எமது நண்பர் மனைவியின் நோயை “பிரேக்..” போட்ட மாதிரி நிறுத்தச் செய்தார் குருநாதர்

Arul Guru Gnanaguru

எமது நண்பர் மனைவியின் நோயை “பிரேக்..” போட்ட மாதிரி நிறுத்தச் செய்தார் குருநாதர்

 

எனக்கு (ஞானகுரு) மூல நோய் இருந்தது. அதே சமயத்தில் என்னுடைய நண்பர் தன் மனைவிக்கு உதிரப் போக்கு என்ற நிலைகள் வரப்படும்போது என்னிடம் சொல்லி குருநாதரிடம் கேட்டு மருந்து வாங்கிக் கொடுங்கள் என்றார்.

அப்பொழுதெல்லாம் விநாயகர் சிலை ஒன்றை வைத்து குருநாதர் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) சொன்னபடி அதை உற்றுப் பார்த்தால் காட்சிகள் கிடைக்கும். அந்தக் காட்சியின் தன்மை கொண்டு தெரிந்து சிலருக்குச் செய்வது உண்டு.

என்னுடைய சிறிய குழந்தை மீரா என்ற பெண்ணுக்குக் காட்சியாகக் கிடைக்கும். அது எல்லா விபரத்தையும் சொல்லும்.

இந்த மாதிரி நேரத்தில் என் நண்பர் வந்து தன் மனைவியின் உதிரப் போக்கை நீக்குவதற்கு குருநாதரிடம் மருந்து கேட்கச் சொல்கிறார்.

வீட்டில் கண் தெரியாத குழந்தை ஒன்று இருக்கின்றது, அது போக 4 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த உதிரப் போக்கு நிற்கவே இல்லை. டாக்டர்களால் ஆபரேஷன் செய்தும் முடியவில்லை. எனக்கு என்ன செய்வது என்று தோன்றவில்லை.

இன்றோ நாளையோ என்ற நிலையில் என் மனைவி உள்ளது. இரத்தக் கசிவு அதிகமாகி அதனால் சேதமாகி இந்த உடலை விட்டு மனைவியின் உயிர் பிரிந்துவிடும் போலிருக்கின்றது என்று என்னிடத்தில் சொல்கின்றார்.

சரி.., சாமியிடம் கேட்கலாம் என்று நான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன்.

அப்படி நான் சொல்லிக் கொண்டிருக்கும்போது குருநாதர் ரோட்டிலிருந்து சப்தம் போடுகின்றார். இங்கே நாங்கள் பேசிக் கொண்டிருக்கின்றோம். ரோட்டிலிருந்து சப்தம் போடுகின்றார்.

“டேய்.., ஓமப் பொடியை வாங்கிக் கொடுக்கச் சொல்லுடா.., உதிரப் போக்கு சரியாகப் போய்விடும் என்று சொல்லுடா” என்கிறார். எனக்குத்தான் தெரியும் நண்பருக்குத் தெரியாது.

ரோட்டில் இருக்கும் எலக்ட்ரிக் போஸ்டில் கல்லைக் கொண்டு “தட்டோ.., தட்டு” என்று தட்டி காது கேட்க வைத்து
1.“ஓமப் பொடியை வாங்கி வரச் சொல்லுடா..,
2.சரியாப் போகும் என்று சொல்லுடா” என்கிறார் குருநாதர்.

நண்பர் சொல்கிறார் இங்கே இத்தனை மருந்து கொடுத்து ஒன்றும் ஆகவில்லை. அது என்னங்க..! ஓமப் பொடியை வாங்கிக் கொடுக்கச் சொல்கிறீர்கள்? இப்படிச் சொல்லிவிட்டு வாங்கப் போய்விட்டார்.

அதைச் சொன்னவுடன் என்ன செய்தார் குருநாதர்?

எனக்கு (ஞானகுருவிற்கு) ஆனி மூலம் இருந்தது என்னால் ரொம்ப நேரம் உட்கார முடியாது.

உனக்கே மூல நோய் இருக்கின்றது, நீ அவர்களுக்கு வைத்தியம் பார்க்கப் போகின்றாயா? என்கிறார் குருநாதர்.

கொஞ்ச நேரத்தில் பார்த்தால் “படீர்..” என்று வெளியில் தள்ளிவிடுகிற மாதிரி அந்த ஆனி வெளியில் வந்துவிட்டது. என் வேஷ்டியெல்லாம் இரத்தமாகிவிட்டது. வேறு வேஷ்டியை மாற்றிவிட்டு வந்தேன்.

ஓமப் பொடியை வாங்கிக் கொண்டு வந்து என் கையில் கொடுத்தார் நண்பர். அவரிடம் சொல்லிக் கொடுத்து உங்கள் மனைவியைச் சாப்பிடச் சொல்லுங்கள் என்றேன்.

சாப்பிட்டவுடன் “பிரேக்..,” போட்ட மாதிரி ஆகிவிட்டது. ஏனென்றால்,
1.குருநாதருடைய அருள் வாக்கு,
2.பார்ப்பது ஓமப் பொடி
3.குரு அருள் அங்கே இருக்கின்றது.
4.அதன் வழி அங்கே நன்றாகிவிட்டது.

நண்பர் ஓடி வருகின்றார். நிற்காது போய்க் கொண்டிருந்த உதிரப் போக்கு அது பிரேக் ஆனது மாதிரி ஆகிவிட்டது.

நாளைக்கு வரையிலும் பார்க்கலாம் என்றார். இப்பொழுது நின்று விட்டது. நாளைக்குப் பார்த்தால் நாளைக்கும் இல்லை…! நன்றாகிவிட்டது…!

இதே போல குருநாதர் அவருடைய உணர்வின் ஆற்றல் மிக சக்திவாய்ந்த நிலைகளில் இருப்பதால்
1.நாம் இங்கே பேசினாலும்
2.அவருடைய உணர்வுகள் நமக்குள் இயக்கப்பட்டு
3.சொல்லாகச் சொல்லச் சொல்லி
4.இந்த ஓமப் பொடிக்குள் வார்த்தையை விட்டு
5.நோய் சரியாகப் போகும் என்று சொல்லி அது கொடுக்கும்போது
6.இப்படித்தான் குருநாதர் அனுபவத்தில் கொண்டு வருகின்றார்.

என் மனதில் ஒரே போராட்டமாக இருக்கிறது என்கிறோம்…! காரணம் என்ன…? மாற்றுவது எப்படி …?

Mental inner state

என் மனதில் ஒரே போராட்டமாக இருக்கிறது என்கிறோம்…! காரணம் என்ன…? மாற்றுவது எப்படி …?

 

சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பமும் காந்தமும் ஒரு வேம்பின் சத்தைக் கவர்ந்து கொண்டால் கசப்பின் உணர்ச்சியைத் தூண்டும் அணுவாக மாறும்.

சூரியனின் வெப்ப காந்தங்கள் ரோஜாப்பூவின் சத்தைக் கவர்ந்தால் அந்த நறுமணத்தையும் அதனின் துவர்ககும் சக்தியை உணர்த்தும் உணர்வாக அலைகளாக மாறுகிறது.

அதே போல சூரியனில் இருந்து வரும்போது ஒரு விஷச் செடியின் சத்தைக் கவர்ந்தால் விஷத்தின் உணர்ச்சிகளைத் தூண்டும் அணுவாக மாறுகிறது.
(வேம்பு ரோஜா விஷம் – அந்தந்தக் காற்றலைகளாக மாறுகின்றது)

வேப்ப மரம் மரமாக இருக்கும் போது அடர்த்தியின் தன்மையால் மற்றதைத் தன் மணத்தைக் கொண்டு தாக்கி வெளியே அனுப்பிவிடும். தன்னுடன் இணைத்துக் கொள்வதில்லை.

ஆனால் ரோஜாப்பூ தன் அடர்த்தியின் தன்மை கொண்டு நுண்ணிய அலைகளாக வெளி வரும் பொழுது அந்த வேம்பின் கசப்பைத் தன் அருகில் விடாது பாதுகாக்கும்.

வேம்பின் அருகில் ரோஜாச் செடி இருந்தால் அதனின் வளர்ச்சி கம்மியாக இருக்கும். ஏனென்றால்
1.வேப்ப மரத்திற்கு மாறாக இருந்து விட்டால் அந்தச் செடிகளின் பலனைக் குறைத்து விடும்..
2.அதற்கு ஒத்த நிலைகள் இருந்தால் தான் மற்ற செடிகளும் வளரும்.

உதாரணமாக வேப்ப மரத்தின் அருகில் கருவேப்பிலையை வைக்கலாம். ஏனென்றால் இந்த வேப்ப மரத்தின் கசப்பின் தன்மையை நுகர்ந்து தான் கருவேப்பிலையாக உருவாகிறது.

அதே சமயத்தில் இந்த ரோஜாப்பூ தன்மையும் இதனுடன் கலந்து கருவேப்பிலைச் செடியாகின்றது. அதனால் ரோஜாப்பூச் செடியையும் கருவேப்பிலையையும் அருகருகே வைத்தோம் என்றால் இரண்டிற்கும் நல்லது… செழிப்பாக வளரும்.

அனால் ஒரு விஷச் செடிக்குப் பக்கத்தில் ரோஜாவை வைத்தால் அந்த விஷத்தின் தன்மை ரோஜாப்பூவின் நிலையை உருவாக விடுவதில்லை.

இது எல்லாம் ஏன் என்றால்
1.ஒன்றை ஒத்து ஒன்றின் நிலைகள் கலந்து தான் தாவர இனங்கள் அனைத்தும் உருவாகியுள்ளது,
2.அது அது கலந்து கலந்து புதுப் புதுச் செடிகளாக உருவாகின்றது.

எப்படி…?

வேப்ப மரத்திலிருந்து வேம்பின் சத்து வெளிப்பட்டது என்றால் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாறும். அதே போல ரோஜாப்பூவின் சத்தை எடுத்துக் கொண்டால் அதுவும் அலைகளாக மாறும். விஷச் செடியின் சத்தை எடுத்துக் கொண்டால் அதுவும் அலைகளாக மாறும்.

இதைத்தான் வேதங்கள் இயல் இசை நாடகம் என்ற நிலைகளில் கூறுகின்றது. ரிக் சாம அதர்வண யஜூர். இதிலே சாம என்பது இசை.
1.ரோஜாப்பூவின் நறுமணத்தை நாம் நுகர்ந்தால் “ஆஹா…ஹா…!” (இசை – சப்தம்) என்று சொல்கிறோம்.
2.வேப்ப மரத்தின் மணத்தை அந்தக் கசப்பை நுகர்ந்தால் “ஓய்…!” என்கிறோம். ஏனென்றால் கசப்பின் தன்மை அதிகரிக்கின்றது.
3.ஒரு விஷத்தின் தன்மையை நுகர்ந்தால் நச்…நச்…! என்று தும்மல் வருகின்றது. இது அரிப்பின் தன்மை கொண்டது. சில நேரம் நுகர்ந்த பின் நீராகக் கூட வடிகின்றது.

தனித் தனியாக இந்த மணங்களைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகச் செல்லப்படும் பொழுது சந்தர்ப்பவசத்தால் வேம்பின் அலைகளைக் கண்ட ரோஜாப்பூவின் உணர்வலைகள் இதற்கும் அதற்கும் ஒத்துக் கொள்ளாத நிலையில் நகர்ந்து ஓடுகின்றது.

நகர்ந்து ஓடும் பொழுது ஒரு விஷச் செடியிலிருந்து நுகர்ந்த உணர்வலைகள் அங்கே இருந்தால் வேம்பின் மணம் துரத்தி வந்த நிலையில்
1.விஷச் செடியின் அழுத்தத்தைக் கண்டு
2.ரோஜாவின் மணம் அதைத் தடுத்து நிறுத்தத் (தனக்குள் “பிரேக் போட”) தெரியாது. (இந்த இயல்பு முக்கியமானது)
3.அழுத்தம் அதிகமான பின் அந்த விஷ உணர்வுகளில் மோதிச் சுழலத் தொடங்கிவிடும்.

அப்பொழுது சுழலும் தன்மை வரும் பொழுது வேம்பின் உணர்வையும் உள்ளே இழுக்கின்றது. ஏனென்றால் சுழற்சியில் ஈர்க்கும் தன்மை வருகின்றது.

இந்த மூன்றும் இபப்டி ஒன்றுடன் ஒன்று மோதி இந்த மோதலில் வேம்பின் உணர்வும் மற்ற நிலைகளும் எந்த அளவுக்குக் கலந்ததோ அதற்குத் தக்கவாறு “ஒன்றாகின்றது…!”

உதாரணமாக பத்து சதவீதம் வேம்பின் உணர்வும் ரோஜாப்பூ மூன்று சதவீதமும் விஷத்தின் தன்மை ஒரு சதவீதமும் இந்த மூன்றும் கலந்து ஒரு அணுவின் தன்மை ஆகிவிட்டால் பார்க்கலாம்… சுழிக் காற்றாக வரும். அப்பொழுது மேலே ஆவியாகச் செல்லும்.

ஆனால் கனமான பின் அந்தப் பொருள் அப்படியே கீழே பூமியில் ஒடுங்கும். இப்படி ஒடுங்கி இழுத்தாலும் பூமிக்குள் ஆழமாகப் பதிந்து விட்டால் அது கருவேப்பிலையின் வித்தாகப் பதிந்து விடுகின்றது.

மின்னல் தாக்கபப்டும் பொழுது அதனின் உணர்ச்சிகள் உந்தி அந்தப் பத்து சதவீதம் வேம்பின் சத்தையும் முன்று சதவீதம் ரோஜாப்பூவின் சத்தையும் ஒரு சதவீதம் விஷச் செடியின் சத்தையும் கலந்து அது விளையும் தன்மைக்கு வருகின்றது.

1.ஆக வேம்பின் பக்கம் ரோஜாப்பூவை வைத்தால் இதற்கும் அதற்கும் தொடர்பில்லை – வளர்ச்சி இருக்காது
2.ஆனால் இதனுடன் இணைந்து கருவேப்பிலைச் செடியாக ஆன பின் அதற்கு அருகில் ரோஜாப்பூச் செடியை வைத்தால் நன்றாக வளரும்.
3.இதற்கு அது உணவு கொடுக்கின்றது. அதற்கு இது உணவு கொடுக்கின்றது… ரோஜாப்பூவிற்கு உரமாகின்றது.
4.கருவேப்பிலைப் பக்கம் ரோஜாப்பூவை வைத்துப் பாருங்கள் நல்ல விரிவடைந்து ஜோராக வரும்.

ஏனென்றால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இதை எல்லாம் காட்டிற்குள் எம்மை (ஞானகுரு) அழைத்துச் சென்று
1.எப்படி அதனதன் உணர்வுகள் உந்துகின்றது..?
2.அந்த உணர்வின் செயலாக்கங்கள் எப்படி எல்லாம் வருகிறது…? என்று இதை எல்லாம் காட்டினார்.

ஆனால் விஷச் செடிக்கு அருகில் வைத்தால் அந்த அதிகரித்த விஷத்தின் தன்மையை இது நுகரப்படும் பொழுது ரோஜாப்பூ வாடிவிடுகின்றது. இதெல்லாம் தனக்குள் கவர்ந்து கொண்ட… நுகரும் சக்தியால் மாறுகின்றது.

ஆக அந்தத் தாவர இனத்தின் மணங்கள் தான் நாம் சுவாசிக்கும் பொழுது எண்ணங்களாகவும் உணர்ச்சிகளாகவும் சொல்லாகவும் பல வித குணங்களாகவும் இயக்குகின்றது.
1.ஒன்றை ஏற்றுக் கொண்ட நிலைகளும்
2.ஏற்றுக் கொள்ளாத நிலைகளும் எல்லாம் இப்படித்தான் நமக்குள் வருகிறது.

அணுவின் இயக்கத்தையும் அண்டத்தின் இயக்கத்தையும் வான இயல் புவி இயல் உயிரியல் தாவரவியல் என்று இதை எல்லாம் தெளிவாக அறிந்து தன் வாழ்க்கையில் வந்த நஞ்சுகளை எல்லாம் அடக்கி உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற்றால் நமக்குள் இயக்கும் எதிர்மறையான இயக்கங்களைச் சமப்படுத்தி நாமும் அந்தத அகஸ்தியனைப் போன்றே நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றலாம். பிறவி இல்லா நிலை அடையலாம்.

நம் உயிரின் பரிமாணத்தைக் கூட்டுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

spiritual stiffness

நம் உயிரின் பரிமாணத்தைக் கூட்டுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.இந்தப் பூமியின் சமைப்பு அமிலத்தின் முதிர்வு நிலையின் முலாம் தன்மை தான்
2.மனித உடலின் அமிலக்கூறின் வார்ப்பு நிலை.
(பூமியின் முதிர்ந்த வளர்ப்பு தான் மனிதன்)

பூமிக்கு அடியில் உருவாகும் உலோகத் தன்மையில் முதிர்வு நிலை வளர வளர பூமியின் முதிர்வின் வலுத் தன்மை கூடுவதைக் காண்கின்றோம். (உலோகத்தின் வளர்ச்சியில் பூமி அடுத்து நட்சத்திரமாகிப் பின் சூரியானாக வளர்ச்சி பெறும்.)

தாவர இனங்களின் வளர்ச்சியில் காய்களாக உருவாகும் பொழுது அந்தப் பிஞ்சு முற்றிப் பழமாகிப் பழுத்து விடுகின்றது. அதற்கடுத்த நிலையாக அதனுடைய கொட்டை மீண்டும் ஒரு வித்தாகப் பயிருக்கு வருகின்றது.

ஆனால் உலோக வளர்ச்சியில் பல மாறுபாடு கொண்டு அதனுடைய வளர்ச்சி முதிர்வின் நிலை பெறுகின்றது. முதிர்வு நிலை பெற்ற உலோகம் தான் செயலுக்கு வருகின்றது.

இந்தப் பூமியின் இயற்கை வளத்தை ஒட்டிய உயிர் அணுக்களின் வளர்ச்சி யாவும் உலோகப் படிவத்திலும் தாவர இன வளர்ச்சியிலும் மாறி மாறி வளர்கிறது. பல உருவங்களாகப் பரிணாம வளர்ச்சி அடைகின்றது.

அப்படி உயிர் பெறும் அத்தகைய ஜீவ ஜெந்துக்களின் உயிராத்மாவின் பரிமாணம்
1.வலு கொண்ட மனித உருவத்திற்கு வரவும்
2.அதிலே ஞானத்தின் ஒலியை எடுக்கும் செயலாக உருவத்திற்கு வரவும் பல கோடி ஆண்டுகள் ஆகின்றன.

அப்படி வளர்ந்து வந்த மனிதன் ஞானத்தின் முதிர்வு நிலை பெற்றுத் தன் ஆத்மாவின் வலுவின் ஒளியை விழிப்பு நிலைக்கு (ஒளிச் சரீரமாக) வித்தாக ஆக்கவில்லை என்றால் என்ன ஆகும்…?

ஆரம்பத்தில் பூமியில் இருக்கும் முலாம் தன்மையில் (தாவரத்திலும் உலோகத்திலும்) உயர் நிலை பெற்ற வலுவை… அந்த வலுவை வளர்த்த தொடர்ச்சியைப் போல்
1.மீண்டும் மிருக இனத்திற்கும்
2.மற்ற ஜீவ ஜெந்துக்களின் இன நிலைக்கும்
3.புழு பூச்சியாகத் தாவர இனம் மற்ற உலோக நிலைக்கும்
4.பூமியின் சுழற்சி வட்டத்தில் பல கோடி ஆண்டுகளுக்குச் சுழலும் நிலை தான் ஏற்படும்.
(பல கோடி ஆண்டுகளில் வளர்ந்து மனிதனான நாம் மீண்டும் தேய்பிறையாகிக் கீழே போய் விடுவோம்)

பூமியின் சுழற்சியுடனே பல வார்ப்பில் வளர்ந்த நாம் நம்முடைய இந்த மனித வாழ்க்கையின் தொடரில்
1.தன் உயிராத்மாவின் வளர்ச்சியை வளர்க்காதபடி
2.உடலின் இயக்கத்துக்கு அடிமைப்பட்டு வாழ்ந்தால்
3.இந்தப் பூமியின் இயக்கச் சுழற்சியில் மட்டும் தான் சிக்கிக் கொண்டிருக்க முடியும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து ஒவ்வொருவரும் விடுபட வேண்டும். ஏனென்றால் இந்தப் பூமியின் வளர்ச்சியில் வலுப் பெற்ற வளர்ச்சியே மனிதனின் நிலை தான். பூமியின் செயல்பாட்டிலேயே உயர்ந்த நிலை கொண்டதும் மனிதனின் நிலை தான்.

மனிதன் தன்னைத் தானே உணரும் ஞான ஒலியை… அதாவது அந்த “ஆத்மாவின் விழிப்பையும்…” அதன் மூலமாகப் பெறும் ஆத்ம ஒளியின் செயல்பாடு கொண்ட சக்தியினால் தான் சூட்சம இயக்கம் சுழல்கிறது.

1.கனம் கொண்ட கயிறைச் சுற்றி முறுக்கும் பொழுது “திடம்” பெற்று விடுகின்றது.
2.சில பொருள்களை வேக வைக்கும் பொழுது அதனுடைய “மணம்” வெளிப்படுகின்றது.
3.சில பொருள்கள் எரியும் பொழுது அதனுடைய மணமும் எண்ணமும் “ஆவியாக” புகை நிறத்தில் வெளிப்படுகின்றது.

அந்தந்தச் செயல்பாடுகளுக்கொப்ப அடுத்த நிலையின் மாற்றத்தில் (வேக வைத்தலோ அல்லது எரித்தலோ) திடமாகும் பொழுது
1.அதனுடைய வார்ப்பு நிலை
2.கயிறைத் திரித்தவுடன் முறுக்குவதைப் போன்று
3.கெட்டித் தன்மை ஏற்பட்டு விடுகின்றது.

பொருளை வேக வைக்கும் பொழுது ஆவி வெளிப்பட்டுப் பொருள் திடப்படுகின்றது. பொருளை எரிக்கும் பொழுது நீர்ச் சத்து வெளியேறி அந்தப் பொருள் பஸ்பமாகிச் சாம்பல் தான் திடமாகின்றது.

அதைப் போன்று இந்த ஆத்மாவின் இயக்கம்…
1.சரீரத்தின் ஓட்டத்தில் வாழும் காலத்தில்
2.ஆத்மாவின் வலு வளர்ச்சியைத் திடமாக்கிக் கொள்ள வேண்டும்
3.ஏனென்றால் ஆத்மாவின் வலு திடம் பெற்றால் தான் உயிரின் பரிமாணம் அதிகரிக்கப்படும்.

மனிதனுக்கு அடுத்த உயர்வு நிலையான ஞான நிலை எய்திட அந்த மெய்யை அறியும் மெய் அறிவிற்கு முலாமாக்கும் நிலையாக (சக்தியைச் சேமிக்கும்) ஆத்மாவின் முதிர்வு நிலையை “விழிப்பு…” நிலையாக்கினால் தான் முடியும்.,

அத்தகையை ஆத்ம விழிப்பு நிலை பெறவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஒவ்வொரு நிமிடமும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும்
1.அந்த ஆத்மாண்டவனை..
2.நம் உயிரான ஈசனைப் புருவ மத்தியில் ஈஸ்வரா…! என்று எண்ணி
3.மெய் வழியைக் காட்டிக் கொண்டிருக்கும் சகல ரிஷிகளின் நேரடி அலைத் தொடர்பில்
4.உயிர் வழிச் சுவாசமாக ஈர்த்தெடுக்கும் பேரருள் பேரொளி வளர்ப்பினால் தான் முடியும்.

சர்க்கரை நோய் இரத்தக் கொதிப்பாக மாற முக்கியமான காரணம் என்ன…?

Diabetes

சர்க்கரை நோய் இரத்தக் கொதிப்பாக மாற முக்கியமான காரணம் என்ன…?

 

ஒரு எலி தன்னிச்சையாகச் சென்றாலும் அதன் மீது பாம்பு தன் விஷத்தைப் பாய்ச்சி அதை உணவாக உட்கொள்கின்றது. பாம்பின் உடலில் அந்த விஷத்தைச் சேமித்து நாகரத்தினமாக மாற்றுகின்றது.

அதே போல் ஒடக்கான் பல்லி இவைகளிலும் விஷம் இருக்கும். பல்லி தன் இரையை விழுங்கிய பின் விஷத்தின் தன்மை கொண்டு அதை ஒடுக்குகின்றது. விஷத்தின் உணர்ச்சியின் தன்மையாக தனக்குள் கூட்டுகின்றது.

ஒடக்கானை எடுத்துக் கொண்டால் அதற்குள் சேமிக்கும் உணர்வின் அணுக்களை வலு கொண்டதாகச் சிந்திக்கச் செய்யும் நிலையாக உருவாக்குகின்றது அணுக் கருவாக.

விஷத்தின் சேமிப்பாகும் பொழுது பாம்பின் உடலில் நாகரத்தினமாக மாறுகிறது. ஆனால் ஒடக்கான் போன்ற மற்ற நிலைகளோ தன் உடலை விஷத் தன்மையாக மாற்றி கொள்கின்றது.

விஷம் கொண்ட உயிரினங்கள் தன் உடலில் விஷத் தன்மையாக மாற்றிக் கொள்வதனுடைய நோக்கம்
1.ஒரு இரையைத் தனக்குள் முழுமையாக விழுங்கப்படும் போது
2.இந்த விஷமும் இதற்குள் ஏற்படும் அமிலமும் சேர்த்து நீராகக் கரைத்துவிடும்.

கரைத்த உணர்வுகள் அதன் உடலுக்குள் சென்ற பின் அதனுடைய உணர்வின் தன்மையாக இரத்தத்தில் கலந்து உடலை உருவாக்கிய அணுக்களுகு ஆகாரமாகக் கொடுக்கும். இது எல்லாம் ஒரு உணர்வின் சத்தைக் கொண்டது.

அதே போல் தான் நாம் உணவாக உட்கொள்கிறோம் என்றால் நம் உடலில் அது முதலில் அமிலமாகத் தான் மாறும். விஷத் தன்மை கொண்ட நம் பித்த சுரப்பியின் சுரப்புக்குத் தக்கவாறு நாம் சாப்பிட்ட உணவுகளைக் கரைத்த பின் அமில சக்தி குளுக்கோஸாக மாறுகின்றது.

1.குளுக்கோஸாக மாற்றி வரப்போகும் போது
2.இரத்தங்களில் இருக்கக்கூடிய செல்களில் இதன் உணர்வின் தன்மை சுழலச் செய்து சுழலச் செய்து
3.அது செவ்வணுக்களாக மாற்றுகின்றது.

அவ்வாறு மாற்றும் தன்மை அங்கு இல்லை என்றால் இந்த விஷத்தின் தன்மையால் குளுக்கோஸாகவும் சர்க்கரையாகவும் மாற்றி விடுகிறது. குளுக்கோஸ் அதிகமானால் நமக்குச் சர்க்கரைச் சத்து தான் அதிகம் ஆகும். ஆகவே அதை மாற்றும் வல்லமை அங்கு பெற வேண்டும்.

1.அடிக்கடி வேதனை என்ற உணர்வின் தன்மை நாம் சுவாசிக்கும் போதும்
2.வேதனைப்படுவோரைப் பார்க்கும் போதும்
3.ஒருவர் செயலைப் பார்த்து நம்மால் தாங்க முடியவில்லை என்ற நிலையில் சோர்வு என்ற உணர்வைக் கவரப்படும் போதும்
4.இந்த உணர்வுகளை எல்லாம் நுகரப்போகும் போது கோபமான உணர்வுகளையும் கலந்து நாம் சுவாசிக்கின்றோம்.

இந்த உணர்வின் தன்மை நமக்குள் கலந்த பின் இந்த உணர்வு பிரிக்கப்பட்டுக் குளுக்கோஸ் என்ற நிலையை மாற்றுவதற்கு மாறாக இதனுடைய உணர்வின் செல்கள் அழுத்த நிலைகள் கொண்டு இரத்தக் கொதிப்பாக ஒரு பக்கம் மாறும்.
1.சர்க்கரைச சத்து உள்ளவர்களுக்கு
2.ரொம்பச் சீக்கிரம் இந்த இரத்தக் கொதிப்பு வரும்.

இவைகளுக்கு எல்லாம் காரணம் என்ன என்றால் நாம் நுகர்ந்த உணர்விற்கொப்ப அந்த அணுக்களின் தன்மை எப்படி வீரியமோ அதற்குத்தக்க இயக்கமாகின்றது.

வைத்தியரீதியில் இரத்தங்களைப் பரிசோதித்து அந்த அணுத் தன்மைகளைச் சோதிக்கும் போது இரத்த கொதிப்பு இருக்கிறது… சர்க்கரை சத்து இருக்கிறது…! என்று சொல்வார்கள்.

சர்க்கரையும் கொதிப்பும் இந்த இரண்டு உணர்வின் மோதலின் தன்மை ஆகிக் கடைசியில் சலிப்பின் தன்மையாகப் பிரிக்கப்படும் பொழுது ஆஸ்துமா நோயாகி சளித்தன்மை அதிகமாகும்.

சர்க்கரை அதிகமான நிலையில் சளி உருவாகி எல்லா இடங்களிலும் அந்த உறையும் தன்மையாக அந்த அமிலங்கள் மாறி விடும். இப்படியெல்லாம் நம் உடலுக்குள் மாற்றங்கள் ஆகின்றது.

எத்தனையோ உடல்களில் தீமைகளை நீக்கி நீக்கி மனிதனாக வளர்ச்சி அடைந்து வந்தாலும் சந்தர்ப்பத்தால் நாம் சுவாசிக்கும் உணர்வுகளால் உடலுக்குள் அணுத் தன்மைகளை மாற்றி மனித உடலின் ரூபத்தையே மாற்றும் தன்மையாக வந்து விடும்.

கடைசியில் வேதனை வேதனை என்று மனிதனாக இருக்கும் உருவை மாற்றும் சக்தியாக வந்து விடுகிறது.

ஆகவே இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால் வேதனையை உருவாக்கும் சந்தர்ப்பங்களை எல்லாம் வேதனையை நீக்கும் சந்தர்ப்பமாக நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

எப்பொழுது தீமை என்று காணுகின்றோமோ அடுத்த கணமே ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடமாவது வலுவாக எண்ணி உடலுக்குள் சேர்க்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய வினைகள் சாப வினைகள் பாவ வினைகள் பூர்வ ஜென்ம வினைகள் அனைத்தும் அகல வேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடம் தியானிக்க வேண்டும்.

எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெறவேண்டும் எங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களுக்கு நல்ல உணர்வாகப் படர வேண்டும் நாங்கள் பார்ப்பதெல்லாம் நலமும் வளமும் பெறவேண்டும் ஈஸ்வரா…! என்று நாம் சமப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.

1.இவ்வாறு எண்ணி எடுத்துக் கொண்டால்
2.நாம் சுவாசித்ததை நோயாக மாற்றாது. நாம் உடல் நலத்துடன் வாழ முடியும்.

ஆத்மாவின் விழிப்பு நிலை ஏற்படுத்தும் வலுவால் தான்… பிறவியில்லா நிலையை அடைய முடியும் – “தூங்காமல் தூங்கும் நிலை…!”

Atma awakening

ஆத்மாவின் விழிப்பு நிலை ஏற்படுத்தும் வலுவால் தான்… பிறவியில்லா நிலையை அடைய முடியும் – “தூங்காமல் தூங்கும் நிலை…!”

 

நம்முடைய எண்ணம் ஓடிக் கொண்டே உள்ளது உடல் உறங்கும் வரை.

உறக்கத்தில் உடலையும் எண்ணத்தையும் மறந்துள்ள தன்மையில் கனவுகள் சில நேரம் நமக்கு வருகின்றது. எல்லாக் கனவுகளும் மீண்டும் நம் நினைவுக்கு வருவதில்லை.

உறக்கம் இல்லாத நிலையில் கண்ணை மூடிக் கொண்டிருந்தாலும் உடல் உறங்கும் வரை நம் எண்ணங்கள் ஓடிக் கொண்டே தான் உள்ளது.

சிலருக்குச் சில சமயங்களில் மயக்கம் ஏற்பட்டால் அந்த நேரத்தில் எண்ணத்தின் ஓட்டமில்லை. மயக்கம் தந்து (ANESTHESIA) உடல் உபாதைகளை நீக்க அறுவை சிகிச்சைகளைச் செய்யும் வேலைகளில் நம் எண்ணத்தின் ஓட்டம் மறந்து விடுகின்றது.

ஆக விழிப்புடன் உள்ள நேரங்களில் தான் மனிதனின் எண்ண ஓட்டம் ஓடிக் கொண்டே உள்ளது. உடல் உறக்கத்தில் எண்ணத்தின் ஓட்டம் இல்லை. சாதாரண வாழ்க்கை நிலையில் நாம் வாழ்ந்து இறக்கும் வரையிலும் இப்படித்தான் செயலாகின்றது.

1.உறக்க நிலையிலே எண்ண ஓட்டம் இல்லாத பொழுது
2.உடல் இறந்த பிறகு ஆன்மாவின் எண்ணம் செயலாகுமா…?
3.ஆன்மாவின் எண்ணம் செயலாகக் கூடிய வழி முறை யாது…?

சாதாரணமாக இறந்த மனிதனின் ஆன்மா அது உடலை விட்டுப் பிரிந்த பிறகு அந்த ஆத்மாவின் எண்ண ஒலிகள் ஜீவன் பிரிந்த பிறகு செயலாக்கும் சக்தியின் வீரியம் குறைந்து விடுகின்றது.

உடலில் இருக்கும் பொழுது தான் ஏற்படுத்திக் கொண்ட வலு நிலைக்கொப்ப அந்த ஆத்மா
1.இந்தப் பூமியின் சுழற்சியில் அதனுடைய தன்மைக்குகந்த வலுவில் தான் சுழன்று கொண்டிருக்கும்
2.தன் ஆசை நிலைக்கொப்ப…!
3.அதாவது அதனுடைய செயலுக்குகந்த ஆத்ம சந்திப்பு ஏற்படும் காலம் வரை…! (சுழன்று கொண்டிருக்கும்)

உடல் விழிப்பு இருந்தால் தான் எண்ண ஓட்டத்தின் கதியின் செயலாக சரீர இயக்கத்தின் நிலை உள்ளது. அப்படியானால்
1.உறங்கா நிலை…
2.விழிப்பு நிலை… என்பதின் பொருள் யாது…?

உடல் உறக்கமற்ற நிலையில் எண்ணத்தின் விழிப்பு நிலையில் இந்தச் சரீர வாழ்க்கைக்கு ஒத்த அமைப்பு கொண்டது தான் அந்த “எண்ணத்தின் ஓட்டம்…!”

ஆகவே “ஆத்மாவின் விழிப்பு நிலை ஏற்படுத்தும் வலுவால் தான்…” என்றுமே நாம் அழியாத வாழ்க்கையாக என்றும் பதினாறு என்ற பிறவியில்லா நிலையை அடைய முடியும்.

இந்த உடல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த உடலுடன் வாழ்ந்தாலும்
1.வாழும் காலத்தில் மெய் ஞானத்தை அறிய விரும்புவோருக்கு
2.உடல் உறக்கத்திலும் ஆத்மாவின் விழிப்பால் எண்ணத்தின் ஓட்டத்தைக் கொண்டு
3.என்றுமே விழிப்பு நிலை ஏற்படுத்திக் கொண்டால்
4.ஒளியாக… ஜோதி நிலையாக அறியும் நிலைக்கு
5.ஆத்மாவின் எண்ணச் செயல் செயலாக்கும் அந்தத் தெய்வ நிலைக்கு
6.அஷ்டமா சித்தின் சக்தியைப் பெற முடியும்.

லட்சுமணா…! – சுவாசித்தது உணர்ச்சிகளாக எப்படி இயக்குகிறது என்பது பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

Rama sita lakshmana

லட்சுமணா…! – சுவாசித்தது உணர்ச்சிகளாக எப்படி இயக்குகிறது என்பது பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

ஒரு வேப்ப மரம் இருக்கின்றதென்றால் அது கசப்பின் உணர்வு கொண்டது. ஆனால் ரோஜாப்பூவோ துவர்ப்பு உணர்வு கொண்டு நறுமணங்களைக் கூட்டும் உணர்வு கொண்டது.ஆனால் இதைச் சூரியன் காந்தப்புலன் அறிவு கவர்ந்து அதனதன் அலைகளாகப் படரச் செய்கின்றது.

ஏனென்றால் சூரியனிலிருந்து வெப்பமும் காந்தமும் விஷம் என்ற மூன்று நிலைகள் தான் வருகிறது. காரணம் பிற மண்டலங்களில் இருந்து கவர்வதை நட்சத்திரங்கள் கவர்ந்து அந்த விஷத் தன்மையைத் தூசிகளாக மாற்றுகின்றது.

அப்படித் தூசிகளாக மாறி வருவதை இந்த சூரியன் தனக்குள் இழுக்கும் போது தன் உணர்வில் பெற்றதைப் பாய்ச்சுகிறது.

ஒரு நூலாம்படைப் பூச்சி நூலாம்படையால் தன் கூட்டினைக் கட்டித் தனக்குள் எவ்வாறு இருக்கின்றதோ இதைப் போல தான் பிற மண்டலங்களின் சக்தியை நட்சத்திரங்கள் கவர்ந்தாலும் இதனில் உருவான அந்த உணர்வின் மலம் தான் அது – பால்வெளி மண்டலம்.

பால் வெளி மண்டலமாக மாற்றினாலும் அதிலே சிக்குண்டு வருவதை நட்சத்திரங்கள் அது சுழலும் போது தூசியாக மாற்றிப் நம் பிரபஞ்சத்திலே பரவச் செய்கின்றது. தூசியாக வருவதைச் சூரியனுடைய காந்தப்புலன் அறிவு அதைக் கவர்கின்றது.

ஏனென்றால் இதிலிருந்து வெளிப்படும் உணர்வை வெப்பம் காந்தம் என்ற நிலைகள் மோதலின் தன்மை ஆகும் பொழுது அது வெப்பமாக மாறுகிறது. வெப்பமாக மாறும் போது நகர்ந்து ஓடும் சக்தியும் ஈர்க்கும் காந்தத்தின் செயல் அதிகமாகின்றது.

மோதலில் சூரியன் விஷத்தின் தன்மைகளைப் பிரிந்தாலும் பிரிந்து செல்லும் விஷத்தின் தன்மையை இந்தக் காந்தம் இழுத்து வைத்துக் கொள்கின்றது.

இதை எல்லாம் நாம் சாதாரணமாக எளிதில் புரிந்து கொள்வதற்காக
1.சூரியனை நாராயணன் என்றும்
2.மறு அவதாரமாக உயிரின் துடிப்பிற்குள் வெப்பமாக வருவதை விஷ்ணு என்றும்
3.வெப்பத்தினால் ஈர்க்கும் தன்மை வருவதை அந்தக் காந்தத்தை லெட்சுமி என்றும்
4.பிரிந்து சென்ற விஷத்தை அந்தக் காந்தம் தனக்குள் இணைத்து கொளளும் பொழுது அதை லட்சுமணா என்றும் காட்டுகிறார்கள் ஞானிகள்,

இராமயாணத்தில் பார்த்தோம் என்றால் ராமனும் லட்சுமணனும் சீதையும் இருக்கும். இதெல்லாம் நமக்கு தெளிவாகவே தெரியச் செய்கிறார்கள். இந்தக் காந்தம் ஒரு மணத்தின் தன்மையை நுகர்ந்த பின் எப்பொருளை இந்தக் காந்தம் இழுக்கின்றதோ அந்த மணத்தை…
1.உணரச் செய்யும்
2.உணர்த்தச் செய்யும்
3.உணர்வை வளர்க்கச் செய்யும் சக்தி பெற்றது இந்த விஷம்
4.அது தான் “லட்சுமி… லட்சுமணா…” (எல்லாமே காரணப் பெயர் தான்)

ஒரு செடியின் சத்தை இந்தக் காந்தம் இழுத்துத் தன்னுடன் மோதலாகும் பொழுது வெப்பமாகின்றது. இரண்டறக் கலந்து விடுகிறது. மோதலில் ஏற்படும் இதனுடன் இணைந்த விஷத்தின் தாக்குதலால் வெப்பத்தின் தன்மை கூடும் தன்மை வருகிறது.

ஆனால் இணைந்து கொண்ட பின் அதற்குள் இருக்கும் விஷம் இந்த மணத்தை வெளிப்படுத்துகின்றது. அதாவது ஒரு செடியின் சத்தை இவ்வாறு நுகர்ந்து விட்டால் சீதா… “சீதா லட்சுமி” என்று சொல்வார்கள்.

ஆனால் அதே சமயம் அதே செடியின் சத்தை மனிதனான நாம் நுகர்ந்தால் நம் உயிருக்குள் பட்ட பின் “சீதா ராமா” எண்ணங்களாகத் தோன்றுகிறது. அந்த உணர்ச்சிகள் நமக்குள் இந்த உயிர் என்ற விஷ்ணு மோதலில் ஆனபின் ஒலி அலைகளை உடலிலே பரப்புகின்றது.

அந்த உணர்வின் சக்தியை நம் உடலிலே சுழலச் செய்கிறது. அந்த உணர்ச்சியின் தன்மை ஒவ்வொன்றிலும் தாக்குகிறது. எதன் உணர்வை நுகர்ந்தோமோ அந்த உண்ரச்சியின் தன்மை நம் உடலிலே உருவாக்குகின்றது.

நமது ஞானிகள் இதை எல்லாம் இணைத்துக் காவியமாக நமக்கு எவ்வாறு கொடுத்தார்கள் என்ற நிலையைச் சற்று சிந்தித்துப் பார்த்தால் மனிதனான பின்
1.நாம் எதை நுகர வேண்டும்…?
2.நாம் எதை வளர்க்க வேண்டும்…?
3.நாம் எவ்வழி செல்ல வேண்டும்…?
4.நாம் எதனை நமக்குள் பெருக்க வேண்டும்…? என்ற சிந்தனை வந்து விடும்.

ஆகவே சுழலப்படும் போது இந்த உணர்வின் சத்து… “சீதா” என்பது உடலாகி விடுகிறது. அதில் உள்ள மணம் ஞானமாகின்றது. எந்த மணத்தின் தன்மை இதில் உணர்ச்சிகளாகின்றதோ அந்த ஞானத்தின் தன்மை கொண்டு
1.இந்த உடல் இயக்கும்.
2.அந்தச் சொல் வரும்.
3.அந்தச் செயல் இருக்கும்.

சீதா என்ற நிலையின் அந்தச் சுவையின் சொல்லாக வரப்போகும் போது அந்த உணர்வின் மணமாக அந்த உணர்ச்சிகளைத் தூண்டி நம் எண்ணம் செயல்படும்.

ஆகவே இந்த விஷம் எதனுடன் கலக்கின்றதோ அதனின் உணர்ச்சியைத் தூண்டும் செயல் பெற்றது. ஆகையினாலே உணர்ச்சி என்பது உணர்ச்சியை மனிதனுக்குள் அந்த உணர்ச்சியைத் தூண்டச் செய்வது. உணர்வு என்பது ஒன்றுடன் இணைந்து அணுவின் தன்மை பெற்றது.

ஒரு மனிதனுக்குள் விளைந்து வெளிப்பட்ட உணர்வை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொண்டால் “உணர்வு…” என்ற நிலைக்கு மாறுகிறது. உணர்வின் தன்மையை மனிதர்கள் நுகர்ந்தால் “உணர்ச்சி…” என்ற உணர்வுகளே அஹ்டு இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.
1.ஒரு திடப்பொருளாகும் போது உணர்வு.
2.ஆனால் நாம் நுகரப்படும் போது உணர்ச்சி.

உதாரணமாக மிளகாயை எங்கேயோ வறுக்கிறார்கள். சூரியனின் காந்த சக்தி அந்த மணங்களை எடுத்துக் கொள்கிறது. சுவாசித்தவுடன் நாம் என்ன செய்கிறோம்..?

அந்த நெடி கலந்த உணர்வால் “நச்சு…நச்சு…” என்று தும்முகின்றோம். அப்போது அந்த உணர்ச்சிகளை அங்கே தூண்டச் செய்கின்றது. அது தும்மலாக வருகிறது.

உணர்வு இயக்கி உணர்ச்சியாக ஆன பின் அதைச் சொல்லாகச் சொல்லும் பொழுது “இந்த நேரத்திலே போய் மிளகாயை வறுக்கிறார்கள் பார்…!” என்ற சொல்லைத் தான் சொல்ல வைக்கின்றது.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா..!

இயற்கையின் நிலைகளில் “நாம் இயங்குகிறோமா…?” என்றால் இல்லை. நாம் நுகரும் உணர்வு எதுவோ அது தான் இந்த உடலை இயக்குகின்றது. இதைத் தெளிவாக்குகின்றார்கள் ஞானிகள்.

அப்பொழுது நாம் நுகரும் உணர்வுகள் எதுவாக இருக்க வேண்டும்…?

நம் ஆறாவது அறிவைக் கார்த்திகேயா என்று காட்டி அந்த மெய் ஞானிகள் வெளிப்படுத்தும் அருள் உணர்வுகளைச் சுவாசித்து அதனின் இயக்கமாக நாம் வளர வேண்டும்… வாழ வேண்டும்…! மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே என்றும் வாழ்ந்திட வேண்டும் என்பதே நம் குருநாதர் காட்டிய அருள் வழி.

மனிதப் பிறவி பெற்ற ஒவ்வொருவரும் “ரிஷிச் சக்தியைப் பெறும் மார்க்கத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது..!”

Divine realization - treaure

மனிதப் பிறவி பெற்ற ஒவ்வொருவரும் “ரிஷிச் சக்தியைப் பெறும் மார்க்கத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது..!”

 

மறை பொருளே உறைப்பொருள்
உறை பொருளே வினைப்பொருள்
வினைப் பொருளே விளைப்பொருள்
விளைப் பொருளே மெய்ப்பொருள்

1.விளைப் பொருளின் வளர்ச்சியின் ஆக்கம் தான் ஒவ்வொன்றிலும் வலுத் தன்மையாகி
2.மெய் ஞானம்… மெய்ப் பொருளாக… மெய் ஒளி ஒலி… செயல் சக்தியாகக் கூடுகிறது.

மனித உணர்வில் எண்ணியவுடன் (READY MADE) ஏற்படுவதல்ல அந்த விளைப்பொருளும் மெய்ப் பொருளும். அப்படியானால் அந்த மெய் ஒளி… மெய் ஒலி… மறைப் பொருள்… உறைப் பொருள்… இதெல்லாம் எப்படி உருவாகின்றது…?

இந்தப் பூமியின் சுழற்சி தட்ப வெப்ப சீதோஷ்ண நிலை மாறிக் கொண்டே உள்ளது. பூமியின் எட்டுத் திசைகளில் அந்தந்த இடங்களில் ஒன்று போல் சீதோஷ்ண நிலையும் கால நிலையும் இருப்பதில்லை. இது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

ஆனாலும் பூமி எப்படி மறைப்பொருளை (தனக்குக் கிடைக்கும் ஆற்றலைச் சமமாக்கும் நிலையாக) தன்னுடைய சக்தியின் ஈர்ப்பிற்குப் பல மாற்றங்களில் விளைப் பொருளாக ஒளியையும் ஒலியையும் எடுத்துத் தன் ஓட்டத்தின் கதியில் ஓடிக் கொண்டேயுள்ளதோ அதைப் போன்று தான்
1.உணர்வு கொண்ட எண்ணத்தின் கதி ஓட்டம் ஓடிக் கொண்டே உள்ள சுழற்சியில்
2.நம் சரீர உடலின் நிலையும் உள்ளது.

ஜீவன்கள் வாழ இந்தப் பூமியின் ஜீவ நாடியாக நீர் உள்ளதற்குப் பூமியில் எப்பொழுதுமே மழை பெய்து கொண்டிருப்பதில்லை. மேகங்கள் கருத்து இடியும் மின்னலும் தோன்றுகிறது. அப்பொழுது பல இடங்களில் பெய்யக்கூடிய அந்த மழை வெள்ளமாகின்றது.

வெள்ளமே ஆறாகக் கரை புரண்டு ஓடி நீர் நிலைகள் பூமியில் நிறைகிறது. அந்த நீரைக் கொண்டு தான் பல ஜீவராசிகள் உயிர் வாழ்கிறது. ஒரு இடத்தில் பெய்யும் மழை ஆறாகும் பொழுது பல இடங்களுக்குச் செல்கிறது.

இதே நிலை போல் மீண்டும் மீண்டும் அந்தந்த இடங்களுக்கொப்ப ஏற்படக்கூடிய நிலைகளைக் கொண்டு ஜீவராசிகளின் நிலையும் தாவர இனங்களின் வளர்ச்சியின் பயனாகக் கனியும் பூக்களும் (புஷ்பங்களும்) வளர்கிறது.

1.கனியும் பூக்களும் வருவதைப் போன்று தான்
2.மனித உணர்வில் மெய் ஒலி பெற.. மெய் ஒளி பெற… மெய் ஞானமாக்க..
3.பல நிலைகளில் நம் உணர்வின் எண்ணமுடன் மோதிடும் இன்னல்கள் ஏற்படுத்தும் காலங்களை
4.புருவ மத்தியில் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த ஜீவித உணர்வில் எடுக்கும் ஒலி கொண்டு தான் ஒளியாக மாறும்…!
5.அதாவது இடி மின்னலைப் போன்றே ஒலி ஒளி செயல் ஏற்படும் இன்னல்கள் அனைத்தையும் பேரொளியாக மாற்ற வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் ஏற்படக்கூடிய எண்ணத்தின் மோதலை இடி மின்னலைப் போன்று உணர்வின் சமைப்பாக நாம் மாற்றும் பொழுது
1.நீரான பெருக்கம் மழையாகி ஜீவன்களை வளர்க்கப் பூமிக்கு வலு ஏற்படுகின்றதோ
2.அதைப் போன்று எண்ணத்தில் எதிர்படும் பல மாற்றங்களையும் உணர்வில் எடுத்து
3.நம் உணர்வுடன் எந்த எண்ணத்தின் மாற்று நிலைகள் மோதினாலும்
4.மேகத்தின் கருமை கொண்டு இடி மின்னல் வெடித்து மழை வருவதைப் போன்று
5.நாம் போகும் மார்க்கத்தில் ஞானத்தின் மெய் ஞானம் அறிய…
6.மோதிடும் எதிர் தன்மைகளை உணர்வின் எண்ணத்தால் மாற்றி உயர்ந்த ஞானத்தின் ஒலியாக நாம் எண்ணினால்தான்
7.அந்த ஒலியே (எந்த ஒலியாக இருந்தாலும்) ஒளியாகும்… நம் ஆத்மா பேரொளியாக ஆகும்.

மெய் ஒலி… மெய் ஒளி பிறக்க… மெய் ஞானிகள் அன்று என்ன செய்தார்கள்…?
1.வாழ்க்கையில் தன் உணர்வுடன் மோதிய “எண்ணத்தின் ஓட்டத்தின் கதியைக் கொண்டுதான்…”
2.எண்ணத்தால் எதிர்படும் எதிர் நிலைகளை ஞானத்தின் பகுத்தறிவால் உணர்ந்து
3.மெய் ஒலி மெய் ஒளி பெற்றால் மெய் ஞானியாகும் குணங்களைத் தன் ஆத்ம ஞானத்தால் வளர்த்து
4.ஆத்ம சக்தியின் சூட்சமத்தை… ஆதிசக்தியின் ஒளி சக்தியாக..
5.அகிலத்தில் படர்ந்துள்ள பரமாத்மாவின் பரம்பொருளை
6.”தனக்குள்ளேயே…!” மெய் ஞானிகள் அன்று கண்டார்கள்.
7.பால்வெளியில் படர்ந்துள்ள உண்மைத் தன்மைகளை உணரும் சக்தியாக ஆதிசக்தியின் சக்தியை மெய் ஞானிகள் அன்று இப்படித்தான் கண்டார்கள்.

பூமியின் சுழற்சியின் கதியில் ஒவ்வொரு நாளும் நாம் வானத்தில் கண் கொண்டு பார்க்கும் பொழுது எண்ணிலடங்காத எத்தனையோ பிரபஞ்சங்களையும் மண்டலங்களையும் காணுகின்றோம்

அந்தப் பால்வெளி மண்டலத்தில் பலவாக படர்ந்துள்ள பரம்பொருளின் செயல் என்பது
1.ஆதி சக்தியின் சூட்சமமாக
2.சூனிய மண்டலமாகப் பலவும் நிறைந்துள்ள செயலின்
3.செயல்பாடில்லா – சூனியமான நிலை தான் பால்வெளியின் நிலை.

அந்தப் பரம்பொருளின் சக்தியைத் தான் மெய் ஞானத்தின் ஒலி கொண்டு… ஒளி பாய்ச்சும் ஏக்கத்தில்… மெய் ஞானி பெற்றான் “ரிஷிச் சக்தி…!”

அந்த ரிஷிச் சக்தியின் செயல் நிலை தன் தன் கதியின் சுழற்சிக்குச் செயலாக்குவதைப் போன்று
1.ஒவ்வொரு மனிதனிடத்திலும் மறைந்துள்ள ஞானத்தைக் கொண்டு
2.வலுவை வளர்க்க வழியமைக்கும் நிலையைத்தான் இங்கே உணர்த்துகின்றேன் (ஈஸ்வரபட்டர்).

கணவனும் மனைவியும் “ஒன்றி வாழ வேண்டியதன் அவசியம்…!”

Husband and wife unity

கணவனும் மனைவியும் “ஒன்றி வாழ வேண்டியதன் அவசியம்…!”

 

நமது உயிர் ஒளியின் தன்மை பெற்ற நட்சத்திரங்களின் சக்தி கொண்டது தான், கார்த்திகை நட்சத்திரம் என்பது ஆண்பால். ரேவதி நட்சத்திரம் என்பது பெண்பால்.

இது இரண்டுமே மோதலில் வரப்போகும் போது பெண்பால் என்ற நிலைகள் அந்த உயிருடன் மோதிய துடிப்பின் தன்மை ஏற்பட்டால் கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தி அதிகமாக இருந்தால் ஆண்பாலாகத் தான் உருவாகும்.

அதிலே ரேவதி நட்சத்திரத்தின் உணர்வுகள் அதிகமாகி விட்டால் பெண்பாலின் உணர்வுகள்… அதாவது ஒன்றைக் கவர்ந்து அது வளர்க்கும் தன்மை பெறும் கருவாக வருகிறது.

ஆகையால் தான் இந்த உயிரின் துடிப்பின் நிலையை கார்த்திகை நட்சத்திரம் கொண்டவர். ரேவதி நட்சத்திரம் என்று கொண்டவர் என்று ஒரு உயிரினுடைய நிலைகளுக்குப் பெயர் வைத்தாலும் இங்கே ரேவதி நட்சத்திரத்தின் சக்தி அதிகமாக வளரப்படும் போது பெண்பாலுக்கு அந்த மற்றதைக் கவரும் சக்தி வருகிறது.

ஆண்பால் பெண்பால் என்ற நிலைகள் பெற்றாலும் இரண்டு எண்ணங்கள் கலக்கப்படும் போது தான் ஒன்றைத் தனக்குள் கலந்து உருவாக்கும் சக்தி பெறுகின்றது.

ஆண் செடி பெண் செடிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். காற்றிலே இதன் அலைகள் படர்ந்தாலும்
1.ஆண் செடியின் உணர்வுகள் பெண் செடியின் மீது பட்ட பின் அந்த உணர்வுகள் கருவுற்றுத்
2.தன் இனத்தை உருவாக்கும் சக்தி பெறுகிறது. ராசி ஜாஸ்தி வரும்.
3.ஆண் செடிகள் இல்லை என்றால் பெண்பால் செடியின் ராசி குறைவாகவே இருக்கும்.
4.ஆண் செடியின் தன்மை கம்மியாகி விட்டாலே போதும். பயிர் இனங்கள் வளர்ச்சி குன்றிவிடும்.

இதைப் போன்று தான் இந்த மனிதன் வாழ்க்கையில் எடுத்துக் கொண்டாலும் கணவன் மனைவி என்ற நிலையில் வாழ்கிறோம். சில வீடுகளில் பார்த்தால் என்ன செய்வார்கள்…?

மனைவி தன்னுடைய கணவனை “எப்போது பார்த்தாலும் அவர் இப்படித் தான் செய்வார்…!” என்று குறையாகவே நினைத்து அதையே சொல்லிக் கொண்டிருப்பார்.

அதே போல் கணவனும் தன் மனைவியை “நான் எதைச் சொன்னாலும் மனைவி கேட்க மாட்டேன் என்கின்றது…! என்று குறையாகச் சொல்லிக் கொண்டிருப்பார்.

இப்படி இந்த வெறுக்கும் உணர்வின் அணுக்கள் இருவருக்குள்ளும் முனித் தன்மையாக அடைகின்றது. முனி என்றால் ஒன்றைத் தனக்குள் எடுத்து மற்றொன்றைத் தாக்கும் நிலைகள்.
1.ஆகவே இரண்டு பக்கமும் என்ன செய்யும்…?
2.இந்தப் பகைமை உணர்வுகள் தான் இருக்கும்.
3.இருவர் உடலிலும் இரண்டறக் கலந்து நல்ல குணங்களைப் பேணிக் காக்கும் சக்தியும் இழக்கச் செய்துவிடும்.

இந்த முனித் தன்மை என்பது விஷத்தின் தன்மை கொண்டது. அது ஒன்றை ஊடுருவிக் கொல்லும் சக்தி பெற்றது. தனித் தன்மையாக அந்த ஊடுருவும் தன்மை பெற்றாலும் பெண்பால் என்ற நிலைகள் இணைந்து விட்டால் ஒடுங்கி விடும்.

விஷத்தின் தன்மையை ஒடுக்கி உணர்வின் துடிப்பின் நிலையாக அணுவின் சக்தியாகப் பெறக்கூடிய தகுதி பெறுகிறது. இதை எல்லாம் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சிந்தித்துப் பார்த்தால் தெரியும்.

கணவன் மனைவி இரண்டு பேரும் அன்பாகப் பேசி நல்ல நிலை பெறவேண்டும் என்று இரண்டு பேரும் ஏகோபித்து எண்ணினால் அந்த எண்ணங்கள் கை கூடி காரியங்கள் எல்லாம் சித்தியாகும்.

ஆனால் சிலர் ஆலோசனை சொல்கிறேன் என்ற நிலையில் “உன் கணவன் நன்றாக இருக்கும் போது நீ செய்தால் பரவாயில்லை…! அப்படி இல்லாமல் இருக்கும் பொழுது நீ எதற்குப் போய் உதவி செய்து கொண்டே இருக்கின்றாய்…? என்று மனைவியிடம் சொன்னால் போதும். இது ஊடே கலந்து விடும்.

அடுத்து நீங்கள் எந்த நிலைகள் செய்தாலும் கூட இந்தக் குறை உள்ள உணர்வுகளே கணவன் மனைவிக்குள் அதிகமாக வளரும். சில குடும்பத்தில் பெண்கள் சர்வ ஜாக்கிரதையாகச் சொல்லைப் பயன்படுத்தல் வேண்டும்.

ஏனென்றால் இந்தப் பெண்பால் என்ற உணர்வுகள் எதிலே கலந்ததோ அந்த உணர்வின் கலவை கொண்டு உணர்வின் அணுத் தன்மை பெறும் தகுதி பெற்று விடுகின்றது. ஆகவே ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

இதைப் போன்ற நிலையில் இந்த வாழ்க்கையில் நாம் அறிந்து கொள்ளக் கூடிய விஷயங்கள் ஏராளம் உண்டு. ஏனென்றால்
1.பல கோடி உணர்வுகள்
2.பல குடும்பங்களில் பல நிலைகள்
3.பல வித்தியாசமான நிலைகள் உண்டு.

கணவன் நல்லவராக இருக்கலாம். அதே சமயத்தில் மனைவி தன் அறியாமையினால் வேதனைப்படும் செயல்களைச் செய்து விட்டால் வேதனையும் வெறுப்பையும் கணவனுக்குள் உருவாக்குகின்றது

அந்த வேதனை என்ற விஷத் தன்மை கூடப்படும் போது மனைவியை நினைக்கும் போதெல்லாம் வெறுக்கும் தன்மையும் வேதனைப்படும் தன்மையும் கணவனுக்கு வருகின்றது.
1.அப்பறம் மனைவி தன் நிலைகளில் நல்லதைச் சொன்னாலும்
2.கணவனுக்கு அதை ஏற்றுக் கொள்ளும் பண்பு வருவதில்லை.

அதே சமயத்தில் மனைவிக்கும் இந்த விஷத்தின் தன்மை கூடி கணவனில் விளைந்த வெறுப்பின் உணர்வு இங்கே சாடிய பின் இவர் செய்யும் அந்தத் தவறின் உணர்வே அங்கே விளைகின்றது.

இருவரும் இந்த உணர்வின் தன்மைகளை வளர்க்கப்படும் போது
1.இருவருக்குமே நோய் வருகின்றது.
2.இரண்டு பேருக்குமே கை கால் குடைச்சல் மேல் வலி தலை வலி எல்லாம் வரும்.

வேதனையை வளர்த்துக் கொண்ட நிலையில் இருவருமே ஒன்று சேர்த்து ஒரு பொருளைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு சரி…! இதை வாங்கலாம்…! என்று எண்ணி ஒரு பொருளை வாங்குவார்கள்,
1.ஆனால் வாங்கியபின் இரண்டு பேருக்கும் அந்த வேதனையாகிப்
2.பகைமை தான் வரும். பொருளைப் பாதுகாக்கும் சக்தியும் இழந்து விடுகின்றது.
3.இது எல்லாம் இந்த இயற்கையின் நியதிகளில் உணர்வுகளின் இயக்கம் தான் இது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு ஒவ்வொரு வீட்டிலும் கணவனும் மனைவியும் ஒன்றி வாழும் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள், மகரிஷிகளின் அருள் சக்தியை ஒருவருக்கொருவர் பாய்ச்சி இரு மனமும் ஒரு மனமாகி இரு உயிரும் ஒன்றாகி ஒளியின் உணர்வாக மாற்றுங்கள்…!

கணவன் மனைவி உயிருடன் ஒன்றி வாழ்ந்தால் அதுவே சொர்க்கலோகமாகின்றது…!

அஷ்டமி.. நவமி… அன்று சுப காரியங்கள் செய்யக் கூடாது என்றால் வேறு எதைச் செய்ய வேண்டும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Dazzling soul lights - Navajodhi

அஷ்டமி.. நவமி… அன்று சுப காரியங்கள் செய்யக் கூடாது என்றால் வேறு எதைச் செய்ய வேண்டும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நம் சூரியக் குடும்பத்தில் சூரியனை மையம் கொண்டு சுழன்று ஓடும் கோள்களும் அதன் உபகோள்களும் பூமியுடன் தொடர்பு கொண்ட 27 நட்சத்திரங்களும் ஒரு மண்டலம் 48 கோள்கள் கொண்டு ஒரு முழுமையாகின்றது.

அந்த வினைச் செயலின் பதிவு நிலை எண்ணம் கொண்டு ஈர்த்திடும் உயிர் சக்தியின் மின் காந்தத் தொடர் வான இயலின் தத்துவத்தை அறிந்து கொண்டு பேரருள் பேரொளியாக அன்றே ஆனவர்கள் மாமகரிஷிகள்.

தனக்குப் பின் வந்த தன் இன மக்கள்
1.நல்ல எண்ணம் நல்ல சுவாசம் கொண்டு தியானத்தின் வழி பெறும் மார்க்கமாகவும்
2.மனித குலம் வாழ்ந்து நல்லாக்கம் பெற்றிடவும்
3.பேரானந்தப் பேரருள் சக்தியாகப் பெற்று ஆதிசக்தியில் கலந்திடவும்
4.அந்த மகரிஷிகள் காட்டிய தத்துவமே “நவஜோதித் தத்துவம்…!”

இராம நவமி என்றும் கோகுலாஷ்டமி என்றும் மக்கள் கொண்டாடி மகிழ்கின்றார்கள். இருந்தாலும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் நடத்த வேண்டிய கர்ம வினைச் செயல்களுக்கு “அஷ்டமி… நவமி…” என்று காலத்தைக் கணக்கிட்டு அன்று எந்தச் சுப காரியம் செய்யக் கூடாது…! என்கிறார்கள்.

அந்த நேரத்தில் அவதரித்த இராமனையும் கிருஷ்ணனையும் வணங்கிடும் செயலில் “மறைக்கப்பட்ட உண்மைப் பொருளே… நவ ஜோதியின் தத்துவமப்பா…!”

ஆனால் அந்த நவ ஜோதியைத் தன் உயிராத்மாவை ஜோதியாக்கும் செயலுக்குச் செயல்படுத்தும் ஒவ்வொருவருக்கும்
1.வாழ்க்கையின் எல்லா நேரங்களும் நல்ல நேரம் தான்
2.நல்ல நேரம் கெட்ட நேரம் என்பது இல்லையப்பா…!
3.விஷ அமில குணங்களையே (துன்பங்களையும் இன்னல்களையும்) அமுதமாக்கிடும் திறன் நாம் செய்யும் தியானத்திலேயே கிடைக்குமப்பா.

நம்முடைய எண்ணத்திலும் சுவாசத்திலும் மாற்றம் கொண்டு விடக் கூடாது…! என்று கூறுவதெல்லாம்
1.விஷத்தின் அமிலத் தன்மையில் ஒலி பிறப்பதைப் போல் (ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது)
2.நம் மீது மோதும் அனைத்திலுமே நம் உயிராத்மா வலுவான சக்தியைப் பெறுவதற்குண்டான
3.அத்தகைய செயற்பாடுகள் நிலை பெற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தான்.

நவக் கோள்களின் விஷத்தையே “நவபாஷாணச் சிலையாக” முருகனின் சிலையாக உருவாக்கியவர் போகர். ஜோதி நிலை பெறுவதற்காக
1.தன் எண்ணத்தின் தன்மையை ஞானவேல் என்ற ஆறாவது அறிவை உயர்த்தி
2.வான இயல் சக்திகளைப் புவியியலில் உள்ள மனிதர்கள் அனைவரும் பெற்றிட 5300 ஆண்டுகளுக்கு முன்பே வழி காட்டினார் அந்தப் போகமாமகரிஷி.

அதே தத்துவத்தை… அதாவது நவக் கோள்களின் சக்தியை தியான வலு ஈர்ப்பு கொண்டு
1.ஒவ்வொருவரும் தன் உயிராத்மாவின் முலாம் பிரகாசித்துச் சக்தி பெறுவதற்காக
2.நீல வண்ண இராமனாகக் காட்டினார் வான்மீகி மாமகரிஷி.
3.அனைத்துமே ஆத்ம வலு பெற்றிடும் செயல் முறைகள் தான்.

இராசிகள் என்று கூறுகின்றோம். அதன் பொருள் என்ன…?

நாம் பார்க்கும் பால்வெளி மண்டலத்தில் நம் சூரியக் குடும்பம் சுழன்று ஓடுகிறது. அதைப் போல மற்ற சூரியக் குடும்பங்களும் அதிலே சுழல்கிறது. 2000, 1000 என்று குடும்பம் குடும்பமாகச் சுழன்று கொண்டிருக்கின்றது.

நம் சூரியக் குடும்பத்தின் ஓட்டத்தின் கதியில் நம் சூரியக் குடும்பத்தைப் போல் சுழலும் மற்ற குடும்பத்தின் சந்திப்பாக ஒன்றுடன் ஒன்று கலவையாகி அதிலே உயிரணுக்கள் உதித்திடும் தன்மையாக அத்தகைய குணங்களைப் 12 இராசிகள் என்று கூறினார்கள் ஞானிகள்.

பூமியில் பிறப்புக்கு வரும் உயிரணுக்கள் ஜீவாத்மாவாகி (உடல் பெற்று) தன்னை உணர்ந்திடும் பக்குவத்தில்
1.விண்ணின் ஆற்றல்கள் அனைத்தையும் ஈர்த்துக் கொண்டு
2.பரமாத்மாவாக ஆகும் தத்துவத்தில்
3.சுயப் பிரகாச ஜோதியாக ஆவதின் மூலமே நவஜோதி.

நாம் சுட்டிக் காட்டும் தியான வழிகளில் உயர் ஞான சிந்தனை வசம் நிலைப்போர் ஒவ்வொருவரும் தன் உயிராத்மாவை வளர்ச்சி கொண்டதாக ஆக்கிட
1.அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை
2.நவஜோதிகளாக உங்கள் உயிரான ஆத்ம ஜோதியில் கலக்கச் செய்யுங்கள்.

அந்த ஆதிசக்தியில் (இயற்கை) ஒன்றிட வேண்டும் என்று எண்ணம் கொண்டு உயர்ந்திட வேண்டும் என்று எண்ணுவோர் அனைவருக்கும் எமது (ஈஸ்வரபட்டர்) ஆசிகள்.

தெய்வ குணத்தைப் பெறுவோம்… தெய்வ சக்திகளை வளர்ப்போம்.

தீமையான உணர்வுகள் நமக்குள் வினையாக… ஒரு வித்தாக… உருவாகாமல் தடுப்பது தான் “சதுர்த்தி…!”

ganeshpuja

தீமையான உணர்வுகள் நமக்குள் வினையாக… ஒரு வித்தாக… உருவாகாமல் தடுப்பது தான் “சதுர்த்தி…!”

 

மனிதனுக்கு மனிதன் கொன்று புசிக்க வேண்டும் என்ற சிந்தனையை எடுத்துப் பல கருவிகளை உருவாக்குகின்றார்கள்.
1.கொல்லும் பொழுது கொல்பவனோ அதை ரசிக்கின்றான்.
2.கொல்லப்பட்டவனோ துடிக்கின்றான்… பதறுகின்றான்.

இந்த இரண்டு உணர்வும் இங்கே உருவாக்குகின்றது.

பதட்டமடைவனின் உடலில் பதட்டத்தை உருவாக்கும் அணுக்களாக உருவாகின்றது, அவன் வெளி விடும் மூச்சலைகள் பதட்டமான உணர்வலைகளாகக் காற்றிலே பரவுகிறது.

அதே சமயத்தில் கொல்லும் உணர்வுகளை நுகரப்படுவனின் உடலில் மற்றவர்களைக் கொன்று போட்டு மனதில் மகிழ்ச்சி பெறும் நிலையாகி அத்தகைய மூச்சலைகள் காற்றிலே பரவுகிறது.

1.இத்தகைய அலைகள் தான் இன்று காற்று மண்டலத்தில் அதிகமாகப் படர்ந்துள்ளது.
2.இந்த உணர்வுகளை நுகரும் மற்ற மனிதனுக்குள்ளும் அத்தகைய அணுக்கள் விளையத் தொடங்குகின்றது.

ஏனென்றால் அதே உணர்வுகள் இயக்கப்பட்டுத் தன் இரையைத் தேடி நுகரும் பொழுது அதே காரியத்தையே செய்யும். நாளடைவில் இந்தக் காற்று மண்டலமே நச்சுத் தன்மையாகி விட்டது.

1.இப்படிப்பட்ட நஞ்சின் தன்மைகள் உருவாகாதபடி தடுப்பதற்குத்தான்
2.அன்று விநாயகர் சதுர்த்தியை ஏற்படுத்தினார்கள் ஞானிகள்.
3.அதாவது “தீமையான உணர்வுகளை வளராது தடுக்கும் நாள்…!” என்று வைத்தார்கள்,

மனிதனுக்கு மனிதன் நாம் பேசுகின்றோம். பேசித் தொடர்பு கொள்ளும் பொழுது உதாரணமாக நான் வேதனைப்பட்டால் அதைக் கேட்டு நீங்களும் வேதனை உனர்வுகளை எடுத்துக் கொள்கின்றீர்கள்.

ஏனென்றால் வேதனைப்படுவோரின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது உயிரிலே பட்டு அதே உணர்ச்சியாக இயக்கப்பட்டு நமக்குள் வந்துவிடுகின்றது.

மனிதனுக்கு மனிதன் யாரும் பிரிவில்லாதபடி அதை வளர்த்து வைத்திருக்கின்றோம். இப்படி இரண்டு பேர் பேசிய உணர்வையும் சூரியனின் காந்த சக்தி எடுத்து வைத்துக் கொள்கிறது.

இப்பொழுது நல்ல மனிதனாக இருக்கின்றான் என்று ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்கிறீர்கள். அவரிடம் நெருங்கிப் பழகுகின்றீர்கள் அடுத்து அந்த மனிதனுக்கு நோயாகிவிட்டது…! என்று சொல்கிறார்கள்… நீங்கள் அதைக் கேள்விப்படுகின்றீர்கள்.

கேள்விப்பட்ட உடனே
1.அந்த நல்ல மனிதனின் உணர்வு நமக்குள் இருந்தாலும்
2.அடடா… நல்ல மனிதனுக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று நாமும் வேதனையைச் சுவாசிக்கின்றோம்.
3.அவர் மேல் உள்ள பாசத்தால் நாம் எண்ணும் பொழுது
4.அவர் உடலில் உருவான அதே நோயின் உணர்வுகளை நாமும் எண்ணி இழுத்துக் கவர்ந்து விடுகின்றோம்.
5.அதே நோயின் தன்மை இங்கே நமக்குள்ளும் உருவாகின்றது.
6.நாம் தவறு செய்யவில்லை ஆனால் நமக்கும் நோயாகின்றது.

சந்தர்ப்பவசத்தில் அவர் இறந்தால் அவரின் பற்று எவ்வளவு நமக்கு இருந்ததோ அந்த உடலை விட்டு இறந்த ஆன்மா நம் எண்னத்தின் வலு கொண்டு நம் உடலுக்குள் வந்துவிடும்.

பார்க்கலாம்… நீங்கள்…! நேற்று வரையிலும் நன்றாக இருந்தார்… திடீரென்று எபப்டியோ மனமாற்றம் ஆனார்..! என்று பார்க்கின்றோம். இது எல்லாம்
1.ஒரு மனிதனுக்கு மனிதன் தொடர்பு கொண்ட உணர்வுகள்
2.வரிசையாக இப்படித்தான் இயக்குகிறது…! நாம் தவறு செய்யவில்லை…!

இதைப் போன்ற நிலைகள் நமக்குள் உருவாவதை நாம் எப்படித் தடுக்க வேண்டும்…? தடுக்க ஒரு சக்தி வேண்டுமல்லவா…!

நண்பரோ உறவினரோ யாராக இருந்தாலும் வேதனைப்படுகின்றார்கள் அல்லது நோயால் வாடுகிறார்கள் என்று கேள்விப்பட்டால்
1.உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று
2.நாம் இந்த உணர்வைப் பல முறை எடுத்து நமக்குள் சேர்க்க வேண்டும்.

அடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர் நல்ல நிலை பெறவேண்டும் அவர் அருள் ஒளி பெறவேண்டும் உடல் நலம் பெற வேண்டும் என்ற எண்ணங்களை எண்ணி நமக்குள் மாற்றிவிட வேண்டும்.

இது தான் சதுர்த்தி என்பது. தீமையான உணர்வுகள் நமக்குள் வினையாக… ஒரு வித்தாக உருவாகாமல் தடுப்பது தான்.. “விநாயகர் சதுர்த்தி…!”

இப்படி ஒவ்வொரு மனிதனும் எண்ணி எடுத்தால் இந்தக் காற்று மண்டலமே தூய்மையாகின்றது. தீய வினைகள் நமக்குள் சேர்வதில்லை. தீமை செய்யும் உணர்வுகள் அனைத்தும் இந்தக் காற்று மண்டலத்திலிருந்து அகற்றப்பட்டு இந்தப் பரமாத்மாவும் தூய்மையாகின்றது.

தீமை செய்யும் உணர்வுகளை இங்கே உள்ள மனிதர்கள் யாரும் நுகரவில்லை என்கிற பொழுது பிடிப்பில்லாத அந்த அலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கடலுக்குள் அமிழ்த்தச் செய்கின்றது.

அதை உணர்த்தும் விதமாகத் தான் விநாயகரைக் களிமண்ணில் செய்து அதைக் கடலிக் கரைக்கச் சொன்னது. தீய வினைகளை நமக்குள் சேர்க்காமல் எல்லோரும் சேர்ந்து அந்தக் கடலில் கரைக்க வேண்டும்.

ஞானிகள் சொன்னதில் எதுவும் தவறில்லை… அந்தக் கருத்தினை நாம் அறிந்து வழி நடக்க வேண்டும். அதற்காகத்தான் சொல்கிறோம் (ஞானகுரு)