தியானத்தில் நாம் பெற வேண்டிய “வலு…!”

Concentration - Meditate

தியானத்தில் நாம் பெற வேண்டிய “வலு…!”

நான் தியானம் செய்தேன். என் தொழில் இப்படிப் போய்விட்டது…! என் குடும்பத்தில் இப்படி நடந்து விட்டது…! என்றால் என்ன அர்த்தம்…?

இந்த உணர்வைக் கூட்டி மீண்டும் கீழே இழுத்து விடுகின்றீர்கள் என்று அர்த்தம்.

“வேதனை…” என்ற உணர்வைப் பெருக்கி எல்லாவற்றையும் செய்துவிட்டு “தியானம் செய்தால்… என்னத்திற்கு ஆகும்…?” என்று எண்ணினால் அது நமக்கல்ல.

தியானத்தைக் கூட்டி எல்லாம் நன்றாக இருக்க வேண்டும். அந்த உணர்வை நமக்குள் பெருக்க வேண்டும்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் சங்கடங்களையோ சிரமங்களையோ சலிப்பையோ வெறுப்பையோ பகைமையான உணர்வுகளை உங்களுக்குள் புகாதபடி தடுத்துப் பழக வேண்டும்.

கணவன் மனைவிக்குள் அந்தப் பேரானந்த நிலையை தான் என்றும் உருவாக வேண்டும். சந்தர்ப்பத்தில் கோபம் வரும். அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

1.ஏதோ ஒன்றல்லவா… “நம்மை இயக்குகின்றது..!” என்று உடனே சுதாரித்து
2.அதிலிருந்து விடுபட வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வைக் கவர்ந்து
1.ஆத்ம சுத்தி செய்யும் உணர்வு வந்து விட்டது என்றால்
2.“நான் செய்வது தான் ரைட்…!” என்ற எண்ணம் வராது.

பால் ருசியாகத் தான் இருக்கும். அதிலே பாதாமைப் போட்டால் இன்னும் ருசியாகத் தான் இருக்கும்.

ஆனால் ஒரு துளி காரம் பட்டால் என்ன செய்யும்…? அது விடாப்பிடியாகக் காரத்தின் உணர்ச்சிகளைத் தான் ஊட்டும். அதைப் போன்று தான்
1.நம் நல்ல மனதில் வெறுப்பின் உணர்வை ஊட்டினால்
2.அது விடாப்பிடியாக அந்த உணர்ச்சியைத் தான் ஊட்டும்.
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரோளி பெற வேண்டும் அதைத் தணித்து சுவையைக் கொண்டு வர வேண்டும்.

நாம் கடைசியில் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் நமது உயிர் உருவாக்குகின்றது.

தனுசு கோடி என்ற நிலையில் வாழ்க்கையில் வரும் தீமைகளை எல்லாம் மாற்றி அருள் ஒளியை நமக்குள் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.

தனுசு கோடி என்றால் எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக்குவது. பிறவியில்லா நிலை அடைவது.

உணர்வின் எண்ணங்களைப் பற்றி இராமயாணத்தில் தெளிவாகக் கொடுத்திருக்கின்றனர். அதை நாம் கடைப்பிடித்து இந்த வாழ்க்கையில் உடலுக்கு பின் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.

என்ன தான் நாம் ஒழுங்குபடுத்திச் செல்வத்தைத் தேடினாலும் நிற்கின்றதா…? இந்த உடலே நமக்குச் சொந்தமல்ல. இந்த உடலால் தேடிய செல்வம் எப்படி நிற்கும்..?

ஆகவே அந்தப் பேரருளை நாம் கூட்ட வேண்டும். எந்த அளவுக்குக் கூட்டுகின்றமோ இது அழியாச் செல்வமாக இருக்கும்.
1.என்றுமே ஏகாந்த நிலை பெறுவோம்.
2.அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்.
3.ஒவ்வொரு மகரிஷிகளும் இந்த நிலையில் தான் விண் சென்றார்கள்.

குழந்தையை வைத்துக் கணவன் மனைவிக்குள் சண்டை வரும் போது குடும்பத்தில் ஒற்றுமையை எப்படிக் கொண்டு வருவது…

Image

Eternal Sages world

குழந்தையை வைத்துக் கணவன் மனைவிக்குள் சண்டை வரும் போது குடும்பத்தில் ஒற்றுமையை எப்படிக் கொண்டு வருவது…?

 

வீட்டில் குழந்தைகளை வைத்துப் பரிபாலணம் செய்யும் பொழுது பார்க்கலாம்.

கணவன் வீட்டில் முக்கியமான ஒரு கணக்கு எழுதிக் கொண்டிருக்கின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள். பிள்ளை “நச்…நச்…” என்று அவரிடம் ஏதாவது செய்தால் போதும்.

பிள்ளையை வளர்ப்பதைப் பார்… ஏன்…? பிள்ளையை உனக்கு அடக்கத் தெரியவில்லையா…? என்று மனைவி மீது சடாரென்று கோபம் வந்துவிடும்.

அந்தக் கோபத்தைப் பாய்ச்சினால் குழந்தையின் தாய் என்ன சொல்லும்…?

சனியனே…! இப்படியே செய்கிறாயே… எனக்கு இரண்டு திட்டு வாங்கிக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றாயே…! என்று குழந்தையைத் திட்டும்.

கணவன் மனைவி இரண்டு பேர் உணர்வும் சேர்ந்து அந்தக் குழந்தை மேலே தான் கோபமாகப் பாயும். இப்படி வெறுப்பானபின் உணர்வைக் குழந்தை மேல் தான் பாய்ச்சுகின்றோம்.

குழந்தை மேலே பாய்ச்சிய பின் இந்த உணர்வு என்ன செய்கின்றது? குழந்தை அதை உற்றுப் பார்க்கின்றது.

உங்கள் குழந்தைகளைத் திட்டிப் பாருங்கள். உடனே முகம் எப்படி மாறுகின்றது என்று… வெறுப்பான நிலைகளில் இருந்து பாருங்கள் எப்படி ஆகிறது என்று…?

குழந்தைக்கு ஒன்றுமே தெரியாது. இருந்தாலும் அந்த உணர்ச்சிகளை மாற்றும்.

படிக்கப் போக வேண்டும் என்று அனுப்புகின்றோம். படிக்கவில்லை என்றால் இரண்டு பேருமே இப்படித்தான் சொல்வோம்.
1.குழந்தையை ஏதாவது கவனிக்கிறீர்களா…?
2.அது சும்மா சுற்றிக் கொண்டு இருக்கிறது என்று
3.கணவன் மனைவி இரண்டு பேருக்குமே இந்தச் சங்கடம் வரும்.

இப்படித்தான் நம் வீட்டில் உண்மையின் உணர்வின் தன்மை கருக்களை மாற்றிவிட்டு வெறுப்பு வளர்ந்துவிடுகின்றது.

குழந்தை மேலே பாசம் நிறைய இருக்கும். “பார்… ஏதாவது கவனிக்கின்றாரா பார்…?” என்று ஒருவருக்கொருவர் இந்த உணர்வு வரும்.

குழந்தை மீது பாசமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் ஒன்றும் கவனிக்க மாட்டேங்கிறார்களே…, என்ற இந்த உணர்வின் வேகங்கள் என்ன செய்கின்றது…? உடனே வெறுப்பாகின்றது.

அப்போது பையனிடம் கணவர் என்ன சொல்வார்…? ஏன்டா அம்மா “இப்படித் திட்டுகிறது…!” நீ இந்த மாதிரிச் செய்து கொண்டே இருக்கிறாயே… என்று இதைப் பேசுவார்.

அப்போது கணவன் மனைவி இரண்டு பேருமே அந்த ஞானத்தை என்ன செய்கிறோம்…? பாழாக்குகின்றோம்.

ஆறாவது அறிவு என்ன செய்கிறது? உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்து வரும் நஞ்சை உடல் மலமாக மாற்றுகின்றது. தீமைகளை நீக்கி வாழ வழி வகுக்கிறது – இது கார்த்திகேயா.

1.சாக்கடை என்றால் “தீமை” என்று தெரிகிறது.
2.தெரிந்தும் மீண்டும் சாக்கடைக்குள் போனால் என்ன ஆகும்…?
3.சட்டையில் அழுக்கு இருக்கின்றது – அதே அழுக்கு தானே.
4.அதை வைத்துச் சாக்கடையைத் துடைத்து விடலாம் என்றால் சாக்கடை நாற்றம் தான் வரும்.

இதைப் போன்ற நிலைகளில் நம்மை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

பல நல்ல சரக்குகளை வாங்கி காய்கறி எல்லாம் போட்டுச் சமைத்த பின் கடைசியில் உப்பு கொஞ்சம் அதிகமானால் என்ன ஆகும்…? தூக்கி எறியச் செய்யும்.

காரம் போட்டால் நல்ல ருசியைக் கொடுக்கிறது என்று கொஞ்சம் காரத்தைம் அதிகமாகப் போட்டால் சாப்பிட முடியுமா…? கண்ணிலேயும் மூக்கிலேயும் தண்ணீர் வரும்.

சீரகம் போட்டால் நல்ல ருசியாகத் தான் இருக்கும் என்று சீரகத்தை ஜாஸ்தி போட்டால் உமட்டல் தான் வரும்.

எந்தெந்தப் பொருளின் தன்மை அதனின் ருசி எப்படி இருக்கின்றது என்று தெரிந்து கொள்கிறோம்.
1.“கெட்டது என்று எதையும் ஒதுக்குகின்றோமா…?”
2.அந்த அளவுகோல்படி போட்டு நாம் சமப்படுத்திச் சுவையாக ஆக்குகின்றோம் அல்லவா…!

அதைப் போல் தான் பையனிடத்தில் குறைகள் வருகின்றது என்றால் அதை எப்படி மாற்ற வேண்டும்..? எப்படி நீக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்கின்றோம்.

ஏனென்றால் இயற்கையின் உண்மையின் நிலைகளை அறிந்து கொள்ள வேண்டும். அதற்குத்தான் இந்த அருள் ஞானத்தைக் கொடுப்பது.

கணவன் மனைவி இரண்டு பேரும் மகரிஷிகளின் அருளைப் பெற்று இருள் சூழும் நிலையைத் துடைத்து விட்டு குழந்தைகளுக்கும் அருள் ஞானத்தை ஊட்ட வேண்டும்.

தீமைகள் வரும் பொழுதெல்லாம் ஓ..ம் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்தத் தீமை நமக்குள் பதிவாகாதபடி தடுத்துப் பழக வேண்டும்.

பையனுக்குப் படிப்பு வரவில்லை என்று சொன்னால் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.
1.முதலில் சிறிதளவு சென்றதைக் குறைக்க
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அதைப் பலவீனப்படுத்த வேண்டும்.

அவன் கல்வியில் ஞானமும் கருத்தறிந்து செயல்படும் திறனும் உலக ஞானம் பெறக்கூடிய அந்தச் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்ற அருள் உணர்வுகளை அவனுக்குப் பாய்ச்ச வேண்டும்.

அவன் மேலே வரக்கூடிய வெறுப்பை இங்கே இப்படி மாற்றி நமக்குள் அடக்கி விடுகிறோம்.
1.நீ தெளிந்தவனாக வருவாய்…
2.உனக்கு அருள் ஞானம் கிடைக்கும்…
3.நீ தெளிவானவனாக வர வேண்டும். “இது தான் என் ஆசை…!” என்று
4.இப்படி உங்கள் ஆசையை மட்டும் சொல்லுங்கள்.

இப்படியே செய்து கொண்டு இருக்கேயடா…! என்று சொன்னால் வெறுப்பு வரும்.
1.நீ உயர்ந்தவனாக வர வேண்டும்
2.அது தான் என்னுடைய ஆசை… அதன் வழி நிச்சயம் வருவாய்..! என்று சொல்லிப் பாருங்கள்.

உங்கள் ஞானக் குழந்தையாக வளர்வான். குடும்பத்தில் ஒற்றுமை வரும். மகிழ்ந்து வாழ முடியும்.

மெய் உலகிற்கு வாடா…! என்று கூப்பிட்டார் குருநாதர்

immortal-bliss

மெய் உலகிற்கு வாடா…! என்று கூப்பிட்டார் குருநாதர்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி அவர் கற்றுணர்ந்த… கண்டுணர்ந்த உணர்வுகள் அவர் உடலிலே உருவாக்கி துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஏகாந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அத்தகைய நிலை பெற்ற அவர் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கப்படும்போது
1.அவர் உணர்வினை நாமும் நுகர்ந்து
2.வாழ்க்கையில் வந்த இருளை அவர் அகற்றியது போன்று
3.நாமும் இருளை அகற்றி மெய் உலகை அடையலாம்.
4.மெய் என்றால் நம் உயிர்.
5.அந்த உலகை அடைய வேண்டும்.

இப்போது நம் உடல் எல்லாம் பொய் உடல்கள். உடலைப் பொய் என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் இப்போது நாம் மனிதனாக இருக்கிறோம். அடுத்துப் பார்த்தால் சுருங்கிப் போகிறோம்.

சுருங்கிய உணர்வு கொண்டு இந்த உயிர் என்ன செய்கிறது…? வேறொரு உடலை நாடுகிறது. ஆகவே பொய் உலகில் வாழுகின்றோம் என்பதை நாம் தெளிவாக உணர வேண்டும்.

இதைத்தான் குருநாதர் அடிக்கடி எம்மிடம் (ஞானகுரு) சொல்வார். “டேய்…! ஏன்டா பொய் உலகிற்கு போகிறாய்…? மெய் உலகத்திற்கு வாடா…!” என்பார். ஆகவே நம் உயிரை நீ எப்படி மதித்தல் வேண்டும்…?

உயிர் எல்லாவற்றையும் உணர்த்துகின்றான்… உணருகின்றான்… உணரச் செய்கின்றான்… உணரும் வழியில் வாழச் செய்கின்றான்…!

ஆனால் இதை ஆறாவது அறிவால் தெரிந்து கொண்ட பின் நீ எந்த உலகிற்குச் செல்லுகின்றாய் என்று சில இக்கட்டான நேரங்களில் குருநாதர் இப்படியெல்லாம் கேட்பார்.

சில சிக்கலான நிலைகள் வரும் போது என்ன செய்வேன்..? என்ன வாழ்க்கை போ…!

என் மனைவியை நோயிலிருந்து எழுப்பி விட்டார். சொல்வதைச் செய்கிறாயா என்று வாக்கை வாங்கிக் கொண்டார்.

ஆனால் காட்டுக்குள் அழைத்துச் சென்று “இப்படித் தொல்லை கொடுக்கிறாரே…!” என்று ரொம்பக் கஷ்டம் வரும் போதெல்லாம் என்னுடைய நினைவு இப்படி வரும்.

எங்கேயாவது பேசாமல் உடலை விட்டுப் போயிடலாம்…! என்று இரண்டு மூன்று முறை தோன்றியது. அந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையில் “தற்கொலை செய்து கொள்ளலாம்…! என்ற உணர்வு வரும்.

அப்போதெல்லாம் குருநாதர் சிரிப்பார்.
1.இந்த உலகத்தை என்ன என்று நீ அறிந்தாய்…?
2.உன் உயிரை யார் என்றும் அறிந்தாய்…!
3.இந்த உடலையும் அறிந்தாய்…
4.மீண்டும் ஏன்டா பொய் உலகத்திற்கு போகிறாய்…?

வேதனையிலிருந்து தப்ப வேண்டும் என்று நான் எண்ணுகின்றாய். நீ யாரை எண்ணி இதைச் செய்து கொண்டாயோ இந்த வேதனையான உணர்வுகள் கேட்பவருக்குள் வலுவாகும். அவர் உடலுக்குள் இதையே நீ செய்வாய். அவனையும் வீழ்த்துவாய்.

இந்த உணர்வின் தன்மை இந்த உடலுக்குப் பின் என்ன என்ன ஆவாய்..? பிறிதொன்றைக் கொன்று தின்னும் உணர்வின் தன்மை தான் உடல் பெறும்.
1.இன்று நீ மனிதனாக இருக்கின்றாய்.
2.அடுத்து நீ பொய் உலகிற்குத் தானே போகின்றாய்…?

உயிரால் மனித உடல் பெற்று ஆறாவது அறிவால் இதையெல்லாம் தெரிந்து கொள்ளும் நிலைகள் கார்த்திகேயா என்ற நிலைக்கு நீ வந்தாய். மீண்டும் ஏன் பொய் உலகிற்குச் செல்கின்றாய்…? என்று இந்த இடத்தில் விளக்கங்களைக் கொடுப்பார் குருநாதர்.

வியாபாரத்தைச் செய்ய வேண்டும் என்று ரொம்ப ஆர்வமாக இருப்போம். ஆர்வமாக இருக்கும் பொழுது சந்தோஷமாக இருப்போம்.

ஆனால் சந்தோஷமாக இருப்பதில் சிறு குறை வந்து விட்டால் போதும் என்ன வாழ்க்கை இது…? என்று வேதனைகள் படுவோம்.

இந்த உடலை பாதுகாக்க எத்தனையோ வகைகளில் சண்டை இடுவோம். எல்லாம் செய்வோம். ஒரு சொல் தாங்க முடியாமல் “என்ன வாழ்க்கை இது…” என்று தற்கொலை செய்யப் போகிறோம்.

இந்த உடலின் தன்மை நாம் எதை எண்ணுகிறோமோ அதை வளர்த்து விடுகிறது.
1.இந்த உடலை அழிக்க வேண்டும் என்றால் அதன் வழி நீ செய் என்று தான்
2.உயிர் அந்த உணர்ச்சிகளை இயக்கி நம்மை ஆளுகிறது.

முழுமையான இந்த உடலை நாம் வளர்ச்சியற்ற நிலைகளுக்குக் குறைக்கப்படும் போது குறை உணர்வு சில உயிரினங்களாக நம்மை மாற்றி விடுகிறது என்பதைத் தெளிவாக காட்டுகிறார் குருநாதர்.

மெய் என்றால் உயிர். உயிருடன் ஓன்றிய ஒளியின் தன்மை பெற்றது தான் துருவ நட்சத்திரம். அந்த மெய்யை நாம் அடைதல் வேண்டும். மெய்யை உணர்த்தும் உணர்வுகளைப் பெறும் போது எப்படி இருக்க வேண்டும் என்பதனை இவ்வாறு உணர்த்துவார்.

1.கடவுளின் அவதாரம் பத்து “கல்கி…!”
2.உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறி
3.அந்தத் துருவ நட்சத்திரத்தைப் போன்று நாமெல்லாம் ஒளியாக மாற வேண்டும்.

ஆஹா…! சாமி (ஞானகுரு) சொல்வது “மிகவும் அற்புதம்” என்று போற்றிவிட்டு யாம் சொன்னதைச் செய்யவில்லை என்றால் எந்தப் பலனும் இல்லை

Image

wisdom world

ஆஹா…! சாமி (ஞானகுரு) சொல்வது “மிகவும் அற்புதம்” என்று போற்றிவிட்டு யாம் சொன்னதைச் செய்யவில்லை என்றால் எந்தப் பலனும் இல்லை

 

ஞானிகள் கண்டுணர்ந்த பேருண்மைகளை உங்களுக்குத் திரும்பத் திரும்ப பல கோணங்களில் சொல்லிக் கொண்டே வருகின்றோம். ஆனால் உபதேசத்தைக் கேட்கும் சிலர்
1.சாமி (ஞானகுரு) சொன்னார்… கேட்டோம்
2.நல்ல விஷயங்களைச் சொன்னார்…! என்று அந்த அளவில் நிறுத்தி விடுகிறார்கள்.

நெற் பயிரை விவசாயம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு இந்த இந்த உரங்கள் இட வேண்டும். பயிர் வளர்ந்து வரும் வேளையில் இந்தெந்தக் காலங்களில் இதை இதைச் செய்ய வேண்டும் என்று சொன்ன பிற்பாடு…
1.“ஆஹா… பிரமாதமாகச் சொல்லி விட்டார்…!” என்று
2.அதைப் புகழ்ந்து பேசினால் எப்படி இருக்கும்…?

நெல் விளைவதற்கு இன்னென்ன உரம் இட்டால் அது நலமாக இருக்கும் என்று விளக்கிச் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு
1.“ஆஹா…! எப்படிச் சொன்னார் தெரியுமா…?” என்று மனதில் மட்டும் வைத்து விட்டு…
2.நெல்லுக்கு வேண்டிய உரத்தை இடாது…
3.அந்தந்தக் காலத்திற்கு நீரை விடாது…
4.அந்தந்தக் காலத்தில் களையை நீக்காது விட்டு விட்டால்…
5.நெல் எப்படி வரும்…?

தியானத்தைக் கடைப்பிடிக்கிறோம் என்று சொல்வோர் பலருடைய நிலைகள் இதில் தான் உள்ளது. என்னைப் புகழ்ந்து பேச வேண்டும் என்ற நிலையில்
1.ஆஹா… எங்கள் சாமி அற்புதமாகச் சொல்லுகின்றார்…!
2.அவர் சொல்வதை நான் என்னவென்று சொல்வேன்…!
3.என்ன அழகாகச் சொல்கிறார் என்று போற்றுவார்கள்… புகழ் பாடுவார்கள்…!
4.சாமியை யாராவது தவறாகச் சொன்னால் அவர்களுக்குக் கோபமும் வரும்…!
5.சாமி இப்படித்தான் சொன்னார்… உனக்கென்ன தெரியும்…! என்று சண்டையும் போடுவார்கள்…!

ஆனால் யாம் கொடுக்கும் உபதேசத்திற்குள் இருக்கும் மெய்ப் பொருளைக் காணாத நிலையில் நமக்கு நாமே நல்ல உணர்வின் தன்மையை மறைத்து விடுகின்றோம்.

இது தான் உண்மை.

மனித வாழ்க்கையில் தீமைகளை அகற்றும் பேரானந்த நிலை பெறும் ஆற்றல் மிக்க சக்திகளை நீங்கள் பெற வேண்டும் என்று குருநாதர் காட்டிய வழியில் 20 வருடம் தவம் இருந்து அந்த உண்மையை உணர்ந்து கொண்டோம்.

மகரிஷிகள் கண்டுணர்ந்த அந்த மெய்ப் பொருளை நீங்கள் காணும் வண்ணம் அதனை விளைவித்து அருள் ஞான வித்தாக ஒவ்வொரு கால கட்டத்திலும் விதைத்துக் கொண்டே இருக்கின்றோம்.

அந்தக் காலமறிந்து பருவமறிந்து வரும் தீமைகளை அகற்றி எப்படி வளர வேண்டும் என்ற நிலைகளை உங்களுக்குள் உபதேசித்துக் கொண்டே இருந்தாலும் நீங்கள் எத்தனை பேர் அதைப் பெற்று வளர்த்துக் கொண்டுள்ளீர்கள் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

நமக்குள் கடவுளாக வீற்றிருந்து உள் நின்று இயக்கிக் கொண்டிருக்கும் புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசன்
1.நாம் எண்ணியதை எல்லாம் இறையாக்கி
2.நாம் எண்ணியதை நமக்குள் உருப் பெறச் செய்து
3.எதை இறையாக்கினோமோ அதனின் செயல் தெய்வமாகச் செயலாக்குகின்றது.

எனவே நாம் எதை எண்ண வேண்டும்…? எதனின் உணர்வின் தன்மையை நமக்குள் செயலாக்க வேண்டும்…? என்பதைத் தெளிவுற எடுத்துக் கொள்ளுங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளை அனுபவ ரீதியாகப் யாம் பெற்றுணர்ந்ததை உங்களுக்குள் அருள் ஞான வித்தாக விளைய வைத்து அதைப் பெறும் தகுதியை நீங்கள் பெற வேண்டும் என்பதற்கே இந்த உபதேசம்.

உங்களை ஆண்டு கொண்டிருக்கும் அந்த ஈசனுக்கு மகிழ்ச்சி பெறும் நிலைகளாக மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் எண்ணத்தால் உங்களுக்குள் உருப் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று அதன் துணை கொண்டு
1.தீமையான நிலைகளைக் குறைத்து
2.வாழ்க்கையில் வரும் இருளைப் போக்கி
4.மெய்ப் பொருளைக் கண்டுணரும் உணர்வுகள் வளர்ந்து
5.மெய் ஞானத்தின் நிலைகள் வளர்ந்து
5.மெய் ஞானிகளுடன் ஒன்றி
6.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு
7.பிறவா நிலை என்ற பெரு நிலையை அடைய முடியும்.

நீங்கள் ஒவ்வொருவரும் அந்த நிலையை அடைவது தான் அற்புதம்…!

“தவப்புதல்வர்களும்… கடும் ஞானிகளும்… பிறந்த நாடு இது”

Image

Sage Agatheeswaran

“தவப்புதல்வர்களும்… கடும் ஞானிகளும்… பிறந்த நாடு இது”

 

கட்சி நடத்துவோரும் சரி பொது மக்களாக இருந்தாலும் சரி அரசாங்கத்தை நாம் மதித்து நடத்தல் வேண்டும். கட்சியின் அடிப்படையில் அரசாங்கத்தை நடத்தக் கூடாது.

அரசாங்க உத்தியோகத்தில் இருப்போர்கள் அரசு எனக்குச் சொந்தம் என்று எண்ணிவிடாதீர்கள்.

நீங்கள் மக்களுக்குச் சேவை செய்யத்தான் அங்கே இருக்கின்றீர்கள். அரசாங்கத்திடம் சம்பளம் வாங்கிக் கொண்டு தான் நீங்கள் சேவை செய்கின்றீர்கள்.
1.“பணம் இல்லாது அரசு சேவை செய்யவில்லை…!”
2.நியாயம் எங்கே இருக்கின்றதோ அந்த நியாயப்படி நீங்கள் செய்து பழகுங்கள்.
3.காசு (இலஞ்சம்) வாங்கிச் செய்யப்படும் பொழுது தவறுகள் தான் அதிகமாகின்றது.
4.தானும் கெட்ட பேர் வாங்குகின்றோம்.
5.நம் குடும்பத்தையும் நாம் காக்கத் தவறுகின்றோம்.
6.இதை வழி நடத்தும் அரசாங்க நிர்வாகிகளுக்கும் கெட்ட பேர் வருகின்றது
7.எந்தக் கட்சி வழி நடத்திச் செல்கின்றதோ அவர்களுக்கும் இந்தக் கெட்ட பேர் செல்கின்றது.
6.இந்த அரசாங்கத்தில் என்ன செய்கின்றார்கள்…? என்ற கேள்வி வருகின்றது.

“பணத்திற்காக வேண்டித்தான்” உத்தியோகம் பார்க்கின்றார்களே தவிர இன்று பெரும் பகுதி அரசாங்க உத்தியோகம் பார்க்கும் அனைவரும் மக்களைக் காக்க அல்ல.

ஆகவே கட்சியில் உள்ள தொண்டர்கள் ஒவ்வொருவரும் இதைக் கண்கானிக்க வேண்டும்.

தொண்டர்கள் என்றால் எல்லாக் கட்சியிலும் உள்ள தொண்டர்களும் தான். எங்கே தவறு நடக்கின்றதோ உடனே அரசாங்கத்தில் உள்ள மேலதிகாரிகளிடம் “எடுத்துச் சொல்லுங்கள்…!”

அதைக் கேட்கவில்லை… என்றால் நியாயம் வழங்க வேண்டும்…! என்று “மௌனம் சாதியுங்கள்…” அதற்காக வேண்டி அரசாங்கப் பொருள்களைச் சேதப்படுத்தாதீர்கள்.

ஏனென்றால் அது எல்லாம் நம் (மக்கள்) பணம்.

காந்திஜி வழி காட்டியபடி நாம் எல்லாம் ஒரு குடும்பம். இந்த அரசியல் வாழ்க்கையில் இந்தக் கட்சி அந்தக் கட்சி என்ற நிலையில் வராதீர்கள்.

ஒருவர் ஒருவர் சாடிப் பேசும் நிலைகளிலிருந்து நீக்க வேண்டும் என்றால் கீழ் மட்டத்தில் உள்ள தொண்டர்கள் தான் அதை எடுத்துரைக்க முடியும்.

அதே சமயத்தில் கற்றுணர்ந்த மேலதிகாரிகளாக உள்ள படித்த வர்க்கத்தினரும் அரசாங்க உத்தியோகத்தில் இருக்கப்படும் பொழுது தவறுகளைக் கண்டால் “இதனைத் தவறு…!” என்ற நிலைகளில் எடுத்துச் சொல்லத் தயங்கக் கூடாது.

அரசாங்க நிலைகளில் தவறு செய்யாத நிலைகளுக்கு வர வேண்டும். உங்களுக்குச் சம்பளம் உண்டு.

1.அப்படியே… தவறு செய்ய ஒருவர் தூண்டினாலும்
2.இந்தத் தவறை “நான் செய்ய மாட்டேன்…” என்ற ஒரு மூன்று நாளைக்காவது விரதம் இருங்கள்.
3.தவறு செய்யச் சொல்வோரும் “விலகிச் செல்வார்…!”

அரசாங்கத் துறையில் உள்ள அதிகம் படித்தோரும் விஞ்ஞான அறிவைக் கற்றுணர்ந்தோரும் மக்களுக்குச் சேவை செய்யும் இந்த உணர்வின் தன்மையைக் கொண்டு வர வேண்டும்.

காந்திஜியை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். உங்களுக்கு வேண்டிய மன பலம் கிடைக்கும். சாந்தமும் ஞானமும் விவேகமும் கிடைக்கும்.

மெய் ஞானிகள் நமக்குக் காட்டிய அந்த அருள் ஞானத்தைப் (நல்ல வழிகளை) போதித்து நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற நிலைகளை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

உலகில் நடக்கும் கொடூரமான தவறுகளிலிருந்தும் விஞ்ஞானத்தால் விளைந்த விஷத் தன்மைகளிலிருந்தும் மீட்டிடும் வல்லமை இங்கே உண்டு.
1.”தவப்புதல்வர்கள்…” பிறந்த நாடு இது.
2.”கடும் ஞானிகள்” பிறந்த நாடு.
3.இந்த உலகிற்கே வானுலக ஆற்றலை வெளிப்படுத்திக் காட்டிய நாடு இது

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற நிலையில் அந்த அகஸ்தியன் தனக்குள் அணுவின் ஆற்றலை அறிந்து துருவத்தின் ஆற்றலை நுகர்ந்து துருவ நட்சத்திரமாகத் திகழ்ந்து கொண்டுள்ளான்.

தென்னாட்டில் தோன்றியவன் தான் அகஸ்தியன். இந்த நாட்டில் தோன்றியவன் தான்.

அவன் அருளைப் பெற்றால் நம்மைச் சீராக்கலாம். நாட்டைச் சீராக்கலாம் இந்த உலகையும் சீராக்க முடியும்.

ஒருவர் நம்மைத் தாக்கினால் நாமும் அவரைப் பதிலுக்குத் தாக்கி விட்டால் அது “வீரம்…!” என்றும் விலகிச் சென்று விட்டால் “கோழைத்தனம்…!” என்றும் நினைக்கின்றோம் – ஞானிகள் சொல்வது என்ன…?

Image

Bravaveness of Sages

ஒருவர் நம்மைத் தாக்கினால் நாமும் அவரைப் பதிலுக்குத் தாக்கி விட்டால் அது “வீரம்…!” என்றும் விலகிச் சென்று விட்டால் “கோழைத்தனம்…!” என்றும் நினைக்கின்றோம் – ஞானிகள் சொல்வது என்ன…?

 

காந்திஜி உடலில் வளர்த்துக் கொண்ட பகைமை அகற்றும் உணர்வுகளை இன்றைக்கு அரசியல் நடத்தும் அனைவரும் எடுத்துக் கொள்ள.

நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் நல்ல குணங்களைச் சுதந்திரமாக அவரவர் உடலில் இயக்கப்பட வேண்டும். நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற உணர்வினை அனைவரும் வளர்த்துக் கொள்தல் வேண்டும். ஏனென்றால்
1.பகைமை கொண்டு ஒருவரை அழித்து விடலாம் என்று எண்ணினால்
2.அழிக்கவே முடியாது. அது வளருமே தவிர குறையாது.

கோட்சே அவரைக் கொல்லும் பொழுது அதைத் தான் காந்திஜி சொன்னார். அவன் என்னுடைய உடலைத்தான் வீழ்த்தினான்.
1.என் உணர்வை வீழ்த்த முடியாது.
2.அவனுக்கு அந்தத் திறன் இல்லை.

ஆனால் இந்த உடலை அவன் வீழ்த்தினாலும் அவன் மற்றவர்களைக் காக்கும்… உயர்ந்த நிலைகள் பெறும் அந்தத் தகுதி பெற வேண்டும் என்று எல்லோரும் எண்ண வேண்டும்.

அப்படி எண்ணினால் தான் நாம் செய்யும் தவறுகளில் இருந்து மீள முடியும் என்று தெளிவாக்கினார் காந்திஜி.

ஒவ்வொரு நிலைகளிலேயும் நமக்குள் தெளிவான நிலைகள் வளர வேண்டும் என்றால் ஒவ்வொரு மனிதனின் உயிரையும் கடவுளாக மதித்தல் வேண்டும்.

ஒவ்வொரு நிலையிலும் கடவுள் என்ற நிலை வரப்படும் போது அறிந்து செயல்படும் எண்ணங்களாக அங்கே உருவாகும் என்றார்.

உடலில் ஏதாவது தாங்க முடியாதபடி திடீரென்று ஏற்பட்டால் நாம் ஐயோ… அம்மா…! என்று அலறுவோம்.
ஆனால் தான் சுடப்பட்டு நெஞ்சில் குண்டு பாய்ந்தாலும் அந்த உணர்வின் வேகம் அவருக்கு வரவில்லை. அஞ்சிடும் செயல்கள் வரவில்லை.

ஹரே ராம்…! ஹரே ராம்…! என்றார்.

அவனைப் போன்று மற்றவர்கள் யாரும் அவன் செய்யும் தவறான உணர்வை எடுத்து விட வேண்டாம். அவனைத் தண்டிக்க வேண்டாம். அந்த குணத்திலிருந்து அவனை மீட்டும் பக்குவத்தைக் கொண்டு வாருங்கள் என்று தான் சொன்னார்.

இதைதான் கடைசி மொழியாக அவர் சொன்னார்.

காந்திஜி குண்டடிபட்டார் என்ற செய்தி வரும் பொழுது நான் (ஞானகுரு) மதுரை மீனாட்சி மில்லில் வேலை செய்து கொண்டிருக்கின்றேன்.

என்னுடன் ஒரு முஸ்லீம் பாயும் வேலை பார்த்து கொண்டிருக்கின்றார்.

1.காந்திஜியைக் கொன்று விட்டார்கள்
2.நம்முடைய இனம் தான் அவரைச் சுட்டிருக்கின்றார்கள் என்று சொன்னவுடனே
3.எல்லாம் சேர்ந்து அந்த டிபார்ட்மென்ட்டில் (department) அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

மில்லுக்குள்ளேயும் வந்து அடிப்பதற்கு ஆரம்பிக்கின்றார்கள். அப்பொழுது நான் என்ன செய்தேன்…?

காந்திஜியினுடைய கடைசி வாக்கு எதுவோ அதை நிறைவேற்றுவோம். அவரைக் கொன்று விட்டார்கள் என்பதற்காக இங்கே வெறித்தனமாகப் போவது சரியில்லை என்று சொன்னேன்.

அரவணைப்பாக ஒரு இருபது பேரைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு போய் அதற்கென நான்கு பேரை வைத்துத் தாக்காத நிலையில் பாதுகாத்தோம். ஏனென்றால்
1.தவறு செய்வது யாரோ…!
2.அந்த உணர்ச்சியின் வேகம் நாட்டையே கலக்குகின்றது.

நாட்டின் நன்மைக்காக நாம் பாடுபட வேண்டும் என்றார் காந்திஜி. அனைவரும் சகோதரர் என்ற நிலைகளில் ஒவ்வொருவரும் வர வேண்டும் என்றார்.

மற்றவர்கள் தவறு செய்யும் பொழுதெல்லாம் உண்ணாவிரதம் இருந்தார். தவறிலிருந்து விடுபட்டால்தான் உணவாக உட் கொள்வேன் எழுந்து வருவேன் என்று வைராக்கியமாகச் சொன்னார்.
1.தவறான நிலை வரப்படும் போது
2.நாடு ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்றார் காந்திஜி.

“அந்நியனே வெளியேறு…! என்று சொல்லி அந்நியன் என்று அவனைக் கருதவில்லை.
1.அந்நிய குணங்களாக (இங்கே) அடிமைப்படுத்தும் குணத்திலிருந்து “வெளியேறு…!” என்று தான் அவர் சொன்னார்.
2.”அந்நியமாக்கும் குணங்களில் இருந்து வெளியேறு…” என்ற
3.அந்த எண்ணத்தை தான் அங்கு உருவாக்கினார்.

நாம் ஒருவரைத் தாக்கிக் கொன்று விடுவதனால் யாரும் இறந்து விட வில்லை. உடல் தான் மடிகின்றது.
1.அவனுக்குள் விளைந்த பழி தீர்க்கும் உணர்வுகள் பரவுகின்றது.
2.அப்படிப் பரவும் உணர்வுகள் மற்றவர்கள் உடலில் சேர்த்தபின்
3.அவனும் தாக்கும் உணர்வு கொண்டு தான் செயல்படத் தொடங்குகின்றான்.
4.ஆகவே எங்கே மடிந்தது…?

இவன் செய்த நிலைகள் இங்கே மீண்டும் அவன் தாக்கப்படும் உணர்விற்கே வளர்க்கப்படுகின்றது. அப்போது நல்ல குணங்களைக் காக்கும் நிலை எங்கே இருக்கின்றது…?

1.ஒருவரைத் தாக்குவது என்றால் கோழை.
2.”பதிலுக்கு அவரைத் தாக்கிவிட்டு… மீள்வதும் கோழையே…”
3.இது வீரியம் அல்ல…! வீரமல்ல…!

தாக்குவோர் நிலைகளில் இருந்து மீள வேண்டும் என்று வலிமை கொள்வோர் எவரோ அவர்கள் தான் வீரியம் என்றார் மகாத்மா காந்திஜி.

பிறரைத் தாக்கும் உணர்வை விடுத்துவிட்டு மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்து அனைவரையும் காக்கும் உணர்வை வளர்ப்பதே நம் ஞானிகள் நமக்கு உரைத்த மெய் உணர்வுகள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய மெய் வழி அதுவே..!

தீமை செய்யும் அணுக்கள் சுவாசத்தின் வழியாக நம் உடலுக்குள் எப்படி உருவாகின்றது…?

சுவாசநிலை - காற்று

தீமை செய்யும் அணுக்கள் சுவாசத்தின் வழியாக நம் உடலுக்குள் எப்படி உருவாகின்றது…? 

நாம் நுகர்ந்த உணர்வுகள் உடலுக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டி “ஒருவன் வேதனைப்படுகின்றான்…” என்ற உணர்வை அறிவித்தாலும் நம் உயிரில் மோதிய பின் அது அணுக் கருவாக உருவாகிவிடுகின்றது.

உதாரணமாகக் கோழி, குருவி முட்டை இடும் உயிரினங்கள் அனைத்துமே கேறும். பல்லி கூட கேறும்.

அப்படிக் கேறுவது போல “அவன் வேதனைப்படுகின்றான்… வேதனைப்படுகின்றான்… வேதனைப்படுகின்றான்…” என்று எண்ணங்களை அதிகமாகக் கூட்டி நாம் திரும்பத் திரும்ப எண்ணும் போது எந்த மனிதனை எண்ணினோமோ அந்த உணர்வின் கருவாக உடலுக்குள் உருபெறத் தொடங்கிவிடுகின்றது.

அவர் உடலிலே நோய் உண்டாக எது காரணமாக இருந்ததோ அதே மாதிரி நம் உடலுக்குள் வரும். அது கருவான பின் நம் இரத்தங்களிலே சுழன்று வரும்.

1.பின் எந்தெந்தப் பாகங்களிலே தேங்கி நின்று விடுகின்றதோ
2.அந்தப் பாகத்திலே கருவாகி
3.முட்டையாகி வெடித்து அணுவாக வரும்.

கோழி அடைகாத்த பின் முட்டை பொரிந்து அந்தக் குஞ்சுகள் வெளி வருவது போல் வந்துவிடும். வெளி வந்த பின் அந்தக் குஞ்சுகள் எல்லாம் கத்தும். கத்தும் பொழுது தாய்க் கோழி கூப்பிட்டு மண்ணைக் கிளறி எடுத்து ஆகாரம் கொடுக்கும்.

இதைப் போன்று தான் நம் உடலுக்குள் ஒரு அணுவின் தன்மை முழுமை அடைந்து விட்டால்
1.அந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதும் பரவும்.
2.நம் சிறுமூளை பாகம் வந்து அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.
3.பின் நம் உயிர் அந்த உணர்ச்சியைப் புலனறிவு ஐந்திற்கும் கண் காது மூக்கு உடம்பு வாய் இவைகளுக்கு அனுப்பும்.
4.அதன் வழி கவரச் செய்யும் (சுவாசமாக)

எந்த மனித உடலில் இருந்து நோயின் உணர்வலைகள் வெளி வந்ததோ அதை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரப்பி வைத்துள்ளது.

நம் புலனறிவும் ஐந்தும் அந்த உணர்வலைகளைக் கவர்ந்து நம் உடலுக்குள் அனுப்பும். உடலுக்குள் போவதற்கு முன் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்ட பின் என்ன நடக்கின்றது…?
1.அந்த மனிதன் எப்படி வேதனைபட்டானோ
2.அந்தச் சங்கடமும் சோர்வான உணர்ச்சிகளையும் நம்மை அறியாமலே தோற்றுவிக்கும்.
3.நாம் இனம் புரியாதபடி வேதனைப்படுவோம்.

அவ்வாறு நாம் வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கும் போது ஒருவர் தொழிலின் நிமித்தமாக நம்மைத் தேடி வந்து “இன்ன குறை இருக்கிறது” என்று எடுத்துச் சொல்ல வருகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

அவர் சொல்வதை நம் செவிப்புலன்கள் ஏற்றுக் கொள்ளாது. இந்த வேதனைக்குரிய நினைவைத் தான் ஊட்டும்.

அதே சமயத்தில் ஒருவன் மகிழ்ச்சியான நிலையில் இருந்தால் நம் கண்ணின் பார்வைக்கும் அது ஏற்றுக் கொள்ளாது. நம் கண்ணின் பார்வைக்கும் அந்த வெறுப்பின் நிலையே ஊட்டும்.

நாம் ஒரு கணக்கையோ அல்லது ஒரு பொருளையோ உருவாக்க வேண்டும் என்றால் கவனமாகப் பார்த்துத் தான் செயல்படுத்த வேண்டும்.

அப்போது அந்த வேதனையின் உணர்வுகள் பார்வைக்கு வரும் போது அந்த உணர்ச்சிகள் உடலை இயக்கிய பின்
1.அதை வேலை செய்ய விடாதபடி அந்த வேதனை உணர்வுகள் நம் அங்கங்களைக் குறைத்து விடும்.
2.கை கால்களைக் குறைத்து விடும் – இந்த உடலுக்கு.

அப்போது நம் உடல் என்ன செய்கின்றது?

வேதனையால் உருவான அணுக்கள் உடலுக்குள் இருக்கிறதல்லவா…! அதற்கு இந்த வேதனை உணர்வலைகளை சாப்பாடாகக் கொண்டு கொடுக்கும்.
1.வேதனையான அணுக்கள் சந்தோஷப்படும்.
2.ஆனால் நம் உடலில் உள்ள நல்ல குணங்களால் உருவான அணுக்கள் வேதனைப்படும்.

கோழி தன் குஞ்சுகளுடன் மேய்ந்து கொண்டிருகின்றது என்று வைத்துக் கொள்வோம். ஒரு பருந்து வந்தால் உடனே கோழி என்ன செய்கின்றது…?

உடனே “கர்ர்ர்…ர்ர்…” என்று இரைச்சலை விடும். எல்லாக் குஞ்சுகளும் தாயின் இறக்கைக்குள் அடங்கிவிடும்.

இதே மாதிரித்தான் வேதனை என்ற உணர்வு வந்தவுடனே எல்லாமே அந்த உயிருடன் ஒன்றி அதனுடைய உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. பாதுகாப்பாக இருக்கின்றது.
1.வேதனையால் உருவான அணுக்கள் மீண்டும் அதனுடைய உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
2.உயிர் அதனின் ஆகாரத்தை எடுத்துக் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றது.
இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஏனென்றால் இப்படி நம் உடலுக்குள் நம்மை அறியாமலேயே வேதனை அணுக்கள் உருவாக்கினால் நாம் பார்த்த மனிதன் எப்படி வேதனைபட்டானோ அதே வேதனை அணுக்கள் நமக்குள் உருவாகி நாமும் வேதனைப்படுவோம்.

1.சாமியைக் கும்பிட்டாலும் சரி…
2.சாமியாரைப் பார்த்தாலும் சரி…
3.அர்ச்சனை செய்தாலும் சரி…
4.யாகங்கள் செய்தாலும் சரி… அதனால் பலன் இல்லை

யாகத்தின் பால் பற்றாகி அந்த எண்ணங்களைக் கொண்டு வரப்போகும் போது யாக எண்ணத்தின் அணுவின் கருவாக உருவாகின்றது.

அதை வளர்ந்து விட்டால் “யாகத்தைச் செய்ய வேண்டும்… செய்தால் தான் சரியாகும்…! என்று அதன் வழியே தான் நம்மைச் செய்யச் செய்கின்றது.

அங்கே கோவிலுக்குச் சென்று அரச்சனை செய்து பல விதமான கனிகளையும் மலர்களையும் நல்ல மணங்களையும் வைத்து அங்கே கொடுத்தாலும்
1.ஒரு நல்ல பதார்த்தத்தில் விஷம் என்ற நிலைகள் பட்டவுடனே
2.நல்ல பதார்த்தமும் விஷத்தின் இயக்கமாகதான் மாறுமே தவிர அதற்குச் சக்தி இல்லை.
3.நீங்கள் யாகங்கள் செய்தாலும் சரி… மற்ற நிலைகள் எதைச் செய்தாலும் சரி…
4.கஷ்டத்தைப் போக்குவதற்காகத் தெய்வத்தை வேண்டி “நான் விரதம் இருக்கின்றேன்…” என்று சொன்னாலும் சரி…
5.இன்னும் கொஞ்சம் விஷத்தைத் தான் வளர்க்கிறமே தவிர அந்த நோயை மாற்றாது.

அதை மாற்ற வேண்டும் என்றால் அந்த ஆலயத்தில் காட்டிய முறைப்படி தெய்வ குணத்தை நமக்குள் கவர வேண்டும்… சுவாசிக்க வேண்டும்…!

 

அந்த அருள் உணர்வுகளை நமக்குள் கருவாக்கி அணுவாக்க வேண்டும். ஒளியான அணுக்கள் நம் உடலில் பெருகினால் நஞ்சான அணுக்களுக்கு ஆகாரம் செல்லாது அது செயலிழந்துவிடும்.

உண்மையான அரசியல் எது…?

Image

spiritual-unity

உண்மையான அரசியல் எது…?

 

உலகம் முழுவதிலும் மதம் இனம் என்ற வகையில் ஒன்றுக்கொன்று ஒத்துக் கொள்ளாது இருப்பினும் அரசியலில் எடுத்துக் கொண்டால் இந்தக் கட்சி அந்தக் கட்சி என்று இதிலேயும் பகைமை வளர்கின்றது.

நாட்டைக் காக்கின்றோம் என்று தான் அனைவரும் சொல்கின்றனர். ஆனால் நாட்டு மக்கள் மத்தியிலே பகைமையை உருவாக்கும் நிலைகள் தான் இன்று உருவாகின்றது.

அவன் என் கட்சியைச் சேர்ந்தவன் இவன் உன் கட்சியைச் சேர்ந்தவன் என்று பகைமைகள் உருவாகிவிட்டது.

மாறி மாறி கட்சிகள் நாட்டை ஆட்சி செய்தாலும் ஒருவருக்கொருவர் அவர் என்ன நல்லது செய்தார்…? இவர் என்ன நல்லது செய்தார்…? ஒன்றும் செய்யவில்லையே என்ற இந்தப் பகைமை உணர்வைத்தான் ஊட்ட முடிகின்றது.

அவர்கள் ஆட்சியிலிருந்தாலும் சரி அல்லது எதிர்க்கட்சியாக மாறினாலும் சரி மாறி மாறிக் குறை கூறும் நிலையைத் தான் வளர்க்கின்றார்கள்.

நாட்டு மக்களுக்குச் செய்ய வேண்டிய நன்மையைப் பற்றிப் பேசும் நிலையோ அல்லது அதைச் செயல்படுத்த வேண்டிய ஆக்கபூர்வமான நிலைகள் இல்லை.

நாட்டுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று யார் சென்றாலும் அதைச் செய்ய முடியாத நிலைகள் தான் உருவாகின்றது. இன்று நம் நாட்டிலுள்ள எல்லா மாநிலங்களிலும் பார்க்கலாம். ஏன்..! உலகமெங்கும் இந்த நிலை தான் உள்ளது.

அரசியல் வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பவர்கள் எப்படி வாழ்கின்றார்கள்..! என்ற நிலையைப் பார்க்கலாம்.
1.மக்களைக் காக்க வந்தார்களா…?
2.தன்னைக் காக்கச் சென்றார்களா…? என்ற வினாக்கள் தான் இன்றைய நிலைகளில் இருக்கின்றது.

உலக ரீதியிலே எடுத்துக் கொண்டாலும் இந்த நிலை தான் தான் இருக்கின்றது. அவர்களைக் காக்கத் தான் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றார்களே தவிர நம்மைக் காக்க இல்லை…!

தன்னைச் சுற்றி அத்தனை பகைமைகளும் சிக்கல்களும் இருக்கும் போது மற்றவர்களை எங்கே காப்பது…! அவர்களால் முடியுமா…?

எந்த அரசாங்கமாக இருந்தாலும் மக்கள் நாம் அனைவரும் நல்ல நிலையில் இருந்து ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.
1.அரசு நன்றாக நடக்க வேண்டும் என்றால்
2.மக்கள் காந்திஜியின் தத்துவத்தைக் கடைப்பிடித்தால்
3.ஒருவருக்கொருவர் பொறாமை என்ற நிலைகளை அகற்ற முடியும்
4.போட்டியையும் பகைமையையும் அறவே ஒழிக்க முடியும்…!

அந்த நிலையைத் தனி மனிதன் நாம் ஒவ்வொருவரும் கடைப்பிடித்தால் அரசியல் வாழ்வோருக்கும் நாம் எடுத்துக் காட்டும் நிலை வருகின்றது.

நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் எடுத்து நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பகைமைகள் வரும் பொழுது அதைத் தடுக்கும் ஆயுதமாக காந்திஜி சொன்ன வழியில்
1.தவறு செய்பவர்கள் உணர்வை நம்மை இயக்கவிடாது
2.அந்த உணர்வு நமக்குள் வந்து நம்மை அந்நியமாக்க விடாது
3.மகரிஷிகளின் உணர்வைப் பாய்ச்சிப் பாதுகாப்புக் கவசமாகத் தடுக்க வேண்டும்.

நாம் பாய்ச்சும் அந்த ஆற்றல்களை அவர்கள் நுகரும் பொழுது அவர்கள் தவறை உணர்த்திக் காட்டும். அவர்களும் உண்மையை அறியும் சந்தர்ப்பம் உருவாகும். அதைப் பகைமையாக மாற்றாது.

ஆகவே நாம் இந்த நிலையைக் கடைப்பிடிக்க வேண்டும். செய்து பாருங்கள். உங்களால் முடியும்…!

மன வலிமை கொண்ட “காந்திஜி” உண்மையான ஆன்மீகவாதி

Image

Gandhi Ji

மன வலிமை கொண்ட “காந்திஜி” உண்மையான ஆன்மீகவாதி

 

சாமி (ஞானகுரு) ஆன்மீகவாதி அல்லவா…! ஆன்மீகத்தைப் பேசும் போது எப்படி அரசியல் எப்படிப் பேசுகின்றார் என்று சிலர் எண்ணுகின்றார்கள்.

காந்திஜி உண்மையான ஆன்மீகவாதி. வலிமை பெற்றவர்….

அந்த வலிமை இருந்தால் தான் நம் உயிர் மனிதனாக வளர்க்கும் போது பகைமை உணர்வுகளைள் நமக்குள் வளர்த்திடாது
1.நம்மைக் காக்க முடியும்.
2.நாட்டைக் காக்க முடியும்.
3.நாம் மனிதன் என்ற முழுமையையும் அடைய முடியும்.

அனைவரும் ஒன்று சேர்த்தால் தான் மகிழ்ச்சி. அப்படிப்பட்ட மகிழ்ச்சியான உணர்வை வளர்க்கப்படும் போது தான் பிறவியில்லா நிலைகள். தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்.

சாமியாராகப் போன நான் (ஞானகுரு) எப்படி அரசியலைப் பேசுகின்றேன் என்று எண்ண வேண்டாம்…!
1.நான் அதிலே சேவை செய்தவன்.
2.காங்கிரஸில் தொண்டனாகச் சேர்ந்தவன்… அடிபட்டவன்…!
3.“நான் அடிபட்டவன்” என்று இப்போது (02.10.1997 அன்று உபதேசித்தது) சொல்கின்றேன்.

“அடிபட்டது” என்று அந்த நேரத்தில் யாரிடமும் நான் சொல்லவில்லை. சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்றும் சொல்ல வேண்டியதில்லை.

வினாக்கள் வரும் என்பதற்காகத் தான் இதைச் சொல்கின்றேன். காந்திஜி வழியில் செயல்பட்டவன்.

அந்த ஞானிகளின் அருள் ஒளி கொண்டு நம்மை அறியாமல் இயக்கும் தீமையிலிருந்து நாம் விடுபடல் வேண்டும்.

1.காந்திஜியின் நினைவைக் கொண்டு வந்தால்
2.நம் மனித வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து விடுபடும்
3.அந்த ஆன்மீக வலிமை கிடைக்கும்.
4.அத்தகைய வலிமை இருந்தால் தான் நாம் அருள் ஒளியைப் பெற முடியும்.

அந்த வலிமை இல்லை என்றால்
1.ஒன்றை நாம் எதிர்பார்ப்போம்…!
2.நடக்கவில்லை என்றால்… வலிமை இல்லை என்றால்…
3.நான் கொடுத்த சக்தியை நீங்கள் இழப்பீர்கள்.
4.நல்ல உயர்ந்த குணங்களை இது தாழ்மைபடுத்தும்.

இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் மீள்தல் வேண்டும் என்பதற்காகத்தான் காந்திஜியின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

நம் உடலுக்குள் நம்மை அறியாது இயக்கும் பகைமையான உணர்வுகளிலிருந்து விடுபட காந்திஜியின் நினைவை நாம் கொள்தல் வேண்டும். காந்திஜியை எண்ணிப் பாருங்கள்…!
1.மனம் அமைதி பெறும்
2.சாந்தமும் விவேகமும் கிடைக்கும்.