பன்னிரெண்டு மாதங்களிலும் அருள் சக்தியைப் பெறச் செய்யும் நம் ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்கள்

Festival day

பன்னிரெண்டு மாதங்களிலும் அருள் சக்தியைப் பெறச் செய்யும் நம் ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்கள்

மனிதனுக்கு மத்தியில் இருக்கக்கூடிய குறைபாடுகளை நீக்குவதற்காக பன்னிரண்டு மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நிலைகளைக் கொடுக்கின்றார்கள் ஞானிகள்.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.இந்தப் பன்னிரண்டு மாதங்களுக்கும் முப்பது நாளைக்கு ஒரு தரம்
3.தீமைகளைக் கழித்துச் சுத்தப்படுத்தும் முறைகளைக் காட்டுகின்றார்கள்.

பொங்கல்… சிவன் இராத்திரி… சித்திரைக்கனி… ஆடிப் பெருக்கு.. விநாயகர் சதுர்த்தி.. விஜய தசமி… தீபாவளி.., கார்த்திகை தீபம்… வைகுண்ட ஏகாதசி… என்று ஒவ்வொரு மாதத்திலும் விழாவை வைத்து ஞானிகளின் உணர்வை நமக்குள் வலுவாக்கிக் கொள்ளும் முறைகளைக் கொடுக்கின்றார்கள்.

விஜயதசமி – நம் உயிர் விண்ணிலிருந்து இங்கே பூமிக்குள் வந்த பின் பத்தாவது நிலை அடையக்கூடிய முறையைக் கொடுக்கின்றார்கள்.

கார்த்திகை ஜோதி. என்றால் ஆறாவது அறிவு கார்த்திகேயா. விளக்கை நம் வீட்டு வாசற்படியில் வைத்து வீட்டுக்குள் வருகின்ற இருளை நீக்குகின்றோம். ஆகவே கார்த்திகை தீபம் ஏற்றி இருளை நீக்குவது போல் எல்லாக் குடும்பமும் ஒளியாக வேண்டும் என்று எண்ணும்படி செய்கிறார்கள்.

உதாரணமாக நாம் நுகரும் உணர்வுகள் தீமையின் உணர்வுகளானால் வினையாகி உடலுக்குள் ஒரு வித்தாகின்றது. தீமையான அந்த வித்தை உடலுக்குள் வளர விடாது தடுக்க வேண்டும் அல்லவா…! அதற்காக விநாயகர் சதுர்த்தி என்று கொடுக்கின்றார்கள்.

நல்ல குணங்கள் கொண்டு நல்ல உணர்வுகளை உடலில் விளைய வைத்திருந்தாலும் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தது வினைக்கு நாயகனாகி விடுகின்றது.

நம் உடலில் உள்ள நல்லதைக் காப்பதற்காக வேண்டி தீமையான உணர்வுகளைக் களையை நீக்குவது போல் நீக்க வேண்டும். அந்த அருள் ஞானிகள் பெற்ற அருள் உணர்வின் தன்மை நாம் பெற வேண்டும் என்று எண்ணும் போது நல்ல வித்திற்கு உரம் கிடைக்கின்றது. அப்பொழுது தீமைகளைக் கரைத்து விடுகின்றோம்.

நாம் நீக்கிய தீமையான உணர்வுகளைக் காலையில் சூரியன் எடுத்து சூனிய மண்டலத்திற்குக் கொண்டு போகிறது. அப்புறம் கடல் அலைகளிலிலே கொஞ்சம் கொஞ்சமாக இழுத்து அங்கே கரைத்துவிடும். உள்ளே இழுத்துக் கொள்கின்றது.

அதாவது பூமியில் முக்கால்வாசி நீர் இருக்கின்றது. பாக்கி கால் வாசி நிலப் பகுதியில் தான் நாம் இருக்கிறோம். தீமைகளை அங்கே நீரிலே கரைத்த பின் இங்கே நிலப் பகுதியில் வராது அது நிறுத்தி விடும். நாம் வாழும் இந்த உலகமும் தூய்மை ஆகின்றது.

தீபாவளி அன்றைக்கும் இதேதான். தீபாவளி என்றால் கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாள்.

இப்போது நீங்கள் என்ன செய்கின்றீர்கள். கண்கள் கொண்டு வேதனைப்படுவோரைப் பார்க்கின்றீர்கள். அடடா… இவனுக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று பாசத்தால் வளர்த்துக் கொள்கிறோம்.

அந்த வேதனையான உணர்வின் தன்மை வந்தவுடனே நமக்குள் அது நோயாக மாறுகிறது. அசுர குணங்கள் விளைகின்றது. அசுர அணுக்கள் விளைகின்றது. நல்ல குணங்களைக் கொல்கின்றது. நம் வாழ்க்கையில் தவறு செய்யாமலேயே இப்படி வருகிறது.

கண்ணன் நரகாசுரனைக் கொன்றான் என்ற நிலையில்
1.நம் கண்களின் துணை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று பல முறை
3.கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் செலுத்த வேண்டும்.

கணவனும் மனைவியும் இரண்டு பேரும் இந்த உணர்வை வளர்த்துக் கொண்ட பின் நாங்கள் பார்ப்போர் குடும்பம் எல்லாம் மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும். அவர்கள் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும். அவர்கள் மலரைப் போல மணம் பெற வேண்டும். மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும். மகரிஷியின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும். அவர்கள் குடும்பம் எல்லாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்

நம் வாடிக்கையாளர்கள் அவர்கள் கஷ்டத்தை நம்மிடம் சொல்லி இருப்பார்கள். “உ..ம்” கொடுத்து அதைக் கேட்டிருப்போம். நமக்குள் அது பதிவாகிவிடும்.

அதை மாற்ற நாங்கள் தொழில் செய்யும் இடங்களெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். எங்கள் வாடிக்கையாளர்கள் எல்லாம் நலம் பெற வேண்டும். எல்லாக் குடும்பங்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஏகோபித்த நிலையில் நாம் எண்ணிப் பழக வேண்டும்.

ஆக மற்றவர்களுடைய துயரங்களை நாம் எண்ணுவதே இல்லை. அதிகாலையில் நான்கு மணிக்கு இப்படித் தியானித்தால் காலையில் ஆறு மணிக்கு சூரியனின் ஒளிக் கதிர்கள் வருகிறது.
1.நாம் இழுக்காத அந்தத் தீய வினைகளை எல்லாம்
2.அது இழுத்து மேலே சூனிய மண்டலத்திற்கே கொண்டு போய் விடுகிறது.

சிலர் தியானம் இருக்கிறோம் என்ற நிலையில் சூனிய மண்டலத்திற்கே போய் விடுகிறார்கள். எங்கே…? சிவன் இருண்ட உலகத்தில் இருக்கின்றான். அங்கே போய்ப் பார்க்க வேண்டும் என்ற நிலையில் சிவன் ராத்திரி என்று அறியாதபடி சொல்கிறார்கள்.

ஒருவருகொருவர் பகைமையான உணர்வு வந்தாலும் தீபாவளி அன்று நல்ல பதார்த்தங்களைக் கொண்டு போய்க் கொடுத்து அவர்கள் வீட்டில் உள்ள எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். மலரைப் போல் மணம் பெற வேண்டும். மகிழ்ந்து வாழ வேண்டும் என்று ஒற்றுமை ஏற்படுத்தும் நாளே தீப ஒளித் திருநாள்.

சிவன் ராத்திரி அன்றைக்கு “விழித்திரு…!” என்கிறார்கள். மகா சிவன் ராத்திரி அன்று சிவன் கோயிலில் போய் விடிய விடிய விழித்து இருக்கிறோம்.

தாயக்கட்டையையும் மற்றதையும் போட்டு விளையாடுகிறோம். விழித்திருக்க வேண்டு என்று சொல்லிக் கொண்டு “நான் ஜெயித்தேன்… நீ இல்லை நான் தான் ஜெயித்தேன்…!” என்று இதில் தான் நாட்டத்தைச் செலுத்துகின்றோமே தவிர “எதற்காக விழித்திருக்க வேண்டும்…?” என்பதை அறியவில்லை.

விழித்து இருக்கிறது என்றால் சும்மா விழித்திருப்பதல்ல…! அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர என்று எண்ண வேண்டும்.

யார் யாரிடம் எல்லாம் நான் பழகினேனோ அந்தக் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும். அவர்கள் தொழில் வளம் பெருக வேண்டும். பார்ப்போர் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று சொல்லி “எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்…!” என்று இதை எண்ண வேண்டும்.

அதாவது தீமைகளையும் அந்தப் பகைமை ஊட்டக்கூடிய எண்ணங்களும் நமக்குள் வராதபடி விழித்திருக்க வேண்டும்.

பகைமை வந்தால் எனக்கு இப்படிச் செய்தான்… அவன் உருப்படுவானா…? அவன் குடும்பம் கெட்டு போகவேண்டும்…! என்று சொல்கிறோம்,

அந்த உணர்வு நமக்குள் புகாதபடி தீமையை விளைவிக்கும் அணுக்களுக்குச் சாப்பாடு கொடுக்காதபடி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்ய வேண்டும்.

நாம் பார்க்கும் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று அந்தப் பகைமை உணர்வுகளை அகற்றுவதற்காக நாம் விடிய விடிய விழித்துக் கொண்டு இருப்பது.

ஏனென்றால் மனிதனுக்குள் சந்தர்ப்பத்தால் விளைய வைத்த வெறுப்பின் உணர்வுகள் அவர்கள் எண்ணும் போது இந்த சூரியனின் காந்த சக்தி எடுத்துக் காற்றிலே அலைகளாகப் பரப்ப் வைத்து விடுகிறது.

அப்போது நமக்குள் அணுவாகி விட்டால் சும்மா இருந்தாலும் போதும். அந்த உணர்ச்சிகள் தூண்டி சிறு மூளைக்கு அனுப்பும். உயிர் என்ன செய்யும்…? அது எடுத்து நமக்குள் உணர்த்தும். தீமை செய்யும் உணர்வுகளை நுகரச் செய்யும். உயிரில் பட்டவுடனே அந்த எண்ணம் வரும்.

1.“அவனைச் சும்மா விடுவதா…?” என்ற எண்ணம் வந்தால் அந்த அணு அதனுடைய உணர்வை இழுத்துவிடும்.
2.இது இழுத்தவுடனே நம் உடல் உறுப்புகளைக் கெடுக்கும்.
3.நாம் நினைக்கிறோம்… அவனை விடுவதா என்று…!
4.ஆனால் அந்த உணர்வு இரு நான் பார்க்கிறேன்…! என்று நம் நல்ல குணங்களை இங்கே கொல்லும். இதை மாற்ற வேண்டும்
5.அதற்காகத்தான் சிவன் ராத்திரி அன்று விழித்திரு என்று சொல்கிறார்கள்

அதாவது தீமைகள் நமக்குள் புகாதவண்ணம் நம் உடலுக்குள் விளையாத வண்ணம் தடுத்து நிறுத்த வேண்டும்.

என்றும் பதினாறு என்ற மார்க்கண்டேய தத்துவத்தை உணர்த்திய “பிருகு… பிருகண்ட ரிஷியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…”

self realization - divine rishi

என்றும் பதினாறு என்ற மார்க்கண்டேய தத்துவத்தை உணர்த்திய “பிருகு… பிருகண்ட ரிஷியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…”

 

மனிதனின் உடலில் உண்ணும் உணவிற்கொப்ப உடலில் இரத்தம் எப்படி மாறுபாடு கொள்கின்றதோ அதே போன்று நாம் சுவாசிக்கும் உணர்விற்கொப்பவும் உயிரணுக்களின் தோற்றம் உடல் தன்மையில் வளர்கின்றது.

இன்று விஞ்ஞான ரூபத்திலேயே மருத்துவரின் ஆராய்ச்சியில் உணவு உட்கொள்வதற்கு முன்னும்… பின்னும்… மற்றும் இனிப்புப் பதார்த்தங்களைத் தந்தும்.. (SUGAR LEVEL IN BLOOD) ஆராய்ச்சிகள் நடத்துகின்றார்கள்.

அதற்கொத்த விகிதத்தில் இரத்த அணுக்களின் மாற்றத்தைக் காணுகின்றார்கள், அதைப் போன்றே
1.உணர்வின் நிலைக்கொப்ப எடுக்கப்படும் எண்ணத்தால்
2.உயிரணுக்களின் ஆத்ம பதிப்பு உடனே இரத்த அணுக்களில் சேர்வதைக் காட்டிலும்
3.ஆத்மாவின் பதிவு எண்ணத்தின் மோதலாக
4.எண்ணத்தின் செயல்பாடு உணர்வைத் தூண்டக் கூடிய நிலையில்
5.உயிரணுக்களின் விகிதத் தன்மை வீரியம் கொள்கின்றது.

புரியாத புதிராகப் படிப்பவர்களுக்கு இது தோன்றும்…!

உணவை உண்ணும் பொழுது உடலுக்குள் இரத்தத்தில் உடனே அது அணுவாகச் செயல் கொள்கிறது. அதுவே “எண்ணத்தில் எடுக்கும் எதுவாகிலும்…!” நம் ஆத்மாவில் பதிவாகிறது.

பதிவான பின் ஆத்மாவின் உந்துதலினால் உணர்வில் மோதுண்டு ஒன்றையே மீண்டும் மீண்டும் எண்ணத்தில் கொண்டு உடலுக்குள் இருக்கும் (ஜீவ) உயிரணுக்களிலும் அச்சத்துக் கூடக்கூடிய சந்தர்ப்பத்தை எண்ணத்தால் எடுக்கும் உராய்வினால் ஏற்படுத்துகின்றோம்.

அப்படி ஏற்படுத்துவதினால் வாழ்க்கையில் மனித ஆற்றலின் செயல் யாவையும் “எண்ணமே தான் கடவுள்..!” என்ற தத்துவத்தில் எண்ணத்திற்கொப்பத்தான் செயல் திறமையின் ஆற்றலின் பரிமாண சக்தியாக வளர்கின்றது.

1.இந்தப் பிரபஞ்சத்தின் உண்மையை உணர்ந்த ஞான ரிஷிகள் பிருகு முனிவரும் பிருகண்ட ரிஷியும்
2.என்றும் பதினாறு என்ற மார்க்கண்டேயத் தத்துவமாக இந்தப் பூவுலகத்திற்குத் தத்துவரீதியாக உணர்த்தினார்கள்
3.அந்த உண்மைகள் யாவையும் ஆதிசங்கரர் காலத்திற்குப் பிறகு வேதங்களாகப் பிரிக்கப்பட்டு விட்டது

என்றும் பதினாறு என்ற நிலையில் அழியாததாக “உயர்வெய்தும் உயிர் ஆத்மாவின் உயர்வை…”
1.இன்றைய மனித ஆற்றலின் சிந்தனை எல்லாம்
2.சரீர சுகத்தின் செருக்கில்
3.விஞ்ஞானத்தின் இயந்திரக் கதிக்கு அடிமைப்பட்டு விட்டது.

எண்ணத்தைக் கொண்டு எதையும் சிந்தனையில் சீர்படுத்தி உணரக்கூடிய தன்மை ஒவ்வொரு ஜீவ ஆத்மாவுக்கும் உண்டு. செலுத்தும் பக்குவத்தில் தனக்குள் இருக்கும் உயிரான ஈசனைச் சூட்சமத்தின் துணை கொண்டு ரிஷி சக்திகளின் சக்தியைக் காண வேண்டும்.

விதியின் கதிப்படி நடப்பதை எல்லாம் மதி கொண்டு மாற்றியமைப்பது போல் ஒவ்வொரு மனித ஆத்மாவில் சரீர விதியின் கதியை மாற்றியமைக்கக்கூடிய செயலை “நான்” என்ற உண்மை உணர்தலில் பெற முடியும்.

விஞ்ஞானத்தில் எப்படி இயற்கை வளங்களைச் செயற்கை முறையால் மாற்றியமைத்து பல உண்மைகளை மாற்றும் நிலைப்படுத்துகின்றனரோ அது போன்ற நிலையை மனித தத்துவத்திலும் மெய் ஞானத் தத்துவத்தால் மாற்ற முடியும்.

1.சரீர எண்ண அறிவின் ஆற்றல் கொண்ட மனிதப் பிறப்பின் தொடரில்
2.உயிரணுவின் தோற்றத்தின் நட்சத்திர ஒளி அலை அமிலத்தின் கூறு கொண்டு
3.பிறப்பின் தொடரில் வாழும் விதியின் கதியின் வாழ்க்கையில்
4.பிறப்பின் தொடரில் வாழும் முறையில் அந்தப் பிறப்பின் முடிவும்
5.நட்சத்திரத் தொடர் கொண்ட பூமியின் கதிக்கு
6.பூமி தொடர்பு கொள்ளக்கூடிய நட்சத்திர ஒளிகளின் செயல் தன்மை
7.ஒவ்வொரு இயற்கையின் செயலிலும் நடக்கும் கதி கொண்டு இயற்கையின் சுழற்சியுடன் சுழல்கின்றது.
(அதாவது உயிர் தோன்றி பல பிறவிகள் எடுத்து மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்து சுழலும் நிலையின் இயல்பு இதுவே)

ஆனால் மதி கொண்ட ஞான ஒளி எடுக்கும் ஆத்ம ஞானிகளின் செயல் எப்படிப்பட்டது…?

உயிர் தோன்றிய அந்த (தன்னுடைய) நட்சத்திரத் தொடரையே தன் எண்ணத்தின் அறிவின் ஆற்றலைக் கொண்டு சரீரத்தில் இயங்கும் உயிராத்மாவின் ஒளித் தன்மையை விழிப்புறச் செய்கின்றார்கள். எப்படி…?

1.மெய் ஞான ஒளி அறிவின் வேரை வளர்க்கக்கூடிய
2.வான் கோள்களின் விண்மீன்களின் தொடர்பு படுத்தும் ஒளிச் சக்தியால்
3.ஆத்மாவின் விழிப்பால் – பேரண்டத்தின் உண்மையின் வளர்ப்பு கொண்ட விண்மீன்களின் விழிப்பு நிலையை
4.தன் சிந்தனையின் அறிவின் ஆற்றலைக் கொண்டு பெற்று
5.என்றும் பதினாறாக ஒளிரும் நட்சத்திரமாக விண்ணிலே பிரகாசிக்கச் செய்கின்றார்கள்.
6.மனிதனின் முதிர்வு நிலை அதுவே…!

விநாயகர் வள்ளியை முருகனுக்கு மணம் முடிக்க உதவினார்… ஏன்…?

Valli marraige

விநாயகர் வள்ளியை முருகனுக்கு மணம் முடிக்க உதவினார்… ஏன்…?

சேனாதிபதி…! பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்…! என்றால் தீமைகளை வென்றவன். அந்த அருள் ஒளியைத் தனக்குள் எடுக்கும் பொழுது வலிமை பெருகுகின்றது. அது தான் வள்ளி.

நம் உடலிலிருந்து வரக்கூடிய வலிமையான சக்தி வள்ளி (வல்லி). திணைக்காட்டில் காவல் இருக்கின்றாள் வள்ளி.

தான் விளைய வைத்ததை மற்ற பட்சிகள் கொத்தித் தின்றுவிடாமல் கவண் கொண்டு கல்லை வீசிப் பாதுகாக்கின்றாள். அதாவது
1.உடலை வளர்த்த நிலையில்
2.நம் உடலுக்குள் தீமை வராதபடி அதை எதிர்த்துத் தாக்குதல் வேண்டும்.

அந்த வலுவான சக்தியை நமக்குக் காட்டுவதற்காக வேண்டி வள்ளி திருமணத்தைக் காட்டுகின்றார்கள். விநாயகர் வந்து “என் தம்பி முருகனைத் திருமணம் செய்து கொள்…!” என்று வள்ளியைப் பயமுறுத்தி முருகனிடம் கொடுத்து விடுகின்றார்.

விநாயகர் தன் தம்பிக்கு இப்படிக் கல்யாணத்தைப் பண்ணி வைக்கின்றார். ஆக விநாயகர் என்பது யார்…?
1.இந்த உடலைக் காத்திடும் வினையாகச் சேர்த்து அதை இச்சையாகி இச்சா சக்தி… கிரியா சக்தி… ஞான சக்தி…!
2.தன் உடலைக் காக்கும் உணர்வின் தன்மை இச்சைப்பட்டு
3.அந்த உணர்வுகள் உயிரிலே பட்ட பின் கிரியை ஆகி
4.அந்த ஞானப்படித்தான் இந்த உடல் இயங்கும்.

ஆகவே எதை இச்சைப்பட வேண்டும்…? அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் வலு சேர்க்க வேண்டும். நம் உடலில் அந்த ஒளியான அணுக்களைப் பெருக்கி உயிராத்மாவை ஒளியாக ஆக்க வேண்டும்.

வள்ளி… அந்த வலிமை மிக்க சக்தியை நாம் நுகரப்படும் பொழுது நம் உயிரிலே பட்ட பின் தெய்வ ஆணை அந்த உணர்வு எதுவோ அது செயல்படும். அதன் வழியே இந்த உடல் இயங்கும்.

இவ்வளவு பெரிய விஷயத்தைக் காவியமாகச் சுருக்கமாக மக்களுக்குப் புரிய வைக்கின்றார்கள் ஞானிகள். நாம் புரிந்திருக்கின்றோமா என்றால் இல்லை, (முருகனுக்கு இரண்டு மனைவி. ஆசைக்கு ஒரு மனைவி அன்புக்கு ஒரு மனைவி என்று அதைத் தான் சொல்லத் தெரியும்.)

அந்த மகரிஷிகளின் அருள் ஆற்றலை உங்களுக்குள் வலு (வள்ளி) ஏற்றுவதற்காக வேண்டித் தான் அதை உபதேசமாக
1.உங்கள் எணணங்களை வேறு பக்கம் திருப்பாதபடி
2.மெய் ஞானிகளின் உணர்வுகளை ஆழமாகப் பதிவாக்குவதற்காக
3.மூன்று மணி நேரம் ஆறு மணி நேரம் எட்டு மணி நேரம் என்று பத்து மணி நேரம் கூடப் (பாபநாசத்தில்) பேசியிருக்கின்றேன் (ஞானகுரு)

உபதேசத்தைக் கேட்பவர்களின் உணர்வை எல்லாம் ஒடுங்கச் செய்து எங்கே இருக்கின்றார்கள்…? என்றால் சொர்க்கலோகத்திலேயே இருக்கின்றார்கள். ஏனென்றால்
1.உங்களிடம் உள்ள மற்ற உணர்வுகளை மறக்கச் செய்து
2.அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளில் வலுவாக (வள்ளி) இருக்கச் செய்வதற்குத்தான் அப்படி மணிக்கணக்கில் பேசுவது.

அப்பொழுது எனக்குள்ளும் அந்த அருள் சக்தி வளர்கின்றது. உங்கள் உடலுக்குள் அந்த அருள் ஒளியைச் சேர்க்கப்படும் பொழுது அருள் ஆனந்தம் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும். தீமைகளிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள்.

தியானம் செய்வதால் உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள்

Ultimate star Polaris

தியானம் செய்வதால் உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள்

 

கேள்வி:-

தியானம் முடித்தவுடன் சில நேரங்களில் எனக்கு உடல் கூசுகிறது.
தியானம் செய்யாத நேரங்களில் கூட இனிப்பான உமிழ் நீர் சுரத்தல் அதிகமாக உள்ளது. ஏன்..?
எனக்கு குருவைத் தியானத்தில் காண வேண்டும் என்று ஆசையாக உள்ளது. அதை அடைவது எவ்வாறு…?

பதில்:-

தியானத்தின் மூலம் நாம் துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியையும் உயிரி வழியாக அதிகமாகப் பெற ஆரம்பித்தால் உடலுக்குள் நிறைய மாற்றங்களை உணர முடியும்.

அதிலே சிலவற்றைச் சொல்கிறேன். உடலின் சில பாகங்களில்
1.சுருக் சுருக் என்று குத்தும்
2.பட பட என்று தசைகளில் துடிக்கும் (கண்களும் துடிக்கும்)
3.சில நேரம் பளீர்…! என்று கூட மின்னும்
4.உடலுக்குள் திடீரென்று அதிக சூடாகும்
5.காதிலே சில நேரம் இரைச்சலாவது போன்றும் அடைப்பது போன்றும் உணரலாம்
6.தலையே பாரமாக இருப்பது போல் இருக்கும்
7.தலையின் பின் பகுதியில் “கின்” என்று இருக்கும்.
8.கண்களின் இமைகளில் எரிச்சல் இருக்கும் (கண்களும் சில நேரம் இலேசாகச் சிவப்பாக இருக்கும்)
9.உட்கார்ந்து தியானிக்கும் பொழுது தூக்கம் வரும்… ஆனால் படுத்தால் தூக்கம் போய்விடும்
10.உமிழ் நீர் சுரந்து கொண்டே இருக்கும் (எவ்வளவு வெயில் வறட்சியாக இருந்தாலும்… தண்ணீரே குடிக்கவில்லை என்றாலும்)
11.புருவ மத்தியிலும் மூக்கின் நுனியிலும் அரிப்பு இருக்கும்
12.கனவுகள் அதிகம் தெரியும் (பகலில் தூங்கினாலும் வரும்)
13.உடலில் சில நேரம் மின்சாரம் பாய்வது போல் “கிர்” என்று இருக்கும்.
(1-13 எல்லாமே எனக்குள் நான் பார்த்திருக்கின்றேன்)

மேலே சொன்ன எல்லாமே அவரவர்கள் உடலுக்குத் தக்கவாறு எடுக்கும் சக்திக்குத் தக்கவாறு எண்ணும் ஏக்கத்திற்குத் தக்கவாறு துருவ நட்சத்திரத்தின் சக்திகள் உயிர் வழியாக உடலுக்குள் செல்லும் பொழுது ஏற்படலாம்.

அது அது தெரியும் பொழுது புருவ மத்தியில் உயிரை எண்ணி மகரிஷிகளின் பால் நினைவை விண்ணிலே செலுத்தி இதைப் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணினால் அந்த விடைகள் கிடைக்கும். உணரவும் முடியும்.

குருவைக் காண வேண்டும் என்றால் குரு சொன்ன முறைப்படி நாம் கடைப்பிடித்து வாழ்க்கையை அருள் வழியில் நடத்த வேண்டும். கூட்டுத் தியானங்களில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் (இது மிகவும் முக்கியம்)

குருவின் உபதேசக் கருத்துக்களை ஆழமாகப் பதிவாக்கியதை நினைவுக்குக் கொண்டு வந்து அதை மற்றவர்களுக்கும் தக்க நேரத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும்.

1.மற்றவர்களுக்குச் சொல்லும் பொழுது அது நமக்குள் ஓங்கி வளரும்.
2.நமக்குள் அது ஓங்கி வளரும் நிலையில் நாம் வெளிப்படுத்தும் நுண்ணிய உணர்வுகளை
3.அவர்கள் சுவாசித்துத் தன் வாழ்க்கையில் வந்த தீமைகளைப் போக்கத் தொடங்கினால்
4.நாம் நிச்சயம் அந்த இடத்தில் குருவைக் காண முடியும்
5.எல்லா மகரிஷிகளையும் காண முடியும்.

குருவையும் மகரிஷிகளையும் ஒவ்வொரு நொடியும்
1.காண வேண்டும் என்ற கண்ட நிலையிலும்
2.அவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று தொடர்பு கொண்ட நிலையிலும் தான்
3.ஞான குரு வெளிப்படுத்திய ஞானிகளின் உணர்வுகளை இங்கே பதிவு செய்து கொண்டுள்ளேன்.

எல்லோரும் பெறவேண்டும் என்று இங்கே பதிவு செய்யும் பொழுது தான் அவர்களை என்னால் காண முடிகின்றது. காட்சியாக அல்ல…! உணர்வாக… ஒளியாக… அலைத் தொடர்பாக… உணர்வின் இயக்கமாக… அவர்களுடன் அவர்களாக…!

நம்முடைய முன்னோர்கள் சொன்ன முறைப்படி தீய வினைகளை நாம் கரைக்கின்றோமோ…?

Lord vinayar

நம்முடைய முன்னோர்கள் சொன்ன முறைப்படி தீய வினைகளை நாம் கரைக்கின்றோமோ…?

 

விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணில் செய்த விநாயகரை வைத்துத்தான் கும்பிடுகின்றோம். அதைப் பார்த்தால் அன்றைக்கு நல்லா கிராக்கியாக இருக்கும்.

மாலையைப் போடுகிறோம். ஆடம்பரப் படுத்துகின்றோம். வாழை மரத்தை வைக்கின்றோம். மஞ்சள் கும்பம் வைக்கின்றோம் இனிப்பை வைக்கின்றோம். கரும்பை வைக்கின்றோம்.

எல்லாவற்றையும் வைத்துச் சமைக்கின்றோம். பூஜை செய்கிறோம். ஆடுகிறோம் பாடுகிறோம். கடைசியில் அந்த விநாயகரைக் கொண்டு போய்த் தண்ணீரில் கரைக்கின்றோம்.

1.ஞானிகள் சொன்ன தத்துவம் வேறு. நாம் சொல்வது வேறு.
2.எல்லாம் கும்பிட்ட பின் களிமண்ணில் செய்த அந்த விநாயகரைக் கடலில் கொண்டு போய் கரைத்து விடுகிறோம்.
3.ஏன் எதற்கு என்று சிந்திக்கின்றோமா…?

விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு அதிகாலையில் நாம் என்ன செய்ய வேண்டும்..? துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய பேரருள் உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக நம் பூமிக்குள் பரவச் செய்கின்றது.

காலையில் விழித்தவுடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி தன் மனைவிக்கு கிடைக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். மனைவியும் தன் கணவருக்குப் பெற வேண்டும் என்று இந்த உணர்வை வலு பெறச் செய்ய வேண்டும்.

மகரிஷியின் அருள் சக்தி இந்த உலகம் முழுவதும் படர வேண்டும். நாங்கள் யாரை எல்லாம் சந்தித்தோமோ பேசினோமோ அவர்கள் குடும்பம் எல்லாம் நலம் பெற வேண்டும். அங்கே அருள் ஒளி படர வேண்டும். அவர்கள் குடும்பத்தில் அறியாத இருள்கள் நீங்க வேண்டும். மெய்ப் பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணிப் பகைமை உணர்வை நமக்குள் நுழையாத படி முதலில் இதைச் செய்ய வேண்டும்.

நம் பிள்ளைகளை நினைத்து அந்த மகரிஷியின் அருள் சக்தி அவர்கள் பெற்று அருள் ஞானம் பெற வேண்டும் என்று அன்றைக்கு எண்ண வேண்டும்.

ஆனால் அதை விடுத்துவிட்டு விநாயகர் சதுர்த்தி தினத்திலேயும் “இப்படி இருக்கிறார்களே… உன்னை நான் வணங்கினேனே…!” என்று இப்படி வேதனைகளை எண்ணினால் நமக்குள் அந்த வேதனை தான் வளரும்.

ஆகையினாலே பிள்ளைகள் அவர்கள் அறியாத இருள் நீங்க வேண்டும். மெய்ப் பொருள் காணும் நிலை பெற வேண்டும் என்று இந்த உணர்வைச் சொல்ல வேண்டும்.

அன்றைக்குத் தினத்தில் பிள்ளைகளும் என்ன நினைக்க வேண்டும்…?

எங்கள் தாய் தந்தையரின் அருளால் அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். அம்மா அப்பா அருளாசி நாங்கள் பெற வேண்டும். அவர்கள் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் என்ற எண்ண வேண்டும்.

1.குடும்பத்தில் சந்தர்ப்பத்தில் பகைமைகள் உண்டானாலும்
2.விழாக்கள் போன்ற காலத்திலேயாவது எல்லோரையும் ஒன்றாக இணைத்து
3.உணர்வின் தன்மையைப் பக்குவப்படும் நிலைக்கு ஞானிகள் வைத்தார்கள்.

பொதுவாகச் சொன்னால் பிள்ளைகள் கேட்க மாட்டார்கள். அன்றைக்கு அந்த விழாக் காலத்தில் சாமி கும்பிடும் போதாவது இந்த மாதிரி எண்ணி அம்மா அப்பா அருளாசி கிடைக்க வேண்டும். அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும் போது அந்த அருள் உணர்வு வளர்கிறது.

அருள் உணர்வுகளைச் சேர்க்கும் பொழுது அறியாத இருள்கள் நீங்குகிறது. அம்மா அப்பா மேலிருக்கும் வெறுப்பின் தன்மை மறைகின்றது. தாய் தந்தையரின் நல்லாசிகளைக் கவரும் சக்தி வருகிறது.

1.நமக்குள் இருக்கும் பகைமை வெறுப்பு போன்ற உணர்வுகளை ஈர்க்கும் தன்மை குறைந்தவுடனே
2.யாரும் இங்கே இழுக்கும் சக்தி இல்லை என்றால் அது ஒதுங்கி நிற்கும்.

காலையில் ஆறு மணிக்கு எல்லாம் சூரிய ஒளி வருகிறது. வந்தவுடனே இழுத்துக் கொண்டு மேலே சூனிய மண்டலத்திற்குக் கொண்டு செல்கிறது. நம் பூமியில் அந்தச் சக்தி இருப்பதில்லை.
1.அப்போது நாம் எண்ணினாலும் புதிதாக உருவாவதில்லை.
2.இது கிடைக்காது. இது மயங்கி போகும்.
3.ஆக தீமையான வினைகளுக்குச் சாப்பாடு கொடுக்காமல் இருக்கும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தொடர்ந்து இந்த எண்ணங்களை எடுக்கப்படும் போது நமக்கு முன்னாடி இருக்கும் இந்தப் பரமாத்மாவும் சுத்தமாகின்றது.

நாம் சுவாசிக்கும் பொழுது நம் உடலிலுள்ள ஜீவான்மாக்களும் தீமைகளை நுகர்வதில்லை. அதுவும் சுத்தமாகின்றது. நம் உயிராத்மா ஒளியாக மாறுகின்றது.

ஞானிகள் விநாயகரைத் தண்ணீரில் (கடலில்) கரைக்கச் சொன்னதன் உட்பொருளே ஒவ்வொருவருக்குள்ளும் அறியாது சேர்ந்த தீய வினைகளைக் கரைப்பதற்குத்தான்…!

நான் நானா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Myself

நான் நானா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நான் என்பது யார்…? உயிரா.. ஆத்மாவா… இந்த உடலா..?

சரீரம் என்பது அழிககூடியது தான். ஆனால் இந்தச் சரீரத்தின் உண்மையின் இயக்கத்தில் உண்மையில் எண்ணம் என்பது எது…?

1.ஒரு பம்பரம் சுழல்கிறது என்றால் எந்த வேகத்தை அதற்குத் தருகின்றோமோ அது வரைக்கும் தான் அதனுடைய சுழற்சி இருக்கும். பின் நின்றுவிடும்
2.குழந்தையை ஆட்டுவிக்கும் ஒரு தூளியும் நாம் ஆட்டுவிக்கும் வேகத்திற்கொப்பத்தான் ஆடுகின்றது. பின் ஆட்டம் நின்றுவிடும்.

செயற்கையில் சுழலும் பொருள்கள் (ஜீவன் இல்லாத) அனைத்துமே நாம் செய்விக்கும் திறனைப் பொருத்து அதன் ஓட்டத்தின் கதியை அடைகின்றது. இயந்திரங்களும் அதனுடைய செயல்பாட்டின் நிலைக்கொப்ப ஓடுகின்றது.

ஆனால் கோள்களின் ஓட்டம் இயற்கையின் கதி விகிதத்தைக் கொண்டு ஜீவனுடன் ஓடிக் கொண்டே உள்ளது. இருந்தாலும்
1.மனிதனின் செயல் நிலையில் உண்மையின் தத்துவ உட்பொருளான
2.”நானின்…” இயக்கத்தை நாம் அறிதல் வேண்டும்.

சுவாசம் எடுத்துவிடுவதும்… கண் இமை மூடித் திறப்பதும்… செவி ஒலி கேட்பதும்… சுவை உமிழ் நீர் ஊருவதும்… இவை எல்லாமே நம் எண்ணத்தைச் செலுத்தாமலே தானே நடக்கின்றது.

கோள்கள் இயற்கையின் கதியில் எப்படி அது இயற்கையின் மாற்றத்திற்கொப்ப எல்லாம் செயல்பட்டு வளர்ந்தே ஜீவனுடன் எண்ணம் இல்லாமல் ஓடிக் கொண்டுள்ளதோ அதைப் போன்று தான்
1.நம் சரீரத்தின் இயக்கத்தின் கதியும் எண்ணத்தைச் செலுத்தாமலேயே
2.பசி… தூக்கம்… மற்றும் உடல் உபாதைகளில் ஏற்படும் வேதனைகளும்… தன் தன் கதியில்
3.நாம் எண்ணத்தைச் செலுத்தாமலே ஓடிக் கொண்டுள்ளது. (பசியோ தூக்கமோ உடல் வலியோ நாம் எண்ணி வருவதில்லை)

செயல்படும் நிலையில் ஏற்படும் மாற்றத்தால் அந்த உந்துதல் ஏற்படக் கூடிய தருணத்தில்தான்
1.எண்ணத்தில் அதை அறிந்து
2.சாப்பிடவோ தூங்கவோ வலியை நீக்கவேண்டும் என்றோ
3.எண்ணத்தை அதற்காகச் செயல்படுத்துகின்றது உடல்.

கோள்களுக்கு எண்ணம் இல்லாததினால் அது சந்திக்கும் மற்ற கோள்களின் அமிலத் தொடர்பைக் கொண்டு அதன் ஜீவ ஓட்டம் தன் இச்சையில் ஓடிக் கொண்டுள்ளது.

மனித உடலின் இயற்கையின் செயல்படும் கதியில் ஏற்படக்கூடிய மாற்றத்திற்கு எண்ணத்தைக் கொண்டு பசிக்கு உணவையும்… சோர்வுக்கு உறக்கத்தையும்… செலுத்தக் கூடிய எல்லாவற்றிற்கும் எண்ணத்தைச் செலுத்துகின்றோம்.

அப்பொழுது… இந்த “எண்ணம் தான்…” நானா…?

விதை முளைத்து மரமாகி பலன் தந்து பல நாள் வாழும் மரத்திற்கு எண்ணம் இல்லாவிட்டாலும் உணர்வின் செயல் தன்மை உள்ள மரத்தின் உயிர் தன்மை வலுவாகி வளர்த்துக் கொள்கிறது.

தாவரங்கள் எண்ணமில்லாத இயற்கையின் வலுவானாலும் அதற்கு அடுத்த நிலை என்ற உயர் நிலைக்கு உயிர்ப்பிக்கும் அந்தத் தாவரங்களும் செல்வதில்லை.

ஆனால் மனிதச் செயலுக்கோ தன் எண்ணத்தைக் கொண்டு தெய்வ குணங்களான உயர் தன்மைகளை வளர்த்திட அறு குணங்களை உணரக்கூடிய எண்ணத்தின் பால் வரையறுக்கப்பட்ட குணச் சிறப்பின் விதிக்கொப்ப
1.மனிதனிடம் செயலாகும் எண்ணத்தின் கதி கொண்டே
2.நான் என்பது யார்..? என்ற எண்ணத்தை ஊன்றிப் பார்த்தோமானால்
3.மனித எண்ணத்தில் ஓடக்கூடிய பல குணங்களில் பொறுக்கி எடுத்த
4.நற்குணம் ஆறு எதிர் நிலையான தீய குணங்கள் ஆறு என்ற அடிப்படையில்
5.மனிதனுக்குள் ஓடக்கூடிய பல ஆயிரக்கணக்கான எண்ண குண நலன்கள்
6.பல விந்தையின் விபரீத நிலையிலும் செயல் கொள்கின்றதப்பா…!

அவனவன் எடுத்துக் கொண்ட எண்ணத்தின் தன்மைக்கொப்ப மெய் ஞானியாகவும் ஆகின்றான் விஞ்ஞானியாகவும் ஆகின்றான் அல்லது அஞ்ஞானியாகவும் ஆகின்றான்.

மற்ற எந்த உயிரினங்களுக்கும் இல்லாத சிறப்பாகத் தன் எண்ணத்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் எடுத்துக் கொண்ட நிலைக்கொப்ப மருத்துவம் பொறியியல் தத்துவம் கலைகள் இசை விவசாயம் என்று செயல்படுத்துகிறார்கள் அல்லவா…!

ஆகவே எண்ணத்தின் மூலமே உயிரின் பரிமாணத்தின் பலனாக மனித ஆத்மாவின் வலுவிற்கு வழி தேடும்
1.“நான்…!” என்னும் பலனை
2.நாம் அறிதல் வேண்டும்.

நம்முடைய தவறை நீக்குவதற்காக ஞானிகளால் வைக்கப்பட்ட ஆலயங்களில் எதை வேண்டுகிறோம்…?

Renganathan saamigal

நம்முடைய தவறை நீக்குவதற்காக ஞானிகளால் வைக்கப்பட்ட ஆலயங்களில் எதை வேண்டுகிறோம்…?

 

பல கோடிச் சரீரங்களில் தீமையை உணர்ந்து உணர்ந்து அதிலே பரிணாம வளர்ச்சி ஆகி
1.தீமையிலிருந்து விடுபட்ட உணர்வுகள்
2.தீமையிலிருந்து விடுபடும் அனைத்தையும் அறிந்திடும் அறிவாக
3.தனக்குள் தீமை வராது சேனாதிபதியாக ஆறாவது அறிவு கார்த்திகேயா என்று
4.இந்த மனித உடலில் இருக்கின்றது.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்த நஞ்சுகளை மலமாக மாற்றும் நிலையைச் சரவணபவா… தீமைகளைச் சரணமடையச் செய்யக்கூடிய சக்தியாக கந்தா… பலவற்றையும் அறிந்து கடம்பா… உருவாக்கத் தெரிந்து கொண்டவன் கார்த்திகேயா என்று ஆறாவது அறிவின் இயல்பைக் காட்டுகின்றார்கள்.

கோபப்படுபவரை சலிப்புப்படுபவரை என்று பலவிதமான உணர்வுகளை ஒவ்வொரு நாம் நுகர்கின்றோம். வருவதை எல்லாம் அரவணைத்துக் கொள்கிறோம் அல்லவா…!

கந்தா.. கடம்பா…! நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்குகின்றான் கார்த்திகேயா. ஏனென்றால் நமக்குள் இதெல்லாம் எப்படி உருவாகிறது என்று தெரிந்து கொள்கின்றான்.

தீமைகளை வெல்லும் சக்தியான ஆறாவது அறிவு கார்த்திகேயா… சேனாதிபதி…! தீமை வந்தால் அதை நீக்கிடும் நிலையைக் கொண்டு வருகின்றது.

ஆனால் ஒருவன் தீமை செய்கின்றான் என்றால் அவனை அழிக்க வேண்டும் என்ற உணர்வை நுகர்ந்தோம் என்றால் ஓ…ம் நமச்சிவாய…! நம் உடலை அழிக்கும் “அணுவாக” இங்கே நுழைந்து விடுகின்றது.
1.அவனை அழிக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது
2.அழித்திடும் உணர்வின் தன்மை இங்கே வருகின்றது.
3.அவனைக் கொல்ல வேண்டும் என்று எண்ணினோம். நம் நல்ல எண்ணத்தை அது கொல்லும்.
4.கொல்ல வேண்டும் என்ற உணர்ச்சியைத் தூண்டும்.. அடுத்து அவனைக் கொல்லும்.
5.அவனைக் கொன்று ரசிக்கும். ரசிக்கும் உணர்வுகள் இங்கே வந்த பிற்பாடு
6.உடலுக்குள் கிருமிகளாக உருவாகி டி.பி நோயாக உருவாகும். நம்மையும் கொல்லும்…!

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

இவனிடம் இருப்பது வேதனை. இதை முதலில் அடக்க வேண்டும். வேதனை என்ற நஞ்சை அடக்க வேண்டும் என்றால் அருள் மகரிஷிகளின் உணர்வை நம் உடலுக்குள் சேர்த்தே ஆக வேண்டும்.

மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்க்கச் சேர்க்க அந்த நஞ்சுகள் ஒடுங்கும். ஏனென்றால் இதைப் போன்ற நஞ்சினை வென்றவர்கள் அந்த மகரிஷிகள். இதை எண்ணி நமக்குள் எடுத்துக் கொண்டால் நாம் எண்ணியதை உருவாக்குவது உயிர்.

இதைத்தான் ஒவ்வொருவரையும் ஆலயங்களில் எண்ணி எடுக்கும்படி சொல்கிறார்கள் ஞானிகள். ஆலயத்திற்குச் செல்வோர்
1.அவர் அருளைப் பெற்று
2.மற்றவர்கள் எல்லாம் நலமாக வேண்டும் என்ற எண்ணம் இங்கே தோன்றுகிறதா என்றால் இல்லை…!

நான் தவறு செய்தேன்… கொலை செய்தேன்… கொள்ளை அடிக்கிறேன்…! என்பவனும் ஆடு கோழி மாடை அறுப்பவனும் கோவிலுக்குள் போகின்றான். உண்டியலில் காணிக்கையைப் போட்டு விட்டு என்னைக் காப்பாற்றுடா…! என்று வேண்டுகின்றான்.

நான் தவறு செய்கின்றேன். நான் செய்யும் தவறுக்கு அவன் உதவி செய்யவில்லை. அதனால் அவனுக்கு இடைஞ்சல் செய்தேன் எனக்கு ஒத்து வரவில்லை அதனால் அவனைக் கொன்றேன்.

இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டு செய்த பாவத்திற்காக வேண்டிக் கோவிலில் அபிஷேகம் செய்து ஆராதனை செய்து என்னைக் காப்பாற்றுடா..! என்று சொன்னால் யாரும் காக்க முடியாது. அவன் எப்படிக் காப்பான்…?

“கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்த கந்தவேலே…! அருள் பெரும் ஜோதி நீ… தனிப் பெரும் கருணை…!” எதனையுமே நீ அருள் பெரும் ஜோதியாக இயக்குகின்றாய். தனிப் பெரும் கருணையாக எனக்குள் உருவாக்குகின்றாய் என்று இராமலிங்க அடிகள் பாடினார்.

நாம் எண்ணியதைத்தான் உயிர் இங்கே கொடுக்கின்றது. நான் யாரிடமும் யாசிக்கக் கூடாது… யாருக்கும் நான் இல்லை என்று சொல்லக் கூடாது. அந்த அருள் தாகத்துடன் வருபவருக்கு அருள் ஞானத்தைப் போதிக்க வேண்டும் என்று வேண்டினார் அடிகளார்.

யாரிடமும் யாசகம் வாங்க மாட்டேன் என்று சொன்னவுடனே சாப்பாடு போடுவதற்கு வந்து விட்டோம். சாப்பாடு போடுகிறோம் என்றால் எல்லோரும் தான் வருகின்றார்கள்.
1.ஆனால் அவர்கள் மனதைத் திருத்த முடிகின்றதா..?
2.உடல் பசியைப் போக்க முடிகின்றது. அருள் ஞானப் பசிக்கு உணவு கிடைக்கிறதா…? இல்லை…!

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் யாம் (ஞானகுரு) அந்த அருள் ஞானத்தைக் கொடுக்கின்றோம். ஏங்கி இருக்கக் கூடிய அணுக்களுக்கு அதைக் கொடுக்கின்றோம்.
1.மெய் ஞானத்தைப் பெறவேண்டும் என்பவர்கள் தான் இங்கே வருவார்கள்.
2.அந்தப் பசியைப் போக்கும் பொழுது அருள் ஒளியின் உணர்வு உங்களுக்குள் வளர்கின்றது.
3.அதற்குத்தான் மணிக்கணக்கில் பேசுகிறோம்…!

செய்த வினை… செய்யப்பட்ட வினை.. செய்கின்ற வினை… செய்ய வேண்டிய வினை…! பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Karma

செய்த வினை… செய்யப்பட்ட வினை.. செய்கின்ற வினை… செய்ய வேண்டிய வினை…! பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

1.பல பல பிறவிகளில் நாம் செய்த நிலைகள் அனைத்தும் செய்வினையாகி (PAST)
2.அதனுடைய செயல் தொடராக இந்தப் பிறவியில் செய்கின்ற (தற் சமயம் நிகழ்ந்து கொண்டிருக்கும் – PRESENT) வினைப் பயனாகி
3.மீண்டும் செய்த வினையாகின்ற எண்ணத்தின் வழிச் செயலுக்கு வித்தாகும் (FUTURE) “இவனே…!”
4.ஏற்கனவே செய்யப்பட்ட முன் ஜென்ம வினையான உரத்தை ஈர்த்து
5.வினையினது இரு வழிச் செயலான நல்வினை தீவினை இரண்டின் பயன் வீரியப் பயனுக்கு
6.அந்தத் தொடரில் இவனும் உட்பட்டு இரண்டின் பலன்களையும் அனுபவிக்கும் நிலை வருகின்றது.

தீமையோ நன்மையோ எந்த வினையின் வீரியம் அதிகமாகின்றதோ அதற்குள் மற்றொன்று உள்ளடங்கி விடுகின்றது. அப்படி நடக்கும் செயலைத் “தன் விதி” என்னும் செயல்பாடாக
1.செய்த வினையின் வீட்டில் (முன் பிறவிப் பயனால் உருவான உடலில்)
2.செய்யப்பட்ட வினை வந்து இருந்து தன் அரசைத் தான் ஓச்சி
3.தனது செயலுக்கு இவனின் எண்ண உந்துதல்களுக்குத் துணையாகி
4.இன்ப துன்பங்களை ஒவ்வொரு நாளும் அனுபவிக்கச் செய்கின்றது.

மூலமும் இவனே ஆகின்றான்…! மூலக் காரணமும் இவனே ஆகின்றான்…! என்னும் தத்துவக் கோட்பாட்டின் தொடரில் நல்லது கெட்டதன் காரணத்தை ஆராயப் புகும் இவன்
1.தன் எண்ணச் செயலின் நிகழ்வு வழிக் கொள்கைகளைப் புரிந்து கொண்டான் என்றால்
2.நான் என்பது யார்…? என்ற புதிருக்கும்…
3.உயிரா…? ஆன்மாவா…? எண்ணமா…? என்றெல்லாம் சிந்திக்கச் செய்யும்
4.சுழல்கின்ற அணுவின் (உயிரணு) சுழலோட்ட எண்ணத்தின் வினைப் பயனைக் கண்டுணரலாம்.
5.மதி கொண்டு தெளிவு பெற்று உயர் ஞானம் பெறும் செயலுக்கெல்லாம் வழி உணர்ந்திடலாம்
6.அந்த வழியில் நல்வினைப் பயனுக்குச் சக்தி ஊட்டி… சக்தி பெற்று
7.ஆதி சக்தியால் (இயற்கை) கலப்பான தீவினையான எண்ணப் பயன் களையத் தலைப்பட்டு
8.அதைத் தொடர்ந்து வரும் செய்யப்பட்ட வினையின் (இப்பொழுது செய்து கொண்டிருக்கும்) நற்செயலின் செயலுக்கே உரமாக்கிடலாம்.

ஆகவே இந்த ஜென்மத் தொடரில் தொடர்ந்து செய்யப்படுகின்ற வினையின் செயலை
1.நற் செயலாக்கினால்
2.நல் சுவாசத்தால் ஈர்த்துக் கொண்டால்
3.அவ்வாறு அமைக்கும் அதே தொடரில் – செய்த வினைப் பயனை நல் வினையின் வளர்ப்பாக ஆக்க முடியும்.

சந்தர்ப்பத்தால் வரும் தீவினைப் பயன்களை எல்லாம் களைவதற்குத் தியான முறையாக வான இயல் வழியைக் (விண் செல்லும் மார்க்கம்) கண்டு அதன் வழியில் செல்லச் செல்ல அனைத்தும் ஒன்றான நல்வினைப் பயனாக்கிடலாம்.

இத்தகைய விதிகளை எல்லாம் செயல்படுத்துகின்ற காரண காரிய கர்த்தாவான மூலமும் “இவனே ஆவான்…!”

அப்பொழுது இவன் யார்…? நான் யார்…? தான் யார்…? என்று நிச்சயமாக உணரலாம்…!

கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…! அருள் பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை நீ…!

Adikalar

கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…! அருள் பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை நீ…!

 

அருள் ஞானத்தைப் பெறக்கூடியதைத்தான் “அருள் பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை..! என்று
1.நான் யாரிடமும் யாசிக்கவில்லை…
2.நான் யாருக்கும் இல்லை என்று சொல்லக்கூடாது…! என்று இராமலிங்க அடிகள் இந்தப் பாடலைப் பாடுகின்றார்கள்.

அருள் ஒளியின் உணர்வைத் தனக்குள் எடுக்கப்படும் பொழுது நமக்குள் ஒளியாக மாறுகின்றது. மற்றவர்கள் கேட்கும் பொழுது இல்லை என்ற நிலை வராதபடி அந்த அருள் ஒளி அவர்களுக்குள்ளும் படர்கின்றது.

1.நீ அன்பையே சிவமாக்கு…! என்று அவர் சொன்னார்.
2.அந்த அரவணைக்கும் உணர்வுகள் அன்பாகி இந்த உடலாகச் சிவமாக்கு.
3.எல்லாவற்றையும் நீ அரவணைத்துக் கொள்…!
4.இந்த அரவணைக்கும் உணர்வின் தன்மை உனக்குள் மகிழ்ச்சியூட்டும் ஒளியாகும் என்ற
5.இந்த உணர்வின் தன்மையைத் தான் அருள் பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை என்றார்.

மற்றவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எனக்குள் சந்தோஷத்தை உருவாக்கிவிட்டால் எனக்குள் இருள் வருமோ…? வராது…! இருண்ட நிலைகளிலிருந்து மீள வேண்டும் என்ற உணர்வுகளுக்காக இராமலிங்க அடிகள் அதைச் சொல்கிறார்.

அப்பொழுது அந்த மகிழ்ச்சி என்ற உணர்வுகள் அருள் பெரும் ஜோதியாகி தனிப் பெரும் கருணையாகின்றது.
1.நான் எண்ணியதை நீ உருவாக்குகின்றாய்… கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்த கந்தவேலே…! (கந்தவேல் யார்…?)
2.நம் உயிர் தான் அந்தக் கந்தவேல்.

கந்த… அதாவது பலவிதமான உணர்வுகள் கொண்ட கோட்டை இது. நம் உடல் என்ற கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…!

அதாவது வேல் என்றால் கூர்மையானது.
1.பலவிதமான உணர்வுகள் சேர்த்து நம் உடல் கந்தக் கோட்டம்.
2.அந்த உயிருடன் ஒன்றி நாம் எண்ணப்படும் பொழுது
3.அந்தக் கூர்மையின் நிலைகளில் இயக்குகிறது என்பதைத்தான்
4.கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே.. அருள் பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை…! என்றார் இராமலிங்க அடிகள்.

அங்கே கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்து கூர்மையாக… உணர்வின் ஜொலிப்பாக… உணர்வின் கூர்மையாக… உணர்வின் தன்மையை அறியச் செய்கின்றாய்…! நீ ஒவ்வொன்றையும் எனக்குள் ஒளியாக நின்று உணர்த்துகின்றாய்… அறிவின் செயலாக என்னை இயக்குகின்றாய்…! என்று தன் உயிரிடம் தான் ஏங்குகின்றார்.

கந்தக் கோட்டம் என்று இந்த உடலுக்குள் இயங்கும் உயிரைப் பற்றித் தான் இராமலிங்க அடிகள் சொன்னார்.
1.இருளை அகற்ற வேண்டும்
2.ஜோதியாகப் பேரொளியாக ஆக வேண்டும் என்ற பொருள்படும்படியாகச் சொன்னார்.

கற்பனையாக எண்ணுவது பற்றியும் கனவில் காணும் படங்களையும் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

Third eye opening tech

கற்பனையாக எண்ணுவது பற்றியும் கனவில் காணும் படங்களையும் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

 

1.கண்களால் பார்க்கும் செயல்படம்
2.அகத்திற்குள் தோன்றும் எண்ணத்தின் கற்பனைப் படம்.
3.கனவில் காணும் படம்
4.பிறர் சொல்லும் ஒலி (சொல்லை) கேட்டு அந்த எண்ணத்தில் எடுக்கும் படம்.
5.இப்படி மனித உணர்வில் நாம் நான்கு வகைப் படங்கள் எடுத்துக் கொண்டே உள்ளோம்.

நம்முடைய எதிரில் காண்பவை எல்லாம் நம் கண்கள் படமாக எடுத்துக் கொள்கின்றது.

கற்பனையாக எண்ணும் படத்தை நம் எண்ணத்தின் உணர்வில் ஒரு தடவை எந்த இடத்தை எண்ணிக் கற்பனையில் படம் எடுக்கின்றோமோ அதே தொடர் தான் எப்பொழுது அந்த இடத்தை எண்ணும் பொழுதெல்லாம் நினைவில் வருகின்றது.

அதே படத் தொடர்
1.மற்றவர்கள் ஒலியால் சொல்லக்கூடிய பொருளைப் பற்றி
2.எண்ணத்தின் நினைவு படமாகவே நம் ஆத்மாவில்
3.நாம் பார்க்காமலேயே படமெடுத்து விடுகின்றது – “கற்பனையில்…!”

எண்ணம் உறங்கிய நிலையில் ஆத்மாவில் பதிவான உணர்வின் தொடர் கொண்டு நாம் சுவாசிக்கும் பொழுது “தூக்கத்திலே மோதும் சுவாச ஒலியால்” கனவாக… அந்தப் படமாக… ஆத்மாவில் பதிவு நிலை ஏற்பட்டுவிடுகின்றது.

சரீர வாழ்க்கையில் வாழக்கூடிய செயல் தன்மையில் கண்களால் மட்டுமல்லாமல் ஆத்மாவின் தொடர்பிலும் இப்படம் பதிவாகின்றது. (உதாரணமாக – செவி வழி கேட்கும் ஒலிகள்,,, மூக்கின் வழி சுவாசிக்கும் மணங்கள்… உடலில் உணரும் உணர்வுகள்…)

கண்களால் தான் நாம் அதிகமாகப் படமாக எடுக்கின்றோம். இருந்தாலும் அத்தகைய ஒளி கொண்ட சுவாச கதியில் இயக்கத்தின் தொடர் நம் கண்களின் தொடர்பில்லாமல்
1.கற்பனை… கனவு… வெளியிலிருந்து வரும் ஒலி இந்த மூன்றின் படமும்
2.உணர்வின் பதிவு கொண்டு சுவாசமெடுக்கும் காந்த மின் அலையால் ஆத்மாவின் படமாகப் பதிந்திருக்கின்றது.
3.ஆகவே பார்க்கும் பொருளைப் பற்றிய படங்களும் ஆத்மாவின் பதிவுப் படமே.

இந்தச் சரீரத்தின் செயலால் ஏற்படும் ஆத்மாவின் இயக்கத்தின் கதி தான் மனித வாழ்க்கையின் உயிர் செயல்பாடாக ஆத்மாவின் இயக்கம் ஜீவ காந்த சரீரமுடன் செயல் கொள்கின்றது.

இந்த ஜீவ காந்தமுடன்… ஆத்ம உயிரில்…
1.ஒலி… ஒளி கொண்ட பதிவின் தன்மை உணர்வின் நினைவலைகள் மோதும் செயல்பாட்டில்
2.விழிப்பு நிலை ஏற்படக்கூடிய ஐந்தாம் நிலையான ஞானத்தின் செயல் அறிந்து “தூர திருஷ்டி…!” (TELESCOPE போல்) என்ற காட்சியைக் காணும் நிலையும்
3.அதற்கடுத்த ஆறாம் நிலையில் அண்டத்தில் சுழலும் மண்டலங்களின் உண்மையை நம் ஆத்மா அங்கு சென்று அறியும் நிலையும்
4.ஏழாம் நிலையான படைப்பின் படைப்பாக்கும் செயல் தன்மையும்
5.அடுத்தடுத்த நிலைக்கு இந்த உயிரும் ஆத்மாவும் இணைந்து ஒளிப் படம் எடுக்கும் இந்த ஆத்மாவுக்கே ஏற்படக்கூடிய செயல் நிலைக்கு
6.ஆத்மாவின் விழிப்பு (நம் விழிப்பு நிலை) இந்த கண் ஒளியில் இருந்து பெறுவதற்கு
7.விழிப்படலத்தின் ஒளித் தன்மையை மின் காந்த ஈர்ப்பின் செயலுக்குக் கொண்டு வர வேண்டும்.

அதாவது முதலில் சொன்னபடி நான்கு விதமான படங்களை எடுக்கும் நாம் ஐந்து ஆறு ஏழு என்ற நிலையில் நமக்குச் சொந்தமான நம் உயிர் ஈர்ப்பது போல் அலைகளை இழுத்துக் கவர்ந்து இயக்கும் நிலைக்கு வர வேண்டும்.

மூக்கு வழியாகக் காற்றைச் சுவாசிப்பது போல் ஆன்மாவின் விழிப்பு என்ற அந்தக் கண்கள் வழியாக நுண்ணிய அலைகளைக் கவரும் நிலைக்கு வர வேண்டும்.

இன்று விஞ்ஞானக் கருவிகள் கவரும் நுண்ணிய அலைகளைக் காட்டிலும் மிகவும் நுண்ணிய நிலைகளைக் கவர முடியும் அது தான் ஆன்மாவின் விழிப்பு நிலை என்பது..!