறது.

அதாவது ஒரு கட்டளைக் கேந்திரமாகச் (CONTROLLING STATION) செயல்படும் எண்ணத்தின் பிடர்தல் உந்துவிசை கொண்டு எந்த உணர்வுகள் அச்சத்தை ஊட்டியதோ (ஈர்த்ததோ)
1.அதே உணர்வுகளில் நொடிக்குள் மாறு கொண்ட விநோத செயல்பாட்டை அறிந்து
2.தன்னைத் தற்காத்துக் கொள்ளும் செயல்கள் துரித கதியில் செயல்படுகிறது.

இதே செயல் முறை தான் கௌதம புத்தருக்கும் அன்று ஏற்பட்டது.

புத்தர் தான் பெற்ற அனுபவ ஞானத் தொடரில் சரீர அவஸ்தைகளிலிருந்து மனிதன் விடுபட்டு இந்தச் சரீரத்தைக் காத்திட வேண்டும் என்றால் மனிதன் விடுபட வேண்டிய குணங்களில் “அதி ஆசையை முதன்மையாகக் காட்டினார்…!”

ஆக பிறவித் துன்பங்களுக்குக் காரணமே “ஆசை” என்ற சொல் நாமப்படுத்திச் சூட்சமங்களை உள் மறைத்து உயிரான்ம சக்தியை வலு கொண்டதாக ஆக்கிடும் செயலில் புத்தருக்குப் பரிபூரணத்துவம் உண்டு.

நம் உயிரான்ம சக்தியைக் காத்திடும் பஞ்ச உறுப்புகளில் எதிர் மோதல் தன்மைகளைப் பக்குவமாக விலக்கிடும் உணர்வுகள் கொண்டு அறிந்து செயல்படும் பிடர்தல் செயல்பாட்டின் பொழுது
1.உயிரான்ம சக்தியில் ஏற்கன்வே பதிவு செய்த செயலை வீரியமாக்கிடாமல்
2.ஆன்மாவில் பதிந்த பின் சுவாசத்தின் வழி கொண்ட சரீர உணர்வுகளில் செயலாக்கத்திற்கு
3.ஞான விழிப்பார்வை கொண்டு “நொடி நேர செயல்பாடாக…”
4.அருள் உணர்வுகளைத் தன் ஒளிகாந்த சக்தியால் வலுக் கூட்டிக் கொண்டு அதனைப் பார்வை வழியாச் செயல்படுத்துதல் வேண்டும்
5.ஆனால் அப்பொழுது செயல்படும் செயலின் ஈர்ப்பில் அச்ச உணர்வுகளைக் கூட்டிக் கொள்ளக் கூடாது.

காத்திடும் பக்குவமும்… எதிர் மோதல் குணங்களையே தன் ஒளி காந்தத்தால் வசமாக்கி.. அன்பு கொண்டு ஈர்த்திடும் செயலாக… தன் எண்ண அசைவு கொண்டு செயலாற்றிடல் வேண்டும்.

புத்தரைக் கொல்ல வந்த காட்டுக் கள்வன் எடுத்த விரக்தியின் உச்சகட்ட ஆவேச உணர்வுகள் “சாது என்றோ… சம்சாரி என்றோ…” அறிந்து கொள்ளாத செயல்பாடாக இருந்தது.

அவனின் அறிவின் மௌடீகம் எவ்வளவு கொடுமையாக வீரியமாக அவனுக்குச் செயல்பட்டாலும் அதை ஒரு நொடிக்குள் மாற்றியமைத்துச் சமப்படுத்திய
1.அந்தப் புத்தனின் செயலாற்றும் திறன்
2.எல்லா ஞானச் செல்வங்களும் (மனிதர்கள்) பெற்றிட வேண்டும்.