தியானம் செய்யச் செய்ய “ஒவ்வொரு நிமிடமும்… நம்மை எது இயக்குகிறது…?” என்று அறிந்து கொள்ள முடியும்

தியானம் செய்யச் செய்ய “ஒவ்வொரு நிமிடமும்… நம்மை எது இயக்குகிறது…?” என்று அறிந்து கொள்ள முடியும்

 

மனிதனின் வாழ்க்கையில் தொழிலில் முன்னேற்றம் அடைந்தால் “அது சந்தர்ப்பம் தான்…”

ஆனால் வளர்ச்சி அடையும் பொழுது நான்கு பேர் வந்து ஏதாவது ஆசையைக் காட்டியோ அல்லது நம் மீது வெறுப்பாகிக் கேவலமாகப் பேசும் நிலையோ வந்தால் அந்தச் சந்தர்ப்பம் நம் நினைவுகள் அனைத்தும் அவன் மீது சென்றுவிடுகிறது.

அந்தச் சந்தர்ப்பம் என்ன செய்கிறது…?
1.அவன் மீது கோபம் வெறுப்பு உண்டாக்குகிறது.
2.நம் தொழிலைச் சீராகப் பார்க்க முடியாது போய் விடுகிறது
3.நல்ல குணங்களையும் பாதுகாக்க முடியாது போய் விடுகிறது.

வேதனை என்ற உணர்வுகளை உடலில் அதிகமாகச் சேர்த்த பின் நல்ல அணுக்கள் மயக்கப்பட்டு விடுகின்றது சிந்திக்கும் வலிமை இழந்து விடுகின்றது

இந்த உணர்வுகள் அதிகமாகி இருதயம் பலவீனம் ஆகிறது. இருதயம் பலவீனமான பின் அடுத்து எதையுமே வலுவாக எண்ண முடியாது போய் விடுகிறது.

இப்படி வரக்கூடிய நிலைகளை மாற்றுவதற்குத் தான் உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலு ஏற்றும்படி சொல்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
1.முதலில் கண்ணின் நினைவை உயிரான ஈசனிடம் செலுத்த வேண்டும்.
2.உயிரான ஈசனிடம் வேண்டி… துருவ நட்சத்திரத்தின் சக்தியை அதன் வழி ஈர்க்கும் தன்மையாகக் கொண்டு வர வேண்டும்.

பின் கண்ணின் நினைவை உடலில் உள்ள இரத்தங்களிலே செலுத்தி இரத்தம் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இரத்தத்தில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும்… உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று எண்ணிப் பழக வேண்டும்.

அதற்குப் பின் சிறு குடல் பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
1.கொஞ்சம் கொஞ்சமாக உறுப்புகளுக்கு அந்தச் சக்தியை வலு சேர்க்கும் ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.
2.ஏனென்றால் எல்லா உறுப்புகளுக்கும் உடனடியாக அதை எடுக்கக்கூடிய பவர் கொடுக்கின்றோம்.

உணவாக உட்கொள்ளும் சாப்பாட்டுடன் சேர்த்த கொழுப்புச் சத்து சக்கரைச் சத்து உப்புச் சேர்த்து அதை பிரிக்கும் தன்னை பெற்றது நம்ம்ய்டைய கணையங்கள்.

ஆனால் அது சரியாகப் பிரிக்கவில்லை என்றால் கொழுப்புச் சத்து இரத்தத்துடன் கலந்து… இரத்தக் குழாய்கள் எல்லாம் அடைத்து விடுகின்றது.

சர்க்கரையும் உப்பையும் சீராகப் பிரிக்கவில்லை என்றால் உறுப்புகள் பலவீனம் அடைந்து விடுகிறது வலுவான அணுக்களாக இருந்தால் அதையெல்லாம் சீராகப் பிரிக்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கணையங்கள் முழுவதும் படர்ந்து அது சீராகப் பிரிக்கும் சக்தி பெற வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.

குளத்தில் இருந்து எடுக்கக்கூடிய தண்ணீரை பெரிய கற்கள் அப்புறம் சிறிய கற்கள் அப்புறம் குறு மணலைப் போட்டு வடிகட்டிச் சுத்தமான நீராகக் கொண்டு வருவது போல் தான் நம் கல்லீரலின் இயக்கமும்.

நாம் சாப்பிடும் ஆகாரம் கணையங்களில் இருந்து வடிகட்டி வரும் ரசத்தைக் கல்லீரல் மண்ணீரல் பிழிந்து வடிகட்டி நல்ல இரத்தமாக மாற்றுகின்றது. அது சீராக வடிகட்ட துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலு ஏற்றிக் கொடுக்க வேண்டும்.

1.சுவாசித்தது… நுரையீரலில் எது படுகின்றதோ
2.”அந்த மூச்சு” அதற்குத் தகுந்த மாதிரித் தான் வெளியில் இருந்து இழுக்கும்.

வேதனை வெறுப்பு எல்லாம் சுவாசத்தின் வழி வந்தது என்றால் கல்லீரல் மண்ணீரலைத் தாண்டி நுரையீரலுக்கு வந்தால் “படக்..படக்…” என்று அடிக்கும்.

அப்பொழுது மூச்சுத் திணறலாகும்…! காரணம் நாம் “சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம்” ஒரு நண்பர் வந்து… என் பையன் சொன்னபடி கேட்காமல் சேட்டை செய்கின்றான்… தொழிலில் என்னை ஏமாற்றுகிறார்கள்… உடம்பு சரியில்லை… என்று அவர்கள் கஷ்டத்தை எல்லாம் சொல்லட்டும்.

அதை எல்லாம் உ..ம் கொடுத்துக் கேளுங்கள். அடுத்த உங்கள் மனதில் என்னென்னவெல்லாம் ஓடுகிறது…? என்று பாருங்கள்.
1.தியானத்திற்கு முன்னாடி இதெல்லாம் தெரியாது
2.தியானத்தில் இப்பொழுது உணர முடியும்… நம்மை எது இயக்குகின்றது…? என்று அறிந்து கொள்ளலாம்.

நண்பர் தன் கஷ்டத்தைச் சொல்கிறார்கள் என்றால் உடனே சுதாரித்து… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடனே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

இந்தப் பழக்கம் அவசியம் நமக்கு வரவேண்டும்.

1.மேலே அழுக்குப் பட்டபின் குளித்துச் சுத்தமாக்குவது போன்று…
2.துணியில் உள்ள அழுக்கைச் சோப்பை போட்டு நீக்குவது போன்று
3.ஆன்மாவில் உள்ள அழுக்கை நாம் தூய்மைப்படுத்தி ஆக வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் உடல் உறுப்புகள் எல்லாவற்றிலும் வலு ஏற்றி நம்மை அறியாது உட்புகும் அசுத்தங்களை வடிகட்ட வேண்டும்.

நம் எண்ணம் சொல் செயல் தூய்மை பெறும்… வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். உடலுக்குப் பின் பிறவியில்லா நிலையும் அடைய முடியும்.

தீமையை நீக்கிய அனுபவங்கள் இல்லையென்றால் தியானத்தைச் செய்து பலனில்லை

தீமையை நீக்கிய அனுபவங்கள் இல்லையென்றால் தியானத்தைச் செய்து பலனில்லை

 

படித்ததை மட்டும் வைத்துக் கொண்டு இன்ஜினியர் வேலை பார்த்தால் அவர் காரியத்திற்கு ஆகாது. அனுபவ சித்தி அவசியம் வேண்டும்.

அதைப் போன்று தான் யாம் சொன்னதை எல்லாம் வெறும் பாடமாக வைத்துக் கொண்டு “சாமி சொன்னார்…!” என்று மட்டும் எண்ணக் கூடாது.

உபதேசிப்பதை எல்லாம் முதலில் ஆழமாகப் பதிவு செய்து ஞாபகத்தில் வைத்து… அதை உங்களுக்குள் வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.
1.சந்தர்ப்பத்திலே குறைபாடுகள் எப்படி வருகின்றது…? என்று அறிந்திடும் அந்த அனுபவம் வேண்டும்.
2.யாம் சொன்னதை எடுத்துப் பயன்படுத்தி அந்தக் குறைகளை மாற்றி அமைக்கக்கூடிய அனுபவம் பெற வேண்டும்.
3.”எது வந்தாலும்” அடுத்த கணமே மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து… நல்லதாக வேண்டும் என்று அதைத் தூய்மைப்படுத்தி…
4.அப்படித் தூய்மையாக்கிய அனுபவங்கள் கட்டாயம் வேண்டும்.

படித்துப் பட்டம் பெற்ற இன்ஜினியர் என்றாலும் அனுபவம் இல்லை என்றால் படித்த பாடத்தால் பலன் இல்லை. மருத்துவர்களாக வருபவர்கள் முதலிலே மருத்துவம் பற்றியதை முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்கின்றார்கள்.

படித்த படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு “நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது…” அவர்களுக்கு அனுபவத்திற்கு என்று தனியாகப் பயிற்சி கொடுப்பார்கள்.

ஏனென்றால் ஒருவருக்கு ஒரு நோய் இருக்கிறது என்றால் படித்ததன் பிரகாரம் மட்டும் மருந்து கொடுக்க முடியாது. காரணம்…
1.அவர் உடலில் மற்றொரு உபாதை இருக்கும்…
2.அதற்கு இந்த மருந்து எதிர்ப்பதம் ஆகிவிடும்.

அதாவது ஒருவருக்கு ஆஸ்த்மாவும் இருக்கும்… இரத்தக் கொதிப்பும் இருக்கும். ஆஸ்துமாவுக்கு மருந்து கொடுத்தால் இரத்தக் கொதிப்புக்கு ஆகாது. இரத்தக் கொதிப்புக்கு மருந்து கொடுத்தால் ஆஸ்துமாவுக்கு ஒத்துக் கொள்ளாது.

மீண்டும் அவருக்கு நோய் அதிகமாகும்… வேதனையாகி பாதிப்புகள் அதிகமாகும்.

ஆனால் இது இரண்டையும் சமப்படுத்தும் நிலையாக
1.அதற்கு எப்படிப்பட்ட மருந்து கொடுக்க வேண்டும்…? என்று அந்த மருத்துவர் சிந்தனை செய்து
2.தன்னுடைய அனுபவத்தால் செயல்படுத்தி இரண்டையும் சீராக்கினால் தான் அவரை உடல் நலம் பெறச் செய்ய முடியும்.

ஆனால் “இன்ன நோய்க்கு… இன்ன மருந்து தான்” கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருப்பார்கள். அந்த ஆஸ்துமாவிற்கு என்று அவர் தனித்து மருந்து கொடுத்தால் சீராக வராது இரத்தக் கொதிப்புக்குக் குளிர்ச்சியான நிலை உருவாக்கும்படி செய்தால் ஆஸ்துமாவுக்கு அதிகமாகிவிடும். கர்…புர்… என்று இழுத்துக் கொண்டிருக்கும்.

அப்பொழுது எந்த நோயை நீக்குவது…?

ஆகவே அனுபவரீதியிலே இதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்று சிந்தித்து
1.ஆஸ்துமாவுக்குக் குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த உஷ்ணத்தை மேலே ஏற்றி
2.அதனுடன் இரத்தக் கொதிப்பிற்கு குளிர்ச்சிக்குண்டானதைக் கொடுத்துச் சமப்படுத்திக் கொண்டு வந்தால் இரண்டும் சமமாகும்.
3.ஆஸ்துமாவையும் குறைக்கும்… இரத்தக் கொதிப்பையும் குறைக்கும்.

ஆனால் சமப்படுத்த முடியாத மருந்தைக் கொடுத்தால் அது வேலையாகாது. குளிர்ச்சியைக் கொடுத்துத்தான் கொதிப்பை அடக்க முடியும். ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதமான செயலாக்கங்கள் வரும். அதனுடைய செயலாக்கங்களை அறிந்து அனுபவரீதியிலே கொண்டு வர வேண்டும்.

அதற்குத்தான்…
1.எம்முடைய (ஞானகுரு) அனுபவத்தை உபதேச வாயிலாக உங்களிடம் சொல்கின்றேன்.
2.அனுபவத்தைச் சொல்லி எந்த நிமிடத்தில்… அந்தக் குறைகள் எப்படி உங்களை இயக்குகின்றது…? என்றும்
3.அதை மாற்றி அமைக்க ஈஸ்வரா… என்று உங்கள் உயிரை எண்ணி அருள் சக்திகளை அங்கே நிலை நிறுத்தி
4.உங்கள் உடலுக்குள் அதை வலுவாக்க வேண்டும் என்று வாக்கினால் அதைப் பதிவு செய்கிறேன்.

அந்தப் பதிவை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வர வேண்டும். இப்படி நான் சொன்னதை எல்லாம் நீங்கள் கடைப்பிடித்து…
1.நான் செய்தேன் என்று செயல்படுத்தி அனுபவபூர்வமாக ஒவ்வொன்றாக்க் கொண்டு வந்தால்
2.அதன் வழி தான் இதை மாற்றியமைக்கக்கூடிய நிலையைக் கொண்டு வர முடியும்.

தொழிற்சாலையிலும் சரி… ஒரு இயந்திரத்தைச் சீராக்குவதிலும் சரி… அதைப் பற்றி அனுபவரீதியாகத் தெரிந்த பிட்டர்கள் (FITTER) இருப்பார்கள். படித்தவர்களைக் காட்டிலும் அவர்கள் அனுபவ அறிவு கொண்டவர்கள்.

ஆனால் இன்ஜினியரோ நான் சொன்னபடி செய்ய வேண்டும் என்று சொல்லலாம். அதன்படி செய்தும் விடலாம் ஆனால் அந்த இயந்திரம் வேலை செய்யும் போது அங்கே தேய்மானம் ஏற்பட்டு விடுகிறது.

தேய்மானம் ஆகும் போது அங்கிருக்கும் பிட்டருக்கு அதை பற்றி அனுபவம் இருக்கிறது. இந்த இடத்தில் சாய்வாக இருக்கின்றது… சமமாக்கி நேராக்கினால் தேய்மானம் ஆகாது… சரியாகிவிடும் என்று அவன் சொல்கிறான்.

ஆனால் படித்தவன் நான் சொல்கின்றேன்..! பிட்டர் நீ இந்த மாதிரிச் சொல்கிறாயே என்று இஞ்சினியர் சொன்னால் சரியாக வருமா…?

சில பேர் இப்படித்தான் நான் எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கின்றேன்… தியானம் எல்லாம் கற்றுக் கொண்டிருக்கின்றேன். குண்டலினி யோகா செய்திருக்கின்றேன் என்றெல்லாம் சொல்வார்கள்.

1.ஆனால் “அந்த நுணுக்கம்…” எதிலிருந்து வருகின்றது…? என்று இல்லாதபடி சொன்ன பாடத்தை ஒப்படைக்கின்றார்கள்.
2.எப்படி மாற்றிக் கொண்டு வருவது…? என்பதை ஒதுக்கி அதை விட்டு விடுகிறார்கள்.

படித்தவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள். படிக்காதவர்கள் தியானத்தைப் பற்றிச் சொல்லும் பொழுது நான் எத்தனையோ படித்திருக்கின்றேன் எனக்கு எல்லாம் தெரியும் என்னிடம் வந்து நீ சொல்கின்றாயா…? என்று சொல்வார்கள்.

இப்படிச் சொன்னால்
1.படிக்காதவர் கண்டுபிடித்துச் சொன்னதை
2.படித்தவர் அறிய முடியாது போய்விடும்.

இது எல்லாம் இயற்கையின் நியதிகள்.

(அந்த உணர்வின் தன்மை கொண்டு உணர்ச்சிகள் கொண்டு செய்தோம் என்றால் அது பக்குவமாகும்).

வீட்டில் வடை சுடுவார்கள். எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லிக் கொண்டு நாமும் சொல்லலாம் அட.. அடுப்பில் சட்டியை வைத்து எண்ணை காய்ச்சுகிறார்கள்… மாவைத் தட்டிப் போடுகிறார்கள்… அவ்வளவு தான்…! என்றும் நினைக்கலாம்.

தண்ணீரைத் தெளித்து அவர்கள் எண்ணையின் சூட்டைக் கணிப்பார்கள் அது சுய்… என்று சப்தமிடும். ஓ… இவ்வளவுதானா…! என்று இவர்களும் அதே போன்று செய்து பார்க்கும் போது சுய்… என்று சப்தமிடும்.

1.ஆனால் அந்தச் சப்தத்தின் வித்தியாசங்கள் அவர்களுக்குத் தெரியும்
2.எந்த அளவிற்கு எண்ணெய் காய்ந்திருக்கிறது என்று…!

அதற்குத் தகுந்தது போன்று அவர்கள் மாவை பிசைந்து கொண்டே இருப்பார்கள். அல்லது மற்ற வேலை செய்வார்கள் அதற்குப்பின் இந்த வடையைப் போடுவார்கள். சமமாக அவர்கள் 10 வடையைப் போட்டர்கள் என்றால் அந்தப் பத்திற்கும் சூடு சரியாக இருக்கும். வெந்து சீராக வரும்… ருசியாகவும் இருக்கும்.

ஆனால் புதிதாக வடை சுடுபவர்கள் தட்டிப் போட்டால் ரெண்டு அல்லது மூன்று வடையைப் போட்டதும் எண்னையிலிருக்கும் சூட்டை எல்லாம் அது எடுத்துக் கொள்ளும். அடுத்து வடையைத் தட்டிப் போட்டால் சரியாக வேகாது. எண்ணை எல்லாம் மாவிற்குள் புகுந்து விடும்… எண்ணெய் காணாது போய்விடும்.

ஆனால் அனுபவம் பெற்றவர்கள் சுட்டுப் போட்டால் வடையில் எண்ணெய் இல்லை… வடை மொறு மொறு என்று ருசியாக இருக்கிறது.

ஆனால் அவர்கள் சுட்டதில் எண்ணை இருக்கிறது. மாவாக இருக்கிறது என்று சூட்டைக் கூட்டினால் மேலே கருகிவிடும். ஐய்யய்யோ கருகிவிட்டதே என்று எடுத்தால் இந்தப் பக்குவம் தவறும் போது என்ன ஆகிறது…? சாப்பிட்டால் ருசி இல்லை.

காரணம் அந்தப் பக்குவம் தெரிய வேண்டும்…!

ஆக எதுவுமே… ஒரு சிறியதாக இருந்தாலும் எல்லாவற்றிலும் அந்தப் பக்குவம் வேண்டும்
1.ஆன்மீகத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம் என்றால் “பக்குவ நிலை பெறுவதற்குத் தான்” உணர்வுகளை அனுபவித்துச் சொல்கின்றோம்.
2.எம்மைப் போன்று நீங்களும் அனுபவரீதியில் தியானத்தை எடுத்து வளர்ந்தால் “உங்களைக் காப்பதற்கு உங்கள் எண்ணம் உதவும்…”

யாம் கொடுக்கும் சக்தியைப் பயன்படுத்தவில்லை என்றால் திருச்சபையில் அங்கத்தினராகச் சேர்ந்தும் பயனில்லை

யாம் கொடுக்கும் சக்தியைப் பயன்படுத்தவில்லை என்றால் திருச்சபையில் அங்கத்தினராகச் சேர்ந்தும் பயனில்லை

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் “எதிரியிடமிருந்து தப்ப வேண்டும்…” என்ற நிலையில் தன்னைக் காட்டிலும் வலுவான உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து மான் புலியைப் பார்த்து அதனின் வலுவை நுகர்ந்து; எலி பாம்பைப் பார்த்து அதனின் வலுவை நுகர்ந்து; பாம்பு கருடனைப் பார்த்து அதனின் வலுவை நுகர்ந்து; பரிணாம வளர்ச்சியாக அணுக்களில் மாற்றமாகி இப்படித்தான் நாம் மனிதனாக இன்று வந்திருக்கின்றோம்.

ஆனால் மனிதனாக வந்த பின் இந்த வாழ்க்கையில் தீமையான செயல்களைப் பார்த்த பின் அதை நுகர்ந்து உடலுக்குள் தீமையின் அணுக்களாக உருவாகாதபடி தப்பித்துக் கொள்ள ஒவ்வொரு நொடியிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுதல் வேண்டும்.

அதற்குத் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்தி அதைப் பெறச் செய்து கொண்டே இருக்கின்றேன் (ஞானகுரு).

அவ்வாறு
1.அதைப் பெறும் தகுதியை ஏற்படுத்தி… துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைக் கொடுத்தும்
2.அதை நீங்கள் சீராகப் பயன்படுத்தவில்லை என்றால் இந்தத் திருச்சபையில் அங்கத்தினராகச் சேர்ந்தும் பயன் இல்லை

ஒவ்வொரு நொடியிலும் யாம் கொடுக்கும் சக்தியை நீங்கள் பயன்படுத்த வேண்டும். எத்தகைய நிலைகள் வந்தாலும் புருவ மத்தியிலே “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று “முதலில் அங்கே நிலை நிறுத்தப் பழக வேண்டும்…”

1.எப்படி… எவ்வளவு பெரிய நிலை இருந்தாலும்… அல்லது வந்தாலும் சரி…
2.அது வந்த அடுத்த கணமே ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணிவிட்டு
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
4.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஒரு நிமிடமாவது எண்ணி அதை அங்கே தடைபடுத்திப் பழகுதல் வேண்டும்

ஒரு பழக்கத்திற்கு வந்து விட்டால் தாராளமாக வரும். இது போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து… அடுத்து எந்த நல்லது நடக்க வேண்டுமோ அதை எண்ண வேண்டும்.

கோபப்பட்டவரைப் பார்த்திருந்தோம் என்றால் அவன் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும் என்று இந்த உணர்வைச் சேர்க்க வேண்டும்.

ஆக… அவன் வெளிப்படுத்திய கோப உணர்வுடன் துருவ நட்சத்திரத்தின் பேரருளை இணைத்து நல்ல உணர்வாக மாற்ற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வு கலந்து அது இரத்த நாளங்களில் பரவப்படும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு இது நல்ல உணர்ச்சிகளை ஊட்டி நல்ல அணுக்களாக மாற்ற உதவும்.

இதைப் போன்ற பழக்கத்திற்கு நாம் அவசியம் வந்தாக வேண்டும்.

1.நம் குடும்பத்திலும் எந்தக் குறை வந்தாலும்… குறையாக நாம் எடுத்துக் கொள்ளாதபடி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடலில் இதை எடுத்து மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

குடும்பத்தில் கணவன் மனைவியோ… குழந்தைகளோ… நம்முடன் பிறந்தவர்களோ… அல்லது யாராக இருந்தாலும் குறையாக எண்ணாதபடி… அந்த உயர்ந்த சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் எல்லோரும் போற்றும் நிலைக்கு அவர்கள் வளர வேண்டும் என்று இப்படி நாம் எடுத்துக் கொண்டே வந்தால் இந்த உணர்வு எல்லோருக்கும் கிடைக்கின்றது.

இப்படி நாம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு குணத்திலும் ஒவ்வொரு உணர்விலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துக் கொண்டே வந்தால் இந்த அருள் வழி நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களிலே சேர்க்கப்படுகின்றது.

இப்படிப் பெருக்கினால் இது தனுசுக்கோடி கடைசி நிலைகள் யாருடைய பகைமையும் இல்லாதபடி அந்த அருள் உணர்வுகளை நமக்குள் சேர்த்து “எல்லோருக்கும் நல்லதாக வேண்டும்” என்ற இந்த மூச்சுகளை நாம் வெளியிடுகின்றோம்.

யாருடைய தீமையும் நமக்குள் வராதபடி தடுத்து நம்மை நாம் காத்துக் கொள்கின்றோம். ஆகவே திருச்சபை அங்கத்தினர்கள் தலையாய கடமையாக இதைச் செயல்பட வேண்டும்

1.எந்த நிமிடத்தில் எந்த நேரத்தில் எவ்வளவு பெரிய நிலை வந்தாலும்
2.குடும்பத்தில் எதிர்பாராத கோபமோ வேதனையோ வந்தாலும்
3.எத்தகைய கடுமையான சிக்கல்கள் வந்தாலும்… அந்த மாதிரி நேரங்களில் எல்லாம்
4.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பயன்படுத்தி அந்தத் தீமை நமக்குள் வ(ள)ராதபடி தடுத்து
5.நம் குடும்பத்திலும் சரி அல்லது புறநிலைகளிலும் சரி ஒன்று சேர்ந்து வாழும் நிலையாக நாம் கொண்டு வருதல் வேண்டும்.

இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செயலிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் நுகரப்படும் போது அது நமக்குள் வளர்ந்து கொண்டே வரும். அதனின் பெருக்கம் எல்லா அணுக்களிலும் சேர்ந்து கொண்டே வரும். பேரொளியாக நாம் மாறலாம்.

ஒளியின் காட்சிகளைத் தான் தியானத்தில் நாம் காண முயற்சிக்க வேண்டும்

ஒளியின் காட்சிகளைத் தான் தியானத்தில் நாம் காண முயற்சிக்க வேண்டும்

 

தியானத்தில் எடுக்கக்கூடிய சக்தியின் துணை கொண்டு ஒளியான உணர்வுகளைக் காணுவதற்குத்தான் நாம் முயற்சிக்க வேண்டும்.
1.அதை எடுக்க எடுக்க இந்த வாழ்க்கையில் பொருள் காணும் நிலைகள் வரும்… சிந்திக்கும் ஆற்றல் வரும்
2.நமக்குள் சுதாரித்து… ஒவ்வொன்றையும் எவ்வாறு செய்ய வேண்டும்…? என்ற அதற்குண்டான ஞானங்கள் வரும்
3.அந்த உணர்வு உண்டு எதையுமே சீர்படுத்திக் கொள்ளலாம்.

விஞஞான அறிவுப்படி… எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலைகள் கொண்டு தான் இன்று ஏவுகணைகளை இராக்கெட்டின் மூலம் இயக்குகின்றார்கள்.

அதாவது ஆள் இல்லாதபடி கம்ப்யூட்டர் என்ற இயந்திரத்தின் துணை கொண்டு தன்னிச்சையாக இங்கிருந்து (தரையிலிருந்து) இயங்கும்படி செய்து வைத்திருக்கின்றார்கள்.

உதாரணமாக எதிரி விமானங்களில் இருந்து குண்டு வீசினால்
1.அந்த நுண்ணிய ஒலி அலைகளை ஈர்த்து… முகப்பிலேயே காணும் நிலைகளாக வைத்து இது விலகிச் செல்லும்படியாக வைத்திருக்கின்றார்கள்.
2.வெகு தூரத்திலிருந்தாலும் இது தன்னுடைய மோப்பத்தால் வானிலே இவ்வளவு மைல் வேகத்தில் இத்தனை டிகிரியில் வருகிறது என்று உணர்ந்து
3.அதை எதிர்த்துத் தாக்கும் நிலைகளை இது செயல்படுத்துகின்றது.

இப்படி எத்தனையோ நுண்ணிய நிலைகளை இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வைத்திருக்கின்றார்கள்.

இதே மாதிரித் தான் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் பெருக்கப் பெருக்க
1.தீமை நம்மைத் தாக்குவதற்கு முன் அதை நாம் விலக்கி தள்ளும் நிலையாக
2.அது நமக்குள் வராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.

அத்தகைய சக்திகளை நீங்கள் பெற வேண்டும்.

ஆகவே ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைப் பெறுவதற்கு… நமது குரு அருளும்; அவரின் துணை கொண்டு அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும்; அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாக ஆன அந்த உணர்வுகளையும் பதிவு செய்கின்றோம்.

நீங்கள் குறைகளை நினைக்கவே கூடாது… நிறைவு பெற வேண்டும்… நல்லது நடக்க வேண்டும் நல்லபடியாக இருக்க வேண்டும் என்றே எண்ணிப் பழக வேண்டும்.

எங்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்த ஞானம் பெற வேண்டும் குடும்பத்தினர் அனைவரும் உடல் நலத்துடன் வாழ வேண்டும் சிந்தித்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிப் பழக வேண்டும்

இதைக் குழந்தைகளுக்கும் ஞாபகப்படுத்தி அவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணும்படி கற்றுக் கொடுக்க வேண்டும்.

யாம் கொடுத்த அருள் ஞான்ச் சக்கரத்திற்கு முன் அமர்ந்து இதை எல்லாம் எண்ணும் ஒரு பழக்கமாக நீங்கள் வளர்த்துக் கொண்டே வந்தால்
1.அதிலிருந்து ஒளிக் கற்றைகள் வரும்.
2.இரவில் படுத்திருக்கும் போது உங்கள் உடலிலிருந்து வெளிச்சத்தையும் காண முடியும் – அது தீமைகளை நீக்கும்.

ஆனால் காண முடியும் என்று சொன்னதைக் கேட்டு “எனக்கு வெளிச்சம் வரவில்லையே… வரவில்லையே…!” என்று எண்ண வேண்டியதில்லை.

ஏனென்றால் இப்படிச் சில பேர் தவறான நிலைகளில் கொண்டு சென்று விடுகின்றனர். ஐயோ… எனக்கு அந்தச் சக்தி இல்லை போலிருக்கிறது…! என்று எண்ணிவிடுகிறார்கள்.

ஆனால் அத்தகைய எண்ணமே வரக்கூடாது.

உங்கள் உடலில் “அந்தச் சக்திகள் பாய்ந்து கொண்டிருக்கின்றது…” அதை வளர்ப்பதற்குத் தான் இப்பொழுது வாக்காகக் கொடுத்துப் யாம் பதிவு செய்கின்றோம்.

வளர்ந்தால் தானே தெரியும். ஆகவே
1.காணாத உணர்வுகளை நாம் வளர்க்க கூடாது
2.காண வேண்டும் என்ற உணர்வைத் தான் வளர்க்க வேண்டும்
3.துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலத்துடனும் இணையும் சந்தர்ப்பங்கள் உருவாகும்.

முறைப்படி தியானம் செய்தால் உங்கள் மூச்சலைகள் பட்டாலே “பளீர்… என்று ஒளிகள் மின்னும்…”

முறைப்படி தியானம் செய்தால் உங்கள் மூச்சலைகள் பட்டாலே “பளீர்… என்று ஒளிகள் மின்னும்…”

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் கணவர் பெற வேண்டும்… என் மனைவி பெற வேண்டும்… அவர் இரத்த நாளங்களில் கலந்து ஜீவான்மா ஜீவணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும்; எங்கள் இரு மனம் ஒன்றாக வேண்டும்; இரு உயிரும் ஒன்ற வேண்டும்; இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றிடும் அந்த அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்; அருள் ஞான சக்தி எங்கள் இருவருக்குள்ளும் ஓங்கி வளர வேண்டும் என்று இருவருமே “தினமும் ஒரு பத்து நிமிடமாவது” ஒருவருக்கொருவர் எண்ணிப் பழகுதல் வேண்டும்.

1.இரவு முழிப்பு வரும் பொழுதெல்லாம் இதைப் போன்று செய்ய வேண்டும்
2அதே சமயத்தில் இரவு படுக்கும் போது எண்ணிவிட்டு உறங்கச் சென்றிருந்தால் காலையில் நான்கு மணிக்குத் தன்னாலே விழிப்பு வரும்.
3.நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் நிச்சயமாகத் தட்டி எழுப்பும்… உங்களை அறியாமலே அந்த முழிப்பு வரும்.

அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்துப் பழகுதல் வேண்டும்.

ஆண்கள் தங்கள் மனைவிக்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்றும் பெண்கள் தங்கள் கணவருக்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்றும் “அவசியம்” எண்ண வேண்டும்.

அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் குரு அருள் அவர் பெற வேண்டும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் அவர் பார்வையில் மற்றவர்கள் இருளைப் போக்கும் சக்தியாக அந்த உயர்ந்த சக்தி அவருக்குக் கிடைக்க வேண்டும்.

1.அவர் பார்ப்பவர் எல்லாம்… அவரைப் பார்ப்போர் எல்லாம்… நலம் பெறும் சக்தி பெற வேண்டும் என்று
2.இப்படிக் கணவன் மனைவி இருவருமே ஒருவருக்கொருவர் இந்த உணர்வைப் பாய்ச்சி பழகுதல் வேண்டும்.

மற்றதை அதிகமாக எண்ண முடியவில்லை என்றாலும் இப்படி எண்ணினாலே போதுமானது.

அவர் சொல்லிலே இனிமை பெற வேண்டும்… செயலிலே புனிதம் பெற வேண்டும்… அவரைப் பார்ப்போர் எல்லாம் அந்தப் புனித நிலை பெற வேண்டும் என்று கணவன் மனைவிக்கு எண்ணுவதும்… மனைவி கணவனுக்கு எண்ணுவதையும்… இரண்டு பேருமே ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்

1.காலையில் எழுந்து அடுத்த வேலைகளைச் செய்யும்போது ஒரு ஆனந்தமான நிலை ஏற்படும்.
2.உங்கள் வீட்டில் இந்த உணர்வுகள் பாய்ந்து பளீர்… பளீர்..ர்ர்… என்று வெளிச்சங்கள் வரும்… வீட்டுக்குள்ளே ஒரு விதமான வெளிச்சம் வரும்.

ஏனென்றால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து ஒருவருக்கொருவர் பாய்ச்சப்படும் பொழுது
1.அந்த அலைகள் வீட்டிற்குள் பட்ட உடனே மோதி இருளை நீக்கி
2.பளீர்..ர்ர்… என்று வெளிச்சமாகத் தெரிய வரும் பார்க்கலாம்…!
3.உங்கள் மூச்சலைகள் பட்டு அத்தகைய நிலை ஏற்படுகின்றது.

சூரியன் தான் வெளிப்படுத்தக்கூடிய பாதரசத்தால் மற்ற நிலைகள் அருகில் வரும் போது அதிலே மோதி விஷத்தைப் பிரித்து விட்டுப் பளீர்… என்று இந்தப் பிரபஞ்சத்தையே ஒளிமயமாக ஆக்குகின்றது.

இதே மாதிரித் தான்
1.கணவன் மனைவி இருவருமே துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து ஒருவருக்கொருவர் பாய்ச்ச…
2.அந்தச் சக்தி தீமைகளில் மோதியவுடன் விலகிப் போகும்.
3.உங்களுக்குள் வெளிச்சங்கள் தோன்றும்… புது விதமான மகிழ்ச்சி இருவருக்குமே ஏற்படும்.

அனுபவத்தில் நீங்கள் இதைத் தெரிந்து கொள்ளலாம்…!

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்திருக்கும் பொழுதும் சரி… இரவு படுக்கைக்குச் செல்லும் போதும் சரி… அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இருவருமே எடுத்து ஒருவருக்கொருவர் பாய்ச்ச வேண்டும்.

இப்படி இருவருமே செய்து வந்தால்
1.உங்களுக்கு உபதேச வாயிலாக யாம் பதிவு செய்யும் ஞான வித்திற்கு
2.சக்தியை (சத்தை) ஊட்டிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

இந்த அருள் ஞானப் பயிர் உங்களுக்குள் வளர வளர பேரருள் பேரொளியாக நீங்கள் இருவருமே மாறுவீர்கள்.

தீமை நீக்கும் பயிற்சியைப் பெறுவதற்குத்தான் தியானம்… “கண்களை மூடி ஜெபிப்பதற்காக இல்லை”

தீமை நீக்கும் பயிற்சியைப் பெறுவதற்குத்தான் தியானம்… “கண்களை மூடி ஜெபிப்பதற்காக இல்லை”

 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அதிலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் பேரொளியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அதனின்று வெளிப்படும் பேரருளை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்தாலும் நமது பூமி துருவத்தின் வழியாகக் கவர்ந்து நமக்கு முன் படரச் செய்து கொண்டிருக்கிறது.

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தியால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

ஏற்கனவே பல முறை இந்த உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்திருக்கின்றோம்.
1.உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அதன் வலிமை பெற்றதனால்
2.அதன் துணை உண்டு உங்கள் கண்ணின் நினைவினை விண்ணிலே செலுத்தி
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
4.உயிரின் இயக்கத்துடன் தொடர் கொண்டு நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி கண்களைத் திறந்து ஏங்கித் தியானியுங்கள்.

இவ்வாறு ஏங்கி தியானிக்கும் போது
1.கருவிழியின் வழி… கண்ணின் நரம்பு மண்டலத் தொடர்புடன்…
2.உங்கள் உடலில் உறுப்புகளில் உள்ள அணுக்கள் அனைத்திற்கும்
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை இயக்கும் வலிமை பெறுகின்றது.

புருவ மத்தியில் வீற்றிருந்து நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனிடம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவைப் புருவ மத்தியிலே மீண்டும் மீண்டும் செலுத்தி உயிருடன் இணைத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அந்த உணர்வோடு கண்களை மூடுங்கள்.

இப்பொழுது உயிர் வழி துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவை இவ்வாறு உயிருடன் அந்தப் புருவ மத்தியிலே இணைத்து இயக்கப்படும் பொழுது…
1.உணர்ச்சிகள்… அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வருவதை (உயிர் வழி) உயிரிலே ஈர்க்கப்படும் பொழுது
2.உடலிலே உருவாகிக் கொண்டிருக்கும் அந்தத் தீமையான அணுக்களுக்கு ஆகாரம் புகாது இப்போது நாம் தடைப்படுத்துகின்றோம்.

புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஈர்க்கும் நிலை வரும் பொழுது புருவ மத்தியில் சிறிது கனமாக இருக்கும்.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உயிரிலே மோதும் பொழுது
2.வெளிச்சங்கள் புருவ மத்தியில் வந்து கொண்டே இருக்கும்.

உங்கள் உடலில் இருக்கக்கூடிய தீமையான அணுக்களுக்கு ஆகாரம் உள் புகாது இப்பொழுது தடுத்து நிறுத்தப்படுகின்றது “நம்முடைய ஆறாவது அறிவின் துணை கொண்டு…”

கண்ணின் நினைவை இப்போது உங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களிலே செலுத்துங்கள். அதில் உள்ள ஜீவணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

சந்தர்ப்பத்தில் நாம் வெறுப்போ வேதனையோ சலிப்போ கோபமோ ஆத்திரமோ கொள்ளும் போது… எவர் உடலில் இருந்து இந்த உணர்வுகள் நமக்குள் வந்ததோ அதை நினைவாக்கி மீண்டும் எண்ணும் பொழுது உணவு உட்கொள்ளும் பொழுது இங்கே தடையாகிறது

ஆனால் வெறுப்பு வரும் போது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நினைவை உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது அது ஒடுங்குகின்றது.

அல்லது அந்த இரத்தத்தில் உருவான அத்தகைய அணுக்களுக்குக்
1,கண்ணின் உணர்ச்சி கொண்டு வீரிய சக்தியான நட்சத்திரத்தின் பேரருளைப் பெறச் செய்கின்றோம்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் இரத்தத்தில் கலப்பதை இப்பொழுது நீங்கள் உணரலாம்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து… உடல் முழுவதும் கடந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவு கொண்டு உடல் முழுவதும் செலுத்துங்கள்.

உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் வீரிய சக்தியைப் பெறும் பொழுது அந்த உறுப்புகள் அனைத்தும் வலிமை பெறுகிறது.

உங்கள் உடலின் ஈர்ப்பு வட்டத்தில் (ஆன்மாவில்)
1.முன்னாடி இருக்கக்கூடிய தீமைகள் உங்கள் சுவாசத்திற்கு மூக்கின் வழி உள்ளே செல்லாதபடி அதைத் தள்ளிவிடும்
2.அதற்குத்தான் பயிற்சியாக இந்தத் தியானத்தைச் செய்கின்றோம்.

மிகவும் சிக்கலான காலங்களில் உங்களுக்கு வழிகாட்டக்கூடிய முதல் குருவாக நான் இருக்கின்றேன் – ஞானகுரு

மிகவும் சிக்கலான காலங்களில் உங்களுக்கு வழிகாட்டக்கூடிய முதல் குருவாக நான் இருக்கின்றேன் – ஞானகுரு

 

தியானம் செய்யும்போது எப்போதுமே புருவ மத்தியிலிருக்கும் உங்கள் உயிரைத் தான் எண்ணி தியானிக்க வேண்டும். “என் (ஞானகுரு) உயிரை எண்ணுவதனால் பயனில்லை…”

சாமி (ஞானகுரு) உயிரால் உருவாக்கப்பட்ட அருள் உணர்வலைகள் இங்கே பரவி இருக்கப்படும் பொழுது உங்கள் உடலிலே அது பதிவாகின்றது.
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் உணர்வுகளைத் தான்
2.குரு வழியில் எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று ஏகமாக எண்ணி
3.அந்த உணர்வலைகளை இங்கே பரப்பிக் கொண்டே உள்ளோம்.
4.மிகவும் சிக்கலான காலங்களில் உங்களுக்கு வழிகாட்டக்கூடிய முதல் குருவாகவும் நான் (ஞானகுரு) இருக்கின்றேன்

குரு அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணும் பொழுது எல்லோரும் சேர்ந்து… தியானத்தின் மூலம் தவமிருந்து வெளிப்படுத்திய உணர்வுகள் இங்கே உண்டு… அது உங்களுக்குக் கிடைக்கின்றது.

அது மிகவும் வலிமைக்க சக்தி…!

யாம் சொன்ன முறைப்படி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவருடைய அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கினால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எளிதில் பெறலாம்.

எந்தக் காரியம் நடைபெற வேண்டும் என்றாலும் இந்த முறைப்படித் தான் எண்ணி அதைச் செயல்படுத்த வேண்டும் ஆனால்
1.நமது ஆசை நல்ல உணர்வின் தன்மை கொண்ட ஆசையாக இருக்க வேண்டும்.
2.நல்லதைச் செயல்படுத்தக்கூடிய இச்சையில் நாம் செயல்பட வேண்டும்
3.அதன் வழி ஏங்கித் தியானித்தால் உங்களுக்கு அது கிடைக்கும்.

ஆகவே எந்தத் திசையில் எங்கிருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பால் நினைவைச் செலுத்தி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் மிகவும் எளிதாக கிடைக்கும்.
1.அது வலிமைமிக்க சக்தியாக உங்களுக்குள் வரும்
2.உங்கள் அனுபவத்தில் இதைத் தெரிந்து கொள்ளலாம்.

நம்முடைய ஆசைகள் எல்லாம் குரு வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவதாக இருக்க வேண்டும். குரு துணை கொண்டு அதைத் தான் பரப்புகின்றோம்.

எல்லோரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற உணர்வுகளைப் பரப்பப்படும் பொழுது நம் பூமி முழுவதும் அது படர்கின்றது

உலகின் எந்த மூலையிலிருந்து நீங்கள் எண்ணினாலும்
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் உணர்வுகளைப் பெற முடியும் (வாக்காகக் கொடுக்கின்றேன் – ஞானகுரு)
2.ஏனென்றால் அவர் உணர்வுகளைப் பெற்று தான் நான் வளர்ந்தது
3.அவர் உணர்வை எடுத்துத் தான் உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்…
4.அவர் இன்று ஒளியின் உடலாக இருக்கின்றார்… அவருடைய உணர்வை எளிதில் பெற முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்… அவர் எடுத்துக் கொண்ட உணர்வை எனக்குள் விளைய வைத்து அந்த ஞான வித்தைத் தான் உங்களுக்கும் கொடுக்கின்றேன்.

ஆகவே…
1.ஞானகுரு கூறிய வழிப்படி குரு அருளைப் பெறுவேன்
2.குரு அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவேன் என்றால்
3.இது தான் முறை… முறைப்படி துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுகின்றோம்.

குரு காட்டிய உணர்வுகள் எனக்குள் விளைந்தாலும் ஒளியின் உடலாக இருக்கும் அந்தக் குருவின் அருளை எளிதில் பெற முடியும். ஏனென்றால் சப்தரிஷி மண்டலத்தில் அவர் உள்ளார்.

அவர் உடலுடன் இங்கே இருந்த காலத்தில் எனக்கு உபதேசித்த உணர்வுகள் ஆழமாகப் பதிவானது. அதை உங்கள் எல்லோருக்குள்ளும் பதிவு செய்து… ஒருக்கிணைந்து அந்த உணர்வின் தன்மை அலைகளாகப் பரப்பி வைத்திருப்பதனால் அதனை நீங்கள் எளிதில் பெற முடியும்.

“சாமி செய்து கொடுப்பார்…” என்றால்
1.குருவின் வழியை நமக்குக் காட்டினார்
2.அந்த ஞானத்தின் வழியினைப் பதிவாக்கப்படும் பொழுது இதுவே குருவாக அமைந்து
3.அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் அருள் வழியாகக் கிடைக்கும்
4.குரு ஒளியான உணர்வைப் பெறக்கூடிய தகுதியும் நீங்கள் பெறுவீர்கள்.

இதிலே இன்னும் விளக்கம் தெரிய வேண்டுமா…?

நான் (ஞானகுரு) சொன்ன தியானத்தைச் செய்து என்ன வந்தது…? என்கிறார்கள்

நான் (ஞானகுரு) சொன்ன தியானத்தைச் செய்து என்ன வந்தது…? என்கிறார்கள்

 

மூன்று லட்சம் பேரைச் சந்தித்து குருநாதர் காட்டிய வழியில் பல வருட காலமாக அனுபவபூர்வமாகப் பெற்ற உண்மைகளைத் தான் உங்களிடம் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).

இப்பொழுது நல்ல உணவை உட்கொள்கின்றேன்… ஆனால் அன்று அப்படி அல்ல. என் இரண்டு காலிலேயும் 28 ஆணி இருந்தது. ஆனால் நீ செருப்பு போடக்கூடாது என்று குருநாதர் சொல்லி விட்டார்.

ஒரு சின்னக் கல் மீது காலை வைத்தால் போதும்… அ…ஆ…! என்று தலை உச்சி மயிர் நட்டமாக நிற்கும் பாத்ரூமில் சிறிது நேரம் அதிகமாக உட்கார்ந்திருக்க முடியாது… எரிச்சலாகும்.

கால் ஆணி உள்ளவரிடம் கேட்டால் தெரியும் என்ன வலி வேதனை எப்படி இருக்கிறது என்று…!

இத்தனையும் பொறுத்துக் கொண்டு
1.உலகம் எப்படி இருக்கின்றது…? என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்று குருநாதர் சொல்லி விட்டார்
2.ஒவ்வொரு குடும்பமும் எத்தனை பாடு படுகின்றது
3.குடும்பத்தில் உள்ளவர் யாராவது இறந்தால் அங்கே என்ன நிகழ்கின்றது…?
4.இறந்தவரின் ஆன்மாக்கள் எங்கே… எப்படி… என்ன செய்கின்றது…? என்று அனுபவ ரீதியிலே தெரியும்படி செய்தார்.

கஷ்டப்பட்டுத் தான் nhaan எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு வந்தேன். ஆனால்
1.உங்களுக்குக் கஷ்டம் வரும் பொழுது நான் சொல்லும் முறைப்படி செய்து அதை நீக்கிக் கொள்ளுங்கள்
2.உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றேன்
3.அதற்குண்டான முறைகளையும் சொல்லி… வழிகளையும் காட்டி சக்திகளைப் பெறும்படி செய்தாலும் “ஏற்பதற்கு ஆள் இல்லை…!”

“தியானத்தைக் கடைபிடிக்கிறோம்… என்று தியான வழியில் வருகின்றார்கள்…! சக்திகளைக் கொடுத்து… உங்களுக்கு வரக்கூடிய தீமைகளை இப்படி மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோம்… யாரும் எடுப்பதில்லை.

1.”சாமி (ஞானகுரு) எனக்குச் செய்து தர மாட்டேன் என்கிறார்…” என்ற இந்த உணர்வுடன் தான் இருக்கிறார்கள்
2.சாமி சொன்ன தியானத்தைச் செய்து என்ன வந்தது…? என்று (சாதாரணமாக) கேட்கின்றார்கள்.

ஆக மொத்தம் நான் சொல்வதை… “நீங்கள் எடுத்தால் தானே” அது நடக்கும். உணவைக் கொடுத்த பின் அதைச் சாப்பிடவில்லை என்றால் பசி எப்படித் தீரும்…?

பாதாமைச் சாப்பிட்டால் உடலுக்குச் சத்துதான். ஆனால்
1.சாப்பிட வேண்டும் என்று ஆசையை மட்டும் பட்டுக் கொண்டு
2.சாப்பிட முடியாதபடி (சாப்பிடாதபடி) வேதனைப்பட்டுக் கொண்டிருந்தால் என்ன நடக்கும்…?
3.அந்தச் சத்து உங்களுக்குக் கிடைக்காது… விஷம் தான் வளரும்…!

ஒவ்வொரு நொடிப்பொழுதும் இந்த உயர்ந்த சக்தி நீங்கள் பெறுவதற்கு எத்தனையோ வேலைகளைச் செய்கின்றேன்.

யாம் சொன்ன முறைப்படி செய்து ஒரு சமயம் நல்லதாக ஆன பின் மீண்டும் (இன்னொரு) சிக்கல் வந்தால் அதே முறைப்படி செய்து அதிலிருந்து மீண்டு கரையேறுவதற்கு ஆள் இல்லை.

காரணம் அந்தப் பழக்கம் வரவேண்டும் என்பதற்குத் தான் இதை ஞாபகப்படுத்துகின்றோம்.

எத்தனையோ பேருக்குத் துயரங்களும் துன்பங்களும் வரும் பொழுது… அதிலிருந்து மீட்டி விடுகின்றோம்… அவர்கள் எப்படியும் தெளிந்து வருவார்கள் என்று…! அந்த எண்ணத்தில் தான் இதைச் செயல்படுத்துகின்றோம்

ஆனால் அதற்காக வேண்டி
1.என்னுடைய சக்தியை நான் எல்லா நேரத்திலும் விரயம் செய்ய முடியாது
2.உங்களுக்கு வழி அமைத்துக் கொடுத்தாலும் கரை ஏறி வருவதற்குண்டான தன்னுடைய சுய பலம் வேண்டும் அல்லவா
3.”எல்லாம் சாமி பார்த்துக் கொள்வார்” என்றால் சாமி எதைப் பாப்பார்…?

நீங்கள் கஷ்டப்படுவது துன்பப்படுவது இதையெல்லாம் நான் கேட்டுக் கொண்டிருந்தால்… அந்தத் தீமையிலிருந்து தப்புவதற்குத்தான் நான் பார்க்க முடியும். உங்களை எப்படிக் காப்பது…?

யாம் இப்பொழுது கொடுக்கக்கூடிய வாக்கின் பிரகாரம் ஒவ்வொரு நொடிப்பொழுதும் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து ஆத்ம சுத்தி செய்து வாழ்க்கையில் அதைக் கடைப்பிடித்து… அந்தந்த நேரத்தில் சரியாகப் பயன்படுத்தித் தீமையிலிருந்து விடுபடும் சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள்.
1.துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லாத நிலை அடையுங்கள்
2.இதிலே ஒன்றும் கஷ்டம் இல்லை
3.சிறிது காலம் செய்து பழகிக் கொண்டாலே போதுமானது.

தொழிலிலே ஆசை மற்றதில் ஆசை என்று அதை எண்ணி ஏங்கி… கடைசியில் அது நிராசையாகி விட்டால் வேதனை தான் வருகிறது வேதனை வளர்ந்தால் சிந்தனை இழக்கப்படுகின்றது.

அந்த மாதிரி நேரங்களில் எல்லாம் கண்டிப்பாக யாம் சொன்ன முறைப்படி நீங்கள் ஆத்ம சக்தி செய்ய வேண்டும். ஆன்மாவைத் தூய்மைப்படுத்திவிட்டு அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன…? என்று சிந்தனை செய்ய வேண்டும்.

அதற்குண்டான உபாயங்கள் நிச்சயம் வரும். அந்த உயர்ந்த சிந்தனைகள் வருவதற்குத் தான் மணிக்கணக்காக உங்களுக்கு உபதேசிக்கிறோம்.
1.குருநாதர் எனக்குக் காட்டிய வழி முறைகளை எல்லாம்
2.உங்களுக்குப் பல வகைகளிலும் எடுத்துக் காட்டிக் கொண்டே வருகின்றேன்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நாம் மேலே செல்வதற்குப் பதில்… கீழே இந்த உடலுக்குள் இழுத்து விடக்கூடாது

நாம் மேலே செல்வதற்குப் பதில்… கீழே இந்த உடலுக்குள் இழுத்து விடக்கூடாது

 

நாம் செய்யும் தியானம் இந்த உடலுக்காக அல்ல… உடலைப் பார்ப்பதற்காக அல்ல.
1.நிலையாக இருக்கும் இந்த உயிர் இருக்கின்றதே…
2.அதைத்தான் நாம் தியானிக்க வேண்டும்.

தியானம் இருந்தேன் நல்லதானது… காப்பாற்றினார் (ஞானகுரு) கடவுளாக இருக்கின்றார் என்று இத்தகைய உணர்வுக்கு நாம் சென்றால் மீண்டும் புவியின் ஈர்ப்புக்குத் தான் வருவோம்.

ஆகவே நாம் பார்க்கும் அனைவரும் மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும் என்ற ஏகாந்த உணர்வுகளைக் கொண்டு வந்தோம் என்றால் அது அருள் வழியாக இருக்கும்.

ஆனால் அதை விடுத்து விட்டு
1.இந்த வாழ்க்கைக்காக நாம் எண்ணினால் என்ன ஆகும்…?
2.தான் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் வருத்தம் வரும்… அப்போது வேதனை வருகிறது.
3.அப்பொழுது எந்தப் பற்று…? வேதனை என்ற பற்று தான் வருகின்றது அது தான் அதிகமாகின்றது

இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபட்டு அருள் ஞானத்தை வளர்ப்பதற்கு உண்டான அந்த முயற்சியை நாம் எடுக்க வேண்டும்.

எப்பொழுதுமே எதிலுமே இந்த உடல் பற்று என்று இல்லாதபடி உயிர் எப்படி உணர்வை ஒளியாக மாற்றுகின்றதோ அதைப் போன்று எல்லோருக்கும் அந்த அருள் கிடைக்க வேண்டும் என்ற இந்தப் பற்றை நாம் வளர்த்துக் கொண்டால் அதைப் பற்றுடன் பற்றி வாழ்க்கையில் வந்த இருள் என்ற நிலையை பற்றற்றதாக மாற்ற முடியும்.

இது தான் தியானம்.

நான் தியானமிருந்தேன் கல்யாணம் நடந்தது… நான் தியானமிருந்தேன் உடல் நலமானது… நான் தியானமிருந்தேன் தொழில் நன்றாக நடந்தது… என்று வெறுமனே சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் இதற்காக நம்முடைய ஆசையைக் கூட்டக் கூடாது…!

நாம் பார்ப்பவர் நலமாக வேண்டும் என்ற ஆசைப்படலாம். அப்போது அந்த அருள் உணர்வு பெற வேண்டும் என்ற இச்சை நமக்குள் விளைகின்றது.

இச்சா சக்தி கிரியா சக்தி…!
1.நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அந்த இச்சையைக் கூட்டும் பொழுது
2.நம் உயிரிலே அந்த உணர்வு பட்டு கிரியை ஆகி அந்த ஞானத்தின் வழி நம்மை அந்த எல்லைக்கு அழைத்துச் செல்லும்.

உடல் இச்சைக்காக நாம் ஆசைப்பட்டு அதை நமக்குள் கிரியை ஆக்கினால் அது இந்த வாழ்க்கையினுடைய நிலைகளுக்குத் தான் வரும்
1,சிறிது தடைப்பட்டால் என்ன செய்யும்…?
2.ஞானம் இழக்கப்பட வேண்டியிருக்கும்.

இதைப் போன்ற நிலையிலிருந்து எல்லாம் நாம் விடுபட வேண்டும்… அருளைப் பெருக்க வழியைத் தேட வேண்டும். இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே…? என்ற நிலையில் சப்தரிஷி மண்டல எல்லையை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

அது தான் ஏகாதசி…!

1.இந்த வாழ்க்கையில் வரக்கூடிய பற்றை எல்லாம் நீக்கிவிட்டு
2.எல்லோரும் பேரின்பம் பெற வேண்டும் என்று எண்ணுவது தான் ஏகாதசி விரதம்.

அன்றைய நாள் முழுவதும்… ஒவ்வொரு மாதத்திலும்… அவ்வப்பொழுது வரக்கூடிய குறைகளை நீக்குவதற்கும் பிறருடைய பகைமைகளைக் குறைப்பதற்கும்… “அவர்களுக்கெல்லாம் அருள் பெற வேண்டும்… என்று அந்த ஏகாந்த உணர்வை வளர்த்துக் கொள்ளும் பொழுது “ஏகாதசி…”

யாருடைய பகைமையையும் நாம் நமக்குள் வளர்ப்பதில்லை. அந்தப் பகைமை இல்லாது செல்லப்படும் பொழுது “பத்தாவது நிலையான பிறவி இல்லா நிலையை அடைய முடியும்…”

12 மாதங்களிலும் 12 ராசிகளிலும் மாறி வரப்படும் பொழுது
1.ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு மனிதனுடைய உணர்வுகள் ராசிகள் அங்கே மாறப்படும் பொழுது
2.அந்த ராசியை எப்படி மாற்ற வேண்டும் என்று தான் தத்துவ ஞானிகள் கூறியுள்ளார்கள்.

வைகுண்ட ஏகாதசி…! எல்லோரும் ஏகமாகச் சேர்ந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரும் பெற வேண்டும் என்று ஏங்கி… ஒருவருக்கொருவர் பகைமை ஆகாதபடி… வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் இவையெல்லாம் உடலுக்குள் வளராதபடி தடுத்து அனாதையாக்குதல் வேண்டும்.

அனாதையாக்கினால் காலையில் 6:00 மணிக்கு சூரியன் அதைக் கவர்ந்து சென்று விடுகிறது. அதைச் சூரியன் கவர்ந்து செல்லப்படும் பொழுது இந்த உடலை விட்டுச் செல்லும் நாம் துருவ நட்சத்திரத்திந் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்தில் இணைகின்றோம்.

ஒளி என்ற உடலும்… ஒளியான அறிவும்… இருளை நீக்கும் ஞானமும்… மெய்ப்பொருள் காணும் சக்தியும் கிடைக்கும்.

ஆகவே…
1.நாம் மேலே செல்வதற்குப் பதில் கீழே இந்த உடலுக்குள் இழுத்து விடக்கூடாது
2.இந்த உடலில் வாழ்வதற்காக யாம் (ஞானகுரு) கூட்டத்தைக் கூட்டவில்லை
3.இதிலிருந்து பிரிந்து பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.

அதுதான் நமக்கு முக்கியம்…!

சிறிது நாட்கள் தான் நாம் வாழ்கின்றோம். அப்படி இந்த உடலில் வாழும் நாள்களுக்குள் நம் மனம் ஐக்கியமாக வேண்டும்… எல்லாவற்றையும் ஒன்று சேர்க்க வேண்டும்
1.ஒளியாக மாறுதல் வேண்டும்
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணைதல் வேண்டும்.

முந்தைய தீயவினைகளையும் இப்போது வரும் தீயவினைகளையும் தடுக்க வேண்டும்… “இல்லையென்றால் தியானம் அர்த்தமற்றது தான்”

முந்தைய தீயவினைகளையும் இப்போது வரும் தீயவினைகளையும் தடுக்க வேண்டும்… “இல்லையென்றால் தியானம் அர்த்தமற்றது தான்”

 

உங்கள் வாழ்க்கையில் தியானம் செய்வதற்கு முன்னாடி இருந்த அனுபவமும்… தியானத்திற்கு வந்த பிற்பாடு சில அனுபவங்களும் உங்களுக்குத் தெரியும்.

இதை நீங்கள் கூர்ந்து பார்த்து இதனுடைய இயக்கம்
1.நாம் இயங்குகின்றோமா…
2.நாம் நுகர்ந்த உணர்வு நம்மை இயக்கியதா…?
3.அந்த இயக்கிய உணர்வுக்குத் தக்க நாம் செல்கின்றோமா…? என்பதை யோசனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

நாம் உணவாக உட்கொண்ட அந்த உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சை நம் உடல் மலமாக மாற்றுகின்றது. ஆகவே தீமை என்ற உணர்வுகளை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி மனிதனுக்கு உண்டு.

அதை நாம் எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? அதை மாற்றுவதற்கு உண்டான சக்தி நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இந்த உபதேசம்.

எனக்கு (ஞானகுரு) எப்படித் தீமைகளிலிருந்து தப்புவதற்கு குருநாதர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறச் செய்தாரோ அதைத் தான் உங்களுக்குள்ளும் நான் பெறச் செய்து கொண்டிருக்கின்றேன்.

அதை நீங்கள் வளர்த்துக் கொண்டால்
1.முந்தைய தீயவினைகள் இருந்தாலும் குறையும்
2.புதிதாகத் தீயவினைகள் நமக்குள் உருவாகாதபடி தடுக்கவும் முடியும்.
3.இரண்டும் இல்லை என்றால் நான் தியானம் செய்தேன்… அதைச் செய்தேன்… என்று சொன்னால் “அது அர்த்தமற்றது…”

ஆகவே இதைப் பின்பற்றி ஒவ்வொன்றுக்கும் அதைச் சீராகச் செயல்படுத்த வேண்டும்.

ஒரு வித்தினை ஊன்றி செடி உருவாகி விட்டால் அது வளர்வதற்குண்டான நீரை ஊற்றிக் கொண்டே இருந்தால் தான் வளர்க்க முடியும்… அதிலே மீண்டும் வித்துக்களும் உருவாகும்.

ஆனால் செடியை வைத்து விட்டேன்… தண்ணீரையும் ஊற்றி விட்டேன்.. அது வளர்ந்து விடும் என்று சொன்னால் எப்படி விளையும்…?

இது போன்று அனுபவத்திலே வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வரக்கூடிய அழுக்குகளை நீக்கிடும் ஒரு பழக்கம் வர வேண்டும்,

1.எத்தனையோ கோடி உடல்கள் பெற்று
2.அதிலிருந்து மீளும் சக்திகளை நாம் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்டது தான்
3.உயிர் இந்த மனித ரூபத்தைக் கொடுத்தது.

அகஸ்தியன் பல விஷத்தன்மைகளை அடக்கி அதை எல்லாம் மாற்றி அமைத்ததனால் ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

அதிலிருந்து வரக்கூடிய உணர்வினை நம் உடலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அணுக்களுக்கும் பெறச் செய்யக்கூடிய தகுதி பெற்றால்… அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனது போன்று நாமும் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களைச் சிறுகச் சிறுக ஒளியாக மாற்றி முந்தைய தீய வினைகளைத் தணித்துப் புதிய வினைகள் நமக்குள் சேராதபடி தடுத்து நம் உணர்வுகளை வலுவாக்க முடியும்.

வலு பெறச் செய்வதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.

எம்முடைய உபதேசக் கருத்துக்களைப் பதிவாக்கிக் கொண்டு அதன் வழி நடந்த பின்
1.வாழ்க்கையில் உங்களை எது இயக்கியது…?
2.குடும்பங்களில் வெறுப்பு எப்படி வந்தது…?
3.பகைமைகள் எப்படி வந்தது…?
4.தொழில் எப்படி நஷ்டமானது…?
5.அதை எல்லாம் தியானத்தின் மூலம் எப்படி மாற்றினோம்…? என்பதை அனுபவத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

உங்களிடம் இப்போது கேட்கிறோம்…! அடுத்து அதற்குண்டான விடைகளையும் யாம் (ஞானகுரு) கொடுக்க முடியும்.

எம்மிடம் பழகிக் கொண்ட பிற்பாடு… தியானத்தில் இருந்தீர்கள். தியானத்தின் மூலம் தீமை நீக்கிடும் அனுபவங்களைப் பெற்று அதை வலுப்படுத்தித் தான் ஆக வேண்டும்.

அதை மற்றவரிடமும் சொல்லித் தான் ஆக வேண்டும். நீங்கள் அதை வெளிப்படுத்தினால்
1.அடுத்து மற்றவரும் தங்களுடைய அனுபவங்களைச் சொல்ல
2.எல்லோரும் அந்த ஞானிகள் காட்டி வழியினைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.

அதற்குத் தான் இதைச் சொல்வது.

ஆரம்பத்திலே எத்தனையோ உணர்வுகளை வெளிப்படுத்திக் காட்டினோம். உடலுக்குள் ஆன்மாக்கள் எப்படி இயங்குகின்றது…? அது உடலுக்குள் நுகரப்பட்டால் என்ன செய்யும்…? எல்லாவற்றையும் காட்சியாகக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தோம்.

ஆனால் காட்சியைக் கொடுக்கப்படும் போது அவரவர் ஆசை எதுவோ அதற்குத்தக்க
1.அந்த ஆசை உணர்வு கொண்டு இறந்த பிற ஆவிகள் அவர்கள் உடலில் புகுந்து…
2.போகும் மார்க்கங்களை இடைமறித்து… மீண்டும் தீய வினைகளுக்கே அழைத்துச் சென்று விட்டது.

ஆரம்ப நிலையில் எம்மிடம் பழகியவர்கள் எல்லாம் பெரும்பகுதி அந்த நிலைக்குத் தான் சென்று விட்டார்கள்.

ஒவ்வொருவரும் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகப் பல நிலைகளைக் காண்பித்தேன். அதைத் தப்பான வழியில் கொண்டு சென்று விட்டார்கள்.

ஆகவே… அந்த இயற்கையின் உண்மைகளை நாம் நுகர்ந்து கொண்ட பின் நம் உணர்வுகள் என்ன செய்கின்றது…?

நம் உடலில் அது வளர்ந்த பின் நண்பர்கள் நம்மைப் பார்க்கும் போது எப்படி மதிக்கின்றனர்…? ஒரு பொருளைப் பார்த்த பின் நமக்கு வெறுப்போ அல்லது அதன் மீது பாசமோ எப்படி வருகிறது…? என்பதை நாம் அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நம் உடலுக்குள் இருக்கும் உணர்வுக்கொப்பத் தான் அது வரும்.
1.எம்மிடம் அதை வெளிப்படுத்தினால் அதற்குண்டான விளக்கமும் உங்களுக்குக் கிடைக்கும்.
2.அருள் வழியில் உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு இது உதவும்.