
தியானம் தான் செய்கிறேன்… “எனக்கு மட்டும் ஏன் கஷ்டம் வருகிறது…? என்ற எண்ணம் சரியா…!”
நான் தியானம் பண்ணிக் கொண்டே இருக்கின்றேன்… என் வீட்டுக்காரர் இப்படித் திட்டுகின்றார்.
நானும் தியானம் பண்ணிக் கொண்டே இருக்கின்றேன். கொடுத்த கடன்காரன் கொடுக்கவே மாட்டேன் என்கிறான் என்று விட்டுவிட்டால் என்ன்வாகும்…? இது எல்லாம் சவாரி பண்ணி விடும்.
தியானம் பண்ணிக் கொண்டே இருக்கின்றேன்… நோய் வந்துவிட்டது என்று நினைத்தால் இதை (சக்தி எடுப்பதை விட்டுவிட்டு அதை (நோயை) எடுத்துக் கொள்கிறீர்கள்.
1.கெட்டதுக்குத்தான் நீங்கள் சக்தி வளர்க்கின்றீர்கள்.
2.ஆக எதற்கு ஜீவன் ஊட்டுக்கின்றீர்கள்…? எண்ணங்கள் எதில் வருகின்றது…?
நம்முள் உள்ள அணுக்கள் அதற்குண்டான பசியைத் தூண்டும் பொழுது நல்லதை எடுக்க விடாமல் தடுக்கின்றது.
அந்த மாதிரி தடுக்கின்ற நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்…? ஆன்மாவைச் சுத்தப்படுத்திப் பழக வேண்டும்.
“ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும். என் உடல் முழுவதும் படர வேண்டும். என் ஜீவான்மா பெற வேண்டும் என்று
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலை உருவாக்கிய அணுக்களுக்கு நல்ல உரமாகக் கொடுத்து
2.அந்த ஞானத்தை நாம் பெருக்க வேண்டும்.
3.அப்போது தீமையான உணர்வு நமக்குள் போகாமல் தடுக்க முடியும்.
இப்படிச் சுத்தப்படுத்த வேண்டும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.