சிலர் பேசுவதைக் கேட்டாலே நமக்கு டென்சன் (TENSION) ஆகின்றது… துடிப்பு அதிகமாகின்றது… மூச்சுத் திணறல் கூட வருகின்றது… ஏன்…? – விளக்கம்

Image

Tension stress - relief

சிலர் பேசுவதைக் கேட்டாலே நமக்கு டென்சன் (TENSION) ஆகின்றது… துடிப்பு அதிகமாகின்றது… மூச்சுத் திணறல் கூட வருகின்றது… ஏன்…? – விளக்கம்

 

உதாரணமாக ஒருவன் நம்மிடம் கோபமாகப் பேசுகின்றான் என்றால் அவனை நாம் உற்றுப் பார்க்கின்றோம். அவனிடமிருந்து வெளிப்படும் கோபமான உணர்வைச் சுவாசிக்கின்றோம்.

சுவாசித்தது உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சிகள் நம்மை அறியச் செய்கின்றது. அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் உட்புக நம் உயிரே காரணமாகின்றது.

அந்த உணர்வுகள் அணுக் கருவாகி நம் இரத்தத்தில் கலந்து வந்தபின் குறித்த காலம் வரும் போது அந்தக் கரு வளர்ச்சி அடைந்து நம் உடல் உறுப்புகளில் எந்தப் பாகத்தில் செல்கின்றதோ அங்கே முட்டையாகி வெடித்து முட்டையிலிருந்து அணு வெளிப்படுகின்றது.

அவ்வாறு வெளிப்பட்ட பின் அவன் எந்தக் கோபமாகப் பேசினானோ அதே உணர்வுகளை ஊட்டும் அணுத் தன்மை அடைந்துவிடுகின்றது.

நுரையீரல்களிலேயோ கல்லீரல்களிலயோ அல்லது நம் உறுப்பின் பாகங்களில் முக்கியமான நிலைகளிலயோ ஒட்டிக் கொள்கிறது.

நம் சிரசின் பாகத்தில் புருவ மத்தியிலிருந்து சிறு மூளைக்குச் செல்லும் இடத்தில் அது நுண்ணிய அலைகளை இழுத்து டிரான்சாக்சன் (TRANSACTION) செய்யக்கூடிய இடம். “கவன ஈர்ப்பு நரம்பு…!” என்று சொல்வார்கள்.

ஒன்றை இழுத்து நமக்குக் கொடுக்கக் கூடிய அந்த இடத்தில் அந்தக் காரத்தின் உணர்ச்சி அதிகமாகி விட்டால்
1.நாம் எவ்வளவு சந்தோஷமாக இருந்தாலும் கூட
2.அந்த அணு அங்கே போனவுடனே வெறுக்கும் உணர்வுகளே நமக்கு வரும்.
3.சுவாசிக்கும் பொழுது அங்கே மோத மோத அந்த வேதனையின் உணர்ச்சிகளைத்தான் ஊட்டும்.

சில பேருக்குச் சந்தோஷமாகச் சொன்னாலே நீங்கள் பார்க்கலாம் அது அவருக்கு எரிச்சலாகவே வரும். சந்தோஷமான உணர்வை அவர்களால் தாங்க முடியாது.

ஏனென்றால் எதிர்ப்புணர்வின் தன்மைகள் அந்த டிரான்சாக்சன் செய்யக்கூடிய இடங்களில் இந்த அணுக் கருத்தன்மை அதிகமாக அங்கே அந்தப் பாகம் வெடித்து அந்த உணர்வின் அணுக்கள் அங்கே பெருக்கமாகி விட்டால்
1.மற்றவர் சொல்வதைக் கேட்டுக் கிரகிக்கும் நிலைகள் அது மறுக்கப்படுகின்றது.
2.மகிழ்ச்சி ஊட்டும் நிலையை இழக்கச் செய்து விடுகின்றது.

ஆனால் அத்தகைய நிலைகள் அதிகமாகி விட்டால் நம் உடலிலுள்ள நுரையீரல்களில் துடிப்பின் தன்மை அதிகரித்துவிடும். அப்படி அதிகரித்து விட்டால் என்ன ஆகும்…?

நாம் காரமான பொருளைச் சாப்பிட்டவுடன் “உஷ்…ஆ.. உஷ்…ஆ…” என்று சொல்வது போல இந்த உணர்வுகளால் நுரையீரல்கள் அது சீராக இயக்கும் சக்தி இழந்து விடுகின்றது.

1.அப்போது அந்த நேரத்தில் நமக்குள் அதிகமாகத் துடிப்பும்
2.ஏதாவது வேலை செய்தால் கடினமாகவும்
3.அதிகமாகப் பேசினாலே என்னால் முடியவில்லை போன்ற நிலைகளை உருவாக்கி விடுகின்றது.
(பெரும்பகுதியானவர்கள் இதை நாம் அனுபவித்திருப்போம்)

ஏனென்றால் உயிருடன் ஒன்றச் செய்து உணர்வுகளைத் தாங்கி நம் உடலுக்குள் பரப்பச் செய்யும் இடத்தில் அந்தக் காரமான உணர்ச்சிகள் அணுத் தன்மையாக வெடித்து விட்டால் இத்தகைய நிலை ஏற்பட்டு விடுகின்றது.

நாம் தவறு செய்யவில்லை. ஆனால் இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் மீள வேண்டுமா இல்லையா…!”

இதைத்தான் விஷ்ணு வரம் கொடுத்து விட்டான் என்று சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

அதே சமயத்தில் குறித்த காலம் வரும் போது அணு வெடித்து விட்டால் அதே உணர்ச்சியை ஊட்டும் அந்த அணுக்களாக அது மாறுகின்றது.

அதைத் தான் பிரம்மா உருவாக்குகின்றான்… விஷ்ணுவின் மகன் பிரம்மா என்றார்கள் ஞானிகள்.

நாம் நுகர்ந்த உணர்வுகள் காந்தத்தால் ஈர்க்கப்பட்டு அந்த வெப்பத்தால் இணைக்கப்பட்டு அந்த உணர்வின் தன்மை அந்த கருத்தன்மையாக உருவாக்கும் தன்மை தான் விஷ்ணுவின் மகன் பிரம்மா என்று இப்படித் தெளிவாகக் கூறுகின்றனர்.

அந்தச் சிந்திக்கும் இடமான சிரசின் பாகங்களில் இத்தகைய (கோபமான) காரமான அணுத் தன்மைகள் வளர்ந்து விட்டால்
1.நாம் சிந்தனையை இழப்பதும்
2.நம்மை அறியாமலே அடிக்கடி நாம் கோபிப்பதும்
3.சிரசில் ஒரு விதமான வலி இருப்பதும்
4.பிறர் சொல்வது மோதியவுடனே தாங்க முடியாத நிலை (TENSION) வருவதும் போன்ற நிலைகள் உருவாகின்றது.

நாம் ஏதாவது தவறு செய்தோமா…? இல்லையே…! ஆனால் நாம் நுகர்ந்து சுவாசித்த உணர்வுகள் உடலுக்குள் அணுக்களாகப் பெருகிவிட்டால் அதற்குத் தகுந்த உணர்ச்சிகளாக இப்படி ஊட்டுகின்றது.

இது தான் அதில் உள்ள மூலம்.

உயிரில் மோதும் உணர்வுகளே நம்மை இயக்குகின்றது – உயிரில் மோதும் (LASER போல்) உணர்வுகளில் கவனம் தேவை…!

Everlasting soulS

உயிரில் மோதும் உணர்வுகளே நம்மை இயக்குகின்றது – உயிரில் மோதும் (LASER போல்) உணர்வுகளில் கவனம் தேவை…!

விஞ்ஞான அறிவு கொண்டு பார்க்கலாம். முன்பு காந்த ஊசியை வைத்து நாடாக்களில் உராய்ந்து அந்த உணர்வின் அதிர்வுகளை வெளிப்படுத்தி இசையோ அல்லது பாடலோ படமோ அதைக் கேட்கலாம்… காணலாம்…!

இப்போது அதெல்லாம் இல்லை. லேசர் (LASER) இயக்கம் என்ற நிலையில் ஒளிக் கற்றையை நேராகப் பாய்ச்சுகின்றனர்.

நாடாக்களில் பதிந்த நிலைகள் கொண்டு அதை வேகமாகச் சுழலச் செய்து அதில் LASERஐப் பாய்ச்சும் பொழுது அந்த நாடாக்களில் பதிவானது எதுவோ அந்த உணர்வலைகளை இன்று டி.வி்.க்களிலும் கம்ப்யூட்டரிலும் செல்ஃபோன்களிலும் பார்க்கின்றோம்.

இந்த ஒளியின் லேசர் இயக்கம் அதிலே மோதி அதிலே வரக்கூடிய அந்தக் காந்தப்புலனுடன் இணைந்து அது எந்தெந்த இசைகள் இருந்ததோ அதையெல்லாம் இயக்கிக் காட்டுகின்றது. பாடல்களைப் பாடச் செய்கின்றது.

பாடல்களைப் பாடச் செய்யும் போது பாடத் தெரியாத குழந்தையும் காதிலே கேட்டவுடனே அந்த இசைக்குத் தகுந்த மாதிரி ஆட ஆரம்பிக்கின்றது.

அப்பொழுது அந்தக் குழந்தையை எது ஆட்டுவிக்கின்றது.

எந்தக் குழந்தை அந்தப் பாடலைக் கூர்ந்து உற்று நோக்குகின்றதோ
1.கண்ணின் புலனறிவு அந்த ஒலி் அலைகளைத் தன் ஆன்மாவாக மாற்றுகின்றது.
2.சுவாசிக்கும் பொழுது உயிரால் ஈர்க்கப்பட்டு
3.அதிலே மோதியவுடன் அந்தச் சப்தத்தை எழுப்புகின்றது.
4.அந்தச் சப்தம் மகிழ்ச்சி என்றால் மகிழ்வான உணர்வுகளைக் கொண்டு வருகின்றது.
5.உடல் முழுவதும் பரவச் செய்கின்றது
6.அதற்குத்தக்க இந்த உடலை இயக்கச் செய்கின்றது.

குழந்தைகளில் இதைப் பார்க்கலாம். எது இயக்குகின்றது…? நுகர்ந்தறிந்த உணர்வு எதுவோ அதற்குத்தக்க இயக்கச் செய்கின்றது.

ஆனால் அந்தக் குழந்தைக்குப் பாடலைப் பற்றி அந்த இசையின் தன்மை தெரியவில்லை என்றாலும் கூட
1.உற்றுக் கேட்டு நுகர்ந்த உணர்வுகள்
2.அந்தக் குழந்தையை இயக்கிக் காட்டுகின்றது… இயக்கச் செய்கின்றது…!

அதாவது உயிரால் நுகரப்பட்ட உணர்வுகள் உடல் முழுவதும் பரவச் செய்யப்படும் போது அந்த உணர்ச்சிகளே நம்மை இயக்குகின்றது. அதுவே நம்மை ஆள்கின்றது.

1.நாம் இயக்குகின்றோமா…?
2.நம்மை அது இயக்குகின்றதா…? என்று பார்த்தால்
நாம் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ அதுவே அந்த உணர்ச்சிகளை ஊட்டி அந்த உணர்வுகள் நம்மை இயக்குகின்றது.

உயிர் என்பது (LASER) போன்று நாம் சுவாசிக்கும் அலைகளுடன் உராய்ந்து எண்ணங்களாகவும் உணர்வுகளாகவும் எழுப்பி உடலுக்குள் உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.

அந்த உணர்ச்சிகள் உந்தப்படும் பொழுது உடல் உறுப்புகளை இயக்கச் செய்து அதன் வழி தான் நாம் செயல்படுகின்றோம். உயிரிலே படவில்லை என்றால் எந்த உணர்ச்சிகளும் நம்மை இயக்காது. அதனால் தான்
1.தீமையான உணர்ச்சிகள் நம்மை இயக்காமல் தடுக்கப்
2.புருவ மத்தியில் ஈஸ்வரா என்று எண்ணச் செய்து
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைக்கும்படிச் சொல்கிறோம்.

அப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளே நம்மை இயக்கும். தீமையான உணர்வுகள் நமக்குள் ஜீவன் பெறாதபடி தடைப்படுத்தப்படுகின்றது.

நம் நல்ல குணங்களை மறைக்கும் சிறு சிறு தோஷங்களை எப்படி அகற்றுவது…?

Eclipse

“சித்திரை” – நம் நல்ல குணங்களை மறைக்கும் சிறு சிறு தோஷங்களை எப்படி அகற்றுவது…?

ஒரு ஆடு ஒரு நரியைப் பார்க்கிறது என்று வைத்துக் கொள்வோம். நரியோ வலிமையானது. நரியிலிருந்து வெளிப்படும் உணர்வினை ஆடு நுகர்ந்தால் ஆட்டின் உணர்வுகள் அனைத்தும் நரியின் உணர்வாக மாற்றப்படுகின்றது.

அந்த நரியை அடிக்கடி சந்தித்து அது இதைக் கொன்று புசிக்கும் அந்த உணர்வுகள் ஆட்டிடம் தோன்றினால் அந்த உணர்வின் தன்மை வரப்படும் போது ஆட்டின் உணர்வினை இது மறைத்து விடுகின்றது.
1. நரியின் உணர்வுகள் ஆட்டின் உணர்வுகளை மறைத்து
2.அதை மூடிக் கொள்கின்றது.

ஆட்டின் திரையை நீக்கிய பின் அந்த நரியின் உணர்வுகள் பெருத்து அந்த உணர்வின் தன்மை ஆட்டின் உடலில் வித்தாகி விடுகின்றது.

ஆட்டின் உடலை விட்டு (அந்தத் திரையை நீக்கி) உயிர் வெளி வந்தால் நரியின் உணர்வைக் கவர்ந்து அதன் உணர்வின் தன்மை கொண்டு நரியின் உடலுக்குள் புகுந்து நரியாகப் பிறக்கும் தன்மை வருகின்றது.

அதைத் தான் வேதங்கள் கூறுவது ரிக் சாம அதர்வண யஜூர் மீண்டும் சாம என்பது.

ஒரு ஆடும் அந்த உடல் ரிக் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப ரிக் ஆகின்றது. ஒரு நரியும் அது சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப அதுவும் ரிக் ஆகின்றது.

ஆட்டின் மணமோ சாந்தமானது. நரியின் உணர்வை நுகரப்படும் போது இந்த ஆட்டின் உணர்வை அது மறைத்து விடுகின்றது. ஆட்டின் உணர்வை மறைத்த பின் நரியின் உணர்வே வலு பெறுகின்றது.

உதாரணமாக பாலில் பாதாமைப் போடுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பாதாம் கலந்த பாலைச் சாப்பிட்டால் அது நம் உடலுக்குச் சத்து தான்.

ஆனால் அந்தப் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் பாதாமிலும் ஊடுருவி விடுகின்றது. பாதாமின் சத்தையும் இழக்கச் செய்கின்றது. இதைப் போல
1.ஆடு நரியின் உணர்வுகளைச் சுவாசிக்கும் போது
2.அதனுடைய விஷத் தன்மைகள் ஆட்டின் சாந்தமான உணர்வை ஆக்கிரமித்து
3.இது ஒரு திரையாக மாற்றிவிடுகின்றது.

இந்தத் திரை மறைவு ஆன பின் சாந்த உணர்வு கொண்ட ஆடாக இருந்தாலும் வலிமை பெறும் நரியின் தன்மையை ஆடு பெறுகின்றது.

உடலை விட்டு வெளி வந்தபின் ஆட்டின் உயிரான்மா நரியின் ஈர்ப்புக்குள் சென்று நரியாக உரு மாறுகின்றது. ஆட்டின் உடல் என்ற திரையை மாற்றிய பின் நரியாக உருபெறும் தன்மை வருகின்றது.

ஞானிகள் அதைத்தான் “சித்திரை…” என்று காட்டினார்கள்.

ஏனென்றால் நம் மனித வாழ்க்கையிலும் இதைப் போன்று எத்தனையோ கோடி உணர்வுகள் ஒவ்வொரு நாளும் சிறு சிறு திரைகளாக நம் நல்ல குணங்களை மறைத்து விடுகின்றது.

நம் நல்ல குணங்களை மறைக்கும்
1.அந்தச் சிறு சிறு திரைகளை நீக்கவில்லை என்றால்
2.ஆடு நரியாக ஆனது போல் நம் நல்ல குணங்கள் மாறி
3.சந்தர்ப்பத்தால் நுகர்ந்த தீமையான உணர்வுகளின் இயக்கமாக அது நம்மை மாற்றிவிடும்.
4.நம் நல்ல குணங்கள் மறையத் தொடங்கும்.

அதை நீக்கும் நிலையாகத்தான் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம்.

“ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் உள் முகமாகச் செலுத்துதல் வேண்டும்.

அவ்வாறு செலுத்தப்படும் பொழுது நம் ஆன்மாவில் சுழன்று கொண்டிருக்கும் தீமையான உணர்வலைகளைப் பிளந்து (சிறு திரைகளைக் கிழித்து) நம் ஈர்ப்பை விட்டு அகலச் செய்யும்.

நம் ஆன்மா தூய்மை அடையும். நம் நல்ல குணங்கள் வலிமை பெறும்.

கையில் அழுக்குப் பட்டாலோ… அல்லது துணியில் அழுக்குப் பட்டாலோ… “எப்படி உடனடியாக அதைச் சுத்தம் செய்கிறோமோ…!” அதைப் போன்று தீமையான உணர்வுகளை நாம் நுகர்ந்தால் அடுத்த கணமே ஆத்ம சுத்தி செய்து தூய்மையாக்க வேண்டும்.

 

இறந்த உயிரினங்கள் மூலமாகப் புது விதமான தாவர இனங்கள் உருவாகும் நிலையும் அதற்குண்டான அமானுஷ்ய ஆற்றல்களும்…!

dhuruva-maharishi-agastya

இறந்த உயிரினங்கள் மூலமாகப் புது விதமான தாவர இனங்கள் உருவாகும் நிலையும் அதற்குண்டான “அமானுஷ்ய ஆற்றல்களும்…!”

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சொன்ன முறைப்படி யாம் (ஞானகுரு) காடு மேடெல்லாம் அலைந்து பல வருட காலம் பல அனுபவங்களைப் பெற்றோம்.

ஒரு சமயம் ஒரு காண்டாமிருகம் மற்றொன்றால் தாக்கப்பட்டு இந்த உயிர் பிரிந்த நிலையில் அதனுடைய உடல் அழுகிய நிலைகளில் இருக்கின்றது.

அந்த உடலை உருவாக்கிய ஜீவ அணுக்கள் உயிரணுக்களாக மாறி புழுக்களாக மாறி அந்த உடலையே உணவாக உட்கொள்கின்றது.

அந்த நேரத்தில் அதனின்று வெளிப்படும் மணத்தைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்கின்றது. அதை அலைகளாக மாற்றுகின்றது.

அவ்வாறு அலைகளாக மாறியது வலுவான உணர்வின் தன்மையாகக் காற்றிலே பரவி வரும் பொழுது இன்னொரு தாவர இனத்தின் (பச்சிலை) சத்தைக் கவர்ந்த அலைகள் மீது மோதியபின் அதைக் கண்டு தாவர இனத்தின் உணர்வலைகள் அஞ்சி ஓடுகின்றது.

அவ்வாறு ஓடும் பாதையில் இன்னொரு விஷச் செடியின் சத்தைக் கவர்ந்த அலைகளில் தாக்கப்பட்ட பின் “கிறு…கிறு…” என்று சுழலுகின்றது.

இதை வேதங்கள் தெளிவாகக் கூறுகின்றது. எப்படி?

காண்டாமிருகம் அது சேர்த்து கொண்ட உணர்வுகள் ரிக். தாவர இனச் சத்தை உருவாக்கிய செடியும் ரிக். விஷச் செடியின் தன்மையும் ரிக். ரிக் என்றால் ஒரு பொருள்.

இந்த மூன்றிலிருந்தும் வெளிப்படும் மணம் “சாம…” சாம என்றால் இசை.

இந்தக் காண்டாமிருகத்தின் உணர்வலைகள் வலுவான நிலைகள் கொண்ட பின் இது போகும் பாதையில் சாந்த உணர்வு கொண்ட தாவரமான அந்தப் பச்சிலையின் உணர்வுகள் நகர்ந்து ஓடுகின்றது.

அது ஓடும் பாதையில் ஒரு விஷச் செடி உமிழ்த்திய அந்த உணர்வு கொண்டு மோதிய பின் அது சுழற்சியாகி மூன்றும் இரண்டற இணைகின்றது.

இதற்குப் பெயர் தான் “அதர்வண…” அதர்வண என்றால் மறைதல் என்று பொருள். இரண்டற இணைந்த பின் அதனதன் குணங்களை இழந்து விடுகின்றது. இருந்தாலும்..
1.பல தாவர இனங்களை உணவாகப் புசித்த
2.இந்தக் காண்டாமிருகத்தின் வலுவான உணர்வுகள்
3.அது முன்னனியில் வலு பெறுகின்றது.

மூன்றும் சுழன்று மோதலில் ஆவியின் தன்மை மேலே செல்கின்றது. மோதிய உணர்வுகளோ இரண்டறக் கலந்து ஒரு புது விதமான செடியாக உருவாகின்றது.

அதாவது மூன்று உணர்வுகளும் சேர்த்து “யஜுர்…” யஜூர் என்றால் ஒரு வித்தாக உருவாகின்றது என்று பொருள்.

அதாவது காண்டாமிருகத்திலிருந்து வெளிப்பட்ட அந்த உணர்வின் மணம் பத்து சதவீதமும் பச்சிலையின் மணம் நூறு சதவீதமும் விஷச் செடியின் மணம் பத்து சதவீதமும் இந்த மூன்றும் கலந்து ஒரு வித்தாகின்றது.

எடை கூடிய நிலையில் அந்த வித்தின் தன்மை இந்தப் பூமிக்குள் பதிந்து விடுகின்றது. பின்பு
1.பதிந்த வித்தில் மின்னல்கள் தாக்கப்படும் போது
2.அந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டு
3.அந்த வித்து உருவாகக் காரணமான
4.காண்டமிருகம் பச்சிலை விஷச் செடி மூன்று சத்துக்களையும் அந்தந்த சதவீதம் கவர்ந்து
5.புதுவிதமான செடியாக வளர்கின்றது.

அந்த செடியின் மணமும் அதனுடைய உணர்வுகளும் அதனுடைய இயக்கங்களும் எவ்வாறு இருக்கின்றது என்ற நிலையை அறியும்படிச் செய்கின்றார் குருநாதர்.

அந்தச் செடியை எடுத்துச் சிறிது நேரம் அதை வெயிலில் வாடச் செய்து அதை நுகரும்படி சொன்னார். பின் அதை மென்று உட்கொள்ளும்படி சொன்னார் குருநாதர்.

அவர் சொன்னபடி செய்து அதை உட்கொண்ட பின் நான் காட்டுப் பகுதியில் அலைந்து திரிந்து எவ்வளவு சோர்வு அடைந்து இருந்தேனோ
1.அந்தச் சோர்வெல்லாம் நீங்குகின்றது.
2.எனக்கு ஒரு மன உறுதியைக் கொடுக்கின்றது.

ஏனென்றால் அந்தக் காண்டாமிருகம் தாவர இனங்களை உட்கொண்டது. அதன் உடலில் உருவான அந்த அணுக்கள் புழுக்களாகி அந்த உடலை உணவாக எடுக்கின்றது.

இந்த உடலைத் தின்ன புழுக்கள் அதற்கு இரை இல்லை என்றால் மடிகின்றது. மடிந்த புழுவின் உயிர்கள் மற்ற செடிகளில் விளைந்து அதை உணவாக உட்கொண்டு
1.எந்தச் செடியின் உணர்வை உணவாக உட்கொள்கின்றதோ
2.அதற்குத்தக்க உணர்வும் குணமும் இணைந்து
3.விட்டில் பூச்சிகளாகவும் விஷப் பூச்சிகளாகவும் அது உருபெறுகின்றது என்பதனை
4.அங்கே காட்டிற்குள் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

வான இயல் புவி இயல் தாவர இயல் உயிரியல் என்ற நிலையில் ஆதியிலே அகஸ்தியன் கண்டுணர்ந்த பேருண்மைகள் இவை.

அந்த மகா ஞானி பெற்ற பேரண்டத்தின் சக்திகளையும் ஆற்றல்களையும் நீங்களும் பெறவேண்டும் என்பதற்காகத்தான் சிறுகச் சிறுக இதை உணர்த்துகின்றோம்.

நூலாம்படைப் பூச்சி ஆயிரக்கணக்கில் தன் இனத்தைப் பெருக்குவது போல் ஒளியான அணுக்களை நமக்குள் எப்படி உருவாக்குவது…?

Spiritual lights - Third eye

நூலாம்படைப் பூச்சி ஆயிரக்கணக்கில் தன் இனத்தைப் பெருக்குவது போல் ஒளியான அணுக்களை நமக்குள் எப்படி உருவாக்குவது…? 

நூலாம்படைப் பூச்சி தன் உமிழ் நீரால் நூலம்படையை உருவாக்குகின்றது. அதற்குள் ஒரு ஈ சிக்கிவிட்டால் தன் ஊசி போன்ற மூக்கால் ஈ உடலுக்குள் தன் விஷத்தைப் பாய்ச்சி உடலை அமிலமாக மாற்றி அதை உணவாக உட்கொண்டு விடுகின்றது.
1.ஈ முழுமையாக இருக்கும்.
2.ஆனால் அதனுடைய தசைகள் இருக்காது.

அதே போல் வலைக்குள் சிக்கும் இன்னொரு ஈயை இந்த நூலாம்படைப் பூச்சி என்ன செய்கிறது? தனக்குள் விளைந்த விஷத்தின் தன்மையை அந்த ஈயின் உடலுக்குள் பாய்ச்சி விடுகின்றது.

பாய்ச்சிய பின் ஈயின் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் நூலாம்படைப் பூச்சியை உருவாக்கும் உணர்வின் அணுக்களாக மாறுகின்றது.
1.அப்படி மாறிய பின் அந்த ஈயின் ரூபங்கள் மறைந்து விடுகின்றது.
2.அந்த அணுக்கள் அனைத்தும் நூலாம்படைப் பூச்சிகளாக மாறி விடுகின்றது

அதாவது ஈயின் உடலில் இந்த நூலாம்படைப் பூச்சிகள் உருவாகி “பல ஆயிரம் நூலாம்படைப் பூச்சிகளாக…” வெளி வருகின்றது. (இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்)

ஒரு குளவி என்ன செய்கிறது? ஒரு புழுவின் மீது தன் விஷத்தைப் பாய்ச்சி கூட்டுக்குள் அடைத்துப் புழுவைத் தன் இனமாகக் குளவியாக மாற்றுகின்றது.

நூலாம்படைப் பூச்சி ஈக்குள் தன் விஷத்தைப் பாய்ச்சப்படும் போது அதிலிலுள்ள அணுக்கள் அனைத்தையும் ஜீவ அணுக்களாக மாற்றும் போது
1.நூலாம்படைப் பூச்சியின் உருவாகக் கொச கொச என்று
2.பல அணுக்களின் தன்மை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.

நூலம்படைப் பூச்சி தன் இனத்தை உருவாக்குவதற்கும் குளவி தன் இனத்தை உருவாக்குவதற்கும் உண்டான வித்தியாசத்தைக் காட்டுகின்றார் குருநாதர்.

நீங்கள் இதையெல்லாம் ஆர அமர்ந்து நிதானமாகக் கேட்கின்றீர்கள். ஆனால் நான் (ஞானகுரு) இதைத் தெரிந்து கொள்வதற்கு அந்தப் பூச்சியகள் கருவாகி உருவாகும் நிலையை அதை அறியும் வரையில் எனக்குச் சாப்பாடு கிடையாது.

ஒரு நிமிடம் வேறு பக்கம் என் நினைவு திரும்பினால் குருநாதர் என்ன செய்வார்…?
1.உன்னை எதற்காகக் கூப்பிட்டுக் கொண்டு வந்தேன்…?
2.நீ எங்கே பார்க்கின்றாய்…? என்பார்.

நூலாம்படைப் பூச்சி ஈக்குள் கூர்மையாகப் பாய்ச்சிய உணர்வின் தன்மையால் அது எப்படி உருமாறுகின்றது…? அதன் உணர்ச்சியின் தன்மை துடிப்பின் நிலைகள் எவ்வாறு வருகின்றது…?

உதாரணமாக விஞ்ஞான அறிவு கொண்டு ரேடியோ அலைகளையும் டி.வி. அலைகளையும் ஒலி/ஒளிபரப்புகின்றார்கள். வீட்டில் இருக்கும் ரேடியோ டி.வி இவைகளைத் திருப்பி வைக்கும் பொழுது
1.ஒலி/ஒளிபரப்பாகி வரும் அந்த அலைகளைக் கவர்ந்து
2.அந்த அலைகளுக்குத் தக்க உருவமாகவும் ஒலியாகவும் நமக்குக் காட்டுகின்றது.

அதைப்போல நூலாம்படைப் பூச்சி பாய்ச்சிய உணர்வலைகள் அந்த உயிரின் (ஈயின்) துடிப்பால் ஈர்க்கப்பட்டு அந்த உணர்வுகள் நூலாம்படையின் ரூபமாக மாற்றுகின்றது என்ற நிலையைத் தெளிவாக்குகின்றார் குருநாதர்.

இவை அனைத்தும் எந்த உயிரானாலும் எதன் நிலைகள் கொண்டாலும் ஆண் பெண் என்ற நிலைகளில் தான் இணைகின்றது.

ஒரு ஆண் நூலாம்படைப் பூச்சி தனக்குள் உருவாகும் உணர்வின் தன்மையை ஈயைத் தாக்கப்படும் போது ஒரு பெண் நூலாம்படைப் பூச்சியும் அதே போல அங்கே ஈக்குள் உமிழ் நீரைச் சுரக்கச் செய்கின்றது.

அப்படிச் சுரந்த பின்தான் ஈயின் உடலில் அமிலங்கள் மாறி அதன் ரூபமாக மாற்றுகின்றது. ஆண் பூச்சி மட்டும் அது தாக்குவதில்லை.

ஆனால் குளவியில் இருக்கக்கூடிய நிலையோ
1.உயிரின் இயக்கம் கொண்டு குளவி ஆண் என்ற நிலைகள் அடைந்த பின்
2,குளவிடமிருந்து சுரக்கும் உணர்வுகள் புழுவின் உடலுக்குள் சேர்க்கப்படும் போது
3.அது பெண் என்ற நிலைகள் அடைகின்றது.

அப்பொழுது புழு உடலுக்குள் உருவாகும் கருவின் தன்மையை குளவியின் ரூபமாக எவ்வாறு உருமாற்றுகின்றது..? என்று காட்டுகின்றார்.

நூலாம்படைப் பூச்சி ஆண் பெண் என்ற நிலைகள் அமைகின்றது. ஆனால் குளவி ஆண் பெண் என்ற நிலைகளில் வருவதில்லை. தன் விஷத்தின் தன்மையைப் புழு உடலில் பாய்ச்சப்படும் போது இந்த உடலிலுள்ள அணுக்களின் தன்மை பெண்பாலாக மாறிவிடுகின்றது.

இவ்வாறு ஒவ்வொரு இயற்கையின் செயல்கள் எப்படி உரு பெறுகின்றது…! உடல்கள் எப்படி மாறுகிறது…? என்ற நிலையைத் தெளிவாக்குகின்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

குளவி ஒரு புழுவைக் கொட்டி ஒரு புழுவாக மாற்றும் நிலையையும் நூலாம்படைப் பூச்சி ஒரு ஈயை பல நூற்றுக்கணக்கான நூலாம்படைப் பூச்சிகளாக மாற்றும் நிலைகளையும் குருநாதர் தெளிவாக்கினார்.

இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன். ஏனென்றால்
1.நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்குள்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பாய்ச்சி
3.நம் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தையும்
4.ஒளியான அணுக்களாக உருவாக்கி அழியா ஒளிச் சரீரம் நாம் பெற வேண்டும்.

“பிறரை உயர்த்தித் தான் உயரும் நிலையையும்.. பிறரைக் காத்துத் தன்னைக் காக்கும் நிலையையும்… பிறரை வலுவாக்கித் தன்னை வலுவாக்கிக் கொள்ளும் நிலையையும்…” கொடுத்தார் குருநாதர்…!

Image

Divine chracter of Sages

“பிறரை உயர்த்தித் தான் உயரும் நிலையையும்.. பிறரைக் காத்துத் தன்னைக் காக்கும் நிலையையும்… பிறரை வலுவாக்கித் தன்னை வலுவாக்கிக் கொள்ளும் நிலையையும்…” கொடுத்தார் குருநாதர்…!

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மைக் (ஞானகுரு) காட்டிற்குள் அழைத்துச் சென்று பல அனுபவங்களைப் பெறச் செய்தர்.

விஷத்தன்மை கொண்ட பாம்பினங்கள் அது விஷத்தால் தன் உடலை வளர்த்தாலும் அது உடலை விட்டுச் சென்ற பின் மடிந்த அந்த உடலிலிருந்த விஷத்தின் அணுத் தன்மைகள் அங்கே படர்கின்றது

அது சில கலவைகளாகி தாவர இனங்களில் மோதப்பட்டு புதுவிதமான செடியாக உருவாகின்றது.

அந்தச் செடியின் விழுதைக் காட்டினால் அதை நுகரும் விஷம் கொண்ட பாம்பினங்களும் விஷத்தால் இயக்கும் மற்ற உயிரினங்களும் ஒடுங்குகிறது என்பதனைக் காட்டிற்குள் நேரடியாகக் காட்டுகின்றார் குருநாதர்.

1.உயிரணுக்களின் வளர்ச்சியில் உடல்கள் உருவாகி
2.இந்த உடலில் பெற்ற உணர்வுகள் மற்ற தாவர இனத்துடன் கலந்து
3.அந்த (உடல்களில் உள்ள) இரத்தத்தைக் கவர்ந்து கொண்ட பின்
4.அந்தத் தாவர இனங்கள் (மணம், விழுது) என்ன செய்கின்றது?
5.விஷத்தின் தன்மை பெருகிய பின் அந்த விஷத்தின் தன்மையால் என்ன செய்கிறது..?
7.இயற்கை எப்படி மாறுகின்றது…
8.எந்தெந்த இயக்க வடிவில் அது வருகின்றது..? என்று
9.காட்டுக்குள் அழைத்துச் சென்று நேரடியாகக் காட்டினார்.

இப்படி உருவான தாவர இனங்கள் அக் காலங்களில் ஏராளம் ஏராளம் என்று காட்டி இதன் அறிவாக நீ தெளிந்து கொள் என்றார் குருநாதர்.

இன்று கேன்சர் என்ற விஷத்தன்மையை அடக்குவதற்கு விஞ்ஞானிகள் எத்தனையோ நிலைகளைக் கையாளுகின்றனர். ஆனால் அது முடியவில்லை.

TB நோய் வரும்போது அணுக்களின் தன்மைகளில் கிருமிப் போர் என்ற நிலைகளில் இதைக்காட்டிலும் வல்லமை கொண்ட உணர்வை ஒரு உடலில் உருவாக்குகின்றார்கள். அதாவது
1.TB நோயை உருவாக்கும் அணுக்கள்
2.உடலிலுள்ள எலும்பையும் மற்ற உறுப்புகளையும் அது கரைத்துக் கொன்று புசித்தால்
3.அதற்கு மாறான அவைகளைக் கொன்று புசிக்கும் அணுக்களைப் பெருக்கி
4.அந்த TB அணுக்களைக் கொன்று மனிதனைக் காக்கின்றார்கள்

இப்படிக் காத்து மனிதனை நோயிலிருந்து மீட்டினாலும் இவர்கள் கொடுக்கும் மருந்தால் இன்னொரு விஷத்தன்மையான அணுக்களை வளர்க்கும் பொழுது விஷத்தன்மை கொண்ட சிந்தனைகள் மனிதனின் நினைவில் வருகின்றது.

விஷமான இந்த நினைவுடன் உடலை விட்டுச் சென்ற பின் இன்னொரு உடலுக்குள் சென்றாலும்
1.அந்த உடலைக் கரைத்திடும் நிலையும்
2.விஷத்தை உருவாக்கும் தன்மை கொண்டும்
3.மனிதனுக்குள் அது மனிதனாகச் சென்றாலும்
4.மனிதனாகப் பிறக்க முடியாத நிலை ஆகின்றது.

அந்த உடலிலிருந்து அவன் ஆன்மா வெளிச் சென்றால் மீண்டும் விஷத்தைப் பெருக்கி விஷத்தால் ஜீரணிக்கும் சக்தி கொண்ட உடலாக மனிதனல்லாத விஷப் பாம்பாகவோ மற்ற விஷமான ஜெந்துக்களாகவோ தான் பிறக்க நேரும் என்று காட்டுக்குள் வைத்துக் காட்டுகின்றர் குருநாதர்.

இயற்கையின் உண்மை நிலைகள் என்ன..? இயற்கை எவ்வாறு இயங்குகிறது என்று அறிவதற்காகப் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் வாழ்ந்த நிலைகளைக் காட்டினார் குருநாதர்.

எந்தெந்த இடங்களில் அதிகமாக அகஸ்தியனின் உணர்வுகள் உந்தப் பட்டதோ அந்தப் பகுதிகளுக்கெல்லாம் என்னை அழைத்துச் சென்றார். இந்த உண்மையின் உணர்வுகளை அறியச் செய்தார்.

இதை அறிந்து கொண்ட பின் எனக்குள் வளர்ந்தால் மட்டும் போதுமா…? நீங்களும் அதைப் பெற வேண்டும் அல்லவா…!

அந்த அகஸ்தியன் கண்ட இயற்கையின் உண்மை உணர்வுகளை உலக மக்கள் அனைவரும் பெறச் செய்ய வேண்டும். அதற்காகத்தான் உனக்கு இதையெல்லாம் கொடுக்கிறேன் என்றார் குருநாதர்.

ஆனால் நீ சுயநலமாக
1.நான் வளர்த்துக் கொண்டேன்… நான் பெரிய மகான்…!
2.நான் அதைச் செய்வேன்… நான் இதைச் செய்வேன்.. என்று உனது பெருமையைச் சாற்றினால்,
3.அதனால் உனக்குச் சிறுமையே வரும்…!

இதனை நீ கற்றுணர்ந்த பின் “நான் இதையெல்லாம் அறிந்தேன்” என்ற அகம் எப்போது உனக்கு தோன்றுகிறதோ அப்போதே உண்மையை அறியும் தன்மையை நீ இழக்கின்றாய் என்றார் குருநாதர்.

ஆகவே இதனை நீ எவ்வாறு செய்யப் போகின்றாய்…? எவ்வாறு நீ வெளிப்படுத்தப் போகின்றாய்…?

கடுமையான நிலைகளில் உன்னை எதிர்த்துத் தாக்கும் உணர்வுடைய உலகில் நீ வாழ்கின்றாய். இதனின்று மீளும் மார்க்கம் என்ன…?

இப்படி அடிக்கடி வினாக்களைப் போட்டு அவர் கண்டுணர்ந்த உண்மையின் தன்மைகளை உணர்த்தினார். ஆகவே
1.ஒவ்வொருவரும் பெருமைப்படும்படி
2.அவர்களை உயர்த்தும்படி நீ இதைச் செய்தால்
3.நீ உயர்கின்றாய்… அவர்களையும் உயர்த்துகின்றாய்…!
4.உயர்ந்த நிலையை நீயும் நுகருகின்றாய்… அவர்களும் உயர்கின்றனர்.
5.ஒருவர் உயர வேண்டும் என்ற உணர்வை எப்போது நீ உணர்த்துகின்றாயோ…
6.அவர்கள் பெற வேண்டும் என்று எதை நீ ஆசைப்படுகின்றாயோ…
7.அவர்களைக் கேட்க வைக்கின்றாயோ… அதை உருவாக்குகின்றாயோ…
8.அது உருவான உணர்வின் தன்மை உன்னை வலுவாக்கவும்
9.உன்னை பாதுகாத்துக் கொள்ளவும் அவர்களைப் பாதுகாக்கும் நிலையாகவும் இது வருகிறது.

இதைத்தான் நான் உன்னைச் செய்யச் சொல்கிறேன் என்றார் குருநாதர்.

உடலுக்குள் மறைந்திருக்கும் ஆற்றல்களையும் சக்தியையும் எப்படிப் பயன்படுத்த வேண்டும்…?

Powers of Human

உடலுக்குள் மறைந்திருக்கும் ஆற்றல்களையும் சக்தியையும் எப்படிப் பயன்படுத்த வேண்டும்…?

இன்று விஞ்ஞான அறிவில் எங்கிருந்தோ ஒலி/ஒளிபரப்பக் கூடிய அந்த உணர்வின் காந்த அலையை அந்த உணர்வு கொண்டு இங்கே சுவிட்சைப் போட்டவுடன் TV RADIO காற்றிலிருந்து இழுத்து நமக்குக் காட்டுகின்றது.

இது யார் செய்தது..? மனிதன் தான்.

1.இந்த காந்த இயக்கத்தின் சக்தியினுடைய தன்மையை
2.நாம் உணர்ந்தறிந்து செயல்படும்… உரு பெறும்… உருவாக்கச் செய்யும்…
3.ஆறாவது அறிவின் தன்மை அது நம் உடலுக்குள் நின்று தசைகளை இயக்கினாலும்
4.நாம் எண்ணக்கூடிய உணர்வுகளைச் சுவாசித்தவுடன்
5.நம் உயிரிலே பட்டு – அந்த எண்ணங்களுக்குத் தக்கவாறு (நம்) உடலை இயக்குகின்றோம்.
6. அந்த உணர்வின் ஆற்றல் வலுவானது…! அதை நாம் பயன்படுத்தும் முறைகளை அறிந்து கொள்ள வேண்டும்.

நான் படிக்கவில்லை…
1.சாமி (ஞானகுரு) என்னமோ சொல்கிறார்…! என்று விரக்தியாக இருக்க வேண்டாம்
2.சாமி சொல்வது “அர்த்தமாகவில்லையே…!” என்று எண்ண வேண்டாம்
3.சாமி சொல்வதைப் “புரிந்து கொள்ள வேண்டும்…!” என்ற ஏக்கத்தில் இருந்தால் போதும்
4.இந்த உணர்வின் ஆற்றல் உங்களுக்குள் பதிவாகிவிடுகின்றது.

டேப் செய்யப் பயன்படும் “ஒலி நாடா” ஒன்றுமே அறியாதது. ஆனால் அந்த நாடாவில் பதிவு செய்து மீண்டும் அதை இயக்கினால் அந்த ஆனந்தமான பாடல்களைக் கேட்டு இரசிக்கின்றோம்.

அபூர்வமான படங்களையோ மற்ற எத்தனையோ ஆச்சரியத்தக்க அளவில் பல நிலைகளை நாம் கண்டு மகிழ்கிறோம்.

அதைப்போன்று தான் நம் எலும்புக்குள் இருக்கக்கூடிய காந்த சக்தியினுடைய நிலைகள் எந்த உணர்வை நாம் ஆழமாகப் பதிவாக்கிக் கொள்கின்றோமோ அது ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கிக் கொள்கின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் மெய் ஞானிகளின் ஆற்றல் மிக்க நிலைகளை இந்த உபதேசத்தின் மூலமாகப் பதிவாக்குகின்றோம்.

இதைப் படிக்கும் பொழுது அந்த உணர்ச்சிகள் தூண்டப்பட்டு மகரிஷிகளின் உணர்வைச் சுவாசிக்க நேர்கின்றது. அது உமிழ் நீராக மாறி உடலுக்குள் சத்தாக மாறுகின்றது.

நெருப்புடன் ஒரு கட்டையைப் போட்டவுடன் அந்தக் கட்டையில் இருக்கக் கூடிய சத்தை மாற்றி அதை ஒளியாக மாற்றுகின்றது.

நம் உயிர் ஒளியாக நின்று உடலுக்குள் அணுவின் திசுவை இயக்கி அந்த உணர்வின் சக்தியை அறியச் செய்து அந்த அறிவின் நிலையில் இயக்குகின்றது. ஆகவே நம் உணர்வுகளை உயிரைப் போன்றே ஒளியாக மாற்ற வேண்டும்.

நாம் கட்டைகளை எரித்து அதன் சக்தியை மற்ற ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்தி இரும்பையோ மற்றவைகளையோ உருக்குகின்றோம். அதைப் போன்று
1.நம் உடலை உருவாக்கிய இந்த உணர்வைக் கட்டையாக வைத்து,
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் கூட்டிச்
3.சிறுகச் சிறுக இந்த உணர்வின் சக்தியை உயிராத்மாவில் மாற்ற வேண்டும்.

அப்படி மாற்றிய பின் விண்ணிலே தோன்றக் கூடிய கடும் விஷமானாலும் அதனின் சக்தியை ஒளியாகத் தனக்குள் கூட்டி ஒளியின் சிகரமாக விண்ணிலே சென்றடைவது தான் “மனிதனின் கடைசி நிலை….!”

இந்த மனித உடலுக்குள் நின்று அந்த உணர்வின் சக்தியை நாம் சிருஷ்டிக்கும் வலிமை மிக்கதாக நாம் செயலாக்க வேண்டும். அவ்வாறு செயலாக்கப்படச் செய்வதற்குத்தான் இந்தத் தியானத்தின் வழி.

மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெறவேண்டும் என்று ஏங்கும் பொழுது அதை உங்களுக்குக் கிடைக்கச் செய்து வாழ்க்கையிலே மகிழச் செய்யும் இந்த உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் பெருக்கச் செய்கின்றோம்.

விஞ்ஞானிகள் ஒரு பொருளின் தன்மையை உருவாக்கி இராக்கெட் மூலம் விண்ணிலே செல்லக்கூடிய ஆற்றல் பெற்றிருக்கிறார்கள்.

அன்று மகரிஷிகளோ விண்ணை நோக்கி ஏகி விண்ணின் ஆற்றலைத் தான் இருந்த இடத்திலிருந்தே பெற்றுத் தனக்குள் அதைக் கூட்டி அந்த உணர்வின் சத்தை ஜீரணிக்கச் செய்து உணர்வுகளை ஒளியாக மாற்றிச் சப்தரிஷி மண்டலமாக இன்றும் சுழன்று கொண்டுள்ளார்கள்.

அவர்கள் கண்ட மெய் உணர்வுகளைத்தான் இராமாயணம், மகாபாரதம் கந்தபுராணம் சிவபுராணம் என்று தோற்றுவித்து அதைத் சாதாரண மக்களுக்கும் தெரியப்படுத்தும் விதமாகக் காவியமாகப் படைத்துச் சென்றார்கள்.

மகரிஷிகளின் உணர்வுடன் அவைகளை மீண்டும் படித்துப் பார்த்தால் அதற்குள் மறைந்த மூலங்களை அறிய முடியும்.
1.இந்த உடலில் வாழும் இக்காலத்திலேயே
2.ஒளியின் சரீரம் பெறும் நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

ஒரு சொல் தான்…! என்றாலும் அது எப்படி இயக்குகின்றது…?

emotions

ஒரு சொல் தான்…! என்றாலும் அது எப்படி இயக்குகின்றது…? 

1.வாருங்கள்…! வாருங்கள்…! என்று கூப்பிடுகின்றேன்.
2.ஆனால் “வாங்க…ஆ…!” என்று கொஞ்சம் அழுத்தமாகக் கூப்பிட்டால் என்ன சொல்வீர்கள்…?
3.என்ன இப்படி “வெடுக்…” என்று கேட்கின்றார்…! என்று தான் சொல்வீர்கள்.
4.அதே சொல் தான். ஆனால் அந்தச் சொல்லிற்குள் இந்த உணர்ச்சிகள் இப்படித்தான் இயக்கும்.

இனிமையாக இருந்தால் மகிழ்கின்றோம். அழுத்தமாகும் பொழுது எரிச்சலாகின்றது.. வெறுக்கச் செய்கின்றது…!

அப்பொழுது எது நம்மை இயக்குகின்றது…?

உதாரணமாக கண்ணாடி தெளிவாகத் தெரிகிறது. தட்டினால் உடைந்து போய்விடும். அதில் பெயரை அடிக்க (எழுத) வேண்டும் என்றால் அதற்குத் தகுந்த அடி கொடுக்க வேண்டும். இல்லை என்றால் அதில் எழுத முடியாது.

கண்ணாடி உடைந்து போனதென்றால் எழுதி என்ன செய்வது…?

அதே மாதிரி நமது ஆன்மா என்பது ஒரு “கண்ணாடிக்குச் சமம்” தான். அதில் வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் கலந்தால் அழுக்காகப் படிந்துவிடும். நல்ல குணத்துடன் கலந்து அழுக்கடைந்து விடும்.

அதற்கு அப்புறம் சிந்திக்கும் தன்மை இருக்காது.

வேதனைப்படுவோரை உற்றுப் பார்த்து அந்த உணர்வைக் கவரும் போது நம் ஆன்மா அழுக்கடைந்து விடுகிறது. மீண்டும் மீண்டும் அவரை எண்ணி “இப்படிக் கஷ்டப்படுகின்றாரே…!” என்று எண்ணினால்
1.அப்போது நாம் மீண்டும் அழுக்கைத்தான் சேர்க்கின்றோமே தவிர
2.அதைத் துடைத்துப் பழகுகின்றோமா… என்று சிந்தித்துப் பாருங்கள்.

மகரிஷிகளின் அருள் உணர்வுகள எடுத்து நம்மைத் தூய்மைப்படுத்திக் கொண்டு மகரிஷிகளின் அருள் சக்தியால் உன் வேதனைகள் அகலும். நீ நலம் பெறுவாய்…!

ஆகவே “இப்படி வேதனைப்பட்டுக் கொண்டு இருக்காதே…”என்று அவரிடம் சொல்லித் துடைத்து விட்டோம் என்றால் தன்னை உணரக்கூடிய சக்தி இருக்கும்.

உதாரணமாக நாம் கடையில் வியாபாரம் செய்யும் பொழுது என்ன செய்கிறோம்…?

ஒரு கடன்காரன் வந்து என்ன… கடனுக்குக் கொடுக்க மாட்டீர்களா…? என்று கேட்டு விட்டுப் போகின்றான்.

உடனே அவன் மீது வெறுப்பு வருகின்றது. வேதனை என்ற உணர்ச்சி வருகிறது.
1.“சுருக்… என்று கேட்டுவிட்டுப் போகின்றான் பார்…! என்று வரும்.
2.விஷம் என்ற நிலைகள் நம்மை இயக்குகின்றது.

கடனுக்குக் கொடுத்தாலும் பணம் திரும்ப வரவில்லை என்ற நிலையில் வெறுப்பு வருகின்றது. கடனுக்கெல்லாம் இப்பொழுது சரக்குக் கொடுப்பதில்லை. “ஒன்றும் முடியாது… இல்லை…!” என்று சொல்வோம்.

ஆனால் முதலில் கடன் கொடுத்துப் பழகிவிட்டோம். கடன் கொடுத்துப் பழகியது இப்பொழுது வெறுப்பாகச் சொல்லும் பொழுது என்ன ஆகும்…?

அடுத்த கடையில் கடன் கொடுக்கத் தயாராக இருப்பார்கள். இப்படி நம்முடைய வாடிக்கையாளர்கள் எல்லாம் அங்கே போய்விடுவார்கள். அங்கே போனவுடனே அவனுக்குச் சரியான நேரத்தில் பணத்தைக் கொடுப்பார்கள்.

நம்மை எண்ணும் பொழுது “இவன் நம்மை வெறுத்தான் அல்லவா…! இவனுக்கு என்ன கடனைத் திருப்பிக் கொடுப்பது…? என்ற நிலையில் தான் வருவார்கள்.

வெறுப்பின் தன்மையால் இந்தக் கடனைக் கொடுக்க மாட்டார்கள். இது இயற்கை.
1.சில சந்தர்ப்பம் நாம் நுகரும் உணர்வுகளில் இப்படி நடக்கும்.
2.இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

இப்படி வெறுப்புகள் வளர்ந்த பின் அடுத்தாற்போல் நன்றாகக் காசு கொடுத்துப் பொருளை நல்ல முறையில் வாங்குகின்றவர்கள் நம்மிடம் வியாபாரத்திற்காக வருவார்கள்.

சரக்குக் கேட்டு நம்மிடம் அவர் விசாரிக்கும் போது அவருக்குப் பதில் சொல் நம்மிடம் சரியாக வராது. அவருக்குச் சரக்கு எடுத்து கொடுக்கப் போகும் போது சரியான பதில் வராது.

1.அவர்கள் ஒன்றைக் கேட்டு கொண்டிருப்பார்கள்.
2.ஆனால் நாம் அந்த வெறுப்படைந்த நிலையில் சாமானை எடுத்துக் கொடுப்போம்.
3.பார்க்கலாம் சில சமயங்களில்… நாம் வெறுப்பாகி விட்டால்…
3.உப்பு என்பதற்கு பதில் “பப்பு…!” என்று சொன்ன மாதிரி
4.ஏதாவது ஒன்றை நாம் பேசுவோம்.

என்னங்க…! நான் என்ன கேட்கிறேன்…? நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்..! எடுத்துக் கொடுக்கின்றீர்கள்…? என்பார் வாடிக்கையாளர்.

இரண்டு தரம் நம்முடைய உணர்வுகள் மாறி வந்தவுடனே சொன்னவுடனே என்னவாகின்றது..?
1.விஷயத்தைச் சொல்லிச் சொல்லாதபடி…
2.எதையோ கேட்டுக் கொண்டு இருக்கின்றாய்…! என்று அவரிடம் நாம் வம்பு செய்வோம்.
4.அவர்கள் சொல்வது நம் காதில் கேட்காது. அவர்களைக் குற்றவாளியாக ஆக்குவோம்.

“தறி” நெய்கின்றவர்களை எடுத்துக் கொண்டோம் என்றால் கொஞ்சம் வெறுப்பாகி விட்டால் போதும். நிச்சயம் ஒரு பக்கத்தில் நூல் அறுந்து கொண்டே போகும்.

கண்ணுக்கு முன்னாடியே ஒரு நூல் அறுந்து இருக்கும். நூல் அறுந்தது நமக்குத் தெரியாதபடி வெறுப்பிலேயே இருப்போம். அது மேலும் சிக்கலாகி விடும்.

ஏனென்றால் வெறுப்பான உணர்வு இருக்கும் போது எதிரில் இருக்கும் அறுந்த நூலைப் பார்க்க முடியாது.

நீங்கள் அவசரமாகப் போக வேண்டும் என்று மட்டும் எண்ணிப் பாருங்கள். கையில் சாமானை வைத்துக் கொண்டே இருப்பீர்கள்.

ஆனால் அதைக் காணோம்…! காணோம்…! இங்கே தானே வைத்தேன்.. எப்படிக் காணாமல் போகும்…? என்று சொல்லி வீட்டில் சண்டைக்குப் போவோம்.

நாம் வெளிப்படுத்தும் பதட்டத்தைப் பார்த்து உங்கள் கையில் தான் இருக்கிறது என்று அவர்களும் சொல்ல மாட்டார்கள். “சரி… காணோம்..! எங்கே போய்விட்டதோ… என்று இவர்களும் சேர்ந்து தேடிப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.

கடைசியில் அமைதி ஆன பிற்பாடு “ஐய்யய்யோ…! நான் கையில் வைத்துக் கொண்டு இருக்கின்றேன்…” என்பார்கள்.

சொல்கிறது அர்த்தம் ஆகிறதல்லவா…!

அப்பொழுது நம் கண்ணுக்கு முன்னாடி இருப்பதை இருளச் செய்வது எது…?
1.நம்மை அறிய விடாமல் செய்வதும்
2.அறிந்த நிலையில் செயல்படுத்துவதும்
3.”நாம் நுகர்ந்த உணர்வு தான்…!”

நாம் நமது வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் இருள் சூழச் செய்யும் உணர்வுகளை எல்லாம் துடைத்துப் பழக வேண்டும்.

அகஸ்தியன் எப்படி ஒவ்வொரு இருளையும் மாய்த்து ஒளியின் தன்மை பெற்றானோ அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் ஒவ்வொரு நிமிடமும் எடுக்க வேண்டும்.

எல்லா உணர்வுகளுக்குள்ளும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கலக்கச் செய்யும் பரிபக்குவ நிலை பெற வேண்டும். நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து விடுபடும் “மெய் ஞானம்” நமக்குக் கிடைக்கும்.

அதன் வழி நாம் செயல்படுத்தும் பொழுது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் மகிழ்ந்து வாழ முடியும். உங்களால் முடியும்…!

நம்முடைய அவசர புத்தி என்ன செய்யும்…? அது எதனால் எப்படி வருகின்றது…?

divine knowledges

நம்முடைய அவசர புத்தி என்ன செய்யும்…? அது எதனால் எப்படி வருகின்றது…? 

பய உணர்வுகள் இருப்போரைப் பார்த்தால் தெரியும். எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும் “சீக்கிரம் முடித்து விட வேண்டும்… என்று பட…பட…வென செய்வார்கள்…!”

பயமாகும் போது எவ்வளவு வேகத் தொடர்கள் ஏற்படுகின்றதோ இந்த உணர்வுகள் நாம் எண்ணும் எண்ணத்துடன் இயக்கி அது வேகமாக இயக்கச் செய்யும்.
1.ஆனால் வேகமாக வரும் போது – இடைமறித்து
2.அது சிந்திக்கும் தன்மையே இல்லாது போய் விடுகின்றது.

உதாரணமாக நம் போகும் பாதையில் ஒரு பஸ் வருகின்றது என்று வைத்துக் கொள்வோம்.

அதனுடைய வேகத் தொடரின் எண்ண அலைகளை நமக்குள் பதித்து விட்டால் இந்தப் பக்கம் வேகமாக நகர்ந்து செல்ல வேண்டும் என்று எண்ணுவோம். ஆனால் அந்தப் பக்கம் பள்ளம் இருக்கிறது என்று அறியாது.

1.காத்துக் கொள்ளும் வேகத்தின் உணர்ச்சிகள் வேகமாகத் தள்ளிய பின்
2.முள் இருக்கின்றதா… அல்லது வேறு ஏதேனும் பொருள் இருக்கின்றதா…? என்று சிந்திக்க விடாது.
3.இதை உங்கள் வாழ்க்கையில் பார்க்கலாம்.

பின் அதிலிருந்து நகர்ந்தபின் முள் குத்தினால் ஐய்யயோ…! முள் குத்தி விட்டதே என்று எண்ணுகின்றோம். அடுத்து அங்கே அசூசை இருந்தால் ஐய்யய்யோ மிதித்து விட்டோமே…! என்று அப்புறம் தான் சிந்திக்கின்றோம்.

ஆனால் நாம் சிந்தித்து வேகமாக வரவும் முடியாது. ஏனென்றால் அந்த நேரம் அப்படி…! சிந்திக்கும் திறனற்ற உணர்வின் உணர்ச்சிகள் நமக்குள் விளையும் சந்தர்ப்பமாக அது அமைந்து விடுகின்றது.

நாம் எண்ணிய இத்தகைய உணர்வுகள் நமக்குள் ஜீவன் பெற்று விட்டால் இதே பய உணர்வு எல்லா எண்ணங்களிலும் அடுத்து இயக்கும்.
1.எங்கேயாவது ஊருக்குப் போக வேண்டும் என்றால்
2.அவசர அவசரமாகச் செயல்படுத்தச் செய்யும்.
3.இந்த உணர்வின் வேகம்.

(அப்படி அவசரத்தில் இருக்கும் பொழுது) நமக்கு முன்னாடியே பொருள் இருக்கும். இதைத் தூக்கி எறிந்து விடுவோம்.

பின்… நாம் தேடும் அதே பொருள்… “எங்கே இருக்கிறது…!” என்று தெரியாதபடி மற்றவர்களைக் கூப்பிட்டுக் கேட்போம்.

அங்கே தான் இருக்கிறது என்று மனைவியோ பிள்ளைகளோ சொன்னால்
1.எங்கே இருக்கிறது…?
2.நான் தான் பார்த்துக் கொண்டே இருக்கிறேனே… என்று
3.அங்கே சண்டைக்கு போகச் சொல்லும்.

நாம் தவறே செய்ய வேண்டாம்…!
1.நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் எவ்வாறு இயக்குகிறது…?
2.உணர்வின் உணர்ச்சிகள் எவ்வாறு நமக்குள் இணைகின்றது…?
3.என்ற நிலையை வியாசகர் தெளிவாகக் காட்டியுள்ளார்.

உதாரணமாக ஒரு இடத்தில் பஸ்ஸோ காரோ வேகமாக வருகிறது என்றால் அதிலிருந்து நம்மைக் காக்க அவசரம் பயம் போன்ற உணர்வுகளை எடுத்து நம்மைக் காத்துக் கொள்கின்றோம்.

ஆகவே நாம் சந்திக்கும் அந்தச் சந்தர்ப்பத்தின் நிலைகளில் நாம் எதைச் சுவாசிக்கின்றோமோ அது உயிரிலே பட்ட பின் இயக்கிப் பிரம்மமாக நமக்குள் சிருஷ்டித்து விடுகின்றது.

சிருஷ்டித்த உணர்வுகள் தன் இனத்தை மற்றதுடன் கலந்தே இயக்கும். காக்கும் நிலையாக நாம் செயல்படும் போதெல்லாம்
1.அந்த உணர்ச்சியின் வேகங்கள் அதிகமாகி
2.நம் நல்ல குணங்களுக்குள்ளும் இந்த அவசர உணர்வுகள் ஊட்டி
3.சிந்தித்துச் செயல்படும் நல்ல குணங்களைத் தடைபடுத்துகின்றது?

அந்த அவசர உணர்வுகள் தான் முதலில் விபத்தில் இருந்து நம்மைக் காத்தது. ஆனாலும் விபத்திலிருந்து காத்த உணர்ச்சியின் வேகங்களும் பய அலைகளும் நமக்குள் இரண்டறக் கலந்து விளைகின்றது.

விளைந்த உணர்வுகள் என்ன செய்யும்…?

ஒரு ஊருக்குச் சீக்கிரம் போக வேண்டும் என்றால் அந்த அவசர உணர்ச்சிகளைத் தூண்டும்.

அரை மணி நேரம் இருக்கும். ஆனால் அதற்குள்…
1.பஸ்ஸிற்கு நேரமாகிவிட்டது…!
2.முன்னாடியே போக வேண்டும் என்று
3.இந்த அவசரம் – அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.
4.தூண்டும் பொழுது அதனின் வேகத் தொடரிலேயே இருப்போம்.

துணிமணிகளை எடுத்து வைக்க வேண்டும் என்றால் கையில் எடுத்துப் பார்த்து அப்புறம் அதை முன்னாடியே போட்டு வைத்திருப்போம்.

ஆனால் என் துணிகளை இங்கே வைத்தேனே அதை எங்கே காணோம்…! யார் எடுத்தார்கள்…? என்ன ஆனது…! ஏது ஆனது…! என்று அங்கே வீட்டில் பெண்களைக் கோபிப்போம்.

அந்த அவசரத்தில் சிந்தித்துக் கேட்கும் (அறிவு) உணர்ச்சியின் நிலைகள் இயங்காது எப்படிக் கேட்போம்…!

எங்கே வைத்தீர்கள்.. அங்கே பாருங்கள்…! என்பார்கள்.

இல்லை.. இல்லை…! “இங்கே தான் வைத்தேன்… நான் தான் பார்க்கின்றேனே… நீயே வந்து பார்…!” என்று கோபமாகவே சொல்வோம்.

அவர்கள் வந்து கண்ணுக்கு முன்னாடிதான் இருக்கிறது என்று எடுத்துக் கொடுப்பார்கள். (இதையெல்லாம் நீங்கள் பார்க்கலாம்)

ஏனென்றால் அங்கே சிந்திக்கும் திறன் இழக்கப்படுகின்றது. கணவனும் மனைவிக்குள்ளும் பயந்த அலைகள் அவசர நிலைகளாக இயக்கிவிடும்.

இப்படிப் பயத்தை ஊட்டிய பின் “இப்படிப் பேசுகின்றாரே..! கணவர்… என்று அங்கே பய உணர்வை ஊட்டும். சிந்திக்கும் திறன் இழக்கும் போது குற்றமாக அங்கே சுமத்தப்படுகின்றது.

குற்றத்தின் உணர்வு ஆனவுடனே மனைவியோ பயப்படுகின்றது.

அல்லது மகனோ மகளோ இதைப் போன்று அங்கே இருந்தால் அவசரத்தில் அந்தப் பொருள் அங்கே இல்லை என்று அவர்கள் சொல்லி விட்டால் இந்தக் கோப உணர்வுடன் “அம்மாவைக் கூப்பிடு…!” என்று கடுமையான உணர்வாகும்.

அதற்கு அடுத்து எதை எடுத்தாலும் இப்படித்தான் இருக்கிறது என்று வெறுப்பின் உணர்வு இங்கே வளரத் தொடங்கும். பையனோ குழந்தையோ இந்த வெறுப்பின் உணர்வுகளை நுகர்ந்த பின் “அப்பா கோபிக்கின்றார்…!” என்ற உணர்வுகள் அவருக்குள்ளும் படுகின்றது.

நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று கீதையிலே சொல்லப்பட்டுள்ளது.

வெறுப்பின் உணர்வுகள் நமக்குள் இயக்கப்பட்டு அதனின் செயலாகவே சொல்லும் செயலும் இங்கே அமைகின்றது. அதே உணர்வுகள் நமக்குள் விளைந்தது. தீமை விளைவிக்கும் விளைவாக மாறுகின்றது.

ஆரம்பத்தில் விபத்திலிருந்து நாம் காத்துக் கொண்டோம்.
1.ஆனால் காத்த உணர்வுகள் நமக்குள் விளைந்த பின்
2.அதனின் தொடர் வரிசையில் எல்லாவற்றையும் கலந்து
3.அந்தப் பய உணர்ச்சிகளும் அவசர உணர்ச்சிகளும் நம்மைக் கோபக்காரனாக மாற்றுகின்றது.
4.சிந்தனை அற்றவனாக மாற்றுகின்றது.

ஒரு முறை பார்த்தது தான்…! மற்றவை அனைத்திலும் இந்த பய உணர்ச்சியின் வேகத் துடிப்புகள் இயக்கிக் கொண்டு வருகின்றது.

ஆபிசில் வேலை பார்த்தால் நாம் ஒரு பொருளைக் கொண்டு வா என்று சொல்லி ஒரு நிமிடம் லேட் ஆகிப் போனதென்றால் அவர் மேலே “கடு..கடு… என்று கோபம் வந்துவிடும்.

ஏம்ப்பா… இவ்வளவு நேரமா…? என்று அவர் மீது கோபிக்கச் சொல்லும். இந்த உணர்வின் வேகம் தொழில் செய்யும் இடங்களிலும் அமைதியைக் கெடுக்கின்றது.

சிந்தித்துச் செயல்படும் நல்ல குணங்களுக்குள் அவசர உணர்வுகள் கலந்த பின் இப்படி எல்லாம் நடக்கின்றது.

ஒரு மான் புலியிடம் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள பயத்தால் உணர்வின் வேகம் அதிகமாகி அதையே தொடர்ச்சியாகச் சுவாசிக்கின்றது.
1.அவ்வாறு மான் சுவாசிக்கும் போது
2.மானின் உடலிலே மானின் சாந்த உணர்வு குறைந்து
3.புலியின் உணர்வு அதிகரித்து அதன் வேக உணர்வு இதற்குள் கூடி
4.புலியின் உணர்வுகள் கூடிய பின் இது நோயுற்றுவிடுகின்றது.

புலி மானைக் கொன்று சாப்பிடவில்லை என்றாலும் மான் தப்பி அஞ்சி ஓடினாலும் புலியின் நினைவு கொண்டே வாழ்ந்து புலியின் உணர்வை வளர்த்து மரணமடைந்த பின் மானின் உயிரான்மா புலியின் ஈர்ர்புக்குள் சென்று புலியாக மாறுகின்றது.

இப்படித் தான் நமது உயிர்
1.ஒவ்வொறு சந்தர்ப்பத்திலும் பயத்திலிருந்து காத்திடும் உணர்வாக
2.அதிகமாகத் துடித்து அதனின் உணர்வைச் சேர்த்து
3.தன்னைப் பாதுகாக்கும் உடல்களாக மாற்றமாகிக் கொண்டே வந்தது.

மனிதனான பின் பயமான உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து அதிகமாக வளர்த்துக் கொண்டால் மறுபடியும் கீழான உயிரினமாகத்தான் பிறக்க நேரிடும்.

ஏனென்றால் பஸ் என்பது நாம் செய்த இயந்திரம் தான். அதற்குச் சிந்தனை இல்லை.

ஆனால் அது வரும் வேகத்தில் நம்முடைய அதிர்வுகள் வரும் போது பயமாகி அதிர்ச்சியாகின்றது. அந்தச் சந்தர்ப்பத்தில் இந்த உணர்வுகள் நமக்குள் சேர்த்து வரிசைப்படுத்தி நம்முடைய எல்லா குணங்களிலும் கலக்கின்றது.

இதை நீக்க வேண்டும் அல்லவா…! நன்றாக சற்றுச் சிந்தித்து பாருங்கள்.

இதைப் போன்று நம்மை அறியாமல் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து விடுபடத்தான் அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை குருநாதர் காட்டிய வழியில் உபதேசமாகக் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.

நஞ்சினை வென்று உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளொய்யாக மாற்றிய மகரிஷிகளின் உணர்வுகளைத் தியானத்தின் மூலம் உடலுக்குள் சேர்த்து வலிமை பெற்றால் அந்தத் தீமைகளை அது ஒடுக்கச் செய்யும்.
1.தெளிந்த அறிவை ஊட்டும்.
2.சிந்தித்துச் செயல்படும் ஞானம் கிடைக்கும்.
3.மெய் உணர்வுகள் வளரும் – நாம் மெய் ஞானியாக ஆக முடியும்.

அத்தைகைய சந்தர்ப்பத்தைதான் யாம் ஏற்படுத்துகின்றோம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்…!

சொல்லால் சொல்லி யாரையும் திருத்த முடியுமா…? திருத்த வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

Divine Keys

சொல்லால் சொல்லி யாரையும் திருத்த முடியுமா…? திருத்த வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

வீட்டிற்குள் பார்த்தால்
1.”நான் சொன்னதைக் கேட்கவில்லை…” என்ற நிலையில்
2.ஒவ்வொருவருக்கும் கோபம் இருக்கும்.
3.அதனால் அடிக்கடி சண்டை வரும்.

இந்த உணர்வெல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் அல்லவா…!

ஆனால் அவரவர்கள் உணர்வுதான் அவரவர்களை இயக்கும். நீங்கள் மெய்ப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் யாரிடமும் அழுத்தமாகச் சொல்லாதீர்கள்….!

ஏனென்றால் “சொல்லால் சொல்லி… யாரையும் திருத்த முடியாது…!

நீங்கள் சொல்கின்ற வரையிலும் கேட்டுக் கொண்டு இருப்பார்கள். பின் “இவருக்கு என்ன தெரியும்…?” என்ற இந்த உணர்வின் தன்மை தான் அங்கே வரும்.

மெய் ஞானிகளைப் பற்றிய உபதேசத்தின் உணர்வுகளைப் பெருக்கித் தன்னிச்சையாக அதைப் பெற வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டினால் அது அவருக்குள் பதிவாகும்.

அந்த ஆர்வத்தின் தன்மைகள் வரும் பொழுது உண்மையின் இயக்கத்தை ஒரு முறைக்கு நான்கு முறை சொன்னால் அது அவருக்குள் இயக்கமாகின்றது.

தவறு தவறு என்று ஒருவரைச் சொன்னால் அந்த தவறின் நிலைகள் நமக்குள் வந்து நம்மையும் அதே தவறு செய்யும் நிலைக்கே கொண்டு செல்கின்றது.

அதாவது திட்டுகிறவனின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தால் நமக்கும் திட்டத் தோன்றுகின்றது. இல்லையா…!

ஏனென்றால் அப்போது நம்மை அறியாமலே அது வருகின்றது.

இதே போல் தான் அருள் ஞானத்தை யாருக்கும் துணிந்து சொல்லலாம். அவர்கள் கேட்கக் கேட்கச் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தால் இது அவர்களுக்குள் வளரும்.

அந்த நேரத்தில் அருள் ஞானத்தை போதிக்கத் தவறக்கூடாது. சிறிது நேரம் அவர்கள் கேட்கும் போது ஞான வித்தை விதைத்து விடுகின்றோம். அது வளர்ந்தால்
1.சிக்கலான நிலைகள் வரும் பொழுது
2.இதை எடுத்துத் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் நல்ல சிந்தனைகள் தோன்றும்.

ஆனால் சாதாரண வாழ்க்கையில் இக்கட்டான நிலைகள் வரும் போது என்ன செய்கின்றோம்..? பார்த்தவுடனே பதட்டமாகிச் சோர்வடைந்து விடுகின்றோம்…? அதை மாற்றிப் பழக வேண்டும் அல்லவா…!

உதாரணமாக எலி பூனையைக் கண்டால் என்ன செய்கின்றது…? பயந்து ஓடுகின்றது. ஓடுவதற்கு வேறு வழி இல்லை என்றால் பூனையை எதிர்த்து விடுகிறது. எதிர்த்து விட்டது என்றால் பூனை பயப்படுகின்றது.
1.எலி ஓடுகிற வரையிலும் பூனை விரட்டுகிறது.
2.எலி எதிர்த்துத் திரும்பி வந்தால் பூனை நின்று விடுகின்றது.

ஒரு சமயம் நான் ஒரு பூனை பெருக்கானைத் துரத்திக் கொண்டு இருந்தது. வேகமாக ஓடிக் கொண்டு இருந்தது. வேகமாக ஓடிக்கொண்டு இருக்கும் பொழுது எதிர்த்துத் திரும்பியவுடன் புஸ்..புஸ்.. என்று பூனை ஓடுகின்றது.

அது வந்தவுடனே லபக்கென்று காலைப் பிடித்ததோ இல்லையோ தப்பித்துப் போன பூனை அப்பறம் இந்த எலியைத் திரும்பப் பிடிக்க வரமாட்டேன் என்கிறது.

அதே மாதிரி நாய்களை வைத்து இரவில் ரோட்டில் கொண்டு வந்து பூனைகளைப் பிடிப்பார்கள். வாசனையை வைத்து லபக்கென்று அப்படியே பிடிக்கும்.

ஒரு சந்தர்ப்பம் இரண்டு மூன்று நாய்களை வைத்துக் கொண்டு இந்த மாதிரிச் செய்கிறார்கள்.

எல்லாம் ஓடிப்போனாலும் ஒரு பூனை எதிர்த்து வந்து டபார் என்று ஒரு நாயைக் கண்ணிலே கடித்ததோ இல்லயோ “வால்…வால்…” என்று கத்திக் கொண்டு நாய் ஒடத் தொடங்கியது.

ஒரு நாய் நிற்க வேண்டுமே…! எல்லாம் ஓடிப் போனது. அடுத்து ஒரு நாய் கூட வரமாட்டேன் என்கிறது. அப்படியே உட்கார்ந்து கொள்கிறது. இது நடந்த நிகழ்ச்சி.

ஏனென்றால் இதெல்லாம் சந்தர்ப்பத்தில் குருநாதர் இதைப் பார்க்கச் செய்தார். காடு மேடு எல்லாம் எம்மை (ஞானகுரு) அலையச் செய்து உண்மையின் இயக்கத்தை அறியச் செய்தார்.

ஆகவே மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று அடிக்கடி அந்த வலுவைக் கூட்டிக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் இந்த உணர்வே நல்வழி காட்டும். மன வலிமை கொடுக்கும்.

பிறிதொரு உணர்வு நம்மை இயக்கமால் தடுத்துக் கொள்ள உதவும். கொஞ்ச நாள் பழக்கம் செய்து வீட்டீர்கள் என்றால் பிறருடைய வேதனைகள் நம்மை வந்து பாதிக்காது.

இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடையலாம்.