“மகரிஷிகளுடன் நாம் நேரடியாகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Sages network connection

“மகரிஷிகளுடன் நாம் நேரடியாகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நம் சூரியக் குடும்பத்தில் ஞானத்தில் பகுத்தறிவைப் பண்படுத்தும் மனிதத் தன்மை எப்படிச் செயல் கொள்கின்றதோ அதைப் போன்ற நிலை ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் உண்டு.

நம் பூமியில் ஞானமும் விஞ்ஞானமும் வளர்ந்துள்ளதைப் போன்று மற்ற சூரியக் குடும்பத்தில் நமக்கு மேல் வளர்த்த ஞானத்தின் அலை நிலையின் தொடர்பை நம் பூமியிலும் “ரிஷிச் சக்திகள்” தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு தான் உள்ளார்கள்.

1.சூட்சமத்தின் இயக்கத்தின் கதி….!
2.அனைத்துக் கோள்களின் தொடர்பிலும் சுழன்று கொண்டேயுள்ள நிலையில்
3.“நான் என்பது யார்…?” என்ற உண்மையை உணர்ந்தோமானால்
4.நம் உயிரையும் ஆன்மாவையும் இணையத் தக்க ஒளித் தன்மையின் தொடர்பை நாம் பெறலாம்.

உடல் என்ற ஜீவ காந்த சரீர இயக்கத்தின் துணை கொண்டு… ரிஷிகளின் தன்மை வளர்ந்ததைப் போன்று…
1.சரீர இயக்கத்தின் வாழ்க்கையை
2.ஆத்மாவின் இயக்க வாழ்க்கையாக உணரும் தன்மையால்
3.ஆத்மாவும் உயிரும்… இந்த உடலை இயக்கக்கூடிய… நம் எண்ணத்தை ஆளக்கூடிய ஆட்சியாக
4.தன்னைத் தான் உணரல் வேண்டும்.

தன்னைத் தான் உணரும் சக்தியால் தன் சக்தியைக் கொண்டு ரிஷிகளின் சக்தியுடன் நம் ஆத்மாவின் சக்தியை வளர்த்துக் கொள்ள முடியும்.

ரிஷிகளின் சக்திக்கும் நம் சக்திக்கும் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளும் முறைதான் இந்தத் தியான முறை. ரிஷிகளின் சக்தி அனைத்தும் பால்வெளி மண்டலத்தில் (பரம்பொருளாக) படர்ந்துள்ள செயலில் எல்லோருக்கும் கிடைக்கும்படியாகத்தான் படரவிட்டுள்ளார்ககள்.

அத்தகைய மாமகரிஷிகள் தன் தன் இயக்கத்திற்கொப்ப… தன் வளர்ச்சிக்கொப்ப வலுவை வலு கூட்டிக் கொள்வதற்காக… தன் குணத்தை… மணத்தை… ஒளித் தன்மையில் நட்சத்திர ஒளியாகத் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் எண்ணிலடங்காத நிலையில் இந்தப் பிரபஞ்சத்தின் சுழற்சியில் சுழன்று கொண்டே உள்ளனர்.

அந்தச் சுழற்சியின் கதியின் இயக்கத்தைச் செயல்படுத்தக்கூடிய வளர்ச்சிக்கு அறிவின் ஞானத்தை எடுக்கவல்ல எண்ணம் கொண்ட மனிதர்களை எல்லாம் தன் வலுவின் தொடரில் ஈர்க்கின்றார்கள்.

1.அத்தகைய மெய் ஞான வித்து ஓங்கி வளரத்தான்
2.தெய்வ குணங்களும் தெய்வ சக்தியும் இன்றும் சூட்சம கதியில் செயல்பட்டுக் கொண்டேயுள்ளது.
3.மலர் விரிந்து மணம் பரப்பி எப்படிக் காற்று மண்டலத்தை இனிமையாக்குகின்றதோ
4.அதைப் போன்று இன்றும் ரிஷி சக்திகளின் செயல் செயல்பட்டுக் கொண்டே தான் உள்ளது. (அருள் மணங்களாக)

தெய்வ குணத்தையும் தெய்வ சக்தியையும் வளர்க்கக்கூடிய மெய் ஞானிகளின் சிந்தனையால் தன் அறிவின் வளர்ச்சியைச் சூட்சமத்தின் துணை கொண்டு மேலோங்கி வளர்த்ததின் தொடரில் தான் இன்றைய உலகில் இருக்கும் மருத்துவம் விஞ்ஞானம் எல்லாமே வளர்ந்தது.

இருந்தாலும் இன்று மக்கள் தொகையின் பெருக்கத்தைப் போன்றே மனித அறிவின் பெருக்கமும் “ரிஷிகளின் சிந்தனை சக்தியுடன் தொடர்பு கொண்டு…!” தன்னை உணர்ந்து ஆத்ம பலம் பெற்றிருந்தார்கள் என்றால் இந்தப் பூமியில் உள்ள மனிதனின் சிந்தனைகள் வேதனை பயம் கோபம் குரோதம் அச்சம் என்ற விபரீத வினையினால் வரக்கூடிய பல கொடிய வியாதிகளினாலும் கொடிய விபத்துக்களினால் வேதனைப்பட்டு இறக்கும் நிலையிலிருந்து தப்பியிருக்கலாம்.

1.ஏனென்றால் இன்று ரிஷிகளின் அலையைக் காட்டிலும்
2.வேதனை ஒலி கொண்ட ஆவி உலக ஆத்மாக்களின் அலைத் தொடர் அதிகமாக மனிதனைச் சாடிக் கொண்டிருக்கின்றது.

இதிலிருந்து விடுபடும் நிலையாக யாம் சொல்லக்கூடிய தியான முறையின் தொடர்பில் ரிஷிகள் வழி காட்டிய துருவ மகரிஷியையும் சப்தரிஷி மண்டலத்தை இயக்கும் துருவ நட்சத்திரத்தினையும் எண்ணி அதிலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணித் தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தை புருவ மத்தியின் வழியாக எண்ணித் தியானம் எடுக்கும் பொழுது
1.நம் எண்ணத்தின் ஒலி செலுத்தக்கூடிய தொடரில்
2.அந்தத் தொடரின் அமில ஒலியின் உயிர் ஒளித் தொடர்பு ஜீவ உயிர் காந்த சுழற்சியில்
3.நம் ஆத்மாவில் ரிஷிகளின் தொடர்பலைகள் ஈர்க்கப்பட்டு
4.அவ்வாறு அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் தியானத்தின் சிந்தனை சக்தியால் (அதனால் தான் மகரிஷிகளுடன் பேசுங்கள் என்று சொல்கிறோம்)
5.இந்தப் பூமியின் பிடிப்பலையிலிருந்து நம் ஆத்மாவை ரிஷிகளின் சக்தியுடன் இணைத்து விடுகின்றோம்.

இப்படிப்பட்ட தியானத்தின் மூலம் ரிஷிகளின் தொடர்பில் நம் ஆத்மாவும் கலக்கும் பொழுது
1.அந்த இறைத் தன்மை கொண்டோரின் இறைக்கு நாம் உட்படுத்தப்பட்டு
2.நம் ஆத்மாவும் தெய்வ நிலை பெறும்.
3.பிறப்பின் பலனை ஒவ்வொரு உயிராத்மாவும் பெறும்.

வாஸ்து… நியுமராலஜி… நவரத்தின மாலை…! என்று நம் கஷ்டத்தைப் போக்க என்னென்னமோ செய்கிறோம்… அதிலுள்ள உண்மைகள் என்ன…?

mentors

வாஸ்து… நியுமராலஜி… நவரத்தின மாலை…! என்று நம் கஷ்டத்தைப் போக்க என்னென்னமோ செய்கிறோம்… அதிலுள்ள உண்மைகள் என்ன…?

 

அதிகாலையில் விழித்தவுடன் செய்யும் துருவ தியானத்தைக் கணவன் மனைவி அவசியம் செய்ய வேண்டும்.

எந்த மதங்களில் எடுத்துக் கொண்டாலும் காலையில் அந்த ஐந்து மணிக்குத்தான் எல்லாக் கோவிலிலும் மணி ஓசைகளை எழுப்புகின்றார்கள்.

மதங்கள் அனைத்தும் அரசர்களால் உருவாக்கப்பட்டது தான் அவன் ஞானிகள் சொன்ன உண்மைகளை எல்லாம் மறைத்து விட்டான்.
1.அரசனைப் போற்றும்படிச் செய்தான்.
2.அரசன் உருவாக்கிய தத்துவத்தைக் கடவுளாக்கினான்.
3.அவன் சொன்ன சட்ட திட்டங்களுக்கு மக்கள் எல்லோரும் போக வேண்டும்.
4.அவன் வகுத்த திட்டத்திற்கு மாறாகப் போனால் மதத்தின் அடிப்படையில் “தண்டனை…!” என்று கொடுக்கின்றான்.
5.கடவுள் சாட்சியாக என்று சொல்லி எல்லா மதத்திலும் இந்த நிலை தான்.

இந்த எண்ணத்தின் தன்மையை உருவாக்கும் பொழுது ஒவ்வொருவர் உடலிலும் இதுவே தான் கடவுளாகின்றது. இந்த எண்ணத்தின் தன்மையை வளர்த்துக் கொண்ட பின் எந்த மதத்தில் சிக்குகின்றோமோ
1.அந்த உணர்வின் தன்மைக்கு மாறுபட்டால் தெய்வம் நம்மைத் தண்டித்துவிடுமோ…! என்று
2.அச்சுறும் (பயம்) நிலையை மக்களுக்கு ஏற்படுத்திவிட்டார்கள்.

சாஸ்திரங்கள் என்று சொல்லிக் கொண்டு சில குடும்பங்களில் என்ன செய்கின்றோம்…? ஆடி மாதம் கல்யாணம் செய்யக் கூடாது என்போம். ஆனால் ஆடி மாதம் கல்யாணம் செய்து “சந்தோஷமாக இருப்பவர்களும் இருக்கின்றார்கள்…!”

செய்யக் கூடாது…! என்று சொன்ன பிற்பாடு யாராவது செய்தால் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து “ஆடி மாதத்தில் போய்க் கல்யாணம் செய்கிறான் பார்…!” என்று பயமுறுத்துவார்கள்.

மதத்திற்குள் அவரவர்கள் சேர்த்துக் கொண்ட “இனம்… குலம்…” என்ற நிலையில் உள்ளவர்கள்
1.இப்படிச் செய்கிறான் பார்…! எல்லாம் சேர்ந்து சொல்லி
2.அவனை எழ முடியாதபடி அமுக்கி விடுகிறார்கள்

அட… நான் ஆடி மாததில் கல்யாணம் செய்தால் உங்களுக்கு என்னய்யா..? என்று கேட்டால் கேட்க மாட்டார்கள்…!

அடுத்து இப்பொழுது என்ன செய்கிறார்கள்..? வாஸ்து சாஸ்திரம் என்று சொல்லிக் கொண்டு இதையும் ஊடே கிளப்பி விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

உங்கள் வீட்டில் உள்ள இந்தச் சுவரில் குறை உள்ளது. இதை இடித்துத் தள்ளிவிட்டு அந்தச் சுவரை இத்தனை அடி தூரம் தள்ளி வைத்தால் “வாஸ்து சாஸ்திரப்படி உங்களுக்கு நல்லதாகும்…!” என்று சொல்கிறார்கள்.

சுவர் அந்த இடத்தில் இருப்பதால் தான் உங்களுக்கு எல்லாக் கஷ்டமும் வருகின்றது என்று சொல்லி அதற்குப் பரிகாரமாக சுவரை மாற்ற வேண்டும்…! என்று சொல்வார்கள்.

ஏனென்றால் கஷ்டத்தை நீக்கும் எண்ணத்தையும் உபாயத்தையும் எடுப்பதற்குப் பதிலாக “பரிகாரம்..!” என்ற பெயரில் இப்படிக் கொண்டு போகின்றார்கள்.
1.பரிகாரம் செய்துவிட்டோம்…
2.அதனால் நம் கஷ்டம் போகும்…! என்ற அந்த எண்ணத்தைக் கொண்டு வருவதற்கு இப்படி ஒரு செயல்…! (நன்றாக இருக்கும் சுவரை இடிக்க)

இன்னொன்றும் சொல்வார்கள். நியுமராலஜி…! உங்கள் பெயரில் ஒரு எழுத்தை மாற்றி வைத்தாலோ அல்லது ஒரு எழுத்தைக் கூட்டி வைத்தாலோ உங்கள் கஷ்டமெல்லாம் போய்விடும் என்பார்கள். அதைக் கேட்டுத் தன் பெயரை மாற்றி வைத்தவர்கள் ஏராளமாக உண்டு.

அடுத்து நவரத்தின மோதிரம்… நவரத்தின மாலை…! என்று அதை அணிந்தால் அதனால் உங்களுக்கு நல்லது என்பார்கள்.

ஒன்பது கோளின் உணர்வுகள் தான் மனிதனுக்குள் எண்ணங்களாக வருகின்றது. ஆனால்
1.நாம் அந்த அருள் ஒளி பெற்ற அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும்.
2.இதைச் சேர்ப்பதில்லை. சேர்க்கச் சொல்லவும் இல்லை.

சேர்க்க வேண்டியதைச் சேர்க்காமல் இந்த உடல் இச்சைக்குத்தான் சேர்த்துக் கொண்டிருக்கின்றோம்.
1.இப்படிச் செய்தால் தொழில் வளரும்…
2.இப்படிச் செய்தால் சொத்து வரும்… என்ற இந்த ஆசையில் தான்
3.ஒவ்வொன்றாகச் செய்து “ஏமாந்து கொண்டிருக்கின்றோம்…!”

அப்படித் தொழில் செய்த… சொத்தைச் சேர்த்த… “எத்தனை பேர் இந்த உடலுடன் இருந்தார்கள்…? இருக்கின்றார்கள்..? சொல்லுங்கள் பார்க்கலாம்…!

அந்த மெய் ஞானிகளும் மகரிஷிகளும் பல ஆற்றல் மிக்க சக்திகளைப் பெற்றாலும் இந்த உடலுடன் அவர்கள் யாராவது இந்தப் பூமியில் இருக்கின்றார்களா… என்றால் இல்லை.
1.தன் உணர்வுகளை எல்லாம் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றி விட்டு
2.ஒளியின் சரீரமாகி விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக
3.அங்கே இருக்கின்றார்கள். இங்கே இல்லை…!

இவ்வளவு சொன்னதும் என்ன செய்வார்கள்…? கண்டார் விண்டதில்லை.. விண்டார் கண்டதில்லை…! என்று இதை மட்டும் சொல்லி விடுவார்கள்.

ஆனால் கண்டவன் என்ன செய்கின்றான்..?
1.கண்ட நிலையில் அங்கே விண்ணுக்குப் போகின்றான்.
2.மறுபடியும் இங்கே எதற்காக வருகின்றான்…? வரவே மாட்டான்.

விண்டவன் கண்டதில்லை…! அப்படி என்றால் அவனவன் கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டே இருப்பான். என்ன… ஏது…? என்று திரும்பிப் பார்க்க மாட்டான். (காணுவதில்லை)

கடவுளைப் பார்த்தவன் திரும்ப வர மாட்டான்… பார்க்காமல் சொல்லிக் கொண்டிருக்கின்றான்…! என்று அவரவர்களுக்குத் தக்கவாறு கண்டார் விண்டதில்லை விண்டவன் கண்டதில்லை என்று சொல்வார்கள்.

அந்த மெய் ஞானி அந்தப் பழமொழியைச் (மெய்யை) சொன்னான் என்றால் இவர்கள் இஷ்டத்திற்கு இங்கே விளக்கங்களைக் கொடுத்துக் கொண்டுள்ளார்கள். அந்த அர்த்தத்தைப் பார்த்தோம் என்றால் அனர்த்தமாகிவிடும்.

ஆனால் அந்த மெய் ஞானிகள் விண்டது எது…?
தீமைகளை வென்றதை…!

கண்டது எது…? அந்த அருள் ஒளியை.
அதைக் கண்ட பின் இதை விண்டுவிடுகின்றது.

அவன் (ஞானிகள்) அதைப் பெற்று அங்கே சென்றுவிட்டான். நாம் செல்ல வேண்டியது அங்கே தான்…! இங்கேயே இருப்பதற்காக நாம் வாழவில்லை..! என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

அமானுஷ்யம் என்றால் என்ன…?

Astral divine powers

அமானுஷ்யம் என்றால் என்ன…?

 

கேள்வி:-
சூட்சும நிலை என்றால் என்ன..?

உடலை விட்டு பிரிந்த நிலைக்கும் சூட்சும நிலைக்கும் உள்ள வேறுபாடு என்ன…? அதன் செயலாக்கத்தை நாம் எவ்வாறு உணர்கின்றோம்?

பதில்:-
பொதுவாக நம் கண்ணுக்கும் அறிவுக்கும் புலப்படவில்லை என்றால் அதைப் பற்றி நாம் யாரும் அதிகமாகக் கவனம் செலுத்த மாட்டோம்.

இங்கே “சூட்சமம்…!” என்பதே அப்படிப்பட்ட நிலை தான்.

இன்றைய விஞ்ஞானக் கருவியான டெலஸ்கோப் மூலம் உதாரணமாக வான மண்டலத்தில் தொலை தூரத்தில் இருக்கும் மண்டலங்களைப் பார்க்கலாம். படமும் எடுக்கலாம்.

அதே போல் நுண்ணிய கருவிகள் மூலம் மிகச் சிறிய அணுக்களையும் பார்க்கலாம். லேசர்.. எக்ஸ்ரே.. மூலம் ஒரு பொருளுக்குள்ளோ உடலுக்குள்ளோ நடக்கும் நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம்.
1.அப்படிப் பார்ப்பதைச் சூட்சமம் என்று சொல்ல முடியாது.
2.ஆனால் அந்தக் கருவிகள் எப்படிக் கவர்கிறது..?
3.எதைக் கவர்கிறது..? எதைக் காட்டுகிறது..? அதனின் இயக்கம் எப்படி…? என்பதே “சூட்சமம்…!”

இன்று நாம் உபயோகப்படுத்தும் மின்சாரத்தை நம் கண்களால் காண முடியவில்லை. ஆனாலும் அதைக் கடத்த வேண்டும் என்றால் +/– POSITIVE, NEGATEIVE அல்லது PHASE. NEUTRAL “ஒன்றுடன் ஒன்றை இணைத்தால் தான்” அது இயங்கும். இல்லை என்றால் இயங்காது.

ஆனால் இந்தச் “சூட்சம சக்தி…!” என்பதற்கு அப்படிப்பட்ட இணைப்பு தேவையில்லை. விஞ்ஞான ரீதியாக அதைப் புரிய வைக்க முடியாது.

நமக்குப் பசிக்கிறது… என்றால் அதைக் காட்ட முடியுமா…? முடியாது. உயிர் உடலுக்குள் இருக்கிறது என்பதையும் காட்ட முடியாது. ஆனால் இதை எல்லாம் உணரலாம்.

ஆக மொத்தம்
1.கண்ணுக்குப் புலப்படாத…
2.உணரக்கூடிய அல்லது உணர்த்தக்கூடிய
3.அல்லது உணர முடியாத எல்லாமே சூட்சமச் செயல்கள் தான்.

இருந்தாலும் நாம் சாதாரணக் கண்களால் காண முடியாததை இன்று விஞ்ஞானிகள் புறத்திலே கருவிகளை வைத்துக் காண்பது போல்
1.மெய் ஞானிகள் விண்ணின் ஆற்றலை அகத்திலே (உயிராத்மாவில்) சேர்த்து
2.கண்ணுக்குப் புலப்படாத.. உணரக்கூடிய… உணர்த்தக்கூடிய செயல்கள் அனைத்தையும் கண்டார்கள்.
3.புறக் கண்களால் அல்ல.

ஏனென்றால் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது ஒலி உருவாகி ஒளி உருவாகின்றது. இடி… மின்னல்..!
1.தனக்குள் மோதும் அல்லது
2.தன்னிடமிருந்து வெளிப்படும் உணர்வலைகளை மற்றதுடன் மோதி
3.ஒலி ஒளி என்ற நிலையில் எல்லாவற்றையும் அறிந்துணர்கின்றார்கள்.

அவர்களால் அகண்ட பேரண்ட விரிந்த நிலைகளையும் அறிய முடிகிறது. மிக மிக நுண்ணிய நிலைகளையும் அறிய முடிகிறது. எங்கேயும் தொடர்பு கொள்ளவும் முடிகிறது அதை இயக்கவும் முடிகிறது.
1.இந்த அகண்ட பேரண்டமே அத்தகைய மெய் ஞானிகளின் கூட்டுச் செயலால்
2.இணைந்த தன்மைகளில் தான் இயங்கிக் கொண்டுள்ளது.
3.அவர்கள் செயல் எல்லாமே சூட்சம செயல்கள் தான்.

அவர்கள் உணர்வுடன் இணைந்து அவர்களின் செயலாக ஒன்றினால் மட்டுமே அதை நாமும் காண முடியும் உணர முடியும்.

சாதாரண நிலைகளில் அதைக் காண முடியாது. அல்லது அப்படியே கண்டாலும் அதை உணர முடியாது.

ஏனென்றால் நம்முடைய உணர்வின் ஈர்ப்பு உடலின் இச்சை கொண்ட நிலையில் பூமிக்குள் விளைந்த உணர்வின் இயக்கம் இருப்பதால் அந்த நுண்ணிய நிலைகளை அறிய முடியாது.

உதாரணத்திற்குக் குருநாதர் (ஞானகுரு) கண்ட உணர்வு…! செவ்வாய்க் கோளைப் பற்றி சுமார் ஒன்றரை மாதம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னை அறியும்படிச் செய்தார்.

அந்த ஒன்றரை மாதம் நான் வேறு எந்தத் திட உணவையும் உட் கொள்ள முடியவில்லை.. காற்றிலிருக்கும் சில உணர்வுகளைத் தான் நான் ஆகாரமாக எடுத்தேன்..! என்று சொல்கிறார்.

சுவாசித்து உயிரில் கலக்கும் உணர்வுக்கொப்பத்தான் நம்முடைய எண்ணம் சொல் செயல் இயக்கம் அனைத்துமே இருக்கும். அதுதான் மெய் ஞானம் என்பது. மெய் ஞானத்தின் செயல்கள் எல்லாமே சூட்சமம் தான்.

மெய் ஞானிகளின் அருள் ஆற்றல்களை நாம் பெற்றால் அதை நாம் சுவாசித்தால் அந்தச் சூட்சமங்களை நிச்சயம் காணலாம் உணரலாம்.

நாம் நினைக்காமலேயே எண்ணங்களும் உணர்ச்சிகளும் நமக்குள் எப்படித் தோன்றுகிறது…?

THOUGHT POWERS AND FUNCTIONS

நாம் நினைக்காமலேயே எண்ணங்களும் உணர்ச்சிகளும் நமக்குள் எப்படித் தோன்றுகிறது…?

 

ஒவ்வொரு நொடியிலும் நாம் ஒவ்வொருவரும் எண்ணிய எண்ணங்களையும் பேசிய உணர்வலைகளையும் வெளிப்படுத்தும் மூச்சலைகளும் சூரியனின் காந்த சக்தி எடுத்துக் கவர்ந்து (மின் காந்த அலைகள்) வைத்திருக்கின்றது. இங்கே நமக்கு முன்னாடி அலைகளாகப் பரவி உள்ளது.

அதே போல செடி கொடிகளிலிலிருந்து வெளிப்படும் சத்துக்களையும் சூரியனின் காந்த சக்தி எடுத்து வைத்துள்ளது. அந்தந்தச் செடியில் விளைந்த வித்தை நிலத்தில் ஊன்றினால் நிலத்தின் தன்மை கொண்டு மீண்டும் தன் சத்தை எடுத்துத் தன்னிச்சையாக அந்தச் செடிகள் வளரும்.

இதே மாதிரி நம் உடல்களிலும் எல்லாக் குணங்களின் சக்திகளும் இருக்கின்றது. சூரியனின் காந்த சக்தியும் அதைக் கவர்ந்து வைத்திருக்கின்றது,

உதாரணமாக ஒரு வேதனைப்படும் உணர்வு நமக்குள் வந்து வித்தாகி விட்டால்
1.உடனே அந்த உணர்ச்சியைத் தூண்டும்.
2.அது (வித்து) எல்லாம் நம் இரத்த நாளங்களில் தான் குடி கொண்டு இருக்கும்.
3.எப்படி இந்தக் காற்று மண்டலத்திலிருந்து செடி கொடிகள் அதனதன் சத்தை எடுக்கின்றதோ
4.அதே போல நம் உடலிலிருந்து நுகரும் பொழுது அந்த உணர்வின் அலைகள் நமக்குள் வருகின்றது.
5.உடலுக்குள் வந்த பின் 48 நாளுக்குள் கருவாகி முட்டையாகி வெடித்து… “அணுவாக” முழுமை அடைந்து விடுகின்றது.

நம் உடல் முழுவதும் அந்த அணு சுற்றப்படும் பொழுது அந்தந்த உறுப்புகளில் போய் ஒட்டிக் கொள்கின்றது. அணுவான பின் தன் உணர்ச்சியைத் தூண்டுகிறது.
1.இரத்தத்தின் வழி கூடி நம் சிறு மூளைக்கு அந்த உணர்ச்சிகள் எட்டுகின்றது.
2.தன் பசிக்குச் சாப்பாடு கேட்கின்றது….!

அந்த உணர்வின் தன்மை பெற்ற பின் நம் உயிர் என்ன செய்யும்…? சும்மாவா இருக்கும்…!
1.நம் கண் காது மூக்குக்கு ஆணையிடும்.
2.எந்த மனித உடலிலிருந்து விளைந்து வந்ததோ இங்கே இழுக்கும்.

சுவாசித்து நம் உயிரிலே பட்ட பின் அந்த மனிதனின் எண்ணங்கள் நமக்குள் வரும்.
1.பாவிப் பயல்.. எனக்கு இப்படிச் செய்கின்றானே…! என்று நாம் எண்ணுவோம்.
2.இப்படிச் செய்கின்றானே..! என்று எண்ணும் பொழுது அதே உணர்வு நமக்குள் வந்து அதையே நாம் வளர்க்கின்றோம்.

அதாவது அவர்கள் நமக்கு என்னென்ன சொன்னார்களோ உதாரணமாக “வியாபாரம் கெடும்…!” என்று சொல்லியிருந்தால் அது அப்படியே வரும்.

நம் பையனையே வைத்துக் கொள்ளுங்கள். அவன் தவறு செய்யும் நிலையில் “இப்படிச் செய்கின்றானே…!” என்று எண்ணி வேதனைபபடுகின்றோம்.

நம் உடலில் வேதனையின் உணர்வின் அணுக்களாகின்றது. அந்த வேதனை உணர்வுகள் நம் உடலாக மாறுகின்றது.

இதை நினைத்துவிட்டு ஒரு நல்ல காரியத்திற்குப் போனால் என்ன ஆகும்…? எந்த வேலையாக இருந்தாலும் எதிரியாகிவிடும். வேதனை உணர்வை நுகர்ந்து விட்டால் சரியாக இயங்காது.

அதனால் நாம் தொழில் செய்யும் இடத்தில் பகைமை வந்துவிடுகின்றது. வியாபாரம் செய்தாலும் இந்த வேதனை வரும். நாம் சொல்வதைக் கேட்டால் உடனே “சரக்கை வேண்டாம்…!” என்று சொல்லி விடுவார்கள்.

இதெல்லாம் நம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய நிலைகள். இதை மாற்ற வேண்டும் அல்லவா…! அதற்காகத்தான்
1.காலையில் விழித்தவுடன்
2.இந்தத் துருவ தியானத்தைச் செய்யுங்கள்…? என்று முக்கியமாகச் சொல்கிறோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா..! என்று ஒரு ஐந்து அல்லது ஆறு தடவை சர்க்குலேசன் போன்று தலையிலிருந்து கால் வரை உடலுக்குள் செலுத்தி நம் ஆத்மாவைச் சுத்தப்படுத்த வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். பெற்று எல்லோரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். அதே போல் இருவரும் சேர்ந்து அந்தச் சக்தி எங்கள் குழந்தைகள் பெறவேண்டும் என்று அவசியம் எண்ணுதல் வேண்டும்.

அதே போல் நம்முடைய முன்னோர்களையும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்.

இபப்டிச் செய்து வந்தால்
1.வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நம் நினைவுகள் மகரிஷிகளின் பால் அங்கே செல்கிறது.
2.நாம் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே இணைந்து வாழ்கின்றோம்.
3.மெய் ஞானிகளின் உணர்வுகள் அதீதமாக நமக்குள் வளர்கின்றது.
4.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெறுகின்றோம்…!

பிறப்பு இறப்பு என்ற ஓட்டத்தில் செல்லாமல் “நான் என்பது யார்…?” என்று மனிதன் பெற வேண்டிய ரிஷித் தன்மையைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Self realization step

பிறப்பு இறப்பு என்ற ஓட்டத்தில் செல்லாமல் “நான் என்பது யார்…?” என்று மனிதன் பெற வேண்டிய ரிஷித் தன்மையைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இந்தப் பூமியின் இயக்கத்தின் கதியால் பூமி எதை எதை எடுத்து வளர்க்கின்றதோ அந்தத் தொடரின் அமிலக் கலவையின் உயர்ந்த வீரியம் கொண்ட உயிர் நிலை தான் மனிதச் சரீரம் எடுக்கும் உண்மை நிலை.

பூமியின் இயற்கைத் தன்மையிலேயே அறிவின் ஆற்றலைச் செயலாக்கும் திறன் கொண்ட
1.மனித நிலையில் ஜீவித சரீர ஓட்டத்தில்
2.எந்தச் சுவையின் உணவு முறையில் மனிதன் உண்டு வாழ்கின்றானோ
3.அந்த அமிலம் மட்டுமல்லாமல் இந்தப் பூமியிலுள்ள கனி வள அமிலத் தன்மையின் குணமும் மனிதச் சரீரத்தில் உண்டு.

மனிதன் தான் எடுக்கும் சுவாசத்தின் உணர்வால் இந்தப் பிறப்பின் தொடர் வாழ்க்கையில்
1.பிறப்பு… இறப்பு…! என்ற இயற்கையின் கதியில் உட்பட்டு
2.அதையே நியாயப்படுத்தி வாழ்கின்றானே தவிர
3.மனிதனுக்குள் மறைந்துள்ள “நான் என்பது யார்…?” என்ற நிலையை மனிதன் உணரவில்லை.
4.பிறப்பையும் இறப்பையும் ஏற்றுக் கொண்ட நிலை தான் உள்ளது
5.எங்கிருந்து வந்தோம்… எங்கே செல்ல வேண்டும்… ஏன்… எதற்காக.. எப்படி…? என்று அறியும் நிலை இல்லை.

ஆனால் கோள்களில் செயல்படும் எண்ணிலடங்காத தெய்வ சக்திகளின் சூட்சமத்தின் சூட்சமமே “மனித உயிரும்…!”

மனித உயிரின் ஜீவித உடலின் உயிர் அணுக்கள் தான் உயிர்ப்பித்து உணர்வு கொண்ட சுவாச கதியில் செயல் கொண்ட அமில உயிர்ப்புத் தன்மைகள் அதனுடைய கதியின் நிலைக்கொப்பத்தான் வாழ்க்கையின் எண்ண உணர்வு நிலையின் செயலின் கதி ஓட்டம் இன்று மனிதன் வாழும் நிலை.

(அதாவது உயிரால் ஜீவன் பெறும் நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்துமே அந்த உயிரின் தொடர்பால் தான் சுவாசிக்கும் நிலையே பெறுகிறது. அப்படி வெளியிலிருந்து உடலுக்குள் வரும் பல சக்திகள் அது எந்த எந்த உணர்வு கொண்டு வந்ததோ அதற்கு ஒப்பத்தான் நம்முடைய் எண்ணம் சொல் செயல் இயங்கி நம் வாழ்க்கையே அமைகிறது)

இந்த உலகில் கலந்துள்ள அமிலத்தின் அனைத்துத் தொடர்புகளும் மனித உயிரின் சூட்சமத்தில் அடங்கியுள்ளது. அது எல்லாவற்றையும் பெறும் தகுதியும் உண்டு.

ஆனால் இன்றைய மனித வாழ்க்கையில்
1.எண்ணத்தின் உணர்வு சரீர இயக்கத்தின் கதியால் இருப்பதாலும்
2.”சரீரத்தையே நான்…!” என்ற முறைப்படுத்திச் செயல்படுத்துவதாலும்
3.சரீரத்திற்காக மட்டுமே பிறப்பின் தொடர் கொண்டு தன் வாழ்க்கையை அமைத்து வாழ்வதாலும்
4.கடைசியில் இறப்பு நிலையை எய்துகின்றனர்.

உயிரின் உயர்வை ஒவ்வொருவரும் இனியாவது உணர்ந்து கொள்ளுங்கள்.

இஜ்ஜீவிதத்தில் அதாவது மனிதனாக உருப் பெற்ற நிலையில் உயிர் என்ற சூட்சம ஒளிச் சரீரத்தின் இயக்கத்தில் சுழலும் தன்மையில்
1.தன் எண்ணத்தின் உணர்வை
2.எந்தச் சுவையின் தொடரில் சுவைப்படுத்துகின்றோமோ
3.அதற்கொத்த செயலாக உயிரும் ஆத்மாவும் வலுத் தன்மை கொண்டு
4.இந்தப் பிறப்பின் தொடரிலிருந்து பிறவா நிலை பெற முடியும்.
5.உங்களால் முடியும்.. உங்களை நீங்கள் நம்புங்கள்…!

இந்தச் சரீர இயக்கத்தின் கதியில் ஓடக் கூடிய உயிரணுக்களின் உணர்வுக்கொப்ப சரீர ஆத்மா அதனுடைய செயலைச் சரீர எண்ணத்தில் மோதக்கூடிய இயக்க நிலைதான் மனித இயக்க நிலை.
(1.அதாவது வெளியிலிருந்து சுவாசித்து உடலாக உருவான நிலையில் அதனின் இயக்கமாகவும்
2.அதிலே எது எது வந்து மோதுகின்றதோ அதனின் இயக்கமாகவும் தான் நாம் இன்று வாழ்கின்றோம்)

இப்படிப்பட்ட மனித இயக்கதில் பிறப்பு இறப்பு கதி ஓட்ட கால சுழற்சியின் வாழ்க்கை என்பது…
1.எந்த உணர்வுக்கொப்ப வாழ் நாள் செல்கிறதோ
(வெள்ளத்திலே அடித்துச் செல்லப்படும் பொருள் போல)
3.அதன் சுழற்சியில் சிக்கி இந்தப் பூமியின் இயற்கையின் கதியுடன் தான் மீண்டும் மீண்டும் சுழல முடியும்.

இதிலிருந்து மனிதனில் மறைந்துள்ள உண்மை நிலையின்
1.“நான் என்பது யார்…?” என்ற உயிரின் தன்மையை உணர்ந்தால் தான்
2.மனித தத்துவம் “ரிஷித் தன்மை” பெற முடியும்.

இந்தப் பூமியில் சில மகான்களின் தத்துவம் எப்படி வளர்ந்தது…?

நம்முடைய உணர்வின் எண்ணம் எதை எண்ணிச் செயல்படுகின்றதோ அதற்கொப்ப குண அமிலங்கள் உடலுக்குள் வந்து சேர்கின்றது. அத்தகைய உயிர் அணுக்களுக்குள் எது பதிவாகியுள்ளதோ அந்தப் பதிவின் தொடர் அலை ஜீவித வாழ்க்கை தான் மனிதனின் வாழ்க்கை.
1.அதன் தொடரில் எண்ணும் எண்ணமே தான்
2.நம்முடைய ஆத்மாவில் பதிவாகி
3.நம் ஆத்ம தொடரின் வளர்ப்பும் செழிப்பும்.
(உடலில் உள்ள உயிரணுக்களின் நிலையும் நமக்குச் சொந்தமான உயிரணுவின் நிலையும் இங்கே பிரித்துக் காட்டப்பட்டுள்ளது)

இந்த நிலையில் இருந்து தான் மனிதனில் சிலருக்கு அபூர்வமான உண்மைத் தன்மைகளை உணரும் நிலை ஏற்பட்டது.

இந்தக் கலியிலேயே பிறப்பால் தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்த ஒரு சிறுவன் தன் வாழ்க்கை நிலையில் ஏற்பட்ட சந்தர்ப்பத்தால் தெய்வ குணத்தின்பால் “கிருஷ்ணர்… இராமர்…!” என்ற தன் எண்ணத்தில் ஈர்க்கப்படுகின்றான்.

அதன் தொடர்பால் அந்தச் சிறுவனின் எண்ணம் சர்வ சதா காலமும் கிருஷ்ணனின் நாமத்தைத் தெய்வ குணமாக எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.

அப்பொழுது விண்ணிலிருந்து வரும் மகரிஷிகளின் சக்தி ஒளி அந்தச் சிறுவனின் மேல் பட அந்தச் சிறுவனில் இருந்த இருள் அகலுகின்றது.
1.அந்த மகரிஷிகளின் ஒளி சக்தியால்
2.சிறுவனின் ஆத்மா மங்காத நட்சத்திர ஒளியைப் பெற முடிந்தது. (பாலயோகீஸ்வரர்)

எதைத் தொடர்ந்து எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் உணர்வே தான் ஆன்மா.
1.அந்த ஆத்மாவின் விதி கொண்டு தான் நற்கதியும் துர்க்கதியும்.
2.நற்கதியின் எண்ணத்தை மதி நுட்பமுடன் எண்ணும் பொழுது ஆத்மா நிச்சயம் ஒளித் தன்மையில் பிரகாசிக்கும்.

மனிதன் “நான் என்பது யார்..?” என்பதை உணரக்கூடிய நிலையில் மெய் ஞானத்தில்
1.மகரிஷியாகக் கூடிய உயிர் தான் தன்னுயிரும் என்பதை
2.ஒவ்வொருவரும் உணர்ந்து அந்த நிலையை எய்த முடியும்.

தியானத்தின் மூலம் உயர்ந்த சக்தியை எப்படிக் கூட்டிக் கொள்வது…?

 

தியானத்தின் மூலம் உயர்ந்த சக்தியை எப்படிக் கூட்டிக் கொள்வது…?

 

குருவின் துணையால் அகஸ்தியன் துருவனாகி அந்தத் துருவ நட்சத்திரமான அதனின் பேரருள் பேரொளியைப் பெறுவோம். இந்த உணர்வுடன் இப்பொழுது எண்ணி ஏங்கி தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வாருங்கள்.

ஏனென்றால், இதைத் தாண்டித்தான் (புருவ மத்தியைத் தாண்டித்தான்) உயிருக்குள் மோத வேண்டும்.

காலையிலிருந்து வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் என்று எடுக்கும்போது எல்லாம் முன்னாடி தான் இருக்கின்றது.

அப்பொழுது இத்தகைய வலுவான உணர்வை (துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்) எடுக்கும்போது அதைப் போகவிடாமல் தடுக்கின்றீர்கள்.

தடுத்துக் கொண்டபின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும், எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று உணர்வை வேகமாகப் பாய்ச்சுங்கள்.

1.அவன் இப்படிச் செய்தான்,
2.இவன் அதைச் செய்கின்றான்
3.கொடுத்தவன் கொடுக்க மாட்டேன் என்கிறான் என்று
4.வெறுப்பு வேதனையாகக் காலையிலிருந்து நீங்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எல்லாம்
5.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உள்ளுக்குள் சேர்த்து வலுவானபின் அனாதையாகி விடுகின்றது.

தீமை செய்யும் உணர்வுகள் அனாதையான பின்
1.சூரியனின் காந்தப் புலனறிவுகள் எடுத்துச் சென்றுவிடுகின்றது.
2.நம் ஆன்மா சுத்தமாகின்றது.
3.ஆன்மாவைச் சுத்தமாக்கும் முறைதான் இது.

உங்களை இப்படிச் சுத்தப்படுத்தாதபடி பையனுக்கு மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும், அவன் நோய் அனைத்தும் நீங்க வேண்டும் உடல் நன்றாக வேண்டும் என்று சொல்லி இந்த இராகம் பாடினால் அந்த நோய்தான் உங்களுக்கு வரும். அதை நீக்க முடியாது.

சிலர் படித்துக் கொண்டபின் நான் இப்படித்தான் பண்ணினேன், என் பையனுக்கு நோய் நீங்க வேண்டும் நோய் நீங்க வேண்டும் என்றுதான் தியானம் செய்தேன் என்று சொல்வார்கள்.

ஏனென்றால் இப்படி எண்ணி இந்த உணர்வை நுகர்ந்தால் வேதனைதான் வரும். இங்கேயும் நோய் வரும் அங்கேயும் நோய் வரும்.

அதே மாதிரி பையனை எண்ணி அவன் படிக்கவில்லை, படிக்கவில்லை என்று சொல்வார்கள். அவன் இந்த மாதிரி படிக்காமல் இருக்கின்றானே படிக்காமல் இருக்கின்றானே என்று இதைத் தியானம் செய்வார்கள்.

ஆக, அவன் மேல் வெறுப்பின் தன்மையை எடுத்துத் தியானம் செய்வார்கள். இதுவெல்லாம் முறையற்றது.

தியானத்தில் அமர்ந்திருக்கும்போது அவன் உணர்வுகளெல்லாம் அதிகமாக இருக்கும். வலு இல்லை. அப்படி இருக்கும் போது பையன் இப்படிச் செய்கின்றானே இப்படிச் செய்கின்றானே என்று எண்ணுவார்கள்.

1.அப்புறம் என்ன செய்வார்கள்?
2.அப்படி இப்படி என்று பார்ப்பார்கள்.
3.நெளித்துப் பார்ப்பார்கள். பிறகு முடியாது.
4.பையன் உணர்வுதான் முன்னாடி வரும்.
5.அப்பொழுது நீங்கள் என்ன செய்யவேண்டும்?

உடனே கண்களைத் திறந்து நேராக அந்தத் துருவ நட்சத்திரத்திற்கு அனுப்புங்கள்.

எதை?

உங்கள் நினைவை அங்கே துருவ நட்சத்திரத்திற்கு அனுப்புங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் எங்கள் ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கி அப்படியே கண்களை மூடுங்கள், உள்ளுக்குள் செலுத்துங்கள்.

அடுத்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் பையன் பெறவேண்டும் அவன் உடல் முழுவதும் படரவேண்டும் அவன் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும். அவன் சிந்தித்துச் செயல்படும் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வுகளைப் பாய்ச்ச வேண்டும்.

இப்படி நமக்குத் தொல்லை கொடுக்கும் உணர்வுகள் வெறுப்போ, வேதனையோ, வேதனைப்படுவோரின் உணர்வுகளோ வந்தால் உடனே என்ன செய்யவேண்டும். தியானிக்கும்போது வேறு எண்ணம் வந்தால்

1. கண்களைத் திறங்கள்
2. நேராக துருவ நட்சத்திரத்தை எண்ணுங்கள்
3. அந்த உணர்வின் தன்மை கண் வழி கவருங்கள்
4. கண்களை மூடுங்கள்
5. உயிர் வழி உள்ளுக்குள் செலுத்துங்கள்
6. துருவ நட்சத்திரத்தின் உணர்வை உள்ளே அனுப்புங்கள்

இந்த முறைப்படி நீங்கள் செய்து பாருங்கள். இந்தத் தியானத்தில் அந்தச் சக்தி நிச்சயம் கிடைக்கும்.

ஏனென்றால் உள்ளுக்குள் அழுக்கு அதிகம் இருக்கின்றது. அதை மாற்றுவதற்கு இப்படித்தான் செய்ய வேண்டும்.

உங்களால் இது முடியும். சிறிது நாள் முயற்சி எடுத்தால் பழையது எல்லாம் மாறும். ஒரு புதுமையான சக்தியை நாம் பார்க்கலாம்.

நல்ல நிலையில் இருக்கும் போது நன்மை செய்யும் போது பிறருடைய தீமைகளைக் கேட்டறிந்த பின் நமக்குள் அழுக்கான நிலைகள் வந்து நோயாகித் தீமைகள் விளைவிக்கின்றது.

இதே போல தீமையை நீக்கிய உணர்வின் தன்மை அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நாம் எடுக்க வேண்டும். இதுதான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் நாம் “தீமைகளை நீக்க வேண்டிய முறை…!”

மெய் வழிச் சாலை…!

Final destination

விண் செல்ல வேண்டிய மெய் வழிச் சாலை…!

 

ஒவ்வொரு நாளும் அதிகாலை துருவ தியானம் இருந்து முடிந்த பின் நம் குடும்பத்தைச் சார்ந்த முன்னோர்களை அவசியம் விண் செலுத்த வேண்டும்.

இதற்கு முன்னாடி நாம் செய்யவில்லை. ஆனால் அவர்கள் விண் செல்ல வேண்டும் என்ற உணர்வை இணைத்து நமக்குள் வளர்க்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் வழியில் வந்தவர்கள் நாம். அவர்கள் உணர்வுகள் நம் உடலாக இருக்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற எண்ணத்தை எடுத்து நமக்குள் வலுவைச் சேர்த்துக் கொண்டபின் முன்னோர்களை விண் செலுத்த வேண்டும்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் முன்னோர்களின் உயிரான்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் உயிரான்மா இணைய வேண்டும் என்று
1.அவர்களுடன் உறவாடிய உணர்வுகள் நமக்குள் இருப்பதனால் அதன் துணை கொண்டு
2.அவர்கள் முகப்பிலே (உயிரிலே) சப்தரிஷி மண்டல உணர்வை இணைத்து எளிதில் விண்ணுக்குச் செலுத்தலாம்.

விஞ்ஞானிகள் இன்று கம்ப்யூட்டர் அலை வரிசையில் வைத்து ஒவ்வொரு கோளின் செயலாக்கங்களையும் உணர்கிறார்கள் கவர்கிறார்கள்.

முதலில் படம் எடுக்கும் கருவியை ராக்கெட் மூலமாக அனுப்புகிறார்கள். அதன் மூலம் ஒவ்வொரு கோளின் திசையையும் எடுத்து அருகில் இருந்து அவைகளின் செயலாக்கங்களை உணர்கின்றார்கள்.

அதைக் கம்ப்யூட்டரில் அதைப் பதிவு செய்கின்றார்கள். பதிவு செய்த பின் இந்த உணர்வின் துணை கொண்டு ஒரு செயற்கைக் கோளை அங்கே அனுப்புகிறார்கள்.

முதலில் அந்தக் கோளின் உணர்வுகளை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றார்கள். மாற்றிய அந்த உணர்வை இணைத்துச் செயற்கைக் கோளை அங்கே கொண்டு போகின்றார்கள்.

1.கம்ப்யூட்டரில் பதிவு செய்த நிலை கொண்டு
2.அங்கே மோதலில் தன் இனமான உணர்வுகள் வந்தவுடனே
3.செயற்கைக் கோளைத் திசை திருப்பி அந்த கோளுக்கு அழைத்துச் செல்லுகின்றது.

கோளுக்கு அழைத்துச் செல்லும் போது அந்த வட்டப் பாதையை நிர்ணயிக்கின்றார்கள். கோளுக்குள் விழுந்து விடாதபடி அந்த சுழற்சியின் வட்டப் பாதையில் ஈர்க்கும் தன்மை வரும் போது இதைச் சுழலும்படி செய்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இதை எல்லாம் இங்கே தரையில் இருந்து விஞ்ஞான அறிவால் செயல்படுத்துகிறார்கள்.

அதே போல் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை நாம் உந்திச் செலுத்தும் பொழுது நேராகச் சப்தரிஷி மண்டலத்தில் இணைகின்றது.

அங்கே இணைந்த பின் உடல் பெறும் உணர்வைக் கரைத்து விடுகிறது.. பொசுக்கி விடுகிறது. ஏனென்றால் சப்தரிஷிகள் என்பவர்கள் உடல் பெறும் உணர்வுகளைக் கருக்கியவர்கள்.

அப்பொழுது உயிருடன் ஒன்றிய நிலைத்த அறிவாக நம் முன்னோர்கள் அந்தச் சப்தரிஷி ஒளி வட்டத்தில் சுழல ஆரம்பித்து விடுகிறார்கள்.

உதாரணமாக கணவனைப் பிரிந்த மனைவியின் உயிரான்மாவை கூட்டுத் தியானத்தின் மூலமாக எல்லோரும் சேர்ந்து அங்கே விண் செலுத்துகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

கணவனும் தன் மனைவியின் உயிரான்மா அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளி பெறும் சரீரம் பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ணுதல் வேண்டும். அப்பொழுது மனைவியின் ஆன்மா அங்கே செல்கிறது.

மனைவி சப்தரிஷி மண்டலத்துடன் முதலில் இணையும் போது அடுத்து கணவனும் உடலை விட்டுப் பிரியும் சமயம் சப்தரிஷி மண்டலத்தை எண்ணினால் தன்னிச்சையாக (AUTOMATIC) அங்கே இழுத்துக் கொண்டு போய்விடும்.

இந்த உணர்வை எல்லாம் பெருக்குவதற்கு அந்தப் பதிவு இல்லை என்றால் யாரையும் நாம் அங்கே அனுப்பவும் முடியாது. நாம் விண் செல்லவும் முடியாது.

யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி செய்தால் உடலை விட்டுப் பிரிந்தால் தன்னிச்சையாக (AUTOMATIC) அங்கே அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் போய் இணையும்.

(ஏனென்றால் ஒரு நண்பனிடத்தில் மிகுந்த பாசமாக இருக்கிறோம். எனக்கு இப்படி நன்மை செய்தான். அவனை விட்டு விட்டுப் போகிறோமே என்று எண்ணினால் வேறு எங்கேயும் அந்த ஆன்மா போகாது. நேராக நம் உடலுகுள் தான் வரும். இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்)

முந்தி நாம் யாரையும் விண் செலுத்தவில்லை. அந்தப் பழக்கத்தை விட்டு விட்டோம். இப்போது குருநாதர் காட்டிய வழியில் அந்த ஞானிகள் கண்ட வழியை உங்களிடம் தொடரச் செய்கிறோம்.

மனிதனான பின் பிறவியில்லா நிலை அடைந்தவர்கள் தான் முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று பொருள். சப்தரிஷி மண்டலத்தில் கண்ணுக்குப் புலப்படாத நிலையில் எத்தனையோ கோடி உண்டு.
1.ஏனென்றால் அவர்கள் ஒளியின் சரீரமாகி
2.என்றும் பதினாறு என்ற நிலை அடைந்து பல நூறாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது,

இந்தச் சூரியக் குடும்பம் அழிந்தாலும் அவர்கள் பிற மண்டலங்களுடன் இணைந்து அதில் வரும் உணர்வை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றதால் “என்றுமே… எங்கேயுமே… அழியாத நிலைகள் கொண்டு வாழ்கிறார்கள்…!

அவர்கள் வாழும் எல்லைக்கு நாம் இப்போது பலரை அனுப்புகிறோம். அடுத்து நாம் இந்த உடலை விட்டுப் போனவுடனே யாருடைய தயவும் தேவையில்லை. அங்கே போய்விடுகிறது.

ஆகவே தினசரி காலைத் துருவ தியானத்தில் நம் முன்னோர்கள் அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும் என்று இணைத்துக் கொண்டே வர வேண்டும்.

உலோகச் சத்தினை நம் உயிரான்மாவில் எப்படிப் பெருக்குவது..? சக்தி வாய்ந்த மெய் ஞானியாக எவ்வாறு ஆவது…?

Divine satellite

லோகச் சத்தினை நம் உயிரான்மாவில் எப்படிப் பெருக்குவது..? சக்தி வாய்ந்த மெய் ஞானியாக எவ்வாறு ஆவது…?

 

கேள்வி:-
இந்தப் பூமியின் ஜீவ நாடியான உலோகத்தை அழித்து வாழும் மனிதனின் ஞானம் அந்த உலோகத்தின் பெருக்கத்தை வளர்க்கும் மெய் அறிவை மெய் ஞானத்தில் கூட்டினான் என்றால் இந்தப் பூமியையே ஆட்சி செலுத்தும் “உயர் ஞானியாக” ஆகலாம்.

அப்படி என்றால் உலோகத்தின் பெருக்கத்தை வளர்க்கும் மெய் அறிவை மெய் ஞானத்தில் எப்படிக் கூட்டுவது..? விளக்கம் தேவை

பதில்:-
மாமகரிஷி ஈஸ்வரபட்டர் சொன்னபடி பல நூல்களை ஒன்றாக ஆக்கி ஒரு கயிறாக முறுக்கப்படும் பொழுது அது திடமாகின்றது. வலு கூடுகின்றது. அதிக எடையுள்ள எதையும் அந்தக் கயிறால் தூக்கவும் முடிகிறது.

அது போல் தான் ஒரு பொருளை மறைமுகமாக
1.வேக வைத்து அல்லது எரித்து அதிலுள்ள நீர்ச் சத்தெல்லாம் ஆவியாக ஆன பின்
2.எதை வேக வைத்தோமோ அது திடம் கொண்டதாக உருவாகின்றது.

விஞ்ஞானிகள் பூமிக்குள் இருக்கும் அந்தந்த உலோகப் படிவங்களை எடுத்து இந்த முறைப்படித்தான் பிரித்து எடுத்து தனித் தனியாக பல வகையான உபயோகங்களுக்கு இன்று பயன்படுத்துகின்றார்கள்.

பண்டைய காலங்களில் உபயோகிப்பட்ட உலோகங்களை எடுத்துக் கொண்டால் இரும்பு தாமிரம் தங்கம் வெள்ளி இதைப் போல இன்னும் சிலதுகளைத்தான் பயன்படுத்தினார்கள்.

ஆனால் இன்று அதைக் காட்டிலும் ஏழு மடங்கு எட்டு மடங்கு அதிக அளவில் தனிமங்களைக் கண்டு அதைத் தனித்துப் பிரிக்கும் நிலையும் மற்றதுடன் இணைத்துக் கலப்பு உலோகங்களாகவும் பல்வேறு பயன்பாட்டிற்காகச் செயல்படுத்துகின்றார்கள்.

இன்று நாம் உபயோகிக்கும் ஒரு ஸ்மார்ட் ஃபோனில் (SMART PHONE) பல உலோகங்களும் தனிமங்களும் (நூறுக்கு மேல்) உள்ளது. அதற்குள் அத்தகைய நுண்ணிய நிலைகள் இருப்பதால் தான் செயற்கைக் கோள் வரைக்கும் அதனின் அலைக்கற்றைகள் சென்று ஒரு இடத்திலிருந்தது உலகம் முழுவதும் பரப்புவதை ஒலி ஒளி என்ற நிலையில் இழுத்துக் கவர முடிகின்றது. கண்ணை மூடித் திறப்பதற்குள் நமக்கு முன்னாடி அதைக் காட்டுகின்றது.

நாம் தட்டெழுத்தால் கொடுக்கும் அழுத்தத்திற்கொப்ப அந்த அதிர்வுகள் (ELECTRONIC PULSES) இயங்கி காற்றலைகளுக்குள் வெகு தொலைவுக்குள்ளும் ஊடுருவிச் சென்று அதைக் கவர்ந்து படமாகவும் செய்திகளாகவும் காட்டுகின்றது.

1.இன்றைய விஞ்ஞானத்தில் உலோகங்களையும் தனிமங்களையும் புறத்திலே
2.இத்தகைய கருவிகளிலே சேர்த்துப் பயன்படுத்தும் நிலைக்குத்தான் வந்திருக்கின்றார்களே தவிர
3.அகத்திற்குள் சேர்க்கும் வழி தெரியவில்லை. (அதனின் முக்கியத்துவமே தெரியவில்லை)

அகத்திற்குள் சேர்க்கும் வழி என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

நம் உயிர் ஒரு நட்சத்திரம் தான். கோள் தன்னுடைய வளர்ச்சியில் தான் நட்சத்திரமக மாறுகின்றது. கோள்களிலே உயிரணுக்கள் உயிரினங்களும் இருக்கும். நட்சத்திரங்களில் உயிரணுக்கள் இல்லை உயிரினங்கள் அங்கே வாழவும் முடியாது.
1.ஏனென்றால் நட்சத்திரங்கள் அதீத கதிரியக்கச் சக்தி கொண்டது.
2.உலோகத்தின் வீரிய வளர்ச்சி தான் கதிரியக்கம். (உலோகங்களே அங்கே அமிலத் தன்மையாகவும் ஆவிகளாகவும் இருக்கும்)

நட்சத்திரத்திலிருந்து வரும் அத்தகைய கதிரியக்கங்கள் தான் பூமிக்குள்ளும் சரி மற்ற கோள்களிலும் சரி அங்கே விளையும் கல் மண் தாவரம் உலோகங்கள் எல்லாமே வளர்வதற்குக் காரணம்.

பூமிக்குள் மண்ணிலே விளையும் தாவரங்களைச் சமைத்து நாம் உணவாக உட்கொள்கிறோம். மற்றவைகளை நம் வசதிக்கு வீடாகவும் தொழிலுக்காகவும் சுகத்திற்காகவும் பயன்படுத்துகின்றோம்.

ஆக மொத்தம் பூமிக்குள் விளைந்ததைத்தான் எடுத்துப் புறத்திலே உடல் வாழ்க்கைக்குப் பயன்படுத்தப் பழகியுள்ளோம்.
1.ஆனால் மெய் ஞானிகள் அந்த நட்சத்திரத்திலிருந்து வரும் கதிரியக்கச் சக்திகளை நேரடியாக எடுத்து
2.தங்கள் உயிரிலே இணைத்துச் சக்தி வாய்ந்தவர்களாக ஒளியுடன் ஒளியாக ஆனவர்கள்.
3.என்றுமே அழியாத நிலைகளில் வாழ்பவர்கள்…! (உடலுடன் அல்ல – சூட்சம நிலையில் ஒளியாக)

இந்த உடல் வாழ்க்கைக்கும் உடலுக்கும் தான் நாம் முக்கியத்துவம் கொடுக்கின்றோமே தவிர
1.உடலையே உருவாக்கி
2.நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் உயிரைப் பற்றிக் கொஞ்சம் கூட எண்ணுவதில்லை.
3.அதனின் வளர்ச்சிக்காக “எதையுமே…!” செய்வதில்லை.

உடலைக் காக்கும் எண்ணத்திற்குப் பதிலாக உயிருடன் ஒன்றிடும் நிலையாக உயிரைப் போன்றே அழியாத நிலைகள் பெறவேண்டும் என்ற எண்ணத்தை முன்னணியில் வைத்தால்
1.நாம் உடலுக்குக் கொடுக்கும் உணவைக் காட்டிலும்
2.அந்த நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் கதிரியக்கச் சக்திகளை உயிருக்கு உணவாகக் கொடுக்கலாம்.

ஏனென்றால் இருபத்தியேழு நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து மொத்தமாகக் கலவையாக்கியது தான் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் ஒரு அணு என்பது.

ஆதியிலே அந்தச் சக்தியை எடுத்துத்தான் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனான். அதனின் வளர்ச்சியில் நம் சூரியக் குடும்பத்தைத் தாண்டி 2000 சூரியக் குடும்பத்தையும் தாண்டி அகண்ட அண்டத்திலிருப்பதையும் எதுவாக இருந்தாலும் அதைத் தனக்குச் சாதகப்படுத்தும் சக்தியாக அது வளர்ந்து கொண்டேயுள்ளது.

அந்தச் சக்தியைப் பெற நாம் இச்சைப்பட வேண்டும். அதை ஒவ்வொரு நொடிப் பொழுதும் நம் உயிருக்குள் இணைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

அதை இணைக்க இணைக்க புருவ மத்தியில் ஒளிக்கற்றைகள் இணைவதையும் பளீர்… என்று வெளிப்படுவதையும் காணலாம். நம்மிடம் எது மோதினாலும் அதுவும் ஒளியாகவே மாறத் தொடங்கும். (என்னுடைய அனுபவம் அது தான்)

1.நம் சொல் ஆற்றல்மிக்கதாக ஆகும்.
2.நம் செயல் வலு கொண்டதாக இருக்கும்.
3.புறத்தின் செயலாக அல்ல. அகத்திலே எண்ணினாலே புறத்திலே அதனின் இயக்கம் நடக்கும்.

விழித்திருந்து விஞ்ஞானத்தால் செய்ய முடியாததை… ஆன்ம விழிப்பாக… உயிருடன் ஒன்றி விண்ணின் ஆற்றலைச் சுவாசித்து.. மிக மிக நுண்ணிய நிலைகளில் செயல்படக் கூடிய சூட்சம செயலே இது.

இது சகலத்திற்கும் பொருந்தும். இதிலே முதிர்ந்தவர்கள் தான் அந்த மெய் ஞானிகளும்… மகரிஷிகளும்…!

பூமிக்குள் விளைந்ததைச் சுவாசிக்காமல் விண்ணின் ஆற்றலைச் சுவாசித்து உயிருடன் ஒன்றி ஒளியாகும் மகத்துவமே உயர் ஞானியாக அகிலத்தை ஆட்சி செய்யும் நிலை. மனிதப் பிறப்பின் பலனே அது தான்…!

உருவான சக்தியைக் காக்கவும் உருவான சக்தியை அனுபவிப்பதையும் விடுத்துவிட்டு
1.உருவாக்கும் மூல சக்தியை எடுத்து
2.நமக்குள் இருக்கும் உயிரன மூல சக்திக்குள் அதைக் கூட்டிக் கொண்டு
3.படைப்பின் படைப்பைப் படைக்கப்பட்டவனின் படைப்பாக்க வேண்டும்.
4.படைத்ததின் பொருளும் அதுவே…! மீண்டும் மீண்டும் படைக்கப்படுவதின் பொருளும் அதுவே.

சூனியமான நிலையில் உருவான நிலைகள் மீண்டும் சூனியமாகாமல்
பரம்பொருளாக…
நிலைத்த பொருளாக…
ஜீவிக்கும் பொருளாக
ஜீவனூட்டும் பொருளாக வளர்ச்சிக்கு வருதல் வேண்டும்.

தியானமிருந்தாலும் நல்லதை எண்ணி வேதனைப்படத்தான் தெரிகிறதே தவிர நல்லதைக் காக்கும் சக்தியைப் பெற்று நல்லதாக்க முடியும் என்ற எண்ணத்தை எடுக்கப் பழகவில்லை

spiritual need

தியானமிருந்தாலும் நல்லதை எண்ணி வேதனைப்படத்தான் தெரிகிறதே தவிர நல்லதைக் காக்கும் சக்தியைப் பெற்று நல்லதாக்க முடியும் என்ற எண்ணத்தை எடுக்கப் பழகவில்லை

 

வேதனைப்படுவோருக்கு நல்ல மனம் கொண்டு உதவி செய்தாலும் அவன் தவறு செய்யும் போது “இவனுக்குப் போய் நாம் உதவி செய்தோம் பார்..! என்று நாம் வேதனைப்படுகின்றோம்

ஏனென்றால் நாம் நல்லது செய்த உணர்வுகள் அங்கே இருக்கிறது. தவறான அவன் செயலைப் பார்க்கும் போது அந்த உணர்வின் தன்மையை நாம் நுகர நேர்கின்றது.

அந்தத் தவறான உணர்வுகளை நுகர்ந்து நாம் வேதனைப்படும் நிலை வரும் அது நம் நல்ல குணத்தின் தன்மை அடக்குகின்றது. அதன் உணர்வின் தன்மை நமக்குள் விளையப்படும் பொழுது என்ன சொல்கிறோம்…?

நான் நல்லதைச் செய்தனே… அவன் இப்படிச் செய்கின்றானே..! நல்லதைச் செய்தேனே… இப்படிச் செய்கின்றானே…! என்று தான் சொல்வோம்.

அதே போல நம் பிள்ளைகளுக்கும் ஒரு நல்லதைச் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோம். நம் சொன்னபடி கேட்காலம் அவன் செயலற்றவனாக மாறும்போது அவனை எண்ணும் போதெல்லாம் வேதனையின் தன்மையாக நமக்குள் உருமாற்றும்.

1.நமக்கு பிறந்த குழந்தைகள்தான் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினாலும்
2.அவர்கள் செய்யும் தவறு வலிமையாகப்போகும் போது அதை நுகர்ந்து விடுகின்றோம்.
3.ஏனென்றால் முதலில் ஒன்றும் தெரியாது.

அது சிறுகச் சிறுகக் கலந்து அணுவின் தன்மையாக நம் உடலுக்குள் மாற்றப்படும் போது அவனை நினைத்தாலே அந்த வேதனை உணர்வுகள் அதிகமாகி விடும். அதனால் உடலுக்குள் உருவாகும் நோயிலிருந்து யாரும் தப்ப முடியாது.

பின் அவனுடைய உணர்வுகள் நமக்குள் அதிகமாக விளைந்த பின் இந்த உடலை விட்டு நாம் செல்லப்படும் போது அவனுடைய ஈர்ப்புக்குத் தான் போவோம்.

அவனை எண்ணி அவன் உடலுக்குள் செல்கிறோம். அவனில் விளைந்த விஷத்தை நமக்குள் உருவாக்கி அங்கே போன பின் அவனைத் திருத்தும் வழி இல்லை.

1.அவனுக்குள் விளைந்ததை எடுத்து
2.நாம் தான் நம் நல்ல குணத்தை இழக்கின்றோம்…
3.இந்த உடலையும் இழக்கச் செய்கின்றது. நல்ல உணர்வையும் மாற்றச் செய்கிறது.

இப்படிச் செய்கிறானே…! இப்படிச் செய்கிறானே…! இப்படிச் செய்கிறானே…! என்ற நிலைகளில் பேய் மனம் ஆகிவிடுகிறது. இதைப் போன்ற நிலைகள் ஒவ்வொரு குடும்பத்திலும் உண்டு.

“வீட்டுக்கு வீடு வாசற்படி…” என்பது போன்று ஒவ்வொரு குடும்பத்திலேயும் இத்தகைய குணங்கள் கொண்ட குழந்தைகள் இருக்கும். அவர்கள் தவறு செய்யும் நிலைகள் நமக்குள் வரப்போகும் போது பேய் மனம் ஆகின்றது.

அவனை எப்படியும் வளர்க்க வேண்டும் என்ற உணர்வுகள் தோன்றுகிறது. அந்த எண்ணம் பாசக் கயிறாக மாறுகிறது.
1.அவனைத் திருத்துவதற்கு மாறாக
2.நம்முடைய எண்ணம் நம் உடலுக்குள் அது எமனாக… நோயாக மாறுகின்றது.

இதைத் தான் சித்திர புத்திரனின் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று ஞானிகள் காட்டுகின்றார்கள்.

நாம் பார்ப்பது நம் பையனை…! அது “சித்திரம்…” அவன் இப்படிச் செய்கிறான் என்ற உணர்வை நுகரப்படும் போது நமக்குள் குழந்தையாக இருந்தாலும் அவன் செய்யும் தீமையின் உணர்வுகள் நமக்குள் அணுவாக உருவாக்கும் கருவாக உருவாகி விடுகின்றது. அதாவது “புத்திரனாக” உருவாகிவிடும்.

அப்போது “அவன் இப்படி இருக்கின்றானே… அவன் எதிர்காலம் என்ன ஆகுமோ…?” என்று அடிக்கடி எண்ணி அதாவது பாசக்கயிறால் தொடரப்படும் போது அவனை எண்ணி எந்த வேதனைகள் பட்டமோ அது நமக்குள் நோயாக விளையும்.

அப்போது இந்த வாழ்க்கையில் நல்லது செய்ய வேண்டும் என்பதையே சுத்தமாக மறந்து விடுறோம். ஒரு எருமை மாடு என்ன செய்யும்…? அதற்குச் சிந்தனை இல்லை. சுமக்கத் தெரியும். அடித்தால் “ஆ…” என்று கத்தும். அந்த வலுவின் தன்மை தான் அதற்கு உண்டு.

ஆக அதைப் போன்ற உணர்வின் தன்மை நமக்குள் வரப் போகும் போது தான் எருமையை வாகனமாக வைத்து “எருமை மேலே எமன்…” வருவதாகக் காட்டுகின்றார்கள். பையன் மேல் உள்ள பாசத்தால் சிந்தனை அல்லாது செயல்பட்ட உணர்வுகள் அது தொடர்ந்து “பாசக் கயிறாக” நம்மை வழிப்படுத்துகின்றது.

சூட்சம நிலையில் நடப்பதை மனிதன் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான் சித்திர புத்திரன் கணக்குப் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று தெளிவாக்கிக் கொண்டு வருகிறார்கள் ஞானிகள்.

நாம் பார்த்த உணர்வின் தன்மை அது எந்தக் கணக்கோ அதன் வழி கொண்டு நாம் எண்ணிய எண்ணங்கள் பாசக் கயிறாக மாறி “நம்முடைய எண்ணமே எமனாக மாறுகிறது…”

வேதனையான ஆன பிற்பாடு பேய் மனம் கொண்டு யாரைக் காக்க வேண்டும் என்று எண்ணினோமோ அவன் உடலுக்குள் சென்று இந்த விஷத்தைத் தான் வளர்க்கும். அவனையும் வாழ விடுவதில்லை. அவனையும் வீழ்த்திய பின் அடுத்து வெளி வந்து மனிதனல்லாத உயிரினமாகத்தான் பிறக்க முடியும்.

இதை எமன் தண்டனை கொடுக்கின்றான் என்ற நிலையில் எண்ணெயில் போட்டு வாட்டுகின்றான். தலை கீழாகக் கட்டித் தொங்க விடுகிறான் என்று உணர்த்துகின்றார்கள்.

நாம் நுகரும் செயலாக்கங்கள் நமக்குள் மறைமுகமாக எப்படி இயக்குகிறது என்று ஞானிகளால் காட்டப்படுகிறது. இதை நாம் யாருமே புரிந்து கொள்வதில்லை.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் காலையில் அந்தத் துருவ தியானம் எடுக்கப்படும் போது அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா என்று எடுத்து வலுவாக்கி அந்த வேதனையின் உணர்வுகளை மாற்றப் பழக வேண்டும்.

ஏனென்றால் விஷத்தை ஒடுக்கியவன் அந்தத் துருவ மகரிஷி. குடும்பத்தில் கணவன் மனைவி இருவருமே துருவ மகரிஷியின் உணர்வை எடுத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தை தவறு செய்தால் அந்தத் துருவ மகரிஷியின் அருள் உணர்வு அவன் பெற வேண்டும். அவன் அறியாத இருள்கள் நீங்க வேண்டும். மெய்ப் பொருள் காணும் சக்தி பெற வேண்டும் என்று தியானத்து அந்த உணர்வுகளை அவனுக்குள் பாய்ச்ச வேண்டும்.

இப்படி அருள் உணர்வை நமக்குள் படைத்து நல்ல அணுவின் தன்மையாக அடையச் செய்ய வேண்டும். எண்ணத்தால் இங்கே எப்படிக் கரு உருவானதோ இதைப் போல அவனை வளர்க்கும் அருள் ஞான்த்தின் உணர்வை நமக்குள் எடுத்துக் கருவாக உருவாக்குதல் வேண்டும்.

கணவனும் மனைவியும் இருவருமே வேதனை என்ற உணர்வுகள் வராதபடி மகரிஷிகளின் ஒளி அலையாகச் சமைத்து அந்த எண்ணத்தைப் பாய்ச்சப்படும் போது அறியாத இருளை நீக்கும் சக்தியை நீங்கள் பெறுகின்றீர்கள்.

இருளை நீக்கும் உணர்வுகள் அவனுக்குள் பாயும் பொழுது அவன் தெளிவாகின்றான். தெளிந்த நிலைகள் அடைகின்றான்.

தாய் கருவிலே வளரப்படும் போது சந்தர்ப்பத்தால் தீமையின் உணர்வுகளைத் தாய் உற்று நோக்க நேர்ந்தால் அந்தத் தீமையான உணர்ச்சிகளைத் தூண்டும் நிலைகள் கருவிலே விளைந்து.. குழந்தை பிறந்த பின்.. “நாம் என்னதான் சொன்னாலும் விளைந்த உணர்வின் சக்தி அவனை அப்படித் தான் இயக்கும்…!” அதை மாற்ற வேண்டும் என்றால் இந்த வழிப்படி நாம் அவனை நிச்சயம் மாற்ற முடியும்.

1.களைகள் முளைத்து விட்டால் வயல்களில் அந்தக் களையை எப்படி உடனே நீக்குகின்றோமோ அதைப் போல
2.குறைகளைக் கண்டால் இந்த முறையைக் கடைபிடித்தே ஆக வேண்டும்.
3.சொல்லால் சொல்லி யாரையும் மாற்ற முடியாது.

இதைத் தெளிவாக எல்லோரும் தெரிந்து கொள்ளுங்கள்.

பூமியின் ஜீவ நாடியையே மாற்றும் இன்றைய விஞ்ஞானத்தின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

HUMAN BIRTH TREASURE

பூமியின் ஜீவ நாடியையே மாற்றும் இன்றைய விஞ்ஞானத்தின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

காட்சி:-
பலா மரம் ஒன்று தெரிகின்றது. அந்த மரத்தின் வேரிலிருந்து பல பலாப் பழங்கள் பெரிது பெரிதாகத் தொங்குவது தெரிகின்றது,

விளக்கம்:-
இந்தப் பூமியின் இயற்கைக் கதியுடன் வளர்ந்த பலா மரத்தில் அது வளர்ந்து பலன் தருகிறது. அதனுடைய பலனாக ஒவ்வொரு தருணத்திலும் காய்த்துப் பல ஆண்டுகள் அந்த மரத்தினுடைய பலனை வெளிப்படுத்தியபின் அந்த மரம் பட்டு விடுகின்றது.

1.அந்த மரத்தின் பலனான பலாப் பழத்தின் சுவை பக்குவப்படும் நாள் இரண்டு தினங்களே (அறுத்த பின்)
2.அதனுடைய மணமும் சுவையும் அந்த இரண்டு தினங்களுக்குத் தான்…!
3.அந்த நேரத்தில் அந்தக் கனியை மனிதன் தனக்கு உணவாக்கிக் கொள்கின்றான்.

இரண்டு தினங்களுக்கு மேல் அப்படியே வைத்திருந்தால் அழுகிய துர்நாற்றமும் ஈ கொசு எறும்பு போன்ற பூச்சிகள் மொய்க்கத் தொடங்குகிறது. அதற்குப் பிற்பட்ட நாளில் அந்தக் கனியிலேயே புழுக்கள் புழுத்து விடுகின்றது.

பலாக் கனியின் பயனை இரண்டு நாளில் சுவையாக மனிதன் உட்கொள்கின்றான். அதே சமயத்தில் அந்த இரண்டு நாளிலேயே அதனைத் தன் உணவுக்காகப் பல நாட்கள் கெடாமல் பக்குவப்படுத்தும் வழியையும் மனிதன் செய்து கொள்கின்றான்.

பலா மரத்தின் கனியின் சுவையைச் சுவைப்பதற்காக மனிதன் அதனை மீண்டும் மீண்டும் பயிர் செய்கின்றான். மனித இனத்தின் உணவின் பெருக்கத்திற்கு வித்தாக்கி வளர்க்கின்றான்.

மனிதனின் பக்குவத்தால் பலா மரத்தின் வளர்ச்சியின் விகிதங்கள் பூமியின் இயற்கையில் கூடுகின்றது. ஏனென்றால் பலா மரம் தானாக வளரக்கூடிய நிலை அதிகம் இல்லை.

1.மனிதனின் செயல்பாட்டினால் பூமியின் இயக்கத்தில் தாவரத்தின் இனப் பெருக்கத்தை வளர்த்துக் கொள்வது போல்
2.உலோகக் கனி வளங்களின் வளர்ச்சியை மனிதனின் செயலால் இந்தப் பூமியின் இயக்கத்தில் வளர்க்க முடியவில்லை.

அதே போல் பூமியின் ஜீவ ஜெந்துக்களின் இன விருத்தியையும் நீர் நிலைகளில் வளரும் முத்துக்கள் போன்ற சில இனங்களையும் மனிதனின் செயல்பாட்டால் வளர்க்க முடிகின்றது.

1.பூமியில் உருவாகும் அனைத்துத் தனிமங்களையும் வெட்டி எடுத்துப் பயன்படுத்தும் மனிதனால்
2.அந்த உலோகத் தன்மையைத் தன்னுடைய செயலால் வளர்க்க முடியவில்லை விளைய வைக்கவும் முடியவில்லை.
3.ஆனால் இந்தப் பூமியின் ஜீவ நாடியே பூமிக்குள் விளையும் உலோகங்கள் தான்…!
(அதை விஞ்ஞானிகள் இது வரை உணரவில்லை)

ஆக இன்றைய மனிதனுடைய திறமை உயிரினங்களையும் தாவரங்களையும் தனக்கு உணவாக்கிக் கொள்ளும் தேவைக்காகச் செயல்பட்டு
1.அதனுடைய பெருக்கத்தின் வளர்ச்சிக்காகத்தான்
2.இன்றைய மனிதனின் ஞானச் செயலும் விஞ்ஞானமும் இந்தப் பூமியில் வளர்த்து வாழ்கின்றது.

இந்தப் பூமியின் ஜீவ நாடியான உலோகத்தை அழித்து வாழும் மனிதனின் ஞானம் அந்த உலோகத்தின் பெருக்கத்தை வளர்க்கும்
1.மெய் அறிவை மெய் ஞானத்தில் கூட்டினான் என்றால்
2.இந்தப் பூமியையே ஆட்சி செலுத்தும் “உயர் ஞானியாக” ஆகலாம்.

உலோகத்தின் சத்தைக் கொண்டு தான் இயற்கையின் கதியை இந்தப் பூமியின் பெருக்கத்தின் ஜீவ நாடியாக்க முடியும் என்பதனை மனிதனின் மெய் அறிவு இனிமேலாவது விழிப்படைதல் வேண்டும்.

ஏனென்றால் மனிதன் என்பவன் உண்டு உறங்கிக் கழிக்க மட்டும் இந்தப் பூமியில் பிறப்பு எடுக்கவில்லை. ஞானத்தின் பகுத்தறிவை மெய்யின் விழிப்படைந்து மனிதன் இந்தப் பூமியின் இயக்கத்தின் செயல் சூட்சமத்தில் சுழல வேண்டும்.

சூரியனும் பல கோள்களும் இந்தப் பூமியின் தொடர்புடன் சுழலும் பொழுது இந்தப் பூமியின் இயக்கத்தின் கதியில் வாழும் மனிதன் “இந்த மெய்யை அறிதல் வேண்டும்…!”