துருவ நட்சத்திரத்தின் சக்தியை அபரிதமாக எடுக்கும் போது கொட்டாவி வருவது ஏன்…?

துருவ நட்சத்திரத்தின் சக்தியை அபரிதமாக எடுக்கும் போது கொட்டாவி வருவது ஏன்…?

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து நமக்குள் வலு சேர்த்துத் தீமைகளை மாற்றி நமது ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டே வருகின்றோம்.

ஈஸ்வரா என்று உயிரான ஈசனை எண்ணிப் புருவ மத்தியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை அங்கே நிலை நிறுத்துகின்றோம்.
1.அப்பொழுது என்ன நடக்கிறது…?
2.பிற உணர்வுகள் உள்ளே புகாது அங்கே தடுத்து நிறுத்தப்படுகின்றது.

அங்கே நிறுத்திய பின்பு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று உயர்ந்த உணர்வுகளை ரத்தம் முழுவதும் பரவச் செய்கின்றோம்.

அப்போது உடலில் உள்ள மற்ற அணுக்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்கிற பொழுது
1.அது எல்லாம் வருத்தத்தில் இருக்கும்.
2.துருவ நட்சத்திரத்தின் வீரிய சக்தி உள்ளே சென்ற பின் சிலருக்குக் கொட்டாவியாக வெளியே வரும்…
3.அதைக் கரைத்து ஆவியாக மாற்றும்.

தியானமிருக்கும் பொழுது கொட்டாவியாக வருகின்றது… எங்களால் உட்கார முடியவில்லை நிற்க முடியவில்லை என்று சொல்வீர்கள்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்த்த பின்பு உடலிலிருக்கும் அந்த விஷமான உணர்வுகள் காலியாகி வெளியேறும். அய்யய்யோ… தியானத்தில் எனக்குக் கொட்டாவி வருகின்றது என்று நீங்கள் சொல்வீர்கள்.

காரணம் அது கரைத்து வெளியே கொண்டு செல்கின்றது. துருவ நட்சத்திரத்தின் சக்தி இரத்தத்தில் கலந்த பின் கெட்ட அணுக்களுக்கு வேண்டிய ஆகாரம் கிடைப்பதில்லை.

1.அப்பொழுது வீரியமாக இருக்கும்… விஷத்தன்மையாக இருந்தால் வலு ஜாஸ்தியாக இருக்கும்.
2.ஆனால் விஷத்தன்மைக்குண்டான சக்தி கிடைக்கவில்லை என்றால் அது சோர்வடையும்.
3.அப்பொழுது வேகமாகப் பேசிக் கோபமாகப் பேசுபவருடன் இணைந்தால் தணியும்.

மற்றவர்களுடன் பார்த்துப் பார்த்துப் பேசி மற்ற உணர்வுகளை எடுத்திருந்தாலும் தியானம் எடுத்த பின் அது குறையும். அதற்குச் சாப்பாடு இல்லை என்கிற பொழுது மயக்கமடைகிறது.

ஆனால் அதே சமயத்தில்
1.உங்கள் உடலில் ஊழ்வினை என்ற வித்துக்களுக்குள்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து விடுகின்றோம்.

அக்ரிகல்ச்சரில் வித்துக்களில் விஷ பூச்சிகள் தாக்காதபடி அந்த வித்துக்களை ஊறவைத்து அதற்குண்டான நிலைகளை இணைக்கப்படும் பொழுது அந்தச் செடிகளில் விஷப் பூச்சிகள் தாக்காது. அதிலே பூச்சிகள் வருவதில்லை…!

ஆனால் வரவில்லை என்றாலும் கூட வளர்ந்து வரும் பொழுது பூச்சிகள் இதைச் சாப்பிடுவதில்லை ஆனாலும் அதிலே முட்டை இடுகின்றது. முட்டையிட்டால் என்ன செய்யும்…?

விஷத்தன்மை அந்த முட்டைக்குள் வளர்ந்து விடும். அது வெடித்து வெளிவந்த பின் மீண்டும் அந்தச் செடிகளையே உணவாக உட்கொள்ளும்.

இதையெல்லாம் தெளிவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நம் ஆன்மாவிற்குள் கொண்டு வர வேண்டிய சக்தி

நம் ஆன்மாவிற்குள் கொண்டு வர வேண்டிய சக்தி

 

வீட்டில் பெண்கள் கோலமிடுகின்றார்கள். கோலமிடும் போது புள்ளிகளை வைத்து இணைக்கப்படும் போது
1.எங்கள் குடும்பம் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்…
2.இந்த வீட்டிற்கு வருவோர் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று எண்ணத்தில் உற்றுப் பார்த்து
3.இந்த உணர்வுகளை அந்தக் கோலத்திலே பதிவாக்க முடியும்.
4.ஏனென்றால் அந்தக் கோலப் பொடியிலும் மேக்னெட் உண்டு.

ஆகவே குடும்ப ஒற்றுமைக்காக உயர்ந்த எண்ணங்களை எண்ணி அருள் ஞானம் பெருக வேண்டும் நல் வாழ்க்கை வாழ வேண்டும். குடும்பத்தில் எதையெல்லாம் நல்லதாக வேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ அதை எல்லாம் எண்ணிக் கோலமிடலாம்.

நமக்குள் இது பதிவாகிறது… நல்ல இயக்கச் சக்தியாக மாற்றுகிறோம். நீங்கள் இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக நமக்குத் தெரிந்தவர்கள் அல்லது நண்பர்கள் நம் வீட்டுக்கு வருவார்கள். இங்கே வந்து அவருடைய கஷ்ட நஷ்டங்களை எல்லாம் சொல்ல ஆரம்பிப்பார்கள். நாம் “உம்…” கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருப்போம்.

எந்த இடத்தில் நின்று பேசினோமோ அந்த இடத்திலே பதிவாகிவிடும்… இருவர் உடலிலும் பதிவாகிவிடும்.
1.அடுத்தாற்போல் அந்த இடத்திற்கு மீண்டும் வந்தாலே அந்த வாசனை இயக்கி
2.உங்களை அறியாமலே “ஏதோ சங்கடமாக இருக்கின்றது…” என்ற நிலையில்
3.அந்த கவலையாகப் பேசிய அதே இடத்திலே அமர்ந்து மீண்டும் எண்ணி அதை வளர்க்கும்படி செய்யும் (பதிவு அப்படி இயக்கும்).

அதே போல ஊரிலிருக்கும் குறைகளைப் பற்றிப் பேசியிருந்தால் வேறு பாதையில் செல்ல மாட்டார்கள். ஒற்றைக்காலில் நிற்கக்கூடிய இடமாக இருந்தாலும் கூட அங்கே தான் செல்லும்படி அதை எல்லாம் கவரும்படி இந்த உணர்வு இயக்கும்.

இந்த நினைவுகள் அவ்வாறு தான் இயக்கும். அதே எண்ணத்துடன் வீட்டிற்குள் வந்தால் வீட்டிற்குள்ளும் இது வரும்.

அதாவது…
1.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று மனிதனுக்குள் இருக்கக்கூடிய நிலைகள் எப்படி உருமாறுகிறது…?
2.நம்மை அறியாத செயல்கள் சூட்சுமத்தில் எப்படி நடக்கிறது…?
3.இதையெல்லாம் எப்படி மாற்ற வேண்டும்…? என்பதற்குத்தான் உபதேசிக்கின்றோம்.
4.எல்லாம் நேரடியாக அனுபவித்துச் சொல்கின்றேன்… புத்தகத்தைப் பார்த்துப் படித்துச் சொல்லவில்லை.

குருநாதர் காட்டிய வழிப்படி இந்தியா முழுவதற்கும் இமயமலை முதல் கன்னியாகுமரி வரையிலும் சுற்றித் தெரிந்து கொண்ட பிற்பாடு தான் இதை எல்லாம் சொல்கின்றோம்.

ஒரு மனிதன் அவன் தெரிந்து தவறு செய்யவில்லை…! சந்தர்ப்பம் சூழ்நிலை தான் அவனைக் குற்றவாளியாக்குகின்றது. அதே சந்தர்ப்பம் சூழ்நிலை அவனை நோயாளியாக மாற்றுகின்றது… அதே சந்தர்ப்பம் சூழ்நிலையால் தான் குடும்பத்தில் கஷ்ட நஷ்டங்களும் வருகின்றது…!

1.இதிலிருந்து மீளும் வழி என்ன…? என்பதைத்தான் கோவிலில் வைத்து ஞானிகள் காட்டியிருக்கின்றார்கள்.
2.ஆனால் காசைக் கொடுத்து விலைக்கு வாங்கும் நிலைகளுக்கு இன்று அது மாறிப் போய்விட்டது.

இயற்கையின் உண்மை நிலைகளை நாம் நுகர்ந்தால் நமது உயிர் என்ன செய்யும்…? நாம் எண்ணியதை நமது உயிர் உருவாக்கிக் கொடுக்கும். அதற்குத் தான் அதிகாலையில் அந்த பிரார்த்தனையைச் செய்யும்படி எல்லோருமே சொல்கின்றார்கள்.

ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அதை வளர்க்க வேண்டிய பொறுப்பு உங்களிடம் தான் இருக்கின்றது.
1.அந்த அதிகாலை நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்று எண்ணி எடுத்து உங்களுக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள்… குளிக்க வேண்டாம்…!

ஆனால் குளித்துவிட்டு மறுபடியும் நீங்கள் ஆடைகளை அணிந்து பாருங்கள். குளித்த வியர்வை வெளியில் வரும். ஆடையை இரண்டவது தரம் நுகர்ந்து பாருங்கள். ஆடையில் நாற்றம் வரும்.

ஆனால் அதிகாலை விழித்தவுடன்… படுக்கையிலே எழுந்து அமர்ந்து
1.அல்லது படுக்கையிலேயே துருவ நட்சத்திரத்தை எண்ணி நினைவுகளை அங்கே செலுத்தித் தியானித்த பின்
2.ஐந்து நிமிடம் கழித்து உங்கள் ஆடையை நுகர்ந்து பாருங்கள்.

நல்ல வாசனையாக இருக்கும். அந்த அருள் மணங்கள் தீமைகளை அகற்றும். ஆக… ஆடையில் படிகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிந்து தெரிந்து
1.நம் எண்ணத்தால் உயர்ந்த சக்திகளை நம் ஆன்மாவிற்குள் கொண்டு வரக்கூடிய பழக்கத்தை அவசியம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்…
2.நம் ஆன்மாவை வலுவாக்க வேண்டும்… தீமைகள் புகாது தடுக்க வேண்டும்.

நாம் உருவாக்க வேண்டிய கூட்டமைப்பு

நாம் உருவாக்க வேண்டிய கூட்டமைப்பு

 

விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட கதிரியக்கங்களைச் சூரியனுடைய காந்த சக்தி எடுத்து வைத்திருக்கின்றது. எந்தெந்த நாடுகளில் இதைச் செய்து கொண்டார்களோ
1.இந்த உணர்வு “நியூட்ரான் என்ற விஷத்தன்மைகளின் அழுத்தம்” கதிரியக்க உணர்வினைக் கண்ட பின் அது அஞ்சி ஓடுவதும்
2.மற்றொன்றுடன் மோதிச் சுழல் காற்று போலப் புயலாக மாறுகின்றது அல்லது சூறாவளியாக மாறுகின்றது.

அணுகுண்டை வெடித்தால் கட்டிடங்களுக்குள் ஊடுருவித் தன் இனமாக மாற்றி அது புகை மண்டலங்களாக மாறுகின்றது. ஆனால் அதே சமயத்தில் இந்த நியூட்ரான் என்ற உணர்வுகள் பூமியிலே கலந்தால் விஷத் தன்மை கொண்டு மடியச் செய்யும்.

ஆனாலும் விஷத்தின் தன்மை கொண்டு கதிரியக்கப் பொறிகள் அஞ்சி ஓடும் பொழுது மற்றொன்றுடன் மோதியவுடன் சூறாவளியாக மாறி கடலிலே பட்டால் அதையும் அள்ளி எடுத்துக் கொண்டு புயல் போல் மாறும்.

இது கட்டிடங்களிலே படர்ந்தால் பலவீனப்படுத்தித் தரைமட்டமாக்கிவிடும்… மனிதனாக இருந்தாலும் தூக்கிச் சென்று விடும்.

கடலில் பட்டால் அலைகளாக மாறுகிறது. சனிக் கோளின் உணர்வு படடால் நீரை ஆவியாக மாற்றி மேகங்களாகக் கூடி மழை பெய்ய வைக்கின்றது.

ஆனால் விஷத்தன்மையான உணர்வுகள் மாறி கடலோரம் உள்ள நகரம் எல்லாம் அழியும் தன்மை வருகின்றது விஞ்ஞான அறிவால். இதைப் போன்ற பாதிப்புகளில் இருந்து நாம் தப்ப வேண்டும்.

1.கூட்டு ஐக்கியமாகத் தியானங்களைச் செய்து துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் வாழும் இடங்களிலே பரவச் செய்து
2.அந்த உணர்வலைகளை மோதும்படிச் செய்து அதைப் பெருக்கச் செய்யப்படும் பொழுது நம்மையும் காக்கலாம்… நாம் வாழும் ஊரையும் காக்கலாம்.

துருவ நட்சத்திரத்தினுடைய உணர்வு அழுத்தமாகும் பொழுது அந்தத் தீமைகளை விலக்கிவிடும். நம் நாட்டிலே அத்தகைய சூறாவளியோ புயலோ வராதபடி காக்கலாம்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி இந்த அகஸ்தியன் வெளிப்படுத்திய உணர்வுகளை… காலை துருவ தியானத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும்.

தியானத்தைக் கடைபிடிக்கும் குடும்பங்களில் கணவன் மனைவி இருவரும் அந்த அருள் சக்தியைப் பெற்று
1,தியானமிருக்கும் அனைத்துக் குடும்பங்களில் இது படர வேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் தெளிந்த மனம் பெற வேண்டும்
3.மகிழ்ச்சியான நிலைகள் பெற வேண்டும் மகரிஷிகள் அருள் வட்டத்தில் வாழ வேண்டும்
4.நாம் பார்க்கும் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடத்திலும் இதைப் படரச் செய்ய வேண்டும்.

அது தான் கோடிக்கரை… இராமன் என்ன செய்தான்…? மணலைக் குவித்துச் சிவலிங்கத்தைப் பூஜித்தான் என்று காட்டியிருப்பார்கள். காரணம்… மனிதனின் கடைசி எல்லையில் இருக்கின்றோம்.

மனதைக் குவித்து ஒன்றுபட்டு வாழும் நிலையில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை ஒன்றாகக் கூட்டி
2.ஒருங்கிணைந்த நிலையில் கூட்டமைப்பாக வலுவான நிலைகள் கொண்டு
3.விஞ்ஞான அறிவால் வரும் தீமைகளை விலக்கித் தள்ளி ஊரையும் நாட்டையும் காக்கும் நிலைக்கு வர வேண்டும்.

எங்கிருந்தாலும் சரி…! விஞ்ஞானப் பேரழிவுகளில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள
1.கூட்டமைப்பாகத் துருவ தியானத்தை மேற்கொண்டு அருள் உணர்வுகளைக் கவர்ந்து நாம் வாழும் இடங்களில் இந்த உணர்வுகளைப் பரவச் செய்வோம்.
2.ஒவ்வொரு நாளும் நாம் இதை வலுப்படுத்திக் கொண்டே வருவோம்.
3.உலகைக் காக்கும் சத்தியாக நாம் செயல்படுவோம்.

“சாமி சொல்லும் வழியில் நடந்தால்” நம்மை நாம் காக்க முடியும் என்ற நம்பிக்கை வர வேண்டும்

“சாமி சொல்லும் வழியில் நடந்தால்” நம்மை நாம் காக்க முடியும் என்ற நம்பிக்கை வர வேண்டும்

 

மற்றவர்களைக் காக்க நாம் உதவி செய்தாலும்… அவருடைய துயரத்தை வேதனையை நுகர்ந்த நிலையில் அது விஷமான உணர்வாக நம் உடலுக்குள் சென்று… நம்மை ஆபத்தான நிலைகளுக்குக் கொண்டு செல்கின்றது.

ஏனென்றால் நன்மை செய்தாலும் அதைத் தடுக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்குத் தான்
1.உங்கள் வாழ்க்கையில் எந்த நிமிடமும் எந்த நேரத்திலும் நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம்…
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறும்படி தகுதியை ஏற்படுத்துகின்றோம்… அடிக்கடி நினைவு படுத்துகின்றோம்.
3.அனைவரது உடல்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
4.24 மணி நேரமும் நான் சதா தியானத்தின் மூலம் எடுத்துப் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றேன்.

எம்முடைய உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாலே உங்கள் தலை வலி மேல் வலி குறையும்… இடுப்பு வலி இருந்தால் அதுவும் குறையும். ஏனென்றால் இதைக் கேட்கப்படும் பொழுது அந்த நஞ்சுகள் அகல்கின்றது.

ஆனாலும்… சாமி உபதேசிக்கின்றார்…! அதைக் கேட்க விடாது “மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றார்களே…” என்று அதன் பால் நினைவச் செலுத்தி விட்டால் அடுத்த நிமிடம் மேல் வலி தலை வலி… வெறுப்பு எரிச்சல் கை கால் குடைச்சல் நிச்சயம் வரும்.

காரணம்… “நாம் நுகர்வதைத் தான் நமது உயிர் இயக்குகிறது…” என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்தாலும் அதை மாற்றும் வழி வேண்டும்.

அதை மாற்றுவதற்குண்டான சக்தி உங்களுக்குக் கிடைப்பதற்குத் தான் இதை உபதேசிப்பதும் அருள் உணர்வுகளைப் பதிவு செய்வதும்.

உபதேசக் கருத்துக்களை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்தால் உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும் சக்தியாக அது வரும். ஆனால் அதற்குப் பதில் சாமி தான் செய்து கொடுப்பார் என்று நம்பினால்… “அது மிகவும் பிழையானது…”

1.சாமி சொன்ன உணர்வைப் பதிவாக்கி கொள்ள வேண்டும்.
2.”அதன் வழி நடந்தால் நம்மை நாம் காக்க முடியும்… ” என்ற அந்த நம்பிக்கை வர வேண்டும்.

ஏனென்றால் சாமியார் செய்வார் கோவிலில் இருக்கும் தெய்வம் செய்யும் என்ற இந்த நம்பிக்கையில் தான் வாழ்கின்றோம்.

அந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும். அந்தத் தெய்வ நிலை பெற வேண்டும்… அந்தத் தெய்வச் செயலாக நாம் செயல்பட வேண்டும். இந்த ஆலயம் வருவோரெல்லாம் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால்
1.அந்த உணர்வு நமக்குள் அத்தகைய செயலாக உருவாக்குகின்றது.
2.ஆக நாம் எண்ணியதைத் தெய்வமாக்குகின்றது.

அனைவரும் நல்லவராக வேண்டும்… குடும்பத்தில் அனைவரும் தெய்வீகப் பண்புகள் பெற வேண்டும் என்று எண்ணினால் நாம் அதுவாக ஆகின்றோம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் இயற்கையின் பேருண்மைகளை எல்லாம் சொல்லி வருகின்றோம். ஆனாலும் நான் படிக்காதவன் தான்.

1.அனைத்துச் சக்திகளும் காற்றில் இருக்கின்றது… குரு காட்டிய வழியில் அதை நான் நுகர முடிகின்றது.
2.வியாசகன் எப்படி அகஸ்தியன் உணர்வை நுகர்ந்து உண்மைகளைக் கண்டறிந்தானோ அதைப் போன்று தான் குருநாதர் எம்மை நுகரும்படி செய்தார்.
3.அதைத்தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

நீங்கள் பிறவி இல்லாத நிலை அடைய வேண்டும். வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி மெய்ப்பொருள் காண வேண்டும் என்று எண்ணினால் எந்தத் தீமையும் உங்களை சாடாது. உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

உங்களை நீங்கள் நம்புங்கள.

கூட்டமைப்பின் மூலம் நாம் உருவாக்க வேண்டிய பேரருள் பேரோளி

கூட்டமைப்பின் மூலம் நாம் உருவாக்க வேண்டிய பேரருள் பேரோளி

 

கூட்டுத் தியானத்தின் மூலம் “அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்” என்ற உணர்வினைக் கூட்டமைப்பாக நாம் வெளிப்படுத்தும் போது
1.அனைவரது செவிகளிலும் அது பட்டு இந்த உணர்வுகள் உயிருக்கு எட்டிக் கண்ணுக்குப் பாய்ச்சப்பட்டு
2.கண்ணின் துணை கொண்டு இந்தப் பூமியில் பரவி இருப்பதையும்… சொல்லும் உணர்வையும் கவர்ந்து
3.அத்தகைய வலுக் கொண்ட அணுவாக உடலுக்குள் உருவாக்குவது தான் கூட்டுத் தியானத்தின் அமைப்பு.

பல பொருள்களைப் போட்டுச் சுவைமிக்க குழம்பாக உருவாக்குவது போன்று பலரும் ஒன்றாகச் சேர்த்து அனைவரும் நலம் பெற வேண்டும்… இருளில் இருந்து மீள வேண்டும்… நஞ்சில் இருந்து விடுபட வேண்டும்… பேரருள் பெற வேண்டும்… மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வைச் சொல்லப்படும் பொழுது இந்தக் கூட்டமைப்பின் உணர்வின் சக்தி நமக்குள் “பேரருள் சக்தியாக மாறுகின்றது…”

இப்படி…
1.ஒவ்வொரு மனித உடலிலும் விளையும் அந்த அருள் உணர்வுகளை ஒன்றாக இணைத்துக் கூட்டுத் தியானத்தினை வளர்ப்போம் என்றால்
2.கடும் தீமைகளை வெல்லும் ஆற்றலை நாம் அனைவருமே பெறுகின்றோம்.

ஆகவே இந்தக் கூட்டமைப்பை நாம் ஒழுங்குப்படுத்தி அதைப் பற்றுடன் செயல்படுத்தி பேரருளை நமக்குள் கூட்டுதல் வேண்டும்.

அந்தப் பேரருள் என்ற உணர்வே துருவ நட்சத்திரத்திலிருந்து பெற்றது தான். அதன் உணர்வை நமக்குள் கவர்ந்து பேரருள் என்ற இயக்கச் சக்தியை… தீமைகளை அகற்றும் வல்லமை பெற வேண்டும் என்பது தான் நமது நோக்கம்.

ஒவ்வொரு உயிரும் ஈசனாக இருந்து… ஒவ்வொரு உடலும் கோயிலாக இருந்து… அந்தக் கோவிலுக்குள் மனிதனாக இருக்கும் நற்பண்புகளையும் நற்செயல்களையும் நல்ல உணர்வுகளையும் தீமையை அகற்றும் உணர்வாக விளையச் செய்துள்ளது.

ஆகவே…
1.நஞ்சினை வென்று உணர்வைப் பேரருளாக மாற்றும் இந்த மனித உடலுக்குள் இருக்கும் பேருண்மைகளை நாம் உணர்ந்து
2.பகைமை உருவாகாது அருள் ஒளியைப் புகுத்தி… அருள் ஞானத்தைப் பெருக்கிப் பேரருளாக மாற்றி
3.நமது சொல்லும் செயலும் கேட்போர் உணர்வுகளில் மகிழ்ச்சி பெறச் செய்வதும்
4.அவர்கள் பேரானந்த நிலைகளில் வாழும் பொழுது அதை நுகர்ந்து அரும்பெரும் சக்தியாக நமக்குள் மாற்றி அமைப்பது தான் கூட்டுத் தியானத்தின் நோக்கம்.

இதை எல்லாம் அனைவரும் பெற்று மகிழ்ந்து வாழ வேண்டும். பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். பேரானந்த நிலை பெற வேண்டும்.1.
1.அந்தப் பேரருளைப் பெற்று அனைவரும் பேரொளியாக வாழ வேண்டும்
2.அனைவரும் பேரருளைப் பெற்று பேரொளியின் இயக்கமாக இருக்க வேண்டும் என்ற
3.இந்த உயர்ந்த நோக்கத்துடனே நாம் அனைவரும் செயல்படுவோம்… கூட்டமைப்பின் மூலமாக நாம் இதை உருவாக்குவோம்.

அவரவர்கள் பெற்ற உண்மைகளைத் தெளிவாக்கி அனைவரையும் தெளிவாக்குவோம்… மற்றவர்கள் இருளைப் போக்கிடும் சக்தியாக இது வளரட்டும்.

அதிகாலையில் ஒரு பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்

அதிகாலையில் ஒரு பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்

 

விஷத்தன்மைகள் பூமியில் அதிகமாகப் பரவிக் கொண்டுள்ளது. சாயப்பட்டறைகள் மூலமாகக் கெமிக்கல்கள் பரவிக் கொண்டுள்ளது. அதே போல கரும்பு ஆலைகளிலும் கரும்புச் சாற்றில் உள்ள அழுக்குகளை நீக்க அதிலும் கெமிக்கலைப் போடுகின்றார்கள். அந்தக் கெமிக்கலை நம் துணியில் போட்டால் துணி வெந்து ஓட்டையாகிவிடும். ஆனால் அந்த கெமிக்கலை உபயோகித்து அதிலே உருவான சர்க்கரையைத் தான் நாம் உட்கொள்கிறோம்.

1.பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றது… ருசியாக உள்ளது. ஆனால் விஷத்தன்மைகள் கலந்து வருகின்றது
2.இப்படி விஞ்ஞான அறிவு கொண்டு பொருள்களை தெளிவாக்கினாலும் இந்த நிலை ஆகிறது.

குடி தண்ணீரிலும் இதைச் செயல்படுத்தினார்கள். நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் எண்ணெய்களையும் தூய்மைப்படுத்த இது போன்றே செயல்படுத்துகின்றார்கள். எண்ணையில் இருக்கும் கொழுப்புச்சத்தை எடுக்கின்றோம் என்று சொல்கின்றார்கள்.

அதை எடுக்கின்றது… ஆனால் அந்த எண்ணெயை நாம் உபயோகப்படுத்தும் பொழுது இந்தக் கெமிக்கல் நம் உடலுக்குள் இணைந்து விடுகின்றது… அணுக்களிலும் சேர்கின்றது.

இதிலிருந்து எல்லாம் நாம் தப்ப வேண்டும். அந்த மகரிஷியின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் சேர்த்து மேலே சொன்ன தீமையான விளைவுகள் வராதபடி தடுத்துப் பழக வேண்டும்.

விஞ்ஞான அறிவால் பல வகைகளிலும் நச்சுத்தன்மைகளைப் பரவ விட்டுள்ளார்கள். அதனால் அஞஞான வாழ்க்கையாகச் சிந்தித்து செயல்படும் திறனை பெரும்பகுதியானவர் இழந்து விட்டோம்.

1.அதனால் திடீரென்று உணர்ச்சிவசப்படக் கூடிய நிலைகளும் தவறு செய்யக்கூடிய உணர்ச்சிகளைத் தூண்டுவதும் சிந்தனை இல்லாது செயல்படுத்தும் நிலைகளும் வருகின்றது.
2.இதைப்போல் வரும் பொழுது தான் போக்குவரத்திலும் விபரீத விபத்துகள் ஏற்படுகின்றது.
3.மனிதனுக்கு மனிதன் என்ற நிலை இல்லாதபடி பல விபரீத செயல்களும் இரக்கம் ஈகையற்ற நிலைகளும்
4.ஒருவரை ஒருவர் தாக்கிக் கொன்றிடும் நிலைகள் வந்து விடுகின்றது.

காரணம் ஒரு பொருளிலே விஷம் பட்டு விடடால் அதை நாம் உட்கொள்ளும் பொழுது நம்முடைய சிந்தனைகள் இழக்கப்படுகின்றது. இது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

அதே போலத்தான் நம்மை அறியாமலே விஷத்தன்மைகள் சிறுகச் சிறுக உடலில் உள்ள அணுக்களில் சேர்க்கப்படும் பொழுது தவறு செய்யும் இயல்புகளாக மாறி விடுகின்றது. கடும் நோய்களும் வருகிறது.

இதிலிருந்து நாம் மீள வேண்டும்.

1.காலையில் கண் விழித்த உடனே துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை வலு சேர்த்துக் கொண்டு
2.அந்தச் சக்தி கணவன் தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்றும் மனைவி தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்றும் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்றும்
3.குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று குடும்பத்தில் உள்ள அந்த குழந்தைகளும்
4.இதைப் போன்று எண்ணக் கூடிய ஒரு பழக்கத்திற்கு நாம் கொண்டு வர வேண்டும்.

அந்தக் குழந்தைகளுக்கு ஒரு இரண்டு நாள் மூன்று நாள் சொல்லிப் பதிவாக்கி அவர்களையும் பழக்கிக் கொண்டு வந்தால் சீராகும். அவர்களுக்கும் நல்ல படிப்பு வரும் ஞானங்கள் வரும் என்று சொல்லிப் பழக்கப்படுத்திக் கொண்டு வர வேண்டும்.

அதிகாலை ஒரு ஐந்து ஐந்தரைக்குள் ஒரு பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து
1.நம் உடலை உருவாக்கிய எல்லா அணுகளுக்கும் வலு சேர்த்துப் பழக வேண்டும்.
2.அந்தச் சக்திகளை நாம் அவசியம் பெருக்கிப் பழக வேண்டும்.

நாம் செய்யும் தியானத்தைச் சீர்படுத்ததும் முறை

நாம் செய்யும் தியானத்தைச் சீர்படுத்ததும் முறை

 

மனித வாழ்க்கையில் எத்தனையோ உணர்வுகளை நாம் பதிவாக்கி வைத்துள்ளோம். கோபப்பட்டவரை வேதனைப்பட்டவரை நோய்வாய்ப்பட்டவரை இது போன்று எத்தனை வகையான மனிதர்களை நாம் பார்க்கின்றோமோ அவையெல்லாம் நமக்குள் பதிவாகி விடுகின்றது. ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய… என்று நம் உடலாக மாறிவிடுகின்றது.

இருந்தாலும் அவரிடம் இருந்து வெளிப்பட்ட உணர்வுகள் அனைத்தும் அலைகளாக நம் புமியிலே பரவுகின்றது.
1.அவ்வாறு பரவி இருப்பது நம் உடலில் அணுக்களாக மாறிவிட்டால் அது உணவுக்காக நம் உடலில் உணர்ச்சிகளை உந்தும்.
2.அப்படி உணர்ச்சிகளை உந்தினால் நம் முன் இருப்பதை அது கவரும்.

அதாவது செடி கொடிகள் தன் சத்தினை எப்படிக் கவர்ந்து கொள்கின்றதோ இதைப் போல நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அதைக் கவர்ந்தால் நாம் சுவாசிக்க நேர்கின்றது.
1.சுவாசித்தால் அவர்கள் என்னென்ன சங்கடப்பட்டார்களோ அது எந்தெந்த நிலையோ நம்மை அறியாதபடியே சோர்வடையும் நிலைகள் வரும்.
2.அத்தகைய சோர்வடையும் நிலைகள் வந்தால் இரத்த நாளங்களில் கலந்து அது உணவாக எடுத்துக் கொள்ளும்.
3.இப்படி நம்மை அறியாமலே சில நேரங்களில் சிந்தனை இல்லாதபடியே இது போன்ற சிந்தனைகள் வரும்… தியானம் செய்யும் பொழுது.

சிலரிடம் அதிகப் பற்றுடன் பழகி இருப்போம். சந்தர்ப்பத்தில் அவர்கள் கஷ்டப்பட்டு இருப்பார்கள். அதை நாம் நுகர்ந்து விட்டால் அந்த அணுக்கள் நமக்குள் விளைந்து விட்டால் நாம் தியானிக்கும் நேரத்திலே நம்மை அறியாமலே அவருடைய எண்ணங்கள் நமக்குள் வரும்.

வியாபாரத்தில் ஏமாற்றி இருந்தால் கொடுக்கல் வாங்கலில் அவருடைய உணர்வுகளை நாம் பதிவு செய்திருப்போம். அப்படிப் பதிவு செய்திருந்தால் நமக்குள் ஏமாற்றம் அடைந்த உணர்வுகள் இருப்பினும் இந்த உணர்வுகளுக்கு எல்லாம் வலு அதிகம்.

தியானத்திலே மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ணினாலும்… இந்த விஷம் கொண்ட உணர்வுகள் இந்த உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் உணவுக்காக உணர்ச்சிகளை உந்தப்படும் பொழுது “நம் ஆன்மாவில் அதிகமாகச் சேர்கின்றது…”

அதைச் சுவாசித்தோம் என்றால் நம்மை அறியாமலே இயக்கும். நாம் நினைப்பது துருவ மகரிஷி என்று…! ஆனால் அவருடைய உணர்வுகள் தான் அதிகமாக வரும்.
1.அந்த மாதிரி நினைவு வந்தாலும் கண்களை மூடித் தியானித்துக் கொண்டிருக்கிருக்கும் பொழுது உடனடியாக கண்களைத் திறந்து துருவ நட்சத்திரத்தின் பால் நினைவை இணைக்க வேண்டும்.
2.கண்களைத் திறந்து சிறிது நேரம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா என்று அப்படியே கண்களை மூட வேண்டும்.

இப்படி அந்த உணர்வை அதிகமாகச் சேர்த்துவிட்டால் மற்றவருடைய உணர்வுகளை இழுப்பது குறையும். இப்படி ஒவ்வொரு சமயத்திலும் நாம் தியானிக்கும் போது இத்தகைய நிலை வந்தால் இதைப் போன்று நாம் சமாளித்துப் பழக வேண்டும்.

தீமை விளைவிக்கும் உணர்வுகளுக்கு நாம் நுகர்ந்த உணர்வு ரத்த நாளங்களிலே கலக்கப்படும் பொழுது இது அதிகரித்து… அதாவது
1.நம் உடலில் உள்ள வெறுப்பான உணர்வுகளைச் சுவாசிக்கும் அந்த அணுக்களுக்கு
2.இரத்த நாளங்களில் துருவங்கள் நட்சத்திரத்தின் பேரருள் பேரோளியைக் கலக்கப்படும் பொழுது அந்த அணுக்களுக்கு உணவு கிடைக்காது தடைப்படுத்தும்.

நல்ல குணங்களுக்கொ மற்ற நிலைகளுக்கோ பிற உணர்வு நம்மைத் தடைப்படுத்துவது போல நாம் அந்த மகரிஷியின் அருள் சக்திகளை கண்ணைத் திறந்து ஏங்கி சிறிது நேரம் உள்ளே செலுத்தினோம் என்றால்… ரத்தங்களிலே கலந்த பின் அந்த அணுக்களின் செயலை இந்த வலுவான நிலைகள் அதைத் தடைப்படுத்தும்.

இப்படி நாம் மாற்றிப் பழக வேண்டும்.

பலருடைய உணர்வுகள் இருக்கும் பொழுது இந்த உணர்வுகளைக் கவர்ந்த பின் அந்த அலைகளை எடுத்து நமக்குள் ஆன்மாவாக ஆனபின் இதுதான் முன்னணியில் வருகின்றது. நாம் தியானிக்கும் நிலையை மாற்றிவிடும்.

நாம் தியானித்துக் கொண்டே இருப்போம். திடீரென்று திசை மாறிச் சென்றுவிடும்.

இதே போலத் தான் நம் ரத்த நாளங்களில் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் செலுத்தினோம் என்றால் அதனுடைய உணர்வுக்கு உணவு கிடைக்கவில்லை என்கிற பொழுது அது ஒடுங்கிவிடும்.
1.இப்படி நாம் அதை ஒடுக்கி ஒடுக்கி அருள் உணர்வுகளை பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.
2.தியானம் செய்யும் பொழுது நாம் பழக வேண்டியது முக்கியமான பயிற்சி இது.
3.தீமை செய்யும் அணுக்கள் அனைத்தும் நல்லதாக மாறத் தொடங்குகிறது.

எதிர்காலத்தில் நீங்கள் மெய் ஞானிகளாக வருவீர்கள்

எதிர்காலத்தில் நீங்கள் மெய் ஞானிகளாக வருவீர்கள்

 

தியானம் என்றாலே சாமியாராகப் போய்விடுவோம்… சாமி கும்பிடுவோர் நாங்கள் எப்படித் தியானம் செய்வது…? என்றெல்லாம் சிலர் நினைப்பார்கள்.

தியானம் என்பதே உயர்ந்த எண்ணங்களைப் பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணுவது தான்.

நம்மிடம் யாராவது சண்டையிடுகிறார்கள் அல்லது திட்டுகின்றார்கள்… என்றால்
1.அப்பொழுது என்ன நினைக்கின்றோம்…?
2.என்னை இப்படிப் பேசினான்… என்னை இப்படிப் பேசினான்…! என்று எண்ணுவது இது தியானம் தான்.

அந்த மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணினால் இது தியானம்தான்.

காரணம்…
1.நாம் எண்ணியது நமக்குள் உடலாகின்றது
2.எண்ணியதை உயிர் இயக்குகின்றது
3.எண்ணியதை உடலாக்குகின்றது உயிர்.
4.எண்ணியதை உடலுக்குள் விளைய வைக்கின்றது
5.விளைந்ததைத் தான் உடலை விட்டுப் பிரியும் சமயம் தன்னுடன் அழைத்துச் செல்கின்றது
6.நமக்குள் இருக்கும் எண்ணங்களை… உயிரே அதைப் படைக்கின்றது
7.நம்மை ஆளும் ஆண்டவனும் உயிரே
8.ஆண்டவனாக இருப்பதும் உயிரே
9.எண்ணியதை இயக்கி இறை ஆக்குவதும் இறைவன் ஆக்குவதும் உயிரே
10.எண்ணியதை ஓ என்று ஜீவன் ஆக்குவதும் உயிரே
11.எண்ணி உடலுக்குள் பதிவு செய்தாலும்… அது அனைத்திற்கும் குருவாக இருப்பதும் உயிரே.

நாம் எந்தெந்த உயர்ந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ அதைத் திரும்ப எண்ணி அதற்குக் குருவாக நின்று நல்வழி காட்டுவதும் உயிரே.

1.ஞானிகளின் உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவு செய்யும் பொழுது
2.மீண்டும் அதை எண்ணுவீர்கள் என்றால் குருவாக நின்று உங்களுக்கு அது நல்வழி காட்டும்.

தீமை செய்த உணர்வுகளை எண்ணினால் அது “ஓ” என்று ஜீவனாக்கி உடலுக்குள் “ம்” என்று பதிவு செய்தால்… திரும்ப எண்ணினால் தீமை செய்யும் எண்ணமாகக் குருவாக நின்று தீமையை விளைவிக்கும் நிலைக்கே அது உங்களை அழைத்துச் செல்கின்றது.

நோய் என்ற நிலைகள் பதிவானால் அந்த நோயைப் பற்றிப் பேசினாலும் அந்த நோயே ஜீவனாகி அதுவே குருவாகி நோயாக உடலுக்குள் உருவாக்கி விடும்.

ஆனால் நோயை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுத்துக் கொண்டால்
1.அதனை உங்கள் உயிர் ஜீவனாக்கி இந்த உணர்வின் தன்மை நோயற்றவனாக ஆக்கி
2.ஞானத்தின் தன்மை கொண்டு பொருளறிந்து செயல்படும் திறனாக நமக்குள் அதை வளர்க்க
3.அந்த உணர்வின் எண்ணம் குருவாக நின்று இந்த வாழ்க்கையை தீமை அற்றவனாக்கி
4.தீமைகளை அகற்றிடும் சக்தியாக நமக்குள் அது விளையும்.
5.அப்படி விளையச் செய்யும் சக்தி இதைக் கேட்டுணர்ந்தவர்கள் நீங்கள் பெற முடியும்.

உங்களுக்குள் ஊழ்வினையாக அந்த மெய் ஞானிகள் உணர்வுகள் ஆழமாகப் பதிய வேண்டும். உங்களை அறியாத தீமைகள் நீங்க வேண்டும். நீங்கள் நன்மை செய்த நிலைகள் அந்தத் தெய்வ குணங்கள் உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும்.

மெய் ஞானிகள் உணர்வு உங்களுக்குள் விளைந்திட வேண்டும்… உங்கள் மூச்சும் பேச்சும் உலக நன்மை பயக்கும் சக்தியாக மலர்ந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதை யாம் உபதேசித்தது.

கேட்டுணர்ந்தோர் அனைவருக்கும் இது பதிவாகி இதன் வழி கொண்டு உங்கள் எதிர்காலம் சிறந்து இருக்க வேண்டும். அந்தச் சிறந்த எண்ணங்கள் உங்களுக்குள் பதிவாகி ஞானத்தின் வழித்தொடராக வளர வேண்டும்.

1.எதிர்காலத்தில் நீங்கள் மெய் ஞானிகளாக வருவீர்கள்.
2.விஞ்ஞானப் பேரழிவிலிருந்து மக்களை மீட்டிடும் சக்தியாக விளைந்து
3.உங்கள் மூச்சும் பேச்சும் தீமைகளை அகற்றிடும் அரும் பெரும் சக்தியாக வளரும்.

முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களின் ஆசீர்வாதம்

முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களின் ஆசீர்வாதம்

 

யாகத்தைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். உண்மையான யாகம் என்பது பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

1.ஒவ்வொரு உயிரும் சிறு துளி… சிறு நெருப்பு.
2.சிறு துளி சிறு நெருப்பாக இருந்து… நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து “பெரும் நெருப்பாக…”
3.யாம் உபதேசிக்கும் அந்த மகா ஞானிகளுடைய உணர்வுகளை எல்லோரும் சுவாசித்து
4.சுவாசித்த உணர்வலைகள் இந்தக் கூட்டுத் தியானத்தின் மூலம் உங்கள் உடல் முழுவதற்கும் படர்ந்தது.
5.அப்படிப் படரும் நிலை தான் யாகம்… “யாக வேள்வி…” என்பது.

யாகத் தீயில் எந்தப் பொருளைப் போடுகின்றமோ அதனின் மணம் வருகின்றது. இதைப்போல நம் உயிருக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் படரச் செய்து உடலுக்குள் அந்த யாகக் குண்டத்திற்குள் படரும்படி செய்கிறோம்.

அவ்வாறு படர்ந்து… நீங்கள் வெளிப்படுத்தும் மூச்சலைகள் அனைத்தையும் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு
1.அவ்வாறு வெளிப்படும் இந்த யாக உணர்வுகள் எல்லோருடைய உணர்வுக்குள்ளும் ஊடுருவிப் படர்ந்து
2.நாம் இருக்கக்கூடிய இடம் கல் மண் தாவர இனங்கள் அதில் இருக்கக்கூடிய காந்தப் புலன்கள் இதைக் கவர்ந்து
3.அதிலே மெய்ஞானிகள் உணர்வுகளை படரச் செய்வதுதான் யாக வேள்வி என்பது.

இது உண்மையான யாக வேள்வி.

யாகத் தீயில் நெய்யை விடுகின்றோம். அதனின் உட்பொருள் என்ன…?

இந்த மனித வாழ்க்கையில் உயர்ந்த உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்ற மகரிஷிகள்…
1.சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரும் அவர்களின் உணர்வின் எண்ணங்களை இயக்கி
2.நம் அனைவரது உயிருக்குள்ளும் யாகக் குண்டத்திற்குள் (உடலுக்குள்)
3.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உள் செலுத்துவது தான் நெய் ஊற்றுவது என்பது.

இந்த உணர்வலைகள் நம் உடல் முழுவதும் படர்ந்து பேச்சால் மூச்சால் பார்வையால் சொல்லால் செயலால் இது அனைத்தும் வெளியிலே படர்ந்து “கேட்போர் உணர்வுகளை மகிழ்ச்சியைத் தூண்டும் உணர்வாக அமைகின்றது…!”

யாகக் குண்டமான உடலில் நம் உயிரான நெருப்பில் போடப்பட்ட
1.அந்த மகரிஷிகள் உணர்வு தான் எல்லோருக்குள்ளும் படர்ந்து
2.நாம் இட்ட மூச்சலைகள் அனைத்தும் நம் வீட்டில் தெருவிலும் ஊரிலும் நாட்டிலும் படர்ந்து உலகம் முழுவதும் “ஊடுருவிப் படர்கின்றது…”

இதைத்தான் “முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் கூடி நின்று ஆசீர்வாதம் செய்தார்கள்…” என்று காட்டப்பட்டது.

ஆகவே நாம் அனைவரும் ஒன்று சேர்த்து உணர்வின் எண்ணங்களைக் கூட்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பதிவு செய்யும் பொழுது
1.இந்தப் பதிவே ஊக்கச் சக்தியாக இருந்து
2.மெய்ஞானத்தின் தொடராக எல்லா இடங்களிலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்.

அதற்குத் தான் கூட்டுத் தியானத்தை அமைத்துள்ளோம்… எல்லோரும் அதிலே கலந்து கொள்ளுங்கள்…. அருள் ஞானக் கூட்டமைப்பை உருவாக்குங்கள்.

துருவன் நஞ்சை நீக்கி ஒளியாக மாற்றிய சக்தியை நம் கிட்னிக்குப் பெறச் செய்ய வேண்டும்

துருவன் நஞ்சை நீக்கி ஒளியாக மாற்றிய சக்தியை நம் கிட்னிக்குப் பெறச் செய்ய வேண்டும்

 

வயல்களில் நாம் களைகளை நீக்கினாலும் அதற்குள் மறைந்த வித்துக்கள் மீண்டும் முளைத்து வந்துவிடுகின்றது. இதைப்போலத்தான் நமது வாழ்க்கையில் எத்தனையோ விதமான வெறுப்பு உணர்வுகளை நாம் நுகர நேருகின்றது.

கண்களால் நாம் பதிவாக்கித்தான் நாம் நுகருகின்றோம். நுகர்ந்த உணர்வால் நாம் அறிகின்றோம்.
1.அந்த உணர்வுகள அனைத்தும் நம் இரத்தத்தில் கலந்து
2.நம் இரத்தமே மாசுபடும் நிலைகள் கொண்டு மாசுபடும் இரத்தங்கள் நம் உடல் முழுவதும் படரப்படும் பொழுது
3.நமது நல்ல அணுக்களைச் செயலற்றதாக மாற்றிக் கடும் நோயாகி நம் உறுப்புகளில் நோய்கள் உருவாகி விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை நாம் தடுப்பதற்கு… அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி ஒளியின் உடலாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நாம் எண்ணி ஏங்கி நம் நினைவினைப் புருவ மத்தியில் வைக்க வேண்டும்.

அப்படி வைக்கப்படும்பொழுது நாம் இதற்கு முன்னாடி தீமைகளை நுகர்ந்திருந்தாலும் அந்த வெறுப்பு, வேதனை, சலிப்பு, சஞ்சலம், சங்கடம், கோபம், குரோதம் போன்ற உணர்வுகள் நம் உடலுக்குள் போகாது தடைப்படுத்திவிடும்.

அடுத்து நம் கண்ணின் நினைவு கொண்டு ஒவ்வொரு உறுப்புகளுக்கும் அதை உருவாக்கிய அணுக்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செலுத்தப்படும் பொழுது அது வீரியமடைந்து இந்த இரத்தங்களிலிருந்து வரும் விஷத்தன்மைகளை அது ஏற்காது அது கழித்துவிடும்.

பின்… விஷத்தின் தன்மைகளை வடிகட்டும் கிட்னிக்குள் “துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும்” என்று வீரிய சக்தி உண்டாக்கப்படும் பொழுது
1.எப்படி அகஸ்தியன் அவன் துருவனாகும் பொழுது விஷத்தின் தன்மை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றிச் சென்றானோ
2.அத்தகைய வலுவான நிலைகள் கொண்டு கிட்னி விஷத்தின் தன்மை வடிகட்டி நல்ல இரத்தங்களாக உருவாக்கி
3.நம் இருதயத்தைச் சீராக இயக்கி இருதயத்திலிருந்து மூளை பாகம் செல்லும் இந்த இரத்தங்களைப் பரிசுத்தமாக்கி
4.நமக்குள் நல்ல இயக்கமும் நல்ல நினைவும் உருவாக்குகின்றது.

இவ்வாறு அந்தத் “துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள்” நமக்குள் இருளை நீக்கி ஒளி பெறும் தன்மையாக நமது அறிவாக இயக்கத் தொடங்கும்.

வாழ்க்கையில் நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க அதைப் பற்றுடன் பற்றி வாழும் நிலை உருவாகிறது.

சலிப்போ, சோர்வோ, சஞ்சலமோ, வேதனையோ, கோபமோ இந்த உணர்ச்சிகள் நமக்குள் வரும் பொழுதெல்லாம்…
1.“ஈஸ்வரா” என்று உங்கள் கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் உயிரின்பால் செலுத்தி உயிரான ஈசனிடம் வேண்டி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று எண்ணினால் அங்கே தீமைகள் புகாது தடுக்கப்படுகின்றது.

பின் அதே கண்ணின் நினைவு கொண்டு ஒவ்வொரு உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கும் அந்தச் சக்தியைச் செலுத்தப்படும் பொழுது அது வீரியத்தன்மை அடைந்து விடுகின்றது.

அப்பொழுது நாம் அறியாது நுகரும் வேதனை உணர்வுகள் இரத்தத்தில் கலந்தாலும் “கிட்னி அதைச் சுத்தப்படுத்தி” நல்ல உணர்வுகளை நம் உடலுக்குள் பரவச் செய்கின்றது.

அதே போன்று எல்லா அணுக்களிலும் “துருவ நட்சத்திரத்தின்” உணர்வுகளை வலுவாக்கப்படும் பொழுது உடலில் உள்ள அணுக்கள் தீமைகளை ஏற்காது அதை நீக்குகின்றது.

இப்படி ஒதுக்கும்போது
1.நமது வாழ்க்கையில் நோய் வராததும் மன வலிமையும் சிந்தித்துச் செயல்படும் தன்மையும்
2.நாம் எத்தகைய தீமையைப் பார்த்தாலும் அந்தத் தீமையின் உணர்வு இயக்காது… நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்.