உயர்ந்த சக்தி கிடைத்தும்… அதைப் பக்குவப்படுத்தத் தெரியவில்லை என்றால் பலனில்லாது போய்விடுகிறது

உயர்ந்த சக்தி கிடைத்தும்… அதைப் பக்குவப்படுத்தத் தெரியவில்லை என்றால் பலனில்லாது போய்விடுகிறது

 

1.விண்ணிலிருந்து ஒளி அலைகள் வருவதையும்
2.அந்த மகரிஷிகளுடைய ஆற்றல்கள் எப்படி வருகிறது…? என்பதையும்
3.அகஸ்தியன் உணர்வலைகள் எப்படி வருகிறது…? என்பதையும்
4.பச்சிலைகளை அவர் எப்படி நுகர்ந்தறிந்தார்…? என்பதையும்
5.அதே உணர்வின் தன்மை அவருடைய தாய் தந்தையர் எப்படி நுகர்ந்தார்கள்…? என்பதையும்
6.விஷத்தன்மை கொண்ட அணுக்கள் தங்களுக்குள் வராது எப்படிப் பாதுகாத்துக் கொண்டார்கள்…? என்பதையும்
7.அம்பாசமுத்திரத்தில் ஒரு பையனுக்குக் காண்பித்துக் கொடுத்தேன் (ஞானகுரு)..

அங்கே ஒரு மருத்துவரின் தந்தைக்குத் தீராத தலைவலி நோய். அதை நீக்குவதற்கு அகஸ்தியருடைய மூலிகையை எடுக்க வேண்டும். நீ வானத்தை நோக்கி எண்ணி இந்த மாதிரி தியானம் இரு என்று அந்தப் பையனிடம் சொன்னேன்.

அகஸ்தியரின் உணர்வலைகள் வரும். அவர் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை உன் கையிலே அந்தப் பொருள் கிடைக்கும்… அதை அவருக்குக் கொடுத்துவிடு என்று சொன்னேன்.

அவ்வாறு எண்ணிய உடனே
1.பையன் தியானத்தில் உட்கார்ந்திருக்கும் பொழுது அந்த வேர் கிடைக்கின்றது
2.கிடைத்த உடனே “அதை அவர் தலைமாட்டில் வை…” என்று செயல்படுத்தினேன்.

தலைவலியைப் போக்குவதற்கு அன்றைய காலத்திலே அவர் 12 ரூபாய் மாத்திரை சாப்பிட வேண்டும். காலையில் ஒன்று சாப்பிட வேண்டும் இரவு தூங்கப் போகும் முன் ஒன்று சாப்பிட வேண்டும்.

அப்பொழுது தான் தலைவலி நீங்கும்… இல்லையென்றால் புழுவைப் போல துள்ளுவார்.

அதே சமயத்தில் அவர் கேட்டது… “என் தலைவலியைப் பார்க்கின்றாய்… நீ இத்தனை தியானம் செய்கின்றாய்… ஆனால் உன்னால் அதைப் போக்க முடியவில்லை. நீ என்னப்பா தியானம் செய்கின்றாய்…?

இதை நான் அந்தப் பையனிடம் சொல்லி
1.தியானத்தின் மூலம் நீ கேள்… அகஸ்தியன் உணர்வுகள் குவியும்
2.அகஸ்தியன் உபயோகப்படுத்திய அந்த வேர்கள் கிடைக்கும் என்றேன்.

காரணம்… அன்று அகஸ்தியன் தாய் கருவில் இருக்கப்படும் பொழுது அவருடைய தாயார் பல தாவர மூலிகைகளைத் தனக்குள் மூலமாகப் பூசி… பல தீமையான மிருகங்களிடம் இருந்து அந்த விஷத் தன்மையான நிலைகளிலிருந்து துயரப்படாதபடி மீட்டிய அந்த உணர்வுகள் அவர்கள் உடலில் உண்டு.

அது கருவில் இருக்கும் அகஸ்தியனுக்குள்ளும் பதிந்தது அவன் பிறந்த பின் இந்த உணர்வின் தன்மை விஷத்தின் தன்மை நாடாத நிலைகள் கொண்டு விண்ணை உற்று நோக்கினாலும் நஞ்சினை அடக்கி உணர்வினை ஒளியாக மாற்றி துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனது.

அந்த உணர்வின் தன்மையைப் பக்குவமாகப் பெறும்படி செய்தது. ஏனென்றால் குருநாதர் காட்டிய அருள் வழியில் நான் உலக அனுபவம் பெறுவதற்காக அந்த இளம் வயது பையன்… கலக்கமற்ற நிலைகள் அவனுக்குப் பெற வேண்டும் என்று செயல்படுத்தியது.

தகப்பனாருக்கு அந்த வேரைக் கொடுத்தபின் தலைவலி அகன்று விட்டது. மருந்து சாப்பிட்டும் முழுமையாக குணப்படுத்த முடியாதது இந்த வேரைத் தலைமாட்டில் வைத்ததும் முழுமையாக நீங்கியது.

அப்பொழுது அவர் “உங்கள் குருநாதர் நல்ல குருநாதர்…” என்று போற்றுகின்றார். ஆனால் அதற்குப்பின் அவர் இங்கு தியானத்திற்கு வரவில்லை.

இப்படி நிகழ்ச்சி ஆனபின் ஒவ்வொருவராக வந்து இந்தப் பையனிடம் கேட்க ஆரம்பிக்கின்றார்
1.என் உடலில் இருக்கக்கூடிய இந்த நோய்க்கு ஒரு பச்சிலை வேண்டும்
2.எனக்குக் குழந்தை வரம் வேண்டும் அதுக்கு ஏதாவது கேட்டுச் சொல்லுங்கள் என்று
3.இந்த மாதிரி பல நோய்களுக்கும் பல நிலைகளுக்கும் பச்சிலைகள் அங்கே வந்து கொண்டே இருந்தது.

தியானத்தில் அமர்ந்து பச்சிலை கிடைத்த பின்… எல்லோரும் அவனிடம் பச்சிலையைக் கேட்க ஆரம்பித்தார்கள். ஆக
1.மெய் ஞானிகளின் உணர்வுகளைப் பெறுவதற்கு இதை எல்லாம் அனுபவப்பூர்வமாக யாம் காட்டினாலும்
2.அந்த பிஞ்சு உள்ளமாக இருக்கக்கூடிய அந்தப் பையனுக்கு தெரிந்தாலும்
3.அடுத்து அவன் அவனுடைய உணர்வுக்குத் தக்கவாறு வேறு நிலைகளுக்கு மாற்ற ஆரம்பித்து விட்டான்.

நான் அங்கே போக வேண்டும்… இங்கே போக வேண்டும்… “எனக்குப் பணம் வேண்டும்” என்று கேட்க ஆரம்பித்து விட்டான்.

இவைகள் எல்லாம் உண்மையின் உணர்வின் நிலைகளைத் தெரியச் செய்தாலும்… பெரியவர்களுக்கு இதை தெரியச் செய்தாலும்…
1.அந்த ஆசையிலே தான் மூழ்கி விடுகின்றார்கள்.
2.மேற்கொண்டு அருள் ஞானத்தைப் பெற வேண்டும் என்ற குரு காட்டக்கூடிய நிலைகள் அங்கே இல்லை.

பல வருடங்கள் யாம் பெற்ற சக்திகளை “அனுபவபூர்வமாக” மக்களுக்கு இது கிடைக்கச் செய்ய வேண்டும் என்று செயல்படுத்தினாலும்… அவர்களால் அதை நல்வழிக்குக் கொண்டு செலுத்த முடியவில்லை.

பித்தம் அதிகரிப்பதன் காரணமும்… அதனால் உடலில் ஏற்படும் பாதிப்புகளும்

பித்தம் அதிகரிப்பதன் காரணமும்… அதனால் உடலில் ஏற்படும் பாதிப்புகளும்

 

சில சந்தர்ப்பங்களில் நம்மை அறியாமலே குடும்பத்தில் எதிர்பாராது பல நிலைகள் ஆகி அதனால் வேதனையாகும் பொழுது கோபமும் எரிச்சலும் சிறுகச் சிறுக விளைந்து… உடலில் இருக்கக்கூடிய “பித்த சுரப்பிகள்” அதிகமாக இயங்க ஆரம்பிக்கும்.
1.எந்த அளவுக்கு வேகத் துடிப்பின் உமிழ் நீர்கள் சுரக்கின்றதோ
2.அந்த வேகத் துடிப்புக்கொப்ப பித்தம் அதிகமாகும்.

ஆகாரத்தை எந்த அளவுக்கு எடுக்கின்றோமோ அதற்குத்தக்க பித்த சுரப்பிகள் இயங்கி அதை ஜீரணிக்க செய்யும். ஆனால்
1.அதிகமான பித்தமானாலோ மந்தமாக்கிவிடும். அதே சமயத்தில் வாய் உமட்டல் வந்துவிடும்
2.பசி அதிகமாகும் ஆனால் ஆகாரம் அதிகமாக உட்கொள்ள முடியாது.

இத்தகைய உணர்வு உடல் முழுவதும் பரவி… கார உணர்ச்சிகளும் கூடி அதை இந்த பித்த சுரப்பிகள் எடுக்கப்படும் பொழுது “நமது நாடி நரம்புகள் அனைத்தும் பலவீனப்படச் செய்யும்…”

அதே சமயத்தில் எதையாவது ஒரு தொழில் செய்வோம் என்றால்
1.கடினமான சாமானைத் தூக்கினால் திடீரென்று கண் கட்டும்… கீழே விழுகச் செய்யும்.
2.அதே சமயம் உட்கார்ந்து எழுந்தாலும் கண் கட்டச் செய்யும்.

ஏனென்றால் இந்தப் பித்தத்தின் சுரப்பிகள் நமக்குள் அதிகமாகும் பொழுது… கடைசியில் இரத்தக்கொதிப்பும் பக்கவாதங்களும் வந்து விடுகிறது.

ஆனால் தவறு செய்யவில்லை.

எதை எண்ணுகின்றோமோ அதனின் உணர்வை உயிர் இயக்கிக் காட்டுகின்றது. நாம் எதைப் பார்க்கின்றோமோ அந்த உணர்வின் உண்மையை… “குடும்பத்திலே இப்படிச் செய்கின்றார்கள்…” என்று அந்த உணர்வினைக் கண் இழுத்துக் காட்டுகின்றது.

அந்த உணர்வினை உயிர் இயக்கிக் காட்டிப் பொருளறியச் செய்கின்றது… அறியச் செய்தாலும்… நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை உடலாக ஐக்கியமாகி விடுகிறது.

இவ்வாறு உடலுக்குள் மாறிக் கொண்டே இருக்கும். இந்த நிலையை… இவை அனைத்தையும் மாற்றி அமைக்கக்கூடிய திறன் மனிதனின் ஆறாவது அறிவுக்கு உண்டு.

அதைச் சரியான முறையில் நாம் பயன்படுத்தவில்லை என்றால் நாம் பரிணாம வளர்ச்சியில் வந்தது போல இந்த உணர்வின் தன்மை நம்மை அறியாமலே இயக்கி வேதனை கொண்ட உணர்வின் தன்மையை நமக்குள் இயக்கி விடுகிறது.

வாதமோ இரத்தக் கொதிப்போ ஆகிவிட்டால் அதே சமயத்தில் பித்த சுரப்பிகள் அதிகமாகும் பொழுது பசியின் கொடுமை அதிகமாகும். வாத நோய் வந்தவர்களுக்கும் இரத்தக் கொதிப்பு வந்தவர்களுக்கும் பசியின் ஏக்கம் அதிகமாகும்.

1.பசி எடுத்தவுடன்… ஆகாரம் உடனே கொடுக்கவில்லை என்றால் மிகவும் கோபம் வரும்
2.யார் அவர்களுக்கு உதவி செய்கின்றார்களோ அவர்களை ஏச வேண்டிய நிலையில் வெறுக்கும் நிலையும் அதிகமாகச் சேர்த்துக் கொண்டே இருக்கும்.

அந்த வெறுப்பான உணர்வு கொண்டு வேகமாகக் கேட்கப்படும் பொழுது அவர்கள் உணவு உடனே கொடுக்கவில்லை என்றால் அவருடைய எண்ணம்…
1.“இப்படிச் செய்கின்றார்களே…
2.நான் சம்பாரித்துக் கொடுத்தேனே…
3.தக்க சமயத்தில் எனக்கு உதவி செய்யவில்லையே என்ற இந்த உணர்வுகள் ஓடிக்கொண்டே இருக்கும்.

யாரை எண்ணி இந்த உணர்வுடன் ஏங்குகின்றாரோ இந்த உணர்வின் ஆற்றல் அவர் உடலுக்குள் சென்று விடுகின்றது. உடலை விட்டு ஆன்மா பிரிந்து விட்டால் பண்புடன் உதவி செய்திருந்தாலும்… நேரத்தில் தனக்கு உபகாரம் செய்யவில்லை என்ற இந்த உணர்வு தான் உந்தப்படுகிறது.

அந்த உணர்வின் வேகத்தில் அவர் மேல் எடுத்துக் கொண்ட வெறுப்பான உணர்வுகள்… பதிலுக்கு அவர்களும் வெறுப்பாகச் சொல்லும் பொழுது வெறுப்பான உணர்வுகளைப் பாய்ச்சி… பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பும் நம்மைப் பார்க்கும் பொழுது வெறுப்பும்… இப்படி வெறுப்புகள் தோன்றி இந்த உணர்வுகள் விளைந்து உடல் நலிவடைந்து விடுகிறது.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மா… யார் மீது வெறுப்பானதோ அவர் உடலுக்குள் தான் செல்லும்… இதே நோயின் கொடுமையை அங்கேயும் உண்டாக்கும்.

பெரும்பகுதியானவர்களுக்கு இன்று கிட்னி பழுதடைவதன் காரணம் என்ன…?

பெரும்பகுதியானவர்களுக்கு இன்று கிட்னி பழுதடைவதன் காரணம் என்ன…?

 

நாம் விளைய வைக்கும் தாவர இனங்களில் பூச்சிகள் புழுக்கள் விழுந்தால் அவைகளைக் கொல்ல பூச்சி மருந்துகளைத் தெளிக்கின்றோம். அதே சமயத்தில் அதில் விளைந்த நல்ல தானியங்களை உணவாக உட்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றோம்.

ஆனாலும் அந்தத் தாவர இனத்திலே விழுந்த பூச்சிகள் நாம் தெளித்த பூச்சிக்கொல்லி மருந்தை ஏற்றுக் கொண்ட நிலையில்
1.அந்த நஞ்சினையே தனக்குள் ஏற்றுக் கொண்டு
2.கடும் நஞ்சு கொண்ட புழுவாக நஞ்சான கிருமிகளாக அடுத்து அது விளைகின்றது.

நாம் தெளித்த பூச்சி மருந்து நாம் விளைய வைக்கும் தாவர இனங்களிலும் கலக்கப்பட்டு… அந்த உணர்வின் சத்து அதுவே நஞ்சாக மாறி… அது கலந்த உணவை உணவாக உட்கொள்ளும் பொழுது “நம் உடலுக்குள் பலவிதமான நோய்களாக உருவாகிறது…”

அந்தப் பூச்சிகளையும் புழுக்களையும் இரக்கமற்றுக் கொன்றது போன்று அந்த நஞ்சின் தன்மை அதிகமாகி கொன்றிடும் உணர்வுகளாக அதிகமாக விளைந்து… அதனால் நம் உடலுக்குள் இருக்கும் “சிறுநீரகங்கள்” பாதிக்கப்படுகின்றது.

காரணம்… அதிலே இந்த நஞ்சு அதிகரிக்கப்படும் பொழுது இரத்தத்தைச் சுத்திகரிக்கும் அதனுடைய செயலாக்கங்கள் செயலற்றதாக ஆக்கி வெறித்தனமான நிலைகள் கொண்டு பல நோய்களை உருவாக்கக் காரணமாகி விடுகின்றது.

1.எந்த நஞ்சினை வடிகட்டும் திறன் கொண்டதோ நம் சிறுநீரகங்கள் அதனின் திறனை இழந்து
2.அதனால் நஞ்சு நம் இரத்தங்களிலே அதிகரித்து உடல் முழுவதும் சுழன்று
3.மனிதனுடைய சிந்தனைத் திறன் குறைந்து சிந்தனையற்றவனாக அந்த வளர்ச்சிகள் அதிகரித்து
4.மனித உடலுக்குள் நஞ்சையே வளர்த்திடும் நிலையாக மாறிவிடுகின்றது.

இதிலிருந்து மீள ஞானிகள் காட்டிய அறவழியில் நாம் செயல்படுதல் நல்லது.

விஞ்ஞானிகள் அணுவைப் பிளந்தார்கள். ஆனால் மெய் ஞானிகள்
1.உணர்வுக்குள் இருக்கும் நுண்ணிய நிலைகளைப் பிளந்து அதை ஒளியாக மாற்றினார்கள்
2.அந்த ஞானிகள் உணர்வை நாம் எடுத்தால் விஞ்ஞான அறிவால் ஏற்றுக் கொண்ட அந்த நஞ்சின் தன்மையைப் பிளக்க முடியும்.

அதைப் பிளக்கச் செய்வதற்குத் தான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய்ஞானிகள் உணர்வுகள் இங்கே படர்ந்து இருக்கும் வேளையில் அது ஆழமாக உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

பதிவாக்கிய பின் அதை தியானிக்கும்படி செய்து அதனின் வலுப்பெறச் செய்து அதையே இப்பொழுது உபதேசமாக கொடுக்கப்படும் பொழுது “எந்த அளவிற்குக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ… அது ஊழ் வினையாக உங்களுக்குள் பதிவாகின்றது…”

அதை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் இந்த வாழ்க்கையில் விஞ்ஞான அறிவால் நமக்குள் வரும் தீமைகளிலிருந்து மீட்டிக் கொள்ள உங்களால் முடியும்.

உபதேசித்த உணர்வுகள் அனைத்தையும் உங்களுக்குள் வலுப்பெறச் செய்து கொண்ட பின்… நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த ஞானிகள் உணர்வுகளை நீங்கள் சுவாசித்து… உங்களை அறியாது வந்த தீய வினைகளை நீக்க முடியும்.

விஞ்ஞானி எப்படி அணுவைப் பிளந்தானோ…? அதே விஞ்ஞானக் கல்விக்குச் செல்லப்படும் போது அதனின் ஆற்றலை அவன் பெறுவது போல்
1.மெய்ஞானிகள் உணர்வை நமக்குள் சேர்த்து
2.நம் உணர்வுக்குள் நஞ்சு கலந்ததை நம் உடல் பிரிப்பதை…
3.பிரிந்த நிலைகள் கொண்டு தன் எண்ணத்தால் உணர்வுக்குள் இருக்கும் நஞ்சினைப் பிளந்து
4.அந்த மகரிஷிகள் உணர்வுகளைப் பாட நிலையாக எடுத்து அதனின் நிலைகள் கொண்டு
5.இந்த மனித வாழ்க்கையில் எப்போதெல்லாம் துன்பம் நேர்கின்றதோ அது சேராத வண்ணம் தடுத்து நிறுத்த ஈஸ்வரா என்று
6.எண்ணியதை இயக்கிக் காட்டும் அவனையே ஈஸ்வரா என்று “உயிரை எண்ணி ஏங்கி”
7.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று வானை நோக்கி நினைவினைச் செலுத்த வேண்டும்.

சக்தி வாய்ந்த ஆண்டென்னா… விண்ணிலிருந்து வரும் சக்திகள் பூமிக்குள் படர்ந்து கொண்டிருப்பதைக் குவித்து ஈர்த்து… அதனுடன் இணைக்கப்பட்ட டிவியில் தெளிவாக அதைக் காட்டுகின்றது… உணர்த்துகின்றது.

இதை போன்று யாம் கொடுக்கும் உபதேசங்களைக் கூர்ந்து கவனித்தால் உங்கள் கண் கரு விழிகளின் இயக்கத்திற்குள் ஆற்றல் மிக்கதாக இந்த உணர்வின் அலைகள் பாயும்..
1.இதை மனமுவந்து பெற வேண்டும் என்று ஏங்குங்கள்
2.அந்த சக்தி உங்களுக்குள் ஜீவன் பெறுகின்றது

இது உங்கள் கையில் தான் இருக்கிறது.

எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நான் (ஞானகுரு) செய்தேன் அதன் வழிகளிலே உயர்ந்த சக்திகளைப் பெற முடிந்தது. என் குருநாதர் காட்டிய வழியினைத் தான் உங்களுக்குள்ளும் இப்போது பதிவாக்குகின்றேன்.

பதிவாக்கியதை நினைவு கொண்டு விண்ணை நோக்கி நீங்கள் ஏங்கினால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கிறது. உங்கள் உடலுக்குள் சேர்த்துத் தீய குணங்கள் விளையாது தடுத்துக் கொள்ள இது நிச்சயம் உதவும்.

மற்றவர்களுக்கு அருளைப் பாய்ச்சும் போது… தீமையிலிருந்து விடுபடும் சக்தியை நமக்குள் வலுவாக்க முடியும்

மற்றவர்களுக்கு அருளைப் பாய்ச்சும் போது… தீமையிலிருந்து விடுபடும் சக்தியை நமக்குள் வலுவாக்க முடியும்

 

அன்றைய அரசர்கள் தன்னுடைய சுகபோகங்களுக்காக மனிதரை மாக்கள் ஆக்கி… அவன் சுகபோகங்களை அனுபவித்தான். அவனுக்குக் கீழ் அடிமையாக்கப்பட்ட நிலையில் மக்கள் இன்றும் நரக வேதனையில் தான் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அவன் ஏற்படுத்திய பகைமை உணர்வுகள் மதத்தை அடிப்படையாக வைத்து மக்களைப் போர் புரியச் செய்தான். அதன் விளைவாக… சகோதர உணர்வுகள் இன்று இழக்கப்பட்டுப் போர் முறைகளாக வந்து கொண்டிருக்கின்றது

பகைமை உணர்வுகள் வளர்ந்த பின்
1.அஞ்சி வாழும் நிலைகளாக உண்மையின் உணர்வுகளை அறியும் தன்மை இழக்கப்பட்டு
2.இன்று வாழும் மக்கள் பண்டைய கால வாழ்க்கை நிலை போல
3.மிருகத்தைப் போன்று ஒருவருக்கொருவர் தாக்கிடும் நிலையாக அஞ்சி வாழும் உணர்வுகளே விளைந்து வந்து கொண்டிருக்கின்றது.

இதைப் போன்ற கொடுமைகளிலிருந்து மனிதன் மீள வேண்டும்.

ஆகவே… நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த உண்மையின் உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள். இந்த மனித உடலில் இருந்தே அருள் வழியைப் பெற வேண்டும் என்ற உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

உங்களை அணுகியவர்களுக்கும் இந்த அருள் உணர்வை ஊட்டுங்கள்.
1.தவறு செய்வது நாம் அல்ல… சந்தர்ப்பங்களும் அந்த நேரத்தில் நாம் நுகர்ந்த உணர்வுகள் தான் இயக்கச் சக்தியாக இயக்குகின்றது.
2.இதிலிருந்து விடுபட வேண்டும் என்று நீங்கள் மற்றவர்களுக்கு ஓதும் பொழுது
3.அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் வலுவாக வளர்த்துக் கொள்ள முடியும்.

உங்கள் சொல்… அந்த அருள் உணர்வுகள்… அங்கே பதிவாக்கப்படும் பொழுது அவர்களையும் தீமையிலிருந்து மீட்டிடும் சக்தியாக மாற்ற முடியும். நீங்கள் இடும் மூச்சலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவருகின்றது.

நீங்கள் எண்ணும் பொழுது அகஸ்தியனின் உணர்வை அறியும் நிலையாக அறிய முடியும். நஞ்சினை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வையும் அகஸ்தியன் உணர்வையும் நீங்கள் பெற முடியும் உங்கள் வாழ்க்கையும் அந்த நிலை பெறும். அடுத்து பிறவி இல்லா நிலை அடையும் பாக்கியமும் பெறுகின்றீர்கள்.

உங்கள் வாழ்க்கை அனைத்தும் சதா அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே வாழ்ந்திடும் நிலை பெறுங்கள். அனைவரும் அதைப் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

1.பகைமை என்ற உணர்வோ… அதனால் வந்த நோயோ இருந்தாலும் அதை மறந்து விடுங்கள்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறுவேன்… என் இரத்த நாளங்களில் கலக்கச் செய்வேன் என்று இதைப் பெருக்குங்கள்.

அருள் உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்… அது வளர அறியாது சேர்ந்த பகைமையால் ஏற்பட்ட கடும் நோய்களிலிருந்து விடுபட முடியும்.

நோய்…! என்று எண்ணத்தை அதன் மீது செலுத்தாதீரக்ள். அதை மறைக்க அருள் உணர்வுகளைச் சேருங்கள்.
1.இதைச் சேர்க்கச் சேர்க்க மகரிஷிகளை எண்ணினாலும் தீமை என்ற நிலைகள் சிறிது கடினமாக இருக்கும்.
2.மேலும் என்னைச் சிந்திக்க விடவில்லையே…! என்று ஏங்க வேண்டாம்
3.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவேன்… எனக்குள் இருக்கும் தீமையை விளைவிக்கும் அணுக்களும் சாந்தமடையும்.
4.என் உடல் நலம் பெறும்…!
5.என் இரத்த நாளங்களில் மகரிஷிகள் உணர்வுகள் பெருகும்… அருள் ஞானம் பெறுவேன்…
6.என் பேச்சும் மூச்சும் கேட்பவரையும் நலம் பெறச் செய்யும் என்று இத்தகைய உறுதியுடன் நீங்கள் செயல்படுத்துங்கள்.

நன்றாகத் தான் இருந்தார்… இப்போது கேன்சர் வந்துவிட்டது…! என்றால் ஏன்…?

நன்றாகத் தான் இருந்தார்… இப்போது கேன்சர் வந்துவிட்டது…! என்றால் ஏன்…?

 

இன்றைய உலகம் எங்கே சென்று கொண்டிருக்கின்றது…? காற்று மண்டலம் நஞ்சாக மாறிவிட்டது…! நஞ்சுகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றது… விஞ்ஞானிகள் கண்டுபிடித்த நிலைகளால் உலகம் மாசுபடும் நிலைகளுக்கே சென்றுவிட்டது.

1.தொழிற்சாலைகளில் வரும் கழிவுகளை எவ்வளவு குழியைத் தோண்டி அதில் புதைத்து வைத்தாலும்
2.அல்லது நீரிலே கலக்கப்பட்டு வடிக்கப்பட்டாலும்
3.அந்த உணர்வுகள் ஆவிகளாக மாறும் பொழுது காற்று மண்டலத்தில் தான் கலக்கின்றது.

பூமிக்குள் செல்வதைத் தடுக்க வேண்டும் என்று விரும்புகின்றனர் ஆனால் மேலே செல்லப்படும் பொழுது தாவர இனங்களிலே இது படர்ந்து விடுகின்றது அதனால்… கேன்சர் நோய் இன்று அதிகமாக வருகின்றது.

1.இவர்கள் கழிக்கும் நஞ்சுகள் அதிகரிக்கும் நிலையில்
2.எங்கே பார்த்தாலும் கேன்சர் கேன்சர் என்ற நோய்கள் வந்து கொண்டு இருக்கின்றது
3.நன்றாகத் தான் இருப்பார்கள்… திடீரென்று இந்த நோய் வந்துவிடும்.

இதைப் போன்ற கடுமையான நஞ்சின் நிலைகள் வரப்படும் பொழுது உடலில் மூட்டுகளிலும் இந்த விஷத்தன்மைகள் ஊடுருவுகின்றது.

எந்த வலுவின் தன்மை ஏற்கின்றோமோ நரம்பு மண்டலங்களுக்குள் இந்த விஷத்தன்மைகள் செல்லப்படும் பொழுது
1.அங்கே தேங்கி விட்டால் வலு கொண்டு செயல்படுத்தும் நிலைகள் முடியாது போய்விடுகின்றது.
2.நாம் சுவாசித்த உணர்வுகள் இந்த நிலை பெறுகின்றது.
3.இது போன்ற நிலையில் இருந்து மனிதன் மீள வேண்டும்.

இந்த உணர்வுகள் எல்லாம் எப்படி இயங்குகின்றது…? என்ற நிலைகளை குருநாதர் 20 வருடம் அனுபவபூர்வமாக தெளியச் செய்தார். தெளிந்து உணர்ந்த பின் தான் உங்களுக்கு இதை எடுத்துச் சொல்கின்றேன் (ஞானகுரு).

எம்மிடம்…
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதி என்றார்
2.அவன் அமைத்த உடல் அந்த ஆலயம் என்று நீ கருது
3.மனிதனை உருவாக்கிய ஒவ்வொரு உயர்ந்த குணங்களையும் சீர்படும்படி உனக்குள் எண்ணி அதை வளர்த்துக் கொள்.

பிறருடன் பழகிய உணர்வு… அதே உணர்வு வளர்ந்து இருந்தால்
1.அவர்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று நீ எண்ணினால்
2.உனக்குள் அவர் உணர்வு பதிவாகி இருந்தால்… உன்னை உயர்த்தும் நிலையாக உனக்குள் அது சீர்படுகின்றது.

இது அல்லாது வேறு யாரிடத்திலும் காசைக் கொடுத்து யாகத்தைச் செய்து பாவத்தைப் போக்கிவிடலாம் என்றால் பாவத்தைத் தான் நீ சேர்க்கின்றாய் எந்த மந்திரத்தைச் சொல்லி யாகத்தைச் செயல்படுத்துகின்றார்களோ பாவத்திற்கு நம்பர் ஒன்றாகின்றாய்…!

இந்த உடலை விட்டுச் சென்ற பின் எந்த உணர்வுகளை நீ பதிவு செய்து கொண்டாயோ இறந்த பின் மந்திரம் தெரிந்தவன் அதைப் பதிவு செய்தான் என்றால் பாவச் செயலுக்கு உன்னைப் பயன்படுத்துவான் என்றார்.

இதிலிருந்து எவரும் தப்ப முடியாது. மனிதன் மீண்டும் புழு பூச்சியாகத்தான் செல்ல முடியும் இதை எல்லாம் தெளிவாகக் கூறுகின்றார் குருநாதர்.

ஆகவே உங்களை நம்புங்கள்…! நீங்கள் எண்ணுவதைத் தான் உயிர் உருவாக்குகின்றது. எதை எண்ணிச் சேர்க்க வேண்டும்…? என்று உணர்ந்து கொள்ளுங்கள்.

மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உடலில் வளர்த்துக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள். வளர்க்க வேண்டும் என்றால் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பதிவாக்குங்கள். அதை வலுவாக்கத் தியானித்துக் கொள்ளுங்கள்.

எப்பொழுதெல்லாம் துன்பங்கள் வருகின்றதோ அதை மறந்து விட்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவேன் என்று அதை உறுதிப்படுத்துங்கள்.
2.எதனால் துன்பங்கள் வந்ததோ என் பார்வை அதைச் சீராக்க வேண்டும்…
3.நான் சிந்தித்துச் செயல்படும் சக்தி பெற வேண்டும்
4.பொறுப்புடன் செயல்பட வேண்டும்… அந்தச் சக்தி எனக்குள் வளர வேண்டும்
5.என் பார்வை அனைத்தையும் நல்லதாக வேண்டும்
6.என் பேச்சைக் கேட்பார் வாழ்வில் நலமும் நலமும் அவர்கள் பெற வேண்டும் என்று இப்படி எண்ணிப் பழகுங்கள்.

இப்படி நீங்கள் எண்ணுவது நலம் பெறும் சக்தியாக உங்களை மாற்றும்…!

“சதமில்லாததை எல்லாம்” நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியதில்லை

“சதமில்லாததை எல்லாம்” நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியதில்லை

 

யாம் உங்களுக்கு கொடுக்கும் அரும்பெரும் சக்திகளை நீங்கள் சீராகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்.. எங்களை அறியாது சேர்ந்த இரத்தக் கொதிப்பு நீங்க வேண்டும்… அதை நீக்கும் அரும்பெரும் சக்தி நாங்கள் பெற வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும் என்று ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடமாவது தியானிக்க வேண்டும்.

உதாரணமாக ஒருவருக்கொருவர் நண்பர் என்று இருக்கப்படும் பொழுது நண்பனுக்கு நன்மை செய்தான்… என்றால் வெகு தொலைவில் இருந்தாலும் விக்கல் ஆகிறது… துரோகம் செய்தான் என்றால் புரையோடுகிறது.

ஆனாலும் தியானம் எடுத்துக் கொண்ட பின் யாம் உபதேசிக்கும் உணர்வுகள்… உங்களுக்குள் பதிவான அந்த அரும்பெரும் சக்தியை நீங்கள் சீராகப் பயன்படுத்தி
1.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
2.துருவ மகரிஷிகள் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
4.எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும்
5.சர்வ நோய்களையும் நீக்கிடும் அரும்பெரும் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
6.எங்களுக்குள் அந்த நோய் நீக்கும் சக்தி விளைய வேண்டும் என்று
7.திரும்பத் திரும்ப… திரும்பத் திரும்ப… அருள் உணர்வுகளை உடலுக்குள் சேர்க்க வேண்டும்

கணவன்… மனைவிக்கு இது போன்று செயல்படுத்த வேண்டும். மனைவியும்… கணவனுக்கு இதைப் போன்று எண்ணி இந்த உணர்வுகளைப் பாய்ச்ச வேண்டும்.

கணவர் உடலில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்… நோய் நீக்கக்கூடிய சக்தி அவருக்குள் வளர வேண்டும்… அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று
1.இப்படி இருவருமே ஒருவருக்கொருவர் எண்ணிப் பழகுதல் வேண்டும்
2.அடிக்கடி இவ்வாறு எடுத்துக் கொண்டு வந்தால் இருவருமே உடல் நலத்துடன் வாழ முடியும்.

சர்க்கரை நோயோ… ஆஸ்த்மாவோ இருந்தால் “அந்த நோய்களை மறந்து விட்டு” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… உடல் நலம் பெறும் சக்தி பெற வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடலில் எந்த நோய் இருந்தாலும் அது நீங்க வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும்…
1.நோய் நீக்கும் அருல் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் பெருக வேண்டும் என்று
2.திரும்பத் திரும்ப… திரும்பத் திரும்ப இந்த நினைவுகளை எடுத்து உடலில் செலுத்துங்கள்.
3.நாளடைவில் நோய்கள் நீங்கும்… துருவ நட்சத்திரத்தினுடைய ஆற்றல் அதிகமாகப் பெருகும்.

இப்படிப் பெருக்கி பழகிக் கொண்டால்தான் விஞ்ஞானத்தால் இனி வரக்கூடிய நஞ்சின் தன்மையை நாம் அகற்ற முடியும்.

ஆகவே துருவ நட்சத்திரத்தின் உணர்வை வளர்த்துக் கொண்டால் இந்த உடலை விட்டு நாம் செல்லும் போது உணர்வின் ஒளியாக மாறி அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று நாம் வாழ முடியும்.

ஏனென்றால் இந்தப் பூமியில்
1.நமக்கு இந்த உடல் சதம் அல்ல… சேர்க்கும் சொத்தும் நமக்குச் சதம் அல்ல
2.சதம் இல்லாததை எல்லாம் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

ஆனாலும்… சதமான நிலைகளைப் பெறுவதற்கு இந்த உடலைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். இந்த உடலில் இருந்து ஓரளவுக்கு மகரிஷிகள் உணர்வுகளை முழுமையாகப் பெறும் வரையிலும் உடலையும் பாதுகாக்க வேண்டும்.

உடலைப் பாதுகாக்க வேண்டும் என்றால் மகரிஷிகளின் அருள் சக்திகளை அதிகமாக நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்
1.அப்படி வளர்க்கப்படும் பொழுது உடலையும் அது பாதுகாக்கின்றது
2.இந்த உடலில் இருந்து அருள் ஒளி பெறும் தகுதியையும் பெருக்கிக் கொள்ள முடிகின்றது
3.இரு மடங்கு நமக்கு அந்தச் சக்தி கிடைக்கின்றது.

இந்த தியானத்தை அவசியம் நீங்கள் அனுதினமும் கடைப்பிடித்துப் பழகுங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறப் பழகிக் கொள்ளுங்கள்.

இதற்கு முன் நம்மை அறியாது சேர்ந்த தீயவினைகள் எதுவாக இருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் அதிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும் என்று தான் எண்ணிப் பழக வேண்டும்.

அந்தச் சக்தியை உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்குத் தான் உங்கள் ஒவ்வொருவர் உயிரையும் கடவுளாக மதித்து
1.ஒவ்வொரு உயிரும் அந்த சக்தி பெற வேண்டும்
2.அந்த சக்தியை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று
3.குரு வழியில் ஐக்கிய உணர்வு கொண்டு அருள் உணர்வுகளைப் பாய்ச்சிக் கொண்டே உள்ளேன் (ஞானகுரு).

அதை நீங்கள் சீராகப் பயன்படுத்தி… எதிர்காலத்தில் வரக்கூடிய தீமையிலிருந்து விடுபடும் சக்தியை வளர்த்து… உலகைக் காத்திடும் மெய் ஞானிகளாக நீங்கள் வளர்ந்திட வேண்டும் என்று குருவின் ஆணைப்படி நான் செயல்படுத்துகின்றேன்.

தீமை செய்யும் (இடும்ப) குணங்களும் அதனால் உடலில் உருவாகும் நோய்களும்

தீமை செய்யும் (இடும்ப) குணங்களும் அதனால் உடலில் உருவாகும் நோய்களும்

 

வாழ்க்கை நடைமுறையில் மனிதன் கொள்கின்ற எண்ணத்தின் குணங்களாக
1.மோகம் (மயக்கம் – மருள்)
2.கோபம் (அவசரம் – ஆத்திரம் – ஆவேசம்)
3.காமம் (அதி ஆசைகள் – ஏக்கம்)
4.வெறி (மதம் – செருக்கு)
5.பொறாமை (வெறுப்பு – விரக்தி – குறுகிய மனம்)
6.அதி பயம் (கலக்கம்) போன்ற இந்த ஆறு குணங்களும் இடும்பச் சித்தன் காட்டிய தீதெண்ண குணங்கள்.

இந்தக் குண எண்ண ஓட்டங்களால் மனிதனின் நினைவுகள் அதிலே சிக்கப்பட்டு அந்தச் சுவாசமே “கனம் கொண்டதாக…” ஈர்க்கப்படுகின்றது.

அந்தக் கனமான சுவாசத்தின் அலைகள் சரீரத்தினுள் இரத்த ஓட்ட நாளங்களில் செயல் கொள்ளும் சுவாச நாடிகளின் வழியே ஓடி சுவாச நாடிகளின் முக்கிய கேந்திரங்களாக அந்தந்த இடங்களில் அமையப் பெற்ற மூலம்… மூலாதாரம்…. நாபி… இருதயம்… கண்டம்… நெற்றி… தலையின் உச்சிப் பகுதி… முதலிய அமைப்புகளிலும் ஓடுகின்றது.

1.சரீரத்தில் ஈர்க்கப்படும் இத்தகைய உணர்வுகள் இடும்ப குண வசமாக மனிதனுக்குள் வந்து
2.அந்தந்த எண்ணத்தின் தொடருக்கு நாடிகளில் ஓடிடும் மூச்சலைகள் இரத்த நாளங்களில் ஓடிடும் செயலில்
3.சரீர அவயங்களில் தன் தன் இயக்கத்தில் (நாடிகளில்) செயல்படும் நிலையே
4.அதி தீவிரச் செயல் நிகழ்வாக சரீர இயக்கத்தில் செயல்பட்டு
5.அந்தத் தீதெண்ண குணங்களின் கனம் மிக்க சுவாச ஓட்டத்தில் ஏற்படுவதே உடல் நோய்கள்.

(1). இருதய வலி:-
சுவாச ஓட்டம் சரீரத்திற்குள் சென்று வெளி வரும் செயலில் இருதயப் பகுதியில் இருந்து ஓடிடும் தாய் மூச்சு நாடி நாபிப் பகுதியில் நீரமிலச் சக்தியுடன் இணைந்து செயல்படுகின்ற செயலில் கோபத்தின் கனம் மிக்க சுவாச ஓட்டத்தால் என்ன ஆகிறது…?

அந்தத் தாய் மூச்சு தாக்கப்பட்டு அதனுடன் இணைந்த மார்பு நாடியின் செயலுக்கும் தடை ஏற்படுத்தும் பொழுது உண்டாவதே இருதய வலி.

(2). வாயு… பித்தம்… மன நோய்:-
குறுகிய மன நிலை… மருள்… பொறாமை… ஏக்கம்… உள்ளிட்ட கனம் கொண்ட சுவாசத்தின் தன்மையால் நீரமில சக்தி கொண்டிட்ட நாபி நாடியின் செயலுக்குத் தடை ஏற்படுகிறது.

அதே போல் இடுப்பு எலும்பும் கால் எலும்பும் இணையும் இடத்தில் ஓர் சூட்சம வாயு வெளிப்பட்டு மூல அக்கினியில் கலக்கின்றது.

1.மூல அக்கினியில் கலந்த அந்த வாயு
2.மூலத்திலிருந்து கிளம்பி மூல நாடியின் வழி ஓடி நாபி நாடியைத் தாக்கிடும் செயலில்
3.சரீரத்தில் வாயு பித்தம் மற்றும் மன நோய் ஏற்படும் நிலைகளை உண்டாக்கி விடுகிறது.

(3). உடல் உஷ்ணம்… தோல் வியாதி:-
மோகம்… செருக்கு… அதி ஆசைகள்… என்ற எண்ண ஓட்டத்தில் வரும் சுவாசத்தின் மூச்சலைகள் மூலாதாரம் மூலம் இந்த இரு நாடிகளில் தாக்கப்பட்டு அதி உஷ்ணம் தோல் வியாதிகள் மற்றும் உயிர் நிலையை ஜீரணிக்கச் செய்யும் இரத்தம் சிலந்தி நோய்களும் வரக் காரணமாகின்றது.

கண்ட நாடி பாதிக்கப்படும் பொழுது அறிவின் ஆற்றல் செயல்படாதபடி பிரமை பிடித்த நிலையும் ஊமைத் தன்மையும் மற்றும் காதுகேளாச் செயலும் ஏற்படுகிறது.

இந்த நோய்களும் இவைகளின் கிளைகளாகப் பல்கிப் பெருகும் ஏனைய நோய் நொடிகளும்
1.தான் எடுத்துக் கொண்ட குணத்தின் வீரியத் தன்மைகளால்
2.”மனிதன் தனக்குத் தானே விதித்துக் கொள்ளும் தண்டனைகள் தான்…!”

கண்டத்தின் செயலையும் தாண்டிச் சிரசின் பகுதியில் நெற்றியில் ஓடிடும் நாடிகள் பாதிக்கச் செய்யும் அதி தீவிரச் சிந்தனைகளாலும்… திடீரென ஏற்படும் அதிர்ச்சிகளின் செயலினால் உண்டாகும் பயத்தினாலும் மனிதனுடைய சித்தம் கலங்கிப் பித்தனாகவே (பைத்தியம்) மாற்றிவிடும்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல…!
1.நல் எண்ண குணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து
2.சுவாச நிலையைச் சீராக்கும் முயற்சியில் மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்து
3.உயரிய சுவாசமாக.. அருள் மணங்களாக.. அந்த மூச்சலைகளை நாடிகளின் கேந்திரங்களுக்குள் செலுத்தினால்
4.சரீர சுத்தி கிடைக்கும்… அதே போல் உயிரான்ம சக்தியும் சுயப்பிரகாச நிலை (ஒளி நிலை) அடையும்.

மருந்தை மட்டும் உட்கொண்டால் சரீர சுத்தி கிடைக்காது…!

மருந்தை மட்டும் உட்கொண்டால் சரீர சுத்தி கிடைக்காது…!

 

மனிதனின் சரீரமானது எண்ணம் கொண்டு ஜீவ காந்த ஆற்றலின் கதியினால் இயங்கும் இயற்கைச் செயல்பாட்டில் சரீரம் நலிவுறும் காலங்களில் எல்லாம் அதைக் குணப்படுத்த நவீன மருத்துவ விற்பன்னர்கள் (DOCTORS) பல பல முறைகளைக் கையாளுகிறார்கள்.

நோயின் குணங்களை அறிந்து அந்த நோய் அகலச் செயல்படுத்தும் இன்றைய மருத்துவத்தில் நோய்வாய்ப்படுபவனின் சரீரம் மருத்துவர் கொடுக்கும் மருந்தின் குண அமிலத்தை ஏற்றுக் கொண்டு நோயை அகற்றிடச் செயல்படுகிறது.

ஆனால் நோயின் கடுமை வீரியம் கொண்டால் உட்கொள்ளும் மருந்தை ஏற்றுக் கொள்ளாத நிலையில் முதிர்வாகிச் சரீர அவயங்களில் பெரிய பாதிப்பு எற்படத் தொடங்கிவிடுகிறது.

இவைகளை மருத்துவர்கள் கண்டு கொண்டு அந்த நோயின் கடுமைக்கு ஏற்ப அறுவைச் சிகிச்சை முறைகளையும் (SURGERY) கற்ற அறிவின் ஞானம் கொண்டு செயல்படுத்துகிறார்கள்.

மருத்துவம் மனிதனை இன்றைக்குக் காத்துக் கொண்டிருப்பது இதைப் போன்ற வழிகளில் தான். ஆனால்
1.மனிதனுடைய சந்தர்ப்பத்தினால் அவன் எடுத்துக் கொண்ட குணங்களின் கடுமையால் தான் சுவாச ஈர்ப்புத் தன்மையே மாறுகிறது.
2.அதனால் சரீரத்தில் நலிவுகள் ஏற்படத் தொடங்குகிறது
3.இன்றைய மனிதனின் செயல்பாடுகள் இப்படிப்பட்ட விதி வழி செல்கின்றதப்பா…!

பூமி ஈர்த்துச் சமைக்கும் சுவாசத்தின் செயலில் நன்மை தீமை என்று கலந்தே காற்றினில் படர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் வாழ்க்கை மோதலில் மனிதன் தான் ஏற்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட எண்ணம் வலு நிலை பெற்று விடுவது “சுவாசத்தின் கதியினால் தான்…!”

சரீரத்திற்குள் அமைந்து வினைச் செயலாக இயங்கிக் கொண்டிருக்கும் முக்கியமான நாடிகள்: மூலாதார நாடி… நாபி நாடி… மார்பு நாடி… கண்ட நாடி… சிரசில் நெற்றிப் பகுதியில் சிவசக்தி நாடி… சிரசின் உச்சியில் ஈஸ்வர நாடி…. ஆகும்.

இவைகளுடன் சேர்ந்து சரீர அவயங்களில் புறத் தொழில் புரிந்திடும் செயலாகச் செயல்பட்டு ஓடிடும் நாடிகள் கண்… காது… நாசி… வாய்… கை கால் உறுப்புகள்.. ஒவ்வொன்றுமே சரீர வளர்ச்சிக்காக இயங்கினாலும்
1.அந்த வளர்ப்பின் முதிர்வாக…
2.கடைசியில் மனிதனின் சரீரத்தில் ஏற்படுகின்ற நோய் நொடிகள் அனைத்திற்கும் மூல காரணம் எது…?

உலகோதய வாழ்க்கையில் மனிதன் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் செயல்படும் குணங்களில்
1.பயம் கோபம் மோகம் ஆத்திரம் அவசரம் வெறி வேதனை உள்ளிட்ட
2.பல்லாயிரம் கிளைகளாகக் கிளைத்திடும் அந்தக் குணங்களின் செயல்பாடே
3.சுவாசத்தின் கதியாக நாடிகளில் ஓடுகின்றது.
4.அந்தந்தக் குணங்களின் வீரியத்திற்கொப்ப இரத்த நாளங்களைத் தூண்டச் செய்து
5.மேலே சொல்லப்பட்ட அக… புற நாடிகளில் ஓடும் சீரான சுவாச ஓட்ட கதி முழுவதையுமே அது மாற்றி விடுகின்றது.

அதே சமயத்தில் சரீர உள் அவயங்கள் செயல்படும் செயலிலும் மாற்றத்தை ஏற்படுத்தி வேதனைகளை உண்டாக்குகின்றது. அந்த வேதனையின் உச்ச நிலையே நோயாக மாறுகின்றது.

நோயாக ஆன நிலையில் இயற்கையின் கதியை அதாவது சரீர இயக்கத்தின் இயல்பையே மாற்றிவிட்டு தான் பெற வேண்டிய உயர் நிலைக்கே விபரீதத்தை விளைவித்துக் கொள்கின்றான் மனிதன்…!

சுவாச நிலை சுவாச நிலை என்று பல முறை சொல்கிறோம். அந்தச் சுவாச நிலையைச் சரி செய்ய வேண்டுமா இல்லையா..?
1.சுவாச நிலையை மாற்றாதபடி
2.நாடிகளின் இயக்கங்களைச் சீராக்காதபடி
3.மருந்தை மட்டும் உட்கொண்டால் சரீர சுத்தி கிடைக்குமா…?

நோய் நீக்க மருந்தை உட்கொண்டாலும்… “அதற்கு முன்” மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்க்க வேண்டியது மிக மிக அவசியம்

நோய் நீக்க மருந்தை உட்கொண்டாலும்… “அதற்கு முன்” மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்க்க வேண்டியது மிக மிக அவசியம்

 

நாம் கோபப்படுவோரையோ அல்லது ஒரு வேதனைப்படுவோரையோ பற்றிக் கேட்டறிந்து அவர்களுக்கு உபகாரங்கள் செய்தாலும்… கேட்டறிந்த உணர்வுகளை நமது உயிர் (நாம் நுகர்ந்ததை) ஓ… என்று இயக்கி ஜீவ அணுவாக மாற்றி உடலுக்குள் இணைத்து விடுகிறது.

அதாவது நாம் பரிவு கொண்ட மனதுடன் பிறர் வேதனைப்படும் உணர்வினைத் தனக்குள் கவர்ந்த பின் “வேதனையை உருவாக்கும் அணுவாக” உருப்பெற்று விடுகின்றது.

உதாரணமாக செடிகளில் விழும் புழுவைக் கொல்ல நஞ்சு கொண்ட மருந்தினை அதன் மேல் பாய்ச்சுகின்றோம். புழு இறந்து விடுகின்றது.
1.அது இறந்தாலும்… அதனின் கருவின் தன்மைக்குள் இந்த நஞ்சு இயக்கப்பட்டு
2.அந்த நஞ்சால் இறக்காத உடலாகப் பின்னாடி (அடுத்து) பெறுகின்றது.

அது போல் மனிதன் வேதனைப்படுவதைக் கூர்ந்து கவனித்து அந்த வேதனையான உணர்வின் சத்தை நாம் நுகர்ந்து விட்டால் அது நமக்குள் அணுவாக மறைகின்றது… நோயாகிறது.

விஞ்ஞான அறிவு கொண்டு அந்த நோயை நீக்க அவன் பாய்ச்சும் நிலைகள்… நஞ்சு கலந்த மருந்தாகக் கொடுக்கின்றார்கள். அது நோயினை வலுவிழக்கச் செய்தாலும்… அதனால் விளைந்த அணுவின் தன்மை அந்த நஞ்சே கலந்ததாகவே மாறுகின்றது..

1.நஞ்சான மருந்தைப் பாய்ச்சித் தான் புழுவைக் கொல்கின்றோம்.
2.அது இறந்தாலும் அது இட்ட கரு முட்டையில் இந்த நஞ்சு பரவி நஞ்சின் தன்மையாக எப்படி அடைகின்றதோ
3.நஞ்சு கொண்ட புழுவாக… நஞ்சுக்கும் அஞ்சாது தப்பி அதனுடைய செயலாக்கங்கள் வளர்வது போன்று
4.இன்று வைத்திய ரீதியில் ஆஸ்த்மா கேன்சர் போன்ற கடும் விளைவுகள் கொண்ட நோய்களுக்கு
5.விஞ்ஞான அறிவால் கடும் விஷத்தை நல்ல மருந்துடன் காய்ச்சி அதை இணைத்துத் தான் மருந்தினைக் கொடுக்கின்றார்கள்.

மருந்தை நாம் உட்கொள்ளும் போது இந்த விஷத் தன்மை ஊடுருவி அந்த மருந்தினை உடலுக்குள் ஊடுருவிச் செலுத்துகின்றது. மற்ற குணங்கள் கொண்ட உணர்வுடன் இது அதிகமாகக் கலந்த பின் இந்த நோயை உருவாக்கிய அணுக்களைச் சோர்வடையச் செய்கின்றது… அவைகள் மடிகின்றது…! உடலில் வரக்கூடிய வேதனை குறைகின்றது.

ஆனாலும் இந்த உணர்வின் அணுக்கள் உள் சென்று மீண்டும் மீண்டும் இந்த மருந்தின் வேகத் துடிப்பைக் கொண்டு வரும் பொழுது என்ன ஆகிறது.

அப்போது அமைதி கொள்கின்றனர்.
1.பின் அதனுடைய வழிகளில் இதே கலந்த மருந்தினை ஒவ்வொரு டோஸாக (DOSAGE) விஞ்ஞான அறிவுப்படி கூட்டுகின்றனர்.
2.விஷத் தன்மை கொண்டு நோயை அடக்க எண்ணினாலும் கடைசியில் இந்த விஷத்தின் தன்மை அதிகமாக முதிர்வடைந்து
3.மீளாத் துயர் கொண்ட நஞ்சாக உடலில் வளர்த்துவிடுகிறது.

அப்போது நஞ்சு கொண்ட உடலாக வெளிவந்த பின்…
1.இறக்கப்படும்போது எவர் மேல் பற்று கொண்டாரோ அந்த உடலுக்குள் சென்று
2.அதே நஞ்சு கலந்த உணர்வினைப் பாய்ச்சி நோயினை உருவாக்கி விடுகின்றது.

ஆஸ்த்மா போன்ற நோய்கள் இதைப் போன்று பரவி வந்தாலும்
1.பற்று கொண்ட உடலில் இந்த ஆன்மா உள் புகுந்து விட்டால்
2.அடுத்து இவர்கள் எந்த மருந்தினை உட்கொண்டாலும் அது ஈடேறுவதில்லை.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஒவ்வொரு நொடியிலும் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்தால் தான் அதிலிருந்தெல்லாம் நாம் தப்ப முடியும்.

“பேரின்ப ரசம் பருகும் சூட்சம கதியைத்தான்” ஈஸ்வரபட்டனாகிய யான் உணர்த்தி வருகின்றேன்

“பேரின்ப ரசம் பருகும் சூட்சம கதியைத்தான்” ஈஸ்வரபட்டனாகிய யான் உணர்த்தி வருகின்றேன்

 

வெயிலின் கடுமை நிறைந்திருக்கும் பாலையில் பூமியில் சூட்சம ஈர்ப்பின் கதி சுழலில் அந்த இடத்து நிலைத் தொடர்கள் ஈர்ப்பின் நிலைப்பில் நீர் சக்தி மறைந்துவிடும் என்பது இயற்கையே…!

ஆனாலும் பாலையின் கதியிலும் நீர் உள்ளே மறைந்திருக்கும் செயல் (சூட்சமம்) என்பது
1.வெயிலின் வெப்பத்தன்மை எவ்வளவு தான் கடுமை ஆனாலும்
2.பாலை நீர்த் தன்மை குளிர்ந்திருக்கும் செயலே “பாலைச் சூட்சமம்…!”

கோடையின் வெப்பத்தால் நீர் நிலையில் மேலே இருக்கும் நீர் வெம்மையுற்றாலும் அதன் உட்புற நீர் குளிர்மையாகத் தான் இருக்கும். அப்படி அந்த நீர் ஓரளவு குளிர்ந்திருக்கும் தன்மை போல் சரீர கதியிலும் உண்டு.

“பாலைச் சூட்சமம்” போல் வாழும் நீர் சக்தியின் தொடரே…! நம் உயிரான்ம சக்தி சூட்சம சரீர கதியில் உடலில் வாழும் தத்துவம்…! என்பதன் கருத்தை ஊன்றி… உணர்ந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

1.தத்துவத்தில் “வினோதம்…!” என்பதெல்லாம்… – சூட்சம கதித் தொடர் என்பதில்
2.வெப்பம் என்று பாலைவனம் உஷ்ணம் தகிக்கும் தன்மை போல் சரீரமும் உணர்கின்றது.

வெப்பம் போல் ததித்துறும் செயல் உயிர் ஆன்ம இயக்கத்தில் சரீரத்தில் இருக்கும் அத்தனை உயிரணுக்களுக்கும் அதன் அதன் எண்ண ஓட்ட கதிக்குட்பட்டு வாழும் செயல் நிலைத் தொடரில்… சரீர கதிக்கு உண்டாக்கப்படும் வினைச் செயல்களால்
1.எந்த உயிரணுக்களின் எண்ண நிலை தாக்கப்படுகிறதோ
2.அந்தந்த உயிரணுக்களின் எண்ண அமில நிலைத் தொடர்பால்
3.உணர்வின் உந்துதல்களின் வழி பெறப்படும் நிலையே சரீர அவஸ்தை என்னும் உடல் துன்பம்.

எந்தெந்த இடங்கள் தாக்கப்படுகின்றதோ… அந்த இடத்திலுள்ள உயிரணுக்கள் அதனின் எண்ணம் வேதனையாக வெளிப்பட்டு… சரீரம் முழுவதற்கும் அந்த எண்ணம் “தொடர் போல் வியாபித்து…” ஒன்றுடன் ஒன்று அனைத்து உயிரணுக்களின் கதிக்கும் வேதனையை அனுபவிக்கும் செயலாக அமைந்து… “உயிர் ஆன்ம சக்திக்கே பாதிப்பு நிலை ஏற்படுகின்றது…”

ஆக நீரின் உட் தன்மை கோடையிலும் இயல்போடிருப்பதைப் போல் யாம் சொல்லும் தியானத்தின் வழி சூட்சம சக்திகளை எடுக்கும் நிலையில் உயிரானது ஆன்ம வடிவ சூட்சம ஜோதியில் வாழும் தன்மையாகச் செயல் கொள்ளும் திறனை அறிதல் வேண்டும்.

ஆகவே சரீர உயிரணுக்கள் அனைத்தும் ஒளி காந்த சக்தி பெற்று உயிர் ஆன்மத் தொடரில் ஒன்றி வாழும் தொடர் எண்ணங்கள் வருதல் வேண்டும்.
1.கண்ணன் வேய்குழலின் இன்னிசையில் பசுக்கள் எல்லாம் மயங்கின…! என்ற தத்துவச் செயலாக
2.நம் சரீர உயிரணுக்களை மயக்குறும் நாதமாக்க
3.உயிர் ஆன்ம சக்தி (நாம்) செயல்பட வேண்டும்.

ஆத்ம சுடர் ரசமணியாக்கும் வான்மீகியார் தொடர் கொண்டு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் செயலபடும் நிலையை அனைத்து உயிரான்மாக்களும் பெறவேண்டும்.

மூல சுக்கிரன் தொடர்பு கொண்டு தனக்குள் அதைப் பெறப் பெற கண்ணன் இசைக்கும் இசையாகும் உயிர் சக்தி…
1.சரீர கதியில் அனைத்து உயிரணுக்களையும் தன் பால் ஈர்த்து
2.ஜோதித்துவத்தில் மூழ்க வைக்கும்.

அந்தப் பேரின்ப இரகசிய ஆனந்த நிலை என்பது என்ன…?

உயிரணுக்களை எண்ண மேய்ச்சலுக்கு விடும் பொழுது உணர்வுகள் ஒன்றி ஒடுங்கும் செயல் சரீரச் செயலில் தாக்கப்படும் வேதனையை அனுபவிக்காத தன்மை கொண்டு
1.உயிரில் ஆனந்த அமுதைப் பருகி
2.தன் வழியில் எண்ணச் செயல் விடுத்து அந்தப் பேரின்ப ரசம் பருகும்.
3.அந்தச் சூட்சம கதியைத்தான் ஈஸ்வரபட்டனாகிய யான் உணர்த்தி வருகின்றேன்.

பாலையாகச் சுடும் வினைச் செயலில் வாடையாகக் குளிர்ந்திருக்கும் எண்ண நினைவில் அச்சம் விலகிடும் பூரணத்துவத்தை ஒவ்வொருவரும் அடைதல் வேண்டும்.

தீவினைப் பயன் நீக்கும் செயலுக்கு எந்த ஒரு உயிரணுக்களும் சரீரம் தொட்டு வேதனயுறாமல்
1.உயிரான்மா காக்கப்படுவதைப் போல் காக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்து
2.சூட்சம உடல் வாழும் “தவ வாழ்வை” மேற்கொள்ள வேண்டும்.