நம் உடலுக்குள் இருந்து கொண்டு நம்மை அறியாமல் இயக்கும் (ஆசையின்) உணர்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்…!

Vaikundam

நம் உடலுக்குள் இருந்து கொண்டு நம்மை அறியாமல் இயக்கும் (ஆசையின்) உணர்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்…!

எம்முடைய (ஞானகுரு) உபதேசத்தைக் கேட்பவர்கள்… “என்னமோ சாமி சொன்னார்… நன்றாக இருந்தது…!” என்பார்கள். அதற்கப்புறம் வழக்கம் போல் மற்றவர்கள் (இவர்களைப்) பேசுவதைப் பார்த்து
1.அவர்கள் என்னை இப்படிச் சொன்னால் அது எப்படி…!
2.நான் சும்மா விடுவேனா…? என்று பிடித்துக் கொள்வார்கள்.

அதே சமயத்தில் “நல்ல மனிதன்… கஷ்டம்…!” என்று சொன்னால் அதை எப்படி நான் கேட்காமல் இருக்க முடியும்…? கேட்டுவிட்டு உதவி செய்யாமல் நான் சும்மா இருக்க முடியுமா…? என்பார்கள்.

அவர்கள் கஷ்டப்பட்டது துயரப்பட்டது சங்கடப்பட்டது அது பூராமே இங்கே வந்துவிடுகின்றது. இப்படி நமக்குள் அந்தப் பாசத்தால் ஒன்றைக் கவர்ந்து விட்டால் அந்த உணர்வின் தன்மை இயக்கும்.

காரணம் ஒரு செடியிலே விளைந்த வித்தை நிலத்தில் ஊன்றினால் அந்தத் தாய்ச் செடியின் சத்தைக் கவர்ந்து தான் தீரும். இதே மாதிரித்தான்
1.ஒரு உடலிலே விளைந்த உணர்வுகள் நம் உடலுக்குள் வந்துவிட்டால்
2.அது உணர்ச்சியைத் தூண்டி அதன் உணர்வைத்தான் அது வளர்க்கும்.
3.ஆகவே இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட வேண்டும்.

மாமிசம் சாப்பிட்டுப் பழகி விட்டோம். சாப்பிடக்கூடாது என்று சொன்னால் மாமிசத்தைச் சாப்பிடுவதில்லை. அதே சமயத்தில் சிந்தனை இழந்து விடுகின்றது.

நீங்கள் மாமிசம் சாப்பிடாமல் போனாலும் கறியைச் சமைத்துச் சாப்பிட எடுத்துக் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாலே இந்த உணர்வு வரும். மற்றவர்கள் சாப்பிடுவதைப் பார்த்தால் நமக்கும் அந்த உணர்வு வரும்.
1.ஆனால் இதை மறுத்து… நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் இருந்தால்
2.அதைப் பார்த்தவுடன் விலகிப் போகச் சொல்லும்.
3.தியான வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துக் கொண்டால்
4.அதைப் பார்த்ததும்… உடனே அந்த உணர்வை நுகருவதை விட்டு விலகிப் போகச் சொல்லும்.

இல்லாமல் போனால் என்ன நடக்கும்…? நான் அதைச் சாப்பிடவில்லை. சும்மா வேடிக்கைதான் பார்க்கின்றேன்… என்று சொன்னால்
1.கொஞ்சம் கொஞ்சமாகப் போகும்…!
2.அப்புறம் அந்த அணுக்கள் விளைந்தவுடன் “சாப்பிடலாமா…! என்ற அந்த ருசி இழுக்கும்.
3.பிறகு தன்னாலே அங்கே தான் போய்க் கொண்டிருப்போம்.
(எல்லாப் பழக்க வழக்கங்களுக்கும் இப்படித்தான்)
4.அந்த வலு வரும். ஆனால் சிந்திக்கும் தன்மை இழக்கும்.

மற்ற உயிரினங்களுக்கு அந்தச் சிந்தனை கிடையாது. தன் உடலை வளர்த்துக் கொள்ளும் உணர்வு தான் உண்டு. அதைப் போன்று இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால் தன் உடலை வளர்த்துக் கொள்ளும் நிலையில் சிந்திக்கும் தன்மையை இழக்கத்தான் செய்யும்.

ஏனென்றால் நம் வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் இப்படி எல்லாம் மாற்றிக் கொண்டே வருகின்றது. அதை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நீங்கள் எடுப்பதற்காக வேண்டி உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். “சாமி மிகவும் நன்றாகப் பேசுகின்றார்…!” என்று சொல்லிவிட்டு அப்படியே போய்விடாதீர்கள்.

இருபது வருடம் எவ்வளவோ கஷ்டப்பட்டேன் உண்மைகளைத் தெரிந்து கொண்டேன். அது எப்படி என்று உங்களிடம் வந்து சொல்கின்றேன்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னிடம் பதிவு செய்தார். அவர் சொன்னதை எல்லாம் எடுத்தேன்.
1.எடுத்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது.
2.உங்களுக்கும் அந்தக் காக்கும் சக்தியைக் கொடுக்க முடிகின்றது.

நல்ல தங்காள் கிணறு…!” – நடந்த நிகழ்ச்சி

நல்ல தங்காள் கிணறு…!” – நடந்த நிகழ்ச்சி

ஒரு சமயம் பழனியில் தாய் தந்தையுடன் ஏழு பேர் சேர்ந்து கிணற்றில் விழுந்து செத்துப் போனார்கள். அதனால் அந்தக் கிணற்றுப் பக்கமாகப் போவதற்குப் பயந்து கொண்டே இருப்பார்கள்.

குருநாதர் என்ன செய்தார்…? என்னை இங்கே வாடா…! என்று கூப்பிட்டார். நான் சொல்வதைக் கேட்கிறேன் என்று சொன்னாய் அல்லவா…! என்று சொல்லிக் குளத்திற்குக் கூட்டிக் கொண்டு போனார்.

அந்தக் குளத்திற்கு அருகில் உள்ள இந்தக் கிணற்றுக்கு என்னைப் போகச் சொன்னார். நான் இங்கே இருந்து கொள்கிறேன்டா…! நீ (ஞானகுரு) அந்தக் கிணற்றில ஒரு கல்லைக் கொண்டு போட்டு விட்டு வாடா என்கிறார்.

நான் எப்படி அங்கே போக முடியும்…?

ஏற்கனவே நிறையப் பேர் விழுந்து அதிலே இறந்திருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். அங்கே போய் எத்தனையோ பேர் பயத்தாலே நெஞ்சு வலித்தது என்று செத்துப் போயிருக்கின்றார்கள்.

இந்த எண்ணம் எல்லாம் எனக்குள் ஏற்கனவே பதிவாகி இருக்கின்றது. என்னை இராத்திரியில் ஒரு மணிக்குக் கல்லைக் கொண்டு போய் அந்தக் கிணற்றில் போடச் சொன்னால் எப்படி இருக்கும்…?

கல்லைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டேன். போடா…..! என்கிறார் குருநாதர். சாமி…! என்றேன் நான். முன்னே வைத்த காலைப் பின்னே வைக்காதடா என்கிறார் குருநாதர்.

அங்கே நான் போகப் போகப் போகப் போகப் போகப் போக அந்த உருவம் முதலில் வெள்ளையாகத் தெரிகின்றது. பிறகு அந்த அம்மா கூட்டிக் கொண்டு வந்தது எல்லாமே அப்படியே தெரிகின்றது.

அங்கே கிணற்றில் விழுந்தது எல்லாம் தெரிகின்றது. “ஜல…ஜல…!” என்ற நினைப்பு அந்த எண்ணங்கள் அப்படியே குவித்து வருகிறது. அடுக்கடுக்காக அத்தனை உருவங்களும் தெரிகிறது.

இதைப் பார்த்தவுடனே எனக்கு என்னாகிப் போனது…? நான் சாப்பிட்ட ஆகாரம் ஜீரணிக்கவில்லை. பூராம் வயிற்றோட்டமாகப் போய் வேஷ்டியெல்லாம் அசிங்கமாகிவிட்டது. அவ்வளவு தைரியம் எனக்கு…!

இந்த அளவுக்கு ஆனவுடனே தலையிலிருக்கும் கல் தன்னாலே கிடு…கிடு…! என்று நடுங்கிக் கீழே வருகின்றது. விழுந்துவிட்டது. கல் விழுந்தவுடனே குருநாதர் என்ன செய்து விட்டார்…?

டேய்…டேய்…டேய்…! என்னைக் காப்பாற்றுடா…. என்று சப்தம் போடுகின்றார். அந்த உருவம் இங்கே குருநாதரைச் சுற்றிக் கொண்டு அவர் மண்ணையைப் பிடிக்கின்ற மாதிரி (மூச்சுத் திணறல்) கழுத்தைப் பிடித்ததும் அலறுகின்றார்.

அட… இதென்னடா வம்பாகப் போய்விட்டது…? இவரே இப்படி இருக்கிறார் என்று சொன்னால் எப்படி…? நீ என்னைக் காப்பாற்றுடா… என்று குருநாதர் சொன்னதும் எனக்கு பயம் இன்னும் அதிகமாகி விட்டது. சரி…. அவ்வளவு தான் போலிருக்கின்றது.

ஏனென்றால் என்னுடைய மனைவி இறக்கும் தருவாயிலிருந்து குருநாதர் காப்பாற்றினார். பின் நான் சொல்வதை நம்புகிறாயா..? நான் சொல்வதைக் காப்பாற்றுவாயா..? இதிலிருந்து மாறமாட்டாய் அல்லவா என்று ஏற்கனவே வாக்கை வாங்கிக் கொண்டார்.

மனைவி இப்பொழுது தான் நன்றாக உள்ளது. சிறிய குழந்தைகளாக இருக்கின்றது. சரி இனி நமக்கு அவ்வளவு தான்…! இப்பொழுது வயிற்றோட்டம் போய்விட்டது. நாளைக்கு ஆள் இருக்கின்றனோ… இல்லயோ…? என்று இந்த எண்ணம் தான் எனக்குள் ஓடுகின்றது.

என் எண்ணம் இப்படி ஓடிக்கொண்டு இருக்கும் போது குருநாதர் நான் சொன்னதைக் காப்பாற்றுகிறேன் என்று சொன்னாய் அல்லவா. என்னைக் காப்பாற்றுடா…! என்கிறார்.

அவரிடம் நெருங்கிப் போகிறேன்…! நடுக்கம் தான் வருகிறதே தவிர வேறு ஒன்றும் இல்லை. திடீரென்று குருநாதர் என்னிடம் “அதைக் கொன்று விடுவேன்…. என்று சொல்லுடா…! என்றார்

கொன்று விடுவேன்…! என்று சொன்னேன். அப்புறம் கொஞ்ச நேரத்தில் என்னாகிப் போகின்றது…? அந்த உருவம் “பட்…!” என்று விலகி விடுகின்றது… மறைந்து விட்டது…!

1.நீ என்னிடமே பெரிய வேலை பார்க்கிறாய்.
2.உன்னிடம் என்னென்னமோ சக்தியை வைத்துக் கொண்டிருக்கின்றாய்.
3.அந்த ஆவியைப் போகச் செய்து விட்டாய்…!
4.வேஷ்டியெல்லாம் கழித்துவிட்டாய் என்று சொன்னால் நான் நம்ப மாட்டேன்.
5.நீ திருடன்டா……!” என்கிறார் குருநாதர்.

சாமி…! நீங்கள் தானே அதைச் சொல்லச் சொன்னீர்கள்…! போகச் சொல்லிச் சொன்னதே நீங்கள் தானே என்று சொன்னேன். அதோடு விட்டாரா குருநாதர்…!

நீ இந்த வேஷ்டிய எடுத்துக் கொண்டு போய் அந்தக் கிணற்றில் இறங்கிக் கழுவித் துவைத்துச் சுத்தப்படுத்திவிட்டு வாடா என்கிறார்..! எப்படி இருக்கும்..,?

ஏனென்றால் அந்தக் கிணறு உடை கிணறு. அதாவது காலை வைத்து இறங்கி உள்ளே போகப் படிக்கட்டுகள் இருக்கின்றது. திருடன்டா நீ…! போய் அலசி விட்டு வாடா போடா…! என்று சொல்கிறார் குருநாதர்.

இப்படி ஒவ்வொரு உணர்வுகளிலேயும் எனக்கு நேரடி அனுபவமாகத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டினார்.

1.நீ பார்த்த நினைவால் அங்கே காற்றில் மறைந்து இருக்கக்கூடிய உணர்வுகள் அது எப்படிக் குவிகின்றது…?
2.அந்த நினைப்புக்கு அணைவாக அது எப்படி டி.வி.யில் சுவிட்சைப் போட்டவுடனே படம் தெரிவது போல் காற்றிலே பரவி இருக்கின்ற அலைகளைக் குவித்து உனக்குப் படமாக எப்படிக் காண்பிக்கின்றது…?
3.அங்கே கிணற்றுக்குள் விழுந்ததைப் பற்றி நீ கேள்விப்பட்டிருக்கின்றாய். இந்த உணர்வின் எண்ணம் வரப்போகும் போது அந்த அலைகள் படர்ந்திருப்பதை எப்படி குவிக்கின்றது…?
4.அது உன் உடலுக்குள் வந்தவுடனே மற்றவர்கள் சொன்ன உணர்வுகள் அந்த எண்ணங்கள் உனக்குள் அது இயக்கச் சக்தியாக எப்படி மாறுகின்றது…? என்று
5.இப்படி அனுபவத்தைக் கொண்டு வருகின்றார்.

முதன் முதலில் என்னை ஒன்றுமே இல்லாமல் இப்படிப் பயப்படச் சொல்லி அந்த உணர்வுகளை எண்ணச் சொல்லி அது நடந்த நிகழ்ச்சிகளை இதே மாதிரிப் பார்த்து விட்டு வரச் சொல்கின்றார் குருநாதர்.

நாம் புலனறிவால் (கண் காது) நுகரும்போது சுவாசிக்கும் உணர்வுகள் நம்மை எப்படி எல்லாம் இயக்குகிறது…? உடலுக்குள் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது…? என்று காட்டினார்.

சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறதல்லவா…!

ஆண்டவன் அருள் என்பது ஆண்டவனாக வந்து நமக்கு அளிப்பதல்ல…!

Image

Jothilinga - divine light

ஆண்டவன் அருள் என்பது “ஆண்டவனாக வந்து நமக்கு அளிப்பதல்ல…!”

காட்சி:-
நிலத்திலிருந்து ஒரு ஆத்ம லிங்கம் வளர்ந்து வருகின்றது. அதுவே ஒரு மகரிஷியாகக் காட்சி அளித்து மேடான இடத்தில் நின்று கொண்டு அவர் கையில் இருக்கும் ஒரு ஒளியான லிங்கத்தைக் காட்டி நிற்கின்றார்.

அவர் நிற்கும் மேடான இடத்திற்குக் கீழ் பலர் நின்று கொண்டு அவரால் யாருக்கு அந்த ஒளியான லிங்கம் கொடுக்கப்படும் என்று கையேந்தி நிற்கின்றனர்.

ஆனால் அவரோ அந்த ஒளியான லிங்கத்தை மேலும் கீழும் ஆட்டி அந்த ஒளியைப் பாய்ச்சிக் கொண்டேயிருக்கின்றார். யாருக்கும் தனித்து அந்த லிங்கத்தைத் தரவில்லை.

1.அவர் உருட்டிய ஒளியான அலைகள் பாயப் பெற்ற அந்த ஒளியை ஈர்த்து
2.தன் ஒளியை அந்த ஒளியுடன் கலக்கும் நிலைப்படுத்திய ஒளி ஆத்மாக்கள் எல்லாம்
3.அந்த ஒளியான லிங்க ஆத்மாவிடம் சென்று ஐக்கியப்படுகின்றன.
4.அந்த மகரிஷியின் கையில் உள்ள ஒளி லிங்கம்
5.முதலில் வீசிய ஒளியைக் காட்டிலும் அதிக ஒளியைப் பரப்பிக் கொண்டேயுள்ளது.

அந்த லிங்கமே கையில் கிடைக்கும் கிடைக்கும் என்று கையேந்தி நின்று கொண்டேயிருப்பவர்கள் நின்று கொண்டே தான் இருக்கின்றார்கள். அந்த மகரிஷியும் தான் பெற்ற அந்த ஒளியான லிங்கத்தைச் சிரித்துக் கொண்டே வளர்த்துக் கொண்டே தான் இருக்கின்றார்.

விளக்கம்:-
ஆண்டவன் அருள் என்பது ஆண்டவனாக வந்து நமக்கு அளிப்பதல்ல. ஆண்டவன் ஒளி வடிவில் எல்லாமில் எல்லாமாக ஒன்று போல் தான் ஒளி வீசுகின்றான்.

அந்தப் பேரருளை நாம் பெற்று அந்த ஒளியுடன் ஒன்றும் ஒளியாகத்தான் நம் செயல் இருக்க வேண்டுமே தவிர ஆண்டவனே வந்து நமக்களிக்கட்டும்…! என்று ஏங்கிக் கொண்டிருந்தால் காத்துக் கொண்டே தான் இருக்க வேண்டும்.

எவ்வளவு காலங்கள் காத்திருந்தாலும்…… அந்த ஒளியை ஆண்டவன் வந்து நமக்கு அருளப் போவதில்லை.

1.அவன் தந்த ஒளியை அவனதாக்கி
2.அவனுடன் ஐக்கியப்படுவது தான்
3.மெய் ஞான ஒளி பெறும் ஆண்டவனின் அருள் சக்தி.
4.அவன் ஒளியுடன் நம் ஒளி கலக்கப் பெற்றால் நம் ஒளியைக் கொண்டு பலருக்கு ஒளி பரப்பலாம்.

இதன் உண்மை நிலையைப் புரிந்து கொண்டு ஆண்டவனின் அருளை வேண்டி நிற்காமல் ஆண்டவனுடன் ஐக்கியப்படும் நிலை பெற ஒவ்வொருவரும் செயலாக்குங்கள்.

தியானம் செய்வதற்கு ஏற்ற இடமும் காலமும் எது…?

Merkaba-Meditation

தியானம் செய்வதற்கு ஏற்ற இடமும் காலமும் எது…?

கேள்வி:-
தியானத்தில் இருக்கத் தனிமையான இடமும் சோலைகள் அடர்ந்த அமைதியான இடமும் பிற சப்தங்கள் வராத இடமும் தான் ஏற்ற இடமா..?

விளக்கம்:-
1.எந்த நிலையிலும்…
2.எங்கு இருந்தாலும்…
3.எவன் ஒருவன்… ஒரு நிமிடமாவது
4.புருவ மத்தியில் இயக்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனிடம்
5.மனதை (நினைவை) ஐக்கியப்படுத்துகின்றானோ அதுவே தியானத்திற்கு ஏற்ற இடம்.

யோகிகள் சந்நியாசிகள் போல் உலகப் பற்றை விட்டு விட்டுத் தியானத்தில் இருந்தால் தான் “தியான நிலை” என்பதல்ல. எல்லோரும் சந்நியாசிகளாக ஆக முடியாது.

அவரவர்கள் ஏற்றுக் கொண்ட கடமைகளைச் செய்து கொண்டே உயிரான ஈசனை வேண்டித் தியானிப்பவர்கள் அனைவருமே அந்த அருளையும் சக்தியும் ஆற்றலும் பெறுகின்றார்கள்.

கணவன் மனைவி இருவரும் எங்கள் குழந்தைகளுக்குக் கல்யாணம் முடிந்து கடமைகள் முடிந்த பிற்பாடு தெய்வீக வழியில் ஈடுபடுகிறோம் என்று நினைப்பீர்கள்.

கல்யாணம் முடிந்ததும் கடமை தீர்ந்துவிடுமா…? தீராது.

நீங்கள் இருக்கும் வரை நீங்கள் நினைப்பது எல்லாம் நடக்கும் என்று நினைக்கின்றீர்கள். நினைப்பது எல்லாம் நடக்குமா…? நீங்கள் இருக்கும் வரை கடமைகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

இப்பொழுது இருக்கும் நிலையிலேயே…
1.கடமை பந்தம் பாசம் ஆசைகளை விட்டுவிடலாம் என்று நினைக்காமல்
2.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா…! என்ற எண்ணைத்தில்
4.இந்தத் தியானத்தைச் செய்து கொண்டே வாருங்கள்.

கடமைகள் தீர்ந்த பிற்பாடு தான் தியானத்தில் ஈடுபாடு வைக்க வேண்டும் என்று எண்ண வேண்டாம். நாம் எடுக்கும் தியானத்தின் மூலம் அந்த மகரிஷிகளே நம்மை எல்லா வழியிலும் வழி நடத்திச் செல்வார்கள்.

மகரிஷிகளின் அருள் என்றென்றும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

ஆண்டவனை நான் அடையப் போகின்றேன் என்று எல்லோரும் சொல்கிறோம்…! அதனின் பொருளை (கருத்தை) அறிந்திருக்கின்றோமா…?

ஒளி உலகம்

ஆண்டவனை நான் அடையப் போகின்றேன் என்று எல்லோரும் சொல்கிறோம்…! அதனின் பொருளை (கருத்தை) அறிந்திருக்கின்றோமா…?

வாழ்க்கை என்ற நிலை அமைதியுடன் செல்ல வேண்டும். அது தான் வாழ்க்கையின் முழுமை. அதற்காக வேண்டி ஒரு நிலையில் இருந்து கொண்டு ஆண்டவனின் பெயரை மட்டும் உச்சரித்துக் கொண்டே ஆண்டவன் பால் செல்வதல்ல வாழ்க்கை.

மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும்…! ஆண்டவனிடம் சென்று ஐக்கியப்பட வேண்டும்…! என்றால் அப்படிப்பட்ட ஆண்டவன் எங்குள்ளான்…?

1.ஒன்றுடன் ஒன்று இணைந்தது தான் “ஆதி சக்தியின் நிலையே….!”
2.காற்றும் நீரும் மோதுண்டால் “ஒளி..” உருவாகின்றது.
3.ஒலியும் ஒளியும் மோதுண்டால் “ஜீவன்…” உண்டாகிறது.
4.ஒளி நீர் ஒலி எல்லாமே சேர்ந்த பிறகுதான் அந்த ஜீவனுக்குச் “சுவாசத் துடிப்பே…” வருகிறது.
5.சுவாசத் துடிப்பு வந்தவுடன் பல உணர்வின் எண்ணங்களுடன் அந்த ஜீவன் (அணு) மோதி மோதி “ஈர்க்கும் சக்தி பெற்றுச் சுழல்கிறது…”

அந்த ஈர்ப்பின் நிலைக்கொப்ப அது தனக்குள் சேமித்த குணத்தின் தன்மைக்கொப்ப இந்தப் பூமியில் உள்ள பல சத்துகளுடன் மோதி மோதி தன் வளர்ச்சிக்கு அதன் சுவாசத்திற்கொப்ப “வழித் தொடரைப் பெறுகின்றது…”

ஒன்றுடன் ஒன்று மோதாத நிலையில்… “ஜீவனே பெற முடியாது…!”

இரண்டு நிலைகள் கொண்ட நிலையில் மோதலில் மூன்றாகி நான்காகி பலவாகிச் சுழல்வது தான் இந்த அகண்ட அண்டத்திலுள்ள எல்லா ஜீவன்களும்…! (மண்டலங்களாக இருந்தாலும் சரி உயிரினங்களாக இருந்தாலும் சரி அப்படித்தான்…!)

1.தனித்த (சக்தி) ஆண்டவன் என்று எங்கே இருக்கின்றான்…?
2.ஆண்டவனின் பெயரை ஜெபித்துக் கொண்டே நாம் எங்கே செல்லப் போகிறோம்…?
3.முடிவே இல்லாத உண்மையின் ஒளிர் தத்துவ அடக்கமே (பேரருள் பேரொளி) அந்த மோதலின் சுழற்சியில் தான் உள்ளது.

ஆதி சக்தி என்பது விஷம். அந்த விஷம் விஷமற்றதைத் தாக்கும் பொழுது ஏற்படுவது வெப்பம். வெப்பத்தினால் ஈர்க்கும் காந்தமாகி மற்றதைக் கவர்ந்து ஒரு திடப் பொருளாகின்றது… “பரம்பொருள்…”

மோதவில்லை என்றால் எதுவுமே சிருஷ்டியாகாது. ஒன்றுடன் ஒன்று மோதவில்லை என்றால் ஆண்டவன் என்ற சொல்லுக்கே பொருள் இல்லை…! மோதலினால் ஏற்படும் அந்தச் சுழற்சியில் ஜீவன் கொண்ட வளர்ச்சியில் உருவங்களாகி மனிதன் வரை வளர்ச்சி பெற்று வந்துள்ள நாம்
1.எல்லாமில் எல்லாமாக….
2.”ஒளிரக் கூடிய எல்லாமே ஆண்டவன் தான்…!” என்று உணர்தல் வேண்டும்.

நம் ஜீரண உறுப்புகளுக்குள் நடக்கும் சில அதிசயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்…!

human body.jpg

நம் ஜீரண உறுப்புகளுக்குள் நடக்கும் சில அதிசயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்…!

இரண்டு பேர் காரசாரமாகச் சண்டை போடுகிறார்கள். அந்தக் சங்கடமான வார்த்தைகளை நீங்கள் கேட்டுவிட்டு வந்து வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டால் என்ன செய்யும்…?

எவ்வளவு வேதனைப் பட்டார்களோ… அந்த வேதனையான உணர்வுகள் அனைத்தும் சாப்பாடோடு கலந்து உள்ளே செல்கிறது.

மற்றவர்கள் சங்கடப்படுவதையும் துன்பப்படுவதையும் ஆத்திரப்படுவதையும் நீங்கள் வேடிக்கையாகத்தான் கேட்டீர்கள். கேட்டு விட்டு வந்து சாப்பிடும் போது அந்த உணர்வு உணவுடன் கலந்து ஜீரண உறுப்புகளுக்குள் போகிறது.
1.அந்த வேதனையான உணர்வு கலந்த உமிழ் நீரும்
2.நாம் சாப்பிட்ட ஆகாரம் இரண்டும் இரைப்பையில் போய் என்ன செய்யும்…?

கோழி குருவி இருக்கிறது இல்லையா…? கோழியாவது கொத்தித் தின்று தன் குஞ்சுகளைக் கூட்டிப் போகும். ஆனால் குருவி காகம் போன்ற பறவை இனங்கள் எங்காவது சென்று இரையை எடுத்து வரும்.

குஞ்சுகள் “ஆ…ஆ…” என்று வாயைத் திறக்கும். தாய் தான் எடுத்து வந்த அந்த இரையை அதன் வாயில் போடும். போட்டவுடன் குஞ்சுகள் வாயை மூடிக் கொள்ளும்.

இதே மாதிரித்தான்
1.நம் சிறுகுடல் அதன் பசியின் நிலைகளை உந்தியவுடனே
2.இரைப்பையிலிருந்து “ஆ…!” என்று வாயைத் திறக்கும்.
3.அந்த நேரத்துக்கு தகுந்த மாதிரி இரைப்பையிலிருந்து “சொத்…!” என்று உணவு கீழே விழும்.
4.“லபக்…” என்று மூடிக் கொள்ளும்.

அது மூடியவுடன் என்ன அதிலிருக்கும் இரசத்தை வடித்துக் கொள்ளும். அடுத்துக் கீழே பசி எடுக்கும் போது இதைக் கீழே தள்ளி விடும். அதைக் கழித்து எடுத்துக் கொள்ளும்.

இப்படி வழித்துக் கொண்டே வந்து அதிலிருக்கும் சத்தையெல்லாம் பிரித்துவிட்டு விஷத்தையெல்லாம் வடித்து வெளியே அனுப்பும்.

இப்படி நமக்குள் அந்த விஷத்தை வடிக்கக்கூடிய திறன் இருந்தாலும், நாம் வேதனை உணர்வோடு அந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்டோம் அல்லவா..!

சாப்பாட்டில் இருக்கக்கூடிய விஷத்தைத் தான் சிறு குடலுக்குப் பிரிக்கத் தெரியும். ஆனால் வேதனையான விஷயத்தை கேட்டறிந்து அது இரைப்பையோடு சேர்ந்து விட்டால் என்ன செய்யும்…?

சிறு குடல் சத்தைப் பிரிக்க இழுக்கும் பொழுது இரைப்பை திறக்கும். ஆனால் பிறர் கோபமாகப் பேசியத்தைப் பார்த்தவுடன் அது “ஆ..” என்று வாயைத் திறந்துவிடும். திரும்ப மூடாது…! ஏன்…?

மிளகாயை வாயில் போட்ட பின் வாயை மூடச் சொல்லுங்கள் பாப்போம்…! உங்களால் மூட முடியுமா என்று பாப்போம்…? “ஆ… ஆ…!” என்று வாயைத் திறந்து அலறிக் கொண்டே இருப்போம். மூட முடியாது. மூட மாட்டோம்.

அதைப் போன்று தான் எரிச்சலான உணர்ச்சிகள் சிறு குடலை விரித்து விட்டுவிடும். அப்போது “ஆ…ஆ..” என்று அலறும்…! உள்ளே “கட…புடா…!” என்று ஆகும்.

ஏனென்றால் சண்டை போடுவதைப் பார்த்துவிட்டு வருகிறீர்கள் இல்லையா…? ஒருவர் கோபமாகப் பேசுவார்.. ஒருவர் வேதனைப்படுவார்…! இரண்டும் இருக்கும்.

இதைப் பார்த்துவிட்டு வந்தவுடன் உங்கள் உடலிலுள்ள குடலில் இத்தகைய உணர்ச்சிகள் தோன்றுவதை நிச்சயம் பார்க்கலாம். நான் சொல்வதையெல்லாம் பாருங்கள் தெரியும்…!

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் நாம் யாரும் தவறு செய்யவில்லை. ஆனால் நம் புலனறிவால் உடலுக்குள் பதிவாகும் உணர்வுகள் கொண்டு நாம் சுவாசிக்கும் பொழுது
1.அந்தந்த உணர்வுகள் (குணங்கள்) உடலுக்குள் சென்று
2.என்னென்ன வேலை செய்கிறது…!
3.உடல் உறுப்புகளையும் அதை உருவாக்கிய அணுக்களையும் அது எப்படி இயக்குகிறது… மாற்றியமைக்கிறது…! என்பதை
4.நீங்கள் தெரிந்து கொள்வதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

ஆகவே அந்தச் சுவாச நிலையைச் சீராக ஆக்க வேண்டும் என்பதற்குத்தான் தியானமும் ஆத்ம சுத்தியும் உங்களுக்குப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.

எந்த வேலை செய்தாலும்… அல்லது எங்கே வெளியிலே சென்றாலும்… மறுபடியும் வீட்டுக்கு வந்த பின்னும்… மகரிஷிகளின் உணர்வுகளை நம் உடலுக்குள் கலக்கும் பழக்கம் வந்துவிட்டால் நம்மை அறியாது உட்புகுந்த தீமைகளை அந்த நேரத்திலேயே செயலிழக்கச் செய்ய முடியும்.

இது ஒன்றும் கஷ்டமான காரியமல்ல…!

எதை நினைக்கின்றாயோ… நீ அதுவாகின்றாய்…!

spiritual-happiness-and-bliss

எதை நினைக்கின்றாயோ… நீ அதுவாகின்றாய்…!

பௌர்ணமி எப்படி முழுமையாகப் பிரகாசிக்கின்றதோ அதைப் போன்று நாம் இந்த மனித வாழ்க்கையில் முழுமை அடைய வேண்டும்.

இல்லையென்றால் இந்த உடலை விட்டுப் போனவுடனே அமாவாசை போல மீண்டும் இன்னொரு இருண்ட உடலுக்குள் தான் செல்ல வேண்டும்.

அப்படித் தேய்ந்து அந்த நிலை ஆகிவிடக்கூடாது என்பதற்குத்தான் இந்த உபதேசமே. உயிர் எப்படி ஒளியாக இருந்து ஒரு பொருளை அறிவிக்கின்றதோ அதைப் போன்று
1.பேரொளியாக இருக்கும் அந்த மகரிஷிகளின் உணர்வை எடுத்து உனக்குள் அதை நிலையாக்கு….
2.எல்லோரும் அதைப் பெற வேண்டும் என்று எண்ணு…!
3.நீ அதுவாகு…! என்று தான் குருநாதர் சொன்னார்.
4.இது என் (ஞானகுரு) சுயநலம்.

எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நான் எண்ணும் போது நான் அதுவாகிறேன். “என் சுயநலமாகிறது…!” மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு அப்படித்தான் சொல்லிக் கொடுத்தார்.

1.மக்கள் அவர்களை அறியாமல் வந்த இருள்கள் எல்லாம் மாய வேண்டும்.
2.மகரிஷியின் அருள் ஒளி மக்கள் எல்லோரும் பெற வேண்டும்.
3.அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து இருக்க வேண்டும் என்று நீ எண்ணினாய் என்றால் “நீ அதுவாகிறாய்…!”
4.உயர்ந்த ஆற்றல்களை நான் உனக்குக் கொடுத்தேன் என்றால்
5.அவர்கள் அதைப் பெற வேண்டும் என்று நீ எண்ணு.
6.அவர்கள் மகிழ்வதைப் பார்த்து… அந்த மகிழ்ச்சியைக் கண்டு “நீ மகிழ்ச்சியாக இரு…!”
7.அவர்கள் சந்தோஷப்படுவதைப் பார்த்து நீ சந்தோஷமாக இரு என்றார் குருநாதர்.
8.அவர் சொன்ன கட்டளைப்படித்தான் இன்று வரை செய்து கொண்டிருக்கின்றோம்.

இவ்வளவு தூரம் குருநாதர் காட்டிய நிலைகளை யாம் தெளிவாகச் சொன்னாலும் திடீரென்று ஒரு கேள்வியைக் கேட்டு விடுவார்கள். சாமி திடீரென நம்மைக் கோபிக்கின்றாரே…! ஏன்…?

ஏனென்றால் உங்கள் கஷ்டம் என்னிடம் போகாதபடி தடைப்படுத்தும் பொழுது அது நரசிம்ம அவதாரமாக வந்துவிடுகிறது.

அந்த மகரிஷியின் அருள் சக்தி நான் (ஞானகுரு) பெறவேண்டும் என்று வானை நோக்கி எண்ணும் போது என் உடலுக்குள் அந்தச் சக்தி வாய்ந்த நிலைகள் வந்துவிடுகின்றது. அந்த உணர்வுடன் உங்களைப் பார்க்கின்றேன்.

அப்படிச் சக்தி வாய்ந்த நிலைகள் வரும் பொழுது நீங்கள் வீரியமாகப் பார்த்தவுடனே அந்த நல்ல வாசனைகள் வரும். அந்த நேரத்தில்…
1.நீங்கள் துன்பப்பட்டுச் சொல்கிற வார்த்தை இங்கே வராதபடி
2.”டபார்….!” என்று பிளந்து தள்ளிவிட்டு அந்த மகரிஷியின் அருள் ஒளி உங்களை இயக்கத் தொடங்கும்.

அப்பொழுது நான் சொல்கிற வார்த்தை – திடீரென நீங்கள் கோபித்துக் கொண்டாலும் இந்த உணர்வு உங்களுக்குள் போய் என்ன செய்கின்றது…? உங்கள் துன்ப அலையைப் போக்கி விடுகின்றது.

அப்பொழுது யாம் பாய்ச்சிய மகரிஷிகளின் உணர்வின் சக்தி உங்களுக்குள் வந்தவுடனே கவலையை விட்டுவிட்டு… “அதைத் திரும்பச் சொல்லக்கூடாது…!” என்று நினைப்பு வரும். அதற்காக வேண்டிதான் இந்த உணர்ச்சியைத் தூண்டுவது.

சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகின்றதல்லவா…!

தங்கத்தில் செம்பும் பித்தளையும் வைத்து நாம் நகையாகப் பற்ற வைக்கின்றோம். அடுத்தாற்போல திரவகத்தை வைத்து நீக்கிவிட்டு
1.புடம் போட்டு வைத்தவுடனே சுத்தமான தங்கமாகின்றது.
2.மீண்டும் அடுத்த நகையைச் செய்கின்றோம்.

இதைப் போல நம் வாழ்க்கையில் எத்தகைய கெட்டதைப் பார்த்தாலும் அந்த அழுக்கை நீக்கி விட்டு இந்த உணர்வின் சத்தை நாம் என்ன செய்ய வேண்டும்…?

அருள் மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் போட்டு அந்த தீயவினைகளைப் புடம் போட்டு ஒளியின் உணர்வாக நாம் மாற்றிட வேண்டும். பேரொளியாக மாறி அந்த மகரிஷிகள் வாழும் சப்தரிஷி மண்டலத்திற்குப் போக வேண்டும். அவ்வளவு தான்…!

ஞான வழியில் நாம் சென்று கொண்டிருந்தாலும்… சந்தர்ப்பத்தால் வரும் இடர்பாடுகளை “எப்படிக் கையாள வேண்டும்…?”

Spiritual wisdom

ஞான வழியில் நாம் சென்று கொண்டிருந்தாலும்… சந்தர்ப்பத்தால் வரும் இடர்பாடுகளை “எப்படிக் கையாள வேண்டும்…?”

காட்சி:-
ஒருவர் சாதம் உண்ணும் பொழுது அதிலே ஒரு கல் பட்டு உடம்பே சிலிர்க்கின்றது.

விளக்கம்:-
நாம் நல்ல நிலையில் நல்ல உணர்வும் எண்ணங்களும் கொண்டு வாழ்ந்து வந்து ஞானத்தின் வழித்தொடரைப் பெற்றாலும் அறுசுவையான உணவை உட்கொள்ளும் பொழுது அதனுடன் சேர்ந்து வந்த சிறு கல்லைப் போல அருள் வழியில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது சில இடர்கள் வரத்தான் செய்யும்.

1.அந்த நிலையில் உணவுடன் வரும் கல்லுக்காக
2.நாம் சாப்பாடு சாப்பிடாமல் இருப்பதில்லை.
3.நம்மை எதிர்த்து வரும் அந்த ஏதிர் நிலையான உணர்வுக்கு நம்மையே நாம் அடிமைப்படுத்தாமல்
4.ஞானிகள் காட்டிய மெய் வழியிலேயே நாம் செயல்படுதல் வேண்டும்.

உதாரணமாக ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்றால் பலமான அஸ்திவாரம் வேண்டும். அதே போலத்தான் சுவரை எழுப்பவும் அதற்குகந்த கலவைகள் அந்தந்த அளவிலே சேர்த்துக் கட்டினால் தான் அந்தச் சுவர் உறுதியாக நிற்கும்.

சுவர் எழுப்பும் பொழுது அதன் கலவையில் போடும் பொருள்களில் அளவு மாறுபட்டால் அந்தச் சுவருக்குப் பலமில்லை.
1.மணல் அதிகப்பட்டால் உதிரும் நிலையும்
2.சிமெண்ட் அதிகமானால் வெடிக்கும் தன்மையும்
3.நீர் அதிகமானால் அதன் பக்குவ நிலை செயல்படாத நிலையும்
4.மனிதனால் உருவாக்கப்பட்ட சுவருக்கே அதன் கலவை மாறும் பொழுது அது நிற்பதில்லை.

ஆகவே நம் உடலிலுள்ள உணர்வின் எண்ணங்கள் சீராகவும் சமமாகவும் இருந்தால் தான் உடல் நலமாக இருக்கும். உடல் நலமாக இருந்தால் அது எண்ணத்தின் “மையக் கோலாகி (வலுவாகி)” ஆத்ம சக்தியைப் பெற முடியும்.

சலிப்பு சங்கடம் கோபம் ஆத்திரம் வேதனை பேராசை அதிகமான உடல் இச்சைகள் லாகிரி வஸ்துக்களைப் பயன்படுத்துதல் போன்ற நிலைகளில் அடிமைப்பட்டு வாழும் பொழுது
1.நாம் எடுக்கும் சுவாசமானது “கடினமாகி…!”
2.நம் உடலில் சேரும் (உணர்வின் எண்ணங்கள்) அமிலத் தன்மை கூடியும் குறைந்தும் விடுகின்றது

அதனால் உடலில் உள்ள சுரப்பிகளில் சுரக்கக்கூடிய அமிலங்களில் வித்தியாசமாகி (உப்புக்கள் சர்க்கரை கொழுப்பு) நம் உடல் நிலை பாதிக்கப்பட்டு நாம் சோர்வடைந்து விடுகின்றோம். அதனால் பல நோய்களுக்கும் ஆளாகி விடுகின்றோம்.

இதைப் போன்ற நிலைகளைச் சமப்படுத்தும் நிலைக்குத்தான் உங்களுக்குச் சரியான ஆயுதமாக ஆத்ம சுத்தியைக் கொடுத்துள்ளோம்.

ஒவ்வொரு நிமிடமும் அந்த மகரிஷிகளின் உணர்வை எடுத்து உடல் உறுப்புகளுக்குள் பாய்ச்சி அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்களையும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்து கொண்டே வந்தால் நம்முடைய வாழ்க்கை அருள் வாழ்க்கையாக அமையும்.

மகிழ்ந்து வாழும் சக்தி பெறுகின்றோம். மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே ஒன்றி வாழும் தகுதி பெறுகின்றோம்.

“மந்திரம்… தந்திரம்… ஆவி….!” என்றாலே சிலருக்கு அச்சம் ஏற்படுகின்றது – அதைப் போன்ற பயமான உணர்வுகளிலிருந்து விடுபடுங்கள்…!

Lightning power of rishis

“மந்திரம்… தந்திரம்… ஆவி….!” என்றாலே சிலருக்கு அச்சம் ஏற்படுகின்றது – அதைப் போன்ற பயமான உணர்வுகளிலிருந்து விடுபடுங்கள்…!

நீங்கள் தவறு செய்யாமலே உங்களை அறியாது எத்தனையோ உணர்வுகள் தூண்டப்படுகின்றது. எத்தனையோ நிகழ்ச்சிகளை ரோட்டிலே பார்க்கின்றீர்கள்..! பத்திரிக்கைகளில் படிக்கின்றீர்கள். டி.வி.யில் பார்க்கின்றீர்கள்.

உதாரணமாக டி.வி.யில் பேய்களைப் பற்றியோ அல்லது அதிர்ச்சியூட்டக்கூடிய படங்களையோ காண்பிக்கின்றார்கள் என்றால் குழந்தைகள் அதை ஆர்வமாக வேடிக்கையாகப் பார்க்கும்.

அதிலே திடீரென்று மிகவும் பயமுறுத்தும் காட்சிகளைப் பார்த்துப் பதிவாக்கிக் கொண்ட பின் இரவிலே அந்தப் பயமான உணர்வுகள் இயக்கி மனதைப் பாதிக்கும் நிலை ஆகிவிடும். தூக்கம் வராது.

டி.வி.யில் படம் பார்க்கும் பொழுது “ஆ… ஊ…!” என்று சப்தம் கேட்டாலோ முதலிலே குழந்தை அதைப் பார்த்துச் சிரித்திருக்கும். ஆனால் இரவு வந்துவிட்டாலோ… “பயம் வந்துவிடும்…!”

அப்புறம் காலையில் எழுந்து இந்த உணர்வுடன் பள்ளிக்குச் சென்றாலோ படிப்பிலே மந்தமாகிப் போகும். வாத்தியாரிடம் இரண்டு அடி வாங்கியது தான் மிச்சமாகிப் போகும்.

பையன் படிப்பில் இப்படி ஆகிவிட்டானே…! என்ன செய்யப் போகிறானோ…? என்று தாய் தந்தையர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இதுகள் எல்லாம் விஞ்ஞான அறிவால் வரக்கூடிய விளைவுகள்…!

நான் (ஞானகுரு) சின்னப்பநாயக்கன் பாளையத்தில் இருக்கும் பொழுது ஒரு மந்திரவாதி பல வேலைகளைச் செய்து என் கையை முறித்துவிடுவேன்… காலை முறித்துவிடுவேன்…! என்று மிரட்டிக் கொண்டிருந்தான்.

பல பயங்கரமான வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். ஒரு மண்டை ஓட்டைத் தூக்கிக் கொண்டு நான் இருக்கும் இடத்தில் வைத்தான்.

இந்தச் சாமியார் (ஞானகுரு) எங்கே இருந்து வந்து இங்கே வந்து வேலை செய்கிறான். அவனை எப்படியும் முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் செய்து கொண்டிருந்தார்கள்.

ஏனென்றால் அங்கே இருக்கும் மக்களுக்கு எல்லாம் நல்லாகிப் போகும் என்று வெறும் விபூதியைக் கொடுத்துக் கொண்டிருந்தேன். காசும் வாங்கவில்லை.
1.ஈஸ்வரா…! என்று உங்கள் உயிரை எண்ணி
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று சொல்லுங்கள்.
4.”உங்களுக்கு எல்லாம் நல்லதாகும்…!” என்று இப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தேனே தவிர வேறு ஒன்றும் இல்லை.

அங்கிருந்த மந்திரவாதிகளோ மக்களை ஏமாற்றி மந்திரத்தாலே பல இன்னல்களைக் கொடுத்து பின் அதை நிவர்த்தி செய்து அதன் மூலம் காசைச் சம்பாரித்தவர்கள்.

நன் வெறும் விபூதியைக் கொடுத்து மக்களை நல்லதாக்கியதும் அவர்களுக்கு வருமானம் கிடைக்கவில்லை. இதை ஏற்கனவே குருநாதர் சொல்லி அனுப்பினார்.

உனக்குப் பல இடைஞ்சல்கள் செய்வார்கள்.. நீ மந்திரவாதிகளின் செயலை அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாகும் என்று தான் அங்கே சின்னப்பநாயக்கன் பாளையத்திற்கு என்னை அனுப்பினார்.

மந்திரவாதிகளைப் பற்றியும் மந்திர உணர்வுகள் எப்படி இயக்கி வேலை செய்கிறது…? என்று தெரிந்து கொள்வதற்காக ஒரு வருடம் அங்கே இருந்தேன்.

1.ஒவ்வொரு சிரமங்களும் எப்படி வருகின்றது…?
2.மனிதன் எந்த நிலையில் கஷ்டப்படுகின்றான்…?
3.மனித உணர்வினால் விளைந்த உணர்வுகள் (ஏவல் செய்வினை) எப்படி இயக்குகின்றது…?
4.அந்த உயிரான்மாக்கள் (ஆவி) எப்படி அந்த வேலைகளைச் செய்கிறது…?
5.மந்திர தந்திரங்களிலிருந்து எப்படி நாம் விடுபடுவது…? என்று
6.இதையெல்லாம் அங்கே வைத்துக் காண்பித்தார் குருநாதர்.

கஷ்டப்பட்டுத் தெரிந்து கொண்ட பிற்பாடு தான் இதையெல்லாம் உங்களிடம் இலேசாகச் சொல்கிறேன். உங்களை அறியாது இயக்கக்கூடிய தீமைகளிலிருந்தெல்லாம் நீங்கள் விடுபட வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன்.

ஆகவே எப்பொழுதெல்லாம் கஷ்டம் என்று வருகிறதோ அந்த நேரத்தில் எல்லாம் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியிலிருக்கும் உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து உங்கள் உடலுக்குள் சேர்த்து அதை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.

இதை ஒரு பழக்கமாகப் பயிற்சியாக எடுத்துக் கொள்ளுங்கள்.
1.காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும் ஒரு பத்து நிமிடம்
2.இரவில் படுக்கப் போகும் முன் ஒரு பத்து நிமிடம்
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று
4.அவசியம் ஒரு பத்து நிமிடமாவது செய்ய வேண்டும்.

மகரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்களுக்கு ஒரு மிகப் பெரிய பாதுகாப்புக் கவசமாக அமையும். மன பலம் மன நலம் கிடைக்கும். உங்களுக்கு யார் இடைஞ்சல் செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றார்களோ அவர்களுக்கும் “தக்க பதில் கிடைக்கும்…!”

செய்து பாருங்கள்…! உங்களை நீங்கள் நம்புங்கள்…!

உபதேசம் கொடுக்கும் ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் இருக்கும் இரகசிய சக்திகள்

Astral divine powers

உபதேசம் கொடுக்கும் ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் இருக்கும் இரகசிய சக்திகள்  

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் யாம் (ஞானகுரு) அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்வதற்காகக்
1.கஷ்டப்படுபவர்களைப் பார்க்கச் சொன்னார்.
2.பல கஷ்டங்களை எனக்கு உண்டாக்கினார்.

நீ ஒன்றும் செய்யவில்லை. மற்றவருக்கு உதவி தான் செய்கிறாய்…!
1.ஆனால் கஷ்டம் உன்னிடம் எப்படி வருகின்றது..?
2.அது உனக்குள் எப்படிக் கஷ்டத்தை உண்டாக்குகின்றது…?

குருநாதர் சிரமப்படுபவர்களை இரக்கமாகப் பார் என்பார். பார்ப்பேன். அப்பொழுது அவர்கள் கஷ்டம் எல்லாம் எனக்குள் வந்துவிடும். சண்டை போடுபவர்களைப் பார்க்கச் சொல்வார். பார்ப்பேன். இரவுக்கெல்லாம் கெட்ட கனவாக வரும்.

திடீரென்று பல ஆக்ஸிடென்ட்டுகளைப் பார்க்கச் சொல்வார். ஒருவருக்கொருவர் அடிபட்டு இறந்திருப்பார்கள். அந்த ஆன்மாக்களை (ஆவி) குருநாதர் காண்பிப்பார்.

ஆற்றிலே விழுந்து தற்கொலையானது…! அடித்துக் கொன்றது…! பயந்து கொண்டு ஓடியது…! இதையெல்லாம் காண்பிக்கின்றார் குருநாதர். இதையெல்லாம் பார்த்த பின்
1.இரவிலே எங்கேயோ என்னை இழுத்துக் கொண்டு போகிற மாதிரி இருக்கின்றது.
2.அடிக்கிற மாதிரி இருக்கின்றது…
3.உதைக்கிற மாதிரி இருக்கின்றது…
4.அப்புறம் எப்படித் தூக்கம் எனக்கு வரும்..!

அப்பொழுது நீ நுகர்ந்த அந்தந்த உணர்வுகள் உன் உடலுக்குள் வந்து என்னென்ன செய்கிறது என்கிற வகையில் எனக்குத் தெரியச் செய்கிறார். பின்… “இதையெல்லாம் எப்படி மாற்றுவது…? என்று அதற்குண்டான உபயாங்களைக் காண்பிக்கின்றார். பல பல சக்திகளையும் கொடுக்கின்றார்.

அடுத்தாற்போல் அன்றைய மந்திரங்களைப் பற்றி அடுத்துச் சொல்கிறார்.
1.மந்திர ஒலிகளை அந்தக் காலங்களில் எப்படி உண்டாக்கினார்கள்…?
2.மந்திரங்களை எப்படி எடுத்து இயக்கினார்கள்…?
3.மந்திர சக்திகளை அரசர்கள் எப்படிப் பயன்படுத்தினார்கள்..?
4.அரசர்களால் செய்யப்பட்ட சில வினைகள் ஏவல் பில்லி சூனியம் இந்த உணர்வுகள் அது எப்படிச் சேர்கிறது…?
5.அதெல்லாம் எதிலிருந்து வருகின்றது…? அந்த உணர்வின் சக்தி எப்படி இருக்கின்றது..?
6.கூடு விட்டுக் கூடு எப்படிப் பாய்ந்தார்கள் என்று பூராவற்றையும் அப்படியே எடுத்துக் காட்டுகின்றார்.

இதை எல்லாம் அந்தந்த நினைவைக் கொடுத்து என்னைக் குருநாதர் எண்ணச் செய்யும் பொழுது “எல்லாம் குவித்து வருகிறது…! அப்பொழுது என் உடலில் பல நிலைகளைச் செய்கிறது.

குருநாதரிடமிருந்து மிகவும் சிரமப்பட்டுத்தான் அறிந்து கொண்டேன். இப்படி மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து தான் முழு அனுபவங்களையும் கொடுத்தார் (கஷ்டத்தைக் கொடுத்துத்தான்).

ஆகையினால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் யாம் கொடுக்கும் வாக்கு என்பது சாதாரணமானதல்ல.
1.ஒரு வார்த்தையைச் சொல்கிறோம் என்றால்
2.எத்தனையோ கஷ்டப்பட்டு அதை நல்லதாக விளைய வைத்துத்தான்
3.வாக்காக உங்களிடம் சொல்கிறோம்.
4.சும்மா வெறும் வார்த்தையாகச் சொல்லவில்லை.

வாக்கு என்பது நல்ல வித்து. அதைக் காப்பாற்றிக் கொள்ளும் நிலைக்கு நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். தவறு யாரும் செய்யவில்லை.

நல்லதை எண்ணிச் செயல்படுகின்றீர்கள். ஆனால் வேதனைப்படுகின்றீர்க்ள். சண்டை போடுவதை வேடிக்கை பார்க்கின்றீர்கள். அந்த உணர்வுகள் உங்களிடம் வந்துவிடுகின்றது.

இதையெல்லாம் நிவர்த்திக்க மக்களுக்கு நீ வழி காட்ட வேண்டும் என்று தான் குருநாதர் கட்டளையிட்டார்.

அதனால் தான் ஓய்வில்லாமல் உபதேசிக்கின்றேன். எது எனக்கு ஓய்வு…?
1.நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும்… சந்தோஷமாக இருக்க வேண்டும்…! என்று
2.நான் நினைக்கும் பொழுது தான் எனக்கு ஓய்வு.
3.நீங்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.
4.எப்படியும் உங்கள் துன்பம் நீங்க வேண்டும்.
5.துன்பங்கள் நீங்கி நீங்கள் விடும் மூச்செல்லாம் இந்த உலகம் முழுவதும் படர வேண்டும்.
6.நல்லதை எண்ணி ஏங்குவோருக்கு அந்த நல்லது நடக்க வேண்டும்.
7.இந்த வகையிலே நான் எண்ணிக் கொண்டேயிருக்கின்றேன்.
8.இந்தச் சொத்தைப் பெறுகின்றேன். வேறு ஒன்றும் இல்லை.

அதே போல் நீங்களும் உங்களுக்குள் நல்லதாக வேண்டும் என்று…. “கொஞ்சம் மனது வைத்து…. எண்ணினீர்கள்…..!” என்றால் நன்றாக இருக்கும்.