ஓ…ம் நமச்சிவாய…! சிவாய நம ஓ…ம்…!

lordshivaandparvathi

ஓ…ம் நமச்சிவாய…! சிவாய நம ஓ…ம்…! 

 

நம் வாழ்க்கையில் பார்ப்பதை எல்லாம் சதாசிவமாக்கிக் கொண்டு வருகிறோம். அதாவது உடலாக ஆக்கிக் கொண்டேயுள்ளோம்.

உதாரணமாக ஒரு நோயால் அவதிப்படுவோரை உற்றுப் பார்த்து நுகர்ந்த உடனே
1.உயிரிலே பட்டு “ஓ…!” என்று பிரணவமாகி “ம்…! என்று நம் உடலாக ஆகின்றது. – அது தான் “ஓ…ம் நமச்சிவாய…!”
2.அடுத்து அவரிடம் நோயைப் பற்றி விசாரித்துக் கேட்டறிந்தவுடனே நோயால் வாடிக் கொண்டிருக்கின்றார்… என்று திருப்பிச் சொல்கிறோம். – அது “சிவாய நம ஓ…ம்…!

அதே போல் ஒருவர் நம்மைத் திட்டுகிறார் என்று காதில் கேட்கிறோம். திட்டும் உணர்வை நுகரும் பொழுது ஓ…ம் நமச்சிவாய…! அந்த உணர்வை நுகர்ந்த பின் திட்டியவனைச் சும்மா விடுவதா…? விடக்கூடாது…! என்று திருப்பிச் சொல்கிறோம். அது சிவாய நம ஓ…ம்.

நோயுடன் வாடுபவரைப் பார்த்ததும் அடடா…! இந்த மாதிரி வேதனைப்படுகிறார் என்ற அந்த உணர்வின் தன்மையை நாம் எடுக்கின்றோம். அதே உணர்வு நமக்குள் விளைகிறது. ஒருவர் திட்டினால் அவருக்குப் பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற அதே கோப உணர்வை எடுக்கின்றோம். அதுவும் நம் உடலில் விளைகிறது.

நம்முடைய வாழ்க்கையின் சந்தர்ப்பங்களில் இப்படிப்பட்ட உணர்வுகளைத்தான் சதாசிவமாக்கிக் கொண்டு இருக்கின்றோம்.
1.ஆனால் மனித உடல் பெற்றது என்பது பரசுராம்.
2.அதாவது சமப்படுத்தும் நிலைகள் பெற்றது தான் நம்முடைய மனித உடல் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

காய்கறிகளை வேக வைக்கிறோம். சமைக்கும் பொழுது அதிலே பல சரக்குகளைச் சேர்த்துச் சுவையாக உருவாக்குகிறோம்… பரசுராம். அதே போல பலராம். அதாவது பலருடைய எண்ணங்களை நன்மை தீமை என்ற நிலைகளில் நாம் கேட்டு அறிகிறோம்.

ஆனாலும் நாம் செய்யும் நன்மைகளைக் காக்க வேண்டும் என்றால் அந்தத் தீமைகள் விளையாது தடுக்க (சமப்படுத்த) வேண்டும். தீமைகளைத் தடுக்க வேண்டும் என்றால் மெய் ஞானிகளின் உணர்வுகளைக் கலக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் எடுத்துச் சமப்படுத்தும் பொழுது அந்தத் தீமைகள் தணிகிறது. சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

கொஞ்ச நாள் இதைச் செய்து பழகிவிட்டால் போதும். நீங்கள் சொல்ல வேண்டாம். தன்னாலேயே மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…! என்று உங்களைச் சொல்ல வைக்கும்.

1.கஷ்டங்கள் வரும் பொழுது இதற்கு முன்னாடி சொல்லி இருந்தால் ஐயய்யோ அம்மம்மா…! என்று சொல்வார்கள்.
2.இப்போது ஈஸ்வரா… என்று உயிரின் மீது நினைவுகள் வரும்
3.அப்படி நினைவு வரும் பொழுது அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இணைத்து விட்டீர்கள் என்றால்
4.இது சிவமாகின்றது… ஒ…ம் நமச்சிவாய…! உடலுக்குள் ஞானிகணின் உணர்வுகள் விளையத் தொடங்கும்.

வேதனையோ கோபமோ பயமோ எது வந்தாலும் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இதை இணைத்து விட வேண்டும்.

இப்படி இணைத்துப் பழகி விட்டீர்கள் என்றால் எந்தத் துன்பத்தையும் நீக்க முடியும். உங்கள் சொல்லால் பிறருடைய துன்பத்தையும் போக்க முடியும். ஆக துன்பத்தைப் போக்கும் உணர்வுகள் உங்களுக்குள் விளைகிறது.

1.துன்பத்தையும் துயரத்தையும் காணும் பொழுது துன்பத்தை விளைவிக்கும் உணர்வுகள் விளைகிறது.
2.துன்பத்தை அகற்றிய மகரிஷிகளின் உணர்வுகளை இணைத்து விட்டீர்கள் என்றால் துன்பத்தை அடக்கும் சக்தி கிடைக்கின்றது. – பரசுராம்.
3.தியானம் என்பது இது தான்.

இதைச் செய்யாதபடி யாரோ செய்வார்… எவரோ செய்வார்…! என்றால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வின் தன்மை வரும் பொழுது… இந்த உயிர் எதனின் வலுப் பெற்றதோ அங்கே கொண்டு செல்லும்.

நம் கண்ணின் நினைவு கொண்டு எதைக் கூர்மையாக எண்ணுகின்றோமோ அதனின் வலுவை நமக்குள் சேர்க்கின்றது.
1.வான மண்டலத்தில் நினைவு செல்லும் பொழுது அங்கே தான் நாம் செல்வோம்.
2.அந்த உணர்வின் தன்மை ஆகும் பொழுது அது தான் கூர்மை அவதாரம்.

கண்ணன் என்ன செய்கின்றான்..,? அர்ச்சுனனுக்குக்ச் சாரதியாகப் போகின்றான். உதாரணமாக வேதனைப்படும் உணர்வுகளை எடுத்தால் அது வலிமையாகி அர்ச்சுனனாகின்றது. கண்ணன் சாரதியாகின்றான். வேதனை உணர்வை நமக்குள் சேர்க்கின்றோம்.

ஆனால் அதை மாற்ற அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது அது அர்ச்சுனனாகி வலிமையாகின்றது. அந்தக் கண்ணன் அங்கே அழைத்துக் கொண்டு போகின்றான்.
1.எதனின் உணர்வு வருகிறதோ அதற்குத் தக்க அந்தக் கூர்மை…
2.அதனின் வலுவாக நம்மை அங்கே அழைத்துச் செல்கின்றது.
3.மகாபாரதத்தில் இதைக் கீதா உபதேசமாக வியாசகரால் இது தெளிவாக்கப்பட்டுள்ளது.

நான் (ஞானகுரு) ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லை. அவர்கள் சொன்னதைத்தான் திருப்பிச் சொல்கிறோம். விளக்கமாகச் சொல்கிறோம்… அவ்வளவு தான்…!

தியானத்தின் மூலம் கிடைக்கும் “மன பலம்”

Meditationg time

தியானத்தின் மூலம் கிடைக்கும் “மன பலம்” 

 

நாம் பரிவு பண்பு அன்பு கொண்டவர்களாக இருக்கிறோம். ஒருவர் “ஐயா பசிக்கிறதே…! என்று கேட்கிறார். அந்த வேதனையான உணர்வை நாம் நுகர்கிறோம். இரக்க உணர்வு கொண்டு அவருக்கு உதவியும் செய்கிறோம்.

அவர் எந்த வேதனையிலிருந்து அந்த சோகக் குரலில வருகிறாரோ அந்தச் சோக உணர்ச்சியைத் தூண்டும் அணுவாக நமக்குள் விளைந்து விடும். இது சிவமாகின்றது. (சிவம் என்றால் உடல்)

அதே சமயத்தில் இன்னொரு பக்கம் ஒருவர் கோபமாக மற்றொருவரை உதைக்க வேண்டும் என்று கோபமாகப் பேசுகின்றார். கண்ணில் பார்க்கிறோம். அப்பொழுது அந்தக் கோப உணர்ச்சிகள் ஓ…ம் நமச்சிவாய…! என்று இது நம் உடலில் ஆகிறது.

அந்த உணர்வுகள் நமக்குள் வந்த பின் குறை காணக் கூடிய நிலையாகிவிடுகிறது. அதே உணர்வுடன் வந்ததும் வீட்டில் உள்ள நம் குழந்தையை உதைக்க ஆரம்பித்து விடுகின்றோம். இந்த உணர்வுகள் நமக்குள் சிவமாகின்றது. இப்படி நம் வாழ்க்கையில் ஒவ்வொன்றும் உடலாகிக் கொண்டேயிருக்கிறது.

வேதனைப்படுகிறான்…! என்ற நிலையில் உதவி செய்தாலும் அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும…? ஈஸ்வரா… என்று நம் உயிரிடம் வேண்ட வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். எது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
1.அவன் வேதனைப்பட்ட உணர்வை இதனுடன் சேர்த்துத் தணிக்க வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை அணுவாக மாற்ற வேண்டும்.
3.அதை நம் உடலாக்க (சிவமாக்க) வேண்டும்.

இப்போது சொல்வது அர்த்தம் ஆகின்றதல்லவா…? அடுத்து நம் நினைவு எங்கே இருக்க வேண்டும்…?

யார் வேதனைப்பட்டார்களோ துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். துன்பத்திலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று இந்த உணர்வின் ஒளியைப் பரப்பி விட வேண்டும்.

கஷ்டப்படுகிறான் என்ற நிலையில் அவனுக்குச் சாப்பாடோ பணமோ கொடுத்தாலும் அது எவ்வளவு நேரத்திற்கு இருக்கும்….? அன்றைக்குத் தான் சரியாகும். அடுத்தாற்போல நீங்கள் நிவர்த்தி செய்ய முடியுமா…? முடியாது…!

ஆகவே அவனுடைய துன்பத்தின் உணர்வுகள் உங்களுக்குள் வராது தடுத்தல் வேண்டும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நீ பெற வேண்டும்.
2.உன்னுடைய எதிர் காலம் நன்றாக இருக்க வேண்டும்
3.நீ நன்றாக இருப்பாய்…! என்ற இந்த உணர்வை வித்தாக அவனுக்குள் போட்டு விட்டு விட வேண்டும்.

அதை எண்ணினால் அவனுக்குக் கிடைக்கும். எண்ணவில்லை என்றால் கிடைக்கவில்லை. ஆனால் இந்த வித்தை நீங்கள் அங்கே ஊன்ற வேண்டும்.

இதே மாதிரி நண்பர்கள் நோயாக இருக்கிறார்கள். பார்த்தவுடனே அவர்கள் நோயைப் பற்றி அறிந்து கொள்ள விசாரிக்கின்றீர்கள். அந்த நோயை விசாரிக்க விசாரிக்க உங்கள் உயிரிலே அந்த உணர்ச்சிகள் பட்டவுடனே சோர்வு அடைந்து விடுகின்றீர்கள்.

சோர்வடைந்தவுடனே சோர்வடையச் செய்யும் அந்த அணுவாக உங்களுக்குள் விளைகிறது. அந்த நண்பரின் உடலில் விளைந்த உணர்வுகள் அவன் எத்தனை வேதனைப்பட்டானோ அதே சத்தை எடுத்து மீண்டும் நமக்குள் விளைய தொடங்கி விடும்.

அப்படியானால் நோயைப் பற்றிக் கேள்விப்பட்டவுடனே நாம் என்ன செய்ய வேண்டும்…?

“ஈஸ்வரா…” என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இதை இணைக்க வேண்டும். இரண்டு நிமிடமாவது இப்படிச் செய்ய வேண்டும்.

1.அடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நண்பன் உடல் முழுவதும் படர வேண்டும்.
2.மகரிஷியின் அருள் சக்தியால் அவன் நலமாக வேண்டும் என்று சொல்லி விட்டு
3.இதை விட்டு விட வேண்டும்.
4.இப்படிச் செய்யப்படும் போது இந்த உணர்வு கலந்து வலிமை பெற்ற உணர்வுகள் உங்களுக்குள் சேரும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நீங்கள் எடுப்பதற்குச் சக்தியைக் கொடுக்கிறேன் (ஞானகுரு) இந்த உபதேசத்தின் மூலமாக…!

திட்டியவர்களைத் திருப்பி எண்ணும் போது பதட்டமும் கோபமும் வருகிறது அல்லவா…! அதே மாதிரித்தான் அந்த அருள் ஞானத்தை நீங்கள் பெறக்கூடிய தகுதியையைத்தான் பதிவாக்குகிறேன்.

மீண்டும் நீங்கள் நினைவாக்கும் பொழுது உங்கள் கண்ணுக்கு வந்து அந்த உணர்வின் தன்மையை நீங்கள் எடுக்க முடியும். அந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்படி எடுத்துக் கலந்து பழக வேண்டும். இப்படிக் கலந்து பழகினால் தான் தீமைகளையும் துன்பங்களையும் துயரங்களையும் அடக்க முடியும்.

1.ஆனால் நோயாளியைப் பார்த்து எல்லாவற்றையும் விசாரித்துவிட்டு
2.அப்புறம் வீட்டிற்கு வந்து எல்லாம் நல்லதாக வேண்டும் என்று நினைத்தால்
3.நோயைப் பற்றிக் கேட்டறிந்தது உடலுக்குள் முதலில் அணுவாகிறது.
4.இரண்டாவது தடவை இதை மாற்றிக் கொண்டு போவதற்கு ரொம்ப சிரமம்.

ஏனென்றால் தன் நண்பன் நோயால் வாடுகிறான் என்று அதைப் பற்றுடன் பற்றும் போது தவறி உள்ளே (உடலுக்குள்) போய்விட்டது.
1.உடலுக்குள் போனதைக் குறைந்த பட்சம் அது அணுவாக உருவாவதற்கு முன்னாடி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஒரு நிமிடமாவது எடுத்து உடலுக்குள் பாய்ச்சி விட வேண்டும்.
3.இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வந்து விடுங்கள். தீமைகள் வளராது.

ஏனென்றால் ஒரு செடி வளரும் பருவத்தில் அந்தச் செடியோடு உரத்தை இணைத்து விட்டோம் என்றால் நன்றாக இருக்கும். ஆகவே தீமையின் உணர்வுகள் நமக்குள் வளராது அப்போதைக்கப்போது மாற்றிக் கொள்ளுங்கள்.

இது தான் வாழ்க்கையே தியானம் என்பது.

எண்ணியது நடக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

energy boosts

எண்ணியது நடக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

 

மாடு ஆடு இவைகள் எல்லாம் அதிலே ஒன்று செத்துப் போனது என்றால் பார்த்து விட்டுப் போகும். ஒரு யானையாக இருந்தாலும் தன் இனம் செத்துப் போனது எனறால் ஒன்று சேர்ந்து கூட இருந்து விட்டுப் போகும். வேறு ஒன்றும் செயல்படுத்த முடியாது.

ஆனால் புலி ஓநாய் இதுகளை எல்லாம் பார்த்தோம் என்றால் மோந்து பார்க்கும். நல்ல இரையாக இருக்கிறதா…? அல்லது கெட்டுப் போய்விட்டதா…? நமக்கு ஏதாவது இரைக்கு ஆகுமா…? என்று இந்த உணர்வின் தன்மையை அது நுகர்கின்றது. கொன்று புசிக்கும் உணர்வு கொண்ட உயிரினங்கள் இப்படித்தான் நுகர்ந்து பார்க்கும்.

1.சாந்தமான மிருகங்கள் பார்த்துவிட்டுப் போகிறது.
2.ஆனால் கொன்று புசிக்கும் மிருகங்களோ தனக்கு இரைக்கு ஆகுமா…? என்று பார்க்கிறது.
3.காட்டுக்குள் வைத்து மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இந்த இரண்டு வித்தியாசத்தையும் காட்டுகிறார்.
4.இது எல்லாம் அனுபவபூர்வமாகக் கொடுத்தது.
ஆகவே நம் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ சந்தர்ப்பங்களைச் சந்திக்கின்றோம். அதன் வழியில் வளர்த்துக் கொண்ட பல கோடி குணங்கள் நம் உடலுக்குள் உண்டு.

ரோட்டில் போகும் போது ஒருவன் வேதனைப்படுகின்றான். பார்த்தவுடனே அடப்பாவமே…! நல்ல மனிதனாக இருக்கின்றான்… இப்படி ஆகி விட்டதே…! யார் பெற்ற பிள்ளையோ…? என்று
1.பரிவு கொண்ட மனமும் இரக்கம் கொண்ட குணமும் தர்மம் செய்யும் எண்ணங்கள் கொண்டவர்களுக்கு
2.இத்தகைய எண்ணங்களைத்தான் எண்ணி ஏங்கிப் பெறச் செய்கிறது.
3.இந்த எண்ணம் இருந்தால் தான் நாம் அவனுக்கு உதவியே செய்வோம்.
4.இல்லை என்றால் அசுர குணங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு போய் கொண்டே தான் இருப்போம்.
5.உதவி செய்தாலும் அவன் பட்ட வேதனையான உணர்வுகளை நமக்குள் நுகர்ந்ததைத் தூய்மைப்படுத்துகின்றோமா…? என்றால் இல்லை.

இதை யாரும் செய்வதில்லை. உதவி செய்தோம் என்று அப்படியே சென்று விடுகின்றோம், ஆனால் நுகர்ந்த வேதனை நம்மையும் வேதனைப்படச் செய்யும் என்று அறியவில்லை.

அடுத்தாற்போல் நாம் செயல்படுத்தும் காரியத்தில் தோல்வி அடைந்து விட்டால் என்ன நினைக்கின்றோம்…? எல்லோருக்கும் நான் உதவி செய்தேனே…! எனக்கு இப்படி ஆகிவிட்டதே என்ற நிலையில் (முதலிலே நாம் சுவாசித்த) அந்த வேதனை உணர்வுகள் இயக்கி நம்மைச் சோர்வடையச் செய்கின்றது.

சோர்வு என்ற நிலைகள் உருவாக்கப்படும் போது சிந்திக்கும் வலு இழக்கப்படுகின்றது… மாற்றங்கள் ஆகின்றது…! சிந்திக்கும் தன்மை மாற்றம் ஆகப்போகும் போது அடுத்து தான் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் “விஷமாகின்றது…!”

இப்படி அந்த வேதனை என்ற உணர்வு மூன்றும் சேர்த்து கருவாக்கி இந்த உயிர் அந்த அணுவாக உருவாக்கி விடுகின்றது. மீண்டும் நான் நினைத்தேன்… வரவில்லையே…! என்று எண்ணுவதும் சாமி (ஞானகுரு) சொன்னார்… இது கிடைக்கவில்லையே…! என்றுதான் அப்பொழுது எண்ணுவீர்கள்.

அதை வளர்த்துக் கொண்டால் கீழே தான் போக முடியுமே தவிர உயர்ந்த நிலை பெற முடியாது.
1.சாமியை எண்ணுவீர்கள்.
2.ஆனால் சாமி சொன்னதை விட்டுவிடுவீர்கள்.

வயலில் களை முளைத்திருக்கிறது. அந்தக் களையை எடுங்கள்… என்று சொன்னால் களையை எடுப்பதற்குப் பதில் நல்ல செடி முளைத்தைத் தட்டி விட்டால் என்ன செய்யும்…?

நல்ல வித்தினை விவசாயப் பண்ணைகளில் வாங்கி விதைக்கின்றீர்கள். வளர்ந்த நிலையில் அதிலே இருக்கும் களைகளை எடுங்கள் என்று சொன்னால் முளைத்த நல்ல செடியையும் சேர்த்துப் பிடுங்கி விட்டால் எல்லாம் போய்விடுமல்லவா…!

அது போல் அருள் ஞானிகளின் வித்துக்களை உங்களுக்குள் ஆழமாக ஊன்றியுள்ளோம். களை (தீமைகளை) நீக்கும் போது களைகளை நீக்குவதற்குப் பதில் நல்லதையே வீழ்த்தி விடுகின்றோம். ஏனென்றால்
1.நல்ல குணத்துடன் இருக்கும் நாம் உயர்ந்த நிலைக்குச் செல்லப்படப்போகும் போது
2.சந்தர்ப்பத்தால் தீமையான உணர்வுகள் நமக்குள் கலந்தவுடன் அந்த நல்லதை அடக்கி விடுகின்றது.
3.அடக்கி விட்டால் மீண்டும் நினைவு எதிலே வரும்…?
4.ஒரு காரியத்தில் இறங்கும் போதெல்லாம் தன்னைச் சோர்வடையச் செய்யும்.
5.வேதனை என்ற நிலைகளை உருவாக்கிக் கொண்டு இருக்கும்.

நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்ற நிலையில் விஷமான உணர்வை இணைத்து விட்டால் நமக்குள் இருக்கும் நன்மைகளைப் பிரித்தேவிடும். நல்லதைச் செயல்படுத்த முடியாதபடி ஆக்கிவிடும்.

அப்பொழுது அந்தத் தீமைகளே நம் உடலில் அதிகமாக விளையும். இதைத் தடுக்க வேண்டுமல்லவா…! சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நாம் புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வரையிலும் தன்னைக் காட்டிலும் வலு கொண்ட உணர்வை எடுத்து வரும் தீமைகளிலிருந்தெல்லாம் மீள வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்துத்தான் மனிதனாகப் பரிணாம வளர்ச்சி அடைந்து இன்றும் வந்திருக்கின்றோம்.

ஆனால் இத்தனையும் கடந்து வந்த நிலையில் தன் இச்சையின் உணர்வு கொண்டு நிறைவேறவில்லை என்று மீண்டும் சோர்வும் வேதனையும் இது உருவாக்கும் அணுவின் தன்மை வரப்போகும் போது நல்ல குணங்களை அடக்கிவிடுகின்றது.

நல்லதை அடக்கிய பின் அதனுடன் இணைந்து செயலாக்கும் உணர்வின் கருவாக உடலுக்குள் நம் உயிர் உருவாக்கி விட்டால் நாம் நல்லதைச் செயல்படுத்த முடியாது.

இந்த மாதிரிச் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால் ஈஸ்வரா..! என்று புருவ மத்தியில் எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துத் தடுக்க வேண்டும் என்று பல முறை சொல்லியிருக்கின்றேன்.

அரும் பெரும் சக்தியாக ஆத்ம சுத்தி என்ற கடுமையான ஆயுதத்தை உங்களிடம் கொடுத்து இருக்கிறேன். ஒரு இரண்டு நிமிடம் எண்ணி எடுப்பதற்கு என்ன…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் எது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணி இணைத்துக் கொள்ளுங்கள்.

சிரமம் வரும் பொழுதெல்லாம் இப்படி அந்த வேதனை என்ற உணர்வை அடக்கி அருள் ஒளியின் அணுக்களைப் பெருக்கினால் நம் எண்ணம் என்ன செய்யும்…? அந்தத் துருவ மகரிஷியை எண்ண வைக்கும். துருவ நட்சத்திரத்துடன் ஒன்றச் செய்யும்.

ஆகவே அந்த ஞான வித்தினை இப்படிப் பக்குவப்படுத்தி வளர்த்தால் அருள் வாழ்க்கை வாழச் செய்யும். அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

கஷ்டங்கள் வந்தால் “ஈஸ்வரா…..” என்று ஒரு புருவ மத்தியில் பிரேக் (BRAKE) போட்டுத் தடுத்து நிறுத்துங்கள்….!

Intuition-Third-Eye (2)

கஷ்டங்கள் வந்தால் “ஈஸ்வரா…..” என்று ஒரு புருவ மத்தியில் பிரேக் (BRAKE) போட்டுத் தடுத்து நிறுத்துங்கள்….!

 

ஒவ்வொரு நிமிடத்திலும் வீட்டில் ஏதாவது “குறைபாடுகள்” வரும். வீடு என்று இருந்தாலே
1.நீங்கள் எப்படி எவ்வளவு தான் தெளிவாக இருந்தாலும் கூட
2.எவ்வளவு நல்லது செய்தாலும் கூட இந்த நிலை வரும்.

ஆகவே அந்த நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்…?

சந்தர்ப்பத்தால் சங்கடத்திலேயோ சலிப்பிலேயோ வெறுப்பிலேயோ ஆழ்த்தக்கூடிய நிலைகள் நமக்குள் வந்தால்
1.மூக்கின் வழியாகச் சுவாசம் போய்
2.உயிரில் பட்டுதான் அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.

அப்போது நமக்குள் அந்தச் சங்கடம் என்ற எண்ணம் வரும் போது என்ன நடக்கின்றது…?
1.இந்த ஆன்டெனா (ANTENNA) நம் கண்கள் அதை இழுக்கின்றது.
2.நம் ஆன்மாவாக மாற்றுகிறது.
3.ஆன்மாவிலிருந்து கவர்ந்து சுவாசத்திற்குள் வருகின்றது.

அப்போது அந்த கெட்ட அணுக்கள் தான் வளர்கின்றது. நாம் சிந்திக்கும் தன்மை போய்விடுகின்றது.

அந்த இடத்தில் அதை உடனடியாகத் தடுக்க என்ன செய்ய வேண்டும்…?

1.”ஈஸ்வரா….” என்று சொல்லி ஒரு “பிரேக்….!” (BRAKE போட வேண்டும்)
2.கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் “உயிருடன் ஒட்டி”
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்க வேண்டும்
(ஒரு வினாடிக்குள் இந்த மாதிரி இப்படி “பிரேக்” இட வேண்டும்)

அப்போது என்ன நடக்கின்றது…?

அந்த சங்கட அலை புகாது தடுத்து வெளியிலே உந்தித் தள்ளி விடுகின்றது. உள்ளுக்குள் போகாது.

ஏனென்றால் உயிரில் பட்டால் தான் உயிர் அந்தச் சங்கட உணர்ச்சிகளை இயக்கும்,
1.நெருப்பில் ஒரு பொருள் பட்ட பிற்பாடுதான் அந்த வாசனை வருகின்றது.
2.அதே மாதிரி நம் உயிரில் (நெருப்பில்) படாமல்
3.தீமைகளைத் தடுத்துப் (BRAKE) பழக வேண்டும்.

இப்படிப் பழகிக் கொண்டால் அப்புறம் இதன் வழி கூடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரோளியை நமக்குள் இழுக்க வேண்டும்.

1.“உயிர் வழி சுவாசம்” என்பது இது தான்
2.”ஆக்ஞை” என்பதும் இது தான்
3.”பிராணாயாமம்” என்பதும் இது தான்
4.”யோகா” என்பதும் இது தான்
5.”மூன்றாவது கண்” திறப்பது என்பதும் இது தான்
6.”மூலாதாரம் குண்டலினி” என்பதும் இது தான்.

ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை எடுத்து அடிக்க அடிக்க நமக்குள் வரும் பேராற்றல்கள்…!

Divine energy and Power

ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை எடுத்து அடிக்க அடிக்க நமக்குள் வரும் பேராற்றல்கள்…! 

 

குடும்பங்களில் அடிக்கடி குறைபாடுகள் வந்தால் அந்தக் குறைகள் நாமல்ல. நாம் நுகர்ந்த உணர்வுகளே நம்மை இயக்குகின்றது. உடனே ஆத்ம சுத்தி செய்து நம் குடும்பத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று அதைத் தடுக்க வேண்டும்.

ஏனென்றால் இன்றைக்கு வந்த நிலை அல்ல. தாய்க் கருவில் நாம் சிசுவாக இருக்கும் போதே எத்தனையோ நிலை வந்திருக்கிறது.

நாம் ரோட்டில் போகின்றோம். அங்கே ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டு சாபமிட்டிருப்பார்கள். அந்த அலைகள் அங்கே இருக்கும். நாம் அதை உற்றுப் பார்க்கும் பொழுது நமக்குள் பதிவாகின்றது.

ஆனால் நாம் எந்தத் தப்பும் செய்யவில்லை. இந்த மாதிரிச் சாப அலைகள் நம் உடலில் “எத்தனையோ விதமாக… எத்தனையோ வகையில்…!” பதிவாகி இருக்கும். அதெல்லாம் மிகச் சக்தி வாய்ந்தது.

உதாரணமாக நீங்கள் கேமராவில் படம் எடுக்கின்றீர்கள். அப்பொழுது ஊடே குறுக்கே யாராவது வந்தால்… படத்தில் சேர்ந்து பதிவாகின்றது அல்லவா…!

அதே மாதிரி ஒரு ஒலிப் பதிவைப் பதிவாக்கிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அங்கே ஊடே யாராவது சத்தம் போட்டார்கள்… என்றால் அதுவும் சேர்ந்து தான் பதிவாகும்.

இதே மாதிரித் தான் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நாம் பார்ப்பது கேட்பது நுகர்வது அனைத்தும் ஊழ்வினை என்ற வித்தாக நம் எண்ணமுடன் சேர்த்துப் பதிவாகும்.
1.அந்த நேரத்தில் வேறு எண்ணத்தில் நாம் இருந்தாலும்
2.இந்த உணர்வு நமக்குள் ஊடுருவுவது தெரிய வரும்.

உதாரணமாக அது சாப அலையாக இருந்தாலும் நம் காரியங்களைத் தடைபடுத்தும் உணர்வாக வரும். ஒரு நல்ல காரியத்திற்காகச் சென்றாலும் மற்றவர்கள் சண்டையிட்டுச் சாபமிடும் உணர்வுகளை நாம் செவி கொண்டு கேட்டவுடனே அதுவும் நம் நல்ல குணத்துடன் இணைந்து கொள்ளும். (JOINT)

எப்படியெல்லாம் கெட்டுப் போக வேண்டும் என்று எண்ணி ரோட்டிலே பேசினார்களோ அது எல்லாமே இணைந்து வரும். ஏனென்றால் அந்த உணர்வின் ஒலி அலைகள் வரும் போது
1.சுவாசத்தின் வழியாக அது நம் உயிரிலே பட்டு அதற்குத் தக்கவாறு
2.நம் உடலிலிருந்து மணமாக வெளிப்பட்டு நமக்கே எதிரியாக வரும்.
3.இப்போது இதைத் துடைப்பது யார்…?

இவ்வாறு இயற்கையின் நிலைகளில் வளர்ச்சி அடைந்தது தான் பல எண்ணங்கள். அதைத்தான் பலராமன் (ராமன் என்றால் எண்ணங்கள்) என்று காவியங்களில் காட்டப்பட்டுள்ளது.
1.ஆகவே பலருடைய எண்ணங்களை அறியும் சக்தியாக
2.அந்த எண்ணங்களின் இயக்கங்களை நமக்குள் உணர்த்துகின்றது.

உணர்த்தினாலும் எப்போது தீமை என்று உணர்கின்றமோ அதை நம் உடலுக்குள் போகாதபடி இங்கேயே பிளக்க வேண்டும். அது தான் நரசிம்மா…!

தீமைகளை நம் ஆன்மாவிலிருந்து பிளக்க வேண்டும் என்றால் உயிர் வழியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துச் சுவாசித்து உள்ளுக்குள் கொண்டு போக வேண்டும்.

அப்பொழுது தீமையான உணர்வுகள் உள்ளுக்குள் போகாதபடி பிளந்து தள்ளிக் கொண்டே இருக்கும். இதுதான் ஆத்ம சுத்தி என்பது. நம் காவியத் தொகுப்புகளில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன் வழி நாம் செய்து பழக வேண்டும். கொஞ்ச நாளைக்குச் செய்து பழகி விட்டோம் என்றால் தன்னிச்சையாக வரும்.

ஆனால் முந்தைய பழக்கத்தில் எடுத்துப் பழகிய மற்ற உணர்வுகள் நமக்குள் வலுவாக இருக்கும். ஏதாவது சொல்லிட்டாலும் சரி அதிலேயே தான் நம் எண்ணத்தைச் செலுத்துவோம்.

அப்படிப்பட்ட நேரத்தில் அதாவது அது வலுவாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு வந்தாலும் கூட
1.அது இடைவேளியில் வந்து தடுக்கும்.
2.(ஆத்ம சுத்தி செய்யவிடாமல் எண்ணங்களை மாற்றும்)
3.அதையும் நீங்கள் கவனித்துப் பார்க்கலாம்.

அப்பொழுது சுதாரித்து மீண்டும் “ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி…!” துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அந்த உணர்வை வலுவாக எடுத்து அந்தத் தீமையைப் பிளக்க வேண்டும். அப்போது அந்த உணர்வுகள் நமக்குத் தோன்றும்.

காரணம் என்ன என்று கேட்டீர்கள் என்றால் ஒரு அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை ஊற்ற ஊற்ற அழுக்குத் தண்ணீர் குறையும். ஆனால் முதலில் நல்ல தண்ணீரை ஊற்றினால் அழுக்கு தண்ணீருடன் கலந்து அழுக்குத் தண்ணீராகத் தான் தெரியும். நல்லதை ஊற்ற ஊற்ற அழுக்குத் தண்ணீர் முழுவதும் குறைந்து விடும்.

அதைப் போன்று தான் அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் சேர்க்கச் சேர்க்க இது பெருகும். இது முழுமை அடைந்துவிட்டது என்றால் அது தன்னிலை அடைந்து விட்டது என்று அர்த்தம்.

இந்தத் தியானம் செய்வதற்கு முன்னாடி நம் வாழ்க்கையில் எத்தனையோ தீமைகளைப் பார்த்துப் பதிவாக்கி இருக்கிறோம். ஆனால் இப்பொழுது துடைக்கிறோம். மீண்டும் அது வருகிறது.
1.அது வந்து கொண்டே தான் இருக்கும்.
2.நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத் துடைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
3.இன்றைக்கு வீட்டைச் சுத்தம் செய்து விடுகிறோம் என்றால் மறு நாள் மீண்டும் சுத்தப்படுத்தாமல் இருக்கின்றோமா…?
4.சுத்தமான பாத்திரங்களை வைத்துச் சமைத்தாலும் மீண்டும் சமைக்கும் பொழுது அந்தப் பாத்திரங்களைச் சுத்தப்படுத்தாமல் இருக்கின்றோமா…?

அதற்காக வேண்டித்தான் வாழ்க்கையில் எது வந்தாலும் அதைத் தூய்மையாக்கும் கடுமையான ஆயுதமாக ஆத்ம சுத்தியை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.
1.அதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திச் செய்யும் பொழுது
2.உங்கள் வாழ்க்கையின் பற்று அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றுகிறது.
3.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைகிறது.
4.பற்று அங்கே வரப்போகும் போது இங்கே பூமியில் பற்றற்றுப் போகும்.

இதை நாம் செய்து பழக வேண்டும். அப்படிச் சென்றவர்கள் தான் இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக ஏகாந்தமாக வாழ்கின்றார்கள்.

ஏனென்றால் இந்த உடல் நமக்கு நீடித்த நாள் சொந்தம் அல்ல.

1.இன்று நமக்குச் சொந்தமாக இருக்கிறது.
2.இந்த உடலை வைத்து நிரந்தரமான சொந்தத்தை அந்த ஒளி உடலை நாம் உருவாக்க வேண்டும்.
3.பிறவியில்லா நிலை என்ற அந்தச் சொந்தத்தைக் கொண்டாட வேண்டும்.

விண்ணில் வரக்கூடிய நஞ்சினையும் ஒடுக்கி ஒளியாக மாற்றும் திறன் இந்த உடலை வைத்துத்தான் பெற வேண்டும். இன்றைய செயல் நாளைய ஒளிச் சரீரம்.

ஆனால் முந்தைய செயல் இன்றைய சரீரம். கடவுளின் அவதாரத்தில் வராகன் தீமைகளை அகற்றி நல்ல உணர்வுகளைத் தனக்குள் எடுத்தது.

தீமைகளை அடக்கும் கூர்மையான எண்ணம் கொண்டு கடுமையான சாக்கடையைப் பிளந்து அதற்குள் இருக்கும் நல்லதை நுகர்ந்தது. தீமையைப் பிளந்த உணர்வுகள் விளைந்து தீமையை நீக்கும் உடலாக மனித உருப் பெற்றது.

இதைப் போல தான் நமக்கு முன்னாடி இன்று இருக்கும் இந்த காற்று மண்டலம் ஒரு சாக்கடை. அதற்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளும் சப்தரிஷி மண்டல உணர்வுகளும் மிதந்து கொண்டிருக்கிறது.

வாழ்க்கையில் வரும் தீமைகளை எண்ணாது அதைப் பிளந்து அருள் ஞானிகளின் உணர்வை நாம் வலுக் கொண்டு எடுக்க வேண்டும். உடலை விட்டுச் சென்றால் பிறவியில்லா நிலை அடைய இது உதவும்.
1.இந்த நிலையை ஒவ்வொருவரும் செய்யும்படி வேண்டிக் கொள்கிறேன்.
2.எல்லா நலமும் எல்லா வளமும் பெறுவீர்கள்.

மணிக்கணக்காக உட்கார்ந்து செய்வது தியானம் ஆகாது… ஏன்…?

siddhars

மணிக்கணக்காக உட்கார்ந்து செய்வது தியானம் ஆகாது… ஏன்…?

உங்களை அறியாமலே சந்தர்ப்பவசத்தால் கொஞ்சம் சோர்வடைந்திருந்தால் என்ன நடக்கின்றது…? அடுத்தவர்களை எண்ணி “இப்படிப் பேசுகிறானே… அப்படிப் பேசினானே…! என்று இதை எல்லாம் எண்ணி வளர்த்துக் கொள்வோம்.

1.அப்புறம் எத்தனை நல்லது சொன்னாலும் கேட்கவிடாது.
2.சங்கடமும் சலிப்பும் வெறுப்பும் எடுத்துக் கொண்டால் நாம் கேட்டுணர்ந்த உணர்வுகள் நல்லதை நினைக்க விடாது.
3.நல்லதைச் செய்யவும் விடாது. நல்ல சொல்லும் வராது. பார்வையிலும் சோர்வு இருக்கும்.

யாரைப் பார்த்தாலும் சோர்வுடனே பார்ப்போம். சோர்வுடன் வேலையைச் சொல்லும் பொழுது நம்மிடம் வேலை செய்பவர்களையும் பலவீனப்படுத்தும்.

ஏனென்றால் இவைகள் எல்லாம்
1.இயற்கையின் செயலாக அந்த உணர்விற்குத்தக்க அது அது இயக்கும்.
2.அந்த உணர்விற்குத் தக்க தான் அவர்கள் வாழ்ககையும்
3.அந்த உணர்விற்குத்தக்க தான் நம் தொழிலும் இருக்கும்.
3.இதற்குக் காரணம் நாம் அல்ல. சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வுகள் தான் நம்மை இயக்குகின்றது.

காரணம் என்ன என்றால்… சும்மா ரோட்டில் போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். ஒரு விஷச் செடியில் இருந்து வெளிப்படும் மணங்கள் அங்கே பரவிக் கொண்டு வருகிறது.

நமக்கு முன்னாடி நடந்து போனவர்களுக்கு ஒன்றும் இல்லை. நாம் பின்னால் போகிறோம். அந்தக் காற்று நம் மீது பட்டவுடனே நமக்கு எதிர் நிலையாகின்றது. மேலே பட்டவுடனே அரிப்பாகின்றது. உடலிலே தடிப்பாகின்றது.

என்ன என்றே தெரியவில்லை…! நான் ஒன்றுமே செய்யவில்லை. ரோட்டில் தான் நடந்து வந்தேன். எனக்கு அரிப்பாகி உடலில் தடிப்பாகிவிட்டது என்பார்கள். இதெல்லாம் காற்றலைகளில் இருந்து நமக்குள் வருவது.

அதே சமயத்தில் இன்று மனிதனால் உருவாக்கப்பட்ட சில கெமிக்கல் கலந்த உணர்வலைகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு அலைகளாக மாறி அதுவும் படர்ந்து கொண்டே இருக்கின்றது.

ஒவ்வொரு தொழிற்சாலையிலிருந்தும் மாறி மாறி வெளிப்படுத்தும் பல கெமிக்கல் கலந்த அலைகளின் தொகுப்புகள் ஒன்றைக் கண்டு மற்றது அஞ்சி ஓடி இப்படி ஒன்றோடு ஒன்று மோதி வேகத் துடிப்பு அதிகமாகும்.

அது அடுக்கடுக்காக வரப்போகும் போது அந்தப் பக்கமாகச் சென்றால் யார் உடலில் இது அதிகமாகப் படுகிறதோ சுவாசித்த பின்
1.எனக்கு எப்படியோ மயக்கம் வருகிறது.. என் சிந்தனை எல்லாம் குறைகின்றது…! என்றெல்லாம் சொல்வார்கள்.
2.அந்த நேரத்தில் சுவாசித்த உணர்வுகளால் உடலில் நோயாகும் வாய்ப்பும் உருவாகின்றது.
3.ஏனென்றால் இன்று நம்முடைய காற்று மண்டலத்தில் நச்சுத் தன்மை அதிகமாகப் பரவி இருக்கிறது.

இதைப் போன்ற நிலைகள் எல்லாம் நமக்குள் வராமல் தடுக்க வேண்டும் என்றால் நாம் வீட்டை விட்டுக் கிளம்பும் போதே அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்று எண்ணிவிட்டுத் தான் செல்ல வேண்டும்.

இந்த உபதேசத்தின் மூலம் பதிவு செய்ததை நினைவுக்குக் கொண்டு வந்து துருவ நட்சத்திரத்தை எண்ணி ஒரு ஐந்து நிமிடம் அந்தச் சக்திகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஐந்து நிமிடம் எடுத்து கொண்ட பின் அந்தச் சக்தி தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இதே மாதிரி மனைவியும் தன் கணவர் வெளியில் போகிறார் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர் உடல் முழுவதும் படர வேண்டும். அவரைப் பார்ப்போர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணி இந்த வலுவைக் கணவருக்குப் பாய்ச்ச வேண்டும். இத்தகைய வலு இருக்கும் போது மற்ற தீமைகளை விலக்கித் (REMOTE) தள்ளிக் கொண்டேயிருக்கும்.

ஆனால் நீங்கள் சோர்வாகப் போய்ப் பாருங்கள். நடந்து போகப் போக சோர்வு அதிகமாகும்.
1.மனக் கவலையுடன் இருந்தீர்கள் என்றால் உங்கள் காரியங்கள் தடைப்படும் நிலையாகிவிடும்.
2.நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் – “நம் சொல்லே…!” நமக்கு எதிர் நிலையாக வரக்கூடிய தன்மையிலே வரும்.

இதைப்போன்ற நிலைகளை எல்லாம் மாற்றி அமைப்பதற்குத் தான் உங்களுக்கு அந்தத் துருவ நட்சத்ததிரத்தின் சக்தியை அதிக அளவில் கொடுக்கிறோம். அதை நீங்கள் எடுத்து வளர்கக வேண்டும்.

ஒரு விதையைக் கொடுத்து வயலில் விதைத்து விளைவிக்கச் சொல்கிறோம். அந்த விதைக்குத் தக்கவாறு இன்னென்ன காலத்தில் இன்னென்ன பருவத்தில் இப்படிச் செய்…! என்று சொன்ன பிற்பாடு அதே முறைப்படி செய்தோம் என்றால் நன்றாக வெள்ளாமை வரும்.

இதைப் போன்று தான் யாம் (ஞானகுரு) கொடுக்கும் அருள் ஞான வித்தைக் கூர்மையாக உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.

பதிவான பின் வாழ்க்கையில் சிக்கல் வரும் பொழுதெல்லாம் அந்த ஞானிகளின் எண்ணங்களை எடுத்து எடுத்து அந்தப் பருவத்தினை ஏற்படுத்தினால் அது உங்களுக்குள் வளர்ந்து கொண்டே இருக்கும். சாப்பாடு கிடைத்துக் கொண்டே இருக்கும்.

வெளியில் போகும் போதும் வியாபாரம் செய்யும் போதும் இரவிலே தூங்கப் போகும் எத்தனையோ பல தீமைகளைப் பார்க்கின்றீர்கள். அந்தத் தீமைகள் உங்களைச் சேராமல் அவ்வப்பொழுது அதைத் துடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இது தான் உண்மையான தியானம்.

1.அது இல்லாதபடி… உட்கார்ந்து கொண்டு…!
2.”விடிய விடிய நான் தியானம் எடுப்பேன்…!” என்று சொன்னால் அது அர்த்தமில்லாத தியானம்
3.ஆகையினால் ஒவ்வொருவரும் இங்கே கொடுக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை விரயம் ஆக்காது செயல்படுத்த வேண்டும்.

புறக்கண்ணின் இயக்கமும்… அகக்கண்ணின் செயலும்…!

Image

Third eye - Siva

புறக்கண்ணின் இயக்கமும்… அகக்கண்ணின் செயலும்…!

பிறருடைய வேதனைகளைக் கேட்டறிந்து பிறருடைய துயரங்களைக் கேட்டறிந்து உதவி செய்யும் பண்புடன் நாம் சென்றாலும் இந்தப் பண்பால் கவரப்பட்ட உணர்வுகள் நம் உடலுக்குள் இயக்கித்தான் அந்தப் பண்பின் அன்பால் அவர்களுக்கு நன்மையைச் செய்கின்றோம்.

அதன் மூலம் நன்மைகளை அவர்களுக்குச் செய்தாலும் அவரின் உணர்வுகள் நமக்குள் வந்தபின்
1.சூரியன் எவ்வாறு தனக்குள் வரும் நஞ்சினை வெளியிலேயே மோதி வீழ்த்துகின்றதோ
2,மகரிஷிகள் எவ்வாறு தீமைகளை வீழ்த்தி உணர்வை ஒளியாக (நன்மையின் சக்தியாக) மாற்றிக் கொண்டார்களோ
3.அதைப் போல நாமும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று அந்தத் தீமைகளை வீழ்த்திட வேண்டும்,

அது எவ்வாறு…?

நாம் கண் கொண்டு பார்க்கும் உணர்வின் தன்மைகள் வெளியிலிருந்து தான் நம் ஆன்மாவிற்குள் வருகின்றது. ஆன்மாவில் வந்த பின் தான் மூக்கின் வழியாகச் சுவாசிக்கச் செய்து அதைப் புருவ மத்தியிலிருக்கும் நம் உயிர் நுகர்கின்றது.

உயிரிலே பட்ட பின் இந்த உணர்வின் தன்மையை உணர்ச்சிகளாக இயக்கி நம் உடலுக்குள் அந்தச் சத்தைப் பரப்புகின்றது.

அதாவது தீங்கு செய்கின்றான்… தீங்குடன் இருக்கின்றான்… வேதனைப்படுகிறான்…! என்ற இந்த உணர்வுகளை எல்லாம் கண் கவர்ந்தாலும் இங்கே ஆன்மாவாக மாற்றி உயிரின் இயக்கத்தால் ஈர்த்து உணர்வின் அலைகளைப் பரப்பி “அகக்கண்ணாக…!” இருந்து நமக்குள் உணர்த்துகின்றது உயிர்.

1.புறக்கண்களால் நாம் பார்த்துக் கவர்ந்த உணர்வுகளை நம் ஆன்மாவாக மாற்றி
2.அது உயிருடன் ஒன்றும் பொழுது இதை அகக்கண்ணாக மாற்றி (உள் உணர்வாக) உடலுக்குள் உணர்த்துகின்றது.
3.இப்படித்தான் பிற தீமைகள் நம் உடலுக்குள் வந்து விடுகின்றது.

இதைப் போன்ற விளைவுகளிலிருந்து தப்புவதற்குத் தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற வலுவான உணர்வைத் தனக்குள் பதிவு செய்து புறக்கண்ணின் நினைவை அகக்கண்ணான உயிருடன் ஒன்றி உள்முகமாகத் தனக்குள் பல முறை செலுத்த வேண்டும்.

இப்படிப் பல முறை சொல்லி உள்ளே செலுத்தும்போது நம்மை அறியாத தீமைகளை அகற்றுவதும் அந்த ஞானியின் உணர்வு இங்கே வரப்படும் போது தான் நம் ஆன்மாவில் இருக்கும் அந்தத் தீமைகளைப் பிளக்கவும் செய்கின்றது.

தீமையின் தன்மையை பிளக்கும் இந்த நிலையைத்தான் விநாயகர் தத்துவத்திலேயும் காட்டப்பட்டது. மாரியம்மன் ஆலயத்திலும் காட்டப்படுகின்றது.

மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் செலுத்தி நம் உடலில் உட்புகுந்த தீமைகளைப் பொசுக்க வேண்டும். அதாவது
1.வெகு தொலைவிலேயே…!
2.நம் ஆன்மாவில் வரும் போதே..!
3.அந்தத் தீமைகளை அகற்றிடல் வேண்டும் என்ற மகரிஷிகள் காட்டிய பேருண்மையை நாம் உணர்வோம் என்றால்
4.நமது வாழ்க்கையில் பேரின்பத்தை அடையும் நிலை பெறுகின்றோம்.

“எந்த மகரிஷியின் உணர்வை…!” நமக்குள் அதிகமாக வளர்க்கின்றமோ இந்த உடலை விட்டு நாம் அகன்ற பின் நாம் அங்கே அவர்களின் அருள் வட்டத்திற்குள் செல்கின்றோம்.

ஒருவன் நம்மை வேதனைப்படுத்துகின்றான் என்றால் அவனை எண்ணி எண்ணி “எனக்குத் துன்பம் செய்தான்…!” என்ற உணர்வை வளர்த்துக் கொண்டால் இறந்த பின் அவன் உடலிலே தான் சேர்கின்றோம்.

குடும்பத்தில் பாசத்தால் “என் பையன் அடுத்து என்ன செய்வான்…!” என்று எண்ணத்தை ஓங்கி வளர்த்துக் கொண்டால் அந்த உணர்வின் தன்மை வரும் போது பையன் உடலிலே சென்று நாம் நோயைத் தான் உருவாக்க முடியும்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து மனிதன் விலகி அந்த மெய் ஞானிகளின் உணர்வைத் தனக்குள் பெருக்கி மெய்ப் பொருளை நாம் காண வேண்டும்.

ஆகவே அந்த மகா ஞானிகள் நமக்குக் காட்டிய அந்தச் சாஸ்திரத்தைத் தெளிவாக எடுத்து அந்தச் சாஸ்திர விதிப்படி உங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றப் பழகிக் கொள்ளுங்கள். எமது அருளாசிகள்.

புருவ மத்தியில் ஈஸ்வரா… என்று எண்ணி
தீமைகளைச் சுட்டுப் பொசுக்குங்கள்…!

வாழ்க்கையில் எது வந்தாலும் சமாளிக்கக்கூடிய சக்தியும்… யுக்தியும்

Image

Power and wisdom

வாழ்க்கையில் எது வந்தாலும் சமாளிக்கக்கூடிய சக்தியும்… யுக்தியும்

1.புற உலகில் உள்ள நிலைகளை நாம் எண்ணிப் பார்க்காது
2.புற உலகிலிருந்து நம்மைத் தாக்கும் சாபமோ… பாவமோ… கோபமோ…
3.மற்ற பழித்துப் பேசும் நிலையோ… இழுக்கான நிலைகள் பேசும் நிலைகளிலோ நாம் சிக்காது…
4.அவ்வப்பொழுது மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணி ஆத்ம சுத்தி செய்து
5.நம் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும் நம்மைப் பார்ப்போருக்கெல்லாம் நல்ல எண்ணம் வர வேண்டும் என்று
6.இப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

குடும்பங்களில் ஏற்படும் சிக்கல்களைச் “சிக்கல்…!” என்று சொல்லாது அதிலிருந்து விடுபட ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் குடும்பத்தில் கணவன் மனைவி நாங்கள் இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போல் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற இந்த முறையைக் கையாண்டு பழக வேண்டும்.

இந்தப் பழக்கத்திற்கு நாம் அவசியம் வந்தே ஆக வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்றுப் பழகி விட்டால் உங்கள் வாழ்க்கையில் உயர்வான நிலைகள் கிடைக்க ஏதுவாக இருக்கும். உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

ஆகவே
1.சங்கடம் என்ற எண்ணத்தை உங்கள் எண்ணத்திலிருந்து அறவே நீக்கிடல் வேண்டும்.
2.குடும்பத்தில் கஷ்டம் என்ற வார்த்தையே உங்கள் வாயில் வராதபடி அது தடுக்க வேண்டும்.
3.யார் எதைச் சொன்னாலும் குடும்பத்தில் ஒற்றுமை வளர வேண்டும் என்று எண்ணுங்கள்.
4.எத்தகைய நோயாக இருப்பினும் “எனக்கு நோய் இருக்கிறது…!” என்று சொல்ல வேண்டாம்.
5.மகரிஷிகளின் அருள் சக்திகளை நான் பெற்று “என் நோயை நீக்குவேன்… நான் நலமடைவேன்…!” என்ற இந்த உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.

இதை நீங்கள் எண்ணி வந்தாலே போதுமானது. கீதையிலே சொன்ன மாதிரி நீ எதை நினைக்கின்றாயோ அதுவாக ஆகின்றாய் என்பது போல் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நலம் பெறுவீர்கள்.

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவரின் அருள் ஒளியைப் பெற்று அவர் சொன்ன முறைப்படி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்றால் நாமும் அவரைப் போன்ற ஒளி நிலை பெறலாம்.

வைகுண்ட ஏகாதசி அன்று தான் உடலை விட்டு அகன்று விண்ணுலகம் சென்றார். உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு இன்றும் ஒளியின் சரீரமாக ஏகாந்தமாக நிலை கொண்டுள்ளார்.

அவர் காட்டிய அருள் நெறிகளை நாம் பின்பற்றி ஆத்ம சுத்தி என்ற நிலையைச் செய்து மகரிஷிகளின் அருள் ஒளியைப் பற்றுடன் பற்றிப் பிறவா நிலை என்ற பெரு நிலை அடையலாம்.

அதே சமயம் இந்த வாழ்க்கையில் வந்த சகல தீமைகளிலிருந்தும் விடுபட்டு நமது வாழ்க்கையில் எது வந்தாலும் அதைச் சமாளிக்கும் திறனும் குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்கும் நிலைகளும் நோய்கள் வராது தடுக்கும் நிலைகளும் நிச்சயம் நாம் பெற முடியும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்…!

எந்தக் காரியத்தைத் தொடங்கும் முன்னும் செய்ய வேண்டிய சிறு பிரார்த்தனை…!

chitra festival

எந்தக் காரியத்தைத் தொடங்கும் முன்னும் செய்ய வேண்டிய சிறு பிரார்த்தனை…!”

நம்மை யாராவது ஒருவர் திட்டினால் என்னைத் திட்டினார்… திட்டினார்…! என்று எண்ணும் போது அந்தக் காரமான அலைகள் நமக்குள் வந்து விடுகிறது.

அதே கோபமான எண்ணத்துடன் என்னை இப்படிப் பேசினார்களே இப்படிப் பேசினார்களே என்று எண்ணிக் கொண்டே நீங்கள் சமையல் வேலை செய்தா என்ன ஆகும்..?

1.எந்த அளவுக்குக் கோபமாக இருந்தீர்களோ குழ்ம்பிலே ஒரு மிளகாய் அதிகமாகிப் போகும். குழம்பு காரமாகிவிடும் உஷ்..உஷ்.. என்று தான் சாப்பிடுவார்கள்.
2.என்னை இப்படிப் பேசினார்கள் அப்படிப் பேசினார்கள் என்று சலிப்பான எண்ணத்துடன் சமைத்துப் பாருங்கள். குழ்ம்பில் புளியை நிச்சயம் அதிகமாக்கி விடுவீர்கள்.
3.எப்போது பார்த்தாலும் இப்படி “நச்..நச்…நச்…!” என்று இருக்கிறது என்று ஆத்திரத்துடன் சமைத்தீர்கள் என்றால் குழம்பில் உப்பை அள்ளி அதிகமாகப் போட்டு விடுவீர்கள்.
4.இப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லை.
5.ஆனால் நீங்கள் அந்தந்த சந்தர்ப்பத்தில் நுகர்ந்த உணர்வுகள் உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி அதைச் செய்ய வைத்துவிடும்.

நாம் தவறு செய்யவில்லை. காரணம் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் நிலைகள் தான். அதை அவ்வப்பொழுது சுத்தப்படுத்த வேண்டும் அல்லவா…!

அதற்காகத்தான் ஆத்ம சுத்தி என்ற பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

ஓ…ம் ஈஸ்வரா…… குருதேவா…! என்று புருவ மத்தியில் நம் உயிரை எண்ணி அந்த உணர்வின் வேட்கையைக் கூட்ட வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று கண்களைத் திறந்து வானை நோக்கி ஏங்கிச் சுவாசியுங்கள்.

பின் கண்களை மூடித் திரும்பத் திரும்ப “மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…!” என்று ஒரு நிமிடம் தியானிக்க வேண்டும்.

பிறகு மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா. மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா. மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மாக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்று ஒரு நிமிடம் இதைத் தியானிக்க வேண்டும்.

பின் கண்களைத் திறந்து மீண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கி விட்டு கணவன் மனைவி இருவருமே ஒரு நாளைக்குக் குறைந்த பட்சம் ஐந்து முறையாவது இது போல எண்ண வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி என் கணவரின்/ என் மனைவியின் ஜீவாத்மா பெறவேண்டும். அவர் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும். அவர் எத்தொழில் செய்தாலும் நலமும் வளமும் பெற வேண்டும். அவர் பேச்சும் மூச்சும் உலக மக்களுக்கு நன்மை தர வேண்டும். அவரைப் பார்ப்போரெல்லாம் நல்லது நினைக்க வேண்டும் இவ்வாறு கணவன் மனைவி கணவனை ஒருவருக்கொருவர் எண்ணுதல் வேண்டும். இதற்குப் பெயர் தான் ஆத்ம சுத்தி என்பது.

சமையல் செய்யும் போதெல்லாம் பெண்கள் ஆத்ம சுத்தி செய்துவிட்டுத் தொடங்க வேண்டும்.
1.அரிசியையோ மற்ற பொருள்களைப் போடும் போதெல்லாம்
2.நாங்கள் சமைக்கும் இந்த உணவை உண்ணுவோர் அனைவரும்
3.மகரிஷிகளின் அருளால் நலமும் வளமும் மன பலம் பெற வேண்டும் என்று எண்ணிப் பழகுதல் வேண்டும்.

இதே போல ஆகாரத்தைப் பரிமாறும் போதும் அந்த மகரிஷிகளின் உணர்வை ஒரு நிமிடம் ஏற்றி விட்டு ஆகாரத்தை எடுத்துப் பரிமாற வேண்டும்.

காரணம் அந்த ஒரு நிமிடம் என்பது மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொன்ன உடனே
1.மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சூரியனுடைய காந்த அலைகள் கவர்ந்து
2.நமக்கு முன்னாடி கொண்டு வந்து நிறுத்திவிடும். (அதற்காகத்தான் திரும்பத் திரும்ப எண்ணச் சொல்கிறோம்)
3.நம் ஆன்மாவில் அந்த அருள் சக்தி பெருகினால் மற்ற கோபமோ சலிப்போ வேதனையோ எல்லாம் அகன்று சென்றுவிடும்.

ஆகவே எந்தக் காரியத்தைச் செய்வதற்கு முன்னாடியும் இப்படி ஆத்ம சுத்தி செய்துவிட்டுத் தான் தொடங்க வேண்டும். ஒரு இரண்டு நிமிடத்திற்குள் இதைச் செய்து முடித்துவிடலாம்.

இரவில் தூங்கச் செல்லும் முன் ஒவ்வொரு நாளும் நாம் செய்ய வேண்டியது

sleeping meditation

இரவில் தூங்கச் செல்லும் முன் ஒவ்வொரு நாளும் நாம் செய்ய வேண்டியது 

 

காலையிலிருந்து இரவு வரையிலும் கேட்டறிந்த பார்த்தறிந்த தீமைகளை அந்த அசுர குணங்களின் செயல்களை அகற்றும் நிலைக்காக மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் ஆத்ம சுத்தி என்ற இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றோம். இரவில் தூங்கச் செல்லும் போது இதை அவசியம் செய்து பழக வேண்டும்.

தினசரி நம் உடலிலே இருக்கும் அழுக்கைப் போக்க நல்ல நீரைக் கொண்டு உடலைத் தேய்த்துக் குளிக்கின்றோம். அது போல இரவிலே நாம் தூங்கச் செல்லும் போது சப்தரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஒரு நூறு முறை நம் உயிரை வேண்ட வேண்டும்.

ஏனென்றால் அன்றாடம் நாம் எத்தனையோ தீமையான செயல்களை டி.வி. பத்திரிக்கை கம்ப்யூட்டர் மூலமாகவும் அல்லது நேரடியாகவும் நாம் பார்க்க நேர்கின்றது.

1.அவை அனைத்தும் நம் கண்களால் கவரப்பட்டு உயிருடன் இணைக்கப்படும் பொழுது
2.நம் உயிர் அதை எல்லாம் இயக்கச் செய்யும் பொழுது
3.தவறு செய்கின்றான்… குற்றம் செய்கின்றான்… கொலை செய்கிறார்கள்… வேதனையால் துடிக்கின்றார்கள்…! என்று உணர்கின்றோம்.

இவ்வாறு உயிரால் இயக்கப்பட்டு அந்த உணர்வுகளை நாம் அறிந்து கொண்டாலும்
1.இயக்கிய உணர்வின் சக்தி ஜீவன் பெற்று
2.நமக்குள்ளும் அதே தீமைகளை விளைவித்து விடுகின்றது.

கொலைகாரனயோ தவறு செய்பவனையோ வேதனைப்படுபவனையோ பார்த்து நுகர்ந்தறிந்த உணர்வுகள்
1.நம் உயிரின் நிலைகளைத் திரை மறைவாக மறைத்துக் கொண்டு
2.நம் சிந்திக்கும் உணர்வினைச் செயலற்றதாக மாற்றிவிடும்.

அத்தகைய தீமைகளை நீக்க வேண்டும் என்றால் புருவ மத்தியில் இருக்கும் உயிரான ஈசனிடம் எண்ணங்களைச் செலுத்த வேண்டும். உயிருடன் ஒன்றி நினைவினை விண்ணை நோக்கிச் செலுத்தித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மாக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று நூறு முறை நம் உடலுக்குள் செலுத்துவது நல்லது.

சப்தரிஷி மண்டலங்களாக இருப்பினும் துருவ நட்சத்திரமாக இருப்பினும் அவர்கள் அனைவரும் தங்கள் ஆறாவது அறிவை ஏழாவது நிலைகள் கொண்டு ஒளியாக மாற்றிச் சப்தரிஷிகளாக ஆனவர்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உடலுக்குள் பல முறை கண்ணின் நினைவாற்றலைச் செலுத்தித் தியானிக்க வேண்டும்.

ஆக நம் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற நினைவினை உள் செலுத்தி நம்மை அறியாது சேர்ந்த தீமையின் உணர்வுகளைச் செயலற்றதாக மாற்றச் செய்வது தான் “சூரசம்ஹாரம்…!” என்பது.

ஒரு விளக்கை மறைத்துக் கொண்டிருக்கும் இருளைப் பிளந்து விட்டால் விளக்கின் வெளிச்சம் அருகிலே இருக்கக்கூடிய அனைத்துப் பொருளையும் தெரிவிக்கின்றது.

அது போலத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நுகர்ந்து அந்த உணர்வுகளை நம் ஆன்மாவாக்கி மீண்டும் சுவாசிக்கும் பொழுது இருள் சூழச் செய்யும் அந்த இருள் சக்தியை அது அகற்றச் செய்யும்.

தீமையான செயல்ளைச் செயல்படுத்தும் அந்த கொடூர சக்தி கண்ணின் நினைவு கொண்டு அகற்றப்படுகின்றது. ஆகவே தான்
1.இரவிலே தூங்கச் செல்லும் போது நூறு முறையாவது சப்த ரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் உடலில் உள்ள தீமையான உணர்வுகள் மடிய வேண்டும்
3.சப்தரிஷிகளின் அருள் சக்தியால் நாங்கள் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெறவேண்டும்
4.எங்கள் குடும்பத்தில் அறியாது சேர்ந்த தீயவினைகள் அனைத்தும் நீங்க வேண்டும்
5.எங்கள் விவசாய நிலங்களில் அறியாது சேர்ந்த தீய அணுக்களின் நிலைகள் மறைய வேண்டும்
6.சப்தரிஷிகளின் அருள் சக்தி விவசாய நிலங்களில் படர்ந்து நல்ல அணுக்கள் உரு பெற வேண்டும்
7.அதனின் மலத்தின் தன்மை கொண்டு தாவர இனங்கள் செழித்து வளர்தல் வேண்டும்
8.சப்தரிஷிகளின் அருள் சக்தி எங்கள் தொழில் வளாகம் அனைத்திலும் படர வேண்டும்
9..எங்கள் வளாகத்தில் தொழில் செய்யும் அனைவரும் மன பலம் மன வளம் பெற வேண்டும்
10.அவர்கள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்கிப் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெறவேண்டும் என்று
11.இந்த ஏக்க உணர்வினை நாம் நம் நினைவால் பரவச் செய்து நம் ஆன்மாவைத் தூய்மை செய்ய வேண்டும்.

நம் ஆன்மாவைத் தூய்மை செய்வது போல் வீட்டைத் தூய்மைப்படுத்துவதும் நம் தொழில்களிலுள்ள தீமையான உணர்வுகளை நீக்குவதும் விவசாய நிலங்களில் நல்ல உணர்வுகளைப் பரவச் செய்வதும் வேண்டும்.

தினசரி இரவு இவ்வாறு எண்ணி ஆத்ம சுத்தி செய்து இந்தக் கணக்கைக் கூட்டிக் கொண்டு வந்தாலே போதுமானது. நம் வாழ்க்கைப் பாதை சீராகும். நம் பயணம் அழியா ஒளிச் சரீரம் பெறுவதாக அமையும்.