குழந்தை இல்லாவதவர்களுக்கு அன்றைய மெய் ஞானிகள் தன் பார்வையாலே ஒளியைப் பாய்ச்சி… “புத்திர பாக்கியம்” பெறச் செய்தார்கள்…!

mother-and-child-care

குழந்தை இல்லாவதவர்களுக்கு அன்றைய மெய் ஞானிகள் தன் பார்வையாலே ஒளியைப் பாய்ச்சிப் “புத்திர பாக்கியம்” பெறச் செய்தார்கள்

 

இன்று விஞ்ஞான அறிவின் வளர்ச்சியைப் பார்க்கின்றோம். ஒரு மிருகத்திலுள்ள அணுக்களை எடுக்கின்றான். மற்ற மிருகங்களினுடைய விந்துக்களில் இதைக் கலக்கிறான். அது வேறு விதமாகப் போகின்றது.

ஒரு மாட்டின் விந்தை எடுக்கின்றான். இன்னொரு இன விந்திலே இதைக் கொடுக்கிறான். இதனுடைய அடைப்பிலே பாதுகாப்பாகக் கவசம் பண்ணி அந்த மாட்டின் ரூபத்தையே மாற்றி விடுகின்றார்கள்.

நாயோ ஆடோ கோழியோ அதிலுள்ள செல்களைப் பிரித்து எடுக்கின்றான். மற்ற உணர்வுகளை மாற்றி அதனுடன் இணைக்கும் பொழுது கோழியின் ரூபம் மாறுகின்றது. குருவிவியின் நிறம் மாறுகின்றது. மயிலின் நிறம் மாறுகின்றது. பல விதமான நாய்கள் உருவாகின்றது பல தரப்பட்ட கோழிகள் உருவாகின்றது.

இப்படியெல்லாம் உருக்கள் மாறுகின்றது. விஞ்ஞானிகள் உருவாக்கிய இந்த நிலைகளை எல்லாம் நாம் பார்க்கின்றோம்.

இனச் சேர்க்கையின் பொழுது வேறொரு சீமை மாடுடன் இணையும் பொழுது அந்த விந்து இதிலே அந்த மாடாக மாற்றுகின்றது.

அது உணர்வது பாதுகாப்பாகப் போகின்றது. இதே மாதிரித் தான் மனிதனுடைய கருக்களிலும் ஒரு மாட்டின் விந்தினை எடுத்து விட்டால் அதே மாட்டின் நிலையே தான் இங்கு மாற்றும்.

ஏனென்றால் இது ஒரு பாதுகாப்புக் கவசமாகின்றது.

இப்பொழுது விஞ்ஞான அறிவிலே கொண்டு வருகின்றார்கள்.

ஒருவருக்குக் குழந்தை இல்லை என்றால்…
1.கருப்பைக்கு அப்புறம் இதற்கென்று இயற்கையிலே செய்யப்பட்ட இந்தக் கருவின் அணுக்களை வைத்து
2.(இன்னொரு) தாயின் வெப்பத்தை வைத்து
3.இந்தக் கரு முட்டையை வளர்க்கின்றான்.
4.அதிலே குழந்தைகள் பிறக்கின்றது.

அதாவது ஜீவ அணுக்களை வளர்த்ததை மற்ற உடலிலிருந்த அணுக்களைப் பிரித்து இப்படிச் செய்கின்றார்கள். இது விஞ்ஞான அறிவு.

ஆனால் அன்று வாழ்ந்த மெய் ஞானிகள் என்ன செய்தார்கள்?

புத்திர பாக்கியம் ஏற்படாததன் காரணம் என்ன என்றால் புத்திர பாக்கியத்தை உண்டாக்கும் அணுக் கருக்கள் உடலில் வீரியம் பெறாத நிலைகளினால் தான்.

ஏனென்றால் பல சந்தர்ப்பங்களில் சுவாசித்த எண்ண உணர்வுகள் “எதிர்மறையான அணுக்களாகி” உடலில் புத்திர பாக்கியம் உண்டாக்கும் அணுக் கருக்களை அழித்துவிடுகின்றது.

அந்த அணுக்களின் குறைவு எதுவோ அந்த அணுக்களுக்குத் தேவைப்பட்டது எதுவோ அதை மெய் ஞானி “தன் பார்வையால்…” அந்த உணர்வின் சத்தை அவர்களுக்குப் பாய்ச்சுகின்றான்.
1.ஒருவருக்குக் குழந்தை இல்லை என்றால்
2.தன் எண்ணத்தால் குழந்தை கொடுக்கின்றான்.

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து துருவ நட்சத்திரத்தின் அருளாற்றல் பெறவேண்டும் என்று ஒருவருக்கொருவர் தினசரி காலை மாலை இரவுகளில் தியானித்து வர வேண்டும்.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் பெருகப் பெருக
2.புத்திர பாக்கியம் உண்டாக்கும் அணுக் கருக்களை அழிக்கும் அணு செல்களில்
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் படர்ந்து
4.அதனின் செயலாக்கம் வலுவிழக்கின்றது.

புத்திர பாக்கியம் நிச்சயம் உண்டு… என்ற நம்பிக்கை கொண்டு மன வலுவுடன் தியானித்தால் “உறுதியாகக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்….!”

துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியையும் “நேரடியாகப் பெறச் செய்யும் பயிற்சி…!”

Menbership

துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியையும் “நேரடியாகப் பெறச் செய்யும் பயிற்சி…!”

 

நமது தினசரி வாழ்க்கையில் எத்தனை வகையான குணங்களைத் தெரிந்தோ தெரியாமலோ எண்ணி எடுத்திருப்போம். அது அத்தனையும் அதற்குத்தக்க அணுக்களாக நம் உடலுக்குள் விளைந்திருக்கும்.

நாம் நல்ல குணங்கள் கொண்டு இருப்பினும் பிறருடைய தீமைகளை உற்றுப் பார்த்துக் கேள்வியுற்று இருந்தால் அந்த நேரத்தில் இந்த உணர்வுகளை நுகர்ந்திருப்போம். அப்பொழுது நம் நல்ல குணங்களின் முகப்பில் இது அடைபட்டு இருக்கும்.
1.அதனால் நல்ல குணங்கள் செயல்படாத நிலைகளில் தடைபட்டு அது நலிந்து கொண்டு இருக்கும்.
2.நல்ல குணங்கள் வளர்வதற்கு ஈர்ப்பு சக்தி குறைந்து இருக்கும்.
3.அது வளர்ச்சி குன்றும் போது நாம் நல்ல குணங்களால் வளர்க்கப்பட்ட நம் உடலில் சோர்வின் தன்மை உண்டாகும்.

நாம் நல்லதை எண்ணி நல்லதைச் செய்ய வேண்டும் என்கிற போது பிறருடைய தீமைகளை எல்லாம் கேட்டு உணர்கின்றோம். அப்போது
1.நம் உயிரிலே பட்டுத் தீமை என்ற நிலைகள் உணர்ந்தாலும்
2.இந்த உணர்வுகள் நம் உடலுக்குள் பரவப்படும் போது
3.நாம் எந்த நல்ல குணங்களை வைத்திருந்தோமோ அதன் வழியில் முன்னோட்டமாக அடைபட்டு விடும்.
4.அதாவது தீமை என்று நமக்கு அறிவித்தாலும் நல்லதுக்கு முன்னாடி இது வந்து அடைத்துக் கொள்கின்றது.
5.அதை மாற்ற வேண்டும் அல்லவா…! அது எப்படி…?

சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

இப்போது இதை யாம் (ஞானகுரு) சொல்லும் போது உங்கள் உடலுக்குள் ஆழமாகப் பதிவாகின்றது. பதிவு செய்து கொண்ட பின் அடுத்து உங்கள் நினைவினைப் புருவ மத்தியில் எண்ணினால் அந்தச் சக்திகளை எளிதில் பெற ஏதுவாகும்.

உங்கள் நினைவு அனைத்தையும் சப்தரிஷி மண்டலங்களையும் துருவ நட்சத்திரத்தினையும் எண்ணிச் செலுத்துங்கள். இவ்வாறு செலுத்தப்படும் பொழுது அதனின்று வெளிப்படும் உணர்வுகளை நீங்கள் எளிதில் நுகர்ந்தறிய இது உதவும்.
1.ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி
2.விண்ணிலே நினைவினைச் செலுத்தி அந்தச் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்கள் நினைவெல்லாம் வான மண்டலங்களில் சென்றிருக்கும். தீபாவளிக் காலங்களில் ஒரு மத்தாப்பு பொருத்திய பின் பொறிகள் எப்படிக் கிளம்புகின்றனவோ அது போல
1.வான மண்டலத்தில் பல கலர்கள் கொண்ட உணர்வலைகள் பரவிக் கொண்டிருப்பது உங்கள் உணர்வுகளில் தோற்றமளித்திருக்கும்.
2.அந்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலுக்குள் பரவுகின்றது.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்பட்ட உணர்வுகளை நீங்கள் நுகரப்படும் பொழுது அது அனைத்தும் வைரத்தைப் போல “இளம் நீல நிறமாக… இருக்கும்…!”

சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகளை நீங்கள் நுகரப்படும் பொழுது அது அனைத்தும் பல வித வண்ணங்களில் இருக்கும். ஏனென்றால் பல கோடி மகரிஷிகள் அந்த ஒவ்வொரு மகரிஷியும் அவரவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் கலந்த வண்ணம் பல வர்ணங்களில் இருக்கும்.

சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வருவது மத்தாப்பு போல பல வண்ணங்களில் ஒளிக்கற்றைகளாக இந்த உணர்வுகள் தெரிந்து இருக்கும்.

ஆனால் உங்களுக்குள் இது தெரியவில்லை என்றாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் உடல்களிலே பாய்ந்து
1.உங்கள் உடலில் ஒரு சக்கரம் போன்று சுழன்று கொண்டு வருவதை உணர்ந்திருக்கலாம்.
2.ஏனென்றால் சுவாசித்து உங்கள் உடல் முழுவதற்கும் ஒரு ரவுண்டு வரும்.

இந்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலிலுள்ள அணுக்களில் அவை அனைத்திற்கும் செடிகளுக்கு உரம் போட்ட மாதிரி அந்த அணுக்களின் முகப்புகளில் இது பூராம் போய்ச் சேரும்.

உதாரணமாக நீங்கள் மாவை எடுத்துப் பிசைகின்றீர்கள். அது நல்ல சுவை உள்ளது தான். ஆனால் அதில் வேறொரு பொருளைப் போட்டால் எதன் சுவை வரும்…?
1.அந்த நல்ல மாவுடன் நாம் எதைக் கலக்கின்றமோ அது மேலோட்டமாக இருந்தால்
2.அதனுடைய சுவை தான் முன்னணியில் இருக்கும்.

அதைப் போன்று தான் நம் நல்ல குணங்கள் செயலற்றதாக்கி வரும் போது இதை அகற்றிய அருள் ஞானிகளின் உணர்வுகளை நம் உடலுக்குள் இப்படிச் சுழலச் செய்ய வேண்டும்.

நாம் எப்படிச் செடிகளுக்கு உரம் போடுகின்றோமோ அதைப் போல் மகரிஷிகளின் உணர்வை உடலுக்குள் சுழலச் செய்யும் பொழுது அது வலு கொண்டு ஊடுருவிப் பாயும் தன்மை பெற்றது.

அது ஊடுருவிப் பாய்ந்து நம் நல்ல குணங்களில் கலக்கப்படும் பொழுது அந்த நாம் கேட்டறிந்த தீமையின் நிலைகள் செயலிழந்து விடுகின்றது.

உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளைச் செயலற்றதாக்கி அதனின் வலுவை இழக்கச் செய்வதற்குத்தான் இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றோம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

என்றுமே இளமையாக இருக்க என்ன செய்ய வேண்டும்…?

exalted-state

என்றுமே இளமையாக இருக்க என்ன செய்ய வேண்டும்…?

முதுமை என்பது வயதால் வருவது அல்ல. அறுபது வயது…, எழுபது வயது… நான் முதுமை அடைந்து விட்டேன்..! என்று வெறும் வருடத்தால் கணக்கிட்டுச் சொல்வதல்ல…!

ஒரு தானியம் விளைந்தாலும் அதனின் முதிர்ச்சியின் தன்மையில்
1.தன் இனத்தை உருவாக்கும் வித்தின் தன்மையாக அடைந்து
2.அது மீண்டும் தன் வளர்ப்பின் வளர்ப்பாக வளர்க்கச் செய்யும் போது தான்
3.அது முதுமை அடைந்தது (முதிர்ந்த வித்து) என்று சொல்ல முடியும்.

அதைப் போன்று தான்
1.ஒரு உயிரின் தன்மை மனித உடலாக உருப் பெற்ற பின்
2.அறிந்திடும் உணர்வு கொண்ட
3.ஒளியின் சரீரம் பெற்ற மெய் ஞானியின் உணர்வைச் சேர்த்து உடலை முதுமையாக்கிவிட்டு
4.உணர்வின் தன்மையை – நம்மை என்றும் இளமையாக்கும் நிலைக்கு வளர வேண்டும்.
(உடல் அழியக்கூடியது உயிர் என்றுமே அழியாதது)

இப்படி ஒவ்வொரு சரீரத்திலும் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் அது இளமைப் பருவமே பெறுகின்றது.

1.நாம் இளமை பெற்று அது உடலிலே முதுமை பெறும்போது தான் (உடலுக்குள் விளைந்தது)
2.”முதுமையின் வித்தாக…! உருபெற்ற உணர்வின் அறிவாக…
3.அது உயிருடன் ஒன்றிய நிலை கொண்டு,
4.அடுத்த அறிவின் ஞானச் சுடராக கனியின் வித்தாக (உணர்வாக) ஞானத்தை வளர்க்கின்றது.

ஆகவே அருள் மகரிஷிகளின் உணர்வுடன் ஒன்றிடும் நிலையாக உயிருடன் ஒன்றிய முதுமையின் நிலைகள் பெற்று முழுமையின் நிலையாக அந்தப் பேரானந்த பெருநிலை பெறுவோம்

அந்த பேரானந்த உணர்வை நமக்குள் வளர்த்திடுவோம். அனைவரும் பேரானந்த நிலை பெறும் சக்தியாக நமக்குள் விளைய வைத்து அந்தச் சத்தான வித்துக்களைப் பரப்புவோம்.

அதை நுகர்வோர் அனைவருக்கும் அந்தச் சத்தான வித்துக்கள் படர்ந்து அவர்களும் பேரானந்தப் பெரு நிலையை அடையட்டும்.

1.மகரிஷிகளின் அருள் வட்டத்திலே
2.நாம் என்றுமே இளமையாக
3.என்றும் பதினாறாக வளர்ந்து கொண்டேயிருப்போம்… வாழ்வோம்.

எந்தத் தீமையான உணர்வையும் நாம் நேரடியாகத் தாக்கக் கூடாது… ஏன்…!

vaali-fighting

எந்தத் தீமையான உணர்வையும் நாம் நேரடியாகத் தாக்கக் கூடாது… ஏன்..!

மகரிஷிகள் கண்டுணர்ந்த மெய் உணர்வுகளைப் பெறவேண்டும் என்றால்
1.கண்ணின் நினைவு கொண்டு நினைவாற்றலை மகரிஷிகளின் பால் கொண்டு சென்று
2.அதைக் கவர்ந்து கொண்டால் தான்
3.நம் உடலுக்குள் செலுத்தி அணுக்களாக உருவாகிக் கொண்டிருக்கும் கருவிற்குள் உபதேசிக்க முடியும்.

(கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உபதேசித்தான் என்று சொல்வார்கள்)

இங்கே நான் (ஞானகுரு) உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தாலும் உங்கள் நினைவலைகள் வேறு பக்கம் இருந்தால் இது பதிவாகாது.

எனக்கு நேரமாகி விட்டது. அந்த பஸ்ஸுக்கு போக வேண்டும் என்ற நினைவலைகளை அங்கு வைத்துக் கொண்டு இங்கே கேட்டுக் கொண்டிருந்தால் உபதேசம் கொடுக்கமாட்டான் – கண்ணன் (உயிருக்கு).

அவசரமாக வீட்டுக்குப் போகவேண்டும் என்று (கண்ணின் நினைவலைகள்) நினைத்தீர்கள் என்றால் அந்த நினைவலைகள் அனைத்தையும் உங்களுக்கு இழுத்துக் கொடுத்துக் கொண்டே இருப்பான்.

யார்…? கண்ணன்…. நம் கண்கள்.

பிள்ளைகள் என்ன செய்கின்றார்களோ…? அவன் என்னென்னமோ செய்கிறான். இவனைப் பார்த்தால் நம்மை ஏமாற்றிக் கொண்டேயிருக்கின்றான்…! என்று பல நிலைகளில் கண்ணின் நினைவலைகள் கொண்டு எண்ணிக் கொண்டிருந்தால் அதற்குத்தான் வழி காட்டுவான் கண்ணன்.

திருடப் போகிறேன் என்று சொன்னால் “வீட்டுக்காரன் அங்கே இருக்கிறான் சிக்கிவிடாதே…! இப்படிப் போ…” கண்கள் என்று காட்டும்.

அந்த வீட்டுக்காரன் நிறையச் சம்பாதித்து வைத்திருப்பான். சிறியதாக நறுக் என்று சத்தம் கேட்டவுடன் “ஓகோ… திருடன் வருகிறான் போலிருக்கின்றது… நீ இப்படிப் போ…” என்று வழி காட்டுவான் கண்ணன்.
அதைப் போன்று தான்
1.நான் எவ்வளவோ உயர்ந்த நிலைகளில் உபதேசம் கொடுத்தாலும் கூட
2.எம்முடைய உபதேசத்தை நீங்கள் கேட்கும் அந்தச் சமயம்
3.எந்த நினைவு கொண்டு வருகின்றீர்களோ…
4.கண்ணன் கண்கள் உங்களுக்கு அந்த உபதேசத்தைத்தான் கொடுப்பான்.

இப்படி எல்லாம் பல நினைவுகள் வருவதனால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னை என்ன செய்தார்…?

இவனைச் சும்மா விட கூடாது என்பதற்காகத்தான் எறும்புப் புற்றுக்குள்ளேயும் காட்டுக்குள்ளேயும் கொண்டு போய் பல இன்னல்களை ஏற்படுத்தினார்.

அப்பொழுது எனக்கு வீட்டு நினைவு எங்கே வருகிறது…? எப்படி வீட்டு நினைவு வரும்…?

வசமாகக் கொண்டு போய்ச் சிக்க வைத்துவிடுவார்.

காட்டுக்குள்ளே “செந்தேள்…!” ஒன்று இருக்கிறது. அது கொட்டியதென்றால் எப்படித் தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. மிளகாயைப் போட்டு அரைத்துத் தேய்த்தால் எப்படி இருக்கும் எரிச்சல்…! அதே போல இருக்கும்.

அதை என்னைக் கொட்ட வைத்தார். அது கொட்டினவுடனே, ஐய்யய்யோ… ஐய்யய்யோ என்று துடித்துக் கொண்டு இருப்பேன். கொஞ்ச நேரத்தில் பார்த்தால் “விண்,,,விண்,,,” என்று வலி இருக்கும்.

“ஈஸ்வரா…” என்று சொல்லுடா என்பார். ஆனால் ஈஸ்வரா என்று சொல்ல எனக்கு வராது. ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது ஐய்யய்யோ… ஐய்யய்யோ என்று தான் அலறிக் கொண்டு இருப்பேன்.

விஷம் எந்த அளவுக்கு ஏறியதோ அந்த அளவுக்கு நான் அலறும் பொழுது
1.உன்னுடைய நல்ல குணங்கள் எல்லாம் எங்கேடா போனது…? என்று கேட்பார் குருநாதர்.
2.எல்லாருக்கும் நல்லது செய்தாய்…! நல்லது செய்த அந்த நல்ல குணங்கள் எல்லாம் எங்கே போனது…?
3.இந்த விஷத்தைக் கண்டது அது ஓடி ஒளிந்து விட்டது அல்லவா…! என்று அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.

இதற்காகத்தான் இராமாயணத்தில் வாலியைக் காட்டுகின்றார்கள்.

ஆனால் வாலியை இராமன் மறைந்திருந்து தான் தாக்கினான். நேராகத் தாக்கவில்லை…!

ஏன்…?

1.நமக்குள் வேதனை வந்தாலும்
2.அது நம்மைத் தாக்கினாலும்
3.நம்முடைய நினைவு அந்த வேதனையின் மீது இருக்கக்கூடாது.

உதாரணமாக ஒரு புலி வருகிறது என்று எண்ணிப் பாருங்கள்…! புலி வருகிறதா..!. என்று எண்ணிய உடனே கிடு…கிடு…வென நடுங்குவோம்.

நாம் இருக்கும் இந்தப் பக்கம் ஒரு போக்கிரி வருகிறான். பார்ப்பவரை எல்லாம் எல்லாம் அடிக்கிறான்… உதைக்கிறான் என்று சொன்னால் போதும்.

இங்கே நமக்குக் கிடு…கிடு…வென்று வரும்.

அப்பொழுது அந்த நேரத்தில் நம் வலு எல்லாம் எங்கே போகிறது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
1.”போக்கிரி…” என்று சொன்னவுடனே
2.நம் வலு அனைத்தும் அவனிடத்தில் போகிறது.
3.நம் நிலை எல்லாம் அங்கே போய்விடுகிறது.

வாலி என்ன செய்கிறான்…? அவனுக்கு நேராக நின்றால் (நம்முடைய) சம பலத்தை எடுத்துக் கொள்கிறான். இராமாயணத்தில் வான்மீகி மாமகரிஷி மிகவும் தெளிவாகவே இதைக் காட்டுகின்றார்.

நம்மிடம் இருக்கும் நல்ல குணத்தின் வலு இழந்தபின் அடுத்து நாம் எதை எடுக்க முடியும்… முடியாது.

அதற்காக வேண்டித் தான்
1.நம் கண்கள் செல்லும் வழியில் (கண்ணன் சொல்லும் வழியில்)
2.புருவ மத்தியில் ஈஸ்வரா என்று நம் உயிரை எண்ணி
3.அவனை (போக்கிரியின் உணர்வை) நேரடியாகத் தாக்காதபடி
4.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
5.எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்… ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று
6.உடலுக்குள் அந்த உபதேசத்தைச் செய்ய வேண்டும்.

மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் கூட்டிக் கொண்டு என்று நம் உடலில் இந்த வாசனையை அதிகமாகப் பரவச் செய்து கொள்ள வேண்டும். அப்பொழுது
1.அவனை எண்ணும் பொழுது (முதலில்) நமக்கு எப்படி நடுக்கம் வருகின்றதோ
2.அதே மாதிரி – “அவன் நம்மை எண்ணும் பொழுது..”
3.மறைமுகமாக நாம் பரவச் செய்த மகரிஷிகளின் உணர்வை அவன் நுகர்ந்தால்
4.அது அவனுக்குள் போய் அவனிடத்தில் இருக்கும் அந்த வீரியத் தன்மையை குறைக்கும்… “தடுமாறச் செய்யும்….!”

ஏனென்றால் அவன் உணர்வைக் காட்டிலும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று நாம் இதை எண்ணும் பொழுது
1.நம்மைத் தாக்க வேண்டும் என்று எண்ணினால்
2.நம்மைப் பார்த்ததும் நம் நினைவுகள் அவனுக்குள் குபு…குபு… என்று போய்
3.அவன் உணர்வு அனைத்தையும் மாற்றிவிடும்…!

தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் செம்பும் பித்தளையும் ஆவியாக மாறுகிறது. விஷத்தின் தன்மையை முறிக்க வேறு ஒரு விஷ முறிவு மாத்திரையைக் கொடுத்தால் விஷம் இறங்கிவிடுகிறது.

நம் சிறு நீரைப் பரிசோதிப்பதற்காக அதிலே ஒரு சொட்டு கெமிக்கல் விட்டால் உடலுக்குத் தகுந்தாற்போல் அதிலுள்ள அனைத்தையும் காட்டுகின்றது.

சர்க்கரைச் சத்து அதிகமாக இருந்தால் சிகப்பு நிறமாக மாறுகிறது. அதிலே சர்க்கரை கொஞ்சம் அளவு குறைவாக இருந்தால் வெளுப்பு நிறமாக வருகிறது. மிகவும் கொஞ்சமாக இருந்தால் பச்சை நிறமாக ஆகிறது. ஒன்றுமே இல்லை என்றால் நீல நிறமாக இருக்கிறது.

அந்தக் கெமிக்கலைக் கலந்ததும் சிறு நீருக்குள் உள்ளதைப் பிரித்துக் காட்டும் நிலைக்கு வருகிறது.

இதே போன்று மகரிஷிகளின் நினைவலைகளை நம் உடலுக்குள் சேர்த்துக் கொண்டால்
1.பிறருடைய துயரத்தின் நிலையைப் பிரித்துக் காட்டும் நிலையும்
2.அந்த மகரிஷிகளை எண்ணும் பொழுது நம்மைப் பாதுகாக்கும் நிலையாகவும் அமையும்.

செய்து பாருங்கள்…! உங்களுக்கு வரும் எத்தகைய தீமைகளையும் துன்பங்களையும் துயரங்களையும் பகைமைகளையும் வேதனைகளையும் உங்களால் அடக்கி ஒடுக்க முடியும்.

நல்ல உணர்வைக் காக்கும் சக்தியாக நீங்கள் பெற முடியும் என்று உறுதியாகச் சொல்கின்றோம்.

நாள் முழுவதுமே மகிழ்ச்சியாக இருந்தாலும் அதற்கடுத்து சங்கடமும் வெறுப்பும் எதனால் வருகிறது…?

Divine spiritual rays

நாள் முழுவதுமே மகிழ்ச்சியாக இருந்தாலும் அதற்கடுத்து சங்கடமும் வெறுப்பும் எதனால் வருகிறது…?

 

சில நேரங்களில் வாழ்க்கையில் தடங்கல்கள் ஏற்பட்டால் நம்மையறியாமலே சோர்வும் வரும். அந்த நேரத்தில் கடுமையான வெறுப்பும் வரும். அப்பொழுது நாம் என்ன நினைக்கின்றோம்…?

ஹு..ம்…! எவன் முகத்தில் முழித்தேனோ…! காலையிலிருந்து இந்த மாதிரி எதை எடுத்தாலும் வெறுப்பாக இருக்கிறது..! என்று அந்த உணர்வுகளைத் தான் பெருக்குவோம்.

பேசுவது யார்…? செயல்படுத்துவது யார்…? சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வுகள் பதிவாகி மீண்டும் நினைவுக்கு வருகிறது. நாம் சோர்வடையும் போது அது ஆக்கிரமித்துக் கொள்கிறது.
1.ஆக்கிரமித்துக் கொள்வது எது…?
2.நம் உடலில் உள்ள சந்தர்ப்பத்தால் பதிவான அப்படிப்பட்ட அணுக்கள் தான்.

நாம் சந்தோஷமாக இருக்கும் போது அதற்குச் சாப்பாடு கிடைப்பதில்லை.. அது பட்டினியாக இருக்கிறது. ஒதுங்கி இருக்கிறது. ஆனால் சந்தோஷத்தில் சிரித்து ஆடிப் பாடி முடிந்த உடனே
1.கொஞ்சம் சோர்வடைவோம்.
2.“லபக்…!” என்று அது முன்னாடி வந்துவிடும்.

நீங்கள் சும்மா இருக்கும் போது பாருங்கள்…! என்னைத் திட்டினார்கள்… எனக்கு இடைஞ்சல் செய்தார்கள்… என்னைக் கோபித்தார்கள்… என்ற நிலையில் அந்த அத்தனை நினைவுகளும் வரும். இவை எங்கிருந்து வருகிறது…?

ஏற்கனவே நமக்குள் பதிவு (RECORD) செய்த உணர்வுகள் அது தன் உணவுக்காக ஏங்கும் பொழுது அதே உணர்வுகளைக் காற்றிலிருந்து இழுத்து உணவாக எடுத்துக் கொள்கிறது. உணவைக் கொடுத்து அந்த அணுக்களைப் பிழைக்க வைக்கிறது.

வித்து நிலத்தில் பதிந்தால் தான் அந்தச் செடி முளைக்கும். பதிவு இல்லை என்றால் முளைக்காது. அதைப் போன்று தான் நமக்குள் எந்தெந்த உணர்வுகள் பதிவாகியிருக்கின்றதோ அது அது தன் உணவை எடுக்கத்தான் செய்யும்.

விவசாய நிலங்களில் புல்லையோ மற்ற களைகளையோ நீங்கள் அறுத்து விடுகிறீர்கள். ஆனால் புல்லை அறுத்த பின்னாடி அந்த வித்து மீண்டும் தன் இனத்தைப் பெருக்கிக் கொண்டு தான் இருக்கிறது.

அதைப் போல் தான் நான் அதைச் செய்கிறேன்… இதைச் செய்கிறேன்… என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் உங்களுகுள் ஆழமாக ஊன்றிய உணர்வுகள் உடலுக்குள் எத்தனையோ உள்ளது. எப்படி…?

வாழ்க்கையில் எதை எல்லாம் உற்றுப் பார்க்கின்றோமோ அது எல்லாம் வீரிய வித்தாக ஊன்றப் படுகிறது. பிறரைப் பார்க்கும் பொழுது வெறுப்பு கோபம் வேதனை போன்ற எத்தனையோ உணர்வுகள் நம் உடலில் அது பதிவாகி விடுகிறது.

எங்கே கொண்டு போய் பதிவாக்குகிறது…? நம் எலும்புக்குள் உள்ள ஊனில் பதிவாக்குகின்றது. அங்கிருந்து தன் இனத்தை உடலில் தசைகளுக்குள்ளும் மற்ற உறுப்புகளிலும் பெருக்குகின்றது.

இப்படிப்பட்ட அணுக்கள் பெருகினால் உடலில் நோயாகின்றது. நோயாகும் பொழுது அதை நீக்க மேலெழுந்தவாரியாக நீங்கள் மருந்து குடித்தாலும் சரி அல்லது எந்த வைத்தியத்தைச் செய்தாலும் சரி.
1.எலும்புக்குள் ஊனுக்குள் மறைந்திருக்கும் மூல வித்தை மாற்ற வேண்டும்.
2.அதை மாற்றவில்லை என்றால் மறுபடி முளைக்கத் தான் செய்யும்.

அந்த ஊனை மாற்ற வேண்டும் என்றால் விஞ்ஞானத்தால் கொடுக்கப்படும் மருந்துகளால் முடியாது. அதை மாற்ற வேண்டும் என்றால் நம் கண்ணின் நினைவைக் கொண்டு வந்தால் தான் முடியும். ஏனென்றால் கண்ணால் பார்த்துத்தான் எலும்புக்குள் பதிவு செய்கின்றோம்.

“ஈஸ்வரா…!” என்று சொல்லி உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் உடல் முழுவதும் படர வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் உடலில் உள்ள ஜீவன்மா ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் கண்ணின் நினைவைக் கொண்டு போக வேண்டும்.

நம்மைக் கோபித்தவர்களைப் பார்த்தாலும் அடுத்த நிமிடமே ஈஸ்வரா என்று சொல்லி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கி
1.“டக்…! என்று கண்ணை மூடி கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி
2.என் உடலில் உள்ள ஜீவான்மாக்களும் ஜீவ அணுக்களும்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

நமக்குக் கோபம் வரும் போது என்ன நடக்கிறது…? கண்ணினால் கோபமான உணர்வினை கண்ணிலிருக்கும் கருவிழி ருக்மணி தான் ஊழ் வினை என்ற வித்தாகப் பதிவு செய்கின்றது.

கண்ணின் நினைவை எங்கே கொண்டு போகிறோம்….? அந்தத் தவறுக்குக் காரணமானவரையோ அல்லது தப்பு செய்பவரையோ மீண்டும் மீண்டும் எண்ணிப் பதிவு செய்கிறோம்.

பதிவு செய்து கொண்டபின் அவன் அமெரிக்காவில் இருந்தாலும் “இப்படிச் செய்கிறானே பாவி…!” என்று நினைத்தால் இந்த உணர்வு அந்த நேரம் அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் புரை ஓடுகிறது.

வேலை செய்து கொண்டிருந்தாலோ அல்லது ரோட்டில் சென்று கொண்டிருந்தாலோ சிந்தனைகளைக் குறைக்கச் செய்து எதிர்பாராத சம்பவங்கள் நடக்கக் காரணமாகின்றது.

நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் தான் அங்கே வருகிறது. ஏனென்றால் தப்பு செய்த உணர்வின் அணுக்கள் இங்கே இருக்கும் போது இந்த வித்து இருந்து கொண்டே தான் இருக்கும்.

எத்தனை கோடி வித்தை எடுக்கிறீர்களோ இங்கே இருந்து கொண்டே தான் இருக்கும். இதைக் கொஞ்சம் கொஞ்சமாக நாம் மாற்ற வேண்டும்.
1.விவசாயத்தில் எப்படி வீரியமுள்ள மூல வித்துகளோடு
2.வீரியம் குறைந்த வித்துக்களைச் சேர்த்துச் சேர்த்துச் சேர்த்து
3.அந்த வித்துக்களை நல்ல வித்துகளாக மாற்றுவது போல நாம் நல்ல வித்துக்களாக மாற்றிக் கொண்டு வர வேண்டும்.

மனித வாழ்க்கையில் நாம் பதிவாக்காமல் இருக்க முடியாது. பதிவானால் தான் அவன் தவறு செய்கிறான்… என்று எண்ணுகிறோம். பதிவானால் தான் வேதனை படுகிறோம்… என்று எண்ணுகிறோம். இங்கு பதிவாகவில்லை என்றால் நினைக்க முடியுமோ…? முடியாது.

ஆனால் அந்த உணர்வு இங்கே கவருகிறது. கவர்ந்து நுகரச் செய்கிறது. அந்த உணர்வுகள் உணர்ச்சியாக மாறும். உணர்ச்சிகள் எண்ணங்களாக வரும். உணர்ச்சிகொப்ப நம் அங்கங்கள் இயங்கும்.

அப்போது நம்மை எது இயக்குகிறது…?

ஒரு பாத்திரத்தை வைக்கிறோம். கீழே நெருப்பை வைக்கிறோம். பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் எந்தெந்தப் பொருள்களை எல்லாம் சேர்க்கிறோமோ வேகும் பொழுது அந்தச் சுவை தான் வரும். அந்த மணம் தான் வரும்.

நம் உயிருடைய வேலையும் அதைப் போன்றது தான். உயிர் ஒரு நெருப்பு. சுவாசிக்கும் பொழுது அதில் எந்த உணர்வுகள் படுகின்றதோ அந்த மணமாக… அந்த உணர்வாகத்தான் உடலை இயக்கும்.

இதை எல்லாம் தெரிந்து கொண்டவன் மெய் ஞானியான அகஸ்தியன். அவன் தன் வாழ்க்கையில் இருளை அகற்றினான். உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றினான். துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அவன் உணர்வை நாம் உயிர் வழியாகச் சுவாசித்தால் வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளிலிருந்து விடுபடலாம். வேதனைகளையும் துன்பங்களையும் மாற்றி மகிழ்ச்சியாக வாழ முடியும்.

கருவித்தை.. குட்டிச் சாத்தான்…! இவைகள் மூலம் ஜோதிடம் சொல்பவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

ghost

கருவித்தை.. குட்டிச் சாத்தான்…! இவைகள் மூலம் ஜோதிடம் சொல்பவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

 

பல சாமியார்கள் பல வழிச் சாமியார்கள் ஒவ்வொரு கொள்கையுடன் கடவுளின் அருளைப் பெற உலகம் முழுவதுமே உள்ளார்கள்.

அவர்களின் நிலையெல்லாம் ஆண்டவனை அடைவதற்கு… ஆண்டவனை அடிபணிவதற்கு… ஆண்டவனைத் தான் அடிபணிந்து வணங்கிட்டால்.. “தானே ஆண்டவன்…!” என்ற எண்ணத்தில் வாழ்கின்றார்கள்.

பல வழிகளில் அவர்களுக்கும் பொருளும் புகழும் வருகின்து. பல ஜெபத்தைச் சொல்கிறார்கள். செய்கிறார்கள்…! ஆண்டவனை வணங்கப் பல வழிகளில் மக்களை அடிபணிய வைக்கின்றார்கள்.

அவர்கள் நிலையெல்லாம் என்னப்பா…? இச்சாமியார்கள் தான் பூஜிக்கும் உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில்லை. இவ்வுலகம் முழுவதுமே இந்நிலை உள்ளதப்பா.

கடவுளை வணங்குவதையே மக்களின் மனதில் பெரும் கஷ்டத்தை உண்டு பண்ணுகிறார்கள். இவர்கள் நிலையில் இருப்பதெல்லாம் “கரு வித்தை… என்னும் ஆவி நிலைதான்…!”

அவர்கள் நினைத்து ஜெபமிருக்கும் பொழுது அவ்வாவி காட்சி தருகிறது. அவ்வாவியின் உருவத்திற்குப் பல பூஜைகளும் பல உணவுகளும் அளித்திட்டு இவர்கள் நினைத்த நினைவுகளுக்கு வரும்படி அவ்வாவிகளை இவர்கள் வசப்படுத்திக் கொள்கிறார்கள்.

இவர்கள் என்ன எண்ணுகின்றார்களோ… எதை எதையெல்லாம் வேண்டுகின்றார்களோ… அவைகளையெல்லாம் அவ்வாவிகள் அறிந்து இவர்களுக்குச் சொல்கின்றது.

அவற்றை வைத்துத்தான் வருபவர்களுக்கெல்லாம் அவர்கள் நிலையை உணர்த்தி அவர்கள் மூலமாகப் பொருள் சம்பாதித்து வருகின்றார்கள்.
1.நடந்த நிலையைத்தான் இவ்வாவிகளால் செப்பிட முடிந்திடும்.
2.நடக்க இருப்பவைகளை அவ்வாவிகளினால் அறிந்திட முடியாது
3.எந்த ஜோதிடனும் எந்தச் சாமியாரும் நடக்க இருப்பவைகளைச் செப்பிட முடியாதப்பா.
4.ஆனால் நடந்தவைகளை முழுவதுமே உண்மையாகச் சொல்லிவிடுவார்கள். எல்லாம் இக்கருவித்தை வேலைதான்.

பல கோவில்களில் அருள் வருவதெல்லாம் இவ்வாவிகளின் வேலைதான். அருள் இல்லையப்பா.. மருள் அது…!
1.ஆண்டவனின் அருள் வருபவன்…
2.தன்னையும் தன் நிலையையும் மறந்து ஆடிட மாட்டான்.
3.பெரும் அமைதியில் தான் அமர்ந்திருப்பான்.
4.நடக்க இருப்பவைகளை நல்ல முறையில் நடத்திட அருளைத் தான் செப்பிடுவான் அவன் வழியில்.

மருள் வந்தவன் வேலையெல்லாம் குட்டிச் சாத்தான் வேலையப்பா. இக்குட்டிச்சாத்தான் வேலையில்தான் இவ்வுலகமே உள்ளதப்பா. இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே சொல்கிறேன்.

குறை கூறுவது மிகவும் எளிது… குறையிலிருந்து மீள்வது கடினம்…!

Matured wisdom powers

குறை கூறுவது மிகவும் எளிது… குறையிலிருந்து மீள்வது கடினம்…!

 

நாட்டின் சுதந்திரத்திற்காக அன்று எத்தனையோ பேர் பாடுபட்டார்கள். அதில் பெரியாரும் ஒருவர். அவர் மதம் என்று சொல்ல வில்லை. மத பேதம் என்று சொல்லவில்லை. இனங்கள் என்று சொல்லவில்லை. அனைவரும் “சகோதரர்கள்…!” என்று தான் உணர்த்தினார்.

அதே சமயத்தில் பக்தி கொண்ட நிலைகள் கொண்டு வாழும் சிலர் ஆங்கிலேயருடன் இணைந்து மற்றவரை எப்படிச் சுரண்டி வாழும் நிலைகளில் செயல்பட்டார்கள் என்று காட்டுகின்றார்.

தீமை என்ற நிலைகளில் அவர்களால் பகைமையைத்தான் உருவாக்க முடிந்ததே தவிர தவறை ஏற்றுக் கொள்ளும் பண்புகள் இல்லை. நல்ல ஒழுக்கங்களை வளர்க்க முடியவில்லை. கடவுளை வணங்குவோர் கடவுளை முன்னாடி வைத்துக் கொண்டு தவறு செய்வதை எல்லாம் பார்த்தார்.
1.கடவுள் இல்லை…!
2.உன்னுடைய எண்ணம்தான் கடவுளாகின்றது…! என்ற நிலையை அங்கே அவர் தெளிவாக்கினார்.

கடவுளை வணங்குவோர் என்ற நிலைகளில் பகைமைகளை ஊட்டி மற்றவரை அடிமைப்படுத்தித் தன்னை உயர்த்தி கொள்ளும் நிலைகளில் இருந்து மீள வேண்டும் என்று உணர்த்தினார். ஆனால் அவர் சொன்ன உண்மைகளை மாற்றிவிட்டனர்.

நான் என் தாய் தந்தையைத் தான் வணங்குகின்றேன். ஆகவே உனது தாய் தான் கடவுள் உனது தந்தை தான் கடவுள். தெய்வம் என்று இல்லை என்ற நிலையில் அவருக்குப் பின் வந்தோர் பறைசாற்றினாலும் மற்றோர்களைப் பார்க்கும் போது பழி தீர்க்கும் உணர்வைத்தான் எடுத்தனர்.

மற்றவருடைய செய்கைகளைக் குறை கூறும் உணர்வுகளை வளர்த்துக் கொண்டு… உயர்ந்த பண்பு கொண்ட நெறிகளை வளர்க்க முடியாது… ஞானிகள் கொடுத்த அறநெறிகள் எல்லாம் மாறி தமிழ் நாடு என்னவானது…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.
1.ஒன்றைக் குறை கூறுவது எளிது.
2.ஆனால் குறையிலிருந்து மீள்வது மிகவும் கடினம்.

ஆகவே குறை கூறி வாழ்ந்தால் அந்தக் குறையின் தன்மையே நமக்குள் வளரும்…! என்ற நிலைகளில் ஞானிகள் காட்டிய மெய் வழிகளைச் சற்று சிந்தித்து பாருங்கள்.

ஏனென்றால் மனிதர்கள் நாம் வெகு காலம் வாழ்வதில்லை. குறுகியே காலமே வாழும் நாம் நமக்குள் எடுத்து கொள்ளும் உணர்வு எதுவோ அதன் துணை கொண்டே அடுத்த உடலுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றது நம் உயிர்.

எந்த இனம் என்று சொல்லிக் கொண்டாலும் சரி… அல்லது எந்த மதம் என்று சொல்லிக் கொண்டாலும் சரி
1.பகைமை என்ற உணர்வை வளர்த்துக் கொண்டால் உடலில் அது விளைந்து
2.இந்த உடலை நோயாக்கி வீழ்த்திவிட்டுக் கடைசியில் இழி நிலையான சரீரமாகத்தான் பெற வேண்டியது வரும்.

ஆக எந்த வகையில் சென்றாலும் சரி…! நாம் எடுத்து கொண்ட உணர்வுகளை நம் உயிர் இயக்கி… அதைச் சிருஷ்டித்து… அதனின் செயலாக்கமாக நம்மை மாற்றி… எதை வலுவோ நமக்குள் எடுத்துக் கொண்டோமோ… அதன் நிலைக்கே நம்மை மாற்றும். இது எல்லாம் இயற்கையின் நியதிகள்.

அதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட்டு இந்தப் பிரபஞ்சத்தில் நம் சூரிய குடும்பம் எப்படி ஒன்றுபட்ட நிலையில் ஒரு குடும்பமாக இயங்குகிறதோ அதைப் போல “நாம் அனைவரும் சகோதர உணர்வை வளர்த்து… ஒன்றுபட்ட நிலையில் வாழ வேண்டும்…!”

இந்தப் பூமியில் மீண்டும் மீண்டும் நாம் பிறவி எடுத்துச் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டுமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

Image

Ultimate destination

இந்தப் பூமியில் மீண்டும் மீண்டும் நாம் பிறவி எடுத்துச் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டுமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

 

புத்தனும் ஏசுவும் முகமது நபியும் அகத்தியரும் போகரும் கொங்கணவரும் ஐயப்பனும் பெற்ற அருளையெல்லாம் இம்மானிட உடலில் பிறந்த எல்லோருமே பெற்றிடலாம்.

இந்நிலையை ஏன் பெற வேண்டும்…! என்ற எண்ணத்தை இனி எண்ணிடாதீர்கள். இப்பொழுது சொல்வது மிகவும் முக்கியம்.
1.சுழன்று கொண்டே உள்ள உலகத்தின் சுழற்சியில் சிக்கிப் பல பல அவதாரங்களை எடுத்து பல உடல்களை எடுத்து
2.உலக ஆரம்ப நிலையில் அல்ல கல்கியில் ஆரம்பித்து கலியில் முடிந்து…
3.திரும்பவும் கல்கிக்கு வந்து திரும்பவும் கலியில் முடிந்து பல பல உடல்களை எடுத்து
4.ஏனப்பா இவ்வுலகத்தில் சுழன்று கொண்டே இருக்க வேண்டும்.

ஜென்மங்கள் வருவது எதனால் என்பது தெரிந்து விட்டது முதலிலேயே உங்களுக்கு…!

இப்பொழுது பெற்றிருக்கும் இவ்வுடலைக் “கடைசி உடல்…!” என்ற எண்ணம் வைத்து இவ்வுடலிலேயே உன்னுள் இருக்கும் ஆண்டவனை நீ புரிந்து கொண்டு
1.மறு ஜென்மம் எடுத்திடும் நிலைக்கு வந்திடாமல்
2.இக்கலியிலேயே உன் நிலையை ஒரு நிலைப்படுத்தி அவ்வாண்டவனின் அருளைப் பெற்று
3.சூட்சும உலகத்திற்கு வந்துவிட்டால் அடுத்த கல்கி பிறந்து கலி வந்து முடியும் வரை பல ஜென்மங்கள் எடுத்து அவதிப்பட வேண்டியதில்லை.

சூட்சும உலகத்தில் இருந்து கொண்டே எவ்வுடலையும் உன் நிலைக்கு எடுத்துக் கொள்ளலாம். அவ்வுடலில் உன் நிலைக்குச் செய்யும் சேவையை முடித்துக் கொண்டு மறு உடலையும் எடுத்துக் கொள்ளலாம்.
1.பிறந்து வளர்ந்து பல நிலைகளில் மாறுபட வேண்டியதில்லை.
2.அந்நிலைக்கு வந்து வாழ்வது… “என்ன சோம்பேறி வாழ்க்கையா…?” என்று எண்ணிவிடாதே…!

அந்த வாழ்க்கை நிலையில் இம்மனித உடலுக்கு… இம்மானிட மக்களுக்கு… நல் வழி புகட்டி நல்லாசியை அளித்திடத்தான்
1.அவ்வாண்டவனின் அருளைப் பெற்று
2.நீ ஆண்டவனாக இருந்திடு…! என்று சொல்வதெல்லாம்.

திரும்பவும் சொல்கின்றேன்……! இக்கலியில் இப்பொழுது பெற்றிருக்கும் கடைசி உடல் தான் உங்களுடைய உடல்கள். இந்நிலையில் இருந்து நீங்கள் மாறுபட்டால்
1.வந்திடும் எதிர்ப்பையும் எண்ணத்தின் மாற்றத்தையும் வைத்து மாறுபட்டால்
2.அடுத்த மானிட உடல் இல்லையப்பா… மனித உடல் இல்லையப்பா…!
3.மிருக உடலுக்குத்தான் செல்ல முடியும்.

உமக்கு ஆண்டவர் எடுத்து கொடுத்த சந்தர்ப்பத்தில் கடைசிச் சந்தர்ப்பம். இது இந்நிலையை மாற்றி விடாதீர்கள்.

நான் பயமுறுத்துகிறேன்…! என்று எண்ணிடாதீர்கள். உங்கள் சுவாச நிலையை ஒரு நிலைப்படுத்துங்கள் நல் வழியில். அழியாத நிலை பெற்றுக் கல்கியில் கலந்திடுங்கள்…!

“அகஸ்தியரிடமிருந்து வெளிப்பட்ட அவர் மூச்சலைகளையும் மணங்களையும்” தியானத்தின் மூலம் பெறலாம் – அனுபவம்

அகஸ்தியரின் அருள் மணம்

“அகஸ்தியரிடமிருந்து வெளிப்பட்ட அவர் மூச்சலைகளையும் மணங்களையும்” தியானத்தின் மூலம் பெறலாம் – அனுபவம்

 

1.விபூதி வாசனை
2.எலுமிச்சை வாசனை
3.முருக்கு வாசனை
4.இந்தப் பொருள்களே அருகில் இல்லாமல் உங்களுக்கு வாசனை வருகிறது என்றால் ஞானகுரு (சாமிகள்) அங்கே இருக்கிறார் என்று உணரலாம்.

சீராகத் தியானம் செய்யும் போதும் ஆத்ம சுத்தி செய்யும் போதும் அல்லது மிகவும் இக்கட்டான நேரத்தில் அதிலிருந்து விடுபட வலுவான எண்ணத்துடன் குருநாதரை நினைத்து அருள் உணர்வைச் சுவாசிக்கும் போதும் இந்த வாசனைகள் நிச்சயம் வரும்.

எனக்கு விபூதி வாசனையும் எலுமிச்சை வாசனையும் திருநெல்வேலி – வள்ளியூருக்கு அருகில் மலை மீது உள்ள “நம்பி கோவிலில்” அகஸ்தியரை எண்ணித் தியானிக்கும் பொழுது தான் வர ஆரம்பித்தது. அது எப்படி வந்தது என்றால்…
1.அங்கே தான் ஞானகுரு முதன் முதலாக (1988ல் எனக்கு)
2.”பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியரின் உணர்வை…!”
3.தியானத்தின் மூலமாக ஆழமாகப் பதிவாக்கி அதைப் பெறும்படியும் செய்தார்.
4.(குபு… குபு… என்று விபூதி வாசனையும் எலுமிச்சை வாசனையும் மூச்சு முட்டும் அளவிற்கு வந்தது. ஒரு பத்துப் பதினைந்து நிமிடம் இருக்கும்)

தியானத்தில் சாமிகள் சொன்னது:-
1.இந்தப் பகுதி எல்லாம் அகஸ்தியன் வந்து சென்ற இடம்…! அவன் காலடி பட்ட இடம்.
2.ஆகவே அகஸ்தியன் வாழ்ந்த அக்காலத்திற்கு உங்கள் கண்ணின் நினைவாற்றலைக் கொண்டு செல்லுங்கள்
3,அகஸ்தியன் பெற்ற நஞ்சை வென்று ஒளியாக மாற்றிய பச்சிலை வாசனைகளும் மூலிகை மணங்களும் அருள் தாவர இனச் சத்துக்களும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டித் தியானியுங்கள் என்று சொன்னார்.
4.ஒரு அரை மணி நேரம் தியானம் நடந்திருக்கும்.

தியானம் முடிந்ததும் என்னிடம் குருநாதர் கேட்டார். வாசனைகளாக வந்தது என்று கூறினேன்.

இதற்குப் பின் பெரும்பகுதி வருடம் தோறும் மார்கழி (நவம்பர் டிசம்பர்) மாதம் “வைகுண்ட ஏகாதசிக்கு முன்னாடி…!” குறைந்தது ஒரு மாதம் அளவிற்கு இன்னதென்று சொல்ல முடியாதபடியாக மூலிகை வாசனை போன்று விட்டு விட்டு வந்து கொண்டே இருக்கும். எங்கே… எந்த நிலையில்… இருந்தாலும் வரும்.

வருடம் தோறும் குறிப்பிட்ட அதே காலத்தில் வரும். அந்தச் சமயத்தில் இரவு நேரத்தில் 7 மணி அளவில் வட கிழக்குத் திசையில் சப்தரிஷி மண்டலம் உதயமாவதைப் பார்க்கலாம்

வாசனை வந்தபின் நான் மாதத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும் பார்த்துத் தெரிந்து கொள்வேன். 2018ல் இப்பொழுதும் இன்றும் வாசனை வந்து கொண்டுள்ளது.

இது என்னுடைய அனுபவம்.

“குரு பலம்…” பெறுவது எப்படி…?

Eswara

“குரு பலம்…” பெறுவது எப்படி…?

நான் தியானமிருந்து விட்டேன். ஆகையினால் குருநாதரே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என்று எண்ணக் கூடாது.
1.என் நினைவு புருவ மத்தியிலிருக்கும் உயிரின் பால் சென்றது.
2.உயிரான ஈசனிடம் வேண்டினேன்.
3.குரு காட்டிய வழியில் மகரிஷிகளின் ஆற்றல்மிக்க சக்திகளை உயிரின் துணையால் நான் சுவாசிக்க நேர்ந்தது.
4.அந்தச் சக்திகளை என் உடலுக்குள் பாய்ச்சி என் தீமைகளை நீக்கினேன் என்று இப்படி வர வேண்டும்.

அதே போல் மற்றவருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பாய்ச்சினேன். அவர்கள் தீமை அகன்றது.. நோய் நீங்கியது…! என்பது சிறப்பாகும். இப்படிப்பட்ட தொடர்பு… வரிசையாக… சரியான முறையில் இருந்தால் தான் நம் காரியங்கள் எல்லாம் சித்தியாகும்.

மகரிஷிகள் உணர்வை குருநாதர் மூலமாகப் பெற்று நம் உயிர் வழியாகக் கவர்ந்தால் குரு உபதேசித்த உணர்வுகள் நமக்குள் ஜீவன் பெற்று இயங்கும்.

குருவே பார்த்துக் கொள்வார் என்று பொதுவாகச் சொல்லி விட்டால் அவர் என்ன சொல்கிறார்…?
1.நான் எல்லோருக்கும் தான் கொடுக்கின்றேன்.
2.அவர்கள் உயிர் வழியாகக் கவர்ந்து எடுக்க வேண்டும் அல்லவா.
3.அவர்கள் எடுக்கவில்லை என்றால் நான் எப்படிப் பார்க்க முடியும்…?

ஆகவே குருநாதர் சக்திகளைக் கொடுத்தாலும் நாம் நுகர்ந்து அதை எடுக்க வேண்டும். இந்த எண்ணம் நமக்கு வலுவாக இருக்க வேண்டும்.
1.உங்களை நீங்கள் நம்புங்கள் என்று தான் சொல்கிறார்.
2.என்னை நீங்கள் நம்புங்கள் நான் காப்பாற்றித் தருவேன்…! என்று சொல்லவில்லை.

அவர் செய்வார்…! என்றால் நம் உயிருக்குள் நாம் இணைப்புக் கொடுத்தால் தான் அவரும் நமக்குள் அபிஷேகம் செய்ய முடியும்.

நம்முடைய எண்ணம் குருநாதர் கொடுக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்வதில் அழுத்தமாக இருக்க வேண்டும்.
1.அது தான் குரு பலம் என்பது.
2.அந்தப் “பிடிப்பு..” இருக்க வேண்டும்.
3.அந்தப் பிடிப்புக்குப் பேர் தான் பற்று…!
4.அதில் நமக்குப் பற்றுதல் வேண்டும்.

குருநாதர் பார்த்துக் கொள்வார் என்றால் அவர் வேலையை அவர் சரியாகச் செய்கிறார். அவர் கொடுக்கும் சத்தை நாம் சரியாக எடுக்க வேண்டுமா இல்லையா…?

இது மிகவும் முக்கியம்…!