மனிதப் பிறவி பெற்ற ஒவ்வொருவரும் “ரிஷிச் சக்தியைப் பெறும் மார்க்கத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது..!”

Divine realization - treaure

மனிதப் பிறவி பெற்ற ஒவ்வொருவரும் “ரிஷிச் சக்தியைப் பெறும் மார்க்கத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது..!”

 

மறை பொருளே உறைப்பொருள்
உறை பொருளே வினைப்பொருள்
வினைப் பொருளே விளைப்பொருள்
விளைப் பொருளே மெய்ப்பொருள்

1.விளைப் பொருளின் வளர்ச்சியின் ஆக்கம் தான் ஒவ்வொன்றிலும் வலுத் தன்மையாகி
2.மெய் ஞானம்… மெய்ப் பொருளாக… மெய் ஒளி ஒலி… செயல் சக்தியாகக் கூடுகிறது.

மனித உணர்வில் எண்ணியவுடன் (READY MADE) ஏற்படுவதல்ல அந்த விளைப்பொருளும் மெய்ப் பொருளும். அப்படியானால் அந்த மெய் ஒளி… மெய் ஒலி… மறைப் பொருள்… உறைப் பொருள்… இதெல்லாம் எப்படி உருவாகின்றது…?

இந்தப் பூமியின் சுழற்சி தட்ப வெப்ப சீதோஷ்ண நிலை மாறிக் கொண்டே உள்ளது. பூமியின் எட்டுத் திசைகளில் அந்தந்த இடங்களில் ஒன்று போல் சீதோஷ்ண நிலையும் கால நிலையும் இருப்பதில்லை. இது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

ஆனாலும் பூமி எப்படி மறைப்பொருளை (தனக்குக் கிடைக்கும் ஆற்றலைச் சமமாக்கும் நிலையாக) தன்னுடைய சக்தியின் ஈர்ப்பிற்குப் பல மாற்றங்களில் விளைப் பொருளாக ஒளியையும் ஒலியையும் எடுத்துத் தன் ஓட்டத்தின் கதியில் ஓடிக் கொண்டேயுள்ளதோ அதைப் போன்று தான்
1.உணர்வு கொண்ட எண்ணத்தின் கதி ஓட்டம் ஓடிக் கொண்டே உள்ள சுழற்சியில்
2.நம் சரீர உடலின் நிலையும் உள்ளது.

ஜீவன்கள் வாழ இந்தப் பூமியின் ஜீவ நாடியாக நீர் உள்ளதற்குப் பூமியில் எப்பொழுதுமே மழை பெய்து கொண்டிருப்பதில்லை. மேகங்கள் கருத்து இடியும் மின்னலும் தோன்றுகிறது. அப்பொழுது பல இடங்களில் பெய்யக்கூடிய அந்த மழை வெள்ளமாகின்றது.

வெள்ளமே ஆறாகக் கரை புரண்டு ஓடி நீர் நிலைகள் பூமியில் நிறைகிறது. அந்த நீரைக் கொண்டு தான் பல ஜீவராசிகள் உயிர் வாழ்கிறது. ஒரு இடத்தில் பெய்யும் மழை ஆறாகும் பொழுது பல இடங்களுக்குச் செல்கிறது.

இதே நிலை போல் மீண்டும் மீண்டும் அந்தந்த இடங்களுக்கொப்ப ஏற்படக்கூடிய நிலைகளைக் கொண்டு ஜீவராசிகளின் நிலையும் தாவர இனங்களின் வளர்ச்சியின் பயனாகக் கனியும் பூக்களும் (புஷ்பங்களும்) வளர்கிறது.

1.கனியும் பூக்களும் வருவதைப் போன்று தான்
2.மனித உணர்வில் மெய் ஒலி பெற.. மெய் ஒளி பெற… மெய் ஞானமாக்க..
3.பல நிலைகளில் நம் உணர்வின் எண்ணமுடன் மோதிடும் இன்னல்கள் ஏற்படுத்தும் காலங்களை
4.புருவ மத்தியில் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த ஜீவித உணர்வில் எடுக்கும் ஒலி கொண்டு தான் ஒளியாக மாறும்…!
5.அதாவது இடி மின்னலைப் போன்றே ஒலி ஒளி செயல் ஏற்படும் இன்னல்கள் அனைத்தையும் பேரொளியாக மாற்ற வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் ஏற்படக்கூடிய எண்ணத்தின் மோதலை இடி மின்னலைப் போன்று உணர்வின் சமைப்பாக நாம் மாற்றும் பொழுது
1.நீரான பெருக்கம் மழையாகி ஜீவன்களை வளர்க்கப் பூமிக்கு வலு ஏற்படுகின்றதோ
2.அதைப் போன்று எண்ணத்தில் எதிர்படும் பல மாற்றங்களையும் உணர்வில் எடுத்து
3.நம் உணர்வுடன் எந்த எண்ணத்தின் மாற்று நிலைகள் மோதினாலும்
4.மேகத்தின் கருமை கொண்டு இடி மின்னல் வெடித்து மழை வருவதைப் போன்று
5.நாம் போகும் மார்க்கத்தில் ஞானத்தின் மெய் ஞானம் அறிய…
6.மோதிடும் எதிர் தன்மைகளை உணர்வின் எண்ணத்தால் மாற்றி உயர்ந்த ஞானத்தின் ஒலியாக நாம் எண்ணினால்தான்
7.அந்த ஒலியே (எந்த ஒலியாக இருந்தாலும்) ஒளியாகும்… நம் ஆத்மா பேரொளியாக ஆகும்.

மெய் ஒலி… மெய் ஒளி பிறக்க… மெய் ஞானிகள் அன்று என்ன செய்தார்கள்…?
1.வாழ்க்கையில் தன் உணர்வுடன் மோதிய “எண்ணத்தின் ஓட்டத்தின் கதியைக் கொண்டுதான்…”
2.எண்ணத்தால் எதிர்படும் எதிர் நிலைகளை ஞானத்தின் பகுத்தறிவால் உணர்ந்து
3.மெய் ஒலி மெய் ஒளி பெற்றால் மெய் ஞானியாகும் குணங்களைத் தன் ஆத்ம ஞானத்தால் வளர்த்து
4.ஆத்ம சக்தியின் சூட்சமத்தை… ஆதிசக்தியின் ஒளி சக்தியாக..
5.அகிலத்தில் படர்ந்துள்ள பரமாத்மாவின் பரம்பொருளை
6.”தனக்குள்ளேயே…!” மெய் ஞானிகள் அன்று கண்டார்கள்.
7.பால்வெளியில் படர்ந்துள்ள உண்மைத் தன்மைகளை உணரும் சக்தியாக ஆதிசக்தியின் சக்தியை மெய் ஞானிகள் அன்று இப்படித்தான் கண்டார்கள்.

பூமியின் சுழற்சியின் கதியில் ஒவ்வொரு நாளும் நாம் வானத்தில் கண் கொண்டு பார்க்கும் பொழுது எண்ணிலடங்காத எத்தனையோ பிரபஞ்சங்களையும் மண்டலங்களையும் காணுகின்றோம்

அந்தப் பால்வெளி மண்டலத்தில் பலவாக படர்ந்துள்ள பரம்பொருளின் செயல் என்பது
1.ஆதி சக்தியின் சூட்சமமாக
2.சூனிய மண்டலமாகப் பலவும் நிறைந்துள்ள செயலின்
3.செயல்பாடில்லா – சூனியமான நிலை தான் பால்வெளியின் நிலை.

அந்தப் பரம்பொருளின் சக்தியைத் தான் மெய் ஞானத்தின் ஒலி கொண்டு… ஒளி பாய்ச்சும் ஏக்கத்தில்… மெய் ஞானி பெற்றான் “ரிஷிச் சக்தி…!”

அந்த ரிஷிச் சக்தியின் செயல் நிலை தன் தன் கதியின் சுழற்சிக்குச் செயலாக்குவதைப் போன்று
1.ஒவ்வொரு மனிதனிடத்திலும் மறைந்துள்ள ஞானத்தைக் கொண்டு
2.வலுவை வளர்க்க வழியமைக்கும் நிலையைத்தான் இங்கே உணர்த்துகின்றேன் (ஈஸ்வரபட்டர்).

Leave a Reply