எம்மிடம் வரும் போது… “கஷ்டம்” என்ற வார்த்தையை விட்டு விடுங்கள்

எம்மிடம் வரும் போது… “கஷ்டம்” என்ற வார்த்தையை விட்டு விடுங்கள்

 

1.என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் அந்த அருள் சக்தி வேண்டும்
2.என் பையன் ஞானியாக வேண்டும் அந்த அருள் சக்தி வேண்டும்
3.என் குழந்தைகள் உடல் நலமாக இருக்க வேண்டும் அந்த அருள் சக்தி வேண்டும்
4.என் தொழில் வளமாக வேண்டும் அந்த அருள் சக்தி வேண்டும் என்று
5.இதைத் தான் நீங்கள் என்னிடம் வாக்காகக் கேட்டுப் பெற வேண்டும்…. கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்.

ஆனால் இப்படிக் கேட்பதற்குப் பதில் கஷ்டம் என்று சொல்லிவிட்டீர்கள் என்றால் முதலில் இருளாகிவிடும். அப்போது நான் சொல்லும் உயர்ந்த வாக்குகள் உங்களுக்குக் கிடைப்பது கஷ்டம்.

இதை எதிர்த்துத் தள்ளி விடுகின்றது. கஷ்டம் என்று நீங்கள் எண்ணினீர்கள் என்றால் நான் கொடுக்கும் நல்ல வாக்குகளை அது உள்ளே விடுவதில்லை. ஏனென்றால் அது வாலியாக மாறி விடுகின்றது.
1.உங்கள் எண்ணமே நல்லதைப் பெற முடியாதபடி தடுக்கும் சக்தியாக மாறிவிடுகிறது.
2.இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபட்டு நல்லதை வேண்டிக் கேட்டுப் பெறும் ஒரு பழக்கத்திற்கு வாருங்கள்.

எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் அந்தத் தெய்வீக குணம் பெற வேண்டும் கொவிலுக்கு வரும் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். கோயிலை அவமதிக்காதீர்கள்.

நம்மைத் திரிந்து வாழச் செய்யும் நிலையில் நமக்குள் நல்ல குணங்களை வளர்த்துக் கொள்வதும் பகைமையிலிருந்து மாறவும் ஒன்றுபட்டு வாழ்வதற்கும் தான் கோவில் என்ற நிலையில் அதை மதித்து நடங்கள்.

ஆகவே நான் சொல்வதை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகின்றேன்.
1.ஞானிகள் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.
2.உங்களுடைய நினைவு கொண்டு தான் மீண்டும் அதை எண்ணி எடுக்க வேண்டும்.

திட்டியவனை நினைத்தவுடன் அவனுடைய உணர்வுகள் உடனடியாக உங்களுக்கு வருகிறது அல்லவா. கோபம் வருகிறது காரியமெல்லாம் கெடுகிறது… அங்கேயும் புரையோடுகிறது காரியங்கள் கெடுகிறது.

பிள்ளை மீது பாசமாக இருந்து என்ன ஆனதோ…? ஏதானதோ…? என்ற துன்பப்பட்டால் அந்த வேதனையால் உங்கள் செயல்கள் தடுமாற்றம் ஆகின்றது.

நீங்கள் அந்த வேதனையுடன் சமையல் செய்தீர்கள் என்றால் சூடாக இருக்கும் பாத்திரம் பொங்கி வரும் போது சரியான முறையில் ஆதைக் கையாளாதபடி உடுத்தியிருக்கும் துணியில் தீ கூடப் பிடித்து விடும்.

காரணம்…
1.சிந்தனை இல்லாத உணர்வு கொண்டு அவசரப்பட்டு இயக்கப்படும் பொழுது நமக்கே அது தீங்கு விளைவிக்கும் சக்தியாக வந்து விடுகிறது.
2.ஏனென்றால் வேதனை என்பது விஷம்… சிந்திக்கும் தன்மையை அது இழக்கச் செய்து விடும்.

ஆகவே அடுத்தடுத்து அடுத்தடுத்து “கஷ்டம் என்ற நிலையினை உள்ளே விடாதபடி” மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் நான் பார்ப்பதெல்லாம் நன்றாக இருக்க வேண்டும் கணவன் மனைவி நாங்கள் ஒற்றுமை உணர்வுடன் உடல் நலத்துடன் வாழ வேண்டும் எங்களுக்குள் அருள் ஞானம் வளர வேண்டும்… என்று அதிகாலையில் இப்படி எண்ணி எடுத்துப் பாருங்கள்.

பகைமைகள் அகலும்… மனம் ஒன்றாகும். இருளைப் போக்கும் அருளைப் பெருக்கும். பேரருள் பேரொளியாக வளர்த்துக் கொள்ள முடியும். அத்தகைய ஆனந்தத்தை நீங்கள் பெறுங்கள்.

நான் பதிவு செய்த நிலைகள் கொண்டு எண்ணி எடுத்துப் பாருங்கள்.

தங்கத்திலே திரவகத்தை ஊற்றினால் செம்பும் பித்தளையும் எப்படிக் கரைகின்றதோ அதைப் போல் அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் சேர்த்தால் அது உங்கள் கவலையையும் வேதனைகளையும் கரைத்து உங்களைச் சிந்திக்கச் செய்து ஆற்றல் மிக்க வலிமையைக் கொடுக்கும்.

அந்த வலிமை பெறச் செய்வதற்குத் தான் இந்த உபதேசமே.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்
1.உங்கள் உயிர் கடவுள் உங்கள் உடல் ஒரு கோவில்
2.அந்த ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும் என்ற ஆசையில் வெளிப்படுத்துகின்றேன்.
3.அதே ஆசையுடன் நீங்கள் அருள் சக்திகளை நுகர்ந்தால் அந்த அருள் உணர்வுகள் உங்களுக்குப் பாதுகாப்பாக வரும்.
4.சிந்திக்கும் தன்மை வருகின்றது… அருளைப் பெருக்க முடிகின்றது… அருள் வாழ்க்கை வாழ முடிகின்றது…!

பிறிதொரு ஆன்மா இல்லாத மனித உடலே இல்லை…!

பிறிதொரு ஆன்மா இல்லாத மனித உடலே இல்லை…!

 

“சரியான நேரத்தில் நீங்கள் எனக்கு உதவி செய்திருக்கின்றீர்கள்” என்று நம் மூலமாக அந்த உதவியைப் பெற்றவர் என்ன செய்வார்…?
1.வேறு யாரும் உதவி செய்யவில்லை… இந்த மனிதர் தான் எனக்கு உதவி செய்தார்…! என்று கடைசியிலே அவர் எண்ணினால் போதும்.
2.அந்த ஆன்மா நேராக நம் உடலில் புகுந்து விடும்… அவர் உடலில் ஏற்பட்ட தொல்லைகளை எல்லாம் இங்கே செயல்படுத்தும்.

ஒரு வயதான கிழவியாக இருந்தது. அவர்கள் வீட்டில் யாரும் அவருக்கு உதவி செய்யவில்லை. ஆனால் பெரியம்மா என்ற நிலையில் நாம் சந்தர்ப்பத்தில் உதவி செய்தோம் என்றால்… “இறக்கப்படும்போது அந்த அம்மாவிற்கு நம் நினைவு தான் வரும்…”

அதற்கு முன்னாடி உதவி செய்திருக்க மாட்டோம். கடைசியிலே அது இறப்பதற்கு ஒரு நான்கு நாளைக்கு இந்த உதவி செய்திருந்தால் போதும்…! மற்ற நிலைகளை எல்லாம் மறந்து இது அந்த அம்மாவின் முன்னணியில் வந்து விடும். அது எந்தெந்த வேதனைப்பட்டதோ அதெல்லாம் நமக்குள் வந்து இயக்கத் தொடங்கும்.

இப்படிப் பல நிலைகள். ஏனென்றால் ஒரு மனிதன் இறந்து பின் அவன் இன்னொரு உடலுக்குள் வந்தால் மனிதனாக உருப் பெறும் கருவாக உருவாவதில்லை.

அந்த உடலுக்குள் சென்று அவனை உருக்குலையச் செய்து அவனைச் சின்னாபின்னமாக்கி இந்த உடலிலே விஷத்தைக் கலந்து… ஒரு மிருகம் எப்படி விஷமான சத்து கொண்ட தன் உடலைப் பாதுகாத்துக் கொள்கின்றதோ அது போன்று மனித சிந்தனைகள் ஒவ்வொன்றாகக் குறைந்து மனித நிலை அற்ற பிற்பாடு மிருகத்தின் ஈர்ப்புக்குள் செல்கிறது.

உதாரணமாக பாம்பு மனிதனைக் கடித்து விட்டால் மனிதருடைய நினைவு இழக்கப்பட்டு பாம்பினுடைய ஈர்ப்பிற்குள் சென்று பாம்பாகத்தான் பிறக்க நேரும்.

ஆனால் அதே சமயத்தில் “கொசு கடிக்கிறதே…” என்று கொசுவை நாம் அடிக்கிறோம் என்றால் அது நம் உடலுக்குள் வந்து கொசு மனிதனாகப் பிறக்கும் சந்தர்ப்பம் உருவாகின்றது.

இப்படி எத்தனையோ மாற்றங்கள் ஏற்படுகின்றது. இது போன்று தான் ஒன்றுக்குள் ஒன்று எடுத்துக் கொண்ட உணர்வுக்குள் ஏப்படி எல்லாம் மாறி வருகிறது என்ற நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இதிலிருந்து எப்படி நாம் தப்புவது…?

ஒரு சிலர் அடுத்தவரின் ஏச்சையும் பேச்சையும் பொறுக்க முடியாமல் “பேயாகச் சென்றாலும் நான் உன்னை விடமாட்டேன்…! என்று பேசுவார்கள். எனக்கு இப்படிச் செய்தார்களே பாவிகள்…! என்று இந்த உணர்வுகளை வளர்க்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் இங்கே வந்து விடுகிறது.

குடும்பத்திற்குள்ளோ மற்றதற்குள்ளோ எதைச் செய்தாலும் இந்த உணர்வுடன் இறந்தபின் அதே உணர்வின் ஒலி கொண்டு இங்கே வந்துவிடுகிறது. அதற்குத் தான்… நீ செய்த தொல்லைகளுக்குப் பேயாகப் போ என்று ரிஷி சாபமிடுவதாகக் காட்டுகின்றார்.

பேயின் தன்மை அடைந்தபின்… ஐயனே எனக்கு வேறு வழி இல்லையா…? என்று தன் விமோசனத்திற்குக் என்று கேட்கப்படும் பொழுது “உயர்ந்த நிலைகள் கொண்ட ஒரு மனிதனை நீ தீண்ட எண்ணுவாய்… அவன் நிழல் பட்டு மீண்டும் மனித நிலையை அடைவாய்…!” என்று ரிஷி சொல்வார்.

நாம் நல்லதைச் செய்து கொண்டிருந்தாலும் அந்த நன்மை செய்த நிலைகள் கொண்டு இன்னொரு ஆன்மா இந்த உடலுக்குள் வந்து இந்த உணர்வின் தன்மை இயக்கமாகின்றது.

அதாவது பாலிற்குள் விஷம் பட்டால் எப்படி அதனுடைய நிலைக்கு இட்டுச் செல்கின்றதோ இதைப் போன்று “நாம் உதவி செய்த நிலைகள்…”
1.வேதனையான இயக்கத்தால் இந்த உடலுக்குள் வந்துவிட்டால்… அது அதனின் நிலையையே இங்கே உருவாக்குகின்றது.
2.நம்முடைய உணர்வும் அதனுடைய உணர்வும் இரண்டும் கலந்து உயிரிலே படும்போது “இரண்டு எண்ணங்கள்” வருகின்றது.

பேய் பிடித்தவரைப் பாருங்கள். நல்லா இருப்போம் என்று நினைப்போம்… ஆனால் என்னை எங்கேயோ இழுக்கிறதே… என்னை எதுவும் செய்ய விட மாட்டேன் என்கிறதே… கை கால்கள் குடைகின்றதே… இடுப்பு எல்லாம் வலிக்கின்றதே… என்னைத் தூக்கு போடச் சொல்கின்றதே… என்னை எங்கேயோ ஓடச் செய்கின்றதே என்று பேசுவதெல்லாம்
1.தன் நினைவுகள் நல்லதாக இருந்தாலும் அந்த உணர்வுகள் இவ்வாறு இயக்குகின்றது.
2.நாம் தவறு செய்யாமலேயே இப்படி நடக்கின்றது.
3.இன்னொரு ஆன்மாவின் உணர்வின் தன்மை இவ்வாறு இயக்குகின்றது.
4.அதை நமக்குள் அடக்க வேண்டும். அதற்கு நமக்குச் சக்தி வேண்டும்.

அந்தச் சக்தி உங்களுக்குக் கிடைப்பதற்குத் தான் அந்த மெய்ஞானிகள் அருள் வாக்குகளை உங்களுக்குள் இந்த உபதேச வாயிலாகப் பதிவு செய்கின்றோம்.

ஒன்றும் தெரியாத மூடனிடத்தில் (என்னிடத்தில்) அந்த மெய் ஞானிகள் உணர்வை ஊட்டி அந்த வித்தினை வளர்க்கும் முறையைக் காட்டினார் “எனது குருநாதர் ஈஸ்வரபட்டர்…”

அவர் காட்டிய அந்த உணர்வின் ஓளியை… அவர் தனக்குள் வளர்த்துக் கொண்ட அந்த ஒளியான வித்தைத்தான் இப்போது உபதேசமாகக் கொடுத்து உங்கள் உடலுக்குள் விதைக்கின்றோம்.

அதன் மூலம் காற்றிலே மிதந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் வளர்க்கச் செய்வதற்கே இந்த நிலை.

ஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள்.

உங்களுக்கு எப்பொழுதெல்லாம் துன்பங்கள் வருகின்றதோ அந்த நேரத்தில் எல்லாம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதை அடக்குங்கள். அதன் மூலம் உங்கள் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்ற முடியும்… இருளான நிலையிலிருந்து விடுபட முடியும்.

அத்தகைய சந்தர்ப்பத்தை… அந்த நிகழ்ச்சியை ஏற்படுத்துவதற்குத் தான் உங்களுக்கு இந்தத் தியான பயிற்சியைக் கொடுக்கின்றோம்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வேதனையாக இருக்கிறது… முடியவில்லை…! என்று சொல்வதற்குப் பதில் “மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்” என்று சொல்லுங்கள்

வேதனையாக இருக்கிறது… முடியவில்லை…! என்று சொல்வதற்குப் பதில் “மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்” என்று சொல்லுங்கள்

 

மனித வாழ்க்கையில் வரக்கூடிய எத்தகைய இன்னல்களாக இருந்தாலும் யாம் சொல்லும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை இணைத்து… நமக்குள் பரிசுத்த நிலைகளை ஊட்டி… மகிழ்ச்சியூட்டும் உணர்வாக நமக்குள் கூட்டி… உணர்வின் எண்ண அலைகளை ஒளியாகக் கூட்டி… இந்த உணர்வின் சக்திகள் உயிருடன் ஒளியாக மாறி வெளியில் சென்ற பின்… எந்தத் தீங்கும் நேராதவண்ணம் தீமையான உணர்வுகளை மாய்த்துத் தனக்குள் ஒளியின் சுடராக என்றும் பதினாறு என்ற நிலையை அடைய முடியும்.

ஆகையினால் யாம் லேசாகச் சொல்கிறோம் என்று யாரும் எண்ண வேண்டாம்.

யாம் கொடுக்கும் நல் வாக்கினை எண்ணி “அதைப் பெற வேண்டும்” என்று ஏங்கி இருந்தீர்கள் என்றால் ஆற்றல்மிக்க சக்திகள் உங்களுக்குள் ஊடுருவி உங்களுக்குள் நன்மைகளை வளர்த்து தீமைகளை விலக்கி ஒளியின் சுடராகப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.

எல்லாமே வாக்கு தான்…! ஜோதிடம் ஜாதகம் பார்க்கப்படும் பொழுது
1.“கேட்ட நேரம் வருகிறது… ஏழரை நாட்டான் சனி பிடித்திருக்கிறது” என்று அவர்கள் சொன்ன வாக்கினை மனதினிலே ஏற்றி
2.அதன் உணர்வை உருக்கொண்டு உங்கள் வாழ்க்கையை நசித்துக் கொள்கின்றீர்கள் அல்லவா…!

ஆனால் சாதாரண ஒலியின் தன்மை தான் அது.

அவன் சொன்ன வாக்கை மீட்டுவதற்கு “உபசாந்திகளைச் செய்… யாகத்தைச் செய்தால் மீள்வாய்… இந்த ஆலயத்திற்குச் சென்றால் மீள்வாய்…” என்று பல பொருள்களைச் செலவழிக்கச் சொல்வார்கள்.

அதை போல் அல்ல யாம் சொல்வது…!
1.நீங்கள் ஒவ்வொருவரும் யாம் சொன்ன முறைப்படி
2.மெய் ஒளியின் சுடரை எடுத்து ஒளியின் சுடராக உங்களுக்குள் வளரச் செய்யுங்கள்.

இந்த மனித வாழ்க்கைக்குத் தான் சொன்ன குறைகளை மாற்றி அமைப்பதற்குச் செய்யப்பட்ட நிலைகள் தான்
1.ஜாதகங்களையும் சாஸ்திரங்களையும் சொல்லி நீ இதைச் செய்ய வேண்டும் என்று சொல்கின்றார்கள்.
2.ஆனால் “விதிப்படி நடக்கும்…!” என்று இருக்கப்படும் பொழுது கேள்விகளை நடத்தினால் எப்படி மாறும்…?

ஆனால் அதை எப்படி எதன் வழிகளில் நடத்த வேண்டும்…?

நம் உணர்வின் தன்மை ஒளியாக… ஞானிகளின் அருள் வித்தாக நமக்குள் மாற்றி அமைத்தால் தான்… “இந்த வேள்வியை நடத்தினால்தான் மாற்ற முடியுமே தவிர… புற கேள்விகளைச் செய்து அல்ல…!”

அவன் சொன்ன நிலைகளை நாம் எடுப்பது போல மெய் ஞானியின் அருள் வித்தை உங்களுக்குள் வளர்த்து மெய் ஒளியுடன் நீங்கள் செல்ல
1.அன்று ஆதிசங்கரர் சொன்ன அருள் தத்துவத்தை உங்களுக்குள் ஏற்று
2.மெய் ஒளியாக நல்ல உணர்வினை இயக்கக் கூடிய சக்தியாக தனக்குள் துவைதமாக்கி
3.உணர்வின் மன ஒலியாக அத்வைதமாக இயக்கி
4.அத்வைதத்தின் தத்துவமாக என்றும் நம்முடைய பேச்சு மூச்சம் உலகைச் சிருஷ்டிக்கும் சக்தியாக
5.இருளை நீக்கி ஒளியின் சுடராகப் பெறும் தகுதியை நீங்கள் பெற முடியும்.

இது ஆதிசங்கரர் சொன்ன உண்மை நிலைகள்…! அதன் வழியில் நீங்கள் பெற வேண்டும் என்று அந்த ஆசையின் நிலைகள் கொண்டு இதைச் சொல்கின்றேன்.

ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் கூட்டுத் தியானமும் ஆத்ம சுத்தி என்ற நிலையும் கடைப்பிடித்து உடலிலே எந்த நோயாக இருந்தாலும்… வயிற்று வலியாக இருந்தாலும்…
1,மகரிஷிகளின் அருள் சக்தி அந்த வலி இருக்கும் இடங்களிலே படர்ந்து
2.அந்த வலிகள் நீங்கி நலம் பெற வேண்டும் என்று ஒரு 15 நிமிடம் எண்ணுங்கள்.

கேன்சர் நோய் வந்து விட்டது… உங்களால் முடியவில்லை என்று எண்ண வேண்டாம் முடியவில்லை என்கிற பொழுது… “வேதனை… வேதனை…” என்று எண்ணுவது போல “அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்” என்று எண்ண வேண்டும்.

உடலில் எங்கே கேன்சர் இருக்கின்றதோ அங்கே நினைவைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தியால் அந்த வேதனை நீங்கி மகரிஷிகளின் அருள் ஒளி ஆங்கே படர்ந்து மகிழ்ச்சியூட்டும் உணர்வாக எனக்குள் விளைய வேண்டும் என்று… கண்ணைத் திறந்து வானை நோக்கி ஏகி பின் கண்களை மூடி அந்த இடத்திலே நினைவினைச் செலுத்த வேண்டும்.

கண்களை மூடி… கண்களைத் திறந்து இவ்வாறு சிறிது நேரம் செய்ய வேண்டும்.

1.நாள் முழுவதற்கும் ஐயோ வலிக்கிறதே…” என்று வேதனையாகச் சொல்வதற்குப் பதில்
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பெற வேண்டும் என்று சொல்லுங்கள்.

இந்த வாக்கின் சுடரின் தன்மை உங்களுக்குள் அந்த மெய் ஒளியினை உணர்த்த… அந்தத் தீய நிலைகளை மாற்ற… அதனின் தன்மை கொண்டு “நன்மை பயக்கும் நிலையை” நாம் பெற முடியும்.

நாம் எடுத்துக் கொண்ட நினைவு தான் சுவாசமாகி… அந்தச் சுவாசத்தின் உணர்வு தான் நமக்குள் இயக்கமாகி… அந்த உணர்வின் சக்தி உறைந்து நமக்குள் விளைந்து பரிணாம வளர்ச்சியில் வந்திருக்கின்றோம்.

1.தீமைகளிலிருந்து மீட்டிட ஞானிகள் காட்டிய அருள் வழியினைக் கடைப்பிடித்து அதைப் பெற வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்.
2.ஒரு நாளைக்கு ஆயிரம் முறை கூட அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணலாம்.

பத்திரிகையைப் பார்க்கின்றோம் டிவியைப் பார்க்கின்றோம். அதில் எத்தனையோ உணர்வுகளைத் தெரிந்து கொள்கின்றோம். அடுத்த கணமே ஆத்ம சுத்தி செய்து எங்கள் பேச்சும் மூச்சும் உலக நன்மைக்குப் பயன்பட வேண்டும் எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும் நாளை நடப்பது அனைத்தும் நல்லவையாக நடக்க வேண்டும் என்று எண்ண அலைகளைப் பரப்ப வேண்டும்.

அப்போது அந்தச் சங்கட உணர்வுகள் உங்களுக்குள் சேராது தடுக்க முடியும்.

நோயாளியைப் பார்த்தாலும் ஆத்ம சுத்தி செய்துவிட்டு உங்களுக்கு “இனி நோய் இல்லை நலம் பெறுவீர்கள்…” என்று நல்ல வாக்கினைச் சொல்லுங்கள்.

உணவு உட்கொள்ளும் பொழுதெல்லாம் ஆத்ம சுத்தி செய்து அந்த அருள் உணர்வுடன் உணவை உட்கொள்ளுங்கள். அருள் உணர்வுகள் உமிழ் நீராகக் கலந்து நன்மை பயக்கும் சக்தியாக மாறும்.

இந்த வாழ்க்கையில் நல்லது என்று பார்க்கும் போது… தீமை என்ற நிலைகளை உணர்த்துகின்றது. அதைத் தெரிந்து தான் நாம் விலகிச் செல்கின்றோம்.
1.விலகிச் சென்றாலும் அந்த உணர்வின் சத்து உடலுக்குள் சென்று நோயாக மாறிவிடுகின்றது.
2.அதை அவ்வப்போது தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அப்படி இல்லாதபடி கடவுள் செய்வார் யாரோ செய்வார் எவரோ செய்வார் ஜாதகம் செய்யும் நல்ல நேரம் செய்யும் என்று அப்படி எண்ண வேண்டியது இல்லை.

1.நல்ல நேரம் எது என்றால்…? “நல்ல உணர்வுகளைச் சேர்க்கும் நேரமே நல்ல நேரம் ஆகின்றது…”
2.மனிதனுக்கு நேரமும் காலமும் ஜாதகமும் ஜோதிடமும் கிடையாது.

உங்களுக்குள் பதிவான ஞானிகளின் உணர்வின் சத்தைச் சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும்

உங்களுக்குள் பதிவான ஞானிகளின் உணர்வின் சத்தைச் சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும்

 

துன்பம் வரும் பொழுது உங்கள் நினைவினை அகஸ்தியன் பால் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.

நாரதன் கலகப் பிரியன்… நாரதன் கையிலே இனிமையான இசை உண்டு.
1.பிடிவாதமான உணர்வுகளை வளர்த்திடாது அருள் ஒளி கொண்டு இருளை நீக்கி இனிமை என்ற உணர்வினை இணைவாக ஏற்றி
2.மகிழச் செய்யும் உணர்வினை நமக்குள் வளர்த்திடல் வேண்டும் என்பதற்குத்தான் இதைத் தெளிவாக்குகின்றேன்.

இந்த வாழ்க்கையில் குறுகிய காலமே வாழும் நாம் இந்த உடலின் இச்சையை வளர்த்திட வேண்டாம். அருள் உணர்வின் தன்மையாக அவன் (அகஸ்தியன்) அருள் பெற வேண்டும் என்று இந்த இச்சையைக் கூட்டுங்கள்.

1.ஒளியின் உணர்வாக என்றும் நிலை கொண்ட மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்வோம்
2.அகண்ட அண்டத்தில் வரும் உணர்வை உணவாக எடுப்போம்
3.வருவது அனைத்தையும் ஒளியின் உணர்வாக மாற்றுவோம் என்ற இந்தத் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் நாம் எதை எண்ணுகின்றோமோ அதை நம் உயிர் உருவாக்குகின்றது. எதை எண்ணுகின்றோமோ அதைக் கண் காட்டுகின்றது.

நமக்குள் அருள் ஒளி என்று பதிவான பின் மீண்டும் அது கண்ணுக்கு எட்டப்படும் பொழுது
1.எதனின் உணர்வை நமக்குள் நுகர்ந்தோமோ அந்த இடத்திற்கே கண் நம்மை அழைத்துச் செல்கின்றது.
2.அந்த உணர்வினை நுகரச் செய்கின்றது… பகைமை உணர்வை மாற்றுகின்றது
3.அருள் ஒளி என்ற உணர்வை உருவாக்குகின்றது.

ஆகவே அருள் ஒளியைப் பெறுவோம் என்று நாம் தியானிப்போம். இந்த வாழ்க்கையில் அறியாது சேர்ந்த வேதனை வெறுப்பு சலிப்பு சஞ்சலம் இதைப் போன்ற உணர்வுகளை நீக்குவோம்.

நோயாளியை அன்புடன் பண்புடன் பார்த்தாலும் நாம் நுகர்ந்த உணர்வுகள் அவரைக் காக்க உதவுகின்றது. ஆனால் நம்மைக் காக்கும் நிலை அற்று விடுகின்றது. நம்மைக் காக்கும் நிலை இல்லை என்றால் நல்லது அழிந்து விடுகின்றது.

நல்லவைகள் அழிந்திடாது அருள் ஞானத்தைப் பெருக்கித் தீமையை நீக்கும் சக்திகளை நாம் பெற வேண்டும் என்று ஏங்கி… நம்முடைய சக நண்பர்களுக்கும் அதை உணர்த்தி
1.அவர்கள் அந்த ஆற்றலைப் பெற வேண்டும்… அவர்களும் துன்பத்திலிருந்து விடுபட வேண்டும்
2.அவர்கள் அருள் ஒளி பெற வேண்டும் என்று நாம் ஏங்கினால்
3.அவர் உணர்வு கொண்டு நாமும் வளர முடியும்… நம் உணர்வு கொண்டு அவரை வளர்க்கவும் முடியும்.

நமக்குள் எடுத்து வளர்த்துக் கொண்ட அருள் உணர்வுகள் இந்தப் பரலோகத்தில் பரவுகின்றது. அந்த உணர்வின் தன்மை “நம் எண்ணமே நம்மைக் காக்கின்றது…”

அருள் ஒளியை நாம் பெற்றால் அனைவரும் அது பெற வேண்டும் என்று எண்ணினால் அனைவருடைய உணர்வுகளும் நமக்குள் ஒன்றென இணைகின்றது.

பகைமையற்ற உணர்வுகள் நமக்குள் வளர்கின்றது. நாரதன் கலகப்பிரியன் தீமைகளை அகற்றுகின்றது. அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் உருவாக்குகின்றது…
1.அதைப் பெருக்குகின்றது… அதுவே நம்மை இயக்குகின்றது.
2.அந்த உணர்வின் இயக்கமாக உயிர் ஒளியாகின்றது.

இதை நாம் அனைவரும் செயல்படுத்துவோம்…!

சாமி சொன்ன வழியைக் கடைப்பிடித்துத் தீமைகளைத் தடுத்து நிறுத்த முடிகின்றது… என்று இரண்டு பேர் சொல்லுங்கள் பார்ப்போம்

சாமி சொன்ன வழியைக் கடைப்பிடித்துத் தீமைகளைத் தடுத்து நிறுத்த முடிகின்றது… என்று இரண்டு பேர் சொல்லுங்கள் பார்ப்போம்

 

அன்றாட வாழ்க்கையில் நாம் எத்தனையோ பேருடன் பழகுகின்றோம்.
1.அவன் இப்படிச் செய்தான்… இவன் இப்படிச் செய்தான்… மோசம் செய்து விட்டார்கள்… ஏமாற்றி விட்டார்கள்
2.இவன் நல்லவனாக இருந்தான்… எல்லோருக்கும் உதவி செய்தான் ஆனால் நோயால் இப்பொழுது அவதிப்படுகின்றான் என்று
3.இப்படிப்பட்ட எத்தனையோ உணர்வுகளை நாம் நுகருகின்றோம்.

சந்தர்ப்பங்களில் இது போன்று நுகர்ந்து விட்டால் நமக்குள் என்ன நடக்கின்றது…?

இந்த உணர்வு அனைத்து நம் உடலுக்குள் சென்று அது நரகாசுரனாக மாறி நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களைக் கொன்று தின்ன ஆரம்பிக்கின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை…!

ரோட்டிலே செல்கின்றோம்… திடீரென்று ஒருவன் அங்கே அடிபடுகின்றான். அடப் பாவமே…! என்று கண்களால் உற்றுப் பார்க்கின்றோம்… நுகர்ந்து விடுகின்றோம்… பதட்டம் பயமும் வருகின்றது.

இது போன்று அன்றாட வாழ்க்கையில் நாம் எத்தனையோ விபரீத உணர்வுகளை அறிய நேருகின்றது… பார்க்க நேருகின்றது நம்மை அறியாமலே நமக்குள் பதிவாகி உடலுக்குள் வந்து விடுகின்றது.

கண்களோ இது அனைத்தையுமே நமக்குத் தெரியச் செய்கின்றது. பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றவும் செய்கின்றோம். ஆனால்
1.அப்போது நாம் எடுத்துக் கொண்ட பயமோ பதட்டமோ வேதனையோ அவை எல்லாம் உமிழ் நீராக மாறி
2.நாம் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்து இரத்தமாக மாறி அந்த இரத்தம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்குள் செல்லப்படும் பொழுது
3.அந்த நல்ல அணுக்களைக் கொல்லக்கூடிய நரகாசுரனாக மாறி விடுகின்றது
4.அதாவது… நம்மையும் வேதனைப்பட வைக்கிறது என்று காட்டுகின்றார்கள்.

அதைத்தான்
1.தீப ஒளித் திருநாளன்று கண்ணன் (நம் கண்கள்) நரகாசுரனைக் கொன்ற நாள்…! என்று காட்டி நீ விழித்திரு உடலுக்குள் தீமைகள் புகாது தடுத்து நிறுத்து என்றும்
2.விநாயகர் சதுர்த்தி அன்று தீமைகளை நிறுத்திப் பழகு என்றும்
3.இவ்வளவு அழகாக வருடத்தில் 12 மாதங்களும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த உயர்ந்த சக்திகளை எடுக்கும்படி ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

ஞானிகள் கொடுத்ததை யாராவது நாம் சிறிதளவாவது மதிக்கின்றோமா…? அவர் சொன்னதை நம் வாழ்க்கையில் கடைபிடிக்கின்றோமா…?

இப்பொழுது இதை எல்லாம் நான் (ஞானகுரு) சொல்லிக் கொண்டு வருகின்றேன்… எல்லாம் கேட்கின்றீர்கள். எத்தனை பேர் இதைப் பின்பற்றுகின்றீர்கள்…?

“சாமி நன்றாகச் சொன்னார்…” என்று மட்டும் சொல்லிவிட்டுச் சென்று விடுவார்கள்
1.எவ்வளவு அழகாகச் சொல்கின்றார் தெரியுமா…!
2.என்னைப் புகழ் பாடி விட்டுப் பொருள் காணாதபடி… பொருளைத் தனக்குள் வளர்க்கத் தெரியாதபடி
3.இன்றும் தியான வழியில் வருபவர்கள் இருக்கின்றார்கள்.

எங்கள் சாமி எப்படிப் பேசுகின்றார் தெரியுமா…? என்று கேட்பார்கள். ஆனால்
1.நான் கடைப்பிடித்தேன்… நான் செய்து காட்டினேன்…!
2.சாமி சொன்னார்… நான் செய்தேன்… என்னால் நிறுத்த முடிகின்றது… நிறுத்த முடியும்…! என்று
3.ஒரு இரண்டு பேர் நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம்…!

ஏனென்றால் யாம் சொன்னபடி நீங்கள் செய்து பழக வேண்டும். தீமையை நீக்கும் அந்தப் பழக்கத்திற்கு நீங்கள் வரவேண்டும். அன்றாட வாழ்க்கையில் அதைச் செயலுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்குத் தான் நான் “மௌன விரதம்…” இருந்தது.

என்னுடைய நோக்கமே எப்படியாவது உங்களுக்குள் அருள் உணர்வுகளைத் தூண்டி அந்த ஞானிகள் உணர்வுகளைக் கவரும் பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்பது தான்.

ஆக…
1.அறியாது வரும் தீமைகளிலிருந்து நீங்களே உங்கள் எண்ணத்தால் மாற்றி
2.உங்களுக்குள் வரக்கூடிய கெடுதலை நீங்களே தடுத்து நிறுத்திக் கொண்டே வந்தால்
3.பிறவில்லா நிலை அடைய முடியும் என்று உறுதிப்படுத்துவதற்குத் தான் இதை எல்லாம் சொல்வது.

“மணல் குன்று” என்று வாழ்க்கையை ஒப்பிட்டால் சறுக்குமே…! என்று ஏறாது இருக்க முடியுமா…?

“மணல் குன்று” என்று வாழ்க்கையை ஒப்பிட்டால் சறுக்குமே…! என்று ஏறாது இருக்க முடியுமா…?

 

வாழும் வாழ்க்கையின் இயல்(பு) கொண்டு… வானியல் அறிந்திடும் செயலுறும் எண்ணத்தின் உயர்வால்… ஞானத்தின் சுடர்தல் தெளியும்.

வாழ்வேனும் சமுத்திரம் கண்டாய்…!
1.ஞானச்சுடர் வாழ்வியல் ஆக்கும் தெளிவின் வழியை அறிவுறுத்தி
2.எது செயல்படும் ஆக்கமோ அவ்வழி நிற்றல் “மனத்தின் திறன்” என்றே
3.செயலுறும் செயல்பாட்டின் வேகம் “வானியல் (விண்ணுலக ஆற்றல்) பெற்றிடும் விவேகத்தில் நிலைநிற்றல் வேண்டும்…”

பால்வெளியின் உவர் அமில அடர்வு செயலுறும் தன்மைகள் கண்டோம். நீரமில சக்தியில் கலந்திட்ட அந்நிலை உருக்கோலம் கொண்டிட்ட செயலில் மாமகான்கள் தத்துவங்களாகக் காட்டியதில் உருக்கோலம் கொண்ட உவர் அமில அடர்வு நீரின் ஆழம் காணச் சென்றதாக உரைப்பதும் உண்டு.

பக்தியின் தொடர் காட்டும் செயலில் பெற்று உயர்வது எக்காலம்…?

உயிரணுவைச் சுவாசமாகச் சூழ்ந்திட்ட நல் உணர்வெனும் ஆத்ம முலாம் சுடர்ந்திடும் செயலுக்கு எல்லாமே எண்ணம் தான்.

ஞானத்தின் செயலுக்குக் காட்டிடும் வேகம் உணர்வெண்ணத்தின் மாற்றத்தில் முன்பு கூறிட்ட “அதே விவேகம்” தியானத்தின் வழியாக மெய்ஞானச் சுடர் எனும் விழுமிய வேதப் பொருளாக நன்நிலையை உயிர் ஆத்ம சக்தி பெற்று வளர்த்து உயர்த்திக் காட்டும்.

மாமகான்கள் உரைத்திட்ட நல்ல நெறிகள் வெறும் போதனை மாத்திரம் அன்று. வாழ்க்கையின் நிலைகாட்டி உயர் ஞான வலுவில் மெய்ஞானியாய் வாழும் வகை காட்டியதே போதனாமூர்த்திகளான அப்போதினிகள் கைக்கொண்ட செயல் நிலையை “எளிமையாக உரைக்கின்றோம்…”

வாழ்க்கையே மணல் குன்று…!
1.ஏற சறுக்கும் மணல் குன்று…
2.சாணுக்கு முழம் சறுக்கும் என்று மெய்ஞானியர் சுட்டிக்காட்டுவதில்
3.மெய்ஞானத்தின் விழிப்பு விவேகமாகத் தன்னைத்தான் வளர்த்துக் கொண்டிடவே இந்த எளிய தியான முறை.

“மணல் குன்று” என்று வாழ்க்கையை ஒப்பிட்டால் சறுக்குமே…! என்று ஏறாது இருக்க முடியுமா…?
1.”வாழ்ந்து காட்டுவோம்…” என்ற மனதின் உறுதிக்கு
2.அந்தப் புறச்சான்றுகளைக் காட்டினோமப்பா.

அகத்தின் உயர்வு கூட்டும் அதே மன உறுதி தான் தியான நிலையில் ஆத்ம பலம் கூட்ட எண்ணுகின்றோம். பிறப்பறுக்கும் உயர்வாம் ஆத்ம கலப்பாக எண்ணுகின்றோம்.
1.உணர்வலைகள் தொழில்படும் ஜீவ சரீர பிம்பத்தில்
2.“சகல உயிரணுக்களும்… சக்தியின் வலு கூட்டிக் கொள்ள எண்ணுகின்றோம்….”

சித்தன் நிலையைப் பெறச் செய்யும்… சித்தத்தின் சிந்தனா சக்தி குவிக்கப் பெறும் ஓர்முக நினைவோட்ட குணத்தன்மைகளில்… “பிடர்தல்” எனும் எண்ணத்தின் பாங்கு வான் இயல்பு காட்டிடும் முறைகள் முறையாக உரைப்போம்.

உலகளவிற்கு மனதிற்குள் இடர்கள் வந்தாலும்… அது ஒரு கடுகு அளவு தான்

உலகளவிற்கு மனதிற்குள் இடர்கள் வந்தாலும்… அது ஒரு கடுகு அளவு தான்

 

பரிசுத்தம் தங்கும் மனம் என்பது எதுவப்பா…?

தங்கத்தைச் சுத்தம் செய்யும் ரசம் (திரவகம்) தங்கத்தின் செழுமையைக் காட்டும். “மகரிஷிகளின் அருள் சக்தி” பரிசுத்த மனதைத் தெளிவாக்கிடும் உண்மையின் நிலை ஆகும்.

1.“ஈஸ்வரா…!” என்று ஒலி நாதத்தைக் கூட்டி… உன்னுள் உன்னை நீ தெளிந்த விதம்
2.உலகத்தையே உன்னைப் பார்த்திடச் செய்துவிடும்.
3.யாம் சொன்ன தியான வழியைக் கடைப்பிடிக்கும் போது உன் உள்நிலை சுடர்விட்டுப் பிரகாசிக்கும்.

அதை யாம் (ஈஸ்வரபட்டர்) அறிவோம்.

பாய்மரக்கப்பலில் “விரிக்கபட்ட பாய்”
1.காற்றின் வேகத்தால் கடலில் படகைச் செலுத்துவதோடு மட்டுமல்லாதபடி…
2.சில நேரத்தில் படகையே நிலைகுலையைச் செய்திடும் செயலும் உண்டு.

அது போல்
1.அறிவின் விவேகம் (ஆறாவது அறிவு) அலைக்கழித்திடாமல் சமன்படுத்திட பழியைக் காண்கின்றது
2.காண்பதோடு செயல்படுத்தும் காரியமும் ஆற்றுகின்றது.

அறிவின் பரிணாம வளர்ச்சி விஞ்ஞான அறிவினால் இயந்திர பாகங்கள் பொருத்தப்பட்டுக் கடலோடும் வழிவகுக்க அறிவின் நிலைக்களன் வித்தாகின்றது.

மகரிஷிகளின் அருள் பார்வை உன் மீது விழும் பொழுதே அது “சத்திய சோதனையின் துவக்கம்” என்று நீ எண்ணுவாய்.

அது சோதனை அல்லவப்பா…!

தாய் தன் குழந்தையைப் பரிந்து எடுக்கும் பாசத்தின் விளைவு… தவழ்ந்திடும் குழந்தை தானே நடந்திடும் செயலில் கொள்கின்ற அனுபவ நடைமுறை போல்…
1.மகரிஷிகளின் ஒளி சக்திகளை “எந்தெந்த உயிராத்மாக்கள்” தன் நிலையை உயர்த்துவதற்காக வேண்டி ஏக்கமாய் ஏங்குகின்றதோ
2.அந்த மகான்களின் எண்ணத்துடன் தானும் ஒன்றி…
3.அவர்களுடன் இணைந்து ஜெபித்திடும் செயலில் தியானிக்கின்றதோ…
4.அந்த நல்வழி நிச்சயம் அங்கே சிறக்கும்.

உலக வாழ்க்கை நடைமுறையிலும் “பொன் (தங்க) நகை படும் பாடு… உன் பாடு…!” என்ற சூட்சுமப் பொருளாக உணர்த்தி வந்ததனை…
1.உம்மைப் பக்குவப்படுத்திட முனைந்ததன் பொருளாக
2.நீ அறிய வேண்டியது முக்கியம்.

காப்பிய ரிஷி தசரதன் பெற்றுக் கொண்ட “புத்திர சோகம்” என்று சுட்டிக் காட்டப்பட்டதை…
1.உறவின் வழிமுறைக்குப் போதனைப்படுத்தியதாக உணர்ந்து
2.சிந்தனையில் அதை நீ சீர்தூக்கிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மனதின் விசாலம் எது…? தயை என்ற சொல்…!

உலகளவிற்கு மனதிற்குள் இடர்கள் வந்தாலும்… அதுவும் ஒரு கடுகு அளவு தான். ஆனால் சித்தன் ஆகும் மனதின் விசாலம் எத்தனை பெரியது…? சிந்தனை செய்…!
1.முயற்சி வினையாக்கும்
2.விடாமுயற்சி திருவினைப் பயனாகும்.

ஆஞ்சநேயன் விஸ்வரூபம் காட்டினான்… ஆகாயத்தில் நீந்தினான்… அணுவளவாய் ஒரு மாறினான்… நெருப்பில் உலவினான்… நீரில் மிதந்தான்… உடலையே சிறகு போல் எளிதாக ஆக்கினான்… கணம் கொண்ட பக்குவ கதியாக்கினான்… பேரின்ப லயத்தை அனுபவித்தான்…! என்று காட்டுவதெல்லாம்
1.கூறிடும் பொருளின் அடிப்படை நிலைகளின்
2.தியானம்… தியானம்… தியானமே…!

கண்டவன் சக்தியை… மகரிஷிகளின் செயல்பாட்டை… “புறம் கூறி” செயலின் செயல்பாட்டை… அணை போட்டுத் தடுக்க முடியாது. ஆனால் மகரிஷிகள் “அறம் கூறினால்…” நிலைமை என்ன ஆகும்…? அவர்கள் அன்பு மகான்களப்பா.

நம் கைகளைக் கொண்டு சூரியனை மறைத்து விட முடியுமா…? முடியாது…! ஆனால் “நான் மறைத்து விடுவேன்…” என்று அதைச் செயல்படுத்தித் தனக்குத் தானே மறைந்துக் கொண்டால் அது எண்ணத்தின் மாயை தான்.

ஒருமையைப் பலப்படுத்திடும் செழுமை… சித்தர்கள் மகரிஷிகளின் செயல். அதற்குள் ஐந்தும் அடங்குதல் என்பது விண் செல்ல வேண்டிய பாதையைக் காட்டும் தெய்வீக நிலை.

1.பூக்களின் மணத்தை நுகர்ந்திடும் மன நிலையே
2.யாம் சுட்டிக் காட்டும் இந்த எளிய தியானத்தில் உணர்ந்து கொள்ள வேண்டிய “ஆரம்ப அனுபவ நிலை…”

மகோன்னத நிலையே ஆத்ம சம்பூரணம்…!

சோமபானம் என்ற சோகபானம்

சோமபானம் என்ற சோகபானம்

 

குடும்பங்களில் கடும் சிரமங்கள் ஏற்பட்டால் இன்று லாகிரி வஸ்துகளை (மது) உபயோகப்படுத்துகிறார்கள். அதைப் போட்டு குடும்பக் கவலையே இல்லாதபடி “பல இம்சைகளைச் செயல்படுத்துகின்றார்கள்…”

ஆரம்பத்திலே அன்றைய அரசர்கள் சோமபானம் என்ற நிலையை உருவாக்கிக் கொடுத்துத் துஷ்ட தெய்வங்களையும் உருவாக்கி மந்திரங்களையும் சொல்லிப் பழகி இருந்ததனால்
1.அதையே காவல் தெய்வம் என்று வணங்கி சாராயமும் கறியும் வைத்துக் கும்பிடுபவர்களும் இருக்கின்றார்கள்.
2.இப்படிக் கும்பிட்டு ஏற்றுக் கொண்ட பின் இதை ஒத்த ஆன்மாக்கள் உடலுக்குள் வந்து சேர்ந்து விடுகின்றது.

ஆதியிலே அரசன் எந்த அடிப்படையில் (செய்வினை ஏவல் தோஷம்) இதை உருவாக்கி மக்களுக்குள் பதிவு செய்தானோ அதுவே இன்று வேரூன்றி வளர்ந்து விட்டது. அவன் உருவாக்கிய மந்திரங்கள் அனைத்தும் மக்களுக்குள் ஊடுருவி விட்டது.

மது மாமிசம் இவைகளை வைத்து இன்று மந்திரத்தை ஜெபித்தால் போதும்…
1.அரசர் காலத்தில் உருவாக்கப்பட்ட நிலைகள் பிரிந்து சென்ற ஆன்மாக்கள் இங்கே வந்து சேரும்… பல கெடுதலைச் செய்யும்.
2.துன்பங்களை மறக்க மதுவை உபயோகப்படுத்தி எதன் வழி அந்த ஜீவன்கள் பிரிந்ததோ அது இன்னொரு உடலுக்குள் சென்ற பின்
3.அதே மதுவைப் பருகச் செய்யும்… அவனைச் செயலற்றதாக ஆக்கும்… அதன் வழியில் வளர்ச்சி ஆகும்.
4.மீண்டும் அதனால் தொடர்படும் சாபங்கள்… அதனால் கடும் வேதனைகள் அங்கே உருவாகும்.

இப்படி உருவாகி விட்டால் அந்த உடலை விட்டுச் சென்ற பின் உயிரானமா… தன் உடலில் எத்தனை வேதனைகள் பட்டதோ அந்த வேதனையை உருவாக்கும் உணர்வுகள் உயிருடன் ஒன்றித் தொக்கிக் (சுற்றி) கொண்டே இருக்கும்.

இந்த உணர்வுகள் தான் உடல்… உடலில் விளைய வைத்த்து தான் உயிர். உயிரின் தன்மை கொண்டு இந்த ஆத்மா அதில் சேர்த்துக் கொண்ட பின்
1.நிலையான வேதனையாக என்றுமே வேதனைப்படும் நிலையாக அமைத்து விடுகின்றது.
2.மதுவைக் குடித்துக் கஷ்டங்களை மறக்கலாம் என்று செய்தாலும் இது எல்லாம் விடாது.

ஆகவே உடலை விட்டுச் சென்ற பிற்பாடு என்ன நடக்கும்…? என்று சற்று தெரிந்து கொள்ளுங்கள்.

உடலில் இருக்கும் பொழுதாவது சமாளித்துக் கொள்ளலாம்… உடலை விட்டுச் சென்றால் சமாளிக்கும் திறனே கிடையாது… வேதனையை அனுபவித்தே தான் தீர வேண்டும்.

1.மீண்டும் எந்த மனிதனுடைய ஈர்ப்புக்குச் சென்றாலும் அங்கே மனிதனாகப் பிறக்க முடியாது
2.அங்கேயும் வேதனையை உருவாக்கி அவனையும் வீழ்த்தி விட்டு
3.எந்தத் தகாத செயலை இவன் செய்தானோ அதையே செய்யச் செய்யும்.

எந்த வேதனை அனுபவித்தானோ அதை அங்கே உருவாக்கி அதில் விளையும் உணர்வின் சத்தை இது எடுத்துத் தனக்குள் வளர்த்துக் கொள்ளும்.

அந்த உடலை வீழ்த்திய பின் மனிதனுடைய சிந்தனைகள் முழுமையாக அழிந்து உயிர் பாம்பின் ஈர்ப்புக்குள் தான் கொண்டு போய்ச் சேர்க்கும்.

கீதையிலே சொல்வார்கள் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று.
1.எந்தெந்த வேதனையை உருவாக்கி அதை ரசித்தோமோ அந்த வேதனையின் செயலாக நாம் இருந்தோமோ
2.அதனின் அடிப்படையிலேயே உயிர் அடுத்த உடலுக்குள் கொண்டு சேர்க்கும்.

அதாவது விஷத்தைக் கொட்டி உணவாக உட்கொள்ளும் பாம்பின் ஈர்ப்புக்குள் அழைத்துச் சென்றுவிடும் ஏனென்றால் அந்த விஷத்தைத் தான் தன் உடலாக அது மாற்றி வைத்திருக்கின்றது.

மனிதனாகப் பிறந்த பின் கொடூர வேதனைகளை அனுபவித்து அதில் வளர்த்துக் கொண்ட விஷம் எதிலே சென்று ஒடுங்கும்…?

இந்த விஷத்தையே உணவாக உட்கொள்ளும் பாம்பின் ஈர்ப்புக்குள் இந்த உயிரான்மா சென்று விஷத்தைத் தாங்கிக் கொள்ளும் உடலாகப் பெற்று அதிலிருந்து தான் மீண்டும் தன்னைக் காத்துக் கொள்ளும் நிலைகள் மீண்டும் விளைகிறது.

1.மதுவை விரும்பிக் குடிப்பவர்களாக இருந்தாலும் சரி… அல்லது கவலையை மறக்க அதைக் குடித்தாலும் சரி
2.இறந்த பின் கடைசியில் அந்த நிலை தான்…!

இதைத் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

வேடிக்கையாகப் பார்த்தாலும்… சாப அலைகள் என்பது சாதாரணமானதல்ல

வேடிக்கையாகப் பார்த்தாலும்… சாப அலைகள் என்பது சாதாரணமானதல்ல

 

உதாரணமாக எல்லோருடனும் நாம் பழகுகின்றோம். ரொம்ப நெருங்கி ஒருவருக்கு உதவி செய்கின்றோம் அவர் குடும்பத்தில் கடுமையான சிக்கல்கள் வருகின்றது என்ன வாழ்க்கை…? என்று தற்கொலை செய்து கொள்கிறார்.

இந்தக் குடும்பம் எனக்கு இப்படிச் செய்தது… அது உருப்படுமா…? என்று இந்தச் சொல்களைச் சொல்கிறார். இந்த உணர்வலைகள் அவர்கள் உடலில் சாப அலைகளாக மாறுகின்றது.

எப்படி எல்லாம் இந்தக் குடும்பம் நாசமாக வேண்டும் என்று சொன்னாரோ… அந்த உணர்வுகள் எல்லாம் அங்கே பதிவாகி அந்தக் குடும்பத்தைச் சீரழிக்கின்றது.

இது போன்று சாப அலைகள் பட்ட குடும்பங்களை எல்லாம் பார்க்கலாம்
1.அதிகம் சம்பாதிப்பார்கள் கடைசியில் ஒன்றுமே இருக்காது
2.எதை எடுத்தாலும் எங்கே சென்றாலும் முட்டுக்கட்டையாக இருக்கும்… பல தொல்லைகளை அனுபவிப்பார்கள்.

ஒருவர் சாப அலைகளைச் சொல்லப்படும் போது “குடும்பம் நாசமாக வேண்டும்” என்று சொல்வதை நாம் வேடிக்கையாகப் பார்த்தாலும் கூட அதை நுகர்கின்றோம்.

இப்படிச் சொல்கின்றார் என்று எண்ணும் பொழுது அதே சாப அலை நமக்குள் அணுவாகி அவன் சொன்ன முறைப்படி நம் உடலிலே தவறுகளாகி நமக்குள்ளும் பகைகள் வரும் “சும்மா பார்த்தாலும் கூட…”

ஒரு சாக்கடைத் தண்ணீரை அள்ளி வீசுகின்றார்கள்
1.அருகிலே நல்லவர் இருந்தாலும் அந்தச் சாக்கடை படாமல் இருக்குமா…?
2.கெட்டவன் மீது அள்ளி ஊற்றினாலும் அருகிலே நல்லவன் இருந்தால் அவன் மீதும் படத்தான் செய்யும்
3.இவன் உடலிலும் நாற்றம் ஆகும் அவன் உடலிலும் நாற்றம் ஆகும்.
4.சாக்கடை நல்லவன் என்று பார்க்குமா…? இல்லை…!

இந்தச் சாக்கடையைத் துடைக்கவில்லை என்றால் நாற்றம் இருக்கத்தானே செய்யும். இதைப் போன்று தான் நாம் நல்லவர்களாக இருந்து ஒருவன் சாபம் இடுவதை வேடிக்கையாகப் பார்த்தாலும் நாம் நுகர்ந்த உணர்வு நமக்குள் பதிவாகி உள்ளது.

அவன் சாபம் இடுகின்றான் என்று தெரிந்து கொள்கின்றோம் இந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதும் சுழலத் தொடங்குகிறது நம் இரத்தங்களில் தேங்கி விடுகின்றது.

பின் அந்தச் சாப அலைகள்… அவன் ஒவ்வொரு நிமிடம் எப்படி கெட்டுப் போக வேண்டும் என்று சொன்ன உணர்ச்சிகள்… அந்த எண்ணம் தோன்றுகின்றது.
1.யாரைப் பார்த்தாலும் “நீ நாசமாகப் போ” என்று நாமும் சொல்ல ஆரம்பிப்போம்
2.தொலைந்து போறவனே என்று சொல்லும்படி வரும் நாசமாக போகட்டும் என்ற அந்த உணர்வுகளை ஊட்டி
3.அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்கி நம்மையும் அறியாமலேயே சாப அலைகள் வேலை செய்ய ஆரம்பிக்கும்.

தெரிகின்றது நமக்கு கோபப்படுகின்றோம் சாபம் விடுகின்றோம் அவன் சாபம் விட்டான் என்று. நாமும் சாபம் இடுவோம் ஏன் இந்த மாதிரிச் சொல்கின்றாய்…? என்று நம்மைக் கேட்டால் உனக்கு என்ன தெரியும்…? அவன் செய்வது அப்படி…! என்று நம்மிடம் நல்லதைச் சொல்பவரிடமும் நாம் வம்புக்குத் தான் செல்வோம்.

ஏனென்றால் அந்த உணர்வு தான் நம்மை இயக்குகிறது என்று தெரிகின்றது… அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதைக் கட்டுப்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்பதைத்தான் குரு வழியில் உங்களுக்குத் தொடர்ந்து உபதேசித்துக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).

இப்படி நமது வாழ்க்கையில் அந்தச் சாப அலைகள் ஆனாலும் அந்த உணர்வுகள் வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்குகின்றது… தேடிய செல்வத்தையும் பாதுகாக்க முடியவில்லை.

கல்வி கற்று விஞ்ஞானத்தில் வளர்ச்சி அடைந்து எல்லாம் வளர்ச்சி இருக்கலாம் புதுப்புது பொருள்களையும் கண்டுபிடிக்கலாம்… செல்வத்தை அதிகமாகத் தேடக்கூடிய அந்தச் சக்தியும் இருக்கலாம்.

ஆனால் சாபம் இடுவோரைப் நல்ல குணம் கொண்டு பார்த்தபின் அந்த சாப அலையின் உணர்ச்சிகள் நல்ல அணுக்களில் சேர்ந்த பின் இதுவும் அந்த வேலையைச் செய்ய ஆரம்பிக்கும்.

1.நாம் தேடிய செல்வத்தையும் அடுத்து பார்க்க முடியாது
2.யாரோ ஏதோ செய்து விட்டார்கள் நாம் வளர்ந்து வருவது பொறுக்க முடியாமல் ஏதோ செய்து விட்டார்கள்
3.பொறாமையில் எனக்குச் செய்து விட்டார்கள் என்று தான் இந்த உணர்வுகள் அந்தச் சாப அலைக்கு ஜீவன் ஊட்டி
4.நமக்குள் “அந்தச் சாபத்தையும் நிறைவேற்றியே கொடுக்கின்றோம்”. என்று வைத்துக் கொள்ளலாம்.

உதாரணமாக மிளகாய் நெடி எந்தப் பொருளிலே பட்டாலும் அதனின் உணர்ச்சியை ஊட்டத்தான் செய்யும். ஒரு விஷம் எதிலே பட்டாலும் அதனுடைய உணர்வின் இயக்கத்திற்குத் தான் மாற்றும்.

அதைப் போன்று நம் உடலில் இத்தகைய உணர்வுகள் மாறுகின்றது.. இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

எத்தனையோ கோடிச் சரீரங்களில் பல இம்சைகள் பட்டுத் தப்பிக்க வேண்டும் என்ற உணர்வை எடுத்துத்தான் மனிதனாக வந்திருக்கின்றோம். பல உயிரினங்கள் இன்று எத்தனையோ இம்சைகள் படுவதைப் பார்க்கின்றோம் அல்லவா.

ஆக… பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்த நாம்
1.அருள் ஞானிகள் உணர்வை எடுத்து இனி வரக்கூடிய எத்தகைய தீமையிலிருந்தும் தப்பும் நிலையாக
2.அதை நமக்குள் பெருக்கிப் பெருக்கி இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலையை அடைதல் வேண்டும்.

அதற்குத் தான் இதை எல்லாம் உணர்த்துகின்றேன்.

குறை (கூறும்) காணும் உணர்வு நம்மை இயக்கவிடாது தடைப்படுத்தியே ஆக வேண்டும்

குறை (கூறும்) காணும் உணர்வு நம்மை இயக்கவிடாது தடைப்படுத்தியே ஆக வேண்டும்

 

வீட்டில் பையன் மீது பிரியமாக இருக்கின்றோம்… அவன் நல்லவனாக வேண்டும் என்று விரும்புகின்றோம் ஆனால் மற்ற பையன்களோடு சேர்ந்து (வேகமான உணர்வு கொண்டு) விளையாடிக் கொண்டிருக்கின்றான்… அவர்களுடன் சேர்ந்து கொள்கின்றான்.

அவன் நன்றாகப் படித்து முன்னுக்கு வர வேண்டும் என்று விரும்புகின்றோம். ஆனால் அவனோ விளையாட்டுப் புத்தியில் இருக்கின்றான்.

அப்பொழுது அதைப் பார்த்த பின்…
1.“இந்த மாதிரி அவன் சுற்றிக் கொண்டிருக்கிறானே…” என்று சிறிதளவு வேதனைப்படுகின்றீர்கள். அந்த வேதனை என்பது விஷம்.
2.விஷத்தன்மையான பின் சிந்திக்க இடமில்லாது போய் விடுகின்றது.

நாம் தவறு செய்யவில்லை. பிள்ளை நல்ல முறையில் வளர வேண்டும் என்று தான் நாம் விரும்புகின்றோம். அவன் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொண்டு இந்த மாதிரி இருக்கின்றானே என்று வேதனைப்பட்டால் என்ன ஆகும்…?

விஷம் (வேதனை) முதலிலே கண்ணுக்குத் தான் வருகின்றது. அதே உணர்வு உமிழ் நீராக மாறுகின்றது ஆகாரத்துடன் சேருகின்றது

நம்முடைய ஆசை நல்ல ஆசை தான். ஆனால்
1.மற்றவருடன் சேர்ந்து விளையாடுகின்றான் என்று எண்ணினால் வேதனை கூடுகின்றது
2.அந்த வேதனையோடு அவனிடம் திரும்பச் சொல்லப்படும் பொழுது என்ன ஆகிறது.

அவனுக்கு அவன் செய்யும் தவறு தெரியாது. ஆனால் அவன் உணர்வை நுகர்ந்து ஏண்டா இப்படிச் செய்கின்றாய்…? உன் எதிர்காலம் என்ன ஆகும்…? என்று நாம் பேசுவோம்.

அவன் கண்ணிலே நம்மைக் கூர்ந்து கவனிப்பான்.

ஏனென்றால்
1.”அவன் செய்த தவறை நாம் எடுத்து” இரண்டாவது சமைத்து அவனிடம் சொல்லப்படும் பொழுது
2.நம் உடலிலிருந்து வருவதைப் பார்த்தவுடனே
3.என் அப்பா இப்படித்தான் பேசுவார்…! என்று அவனுக்குப் பார்த்தவுடனே கோபம் வந்துவிடும்.

நாம் சொன்னால் அவன் காது கொடுத்துக் கேட்க மாட்டான். ஆனால் மற்றவர்கள் சொன்னால் காது கொடுத்துக் கேட்பான்.

அடுத்தவர் சொன்னால் கேட்கின்றான் நாம் சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறான் என்று நாம் சொல்வோம்.

காரணம்… “சொன்னபடி கேட்கவில்லை” என்ற அந்த வெறுப்பான உணர்வு கொண்டு நாம் சொல்வது… அவனைக் கேட்க விடாது அது தடுத்து விடுகின்றது. அடுத்து நாம் எதைச் சொன்னாலும் இவன் இப்படித்தான் இருப்பான் என்று சொல்வோம்.

1.மற்றவர் வெறுப்பாக எண்ணுவதில்லை… அந்த உணர்வைச் செலுத்தப்படும் பொழுது அங்கே ஒன்றும் இல்லை.
2.ஆனால் நான் பாசத்தோடு சேர்த்து இப்படிப் பண்ணுகின்றானே என்று எண்ணி எடுத்து வேகமான சொல்லைச் சொல்லும் பொழுது
3.நமக்குள்ளே அதை விளைய வைத்துச் சமைத்து அவன் காதிலே இதைக் கேட்கப்படும் பொழுது
4.அவன் பதிவாக்கி நாம் பேசிய உணர்வை நுகர்ந்து அவன் உயிரிலே பட்டபின் “நம் மீது அவனுக்கு வெறுப்பு தான் வருகின்றது…”.

சில குடும்பங்களில் ஆசையோடு பாசத்தோடு குழந்தைகளை வளர்ப்பார்கள் பையன் நல்லவன் தான் ஆனால் அந்த இடத்தில் இப்படி ஆகிவிடுகிறது.

அதற்குத்தான் ஆலயத்திலே தெய்வத்திற்குத் தங்கத்திலே ஆபரணங்களைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்.
1.அந்தத் தங்கம் எப்படி மங்காது இருக்கின்றதோ
2.பையன் சேட்டை செய்வதைப் பார்த்தாலும் நம் மனது மங்காதபடி இருக்க வேண்டும்…
3.அதற்கு உபாயத்தைக் காட்டுகின்றார்கள்.

அப்படி என்றால் அவனுக்கு நாம் எப்படி எண்ண வேண்டும்…?

1.இன்னன்ன வழிகளில் அவன் இப்படி இப்படி இருக்க வேண்டும்
2.அவன் செயல் அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும்
3.பார்ப்பவர்களை மதிக்கும் பண்புகள் வளர வேண்டும்
4.தெளிவானவனாக அவன் வரவேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணிய பின் நம் உயிரிலே பட்டு இந்த உணர்ச்சிகள் உடலுக்குள் உமிழ் நீராக ஆகிவிடுகிறது.
1.அவன் செய்த தப்பைப் பார்த்து அந்த வேதனை என்ற உணர்வு நமக்குள் வருவதில்லை.
2.அவனுடைய உணர்வுகளும் நம்மை இயக்குவது இல்லை.

அதற்குப் பின் அவனிடம் திருப்பிச் சொல்லப்படும் பொழுது… “தம்பி நீ இந்த மாதிரிச் செய்கின்றாய்… அதனால் உன்னுடைய உடையெல்லாம் அழுக்காகின்றது நோய் வரக் காரணமாகின்றது… அதனால் நீ பார்த்து நடந்து கொள்…!” என்று விபரத்தைச் சொன்னமென்றால்… அவன் அதைத் தெரிந்து கொள்வதற்கு வழி இருக்கின்றது.

ஆனால் முதலில் நாம் ஆசைப்பட்டோம் வழிகாட்டத் தெரியவில்லை. ஆனால் ஆலயத்திலே ஞானிகள் காட்டிய வழியில் நாம் இதைச் செயல்படுத்தினோம் என்றால் நமக்குள்ளும் வேதனை வருவதில்லை… அவனையும் சரியான பாதையில் கொண்டு செல்ல முடிகின்றது.

பள்ளிகளிலே பார்த்தோம் என்றால் ஆசிரியர்களும் பாடத்தை சொல்லிக் கொடுப்பதில் குறியாக இருப்பார்கள். ஆனால் தன்னிடம் படிப்பவன் சிறிதளவு தவறு செய்து விட்டான் என்றாலும் அவனை மிரட்டுவார்கள்.

அந்த மிரட்டல் பதிவான பின் வாத்தியாரை நினைக்கும்போது அவனுக்கு ஞாபக சக்தி குறைந்துவிடும்
1.ஒரு சிறு தவறுக்கு ஒரு தடவை மிரட்டி இருந்தால்
2.அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் மறதி வரும்… சொல்லிக் கொடுப்பது எல்லாம் மறந்து விடும்.

ஏனென்றால் இந்த உணர்வுகள் விளைந்து மறுபடியும் இப்படி மாறிக் கொண்டே போகும் இதையெல்லாம் நாம் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா

நமது குருநாதர் காட்டிய வழியில் ஞானிகள் உணர்வை உடனுக்குடன் எடுத்துத் தூய்மைப்படுத்தியே ஆக வேண்டும் அதற்குத்தான் உங்களுக்கு திரும்பத் திரும்ப பல வகைகளிலும் சொல்லி உண்மைகளை எல்லாம் உணர்த்தி வருகின்றேன் (ஞானகுரு).