குழந்தை இல்லாவதவர்களுக்கு அன்றைய மெய் ஞானிகள் தன் பார்வையாலே ஒளியைப் பாய்ச்சி… “புத்திர பாக்கியம்” பெறச் செய்தார்கள்…!

mother-and-child-care

குழந்தை இல்லாவதவர்களுக்கு அன்றைய மெய் ஞானிகள் தன் பார்வையாலே ஒளியைப் பாய்ச்சிப் “புத்திர பாக்கியம்” பெறச் செய்தார்கள்

 

இன்று விஞ்ஞான அறிவின் வளர்ச்சியைப் பார்க்கின்றோம். ஒரு மிருகத்திலுள்ள அணுக்களை எடுக்கின்றான். மற்ற மிருகங்களினுடைய விந்துக்களில் இதைக் கலக்கிறான். அது வேறு விதமாகப் போகின்றது.

ஒரு மாட்டின் விந்தை எடுக்கின்றான். இன்னொரு இன விந்திலே இதைக் கொடுக்கிறான். இதனுடைய அடைப்பிலே பாதுகாப்பாகக் கவசம் பண்ணி அந்த மாட்டின் ரூபத்தையே மாற்றி விடுகின்றார்கள்.

நாயோ ஆடோ கோழியோ அதிலுள்ள செல்களைப் பிரித்து எடுக்கின்றான். மற்ற உணர்வுகளை மாற்றி அதனுடன் இணைக்கும் பொழுது கோழியின் ரூபம் மாறுகின்றது. குருவிவியின் நிறம் மாறுகின்றது. மயிலின் நிறம் மாறுகின்றது. பல விதமான நாய்கள் உருவாகின்றது பல தரப்பட்ட கோழிகள் உருவாகின்றது.

இப்படியெல்லாம் உருக்கள் மாறுகின்றது. விஞ்ஞானிகள் உருவாக்கிய இந்த நிலைகளை எல்லாம் நாம் பார்க்கின்றோம்.

இனச் சேர்க்கையின் பொழுது வேறொரு சீமை மாடுடன் இணையும் பொழுது அந்த விந்து இதிலே அந்த மாடாக மாற்றுகின்றது.

அது உணர்வது பாதுகாப்பாகப் போகின்றது. இதே மாதிரித் தான் மனிதனுடைய கருக்களிலும் ஒரு மாட்டின் விந்தினை எடுத்து விட்டால் அதே மாட்டின் நிலையே தான் இங்கு மாற்றும்.

ஏனென்றால் இது ஒரு பாதுகாப்புக் கவசமாகின்றது.

இப்பொழுது விஞ்ஞான அறிவிலே கொண்டு வருகின்றார்கள்.

ஒருவருக்குக் குழந்தை இல்லை என்றால்…
1.கருப்பைக்கு அப்புறம் இதற்கென்று இயற்கையிலே செய்யப்பட்ட இந்தக் கருவின் அணுக்களை வைத்து
2.(இன்னொரு) தாயின் வெப்பத்தை வைத்து
3.இந்தக் கரு முட்டையை வளர்க்கின்றான்.
4.அதிலே குழந்தைகள் பிறக்கின்றது.

அதாவது ஜீவ அணுக்களை வளர்த்ததை மற்ற உடலிலிருந்த அணுக்களைப் பிரித்து இப்படிச் செய்கின்றார்கள். இது விஞ்ஞான அறிவு.

ஆனால் அன்று வாழ்ந்த மெய் ஞானிகள் என்ன செய்தார்கள்?

புத்திர பாக்கியம் ஏற்படாததன் காரணம் என்ன என்றால் புத்திர பாக்கியத்தை உண்டாக்கும் அணுக் கருக்கள் உடலில் வீரியம் பெறாத நிலைகளினால் தான்.

ஏனென்றால் பல சந்தர்ப்பங்களில் சுவாசித்த எண்ண உணர்வுகள் “எதிர்மறையான அணுக்களாகி” உடலில் புத்திர பாக்கியம் உண்டாக்கும் அணுக் கருக்களை அழித்துவிடுகின்றது.

அந்த அணுக்களின் குறைவு எதுவோ அந்த அணுக்களுக்குத் தேவைப்பட்டது எதுவோ அதை மெய் ஞானி “தன் பார்வையால்…” அந்த உணர்வின் சத்தை அவர்களுக்குப் பாய்ச்சுகின்றான்.
1.ஒருவருக்குக் குழந்தை இல்லை என்றால்
2.தன் எண்ணத்தால் குழந்தை கொடுக்கின்றான்.

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து துருவ நட்சத்திரத்தின் அருளாற்றல் பெறவேண்டும் என்று ஒருவருக்கொருவர் தினசரி காலை மாலை இரவுகளில் தியானித்து வர வேண்டும்.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் பெருகப் பெருக
2.புத்திர பாக்கியம் உண்டாக்கும் அணுக் கருக்களை அழிக்கும் அணு செல்களில்
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் படர்ந்து
4.அதனின் செயலாக்கம் வலுவிழக்கின்றது.

புத்திர பாக்கியம் நிச்சயம் உண்டு… என்ற நம்பிக்கை கொண்டு மன வலுவுடன் தியானித்தால் “உறுதியாகக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்….!”

Leave a Reply