மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று “ஆயிரம் முறை” சொல்லுங்கள்

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று “ஆயிரம் முறை” சொல்லுங்கள்

 

நம்மை அறியாதபடி உள் புகுந்து நம்மை கவலைப்படச் செய்வதற்கும்… நம்மை அறியாத உள் புகுந்து வேதனையான சொல்களைச் சொல்லச் செய்வதற்கும்… சந்தர்ப்பத்தால் நாம் சுவாசிக்கும் உணர்வுகளே… (குணங்கள்) காரணமாகின்றது.

அத்தகைய வேதனைகள் வளர்ந்தால் உடலில் கடும் நோயாகின்றது.

ஆனால் நாம் அதைத் தடைப்படுத்தி… மெய் ஞானிகள் உணர்வுடன் ஒன்றி… என்றும் நிலை கொண்ட நிலைகளில் அதைப் பற்றுடன் பற்றி… அந்தப் பற்றின் நிலைகள் கொண்டு ஏழாவது நிலையான ஒளியின் சரீரம் பெற முடியும்.

மறவாதீர்கள்…!
1.எந்த நோய் வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று “ஆயிரம் முறை சொல்லுங்கள்…”
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி ஏங்குங்கள்.

உங்கள் உடலுக்குள் இது பெருகப் பெருக நோயின் தன்மை குறையும். மகரிஷிகளின் அருள் சக்தியால் நோய் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.
1.உங்களை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனான உயிரை நீங்கள் கேட்டுக் கொண்டால்
2.நாம் எதைக் கேட்டோமோ அந்த உணர்வின் அலையாக அவன் (உயிர்) நமக்குள் படரச் செய்வான்
3.நம்மை அறியாத உள் புகுந்த தீமைகளை அது நீக்கும்.

மறவாதீர்கள்… மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுங்கள். உங்கள் ஈசனான உயிரிடம் வேண்டுங்கள். தீமைகளை அகற்றிட எண்ணும் பொழுது தீமைகளை அகற்றிடும் செயலாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களிடம் விளைகின்றது.

மறவாதீர்கள்…! ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சக்தி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையில் பிறவிக் கடலைக் கடந்து சென்ற அந்த மகரிஷிகளின் உணர்வைச் சேர்த்து… அதைப் பற்றுடன் பற்றி இந்த உடலே ஒளியின் சரீரமாக மாற வேண்டும்.

சிவன் இராத்திரி உயிர் உடல் பெற்ற நாள்…! அந்த உடல் பெற்ற நாள் என்றால் அந்த உடலுக்குள்ளே “நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் மறைந்தே இருக்கின்றது…”

இருளுக்குள் மறைந்த அந்த உணர்வின் ஆற்றலை அறிந்துணர்ந்து செயல்படும் அடுத்த நிலை தான் நாம் மனிதனாக வளர்ந்த நிலை. மனிதனாக வளர்ந்த நிலையில் இந்த உடலை விட்டு அகன்ற பின் உத்தராயணம்…! அது முருகனுக்கு உகந்த நாள்.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நமக்குள் மாற்றி அமைக்கும் உத்தராயண நேரத்தில் “பங்குனி உத்திரம்…” என்று அங்கே காட்டுகின்றார்கள்.

அதாவது ஆறாவது அறிவின் துணை கொண்டு ஞானிகள் சென்ற வழியில் நம் நினைவாற்றல் அங்கே சென்று இந்த உடலை விட்டு அகன்ற பின் பிறவியில்லா நிலை அடைவது தான் உத்தராயணம்.

1.இந்த உடலின் தன்மை நமக்கு நமக்கு வேண்டாம்
2.உயிருடன் ஒன்றி ஒளி நிலைகள் பெறுவதே நமக்கு வேண்டும்.

பங்குனி உத்திரம் – ஆறாவது அறிவின் துணை கொண்டு வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி மெய் ஞானிகள் உணர்வுடன் ஒன்றி மெய் ஒளியுடன் ஒன்றி மெய் ஒளியின் சரீரம் பெறும் நன்னாள்தான் அது.

“புருவ மத்தியில்…” துருவ நட்சத்திரத்தினை நிலை நிறுத்த வேண்டியதன் அவசியம் என்ன…?

“புருவ மத்தியில்…” துருவ நட்சத்திரத்தினை நிலை நிறுத்த வேண்டியதன் அவசியம் என்ன…?

 

வாழ்க்கையில் யாருக்குமே நாம் தொல்லை கொடுக்க வேண்டாம்… “சும்மா தான் இருக்கின்றேன்…” என்று சொன்னாலும் தொல்லைப்படுவரையும் கஷ்டப்படுபவரையும் வேதனைப்படுபவரையும் வெறுப்படைபவரையும் அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்காமல் இருக்க முடியாது… அந்தந்த உணர்வுகளை நுகராது இருக்கவும் முடியாது.
1.நாம் நுகர்ந்த அந்த உணர்வுகளை எல்லாம்
2.உயிரிலே பட்ட பின் தான் அதைத் தெரிந்து கொள்ள முடிகின்றது.

கண்களால் பார்க்கின்றோம் பிறருடைய செயல்களை உற்றுப் பார்க்கின்றோம். ஆனால் அவர் செயலின் உணர்வுகள் வெளி வருவதை நாம் நுகர்ந்து தான் அவர் இன்ன நிலையில் இருக்கின்றார் என்று அவர் கோபப்படுகின்றாரா.. வேதனைப்படுகின்றாரா…! வேதனைப்படுத்துகின்றாரா…? என்ற உணர்வால் அறிகின்றோம்.

இந்த உணர்வை ஈர்த்து நம் உயிர் சரியாகச் செயல்படுத்தவில்லை என்றால் “என்ன தான் நடந்தாலும் நமக்கு ஒன்றும் தெரியாது…”

வாழ்க்கையில் சிலர் மிகவும் விரக்தி ஆகி இருப்பார்கள். அப்படிப்பட்ட நிலையில் உள்ளோருக்கு…
1.எதிர்த்தாற்போல் இருக்கக்கூடிய ஒரு பொருளை அறிய முடியாது… காண முடியாது… தெரிய முடியாது… அவர்கள் சென்று கொண்டே இருப்பார்கள்.
2.வீட்டை விட்டு வெளியே வந்து விட்டால் “தன் வீடு” எங்கே இருக்கிறது…? என்று தெரியாது.
3.அவருடைய நண்பரே அருகில் வந்தாலும் அந்த நண்பரை அவரால் அறிய முடியாது… தெரியாது.

ஏனென்றால் இந்த உணர்வின் அறிவு அங்கே மழுங்கி விட்டால் இந்த உணர்வுகளை அங்கே செயலாக்குவது இல்லை. உதாரணமாக…
1.கண்களிலே பூ விழுந்தால்… அதாவது கண் கருவிழிக்குள் கருமணியில் அழுக்குகள் சேர்ந்து விட்டால் எப்படிப் பார்வை சரியாகத் தெரியாதோ இதே மாதிரி
2.நம் உயிரிலே உணர்வுகள் (நாம் சுவாசிப்பது) மோதும் இடத்தில் ஒரு “தடயம்…” ஒன்று உண்டு
3.அடிக்கடி வேதனையான உணர்வுகளை நாம் சுவாசித்தால் உயிரைச் சுற்றி அழுக்குகள் அதிகமாகிவிடும்.

அந்த அழுக்கு என்பது வேதனையின் நிலையாக உருவாவது உண்டு. அதிகமான அழுக்குகள் அங்கே சேர்ந்து விட்டால் சோர்வின் தன்மை வந்துவிடும்.

1.எதை நினைத்தாலும் அது சரியான நினைவுகள் வராது
2.என்ன செய்கின்றோம்… ஏது செய்கின்றோம்…? என்று எதையும் அறிந்து கொள்ள முடியாது (தன்னை மறந்த நிலை என்று சொல்கிறோம் அல்லவா)

இத்தகைய உணர்வு கொண்டு இந்த உயிரான்மா வெளியே சென்றால் எங்கே செல்லும்…? மனிதன் யார் மீதும் நினைவில்லை.

ஆனால் இதைப் போன்று சில உயிரினங்கள் அடிக்கடி தன்னை நினைத்து மறந்து போகும். அத்தகைய உடலைப் பெறும் நிலையாக இந்த உயிர் நம்மை அங்கே அழைத்துச் சென்றுவிடும்.

உயிர் ஒன்றுதான்… பல உடல்களாக எடுத்து எடுத்து இன்று மனிதனாக வந்தது. இருந்தாலும் “உயிர் தான் நம்மை உருவாக்கியது…” என்று மனிதனாக ஆன பின் தான் நாம் தெரிந்து கொள்கின்றோம்.

தெரிந்தாலும் அதை மதித்து ஞானிகள் காட்டிய வழியில் நாம் செயல்பட வேண்டுமா இல்லையா…?

1.புருவ மத்தியில் ஈஸ்வரா…! என்று சொல்லித் துருவ நட்சத்திரத்தைப் அடிக்கடி எண்ணச் சொல்வதன் முக்கியத்துவம் இப்போது புரிகிறதா…?
2.தியானம் செய்யும் போதும் ஆத்ம சுத்தி செய்யும் போதும் கண்ணின் நினைவு புருவ மத்தியில் இருக்க வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியை அங்கே நிலை நிறுத்த வேண்டும்.

அப்போது தான் உயிருடன் ஒன்றும் உணர்வுகள் துருவ நட்சத்திரத்தைப் போன்று ஒளியாக மாறும். நம் உணர்வுகள் தெளிவாகும்… பேரருளாக பேரொளியாக மாறும்.

இந்தப் பிறவிக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலையை அடைய முடியும்.

தீமைகளை நீக்க வேண்டும் என்றாலும் அதைப் “பகையாகக் கருதக் கூடாது…”

தீமைகளை நீக்க வேண்டும் என்றாலும் அதைப் “பகையாகக் கருதக் கூடாது…”

 

துருவ தியானத்தில் எடுக்கும் சக்தியின் துணை கொண்டு உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எங்கினால் அதை நீங்கள் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

கையில் அழுக்குப்பட்டால் நந்நீரை விட்டுக் கையைத் தூய்மைப்படுத்திக் கொள்கின்றோம்.

இதைப் போல நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலேயும்
1.பல தீமைகளைக் காணும் பொழுதும் கேட்கும் பொழுதும் இது நமக்குள் ஊடுருவி நம்மை அறியச் செய்தாலும்
2.அந்த உணர்வின் வளர்ச்சிகளை அதை நமக்குள் வளராது தடைப்படுத்தி
3.“நம்முடன் அடங்கி இயக்கச் செய்ய வேண்டும்”.

அவ்வாறு செய்ய வேண்டும் என்றால் அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் எடுத்துப் பழக வேண்டும். கடுமையான தீமைகளைப் பார்த்தாலும் ஆத்ம சுத்தி செய்து துருவ நட்சத்திரத்தின் உணர்வினை இணைத்து இந்த வலுவைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

இன்று நாம் குழம்பு வைக்கும் பொழுது காரம் புளி உப்பு என்று கலந்து தான் வைக்கின்றோம்.

காரம் புளி உப்பு ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டு அதனுடைய வீரியச் சத்தினை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதனை நாம் “பக்குவப்படுத்திச் சம அளவு கொண்டு வரும் பொழுது” சுவையாக வருகின்றது.

இதைப் போலத்தான் உலகில் இன்று கடுமையான நிலைகளும் வேதனைப்படும் நிலைகளும்… துயரப்படுத்தும் செய்திகளும்… நம்மை அறியாமலே பல நிலைகளில் வந்து கொண்டேயுள்ளது.

நாம் வாழும் காலங்களில் இத்தகைய “எதிர்மறையான உணர்வுகள்” வரும் பொழுது வெறுப்பின் தன்மை அடைந்து பிரித்திடும் தன்மையும் அந்த வெறுப்பின் உணர்வுகள் நமக்குள் வளர்ந்து விடுகின்றது.
1.அப்பொழுது நம் உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்கும்
2.நாம் நுகர்ந்த இந்த வெறுப்பின் உணர்வுகளுக்கும் இரண்டும் போராகி
3.தீமையை விளைவிக்கும் அணுக்களாக உருப்பெற்று நம் நல்ல உணர்வுகளை அழித்து விடுகின்றது.

ஆகவே இதைப் போன்ற நிலைகளிலில்லாது அவைகளை நம்முடன் இணங்கி இயக்கிடும் நிலையைச் செயல்படுத்திட வேண்டும்.

அவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்ததை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்.

எப்பொழுதெல்லாம் தீமைகளைச் சந்திக்கும் சந்தர்ப்பம் வருகின்றதோ உடனடியாகத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் நுகர்ந்து இந்த உணர்வினை இணைத்து விட்டால் இந்த எண்ணம் தான் “கல்யாணராமன்” என்பது.

1.வாழ்க்கையில் சந்திக்கும் “எத்தகைய தீமைகளையும் பகைமையாகக் கருதாது”
2.அது தனக்குள் அடங்கி தன்னுடன் இணைந்து இருக்கும்படியாக
3.குழம்புக்குள் புளிப்பும் காரமும் எப்படி இணைந்து சுவையாக உள்ளதோ
4.இதைப் போல மாற்றிக் கொள்ள முடியும்.

நாம் வாழ்க்கையில் காணும் தீமைகள் யாவையாகினும் கடும் நோயாக இருந்தாலும் நாம் பார்த்துணர்ந்து அதிலிருந்து நாம் விலகிச் செல்ல வேண்டும். இருந்தாலும்…
1.நுகர்ந்த அந்த உணர்வின் அணுக்கள் நமக்குள் விளைந்திடாது
2.அது வலுப் பெறாது துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைத்து… இணைத்து…
3.ஒவ்வொரு நொடிகளிலேயும் நாம் துருவ நட்சத்திரத்துடன் இணைத்(ந்)தே வாழ வேண்டும்.

இது தான் “வாழ்க்கையே தியானம்” என்பது.

“தியானம் எடுத்துக் கொண்டே வந்தாலும்” வேதனையும் கோபமும் வருகிறது… ஏன்…?

“தியானம் எடுத்துக் கொண்டே வந்தாலும்” வேதனையும் கோபமும் வருகிறது… ஏன்…?

 

ஒரு ரைஸ் மில்லில் நெல்லைப் போடும் பொழுது
1.அளவுக்கு மீறிப் போட்டால் அது நெல்லின் தோலைப் பிரிக்கும் சக்தி இழந்து விடுகின்றது
2.அல்லது அந்த இயந்திரத்தை இயக்க விடாதபடி தடைப்படுத்தி விடுகின்றது.

இதைப் போன்று தான் மனிதனின் சுவாசத்திலும் தீமைகளை எதிர்க்கும் சக்தி இருந்தும் அதைக் காக்க முடியாத நிலை ஆகப்படும் பொழுது…
1.தீமையின் உணர்வுகளை நாம் அடிக்கடி கேட்டுணர்ந்து இரத்தத்தில் கலந்து விட்டால்
2.அதே உணர்வுகள் நம் உடலில் தீமைகளைக் கவரும் சக்தியாக மாறிவிடுகிறது.

காரணம் இந்தத் தீமை என்ற உணர்வுகளைக் கண்ணிலே பார்த்தபின் கருவிழி நம் உடலில் முன் பாகத்தில் (நெஞ்சில்) எலும்புக்குள் ஊன் உண்டு. அதிலே பதிவாக்கி விடுகின்றது.

ஆக நாம் எதைக் கலந்தாலும் கவர்ந்தாலும் முன்னாடி குவித்து இதனின் உணர்வுகள் எதுவோ அதற்குத் தக்கவாறு இருக்கின்றது. இதில் எது அதிகமோ அந்த உணர்வின் தன்மை நமக்குள் அந்த வாழ்க்கையின் அமைப்பாக நாம் மாறி விடுகின்றோம்.
1.அதற்குத் தக்க உணர்வின் தன்மை நம் இரத்தங்களிலே மாறுகிறது
2.அது மாற்றப்படும் போது நம் உறுப்புகளும் மாற்றப்படுகின்றது.
3.தீமைகள் அதிகமான பின் கடுமையான நோய்களைச் சந்திக்கும் நிலை வருகின்றது.
4.உடலுக்குப் பின் வேதனை கொண்ட உணர்வுடனே உயிரான்மா பிரிகின்றது.
5.பின் நாம் எங்கே செல்கின்றோம்…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நமது வாழ்க்கையில் எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து வளர்ச்சியில் மனிதனாக வந்தோம். இதற்குப் பின் மீண்டும் கீழான நிலைகளுக்குச் செல்லலாமா…!

ஒரு நாயை அடிக்கிறோம்… துன்புறுத்துகிறோம்… இம்சிக்கிறோம்… என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அந்த உயிர் வெளி வரப்படும் பொழுது மனிதன் அடித்தால் மனித உடலுக்குள்ளே தான் வருகின்றது.

ஆனால் வலு கொண்ட வேறு ஒரு மிருகம் உதாரணமாக ஒரு புலி அடித்தால் நாயின் உயிரான்மா புலிக்குள் செல்கிறது.

மனிதனால் தாக்கப்பட்ட நாயின் உயிர் மனித உடலில் ஈர்க்கப்பட்டு மனித உணர்வை எடுத்து மனிதனாக உருவாக்கும் சந்தர்ப்பம் வந்துவிடுகிறது.
1.ஆகவே இந்த உயிரை நாம் மதித்தல் வேண்டும்
2.காரணம் “எல்லாமே சந்தர்ப்பத்தால் உருவாக்கப்பட்ட நிலைகள் தான்…!”

அன்றாட வாழ்க்கையில் நமக்குக் கோபம் வரலாம்… வெறுப்பு வரலாம்… வேதனை வரலாம்… சலிப்பு வரலாம்… சங்கடம் வரலாம்…! இது எல்லாம் நாம் சந்திக்கும் சந்தர்ப்பத்தால் வரக்கூடியது தான். இதையெல்லாம் நாம் தடுத்துப் பழகுதல் வேண்டும்.

அப்படித் தடுத்துப் பழகுவதற்குத் தான் ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து “ஆத்ம சுத்தி செய்யுங்கள்…” என்று சொல்கிறோம்.

அந்தச் சக்திகள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும்… தீமைகள் புகாது தடுக்கும் அருள் சக்தி கிடைக்க வேண்டும்… உங்களுக்கு அருள் ஞானம் கிடைக்க வேண்டும்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும்…! என்று வேறு எந்தச் சிந்தனையும் இல்லாதபடி நான் (ஞானகுரு) தவமிருந்து கொண்டிருக்கின்றேன்.

அவ்வாறு உங்களுக்கு அந்த அருள் சக்திகள் கிடைக்க வேண்டும் என்று செயல்படுத்திக் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் பொழுது நீங்களும்…
1.எப்போது… எத்தகைய குறைகள் வந்தாலும் அதை மறந்து ஈஸ்வரா என்று உயிரை எண்ணி
2.அந்த்த் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
3.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எல்லா உறுப்புகளுக்குள்ளும் செலுத்துங்கள்.

எங்கள் உடலில் இருக்கும் ஊனுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இணைத்து விட்டால் இதனுடன் அது அருகில் வரப்படும் பொழுது இது வலுவாகிறது. துருவ நட்சத்திரத்தின் வலு கூடுகிறது.

இதை எல்லாம் ஏன் திரும்பத் திரும்பச் சொல்கிறேன் என்றால் இன்று எல்லாமே நச்சுத்தன்மையாக இருக்கும்… கடினமாக இருக்கும் தீமைகளிலிருந்து நீங்கள் தப்ப வேண்டும். அதற்குத் தான் பதிவு செய்கின்றேன்.

நீங்கள் தியானம் எடுத்துக் கொண்டே வந்தாலும்…
1.சந்தர்ப்பத்தால் தான் எண்ணியது நடக்கவில்லை என்றால் “வேதனை…”
2.இல்லையென்றால் “கோபம்…” இதைப் போன்ற உணர்வு வந்தே விடுகின்றது.
3.நாம் தவறு செய்யவில்லை… ஆனால் இந்த உணர்வுகள் இயக்கி விடுகின்றது அல்லவா…!

காரணம்… ஏற்கனவே பதிவான நிலைகள்… அது வலிமை பெற்றது. அதனின் இயக்கங்களை இயக்கத் தான் செய்யும். அதை தடைப்படுத்த உங்களுக்குச் சக்தி தேவை.

இப்போது கொடுக்கும் சக்தியை நீங்கள் பயன்படுத்தி உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்திற்கும்
1.நான் சொல்லும் நிலைகள் கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலுவாக்கிக் கொள்ளுங்கள்
2.தீமைகள் புகாது தடுத்துக் கொள்ளுங்கள்…
3.உங்கள் பேச்சால் மூச்சால் மற்றவரையும் காக்கும் சக்தியாக வலுப் பெறுங்கள்.

இருளை அகற்றி ஒளியாக மாற்றி… பேரருள் பேரொளியாக ஆனவர்கள் தான் சப்தரிஷிகள்

இருளை அகற்றி ஒளியாக மாற்றி… பேரருள் பேரொளியாக ஆனவர்கள் தான் சப்தரிஷிகள்

 

சப்தரிஷிகள் உபதேசித்து உணர்த்திய அருள் வழி எங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க அருள்வாய் ஈஸ்வரா

சப்தரிஷிகள் எவ்வாறு தங்கள் வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை அருளாக்கிப் பேரருளாக மாற்றிப் பேரொளியாக மாறி எப்படி பிறவியில்லா நிலை அடைந்தனரோ அந்தச் சப்தரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

சப்தரிஷிகள் என்றால் யார்…?

இருளை அகற்றி ஒளியின் உணர்வினை தங்களுக்குள் சிருஷ்டித்தவர்கள் தான் சப்தரிஷிகள்.
1.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு ஏழாவது நிலைகள் பெற்று
2.ஒளியின் சரீரமாக விண்ணிலே வாழ்பவர்கள் சப்தரிஷிகள்.

அவர்கள் மனிதச் சரீரத்தில் வாழ்ந்த காலத்தில் தங்களுடைய வாழ்க்கையில் அறியாது வந்த இருளை அகற்றி அருள் ஒளி பெறும் அருள் வாழ்க்கை வாழ்ந்தனர்.

அவர்கள் தங்களிடமிருந்து வெளிப்படுத்திய அருள் உணர்வுகளை நாங்கள் பெற்று அந்த அருள் ஞான வழியினை எங்கள் கடைப்பிடிக்க அருள்வாய் ஈஸ்வரா என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டுதல் வேண்டும்.

உதாரணமாக… பலகாரங்களைச் செய்யும் பொழுது நாம் பல பொருள்களை ஒன்றாக இணைத்துச் சுவைமிக்க நிலைகளை எப்படி உருவாக்குகின்றோமோ இதைப் போன்று சப்தரிஷிகள் ஒன்றென இணைந்து உணர்வுகளைப் பேரருளாகப் பெற்றுப் பேரொளியாக மாற்றிப் பேரொளி என்ற நிலைகள் அடைந்து பிறவியில்லா நிலையாகத் தனக்குள் உருவாக்கி வளர்த்துக் கொண்டவர்கள்.

ஆகவே தான் அந்தச் சப்தரிஷிகள் பெற்ற அந்த அருள் சக்திகளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று தியானிக்கச் சொல்கிறோம்.

கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொன்னது போன்று குருநாதர் காட்டிய அருள் வழியில் இப்பொழுது நாம் எந்தச் சப்தரிஷிகளை எண்ணுகின்றோமோ நாம் அதுவாக ஆகின்றோம்.

சப்தரிஷிகள் தங்கள் வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக்கிச் சென்ற அந்த அருளைப் பெற வேண்டும் என்ற நினைவினை
1.கண்ணின் வழி கொண்டு உணர்வினை உடலுக்குள் பதிவாக்கி
2.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி
3.அந்தச் சப்தரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்கி இருங்கள்.

அவர்கள் பெற்ற பேரருளின் தன்மையை பேரொளியாக மாற்றிய உணர்வின் தன்மைகளை நாம் ஏங்கும் பொழுது
1.நமது உயிரோ அதை “ஓ…” என்ற நிலையில் அதை கருவாக்கி
2.உயிரான ஈஸ்வரலோகத்தில் சிரசின் பாகத்தில் அதன் அணுவின் தன்மையை உருவாக்கி
3.நம் இரத்த நாளங்களில் அதனின் கருவின் தன்மையாக உருவாக்கச் செய்கிறது.

அத்தகைய கருவினை நமக்குள் உருவாக்கி விட்டால் அணுவாக உருவாகும் போது
1.அதற்கு உணவு அந்த சப்தரிஷிகள் எடுத்த அருள் சக்திகள் தான்…
2.அதையே உணவாக உட்கொள்ளும் சக்தி பெறுகின்றது.

உதாரணமாக ஒருவர் வேதனைப்படுவதைப் பற்றுடன் பாசத்துடன் உற்று நோக்கி அதன் உணர்வை நாம் நுகர்ந்தறிகின்றோம்… பின் அவர்களுக்கு உதவியும் செய்கிறோம்.

நாம் உதவி செய்தாலும் நாம் நுகர்ந்த அந்த வேதனையான உணர்வுகளை ஓ…ம் நமச்சிவாய… என்று நம் உயிர் ஈசனான ஈஸ்வரலோகத்தில் அந்த வேதனையை உருவாக்கும் அணுவின் கருவாக உருவாக்குகின்றது.

அவனைப் பரிவு கொண்டு உற்று நோக்கி இப்படி அவதிப்படுகிறானே…! எண்ணும் பொழுது நாம் அதுவாக மாறிவிடுகின்றோம்.

அதைப் போன்று தான் சப்தரிஷிகள் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய அந்த அருள் ஒளியைப் பெற வேண்டும் என்று நாம் கண்களால் ஏங்கிப் பெறுதல் வேண்டும்.

சப்தரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று
1.உயிரான ஈசனிடம் ஏங்குகின்றோம்… இந்த உணர்வின் தன்மை அங்கே ஈஸ்வரலோகத்தில் உருவாக்குகின்றது.
2.நம் இரத்தங்களிலே அது இந்திரலோகமாக மாறுகின்றது
3.பின் அந்த அணுவின் தன்மை உருவாகும் பொழுது பிரம்மலோகமாக மாறுகின்றது.

சப்தரிஷிகள் அவர்கள் எப்படி இந்த வாழ்க்கையில் இருளை நீக்கிவிட்டு உணர்வை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக வாழுகின்றனரோ
1.அந்த அரும்பெரும் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
2.அந்த ஏக்கம்… நாம் அதுவாக மாறுகின்றோம்.

சாமி சொன்ன வழியைக் கடைப்பிடித்தேன்… தீமைகளை என்னால் தடுத்து நிறுத்த முடிகின்றது… என்று ஒரு இரண்டு பேர் சொல்லுங்கள் பார்ப்போம்

சாமி சொன்ன வழியைக் கடைப்பிடித்தேன்… தீமைகளை என்னால் தடுத்து நிறுத்த முடிகின்றது… என்று ஒரு இரண்டு பேர் சொல்லுங்கள் பார்ப்போம்

 

அன்றாட வாழ்க்கையில் நாம் எத்தனையோ பேருடன் பழகுகின்றோம்.
1.அவன் இப்படிச் செய்தான்… இவன் இப்படிச் செய்தான்… மோசம் செய்து விட்டார்கள்… ஏமாற்றி விட்டார்கள்
2.இவன் நல்லவனாக இருந்தான்… எல்லோருக்கும் உதவி செய்தான் ஆனால் நோயால் இப்பொழுது அவதிப்படுகின்றான் என்று
3.இப்படிப்பட்ட எத்தனையோ உணர்வுகளை நாம் நுகருகின்றோம்.

சந்தர்ப்பங்களில் இது போன்று நுகர்ந்து விட்டால் நமக்குள் என்ன நடக்கின்றது…?

இந்த உணர்வு அனைத்து நம் உடலுக்குள் சென்று அது நரகாசுரனாக மாறி நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களைக் கொன்று தின்ன ஆரம்பிக்கின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை…!

ரோட்டிலே செல்கின்றோம்… திடீரென்று ஒருவன் அங்கே அடிபடுகின்றான். அடப் பாவமே…! என்று கண்களால் உற்றுப் பார்க்கின்றோம்… நுகர்ந்து விடுகின்றோம்… பதட்டம் பயமும் வருகின்றது.

இது போன்று அன்றாட வாழ்க்கையில் நாம் எத்தனையோ விபரீத உணர்வுகளை அறிய நேருகின்றது… பார்க்க நேருகின்றது நம்மை அறியாமலே நமக்குள் பதிவாகி உடலுக்குள் வந்து விடுகின்றது.

கண்களோ இது அனைத்தையுமே நமக்குத் தெரியச் செய்கின்றது. பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றவும் செய்கின்றோம். ஆனால்
1.அப்போது நாம் எடுத்துக் கொண்ட பயமோ பதட்டமோ வேதனையோ அவை எல்லாம் உமிழ் நீராக மாறி
2.நாம் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்து இரத்தமாக மாறி அந்த இரத்தம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்குள் செல்லப்படும் பொழுது
3.அந்த நல்ல அணுக்களைக் கொல்லக்கூடிய நரகாசுரனாக மாறி விடுகின்றது
4.அதாவது… நம்மையும் வேதனைப்பட வைக்கிறது என்று காட்டுகின்றார்கள்.

அதைத்தான்
1.தீப ஒளித் திருநாளன்று கண்ணன் (நம் கண்கள்) நரகாசுரனைக் கொன்ற நாள்…! என்று காட்டி நீ விழித்திரு உடலுக்குள் தீமைகள் புகாது தடுத்து நிறுத்து என்றும்
2.விநாயகர் சதுர்த்தி அன்று தீமைகளை நிறுத்திப் பழகு என்றும்
3.இவ்வளவு அழகாக வருடத்தில் 12 மாதங்களும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த உயர்ந்த சக்திகளை எடுக்கும்படி ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

ஞானிகள் கொடுத்ததை யாராவது நாம் சிறிதளவாவது மதிக்கின்றோமா அவர் சொன்னதை நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்கின்றோமா…?

இப்பொழுது இதை எல்லாம் நான் (ஞானகுரு) சொல்லிக் கொண்டு வருகின்றேன்… எல்லாம் கேட்கின்றீர்கள். எத்தனை பேர் இதைப் பின்பற்றுகின்றீர்கள்…?

“சாமி நன்றாகச் சொன்னார்…” என்று மட்டும் சொல்லிவிட்டுச் சென்று விடுவார்கள்
1.எவ்வளவு அழகாகச் சொல்கின்றார் தெரியுமா…!
2.என்னைப் புகழ் பாடி விட்டுப் பொருள் காணாதபடி… பொருளைத் தனக்குள் வளர்க்கத் தெரியாதபடி
3.இன்றும் தியான வழியில் வருபவர்கள் இருக்கின்றார்கள்.

எங்கள் சாமி எப்படிப் பேசுகின்றார் தெரியுமா…? என்று கேட்பார்கள். ஆனால்
1.நான் கடைப்பிடித்தேன்… நான் செய்து காட்டினேன்
2.சாமி சொன்னார்… நான் செய்தேன்… என்னால் நிறுத்த முடிகின்றது… நிறுத்த முடியும்…! என்று
3.ஒரு இரண்டு பேர் நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம்…!

ஏனென்றால் யாம் சொன்னபடி நீங்கள் செய்து பழக வேண்டும். தீமையை நீக்கும் அந்தப் பழக்கத்திற்கு நீங்கள் வரவேண்டும். அன்றாட வாழ்க்கையில் அதைச் செயலுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்குத் தான் நான் “மௌன விரதம்…” இருந்தது.

என்னுடைய நோக்கமே எப்படியாவது உங்களுக்குள் அருள் உணர்வுகளைத் தூண்டி அந்த ஞானிகள் உணர்வுகளைக் கவரும் பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்பது தான்.

ஆக…
1.அறியாது வரும் தீமைகளிலிருந்து நீங்களே உங்கள் எண்ணத்தால் மாற்றி
2.உங்களுக்குள் வரக்கூடிய கெடுதலை நீங்களே தடுத்து நிறுத்திக் கொண்டே வந்தால்
3.பிறவில்லா நிலை அடைய முடியும் என்று உறுதிப்படுத்துவதற்குத் தான் இதை எல்லாம் சொல்வது.

நெற்றிக் கண்ணை நாம் திறக்க வேண்டும்

நெற்றிக் கண்ணை நாம் திறக்க வேண்டும்

 

நண்பராகப் பழகுகிறோம். சந்தர்ப்பத்தில் அவன் தீங்கு செய்தான் என்றால் கண்களால் உற்று நோக்கி அதைப் பதிவாக்கி விடுகின்றோம். அதற்குப் பின் நினைவை நாம் செயல்படுத்தப்படும் பொழுது அந்த நண்பன் அமெரிக்காவில் இருந்தாலும் பதிவான உணர்வின் அலைகள் இதே காற்றிலே தான் உண்டு… அங்கே போய் அவனை இயக்கி விடுகிறது.

நாம் உபயோகப்படுத்தும் செல்ஃபோன்களில் பட்டனை அழுத்தியவுடன் இன்னார் பேசுகிறார் என்று தெரிகின்றது… அது எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்…! அதே போன்று
1.நமது உயிர் எலக்ட்ரிக்
2.நாம் நுகரும் உணர்வுகள் எலக்ட்ரானிக்
3.நாம் பார்த்த உணர்வுகள் ஊழ் வினை என்ற வித்தாகப் பதிவாக்குகின்றது.
4.அதில் எத்தனையோ எண்ணிலடங்காத வகைகளைப் பதிவாக்கலாம்.
5.பட்டனை அழுத்திச் செல்ஃபோனை இயக்குவது போல் பதிவானது அனைத்தும் அந்தந்தச் சந்தர்ப்பத்தின் அழுத்தத்திற்கொப்ப இயக்கும்.

வேறு ஒரு நண்பன் வருகின்றான் என்னப்பா…! உன் நண்பனை அமெரிக்காவில் பார்த்தேன்… அவன் நன்றாக இருக்கின்றான் என்று நம்மிடம் நினைவுபடுத்தினால் போதும்.

அவனா… துரோகி…! எங்கிருந்தாலும் அவன் உருப்பட மாட்டான்..! என்று அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டு உடனே சொல்கின்றோம்.
1.அங்கே அமெரிக்காவில் அவன் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தால் இதே உணர்வு கிராஸ் ஆகி… சிந்தனை குறைந்து ஆக்சிடென்ட் ஆகும்
2.உணவு உட்கொண்டிருந்தால் புரை ஓடும்.
3.நடந்து சென்றாலும் மேடு பள்ளம் தெரியாதபடி கீழே விழுந்து விடுவான்.

அன்பால் பண்பால் பரிவால் நண்பன் என்று பழகுகிறோம். நமக்கு அவன் உதவி செய்தான் என்று எண்ணும் பொழுது அங்கே விக்கலாகப் பாய்கின்றது… அவனுக்கு நல்லதாகிறது.

கணவன் மனைவி பாசத்துடன் இருப்பார்கள். வீட்டிலே பையன் சொன்னபடி கேட்கவில்லை… குறும்புத்தனம் செய்கின்றான்… கணவர் வேலை பார்க்கும் இடத்தில் கஷ்டப்படுகின்றார் என்ற இத்தகைய சூழ்நிலையில்…
1.அங்கே தொல்லை படுத்துகின்றார்களே…! என்று மனைவி தன் கணவனை எண்ணினால்.
2.கணவன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தாலும் இதே பாச உணர்வு அங்கே இயக்கப்பட்டு
3.மேடு பள்ளம் தெரியாதபடி ஆக்சிடென்ட் ஆகும்…. அல்லது வாகனம் வருவது தெரியாதபடி விபத்தாகும்.

இதெல்லாம் மனிதனுக்கு மனிதன் தொடர்பு கொண்டு இயக்கும் நிலைகள்…! பாசத்தாலும் இயக்குகிறது… பகைமையாலும் இயக்குகிறது…!

இப்படி
1.நம்மை அறியாது நம் உடலுக்குள் எத்தனையோ தீமைகள் இயக்கிக் கொண்டே தான் உள்ளது
2.அதனுடைய வலிமை கொண்டு நமக்குள் எத்தனையோ வகையான நோய்களும் வந்து கொண்டு தான் இருக்கின்றது
3.அந்த நோய்களால் நமக்குள் போர் நடந்து கொண்டே இருக்கின்றது
4.அதனதன் உணர்வுக்கொப்ப புறத்திலே நாமும் போர் செய்து கொண்டே தான் இருக்கின்றோம்.

இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் மீள வேண்டுமா இல்லையா…?

மீள்வதற்குத் தான் “கோடிக்கரை…” என்ற இந்தக் கடைசிக் கரையில் இருக்கக்கூடிய நாம்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை நம் உயிரான ஈசனிடம் வேண்டி அங்கே நிலை நிறுத்த வேண்டும்.

அதைத்தான் “சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தால்… சுட்டுப் பொசுக்கி விடுவான்…!” என்று காட்டினார்கள் ஞானிகள்.

1.தீமை நீக்கும் உணர்வின் சக்திகளைக் கண்ணிலே கவர்ந்து உயிரிலே மோதச் செய்யும் பொழுது “உயிர் வழி அது கவரப்படுகின்றது…”
2.மூக்கு வழி வருவதில்லை… தீமை புகாது அங்கே தடைப்படுத்தி விடுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் சிறிது நேரம் நிறுத்தி அந்த வலுவைப் பெற வேண்டும் என்று நம் எண்ணங்களைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும்… எங்கள் உடலில் உள்ள உறுப்புகள் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலில் எலும்புக்குள் இருக்கும் ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற இந்த உணர்வின் தன்மையை உடலுக்குள் செலுத்திப் பழக வேண்டும்.

ஏற்கனவே முதலில் சொன்னது போல் கண்ணின் நினைவு காற்று மண்டலத்தின் வழி ஒருவரை ஒருவர் தாக்கி அது இயக்குவது போல்
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை உய்ரி வழி கவர்ந்து எடுத்து
2.நம் கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் பாய்ச்சி…
3.போர் முறைகளை மாற்றிச் சமப்படுத்தும் சக்தியாகக் கொண்டு வர வேண்டும்.

“இது தான் நடக்க வேண்டும்…!” என்ற குறிக்கோளுடன் உடல் இச்சைகளுக்காகத் தியானித்தால் நமக்கு வளர்ச்சி இருக்காது

“இது தான் நடக்க வேண்டும்…!” என்ற குறிக்கோளுடன் உடல் இச்சைகளுக்காகத் தியானித்தால் நமக்கு வளர்ச்சி இருக்காது

 

எனக்கு இடைஞ்சல் செய்கின்றான் பாவி…! இப்படிச் செய்தால் அவனெல்லாம் உருப்படுவானா…? என்று நமக்கு ஆகாதவனைப் பற்றி நாம் பேசுகின்றோம்.

ஆனால் மீண்டும் மீண்டும் அந்த உணர்வின் தன்மையையே எண்ணி எடுத்து வளர்த்துக் கொண்டால் இடைஞ்சல் செய்தவனின் எண்ணமே நமக்குள் தோன்றுகின்றது. அதன் அணுக்களே நமக்குள் பெருகுகின்றது.

பின் அதற்கப்புறம் ஒன்றும் சொல்ல வேண்டாம். உடலில் அது நோயாக மாறி நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றி பகைமையை உருவாக்கும் அணுக்களாக விளைய வைத்த பின் உடலை விட்டுச் சென்ற பின் எங்கே போவோம்…?
1.அவர் முன்னாடி இறந்தார் என்றால் அவர் ஆன்மா இங்கே வந்து விடும்.
2.நாம் முதலில் இறந்தால் அவருக்குள் செல்வோம்.
3.இதே உணர்வை அந்த உடலிலும் விளைய வைத்து அந்த உடலையும் வீழ்த்தும்.

அவர்களும் அதேபோல தன் நினைவு கொண்டு மற்றவர்களை எண்ணுவார்கள். அந்த ஆன்மா வேறொரு உடலுக்குள் போகும்.

ஆனால் இந்த உடலை விட்டு வெளி வந்த ஆன்மாவோ நஞ்சு கலந்த உணர்வின் அணுக்கள் எதுவோ இந்த உயிருடன் ஒன்றிய கருவின் ஆன்மாவாக மாறுகின்றது.

அடுத்து உயிராத்மாவில் சேர்ந்த மணம் எதுவோ தேளோ பாம்போ விஷமான ஜெந்துக்களோ அத்தகைய உடலுக்குள் தான் போவோம். இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

புழுவிலிருந்து பாம்பாக தேளாக மற்ற எத்தனையோ விஷ ஜந்துகளாகப் படிப்படியாக உருவாகித் தான் இன்று நாம் மனிதனானோம்.
1.மனிதனான பின் மீண்டும் விஷமான உயிரினங்களாகப் பிறக்க வேண்டுமா…?
2.சற்று சிந்தியுங்கள்.

ஆகவே உடல் இச்சைகளுக்கு எண்ணி “இது தான் நடக்க வேண்டும்…!” என்ற குறிக்கோளுடன் வந்தால் மீண்டும் சாதாரண வாழ்க்கையில் இருப்பது போன்று அந்த உணர்வுகளை வளர்த்துக் கீழே தான் போவோம்.

1.பெரும் பெரும் ஞானிகள் எல்லாம் மக்கள் மத்தியில் வந்து
2.தோல்வியைக் கண்டு வெறுப்படைந்துதான்
3.இத்தகைய (மனித) ஆன்மாக்களின் மீது பற்று இருந்தால் நம்மையும் இது இழுத்துக் கொண்டு போய்விடும் என்று
4.அவ்வாறு விலகிச் சென்ற ஞானிகள் ஏராளம்.

தீமையை அகற்றிடும் உணர்வை விளையச் செய்து அனைவரையும் ஞானியாக்க வேண்டும் என்ற இந்த எண்ணம் அந்த ஞானிகளுக்கு வரப்படும் போது தான் தகுந்த உபாயத்தைக் கொடுக்கின்றனர்.

அவருக்குள் உருபெற்ற இந்த நிலையை அவர் வெளிப்படுத்தும் பொழுது அந்த உணர்வை நுகர்வோருக்கெல்லாம் அது கிடைக்கின்றது. ஆனாலும் உடல் இச்சையுடன் இந்த உணர்வின் தன்மைகளை நுகர்ந்தால் அது எங்கே கொண்டு செல்கின்றது…?

1.உடல் மீது பற்றின் தன்மை வரப்படும் போது விண்ணின் ஆற்றலை மறக்கச் செய்கின்றது.
2.பின் நாம் எங்கே போகின்றோம்…? கீழே தான் போகின்றோம்…!
3.அப்பறம் தியானத்திற்கு வந்தால் என்ன ஆகும்….?

சிலர் நீங்கள் தியானத்தில் என்ன பார்த்தீர்கள்…? என்ன பார்த்தீர்கள்…! என்று இப்படித் தான் மற்றவர்களைக் கேட்டுக் கொண்டு இருப்பார்கள்.

சாமி (ஞானகுரு) சொன்ன வழியில்தான் இவர் நடக்கிறார்.
1.அப்படி இருந்தும் இப்படித்தான் நடக்கின்றது… ஒன்றும் நல்லதாகவில்லை…! என்று இலேசாகத் தூண்டி விட்டால் போதும்…!
2.ஆமாம்…! என்று தலையாட்டி விட்டு… தான் பெற்றுக் கொண்டிருக்கும் நல்லதைக் கெடுக்கத்தான் உதவும்.
3.ஆக அவரும் பெற முடியாது… இவரும் பெற முடியாது…!

ஏனென்றால் நான் (ஞானகுரு) இவர்களிடமிருந்து ஏதோ சக்தி பெறுவதாகத் தான் அர்த்தமாகின்றது.

எல்லோரும் மெய் ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… மெய் ஞானிகளாக வளர வேண்டும் என்ற என்ற அந்த உயர்ந்த எண்ணம் தான் எனக்குள் அது உருபெருகின்றது. அந்த ஆசையைத் தான் நான் பெறுகின்றேன்.

நாங்கள் பார்க்கும் அனைவரும் அந்த அருள் ஒளி பெற வேண்டும். நாங்கள் பார்ப்போர் எல்லாம் நலம் பெற வேண்டும்… அவர்கள் குடும்பம் நலம் பெற வேண்டும் என்ற உபதேசத்தைத் தான் கொடுக்க முடியும்.

ஞானத்தின் தன்மை விளைந்த அந்த வித்தின் உணர்வுகள் சொல்லாக வரப்படும் போது சீதா. சூரியன் எடுத்து கொண்டால் உணர்வின் அலைகளாகப் படர்கின்றது.

அதை நினைவுக்குக் கொண்டு வந்து நீங்கள் எடுக்க எடுக்க அந்த உணர்வலைகள் உங்களுக்குள் சென்று
1.உங்களுக்குள்ளும் அருள் ஞானம் பெருகும்…
2.மெய் வழியில் செல்ல முடியும். பேரானந்த நிலை பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் புருவ மத்தி வழி கூடி இழுக்க வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் புருவ மத்தி வழி கூடி இழுக்க வேண்டும்

 

ஆறாவது அறிவு கொண்ட மனிதர்கள் நாம்… காய்கறிகளை எல்லாம் வேக வைக்கின்றோம் வேக வைத்துத் தான் உணவாக உட்கொள்கிறோம். வேக வைத்து விட்டால் அந்தக் காய்கள் மீண்டும் முளைப்பதில்லை.

இதைப் போன்றுதான் நமது வாழ்க்கையில் தீமைகள் வந்தால்…
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடனடியாகச் சேர்த்து
2.அந்தத் தீமைகளைப் பலவீனப்படுத்திப் பழகுதல் வேண்டும்

இதைத் தான் இராமன் வாலியை மறைந்திருந்து தாக்கினான்…! என்று இராமாயணத்தில் தெளிவாகக் காட்டுகின்றார்கள்

எத்தனையோ கோபம் ஆத்திரம் குரோதம் வெறுப்பு பயம் வேதனை இவைகளெல்லாம் நாம் அன்றாடம் சந்திக்க நேர்கிறது. இதற்கு வாலி என்று பெயர்.

அத்தகைய குணங்கள் நமக்குள் வந்த பின் அதனுடைய வலிமையைக் காட்டிவிடும்… அப்போது நம் நல்ல குணங்கள் செயல் இழந்துவிடும்.

எப்படி…?

சந்தோஷமாகத் தான் நாம் இருப்போம்… ஆனால் வேதனைப்படும் செயல்களைப் பார்த்து விட்டால் அந்தச் சந்தோஷம் அங்கே இழக்கப்படுகின்றது.

அதே போல் ஒரு கோபப்படுவரைப் பார்த்தவுடன் அந்தச் சந்தோஷம் மாறி அது வாலியாகி அதனின் உணர்வாக நம்மை மாற்றிவிடுகிறது.

இராமன் குகை மேல் இருக்கக்கூடிய பாறையை அம்பால் எய்து அந்த வாலி வெளியே வராதபடி அந்தக் குகையின் வாசலை அடைத்து விடுகின்றான். அப்போது வாலியின் செயல்கள் தடுக்கப்படுகின்றது.

ஆகவே… நம் வாழ்க்கையில் தீமை வந்தால்
1.நமது எண்ணத்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்று
2.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்து தீமையான உணர்வை அடைத்துப் பழகுதல் வேண்டும்.

உயிரிலே பட்டால் தான் இயக்கும்.

உதாரணமாக நெருப்பு எரிந்து கொண்டிருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம்… காற்றடிகிறது. தவறிப்போய் அந்த நெருப்பிலே ஒரு மிளகாய் விழுந்தால் என்ன செய்யும்…?
1.நெருப்பிலே பட்டபின் நெடி வரத்தான் செய்யும்
2.நம்மை அறியாமலே தும்மலும் வரத்தான் செய்யும்.

அதைப் போன்றுதான்
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டால் அது அதனின் உணர்ச்சிகளை ஊட்டியேவிடும்.
2.தீமையான உணர்வுகள் பட்டால் அதை உயிர் இயக்கிவிடும்…
3.தெரியாமல் பட்டாலும் அதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டுமா இல்லையா…?

அதற்குத்தான் அவ்வப்பொழுது உங்களுக்குத் தியானப் பயிற்சியாகக் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.

தீமை என்று பார்த்தாலும் நாம் அதை நுகர்கின்றோம்… நுகர்ந்த பின் அதை அறியவும் முடிகின்றது. அறிந்தாலும் உயிரிலே பட்டு உடலுக்குள் சென்றால் கடுமையாகும்.

குழம்பிலே அளவுடன் மிளகாயைப் போட்டால் ருசியாக இருக்கின்றது காரம் அதிகமாகி விட்டால் அதனுடைய உணர்ச்சிகளைத் தூண்டுகிறது… எரிச்சலாகிறது.

இதைப் போன்று தான் அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் கோபமோ குரோதமோ வெறுப்போ பயமோ வேதனையோ உயிரிலே பட்ட பின் அறிந்து கொள்கின்றோம்.

அறிந்தாலும்…
1.உடனே அடுத்த கணம் நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இடைமறித்து அதை நீக்கிப் பழகுதல் வேண்டும்.
3.புருவ மத்தி வழி கூடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இழுக்க வேண்டும்… உயிர் வழி…! (இது முக்கியமானது),

இவ்வாறு தீமைகளை அடைத்துப் பழகுதல் வேண்டும் ஏனென்றால் நுகர்ந்த உணர்வு உயிரிலே பட்டுத் தான் இந்த உணர்ச்சிகள் உடலுக்குள் செல்லும்.

ஆனால் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து… உயிருடன் ஒன்றி…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று அதன் வழி இழுத்தால்
2.அங்கே புருவ மத்தியில் வலு கூடுகின்றது
3.அடுத்து அதே நினைவினைக் கண்களை மூடி உடலுக்குள் செலுத்தினால் மிகவும் ஆற்றல்மிக்கதாக மாறுகிறது.

கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் நாம் செலுத்த வேண்டியது:-
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் சக்தி படர வேண்டும்
3.எங்கள் கண்களில் உள்ள கருமணிகளில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்
4.எங்கள் நரம்புகள் முழுவதிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
5.எங்கள் உடலில் உள்ள எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள்ளும் ஊனை உருவாக்கிய அணுக்களுக்குள்ளும்ம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று
6.”ஒரு நொடிக்குள்…” இந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்தி விட்டால்
7.நாம் நுகர்ந்தறிந்த தீமை உடலுக்குள் அணுவாக உருவாவதற்கு முன் இது மாற்றிக் கொண்டு வருகிறது.

நண்பனாகப் பழகுகிறோம்…! இருந்தாலும் சந்தர்ப்பத்தில் பகைமையாகி விடுகிறது. திடீரென்று அந்த நண்பன் நினைவு வந்தது என்றால் அவன் அமெரிக்காவில் இருந்தாலும் “துரோகம் செய்தான் பாவி… எங்கிருந்தாலும் உருப்பட மாட்டன்,,,!” என்று நம் கண்ணின் நினைவைப் பாய்ச்சினால் அது உடனடியாகப் போய் அவனைத் தாக்குகிறது.

அதே போன்று தான்
1.துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எண்ணி எடுத்து
2.நம் கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் அதைப் பாய்ச்சி விட்டால்
3.அதாவது தீமையை நுகர்ந்த அந்தச் சந்தர்ப்பத்திலேயே இதைப் பெருக்கி விட்டால்
4.விஷமான உணர்வுகளையோ தீமையான உணர்வுகளையோ வெளியிலிருந்து அது இழுக்கும் சக்தி குறையும்
5.உடலுக்குள் அத்தகைய அணுக்கள் இருந்தாலும் அதற்குண்டான ஆகாரம் கிடைக்காதபடி தடையாகும்
6.புறத்திலே குழம்பை நாம் சுவையாக்கிக் கொண்டு வந்தது போன்று சுவை மிக்க உணர்வாக நமக்குள் படைக்க முடியும்.

செய்து பாருங்கள்…!

துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஆசைப்பட்டு நுகர வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஆசைப்பட்டு நுகர வேண்டும்

 

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்.

கண்ணின் நினைவைப் “புருவ மத்தியில் வையுங்கள்…” துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று மெதுவாகக் கண்களை மூடுங்கள்.

1.உயிரான ஈசனிடம் வேண்டி உங்கள் நினைவனைத்தும் உயிருடன் இணைக்கப்படும் பொழுது
2.மூக்கின் வழி செல்லாதபடி புருவத்தின் வழி காந்தத்தால் ஈர்த்து உங்களுக்குள் அந்த உயிர் உணர்வின் ஒளி அலைகளாக மாற்றும்.
3.இப்பொழுது அந்த ஈர்க்கும் சக்தி புருவ மத்திக்கே வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உயிரிலே வைத்து… உயிரான ஈசனிடம் வேண்டி…
1.துருவ நட்சத்திரத்தின் பால் உங்கள் முழுமையான எண்ணத்தைச் செலுத்தி
2.அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இச்சைப்படுங்கள்… ஆசைப்பட்டு அதை நுகருங்கள்.

இவ்வாறு இச்சைப்பட்டு நாம் நுகர்ந்த உணர்வுகள் நம் உடலில் பிரம்மம் ஆனால் பிரம்மகுரு வசிஷ்டரின் மனைவி அருந்ததி…! அந்தச் சக்தியாக நமக்குள் நல்லதை வளர்க்கும் சக்தி பெறுகின்றது.

கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வையுங்கள். உயிருடன் ஒன்றிய உணர்வை துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து அதிலுள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை இரத்தநாளங்களில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

நுகர்ந்தது ஜீவ அணு… ஜீவான்மா…! “ஜீவான்மா…” என்பது இன்னொரு மனிதன் மேல் நாம் பிரியப்பட்டு இருந்தால் “இறந்த பின் அந்த ஆன்மா…” நம் உடலுக்குள் வந்தால் அது இரத்தத்தில் தான் இருக்கும்.

இரத்தத்தின் வழி உணர்வை எடுத்துத் தான் அந்த அணுக்களும் வளரும்.
1.உயிர் பாகம் செல்லும் பொழுது அதன் உணர்ச்சிகளை உந்தி அது உணவாக எடுத்துக் கொள்ளும்…
2.நமக்குத் தீங்கு விளைவிக்கும்.

ஆகையினால் நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்களும் அந்த அருள் உணர்வுகள் பெற நாம் தியானிக்க வேண்டும்.

நண்பனை உற்றுப் பார்த்து அவரை நமக்குள் பதிவு செய்திருந்தால் இறக்கும் போது இறந்ததைப் பாசத்துடன் கண்களால் கவர்ந்திருந்தால் நம் இரத்தத்திற்குள் அது தேங்கி இருக்கும்.
ஆக… ஜீவான்மாக்கள் எதுவாக இருப்பினும் அந்த ஆன்மாக்களுக்கு மாற்றத் தெரியாது. அதனால் மாற்ற முடியாததை துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தத்தில் இருக்கும் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை இரத்த நாளங்களில் செலுத்த வேண்டும்.
1.இவ்வாறு செயல்படுத்தினால் அந்த ஜீவான்மாக்களும்
2.ஒளியின் உணர்வாக மாறும் தகுதி பெறுகின்றது.

இப்படித் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் சேர்த்துச் சேர்த்து ஒளியின் அறிவாக இயக்கும் அந்த உணர்வை நம் கண்களால் செலுத்தப்படும் பொழுது நல்ல கருக்களாக இரத்தத்தில் உருவாகும்.

இப்பொழுது…
1.உங்கள் உடலில் மின்சாரம் பாய்வது போன்று
2.இரத்த நாளங்களில் மிக சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் கலக்கும்
3.மகிழ்ச்சியூட்டும் உணர்வாக உங்களுக்குள் வளரும்.

ஆனால் ஒரு சிலருக்குத் தீமை என்ற உணர்வு உடலில் இருந்தால் அது அடங்கும் பொழுது அதனால் கொஞ்சம் சோர்வடையும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் பித்த சுரப்பிகளில் படர வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
1.“விஷத்தைத் தணித்திடும் அருள் சக்திகளை நமக்குள் பெருக்க முடியும்…”
2.நாகன் விஷத்தைப் பாய்ச்சித் தன் உணர்வை எடுத்து வளர்த்து நாகரத்தினமாக எப்படி மாற்றுகின்றதோ
3.அது போல் நம் உடலில் உள்ள அணுக்களை ஒளியாக மாற்ற முடியும்.

விஷம் இல்லையேல் ஜீரணம் இல்லை…. ஆனால் விஷம் அளவுக்கு அதிகமானால் உடலில் இருக்கக்கூடிய அணுக்களும் நஞ்சாக மாறி விடுகின்றது.

ஆகவே விஷத்தை மாற்றிடும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் பித்த சுரப்பிகளிலே செலுத்தப்படும் பொழுது அது சம அளவாகிச் சாந்தமான அணுக்களாக நல்ல ஜீரணமாக்கும் சக்தி பெறுகிறது.

இதே போல் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று உங்கள் எண்ணங்களைச் செலுத்துங்கள்.

நோய்களை நீக்க விஞ்ஞானிகள் மருந்தைத் தயார் செய்து அதை இரத்தத்தில் தான் கலக்கச் செய்கின்றனர்
1.ஆனால் நோயின் வீரியம் அதிகமாகி விட்டால்
2.நரம்புகளிலே… அந்த வாயு மண்டலங்களிலே அதாவது உடலை இயக்கக்கூடிய நரம்புகளுக்குள்ளேயே மருந்தினைப் பாய்ச்சி விடுவார்கள்.

அதே போன்றுதான் உங்கள் உடலில் இருக்கக்கூடிய உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று ஏங்கி உங்கள் கண்ணின் நினைவினை உறுப்புகளுக்குள் செலுத்துங்கள்.

உங்கள் உடல் உறுப்புகளில் ஒரு அற்புதமான உணர்ச்சிகள் வருவதை உணரலாம்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உங்கள் உடலில் அற்புதங்களைச் செயல்படுத்தும்.
2.அந்த அற்புத உணர்வுகள் உங்கள் உடல் உறுப்புகளில் படர்ந்து
3.உடலில் இருக்கக்கூடிய விஷத்தன்மை தணிந்து மகிழ்ச்சியூட்டும் உணர்வின் அணுக்கள் விளைய இது உதவும்.

இப்பொழுது உங்கள் உடலிலே புது விதமான உணர்ச்சிகள் பரவும். உடல்களிலே வலியோ… எலும்புகளில் வலியோ… மூட்டுகளில் வலியோ… சிரசில் வலியோ குறையத் தொடங்கும்… வேதனைகள் நீங்கும்.

உடலி இருக்கக்கூடிய நரம்புகள் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரும் பொழுது அதிலிருக்கக்கூடிய குறைபாடுகள் குறைந்து அருள் உணர்வுகள் பெருகும்.

1.அழுக்குகளை அகற்ற நந்நீரை விடுவது போன்று
2.கண்ணின் நினைவை எல்லா உறுப்புகளிலும் செலுத்தி
3.உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாக எடுக்கும் ஒரு பழக்கமாகக் கொண்டு வர வேண்டும்.