இன்றைய உலகில் எது மெய்…? எது பொய்…? என்று நாம் உணரும் வழி

vedavyasa

இன்றைய உலகில் எது மெய்…? எது பொய்…? என்று நாம் உணரும் வழி 

அத்வைதத்திற்கும் விசிஷ்டாத்வைதத்திற்கும் இரண்டு பேருக்கும் சண்டை. இது தான் உண்மை…! இல்லை… இது தான் உண்மை…! என்று.

அடுத்துப் பார்த்தால் அத்வைதம் தான் உண்மை…! இல்லை… துவைதம் தான் உண்மை….! என்று இதிலேயும் சண்டை.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அந்த மெய்ப் பொருள் காணும் நிலைகளை அன்று ஞானிகள் காட்டி இருந்தாலும்
1.இன்று நான் தெரிந்து கொண்டது தான் பெரிது…
2.இல்லை இல்லை…! நான் தெரிந்து கொண்டது தான் பெரிது…! என்று
3.ஒருவருக்கொருவர் போர் செய்யும் நிலைகளில் தான் ஆன்மீகம் உள்ளது.

இதில் வல்லமை எப்படி வருகிறது…? வாய் வன்மை (சொல் வலிமை) இருந்தது என்றால் அவர் சொல்வது தான் பெரிது.
1.வாய்மையின் தன்மையை வன்மையாக்கி
2.வன்மையின் தன்மையைத் தான் நாம் பெரிதாக்கி விடுகின்றோம்.
3.இன்று உலகில் இருக்கக்கூடிய தன்மைகள் இது தான்.

ஒருவர் தவறு செய்து விட்டார் என்றால் அவர் தவறு செய்தார் என்று கற்பனை பண்ணியே போகும்.
1.தவறு செய்தவர்ககள் இதற்கு பதில் சொல்லியே தீர வேண்டும் என்று
2.நாம் அதைத் திருப்பியே சொல்லி விடுவோம்.
3.அவன் தான் பொய் சொன்னான்…!
4.இல்லை இல்லை…! நீ தான் இப்படிச் சொன்னாய் என்று
5.இப்படி இரண்டும் ஒன்றாகிப் போய்விடும்…!
6.குற்றமில்லாதவரைக் குற்றமாக்கி விடுகிறோம்
7.குற்றம் செய்தவரைக் குற்றம் செய்யவில்லை என்கிறோம்.

இன்றைக்கு….. வேறு ஒன்றுமே வேண்டியதில்லை. ஒருவர் மோசமான போக்கிரியாக இருக்கின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள். பல தவறுகளையும் செய்கிறார்.

தவறையெல்லாம் செய்துவிட்டு இங்கே உங்களுக்கு முன்னாடி வந்து
1.என்னைப் பார்…!
2.யாரிடமாவது கேள்…? நான் தவறு செய்தேனா….? என்று மட்டும் சொல்லச் சொல்லு பார்க்கலாம்….! என்று சொன்னால்
3.அவர் தவறு செய்தார்… என்று நீங்கள் சொல்வீர்களா….?
4.இந்த மாதிரி எல்லாம் நீ தவறு செய்திருக்கிறாய்… என்று அவருக்கு முன்னாடி நீங்கள் சொல்ல முடியுமா…?
5.உங்களால் முடியாது (ஏனென்றால் சொன்னால் அடுத்து நமக்குப் பல தொல்லைகள் கொடுப்பான் என்ற பயம் கண்டிப்பாக வரும்)

ஏனென்றால் நம் சுவாசிக்கும் உணர்வுகள் எதுவோ அதற்கென்று ஒரு உணர்வுக்கு உணர்வு அஞ்சும் உணர்வுகள் வரும் – “நேரடியாக இருக்கும் போது…!” (ஆள் இல்லாத போது எல்லாம் பேசுவோம்…!)

ஒருவரிடம் நண்பராகப் பழகுகிறீர்கள். அவர் தன் வாழ்க்கையில் வரும் சிக்கல்களால் சங்கடப்படும் பொழுது அதை உங்களிடம் சொல்கிறார். அதைக் கேட்டு நீங்களும் சங்கடப்படுகின்றீர்கள். நண்பராக இருப்பதால் அவரைப் பார்க்கும் போதெல்லாம் அந்தச் சங்கடம் வரும்.

ஆனால் அதே சமயம் இன்னொரு நண்பர் நம்மிடம் வருகிறார். முதலில் சொன்ன நண்பரைப் பற்றிச் சொல்லத் தொடங்குவார். பார்..! அவர் ரொம்ப மோசமான ஆள். உன்னை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றார்.. என்று சொல்வார்.

இல்லை…! அவர் அப்படிப்பட்டவர் இல்லை நல்லவர் என்று நீங்கள் சொல்வீர்கள். ஆனால் திருப்பித் திருப்பி அவர் மோசமான ஆள் மோசமான ஆள்…! நீங்கள் நினைப்பது போல் நல்லவரில்லை என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்.

இதை இப்படி இரண்டு தரம் பதிய வைத்துக் கொண்ட பின் அடுத்தாற்போல் ஏதாவது சிறு குறை ஏற்பட்டால் போதும்.

ஆஹா…! அன்றைக்கு இதனால் தான் “மோசமான ஆள்…!” என்று அவர் சொன்னார் போல.. என்று அந்த நண்பர் பதிவாக்கியது நினைவுக்கு வரும்.
1.அப்புறம் இந்த நண்பரைக் குறையான உணர்வுடனே தான் பார்க்கச் சொல்லும்.
2.அதற்குத் தகுந்த மாதிரியான சொல்லும் வரும்.
3.குறையின் உணர்வு அதிகமாகி நம்முடைய பார்வைகள் அவர் குறையாக்கும்.
4.நாமே இதை உற்பத்தி செய்து விடுகின்றோம்.

ஆக நம்மை அறியாதபடியே இந்தக் குறையை உருவாக்கி நமக்குள் குறைகளை வளர்த்து பல நிலைகளைச் செய்து விடுகின்றோம். நல்லதைப் பொல்லாததாக மாற்றி விடுகின்றோம். பொல்லாததை நல்லதாக்கிக் கொள்கின்றோம்…!

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. இதைப்போல நிலைகளில் இருந்து நாம் மீள்வது எப்போது…? எப்படி…? எது மெய் எது பொய் என்று எப்படி அறிவது…?

நம் வாழ்க்கையில் நம்மை அறியாமல் எத்தனையோ உணர்வுகள் நம் நல்ல எண்ணத்தை இருளாக்குகின்றது. அந்த இருளிலிருந்து விடுபடும் சக்திகளை நாம் பெறுவதற்காகத்தான் ஆலயங்களில் விளைக்கை வைத்துக் காட்டுகின்றார்கள்.

தீப ஆராதனை காட்டியதும் அங்கே மறைந்த பொருள்களை நாம் தெளிவாகப் பார்க்க முடிகின்றது.

1.தீபத்தைக் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது துவைதம்…!
2.தீபத்தின் வெளிச்சத்தால் இருள் மறைந்து அங்கே பொருள் தெரிவது போல எங்கள் வாழ்க்கையிலே பொருளறிந்து செயல்படும் திறன் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி “அந்தச் சக்தியை” நமக்குள் சுவாசிக்க வேண்டும். – இது அத்வைதம்…!
3.பொருளறிந்து செயல்படும் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் அந்தப் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் நாங்கள் பார்க்கும் அனைவரும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் இந்த ஆலயம வரும் அனைவரும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் என்று இதை எண்ணி எண்ணி நமக்குள் வளர்த்துக் கொண்டால் அந்தச் சக்திகள் நம் உடலுக்குள் விளைந்து… “உயிருடன் சேரும் பொழுது” விசிஷ்டாத்வைதம்…!

கண்ணுக்குப் புலப்படுவது துவைதம். சூட்சமமாக இருப்பது அத்வைதம். சூட்சமாக இருப்பதைக் கவரும் பொழுது அது உறைந்து உயிருடன் இணைந்து அதன் அறிவாக இயக்கப்படும் பொழுது விசிஷ்டாத்வைதம்.
1.அதாவது, அந்தச் சக்தியாக… “அதுவாகவே நாம் ஆகின்றோம்…!
2.ஆலயங்களில் காட்டப்பட்டுள்ள பேருண்மை இது.
3.ஆலயத்தில் காட்டப்பட்டுள்ள அந்தத் தெய்வ குணத்தை ஒவ்வொருவரும் வளர்ப்போம்
4.மெய் வழி சென்று மெய் ஞானம் பெற்று அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்.

 

பிள்ளையார் “சுழி…” இந்தப் பிள்ளை யார்…? என்று கேள்விக் குறியாகப் போட்டு ஏன் காண்பித்தார்கள்…? ஞானிகள்

Image

Ganesamoorthy

பிள்ளையார் “சுழி…” இந்தப் பிள்ளை யார்…? என்று கேள்விக் குறியாகப் போட்டு ஏன் காண்பித்தார்கள்…? ஞானிகள்

 

நமக்குள் வீற்றிருந்து மனிதனாக உருவாக்கிக் கெட்டதை நீக்கி நல்லதை உருபெறச் செய்யும் சக்தி நம் உயிர் தான். உயிரே கடவுள்…!

ஆகவே நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் அந்த உயிரான ஈசனுக்கு எந்த விதமான எரிச்சலைக் கொடுக்காத வண்ணம் நல்ல உணர்வுகளைப் பெறச் செய்வதற்காக வேண்டித் தான் ஆலயங்களை அன்று உருவாக்கியுள்ளார்கள் ஞானிகள்.

1.நம் உடலில் பட்ட அழுக்கைத் தினசரி குளித்து நீக்குவதுபோல்
2.உயிரான ஈசனிடம் படும் அசுத்தங்களைத் துடைத்திட
3.அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் சேர்க்கச் செய்து
4.அந்த ஆற்றல் மிக்க சக்தியை நம் உடலுக்குள் செயல்படுத்துவதற்கே
5.அபிஷேகங்களையும் ஆராதனைகளையும் தெய்வச் சிலைக்குக் காட்டினார்கள் காஞானிகள்.

தெய்வத்திற்குப் படைக்கப்பட்டிருக்கும் கனியைப் பார்க்கும் போது அந்தக் கனியின் சுவையைப் போல எங்கள் சொல்லுக்குள் இனிமை பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. எங்கள் சொல்லைக் கேட்போர் உள்ளங்களில் அந்த மகிழ்ச்சி பெற அருள்வாய் ஈஸ்வரா.

ஆலயத்திற்கு வருவோர் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும். எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்.

எங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும். அவர்கள் வாழ்வில் இருள்கள் நீங்க வேண்டும். மெய்ப் பொருள் காண வேண்டும்.

மலரைப் போல மணம் நாங்கள் பெற வேண்டும். எங்களுக்குள் ஒற்றுமை ஏற்படும் அருள் சக்திகள் வளர வேண்டும்.
1.இந்த உலகெங்கிலும் உள்ள எல்லா மனிதரையும் இயக்கிக் கொண்டிருக்கும்
2.ஈசனின் அருள் நாங்கள் பெற வேண்டும் என்று
3.இவ்வாறு நமக்குள் கலந்து நாம் அனைவரும் ஒன்று என்ற நிலையில்
4.அந்த மகிழ்ச்சியின் நிலைகள் கொண்டு எல்லோரும் இணைய வேண்டும் என்ற
5.இந்த உயர்ந்த பண்புகளை ஆலயத்தின் பண்பாகக் காட்டினார்கள் ஞானிகள்.

அனைவரும் ஒன்றாகச் சேர்த்து தேரை வடம் பிடித்து இழுப்பதைப் போல நம் அனைவருடைய எண்ணங்களையும் ஒன்றாகச் சேர்க்கச் செய்து இந்தக் காற்றில் கலந்துள்ள ஞானிகளின் அருள் சக்தியை எல்லோருக்கும் கிடைக்கச் செய்தார்கள் ஞானிகள்.

சூரியக் குடும்பம் எப்படிப் பல உணர்வின் தன்மைகள் கொண்டாலும் அந்த உணர்வின் தன்மைகள் ஒன்றாக இயக்கி இணைந்த நிலைகள் கொண்டு ஒரு பிரபஞ்சமாக ஒற்றுமையாக வாழ்கின்றது.

1.சூரியனின் இயக்கத்தில் பல கோள்களாகி கோளுக்குள் பூமியாகி
2.பூமிக்குள் தாவர இனமாகி தாவர இனத்தின் சத்தை உயிரணுக்கள் கவர்ந்து உடல்கள் பெற்று
3.பல பல உடல்கள் மாறி மனிதனான பின் உணர்வுகளை ஒளியாக மாற்றி
4.என்றுமே அழியாத ஒளிச் சரீரமாகப் பெற வேண்டும் என்ற
5,மெய் உணர்வின் தன்மையை உணர்த்துவதற்குத் தான் ஆலயங்களை அமைத்தார்கள்.

அதைத் தெரியப்படுத்தி அந்த உணர்ச்சியை உந்தச் செய்து… நாம் யார்…? என்று அறிந்து கொள்வதற்காக இந்தப் பிள்ளை யார்…! யானையின் தலையைப் போட்டு மனித உடலைப் போட்டுக் கேள்விக் குறி போட்டுக் காட்டினார்கள்.

நம் மனித உடலை உருவாக்கிய ஈசனின் அணைப்பிலே அந்த மெய் ஒளி காட்டிய அந்த மெய் ஒளியின் தன்மையான (மெய் ஞானியாக) அந்தப் பிள்ளையாக ஆகப் போகின்றீர்களா…?

(அல்லது)

இந்த வாழ்க்கையிலே “வாழ்ந்ததே போதும்…!” என்ற நிலைகள் கொண்டு ஆசையினால் வெறுப்பின் நிலைகள் ஆகி…
1.ஒரு உடலுக்குள் சென்று பேயாக ஆட்டிப் படைக்கும் சக்தியாகப் போகின்றீர்களா…?
2.ஒரு உடலுக்குள் சென்று அந்த நோயாக வேதனைப்படச் செய்யப் போகின்றீர்களா…?
3.இது எல்லாம் வளர்த்த பின் விஷம் கொண்ட உயிரினங்களாகப் பிறக்கப் போகின்றீர்களா…? என்று
4.இதை (தனக்குள் கேள்வியாகக் கேட்டு) உணர்த்துவதற்காகத்தான் விநாயகருக்குக் கேள்விக் குறியைப் போட்டுக் காட்டியுள்ளார்கள்.
5.(ஞானிகள் பிள்ளையார் “சுழி…!?” என்று கேள்விக் குறியாகப் போட்டுக் காட்டினால் நாம் “உ…” போட்டால் நாம் தொடங்கும் காரியத்திற்கெல்லாம் நல்லது என்று இப்படித்தான் எண்ணுகிறோம்)

ஏனென்றால் மனிதனாகப் பிறப்பது அரிது. மனிதனாகத் தோன்றினாலே முழு முதல் கடவுள். ஆகவே நாம் உருவாக்கும் நிலையில் இருக்கின்றோம். பேரருள் உணர்வுகளை எடுத்துப் பேரொளியை நமக்குள் உருவாக்க வேண்டும்.

இந்த உடலை விட்டுச் சென்றால் விண்ணுலகம் சென்ற அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குள் சென்றடைய வேண்டும்.

நாம் எடுக்கும் ஒவ்வொரு உணர்வையும் ஒளியாக மாற்றும் நிலைகள் பெற வேண்டும் என்று நமது குருநாதரும் மற்ற மகா ஞானிகளும் தெளிவாக உணர்த்தியுள்ளார்கள்.

அவர்கள் காட்டும் வழியில் நாம் செல்வோம். அந்த அருள் வழி நாம் பெறுவோம்.

குருநாதர் வழியில் தான் யாம் உங்கள் பொட்டில் (உயிரில்) தொட்டுக் காண்பித்துக் கொண்டிருக்கின்றோம்…!

Image

Third eye agastyar

குருநாதர் வழியில் தான் யாம் உங்கள் பொட்டில் (உயிரில்) தொட்டுக் காண்பித்துக் கொண்டிருக்கின்றோம்…! 

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இயக்கிக் கொண்டிருக்கும் குணங்களைத் (உணர்வின் இயக்கங்களை) தெய்வங்களாகக் காட்டி
1.சந்தர்ப்பம் எதை நம்முடன் இணைக்கின்றது…
2.சந்தர்ப்பம் எதை நமக்குள் விளைவிக்கின்றது…? என்ற நிலையைத்
3.ஞானிகள் தெளிவாக உணர்த்தியிருந்தாலும்
4.காலத்தால் நாம் அதை அறிய முடியாத நிலைகள் ஆகிவிட்டது.

இந்த விஞ்ஞான உலகம் எல்லாவற்றையும் அழித்திடும் காலமாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது. மனிதனின் சிந்திக்கும் நிலைகள் அழிந்து கொண்டிருக்கின்றது. மனித இனமே வீழ்ந்திடும் நிலைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றது.

இந்தக் காலகட்டத்தில் இப்பொழுதாவது அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குள் செல்லும் உணர்வை வளர்த்துக் கொண்டால் உங்களுக்கு நல்லது.
1.எல்லோரும் பொட்டில் தொட்டுக் காண்பிக்கிறார்கள்,
2.குண்டலினியைத் தொட்டுக் காண்பிக்கிறார்கள்.
3.முதுகு தண்டைத் தொட்டுக் காண்பித்தார்…! அப்படியே ஜிர்…ர்ர்…! என்று இழுத்தது
4.ஆனால் சாமி (ஞானகுரு) இப்படியெல்லாம் ஒன்றுமே கொடுக்கவில்லையே…! என்று
5.நீங்கள் ஏமாந்து போய் “இதை விட்டு விடாதீர்கள்…!”

ஏனென்றால்
1.உங்களுக்குள் இருக்கும் ஒவ்வொரு உணர்வுக்குள்ளும்
2.உணர்வின் இயக்கத்தை உள்ளூர அதைத் தொட்டுக் காண்பித்து
3.அந்த இயக்கத்தின் உணர்வை உங்களுக்குள் அறியச் செய்து
4.அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு அது உங்களுக்குள் கட்டுப்பட்டு இயக்கும் சக்தியாக மாற்றுவதற்கு
5.அந்தந்தக் காலத்தில் ஒவ்வொரு மகரிஷியின் அருள் ஒளியை உங்கள் உடலுக்குள் சேர்த்து
6.பல விதமான குணத்திற்குள்ளும் உணர்வுக்குள்ளும் புகுத்தச் செய்து
7.உபதேச வாயிலாகக் கேட்டுணரச் செய்து பதியச் செய்து கொண்டிருக்கின்றோம்.
8.இது தான் தொட்டு காண்பித்தல் என்பது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழி இது தான். குருநாதர் இப்படித் தான் எனக்குத் (ஞானகுரு) தொட்டுக் காண்பித்தார். அதைத் தான் உங்களுக்குள்ளும் நான் தொட்டுக் காண்பிக்கிறேன்.

மெய் ஞானியின் அருள் சக்தியை ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இணைத்து அந்த உணர்வின் தன்மையை இயக்கச் சக்தியாக மாற்றி விடு…!
1.“மக்கள் அனைவரையும் மெய் ஞானிகளாக மாற்ற வேண்டும்…!”
2.எல்லா மக்களும் விண்ணுலக ஆற்றலைக் கண்டுணர வேண்டும்…! என்ற இந்த முழுமையான எண்ணங்கள் கொண்டு அதைச் செய்…!
3.ஆனால் போற்றும் நிலைகள் கொண்டு உபதேசித்து விடாதே…
4.போற்றும் நிலைக்காக ஏங்கி விடாதே…
5.உன்னைப் போற்றும் இயக்க நிலைகளுக்கு ஏங்கி விடாதே…
6.போற்றும் உணர்வைக் கலந்து பதியச் செய்து விடாதே…!
7.அது உன்னையும் ஏமாற்றிவிடும் கேட்போர்கள் உணர்வையும் மாற்றிவிடும் என்று தெளிவாக குருநாதர் எனக்கு உணர்த்தினார்.

ஆகவே இந்த உடலை விட்டு எப்பொழுது உயிரான்மா சென்றாலும் என்றும் நிலையான அழியா ஒளிச் சரீரம் பெறுவோம் என்ற இந்த உணர்வினை நீங்கள் வளர்த்து அங்கே மகரிஷிகள் வாழும் சப்தரிஷி மண்டலத்திற்குள் செல்வோம்…! என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.

நாம் பார்ப்பதோ வேடிக்கை…! ஆனால் சாப அலைகள் நமக்குள் வந்து என்னென்ன வேலைகள் செய்கிறது… என்று தெரிந்து கொள்ளுங்கள்…!

curse-quarrel

நாம் பார்ப்பதோ வேடிக்கை…! ஆனால் சாப அலைகள் நமக்குள் வந்து என்னென்ன வேலைகள் செய்கிறது… என்று தெரிந்து கொள்ளுங்கள்…!

காலையில் எழுந்து நல்ல காரியங்களைச் செய்திருப்பினும் நாம் ரோட்டில் போகும் பொழுது சந்தர்ப்பம் ஒருவன் சாபமிடுவதைப் பார்க்க நேருகின்றது.

ஒருவன் இன்னொருவரை ஏசிப் பேசுகின்றான். உன் குடும்பம் நாசமாகப் போகும்… உன் வியாபாரம் எல்லாம் நஷ்டமாகும்…! என்று சாபமிடுகின்றான். அவன் பேசிய உணர்வலைகள் அனைத்தையும் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. அலைகளாக மாற்றிப் படரச் செய்கின்றது.

ஏசுவோனுடைய பேச்சைக் கேட்டதும் அடுத்தவனும் எதிர் பதிலைக் கொடுப்பான். ஒருவருக்கொருவர் ஏசிப் பேசும் பொழுது அதற்கு ஈடாக அடுத்தவர் பேசும் பொழுது அதனின் வலு அங்கே பெறுகின்றது.

ஆனால் சாதாரணமாக நாம் வேடிக்கை பார்த்தாலும்
1.அப்பொழுது அந்த இரண்டு பேர் ஏசுவதையும் சாபமிடுவதையும் நாம் நுகர்ந்து கொள்கின்றோம்
2.அது கடும் தீமைகளை விளைய வைக்கும் சாப அலைகளாக நமக்குள் படர்ந்து விடுகின்றது.
3.நம்மை அறியாமலே இந்தச் சாப அலைகள் நமக்குள் வந்த பின்
4.அவர்கள் சாபமிட்ட உணர்வலைகள் நம் ஆன்மாவில் (நம்மைத்) தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
5.சாபமிட்ட உணர்வுகள் நம் உடலுக்குள் விளையத் தொடங்கும்.

விளைந்த பின் அவர்கள் எப்படிச் சாபமிட்டார்களோ அதைப் போன்று ஒரு சிறு குறையைக் கண்டாலும்… “தொலைந்து போகிறவனே…! ஏண்டா… இப்படிச் செய்து கொண்டிருக்கின்றாய்…?” என்று தான் சொல்ல வேண்டி வரும்.

சாபமிடும் உணர்வுகள் நமக்குள்ளும் வளரத் தொடங்கி நல்ல குணங்கள் நமக்குள் சீர் கெடும் நிலைகள் ஆகி அது தொலைந்து போகும் நிலைக்கே வருகின்றது. இதைப் போன்ற உணர்வுகள் நமக்குள் அழுக்காகச் சேர்கின்றது.

சாதாரண மனிதன் கேட்கும் பொழுதே இப்படி என்றால் கர்ப்பிணிப் பெண்கள் இத்தகைய சாபமிடும் உணர்வுகளைக் கேட்க நேர்ந்தால் அந்தக் கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்குள் அந்த உணர்வின் தன்மை ஆழமாகப் பதிந்து விடுகின்றது.

விஞ்ஞான ரீதியாக ஒரு செடியின் வித்துக்குள் மற்ற தாவர இனச் சத்தை இணைத்து இரண்டறச் சேர்த்து வீரிய வித்தாக உருவாக்குகின்றார்கள். அது போல கருவுற்றிருக்கும் தாய் எதை உற்று நோக்குகின்றதோ அது கருவுக்குள் இணைந்து உருவாகத் தொடங்கி விடுகின்றது.

யாம் ஞானிகளைப் பற்றி உபதேசிக்கின்றோம். அந்த உயர்ந்த ஞானியின் சொல்லை ஒரு கர்ப்பிணி உற்றுக் கேட்டால் அந்தத் தத்துவத்தின் உணர்வுகள் கருவிற்குள் விளையும் பருவம் பெறுகின்றது. பின் அந்தக் குழந்தை பிறந்த பின் தத்துவ ஞானியாகவே வளரத் தொடங்கி விடுகின்றான்.

ஆனால் அதே சமயத்தில் வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில் மற்றவர்கள் சாபமிடும் உணர்வுகளைத் கர்ப்பிணித் தாய் உற்றுப் பார்த்தால் தாய்க்கு ஊழ்வினையாகச் சேர்கின்றது. கருவிலிருக்கும் குழந்தைக்கோ பூர்வ புண்ணியமாக அமைந்து விடுகின்றது.

கண் தெரியாது குருடாக கை கால் முடமாகிவிடும் என்று ஒருவன் சாபமிடுகின்றான் என்றால் அவனுக்குள் விளைந்த இந்த உணர்வுகளைக் கர்ப்பமாக இருக்கும் தாய் உற்றுப் பார்த்து நுகர்ந்ததென்றால் அந்தக் கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்குப் பதிவாகி விடுகின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு ஒலி நாடாவில் பதிவு செய்கின்றார்கள். அதைக் கம்ப்யூட்டரில் இணைத்துக் கொண்ட பின் எலெக்ட்ரானிக் முறையில் மற்ற இயந்திரங்களை இயக்கத் தொடங்கி விடுகின்றார்கள்.

எதை ஆணையிடுகின்றானோ அந்த உணர்வின் தன்மைகள் அந்த ஒலிப் பேழைக்குள் (CHIP) கொண்டு அதனதன் தருணத்தில் அந்த இயந்திரங்களை ஓட்டுகின்றது.

இதைப் போன்று தான் மனிதன் தனக்குள் விளைய வைத்த உணர்வின் சத்து கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்கு இந்தச் சொல்லின் உணர்வுகள் அங்கே பதிந்துவிடுகின்றது.

கடுமையாகச் சொல்லும் உணர்வுகளைக் கேட்கும் பொழுது நம்மைக் கோப நிலைகளுக்கு ஆளாக்கி நல்ல குணங்களுக்கு எதிர்மறையாக நாம் இயங்கத் தொடங்குகின்றோம்.

இதைப் போல சாபமிடும் பொழுது உன் கை கால்கள் முடமாகிவிடும் என்று சொன்னால் “நீயும் அதுவாகத்தான் ஆகின்றாய்…! என்று அதே உணர்வின் தன்மையை நாமும் திருப்பிப் பேசுகின்றோம்.

இப்படி எதிர்மறையாகப் பேசும் பொழுது சிறுகச் சிறுக விளைந்து இது கொடூர நிலைகளாக வாத நோய்களாகக விளையும்.

அதே சமயம் இப்படிப்பட்ட சாப உணர்வுகள் கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்குப் பதிவானால்
1.குழந்தையாகக் கருவுற்றுக் கண்களும் உடலும் உருவாகும் பொழுது
2.நுகர்ந்த உணர்வுக்கொப்ப உறுப்புகளை மாற்றியமைத்து விடுகின்றது.
3.கண்கள் குருடாகவும் முடமான குழந்தையாகவும் அது விளைந்து விடுகின்றது.

ஆனால் குழந்தை தவறு செய்யவில்லை. தாயும் தவறு செய்யவில்லை. உலகில் இயக்கும் உணர்வுகளை உற்றுப் பார்க்கும் பொழுது அந்த உணர்வின் சத்து உடலுக்குள் பதிவாகி விடுகின்றது.

இதைப் போல கருவிலே இருக்கப்படும் பொழுது கடுமையான நோயுற்றவரை அந்தத் தாய் உற்றுப் பார்க்குமே என்றால் அது தாய்க்கு வினையாகச் சேர்கின்றது. ஆனால்
1.கருவிலே இருக்கும் குழந்தைக்கு இது பதிவாகி
2.எந்த வயதில் நோயுற்ற நிலைகளை இங்கே உற்றுப் பார்த்ததோ
3.அதே வயதின் பருவம் குழந்தைக்கு வரும்போது அதே நோய் வந்துவிடும்.
4.குழந்தை எந்தத் தவறும் செய்யவில்லை.

ஆக இவை எல்லாம் மனிதனாக வாழும் நாம் மனிதனான பின் வந்து சேர்ந்ததுமல்ல. ஆனால் கருவிலே விளையும் பொழுது சேர்ந்த உணர்வுகள் அதன் தொடர் வரிசையிலே பூர்வ புண்ணியத்தில் அமைந்தது தான் இந்த வாழ்க்கையில் அழைத்துச் செல்லும்.

பூர்வ புண்ணியமாக அமைந்ததை அது நாம் நுகரும் அனைத்துமே வினையாகச் சேர்த்து வினைக்கு நாயகனாக உருவாக்கி இந்த உணர்வின் செயலாக உருவாக்குகிறது என்பதனை மகரிஷிகளால் விநாயகர் தத்துவத்தில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

நல்ல மனிதனாகவும் பண்பு கொண்ட மனிதனாகவும் நாம் இருப்பினும் இந்த நிலைகள் தொடர் வரிசையிலே தான் நம்மை இயக்குகிறது.

நாம் எத்தனையோ கோடிச் சரீரங்களில் தீமைகளிலிருந்து மீட்டிடும் உணர்வைச் சேர்த்துச் சேர்த்துத் தீமையை அகற்றிடும் சக்தியாக மனிதனாக வந்தாலும் நம் வாழ்க்கையின் சந்தர்ப்ப பேதத்தால் மற்ற தீமைகளைக் கேட்டுணர்ந்து பார்த்துணர்ந்த பின் இந்த உணர்வுகளே நமக்குள் அதிகமாக விளைந்து விடுகின்றது.

ஆக நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் தீமைகளைத்தான் பார்க்க முடிகின்றது. நாம் உற்றுப் பார்த்த உணர்வுகள் வினையாகச் சேர்கின்றது. நம் உடலிலே அழுக்குகள் சேர்ந்து கொண்டே வருகின்றது.

இதிலிருந்து எவ்வாறு மீள்வது…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

இதைப் பதிவு செய்தாலே… கண்களால் பல அற்புதங்களை நீங்கள் காணலாம்…!

hare-krishna-hare-krishna

இதைப் பதிவு செய்தாலே… கண்களால் பல அற்புதங்களை நீங்கள் காணலாம்…!

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நல்லது செய்வதாக எண்ணி ஒரு மனிதன் வேதனைப்படுபதைப் பார்த்து நுகர்ந்து அறிந்து கொள்கின்றீர்கள். அதன் பிறகு அவருக்கு நீங்கள் நல்ல உதவிகளைச் செய்கின்றீர்கள்.

ஆனாலும் உங்கள் நல்லது செய்யும் எண்ணத்திற்குள் அவர் வேதனைப்பட்ட அந்த வேதனையான விஷமான உணர்வுகள் இணைந்து
1.உங்கள் நல்ல அறிவை மறக்கச் செய்கின்றது.
2.இதான் சிறு திரை… சித்திரை…!
3.அந்தச் சிறு திரையை உடனே நீக்க வேண்டும்.

நாம் வேதனைப்படுவோரைப் பார்த்தாலும் அந்த வேதனையான உணர்வுகள் நம் நல்ல எண்ணங்களில் இணைந்திடாது தடுக்க அடுத்து என்ன செய்ய வேண்டும்…?

1.அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் வேண்டி
2.இந்த உணர்வினை நம் நல்ல அறிவில் இணைத்து நம் நல்ல அறிவு மங்கிடாது
3.எதனையுமே தெளிவாக அறிந்திடும் தெரிந்திடும் அந்த அறிவை நாம் வளர்த்திடல் வேண்டும்.

இல்லையென்றால் வேதனையான விஷத்தின் தன்மை நல்ல அறிவில் கலந்து விட்டால்
1.மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை உங்களால் நுகர முடியாது.
2.நுகர்ந்தாலும் உங்கள் வேதனையை நிவர்த்திக்க முடியாது.

ஒரு வேதனைப்பட்ட மனிதனின் உணர்வுகள் நம் நல்ல அறிவை மறைத்த பிற்பாடு இன்னொரு மனிதன் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து இதை மாற்ற முடியாது.

அப்படி அதை மாற்ற வேண்டும் என்றால் வேதனையான நஞ்சினை நீக்கிய அந்த மகரிஷியின் உணர்வை நீங்கள் ஏங்கிப் பெற்று இதனுடன் இணைக்க வேண்டும். இணைத்தால் அந்த நஞ்சு ஒடுங்கும்..!

ஆகவே அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்தவும் உங்கள் நினைவாற்றலை மகரிஷிகளின் பால் கொண்டு செல்வதற்கும் தான் இந்த உபதேசமே செய்கின்றோம்.

இப்பொழுது இதை நீங்கள் படித்துக் கொண்டு இருக்கும் போதே
1.உங்கள் நினைவாற்றலை மகரிஷிகளுடன் இணைத்துக் கொண்டால்
2.அந்த வேதனையான உணர்வுகளை நுகர்வதைத் தவிர்த்து
3.அருள் உணர்வை நுகர முடியும். மகிழ்ச்சியை உண்டாக்க முடியும்.

தீமைகளை வென்று நஞ்சினை வெல்லும் ஆற்றலை வலு பெறச் செய்வதற்காகத்தான் உங்களுக்குத் தெரியாமலேயே இந்த உபதேசத்தின் வாயிலாக மகரிஷிகளின் சக்தி வாய்ந்த உணர்வுகளை உங்களுக்குள் சேர்ப்பிக்கின்றோம்.

உங்கள் நல்ல அறிவைக் காக்க இது உதவும். இதைப் படித்துப் பதிவு செய்த பின் மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்ற நினைவினைச் செலுத்தினாலே போதும்.

மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் ஊடுருவி உடலுக்குள் சென்று உங்கள் நல்ல அறிவை மறைத்துக் கொண்டு இருக்கும் அந்த நஞ்சான இருளை நீக்கி ஒளியாக மாற்றும்.

திரும்பத் திரும்பச் சொல்கிறோம் என்று எண்ண வேண்டாம். மீண்டும் உங்களை ஞாபகப்படுத்தி அந்த ஆற்றலைப் பெறச் செய்கின்றோம். திருப்பித் திருப்பிச் சொன்னால் தான் உங்களுக்குள் அந்த அர்த்தத்தை உணர முடியும்.

அதாவது தீமைகளையும் துன்பங்களையும் வேதனைகளையும் கண் கொண்டு பார்த்ததும் உங்கள் நல்ல அறிவு இருண்டு விடுகின்றது. உங்கள் செயலாக்கங்கள் மாறுகின்றது. இது வளர்ந்து விட்டால் அந்த நல்ல அறிவின் செயலே முழுமையாக இழந்து விடுகின்றது.

அது எப்படிக் கண்கள் வழியாக உங்களுக்குள் புகுகின்றதோ அதே போல இந்த உபதேசத்தின் வாயிலாக
1.மகரிஷிகளின் உணர்வலைகளை உங்கள் கண்ணின் நினைவலைகளுக்குக் கொண்டு வரச் செய்து
2.உங்கள் கண்ணின் வாயிலாகவே பதியச் செய்து கொண்டிருக்கின்றோம்.
3.உங்களை அறியாமலே பதியச் செய்கின்றோம்.
4.மீண்டும் எண்ணும் போது உங்களை அறியாமலே உங்களுக்குள் பல அற்பதங்கள் நடக்கும்.
5.தீமைகளை அடக்கும் அந்தத் தீமைகளை நீக்கிடும் ஆற்றல் நீங்கள் பெறுகின்றீர்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இட்ட் கட்டளைப்படி உங்களுக்குள் மெய் ஞானிகளின் உணர்வைத் தூண்டச் செய்து அதைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம். அதை நீங்கள் ஏங்கிப் பெற்று ஒவ்வொரு நொடியிலேயும் உங்கள் நல்ல அறிவைத் தெளிவாக்கிக் கொண்டு வர முடியும்.

அவ்வாறு தெளிவாக்கிக் கொண்ட பின் உங்கள் வாழ்க்கையில் இது முழுமை பெற்றால் பூரண நிலாவாக இருப்பது போல் உங்கள் உடலிலுள்ள உணர்வுகள் அனைத்தும் ஒளியின் சிகரமாக மாறி பிறவியில்லா நிலை அடைய முடியும்.

ஆகவே
1.அந்த நிலையைப் பெறச் செய்வதற்கும்
2.இந்த வாழ்க்கையில் அறியாமல் வரும் தீமைகளை அகற்றி
3.தீமையற்ற செயலாக உடலுக்குள் வளர்த்து
4.நம் எண்ணத்தால் தீமையற்ற செயல்கள் வராதபடி தடுத்து
5.நம்மை அது செயலாக்காதபடி காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம் (ஞானகுரு)…!

வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தியானம் எப்படிச் செய்ய வேண்டும் என்ற பயிற்சி முறைகள்

Soul serene cleaning

வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தியானம் எப்படிச் செய்ய வேண்டும் என்ற பயிற்சி முறைகள் 

சாதாரணமாக ஒரு நண்பன் உங்களிடம் துன்பம் என்று சொல்லும் போது கேட்டுணர்ந்து நுகர்ந்து அவர்களுக்கு நீங்கள் உதவி செய்தாலும் அந்தத் துன்ப உணர்வுகள் உங்களுக்குள் சேராவண்ணம் தடுக்க என்ன செய்ய வேண்டும்…?

உதாரணமாக
1.இரும்புக்குள் இருக்கும் வலுவான சத்தை இழக்கச் செய்யாமல்
2.அதைப் புடம் போட்டுப் பஸ்பமாக்கி
3.அதை ஆற்றல்மிக்க ஆக்கச் சக்தியாக மாற்றிப் பயன்படுத்துகின்றோம்.

அதைப் போல உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கேட்டறிந்த அந்தத் துன்ப உணர்வுகள் உங்களுக்குள் தீய விளைவுகள் உருவாக்காதபடி மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும்.

அந்த மாமகரிஷிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கி விஷமான சக்திகளைப் புடமிட்டு அந்த உணர்வின் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார்கள். நமக்கு முன்னாடி இருக்கின்றது.

அந்த உணர்வுகளை உங்கள் உடலுக்குள் சேர்த்தவுடனே புடம் போட்டு எடுத்தது போன்றே உங்களையும் உங்கள் ஆன்மாவையும் பரிசுத்தப்படுத்துகின்றது.

ஒரு ஆன்டென்னாவைச் சரியான முறையில் வைத்தபின் வெகு தொலைவில் இருந்து வரும் டி.வி. அலைகளையும் மற்ற அதைப் போன்ற அலைகளையும் அது கவர்ந்து தெளிவாக உணர்த்துகின்றது. அதைப் போல
1.உங்கள் நினைவாற்றல் அந்த மகரிஷிகளை எண்ணி ஏங்கும் போதெல்லாம்
2.அந்த அருள் சக்தியை நீங்கள் கவர்ந்து
3.அந்த நன்மையின் சக்தியை என்றும் நிலைத்திருக்கச் செய்ய முடியும்.

நாம் கெட்டதைக் கேட்டாலும் கெட்டதைப் பார்த்தாலும் கெட்டதை எண்ணினாலும் கெட்டதைப் பேசி விட்டாலும் அடுத்த கணமே ஈஸ்வரா…! என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ண வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஒரு நிமிடம் தியானியுங்கள்.
2.பின் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று கண்களை மூடி ஒரு நிமிடம் தியானியுங்கள்.
3.கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி கவர்ந்த அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உடலுக்குள் பாய்ச்ச வேண்டும்.
4.இப்படித் திரும்பத் திரும்பச் செய்தால் இதற்குப் பெயர் தான் ஆத்ம சுத்தி.

(1) வெளியில் செல்லும் பொழுது:-
நீங்கள் வீட்டை விட்டுச் செல்லும் போதெல்லாம் ஆத்ம சுத்தி செய்து விட்டு வெளியிலே செல்லுங்கள். எந்த காரியத்திற்காக யாரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் செல்கிறீர்களோ அவரை எண்ணி
1.எங்கள் பார்வை அவரை நல்லதாக்க வேண்டும்.
2.எங்கள் சொல் இனிமை பெற வேண்டும்.
3.எங்களைப் பார்க்கும் போது அவர் நல்லது செய்து தரக்கூடிய எண்ணங்கள் தோன்ற வேண்டும் என்று
4.இப்படி எண்ணிவிட்டுச் செல்லுங்கள்.

(2) கடைக்கு வியாபாரத்திற்குச் செல்லும் பொழுது:-
நீங்கள் கடையில் வியாபாரத்திற்குப் போகும் முன் ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

எங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும். அவர்கள் உடல்கள் நலம் பெற வேண்டும். அவர்கள் வாழ்விலே மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

கடைக்குப் போனபின் இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்து விட்டு உங்கள் கடையில் உள்ள சரக்குகள் அனைத்தையும் பார்த்து இதைப் பயன்படுத்துவோர் அனைவரும்
1.மகரிஷியின் அருள் சக்தியால் அவர்கள் உடல் நலமும் மன பலமும் பெற வேண்டும்.
2.அவர்கள் வாழ்விலே மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ணி விட்டு வியாபாரத்தைத் தொடங்குங்கள்.

(3) தொழிலுக்குச் செல்லும் பொழுது:-
தொழிலுக்குப் போனாலும் ஆத்ம சுத்தி செய்து விட்டுப் புறப்படுங்கள். அங்கே அமர்ந்து தொழில் செய்யப் போகும் போது ஆத்ம சுத்தி செய்து விட்டு உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களை எண்ணி
1.அவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.என் பார்வையால் அவர்கள் மன பலமும் உடல் நலமும் பெற வேண்டும்.
3.தொழிலைத் திறம்படச் செய்யும் சக்தியாக எங்கள் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும்.
4.எங்கள் சொல் அவர்களை இனிமை பெறச் செய்ய வேண்டும்.
5.எங்கள் செயல் அவர்களைப் புனிதப்படுத்த வேண்டும் என்று எண்ணுங்கள்.

அதே மாதிரி எங்கள் பார்வை மேலதிகாரிக்கு நல்லதாக இருக்க வேண்டும். எங்கள் செயல் அவர் போற்றும் நிலைக்கு வர வேண்டும். எங்கள் சொல் அவருக்கு இனிமையாக இருக்க வேண்டும். அவர்கள் எங்களைப் பார்க்கும் போது நல்ல செயல்கள் செய்து தரும் நிலைகள் வர வேண்டும் என்று எண்ணுங்கள்.

நாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களைப் பயன்படுத்துவோர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று இதை மாதிரி எண்ணிவிட்டுத் தொழில் செய்யுங்கள்.

(4) நோயாளிகளைப் பார்க்கும் பொழுது:-
நோயாளிகளைப் பார்த்தால் உடனே அடுத்து ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

மகரிஷியின் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள். அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் உங்கள் நோய்கள் நீங்கும். நீங்கள் நலம் பெறுவீர்கள் என்று இந்த வாக்கைச் சொல்லுங்கள்.

(5) குழந்தைகளுக்கு:-
உங்கள் குழந்தைகளைப் பார்க்கப்படும் போது அவர்கள் மேல் வெறுப்பு வந்தால் ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி குழந்தைகள் பெற வேண்டும். அவர்கள் பெறுவார்கள்.
1.அதன் வழி அவர்கள் எதிர்காலம் சிறந்திருக்கும்.
2.கல்வியில் அவர்கள் உயர்வார்கள்.
3.எங்கள் பார்வை அவர்களை உயர்த்த வேண்டும் என்று இப்படி உங்கள் குழந்தைகளை எண்ணிச் செயல்படுத்துங்கள்.

அந்த உணர்வுடன் குழந்தைகளுடன் பேச முற்படுங்கள். நல்லதாகும்.

(6) சமையல் செய்யும்போது… பரிமாறும்போது… சாப்பிடும் பொழுது:-
பெண்கள் சமையல் செய்யும் போதெல்லாம் ஆத்ம சுத்தி செய்து விட்டுத் தொடங்குங்கள். நாங்கள் சமைக்கும் இந்த ஆகாரத்தைச் சாப்பிடும் அனைவரும் உடல் நலமும் மன பலமும் பெற வேண்டும் என்று எண்ணிச் சமையல் செய்யுங்கள்.

ஆகாரம் பரிமாறும் போதும் நாங்கள் பரிமாறும் இந்த ஆகாரத்தை உட்கொள்ளும் அனைவருக்கும் மன வளம் உடல் நலம் கிடைக்க வேண்டும் என்று எண்ணி விட்டுப் பரிமாறுங்கள்.

சாப்பிடும் போதும் ஆத்ம சுத்தி செய்து விட்டு
1.நாங்கள் சாப்பிடும் ஆகாரத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து
2.அது எங்கள் உடலில் நலம் பெறும் சக்தியாக மலர வேண்டும் என்ற எண்ணத்துடன் சாப்பிடுங்கள்.

(7) இரவிலே படுக்கும்போது:-
இரவிலே படுக்கப்போகும் போது இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள். எதையெல்லாம் நல்லவைகளாக நிறைவேற வேண்டும் என்று எண்ணினீர்களோ
1.உங்கள் உணர்வின் ஓட்டம் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
2.அந்த உணர்வின் ஆற்றல் எனக்குள் விளைந்து கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள்

சப்தரிஷிகளின் அருள் ஒளி எங்கள் ஈர்ப்பு வட்டத்திற்குள் இருக்க வேண்டும். அந்த உணர்வின் சக்தி எங்களுக்குள் வளர வேண்டும் என்ற எண்ணத்துடனே படுங்கள். ஆனந்தமான தூக்கமாக அமையும். காலையில் எழும் பொழுதும் அந்த ஆனந்தம் இருக்கும்.

(8) காலையில் எழும் பொழுது:-
காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடனே ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள். எங்கள் பார்வை எல்லோரையும் நலமாக்க வேண்டும். எங்கள் சொல்லைக் கேட்போர் அனைவரும் மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

எங்கள் பேச்சைக் கேட்போர் உணர்வுகளில் மெய் ஒளியாகப் படர வேண்டும். நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணி எழுந்து கொள்ளுங்கள்.

(9) வர வேண்டிய பாக்கிப் பணம் திரும்ப வருவதற்கு:-
உங்களிடம் வாங்கிச் சென்றவர் ஒருவர் பாக்கி பணத்தைக் கொடுக்கவில்லை என்றால் உடனே ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.
1.பின் அவர்கள் வியாபாரம் செழித்து வர வேண்டும்.
2.அவர்களுக்கு வருமானம் வர வேண்டும்.
3.எங்கள் பணத்தைச் சீக்கிரம் திருப்பித் தரும் சக்தி அவர் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

இந்த உணர்வுகள் இயக்கப்பட்டு பணம் சீக்கிரமே வந்து சேரும். வராது என்று எண்ணியிருந்தால் கூட வந்து சேரும். அனுபவத்தில் பார்க்கலாம்.

(10) ஒருவர் மேல் உள்ள வெறுப்பை அகற்ற:-
ஒருவரை நாம் எண்ணும் போது கோபமோ வெறுப்போ வந்தால் அந்த வெறுப்பான உணர்வுகள் நமக்குள் வராது தடுக்க ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

யார் உங்கள் மேல் வெறுப்பு வருகின்றதோ எங்கள் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும். அவர் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். வெறுப்பு மாறி ஒன்றி வாழும் இயக்கமாக மாறும்.

(11) நோயை நீக்குவதற்கு:-
உங்கள் உடலிலே எத்தகைய நோய் இருந்தாலும் அந்த நோயைப் பற்றிய வேதனைகளை சஞ்சலங்களை மறந்திடுங்கள். மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலிலே படர்ந்து நோய்கள் நீங்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்களுக்குள் என்றும் நிலைத்திருக்க வேண்டும். எங்கள் நோய்கள் அனைத்தும் பறந்திட வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.அது எந்த நோயாக இருந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று
2.உடலுக்குள் அங்கங்கே கண்ணின் நினைவைச் செலுத்தி
3.நோய் நீங்க வேண்டும். நீங்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து அது நலம் பெறும் சக்தியாக வளர்கின்றது. நாங்கள் நலம் பெற்று வருகின்றோம்.
1.மகரிஷிகளின் அருள்வட்டத்தில் எங்கள் எண்ணங்கள் சுழல்கின்றது.
2.எங்கள் வாழ்விலே மகிழ்ச்சி பெறுவோம்…! மகிழ்ச்சி பெறுவோம்…! என்ற எண்ணங்களை அடிக்கடி எண்ணிப் பாருங்கள்.

(12) வெளியிலிருந்து மீண்டும் வீட்டுக்குள் வரும் பொழுது
நாம் வெளியிலே எங்கே சுற்றி விட்டுக்கு வரும் பொழுது எத்தனையோ எண்ணங்கள் கொண்டு தான் வருகின்றோம். வீட்டிற்கு வந்த பின் இதைப் போல ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

மகரிஷியின் அருள் சக்தி எங்கள் வீட்டிலே படர வேண்டும். எங்கள் வீட்டிற்கு வரும் அனைவரும் மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும்.
1.குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும் சக்திகள் படர வேண்டும்.
2.வீட்டுக்கு வருகின்றவர்கள் எல்லாம் மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ணி விட்டு
3.அதற்கப்புறம் மற்ற விஷயங்களைப் பேசுங்கள்.

இதைப் போல அடிக்கடி ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள். உங்கள் எண்ணங்கள் அனைத்தும் மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே சுழலச் செய்யுங்கள்.

நீங்கள் எண்ணிக் கொடுப்பதை எல்லாவற்றையுமே உங்கள் உயிர் படைக்கின்றது… இயக்குகின்றது… உடலாக்குகின்றது…. விளைய வைக்கின்றது…! அந்த உணர்வைத்தான் தனக்குள் (உயிராத்மாவாக) இணைத்துக் கொள்கின்றது.

1.இந்த உடலை விட்டு நாம் எப்போது போவோம்…?
2.அது எந்த நேரம் என்று அது எப்படி…? என்று தெரியாது.

ஆனால் நாம் இந்த உடலில் இருக்கும் போதே அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்துக் கொண்டே வந்தால் எந்த நேரத்தில் இந்த. உயிராத்மா உடலை விட்டுப் பிரிந்தாலும் அந்த நினைவுடன் நாம் அங்கே செல்கின்றோம். இது நிச்சயம்…!

ஒளிச் சரீரமாக நம்மை அங்கே நிலைக்கச் செய்கின்றது. இந்த நிலைகள் பெற வேண்டும் என்று ஏங்கி இதைப் போல நீங்கள் எண்ணிச் செயல்படுத்துங்கள்.

ஞானத்தின் பாதையில் “நாம் ஒரே சீராகச் செல்ல வேண்டும்…” என்றால் இதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்…!

Divine triple fruits

ஞானத்தின் பாதையில் “நாம் ஒரே சீராகச் செல்ல வேண்டும்…” என்றால் இதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்…!

காட்சி:-
ஒரு ஆட்டுக்கல்லில் அரிசியைப் போட்டு அரைக்கும் பொழுது ஒரே சீராக அரைத்து வந்த நிலையில் ஒரு கல் சிக்குண்டவுடன்… “ஒலி கிளம்பி… நரநரத்த நிலையுடன்…!” மீண்டும் முதல் நிலை போல அந்த மாவு அரைபடுகின்றது.

விளக்கம்:-
ஞானிகள் காட்டிய வழியில் ஞானப் பாதையில் நாம் சென்று கொண்டிருந்தாலும் நம்மை அறியாமலே சில ஊடுருவல்கள் வந்து மோதும்.

அந்த மோதலுக்காக
1.நாம் நம் ஞானத்தைச் சஞ்சலப்படுத்தாமல் சுழலும் பொழுது
2.மோதிய நிலையும் நம் ஞானத்துடனே கலந்து
3.தனித்து நிற்காமல் நம் ஞான வழி மீண்டும் செயல் கொள்ளும்.

இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சில கனிகளைப் பறித்து அப்படியே உட்கொள்கின்றோம். சில கனிகளைத் தோலை நீக்கிய பின் உட்கொள்கின்றோம்.

பலாப்பழம் போன்ற கனிகளை அதன் முள்ளை அகற்றிவிட்டு அதற்குள் இருக்கும் சதைப் பகுதியை அகற்றிவிட்டுச் சுவையான பலாச்சுளையை எடுத்து அதற்குள் இருக்கும் கொட்டையை எடுத்து விட்டுப் பின் தான் சாப்பிடுகின்றோம்.

முன்னோர்கள் காட்டிய வழியில் முக்கனியை வைத்து வணங்கவும் செய்கின்றோம். ஏன் வணங்கச் சொன்னார்கள்…? அதன் உட் பொருள் என்ன…?

1.மாம்பழத்தை அப்படியே கடித்துச் சுவைத்து உண்டு கொட்டையை வீசி விடுகின்றோம்.
2.வாழைப்பழத்தின் தோலை நீக்கி அதை அப்படியே சுவைக்கின்றோம்.
3.பலாச்சுளையைச் சுவைக்கப் பல வேலைகள் செய்த பின் தான் உட்கொள்கின்றோம்.

முக்கனிக்கும் சுவை உண்டு. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பக்குவ நிலை கொண்டு தான் நாம் உட்கொள்ள முடிகின்றது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் ஞானிகளின் உணர்வை நாம் பற்றுடன் பற்றி நம் எண்ணத்தைச் சுற்றியுள்ள உலக நிலைகளைத் தோலை அகற்றுவது போல் அகற்றி ஞானத்தை ருசிக்க வேண்டும்.

1.நமக்குள் கலந்துள்ள தீமையான அணுக்களை முட்களை அகற்றுவது போல் அகற்றி
2.சதையான நிலையை எண்ணாமல் நம்முள் உள்ள சுவையான சுளையைச் சுவைத்திட
3.வாழ்க்கையில் வரும் எதிர் நிலைகள் என்ற கொட்டைகளை அகற்றி
4.மகிழ்ச்சி என்ற நிலை எய்திட முக்கனியைப் படைத்தார்கள் நம் முன்னோர்கள்.

ஆசைகளை அடக்கினால் தான் ஞானம் பெற முடியும் என்கிறார்கள்… அதனின் உண்மை நிலை என்ன…? ஆசையை அடக்க முடியுமா…?

Eswara Guru Devar

ஆசைகளை அடக்கினால் தான் ஞானம் பெற முடியும் என்கிறார்கள் அதனின் உண்மை நிலை என்ன…? ஆசையை அடக்க முடியுமா…?

ஆசை இல்லாவிட்டால் இந்த உலகமே இல்லை. பற்றற்று வாழ வேண்டும். ஆசையில்லா விட்டால் தான் உலக ஞானம் பெறவேண்டும் என்பதெல்லாம் இவர்களாகச் சொன்ன கதை…!

பெரும் ஆசையில் உருவானது தான் இந்த உலகமே…
1.ஆசை இல்லாவிட்டால் ஜீவனுமில்லை… பந்த பாசமுமில்லை பாற்கடலுமில்லை
2.பாழடைந்த நிலையாக எங்கும் சூனியம் தான் இருக்கும்.

மனித எண்ணமும் ஆசை தான். எல்லா உலகமும் ஆசையில் தான் சுழன்று கொண்டுள்ளது.
1.பற்றற்றவன் என்பவனும் ஆசையில்லாமல் இல்லை.
2.ஞானிகளுக்கும் மகரிஷிகளுக்கும் ஆசை உண்டு.

சுவாச நிலை என்பதெல்லாம் நம் மனதைச் சாந்தமான நிலையில் வைத்துக் கொண்டு நம் மீது வந்து மோதும் கோபம் ஆத்திரம் வேதனை குரோதம் போன்ற உணர்வுகள் நம்மை இயக்காத வண்ணம் மகரிஷிகளின் அருள் உணர்வை ஈர்த்து பெரும் சாந்த நிலைக்கு வருவது தான் அந்தச் சுவாச நிலை.

அந்தச் சுவாச நிலை வருவதற்கே ஆசை வேண்டும். ஆசையை அடக்கிவிடு… ஆசையை அடக்கிவிடு…! என்று சொல்வதெல்லாம் சொல்பவனுக்கே இருப்பதில்லை.

ஆசையை அடக்கிவிட்டால் இந்த உடலில் ஆத்மாவுக்கு என்ன வேலை…! ஆசையை அடக்குபவனின் ஆன்மா தானாகப் பிரிந்து சென்றுவிடும் தன் நிலைக்கே. ஆகவே நாம் பிறந்த பயனை ஆசையுடனே பெற்றிட வேண்டும்.

தான் பெற்ற குழந்தையையே ஆசை இருந்தால் தான் வளர்க்க முடியும். உண்ணும் உணவையும் ஆசையுடன் தான் உண்ண முடியும். ஆசையுடன் இருங்கள் என்பதும் அன்பாக இருங்கள் என்பதும் ஒன்றே தான்…!

ஆசையில்லா உலகில் அலையுமில்லை… கடலுமில்லை…! செடிக்கும் மரத்திற்கும் ஆசையுள்ளது. மண் பேசும் கல் பேசும் என்பதும் இந்த ஆசையினால் தான்.
1.ஆசையில்லாதவன் பிறந்ததுமில்லை.
2.ஆசையில்லாதவன் பிறக்கப் போவதுமில்லை.

ஆசை என்பது பேராசை என்பது வேறு. எண்ணத்தை இன்பமாக்குங்கள் என்று சொல்லும் பொழுதே அந்த எண்ணம் ஆசையில் தான் வருகின்றது.
1.பேராசை நமக்குத் தேவையில்லை.
2.ஈசனின் அருளைப் பெற்று அவனுடன் அவனாக…!
3.ஒளியாக வேண்டும் என்ற இந்த ஆசை தான் நமக்கு வேண்டும்.

ஞானிகளை எப்படி அணுகுவது…?

Power to Meditate

ஞானிகளை எப்படி அணுகுவது…?

மனித வாழ்விலே புனிதம் பெறும் இந்த உணர்வின் சக்தியை நமக்குள் விளையச் செய்யும் தன்மையை அன்று மெய் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

நம் உடலின் தன்மை பிரபஞ்சமாகவும் நம் எண்ணத்தின் தன்மை நட்சத்திரமாகவும் அதில் விளைந்த உணர்வின் சக்திகள் உடலாகவும் உடலுக்குள் விளைந்த உணர்வின் எண்ணங்கள் அனைத்தையும் (சூரியன் இந்தப் பிரபஞ்சத்தை ஒளியாக மாற்றுவது போல்) ஒளியாக மாற்றும் தன்மையை அகஸ்தியன் காட்டினான்.

அகஸ்தியனுக்குப் பின் வந்த எல்லா ஞானிகளுடைய நிலைகளையும் உணர்ந்தறிந்த நமது குருநாதர் எமக்குள் அதை உபதேசித்தார்.

உணர்வை ஒளியாக மாற்றிடும் சக்தியை எனக்குள் வளர்த்துக் கொண்டேன். அப்படி வளர்த்த நிலைகளை நீங்களும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதைப் பேசுகின்றேன்.

அதன் வழியில்
1.நீங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று எண்ணுகின்ற வரையிலும் எனக்கு லாபம்
2.நீங்கள் வாழ்ந்து மகிழ்ச்சியாகச் சொல்கிற வரையிலும் எனக்கு லாபம்.
3.நாம் அனைவரும் ஒன்றாகச் சேர வேண்டும் என்று
4.நாம் என்ற நிலைகளிலே தான் இதைப் பேசுகின்றேனே தவிர
5.”நான்…!” என்ற நிலையே எனக்கு (ஞானகுரு) இல்லை.
6.நாம் என்ற நிலைகள் தான் நாம் அனைவரும் சேர்ந்தால் தான் அதை இயக்க முடியும்.

ஏனென்றால் சக்தி வாய்ந்த ஞானிகள் அருளாற்றல் மிக்க சக்தியை அணுக வேண்டும் என்றால் அதற்குண்டான வலு வேண்டும்.

ஒரு கனமான பொருளைத் தூக்க வேண்டும் என்றால் ஒரு நூலால் தூக்க முடியாது. பல நூல்களை ஒன்றாகத் திரித்து அதனுடைய தன்மை கொண்டு தூக்கப்படும் போது தான் கனமான பொருளைத் தூக்க முடிகின்றது.

அது போல் நாம் எல்லோரும் சேர்ந்து அந்த வலு கொண்ட எண்ணத்தால் இழுக்கும் போது ஞானிகள் அருளை எளிதில் நுகர முடியும்.

1.பிறவா நிலை எய்திய அந்த ஞானிகளின் ஆற்றல் மிக்க நிலைகள்
2.நெருப்புக்குச் சமம். நெருப்பென்றாலும் பரவாயில்லை.
3.அதைக் காட்டிலும் கடினமான நெருப்பு (ஆற்றல் மிக்க கதிரியக்கச் சக்திக்கு ஒப்பானவர்கள்)

அணுவைப் பிளந்து அணுவின் தன்மையை அது வெடிக்கச் செய்யும் போது அதனுள் இருக்கக்கூடிய ஆற்றல் கடினமான இரும்பு உலோகத்தையும் உருக்கிவிட்டுத் தன் அணுவின் தன்மை அது வளர்த்துக் கொள்கின்றது (அதைப் போல பல மடங்கு ஆற்றல் கொண்டவர்கள் ஞானிகள்)

சாதாரண மனிதராக இருக்கும் நாம் நம்முடைய எண்ணங்கள் கொண்டு அந்த ஞானிகளின் உணர்வலைகளை எடுப்போம் என்றால் என்ன ஆகும்…?
1.அந்த ஞானிகளின் உணர்வுகள் பட்டவுடன் நம்முடைய எண்ணம் சுக்கு நூறாகி
2.நம்முடைய உணர்வின் ஒலிக்குள் இருப்பதை அது கவர்ந்து அது தான் வளருமே தவிர
3.அதை நுகர்ந்து நமக்குள் சேர்த்து நமக்குள் இருளை நீக்கும் சக்தியாக அதைக் கவர
4.நம் எண்ணத்திற்கு வலு கிடையாது.

அந்த வலு கிடைக்கச் செய்வதற்குத் தான் நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்களுக்குள் இந்த நினைவின் தன்மை சிறுகச் சிறுகக் கூட்டி அந்த ஆற்றலைப் பெருக்கும் நிலைக்காக உபதேசிக்கின்றோம்.

எந்த அளவிற்கு இதைப் பெறவேண்டும் என்ற ஏக்க நிலைகள் கொண்டு நீங்கள் வருகின்றீர்களோ
1.உங்களுக்குள் விளைந்திடும்… விளைந்திட்ட அந்த உணர்வின் எண்ண அலைகள் ஒவ்வொன்றுக்குள்ளும்
2.ஒவ்வொரு குணத்தின் செயலையும் உங்களுக்கு உபதேசமாகக் கொடுக்கும் போது
3,அந்த ஞானியின் உணர்வுகளைப் பிணைக்கச் செய்து கொண்டடேயிருக்கின்றோம்.
4.அப்படிப் பிணைத்த உணர்வின் நிலைகள் கொண்டு அதிலேயும் தொட்டுக் காண்பித்து
5.அந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்து கொண்டிருக்கின்றோம்.

அவ்வாறு பதிந்த நிலைகள் கொண்டு நீங்கள் ஞானிகளை எண்ணும் போது அது விளைந்து உங்களுக்குள் சேர்ந்த தீய உணர்வுகளைப் பிளந்து உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றும் திறன் நீங்கள் பெறுகின்றீர்கள்.

நமக்கு முன் சுழன்று கொண்டு இருக்கும் அந்த மெய் ஞானியின் உணர்வலைகளை யாம் உங்களுடன் சேர்த்து… (நாம் அனைவரும் சேர்த்து…!) ஏக்க உணர்வுடன் கொண்டு அந்த உணர்வின் தன்மை நாம் கவரப்படும் போது இங்கே பெரும் அலைகளாகக் குவிகின்றது.

சிறு துளி பெரு வெள்ளம் போன்ற நிலைகளில் அனைவரது வலுவின் தன்மை வரப்படும் போது அந்த ஞானிகளின் ஒத்த உணர்வின் தன்மை வளர்க்கப்பட்டு நாம் எத்தனை குணங்கள் கொண்டு இருந்தாலும் அதை மறந்து மெய் ஒளியைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்ச்சியைக் கூட்டி அந்த உணர்வின் தன்மை விளையச் செய்கின்றோம்.

1.யாம் சொன்ன முறைப்படி இந்தத் தியானத்தை மேற்கொண்டு
2.தீயவை எவையானாலும் அது நினைவில் வராது
3.மகரிஷிகளின் உணர்வலைகள் உங்களுக்குள் பெற வேண்டும் என்று ஏங்கும் போதெல்லாம் அதைப் பெறச் செய்து
4.அருள் உணர்வின் தன்மை உங்களுக்குள் விளையச் செய்து
5.உங்களை ஆட்டிப் படைக்கும் உணர்வைச் சிறுக்கச் செய்து
6.அந்த மெய் ஒளியின் தன்மை உங்களுக்குள் வளரச் செய்வதற்கே இதைச் செய்கின்றேன் (ஞானகுரு).

ஆகவே உங்களுக்குள் இருக்கும் ஈசனிடம் எந்த எண்ணத்தைக் கொடுக்கின்றீர்களோ அதைத்தான் உங்களுக்குள் படைக்கின்றான். ஆகவே உங்கள் உயிரைக் கடவுளாக மதியுங்கள். உங்கள் உடலைச் சிவமாக மதியுங்கள்.

அனைத்துக்கும் பாத்திரமாகி அனைத்தையும் அணைத்துக் கொண்டு நினைவு கொண்டு இயக்கும் சக்தியாக நம் கண்கள் (கண்ணன்) இருக்கின்றது.

உங்கள் கண்ணின் நினைவாற்றலை மகரிஷிகளின் பால் செலுத்தி அவர்கள் ஆற்றல்களை உயிர் வழியாகக் கவர்ந்து சுவாசிக்கும் பொழுது உடலுக்குள் ஒளி பெறும் உணர்வின் அணுக்களாக விளைகின்றது.

ஈசனுடன் ஒத்த நிலையாக அந்த உணர்வின் ஒளிச் சரீரமாக மாறுகின்றீர்கள். அதைப் போன்ற நிலைகள் நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டிப் பிரார்த்திக்க்கின்றேன்.

குருநாதர் காட்டிய வழியில் மெய் ஞானத்தின் உண்மைகளை நாம் மற்றவர்களுக்கு “எப்படித் தெரியப்படுத்த (விளம்பரப்படுத்த) வேண்டும்…?”

Image

Self realization Gnani

குருநாதர் காட்டிய வழியில் மெய் ஞானத்தின் உண்மைகளை நாம் மற்றவர்களுக்கு “எப்படித் தெரியப்படுத்த (விளம்பரப்படுத்த) வேண்டும்…?”

குருநாதர் காட்டிய வழியில் மெய் ஞானத்தின் தன்மையில் அந்த மெய் ஞானிகள் கண்டுணர்ந்த பேருண்மைகளை உங்களுக்குக் உணர்த்திக் கொண்டே வருகின்றோம்.

இதைப் பற்று உங்களிடம் வந்து சிலர் கேட்டார்கள் என்றால் தாராளமாகச் சொல்லி விடுவீர்கள். இருந்தாலும் இதை எல்லாம் யாருக்குச் சொல்ல வேண்டும்…? என்று இருக்க வேண்டும்.

உண்மையான நிலைகளில் ஞானிகள் உணர்வைப் பெற வேண்டும் என்று நம்மை அணுகி வரக்கூடியவர்களுக்கு இந்த உபதேசங்களைச் சொல்லி அவர்கள் வளர வேண்டும் என்று சொல்வது சரியாக இருக்கும்.

அதே சமயத்தில்
1.உபதேசிக்கும் உணர்வின் துணை கொண்டு
2.காற்றிலிருக்கும் மகரிஷிகளின் உணர்வை இந்தத் தியானத்தின் மூலம் பெறவேண்டும் என்று
3.வேண்டி விரும்பித் தேடி வருபவர்களுக்கு இதைச் சொன்னால் சரியாக இருக்கும்.

அது அல்லாதபடி… அட என்னய்யா…? உங்கள் சாமி (ஞானகுரு) என்ன சொல்கிறார்…. என்று எங்களுக்குத் தெரியாதா…? என்று சாதாரணமாகச் சிலர் சொல்லிவிடுவார்கள்…!

அதைக் கேட்ட உடனே அப்படியா..! இரு நான் பார்க்கிறேன்…! என்று சொல்லிவிட்டுக் கட..கட என்று எல்லாப் பாடத்தையும் அவர்களிடம் ஒன்றுவிடாமல் நீங்கள் ஒப்பித்துவிடுவீர்கள்.

அதை எல்லாம் கேட்ட பிற்பாடு அவர்கள் உங்களைப் பைத்தியக்காரராக்கி… நம்மையும் பைத்தியக்காரராக்கி விடுவார்கள். கேட்பவர்களையும் அதைப் போன்ற நிலையாக்கிக் கடைசியில் “பாலுக்குள் விஷத்தைக் கலப்பது போல்…” நிலைமையை உண்டாக்கி விடுவார்கள்.

ஏனென்றால் காற்று மண்டலத்தில் நஞ்சின் தன்மைகள் அதிகமாக வளர்ந்திருக்கின்றது. ஆகையினால் நாம் ஒருக்கிணைந்து வலுவான நிலைகளில் நாம் இதைச் செயல்படுத்த வேண்டும்.

ஞானிகளையும் மகரிஷிகளையும் பற்றி யாம் எதை எல்லாம் சொன்னோமோ அதை வளர்க்கக் கூட்டுத் தியானங்களை அமைத்து அந்தக் கூட்டமைப்புக்குள் யாருக்குத் துன்பம் நேர்ந்தாலும் உடனே எல்லோரும் சேர்ந்து அவர்கள் நலம் பெற மகரிஷிகளின் உணர்வைப் பாய்ச்ச வேண்டும்.

1.அவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.
2.அந்த அருள் ஒளி அவர்கள் உடலிலே பரவ வேண்டும்.
3.அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்.
4.மகரிஷிகளின் அருளால் அவர்கள் நலம் பெறவேண்டும் என்று
5.இப்படி எல்லோரும் சேர்ந்து அதைப் பாய்ச்சிப் பழக வேண்டும்.
6.இப்படிச் செய்தால் வலிமை இருக்கும்.

ஆகவே இதைப் போல ஒரு நண்பர் சொன்னால் நான்கு பேர் சேர்ந்து இதைச் செய்தால் போதும். நூறு பேர் வரவேண்டும் என்பதில்லை. இதைப் போன்று நாம் செய்து பழக வேண்டும்.

இதையெல்லாம் நாம் சிறுகச் சிறுகக் கொண்டு வர வேண்டும். இதை நாம் ஏன் விளம்பரப்படுத்த வேண்டும்…? எப்படி விளம்பரப்படுத்த வேண்டும்…?

1.அந்த மெய் ஞானிகளின் அருளை நீங்கள் ஏங்கிப் பெறும் போது
2.உங்கள் உள்ளங்களில் அது ஓங்கி வளர்கின்றது.
3.அதன் மூல்ம நீங்கள் எந்த அளவிற்குத் துன்பங்களிலிருந்து விடுபடுகின்றீர்களோ
4.அந்த எண்ணங்கள் உங்கள் சொல்லைக் கேட்போரின் உள்ளங்களிலும் படர்ந்து
5.அவர்கள் துன்பங்களையும் அது போக்கும்.
6.இது தான் விளம்பரம்…! இப்படித்தான் நம் குருநாதர் காட்டிய வழியில் வளர்க்க வேண்டும்.

இப்படிச் செய்யாமல் எங்களிடம் இப்படிப்பட்ட சக்தி இருக்கின்றது… எங்கள் சாமியிடம் நிறையச் சக்தி இருக்கின்றது… மகரிஷிகள் ரொம்பவும் சக்தி வாய்ந்தவர்கள்…! என்று வீணாகப் பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
இப்படிச் சொன்னீர்கள் என்றால்
1.இவ்வளவும் தூரம் சொல்கிறாய் அல்லவா…!
2.உன்னிடம் என்ன சரக்கு இருக்கின்றது…? என்று கேட்டால்
3.பதில் சொல்ல முடியாது… அப்புறம் தவிக்கத்தான் வேண்டும்.

ஆகவே முதலில் நாம் அதுவாக மாற வேண்டும். அந்த மெய் ஞானிகளின் உணர்வாக நாம் மாற வேண்டும். நமக்குள் மெய் ஞானத்தை வளர்க்க வேண்டும். நம் மூதாதையர்கள் அனைவரையும் விண் செலுத்த வேண்டும்.

நம்மைச் சார்ந்த முன்னோர் மூதாதையர்களை வெறுமனே சொல்லிப் போற்றாதபடி அந்த மகரிஷிகளின் அருள் ஒளி அவர்கள் பெறவேண்டும். அவர்கள் ஒளி நிலை பெறவேண்டும் பிறவியில்லா நிலை பெறவேண்டும் என்று அவர்களை உந்தி விண் செலுத்த வேண்டும்.

யார் மீதாவது நமக்குப் பகைமை இருந்தால் அந்த உணர்வுகள் நம்மை உறுத்திக் கொண்டே இருக்கும். அதைப் போன்ற பகைமைகளை நீக்க குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் சேர்ந்து மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பார்க்கும் அனைவரும் பெறவேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

தியான வழியில் இருப்போர் அனைவருமே மற்ற யாரையும் கஷ்டப்படுத்தியோ… கட்டாயப்படுத்தியோ… இதைச் செய்யச் சொல்ல வேண்டாம்…!

அவர்களும் மெய் உணர்வுகள் பெறவேண்டும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெறவேண்டும் என்று உடலில் பரப்பிக் கொண்டால்
1.இந்த உணர்வுகள் ஓங்கி வளர்ந்த நிலையில்
2.பிறர் மேல் இருக்கும் அந்தக் கசப்பான உணர்வின் நிலைகள் நம்மிடமிருந்து நீங்கும்.

அதே சமயத்தில் அவர்களுக்குள்ளும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி விளையும். இணைந்த நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பிரபஞ்சம் போன்று நாம் அனைவரும் “ஏகமாக வளர்வதற்கு இது உதவும்…!”