நம்மை இயக்கும் ஆன்மாக்களால் வரும் தீமைகள்

நம்மை இயக்கும் ஆன்மாக்களால் வரும் தீமைகள்

(1)

ஒரு முறை யாம் குருதேவருடன் சென்னையிலிருந்து மும்பைக்கு இரயிலில் சென்று கொண்டிருந்தோம். அப்பொழுது இரயிலில் ஒரு நோய்வய்ப்பட்ட பெண்மணியை அவர்களுடைய உறவினர்கள் வேலூர் ஆஸ்பத்திரியிலிருந்து மும்பைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள்.

நோய்வாய்ப்பட்ட பெண்மணி வேதனை தாளாமல் உறவினர்களிடம் “தண்ணீர் கொடு… அது கொடு… இது கொடு…!” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.

ஆனால் உறவினர்களோ மருத்துவர் சொன்னபடி “உணவோ தண்ணீரோ ஒரு அளவிற்கு மேல் கொடுக்கக் கூடாது” என்பதைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் நோய்வாய்ப்பட்ட பெண்மணியோ… “அடப்பாவிகளா…! எனக்கு நாக்கு இழுத்துக் கொண்டிருக்கின்றது… உண்ணுவதற்கு எதுவும் கொடுக்கமாட்டீர்களா…?” என்று சாபமிட்டுக் கொண்டிருந்தார்.

உறவினர்கள் நோயாளியைப் பார்த்து “நீ சும்மா இருக்க மாட்டாயா…?” என்று மிரட்டுகிறார்கள்.

அங்கே இரயிலில் உடன் வந்தவர்கள்… அந்த நோயான பெண்மணியைப் பார்த்து “உனக்கு என்ன வேண்டும் அம்மா…?” என்று இரக்கமாகக் கேட்டார்கள்.

அதற்கு உறவினர்கள் “ஏனம்மா…! என்ன கொடுக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியாதா…? நீ ஏன் கேட்கிறாய்…?” என்று சொன்னவுடன் நோயான பெண்மணி “பார்…! உதவி செய்பவர்களைக் கூட திட்டுகிறார்களே…” என்று எண்ணுகின்றார்.

சந்தர்ப்பம்… இது போன்ற உணர்வுகளை நுகரும் பொழுது உயிர் அதை ஜீவ அணுவாக அவர்களுக்குள் உருவாக்குகின்றது. குருநாதர் இதைக் காண்பித்தார்.

ஆனால் அங்கு யாரும் தவறு செய்யவில்லை.

1.மருத்துவர் கூறிய அறிவுரையை உறவினர்கள் கடைபிடிக்கிறார்கள்
2.எதற்காக…? நோயான பெண்மணியைக் காப்பாற்ற வேண்டும் என்று…!

ஆனால் நோயான பெண்மணியோ “இப்படி அவஸ்தைப்படுகிறேனே… கேட்டதைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்களே…! கொஞ்சம்கூட இரக்கம் இல்லையே…?” என்று எண்ணுகின்றார்.

இந்த உணர்வின் சொல்லைக் கேட்டவுடனே உறவினர்கள் வேகம் கொண்டு “நீ பேசாமல் இரு…!” என்கிறார்கள்.

இதனால் நோயான பெண்மணி… “நாம் இவர்களுக்கு எத்தனை செய்திருப்போம்… என்னுடைய நோயின் தன்மை தெரியாமல் இப்படிச் சீறிப் பாய்கிறார்களே… வேதனைப்படுத்துகிறார்களே…!” என்று நோயாளியின் உணர்வுகள் மாறுகின்றது.

இதெல்லாம் சந்தர்ப்பங்கள்…!

இரயிலை விட்டு இறங்கியவுடன் நோயான பெண்மணியின் வீடு வரை எம்மை சென்று வரச் சொல்லிவிட்டு குருநாதர் ஒரு இடத்தில் இருந்து விட்டார்.

யாம் அவர்களை பின் தொடர்ந்து அவர்கள் வீடு வரை சென்றோம். இரண்டு நாள் அங்கே இருந்தோம். மூன்றாம் நாள் நோயான பெண்மணியின் உயிராத்மா பிரிந்தது.

இரயிலில் வரும் பொழுது…
1.நோயான பெண்மணிக்காக யார் பரிந்து பேசினார்களோ அவர்களுடைய நினைவு
2.இந்த நோயான பெண்மணிக்கு சாகும் தருவாயில் வருகிறது… “மகராசி…! எனக்கு உதவி செய்தாளே…” என்ற எண்ணம் வந்தது.

ஆனால் உறவினர்களை நினைத்து என்னுடைய எல்லாச் சொத்துக்களையும் வைத்துக் கொண்டு “துரோகம் செய்தார்களே…” என்று சாபமிட்டது.

இத்தகைய சாப அலைகளை நுகர்ந்த உறவினர் குடும்பத்தில் சாப உணர்வுகள் விளைந்து பெருகி அவர்கள் குடும்பத் தொழில் நசுங்கியது.. குடும்பத்தில் பல குழப்பங்கள் விளைந்தது.

இதையெல்லாம் பார்க்கும்படியாக…
1.குருநாதர் எம்மை “48 நாட்கள்” அந்த வீட்டிற்கு அருகாமையில் இருந்து பார்க்கும்படி செய்தார்.
2.ஒரு பக்கத்தில் அமர்ந்து இங்கே என்ன நடக்கிறது…? என்று பார்த்துக் கொண்டிருந்தோம்.

அதே சமயத்தில் நோயான பெண்மணிக்கு யார் பரிந்து பேசினார்களே அவர்கள் நோயான பெண்மணியின் வீட்டுப் பக்கம் வந்து பார்த்தவுடனே நோயான பெண்மணியின் உயிராத்மா, இவருடைய உடலுக்குள் புகுந்து விட்டது.

புகுந்த பின்… தான் அது எப்படியெல்லாம் நோயால் அவஸ்தைப்பட்டதோ அதே வேதனையின் உணர்ச்சிகளை புகுந்து கொண்ட உடலுக்குள் ஊட்டுகின்றது.

குருநாதர் இதையும் பார்க்கச் சொன்னார்…! ஆன்மா இன்னொரு உடலுக்குள் செல்கின்றது… இவரை எப்படிச் சிரமப்படுத்துகின்றது என்று…!

தொடர்ந்து அவருடைய வீட்டில் ஒருவருக்கொருவர் குழப்பமாகி வியாபார மந்தம் தங்களை அறியாமலே குழந்தைகளிடம் சீறிப் பேசுவது, தவறான நிலையில் பேசுவது சங்கடங்கள் போன்ற பல இயக்கங்க நடப்பதை எல்லாம் அங்கே எம்மைக் கண்டுணரும்படி செய்தார்.

இயற்கையின் இயக்கத்தில்…
1.சந்தர்ப்பம், மனிதர்களை எப்படிக் குற்றவாளியாக ஆக்குகின்றது…?
2.சந்தர்ப்பத்தால் நோய் எப்படி விளைகின்றது…? என்பதையெல்லாம் குருநாதர் தெளிவாகக் காண்பித்தார்.

(2)

கோலமாமகரிஷி… ரிஷி நிலை எப்படிப் பெற்றார்…? என்று அறிவதற்காக மங்களூர் அருகில் உள்ள கொல்லூரில் யாம் தியானமிருந்து வந்தோம்.

அதற்காக மங்களூரில் நண்பர் வீட்டில் தங்கியிருந்தோம். அப்பொழுது அங்கிருந்து இன்னொரு வீட்டிற்குப் போய் வருமாறு குருநாதர் கூறினார். அங்கு போனோம்.

அந்தக் குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பையன் பிறந்த பின் சந்தர்ப்பத்தால் பையனுடைய அப்பா இறந்து போனார். அப்பா இறந்தவுடன் பையனுடைய அம்மா வேதனை கொள்கின்றார்.

பையனுக்கு ஏற்கனவே மூத்த சகோதரி இருக்கிறார். அந்த “இரண்டு குழந்தைகளையும் விட்டு விட்டுத் தன் கணவர் இறந்து விட்டாரே… இரண்டு குழந்தைகளையும் என்ன செய்வது…?” என்று அம்மா எண்ணினார்கள்.

இப்படித் தன் கணவருடைய உணர்வையே எடுத்துக் கொண்டபின் சிறிது நாட்களில் பையனுடைய அம்மாவும் இறந்து போனார்கள்.

இந்தப் பையனுடைய அம்மாவின் அம்மா… அதாவது பையனுடைய பாட்டி தான் தொழில் செய்து குடும்பத்தைப் பராமரித்து வந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் பாட்டி தன் பேரனைப் பார்த்து, “நாசமாகப் போகிறவன்…! இவன் பிறந்தான் இரண்டு பேரைக் கொன்று விட்டான்…! தொலைந்து போடா நாசமாகப் போகிறவனே…!” என்று பேரனைக் கண்டாலே விரட்டினார்கள்.

பையனுடைய அக்காவோ… “அவன் என்ன செய்வான் பாட்டி…? அவர்கள் இறந்து போனால் இவன் என்ன செய்வான்…! இவனா அவர்களைக் கொன்றான்…?” என்று பையனுடைய சகோதரி தன் சகோதரனை அரவணைத்துப் பேசினாள்.

ஆனால் பாட்டி… “அவனுக்குச் சோறு போடாதே…! வெளியே தள்ளிவிடு… எங்கேயாவது பிச்சையெடுத்துச் சாப்பிடட்டும்…!” என்று சொல்கிறது.

ஆனால் பையனுடைய அக்கா “தம்பி என்ன செய்வான்…?” என்று கூடுமான வரையில் தன் தம்பியைப் பாதுகாத்து வளர்த்து வந்தாள்.

பாட்டியோ… “பையன் பிறந்தவுடன் அப்பா இறந்தார், மூன்று வருடங்களில் அம்மாவும் இறந்தார். வியாபாரமும் கெட்டது… இருக்கின்ற சொத்தும் போனது…!” என்ற உணர்வுகளை வளர்த்துக் கொண்டபின் தன் பேரனை “வெடுக்…வெடுக்…” என்று கடுமையாகத் திட்டிப் பேசினார்கள்.

1.தன் பேரன் மேல் பாட்டிக்கு வெறுப்பு அதிகமான அதே நேரத்தில் தன் பேத்தி மீது அதிகமான பாசத்தைக் காண்பித்தார்கள்.
2.இதனின் தொடர் கொண்டு பாட்டி இறந்த பின்… பாட்டியின் உயிராத்மா அந்தப் பேத்தியின் உடலுக்குள் சென்றுவிட்டது.

பேத்தியின் உடலுக்குள் பாட்டியின் உயிராத்மா சென்றபின் என்ன நடக்கிறது…?

பாட்டி பையனை எப்படித் திட்டிப் பேசினார்களோ அதே போன்று பையனின் சகோதரியும்…
1.தன்னுள் பாட்டியின் உயிராத்மா இணைந்துள்ள நிலையில்
2.தம்பியைப் பார்த்து, “தோலைந்து போடா… நாசமாகப் போடா…” என்று சொன்னாள்.

அதன்படியே தம்பியையும் விரட்டினாள்.

ஒரு உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் மற்றொரு உடலுக்கு மாறுவதும் இதனின் உணர்ச்சிகள் வந்ததும் செயலாக்கங்கள் எப்படி அமைகின்றதென்றும் யாம் அறிந்து கொள்ளவே குருநாதர் எம்மை மங்களூருக்கு அனுப்பினார்.

அதற்கான இடத்தைக் காண்பித்து
1.“இன்னின்ன நிகழ்ச்சிகள் நடக்கும்… அதனை நீ பார்…” என்று சொல்லியிருந்தார் குருநாதர்.
2.அவர் சொன்னது போன்றே நடந்தது.

இதன் தொடர் கொண்டு பெண் பிள்ளையின் உடலில் வேதனை உணர்வுகள் வளர்ந்து நோய் வந்து பையனின் சகோதரியும் மடிந்து விட்டது.

பையனோ… ஒதுக்கப்பட்ட நிலைகளிலிருந்து மற்றவர்களால் காக்கப்பட்டு அவன் தொழிலில் பெரியவனாக வளர்ந்து விட்டான்.

ஒதுக்கப்பட்டாலும்
1.தன் மீது பற்று கொண்டு தான் எப்படியும் வளர வேண்டும் என்று மற்றவர்களின் அன்பைப் பெற ஆரம்பித்தான்.
2.‘பாவம் பையன் என்ன செய்வான்…!” என்று எண்ணிய உணர்வு கொண்டு மற்றவர்கள் அவனுக்கு உதவிகள் செய்தனர்.

அவன் சிறந்த விஞ்ஞானியாகவே ஆகிவிட்டான்…. அமெரிக்காவில் இருக்கின்றான். அவன் அனாதையாக இருந்தாலும் தன் உணர்வின் வேகத்தைக் கூட்டித் தன்னைக் காக்க வேண்டுமென்ற உணர்வை எடுத்து விஞ்ஞானி என்ற நிலை பெற்று விட்டான்…!

இது நடந்த நிகழ்ச்சி…!

மனிதனின் முடிவு எங்கே போகின்றது…? சற்று சிந்தியுங்கள்…!

மனிதனின் முடிவு எங்கே போகின்றது…? சற்று சிந்தியுங்கள்…!

 

உதாரணமாக நாம் கண் கொண்டு பார்க்கும் பொழுது பையன் தவறு செய்கின்றான் என்று நாம் நுகர்கின்றோம்.

நமது உடலிலுள்ள நல்ல குணங்களுக்கும்… அவன் செய்யும் தவறான குணங்களுக்கும் எதிர்மாறான நிலைகளாக இருக்கப்படும் போது…
1.உயிரிலே பட்டபின் அவனுடைய உணர்ச்சிகள் “அவன் தவறு செய்கின்றான்…” என்று உணர்த்துகின்றது.
2.உணர்த்தியவுடனே நாம் அறிகின்றோம்.

அறிந்தவுடன் அதை நிறுத்திவிட்டு அவன் ஏன் செய்கின்றான்…? என்று சிந்தனை செய்து அவனை நல்வழிப்படுத்த வேண்டும். அதை விடுத்து நாம் வேதனைப்பட்டால் வேதனை என்பது விஷம். நாம் சிந்திக்கும் தன்மையை இழக்கின்றோம்.

சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்டால் கோபமென்ற உணர்ச்சியின் வேகம் கூடுகின்றது. அப்பொழுது சிந்தனையற்ற நிலைகளில் அதீதமான உணர்வுகளை நாம் சேர்க்கும் பொழுது… இந்த உணர்ச்சிகள் எல்லாம் நம் உடலில் கலக்கப்படுகின்றது.

அப்படிக் கலக்கப்படும் உணர்வுகள் நம் இரத்தங்களில் கலந்த பின் உடலில் உள்ள நல்ல அணுக்கள் அதை ஏற்க மறுத்தால் நாம் சோர்வடைந்து விடுகின்றோம்.

இப்படிப் பண்ணுகின்றானே என்ன பண்ணுவது…? என்று வேதனையில் வெறுப்பான பின் நம் உடலிலுள்ள நல்ல அணுக்கள் எல்லாம் சோர்வடைந்து… நாமும் சோர்வடைகின்றோம்.
1.செய்வதறியாது மயக்கப்படுவோரும் உண்டு.
2.சமாளிக்க முடியாத நிலையில் பதட்டமும் பயமும் நடுக்கமும் ஏற்படும்… அவனை எண்ணினாலே மயக்கம் வரும்.
3.நம் பக்கத்து வீட்டில் யாராவது இடைஞ்சல் செய்தாலும் மயக்கம் வரும்.

ரோட்டிலே அல்லது பக்கத்து வீட்டிலே ஒருத்தருக்கொருத்தர் சண்டை போடுவதைப் பார்த்தாலே நம் வீட்டிலும் சண்டை வரும். இவைகளெல்லாம் நம்மை அறியாது இயக்கக்கூடியது.

தவறு செய்யும் உணர்வுகள் பையன் உடலிலே “ரிக்…” அவன் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் வெளிப்படுவது “சாம…” இசை.

நமது உடல் ரிக்… அவன் மேல் அன்பு கொண்டு பரிவு கொண்ட நாம் பேசும் பொழுது நம்முடைய நல்ல எண்ணங்கள் வெளிப்படும்போது சாம… இசை.

பாலில் பாதாமைப் போட்டால் பாலிற்கு நல்ல சத்து இருக்கிறது. அதில் ஒரு துளி விஷம் பட்டால் அதற்குச் சக்தியிருக்கிறதா…? நம்மை மயக்கத்தான் செய்கிறது. பாதாமின் வலு இழந்து விடுகின்றது.

1.பையன் தவறு செய்கின்றான் என்ற உணர்வை நுகர்ந்தோமென்றால் அதைக் குறைத்துப் பழக வேண்டும்.
2.இல்லையென்றால் அவன் செய்த தவறான உணர்வுகள் நமக்குள் வந்து எதிர் நிலையாகி
3.நமது நல்ல குணத்தை அடக்கிவிடுகின்றது…!

இதற்குப் பெயர் “அதர்வண…”

அவன் இப்படிச் செய்கின்றானே, என்ற உணர்வின் தன்மையை வளர்க்க வளர்க்க “யஜூர்…” ஓர் வித்தாகின்றது. அதனை எண்ணும் பொழுது வேதனைப்படும் உணர்வுகள் நம் உடலில் வித்தாகின்றது.

அவன் இளையவன்… நாம் மூத்தவர்கள்…! “அவன் இப்படிப் பண்ணுகிறானே…” என்ற உணர்வுகளை வளர்த்து நம் உடலில் கலந்து விட்டால் நம் உடலில் இரத்தக் கொதிப்பு வரும்.

நாம் எதாவது எண்ணினால் இப்படியாகி விட்டதே…! என்ற வேதனை இரண்டும் கலந்து வரும்.
1.சிறு மூளை பாகம் செல்லக்கூடிய இடங்களில் இரத்த அழுத்தம் அதிகமாகி விட்டால்
2.அந்த நரம்பு மண்டலம் வெடித்துவிடும்.

யாரை நினைத்து இந்த ஆன்மா வெளியில் செல்கின்றதோ அவர் உடலுக்குள் சென்றுவிடுகிறது.

நாம் குழந்தையைக் காக்க வேண்டும் என்று நினைத்தோம்.
1.அவனாலே வேதனையை அதிகமாகச் சேர்த்தோம்.
2.இறந்தபின் அவன் உடலுக்குள்ளே போய் இதே வேதனை என்ற உணர்வை உருவாக்கும்.

மான் சாந்தமானது… புலி துரத்தும் பொழுது அதே நினைவாகின்றது. துரத்தும் நேரத்தில் அந்த உணர்வுகள் அதிகமாகின்றது. அது இறந்தால் புலியின் ஈர்ப்பிற்குள் வந்து இந்த உணர்வை நுகர்ந்ததனால் புலியாக மாறுகின்றது.

பரிணாம வளர்ச்சியில் புலிக்குண்டான குணம்… அது மற்றொன்றை வேதனைப்படுத்திக் கொன்று சாப்பிடும்.

இதைப் போன்ற உணர்வை வளர்த்துக் கொண்ட தந்தை… உடலை விட்டுச் சென்றபின் மகன் உடலுக்குள் சென்று அங்கிருக்கும் நல்ல குணங்களை எல்லாம் சாப்பிட ஆரம்பித்துவிடும்.

பையனைக் காக்க வேண்டும் என்று எண்ணினாலும்
1.இந்த உணர்வுகள் அதை பலவீனப்படுத்தி அதையே வளர்க்கும்.
2.அவனுக்கும் கோபம் வரவைக்கும்.
3.இதைப் போல அதன் உணர்வுகள் தவறாகப் போக வைக்கும்.
4.தேடி வைத்த செல்வத்தை அவன் பாதுகாக்க முடியாமல் போய்விடும்.
5.கடைசியில் அவனும் இதே கதியில் மடிவான்.

அதே சமயத்தில் இவர் ஆன்மாவும் உடலை விட்டு வந்தபின் எதன் உணர்வுகள் அணுக்களாக மாறியதோ அந்த உடலை விட்டு வெளி வந்தபின் புலி மேய்ந்து கொண்டிருந்தால் அதன் உணர்வின் வலுக் கொண்டு ஈர்த்துவிடும்.

அந்த உடலுக்குள் அதே உணர்ச்சிக்குத்தக்க அதனுடைய கருவாகி மனிதன் ரூபத்தைப் புலியாக மாற்றிவிடும். நாம் தவறு செய்யவில்லை.

இதே போன்று… அவரைப் பற்றி வீட்டில் அடிக்கடி பேசினால் “பரம்பரை நோய்…” என்று வரும். இரத்தக் கொதிப்பு வந்ததென்றால் மற்றவர்களுக்கும் இதே போல் வரும்.

அவர் இரத்தக் கொதிப்பில் இறந்தார். அதே போல அந்தக் குடும்பத்தில் பரம்பரை நோயாக மாறும்.
1.அந்தக் குடும்பத்தில் எப்பொழுது பார்த்தாலும்
2.யாராவது ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இப்படிச் சண்டை போட்டுக் கொண்டிருப்பது குடும்பத்தில் தாய் கருவுற்றிருந்தால் கருவில் வளரும் சிசுவுக்கும் அந்த உணர்வுகள் விளையும்.

ஆக… மனிதனின் முடிவு எங்கு போகின்றது…? சற்று சிந்தியுங்கள்.

ஒரு குடும்பத்தில் இப்படி ஏற்பட்டால் அடுத்து அந்தக் குடும்ப வரிசையிலும் இதே போன்று பரம்பரை நோயாக மாறும்.
1.ஆஸ்துமா நோய் போன்ற நோய்களும் இதைப் போன்று நாம் எடுத்துக் கொண்ட நிலைகளால் வருவதுதான்.
2.வாத நோய் வருவதும் இதைப் போன்று தான்.

எத்தனையோ கோடி சரீரங்களைக் கடந்து வந்த நம் அம்மா அப்பா மனிதர்களாகப் பிறந்து நம்மை மனிதனாக உருவாக்கினாலும் சந்தர்ப்பத்தால் நாம் மனிதனல்லாத உருவுக்குத்தான் நாம் திரும்பிச் செல்கின்றோம்.

வளர்த்துக் கொண்ட உணர்வுகள் எப்படியோ… அதற்குத்தக்கத்தான் மற்ற உடல்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்த உயிர்.

இதைப் போன்ற நிலைகளை மாற்றத்தான்
1.அடிக்கடி யாம் உங்களை ஆத்ம சுத்தி செய்யச் சொல்வது.
2.தீமை வரும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
3.அந்த அருள் சக்திகளை உயிரின் வழியாக நுகர்ந்து
4.உடலுக்குள் உள்ள எல்லா அணுக்களுக்கும் பாய்ச்சி உடனுக்குடன் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
5.நாம் நுகரும் உணர்வுகள் நோயாக உருவாகாதபடி “அந்தக் கணமே…” மாற்றி அமைக்க வேண்டும்.

நாம் பிறரைப் பார்த்து அங்கலாய்ப்பதால் வரும் தீமைகள்

நாம் பிறரைப் பார்த்து அங்கலாய்ப்பதால் வரும் தீமைகள்

 

கோபப்படுவோரின் உணர்வை சுவாசித்தால் நம்மிடத்தில் அது “காளி” ஆகின்றது. அதிகமானால் இரத்தக் கொதிப்பாகின்றது.

இரத்தக் கொதிப்பு வந்துவிட்டால் மனிதரின் கை கால் அங்கங்கள் சுருங்குகின்றன… கோபத்தின் தணலும் அதிகமாகின்றது. இதைப் போன்ற உணர்வுகள் வரப்படும் பொழுது உடலுக்குள் அணுக்களாகி… வேதனையின் உணர்வுகளே அதிகமாகும்.

ஆகையால்
1.யாரைப் பார்த்தாலும் கோபிக்கும் தன்மையும்
2.தான் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் உணர்ச்சி வசப்பட்டு அழுவதும்
3.அவர்களைக் கோபிப்பதுமான உணர்வுகளைத் தூண்டிவிடும்.

இவர் யார் மீது அதிகப் பற்று கொண்டு பார்க்கின்றாரோ அல்லது இவர் மீது யார் பற்று கொண்டு பார்க்கின்றனரோ அவருடைய உணர்வுகளில் இது பதிவாகி அந்த உணர்வின் தன்மை அதிகமாகி விட்டால் இவருடைய உயிரான்மா அவருடைய உடலுக்குள் செல்கின்றது.

பின்… உடலில் இருந்த பொழுது தனக்குள் விளைய வைத்த உணர்வுகளை அவரிடத்திலும் உருவாக்குகின்றது.

இவருடைய உடலில் அதை உருவாக்கி அதே உணர்வினைத் தனது உணவாக ஈர்க்கின்றது. இவருடைய உடலில் இந்த ஆன்மா புகுந்து விட்டதால்
1.இவருக்கும் கோபம் அடிக்கடி வரும்
2.ஏன் கோபம் வருகிறது…? என்றே இவருக்குத் தெரியாது.
3.பின் இவருடைய உடலையும் வீழ்த்திவிட்டு வெளியே சென்றபின் மனிதனல்லாத பிறவியைத்தான் அடைகின்றது.

இதில் எத்தகைய உணர்வின் வலுவைச் சேர்த்துக் கொண்டதோ… பரிணாம வளர்ச்சியில் வந்த பொழுது எந்தெந்த குணங்கள் கொண்ட உடலின் உருவங்கள் பெற்றதோ… அதற்குத்தக்க உருவத்திற்கு உயிர் அழைத்துச் சென்று… எங்கே அதனின் உணர்வின் வலு இருக்கின்றதோ அங்கே அழைத்துச் செல்கின்றது.

உதாரணமாக இன்று விஞ்ஞான அறிவு கொண்டு, ஒரு TV நிலையத்தில் ஒரு அலைவரிசையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பப்படும் பொழுது மறுமுனையில் அதே அலைவரிசையில் நமது TV.யைத் திருப்பி வைக்கப்படும் பொழுது அந்த நிகழ்ச்சிகளைக் காண்கின்றோம்.

இதைப் போன்று
1.நமக்குள் எவருடைய உணர்வுகளைப் பதிவாக்கிக் கொள்கின்றோமோ அதனின் உணர்வுகள் உந்தப்படும் பொழுது
2.அதே நினைவின் உணர்வுகளை நாம் சுவாசித்து அதன் வழிகளில் பெருக்கப்படும் பொழுது
3.இந்த உடலை விட்டுச் சென்றபின் அவருடைய உடலுக்குள் நாம் புகுந்து கொள்கின்றோம்.

இயற்கையின் நியதிகளைத் தெளிவாகக் கூறுகின்றது நமது சாஸ்திரங்கள்.

ஒருவர் தொழிலில் முன்னேற்றமடைந்து அவருடைய மகிழ்ச்சியின் நிலைகளைப் பார்த்து… நாம் தமது தொழில் முன்னேற்றம் அடையவில்லை என்று சோர்வடைந்து அங்கலாய்த்துக் கொள்கிறோம்.
1.பார்…! நான் இத்தனை தொழில் செய்கின்றேன் எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.
2.ஆனால் ஆண்டவன் அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான்…! என்று
3.அவர்பால் உயர்வைக் காட்டி தன்பால் அங்கலாய்த்துக் கொள்ளப்படும் பொழுது… “அந்த எண்ணம்”
4.நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்கு உணவு கொடுப்பதில்லை… நல்லதை வளர்க்கும் சக்தியை இழக்கின்றது.

அங்காளேஸ்வரி என்ன செய்கின்றது…? தன் குழந்தையையே பிளக்கின்றது. குடலை உருவுகின்றது. அதனுடைய வாழ்க்கையை அழிக்கின்றது.

இதைப் போன்றுதான் நாம் வேதனையை நுகர்வதனால் நமது உடலினுள் நம்மை மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களை நாம் பிளந்து விடுகின்றோம்.

இதைத் தான் அவ்வாறு உருவமாகக் காட்டினார்கள் ஞானிகள். அதாவது,,,
1.அருவ நிலையில் செயல்படுவதை உருவமாகக் காண்பித்து
2.அங்கே மடி மீது குழந்தையை வைத்துக் குடலை உருவுவதாகக் காண்பித்துள்ளார்கள் ஞானிகள்.

யாரையோ பார்த்து அங்கலாய்த்து அதனின் உணர்வின் சக்தியை நமக்குள் அதிகரிக்கப்படும் பொழுது… நமக்குள் வளர்ந்து வரும் நல்ல குழந்தைகளுக்கு உணவு கொடுக்காது அதாவது… “நம்மிடத்தில் உள்ள நல்ல அணுக்களைப் பிளந்து விடுகின்றது…” என்பதனைத் தெளிவாகக் காண்பித்தார்கள் ஞானியர்கள்.

ஆனால் நாம் இப்பொழுது என்ன செய்கிறோம்…?

அங்காளேஸ்வரிக்கு ஆட்டையும் கோழியும் கொடுத்தால் அவள் நம்மைக் காப்பாற்றுவாள் என்று நமது நல்ல குணங்களைக் கொன்றிடும் நிலையாக அவளுக்கு இன்னொரு ஜீவனைப் பலி கொடுக்கின்றோம்.

பலி கொடுத்தால் அவள் நமக்குச் செய்வாள் என்று அந்த அகங்கார உணர்வுகளை எடுத்துப் பலியிட்டு அதன் உணர்வினை நுகர்ந்து விட்டால் இந்த உணர்வின் தன்மையே நமது உடலில் விளைகின்றது.

பின்… எதிலும் நம் காரியம் சித்தி ஆகவில்லை என்றால் என்ன செய்கிறோம்…?

தன் சொந்தமோ நண்பர்களோ அவர்களுடைய உயர்வின் தன்மையைக் கண்டு அங்கலாய்ப்பதும்… வெறி கொண்ட உணர்வுகளைப் பெறுவதும்… ஆக இந்த உணர்வின் தன்மையினைக் கொண்டு வரப்படும் பொழுது…
1.எவர் மேல் இந்த உணர்வின் சக்தி கொண்டாரோ அவருடைய உடலுக்குள்
2.இவர் இறந்தபின்… இவருடைய உயிரான்மா புகுந்து கொள்ளும்.

அதாவது… இந்த ஆன்மா வெளி வந்தபின் “தன் மேல் வெறுப்பு கொண்டோர் உணர்விலேயோ… அல்லது இவர் மேல் பாசம் கொண்டோர் உடல்களிலோ…” இது ஈர்க்கப்படுகின்றது.

நோய்வாய்ப்பட்டு இவர்கள் மரணமடையப்படும் பொழுது… அவர் நண்பர்கள் உற்றுப் பார்த்து இதைக் கேட்டறிந்தால் இதே உணர்வுகள் கொண்டு அந்த ஆன்மா அங்கே “அங்காளேஸ்வரி போன்று…” காட்சி தரும்.

அந்த உணர்வின் தன்மை இங்கே பயமுறுத்தும். நல்லதை எண்ண முடியாதபடி “ஐயோ என்னை விரட்டுகின்றது… ஏதோ என்னைத் துரத்துகின்றது…” என்ற நிலை வரும்.

வாழ்க்கையில் வெறுப்படைந்தோர் உணர்வுகள் அதிகரித்து விட்டால் அவர் உடலுக்குள் சென்றால் இப்படித் தான் செய்யும்.

எதனின் உணர்வை இதற்குள் வளர்த்துக் கொண்டதோ அதன் ரூபமாகக் காட்சி கொடுத்து
1.“இது வருகிறது” என்றும்
2.சோர்வடையும் நேரங்கள் எல்லாம் “என்னைத் துரத்துகின்றது தூங்க விடுவதில்லை…” என்றும் சொல்வார்கள்.

அது மட்டுமல்ல…!
1.எந்தச் சிலையைப் பார்த்து அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்துக் கொண்டதோ
2.இன்னொரு உடலுக்குள் சென்றபின் “எனக்கு ஏன் ஆடு கொடுக்கவில்லை…?
3.எனக்குக் கொடுத்தது ஏன் சரியாகக் கொடுக்கவில்லை…” என்றும்
4.இந்த உணர்வு கொண்டு அந்த உடலிலே இயங்குகின்றது.
5.அசுர உணர்வின் செயல்களையே அங்கே செயல்படுத்தும்.

ஆகவே இந்த உணர்வுகள் சிறுகச் சிறுக அந்த உடலில் வளர்ந்து அந்த உடலில் இருக்கும் நல்ல அணுக்களைக் கொன்று புசித்துக் கொண்டேயிருக்கும்.

இவ்வழியில்தான் மரணங்கள் நேரிடுகின்றது. இதை எல்லாம் மாற்றியமைக்க என்ன செய்ய வேண்டும்…?

எத்தனையோ கோடிச் சரீரங்களில் பலவற்றிற்கு இரையாகி அதிலிருந்து மீண்டிடும் உணர்வை வளர்த்து மனிதனாக உருவாகி… பகைமை உணர்வுகள் இருந்தாலும் அதை அடக்கிப் பகைமையற்ற நிலையாக மாற்றி… உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி அதன் செயலாக்கமாக…
1.தமது ஆறாவது அறிவைப் பயன்படுத்திய அனைவருமே இன்று சப்தரிஷி மண்டலங்களாகவும்
2.துருவ நட்சத்திரமாகவும் வாழ்ந்து வளர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எடுத்து
4.நம்மிடத்தில் உள்ள பகைமை உணர்வுகளையும் வெறுப்பான உணர்வுகளையும் மாய்த்துப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம்முள் வளர்த்து உடலில் உள்ள அணுக்களில் அதை விளையச் செய்து… சப்தரிஷி மண்டலங்களின் அருள் வட்டத்தில் இணைந்திடும் உணர்வாக வாழ்ந்திடல் வேண்டும்

அவ்வாறு வாழ்ந்து வரும் அனைவரும் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் சக்தியையும் மலரைப் போன்ற மணத்தையும் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியையும் பெறுவதற்கு எமது அருளாசிகள்.

“கொடுக்கல் வாங்கலில்…” கௌரவ உணர்வால் வரும் தீமைகள்

“கொடுக்கல் வாங்கலில்…” கௌரவ உணர்வால் வரும் தீமைகள்

 

நமது கண் காது மூக்கு வாய் உடல் இதைத்தான் பஞ்ச பாண்டவர்கள் என்றார்கள். “நமது கௌரவம் குறைந்து விடுமே…” என்ற உணர்வு வரப்படும் பொழுது கௌரவர்களுக்கும் பஞ்ச பாண்டவர்களுக்கும் போராகின்றது.

பஞ்ச பாண்டவர்கள்தான் நம்மை ஆளக்கூடியவர்கள் என்றாலும், இந்த உணர்வின் தன்மை கொண்டு நம்மை ஆட்சி புரிவது கௌரவர்கள்.

ஒருவர் நம்மை தரக்குறைவாகப் பேசி அதைக் காதால் நாம் கேட்கப்படும் பொழுது நமக்குள் உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

அப்போது கௌரவப் பிரச்சினை வந்து
1.“இப்படி நம்மைச் சொல்லிவிட்டானே…!” என்று நமது கௌரவம் குறைந்ததாக எண்ணி வேதனைப்படுகின்றோம்
2.வேதனை என்ற நிலைகள் வரப்படும் பொழுது விஷத்தன்மைகள் நமக்குள் வருகின்றன.

நமது கண் காது மூக்கு வாய் உடல் இவை ஆட்சி புரிந்தாலும் ‘கௌரவப் பிரச்சினை…” என்று வரப்படும் பொழுது கௌரவர்களுக்கும் பஞ்ச பாண்டவர்களுக்கும் போராகிறது என்பதைக் காவியத் தொகுப்புகள் தெளிவாகக் கூறுகின்றன.

நமக்குப் பணம் தர வேண்டியவர் அதைத் தரவில்லை என்று ஒரு பக்கம் வேதனை நாம் தருகிறோம் என்று கூறியவருக்குத் தரவில்லை என்றால் “கௌரவம் போய்விடுமே…” என்று ஒரு பக்கம் வேதனை.
1.நமக்குத் தர வேண்டியவன் தருகிறேன் என்று சொல்லித் தரவில்லையே என்று கோபமும்
2.”ஏமாற்றிவிட்டானே…” என்ற வேதனையும் சேர்ந்து எலிப்பொறியில் சிக்கியது போன்று ஆகி விடுகின்றது.
3.இதனின் வேதனைகளாகும் பொழுது அது நமக்குள் நரகாசுரனாக உருப்பெறுகின்றது.

அதே சமயத்தில் மனிதன் ஒருவன் மற்றொருவனை எண்ணி “அவன் நமக்கு நன்மை செய்தான்…” என்று எண்ணினால் அவனுக்கு விக்கல் ஏற்படுகின்றது.

“அவன் நமக்குத் தீமைகள் செய்தான்” என்று எண்ணினால் அவனுக்கு புரை ஏற்படுகிறது.

அதைப் போன்று நாம் நமக்குத் தர வேண்டியவனிடம் “எனக்குப் பணம் தராமல் இருந்து விட்டாயே…!” என்று உற்று நோக்கும் பொழுது அவனிடத்தில் இதனின் உணர்வுகள் பதிவாகி நல்ல குணங்கள் செயலற்றதாக மாறுகின்றது.
1.அவனிடத்தில் இனம் புரியாத பதட்டம் வரும்… அவருடைய வியாபாரம் குறையும்.
2.அவர் சீராக இயங்கும் தன்மையும் குறையும்.

அவரும் எண்ணுவார்… “அவருக்குக் கொடுக்க வேண்டுமே சரியான காலத்தில் அவருக்குக் கொடுக்கவில்லையே…” என்று நம்மை எண்ணி எண்ணி வேதனைப்படுவார்.

வேதனையின் உணர்வுகள் அவரிடத்தில் விளைகின்றது. கொடுக்க முடியாத நிலையில் அவருடைய வேதனை அதிகரிக்கும் பொழுது நம்மைப் பற்றிய நினைவு அவரிடத்தில் அதிகரிக்கின்றது.

இப்படி நம்மால் அவர் எடுத்துக் கொண்ட வேதனையின் உணர்வுகள் நோயாக மாறுகின்றது. அவர் நோயுடன் இருக்கும் பொழுது “நீ வேண்டுமென்றே எனக்குப் பணம் தரவில்லை…!” என்று நாம் கடுமையாகப் பேசும் பொழுது அதனின் உணர்வுகள் அவருக்குள் வளர்ந்து நரகாசுரனாக உருவாகி விடுகின்றது.

அது மட்டுமல்லாமல் நம்மைப்பற்றிய நினைவு கொண்டு வேதனையின் உணர்வுகளை வளர்த்து அது அவருள் கடுமையான நோயாக மாறி
1.அவருடைய உடலை விட்டு உயிராத்மா பிரிந்தால் அவருடைய உயிராத்மா நேராக நம்மிடத்தில் வந்துவிடும்.
2.வாங்கிய பணத்தைக் கொடுப்பதற்குப் பதிலாக அவருடைய உயிராத்மா நம்முள் வந்து விடுகின்றது.
3.அவர் தமக்குள் சேர்த்துக் கொண்ட நரக வேதனையின் உணர்வுகளை இங்கே உருவாக்கி விடுகின்றது.

இது ஒரு பக்கம்.

அதே சமயம் “இவர் கேட்டாரே அவருடைய பணத்தைக் கொடுக்க முடியவில்லையே…” என்று அவர் எடுத்துக் கொண்ட வீரிய உணர்வுகள் சாப அலைகளாக மாறுகின்றது.

இதைப் போன்ற நிலைகள்தான் மற்றவருக்குப் பணம் தர வேண்டிய நிலையில் கொடுக்க முடியாத பொழுதும் உருவாகின்றது.

அவருடைய சாப அலைகள் வளர்ச்சி அடைந்தபின் அவருடைய உயிராத்மாவும் நம்முடலில் புகுந்து பேய் மனம் என்ற நிலையில் நோயின் நிலைகளை நம்முள் உருவாக்கி விடுகின்றது.

அதன்பின் நாம் இந்த உடலை விட்டுச் சென்றால் மனிதனல்லாத பிறவியாகப் பிறக்கின்றோம். இதைத் தான் “சிவனின் கணக்குப்பிள்ளை நந்தீஸ்வரன்…” என்று சிவதத்துவத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

வேதனையின் உணர்வை நுகர நுகர அந்நிலைகள் அவரிடத்தில் அதிகரித்து யாரை நினைத்து வளர்த்துக் கொண்டாரோ அதன் நிலைகள் கொண்டு உடலை விட்டு அகன்றால் இந்த உயிராத்மா அங்கே சென்று விஷத்தின் தன்மைகளை உருவாக்குகின்றது.

இது போன்ற சந்தர்ப்பங்களில் வேதனையின் உணர்வுகளால் நம்மிடத்தில் “விஷத்தின் தன்மையான நரகாசுரன் தான்…” வலிமை பெறுகிறான். அவனை அடக்க வேண்டும்.

காலை 4.00 மணிக்கெல்லாம் எழுந்து “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணித் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி என் உடல் முழுவதும் படர்ந்து என் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணி ஏங்கிக் கண்ணின் நினைவை விண்ணை நோக்கிச் செலுத்தி நம் உடலுக்குள் அதனின் உணர்வைப் படரச் செய்தல் வேண்டும்.

1.அதன் பின் யார் மீது பகைமை கொண்டோமோ அவர்பால் நினைவைச் செலுத்தி
2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெற வேண்டும்
3.அவருடைய தொழிலில் அதிக வருமானம் வர வேண்டும்
4.என் பணத்தை எனக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானிக்கும்போது
5.விஷத்தன்மையான உணர்வுகளிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்கின்றோம்.

நண்பர்களுக்குள் பகைமை உணர்வுகள் எப்படி இயக்கும்…?

நண்பர்களுக்குள் பகைமை உணர்வுகள் எப்படி இயக்கும்…?

 

உதாரணமாக ஒரு நண்பன் நமக்குத் தீங்கு செய்துவிட்டால் அதை எண்ணி நமக்குள் பதிவு செய்து கொள்கிறோம்.

“பாவி எனக்குத் தீங்கு செய்தானே… அவன் உருப்படுவானா…!” என்று கோபத்தின் எல்லை கடந்து உணர்ச்சி பொங்கப் பேசுகின்றோம் (சாபமிடுகின்றோம்).

அவ்வாறு நமக்குத் தீங்கு செய்தவனை எண்ணி அது உடலில் விளைந்து “அவன் தீங்கு செய்தான்…” என்று நமக்குள் பதிந்தாலோ அவனுக்குள்ளும் இந்த பதிவு உண்டு.

இந்த சாபமிட்ட இந்த உணர்வின் நிலைகள் அங்கே சென்று அவனுக்குள் புரையோடி அவனுடைய நற்குணங்களை அழித்துவிடும்.
1.ஒவ்வொரு முறையும் இவ்வாறு சாபமிடும் நிலைகளில்
2.”பாவி அவன் தொல்லை கொடுக்கிறான்” என்று எண்ணினால்
3.இது அவன் செயலாக்கங்களுக்கே தடையாயிருக்கும்.

இப்பொழுது நண்பர்களுக்குள் ஒருவருக்கொருவர் வேதனைப்பட்டுப் பிரிந்திருந்தாலும் சில நேரங்களில் புரையோடும்.

புரையோடும் பொழுது சாதம் விழுங்கினாலும் விழுங்க முடியாது. எச்சில் விழுங்கும் பொழுதே புரையோடும். இவையெல்லாம் வெறுப்பின் உணர்வுகள் நமக்குள் வரும் பொழுது “நமது உறுப்பின் இயக்கங்களே தனி…”

நண்பனாக இருக்கும் பொழுது அவன் நன்மை செய்தான் என்று எண்ணப்படும் பொழுது விக்கல் வருகின்றது. அப்பொழுது உயிரின் தன்மை நமக்குள் ஊட்டி அது தணித்துக் கொள்ளும். மகிழ்ச்சியின் நிலைகள் நமக்குள் உருவாகின்றது.

இதெல்லாம் இயற்கையின் நிலையின் இயக்கங்கள். மற்றோருடன் ஒன்றி இயக்கும் நிலைகளை இங்கே உருவாக்குகின்றது.

நாம் நமது வாழ்க்கையில் மற்றோருடன் பழகிய நேரங்களில் தீமையின் உணர்வுகளை நமக்குள் பதிவு செய்யும் பொழுது நமக்குள் யாருடைய குணங்களைப் பதிவு செய்து கொண்டோமோ அது இங்கே விளையத் தொடங்கி விடுகின்றது.

இதைப் போன்று பற்றின் தன்மையால் தீமையே விளைகின்றது.
1.பாசத்தாலோ பண்பாலோ அன்பாலோ “பிறர்படும் துயரங்களைக் கேட்டறிய நேரும் பொழுது…”
2.அந்த உணர்வின் தன்மை நமக்குள் புகுந்து அந்த உணர்வின் வித்தாக விளைந்து
3.அந்த உடலிலிருந்து எது வெளிப்படுகின்றதோ அந்த அலைகளைக் கவர்ந்து நமக்குள் நோயாக உருவாக்குகின்றது.

சூரியன் தனக்குள் வருவதற்கு முன்பே நஞ்சினைப் பிளந்துவிடுவது போன்று… மனிதன் தன் உணர்வின் செயலால் தீமைகள் தன்னிடத்தில் வரும் பொழுது அதனைப் பிரித்துத் தனக்குள் ஒளியின் சுடராக மாற்றும் தன்மை பெற்றவன்.

கோளாக இருந்து நட்சத்திரமானதைப் போன்று
1.மனிதன் தன் உணர்வின் துணையால் ஒளியின் சரீரமாக மாறி அதனின் செயலாக்கங்களாக நட்சத்திரமாக இருந்து
2.தீமையைத் தன்னிடமிருந்து வெகு தூரத்திலேயே சுட்டுப் பொசுக்கும் ஆற்றல் பெற்றவன்.

இந்த ஆற்றல் மனித வாழ்க்கையில் தீமைகளை அகற்றும் உணர்வுகளைப் பெற்ற நிலையால் விளைவதுதான்.

இதைத்தான் “மாரியம்மன்” கோவிலில் நமக்குக் காண்பிக்கிறார்கள். ஒருவருடைய தீமையைக் கேட்டறிய நேரும் பொழுது, அது நமக்குள் மாறி (அவருடைய தீமை நமக்குள் மாறி — மாரி) தீமை செய்யும் நிலையாக விளைவதைப் போன்று
1,துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை நாம் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
2.அது நமக்குள் மாறித் தீமைகளை அகற்றும் சக்தியாக உருவெடுக்கின்றது.

ஆகவே நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைப் பற்றுடன் பற்ற வேண்டும். அதைப் பற்றுடன் பற்றினால் நம்மை அறியாது சூழும் தீமைகளை அகற்ற முடியும். அறியாமை என்ற இருளை விலக்க முடியும்.

இந்த வாழ்வில் பெற வேண்டிய மெய்யான பொருளாக உயிருடன் ஒன்றும் உணர்வினை ஒளி பெறச் செய்ய முடியும்.

எல்லையில்லா பேரண்டத்தில்…
1.ஒரு எல்லையோடு நின்றாடும் இந்தப் பரம்பொருளில் வந்து உதித்த உயிராத்மாக்கள் நாம் அனைவரும்
2.மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற்று வாழ்வதே நமது எல்லையாக அமைத்திடல் வேண்டும்.
3.மெய் ஞானிகள் உரைத்த வழியை அனைவரும் பின்பற்றிப் “பெரு வீடு பெரு நிலை” அடைவதற்கு எமது ஆசிகள்.

எதைப் பற்றியும் “இப்படி ஆகிவிட்டதே…!” என்ற அந்த சிந்தனை வேண்டாம்

எதைப் பற்றியும் “இப்படி ஆகிவிட்டதே…!” என்ற அந்த சிந்தனை வேண்டாம்

 

நான் சம்பாதித்தேன்… பிள்ளையை வளர்த்தேன்… நாளை அவன் என்ன செய்வானோ…! இப்பொழுதே என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றான்…! என்று உணர்வுகளைச் சேர்த்து விட்டால் அவன் உடலில் விளைந்த “ஏமாற்றும் உணர்வுகள்…” இந்த உடலிலே நோயாக மாறும்.

நோய் முற்றி இறந்த பின் பிள்ளையின் உடலுக்குள் தான் செல்வோம். ஆக… மீண்டும் இன்னொரு உடலுக்குள் தான் செல்ல வேண்டி வருகின்றது. விண் செல்லும் உணர்வை இழந்து விடுகின்றோம்.

அது போன்று ஆகாதபடி
1.இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடிப் பொழுதும் எத்தகைய சிரமங்கள் வந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துப் பாருங்கள்.
2.அதை உங்களால் மாற்றிக் கொள்ள முடியும்.
3.எதைப் பற்றியும் “இப்படி ஆகிவிட்டதே…!” என்ற அந்த சிந்தனை வேண்டாம்.
4.அருளைப் பெறுவேன் இருளை நீக்குவேன் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறுவேன் என் இரத்த நாளங்களிலே அதைக் கலக்கச் செய்வேன்.
5.உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறச் செய்வேன் என்று எண்ணுங்கள்.

அகஸ்தியன் தன் வாழ் நாளில் பல பல விஷத்தன்மைகளை முறித்து வலுப்பெற்றவன். அவன் உடலில் இருந்து வெளிப்பட்ட அந்தச் சக்திகள் நமக்கு முன் பரவி உள்ளது. உங்களுக்குள் அதைத்தான் இப்பொழுது பதிவு செய்கின்றேன்.

அதை உங்கள் எண்ணத்தால் மீண்டும் கவர முடியும்.

அகஸ்தியன் பெற்ற “மூலிகை மணங்களையும் அவன் பெற்ற நஞ்சினை வென்றிட்ட அந்த அருள் சக்தியும்…” நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்தே ஏங்குங்கள்.

உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள். அந்த ஏக்கத்துடன் கண்களை மூடுங்கள்.
1.அப்படி மூடும் பொழுது அந்த அகஸ்தியன் பெற்ற மூலிகைகள் உங்கள் வாயிலே உமிழ் நீராகச் சுரப்பதைக் காணலாம்.
2.உடலுக்குள் செல்லப்படும் பொழுது ஆகாரத்தில் கலந்து இரத்தத்தில் கலந்து விடுகின்றது.
3.விஷத்தன்மைகளை மாற்றும் சக்திகளை நீங்களே பெறுகின்றீர்கள். காற்றிலே உண்டு… நீங்கள் அதை நுகர்கின்றீர்கள்.

ஒருவன் வேதனைப்படுத்துகின்றான். அந்த உணர்வுகள் நமக்குள் வந்து இரத்தங்களிலே கலந்து விஷத்தன்மை ஆகி நம் நல்ல அணுக்கள் செயலிழக்கின்றது. அப்பொழுது வெறுப்பும் வேதனையும் வருகின்றது.

இதைப் போலத் தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். அதை உபதேசமாகக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.
1.இதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து மீண்டும் மீண்டும் எண்ணிச் சுவாசித்தால் போதுமானது.
2.எத்தகைய தீமையையும் நீங்கள் நீக்க முடியும்… துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற முடியும்.
3.தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்… உங்களால் நிச்சயம் முடியும்…!

இன்றைய மனிதனின் தவறான உணர்வுகளிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்

இன்றைய மனிதனின் தவறான உணர்வுகளிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்

 

குருநாதர் காண்பித்த அருள் வழியில் அருள் ஞானத்தை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அருள் ஞான உணர்வை உங்களுக்குள் இணைத்துப் பெருக்கும் பொழுது உங்களுள் தீமைகளை அகற்றும் சக்தி விளைகின்றது.

குமாரபாளையத்தில் நாராயணசாமி என்பவர் மேனேஜராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய மகன் ஆஞ்சனேயர் மடத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் மாதேஸ்வரன் மலைக்கு யாம் அழைத்துச் சென்றோம்.

நாராயணசாமி மற்றும் அவர்களுடைய பாட்டி குழந்தைகள் அனைவரையும் அழைத்துச் சென்றோம். போகும் வழியானது யானைக் காடு. குறுக்குப் பாதை என்று யானைக் காட்டின் வழியாக அவர்களை அழைத்துச் சென்றோம்.

மலைப்பாதையில் சென்று கொண்டிருக்கும் பொழுது எங்களுக்கு எதிர்த்தால் போன்று ஒரு புதரில் இரண்டு புலிகள் நின்று கொண்டிருந்தன. யாம் அழைத்து வந்தவர்கள் புலிகளைப் பார்க்கவில்லை.

அவர்கள் பார்த்தால் பயந்துவிடுவார்கள் என்று கருதி யாம் அவர்களுக்கு முன்னால் போய் நின்று கொண்டோம். யாம் அழைத்து வந்தவர்களில் 10 வயது 12 வயது சிறுவர்களும் இருந்தனர். பின்னால் வயதானவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

1.யாம் அவர்கள் புலியைப் பார்க்காதவாறு மறைந்து நின்று கொண்டு பிரார்த்தனை செய்தோம்.
2.எல்லோரையும் பார்த்துக் குறி வைத்துக் கொண்டிருந்த புலிகள் அவைகளுக்கு எதிரான உணர்வுகளைக் கண்டவுடன்
3.இரண்டு புலிகளும் தாண்டிக் குதித்து ஓடின. எதையோ கண்டு பயந்ததைப் போன்று விருட்டென்று ஓடி மறைந்தன.

புலிகள் ஓடுவதைக் கண்டு யாம் அழைத்து வந்தவர்கள் வெகுவாகப் பயந்து போனார்கள். அதன் பிறகு, அங்கிருந்து அவர்களை அழைத்துச் சென்றோம். அப்பொழுதெல்லாம் அவர்களுக்குக் காட்சிகள் கிடைக்கும்படிச் செய்தோம்.

மாதேஸ்வரன் மலைக்கு அவர்களைப் பழக்கத்திற்காகக் கூட்டிச் சென்றோம். இயற்கை எப்படிச் செயல்படுகிறது…? என்ற நிலைகளை யாம் அறிவதற்காக வேண்டி குருநாதர் எம்மை எல்லா இடங்களுக்கும் செல்லச் செய்து பலரைச் சந்திக்கும்படிச் செய்தார்.

காட்டிற்குள்ளும் மனித வாழ்க்கையிலும் என்ன இருக்கின்றது…? என்பதைத் தெரிந்துதான் சொல்கின்றோம். ஆனால் உங்களுக்கு இதைச் சொல்கின்றோம் என்றால் சாமி “கதை சொல்வதாக…” எண்ணக் கூடாது.

இயற்கை எப்படி இயங்குகின்றது…? வாழ்க்கையில் வரக்கூடியது அனைத்தும் என்ன செய்கின்றது…? என்பதை குருநாதர் எம்மை அனுபவரீதியாக உணரும்படி செய்தார்.

1.காட்டிற்குள் சென்றால் மிருகங்கள் கட்டுப்படும்.
2.ஆனால் மனிதர்களிடம் பழகும் பொழுது அவர்களிடம் இருந்து தப்பிப்பதே கடினம் தான்.

அதனால் நாம் இன்று பெரும் காட்டினுள் வாழ்கின்றோம். இங்கே நமது உணர்வுகள் கொண்டுதான் நாம் எதையும் மாற்றி அமைக்க வேண்டும்.

ஆகையால் “ஒருவர் தவறு செய்கிறார்…!” என்று எண்ணும் பொழுது நமக்குள் தவறின் உணர்வுகளே விளைகின்றது. ஆகவே
1.ஒருவரிடம் தவறு என்று உணர்ந்த அடுத்த நிமிடமே அவருடைய தவறான உணர்வு நம்மிடம் இல்லாதபடி
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நமக்குள் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
3.இதனால் அவருடைய உணர்வு நம்மைத் தாக்குவதில்லை.

இப்படித் துருவ நட்சத்திரத்தின் உணர்வை தம்முள் பெருக்கித் தீமைகள் வராது காக்கும் நிலையாக… உணர்வை ஒளியாக மாற்றும் நிலையாக… ஞானிகள் காண்பித்த அருள் வழியில் வாழ்ந்து வரும் அன்பர்கள் அனைவரும்… தம்முள் அறியாது சேர்ந்த சாப வினைகளை பாவ வினைகளை தீய வினைகளை நீக்கி… அருள் ஞானிகளின் அருள் சக்தி பெற்று…
1.உங்களுடைய பார்வையில் மற்றவர்களுடைய தீமைகளை நீக்கிடும் நோய் நீக்கிடும் அருள் சக்தி பெற்று
2.நீங்கள் இவ்வாழ்க்கையில் பெருவீடு பெரு நிலை பெறும் நிலையாக பிறவியில்லா நிலையினைப் பெறும் நிலையாக
3.பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருள் ஆசிகள்.

“உங்கள் துன்பங்கள் அகல வேண்டும்…” என்பதே என்னுடைய பிரார்த்தனை

“உங்கள் துன்பங்கள் அகல வேண்டும்…” என்பதே என்னுடைய பிரார்த்தனை

 

உங்கள் வாழ்க்கையில் மற்றவர்களிடம் பேசும் பொழுது சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் அவசரம் ஆத்திரம் இது போன்ற உணர்வுகள் வளர்ந்து உங்கள் நல்ல குணங்கள் அடைபட்டு விடுகின்றது.

அடைபட்டுக் கிடந்த அந்த நல்ல குணங்களை மீட்டத் தான் யாம் உபதேசித்தது. உபதேசித்த அந்த உணர்வுக்கு வலுக் கூட்ட உங்களுக்குள் காந்த சக்தியைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

1.உங்கள் எல்லா குணங்களிலும் சப்தரிஷி மண்டல உணர்வுகளையும் நட்சத்திரங்களுடைய உணர்வுகளையும் தூண்டி
2.இந்த உணர்வின் தன்மை கொண்டு காந்த சக்தியைப் பெறச் செய்து
3.எல்லோருடைய உள்ளங்களிலும் அதைப் பதிவு செய்கின்றோம்.

ஏனென்றால்… எத்தனையோ பேர் எத்தனையோ விதமான கஷ்டங்களில் வந்திருப்பீர்கள்.

ஒருவருக்கு வீட்டிலே கஷ்டமாக இருக்கும்… ஒருவருக்குத் தன் பிள்ளை சொன்னபடி கேட்காதபடி இருக்கும்… ஒருவருக்கு நோய் வந்து கஷ்டமாக இருக்கும்… ஒருவருக்கு உதவி செய்து அதனால் தொழிலில் தொல்லைகள் அனுபவித்து அதனால் கஷ்டமாக இருக்கும்… ஒருவாருக்கு வியாபாரத்தில் மந்தமாக இருந்திருக்கும்… எதை எடுத்தாலும் எனக்குத் தொல்லையாகவே இருக்கிறது…! என்றும் இப்படி எத்தனையோ பேர் வந்திருப்பீர்கள்.

இந்த எண்ணம் உள்ள அத்தனை பேருக்குமே
1.எந்தெந்த எண்ணத்தில் நீங்கள் வந்தீர்களோ அந்த எண்ணங்கள் மாறி
2.உங்களுக்குள் உயர்வான சக்தி கிடைக்க வேண்டும் என்று தான் உபதேசத்தைக் கொடுத்து
3.மகரிஷிகளின் அருள் சக்தியை அந்த இடத்தில் அடைத்து வைத்து உங்களுக்குள் சக்தி கூடும்படிச் செய்கின்றோம்.

குழம்பிலே புளிப்பு காரம் கசப்பு துவர்ப்பு உப்பு இவையெல்லாம் போட்டு அதை எப்படி ருசியாகக் கொண்டு வருகின்றோமோ இதைப் போன்று
1.எல்லோருடைய உணர்வுகளிலும் அந்த அருள் உணர்வுகளை நுகரும்படிச் செய்து
2.அதைப் பெறுவதற்குண்டான உணர்ச்சிகளைத் தூண்டும்படிச் செய்து
3.இந்த உணர்வினை ஒலிகளாக எழுப்பும்படி செய்து அதைச் சூரியனுடைய காந்த சக்திகள் கவரும்படிச் செய்து
4.கவர்ந்த உணர்வுகளை உங்கள் செவிகளிலே ஊடுருவச் செய்து
5.ஊடுருவிய உணர்வின் தன்மையை உங்களுக்குள் இருக்கும் 1008 குணங்களிலும் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

அடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணினால் அந்தச் சக்தி எளிதில் கிடைக்கும்.

எனது குருநாதர் எனக்கு எப்படி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை ராஜதந்திரமாக உள்ளுக்குள் நுழைய வைத்தாரோ அதே போலத்தான் உங்களுக்குள் இந்த உணர்ச்சிகளை தூண்டும்படிச் செய்து… அதைத் தட்டி எழுப்பி துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் அந்த உணர்வுகள் உடலிலிருந்து நீங்க வேண்டும் என்று… மகரிஷியின் அருள் உணர்வுகளைப் பாய்ச்சி… தீமைகள் அகன்று நன்மையை உருவாக்கச் செய்கிறோம்.

உங்கள் அனைவரையும் அந்த உணர்வின் ஒலிகளை எழுப்பும்படி செய்து அந்த மகரிஷிகள் உணர்வுகளை உங்களுக்குள் நிரப்பி அந்த அடிப்படையில் நீங்கள் தியானம் எடுத்தீர்கள் என்றால் காற்றிலிருக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர்ந்து உங்கள் உடலில் வந்த துன்பங்களைப் போக்கிக் கொள்ளலாம்.

எனக்குத் துன்பத்தைக் கொடுத்துத் தான் குருநாதர் எல்லாமே தெரிய வைத்தார். ஆனால்
1.உங்களுக்குத் துன்பம் வரும் பொழுது இந்த முறைகளைக் கையாண்டு
2.மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற்றுத் தீமையிலிருந்து மீண்டு உண்மைகளையும் அறிந்து கொள்ளலாம்.

மகரிஷிகள் அருள் சக்தியை எடுத்தேன் என் துன்பம் நீங்கியது நான் நன்றாக ஆனேன் என்று நீங்கள் சொல்ல முடியும்.
1.கஷ்டம் இல்லாது நீங்கள் பெறுகிறீர்கள்.
2.ஆகையினால் நான் லேசாகச் சொல்கிறேன் என்று அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.
3.வாக்குடன் கூடி உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்… அந்த வாக்கை நீங்கள் மீண்டும் எண்ணினால் சீக்கிரம் நல்லதாகும்.

எனக்குத் தொல்லை கொடுத்தாய்… “நீ உருப்படுவாயா…?” என்ற அடுத்தவர் சொல்லை வாங்கிக் கொண்டோம் என்றால் அது பதிவான பின் வியாபாரத்தில் மந்தம் உடலில் கை கால் குடைச்சல் என்று உங்கள் உடலை எப்படி அது கீழே கொண்டு போகின்றதோ இதே மாதிரி அந்தத் துன்பத்தைத் துடைப்பதற்கு
1.சாமி சொன்னார்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நினைத்து
2.அதை எடுத்தீர்கள் என்றால் காற்றிலிருந்து அந்தச் சக்தி உங்களுக்கு உதவி செய்யும்.

துன்பத்திலிருந்து விடுபட… குரு வழியில் யாம் உங்களுக்குச் செய்யும் சேவை

துன்பத்திலிருந்து விடுபட… குரு வழியில் யாம் உங்களுக்குச் செய்யும் சேவை

 

மரத்திற்கு வேண்டிய உரத்தைப் போடுகின்றோம். அதை ஏற்றுக் கொண்டு நல்ல சக்திகளை எடுத்துக் கொள்கின்றது.

அதே சமயத்தில் சில நச்சுத்தன்மைகள் அந்த மரத்தினுடைய வேரிலே பட்டு அது ஊடுருவி விட்டால் அந்த விழுதிலே நஞ்சு கலந்து மரம் கெட்டு விடுகிறது.

இதைப் போல
1.நம்மை அறியாமல் இருளான உணர்வுகளைச் சுவாசிக்க நேரும் பொழுது
2.அதிலிருந்து நம்மை மீட்டிக் கொள்வதற்கு ஞானிகள் இட்ட அந்த உணர்வின் சத்தான நிலைகள் உண்டு.
3.அந்தச் சத்தைத்தான் உங்கள் உணர்வுகளுக்குள் ஏற்றிக் கொடுக்கின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் எது எல்லாம் உங்களுக்குள் தேய்மானம் ஆகிச் சிந்திக்க முடியாமல் இருந்ததோ சிந்தித்துச் செயல்பட முடியாமல் இருந்ததோ
1.அதை மாற்றியமைக்க மெய் ஞானிகளின் ஆற்றல்மிக்க நிலைகளை
2.செவிப்புலன் கொண்டு கேட்கச் செய்கின்றோம்.

எனக்கு என் குருநாதர் எப்படி உண்மைகளைக் காட்டினாரோ அதைப் போன்று தான் உங்களுக்கும் சொல்கிறோம்.

எந்தெந்த நல்ல மனதுடன் எல்லோருக்கும் நன்மைகளைச் செய்தீர்களோ… பிறருடைய துன்பத்தை இழுத்து உங்கள் நல்ல குணத்தைச் செயல்பட முடியாதபடி உங்கள் உடலுக்குள் தொல்லையும் துன்பமும் ஏற்படுத்திக் கொண்டிருந்ததோ…
1.அந்தத் துன்பத்தை நீக்க நமது குருநாதர் காட்டிய அந்த அருள் வழிப்படி உங்களை இந்த அருள் உணர்வைக் கேட்கும்படி செய்து
2.உங்கள் நல்ல குணங்களுக்குள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற உணர்ச்சியின் தன்மையைத் தட்டி எழுப்பி
3.அந்த உணர்வாலே சுழன்று கொண்டிருந்த விஷத்தின் தன்மை நீங்கி
4.மெய் ஒளியின் தன்மையை இந்தக் காற்றிலிருந்து நீங்கள் இழுத்துச் சுவாசித்து
5.அந்தச் சத்தான நிலைகள் பெற்று உயிரின் நிலைகள் ஒளியாக மாற்றி
6.குருநாதர் எப்படி ஒளியின் சரீரமாகச் சென்று விஷம் தனக்குள் எதுவும் அணுகாத நிலை பெற்றாரோ
7.எனக்கு குருநாதர் காட்டிய அந்த நிலையை நீங்களும் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதை உபதேசிக்கின்றேன்.

காரணம் நமக்குள் எதைப் பதிவு செய்து கொள்கின்றோமோ… நாம் நல்லதைப் பெற வேண்டும் என்று தான் எண்ணுகின்றோம். ஆனால் நாம் அறியாதபடி அந்த உணர்வுக்குள் விஷம் பட்டு விஷத்திலிருந்து எழ முடியாத நிலைகள் வந்து விடுகின்றது.

அந்த விஷத்தை நீக்கும் ஆற்றல்மிக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்ற ஆவலில் தான் உங்களுக்கு உபதேசிக்கின்றேன்.

அந்த ஆற்றல் மிக்க சக்தியைப் பெறச் செய்வதற்குத் தியானத்தின் முறையை குருநாதர் எனக்கு எப்படி வழி காட்டினாரோ அதே வழியில் நீங்களும் தியானத்தைச் செய்து கொண்டால் இந்த காற்றிலிருந்து மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற முடியும்.

மரத்திற்கு உரமான சத்தைக் காட்டிய பின் அது புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு காற்றில் மறைந்திருக்கும் தன் சத்தினை எடுத்துத் தான் எப்படி வளர்த்துக் கொள்கின்றதோ இதைப் போன்றே
1.உங்கள் நல்ல உணர்வின் தன்மையைக் காக்க மெய் ஞானிகளுடைய அருள் சக்திகளை நீங்கள் சுவாசித்து
2.உங்களுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைக் காத்து உங்கள் சொல்லுக்குள் இனிமையும் உங்கள் மூச்சுக்குள் உடலுக்குள் நலமும்
3.உங்கள் பேச்சும் மூச்சும் பிறர் துன்பத்தைப் போக்கும் நிலையும் ஆற்றல்மிக்க சக்தியை நீங்கள் பெறும் நிலையும்
4.இந்த உடலிலிருந்தே உயிரின் தன்மை உணர்வுகள் ஒளியாக மாறி
5.என்றும் பதினாறு என்ற ஒளியின் சரீரமாகப் பெறும் தகுதியை நீங்களும் பெற முடியும்.

அன்றைய மெய் ஞானிகள் எவ்வாறு விண் சென்றார்களோ அதே போன்று நீங்களும் அந்த மெய் ஒளியின் சுடரின் நிலைகள் கொண்டு அந்த மெய் வழியில் செல்லக்கூடிய தகுதியைப் பெறுவீர்கள்.

குருநாதர் காட்டிய வழியில் தான் யாம் உங்களுக்கு அடிக்கடி இதைச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

நம் எண்ணத்தின் கூர்மை எதிலே இருக்கிறது…! எதிலே இருக்க வேண்டும்…?

நம் எண்ணத்தின் கூர்மை எதிலே இருக்கிறது…! எதிலே இருக்க வேண்டும்…?

 

நம் பிள்ளை பேர் வாங்க வேண்டும் என்றால் நாட்டியத்தைக் கற்றுக் கொடுத்துக் கோவிலுக்குச் சென்று ஆடும்படி செய்கின்றோம். “ஆண்டவன் சன்னிதானத்தில் ஆடியது…” என்று எல்லோரும் சேர்ந்து போற்றப்படும் பொழுது நம் பிள்ளைக்கு நல்ல ஆசி கிடைக்கும் என்று செயல்படுத்துகின்றோம்.

ஆனால் இப்படி எண்ணிக் கொண்டிருந்தாலும் கூட யாராவது ஒருவர் “நண்டு மாதிரி இருந்து… எப்படி நன்றாக ஆடுகின்றது பார்…?” என்று பொறாமைக் கண்களோடு பார்த்தால் என்ன நடக்கின்றது…?

1.நல்லதாகச் சொன்னது அனைத்துமே விடுத்து விட்டு இந்த உணர்வுகள் பாய்ந்து கை கால் குடைச்சல் வந்துவிடும்.
2.பிள்ளைக்குக் கண் திருஷ்டி பட்டுவிட்டது என்ற நிலை ஆகிவிடுகிறது.

நாட்டியத்தைப் பார்த்த அத்தனை பேரும் நன்றாகச் சொன்னாலும் கூட ஒருவருடைய பார்வை… “இந்த வயதிலேயே இந்த மாதிரி ஆடுகின்றது பார்…” என்று வெறுப்பான எண்ணங்களை ஊட்டப்படும் பொழுது
1.ஆயிரம் பேர் சேர்ந்து நல்ல எண்ணங்களை ஊட்டினாலும்
2.இந்த வெறுப்பான உணர்வு பார்வையாகப் படப்பட்டு அந்த நல்லதை வீணாக்கி விடுகின்றது.

உதாரணமாக இசைக் கருவிகளை வாசிக்கப்படும் பொழுது… அதிலே ஒரு வாத்தியத்தின் இசை கொஞ்சம் குறையாகி விட்டால் போதும்.

மற்ற எல்லாம் சீராக இருந்தாலும் கூட ஒன்று குறையாகி விட்டால்…
1.“அச்சச்சோ போய்விட்டதே…” என்று நல்லதாக வாசித்த அத்தனையுமே நாம் விட்டு விடுவோம்.
2.சுருதிகள் மாறி நன்றாக இருந்த இசை இப்பொழுது கெட்டுப் போய்விட்டது என்று வந்து விடுகின்றது.

அதே போன்றுதான் குழந்தை நன்றாக நாட்டியம் ஆடினாலும் அது வளர்ந்த நிலைகள் கொண்டு நாம் என்ன செய்கின்றோம்…?

குறையாகப் பேசியவருடைய உணர்வை வளர்த்துக் கண் திருஷ்டி பட்டது… கண் திருஷ்டி பட்டுவிட்டது… எல்லாமே கண் திருஷ்டி ஆகிவிட்டது என்று தனக்குள் விளைந்து அதையே எண்ணி எடுத்து குழந்தையைப் பார்க்கப்படும் பொழுது இந்த உணர்வினை ஊட்டிக் கொண்டிருப்போம்.

ஒருவர் தான் கண்களால் வெறுப்பாகப் பார்த்தார். ஆனால் அதைத் தாய் தந்தையும் சேர்த்து எடுத்துக் கொள்கின்றோம். குழந்தை நன்றாக நாட்டியம் ஆடியது… ஆனால் கண் திருஷ்டி பட்டு விட்டது என்ற எண்ணத்தை எடுத்து வருவோர் அனைவரிடமும் இதைத்தான் சொல்வோம்.

ஆக அந்த உணர்வை எடுத்துத் தனக்குள் சேர்க்கப்படும் பொழுது அந்த விஷம் எதிலே கலந்தாலும் அது ஊடுருவி இயங்கி விடுகின்றது.
1.இதைத் தடைபடுத்த நாம் ஏதாவது செய்கின்றோமா…? இல்லை…!
2.சிறிதளவு குறையைக் கண்டால் போதும்… அந்தக் குறையத்தான் வளர்க்கின்றோம்.
3.எவ்வளவு மகிழ்ச்சியான நிலையில் இருந்திருந்தாலும் அந்த மகிழ்ச்சியைக் காக்கும் நிலை வருவதில்லை.

அதைப் போன்ற உணர்வின் தன்மை தான் “கூர்மை அவதாரம்…” அதாவது நாம் எண்ணியது அனைத்துமே உயிர் அவதார புருஷனாக “நம்மை அதுவாக ஆக்கி விடுகின்றது…”

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து நம்முடைய கூர்மை எதுவாக இருக்க வேண்டும்…? என்று சற்று சிந்திக்க வேண்டும்.

1.எப்பொழுதுமே அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்திலே அதைக் கூர்மையாக்கி
2.ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் செயல்பட்டோம் என்றால் அந்த உணர்வு நமக்குள் வளர்ந்து அதுவாக நம்மை ஆக்கும்.