சந்தர்ப்பத்தால் நம் வியாபாரம் எப்படிக் கெடுகின்றது…?

சந்தர்ப்பத்தால் நம் வியாபாரம் எப்படிக் கெடுகின்றது…?

 

நாம் ஒரு ஜவுளி வியாபாரத்திற்குப் போகின்றோம். ஜவுளி வியாபாரத்திற்குப் போகும் பொழுது கடைகளில் ஆர்டர் சேகரிப்பதற்குச் சில மாதிரிகள் மட்டுமே எடுத்துச் செல்கின்றோம்.

கடைகளுக்குச் சென்று நாம் எடுத்துச் சென்ற “மாதிரித் துணிகளை” (sample) காண்பித்தவுடனே கடைக்காரர்களும் அதைப் பார்த்துவிட்டு ஒன்றிரண்டு மாதிரிகளைப் போன்று சரக்கு அனுப்பும்படி நம்மிடம் கேட்கின்றனர்.

நாமும் கடைக்காரரிடம் ஆர்டர்களைச் சேகரித்துக் கொண்டு, நமது ஊருக்குக் கிளம்பி வந்து, கடைக்காரர் ஆர்டர் செய்த சரக்குகளைத் தயார் செய்து, அவரது கடைக்கு அனுப்புகின்றோம்.

சரக்கை அனுப்பி வைத்துவிட்டு ஓரிரு நாள்கள் கழித்துப் பண வசூலுக்காக அவருடைய கடைக்குச் செல்கின்றோம்.

அவருடைய கடைக்குச் செல்ல வேண்டுமென்றால் (city) பஸ்ஸில் பயணம் செய்துதான் போக வேண்டும். ஆனால் பஸ் கிடைக்கவில்லை… நடந்தே செல்கின்றோம்.

அப்போது சந்தர்ப்பம்… ஒரு குடும்பத்தில் பலகாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள். பலகாரம் செய்து கொண்டிருந்த சமயத்தில் எண்ணெய் தீர்ந்து விட்டது.

வீட்டிலிருந்த சிறுவனை அழைத்து,ச் “சீக்கிரம் எண்ணெய் வாங்கி வாடா…” என்று அவசரப்படுத்தி அனுப்பி வைக்கின்றார்கள். சிறுவனும் எண்ணெய் வாங்கி வருவதற்காக வேகமாகக் கடைக்குச் செல்கின்றான்.

சிறுவன் கடைக்குச் சென்று “எண்ணெய் கொடுங்கள்… எண்ணெய் கொடுங்கள்…!” என்று அவசரப்படுத்துகின்றான்.

ஆனால் கடைக்காரரோ இவனைப் பார்த்துப், “பொறு… பொறு…” என்று அடுத்தவர்களுக்கே சரக்கைக் கொடுத்து அனுப்புகின்றார். சிறுவனுடைய அவசரத்திற்குச் செவி சாய்க்க முடியாமல் போய் விடுகின்றது.

சிறுவனுக்கோ நேரம் கடந்து கொண்டிருக்கின்றது.

அது சமயம் சிறுவன் “நேரமாகிக் கொண்டு இருக்கின்றது… வீட்டில் பலகாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள், ஆகவே எண்ணெய் சீக்கிரம் கொடுங்கள்… தாமதமானால் வீட்டில் என்னைத் திட்டுவார்கள்…!” என்று கூறுகின்றான்.

1.இருந்தாலும், சிறுவனுடைய ஆவேச அவசர உணர்வுகள், அங்கே எதிர்நிலையாகின்றது.
2.“எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்…” அதாவது கடைக்காரரின் உணர்வும் சிறுவனுக்குச் சீக்கிரம் சரக்கைத் தந்து அனுப்ப மறுக்கின்றது.

இப்படித் தாமதமாகும் பொழுது… “நேரமாயிற்றே, நேரமாயிற்றே…!” என்ற இந்தப் பதட்டத்திலேயே சிறுவன் இருக்கின்றான். சிறிது தாமதத்திற்குப்பின் சிறுவனும் எண்ணெயை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வேகமாக வருகின்றான்.

இப்படி, சிறுவன் வேகமாக வரும் பொழுது அவனுடைய எண்ணம் முழுவதும் “நேரமாகி விட்டதே… நேரமாகி விட்டதே…!” என்றே செலுத்துகின்றான். இதனால் சாலையில் மேடு பள்ளங்கள் தெரியாதபடி சென்று தவறிக் கீழே விழுந்து விடுகின்றான்.

ஏனென்றால்
1.அவனுடைய எண்ணம் “நேரமாகி விட்டதே… நேரமாகி விட்டதே…!” என்று இருக்கின்றது.
2.இதனால் அவனுக்குச் சாலையில் மேடு பள்ளம் தெரிவதில்லை.

எப்படியும் எண்ணெயைக் கொண்டு போய்ச் சீக்கிரம் கொடுத்து விடவேண்டும் என்று எண்ணினான். அந்த அவசரத்தால் போகும் வேகத்தில் இவனும் தவறி விழுந்து பாட்டில் நொறுங்கி எண்ணெயும் வீணாகி விடுகின்றது.

சிறுவன் எண்ணெய் வீணான வருத்தத்தில் உடைந்த பாட்டிலை சாலை ஓரமாகத் தள்ளிவிடாதபடி சாலையில் அப்படியே விட்டுவிட்டுச் சென்று விடுகின்றான்.

அதே சமயம் நாம் அதே சாலை வழியில் (ஜவுளி) சரக்கை அனுப்பிய கடைக்கு நடந்து வருகின்றோம். வழியில் நாம் நமது வியாபாரம் பற்றிய எண்ணத்துடனே செல்கின்றோம்.

1.நமது நினைவு முழுவதும் வியாபாரம் பற்றிய சிந்தனையில் இருப்பதால்
2.சாலையில் உடைந்து கிடக்கும் பாட்டிலைக் கவனிக்காமல் உடைந்து கிடக்கும் பாட்டிலை நம்மை அறியாமலே உதைக்கின்றோம்.

உடைந்த பாட்டில் காலில் பட்டவுடன் “பாவிப் பயல்கள்… நடக்கும் ரோட்டில் பாட்டிலைப் போட்டு உடைத்துள்ளார்களே…!” என்று வெறுப்பான உணர்வுகள் வருகின்றது.

உடைந்த பாட்டிலில் நம் கால் மோதிய போதும் நமது காலில் காயம் எதுவும் இல்லை. ஆனால் “இந்நேரம் உடைந்த பாட்டில் காலில் குத்தியிருந்தால் என்னவாயிருக்கும்…?” என்ற உணர்வுகள் வருகின்றன.

சரி… நாம் தான் உடைந்த பாட்டிலைப் பார்த்தோம். உடைந்த பாட்டில்களை ஓரமாகத் தள்ளிவிடுவோமா…? என்றால் செய்ய மாட்டோம்.

இதே பாட்டில் அடுத்தவரின் காலில் குத்த வாய்ப்பிருக்கின்றது. ஆகவே உடைந்த பாட்டிலை ஓரமாகத் தள்ளிவிடுவோம் என்று உடைந்த பாட்டிலை ஓரமாகத் தள்ளி விட்டிருந்தால் “நம்மிடம் சிறிது நல்ல மனம் இருக்கின்றது…” என்று இருக்கும்.

1.ஆனால் நாம் என்ன செய்கின்றோம்…? வியாபார நோக்கத்திலேயே போகின்றோம்.
2.“ரொம்ப அறிவு கெட்டதனமாக இருக்கின்றது…” என்று
3.மற்றவர்களைக் குறை கூறும் உணர்வுகளை எடுத்துக் கொண்டு போகின்றோம்.

இப்படி இதன் உணர்வுகளுடன் கடைக்குச் சென்றபின்… “சரக்கு அனுப்பியிருந்தோம்… சரக்கைப் பார்த்தீர்களா…?” என்று கடைக்காரரிடம் கேட்போம்.

நம்மைக் கடை முதலாளி பார்க்கின்றார். அது சமயம்
1.சாலையில் நடந்த சம்பவத்தால் உண்டான “வெறுப்பின் மணம்” நமது உடலிலிருந்து வெளிப்படும் நிலையில்
2.அதன் மணத்தை முதலாளி நுகர நேருகின்றது.
3.நுகர்ந்தபின் நாம் அனுப்பியிருந்த சரக்குக் கட்டுகளைப் பிரித்துப் பார்க்கின்றார்.

கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய். வெறுப்பின் உணர்வுகளை நுகர்ந்து சரக்கைப் பார்க்கும் பொழுது கடைக்காரருக்கு “வித்தியாசமாகத் தெரிகின்றது…”

உடனே கடை முதலாளி “ஜவுளி மாதிரி (sample), அன்று காண்பிக்கும் பொழுது ஒரு விதமாக இருந்தது, ஆனால் இன்று சரக்கு வேறு விதமாக இருக்கின்றதே…!” என்று கூறுவார்.

ஏனென்றால் நுகர்ந்த வெறுப்பின் உணர்வின் மணத்திற்கொப்ப அங்கே வெறுப்பு உணர்ச்சியையே காண்பிக்கின்றது.
1.ஆனால் அன்று காண்பிக்கப்பட்ட மாதிரிப் பொருளும் இன்று காண்பிக்கும் சரக்கும் ஒன்றுதான்.
2.நுகர்ந்த உணர்வுகள் இன்று வேறு விதமாகக் காண்பிக்கின்றது.

“நான் அனுப்பியது நல்ல சரக்குதான்… நன்றாகப் பாருங்கள்…!” என்று நாம் கூறுவோம்.

உடனே கடை முதலாளி, எனக்குக் கண் இல்லையா…? நன்றாகப் பார்த்துவிட்டுத் தான் சொல்கின்றேன்…” என்று கூறுகின்றார்.

நாமும் இரண்டு தரம் “நல்ல சரக்குதான்…” என்று கூறுவோம்.

அதற்குக் கடை முதலாளி “இப்படி நாணயம் (நேர்மை) கெட்டுவிடக் கூடாது…” என்று கூறுவார்.

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வுகளின் இயக்கம் இப்படி இருக்கின்றது. இதை மாற்றுவதற்கு வழி என்ன…? சந்தர்ப்பத்தால் வரும் இத்தகைய தீமைகளைத் துடைப்பதற்குச் சக்தி வேண்டுமே.

அதற்குத்தான் தியானத்தைக் கடைப்பிடிக்கச் சொல்வது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை நமக்குள் சேர்த்து அறியாது வரும் தீமைகளை உடனுக்குடன் நீக்கிப் பழக வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள் அருளிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம்முள் பெற்று மெய்ப் பொருள் காணும் திறனை நமக்குள் வளர்த்துக் கொண்டால்
1.நமது வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கொப்ப நல் ஞானங்கள் உதயமாகி நம்மை வழி நடத்திச் செல்லும்.
2.இதன் தொடர் கொண்டு அகண்ட அண்டத்தின் இயக்கமும் நமது உடலான பிண்டத்திற்குள் அது எப்படி இயக்குகின்றதென்றும்
3.உணர்வுகள் எப்படி எண்ணங்களாக ஆகின்றதென்றும்
4.எண்ணங்கள் எப்படி உணர்ச்சிகளாக மாறுகின்றதென்றும்
5.உணர்ச்சிகள் எப்படி நம்மை இயக்குகின்றதென்றும்
6.நமக்கு நாமே அறிந்து கொள்ளக் கூடிய ஆற்றலைக் குரு வழியில் நாம் எல்லோரும் பெற வேண்டும்.

குரு காட்டிய அருள் வழியில் உங்களை நீங்கள் அறிந்து அருள் வழி வாழ்ந்து அருள் வாழ்க்கை வாழ்ந்து அருள் வழியில் தொழில் வளம் பெற்றுச் செல்வம் செல்வாக்கு பெற்று அனைவரும் மகிழ்ந்து வாழ்ந்திட எமது அருளாசிகள்.

தவறைச் சுட்டிக் காட்டும் பொழுது ஏற்படும் நிலைகள்

தவறைச் சுட்டிக் காட்டும் பொழுது ஏற்படும் நிலைகள்

 

நாம் ஒரு மனிதனிடத்தில் “நீ செய்யும் தவறுகளிலிருந்து விடுபட்டு இந்த நல்ல வழியில் செல்” என்று கூறினால் உடனே அவரிடத்தில் “எதிர் நிலையாகின்றது…”

தனக்கு விரோதமாக ஒருவர் சொல்லும் பொழுது அவர் தமது தாய் தந்தையராக இருந்தாலும் வெறுக்கின்றார்… சகோதரனாக இருந்தாலும் வெறுக்கின்றார்… நண்பராக இருந்தாலும் வெறுக்கின்றார்.
1.ஏனென்றால் மனிதர் தமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எதுவோ
2.அதன் வழியே அவரை அழைத்துச் செல்கின்றது.

ஆனால் அப்படி ஒருவர் மற்றவர்களை வெறுக்கும் தன்மைக்குக் காரணம் என்ன…?

குழந்தைகள் விளையாட்டில் ஆர்வமாக இருப்பவர்கள். அதனால் நமது குழந்தையிடமும் விளையாட்டுக் குணம் அதிகமாக இருக்கின்றது. இதனால் அவன் விபத்தில் சிக்குவான்… கல்வியில் ஞாபகம் இருக்காது… ஞானம் வராது என்று நாம் அவனைத் திட்டினால் அப்போது அங்கே எதிர் நிலையாகின்றது.

நாம் கோபமாகப் பேசினால் அவன் நம்மை எதிர்த்து பேசும் நிலை வருகின்றது. இதைப் போன்று அவன் நம்மை எதிர்த்துப் பேசும் நிலை வரும் பொழுது நமக்குள் வெறுப்பின் தன்மை இயக்கி அவனின் வெறுப்பைத் தணிப்பதற்கு மாறாக நாம் வெறுப்பின் உச்சக்கட்டம் அடைந்து அவனை உதைக்கும் தன்மை வருகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

நுகர்ந்த உணர்வுக்கொப்ப நமது உயிர் நம்மை இயக்குகின்றது.
1.நுகர்ந்த உணர்வுக்கொப்ப உயிர் நம்மை இயக்கினாலும்
2.நமது ஆறாவது அறிவால் நமது உயிரான்மாவை நம் வழிக்கு கொண்டு வரமுடியும்.

நாம் இதைக் காட்டிலும் வலுவான உணர்வுகளை நுகர்ந்தோம் என்றால் நமது உயிர் அவ்வுணர்வின் வழி நம்மை வழி நடத்தும்.

1.தீமைகளை நீக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் நுகர்ந்தறிந்தால்
2.நமது உயிர் நம்மிடத்தில் தீமைகளை நீக்கும் உணர்ச்சிகளை ஊட்டி நமது அங்கங்களைச் செயல்படுத்தும்.
3.தீமைகளை நீக்கும் அருள் உணர்ச்சிகள் நமது இரத்தத்தில் அணுவாக உருவாகும்.

இதை போன்று தீமைகளை நீக்கும் அரும் பெரும் சக்திகளை நாம் நுகர்ந்து அதன் உணர்ச்சிகளை நம்முள் இயக்கினால்… நமது சொல்லில் நயமும்… நமது சொல்லைக் கேட்பவரிடத்தில் இனிமையும்… நமது சொல்லை ஏற்றுக் கொள்வோரிடத்தில் மகிழ்ச்சியும் வருகின்றது.

உணர்வின் “சில மாறுபட்ட இயக்கங்களை” அறிந்து கொள்வது நல்லது

உணர்வின் “சில மாறுபட்ட இயக்கங்களை” அறிந்து கொள்வது நல்லது

 

உயிரின் இயக்கத்தை அறிந்து அதை எப்படி மதிக்க வேண்டும்…? என்பதற்காகத்தான் குருநாதர் எம்மை காடு மேடலாம் அலையச் செய்து எனக்குப் பல தொல்லைகளைக் கொடுத்து அறியும் படி செய்தார்.

அதே சமயத்தில் நகருக்குள் வந்த பின் இங்கே எத்தனையோ வேதனை வருகிறது.

ஒருவனுக்கு உடல் எல்லாம் ரணமாக இருக்கின்றது ஆனால் உணவுக்காக வேண்டி “ஐயா பசிக்கிறது…” என்று உடலை வளர்க்கப் பிச்சை கேட்கின்றான்
1.ஆனால் வேதனை தெரிவதில்லை.
2.வசதி உள்ளவர்கள் நமக்கு உடலில் வேதனையானால் நம்மால் ஒரு இஞ்ச் கூட நம்மால் நகர முடியவில்லை.

ஆனால் வேதனையானாலும் கூட பசிக்குச் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வத்தில் வேதனையை தாங்கிக் கொண்டு அவன் எப்படிப் பிச்சை எடுக்கச் செல்கிறான்…?

1.ஆகாரத்தின் மீது எண்ணம் இருக்கப்படும் பொழுது வேதனை குறைகின்றது.
2.ஆனால் ஆகாரம் கிடைத்த பின்பு வேதனையை ஜாஸ்தியாக உணர்கின்றான்.

முதலில் உணவு வேண்டும் என்பதற்காகத் தேடிச் செல்கின்றான். அதை தேடிச் சென்று “உணவைப் பெறும் வரையிலும் ஆர்வம் இருக்கின்றது..” உட்கொண்டு பசி தீர்ந்தபின் எவ்வளவு வேதனைப்படுகின்றான்…?

உடலை வளர்க்க விரும்புகின்றான். அந்த உணர்வுகள் உடலுக்குள் சென்றபின் இந்த உணர்ச்சிகள் எப்படி அறியச் செய்கின்றது…?

இதை அறியும் உணர்வுகள் உனக்குள் நுகர்ந்து கொண்ட பின் என்ன ஆகிறது…? என்பதையும் காட்டுகின்றார். இதெல்லாம் எதற்காக அனுபவம் கொடுக்கிறார்…?

என்னிடம் பழகி இருக்கிறீர்கள்.
1.உங்களுக்குக் கோபம் எப்படி வருகின்றது…? வெறுப்பு எப்படி வருகின்றது…?
2.வெறுப்படைந்த பின் வீட்டில் உள்ளவர்கள் மீது வெறுப்படையச் செய்வது எது…?
3.அதே சமயத்தில் அதை எல்லாம் எப்படி நீக்குவது…? என்பதற்குத் தான் இதை எல்லாம் உபதேசிப்பது.

இத்தனையும் நான் கஷ்டப்பட்டுத் தான் தெரிந்து கொண்டு வந்தேன்.

உயர்ந்த சக்தியை உங்களிடம் சொல்லி அதை ஏங்கிப் பெறும்படி செய்து வளர்த்து அந்தத் தீமையை நீக்கும் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்வது.

நான் வந்து உங்களுக்கு அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என்று சொல்ல வரவில்லை.

திட்டியவனைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது அந்த உணர்வு பதிவாகின்றது. அது எப்படி மீண்டும் மீண்டும் இயக்குகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் “எல்லாமே சந்தர்ப்பம்…” என்பதை நீங்கள் உணர முடியும்.

புழுவிலிருந்து மனிதனாக வளர்ச்சி அடைந்து வந்ததும் சந்தர்ப்பம்தான். தன்னைக் காட்டிலும் வலுவான உணர்வைச் சுவாசித்த பின்
1.அது அணுக்களாக மாறி உடலில் மாற்றமாகி உணர்வுகள் மாறி குணங்கள் மாறி செயல்கள் மாறி
2.இது எல்லாம் எப்படி மாறி வந்தது…? என்பதைத் தெரிந்து மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எடுத்து வளர்த்துக் கொண்டால்
3.நாம் போகும் வழியினைச் சீராக்கி அதன் வழி வளர்ச்சி பெற ஏதுவாகும்.

உங்களிடம் “ரிக்கார்ட்” செய்கின்றேன்

உங்களிடம் “ரிக்கார்ட்” செய்கின்றேன்

 

கம்ப்யூட்டரில் அழுத்தத்தின் தன்மை கொண்டு பதிவு செய்கின்றார்கள். பதிவான பின் அதற்குண்டான வேலைகளை எல்லாம் அது செய்கின்றது.

உதாரணமாக கோபமான உணர்வுகளை நீங்கள் பதிவு செய்து கொண்டீர்கள் என்றால்
1.அவனை நினைக்கும் போதெல்லாம் கோப உணர்ச்சிகள் தான் வருகின்றது.
2.யாரால் அது உருவானதோ அவனை எப்படி அடிப்பது…? எப்படி அவனை மிரட்டுவது…? எப்படித் துரத்துவது..? என்ற உணர்வெல்லாம் வரும்.

இல்லை என்றால் அவன் கோப்ப்பட்டு நமக்கு ஏதாவது அடுத்து தொல்லை கொடுப்பானா…? அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…? என்று சிந்தனைகள் வரும்.

இவை எல்லாம்…
1.அவனைப் பார்த்துப் பதிவான அந்த ரெக்கார்ட் நல்ல குணத்துடன் இணையும் பொழுது
2.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையில் பல சிந்தனைகள் பல செயல்கள் உணர்வுகள்
3.”உணர்ச்சிகளாக ஊட்டி…” அதன் வழி தான் நாம் செயல்படுகின்றோம்.

அதே போன்று தான் உபதேசங்கள் வாயிலாக உங்களிடம் “ரிக்கார்ட்” செய்கின்றேன். கம்ப்யூட்டரில் பதிவு செய்வது போன்று “வரிசைப்படுத்தி… ஒழுங்குப்படுத்தி…” அந்த மூலக்கூறுகளை உங்களிடம் ரிக்கார்ட் செய்கின்றேன்.

நமது குருநாதர் காட்டிய அந்த அருள் வழியை நீங்கள் எடுக்கும் போது… ஈஸ்வரா என்று உயிரை எண்ணி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவருடைய அருளால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கி இருக்க வேண்டும்.

அதற்கு அடுத்து…
1.அருள் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப ரிக்கார்ட் செய்கின்றோம்.
2.அதற்குத் தக்கவாறு உங்களுக்குள் ஞானங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

இதை எடுத்துப் பழகிக் கொண்டால் ஒரு தொழிலுக்குச் சென்றாலும் “அதை எப்படி வழி நடத்த வேண்டும்…?” என்ற நல்ல சிந்தனை வரும். மற்றவரிடம் யோசனை கேட்டால் கலக்கி விட்டு விடுவார்கள். அவர்கள் உணர்வுக்குத் தக்கவாறு சொல்வார்கள்.

நீங்களே சிந்தித்து… “இதை இப்படித்தான் செயல்பட முடியும்” என்று எண்ணம் வரும். ஆகவே அருள் ஞானச் சக்கரத்தைப் பார்த்துத் தியானிக்கும் போது இத்தகைய சிந்தனை… ஞானமாக வரும்.

இதே போன்று கணவன் மனைவியும் ஒன்று சேர்ந்து தியானித்துவிட்டு
1.உன் சக்தி எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்… என் செயல் நல்லதாக இருக்க வேண்டும்.
2.இரு மனமும் ஒன்றாக வேண்டும் இரு உயிரும் ஒன்ற வேண்டும்
3.எங்களுடைய செயல்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணி விட்டுக் காரியத்திற்குச் செல்லுங்கள்.

இந்த உணர்வுகள் அவ்வப்போது “எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்” என்று எதிர் நிலைகள் வரும் பொழுது… உங்களைச் சரியான பாதையில் நெறிப்படுத்திக் கொண்டே செல்லும். எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்…!

இந்த உணர்வின் தன்மை வலுப்பெறும் போது
1.தவறான நிலைகள் வந்தால் உடனே உணர்த்தி அந்த இடத்திற்கு உங்களை அது செல்லவிடாது தடுக்கும்.
2.நல்ல இடங்களுக்கு உங்களை அழைத்துச் சென்று சீராக வாழ வைக்கும்.
3.இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கும் அன்பர்கள் இதையெல்லாம் கடைப்பிடித்து
4.இந்த அனுபவங்களைப் பெற்று மற்றவர்களுக்கு வழிகாட்டியாக வரவேண்டும்.

உணர்வின் இயக்கங்களைப் பற்றி இன்றைய விஞ்ஞானம் நிரூபிக்கின்றது…! ஆனால் மெய் ஞானிகள் கூறிய வழிப்படி நம்மை எது இயக்குகின்றது…? என்பதை
1.நாம் நுகர்ந்தது தான் நம்மை இயக்குகின்றது… அதற்குத் தான் நாம் அடிமையாகின்றோம்.
2.நல்ல குணத்தின் தரங்களைக் குறைக்கின்றது என்பதை உணர வேண்டும்.

ஆகவே அருள் உணர்வை நாம் பெருக்க வேண்டும். தீமைகளை மாற்றி அமைக்க வேண்டும். அதன் வழி அருள் வாழ்க்கை வாழ்வோம் அருளானந்தம் பெறுவோம்.

“மெய் ஞானத்தின் மூலங்களை எல்லாம்” படிக்காதவன் வெளிப்படுத்துகின்றேன்

“மெய் ஞானத்தின் மூலங்களை எல்லாம்” படிக்காதவன் வெளிப்படுத்துகின்றேன்

 

நமது காவியங்களில் பேருண்மைகளைத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள். அதனின் மூலக்கூறுகளை நாம் சற்று சிந்தித்துப் பார்த்து இருக்கின்றோமா…?

1.ஆனால் நான் படிக்காதவன் தான்…! அந்தக் காவியங்களையும் நான் படிக்கவில்லை.
2.இருந்தாலும் அதனின் விளக்கங்களை உங்களிடம் சொல்கிறேன்.
3.காரணம் குருநாதர் காட்டிய அருள் வழியில் என்னால் அதை அறிய முடிந்தது.
4.அந்த இயற்கையின் உண்மைகள் மறைந்து விடவில்லை.

இன்றைய விஞ்ஞான அறிவு… பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கே பூமிக்குள் எந்தெந்த நிலைகள் பதிவாகியுள்ளதோ “எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்” என்ற முறைப்படி அதனின் உணர்வின் அதிர்வுகளை எடுக்கின்றான்.

அந்த அதிர்வுகளை வைத்து அந்தக் காலத்தில் வாழ்ந்த உயிரினங்களோ மனிதர்களோ அவருடைய எண்ண அலைகளை வைத்து “உருவத்தையும் காட்டுகின்றான்…”

இதைப் போன்று தான்
1.மெய் ஞானிகள் கண்ட உண்மை உணர்வை “மெய் ஞானத்தைக் கண்ட நமது குருநாதர் எனக்குள் பதிவு செய்து…”
2.அதை எப்படி அறிய வேண்டும்…? என்று உணர்வுகளை ஊட்டினார்.

அதன் வழியில் நான் செல்லப்படும் பொழுது அதை எல்லாம் காண முடிந்தது.
1.அந்த உண்மையின் சக்திகளைப் பெறும் தகுதியைப் பெற்றேன்.
2.நீங்களும் அந்தத் தகுதியைப் பெற வேண்டும் என்பதற்கே இதைப் பதிவு செய்கின்றேன்.

ஒரு கம்ப்யூட்டரில் பதிவானால்தான் அது இயக்கும். ரேடியோ டி.வி. ஸ்டேசன்கள் எங்கேயோ இருந்து கொண்டு ஒலி/ஒளிபரப்பு செய்கின்றார்கள். அந்த அலைவரிசையில் இங்கே நாம் திருப்பி வைத்தால் தான் காற்றிலிருந்து வருவதை எடுக்க முடியும்.

இதே போன்றுதான் பகைமை உணர்வு வெறுப்பு கொண்ட உணர்வு கோப உணர்வு இப்படி எண்ணிலடங்காத உணர்வுகள் உங்கள் ஒவ்வொருவர் உடலிலும் பதிவாகியுள்ளது.

அதை நினைக்கும் போதெல்லாம் அதற்குத் தக்கவாறு அதனுடன் தொடர்பு கொண்டு… கவர்ந்து சுவாசிக்கப்பட்டு இயக்குகின்றது.

ஆனால் குரு கொடுத்த தீமைகளை அகற்றிடும் அருள் ஞான சக்திகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.
1.எப்பொழுதெல்லாம் இதை எண்ணுகின்றீர்களோ
2.அந்த அலைவரிசையைத் திருப்பி வைத்தால் உங்கள் வாழ்க்கையில் வரும் துன்பங்களை எல்லாம் மாற்றி விட்டு
3.வாழ்க்கையைச் சீராக்க நிச்சயம் இது உதவும்.
4.”உதவ வேண்டும் என்பதற்குத்தான்” உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.

ஞானிகள் உணர்வை மிக வீரியமான வித்தாக உங்களுக்குள் உருவாக்குகின்றோம்

ஞானிகள் உணர்வை மிக வீரியமான வித்தாக உங்களுக்குள் உருவாக்குகின்றோம்

 

உதாரணமாக… பால் மாடு அது பால் குறையாகக் கறப்பினும் விஞ்ஞான அறிவு கொண்டு மற்ற மாடுகளின் அணு செல்களை எடுத்து…
1.பாலை அதிகமாக உற்பத்தி செய்யும் அந்த ஜீன்களை அதிகமாக அதனுடன் சேர்த்து அந்தக் கருவுடன் இணைக்கப்படும் பொழுது…
2.ஒரு லிட்டர் கறப்பதை 20 லிட்டர் கறக்கும் சக்தியாக அந்த அணுக்களை உருவாக்கி விடுகின்றார்கள்.

இதைப் போன்று தான் நோயின் தன்மையை மாற்றுவதற்காக இதைப் போல சில அணுக்களை உருவாக்கி நோயை மாற்றிடும் சக்தியையும் விஞ்ஞான அறிவு கொண்டு செயல்படுத்துகின்றார்கள்.

இந்த மனித வாழ்க்கையில் ஒரு நோயாளியைப் பற்றி நாம் கேட்டறிந்தால் அதை உயிர் ஓ என்று ஜீவ அணுவாக மாற்றும் திறன் பெறுகின்றது. அணுவாக மாறும் இந்திரீயமாக கருவாக உருவாகின்றது.

அதே சமயத்தில் அது அணுவாக உருவாவதற்கு முன் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நாம் இதனுடன் இணைத்து விட்டால் அந்த நோயை உருவாக்கும் தன்மை குறைத்துவிடும்.
1.ஆக நோயை அடக்கிடும் அருள் ஞானிகள் உணர்வை உடலில் விளைவிக்கும் பொழுது
2.நமக்குள் நோயின் தன்மை உருவாகாது அறியும் தன்மை வரும்.
3.நம் பார்வையில் அடுத்தவருக்கு நோய் நீங்க வேண்டும் என்று சொன்னால்
4.கேட்டறிந்த உணர்வுகள் அவருக்குள்ளும் சென்று “நோயை நீக்கிடும் உணர்வின் அணுக்கள்…” அங்கே உருவாகின்றது.
5.திரும்பத் திரும்ப அவர்கள் அதை எண்ணினால் நோயை நீக்கும் அருள் சக்தி அவர்கள் பெறுகின்றார்கள்.

இந்த உணர்வை நாமும் அடிக்கடி எண்ணி வளர்த்துக் கொண்டால் நோய் வராது தடுப்பதும் அருள் ஞானத்தின் உணர்வைப் பெருக்கவும் இந்த வாழ்க்கையில் வரும் துன்பங்களை மாற்றி அமைக்கும் திறனும் நாம் பெறுகின்றோம்.

ஒவ்வொரு நிமிடமும் சிந்தித்துச் செயல்படும் சக்தியும் நாம் பெறுகின்றோம். இந்த வாழ்க்கையில் சிரமமில்லாத வாழவும் சிரமங்கள் வரும் பொழுது சிந்திக்கும் ஆற்றலும் நமக்குள் அது உருவாகின்றது.

ஆகவே கோபப்படுவார்களையோ வெறுப்படைவோரையோ வெறுப்புடன் பார்ப்பவர்களையோ பார்த்தால் கேட்டறிந்தால் அந்த உணர்வு நமக்குள் இந்திரீகமாக மாறிவிடுகிறது.

ஆனால் அடுத்த கணம் அதனுடன் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இணைத்து விட்டால் அதனுடைய வீரியத்தைத் தணித்து நமக்குகந்த நிலையில் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.

இது ஒரு பழக்கத்திற்கு நாம் வரவேண்டும்.
1.அதற்குத் தான் மகரிஷிகள் உணர்வை இந்த உபதேசத்தின் வாயிலாக அடிக்கடி பதிவு செய்கின்றோம்… பதிவாக்கிக் கொள்ளுங்கள்.
2.தீமைகள் வராது பாதுகாத்துக் கொள்ள இது உதவும்.

விஷத்தை ஒடுக்கும் பச்சிலைகள்

விஷத்தை ஒடுக்கும் பச்சிலைகள்

 

குருநாதர் காட்டுக்குள் என்னை அழைத்துச் சென்றார். கொசுக்கள் கடிக்கும் பொழுது அதிலிருந்து மீட்டிக் கொள்வதற்காக ஒரு பச்சிலையை என் மேல் பூசினார். அது எனக்குத் தெரியாது.
1.பூசியபின் அந்த மணத்தைக் கண்டால் கொசுக்கள் மயங்கி விடுகின்றது… அல்லது மடிந்து விடுகின்றது.
2.இதனின் வேகத் துடிப்பு அதன் மேல் மோதப்படும் பொழுது அது மடிந்து விடுகின்றது.
3.இந்த மணத்தைக் கண்டால் அஞ்சி ஓடுகிறது. இந்த மூன்று நிலையில் அதன் நகர்ந்து செல்கின்றது.

அதே போல விஷப் பூச்சிகளும் எத்தனையோ வகைகளில் அங்கே உண்டு. உடல் மீது ஊர்ந்து சென்றால் சூடு போட்டது போன்று ஆகிவிடும்.

அத்தகைய விஷத்தை ஒடுக்கும் பச்சிலைகளை உடலில் பூசி அக்காலத்தில் வாழ்ந்த அகஸ்தியனுடைய தாய் தந்தைகள் தங்களை எப்படித் தற்காத்துக் கொண்டார்கள்…? என்பதை என்னிடம் உணர்த்துகின்றார்.

விஷத்தினை ஒடுக்கும் பச்சிலைகளை உன் மீது பூசுகின்றேன். இதை நுகரப்படும் பொழுது
1.மனித உடலை உருவாக்கிய அணுக்கள் விஷத்தின் தன்மை பெருகப்படும் பொழுது
2.விஷம் அதிகமாகி உனக்குள் இது நோயாகி உன்னை மடியச் செய்யுமே தவிர உன்னைக் காக்காது.
3.கொசுக்களிடமிருந்து பூச்சிகளிடமிருந்து உன்னைக் காக்க இது உதவும்.

அதே சமயத்தில் நீயும் உன் மனைவியும் இதைப் பூசிக்கொண்டு கருத்தன்மை அடைந்து விட்டால் இந்த உணர்வின் தன்மை நுகரப்படும் பொழுது அணுக்களில் சிறுகச் சிறுக இணைந்து “விஷத்தை ஒடுக்கும் அணுவாக…” வளர்ச்சி பெறுகின்றது.

நீ பூசிக் கொண்டால் சிறிது காலத்திற்கு அதைப் பழக்கமாகக் கொண்டு வரப்படும் பொழுது
1.உன் உடலில் உள்ள அணுக்கள் விஷத்தன்மை வாய்ந்ததாக மாறி நல்ல அணுக்களைக் கொன்றிடும் நிலை வந்துவிடும்…
2.துடிப்பின் இயக்கத்தை மாற்றிவிடும் என்று தெளிவாக்குகின்றார்.

பல பச்சிலைகளை நுகர்ந்து பார்க்கப்படும் பொழுது சில சில எதிர் நிலையான உணர்வுகளை நுகரும்படிச் செய்கின்றார். அப்பொழுது மயக்கமே வருகின்றது.

இத்தகைய மணங்களை நுகரப்படும் பொழுது பூச்சிகளும் மயங்கி விழுகின்றது. அனுபவரீதியாக இயற்கையினுடைய நிலைகளைத் தெரிந்து கொள்வதற்காக எமக்கு இதைக் காட்டுகின்றார் குருநாதர்.

அருள் ஞானச் சக்கரத்திற்கு முன் நின்று ஒவ்வொருவரும் சொல்ல வேண்டியது

அருள் ஞானச் சக்கரத்திற்கு முன் நின்று ஒவ்வொருவரும் சொல்ல வேண்டியது

 

யாம் கொடுத்த அருள் ஞானச் சக்கரத்திற்கு முன்பு நின்று அதை உற்றுப் பார்த்து…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்…
2.எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
3.பகைமைகள் வராது… இந்த உணர்வு அனைவரையும் அருள் வழியில் இயக்கும்
4.உயர்ந்த பண்புகள் வளரும்… அருள் உணர்வுகள் பெருகும்… இருள் புகாது தடைப்படுத்தும்

அந்தச் சக்திகள் நமக்கு நிச்சயம் கிடைக்கும். ஆகவே அந்த அருள் வழி நாம் செயல்படுவோம்.

சக்கரத்திற்கு முன் அமர்ந்து தியானித்தால்
1.அபூர்வமான நிலைகளில் உங்களை அகண்ட அண்டத்திற்கே அழைத்துச் செல்லும்.
2.நம் பிரபஞ்சம் மட்டுமல்ல… 2000 சூரியக் குடும்பத்தையும் வட்டமிடும்.
3.2000 சூரிய குடும்பம் எடுத்த உணர்வுடன் அங்கேயே உங்களை அழைத்துச் செல்கின்றேன்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழி அது…!

ஏனென்றால் அவர் எனக்கு எப்படி இதையெல்லாம் காட்டினாரோ அதே வழிப்படித் தான் உங்கள் உயிரிலே சேர்க்கப்பட்டது. அந்த உயர்ந்த உணர்வின் தன்மை பெற வேண்டும் என்று தான் இதை உபதேசிக்கின்றேன்.

ஒவ்வொருவரும் இதைக் கடைப்பிடியுங்கள்.

குடும்பத்தில் நண்பர்களோ அல்லது யாராக இருந்தாலும் சரி “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணிவிட்டு… அவர்கள் நலம் பெற வேண்டும் என்று சக்கரத்திற்கு முன் சொல்லுங்கள்.

அதிலிருந்து ஒளிகள் வரும்… இந்த உணர்வுகள் அவர்களுக்குள் படரும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று சொல்லுங்கள்.

1.இத்தகைய நல் உணர்வுகளாக மாற்றி அமைக்கப்படும் போது
2.நல் சக்திகளாக அவர்களுக்கும் கிடைக்கும்… உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

ஆனால் எப்படித்தான் இருந்தாலும் உடலை விட்டு நாம் செல்லத்தான் வேண்டும். அதற்குள் அருள் ஒளியை அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் நிலையாக அவருடைய இருளைப் போக்க வேண்டும் என்று எண்ணினால்… நமக்குள் வரும் இருளைப் போக்கிடும் அந்த வலுவை நாம் பெறுகின்றோம்.

ஆகவே யார் உடல் நலக் குறைவானாலும் சக்கரத்திற்கு முன் நின்று ஈஸ்வரா என்று உயிரை வேண்டித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று சொல்லிப் பழகுங்கள்.

இது போன்று தியானித்து விட்டு அவர்களுக்கு ஏதாவது ஒரு பொருளைத் தொட்டுக் கொடுங்கள்… நன்றாகிவிடும் என்று சொல்லுங்கள்.

குடும்பத்திற்கோ தொழிலுக்கோ விவசாயத்திற்கோ நண்பர்களுக்கோ யாரையெல்லாம் நாம் பார்க்கின்றோமோ அவர்களுக்கெல்லாம் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று அவர்கள் குடும்பமெல்லாம் நலம் பெற வேண்டும் என்று
1.சக்கரத்துக்கு முன்னாடி அமர்ந்து சொல்லுங்கள்… அதிலிருந்து ஒளிகள் வந்து கொண்டே இருக்கும்
2.காலை துருவ தியானத்தில் அந்தச் சக்கரம் உங்களுக்குப் பயன்படும்.
3.சக்கரத்தை எண்ணித் துருவ தியானத்தில் அமர்ந்தீர்கள் என்றால் அற்புத நிகழ்ச்சிகள் நடக்கும்.
4.துருவ நட்சத்திரத்திலிருந்து ஒளிக் கற்றைகள் ஈர்க்கப்பட்டு அதை எல்லாம் நீங்கள் காணலாம்.

ஆயுள் மெம்பராக நாம் அனைவரும் அங்கே தான் இணைந்திருக்கின்றோம். ஏனென்றால் நான் ஒருவன் மட்டும் ஒன்றும் செய்ய முடியாது. ஒரு நெல் பசிக்கு உதவாது… அதைப் பல நெல்களாகக் குவித்தால் அனைவரும் பசியாற முடியும்.

நாமெல்லாம் அந்த அருள் ஒளி பெறும் பொழுது அது பேரொளியாக மாறும். இருளை அகற்றும் வலிமை பெறும் உலகையே காத்திடும் நிலை வரும்.
1.இந்த உணர்வின் சுழற்சி வரப்படும் பொழுது விஞ்ஞான அறிவால் வரும் சூறாவளியோ மற்ற விஷத்தன்மைகளோ
2.நாம் வாழும் பக்கங்களில் வராதபடி நிச்சயம் தடுக்க முடியும்.

விஷக்கிருமிகளால் கொடிய நோய் வந்தாலும் கூட கூட்டுத் தியானங்கள் எடுத்து துருவ நட்சத்திரத்தின் சக்தி ஊர் முழுவதும் படர வேண்டும்… ஊர் மக்கள் அனைவரது உடல்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று சக்கரத்திற்கு முன் சொல்லுங்கள்.

வெளியிலே சொல்வதற்குக் கூச்சமாக இருந்தாலும் சக்கரத்திற்கு முன் நீங்கள் நின்று தாராளமாகச் சொல்ல முடியும்.
1.வீடு நன்றாக இருக்க வேண்டும் தெரு நன்றாக இருக்க வேண்டும் ஊர் நன்றாக இருக்க வேண்டும்
2.அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் சக்கரத்திற்கு முன்னாடி சொல்லுங்கள்.
3.அந்த உணர்வுகள் அலை அலையாகப் படரும். உடலுக்குள் இருளை மாய்க்கும்… பேரொளியாக உருவாக்கும்
3.மகிழ்ந்து வாழும் சக்திகள் பரவும்.

அதற்குத்தான் சக்கரத்தைக் கொடுத்தது.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று இந்தத் தென்னாட்டில் தோன்றிய அகஸ்தியன் தான் ஒளியாகித் துருவ நட்சத்திரமானான்.

இந்த உணர்வை எவர் பெற்றாலும் இருளை அகற்றி ஒளித்தன்மை பெறுகின்றது. தென்னாட்டில் தோன்றிய நாமும் அவன் வழியைப் பின்பற்றி நம் உணர்வுகள் உலக இருளை ஒளியாக மாற்றிடும் அறிவின் தன்மையும் “மக்களைக் காத்திடும் நிலையையும் நாம் செயல்படுத்த முடியும்…” ஏனென்றால் உலக உணர்வுகள் அனைத்து நமக்குள் உண்டு.

உயிருடன் ஒன்றி… உடலை விட்டு அகன்றால் பேரொளியாக மாறி
1.எல்லோரையும் காக்கும் உணர்வாக முழு முதல் கடவுளாக ஆவோம்.
2.நாம் அனைவரும் ஒன்றாக இணைந்தால் தான் அது செயலாகும்.

எத்தனையோ அணுக்களின் மலம் தான் நம் உடலாகின்றது. அதே போன்று அருள் ஒளி என்ற உணர்வின் அணுக்களாக விளைந்தால்… உயிருடன் ஒன்றி ஒளிச் சரீரம் பெற முடியும். அது தான் முழுமை.

நாம் அனைவரும் அதைப் பெறுவோம். அருள் ஞானத்தைப் பெறுவோம். நாம் எதைக் கொண்டு செல்லப் போகின்றோம்…? நாம் எதையும் கொண்டு போவதில்லை… இந்த உடலையும் நாம் கொண்டு செல்ல முடியாது.

அழகான வீட்டைக் கட்டினாலும் அழகான ஆடைகளை அணிந்தாலும் உடலில் நோயாகி விட்டால் உடல் சுருங்குகின்றது… அதை அனுபவிக்க முடிவதில்லை.

ஆகவே… “நம்முடைய எல்லை பிறவி இல்லா நிலை அடைவது தான்…” என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

இன்று நல்ல நினைவு இருக்கும் போதே அருள் உணர்வை வளர்க்கும் பருவத்திற்கு நாம் வர வேண்டும்

இன்று நல்ல நினைவு இருக்கும் போதே அருள் உணர்வை வளர்க்கும் பருவத்திற்கு நாம் வர வேண்டும்

 

இந்த மனித உடலில் நாம் வாழும் இந்தச் சிறிது காலத்திற்குள்ளேயே நாம் ஒளியான நிலைகள் பெற வேண்டும். ஏனென்றால் இந்த உடலில் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது தெரிகின்றது.

அதற்குள் எத்தனையோ நிலைகளில் நாம் ஆசை வைக்கிறோம். எல்லாவற்றையும் செலவழிக்கின்றோம்… ஆடம்பரத்திற்கும் செலவழிக்கின்றோம்.
1.ஆனால் எதுவும் நிற்கின்றதா…?
2.செல்வத்தைச் சம்பாரித்து அழகாக வீட்டைக் கட்டி உடலையும் அழகு படுத்தினாலும்
3.நோய் என்ற நிலை வந்து விட்டால் அது எல்லாவற்றையும் தூக்கி எறி…! என்று சொல்கின்றோம்.
4.அந்த நேரத்தில் நல்லதை எல்லாம் வேண்டாம் என்று சொல்கிறோம் அல்லவா.

இன்று நன்றாக மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். யாராவது ஒரு சொல் தவறாகக் கேவலமாக சொல்லிவிட்டால் உடனே மனது சோர்வடைந்து விடுகின்றது.

என்னைக் கேவலமாகப் பேசினார்கள்… கேவலமாகப் பேசினார்கள்…! என்று வேதனை வருகின்றது. இந்த உணர்வை எடுத்துக் கொண்ட பின் அவர் மீது வெறுப்பும்… அவர் என்னென்ன சொன்னார்களோ அதை எல்லாம் எடுத்து இந்த உடலில் விளைய வைக்கத் தொடங்குகின்றோம்.

அதாவது… கீதையில் நீ எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய் என்பது போல் அவர்கள் உணர்வு இங்கே உருவாகிறது.

1.அவர்கள் சொன்னால் சொல்லிவிட்டுப் போகின்றார்கள்
2.மகரிஷிகள் அருள் சக்தியால் அவர்களுக்கு நல்ல புத்தி வரவேண்டும் என்று சொன்னால் அந்த உணர்வு நம்மை இயக்காது.

இப்படிப்பட்ட உணர்வை எடுத்து நாம் அதைத் தடுத்துப் பழக வேண்டும். அதனால்தான் ஆறாவது அறிவைச் சேனாதிபதி என்று சொல்கின்றோம்.

அதைத் தடுக்கக்கூடிய வல்லமை எப்படிப் பெற வேண்டும்…?

மகரிஷிகளின் அருள் சக்திகளை… அந்த அருள் ஞானத்தை நமக்குள் பெருக்கப்படும் பொழுது அது பாதுகாப்பாக வரும்.
1.அந்த மகரிஷியின் உணர்வுகளைப் புருவ மத்தியில் நம் உயிருடன் இணைக்கப் பழக வேண்டும்.
2.அங்கே உருவாக்கும் திறனாக அது அமையும்… அது தான் பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்.
3.அருள் ஒளியின் உணர்வை அணுக்களாக நமக்குள் பெருக்கினால் அது நம்மைக் காக்கின்றது.

வேதனையான உணர்வை நுகர்ந்து விட்டாலோ தீமையின் விளைவாகவே நம்மை மாற்றிவிடும்.

இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட்டு அருள் உணர்வை ஆழமாகப் பதிவாக்கிப் பெருக்கிக் கொண்டு பெரிய தத்துவ ஞானியாக வளர வேண்டும். எல்லோரையும் காத்திடும் சக்திகளாக நாம் வரவேண்டும்.

பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்குள் இந்த உணர்வைப் பதிவு செய்ய வேண்டும்.

ஏனென்றால் நான் படிக்காதவன் தான் இத்தனையும் பேசுகின்றேன். படித்துக் கொண்டிருப்பவர்கள் ஆழமாகப் பதிவாக்கி இந்த ஆற்றலை நீங்கள் பெறப் பழகிக் கொள்ளுங்கள்.

எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள் உங்கள் பார்வை இருளை அகற்றும் உயர்ந்த சக்தியாக வளரட்டும்.
1.அருள் ஞானத்தைப் பெறும் கருவின் தன்மை உருவாக்க வேண்டும்.
2.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றும் திறன் நீங்கள் பெற வேண்டும்.

நாம் தெரிய வேண்டியதும்… தெரிந்து கொண்ட நிலையில் “நடந்து கொள்ள வேண்டிய முறையும்…”

நாம் தெரிய வேண்டியதும்… தெரிந்து கொண்ட நிலையில் “நடந்து கொள்ள வேண்டிய முறையும்…”

 

நம் குருநாதர் பித்தரைப் போன்று இருந்து தான் எல்லா உலகத்தையும் அறிந்தார். அதே போல அவர் காட்டிய அருள் வழியில் “ஒன்றும் தெரியாதவனைப் போன்று…” எல்லாவற்றையும் நான் தெரிந்து கொள்கின்றேன்.

ஆனால் உங்கள் உணர்வைத் தெரிந்து அதற்குத் தக்க
1.இங்கே வந்தோருக்கு குரு காட்டிய அருள் வழியினை உபதேசிக்கும் பொழுது
2.நீங்கள் எந்த நிலையில் வந்தாலும் உங்களுக்கு நல்ல சிந்தனையைத் தூண்டி
3.தன் தன் தவறுகளை உணர்ந்து… தீமைகளை நீக்கும் அருள் உணர்வுகளைப் பெறச் செய்கின்றேன்.

குருநாதர் பித்தரைப் போல் இருந்துதான் எனக்கு வழி காட்டினார். ஆக நானும் தெரியாதவனைப் போல் தான் இருக்கின்றேன்… தெரிந்து கொண்டவனாக நான் நடப்பதில்லை.

ஆனால் நான் தெரிந்து கொண்ட அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் பெற வேண்டும். பொருளறியும் சக்தி பெற வேண்டும்… அருள் உணர்வுகள் நீங்கள் பெற வேண்டும்…! என்ற உணர்வைத் தான் எடுத்துக் கொள்கின்றேன்.

ஆனால் நீங்கள் சொல்வதை எல்லாம் நான் உம்… கொடுத்துக் கேட்டால்… வீட்டில் இப்படி இருக்கின்றது தொழில் இப்படி இருக்கின்றது பையன் இப்படி இருக்கின்றான் என்ற குறைகளை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தால் என்ன ஆகும்…?

1.ஆக நான் அதைத் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை.
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று எனக்குள் நான் மாற்றிக் கொள்கின்றேன்.
3.அதன் வழி உங்களுக்குள் அந்த அருள் சக்திகளைப் பாய்ச்சுகிறேன்.
4.அதே போல் நீங்கள் ஒவ்வொருவரும் தீமை புகாது தடுக்கும் நிலையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

உலகில் விஷத்தன்மைகள் உருவாகிக் கொண்டுள்ளது. எங்கே பார்த்தாலும் இனம் மதம் என்ற நிலையில் வெறி கொண்டு தாக்கிடும் நிலையாக தன் இனத்தையே அழித்திடும் நிலையாகச் செயல்படுகின்றார்கள்.

தன் உயிர் போனாலும் பரவாயில்லை என்று அப்படிப்பட்ட வீரிய உணர்வு தான் வருகின்றதே தவிர இருளை நீக்கி ஒளியான நிலை பெற வேண்டும் என்ற எண்ணம் எவருக்கும் வருவதில்லை.

அசுர உணர்வுகள் பாயும் போது நல்ல உணர்வுகள் செயல்பட முடியாது போகின்றது. இதைப் போன்ற நிலைகளை நாம் மாற்ற வேண்டும்.

1.இந்தத் தியானத்தைத் கடைப்பிடிக்கும் ஒவ்வொருவரும் அருள் உணர்வைப் பெற்று அதையே வளர்த்து
2.மற்றவர்களுக்கும் அருள் ஞானத்தைப் போதியுங்கள்… அதை எடுத்துச் சொல்லப் பழகிக் கொள்ளுங்கள்.

கேட்டுணர்ந்தோர் எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று ஏங்கினால் உங்களுக்குள் இந்த வளர்ச்சி வருகின்றது. அவரும் அதைப் பெருக்கத் தொடங்கினால் அவரும் நல் வழி பெறுகின்றார். அவருக்கும் வாழ்வதற்கு நல்ல வழி கிடைக்கின்றது.

இதைப் போன்று தொடர்ந்து நம் வாழ்க்கையையே தியானமாக்குதல் வேண்டும். தீமைகள் புகாது தடுத்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.