January 2022 உபதேசம்

தை…! இணைத்துவிடு…! துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து எல்லாவற்றிலும் இணைத்துவிட வேண்டும்

 

தை…! (தை மாதம்) என்றால் இணைத்தல் என்று பொருள். ஒரு நூலின் தன்மை கொண்டு இணைக்கப்படும் பொழுது ஒன்றுடன் ஒன்று இணைந்து கொள்கிறது. அதைத் தான் “தை…” என்று காட்டினர்.

இணைத்திடும் உணர்வின் தன்மை கொண்டு இணைந்து வாழச் செயல்படுத்துவது தான் அதன் நிலை. அன்றைய கால பாஷையில்
1.“தை” என்ற நிலையில் “இணைத்து விடு…” என்று பொருள்படும்படி
2.உலகில் வாழும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்திடும் நிலையாக
3.சுவைமிக்க நிலைகளை உருவாக்கும் நாள் என்று தைப் பொங்கல் என்று காட்டினார்கள்

ஒருவருக்கொருவர் பகைமையை மறந்து அருள் உணர்வைத் தனக்குள் நுகர்ந்து ஒளியின் உணர்வாக அத்தகைய பெரும் சக்தியை எவ்வாறு நமக்குள் வளர்த்தல் வேண்டும்…? என்பதைத் தெளிவாக்கும் நாள்தான் தைப் பொங்கல்.

அதிகாலையில் எழுந்து நான்கிலிருந்து ஆறு மணிக்குள் சூரிய உதயத்திற்குள் பொங்கல் வைத்துப் பழகுதல் வேண்டும். பண்டைய காலத்தில் அப்படித்தான் வைப்பார்கள்.

அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். செல்லப்பிராணிகளை வைத்து அதை வணங்கும் முறையைக் காட்டி
1.அத்தகைய உயிரினங்களிலிருந்து தான் நாம் வளர்ந்து வந்திருக்கின்றோம்
2.மனிதனாக இன்று வந்திருக்கிறோம்…! என்று நினைவுபடுத்தும் நாள் தான் மாட்டுப் பொங்கல்.

அதாவது இன்று மனிதனாக இருக்கும் நிலையில் இதற்கு முந்திய நிலையில் நாம் எப்படி வாழ்ந்தோம்…? எப்படி வளர்ந்து வந்திருக்கின்றோம்..? இன்றைய மனித வாழ்க்கையில் அதை நாம் எப்படிச் செயல்படுத்துகிறோம்…? மற்ற உயிரினங்கள் எப்படி வாழ்கின்றது…? அதில் இருந்து வந்தவர்கள் தான் நாம்…! என்ற நிலை அங்கே தெளிவாக்கப்படுகின்றது.

காரணம்… ஒருவர் கஷ்டப்படுகிறார் என்று நாம் பார்த்தால் அவருடைய கஷ்டத்தை ஈகையால் நுகர்ந்து விட்டால் வேதனை உணர்வுகள் நமக்கு அதிகரித்துவிடும். நம்மையும் கஷ்டத்திற்குள் ஆழ்த்திவிடும்.

ஆகவே அந்த வேதனை நமக்குள் வராது தடுக்க அந்தப் பேரருள் பேரொளி பெற்ற அருள் ஞானிகள் உணர்வை நாம் ஈகையால் நுகர்ந்து மாற்றிக் கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில்…
1.ஞானிகளின் அருள் சக்தியை அவர்களுக்குள் பாய்ச்சி
2.அந்த வேதனையிலிருந்து அவரும் விடுபட வேண்டும் என்று எண்ண வேண்டும்
3.வெறுமனே எண்ணினால் நம்மைத் தீமையின் நிலைக்குத் தான் அது ஆளாக்கும்.

உதாரணமாக ஒரு பொருளை வேக வைக்கிறோம் என்றால் சூடு அதிகமாகி விடுகின்றது. ஒரு உபகரணத்தையோ அல்லது துணியையோ வைத்துத் தொட்டால் தான் அதை நாம் எடுக்க முடியும். இல்லையென்றால் கையைச் சுட்டுவிடும். ஆகவே அதை நாம் பக்குவமான நிலையில் எடுக்க வேண்டும்.

அது போலத் தான் வாழ்க்கையில் நாம் தீமைகளைச் சந்திக்கும் போது அந்த அருள் ஞானிகள் உணர்வை வைத்துத் தான் அதைச் செயல்படுத்த வேண்டும்.

ஒருவன் வேதனையால் அவதிப்படுகிறான். கேட்டறிந்தவுடனே அது வந்து விடுகின்றது. நாம் நல்ல பண்புகள் கொண்டிருப்பினும் வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் வந்துவிட்டால் நல்ல மனதையும் கெடுத்து விடுகின்றது. இதை எல்லாம் நாம் மாற்றிப் பழக வேண்டும்.

அகஸ்தியன் துருவனாகி… துருவ மகரிஷியாகி வாழ் நாளில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய அந்த அரும் பெரும் சக்தியை யாரொருவர் நுகர்கின்றனரோ அந்த உணர்வினை வலுவேற்றி கொண்டால அடுத்து வரும் தீமை எதுவாக இருந்தாலும் அதை வளராது தடுத்து விடலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கூட்டினால் வேதனையை அகற்றிடும் சக்தியாக நமக்குள் வளரும்.

அரிசி இயற்கையில் சூரியனால் விளைந்தது தான். அதில் இருக்கக்கூடிய தோடை (உமியை) நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் அரிசியைத் தான் எடுத்து வேக வைக்கின்றோம்.

வேக வைப்பது எதற்கு…? வெறும் சுவைக்காக அல்ல…!

1.இயற்கையில் விஷத்தின் ஈர்ப்பால் அதனின் உணர்ச்சியைத் தூண்டி
2.அந்த உணர்வுக்கொப்பத் தான் அது விளைகின்றது.
3.ஆனால் வேக வைத்தாலோ தன் இனத்தை அது வளர்க்காது.

அதைப் போன்று வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால்… அது நமக்குள் வளராது அடக்க வேண்டுமென்றால்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் இணைத்து
2.அதை வேக வைக்க வேண்டும்.
3.அதனின் இயல்பை மாற்றி மகிழ்ந்து வாழச் செய்யும் சக்தியாக நாம் வளர்க்க வேண்டும்.

அது தான் ஞானிகள் அடைந்த வேகா நிலை என்பது.

வண்ணான் ஆடைகளைத் தூய்மைப்படுத்துகின்றான்… சுவாசத்தில் வரும் தீமைகளை நாம் தூய்மைப்படுத்த வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

இச்சரீர இயக்கத்தில் இன்று வாழக் கூடிய காலங்களில்… உணர்வின் எண்ணத்தைப் பக்குவப்படுத்தக் கூடிய வழி முறையில்… நாம் எடுக்கக் கூடிய சுவாசத்தின் உணர்வு மற்ற எந்த உணர்வின் அலையுடன் மோதினாலும் அதைச் சீராக்க வேண்டும்.

இச்சரீரத்தில் பதிவாகக் கூடிய எண்ண அலைகளை…
1.நாம் வண்ணானிடத்தில் அழுக்குத் துணிகளைப் போடும் பொழுது
2.அழுக்கை நீக்கித் தூய்மையான துணிகளை நமக்கு எப்படித் தருகின்றானோ அதைப் போன்று
3.நம்மை எதிர்படும் தீய உணர்வுகளை நம் எண்ணத்தில் எடுத்தாலும்
4.அதை உடனே உணர்வுடன் கலக்க விடாமல் அவ்வழுக்கை நீக்கி
5.தூய்மையான அலையை இச்சரீரத்தில் பதியக் கூடிய நிலைக்குப் பக்குவமாக்கி
6.அழுக்கை நீக்கித் தூய்மையான உடையை வண்ணான் தருவதைப் போன்று
7.நம் உணர்வுடன் மோதக்கூடிய தீய அலைகளைத் தூய்மையாக்கி
8.நம் ஆத்மாவின் ஒளிக்குத் தர வேண்டும்.

இருந்தாலும் வாழ்க்கை என்னும் பொழுது உணர்வுகளில் மாற்றமில்லாத் தன்மை ஏற்படாமல் இருக்காது.

ஆகவே… வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு நொடிப் பொழுதின் உணர்வையும்
1.சரீர எண்ணத்தில் நாம் எடுக்கக்கூடிய சுவாசத்தைக் கொண்டு
2.செயலாக்கத்தக்க அணு வளர்ச்சியின் காந்த ஒளி அலையால்
3.நாம் எடுக்கக்கூடிய சாந்த நற்குணத்தின் சம அலையால்
4.உயர் காந்த மின்காந்த சக்தியால் பெறவல்ல பக்குவத்தில்
5.இவ்வாத்மாவின் ஒளியைக் கூட்டிக் கூட்டி ஆத்மாவின் வீரியத் தன்மை பெற்று
6.வாழ்க்கையில் உள்ள பொழுதும் இச்சரீரத்தை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகும்
6.தன்னைத் தானே தான் உணர்ந்து தன் வளர்ச்சியைப் பெற்றுக் கொண்டே இருக்க முடியும்…!

அப்படி வலுப் பெற்ற ஆத்ம ஒளிகள் தானப்பா… இன்று நாம் வாழும் பூமியும்… நம்மை வாழ வைக்கும் சூரியனும்… மற்ற பல கோடி ஜீவ ஒளி மண்டலங்கள் யாவையுமே…!

ஆனால் அப்படிப்பட்ட உணர்வின் எண்ணத்தின்… ஜீவ வளர்ச்சியின் உண்மையை மனிதன் உணராமல்…
1.இன்றைய மனிதனின் எண்ணம் செயல் எல்லாம்
2.தன்னுள் இருக்கும் ஆத்மாவின் உண்மையை அறியாமல்
3.உடலின் சுகத்தின் உணர்வின் உந்தலின் வாழ்க்கையிலேயே
4.தன்னைத்தானே – இச்சரீரத்தையே உண்மை என்று நம்பி அழித்துக் கொள்கின்றான்.

மனிதனுக்குக் கிடைத்துள்ள பெரும் பொக்கிஷமே இச்சரீரம் தான். இந்தப் பொக்கிஷத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்…? என்பதைத்தான் ஒவ்வொருவரும் அறிதல் வேண்டும்

அதைத் தான் தொடர்ந்து இங்கே பாடநிலையாகக் கொடுத்துக் கொண்டுள்ளேன் (ஈஸ்வரபட்டர்).

கடிந்துரைக்க எண்ணாதே…!
கடுமையின் உணர்வு உன்னையும் சுடும்

கனிந்துரைப்பாய்…!
காரியத்தின் வெற்றியைச் சுவைக்கலாம்

மனதின் மமதைக்கு மருந்துண்டால்
மங்கிடும் மமதை மறைந்தே…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக மிளகாய் காரமாக இருக்கின்றது. அந்தக் காரமான மிளகாயிலும் புழு உருவாகிறது.

அதைக் காட்டிலும் கடுமையான பூச்சி மருந்துகளை அடித்து அந்தப் புழுவைக் கொல்லும் பொழுது புழு சாகின்றது.
1.புழுவைக் கொன்ற அந்த விஷம் ஆவியாக மாறுகின்றது.
2.அந்த மிளகாய்ச் செடியில் புழுவைத் தாக்கிய இந்த விஷம் ஊடுருவுகின்றது.

அந்த மிளகாய்ச் செடியில் விளைந்த மிளகாயை நாம் உணவுப் பதார்த்தங்களில் சேர்த்தால் விஷத்தன்மை கொண்ட அணுக்கள் உருவாகி நமக்குள் “நோயாகவும்…” மாறுகின்றது.

மனிதன் விஞ்ஞானத்தால் பல விஷப் பூச்சிகளைக் கொன்றாலும் இது இந்த நிலை ஆகின்றது.

முந்தைய காலங்களில் இத்தகைய விஷப் பூச்சிகள் ஏற்பட்டால் அதை இயற்கையான முறைகளைக் கையாண்டு பூச்சிகள் உருவாகாமல் தடுத்தார்கள்.

சாணத்தை எரிக்கும் பொழுது
1.அந்த நெருப்பால் விஷம் ஒடுங்குகின்றது.
2.அப்பொழுது விஷத்தை ஒடுக்கும் உணர்வுகள் அந்தச் சாம்பலில் கலந்துவிடுகின்றது

மாட்டுச் சாணங்களைச் சாம்பலாக உருவாக்கி அந்த சாம்பலைப் பயிர்களில் தூவி விடுவார்கள். சாம்பலைத் தூவினால் பயிர்களில் உருவான இந்தப் பூச்சிகள் இந்த மணத்தைக் கண்டு மடிந்துவிடும்.

ஆனால் அதற்கு எதிர்நிலையாகப் படும்போது அதை உணவாக உட்கொண்டாலும் நல்ல அணுக்களாக மாறுகின்றது.

அந்தச் செடியில் விளைந்து வருவதை உணவாக உட்கொண்டால் நமக்கு நோயில்லாத நிலை வருகின்றது.

தாவர இனக் கழிவுகளைச் சேர்த்துக் குளங்களில் வண்டலாக மாறுகின்றது. இந்த வண்டலையும் சாணத்தையும் கலந்து வரும் போது
1.இந்த மண்களில் விஷப் புழுக்கள் உருவாவதில்லை.
2.சோளமோ மற்ற பருப்போ அதிலே போட்டோம் என்றால் புழுக்கள் அதிகமாக விழுவதில்லை.

புழுக்கள் அதிகமானாலும் சாம்பலையும் வெறும் உப்பையும் கலந்து அதிலே தூவினால் பருப்பு காய்கறிகளில் வரக்கூடிய புழுக்கள் அதனுடைய செயலாக்கங்களை இழந்து விடுகின்றது.

நெற் பயிர்களுக்கும் இதைப் போல சாம்பலும் சாப்பாட்டு உப்பையும் கலந்து தூவினால் அந்த காலங்களில் நெல் பயிரும் நன்றாக இருந்தது.

இப்போது விஞ்ஞான முறைப்படி விஷத்தைத் தூவிப் புழுவைக் கொல்கின்றார்கள்.
1.அதனுடைய முட்டையில் இந்த விஷம் பட்டு
2.இந்த விஷத்தைத் தாங்கக்கூடிய புழுவாக அடுத்து வந்துவிடும்.

அடுத்து இதே மருந்தைத் தூவினால் அந்தப் புழு சாவதில்லை.

அதே சமயம் செடிக்குள் விஷத்தன்மை கலந்து அதிலே உருவாகும் நெல் மணியிலும் அது கலந்து விடுகின்றது. கத்தரிக்காய் மற்ற எல்லாக் காய்களுக்கும் விஷ மருந்து தூவவில்லை என்றால் அவை விளைவதில்லை.

செடியில் விஷம் கலந்தபின் அதில் விளைந்த காய்கறிகளைச் சாப்பிடும்போது தூவிய விஷம் நம் இரத்த நாளங்களிலே கலந்து நம் உடலிலுள்ள அணுக்களுக்கு ஆகாரமாகச் சேர்கின்றது.

விஷத்தின் தன்மை உணவாக உட்கொள்ளும் போது இந்த மனித உடலை உருவாக்கிய நல்ல அணுக்களும் அதனுடைய செயலாக்கங்களைக் குறைக்கின்றது.

செடியில் தூவிய விஷங்கள் அனைத்தும் ஆவியாக மாறியதைச் சூரியன் எடுத்து வைத்துள்ளது.

செடியில் விளைந்ததை நாம் உணவாக உட்கொள்ளும் போது நம் உடலில் உள்ள அணுக்களுக்குள் அந்த விஷங்கள் கலந்துவிடுகின்றது.

அதன் வளர்ச்சியில் செடிக்குத் தூவிய மருந்தினைச் சூரியன் ஆவியாகக் கவர்ந்து வைத்துள்ள அந்த விஷங்களை நம் உடலில் உள்ள அணுக்கள் அது இழுக்கும். இழுக்கும் பொழுது நம் ஆன்மாவாக மாற்றும்.

நம் ஆன்மாவாக மாற்றும்போது
1.நம் நல்ல குணங்களுடன் சேர்த்து
2.அந்த விஷமான ஆவியைச் சுவாசிக்கும் போது
3.நமக்குள் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.
4.மனமும் பலவீனப்படுகின்றது.
5.சொல்லிற்குள் நயம் கெடுகின்றது.

விஷம் கலந்த உணர்வுகளை நாம் கலந்தால் எப்படி “ஆ…” என்று அலறுகின்றோமோ இதைப் போல நாம் நுகர்ந்த உணர்வுகள் சொல்லாக வெளிப்படும் போது ஒருவர் செவிகளில் கேட்டபின் அந்த உணர்வுகளை அவர் நுகரும் போது அவரை “உணர்ச்சிவசப்படும்படிச் செய்கின்றது”.

1.நன்மையின் தன்மையை நீங்கள் சொன்னாலும்
2.சிந்திக்கும் தன்மைகளுக்கு மாறாக
3.வெறுப்பின் தன்மை உருவாக்கும் நிலையே
4.இந்த விஞ்ஞான அறிவால் வருகின்றது.

பண்டைய காலங்களில் எல்லாம் மனிதனுக்குகந்த நிலைகள் கொண்டு காட்டிற்குள் விளைந்த பல பயிரினங்களைச் சேர்த்துத்தான் நெல்லாகவும் மற்ற மற்ற தானியங்களாகவும் உருவாக்கினார்கள்.

பயிரினங்களில் பூச்சிகள் விழாது தடுப்பதற்காக மற்ற தாவர இனங்களை இது உரங்களாக இட்டார்கள். அப்படி இடப்படும் போது இந்த உரங்கள் தாவர இன சத்தைக் கொல்லும் பூச்சிகளை வளரவிடாது தடுக்கின்றது

அந்த மெய்ஞான வழியில் உருவாக்கிய நிலைகள் தான் இவைகள்.

விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்திருந்தாலும் அன்று வாழ்ந்த மெய் ஞானிகளின் உணர்வை அறியாது செயல்படும் பொழுது மனிதனின் சிந்தனையைக் குறைக்கும் நிலைக்கும் அழிக்கும் நிலைக்குத்தான் கொண்டு செல்கிறது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தோஷம்

 

கோடிப் பணம் சம்பாதித்து விட்டோம் என்றால் “நிம்மதியாக இருந்து விடலாம்…” என்று நினைப்பார்கள்.

அவ்வாறு நிம்மதியாக இருக்கும் போது இவர் மிகவும் “நல்லவர்.. என் சொந்தக்காரர்…” என்று எல்லாம் சொல்லிக் கொண்டு நம்மைத் தேடி வருவார்கள்.

என் பையன் சேட்டை செய்கிறான் என்று சொல்வார்கள். பக்கத்தில் இருக்கும் வீட்டுக்காரன் சதா தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறான். நீங்கள் தான் நிவர்த்தி செய்து தர வேண்டும் என்பார்கள்.

இவர் கேட்பார். உடனே அதே உணர்வு இங்கு வரும். இவர் மேலே பாசமாக இருந்து அதையெல்லாம் எடுத்துக் கொள்வார்.

முதலில் இவர் அமைதியாக இருந்தார். செல்வம் எல்லாம் தேடி வந்தது. சம்பாரித்தார்…, நன்றாக இருக்கின்றார்.

இவர் நன்றாக இருப்பதைப் பார்த்து மற்றவர்கள் வந்து அவரவர் கஷ்டங்களையும் எல்லாம் சொல்ல ஆரம்பிக்கின்றார்கள்.

ஏனென்றால் இவர் மற்றவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கிறார். அவர்களுக்கு வேண்டிய உதவியும் செய்தார். அப்புறம் என்ன நடக்கின்றது?

உடலில் இல்லாத வலியெல்லாம் வரும்.
இடுப்பு வலிக்கிறது…
மேல் வலிக்கின்றது…
தலை வலிக்கின்றது…
சர்க்கரைச் சத்து வந்து விட்டது…
இரத்தக் கொதிப்பு வந்து விட்டது என்பார்கள்.

ஏனென்றால் தன்னை நாடி வருபவர்கள் சொல்வதை எல்லாம் இவர் கேட்பார். நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை – இது இந்த மாதிரி வந்துவிடும்.
1.நாம் சுவாசித்த உணர்வுகள் உயிரிலே படுவது நந்தீஸ்வரன்.
2.சிவனான இந்த உடலில் அந்தக் கணக்குள் கூடுகின்றது.

தவறே செய்யவில்லை. உதவி கேட்டு வருகின்றனர். அவர்கள் கஷ்டத்தைச் சொல்கிறார்கள்.

நல்ல மனதுடன் இவர் கேட்கிறார். நுகருகின்றார். உமிழ்நீராக மாறுகின்றது. சாப்பாட்டில் கலக்கிறது. நுரையீரலுக்குப் போகின்றது. கல்லீரலுக்குப் போகின்றது. கிட்னிக்குப் போகின்றது. இருதயத்திற்கு வருகின்றது.

1.பின்னர் இருதயம் பட…படா.. பட…படா… என்று வரும்.
2.அத்தனை பேருடைய கஷ்டத்தையெல்லாம் கேட்டு
3.அதற்குப் பஞ்சாயத்து செய்வதற்குப் போனார்.
4.இந்த உணர்வு பட…படா… என்று வரும்.

கடைசியில் இந்த மாதிரி ஆனவுடனே “சீனி சாப்பிடாதே…, காரத்தைச் சாப்பிடாதே… உப்பைச் சாப்பிடாதே… எண்ணெயைச் சாப்பிடாதே…” என்று டாக்டர்கள் சிபாரிசு செய்வார்கள்.

அவர் தவறு செய்யவில்லை.
1.செல்வம் இருக்கிறது.
2.ஆனால் அமைதி இருக்கின்றதோ…?

நாம் சுவாசித்த பிறருடைய உணர்வுகள் இவ்வாறு தோஷமாக வந்து விடுகின்றது. அதைத் தான் நந்தீஸ்வரா…! என்று காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

நந்தீஸ்வரன் (சுவாசிப்பது)) என்றால்
1.நாம் ஒவ்வோரு நொடியிலும் சுவாசிப்பதை உயிரான ஈசன் உருவாக்கும்.
2.நம் உடலுக்குள் போனவுடன் அதே குணத்தை உருவாக்கும்.

நந்தீஸ்வரன் எதுவாக இருக்க வேண்டுமென்றால்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று நந்தி நமக்குள் சென்று அவன் எப்படித் தீமைகளை நீக்கினானோ அதைப் போல நாமும் நமக்குள் தீமைகளை நீக்க வேண்டும்.

அப்படி நீக்குவதற்கு நாம் எப்படிச் சுவாசிக்க வேண்டும்…?

காலை நான்கு மணிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி… உயிரான ஈசனிடம் நினைவினைச் செலுத்தி…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
2.எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று
3.நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு இப்படிச் சாப்பாடு கொடுக்க வேண்டும்.

அப்பொழுது நம் உடலில் உள்ள அணுக்கள் எல்லாம் உற்சாகம் அடையும். நோயாக மாற்றாது… பகைமையை உருவாக்காது… ஏகாந்தமான உணர்ச்சிகள் வரும்.

இதுதான் தோஷத்தைக் கழிக்கும் முறை…!

இந்தப் பிறவியே கடைசியாக இருக்கட்டும்…! – ஈஸ்வரபட்டர்

 

இச்சரீரத்தில் நாம் பெற்றுள்ள அமிலத்தின் தன்மைக்கும் இப்பூமியைச் சுற்றியுள்ள நட்சத்திரக் கோள்களின் அமிலத்தின் தன்மைக்கும் தொடர்புண்டு.

சுவை ஏழு… வண்ணம் ஏழு… நாதம் ஏழு… மணம் ஏழு… என்ற நிலையில் இந்த பூமியின் தொடர்பு நிலை மையத்தின் விகித நிலைகள் பலவாக மாறுபட்டாலும்… ஒன்றின் தொடர்பு கொண்ட வீரியத் தொடர்பில்.. பல மாற்றத்துடன் ஒவ்வொன்றும் ஜீவன் பெறுகின்றது.

ஜீவிதத்தின் தொடர்பில் ஒன்றிலிருந்து ஒன்று மாற்றப்படும் அமிலக் கலவையின் கூட்டு விகிதத்தில் செயல் தன்மை பலவாக மாறு கொள்கின்றது.

1.நொடிக்கு நொடி மாறுகொள்ளும் உணர்வின் செயல் வட்டத்தில்
2.இச்சரீரத்தின் எண்ணத்தை எப்படிப் பக்குவப்படுத்தல் வேண்டும்…? என்ற ஞானத்தைத்தான்
3.நாம் உயர் ஞானமாக்கும் வழிமுறைக்குச் செயல்படல் வேண்டும்.

நாம் வாழக் கூடிய வீட்டிற்கு முன் கதவு வைத்து நமக்குப் பாதுகாப்பிற்கான செயலுடன் வீடு கட்டிக் கொள்கின்றோம். வெளி உலகத் தொடர்பிற்கு நாம் வீட்டின் முன் கதவைத் திறந்துதான் வெளியே செயலுக்குச் செல்கின்றோம்.

உண்ண உறங்க இச்சரீரத்தின் பாதுகாப்பிற்கு வீட்டை அமைத்துக் கொள்கின்றோம். வெளி உலகத்திற்கும் வீட்டிற்கும் எப்படி முன் கதவு இருக்கின்றதோ அதைப் போன்று
1.சரீரம் என்பது நம் ஆத்மாவிற்கு வீட்டைப் போன்றது.
2.இவ்வீட்டிற்குள்ளே ஆத்மா குடியிருக்கக்கூடிய செயலானது
3.ஆத்மாவினுடைய வளர்ச்சியின் செயலுக்கான எண்ணத்தை வீட்டின் கதவைப் போன்று
4.வெளி உலகத்திற்கும் வீட்டிற்கும் எப்படிக் கதவை வைத்துப் பாதுகாப்பு அமைத்துக் கொண்டுள்ளோமோ
5.இக்கதவு என்ற எண்ணத்தைப் பாதுகாப்பின் செயலுக்காக நாம் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

இச்சரீரத்தின் உணர்வின் எண்ணத்தைக் கொண்டுதான்…
1.ஆத்மாவின் ஒளியைப் பிறவா நிலை என்ற
2.ஜோதி நிலைக்குச் செயல்படுத்திடல் முடியும்.

நிலைக் கண்ணாடியில் நம் பிம்பத்தைப் பார்க்கும் பொழுது நம்மைச் சுற்றியுள்ள பொருளையும்… நம் உருவத்தையும் எதிர்படுத்திக் காட்டுகின்றது

அதுவே இரசம் பூசப்படாத கண்ணாடியில் பார்க்கும் பொழுது வெளி உலகைத்தான் பார்க்க முடிகின்றது. நம் உருவமோ நம்மைச் சுற்றியுள்ள நிலையோ எதிர்படுத்தி இரசம் பூசாத கண்ணாடியில் பார்க்க முடிவதில்லை.

1.அதைப் போன்று இச்சரீரமென்பது நம் ஆத்மாவிற்கு இரசம் பூசப்பட்ட கண்ணாடியைப் போன்றது.
2.ஜீவனற்ற ஆத்மாவின் நிலை இரசம் பூசப்படாத கண்ணாடியைப் போன்றது.

தன் பிம்பத்தைத் தானேக் கண்டு… தன்னைச் சுற்றியுள்ள பொருளும் கண்ணாடியில் தெரிவதைப் போன்று… ஆத்மாவின் இயக்கத்தின் செயல் இச்சரீர ஜீவனில் வாழக்கூடிய செயலில்…
1.தன்னைத்தானே உணர்ந்து வளரும் வலுவிற்கு வலுக் கூட்டக் கூடியது
2.இச்சரீரத்தின் இயக்கமுடன் கூடிய ஆத்மாவின் வாழ்க்கை…!

உடலை விட்டு ஆத்மா பிரிந்து விட்டதென்றால் அவ்வாத்மாவிற்கு ஊடுருவிப் பார்க்கும் கண்ணாடியைப் போன்று எதிர் நிலையைத்தான் உணர முடியுமே தவிர “தன் ஆத்மாவை வளர்த்துக் கொள்ள முடியாது…”

ஆகவே இதைத் தெளிவாக உணர்ந்து கொண்டு
1.இப்போழுது இருக்கும் இந்த உடலையே கடைசி உடலாக எண்ணி…
2.உயர் ஞானத்தை இச்சரீரத்தில் விளைவித்து…
3.ஆத்மாவைப் பேரொளியாக ஆக்கி…
4.மகரிஷிகள் வாழும் இடம் செல்ல வேண்டும்.
5.அழியா ஜோதி நிலை பெற வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இருதயத்தில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை வலு ஏற்றி “நம் மன பலத்தைக் கூட்டிச் சிந்தித்துச் செயல்படும் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளும் வழி”

இந்த வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று மனதைத் தெளிவாக்கிக் கொள்ல வேண்டும்.

அந்த அருளைப் பெருக்கி இருளை அகற்றி நம்மை அறியாது வரும் தீமைகளைப் “பற்றற்றதாக…” மாற்றி
1.அருள் மகரிஷிகளின் உணர்வைப் பற்றுடன் பற்றி
2.அன்புடனும் பண்புடனும் பரிவுடனும் ஒன்றி வாழும்
3.அருள் குடும்பமாக நாம் மாற்றியாக வேண்டும்.

நம் குடும்பம் கூட்டுக் குடும்பமாக இருந்து பின் நாம் தனித்து நிற்க வேண்டிய சூழல் இருந்தாலும் பண்புடன் வழிகாட்டி பண்புடன் அரவணைத்து அன்புடன் அரவணைத்து வாழ வேண்டும்.

தனிக் குடும்பமாகச் சென்றாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கூட்டும் பொழுது அரவணைத்து வாழும் சக்தியை நாம் பெறமுடிகின்றது.

இதே போல உங்கள் வாழ்க்கையில் குடும்பத்தில் கஷ்டமானாலும் தொழிலில் நஷ்டம் என்றாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

எங்கள் இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று இருதயத்தில் வலுவேற்றிக் கொள்ள வேண்டும்.

அப்போது சிறிது நேரத்திலேயே நல்ல சிந்தனை வருகின்றது. ஏனென்றால்
1.உடலிலுள்ள எல்லா உறுப்புக்களுக்கும் எல்லா உணர்வுகளுக்கும்
2.உந்தித் தள்ளும் அந்த உணர்ச்சிகள்
3.இருதயத்திலிருந்து தான் (இரத்தத்தின் வழி) செல்லுகின்றது.

இருதயத்திலிருந்து உங்கள் உடல் முழுவதும் படரப்படும் பொழுது சிறு மூளையின் பாகத்திற்குச் சென்ற பின் சிந்திக்கும் ஆற்றலைக் கொடுக்கின்றது.

1.எதைச் செய்தால்… எது நல்லது…?
2.எப்படி இருந்தால் நமது வாழ்க்கையில் நல்லதாக இருக்கும்…?
என்று சிந்திக்கும் ஆற்றல் வருகின்றது.

அந்த அருள் உணர்வைப் பெருக்கும் பொழுது தீமைகளை நீக்கி நல் உணர்வைப் பெறும் ஞானம் சாந்தம் விவேகம் என்ற உணர்வுகள் நமக்குள் ஊடுருவிச் சென்று
1.நம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்த இது உதவும்.
2.வேறு யாரும் சொல்லி நம் வாழ்க்கையைச் சீர்படுத்த முடியாது.

ஆகவே உங்களுக்குள் வரும் உணர்வுகளைத் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெற்று இந்தத் தியான முறைப்படிச் செய்து வந்தீர்கள் என்றால் உங்களுக்குள் அருள் ஞானம் பெற்று இருளை அகற்றி மெய்ப் பொருளை காணும் திறன் நீங்கள் பெறமுடியும்.

இல்லை என்றால் உங்களுக்குள் வெறுப்பு வேதனை என்று ஆகி அதற்குத் தகுந்த உங்களுடைய சொல்லும் செயலும் செயல்படத் துவங்கி விடுகின்றது.

பிறிதொருவர் உங்களிடம் நல்லதைச் சொன்னாலும் ஏற்காதபடி இந்த நியாயத்தைத் தான் பேசுவீர்களே தவிர
1.பண்பை ஏற்றுக் கொள்ளும் தன்மையோ
2.பண்பை வளர்த்துக் கொள்ளும் நிலைகளோ
3.வரக்கூடிய தீமைகளை அகற்றக் கூடிய நிலைகளோ
4.நமக்குள் வருவது மிகவும் சிரமம்.

பரமாத்மாவிற்கு நாம் செய்ய வேண்டிய சேவை

 

நம் பூமியில் எங்கெங்கே எந்தெந்த ஊர்களில் பயமும் அதிகமான வெறுப்பும் வேதனையும் கொதிப்பும் கொண்டு அந்த உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்களோ
1.இவை அனைத்துமே மேக மண்டலங்களில் கலக்கின்றது.
2.மழை நீராகப் பெய்யும் பொழுது கடும் நோயாகவே மாற்றுகின்றது.

இது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் இன்று விஞ்ஞான அறிவு கொண்டு எத்தனையோ புதிது புதிதாக உருவாக்குகின்றார்கள்… படைக்கின்றார்கள். அதில் உள்ள தீமைகளை அகற்றுகின்றார்கள். ஆனாலும்
1.அதிலே நஞ்சினைக் கலக்கின்றான்
2.தீமைகளை அகற்றுவதற்காக இத்தகைய நிலையைச் செயல்படுத்துகின்றான்.
3.தீமையை நீக்கிய அந்த நஞ்சின் உணர்வுகளைச் சூரியன் ஆவியாக மாற்றுகின்றது
4.மேகக் கூட்டங்களில் கலக்கின்றது… மழை நீருடன் கலக்கின்றது.
5.விஷத்தன்மைகளை உலகெங்கிலும் பரப்புகின்றது.

உலக மக்களுடன் நாம் அன்றாடம் பழகுகின்றோம்… உலகத் தொடர்பும் கொண்டுள்ளோம். அதன் மூலம் விஞ்ஞான அறிவால் உலகெங்கிலும் நடக்கக்கூடிய சம்பவங்களை ஒரு நொடிக்குள் நாம் காண நேருகின்றது.

எல்லாவற்றையும் படமாக்கி டி.வி. பத்திரிக்கை மூலம் ஒலி ஒளி என்ற அலைகளைப் பரப்புகின்றனர்.
1.அந்த ஒலிகள் நம் செவிகளில் படுகின்றது… உணர்ச்சிகள் தூண்டப்படுகிறது
2.தூண்டியவுடன் கண்ணின் நினைவாற்றலை அங்கே செலுத்துகின்றோம்… அந்த அசம்பாவிதங்களைக் கண் கவர்கின்றது…
3.கவர்ந்த்தை மூக்கின் வழியே நாம் சுவாசிக்கின்றோம்… உயிருடன் இணைக்கப்படுகின்றது… உணர்வின் அறிவாக அறிகின்றோம்.

அதன் உணர்வாக நமது உயிர் “ஓம் நமச்சிவாய…” என்று நம் உடலாக மாற்றி விடுகின்றது. உடலுக்குள் அணுவாக்கி விட்டால் நாம் எதை வேடிக்கை பார்த்தோமா… எதை ரசித்தோமோ… அங்கே நடக்கும் அசம்பாவிதங்களைப் பார்த்தவுடன் அந்த உணர்வின் கருவாக இங்கே உருவாகி அதன் உணர்வாகவே நம்மை இயக்கத் தொடங்கி விடுகின்றது.

உலகில் எங்கெங்கு சிதைந்திடும் நிலையாகிப் போர்க்களங்கள் ஆகி மடியச் செய்யும் உணர்வுகள் பெற்றதோ அதை எல்லாம் நுகர்கின்றோம்.
1.அங்கே மடிகின்றான் என்று உணர்கின்றோம்
2.இதே உணர்வு நமக்குள் வரும் போது நமக்குள் இருக்கும் நல்ல உணர்வுகளை அது மடியச் செய்கின்றது
3.மனிதனை மடியச் செய்யும் உணவுகளை வளர்க்கின்றது.

நுகர்ந்த உணர்வுகள் எதிரி என்று ஆகிறது. நன்மைகளை இழக்கச் செய்கிறது… பகைமையை வளர்க்கின்றது.

அதை எல்லாம் செயலற்றதாக ஆக்குவதற்குத்தான் நமது குரு காட்டிய வழியில் கல்யாணராமா…!
1.நம் எண்ணங்கள் உணர்வுகளை ஒன்றாக்கிப் பகைமை என்ற காண்டீபத்தை ஒடித்துவிட்டு
2.அன்பென்ற அரவணைக்கும் சக்தியை வளர்த்து உயர்ந்த நிலைபெறச் செய்வதற்கு இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

யாம் உபதேச வாயிலாகக் கொடுக்கும் இந்த அருள் உணர்வுகளைக் கூட்டமைப்பாக எடுத்து நீங்கள் ஒவ்வொருவரும் அந்த ஞானிகளின் உணர்வுகளை மூச்சலைகளாக வெளிவிடும் போது சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்கின்றது. அந்த அருள் உணர்வுகள் மேகங்களில் கலக்கப்படுகின்றது.

மேகக் கூட்டங்களில் இந்த உணர்வுகள் பரவப்படும் போது
1.உலக மக்கள் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவருடனும் பற்று கொள்கின்றோம்
2.நமக்குள் அந்த அருள் பாசத்தை வளர்த்துக் கொள்கின்றோம்.

எதை வைத்து…?

இந்தப் பேரானந்தத்தைப் பேரின்பத்தை எல்லோரும் அனுபவிக்க வேண்டும் என்று செலுத்தப்படும் போது அதே உணர்வின் தன்மை பேரின்பம் பெறும் உணர்வின் தன்மையை நமக்குள் வளர்க்கின்றது.

இத்தகைய உணர்வினை நாம் வளர்த்துக் கொண்டால் அந்த மூச்சலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது.
1.பரமான நம் பூமியின் எல்லையில் “பரமாத்மாவாக…” மாறுகின்றது.
2.பூமியில் வாழும் மக்கள் அனைவரும் இந்த பரமாத்மாவிலிருந்து அந்த அருள் உணர்வுகளைச் சுவாசிக்கும் போது அவருடைய “ஆன்மாவாக…” அது மாறுகிறது.
3.அப்போது அருள் உணர்வுகளை அங்கே இயக்கி… பேரின்பம் பெறும் உணர்வின் தன்மை அவர்கள் “ஜீவான்மாவாக…” மாறுகின்றது.

ஜீவாத்மாவாக மாறும் பொழுது பகைமையற்ற உணர்வுகளையும்… மகிழ்ந்து வாழ்ந்திடும் உணர்வுகளையும்… ஒன்றுபட்டு வாழும் உணர்வுகளையும்… அணுக்களாக மாற்றப்படும் பொழுது அது அவர்களின் “உயிரான்மாவாக…” மாறுகின்றது.
1.உயிருடன் ஒன்றி உணர்வினை ஒளியாக மாற்றும் தன்மையும்
2.பிறவியில்லா நிலை என்ற நிலையையும் அடைகின்றனர்.

ஆகவே நமது எண்ணங்கள் எவ்வாறோ அதன் வழியே அது நடக்கின்றது. அது தான் கீதையிலே நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்.

தெய்வ சக்தி பெற்ற மனித உயிராத்மாக்கள் தான் படைக்கப்படும் படைப்பிற்குத் தேவை – ஈஸ்வரபட்டர்

 

1.சிவனான ஆண் குண வலுவைக் கொண்டு
2.சக்தியான பெண் உணர்வின் எண்ண அமில ஈர்ப்பின் ஜீவித தொடர்பால்
3.இரண்டு ஆத்மாக்களின் ஈர்ப்பு வட்டம் ஒன்றின் தொடர்பு கொண்டு எடுக்கப்படும் தியான அலையின் வலுவைக் கூட்டக் கூட்ட
4.அவ்வலுவின் வளர்ச்சியால் ஆத்ம ஐக்கிய உணர்வு சரீர வாழ்க்கை பந்தத் தொடர்பில்
5.ஒரே எண்ண குண தொடர்பின் சுழற்சியில் வளர வேண்டும்.

ஏனென்றால் அப்படிப்பட்ட உயர் நிலையில் வளர்ச்சிக்கு வரும் இந்த மனித சக்திகளால் தான் ஒவ்வொரு கோள்களாகவும்.. ஒளி சக்தி கொண்டு ஒளிரும் சக்தியாகவும்… நம் பூமியில் சூரியனின் ஒளி அலைகள் வீசத்தக்க ஈர்ப்பின் தொடர் கொண்டு வளர்ந்துள்ள இயற்கை வள கனி வளங்களும் தாவர இனங்களும் உருவக அமைப்பின் தன்மையும் எல்லாமே உருப்பெற்று உள்ளன.

இன்று ஓர் பலூனை ஊதும் பொழுது… எந்த வடிவ அமைப்பில் அது உள்ளதோ… எந்த அளவுக்குக் காற்றின் அழுத்தத்தைச் சேமித்து உப்பக்கூடிய நிலை அதற்குள் இருக்கின்றதோ… அதனுடைய வடிவை அது பெறுகிறது. அதிகப்படும் பொழுது பலூன் வெடித்து விடுகின்றது.

அதைப் போன்று தான் உயிரணுவின் தோற்றத்தின் உருவ நிலைகள் யாவுமே…! மரம் செடி கொடிகள் மற்ற இன வர்க்கங்கள் ஒவ்வொன்றுமே
1.அதனதன் ஆத்ம அமிலச் சேர்க்கையின் நிலைக்கொப்ப
2.உயிர் பெறும் உருவக அமைப்பில் இப்பூமியின் காற்றழுத்த ஈர்ப்பின் வளர்ச்சி கொண்டு வளரும் தன்மை பெறுகிறது.
3.ஆனால் இது பிற கோள்களின் நிலையில் மாறுபடுகின்றது.

மனித உயிர் ஆத்மாவின் அமிலக் கூறின் உயிர் பெற்று ஜீவ வளர்ச்சியின் பருவக்காலம் வரை சேமிப்பின் அமில உருவக நிலை வளர்ந்தாலும் உருவ வளரச்சி நிலை பருவ காலத்திற்குப் பின் உயரும் நிலை தடைப்பட்டு விடுகின்றது.

இப்பூமியின் எந்தெந்த இடங்களில்… எக்காற்றின் அலைத் தொடர்பில் ஜீவன் பெறுகின்றதோ… அதற்கொப்பத்தான் அங்கங்குள்ள மனித இனங்களும்… மற்ற தாவரங்களும்… பிராணிகளும் உருவகம் பெறுகின்றது.

ஏறக்குறைய இப்பூமியின் அமைப்பின் சுழற்சியிலேயே சிறிது சிறிது மாற்றங்களுடன் உருவக வளர்ச்சி நிலைகள் யாவையும் வளர்கின்றன.

சில அபூர்வமாக உயரமாக வளரக்கூடிய தன்மைகள் மட்டும் அமிலத்தின் சேர்க்கை விகித நிலைக்கொப்பக் கூடியும் குறைந்தும் வளர்கின்றது.

இன்று நம் பூமியின் தன்மைக்கும் மற்றக் கோள்களின் தன்மையும் மாறுபாடான நிலை தான் உண்டு. உதாரணமாக சனி கிரகத்தில் மனித ஜீவனின் உணர்வின் எண்ணம் கொண்டு வாழக்கூடிய தன்மைக்கு சனிக் கோளின் அமைப்பு நிலை மாறுபட்ட தன்மையாக உள்ளது.

ஜீவனுள்ள உயிர் அணுக்கள் அங்கு வளர்ந்தாலும் இங்கு எப்படி கல் மண் மேல் படிந்துள்ள பாசி போன்று அங்கங்கு உள்ள ஜீவ வளர்ச்சி நிலையில் உள்ளது போல் தான் உண்டு. நம் பூமியில் உள்ளது போல் அவைகள் நகரும் தன்மையோ நடந்து பறக்கும் நிலை போன்று அங்கில்லை.

ஓர் ஜீவ உயிர் சனியில் பிறந்ததென்றால் அப்பூமியின் பிடிப்பில் ஒன்றியே பிறப்பெடுத்து இறுகிய நத்தைக்கும் மற்றச் சில பிராணிகளுக்கும் இருப்பதைப் போன்று கெட்டியான ஓடுகளுடன் பிறப்பெடுத்து அப்பிறப்பின் இறப்பிலேயே மாறும் தன்மையும் உள்ளது.

சனிக்கோள் அதி குளிரின் ஈர்ப்புப் பிடிப்பிற்கொப்ப சுழல்வதால் பிற கோள்களின் சந்திப்புச் செயல்நிலை இருந்தாலும் உஷ்ண அலையின் சமைப்பு நிலைக்கு நம் பூமியின் தன்மை போன்ற நிலை இல்லாததினால் மனிதர்கள் யாரும் அக்கோளில் பிறப்பெடுக்க முடியாது.

நம் பூமியிலிருந்து பார்த்தால் சந்திரனின் பௌர்ணமி நிலவு தெரிவதைப் போன்று தான்… சனியைச் சுற்றியுள்ள பன்னிரண்டு கோள்களின் நிலையிலும்… சனிக்கோளின் சுழற்சி சந்திப்பிற்கொப்ப இங்கெப்படி அமாவாசை பௌர்ணமி என்று ஒரு சந்திரனின் தொடர்பில் அறிவது போன்ற நிலை உண்டு.

சனிக் கோளின் தொடர்பு கொண்ட பன்னிரண்டு கோள்களும் அவை எடுத்து வெளிக் கக்கும் அலை அமில நிலைக்கொப்ப சனியின் சுழற்சி ஓட்டமும் பூமியைக் காட்டிலும் குறைவான நிலையிலும்
1.இரவில் சந்திர ஒளியின் வெளிச்ச அலையை எப்படி நாம் இங்கு காண்கின்றோமோ அதற்கொப்ப
2.குளிர்ச்சியில்… சனிக்கோளும் சனிக்கோளின் உப கோள்களும் மிகவும் ரம்மியமாய் செயல்படக் கூடிய நிலையில்
3.நம் சூரியக் குடும்பத்தில் ஜீவனைத் தரக்கூடிய மையமாக உள்ளது
4.சனியின் தொடர்பு நமக்குக் கிட்டும் வலுவில்தான் நம்முடைய ஜீவ நாடியே உள்ளது

சனிக் கோள் நம் சூரியக் குடும்பத்தின் ஜீவனான நீர் சக்திக்கே மிகவும் முதன்மையானது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று ஜோசியம் ஜாதகம் என்ற நிலையில் நீங்கள் வேண்டி விரும்பிப் பார்க்கிறீர்கள். அதில் இருக்கும் உண்மைகளை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு சமயம் யாம் (ஞானகுரு) சுற்றுப் பயணம் வந்து கொண்டிருக்கும் போது நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். நம்மிடம் அவர் பழகியிருந்தார்.

அவரிடம் சினிமா தியேட்டர் ஒன்று உண்டு. அவர் குடும்பத்தில் அதாவது ஏறுசிங் இறங்குசிங் என்ற நிலையில் விவசாயம் செய்து கொண்டிருந்தால் பயிர் நன்றாக விளைச்சலாகி வரும். பின் சில சமயங்களில் அதில் ஒன்றுமே விளைந்திருக்காது.

சினிமா தியேட்டர்… ரைஸ் மில்… என்று எத்தனையோ வைத்திருந்தார். அவை அனைத்தும் ஓடும். ஆனால் காசு இருக்காது. மூடியே கிடந்தது.

இப்படி அவர் முயற்சி எடுத்து எத்தனையோ செய்து பார்த்திருக்கிறார்… முடியவில்லை.

அப்போது யாம் கொல்லூர் மூகாம்பிகையில் தியானம் இருந்தோம். மூகாம்பிகாவைக் கடந்து குடசாஸ்திரி என்று ஒன்று உண்டு. அங்கே மேலே தபோவனம் உண்டு.

அங்கே ஐந்து ஆறு வருடம் இருந்தேன்.

இங்கே அடிக்கடி வந்து சென்றாலும் அங்கே சென்று தியானத்தை மேற்கொள்வது. ஆதிசங்கரரின் இயக்கம் கோலமாமகரிஷி அவர் பெற்ற நிலையும் அந்த உணர்வின் தன்மை அறிவதற்காக இந்தத் தியானத்தை அங்கே மேற்கொண்டேன். கோலமாமகரிஷி பெற்ற உணர்வுகளை அறிவதற்கு இந்தத் தவத்தை மேற்கொண்டது.

இந்த நண்பர் தன் தியேட்டர் ஓடாததையும் விளைச்சல் இல்லாததையும் பற்றி என்னிடம் வந்து விபரம் கேட்டார்.

அதற்கு நீங்கள் இந்த மாதிரிச் செய்யுங்கள் என்று நான் சில விபரங்களைச் சொன்னேன்.

அதன் பின் அவர் வீடுகளில் புதைத்து வைத்திருந்த சில யந்திரங்கள் தகடுகள் எல்லாம் வெளி வந்திருக்கின்றது. வந்த பின் எனக்குத் தபால் எழுதியிருந்தார்.

எல்லாமே எடுத்துவிட்டோம். தன்னாலேயே அது எப்படி வந்தது…? என்று தெரியவில்லை.. எனக்கு அந்த உணர்வு தோன்றியது. அதை வைத்து எல்லாவற்றையும் எடுத்து விட்டேன் என்று கூறினார்.

மறுபடி தீபாவளி அன்று சினிமா தியேட்டரில் படம் ஓட்டப் போகின்றேன். அந்தச் சமயம் “சாமிகள்” நீங்கள் வர வேண்டும் என்று எனக்குத் தகவல் கொடுத்திருந்தார்.

மூகாம்பிகாவிலிருந்து பண்ணாரி வந்து அங்கே இருந்தேன்.

“என்ன நடக்கின்றது…!” என்று பார்த்துவிட்டுத் தீபாவளி அன்று மதியம் இரண்டு மணிக்கு நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.

இங்கே படம் ஓட்டுகிறார்கள். படம் ஓட்டினால் சத்தம் இல்லை. சத்தம் வந்தால் படம் தெரியவில்லை. டிக்கெட் எல்லோருக்கும் கொடுத்திருக்கின்றார்கள். ஆனால் படம் ஓட மாட்டேன் என்கிறது.

இருக்கிறவர்கள் பொறுமை இழந்து தியேட்டரே அல்லாடிக் கொண்டிருக்கின்றது. காசைக் கொடு என்று இந்த மாதிரி சூழ்நிலைகள் அங்கு வந்துவிட்டது.

அப்பொழுது நான் அங்கே வருகின்றேன்,

“சாமி வருவார்…! வந்தால் தியேட்டருக்குள் உள்ளே விட்டுவிடுங்கள்…” என்று அவர் ஏற்கனவே சொல்லி வைத்திருக்கின்றார்.

நான் தியேட்டருக்குள் போய் உட்கார்ந்தேன். உட்கார்ந்த உடனே படம் பாட்டுக்கு தாராளமாக ஓடுகிறது.

நன்றாக ஓடியவுடனே விழுந்தடித்து ஓடி வந்தார். யாராவது வந்தார்களா…?

ஆமாம்…! சாமி உள்ளே உட்கார்ந்து இருக்கிறார்… என்று சொல்கிறார்கள்.

அப்புறம் உள்ளுக்குள் வந்தார். படம் முழுவதும் ஓடி முடியும் வரையில் கூடவே இருந்தார்.

இந்த நண்பர் ஏற்கனவே இந்த ஜோசியம் ஜாதகம் எல்லாம் பார்த்து அடிக்கடி பதிவு செய்து கொண்டவர்,

இவர் நட்சத்திரம்… இவர் பெயர்… இவர் பூர்வ புண்ணியம்… இவர் எந்த எந்த வழி…? என்கிற வழியில் சொல்லால் அங்கே ஜாதகம் பார்க்கிறவரிடம் பதிவு செய்திருக்கிறார்.

தியேட்டர் வைத்திருக்கின்றார். ஆனால் இவருக்கு ஆகாதவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள்…?

இவருக்கு ஆகாதவர்கள் அந்த ஜாதகம் பார்ப்பவரிடம் குறிப்பை எடுத்துக் கொண்டு இவருக்கு “எந்த வகையில் கெடுதல் செய்வது…? என்று பார்க்கின்றார்கள்.

அந்த ஜோசியக்காரர் என்ன செய்கிறார்…?

காசை வாங்கிக் கொண்டு இவருடைய தியேட்டரைச் சூனியமாக்கி விவசாயத்தை நாஸ்தியாக்கும் நிலைக்குச் சூனியம் ஏவல் செய்து வைத்துவிட்டார்.

அதற்காக அந்த ஜோசியக்காரருக்கு நிறையக் காசு கிடைக்கிறது.

ஆனாலும் அந்த ஜோதிடக்காரர் ஜாதகம் பார்ப்பதில் பேரும் புகழும் கொண்டவர். குட்டிச் சாத்தானை வைத்துக் கொண்டு நீங்கள் நினைப்பதை எல்லாம் சொல்வார்.

ஆகையினால் பெரிய ஜோதிடக்காரர் ஆகி விடுகிறார்.

ஜோதிடம் ஜாதகம் எல்லாம் நன்றாகப் பார்க்கிறார்… நன்றாகத் தெளிவாகச் சொல்கிறார்…! என்று தேடி வருகின்றார்கள்.

குட்டிச் சாத்தானையும் கருவித்தைகளையும் வைத்து ஜாதகம் பார்ப்பதில் இப்படியெல்லாம் சில வேலைகள் செய்கிறார். அந்தக் கருவித்தைகளைப் பார்த்து வருபவர்களுடைய ஜாதகங்களைப் பார்ப்பது. அதன் வழியில் அவர்களுக்கு எல்லாம் சொல்கிறார்.

இதை நான் (ஞானகுரு) அனுபவத்தில் உங்களிடம் சொல்கிறேன்.

ஏனென்றால்
1.ஜாதகம் பார்ப்பதால் எத்தனையோ பேர் கெட்டிருக்கின்றார்கள்.
2.ஜாதகங்கள் பார்த்து எத்தனையோ குடும்பங்கள் எல்லாவற்றையும் தொலைத்திருக்கின்றார்கள்.
3.அந்த நம்பிக்கையினால் எத்தனையோ பேர் தன்னை இழந்து அவதிப்பட்டிருக்கின்றார்கள்.
4.அவரவர்கள் அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்.
5.ஆயிரத்தில் ஒன்று இரண்டு தான் தப்பித் தவறி நல்லதாக நடந்திருக்கும்.

ஜாதகக்காரரும் என்னுடைய இந்த நண்பர் வீட்டிற்கு அங்கே வந்திருக்கின்றார். ஏனென்றால் அடிக்கடி நான் அங்கே போகக்கூடியவன்.

ஆனால் அந்தச் சமயத்தில் வெளியில் வரப்படும் போது என்னைப் பற்றிய உண்மையைச் சொல்ல மாட்டேன். “சாமியார்…” என்று சொல்ல மாட்டேன். அரசியல் பற்றி ரொம்பக் கடுமையாகப் பேசிக் கொண்டு இருப்போம்.

ஆகையினால் யாருக்கும் நான் “சாமி…” என்கிற வகையில் தெரியாது. “சாமி..” என்கிற வகையில் தியேட்டரில் ஓடாத படத்தை ஓட வைக்கும் பொழுது தான் தெரியும்.

அதே சமயத்தில் சூனியம் வைத்த அந்த ஜோதிடம் பார்ப்பவர் என் நண்பரிடம் (தியேட்டருக்கு வந்து) வந்து சொல்கிறார்.

எனக்கு வீட்டுக்குப் போவதற்குக் கண் தெரிய மாட்டேன் என்கிறது. இந்த பக்கம் வருவதற்குத்தான் எனக்குக் கண் தெரிகிறது என்றார்.

“என்ன…!” என்று நண்பர் கேட்டார்.

நான் இன்னென்ன தவறுகளையெல்லாம் செய்திருக்கின்றேன். உங்களுக்குக் கெடுதல்கள் செய்திருக்கின்றேன்.

அவர் “தன்னாலே…” உண்மைகளை வெளிப்படுத்துகிறார்.

இந்த மாதிரி இங்கே ஒரு சாமியார் உட்கார்ந்திருக்கிறார் என்கிறார் அவர்.

“எந்தச் சாமியார்..?” என்று கேட்டார்.

அவர் உங்கள் கடைக்குக் கூட அடிக்கடி வந்திருக்கின்றார். நான் கூட உங்கள் கடைக்கு அடிக்கடி வந்து அவர் அரசியல் பேசும் பொழுது பார்த்திருக்கிறேன் என்று சொல்கிறார்.

“அப்படியா…” சரி பார்க்கலாம்…! என்று என்னிடம் அழைத்து வருகிறார். இந்தப் பக்கம் தான் (நான் இருக்கும் பக்கம்) வருகிறார். அந்தப் பக்கம் போனால் அவருக்குக் கண் தெரிய மாட்டேன் என்கிறது.

சாமியைப் பார்த்து நான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொல்கிறார். நான் காசை வாங்கி இத்தனைத் துரோகம் செய்து விட்டேன் என்றும் அவர் சொல்கிறார்.

அவர் இப்படிப் பேசியவுடன் என்னிடம் கூப்பிட்டு வந்தார். நான் தியேட்டருக்குள் உட்கார்ந்திருந்தேன்.

வந்தவுடன் நமஸ்காரம் செய்துவிட்டு நான் பாவங்கள் நிறையச் செய்துவிட்டேன் என்றார்.

நான் ஜாதகம் பார்த்ததுடன் மட்டும் இல்லாமல் பணத்தின் மீது ஆசைகள் கொண்டு ஒருவருக்கொருவர் அங்கங்கே போய்க் கேட்டுச் சில விபரங்களைத் தெரிந்து கொண்டு அதற்குத் தகுந்த தீயவினைகளைச் செய்தேன்.

அதனால் இப்பொழுது எனக்கு அந்தப் பக்கம் போனால் கண் தெரிய மாட்டேன் என்கிறது என்றார். அவர் செய்த உணர்வுகள் அவருக்குள் உள்ள அனைத்தையும் சொன்னார்.

என்னை மன்னித்துவிடுங்கள்… இனிமேல் இந்தப் பாவச் செயலைச் செய்யவே மாட்டேன் என்று சொல்கிறார்.

சரி.. என்று சொல்லி ஆசீர்வாதம் செய்தேன்.

இனிமேல் யாருக்கும் இந்தத் தீங்கைச் செய்யாதே. இந்த ஜாதகத்தைத் தொடாதே… நீ ஜாதகத்தைத் தொட்டால் மீண்டும் இந்தக் காசு ஆசைதான் வரும் என்று சொல்லி அனுப்பினேன்.

ஏனென்றால் இதைப் போன்ற ஜாதகக்காரர்கள் மக்கள் யார் யாரிடம் எல்லாம் போகிறார்களோ அங்கெல்லாம் போய் அவர் ஜாதகங்களைப் பற்றிய விபரங்களை அறிந்து கொள்வது.

ஜோதிடம் பார்ப்பதற்காக வரும் மனிதர்களின் நட்சத்திரம் என்ன…? ஏது…? அவர் உணர்வு என்ன…? என்று எல்லாம் அடுக்கு வரிசையில் தெரிந்து கொண்டு தன் இந்த மாதிரித் தவறுகளைச் செய்கின்றார்கள்.

இந்த லாட்ஜுகளில் கேம்ப் போட்டுச் செய்கின்றார்கள். இவர்களிடமெல்லாம் இந்த மாதிரி வேலைகள் ஏராளமாக உண்டு. ஒன்றும் தெரியாதது மாதிரிச் சொல்வார்கள்.

இதை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே அனுபவபூர்வமாக நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்கிறேன்.

“மனிதனுக்கு ஜாதகம் இல்லை”

மனிதன் அடைய வேண்டிய முழுமையின் நிலை

 

ஆதியிலே ஆவியாக இருந்தது அணுத் தன்மை அடைந்தது. பல அணுக்கள் ஒன்றாக இணைந்து கோள் என்ற நிலை அடைகின்றது. கோள் என்ற நிலை அடையும் பொழுது அதனின் வளர்ச்சியில் நட்சத்திரமாக மாறுகின்றது.

நட்சத்திரமாக ஆனபின் தன் மலத்தால் (பால்வெளி மண்டலம்) பிரபஞ்சத்தை உருவாக்கும் நிலை பெறுகின்றது… உணர்வின் இயக்கமாக மாறுகின்றது. ஒரு அமிலத்தின் தன்மையாக மாற்றி அமைக்கும் சக்தி பெறுகின்றது.

பின்… பிற மண்டலங்களின் சக்திகளைத் தனக்குள் நுகர்ந்து அந்த நட்சத்திரம் சூரியனாக மாறுகின்றது. சூரியன் ஆகும் போது தனது வளர்ச்சியில் அதன் வளர்ப்பில் ஓர் பிரபஞ்சம் என்ற நிலையை உருவாக்குகின்றது.

பிரபஞ்சம் என்று உருவான பின் அதில் சேர்க்கும் உணர்வின் தன்மை நட்சத்திரங்களின் இயக்கமாக ஒரு உயிரணு என்று உருவாகின்றது. அந்த உயிரணுவோ தான் நுகர்ந்த உணர்வின் தன்மையை அணுவாக மாற்றுகின்றது.

தாவர இனங்கள் உணர்வின் தன்மையை இந்த உணர்வுக்கொப்ப அந்தச் செடியின் ரூபமும் மணமும் அதன் இயக்கமும் என்ற நிலையை அடைகின்றது.

இதைப் போன்று பல நிலைகளைக் கவர்ந்து கொண்ட நிலைக்கொப்ப
வண்ணங்கள் மாறுகின்றது…
சுவைகள் மாறுகின்றது…
குணங்கள் மாறுகின்றது…
உணர்ச்சிகள் மாறுகின்றது.

1.ஆக… கோளாக இருப்பது இருண்ட நிலையிலிருந்து வேகும் நிலைகள் கொண்டு நட்சத்திரமாக எப்படி ஆனதோ
2.இதைப்போன்று நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தையும்
3.இந்த உயிருடன் ஒன்றிய ஒளியின் நட்சத்திரமாக என்று மாற்றுகின்றோமோ
4.அதுவே மனிதன் அடைய வேண்டிய முழுமையின் நிலை.

சூரியன் எவ்வாறு ஒளியாக மாற்றுகின்றதோ அதைப்போல உயிரின் தன்மை ஒளியாக மாற்றும் தன்மை பெறுகின்றது.

இதை எல்லாம் முழுமையாகக் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன். அவன் திருமணமான பின்
1.தான் கண்ட பேருண்மைகளை எல்லாம் தன் மனைவிக்குப் போதிக்கின்றான்
2.மனைவியும் கணவருடன் ஒன்றி ஒத்துழைக்கின்றது…
3.இருவரும் ஒன்றென இணைந்து இரு உயிரும் ஒன்றன இணைந்து உணர்வின் தன்மை ஒளியாகி ஒளியின் சரீரமாகத் தனக்குள் படைத்து
4.எந்தத் துருவத்தை உற்று நோக்கி அந்த ஆற்றலை நுகர்ந்தனரோ அதையே எல்லையாக வைத்து
5.பூமி கவரும் உணர்வினை ஒளியாக மாற்றி கொண்டுள்ளார்கள்.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமையை அகற்றிய அத்தகைய அருள் ஞானியின் உணர்வுகள் இந்தப் பிரபஞ்சத்தில் பரவுகின்றது. நமது பூமி துருவப் பகுதி வழியாக அதைக் கவர்கின்றது.

துருவத்தின் வழி பூமிக்குள் வருவதை
1.ஆதியிலே அகஸ்தியன் கண்ட உண்மை போல அவன் கண்டறிந்த உண்மையை
2.நமது குருவும் கண்டுணர்ந்தார்… அதனை நுகர்ந்தார்
3.நுகர்ந்ததைத் தனக்குள் விளைய வைத்தார்… அருள் உணர்வினை வெளிப்படுத்தினார்
4.எம்மை நுகரும்படி செய்தார்… அவர் கண்ட அந்த உண்மையின் உணர்வை யாமும் அறிய முடிகின்றது.

அறிந்த உணர்வை இப்பொழுது உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். பதிந்த உணர்வினை நீங்கள் உங்களுக்குள் உருவாக்கினால் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிடும் சக்தி பெற முடியும். இந்த உடலுக்குப்பின் பிறவி இல்லை என்ற நிலையை அடையலாம்.

இல்லறத்தில் இருந்து உயர் ஞான வளர்ச்சி பெற முடியுமா…? ஈஸ்வரபட்டர்

 

சகலத்தின் சக்தியையும் சகலமாக்கித் தன்னைத்தானே தான் உணரும் உயர் ஞான ஒளி சக்தியாய் உயரும் வழித் தொடருக்கு… எண்ணத்தின் உணர்வு பக்குவ முறை கொள்தல் வேண்டும்.

இப்பூமியின் ஈர்ப்புப் பிடிப்பின் சுழற்சியில் இருந்து விடுபட எண்ணத்தின் வலுவை முதலில் பக்குவ நிலைக்கு நாம் செயல் படுத்துதல் வேண்டும்.

வாழ்க்கையில் இருந்தே நம் தியான முறையை வழிப்படுத்தும் சமமான நற்குண செயல் வழியை எண்ணத்தின் உணர்வு செயல்படும் முறை பக்குவத்தில்
1.உடல் உணர்வில் உந்தப்படும் இல்லற உணர்வின் வழித் தொடர் உகந்ததா…?
2.அந்த உடல் உணர்வின் உந்தலைச் சமப்படுத்தும் பக்குவத்தில் அடக்கும் பக்குவம் உகந்தந்தா…?
3.உடல் இச்சையின் உணர்வின் உந்தலில் எப்படிச் செயல்படுவது…? என்ற வினா ஒவ்வொருவருக்கும் எழும்பலாம்.

அதாவது தாம்பத்ய வாழ்க்கை உகந்த நிலையா…? பிரம்மச்சர்ய நிலையில் உயர்வு நிலை பெற முடியுமா…? என்ற வினா எழும்பலாம்.

ஆரம்ப மனித உணர்வின் வழித்தொடரே தாவர நிலைக்கடுத்த வளர்ச்சி நிலை யாவையும் நீரிலிருந்து உயிர் ஆத்ம ஜீவன்கள் பிறப்பெடுத்து வந்தது.

அதன் பின் (கடல் வாழ்) தாவர இனங்களில் இருந்து வளரும் புழு பூச்சிகள் உடல் உணர்வின் ஆண் பெண் இனச் சேர்க்கையில் வளரும் நிலை இல்லாமல் தாவரங்களின் உஷ்ண அலை வெளிக் கக்கும் அமிலத்தின் பிசின் போன்ற வழுவழுப்பான அமிலத்தின் கெட்டித் தன்மையில் உயிர் அணுக்கள் சிறு புழு பூச்சிகள் உற்பத்தியாகும் நிலை இனச் சேர்க்கையின்றி வளரும் நிலை தான் உண்டு.

நீரிலிருந்து உயிரணு தோன்றும் வளர்ச்சியில் இனச் சேர்க்கையில் ஆண் பெண் என்ற நிலை அபூர்வமாகச் சில இனங்களுக்கு மட்டும்தான் உண்டு.

ஆனால் ஜீவப் பிராணிகள் பெரும்பகுதி இனச் சேர்க்கையின் தொடர்பு கொண்டுதான் இனப் பெருக்கம் செயல் கொள்கின்றது.

இவற்றின் தொடர்பில் மனித உணர்வில் பகுத்தறியும் ஞான வித்தின் முதல் நிலையில்
1.அன்பான உணர்வின் குணம் தான்
2.உந்தப் பெறும் மனித நிலையின் குணத்தின் “முதல் நிலை…”

தன் உணர்வில் உந்தும் இச்சையின் ஆசையில்… உதிரத்தில் பிறக்கும் உயிர் ஜீவனே அந்த அன்பின் உணர்வுத் தொடரில் பிறக்கும். அன்பின் ஆசை நிலை அதற்கடுத்த நிலை.

உதிரத்தில் அன்பின் உணர்வு கொண்டு பிறக்கும் சிசுத் தொடரில்
1.ஆசையும் பாசமும் தன் உணர்வின் இச்சையிலேயே பிறக்கா விட்டால்
2.எஜ்ஜீவ சக்தியையும் எந்த ரிஷிகளாலும்… ஆதிசக்தியாலுமே… வளர்க்க முடியாது.
3.அன்பின் எண்ண உணர்வில் ஆசையின் பாசமில்லை என்றால் மனிதன் என்ற நிலையே உருவாகாது.

உயர் ஞான நிலைக்கு மனித உணர்வின் எண்ணத்தைச் சம குணப்படுத்தக் கூடிய வழி முறைக்கு வயது முதிர்ந்தவர்கள் தான் செயல்படுத்த முடியுமா…? சிறுவர்களும் புதிதாக மணமான தம்பதியர்களும் எப்படி அந்நிலை பெற முடியும்…? என்ற வினா எழும்பலாம்.

நாம் எடுக்கக்கூடிய தியான உணர்வின் ஆரம்ப உணர்வே… அன்பென்னும் ஆசையில்… பாசம் கொண்டு வளர வேண்டிய வழித் தொடரில் தான்… சத்திய நிலையின் ஜீவனை வளர்க்க முடியும்,

1.தம்பதியர்களின் உணர்வுகளில் உடல் உணர்வில் அன்பின் ஆசை கொண்டு பிறக்கும் சிசுவின் பாசம் எப்படி வளர்கின்றதோ
2.வாழ்க்கையில் உண்ண உறங்க உடுக்க எப்படி சம நிலை குணங்களைப் பக்குவப்படுத்தச் சொல்லிப் போதனைப்படுத்தினோமோ
3.மணமான சிறு வயது தம்பதியர்கள் அவர்களின் வம்சத்தின் கொழுந்து பிறக்கக்கூடிய காலத்திலேயே
4.எப்படி உடல் உணர்வில் சிசு பிறக்கின்றதோ அதைப் போல் ஆத்ம ஐக்கிய உணர்வு கொண்டு இரு எண்ணங்களும் ஒன்றுபோல் ஆகி
5.உயர்ந்த ஞானத்தின் உணர்வுடன் ரிஷிகளின் தொடர்பால் எடுக்கும் தியானத்தின் மூலம்
6.ஆத்ம ஐக்கிய உணர்வில் இரண்டு ஆத்மாக்களும் இணையக் கூடிய பக்குவ நிலை பெற்று
7.சாதாரண வாழ்க்கை நிலையில் ஆத்ம உயிருக்கு நம் அன்பின் ஆசையின் ஜீவன் தந்து பிறக்கும் குழந்தையைக் காட்டிலும்
8.ஆத்ம ஐக்கியம் கொண்டு ரிஷிகளின் தொடர்பில் எடுக்கும் ஜெபத் தொடர்பின் அலை ஈர்ப்பினால்
9.புது மணம் கொண்ட தம்பதியரின் ஈர்ப்பில் உயர்ந்த ஞான வித்தின் ஆத்ம உயிர்களுக்கு ஜீவன் தரும் பாக்கியத்தைப் பெற முடியும்.

இப்பூமியில் பிறப்பெடுத்து ஞானத்தின் வழியில் சித்து நிலையால் உயர்ந்த ரிஷிகளுக்குப் போக முடியாத பல நல்ல ஆத்மாக்கள் இன்றும் உள்ளன. அந்த உயர்ந்த ஆத்மாக்களுக்கு மீண்டும் ஜீவன் கிடைக்கச் செய்யலாம்.

நாமெடுக்கக்கூடிய (தாய் தந்தை) ஆத்ம ஐக்கியத்தால் எடுக்கும் உயர் குணத்தைக் கொண்டு அத்தகைய ஆத்மாக்களுக்கு… தான் பெற முடியாத ரிஷி சக்தியின் செயலைச் செயலாக்கி வழிதரக் கூடிய நிலையை…
1.ஒவ்வொரு தம்பதியரும் ஆத்ம ஐக்கியத்தில் நல்ல உணர்வின் செயல் வாழ்க்கையால்
2.இப்பூமியைப் பக்குவப்படுத்தக் கூடிய இல்லற உணர்வின் இச்சையின் ஆசைக்கு
3.உடல் உணர்வின் உந்தலைப் பக்குவப்படுத்தும் நிலை செயல்படுத்தலாம்.

வாழ்க்கை வழிமுறையில் துறவறம் என்ற பிரமச்சரிய முறையால் ஆண்டவனை அடைய முடியுமா…? உயர் ஞான வாழ்க்கைக்கு எம்முறை உகந்தது…? என்ற வினா எழும்பலாம்.

உணர்வின் எண்ண குணத்தைச் சமப்படுத்தும் பக்குவத்தால்… ஒவ்வொரு நாளும் இப்பூமியின் ஈர்ப்புப் பிடியிலிருந்து ரிஷிகளின் எண்ணத்துடனும்… விண்ணின் ஆற்றலைப் பெறும் எண்ணத்துடனும்
1.எண்ணத்தின் உணர்வைத் தினசரி எடுக்கக்கூடிய தியான முறையில்
2.உணர்வின் இன்பம் அனைத்தும் ஏகாந்தத்தின் இன்பத்தை உணரும் பக்குவ இன்பத்தில்
3.இனிமை சுரக்கும் அன்பின் ஆசை உணர்வு கொண்டு பெறப்படும் பக்குவத்தில் ஆத்ம ஒளியே ஒளிரும் நிலை பெற்று விட்டால்
4.உடல் உணர்வின் இச்சை எச்சுவையையும் தனித்து எடுக்கக்கூடிய ஏக்கத்தின் உணவிற்கு
5.நம் எண்ணத்தின் உணர்வே செல்லாது (இதை அனுபவத்தில் பார்க்கலாம்).

ஏகாந்தத்தின் இன்பத்தை நுகரும் பக்குவத்தை… ஆத்ம ஐக்கியத் தொடர்பு கொண்டு… இரண்டு ஆத்மாக்களுக்கும் ஒரே எண்ணத்தின் வழிப்படுத்தும் வழி முறையில் கிடைக்கும் ஆத்ம ஐக்கிய ஒளியால்… எச்சிருஷ்டியையும் சிருஷ்டிக்கவல்ல தன்மையைப் பெறலாம்.

ஆனால் இரண்டு எண்ணங்களின் குண நிலை மாற்றப்பட்டு ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் ரிஷி சக்தியின் தொடர்பில் அதைச் சீர்படுத்தும் பக்குவ நிலையாக ஜெப ஈர்ப்பில்
1.ஒருவர் மேல் ஒருவர் எண்ணத்தைச் செலுத்தி
2.ஆத்ம ஐக்கிய உயர் ஞானம் பெற வேண்டுமென்ற எண்ணத்தைக் கொண்டே
3.இரு நிலையையும் ஒரு நிலையாகக்கூடிய தன்மைக்கு
4.நிச்சயம் செயல்படுத்திட முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பூமிக்கடியில் அணுக்கதிரியக்கங்கள் இன்று மிகவும் அதிகமாகி விட்டது. இது வெடித்து மக்கள் இறந்தாலும் தொக்கிய உணர்வுகள் பூமிக்கடியில் அதிகமாகச் சேர்த்துக் கொதிகலனாக மாறி பாறையெல்லாம் குழம்பாக மாறப் போகின்றது.

அணு உலைகளில் அந்த எரி பொருளை எரித்தவுடனே வேகமாகச் சூட்டை உண்டாக்குகின்றது. அதைப் போன்ற நிலை நம் பூமியின் நடு மையத்திலும் அதிகமாகிவிட்டது.

உதாரணமாக மின்னல்கள் தாக்கப்படும் போது ஒரு நொடிக்குள் எல்லாவற்றையும் பஸ்பமாக்கி விடுகிறது. மின்னல்கள் கடலிலே விழுந்த பின் அடங்கி மணலாக மாற்றிவிடுகின்றது.

மணலாக மாற்றியதை யுரேனியமாகப் பிரித்து மீண்டும் வெடிக்கச் செய்கின்றார்கள் விஞ்ஞானிகள். (அணு உலைகள், குண்டுகள், லேசர் இயக்கங்கள், மிகவும் சக்தி வாய்ந்த எலெக்ட்ரானிக் கருவிகள்)

1.இருபத்தியேழு நட்சத்திரங்கள் இயற்கையாக வெளிப்படுத்தும்
2.கதிரியக்க உணர்வுகள் ஒன்றின் வலு அதிகமானதும்
2.மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட கதிரியக்கமும்
4.ஒன்றுடன் ஒன்று மோதும் போது
5.எல்லாவற்றையும் கடினமாகச் சூடாக்கச் செய்கின்றது.

(சூரியன் அடிக்கடி நெருப்பைக் கக்கிக் கொண்டிருக்கின்றது என்று சொல்வார்கள் – SUN FLARE)

அது மோதும் இடங்களில் உயிரினங்களையும் கல்லுக்குள் இருப்பதையும் மற்ற எல்லாவற்றையும் மடியும்படிச் செய்கின்றது.

அதை வெடித்துப் பரீட்சித்தார்ந்தமாகப் பார்த்தாலும்
1.எல்லாமே பூமியின் சுழற்சியால் நடுமையம் அடைகின்றது.
2.நடு மையத்தில் கொதிகலனாகவும் மாறுகின்றது.

அதே சமயம் பூமிக்குப் புறத்திலும் வெடிக்கச் செய்தது சூரியனுக்கும் மற்ற நம் பிரபஞ்சத்திலுள்ள அனைத்துக் கோள்களுக்கும் சென்றுவிட்டது.

இந்த விஷத்தின் தன்மைகள் நட்சத்திரங்களிலும் கோள்களிலும் பரவப்பட்டு நமது பிரபஞ்சத்திலும் அதிகமாக விஷத்தன்மை பரவி விட்டது.

நமது பூமிக்குப் பாதுகாப்பாக இருக்கும் விஷத் தன்மைகளை வடித்திடும் ஓசான் திரை உண்டு. அதிலே விஷ அடுக்குகள் உண்டு. தன் இனத்தைச் சேர்த்துக் கொள்ளும். பூமிக்குப் பாதுகாப்பு அது.

கீழே சுழலும் போது தனக்குத் தேவைப்பட்ட உணர்வு தான் இயக்கத்திற்கு வரும். ஆனால் அதுவும் இன்று என்ன ஆகி விட்டது,

பிரபஞ்சத்தில் மனிதனால் செயற்கையால் பரவச் செய்யப்பட்ட அணுக்கதிரியக்கங்கள் துருவப் பகுதி வழியாக மீண்டும் பூமிக்குள் நுழைந்து ஓசோன் திரையும் ஓட்டை ஆக்கிவிட்டது.

1.இந்தக் கதிரியக்க உணர்வுகள் அதிகமாகி
2.அது குவிந்து நம் துருவத்தில் வரப்போகும் போது
3அங்கிருக்கும் பனிப்பாறைகள் கரைகின்றது.
4.வட துருவமும் சரி தென் துருவமும் சரி கரைந்து கொண்டேயுள்ளது.

ஆனால் அதே சமயத்தில் பூமியின் நடு மையமோ கொதிகலனாக மாறுகின்றது. பூமிக்குள் இவ்வாறு ஆகப் போகும்போது
1.முதலில் கொதிகலன் சிறிதளவு இடத்தில் இருந்தது.
2.அப்புறம் அது கொஞ்சம் பெரிதானது.
3.இப்படிப் பெரிதாகப் பெரிதாகப் பெரிதாகக் கூழ் மாதிரி ஆகிக் கொண்டு வருகிறது.

(ஏற்கனவே) கூழாக மாறியதால் தான் பாறையில் மாற்றமும் நில நடுக்கம் பூகம்பம் நில அதிர்வு மற்ற நிலைகளும் வருகின்றது.

நாம் பாத்திரத்தை வைத்து அதில் பொருள்களைப் போட்டு பல சரக்குகளைச் சேர்த்து ஒன்றாக்குவது போல பூமியின் நடு மையத்தில் உணர்வின் தன்மை பல கலவைகள் ஆகின்றது.

கொதிகலனாகும் போது கலவையாகிய பின் வெடிப்பாகி மீண்டும் இறங்கி இதனுடைய உணர்வுகள் மாற்றிக் கொண்டே இருக்கும்.

துகள்கள் தூசிகள் போவதில்லை. ஆனால் கீழிருந்து உணர்வின் தன்மை மாறினால் மேலே உறைய உறைய உறைய அதன் உணர்வு மாறினாலும்
1.எல்லாம் கலவையாகச் சேர்த்துக் கீழே
2.நம் பூமியின் நடுமையம் “வெப்பத்தால்… உருக்கப்படுகின்றது”.

உருகிய நிலைகள் கொண்டு தான் ஆவியாக மாறுகின்றது. ஆவியாக மாற்றப்படும் போது ஒன்று சேர்த்து இருக்கும் போது ஒன்றுமில்லை. வெடித்து விட்டால் இதன் வழி கூடி ஆவியினுடைய சத்துக்கள் வெளி வருகின்றது.

சில நேரங்களில் உள் வெடிப்பு இருக்கும். பாறையில் மாற்றம் இருக்கும்.

ஆக உள் வெடிப்பு என்று இருக்கப்படும் போது இது சிறுகச் சிறுக மேலே வரும் போது வெடிப்பின் தன்மை அதிகரிக்கும்.

1.முதலில் 3,500 மைல் தூரத்தில் (அடியிலிருந்து) மேல் ஓடு இருந்தது என்றால்
2.அது 1,000 மைல் தூரம் ஆகி
3.இப்பொழுது 3,000 – 4,000 அடி தூரத்திற்குப் பக்கத்தில் வந்து விட்டது.
4.அதனால் தான் இன்று அடிக்கடி வெடிப்பின் தன்மை அதிகமாகின்றது.
5.இன்று இந்தப் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது என்று தினசரி நீங்கள் கேள்விப்படலாம்.

வெடித்தபின் மேலே எந்தப் பக்கம் அதிகமோ அமிழ்த்துகின்றது. இப்போது இந்தப் பக்கம் அமிழ்த்தினவுடனே இதை அடைத்து விடுகின்றது.

இப்படிச் சாய்ந்த பின் இதனுடைய அழுத்தம் அதிகமான பின்
1.உள்ளுக்குள் இருக்கக்கூடிய “சகதி… கூழ்…”
2.எப்படி ஒரு பைப்பிற்குள் போகும் போது ஏதாவது தடுத்தால் சப்தம் வருகின்றதோ
3.அந்த மோதலில் எங்கெல்லாம் தடுப்பாகின்றதோ
4.அந்த மோதலில் அதிர்வு வரும் போதெல்லாம்… போகும் பாதையெல்லாம் (நில) அதிர்வு உண்டாகும்.

நம் பூமி வட்டமாக இருப்பதனால் சுற்றி வரப்போகும் போது எதனெதன் திசைகளில் அதிகமாகச் சந்து வருகின்றதோ அதன் நிலைகள் மோதுகின்றது.

அப்பொழுது அது மோதும் இடங்களில் கொஞ்சம் மேடான நிலைகள் அதாவது மறைக்கும் இடம் இருந்தால் “மோதி… ஒரு செகண்ட்…” அது அழுத்திய நேரத்தில் அங்கே நில நடுக்கம் வருகின்றது.

அது மறுபடியும் மோதி இப்போது மோதிய இடங்கள் எல்லாம் பூமிக்குள் போகும். உதாரணமாக ஒரு இடத்தில் நடக்கிறது என்றால் இது நகர்ந்து இந்தப் பக்கம் விரிவான இடமாகப் போனால் நடுக்கம் இருக்காது. சப்தம் வரும். (EARTH QUAKE AFTER SHOCKS என்பார்கள்)

இப்படி அது ஓடும் நிலைகள் குறுக்கே வரும் நிலைகளுடன் மோதி அந்த இடத்தில் மோதலில் அழுத்தம் வருகின்றது. அதிகமாக இது ஓட ஓட ஓட அதே சமயத்தில் கரையும் தன்மை ஜாஸ்தியாகின்றது.

கதிரியக்கம் அதிமாக ஆக ஆக பூமியின் குழம்பு அதிகமாகி துருவத்தின் வழி வரும் விஷத் தன்மை அதிகமாகி இயக்கத்தின் தன்மை அதிகமாக ஆகி இன்று பனிப்பாறைகள் அனைத்தும் கரைந்து கடல்கள் பெருகுகின்றது.

(கடல்கள் மிகப் பெரிய அளவில் பெருகிக் கொண்டுள்ளது என்று உலக விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்துவிட்டார்கள்)

கடல் இருக்கின்ற பக்கம் இத்தகைய நிகழ்வானால் கடல் அலைகள் பொங்கி (சுனாமி) நகரை அழிக்கும் தன்மை வருகின்றது. இதைப் போன்று இயற்கையின் சீற்றம் வருகின்றது…. வந்து கொண்டேயிருக்கின்றது.

நாம் எந்த உணர்வின் தன்மை பெற்றோமோ அதன்வழியில் நாம் உடலை விட்டுப் போகும் போது
1.எந்த ஆசையை அதிகமாக எடுத்துக் கொண்டோமோ
2.இந்த உயிரிலே கடைசி நிமிடம் எந்த உணர்வு எடுத்தோமோ
3.உயிரால் கவரப்பட்டு அதற்குத்தக்க அடுத்த உடலைப் பெறுகின்றது.

அதிலிருந்து மீள நாம் இப்பொழுதிருந்தே தயாராகிக் கொள்ள வேண்டும்.

அதிகாலையில் இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் தியானத்தின் மூலம் எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

1.அது நமக்குள் ஒளியான அணுக்களாகப் பெருகப் பெருக
2.எந்த நிமிடத்தில் எது வந்தாலும்
3.நம்முடைய நினைவு அந்தத் துருவ நட்சத்திரத்தை அடைய வேண்டும் என்ற உணர்வானால்
4.”அந்த உணர்வு… அந்த நினைவு… அந்தப் பற்று வருமானால்
5.நம் உயிர் நிச்சயமாக அங்கே அழைத்துச் செல்லுகின்றது.

இத்தகைய நிலையானால் நாம் அந்த எல்லையை அடைகின்றோம்.

ஆனால் எனக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்ற நிலையாகி பொருளின் பற்றுக்கு வரப்போகும் போது இந்த உணர்வின் தன்மை இந்த உயிரிலே பட்டு கருகும் நிலைக்கே வருகின்றது. பின் அதற்குத்தக்க கருகும் உடலின் தன்மையே பெருகுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வு வரும் போது கருக்கும் தன்மைய இழக்கச் செய்கின்றது, நம் உணர்வு அங்கே செல்கின்றது.

ஆகையினாலே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில்
1.உங்களுக்குள் பதிவாக்கி விட்டேன்.
2.உங்கள் நினைவு உங்களைக் காக்க வேண்டும்.
3.ஆக எவரும் காக்க மாட்டார்கள்.

ஏனென்றால் நீங்கள் எண்ணிய உணர்வை வைத்துதான் உங்கள் உயிர் அந்த வாழ்க்கையை நடத்துகின்றது. உணர்வின் தன்மை உடலாக்குகின்றது. அதன் வழியே உங்கள் உயிர் உங்களை ஆளுகின்றது.

இதை மனிதன் தான் அறிந்து கொள்ள முடியும்.
1.எல்லாவற்றையும் அறிந்து கொண்ட மனிதன்
2.இந்த நிலையைச் செயல்படுத்தவில்லை என்றால்
3.பின் யாரும் நம்மைக் காக்க மாட்டார்கள்.

குருவின் (வியாழன் கோளின்) மிக மிக சக்தி வாய்ந்த ஆற்றல்

 

நம் பிரபஞ்சத்தில் உள்ள வியாழன் கோள் தனக்குள் மற்ற சத்துக்களை எடுத்து
1.ஒவ்வொன்றிலும் கருவுறும் சத்தாக
2.குருவாக முன்னின்று இருக்கின்றது.

சந்திரனோ மற்றவைகளை எடுத்துச் “சாந்தமான நிலையில்…” தனக்குள் உருவாக்கும் நிலையாக உருப்பெறுகின்றது. காரணம் ஒவ்வொரு குணங்களின் தன்மை அது அது கவரும் நிலைகள் கொண்டு தான் கோள்களின் இயக்கம்.

சந்திரனின் சுழற்சி வட்டத்தினை எடுத்துக் கொண்டால்… வரும் சக்திகளை அது சாந்தமான நிலைகள் கொண்டு மெதுவாக எடுத்துத் தனக்குள் மாற்றி அமைக்கின்றது.

1.இதற்கு மாறாக வியாழனோ படு வேகமாகச் சுழற்றி
2.மற்றவைகளைத் தனக்குள் வேகமாகக் கவர்ந்திடும் சக்தி கொண்டது
3.அதனால் அதனுடைய வளர்ச்சி வேகமும் அதிகரிக்கின்றது.
4.வெகு தொலைவிலிருந்து வரும் உணர்வினையும் தனக்குள் கவரும் ஆற்றல் பெற்றது
5.அதே சமயத்தில் அதனின் உமிழ்த்தும் உணர்வின் வேகமும் அதிகம்.

மற்ற கோள்களைக் காட்டிலும் உயர்வான இடங்களில் அது இருப்பதனால் தனக்கு மேல் இருக்கும் கேது ராகு கோளின் சக்தியையும் கவரும் திறன் கொண்டது.

ராகு இருள் சூழ்ந்தது… கேதுவோ விஷம் கொண்டது. அவைகளையும் வியாழன் தனது சுழற்சியின் வேகத்தில் கவர்ந்து இந்தப் பிரபஞ்சத்திற்குகந்ததாக மாற்றுகிறது.

அதாவது…
1.சூரியன் எவ்வாறு தனது சுழற்சியின் வேகத்தில் மற்ற நட்சத்திரங்களின் ஆற்றலைத் தனக்குள் கவர்ந்து
2.கோள்களுக்கும் ஜீவனூட்டித் தனது நிலைகளில் அது ஒளியாக மாற்றுகின்றதோ
3.அதைப் போன்று வியாழன் கோள் மற்ற சத்துக்களைத் தனக்குள் கவர்ந்து
4.விஷம் மற்றவைகளையும் கலந்து அதை ஒரு குருவாக்கி
5.மற்ற கோள்களுக்கும் தனது இணையாக இணைத்துக் கொண்டு வருகின்றது.

கோள்கள் நட்சத்திரங்கள் உமிழ்த்தும் சக்தியை நமது பூமி கவர்ந்து உயிரணுக்களை ஜீவன் பெறச் செய்வதும்… உயிரணுக்களை வளர்க்கச் செய்வதும்… தாவர இனங்களைத் தனக்குள் வளர்ப்பதும்… தாவர இனத்தின் நிலைகள் கொண்டு உயிரினங்களுக்கு ஊட்டச்சக்தி கொடுப்பதுமாக மாற்றி அமைக்கின்றது.

இந்தப் பிரபஞ்சத்தைப் போன்று தான் நாம் மற்றவருடைய எண்ணங்களை எந்த அளவிற்குக் கவர்கின்றோமோ அந்த உணர்வின் சக்திகளை எல்லாம் “நம் உயிர் குருவாக நின்று…” இந்த உணர்வின் சத்தைப் பெருக்கி உடலாக மாற்றுகின்றது

1.சூரியன் இந்த பிரபஞ்சத்திற்கே குருவாக இருப்பினும்
2.இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் அணுக்களுக்கு வியாழன் கோளே குருவாக இருக்கின்றது.

இதைப் போல…
1.அனைத்து சக்திகளையும் எடுத்த இந்த மனித உடலுக்குள்
2.நாம் எண்ணும் எண்ணங்களுக்கு இந்த மனித உடல் உருவான நிலையே குருவாகின்றது.

ஏனென்றால்…
1.மற்ற சத்துக்களை எடுத்து வியாழன் கோள் தனது நிலைகளில் இந்தப் பிரபஞ்சத்தில் குரு தன்மையை எப்படி அடைந்ததோ
2.அதைப் போல மனித உடலாக உருவாக்கப்படும் பொழுது நம்முடைய உணர்வின் எண்ணங்களுக்கு இது குருவாகின்றது.
3.அதே சமயத்தில் உடலுக்குள் உயிர் குருவாகின்றது… நமக்குள் சூரியனாக அது மிளிரும் தன்மையை அடைகின்றது.

அன்று ஞானிகளால் சாஸ்திர விதிகளை வகுக்கப்பட்ட இத்தகைய உண்மைகளை எல்லாம் எண்ணத்தால் எண்ணி நமக்குள் அதைப் பொங்கச் செய்ய வேண்டும்.

சூரியன் எவ்வாறு தான் கவர்ந்து கொண்ட அணுக்களில் இருக்கும் நஞ்சினைப் பிளந்துவிட்டு நல்ல உணர்வினை எடுத்து ஒளிச் சுடராக மாற்றுகின்றதோ இதைப் போன்று
1.மகரிஷிகள் தமது வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் எத்தகைய நிலைகளைக் கவர்ந்து கொண்டாலும்
2.அதில் வரும் நஞ்சினைத் தனக்குள் அணுகாதபடி தன் உணர்வின் எண்ணங்களை ஒளியாக மாற்றி
3.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகி சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

சப்தரிஷி மண்டலத்தில் வெளி வரும் உணர்வுகளைச் சூரியன் தனக்குள் ஒளிச் சுடராகப் பொங்கி இங்கே பூமிக்குள் பரவச் செய்கிறது.

நமது வாழ்க்கையில் குடும்பத்திற்குள் வெறுப்போ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ ஏற்பட்டால் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து நமக்குள் அதை மாற்றி அமைக்க வேண்டும்.

தாவர இனங்களில் விளைந்ததை நாம் வேக வைத்து எப்படிச் சுவைமிக்கதாக உணவாகப் படைக்கின்றோமோ அது போல்
1.மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து
2.நமக்குள் வரும் அனைத்தையும் ஒளியாகப் படைக்கும் சக்தி பெற வேண்டும்.

மகரிஷிகளை எண்ணி நாம் எடுக்க வேண்டிய உயர்ந்த சக்தி – ஈஸ்வரபட்டர்

 

1.ஆதியின்… படைப்பின் கடவுள்… இறைவன்… தெய்வம் என்ற தொடரில்…
2.மனித ஒளி சரீரத்தின் ஒளித் தன்மை கொண்டு…
3.அவ்வொளியின் நாத உயர்வில் இறை நிலை பெற்ற மனிதன் “தெய்வத் தன்மை பெறுகின்றான்…”

பூமிக்கும்… பூமியில் வளரும் சகல ஜீவராசிகளும் ஒளித் தன்மையின் நிலை பெற்றிருந்தாலும்… ஒவ்வொன்றின் தொடர்பலையில் வலுக் கொண்ட ஒளி நிலை பெற்று… ஒளி சக்தியை வளர்க்கும்
1.உயிர் ஞான வழியை அறியக்கூடிய நிலை
2.மனிதனுக்கு மட்டும் தான் உண்டு.

குயில் அழகாக… இனிமையாக… அதனுடைய குரல் ஒலியை எழுப்பினாலும்… மனிதனின் எண்ணத்தின் உணர்வு ஞானம் அதற்கு இல்லை.

மனித உணர்வுடன் ஒட்டி… ஒன்றின் தொடரில் வளர்ச்சியின் நிலை பெருக்கத் தொடருக்கு… ஞானத்தை உயர்த்தித் தன் பகுத்தறிவைக் கொண்டு “பல நிலைகளை மாற்றியமைக்கும்” செயல் மனிதனுக்குத் தான் உண்டு.

ஒலியின் நாதத்தை உணர்வின் எண்ண ஊட்டத்தில் பகுத்தறியும் ஞானத்தால் மனிதன் இச்சரீர உயர்வை எண்ணி… இவ்வுணர்வால் இறை சக்தியின் உன்னத நிலையான இவ்வுயிர் ஆத்மாவை… இறை குணத்தை… உணர்வின் எண்ண ஞானத்தால் பகுத்தறியும் செயலைக் கொண்டு இவ்வுடலையே இறையாக்கி… இறைவன் படைப்பில் இறை சக்தியை எடுக்கக்கூடிய ஒலி நாதத்தைத் தன் ஆத்ம உயிருக்காக இறை உணர்வு பெற்றுத் “தெய்வ நிலை பெறும் சத்திய நிலையை…” மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மனிதன் இன்று எடுத்துள்ள உடல் பிம்ப வாழ்க்கைக்குகந்த பேராசைப் பிடிப்பையே தெய்வ நிலை பெறக்கூடிய பேராசையாய் உணர்வின் எண்ணத்தைப் பக்குவப்படுத்த வேண்டும்.

ஒளியின் ஒளிப் பெருக்கைப் பெருக்கவல்ல தொடரைப் பூமியில் படைத்த
1.ரிஷிகளின் சக்திக்கு ஒளி கூட்டும் ஒளி நிலை பெற
2.உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் ஒலி கொண்டு
3.நம்முள் உள்ள இருளகற்றி ஒளி நிலையை நாம் பெற்றோமானால்
4.ஒளி கொண்டு மற்ற இருளையும் அகற்றும் சித்தை
5.நம் சித்தத்தின் உணர்வால் ஒவ்வொருவரும் பெறலாம்.

இச்சரீர அமைப்பைச் சிருஷ்டிக்கவல்ல சித்து சக்தியையே… இக்காற்றலையில் கலந்துள்ள சகல சத்திலிருந்து உருவை உருவாக்கும் சக்தியைப் பிரித்தெடுத்துச் செயலாக்கும் முறையை உயர் ஞானி அன்றைய தன் ஞானத்தால் செயல்படுத்திக் காட்டினான்.

ஆனால் இன்றைய விஞ்ஞானி தன்னைத்தான் தான் நம்பாமல் “இயந்திரங்களின் இயக்க ஒலி சக்தி கொண்டு தான்” விஞ்ஞானத்தில் சாதிக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளான்.

பல முன்னேற்றங்கள் விஞ்ஞானத்தால் இன்று வளர்ந்திருந்தாலும் தன் ஆத்ம உயிருக்குக் கூட்டக் கூடிய ஒளியின் உயர்வைக் கூட்டாததால் அழிக்கும் நிலைக்குத் தன் உயிர் ஆத்மாவை மங்கச் செய்யும் நிலை ஏற்பட்டு விடுகின்றது.

அன்று ஞானிகள் காட்டிய உண்மைகளை எல்லாம்… ஞானிகள் தொடர்பால் இன்றும் எல்லோராலும் பெற முடியும்.

எண்ணத்தின் உணர்வை மனிதனுக்கு மனிதன்… தான்… எவ் ஒலி இறை உணர்வைப் பெற்று இச்சரீர உணர்வால் செயல்படுகின்றானோ அதே தொடர்தான் தன்னை ஒத்த மனித உணர்விலும் உள்ளதை அறிந்து கொண்டால்
1.தன் ஆத்ம பலத்தின் உயர்வைக் கூட்டிக் கொள்ளக்கூடிய உரம்
2.மனித உணர்வுடன் ஒட்டிய தொடர்பால்
3.பிறரிடம் இருந்து எதிர்படும் மூச்சலைகள்
4.நல் அலையின் உணர்வு கொண்டு பெறப்படும் தொடர்பால்
5.மனித உணர்வின் ஆத்ம உயிர் ஒலித் தன்மையின் வலு நிலையை
6.சம குணத்தின் அறுகுண ஈர்ப்பால் உயர்ந்த ஒளி ஞானியாகலாம்.

அதாவது… மனித உணர்வின் எண்ண வேட்கையின் சமைப்பின் ஒளி நிலை கொண்டு
1.ஒருவரின் மேல் உயர்ந்த குணத்தைப் பலரும் செலுத்தச் செலுத்த
2.அவ்வுரத்தின் உணர்வால் மனிதன் தெய்வமாகும் நிலையை
3.அன்றைய ஞானி உணர்ந்ததால் தான் அன்பையே தெய்வமாகக் காட்டினான்.

உணர்வுகள் உந்தப்பட்டாலும் அதைச் சமமாக்கும் பக்குவத்தை எவனொருவன் செயல்படுத்தி.. செயல் வழியில் உரத்தைப் பெறுகின்றானோ… அன்றே தெய்வ நிலை கொண்ட ஒளித் தன்மையில் செயல் கொள்ள முடியும்.

இக்காற்றலையின் சுழற்சியில்… மனித உணர்வில் பல உணர்வின் வேட்கை அலைக்கு மத்தியில்… “தன் ஞானத்தை உயர்வாக்க… உயர்ந்த ரிஷி சக்திகளின் எண்ண ஜெபத்தால்… உயர் காந்த மின் ஒளியின் தியானத்தைக் கொண்டு… மனிதன் தன்னைத் தானே தான் உணர்ந்து… தெய்வ நிலை பெறும் வழி நிலையை… அமைத்துக் கொள்ளல் வேண்டும்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கண்ணின் நினைவு கொண்டு… துருவ நட்சத்திரத்தினை எண்ணி உயிரின் காந்தத்தால் ஈர்க்கப்படும் பொழுது “புருவ மத்தியில் வெளிச்சங்கள்…” வருவதைக் காணலாம்

அவரவர்கள் அம்மா அப்பாவை எண்ணி எங்கள் அம்மா அப்பா அருளாசி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுங்கள்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாக துருவ நட்சத்திரமான அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.கண்ணின் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்
2.கண்களைத் திறந்து செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரம் என்று யாம் (ஞானகுரு) சொல்வதை நீங்கள் கேட்டுப் பதிவாக்கி விட்டீர்கள்.
1.இந்தப் பதிவின் நினைவை
2.உங்கள் கண்களுக்குக் கொண்டு வருகின்றீர்கள்.

உங்கள் கண்ணின் நினைவு நான் எதைத் “துருவ நட்சத்திரம்…” என்று சொன்னேனோ
1.உங்களுடைய உணர்வலைகள்
2.அங்கே அழைத்துச் செல்லுகின்றது.

இந்தக் காற்றிலிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவரும் சக்தி பெறுகின்றது.

“துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா” என்று
1.கண்ணைத் திறந்தே ஏங்கி இருங்கள்.
2.இப்போது கண்ணின் கரு மணிகளில் இந்த ஈர்க்கும் சக்தி வரும்.
3.கண்கள் லேசாகக் கனமாக இருக்கும்
4.மெதுவாகக் கண்ணை மூடுங்கள்.

புருவ மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும் உங்கள் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்துங்கள்,

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினை உங்கள் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.
1.உயிர் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை
2.ஈர்க்கும் சக்தியைக் கொண்டு வாருங்கள்.

அப்படி ஈர்க்குமானால் நம் புருவ மத்தியில் அந்தத் துருவ நட்சத்திர உணர்வு அதிகரிக்க நம் உடலுக்குள் இருக்கும் தீமை விளைவிக்கும் தீய உணர்வுகளுக்கு உணவு செல்லாதபடி தடைபடுத்தும்.

கண்ணிலே எப்படிக் கனமாக இருந்ததோ அதைப் போன்று
1.புருவ மத்தியில் துருவ நட்சத்திர அலைகளை ஈர்க்கும் சக்தி வரும் போது
2.புருவ மத்தியிலும் கனமாக இருக்கும்.
3.உயிரிலே இது மோதும் போது வெளிச்சங்கள் வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணப்படும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை ஈர்க்கும் சக்தி பெறுகின்றீர்கள்.

1.எதைக் கண்ணிலே நினைத்தோமோ
2.அதை உயிருடன் ஒன்றப்படும் பொழுது
3.உயிரில் உள்ள அந்தக் காந்தம் கவர்கின்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உயிரில் (புருவ மத்தி வழியாக) ஈர்க்கப்படும் பொழுது இதைக் கடந்து தீய உணர்வுகள் உள் செல்ல முடியாது தடைபடுத்துகின்றது.

சந்தர்ப்பவசத்தால் தீமைகளை நுகர்ந்தாலும் துருவ நட்சத்திரத்தை இணைத்துத் அந்தத் தீமைகள் விளையாது தடுக்க முடியும்

 

ஓ..ம் ஈஸ்வரா.. குருதேவா.. என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரோளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் இரத்த நாளங்களிலுள்ள ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

காலையிலிருந்து இரவு வரையிலும் சலிப்பு சஞ்சலம் கோபம் குரோதம் வெறுப்பு வேதனை என்று
1.எத்தனையோ வகையான உணர்வுகளை நுகர்ந்தறிந்தாலும்
2.இவை அனைத்தும் நம் இரத்தத்தில் கரு முட்டைகளாக மாறிவிடுகின்றது.

பின் நாளடைவில் அந்தக் கரு முட்டைகள்
1.அதனதன் குணத்திற்குத்தக்க அணுக்களாக உருவாகி
2.எந்த உறுப்புகளில் இந்த முட்டைகள் தேங்கி விடுகின்றதோ
3.அந்த உறுப்புகளில் இந்த வேதனையாகி அங்கே நோயாகி
4.அந்த உறுப்புகளை உருவாக்கிய நல்ல அணுக்களைக் கொன்று விழுங்கும் நிலை ஏற்பட்டு விடுகின்றது.

ஆனால் இதைப் போன்ற நிலைகளைத் தடைபடுத்த நம்மால் முடியும்.

ஒரு மல்லிகைச் செடியின் மேல் தட்டான் பூச்சி முட்டையிட்டாலோ அதைப் போல பல வண்ணங்கள் கொண்ட மலரில் தட்டான் பூச்சி முட்டையிட்டாலோ அந்தந்த வண்ணம் கொண்ட பூச்சிகளாக பட்டாம் பூச்சியாக மாறுகின்றது.

இதைப் போலத்தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை
1.இரத்தநாளங்களில் உருவாகும் பல குணங்கள் கொண்ட அணுக்கருவிற்குள் சேர்த்தால்
2.அந்தக் கரு முட்டைகள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெறும் வலிமை பெறுகின்றது.
3.அப்பொழுது இரத்தத்தில் உருவாகும் கரு முட்டையிலேயே தீமையை நீக்கும் சக்தி பெறுகின்றது.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு ஊசி (INJECTION) மூலம் நோய்களை நீக்குகின்றனர். உடல் ஊனமானதையும் மாற்றியமைக்கின்றார்கள் விஞ்ஞானிகள்.

1.தாயின் கருவில் உருவான சிசு உடலில் சில குறைபாடுகள் இருந்தாலும்
2.அந்த உணர்வின் தன்மையை மாற்றி
3.உயர்ந்த ஞானக் குழந்தையாக வளர்க்க முடியும் என்று விஞ்ஞானம் ஊட்டுகின்றது.

இதைப் போல மெய் ஞானிகள் கூறிய உணர்வின்படி கண்ணின் உணர்வினைக் கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் இரத்தங்களில் செலுத்த முடியும்.

இரத்தத்தில் வளர்ந்து வரும் கரு முட்டைகளுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை உங்கள் இரத்தத்தில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

அதாவது…
1.அந்தத் தீயவினைகள் உருவாக்கும் கரு முட்டைகளில்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இணையச் செய்து
3.அதிலுள்ள தீயதை நீக்கி நல்ல உணர்வு பெறச் செய்யும்
4.அந்த முட்டைகளாக மாற்றி அமையுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து அதிலுள்ள ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரோளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் பாய்ச்சுங்கள்.

ஒரு நண்பரிடம் பழகுகின்றோம். அவர் உடலை விட்டுப் பிரிந்து சென்று விட்டால் அவர் உணர்வு நமக்குள் அதிகமானால் அந்த ஆன்மா நமக்குள் வந்துவிடும்.

அவர் பட்ட துயரமும் நம் இரத்தத்தில் விளைந்து நமக்குள் கலந்துவிடும். அந்தக் கருக்களை உருவாக்கி நம் உடலுக்குள்ளே தீய அணுக்களாகி நம் உடலை வீழ்த்தி விட்டு வெளிச்சென்ற பின் அந்த தீய அணுவின் உணர்வு கொண்டு வேறொரு உடலாக மனிதனல்லாத உடலாகத்தான் பிறக்கும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீளத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்திட வேண்டும் என்று கண்ணின் நினைவைச் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு…
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறும்படி செய்தால்
3.அதன் வளர்ச்சியில் நம் உடலிலுள்ள நோய்களை நீக்கவும்
4.உறுப்புகளை நல்வழியில் வழி நடத்தவும் உதவும்.

நமக்குள் அரும் பெரும் சக்திகளைச் சேர்க்கும் வழி இது தான்…!

சாதாரண வாழ்க்கையில் சந்தர்ப்பவசத்தால் மெய் ஞானத்தைப் பெற்ற ஞான ரிஷிகள் – ஈஸ்வரபட்டர்

 

1.இச்சரீர உணர்வில் பெறும் சுக துக்கங்கள் மாறி மாறி வந்தாலும்
2.அதிலே வரும் அந்தத் துன்ப உணர்விலிருந்து மீளும் நிலை எப்படி…? என்று அறிந்து
3.தன் வாழ்க்கையில் மோதப்பட்ட அத்தகைய சம்பவங்களினால் தான் சகல ஞானிகளும் மகரிஷிகளும் உருவானார்கள்.

வால்மீகியார் வேட்டையாடிப் புசிக்கும் வேடுவ குலத்தில் பிறந்து வேட்டை ஆடச் சென்ற காலத்தில் ஜோடியாக இருந்த இரண்டு புறாக்களில் ஒன்றை அம்பெய்து வீழ்த்துகின்றார்.

வீழ்ந்த புறா வேதனையில் துடிப்பதையும் வேதனையில் துடிக்கும் புறாவின் நிலையை அதனுடைய ஜோடிப் புறா பார்த்துத் துடிதுடிக்கின்றது.

பாச உணர்வால் துடிதுடிக்கும் புறாவின் வேதனையை தன் எண்ணத்தின் உணர்வில் உற்றுப் பார்த்த வேடனான வால்மீகியார்…
1.தாக்கும் நிலையை விடுத்துத் தன் ஞானத்தின் உயர்வை
2.வானை நோக்கி ஏகும் போது உண்மையை உணர்கின்றார்.

அந்த எண்ண அலைத் தொடரைக் கொண்டு அன்று அவருக்குப் பிறந்த ஞானம்தான் இராமாயணக் காவியமாக உருவாகியது.

அதற்குப் பிந்திய காலத்தில் மீனவனாய்ப் பிறந்த வியாசர்… மீன் பிடித்துத் தன் வாழ்க்கையை நடத்திச் சென்ற வழித்தொடரில்… கடலில் மீன் பிடிக்கச் சென்ற பொழுது கடலில் விழுந்து தவித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு மீன் (டால்பின்) அவரைக் கரை சேர்க்கின்றது.

1.எந்த மீன் இனத்தைத் தான் இம்சித்தோமோ அதே இன ஜீவன்
2.தன்னைக் காத்ததை எண்ணி அப்பொழுது ஏங்குகின்றார்.

அந்த நேரத்தில் உதித்த ஞானத்தின் உணர்வுதான் அவரின் உயர் ஞான சித்தில் மனித வாழ்க்கைக்கு உயரும் பக்குவமான “கீதையின் உபதேசமாகத் தன் தத்துவத்தை” வடித்து வெளிப்படுத்தினார்.

பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்… இந்த மனித வாழ்க்கையில் மனிதன் எந்த நிலைக்குச் செல்ல முடியும்…? எதை எதைப் பெற முடியும்…? என்ற ஞான உணர்வில் அகஸ்தியர் காடுகளில் ஜெபமிருந்தார்.

அப்பொழுது ஓரிடத்தில் பிரசவ வேதனையுடன் ஓர் பெண்ணின் அழு குரல் கேட்டு அருகில் சென்று பார்க்கும் பொழுது… குழந்தையைப் பிரசவித்த நிலையில் நீருக்காக அத்தாய் அழுவதைப் பார்க்கின்றார்.

அது படும் வேதனையைப் பார்த்து அப்பெண்ணைக் கூட்டி வந்த பெண்ணும் தாகம் தீர்க்கத் தண்ணீருக்கு ஓடிய நிலையைக் கேட்டு அறிகின்றார்.

அப்பெண் தாகத்திற்காகத் துடிக்கும் நிலையறிந்து தண்ணீர் கொண்டு வருவதற்குள் தாகத்தால் அந்தத் தாய் உயிர் நீத்துவிடுகின்றது.

இதைக் கண்ட அகஸ்தியர் இத்தனை காலங்களாக தன்னால் சாதிக்க முடியாத ஜெப சக்தியை நாம் பெற்றுள்ளோம். இருந்தாலும் நினைத்த மாத்திரத்தில் அந்தப் பெண்ணின் தாகத்திற்கு
1.நீரைக் கொடுக்கக் கூடிய சக்தி இருந்திருந்ததென்றால்…
2.தாகத்தால் உயிர் நீத்த அத்தாய்க்கு
3.தன்னால் நீர் தர முடிந்திருக்கும் என்ற உணர்வின் ஏக்கம் கொள்கின்றார்.

அந்த எண்ணத்தைக் கொண்டு வீரிய ஜெபம் இருக்கின்றார். அதன் வழி வந்த ஞானத்தால்
1.தான் பெற்ற அகத்தின் உணர்வின் ஸ்திரத்தால் அகஸ்தியர் என்ற நாமம் பெற்று
2.அவரின் சித்தின் உயர்வின் ரிஷி சக்தியால்…
3.அவர் அமர்ந்திருந்த இடங்களில் எல்லாம்
4.ஜீவ நதிகள் உற்பத்தியாகும் வழித்தொடர் உருப் பெறுகின்றது

மனித உணர்வுக்கு ஒத்த ஜீவ நீர் அலைத் தொடரில் “தன் சக்தியை” இன்றும் செயலாக்கிக் கொண்டுள்ளார்.

இப்பூமியில் குறுகிய காலத்தொடரில் கொங்கணவர் பெற்ற வழித்தொடரும் இதே முறையில் தான்.
காட்சி:
குன்றுகள் போன்று சிறு சிறு மலைகள் தெரிகின்றன. மேடான ஒரு மலையில் ஓலை வேயப்பட்டுச் சிறு சிறு குடிசைகளும் அதற்குப் பக்கத்தில் சாணியைக் கொண்டு மெழுகிய தரை விசாலமாகவும் தெரிகின்றன.

அதற்குச் சிறிது தூரத்தில் சிறு சிறு பையன்கள் குதித்து விளையாடுவதைப் போன்றும், விளையாடும் பையன்களைப் பார்த்து அந்த வழியாகச் சிறு மூட்டை ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு வந்த பையன் மற்றச் சிறுவர்களுடன் தானும் விளையாடப் போகின்றான்.

எதிர்பாராது ஓர் கூர்மையான கல்லில் இடிபட்டுப் பலத்த காயமுடன் விழுந்து அலறுகின்றான். குடிசையிலிருந்த ஓர் தாய் அச்சிறுவனை அக்குடிசைக்குள் படுக்க வைத்து அச்சிறுவனுக்கு உண்டான காயங்களுக்கு மருந்திட்டுப் பாதுகாக்கின்றது.

பின் அதே சிறுவன் அத்தாயுடன் சிறிது வளர்ந்த நிலையில் அத்தாய்க்கு உதவியாக மருந்து அரைத்துத் தருகின்றான்.

அதன் பிறகு ஓர் கல்லறையும் அக்கலறையில் மண் மேட்டில் அதே சிறுவன் மீண்டும் வளர்ந்த நிலையில் அக்கல்லறையின் கால்மாட்டில் அமர்ந்து அழுது கொண்டிருப்பதைப் போன்றும் காட்சி தெரிகின்றது.

அக்கல்லறையிலிருந்து அச்சிறுவனுக்கு உதவிய தாயே வெளிச்சமுடன் கூடிய உருவமாய் அச்சிறுவனின் உருவமுடன் ஒன்றியதைப் போன்றும்… மேடான ஓரிடத்தில் ஓர் மரத்தை வெட்டி அம்மரம் ஐந்து ஆறு அடி உயரத்தில் உயர்ந்த மேடை போன்று இருப்பதைப் போன்றும்… அந்த இடத்தில் சிறுவனாய் இருந்து பெரியவனான அப்பையன் அமர்ந்திருப்பதைப் போன்றும்… அதே பையனின் உருவம் வயது முதிர்ந்த நிலையில் தெரிகின்றது.

மற்ற ரிஷிகள் தெரியும் பொழுது அடர்ந்த முடி தெரியும். ஆனால் இவரின் நிலை சிறு சிறு முடியுடன் சன்னமான தேகமுடன் அமர்ந்திருப்பதைப் போன்றும் காட்சி தெரிகின்றது.

அவரை வணங்கி யாரோ ஆசீர்வாதம் கேட்கும் பொழுது… என்னிடம் ஒன்றுமில்லை… அத்தாய் சக்திதான்…! என்று அத்தாயை எண்ணி அவர் வணங்குகின்றார்.

அவருக்கு முன் ஒளியாக அத்தாயின் உருவம் தெரிந்து அத்தாயிடம் தான் ஆசீர்வாதம் பெற்றுத் தன்னிடம் ஆசீர்வாதம் வேண்டி நின்றவர்களுக்கு இவர் அருள் புரிகின்றார்.

இதனுடைய உண்மைத் தத்துவம் அனாதையான சிறுவன் பட்ட துன்பத்தை நிவர்த்தித்து ஆதரவு தந்து அத்தாயின் சக்தியால் உயர்ந்த கொங்கணவர்…
1.அத்தாயின் உணர்வுடனே தன்னையும் ஐக்கியப்படுத்தி
2.தனக்கு ஆதரவு தந்து தன்னை உருவாக்கிய அத்தாய் சக்திக்குத்தான் தன் சக்தி சொந்தமென்று தவிர்த்து
3.தன்னை உயர்த்திக் கொள்ளாமல் தாயின் ஜெபத்துடனே தன் உயர்வைக் கொண்டு
4.தாயின் உயர்வுடனே சகல சித்துத் தன்மையையும் பெற்ற பக்குவ நிலை கொண்டு செயல்பட்டார்.

ரிஷி சக்திகளின் உண்மைத் தொடர்பு ஆரம்ப வாழ்க்கை நிலைகள் எல்லாமே சகல மனிதர்களை ஒத்த நிலைதான்…!

ஆனால்… தங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய
1.எண்ணத்தின் உணர்வில் எதிர்ப்படும் மோதல் காலங்களில்
2.ஞானத்தின் உயர் ஞானத்தைக் கொண்டு உயர்ந்தவர்கள் தான் சகல மாமகரிஷிகளும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இப்பொழுது நமக்குள் நாம் கஷ்டப்பட்டது… வேதனைப்பட்டது… சங்கடப்பட்டது… சோர்வடைந்தது… வெறுப்படைந்தது… சண்டை போட்டது… இத்தனை உணர்வுகளும் பிறருடைய தோஷமாக இருக்கின்றது. அவை எல்லாம் நமக்குள் பதிவாகியிருக்கின்றது.

நாம் சிறிதளவு சோர்வடைந்தால் கூட நமக்குள் என்ன செய்யும்…?

1.மாமியார் திட்டிய உணர்வு வந்துவிடும்
2,மாமனார் கோபித்தது வந்துவிடும்
3.பிள்ளைகள் சேட்டை செய்தது நினைவுக்கு வரும்.
4.அவர்கள் ஒத்துழைக்கவில்லை… இவர்கள் இப்படிச் சொல்கிறார்கள்… என்ற எண்ணம் வரும்.

அடுத்து… பக்கத்து வீட்டில் இருக்கும் அவர்கள் ஏதாவது சொன்னால் அவர்கள் மேலும் நமக்குள் கோபம் வரும்.

நாம் சாப்பிடும் பொழுது அந்த உணர்வுகள் அனைத்தும் உடலுக்குள் உமிழ் நீராக மாறுகின்றது. அந்த உமிழ் நீர் இரைப்பைக்குப் போனவுடனே நம் இரைப்பை என்ன செய்கின்றது…?

நமக்குள் சேர்த்துக் கொண்ட அந்த விஷத்தின் தன்மையால் அது மயக்கமடைந்து நாம் சாப்பிட்டதைச் சாப்பிட முடியவில்லை. “என்னால் சாப்பிட முடியவில்லையே…! என்ற உணர்வு வருகின்றது.

இந்த வேதனை உணர்வு ஆன பிற்பாடு பெருங்குடலுக்கு வந்தவுடன் என்ன செய்கின்றது?

“புஷ்…ஷ்ஷ்..” என்று உப்பி வயிறு எப்படியோ உப்புசமாக ஆகின்றது என்று சொல்கிறோம்.

அப்புறம் என்ன செய்கின்றது…?

உடலுக்குள் போனவுடன் இந்த கணையத்தில் இந்த விஷத்தின் தன்மை இணைந்துவிடுகின்றது. இதெல்லாம் கல்லீரல் மண்ணீரலுக்கு வந்த பின் அங்கேயும் விஷம் அதிகமாகின்றது.

இங்கே வலிக்கின்றது… இடுப்பு வலிக்கிறது. “கும்..ம்…” என்று இருக்கின்றது என்று இத்தனை வேலைகளையும் செய்ய ஆரம்பிக்கின்றது. ஆக நம் உடலில் இத்தனை தொல்லைகளையும் எடுத்துக் கொள்கின்றோம்.

நம் உடலில் நாம் எடுத்துக் கொண்ட சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் குரோதம் போன்ற நினைவுகள் நமக்குள் வரும் போது அது உமிழ் நீராக மாறி நமது சிறு குடலில் சேர்த்தவுடன் நாம் சத்தான ஆகாரத்தைச் சாப்பிட்டாலும் அது நஞ்சாக மாற்றுகின்றது.

உதாரணமாகப் பாலில் போடும் பாதாமிற்குச் சக்தி இருக்கின்றது. அந்தப் பாலிற்கும் சக்தி இருக்கின்றது. அதனுடன் சீனி போட்டால் ருசியாகவும் இருக்கின்றது.

ஆனால்… ஒரு துளி விஷம் பட்டால் என்ன செய்யும்…? பாலில் ஒரு துளி விஷம்பட்டால்
1.அதில் சத்து இருக்கின்றதா…?
2.இல்லை… அந்தப் பாதாமிற்குத்தான் சத்து இருக்கின்றதா..?

அதே மாதிரி
1.நமக்குள் நல்ல குணங்கள் இருப்பினும்…
2.நல்ல ஆகாரத்தைத் தான் சாப்பிட்டாலும்…
3.இந்த விஷம் கலந்த பின் விஷம் கலந்த மயக்கம் தான் வருமே தவிர
4.நல்லது வருகின்றதோ…!

நம் உடலுக்குள்
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் எதனெதன் உணர்வோ
2.அதனதன் அறிவாக அதனதன் அணுக்கள் விளைந்து
3.நமக்குள் என்ன செய்கின்றது…? என்பதனைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் நல்லவர்களாக இருந்தாலும் நாம் நுகர்ந்த உணர்வுக்கொப்ப உடலுக்குள் அணுக்களாக எது எது விளைகின்றது…? என்பதைத் தெரிந்து தெளிந்து வாழ்வதற்குத்தான் இதை உங்களிடம் சொல்கின்றோம்.

தீமைகள் வரும் பொழுது அதை நீக்க அந்த மெய் ஞானிகளின் உணர்வை நுகர்ந்து அதை மாற்றியமைக்க வேண்டும். அதை நீக்கிப் பழக வேண்டும். அதற்குத்தான் அந்த மெய் ஞானிகளைப் பற்றித் திரும்பத் திரும்பச் சொல்லிப் பதிவாக்குகின்றோம்.

வசிஷ்டர் அருந்ததி நட்சத்திரங்கள்

 

ஆதிமூலம் என்ற உயிர் ஒவ்வொரு சரீரத்திலும் தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வு கொண்டு சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக மனித உடலை உருவாக்கியது.

மனித உடலை உருவாக்கிய எண்ணங்களுக்கு எல்லாம் ஈசனாக இருந்து இயக்கியது உயிர்…. கணங்களுக்கெல்லாம் ஈசனாக இருந்து இயக்கிய உயிரைக் கணேசா…! என்று ஞானிகள் காரணப் பெயர் வைத்துள்ளனர்.

மூஷிகவாகனா… எதை எதையெல்லாம் சுவாசித்தோமோ சுவாசித்த உணர்வின் தன்மைகளை வாகனமாக அமைத்துப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வளர்ந்து வந்திருக்கின்றோம்.

1.ஆதியிலே அவ்வாறு வளர்ச்சி அடைந்த முதல் மனிதன் அகஸ்தியன்…
2.தாய் கருவிலே பெற்ற சக்தியின் துணை கொண்டு விண்ணின் ஆற்றலைச் சுவாசித்தான்.
3.தன் உணர்வின் தன்மையை ஒளியாக்கி அந்த உணர்வின் துணையால் மூஷிகவாகனா…
4.ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலங்களுடன் ஒன்றி வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான் துருவ மகரிஷி.

அவனைப் பின்பற்றிச் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள். “வசிஷ்டரும் அருந்ததியுமாக ஒன்று சேர்ந்து வாழ்ந்து…” இந்த வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றி ஒளியாகச் சென்று உள்ளார்கள்.

திருமணமாகும் ஒவ்வொரு கணவன் மனைவியும் இந்த நினைவினைத் திருப்பூட்டும் போது எடுத்து அதைத் தமக்குள் வினையாக்க வேண்டும். ஆக… அருள் மகரிஷிகளுடன் ஒன்றி வாழும் நிலைகள் எப்படிப் பெற வேண்டும் என்பதற்குத்தான் அருந்ததி என்ற நட்சத்திரத்தைக் காணச் செய்தார்கள்.

விநாயகரை வணங்கும் பொழுது…
1.எங்கள் அன்னை தந்தையின் அரவணைப்பில் தான் மனிதனாகப் பிறந்துள்ளோம்.
2.எங்கள் வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் பொழுது அந்த வசிஷ்டரும் அருந்ததியும் போன்று
3.இரு மனமும் ஒன்றி வாழ்ந்திடும் அந்த அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
4.அவர்கள் வாழ்ந்த காலத்தில் தங்கள் வாழ்க்கையில் இருள் நீக்கிப் பொருள் கண்டுணர்ந்த அந்தச் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற
5.இந்த உணர்வினை ஏற்று… இந்த உணர்வினைப் பதிவு செய்து விண்ணை நோக்கி ஏகி
6.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற இந்த அலைகளைப் பரப்ப வேண்டும்

கணவனும் மனைவியும் ஒன்று சேர்த்த இணைகள் இருவரும் ஒன்றாகி சூரியனின் காந்த சக்தியால் அது கவரப்பட்டு அலைகளைத் தொடரச் செய்வதுதான் இது.

இவ்வாறு அதை இணைந்து விட்டுத் திருப்பூட்ட வரும் பொழுது
1.விஷ்ணு அக்கினி… தனக்குள் இயக்கிக் கொண்டிருக்கும் உயிரை எண்ணி
2.அந்த உணர்வின் துணையால் எங்கள் இரு மனமும் ஒன்றாக வேண்டும் என்று இன்று இணைக்க வேண்டும்.

பின்… மலரைப் போன்ற மணம் பெற வேண்டும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். கனியைப் போன்று சுவையான சொல்லும் செயலும் எங்களிலே வளர வேண்டும்.
1.என்றென்றும் எங்கள் அன்னை தந்தையரின் அரவணைப்புடன் நாங்கள் வாழ்ந்திட வேண்டும்.
2.அவர்கள் உணர்வுகள் எங்களுக்குள் குருவாக இருந்து வழி நடத்தும் அந்த அருள் சக்தி நாங்கள் இருவரும் பெற வேண்டும் என்று
3.திருப்பூட்டும் முன் மணமக்கள் ஏங்கி இருக்க வேண்டும்

அதே சமயத்தில் வாழ்த்துரைக்க வந்த மற்றவர் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழச் செல்லும் அவர்கள் இருவரையும் ஒன்றாக இணைக்கச் செய்ய அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துத் தங்களுக்குள் வலுவாக்கிக் கொண்டு அந்த மணமக்களைப் பார்த்து…
1.வசிஷ்டரும் அருந்ததியும் போல இரு மனமும் ஒன்றி அவர்கள் வாழ வேண்டும்
2.வாழ்க்கையில் வரும் இருளைப் போக்கி பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும்
3.அவர்கள் அன்னை தந்தை அருள் ஒளியால் தெளிந்த மனங்கள் கொண்டு மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும் என்று
4.அனைவரும் இதை எண்ணிக் கண் ஒளியால்… நினைவால் அந்த உணர்வலைகளைப் பரப்ப வேண்டும்.

மணமக்களைக் கருத்தில் கொண்டு இந்த எண்ண அலைகளைப் பரப்பப்படும் பொழுது இந்த உணர்வின் சக்தி அங்கே அவர்களுக்குள் ஆழமாகப் பதிந்து நம்முடைய வாழ்த்துரைகள் அவர்கள் வாழ்க்கையைச் சீராக்க இது உதவும்.

ஆக…
1.மணமக்களை எவ்வாறு வாழ்த்த வேண்டும்…?
2.வாழப் போவோருக்கு நாம் எப்படி நல்லாசி கூற வேண்டும்…?
3.நாம் கொடுக்கும் அந்த ஆசிகள் இருளைப் போக்கிடும் அரும் பெரும் சக்தியாக எப்படி வலுப்பெறச் செய்ய வேண்டும் என்று தான்
4.நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகின்றது.

ஆதிசங்கரருக்குப் பின் மெய் வழி செல்லும் பாதையே மாறி விட்டது…! ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எண்ணத்தின் உணர்வைச் சமமாக்கும் ஆத்ம வலுக் கொண்டு ரிஷிகளுடன் தொடர்பு கொண்டு உயர் காந்த மின் ஒளியை ஜெபத்தால் எடுக்கும் நிலைக்கு வளர வேண்டும்.
1.இப்படிப்பட்ட வாழ்க்கைத் தொடரில் வளர்த்துக் கொள்ளும் உயிராத்மா இணைப்பில்
2.கணவன் மனைவியின் கூட்டு ஜெபத்தால் மனிதன் தெய்வ நிலை பெற முடியும்.

அண்டத்தின் அகிலமாய்… ஆதி சக்தியின் அனைத்துப் படைப்பிலும்…
1.ஆண்டவன் என்ற உயர்ந்த நிலையில்
2.அதன் தொடர் பெற்று வளரும் தன்மையை இறை நிலையாக்கி
3.இறை சக்தி கொண்டு… இறை உணர்வு பெற்று…!
4.தெய்வத் தன்மை கொள்ளும் தொடர்பு நிலை தான் “இயற்கையின் உண்மை நீதி நிலை…!”

மனிதனின் எண்ணத்தின் உணர்வில் பகுத்தறியும் உயர் ஞானத்தின் வழித் தன்மை கொண்டு இறை நிலை பெற்று… இறை சக்தியாய்… இறை உணர்வு குணத்தை… இச்சரீர வாழ்க்கையில் வலுப்பெறும் வளர்ச்சிக்கொப்ப… மனிதன் தெய்வமாகும் நிலை உண்டு.

மனித வாழ்க்கைக்குத் தேவையானதை… நாளை செயல் கொள்ள இன்றே சேமிக்கும் செயலை… அந்தத் திறமை கொண்டு வழி அமைக்கும் பக்குவம் “மனிதனுக்குதான் உண்டு…!”

வாழ்க்கையின் நடைமுறைக்கு உழுது பயிரிட்டுப் பலன் பெற்றுத் தான் இன்றைய மனிதன் சமைத்து உண்ணுகின்றான்.

உடலின் சுக நிலைக்கு ஏற்ற பல வழி முறைகளைத் தன் ஞானத்தால் மனித வாழ்க்கை நடைமுறையில் செயல்படுத்தும் நாம்…
1.நம் ஞானத்தின் உயர்வால் உயிராத்மாவைத் தெய்வத் தன்மை கொள்ளும் பக்குவத் தொடர் தான்
2.இங்கே இந்த உபதேச வாயிலாக விளக்கப்படும் இயற்கையின் உண்மையின் நியதிகள்.

மிருகங்கள் தனக்குக் கிடைத்ததை உண்டு உறங்கும் வாழ்க்கையாக அதனின் உணர்வின் எண்ணத்தின் நிலை இருந்தாலும் உயர் ஞானத்தால் செயல்பட முடியாத உண்மை நிலையை அன்றே ஞானிகள் தன் உணர்வின் எண்ணத்தால் கண்டுணர்ந்தனர்.

ஆனால் காலப் போக்கில் ஞானத்தின் வழி செல்வது என்பது பல நிலைகளில் மாற்றப்பட்டு… உண்மைத் தத்துவங்கள் மறைக்கப்பட்டு விட்டது.

தன்னுள் உள்ள இறை சக்தியை இறை உணர்வாக்கும் நிலையை மனிதன் அறிய முடியாமல்
1.இறைவன் என்பதையே யாரென்று அறிய முடியாமல்
2.பூஜித்துப் பலன் காணும் வேத விற்பனர்களிடம் அடிமைப்பட்டு
3.சிதறுண்ட நிலையாகத் தான் இன்றைய நிலை உள்ளது.

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பே உணர்வின் எண்ணத்தில் தன் எண்ணத்தாலே சக்தி பெற்று… உயர்வை வளர்க்கும் உயர்ந்த தத்துவத்தை ஆதிசங்கரர் அத்வைத முறைப்படுத்திக் காட்டினார்.

அதற்கடுத்து வந்தவர்கள் நான்கு வகை வேதங்களாக்கி… மனித உருவங்களை அமைத்து… மந்திர ஒலி எழுப்பி… அறியக்கூடிய நிலைக்கும் பக்தி மார்க்க நிலைக்கும்… வான சாஸ்திரத்தின் தொடரை அறியவும் கொண்டு சென்றனர்.

அந்த நான்கு வேதங்களின் தொடரில் இது தான் பெரிது… இல்லை அது தான் பெரிது… என்று பல வேதங்களைப் பிரித்து மனிதனின் எண்ண உணர்வால் தெய்வத் தன்மை பெறக்கூடிய வழியை மாற்றி விட்டனர்.

அரசு நிலைக்கும்… குடிமகன் நிலைக்கும்.. நாட்டியக்கலை மற்ற இசைக் கலைகளுக்கும்… வேதத்தின் விற்பன்னர்களுக்கும்… என்று நான்கு மறையாக்கி வகுக்கப்பட்ட நிலையில் அந்தந்தத் தொடருக்குப் பல நிலைகளைப் பிரித்தனர்.

அது மட்டுமல்லாமல் காலப்போக்கில் ஒலி அலையின் தொடர் பெற்று உருவகங்கள் மாறி மாறி
1.அன்று கண்ட ஞானியின் உண்மைத் தத்துவத்தை
2.இன்றைய நிலையில் உணரும் தன் ஞானமும் அற்றுப் போய்
3.விஞ்ஞானப் பிடிப்பிலேயே வாழுகின்ற நிலை எல்லோருக்கும் ஏற்பட்டு விட்டது.

இதிலிருந்து மீள வேண்டும் என்றால்… ஞானத்தின் வழித் தொடரில் உயர் ஞானமாக்கும் ஆத்ம தியானத்தால்… தன்னைத்தான் தான் உணரும் பக்குவம் பெற்று மனிதனுக்கு அடுத்த உயர்வு நிலையான “தெய்வ நிலை” பெற முடியும்

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“வேதனை…வேதனை…வேதனை… என் வாழ்க்கையே வேதனை…” என்று எண்ணினால் பல விதமான பாம்புகளாகத்தான் அடுத்து உடல் பெறுவோம் – மீளும் மார்க்கம் என்ன?

உயிரணு தோன்றி எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து மனிதனாக நாம் வந்த பின் விஷத்தை மலமாக மாற்றி நல்ல உணர்வுகளைக் கொண்டு வந்தது இந்த உடல்.

அவ்வாறு நல்ல உடலாக நாம் பெற்று வந்தாலும் இன்றைய வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் உணர்வுகள் நம்மை வேதனைப்படச் செய்கின்றது.

ஆனால் வேதனை என்ற உணர்வுகளைச் சுவாசித்துச் சுவாசித்து எல்லா அணுக்களிலும் இந்த விஷத்தைச் சேர்த்துச் சேர்த்து வளர்த்து விட்டால் என்ன சொல்வோம்…?

எம்மா…! என்னாலே முடியவில்லையே… அவன் அப்படிச் செய்கின்றான்… இவன் இப்படிச் செய்கின்றான்… என்று கடும் வேதனையாக நாம் பேசத் தொடங்குவோம்.

அப்பொழுது நம் நண்பரிடம் சொல்லி உதவி கேட்கலாம் என்று செல்கிறோம். அவரிடம் கடுமையான நிலைகளில் வேதனைப்பட்டதைப் பற்றி விவரித்துச் சொல்லும் பொழுது அவரும் உற்றுக் கேட்கின்றார்.

அப்பொழுது அவருக்குள் அந்த வேதனை உணர்ச்சிகள் அதிகமான பின் அவருக்கு மயக்கமாகி விடுகின்றது.

நாம் எந்த எதிர்பார்ப்பில் இருப்போம்…? வேதனையைச் சொல்லி அவர்களிடம் ஏதாவது காசு வாங்கலாம் என்று எண்ணிக் கஷ்டத்தை அதிகமாகச் சொல்வோம்.

இந்தக் கஷ்டமான உணர்வுகள் அவர்களுக்குள் பாய்ந்து அவர்களுக்கு வருமானம் வருவதையும் தடுக்கும். கடைசியில் அவர்களையும் (மயக்கம்) நோயாக்குகின்றது.

அப்பொழுது அந்த நேரத்தில் கேட்டால் “பணம் இல்லை…” என்பார்..

நாம் என்ன நினைப்போம்…! இந்த நண்பர் எனக்கு உதவி செய்கிறேன் என்று நேற்று சொன்னார். இன்று “இப்படி இல்லை…” என்கிறாரே…! என்போம். ஆனால்
1.நம்முடைய உணர்வு தான்
2.அவரை இப்படிச் சொல்ல வைக்கின்றது என்று நமக்குத் தெரிவதில்லை.

நமக்கு அவர் எந்த உதவியும் செய்யவில்லை என்று மீண்டும் இந்த உணர்வின் தன்மை வேதனையாகி நம் உடலுக்குள் வரப்படும் போது விஷங்கள் அதிகமாக வளர்ந்து விடுகின்றது.

அப்பொழுது நம் உடலுக்குள் என்ன நடக்கின்றது…?

எல்லா அணுக்களுக்குள்ளும் வேதனை படர்கின்றது. விஷத்தின் தன்மை நல்ல அணுக்களைக் கொன்று சாப்பிட ஆர்ம்பிக்கின்றது.

ஒரு விஷம் கொண்ட பாம்பு தன் விஷத்தைப் பாய்ச்சித்தான் மற்ற உயிரினங்களை விழுங்கித் தன் உடலாக மாற்றுகின்றது.

அதைப் போல வேதனப்படும் இந்த விஷமான அணுக்கள் மனித உடலை உருவாக்கிய நல்ல அணுக்களைக் கொன்று சாப்பிடுகிறது.

நம் உடல் அப்படியே நலிந்து போய்விடும். ஐய்யய்யோ…, அம்மம்மா என்று சொல்லத் தொடங்குவோம்.

கேன்சர் நோயுடன் இருப்பவர்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள்…? என்ன செய்கிறார்கள்…? நாளுக்கு நாள் நாளுக்கு நாள் வேதனையைத் தான் சேர்க்கின்றார்கள்.

சரவாங்கி நோயோ மற்ற நோய்களோ வரப்படும் போது மூட்டுக்கு மூட்டு வலிக்கின்றது. வேதனை வெறுப்பு கோபம் இதெல்லாம் சேர்த்தவுடனே நம் உடலில் உள்ள நல்ல அணுக்களை அது கொன்று சாப்பிடுகிறது.

1.விஷத்தைப் பாய்ச்சி தனக்கு இரையாக்கிவிடும்.
2.அதனுடைய மலம் நம் உறுப்புகளைத் தின்றுவிடும்.
3.அதனுடைய மலம் உறுப்புகளைத் தின்றால் உடல் உறுப்புகள் குறையத் தொடங்குகிறது.
4.கடைசியில் மனிதன் வாழ்க்கையைக் குறைக்கச் செய்துவிடுகின்றது.

இந்த உடலை விட்டுப் போன பிற்பாடு எங்கே போகிறது…? பாம்பின் உடலுக்குள் சென்று பாம்பின் உடலைத்தான் பெறுகின்றது.

கேன்சர் நோய் உள்ளவர்கள் இறந்தார்கள் என்றால் அடுத்துப் பாம்பின் நிலைக்கே போகிறார்கள்.

வேதனை வெறுப்பு கோபம் என்று வரப்படும் போது கட்டுவீரியன் பாம்பாகத்தான் போகவேண்டும். விஷத்தின் தன்மை அளவுகோல் எப்படி இருக்கின்றதோ அதற்குத்தக்க கண்ணாடிவீரியன் பாம்பாகப் போகிறார்கள்.

உடல் பெற்ற நிலைகளில்
1.எந்தெந்த உயிரினங்கள் ஊர்ந்து செல்கிறதோ
2.அது போல கை கால் எல்லாம் இழந்து
3அத்தகைய உயிரினங்களின் உடலாக ஆக்கிவிடும் நம் உயிர்.
4.இதுவும் உடல் சிவம் தான்.

ஆனால் இருளுக்குள் வேதனை என்ற உணர்வு வரும் போது சிந்திக்கும் தன்மை இழந்து அதற்குத்தக்க உடலை இந்த உயிர் தான் உருவாக்குகின்றது.

காரணம் “சந்தர்ப்பம்… தான்”.

வேதனைப்படுவோர்களுக்கு எல்லாம் அடிக்கடி ஏதாவது வரும். வந்தது என்றால் அது சந்தர்ப்பம் தான்.

ஐயோ… “நல்ல மனிதன்… இப்படி இருக்கின்றானே…!” என்று நீங்கள் எண்ணுவீர்கள்.

இந்தச் சந்தர்ப்பம் நம் உடலில் வேதனை அதிகமாகச் சேர்த்தவுடனே என்ன செய்கிறது…? வேதனை என்ற விஷம் உள்ளுக்குள் போய் நல்ல குணங்கள் அனைத்தையும் சாப்பிட்டு விழுங்குகின்றது.

நான் எல்லாருக்கும் உதவி செய்தேனே… பண்பாக இருந்தேனே… பரிவாக இருந்தேனே… என்று நாம் சொல்லலாம்.

யானை தேய்ந்து கட்டெறும்பாகப் போன மாதிரி “அம்மா… தாங்க முடியவில்லையே… என்றைக்குத் தான் இந்த உடலை விட்டுப் போகப் போகிறேனோ…?” இது… வந்துவிடும்.

நான் இத்தனை பேருக்கு உதவி செய்தேனே…! என்று எண்ணுவோம்

ஆனால் கடைசியில அதைக் கூட மறந்துவிட்டு “எப்படா… (உடலை விட்டு) என்னைக் கொண்டு போகப் போகிறாய்?” என்று சொல்லிப் புலம்புவோம்.

இந்த உணர்வுதான் தோன்றும். வெளியில் போனவுடன் என்ன செய்யும்…?

அதற்குத்தக்க பாம்பின் ஈர்ப்புக்குள் போய் அதனின் கருமுட்டையாக அமைந்து அமைதியாகி… பாம்பாகப் பிறக்கும். பாம்பாகப் பிறந்த பிற்பாடு விஷத்தைப் பாய்ச்சி சந்தோஷமாக இருக்கும் நிலை வருகிறது.

பாம்பு தன் உணவுக்காக ஒரு சுண்டெலியையோ அல்லது பெரிய எலியையோ பார்க்கிறது. விஷத்தால் தீண்டியவுடன் எலி இறந்து போகின்றது.

தன் விஷத்தைப் பாய்ச்சிக் கொன்ற பிற்பாடு வாயைத் திறந்து அந்த எலியை விழுங்குகிறது. உள்ளுக்குள் செல்லும் நிலையில் உடல் உப்புசமாகி பாம்பு நரக வேதனைப்படுகின்றது.

1.முதலில் (மனித உடலில்) அதிகமான வேதனைப்பட்டது.
2.அடுத்தாற் போல பாம்பாகப் பிறந்து விஷத்தைப் பாய்ச்சிச் சந்தோஷமாக இருக்கின்றது.
3.பாம்பான பின் தன் இரையை விழுங்கும் போது இத்தனை நரக வேதனைப்படுகிறது.

உடலுக்குள் கொண்டு போய்ச் சேர்ப்பதற்குள் அது படும் பாடு பார்த்தால் அது எத்தனை நரக வேதனைப்படுகிறது…?

பாம்பு தன் இரையை முழுங்கிய நிலையில் இருக்கும் பொழுது அதை நீங்கள் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். அது எத்தனை அவஸ்தைப்படுகிறது என்று.

கேன்சர் நோய் உள்ளவர்கள் சாப்பிடும் போது எத்தனை வேதனைப்படுகிறார்கள்…? அதே மாதிரி
1.பாம்பின் உடல் பெற்ற பிற்பாடும்
2.அதே வேதனை தான் வருகின்றது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் என்னமோ… “கடவுள் எங்கேயோ இருந்து இயக்குகின்றார்…! அவர் தான் எல்லாவற்றிற்கும் காரணம்…!” என்று எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் ஞானிகள் சொன்னது.
1.உள் நின்று இயக்கும் நம் உயிர் தான் கடவுள்.
2.நம் சந்தர்ப்பம் நாம் எதை நுகர்கின்றோமோ
3.அதனின் இயக்கமாக சுவாசித்ததை நம் உயிர் இயக்கி
4.எண்ணம் சொல் செயல் என்று செயல்படுத்துகின்றது.

நாம் நுகரும் உணர்வுகள் தான் அனைத்திற்கும் காரணம்.

சூரியனுக்கே இல்லாத சிறப்பு நமக்கு உண்டு

 

இந்தப் பேரண்டத்திலே மற்ற அணுக்களாகி… துகள்கள் ஆகி… கோள்களாகி நட்சத்திரமாகி வளர்ச்சியில் சூரியனாகி அதன் வழிகளில் பிறந்த நிலையில் அனைத்தும் தெளிந்திடும் அணுவின் தன்மை பெற்று உலகையே சிருஷ்டிக்கும் நிலைகள் பெற்றது தான் “சப்தரிஷி மண்டலம்…” என்பது.

விண்ணின் ஆற்றலைப் பெற்று பேரண்டத்திலிருந்து வரும் நஞ்சினைப் பிளந்துவிட்டு உணர்வினை ஒளியாக மாற்றியவர்கள் ஒளிச்சுடராகச் சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள். பிறவா நிலை என்ற நிலை அடைந்துள்ளார்கள்

தீமை எது…? நன்மை எது…? என்று உணர்ந்து அதிலே தீமைகளை அகற்றி நன்மைகளை உருவாக்கும் எண்ணங்களைத் தனக்குள் வளர்த்து தீமைகளை அகற்றிடும் வலுவைத் தனக்குள் சேர்த்துச் சேர்த்து ஆற்றல்மிக்க சக்தியை தனக்குள் உருவாக்கிய நிலைகள் கொண்டு உயிருடன் ஒன்றி அழியா ஒளி சரீரம் பெற்றுப் பேரின்ப பெரு வாழ்வு என்ற நிலைகளை அகஸ்தியன் அடைந்தான்.

ஆவியாக இருப்பது அணுக்களாக வளர்ந்தாலும் அதிலே மனிதனான பின் உணர்வின் சத்து உயிருடன் ஒன்றிய ஒளியின் நிலைகள் ஒளியின் சிகரமாகப் பெற்றபின்
1.அதனின்று வெளிப்படும் உணர்வுகள் அனைத்தும்
2.பேரண்டத்தில் பெரும் சக்தியாக மாற்றமடைந்து வருகின்றது.

இப்படித் தான் தன்னுடைய வளர்ச்சியில் வந்த மனிதனின் உயிர் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறியபின் உலகையே படைக்கும் சக்தியாக வருகின்றது.

ஆகையினால் இந்த மனித வாழ்க்கையில் நாம் சிந்தித்து… எதனை நமக்குள் சமைக்க வேண்டும்… பொங்கலாக்க வேண்டும்… எதை ஒளியாக மாற்ற வேண்டும்…? என்பதைச் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

சூரியன் எவ்வாறு இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து அதிலே மற்ற அனைத்தையுமே வளர்ச்சி அடையச் செய்கின்றதோ அதே போன்று மனிதனானவன் சூரியனைப் போன்ற நிலைகள் அடைந்து படைக்கும் திறனைப் பெற்றவன் தான்,

அதனை அறிந்து அதன் வழிகளில் தீமைகளை அகற்றிடும் உணர்வைத் தனக்குள் வளர்த்து முழுமை அடைந்தவர்கள் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் வளர்ச்சி அடைந்துள்ளார்கள்.

சூரியன் எவ்வாறு மற்ற கோள்களையும் நட்சத்திரங்களையும் உருவாக்கியதோ அதைப் போன்று முதல் மனிதனான அகஸ்தியன் துருவத்தின் நிலைகளை உணர்ந்து துருவ நட்சத்திரமாக இன்றும் நிலை கொண்டுள்ளான்.

அதிலிருந்து உமிழ்த்திய உணர்வுகளைப் பெற்று அந்த அகஸ்தியனைப் பின்பற்றிச் சென்ற மனிதர்கள் அனைவருமே ஒளிச் சரீரமாகி ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக மாற்றிச் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்

நம் பிரபஞ்சத்தில் உள்ள சூரியனோ அது குறிப்பிட்ட காலத்தில் மடிந்துவிடும். ஆனால் இந்தப் பிரபஞ்சத்தில் உருவான உயிரணுக்கள்
1.தீமைகளை அகற்றிடும் உணர்வின் சத்தைத் தனக்குள் தெளிவாக எடுத்துக் கொண்டால் அது என்றுமே மடிவதில்லை.
2.இந்தப் பேரண்டத்தை உருவாக்கும் சக்தி பெறுகிறது.

அத்தகைய ஆற்றல் பெற்றவர்கள் தான் அகஸ்தியனும் மற்ற மகரிஷிகளும். நாமும் அந்த ஆற்றலைப் பெற வேண்டும். அதற்குத் தான் இந்த உபதேசம்…! (ஞானகுரு).

மகரிஷிகள் மனிதரைத் தேடி வருவதன் காரணம் என்ன…? ஈஸ்வரபட்டர்

 

காட்சி: பிரகாசமாக சூரிய வட்டம் தெரிந்து பல ரிஷிகளின் உருவமும் அவர்களின் செயல் முறையும் தெரிகின்றது. உருவம் தெரிந்து அவ்வுருவம் அப்படியே பிரிந்து… ஒளியாக ஒரு உருவம் பிரிந்த பிறகு… மீண்டும் பல உருவங்களாகவும் தெரிகின்றது.

பல கோடி ரிஷிகள் உள்ள பொழுது இப்பூமியில் இன்று தன்னைத் தானே உணர முடியாமல் வாழ்கின்ற மனிதனின் மேல்
1.அவர்கள் வளரத் தன் சக்தியை ஏன் உபயோகித்துச் செயல்பட வேண்டும்…?
2.சிருஷ்டியின் தன்மையையே சிருஷ்டிக்கும் ரிஷிகள்
3.மனிதனின் உணர்வுடன் ஒட்டிச் செயல்படும் நிலைகள் எதற்கு…? என்ற வினா எழும்பலாம்.

சூரியனும் பூமியும் ஒன்றின் ஈர்ப்புத் தொடர் கொண்டு ஒவ்வொன்றும் தொடர்ந்து ஓடிக் கொண்டே செயல்படுகின்றது. ஈர்ப்பின் பிடிப்பில் இருந்து எந்த மண்டலமும் தனித்த ஒன்றாகச் சுழன்று செயல்பட முடியாது.

1.ஒன்றின் தொடர்பு பெற்று…
2.ஒன்று ஓடும் ஜீவ வளர்ச்சி ஏற்படும் தொடரில் தான்
3.எல்லா மண்டலங்களின் சுழற்சியும் உள்ளது.

இச்சுழற்சியின் மையக் கருவாக ஈர்க்கப்படும் சக்தியின் தொடர் வளர்ச்சியுற்றுக் கொண்டே… அத்தொடரின் வலுக்கொண்டு வளரும் தொடரில் தான்… மண்டலங்களும் அதில் வளரும் தொடரும் செயல் கொள்கின்றது.

அதைப் போன்று தான் சகல சித்து நிலையின் படைப்பின் படைப்பையே படைக்கவல்ல “ரிஷிகளின் தொடர்பிற்கு…” உணர்வின் எண்ணம் கொண்ட ஜீவ காந்த ஒலி சரீரத் தொடர்பின் எண்ணம் கொண்டுதான் அந்த ரிஷி சக்திகளின் மூலக்கருவே செயல் கொள்கின்றது.

1.தன்னுடைய வலுவின் தொடர் வலுவில் வளர்ப்பை வளர்க்கவல்ல நிலைக்கு…
2.ஜீவ காந்த உணர்வு எண்ண செயல் சக்தியைக் கொண்டு…
3.ரிஷிகளின் தொடர்புடன் மனித எண்ணத்தின் தொடர்பு சுழற்சி வலுப் பெறப் பெற…
4.ரிஷிகளைக் காட்டிலும் மனித உணர்வால் ஜீவ செயலில் உபதேசிக்கும் உண்மை உயர் ஞானத் தத்துவ ஈர்ப்பினால்…
5.மனித உணர்வின் அன்பைப் பெற்றானானால்…
6.மனிதச் சரீரத்தில் இருந்தே பலரின் அன்பான அலையின் வலுவைக் கொண்டு…
7.இச்சரீர ஆத்மாவிற்கு உயர்ந்த முலாமை வளர்த்துக் கொண்டு…
8.இச்சரீரத்தில் இருந்தே அஷ்டமாசித்தின் ஒளி சக்தி பெற்று உயர்வு நிலை பெற…
9.இச்சரீரத்தின் எண்ணத்தின் உயர்வில் வலு நிலை கூடுகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் எத்தனை கோடி உடல்களில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து இன்றைக்கு மனிதனாக வந்திருக்கின்றோம்.

மனிதனாகப்போகும் போது ஆசையின் நிமித்தம் அது எத்தனையோ பேர் பல விதமான பழக்கங்கள் வைத்திருக்கின்றார்கள்.

தண்ணீர் (மது) சாப்பிட்டு பழக்கப்பட்டவர்களுக்குத் திரும்பத் திரும்ப அந்தத் தண்ணியைக் குடித்தால் தான் அவருக்கு சந்தோஷம்,

சிகரெட் பீடி குடித்துப் பழகிவிட்டால் அது இல்லை என்றால் வேறு எந்த வேலையும் என்னால் செய்ய முடியவில்லை… “முடியாது…” என்பார்கள்.

கடைசியில்…
1.இருமல் வருகிறது…! இருதயமும் நுரையீரலும் கெட்டு விட்டது…! என்று தெரிந்தாலும் கூட
2.அப்பொழுதும் இரண்டு குடித்தால் தான் எனக்கு நல்லது… அது தான் எனக்குச் சந்தோஷம் என்ற நிலைதான் வருகிறது.
3.நிறுத்த முடிகின்றதா…? என்றால், இல்லை .

அதே போல் மட்டன் சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு மட்டன் சாப்பிடவில்லை என்றால் என்ன சொல்வார்கள்…? என்னாலே மட்டன் சாப்பிடாமல் இருக்க முடியவில்லை என்பார்கள்.

ஆனால் அந்த மட்டன் சாப்பிட்ட பிற்பாடு என்ன நடக்கின்றது…?

ஆடு மாடெல்லாம் தான் உணவாக உட்கொள்வதிலிருக்கும் விஷத்தைத் தன் உடலாக மாற்றிக் கொள்கின்றது. நல்லதைத் தன் கழிவாக வெளிப்படுத்துகின்றது.

இப்படி ஆட்டினுடைய உறுப்புகளுக்குள் அது கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தைச் சேர்த்துத் தன் உடலாக்கி வலுவாக்கிக் கொள்கின்றது.
1.அந்த ஆட்டைச் சாப்பிட்டவுடன் நமக்கும் உடல் வலுவாகிவிடுகிறது.
2.முரட்டுத்தனமான புத்தியும் வரும்… மட்டன் சாப்பிட்டவுடனே அந்த வாசனை தான் நம் உடலிலிருந்து வரும்
3.ஆட்டைக் கண்டாலே “அடித்துக் கொன்று சாப்பிடலாமா…” என்ற எண்ணம் வரும்.
4.ஆட்டைப் பார்த்தாலே இப்படிச் சாப்பிடும் எண்ணம் தான் வரும்.

மீண்டும் மீண்டும் மட்டன் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் உடலில் இதெல்லாம் வலுவான பிற்பாடு
1.நமக்குள் மனித குணம் இருக்கிறது அல்லவா.
2.அதை எல்லாம் இது கொன்று சாப்பிட்டுவிடும்.
3.எது…?
4.இந்த விஷம்.

கறி சாப்பிட்டவர்கள் அவர்கள் உடலில் சென்ட்டை (வாசனைத் திரவியம்) போடவில்லை என்றால் நாற்றம் தான் வரும். மட்டன் சாப்பிடுகிறவர்கள் சென்ட் போடாமால் இருக்க முடியுமா…!

சென்ட் போடவில்லை என்றால் அவர்கள் பக்கத்தில் போனாலே கவிச்சி நாற்றம் இருக்கும். ஆகவே
1.அந்த மணத்துடன் உடலை விட்டு வெளியே வந்த பிற்பாடு உயிர் என்ன செய்யும்…?
2.ஆடு மேய்ந்து கொண்டிருக்கும்.
4.அதன் ஈர்ப்புக்குள் இழுத்துக் கொண்டு போய்விடும்.

அங்கு போனவுடனே அதற்குள் கருவாகி ஆடாகிறது. நீ சாப்பிட்டாய். நீ அதே மாறிப் போ. உயிருடைய வேலை அது தான்.

நம் சந்தர்ப்பம் வலு எதுவோ அந்த நிலைகளுக்கு நம் உயிர் மாற்றிக் கொண்டே இருக்கும்.
1.இன்றைக்கு மனித உடல் ஒரு சட்டை.
2.நாளைக்கு ஆட்டு உடல் ஒரு சட்டை.

பாம்பு விஷத்தால் மனிதனைத் தீண்டிவிடுகிறது. உடலுக்குள் பாம்பின் விஷம் ஆன பிற்பாடு செத்தால் பாம்பு உடலுக்குள்ளே உயிர் போகின்றது.

ஆனால் பாம்பை ஒரு மாடு மிதித்ததென்றால் அதனுடன் இணைத்துக் கொண்டு மாட்டையே எண்ணி அந்தப் பாம்பினுடைய உயிர் மாடு உடலுக்குள் போய் மாடாகப் பிறக்கின்றது.

மனிதன் அடித்துக் கொன்றாலும் மனிதன் மேல் நினைவு அதிகமாகி மனிதனுக்குள் வந்து பாம்பு மனிதனாகப் பிறக்கிறது.

ஆனால் மனிதனைப் பாம்பு கடித்தாலோ பாம்பின் நினைவு வரும். மீண்டும் மனிதன் பாம்பாகப் போவான்.

இயற்கை எப்படி வளர்த்து வைத்திருக்கின்றது என்பதை இன்று விஞ்ஞானியும் தெரிந்து வைத்திருக்கின்றான்.

மெய்ஞானி தெரிந்து நாம் எப்படி வாழ வேண்டும் என்று இராமயாணம் மகாபாரதம் கந்த புராணம், சிவ புராணம் எல்லாவற்றிலும் அன்றைக்கே கொடுத்திருக்கிறான்.

நாம் புரிந்து கொண்டோமா…? என்றால் இல்லை…!

நான் சொல்வதை “ஏதோ…” என்று இலேசாக விட்டுவிடாதீர்கள்

 

எத்தனையோ கோடி சரீரங்களைப் பெற்ற பின் மனிதனாக நாம் உருவானாலும் நாம் சந்தர்ப்பத்தால் நுகரும் தீமையான உணர்வுகள்
1.மனித உடலை எப்படி அழிக்கின்றது..?
2.நம் நினைவாற்றலை எப்படி மாற்றுகின்றது…?
3.மீண்டும் பரிணாம வளர்ச்சியில் தேய் பிறையாகி
4.மனிதனல்லாத உடலுக்குள் எப்படிச் செல்லுகின்றோம்? என்று
5.இதையெல்லாம் நாம் யாருமே சிந்திப்பதில்லை…!

அந்தத் தேய் பிறையான நிலைகளுக்குச் செல்வதை நிறுத்த வேண்டும் என்றால் அருள் ஞானியின் உணர்வை நமக்குள் விளைய வைக்க வேண்டும்.

தீமையின் நிலைகளுக்குச் செல்லாது அருள் ஞானியின் உணர்வை எடுத்து ஒளியாக மாற்றி என்றும் பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலைகளுக்கு உங்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே குருநாதர் எமக்கு (ஞானகுரு) இட்ட அருள் பணியாகும்.

உங்களுடைய நினைவாற்றல் மகரிஷிகளின் பால் இருக்கச் செய்வதே இந்த உபதேசத்தின் நோக்கம். உங்கள் உடலுக்குள் மகரிஷிகளின் உணர்வுகள் ஊடுருவும் போது தீமையின் நிலைகளைக் கரைத்துவிடும்.

நான் வெறும் சொல்லாகச் சொல்வதாக நீங்கள் எண்ணலாம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் (குருநாதர்) என்னிடம் சொல்லும்போது
1.அவன் சொல்லுகின்றான்… நான் எதைப் பெற முடியும்..?
2.அவன் காட்டுகின்றான்… நான் எதைப் பெற முடியும்…! என்று இப்படித்தான் முதலில் எண்ணினேன்.

அவன் (குருநாதர்) சொன்னதை
1.அந்த வலுவின் தன்மை எனக்குள் வரப்படும் பொழுது
2.பின்னாடி தான் அவர் சொன்ன உணர்வுகள் அனைத்தையும்
3.காட்சிகளாக நான் காண முடிந்தது… உணரவும் முடிந்தது…!

மெய் ஞான அறிவின் தன்மை அது எப்படி…? என்றும் ஒவ்வொரு உயிரிலும் உணர்வுகள் எப்படி விளைகின்றது…? என்ற நிலையும் பின் தான் நான் உணர முடிந்தது.

அதைப் போல இன்றைய நிலைகள் நான் சொல்வதை “ஏதோ…” என்று இலேசாக விட்டுவிடாதீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் அறியாது வந்த தீமையின் நிலைகளை நிறுத்த அருள் மகரிஷிகளின் உணர்வை ஒவ்வொரு நிமிடமும் எடுத்துப் பழகிக் கொள்ளுங்கள்.

தீய வினைகளைக் கரைத்து மெய் ஞானிகளின் அருள் ஒளியைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

தீயவைகளுடன் மோதாமல் நல்லதைப் பாதுகாக்கும்  ஜெபமாகத்தான் நாம் செயல்படுத்த வேண்டும்…! ஈஸ்வரபட்டர்

 

சாதாரணமாக ஒரு பானையில் தண்ணீரை ஊற்றி வைத்து விட்டோமானால சில நாட்களில் அந்நீர் வழுவழுப்புத் தன்மை கூடி பாசி பிடிக்கின்றது.

“அவ்வழுவழுப்பு நிலை” ஏற்பட்ட பிறகுதான் அடுத்த வளர்ச்சி நிலை ஒவ்வொன்றிலுமே வளருகின்றது. “பிசின்” போன்ற நிலை ஏற்பட்ட பிறகுதான் அதன் ஜீவத்தன்மை முதிர்வு நிலை கொள்கின்றது.

அதுவே ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி காய்ச்சும் பொழுது அப்பாத்திரத்திற்கு அடியில் மண் போன்று படிவங்கள் வெள்ளையாகப் படிந்து விடுகின்றது.

இதைப் போன்று…
1.மனித உணர்வில் எடுக்கப்படும் அலைத் தொடர்பின் உணர்வு
2.சரீரம் சமைக்கும் நிலை கொண்டு ஆத்ம அலையின் “படிவமாகி விடுகின்றது…”

ஆத்மாவின் வண்ணத் தன்மை கொண்டு பிரகாச நிலை ஒளி சக்திகளை இச்சரீர சமைப்பினால் மனிதன் பெற்றானானால் மனித சக்தியில் சித்து நிலை பெற முடியும்.

மகரிஷிகளின் உயர் காந்த அலையை…
1.உணர்வின் எண்ணம் கொண்டு “விழி கொண்டு ஒளி பார்த்து இச்சரீரத்தின் உணர்வில் எடுக்கும் ஜெப முறையினால்…”
2.மனித உணர்வின் சஞ்சலமற்ற சம உணர்வு வளர்ச்சியின் தியானத்தின் முறை அறிந்து…
3.தன்னைத்தான் தான் உணரக்கூடிய வழி அறிந்தானானால்…
4.தன் வாழ்க்கை செயலில் அமைதியையும் தன் ஆத்மாவின் உயர்வின் வழியையும் ஒவ்வொருவரும் பெறலாம்.

நம் தேவைக்குகந்த நெல்லைப் பயிரிடுகின்றோம். நிலத்தை உழுது பருவம் பார்த்துப் பயிரிட்டு அதற்குகந்த பாதுகாப்பு எல்லாம் செய்கின்றோம். பின் அதனுடைய பலனை நாம் கண்டு நெல்லை அறுத்து பக்குவமாய் சேமிக்கவும் முற்படுகின்றோம்.

ஆனால் அதை நாம் எடுத்துச் சேர்ப்பதற்குள் பெரிய மழை வந்தால் எல்லாம் அழிகின்றது. அதைப் போன்று…
1.தியானத்தின் மூலம் பல பக்குவமான முறைகளை இச்சரீரத்தில் வளர்த்துப் பலன் பெறும் பக்குவத்தில்
2.உணர்வில் மோதும் பலமான மாற்றத்தினால் பல நாள் செயலின் பலனை இழந்துவிடும் நிலை போன்று
3.சரீர உணர்வால் எண்ணத்தில் பலமாக மோதும் எதிர்ப்பைத் தாங்காமல்
4.தவறிவிடும் நிலை உணர்வின் எண்ணத்தில் மோதுவது உண்டு.

ஆகவே… நெல்லை அறுக்கின்றோம் என்றால் அந்த நேரத்தில் மழை வருகிறது என்றால் அதற்குண்டான வேகத்தைச் செலுத்திப் பெற்ற பலனைப் பாதுகாக்கத் துரிதம் கொள்கின்றோம் அல்லவா…!

அது போன்று… நம் வழி முறையில் நல்லொழுக்கத் தொடரில் வளர்த்த வலுவை…
1.எதிர்ப்படும் மோதலிலிருந்து பாதுகாக்கும் துரிதமாக
2.எண்ணத்தின் துரிதத்தைத் தீயவைகளுடன் மோதாமல்
3.நல்லதைப் பாதுகாக்கும் உணர்வு ஜெபமாகத்தான் நாம் செயல்படுத்த வேண்டும்…!

தன்னைத்தான் தான் உணரும் பக்குவத்திற்கு…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்றைய செயல் நாளைய சரீரம் – “நம்முடைய இன்றைய செயல் எதுவாக இருக்க வேண்டும்…?” என்று நீங்கள் தீர்மானம் செய்து கொள்ளுங்கள்

நான் (ஞானகுரு) என்னுடைய சிறிய வயதில் தெரியாமல் ஒரு குருவியைப் பிடித்து என்ன செய்தேன்…? நெருப்பில் உயிரோடு வாட்டினேன்.

குருநாதர் பிற்பாடு அதை என்னிடம் சுட்டிக் காண்பித்தார். அந்தக் குருவி எப்படி எரிந்தது தெரியுமாடா…? என்று கேட்டார்.

அது… “எரிந்தது” தெரியும். அது உள்ளுக்குள் எப்படி ஆனது…? என்று எனக்குத் தெரியாது என்றேன்.

இப்பொழுது… “பாருடா…!” என்றார்.

அது உடலில் எத்தனை கொதிப்பானதோ அந்த எரிச்சல் எல்லாம் எனக்குள் அப்படியே வந்தது.

இப்பொழுது என்னடா செய்கிறது…? என்று கேட்டார்

1.அது எரிந்தது.
2.வேதனைப்பட்ட மூச்சலைகளை வெளிவிட்டிருக்கிறது.
3.அந்த (குருவியின்) உயிரும் உன்னிடம் இருக்கிறது.

தெரியாத வயதில் நீ செய்திருந்தாலும் இப்பொழுது நினைவுபடுத்தியவுடன் அது எரிந்த உணர்வைச் சுவாசிக்கின்றாய். சுவாசித்தவுடன்… உன் உடலை என்ன செய்கிறது பாருடா…! என்றார்.

நீ தெரியாமல் தான் செய்தாய்,
1.“உன் உயிர்” அதை விட்டு விடுகிறதா…?
2.அது வேதனைப்பட்ட உணர்வுகள் அனைத்தையும் கவர்ந்து கொண்டது.

அந்தக் குருவியும் செத்தது. உன் உடலுக்குள்ளே இருக்கிறது. நீ ஆண்பாலாக இருக்கின்றாய் உனக்குள் கருவாக இருக்கின்றது.

இது எந்தக் கருவில் போய் இது பிறக்கின்றதோ “எரிகிறதே…! எரிகிறதே….!” அந்த உடலை எரியச் செய்யும். இப்பொழுது உன் உடலிலேயும் “எரியும்டா… பாருடா…” என்றார்.

இதை அப்படியே அனுபவபூர்வமாகக் கொடுக்கின்றார். சொல்வது அர்த்தம் ஆகின்றதா…!

அதனால் எல்லாமே சந்தர்ப்பம் தான். பல கோடி உடல்களில் சந்தர்ப்பங்களில் வந்த தீமைகளை நீக்கி நீக்கி வந்து தான் இந்த மனித உடலைப் பெற்றுள்ளோம்.

ஆகவே நம்முடைய சந்தர்ப்பத்த்தில் எதை எதை எண்ணுகின்றமோ அதைத்தான் நம் உயிர் உருவாக்குகின்றது. நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை. சுவாசித்தது தான் கணக்காக அமைகிறது.

நாம் உருவாக்கும் (படைக்கும்) சக்தி பெற்றவர்கள்… மற்றொன்றுக்கு இரையாகி விடக்கூடாது

 

1.கோள்கள் உமிழ்த்தக் கூடிய சத்துக்கள் மற்றொன்றுக்கு இரையாகத் தான் அமையும்
2.நட்சத்திரங்கள் தனக்குள் படைத்தது மற்றொன்றுக்கு இரையாகி அந்த உணர்வுடன் இயங்க முடியும்.
3.ஆனால் சூரியனோ மற்றதை இணைத்து மற்றதை உருவாக்கும் செயல் பெற்றது.

இதைப் போன்று இந்தப் பிரபஞ்சத்திற்குள் சூரியனைப் போன்று எண்ணத்தால் தெரிந்து… உணர்ந்து… அறிந்து செயல்படும் சக்தியாக உணர்வின் எண்ணங்களைப் பெற்றவன் தான் மனிதன்.

அப்படிப்பட்ட நிலையாக ஒளியின் சுடராக மாற்றி முழுமை பெற்றவர்கள் தான் மகரிஷிகள். “அந்த மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் வளர்த்திட வேண்டும்…” என்பதற்குத் தான் இதைப் பிரித்துப் பிரித்துக் காட்டுகின்றேன் (ஞானகுரு).

நம் உடலுக்குள் பகைமையற்ற நிலைகளும் பகைமையான உணர்வு நமக்குள் பதிந்திருந்தாலும் அந்தப் பகைமையை அகற்றிடும் நிலையை உருவாக்குதல் வேண்டும்.

“மிளகாயை…” வாயில் வைத்தால் அதை நாம் வெறுக்கின்றோம். ஆனால் அதைக் குழம்புடன் சேர்த்துச் சமப்படுத்தும் பொழுது சுவையைக் கூட்டும் நிலையாக வருகின்றது… மகிழ்ச்சியூட்டும் செயலும் வருகின்றது.

ஆனால் தனித்து உட்கொண்டால் வெறுக்கும் நிலையும் நம் உடல் உறுப்புகளில் வேதனை உருவாகும் நிலையும் உருவாக்குகின்றது பல பொருட்களுடன் இணைத்துச் சமப்படுத்தும் பொழுது சுவைமிக்கதாகி நமக்கு மகிழ்ச்சி தருகின்றது.

இதைப் போன்று தான்
1.அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் எடுத்து உருவாக்கி
2.சூரியன் எப்படி இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கியதோ அதே போன்று
3.உடலான இந்த உலகிற்குள் தீமைகள் வராதபடி நாம் அருள் ஞானிகள் உணர்வைப் படைத்துப் பொங்கச் செய்ய வேண்டும்.

அதை உருவாக்க வேண்டுமென்றால்
1.முதலிலே தன் குடும்பம்
2.பின் தன் பந்துக்கள்
3.தன் தெரு தன் ஊர் இந்த உலகம் என்று
4.எல்லோரும் மகிழ்ந்து இருக்க வேண்டும் என்ற எண்ணங்களை நாம் வளர்த்தோம் என்றால்
5.நமக்குள் படைத்த உயர்ந்த உணர்வலைகள் வெளிப்படும்போது
6.சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து அனைவருக்குள்ளும் பொங்கச் செய்து மகிழ்ச்சி ஊட்டும் சக்தியாக மலரும்.

இன்றைய நிலையில் சில விஷத்தன்மைகளை (பூச்சிகளை… கிருமிகளைக் கொல்லும் மருந்துகள்) உருவாக்கி விஞ்ஞான அறிவால் மக்களைக் காக்க இன்று பரவச் செய்தாலும் அதிலே பல பொருள்களை இணைக்கும் பொழுது அதில் சில நஞ்சின் தன்மை வெளிப்படுகின்றது.

அந்த நஞ்சினை சூரியன் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் படரப்படும்போது அதை நுகர்ந்தோருக்கு நோயாகவும் தீமைகளும் உருவாக்கிவிடும். இது மனிதனால் உருவாக்கப்பட்ட நிலைகள்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் தப்ப வேண்டும் என்றால்
1.அருள் ஞானிகளின் உணர்வலைகளை ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுத்து நமக்குள் அதைப் படைத்து
2.நம் ஆன்மாவிலும் இந்தக் காற்று மண்டலத்திலும் பரவச் செய்ய வேண்டும்.
3.அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து தீமைகளை அகற்றிடும் சக்தியாகவும் நோய்களை அகற்றிடும் சக்தியாகவும் உருவாக்கச் செய்யும்.

இது ஞானிகள் நமக்கு சாஸ்திரங்கள் மூலம் உணர்த்திய பேருண்மைகள்.

“உரமேறிய கட்டை” – ஈஸ்வரபட்டர்

 

மனிதனுக்குத்தான் உணர்வின் எண்ணங்கள்… பல நிலைகளில் பல வளர்ச்சியை வளர்க்கத்தக்க ஒளி நிலை கொண்ட உயிர் ஆண்டவனின் பிம்ப நிலை உண்டு.
1.உணர்வுகளை எப்படிப் பக்குவப்படுத்த வேண்டும்…? என்ற
2.அந்த வழித் தொடரில்தான் ஞானமே பிறக்கும்.

உணர்வில் கார அலைகள் (கோப அலை) உந்தா விட்டால் வீரம் பிறக்காது. ஆனால் அந்தக் கோப உணர்வு ஏற்படும் காலத்தில் அதன் வளர்ச்சியை சரீரம் அதே தொடர்பில் வளர்த்துக் கொண்டதென்றால் விளைவு வேறாகிவிடும்.

காரமான மிளகாய் விதையை மண்ணிலே ஊன்றியவுடன் அது வளர்ந்து மூன்று மாதத்திற்குபின் அதன் வளர்ச்சியின் பலனை அம்மிளகாய் விதை வளர்த்த மிளகாயை எப்படிப் பெறுகின்றோமோ அதைப் போன்று
1.இக்கார உணர்வான கோப நெடியை நாமெடுக்க
2.அதே உணர்வைச் சரீரம் வளர்க்க இதன் தொடர் அன்றே தெரியாது.
3.கோப குணத்தின் அணுக்கள் சரீரம் முழுவதும் வளர்ந்து அதனுடைய பலனாக
4.மூன்று மாதத்திலிருந்து ஆறு மாதத்திற்குப் பிறகு
5.வாதமோ இரத்தக் கொதிப்போ இதய வலியோ மனிதன் நிச்சயம் பெறுகின்றான்.

ஆகவே கோப உணர்வு உந்தும் நிலையிலேயே அதைத் தன் ஞானத்தால் வீரமாக்கிக் கொள்ள வேண்டும். இப்படி அந்த வீர உணர்வை நாம் பெறும் பொழுது
1.எண்ணத்தின் வலுக் கொண்டு உயர் ஞானம் பிறந்து
2.மீண்டும் அக்கோபமான உணர்வில் நாம் சிக்காமல் இருக்கும் நிலையாக
3.பாதுகாப்பு வேலியான சாந்த குணத்தை நாம் நமக்குள் அவசியம் வளர்க்க வேண்டும்.

கோப குணத்தின் காரமான உணர்வால் எப்படி உடலில் நலிவை ஏற்படுத்திக் கொள்கின்றோமோ அதைப் போன்று
1.அதே கோபத்தை வீரமாக்கும் ஞானத்தின் சாந்தத்தால்
2.ஆத்ம வலு சரீரத்தையே உறுதியான தன்மைக்கு
3.எதற்கும் அஞ்சாத “உரமேறிய கட்டை அவன்…” என்ற ஞானத்தின் வழித் தொடரைப் பெற முடியும்.

ஆக… உறுதியான எண்ணத்தின் செயலுக்கு இச்சரீரத்தை இக்கோப உணர்வு உந்தினால்தான் அதைச் செலுத்தும் நிலைக்கொப்ப “உறுதி நிலையோ… அல்லது நலிவு நிலையோ…” ஏற்படும் தன்மை கொள்கின்றது.

இதைப் போன்று தான் மனித உணர்வின் எண்ணத்தில் உந்தப்படும் குணத் தன்மை ஒவ்வொன்றையுமே “தன் ஞானத்தால்” பக்குவ குணத்தை நாம் பெறல் வேண்டும்.

இதன் தொடரில் தான் பய உணர்வு ஏற்படும் பொழுது பயத்தின் தொடர்பில் “மரண பயம்” என்ற கோழை உணர்விற்குச் செலுத்தாமல்
1.தைரியம் என்ற பல உணர்வைச் சாந்தமுடன் நாம் செலுத்தும் பொழுது மன பலம் கூடி
2.ஞானத்தால் சிந்திக்கும் திறனை நாம் வளர்த்துக் கொள்ள முடியும்.

குழந்தைகள் வளரும் நிலையிலேயே பயமுடன் கூடிய தைரியத்தில் மன பலம் கூடும் பக்குவத்தை வளர்க்கும் செயல் தான் “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்று சொன்னதன் பொருள்…!

வளரும் குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட உபதேச உணர்வுகளை ஊட்டி குழந்தைகள் உயர் ஞானத்தைச் சிந்திக்கவல்ல மன பலம் கொண்ட தைரியத்தை ஊட்டி நாம் அவசியம் வளர்க்க வேண்டும்.

ஆனால் வெறுமணே பயத்தை ஊட்டி மரண பயம் என்ற உணர்வில் அச்சத்தை ஊட்டும் குழந்தை கோழையாகிவிடும்.

மேலும் அந்தப் பய உணர்வின் எதிர் அலையால் அக்குழந்தையே விபத்தில் சிக்கும் சந்தர்ப்பம் உண்டாகின்றது. விபத்துகள் நடப்பதெல்லாம் அச்சத்தின் உணர்வு வளரும் இத்தகைய பய அலையினால்தான்.

ஆக மொத்தம்…
1.மனித உணர்வின் எண்ணம் எதை எடுக்கின்றதோ
2.அதில் ஜீவன் பெறுவதைத்தான் மனைவியாக (சக்தியாக) அன்று ஞானிகள்
3.தத்துவ நூல்களில் மறைமுகமாகச் சுட்டிக் காட்டினார்கள்.

இப்படி… எந்தெந்த எண்ணத்தை எக்குணத்தில் இச்சரீரம் வளர்த்துக் கொள்கின்றதோ… அஜ்ஜீவ வளர்ச்சியின் பலனை சாந்தமான நற்குணத்தைக் கொண்டு… இருபாலரும் இல்லற இணைப்பின் இறை சக்தியின் உண்மையை உணர்ந்து…
1.உயர் காந்த மின் சக்தியை
2.உணர்வின் எண்ணத்தால் வளர்க்கும்
3.ஆத்ம ஐக்கிய இணைப்பினால் ரிஷித் தன்மை பெறலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆட்டை வெட்டிக் கருப்பணச் சாமிக்குக் கொடுத்துவிட்டால் நம்மைக் காப்பாற்றுவான் என்ற நிலையில்
1.ஆட்டை வெட்டி ஆட்டின் உயிரை மனிதனாக ஆக்குகின்றோம்.
2.ஆட்டின் கறியை ருசித்துச் சாப்பிட்டு நாம் ஆடாகப் பிறக்கின்றோம்.

இதைப் போன்ற அசுர உணர்வின் தன்மையைத்தான் நமக்குள் வளர்க்க முடிகின்றது.

இன்றைய உலகில் விஞ்ஞான அறிவு கொண்டிருந்தாலும் மன பேதம் இன பேதம் மொழி பேதங்களை உருவாக்கிவிட்டார்கள்.
1.இன்று மனிதன் வெளியிலே செல்ல முடியவில்லை.
2.ஒவ்வொரு நிமிடமும் மரண பயம் கொண்டு வாழ்கின்றோம்.

தீமையான உணர்வுகளை நாம் எண்ணப்படும் பொழுது மனிதனல்லாத உருவை உருவாக்கிவிடும் நம் உயிர்.

பாம்பு எப்படி… அதனை நாம் தாக்கிவிடுவோம் என்று அது முந்தித் தாக்குகின்றதோ அது போன்றே “சாந்த மனம் கொண்டவன் கூட..,” அவனுக்கு முன் எதிரிகள் வந்தார்கள் என்றால் அவர்களுக்கு முந்தி இவன் தாக்கும் நிலைக்கு வருகின்றான்.

1.தீமை செய்வோனைக் காட்டிலும் தீமையற்ற நிலையில் இருப்பவர்
2.“சாது மிரண்டால் காடு கொள்ளாது..,” என்ற நிலைகளில்
3.சாந்த உணர்வு கொண்டோர் இத்தகையை தீமைகளைக் கண்டால்
4.வேகமாக எதிர்த்துத் தாக்கும் நிலைக்கு வந்துவிடுகின்றார்கள்.

மனிதன் என்ற உருவையே இன்று அழித்திடும் நிலை இன்று வந்துவிட்டது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டும்.

அதிலிருந்து மீண்டிடும் நிலையாகக் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்த அருள் ஞானிகள் கண்ட மெய் உணர்வினை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

விண்வெளியில் இன்றும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களும் துருவ நட்சத்திரமும் அவைகளிலிருந்து வெளிப்படும் உணர்வலைகளைக் கவரும் நிலையாக
1.உங்களுடைய நினைவினை அங்கே செலுத்தச் செய்து
2.அந்தப் பேரருள் உணர்வினை ஈர்க்கும்படி செய்கின்றோம்.

வராக அவதாரத்தில் காட்டியபடி தீமைககள நீக்கி நாற்றத்தைப் பிளந்து நல்லதை நுகர்ந்ததோ அதைப் போன்று இன்றைய விஞ்ஞான உலகில் காற்றில் கலந்து வரும் நஞ்சின் தன்மையிலிருந்து நல்லதை நுகரப் பழக வேண்டும்.

சாக்கடையான இந்தக் காற்று மண்டலத்தில் மிதந்து கொண்டிருக்கும்
1.அருள் மகரிஷிகளின் உணர்வைப் பதிவாக்கி
2.அந்த எண்ணத்தை வலுவாக்கி அருள் உணர்வை நுகர்வோம்.
3.நம்மை அறியாது வரும் இருளைப் போக்குவோம்.
4.மெய்ஞானிகளின் அருள் ஒளியைப் பெறுவோம்.

அந்த மெய்ஞானிகளின் தொடர்பு கொண்டு முன்னோர்களின் உயிராத்மாக்களை விண் செலுத்துவோம்.

முன்னோர்கள் இன்னொரு உடலுக்குள் சென்றிருந்தாலும் அவர்கள் வெளி வரும் பொழுது இந்த உணர்வின் துணை கொண்டு அவர்களையும் நாம் விண் செலுத்துவோம்.

ஏனென்றால் இதற்கு முன்
1.நமது முன்னோர்களை நாம் விண் செலுத்தத் தவறிவிட்டோம்.
2.இந்தக் காற்று மண்டலத்தில் தான் சுழன்று கொண்டுள்ளார்கள்.
3.நம் முன்னோர்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்.

அதன் துணை கொண்டு அந்த அருள் ஒளிகளை நமக்குள் பாய்ச்ச வேண்டும். நம்மை அறியாது வரும் இருளை நீக்க வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.

நாமும் விண்ணின் ஆற்றலைப் பெறும் பொழுது இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் அங்கே சென்றடையலாம். நம் எல்லை சப்தரிஷி மண்டலம் தான்.

நம்முடைய நண்பன் யார்… எதிரி யார்…?

 

கடை வைத்து நாம் வியாபாரம் செய்கின்றோம். மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு ஐந்து நிமிடம் ஆத்ம சுத்தி செய்து விட்டுக் கடையில் உள்ள சரக்குகளைப் பார்க்க வேண்டும்.
1.இந்தப் பொருளைப் பயன்படுத்துபவர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும்.
2.அவருடைய உள்ளங்களில் மகிழ்ச்சி தோன்ற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
3.எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்…. எங்கள் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும்.
4.எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் நலம் பெற வேண்டும்.
5.பிறர் எங்களைப் பார்க்கும் பொழுது நல் உணர்வின் தன்மை கொண்டு பார்க்க வேண்டும் என்று
6.இத்தகைய உணர்வலைகளைக் கடையில் முதலில் பரப்பிவிட்டு வியாபாரத்தைத் தொடங்க வேண்டும்.

ஒரு தடவைக்கு இரண்டு தடவை மூன்று தடவை மாற்றி மாற்றி அதைச் சொல்லிப் பாருங்கள். உங்கள் உணர்வின் தன்மை வலுப்பெறும்… தொழில் சீராகும்… வியாபாரத்தில் நஷ்டம் என்பது வராது.

ஒவ்வொரு நிமிடமும்…
1.நாம் எடுத்துக் கொண்ட இந்த உயர்ந்த உணர்வுகள் ஒலிபரப்பாகி
2.அது மீண்டும் நமக்குள் கவரப்பட்டு ஒரு பாதுகாப்புக் கவசமாக
3.சக்தி வாய்ந்த உணர்வின் அலையாக அங்கே தேங்கி நிற்கும்.

அப்போது நாம் யாரைச் சந்தித்தாலும் நாம் பேசும் உணர்வுகள் இது முன்னணியில் சென்று அங்கே நல்ல உணர்வுகளை ஊட்டும். யானை வரும் பின்னே… மணி ஓசை வரும் முன்னே…!

உதாரணமாக சங்கடமான அல்லது வேதனையான உணர்வுகளை ஒரு பதினைந்து நிமிடம் நாம் எடுத்து விட்டால் அடுத்து நாம் எந்த நல்ல காரியத்திற்குச் சென்றாலும் அல்லது நல்லதையே செய்தாலும் நாம் பேசும்போது
1.இந்த உணர்வுகள் முன்னணியில் சென்று
2.நாம் எந்த வேதனைப்பட்டோமோ அந்த உணர்ச்சிகளை அடுத்தவருக்குத் தூண்டி
3.அந்த உணர்வின் எண்ணத்திலேயே நம்மைப் பார்க்க வைக்கும்.

எந்த வேதனையினால் துடித்துக் கொண்டிருக்கின்றோமோ இந்த உணர்வின் தன்மை அங்கே செயல்பட்டு நாம் எடுத்துக் கொண்ட அந்த காரியத்திற்குத் தடை விதிக்கும் நிலையாக உருவாகிவிடும்.

இதைத்தான் “யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே…” என்று சொல்வது.

ஆகவே நாம் வெளிப்படுத்தும் உணர்வின் நிலைகள் உடனே அங்கே காட்டிக் கொடுத்து நம்முடைய உணர்வே அங்கே நம்மை எதிர்க்கச் செய்யும்… மற்றவர்கள் அல்ல.

1.நேற்று நல்லதைச் சொன்னார்கள்… இன்று என்னமோ கெட்டதாகச் சொல்கிறார்கள் என்று நாம் எண்ணினாலும்
2.நாம் அன்று எடுத்துக் கொண்ட உணர்வின் நிலை அவர்களுக்குள் பாய்ந்து அவ்வாறு அவர்களைப் பேசச் செய்கின்றது.
3.அவர்கள் நம்மை அவ்வாறு பேசவில்லை… நம் உணர்வே நமக்கு எதிரியாக மாறி விடுகின்றது.

ஆனால் நம்முடைய உணர்வே நமக்கு நண்பனாக வேண்டுமென்றால் அடிக்கடி அவசியம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும். ஆத்ம சுத்தி மூலம் நல்ல உணர்வின் தன்மையை நாம் சுவாசிக்கச் சுவாசிக்க நம் உயிர் அது அனைத்தையும் படைக்கின்றது.

இதைத் தான் கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாக ஆகின்றாய் என்று சொல்வது.

இவ்வாறு மகரிஷிகளின் அருள் ஒளியை உயிரின் துணை கொண்டு நமக்குள் படைத்து
1.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்திலே சுழல வேண்டும் என்ற நினைவைக் கூட்டி வளர்த்தால்
2.மீண்டும் ஒரு உடல் பெறாத நிலையில் நாம் அங்கே விண் செல்கிறோம்.

“பிரம்மச்சரியத்தால்” எந்தத் தவசியும் ரிஷியும் உருவாக முடியாது…! – ஈஸ்வரபட்டர்

 

மெய் ஞானி அன்று தன் ஞானத்தின் உண்மை நிலையில் உணர்த்திய தத்துவ வழி முறையில்
1.தெய்வத்தின் செயல் நிலையில் சுட்டிக் காட்டிய விக்கிரக வழிபாட்டு முறையிலேயே
2.ஒரு உயிர் அணு மூல முதலாக வளர்ச்சியுற்ற வழித் தொடருக்கு
3.விநாயகன்…! என்ற யானையின் தோற்றமுடன்…
4.மனித உரு முருகா…! என்ற அறு குண அழகனைக் காட்டினார்கள்.

உருவத்தில் பெரியது யானை…. எண்ணத்தில் உயர்ந்தவன் மனிதன். அவ்வுயிரணுவைத் தெய்வமாகத் தொடர்புபடுத்திச் சுட்டிக் காட்டிய வழித் தொடரில்… உருவ அமைப்புகளில் ஆதியில் மெய் ஞானிகள் வழிகாட்டிய தத்துவத்தில் “பல உண்மைகள் உண்டு…”

சில தெய்வங்களுக்குக் கிருஷ்ணாவதார கீதையின் தத்துவத்தில் ஒருவனுக்குப் பல ஆயிரம் மனைவிகளைச் சுட்டிக் காட்டினார்கள். அதன் உண்மைத் தத்துவத்தை நம் ஞானத்தால் எடுத்தால் அவ்வுண்மை நமக்குப் புரியும்.

மனிதன் பெற்ற ஒளி சக்தியில்… மனித எண்ண ஞானம்.. தான் பகுத்தறிவில் உயர் தன்மை கொண்டு மனித உடல் ஜீவனுடன் உள்ள பொழுது
1.உணர்வுடன் கூடிய எண்ணத்தால் எடுக்கப்படும் குணங்களின் வளர்ப்பு ஒவ்வொன்றையுமே ஜீவிதம் கொண்ட மனைவியாய்
2.பெண் சக்தி மனிதனுக்குள் வளரும் நிலை பெண் தன்மை கொள்ளும் குணங்களை எல்லாம் மனைவியாகச் சுட்டிக் காட்டி
3.கீதையின் தன்மையை நமக்கு அன்றே மெய் ஞானிகள் புகட்டினார்கள் பாடநிலையாக…!

இராமாவதாரத்திலும் கிருஷ்ணாவதாரத்திலும் எந்த அவதாரமாக இருந்தாலும்…
1.மனிதன் பிரம்மச்சரியம் கொண்டு எச்சக்தியையும் பெற முடியாது என்ற நிலையைத்தான்
2.மெய் ஞானிகளும் ரிஷிகளும் சுட்டிக் காட்டினர்
3.தானும் அவ்வழியில்தான் தன் ஞானத்தை வளர்த்தனர்.

இல்லற உணர்வில் எண்ணத்தில் வளர்க்கும் குணத்தில் இரு நிலை வளர்ச்சியின் அன்பால் பெறும் நிலையின் மகவுகளின் பரிவு பாசம் வளருமேயன்றி உணர்வின் எண்ணத்திலேயே
1.அன்பின் ஜீவிதத் தொடர்பின் உணர்வு பிணைப்பு வளரா விட்டால்
2.எத்தவசிகளும்… ஞானிகளும்… “சரீரம்” பெற்றிருக்க முடியாது.

ஜீவ உணர்வின் எண்ணத்தில் வளரும் குணத்தின் பிடிப்பு நிலை கொண்டு… தொடரும் இல்லறப் பிணைப்பின் உடல் தொடர்பின்… “ஆத்ம தொடர்பு கூடும் இரு எண்ணங்களும்…” ஒன்றாய் வலுக் கூடத் தொடங்கும்.

1.அப்படிக் கூடப்பெறும் எண்ணத்தின் உயர் ஞான தியானத்தால்…
2.ரிஷி பத்தினி சக்தியின் வளர்ச்சி ஈர்ப்பில்…
3.இரு நிலை கொண்டு ஒரு நிலை வளர்க்கும் செயல் வழி சரீரப் பிணைப்பில் மக்கள் தொடரும்..
4.ஆத்மப் பிணைப்பின் உயர் ரிஷி சக்தி பெறக்கூடிய படைப்பின் படைப்பிற்கு…
5.இவ்விரு ஆத்மாவின் ஐக்கிய தொடர்பில் பிணைக்கப்பட்டு மூலக்கரு வளர்ச்சியுறும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குடும்பத்திலும் வியாபாரத்திலும் கொடுக்கல் வாங்கலில் பகைமையாகி “உருப்படுவாயா…” என்று சாபமிட்டுக் கொள்வார்கள் – அதை மாற்றுகின்றனரா…? – தீப ஆராதனை காட்டுவதன் தத்துவம் என்ன?

இன்று நாம் மனிதனுக்குள் ஒருவருக்கொருவர் நாம் பாசமாக அன்பாகத்தான் வாழ்கின்றார்கள்.

இருந்தாலும் சந்தர்ப்பத்தால் சில சிரமங்கள் ஏற்பட்டால் அதிலிருந்து மீளத் தன்னை வளர்த்துக் கொள்வதற்காக நண்பர்களையோ உறவினர்களையோ தேடி வருகின்றார்கள்.

ஏனென்றால் அவர்களிடம் பணம் இருக்கிறது. பணத்தை வாங்கிச் சமாளிக்கலாம் என்று வாங்குகிறார்கள்.

சீக்கிரம் திரும்பத் தந்துவிடுவேன் என்று சொன்னபின் அவர்களும் பணத்தைக் கொடுக்கிறார்கள்.

எப்படியோ (ஏமாற்றி) பணத்தை வாங்கிக் கொள்வார்கள். வாங்கிய பணத்தைச் செலவழிக்கின்றார்கள்.

ஆனால் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டால் கெட்ட பெயர் ஏற்படுகிறது.

இப்பொழுது கொடுக்க முடியவில்லை. “தருகிறேன்…” என்று சொல்வார்கள்.
1.இரண்டாவது தடவை கேட்கும் பொழுதும் அதே பதில் வருகிறது.
2.மூன்றாவது தடவையும் கேட்டவுடனே என்ன சொல்வார்கள்…?

“நான் தான் கொடுக்கிறேன்…!” என்று சொன்னேனே அதற்குள் என்ன அவசரம்…? என்பார்கள்.
1.தக்க சமயத்தில் அன்று தனக்கு உதவி செய்தார்கள் என்ற
2.அந்த நல்ல எண்ணம் வருவதில்லை.
3.ஆக பணத்தைத் திருப்பிக் கேட்பவருக்குச் சரியான பதில் சொல்ல முடியவில்லை.

அப்பொழுது அவருக்குக் கோபம் வரும்.

கோபத்தின் தன்மை பணம் கொடுத்தவருக்கு வரப்படும் போது உதவி செய்தார்கள் என்ற எண்ணம் பணம் வாங்கியவருக்கு மறந்துவிடுகின்றது. அப்புறம் அவருக்குத் தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

பணம் கொடுத்தவர் என்ன சொல்வார்…? பார்… அன்றைக்கு உதவி செய்தேன். பாவிப் பயல் இன்றைக்கு அவன் எனக்குத் தொல்லை கொடுக்கிறான்…! என்பார்.

அப்பொழுது தொல்லையின் உணர்வுகளைத்தான் இவர் உடலிலே வளர்க்க முடிகிறது. தொல்லைகளை நீக்கும் நிலை இல்லை.

இப்படி மனிதனுக்கு மனிதன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் உணர்வுகள் மாறுகின்றது.
1.பகைமை உணர்ச்சிகள் உருவாகி உடலுக்குள் வந்தவுடன்
2.உறுப்புகள் சீர் கெடுகின்றது.. கடும் நோயாக மாறுகின்றது.

இந்த நோயை மாற்ற என்ன வழி…?

மனிதன் சந்தர்ப்பத்தால் நல்ல குணங்களை நல்ல முறையில் பயன்படுத்தினாலும் வாங்கிய பணத்தைத் திருப்பி அவர்களால் கொடுக்க முடியவில்லை என்ற நிலைக்கு வந்தவுடன் அங்கே என்ன நடக்கின்றது…?

“என்னைத் தொந்தரவு செய்கின்றார்களே… எனக்கு இடைஞ்சல் செய்கின்றார்கள்…” என்ற உணர்ச்சிகள் தன்னை அறியாமலே அதிகரித்துவிடுகின்றது.

உண்மையில் அவனால் பணத்தைத் திரும்பக் கொடுக்க முடியாத நிலையில் இருந்தாலும் இரண்டு தடவை பணத்தைத் திருப்பிக் கேட்டாலே போதும். அங்கே உணர்ச்சிகள் மாறும்.

வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை இவருக்கு இருக்கிறது. “தருகிறேன்…” என்று சொல்வார்.

ஆனால் முயற்சி எடுக்கும் பொழுது வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது அந்த உணர்ச்சிகளால் இவர் செல்வம் தேடுவதும் இழந்து விடுகின்றது.

ஆனால் அதே சமயத்தில் இரண்டு தரம் பணத்தைத் திரும்பக் கேட்டு நிர்ப்பந்தப்படுத்தும் போது அந்த வெறுப்பு காழ்ப்புணர்ச்சியாக வருகின்றது. இந்த வேதனையின் உணர்வைத் தனக்குள் எடுத்தவுடன்
1.ஒன்று இவர் தவறு செய்பவராக மாறுகின்றார்.
2.இல்லை என்றால் அவர் நுகர்ந்த உணர்வு கடும் நோயாக மாறுகின்றது.
3.இதன் உணர்வுகள் இப்படித் தான் போகின்றது.

பணம் கொடுத்தவரோ… பாருங்கள்… அன்றைக்குக் கொடுத்தேன். இன்றைக்கு எதிர்க்கிறான்… கொடுக்காமல் ஏமாற்றுகிறான்.. என்பார்.

ஏனென்றால் இயற்கையில் (உண்மையில்) பணத்தை அவரால் திரும்பக் கொடுக்க முடியவில்லை.

அவருக்கு எப்படியோ நல்ல நேரம் வரட்டும். அவருக்குக் கொடுக்க வேண்டிய வலு வரவேண்டும். பணத்தைத் திரும்பக் கொடுக்கக்கூடிய திறன் வரவேண்டும் என்று “பணம் கொடுத்தவர்கள்… எண்ணுகிறார்களா…!” என்றால் இல்லை.

அப்படி எண்ண முடியவில்லை.

பணத்தைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்ற வேதனை உணர்வு தான் வருகிறது. அப்பொழுது அந்த வேதனையைச் சமைக்கும் உணர்வுகள் பணம் கொடுத்தவர் உடலிலும் வருகிறது.

நான் அவ்வளவு உதவி செய்தேன். இந்த மாதிரி எல்லாம் செய்கிறானே என்று இவர் சந்தர்ப்பத்தில் விளைந்த உணர்வுகள் கடன்காரனை எண்ணி எடுக்கும் போது “ஓ…ம்” வெறுப்பான உணர்வுகள் ஜீவனாகி
1.இவனெல்லாம் உருப்படுவானா…?
2.என்னை இப்படி ஏமாற்றுகிறான் பார்…! என்று
3.சாபமிடும் நிலைக்கு வந்துவிடுகின்றார்.

அன்றைக்குக் கேட்டதும் பணத்தைக் கொடுத்தேனே… இவன் உருப்படுவானா…? என்று இந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் சேர்த்து இந்த உணர்வுகள் உடலிலே விளைகின்றது.

இதே போல உணர்வுகள் அங்கே பணத்தை வாங்கியவர் உடலிலும் படருகிறது. இதை எண்ணும் போது அவரின் செயலின் தன்மையும் இழக்கச் செய்கிறது.

1.கடைசியில் பணம் கொடுத்தவருக்கும் வேதனை வருகின்றது. பணம் வாங்கியவருக்கும் வேதனை வருகின்றது
2.நல்லதின் பலனை இரண்டு பேரும் அடைய முடியவில்லை.

இதைப் போன்ற நிலைகளை மாற்றியமைப்பதற்காகத்தான் ஆலயங்களில் தீப ஆராதனை காட்டுகின்றார்கள். ஏனென்றால் மறைந்திருக்கும் பொருள்கள் அந்த வெளிச்சத்தால் தான் தெரிய வருகின்றது.

அப்பொழுது நாம் எண்ண வேண்டியது எது…?

1.பொருளறிந்து செயல்படும் திறன் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ண வேண்டும்.
2.இந்த ஆலயத்திற்கு வரும் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.
3.எங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.
4.என்னிடம் தொழில் செய்வோர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.
5.என்னுடைய வாடிக்கையாளர்கள் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.
6.என்னைப் பார்க்கும் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.

இப்படி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சந்தர்ப்பத்தால் ஏற்படும் பகைமைகளை அகற்றச் செய்வதற்காகத்தான் தீப ஆராதனை என்ற “விளக்கை… அந்த ஜோதிச் சுடரைக்” காட்டினார்கள் ஞானிகள்.

நாம் அனைவரும் சகோதரர்களே…!

 

எவ்வளவு உயர்ந்த நிலைகளை நாம் பேசிக் கொண்டிருந்தாலும் சந்தர்ப்பத்தில் நம் நல்ல எண்ணங்கள் எல்லாம் என்ன ஆகிறது…!

உதாரணமாக… கடலிலே பெருங்காயத்தைக் கலக்கினால் அந்த வாசனை சிறிது நேரமே இருக்கிறது. அடுத்த நிமிடம் அது கரைந்து விடுகின்றது. பெருங்காயத்தின் மணம் இல்லாது போய்விடுகின்றது.

ஆக… கடலைப் போல ஒவ்வொரு நிமிடமும் வேதனையும் வெறுப்பும் உப்பு கைப்பது போன்ற உணர்வுகளே அதிகமாக இந்த மனித வாழ்க்கையில் இருக்கின்றது.

1.நல்லதை எண்ணினாலும் கடலில் கரைத்த பெருங்காயம் போன்று சிறிது நேரமே அது வலுவாக இருக்கின்றது
2.அடுத்த நிமிடம் நமக்குள் இருக்கக்கூடிய அந்த நல்ல எண்ணங்கள் அனைத்தும் மறைந்து
3.கவலையும் வெறுப்பும் சோர்வும் வேதனையும் படக்கூடிய உணர்ச்சிகளை நமக்குள் தூண்டி
4.”நம்மால் முடியாது போலிருக்கிறது…” என்ற நிலை வந்து விடுகிறது.

சிறிது நேரம் சிந்திக்கின்றோம் நல்லது செய்ய வேண்டும் என்று… ஆனால் அடுத்த கணம் அது எப்படி நடக்குமோ…? எப்படி நடக்கப் போகின்றதோ…? நாளைக்கு என்ன செய்வது என்று தெரியவில்லையே…! என்று தனக்குத்தானே பலவீனமாகி சந்தேக உணர்வு தோற்றுவிக்கின்றது.

மனித வாழ்க்கையில் இத்தகைய நஞ்சுக்குள் சிக்கப்பட்டு நம் எதிர்காலமே நசிந்து கொண்டிருக்கும் நிலையாகத் தான் இன்று இருக்கின்றோம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால்
1.நாம் கூட்டமைப்பாக இருந்து மெய் ஞானிகள் காட்டிய அருள் நெறிகளை நாம் எண்ணி ஏங்கி
2.அந்த உணர்வை நமக்குள் பதியச் செய்து… அந்த உணர்வின் அலைகளாக நமக்குள் பெருகச் செய்து
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று நம் உடலுக்குள் அதைச் சேர்த்து வலுவாக்க வேண்டும்.

அனைவரும் சேர்த்து ஒன்றாக இயக்கி இந்த உணர்வின் தன்மை கொண்டு உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்ற எண்ணத்தை ஓங்கச் செய்ய வேண்டும்.

நாம் யாரையெல்லாம் சந்திக்கின்றோமோ…
1.எந்த மதத்தவராக இருந்தாலும்
2.எந்த இனத்தவராக இருந்தாலும்
3.எந்த மொழி பேசுவோராக இருந்தாலும் அவர்களை எல்லாம் சகோதரர்களாக எண்ணி
4.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

உதாரணமாக… நமக்கு ஒரு பொருள் வேண்டும் என்றால் எந்த மதத்தவரோ… இனத்தவரோ… வேறு மொழி பேசுவோரோ… கடை வைத்திருந்தாலும் அவர்களிடம் சென்று வாங்கத்தான் செய்கிறோம்.

அதே போல் அவர்களுக்குப் பொருள் வேண்டும் என்றால் நம்மிடம் வந்து வாங்கத்தான் செய்கிறார்கள்.
1.இதில் வேற்றுமை இருக்கின்றதா…? இல்லை…!
2.இவ்வாறு வேற்றுமை இல்லாத நிலைகள் வாழப்படும் பொழுது
3.நம் மனதிற்குள் மட்டும் ஏன் வேற்றுமைகளைக் கொண்டு வரவேண்டும்…?

வேற்றுமை ஏற்பட்டால்
1.இந்த மனித வாழ்க்கையில் நமக்கு நாமே நைந்து கொள்ளும் நிலை தான் வருகின்றது
2.மனிதன் என்ற நல்ல உணர்வு அழிந்து கொண்டிருக்கின்றது.

ஆகவே… ஒவ்வொரு நிலைகளிலும் எந்த மதமாக இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் எந்த மொழி பேசுவோராக இருந்தாலும் இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபடும் நிலையாக
1.உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்றும்
2.எங்களுக்குள் சகோதர உணர்வுகள் வளர வேண்டும் என்றும் நாம் எண்ணி
3.நமக்குள் இருக்கும் பகைமை உணர்வுகளை ஓங்கச் செய்யாது அதைத் தாழச் செய்ய வேண்டும்.

இதைச் சிறிது பேர் செய்வதில் பலனில்லை.

காரணம்… எல்லோரும் இதைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மாதத்தில் ஒரு நாள் பண்டிகையாகத் தேர்ந்தெடுத்து
1.சகோதர உணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்றும்
2.மனிதனின் பண்பை வளர்க்கவும்… இருளை நீக்கி மகிழ்ச்சியை ஏற்படுத்தவும்
3.மகரிஷிகளால் உருவாக்கப்பட்ட நிலைகள் தான் இது.

திருப்பித் திருப்பிச் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம்

எத்தனையோ உணர்வுகள் நமக்குள் மாறி மாறிச் சுழன்று கொண்டிருக்கின்றது. திரும்பத் திரும்பச் சொல்லி நினைவின் ஆற்றலை பெருக்கச் செய்து அந்த மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளை நீங்கள் பருக வேண்டும் என்பதற்குத்தான் சொல்வது (ஞானகுரு).

தனதான இறை உயிரை… தன்னில் தானே… இருள் அகற்றித் தன்னில் தானே… ஒளியாகலாம்…! – ஈஸ்வரபட்டர்

 

தன்னைத்தான்… தான்…
தான் உணர்ந்து…
தன்னைத்தான்… தான் நம்பி

தன்னைத்தானே… தான் வளர்த்து…
தன் வழியின் வழியறிந்து

தன் வழியைத் தான் அமைத்து…
தன் உயர்வைத் தான் வளர்க்க

தன்னில் தான்… இறை உணர்ந்து…
தன்னையே தான்… இறையாக்கி

தனதான இறை உயிரை…
தன்னில் தானே… இருள் அகற்றி
தன்னில் தானே… ஒளியாகலாம்…!

மனிதன் தன்னைத்தான் தான் உணர்ந்து… தன் வழியில் தன்னை நம்பி…
1.உண்மை நிலையை அறிந்து
2.தன் உயர்வை வளர்த்துக் கொள்ள
3.இப்பூமியில் மனித உணர்வு எண்ணம் செயல்பட்ட காலத்திலேயே
4.சித்தர்களும் சப்தரிஷிகளும் பல உண்மையை உணர்த்தியும் செயல்படுத்தியும் காட்டினர்.

ஆதிசங்கரின் காலத்தில் அத்வைதத் தத்துவப்படி… மனிதன் உணர்வின் எண்ணத்தை உயர் ஞானமாக்கி… உயரும் மார்க்கத்தை அணுவுக்குள் அணுவாக உணரும் பக்குவத்தை மனிதனுக்கு உணர்த்தினார்.

அதன் தொடரில் மனிதன் தன்னைத்தான் தான் நம்பி உயரும் பக்குவத்தை அவருக்கு அடுத்த நிலை நான்கு வகை வேதங்களாக்கி தன் வாழ்க்கை நிலைக்கு ஒத்த சௌகரியப்படி காலப்போக்கில் மாற்றி விட்டனர்.

1.வேத மந்திர உச்சரிப்புகளும் பலி பீட மந்திரங்களும் பல வழியில் பிரிக்கப்பட்டு
2.மகரிஷிகளினால் வழிப்படுத்தப்பட்ட தன்மைகள் எல்லாம்
3.மத வழிகளிலும் அரசாட்சியின் பிடிப்புக்கொப்ப மாற்றப்பட்ட தன்மையினால்
4.இன்று தெய்வத் தன்மையின் உண்மை நிலையையே அறிய முடியாமல் போய்விட்டது.

இன்றைய காலப்போக்கில் “பூஜையும்… பக்தியும்…” வழி தெரியாத முறையில் மனிதனின் நாட்டங்கள் சென்று கொண்டிருக்கும் சிதறுண்ட இத்தன்மையை மாற்றி
1.மனிதன் முதலில் தன்னைத்தானே தான் உணர்ந்து
2.தன்னை நம்பி… தன் வழியை மெய் அறிந்து…
3.உயர வேண்டிய ஒளித் தன்மையின் சத்தியத்தின் உண்மை நிலை அறிந்து செயல்பட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக நாயை எடுத்துக் கொண்டால் அதற்குப் புல்லை மேய்ந்து பழக்கம் இல்லை.

ஆனாலும் அதற்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டால் என்ன செய்யும்…?

அந்தப் புல்லைக் கொஞ்சம் மென்று தின்று அது உள்ளுக்குள் சென்ற பின் வாந்தி எடுத்து அந்த அமிலத்தை வெளியேற்றிவிடும்.

அதற்குண்டான அறிவு அது…!

புல்லை மேயச் செல்லும்போது நாயைக் கவனித்துப் பார்த்தால் தெரியும். அதற்குச் சோர்வு வரும் பொழுது அந்த உணர்வுக்குத் தக்க அதனுடைய அறிவு புல்லை நுகரச் செய்கின்றது. தன் உடலில் வந்த தீமைகளை அகற்றுகின்றது.

இயற்கை வைத்தியம் என்ற நிலையில் மனிதனுக்கு அருகம்புல் சாறைச் சாப்பிட்டால் நலம் என்று சொல்வார்கள்.
1.அதை அளவுகோல் படி
2.அந்தந்த நேரங்களில் சிறு துளிகள் சாப்பிடலாம்.
3.அளவுக்கு மீறிச் சாப்பிடவும் கூடாது.

அந்த அளவு கோல்படி அருகம்புல் சாற்றைப் பச்சையாக எடுத்துச் சாப்பிட்டால் நம் இரத்தங்களில் இது கலக்கப்படும் போது
1.இரத்தத்தில் ஊறிய கழிவு நிலைகளை (கட்டிகளை)
2.இது மாற்றி உடைத்து விடுகின்றது.

அதே மாதிரி அடைப்புகள் இருதயங்களிலோ கால்களிலோ இரத்த அழிப்புகள் வந்தால் சிறிதளவு அருகம்புல் சாறைச் சாப்பிட்டால் அதாவது
1.ஒரு மடக்கு அருகம்புல் சாறைச் சாப்பிட்டால்
2.இயற்கை வழிகளில் அடைப்புகளை நீக்குகின்றது.

ஈஸ்வரன்… ஈஸ்வரி…! – சிருஷ்டிக்கும் ஆற்றல்

 

மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இதைச் சொல்லிச் சொல்லி கணவன் மனைவி இருவருமே ஆத்ம சுத்தி செய்து கொண்டால்
1.இந்த உடலை விட்டுச் சென்றால் வேறு எங்கேயும் போகாது…
2.சிவசக்தி என்ற நிலையில் இங்கே வருகின்றது.

யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி செய்யும் பொழுது எந்த விண்வெளியை நோக்கி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நம் உணர்வுகளைச் செலுத்திக் கொண்டோமோ அந்த மகரிஷியின் எல்லையை அடையலாம்.

மனைவியோ கணவனோ ஒருவருக்கு ஒருவர் யார் முந்திச் சென்றாலும் ஆத்மா இந்த உடலுக்குள் தான் போகும். அப்போது இருவருமே சேர்ந்து எடுத்துக் கொண்ட மெய் ஒளியின் தன்மை தனக்குள் ஒளியாக ஆக்கப்படுகிறது,
1.இன்னொரு பிறவிக்குப் போகாதபடி இரண்டு எண்ணங்களும் ஒன்று சேர்த்து
2.மெய் ஒளியின் தன்மையைக் கூட்டி உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றும் ஆற்றல் பெறுகின்றது.

அதே சமயத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்று உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று நம்முடைய குழந்தைகளையும் எண்ணச் சொல்லி உந்தி விண்ணிலே செலுத்தப் பழக்கிக் கொடுக்க வேண்டும்.

கூட்டுக் குடும்ப தியானங்களிலும் இதைப்போல செய்து இறந்த உயிரான்மாக்கள் அங்கே இணைய வேண்டும் என்று உந்திச் செலுத்த வேண்டும்.

இவ்வாறு செய்யும் பொழுது இரண்டு நிலைகளாக இருந்தாலும் அது சிவ சக்தியாக ஒன்றாகச் சேர்த்து இன்று எப்படிக் குடும்ப வாழ்க்கையில் இருக்கின்றோமோ இதே நிலையாக ஒளியின் தன்மையை அங்கே வாழ முடியும்.

1.சப்தரிஷி மண்டலமாக ஆனது என்பது… தனித்து எந்த மனிதனும் சென்று உருப் பெற்றதில்லை.
2.கணவன் மனைவியும் இந்த உணர்வின் தன்மை இணைத்துக் கொண்ட நிலைகள் கொண்டு தான்
3.அங்கே சிருஷ்டிக்கும் தன்மை பெற்றது.

எப்படி இருந்தாலும் பெண்களுடைய கரு உணர்வின் தன்மை என்பது ஒரு உயிரின் தன்மை கொண்டு தனக்குள் வளர்க்கும் ஆற்றல் பெற்றது.

அதாவது கணவன்-மனைவி சரீரம் இரண்டாக இருந்தாலும்… உயிரின் தன்மை ஆணாக இருந்தாலும்… சக்தி என்ற தாவர இனச் சத்தை இது இரண்டும் சேர்த்துத் தான் உருவமாகிறது. உணர்வின் அணுக்களாகத் திசுக்களாக மாற்றும் நிலை தாவர இனச் சத்தினால் தான் உருப்பெறுகிறது.

1.உயிரின் துடிப்பு ஈசனாக உருவாக்கினாலும்
2.ஈஸ்வரியாக உருவாக்கும் இந்த சக்தியின் தன்மையால் கருவின் தன்மை உருவாகி ஒரு உருவின் தன்மை கொண்டு வரும்.

அதைப் போன்று தான் சூட்சம நிலை பெற்று இந்த மனித உணர்வு வந்தபின்
1.ஒலி ஒளி என்ற நிலைகள் கொண்டு கணவன் மனைவி உணர்வின் தன்மை ஒன்று சேர்த்து
2.இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது அது ஒளியின் சரீரம் பெற்று
3.இந்த மனித வாழ்க்கையில் எப்படி இருக்கின்றோமோ ஒளியின் கூட்டாக அது அமைகின்றது.
4.விண்ணின் ஆற்றல் எது வந்தாலும் ஒளியின் சரீரம் ஆகின்றது
5.அதனால் தான் சப்தரிஷிகள் என்பதைக் கணவன்-மனைவி ஒன்று சேர்த்த நிலைகளாக உணர்த்தினார்கள்.

சாதாரண மனிதனும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் நளாயினி சாவித்திரி கதைகளைக் காட்டினார்கள்.

கணவன் மனைவி இரண்டு உடலாக இருந்தாலும் உணர்வுகள் இரண்டறக் கலந்து ஒரு உணர்வாக ஒளியாக மாறுகிறது. இதை நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கணவன் மனைவி ஒன்று சேர்ந்து ஒளியின் தன்மை பெறுவதற்கு அக்காலத்தில் இப்படிக் காட்டியிருந்தாலும் இன்று அவரவருக்கு உகந்தபடி “எப்படி எப்படியோ பிரித்து விட்டார்கள்…”

அந்த மெய் ஞானிகள் காட்டிய பேருண்மையைத் தான் இங்கே உணர்த்துகின்றோம்.

சஞ்சலமில்லாத எண்ணத்துடன் மகரிஷிகளுடன் நேரடித் தொடர்பு கொள்ள வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

ஒவ்வொரு ஞானியும் தன் வாழ்க்கையின் எண்ணத்தின் உணர்வால் பெற்ற சஞ்சல அலையின் உண்மைகளைப் புரிந்து உணர்ந்து பெற்ற உயர் ஞானத்தால் தான் அந்த ரிஷி சக்தியைப் பெற்றார்கள்.

அதே போல் மனிதன் தன் உணர்வின் சஞ்சலத்தைப் போக்கி…
1.தன்னைத்தான் தான் உணர்ந்து
2.தன்னிடமுள்ள திரையை விலக்கி
3.உயர் ஞானத்தின் உண்மையின் ஒளி சக்தி பெற
4.உணர்வின் குணத்தைச் சமப்படுத்தி அறியும் பக்குவத்தைப் பெற
5.ரிஷிகளாய் அன்றும் இன்றும் தன்னுடைய உயர் தத்துவத்தை
6.மனித எண்ணத்தின் உணர்வின் வலுவிற்கு வழி காட்டுகின்றனர்.

தன்னைத்தான் உணரக்கூடிய வழி முறையில் தன் ஞானத்தைப் பெறும் பொழுது…
1.கோபம் வேதனை பயம் சலிப்பு போன்ற குணங்கள் உந்தப் பெறும் பொழுது
2.அந்த உந்தல்களைச் சமப்படுத்திட…
3.தைரியத்தின் உயர் ஞானம் கொண்டு உயரக் கூடிய வளர்ச்சிக்கு
4.இச்சரீர உயிர் அணு… உயிராத்மாவின் வலுவைக் கொண்டு…
5.உயர்ந்த ஒளி சக்தியை மனித ஞானம் வளர்த்துக் கொள்ளும் நிலைக்கு
6.மெய் வழி காட்டும் தொடரில் ரிஷிகள் படைத்த காவியங்களில் பல உன்னதத் தத்துவங்கள் உண்டு.

ஒன்றை ஒத்து ஒன்று… ஒவ்வொரு நொடிப் பொழுதும் மாறத்தக்கதே இந்த உலகச் சுழற்சி ஓட்டத்தின் நியதி.

பூமியின் ஆரம்ப உயிர் அணுத் தோன்றி மனித உணர்வின் எண்ண குணங்கள் வளர்ந்தமைக்கும்… இன்றைய கலியில் மனிதப் பெருக்கத்தின் எண்ணத்தின் ஈர்ப்பலையும்… மின் காந்த வானொலி அலைத் தொடரும்… செயற்கையின் விஞ்ஞான அமிலத்தின் செயலும்… இக்காற்றலையில் அதிகமாக இன்று படர்ந்துள்ளது.

அன்று ரிஷிகள் காட்டிய தத்துவ முறைக்கும் இன்றைய கலியின் நடைமுறைக்கும் பல கோடி மாற்றங்கள் ஆகி விட்டது.

1.நம் உணர்வின் ஞானத்தைச் சஞ்சலமில்லா சாந்தத் தொடரில் ரிஷிகளின் எண்ணமுடன் கலந்து…
2.நாம் எடுக்கும் நேரடி சுவாச மின் காந்த உயர் சக்தியின் வலுவை.. இச்சரீரம் பெறப் பெற…
3.இச்சரீரமே “ஒளித் தன்மை கொள்ளும்…!”

பக்தி மார்க்க வழித்தொடரில் மனதை அந்தந்தத் தருணங்களில் இனிமை கலந்ததாகப் பக்குவப்படுத்தலாமே தவிர தன் ஞானத்தை உயர் ஞானமாக்கும் நிலை இல்லை.

உணர்வின் எண்ணத்தைச் சஞ்சலமில்லா ஒளி சக்தியின் ரிஷி சக்தியின் தொடர்பால் அவர்கள் பெற்ற சக்திகளை நம் உடலுக்குள் பெருக்கி அவர்களின் ஈர்ப்பு வட்டத்தில் நம் எண்ணத்தின் உணர்வு வீரியம் கொள்ள வேண்டும். அவர்கள் வேறல்ல… நாம் வேறல்ல…! என்ற நிலையை அடைதல் வேண்டும்.

இக்கர்ம காரிய வாழ்க்கையில் பலவாகப் பல கோடி ஆண்டுகளாகப் பல கோடி மனிதர்கள் எடுத்து வளர்த்த உணர்வலையின் சுழற்சியின் மத்தியில் வாழும் நம் உணர்வின் எண்ணத்தை இவ்வுலக ஈர்ப்பில் செலுத்தும் பொழுது தன்னைத்தான் உணர முடியாத நிலைக்கு இன்றைய உலக நிலை வந்துவிட்டது.

மேலும் இக்காற்றலையில் உள்ள உணர்வுகளின் வலுவையும் நம் ஆத்மாவில் ஏற்றிக் கொண்டு அதன் குறைவு நிறைவில்…
1.நம் சரீரத்தில் வளரும் உயிரணுக்களையும் உயிர் ஆத்மாவையும்
2.குறை உணர்வின் மத்தியில்
3.குறைவான எண்ணத்தில்
4.குறை கொண்ட வாழ்க்கையாக அமைந்து விட்டது.

இதிலிருந்து மீள ஒளி சக்தியின் வீரியம் கொண்ட மகரிஷிகளுடன் தொடர்பு கொண்டு… ஞானத்தால் உணரக்கூடிய “உயர் ஞான திருஷ்டி” என்ற சில உண்மைகளை உணர்த்தி வரும் அவர்கள் தொடர்பில் நாமும் வளர்ந்திடல் வேண்டும்.

அவர்கள் மூலம் பெற்ற நல் உணர்வின் சுவாசம் கொண்டு… நாம் வளரும் பூமியில்… நம் உணர்வின் சேவை… “பிறரையும் வளர்க்க…” சஞ்சலமில்லா உணர்வைச் சாந்தமுடன் நாம் பெற வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இரவு தூக்கத்தில் கெட்ட கனவு வந்தது… என்னை அப்படியே அமுக்குவது போல் இருந்தது… “ஒன்றுமே செய்ய முடியவில்லை” என்று சொல்வார்கள் – விளக்கம் – எப்படித் தடுப்பது?

விஞ்ஞான அறிவு கொண்டு ஒலி/ஒளிபரப்புச் செய்யும் போது எந்த ஸ்டேசனில் வைக்கிறோமோ TV ரேடியோ மூலம் அந்த ஒலி அலைகளைக் கவர்ந்து அது வருகின்றது… பார்க்கின்றோம்… கேட்கின்றோம்…!

மனிதனின் வாழ்க்கையில் யாருக்கும் நாம் தீங்கு செய்யவில்லை. நாம் ரோட்டிலே அல்லது பஸ்ஸிலே போகும் போது ஒரு ஆக்சிடெண்டைப் பார்க்கின்றோம். அவன் உடல் சிதைகின்றது.

அந்த மனித உணர்விலிருந்து அலறும் அந்த ஓலங்கள் ஒலி அலைகள் பரவுகின்றது. அடிப்பட்ட நிலையில் எத்தனை விதமான ஒலி அலைகள் பரவுகின்றதோ இதைச் சூரியனின் காந்த சக்தி எடுத்து வைத்துக் கொள்கிறது.

அடிபட்ட மனிதனை நம் கண் கருவிழி படமாக்கி நம் உடலிலே பதிவாக்கி விடுகிறது.

அடிபட்ட மனிதன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரவச் செய்கின்றது. அதை நாம் நுகர நேருகின்றது.

நம் உடலிலே ஆக்சிடெண்டைப் பார்த்த உணர்வுகள் வலுவாக இருப்பதால் மற்ற சிந்தனை இல்லாது இரவிலே உறங்கப்படும் போது அது கிளர்ந்தெழுகின்றது.

பதிவாக்கி நுகர்ந்த உணர்வுகள் இயக்கி நம்மை அறியாமலேயே இரவில் “திடுக்…” “திடுக்…” என்று பயப்படுவோம்.

பாலிலே பாதாமைப் போட்டாலும் ஒரு விஷத்தைப் கலந்தால் அந்த விஷம் தான் முன்னிலையில் வரும். ஒரு “சப்…” என்று இருக்கக்கூடிய பொருளுடன் காரத்தை இணைத்தால் அந்தக் காரம் தான் முன்னிலையில் இருக்கும்.

வாழ்க்கையில் நல்லொழுக்கங்களும் நல் செயல்களும் நல்ல நிலைகளைப் பார்த்து வாழ்ந்து வந்தாலும் சந்தர்ப்பத்தில் எதிர்பாராத நிலையில் ஆக்சிடெண்ட் ஆகி அவன் உடல் சிதைந்ததைப் பார்க்கின்றோம்.

அடிபட்டவர்களைக் கருவிழி இங்கே உடலில் பதிவாக்குகின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனறிவு அந்த உடலிலிருந்து வேதனைப்படும் உணர்வைக் கவர்கின்றது. நம் ஆன்மாவாக மாறுகின்றது.

ஆன்மாவிலிருந்து நுகர்ந்த பின் (சுவாசித்தது) அவன் வேதனைப்பட்டது போல் நமக்குள் பயமும் அச்சுறுத்தும் உணர்வுகளும் உருவாகின்றது.

நுகர்ந்தாலும் அந்த அணுத் தன்மையை நமக்குள் அதிகமாகப் பெருக்கி விட்டால் புலனடங்கித் தூங்கும் போது
1.நாம் ஈர்த்துக் கொண்ட அந்த அணு
2.பயமான உணர்வலைகளை அதிகமாக இழுத்து
3.நம் ஆன்மாவில் வந்து சுவாசித்து
4.உயிரிலே பட்டபின் நம்மை அறியாமலே தூக்கத்திலே அலறுகின்றோம் துடிக்கின்றோம்.

சில பேருக்கு ஆக்சிடெண்டைக் கண்டவுடனே “எழுந்து ஓடும் நிலைகள் வரும்…”

ஆக்சிடெண்டைப் பார்த்து அதை நுகர்ந்தவர்கள் தூக்கத்தில் அதே உணர்ச்சிகள் வந்த பின் “என்னை யாரோ அடிக்க வருகிறார்கள்…!” என்று எழுந்து ஓடுபவர்களும் பலர் உண்டு.

விபத்தில் மனிதன் அடிபடுவதை வேடிக்கை பார்க்கின்றனர். அந்த உணர்வின் தன்மை கருவிழி பதிவாக்கி விடுகின்றது. அவன் உடலிலிருந்து வரக் கூடிய அஞ்சி ஓடும் உணர்வலைகள் படர்கின்றது
1.அடிப்பவனைப் பார்க்கின்றோம்
2.விபத்தினால் அஞ்சி ஓடுபவனையும் பார்க்கின்றோம்.
3.இரண்டு உணர்வையும் நம் கருவிழி பதிவாக்கி உடலுக்குள் வைத்து விடுகின்றது.

இதைக் கலந்த உணர்வின் தன்மை ஊழ்வினை என்ற வித்தாக இங்கே வருகின்றது. (நன்றாகக் கவனிக்க வேண்டும்).

Agricultureல் பல பொருள்களைச் சேர்த்து புதுப் புது வித்துக்களை உருவாக்குகின்றனர். அதைப் போல ஆக்சிடெண்டைப் பார்த்த பின் இத்தகைய புதுவிதமான உணர்வின் வித்துக்கள் நமக்குள் உருவாகின்றது.

அடிபடுபவனின் வேதனைகளும் அடிபடுகிறோம் என்று அரண்டு ஓடும் உணர்வுகளையும் இரண்டும் கலக்கப்படும் போது உயிரால் நுகரப்படுகின்றது.

நுகர்ந்தது இதில் எதனின் ஆக்கம் அதிகமாகின்றதோ… “இப்படிச் செய்கின்றானே பாவி…” என்ற நிலை வரும் போது ஓடுபவரிடமிருந்து வெளிப்பட்ட அந்த பயத்தின் உணர்வுகள் நமக்குள் பதிவாகி விடுகின்றது.

“இந்தப் பதிவின் துடிப்பு…” அதிகரிக்கப்படும் போது இரவிலே நாம் தூங்கும் போது அவன் உடல் நம் நினைவுக்கு வருவதில்லை.

ஆனால் இரவில் நாம் தூங்கிக் கொண்டு இருந்தாலும் யாரோ என்னை அடிக்க வருகின்றனர் என்ற உணர்வு கொண்டு அஞ்சி எழுந்து ஓட ஆரம்பிக்கின்றோம்.

புலனடங்கித் தூங்கினாலும்
1.நம் ஆன்மாவில் பட்ட உணர்வுகளை நாம் சுவாசிக்கும் போது
2.நம் உயிரிலே பட்டு அந்த உணர்வுகள்
3.இயற்கையில் நாம் விழித்திருக்கும் போது என்ன செய்வோமோ
4.அதே செயலைச் செய்யும் அந்தச் செயலாற்றலைக் கொண்டு வருகிறது.

சிலர் எழுந்து ஓடுவதையும் பார்க்கலாம். சிலருக்கு
1.ஐயோ என்னைக் கொல்கிறார்களே…! என்ற நிலைகளும் வரலாம்.
2.என்னை அமுக்குகின்றனர்… கொல்கின்றனர்… என்றும் சொல்வார்கள்.

விபத்துக்குள்ளாகித் தாக்குதலான நிலைகளை நண்பர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வார்கள். அங்கே இப்படி நடந்தது… இங்கே இப்படி ஆனது…! என்பார்கள்.

நண்பர் சொல்வதை உற்று நோக்கி அந்த உணர்வின் தன்மை பதிவாக்கினால் அந்த அதிர்ச்சியின் உணர்வுகள் அது வலு கொண்டதாக இருப்பதால் புலனடங்கித் தூங்கும் போது நண்பன் சொன்ன நிலைகள் இரவிலும் வருகின்றது.

அவர் விபத்தைப் பார்த்தார்… நாம் பார்க்கவில்லை. ஆனால் பேசும் பொழுது நாம் கூர்மையாகக் கேட்டிருப்போம்.

என்னப்பா…! அநியாயத்துக்கு இப்படி அடித்துக் கொல்கிறார்களே… என்று அவர் நம்மிடம் சொன்னால் போதும். அவருக்குள் பதிவான உணர்வுகள் சொல்லாக வருகின்றது.

அவர் உற்றுப் பார்த்து உணர்வின் தன்மை பதிவான பின் அந்த உணர்ச்சிகளைச் சொல்லாக வெளிப்படுத்துகின்றார். ஆனால் நாம் ஆளைப் பார்க்கவில்லை.
1.அவர் சொல் நமக்குள் பதிவான பின்
2.நாம் புலனடங்கித் தூங்கும் போது
3.அந்த மனிதனின் ரூபமே நமக்குத் தெரியும்.

அவன் வேதனைப் படுகின்றான் துரத்துகின்றான் அவனை அடிக்கச் செல்லுகின்றான் என்று பதிவான உணர்வுகள் நமக்குள் இருப்பதனால் அந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்ட பின் இரவிலே
1.“நம்மை அடிக்க வருகிறான்” என்று நாம் எழுந்து ஓடுவோம்.
2.அல்லது என்னை அடிக்க வருகிறான் என்று தூக்கத்தில் கத்துவோம்.

ஒருவன் நீரிலே மூழ்கினான். அதனால் அவன் மூச்சுத் திணறி இறந்து விட்டான். அதை இன்னொருத்தர் பார்த்து வீட்டிலே வர்ணனை செய்வார்.

ஒரேயடியாக இந்த மாதிரி மூச்சுத் திணறி இறந்துவிட்டார் என்று சொல்வார். அவன் பட்ட பாடு எப்படி இருந்தது தெரியுமா…! என்று சொல்லுவார்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கெல்லாம் அந்த உணர்வுகள் அப்படியே பதிவாகும்.

வீட்டிலே அன்றைக்குக் கஷ்டம் என்ற நிலைகள் இருந்திருக்க வேண்டும். அத்தகைய சலிப்பான சங்கடமான நிலைகளோடு அவர் தூங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

சோர்வென்ற நிலைகள் இருக்கும் போது அவர் சொன்ன நிலைகள் கிணற்றில் விழுந்து மூழ்கினான் கதறினான் கத்தினான் என்று பதிவான உணர்வுகள்
1.தூங்கும் பொழுது இயக்கி அறியாமலேயே
2.குளத்துக்குள் மூழ்குவது போலவே அவருக்குத் தோன்றும்.
3.தண்ணீருக்குள் மூழ்கினால் கத்துவது போல் கத்துவார்.
4.இவையெல்லாம் பதிவான உணர்வின் இயக்க நிலைகள்.

புலனடங்கித் தூங்கிக் கொண்டிருந்தாலும்
1.உயிரின் தன்மைகள் அந்த உணர்ச்சிகளை நம் உடலிலே சுழலச் செய்து
2.அதே செயலாக்கமாக இயக்கிக் காட்டும்.

இதைப் போன்ற நிலைகளை மாற்றுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

விபத்துகளையோ அசம்பாவிதங்களையோ பார்க்க நேரந்தால் அல்லது கேட்க நேர்ந்தால்
1.அடுத்த கணம் “ஓ..ம் ஈஸ்வரா…” என்று
2.புருவ மத்தியில் உயிரை எண்ணி
3.அதைத் தடுத்து நிறுத்திப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற உணர்வை உடலுக்குள் பல முறை செலுத்த வேண்டும்.

பின் விபத்தில் அடிபட்டவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் விரைவில் உடல் நலம் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அடிபட்டவர்கள் இறந்திருந்தால்… உடலை விட்டுப் பிரிந்த அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று விண்ணை நோக்கி உந்திச் செலுத்த வேண்டும்.

ஓ…ம் நமச்சிவாய… சிவாயநம ஓ…ம்…! – இதனின் உட்பொருள் என்ன…?

 

நம்மைத் திட்டியவர்களைக் கூர்ந்து கவனித்த பின் நாம் என்ன சொல்கிறோம்.

“இருக்கட்டும்… நான் பார்க்கின்றேன்… உதைக்கின்றேன் பார்… அவன் வந்துவிடுவானா… நான் பார்த்து விடுகிறேன்…!” என்றெல்லாம் உணர்ச்சிவசப்படுகின்றோம்.

வருவோர் போவோரிடம் எல்லாம் இதைச் சொல்லி “இப்படிச் செய்கிறான்… அவன் உருப்படுவானா…?” என்று சொல்கிறோம்.

கீதையிலே சொன்னது… நீ எதை நினைக்கிறாயோ அதுவாகின்றாய்.

அவன் உருப்படுவானா…? என்று சொல்லும்போது நாம் கெட்டு… அதைச் சமைத்து… வாக்கைச் சொல்லி… அங்கே பட்டு… அடுத்தவரிடம் சொல்லி அப்படியா…? என்று இரண்டாவது வருகின்றது.
1.முதலில் நாம் தான் கெடுகின்றோம்.
2.இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் திட்டுகிறோம் என்று சொன்னால் நம் உயிரான ஈசன் உடனே அதைப் பிரணவம்… ஜீவன் ஆக்கி விடுகின்றான். நமக்குள் சக்தியாக அது இயங்க ஆரம்பிக்கிறது.

ஓ…ம் நமச்சிவாய… நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வு ஓ…ம் பிரணவம். அந்த உணர்வின் சக்தி எனக்குள் சேர்ந்தபின் சிவமாகிறது (உடலாகிறது). ஓ…ம் நமசிவாய… சிவாய நம ஓ…ம்.

நான் உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கின்றேன். சொல் வெளிப்பட்டவுடன் அந்த உணர்வு எனக்குள் ஜீவன் பெறுகின்றது அந்த உமிழ் நீர் எனக்குள் சிவம் ஆகின்றது. ஓ…ம் நமச்சிவாய என்னுடைய சொல் உங்களிடம் சென்றபின் அது உதவி செய்ய வைக்கும்.

ஆனால் “உதைக்கிறேன்…” என்று சொல்லைச் சொன்னேன் என்றால் அடுத்து சிவாயநம… உதைக்க வேண்டும் என்று இந்த உடலையே இழுத்துக் கொண்டு போகும்.

1.நான் எடுத்துக் கொண்ட உணர்வின் அலை ஈசனிடம் பட்டவுடன் பிரம்மமாகி
2.“பிரணவம்…” அந்தச் சக்தி என் உடலில் அந்த ஆற்றலாக இயக்கும்.
3.ஏனென்றால் சிவம் (உடல்) என்பது உயிரிலே படும் உணர்வால் இயக்கக்கூடிய பொம்மைதான்.

கோபம் வந்துவிட்டால் என்ன செய்கிறோம்…? கையைப் பிடித்து நிறுத்திப் பாருங்கள்… நிற்க முடியுமா என்று…!

கோபம் வந்துவிட்டால் கொஞ்சம் நிறுத்து… இரு…! என்று யாராவது சொன்னால் கேட்போமா…? எல்லாம் உன்னால்தான் வந்தது…! என்று அவரையே உதைக்கச் செல்வோம்.

ஆகவே நான் எதை எடுக்கிறோமோ உயிருக்குள் பட்டவுடன் ஈசனுக்கு எரிச்சல் ஆகிறது. இந்த உணர்வைத் தாங்கி உடலுக்குள் சக்தியாகப் பட்டால் என்ன செய்யும்…?

நம் மீது நெருப்பு பட்டால் என்ன ஆகும்…? சிவன் மேலே பட்டால் ஐய்யய்யோ… ஐயோ…! என்று துள்ளுவோம்.

அதே மாதிரியான உணர்வுகள் ஈசனுக்குள் (உயிருக்குள்) பட்டவுடன் ஐய்யய்யோ.. ஐயோ…! என்று துள்ளுவோம். ஆகவே இதை எல்லாம் நாம் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அந்தந்த உணர்வின் தன்மை நாம் சுவாசிப்பது எதுவோ அதனின் செயலின் தன்மையாகத் தான் நாம் இயக்கப்படுகின்றோம்.
1.தீமை செய்யும் உணர்வின் தன்மை என்றால் அது நமக்குள் சிவமாகி
2.ஐய்யய்யோ என்று உடலிலே குடைந்து நோயாக வந்து கொண்டே இருக்கும்.

அதைக் காட்டுவதற்குத் தான் மூஷிகவாகனா (மூச்சு – வாகனம்) விநாயகருக்கு முன் மூஞ்சூரைப் போட்டு வைத்திருக்கின்றார்கள். ஒருவனை அழித்து விடுவேன் என்ற உணர்வை நாம் சுவாசித்தால் நம் உடலான கட்டிடத்தை அந்த உணர்வுகள் கவர்ந்து இடித்துவிடும்.

ஆனால் முதலிலே விநாயகருக்கு முன் மாம்பழத்தைத் தான் போட்டுக் காட்டினார்கள். காய் கனிகளைச் சாப்பிட்டுத் தனக்குள் வாகனமாக அந்தச் சுவை கொண்டுதான் உடலை வளர்த்து வந்தது என்று காட்டினார்கள்.

அதாவது விநாயகர் தத்துவத்தைப் படமாகக் காட்டும் போது முதலிலே எலி இல்லாது இருக்கும். அதற்குப் பின்னாடி தான் எலியைப் போட்டுக் காண்பித்தார்கள்.

இது எல்லாம்… அந்த இயற்கையின் நிலையை நாம் கண்ணுற்றுப் பார்த்ததும் தெரிந்து கொள்வதற்காக வேண்டி ஞானிகள் தெளிவான நிலையில் நமக்குக் கொடுத்திருக்கின்றார்கள்.

ஒளி நிலை பெற வேண்டியதன் அவசியம் என்ன…? – ஈஸ்வரபட்டர்

 

தன் ஞானத்தின் வலுவை வலுப்படுத்தி… உயர் தியானத்தால் ஒளி சக்தியின் சக்தியை வலுப்படுத்தியதின் உண்மைத் தன்மை யாது…? (எதற்கு) என்பதை அறிதல் வேண்டும்.

ஒவ்வொரு செயலிலும் ஒன்று வளர்ந்து… அது மாறிப் பிறிதொன்றாய் வளர்ந்து தொடர் நிலை கொள்கின்ற வளர்ச்சி பெறும் உருவக அமிலத்தன்மையில்… பொருள் நிலை மாறினாலும் மூல ஒளி நிலை பெற்ற உயிர் அணு எவையுமே மடிவதில்லை…!

உயிர்களுக்கு என்றுமே அழிவில்லை…!

ஆகையினால்..
1.ஒளி நிலை பெற்ற அந்த உயிரணுக்களின் கூட்டுச் செயல் நிலை வளர்ந்தால் தான்
2.அத்தொடரின் வலுவில் வலுவாகக் கூடிய மண்டல வளர்ச்சி உருப் பெற உரம் தர முடியும்.

அமிலமாய்… உருவாய்… ஆவியாய்… உருவாகும் உருத்தொடரின் உயிரணுக்களில்… வீரிய நிலை பெற்ற வளர்ச்சி உரு முதிர்வு நிலை என்பது “மனித உணர்வின் எண்ண ஓட்டச் செயல் நிலைதான்…!”

இச்செயல் நிலையையும் ஜீவ சரீரத்தில் எண்ணத்தின் வளர்ப்பு கொண்டுதான் வலுப்படுத்திக் கொள்ள முடியும்.

அத்தொடரின் அழியா நிலை பெற… அன்று மாமகரிஷியாக உயர்ந்த மனிதன் தன் வலுவைக் கூட்டிக் கொள்ள மனித அறிவில் தன் உணர்வைச் செலுத்தி வளர்ச்சியுறத்தக்க நடைமுறை செயலுக்கு அன்று உள்ள மனித ஜனத்தொகை மிக மிக சொற்பம்… மிருக உணர்வின் தொடர்பில் உயர் ஞான எண்ணச் செயல் குறைவு,

அதன் தொடரில் தன் உயிராத்மாவிற்கு உயர் நிலை பெற தாவர இனத் தொடர்பில் தன் சரீரத்தைப் பல பக்குவங்களுக்கு உட்படுத்திக் “காயகல்ப சித்தி” பெற்றார்கள்.

ஆனால் இக்கலியில் நாம் இன்று வாழக்கூடிய வாழ்க்கைத் தொடரிலேயே….
1.எச்சக்தியையும் பெறக்கூடிய வலுவிற்கு
2.அன்று பெற்ற ரிஷி சக்திகளின் எண்ணமுடன் நம் எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி
3.அவர்களின் தொடர்பலையை நம் ஜீவகாந்த சரீரத்திற்குச் செலுத்தச் செலுத்த
4.உயிரின் பரிமாணமும் உயிரணுக்களின் பரிமாணமும் கூடக் கூட
5.இவ்வாத்மாவின் ஒளி வட்டம் தன் இயக்கச் செயலினால்
6.தனித்து இயங்கும் ஒளி சக்தியின் வலுவைச் சிறுகச் சிறுகப் பெருக்கிக் கொள்ள முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மலரில் உருவாகும் மதுரத்தைப் போல… “மகிழ்ச்சியும் பேரானந்தமும் கொண்ட மதுரத்தைப் பெறுங்கள்”

செடியிலோ மரத்திலோ மலர் மலர்ந்து விட்டால் மீண்டும் மீண்டும் மலர்ந்து அதிலிருந்து அதனின் மணம் கமழ்கிறது.

மலராக உருவான பின்
1.அதில் மதுவான இனிமை கொண்ட மதுரத்தைத் தனக்குள் நுகர்ந்து
2.அந்தத் தேனினை இணைத்து அதற்குள் கருவுற்று
3.கருவுற்ற நிலைகள் கொண்டு தன் வித்தாக உருவாக்குகின்றது.

அதைப் போல நாம் எடுத்துக் கொண்ட மகரிஷிகளின் உணர்வின் தன்மை மலரின் மணம் போன்று அருள் மணமாகக் கமழ்கின்றது.

1.மகரிஷிகளின் மணத்தை நுகர்ந்தால் அது மதுரமாகி
2.மகிழ்ச்சியான அலைகளாக நம் ஆன்மாவாக மாறி
3.அந்த உணர்வின் தன்மையை நாம் சுவாசிக்கும் பொழுது
4.நமக்குள் வளர்ந்து அருள் ஞான ஒளியின் வித்தாக
5.முழுமை பெறும் தன்மையினை நாம் நிச்சயம் அடைய முடியும்.

ஆகவே என்னமோ… ஏதோ…! என்ற நிலையில் யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளை அலட்சியப்படுத்தாது மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளை நீங்கள் பெற வேண்டும். குருவின் அருளால் நீங்கள் தெளிந்திடும் நிலை வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெற்று உங்களுக்குள் தெளிந்த மணம் பெற வேண்டும் என்று விரும்புகின்றேன். உங்களை நான் பார்க்கும் பொழுது எனது குருவின் அருளை உங்களிடம் பார்க்க விரும்புகின்றேன்.

உங்களை அறியாது வந்த இருள்களை நீங்கள் போக்கும் நிலை பெற வேண்டும். அப்பொழுது மகிழ்ந்திடும் பேரானந்த நிலையான அந்த மதுரம் உங்களுக்குள் வரும்.

அந்த உணர்வின் தன்மையை நான் நுகரும் போது எனக்குள்ளும் மதுரமாகின்றது. உயிரான ஒளியுடன் ஒன்றி என்றும் நிலையாக நிலைக்கும் நிலைகளை நாம் அனைவரும் பெறுகின்றோம்.

சூரியன் எவ்வாறு இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டு தனக்குள் கலந்து வரும் நஞ்சினைப் பிரித்து விட்டு உணர்வின் ஒளியாக மாறுகின்றதோ இதே போல
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பேரொளியாக மாற்றினார்.
2.அவர் வழியில் நான் பெற முடிகின்றது.
3.அதன் வழி நீங்கள் அனைவரும் பெற முடியும்.
4.இதில் கடினம் எதுவும் இல்லை.

அனைவரும் இந்த முறைப்படுத்தி வாருங்கள். பிறர் தீமையான நிலைகளில் செயல்பட்டாலும் அதை நீங்கள் கேட்டறிந்தாலும் அடுத்த கணம் ஒரு 50 முறையாவது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு உங்களை அறியாது வரும் அவர்களுக்குள் (பிறரின் இருளான உணர்வுகள்) பட்ட இருள் உங்களை மறைத்திடாது தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் உணர்வை ஒளியாக மாற்றுங்கள்.

அந்த வலுவின் துணை கொண்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள்.
2.உங்கள் பிணிகள் அகலும். உடல் நலம் பெறுவீர்கள்.
3.மகரிஷிகளின் அருள் ஒளியால் உங்கள் நோய்கள் நீங்கும்.
4.உங்கள் குடும்பம் நலமாக இருக்கும்.
5.உங்கள் தொழில்கள் வளரும்.
6.உங்கள் குடும்பங்களில் அனைவரும் ஒன்று சேர்ந்து இருப்பீர்கள் என்று
7.உங்கள் வாக்கை மற்றவர்களுக்குள் அருள் ஞான வித்தாகப் பதிவு செய்யுங்கள்.

இதன் வழி கொண்டு மெய் வழியில் தொடர்ந்து நீங்கள் செய்து வாருங்கள்.

1.தீமைகள் அகன்று தீமைகளை அகற்றும் உணர்வுகள் அனைவரது உடல்களிலும் விளைந்து
2.அந்த உணர்வலைகள் வெளி வரும்போது சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு
3.இந்தப் பரமான பூமியில் பரமாத்மாவாகப் பரவச் செய்யும்.
4.இந்த அருள் உணர்வுகள் பரவப்படும் போது கடவுளாக
5.இந்தப் பரமாத்மாவுக்குள் தீமையை அகற்றும் அலையின் தொடராக
6.யார் எண்ணி ஏங்கினாலும் அடுத்த கணம் அவர்கள் தீமைகளை அகற்றும்.
7.அந்தக் கடவுளாக மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் சிருஷ்டிக்கும் தன்மை வரும்.

ஆனால் இன்றைய மனித வாழ்க்கையில் நாம் எதை இந்தப் பரமாத்மாவில் கலந்து கொண்டிருக்கின்றோம்…?

பஸ்சில் போனால் பயம்; வீட்டில் இருந்தால் பயம்; அதிகமான காசு கொண்டு போனால் பயம்; ஏதாவது வாய் திறந்து பேசினால் பயம் என்ற நிலையில் அஞ்சியே வாழ்ந்து கொண்டிருக்கும் உணர்வுகளை ஒவ்வொருவரும் வெளிப்படுத்துகின்றோம்.

இந்த உணர்வலைகள் படரப் படர அலைகளாக மலர மலர மகரிஷிகளின் அருள் ஒளியை… அந்த மெய் ஒளியை… இங்கே நாம் பெற முடியாது இருள் சூழும் நிலையே வருகின்றது.

அந்த இருளான உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து பரவச் செய்யும்போது அச்சுறுத்தும் உணர்வின் தன்மை கொண்ட கடவுளாக – அதைத்தான் பரமாத்மாவாக மாற்றுகின்றோம்.

அத்தகைய உணர்வுகளை நாம் நுகர்ந்தால் நமக்குள் வந்து அஞ்சி வாழும் நிலைகளைத்தான் நம்மை இயக்கச் செய்யும்.

இதைப் போன்ற நிலைகளை அகற்றுங்கள். உயர்ந்த நிலைகள் பெற அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நுகரப் பழகிக் கொள்ளுங்கள்.

“சாமி செய்து தருவார்…” என்ற எண்ணத்தை வளர்த்தால் உங்களுக்கு அதிலே ஏமாற்றம் தான் வரும்

 

நம்மை ஒருவர் திட்டினால் அதைக் கூர்ந்து கவனிக்கின்றோம். அடுத்தாற்போல் அதே செயலில் நாமும் இயங்க ஆரம்பித்து விடுகின்றோம்.

அது போன்று யாம் (ஞானகுரு) இங்கே உபதேசிக்கும் போது யார் ஒருவர் இதைக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ
1.சாமி சொன்ன வழிகளில் நாம் போக வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால்
2.அந்த உணர்வுகள் உங்களுக்குள் வருகின்றது.

கீதையிலே சொன்னது போல் நீ எதை நினைக்கிறாயோ அதுவாகின்றாய்… மூஷிகவாகனா…! எதை நினைக்கின்றீர்களோ அதையே நீங்கள் சுவாசிக்கின்றீர்கள்.

அப்படி அந்த ஞானிகளை நினைப்பதற்குண்டான ஆற்றலையும் அதை நீங்கள் பெறுவதற்கும் அதைச் சுவாசிக்க கூடிய நிலைகளுக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கும் நிகழ்ச்சி தான் தியானம்.

அந்த முறைப்படி நினைக்கப்படும் பொழுது மெய் ஞானிகள் காட்டிய வழிகளிலே அங்கே போகலாம்.
1.சாமி செய்து கொடுப்பார் என்று எண்ணினால் ஏமாந்து தான் போக வேண்டும்.
2.சாமி பெரிய மகான்…! அவர் கொடுக்கின்றார் பிரசாதம் கொடுக்கின்றார்… அது கொடுக்கின்றார்… என்று எண்ணிக் கொண்டிருந்தால்
3.உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று தான் அர்த்தம்.

இயற்கையின் உண்மை இதுதான் என்று உங்களுக்குள் அருள் உணர்வின் வித்தாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அந்த விதைக்கு நீரூற்றி வளர்க்க வேண்டியது “உங்களுடைய பொறுப்பு…”

குருநாதர் எனக்கு அந்த அருள் வித்தைக் கொடுத்தார்… அதற்கு வேண்டிய பக்குவத்தைச் சொன்னார்… எடுத்துக் கொண்டேன். அதன்படி விளைய வைத்த வித்தின் தன்மையை உங்களுக்குள் கொடுக்கப்படும்போது அதை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள் என்று தான் சொல்கின்றேன்.

“சாமி கொடுப்பார்…” என்று கோவிலில் தெய்வத்திடம் சென்று வரம் வாங்கிக் கொடு…! என்று கேட்பது போன்று கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

சாமி பெரிய சக்தி வாய்ந்தவர்…! என்ற எண்ணத்தில் தலைவலி என்னை விட்டே போக மாட்டேன் என்கிறது… முழங்கால் வலி போகவே மாட்டேன் என்கிறது என்று சொல்லிக் கேட்கின்றார்கள்.

வலி நீங்கி நான் நன்றாக வேண்டும் என்று கேட்கச் சொல்கின்றேன். மீண்டும் தலை வலி விட மாட்டேன் என்கிறது… ஐந்தாறு மாதமாக விட மாட்டேன் என்கிறது… என்னென்னமோ வைத்தியம் பார்த்தேன் என்றே சொல்கிறார்கள்.

இப்போது என்ன வேண்டும்…? என்று கேட்டாலும் அது தான் வலி விட மாட்டேன் என்கிறது என்று மீண்டும் அதையே தான் கேட்கிறார்கள். ஏனென்றால் அந்த உணர்வுதான் நம்மைப் பேச வைக்கின்றது.

எத்தனை தடவை சொன்னாலும் கூட அதைத்தான் திருப்பிக் கேட்கின்றார்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு நமக்குள் பக்தியை வளர்த்து வைத்து விட்டார்கள்.

டாக்டரிடம் சென்று தலை வலி… இடுப்பு வலி மேல் வலி என்று சொல்கிறார்கள். அவர்கள் அதற்குண்டான மருந்தை கொடுத்து மற்ற எல்லாம் சொல்கின்றார்கள்.

டாக்டர் சொன்ன வழிப்படி செய்தால் தானே அந்த நோய் சரியாகும்.

ஊசியையும் போட்டு மருந்தையும் உட்கொண்ட பின் ருசியாக இருக்கிறது என்று டாக்டர் சாப்பிடக்கூடாது என்று சொன்னதைச் சாப்பிட்டால் என்ன ஆகும்…?

மீண்டும் கை கால் குடைச்சல் உடல் வலி வரத்தான் செய்யும்.

அதே போன்று இங்கே தியானத்தைச் சொல்லிக் கொடுத்து மெய் ஒளியின் தன்மையைப் பதிவு செய்கின்றோம். அதை எடுத்து உங்களுக்கு வரக்கூடிய தீமையைப் போக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லும் போது அதை நீங்கள் செய்தால் தான் சரியாகும்.
1.உங்களை நீங்கள் நம்புங்கள் என்று தான் சொல்கிறேன்
2.நான் சரியாக்கித் தருகின்றேன் என்று சொல்ல வரவில்லை.

பல கோடி ஆண்டுகளாக வளர்ச்சி பெற்ற மனித இனமே இந்த நூற்றாண்டில் அழிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளது – ஈஸ்வரபட்டர்

 

அலை வரிசைகளின் மூலம் இன்று நாம் பார்த்து.. கேட்டுக் கொண்டிருக்கும் ரேடியோ… டி.வி. இண்டெர்னெட்… எல்லாமே எவ்வமிலத்தில் உலோகத்தைப் பூசி ஒலி பரப்பப்பட்டதோ.. அது காற்று மண்டலத்தில் பரவி… எத்தொடரில் ஒலிபரப்பானதோ… அவ்வொலியின் பலவாகப் பரவும் செயல் ஜீவன் கொண்டு… ஒரு இடத்தில் ஒலிப்பரப்பப்பட்ட நிலை இக்காற்று மண்டலம் முழுமைக்கும் பல மைல்களுக்கப்பால்… அதன் தன்மை கொண்ட அமில மோதல் தொடர்பில் ஜீவன் பெற்று விடுகிறது.

அந்த இணைப்பு பெறும் தொடர்பிலெல்லாம் ஒலிப்பரப்பாகும் ஒலியை நாம் அவ் ஈர்ப்பில் கேட்கும் பொழுது
1.எவ்விஷ அலையின் முலாம் பூசப்பட்ட அமில ஈர்ப்பின் ஒலிப்பதிவு
2.இந்தக் காற்று மண்டலத்தில் ஜீவன் பெற்றதோ
3.மீண்டும் அதே அலையின் உணர்வை நம் எண்ண உணர்வு எடுக்க எடுக்க
4.இவ்வுடலும் அவ்விஷ அலையின் ஈர்ப்பிற்குத்தான் செல்ல முடியும்.

எப்படி இயந்திரங்களை ஒன்றின் இணைப்பு கொண்டு பிறிதொன்றை இணைத்து ஓட்டும் பொழுது… அதன் தொடர்பில் இதுவும் ஓடுகின்றதோ அதைப் போன்று… உணர்வின் எண்ண அலையின் தொடர்பு அலையில் எத்தொடர்பில் ஒலி அலை.. ஒளி அலை பதிவு பெற்றனவோ… அவற்றின் ஈர்ப்பிற்கு மனிதர்கள் தம் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது… அவ் ஓட்டத்தின் சுழற்சியில் தன் உணர்வும் சிக்கி… அவ்விஷ அலையில்தான் இம்மனித ஆத்மாவும் செயல் கொள்ளத் தொடங்கி விட்டது.

இந்தக் குறுகிய நூற்றாண்டில் வளர்ச்சி கொண்ட இவ் அலையின் தொடர்பினால்… “பல கோடி ஆண்டுகளாக” வளர்ச்சியுற்ற வலுக் கொண்ட இவ்வுயிர் ஆத்மாவை நல் உணர்வின் ஞானமுடன் செயல்படுத்த முடியாத நிலை ஆகி விட்டது.

இன்றைய செயற்கை மின் காந்த ஒலி… ஒளிக் காட்சிகளின் தொடர்பினால்…
1.ஆத்மாவானது உயரும் நிலை பெறாமல்
2.உடலை விட்டு உயிர் பிரிந்தவுடன்
3.உயிருடன் வலுக் கொண்டு… உயிருடன் ஆத்மா வலுப் பெறாமல்
4.ஆத்மா சிதறுண்ட நிலையில் இக்காற்று மண்டல சுழற்சியில்
5.மனித உணர்வின் எண்ண நிலைக்கொப்ப அந்தந்த மோதல் நிலை பெற்று
6.தன் வலு நிலையை இழந்து விடுகின்றது.

ஆகவே.. ஆத்மாவுடன் கூடிய உயிரும்… ஆத்மா பிரிந்த அவ்வுயிரும் வலுவிழந்த நிலையில்… பிறப்பின் தொடருக்கு மீண்டும் மிகவும் கீழ் நிலையான உயிரின நிலைக்குத்தான் செல்ல முடிகின்றது.

இன்று இக்காற்று மண்டலமே மிகவும் நஞ்சாக உள்ளது. மனித உணர்வின் எண்ண ஆத்மாவிற்கு வேண்டிய உயர் காந்த மின் அலையை எடுக்கும் உயர் ஞானத்தின் சக்தி நிலை பெறத்தக்க சூழ் நிலையை
1.இன்றைய விஞ்ஞானம் காற்று மண்டலத்தில் கலக்க விட்டுள்ள பல அலையின் செயலினால்
2.அந்த மனித சக்தியையே வலுவிழக்கச் செய்துவிட்டது.

விஞ்ஞானத்தில் செயல்படும் நிலையே தன் ஞானம் செயல்படக்கூடிய வழி வளர்ந்த தொடரில் வளர்ந்திருந்தது என்றால்
1.இன்று இப்பூமியில் கலியின் கடைசியை அழிவு நிலை இல்லாமல்
2.மனிதனின் உயர்வு வளர்ச்சியான அடுத்த கல்கி அவதாரத்தை மனிதர்கள் பெற்றிருக்கலாம்.

சில நிலைகள் வெளிப்படுத்திய நிலையும் யூதர்களினால் அன்று மனித உணர்வின் ஆத்மா வலுப்பெற்ற நிலையும் அழிவு நிலைக்குச் சென்று விட்டது.

அன்றைய ஞானிகள் மனித ஆத்மா உயர்வு பெற மனிதன் எச்சக்தியையெல்லாம் பெற முடியுமென்ற தத்துவத்தை விளக்கிக் காட்டினர்.

1.அதை வளர்க்கும் நிலையைக் காட்டிலும் எதிர்க்கும் நிலையும்
2.தன் தேவைக்குத் தந்திரமான முறையில் செயல்படுத்தப்பட்டதினால்
3.இன்று அவை எல்லாம் வேறு ரூபமெடுத்துவிட்டன.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யானையோ தன் உடலின் வலுக் கொண்டு தான் உணவாக உட்கொள்ளும் பெரும் கட்டைகளை தனக்குள் உருவாகும் அமிலத்தின் வலுவால் துரித நிலைகளில் கரைத்து அதனின் சத்தைத் தன் உடலாக மாற்றிக் கொள்ளும் திறன் பெறுகின்றது.

ஆனால் அதன் மலத்தை (லத்தி) வெளியிடும் போது அதை மனிதன் மிதித்தால் குதிங்கால் வாதம் நீங்குகின்றது.

மனிதனின் வாழ்க்கையில்
1.வேதனை என்ற உணர்வுகள் அதிகரித்தால்
2.அதன் புவியின் ஈர்ப்பில் இத்தகைய வாத நோய்கள் வந்துவிடுகின்றது.

குதிங்கால் வாதம் என்பது நாம் நடக்கும் போது தெரிவதில்லை. நாம் அமைதியாக இருக்கும்போது கால்களில் அந்த வலியும் வேதனையும் தெரியத் தொடங்கிவிடும்.

நாம் படுக்கும்போது இதைப் போன்ற வலி இருப்பதை உணர முடிகின்றது.

யானையின் லத்தியை அது சூடாக இருக்கும் போது அதை அவர்கள் மிதித்தார்கள் என்றால் இந்த உடலிலுள்ள வாதங்கள் நீங்கிவிடுகின்றது.

விஷத்தின் தன்மை நம் உடலில் உறைந்திருந்தால் லத்தியில் வரும் ஆவியின் தன்மை
1.பாதங்கள் வழியாக உடலுக்குள் ஊடுருவி அதைக் கரைத்து விடுகின்றது.
2.அந்தப் பாகம் இரத்தம் எளிதாகச் சீர்படும் தன்மை வருகின்றது.

இயற்கையின் இயக்கங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதைப் போல் கால்களில் முழங்கால் வாதம் கடுமையாக இருந்தால் எருமை மாட்டின் சாணத்தை உபயோகப்படுத்தி அதைக் குறைக்க முடியும்.

எருமை விஷத்தின் தன்மை கொண்டு உடல் வலிமை பெற்றது.

எருமைச் சாணம் சூடாக இருந்து அதைத் துணியில் எடுத்துப் பிழிந்து மேலே போட்டால் மூட்டுவாதங்கள் மற்றும் குதிங்கால் வாதங்களை நீக்க உதவுகின்றது.

சாணம் போட்டதும் வெதுவெதுப்பான நிலையில் எடுத்துப் பிழிந்து காலில் வைத்துப் பாருங்கள். அது ஒரு மருந்தாகப் பயன்படுகின்றது.

மிகவும் கடினமான விஷத்தை மனிதன் உட்கொண்டால் அந்த விஷத்தின் தன்மையைத் தடைபடுத்த எருமைச் சாணத்தை மிதித்தால் புவியின் ஈர்ப்பில் ஈர்ப்பாக இருப்பதால் இரத்தத்தில் கலந்து அந்த விஷங்களை முறிக்கின்றது.

எருமை மாட்டின் சாணத்திற்கு கடுமையான விஷத்தையும் முறிக்கும் ஆற்றல் இருக்கின்றது.

அக்கால மக்கள் பல கோடி உடல்களில் இருந்து தீமையை நீக்கினாலும் அவர்கள் சந்தர்ப்பத்தால் கண்டுணர்ந்த உணர்வுகளை மனிதனுக்கு வரும் உபாதைகளை நீக்கப் பயன்படுத்தினர்.

மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்து அம்பாகப் பாய்ச்சிப் பழக வேண்டும்

 

உணர்வுகளின் இயக்கம் வெப்பம் காந்தம் மணம் இந்த மூன்றும் உடலில் சேர்த்து மூன்று அறிவாகக் கண்ணில்லாத ஒரு புழுவாக இயக்கினாலும் “தான் பார்க்க வேண்டும்…” என்ற ஏக்கத்தின் உணர்வு கொண்டு கருவிழிகள் தோன்றுகின்றது.

தனக்குள் செயல்படும் ஒவ்வொன்றையும் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வின் நிலைகளாக வரும் போது தான் இருளுக்குள் பிறக்கின்றான் கண்ணன்.

1.தான் சுவாசித்த அந்த உணர்வு வாசுதேவனாக இயக்கி…
2.தேவகி… உணவை உட்கொள்ள வேண்டும் என்று தன் தேவைக்காக வேண்டி எடுத்துக் கொண்ட அந்தச் சக்தியின் தன்மை கொண்டு
3.தனக்குள் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை அதனால் பிறக்கப்பட்ட இந்த உணர்வு தான் கண்ணன்.
4.வாசுதேவன் என்ற அரசனுக்கு மகனாகப் பிறக்கிறான் கண்ணன்

தீயதை நீக்கி நல்லதைச் செய்யும் நிலைகள் கொண்டு நான்காவது நிலையாகக் கண்ணன் உதிக்கிறான் என்ற காவியத்தை அங்கே படைத்தார்கள்.

இது தான் கடவுள் என்று மந்திரமும் மாயமும் போட்டு… அவனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்தால் எல்லாம் கொடுப்பான்…! என்று தன்னுடைய பேராசையையும் பெரு நிலைகளையும் வளர்த்துக் கொள்வது தான் என்ற நிலையில் ஞானி சொன்னதை மாற்றிக் காட்டுகின்றனர்.

1.அந்த மெய் ஞானி வியாசன் உண்மையை உணர்த்தினான்
2.இவர்கள் மந்திரத்தை உருவாக்கி விட்டார்கள்.
3.ஆனால் பதிவு செய்த மந்திரத்தை எடுத்துக் கொண்டால் இன்னொரு ஆன்மா தான் நமக்குள் வரும்.

அதைச் செய்கிறேன்… இதைச் செய்கிறேன்… என்றும் அர்ச்சனை ஆராதனை மந்திரங்களை ஒலிக்கச் செய்து… “உனக்காக எல்லாமே படைக்கின்றேன். ஆகவே நீ எனக்கு என்ன செய்கின்றாய் என்று கேள்வி…!”

இப்படிப்பட்ட உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து உணர்வின் தன்மைகளை நாம் பக்குவப்படுத்தும் நிலை இழந்து இறந்தபின் மந்திரக்காரன் கையிலே போய் நாம் சிக்குகின்றோம். அதற்குத் தான் இது பயன்படும்.

உதாரணமாக வேப்பமரம் தன் இனமான சத்தைக் காற்றிலிருந்து பிரித்து எடுத்துக் கொள்கின்றது அதே மாதிரி
1.எந்த குணத்தின் தன்மையை நாம் முன்னணியில் வைக்கின்றோமோ அந்தச் செயலுக்குகந்த அதே மணத்தின் தன்மை இருக்கின்றது.
2.அதே உணர்வு (மணம்) கொண்ட இன்னொரு மனிதன் இருப்பான்.
3.அவனுக்குள் ஈர்க்கப்பட்டு அங்கே போய் இணை சேர்ந்து அது வளரும் நிலை பெறுகின்றது.

வேதனையை உருவாக்கும் எண்ணம் கொண்டு அங்கே புகுந்து வேதனையை அதிகமாக அங்கே உருவாக்கச் செய்து விஷத்தின் தன்மையைத் தனக்குள் கவர்ந்து அவனையும் அழித்து… அழித்துக் கொள்ளும் உணர்வு கொண்டு உயிராத்மா வெளியே வரப்படும் பொழுது மனிதனுடைய நிலைகளையே எட்ட முடியாத நிலை ஆகிவிடுகின்றது.

விஷம் அதிகமாகும்போது எந்த விஷத்தையும் தனக்குள் சமாளிக்கும் உடலின் அமைப்பு கொண்ட விஷமான மிருகங்களுக்குள் ஈர்க்கப்பட்டு “மனிதனை மிருகமாகப் படைத்து விடுகின்றது…” இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீள வேண்டும்.

கண்ணன் கீதா உபதேசம் செய்வதாகத் தத்துவங்களைச் சொல்கின்றனர். அன்று ஞானியர்கள் உணர்த்திய உண்மைகளைப் பார்ப்போம்.

தீய வினைகள் அனைத்தும் பாசத்தால் வரக்கூடியது தான்.

எதிரி என்ற நிலையில் போர் செய்யும் பொழுது தவறான உணர்வுகளில் சிக்கித் தவிக்கும் நிலைகளில் இருந்து அவர்களை மீட்க வேண்டும். அதை எவ்வாறு மீட்க வேண்டும்..? என்ற நிலையைக் கண்ணன் உபதேசித்ததாகக் கீதையிலே எழுதுகின்றனர்.

1.ஒருவன் செய்யும் தவறான உணர்வை உன் உடலுக்குள் சேர்க்கா வண்ணம் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
2.அவன் செய்யும் தவறான உணர்வை எண்ணாதபடி அவனுக்குள் உன் எண்ணத்தைச் செலுத்த வேண்டும்.

தன் சகோதரன் என்று உணர்ந்தாலும் தீய விளைவுகளிலிருந்து, அவர்கள் தீயவர்கள் என்று உணர வேண்டும்.
1.இதை உணர்த்தவே அங்கு அம்பாக எய்யச் சொன்னது
2.அதாவது மகரிஷிகளின் அருள் உணர்வுகளை அவர்களுக்குப் பாயச் செய்வது.

அவர்கள் செய்யும் தவறான உணர்வுகளைத் தனக்குள் எடுத்துக் கொண்டால் நமது நல்ல குணங்களை அழித்து விடுகின்றது. எதிரிகளிடம் உண்மையின் நிலைகளைத் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று…
1.உணர்வின் இயக்க நிலைகளை அன்று ஞானியர்கள்
2.கண்ணன் சொன்னதாக உணர்த்தினார்கள்.

அழிவுப் பாதையிலிருந்து மீண்டு “மகரிஷிகள் வழியில்” செல்ல வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

மனிதனின் உணர்வின் எண்ணம்… தன் ஞானத்தின் உயர் ஞானத்தால் படைப்பின் பல பொருள்களை எல்லாம் இவ்வுடல் தேவைக்குச் செயலாக்கித் தன் சரீர ஜீவிதத்தை இன்று பக்குவப்படுத்திக் கொண்டுள்ளான்.

அதைப் போன்று… இவ்ஈர்ப்புப் பிடிப்பில் பூமியின் சுழற்சியுடன் சிக்குண்ட இஜ்ஜீவ உடலின் “உயிரையும்… உயிரணுக்களையும்…” இந்த உடலில் உள்ள பொழுதே இது வரை யாம் சொன்ன வழித் தொடர்பினால் உயர் காந்த மின் அலைகளை எடுத்துச் சேமிக்கும் பக்குவம் பெறல் வேண்டும்.

1.இஜ்ஜீவ காந்த சரீரம் இப்பூமிப் பிடிப்பின் சுவாசத்தை எடுத்து
2.சாதாரண வாழ்க்கையில் வளரும் நிலையிலிருந்து
3.உயர் தன்மைக்கு வீரியத்தைச் செலுத்திடல் வேண்டும்.
4.இப்படி மேல் நோக்கி ஈர்க்கப்படும் தொடர் சுழற்சியினால் இக்காற்று மண்டலப் பிடிப்பில் சிக்காமல் தப்ப முடியும்.

(உடலை விட்டுச் சாதாரண நிலையில் பிரியக்கூடிய உயிராத்மா இந்தப் புவியின் காற்று மண்டலப் பிடிப்பில் தான் சுற்ற முடியும்)

ஆக… வீரியத் தன்மை கொண்ட இவ்வுயிராத்மா மேல் நோக்கிப் பெற்ற உயிர் காந்த மின் அலையின் வளர்ச்சியினால்….
1.உயிருடன் உயிர் அணுக்களும் சேர்ந்த ஈர்ப்பின் உந்தலை
2.எண்ணத்தின் உந்தல் கொண்டு ஒளி கொண்ட ரிஷியின் ஈர்ப்பில் செலுத்தும் நிலையால்
3.ஒளியின் ஒளியாகப் பிரகாச நிலை அடைந்து
4.இந்த மனித உடலிலிருந்தே மனிதன் “பறக்கும் நிலை” பெற்றிருக்கலாம்.

ஆனால் உணர்வின் எண்ணம் இந்த உடல் வாழ்க்கையில் பூமிப் பிடிப்பில் தொடர் நிலையுடன் ஓடும் தன்மையால் சரீரம் அழுகிய நிலையில் உடலின் ஆத்மா பிரிந்ததென்றால்… உடலின் உயிரணுக்களும் வலுவிழந்த தன்மையால் பெற்ற உயிர் சரீர நிலையைக் காட்டிலும்… மீண்டும் பிறப்பு நிலையில் மனிதப் பிறப்புக்கே வந்தாலும் ஞானமும் அங்க அவயங்களின் தன்மையும் “குறுகிய நிலை தான்” பெற முடியும்.

விவசாயத்தில் இன்றெப்படி அதற்குகந்த வீரிய இரசாயண உரங்களைச் செலுத்தி மகசூலில் அதிக நிலையும் காய்கறிகளின் தன்மையை வீரியப்படுத்தி விவசாயம் வளர்ந்துள்ளது. அதைப் போன்று….
1.இச் சரீர உடலின் உயிராத்மாவிற்கு வீரியத் தன்மை தரும்
2.உயர் ஞானத்தின் செயலை மனிதன் செயலுக்குக் கொண்டு வராமல்
3.உடலின் ஆரோக்கியத்திற்கும்… உணவின் சுவைக்கும்தான்… தன் ஞானத்தைச் செலுத்தி விட்டான்.

உயிருக்கும் உயிரணுவிற்கும் தரப்படும் வீரியத் தன்மையில் உணர்வின் எண்ணத்தில் “பிற நிலையின் ஈர்ப்பு நிலையற்று… தன் செயலை வீரியப்படுத்தும் நிலையினால் தான்…” உயர்வு நிலைக்குச் செல்ல முடியும்.

உணர்வுகள் மாற்றப்பட்டு எண்ணத்தின் செயல் பூமியின் ஈர்ப்புப் பிடிப்பிற்குச் செலுத்தும் பொழுது மகான்களினால் அன்று வெளிப்படுத்திய சில உண்மை நிலைகளில் மருத்துவ நிலையும் இன்று விஞ்ஞானத்தின் விஸ்வரூபம் எடுத்து விட்டதைப் போன்று
1.அழிவு நிலைக்குச் சென்றுவிடும் பக்குவத்தின் பலனை அறிந்து
2.அதிலிருந்து மீண்டிட மகரிஷிகள் காட்டும் வழியில் செயல்படல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆலயங்களுக்குச் செல்லும் பொழுது அங்கே படர்ந்திருக்கும் தெய்வ சக்திகளை நாம் எவ்வாறு எடுப்பது…? என்று ஞானிகள் காட்டியிருந்தாலும் அவ்வழியில் நாம் செய்கிறோமா…!

நான் போனேன். தேங்காய் பழம் அர்ச்சனைத் தட்டு வாங்கினேன். சாமிக்கு அதைச் செய்தேன்.

ஏனென்றால் கோயிலுக்கு முன்னாடி கடை இருக்கின்றது. அவர்களுக்கு லாபம் வேண்டும். ஏனென்றால் சாமிக்குத் தானே கொடுக்கப் போகிறார்கள். அதை உற்றுப் பார்க்கப் போகிறார்களா…? இல்லை.

வீட்டுக்குக் குழம்புக்காகக் காய்கறி வாங்கினால் சுண்டிப் பார்ப்பார்கள். தட்டிப் பார்ப்பார்கள். தேங்காய் நன்றாக இருக்கிறதா… இல்லை அழுகலா…? என்று பார்ப்பார்கள்.

சாமிக்குப் போகும் போது தாம்பாலத் தட்டிலே வைத்துத் தேங்காயையும் இரண்டு பழத்தையும் பூவையும் பத்தியையும் வைப்பார்கள்.

பத்தியை எப்படித் தயாரிக்கின்றார்கள்…?

கரியை நசுக்கி கொஞ்சம் மெழுகைப் போட்டு அதனுடன் குச்சியிலே உருட்டியவுடன் ஒரு நல்ல வாசனை உள்ள பொருள்களுடன் கொண்டு போய் ஒரு பெட்டிக்குள் போட்டு அடைத்து வைப்பார்கள்.

இதெல்லாம் போட்ட உடனே அந்த வாசனை அதற்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கும். எடுத்துக் காகிதத்தில் சுற்றிக் கொள்வார்கள். அதை எடுத்துக் கொஞ்சம் நுகர்ந்து பார்த்தோம் என்றால் நல்ல வாசனையாகத் தெரியும்.

கொஞ்சம் நேரம் வெளியில் வைத்தால் வாசனை எல்லாம் பறந்து போய்விடும். வெறும் கரிக்கட்டை மட்டும் தான் இருக்கும். கெமிக்கல் கலந்ததைச் சாமிக்காக என்று ஊது பத்தியைக் கொடுத்து விற்பார்கள்.

ஆனால் எந்தக் கோயிலிலும் ஊது பத்தி வைப்பது இல்லை.

சாமிக்கு நீ நல்ல பத்தியைக் கொடு என்று கேட்டால் சாமி பேரைச் சொல்லித் தப்பு பண்ணி இப்படிச் சம்பாதிக்கிறவர்கள் இருக்கிறார்கள்.

இதை போன்ற நிலைகளைத் தான் நாம் கற்றுக் கொண்டோம்.

1.ஆலயத்திற்கு வருவோர் அனவரும் புனிதம் பெற வேண்டும் என்று சொல்வார் யாரும் இல்லை.
2.புனிதம் பெறுவதற்குண்டான அருள் ஞானத்தை அவர்களுக்குப் போதிக்க வேண்டும் என்ற நிலை இல்லை
3.அதற்குண்டான அருள் சேவை நாம் செய்ய வேண்டும் என்ற நிலைகள் எதுவும் இல்லை.

“செய்யும் தொழிலே தெய்வம்…” என்ற நிலையை மறந்த நிலலையில் தான் உள்ளார்கள்.

உயர்ந்த குணங்கள் கொண்டு
1.பொருளை வாங்கிச் செல்வோர் நலம் பெற வேண்டும் என்று எண்ணத்தை கூட்டி
2.பொருளை வியாபாரம் பேசி அனுப்பப்படும் பொழுது அவர்களும் நலம் பெறுகின்றார்கள்.
3.நலம் பெறும் சக்தியால் அவர்கள் மகிழ்ந்திடும் நிலை வரும் பொழுது நாமும் மகிழ்ச்சி அடைவோம்.

நம்மால் மற்றவர் மகிழ்வதும் அதைக் கண்டு நாம் மகிழும் நிலைக்குத்தான் ஆலயங்களைக் கட்டினார்கள் ஞானிகள். இப்போது நாம் எதைச் சேர்க்கிறோம்…?

முருகன் கோயிலுக்கோ மற்ற கோயிலுக்கோ போகும் போது விலை பேசி இவர்கள் செய்யும் போது அங்கே ஏமாற்றம் அடைகின்றார்கள்.

பத்தாயிரம் ரூபாய் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து காண்ட்ராக்டில் கடைகளை எடுத்திருக்கிறோம். எங்களுக்கு வேறு வழி இல்லை. நாங்கள் இதில் தானே பணத்தை எடுக்க வேண்டும்.

கோவிலுக்கு வருகிறவர்களிடம் தான் நாங்கள் வசூல் பண்ண வேண்டும். ஆக கோவிலுக்கு வந்தவர்களிடம் ஏமாற்றுகிறார்கள். இப்படித்தான் நமது ஆலயங்களில் உள்ள திருப்பணிகள் போய் விட்டது.

ஆலயங்களில் பத்தியோ தேங்காய் பழமோ மலர்களோ அங்கு தேவையில்லை. ஆலயத் திருப்பணியாளர்கள் அங்கு அதையெல்லாம் செய்து வைத்திருப்பார்கள். அவர்கள் அதைச் செய்யட்டும்.

1.நீங்கள் எந்த ஆலயத்திற்குப் போனாலும்
2.திருப்பணிக்கு உதவும் நிலையில்
3.இந்தக் காசை உண்டியலில் வேண்டுமானால் போடுங்கள்.
4.ஏனென்றால் திருப்பணியாளர்கள் அதைச் செய்வார்கள்.

நீங்கள் பழத்தை வாங்கிச் சாமிக்கு அபிஷேகம் கொடுத்து அதைக் கண்டு மகிழ்வது அல்ல.

நீங்கள் எப்படித் தேங்காயை இரண்டாக உடைக்கின்றீர்களோ… அதைப் போல
1.உங்களுக்குள் இருக்கும் தீமையைப் பிளந்துவிட்டு
2.அருள் ஞானியின் உணர்வுகளை எண்ணி எடுக்க வேண்டும்
3.கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நான் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

தெய்வத்திற்குப் பால் அபிஷேகம் தேன் அபிஷேகம் இதைப் போன்ற அபிஷேகக் காலத்தில் நீங்கள் சாமியைச் சந்திக்க நேர்ந்தால் நீங்கள் எப்படி எண்ண வேண்டும்…?

1.இந்த பாலைப் போன்ற மணம் நாங்கள் பெற வேண்டும்.
2.தேனைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் பெற வேண்டும்.
3.சந்தனத்தைப் போன்ற நறுமணம் நாங்கள் பெற வேண்டும்

கனி அபிஷேகம் செய்கிறார்கள் என்றால் கனியைப் போன்று சொல்லிலே இனிமையும் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும் என்று இதை நுகர்ந்து சுவாசிக்க வேண்டும்.

அங்கே அபிஷேகம் தெய்வத்திற்கு நடக்கும் பொழுது அதை எண்ணி இப்படி நுகர்ந்தீர்கள் என்றால் உங்கள் (புருவ மத்தியிலிருக்கும்) உயிரான ஈசனுக்கு அந்த நல்ல உணர்வுகள் அனைத்தும் அபிஷேகம் ஆகின்றது.

அப்பொழுது
1.ஈசனுக்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றது.
2.அந்த உணர்ச்சிகள் உமிழ் நீராகி உடலுக்குள் செல்லும் பொழுது
3.உடலான சிவனுக்கு அமுதாகின்றது.
4.உங்கள் உள்ளமும் உடலும் களிப்படைகின்றது.

அந்த மகிழ்ச்சியூட்டும் உணர்வுகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணி எடுக்கச் செய்வதற்குத்தான் ஆலயங்கள்.

கண்ணன் தேரின் சக்கரத்தை அழுத்தினான் என்றால் உட்பொருள் என்ன…?

 

அர்ச்சுனன் சகலகலா வல்லவன் என்று காட்டுகின்றார்கள். சகல சக்தியான அந்த வல்லமை பெற்ற நிலைகள் நம் எல்லோருக்கும் உண்டு என்பாதை நினைவுபடுத்திக் கண்ணின் நினைவு கொண்டு நாம் செயல்படுத்த வேண்டும்.

ஒருவன் தீமை செய்கிறான் என்றால் உடனே ஈஸ்வரா…! என்று இங்கே புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணத்தைச் செலுத்தி அங்கே தாக்க வருபவர் உள்ளத்திற்குள் அதைப் பாய்ச்ச வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வின் தன்மையைத் தன் புலனறிவால் எடுத்து
1.தீமை செய்ய வேண்டும் என்று எவன் எய்ய விரும்புகின்றானோ
2.அவனுக்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பாய்ச்சி
3.என்னுடன் நேசமாக வரும் எண்ணங்கள் அங்கே வளர வேண்டும் என்று
4.இந்த அம்பை நம்மை எய்யச் சொன்னார்கள்.

அதாவது அங்கிருக்கும் தீய அலையின் தன்மையை வீழ்த்தச் சொன்னார்கள் ஞானிகள். ஆனால் ஆளையே வீழ்த்தச் சொன்னார் என்றும் அது தான் வீரம்… வல்லமை…! என்று இங்கே காட்டுகின்றார்.

ஒருவன் நமக்குக் கெட்டது செய்கிறான் என்றால் பதிலுக்கு அவனை அழிக்க வேண்டும் என்று தான் பெரும் பகுதி எண்ணுகின்றோம்.

ஆனால் அதே சமயத்தில் ஈஸ்வரா அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் எடுத்து
1.அறியாத நிலையில் செயல்படுவதிலிருந்து அவன் விடுபட வேண்டும்
2.நல்லது செய்யக்கூடிய எண்ணங்கள் அவனுக்குள் உதயமாக வேண்டும் என்ற இந்த அம்பை எய்ய வேண்டும்.

இது மனிதனின் தலையாயக் கடமை…!

ஏனென்றால் மனிதன் உருவாக்கும் நிலைகள் பெற்றவன்… பிரம்மாவாகச் சிருஷ்டிக்கும் நிலைகள் பெற்றவன். ஒளியின் சிகரமாகச் செல்லக்கூடியவன். இதை அனுபவத்தில் கொண்டு வருவதற்குத் தான் கீதா உபதேசத்தின் நிலைகளைக் காட்டினார்கள்.

எந்தெந்த உணர்வின் தன்மை தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வுகளை நினைவு கொண்டாயோ அந்த உணர்வின் தன்மை கொண்டு
1.சகலத்தையும் உருவாக்கும் ஆற்றலாக இந்த உடலை உருவாக்கினேன்.
2.அனைத்திலும் நான் கலந்துள்ளேன்
3.எதை எடுத்தாலும் எதை நினைத்தாலும் நான் அதிலே கலந்தே வந்தவன்.
4.நீ எதை நினைக்கிறாயோ அதை நான் வழி நடத்திச் செல்கின்றேன் என்று கண்ணன் சொல்வதாக…
5.அதாவது “நம் கண்கள்…!” சொல்வதாகக் கீதையில் அவ்வளவு தெளிவான நிலைகளைத் தத்துவமாகக் கொடுத்துள்ளார்கள்.

இதை நாம் உணர்ந்து கொண்டு ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்ய பழகிக் கொள்ள வேண்டும்… தயவு செய்து அலட்சியப்படுத்தி விடாதீர்கள். ஒவ்வொரு நொடிக்கும் அதை எடுத்துப் பழகுங்கள்.

1.எப்பொழுது ஒருவர் நமக்குத் துன்பம் ஏற்படுத்தும் நிலைகள் ஏற்படுத்துகின்றாரோ
2.அந்தத் துன்பம் நமக்குள் வந்த பின் அவனைத் துன்ப்படுத்த வேண்டும்… அழிக்க வேண்டும் என்று எண்ணுகின்றோமோ
3.அது தான் ஓ…ம் நமசிவாய சிவாய நம ஓ…ம்.
(துன்பம் ஏற்படுத்தியது நமக்குள் சிவமாகி ஓ…ம் நமசிவாய… நம்மிடமிருந்து அதுவே அடுத்தவரைத் துன்ப்பபடுத்தும் சக்தியாக வெளி வருகிறது சிவாய நம ஓ…ம்)

எந்தக் குணத்தை எண்ணுகின்றேனோ அது எனக்குள் ஜீவன் ஆகி ஓ…ம் என்று பிரணவத்தின் சக்தியாக வளர்கின்றது. அந்தச் சக்தி என் உடலுக்குள் சேருகின்றது. அது தான் ஓ…ம் நமசிவாய சிவாய நம ஓ…ம். நான் எதை எண்ணினாலும் அந்த உணர்வு எனக்குள் சிவமாகிறது (உடலாகிறது).

நான் ரோட்டில் நடந்து செல்லும் போது
1.ஒருவன் செய்கையைப் பார்க்கும் பொழுது மகிழ்ச்சி… அந்த உணர்வை எனக்குள் சேர்க்கும் பொழுது உமிழ் நீராகச் சேர்ந்து சிவம் (உடல்) ஆகின்றது.
2.அடுத்து ஒருவன் தவறு செய்கின்றான்… அயோக்கியத்தனம் செய்கின்றான்… என்று பார்த்து அந்த உணர்வை எடுத்தவுடனே அதுவும் உடலாகிறது

இப்படி சதாசிவமாக நம் உடலாக ஆகிக் கொண்டே உள்ளது. வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு மூச்சையும் உடலாக ஆக்கிக் கொண்டே இருக்கின்றோம்.

கீதையில் சொன்னது போன்று நீ எதை நினைக்கின்றாயோ அதுவாக ஆகிந்றாய். நீ எதைச் சுவாசிக்கின்றாயோ அந்தச் சுவாசத்தின் வழி அதுவாகிறாய்.

எப்பொழுது தீமை உங்களுக்குள் வருகின்றதோ அப்பொழுதெல்லாம் நம் குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று மெய் ஒளியின் சக்தியை நமக்குள் சிவமாக ஆக்கிடல் வேண்டும்.

1.எதிரிகள் எத்தகைய நிலைகள் கொண்டு நம்மைத் துன்புறுத்துகின்றனரோ
2.தீய உணர்வுகள் நமக்குள் உணர்ச்சிகளைத் தூண்டுகிறதோ
3.எத்தகைய ஆவியின் தன்மை நமக்குள் தீமையை உருவாக்குகின்றதோ
4.அப்போதெல்லாம் ஈஸ்வரா என்று (புருவ மத்தியில்) குருக்ஷேத்திரப் போரில் நின்று
5.அந்த மகரிஷிகள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
4.எனக்குள் இருக்கக்கூடிய ஆன்மாக்கள் அனைத்தும் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும்
5.என் பேச்சும் மூச்சும் உலகம் நன்மை பயக்கக் கூடிய சக்தியாக வளர வேண்டும்
6.என் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும் என்ற உணர்வுகளை எடுக்க வேண்டும்.

யார் நமக்குத் தீமை செய்தாலும் மேலே இந்த உணர்வின் தன்மை அங்கே பாய்ச்சப்பட்டு அவன் அறியாமையிலிருந்து விடுபட வேண்டும் பிறருக்கு நன்மை செய்யக்கூடிய சக்தி அங்கே ஓங்கி வளர வேண்டும் என்று
1.இந்த அம்பை அங்கே பாய்ச்ச வேண்டும்
2.அர்ஜுனன் சகலகலா வல்லவன் என்று சொன்னாலும் அந்த அருள் உணர்வின் தன்மை கொண்டு
3.இந்த எண்ணத்தை அந்த ஸ்தலத்திலே நிறுத்திவிடு… குருக்ஷேத்திரப் போராக நடத்து…! என்று காட்டினார்கள்.

ஆனால் போரை நடத்த வேண்டும் என்றாலும் அங்கே என் குருநாதர் இருக்கின்றார் என் சகோதரர்கள் இருக்கிறார்கள் இவர்களை வைத்து நான் எப்படி சண்டையிடுவது…?

உன் சகோதரன் என்று இருந்தாலும் அவனை அறியாத விஷமான எண்ணங்கள் அவனையே அந்த உணர்வுகள் அழித்திடும் எண்ணமாக வருகின்றது. தீமையுடன் சேர்த்துத் தீமையை உருவாக்கும் நிலையாக வருகின்றது.

1.அவன் தீமை செய்யும் எண்ணத்தை அழிக்க நீ எடுத்துக் கொண்ட மகரிஷிகளின் சக்தியை
2.உயர்ந்த உணர்வின் அம்பாக அங்கே பாய்ச்சு… அங்கே தீமையை வீழ்த்து…! என்று சொன்னான்.

இதனுடைய ரகசியத்தை அன்று மெய் ஞானியான வியாசன் சொன்ன நிலைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

“கண்ணன் தேரின் சக்கரத்தை அழுத்தினான்…” என்று காட்டினால் அதனுடைய உட்பொருள்
1.அந்தத் தீமையான உணர்வு தனக்குள் வராதபடி அழுத்தி
2.தன் உணர்வின் எண்ண அலைகளை அங்கேயே பாய்ச்சி அந்த உணர்வை அழித்தான்
3.நல்ல உணர்வின் தன்மையை ஊட்டச் செய்தான்… இந்த அம்பைப் பாய்ச்சினான்.

இதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

வாழ்நாள் முழுதும் உடலைக் காக்க முயற்சிப்பதற்குப் பதில் தன் உயிராத்மாவைக் காக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

இன்று விஞ்ஞானத்தில் மருத்துவத்துறையிலும் மற்ற தொழிலிலும் அணுக் கதிர்கள் செயல்படுத்தக் கூடிய நிலைக்கும் ஜீவ காந்த சரீரத்தின் வளர்ச்சியில் இச்சரீர செயலுக்கும் உயிர் அணுக்களின் செயல் எப்படிச் செயல் கொள்கிறது…?

மருத்துவ விஞ்ஞானத்தின் மூலமாக… மனித உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களுக்கு… அதாவது நோயின் தன்மை அறிய உடலிலிருந்து வெளிப்படும் சிறு நீர் மலம் கபம் இவற்றையும் உதிரத்தையும் எடுத்துப் பரிசோதனைக்கு உட்படுத்த சில கால கட்டத்தில் அதிலுள்ள உயிரணுக்கள் பிரியா நிலையில் ஆராய்ந்து அதனுடைய தன்மையை அறிகின்றார்கள்.

உடலிலிருந்து வெளிப்பட்டு… “சில மணி நேரங்களுக்குள் அதைப் பரிசோதனைப்படுத்தினால் தான்…” அதிலுள்ள உயிரணுக்களின் தன்மையைக் காண முடிகின்றது.

செயலுடன் கூடிய ஜீவ ஓட்டத்தில் உயிர் கொண்ட உயிரணுக்கள்…
1.ஜீவ ஓட்டம் அற்றுப் பிரியும் பொழுது… ஈர்ப்பின் ஓட்ட நிலை இல்லாமல்
2.அந்த உயிரணு பிரிந்து காற்று மண்டலத்தில் கலந்து விடுகின்றதல்லவா…?
3.அதைப் போன்று தான் இந்த உடலை விட்டு ஆன்மா பிரிந்தாலும்
4.இஜ்ஜீவ ஓட்டப் பிடிப்பு மாறியவுடன் காற்று மண்டலத்தில்
5.உயிரும் இந்த உடல் அணுக்கள் யாவையும் சுழலும் நிலை ஏற்படுகின்றது.

இதனுடைய தொடரிலிருந்து… உடலில் ஏற்படக்கூடிய சில வகை வியாதிகளுக்கு விஞ்ஞான மருத்துவ முறையில் மின் கதிரியங்களைச் செலுத்தி…
1.வளர முடியாத சில அணுக்களை வளர்க்க…
2.அதற்குகந்த மருந்தைச் செலுத்தி… அதற்குகந்த வீரியத்தைத் தர (உயிரணு வளர)
3.கதிரியக்க முறை விஞ்ஞான மருத்துவத்தில் மனிதன் முன்னேறி இருக்கின்றான்.

தன் ஞானத்தால் இந்த உடலில் வளரும் உயிரணுக்களுக்கு அடுத்த நிலை பெறக்கூடிய நிலையை… “வீரிய மருத்துவத்திலும்… மற்ற பல செயலிலும் செயல்படுத்திக் கொண்டிருக்கும் இன்றைய விஞ்ஞானம்…
1.தன் ஞானத்தைக் கொண்டு மனிதன் இன்று பறக்கும் நிலைக்கும்
2.எண்ணியதைச் செயலாக்கும் உயர் தெய்வ நிலைக்குச் செயலாக்கி இருக்கலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமக்கு முன் ஒரு விழுதை வைத்துக் கொண்டால் அல்லது ஒரு பச்சிலையே நசுக்கிக் கையில் வைத்துக் கொண்டால் பாம்பினங்கள் படம் எடுப்பதைத் தவிர்க்கின்றது. அதன் விஷத்தைக் கக்குவதில்லை.

இதே போல் ஒரு பச்சிலையை நசுக்கி விட்டால் அதன் மணத்தைக் கண்டவுடன் தேளினுடைய வீரிய விஷம் ஒடுங்குகிறது. வீரியச் செயல் இல்லை.

தேனீக்கள் தன் குஞ்சுகளைப் பாதுகாக்க அதனின் விஷத்தைக் கொண்டு எதிரிகளை வீழ்த்துகிறது.

மனிதன் ஒரு பச்சிலையை எடுத்து வாயால் மென்று அந்தக் கூட்டில் “பூ…” என்று ஊதினால் போதும். அந்த மணத்தால் விஷங்கள் ஒடுங்குவதனால் அந்தத் தேனீக்கள் இவனைக் கொட்டுவதில்லை.

மனிதன் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு இந்த விஷத்தை ஒடுக்கும் தன்மை வருகின்றது.

இதே போலத்தான் ஆரம்ப நிலைகளில் காட்டு விலங்குகளுடன் வாழ்ந்த மனிதன் தன் குகையில் இரவில் உறங்கப்படும் போது விஷத்தை ஒடுக்கிடும் பச்சிலைகளை அரைத்துத் தன் உடலில் பூசிக் கொள்கின்றான்.
1.தன் உடலிலிருந்து வரும் வெப்பமோ
2.உடலில் பூசிய மணங்களை வெளிப்படுத்துகிறது.

ஆதலால் இரவில் தூங்கும் போது இந்த உயிரினங்கள் தன் இரைக்காக நுகர்ந்தறிந்து செல்லும்போது இவர்கள் பக்கம் திசை திருப்பினால் இவர்கள் உடலில் உள்ள விஷத்தன்மைகள் அவைகளை இருளடையச் செய்கின்றது.

அவர்கள் படுத்திருக்கும் பக்கம் இந்த மிருகங்கள் போவதில்லை.

இவ்வாறு பச்சிலையின் பாதுகாப்பில் படுத்து மறைந்து அவர்கள் வாழ்ந்து வந்தாலும் மற்ற மிருகங்களுக்கு இரையாகாது தன்னக் காத்துக் கொண்டு (பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த) மனிதன் அவனுக்குத் தெரிந்த அறிவால் வாழ்ந்து வந்தனர்.

ஏனென்றால் பல உணவுகளை உட்கொண்டு வந்தவன் தான் மனிதன். ஆனாலும்
1,இவன் அறிவு நுகர்ந்தறிந்த பின் எதற்குப் பயன்படும்…? என்று
2.அறியும் ஞானத்தால் இவன் இப்படி இதைச் செய்கின்றான்.
3.பச்சிலைகளைத்தான் தன் உடலில் பூசிக் கொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொண்டான்.

ஆனால் இவர்கள் பூசிய பச்சிலைகள் விஷத்தை ஒடுக்குவதாக இருப்பினும் கர்ப்பமாகும் பொழுது அந்தத் தாய் கருவில் ஒன்றிலிருந்து தொண்ணூறு நாள்களுக்குள் அவர்கள் நுகர்ந்த உணர்வுகள் கருவில் இருக்கும் சிசுவுக்கும் அது படர்கிறது. ஆனால்
1.இவர்கள் நுகரும் போது தாய் உடலில் இரத்த நாளங்களில் கலக்கின்றது.
2.தாய் கருவில் வளரும் சிசுவுக்கும் பச்சிலை விஷங்கள் போய்ச் சேர்ந்து
3.விஷத்தை ஒடுக்கும் அணுக்களாக விளைகின்றது.

இப்படி உடலில் விளைந்த உணர்வுகள் தான் அவன் (அகஸ்தியன்) பிறந்த பின் அவன் அருகிலே மற்ற யானையோ புலியோ பாம்போ தேளோ கொசுவோ விஷ வண்டுகளோ நெருங்குவதில்லை.

ஆனால் அதன் வீரியங்கள் குறைகின்றது. இப்படிக் விஷத்தின் வீரியத்தைக் குறைத்து வந்தவன் தான் தனக்குள் வளர்ச்சி பெற்றதனால் தன்னை அறிகின்றான்.

அவன் வானை நோக்கிக் காடுகளில் படுத்திருக்கும் போது சூரியன் இயக்கத்தைக் காணுகின்றான். ஏனென்றால் விஷத்தை ஒடுக்குவதனால் விஷத்தை ஒடுக்கும் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதும் உணர்வுகளைக் காணுகின்றான்.

சூரியனின் செயலாக்கங்கள் இவனுக்குள் பதிவாகின்றது. ஆனால் சிறு குழந்தையாக இருப்பதால் சொல்ல முடிவதில்லை. சொல்லவும் முடியாது.

குளவி ஒரு புழுவை எடுத்துத் தாக்கி அதைக் கூட்டுக்குள் வைத்து மூடி விடுகின்றது. பின் குளவியின் விஷத்தன்மைகள் புழுவின் அணுக்களுக்குள் பட்ட பின் அந்த உணர்வின் தன்மையைப் புழுவை உருவாக்கிய உயிர் தன் துடிப்பின் நிலை கொண்டு இதை இயக்கிக் கொண்டிருப்பினும் இந்தக் குளவியின் விஷத்தன்மைகள் உட்புகுந்து அந்த உணர்வின் தன்மை கொண்டு புழு குளவியாக மாறுகின்றது.

புழு குளவியான பின் வளர்ச்சி பெற்றபின் உமிழ் நீர் கூடுகின்றது. மண்ணாலே அடைக்கப்பட்ட கூட்டில் உமிழ் நீரைப் பாய்ச்சி அதைப் பிரிக்கின்றது. குளவியாக வெளி வருகின்றது.

வெளி வந்த பின் தாய் என்ன செய்ததோ அந்த உணர்வின் தன்மை கொண்டு தான் இதுவும் இயங்குகின்றது.
1.புழுவின் நிலைகளை அது மறந்து விடுகின்றது.
2.இந்த உணர்வின் தன்மை வரும் பொழுது (புழுவின் எண்ணங்களை இழந்து)
3.குளவியின் உணர்வுகளே வருகின்றது.

குளவியாக மாறிய பின் அதற்கு யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை.

இந்தக் குளவி எந்த வகையில் செயல்பட்டதோ இதைப் போன்று அந்த குளவிக்கும் உமிழ் நீர் சுரக்கின்றது. மண்ணைப் பிசைந்து கூடு கட்டுகின்றது.

அதே போன்று தான் இவனுடைய வாழ்க்கையில் நஞ்சினை வென்றிடும் உணர்வின் அணுக்கள் அகஸ்தியனுக்குள் விளைகின்றது.
1.இளம் பருவத்தில் ஒவ்வொன்றையும் அறிந்திடும் நிலையும்
2.வலுகொண்ட உணர்வும் அவனுக்குள் வருகின்றது.
3.எந்த மிருகமாக இருந்தாலும் இவனைக் கண்டு அஞ்சி ஒடுங்குகின்றது.

இதே போல தாவர இனங்களில் நீக்கிய நிலைகள் இவன் உணவாக உட்கொண்ட உணர்வின் தன்மை வரப்படும் போது தாவர இனங்கள் ஒடுங்குவதைக் காண்கின்றான். அதன் இயக்கத்தை உணர்கின்றான் தன் இளமைப் பருவத்தில்.

எப்படிக் குளவிக்கு…
1.யாரும் சொல்லிக் கொடுக்காத நிலையில் தன் இனத்தைப் பெருக்கும் நிலை வந்ததோ
2.இதே போல இந்த உணர்வின் இயக்கங்கள் வருகிறது.
3.அவன் அறியாதே சில செயல்களைச் செய்கின்றான்.

விஷத்தை ஒடுக்கும் தன்மை வரப்படும் போது
1.மற்றவர்களுக்கு விஷம் தாக்கினால் மயக்கம் வருகின்றது.
2.ஆனால் விஷச் செடியின் அருகில் அகஸ்தியன் சென்றால் மீண்டும் இவன் வீரியம் அடைகின்றான்.

விஷத்தை ஒடுக்கும் தன்மையின் வல்லமை வருவதனால் அவன் தெளிந்த மனமும் வலுவான உணர்வு கொண்டவனாக மாறுகின்றான். இப்படி அவன் ஐந்தாவது வயது வரப்படும்போது புவியின் ஈர்ப்பு தன்மையை அடைகின்றான். ஆனால் அதை அறிகின்றான்.

அதே சமயத்தில் நமது பூமி எப்படித் தனக்குத் தேவையான ஆகாரம் எடுக்கிறது…? என்பதை உற்று நோக்குகின்றான். வானுலகை இளமைப் பருவத்தில் கண்டுணர்ந்தாலும் பிரபஞ்சத்திலிருந்து நமது பூமி துருவப் பகுதி வழியாகக் கவர்வதை உணர்கின்றான்.

ஆனால் உணர்ந்தாலும் விஷத்தின் தன்மையே மேலிருந்து வருகின்றது. இந்த உணர்வின் தன்மை தாவர இனங்கள் விஷத்தின் உணர்வின் செயலால் தான் வளர்கின்றது. இருப்பினும்
1.தாவர இனங்களுக்குச் செல்வதை இவன் நேரிடையாக உட்கொள்கிறான்.
2.உணர்வினை ஒளியின் அணுக்களாக மாற்றும் திறன் பெறுகின்றான்.
3.துருவத்தை உற்று நோக்கிப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை அறிகின்றான்.

இவனுக்குள் விஷத்தின் ஆற்றல் உருவாகும் பொழுது விஷத்தின் அளவு கோலால் எப்படி விஷம் உண்டானது…? என்ற நிலையையும் “முதல் மனிதனின் உடலில் இதை உணர்கின்றான்”.

இதை வைத்துத்தான் அகண்ட அண்டம் எப்படி இருந்தது…? அதனின் நிலைகள் கொண்டு எப்படி வளர்ந்தது…? இதை இவன் துருவத்தை உற்று நோக்கும் போது தான் இந்தப் பிரபஞ்சமும் அகண்ட அண்டமும் எப்படி உருவானது…? என்ற நிலையை இவனுக்குள் கண்டறிகின்றான்.

விளைந்த உணர்வுகள் இவனின்று வெளிப்படுவதைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்கின்றது. அலைகளாக மாற்றுகின்றது. அதன் வழி கொண்டு தான்
1.அகஸ்தியனுக்குப் பின் வந்த மக்கள் அதனை அறிவாகக் அறிகின்றனர்.
2.அதனின் வளர்ச்சியாகத் தெரிகின்றனர்.
3.இருளை வெல்லும் செயல் பெற்ற முதல் மனிதன் அகஸ்தியனே.

உடலுக்குப் பின் நாம் செல்ல வேண்டியது எங்கே…?

 

நம்மைப் பாசத்துடன் ஒருவர் கவனித்துக் கொண்டிருந்தால் போதும். எனக்கு இவர்தான் உதவி செய்தார் என்று சாகப் போகும் போது எண்ணினால் போதும்.
1.அந்த ஆத்மா வேறு எங்கும் போகாது இவருடன் தொடர்பு கொண்டு இந்த உடலுக்குள் தான் வரும்.
2.வந்த பின் நோய்களைத் தான் அந்த உடலிலும் உருவாக்கும்.

எல்லோருக்கும் நல்லதைச் செய்து தர்மத்தைச் செய்தால் ஆண்டவன் எனக்குத் தருவான் என்று எண்ணி இருந்தாலும் எல்லோருடைய நிலையையும் எண்ணி எண்ணி எண்ணி வேதனைகளை எடுத்துக் கொண்டு அதனால் நோயாகி இருக்கப்படும் பொழுது யாராவது ஒருவர் எனக்கு உதவி செய்திருந்தால் போதும் அந்த உடலுக்குள் தான் செல்லும்.

அங்கே போய்க் குழந்தையாகக் கருவாக்க முடிகிறதா என்றால் இல்லை. நோயைத்தான் உருவாக்கச் செய்யும். அதீதமாக ஆசைப்பட்டு இறந்தவர்களின் ஆன்மாக்கள் தன்னாலே அடுத்த உடலுக்குள் நின்று பேசுவதையும் பார்க்கலாம்… தன் ஆசைகளை அங்கே பிரித்துக் காட்டும்.

மனிதன் மீண்டும் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்றால் இன்னொரு மனித உடலுக்குள் சென்று தான் பிறக்க முடியும்.

ஆகவே இந்த வாழ்க்கையில் எப்போது கெட்டது என்று உணர்ந்தாலும் “ஈஸ்வரா…” என்று நம் உயிரிடமே முறையிட வேண்டும்.
1.புருவ மத்தியியில் குருக்ஷேத்திரப் போராக நடத்தி
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று சுவாசித்து உள்ளே செலுத்த வேண்டும்
3.இதனுடன் கலந்து உடலின் தன்மை இணைக்கப்படும் போது ஒளியின் தன்மையாகின்றோம்.

அதற்காக வேண்டித்தான்
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்தச் சக்தியை உங்களுக்குக் கொடுக்கின்றோம்
2.உங்கள் உயிரை ஈசனாக மதித்து இந்த உணர்வின் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று சதா தியானிக்கின்றேன் (ஞானகுரு)

எனக்கு அது கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன். அதே எண்ணத்தின் உணர்வை உங்களுக்குள்ளும் பதிவு செய்கின்றேன். அந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிந்து அதை நீங்கள் படைக்க வேண்டும்… சப்தரிஷி. சப்தரிஷி… என்றால் நாதம்…!

நாம் ஒரு வாத்தியத்தை இனிமையாக வாசித்தோம் என்றால் நம் தலைகள் எப்படி அசைகின்றது…? ஆனால் அதிலே நாதத்தின் சுருதி குறைவானால் அதை உடனே நாம் வெறுக்கிறோம்.

இதைப்போல நாம் சிருஷ்டிக்கும் அந்த மகிழ்ச்சியின் நிலைகள் ஒளியின் ஈர்ப்பலைகளுக்குள் நாதங்கள் ஆனாலும் நாம் கவர்ந்து சென்று அதே அலைகளிலே நாம் நிற்கின்றோம்.

நாம் அந்த இனிமையின் நிலைகள் கொண்டு உருவாக்கக் கூடிய நிலைகள் ஏழாவது ரிஷி.
1.இந்த உடலுக்குள் நாம் எடுத்துக் கொண்ட அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நமக்குள் கெட்டதை நீக்கி நல்லதாக உருவாக்கும் நிலை “ஏழு…” அது தான் ரிஷி
2.நாம் சிருஷ்டிக்கும் தன்மை. “எட்டாவது” உணர்வு ஒளியாக மாறுகின்றது… இந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் மகிழ்ச்சி ஊட்டுகின்றது.
3.இந்த உணர்வின் சக்தி உயிருடன் சேர்க்கப்படும் போது “ஒன்பதாவது” ஒளியாக மாறுகின்றது.
4.உடல் எப்படிக் கெட்டதை நீக்குகின்றதோ.. இந்த உடலை விட்டு வெளியே சென்ற பின் இன்னொரு மாடோ ஆடோ மனிதனோ நம்மை இழுத்து விடாது… “பத்தாவது நிலை…!”

அகவே நமக்குள் படைக்க வேண்டியது எது…? கொடுப்பதை நமது உயிர் படைத்துக் கொடுக்கின்றான்…! மகரிஷிகள் சக்தியை ஒவ்வொரு நொடியிலும் நமக்குள் சேர்த்து உடலுக்குள் அருள் உணர்வுகளைப் பொங்கச் செய்ய வேண்டும்.

நம் உடல் விஷத்தை எப்படி மலமாக மாற்றுகிறதோ அது போன்று உயிராத்மா வெளியே வந்தபின் எந்த உடலும் (எந்த விஷமும்) நம்மை இழுத்து விடக் கூடாது… கவர்ந்து விடக்கூடாது.

நாம் செல்ல வேண்டியது எங்கே…?
1.நாம் எந்த மகரிஷியின் தொடர்பைப் பெற்றோமோ… அவருடைய ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்று
2.அவர் படைத்த உணர்வின் சத்தாக நமக்கு உடலாக மாற்றிக் கொள்கின்றோம்
3.அது தான் நிலையான சரீரமாகிறது.

அவர்கள் படைத்த உணர்வின் சத்தை நமக்குள் உணவாக மாற்றிக் கொள்கிறோம். அங்கே நிலையான ஒளிச் சரீரமாகி விண்ணிலே எத்தகைய விஷத்தின் ஆற்றல் வந்தாலும் நாம் அதனின் உணர்வை ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.

அழிப்பதற்காகப் பயன்படுத்தும் சக்தியை… ஆக்கபூர்வமான செயலுக்காகப் பயன்படுத்த வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

“பல நூறு டன் எடையுள்ள மணலிலிருந்து” விஞ்ஞானத்தின் செயலில் ஒரு அவுன்ஸ்க்கும் குறைவான சில இரசாயன சக்தியை (URANIUM) மனிதன் பிரித்தெடுத்து இவ்வுலகத்தையே அழிக்கவல்ல வெடி குண்டுகளைச் செய்விக்கின்றான்.

மனிதனின் எண்ணமும் செயலும் எப்படித் தன் ஞானத்தைச் செயல்படுத்திச் சில சக்தி வாய்ந்த அழிவு நிலைக்கு உட்படுத்தும் குண்டுகளை உருவாக்குவது போல்
1.எண்ணத்தின் உணர்வை மாற்றியமைக்கும் உயர் ஞானத்தைக் கொண்டு
2.இவ் உடலின் ஒவ்வொரு அணுவையுமே வீரியத் தன்மைக்கு
3.சம உணர்வு கொண்டு பரிமளிக்கும் செயலினால்
4.மனிதன் தெய்வ நிலை கொண்டு வளர் சக்திகளை உருவாக்க முடியும்.

விஞ்ஞானத்தில் மனிதக் கருவையே உருவாக்கக் கூடிய ஞானமும் செல்கின்றது. தாய் தந்தை இல்லாமல் அமிலச் சேர்க்கையின் உயிரணு வளர்ச்சி கொண்டு… ஜெட பிம்ப வளர்ப்பிற்கு விஞ்ஞானம் செல்கின்றது.

ஆனால் செயலின் பலன் எதிர் நிலையான உணர்விற்குச் சென்று விடும். அப்படி உருவாகும் சிசுக்கள் மனிதனைக் காட்டிலும் வீரிய விஷச் சக்தி கொண்ட பிம்பமாய்த்தான் செயல்படுத்த முடியும்.

இந்தப் பூமியில்… விஞ்ஞானத்தில் தன் ஞானத்தை இக்கலி கடைசியில் இன்றெப்படி மனிதன் செயல்படுத்துகின்றானோ அதற்கு மேல் வீரிய சக்தி கொண்டு வியாழனில் இருந்த மனிதர்கள் அன்று செய்தார்கள்,

1.நம் பூமியில் இப்பொழுது வளர்ந்துள்ள விஞ்ஞானத்தைக் காட்டிலும்
2.பல மடங்கு வீரியத் தன்மை கொண்ட விஞ்ஞானச் செயல்
3.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செயல்பட்டதுண்டு.

அந்தச் செயலின் தொடர் இன்றளவும் சில நிலைகளில் தொடர் கொண்டுதான் உள்ளது.

தன் ஞானத்தின் உயர் ரிஷி சக்தியை… மனித உணர்வு வளரும் செயலுக்கு
1.தியானத்தில் சம உணர்வு கொண்டு எடுக்கப்படும் உயர் காந்த மின் சக்தியைக் கொண்டு
2.இஜ்ஜீவகாந்த சரீரத்தின் உயிர் ஆத்மா பெறும் உயர்வுதான்
3.ஒளியின் ஒளியாய் எதையும் வளர்க்கும் பிம்பச் செயலுக்குச் செயல்படுத்த முடியும்.

பரப்பிரம்மமாய்.. பிம்பமாய்… பரப்பிரம்மமாகச் செயல் தொடர் பெற.. எண்ணத்தின் உணர்வைக் கொண்டு இஜ்ஜீவகாந்தம் உயர் காந்த மின் ஒளியாய் ஒளி பெறும் தன்மை கொண்டுதான் ரிஷி சக்திக்குச் செல்ல முடியும்.

எண்ணத்தின் உணர்வை இச்சரீர கர்ம காரியத்தில் பொருளீட்டி… உண்டு… உறங்கி… கழித்து… வாழும் வாழ்க்கையில் இச்சரீர ஆசையை வைக்காமல்… எண்ணத்தின் உணர்வை உயர் ஞானத்தில் உய்யும் வழியை உணர்ந்தே… ஒளி பெறல் வேண்டும்.

வாழ்க்கையில் எவ் அலை சுவையை இவ்வெண்ண உணர்வு பெற்றதோ அதன் உந்தலுக்குகந்த இச்சையில்தான் நாம் வாழுகின்றோம்… வாழவும் முடியும்.

ஆனால் மனிதனின் உயர்ந்த தத்துவ சக்தியைக் கொண்டு ஞான ஒளி பெறும் வளர்ச்சிதானப்பா உயர்ந்த வளர்ச்சி…!

1.எல்லா உயிரனங்களிலும் உயர்ந்த நிலை கொண்ட இம்மனிதக் கரு வளர
2.சமமான எண்ணம் கொண்ட சாந்த உணர்வுடன் கூடிய ஜெபத்தால் பெறும்
3.உயர் காந்த மின் சக்தியின் அணுக்களைக் கொண்டு
4.இவ்வுயிர் அணுக்கள் ஒவ்வொன்றையுமே உயர்வு நிலை பெறச் செய்ய முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.விஞ்ஞான அறிவின் தன்மை கொண்டு
2.உடலுக்குள் இருக்கும் நிலைகளை ஊடுருவி
3.தசைகளைத் தாண்டி எலும்புகளைப் படமாக்கி
4.எலும்பிற்குள் உறைந்து இருக்கும் சளியைக் காணுகின்றார்கள்.

எலும்பிற்குள் இருக்கும் சளியின் விளைவால் ஏற்படும் அணுக்களின் சிதைவின் தன்மையும் அது எலும்புகளை எப்படி அரிக்கின்றது (டி.பி. நோய்) என்பதையும் எக்ஸ்ரே மூலம் மருத்துவர்கள் காணுகின்றனர்.

அதைப் போல உடலின் உறுப்புகளில் உள்ள பாகங்களில் இந்தத் தசை மண்டலங்களில் விஷத்தின் ஆற்றல் அளவு கோல் அதிகமாகி விட்டால் அந்த உறுப்புகளில் வீக்கமோ அல்லது சீராக இயங்க முடியாமல் ஏதாவது அடைப்பாகிவிடும்.

இவ்வாறு அந்தந்த உறுப்புகள் செயலற்றதாக ஆகின்றது என்பதனை விஞ்ஞானிகள் எக்ஸ்ரே மூலம் கண்டறிகின்றனர். கருவி கொண்டு அவன் அறிகின்றான்.

எக்ஸ்ரே என்றால்
1.உணர்வின் ஒளிகளை ஒன்றிலே (ஊடுருவிப்) பாய்ச்சி
2.அதன் உணர்வின் அதிர்வுகளை வெளியாக்கி
3.அதைப் படமாக்கி எடுத்துக் கொள்வது

எக்ஸ்ரே என்று அதற்குக் காரணப் பெயர் வைக்கின்றனர்.

உடலுக்குள் இருக்கும் நிலையை இந்த விஞ்ஞான அறிவால் நம்மை அறிந்திடச் செய்கின்றனர். இதைக் கண்டறிந்தது மனிதன் தான்.

ஆக உடலிலுள்ள உணர்வைக் கூர்மையான நிலையில் கண்டறிந்து எக்ஸ்ரே என்று படமாக எடுக்கின்றார்கள்.

அதைப் போன்று நாம் எத்தனையோ பேரைப் பார்க்கின்றோம். அவர்களுடன் பழகுகின்றோம். அவர்களை அறிந்து கொள்கின்றோம். அவ்வாறு அவர்கள் உணர்வுகள்
1.நமக்குள் பதிவான உணர்வுகளில்
2.மீண்டும் மீண்டும் பதிவானதை நினைவுக்குக் கொண்டு வந்தால்
3.எந்த மனிதனின் உணர்வோ அது நுகரப்படும் போது
4.இதுவும் எக்ஸ்ரே தான்.

அடுத்தவர்களைப் பற்றி ஊடுருவி அதன் வழி அவர்கள் உணர்வலைகளை நாம் நுகரப்படும்போது அந்த (அவர்) உணர்வுகள் அதன் வழிப்படி நமக்குள் இயக்குகின்றது.

டி.பி. நோய் வந்தது என்றால் எலும்புகளையோ தசைகளையோ கரைக்கும் அணுக்களுக்கு அதற்கு மாற்றான அணுக்களை நம் உடலிலே உருவாக்குகின்றார்கள்.

மற்ற மருந்தின் துணை கொண்டு அதாவது இவன் எடுக்கும் உணர்வுகளை உள் செலுத்திப் புது விதமான அணுக்களை எலும்புக்குள் உருவாக்குகின்றார்கள். நோயை நீக்குகிறார்கள்.

இது விஞ்ஞான அறிவால் கண்டறிந்து செயல்படுத்தப்படுகிறது. ஆனாலும் அந்த மருந்தின் அளவுகோல் உடலுக்குள் அதிகமாகும் பொழுது
1.நம் உயிரான்மாவில் நஞ்சு அதிகமாகின்றது.
2,அதற்குத்தக்கத்தான் அடுத்த உடல் நாம் பெறுவோம்.
3.விஞ்ஞான அறிவு கொண்டு உடலைக் காக்கலாம்.
4.உயிரான்மாவை ஒளியாக ஆக்க முடியாது.

மெய் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வின் வழிப்படி அவர்கள் தங்கள் கண்ணின் புலனறிவை விண்ணிலே செலுத்தி அந்த ஆற்றல்களைத் தங்கள் உடல்களிலே வளர்த்து வாழ்க்கையில் வந்த நஞ்சை வென்று உணர்வுகளை உயிருடன் ஒன்றச் செய்து ஒளியின் சுடராக மாற்றினார்கள்.

அந்த மெய்ஞானிகள் விளைய வைத்த உணர்வை நாம் நுகர்ந்து அதை நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அப்பொழுது அந்த மெய் ஞானிகளின் உணர்வுகள் எக்ஸ்ரே போன்று நம் உடலுக்குள் ஊடுருவிப் பாய்ந்து உறுப்புகளில் உள்ள தீமையான அணுக்களை அடக்கி அருள் ஒளியின் அணுக்களாக உருவாக்கும்.

தீமைகளையும் அகற்றுகின்றோம். நோயையும் அகற்றுகின்றோம். அதே சமயத்தில் ஞானிகள் உணர்வுகள் நம் உடலுக்குள் ஒளியான அணுக்களாக விளையத் தொடங்கும்.

விளைந்தது உயிரான்மாவில் சேர்ந்து ஒளியின் சுடராகும். இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது அவர்கள் இருக்கும் எல்லையை நாம் அடையலாம். ஒளியின் சரீரம் பெற முடியும்.

உடல் ஆசைக்காக வேண்டி… நாட்டாசைக்காக வேண்டி… உலகையே அழிக்கும் தன்மையாக இன்று வந்து விட்டது

 

இன்று விஞ்ஞான உலகில் ஏற்படுத்தப்பட்ட கொதிகலன்கள் (விஷக் கதிரியக்கங்கள்) சூரியனால் மாற்ற முடியாது. அது எதை எடுத்ததோ சூரியன் அதன் வளர்ச்சியில் அதைத் தான் மாற்றும்.
1.நம் சூரியன் விஷத்தை முறிக்கும் ஆற்றல் முதலிலே பெற்றிருந்தது
2.ஆனால் இன்று மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கையான கதிரியக்கங்கள் சூரியனுக்குள் கலக்கப்பட்டு
3.அதை மாற்ற முடியாதபடி அந்த விஷத்தையே மீண்டும் உமிழ்த்தும் தன்மை அதிகரித்து விட்டது.

விஷத்தின் தன்மையை நல்லதாக மாற்றும் நிலைகள் அங்கே மாறுபடும்போது விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட கருவிகள் (சூரியனை மையமாக வைத்து வேலை செய்யும் சாதனங்கள்) நாளடைவில் செயலிழந்துவிடும்.
1.இந்தச் சூரியனும் செயலிழந்துவிடும்
2.சூரியனால் ஈர்க்கப்பட்ட மற்ற கோள்களும் அது திசை மாறிவிடும்.

இத்தகைய விஷத்தன்மை கொண்ட உணர்வுகள் வெளிப்படும் பொழுது நமது பூமி அதைக் கவர்ந்தாலோ நம் பூமியிலிருக்கும் மனித இனங்களையும் மாற்றிவிடும்.

இவ்வாறு விஷத் தன்மையாக மாற்றிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் எடுத்தே ஆக வேண்டும்.

காரணம் துருவ நட்சத்திரம் அகண்ட அண்டத்திலிருந்து வரும் எத்தகைய விஷத் தன்மையையும் ஒளியாக மாற்றும் ஆற்றல் கொண்டது.

உதாரணமாக பாம்பு தன் விஷத்தைப் பாய்ச்சிப் பலவிதமான ஜந்துக்களை விழுங்கி அதனுடைய விஷமும் இதனுடைய விஷமும் ஒன்றாகும் போது பாம்பின் உடலில் ஒளி கொண்ட நாகரத்தினமாக மிளிரச் செய்கின்றது.

இதைப் போன்றுதான் எத்தனையோ வகையான விஷத்தன்மை கொண்ட உணர்வுகள் நமக்குள் இருப்பினும்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துச் சேர்த்துச் சேர்த்து
2.நம் உடலுக்குள் அந்த உணர்வின் அறிவாக மாற்றி அறிவின் ஒளியாக மாற்ற வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உயிரைப் போன்றே உணர்வுகளை ஒளியாக மாற்றி எத்தகைய விஷமும் நமக்குள் வராதபடி அதைப் பேரருளாக மாற்றி அந்த ஏகாந்த நிலை என்ற முழுமை அடைய முடியும்.

மின்னல்கள் கடலிலே தாக்கப்பட்டாலும் அது மணலாக மாறுவதை அதற்குள் இருப்பதை விஞ்ஞானிகள் வடிகட்டி கதிரியக்கப் பொறிகளாக மாற்றிப் பல விதமான அணு ஆயுதங்களைத் தயார் செய்துவிட்டார்கள்.
1.உடல் ஆசைக்காக வேண்டி… நாட்டாசைக்காக வேண்டி… உலகையே அழிக்கும் தன்மையாக வந்து விட்டது
2.அதிலே வெளி வந்த கதிரியக்கங்கள் இந்த உலகம் முழுவதற்கும் பரவி விட்டது.

பூமியிலிருந்து பரவும் அந்தக் கதிரியக்கங்களைச் சூரியன் கவர்ந்தாலும் அது கவர்ந்து செல்லும் பாதையில் மற்ற கோள்களும் இதைக் கவர்ந்து நமது பிரபஞ்சமே கதிரியக்கமாக மாறிக் கொண்டிருக்கின்றது.

விஞ்ஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட இந்த விளைவால் உலகமே இருள் சூழும் நிலைக்கு வந்துவிட்டது சிறுகச் சிறுக சூரியனும் செயலிழந்து கொண்டிருக்கின்றது… அது செயலிழக்க நம் பூமியும் செயலிழக்கும்.

பூமியில் வாழும் மனிதனும் அசுர உணர்வு கொண்டு ஒருவரை ஒருவரை ஒருவர் கொன்று தின்னும் நிலை வருகின்றது.

சூரியன் உருவாக்கும் அந்தப் பாதரசமே (வெயில்) கருகிய விஷத் தன்மையாக மாறும் தன்மை சூரியனுக்குள்ளும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. சூரியன் செயலிழக்கும் தன்மையினால் சூரியனால் உருவாக்கப்பட்ட இந்தப் பிரபஞ்சமும் அதே நிலை அடைகின்றது.

நான் (ஞானகுரு) வெறும் சொல்லாகச் சொல்லவில்லை.

இந்த உணர்வைப் பதிவாக்கி நீங்கள் நினைவின் தன்மை கொண்டு வந்தால் சூரியனின் இயக்கத்தை நீங்கள் தெளிவாக உணர முடியும். சூரியனின் தொடர் கொண்டு இந்தப் பிரபஞ்சம் இயங்குவதையும் உணர முடியும்.

ஆனால் இதிலிருந்து தப்பிய துருவ நட்சத்திரம் என்றும் அழிவதில்லை. எத்தகைய நஞ்சாக இருந்தாலும் அதை மாற்றி விடுகின்றது.

நம் பூமியின் துருவத்திற்கு நேராக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எப்போதும் நீங்கள் பெறலாம்.
1.அதைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்தத்தான் அடிக்கடி வலியுறுத்தி
2.நினைவாற்றலை உங்களுக்குள் கொண்டு வரச்செய்து அந்த நினைவைக் கூட்டி
3.நஞ்சை வென்று உணர்வினை ஒளியாக மாற்றும் திறனாக உங்களைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்.

விஞ்ஞான அறிவு ஒரு பக்கம் விஷத்தைப் பரப்பினாலும் அதிலிருந்து மீட்டிக் கொள்ளும் அரும் பெரும் சக்தியாக நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இங்கே பதிவாக்கும் உணர்வுகளை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். கூட்டுத் தியானங்கள் இருங்கள். கணவனும் மனைவியும் சேர்ந்து இதைச் செயல்படுத்துங்கள்.

நம் எண்ணத்தைச் (மனதை) சமப்படுத்தும் முறை – ஈஸ்வரபட்டர்

 

எப்படி ஒவ்வொரு கோளத்தின் சந்திப்பினால் கால மாற்றங்கள் இப்பூமியின் பருவ காலம் பெறுகின்றதோ அதைப் போன்று இச்சரீரமும் பெறுகின்றது.

பூமியின் பருவ காலத்தில் சில அதிர்வு நிலைகளால் கடல் பொங்குவது… சூறாவளி… காற்று வீசுவது… எரிமலை வெடிப்பது… பூகம்பம் வருவது…! இத்தன்மை போன்று மனித உடலின் தன்மைக்கும் ஏற்படுகின்றது.

கால மாற்றத்தில் பிற மண்டலங்களின் சந்திப்பில் பூமி ஈர்க்கும் அலையின் தன்மையில் அதிர்வு ஏற்படுகின்றது. அதைப் போன்றே….
1.இம்மனித ஜீவ சரீரத்தில் எண்ணத்தின் உணர்வுகள் ஏற்காத் தன்மை மோதும் பொழுது
2.அதிர்வு நிலைகளை இச்சரீர இயக்கமும் பெறுகின்றது.

இந்தப் பூமியில் எந்த நிலை கொண்டெல்லாம் கால மாற்ற சீதொஷ்ண நிலை மாறுபடுகின்றதோ அதற்கொப்ப இந்த உடல் பிம்பச் செயல்களில் “உணர்வுகள் மாறும் போது..”
1.இச்சரீர ஆரோக்கியத் தன்மையிலும்
2.எண்ணத்தைச் செயல்படுத்தும் ஞான வழியிலும்… பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

உடனே மனிதன் நான் எண்ணியது ஓன்று… நடப்பது ஒன்றாக உள்ளது… “எல்லாம் விதியின் செயல்…!” என்று எண்ணி விடுகின்றான்.

எண்ணத்தின் வாழ்க்கைத் தொடரில் செயல் கொள்ளும் ஞானம்… ஓர் மாற்று நிலைக்குச் செயல்படும் பொழுது… உணர்வின் உந்தலால் உடலையே பாதிக்காத தன்மைக்குத் தன் ஞானத்தைக் கூட்டி… மதியைக் கூட்டி வென்று
1.சம உணர்வின் சாந்த குணமுடன்
2.இச்சரீர இயக்கத்தின் அணு சக்திகளை வீரியமாக்கி
3.உயிராத்மாவை ஒளிரச் செய்தல் வேண்டும்

மணலை அதி உஷ்ணமாக்கிக் கண்ணாடி செய்து தன் பிம்பத்தையும் எதிர்படும் எதனையும் அக்கண்ணாடியில நாம் பார்க்க முடிகின்றது.

அதைப் போன்று இந்த உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் சம உணர்வுபடுத்தும் செயலில் விண்ணிலிருந்து வரும் மின் காந்த ஒளி அலையை எடுத்து உணர்வின் எண்ணத்தால் வீரிய சக்தியாக உடலிலே வளர்த்திட வேண்டும்.

1.அத்தகைய உயிராத்மாவின் சமைப்பினால்…
2.மனிதன் “ஞான திருஷ்டி” என்ற சகல சித்து நிலையையும் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ நிலைகளைப் பத்திரிக்கை வாயிலாகவும் தொலைக்காட்சி வழியாகவும் தினசரி பார்க்கின்றோம்.

தொலைக்காட்சி வழியாகப் பார்த்தோம் என்றால் உலகில் நடக்கின்ற அசம்பாவிதங்களை எல்லாம் “ஆ…” என்று பார்க்கின்றோம். கண்கள் அப்படியே அதை ஈர்த்து நமக்குள் ஆழமாகப் பதிவாக்குகின்றது.

1.டி.வி.யில் அந்தக் காட்சிகளைப் பார்க்கும் பொழுது
2.நம் நினைவு முழுவதும் அங்கே அந்த இடத்திற்கே போகின்றது.
2.அங்கே பரவியிருக்கும் நினைவையே நாம் சுவாசிக்க நேர்கின்றது.

அவ்வாறு நாம் உற்றுப் பார்த்துப் பதிவு செய்த உணர்வின் தன்மை கொண்டு அவர்கள் செய்த (அசம்பாவித) உணர்வெல்லாம் இந்த விஞ்ஞான அறிவால் நமக்குள் வந்து விடுகின்றது.

அதே சமயத்தில் ஒரு நாட்டினை அழிக்க…
1.தொலைக்காட்சிப் பெட்டி மூலமாக ஒலி அதிர்வுகளைக் கொடுத்து நமக்குள் பதிவாக்கி
2.நம் புத்தியைச் செயலிழக்கச் செய்வதற்கும் விஞ்ஞான அறிவு இன்று சென்றுவிட்டது.

இப்படி ஒலிபரப்பும் நிலைகளில் நாம் டி.வியைப் பார்க்கப்பப்படும் பொழுது நம் மனித எண்ணங்களையே சீரழிக்கும் நிலைகள் வருகின்றது.

விஞ்ஞான அறிவால் கேட்ட உணர்வுகள்
1.நாம் வீட்டிலிருந்தபடியே தீமையின் உணர்வை நமக்குள் வளர்ப்பதும்
2.பகைமை உணர்வுகள் ஊட்டுவதும்… ஒருவனை எப்படி மாற்றுவது என்ற நிலைகளும்வருகின்றது.

டி.வி.யில் காண்பித்த நிலைகளையும் மற்றவைகளையும் உற்றுப் பார்க்கும் போது (சினிமாவில்) காட்டும் காட்சிகளில்
1.கொலை செய்வது எப்படி?
2.கொலையிலிருந்து தப்புவது எப்படி? என்ற நிலையெல்லாம் வந்த பின்
3.இந்த உணர்வுகளே நமக்குள் பதிவாகின்றது.

தன் வாழ்க்கையில் ஒரு சிரமம் வந்தால் அது மாதிரி நாம் ஏன் இதைச் செய்யக்கூடாது என்ற உணர்வுகள் தூண்டுகிறது. அதன் வழியிலே தான் தவறுகள் அதிகமாக இன்று உலகம் முழுவதும் வளர்கின்றது.

ஆக மொத்தம் விஞ்ஞான அறிவால் அஞ்ஞான வாழ்க்கையே நாம் வாழுகின்றோம்.

மெய் ஞானத்தின் நிலைகளில் பக்தி என்ற நிலை வந்தாலும் அதிலேயும் குறைகளைக் கூறி நல்ல நிலைகள் எடுக்க முடியாதபடி ஆலயங்களையும் அசுத்தப்படுத்துகின்றோம்.

இதைப்போன்ற நிலைகளிலெல்லாம் இருந்து நாம் விடுபட வேண்டும். அன்று அகஸ்தியன் கண்ட பேருண்மையின் உணர்வின் வழிப்படி
1.நம் வாழ்க்கையில் விழித்திருத்தல் வேண்டும்.
2.ஒவ்வொரு தீமைகளிலிருந்தும் பகைமையிலிருந்தும் நாம் மாறுபடுதல் வேண்டும்.

எப்பொழுதெல்லாம் தீமைகளைக் காண்கின்றோமோ “ஓ..ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நாங்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் அதிகமாகச் செலுத்திப் பழக வேண்டும்.

அதை நீங்கள் பெறும் தகுதிக்காகத்தான் மணிக்கணக்கில் உங்களிடம் பேசுகின்றேன். உபதேச வழியாகப் பதிவாக்குகின்றேன். நினைவு கொள்ளுங்கள்.

மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் வரும் தீமையான உணர்வுகளை
1.உங்களால் மாற்றி அமைக்க முடியும்.
2.பகைமை தோற்றுவிக்கும் உணர்வை உங்களால் அடக்க முடியும்.
3.பகைமையற்ற உணர்வுகளை வளர்க்க முடியும்.
4.உடலை விட்டுச் சென்ற பின் அருள் ஒளியின் சுடராக என்றும் பிறவியில்லா நிலையும் அடைய முடியும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் கணவனும் மனைவியும் இதைப் போன்று மகரிஷிகள் காண்பித்த அருள் வழியில் செயல்படுத்துங்கள்.

உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை அடைவோம்… என்றுமே ஏகாந்தமாக வாழ்வோம்

 

தீமையான உணர்வுகள் நமக்குள் புகுந்தால் அதை மடியச் செய்யும் சக்தியாகத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும். அதை நீங்கள் எளிதில் பெறலாம்.

நான் (ஞானகுரு) சிரமப்பட்டேன்… பார்த்தேன்… குருநாதர் அருளால் எல்லாவற்றையும் தெரிய முடிந்தது.
1.தீமையான உணர்வுகள் எனக்குள் எப்படிச் செயல்படுகிறது…? என்று முதலில் காட்டினார்.
2.பின் அந்தத் தீமையை நீக்கும் வழியையும் காட்டினார்.

அதைப் போன்றுதான் வாழ்க்கையில் நீங்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் உங்கள் உடலுக்குள் எவ்வாறு இயங்குகிறது…? என்பதை உணர முடியும்.

தீமை என்று உணர்ந்தவுடனே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து உங்கள் இரத்த நாளங்களில் கலக்கச் செய்து அதை மாற்றிக் கொள்ளும் சக்தி உங்களுக்கு வர வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் பெறக் கூடிய தகுதிக்குத் தான் இதை ஆழமாகப் பதிவு செய்கிறேன்.

உதாரணமாக…
1.செல்ஃபோன்களில் எதை எதையெல்லாம் பதிவு செய்கின்றோமோ அதை மீண்டும் திரும்பப் பார்க்க முடிகின்றது….
2.பதிவானதை இன்னொருவருக்குச் செலுத்தவும் முடிகின்றது.

இதைப் போன்றுதான் கேட்ட… பார்த்த உணர்வுகள் எல்லாமே நம் உடலில் எலும்புக்குள் உள்ள ஊனுக்குள் ஊழ்வினையாகப் பதிவாகின்றது.

தீமை என்று பதிவானால் அந்த உணர்வு தனித்து இயங்காதபடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதற்கு அருகிலேயே இதைப் பதிவாக்க வேண்டும்.

காரணம்… துருவ நட்சத்திரத்தின் சக்தி அதைக் காட்டிலும் வலுவானது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எண்ணி எடுத்துக் கொண்ட பின் அடுத்து
1.அவன் நல்லவனாக வேண்டும் நல்லது செய்ய வேண்டும்
2.நல் வழி வர வேண்டும்… உலகம் நலம் பெற வேண்டும் என்று
3.நாம் இதைப் பதிவாக்கிக் கொண்டால் அதைச் சுற்றி “பெரிய வட்டமாக…” மாறிவிடுகின்றது.

ஒரு குழம்பை வைக்கிறோம் என்றால் பல பொருட்களைச் சேர்க்கின்றோம். அதில் எந்தப் பொருள் அதிகமோ அதன் சுவை தான் முன்னணியில் வருகின்றது.

இதைப் போன்று அந்த அருள் ஞானிகள் உணர்வை நாம் சிந்திக்கும் உணர்வுகளுக்குள் கலந்து விட்டால்… சிந்தித்துச் செயல்படும் சக்தியாக வளரத் தொடங்கும்.

உங்கள் அனுபவத்தில் நீங்கள் இதைப் பார்க்கலாம்.

இரவில் படுத்துத் தூங்கும் பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்திலேயே உறங்கச் செல்லுங்கள்.

காலையில் எழுந்ததும்… கண் விழித்ததும் இதே நிலைகளைச் செயல்படுத்துங்கள். அதற்குப் பின் மற்ற காரியங்களைச் செயல்படுத்துங்கள்.

எந்தக் காரியத்தை ஆரம்பிக்கும் முன்பும் உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் சுருக்கமாக இப்படிச் சொல்லிக் கொண்டு வரலாம்.

1.வெளியில் செல்லும் பொழுதும்
2.தொழிலுக்குச் செல்லும் பொழுதும்
3.வீட்டிற்கு வந்தாலும் அமைதியாக இருக்கும் போதும் இதைச் செய்யலாம்
4.எந்தச் சந்தர்ப்பத்திலும் அருள் உணர்வைப் பெருக்கிக் கொண்டே வரவேண்டும்.
5.காற்று மண்டலத்தில் விஷத் தன்மைகள் நமக்குள் வராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.
6.பேரின்ப வாழ்க்கையாக உயிருடன் ஒன்றி ஒளியின் தன்மையாக நாம் மாறுவோம்.

மனிதனாகத் தோன்றிய பின் உயிர் என்ற நிலையில் அனைத்தையும் அறிந்திடும் உணர்வு கொண்டால் கார்த்திகேயா… அந்த வெளிச்சத்தின் உணர்வாக மதி கொண்டு நாம் செயல்படுத்த வேண்டும்.

ஆகவே ஒளி என்ற மதி கொண்டு நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும். அதைப் பெற்று உடலுக்குப்பின் பிறவியில்லா நிலையை நாம் அடைவோம்… என்றுமே ஏகாந்தமாக வாழ்வோம்.

அதிக காலம் வாழ்வதைவிட “தெய்வ நிலை பெறுவது” தான் மனிதனின் முதிர்வு நிலை – ஈஸ்வரபட்டர்

 

தாவரங்களில் அதனுடைய முதிர்வுத் தன்மையில் அத்தாவரத்தின் பலன் வெளிப்பட… பூவும் பிஞ்சும் பிடிக்கும் தருணத்தில் பால் பிடித்து அதனுடைய முதிர்வின் பலனை அந்தந்த இன வளர்ச்சிக்கொப்ப பலனை எப்படித் தருகிறது…?

இதில் தாவரத்திற்குத் தாவரம் மாறுபடுகிறது. இதில் சில மரங்கள் தன் வளர்ப்பின் பலனான காய் கனிகளை வெளிப்படுத்துவதில்லை.

ஆனால் தன்னுடைய முதிர்வின் ஈர்ப்பில் விழுதுகளையும் ரோமம் போன்ற முதிர்வின் செயல் வெளிப்பட்டு அதனுடைய வளர்ச்சித் தன்மையின் தொடர் கொண்ட சில மரங்கள்… பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு மரமே மலையாகும் ஈர்ப்பு வளர்ச்சி முதிர்வு செயல் கொள்கின்றது.

பலன் தரத்தக்க மா… பலா… இப்படி உள்ள மரங்கள் சில நூறு ஆண்டுகளுக்குப் பலனைத் தந்த பிறகு மரமே பட்டுவிடுகின்றது. ஜீவத்தன்மையில் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நிலை பெற்று உடல் மாறும் வரை தன் பிறப்பின் பிறப்புத் தொடரைச் செயல்படுத்தி மடிகின்றது.

இத்தொடரில் இருந்தெல்லாம் சில மிருகங்களின் நிலையும் மனிதனின் நிலையும் மாறு கொள்கின்றன.

ஆனால் பிறப்பிலிருந்து வளர்ச்சி பெற்றுப் பிறப்பு நிலை வளர்க்கும் காலங்களுக்கு எல்லாத் தன்மையிலுமே… எப்படிப் பூ பிஞ்சில் பால் பிடித்து பலன் தருகின்றதோ… அதைப் போன்று மனித மிருக நிலையிலும் பருவ முற்றலில் பால் உணர்வு கொண்டு இரு நிலை கொண்ட சேர்க்கையில் பிறப்பின் தொடரை (கரு) வளர்க்கும் வழி நிலை பெறுகின்றதல்லவா…!

மனித உணர்வில் பருவம் பெற்று பெண் தன்மையில் கரு வளர்க்கும் வயது வரம்பு காலத்திற்குப் பிறகு இயற்கையின் கர்ப்ப கால தன்மை மாறி மாதவிடாய் நின்று மீண்டும் குழந்தைப் பருவ நிலைக்கொப்ப உடல் நிலை பெறுகின்றது.

இடைப்பட்ட தருணத்தில் கரு வளர்க்கும் காலம் ஆரம்ப வளர்ச்சி வளரும் நிலையும் முதிர்வு நிலைக்கு மீண்டும் எந்த் நிலையுமற்ற தன்மை கொண்டு சரீர இயக்கமே தான் பெற்ற அமிலக் கூறின் வளர்ச்சிக்கொப்ப முதிர்வு நிலை என்ற ஓர் நிலை பெற்ற பிறகு கரு வளர்க்கும் நிலையற்றதாக ஆகிவிடுகின்றது.

இச்செயல் நிலைக்கும் ஓர் அடுத்த நிலை உள்ளதல்லவா…?

மனிதப் பிறப்பு இறப்பில் வயது நிலையற்றுச் சரீர உணர்வில் எடுக்கும் அலை நிலைக்கொப்ப பிறப்பு இறப்பு நிகழ்கின்றன. ஆனாலும்… பிறந்த சிசுவிலிருந்து வயது முதிர்ந்த நிலை வரையிலும் எத்தருணத்திலும் இறப்பு நிலை ஏற்படுகின்றது.

இத்தன்மையின் உடலை விட்டுப் பிரியும் உயிராத்மா
1.வயது வரம்பு கொண்டு முதிர்வு நிலை பெறுகின்றதா…?
2.ஆத்மாவிற்கு முதிர்வுத் தன்மை எப்படிக் கூடுகின்றது?

மாமரத்தில் பூ பிடிக்கும் தருணத்தில் இம்மரத்தின் இலைகளே தெரியாத அளவிற்கு அதிகமாகப் பூக்கள் பிடிக்கின்றன. ஆனால்… நல்ல கனியாகி பலன் வெளிப்படுத்தும் விகித நிலை “நூற்றில் ஒரு பாகம் கூட… முதிர்வு நிலைக்கு வருவதில்லை…!”

ஆனால் முதிர்வு நிலை பெற்ற கொட்டைகளைப் பதித்தால் தான் மீண்டும் மாங்கன்று வளருகின்றது. கனியில் சொத்தை விழுந்த கொட்டைகள் வளர்ச்சிக்கு வருவதில்லை.

இதைப் போன்று ஒவ்வொரு விதைத் தன்மையிலுமே உள்ளதல்லவா…?

இம்மனித உயிர் ஆத்மாவானது தன் பிறப்பின் கருவைப் பருவ வளர்ச்சிக் காலத்தில் கருவின் தொடரை வளர்க்கின்றது. சில தாவரங்களைப் போன்று தன் வளர்ப்பின் பலன் தந்த பிறகு மரத்தின் நிலை பட்டுப் போவதைப் போன்று கருத்தரித்த பிறப்பு நிலை வளர்க்கும் கால நிலை மாறினாலும் மனித வாழ்க்கையின் செயல் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் கூட… மீண்டும் பல வருடங்களுக்கு வாழ முடிகின்றது.

1.இம்மனித அமிலம் தான் எல்லாத் தன்மையிலும் முதிர்வு பெற்ற உயிராத்மா கொண்டது.
2.இதிலும் அடுத்த நிலை பெறுவதென்பதுதான் ஞானத்தால் ஒளி நிலை பெறும்
3.பிறவா நிலையான “பிறப்பின் பிறப்பையே காக்கும் நிலை…”

சிறு வயதில் தான் எடுத்த உணர்வின் இச்சையை மாற்றாமல்
1.தன் குண வளர்ப்பில் ஆத்ம பலம் பெறாத சிசுக்களோ சிறுவர்களோ
2.அல்லது வாழும் பருவத்தில் பாதி நிலையில் உணர்வின் இச்சையினால் தற்கொலையும் விபத்துக்களும் ஆளானவர்களோ
3,தன்னைத் தான் மறக்கும் குடி வெறிகளிள் சிக்கியவர்களோ
4.கொலை செய்யப்பட்டோ வாழும் பருவத்தில் அதிவேதனையால் உடல் அழுகிய நிலையில் பிரியும் உயிராத்மாக்களோ
5.இவை எவையும் மீண்டும் பிறப்பிற்கு வருவது என்பது…
6.எப்படி சொத்தை விழுந்த மாங்கொட்டையை விதைத்தாலும் அதன் வளர்ச்சி நிலை வளர்வதில்லையோ
7.அதைப் போன்று இம்மனித உணர்வின் எண்ண ஞானத்தின் செயல் உருவ அங்க அவயங்களின்
8.அழகின் பொலிவு கொண்டு பிறப்பு நிலை பெற முடியாது (இது முக்கியம்)

பிறப்பு நிலைக்கு வந்தாலும்.. எத்தொடர்பில் ஆத்மா பிரிந்ததோ அதே நிலையில் அங்ககீனமுள்ள நிலையில் தான் பிறக்க நேரும். ஞானமுடன் கூடிய அறிவு வளர்ச்சியற்ற குழந்தைகளாகத்தான் சாதாரண வழித் தொடரிலேயே பிறப்பு இறப்பு செயல் கொள்கின்றது.

இன்று அங்ககீனமுள்ள குழந்தைகளும்… மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளும் அதிகமாகப் பிறப்பதன் காரணம் புரிந்ததா…!

எண்ணத்தின் வலுக் கொண்ட… “ஆத்ம பலம் பெற்ற ஆத்மாக்கள் தான்..” மீண்டும் தன் இனத் தொடர்பில் பிறப்பு பெற்று… முதிர்ந்த கொட்டைகள் பக்குவமான வளர்ச்சிக்கு வருவதைப் போன்று… மனிதப் பிறப்பு பெற்று வருகின்றது.
1.இதில் அடுத்த நிலை பெறுவது என்பதுதான்
2.இங்கே உணர்த்தப்படுகின்ற மனிதன்… “தெய்வ நிலையாகும்” தன்மை.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.குருவின் உணர்வை நீங்கள் பெற்றீர்கள் என்றால்
2.அந்த உணர்விலிருந்து எல்லாமே நீங்கள் பெறலாம்
அந்த நிலையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் திரும்பத் திரும்பச் சொல்கின்றேன்.

சாமியாரைப் பார்த்து.. அவரைப் பார்த்து… இவரைப் பார்த்து… கடைசியில் “சாமியார் தான் எல்லாவற்றையும் மீட்டிக் கொடுப்பார்…” என்று நினைக்கிறீர்கள்.

அருள் ஞானியின் உணர்வை நீங்கள் நுகர்ந்தால் உங்கள் எண்ணம் உங்கள் உடலுக்குள் இருக்கும் பகைமை உணர்வை நீக்குகின்றது. உங்கள் உடலை நலமாக்குகின்றது. உங்கள் வாழ்க்கையை உயர்த்துகின்றது.

இந்தப் பழக்கங்கள் வரவேண்டும்.

டி.வி, ரேடியோவில் ஒலி/ஒளி பரப்பு செய்கிறார்கள் என்றால் எந்த ஸடேசனை நீங்கள் திருப்பி வைக்கிறீர்களோ அதுதான் வருகிறது. அந்த அலைகளை நீங்கள் காட்சியாகவும் பார்க்கின்றீர்கள். பாடல்களையும் கேட்கிறீர்கள்.

இதே மாதிரித்தான் உங்கள் உடலுக்குள்ளும் நடக்கின்றது.

பல பேரைச் சந்திக்கிறீர்கள். சண்டை போடுகிறவர்களைப் பார்க்கின்றீர்கள்; வேதனைப்படுவோரைப் பார்க்கின்றீர்கள் கோபப்படுவோரைப் பார்க்கின்றீர்கள்; சஞ்சலப்படுவோரைப் பார்க்கின்றீர்கள்; சங்கடப்படுவோரைப் பார்க்கின்றீர்கள்; குரோதமாக இருக்கிறவர்களையும் பார்க்கின்றீர்கள். குரோதத்தால் பிறரை அழிக்கக்கூடிய உணர்வையும் பார்க்கின்றீர்கள்; தெரிந்த்தே தப்புப் பண்ணுபவர்களையும் பார்க்கின்றீர்கள்.

இதை எல்லாம் பதிவாக்கிக் கொள்கிறீர்கள்.

1.இதிலே நீங்கள் எந்த ஸ்டேசனைத் திருப்பி வைக்கின்றீர்களோ…
2.”அடப் பாவிப் பயலே… இப்படிச் செய்கிறேயடா..!” என்று
3.அந்த ஸ்டேசனைத் திருப்பி வைத்தால் அந்தக் காட்சிகள் தான் வரும்.

எந்தக் காட்சி? அவன் சண்டை போடுவது திருடுவது ஏமாற்றுவது.

நான் அன்றைக்கு அந்தப் பையனைப் பார்த்தேன்… கஷ்டப்படுகிறான்… என்ற நினைவு வந்து அந்த ஸ்விட்சைப் போட்டீரகள் என்றால்
1.“அடப்பாவமே அவன் இப்படிக் கஷ்டப்படுகின்றான்…” என்று இந்தக் காட்சி உங்களுக்குள் வரும்.
2.அந்த வேதனை உங்களுக்குள் வரும். இத்தனை வேலையும் நடக்கும்.

அதே மாதிரி பணம் கொடுத்தவன் திரும்பக் கொடுக்கவில்லை. அவன் ஏமாற்றிவிட்டுப் போய்விட்டானே என்று அந்த ஸ்டேசனை வைத்தால்
1.ஏமாற்றப்பட்ட உணர்வலைகள் காற்றிலிருக்கின்றது,
2.உடனே அது உங்களுக்குள் வந்து வேலை செய்கிறது.
3.அப்பொழுது உங்கள் நல்ல உணர்வுகள் வாடுகின்றது.

இதே போலத்தான் அருள் மகரிஷிகளின் உணர்வு இந்தக் காற்றிலே கலந்திருக்கின்றது. உங்களுக்குள் ஆழமாக அதைப் பதிவு செய்யவேண்டும் என்று தான் திரும்பத் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம்.

சூரியன் எப்படி உருவானது? மனிதன் எப்படி உருவானான்? மனிதனான பின் அகஸ்தியன் ஒளிச் சரீரம் எப்படி ஆனான் என்று சொல்கிறோம்.

அகஸ்தியன் தனக்குள் கண்டுணர்ந்த உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கிறோம். அவ்வப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நீங்கள் எண்ண வேண்டும்.

1.இந்த ஸ்டேசனைத் திறந்தால்
2.அந்த அகஸ்தியனின் உணர்வு வரும்.
3.நமக்குள் கோபிக்கும் உணர்வை தடுக்கும்.
4.நமக்குள் அருள் ஞானத்தை வளர்க்கும்.
5.நம்மை அறியாத வந்த தீமைகளைத் துடைக்கும்.

இதை நீங்கள் பெற வேண்டும் என்பதற்காகத்தான் மணிக்கணக்கில் உபதேசிக்கின்றேன். ஏனென்றால் குருநாதர் அந்தச் சக்தி கொடுத்தார். எல்லாமே செயல்படுத்திக் கொண்டு வருகிறேன்.

சாமி பார்த்துக் கொள்ளும் என்று கோயிலில் போய் கஷ்டத்தை எல்லாம் சொல்கிற மாதிரி அந்த நம்பிக்கையிலே இருக்கும் போது என்னைப் பார்த்தவுடனே ஆயிரம் கஷ்டங்களைச் சொல்கிறார்கள். ஆயிரம் வம்புகளைச் சொல்கிறார்கள்,

நான் இதையெல்லாம் கேட்டு என்ன செய்ய…!

இப்படி நூறு பேர் வந்து என் காதில் சொன்னால் நான் எடுத்துக் கொண்ட சக்தியை நீங்கள் தடைப்படுத்துகிறீர்கள் என்று தான் அர்த்தம்.
1.நீங்கள் நல்லதைப் பெறுவதற்கு பதில்
2.அதைத் தடை விதித்துக் கொள்கிறீர்கள்.

உங்களுக்குள் அந்த உணர்வு வளர்ந்து விட்டால் நான் சொன்ன அந்த வாக்கை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது போய் விடுகிறது.

1.அருள் ஒளி பெற வேண்டும்.
2.என்னை அறியாத இருள் நீங்க வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும்.
4.உடல் நலம் பெற வேண்டும்.
5.எங்கள் குடும்பம் நலம் பெற வேண்டும்.
6.என் தொழில் நலம் பெற வேண்டும்.
7.என் பையன் நல்லவனாக வேண்டும் என்று கேளுங்கள்.

அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்களுக்கு இந்த நிலை வேண்டும் என்று தான் நான் கேட்கச் சொல்கிறேன்.

எத்தனை பேர் இப்படிக் கேட்கிறீர்கள்…!

இவ்வளவு தூரம் நான் சொல்கிறேன். இருந்தாலும் இப்பொழுத் தான் உங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன். “நீங்கள் பெரிய மகான்…” என்று சொல்லி “என் கஷ்டம் இப்படி இருக்கிறது…!” என்று சொல்லி உடனே அழுக ஆரம்பித்துவிடுகிறார்கள்.

நான் சொன்னதை எல்லாம் மறந்துவிடுகின்றார்கள். அவர்களுக்குள் எது பதிவானதோ அந்த உணர்வு தான் வேலை செய்கிறது.

யாம் சொல்லும் உயர்ந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை அவர்கள் பெறும் தகுதியை அவர்கள் உடலுக்குள் இருக்கும் உணர்வே தடை படுத்துகின்றது என்று உணர்கிறார்கள். உணர்ந்தாலும் அதை அறிய முடிவதில்லை.

ஒரு இடத்தில் அழுக்குத் தண்ணீர் இருக்கிறது என்றால் அதைத் தூய்மைப்படுத்துகின்றோம்.
1.இன்னும் கொஞ்சம் இருக்கிறது
2.அதையும் தூய்மையாக்கிப் பழக வேண்டும் என்ற நிலைக்கு நீங்கள் அனைவரும் வரவேண்டும்,

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அருள் சக்திகளை பெற்று உங்கள் வாழ்க்கையில் தீமைகள் புகாது ஒவ்வொரு நொடியிலும் விழித்திருத்தல் வேண்டும்.

நீங்கள் ஒவ்வொருவரும் மகரிஷிகளாக உருப்பெற வேண்டும்

 

விண்ணுலக ஆற்றலும்… மண்ணுலக ஆற்றலும்… உயிரின ஆற்றலும்… எவ்வாறு இருக்கிறது…? என்ற நிலையை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தெளிவாக எமக்கு (ஞானகுரு) எடுத்துரைத்தார்.
1.உபதேச வாயிலாக எனக்குள் ஞான வித்தாகப் பதியச் செய்தார்.
2.அவர் பதியச் செயத உணர்வினை நினைவு கொண்டு நான் எடுக்கப்படும் போது
3.விண்ணின் ஆற்றலைப் பருகும் தன்மைகள் எனக்குள் வந்தது… மண்ணுலக ஆற்றலை அறியும் தன்மையும் வந்தது.

விண்ணுலகம் சென்றடைந்து ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மாமகரிஷிகள் மண்ணுலகில் அவர்கள் வாழ்ந்த காலத்தில் பெற்ற ஆற்றல் மிக்க சக்திகள் இங்கே நமக்கு முன் பூமியிலே பரவி உள்ளது.

தீமைகளை அகற்றிப் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் ஆற்றலாகத் தனக்குள் விளைய வைத்த அந்த மகரிஷிகளின் ஆற்றல்களை நாம் கவர்தல் வேண்டும்.

ஆகவே…
1.மகரிஷிகளின் அருள் ஆற்றலை நாம் பெறுவோம்… மகிழ்ந்திடும் வாழ்க்கையாக வாழ்வோம்
2.மகிழ்ச்சி பெறும் செயலாகச் செயல்படுத்துவோம்
3.நாம் பார்ப்போரெல்லாம் மகிழ்ச்சி பெற வேண்டும் என்று மகிழ்ந்து வாழ்வோம்.

பிறர் ஆனந்தமாக வாழ்வதைக் கண்டு நாம் மகிழ்ச்சி பெற வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் புத்துணர்வு பெற்று அவர்கள் குடும்பம் நலம் பெறுவதை எண்ணி எண்ணி அந்த நலம் பெறும் சக்திகளைக் கண்டு நாம் மகிழ்ச்சி பெறுவோம்.

நாம் பார்ப்போர் எல்லாம் மகிழ்ந்து வாழ வேண்டும் உலகம் நலம் பெற வேண்டும் என்று தியானிப்போம் தவமிருப்போம்.

குருநாதர் அனுபவம் பெறுவதற்காக வேண்டி எமக்கு எத்தனையோ இன்னல்களைக் கொடுத்தார். அதை எல்லாம் கடந்து அவர் காட்டிய வழியில் மெய் ஞானத்தை எனக்குள் வளர்க்க முடிந்தது. ஞான வித்துக்களாகப் பெருக்கவும் முடிந்தது.

அந்த நல்ல விதைகளை உங்களுக்குள் விளையச் செய்வதற்கு மீண்டும் மீண்டும் நினைவாக்கிக் கொண்டு வருகிறேன் (ஞானகுரு).
1.நாம் நன்றாக இருக்க வேண்டும்…
2.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்… என்ற
3,இந்த உயர்ந்த எண்ணத்தை வளர்ப்பதற்காக மகரிஷிகளின் சக்திகளை அருள் ஞான வித்துகளாகப் பதியச் செய்கிறோம்.

இந்தப் பூமி முழுவதும் சுற்றப்பட்டு அந்த அருள் ஞான வித்துக்கள் அழிந்திடாதபடி உங்களுக்குள் அதை விளையச் செய்ய ஒவ்வொரு நாளும் கூட்டுத் தியானத்திலும் பௌர்ணமி தியானத்திலும் இதை உணர்த்திக் கொண்டே வந்திருக்கின்றோம்.

தீமைகளை அகற்றக்கூடிய வாக்காகக் கொடுத்து அதன் வித்தாக உங்களுக்குள் விளையச் செய்யும் பொழுது ஏற்றுக் கொள்வார் எத்தனை பேர் இருக்கிறார்கள்…?

அது போன்று ஆகாதபடி…
1.அருள் ஞானியின் உணர்வுகள் உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகி அது ஓங்கி வளர்ந்து
2.மகரிஷிகளின் அருள் சக்தியாக நீங்கள் ஒவ்வொருவரும் உருப்பெற வேண்டுமென்று எல்லா மகரிஷிகளையும் வேண்டிக் கொள்கிறேன்.

நீர் சக்தி என்ற ஜீவ சக்தியின் முக்கியத்துவம் – ஈஸ்வரபட்டர்

 

ஒவ்வொரு செயலிலும் அதன் வளர்ப்பின் முதிர்வு நிலை (பலன்) எவ்வாறு தெரிகின்றதோ… அதைப் போன்ற மனிதன் பெறும் ஒளி சக்தியைக் கொண்டு…
1.இவ்வெண்ணத்தின் உயர் ஞானத்தால்
2.எதனையும் தெய்வம் நமக்குத் தரும்…! என்ற மனிதனின் உயர்வு குணமாய்
3.எத்தெய்வத்தை மனிதன் எண்ணுகின்றானோ… அத்தெய்வமாய் மனித நிலை ஆக முடியும்.

மனித உணர்வின் எண்ணத்தில் இப்புவியில் வளரவல்ல ஒவ்வொரு தொடரிலும் தன் ஞானத்தைச் செலுத்தி அதன் தொடர் வளர்ப்பின் செயலைப் பார்த்தால்… செயலின் முதிர்வின் தொடர் நிலை வளர்ப்பு முற்றலை அறியலாம்.

நீரின் சுவையே… ஒன்றிலிருந்து வளர்ப்பின் தொடர் பெற்றுப் பிரியும் பொழுது… “உராயும் தன்மையில்” தொடர் நிலை அச்சுவையுடன் ஒட்டி அச்சுவை சக்தியின் ஆவியாகி… அதே தொடரின் பிறிதொன்றில் அந்நீர் ஆவித் தன்மை திடம் கொண்டு… செயல் மோதலின் சுழற்சியில் பல செயல்கள் மாறி மாறி வளர்கின்றன. (நாம் சமைக்கும் நிலையிலிருந்து இயற்கையில் உருவாகும் அனைத்துமே இதற்கு உதாரணம் தான்)

எல்லாச் செயலுக்கும்… காற்று மண்டலத் தொடரில் இந்நீர் ஆவியாகி அமிலமாகித் திடம் கொண்டு மீண்டும் அதிலிருந்து பிரிக்கப்படும் தொடர் நிலையில் “கனம் கொள்ளும் செயல் வளர்ச்சி தான்..!”

“நீரான ஆதி சக்தியின் சக்தித் தொடர்” இஜ்ஜீவ பிம்ப சரீரத்திலிருந்து இச்சரீரத்தை இயக்கும் உயிர் பிரிவதற்குள்ளேயே… இச்சரீரத்தின் ஜீவ ஜெனிப்பில் நீர் சக்தியின் வளர்ப்பின் சத்தாய் இச்சரீரத்திலுள்ள ஒவ்வொரு உயிரணுக்களும்… இஜ்ஜீவ நீரின் உணவைப் பெற்று வாழும் இதன் உணர்வின் எண்ணத்திலேயே உயர் நிலை பெற… நம் செயல் இருக்க வேண்டும்.

எப்படி நீரை ஊற்றி விதைப் பயிரில் அதன் பலன் மகசூலைத் தாவரம் தருகின்றது…?

எப்படி நீர் சக்தியின் தொடர்பில் பூமியில் கனி வளங்கள் அதனதன் வளர்ச்சிக்கொப்ப முற்றிய நிலை பாறையே தன் வளர்ப்பின் முற்றலாய் வைரத்தை வளர்க்கின்றது…?

மண் படிவங்கள் எத்தொடரில் எவ் உலோக வித்து வளர்ந்தாலும் அதன் முற்றலில் படிவங்களாக அதது எடுக்கும் நீர் சக்தியில் தங்கமே மண்ணுடன் கலந்த நிலையும் படிப்படியாகக் குவிந்த தன்மையில் அடர்த்தியாகத் தன் இனத்தைப் பெருக்கும் வளர்ப்பில் அதனதன் இனத் தொடரில் முதிர்வுத் தன்மை பெறுகிறது.

அதனின் தொடர் வளர்ப்பில் கனி வளர்ச்சிக்கு அடுத்த நிலை வளர்ப்பான… மண் வளத்தின் ஆவி அலையில் தாவர இன வளர்ப்பில்… புழு, பூச்சி, ஊர்வன, பறப்பன, இப்படி வளர்ப்பின் முதிர்வுத் தொடர் வரிசையாக வருகின்றது.

இவை ஒவ்வொன்றிலுமே பல மாற்றத்தின் சுழற்சி ஓட்டம் அந்தந்தப் பூமியில் அது எடுக்கும் அலைத் தொடர்புக்கொப்ப ஆதி சக்தியுடன் ஜீவ சக்தியாய் நீர் சக்தியில் சுழற்சி ஓட்டம் சுழலும் முதிர்வில் மனித உரு வருகின்றது.

மனிதனான பின் அறியும் ஞானத்தின் உயர் ஞானப் பகுத்தறிவில் ஜீவநீர் இச்சரீரத்திலேயே முதிர்வின் தொடர் பெற்ற மனிதக்கரு உரு சொல் செயல் எல்லா நிலைகளையும் பெற்ற தன்மையினால் இத்தன்மைக்கடுத்த உயர் செயலுக்கு எண்ணத்தை உயர் காந்த மின் அணுக்களைக் கவரும் ஆற்றல் பெறுகின்றது.

ஆகவே நீருடன் கூடிய இச்சரீரத்தின்
1.ஜீவ அணுக்கள் ஒவ்வொன்றையுமே வீரிய ஒளி பெறச் செய்ய…
2.எண்ணத்தை மேல் நோக்கிச் செலுத்தி வலுக் கூட்டி
3.எவ்வுணர்வின் அலையும் இச்சரீர இயக்கத்தில் வந்து மோதாமல்
4.இச்சரீர உணர்வின் அலை மட்டும் வீரியத் தன்மை பெற
5.எண்ணத்தின் செயலைக் கொண்டு உயிரணுக்கள் ஒவ்வொன்றையுமே வலுக் கூட்ட வேண்டும்.

அத்தகைய வலுக்கூட்டிக் கொண்ட… வீரிய சக்தி பெற்ற உயர் காந்த வலு ஆத்மாவை… இப்பூமி இயக்கத்தில் பிறருடன் தொடர்பு கொள்ளும்… வார்த்தையோடும்… எந்த எண்ண உணர்வும் அது பாதிக்காது.

இவ்வாத்மாவின் வளர்ப்பும் இச்சரீர ஜீவ காலத்திலேயே ஜீவனுடன் கூடிய உணர்வின் எண்ணத்தில் ஒளி சக்தியை ரிஷி சக்தியின் சக்தித் தொடர்புடன் வலுக் கூட்டும் செயலுடனே செயல்படுத்திக் கொண்டே இருத்தல் வேண்டும்.

1.இப்பூமியின் பிடிப்பிலிருந்தும்… வேறு எப்பூமிப் பிடிப்பிலும் சிக்காமலும்
2.எப்பூமியின் எம்மண்டலத்தின் தொடர்பையும் அறியும் வலுவையும் கூட்டி…
3.கூட்டப் பெற்ற வலுவின் செயலை… இச்சரீர இயக்கத்தின் தொடர்பில்
4.புதிய நிலையை ஜீவப் படைப்பில் படைக்கும் வழித் தொடருக்கு ஞானத்தைச் செலுத்திட வேண்டும்.

அத்தகைய முதிர்வை மனிதனால் தான் படைக்க முடியும்.

அன்று சித்தர்கள்… ரிஷிகள் எழுதிய காவியத்தில்…
1.மனித உருவம் கொண்ட தெய்வத்தைக் காட்டி
2.அத்தெய்வத்திற்கு நெற்றியில் கண்ணும் பல கைகளும்
3.ஒரு பாதி பெண்ணாகவும் மறு பாதி ஆணாகவும் காட்டிய தன்மையின் உள் அர்த்தங்கள் பல உண்டு.

ஒவ்வொருவரும் தன் ஞானத்தால் அறிந்து உயர்வு நிலைக்குச் செயல் கொள்ளும் மார்க்கத்தில்… காற்று மண்டலத்தில் தன் வளர்ப்பின் உயர்வை அறியும் ஞானத்திற்குப் பல சக்திகளை சரீர ஜீவிதத்தில் ஒளி பெற்றுப் பல நினைவுகளை அறியலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அன்று காட்டு விலங்குகளுடன் வாழ்ந்து வந்த மனிதர்களோ மற்ற மிருகங்களைக் கண்டு அஞ்சி குகையில் வாழ்ந்தார்கள்.

பகலிலே மிருகங்கள் ஒதுங்கி நிற்கின்றது. இரவிலே இரை தேடி வருகின்றது. தன் உடலுக்குள் இருக்கும் நஞ்சின் தன்மை கொண்டு மிருகங்கள் நுகர்ந்தறியும் ஆற்றல் பெறுகின்றது.

உதாரணமாக
1.பூமிக்குள் வங்கிட்டுக் குடிகொண்டு வாழும் சில உயிரினங்கள்
2.நிலநடுக்கம் வருகிறதென்றால் முன்னாடியே அறிந்து வெளி வந்து விடுகின்றது.

அதே சமயத்தில் மழை வருகிறதென்றால் அந்த உணர்வுகளை நுகர்ந்து எறும்புகளும் எலிகளும் இடம் விட்டு இடம் மாறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று விடுகின்றது.

ஏனென்றால் அவைகளுக்கு அறியும் அறிவு ஜாஸ்தி உண்டு.

1.தனக்குள் இருக்கும் விஷத்தின் தன்மை கொண்டு
2.ஊடுருவும் சக்தியால் கவர்ந்து
3.அந்த நுண்ணிய உணர்வின் அணுக்களை
4.இது தனக்குள் அறியும் தன்மை வருகின்றது.

ஆகவே அது தன்னை அறிந்து செயல்படுகின்றது.

இன்று விஞ்ஞானியோ சாதாரண எலக்ட்ரிக் என்ற நிலைகளை வைத்து எலக்ட்ரான் என்ற நிலையை மாற்றுகின்றான்.

விஷம் கொண்ட உணர்ச்சிகளை ஊட்டும் அல்லது கவரும் தன் உணர்வின் அதிர்வுகளை வெளிப்படுத்தும் உணர்வுகளை அது அதிர்வுகளுக்குத் தகுந்த மாதிரி அந்த உணர்வின் இயக்கத்தை மனிதன் கண்டுணர்ந்தான்.

1.ஒலி நாடாக்களில் பதிவு செய்து
2.அந்த நாடாக்களில் தட்டெழுத்துகளில் எழுதுவது போலத் தட்டினால்
3.அந்த உணர்வின் அதிர்வுக்கொப்ப அதனுடைய செயலாக்கங்கள் எலக்ட்ரானிக்காக மாற்றி
4.இவன் எண்ணும் உணர்வுகளைக் கணக்கிடுகின்றது. உருவமாக்குகின்றது.
5.எத்தனையோ வேலைகளைச் செய்கின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு இவ்வாறு செய்வதை இன்று பார்க்கின்றோம்.

இதே போன்றுதான் (நாம்) நுகர்ந்த உணர்வுக்கொப்ப அதனின் ரூபங்களை உயிர் அமைக்கின்றது.

உயிர் எலெக்ட்ரிக்காக இருந்தாலும் தனக்குள் எலக்ட்ரானிக் என்ற நிலைகள் வரப்போகும் போது உயிர் நுகர்ந்ததை (அந்த) உணர்வுகொப்ப ரூபங்களை மாற்றுகின்றது.

எதிர் நிலைகள் காணும் போது அதிலிருந்து வரும் நுண்ணிய அணுக்களையும் மற்ற உயிரினங்கள் காணுகின்றது. ஆனால் இதை எல்லாம் கடந்து வந்த நாம் மனிதன் இருக்கும் (ஒரே) இடத்தில் இருக்கின்றோம்.

மற்ற உயிரினங்கள் தன் மணத்தால் நுகர்ந்தறிகின்றது.
1.இரையைத் தேடி எண்ணித் தன் மூச்சலைகளை விடும் போது
2.வெகு தொலைவில் இருக்கும் மணத்தையும் கவர்கின்றது.
3.கவர்ந்ததைத் தனக்குள் இருக்கும் விஷத்தால் மோதும் போது
4.அருகிலே வெளிச்சம் தெரிகின்றது
5.அப்பொழுது அதற்குத் தான் போகும் பாதையும் தெரிகின்றது.

அது இருக்கும் இடங்களில் மற்ற உயிரினங்களுக்குக் கண்கள் தெரியும். தன் அருகிலே ஒளி மோதும் போது அந்த வெளிச்சம் வருகின்றது. தன் உணர்வுகளில் அதை அறிகிறது. அதன் வழி அங்கே செல்லுகின்றது.

விஞ்ஞானி “இருளுக்குள் இருப்பதையும்…” படமாக எடுக்கின்றான். இன்று நாம் பார்க்கின்றோம்,

மற்ற உயிர் இனங்களுக்கு மோதலில் எப்படி வெளிச்சம் வருகின்றதோ அதே போல் விஷத்தின் தன்மை கொண்டு அவன் கேமராவில் நிறுத்தப்படும் போது இந்த ஒலி அதிர்வுகள் எதைக் குறி வைக்கின்றானோ படமாக எடுக்க முடிகின்றது.

1.அந்த உணர்வின் அதிர்வினைப் பாய்ச்சி
2.எலக்ட்ரானிக் என்ற நிலைகள் கதிரியக்கப் பொறிகளை வைத்து
3.உணர்ச்சிகளை ஊடுருவச் செய்யும் போது
4.மோதும் உணர்வுகளை வடிவமைத்துக் கொடுக்கின்றது.

பூமியின் அதிர்வை வைத்து பூமிக்குள் வாழும் உயிரினங்கள் நிலநடுக்கத்தை அறிவது போல பல கோடிச் சரீரங்களில் நாம் எப்படி மாறி மாறி வந்தோம் என்ற உண்மையின் உணர்வை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

மகரிஷிகள் கண்ட பேருண்மைகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மை அறியும்படி செய்தார். அந்த ஆற்றல்களையும் எம்மைப் பெறச் செய்தார். அவைகளை என்னாலும் அறிய முடிந்தது.

அந்த உண்மைகளைத்தான் இங்கே உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

இந்த மனித வாழ்க்கை மாய வாழ்வாக இருக்கின்றது… நீ எதைக் காணப் போகிறாய்…? என்று கேட்டார் குருநாதர்

 

1.நோய் எல்லாம் போய்விடும்… நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று யாம் (ஞானகுரு) சொன்னால் எங்கெங்கே…? என்று அதைத்தான் திருப்பிக் கேட்கிறார்கள்.
2.குடும்பத்தில் கஷ்டமாக இருக்கிறது… என்று சொல்வார்கள். “அது எல்லாம் நீங்கிப் போய்விடும்… நீங்கள் நன்றாக ஆகிவிடுவீர்கள்…” என்று யாம் சொல்வோம்.
3.நீங்கள் சொல்கிறீர்கள்… என் பையன் எப்பொழுது பார்த்தாலும் என்னிடம் எதிர்த்துக் கொண்டே இருக்கின்றான்…! என்று சொல்லி
4.யாம் கொடுக்கும் வாக்கினை அப்பொழுதே அதை ஜீவனற்றதாக மாற்றி விடுகின்றார்கள்.

எவ்வளவோ சிரமப்பட்டுத் “தந்திரமாக…” உங்கள் உடலிலே அருள் உணர்வைப் பாய்ச்சி… அருள் ஞான வித்தை உங்களுக்குள் தங்க வைக்க வேண்டும் என்று யாம் முயற்சி செய்கிறோம்.

ஆனால் விளை நிலத்தில் விதைத்த விதைகளை எறும்புகள் எடுத்துச் சென்று எப்படி முளைக்காமல் செய்து விடுகின்றதோ… அதைப் போல்
1.உங்கள் உடலில் ஏற்கனவே பதிந்த சாப அலைகள் நின்று
2.யாம் கொடுக்கும் உபதேச உணர்வுகளை ஆழமாகப் பதிய விடாதபடி அது தடுத்து விடுகிறது.

எம்மிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வார்கள். பின் ஊருக்குப் போய் வருகிறேன் என்பார்கள். ஆனால் அடுத்த கணம் என்னுடைய கஷ்டம் இப்படியெல்லாம் இருந்து கொண்டே இருக்கிறதே என்று திருப்பி
1.நான் கொடுத்த வாக்குகளை விட்டுவிட்டு கஷ்டத்தைத் தான் எடுத்துக் கொண்டு செல்கின்றார்கள்
2.நான் கொடுத்த அருள் வாக்கை இங்கேயே விட்டுவிட்டு கஷ்டத்தைத் தான் வாங்கிச் செல்கின்றார்கள்.

காரணம் இந்த சாப அலைகளே இதற்கு மூலம் ஆகின்றது. அவருடைய குறை அல்ல. ஆகவே நான் உங்களைக் குறையாக எண்ணவில்லை.

முந்தைய நிலையில் உங்களுக்குள் விளைந்த உணர்வுகள் உங்களை அறியாது எப்படி எல்லாம் இயக்குகின்றது…? அதிலிருந்து நீங்கள் எப்படி மீள வேண்டும்…? என்பதைத்தான் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

உங்கள் வீட்டில் ஒருவர் சொன்னபடி கேட்கவில்லை என்றால் உங்கள் மனது எப்படிச் செல்கின்றது…? நன்றாக இருக்க வேண்டும் என்று ஒருவருக்கு எல்லா உதவியும் செய்து கொடுக்கின்றீர்கள். ஆனால் அவரால் அதைச் சரியாகச் செயல்படுத்த முடியவில்லை என்றால் உங்கள் மனது அது எப்படி ஆகின்றது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஆனால் எண்ணிலடங்காத பேர் என்னிடம் வாக்கினை வாங்கிச் செல்கிறார்கள். நீங்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று குருநாதர் கொடுத்த நிலைகளை அப்படியே உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

என்னை எத்தனையோ ஆபத்தான நிலையில் எல்லாம் குருநாதர் சிக்க வைத்தார். ஒவ்வொரு நொடியிலும் அந்த உணர்வின் எண்ணங்கள் உனக்குள் எப்படி இயங்குகின்றது…? நீ எப்படி இருக்க வேண்டும்…? என்று
1.மூன்று லட்சம் பேரின் குடும்ப நிலைகளைக் காட்டி
2.மனித உடலிலே மாய வாழ்வாகத் தான் இருக்கின்றது
3.இதில் நீ எதைக் காணப் போகின்றாய்…? என்றார்

என்றும் நிலையான நிலைகளில் இருக்கும் மகரிஷிகளின் எல்லையை நீ எப்படி அடைய வேண்டும்…? என்று .தெளிவாகச் சொன்னார். இதை எல்லாம் அனுபவ ரீதியில் குருநாதர் காட்டுகின்றார்.

நம்முடைய கடைசி எல்லை அந்த மகரிஷிகளின் அருள் வட்டம் தான். அவர்கள் ஒளிச் சரீரம் பெற்று வாழும் சப்தரிஷி மண்டல எல்லையில் தான் நாம் இருக்க வேண்டும்.. அதைத் தான் பின்பற்ற வேண்டும்…! என்று குருநாதர் எனக்குத் தெளிவாக உணர்த்தினார்.

மனிதச் செயலின் வீரியம் விஞ்ஞானத்திற்கு அடிமைப்பட்டு விட்டது – ஈஸ்வரபட்டர்

 

விஞ்ஞானத்தில் இன்று வரையிலும் இப்பூமியில் ஒலி அலைகளையும் ஒளிக் காட்சிகளையும் காற்றலையில் கலக்கவிட்டுப் பதிவு செய்கின்றார்கள்.

மேலும் இப்பூமிக்கும் மற்றக் கோள்களுக்கும் உள்ள தொடர்பை அறிய… விஷமான அமிலத்தை (CHEMICALS) உலோகத்தில் செலுத்திப் பிற மண்டலங்களிலிருந்து இப்பூமியின் தொடர்பிற்கு வலுவாக்க… வளர்ச்சியுறும் உண்மை நிலை அறிய… விஞ்ஞான சாதனைகளைச் செயல்படுத்தவும்… மனிதனின் எண்ண உணர்வு செயல் கொள்கின்றது.

ஒவ்வொரு மனிதனுக்கும் மனித சரீர ஜெனிப்பில் சாதாரண வாழ்க்கை நிலையில் ஆயுட்காலம் அதது எடுக்கும் தன்மை கொண்டு எப்படியும் சராசரி அறுபதோ எழுபதோ எண்பதோ ஆண்டுகள் தான் இருக்கப் போகின்றது.

விஞ்ஞானத்தால்… பிற மண்டலங்களுக்குச் செல்லவும் அங்குள்ள உண்மை நிலையறியவும் கருவிகளின் நிலையால்
1.இன்றைய கருவியின் செயற்கைக்கு மின் காந்த அலையை
2.இயற்கையில் மனிதனின் உணர்வு எண்ணத்தை வளர்க்கவல்ல உயர்காந்த நுண்ணிய மின் அணுக்களை
3.விஞ்ஞானிகள் செலுத்தும் செயல் சாதனைக்கு அனுப்பப்படும் செயற்கைக் கோள்களினால் கிடைக்கப் பெற முடியாது…!

இன்று மனிதனால் பெறப்பட்டு வளரும் உயர் காந்த மின் அலையின் செயல்… இக்கோள்களில் (SATELLITES) செலுத்தப்பட்டு செயற்கையில் ஒலி பரப்பப்படும் தொலைக்காட்சிகளில் ஒளிப் படங்கள் வண்ண ஒளிப் படங்கள் ஒலி அலை வானொலிப் பெட்டி தொலைபேசி மற்றும் பல மின் ஒளிச் சாதனங்களுக்காகப் பிரித்து எடுக்கின்றனர்.

இவ்வாறு மின் காந்த அலைகளைப் பிரிப்பதினால் மனித எண்ண உணர்விற்கு நேரடியாகக் கிடைக்கப் பெற வேண்டிய… உயர் ஞான எண்ணத்தை அறியவல்ல… தன்னைத்தான் உணர்ந்து செயல்படச் செய்யும் இயற்கையான சக்திகளைப் பெற முடியாத நிலை உருவாகி விட்டது.

தனக்குள் உள்ள இறை சக்தியை.. எண்ணத்தின் உணர்வால் வலுவாக்கி வளரும் ஜீவித சரீரத்தை “இச்செயற்கை அலைகள்… சூழ்ந்து விட்டது…!

ஜீவ சரீரத்தில் ஜீவ சரீரமுடன் மனிதனுக்கு மனிதன் பேசப்படும் உறவு படுத்திக்கொள்ளும் உணர்வின் செயல் வளர்ப்பிற்கு…
1.வானொலியில் கேட்கப்படும் ஒலி அலைக்கும்
2.தொலைக் காட்சியில் காணும் ஒளி அலைக்கும்
3.இச்சரீரத்தின் உணர்வைச் செலுத்தும்பொழுது
4.அதே உணர்வைத்தான் இச்சரீரம் எடுக்க முடியும்.

செடிக்குத் தண்ணீரை ஊற்றினால் அதைத் தனக்குச் சத்தாக எடுத்து வளருகின்றது. அதுவே காய்ச்சிய நீரை… ஆற வைத்து ஊற்றினாலும் அச்செடிக்கு வேண்டிய ஜீவ சக்தி கிடைக்காது. அதனால் அத்தாவரம் வளர்வதில்லை.

அதைப் போன்று இச்சரீர உணர்விற்கு செயற்கை மின் காந்த ஒலியைக் கேட்கும் உணர்வினால் இச்சரீர ஜீவ ஆத்மாவானது…
1.தன் உயர்வு நிலைக்குத் தேவையான எண்ணத்தின் உணர்வு எடுக்கும் கவன நரம்பின் பொட்டின் பதிவிற்கு
2.உயர் காந்த மின் ஜீவ அலை உணர்வை எடுக்கவல்ல வளர்ச்சி நிலை குன்றி விட்டது.

ஏனென்றால் எண்ணத்தின் உணர்வுகள் எவ்வலையை எடுக்கின்றதோ அதே நிலையைத்தான் இச்சரீர நிலையில் வளர்க்கும் நிலை உள்ளது.

இன்றைய மனித உணர்வின் எண்ணங்களே… செயற்கை அலையை அதிகமாகக் கேட்டு… பார்த்து… பழக்கப்படுத்தி வளர்த்துக் கொண்ட வலுவினால்… எதனையும் உணரும் பக்குவம் மாறி… இவ்வாத்மாவையே செயற்கை அலையுடன் செயல்படுத்தும் முறைக்கு மாறி விட்டது.

ஆகவே..
1.இவ்வாத்மாவை இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக்கு அடகு வைக்கும் வாழ்க்கையையும்…
2.தன்னைத்தான் உணராமல் பித்தனாக வாழும் மனிதச் செயல்களையும்…
3.தன் ஆறாவது அறிவின் துணை கொண்டு மாற்றி ரிஷிகள் காட்டிய மெய்யை வளர்க்க வேண்டும்.

இப்பூமியின் மண் வளங்கள் அது எடுக்கும் அலை ஒன்று. அதே மண் வளத்தின் தொடர்பில் வளரும் தாவரம்… தன் உணவை எடுத்து வளர்ந்து பலன் தருகிறது. ஆனால் எண்ணமில்லாத உணர்வு… செயலுடன் அது வளருகின்றது.

மிருகத்தின் நிலையோ… தனக்கு வேண்டிய உணவைத் தேடவும் புசிக்கவும் எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் உறங்கவும் தன் உணர்வின் இச்சையில் தேவையை அறிந்து கொள்ளவும் தன் ஐந்தறிவைக் கொண்டு வாழ்கிறது.. வளர்கிறது.

ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் இக்குறுகிய நூற்றாண்டில் விஞ்ஞானத்தின் பெருக்கத்தால் தன்னைத் தானே உணராத நிலைக்குச் சென்று செயற்கையின் பிடிப்பிலேயே சிக்குண்டு விட்டான்.

1.செயற்கை ஒலி அலைகளையும் தொலைக்காட்சி ஒளி அலைகளையும்
2.தன் எண்ணத்தின் உணர்வில் பதியவிடும் அலையினால்
3.மனிதனுக்குக் கிடைத்துள்ள ஆறறிவு பொக்கிஷமான பகுத்தறியும் உயர் ஞானத்தையே
4.தவற விடும் நிலைக்கு இன்று கொண்டு வந்து விட்டார்கள்.

இது தான் இன்றைய உண்மை நிலை…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

போகன் அவன் தான் பல கோடித் தாவர இனச் சத்தை நுகர்ந்தறிந்து விண்ணின் ஆற்றலை நுகர்ந்தறிந்த பின் அவன் செயலின் தன்மை “உலகம் முழுவதற்கும் வலம் வரும் தன்மையாக… சுழன்று வந்தான்”.

எவ்வாறு இன்று ரேடியோவில் உலகம் முழுவதும் ஒலி அலைகளைப் பரப்புகின்றமோ இதைப்போல அவன் கவனக் குளிகை என்ற நிலைகளில் செயல்பட்டான்.

பல தாவர இனச் சத்தைத் தனக்குள் உயர்ந்த சக்தியாக எடுத்து
1.மற்ற தாவர இனங்கள் இதே இனங்கள் எங்கெங்கெல்லாம் இருக்கின்றதோ
2.அங்கே இந்த உணர்வின் தன்மை அதனுடைய நிலைகள் எண்ணப்படும் போது
3.அதன் ஈர்க்கும் நிலையாக
4.இந்த உயிரான்மா இந்த உடலயே அழைத்துச் செல்லுகின்றது.

பல வகையான பறவை இனங்கள் மற்ற எங்கெங்கோ இருப்பினும் அதனதன் வேனில் காலங்களை அறிந்துணர்கின்றது.

ரஷ்யாவிலேயோ அமெரிக்காவிலேயோ பிரான்சிலேயோ உருவான அந்தப் பறவைகள் அதன் காலக் கெடுகள் முடியும் போது அதனின் உணர்வான இனங்கள் கொண்ட அந்த நிலையை நுகர்ந்து திசை நோக்கிக் கவர்ந்து இடம் மாறுகின்றது (MIGRATION).

“யாரும் சொல்லவில்லை…!” என்றாலும் தன் எல்லையை அறிந்து அங்கே வந்து காலங்களைக் கழித்து தன் இனப் பெருக்கத்தைக் கூட்டுகின்றது. அந்தப் பருவத்திற்குத் தக்கவாறு இனப் பெருக்கத்தைக் கூட்டியபின் மீண்டும் தன் இருப்பிடமே செல்லுகின்றது.

இனப் பெருக்கத்திற்கு காலம் உகந்ததாக எண்ணி பறவைகள் அவ்வாறு செய்கின்றது. இதைப் போலத் தான் அன்று போகன் பல உயிரினங்களின் உணர்வை நுகர்ந்தறிந்து அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பருகும் சக்தி பெற்றான்.

அவன் தாயின் எண்ண நோக்கம் அதனின் மெச்சிய உணர்வுகள் இவன் உடலுக்குள் சென்ற பின் அந்த நிலையைச் செய்து அவனால் உலகம் அறியும் நிலையும் இவன் நுகர்ந்தறிந்து தன் உணர்வின் செயலால் மற்றோர் இடத்திற்கு இவன் பறந்து செல்லும் நிலையை அவன் பெறுகின்றான்

பட்சிகள் தான் சிறகடித்தாலும் மிதக்கும் தன்மை கொண்ட உணர்வுகள் அதை மிதக்கச் செய்கின்றது.

கோழி இனமும் அதுவாக இருப்பினும் எடை கூடும் நிலைகளைத் தன் எடை குறைக்கும் நிலை அற்றது. அதனால் பறக்கும் நிலை அதற்கில்லை.

இன்று நாம் காரை ஓட்டுகின்றோம். அதிகமான வேகத்தில் ஓட்டும் போது பறக்கும் நிலை அடைகின்றது. ஆனால் பறக்கும் நிலை வந்தால் இதனுடைய நிலை திசை மாறுகின்றது. எங்கே மோதும்…! என்று சொல்ல முடியாது.

1.காற்றழுத்தத்தை எதிர்க்கும் ராடர் (RADAR) என்ற நிலைகள் அமைத்து
2.அதனின் செயலாக உருவாக்கப்படும் போது காற்றழுத்தத்தைச் சமாளித்து
3.மிதக்கும் தன்மை பெறுகின்றது “விமானம்”.
4.பறவைகளும் காற்றழுத்தத்தைச் சமாளித்துத்தான் தனக்குள் மிதக்கும் உணர்வின் தன்மை பெற்றது.

இருப்பினும் தான் நுகர்ந்தறிந்த திசையை அறிந்து வரும் இந்த நிலைகள் பெற்ற இந்தப் பட்சியின் தன்மையைப் போகன் கண்டுணர்ந்தான்.

மற்ற பட்சிகளின் உணர்வின் சத்தை அதன் பாச ஒலியை அதிலிருந்து இந்தத் தாவர இனங்களை நுகர்ந்தறிந்த அவன்
1.மற்ற பட்சிகளின் அந்த உணர்வு இயக்கமும்
2.அதில் எழும்பும் நாதத்தை இவன் கண்டுணர்ந்து
3.அது வெளிப்படுத்தும் உணர்வை நினைவு கொண்டு
4.கண் கொண்டு கூர்ந்து அதை நுகர்ந்தறிந்து
5.அதை மோகித்து அதைப் போகித்தான் தன் உடலுக்குள்.

இவ்வாறு சென்றடைந்த இந்த உணர்வு கொண்டு தான் அவன் விண்ணிலே தன்னிச்சையாகப் “பறக்கும் நிலை…” பெற்றான்.

பறக்கும் நிலை என்றால்
1.உடலைத் தனக்குள் ஆவியாக மாற்றி
2.அதனின் உணர்வு கொண்டு எங்கே செல்லுகின்றோமோ குவித்து
3.அங்கு இறங்கும் நிலை பெற்றான்.

உடலைக் கடந்து அவன் மேலே பறந்து செல்லவில்லை.

மாந்திரீகத்தில் ஓர் இடத்திலே ஒரு பொருளை வைத்துவிட்டு மனிதனில் உடலில் விளைய வைத்த இந்த உணர்வின் சத்தைக் கவர்ந்து அது இன்னொரு இடத்தில் மீண்டும் அதைக் காண்பிப்பார்கள். இதைக் கரையான் மந்திரம் என்று சொல்வார்கள்.

கரையான் எவ்வாறு தன் மேலே உருவாகும் அந்த உணர்வின் வேட்கைகள் மரத்தில் பட்டபின் பெரும் வைரம் போல் உள்ள மரமாக இருந்தாலும் ஆவியாகக் கரைந்து அது மண்ணாக மாற்றி விடுகின்றது.

அதனின் சத்தை உணவாக உட்கொண்டு இந்தக் கரையான் தன் உணர்வின் செயலாக அது இயக்குகின்றது. இதைப் போன்று தான் கரையான் மந்திரத்தைக் கற்றுணர்ந்தவன் இந்த உணர்வின் சத்தைத் தனக்குள் எடுத்தான்.

மந்திர ஒலிகள் சொல்பவர்கள் இந்தப் பொருளை அதற்குள் இணைத்த பின் உலோகமாக இருந்தாலும் மனிதன் செயற்காகச் செய்த பொருளாக இருப்பினும் அதனை உருகச் செய்யும் மறையச் செய்யும் உணர்வின் சத்தை அதன் மேல் பாய்ச்சியபின் அந்தப் பொருள் ஆவியாக மாறிவிடும்.

பின் டப்பாவை மூடி விட்டு அதில் சிறு ஓட்டையைப் போட்டு விட்டு ஈயம் வைத்துப் பற்ற வைத்து விட்டால் கடுகளவு இருக்கக்கூடிய ஓட்டைக்குள் அது அங்கே டப்பாவில் நிற்கும் அளவுக்கு எந்தப் பொருளோ அது உள்ளே நிற்கும்.

கரைத்து ஆவியாக அந்த டப்பாவிற்குள் இருப்பதை மீண்டும் அவன் சொல்லும் எதிர்மறை விட்டபின் அது உறைந்து அப்பொருளாக மாறும். இதுதான் மந்திரங்களில் இப்போது செயல்படுவது.

1.தங்கம் வா…!
2.எலுமிச்சம்பழம் வா…!
3.ஆப்பிள் வா…!
4,லிங்கம் வா….!
4.அது வா இது வா என்ற நிலையும்
5.வேப்ப இலையைக் கசக்கிய பின் தங்கம் வருவதும்
6.வேப்ப இலையைக் கசக்கிய பின் சிலைகள் வருவதும்
“எல்லாம்…” இந்த நிலை தான்.

செய்வினை வைத்திருக்கின்றார்கள் என்று சொல்வார்கள். மண்ணிற்குள் தோண்டிய நிலைகள் பார்த்தவுடனே செய்வினை செய்து விட்டான் என்று நம்மை “ஏமாற்றுவதும்…” இப்படித்தான்.

1.யாரும் செய்யவில்லை
2.அவன் செய்தான்… இவன் செய்தான்… என்று இவனே செய்கின்றான்.
3.இவனே எடுக்கின்றான் பொருளைக் காட்டுகின்றான்.
4.நினைவு படுத்துவதும் அவனே நமக்குள் நினைவு கூறும்படிச் செய்பதும் அதேதான். (மந்திரங்கள் செய்யும் படி)

போகமாமகரிஷியோ தான் கண்டறிந்த உணர்வின் தன்மையை இந்த உடலைப் பிரித்து மற்றதைச் செய்தாலும் அவன் கண்டுணர்ந்த நிலையை தன் உடலைக் காயகல்பமாக மாற்றினார். உயிருடன் ஒன்றும் உணர்வை ஒளியாக மாற்றினான்.

இந்த உணர்வின் நிலையை இங்கே உறையச் செய்த உடலை நிறுத்தி விட்டு தன் உடலின் தன்மை கொண்டு உணர்வை ஒருங்கக் குவித்துத் தான் எண்ணிய இடத்தில் இந்த உடலை மீண்டும் குவிக்கச் செய்து உருவானான்.

இப்படி வந்தவன் தான் அவன்.

ஆதியிலே ஒரு கோள் உருவாகி அது கரைந்து மீண்டும் உயிரினங்கள் ஒன்று சேர்த்து மற்ற உணர்வின் தன்மை சேர்த்து எப்படிப் பரிணாம வளர்ச்சி வந்ததென்ற நிலையை அன்று அந்த அகஸ்தியன் கண்டுணர்ந்ததை அவன் அறிகின்றான்.

அவ்வாறு அகஸ்தியன் உணர்வால் அறிந்துணர்ந்த நிலைகள் கொண்டு இவன் மீட்டு இந்த உணர்வின் சக்தி அந்தத் தாயின் பேரன்பால் இரு நிலைகள் கொண்டு அனைத்தும் அறியும் தன்மை அங்கே அவனுக்கு வருகின்றது.

இவ்வாறு வளர்ந்தவன்தான் பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் அறிந்து ஒவ்வொரு சரீரத்திலும் இணைந்துக் கொண்ட உணர்வின் சத்துக்கள் அந்த உணர்வுகளுக்கொப்ப உடல்கள் எவ்வாறு உருவானது என்றும் அறிகின்றான்.

மனிதனின் நிலைகள் கொண்டு உட்கொள்ளும் உணவில் உள்ள நஞ்சினை மலமாக மாற்றி விட்டு நல்ல உணர்வின் சத்தை நமக்குள் எப்படி உடலாக மாற்றுகிறது என்று அறிந்தான்.

அந்த உடலிலிருந்து வரக்கூடிய மணத்தை நுகர்ந்தறிந்து தீமைகளை அகற்றிடும் செயலாக கார்த்திகேயா என்று அறிந்தான்.

அருள் சேவை

 

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி நாம் அனைவரும் ஐக்கிய உணர்வாக எண்ணி அந்த மெய் உணர்வின் சத்தைப் பெற வேண்டும்.

குருநாதர் ஏனோ… எதற்கோ.. எதுவோ சொன்னார்…! என்ற நிலைகள் வேண்டாம்.
1.இவ்வழியை எவர் ஒருவர் சீராகப் பெறுகின்றாரோ… நீ பெறச் செய்கின்றாயோ…
2.அங்கே நீ என்னைக் காணலாம்…! என்று தான் எனக்கு (ஞானகுரு) ஒரு கட்டளை இட்டார் .

ஆகையினால் அவர் பெற்ற ஆற்றல் மிக்க சக்தியை அவர் எனக்கு உபதேசித்த உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் பருகச் செய்து… பெறச் செய்து… பதியச் செய்து கொண்டே வருகின்றோம்.

எந்த அளவிற்கு இதை நீங்கள் ஏங்கிப் பெற்று வளர்த்துக் கொள்கின்றீர்களோ…
1.எங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை எங்களால் நீக்க முடிந்தது…
2.எங்கள் சொல்லால் பிறருடைய தீமைகளும் அகன்றதைத் பார்க்கின்றோம் என்று எப்பொழுது சொல்கின்றீர்களோ
3.அங்கே குருநாரை உங்கள் ரூபமாகப் பார்க்கின்றேன்.

எத்தகைய தீமை உள்ளவர்களைப் பார்த்தாலும்
1.நாங்கள் பார்த்த பின் தீமைகள் அங்கே அகன்றது.
2.எங்கள் நினைவாற்றலால் குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் நீங்கியது.
3.எங்கள் பார்வையால் தொழிலும் விவசாயமும் செழித்தது என்று
4.இதைப் படித்துணர்ந்தோர் உணர்வுகளில் இதைப் பெறும்படி நீ செய்ய வேண்டும் என்று தான் குருநாதர் சொன்னார்.

ஆகவே நீங்கள் எல்லோரும் அந்தத் தகுதி பெற வேண்டும் என்று உங்களைத் தான் நான் தியானிக்கின்றேன் .
1.உங்கள் உயிரைத் தான் கடவுளாக மதிக்கின்றேன்.
2.உங்கள் உணர்வைத்தான் தெய்வமாக எண்ணுகின்றேன்.
3.உங்கள் உடலைத் தான் சிவமென்று மதிக்கின்றேன்
4.உங்களுக்கு வழி காட்டும் கண்களைக் கண்ணனாக மதிக்கின்றேன்.
5.உங்கள் உடலுக்குள் சர்வத்தையும் கவர்ந்து வளர்த்திடும் சக்தியை மகா லட்சுமியாக மதிக்கின்றேன்.
6.உங்களுக்குள் சர்வத்தையும் அறிந்திடச் செய்யும் சக்திகளை மகா சரஸ்வதி என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் காணுகின்றேன்.

இந்த உபதேசத்தைப் படித்துணர்ந்த நீங்கள் ஞானிகளின் உணர்வை எங்களுக்குள் வளர்த்துக் கொண்டோம்… மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெற்றோம்… எங்கள் பார்வையால் சொல்லால் செயலால் எல்லோருக்கும் நல்லதானது…! என்று நீங்கள் அனுபவபூர்வமாகச் சொன்னீர்கள் என்றால் அங்கே ஈஸ்வராய குருதேவரை நான் காணுகின்றேன்.

மனிதனாக இருக்கும் நாம் அனைவருமே படைத்திடும் ஆற்றல் பெற்றவர்கள். நாம் அனைவரும் ஒருக்கிணைந்த நிலையில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று நம் மூதாதையர்கள் அனைவரையும் விண் செலுத்தி இந்த விஞ்ஞான அறிவால் வரும் பேரழிவிலிருந்து நாம் மீளவேண்டும்… மற்ற மக்களையும் காக்க வேண்டும்…!

ஞானக்கண் என்ற நம்முடைய கவன ஈர்ப்பு நரம்பு – ஈஸ்வரபட்டர்

 

நாம் மேல் நோக்கிப் பார்த்து எடுக்கின்ற சமமான உணர்வு கொண்டு வளர்க்கப்படும் எண்ணத்தின் உணர்வைப் புருவ மத்தியில் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி நான்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று எண்ணி எடுக்க வேண்டும்.

அத்தகைய நுண்ணிய அலைகளைச் சுவாசித்து எடுக்கும் பொழுது நம் எண்ணங்கள் அனைத்தும் ரிஷிகளின் எண்ணமுடன் கலக்கின்றது.

ஆக… சப்தரிஷிகளினால் இன்று இப்பூமியில்… எப்பூமியிலிருந்து தான் வளர்ந்து வலுக்கூட்டி… இன்றும் தன் வளர்ப்பின் வளர்ப்பாக மனித எண்ணத்தின் பகுத்தறிவை வழி நடத்துகின்றனரோ… அவர்களின் எண்ணமுடன் நம் எண்ணத்தை செலுத்தி… அனுதினமும் தியானித்து அந்தச் சக்திகளை நாம் ஈர்க்க வேண்டும்.

அத்தகைய தியான ஒளி ஈர்ப்பினால்
1.இச்சரீரத்தை இயக்கவல்ல ஆத்மாவில்…
2.அன்று சித்தர்கள் காட்டிய ஞானக்கண் என்ற கவன நரம்பின் பொட்டுத் தன்மையின் மூலம்
3.நாம் எடுக்கும் சுவாசத்தால் எந்த ரிஷிகளின் அலையை எடுக்கின்றோமோ
4,அவ்வலையைச் சிறு மூளைக்குச் செலுத்தி
5.ஆத்மாவின் செயலுக்கு வலுத் தருகின்ற புருவத்தின் நடு மையத்தில் பொட்டில்
6.கவன நரம்பு செயல்படுகின்ற “பருப்பு போன்று… சிறு அளவில் செயல்படுகின்ற கருவி…”
7.இப்பூமியின் சமைப்புக்கு முன் நாம் எடுக்கின்ற நேரடி ஈர்ப்பால்
8.அதற்குகந்த எண்ணத்தின் வளர்ச்சியின் வலுவை அந்தக் காந்த நுண் அலைகள் மூலம் பெற முடியும்.

இயல்பாக… நம் கண்ணின் ஒளியில் எதிரில் காணும் பொருள்களை எல்லாம் சூரியனின் ஒளியோ மற்ற ஒளிகளோ உள்ள வெளிச்சத்தில் தான் கண் பார்த்துப் படம் எடுக்கின்றது.

ஆனால் இக்கவன நரம்பில் பொட்டின் பதிவு பெறும் காந்த நுண் அலையின் வளர்ச்சி கொண்ட வலுத் தன்மையினால் விழியை மூடிக் கொண்டே எண்ணத்தின் உணர்வைச் செலுத்தும் நிலைகளை
1.இருட்டிற்குள் எப்படி வெளிச்சத்தைக் காட்டி அதிலுள்ள உண்மைகளை இவ்விழி படமெடுத்து அறியும் இன்றைய நிலையை
2.வலுப்படுத்தப்பட்ட ரிஷிகளின் ஒளியிலிருந்து எடுக்கப்பட்ட காந்த நுண் அலைகள் கொண்டு
3.இச்சரீரத்தில் வளருகின்ற பல கோடி அணுக்களின் வீரியத் தன்மை உணர்வையும்
4.இப்பொட்டில் பதிவாக்கப்பட்ட ஒளித் தன்மை வளர்ச்சியினால்
5.விழியை மூடிக் கொண்டே பிரகாசத் தன்மையில் நாம் காணலாம்.

இதன் வலு வளர வளர… நாமிருக்கும் இடத்திலிருந்தே எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி மண்டலத்தின் உருத்தன்மையும்… உருப்பெறும் மாற்றுத் தன்மைகளையும் அறிய முடியும்.

நடக்க இருக்கும் நிலைகளையும் முன் கூட்டியே அறிந்திட முடியும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக ஒரு குளவி புழுவைக் கொட்டுமேயானால் அந்தப் புழு உடலில் குளவியின் விஷத் தன்மை பரவியபின் அந்தப் புழுவே குளவியாக மாறுகிறது.

அதே போல் உடல் சுருங்கி வேதனையுடன் இருக்கும் ஒருவருடைய உணர்வை உற்றுப் பார்க்கும் நாம் அந்த வேதனையான உணர்வுகளை நுகர்ந்தோம் என்றால்
1.அது நம் உடலில் இரத்த நாளங்களில் கலந்து
2.நல்ல அணுக்களில் விஷங்கள் பரவி விடுகிறது.

புழு குளவியாக மாறுவது போல நுகர்ந்த உணர்வின் விஷத்தின் தன்மைக்கேற்ப நம் உடலின் அணுக்களின் தன்மை மாறுகிறது.

1.நம் உடலில் அணுக்கள் மாறும் போது
2.நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட உறுப்புகள் சுருங்கத் தொடங்குகிறது
3.நம் உருவமும் சுருங்கத் தொடங்குகிறது
4.எண்ணமும் சுருங்கத் தொடங்குகிறது
5.செயலும் மாற்றப்படுகிறது.

இதைப் போன்று நம் வாழ்க்கையில் பல கோடிச் சரீரங்களில் இருந்து தீமைகளை வென்று வென்று வென்று வென்று… தீமையை வென்றிடும் சக்தி பெற்ற மனித உடலை நாம் பெற்றுள்ளோம்.

நமது உடல் நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்துள்ள நஞ்சை மலமாக மாற்றுகிறது. நல்லதை நம் உடலாக மாற்றிக் கொள்கிறது.

அதே சமயம் நம் உடலில் இருந்து வரக்கூடிய மணம் எதனையும் தெரிந்து கொண்டு தீமை என்ற நிலை அகற்றும் வலிமை பெற்றது. “கார்த்திகேயா…” என்றும் அறிந்து கொள்ளும் உணர்வாக வருகிறது,

தீமை என்ற உணர்வை அறிந்து கொண்டால் நம் உடலில் உள்ள ஆறாவது அறிவு சேனாதிபதியாக இயங்கி நம்மைப் பாதுகாப்பாக இயக்கச் செய்கிறது.

தீமை என்ற உணர்வு அறிந்து கொண்ட பின் தீமையை நம் உடலில் சேர்க்காது ஆறாவது அறிவு நமக்குள் பாதுகாப்பாக இருக்கின்றது.

அதே சமயத்தில் ஆறாவது அறிவு கொண்டவராக இருந்தாலும் வேதனை என்ற உணர்வுகளை நுகரப்படும் போது நம் உயிர் விஷத்தின் தன்மையை பிரம்மமாக உடலாக மாற்றி விடுகிறது.

தீமை என்ற உணர்வுகள் நமக்குள் புகாது தடுக்க வேதனை நீக்கிய அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நம் எண்ணத்தால் கவர்ந்து நம் உயிருடன் இணையச் செய்யும் போது அந்த உணர்வுகள் வேதனையை நீக்கும் அருள் உணர்வாக மாறுகிறது.

வேதனையை நீக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகருவோமானால் இந்த விஷத்தை வெல்லலாம்.

விஷத்தை வெல்லும் உணர்வுகள் நம் உயிரிலே சேர்த்தால் இந்த உணர்வுகள் நம் இரத்த நாளங்களிலே கலந்து விஷத்தின் வலுவைக் குறைக்கிறது.

வலுவைக் குறைக்கப்படும் போது வேதனைப்படுபவனைப் பார்த்து
1.அவன் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்
2.அவன் உடல் நலம் பெற வேண்டும்,
3.அவன் பிணியிலிருந்து விடுபட வேண்டும்,
4.அவன் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று
5.இந்த உணர்வுகளை அடுக்கடுக்காக உடலுக்குள்ளே செலுத்த வேண்டும்

அப்பொழுது அவன் வேதனைப்பட்ட உணர்வுகள் நமக்குள் வராது தடுக்கப்படுகின்றது. துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுக்கும் பொழுது வேதனையின் வீரியத்தைக் குறைத்து
1.அவன் நலம் பெற வேண்டும் என்ற உணர்வு கலக்கப்படும் போது
2.நலம் பெறும் அணுக்களாக நமக்குள் உருவாகிறது.
3.நலம் பெறும் அணுக்களாக நமக்குள் உருவானால்
4.நமக்குள் இந்த உணர்வின் சக்தி நல்ல உணர்வின் உடலாக மாற்றுகிறது.

அருள் உணர்வுகள் நம் உயிரான்மாவில் பெருகி அருள் ஞானியாக நாம் ஆக முடியும்.

அழியா ஒளிச் சரீரம் பெற்றுப் பேரானந்த நிலை அடைவதற்கு குருநாதர் எனக்குக் கொடுத்த அனுபவம்

 

எனக்குள் (ஞானகுரு) இருளச் செய்து கொண்டிருக்கும் உணர்வுகளை நான் அறிந்திடும் வண்ணமாக குருநாதர்… அவருக்குள் அறிந்திடும் சக்தியாக வளர்த்துக் கொண்ட உயர்ந்த உணர்வுகளைச் சொல்வாக்காக எனக்குள் பதிவு செய்தார்.

அவர் கொடுக்கும் அந்த அருள் சக்திகள் எவ்வாறு இயங்குகின்றது என்று எனக்கு உணர்த்தி… அந்த அருள் ஞான வித்துக்களை எனக்குள் குருநாதர் விளையச் செய்திருந்தாலும்
1.என்னுடைய மனித வாழ்க்கையில் நான் ஏற்கனவே வளர்த்துக் கொண்ட உணர்வுகள்
2.அவர் கொடுத்த அருள் சக்தியை நான் அறிய முடியாது இயக்கி
3.மீண்டும் இருள் சூழ்ந்த நிலைக்கே மங்கச் செய்து கொண்டு வந்தது.

காரணம்… ஒரு பொருளுடன் நஞ்சு இணைந்து விட்டால் மீண்டும் அதில் எந்தப் பொருளைப் போட்டாலும் அதுவும் நஞ்சின் செயலாகவே மாறிக் கொண்டிருக்கும் என்பதை உணர்த்துவதற்காக எனக்குப் பல அனுபவங்களைக் கொடுத்தார்.

என்னுடைய இந்த மனித வாழ்க்கையில்
1.நான் வளர்த்துக் கொண்ட ஆசைகள் கொண்டும்
2.எனக்குள் மதிப்பைத் தேட வேண்டும் என்ற உணர்வுகள் கொண்டும்
3.சுய கௌரவத்தை மனதில் வைத்துக் கொண்டும் நான் இயக்கப்படும் போது
4.அடுத்தவர்கள் என்னை ஏளனமாகப் பேசுகின்றனர்
5.பைத்தியக்காரனுடன் (ஈஸ்வரபட்டர்) சுற்றிக் கொண்டிருக்கிறான்
6.பிழைக்கத் தெரியாதவன் என்று இழிவான பேச்சுகளாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

நான் எங்கே போனாலும் சரி… என் நண்பனே என்னால் அவன் சௌகரியப்பட்டிருந்தாலும் கூட “பைத்தியக்காரன்…” என்று என் கண் முன்னாடியே என்னைப் பேசுகிறான்.

தெரிந்தவர்கள் என்று ஒரு கடையிலே போய் உட்கார்ந்தாலும் கூட பைத்தியத்துடன் சுற்றிக் கொண்டிருக்கின்றாய்… நீயும் ஒரு பைத்தியம்… நீ இங்கே உட்கார்ந்தால் தரித்திரம் பிடித்துவிடும்… போ…! என்று விரட்டி விட்ட நண்பர்களும் உண்டு.

குருநாதரோ… மிகப்பெரிய சக்திகளை எனக்குக் காட்டி அது எவ்வாறெல்லாம் விளைகிறது…? என்ற நிலையையும் பல அற்புதங்களையும் என்னையே செய்யச் சொல்கிறார். அற்புதங்களை என்னை நேரடியாகவேக் காணச் செய்கிறார்.

அதை எல்லாம் செய்து “பொருளை அறியும் ஆற்றலும்…” அறிந்தபின் அது உருபெற்று அதனால் வாழ்க்கைக்கு எவ்வளவு லாபங்கள் (பணம்) வரும் என்று இந்த உடலின் தன்மையிலேயும் ஆசையை ஊட்டுகிறார்.

அதே சமயத்தில் மகரிஷிகளின் அருள் ஆற்றலைப் பெற்று இந்த உடலில் வந்த இருளை நீக்கிப் “பெரும் செல்வமான பேரானந்த நிலைகள் எவ்வாறு பெறலாம்…?” என்ற நிலையைக் குருநாதர் காட்டினாலும்
1.அவர் கொடுக்கும் சக்திகளை வைத்து
2.இந்த மனித வாழ்க்கையில் என்னை நீங்கள் மதிக்க வேண்டும்
3.எல்லோரும் என்னைப் போற்ற வேண்டும்… என்னைச் செல்வந்தனாக மதிக்க வேண்டும்
4.எனக்குள் பெரும் சக்தி இருக்க வேண்டும் என்ற இந்த எண்ணம் தான் எனக்கு அதிகமாக வந்தது

ஆக… ஒரு பக்கம் பேரும் வரும்… புகழும் வரும்… காசும் வரும்… மகிழ்ச்சியும் ஊட்டுவார். ஆனால் என் வீட்டிற்குள் வந்தால் கடும் தரித்திர நிலையைக் காட்டுவார்.

அப்போது தான் ஒன்றைச் சொல்வார்…!

எதன் வழிகளிலே நீ தேடினாலும் அது இருள் சூழ்ந்த நிலைக்கே இந்த உடலின் பற்றுக்கே வருகிறது. உடலின் பற்றுக்கு வந்தால் நான் கொடுத்த பெரும் சக்திகள் மறைந்து விடும். இருளைப் போக்கும் நிலையை அறுத்துவிடும் என்றார்.

அதே நேரத்தில் இன்னொன்றையும் காட்டுகின்றார் குருநாதர்.

பூமியில் இருந்து மனிதனாகப் பிறந்த நீ
1.இந்த உடலை விட்டு எவ்வாறு வெளியே செல்ல வேண்டும்…?
2.சென்றபின் எந்த நிலையில் நீ நிலைத்திருக்க வேண்டும்…? என்று அதையும் ஒரு பக்கம் காட்டுகின்றார்.

அதாவது…
1.உடலை விட்டுப் பிரியச் செய்கிறார்…
2.ஒளியின் சுடரைக் காட்டுகின்றார்…
3.ஒளியின் சுடராக ஆனபின் அது எந்த நிலையில் இருக்கும்…? என்று
4.இந்த உடலை விட்டுச் சென்றபின் அதையும் நிலைத்துக் காட்டுகின்றார்.

ஒரு பக்கம் ஆசையை ஊட்டுகின்றார். மற்றொரு பக்கம் துன்பத்தையும் கொடுக்கின்றார். இதில் என்ன செய்வதென்றே ஒன்றும் புரியவில்லை.

குருநாதர் பித்தனைப் போன்று இருந்த மாதிரி
1.இதைப் பிடிப்பதா… அல்லது அதைப் பிடிப்பதா…!
2.அல்லது அவர் சொன்னதைப் பிடிப்பதா…? என்ற நிலை எனக்கு வருகின்றது.

அவர் கொடுக்கும் சக்திகளை நான் சரி வரப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகப் பல சந்தர்ப்பங்களில் இப்படி அனுபவத்தைக் காட்டி எனக்குள் தெளிந்து தெரியும்படி செய்தார்.

அதிலே முழுமை பெற்ற உணர்வுகளை… உயிருடன் ஒன்றி ஒளியாகப் பெறும் ஆற்றலைத் தான் உங்களுக்குக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

மகரிஷிகளின் நேரடி வலுவில் நாம் இருந்தால் எந்த நச்சுக் காற்றும் நம்மைப் பாதிக்காது – ஈஸ்வரபட்டர்

 

இதுவரை சுட்டிக் காட்டிய எண்ணத்தின் உணர்வை “இறைவனுக்குள் நாம்… நமக்குள் இறைவன்…!” என்ற பகுத்தறிவில் மனிதனின் எண்ண உணர்வை இப்புவி ஈர்ப்பில் கர்ம காரிய வாழ்க்கையிலிருந்தே தன் எண்ணத்தின் ஞானத்தை “உயர் ஞானமாக்கிடல் வேண்டும்…”

இப்புவியில் தோன்றி இப்புவியிலுள்ள உயர் சத்தைத் தனதாக வளர்த்துக் கொண்டவர்கள் தான் சப்தரிஷிகள்.

சூரிய மண்டலத்தின் சமைப்பில் தன் சப்த ஒளியைப் பாய்ச்சி… ஒளி கொண்ட வண்ண அமில உயிர் ஜீவ வித்து இப்பூமியில் மீண்டும் எண்ண உணர்வுடன் கூடிய செயல் தன்மைக்கு வளர்ப்பவர்களும் “அவர்கள் தான்…”

சப்தரிஷிகளின் செயல் தன்மையால் வளரும் நாம்… நம் எண்ணத்தின் உணர்வை விண்ணிலே செலுத்தி… அவர்கள் பால் நினைவைச் செலுத்தி அவ்வொளியின் நேரடி அலையை இஜ்ஜீவ ஆத்மாவில் வளரக்கூடிய உயிர் அணுக்களுக்கு உணவாகக் கொடுக்க வேண்டும்.

1.இறைவனுக்குள் நாம்… நமக்குள் இறைவன்…! என்ற நிலையில்
2.உயிர் தெய்வம் எப்படிச் செயல் கொள்கின்றதோ
3.அச்செயலின் தெய்வத்திற்கு… இவ்வுடலில் வளரும் ஒவ்வொரு அணுவையுமே
4.தெய்வமாக்கும் உயர் காந்த ஈர்ப்பில் செயல் கொள்ள வேண்டும்.

சூரியனிலிருந்து உதித்த நம் உயிர்… அவ்வுயிரின் உயிரணுக்களெல்லாம் உயிர் தெய்வ அணுக்களால் வளரும் காந்த ஜீவ வீரியத்தை… சப்தரிஷிகளால் பாதுகாத்து பக்குவப்படுத்தப்பட்ட சமைப்பின் தொடரை… நம் உணர்வின் எண்ணத்தை சப்தரிஷிகளின் எண்ணமுடன் கலந்து செயல்படும் பொழுது…
1.நாம் வேறல்ல…
2.அந்த ரிஷிகள் வேறல்ல…! என்ற நிலையை எய்துகின்றோம்.

அப்படிப்பட்ட ரிஷிகளின் தொடர்புடன் இஜ்ஜீவ ஆத்மா வலுப்பெறக் கூடிய வளர்ச்சியினால்… தினசரி வாழ்க்கையில் ஏற்படுகின்ற செயலில் எல்லாம்… தான் பெற்ற உயர் ஞானத்தால்… சமமான உணர்வு சமைப்பு கொண்ட நிலையில் செயல்படும் பொழுது… எத்தகைய தீய உணர்வுகளும் நம் சரீரத்தைப் பாதிக்காது.

இவ்வாறு நம் ஆத்மாவின் அலை வீரிய உணர்வு பெறும் பொழுது
1.இக்காற்றலையில் பலவாகக் கலந்துள்ள பல நிலை கொண்ட அமிலக் கூறுகளும்
2.பல உணர்வில் ஜீவன் பிரிந்த ஆவி ஆத்மாக்களின் அலையும்
3.இப்புவி ஈர்ப்பில் சுழன்று கொண்டுள்ள இன்றைய நச்சான காற்று மண்டல அலையும்
4.சப்தரிஷிகளின் நேரடி வலுவில் ஜெபம் கொள்ளும்போது
5.எந்த அலையும் நம் நிலையைப் பாதிக்காது.

மனித வாழ்க்கையில் இருந்தே…
1.புருவ மத்தியில் எடுக்கும் ஓ…ம் ஈஸ்வரா…! என்ற ஒளி நாதத்தின் சமைப்பால்
2.இச்சரீர வாழ்க்கையில் எந்நிலையயும் உணரும் பக்குவத்தையும்
3.முன் கூட்டி அறியும் செயலையும்
4.வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஒவ்வொரு நடைமுறை நிலைகளுக்கும் தெளிவு காணும் பக்குவத்தையும்
5.முதலில் நாம் பெற வேண்டியது அவசியமாகும்…!

பல கோடி வருடங்களாய்… உயிர் பெற்று உருவாகி உருவாகி… உயர் தன்மை பெற்ற இம்மனித எண்ண உணர்வு சரீரத்தில்… ஒவ்வொரு உயிரும் ஒன்றைப் போன்று ஒன்றில்லாமல்… தான் வளர்ந்த வீரிய உணர்வின் அடுத்த நிலைக்குத் தனக்குள் உள்ள இறைவனை… தனக்குள் வளரும் இறை அணுக்களை… “இறைவனுக்கும் வீரியத் தன்மையாக…!” மகரிஷிகளின் அருள் ஒளியிலிருந்து எடுக்கும் ஜெபத்தால்… நிச்சயம் செயல் கொள்ள முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விவசாயப் பண்ணைகளிலும் மற்ற ஆராய்ச்சிக் கூடங்களிலும் மனிதன் தன் ஆறாவது அறிவு கொண்டு
1.புதுப் புதுச் செடிகளை உருவாக்குகிறான்.
2.புதுப் புது மிருகங்களை உருவாக்குகின்றான்.
3.புதுப் புது உயிரினங்களை உருவாக்குகின்றான்.

பெனிசிலின் இஞ்செக்சனாக (INJECTION) காளானை உருவாக்குகிறான். அந்தக் காளானுக்குள் பல உயிரணுக்களைச் செலுத்துகின்றான்.

அந்தக் காளானில் உரு பெறும் உயிரணுக்களை அது சேர்த்துக் கொண்ட பின்
1.அந்தக் குறிப்பிட்ட நாள் வந்த பின்
2.அது அனைத்தையும் கொன்று விடுகின்றான்.
3.அதிலே உண்டான (கொசு போன்ற) உயிரணுக்களிலிருந்த இரசத்தை வடிகட்டி எடுக்கின்றான்.
4.பின் அந்த இரசத்தைத் தான் இஞ்செக்சனாக மாற்றுகின்றான்.

விஞ்ஞான அடிப்படையில் இப்படிச் செய்தாலும் பெனிசிலின் ஊசி சிலருக்கு மிகக் கடுமையான நிலைகளை உண்டாக்குகின்றது. மற்றவர்களுக்கு உடலில் நோயை நீக்கி நன்றாகவும் ஆக்குகின்றது.

ஒரு துளி அந்த அணுக்களில் இவன் எடுத்துக் கொண்ட நிலைகள் இஞ்செக்சன் எடுக்கும் போதே
1.அதில் கொஞ்சம் காற்று புகுந்து விட்டால்
2.அதிலே இந்த அணுக்கள் உருவாகி விடும்
3.அது பட்டு விட்டு மருந்தைச் செலுத்தினால் எதிர்மறை (REACTION) ஆகி விடுகிறது.

இதைப் போல பல நிலைகள்.

இவன் எதைக் கண்டு பிடித்தானோ அதை உருவாக்கினாலும் கூட ஊசிக்குள் அந்த மருந்தைப் (POWDER) போட்டுக் கலக்கி அதைச் செலுத்தினாலும் எடுக்கும் நிமிடத்திற்குள் இந்த உடலுக்குள் செலுத்துவதற்கு முன் மாற்றமாகி விட்டால் ஆளை மரணம் அடையச் செய்துவிடும்.

ஏனென்றால் அந்தக் காளானில் அதில் பட்ட மணம் எந்த அணுக்களின் தன்மை உருவானதோ
1.அந்த தசைகளைக் கொன்று
2.அதில் உருவான இரசத்தை எடுத்துத்தான்
3.பெனிசிலின் தயார் படுத்துகின்றான்.

பெனிசிலினிலிருந்து எடுத்து உடலில் போடும் போது இந்த உடலுக்கும் அவன் போடக் கூடிய நிலைகளுக்கும் எதிர்பார்க்காத நிலை வந்து விட்டால் கொன்ற உயிரணுக்களை மீண்டும் உடலில் உருவாக்கத் தொடங்கி விடும்.

அதாவது மருந்தைத் தயார் செய்யும் பொழுது எந்த அணுக்களைக் கொன்றானோ
2.நோயாளிக்குப் பெனிசிலினை INJECTION பண்ணும் போது
3.அந்த அணுக்களின் இரசத்திற்கு பதில்
4.அதிலே உருவான அணுக்கள் இங்கே உருவாகி உடல் முழுவதும் பரவி
5.நோயை நீக்குவதற்குப் பதில் அந்த மனிதனைக் கொன்றே விடுகிறது.

அந்த மாதிரி அணுக்கள் உருவானவர்களுக்கு அருகிலே மற்றவர்கள் யார் இருந்தாலும் அவர்களுக்கும் அவர்களைச் சார்ந்தோருக்கும் பரவி அவர்கள் உடலிலும் இந்தத் தீமையை உருவாக்கும் அணுக்கள் உருவாகி விடுகின்றது.

பெனிசிலின் ஊசி மிகவும் உயர்ந்த தடுப்பு மருந்து தான்.

தடுப்பு மருந்தாக உடலுக்குப் போட்டாலும் தடுக்கும் ஆற்றலாகச் செயல்படுத்தி வியாதியின் தன்மையை மாற்றக்கூடிய வல்லமை பெற்றது.
1.ஒரு நொடி மாறி விட்டால்
2.ஒரு சிலருக்கு எத்தனையோ வேலைகளைச் செய்கிறது.

விஞ்ஞான அறிவால் இந்த ஆறாவது அறிவு கொண்டு தான் செயல் படுத்துகின்றான். ஆறாவது அறிவால் இதைப் போல பல எத்தனையோ நிலைகளைச் செயல் படுத்துகின்றார்கள்.

இதைப் போன்று தான் எத்தகைய தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும் அந்தத் தீமைகள் நமக்குள் விளையாது மகரிஷிகளின் அருள் சக்தியை அவ்வப்போது இணைத்துக் கொண்டே வந்தால் தீமைகளை அடக்கும் நிலை வரும்.

1.எத்தனை தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும்
2.உங்கள் உடல் பாதிக்காதபடி
3.உங்களுடைய நினைவாற்றல் அந்த சப்தரிஷி மண்டலத்திலே இணைந்துவிடும்.

உடலிலும் மனதிலும் வலியோ வேதனையோ வந்தால் எப்படி மாற்றுவது…?

 

உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நீங்கள் பெற அந்தப் பயிற்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் (ஞானகுரு).

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அடிக்கடி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

நம் எண்ணத்தில் தெரிந்து கொண்ட உணர்வுகளுக்கு எல்லாம்… நம் உடல் உறுப்புகளில் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும் கண்ணின் நினைவைச் செலுத்தி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று
2.கல்லீரல் மண்ணீரல் சிறுகுடல் பெருங்குடல் தசை மண்டலம் தோல் மண்டலம் இதயம் நுரையீரல் போன்ற உறுப்புகளுக்கு
3.அருள் சக்திகளை நாம் செலுத்திப் பழகுதல் வேண்டும்

இது போன்ற ஒரு பழக்கத்திற்கு முதலில் வந்து விட்டால் அடுத்து இதற்கு முன் நாம் சேர்த்துக் கொண்ட உணர்வுகளை எளிதில் தூய்மைப்படுத்திவிடலாம்.

ஏனென்றால் நாம் சுவாசித்த உணர்வுகள் அனைத்தும்
1.இரத்தத்தின் வழி சென்று மற்ற உறுப்புகளில் அந்தக் கரு முட்டை அடைகிறது.
2.அங்கே தேங்கி விஷத்தன்மை கொண்ட அணுக்களாக அங்கே உருவாகத் தொடங்கும்.

அத்தகைய அணுக்கள் உருவானால் அந்த உறுப்புகளில் வேதனையோ அல்லது வலியின் தன்மையோ அல்லது மடிந்து போகும் தன்மையோ வரும்.

காரணம் விஷத் தன்மை கொண்ட அணுக்கள் உருவானால் நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அது பலவீனம் அடைந்து அங்கே வலியும் வேதனையும் வரும்.

வேதனை என்றாலே நஞ்சு. வேதனை என்ற உணர்வை வளர்த்து விட்டால் நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்திற்கும் விஷமான நிலைகளாகப் பாய்ச்சப்பட்டு அதில் எத்தகைய உணர்வோ அதற்குத் தக்க இந்த உடலை விட்டு உயிர் செல்லப்படும் பொழுது மாற்று உடலை உருவாக்கும்… மனிதனல்லாத உடலைத்தான் உருவாக்கும்.

நாம் நினைக்கின்றோம்…
1.எப்படியோ காசைப் போட்டு இப்படிப் போட்டுத் தப்பித்துக் கொள்ளலாம்… உறுப்புகளை மாற்றித் தப்பித்துக் கொள்ளலாம் என்று…!
2.ஆக… சிறிது நாள் வாழலாம்… பின் நாம் எங்கே செல்கிறோம்…? என்று சொல்ல முடியாது

ஆகவே அருள் ஞானிகள் உணர்வை நாம் பெற்று இனி வரக்கூடிய காலங்களில் அசுர குணங்களை அகற்றிடும் சக்தியாக நாம் வளர்த்துப் பழகுதல் வேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினைப் பெற்று அந்த அகஸ்தியனின் உணர்வைப் பெற்று அந்த உணர்வுகள் உலகமெங்கும் பரவ வேண்டும் உலக மக்கள் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நாம் எண்ணித் தியானிக்க வேண்டும்.

1.எந்த அளவிற்கு உலக மக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோமோ
2.அந்த அளவிற்கு நமக்குள் அது வளர்ச்சி அடையும்.

மனிதப் பிறவியின் பலன் – ஈஸ்வரபட்டர்

 

கார்மேகக் கண்ணன் அகிலத்தையும் தன் வாயில் காட்டியதாகவும்… பெண்களிடம் தான் லீலா விளையாட்டுகளை நிகழ்த்தியதாகவும்.. கிருஷ்ணாவதாரம் வியாசரால் எழுதப்பட்டுள்ளது.

அந்தத் தத்துவத்தில் பல உண்மைகள் உண்டு… கதை ரூபத்தில் நாம் அதை கேட்கின்றோம்… படிக்கின்றோம்…!

இம்மனிதக்கரு எண்ணத்தின் உணர்வு ஒவ்வொன்றையும் கிருஷ்ணனாகக் கண்டு… அக்கிருஷ்ணனின் பிம்பம் பெற்று… அப்பிம்பத்தின் தொடர் கொண்டு நிகழும் வழித் தொடர் ஒவ்வொன்றுமே
1.உயிர் ஆத்மா உயரும் பரமாத்மாவின் தொடர்பைக் குறிக்க
2.கீதையில் சூட்சும ரூபங்கள் பல உண்டு.

தன் உயிர் ஆத்மாவின் உண்மை ஜெனிப்பை நாம் உணர்ந்து நம்முள்ளுள்ள வீரிய சக்தியை இக்கர்ம காரியத்தில் மோதும் உணர்வுகளுக்கு ஞானத்தைக் கூட்டி தன் உயர் ஞானத்தின் உண்மை எது…? என்ற பகுத்தறியும் எண்ண வாதத்தால்… எண்ணத்தின் உணர்வைச் சமமாக்கக் கூடிய வீரத்தின் ஞானமுடன் ஒவ்வொரு ஆத்மாவும் செயல்பட்டதென்றால்…
1.அன்று ரிஷிகளினால் உணர்த்தப்பட்ட…
2.இன்று கதையாய் உருவம் தந்துள்ள வழி ஒவ்வொன்றையுமே
3.நம் உயிர் ஆத்மாவின் சித்தில் நாமும் பெற முடியும்.

இவ்வெண்ணத்தின் பகுத்தறியும் உயர் ஞானத்தைக் கொண்டு அறிவின் வளர்ச்சியைச் சாந்த குண உணர்வுடன் அறியக் கூடிய தொடர்புக்குச் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

சில தாவரங்கள் விதைக்கப்பட்டு அதனுடைய சத்து நிலை உள்ள காலம் வரை பலன் தந்து ஒரு மாதம்… மூன்று மாதங்கள்… இப்படித் தன் சத்தின் பலனைத் தந்துவிட்டு மக்கி விடுகின்றன.

ஆனால் சில மரங்கள்…
1.“பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்குத் தான் எடுத்த சத்தின் தொடரினால்”
2.அம்மரமே வைரம் பாயும் தன்மைக்கு வளர்ந்து…
3.மரமே மலையாகிப் பல கோடி ஆண்டுகளுக்குப் பூமியின் சுழற்சியில் வலுக் கொள்கின்றது…!

காற்றலையின் சுழற்சியில்தான் எல்லா அமிலங்களும் சுழல் கொள்கின்றன.

மரத்தின் வலுவான வளர்ச்சி முற்றலில் அவ் ஈர்ப்பின் பிடிப்பிற்கு வைரத்தை வளர்க்கவல்ல அமிலத்தைத் தன் ஈர்ப்பில் பெற்று அது வளருகின்றது.

சிறு விதையான மிளகாய் விதை இக்காற்றலையில் கலந்துள்ள கார உணர்வின் சத்தைத் தன் வளர்ப்பிற்கு வலுக் கூட்டித் தன் வளர்ப்பின் பலனாய்ப் பலவற்றைத் தருகின்றது.

எண்ணத்தின் உணர்வை….
1.சிறு விதை எடுத்த பலனைப் போல்… வளர்ச்சியைப் போல்… பலன் தன்மை பெறத்தக்க செயலும் உண்டு…
2.வைரத்தின் ஈர்ப்பாக… மலையாகும்… மரத்தின் தொடர்பைப் பெறும் செயலும் உண்டு…!
3.மனிதன் எடுக்கும் அறிவின் ஞானத்திற்கு…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மலைப் பகுதிகளில் உள்ள சில காட்டுவாசிகளின் செயல்களையும் மந்திரம் செய்து புதையல் எடுப்பதாகக் கூறி பலி கொடுப்போரின் நிலைகளையும் குருநாதர் காட்டினார்

மனிதனுக்கு மனிதன் கொன்று சாப்பிடும் உணர்வுகள் இந்தியப் பகுதியில் சில பகுதிகளில் உண்டு. மலைப் பகுதிகளில் அஸ்ஸாம் பகுதிகளில் எல்லாம் இந்த மாதிரிக் காட்டுவாசிகள் உண்டு.

அவர்கள் வாழும் இடங்களில் வேண்டாத மனிதர்கள் வந்து விட்டால் “தன் ரகசியத்தைத் தெரிந்து விடுவார்கள்…” என்று அந்தப் புலையர்கள் சில நிலைகளைச் செய்வார்கள்.

பல ஆவிகளைத் தனக்குள் கூட்டப்பட்டு அதை வைத்து ஏவல் செய்து வந்தவர்களை மதி மயங்கச் செய்து சிந்தனையை இழக்கச் செய்து பின் திசை மாற்றிச் செல்வதும் உண்டு.

சில மலைப் பகுதிகளுக்குப் போனால் நாம் அவர்களுடைய பார்வையில் பட்டால் இத்தகைய நிலை ஏற்பட்டுவிடுகின்றது.

சில தீவுகளில் எடுத்துக் கொண்டாலும் அந்தத் தீவிலுள்ள மக்கள் இன்றும் நாகரீகத்தை அறியாதபடி பல பச்சிலை தாவர இனங்களைத் தனக்குள் எடுத்துப் “பல மாயா ஜால வேலைகள்” செய்வதும் உண்டு.

அங்கு மனிதன் வருகிறான் என்றால் அந்தத் தாவர இனங்களை எடுத்து மீண்டும் அந்த உராயும் (தேய்த்து) தன்மை வரப்படும் போது அவன் சூட்சம நிலை அடைகின்றான்.

ஒரு மனிதனுக்குள் இருக்கும் உணர்வை எடுத்து மீண்டும் அந்த உணர்வின் தன்மை கொண்டு மயங்கச் செய்து தாவர இனத்தாலே அவனை மடியச் செய்வார்கள்.

மடியும் பருவம் வந்தால் மடியும் பருவத்தில் வருபவனுக்கு இந்த உணர்வை அங்கே ஊட்டி அவன் இறந்த பின் அங்கே இழுத்து வரும்படிச் செய்கிறது.

ஆனால் இவன் உடலுக்குள் சென்ற பின் மிக வலிமை கொண்ட நிலைகளைப் பெறுகின்றார்கள். எவரையும் தாக்கும் உணர்வு வருகின்றது. ராட்சச நிலைகள் போன்று ஆகிவிடுகின்றார்கள்.

மனிதனுக்குள் உருபெற்ற உணர்வுகள் மனித உடலுக்குள் சென்ற பின் எவ்வாறு உருப்பெறுகிறது என்ற நிலையும் மனிதன் என்று எந்தெந்த நிலைகளில் செயல்படுகிறார்கள் என்ற நிலையும் குருநாதர் பூமியில் பல பாகங்களுக்கு அழைத்துச் சென்று காட்டுகின்றார்.

சில நாடுகளில் இன்றைக்கும் எடுத்துக் கொண்டால் வருடத்திற்கு ஒரு தரம் பெண்களை அலங்கரித்து அந்த நாட்டைக் காக்கும் தேவதை என்ற நிலைகள் கொண்டு அதற்குப் பலி கொடுப்பார்கள்.

அவர்களுக்கு வேண்டிய உணவுப் பதார்த்தங்களைக் கொடுத்து “நீ… ஆண்டவனின் பிள்ளை தான்…!” என்று நிலை கொண்டு அங்கே மலை உச்சிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அந்தப் பெண்ணைத் தள்ளி விட்டுவிடுவார்கள்.

இவ்வாறு ஆண்டவனுக்கு உணவாகக் கொடுத்தால் “நம் நாட்டைக் காப்பான்..” என்ற நிலைகளில் நாகரீகம் வளர்ந்த பின்னும் சில மேலை நாடுகளில் இன்றும் நடக்கின்றது.

சீனா போன்ற நாடுகளில் தேவதைக்கு நரபலி கொடுத்தால் தன்னைக் காப்பான் என்ற நிலை வருகின்றது. இதைப்போல நம் நாட்டிலும் தன் குழந்தையைப் பலியிடும் தன்மை வருகின்றது.

நடந்த நிகழ்ச்சி இது. பத்திரிக்கையில் கூட நீங்கள் படித்திருக்கலாம். கல்கத்தாவில் வேலை செய்து வருகிறார். அவருக்கு 55 வயது இருக்கும். குலதெய்வங்களை வணங்குகிறோம் என்று வந்திருக்கின்றார்.

இவர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருவருக்கொருவர் பழி தீர்க்கும் உணர்வு கொண்டு பலியின் உணர்வு கொண்டு செயல்பட்டதனால் இறந்த ஆன்மா அந்த வீட்டு மருமகள் உடலில் புகுந்துவிட்டது.

அவர்கள் குல வழியிலே வந்த அண்ணன் தம்பிகள் நான்கு பேர் இருக்கிறார்கள் என்றால் பாகம் பிரிப்பது வித்தியாசமாகி விட்டால் இந்தப் பழி தீர்க்கும் உணர்வுகள் வந்த பின் அவர்கள் பல உயிர்களைப் பலியிடுகின்றார்கள்.

அதை உணவாகவும் உட்கொள்கின்றனர்.

இதைப்போல இவர்கள் குலதெய்வத்தை வணங்கப்படும் போதும் முதலில் கோழி ஆடு என்ற நிலையில் ஒவ்வொன்றாக வரிசையாகப் பலி கொடுக்கின்றனர்.

அப்பொழுது குலதெய்வம் வந்து அருளாடுகின்றது.

“இது எனக்கு நிறைவேறவில்லை… ஆகையினால் உன்னுடைய குழந்தையின் நாக்கு எனக்குத் தேவை…! என்று சொன்னவுடன் அந்த நாக்கை அறுக்கச் செல்கிறார்கள்.

“இதெல்லாம் வேண்டாம்…” என்ற நிலைகள் கொண்டு இதற்காக வளர்ந்து வரும் குழந்தையையே பலி கொடுக்கின்றேன். அருளாடுகிற குழந்தையையே பலி கொடுக்கிறேன் என்று வரம் கொடுத்தபின் பலி கொடுப்பதற்காகச் சென்றுள்ளார்.

அப்பொழுது அங்கே என்ன நடந்தது…?

அடுத்து குழந்தையைப் பலி கொடுப்பதற்குப் பதில் “என்னையே ஏற்றுக் கொள்…!” என்று அங்கு சொன்னபின் அவருடைய மனைவியும் மகன்களும் கை கால்களைப் பிடித்துக் கொண்டு அந்தத் தலையைத் துண்டித்து விடுகின்றனர்.

அருள் ஆடிய அந்த மருமகளே தன் மாமனின் அந்தத் தலையைத் தூக்கிப் பிடித்து அந்த இரத்தத்தையே உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருக்கின்றது.

அனைவரும் நிர்வாணமாக இருந்து “இது தான் குலதெய்வம்… இவ்வாறு் செய்கிறது…! என்று இன்று செய்கின்றார்கள். இன்றைக்கு வட மாகாணங்களில் அனைத்தும் இத்தகைய நிலைகள் உண்டு.

பலியிட்ட பின் இந்த ஆவியின் தன்மைகள் இருண்ட நிலைகள் கொண்டு அந்த வீட்டிற்குள்ளேயே இருக்கின்றார்கள்.

ஆனால் அந்த ஊரில் உள்ள மக்கள் குலதெய்வம் கொண்டாடுகிறார் என்றால் இதைப் போல நிகழ்ச்சிகள் அதாவது இவர்கள் பலிகள் கொடுக்கும் போது நரபலி கொடுப்பார்கள் என்ற நிலைகளில் எல்லோருக்கும் தெரிகிறது.

இன்று வேறெங்கும் போக வேண்டாம். நம் தமிழ் நாட்டிலும் நடக்கின்றது.

திருப்பூரில் ரணகாளி என்ற நிலைகள் இருக்கப்படப்போகும் போது அங்கு அருளாடி விட்டால் எதிர்த்தாற் போல புதைத்திருக்கும் சுடுகாட்டில் ஓடிச் சென்று தோண்டி எடுத்து அந்தத் தலையை வைத்துப் பூஜை செய்வதும் உண்டு.

இது எல்லாம் என்ன என்றால்
1.மனித உடலுக்குள் எடுத்து கொண்ட உணர்வுகள்
2.மடிந்த பின் ஒரு உடலுக்குள் வந்த பின்
3.இத்தகைய நிலைகள் செயல்படுகின்றது.

எல்லாம் மனிதனால் வளர்க்கப்பட்டது.

மனித உணர்வுகள் அற்ற பின் மனிதனாகச் சாந்த குணம் கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய நிலைகளும் அசுர குணம் கொண்டு தாக்கும் நிலையும் மனிதன் இரக்கமற்றுக் கொல்லும் உணர்வுகளும் இப்படி
1.மனித உடலுக்குள் எதைச் சேர்த்துக் கொண்டதோ
2.ஒரு உடலுக்குள் சென்ற பின் இந்த நிலையைச் செய்கின்றது.

வட இந்தியாவில் குருநாதர் சொன்ன முறைப்படி நான் செல்லப்படும் போது நாசிக் என்ற ஊரைக் கடந்து ஒரு கிராமத்திற்குச் சென்றேன்.

அங்கே என்ன நடந்தது என்றால் ஒரு மந்திரவாதி புதையல் எடுத்துத் தருகிறேன் என்று சொல்லி இருக்கின்றார். அதற்கு இன்னென்ன நரபலி கொடுக்க வேண்டும் என்று சொல்லிப் பெண் குழந்தைகள் இத்தனை வயதிற்குள் வேண்டும் என்று சொல்கிறான்.

புதையல் எடுக்க விரும்புபவர்கள் என்ன செய்கிறார்கள்…?

புதையல் வேண்டும் என்று பலியிடுவதற்காக அங்கே அவர்களுடன் பழகிய பெண்களை மந்திரவாதி கொடுக்கும் மருந்தைக் கொடுத்துத் தனித்தனியாக அங்கே அழைத்து வந்து இரவிலே பலி கொடுத்துக் குழி தோண்டி வைத்திருப்பதிலே புதைத்து விடுகிறார்கள்.

ஒரே நாளில் ஏழு பெண்களைப் புதைத்து உள்ளார்கள். எட்டாவது பெண்ணைக் கொண்டு வரும் பொழுது தான் நான் அங்கே போனேன்.

அழைத்துச் செல்லுகின்றார்கள் “நீ போடா…” என்று குருநாதர் காட்டுகின்றார்.

ஒன்பது பெண்களைப் பலியிடுவதற்காக முயற்சிக்கின்றார்கள். கன்னிப் பெண்களைத்தான் பலி கொடுத்திருக்கிறார்கள். எட்டாவது பெண்ணைக் கொண்டு வரும் போது நான் அந்தப் பெண்ணிற்கு நினைவு வரும்படிச் செய்தேன்.

உடனே அது சுய நினைவுக்கு வந்தது. கத்த ஆரம்பிக்கின்றது.

“ஐய்யய்யோ…! என்னை இங்கே கொல்கிறார்கள்…. கொல்கிறார்கள்….” என்று சொன்ன பின்னர் ஊர் ஜனங்கள் எல்லாம் கூடிவிட்டனர்.

ஜனங்கள் எல்லாம் தேடி வருகின்றார்கள். நான் சிறு தாடி வைத்திருந்தவுடனே அங்கே என்னைப் பார்த்தவுடன் என்னை உதைக்க வேண்டும் என்று வருகிறார்கள்.

நடந்த நிகழ்ச்சி.

அப்போதுதான் நான் சொன்னேன், இங்கே தவறு செய்வோருடைய உண்மைகளை நான் தான் உணர்த்தினேன்.. “அந்த மந்திரவாதி உள்ளுக்குள் இருக்கிறான் போய்ப் பாருங்கள்…!” ஏழு பிணங்களும் உள்ளுக்குள் இருக்கிறது. என்று சொன்னேன்.

ஏனென்றால் முதலில் இந்தப் பெண்களைக் கொண்டு போனார்கள் என்று தான் மற்றவருக்குத் தெரியும். ஆனால் மந்திரத்தைச் செய்து மந்திரவாதி இழுத்துப் போயிருக்கிறான் என்று சொன்னவுடன் “நான் அங்கே இருந்ததால்…” எதிரில் என்னைக் கண்டவுடன் என்னை உதைக்க வருகிறார்கள்.

பின் அங்கே கையைக் காட்டி உண்மை நிலை எப்படி இருக்கின்றதென்று பாருங்கள் என்று கூறும் போது அந்த மந்திரவாதி சிக்கிக் கொண்டான். தப்பிக்க முடியவில்லை.

புதையல் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் செயல்பட்ட அந்தக் குடும்பத்தில் உள்ளோர் அனைவரையும் கைது செய்தார்கள்.

1972ல் நீங்கள் பத்திரிக்கையில் பார்த்திருப்பீர்கள். நான் அப்போது வட இந்தியாவில் இருக்கின்றேன்.

ஆசைக்கு அடிமைப்பட்டு மந்திரத்தைச் சொல்லி மயக்கப்படுத்தி மனிதனை மடியச் செய்யும்போது மடியும் தருணத்தில் அவர்கள் உடல்களிலே எந்த எண்ணங்கள் இருந்ததோ இந்த உடலை விட்டுச் செல்லப்படும் போது பயத்தால் தான் தப்பிக்கும் நிலை கொண்டு இன்னொரு உடலுக்குள் செல்கிறது.

1.அந்த உடலுக்குள் சென்ற பின் உண்மையைச் சொல்வதும்
2.அல்லது இதே உணர்வுகள் அங்கே இயக்கப்பட்டு அதே செயல்களைச் செயல்படுத்தும் நிலை வருகின்றது என்பதனைத்
3.தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

இவ்வளவு விஞ்ஞான உலகில் இருந்தாலும் நரபலிகள் இடுவதை நாம் பார்க்கின்றோம். தமிழ் நாட்டிலும் உண்டு. வட இந்தியாவிலும் உண்டு.

நாம் எந்தத் தெய்வத்தை வணங்கி மனிதனாகின்றோமோ மனிதனான பின் தன்னை அறியாமலே இத்தகைய ஆசையின் உணர்வுகள் நம் நல்ல குணங்களை மறைத்துவிடுகின்றது. இது தான் சித்திரை என்பது.

ஒரு திரை மறைத்து விட்டால் நாம் என்ன செய்கின்றோம்…?
1.நம்மை அறியாமலே நல்ல குணங்களைக் கொல்கின்றோம்.
2.இரக்கமற்று மற்றவர்களைக் கொல்லும் உணர்வுகள் வருகின்றது.

ஒருவிஷம் பட்டால் மனிதன் சிந்தனைகளை இழக்க செய்கின்றது. இதைப் போலத்தான் நுகர்ந்த உணர்வுகள் மனிதன் சிந்தனையை எப்படிச் சீர் குலையச் செய்கின்றது என்ற நிலையை அனுபவபூர்வமாகக் காட்டினார் குருநாதர்.

காட்டுப் பகுதியில் செல்லப்படும் போது இப்படிப்பட்ட ராட்சஸ உணர்வுகள் கொண்ட நிலைகள் உண்டு.

சில காட்டுப் பகுதியில் இதைப் போல பலியிடப்பட்ட உணர்வின் இடங்களுக்கு இரவு 12மணிக்கு மனிதன் சென்றால்
1.பலியான உணர்வலைகள் மனிதனுக்குள் ஈர்ப்புக்குள் வந்து
2.இதே உணர்ச்சிகளைத் தூண்டும் நிலைகளும் பல உண்டு.

அங்கு பலியிடப்பட்ட போது வெளிப்பட்ட அந்த உணர்வுகள் தாவர இனங்களில் படப்பட்டு அந்த தாவரத்தின் நினைவு ரூபமாகவும் சில நிலைகள் வருகின்றது என்பதனைத் தெளிவாகக் காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

கடலில் அலைகள் பாய்வது போல… புயல் அடிப்பது போல… வாழ்க்கையில் எத்தனையோ இன்னல்கள் வருகிறது

 

நன்றாகத் தான் இருப்பீர்கள். ஒன்றுக்கும் ஆகாதவன் யாராவது வந்து “நீ என்னய்யா செய்துவிடுவாய்…?” என்பான்.

கேட்டவுடனே “உன்னைத் தொலைத்து விடுகிறேன்…” என்று மனதில் வேகம் வரும். “இவனுக்குக் குசும்பைப் பார்….” என்போம். இப்படி உணர்ச்சி வசப்படும் நிலை வந்து விடுகிறது. அப்பொழுது என்ன செய்கின்றோம்…?

1.அவன் சொல்லக்கூடிய நிலைகளில் அகம் (நான்) என்ற அலைகளில் நாமும் சிக்கி
2.அவனை அழித்து விட வேண்டும் என்றே நினைப்போம்.
3.அதற்குண்டான முயற்சிகளை எல்லாம் எடுத்துக் கொண்டே இருப்போம்
4.அவனை அழித்து விட வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வந்து நம்மை அழித்துவிடும்.
5.நாம் சேர்த்து வைத்த செல்வத்திற்கு வேலை வந்துவிடும்.

செல்வத்தைச் சேமிக்க வேண்டும் என்று விரும்புவோம். ஆனால் மேலே சொன்ன மாதிரி “அடுத்தவனை அழிக்க வேண்டும்…” என்று கோர்ட்டு… கேஸ்… சாப்பாடு… அது இது என்று பணத்தை எல்லோருக்கும் கொடுத்துவிட்டு
1.என்றைக்கு இதிலிருந்து விடுபடப் போகின்றோமோ…? தெரியவில்லை…! என்பார்கள்.
2.இப்படித்தான் அந்தப் பணம் காணாமல் போகும்.

இவருக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் ஆதரிப்பார்கள் ஆனால் பணம் எல்லாம் போய்க் கொண்டே இருக்கும் சம்பாதித்த பணம் காணாமல் போய்விடும். இந்த அலைகளில் சிக்கி விடுகின்றோம்.

அதே போன்று குடும்பத்தில் எல்லோரும் நன்றாக இருப்பார்கள். ஒரு பையன் சொன்னபடி ஏதாவது கேட்காது இருப்பான்.
1.அவனை இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும்…
2.இவனுக்குச் சொத்தே கொடுக்கக் கூடாது… என்று மனதில் பதிய வைத்துக் கொள்வார்கள்.

“நல்லவனாக நடக்க வேண்டும்” என்று அவன் வந்தாலும் கூட “தொலைந்து போகிறவன் எங்கேயோ போடா… ஒரு காசு கூட உனக்குக் கிடையாது…!” என்று சொல்வோம். இந்த அலைகளில் சிக்கி விடுவோம்.

அவன் மேல் முதலில் பாச அலையாக இருக்கின்றோம். திடீரென்று வெறுப்பலை வந்துவிட்டால் அதில் மூழ்கி விடுகின்றோம்.

இவனை எண்ணி இங்கே மூழ்கினாலும் மற்ற பிள்ளைகளிடமும் அதைப் பேசுவோம் டேய்… அவனை மாதிரி யாரும் ஆகிவிடாதீர்கள்…! என்போம். இந்த அலைகள் அங்கேயும் போய் மோதும்.

என்னுடைய அப்பா எப்பொழுது பார்த்தாலும் அவனை வைத்துக் கொண்டு என்னையும் சும்மா ஜாடை பேசிக் கொண்டே இருக்கிறார் என்று அடுத்த பிள்ளையும் சொல்ல ஆரம்பிப்பான். அங்கேயும் வெறுப்பலைகளில் சிக்கிக் கொள்வோம்… அதிலேயும் மூழ்கிவிடுவோம்.

1.எதை எதைச் சம்பாரிக்க வேண்டும்…
2.எப்படி எல்லாம் நல்ல பிள்ளையாக வளர்க்க வேண்டும்…
3.தான் உயர்வாக எப்படி வர வேண்டும்…
4.எல்லோரும் என்னை எப்படிக் கௌரவமாக மதிக்க வேண்டும்… போற்ற வேண்டும்… என்ற
4.பல வகையான எண்ணங்களில் இந்த அலைகளில் சிக்கிக் கொண்டு அப்படியே தத்தளித்துக் கொண்டிருப்போம்.

எத்தனை சம்பாரித்து வைத்து என்ன பலன்…? இந்த மாதிரிச் செய்கின்றார்களே…! என்று வருவோர் போவோர் அனைவரிடமும் இந்தக் கதைகளைச் சொல்லிக் கொண்டிருப்போம்.

இந்த அலைகளில் தான் மூழ்கிக் கொண்டிருப்போம். மீட்கும் நிலையோ மீளும் வழியோ இல்லாது தத்தளித்துக் கொண்டிருப்போம்.

நிறையக் குடும்பங்களில் இப்படித்தான் இருக்கும். மனிதனுடைய வாழ்க்கையில் மீளாத் துயரத்தில் இப்படிச் சுழன்று கொண்டு இருக்கிறோம்.

காரணம்… உயர்ந்த சரக்குகளை எடுத்து அதிலே நஞ்சினை கலந்து விட்டால் நஞ்சின் செயலாக்கம் எவ்வாறு இருக்குமோ… அதைப் போன்றுதான் மனிதனுடைய வாழ்க்கையில்
1.உயர்ந்த குணங்களை கொண்டோர் அனைவரும்
2.வாழ்க்கையில் எத்தனையோ அலைகளில் சிக்கி… புயலில் சிக்கி விடுகின்றோம்.

உதாரணமாக ஒரு புயல் அடித்தால் அது சுழன்று பெரும் நிலைகளாகப் பரவி எல்லாவற்றையும் அழித்துச் செல்கின்றது. புயல் ஓய்ந்த பின் பார்த்தோம் என்றால் எதையும் காணவில்லை… அடித்துச் சென்றுவிடுகிறது.

இதைப் போல மனிதனின் உணர்வில் (வாழ்க்கையில்) பெரும் புயல் வீச ஆரம்பித்தால் என்ன ஆகும்…? என்ன வாழ்க்கை…? என்ற நிலையில் கொண்டு தனக்குள் அனைத்தும் இருள் சூழச் செய்து கடைசியில் தற்கொலைக்கே அழைத்துச் செல்கின்றது.

அத்துடன் நமக்குள் வளர்த்த ஆசைகள் அனைத்தும் அழிந்து விடுகிறது. அந்தப் புயலின் நிலைகளில் சிக்கும் பொழுது நமக்குள் என்னென்ன ஆசைகள் இருந்ததோ அது அனைத்தையும் நொறுக்கிவிடுகிறது.

ஆகவே
1.நமக்குள் தீமை செய்து கொண்டிருக்கும்
2.அது போன்ற அலைகளைப் பிளக்கும் தன்மை வரவேண்டும்.
3.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழிகள் கொண்டு நம் எல்லையை வகுப்போம்.

மகரிஷிகள் அனைவரும் எத்தகைய இருளையும் ஒளியாக மாற்றிக் கொண்டு உள்ளார்கள் பேரானந்தப் பெரு வாழ்வு என்ற நிலைகள் கொண்டு சப்தரிஷி மண்டலாமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டே உள்ளார்கள்.

அந்த அருள் ஞானிகள் சென்றடைந்த எல்லையை நாம் அனைவரும் அடைவோம்.

எண்ணத்தின் மனோ வலிமை எப்படி இருக்க வேண்டும்…? ஈஸ்வரபட்டர்

 

மண்டலங்களில் நம் சூரியனின் சக்தி பல மண்டலத்தின் அமிலத்தைப் பெற்று தன் சமைப்பின் சத்தான உயர் அலை ஒளியை வெளிக்கக்கி ஒன்றின் தொடர் சுழற்சி ஓட்டத்தில்யே தன் வட்ட ஓட்ட மையச் சுழற்சியுடன் சுழன்று கொண்டே உள்ளது.

சனி மண்டலம் தன் தொடர்பில் சந்திக்கின்ற அமிலங்களின் தொடர்பைத் தான் எடுத்துத் தனக்கு வேண்டிய சத்தை வளர்ச்சிக்கு எடுத்து வேண்டாத் தன்மையை கரையக்கூடிய நிலைக்கு வெளிக்கக்கிக் கொண்டேயுள்ளது.

எல்லாத் தொடர்பின் வலுவின் மோதலினால் உருப்பெறுவதுதான் ஆதிசக்தி நீர்.
1.ஆதிசக்தியின் அமிலம் சிவனாய் உணர்த்தி
2.சிவனான பரப்பிரம்மமாகி பிரம்மமாய் சக்தி பெற்று
3.ஜீவித தொடர் சக்திக்கு எண்ணத்தின் உணர்வு செயல் நிலை கொண்ட இம்மனித பிரம்மம்தான் “உயர்ந்த பிரம்மத் தன்மை….”

“ஒரு சுழற்சி ஓட்டத்தில்” பலவற்றையும் வளர்க்கும் சூரியனே செயல் கொள்கின்றது. பலவாக ஓடும் எண்ணத்தின் ஓட்டத்தில்… பலவற்றையும் அறியக்கூடிய உணர்வின் எண்ணச் செயல்… மனித ஞானத்தில் செயல் கொள்ள…
1.மனிதன் தன்னுள் ஓடும் எண்ணத்தின் உணர்வை
2.சமமான சாந்தத்திற்குச் செயல் கொள்ள
3.கர்ம காரியத்தில் ஞானம் பெறல் வேண்டும்.

காட்டிற்குச் சென்று தனித்து ஜெபம் பெறும் காலத்தில்… மனித உணர்வுகள் மோதும் தருணமோ மற்ற எதிர்மறை செயல் எதுவாகிலும் மோதும் பொழுது “உணர்வுகள் மோதலினால்… உணர்வுகளினால் சாந்தத்தின் உயர் வலுவை மாற்றிக் கொள்ளும் பொழுது…” எதிர் நிலையின் பாதிப்பால்…
1.எடுத்த பலனின் செயல் விரையப்பட்டு
2.மீண்டும் பூமியின் ஈர்ப்புப் பிடியில் வலுவாகச் சிக்க வேண்டி உள்ளது.

ஆகவே… கர்ம காரியத்தில் மோதப் பெறும் எச்செயலானாலும் தன் ஞானத்தினால் உயர் ஞானத்தைச் செலுத்தி… ஏற்படக் கூடிய மாறு கொண்ட உணர்வுகளுக்கு வாழ்க்கைச் செயல்… தன் குடும்பம்.. ஆரோக்கியம்… தொழில்… சமுதாயம்…. எதுவாகிலும்… “அதிலிருந்து ஒதுங்குவதல்ல உயர் ஞானம் பெறுதல் என்பது…!”

வாழ்க்கையில் தன் உணர்வுடன் மோதப் பெறும்…
1.ஒவ்வொரு செயலையும் ஒதுக்கப்படாத தன்மையிலும்
2.தன் ஈர்ப்பின் சுழற்சியில் அதே எண்ணத்தின் ஓட்டம் ஓடிக் கொண்டே உள்ள நிலைக்கும்… எண்ணத்தைச் செலுத்திடாமல்
3.ஏற்படுகின்ற ஒவ்வொரு செயலுக்கும் தன் எண்ணத்தில் உயர்வைக் கூட்டி
4.அதற்குகந்த வழி நிலைகளை வகுத்துச் செயல்படுத்தக் கூடிய அறிவினால்
5.இக்கர்ம காரிய வாழ்க்கையில் தன் உயர் ஞானத்தைக் கொண்டு
6.உயர்ந்தோரின் ரிஷித் தொடர்பைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

ஆனால்… முதன் முதலில் ஜெபத்தில் அமர்ந்தால் உடலுடன் கூடிய வாழ்க்கையில் எடுத்த அலைச் சமைப்பின் தொடர்பு வாசனை எண்ணம்தான் ஏற்படும்.

ஆகவே… உயர்வின் ஞானத்தை நாம் பெற வேண்டும் என்றால் கர்ம காரியத்தில் தன் வாழ்க்கையில் செயல் கொள்ளும் எந்தச் செயலையும் அறிவின் உயர்வால் அதற்குகந்த வழி நிலைகளைத் தான் பெற்ற ஜெப உணர்வு அலையினாலேயே கொண்டு வர வேண்டும்.

1.எண்ணத்தில் சஞ்சலத்தையும் சலிப்பையும் ஏற்படுத்திக் கொள்ளாமல்
2.“இது தான் நடக்கும்…!” என்ற எண்ணத்தின் வலுவைச் செலுத்தி
3.அதற்குகந்த தீர்வுகளைச் செயல்படுத்தி
4.எண்ணத்தின் மனோ வலிமையினால்…
5.ஜெபத்தில் ரிஷித் தொடர்புடன் – எவ்வெண்ணத்தை நாம் செலுத்தி ஜெபம் இருக்கின்றோமோ
6.அதற்குகந்த வலுவின் மின் காந்த வண்ண ஒளித் தன்மையை இச்சரீர ஆத்மா “நிச்சயம் பெற முடியும்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் யாரும் தவறு செய்யல்லை.

இருப்பினும் நாம் நம் தாய் கருவிலே வளரப்படும் போது தாய் பாசத்தால் பரிவால் அன்பால் தனது வாழ்க்கைத் தொடரில்
1.பிறர் செய்யும் தீமைகளைக் கண்டுணர்ந்திருந்தால்
2.அந்த உணர்வின் ஆற்றல் தாய் கருவுக்குள்ளே வளர்ந்து வரும் சிசுக்களில்
3.(நமக்குள்) இந்த உணர்வுகள் பதிவாகி விடுகின்றது.
4.அவ்வாறு பதிவாகியதைத் தான் “பூர்வ புண்ணியம்” என்பது,

தாய் கேட்டுணர்ந்த உணர்வுகள் தாய்க்கு ஊழ்வினையாக அமைந்து விடுகிறது.

இவ்வாறு தாயின் கருவிலே நாம் வளரும் பருவத்தில் தாயால் உலகை அறிந்து தீமைகளைத் தீமைகள் என்று உணரப்படும் போது அந்தத் தீமையின் உணர்வே கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து விடுகிறது.

கருவுற்றிருக்கும் போது ஒரு ஊனமுற்ற குழந்தையைத் தாய் உற்று நோக்கினால்
1.அந்த ஊனமுற்ற உணர்வுகள் கருவிலே சேர்ந்து
2.கருவிலிருக்கும் குழந்தையை ஊனமாக மாற்றிவிடுகிறது.

அதே போல் சில வித்தியாசமான குழந்தைகளைப் பற்றி அங்கே இப்படி இவ்வாறெல்லாம் நடந்தது என்று பத்திரிக்கை வாயிலாகப் படித்ததை “ஒரு ஒட்டுக் குழந்தை… பிறந்தது…” என்று பேசிக் கொள்வார்கள்.

ஒட்டுக் குழந்தையைப் பற்றி இவ்வாறு அவர்கள் பேசிக் கொள்வதைக் கர்ப்பமாக இருக்கும் தாய் உன்னிப்பாகக் கூர்மையாகக் கேட்டுணர்ந்தாலே போதுமானது.

அந்தக் குழந்தை தாயின் கருவிலே சில நிலைகள் உருமாறி இதுவே ஒட்டுக் குழந்தைகளாகப் பிறந்து விடுகிறது. தாயின் கருவிலே விளையும் நிலைகள் தான் இது.

இதைப் போல சில சில நிகழ்ச்சிகளைத் தாய் கர்ப்பமாக இருக்கும் போது கேட்டுணர்ந்த நிலைகள் தான் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து அப்படித்தான் நாம் அனைவருமே வந்துள்ளோம்.

தாயின் கருவிலே இருக்கப்படும்போது ஞானிகளை உற்று நோக்கி
1.ஞானிகளின் அருள் உணர்வுகளுக்கு ஏங்கி இருந்தால்
2.அந்த உணர்வுகள் தாயின் கருவிலே இருக்கும் குழந்தைக்கு இணைந்து
3.அது ஞானியாக வளர்கின்றது.

திருஞானசம்பந்தர் போன்ற ஏனைய ஞானிகள் எத்தனையோ பேர் குழந்தைப் பருவத்தில் இது போல் ஞானிகளாக வந்தவர்கள் தான். இது எல்லாம் தாய் கருவிலே வளர்ந்தது தான்.

குடும்பத்தில் செல்வமும் செல்வாக்குடனும் இருப்பினும் பண்டைய காலத்தில் ஒன்று சேர்ந்து வாழ்ந்த குடும்பங்களில் ஒருவருக்கொருவர் குறைபாடுகள் பற்றி பாகப் பிரிவினையிலோ வாழ்ந்த காலத்தில் சற்று ஒற்றுமையில் பிசகாகி ஒருவருக்கொருவர் சாபமிட்டால் சாப வினைகள் குழந்தைக் கருவிலேயே பதிவாகி விடுகிறது.

அந்த உணர்வுகள் வழி தொடந்து இப்போது நம் உடலிலும் பின் தொடர்ந்தே வருகிறது.

1.ஒட்டுக் குழந்தைகளாகப் பிறப்பது போல
2.ஒட்டு மரங்களை வளர்ப்பது போலத்தான்
3.சாப வினைகள் நமக்குள் ஒட்டி அந்த உணர்வின் தன்மை கொண்டு
4.தீமைகளாக நமக்குள் விளைந்து வருவதும் உண்டு.

நாம் பிழைகள் செய்யவில்லை என்றாலும் பக்தியில் பல நன்மைகள் செய்தாலும் பிறர் செய்யும் தீமைகளைக் கேட்டறியும் போது அவர் உடலிலே விளைந்த தீமைகள் நமக்குள் ஒட்டி விடுகின்றது.
1.அது ஒட்டுச் செடி போன்றே விளைந்து விடுகின்றது.
2.நம் நல்ல குணங்களுடன் தீய குணங்கள் ஒட்டிக் கொள்கிறது.

இதைப் போன்ற தீயவினைகளை நீக்கத் தான் இந்த உபதேச வாயிலாக துருவ நட்சத்திரத்தைப் பற்றியும் அந்த மகரிஷிகளைப் பற்றியும் உங்களுக்குள் பதிவாக்கி ஒட்ட வைக்கின்றோம்.

நல்லதைப் பெற வேண்டும் என்று நூறு பேர் வருகிறார்கள் என்றால் அதிலே இரண்டு பேர் தப்புவதற்கே கஷ்டமாக இருக்கிறது

 

எல்லோரும் நல்லவரே…! இருந்தாலும் ஒவ்வொருவரும் சந்தர்ப்ப பேதத்தால் அவர்கள் உடலிலே அவரை அறியாத நிலைகள் எடுத்துக் கொண்ட உணர்வுகளினால் குடும்பத்திலே எத்தனையோ இன்னல்படுகின்றார்கள்.

உங்களை ஆட்டிப் படைக்கும் தீமைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நல்ல வாக்கான நிலைகளை உங்கள் உடலில் பதிவு செய்கிறேன் (ஞானகுரு).

அப்படிப் பதிவு செய்தாலும் கூட…
1.இங்கே நூறு பேர் வருகின்றார்கள் என்றால்
2.அதிலே இரண்டு பேர் தப்புவதற்குக் கஷ்டமாக இருக்கின்றது.

யாம் வாக்குக் கொடுத்தோமென்றால்
1.அதன்படி அப்படியே நடக்கட்டும்
2.அந்த அருள் சக்தி எனக்குக் கிடைக்கட்டும்…! என்று எண்ணினால் அது நடக்கும்.

ஆனால் அதை விடுத்துவிட்டு இங்கிருந்து போனவுடனே அடுத்தாற்படி அடுத்தவர்கள் கூப்பிட்டுக் கேட்பார்கள். சாமி (ஞானகுரு) என்ன சொல்கின்றார் என்று…?

கேட்டவுடனே… சாமி என்ன சொல்கிறார்…? நன்றாக இருப்பீர்கள் என்று தான் சொல்கின்றார்… ஆனால் என் கஷ்டம் என்ன விட்டுப் போக மாட்டேன் என்கிறதே…! என்பார்கள்.

கஷ்டத்தை எண்ணியவுடன் நல்லதை விட்டுவிடுகின்றார்கள்… வாக்கு கொடுத்ததை விட்டுவிடுகிறார்கள்.

1.சாமி கொடுத்த அருள் வாக்கினால் “எப்படியும் நாங்கள் நன்றாக இருக்க வேண்டும்…”
2.எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்
3.எங்களைப் பார்ப்பவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று
4.இப்படிச் சொல்வார்களா… என்றால் “இல்லை…”

எம்மிடமிருந்து செல்லும்போதே சாமி வாக்குக் கொடுக்கின்றார்… நம் காலம் எங்கே ஒட்டி வருகின்றது…? என்று கொடுத்த வாக்கினை நினைவில் நிறுத்தாதபடி செய்து விடுகின்றார்கள்.

ஆனால் இந்த வாக்கினை வித்தாக உங்களுக்குள் கொடுப்பதற்கு நான் (ஞானகுரு) என்ன கஷ்டப்பட்டேன் என்று எனக்குத் தான் தெரியும்.

ஏனென்றால் குருநாதர் கொடுத்த ஞான வித்தை முளைக்க வைத்து அதை விளைய வைத்து மறுபடியும் பல வித்துகளாக உருவாக்கி உங்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்கின்றோம்.

அதை நீங்கள் விளைய வைத்துக் கொண்டால் அருள் ஞானப் பசியைத் தீர்க்கும். உங்கள் குடும்ப வாழ்க்கையில் வரும் இன்னலைப் போக்கச் செய்யும்.

பசியோடு இருக்கின்றீர்கள்.
1.அந்தப் பசியைத் தீர்ப்பதற்கு நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று
2.அந்த நல்ல வித்தினை உங்களுக்குள் பதியச் செய்கிறேன்
3.நீங்கள் முளைக்க வைத்துப் பசியைத் தீர்க்கலாம்.

ஆனால் சரியான நிலையில் முளைக்க வைக்காமல் விட்டு விட்டால் என்ன செய்யும்…? நான் என்ன செய்ய முடியும்…!

நான் அந்த வித்தை உருவாக்குவதற்கு… அந்த வித்தை முளைக்க வைப்பதற்கு… “என்ன பாடுபட்டேன்…” என்று எனக்குத் தான் தெரியும்.

ஆனால் எளிதாகக் கொடுத்தவுடன் இங்கேயே உதறி விட்டுப் போகின்றார்கள். அப்பொழுது என் மனது எப்படியிருக்கும்…!

நான் கொடுத்தேனே… “இப்படிச் செய்துவிட்டார்களே…” என்று உங்களை மாதிரி என்னையும் ஆக்கிவிடுகின்றீர்கள்.

நான்கு பேர் இருக்கும் வீட்டில் குறைபாடு வந்தால் எப்படி இருக்கும்…? ஆனால் என்னிடம் பல ஆயிரக்கணக்கானோர் வருகின்றார்கள். யாம் சொல்லிக் கொடுத்துப் பதிவு செய்த அந்த ஞான வித்தை முளைக்கச் செய்யாது அதைச் சிதற விட்டால் எப்படி இருக்கும்…!

இதைப் போக்குவதற்காக வேண்டி நான் என்ன செய்வது…? கடும் தியானம் இருக்கிறேன்.
1.உங்களை வளர்த்து இயக்கிக் கொண்டிருக்கும் உயிரை நினைக்கின்றேன்.
2.ஆண்டவனே… என்று உங்கள் உயிரை நினைக்கின்றேன்
3.ஞானப் பசியைப் போக்கி மகிழ்ச்சியான நிலைகள் அங்கே உருவாக வேண்டும் என்று இரவு முழுவதும் தியானம் இருக்கின்றேன்.

காரணம் என்ன…? என்று கேட்டால் உங்கள் கஷ்டத்தை எல்லாம் கேட்டவுடன் எனது உயிர் சும்மா இருக்காது.

இப்படி இருக்கின்றார்களே… என்று என்னை நினைக்கச் செய்கிறது,… அறியச் செய்கிறது, அறிந்தவுடனே உள்ளே போய் என் உடலாகின்றது. உயிரின் வேலை அதுவாக இருக்கிறது.

ஆக… குரு கொடுத்த அருள் சக்தி எனக்குள் விளைந்திருந்தாலும் ஆறாவது அறிவின் ஞானம் கொண்டு ஒவ்வொரு நிமிடத்திலும் துன்பங்களைத் துடைப்பதற்குக் குருநாதர் எனக்குச் சக்தி கொடுத்தார்.
1.அதைத் துடைப்பதிலேயே தான் இருந்து கொண்டிருக்கின்றேன்.
2.உங்களை வளர்ப்பதற்கு முடியாமல் போய்க் கொண்டிருக்கின்றது.

ஆகவே நீங்கள் எதைச் செய்தாலும் யாம் கொடுத்த அருள் ஞான வித்தை ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் உங்களுக்குள் விளைய வைக்க வேண்டும். அருள் ஞானிகளாக வளர வேண்டும்.

இன்னல் வரும் நேரத்தை எல்லாம் உயர் ஞானம் பெறும் படிக்கட்டாக அதை மாற்றிக் கொள்ளுங்கள் – ஈஸ்வரபட்டர்

 

1.பிரம்மத்தின் பிரம்மாவாய்… ஒவ்வொருவரும் தன் எண்ணத்தின் கர்ம காரியத்தில் ஏற்படக்கூடிய மாற்றத்தில்
2.மாற்றம் கொள்ளக்கூடிய செயல் நிலை ஒவ்வொன்றிலுமே
3.இன்னலில் இருந்து தன் ஞானத்தைக் கூட்டி உயர் ஞானமாக்கும் சித்தம் கொண்டால்
4.பரப்பிரம்மத்தில் பிரம்மாவாய்ப் படைப்பில் பிம்பம் பெற்ற நாம்
5.வாழ்க்கை நிலையிலிருந்து செயல் கொள்ளக்கூடிய எண்ணத்தின் உணர்வை
6.தடைப்படக்கூடிய கர்ம காரியத்தில் சலிப்பு சோர்வு என்ற சஞ்சல உணர்வை வளர்க்காமல்
7.தடைப்படும் காரியங்கள் ஒவ்வொன்றையுமே உயர் ஞானத்தைக் கூட்டி மாற்றியமைத்து
8.வளரும் தொடருக்கு வாழ்க்கையின் நிறைவை வளர்த்து
9.எண்ணத்தின் உணர்வைச் சமமான குண நிலைக்கு
10.சாந்தமான ஞானத்தின் வீரத்தை வளர்த்துக் கொண்டோமேயானால்
11.யாம் வழிகாட்டியபடி மேல் நோக்கிய சுவாசத்தால் எடுக்கவல்ல காந்த மின் நுண் அலைகள் மூலம்
12.இச்சரீரம் முழுமைக்குமே வலுக்கொள்ள வழி அமையும்.

எப்போது ஆறு வண்ணங்களின் முலாம் கொண்ட இஜ்ஜீவ ஜடபிம்ப பிரம்ம உடல் பெற்றோமோ… அப்போதே அதற்கடுத்த வான்மீகியாரால் சுட்டிக் காட்டப்பட்ட ஒளிப் பிம்பமான… நீர் மூர்த்தி உருவங்களைத் தெய்வ குணாம்ச வித்தகராய்ப் படைத்த… காவிய ரூபத்திற்கொத்த கருத்தின் ரூபமாய் இராமனைப் போன்றும் கிருஷ்ணரைப் போன்றும்
1.இச்சரீரத்தின் ஆத்ம ஒளியைச் விண்ணிலிருந்து எடுக்கும் உயர் காந்தமின் அணு வளர்ப்பினால்
2.நீல வண்ண ஒளி சரீரமாய் இச்சரீர ஆத்மாவையே ஒளிப் பிழம்பாக ஆக்கி
3.இச்சரீரத்தில் இருந்து கொண்டே அந்த (நம்) ஆத்மாவின் ஒளியை நாம் காண முடியும்.

அப்படிப்பட்ட ஒளியால் ஒளிரக் கூடிய வலுப்பெறும் சித்துத் தன்மையினால் எதனையும் ஊடுருவும் செயல் தன்மை இம்மனித சரீர வாழ்க்கை உணர்வு எண்ணத்திலேயே நாம் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பௌர்ணமி அன்று உங்கள் குடும்பத்தில் கூட்டுத் தியானம் இருந்து குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் ஒன்று சேர்த்து மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் அனைவரும் பெறவேண்டும் என்று ஒரு பத்து நிமிடமாவது ஏங்கித் தியானிக்க வேண்டும்.

அதற்குப் பின் உங்கள் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்.

இவ்வாறு பழகிக் கொண்ட பின் குலதெய்வங்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று வாரத்தில் ஒரு நாளாவது எண்ண வேண்டும்.

காரணம் அவர்களது உணர்வுகள் உங்கள் உடலில் உண்டு.

1.இன்னொரு உடலில் இருந்து முன்னோர்களின் ஆன்மா வெளி வந்தாலும்
2.மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துக் கொண்ட வலிமையால் உந்தித் தள்ளினால்
3.அந்த உயிராத்மாக்களைப் பிறவா நிலை பெறச் செய்ய முடியும்.

உங்கள் குடும்பத்தில் உள்ள மூதாதையர் எவரேனும் விண் சென்றால் தான் நீங்களும் அவர்களைப் பின் தொடர்ந்து விண் செல்ல முடியும்.

இது அல்லாது மார்க்கம் இல்லை…!

1.பக்தி மார்க்கத்தில் காட்டிய வழிப்படியோ
2.மதங்கள் காட்டிய முறைப்படியோ
3.தனித்த ஒரு மனிதன் கடும் ஜபம் இருந்தாலும்
4.நிச்சயம் விண்வெளி செல்ல முடியாது.

எடுத்துக் கொண்ட ஜபம் ஓங்கி வளர்ந்திருந்தாலும் உடலை விட்டுப் பிரிந்து சென்றால் எந்த ஜபம் எடுத்தோமோ அதே ஜபத்தை வேறு யாராவது செய்தால் நம் உயிரான்மா அங்கே ஈர்க்கப்பட்டு அவருக்குள் போய்விடுவோம்.

அங்கே சென்றபின் இரண்டு மனிதனாக சக்தி வாய்ந்தவராக ஆகலாம். ஆனால் அவ்வாறு சென்றாலும் அதனின் துணை கொண்டு பிறருடைய துயர் துடைக்க உதவும்.

பிறருடைய உடலில் உள்ள துயரங்கள் விளைந்த உணர்வுகளை ஈர்த்து அவர்களுக்குப் பதில் சொல்லவும் முடியும்.

எப்படி அந்த உடலுக்குள் போனோமோ
1.பிறருடைய உடலில் விளையும் தீமைகளைக் கவர்ந்து
2.தீமையான உணர்வுகள் இந்த உடலில் விளைந்து
3.இந்த இரண்டு ஆன்மாக்களும் நஞ்சு கொண்ட நிலையில் மீண்டும் வளர்ந்து பின் மடிந்து விடும்.

பக்தியில் காட்டிய ஜபம் என்பது இன்று நமக்கு எளிதாக இருக்கலாம். அந்த வழியில் செய்து அனுபவித்து வந்தவர்களுக்கு ஏதோ நாம் ஜபம் இருக்கிறோம். ஆன்டவனை அடைய முடியும் என்று இருக்கலாம்.

ஆனால் இது அல்ல முறை.

இன்று சக்தி வாய்ந்த அணு குண்டை வீச பல இயந்திரங்களின் துணை கொண்டு விண்ணில் வீசுகின்றான். தனித்து வீசினான் என்றால் அதில் இயக்கச் சக்தியின் கிளைகள் இல்லை என்றால் அது இயங்காது.

சக்தி வாய்ந்த அணுவைப் பிளந்து அணுவின் ஆற்றலை வலுப் பெறச் செய்து விண்ணில் செலுத்துகின்றான். எத்தனையோ செயற்கைக் கோள்களையும் இராக்கெட் மூலம் விண் செலுத்துகின்றார்கள்.

மனிதனான விஞ்ஞானி இவ்வாறு செய்வது போல
1.மெய் ஞானிகள் விண்ணின் ஆற்றலில் கலந்த நஞ்சினைப் பிளந்து
2.உணர்வினை ஒளியாக மாற்றி
3.விண்ணுலகம் செல்லும் மார்க்கங்களைச் செயல்படுத்தினார்கள்.

தன் சீடர்களுக்கு இதையெல்லாம் உபதேசித்து இந்த உடலை விட்டுக் கடந்த பின் அந்த உயிரான்மாவை விண் செலுத்தப் பழக்கிக் கொடுத்துச் சென்றவர்கள் மெய் ஞானிகள்.

அரசர்கள் பக்தி என்ற முறைகளில் மதங்கள் என்ற நிலையில் பிரித்து அவர்கள் போதித்த தன்மை கொண்டு மீண்டும் மீண்டும் இது மனிதனுக்குள் சிக்குவதும் மற்ற உடலில் தப்புவதும் இப்படி இன்னொரு உடலுக்குள் (மனித உடலுக்குப் பின் விஷமான உடல்) தான் சென்றடைந்தார்கள்.

கடும் தவம் இருப்பவர்கள் நான்கு ஐந்து உடலுக்குள் செல்லலாம்.
1.இந்த அரசனாக இருப்பவன் கடும் தவங்கள் எடுத்திருப்பான்.
2.பல மந்திர ஒலிகளைத் தனக்குள் சேர்த்திருப்பான்.
3.அந்த அரசனை எண்ணி ஏங்கிய மற்ற மக்களுடைய நிலைகளும்
4.அவன் இறந்த பின் அதே ஜபத்தால் அவனைக் கவர்ந்து கொள்வார்கள்.

அதனின் வலுக் கொண்டு கூடு விட்டுக் கூடு பாயும் சாகாக்கலை என்ற நிலைகள் தான் அவர்கள் சென்றார்கள். வேகா நிலைக்குச் செல்லவில்லை.

அரசர்களால் ஏற்படுத்தப்பட்ட மதங்களும் மதத்தின் அடிப்படையில் விண் செல்வோர்கள் சாகாக்கலையாக இங்கே தான் சுழன்று கொண்டுள்ளார்கள்,

தீயிலே குதித்தால் நம் உயிர் வேகுவதில்லை. விண்ணில் வரும் எத்தகைய நஞ்சும் இதை வேக வைக்க முடியாது. இந்த உயிர் வேகுவதில்லை.

ஆனால் எத்தகைய நஞ்சினையும் ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றும் திறன் பெற்றவர்கள் மகரிஷிகள்.
1.வேகா நிலை பெற்றவர்கள் மகரிஷிகள்.
2.அந்த மகரிஷிகளின் உணர்வை நாம் கவர்ந்தோம் என்றால்
3.நாமும் வேகா நிலை அடையலாம்.

குருநாதர் எமக்கு இட்ட பணி

 

மகரிஷிகள் தன் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி ஒளியான வித்த்துக்களாக விளைய வைத்து உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகி இன்றும் அழியாத நிலைகள் கொண்டு சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளனர்.

நம் பூமியில் உயிரினம் தோன்றிய நிலைகளிலிருந்து மனிதனாக வளர்ச்சி பெற்று மனித வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கி ஒளி காணும் நிலைகள் பெற்றவர்கள் தான் மகரிஷிகள்.

அந்த மகரிஷிகளின் உணர்வுகள் இன்றும் இந்தப் பூமியில் படர்ந்துள்ளது. அதை எவ்வாறெல்லாம் பருக வேண்டும் என்று மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் எமக்குள் (ஞானகுரு) உணர்த்தினார்.

அந்த அருள் ஞான வித்தை வளர்ப்பதற்கு
1.எங்கெங்கெல்லாம் அந்த அருள் ஞான சக்தி தொடர்ந்துள்ளதோ
2.அங்கெல்லாம் கால்நடையாகவும் மற்ற வழிகளிலும் நடக்கச் செய்து
3.ஆங்காங்கு பூமியிலே அந்த ஞானிகள் உணர்வு பதிந்து இருப்பதையும்
4.அவர்கள் உடலில் விளைந்த சக்திகள் படர்ந்திருப்பதையும் நுகரும்படி செய்தார்.

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் இந்த உலகம் அனைத்தும் எம்மை அழைத்துச் சென்று அவர் உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு அந்த மெய் ஞானிகள் உணர்வின் ஆற்றலைப் பருகும் முறையைக் காட்டினார்.

அந்த மகரிஷிகளின் உடலில் விளைந்த உணர்வலைகள் பூமியில் பதிந்து இருந்தாலும்
1.அந்த அலைகள் அங்கே படர்ந்திருப்பதை நீ நுகரு
2.அந்த ஆனந்த சக்தியான வித்தை உனக்குள் வளர்த்துக் கொள்…! என்றார்.

குரு காட்டிய நிலைகள் கொண்டு அதனை இந்தப் பூமி முழுவதும் சுழன்று வந்து அந்த அருள் ஞான வித்துக்களை வளர்த்துக் கொண்டேன்.

விண்ணிலே வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகள் இந்தப் பூமியில் வாழ்ந்த காலத்தில் வெளிப்படுத்திய அந்த அருள் ஞான வித்துக்களைத் தான் குருநாதர் காட்டிய வழிப்படி உங்கள் உள்ளங்களில் இப்போது ஆழமாகப் பதிவு செய்கிறோம்.

1.பதித்த அந்த உணர்வின் சத்தை… குரு வழியில் திரு அருளாக நீங்கள் பெற வேண்டும்
2.அருள் ஞானிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும்
2.அருள் ஞானப் பசியை உங்களுக்குள் அது ஆற்றிட வேண்டும்
3.பேரானந்தப் பெருநிலை நீங்கள் பெற்றிட வேண்டும் என்பதற்கே மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.

ஒவ்வொரு நிமிடத்திலும் ஞானிகள் அருள் சக்திகளை எடுத்து ஒளியான அணுக்களை உடலில் வளர்த்துக் கொள்ளுங்கள்.

இராமனையும் கண்ணனையும் நீல வண்ணமாக ஏன் காட்டினார்கள்…? – ஈஸ்வரபட்டர்

 

சூரியனின் ஒளிக் கதிர்கள் பிரகாசிக்கும் தருணத்தில்… நம் பூமியில் மழை பெய்யும் தருணத்தில் மேகக் கூட்டங்கள் விலகி மப்பும் மந்தாரமுமாய் மழைத் துளிகள் விழும் தருணத்தில் சூரிய ஒளி பூமியின் ஈர்ப்பில் பட்டுப் பிரகாசிக்கும் சமைப்பு அலையினால் “வானவில்” ஒளியின் வண்ணத்தை நாம் காண்கின்றோம்.

இராமாவதார காலத்தில் வான்மீகி எழுதிய காவியத்தில் வண்ணத்தின் ஒளியில் வளரும் குண உருவ இராமனை “நீல உருவாக” காவியத்தில் காட்டினார்.

சூரியனுக்கும் பூமிக்கும் வான மண்டலப் பால்வெளியில் சமைக்கப்படும்
1.பூமி எடுக்கும் சத்தின் வளர்ச்சி வண்ண ஒளியின் தொடர் வளர்ச்சியை
2.வான்மீகி மகரிஷி பெற்ற ஜெபத்தின் தத்துவக் காவியத்தில்
3.உருவக நிலை உருவாகும் வண்ணத்தின் சேர்க்கையின்… ஆத்ம குணத்தின்… வளர்க்க வேண்டிய ஜீவ சரீரத்தைப் பற்றி…
4.இராமாயணத்தின் மூலம் அன்றே நமக்குப் பல உண்மைகளை உணர்த்தியுள்ளார்.

வானவில்லில் எப்படி வண்ணங்களைக் காணுகின்றோமோ அதற்கொத்த வண்ணத் தன்மை ஆறு வண்ணங்கள்… வலுக்கூடிய ஏழாம் வண்ணமான உருவக வண்ணம் கொண்ட செயல் நிலையில் தான்… மனித ஜீவனும் பிறக்கின்றது.

இச்சரீரத்தை இயக்கும் ஆத்மாவின் வண்ணம் ஆறு. வானவில்லின் ஒத்த வண்ணத்தின் வலு ஒளி பெற வேண்டும் என்றால்…
1.ஆத்மாவின் இயக்கத்தால் ஜீவ சரீரத்தின் உருவகத்தின் மூலம்
2.பகுத்தறியும் ஞான மனிதனை ஒளிச் சரீரமாக (வெண்மை நிறம்) வளர்க்க முடியும்.

ஆறு வண்ணத்தின் திரு உருவாய் ஆறுகுணத்தின் அறுசுவை உண்டு செயல் நிலைக்கு மனிதக்கரு உரு வளர வளர்ச்சி பெற்ற அடுத்தநிலை தான் இராமனும்… கிருஷ்ணனும்…!

அதாவது… ஆத்ம வலுவின் ஒளியைப் பெற்ற… அடுத்த தெய்வ நிலை பெற்ற…
1.அடுத்த தெய்வ நிலை பெறும் ஒளியைக் குறிக்க
2.ஜீவ உடலின் ஆத்ம வலுவின் மனிதனுக்கடுத்த வளர்ச்சி ஒளி நிலையான
3.தெய்வ நிலை பெறும் வண்ணத்தைக் குறிக்கும் ஒளி தானப்பா “நீல ஜோதி ஒளி நிலை…!” (இராமனும்… கிருஷ்ணனும்)

இராமரையும் கிருஷ்ணரையும் நீல வண்ணத்தில் உருவகம் தந்து தெய்வங்களாகக் குறிப்பு காட்டிய வான்மீகியார் தந்த காவியத்தில் இப்படிப் பல உண்மைகள் உண்டு.
1.ஜீவ சரீரத்தின் அடுத்த நிலை பெறும் சூட்சும மார்க்கங்கள் அனைத்தையும் குறிப்புகளாக
2.காவிய உருவத்தில் ரூப கர்ண நாமங்களைச் சூட்டி வடித்துள்ளார் வான்மீகியார்.

மிளகாயின் விதையை விதைத்தால் அதிலுள்ள காரத் தன்மைக்கு ஜீவ நீர் சேர்த்து வளரும் தருணத்தில் அதன் உணர்வின் நிலைக்கொப்ப இக்காற்று மண்டலத்திலுள்ள தனக்குகந்த கார அமில உணவைத் தன் வளர்ப்பின் சத்திற்கு எடுத்து வளர்கிறது.

மிளகாய்ச் செடி அதன் ஊன் நிலை வெளிக்கக்கும் ஆவி உஷ்ணத்தினால் இலைகள் எல்லாம் முதிர்ச்சியுற்றுப் பூவாகிக் காயாகி முற்றிய பிறகுதான் மிளகாயாகவும் வித்தாகவும் பலனைத் தருகின்றது.

இப்படி அந்த வித்தின் தொடர் வளர்ச்சியில் மிளகாயின் பலனை எப்படிப் பெறுகின்றோமோ அதைப் போன்றுதான் நம் ஆத்ம உயிர் வித்தின் பலனும்.

இச்சரீரக் காலத்தின் முதிர்வில் சரீரத்திலுள்ள எலும்புகளின் ஊன் நிலை அது வெளிக்கக்கும் அலை உணர்வின் வளர்ப்பு நிலை வளரும் குழந்தைப் பிராயத்தில் பருவ நிலையில் சரீர மாற்று உணர்வு வளர்ச்சி முற்றுகின்றல்லவா..?

ஏனென்றால் உணர்வின் வளர்ச்சி முற்றல் ஜீவ வளர்ச்சி வளர்க்கும் பக்குவ காலமே… “பருவ காலம்…”

அதைப் போன்று எண்ணத்தின் உணர்வால் ஆத்மாவின் வளர்ச்சி முற்றும் வலு நிலை கூட வேண்டும் என்றால்…
1.ஆத்ம ஜெபத்தால் பெறும் வீரியத் தன்மையால்
2.சமமான குண வலுவைக் கொண்டு
3;ஆறு வண்ணங்களின் உரு வண்ணத்தைப் பெற்ற சரீரத்தை
4.ஒளி வண்ணத்தின் ஒரு வண்ணமாய் நீல வண்ண ஒளி ஆத்மாவாய்
5.இவ்வுயிராத்மா வலுப்பெறும் அந்த வளர்ச்சியின் உண்மையை
6.ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

(குறிப்பு:- சரீர ஜீவ உருவக வாழ்க்கையிலேயே சாதாரண பிறப்பு இறப்புக்கு… அடுத்து ஜென்மத் தொடர் பெறுவதற்கும்… ஆத்ம வலு நிலை கூடியிருந்தால் தான் பிறப்பிற்கு வர முடியும்)

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் உயிர் “ஓ…ம்” என்று பிரணவமாக்கி இயக்குகின்றது. நாம் சுவாசிக்கும் உணர்வின் தன்மையை ஜீவனாக்கி ஜீவனின் மலமாக நம் உடலை ஆக்கிக் கொண்டேயிருக்கின்றது.

“ஓ…” பிரணவம் “ம்…” பிரம்மம்
1.எனக்குள் எண்ணியதைச் சிருஷ்டித்து அதனின் இயக்கமாக இயக்கி
2.ஈசனாக எனக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறாய் என்று
3.நம் உயிரை ஈசனாக மதிக்கும்படிச் சொன்னார்கள் ஞானிகள்.

நாம் எண்ணியதை இயக்கி எண்ணியதைப் பிரம்மமாக்கி நமக்குள் உடலாக்கி அந்த உணர்வின் செயலை நமக்குள் இயக்கிக் கொண்டே இருக்கின்றான் உயிரான ஈசன்.

அந்த உயிரே ஆண்டவன்.

1.நம் உடலில் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும்
2.பெருமாளாக வீற்றிருப்பதும் உயிரே.
3.பெருமானாக இருப்பதும் உயிரே.

மனிதனின் நிலைகள் உருபெற்ற நிலைகளை உங்களுக்குள் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.

நமக்குள் இருக்கும் ஆறாவது அறிவு என்பது “முருகு…”. அதாவது மாற்றி அமைக்கும் பெருமானாக இருப்பது நமது ஆறாவது அறிவு.

1.உடலின் இயக்க உணர்வுகள் அனைத்திற்கும் பெருமாளாக இருப்பது உயிரானாலும்
2.இயக்கத்தின் தன்மை ஈசனாக இருப்பினும்
3.நம்மை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனாக இருப்பினும்
4.ஆறாவது அறிவின் தன்மையை “முருகப் பெருமான்…!” என்றனர் ஞானிகள்.

அதாவது இந்த உடலை ஆண்டவனாக ஆண்டு கொண்டிருப்பது ஈசனாக இருப்பினும் அவனின் நிலைகள் கொண்டு மாற்றியமைக்கும் பெருமானாக இந்த ஆறாவது உணர்வின் துணை கொண்டே இந்த உயிர் நம்மை ஆட்சி புரிகின்றான்.

இது அனைத்தையும் ஆட்சி புரியும் நிலைகளை நாம் நினைவு கொண்டு நாம் அல்ல என்ற நிலைகளுக்கு வருதல் வேண்டும்.
1.நம் உடலை அவனின் உடல் என்றும்
2.அவனின் உணர்வு என்றும்
3.அவனின் கண் என்றும் உணர்தல் வேண்டும்.

எல்லாமே அவனின் நிலைதான் என்று அறிந்து கொண்ட பின் ஒருவன் என்னைக் கேவலமாகப் பேசி விட்டான்… நான் அவனை விடுவேனா…! என்ன செய்கிறேன் பார்…” என்ற நிலைகளில் சொல்லி “ரோசப்படுவது…” என்பது தேவையற்றது.

ஒரு உடலுக்குள் விளைந்த உணர்வுகளை எடுக்காது உத்தராயணம் என்ற நிலைக்கு வர வேண்டும்.

அதாவது மகாமகம் என்று சொல்வார்கள். நாம் சமையல் செய்யும் போது எப்படிப் பொங்கி வடிக்கின்றோமோ இதைப் போல இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு “உத்தராயணம்…” தீமைகளை நாம் மாற்றியமைக்க வேண்டும்.

இந்த நிலை வரும் போது தான் பங்குனி உத்திரத்தை நாம் தெளிவாகக் கொண்டாட முடியும். தெளிந்திடும் உணர்வு கொண்டு நாம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

இதற்குத் தான் மாதத்திற்கு நாள் என்று விழாக் கோலம் வைத்தனர் ஞானிகள். பன்னிரண்டு ராசி என்று சொல்வார்கள்.

பன்னிரண்டு ராசி என்று சொல்லும் போது நமக்குள் எந்த ராசி அதிகரிக்கின்றமோ அதனின் விளைவின் தன்மை தான் நமக்குள் வருகின்றது.

“முருகப் பெருமான்” – நாம் மாற்றி அமைக்கும் ஆறாவது அறிவின் நிலைகள் கொண்டு அது உயர்ந்த நிலைகள் கொண்டு நமக்குள் பெருமாள் ஆக இருந்து ஆட்சி புரியும் உயிருடன் அவனுடன் ஒன்றி அவனாக நாம் ஆகும் நிலையே மகரிஷிகள் அன்று உணர்த்திய தியானம்.

தியானம் என்பது என்ன…?

நம்மை மாற்றி அமைக்கும் முருகப் பெருமானின் உறு துணை கொண்டு மெய் ஞானி உணர்வை நமக்குள் இணைத்து உயிருடன் ஒன்றிடும் நிலையாக அந்தப் பெருமானுடன் ஒன்றி என்றுமே நாம் ஒளியின் சுடராக வாழ்வதே தியானம்.

நமது எல்லை எது…? இனி உடல் பெறாத நிலை தான் உத்தராயணம்.

இந்த மனித உடலை விட்டு நாம் அகன்ற பின் ஒளியின் சிகரமாக நாம் ஆவதற்கே இந்தத் தியானம்.

இன்னல் எது என்றே அறியாதவராக ஒரு பித்தனைப் போன்று வாழ்ந்தவர் தான் நம் குருநாதர்

 

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அவர் வாழ்க்கையில் ஒரு பித்தனைப் போன்று
1.இன்னல் என்ற நிலையை அவர் அறியாது
2.இன்னல் எது…? என்றே அறியாத நிலைகள் கொண்டு
3.இன்னல் என்ற நிலையை அவருக்குள் அறியாத நிலையிலே
4.இன்னலைப் போக்கிடும் ஒளியின் சுடராக அவருக்குள் விளைய வைத்து
5.விண்ணின் ஆற்றலை அவருக்குள் ஒளியின் சுடராக மாற்றி
6.ஒளியின் சுடராகப் பெறும் நிலையை அவர் பித்தனாக இருந்து எனக்குள் (ஞானகுரு) ஆழப் பதியச் செய்தார்
7.அருள் ஞான வித்தை வளர்க்கும் முறையையும் வகுத்துக் கொடுத்தார்.

விண்ணின் ஆற்றல் மிக்க நிலையை மகரிஷிகளால் வளர்க்கப்பட்ட அருள் ஞான வித்துக்களை
1.அதை நமக்குள் எவ்வாறு பருகிட வேண்டும்…?
2.அதை நமக்குள் எவ்வாறு வளர்த்திடல் வேண்டும்…?
3.அதை நமக்குள் எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்…? என்று உணர்த்தி
4.அந்த ஞான வித்தை எல்லோரும் வளர்க்க வேண்டும் என்றும்
5.அதன் மூலம் அருள் ஞானப் பசியை எல்லோருக்கும் போக்க வேண்டும் என்றும்
6.அதை எனக்குள் உருப் பெறச் செய்து உணர்த்திக் காட்டினார்.

அதை எல்லாம் நான் (ஞானகுரு) அவர் நினைவு கொண்டு… அவருடைய துணை கொண்டு தான் அறிய முடிந்தது… வளர்க்க முடிந்தது.

காரணம்… ஒவ்வொரு மகான்களும் மகரிஷிகளும் தனக்குள் வளர்த்துக் கொண்ட அருள் உணர்வுகள் தன் இன மக்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் எல்லோரும் மகிழ்ந்திட வேண்டும் என்றும் தனக்குள் விளைய வைத்த அந்த உயர்ந்த உணர்வுகளை ஞான வித்துக்களாக நமக்குள் பதியச் செய்தார்கள்.

ஆனால் காலத்தால் அந்த அருள் ஞானியின் வித்துக்களை அது முளைக்காது தடைப்படுத்தி விட்டோம்.. விரயமாக்கி விட்டோம்.
1.அருள் ஞான வித்துக்கள் அனைத்தும் முளைக்காது சென்ற அந்தக் காரணத்தால்
2.அருள் ஞானிகள் உணர்வுகள் தேங்கி அதற்குண்டான ஊட்டச்சத்து இல்லாது போய்விட்டது.

அப்படிப்பட்ட இந்த நேரத்தில் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளாற்றலால் அதனைப் பெறும் பாக்கியமாக அமைந்தது.

ஆகவே குரு கொடுத்த அந்த அருள் ஞான சக்தியின் துணை கொண்டு
1.எண்ணத்தால் அதை நமக்குள் வளர்த்திடுவோம்
2.இருளை நீக்கிப் பொருள் காணும் நிலையாக நமக்குள் வளர்த்திடுவோம்.
3.அருள் ஞானப் பசியைப் போக்கிடுவோம்.
4.அருள் ஞானிகளுடன் ஒன்றிடுவோம்.

அந்த மகரிஷிகள் விளைய வைத்த அந்த அருள் ஞான வித்தை நாம் பருகுவோம்… அது நமக்குள் பெருக வேண்டும்… நாம் பெருக்கிட வேண்டும். அதன் மூலம் எல்லோருடைய அருள் ஞானப் பசியையும் போக்கிட வேண்டும்.

மனிதனின் எல்லை செயற்கையை வளர்க்கும் விஞ்ஞானம் அல்ல… இயற்கையை வளர்க்கும் மெய் ஞானம்…! – ஈஸ்வரபட்டர்

 

சூரியன் எத்தன்மை கொண்டெல்லாம் மற்ற மண்டலங்களில் இருந்து வெளிக் கக்கும் அமிலத்தைத் தனக்காக ஒளியாக்கி… அவ்வொளியின் வளர் சத்தில் தானும் வளர்ந்து… தன் ஈர்ப்பு வட்டத்திலுள்ள மற்ற கோளங்களையும் வளரச் செய்து செயல் கொள்கின்றதோ…
1.அத்தொடர்பின் வளர்ச்சியில் முதிர்ந்த வித்து நிலை தான்
2.மனித உரு எண்ண உணர்வின் பகுத்தறிவின் வளர் ஞான நிலை…!

ஒவ்வொன்றின் சத்தில் முதிர்ந்த வித்தைக் கொண்டு தான் பிறிதொரு வளர்ப்பின் செயல் நடக்கின்றது.

அதைப் போன்று தான் சூரியனின் சமைப்பில் பலவற்றின் மூலம் கொண்டு உயர்ந்த வளர்ச்சியில்… முதிர்வின் வித்துத் தன்மையான… “இப்பூமியின் மனித கரு உருவிலிருந்து” வளர்ச்சியின் வளர் தன்மை வித்தைச் செயல்படுத்துகின்றனர் ரிஷி சக்திகள்.

“மாவிதை” வளர்ந்து மரமாகிப் பல இலைகள் பூக்கள் கனிகளாக வளரும் தருணத்தில் எல்லாப் பூக்களும் கனியாகிப் பலன் தருவதில்லை. பூவிலும் பிஞ்சிலும் உதிர்ந்து விடுகின்றது.

வித்தின் சத்தெடுத்துக் கனி பெறும் நிலை அம்மரத்தின் தருண நிலைக்கொப்ப முற்றிய தன்மை வளர்ப்பு தன்மையைக் காட்டிலும் குறைவாய்த்தான் உள்ளது.

அதைப் போன்று…
1.மனித உருக் கருவின் எண்ணத்தில் உணர்வு நிலை பெற்று வாழ்க்கைத் தொடரில் வாழ்ந்தாலும்
2.வாழ்க்கையின் முதிர்வான உயர் ஞானம் பெறும் ஆத்மாக்கள்
3.குறைவாய்த்தான் செயல் கொள்கின்றன.

உண்மையின் வழித் தொடர் மாமரத்தின் பூவும் பிஞ்சும் அதிகமாய் வளர்ந்தாலும் அது எடுக்க வேண்டிய சத்து நிலை குறையும் பொழுது பூக்கள் உதிர்ந்து விடுகின்றன. பிஞ்சான நிலையில் கரடு தட்டி உதிர்ந்து விடுகின்றன. அப்பிஞ்சுகள் மீண்டும் வளர்ச்சி நிலைக்கு வருவதில்லை.

“முற்றிய கொட்டைகள்” கொண்ட கனிகள் தான் வளர்ச்சி நிலை பெறுகின்றன…!

அதைப் போன்றே இம் மனிதக் கரு உரு பிறப்பிற்கு வரும் நிலையும்… ஞானமுடன் கூடிய எண்ண உணர்வும்… செயல் அங்க அவயங்களின் அழகும் பொலிவும் பெற்ற நிலையில் வாழ… சூரியனின் வளர்ச்சியின் முற்றிய நிலையில் வித்தாய்ப் பெற்ற சக்தியில் வளரப் பெற்ற நிலை மனிதக் கரு உரு நிலை.

மனித ஜீவ எண்ணத்தின் உயர் ஞான ஒளியின் உயர் ஆத்மாவின் வளர்ச்சியைக் கொண்டுதான்…
1.சகலத்தையும் அறியவல்ல சித்துத் தன்மையின் ரிஷி சக்தியால்
2.எவ் ஈர்ப்பு வட்டத்திலும் வீரிய சக்தி பெற்ற இவ்வொளி ஆத்மா சிக்காமல்
3.வளர்ச்சியின் வித்தைப் பிறப்பு நிலை வளர்க்க வழி அமைக்கும் வித்தின் மனிதக் கரு உரு ஜீவ உடலுக்கு உண்டு.

ஆனால்… தான் பெற்ற “மகத்தான உண்மை” நிலை அறியாத மனிதன் தன் உணர்வின் எண்ணத்தை விஞ்ஞான செயற்கை மின் காந்த அலையில் அடகு வைத்த “குறுகிய நிலையில்” இன்று வாழுகின்றான்.

ஆத்ம ஜீவ உடலிலும் எடுக்கும் உணர்வின் எண்ணத்திற்கு ஒப்ப எவ்வலையின் உணர்வின் எண்ணம் செல்லுகின்றதோ அதற்குகந்த அணுக்கள் தான் உடலின் அமிலத்தில் வளர்க்கும் நிலைக்கொப்ப ஆத்ம வலு வலுக்கூடும்.

இன்று காற்றலையில் ஒலிப்பரப்பு ஆகியுள்ள மின் காந்த ஒளி அலையின் ஈர்ப்பில் மனித உணர்வு சிக்குண்டுள்ளது.

இக்காற்றலையில் மின்காந்த ஒலி பரப்பில் (வானொலி டி.வி. அலை) அவ் ஈர்ப்பின் வட்டத்தில் மனிதன் அதைக் கேட்டும் தொலைக்காட்சிகளில் பார்த்தும் அதே படத்தை இச்சரீரம் உணர்வின் படமாக எடுத்துணரும் வழித்தொடரிலேயே உள்ளான்.

அதாவது காற்றலையிலுள்ள இயற்கைச் சத்தெடுத்து வளரும் வலுவைக் காட்டிலும் மின்காந்த ஒலியலையில் கேட்டும் பார்த்தும் செயல் கொள்ளும் மனிதனின் உணர்வு அதே அலை உணர்வின் அணுக்களை வளர்த்துக் கொண்டுள்ளனர்.

ஆக…
1.தன் ஆத்மாவின் வளர்ச்சிக்கு இயற்கையின் வித்தின் சத்தை உரமாக செலுத்துவதைக் காட்டிலும்
2.சமைக்கப்பட்ட வலுவிழந்த மின் காந்த உணர்வுடன் எண்ணத்தைச் செலுத்தி அளிக்கும் சத்தாகவே உள்ளது.

செடி கொடிகளுக்கு நீரை நாம் ஊற்றி வளர்த்தால் நீரின் சத்தில் அது வளர்ந்து பலன் தருகின்றது. அதே செடிக்குக் “காய வைத்து ஆறிய நீரை ஊற்றினால்…” செடிக்குகந்த சத்து பெற முடியாமல் செடியும் கருகி வளர்வதில்லை.

அதைப் போன்று உடலிலுள்ள இவ்வுடலை இயக்கும் உயிராத்மாவை மீண்டும் இதே நிலை கொண்ட பகுத்தறியும் ஞானக் கரு உரு மனித ஜீவ வளர்ச்சியை வளர்க்க முடியாத நிலை இன்றுள்ளது.

1.இயற்கையின் சத்து உரத்தை ஆத்ம வலுப் பெற்று வளரும் நிலையை
2.செற்கை மின் காந்த சமைப்பின் சத்தை நாம் செலுத்தி
3.கரடு தட்டிய பிஞ்சின் உதிரும் மாம்பிஞ்சுகளைப் போன்று
4.இஜ்ஜீவ சரீரத்தில் வலுப் பெறும் ஆத்மாவை வலுவற்ற நிலைக்கு
5.செயற்கை மின் காந்த ஈர்ப்பையே இஜ்ஜீவ காந்த சரீரத்தில் வளர்க்கும் செயல் இக்கலியின் கடைசியில் வளர்ந்தோங்கி விட்டது.

இத்தகைய விஞ்ஞானச் செயற்கைப் பிடியில் இருந்து ஒவ்வொரு மனிதனும் உயர வேண்டுமென்றால்… எண்ணத்தின் உணர்வைச் சஞ்சலத்திலும் செயற்கையின் ஆசைப் பிடியிலும் செயல்படுத்தாமல்…
1.அன்று மகரிஷிகள் நமக்கு காட்டிய உன்னத குண வழிகள் கொண்டு
2.நம் உணர்வின் எண்ணத்தால் நமக்குள் பெற்றுள்ள சூரியனின் வளர்ப்பின் வித்தை மீண்டும் மங்காமல்
3.சூரியனுக்கு மேல் உயர்ந்த ஜோதி நிலை பெறத்தக்க வழியை ஒவ்வொரு ஆத்மாவும் பெறலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

குழந்தை கருவில் இருக்கப்படும் போது சந்தர்ப்பவசத்தால் தன்னிச்சையாக அந்தத் தாய்க்கு ஒரு இம்சை வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.

அதில் இருந்து தான் எப்படியும் மீள வேண்டும் என்பதற்காக
1.தனக்குத் தெரிந்த ஞானியின் உணர்வை எண்ணி
2.அவர் அருள் எனக்குக் கிடைக்க வேண்டும்
3.என்னை அறியாது இந்த இருள்கள் நீங்க வேண்டும்.
4.என்னை ஏசுவோர் என்னை இம்சிப்போர் இதை உணர வேண்டும் என்ற எண்ணத்தை ஏங்கிப் பெற்றால்
5.தாய் கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்கு இது பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

ஞானியின் உணர்வுகள் தாயின் உடலுக்குள் சென்று இரத்தத்தில் கலக்கின்றது. அந்த இரத்தத்திலிருந்து வரும் உணர்வை உணவாக உட்கொள்ளும் கருவிலிருக்கக்கூடிய உயிரின் உணர்வுகளுக்கு அந்த அருள் சக்திகள் இணைந்து விடுகின்றது.

ஏனென்றால் கருவுற்ற தாய் தன்னை இம்சிப்போர்களை விட்டு விட்டு அதில் இருந்து மீள வேண்டும் என்று எண்ணுகின்றது. தனக்குத் தெரிந்த எந்த மகரிஷியோ வாழ்க்கையில் அதைக் கண்டுணர்ந்து உணர்ந்த நிலையைத் தனக்குள் எடுக்கப்படும்போது அது நல்ல சந்தர்ப்பம் ஆகின்றது.

அப்பொழுது மகா ஞானிகள் வெளியிட்ட உணர்வை அந்தத் தாய் நுகர நேர்கின்றது. தாயின் கருவில் இருக்கக்கூடிய அந்தக் குழந்தைக்கு அதுவே பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

அந்தத் தத்துவ ஞானிகள் எதையெல்லாம் பேசினரோ உணர்த்தினரோ அந்த உணர்வுகள் கருவிலே வித்தாக ஊன்றப்பட்டு அந்தக் குழந்தை பிறந்த பின் அது வளர வளர அந்தக் குழந்தையிடம் தத்துவ ஞானங்கள் வளர்கின்றது. அதைச் செயல்படுத்துகின்றது.

அதே சமயத்தில் “பாவிகள்… என்னை இப்படி எல்லாம் பேசுகிறார்களே… இவர்கள் எல்லாம் உருப்படுவார்களா…? அவர்கள் குடும்பம் நாசமாகப் போய் விடும்…! அவர்கள் குடும்பம் இப்படி எல்லாம் போய்விடும்… கண் காது முடமாகப் போய்விடும்…” என்று கர்ப்பமுற்ற தாய் பேசிச் சாபமிட்டால் போதும்.

கீதையிலே கண்ணன் சொல்வது நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்.

அந்தத் தாய் தான் எண்ணியது எதுவோ அந்தச் சாபமிடும் உணர்வைச் சுவாசிக்கும் போது உயிரான ஈசன் “ஓ…” என்று பிரணவமாக்கி “ம்…” என்று தன் உடலுக்குள் ஆக்கும் போது அந்தக் கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கு அது உருவாகின்றது.

1.கருவுற்ற தாய் தன்னை இம்சித்தவர்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டும் என்று எண்ணியதோ
2.அது அனைத்தும் அந்தக் குழந்தைக்குள் பதிவாகி
3.குழந்தை பிறந்து வளரப்படும்போது தன் தாயையே உதைக்கக்கூடிய நிலைக்கு வந்து விடுகிறது.

யாரையெல்லாம் இம்சிக்க வேண்டும் என்று எண்ணியதோ தன் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு இந்த நிலை ஆகித் “தாயை இரக்கமற்றுக் கொல்வதையும் பார்க்கலாம்…”

ஆகவே சந்தர்ப்பத்தால் பிறர் ஏசும் அந்த உணர்வில் இருந்து விடுபட வேண்டும் என்ற நல்ல எண்ணங்களை எண்ணாது பதிலுக்கு அவர்களைக் கடுமையான நிலைகளில் தாக்க வேண்டும் என்ற எண்ண உணர்வுகள் வெளிபட்டபின் இதைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.

சாபமிட்டுப் பேசும் நிலையில் மீண்டும் செவிப்புலனில் உந்தப்பட்டு இந்த உணர்வின் சக்தி மீண்டும் தன் உடலுக்குள் போனவுடனே கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து விடுகிறது.

அந்தக் குழந்தை பிறந்த பின்னாடி பார்க்கலாம். எந்நேரமும் பார்த்தாலும் வீட்டில் சண்டையும் சச்சரவுமாக இருக்கும்.

எல்லோரும் வீட்டில் நன்றாக முக்கியமாகப் பேசிக்கொண்டு இருப்பார்கள். அந்த நேரம் இந்தக் குழந்தை “வீல்..!” என்று கத்தும்.

நல்ல நேரத்தில் “சனியன் மாதிரிக் கத்துகிறதே…!” என்று சொல்வார்கள். ஒருவருக்கொருவர் சண்டை மூட்டிக்கொண்டே இருக்கும்.

அப்போது கடவுள் என்ன செய்கின்றார்…? இது தான் கீதையிலே கண்ணன் சொன்னது நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்பது.

1.நம் கண்ணின் நினைவுக்கு வரப்போகும் போது
2.யாரை நினைக்கின்றோமோ அந்த உணர்வின் சத்தை நமக்குள் கவர நேர்கின்றது
3.அதைச் சுவாசிக்கும்போது அதன் வழி கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கும் அது போய்ச் சேர்கின்றது.

இதைத்தான் கண்ணன் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு உபதேசித்தான் என்று ஞானிகள் சொன்னார்கள்.

நமக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு அதற்குண்டான காரணப் பெயரை வைத்து இவ்வாறு இன்னென்ன சந்தரப்பத்தில இவ்வாறெல்லாம் இயக்குகிறது என்ற நிலையைத் தெளிவாக எடுத்து உரைத்துள்ளார்கள் ஞானிகள்.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

1.நாம் நுகரும் உணர்வுக்கொப்பத்தான் நம் உடலில் அணுக்கள் உருவாவதும்
2.தாய் கருவிலே குழந்தை உருவாவதும் எல்லாமே அப்படித்தான்.

மனித உயிராத்மா பெற வேண்டிய “வீரியத் தன்மை” எது…? – ஈஸ்வரபட்டர்

 

கரடு முரடான காடுகளில் புல் பூண்டே இல்லாத இடத்திலும் மழை நீர் பட்டவுடன் பூமி எடுத்த அந்தந்த இடங்களின் அமில நிலைக்கொப்ப ஜீவ வளர்ச்சி புல் பூண்டுகள் வளருகின்றன.

வளர்ந்தாலும் நீர்ச்சத்துக்குகந்த அமிலத் தன்மை கொண்டு காற்றின் உராய்வு வளர்ச்சிக் காலம் முற்றிய பிறகு அதன் நிலை மீண்டும் மக்கி விடுகின்றது.

அதன் நிலை மக்கினாலும்…
1.அவ்வமிலக்கூறு ஜீவன் பெற்று மக்கிய தன்மை
2.எவ்வுணர்வு கொண்டு ஜீவ வித்து பிறந்து வளர்ச்சியுற்று மாற்றம் கொண்டதோ
3.அம்முலாமுடன் கூடிய உயிரணு காற்று மண்டலத் தொடர்ச்சியில்
4.தனக்குகந்த அமில உயிர் வித்தாய்ச் சுழற்சி பெற்று
5.மீண்டும் தன் பிறப்பிற்கு ஏற்ற கால அமிலத் தொடர்புடன் பிறிதொரு வீரிய வளர்ச்சிக்கு வருகின்றது

ஒன்று உயிர் பெற்று… கரைந்து… மீண்டும் ஜீவிதம் பெற்று… மாறி… மாறி… வரும் தொடர்பின் வீரியத்தால்… செயல் நிலை கூடுகின்றது.

அதைப் போன்று மனித சரீரப் பிம்பத்தில் எல்லா நிலைகளையும் அறிந்து… சொல்லாற்றிச் செயலாற்றும் உயர் வளர்ச்சியை… உணர்வின் எண்ணத்தைக் கொண்டு… மனித உயிர் ஆத்மாவை வீரிய நிலைப்படுத்த “இரண்டு நிலை மார்க்கங்கள் உண்டு…!”

மனித எண்ணத்தின் உணர்வை எதில் வீரியத் தன்மை காட்டுகின்றோமோ அதனுடைய வளர்ச்சியின் வேகம் நிச்சயம் வளருகின்றது.

வழி 1: (தெய்வீகம்)
வளரும் வேகத்தை… தெய்வமான உயர்வு நிலைக்கு உணர்வின் எண்ணத்தில் ஏற்படக்கூடிய குணநிலைக்கொப்ப நற்குணத்தின் சமைப்பாய்ச் சரீர பிம்பத்தையே வளர்த்துக் கொள்ளலாம்.

அந்த உயர் ஞானத்தின் வழியில்
1.இப்பூமியின் பிடிப்பிலிருந்து விடுபடும் நிலையாக
2.விண்ணிலிருந்து வரும் உயர் காந்த மின் சக்திகளை
3.சரீர பிம்பத்தின் எண்ண உணர்விற்கு வீரிய உரமாய் செலுத்தி
4.அதில் வளரும் வளர்ச்சியின் பலனாகத் தெய்வ நிலை பெற்ற
5.இறைத்தன்மை கொண்ட வளர்ப்பின் வளர்ப்பான ஒளி நிலை பெறலாம்.

வழி 2: (மீண்டும் பிறவி)
உணர்வின் எண்ணத்தை வீரியத்தன்மையில் செலுத்தினாலும்… “அறியாமல் செய்யும் மாற்றுத் தன்மையில் சிக்கும் நிலையினால்” எவ்வொலி கொண்டு எண்ணம் பிறந்து உணர்வின் செயல் வெளிப்படுகின்றதோ… அதற்குகந்த ஒலி வட்டத்தில் சிக்க நேரலாம்.

அதே ஒலி நிலைக்கொப்ப
1.பூமியின் பிடிப்பில் ஜீவனற்ற வலு நிலை வளர்த்த உயிர் ஆத்மாக்களின் ஒலி ஈர்ப்பும் (ஆவி உலக ஆன்மாக்கள்)
2.ஜீவனுடன் கூடிய உணர்வின் எண்ண ஒலியுடன் செலுத்தப்படும் உணர்வு வட்டத்தில் சிக்கிய தன்மையினால்
3.எண்ணத்தினால் எவ்வீரியத் தன்மை கொண்ட செயல் உணர்வில் மனிதன் செல்கின்றானோ
4.அவ்வீரிய முலாமும் காற்றலையின் ஈர்ப்பு வட்டத்திலுள்ள ஒத்த நிலையும் கூடி இத்தொடர்பு வலுப் பெறுகின்றது.

இப்படி… மனிதன் செய்யும் எச்செயலாய் இருந்தாலும்… உணர்வின் நிலைக்கொப்ப வீரியத் தன்மை… இஜ்ஜீவ காந்த சரீரத்தில் செலுத்தும் எண்ண நிலைக்கொப்ப… அச்செயலின் வளர்ச்சி வளர்ந்து கொண்டே இருக்கும்.

மாந்திரீக மார்க்கமும்… பக்தி மார்க்கமும்… வாழ்க்கைச் செயல் தொழில் எம்மார்க்கமாயினும்… ஜீவ ஆத்மாவின் உணர்வின் எண்ண நிலைக்கொப்ப அதற்குகந்த வலுத் தன்மையினால் மீண்டும் மீண்டும் வலுவாக்கினால் “இன்றைய உலக நிலை போல் தான் இருந்திடும்…!”

அதனால்… பல மோதலில் பல கோடி ஆண்டுகளாய் வளர்ச்சியுற்று…
1.எண்ணத்தின் உணர்வைக் கொண்டு வளர்ந்து வந்த உயர் ஞான வாழ்க்கையை
2.உயர் சக்தியின் தெய்வ நிலை பெறும் வழித்தொடரை உண்மையின் வழி அறியாமல்
3.வர இருக்கும் பூமியின் மாற்றத்திற்கொப்ப இச்சரீரத்தை அடகு வைக்கும் நிலை தான் முடிவாகும்.

இதிலிருந்து மீண்டு மனித நிலை உயர வேண்டுமானால்… தன்னைத் தான் உணர்ந்து… தான் பெற்ற இம்மகத்துவமான உயர் ஞானத்தை அறியவல்ல எண்ணத்தின் உணர்வை…
1.நற்குண வழியில் செலுத்திடல் வேண்டும்
2.இறை நிலை பெற்ற ரிஷிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும்

தன்னுள் உள்ள உயர் ஆத்ம உயிர் இறை சக்தியின் துணை கொண்டு
1.மகரிஷிகளின் சக்திகளை வளர்த்துத் தன் ஞானத்தின் உயர்வைக் கொண்டு…
2.சலிப்பு சோர்வு சங்கடம் போன்ற நிலைகளையும்
3.வாழ்க்கையில் மோதும் எத்தகைய மாற்றுத் தன்மைகளையும்
4.தன் உணர்வின் எண்ணத்தைப் பாதிக்காத வண்ணம்…
5.சாந்தமான வீரத்தைக் கொண்டு மாற்றி அமைக்க வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஐயப்பன் கோவிலில் பார்த்தால் “நீ தள்ளு… நான் தள்ளு…” என்று தள்ளிக் கொண்டு செல்வார்கள்.

எல்லோரும் ஒழுக்கத்தைப் பற்றிப் பேசுவார்கள். அந்தப் பதினெட்டாம் படி வந்ததும் “சரணம் ஐயப்பா” என்று அடுத்தவரைத் தள்ளிக் கொண்டு போவார்கள்.

அந்தப் பக்தி எப்படிப் போகிறது…?

அந்த ஐயப்பன் என்ன செய்தார்…? அவர் அரசனாக இருக்கும் போது அஷ்ட திக்கின் தன்மையும் தவறின் உணர்விலே வாழ்ந்து விட்டோம். அதனால்
1.இங்கே வரும் மக்கள் அந்தத் தெளிந்த மனம் பெற வேண்டும் என்று தான்
2.பதினெட்டுப் படிகள் வைத்து அமைதியும் பொறுப்பும் காத்து பத்தாவது நிலையான ஒளிச் சரீரம் அடையும் நிலைகளில்
3..ஒவ்வொரு படியிலும் அந்த நல்ல நிலைகளை எடுத்து வைத்து நிதானம் கொண்டு
4.அடுத்தவர்களை அரவணைத்துச் செல்லும் பொறுமையும் வர வேண்டும் என்று விரும்பினார்.

படி மேல் ஏறும் போது பாருங்கள். நீ தள்ளு… நான் தள்ளு… என்ற வேக உணர்வுகள் தான் வருகின்றது. அப்புறம் ஐயப்பன் கோவிலுக்குப் போய் என்ன செய்வது…? கோவிலுக்கு எதற்காகப் போகிறோம்…?

அவர் அரசனாக இருந்தான். அருள் உணர்வு பெருக வேண்டும் என்று எண்ணினார். அதை வளர்த்தார்.

அங்கே போவோர் நிலைகளைப் பாருங்கள். அங்கே மேல் ஏறினார்கள். அந்தப் படி மேல் ஏறினான் அது விழுந்தது இது விழுந்தது என்று பேசுகிறார்கள்.

இங்கிருந்து பஸ்ஸிலோ காரிலோ அங்கே செல்லப்படும் போது என்ன செய்கிறார்கள்?
1.சிந்தித்துச் செயல்படுத்தித் தன்னுடைய வேகத்தை குறைத்துப் போகலாம்
2.“சரணம் ஐயப்பா…” என்றவுடன் “ஜர்”….என்று போக வேண்டியது. அப்புறம் போய் ஆகிசிடென்ட் ஆகின்றது
3.நாம் விபத்துக்குள்ளாவதற்காக வேண்டியா அங்கே போகிறோம்.
4.நாம் சிந்தித்துச் செயல்படும் பொறுமையைக் கையாள வேண்டும்.

அன்று ஐயப்பன் அரசனாக இருந்தாலும் பல தொல்லைகள் பட்டோமென்று முகம்மதியர் படை வரும் போது அதிலிருந்து தப்ப வேண்டும் என்ற உணர்வு கொண்டுதான் அவர் அந்த நிலை அடைந்தார்.

கூடு விட்டுக் கூடு பாயும் சக்தி பெற்றவர் ஐயப்பன்.

போர் முறையில் பல திறமைகளைக் கற்றுக் கொண்டாலும் ஜெயிக்க மாட்டோம் என்று தெரிந்து கொண்டபின் இந்த உடலை அழித்து விடுவார்களோ என்ற நிலையில் இன்னொரு உடலுக்குள் சென்றார்.

இன்னொரு குழந்தையின் உடலிலே புகுந்து யாரென்று அறிந்து கொள்ளாத நிலையில் ஒரு அரசனிடம் இந்தக் குழந்தை வளர்க்கப்பட்டு அதன் வழி மீண்டும் அவர் சக்தியைத் திறமையாக்கி விஷத் தன்மை கொண்ட புலியையும் அடக்க முடியும் என்று காட்டினார், அந்த அரசனுக்கும் புகழ் தேடும் நிலைகள் வந்தது.

இதன் வழி கொண்டு தான் அவர் வாழ்க்கையில் வளரப்படும் போது காட்டில் விலங்குகள் வாழும் அந்த இடத்தில் ஒதுங்கி நின்றார்.

மக்கள் வாழ்க்கையில் இன்று விலங்கினங்களைப் போன்று தான் வாழுகின்றோம். காட்டில் விலங்கினங்கள் அவற்றிற்குத் தீங்கு ஏற்பட்டால் தான் தீங்கு செய்யும்.

இன்று மனிதர்களுக்குச் சிந்தித்து செயல்படும் நிலைகள் இல்லாது மற்றவரைத் துன்புறுத்தும் நிலைகள் தான் வருகிறது. விலங்கினங்களையும் மீறி விட்டது
1.துன்பப்படுபவனைப் பார்த்து ரசிக்கிறார்கள்.
2.துன்பப்படுத்துபவனுடைய நிலைகள் தான் தப்பிக்கின்றது.
3.துன்பப்படுத்தி ரசிக்கும் மக்கள் கொள்ளையடிப்பதும் துன்புறுத்துவதும் என்ற நிலைக்கு இன்று பெரும் பகுதியான நிலைகளில் வந்துவிட்டார்கள்.

ஒரு காம்பவுண்டில் குடியிருந்தார்கள் என்றால் ஒருத்தருக்கு ஒருத்தர் பழி சொல்லிக் குறைச் சொல்லித்தான் வாழ்கிறார்கள்.

காட்டிற்குள் கூட அமைதி உண்டு. ஆனால் நாட்டிற்குள் இன்று அமைதி இழந்து விட்டது என்ற நிலையைக் குருநாதர் காட்டினார்.

போர் முறையில் நான் (ஐயப்பன்) என்னுடைய சக்தியைத் தான் நிலை நாட்ட முடிந்தது. முகமதியர்கள் படையெடுத்து வரும் போது அவர்களை மாற்ற முடியவில்லை. அவர்களிடம் ஒளிந்து வாழும் தன்மை தான் வருகிறது.

இன்றைக்கும் பாருங்கள். வாபர் மசூதியில் முஸ்லீம்கள் கன்னிச் சாமிகள் இதற்கு மேல் சாமி கும்பிடப் போனால் கரும் புள்ளி செம்புள்ளி குத்திக் கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள்.

கன்னிச்சாமி எல்லோரும் அப்படித்தான் போக வேண்டும் என்று சொல்வார்கள்.

நம் ஊர்களில் முச் சந்திகளில் உள்ள கோவில்களைக் கட்டி வைத்திருப்பார்கள். மேள வாத்தியம் வாசித்துக் கொண்டு போகும் போது வாலை ஒடுக்கிப் போங்கள் என்று சொல்வார்கள்.

ஏனென்றால் அன்றைய அரசர்கள் ஆட்சிக் காலத்தில் நடந்தது தான் இன்றும் நடக்கிறது. கன்னிச் சாமிகளுக்குக் கரும் புள்ளி செம்புள்ளி குத்தி வைத்திருப்பார்கள்.

அதில் உள்ள உண்மையையாவது தெரிந்து போகிறார்களா என்றால் இல்லை.

ஆனால் அன்று ஐயப்பன் அரசனுடைய நிலைகளைத் தான் எதைச் செய்ய வேண்டுமோ இந்த உடலின் தன்மை கொண்டு அவர் தன்னுடைய உயிராத்மாவை ஒளியாக்கிச் சொர்க்கம் அடைந்தார். துருவ நட்சத்திரத்தின் மேலே சொர்க்கத்தில் இருக்கிறார்.

ஐயப்பன் கூடு விட்டுக் கூடு பாயும் தன்மை வரப்படும் போது உடலின் இச்சையை மறந்து எந்த உயர்ந்த உணர்வை மக்கள் பெற வேண்டும் என்ற உணர்வை எடுத்தாரோ அதைத்தான் பதினெட்டாம் படியாக அமைத்தார்.

மக்கள் ஒன்று பட்ட நிலையில் – பதினெட்டாம் படி அந்த ஒடுக்கமான நிலைகள் வர வேண்டும் என்று பத்தாம் நிலை அடைய வேண்டும் என்றால் அஷ்ட திக்கிலும் நாம் நிதானமும் பொறுப்பும் பொறுமையும் கொண்டு எப்படி வாழ வேண்டும் என்று அந்த ஆலயத்தின் பண்பை அமைத்து அந்த ஞானிகள் கொடுத்துள்ளார்.

எத்தனை பேர் நாம் அங்கே பொறுமையாகப் போகிறோம்…?”

“ஐயப்பனைக் கும்பிட்டால் சொத்து வந்துவிடும், அது வந்துவிடும் சரணம் ஐயப்பா” என்று போகிறீர்கள். தவறுகளைத் தான் வளர்க்கின்றோமே தவிர அந்தப் புனித நிலையை அழித்து விடுகிறது.

அதே சமயத்தில் அங்கே இருக்கும் காட்டு விலங்குகளைப் பற்றி நாம் சிந்திக்கின்றோமா…? அந்த ஐயப்பனைப் பற்றிச் சிந்திக்கின்றோம். பயப்படவில்லை அதனால் போகிறோம்.

அதே சமயத்தில் இங்கு தவறு செய்பவரின் நிலைகளில் சிந்தனை இல்லாது அவர்கள் செயல்படுகின்றார்கள். “அவர்கள் நல்லவராகட்டும்…” என்று யாராவது நினைக்கிறோமா…? அது இல்லை.

அங்கே காட்டு விலங்குகளிடம் நாம் பயப்படவில்லை. இங்கே மனிதன் காட்டு விலங்குகளைக் காட்டிலும் மோசமாக உள்ளான். இவனைக் கண்டு அஞ்சி வாழ வேண்டியிருக்கின்றது.

அங்கு போய்விட்டு வந்தபின் இங்கே என்ன செய்வது…? என்ற நிலைகளைத் தான் குருநாதர் காட்டுகிறார்.

நம்மைப் பக்குவப்படுத்த அந்த ஞானி அதைச் செய்தாலும் ஐயப்பன் கோவிலுக்குப் போகிறவர்கள் எந்தப் பக்தியுடன் போகிறார்கள்…? சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

அவர் காட்டிய நிலைகளைச் சீராக நாம் பயன்படுத்துகிறோமா…? இல்லை நாம் போனால் ஐயப்பன் நமக்கு இதைச் செய்வார் அதைச் செய்வார் என்ற ஆசை உணர்ச்சிகளைத் தான் தூண்டுகின்றோமே தவிர ஆவேச உணர்வுகளைத் தான் நாம் தூண்டுகின்றோமே தவிர அந்த அருளைப் பெறும் நிலை இல்லை.

இங்கிருந்து போகும் போது ஐயப்பனுக்குக் காசு போடுகிறோம். ஐயப்பனுக்கு நிறைய காசு வந்து விடுகிறது. “ஐயப்பனை வணங்கினால் நிறையக் காசு வரும்…” என்று எண்ணுகிறார்கள்.

ஐயப்பனுடைய அருளை நாம் பெற வேண்டும் என்ற உணர்வை நாம் யாரும் தேடுவதில்லை. நீ காசைக் கொடுத்துவிட்டு எனக்கு அருள் கொடு… என்று கேட்டு வா…! என்று தான் செய்கிறார்கள்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

 

நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறப்படும்போது இந்த உடலும் நலியத்தான் செய்யும்.

அசுர உணர்வு கொண்டு வளர்த்துக் கொண்ட இந்த உடலில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு வரப்படும்போது அசுர உணர்வால் வளர்க்கப்பட்ட அணுக்கள் மாறத்தான் செய்யும்.

அதே சமயத்தில்
1.நம் உயிரின் அணுக்கள் ஒளியாக்கப்படும்போது
2.இதுவும் (உடலிலுள்ள அணுக்கள்) குறுகப்பட்டு அந்தச் சத்தினை வடிக்கப்பட்டு
3.உணர்வின் தன்மை ஒளியாக்கப்படும் பொழுது
4.இந்த உடல் கட்டாயம் மடிந்தே தீரும்.

இந்த உணர்வின் தன்மை ஒளியாக்கப்பட்டு உயிருடன் ஒன்றப்படும் பொழுது ஒளியின் உடலாக மாற்றிச் செல்லும்.

எப்படி ஒரு புழு எதன் உணர்வை எடுத்ததோ அதற்குள் தான் சிக்கப்பட்டு அது தட்டாண் பூச்சியாக மாறுகின்றது. அதனுடைய முட்டைகளை எதன் எதனில் இடுகின்றதோ அந்த உணர்வுக்கொப்ப மாறுகின்றது.

பல வகையான “பட்டாம் பூச்சிகளாக” மாறுகின்றது. இதெல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

இதைப்போலத் தான் நமது மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாம் அருள் ஞானக் குழந்தைகளை உருவாக்க வேண்டும். இந்த நாட்டில் விஞ்ஞானத்தால் வந்த பேரழிவை அவர்களால்தான் மாற்ற முடியும்.

நாம் இந்த உடலில் குறுகிய காலமே வாழ முடியும். அகஸ்தியரைப் போன்ற உலகைக் காத்திடும் மெய் ஞானிகளை நாம் உருவாக்கிப் பழகுதல் வேண்டும்.

முதுமை என்பது உடலுக்குத் தான்… நமக்கு இல்லை…!

 

“மகரிஷிகள்…” அவர்கள் வாழ்ந்த காலத்தில் எதனை இனிமை கொண்டு வளர்த்தார்களோ அதைப் போன்று
1.நம்முடைய இந்த மனித உடல் வாழ்க்கை – முதுமையிலும்
2.அருள் ஞானிகளின் உணர்வின் தன்மை உடலிலே வளர்த்திடல் வேண்டும்.
3.ஒளியின் சிகரமாக வளர்த்து “உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெறுவோம்…” என்று அந்த மன உறுதி கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

உலக மக்கள் அனைவரும் அத்தகைய நிலைகள் பெற வேண்டும் என்ற அடிப்படையில் அண்ட அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் விளைய வைத்து ஒளிச் சரீரம் பெறும் அந்த மூச்சலைகளைப் பூமியில் பரவச் செய்வோம்.

தானியங்களின் வித்தைம் விளை நிலைங்களில் ஊன்றி பல பல தானியங்களாக விளைய வைத்து எல்லோருடைய பசியைப் போக்குவது போல மெய் ஞானிகளின் அருள் ஞான வித்தை நமக்குள் ஊன்றி வளர்த்து அந்த வித்தின் தன்மை பல மகசூலாகப் பெருக்குவோம்.

அதன் மூலம்…
1.பிறருடைய ஆனந்தப் பசியை ஆற்றும் நிலையாக…
2.பேரானந்தப் பசியை ஆற்றும் அருள் வித்தாக நமக்குள் விளைய வைத்து இந்தப் பூமி முழுவதும் பரப்புவோம்.
3.அனைவரும் அதைப் பருகி பேரானந்த பெரு நிலை பெறச் செய்வோம்… அதனை வளர்த்திடுவோம்.

முதுமை என்பது உடல் வாழ்க்கையில் வெறும் வயதினால் வரும் முதுமை அல்ல. இந்த உடலின் தன்மை அது முதுமை அடையப்படும் போது… அதாவது ஒரு தானியம் அது முதுமை அடையப்படும் பொழுது வித்தின் தன்மையை அது முதுமையாக்கி அந்த உணர்வினை வித்தாக (பலன்) உருவாக்குகிறது.

அதைப் போல நம் உயிரின் தன்மை மனித உடலை உருவாக்கிய பின்… அறிந்திடும் உணர்வு கொண்ட ஒளியின் சரீரம் பெற்ற அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து
1.இந்த உடலை முதுமையாக்கி… (பாம்பு தன் சட்டையைக் கழற்றுவது போல்)
2.உணர்வின் தன்மை என்றும் இளமையாக்கும் நிலைகள் நமக்குள் வளர வேண்டும்.

காரணம்…
1.ஒவ்வொரு சரீரத்திலும் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் அது இளமைப் பருவமே பெறுகின்றது.
2.இளமை பெற்று… அது உடலிலே முதுமை பெறும் போதுதான் முதுமையின் வித்தாக உரு பெற்று
3.உணர்வின் அறிவாக உயிருடன் ஒன்றிய நிலையாக அடுத்த அறிவின் ஞானச் சுடராக உணர்வின் சரீரத்தை வளர்க்கின்றது.

ஆகவே மெய் ஞானிகள் உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு… உயிருடன் ஒன்றி முழுமையின் நிலைகள் பெற்று… முழுமை அடையும் தன்மையாகப் பேரானந்தப் பெரு நிலையை நமக்குள் வளர்த்திடுவோம்.

அனைவரும் பேரானந்த நிலை பெறும் சக்தியாக நமக்குள் விளைவித்த அந்த அருள் உணர்வின் சத்தான வித்துக்களை உலகமெங்கும் பரப்புவோம்.

அதை நுகர்ந்தறிவோர் உணர்வுகளிலும் அந்த வித்துக்கள் படர்ந்து அவருக்குள் பேரானந்தப் பெரு நிலை அடையும் நிலையை அடையட்டும்.

அருள் ஞானிகளின் அரும்பெரும் சக்தியை அனைவரையும் பெறச் செய்வோம் என்று நாம் வாழ்த்தி வளர்த்திடுவோம்… வளர்ந்திடுவோம்…!

தன்னிச்சையாகப் பெற வேண்டிய உயர் ஞானம் – ஈஸ்வரபட்டர்

 

காட்சி:
கத்தியைக் கையில் வைத்துத் தீட்டுவதைப் போன்றும் கல்லில் வைத்துத் தீட்டுவதைப் போன்றும் காட்சி தெரிகின்றது.

விளக்கம்:
நாவிதன் (முடி எடுப்பவன்) தன் தொழிலில் செயலுக்கொப்பத் தன் உணர்வையே செயல்படுத்திச் செயல்படுகின்றான்.

முடியைச் சிராய்த்து எடுக்கும் பொழுது…
1.கத்தியின் ஒட்டியுள்ள முடியை தன் உள்ளங்கையிலேயே தீட்டி…
2.கழுத்தில் காதின் ஓரங்களிலும் உள்ள மடிப்பிற்கொப்ப
3.கூர்மையாய்த் தீட்டப்பட்ட கத்தியை மிகவும் சாதூர்யமான முறையில்
4.தன் உணர்வையே அதுவாகப் பக்குவப்படுத்திக் கொண்ட முறையினால்
5.தன் தொழிலின் செயலை… உணர்வு கொண்ட பக்குவத்தில்
6.பிறரிடம் பேசிக் கொண்டோ… எண்ணங்களை வேறோட்டத்தில் ஓட்டிக் கொண்டோ…
7.உணர்வின் நிலைக்கொப்பத் தொழில் செய்கின்றான்.

உணர்வால் வடிக்கப் பெற்ற உணர்வின் செயல் கொண்ட சரீரத்தைப் பக்குவப்படுத்தத்தக்க பயம்… அச்சம்… நாணம்… என்ற இயக்க ஓட்ட வடிப்பின் எண்ண செயலைத்தான் சரீரங்கள் செயல் கொள்கிகின்றன.

எவ்வுணர்வின் சுவை கொண்டு சரீரப் பக்குவம் உருவானதோ… அவ்வுணர்வின் குணமும்… செயலும்… கொண்ட வாழ்க்கையில் நடைமுறை செல்கின்றது.

அவரவர் எடுக்கும் செயலுக்கொப்பத் தொழில் முறையில் மனிதன் “தன் உடலையே” தொழிலுக்குகந்த உணவாகப் பக்குவப்படுத்த முடிகின்றது. ஆக…
1.இப்பூமியின் பிடிப்பிற்கும்… வாழ்க்கையின் செயலுக்கும்…
2.தன் உணர்வின் எண்ணத்தை அடகு வைத்துள்ள இன்றைய மனிதன்
3.உயர் ஞானத்தைப் பெறத் “தன் எண்ணத்தின் உணர்வைப்” பக்குவப்படுத்திடல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குள் பதிய வைத்த அந்த உணர்வின் ஆற்றலை அவர் காட்டி உணர்த்திய உணர்வின்படி அந்த அருள் வழிப்படி எனக்குள் வளர்த்துக் கொண்டேன்.

1.அவர் (உணர்த்திய) உணர்வின் ஆற்றல் கொண்டு
2.அவர் அருள் துணை கொண்டு
3.அவர் ஒளி கண்ட உணர்வின் தன்மையை
4.நான் மீண்டும் நினைவு கொள்ளும் போது
5,எனக்குள் இருளைப் போக்கி
6.பொருள் காணும் உணர்வின் ஒளியின் சிகரமாக
7.எம்முள் இருந்து வரும் இந்த (உபதேச) ஒலியின் சொல்லே
8.என் குருவின் சொல்.

ஆகவே அவரில் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் பதிவு செய்யும் போது அதே உணர்வு
1.உங்களுக்குள் குருவாக நின்று
2.உங்களை அறியாத இருளைப் போக்கி
3.மெய்ப்பொருள் காணும் உணர்வாக உங்களுக்குள் ஒளி நிலை பெறும்.

உங்கள் கவனத்தைத் திருப்பாது உற்று நோக்கி இந்த உபதேசத்தின் உணர்வினை ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள். இன்றைய விஞ்ஞான உலகிலிருந்து உங்களைக் காத்திடும் சக்தியாக இது வரும்.

December 2021 உபதேசம்

முக்காலத்தையும் அறிய முடியுமா…! – ஈஸ்வரபட்டர்

 

இஜ்ஜீவ காந்த சரீரத்தில்… எண்ணத்தின் அலைத் தொடர்பு அனைத்தும்… நினைவின் வளர் காலம் (நினைவு தெரியும்) முதற் கொண்டு பூமியில் பிறந்த சரீரத்தின் ஆத்ம அலையுடன் பதிவு பெற்று விடுகின்றது.

மீண்டும் மீண்டும் எண்ணும் எண்ணம் இச் சரீர ஜீவகாந்த அலையுடன் மோதப் பெற்று… இச்சரீரத்தை இயக்கும் ஆத்ம அலையில் பதிவு நிலை பெற்று…
1.ஒலியின் எதிர் தொடர்புடன் எண்ணத்தின் செயல் வாழ்க்கை
2.இப்பூமி ஈர்ப்பு பிடியில் நாம் வாழுகின்றோம்.

அதாவது மின்காந்தத்தால் ஒலி அலையை நாடாக்களில் பதிவு செய்து மீண்டும் அதே மின் காந்தத்தைப் பாய்ச்சி பதிவான ஒலியை கேட்கின்றோம் அல்லவா…!

அதைப் போன்று… ஜீவ காந்த சரீரத்தின் உணர்வுடன் கூடிய எண்ண அலைகள்… ஆத்மாவில் பதிவானதை… மீண்டும் அவ்வலைத்தொடர் இச்சுவாசமுடன் ஜீவகாந்த அலையுடன் மோதியவுடன்… அதன் பிடிப்பிலேயே மீண்டும் மீண்டும் பூமியின் பிடியிலேயே சிக்க வேண்டியதிருக்கும்.

இப்பூமிப் பிடிப்பிலிருந்து விடுபடத் தன் ஆத்ம வலுவைப் பெற வேண்டுமென்றால் இஜ்ஜீவ காந்த சரீர உணர்வின் எண்ணத்தில் ஏற்கனவே பதிவு பெற்ற தொடர்பு நிலைகளை மாற்றி அமைக்க வேண்டும்.

வலுவான ஒலி சக்திகளை… காந்த மின் அலைத் தொடர்பைப் பெற்று… உணர்வின் எண்ணத்தில் இப்பூமி வளரத் தொடர்பு கொண்ட நம் சூரிய குடும்ப ஒளி சக்திகளுடன் எண்ணத்தைச் செலுத்தி பல சமைப்பின் முலாமைப் பெற வேண்டும்.

அதனின் வளர்ச்சியில்… பகுத்தறியும் விழி ஒளியைப் பாய்ச்சி எதிர்படும் பொருளறிந்து வழி செல்லும் வாழ்க்கைதனை… “ஞான ஒளி பாய்ச்சி” எதனையும் அறியும் தொடர்பைப் பெற முடியும்.

இஜ்ஜீவ காந்த சரீரத்தில் இன்று செயல்படும் ஆத்ம வலுவின் வளர்ச்சித் தொடருக்கு மேலும் வலுக்கூட்டும் “சப்தரிஷிகளின் தொடர்பில்” உணர்வின் எண்ணத்தைச் செலுத்தி…
1.ஜீவகாந்த சரீரத்தின் எண்ண அலைக்கு
2.வலுவான ஒளி காந்தத்தை மேன்மேலும் நாம் எடுக்கும்போது
3.ஞானத்தின் ஒளி நிலையைப் பெற முடியும்.

ஞானத்தின் ஒளித் தன்மையை இவ்வாத்மாவின் பதிவு நிலைப்படுத்தப்பட்ட வீரிய சக்தியினால்… “முக்காலமும் அறியும் மூல மந்திரத்தை” ஒவ்வொரு ஆத்மாவும் பெறலாம்.

ஆதிசக்தியின் சக்தியாக… ஜீவசக்தியின் சமைப்பு நிலைக்கு நம் சூரியக் குடும்பமல்லாத
1.வேறு பல சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த ரிஷி சக்திகளின் சமைப்பு நிலை கொண்டு
2.அதற்குகந்த வலுக்களை… ஒளியின் வண்ணச் சமைப்புகளால் சுவை கூட்டும் ரிஷித் தொடர்பில்தான்
3.கரு உரு வார்ப்பக வழித் தொடர்கள் வளருகின்றது.

அத்தகைய வழித் தொடர் பெற்று உயர்ந்த நிலையில் வளரும் மனித உயிராத்மாக்களுக்கு மீண்டும் உரம் சேர்க்கும் வளர்ப்பிற்கு வளர் சக்தியின் ஒளி சக்தியான “ரிஷி சக்தியின் ஒளித் தொடர்பால் தான்” உயர்வு நிலை கிட்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நம் உயிரணு (உயிர்) கதிரியக்க நட்சத்திரத்திலிருந்து உருவானது தான்.

மனிதன் வரை வளர்ந்து அந்த ஆற்றலான உணர்வின் சத்து கொண்டுதான்
1.உடலான இருளுக்குள் இருப்பதை
2.அந்த மறைந்த நிலையைத் தன் உணர்வின் நிலையால்
ஒலி/ஒளி அலைகளாக எண்ணங்களாக மாற்றுகின்றது.

இதையெல்லாம் அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.

தாய் கருவிலே அவன் இருக்கும் பொழுது தாய் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த விண்ணின் ஆற்றல்கள் அனைத்தும் அதாவது அந்த நஞ்சின் இயக்கமான கதிரியக்கத்தின் உணர்வுகள் அகஸ்தியனுக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்தது.

பூர்வ புண்ணியத்தால் தான் பெற்ற அந்த உணர்வின் சக்தி கொண்டு விண்ணை நோக்கி ஏகுகின்றான்.

அப்படி ஏகும் போது “உயிராற்றல்…”
1.எதனின் தன்மை கொண்டு அந்த நட்சத்திரத்தின் இயக்கங்கள் இயக்கியதோ
2.அதையே நுகர்ந்து நுகர்ந்து நுகர்ந்து
3.அதனின் உணர்வின் தன்மையே ஒளியாக மாற்றிக் கொள்கின்றான் அகஸ்தியன்.

விண்ணின் ஆற்றலை எடுத்து இந்த உடலுக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தையும் தனக்கென்ற நிலைகள் இதைப் பிரித்துப் பிரித்து அந்த உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி இன்றும் விண் உலகில் வாழ்ந்து கொண்டுள்ளான் துருவ மகரிஷி.

அதாவது துருவப் பகுதியிலிருந்து நம் பூமி கவரும் உணர்வின் சத்தைத் தான் (அகஸ்தியன்) அங்கேயே நிலை கொண்டு அந்த உணர்வின் சத்தைத் தனக்குள் கவர்ந்தான்.

அவ்வாறு கவர்ந்த சத்திலிருக்கும் நஞ்சினைப் பிரித்து விட்டுத் தன் உயிரான ஒளியின் சிகரத்தை எந்த நட்சத்திரத்தில் பிறந்தானோ அதனின் இனத்தின் தன்மையை இந்த உணர்வின் தன்மையை உணவாக எடுத்துக் கொண்டு இன்றும் துருவ நட்சத்திரமாக மின்னிக் கொண்டுள்ளான் அவன்.

அதைப் போன்று எந்த நட்சத்திரத்தின் தன்மை நம் உயிரணுவின் தன்மையாக இருப்பினும் அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்திகளை நாம் கவர்தல் வேண்டும்.

அந்த அகஸ்தியனின் உணர்வின் துணை கொண்டு விண்ணின் ஆற்றலை நம் உயிரான இயக்கத்திற்குள் இணைத்து இந்த வாழ்க்கையில் எதிர் நிலையான இயக்கங்களாக இருப்பினும் ஒருக்கிணைந்த இயக்கமாக நாமும் மாற்ற முடியும்.

இதையெல்லாம் நீங்கள் படிக்கும் பொழுது “என்னடா…! நாம் எல்லாம் அந்த அளவிற்குப் படிக்காதவர்கள். “சாமி என்னென்னமோ… இப்படிச் சொல்கிறார்..!” என்று எண்ணாதீர்கள்.
1.நான் படிக்காதவன் தான்.
2.மூன்றாவது வகுப்பு முழுவதும் படிக்கவில்லை.

என் குருநாதர் அகஸ்தியன் பெற்ற ஆற்றல்களை எல்லாம் எனக்குள் கொடுத்து இயக்கச் சக்தியாகக் கொண்டு வந்திருக்கிறார்.

அதனால் சாமி சொல்வது அர்த்தம் தெரியவில்லை… எங்கேயோ ஏதோ உலகத்தில் ஏதோ பெரியதாகச் சொல்கிறார்… என்று இப்படி விட்டு விட்டீர்கள் என்றால் நான் சொல்வதைத் தள்ளிவிட்டுவிடும்.

1.சாமி சொல்கின்ற சக்தியை நான் பெற வேண்டும் என்று
2.நீங்கள் உங்களுக்குள் “இறுக்கிப் பிடித்து வைத்துக் கொண்டால்…” இது வளர்க்கச் செய்யும்.

மகரிஷிகளுடன் நாம் என்றுமே இணைந்த நிலையில் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்

 

பால் எவ்வளவு சுவையாக இருந்தாலும் அதிலே காரம் விழுந்து விட்டால் அதனின் சுவையை அது எப்படி மாற்றுகின்றதோ அதைப் போல் தான் இந்த மனித வாழ்க்கையில் நாம் பண்புள்ளவர்களாக இருந்தாலும் பிறருடைய தீமையின் நிலைகளை நுகரப்படும் போது இயக்கங்கள் மாறி அந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகி விடுகிறது…

காரணம்…
1.மனிதர்களான நாம் எவரும் எவரிடமிருந்து பிரிந்து இல்லை.
2.அனைவருடன் சேர்ந்து தான் இயங்கிக் கொண்டிருக்கின்றோம்.

ஒருவரின் தீமையான செயல்களைப் பார்த்தாலும் கேட்டுணர்ந்தாலும் அவருக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை என்று. எண்ணலாம்.

ஆனால் அவருக்குள் விளைய வைத்த தீமையின் தன்மை கொண்டு “தீயவன்…” என்று அவரை எண்ணினாலும் அதனுடைய தொடர்பு கொண்டு அந்தத் தீய உணர்வுகள் நமக்குள் விளைந்து
1.அவனை எண்ணும் போதெல்லாம் நம்மைத் தீய வழிகளுக்கு இட்டுச் செல்லும்
2.தீய சொல்களைச் சொல்ல வைத்துவிடும்
3.தீயதையே நமக்குள் விளையச் செய்து தீயவனாக நம்மையும் மாற்றும் நிலை வந்து விடுகிறது.

ஆகவே எதிலேயும் நாம் தொடர்பு கொண்டவர்கள் தான். யாரிடமிருந்தும் பிரிந்து சென்றவர்கள் இல்லை.

அதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் அந்த மெய் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி… மனிதனாகப் படைத்த நம் உயிரை நாம் மதித்து நடக்க வேண்டும்.

விநாயகர் தத்துவத்தை உணர்த்திச் சென்ற அகஸ்தியனின் வழிப்படி ஒவ்வொரு நிமிடத்திலும் வாழ்க்கையில் எந்தக் குறைகள் வந்தாலும் அதை நிவர்த்திக்க வேண்டும்.

நாம் செய்யும் தொழில் நஷ்டமானாலும் வீட்டிலுள்ளோர் அனைவரும் சேர்ந்து தியானமிருந்து மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

பின்… எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் வாழ்வில் நலம் பெற வேண்டும் என்று இந்த எண்ணங்களை எடுத்து அந்த அருள் உணர்வுகளை வளர்க்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்திகள் பெருகும். வியாபாரம் சீராகும். நமக்குள் வரும் துயரங்களையும் நோய்களையும் மாற்ற முடியும். நம் சொல்லின் நிலைகள் பிறரின் இருளைப் போக்கிடும் சக்தியாக வரும். மெய் உணர்வின் தன்மையை நாம் பெற முடியும்.

அத்தகைய நிலைகள் நீங்கள் பெற வேண்டும் என்ற ஆசையில் தான் இதைச் சொல்கிறேன்.

1.நான் (ஞானகுரு) படிப்பறிவில்லாதவன் தான்.
2.மூடனாக இருந்த என்னைக் குருநாதர் பக்குவப்படுத்தி அறியும் ஆற்றலைக் கொடுத்தார்
3.அவர் கொடுத்ததை எல்லாம் இப்போது உங்களுக்கு உப்தேசமாகவும் கொடுக்க முடிகிறது.
4.அந்த மேய் ஞானிகளின் உணர்வை நுகர்ந்து சொல்லாகவும் செயல்படுத்த முடிகிறது.
5.என் வாக்கினைக் கேட்போர் வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கவும் முடிகிறது.

அவர்கள் இருள்கள் எப்படிப் போகிறதோ அதைப் போல் இந்த உபதேசத்தைக் கேட்டுணர்ந்து அதைப் பின்பற்றுவோர் நீங்களும் வளர முடியும். உங்கள் சொல்லினைக் கேட்போருக்கும் அது இருளைப் போக்கும் சக்தியாக வளரும்.

இன்றைய உலகில் நாம் அறியாதபடியே
1.இருள் சூழும் தன்மைகள் உருவாகி நஞ்சுகள் பரவி நல்லவனையும் தீயவனாக ஆக்கி
2.ஒன்றும் அறியாத பாமர மக்களையும் அழித்திடும் உணர்வுகளாக வெளிப்பட்டு
3.உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எத்தனையோ வெறித் தன்மையான நிலைகளும் செயல்பட்டு
4.உலகிலே படர்ந்து கொண்டிருக்கும் அத்தகைய தீய விளைவுகளை
5.நீங்கள் விடும் மூச்சலைகள் இதை மாற்றி அனைவரையும் நல்வழிப்படுத்தும் சக்தியாகப் படரும்.

உலகைக் காத்திடும் அரும் பெரும் சக்தியாக நாம் ஒவ்வொருவரும் வளர வேண்டும்.

இமயமலையில் சப்தரிஷிகளின் செயல்பாடுகள் – ஈஸ்வரபட்டர் 

 

போகர் தன் உயிராத்மாவின் வளர் சக்திக்காக… முருகா என்ற ஆறுகுண. அமில வழி… ஜீவித நீர் நிலை வளர்க்கும் மூல வித்தினை… இப்பூமியின் ஜீவ வளர்ப்பில்… புவனம் வளர்க்கும் புவனேஸ்வரித் தாய் சக்தியை வணங்கி… முருக குண வித்தை வளர்க்க… நவபாஷண அமிலத்தை முருக குணச் சமைப்பாக்கிச் சிலை செய்து வைத்துள்ளார்.

1.எச்சிலையை நவபாஷணத்தால் முருகனின் உருவத்தைச் செய்தாரோ
2.அதன் தன்மையில் அமில ஜீவ வளர்ப்பின் வித்து இப்பூமியில் வளரும்
3.ஜீவ முருக அறுகுண வண்ண அமிலத்தின் வலுவைக் கூட்டும் முருக குண சக்தி நிலை
4.போகரினால் இப்பூமியில் இன்று செயல்படுகின்றது.

இப்பூமியின் இமயமலையில் பல ரிஷிகளின் செயல் நடக்கின்றது…!

“ரிஷிகளின் ஜெபமிடம் அதுதான்…!” என்ற நிலை மட்டும்தான் மனித உணர்வில் தெரிகின்றதோ தவிர உண்மையில் இமயமலையின் உச்சியில் நடுத் தாழ்வான ஓர் இடத்தில் உச்சிக்கு அப்பால் இந்திய கண்டத்தின் பின்புறத்தில் “சப்தரிஷியின் ஜீவித மனித ஆத்மா வளரும் வித்தின் உணர்வு சமைப்பு தாவர வலுவிற்கு… அங்கு குளம்…” ஒன்று உண்டு.

அந்நீர் கொப்பளிக்கும் தன்மையில் செயல்பட்டுக் கொண்டே உள்ளது.

1.போகர் எப்படி நவபாஷணத்தால் முருகன் சிலையைச் செய்வித்தாரோ…
2.அதைப் போன்று ஜீவ நீரில் வடித்தெடுத்த அமில சேர்க்கையால் திடமாக்கப்பட்ட
3.சிவலிங்கம் ஒன்றை அங்கு ரிஷிகள் பிரதிஷ்டை செய்து வைத்துள்ளனர்.

அதற்குச் சுற்றிலும் அந்நீர் நிலை கொதி நிலை பெற்றுச் செயல்பட்டுக் கொண்டுள்ளது. அதன் தொடர்பில் பல மாற்று நிலைகள் இப்பூமிக்கு மனித உணர்வின் செயல் வலுவைச் சப்தரிஷிகளினால் செயல்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளது.

ஆக சப்தரிஷிகள் செயல்படும் ஞான விருட்சக மலை தான் இமய மலை…!

1.இயற்கையின் மாற்றத்தில் மனித நிலை வாழ வலுக் கூட்டும் ரிஷி சக்தியுடன் நம் எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி
2.இஜ்ஜீவ காந்த சரீரத்தில் ஒளிக் காந்தத்தின் மின் அலையை செலுத்தச் செலுத்த
3.விழி பார்த்துப் படமெடுக்கும் வாழ்க்கையை ஞான விழி கொண்டு ஜோதி நிலைக்கு மனித நிலை உயர முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

திருஞான சம்பந்தர் இளம் வயதில் அறிவின் ஞானம் எப்படிப் பெற்றார்?

திருஞான சம்பந்தர் பல அற்புதச் செயல்கள் செய்தார் என்று காவியங்களிலே உண்டு. அவருக்கு அந்த ஆற்றல் எப்படிக் கிடைத்தது…?

அவருடைய தாய் வெகு நாட்களாகத் தனக்குக் குழந்தை இல்லை என்று ஏங்கியது. அந்த ஏக்கத்தின் பால் சீர்காழி என்ற ஊரில் சிவன் ஆலயத்தில் தாய் ஏங்கி எடுத்த உணர்வே குழந்தை உருவாகக் காரணமாக அமைந்தது.

கடல் அருகில் இருப்பதனால் கடல்களில் இருந்து அலைகள் வரும் போது பொங்கி எழும்போது அதிலே சிவனும் பார்வதியும் படகில் வந்து காப்பாற்றினார்கள் என்ற தத்துவங்களை ஸ்தல புராணங்களாக எழுதி வைத்திருக்கின்றனர் அன்றைய அரசர்கள்.

ஸ்தல புராணங்களையும் அதற்குண்டான காவியங்களையும் தீட்டி அந்த (அரசர்களால் காட்டப்பட்ட) உண்மையை மக்களுக்கு உபதேசிப்பதற்குப் பல யாக வேள்விகளில் உயிர்களை இணைத்து அந்த உயிரிலிருந்து வெளிப்படும் உணர்வைத் தனக்குள் கவர்ந்து மந்திர ஒலிகளை எழுப்பி பல அற்புதங்களைச் செய்து காட்டுவார்கள் பண்டைய கால அரசர்கள்.

அதிலே சீர்காழி என்ற ஊர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடம்.

அந்த இடத்தில்தான் “தனக்குக் குழந்தை இல்லை” என்ற நிலைகளில் வரம் வேண்டி அந்தச் சிவன் ஆலயங்களுக்குத் தினம் சென்று வருவதும் அங்கே அற்புதக் காட்சிகளைக் கேட்டறிகின்றது அந்தத் தாய்.

“இவ்வளவு அற்புதம் செய்தவன்…” எனக்கு ஏன் குழந்தை கொடுக்கக் கூடாது..! என்ற நிலைகளில் சிவனை எண்ணி ஏங்கி இந்த உணர்வின் ஆற்றல்களைத் தன்னுடைய எண்ணத்தால் வளர்த்துக் கொண்டது.

கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாகி அந்தக் காவிய படைப்பின் பிரகாரம் தங்கள் எண்ணத்தை ஓங்கித் தனக்குள் வளர்க்கச் செய்தார்கள். அங்கே அந்தத் தாய் கருவுருகின்றது.

பக்தியின் நிலைகள் கொண்டு அங்கே விநாயகனை முதலில் வணங்குகின்றது அந்தத் தாய்.

பின் ஆலயத்திற்குள் சென்று அந்த சிவ தத்துவத்தின் காவியத்தைக் கவிகள் பாடியதைத் தான் படித்துணர்ந்த உணர்வை நினைவு கொண்டு உற்று நோக்கி அந்த உணர்வின் தன்மைகள் பெற வேண்டும் என்று ஏங்குகின்றது.

கருவுற்ற நிலைகளில் விநாயகரை எண்ணும் பொழுது சிவனுக்கு முந்தியவனாக நின்று நீ எல்லாவற்றிலும் முதன்மையாக ஜீவனாக இருந்து இயக்குகின்றாய்…! என்ற அந்தக் காவியத் தத்துவப்படி அந்தத் தாய் விநாயகரை எண்ணிப் பார்க்கின்றது.

ஆனால் காவியத்தில் உள்ள மூலம் என்ன…? என்ற உண்மை அந்தத் தாயிற்குத் தெரியாது.

இருப்பினும் காவியப் படைப்பைப் படித்ததன் நினைவு கொண்டு
1.நீ சிவனுக்கு முந்தியவனாக இருக்கின்றாய்.
2.நீ எல்லாவற்றுக்கும் ஜீவன் கொடுப்பவனாக இருக்கின்றாய்.
3.அதே போல என்னுடைய குழந்தைக்கும் கருவிலேயே ஜீவன் கொடுத்தாய்.
4.என் குழந்தை அவன் உன்னுடைய ஞானத்தை அங்கே வளர்க்க வேண்டும் என்று விநாயகரைப் பார்த்து
5.கருவுற்ற அந்தத் தாய் ஏங்கி இந்த உணர்வைச் செலுத்துகின்றார்.

ஒவ்வொரு நாளும் இதைப் போன்ற உணர்வின் சக்திகளைத் தனக்குள் சேர்த்துச் சேர்த்து எதையெல்லாம் காவியப் படைப்பில் உயர்ந்த நிலைகள் உணர்த்தினரோ அவையெல்லாம் இந்தத் தாயும் தந்தையும் உற்று நோக்குகின்றார்கள்.

அதையே விரதமாக வைத்து வேண்டுகின்றார்கள்.
1.அருள் ஞானக் குழந்தையாக வளரவேண்டும்.
2.சிவனுடைய புத்திரனாக எனக்குள் வளர வேண்டும்.
3.எவர் ஒருவர் எனக்கு இந்த அருள் கொடுத்தனரோ
4.அந்த ஈசனும் சிவனும் இது முன் நின்று வழி நடத்தி
5.அந்த விநாயகனின் தத்துவங்களை எனக்குள் நின்று
6.அந்த அருள் ஞானத்தைப் பொழிந்திட வேண்டும்.
7.என்னுடைய கருவில் வளரும் ஜீவனுக்கு எனக்குள் வளரும் அந்தச் சிசுவிற்கு உங்கள் அருள் ஞானம் கிடைக்க வேண்டும் என்று
8.அந்தப் பத்து மாத காலமும் கடுமையாக ஏங்கி அதையே தியானித்தது அந்தத் தாய்.

இவ்வாறு விநாயகரையும் சிவனையும் பார்வதியையும் எண்ணி
1.அதையே தனக்குள் உணவாக எடுத்து கொண்டு
2.அதையே ஞானப்பாலாகக் கருவிலிருக்கும் குழந்தைக்கு அந்தத் தாய் ஊட்டியதால்
3.அதன் வழியில் பிறந்த குழந்தையால் அதன் பின் பல அற்புதங்கள் நடந்தது.

நஞ்சு தீண்டிய ஒருவனை மந்திரத்தால் நஞ்சை நீக்குகின்றனர். இந்த அற்புதத்தையெல்லாம் அந்த ஆலயத்தில் செய்து காட்டுகின்றார்கள்.

இதை உற்றுப் பார்த்த இந்தத் தாய் இதே போல நஞ்சை உட்கொண்டோரையோ அல்லது நஞ்சு தீண்டியவர்களையோ என் குழந்தை பார்க்குமேயென்றால் அவன் பார்வையால் அந்த நஞ்சுகள் நீங்க வேண்டும் என்று ஏங்குகின்றது.

இந்தச் சிவனால் கொடுக்கப்பட்ட… இந்த விநாயகனால் கொடுக்கப்பட்ட… என் குழந்தைக்கு அவர்களால் உருவாக்கப்பட்ட இந்தக் குழந்தைக்கு… அந்த அற்புத நிலைகளெல்லாம் செய்யக்கூடிய ஞானப்பால் கிடைக்க வேண்டும் என்று ஏங்கித் தவித்தது.

அந்த உணர்வின் தன்மை கொண்டே குழந்தை பிறக்கின்றது. பிறந்த பின் முதலில் அந்தச் சிசுவை ஆலயத்திற்குள் தரிசனைத்திற்காகக் கொண்டு வருகின்றார்கள்.

அப்படிக் கொண்டு வரப்படும் போதே எந்த விநாயகனைப் பார்த்துத் தாய் ஏங்கி எடுத்ததோ அதைப் பார்த்ததும் ஏற்கனவே பார்த்துப் பழகியது போல் விநாயகரிடம் அது தவழ்ந்து சென்று சிரிக்கின்றது.

அதே போலச் சிவனைப் பார்க்கப்படும் போதும் அதனுடைய துடிப்பின் நிலைகள் தவழ்ந்து அங்கே சிவனிடம் அணுகிச் செல்கின்றது.

ஏனென்றால் மனிதனால் உருவாக்கப்பட்ட சந்தர்ப்பம்
1.அந்தத் தாய் தன் எண்ணத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அது கடவுளாக நின்று
2.இந்த உணர்வின் செயலாக உடலில் இயக்கி அந்த உணர்வின் ஆற்றல்கள்
3.கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

அதுவே கடவுளாக நின்று தாய் எடுத்துக் கொண்ட உணர்வின் ஞானமே கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்தது.

அதனின் வழித் தொடர் கொண்டுதான் சிறு குழந்தையாக இருந்தாலும் அவனை அறியாமல் ஞானத்தைப் பேசும் திறன் அவனுக்குள் வருகின்றது.

அந்தக் குழந்தை தன் வயதுக்கு மிஞ்சிய செயலாக
1.அவர் பேசும் பேச்சினுடைய திறமை கண்டு
2.அவரைக் “கடவுளின் பிள்ளை” என்ற நிலைகளில்
3.திருஞான சம்பந்தர் என்ற நிலையில் பெயரை இடுகின்றார்கள்.

ஞானகுருவின் புத்தாண்டு வாழ்த்தும் அருளாசியும்

 

ஞானிகள் கண்டுணர்ந்த இயற்கையின் உண்மை நிலைகளை யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் போது “சாமி என்னமோ சொல்கிறார்…” என்று விட்டு விடாதீர்கள்.

காரணம் உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்யவே இதைச் சொல்கிறேன். பதிவானதை மீண்டும் நீங்கள் நினைவு கூறும் பொழுது நிச்சயம் அது உங்களுக்குள் இயங்கத் தொடங்கும்.

ஒருவன் கடுமையாத் திட்டி விட்டால் நீங்கள் அதைக் கூர்மையாகப் பதிவு செய்து கொள்கிறீர்கள்.
1.அதைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது பன்மடங்கு ஆத்திரமூட்டும் செயலாகவும்
2.அறிவை இழக்கச் செய்யும் செயலாகவும் உங்களுக்குள் கொடூரத் தன்மைகளையும் விளைவிக்கச் செய்கிறது.

அப்படி விளைந்து விட்டால் சகோதர உணர்வுடன் நீங்கள் இருந்தாலும் இந்தச் சொல்லின் தன்மை கடும் சொல்லாக வெளிப்படும். நீங்கள் எடுத்துக் கொண்ட உணர்வலைகள் உடல் நோயாக மாறும் நிலையும் வந்து விடுகிறது.

ஒருவன் செய்த கொடூரத் தன்மையின் நிலைகள் இங்கே ஊடுருவி நல்ல பண்பை இழக்கச் செய்து தீமை செய்யும் உணர்வின் தன்மையாக நம்மை இயக்கச் செய்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலையில் இருந்து மீள மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்றுப் பழக வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் இந்தப் புத்தாண்டு
1.மகிழ்ச்சி பெறும் நன்னாளாக அது வளர வேண்டும்
2.மகிழ்ச்சி பெறும் செய்தியாக நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்
3.மகிழ்ச்சி பெறும் செயலாக அனைவரும் பெற வேண்டும்
4.நீங்கள் விடும் மூச்சலகள் அனைவரையும் மகிழ்ந்து வாழச் செய்யும் சக்தியாகப் படர வேண்டும்
5.உங்கள் வாழ்க்கையில் அறியாது வந்த இருள்கள் அனைத்தும் நீங்கிட வேண்டும்
6.அந்த மெய்ப்பொருள் காணும் மெய் வழிகள்… மெய் ஒளிகள் நீங்கள் பெற வேண்டும்
7.குருநாதர் காட்டிய வழியில் அதை எல்லாம் நீங்கள் பெற வேண்டும். என்று பிரார்த்திக்கின்றேன்.

எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும்… மக்களுக்குள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்… என்ற நிலையில் ஞானிகளும் மகரிஷிகளும் எதை ஆசைப்பட்டார்களோ அந்த நிலையை ஒவ்வொருவரும் நீங்கள் பெற வேண்டும்.

உதாரணமாக மாங்கனியாக இருக்கும் பொழுது அது சுவையாகவும் பிஞ்சாக இருக்கும் பொழுது துவர்ப்பாகவும் காயாக இருக்கும்போது புளிப்பாகவும் இருக்கிறது.

மனிதர்களாக இருக்கும் நாம் காயின் தன்மையில் இருக்கின்றோம். அந்த ஞானிகளோ கனியின் தன்மை அடைந்து உயிருடன் ஒன்றிய ஒளியாக முழுமை பெற்றவர்கள்.

அவர்கள் உணர்வை நாம் பெற்று நம் ஒவ்வொரு உணர்வையும் இனிமை கொண்டதாக மாற்றி அந்தக் கனியின் தன்மை அடைந்த அந்த ஞானிகள் சென்ற வழியில் நாம் அனைவரும் நிச்சயம் செல்ல முடியும். உங்களை நம்பிப் பாருங்கள்.

எப்படித்தான் இன்று இருந்தாலும் நாம் எண்ணியதற்குத் தகுந்த மாதிரி அடுத்த உடலாக மாற்றி விடுகிறது நம் உயிர். அதே போல்
1.நாம் அருள் உனர்வுகளை எடுத்து வளர்த்துக் கொண்டால்
2.இந்த உடலை ஒளிச் சரீரமாக மாற்றுவதும் இதே உயிர் தான்.

ஆகவே…
1.ஒளியாக மாற்றி விண் சென்ற அந்த மெய் ஞானிகளின் அருளப் பெறுவோம்.
2.நமக்குள் அறியாது வந்த இருளைப் போக்குவோம்
3.நம் சொல்லும் செயலும் கேட்போர் உணர்வுகளில் இருளை நீக்கச் செய்து பொருள் காணும் சக்தியைப் பெறச் செய்வோம்.
4.நம் பேச்சும் மூச்சும் அனைவரையும் மகிழ்ச்சி பெறச் செய்யட்டும்
5.உலகம் முழுவதும் சகோதர உணர்வுகளை வளர்க்கச் செய்வோம்.

மனிதனுக்கு மனிதன் ஒருவருக்கொருவர் துன்பத்தை நீக்கும் நிலையாக உண்மையை உணரச் செய்யும் சக்தியாகப் பெற வேண்டும் என்று நாம் தியானிப்போம்… தவமிருப்போம்.

உலகில் சுழன்று கொண்டிருக்கும் அசுர உணர்வுகளிலிருந்து அனைவரும் மீண்டு மெய் ஒளிகள் மெய் உணர்வின் தன்மை இங்கே படர வேண்டும் என்ற நமது குருவின் ஆசைகள் உங்களுக்குள் பதிவாகி அது ஓங்கி வளரட்டும்.

1.குருவின் ஆற்றல் மிக்க அந்தச் சக்தி உங்களுக்குள் விளைந்து
2.நீங்கள் இடக்கூடிய மூச்சலைகள் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு
3.உலகில் வரும் இருளைப் போக்கி மெய்ப் பொருள் காணும் சக்தியாக இந்தப் புத்தாண்டில் மலரட்டும்.

மெய்… உண்மை… சத்தியம்…! – ஈஸ்வரபட்டர்

 

தீக்குச்சியில் பூசப்பட்ட மருந்தும் பெட்டியில் பூசப்பட்ட மருந்தும் உராயும் பொழுது தீக்குச்சி எரிந்து அம்மருந்தின் வேகம் உள்ளவரை ஒளி தருகின்றது.

இவ்வுராய்வைப் போன்றே திரவக எரி பொருளும் அதன் தொடர்பு கொண்ட உராய்வுக் கல்களைச் செலுத்தும் பொழுது தன் ஒளியினைத் தருகின்றது.

ஒன்று போல் உள்ள இரண்டு கற்களை உரசும் பொழுதும் அதிலிருந்து ஒளி பிறக்கின்றது.

இப்படி உலக உணர்வில் மனித ஞானத்தின் சமைப்புத் தன்மை கொண்டு செயற்கை ஞானத்தில் வழிப்படும் உண்மைகளும்… இயற்கையின் உணர்வில் பிறக்கப்பட்ட உண்மையும்… சூரியனின் சமைப்பு தன்மையால் சுழன்று ஓடிக் கொண்டேயுள்ளது.

சூரியனின் ஈர்ப்புப் பிடியில் உந்தித் தள்ளும் காற்றலையில் மோதப் பெறும் அமில ஒளி நிலையில் ஜீவன் கொண்ட “உயிரணு…”
1.சூரியனின் பிடிப்பலையை விட்டுக் காற்று மண்டல நிலையற்ற பால் வெளி மண்டலத்தில் மிதந்து வரும் அவ்வுயிரணு
2.பூமியின் ஈர்ப்புப் பிடியில் தான் எச்சுவைக் கொண்டு உயிர் பெற்றதோ
3.அதன் தொடர்பில் ஜீவ வளர்ப்பு நிலை மாற மாற
4.ஒன்றின் சமைப்பிற்கு முலாம் பெற்று… ஜீவ வளர்ச்சியின் உஷ்ண நிலையில் ஓர் தொடர்பு வளர்ச்சி நிலை மாறி
5.மீண்டும் பிறிதொரு வளர்ச்சிக்கு வரும் வழித் தொடர் மாற
6.அவ்வுயிரணுவின் வலுத்தன்மையைக் கூட்டிக் கூட்டி… உயிரணுவின் பரிமாணம் கனம் பெற்று
7.எல்லாவற்றையும் அறியக்கூடிய செயல்… சொல்… ஞானம் பெறும்… சரீர நிலைக்கு (மனித உடல்)
8.அவ்வுயிர் காந்தம் ஜீவ காந்த உணர்வு நிலை செயல் கொள்ளப் பல சமைப்பில் புல்லாகிப் பூண்டாகி என்ற வழி நிலைக்கொப்ப
9.பல கோடி அமிலத் தன்மையில்… பல மோதலில்… பிம்ப நிலை மாற்று நிலை மாறி… மாறி…
10.சமைப்பின் அமில வீரிய சக்தியான உயிர் ஜீவாத்மா ஒளி பெற்ற சரீர இயக்கத்தில்
11.பல மோதலில் உருப்பெற்ற உணர்வின் எண்ணச் சரீரத்தில்
12.மெய் ஞான சக்தி பெறுவதுதான் மனிதனுக்கு அடுத்த நிலை.
13.மெய் என்றால் உண்மை என்ற பொருள் தான்… உலக இயல்பின் செயல்படும் உண்மையாக உள்ளது.
13.இன்று நடப்பவை சொல்லப்படும் சொல் சத்தியம் என்றால் அதுவே நாளை கனவாகி விடுகின்றது.

இவ்வுடலில் உயிர் இயக்கமும்… வாழும் வாழ்க்கையும்… “சத்தியம்” என்றால் உடலை விட்டு உயிர் பிரிந்த பின் எது சத்தியமாகின்றது…?

சொல்லப்படும் சொல்லிலேயோ வாழும் வாழ்க்கையிலேயோ சுழலும் ஓட்டத்தில் சத்தியம் இல்லை. சத்தியத்தின் உண்மை நிலையை ஒவ்வொருவரும் உணரல் வேண்டும்.

1.சூரியனின் ஒளி பூமியில் படும் போதுதான் பூமிக்கு வெளிச்சம்.
2.பூமியின் மேல் சூரியனின் ஈர்ப்பு வட்டம் இல்லா இடத்தில் அங்கு சத்தியம் செயல்படுவதில்லை.
3.சூரியனின் ஒளி நிஜம் இல்லை என்று இரவில் பூமி சொல்ல முடியுமா…?

ஒளிரும் மங்காத் தன்மையான உயிர் ஜீவ ஜோதி நிலை தான் “சத்திய நிலை…!” சத்தியத்தின் ஒளியை ஒளிரச் செய்யும் சக்தியாகத் தான் மனித உணர்வின் எண்ணத்தின் ஞானத்தைச் செயல்படுத்த வேண்டும்.

உலகப் பிடிப்பில் நீ சிக்காதே…
உலகத்தையே நீ வெறுக்காதே…
உலகத்தையே நீ உனக்கு சொந்தமாக்கு…!

உலகம் உனக்குச் சொந்தமல்ல…
உலகுக்காக நீ வாழவில்லை…
உலகத்தில் தான் நீ வாழுகின்றாய்…!

உலகம் உறங்குவதில்லை…
உலகத்தில் நீ உறங்காதே…
உலக சுகத்தை நம்பாதே…!

உலகத் தேரில் பவனி வா…!
உலக ஞானம் நீ பெற்றால்…
உலகையே நீ படைக்கலாம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

மகரிஷிகளின் உடல்களில் விளைந்த உணர்வுகள் விளைய வைத்த உணர்வின் வித்துக்கள் இன்றும் நமக்கு முன் பரவிப் படர்ந்து கொண்டுள்ளது.

அதனை நாம் எல்லோரும் எளிதில் பெற முடியும்.

ஆனால் உங்களுக்குக் கதையாக ஏதோ வேடிக்கையாகச் சொல்லி “சாமி பெரியவர்…!” என்று என்னைப் புகழ்ந்து விட்டுப் போவதற்கு இல்லை.

சாமிக்கு என்ன…?
1.அவருக்கு அவர் குருநாதர் கொடுத்தார்
2.அந்தச் சக்தி நமக்கு யார் கொடுப்பார்கள்…? என்று எண்ண வேண்டாம்.

குரு எனக்கு உபதேசித்தார்.

1.அவரை உற்றுப் பார்த்தேன்.
2.அவரின் உணர்வை ஆழமாகப் பதிவாக்கினேன்.
3.அவர் உணர்வின் தன்மை எனக்குள் பதிவு செய்தேன்.
4.மீண்டும் நான் குருவை நினைவு கொண்டேன்.

எதை…?

குருநாதர் பதிய வைத்த உணர்வை மீண்டும் எண்ணும் போதுதான் அவர் கற்றுணர்ந்த உணர்வின் சத்தும் அவருக்குள் விளைய வைத்த நிலையும் அவர் அறியாது தீமைகளை நீக்கிய நிலையும் எனக்குள் வருகின்றது.

அவரை நினைக்கும்போது அந்த உணர்வுகள் எனக்குள் அது கவரும் நிலை வருகின்றது.

அந்தப் பாதை தெரிய வேண்டும் அல்லவா…!

1.மின் அணுவின்… உயிரணுவின் தோற்றமும்
2.உணர்வின் இயக்கங்களும் எவ்வாறு…? என்ற நிலையை
3.அவர் உபதேச வாயிலாக எனக்குத் தெளிவுற உணர்த்தினார்.

உபதேசத்தின் உணர்வின் அருளை அவர் காட்டிய உணர்வினை இன்று யாம் பேசுவதை ஒன்றும் அறியாத “MIC…” காந்தப் புலனில் பூசிய முலாம்கள் இந்த உணர்வின் தன்மைகளைப் பதிவாக்கி
1.மீண்டும் காந்த ஊசியை இணைத்த பின்
2.திருப்பி நமக்குப் பதில் சொல்கின்றது விஞ்ஞான அறிவு.

நாம் இதைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் மீண்டும் நினைவில் கொண்டு வர வேண்டும் என்றும் விஞ்ஞான அறிவால் கண்டுணர்த்தப்பட்ட நிலைகள்தான் இப்போது பதிவு.

MIC மூலமாக யாம் பேசுவதை பல மடங்கு (AMPLIFIER) பெருக்கி ஆயிரம் பேர் இருந்தாலும் தெளிந்த நிலைகள் கேட்கும் நிலைகளுக்கு விஞ்ஞான அறிவு வளர்ந்துள்ளது.

இதைப் போலத் தான் அகண்ட அண்டத்தின் நிலைகளுக்குள் நுண்ணிய அலைகளாக மறைந்த நிலைகள் இருந்தாலும் அதனின் உணர்வின் அதிர்வின் இயக்கத்தைக் கண்டுணர்ந்தவர்கள் மெய் ஞானிகள்.

கண்டுணர்ந்து அதற்குள் மறைந்த நஞ்சினை ஒடுக்கி நஞ்சினை ஒடுக்கும் உணர்வாக ஒளியின் சுடராகத் தனக்குள் விளைய வைத்தது மெய் ஞானிகள்.

அவர்கள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவு செய்யும் போது மீண்டும் நினைவு கொள்ளுங்கள்.
1.நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம்.
2.பதிவு செய்து கொண்டால் மட்டும் போதும்.
(அது என்ன கேட்டுக் கொண்டா இருக்கிறது…?)

மரம் செடி கொடி தன் உணர்வுக்குள் பதிவு செய்த பின் தன் மணத்தின் தன்மை கொண்டு காற்றில் இருப்பதைத் தன் மணத்தால் எடுத்துத் தன்னைப் பாதுகாத்து கொள்கிறது.

தன் இனமான உணர்வின் தன்மையைக் காற்றில் இருந்து தன் உணவாக நுகர்ந்து அதை உட் கொள்கின்றது.

அதற்கு அறிவில்லையா…? அதனில் தோன்றிய உணர்வின் அறிவுதான் நமக்குள் எண்ணங்களாக வருகின்றது.

எந்தக் குணத்தின் தன்மையை நாம் எடுக்கின்றமோ அதில் உருவான உணர்வுகள் அதனின் அறிவின் ஞானமாக நமக்குள் வருகின்றது. இதை நாம் புரிந்து கொண்டு அருள் ஞானிகளின் பதிவைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

ஹைட்ரஜனிலிருந்து வரும் கன நீரும்… மகரிஷிகளின் ஆற்றல்களும்

 

விநாயகர் தத்துவத்தை ஞானிகள் மக்களுக்குக் காட்டியிருந்தாலும் அவர்களை நாம் “முன்னே பின்னே பார்த்ததில்லை…”

1.அந்த மெய் ஞானி நல்லதைச் செய்து “தன்னையறிந்தான்…” என்ற நினைவை ஊட்டி
2.சிறுகச் சிறுக அவர்கள் பெற்ற சக்தியை நமக்குள் வலுவை ஏற்றுவதற்கு
3.காலையில் எழுந்தவுடன் அந்த மகரிஷியின் அருள் ஒளி பெற வேண்டும் என்று
4.வானை நோக்கி எண்ணி ஒவ்வொருவரும் எடுப்பதற்காக விநாயகரை வைத்தார்கள்.

அப்போது… தன் வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கி மெய் ஒளியைப் பெற்று பொருளறிந்து செயல்படும் திறன் பெற்று தன் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிச் சென்ற “அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…” என்று எண்ண வேண்டும்.

எந்த மகா ஞானி உண்மையை அறிந்தானோ…
1.விண்ணிலே ஒளியின் சுடராக இருக்கும் அவனை நினைவு கொள்ளும் பொழுது
2.சூரியனின் காந்த சக்தி அந்த அலைகளைக் கவர்ந்து கொண்டு வரும் அவனின் உணர்வை நாம் சுவாசித்து
3.நமக்குள் அந்த உணர்வின் வலுவை ஏற்ற வேண்டும்.

விஞ்ஞானிகள் அணுவைப் பிளந்து அணுகுண்டுகள் செய்து அதை ஹைட்ரஜனைக் (கன நீர் – DUTERIUM) கொண்டு அடக்கி வைக்கின்றனர்.

நீருக்குள் இருக்கக்கூடிய சக்தியை… அதாவது ஒரு அணுவிற்குள் இருக்கும் சக்தியை அணுவின் தன்மை பிளந்தாலும்
1.மற்றதுக்குத் தீமைகளை விளைவிக்காத ஹைட்ரஜன் என்ற கன நீரை
2.அதாவது நீரை வடித்து உப்பின் சக்தியை அதிகமாக்கி வெடிக்க விடாது அதனுடைய ஆற்றலைக் கலந்து கொள்வது.
3.ஏனென்றால் கன நீரின் அழுத்தத்தின் தன்மையால் வெடிக்கும் நிலையைச் செயலற்றதாக மாற்றிவிடும்.

உப்பைப் போட்டால் எப்படி ஊறுகின்றதோ அதைப் போல் ஹைட்ரஜன் கதிரியக்கத்திற்குள் இருக்கும் “பசப்பை நீக்கி” தன் உணர்வின் தன்மை கொண்டு அதை அடக்கிவிடும்.

விஞ்ஞானி அணுப் பிளப்பை இவ்வாறு கட்டுப்படுத்துவது போல் மெய் ஞானி என்பவன் விண்ணிலிருந்து வரும் எத்தகைய நஞ்சினையும் (கதிரியக்கச் சக்திகளை) அடக்கிடும் கன நீராக… ஹைட்ரஜன் ஆனான்.

அந்த மெய் ஞானியின் உணர்வின் ஆற்றலை நாம் விண்ணிலிருந்து எடுத்து நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை எல்லாம் அடக்கச் செய்ய வேண்டும் என்பது தான் விநாயகர் தத்துவம்.

இன்றைய வாழ்க்கையில் நல்லதை எண்ணுகின்றோம்… பிறர்பால் இரக்கமும் படுகிறோம். ஆனால் அவர்கள் உடலில் விளைந்த துன்பமும் துயரமும் குறைகளும் நமக்குள் வந்து அந்த உணர்வின் சக்தியாக நமக்குள் மாறித் தீய வினைகளாக விளைந்து விடுகிறது.

அதை நீக்க வேண்டுமல்லவா…!

ஆகவே விநாயகரைப் பார்த்ததும் நாம் விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா என்று உடலுக்குள் அந்த ஆற்றலைச் செலுத்த வேண்டும்.

கருவில் இருக்கும் குழந்தைக்குக் கண்ணன் உபதேசித்தான் என்று காவியங்கள் உண்டு. அதாவது நாம் சுவாசித்தது ஒவ்வொன்றுமே உடலுக்குள் கருவாகி அணுவாக விளைகின்றது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி
1.அந்த நினைவலைகளைச் சிறுகச் சிறுகக் கூட்டிப் பின்
2.மொத்தமாக உடல் முழுவதும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற நினைவைக் கூட்டி
3.உடலில் உருவாகிக் கொண்டிருக்கும் அணுக்களுக்குள் எல்லாம்
4.கண்ணின் நினைவு கொண்டு அந்த ஞானியின் நினைவலைகளை இங்கே உபதேசிக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் ஒளியின் வீரியத் தன்மை கொண்டு அது நமக்குள் ஓங்கி வளரும். தீமையிலிருந்து “நம்மைக் காக்கும் சக்தியாக வளரும்…”

பலவாக ஓடும் எண்ணத்தை ஒன்றாக்கும் வழி – ஈஸ்வரபட்டர்

 

மனித எண்ண ஓட்டங்கள்… உணர்வின் எண்ணம் கொண்டும் எண்ணத்தின் உணர்வு கொண்டும் பலவாக ஓடிக் கொண்டே உள்ளது. உறக்கத் தன்மையிலும் மயக்க நிலையிலும் கூட ஓடிக் கொண்டுள்ளது.

உணர்வின் அவயங்கள் சோர்வுபட்டு உறங்கும் தருவாயில்
1.எண்ணத்தின் அலை உறக்க நிலையில் சரீரமுடன் சுவாசத்தில் மோதப் பெறும் காற்றலையின் அலைத் தன்மை
2.சுவாசம் எடுத்துக் கவன நரம்பில் மோதும் பொழுது
3.காற்றலையில் ஏற்கனவே பதிவு பெற்ற அலைத் தொடர்பின் தொடர் தன்மை
4.உடல் கூறின் அமில சமைப்பு வலுத் தன்மையின் ஈர்ப்புடன் மோதும் பொழுது உணர்வுடன் ஒத்த தன்மையும் மோதுகின்றது.

இந்த உடலிலிருந்து வெளிக் கக்கும் அமிலத் தொடர்பின் ஈர்ப்புக்கு வரும்… “காற்றலையின் சந்திப்பும்” இச்சுவாசத்தில் மோதும் பொழுது… உறக்க நிலையில் காணப்படும் கனவுகள்… வாழ்க்கைத் தொடரில் விழிப்புடன் உள்ள செயலுக்கொத்த தொடர் போன்றே நம் எண்ணத்தைச் செலுத்தாமலே காணுகின்றோம்.

இப்படிக் காணக்கூடிய கனவின் செயலும்… இஜ்ஜீவ காந்தச் சரீரத் தொடருடன் எடுக்கப்படும் அலையினால் “வலுவான சில கனவுகள்” தம் எண்ணத்தை உருவாக்கும் ஆத்மாவிலும் பதிவாகி விடுகின்றது.

நினைவின் உணர்வுடன் உள்ள பொழுது… மீண்டும் கனவில் நடந்த அந்த நிலை நம் நினைவிற்கு வருகின்றது.

ஆத்மாவின் “பதிவு” தான் எண்ணத்தின் ஓட்டம்…!

ஆத்ம இயக்கம் இச்சரீர வாழ்க்கையில் வலுக் கொள்ளும் தன்மையும்… சரீரமுடன் கூடிய ஜீவ காந்த மின் அலையின் வலுக் கொண்டுதான்… ஆத்மாவை மீண்டும் வலுவாக்க முடியும்.

முந்தைய பாடங்களில் சொன்னபடி உயிர் ஆத்மா உடல் பிம்ப சரீரத்தின் தொடரை உணர்த்தியுள்ள முறையில் “ஆத்மாவின் செயலை” உணர்ந்திருப்பீர்.

இச்சரீரக் கூறில் சேர்க்கப்பட்ட சுவையின் அமிலத்தின் வார்ப்பு ஜீவ சரீரச் செயலுக்கொப்ப…
1.ஆத்மாவின் செயல் எண்ண அலையின் மோதலைக் கொண்டு
2.எண்ணத்தின் உணர்வும்… உணர்வின் எண்ணமும்… செயல் கொள்கின்றன.
3.பலவாக ஓடும் எண்ணத்தின் ஆத்மாவின் பதிவில் உள் மனம் வெளி மனம் என்று
4.இப்படி ஒரே சமயத்தில் பல நினைவு கொண்ட செயலில் எண்ண ஓட்டம் செயல் கொள்கின்றது.

பூமி சமைப்பில் சரீரத் தொடர் வாழ்க்கையில் சாதாரணத் தொடர்பு கொண்டு நாம் பெற்ற ஒலித் தன்மைக்குகந்த எண்ணத்தைச் செயல்படுத்தி வாழும் போது என்ன நடக்கின்றது…?

நாம் பரிணாம வளர்ச்சியில் நாம் பெற்று வளர்ந்து வந்த வளர்ச்சிக்கு உரம் செலுத்தாமல்… பெற்ற வலுவைச் சரீர எண்ண ஓட்ட சமுதாய எண்ணப் பிடியுடன் செயல்படுத்தும் உணர்வினால்…
1.மீண்டும் மீண்டும் இப்பிடிப்பலையில் சிக்கி
2.வலுப் பெற்ற ஆத்ம ஒளியை மங்கவிடும் இழி நிலை தான் ஏற்படும்.

ஆகவே வாழ்க்கையில் உணர்வின் எண்ணத்தில் மோதப்படும் குண நிலையில் நாம் சிக்கக் கூடாது. மேலும் எண்ணத்தில் செயல்படும் பல நிலை கொண்ட நினைவு எண்ண ஓட்டத்திலும் சிக்கிடக் கூடாது.

சந்தர்ப்பத்தில் எண்ணத்தின் உணர்வுகள் ஈர்க்கப்பட்டு சஞ்சலப்படும் காலங்களில் எல்லாம்
1.நம் உணர்வின் எண்ணத்தை வலுவாக்கும் முறையான
2.உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு மின் காந்த ஒளி சக்தியின் உரத்தை
3.அந்த மாமகரிஷிகளின் ஒளி காந்த சக்தியை நுகர்ந்து.. சுவாசித்து.. உடலுக்குள் செலுத்தும் பொழுது
4.பலவாக ஓடும் எண்ணத்தை ஒன்றாக்கலாம்.

ஒளி நிலை பெற்ற அந்த ஒளி சக்தியை… இச்சரீர உணர்வில் எடுக்கும் பொழுது நம் எண்ணத்தின் வலுக் கூடும். ஆத்மாவின் வலுவையும் வலுவாக்க முடியும். மெய் ஞானத்தில் தொடர் வளர்ச்சி காண முடியும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

உங்கள் வாழ்க்கையில் யாராவது கேவலமாகப் பேசினால் அதை ஆழமாகப் பதிவு செய்து வைத்துக் கொள்கிறீர்கள். பதிவு செய்த பின் என்ன செய்கிறோம்…?

என்னை.. இப்படிப் பேசினான் “கேவலமாகப் பேசினான்… கேவலமாகப் பேசினான்…!” என்று இதைத் தியானம் செய்கின்றோம்.

அவர் எப்படிக் கேவலமாகப் பேசினாரோ அந்த உணர்வு நமக்குள் வந்து அவர் நம்மைக் கேவலப்படுத்திய பிற்பாடு நம் சொல் செயல் எல்லாமே கேவலமான செயல்களைச் செய்யும் செயலாக மாற்றும்.

அவன் என்னை இப்படியெல்லாம் பேசினான்.. நான் என்ன அப்படியா…? என்று அவன் சொன்ன மாதிரியே நம்மையும் பேச வைத்துவிடும்.
1.அவன் பேசினான் ஒரு தரம்…!
2.நாம கேட்டோம் பல நேரம்…!
3.அந்தப் பல உணர்வு நமக்குள் வந்துவிடுகின்றது.

அவன் நம்மைக் கேவலப்படுத்த வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அடுத்து நாம் பேசும் போதெல்லாம் நம்மையறியாமலே அதையே சொல்வோம்.

“பாருங்கள்…! என்னைப் பற்றி அவன் அப்படிப் பேசினான்… இப்படிப் பேசினான்… இகழ்ச்சியாகப் பேசினான்.. என்று அடுத்தவர்களிடம் சொல்லிக் காண்பிப்போம்.
1.அவன் எபப்டி எப்படி நம்மைத் திட்டிக் காண்பித்தானோ
2அதே மாதிரி அதையெல்லாம் நாம் அப்படியே செய்வோம்.

என்ன…! இப்படி… நீங்கள் அசிங்கமாகப் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள் என்று கேட்பார்கள்…?

என்னை அப்படியெல்லாம் பேசினான் அல்லவா…! என்று இங்கே நம்மிடம் கேட்பவர்களிடம் சொல்வீர்கள்.

அடுத்தவர்களிடம் இந்த விஷயத்தைப் பேசும் பொழுது அசிங்கமான நிலைகளைப் பேசும் உணர்வே நமக்குள் வந்து விடும்.

இன்னும் யாராவது அடுத்த ஆள் கேட்டால் நாம் மறுபடியும் அசிங்கமாகப் பேசுவோம். இது குருவாக வந்து விடுகின்றது.

எது…?

அப்போது அந்த உணர்வுகள் அசிங்கமாக வரப்போகும் போது இது குருவாக நமக்குள் வந்து அசிங்கமான செயலைச் செய்ய வைக்கும். அசிங்கமாகப் பேசச் செய்யும்.

அதே சமயத்தில் இதைப் போன்ற அசிங்கத்தை எல்லாம் துடைப்பதற்கு
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று
2.அந்த உணர்வுகளை நீங்கள் எடுத்துப் பழகிக் கொண்டீர்கள் என்றால்
3.இது குருவாக வந்து விடும்.

யாம் உங்களுக்கு உபதேச வாயிலாக உணர்த்தும் அந்த மெய் ஞானிகள் வழியில் இந்தத் தியானத்தை நீங்கள் அடிக்கடிச் செய்தீர்கள் என்றால் இது குருவாக வந்து இந்த அசிங்கத்தை எல்லாம் போக்கிவிடும்.

உதாரணமாக “உடலில் புண் வந்துவிட்டது.. ரோகம் வந்துவிட்டது…” என்று இதையெல்லாம் திரும்பத் திரும்பச் பேசிக் கொண்டு இருந்தால்
1.அதனாலேயே உடலில் கொப்புளம் வரும்
2.உடல் கொதிக்கும்… தலை வலி வரும்
3.காது குத்தும்… நெஞ்சு வலிக்கும்… வயிற்றில் வலிக்கும்.

இது எல்லாம் வரும்.

இப்படி வரப்போகும்போது வயிற்றில் வலிக்கிறது என்றால் அந்த நேரத்தில் யாராவது முன்னாடி வந்து சந்தோஷமாகப் பேசினால் எப்படி இருக்கும்…?

அவர்கள் மேலே வெறுப்பாக வந்து கொண்டு இருக்கும்.

அவர்கள் மேலே வெறுப்பாகி விட்டால் அடுத்தாற்போல் அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் வெறுப்பாகப் பேசுவோம். அப்பறம் இது குருவாக வரும்.

எது…? வெறுப்பாகப் பேசும் உணர்வு தான் உங்களுக்குக் குருவாக வரும்.

குருநாதர் இப்படி மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து “அவர்கள் நிலைமை எல்லாம் எப்படி இருக்கிறது…?” என்று பார்க்கச் செய்து என்னைக் கஷ்டப்பட வைத்தார்.
1.நீ பார்ப்பவன் உணர்வுகள் எல்லாம் உனக்குள் வந்து
2.என்ன வேலை செய்கிறது…? என்று பார்க்கச் சொன்னார்.

இப்படி அதையெல்லாம் நான்… “பார்த்துப் பார்த்துத் தெரிந்து கொண்ட பிற்பாடு தான்” உங்களிடம் சொல்கிறேன்.

நீங்கள் உட்கார்ந்து கேட்கிறீர்கள். நான் அலைந்து திரிந்து சுற்றித்தான் தெரிந்து கொண்டேன். நீங்கள் உட்கார்ந்து கொண்டே இதைத் தெரிந்து கொள்கிறீர்கள். நான் காடு மேடெல்லாம் சுற்றிக் கஷ்டப்பட்டு எனக்குள் அறிந்து கஷ்டத்தையெல்லாம் தெரிந்து வந்தேன்.

உங்களிடம் அந்த ஞானிகளின் அருள் சக்தியைக் கொடுத்து உங்கள் தீமைகளை எல்லாம் நீங்கள் நீக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்கின்றேன்.

குருநாதர் எனக்கு அப்படிக் கொடுக்கவில்லை. நான் உங்களுக்கு இப்படிக் கொடுக்கின்றேன். “இதை உதறிவிடாதீர்கள்…”

அந்த மெய் ஞானி உணர்வை உங்களுக்குள் குருவாக ஏற்று அந்த உணர்வின் தன்மை வளர்க்கும் போது அவர்கள் மெய் ஒளி பெற்றதைப் போல அதை நிச்சயம் நீங்களும் பெறுவீர்கள்.

அடுத்தவரின் கஷ்டத்தைப் பரிவுடன் கேட்போர் அனைவரும் வேதனையைத் தான் விலைக்கு வாங்குகிறார்கள்

 

மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் அடுத்தவருக்கு எல்லா உதவிகளையும் செய்வோம். உதவி செய்த பின்… கடைசியில்
1.இந்தப் பாவிப் பயலுக்கு இப்படியெல்லாம் உதவி செய்தேனே…
2.எனக்கு அவன் ஒன்றும் செய்யவில்லையே…! என்று வேதனைப்பட்டுக் கொண்டிருப்போம்.

வேதனைப்பட்டவர்களுக்கு எல்லாம் முதலில் உதவி செய்திருப்போம். கஷ்டங்களை எல்லாம் பரிவுடன் கேட்டு அவர்களிடம் இருக்கும் வேதனைகளை எல்லாம் விலைக்கு வாங்கி விடுவோம்.

வேதனையாகி நோயான பின் என்ன சொல்வோம்…?

நான் இங்கே இவ்வளவு உதவி செய்தேனே… அங்கே அவர்களுக்கு அந்த உதவி செய்தேனே…! எனக்கு இப்படி வந்துவிட்டதே…! என்ற இந்தத் துன்பப்படும் உணர்வுதான் மீண்டும் மீண்டும் வரும்.

காரணம்… உதவி செய்த பின் நாம் நினைத்தவுடன் மற்றவர்கள் வரவேண்டும் என்று எதிர்பார்ப்போம். ஆனால் அவர்கள் ஏதாவது ஜோலியாகச் செல்வார்கள்.

அன்றைக்கு நான் எப்படி எல்லாம் உதவி செய்தேன்…! இன்று நான் கூப்பிடுகிறேன்… அவர்கள் வரவில்லையே…! என்று அவர்கள் மீதே எண்ணமே இருக்கும்.

1.உதவி செய்தேன் வரவில்லையே… உதவி செய்தேன் வரவில்லையே… என்று
2.பிறரின் உணர்வைத் தான் எண்ணி வேதனையை இங்கே வளர்த்துக் கொண்டிருப்போம்.

அவர்கள் உணர்வு பூராம் இந்த உடலில் சேர்த்து நோயாகி இறந்தபின் எங்கே செல்வோம்…?

நான் அவனுக்கு உதவி தான் செய்தேன். ஆனால் அவனோ எனக்குப் பல தொல்லைகளைக் கொடுத்தான் பாவி…! என்று எண்ணி வேதனையாகி நோயாக மாறி இந்த உடலை விட்டுப் போன பிற்பாடு யாருக்கு உதவி செய்தோமோ அந்த உடலுக்குள்ளே தான் போவோம்.

இங்கே வேதனைப்பட்டு எரிச்சல் கொண்டு வெளியேறிய உயிரான்மா அந்த உடலுக்குள் போய் மனிதனாகவும் பிறப்பதில்லை.
1.அங்கே சென்று வேதனையை மீண்டும் உருவாக்கி நோயாக மாற்றி
2.அவனை வீழ்த்தத்தான் செய்யும்… குழந்தையாகப் பிறப்பதில்லை.

அந்த உடலிலும் வேதனையை அதிகமாக வளர்த்துக் கொண்டபின் உயிரான்மாவில் விஷம் அதிகமாகி விடுகின்றது.

பாலில் விஷத்தைக் கொஞ்சம் போட்டால் குடித்தால் மயக்கம் வரும். அதிகமான விஷத்தைப் போட்டு விட்டால் சுத்தமாகவே நினைவை இழக்கச் செய்துவிடும்

அது போல் கடைசியில் மனிதனுடைய நினைவுகள் எல்லாம் இழந்த பிற்பாடு எந்த அளவிற்கு விஷத்தை அதிகமாகச் சேர்த்துக் கொண்டோமோ அதற்குத்தக்க விஷம் கொண்ட உயிரினமாகப் பிறக்கச் செய்யும் நம் உயிர்.

புழுவிலிருந்து மிருகமாக வரும் வரையிலும் அவைகளின் உடலில் விஷம் அதிகமாக இருக்கும். பூனை விஷமான உயிரினத்தை அடித்துச் சாப்பிடுகிறது. அது போல் மற்ற உயிரினங்களும் விஷத்தைத் தாராளமாக உட்கொள்கிறது. அந்த உடலுக்குள் ஒன்றும் செய்வதில்லை.

ஆனால் சாதாரண ஒரு பல்லியின் எச்சம் நம் மீது பட்டாலே உடலில் கொப்புளம் ஆகிவிடும். விஷம் பட்டவுடனே நம் உடலில் இத்தனை நிலையும் ஏற்படுகிறது.

நாம் விஷத்தை நீக்கும் உடலாகப் பெற்றிருந்தாலும் விஷமான உணர்வு நமக்குள் கலந்து விட்டால் நம்மைச் செயலற்றதாக ஆக்கி விடுகிறது.

ஆனால் மற்ற உயிரினங்கள் விஷத்தைத் தனக்கு உணவாக ஏற்றுக் கொண்டால் உடலிலே அது வலுவின் தன்மையாகக் கொண்டு வருகின்றது. அந்த விஷம் அதை ஒன்றும் செய்வதில்லை

புழுவிலிருந்து மற்ற எல்லா உயிரினங்களுக்கும் விஷம் உண்டு. தேளுக்கு ஒரு விஷம் பாம்புக்கு ஒரு விஷம் கட்டுவிரியனுக்கு ஒரு விஷம் புலிக்கு ஒரு விஷம் பூனைக்கு ஒரு விஷம் நாய்க்கு ஒரு விஷம் இப்படி எல்லாவற்றிலும் விஷத்தின் வலிமை உண்டு.

ஆனால் மனிதன் எடுத்துக் கொண்ட குணம் அடிக்கடி யாரிடமாவது சள்… சள்… சள்… என்று பேசும் நிலைகள் வந்து விட்டால்
1.“என்னை இப்படிச் செய்து கொண்டே இருக்கின்றான்…” என்று சள்..சள்…சள்… என்று சொல்லச் சொல்ல
2.யாரைக் கண்டாலும் வெறுத்துப் பேசச் செய்யும்.

இப்படிப் பேசி வெறுக்கும் நிலைகள் வளர்ந்தால் அந்த நஞ்சின் தன்மை உடலிலே விளைந்த பின் உடலை விட்டுச் சென்றபின் எங்கே செல்வோம்…?

1.நாயிடம் இருக்கும் விஷமும் இந்த உயிராத்மாவில் வளர்த்துக் கொண்டே விஷமும் ஒன்றாகி
2.உயிர் நம்மை அடுத்து நாயாகப் பிறக்க வைத்துவிடும்.

இது எல்லாம் இயற்கையின் நியதிகள். நாம் நினைக்கின்றோம் ஒன்றுமே செய்யவில்லை என்று…!

ஆனால் உயிரின் வேலை… நாம் சுவாசித்து எடுத்ததை எல்லாம் உடலாக உருவாக்கி உடலில் விளைந்த சத்தை உயிராத்மாவாக மாற்றி அதிலே எது வலுவோ அதற்குத் தக்க அடுத்த உடலுக்குள் அழைத்துச் சென்று அந்தந்த உடலாக மாற்றிவிடும்.

மனிதனாக இன்று இருக்கும் நாம் அடுத்து எங்கே செல்ல வேண்டும்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

“எங்கே சென்றாலும்” அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருளாற்றலை எளிதில் பெறலாம்

 

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் “வான இயல் புவிஇயல் உயிரியல்” அனைத்தையும் அறிந்தவன்.

அகஸ்தியன் தனக்குள் பேரண்ட இயக்க உணர்வின் தன்மையை எப்படிக் கற்றான்…? இந்த உணர்வின் ஈர்ப்புத் தன்மை அவன் உடலிலே எப்படி வந்தது…? என்ற நிலையை எல்லோரும் அறிய முடியும்.

1.நட்சத்திரங்களின் இயக்கங்களையும் கோள்களின் இயக்கங்களையும் தன்னில் அறிந்தவன்
2.வான இயல் தத்துவம் புவிஇயலின் நிலைகளாக எவ்வாறு மாறுகின்றது…? என்பதையும் அறிந்து கொண்டான்.
3.விண்ணுலக ஆற்றல் அது புவியியலுக்குள் வந்து அது கலக்கப்படும் பொழுது
4.“தாவர இனங்களாக…” புவியியலாக எப்படி மாறுகின்றது…? என்பதையும் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.

இவ்வாறு அவன் தனக்குள் அறிந்த “உணர்வின் எண்ண அலைகளை” இன்று நீங்களும் பார்க்கலாம்… உணர முடியும்.

ஏனென்றால் இதெல்லாம் ஆரம்பக் காலங்களில் அவருக்குள் விளைந்த உணர்வின் தன்மையை அது வெளியில் படர்ந்திருப்பதை நாம் நுகர முடியும்.

இன்று நாம் ரேடியோக்களிலும் டி.விகளிலும் நாம் எப்படி ஒலி ஒளியைக் காணுகின்றோம்…?

காந்த ஈர்ப்பு கொண்ட நாடாக்களில் இயந்திரத்தின் மூலம் ஒலி ஒளியாக அது பதிவு செய்து அதற்குண்டான சாதனங்களை வைத்து ஒலி அலைகளாக அனுப்பப்படும் பொழுது சூரியனின் காந்தப் புலன் கவர்ந்து அலைகளாகப் படர்கின்றது.

பின்… நாம் அதே அலைவரிசையில் வைக்கப்படும் பொழுது அதனின் தொடர் கொண்டு இதைக் கவர்ந்து உருவங்களைப் பார்க்கின்றோம். ரேடியோ டி.விக்களில் பாடல்களை நாம் கேட்கின்றோம். பல உருவங்களையும் நாம் காணுகின்றோம்.

இதைப் போலத்தான் அன்று வாழ்ந்த அந்த மெய்ஞானிகள் வெளிப்படுத்திய உணர்வுகள் இன்றும் இங்கே படர்ந்துள்ளது. சூரியனின் காந்தப் புலனறிவுகள் அதைக் கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது.

நாம் அதைக் கவரும் தன்மை வரப்படும் பொழுது அந்த அருள் ஞானியின் உணர்வுகளைப் பார்க்கும் திறனும் நமக்குள் வருகின்றது.

1.நமக்குள் “அருள் ஞானத்தின் அடர்த்தியின் வளர்ச்சி…” எவ்வளவு வருகின்றதோ
2.அதன் தொடர் கொண்டு இந்த உணர்வின் வலிமை கொண்டு
3.இந்தக் “காற்றிலே மிதந்திருக்கக்கூடிய… மெய் ஞானிகளின் உணர்வலைகள” நாம் அனைவருமே எளிதில் பெற முடியும்.

நீங்கள் அந்த மெய் ஞானிகளின் ஆற்றல்களைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்வது.

ஏனென்றால்… ஒவ்வொரு தன்மையும் நமக்குள் எது பதிவாகின்றதோ அந்தப் பதிவின் தன்மை எண்ணங்கள் வரப்படும் பொழுதுதான் அதை நுகரும் ஆற்றல் வருகின்றது.

“ஒருவன் தீமை செய்தான்” என்று நாம் பதிவு செய்து கொண்டால் நம் உடல் சோர்வடையப்படும் பொழுது அந்தத் தீமை செய்தோனின் நினைவு வருகின்றது.

அப்பொழுது அவனை எண்ணப்படும் பொழுது அந்த உணர்வுகள் வந்து நம்மையறியாமலே நம் உடலுக்குள் நடுக்கமும் பல தீமைகளும் உருவாகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீண்டிட வேண்டும்.

அதைப் போன்றுதான் அகஸ்திய மாமகரிஷியைப் பற்றி உங்களுக்குள் பதிவாக்குகின்றோம். உங்களுக்குள் பதிவாக்கிய இந்த நினைவு கொண்டு நீங்கள் எண்ணினால் “உங்கள் நினைவாற்றல்” அந்த அகஸ்தியன் பால் செல்லும்.

அதன் மூலம் அகஸ்தியர் தனக்குள் கண்டுணர்ந்த உணர்வுகளையும் விண்ணை நோக்கி எடுத்த அந்த துருவத்தின் ஆற்றலையும் நீங்கள் பெற முடியும்.

அகஸ்தியன் துருவ மகரிஷியான பின் அவரில் விளைந்த உணர்வுகளும் இங்கே பரவியுள்ளதை
1.“இதை வரிசைப்படுத்தி” உங்களில் இதை நுகரும் ஆற்றல் பெறச் செய்வதற்குத்தான் இதைச் சொல்வது.
2.பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியர் “அவரின் பாதம் பட்ட இடங்களில்… அவரின் ஆற்றல்கள்… இங்கே பதிவாகியுள்ளது”
3.அவரின் ஈர்ப்பு வட்டத்திற்குள் அவருடைய அருள் உணர்வுகள் இங்கே சுழன்று கொண்டுள்ளது.

“அதைப் பெற வேண்டும்” என்பதற்குத்தான் சிறுகச் சிறுக உங்களின் நினைவாற்றலை அகஸ்தியர் வாழ்ந்த காலங்களுக்குக் கொண்டு செல்கின்றோம்.

அதன் மூலம் அவர் பெற்ற ஆற்றல்மிக்க உணர்வுகளைப் பதிவாக்கிக் கொண்டிருக்கின்றோம். அந்தப் பதிவின் துணை கொண்டு அவர் ஆற்றலைப் பெறச் செய்கின்றோம்.

இப்பொழுது இதைப் பதிவாக்கும் பொழுது உங்களின் நினைவின் ஆற்றல் அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்திகளைப் பருகும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

இந்தத் தகுதி பெற்றுவிட்டால்…
1.நீங்கள் “எங்கே சென்றாலும்” அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருளாற்றலை எளிதில் பெறலாம்
2.பெற்று அந்த அகஸ்தியனைப் போன்று உலகைக் காக்கும் மெய் ஞானியாக அருள் மகரிஷியாக
3.விண்ணிலே என்றுமே அழியா ஒளிச் சரீரம் பெற்று ஏகாந்தமாக வாழலாம்.

மண்ணிலே வளரும் வைரமே மங்கா ஒளி நிலை பெறும்போது உயிராத்மாவை ஒளியாக்க முடியாதா…? – ஈஸ்வரபட்டர்

 

காட்சி:
எண்ணெயை ஊற்றி விளக்கு எரிகின்றது… மெழுகுவர்த்தி எரிகின்றது… தீவட்டி எரிகின்றது… மின்சார ஒளி பல்புகளும் எரிகின்றன. இதைப் போன்றே காட்சியில் ஒவ்வொரு எரிக்கப்பட்டு ஒளி தரும் சாதனமும் தெரிகின்றது.

சூரியனும் நட்சத்திர மண்டலங்களும்… பூமியின் ஒளியும்… வைரக் கற்களின் ஒளித் தன்மையும்… மாணிக்கக் கல்லின் ஒளியும்… சிறு மின் மினிப் பூச்சியின் ஒளியும்… வரிசையாக இன்னும் பலவும் காட்சியில் தெரிகின்றன.

விளக்கம்:
செயற்கையில் எரிக்கப்படும் பொருள் ஒவ்வொன்றுமே நம் தேவையின் பலனுக்குகந்த ஒளித் தன்மை பெற அதற்குகந்த பொருளைச் செலுத்தித் தொடர்ந்து ஒளியைக் காண்கின்றோம்.

பூமியும் சூரியனும் மற்றக் கோளங்கள் யாவையும் தன்னைத் தானே சுழன்று ஓடும் ஓட்டத்தில் மற்றக் கோளங்களின் தொடர்பைக் கொண்டு தன் சுழற்சி ஓட்டத்தில் ஒளியை வெளிப்படுத்துகின்றது. தன்னையும் ஒளியாக்கி பிறவற்றையும் ஒளிப்படுத்துகின்றது.

பூமிக்கு பூமியைக் காட்டிலும் சக்தி வாய்ந்த சூரியனின் வளர்ச்சித் தன்மையின் குழந்தையாய்… சூரிய ஈர்ப்புப் பிடியில் தொடர் கொள்ளும் ஓட்டத்தில் இரவும் பகலும் மாறி மாறி வருகிறது.

சம நிலை வெளிச்சமும் சம நிலை இருளும் கொண்டு பூமி சுழன்று கொண்டே ஓடினாலும் சூரியனின் சந்திப்பு ஏற்படும் இடத்தில் மட்டும் வெளிச்சம் கொண்டு பூமியின் இயக்கம் உள்ளது.

வளர்ச்சியின் வளர் நிலை கொண்ட பூமியைப் போன்றுதான் சூரியக் குடும்பங்களில் ஒவ்வொரு மண்டலமுமே ஒளி நிலை கொள்ளுகின்றது. ஆனால் சூரியனுக்குப் பகல் இரவு என்ற இருள் தன்மை குறைவாக உள்ளது சூரிய பூமியில்.

சூரியனுக்கு அதன் வளர்ப்பு மண்டலங்களின் (மற்ற பிரபஞ்சங்கள்) அமைப்புத் தன்மையினால்… வளர்ந்த பெரிய கோளமாய் வளர்ச்சியுற்றுச் செயலுறும் ஈர்ப்புத் தொடரில்…
1.சூரியனுக்கு மேல் வளர்ந்த சூரியக் குடும்பமில்லா இரண்டு கோளங்களின் எதிர் எதிர் தன்மையினால்
2.மற்றக் கோளங்களுக்கில்லா ஒளித் தன்மையும் உயர் வளர்ப்பு செயல் தன்மையும் நம்மை வளர்த்த சூரியனுக்கு உண்டு.
3.அண்ட சராசரங்களில் சூரியனை ஒத்த பெரிய கோளங்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும்
4.நம் சூரிய வளர்ப்பின் வளர் ஞான எண்ணச் செயல் பகுத்தறியும் சரீர உருநிலை பெற்ற
5.ஜீவத்தன்மை கொண்ட வளர்ச கதியின் சூரிய சக்தியின் நிலை ஒத்தவை சில தான்.

இப்பூமியில் மண் வளத்தில் வளரும் வைரத்தின் ஜொலிப்பும்… மாணிக்கமும்… இன்னும் ஒளி நிலை பெற்ற கற்கள் எத்தனையோ…
1.மண்ணின் சத்தை எடுத்து ஒளியின் மங்காத நிலை பெற்று
2.ஒளி வீசும் அத்தன்மையின் முதிர்வைப் பூமியின் வளர்ப்பே வளர்க்கும் பொழுது
3.எண்ணத்தின் பகுத்தறிவைக் கொண்டு ஒளி பாய்ச்சி ஒளி நிலை கண்டு உண்மை உணரும் வழி நிலையில்
4.எதிர்படும் பிம்பத்தைப் படமாக்கிக் காணும் நாம்
5.எண்ணத்தின் பகுத்தறிவின் ஞானத்தால் ஞான ஒளியின் கூர்மையைக் கொண்டு
6.அனைத்தையும் அறிந்து பார்த்து செயல்படுத்தும் ஒளி ஞானம் கொண்டு
7.ஒளியின் ஒளி வித்தின் வளர் ஞானத்தின் சித்து நிலை பெற்று
8.சிவசக்தி என்ற வளர்ப்பின் வளர்ப்பை என்றுமே மங்கா ஒளி நிலைத் தன்மையால் வளர்ச்சிப்படுத்தலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

பரமபத விளையாட்டின் உட்பொருள்
நாம் எல்லோருமே நல்ல குணங்களைக் கொண்டவர்கள் தான்.

வைகுண்ட ஏகாதசி அன்று ஆலயங்களில் சொர்க்கவாசலைத் திறக்கும் பொழுது “எப்படி எண்ண வேண்டும்..,? என்று சொல்லியிருந்தாலும் சொர்க்கவாசலைத் திறந்த பின் அந்த “ஆண்டவன்.., அருள் கொடுப்பான்” என்ற ஏக்கத்தில் தான் செல்கின்றார்கள்.

ஒருவரை ஒருவர் இடித்து முண்டியடித்துக் கொண்டு சென்று அங்கே வரம் கேட்கச் செல்கின்றனர்.

1.ஆனால் அப்பொழுது வெறுப்பு உணர்வு அங்கே தோன்றப்பட்டு
2.நரகலோகத்திற்குத்தான் போகச் சொல்லுமே தவிர சொர்க்கவாசல் என்று போக முடியாது.

நல்ல குணங்கள் காக்கப்படவேண்டும் என்றால் அங்கே முதலில் முந்திச் செல்வோருக்கு அருள் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் பேரின்பப் பெரு வாழ்வு வாழ வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வுகளை எடுத்து விட்டால் நமக்குள் “பகைமை உணர்வு புகாது…” அருள் ஒளியின் உணர்வை வளர்த்துச் சொர்க்கலோகம் செல்லும் பாதையாக இதை அமைத்துக் கொடுக்கும் நம் உயிர்.

ஆனால் அப்படி யாரும் செல்வதில்லை. கோவிலில் சென்று பாருங்கள்.

இரவெல்லாம் முழித்திருப்பதற்காக பரமபதத்தைக் கொடுத்து தாயக் கட்டையை உருட்டச் செய்து விளையாடுவார்கள்.

தாயத்தைப் போட்டுச் சிறுகச் சிறுக மேலே ஏறும் பொழுது தாயத்தில் ஒரு எண் அதிகமாக விழுந்து விட்டால் ஏணிப்படி வரும். “சர்..ர்ர்..” என்று மேலே போகும்.

அடுத்து தாயக் கட்டையில் எண் தவறி விழுந்து விட்டால் பாம்பின் வாயில் சிக்க நேர்ந்தால் “சர்..ர்ர்..” என்று கீழே இறக்கிவிடும்.

1.இந்த வாழ்க்கையின் நிமித்தம் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நம்முடைய எண்ண ஆசைகள் எப்படி மேலே செல்கிறது என்றும்
2.அடுத்த நிமிடம் நம்மை எப்படி உருக்குலையச் செய்கின்றது என்றும் காட்டப்படுகிறது.

பரமபதம் அடையும் பருவம் (பக்கத்தில்) வரும் போது பெரிய பாம்பே இருக்கும்.

1.நான் இத்தனையும் கடந்து… “வந்துவிட்டேன்…” என்று “வெற்றி நிலையைக் கொண்டாடினாலும்
2.அந்தப் பாம்பிடத்தில் இந்தக் காய் வந்துவிட்டால் நேராகப் “பன்றி உடலுக்கே…” கொண்டு வந்து நிறுத்தும்.

பரமபத விளையாட்டில் பார்க்கலாம்.

மனிதன் எப்படித் தெளிந்திட வேண்டும் என்றும் அக்காலங்களில் இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்து “மனிதன் வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும்…? என்ற நிலையைக் காட்டியுள்ளார்கள்.

ஆகவே நமக்குள் வரும் “தீமைகளை அகற்றத் தவறினால்” விஷமான உணர்வுகள் உடலுக்குள் விளைந்து சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப மறுபடியும் மனிதனல்லாத உடலைப் பெறச் செய்துவிடும் நம் உயிர்.

1.பின் பன்றி தன் உடலில் எப்படித் தீமைகளைப் பிளந்ததோ
2.மறுபடியும் தீமைகளைப் பிளந்து தான் நாம் மனிதனாக வர முடியும்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் “பரமபதம்’ என்ற நிலையில் “என்றுமே…” அழியா உடலைப் பெறத் தகுதி பெற்ற மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்தல் வேண்டும்.

கல்கியின் கையிலே வாள் எதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது…?

 

விஞ்ஞான உலகில் உருவான நச்சுத் தன்மைகள் மனிதனுடைய சிந்தனைகள் முழுமையாக அழிந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியினை எடுத்து நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்.

1.உலக நடப்புகளைத் தெரிந்து கொள்ளப் பத்திரிக்கையையோ டி.வியையோ பார்த்தாலும் போர் முறை தான்
2.வீட்டிலே பிள்ளைகள் சொன்னபடி கேட்கவில்லை என்றால் போர் முறை தான்
3.வியாபாரம் செய்யும் இடத்திலும் கொடுக்கல் வாங்கலில் போர் நடக்கின்றது

இப்படி ஒவ்வொரு இடத்திலும் சங்கடம் சலிப்பு கோபம் ஆத்திரம் என்று நாம் எடுத்துக் கொள்ளும் போது அங்கே போர் நடக்கின்றது. கடைசியில் ஒன்றும் நடக்கவில்லை என்றால் வேதனை வருகிறது.

அந்த வேதனையான உணர்வுகளுக்கும் உடல் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்கும் போர் முறையாகி அம்மா… அப்பா… என்று மேல் வலி.. இடுப்பு வலி.. கை கால் வலி… என்று உடலுக்குள் மகாபாரதப் போர் நடக்கின்றது.

உடலுக்குள் நடக்கும் இத்தகைய போரிலிருந்து மீளும் நிலையில்லாது இருக்கும் இதற்கு மாற்றாக நாம் குருக்ஷேத்திரப் போரை நடத்தியே தீர வேண்டும்.

உயிர் தான் நம்மை மனிதனாக உருவாக்கி இருக்கிறது. உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் உயிரே குருவாகவும் இருக்கின்றது. ஆகவே
1.புருவ மத்தியில் உயிரான குரு இருக்கும் அந்தச் க்ஷேத்திரத்தில் “குருஷேத்திரப் போராக…”
2.அந்தக் குருவின் (உயிரின்) துணை கொண்டு மெய் ஒளியை நமக்குள் சேர்த்து
3.நமக்குள் இருள் சூழும் நிலையிலிருந்து அந்தப் போரிலே வென்று
4.குருவுடன் ஒன்றி… உயிரைப் போன்று ஒளியாக மாற்றி
5.மெய் ஞானிகள் சென்ற அருள் வழிகளில் நாம் செல்ல வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிப்பது.

குருசேத்திரப் போரை நாம் நடத்த வேண்டும். அந்த பழக்கம் வர வேண்டும். உயிர் குருவை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று நமக்குள் வந்த வெறுப்பு கோபம் ஆத்திரம் இவைகளை அகற்றிட வேண்டும்.

காரணம்… தான் வாழ வேண்டும் என்ற ஆசையில் இரக்கமற்ற நிலையில் ஒருத்தரை வீழ்த்திடும் அந்த உணர்வின் சக்தியை நமக்குள் சுவாசிக்கப்படும் பொழுது அது நல்ல உணர்வை வீழ்த்தும் தன்மையாக வருகிறது.

அது போன்ற நிலையை அகற்ற குருவிடமே வேண்டி அந்த மெய் வழி சென்ற அந்த மெய் ஞானியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று அடிக்கடி ஏங்கிச் சுவாசிக்க வேண்டும்.

அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் பெறுவோம் என்றால் இந்த குருக்ஷேத்திரப் போரில் விஞ்ஞானத்தை வென்று நாம் அந்த மெய் ஞானிகள் காட்டிய வழியில் விண் செல்ல முடியும்.

நாம் எல்லாம் சாதாரணமான மக்கள் என்று எண்ண வேண்டாம்.

இந்தப் பூமியில் விஞ்ஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட நச்சுத் தன்மைகளை வீழ்த்தி மெய் ஞானிகளின் அருள் வித்துக்கள் உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும் என்ற ஆசையிலே தான் ஆற்றல்மிக்க வித்தை உங்களுக்குள் விளையச் செய்து கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).

வயலைப் பண்டுத்தியது போல் உங்கள் மனதைப் பண்படுத்தி மெய் ஞானிகளின் ஆற்றல் மிக்க சக்தியின் வித்தை உங்களுக்குள் விதைக்கச் செய்கின்றேன். அந்த அருள் வித்தை நீங்கள் வளர்க்க வேண்டும்.

யாம் பதிவு செய்த ஞான வித்தை வளர்க்க
1.இடைவிடாது குரு அருளை நீங்கள் பெற்று
2.ஒவ்வொரு நிமிடமும் உயிருடன் ஒன்றி… அவனுடன் இணைந்து…
3.அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அவனிடமே வேண்டி
4.உயிர் குருவின் துணை கொண்டு விஞ்ஞான விஷத்தின் தன்மை தனக்குள் இணையாது அதை வீழ்த்தி
5.மெய் வழியில் மெய் ஒளியாகப் பெற்று… சப்தரிஷி மண்டலங்களில் இணைந்து
6.கல்கியின் அவதாரமாகப் பறக்கும் நிலை பெற வேண்டும்.

குதிரையைப் போட்டுக் கையிலே வாளைப் போட்டுக் காட்டி இருப்பார்கள். வாளைப் போட்டுக் காட்டியதன் உட்பொருள் என்ன..?

தானியங்கள் மற்ற காய்கறிகளை எல்லாம் வேக வைத்து அதிலிருந்து வரக் கூடிய காரலை நீக்கிவிட்டுப் பக்குவப்படுத்திச் சமைத்துச் சாப்பிடுகின்றோம்.

சுவையான உணவை உட்கொண்டாலும் நம் உடல் அதில் உள்ள விஷத்தைக் கழிவாக மாற்றிவிட்டு நல்ல உணர்வின் சத்தை உடலாக மாற்றுகிறது. ஆறாவது அறிவின் செயல் இது.

அந்த நஞ்சுகளை அகற்றுவது போன்றுதான் விஞ்ஞான அறிவினால் வரும் விஷத்தன்மை உடலுக்குள் போவதற்கு முன் உயிரான ஈசனிடம் வேண்டி குருக்ஷேத்திரப் போரை நடத்த வேண்டும்.

1.எப்போது இந்த உடலை விட்டுச் சென்றாலும்
2.இன்னொரு ஆத்மா நம்மைக் கவர்ந்து இழுத்து விடாதபடி அதை வீழ்த்தி (அதற்குத் தான் வாள்)
3.மெய் ஒளியின் தன்மையை விண்ணை நோக்கி அங்கே பறந்து செல்ல வேண்டும்.

பேரண்டத்தில் எண்ணிலடங்காத சூரிய குடும்பங்கள் ஒவ்வொன்றும் அது பல பல நச்சுத் தன்மைகளை உமிழ்த்திக் கொண்டிருக்கின்றது. நஞ்சுகள் வந்தாலும் நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் அதைத் தன்னுடைய கதிர்வீச்சால் மாய்த்து இங்கே நல்லதாக மாற்றிக் கொடுக்கின்றது.

அதைப்போல
1.நம் உயிராத்மாவின் நிலைகள் அந்த நச்சுத் தன்மைகளை எல்லாம் மாற்றும் ஆற்றலாக
2.தனக்கு தானே அந்த நச்சுத் தன்மையை மாற்றிடும் சக்தியாக
3.உணவுகளைச் சுவைமிக்கதாக ஆக்கி இந்த உடலில் எப்படி மகிழ்ச்சியாகின்றோமோ
4.அதைப் போல ஒளிச் சரீரத்தில் மகிழ்ச்சியாக என்றும் பதினாறாக நீடித்த நாள் வாழ முடியும்

ஆனால் இந்த உடலின் தன்மை “அற்ப நிலை தான்…!”

இருந்தாலும் இந்த உடலில் இருக்கும் போது தான் அந்தத் தகுதியை வளர்க்க முடியும்.

துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் உணர்வலைகளைச் சுவாசித்து… சுவாசித்து…
1.நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி
2.மெய் ஒளியின் தன்மை கொண்டு பேரண்டத்தில் விண்ணிலே சுழன்று
3.தீயதை வீழ்த்தி உணர்வின் ஒளிச் சுடராக மாற்றி நாம் பேரானந்த நிலை பெறலாம்.

ஆணாயும் பெண்ணாயும் நின்றான் அவன்…! – ஈஸ்வரபட்டர்

இச்சரீரக் கோளம் ஆணாயும் பெண்ணாயும் சிவசக்தித் தன்மை கொண்டது.

எத்தன்மையின் செயல் உடல் உருவம் பெறவும்… அதிலே சேர்க்கையின் அமில அணுக்கள் ஜீவன் பெற்று… உருவ உருப்பெறும் தன்மையில் எதன் நிலை அதிகமாக உருநிலை கொள்கின்றதோ…. அத்தன்மையின் உருவக ஜெனிப்பு ஆணாகவும்… பெண்ணாகவும்… உரு நிலை கொள்கின்றது.

ஆண் இன அமிலச் சேர்க்கையும்… பெண் இன அமிலச் சேர்க்கையும்…
1.வார்ப்பகத்தில் இரண்டு நிலை கொண்ட மோதல் நிலை கூடும் பொழுதுதான்
2.ஜீவ சக்தி சேர்ந்தவுடன் “உருவ நிலை” ஒன்று உருவாகின்றது.

பெண் சரீரத்தில் ஆணின் அமிலத் தன்மையின் செயல் கொண்டுதான் பெண் உருவ உடலும் சுவாசத்தின் அமில மோதலின் ஜீவத்தன்மை பெண்ணாகி… செயல்நிலை கொள்ளும் சிவ சக்தியாய் ஒவ்வொரு உடல் தன்மையும் உருவ நிலை ஜீவிதம் பெறுகின்றது.

ஆண் பெண் அமிலச் சேர்க்கையின் ஜீவ சக்தியில் சேர்க்கப்படும் அமிலக் கூட்டின் விகிதத்தன்மையில் கூடப் பெறும்
1.ஆண் அமில… பெண் அமிலச் சேர்க்கை… விகிதத்தின் வீரியத் தன்மை கொண்டு
2.கூடும் தன்மையில் எது அதிகமாக உள்ளதோ அதற்குகந்த உருவ உடல் தன்மை கொள்கின்றது.

ஆணாயும் பெண்ணாயும் நின்றான் அவன்…! என்று உணர்த்திய உண்மை நிலை தான் இது.

மூலத்தின்… ஆதி மூல ஆதிசக்தியின் படைப்பு அனைத்தும்… மூலம் சிவனாகி… உருவாகும் உருநிலை சக்தியாகி… ஜெனிப்புத் தொடர் உருவாகும் திட உருவத் தொடரில்… ஆவியாகி… அமிலமாகி… தொடர் பெறும் தொடரில்
1.ஆண் பெண் இனச் சேர்க்கை மாற்றச் செயலில்
2.ஆண் பெண் எல்லாமே ஒன்றுதான்…!

இரண்டு தன்மையின் அமிலம்… ஈர்ப்பு வளர்ப்பின் உயிரணு… இவற்றில் ஆண் பெண் சேர்க்கையின் உயிரணு “ஆதி சக்தியின் தெய்வமாகின்றது…” உயிரணு யாவையுமே படைப்பின் படைப்புத் தெய்வம் தான்.

படைப்பின் படைக்கப் பெற்ற தொடர் நிலை… அது அது சேர்க்கப்படும் செயல் தன்மை தான் அவரவர்களுக்குச் சொந்தமாகின்றது.

உயிரின உயிரணுத் தன்மையில் ஆண் பெண் இன “வேறுபாடில்லை…”

சேர்க்கப்படும் அமிலக் கூறின் ஆத்ம பிம்பம் தான் இனத் தன்மையின் (அமிலத் தன்மை) சேர்க்கப்படும் விகித நிலைக்கொப்ப ஆண் பெண் திடச் சரீர உரு நிலை அமைகின்றது.

மனிதனுக்கு மட்டுமல்லாமல் உருவாகும் உருவ நிலை அனைத்திற்குமே… இதன் தொடர்ச்சி செயலில் தான் அண்ட சராசர கோளங்களும் அவற்றின் வளர்ப்பு வளர்ச்சி நிலை ஒவ்வொன்றுமே… இத் தொடரில் வடிவம் பெறுகிறது.

அவ்வாறு வடிவம் பெற்று வளரும் தன்மையில்…
1.ஆதிசக்தியின் பொதுத் தன்மை கொண்ட
2.உயிரணுவின்… வலுத் தன்மையின்… ஒளித் தன்மை மங்காத் தன்மை கொண்டு
3.ஒளியின் ஒளி வீரியம் கொண்ட பிரகாசத்தின் வளர்ச்சியை…
4.மனித எண்ணத்தின் வளர்ச்சியின் பகுத்தறிவால் (தான்) வளர்க்க முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

முந்தைய காலங்களில் வாழ்ந்த பெரியவர்களைப் பார்க்கலாம். ஒரு பெரியவர் அதாவது கணவர் இறந்து விட்டார் என்றால் அவரின் மனைவியும் சேர்ந்து இறந்துவிடும்.

மனைவி இறந்து விட்டால் என்றால் அதே மூச்சில் இரண்டு பேரும் இறந்துவிடுவார். இப்பொழுது அந்த மாதிரி எங்கே இருக்கின்றார்கள்..?

ஒன்று இரண்டு பார்ப்பதே மிகவும் அபூர்வமாக இருக்கின்றது. ஏனென்றால் அவர்கள் ஒன்றிய உணர்வுகள் கொண்டு வாழ்ந்தவர்கள்.

அவர்கள் உணர்வுகள் ஒளியான பின் சொல்வார்கள்.

என்னுடைய “அந்திமக் காலம்… வந்துவிட்டது…” நான் இத்தனை நாளில் உடலை விட்டுப் போகின்றேன். என்னைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். நீங்கள் எல்லாம் நன்றாக இருங்கள்.

இறப்பதற்கு இரண்டு நாள் முன்பு இவ்வாறெல்லாம் சொல்வார்கள்.

காரணம் என்னவென்றால் அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அவர்கள் உடலை விட்டுப் பிரியும் நேரம் எதன் உணர்வைப் பெற்றனரோ… அதை “அறியும் தன்மை” அவர்களுக்குள் வருகின்றது.

ஆக தெரிந்தோ தெரியாமலோ அதிகாலையில் அந்தத் துருவ தியான நேரங்களில் (பிரம்ம முகூர்த்தம்) அவர்கள் “தியானம் செய்து… பழகியவர்கள்…”

பண்டைய காலங்களில் இது இருந்தது. காலத்தால் இன்று அது மறைந்துவிட்டது. ஆகவே இன்று வாழும் கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.

நாம் இந்த உடலில் வாழும் காலத்தில் நோயாளியைப் பற்றிக் கேட்கும் பொழுது சிவ தனுசு. உடலில் விளைந்த உணர்வு இன்னொரு மனிதனை வீழ்த்துகின்றது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத் தீமைகளை மாற்றி மாற்றி நம் உணர்வின் தன்மைகளை ஒளியாக மாற்றி மாற்றி இதைப் பெறச் செய்யப்படும் பொழுது நாம் உடலை விட்டுச் சென்றபின் “தனுசு கோடி…,”

இருளை நீக்கிய விஷ்ணு தனுசு என்ற அந்த உணர்வை நாம் எடுத்து இந்த “உயிருடன் ஒன்றி உணர்ச்சிகளைப் பாய்ச்சுவோம்” என்றால் தீமைகளை மாற்றிவிடும்.

ஆகவே… இதைப் போன்று நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் தீமை என்று கண்ட பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சேர்த்து ஒளியின் தன்மையாக மாற்றிட வேண்டும்.

செடியில் பிஞ்சு காயாகிக் கனி வித்தாவது போல் உயிரைப் போன்று ஒளியின் வித்தாக நாம் ஆக வேண்டும்

 

உதாரணமாக ஒரு மாமரத்தின் வித்தை நிலத்தில் ஊன்றினால் அந்த வித்திற்குள் மறைந்த சத்துக்கள் அனைத்தும் பூமியின் துடிப்பின் நிலைகள் கொண்டு பூமியின் காந்த ஈர்ப்பின் துணை கொண்டு முளைக்கத் தொடங்குகிறது.

அந்த வித்திற்குள் எடுத்துக் கொண்ட காந்த உணர்வுகள் அது மீண்டும் ஜீவன் பெற்று… காற்றிலே சூரியனின் காந்த சக்தியால் தாய் மரத்தின் உணர்வலைகள் கவர்ந்து அலைகளாகச் சுழன்று கொண்டிருப்பதை இழுத்துக் கவர்ந்து செடியாக அது வளரச் செய்கின்றது.

ஆனால் அந்த வித்திற்குள் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் அது ஈர்த்துக் கவரும் பொழுது தழைகளாகச் செடியாக மாறுகின்றது.

1.பின் தன் உணர்வின் சத்தை அது வளர்த்து மரமாகிப் பிஞ்சு ஆகும் பொழுது துவர்க்கின்றது.
2.காயாகும் பொழுது புளிக்கின்றது
3.புளித்தபின் இனிக்கின்றது
4.இனிக்கும் போது வித்தின் சத்து அனைத்தும் அந்த வித்திற்குள் ஒடுங்குகின்றது.
5.அந்தப் பழம் சுவையாக இருக்கின்றது.

ஒரு மாங்கனி எப்படித் தன் உணர்வின் சத்தை அது வித்தாக மாற்றியதோ இதைப்போல ஜீவராசிகளின் “உயிரின் தன்மை என்பது ஒரு வித்து…”

ஆனால் மனிதனாக வளர்ச்சி பெற்று வரும் பொழுது காயிலிருந்து கனியாகும் பருவம். மனித உடலில் இருக்கக்கூடிய அனைத்தும் கனியின் தன்மை அடைந்து விட்டால்
1.இந்த உயிருடன் ஒன்றிய உணர்வின் சத்து
2.மாவித்திற்குள் எப்படி இந்த உணர்வின் தன்மை அடைந்ததோ
3.இதைப்போல நம் உயிர் எப்படி ஒளியானதோ இந்த உணர்வின் தன்மை அனைத்தும் மாற்றி
4.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக மாறி விண் செல்ல முடியும்.

ஒளியான பின் விண் செல்வதே முழுமை. அப்படிக் கனியாக்கி விண் சென்றவர்களே மாமகரிஷிகள். அவர்கள் அடைந்த முழுமையை நாமும் அடைய வேண்டும்.

உயிராத்மாவைப் பிரகாசிக்கச் செய்ய வேண்டிய முறை – ஈஸ்வரபட்டர்

 

இப்பூமியில் வளர்ப்பு கனிவளத்தில்…
1.தங்கத்தின் நிலை மங்காத ஜொலிப்புடன் எப்படி வளருகின்றது…?
2.வைரத்தின் நிலை ஒளித் தன்மை கொண்டு எப்படிப் பிரகாசிக்கின்றது…?

பூமீயின் மார்பகச் சத்து வளர்ச்சியில் உயர் நிலை பெற்ற உலோகங்கள் பல நிலைக் கற்களாக… பல நிலைகளில் வளர்கின்றன.

அந்தந்த இடங்களில் வளரக்கூடிய வளர்ச்சி நிலை கொண்டு… காலத் தன்மைகளுக்கு மங்காத் தன்மையில் வெளிக் காக்கும் அமிலத்தின் தொடர் பாயப் பெறும் தருவாயில்… பூமியின் வளரும் உலோகங்களிலேயே இத்தன்மை கொண்ட “மங்காத் தன்மையும்… ஒளிக் கற்களும்” வளர்வதைப் போன்று… சில தாவரங்கள் பல காலங்கள் வளர்ந்து முற்றிய நிலை ஏற்பட்ட பிறகு அம்மரத்தின் வலுவில் வைரம் பாய்ந்த வைரத்தின் வளர்ப்பு நிலை வளர்கின்றதல்லவா…!

அம்மரத்தின் வளர்ப்புக் காலத்தின் வலுக்கூடிய வளர்ச்சி முற்றலினால்…
1.மண்டலங்களின் சந்திப்புக் காலங்களில்
2.இம்மரங்களின் ஈர்ப்பிற்கு அவ்வொளித் தன்மை பாய்ந்தவுடன்
3.வைரம் பாய்ந்த மரமாகி வளர ஆரம்பிக்கின்றது.

பூமியின் நிலத் தன்மையில் ஒளித் தன்மையும் தாவரங்கள் பெற்ற ஒளித் தன்மையும்
1.சில நிலைகளில் எப்படிப் பிரகாசிக்கின்றதோ அதைப் போன்றும்
2.மாணிக்கத்தை ஒளியாய் வளர்த்துக் காக்கும் ஜீவ இனப் பாம்பின் ஒளித்தன்மை போன்றும்
3.பூமி தாவர ஜீவராசிகள் இவற்றிக்கில்லா பகுத்தறியும் எண்ணத்தை மனிதன் உணரும் பக்குவத்தால் இவ்வுயிராத்மா ஒளியைத் தங்கத்தின் மங்காத் தன்மை போன்றும்
4.வைரத்தின் ஒளி கொண்டு மாணிக்கத்தின் ஜொலிப்பைப் போன்றும் பிரகாசிக்கச் செய்ய முடியும்…!

எப்படி…?

உணர்வின் எண்ணத்தைச் சமம் கொண்டு ஓ…ம் என்ற நாதத்தின் ஜெப நிலை கொண்டு புருவ மத்தியில் நினைவச் செலுத்தி மகரிஷிகளின் காந்தமின் அலைத் தொடர்பைப் பெற்றிடல் வேண்டும்.

அந்த எண்ண சுவாசத் தொடரினால் உடலிலுள்ள உயிரணுக்கள் ஒவ்வொன்றையுமே அந்தக் காந்த மின் சக்தியின் வலுவை வளர்க்கவல்ல வளர்ச்சியில் செயலைக் கொண்டு மனிதனுக்கு அடுத்த நிலையான தெய்வ நிலையை உருவாக்க முடியும்.

பாம்பு… தான் எடுத்த அமிலக் கூட்டின் வளர்ப்பு வலுவைக் கொண்டு மாணிக்கத்தின் ஜொலிப்பைப் பெறுவது போன்று… மரத்தின் அமிலக் கூட்டிற்கொப்ப அம்மரம் பெற்ற ஜீவ ஒளித் தன்மையை வலுவைக் கொண்டு அதன் ஈர்ப்பை வைரம் பாய்வது போன்று… பூமியின் சில இடங்களில் சில உயர்ந்த தாதுப் பொருள்கள் அந்தந்த இடங்களில் அமில வளர்ப்பு உயிர் வலுவின் தன்மைக்குகந்த வளர்ப்புகள் வளர்வதைப் போன்று…
1.இஜ்ஜீவ சரீரத்தின் (மனித) உயிராத்ம வலுவின் காந்த சக்தியின் ஆத்ம வலு கூடிய தன்மையில்
2..பூமி சந்திப்பு ஓட்டத்தில் செல்கின்ற மண்டலங்களின் உயிர் ஒளித்தன்மை
3.இச்சரீரத்திற்கு நேராகவே பாயும் தன்மை ஏற்படும்.

சரீர ஜீவனில் அப்படி மோதப் பெறும் ஒளித் தன்மையைக் கொண்டு உயிராத்மாவின் ஒளி வட்டம் பிரகாசிக்கும்… ஜொலிப்புத் தன்மை பெறும்….!

இப்படி ஆனவர்கள் தான் மாமகரிஷிகள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இன்று சகஜ வாழ்க்கையில் தனக்குள் ஒரு அச்சுறுத்தும் உணர்வையோ… அல்லது கடுமையான பகைமைகளாகி அதனால் ஆத்திரம் வேதனைகளை நுகர நுகர உடலிலே தீராத நோயாகிவிடுகின்றது.

நோயாகி விட்டால்
1.இந்தப் பொருள் எதற்கு…?
2.இந்த உடை எதற்கு…?
3.இந்த நிலம் எதற்கு…? என்று ஒதுக்கும் தன்மை வரும்.

“ஆண்டவன்…” எப்பொழுது என்னை இந்த உடலை விட்டு அழைத்துக் கொள்வான்…? என்று கேட்பார்கள். இதெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

இன்று பார்க்கலாம். பெரும் செல்வந்தர்களாகக்கூட இருப்பார்கள்.

ஆனால் கடும் வேதனையால் வாடிக் கொண்டிருப்பவர்கள் தன் இம்சை தாளாது தன் செல்வத்தைப் பார்க்கின்றனரா…? உடலைப் பார்க்கின்றனரா…?

இந்த உடலை விட்டு “எப்பொழுது… இந்த உயிர் வெளியேறும்…” என்று நினைக்கின்றார்கள்.

இருப்பினும் இவர்கள் தப்ப முடியாது.

“எந்த வேதனை… இந்த உடலில் உருவாகியதோ…” இந்த உடலை விட்டு உயிர் சென்ற பின் வேதனை உணர்ச்சிகளைத் தூண்டிக் கொண்டிருக்கும். அதை உயிர் உணர்த்திக் கொண்டேயிருக்கும்.

1.“உடல் இல்லை.. என்றாலும்…” வேதனையை உணர்ந்து கொண்டே தான் இருக்க வேண்டும்.
2.அதிலிருந்து தப்ப முடியாது.

வேதனைகள் தாளாது இந்த உடலை விட்டுச் சீக்கிரம் செல்வதற்காகத் “தற்கொலை செய்து கொள்வேன்…!” என்று செய்வார்கள். தன்னை எரித்துக் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

ஆனால் அப்படித் தற்கொலை செய்தாலும் எதன் உணர்வு கொண்டு தற்கொலை செய்தார்களோ இந்த உடலை விட்டு வெளியில் வந்தபின் யார் மேலாவது இவர் பற்று கொண்டிருந்தார் என்றால் என்ன ஆகும்…?

“நல்ல மனிதர் இவர்…! இப்படித் தற்கொலை செய்து கொண்டாரே…” என்று இந்த உணர்வை நுகர்ந்து விட்டால் அந்த உடலுக்குள் சென்று இவர் பட்ட வேதனையை வெளிப்படுவதைக் காணலாம்.

இதைப் பேய் மணம் என்று உடலுக்குள் சென்றபின் “ஆவி பிடித்துவிட்டது…” என்றெல்லாம் நாம் பார்க்கின்றோம்.

இது தனித்து ஒரு உடலுக்குள் புகவில்லை என்றாலும் “எரித்த உணர்வு” கொண்டு எரிந்து கொண்டேயிருக்கும். நரக வேதனையிலிருந்து தப்பவே முடியாது.

“ஈசனாக இருந்து உருவாக்கிய அவனை மறந்து” மனிதனான பின் தவறு செய்வோம் என்றால் நரக வேதனையும் நரகலோகத்தையும் தான் சந்திக்க முடியும்.

இந்த உணர்வின் தன்மையை நாம் உணர்ந்து
1.வாழ்க்கையில் வரும் தீமைகளைக் குறைத்துப் பழக வேண்டும்;
2.மனதைத் தூய்மைப்படுத்திப் பழகுதல் வேண்டும்… மனத் தூய்மை நமக்கு அவசியம் தேவை

மனத் தூய்மை தேவை என்றால் அகஸ்தியர் காட்டிய விநாயக தத்துவப் பிரகாரம் காலையில் நீங்கள் எழுந்தவுடன் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணுங்கள். அந்த உணர்வை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.

1.அந்த அருள் சக்தி உலகில் உள்ள அனைவரும் பெற வேண்டும் என்று தவமிருங்கள்.
2.பிறருடைய தீமைகளோ பகைமைகளோ உங்களுக்குள் வராது.

இதைத் தான் ஏகாதசி விரதம் என்பது.

உயிரையும் குருவையும் எண்ண வேண்டிய முறை

 

ஒவ்வொரு நிமிடமும் நம் குருவான உயிரை ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று எண்ண வேண்டும். காரணம் நம் குருநாதர் பெயரும் அது தான்.
1.அவர் தனக்குள் அந்த உயிரின் நிலைகள் ஒன்றி
2.அந்த உணர்வின் தன்மை தனக்குள் உருவாக்கி
3.குருவின் நிலைகள் கொண்டு மெய் உணர்வின் சக்தியைப் பெற்றார்.

அதனால் ஈஸ்வரா குருதேவா…!

அவர் பெயர் ஈஸ்வரா என்று வரும் பொழுது எனக்கு (ஞானகுரு) அந்த உணர்வின் தன்மையைக் கொடுத்ததனால்
1.ஈஸ்வரா குருதேவா என்று என் உயிரை நான் எண்ணினாலும்
2.என் குருவை நான் எண்ணினாலும் இரண்டும் ஒன்று தான்.

குருவாக இருந்து அந்த உணர்வின் தன்மையைப் படைக்கப்படும் பொழுது அது உடலாக உருவாகின்றது ஆகவே ஈஸ்வரா குருதேவா என்பது உயிரின் இயக்கம் ஈசன் ஆகிறது.

நமக்குள் உருவாக்கிக் (சிருஷ்டி) கொண்டிருக்கும் அந்த ஈசனின் துணை கொண்டு நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி விண் செல்வதே குருநாதர் காட்டிய மெய் வழி.

அவர் காட்டிய அருள் வழியில் இந்த உலகத்திற்கு வழிகாட்டிகளாக நாம் வளர வேண்டும். நாம் விடும் மூச்சின் அலைகள் பிறரின் துன்பத்தை மாய்க்கக்கூடிய நிலைகளாகப் படர வேண்டும்.

1.நம் சொல்லின் நிலைகள் பிறரை இன்பத்தில் ஆழ்த்தி மகிழ்ச்சியின் உணர்வாக உருவாக்கி
2.மற்றவரை இருள் சூழச் செய்யும் விஷத்தை மாய்த்து
3,ஒளிச் சுடராகப் பெறும் அந்தத் தகுதியைப் பெறச் செய்ய வேண்டும்

எனக்குள் (ஞானகுரு) பல இன்னல்களோ அல்லல்களோ வந்தாலும் அதனின் நிலைகள் எனக்குள் சேராத வண்ணம் மெய் ஒளியின் தன்மையை எவ்வாறு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று குருநாதர் உபதேசித்து உணர்த்தினார்.

1.அவர் எனக்கு எப்படி அந்த ஆற்றலைப் பெறும் சந்தர்ப்பமாக அதைப் பதிவு செய்தாரோ
2.அவர் சொன்ன வழியில் அரைத் தொடர்ந்து அந்த உணர்வின் தன்மையை நான் நினைக்கப்படும் பொழுது
3.அந்த உணர்வின் ஆற்றல் எனக்குள் படைக்கப்படுகிறது.
4.அதிலே விளைந்த உணர்வின் சத்தைத் தான் ஞான வித்தாக உங்களுக்குள் செலுத்துகின்றேன்.

வயலைப் பண்படுத்தி அதற்குள் நல்ல விதைகளை விதைத்த பின் அந்த விதையின் தன்மை காற்றிலிருந்து தன் சக்தியை எடுத்துச் செழித்து வளர்கிறது.

அதைப்போல மெய் ஒளியைப் பெறும் தகுதியை நீங்களும் பெற வேண்டும். குருநாதர் அருளிய அந்த அருள் சக்திகளை நாம் எல்லோரும் பெறுவோமேயானால் விஞ்ஞான அழிவில் இருந்து நாம் மீட்டி மெய் ஞானத்தின் வழிகளில் நாம் செல்ல முடியும்.

எதுவாக இருந்தாலும் இயற்கையின் நிலைகள் இனம் இனத்துடன் தான் சேர்க்கும். மெய் ஞானியின் அருள் ஒளியை நாம் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
1.அந்த இனத்துடன் நாம் இணைந்து… அந்த ஆற்றலைப் பெற்று
2.அவர்கள் எங்கே விண் சென்றார்களோ அங்கே செல்ல முடியும்.

ஆகவே…
1.குருநாதர் அருளிய ஆற்றல்மிக்க சக்தி எனக்கு மட்டும் சொந்தமல்ல. நம் அனைவருக்குமே சொந்தம்.
2.ஒன்றில்லாமல் ஒன்றில்லை. ஒன்றுடன் ஒன்று இணைந்து தான் செயல்படுகிறது.

நீர் சிறு துளியாக விழுந்தால் பூமிக்குள் பட்டு ஈர்க்கப்பட்டு விடுகின்றது. ஆனால் பெரும் துளிகள் ஒன்றாகச் சேர்ந்து மழையாகப் பொழியும் பொழுது பெரும் வெள்ளமாகப் பாய்ந்து அனைத்தும் சேர்ந்து வலுக் கொண்டதாகக் குப்பை கூளம் செத்தைகள் அனைத்தையும் அடித்துச் செல்கிறது.

அதைப் போல நாம் அனைவரும் அந்த மெய் ஞானிகளின் அருள் உணர்வு கொண்டு ஒரே உணர்வாக ஓ…ம் ஈஸ்வரா… என்ற உணர்வின் குரலை எழுப்பப்படும் பொழுது பெரும் வெள்ளமாக அருள் சக்திகள் நமக்கு முன் குவியும்.
1.அதன் மூலம் நம்மை அறியாமல் ஆட்டிப்படைக்கும் உணர்வுகளையும்
2.இருள் சூழச் செய்யும் உணர்வின் தன்மைகளையும் மாய்த்திட முடியும்.

மெய் ஞானிகளின் அருள் ஒளிகள் பெரும் வெள்ளமாகப் பாயும் போது மெய் வழியில் மெய் ஒளியைப் பெறும் அந்த ஆற்றல் மிகுந்த சக்தியை நாம் அனைவருமே பெற முடியும்.

உங்களை நீங்கள் நம்ப வேண்டும். நமக்குள் ஆற்றல் மிகுந்த சக்தி உண்டு. இந்த மனித உடலில் இருந்துதான் அந்த உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்.

அத்தகைய நிலைகளை நாம் அனைவரும் நிச்சயம் பெறுவோம்…!

எலும்புக்குள் இருக்கும் ஊனில் மகரிஷிகளின் அருள் சக்தியை வலுவாக்கினால் தான் உயிராத்மாவிற்கு வலுக் கூட்ட முடியும் – ஈஸ்வரபட்டர்

எல்லாமில் எல்லாமாய் உள்ள “இறை சக்தி” பொதுவான சக்தியாய்ச் செயல் கொள்ளும் தன்மைக்கு அவரவர்களின் எண்ணச் செயலை ஒவ்வொரு சாராரும் தன் எண்ணத்திற்குகந்த செயலைச் செய்விக்கத் தெய்வத்தின் துணையை நாடுகின்றனர்.

தெய்வத்தின் துணையை எப்படி அவரவர்கள் பெறுகின்றனர்…?

மருத்துவர் தன் மருத்துவத்தில் கற்ற செயலுக்காகவும்… தன் ஜீவாதாரப் பொருளுக்காகவும்… தான் கற்ற மருத்துவத் தொழிலுக்காக “வியாதியஸ்தன் வரவேண்டும்” என்று எண்ணுபவனும் உண்டு.

தன் தொழில் நடக்க வேண்டும் என்று எண்ணுவதே தன் சுயநல வளர்ப்பிற்காகத்தான்…!

வியாதியஸ்தன் தன் வியாதியைக் குணமாக்க தெய்வத்திடம் எண்ணத்தைச் செலுத்துகின்றான்.
1.வைத்தியனும் இறைவனை வேண்டுகின்றான் (தன் வருவாய்க்காக)
2.வியாதியஸ்தனும் இறைவனை வேண்டுகின்றான் (தன் வியாதி நீங்க)

இந்த இரு சாரரில் யாருக்கு அந்த இறைவன் சொந்தம்…?

வைத்தியன் மற்றவர்களுக்கு வியாதி வந்து அவதிப்பட வேண்டுமென்று எண்ணவில்லை. ஆனாலும் தன் ஜீவாதாரத் தேவைக்காகவும் தான் வளர்த்துக் கொண்ட… வழி முறை செயல் வளரவும் தெய்வத்தை வேண்டுகின்றான்.

வைத்தியனின் வைத்திய முறையில் அவன் கற்ற திறமை கொண்டு அந்தத் திறமைக்குகந்த ஜீவ ஆத்மாக்கள் அவனை நாடி வருகின்றன.

நோயாளியின் தன்மையிலும்…
1.தன் வியாதி குணமாக வேண்டுமென்ற உந்தலில் எடுக்கப்படும் எண்ணத்தால் ஆத்ம செயல் உருவாகி
2.அவனுள் உள்ள இறை சக்தியே அவனுக்கு அவன் வியாதியை சொஸ்தப்படுத்துகின்றது.

ஆகவே தெய்வத்தின் செயல்… நன்மை தீமை பார்த்துச் செயல்படவில்லை…!

உடலில் ஏற்படும் உபாதைகளுக்கு… சாதாரணத் தலைவலி போன்றவைகளுக்கு தலையில் மட்டும் மருந்தைத் தேய்க்கின்றோம்.

அதுவே நிற்காமல் அதிகப்படும் பொழுது… மாத்திரைகளாக உட்கொள்கின்றோம். அது ஆகாரமாகி… ஆவியாகி.. அதன் செயலைச் செய்கின்றது.

அதற்கும் முற்றிய நோய்களுக்கு… உதிரமுடன் கலக்கச் செய்யும் வீரிய மருந்துகளை ஊசியின் மூலம் ஏற்றுகின்றார்கள். அதற்கும் அடுத்தநிலை நரம்புகளிலேயே மருந்துகளைச் செலுத்துகின்றார்கள்.

அதற்கும் முற்றிய நிலையில்… எலும்புகளில் துவாரமிட்டு அதன் தொடரில் வைத்திய நிலை முற்றியுள்ள விஞ்ஞானச் செயலில் உடல் உபாதையை அகற்ற மருத்துவம் செயல்படுகின்றது. (இது எல்லோருக்கும் தெரிந்தது தான்…!)

இவைகளைப் போன்றே
1.இவ்வுடலில் நாமெடுக்கக் கூடிய மகரிஷிகளின் மின் அலைத் தொடர்பினால்
2.ஊடுருவல் நிலை கொண்டு அதைச் சுவாசமாக்கி
3.அதன் வளர்ச்சியில் உதிரமாகி… நரம்புக் கோளங்கள் வலுப் பெற்று
4.உடலில் உள்ள எலும்புக்குள் இருக்கும் ஊன் நிலையில் வலுவாகும் வழி முறையில் தான்
5.உயிராத்மாவிற்கு நாம் வலுக் கூட்ட முடியும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இன்று விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கை வாழ்கின்றோம். பக்தி என்ற நிலையிலும் அஞ்ஞான வாழ்க்கை வாழ்கின்றோம். அரசியல் என்ற நிலைகளிலும் அஞ்ஞான வாழ்க்கை வாழ்கின்றோம்.

இந்த அஞ்ஞான வாழ்க்கையில் ஒருவன் தவறு செய்யும் உணர்வை நுகர்ந்தறிந்தால் அந்தத் தவறை நமக்குள் உருவாக்காமல் தடுக்க வேண்டுமென்றால் “மெய்ஞானத்தின் உணர்வை” நமக்குள் சேர்க்க வேண்டும்.

அருள் ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் சேர்த்து அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து நம்மை அறியாமல் அது இயக்கும் நிலைகளைத் தடைப்படுத்த வேண்டும்.

அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் இணைத்து அந்த வீரியத்தின் தன்மையை நமக்குள் புகுத்தி அஞ்ஞானத்தை மாற்றிடும் நிலை பெற முடியும்.

மக்களை மீட்க வேண்டும் என்ற உணர்வுகளை நமக்குள் வளர்த்து அந்த அருள் ஞானிகள் காட்டிய வழியில் மெய்ஞானத்தின் உணர்வு கொண்டு உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற்ற அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றுமே நாம் வாழ முடியும்.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாம் ஏங்கிப் பெறுதல் வேண்டும்.

1.அத்தகைய ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற்று வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி
2.இந்த உடலை விட்டு எந்த நேரம் பிரிந்தாலும் என்றுமே அழியா உடலாக “அகண்ட அண்டத்தில்… எங்கும் செல்லலாம்”.

நாம் வாழும் இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும்… பிறவியில்லா நிலைகள் அடைந்து அகண்ட அண்டத்திலிருந்து வரும் எத்தகையை நஞ்சினையும் அடக்கி அழியாத நிலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தச் சப்தரிஷி மண்டலத்தை நாம் சென்றடைய வேண்டும்.

1.எதுவுமே தனித்து இயக்குவதில்லை. “ஒருவனே கடவுள்..,” என்ற நிலை இல்லை.
2.மூன்று உணர்வுகள் சேர்த்து ஒன்றைக் கவர்ந்து ஒன்றுக்குள் சென்றால் தான்
3.“நான்காவது நிலையாக… பிரம்மம்…” என்று அடைய முடியும்.

மூன்று நிலைகள் கொண்டு ஒன்றைக் கவர்ந்து, ஒன்றைக் கவர்ந்த பின் ஒன்றுக்குள் நுழைந்து “உள் நின்று.., அந்த உணர்வை இயக்கச் செய்வது தான் கடவுள்”.

ஒன்றென்ற நிலைகள் இங்கில்லை. “வெப்பம் காந்தம் விஷம்…” என்ற மூன்றும் ஒரு பொருளை நுகரப்படும் பொழுது மணம் என்ற நிலையில் ஞானம்.

இதனுடன் சேர்ந்து உருப்பெறும் சக்தியாக உருவாகின்றது. அது தான் “பரப்பிரம்மம்”.

அந்த உணர்வின் தன்மை எதை நுகர்ந்து கொண்டதோ ஒரு பொருளுடன் இணைந்து அந்த “உணர்ச்சியை” ஊட்டும் பொழுது பிரம்மவின் மனைவி “சரஸ்வதி…”

அந்த ஞானத்தின் துணை கொண்டு அதனுடன் இயங்கி இதனின் வலிமையை உருவாக்கும். இதைப் போல வலுக் கொண்ட உணர்வுகளை எடுத்துக் கொண்டால் பரப்பிரம்மம்.

அந்த உணர்வின் தன்மை மற்றொன்றுடன் இணைந்து தன் வலிமை கொண்டால் இதை அடக்கி அந்த உணர்வின் தன்மை கொண்டு அதனின் வளர்ச்சியைக் கூட்டும்.

இதைப் போன்று உலகின் இயக்கம் இவ்வாறு இருக்கும் என்று காட்டிய அருள் ஞானிகளின் உணர்வலைகளை நாம் நுகர்ந்து நமக்குள் அறியாது புகுந்த தீமைகளை நீக்க வேண்டும்.

அருள் ஞானத்தை நமக்குள் வளர்ப்போம். அதை உருவாக்குவோம்.

திரும்பத் திரும்ப ஒன்றையே பேசிக் கொண்டிருந்தால் நம் ஆன்மாவிலே என்ன நடக்கும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்

 

ஒருவர் நம்மைத் திட்டிவிட்டால் என்னை இப்படிப் பேசினான்… என்னை இப்படிப் பேசினான்… என்னை இப்படிப் பேசினான்…! என்றெல்லாம் சொல்கிறோம்.

இந்த உணர்வின் தன்மை திரும்பத் திரும்ப ஜெபிக்கப்படும் பொழுது
1.சூரியனுடைய காந்தப் புலன்கள் சும்மா இருப்பதில்லை
2.நாம் பேசுவதை எல்லாம் எடுத்துக் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

என்னைப் பேசினார்கள்… பேசினார்கள்… என்றே நாம் சொல்லிக் கொண்டிருந்தால் யார் திட்டினாரோ அவர்கள் காதிலும் இது விழுந்தால் நம்முடன் சண்டைக்கு வருவார்கள்.

கேட்கவில்லை என்றாலும்… இந்த உணர்வின் சத்து காந்த அலைகளை இழுத்து நமக்குள் அதை விளைய வைத்துக் கொண்டிருக்கும்.
1.அந்த உணர்வினை எண்ண… எண்ண… எண்ண…
2.விளைய வைத்ததை உடல் இழுத்து வைத்துக் கொண்டே இருக்கும்.
3.நமக்குப் பின்னாடியும் முன்னாடியும் (ஆன்மாவிலே) அது தான் நிற்கும்.

அதனின் இயக்கமாக என்னை இப்படிப் பேசினான்… என்னை இப்படிப் பேசினான்… என்னை இப்படிப் பேசினான்… அவன் மோசமானவன்… என்று சொல்லி நாம் பாட்டுக்குப் பேசினாலும் “வேறு என்னென்னமோ… நம்மிடமிருந்து கிளம்பும்…”

பேச்சின் தொடர்கள் அனைத்தும் வெறுப்பை ஊட்டும் உணர்வாகவே வரும். அப்படிப் வெறுப்பாகப் பேசுவது அனைத்தையும் இந்தக் காந்த அலைகள் கவர்ந்து கொண்டு நாம் பேசப் பேசப் பேச நம் உடலின் முன் பக்கமாகவே நிறுத்திவிடும்.
1.முன்னாடி நின்றவுடன் மீண்டும் அந்த நினைவுகள் வரும் பொழுது
2.எங்கே பார்த்தாலும் இந்த நினைவுதான் வரும்.
3.ஏதாவது ஒரு நல்ல பொருளைச் செய்ய வேண்டும் என்று எண்ணினாலும் அது சீராக நடக்காது.

வெறுப்பான நிலையில் நாம் வேலை செய்யும் போது பார்க்கலாம். எந்தக் குணத்தின் அடிப்படையில் வெறுப்பாக இருக்கின்றீர்களோ நீங்கள் எரிச்சலாக இருந்தால் குழம்பு வைக்கும்போது மிளகாயை அதிகமாகப் போட்டுவிடுவீர்கள்.

என்னை இப்படியே பேசிக் கொண்டிருந்தான் என்ற வேதனை அதிகமாகி விட்டால் உப்பை அதிகமாகப் போட்டு விடுவீர்கள். உங்களை அறியாமலே உப்பை அதிகமாகக் கையில் அள்ளிப் போட வைக்கும்.

வேண்டும் என்றால் சங்கடமாக இருக்கும் போது பார்க்கலாம். குழம்பு வைக்கும்போது உப்பை அதிகமாகப் போட்டு விடுவீர்கள். குழ்ம்பிலே உப்பு அதிகமாக இருக்கிறது…! என்று வீட்டில் சண்டை வரும்.

கோபமாக இருந்தீர்கள் என்றால் குறைந்தது இரண்டு மிளகாயாவது சேர்த்து அதிகமாகப் போட்டு விடுவீர்கள்… அப்புறம் எரிச்சலாகும். சலிப்பு சங்கடம் அதிகமாயிருந்தால் சீரகம் அதிகமாகிவிடும். சீரக வாசனை அதிகமாகி விட்டால் உமட்டலாகும்.

அந்தந்தக் குணத்திற்குத் தக்கவாறு தான் குழம்பு வைக்கச் சொல்லும்.
1,சலிப்பான எண்ணத்துடன் அதிகமாகப் பேசியிருந்தால் புளிக்குழம்பைத் தான் வைக்க வேண்டும் என்று சாதிப்போம்.
2.புளியை அதிகமாகக் கரைத்து விட்டு விடுவோம்… உப்பைக் குறைத்து விடுவோம்.
3.குழம்பிலே புளிப்பு அதிகமாகிவிடும்.

அனுபவத்தில் நீங்கள் இதை எல்லாம் தெரிந்து கொள்ளலாம்.

அதே மாதிரி இட்லிக்காக மாவை அரைத்து உப்பைப் போட்டுக் கரைத்து வைத்தால் மறு நாள் காலையில் இட்லியைச் சுட்டால் அதிகமாகப் புளித்துவிடும். இட்லி கல் மாதிரி ஆகிவிடும்.

ஐய்யய்யோ… நான் நன்றாகத் தானே செய்தேன்…! என்று சொல்லலாம். ஆனால் அந்தக் குணத்திற்குத் தக்கவாறு உணர்வின் தன்மை இயக்கிவிடும். மனிதனுடைய ஆற்றல் அந்த அளவிற்கு இருக்கின்றது.

வாழ்க்கையிலே ஒவ்வொன்றும் இவ்வாறு நம்மை இயக்குகிறது. திரும்பத் திரும்ப… திரும்பத் திரும்ப… பிறரின் குறைகளைப் பேசும்போது இத்தகைய உணர்வெல்லாம் வந்துவிடுகிறது.

இதை எல்லாம் அகற்றுவதற்குத் தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உடனுக்குடன் எடுத்து உடலுக்குள் சேர்த்து தீமைகள் உருவாகாதபடி மாற்றி அமைக்க வேண்டும் என்று அடிக்கடி யாம் (ஞானகுரு) சொல்கிறோம்.

ஆத்ம வலுவினால் நடக்கப் போகும் அசம்பாவிதங்களை “முன் கூட்டியே அறிய முடியும் – ஈஸ்வரபட்டர்

 

காட்சி:
ஆற்றின் குறுக்கே பழைய பாலம் ஒன்று; புகை வண்டியின் போக்குவரத்தின் தண்டவாளமுடன் தெரிகின்றது.

அதிவேகமாய் ஒரு புகை வண்டி வருவதைப் போன்றும்… வரும் வேகத்தில் ஓடக்கூடிய நிலையில் அப்பாலத்தின் நடு மையம் சரிந்து… புகைவண்டிப் பெட்டிகள் எல்லாம் பாலத்துடன் ஆற்றில் விழுவதைப் போன்றும்… இரண்டு பெட்டிகள் மட்டும் பாலத்தின் இக்கரையில் உடையப் பெற்று நிற்கும் பாலத்தில் நிற்பதைப் போன்றும் தெரிகின்றது.

இதன் பொருள் என்ன…?

இயற்கையில் தன் இச்சையுடன் சுழலத்தக்க மண்டலங்களின் கால நிலை… அவைகளின் சந்திப்புத் தன்மை… சீதோஷ்ண நிலை… வரப் போகும் மாற்றத்தின் முன் அறிவிப்பு… நிகழ் இயற்கைத் தன்மை… பூகம்பம்… கடல் கொந்தளிப்பு… காற்று… மழை…
1.பூமியில் அந்தந்த இடங்களில் எந்தெந்தக் காலத்தில் உஷ்ண நிலை மாறும் கொள்ளும் செயல்
2.இப்படி இயற்கையில் வரும் தன்மை வருவதற்கு முதலிலேயே
3.இன்றைய மனித விஞ்ஞானத்தில் அறியும் ஆற்றலைச் செயல்படுத்தி அறியும் விஞ்ஞானத்தின் செயலைப் போன்று
4.தன் ஞானத்தினாலேயே… அன்றையக் கால நிலையை அறியும் ஜோதிடத் தன்மையில்… இவ் ஒலி ஒளித் தன்மையை உணர்த்தினர் ஞானியர்.

கால ஜோதிட விஞ்ஞான கால சாஸ்திர செயல் முறையிலும் இயற்கையில் நிகழப்போகும் நிலையை அறியும் நிலையுண்டு.

காட்சியில் கண்ட செயற்கையின் விபத்துகளை உணர முடியுமா…?

காட்சியில் கண்ட செயற்கை நிலையில் நிகழும் விபத்துகளை முன் கூட்டி அறியும் தன்மை எப்படி ஏற்படுகின்றது…?

சில பொருட்களின் உறுதியையும் தேய்மானத்தையும் கணக்கில் கொண்டு… பார்க்கும் பொருளின்… அதன் உறுதியான உழைக்கும் காலத்தைக் கணக்கிடுகின்றோம்.

எதிர்பாராமல் நடக்கும் செயற்கை விபத்துகளை முன் கூட்டி அறியும் தன்மைகளை…
1.இச்சரீர உணர்வு எடுக்கும் ஒலியைக் கொண்டு ஒளி அலையை…
2.இக்காற்றின் அமிலத் தன்மைக்கும்… இச்சரீரத்தில் வளர்த்துக் கொண்ட காந்தமின் அலையின் வீரிய நிலையான அமிலத் தன்மைக்கும்
3.இரசத்தன்மையின் (அதாவது பாதரசம்) உணர்வின் எண்ணமுடன் ஜீவ சரீர இயக்கத்தில் மோதும் பொழுது
4.இச்சரீர உணர்வு எண்ண ஒலி கொண்டு ஒளி நிலை பெற்ற தன்மையினால்
5.இப்பூமியின் வளர்ச்சித் தன்மையின் மாற்று நிலை நிகழப் போகக் கூடிய இடங்களின் செயலை அறியலாம்.

இச்சரீர உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் ஒளி சக்தியில்… ஆத்ம வலுவின் ஒளி கூடிய தன்மையில்… சூரிய ஒளிக்கும் பூமியின் ஒளிக்கும் இடையில் மாறு கொள்ளும் தன்மையில்… பூமி எடுத்து வெளிப்படுத்தும் அலைத் தன்மையை “இச்சரீர இயக்கம் ஒளி கொண்டு காண முடியும்…!”

புகைவண்டி விபத்துக்குள்ளாகின்றதென்றால்…
1.விபத்து நடக்கக்கூடிய காலத்திற்கு முன்பாகவே
2.பூமியின் அலையில் பூமி வெளிப்படுத்தும் ஆவித்தன்மையில்
3.அந்தந்த இடங்களில் நடக்கும் செயல் நிலை “தடுமாற்றம் கொள்ளும்…”

பூமியில் சில இடங்களில் மட்டும் எப்படிச் சூறாவளி என்ற சுழல் காற்று சுழல்கின்றதோ… அதைப் போன்று பூமியின் உள் நிலையிலிருந்து வெளிக்கக்கும் ஆவி அமிலத் தன்மையிலும் சில நிலைகள் வெளிப்படும்.

அத்தகைய காலத்தில்… அந்த இடங்களில் செயல் கொள்ளும் மனித உணர்வே… புகைவண்டியில் பலர் சென்றாலும்
1.ஜீவ சரீர உணர்வின் அலையுடன் அத்தொடர்பலை மோதியவுடன்
2.திகில் கொண்ட தடுமாற்றம் ஏற்பட்டு… அதனால் செயல்கள் மாறி விபத்துக்கள் ஏற்படும்.

மனித செயலினால் செயல்படுத்தப்பட்ட தண்டவாளத்திலும்… பாலத்தின் வலுத் தன்மை குறைந்திருந்தாலும்… இப்பூமியின் இயக்கமும் ஒன்றி… இப்பூமியின் வளர்ப்பில் சரீர இயக்கத்தில் ஒளி சக்தி பெற்ற தன்மையினால் செயல் தன்மை வலுக் குன்றி… விபத்துக்கள் உண்டாகும்.

இப்படி நடக்கக்கூடிய தன்மையை… உணர்வின் ஒலி சக்தி கொண்டு ஒளித் தன்மையால்
1.அணுவுக்குள் அணு ஊடுருவும் செயல் தன்மையில்
2.மாற்றுத் தன்மையினால் நிகழும் விபரீதங்களையும் ஞான ஒளியினால் அறிய முடியும்.

இச்சரீரமே ஒளி நிலை கொண்ட ஞான ஜோதியாய் ஒளித் தன்மை கொள்ளும் வளர்ப்பினால்
1.இயற்கை மாற்றம்…
2.செயற்கை வழி… செயற்கை மாற்றம்…! ஒவ்வொன்றையும் அறிய முடியும்.

ஆவியாகி பிம்பமாகி மீண்டும் ஆவியாகும் செயல் முறையில் இயற்கை செயற்கை எல்லாமே இவ்வொலித் தன்மையின் ஒளி நிலை பெற்ற ஆத்ம சரீரத்தில் அறிய முடியும்.

ஜெபம் கொண்டு தியானத்தால் தன் உணர்வைச் சமப்படுத்தி அறியும் நிலை இது.
1.சரீர இயக்கச் செயலுடனும்
2.சரீரமற்ற ஆத்ம உயிரின் தொடர்புடனும்
3.சித்து விளையாட்டின் சித்துச் செயலிலும் நிகழும் நிலையை அறிய முடியும்.

ஆனால்… பலனற்ற தன்மை தான் சரீரமற்ற உயிராத்மாவின் (ஆவி…. ஏவல்… மந்திரம்) தொடர்பு கொண்டு செயல்படுத்தும் முறை

ஆகவே… ஒவ்வொரு ஆத்மாவும் தனக்குள் உள்ள குருவான தன்னுயிரைத் தெய்வமாக்கி…
1.ஒலி கொண்டு ஒளி பெறும்
2.எண்ணத்தின் உணர்வைச் சமமாக்கும்… அறியும் ஞானத் தொடர் கொண்டு
3.தன் ஜீவ ஆத்மாவில் இருந்தே “வளர்ச்சி நிலை” ஒவ்வொன்றையும் அறியலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

விண்ணிலிருந்து பூமிக்குள் வந்த உயிரணு தன் துடிப்பால் மின்னிக் கொண்டிருக்கும் அந்த உணர்வே உயிரின் நிலை.

அந்த உயிரணு நம் பூமிக்குள் வந்த பின் உதாரணமாக ஒரு பருத்திச் செடியின் மீது அந்த உயிரணு விழுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது
1.பருத்திச் செடியிலிருந்து வெளிப்படும் அந்த இலையின் சத்து
2.இந்த உயிரணுவின் (தன்) துடிப்பின் ஈர்ப்பால் ஈர்க்கப்பட்டு அந்த உயிரைச் சுற்றி மூடி விடுகிறது.

அதாவது
1.ஒரு “சப்…” என்று இருக்கும் பொருளில்
2.நாம் இனிப்பான பாகைக் காய்ச்சி ஊற்றிய பின் (முலாம் பூசியது போல்) மேலே மூடிக் கொள்வது போல்
3.பருத்திச் செடியின் சத்து அந்த உயிரணுவை மூடி விடுகின்றது.

பருத்திச் செடியிலிருந்து வெளிப்படும் அந்தச் செடியின் சத்தை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் படரச் செய்கின்றது.

அவ்வாறு படரச் செய்து கொண்டிருக்கப்படும் போது எந்தச் செடியின் மேல் உயிரணு வீழ்ந்ததோ அதிலிருந்து வெளிப்படும் அலைகள் அணுக்களாக மாறுவதை
1.அந்த உயிரணு அதைக் கவர்ந்து சுவாசித்து
2.“ஓ…” என்று ஜீவனாக்குகின்றது.

இந்த உயிரணு எவ்வாறு தோன்றியதோ இதைப் போல அந்தத் தாவர இனச்சத்தை அது நுகர்ந்து
1.இந்த உயிரின் துடிப்பு போல
2.தாவர இனச் சத்தையும் துடிப்பாக உருவாக்குகின்றது.

அப்பொழுது அது ஜீவ அணுவாக மாற்றுகின்றது. அது தான் “ஓ…” பிரணவம், ஜீவனாக உருவாகத் தொடங்கி விடுகின்றது. அந்த உணர்வின் சத்து உடலாக ஆகும் போது “சிவமாகின்றது”.

1.இந்த உயிரணு அந்தத் தாவர இனச்சத்தால் மூடப்படும் போது இரவு (இருட்டாகிறது)
2.இது தான் சிவன் ராத்திரி.

முதன் முதலில் இவ்வாறு தோன்றிய உயிர் பரி\ணாம வளர்ச்சியாகி இன்று நாம் மனிதனாக இருக்கிறோம் என்றால் அது தான் “மகா… சிவன் ராத்திரி…”

எது வந்தாலும் “ஈஸ்வரா…” என்று சொல்லச் சொல்வதன் காரணம் என்ன…?

 

அன்றாட வாழ்க்கையில் எந்த நிமிடமாக இருந்தாலும் சரி… யாராவது நம்மிடம் சங்கடமாகப் பேசினாலும் சரி… யாம் (ஞானகுரு) சொல்லிக் கொடுத்த ஆத்ம சக்தியை நீங்கள் கடைப்பிடியுங்கள்.
1.ஈஸ்வரா…! என்று வானை நோக்கி எண்ணுங்கள்
2.அந்தச் சங்கடமான உணர்வுகளை அதை வைத்து மறைத்துக் கொள்ளுங்கள்.

“ஈஸ்வரா…’ என்று அதை மறைக்கச் சொல்வது என்ன…?

மனிதனுடைய உணர்வின் அலைகள் “இங்கே இழுக்கின்றது…” கடிகாரம் போன்று இருக்கின்றது. உடல் முழுவதற்கும் இருப்பதை இது முன்னாடி குவித்துக் கொடுக்கும்.

அப்பொழுது ஈஸ்வரா… என்று தடைப்படுத்தி… அந்த நினைவை மகரிஷியின் அருள் சக்தி பெற… வானை நோக்கி அங்கே கூட்ட வேண்டும். இல்லை என்றால் இதுவும் கலந்துவிடும். (நல்ல உணர்வுடன் பிறரின் உணர்வும் கலந்துவிடும்)

ஆகையினால் எண்ணத்தை வானிலே செலுத்தி
1.அங்கிருந்து எடுக்கப்படும் பொழுது அந்த மகரிஷிகளின் உணர்வலைகள் நம் கையிலேயும் பாய்கின்றது.
2.ஈஸ்வரா… என்று ஏங்கி எடுக்கப்படும் போது தீமைகள் இங்கே அமுங்கிவிடுகிறது.
3.ஆகவே அந்த மெய் ஒளியின் தன்மையை “ஈஸ்வரா…” என்று எண்ணி எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

காரம் மிளகாய் உப்பு கசப்பு இதையெல்லாம் தனித்தனியாக உட்கொண்டால் சுவையற்றதாக இருக்கின்றது. ஆனால் அதையெல்லாம் சமமாக இணைத்துச் சுவையாக ஆக்கும் பொழுது நாம் ரசித்துச் சாப்பிடும் நிலை வருகின்றது.

அதைப் போல் தான் எத்தனை பேர்… எவ்வளவு சங்கடமாகப் பேசினாலும்… எதிர்த்துப் பேசினாலும் கூட
1.நிச்சயம் அவர்கள் நல்லது பெறுவார்கள்… நல்லது செய்வார்கள்…
2.என் எண்ணம் அவர்களுக்கு நல்லதைச் செய்யும் என்று இந்த உணர்வை ஊட்டிக் கொண்டே வாருங்கள்.

என் கடையில் வியாபாரம் இல்லை… வியாபாரம் இல்லை… வியாபாரம் இல்லை…! என்று சொல்லாதீர்கள்.

என்னிடம் சரக்கு வாங்குவோர் அனைவரும் நலம் பெற வேண்டும்.. அவர்கள் வளம் பெறுவார்கள்… மகரிஷியின் அருள் ஒளி அவர்களுக்குக் கிடைக்கும். என்னிடம் பொருள் வாங்குவோர் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வாருங்கள்.

உங்கள் வியாபாரம் நன்றாக ஆகிக்கொண்டே இருக்கும்.

ஒரு தொழிலே புதிதாகச் செய்கிறோம் என்றால் அங்கே தொழில் செய்பவர்கள் உடல் நலம் பெற வேண்டும்… மன பலம் பெற வேண்டும்… மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும். அவர்கள் எதை உற்பத்தி செய்கின்றார்களோ அதைப் பயன்படுத்துபவர் எல்லோருக்கும் நல்லதாக வேண்டுமென்று இதைத் தியானம் செய்யுங்கள்.

இன்று ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் எவ்வளவு அழகாகக் கட்டுகின்றோம். நம் ஆறாவது அறிவின் தன்மை அழகான கட்டிடங்களைக் கட்டச் செய்கிறது.

ஆகவே அந்த ஆறாவது அறிவினைப் பயன்படுத்தி ஒவ்வொரு நிமிடமும் நம்மை இயக்கக்கூடிய பிற உணர்வுகளைத் தடைப்படுத்த அந்த மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஏக்க உணர்வை உடலுக்குள் செலுத்துங்கள்.

1.எல்லோரும் உயர வேண்டும் என்ற எண்ணத்தில் மேல் நோக்கி நினைவினைச் செலுத்தி
2.அந்த ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

நமது குருநாதர் காட்டிய மேல் நோக்கிய சுவாசம் இது தான். அதன் மூலம் நாம் விண்ணின் ஆற்றலைப் பெறலாம் அழியா ஒளிச் சரீரம் பெறலாம்.

மனித வளர்ப்பின் பலன் “ஞான வளர்ப்பின் பலனைக் கூட்டுவது தான்…” – ஈஸ்வரபட்டர்

 

கடலைக் காயை நாம் பயிரிடும் பொழுது தனி விதையாகத் தான் பயிரிடுகின்றோம். ஆனால்… செடி வளர்ந்து பலன் தரும்போது அக்கடலைக்காய் “இரண்டு விதையுடன்… பெட்டி போன்ற அமைப்பு பெற்று…” தன் வளர்ப்பின் வளர்ப்புப் பலனாக… அது எடுத்த சத்தின் ஊட்டப்பலனைப் “பலவாய்த் தருகின்றது…”\

அப்பலனின் தொடர்பலன் அதன் பயிர் நிலை ஒரே தன்மையில்தான் வளர்ந்து கொண்டுள்ளது. அது எடுத்த அமிலத் தன்மைக்கொப்ப சத்தின் வித்து பலன் தருகின்றது.

அந்தக் கடலையை நம் தேவைக்கொப்ப உணவாகவும்… எண்ணையாகவும்… எடுத்துக் கொள்கின்றோம்…

அதே போல அச்செடியிலிருந்து வெளிப்பட்ட வளர்ப்புத் தன்மை யாவையும் பல நிலைகளில் கலக்கப்படுகின்றன.
1.கடலைச் செடியை மாடுகள் உட்கொண்டாலும்…
2.மாட்டின் சத்தான பாலைத் தான் அது தருகின்றது.

அதே கடலைச் செடியை உரமாக வேறு பயிர்களுக்குச் செலுத்தினோமானால்… எந்தப் பயிருக்கு கடலைச் செடியின் சக்கையை உரமாக இட்டாலும்…
1.நெல்லுக்கோ மற்ற பயிர்களுக்கோ இவ்வுரத்தைத் தந்தாலும்
2அதனுடைய சத்தை எடுத்து நெற் பயிர் தன் பலனைத்தான் தருகின்றது.

அதாவது… ஒரு பொருளின் தன்மை பலவாகப் பலவற்றில் கலக்கப் பெற்றாலும்… பலவற்றில் சேர்ந்தாலும் சேர்க்கப்படும் செயலினால் தன்னுடைய உண்மை நிலையைத் தான் பெறுவதில்லை…! பிற செயலுக்குச் சத்தாய்த்தான் அது அமைகிறது. ஆனால்…
1.தன் வித்தின் பலன்
2.தான் வளரும் பொழுது
2.தன் சக்தின் உண்மை வளர்ச்சியை வளர்த்துக் கொண்டே உள்ளது.

இத்தன்மையைப் போன்றுதான் பூமியின் வளர்ப்பின் வளர்ப்புகளுக்கு மற்றெல்லா வளர் தன்மைகளும்,..!

இதன் தொடரைப் போன்று… மனித ஆத்ம ஞானத்தில் பெறப் பெற்ற ஒலித்தன்மையின் ஒளி ஞானத்தைப் “பிற ஈர்ப்பில் எண்ணத்தைப் பலவாகக் கூட்டப்படும் உணர்வினால்” தன்னுடைய உண்மைத் தன்மையின் சத்து நிலை வளர்க்கும் வளர் தன்மை இழக்கப்படுகின்றது.

கடலைக் காயின் வித்தை மீண்டும் ஊன்றி வளர்க்காது அதை உணவாகவும் எண்ணையாகவும் மற்றவைகளுக்கு உரமாகவும் பயன்படுத்தினால் அதன் வளர்ச்சி தடைப்படுவது போல்
1.மனிதன் உணர்வின் எண்ணத்தைப் பலவாக மோதச் செய்து விட்டால்
2.“ஞானம் என்ற உயர்வின் வளர்ச்சி” தடைப்படுகின்றது.

ஆகவே ஞானம் என்ற உண்மை வித்தை மனிதன் ஊன்றச் செய்து தனக்குள் உள்ள சத்தின் பலனை வளர்ச்சி கொள்ளும் பலனினால்தான்
1.மனித உடலிலுள்ள ஒவ்வொரு உயிரணுவுமே வித்தாகிப்…. பலவாகி…
2.பல ஞான வளர்ப்புகளைத் தன் வளர்ப்பால் வளர்க்க முடியும்.

தன் உணர்வின் எண்ணத்தில் கலக்கப்படும் ஒவ்வொரு சத்திற்கும் இவ்வுடலே செயல் கொள்கின்றது. எண்ணமுடன் மோதும் எவ்வெண்ணமும் உணர்வாகி… இவ்வுடல் தன்மையின் செயலுடன்… அதற்குகந்த வளர்ப்புத் தன்மையில் உருவாகிறது.

இத்தொடரிலிருந்து தன் ஞானத்தை அறியக் கூடிய உருவாக எண்ணத்தில் மோதும் செயலைச் சமமாக்கி…
1.இவ்வாத்ம பிம்ப சரீரக் கோளமெடுத்த ஒலி சக்தியின் ஒளியை…
2.எண்ணமும் பகுத்தறியும் ஆற்றலும் செயல் திறமையும் கொண்ட ஒளி சக்தியை
3.ஞான சக்தியாக உயர் ஞானச் சக்தியாக வளர்க்க வேண்டும்

சூரியனைச் சுற்றி அதனின் குடும்பக் கோளங்கள் சுழன்று ஓடினாலும்… அதன் சத்தைத் தானெடுத்துத் தன் சமைப்பின் ஒளியாகச் சூரியன் தன்னைத்தானே ஒளிப்படுத்தி… தன் ஒளியின் பலனாய்த் தன் தொடர்பில் வளரும் மண்டலங்களை வளர்த்து… தன் ஒளியைக் கொண்டு பிறவற்றையும் வளர்க்கின்றது.

அதைப் போன்று
1.தன்னுள் உள்ள நாத விந்துவை “குருவாக… ஒளி பெறும் ஜோதி நிலையாக்க…”
2.எண்ணத்தின் உணர்வைத் தனக்கேற்ற சத்தாக எடுத்து
3.தான் பெற்ற நாத ஒலியின் உண்மை வளர்ப்பின்… நாத விந்துகள் வளரும் வளர்ப்பில்தான்
4.எண்ணத்தின் உணர்வைச் செலுத்த வேண்டும்.

தாவரங்களுக்கோ… கனிவளங்களுக்கோ… எண்ணத்தின் உணர்வு பகுத்தறியும் செயல் நிலை இல்லாததினால் தன் தன் சத்தின் வளர்ப்பு ஜீவநிலையுடன்… அது அது வளர்ச்சி கொண்ட அமிலத் தொடர்புக்கொப்ப தொடர் வளர்ச்சி வளர்கின்றது.

இதை எல்லாம் “இயற்கை” என்கின்றோம்.

ஆனால்… எல்லாவற்றையும் பார்த்து… உணர்ந்து… செயல் கொண்டு அறியும் மனிதன்… தன் எண்ணத்தின் உணர்வை இயற்கையின் தொடர்பற்ற “செயற்கையின் நிலையைப் பெறுகின்றான்..”

இதை ஒவ்வொருவரும் உணர்ந்து… தன்னுள் உள்ள ஜீவகாந்த நாத விந்துவை வளர்க்கும் உயர் ஞானத்தின் வளர்ச்சிக்குச் செலுத்துவதே மனித வளர்ப்பின் உண்மையான பலன்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

கரையானைப் பற்றித் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

அது தன் உணவுக்காகத் தாவர இனச் சத்தை அனைத்தும் எடுத்துக் கொண்டு குவித்து தன் மலத்தை அதன் மீது போடுகின்றது. அதாவது
1.இப்பொழுது நாம் சமையல் செய்வது போல
2.பல சத்தையும் ஒன்றாக ஆக்கி அது உணவாக உட்கொள்கின்றது.

கரையான் புற்றுக்களைப் பார்த்தால் மேலே மண்ணாக இருக்கும். மண்ணை எடுத்துத் தன் உணர்வின் தன்மை உமிழ் நீரைச் சுரந்து அது மேலே கூடாகக் கட்டிக் கொள்கிறது.

அதன் மூலம் வெளியிலேயிருந்து வரக்கூடிய உணர்வுகள் அனைத்தும் இது உள்ளுக்குள்ளிருந்து மற்ற தாவர இனச் செடிகளைக் கவர்கின்றது. கவர்ந்து உள்ளே சென்றாலும் அதிலே இதனுடைய மலத்தைப் பாய்ச்சிவிடும். அதைக் குவித்து வைத்துவிடும்.

குவித்து வைத்தபின் நாம் சமையல் செய்வது போல அதைக் கரைத்து அதனுடைய மணம் வெளிப்படாது கூட்டிற்குள் அடைத்து உணவாக எடுத்துத் தன் இனக் குஞ்சுகளுக்கும் அதை உணவாகக் கொடுக்கின்றது.

கரையான் வெளிவந்த பின் ஓர் மரத்தின் மேல் இது பட்டுவிட்டால் அந்த மரத்தின் சத்தில் இதனுடைய மலம் பட்டபின் அதிலுள்ள சத்தைப் பூராம் ஆவியாக மாற்றித் தன் உணவாக உட்கொள்ளுகின்றது. பின் இந்த மரமே மண்ணாகப் போய் விடுகின்றது.

காலையில் கரையான் பிடித்தது என்றால் சாயங்காலம் பார்த்தீர்கள் என்றால் அந்த மரம் காணாமல் போகும.

நம் வீட்டு வாசலில் உள்ள நிலையில் (மரத்தினால் செய்யப்பட்டதை “நிலை” என்று சொல்வோம்) பத்து நாளைக்கு விட்டு விட்டோம் என்றால் போதும்.

பத்து நாள் கழித்துப் பார்த்தால் நிலை மாதிரித்தான் இருக்கும்.
1.மரத்தை எல்லாம் தின்று விட்டுக் கடைசியில் உள்ளுக்குள் கூடாகத்தான் இருக்கும்.
2.மண்ணாகத்தான் இருக்கும்.

இதைப் போல அது உட்கொண்ட உணர்வின் சத்தை இதனுடைய மலத்தை இட்ட பின் இது கரைத்து விடுகின்றது.

இதைப் போன்று தான் இந்த உணர்வின் சத்து முதன் முதலிலே இது உருவானபின்
1.இதைப் போல அணுக்களின் தன்மை பிரிந்த அணுக்கள்
2.மீண்டும் மண்ணுக்குள் மறைந்து “கரையான்களாக…” மாறுகின்றது.

கரையானாக மாறியதை எது எது கொன்று புசித்ததோ இது வரப்படும் போது அதைத் தனது உணவாக உட்கொள்ளும் நிலையில் கரைக்கும் ஆற்றல் பெறுகின்றது.

(கரையானைத் தின்னாத உயிரினமே இல்லை என்று கூடச் சொல்லலாம்.)

1.கரையான் எப்படிக் கரைக்கின்றதோ
2.இப்படித்தான் (கரைக்கக்கூடிய) அமிலங்கள் மாறுவதும்
3.உணர்வின் சத்து இயக்கத்தின் தன்மை மாறுவதும் என்ற நிலையைத்
4.தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார் குருநாதர்.

ஏனென்றால் உயிரணு தோன்றிய பின் முதலிலே எப்படி இருந்தது என்ற நிலையை அறிவதற்காக வேண்டி என்னைக் கரையான் புற்றிலும் எறும்புப் புற்றிலும் அமர வைத்துக் காட்டினார்.

எறும்புகளும் கரையானைப் போன்றே செய்கிறது. அதிலேயும் ஒரு விதமான அமிலங்கள் உண்டாகும்.

அந்த அமிலத்தைச் சேர்த்துக் கொண்டபின் கரையான் எவ்வாறோ இதைப் போலச் சேமித்துச் செத்தை குப்பைகளை எல்லாம் பச்சையாகக் கொண்டு போய்ச் சேர்க்கும்.

குவியலாகப் போட்டு இது மலத்தை உருவாக்கிவிடும். அது குறிப்பிட்ட காலம் வந்தபின் எடுத்து உணவாக உட்கொள்ளுகின்றது. இது எல்லாம் இந்த உணர்வின் இயக்கம்தான்.

செடியின் சத்து மணம் என்று இருந்தாலும் அந்த செடிக்குள் சேர்த்த (செடியின் மணம்) இயக்கத்தின் தன்மை உணர்வாக இயக்குகின்றது.

அந்த மணத்தின் நிலைகள் எவ்வாறு இயக்குகிறதென்ற நிலை தான் என்னைக் கரையான் புற்றில் அமரச் செய்து எவ்வாறு இயற்கையின் நிலைகள் உருவாகின்றது என்ற நிலையைக் காட்டினார்.

இப்போது நீங்கள் டி.வி.யிலேயும் பார்க்கின்றீர்கள்.

கடலுக்குல் நீருக்கடியில் போகும்போது ஆழப்பகுதிகளில் அதற்கென்ற விஞ்ஞானக் கருவி கொண்டு டெலஸ்கோப்பை வைத்துக் காணுகின்றார்கள்.

நீருக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் உணர்வின் அணுக்களையும் நீருக்குள் நுண்ணிய அணுக்கள் (ORGANISMS – உயிரினங்கள்) உருவாகுவதையும் விஞ்ஞானிகள் கண்டுணர்கின்றார்கள்.

இதைப் போல மெய்ஞானி தனக்குள் சேர்த்துக் கொண்ட உணர்வின் சத்தைக் கொண்டு விண்ணின் ஆற்றலைப் பெற்று மற்றொன்றை உருவாக்கி அந்த ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள் உணர்ந்து கொள்கின்றான்.

1.இது தீயது இதை விலக்கவேண்டும்
2.இது நல்லது இதை இணைக்க வேண்டும் என்ற நிலையில்
3.தன் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தனக்குள் இயக்கச் சக்தியினை மாற்றி அமைத்துக் கொள்கின்றான்.

1.உயிர் எப்படித் துடிக்கின்றதோ
2.அது உயிர் எப்படி இயக்குகின்றதோ அதைப் போல
3.உணர்வின் அணுக்களில் ஒருக்கிணைந்து
4.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமானவர்கள் அந்த மகரிஷிகள்.
5.சப்தரிஷிகளாக சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றார்கள்.

இயற்கையின் படைப்பு

உதாரணமாக ஒரு கண்ணில்லாத புழுவை குளவி கூட்டிலே எடுத்துக் கொண்டு வைக்கின்றது. இதை எல்லாம் நாம் பார்த்திருப்போம்.

ஆனால் கூட்டிலே எடுத்து வைப்பதற்கு முன் முதலிலே குளவி மண்ணைப் பிசைகின்றது. எதை வைத்து…?

குளவிக்குள் உமிழ் நீர் ஊறும். உமிழ் நீர் ஊறும் ஊற்றுக்குத் தக்கவாறு அது மண்ணை நோண்டுகின்றது. தன் உமிழ் நீரை அதற்குள் கொட்டி மண்ணைப் பிசையும்போது கொய்ங்…கொய்ங்… டுங்…டுங்… என்று அதிலே இரைச்சலைக் கொடுக்கின்றது.

தன் உணர்வின் தன்மை கொண்டு இரைச்சலைக் கொடுக்கின்றது. இறக்கையாலும் இந்த நாதத்தைக் கொடுக்கின்றது. நாதத்தைக் கொடுத்து மண்ணை உருண்டையாகச் சேர்க்கின்றது,

அந்த மண்ணிற்குள் கலந்திருக்கக் கூடிய காந்த ஈர்ப்பிற்குள் குளவியின் நாதங்கள் இணைகிறது. ஏனென்றால் மண்ணும் அது ஒன்றோடு ஒன்று இணைந்து தான் அது வளர்ச்சியின் தன்மை பெற்றது.

தன் ஒலிகளைச் செருகி உருட்டி எடுத்து வந்த மண்ணை வைத்து கூட்டைக் கட்டுகிறது. கூடு கட்டிய பின் ஒரு புழுவைத் தேடிச் செல்கின்றது. புழுவைத் தூக்கிக் கொண்டு வந்து கூட்டிற்குள் வைத்த பின் புழுவை இலேசாகக் கொட்டுகின்றது.

கொட்டிய பின்
1.குளவியின் பால் புழுவினுடைய நினைவுகள் அனைத்தும் திரும்புகின்றது.
2.அதே சமயத்தில் புழுவின் உயிரின் துடிப்பின் வேகம் அதிகமாகக் கூடுகின்றது. அதாவது இயக்கச் சக்தி அதிகமாகிறது.

தேள் கொட்டியவுடன் நாம் துடிக்கின்றோம் அல்லவா…! அல்லது விஷமான குளவி கொட்டி விட்டாலும் நாம் துடிக்கின்றோம் அல்லவா…!

அதைப் போல அந்தப் புழுவை குளவி கொட்டிய பின் இந்த உணர்வுகள் தூண்டி எழுந்து அது உற்சாகத்துடன் வருகிறது. வேகத்தின் நிலைகள் அதிகமாகின்றது.

குளவி கொட்டிய விஷத்தின் தன்மை அந்தப் புழுவின் தோலைச் சீக்கிரம் கருகச் செய்துவிடுகின்றது. கருகிய பின் சருகு போல் ஆகிறது. சருகு போல் ஆகும்போது அடுத்து இரண்டாம் தடவை குளவி கொட்டுகிறது. புழுவின் துடிப்பு இன்னும் அதிகமாகின்றது.

குளவி கொட்டிய வேகத்தில் புழுவின் மேல் தோல் சருகு போல ஆகும் பொழுது
1.கோழி முட்டைக்கு எப்படி ஓடு உருவாகின்றதோ
2.அதைப்போல புழுவின் தசைகளுக்குள் விஷங்கள் ஊடுருவி
3.அந்தத் தசைகள் அனைத்தும் அழுகி சருகு போல ஆகி ஒரு கருவாக உருவாகின்றது.

ஆனால் புழு உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் இந்த துடிக்கும் நிலைகள் பெறுகின்றது. அப்போது மண்ணை வைத்து அந்தப் புழுவைக் குளவி மூடி விடுகின்றது.

குளவி கொட்டியதால் கருவிற்குள் அடங்கிய இந்த புழுவின் உயிர் துடிப்பு துரிதம் ஆகிறது. குளவியையே அப்போது எண்ணி எங்குகிறது.

ஆனால் அடைப்பட்ட மண் கூட்டிலே
1.குளவி உமிழ் நீருடன் கலந்து விஷத்தைக் கொட்டியிருப்பதால்
2.புழுவிற்குள் இருக்கக்கூடிய காந்தம் வேகத் துடிப்பாகும்போது
3.கூட்டிற்கு வெளியில் இருக்கக்கூடிய காந்த அலைகளைத் தனக்குள் ஈர்க்கும் நிலைகள் வருகின்றது.

அவ்வாறு ஈர்க்கப்படும் போது இந்த உயிரின் துடிப்பு வேகும் போது காந்தப் புலன்கள் அதிகமாகிச் சூடாகிறது. சூட்டினால் உடலுக்குள் இருக்கும் அழுகிய புழுவின் தசையை ஆவியாக மாற்றித் தன் உயிரின் துடிப்பிற்குள் கொண்டு வருகிறது.

தீபாவளிக் காலங்களில்…
1.மத்தாப்பை நெருப்பை வைத்துக் கொளுத்தினால் அது எப்படிப் பல ரூபங்கள் ஆகின்றதோ
2.அதைப் போல குளவியினுடைய உணர்வலைகளை… கொஞ்சம் கொஞ்சமாக ஆடைகளாகச் சேர்த்து
3.புழுவின் தன்மை குளவியாக மாறுகின்றது.

இப்படிக் குளவியாக மாறி வந்த பின் அந்தக் குளவிக்கும் உமிழ் நீர் வருகின்றது. அப்பொழுது அந்த கூட்டிற்குள் உமிழ் நீரைக் கொட்டுகின்றது. அது ஈரமானபின் கூட்டிலே துவாரமிட்டுத் தன்னிச்சையாக வெளியே வருகின்றது.

ஆனால் முதலில் கூட்டை அடைத்து வைத்த அந்தக் குளவி வந்து இந்தக் கூட்டைத் திறப்பதில்லை. புழு குளவியான பின் அதற்குள் உமிழ் நீர் சுரந்து அந்த உமிழ் நீரைக் கொட்டித்தான் உருவான குளவி வெளியே வருகின்றது.

குளவியாக வெளியே வந்தபின் முதலில் உருவான குளவி எதைச் செய்ததோ… அதே போல் இதுவும் புழுவைத் தூக்கி வந்து மீண்டும் தன் இனத்தை உருவாக்குகிறது.

செயற்கை மின் காந்த அலையில் தான் உலகம் இன்று அடிமைப்பட்டுள்ளது – ஈஸ்வரபட்டர்

 

எறும்பிலிருந்து யானை வரை ஊர்வன… பறப்பன… நடப்பன… எல்லா ஜீவ சரீரத்திற்கும் அவை பெற்ற “ஆத்ம உயிரின் ஒளி” ஒன்று போல் தான் இருக்கின்றது.

ஆனால் ஜீவ காந்த சரீர உணர்வின் நாத ஒலி கொண்ட செயல்… இம்மனித சரீரத்தின் இயக்கத்தில் அதிகம் உள்ளது.

உணர்வின் எண்ணச் செயலை இச்சரீர இயக்கம் செயல்படுத்தக் கூடிய அங்கக்கூறுகள் பெற்ற ஜீவ காந்த சரீரத்தைப் பக்குவப்படுத்தி… அதன் பக்குவத்திற்குகதந்த ஆகாரத்தை நாம் செலுத்த ஜீவ இயக்கத் தொடர் தேவை.

மின்சாரத்தின் மூலம் விளக்கின் ஒளியைப் பெற அவ்வொளியின் செயலுக்குகந்த காந்தமின் அலை தொடர்பைச் செலுத்திக் கொண்டே இருப்பதால் தான் விளக்கின் மூலம் ஒளி கிடைத்துக் கொண்டே இருக்கிறது.. தொடர்பு அற்றால் ஒளி பெறும் தன்மையும் தடைப்படுகின்றது.

அதைப் போன்றே…
1.ஜீவ காந்த மின் அலையின் தொடர்பிற்கு
2.தன் ஒளி என்றுமே ஒளிர்ந்து கொண்டே இருக்கும் வளர் ஒளியை வளர்க்க
3.ரிஷிகள் தம் வட்டத்தின் வளர்ப்பின் தொடருக்கு
4.உணர்வின் எண்ணம் கொண்ட சரீர பிம்பங்களின் ஜீவ காந்தத் தொடர்புடன்
5.தான் பெற்ற வலுத் தன்மையின் தொடரை இப்பூமியிலே பதியச் செய்து
6.அத்தொடரின் ஈர்ப்பு வட்டத்தில் இருந்து தன் வலுவை வலுவாக்கிக் கொண்டே
7.தொடர் ஜீவ சத்தைத் தன் தொடர் வட்டத்தின் சுழற்சி கொண்டு எடுத்துக் கொண்டே
8.அத்தொடர் அலை பிரியா வண்ணம் உணர்வின் எண்ண ஜீவித தொடர்பில்
9.தன் நினைவைப் பதிய வைத்த நிலையிலேயே செயல் கொள்கின்றனர்.

அதைப் போன்றே… எண்ணத்தின் உணர்வு கொண்ட தொடர்பானது ஜீவகாந்த மின் அலை செலுத்தும் உணர்வினால் எந்த ரிஷி பெற்ற தொடர்பிலும் எண்ணத்தைச் செலுத்திட முடியும்.

அவ்வாறு செலுத்தித் தன் ஞானத்தை வளர்க்கும் வலுவை… அறிய வேண்டிய எண்ணமுடன் தொடர்பைக் கொண்டு செலுத்தக் கூடிய எண்ணத்தின் தொடர்பினால்…
1.ரிஷித் தொடர்பின் அலையை வளர்க்க
2.அந்த காந்த மின் அலைத் தொடர்பை எண்ணத்தின் பால் எடுக்கப்படும் வலுவைக் கொண்டு
3.நம் வளர்ப்பின் தொடர் சுழற்சி வலு கூடிக் கொண்டே இருக்கும்.

ஏனென்றால் ஒருவர்பால் ஒருவர் செலுத்தக்கூடிய உணர்வின் எண்ணத் தொடர்பில் தொடர் கொள்ளக் கூடிய மின் காந்த ஜீவ இயக்க வலுத் தன்மை நம் வளர்ப்பின் வலுவிற்கு மிகச் சக்தி வாய்ந்ததாக அமைகின்றது.

இதே ஜீவ காந்த வலுவை பிராணிகளிடத்திலிருந்தும் பட்சிகளிடத்திலுருந்தும் நம் உணர்வைச் செலுத்தத்தக்க வழி முறைக்கொப்ப வலுத் தன்மை பெற முடியும்.

ஜீவ காந்த சரீர எண்ண உணர்வின் செயலை…
1.நமக்குள் உள்ள உயர்ந்த தெய்வத் தன்மையை வளர்க்கும் ஞான வலுவைக் கொண்டுதான்
2.வளர வேண்டிய வலுவிற்கே சக்தி கூடுகின்றது.

விஞ்ஞானத்தால் மின் காந்த தொடர்பில் இன்று நாம் சிக்குண்டு… நாத ஒளி ஈர்ப்பை மின் அலைத் தொடர்புடன் அதிகமாகப் பெற்று… அவ்வலையின் செயலையே இப்பூமியின் காற்று மண்டல அலைத் தொடர்பில் அதிகமாய்ச் சுழல விட்டுக் கொண்டுள்ளோம்.

அதிலேயே சிக்குண்டு அதன் பிடியிலேயே எண்ணத்தைச் செலுத்தி அந்த ஒலி நாதங்களையே பெறுவதினால்
1.செயற்கை மின் காந்த செயலுக்கு…
2.இச்சரீர இயக்கமே அடிமைப்பட்டு… அதன் செயலாக ஆகிவிடுகின்றது.

ஆக.. ஒரு ரேடியோ… காற்றில் கலக்கப்படும் செயற்கைப் பதிவின் ஒலிகளை ஏரியல் மூலம் எடுப்பதைப் போன்று இச்சரீர இயக்கத்தின் ஒலி நாதத்தால்… நாதத்தின் ஒலித் தொடர்பை…
1.எண்ணத்தின் உணர்வு அறியும் தொடர்பு கொண்ட
2.எத்தொடர் அலையையும்… பதிவு கொண்ட ஒலி அலை யாவையும்… கேட்க முடியும்.
3.ஒலி பாய்ச்சிக் கேட்கும் ஒலியையும் காட்சியாகப் பார்க்க முடியும்.

இச்சரீர உணர்வின் ஜீவ காந்த மின் அலைத் தொடர்பைச் செயல்படுத்தும் ஜெப சக்தியினால் நம்மையும் வளர்த்துக் கொள்ள முடியும்.

பின்… நம் வலுவைக் கொண்டு பிறருக்கும் அந்த அலைத் தொடர்பை ஊட்டி…
1.அத்தொடர்பின் வலுவை நாம் பெற்று
2.நம் வலுவை வளர்த்தோரின் (ரிஷி சக்திகள்) வலுவுடன் செலுத்தி
3.அறிவோம்…! என்ற நிலை பெற்றுத் தன்னுள் இருக்கும் தெய்வத்தின் செயலை உணர முடியும்.

படைப்பின் படைப்பாகப் பலவற்றையும் படைக்க… ஒவ்வொரு உயிரணுவிலும் தெய்வத்தின் செயல் தன்மை செயல்படுத்துவதை செயலாக்க கூடியது இவ்வெண்ணம் தான்…!

எண்ணத்தின் உணர்வைக் கர்ம காரியத்தில் உள்ள இருளில் உள்ள உண்மையை… “ஒளி கொண்டு அறிந்து…!” ஆத்ம உயிரை வலுவாக்கி… வளர்ச்சி கொள்ளும் “தெய்வ வளர்ப்பாய்…” ஒவ்வொருவரும் வளரலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒரு நூலாம்படைப் பூச்சி அது மற்றதை உணவாக உட்கொண்டாலும் அதனுடைய மலத்தை நூலைப் போல அது உருவாக்கித் தனக்கென்று ஒரு வீட்டை அமைத்துக் கொள்ளுகின்றது.

நூலாம்படையாக அமைத்துக் கொண்ட பின் மற்ற பூச்சிகள் அதன் மேல் பட்டபின் அதற்குள் ஒட்டிக் கொள்கின்றது. தன் இரைக்காக வேண்டி அதை எடுத்துக் கொள்கின்றது.

இதைப் போலத்தான் விண்ணிலிருந்து வந்த ஒரு உயிரணு தாவர இனச் சத்தின் (உதாரணமாகப் பருத்திச் செடி) தன்மையைக் கவர்ந்து அந்த ஜீவ அணு அந்தச் செடியின் சத்தை மலமாக நூலாம்படை போல் ஆகின்றது.

நூலாம்படைப் பூச்சி எவ்வளவு அழகான நிலைகள் அந்த (தன்) வீடு கட்டுகின்றதோ இதைப் போல
1.இந்த உடலுக்குள் வந்து அது சுற்றிச் சுற்றி
2.அந்த அணுக்கள் பலவும் சேர்த்து
3.இந்த உடலை உருண்டையாக மாற்றுகின்றது. புழுவாக உருவாகின்றது.

அப்போது அந்த உணர்வின் சத்தை உடலாக்கப்படும்போது அது தான் ஜீவ அணு என்பது.

பருத்திச் செடி தன் மணத்தால் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது. அதன் உணர்வால் தனக்குள் அது எடுத்துப் பஞ்சை உருவாக்குகின்றது. அதிலிருந்து பிரித்தால் சிறு சிறு நூல்களாக இருக்கும்,

இதைப் போன்று நூலைப்போல பாய்ச்சியபின்
1.பருத்திச் செடியில் வீழ்ந்த ஓர் உயிரணு
2.இது உறையும் இடம் உடலாக மாறுகின்றது.
3.அதாவது பருத்திச் செடியில் உருவாகும் புழு இப்படித்தான் உருவாகின்றது.

இப்போது மனிதர்களாக இருக்கும் நம் உடலில் நரம்பாக இருக்கின்றது.

இதைப் போல நூலாம்படைப் பூச்சி என்ற நிலைகள் வரப்படும் போது அந்த நூலாம்படையில் ஒரு ஈ பட்டால் அதைத் தேடி வந்து அது உணவாகப் புசிக்கின்றது.

அல்லது தனது உணவுக்குப் போக மீதியை அந்த ஈயையோ மற்றது மேலே அது சுற்றிச் சுற்றிச் சுற்றி அது உருவாக்கிவிடுகின்றது.

பின் அதற்குள் அந்த ஈயின் உயிரணு சிக்கி அந்த ஈயின் உயிரான்மா கரைந்து இந்த நூலாம்படைப் பூச்சி போன்ற எட்டு கால் பூச்சியைப் போன்று அது உருப்பெறுகின்றது.

அது வெளிப்பட்டபின் இதனின் உணர்வு அதற்குள் கலந்து அதனின் செயல் எதுவோ அதைப் போன்று அது செயல்படுகின்றது.

இதைப் போன்று தான் பருத்திச் செடியின் இலையின் ரூபம் எவ்வாறோ பருத்திச் செடியில் விழுகும் உயிரணு அது சுவாசித்து அது வெளியிடும் மலம் அதற்குள் சிக்கி சுவாசிக்கும் உணர்வுகள் பூராம் கருவாக உருவாகி அதனின் இனமாகி இதைப்போல உடலில் உறுப்புகளை மாற்றுகின்றது.

இதைப் போலத்தான் நாம் புழுவிலிருந்து மனிதனாக நாம் வரும் வரையிலும்
1.பல கோடிச் சரீரங்கள் பெற்று
2.அந்த உயிரணு ஒவ்வொரு சரீரத்திலும் தான் சுவாசித்த உணர்விற்கொப்ப ஜீவ அணுக்களாகி
3.அதனின் மலம் தசைகளாகி உடலாகி உறுப்புகள் வளர்ச்சியானது.

இதெல்லாம் இயற்கையில் சில நியதிகள்.

இதையெல்லாம் நாம் அறிந்து கொள்வதற்குத் தான் அந்த ஞானிகள் தான் கண்டுணர்ந்த நிலையைத் தன் இன மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான் உயிரணு தோன்றி உடல் பெற்ற நாளைச் “சிவன் ராத்திரி” என்று காட்டினார்கள்.

ஆத்ம ஜோதி ஜொலிக்கும் சந்தர்ப்பம் – ஈஸ்வரபட்டர்

கர்ம காரிய இருளிலிருந்து ஒளியான ஞானம் பெற உணர்வின் எண்ணத்தைக் கர்ம காரிய வாழ்க்கை இருளிலிருந்து உண்மையை… “ஒளி பாய்ச்சி” அறிதல் வேண்டும்.

சூரியனின் மோதல் பூமியின் மேல் நேர் பார்வையில் மோதும் பொழுது தான் இருளான இப்பூமியின் ஒளி வெளிப்படுகின்றது. அதைப் போன்று…
1.உணர்வின் எண்ணத்தை… “அறிவோம்” என்ற ஞான வழிக்கு இவ்வெண்ணத்தைக் கூட்டும் பொழுதுதான்
2.வாழ்க்கையில் ஏற்படும் கர்ம காரியச் செயலில் இருந்தெல்லாம்
3.நம் ஆத்ம ஒளிக்கு ஒளி பெற முடியும்.

பூமியின் நீர் நிலை உப்புக் கலந்ததாய் உள்ளது. கடல் நீரும் உப்பு. இப்பூமியில் கடல் மட்டத்திற்கு மேல் பல ஆயிரம் அடிகள் உயர்வாக உள்ள மலைப் பிரதேசங்களில் உள்ள கிணறுகளில் நீரும் உப்பாய் உள்ளது.

ஆனால்…
1.ஆழ் கடலிலும் ஆங்காங்கு பல இடங்களில் உப்பில்லாமல் “நல்ல நீர்” கிடைக்கின்றது.
2.அதே போல் இப்பூமியிலிருந்து வெளிப்படும் ஆவி அலையின் சத்தில் பெய்யும் மழை நீரும் உப்புக் கரிப்பதில்லை.

மழை நீர் குணம் கொண்டதாக… இப்பூமி சுழற்சியில் பெய்யும் மழை நீர் எல்லாமே சுவை கொண்டதாகத்தான் பெய்கின்றது. பூமியுடன் கலந்து செயல்படும்போது அந்த நீர் உப்பாகி விடுகின்றது.

அதைப் போன்று…
1.இவ்வாழ்க்கை கர்ம காரிய உடலில் இருந்து வெளிப்படும் இருளான உண்மையிலிருந்து
2.ஒளி கண்டு… காணும் அறியும் நிலையை…! நாம் ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

அதாவது… கடல் நீரும் கிணறுகளில் உள்ள நீரும் உப்பாயிருந்தாலும் கடலின் மத்தியிலே சுவை கொண்ட நல்ல நீரை நாம் காண்பது போன்று
1.இவ்வுடலில் ஏற்படக்கூடிய உணர்வின் எண்ணச் செயலில் மோதும் எச்செயலையும்
2.இருளான நிலைப்படுத்தி மோதும் அந்தச் செயலிலுள்ள உண்மை ஒளியை
3.நமக்குகந்த சத்தாக… “ஒளி” பெற வேண்டும்.

பூமியில் பல கோடி மண் வள கனி வள சத்து நிலைகள் மாறி மாறிப் படர்ந்திருந்தாலும் அச்சத்தின் சத்தாய் அங்கங்கு… சில இடங்களில்… வைரத்தின் ஒளிக் கற்கள் (வைரங்கள்) வளர்கின்றதல்லவா..!

அதைப் போன்று இவ்வுடலின் உணர்வு எண்ணக் கோள கர்ம காரிய சரீர இயக்கத்தில் உள்ள உண்மை வெளிப்பட…
1.ஞானமென்ற ஒளியை…
2.காரிய சிந்தையை…
3.காரிய சித்தாய்
4.“நம் ஒளி ஞானம்” செயல்படல் வேண்டும்.

பிறர் பால் உள்ள குறைவினாலேயே… உயர்வினாலேயே… நம்மை உயர்த்தியும்… குறைத்தும்… எண்ணத்தைச் செலுத்தாமல்…
1.அறியும் ஞான ஒளித் தொடரில் மோதப்படும் ஒவ்வொரு நிலையில் இருந்தும்
2.நம் உயிர் ஆத்மாவிற்கு ஜீவ காந்த வளர்ப்புக்குகந்த சத்து நிலை உணர்வில்
3.நாம் கூட்டும் ஒளி நிலை கொண்டு தான்… ஆத்ம ஜோதி ஜொலிக்க வேண்டும்.

எண்ணமுடன் கூடிய உணர்வினால்தான்… ஒளி நிலையான ஜோதி நிலைக்கு… “இவ்வாத்ம உயிரை” ஜீவ காந்த மின் அலையைக் கொண்டு… வலு கூட்ட முடியும்.

இஜ்ஜீவ காந்தமின் அலை உணர்வு சரீரத்தைக் கர்ம காரியத்தில் சுழலும் மாய வாழ்க்கை இருளிலிருந்து எண்ணத்தை அறியும் ஞான ஒளி பாய்ச்சி… உண்மையை உயிராத்மா வலுக் கூட்டிக் கொள்ள வளர் ஞானம் கொள்ள வேண்டும்.

அந்த வளர் ஞானம் கொண்டோமானால்… இன்றெப்படி வாழ்க்கையில் சுவை… மணம்… உணர்வு… உறக்கம்… போன்றவற்றில் இன்ப நிலையை உணர்கின்றோமோ…
1;இவற்றிற்கு மேல் பேரின்ப நிலையான ஒளி சக்தியைக் கொண்டு
2.மனித பிம்பத்தில் உணர முடியாத உன்னதமான… இனிமையான…
3.சுவை கலந்த இன்ப நிலையைப் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நீங்கள் நல்லதைச் செய்து கொண்டே வந்தால் என்றால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்…?

1954ல் ஒரு சமயம் நான் (வேணுகோபால் சுவாமிகள்) பழனியில் மில்லில் மேஸ்திரியாக வேலை பார்க்கும் போது செல்லையா என்று ஒருவர் வந்தார். மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். அவர் தரித்திரமாக அதாவது ஒன்றும் இல்லாத நிலையில் வந்தார்.

தரித்திரமான நிலையில் வரப்படும் போது நான் என்ன செய்தேன்…?

அவரை நன் வேலை பார்க்கும் மில்லிற்கு கூட்டிக் கொண்டு வேலை பழகிக் கொடுத்தேன். அந்த மில்லில் எனக்கு உதவியாக வேலைக்கும் சேர்த்துக் கொண்டேன்.

கிருஷ்ணமூர்த்தி என்பவர் அவர் ஜெயிலுக்குப் போய்விட்டு வந்தவர் அவர் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த மில்லை விலைக்கு வாங்கினார்.

மில்லை வாங்கிய பின்னர் அவருடன் சேர்ந்த ஒரு குரூப் நெய்க்காரப்பட்டியிலிருந்து அங்கே வேலைக்குச் சேர்ந்தது.

புதிதாக ஆள்கள் எல்லாம் போட்டு வேலை செய்யும் போது நான் வேலை பழகிக் கொடுத்து வேலைக்குச் சேர்த்தவன் உயர்ந்த பிற்பாடு என்ன செய்தான்?

இந்த மில்லை கிருஷ்ணமூர்த்தி வாங்கியவுடனே அவர்கள் ஆட்களாகக் கொண்டு வந்து வேலைக்குச் சேர்த்தவர்களுக்குள் ஒரு மேஸ்திரியும் வந்தார்.

நான் ஒரு மேஸ்திரி. அவர் ஒரு மேஸ்திரி.

நான் எல்லாரையும் தட்டிக் கொடுத்து அனுசரித்து வேலை வாங்கியதால் நான் வேலை பார்க்கும் ஷிப்டில் “உற்பத்தி…” அதிகமானது.

அந்த மேஸ்திரி அடுத்த ஷிப்டில் இருக்கிறார். நான் மற்றொரு ஷிப்டில் இருக்கின்றேன்.

புதிதாக வந்த மேஸ்திரியோ “தான் முதலாளி ஆள்…” என்று வேலை பார்ப்பவர்களை மிரட்டிக் கொண்டே இருந்தார். அதனால் அங்கே புரடக்ஸன் ஆகவில்லை.

நான் மற்றவர்களுடன் சேர்ந்து சந்தோஷத்தை ஊட்டி வேலை செய்வதால் என் ஷிப்டில் புரடக்ஸன் நன்றாக ஆகின்றது.

தினமும் உற்பத்தி சம்பந்தமான ரிபோர்ட் (PRODUCTION REPORT) போகும் போது மேலே விவரம் கேட்கிறார்கள்.

என் ஷிப்டில் உற்பத்தி அதிகமாகின்றது. அவர்கள் கூட்டிக் கொண்டு வந்த ஆட்கள் வேலை செய்யும் ஷிப்டில் புரடக்ஸன் சரியாக வரவில்லயே… “ஏன்…?” என்று கேட்கிறார்கள்.

இதற்காக வேண்டி என்னைக் குற்றவாளியாக ஆக்குவதற்காக அந்த மேஸ்திரி முயற்சிக்கின்றார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்தது யாரை…?

நான் முதலாளியிடம் சொல்லி வேலையை வாங்கிக் கொடுத்தேன் அல்லவா. அந்தச் செல்லையாவைக் கைக்குள் போட்டுக் கொள்கின்றார்கள்.

புதிய மேஸ்திரி – நான் சொல்வது போலச் செய்யவேண்டும் என்று சொன்னவுடன் நீங்கள் சொல்வது போலச் செய்கின்றேன் என்று செல்லையாவும் சொல்லிவிட்டான்.

“என்னைக் குற்றவாளியாக்குவதற்காக” – உற்பத்தியைக் கூடக் காண்பிப்பதற்காக வேண்டி ஏற்கனவே உற்பத்தியான நூல்களை மீண்டும் மீண்டும் எடை போடுகின்றார்கள்.

மில்லில் மிஷின் ஓடுகின்ற இடத்தில் அண்டர் கிரவுண்ட்க்குள் (UNDER GROUND) வயர் போகும். அங்கே கொண்டு இந்த நூல்களைக் கூடையில் போட்டு திட்டமிட்டு மறைத்து வைத்து விட்டார்கள்.

மறைத்து வைத்ததும் என்ன ஆனது…?

இது எனக்குத் தெரியாது. நான் தான் ஷிப்ட் முடிந்து போய் விடுகிறேன் அல்லவா…!

நான் அதை எடுத்து இவ்வாறு ஒளித்து வைக்கச் சொன்னதாகவும் அதற்குச் சாட்சிக்காக செல்லையாவை வைத்துக் காட்டலாம் என்று அவ்வாறு முடிவு செய்தார்கள்.

எதற்காக எடுத்து வைத்திருக்கிறார்கள்…? இரண்டாவது முறையாக நாளைக்கு எடை போட்டுக் “கூடுதலாகக் காட்டுவதற்காக… நான் வைத்துள்ளேன்” என்று இப்படி ஜோடிக்கின்றார்கள்.

இதற்கு மாஸ்டர்கள் எல்லாம் சாட்சி. அடுத்த ஷிப்டில் ஆள்கள் வந்தவுடனே அவர்களிடம் எல்லாம் சொல்லிவிடுகிறார்கள். ஆட்களிடம் சொன்னவுடனே இதைப் பார்த்துக் கொண்டார்கள்.

அடுத்தாற்போல என்ன செய்கிறார்கள்…? நான் ஷிப்ட் முடிந்து போனதும் ஓடுகின்ற மிஷினில் உள்ள பினியன் (பல் சக்கரம்) இருக்கிறது. ஓடுகின்ற அதன் (LOCK) லாக்கை “வேண்டும் என்றே..” எடுத்து விடுகின்றார்கள்.

அதை எடுத்து விட்டால் சக்கரம் இறங்கிப் போகும். ஓடாது. இந்த மாதிரி 2-3 மிஷினில் செய்து வைத்து விட்டார்கள்.

அவ்வாறு செய்து அப்பொழுது நான் உற்பத்தியைக் குறைத்து விட்டேன் என்று காண்பிக்கின்றார்கள்.

பல் சக்கரம் சரியாக இல்லை என்றால் நூல் வெளியில் வந்து தூசியாகப் பறக்கும். இப்படிச் செய்து வைத்துவிட்டுப் போய்விட்டார் (நான் செய்ததாக). அதனால் “நாங்கள் எப்படிப் புரடக்சன் எடுப்பது…?” என்று என்னைப் பற்றித் தவறாகச் சொல்கிறார்கள்.

இதெல்லாம் நான் தான் செய்யச் சொன்னதாகவும் நான் சொன்னதால் அவ்வாறு செய்ததாகவும் அந்தச் செல்லையாவே சொல்கிறான்.
.
நான் தரித்திர நிலையில் வந்தவரை வேலைக்குச் சேர்த்து யாரைப் காப்பாற்ற நினைத்தேனோ அவர் (செல்லையா) இப்படிச் சொல்கிறார், இந்த மாதிரி எல்லாம் பல் சக்கரத்தை என்னை வைக்கச் சொல்லிச் சொன்னார் என்று.

ஏனென்றால் முதலாளி மாறிவிட்டார்.

அவரிடம் சலுகை பெறுவதற்காக அந்த மேஸ்திரி செல்லையாவைக் கைக்குள் போட்டு அவனுக்கும் கொஞ்சம் காசைக் கொடுத்து இந்த மாதிரிச் செய்கின்றார்.

நல்ல மனம் படைத்தவர்களுடைய நிலைகளை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய அனுபவத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த மாதிரி மாதா மாதம் செய்து “பொய்யான ரிக்கார்ட்” உருவாக்குகின்றார்கள்.

இப்போது அவரைக் (என்னை) கேட்க வேண்டாம். அவர் (நான்) செய்கின்ற தவறை எல்லாம் பாருங்கள். எனக்குப் (புதிய மேஸ்திரிக்கு) புரடக்ஸன் ஏன் சரியாக ஆகவில்லை…? என்று அப்புறம் நீங்கள் நிர்ணயம் செய்து கொள்ளுங்கள் என்று முதலாளியிடம் சொல்கிறார்.

ஒவ்வொரு நாளும் நடந்ததை என்னைப் பற்றிய ரிப்போர்ட் எல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள்.

அதாவது உற்பத்தியைக் கூடுதலாகக் காட்டினார். பல் சக்கரத்தை இறக்கிவிட்டார். அதை உடைத்தார்… இதை உடைத்தார்… என்று இப்படி ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதமாகச் செய்தார்… என்று ரிப்போர்ட் எழுதி வைத்துள்ளார்கள்.

என்னிடம் விசுவாசமாக வேலை பார்த்தவர்கள் இருக்கிறார்களே அவர்கள் என்னிடம் வந்து உண்மைகளைச் சொல்கிறார்கள். இந்த மாதிரிச் செல்லையா என்பவன் உங்களைப் பற்றித் தவறாகப் பல ரிப்போர்ட் கொடுக்கின்றான் என்று என்னிடம் சொல்கிறார்கள்.

செல்லையா ரிப்போர்ட் செய்து கொண்டு இருக்கிறார் என்று சொன்னவுடன் “சரி… அவரவர் செயலை அவரவர் எடுத்துக் கொள்ளட்டும்…! போகட்டும்…!” என்று நான் சொல்லி விட்டு விட்டேன்.

ஏனென்றால் அப்போது எனக்கு இரண்டு ஷிப்டிலும் நல்ல மரியாதை உண்டு.

கஷ்டப்படுகிறவர்களுக்கு வெளியில் ரேஷன் அரிசி எல்லாம் கொடுத்து உதவி செய்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் முக்கால் ரூபாய் தான் சம்பளம்.

செல்லையா துண்டு கூட இல்லாமல் வந்தவன். அவனுக்கு நான் வேலையே வாங்கிக் கொடுத்தேன். ஆனால் அவன் இப்படிச் செய்கிறான்.

அப்புறம் என்ன ஆனது…?

முதலாளி கூப்பிட்டுக் கேட்கிறார். அவருக்கு என் மேல் நம்பிக்கை உண்டு.

இருந்தாலும் இதெல்லாம் உன்னைப் பற்றி இப்படிச் சொல்கிறார்கள். என்று கேட்கிறார். ஏனப்பா இந்த மாதிரி எல்லாம் செய்கிறயாமே…?

என்னங்க…? என்று கேட்டேன்.

செல்லையாவைக் கூப்பிடுகிறார்கள்.

அவன் என்னிடம் கேட்கிறான். ஏனுங்க…! அண்ணா…! நான் உடலில் கட்டிக் கொள்வதற்கு துண்டு இல்லாமல் இங்கே வந்தேன் அல்லவா?

ஆமாம்.

அப்பொழுது கட்டிக் கொள்வதற்கு வேஷ்டி கொடுத்தீர்கள். உங்கள் சட்டையைக் கழற்றிக் கொடுத்து விட்டு பனியனுடன் வீட்டுக்குப் போனீர்கள் அல்லவா?

ஆமாம்.

எனக்குச் சாப்பாடு இல்லை என்கிற பொழுது உங்கள் வீட்டிலிருந்து தினமும் சாப்பாடு கொடுத்தீர்கள் அல்லவா.

ஆமாம். அதற்கெல்லாம் இப்பொழுது என்னப்பா…? என்றேன் நான்.

இப்படி எல்லாம் நீங்கள் பல வகையிலும் உதவி செய்திருக்கும் போது “நான் உங்களுக்குத் துரோகம் செய்வேனா…?” என்று என்னிடம் கேட்கிறான்.

இது நடந்த நிகழ்ச்சி.

1.இந்த உதவி செய்ததே…
2.எனக்கு எப்படி எதிரியாக மாறுகிறது… என்று
3.இந்த உலகம் எப்படி என்று பாருங்கள்.

உங்களுக்கு என் (செல்லையா) மீது நம்பிக்கை இருக்கிறது அல்லவா. நான் எப்படிச் செய்வேன் என்று உங்களுக்குத் தெரியும் அல்லவா…! எனக்கு இத்தனை உதவி செய்தீர்கள்.

1.நீங்கள் தானே இந்தப் பல் சக்கரத்தில் ஆணியை வைக்கச் சொன்னது.
2.நீங்கள் தான இந்த நூலை அங்கே கொண்டு ஒளித்து வைக்கச் சொன்னது என்று கூசாமல் சொல்கிறான்.

எப்படி இருக்கும்…? எனக்கு…! எப்படி இருக்கும் உங்களுக்கு…?

இதை எல்லாம் கேட்டவுடன் மற்ற தொழிலாளிகள் பொரிகிறார்கள். இவனைக் (செல்லையாவை) கொன்று விட வேண்டும் என்ற உணர்வு வருகிறது.

என் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியை அனுபவித்துச் சொல்கிறேன்.

அப்புறம் மேனேஜரிடம் சொன்னேன்.

நான் அவருக்கு நன்மை தான் செய்திருக்கிறேனே தவிர எந்தத் தீமையும் செய்யவில்லை. மில்லுக்கு நான் நன்மை தான் செய்திருக்கின்றேனே தவிர தீமை செய்யவில்லை.

எல்லாரும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று தான் உழைத்தேன். இப்படித் திருட்டுத்தனமாக வாழ வேண்டும் என்று இல்லை.

எனக்கு எல்லாத் தொழிலும் தெரியும். நான் வெளியிலே போனால் பிழைத்துக் கொள்வேன். இந்தக் குற்றத்திற்கு என்னால் பதில் சொல்ல முடியாது. நான் வேலையை விட்டே போய்விடுகிறேன் என்றேன். வேலையை விட்டு வந்து விட்டேன்.

இனி இவனை எல்லாம் விட்டோமென்றால் சரி கிடையாது. செல்லையா தவறு செய்யவில்லை. அவன் அந்த மேஸ்திரி தான் எல்லாத் தவறையும் செய்திருக்கின்றான். அந்த மேஸ்திரியைத் தீர்த்துக் கட்டினால் சரியாகப் போகும் என்று சொல்லி அந்த வெறுப்பிலேயே போய்க் கொண்டிருந்தேன்.

பழநி மலையில் போய் பின்னாடி உட்கார்ந்து விட்டேன். அப்போது முருகன் மேல் பக்தி. முருகனிடம் சொல்வதற்குப் போய்விட்டேன். அங்கே இரவு முழுவதும் இருந்தேன்.

பின்னாடி அழகு நாச்சியம்மன் கோவில் ஒன்று இருக்கிறது. அடுத்தாற்போல துர்க்கை. வனதுர்க்கைக் கோயில் இருக்கிறது.

வன துர்க்கை…, “அவன் எல்லாம் இப்படிச் செய்தானே… நீ ஏன் என்று கேட்க மாட்டாயா…” என்று சொல்லிவிட்டுச் சுற்றிப் பின்னர் ரணகாளி கோவிலுக்குப் போனேன்.

“நான் தவறு எதுவும் செய்யவில்லையே…! அவன் இந்த மாதிரிச் செய்கிறானே என்று சொல்லிவிட்டு நீயே கேள்….!” என்று அதைத்தான் சொல்லிப் போய்க் கொண்டு இருக்கிறேன்.

இதை நினைக்க நினைக்க இந்த வனதுர்க்கை ரணகாளி மகேஸ்வரி எல்லாம் பார்த்த பின் “அவனைக் கொல்ல வேண்டும்…” என்ற உணர்ச்சி தான் எனக்குள் வருகின்றது அடக்குவதற்க்கு வழி இல்லை.

அவனைக் கொன்று போட்டுவிட்டு வேறு வேலை பார்க்க வேண்டும் என்று தோன்றுகின்றது.

வீட்டுக்கு வந்தேன்.

நான் ஏற்கனவே சுதந்திரப் போராட்ட காலங்களில் தற்காப்புக்காக வேண்டி மிலிட்டரிக்கார் கொடுத்த ஒரு பிரெஞ்சு துப்பாக்கி அதை மறைத்து வைத்திருந்தேன். ஒரே சமயத்தில் அதில் பன்னிரண்டு குண்டுகள் பாயும்.

சுதந்திரப் போராட்ட காலங்களில் அதைப் பயன்படுத்தவில்லை. ஏதாவது ஆபத்து வந்தால் தப்பித்துக் கொள்வதற்காக மட்டும் வைத்திருந்தேன். அது மட்டும் கடைசி வரை ஒளித்து வைத்துக் கொண்டேன்.

சுதந்திரத்திற்காக காந்திஜி வழியில் போய் அடி வாங்கினேனே தவிர யாரையும் நான் கொலை செய்யவில்லை.

ஏனென்றால் என்னுடைய சரித்திரத்தை நீங்கள் தெரிந்து கொண்டால் சிறிது நன்றாக இருக்கும். அதற்காகச் சொல்கிறேன்.

வீட்டுக்கு வந்து பிஸ்டலை எடுத்துக் கொண்டேன். முக்கால் ரூபாய் இருந்தது. முக்கால் ரூபாயையும் என் இரண்டு பையன்களிடம் கொடுத்தேன்.

இரவு பன்னிரண்டு மணிக்கு நான் என்ன செய்தேன்…?

நடு இரவில் அந்தச் செல்லையா என்கிறவனைக் கட்டி குழி தோண்டிப் புதைப்பதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அதைப் பார்த்ததும் அடப்பாவிகளா…! அவன் தவறு செய்யவில்லை. அந்த மேஸ்திரி தானே தவறு செய்தான்… என்று எனக்கு “இன்னும் கொஞ்சம் வீரியம்…” ஜாஸ்தியாகி விட்டது.

அவன் சோற்றுக்கு வந்தவன்… கஷ்டப்படுபவன். பிழைப்புக்கு வழி இல்லாமல் அவன் கூடச் சேர்ந்து கொண்டான். இதை விட்டுவிட்டால் மறுபடியும் தரித்திரம் ஆகிவிடுமோ…? என்ற நிலையில் அறியாத நிலையில் அவனுடைய உணர்வு இப்படி இயக்குகின்றது.

நேராக வந்து வாழைத் தோப்புக்குள் கட்டி வைத்த செல்லையாவைக் கழற்றி விட்டேன்.

“தப்பித்துப் போயிருப்பா…” என்று சொல்லிவிட்டேன். எல்லாரும் சேர்ந்து குழி தோண்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் இவரைக் கட்டி வைத்திருக்கிறார்கள். அவிழ்த்து விட்டு என் கூட வா என்று சொல்லிப் போகச் சொல்லிவிட்டேன். காந்திய வழியில் அவரைத் தப்பித்துப் போகச் சொல்லி விட்டேன்.

அவனைக் கழற்றி விட்டுவிட்டு நான் வேறு பக்கம் போய்விட்டேன். போய்விட்டு பின்னர் காலையில் ஆறு மணி ஏழு மணி ஷிப்டிற்கு அந்த மேஸ்திரி வருவான் அல்லவா…!

6.30 மணிக்கு அந்த நேரத்தில் அவரை கேட் முன்னாடி வைத்துச் சுட்டு விட வேண்டும் என்று நினைத்துப் போகின்றேன். இந்தத் திட்டத்தில் போகின்றேன். துப்பாக்கியை எடுத்து வைத்துக் கொண்டு போகின்றேன்.

செல்லையா தவறு செய்யவில்லை. அவன் தவறு செய்கிறான். ஆனால் அவர் இன்னும் எத்தனை பேருக்கு இந்தக் கெடுதல் செய்வாரோ…?; என்ற எண்ணம் ஆத்திரமாகி விட்டது,

செல்லையா ஏமாந்திருக்கிறார். அவர் வழியில் இவரைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்.

அப்புறம் சண்முகநதிப் பாலத்தின் மீது போனேன்.

என் பிள்ளைகளுக்குக் காசு கொடுத்திருந்தேன் அல்லவா…! இந்த உணர்வு என்ன செய்கிறது…?
1.“நைனா… நைனா…” என்று என் கையைப் பிடித்து இழுக்கின்ற மாதிரி இருக்கின்றது.
2.அது போல ஒரு பிரமை.
3.அப்புறம் அந்தக் கற்பனைகள் எட்டுகின்றன.

நாம் இப்படிச் செய்தால் அந்தக் குழந்தைகள் எல்லாம் அனாதையாகிவிடும். அனாதையாகி விட்டால் நாம் என்ன செய்வது…? என்ற உணர்வுகள் திரும்புகின்றன.

அப்புறம் சண்முகநதிப் பாலத்தில் இருந்து நேராக ஆற்றிலே போய்க் கொண்டே இருக்கின்றேன். அப்போது இரயில் எஞ்சின் (புகை வண்டி) ஒன்று பழனி இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அதில் தண்ணீரைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
நல்ல தண்ணீர் என்று அங்கே இரயில் நின்று கொண்டு இருந்தது. அந்த இடத்தில் பிஸ்டலைத் தூக்கிப் போட்டுவிட்டேன்.

அவனைக் கொல்ல வேண்டும் என்று நினைத்து வந்தேன். ஆனால் நாம் தவறு செய்து விட்டால் என்ன செய்வது…? என்று எண்ணினேன். அதனால் பிஸ்டலை அங்கே போட்டு விட்டேன்.

அதை போட்டுவிட்டு இரயிலில் ஏறி “ஜம்..” என்று உட்கார்ந்தேன். டிக்கெட்டும் எடுக்கவில்லை.

என்னுடன் பூலாங்கிணறு பிரீமியர் மில்லில் வேலை பார்த்தவர்கள் நிறையப் பேர் உண்டு.

ஏற்கெனவே ஒரு சமயம் மதுரையில் இருக்கும் பொழுது அங்கே ஒருவரை சில ஆபத்தில் இருந்து காப்பாற்றினேன். அவர் பிரிமியர் மில்லில் இருக்கிறார்.

அப்படி என்னிடம் வேலை செய்ததில் கொஞ்சப் பேர் இருந்ததனால் அங்கு போய் இறங்கிவிட்டேன். என் கையில் காசு இல்லை. இறங்கினால் அங்கு டிக்கெட் பரிசோதனைக்கு ஒருவரும் இல்லை. நான் பாட்டுக்கு இறங்கிப் போய்விட்டேன்.

அது லோக்கல் வண்டி. பூலாங்கிணறு வந்தவுடன் இறங்கிவிட்டேன்.

இறங்கி அங்கே போனவுடன் என்னைப் பார்த்தவுடன் எல்லோரும் வாங்க… வாங்க… என்று வரவேற்பு பலமாக இருந்தது, லட்டு ஜிலேபி என்று என்னென்னமோ பலகாரமெல்லாம் வாங்கிக் கொடுத்தார்கள்.

ஆனால் என் நிலையோ மோசமாக இருக்கிறது.

இந்த மாதிரி நிலையில் நான் அங்கு போனால் எல்லோரும் ஆதரிக்கிறார்கள். ஆனால் என் மனதிற்குள் இப்படி இருக்கிறது.

அவர்களிடம் பொய் சொன்னேன்.

பழனியிலிருந்து புறப்பட்டு வந்தேன். உடுமலைப் பேட்டை வருவதற்கு முன்னாடி கையில் இருந்த காசை யாரோ எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். அவர்களிடம் இப்படிப் பொய் கூறினேன்.

இப்பொழுது கையில் காசு இல்லை. மில்லில் இருந்து சாமான்கள் வாங்கி வரச் சொன்னார்கள். வாங்கிக் கொண்டு போகவில்லை என்றால் நாளைக்கு என்னைக் குற்றவாளியாக ஆக்குவார்கள் என்று சொன்னேன்.

அதனால் ஒரு ஐநூறு ரூபாய் வேண்டும் என்றேன்.

ஐநூறு ரூபாய் என்ன…? உனக்கு ஆயிரம் ரூபாய் கூடக் கொடுக்கிறேன் என்றார்கள். அப்புறம் எல்லோருடனும் உட்கார்ந்து சாப்பிட்டேன்.

அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு நான் அப்படியே புறப்பட்டுப் போய்விட்டேன். கோயம்புத்தூருக்கு வந்துவிட்டேன்.

கோயம்புத்தூர் போனால் அடுத்து எங்கே போகின்றேன்…? எனக்கே தெரியவில்லை.

இங்கு சிறிய ரயில். அங்கே பெரிய ரயிலாக இருக்கிறது.

பெங்களூர் போவதற்குத் தெரியாது என்று அங்கு மேஸ்திரி ஒருவர் இருந்தார். அவர் மருமகனிடம் சொல்லி “டிக்கெட் எடுக்க வேண்டும்” என்றேன்.

எங்கே போகவேண்டும்…?

அகமதாபாத் போகவேண்டும். சாமான்கள் வாங்க இங்கே கம்பெனியில் அனுப்பினார்கள் என்று அப்படிச் சொன்னேன்.

அவர் வந்து விவரம் கேட்டு என் கையில் டிக்கெட் எடுத்துக் கொடுக்கிறார்.

கொடுத்தவுடனே முதலில் பெங்களூர் வண்டியில் ஏறி என் தம்பியை (ராதா) இருக்கின்றாரா என்று பார்த்துவிட்டுப் போகலாம் என்று நினைத்து பெங்களூரில் இறங்கித் தம்பியைப் பார்க்கச் சென்றேன்.

என் தம்பி அங்கே இல்லை. ஊட்டி போனபோது வண்டி ஆக்ஸிடண்ட் ஆகி உங்கள் தம்பி தொங்கிக் கொண்டு வந்தார். மிலிட்டரியில் எந்த ரகசியமும் சொல்லக்கூடாது என்று சொல்லி விட்டார்கள். தம்பி இங்கே இல்லை என்றார்கள்.

அப்போது கையில் பணம் இருக்கிறது. எனக்கு வெளியில் போய் ரூம் எடுத்துப் பழக்கம் இல்லை.

மிலிட்டரியில் நமக்குத் தெரிந்தவர்கள் சிறிது பேர் இருக்கிறார்கள். இந்த கேம்ப்ல இருக்கார். அந்த கேம்ப்ல இருக்கிறார் என்று சொல்லுகிறார்கள்.

கையில் காசு இருக்கிறது. அதனால் ஹோட்டலில் சாப்பிடுவது மற்றும் ரூம் எடுக்கத் தெரியவில்லை. அதனால் திண்ணையில் படுத்து கொள்கிறேன்.

மேலே போர்த்தியுள்ள பெட்சீட்கூட நனைந்து போய்விடுகிறது பெங்களூரில் விறு… விறு… என்று ஆகின்றது.

அப்புறம் தம்பி வந்தார். வந்தவுடன் கூட்டிக்கொண்டு போகிறார். அப்புறம் கூப்பிட்டுப் போய் என் அண்ணன் இவர் தான் என்று சொன்னார்.

இவர் எப்படி மில்ட்டரிக்கு போனார்….! என்றால் என் அம்மா பெட்டியில் உள்ள செயின் ரூபாய் எல்லாவற்றையும் எடுத்து விற்றுவிட்டு மிலிட்டரிக்குப் போய்விட்டார்.

“வரட்டும் அவனை உதைக்கிறேன்..” என்று அப்பா சொல்கிறார்கள். அப்பொழுது அவன் சிறிய பையன்.

அப்பா என்ன செய்கிறார்…? வந்தால் அவனைக் கொன்று விடுவேன். ஒரு தடவை விடுமுறை அன்று வந்தபோது கூட வெளியில் தான் நிற்க வைத்தார். அவ்வாறே அனுப்பினார்.

பணத்தை எடுத்துச் சென்றதால் “அப்பா” என்றால் பயம்.

அப்போது நான் மெலிந்திருக்கின்றேன் என்று ஒரு பத்து நாள் மிலிட்டரியில கொஞ்சம் சாப்பாடு எல்லாம் கொடுத்து என்னைத் தேற்றிவிட்டார்

அப்புறம் நான் தம்பியிடம் சொல்லிவிட்டுக் கிளம்புகிறேன், டெக்ஸ்டைல் கம்பெனிக்கு போகிறேன் என்று சொல்லி அவரிடம் கொஞ்சம் 100 – 200 ரூபாய் வாங்கி்க் கொண்டு கிளம்பினேன்.

அடுத்து இன்னொன்று நடந்தது.

அதாவது பம்பாய்க்குப் போகவேண்டும் என்றால் பூனாவில் இருந்து இரயில் மாறிப் போக வேண்டும். மாறிப் போகும்போது அங்கே ஒருவன் நான் டிக்கெட் எடுத்துத் தருகிறேன் என்று அரை குறையாகத் தமிழ் பேசினான்.

“சரி…” என்று சொல்லிவிட்டு டிக்கெட் எடுத்து வருவார் என்று உட்கார்ந்திருக்கின்றேன். அந்தக் காசை வாங்கி அவர் எடுத்துக் கொண்டு ஓடிப் போய்விட்டார்.

“இவனை என்னடா செய்வது…?” என்று அந்த வண்டியிலே டிக்கெட் இல்லாமலே ஏறிவிட்டேன். வண்டி போகிறது என்று சொல்லிவிட்டு அங்கே போய் அகமதாபாத் போய் இறங்கினேன். அவரும் இறங்கினார்.

பின்னாடியே போனேன். எங்கே போகிறார்…? என்று இடைவெளியில் எதுவும் செய்யக்கூடாது என்று பேசாமல் போகிறேன்.

அப்போது என் சித்தப்பா ஒருவர் மில்லில் மேஸ்திரியாக இருக்கிறார். அவரைப் பார்க்கலாம் என்று போகிறேன்.

அப்போது இங்கே போனவுடனே இவர் போனால் கூடவே போகிறேன்.

அப்போது எனக்கு கொஞ்சம் நரம்பு அடி எல்லாம் தெரியும். என்னை ஏமாற்றியவனை அடித்து விட்டேன். என்னை ஏமாற்றிவிட்டாயே என்று சொல்லி அடித்தேன்.

பெண்கள் எல்லாம் உட்கார்ந்து இருக்கிறார்கள். யார் என்ன என்று கேட்டால் எங்களுக்கு என்ன தெரியும்..? என்று சொல்கிறார்கள்.

அப்புறம் போனால் அங்குள்ள ஒருவர் நீங்கள் யார்…? யாரைப் பார்க்க வேண்டும் என்றார்.

இந்த மாதிரி மதுரையிலிருந்த ஒருவர் அம்பிகா மில்லில் வேலை செய்கிறார். அவரைப் பார்க்க வேண்டும் என்றேன்.

ஓகோ மதுரை ஆளா…?

அம்பிகா மில்லில் வேலை பார்க்கும் அவர் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போய்விட்டார். அவரை வைத்து மில்லில் நான் சொன்ன கம்பெனிக்குப் போய் வேலை பார்த்தேன்.

அப்போது வேலை கிடைத்தவுடனே அங்கேயும் போய்ச் சைக்கிள் கடை வைத்தேன். சைக்கிள் கடை வைத்துச் சம்பாதித்துக் காந்திஜி ஆசிரமத்திற்குப் போய் ஞாயிற்றுக் கிழமை அங்கே போய் உட்கார்ந்து விடுவேன்.

அங்கே போனால் அமைதியாக இருக்கிறது.

காந்திஜி ஆசிரமத்தில் சபர்மதி ஆசிரமத்தில் போய் உட்கார்ந்துவிட்டு அப்படியே வருவது. மறுபடியும் வேலை செய்வது. அந்த ஆசிரமத்திற்குப் பணம் கொஞ்சம் கொடுக்கிறது. இப்படியே இருந்து கொண்டிருந்தேன்.

“ஐயா… பசிக்கிறது…!” என்று வருவார்கள்.

அப்போது அவர்களுக்குச் சில வேலை எல்லாம் பார்த்து ஒரு இடத்தில் மூன்றாவது ஷிப்டுக்கு ஆள்களைச் சேர்த்து ஒவ்வொரு இடத்திலும் சம்பாதித்து அங்கே பாபுசிங் என்பவரிடம் பணத்தைக் கொடுத்து விடுவேன்.

வருகின்றவர்களுக்கெல்லாம் சாப்பாடு போடுவது. உதவிகள் செய்வது. 1954ல் ரேஷன் கடைகளும் மளிகைச் சாமான்களும் விலை ஏறி ரொம்பத் தரித்திரமாக இருந்தது. அங்கே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஏனென்றால் இதையெல்லாம் நீங்கள் வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் சொல்கின்றேன்.

ஏனென்றால் நான் பல அவஸ்தைகள் பட்டவன்.
1.ஒவ்வொரு மக்களும் எந்தெந்த வகையில் சந்தர்ப்பத்தில் இயங்குகிறார்கள்…?
2.அவர்களுக்கெல்லாம் ஒரு ஞானம் கிடைக்க வேண்டும்.
3.வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும்.
4.இதற்காக வேண்டித்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை நான் சொல்கி்றேன்.
5.அனுபவித்துச் சொல்கிறேன்.

மூன்றாவது சிப்ட் வேலைக்கு வருகிறவர்களுக்கெல்லாம் சாப்பாடு வாங்கிக் கொடுக்கிறது. எங்கே இருந்தாலும் போய் வேலை வாங்கிக் கொடுக்கின்றது. இந்த மாதிரி எல்லாம் செய்தேன்.

அந்தப் பாபுசிங் என்கிறவர் கொஞ்சம் போக்கிரியும் கூட.

நான் உதவி செய்வதைப் பார்த்து என் மேல் இரக்கப்பட்டுச் உனக்கு வேலை தெரியும் என்றால் சைக்கிள் கடை வைத்துக் கொடுக்கிறேன் என்றார்.

மில்லில் வேலையும் செய்துவிட்டு சைக்கிள் கடையும் வைத்துக் கொண்டதால் கொஞ்சம் காசு நிறைய வந்தது.

அந்த இடத்தில் சைக்கிளுக்குக் காற்று அடிக்க வேண்டும் என்றால் ஒரு அனா.

நான் காசே வாங்காமல் காற்று அடிக்கிறேன் என்றவுடன் கூட்டம் கூடியது. அங்கு பஞ்சர் பார்த்த வகையில் அதிகமான பணம் வருகின்றது.

பிரியம் இருந்தால் காசு போடுங்கள் என்று சொன்னவுடன் ஒரு அனா போடுவதற்குப் பதிலாக நாலனா போட்டுவிட்டுப் போகின்றார்கள்.

சாயங்காலம் பார்த்தால் 200, 300 ரூபாய் இருக்கும். இருக்கும் பணத்தை வைத்து எல்லாருக்கும் சாப்பாடு போட்டுவிட்டு மீதியைப் பாபுசிங்கிடம் கொடுத்துவிடுவது.

சைக்கிள் வேலை தெரிந்தது என்பதால் ஸ்பிரே பெயிண்ட் அந்தப் பெயிண்ட் எல்லாம் அடித்தவுடன் கூட்டத்தைப் பார்த்துவிட்டு அந்தச் சைக்கிள் கம்பெனிக்காரர் என்ன செய்துவிட்டார்.

நன்றாக வியாபாரம் ஆகிறதென்று சைக்கிளுக்கு வேண்டிய சாமான்கள் கொடுத்தார்கள். ஒரு கோன் வந்து அரை அனா. இவர்கள் ஜோடி ஒரு ரூபாய் என்று விற்கிறார்கள்.

அரை அனா கிரையம் போக ஒரு அனா லாபம் கிடைக்கும் என்று சொல்லிப் போட்டவுடனே எல்லாம் வந்து மொய்க்கின்றார்கள்.

சம்பாதித்த பணத்தை அங்கே காந்திஜி ஆசிரமத்தில் கொடுப்பது. அங்கே போய் அமைதியாக இருந்து கொள்வது.

மசால் தூள் அப்பொழுது அங்கே பிரசித்தம். ஒரு பாக்கெட் ஒன்னேகால் ரூபாய்.

நான் என்ன செய்தேன். மிளகாயே அரை ரூபாய் தான். ஒன்னேகால் ரூபாய்க்கு ஒன்னேகால் ரூபாய் சரிக்கு சரி லாபம் கிடைக்கிறது. தனியா கம்மி மசாலா சேர்த்துப் போட்டவுடனே இந்த பாக்கெட்டை வாங்குகிறார்கள்.

அடுத்த ஊருக்குக் கொண்டு போய் இதை அங்கே அரைப்பது. அரைத்த தூளை இங்கே கொண்டு வந்து விற்கிறது. இது மெட்ராஸ்லிருந்து, வருகிறது என்று சொல்லி அங்கிருக்கும் ஊரிலே அரைத்து அங்கேயே விற்கிறது.

இப்படியும் ஏமாற்றினேன்,

இந்த வேலையைச் செய்து வேறு ஒருவனுக்குக் கொடுத்தேன். நான் மில்லுக்குப் பிட்டர் வேலைக்குப் போய்விடுவேன். சம்பாதித்து வந்து “ஐயா…” என்று கேட்டு வருபவர்களுக்குச் சாப்பாடு போடுவது.

இப்படி இருந்த நேரத்தில் அங்கு ஒருவனுக்கு இந்த மசால் அரைத்து விற்கும் வேலையைக் கொடுதேன்

அவன் ஊர் வேலூர் என்று சொன்னார்கள். நீயே இந்தத் தொழிலைப் பார்த்துக் கொள். சம்பளம் எடுத்துக் கொள். வீட்டுக்கும் கொடு. மீதம் வந்தால் மற்றவர்களுக்குச் சாப்பாடு போட்டுவிடு என்றேன்.

அவர் என்ன செய்தான்…?

அந்த இடத்திற்குப் பக்கத்தில் சாராயம் வியாபாரம் செய்கிறார்கள். நான் அவனிடம் மசால் தூள் தொழிலைக் கொடுத்துவிட்டு வந்தால் அவன் சாராய வியாபாரம் செய்ய ஆரம்பித்துவிட்டான்.

திடீர் என்று பார்த்தால் அவனைக் கைது செய்துவிட்டார்கள் என்று செய்தி வருகிறது.

நான் வேலைக்கு போய்விட்டு அப்பொழுது தான் வருகிறேன். பாபுசிங் அங்கே தான் இருந்தார். அவருக்குக் கோபம் வந்துவிட்டது. உடனே அவனைக் போய்க் கொல்லுடா என்கிறார். ஏனென்றால் அவர் ரவுடி.

இங்கே வந்து சாராயமா விற்கின்றான்..? அப்படியே அவரைக் தூக்கிக் கொண்டு வந்து அவருக்கு முன்னாடியே உதைக்கிறார்கள்.

நாம் இல்லாதவனான அவனுக்கு உதவி செய்து உன் சம்பளத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்கும் கொடு என்று சொன்னால் அவன் இந்த மாதிரிச் சாராயம் விற்றுக் கொண்டிருக்கின்றான் (நான் சாராய வியாபாரம் செய்தேன் என்று). இந்த மாதிரி
1.எல்லாம் நல்லது செய்யப் போக ”எத்தனையோ தொல்லைகள் அனுபவித்தேன்”
2.நல்லது செய்பவர்களுக்கெல்லாம் எத்தனை தொல்லைகள் வருகின்றது?
3.எவ்வளவு வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று தெரியுமா…?
4.உதவி செய்யப் போகும் பொழுது நல்லவர்கள் எத்தனை அவஸ்தைப்படுகின்றார்கள்…?
5.அதற்காக வேண்டி நல்லவர்கள் காப்பாற்றப்படவேண்டும்.
6.நல்லதைக் காப்பாற்ற வேண்டும் என்றால் அதற்கென்று ஒரு ஞானம் வேண்டும்.
7.அதற்குண்டான சக்தி வேண்டும் என்பதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுத்த சக்தியை அப்படியே உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

சில உண்மையின் இயக்கங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

நன்மைகள் பல செய்யத் துணிவு வேண்டும் என்று சொல்கிறேன். நன்மைகள் செய்யப் போகும் போது நாம் எப்படி இருக்க வேண்டும்…?
1.அதற்குண்டான மன வலு வேண்டும்.
2.அது இல்லை என்றால் அந்த நன்மைகள் பலன் தராது.
3.ஆகையினால் அதற்கு வேண்டிய சக்தி நல்லவர்களுக்கு வேண்டுமா… வேண்டாமா…?
4.அதனால் தான் உங்களிடம் துருவ நட்சத்திரத்தைப் பற்றித் திரும்பத் திரும்பப் பேசி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவு செய்வது.

நான் அகமதாபாத் போயிருக்கும் போது கூட ஒரு நாள் குருநாதர் அங்கே வந்தார்.

டேய்… சாயா சாப்பிட வாடா…! என்கிறார்.

ஏன் சாமி…! நீங்கள் அங்கே பழனியில் இருந்தீர்கள், இப்போது இங்கே எப்படி வந்தீர்கள்…? என்றேன்.

“நான் சும்மாங்காச்சியும் (சும்மாதான்) வந்தேன்டா…!” என்கிறார். அப்புறம் டீ வாங்கி என்னைக் கொடுக்கச் சொல்கிறார். நான் எங்கே சென்றாலும் என்னைத் துரத்திக் கொண்டே தான் குருநாதர் வந்திருக்கின்றார்.

அப்புறம் என்னென்னமோ சொல்லிவிட்டு போயிட்டார்.

இந்த மாதிரி குருநாதர் என்னுடைய குணத்திற்கோ என்னமோ அல்லது பூர்வ புண்ணியத்திற்காகவோ தெரியாது. ஆனால்
1.என்னைத் தேடி வந்து தான் இந்தச் சக்தி கொடுத்தார்.
2.நான் உங்களை தேடி வந்து இதைச் சொல்கிறேன். “சொல்வது அர்த்தமாகின்றதா…!”

உங்களை தேடி வந்து அந்த நிலையைப் பெறுங்கள் என்று சொல்கிறேன். என்னைத் தேடி வந்து குருநாதர் கொடுத்த அந்த அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும்.
1.நீங்கள் தீமைகளிடமிருந்து விலக வேண்டும்.
2.அந்தத் தீமைகளிடம் இருந்து நீங்கள் விடுபடவேண்டும்.
3.அந்தப் பேரருள் பேரொளி நீங்கள் பெற வேண்டும் என்பதற்காக வேண்டித்தான் இவ்வளவு நேரம் சொல்கிறேன்.

அதனால் தான் நன்மைகள் பல செய்ய துணிவோம் என்று சொல்வது.

குருக்ஷேத்திரப் போர்

 

இந்த மனித வாழ்க்கையில் நம்மை இருள் சூழச் செய்யும் பிற உணர்வுகளைத் தாழ் பணியச் செய்ய மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெற வேண்டும்.

1.மெய் உணர்வின் தன்மை பெற நம் நினைவை மேலே செலுத்தினால் “இமயமலை…”
2.உயர்ந்த சக்திகளைப் பெறக்கூடிய தகுதி பெற்றது நம் உயிர்.

ஆனால் கீழே நினைவுபடுத்தும் போது அந்தச் செயலின் இயக்கத்தில் வாழ்க்கையை ஓட்டலாம். ஆக வாழ்க்கைக்கு நம் உடலின் உணர்வு கொண்டு செயல்பட்டாலும்
1.இடர்கள் வந்து நம்மை ஆட்டிப் படைக்கும் சந்தர்ப்பம் எல்லாம்
2.ஈஸ்வரா… என்று நமக்குள் உச்சியிலிருக்கும் உயிரை நினைவு கொண்டு
3.அவனின் துணை கொண்டு நினைவை அங்கே செலுத்த வேண்டும்.

இது தான் கீதையின் தத்துவம் குருக்ஷேத்திரப் போர்.

வாழ்க்கையில் வரக்கூடிய நிலைகள் மகாபாரதப் போராகப் பலருடைய எண்ணங்கள் நம்மிலே மோதுகிறது. அப்போது நம் நல்ல சிந்தனைகள் செயல்படாத நிலையில் நாம் சுவாசித்த உணர்வுகள் பதட்டமாகிறது.

அத்தகைய பதட்டம் ஏற்பட்டால் ஒன்றை அழிக்கக்கூடிய எண்ணம் உருவாகி நல்ல பொருள்களை அழிக்கும் நிலைகள் வருகின்றது.

ஆனால் ஞானிகளோ தீமை செய்யும் உணர்வைத்தான் அழிக்கச் சொன்னார்கள்.
1.நம்மை அறியாமல் வரும் தவறு செய்யும் உணர்வுகளை
2.அதைச் சுவாசிக்கும் நிலையை நாம் மாற்ற வேண்டும்.

பிறர் செய்யும் தவறான உணர்வுகளை நாம் சுவாசிக்க நேர்ந்து நம்மை அறியாது இழி நிலையான செயல்களைச் செயல்படுத்த வைக்கும் அந்த உணர்வின் தன்மையை மாற்ற ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிரிடம் வேண்ட வேண்டும்.

கண்ணின் புலனறிவு கொண்டு நம் நினைவினை உயிருடன் ஒன்றச் செய்து அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வின் துணை கொண்டு அந்த உணர்வை நாம் எடுக்கும் பொழுது இது குருக்ஷேத்திரப் போர்.

புற நிலையில் நாம் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது பிறருடைய எண்ணங்கள் நம்மை வெறுப்போ பயமோ ஆத்திரமோ மற்ற நிலைகள் அதனுடைய செயலுக்கு ஆளாக்கிவிடுகிறது.

அக்கணமே ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி இங்கே போர் நடத்த வேண்டும்.

நாம் எவ்வளவு பெரிய வல்லமை கொண்டவராக இருந்தாலும் ஒரு விஷத்தின் ஆற்றல் நம்மை ஆட்டிப் படைத்துவிடும்.

ஒரு சிறு எறும்பு கடித்து விட்டால் உடனே நாம் கை கால்களை உதறுகின்றோம். அதே போன்று அந்தக் கடுகடுப்பான விஷத்தின் ஆற்றல் நம் உணர்ச்சிகளைத் தூண்டப்படும் போது உடல் முழுவதும் பதட்டம் ஆகிறது. நல்ல சொல்களைச் சொல்ல முடியாதபடி செயலிழக்கக் கூடிய நிலையும் வந்து விடுகின்றது.

இதைத் தடுப்பதற்கு எந்த நிமிடம் ஆனாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் நாம் எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் ஆற்றல் நாங்கள் பெற வேண்டும்
2.மெய் ஞானிகளின் அருள் வழி நாங்கள் நடக்க வேண்டும்
3.அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
4.எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் என்று
5.எப்பொழுதெல்லாம் தீமைகளைச் சந்திக்கின்றீர்களோ அப்போதெல்லாம் இத்தகைய குருக்ஷேத்திரப் போராக மாற்றுங்கள்.

அந்த மகரிஷிகள் அருள் ஆற்றலை உங்களுக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள். அந்த ஆற்றலைப் பெறச் செய்வதற்கே இந்த உபதேசம்.

பல எண்ண மோதல்கள் வந்தாலும் அதிலிருந்து ஞானம் பெறுவது எப்படி…? – ஈஸ்வரபட்டர்

 

நீந்தத் தெரியாதவன் நீரில் சிக்குண்டு தவிக்கும் பொழுது… தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உதவியை நாடுவதைப் போன்று தான் வாழ்க்கையின் கர்ம காரியக் கடலில் ஏற்படக்கூடிய இன்னலிலிருந்து தப்ப எண்ணும் நிலையும்….!

நீந்தத் தெரிந்தவன்… ஆயிரம் அடி (ஆழம்) கடல் நீரிலும் தன்னைப் பாதுகாக்கும் சாதனைத் திறன் பெற்ற நீச்சலினால் தத்தளிக்கும் நிலையோ… பாதுகாப்பை நாடும் நிலையோ இன்றி… தன்னைக் காத்து கொள்கிறான்.

அதைப் போன்று தான்..
1.உணர்வின் எண்ணத்தைச் சமமாக்கி… ஆத்ம பலம் பெற்று
2.உடல் என்ற இக்கோளத்தில் உருவாக்கும் உயிரணுவின் வளர்ப்பைக் கொண்டு
3.தன் நிலையைத் தான் உணர்ந்து
4.எந்த நிலையான கர்ம காரிய சஞ்சலங்கள் ஏற்பட்டாலும்
5.தன்னை அது தாக்காமல் தன்னைத்தான் பாதுகாத்துத் தன் வலுவைக் கூட்டி
6.ஆத்ம ஞானத்தால் – இரு விழியால் பார்க்கும் படர் ஒளியின் பார்க்கும் இவ்வுடல் உறுப்பின் பார்வை நிலையையே
7.இவ்வுடலின் ஒவ்வொரு உயிரணுக்களையும் “ஒளி நிலை காணும்… விழி நிலை ஆக்கலாம்…!”

உடல் கோளத்தின் ஜீவ சரீரம் செயல் கொள்ள சுவை மிக்க உணவை உண்டு உணர்கின்றோம். உண்ணும் பொழுதும்… சுவைக்கும் பொழுதும்… ஏற்படும் உணர்வு உண்ட பின்… கழிவு நிலையாகச் சென்று விடுகின்றது.

மீண்டும் பசியெடுத்து அதன் சுவை கொண்டு அந்தந்தக் காலத்தின் நிலையில் உணவைச் சுவைப்படுத்தி உண்கின்றோம்.

உண்ணும் பொழுதோ… சுவை உணரும் பொழுதோ… அவ்வின்பத்தின் உணர்வு தவிர உடலைப் பற்றியோ… உண்ணும் உணவு உடலில் செயல்பட்டு உடல் வலுவை வளர்க்க வழி பெறுகின்றது… என்ற எவ்வெண்ணத்தையும் நாம் கூட்டுவதில்லை.

ஆசையின் உந்தலுக்குகந்த சுவையை மட்டும் தான் அந்தந்தத் தருணத்தில் நாடுகின்றோம்.
1.உடலின் தேவை நிலை உந்தலின் செயலை நாம் அறியாமல்
2.எண்ணத்தில் உணர்வு மோதலைக் கொண்டு ஆசை உணர்வால் செயல்படும் இந்நிலை
3.ஜீவ பிம்ப உடல் உறுப்புகளின் வளர்ச்சியில் தன்னிச்சையில் செயல் கொள்கின்றது.

ஆக… ஆத்ம உணர்வின் வேட்கை நிலைக்கு எண்ணத்தின் உணர்வை நாம் யாரும் செயலாக்குவதில்லை.

புற உலக வாழ்க்கையில் ஒன்றை ஒத்து… ஒன்று கண்டு… வளர்த்து… வாழ வேண்டும்…! என்று “எதிர்ப்பலன் எண்ண உணர்வுதான்” செயல்படுகின்றது.

ஒவ்வொன்றின் வளர்ப்பிற்கும் உருவாக… மாற்று நிலை ஏற்பட்ட பிறகு தான் பிறிதொரு செயல் நடக்கின்றது.

தருண காலத்திற்கொப்ப உயிரணுத் தோன்றிக் கருவாகி… உருவாகி… வளர்ச்சி பெற்று… உணர்வின் உந்தலின் இரு நிலை மோதலுக்குப் பிறகு உருவாகும் பிறிதொரு நிலை போன்று… வழித் தொடர் ஒவ்வொன்றிலும் உருவாகின்றது அல்லவா…!

அதைப் போன்று தான்
1.இவ்வுடல் பிம்பச் சரீர கோளத்தின் ஆத்ம ஞானம் பெற
2.சமமான எண்ண உணர்வுகள் ஏற்படும் காலத்தில்
3.பல உணர்வு மோதல்கள் ஏற்படும் செயலிலிருந்து “ஞானம்…” பிறக்க வேண்டும்.

அறிந்த நிலை…
அறிய வேண்டிய நிலை…
அறியும் நிலை… ஆகிய ஒவ்வொரு ஆத்ம நிலையும்
1.தன்னுள் உள்ள உயர் சக்தியான தன் ஞானகுருவான உயிராத்மாவை உயர்வுபடுத்த
2.எண்ணத்தில் ஏற்படும் மோதலைக் கொண்டு பகுத்தறியும் நல் வழியில் தன் ஞானத்தைக் கூட்டி
3.உயர்வு கொள்ளும் ஒளி நிலையாய்
4.சூரியனின் நேர் நிலை பூமியின் மேல் படும்பொழுது பூமி எப்படி தன்னைத்தானே ஒளிப்படுத்திக் கொள்வது போன்று அறியும் நிலைப்படுத்தி
5.அறிந்தோரின் (மகரிஷிகள்) தொடர்பு கொண்டு
6.மனித ஜீவித வாழ்க்கைக் காலத்திலிருந்தே தான் எடுக்கும் அறிவென்ற ஞான வழித் தொடரினால்
7.இச்சரீர பிம்ப கோள உயிரணுக்கள் யாவையுமே விழி நிலைகொள்ளும் ஒளி நிலையை
8.எண்ணத்தின் உணர்வால் நிச்சயம் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

சூரியன் காந்த சக்தி கவர்ந்து வரும் உணர்வின் அலைகளை நம் பூமி எந்தெந்தக் காலங்களில் கவர்கின்றது…? அதனால் இந்தப் புவிக்குள் உணர்வுகள் எவ்வாறெல்லாம் மாற்றம் அடைகின்றது…? என்பதை அறிந்தவர்கள் மெய் ஞானிகள்.

அந்த உணர்வின் செயலால் மக்களுக்குள் இந்த உணர்வின் கொதிப்படையப்போகும் போது இந்த மாசி மாதங்களில் தான் அம்மை நோய் (வார்ப்பு) ஜாஸ்தி இருக்கும்.

ஏனென்றால் கொதிகலனாகக் கோபம் வெறுப்பு என்ற உணர்வுகளை எவர் ஒருவர் அதிகமாகச் சேர்த்துக் கொள்கின்றார்களோ அவர்களுக்கெல்லாம் இந்த அம்மை வரும்.

காரணம் கொதிப்பின் தன்மை அடையும் போது எதிர் நிலையான உணர்வுகள் “நெகட்டிவ் பாசிட்டிவ்”.

கோபத்தின் உணர்ச்சிகள் தனக்குள் எல்லை கடந்து செல்லும் போது
1.அதை உள்ளுக்குள் அடக்கி வைத்தாலும் சரி
2.அல்லது மற்றவர்கள் செய்ததை வெளியிலே பேசாதபடி அந்த உணர்வின் தன்மைகளை எடுத்துக் கொண்டால்
3.எலும்புக்குள் அந்த ஊனின் தன்மையைப் பதிவு செய்து கொள்கின்றது.

அந்த உணர்வின் வேகம் அதிகரிக்கும் போது இந்த வெப்பக் காலங்களில் உமிழ்த்தப்படும் உணர்வுகள் இது அதிகமாகத் தனக்குள் சேர்த்து அம்மை வார்க்கத் தொடங்கி விடும்.

காரணம் இதெல்லாம் எலும்பில் இருந்து ஊடுருவிவிடும்.

1.அந்த உற்பத்தியின் கொதிப்பின் நிலைகள்
2.அது அணுக்களின் செல்களாக வெளிவரும் போது
3.உள் இருந்தே அது கொப்பளித்து வருகின்றது.

மாசி மகம் என்று பொங்குவது போல நமக்குள் கோபம் வெறுப்பு ஆத்திரம் என்ற உணர்வின் தன்மைகள் எதுவோ அதனின் உணர்வின் தன்மை பொங்கும் போது இது அம்மையாக மாற்றுகின்றது.

அதைப் போலத் தான்
1.அருள் மகரிஷிகளின் அருள் சக்திகள் நமக்குள் எடுத்துக் கொண்டால்
2.ஒளியின் சுடராக அது பொங்கும் உணர்வாக
3.தீமையை அகற்றிடும் நிலையாக நமக்குள் விளைகின்றது.

அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களைப் பெறச் செய்வதற்கே இந்த உபதேசம். இந்த உணர்வின் சக்தியை ஆழமாக நீங்கள் பதிவு கொள்ளுங்கள்.

ஒரு டேப் செய்யக்கூடிய நாடா எப்படிப் பதிவாக்குகின்றதோ அதைப் போல இந்த உபதேசங்களைக் கேட்டுக் கொண்டே இருந்தால் போதும்… இது பதிவாகும்.

அடுத்து யாம் உபதேசித்ததை “சாமி என்ன சொன்னார்…” என்று நினைத்தால் போதும்,
1.உங்கள் வாழ்க்கையில் தீமையை விலக்கிச் செல்லும்
2.அருள் ஞானம் உங்களுக்கு வரும்.

நான் (ஞானகுரு) படிக்காதவன் தான். குருநாதர் எனக்குள் அகஸ்தியர் உணர்வுகளை எல்லாம் பதிவாக்கி அதை எல்லாம் இயக்கச் சக்தியாகக் கொண்டு வந்திருக்கிறார்.

சாமி சொல்வது அர்த்தம் தெரியவில்லை, ஏதோ உலகத்தில் ஏதோ பெரியதாகச் சொல்கிறார்…! என்று இப்படி விட்டு விட்டால் உங்களுக்குள் சேராதபடி இதைத் தள்ளி விட்டு விடும்.

ஆகவே
1.சாமி சொல்கின்ற சக்தியை நான் பெற வேண்டும் என்று
2.நீங்கள் உங்களுக்குள்ளே இறுக்கி வைத்துக் கொண்டால் இது வளர்க்கச் செய்யும்.

இராமாயணத்தில் பரதன் தன் தாயிடம் “அன்றே கொன்றிருந்தால்” என்று சொல்வதன் உட்பொருள் என்ன…?

 

ஒவ்வொரு நொடியிலேயும் எப்பொழுது நமக்குத் தீமை என்று தெரிகிறதோ அது நமக்குள் வராது தடுக்க
1.தீமையை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்றே ஆக வேண்டும்.
2.அந்த உணர்வின் தன்மையை நாம் நுகர்ந்தோம் என்றால் அதை அடக்கிவிடும்.

பருப்பை வேக வைத்தால் முளைக்காது… சதுர்த்தி…! தீவினையின் உணர்வுகள் நமக்குள் வளராதபடி அப்போதே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

எதைக் (தீமைகளை) கண்ணிலே பார்த்தோமோ அடுத்த நொடியே அதனுடன் சேர்க்கப்படும் பொழுது அதை அடக்கி துருவ நட்சத்திரத்தின் சக்தி முன்னாடி வரும்.

1.கண் பார்வை ஒன்று தான் (தீமையை நுகர்ந்ததும்… தீமையை நீக்க நுகர்வதும்)
2.ஆனால் அடுத்த கணம் கொண்டு வரும் பொழுது அடுத்த வரிசையில் வருகின்றது
3.அடுத்த வரிசையில் வரப்படும்போது எதிலே பதிவானதோ அதிலேயே சேர்த்துப் பதிவாகின்றது.

அதைத்தான் என்று இராமாயணத்தில் தசரதச் சக்கரவர்த்தி மறைவுக்குப் பின்… இராமன் காட்டிற்குச் சென்ற பின்… பரதன் தன் தாயிடம் “அன்றே கொன்றிருந்தால்” எங்கள் சாம்ராஜ்யத்தில் இத்தகைய தீமை வந்திருக்காது…! என்று சொல்கின்றார்.

ஆகவே அந்த அருள் உணர்வை நமக்குள் பதிவாக்கி தீமைகள் வளராதபடி உடனே செயல்படுத்த வேண்டும்.

ஒருவருக்கு உடம்பு சரியில்லை என்று கேள்விப்படுகின்றோம். இன்ன நோய் என்றும் தெரிந்து கொள்கின்றோம். அடுத்த கணம் என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இரத்தத்தில் அதைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்… அந்த நிமிடமே…!

இல்லை என்றால் முன் பகுதி போவது (வேதனையும் நோயும்) முன்னாடி போகும்.
1.உடலில் உள்ள மற்ற தீமையான அணுக்களுக்கு உணவாகப் போய்ச் சேரும்… அந்த உணர்ச்சிகள் அதிகமாகும்.
2.நல்லதை எண்ண விடாது நம்மைத் தடுத்துக் கொண்டே இருக்கும்.

அதனால் தான் அடுத்த கணமே அப்போதே அன்றே கொன்றிருந்தால் என்று பரதன் சொல்வதாக இராமாயணம் காட்டுகின்றது.

சங்கடமோ சலிப்போ வெறுப்போ வேதனையோ கோபமோ ஆத்திரமோ வந்தால்
1.அடுத்த கணமே பிரேக் போட்ட மாதிரி
2.அவைகளை நிறுத்த வேண்டும்.

ஈஸ்வரா… என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் பரவி எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இரத்தத்தில் கலக்கச் செய்ய வேண்டும. அதைச் சுத்தப்படுத்த வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நோயுற்றவரின் உடலில் படர வேண்டும். அவர்கள் உடல் நோய் நீங்க வேண்டும். அவர் உடல் நலம் பெற வேண்டும். அவர் நல்லவராக வேண்டும். குடும்பத்தில் உயர்ந்த நிலை பெற வேண்டும். மலரைப் போன்ற மணம் பெற வேண்டும். மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று எத்தனை வேண்டுமென்றாலும் அடுத்து நல்லதுகளைச் சொல்லலாம்.

உதாரணமாக ரோட்டில் செல்கிறறோம். இரண்டு பேர் காரசாரமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்… சண்டை போடுகிறார்கள்…!

பார்த்தவுடனே நமக்கும் அந்த ஆத்திரம் வருகிறது… இப்படிப் பேசுகிறார்களே என்று கொதிப்பு வருகிறது.

அதை உடனே அப்போதே நிறுத்த வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அதை எண்ணி எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்குப் பின் அந்த இரண்டு பேரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் அந்த சக்தி அருள் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்
1.அவரிடம் சொல்லக் கூடாது
2.உங்கள் மனதிலே உடலிலே அந்தத் தீமை உருவாகதபடி தடுத்துப் பழக வேண்டும்.

ஆனால் இப்படிச் செய்யவில்லை என்றால் அவர்களை நினைக்கும் போதெல்லாம் இந்த ஆத்திரம் வரும்.
1.அந்த உணர்வு கருவாகி விட்டது என்றால் அணுவாகிவிடும்
2.அணுவின் தன்மை அடைந்தால் மலமாகிறது… மலம் நம் உடலாக மாறிவிடும்.
3.அதனின் வளர்ச்சி அதிகமானால் இரத்தக் கொதிப்பாக உடலில் மாறும்.

இதை எல்லாம் தடுத்துப் பழக வேண்டும் என்பதற்காகத் தான் உங்களைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம்.

நீலவண்ணத்தின் முக்கியத்துவம் – ஈஸ்வரபட்டர்

 

1.எப்படி ஒன்றை ஒத்த முறையில் ஒன்றில்லாமல்
2.ஒவ்வொன்றுமே “வளர் சக்தியில் வளர்கின்றதோ”
3.அதைப் போன்று இவ்வுடல் ஆத்மாவின் வளர் நிலையும் அப்படித்தான்…!

இந்த ஜீவ சரீரக் கலவையில் இப்பூமி எடுக்கும் சத்து அனைத்தும் உள்ளதினால் இச்சரீர பிம்பச் செயலில் கூட்டும் ஞானச் செயலுக்கும் “அந்தந்தக் கலவைக்குகந்த ஒளி பெறலாம்…”

சூரியன் சமைத்த வண்ணம் “ஆறு…” சமைப்பின் சக்தி ஒளியாய் “ஏழாம்…” அதாவது ஒளி பெறும் அந்தப் பூமியின் “வெளிச்சம்” என்பது
1.சூரியனின் சமைப்பு அமில வண்ணம் மோதியவுடன் தான்
2.பூமிக்கு வெளிச்சமே ஏற்படுகின்றது

ஆக… ஏழாம் நிலையாகச் சூரிய சமைப்பின் கலவையைப் பூமி பெறும் ஒளியில் பிரகாச நிலை கொண்டு… அந்தந்த இடங்களுக்கு ஏற்படும் வண்ணக் கலவையின் விகிதாச்சார படிவத்திற்கொப்ப… பூமியின் நில வள உலோக வளர்ச்சி ஏற்பட்டு… அத்தொடரின் வளர் சக்தி வலுக்கொள்கின்றது.

நாம் சாதாரண அடுப்பை எரிக்கும் பொழுது அதனின் வண்ணம் மஞ்சளாகவோ சிவப்பாகவோ பச்சையாகவோ வெண்மையாகவோ எரிகின்றது.

மேலே சொன்ன நிறங்களில் நெருப்பின் ஜுவாலை எரிந்தாலும் அந்த உஷ்ண நிலை அதனுடைய பக்குவ நிலைக்கு ஏற்படாமல்… வைக்கப்படும் பாத்திரத்தில் “கரி” மண்டுகின்றது… ஒரு பக்கமாக எரிகின்றது… அதனால் “தணல் கக்கும் உஷ்ண நிலை” சீராக அமைவதில்லை.
1.ஆனால் எரிவாயுவின் பக்குவ எரி ஒளி நிலை “நீலமாக…!” எரியும் பொழுதுதான்
2.அதனுடைய “உஷ்ணம்” பக்குவ நிலை கொள்கின்றது.

அதைப் போன்று இவ்வொளி வண்ணங்கள் ஆறு நிலை கொண்டதாகச் சூரிய சமைப்பு வெளிப்படுத்துகின்றது.

ஆகவே…
1.ஜோதி நிலையான நீல வண்ணத்தின் ஒளி சமைப்பு நம் ஆத்மாவாக வேண்டும்.
2.காலை சூரிய ஒளியும் மாலை ஒளியும் நீல நிறமாக நம் கண்ணிற்குத் தெரிகின்றது.
3.நம் அருகில் உள்ள நீர் வெண்மை கொண்டதாகத் தெரிந்தாலும்
4.கடல் நீரோ… இப்பூமியின் சமைப்பு அலையின் நிறமாக… நீல வண்ணமுடன் நமக்குத் தெரிகின்றது.

ஆகாயத்தைக் காணும் பொழுது கருமையும்… வெண் புகை நிலையும்… மஞ்சளான ஒளித் திட்டுக்களும் தெரிந்தாலும்… ஆகாயத்தை ஊன்றிப் பார்க்கும் பொழுது “நீல மேகமாகத்தான்” தெரிகின்றது.

அத்தகைய “நீல வண்ண ஒளியை” நம் ஜீவ ஆத்ம ஒளி ஒளி பெற… இச்சரீர கோளத்தில் உள்ள வண்ணங்களை நீல சக்தியாக ஒளி கொள்ள… இங்கே உபதேசித்து வரும் வழி முறையை ஒவ்வொருவரும் செயல் கொண்டிடுங்கள்.

கீதா உபதேசத்தில் கண்ணணைக் காட்டி…
1.கண்ணணின் வாயைத் திறந்தால் உலகமே தெரிந்தது என்றும்
2.கண்ணனின் விளையாட்டுத் தரத்தை உலக மாய கர்ம காரியத்தில் இவ்வாத்மா விளையாடிச் சத்து பெறும் வழியையும்
3.”நீலவண்ணக் கண்ணன்” என்று நாமமிட்டனர் அன்றைய ஞானிகள்.

நம் உருவத்திற்கே “நீல நிற ஒளி…!” பெற வேண்டும் என்றும்… கீதையில் பல உன்னத உயர்ந்த சக்தி நிலை பெற
1.ஒவ்வொரு சரீரத்தையும் மாயக் கண்ணனாக்கி
2.அச்சரீரத்தில் வளர்க்கும் நீல வண்ண ஒளித்தன்மை பெற
2.பல வழி சூட்சுமங்கள் அந்தக் கீதையில் உண்டு.

இக்கலியில் செயற்கை விஞ்ஞான வார்ப்பு உடலாக இச் சரீர வார்ப்பு செயல் கொள்ளும் செயல் முறையை… உணர்வின் எண்ணத்தைச் செயல்படுத்தும் ஞானத்தால் “ஜோதி நிலை பெற்று” வளர் தொடர் வளர்ப்பில் நம் வளர்ப்பு செல்லும்.

இங்கே காட்டப்படும் வழித் தொடரில் ஒவ்வொருவரின் ஞானத்தையும் கூட்டி… எண்ணத்தின் செயலை “ரிஷித் தொடர்புடன் தொடர்புபடுத்தியே” ஆத்ம சொத்தாக வழி பெறும் “ஒளி நிலைக்கு” உயர முடியும்..

1.கர்ம காரிய சரீர ஜீவ பிம்பத்திலிருந்து “ஆத்ம உயர்வுக்கு”
2.ஒவ்வொருவரும் தன் ஞானத்தால் உயர் ஞானம் பெற்று
3.சித்து நிலை கொண்டு ரிஷித் தொடர்புடன் “ரிஷியாகலாம்…!”

உணர்வின் எண்ணப் பகுத்தறியும் செயல் வலுவை மனிதன் விரயப்படுத்தாமல் “தன் ஞானம் கொண்டு… ஆத்ம ஞானத்தால் ஒளி ஞானம்..” பெற வேண்டும்.

ஒளி ஞானத்தின் நிலை பெற்றால்… ஒளியின் வழி செயல் “என்றுமே வளர்ச்சி கொள்ளும்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒரு குழம்பிற்குள் மிளகாய் அதிகரித்து விட்டால் காரத்தின் தன்மை அடைந்து விடுகின்றது. காரமானாலும் அதற்குள் மற்ற சரக்குகளை இணைத்து விட்டால் காரத்தின் தன்மை குறைந்து விடுகின்றது.

இதைப் போன்றுதான் நம் வாழ்க்கையில் கேட்டறிந்த… பார்த்துணர்ந்த… உணர்வுகள் நமக்குள் தீமையை விளைவிக்கும் சக்தியாக இருப்பினும் அந்த மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க சக்தியை நாம் எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று “நூறு முறை… இருநூறு முறை… ஆயிரம் முறை…” என்று எண்ணிப் பாருங்கள்.

உங்களைக் காக்கும் உணர்வாக இது வரும். அப்பொழுது அந்த ஞானிகளின் உணர்வுகள் உங்கள் உயிரால் உருவாக்கப்பட்டு அதுவே ஆட்சி புரிந்து அதனின் வழிகளிலே உங்களை வழி நடத்தும்.

1.நம் உயிர் நினைத்ததையெல்லாம் இயக்கிக் காட்டும்.
2.துயரத்தைத் துடைத்துக் காட்டும்.
3.மெய் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் காட்டும்.
4.மெய் ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் வளர உங்களுக்குள் அறியாது வந்த தீமைகள் குறையும்.

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அதிலே ஆயிரம் குடம் பாலை ஊற்றிய பின் எவ்வாறு அந்த நஞ்சினைச் சிறுக்கச் செய்கின்றதோ இதைப் போல
1.ஞானிகள் ஒரு சொல்லானாலும்
2.ஒரு நினைவானாலும் ஆயிரம் குடம் பாலுக்கு ஒப்பானவர்கள்.

“பல முறை… அதைச் சொல்லும் பொழுது” நமக்குள் தீமையின் நிலைகளைச் செயலற்றதாக்கி அதனின் வீரிய நிலையாக அதை மாற்றிவிடும்.

உங்கள் நினைவின் ஆற்றல் விண்ணிலே செல்லும் பொழுது உங்களை முழுமை அடையச் செய்யும்.

இதைப் போன்று மெய் ஞானிகளின் துணை கொண்டு உங்கள் நல்ல எண்ணங்களை மறைக்கும் இந்த அழுக்கான திரையைக் கிழித்து தீமைகளை அகற்றித் தீமைகளை அகற்றும் சக்தியாக உங்களுக்குள் விளைய வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த உடலை விட்டு அகன்றால் என்றும் அழியாப் பெரு வாழ்வு வாழும் ஒளிச் சரீரம் பெற முடியும்.

இந்த முறைப்படித்தான் விண்ணுக்குப் போக முடியுமே தவிர நான் காட்டிற்குள் போய் ஜெபமிருந்து ஆண்டவன் அருளைப் பெற முடியும் என்றால் முடியாது.

அங்கே உங்கள் நினைவாற்றல் சிறிது சோர்வடைந்தால் போதும்.
1.”பாவிப்பயல்…” அந்தக் காலத்தில் எனக்கு அப்படிச் செய்தான் இப்படிச் செய்தான்.
2.நான் சாமியாராகப் போவதற்கு எப்படியெல்லாம் இடைஞ்சல் செய்தான்…!
3.”அவர்களை என்ன செய்வது…?” என்ற இந்த உணர்வுகள் எதிர்மறையை ஊட்டும்.

அப்புறம் இவர் சாமியாராகப் போகப் போவதுமில்லை.

கடைசியில் இந்தக் கோபமான வினைகளைத்தான் சாப வினைகளாக மாற்றி மற்றவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் சாபமிட்டு அவர்களைக் கெடுக்க முடியும்.
1.விண்ணுக்குப் போகவும் முடியாது
2.இந்த மண்ணை விட்டுத் தப்பவும் முடியாது.
3.இந்தப் பூமியின் ஈர்ப்பிலே தான் அவர்கள் செயல்பட முடியும்.

இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

எம்முடைய வழியைக் கடைப்பிடிப்போர் “இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் – ஞானகுரு

 

சாமி… சாமியார் சொல்வதை எல்லாம் கேட்கின்றீர்கள் அல்லவா. அதே மாதிரி நல்லதை எண்ணி உங்களால் அதை வளர்க்க முடியாதா…?
1.உங்களுக்கு நான் (ஞானகுரு) பவர் கொடுக்கின்றேன்…!
2.இங்கே உபதேசம் கொடுக்கிறேன் என்றால் அந்த மெய் ஞானிகளின் அருளைப் பெறுவதற்குண்டான
3.ஊழ்வினை என்ற வித்தாக உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

விவசாயப் பண்ணைகளில் (AGRICULTURE) புது வித்தாக எப்படி உருவாக்குகின்றார்களோ அதே மாதிரித்தான் உங்களுக்குக் கொடுக்கின்றேன்.

விவசாயப் பண்ணையில் விதைகளை உற்பத்தி செய்து கொடுக்கின்றார்கள். வாங்கி விதைத்துவிட்டு அதைச் சரியாகக் கவனிக்கவில்லை என்றால் பயிர்கள் பட்டுப் போகின்றது.

விதைகள் கொடுத்தீர்கள்… பட்டுப் போய்விட்டது என்று அங்கே சொல்ல முடியுமா…?

அது போல் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் ஞான வித்தை உற்பத்தி செய்து உங்களுக்குக் கொடுக்கின்றோம். நீங்கள் என்ன செய்கிறீர்கள்…?

1.அந்த ஆசையை மட்டும் வைத்துக் கொள்கிறீர்கள்
2.செடிக்குத் தண்ணீர் ஊற்றுவது இல்லை.
3.எப்படா பலன் கொடுக்கும்…? என்று அதையே எண்ணிக் கொண்டு இருக்கிறீர்கள்…!

பயிர்களுக்கு அவ்வப்போது தண்ணீர் விட வேண்டும். உரம் கொடுக்க வேண்டும். சாப்பாடு கொடுக்க வேண்டும். அந்தந்தக் காலத்திற்கு அதைச் செயல்படுத்த வேண்டும்.

கஷ்டம் என்று வந்து விட்டாலே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும். அது எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று
1.இப்படிச் சாப்பாடு கொடுத்தால் கொஞ்சம் ஊக்கமாக இருக்கும்.
2.உங்கள் உணர்வின் எண்ணங்கள் சீராக வரும்
3.அதை வைத்து நீங்கள் நல்லதைச் செயல்படுத்த முடியும்.

“எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்…” என்று எண்ணும் பொழுது தீய வினைகள் நம் உடலுக்குள் செல்லாதபடி சூரியன் அதைக் கவர்ந்து சென்று விடுகின்றது. நம் ஆன்மா தூய்மை அடைகிறது.

தீய வினைகளை இப்படி நிறுத்திப் பழகவேண்டும்.

கஷ்ட நஷ்டங்களை எண்ணாதபடி… “இப்படித்தான் இருக்க வேண்டும்…!” என்று நுகர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

இன்றைய விஞ்ஞான உலகில் பல பகைமை உணர்வுகளையும் விஷத் தன்மைகளையும் நோய்களையும் உருவாக்கக்கூடிய வினைகள் காற்று மண்டலத்தில் அதிகமாகப் பரவி உள்ளது. அதை எல்லாம் நாம் இழுக்கவில்லை என்றால் சூரியன் எடுத்து மேலே கொண்டு சென்றுவிடும்.

பரமாத்மா தூய்மை அடைகின்றது நமது ஆன்மா தூய்மை அடைகின்றது நம் உடலில் ஜீவான்மா தூய்மை அடைகின்றது. நம்முடைய உணர்வுகளை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

டிச்சியிலே (சாக்கடை) நாற்றம் வருகிறது. அப்போது அதிலே கொசுக்கள் உண்டாகின்றது. கொசுவை அழிக்க விஷ மருந்துகளை அதிலே தூவிவிட்டுச் சென்று விடுகின்றார்கள். கொசுக்கள் அனைத்தும் இறந்து விடுகின்றது.

ஆனால் கொசுவின் கருவிலிருக்கும் முட்டைகள் அந்த விஷத்தின் தன்மைகளக் கவர்ந்து வெளியே வருகிறது. அப்படி விஷத்தைக் கவர்ந்து வரக்கூடிய கொசு ஒன்று நம்மைக் கடித்தால் போதும். சுரீர்… என்று இருக்கும். அந்த அரிப்பை நம்மால் தாங்க முடிவதில்லை.

1.விஷ மருந்தை அடித்துச் சென்றபின் அதற்கப்புறம் உருவாகக்கூடிய கொசுக்கள் இப்படித்தான் வீரியமாக இருக்கும்
2.அரிப்பு அதிகமாக இருக்கும்… உடலில் தடிப்பும் அதிகமாகிறது.

கொசுக்கள் எங்கே சாகின்றது…? இது போன்ற தீமையின் விளைவுகளை நாம் அறிந்திருக்கின்றோமா…?

இதை எல்லாம் மாற்றி அமைக்க
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை மொத்தமாக நாம் எடுத்து
2.அந்த உணர்வுகளைப் பரப்பப்படும் பொழுது தீமைகளை அகற்றக் கூடிய சக்தி வலுப் பெறுகின்றது…!

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளை நாம் அனைவரும் ஏங்கி எடுத்து இந்தப் பூமியில் பரவச் செய்யும் பொழுது பூமியும் தூய்மை அடைகின்றது. ஆகவே இதை நாம் தெளிவாகக் கொண்டு வர வேண்டும்.

மேல் நோக்கிய சுவாசம் அவசியம் நமக்கு வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

இன்று நாமுள்ள நிலை பூமிப் பிடிப்பில் சிக்குண்டு சுழலும் நிலைதான்.

உருளுகின்ற உலகினிலே உதித்த உயிரணுக்கள்… அவற்றின் பிடிப்புச் சுழற்சி ஈர்ப்பு வளர்ப்பில் தான் சுழற்சியுடன் சிக்குண்ட நிலையில் சுழலுகின்றோம்.

1.உணர்வில் குளிரும் வெயிலும் ஏற்படுத்து.ம் உணர்வு எண்ணமுடனும்
2.சுவை உணர்வு… உடல் இச்சையின் தேவை… உணர்வு எண்ணத்தில் மோதும் எண்ண அலை உணர்வுடனும்…
3.இதைப் போன்ற விழியெடுக்கும் பட உணர்வும்… செவி கேட்கும் நாத ஒலியின் உணர்வுடனும் நாமெடுத்து
4.அவற்றின் பிடிப்புத் தொடரில் பூமியில் சிக்குண்டு தான் உருளுகின்றோம்.

அதே சமயத்தில்
1.பூமியின் இயக்கத்தில் வளரும் தாவர கனி வள திரவ நீர் இவைகள் “பிடிப்பு” நிலையிலும்…
2.ஊர்வன பிடிப்பில் “ஊரும்” தன்மையிலும்…
3.ஜீவராசிகள் “ஓடவும் நடக்கவும்” இடம் விட்டு மாறிச் செல்லவும் வளர்ச்சி பெற்றும்
4.ஜீவ சரீரம் கொண்ட பட்சிகள் “பறக்கும்” நிலை பெற்றிருந்தாலும் அதன் தொடரிலும் வந்து அமரக்கூடிய பூமி ஈர்ப்புடன் தான் வளம் பெற்று வாழ்கிறது.

இருளான இப்பூமி… தன் சுழற்சி வட்டத்தால் ஒளி பெறும் தன்மையை சூரியன் பூமிக்கு எத்திசையில் சந்திப்பு கொள்கின்றதோ அந்நிலைக்குப் பூமி ஒளி பெறுகின்றது.

அதைப் போன்று பூமிக்கு மேல் எண்ண செயல் கொண்ட இம்மனித ஞானத்தால் எண்ண உணர்வைச் சமமானதாக்கி “இருளிலிருந்து ஒளி பெறும் வலுவை” நாம் கூட்ட வேண்டும்.

சூரியன்… பூமியின் நேர் பார்வையில் வரும்போது தன்னைத்தானே சுழன்று ஓடும். ஓட்டத்தில் சூரியனின் தொடர்பு கொண்டவுடன்… “ஒளி பெற்று” பூமியின் அந்தந்த இடங்களில் வளரும் வளர் சக்திக்கு வலு கூட்டிக் கொள்கின்றது.

அதைப் போன்று
1.சம உணர்வு தொடர்பு எண்ணத்தை இச்சரீர இயக்கம் செயல் கொண்டவுடன்
2.நற்சக்தியின் வலுத் திறமையைப் பகுத்தறியும் ஞான எண்ணமுடன் விண்ணிலே எண்ணத்தைச் செலுத்தி
3.இவ்வுடல் பிம்பத்தில் பூமி எடுத்து வெளிப்படுத்தும் சுவாசத்தைக் கீழ் நோக்கி எடுக்காமல்
4.மகரிஷிகளின் அருள் அலையை நேராக மேல் நோக்கிய சுவாசமாக
5.இச்சரீர இயக்கச் சுவாசத்திற்கு எடுக்கும் பழக்கம் வருதல் வேண்டும்

இருளான இப்பூமி சூரியனின் நேர் சந்திப்பு பெற்றவுடன் ஒளி பெறுவதைப் போன்று ஒளி வளர்ப்புச் சரீரமாய் இச் சரீர அணுக்கள் வலுக்கொண்டு “நம் உயிராத்மா ஜோதி நிலை பெற்றவுடன்” உடலின் இயக்கத் தொடர்புடன் ஆத்ம ஒளி எத்தன்மையையும் அறியும் ஆற்றலையும்… வளர்க்கும் வலுத்தன்மையும் பெற்று விடுகின்றது.

பாம்பின் சுவாசம் மேல் நோக்கிய தன்மை கொண்டது,

விஷமான உடலைக் கொண்ட பாம்பு அது எடுக்கும் சுவாச அலை உணர்வு கொண்டு மனிதனை ஒத்த பகுத்தறியும் சொல் செயல் ஆற்றல் இல்லா விட்டாலும் அதன் சுவாச இயக்கத்தில் எடுக்கும் அலை உணர்வினால் விஷமான உடலில் பல காலங்களுக்கு அவை உயிர் வாழும்,
1.தன் உடலிலேயே மாணிக்கக் கல்லை வளர்க்கும் வலுவைப் பெற்று
2.ஒளி கொண்ட கல்லைப் பாம்பு தருகின்றதல்லவா…!

அதைப் போன்று எண்ணத்தின் உணர்வை ஜீவ காந்த சரீர இயக்கத்தில் சமமான நிலைபடுத்தி… சாந்தமுடன் கூடிய வலுத் தன்மை கொண்டு ஞானிகள் மகரிஷிகள் வெளிப்படுத்தும் ஆற்றல்களை இஜ்ஜீவ காந்த சரீரம் வளர்த்ததென்றல்
1.இச்சரீரமே மண்டல சக்திக்கு உருவாகும் ஒளி சக்தியாக
2.ஒளி கொண்ட சக்தி நிலையாய் அழியா ஆனந்த நிலை பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நான் (ஞானகுரு) சித்தான பின் குருநாதர் என்னைத் திருப்பதிக்கு போகச் சொன்னார். அங்கே மலையில் பாபநாசம் என்று இருக்கிறது. அதையும் தாண்டி மேலே போனால் நாரதர் மன்றம் இருக்கிறது. அங்கிருந்து தண்ணீர் வழிந்து சில இடங்களுக்குச் செல்கிறது.

அந்த நாரதர் மன்றத்தைத் தாண்டி இந்தப் பக்கம் ஒரு காட்டுக்குள் போனவுடனே அங்கே போய் என்னைத் தியானம் (48 நாட்கள்) எடுக்கச் சொல்கிறார் குருநாதர்.

தியானம் எடுக்கும் பொழுது அன்றைக்கு இரவில் கரடி வருகிறது. “உ..ம்ம்ம்ம்…” என்று வருகிறது. கரடியைக் கண்டவுடனே பயம் வருகிறது.

நான் இந்தக் கரடிக்கு பயந்து என்ன செய்வது?

அப்போது அதற்காக வேண்டி எந்த உணர்வை எடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்கிற வகையில் குருநாதர் சொன்னவுடன் பேசாமல் அவர் சொன்ன முறையில் இருக்கப்படும் போது என்னைச் சுற்றி வருகிறது.

“தன்னாலே…” அப்புறம் போய் விட்டது.

அந்த இடத்திற்குப் போன அன்றைக்கு இரவிலேயே இது நடக்கிறது. பயமும் இதுவும் வருகிறது. அப்புறம் ஒதுங்கி இன்னொரு பக்கத்தில் போய் இருந்தேன்.

அங்கே வருடத்தில் பத்து மாதங்களிலேயும் கனி வர்க்கங்கள் விளைகிறது. நவாப்பழம் மாதிரி இருக்கிறது. கொய்யாப்பழம் இருக்கிறது. ஈச்சம்பழம் இருக்கிறது.

இதே மாதிரி ஒவ்வொரு சீசனுக்கும் சாப்பாடு இல்லாமலேயே அந்த கனிகளைச் சாப்பிட்டு அங்கே வாழலாம்.

ஏனென்றால் சாப்பாடு எதுவும் யாம் கொண்டு செல்லவில்லை. இதைத் தான் ஏதாவது ஒரு பழத்தைச் சாப்பிட்டுக் கொள்வது. ஈச்சம்பழம் இருந்தது. அதைச் சாப்பிட்டேன்.

திருப்பதியில் துளசி மாதிரி ஒன்று கொடுப்பார்கள். அதைச் சாப்பிட்டுவிட்டுத் தண்ணீர் குடித்தோம் என்றால் போதும் வயிறு நிறைந்துவிடும். கொஞ்சம் இனிப்பாக இருக்கும்.

இதையெல்லாம் சாப்பிட்டு விட்டு உட்கார்ந்து இருக்கும் போது எனக்கு முன்னாடி நடக்கிறது ஒரு நிகழ்ச்சி.

ஒரு குரங்குக் கூட்டம் இருக்கிறது ஒரு தாய்க் குரங்கு குட்டி போட்டிருக்கிறது. வருகிற குரங்குகள் எல்லாம் அந்தக் குட்டியை முத்தமிகின்றது. அதை எல்லாம் வந்து பார்க்கிறது.

அப்பொழுது ஒரு முரட்டுக் குரங்கு வருகிறது.

அதைக் கண்டவுடனே “உர்…ர்ர்..” என்கிறது. அந்தக் குட்டிக்கு இந்த முரட்டுக் குரங்கு முத்தம் கொடுப்பதற்கு இரண்டு மணி நேரம் ஆனது.

அங்கே தேங்கி நின்று அங்கே இருந்து கொண்டே “வவ்.வா..வவ்..வா என்கிறது. அப்பறம் கொஞ்சம் கொஞ்சமாக இது போனவுடனே இங்கே இருந்தே வாயிலே முத்தம் கொடுக்கின்ற மாதிரிச் செய்து கொஞ்சம் ஒரு அடி முன்னாடி நகர்கின்றது.

“ஓ…” என்று தாய்க் குரங்கு சப்தம் போடுகின்றது. (இது ரௌடிக் குரங்காக இருப்பதால்)

தன் குழந்தையைக் காத்துக் கொள்ள… தாய்க் குரங்கு “என்னென்ன வேலை செய்கிறது…?” என்று இந்த நிலைகளை எல்லாம் நான் பார்த்து கொண்டு இருக்கின்றேன்.

தன் குட்டி மேல் எவ்வளவு பாசமாக இருக்கிறது…? அதோடு சேர்ந்த மற்ற குரங்கெல்லாம் எப்படி இருக்கிறது…? அந்தக் குட்டியைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கிறது.

அப்பொழுது என் ஞாபகம் என் வீட்டிலுள்ளோர் மீது செல்கிறது.

என்னுடைய சிறிய குழந்தை தண்டபாணியை வீட்டில் விட்டு விட்டுத்தான் இங்கே வந்திருக்கின்றேன். இதை நினைவுகள் எனக்கு அதிகமாகி விட்டது.

நாம் மனிதனாக இருக்கின்றோம். குழந்தை குட்டியை எல்லாம் விட்டு விட்டு நாம் இப்படி இங்கே வந்து இருக்கிறோம்.

ஆனால் இந்தக் குரங்குக் கூட்டம்… “தன் குட்டியை.. இப்படிப் பாதுகாக்கிறதே…!” என்ற இந்த எண்ணம் வருகிறது.

குருநாதர் இந்த உணர்வுகளைத் தூண்ட வைக்கிறார்.

நான் வெளியிலே சென்றால் எந்தெந்த நிலைகள் உருவாகிறது…? இந்த மாதிரி நிகழ்ச்சிகளைக் கண்ணுற்றுப் பார்க்கும் போது என் நினைவுகள் எங்கே செல்கிறது…?

அப்பொழுது என் வீட்டு நினைவு தான் எனக்கு வருகின்றது.

“குரங்கிற்கு இருக்கக்கூடிய புத்தி கூட… நமக்கு இல்லையே…!? வீட்டில் எல்லோரையும் விட்டு விட்டு இப்படி நாம் வந்திருக்கின்றோமே என்ற இந்த எண்ணம் வருகிறது.

அப்போது அந்த உணர்வுகள் என்ன செய்கிறது…?

நீ வந்த காரியம் என்ன…? நீ வீட்டிற்குப் போக வேண்டும் என்றால் போ…! என்று சொல்கிறார் குருநாதர்.

காட்சி கொடுத்துச் சொல்கிறார். நீ போகிறதென்றால் போ…! நான் சொன்னது என்ன…? நான் எதைச் சொன்னேன் நீ எதைச் செய்கிறாய்…? என்று இந்த நிலையில் கேட்கிறார்.

அப்புறம் அவருடைய உணர்வுகளைப் பார்த்த பிற்பாடு கொஞ்ச நேரம் கழித்து மறுபடியும் அந்த உணர்வுகளை உந்தச் செய்து
1.நீ எதை எடுக்க வேண்டும்…?
2.எப்படி எப்படி இருக்க வேண்டும்…?
3.உயிரணுக்களுடைய தோற்றங்கள் என்ன…? என்கிற வகையில் பல நிலைகளை உணர்த்தினார்.

இது முடிந்தவுடனே அடுத்தாற்போல ஒரு நிகழ்ச்சி நடந்தது.

அந்தப் போக்கிரிக் குரங்கு முத்தம் கொடுத்து விட்டு வந்தது. வந்த பின்னாடி திரும்ப வரும் போது் இடைவெளியில் இ்ன்னொரு குரங்கைப் பிடித்து “லபக்…” என்று கடித்து விட்டது.

அவ்வளவு தான்…!

எல்லாம் சேர்ந்து “திமு.. திமு.. திமு…” என்று துரத்துகிறது. துரத்தினால் என்னைச் சுற்றி கொண்டு வருகிறது அந்த முரட்டுக் குரங்கு. எல்லாக் குரங்குகளும் இதை விரட்டுகின்றது.

என் மேலே தாவிவிட்டுப் போகிறது. என்னை அங்கே உட்காரவே விடவில்லை.

ஏனென்றால் இந்த நிகழ்ச்சிகள் அது தன் வேகத்தில் போகும் போது “மனிதன்…” என்று கூடப் பார்க்க மாட்டேன் என்கிறது. எல்லாம் சேர்ந்து அந்தப் போக்கிரிக் குரங்கைத் துரத்துகின்றது.

ஏனென்றால் சின்னக் குட்டியைக் கடித்து விட்டது. அதனால் எல்லாம் ரோசமாக விரட்டுகின்றது.

மரத்திற்கு மரம் எங்கே தாவினாலும் விடுவதில்லை. என் பின்னால் வந்து ஒளிகின்றது. அப்புறம் இதைப் பார்த்து விட்டு வந்தேன்.

இது பாசமாகவும் இருக்கிறது அதே சமயத்தில் எதிர்க்கும் உணர்வுகள் எப்படி இருக்கிறது…? என்று இதையும் காட்டுகிறார் குருநாதர்.

அது எல்லாம் போனவுடனே ராத்திரியில் இங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கும் போது தான் கீழே அரிக்கிற மாதிரி இருக்கிறது.

நான் தியானத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கின்றேன். அரிக்கிற மாதிரி இருக்கிறது. “என்ன..!” என்று பார்த்தோம் என்றால் உள்ளுக்குள் இருந்து அந்தக் காலங்களில் பதித்து வைத்திருந்திருப்பார்கள் போலிருக்கின்றது.

பருப்பு போல் “தங்கக்காசு…!” முத்திரை போட்டுப் பாதம் போட்டு வைத்து இருக்கிறது மண்ணுக்குள்.

இது என்னடா… தங்கக் காசு இங்கே இருக்கிறது….? இது நம்மைச் சோதிப்பதற்காகக் குருநாதர் இந்த மாதிரி வைக்கின்றாரா…! என்று தெரியவில்லையே…! என்று எண்ணுகின்றேன்.

எல்லாம் வீட்டு ஆசையும் குழந்தையும் காட்டி விட்டு இப்பொழுது தங்கமும் வருகின்றது. கடைசியில்… நம்மை “எங்கே கொண்டு மாட்டிவிடுவாரோ…?” குருநாதர் என்ற பயம் வந்து விட்டது.

அதை எடுத்து நன்றாகப் பொட்டணமாகக் கட்டி வைத்து வைத்துக் கொண்டேன். சுமக்கின்ற அளவுக்கு இருந்தது. பூராம் சுத்தமான தங்கம்.

அப்புறம் யோசனை செய்து பார்த்தேன்.

அங்கே அந்த இடத்தில் நாற்பத்தெட்டு நாள் தியானமிருக்கச் சொல்லியிருந்தார் குருநாதர். 48 நாள் ஆனவுடனே அந்தத் தங்கக் காசுகளை நேராகத் திருப்பதி உண்டியலில் கொண்டு போய்ப் போட்டேன்.

அது “உனக்கே ஆகட்டும்…!” என்று போட்டேன்.

ஆனால் என்னிடம் இருந்த காசு எவ்வளவு…? நாலணாவோ எட்டணாவோ தான் இருந்தது. ஒரு டீ குடிக்கும் அளவுக்கு இருந்தது.

அதை வைத்துக் கொண்டு “நீ திருப்பதி மலையை விட்டுப் போ…” என்கிறார் குருநாதர்.

மொட்டை அடித்துக் கொண்டு மேலே இருந்து கீழே நடந்து வருகிறேன். நடந்து வரப்போகும் போது பார்த்தோம் என்றால் சரியான வெயில். காலில் செருப்பு இல்லை.

இடைவெளியில் ஒருவன் குடித்து விட்டு வந்தான். அவன் என்ன செய்தான்…? ஒரு மாட்டையும் ஓட்டிக் கொண்டு வருகின்றான். அதை உதைக்கின்றான். அது கீழே விழுந்துவிட்டது.

இந்த மாட்டை எழுப்பி விடு என்கிறான். கீழே விழுகிறது. “அய்யய்யோ… நூ பண்டிட்டு வாரானான்… இட்டிக்குப் போனாலும் நீ ரைய்ரா…” என்று தெலுங்கில் சொல்லிக் கொண்டு அழுகிறான்.

இந்த நேரத்தில் நான் அங்கே போகிறேன்.

அட.. “ராரா… நைனா…!” என்கிறான். கொஞ்சம் தூக்கிவிடு…! என்கிறான்

நான் எப்படி வருகிறேன் என்றால் அங்கிருந்து வெயிலில் நடக்கப்படும்போது முதலில் நான் ஒரு வேலை செய்து விட்டேன்.

அந்த வழியில் மாங்காய்த் தோப்பு இருக்கிறது. ஒரு பிஞ்சு விழுந்து இருந்தது. அதை எடுத்து வந்து தண்ணீர் தாகத்திற்காக எடுத்துக் கடித்து விட்டேன்.

அது என்ன செய்தது…?

இந்தப் பால் தொண்டையில் பட்டுவிட்டது போலிருக்கின்றது. அவ்வளவு தான். தொண்டை கர..கர.. என்று ஆகிவிட்டது.

தண்ணீர் தாகமோ அதிகமாகிறது. இந்த நேரத்தில் வந்து கொண்டு இருக்கின்றேன். “தண்ணீருக்கு எங்கேயாவது போய்ப் பார்க்கலாமா…” என்ற எண்ணத்தில் வந்து கொண்டிருக்கின்றேன்.

வெயில் அடிக்கிறது. தலையில் மொட்டை அடித்து இருக்கிறேன். அப்பறம் என்ன செய்வது…? செருப்பும் போடக்கூடாது. மேலே சட்டையும் கிடையாது. ஒரு துண்டும் வேஷ்டியும் தான்.

இப்படி நான் போகும் போது மாட்டுடன் வந்து கட்டிக் கொண்டு அழுகிறான். “தூக்கிவிடு நைனா…” என்கிறான்.

“நீயே தூக்கிக் கொள் நான் போகிறேன்…” என்று சொன்னால் நீ தூக்கிவிடாமல் போகக்கூடாது. குடித்துவிட்டுth தண்ணி வெறியில் இப்படிப் பேசுகின்றான்.

இது என்னடா வம்பாகப் போய்விட்டது என்று நான் நினைக்கிறேன்.

எனக்கு இங்கே நாக்கு வரளுகிறது என்றேன்.

நீ தூக்கிவிடு உனக்குத் தண்ணீர் கிடைக்கும் என்கிறான். அவன் பாட்டுக்கு இடைஞ்சல் செய்து கொண்டு இருக்கிறான் ஒரு அரை மணி நேரம் போராட்டம்…!

அப்புறம் இந்த இடைவெளியில் இன்னொரு ஆள் வந்தான். டேய்…! “நீ குசும்புத் தனம் தாளாது… விடுடா மனுசனை…!” என்கிறான்.

பேசாமல் ஒடுங்கி விட்டான். அப்புறம் நான் வந்துவிட்டேன்.

அந்த நேரத்தில் “அவனை நான் எதுவும் செய்ய முடியாத நிலை…”

ஏனென்றால் இதுவெல்லாம் குருநாதர் பரீட்சாந்திர நிலையில் என்ன செய்கிறார்…! என்று நமக்குத் தெரியாது.

அப்புறம் அங்கிருந்து போனவுடனே ஒரு தோட்டத்திற்குள் போனேன். அந்த ஆளும் தண்ணி மாஸ்டர்தான் போலிருக்கின்றது.

கொஞ்சம் தண்ணீர் வேண்டும் என்றேன்.

“தாகு நைனா… தாகு நைனா..” என்கிறார்.

“ராரா…!” என்று கூட்டிக் கொண்டு போனார். “தாகு நைனா…! அங்கே போனால் இந்தத் தொட்டியில் தண்ணீருக்குள் புழுக்கள் எல்லாம் ஆடிக் கொண்டு இருக்கிறது.

தாகமோ எனக்கு இங்கே தாங்க முடியவில்லை. குருநாதர் அந்த இடத்தில் வசமாகக் கொண்டு போய் இப்படிக் காட்டுகின்றார்.

அதில் இந்த வால் மாதிரி சின்னப் புழுக்கள் உள்ளே அரிந்து கொண்டிருக்கிறது. கிணற்றில் நீர் இல்லையா…? என்று கேட்டேன்.

கிணற்றில் தண்ணீர் இல்லை. ஏன் இந்த நீருக்கு என்ன…? இதைக் குடி…! என்கிறான்.

அப்பறம் எனக்கு வேறு வழி இல்லை. மேலே போட்டிருக்கின்ற துண்டைப் போட்டு இதில் அள்ளித் தண்ணீர் நிறையப் பிடித்தவுடனே “ஆ..” என்று அண்ணாந்து குடிக்கின்றேன்.

புழுக்கள் எல்லாம் இருக்கிறது. பார்த்தால் “கொச…கொச…” என்று இருக்கிறது.

வேறு வழி இல்லை. புழுக்கள் உள்ளே போகாமல் அதைச் சாப்பிட்டேன். அது சாப்பிட்டாலும் தாகம் அடங்கவில்லை.

வெயிலில் போகப் போக… போகப் போக… வறட்சி மயக்கம் வந்து விட்டது. அது மாதிரிப் போனவுடனே அப்படியே கிறங்கிவிட்டேன். என்ன செய்வது…?

ஒன்றும் புரியவில்லை. தாகத்தை அடக்க முடியவில்லை. ஒரு புளிய மரத்தடியில் சாய்ந்தேன்.

“புளியந் தழை” அப்படியே மேலிருந்து வந்தது. நான் கிறங்கிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது புளியந் தழை கிடைக்கிறது.

அப்போது ஒரு உணர்வு வருகின்றது. அதைப் பறிக்க வேண்டும். சாப்பிட வேண்டும் என்ற உணர்ச்சிகள் வருகின்றது.

எடுத்து வாயில் போட்டு மென்றேன். தண்ணீர் உமிழ் நீர் வருகிறது. தாகம் அடங்குகிறது.

அப்பறம் நிறையப் புளியந் தழைகளை எடுத்து வைத்துக் கொண்டு தின்று கொண்டே நடந்து வந்தேன்.

1.இந்த மாதிரியெல்லாம் உணர்வை ஊட்டுவதும் அவர் தான்.
2.இந்தச் சந்தர்ப்பத்தை ஊட்டுவதும் அவர் தான்.

ஏனென்றால் இதெல்லாம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் அனுபவரீதியில நீ் எப்படித் தெரிந்து கொள்ள வேண்டும்…? என்பதற்காக வேண்டிப் பல இன்னல்களைப் பட வைத்தார்.

ஆனால் இதையெல்லாம் தெரிந்து தான் உங்களிடம் உபதேசமே செய்கின்றேன்.

ஏனென்றால் குருநாதர்.. “அவர் எந்த நிமிடத்தில் எதைச் செய்வார்…?” என்று எனக்குத் தெரியாது.

ஒரு இடத்தில் நான் போய் உட்கார்கிறேன். அந்த ரெக்கத்தில பார்த்தோம் என்றால் விஷக் கொடுக்குத் தேள் இருக்கின்றது. அது எனக்குத் தெரியவில்லை.

நடந்து போன மயக்கத்தில் தெரியவில்லை. சாப்பாடு இல்லை. அந்த நேரத்தில் கொடுக்குத் தேள் இருக்கிற இடத்தில் சாய்ந்து கொண்டு இருக்கிறேன்.

அது மேலே இருந்து இறங்கி வருகிறது.

பயந்து போய்த் தட்டினோம் என்றால் என்னை அது கொட்டும். அது கடுமையான விஷம் உள்ளது.

அப்பறம் நாம் பேசாமல் அப்படியே இருந்தேன். அது போகிற வரையிலும் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

குருநாதா…! என்னை நீ இப்படிச் சோதிக்காதே…! கொட்ட வைக்காதே…! கொட்டினால் நான் தாங்கமாட்டேன்…! என்ற இந்த எண்ணம் தான் வருகிறது.

இதை எல்லாம் சில நேரங்களில் சில விசித்திரமான நிலைகளை அவரே நடத்திக் காட்டுவார்.

ஒவ்வொரு நிமிடத்திலேயும்
1.இல்லாத ஒரு நிலைகளெல்லாம் நமக்கு அங்கே நடக்கிறது என்றால் அது எப்படி…?
2.அவருடைய நிலை தான் என்கிற வகையில் தெரிந்து கொண்டேன்.
3.”அவர் தான்” என்று தெரிந்து கொண்ட பிற்பாடு கொஞ்சம் தெம்பு வந்து… இதையெல்லாம் கண்டு பயம் கொஞ்சம் தெளிந்து விட்டது.
4.எல்லாம் நீயே பார்த்து கொள்.. என்னமோ பார்த்துக் கொள்…! என்று கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவாகின்றது.

ஆனாலும் அந்தப் பய உணர்வு வரும் போது என்ன செய்யும்…? என்கிற வகையில் அதைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

பய உணர்வு வரப்படும் போது அது உனக்குள் என்ன செய்கிறது…? பய உணர்வு வந்தவுடனே அதைப் பார்த்து அந்தத் தேள் தன் கொடுக்கை என்ன செய்கிறது…? கொட்டுவதற்காக அப்படியே தூக்குகிறது.

நான் ஏற்கனவே தேள் எல்லாம் பிடிப்பேன்.

இந்தத் தேள் மோசமான தேள். வெள்ளையாக இருக்கிறது. “ராஜத்தேள்…” என்று சொல்வார்கள். அது கொட்டியது என்றால் பயங்கரமான விஷம்.

பயமும் இருக்கிறது. ஆனால் பயப்படும் போது என்னவாகின்றது. அந்த உணர்வை நுகர்ந்தவுடனே அது பயந்து போய் “ஜிர்…” என்று அது விரைத்துப் பார்க்கிறது.

அப்போது அந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும்…? என்ற உணர்வை ஊட்டுகிறார் குருநாதர்.
1.அது இறங்கிப் போகவேண்டும் என்ற இந்த உணர்வை மட்டும் நீ எண்ணிக் கொண்டிரு.
2.அது போய்விடும்…! என்று சில உணர்வுகளைக் கொடுக்கிறார்.

நீ பயப்பட்ட உணர்வுகள் உனக்குள் எப்படி இயங்குகிறது…? அதே உணர்வுகளை நீ அதிகமாகச் சேர்த்தாய் என்றால் அதிகமான இந்த விஷத்தன்மைகளை எடுத்தால் அது உமிழ்த்தும் உணர்வு உனக்குள் சேர்ந்தால் இது “நடுக்க வாதமாக…” நிச்சயம் வரும் என்று சொல்கிறார்.

தேளைக் கண்டு பயப்படுபவர்களைப் பாருங்கள். இனம் புரியாமல் கை கால் எப்படி நடுங்கிக் கொண்டு இருக்கும்.

அவர்களுக்கு ஒன்றும் இருக்காது. ஒரு சமயம் தேளைக் கண்டு பயந்திருந்தார்கள் என்றால் அந்த நினைவுகள் அடிக்கடி வரப்போகும் போது இந்த உணர்வுகள் எப்படி வருகிறது…? என்று காட்டுகின்றார் குருநாதர்.

1.இது எல்லாம் இந்த இயற்கையின் சில நியதிகள்
2.மனிதனுக்குள் எப்படி மாற்றங்கள் உருவாக்குகிறது…? என்ற வகையில் தெளிவாக்கிக் கொண்டே வருகிறார்.

அகஸ்தியன் பெற்ற மகா சக்திகள்

 

ஆதியிலே அகஸ்தியன் குழந்தையாகப் பிறந்த பின் அவன் அருகிலே கொசுவோ தேளோ பூரானோ யானையோ புலியோ நரியோ நாயோ எதுவும் வருவதில்லை.
1.காரணம் அவன் உடலிலிருந்து வரக்கூடிய மணம்
2.அந்த மிருகங்களுக்கு எதிர்நிலையாகிறது… அஞ்சி ஓடுகிறது.

தாய் கருவிலே பெற்ற நஞ்சினை வென்றிடும் பச்சிலைகள் மூலிகைகளின் மணங்கள் அகஸ்தியன் உடலிலே வினையாகிறது. அந்த மணமே வினைக்கு நாயகனாகி அவன் உடலிலிருந்து வெளிப்படுகிறது.

அந்த மணத்தை மற்ற மிருகங்கள் நுகரப்படும் பொழுது அவைகளின் விஷங்கள் ஒடுங்கி விடுகின்றது. அவைகளின் கவனத்தையும் திசை திருப்பி விடுகின்றது. ஆகையினால் மற்ற உயிரினங்கள் அகஸ்தியன் இருக்கும் பக்கம் வருவதில்லை.

1.ஆனால் இந்தக் குழந்தை அவன் ஒன்றும் மந்திரம் கற்றுக் கொள்ளவில்லை.
2.தாய் கருவில் தான் அதைப் பெற்றது.
3.ஏனென்றால் விஷத்தன்மை கொண்ட அந்தத் தாவர இனத்தின் மணங்களை
4.கருவிலிருக்கக்கூடிய குழந்தை கவர்ந்ததால் அதே மணத்தை நுகரும் அணுத்தன்மை இந்தக் குழந்தையின் உடலில் உருவாகி
5.அதனுடைய மணம் சிவமாகின்றது… அதுவே வினையாகிறது.
6.வினைக்கு நாயகனாகத் தீமையை நீக்கிடும் சக்தி பெருகுகிறது அந்தக் குழந்தையிடம்.

இப்படி வளர்ந்தவன் தான் அகஸ்தியன்…!

சந்தர்ப்பம்… அகஸ்தியன் தாய் கருவிலே இருக்கும் போது அத்தகைய உண்மைகளை உணர்ந்ததனால்… பிறந்த பின்
1.மற்ற விஷத்தன்மை கொண்ட பச்சிலைகளைத் தேடிச் சென்று
2.அவனுடன் அன்று பழகிய மற்றவர்களுக்கும் இதைக் கொடுத்து
3.விஷத்தன்மையிலிருந்து இருந்து மீட்கும் மார்க்கத்தை அவர்களுக்கும் காட்டி வந்துள்ளான்.

அப்படிப்பட்ட அந்த உண்மையான நிலை பெற்றவன் தான் அகஸ்தியன்.

அவன் காடுகளுக்குள் செல்லப்படும் பொழுது அவன் உடலிலிருந்து வரக்கூடிய மணங்கள மற்ற உயிரினங்களோ விஷ ஜெந்துக்களோ நுகரும் போது அதனின் விஷத்தை வலுவிழக்கச் செய்துவிடுகிறது. அதனால் அவைகள் இவன் அருகில் வருவதில்லை.

அதே சமயத்தில் மனிதர்களுக்கு வரும் நோய்களையும் மாற்றும் திறன் பெற்றான் அகஸ்தியன்.
1.நோய்கள் எதுவாக இருப்பினும் பல பச்சிலை மூலிகைகளின் துணை கொண்டு
2.மற்றவர்களின் உடல்களை நலமாக்கும் திறன் பெற்றான்.

இப்படி அவனுடைய அனுபவங்கள் பெற பெற அவன் சந்தர்ப்பத்தால் தாவர இனங்கள் எப்படி உருவானது…? சூரியன் எப்படி உருவானது…? பிரபஞ்சம் எப்படி உருவானது…? என்ற நிலையை அவனால் அறிய முடிகின்றது.

அவனுக்குள் விளைந்த உண்மையின் உணர்வுகளை உலகெங்கிலும் இருப்பினும் அகஸ்தியன் கூறிய அந்த உணர்வுகள் அனைத்தும் மறைக்கப்பட்டுவிட்டது.

மனிதனுக்குத் தேவைப்படும் நிலைகளுக்கு அந்தச் சட்டங்களை மாற்றி அமைத்து விட்டனர்.
1.மனிதன் திருந்தி வாழ்வதற்கு மாறாக தீவினைகளைச் செய்து
2.அதிகமாகத் தீய செயல்கள் கொண்டவராகத் தான் நாம் மாறிக் கொண்டுள்ளோம்.

இது போன்ற நிலையில் இருந்து நாம் தப்ப வேண்டும்.

உயிர் குரு – ஈஸ்வரபட்டர்

 

எப்பொருளைச் செய்விக்கவும் அதற்குகந்த சத்து நிலை.. பொருள்.. எல்லாம் தேவைப்படுகின்றது. பலகாரம் பட்சணங்கள் செய்யும் பொழுது அந்தந்தப் பொருளைக் கூட்டும் நிலை கொண்டு தான் அதற்குகந்த நாமம் பெறுகின்றது.

அதைப் போன்று தான்
1.“மனிதக் கரு அமிலச் சேர்க்கையில் வளர்ச்சி பெற”
2.இவற்றின் மூல வித்தை இந்தப் பூமி எடுக்க
3.பல வழிகள் ரிஷிகளினால் வளர்க்கப் பெற்று இன்றளவும் வளர்ந்து கொண்டுள்ளன.

அவர்கள் வகுத்த வளர்ப்பில் சூரியனின் ஒளிச் சமைப்பை இந்தப் பூமி எடுக்க… இந்தப் பூமி சமைப்பமில வளர்ப்பாகப் பல வளர வழி காட்டிய வழியில் வந்த நமக்கு…
1.குரு என்பது
2.நம் உயிராத்மாவே தான்.

உயிராத்மாவின் உயர்வை எண்ணத்தால் உணரும் பக்குவத்தைக் கொண்டு இந்த உடலில் உள்ள கோடானு கோடி அணுக்களுக்குச் சேவை செய்து குருவை வணங்கிட வேண்டும். ஆக… வணக்கத்திற்குரிய குரு நம் உயிராத்ம குரு தான்.

அந்தக் குருவிற்கு எண்ணத்தால் நாம் எடுக்கும் உயர்ந்த உணர்வு கொண்டு
1.இந்த உடலின் கோடானு கோடி அணுக்களும் இந்த ஆத்ம உயிரை வணங்கியே…
2.தெய்வமாக்கியே… தெய்வமாகியே…
3.ஆதம உயிரின் தெய்வக் குழந்தைகளாக…
4.உடல் உறுப்பில் வளரும் அணுக்கள் அனைத்தையும் ஒன்று போல
4.குருவின் உயர்வில் ஒவ்வொரு அணுக்களும் ஒவ்வொரு “ஒளி ஜோதி நிலை…” பெறுகின்ற செயல் நிலைக்கு
5.நம் எண்ண உணர்வைச் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் இந்த எண்ணத்தால் உணர்வைக் கூட்டும் குண நிலைக்கொப்பத்தான் உடலின் அணுத் தன்மையே வளர்கின்றது. நம் உடலை நாமே இம்சித்துத்தான் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

நாம் எடுக்கும் உணர்வின் எண்ண நிலைக்கொப்ப உணவைத்தான் உடல் பெறுகின்றது. எதை நாம் இந்த உடலில் செலுத்துகின்றோமோ அதன் சத்தைத்தான் இந்த உயிராத்மாவும் பெறுகின்றது.

வஞ்சனை கோபம் ஆத்திரம் சலிப்பு சங்கடம் சோர்வு வேதனை ஆகியவற்றில் எதை எடுக்கின்றோமோ அதைக் கொண்டு தான் நம் உயிராத்மாவிற்கு… நாம். நம் குரு தெய்வத்திற்கு… அபிஷேகம் செய்கின்றோம்.

உணர்வின் எண்ணத்தைச் செலுத்தும் வழியிலேயே…
1.ஞானிகள் மகரிஷிகள் காட்டிய வழியில் நடப்பதற்கு ஆசையைக் கூட்டுங்கள்
2.நடக்க வேண்டும்…! என்ற செயலை ஞானம் கொண்டு செய்யுங்கள்.
3.எண்ணும் அந்த எண்ண நிலைக்கொப்ப நன்மையாகவே முடியும்.

ஆனால்… செய்யும் செயலுக்கு அதி பேராசையைக் கூட்டி… ஆர்வத்தின் உந்தலை அதிகமாக்கித் தடைப்படும் சமயத்தில் சஞ்சலமும் சோர்வு கொண்டு…
1.செயலின் வேகத்தைச் சாந்தமில்லா முறையில் செலுத்தினால்
2.அதிலே எதிர்ப்படும் நிலையை இந்த உடல் தாங்குவதில்லை.

சமமான நல் உணர்வு எண்ணத்தை நாம் எடுக்க… செயலின் வேகத்தைச் செலுத்தும் செயலும் நல் வழி பெற… “இவ்வெண்ணத்தைக் கூட்டும் உணர்வைப் பக்குவமாக்குங்கள்…!”

நல்லதே நடக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

உடலிலிருந்து வரக்கூடியதை ஒன்றிலிருந்து ஒன்றை மீட்டிடும் நிலைகள் கொண்டு அறிந்திடும் ஆற்றல் பெற்றது கார்த்திகேயா. நம் ஆறாவது அறிவின் தன்மை என்பது தான் கார்த்திகேயா.

ஒரு வெளிச்சத்தை நாம் போட்ட பின் அங்கே இருக்கும் பொருள்கள் அனைத்தும் தெரிகின்றது. அதைத்தான்
1.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு
2.இருளை போக்கிப் பொருள் காணும் நிலைகள் வரப்படும் போது
3.“கார்த்திகேயா…” என்று காரணப்பெயர் வைக்கின்றார்கள்.
4.பங்குனி மாதம் – பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்தது.

முதலில் வரக்கூடியது அனைத்தும் தட்சிணாயாணம். இந்த உடலின் நிலைகளில் இருந்து அறிவின் ஆற்றல் வரப்படும் போது மஹா சிவன் ராத்திரி என்று காட்டுகின்றார்கள்.

அடுத்து பங்குனி மாதம் வரப்படும் போது உத்தராயணம்.

இதற்கு முன்
1.மாசி மாதம் வரையிலும் தட்சிணாயாணம் நடக்கின்றது.
2.இந்த உடலுக்குள் இருள்.
3.ஆறாவது அறிவு கொண்டு தட்சிணாயாணம் மாறி வெளிச்சம் அதிகமாகின்றது.
4.அறிவின் ஆற்றல் அறிந்திடும் உணர்வு கொண்டு ஆறாவது அறிவால் உத்தராயணம்
5.பங்குனி உத்திரத்தில் தேரைப் பிடித்து இழுப்பார்கள்.
6.பல ஆயிரம் பேர் சேர்ந்து முருகனை வலம் வரும்படிச் செய்கின்றார்கள்.

நாம் அனைவரும் இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு அருள் உணர்வின் ஆற்றலை நமக்குள் பெருக்கிடல் வேண்டும்.

உத்தராயணம் – இன்னொரு பிறப்பிற்கு வரக்கூடாது என்ற நிலைகளும் நாம் இன்று பொருள் எடுத்தாலும் உயிருடன் ஒன்றிய உணர்வின் ஒளியாக அவனுடன் இணைய வேண்டும் “மாற வேண்டும்” என்பதற்குத் தான் அதைக் காட்டுகின்றார்கள்.

பங்குனி உத்திரம் அன்று உத்தராயணம் என்ற நிலைகளில் வைத்து ஆறாவது அறிவு கொண்டு மெய் ஒளியை நாம் வளர்த்துப் பிறவா நிலை என்ற நிலைகள் அடைவதை நமது சாஸ்திர விதிகள் தெளிவாகக் காட்டுகின்றது

சித்திரை – நாம் நுகரும் ஒவ்வொரு உணர்வின் நிலையிலும் சித்திரை சிறு திரையாக மறைத்துக் கொள்கின்றது.

நமக்குள் ஒளியை மறைக்கும் நிலையைப் பிளந்து ஆறாவது அறிவின் துணை கொண்டு இருளைப் போக்கிப் பொருள் காண வேண்டும் என்பதற்குத்தான் உத்திரம்… உத்தராயணம் என்று காட்டினார்கள் ஞானிகள்.

நம்முடைய மூச்சு எல்லோரையும் நல்லதாக்கச் செய்ய வேண்டும்

 

இன்றைய உலகத்தின் சூழ்நிலையில் நாம் எங்கே இருக்கிறோம் என்றால் “மரண வாயிலில் இருக்கின்றோம்…”

நம் பிரபஞ்சத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களில் இருந்து வருவதைக் கவர்ந்து வெளிப்படுத்துவதைச் சூரியன் தன்னுடைய பாதரசத்தால் மோதி எலக்ட்ரிக் ஆக மாற்றுகின்றது.

அதனுடைய உணர்வில் வேறு ஏதாவது எடுத்தால் விஷத் தன்மையான எலக்ட்ரானிக் ஆக மாறுகிறது. மாற்றினாலும் கூட விஷத்தின் தன்மை கொண்ட நட்சத்திரங்களின் உணர்வுகளைப் பிரித்து… அடித்து… மோதியவுடனே புது விதமான உணர்வாக விஷத் தன்மையாக மாறுகிறது… “நியூட்ரான்…”

1.நியூட்ரான் என்ற விஷத் தன்மையாக மாறியபின் அது அதிவேகமாக இயக்கும் சக்தியாக மாறுகிறது
2.எதனையுமே துரித கதியில் அது இயக்குகிறது.

எந்தப் பொருளுக்குள்ளும் அது இணைந்த பின் எதிர்நிலையாகி… புரோட்டான் என்று அதனுடைய சக்திக்கே மாறுகின்றது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

விஞ்ஞானிகள் கதிரியக்கங்களை வைத்து நியூட்ரானைப் பிரிக்கின்றார்கள். பிரித்து அந்த விஷத்தின் தன்மையை அவர்கள் வெளிப்படுத்தும் பொழுது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. அது பரவும் போது
1.நம் உடல்கள் எல்லாம் அப்படியே இருக்கும்
2.கட்டிடங்களும் அப்படியே இருக்கும்
3.ஆனால் மனிதனுடைய சிந்தனைகள் அனைத்தும் அழிந்துவிடும்

விஷத்தை சாப்பிட்டால் எப்படி இருப்போம்…? அந்த மாதிரியான குண்டுகளைச் செய்து வைத்திருக்கின்றார்கள். எல்லா நாடுகளிலுமே இது உண்டு. நம் நாட்டிலும் உண்டு. அமெரிக்காவிலும் சீனாவிலும் ஒவ்வொரு நாட்டிலும் வைத்திருக்கின்றார்கள்.

அவன் வைத்திருக்கின்றான்… நாம் ஏன் செய்யக் கூடாது…! என்று இந்த ரகசியம் எல்லோருக்கும் வெளி வந்துவிட்டது உலக மக்களை அழித்துக் கொள்வதற்கு தான் விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது.

1.ஒரு பக்கம் மனிதனை உருவாக்குகின்றான்
2.ஒரு பக்கம் மனிதனையே அழித்துக் கொண்டிருக்கின்றான்.

இந்த நிலைதான் இன்று பெருகி வருகின்றது.

நட்சத்திரங்களிலிருந்து வருவது மின்னல்களாக மோதுகிறது. கடலில் படுகின்றது. மின்னல் தாக்கும்போது மணலாக மாறுகின்றது.

விஞ்ஞானி அந்த அணுவைப் பிரித்து யுரேனியமாக மாற்றுகின்றான். அதிலேயே பல நட்சத்திரங்களின் தனிமங்களைச் சேர்க்கின்றான். அணுகுண்டாக வெடிக்கச் செய்கின்றான்.

மின்னல் எப்படி வெகு தூரத்திற்குப் போகிறதோ அதனின் இயக்கச் சக்தியைக் துரித கதியில் வெப்பத்தின் தன்மை கூட்டி துரித நிலையில் இயக்கக்கூடிய தன்மைக்குக் கொண்டு வருகின்றார்கள். அதை வைத்து இயந்திரங்களை இயக்குகின்றான்.

1.அதில் வரும் விஷக் கழிவுகளைச் சூரியன் கவர்ந்து வைத்திருக்கின்றது.
2.கழிவாக்கிய இந்த விஷத்தின் தன்மையைச் சூரியன் எடுத்து இந்தக் காற்று மண்டலத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கத்தான் செய்கிறது.

மனிதன் விஷத்தன்மை கொண்ட சத்துகளைக் கடலிலிருந்து பிரித்து எடுக்கின்றான். அதனின் தரத்தை உயர்த்துகின்றான். ஆனால் கழிவுகள் வருகிறது.
1.சூரியன் எடுத்து இங்கே கழிவாகப் பரவச் செய்கின்றது.
2.இப்படித்தான் அசுத்தமான அலைகள் இங்கே பெருகிக் கொண்டிருக்கின்றது.

இதைச் சுத்தப்படுத்தும் நிலை வேண்டுமல்லவா.

மனிதனுக்குள் இத்தகைய தீமையின் உணர்வுகள் வளராது தடுக்க வேண்டுமென்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அந்தக் கழிவு நமக்குள் சேராது சுத்தப்படுத்தினால் ஒழிய நம்மை நாம் காக்க முடியாது. “துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எடுத்தால் தான் தப்ப முடியும்…”

ஆனால் மனிதன் ஈன்று தன்னுடைய சுகத்திற்காக விஷத் தன்மை வாய்ந்த உணர்வுகளைச் சேர்க்கின்றான். புதுப்புது உணர்வுகள் ஆகி புதுப்புது விஷத் தன்மைகள் இங்கே பரவுகின்றது.

நிமோனியா காய்ச்சல் என்று அக்காலத்தில் கொசுக்கள் மூலம் எல்லாம் வந்தது. அப்படி வந்தால் உடனே மரணம் தான். மூளை சிதைவாகும்… மூளைக் காய்ச்சல் வரும்.

அத்தகைய கொசுக்கள் கடிப்பதால் மனிதன் சிந்தனை இழக்கின்றான்… துரித நிலைகள் கொண்டு மடிகின்றான்…! என்று கண்டுபிடிக்கின்றான்.

காரணம் இவன் எடுத்துக் கொண்ட விஷத்தின் தன்மை காற்றிலே பரவுகின்றது. ஆனால் மனிதனுக்குள் எடுத்துக் கொண்ட இந்தக் கழிவும் இதுவும் சேர்க்கப்படும் பொழுது
1.இந்த உணர்வு கலந்து விஷப் பூச்சிகளாக மாறுகிறது. விஷ அணுக்களாக மாறுகின்றது
2.இன்று அதிக அளவில் மாட்டின் மாமிசங்களைச் சாப்பிடுகின்றார்கள்.
3.மாட்டிற்குள் இந்தப் பூச்சிகள் குடைந்து மூளைக்குள் சென்று மாட்டையே வீழ்த்தி விடுகின்றது.

இந்த மாதிரித் தான் மனிதனுக்குள் விளைந்த நிலைகள் இன்று ஏராளமாக உண்டு. இதை எப்பொழுது மாற்றுவது…? ஆக மொத்தம் நம்மைக் காக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஒரு ரோஜாச் செடி மற்ற செடி கொடிகளின் மணங்கள் தனக்குள் வராதபடி தன் மணத்தின் வலுவால் தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றது.

இதைப் போன்றுதான் நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்து தீமையின் உணர்வுகள் நமக்குள் வராதபடி பாதுகாக்க வேண்டும்.

அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எடுத்துப் பழகி நமக்குள் பெருக்கி நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும். இந்தக் காற்றிலே தான் அந்த நல்ல சக்தியும் இருக்கின்றது.

மனித உருக் கருவை உருப் பெறச் செய்யும் சக்தி – ஈஸ்வரபட்டர்

 

ஓர் பொருளைச் செய்யவோ ஓர் பொருளை வளர்க்கவோ பலமான செயல் வலுக்கூடிய பிறகு தான் அந்தப் பொருள் உருப் பெற்று உபயோகமாகின்றது… அதன் பலனையும் பெற முடிகின்றது.

அதே போல இவ்வுயிரான ஆத்மா உருப் பெறவும் பலவற்றில் மோதி பல சக்திகள் பெற்று இப்பிம்ப நிலை பெறுகிறது.

1.தந்தை உடலின் அமிலம்… தாய் தரும் உயிர்த் துடிப்பு… இவற்றுள் கருவாகி வளர
2.தாயின் சத்து நிலையை உணவாகப் பல கோடி உயிரணுக்களை ஜீவ வளர்ச்சி தந்து
3.கர்ப்ப காலத்தில் எடுக்கவல்ல அறு சுவையின் உயிரணுவின் வளர்ப்புக்கு உணவு தந்து
4.கரு தோன்றி வளர்ந்து பிறப்பில் தன் உணர்வின் உயர்வை உணர்வுக்குகந்த உணவூட்டி
5.இவ்வுயிராத்மாவை வளம் பெற வலுத் தரும் இந்த உடலின் கோடானு கோடி அணுக்களுக்கும்
6.உயிராத்மாவின் சேவை நிலை செய்திடல் வேண்டும்.

உடலின் உயிரணுக்களுக்கொப்ப உணர்வு நிலை தோன்றி… உணர்வின் உந்தலில் எண்ணத்தைச் செலுத்தி… அதனதன் தேவைக்குகந்த உணவை அது அது பெறுகின்றது.

உடல் என்ற உருவக் கூட்டில் நமக்கு நண்பனும் உண்டு… எதிரியும் உண்டு.
1.உடலில் உள்ள உயிரணுக்களில் உணர்வுக்கொத்த சேவை நிலையை நம் உயிராத்மா தந்துதான்
2.தான் குடியிருக்கும் ஆலயத்தைப் பேணி வணங்குகின்றது.

உடலில் ஏற்படும் உபாதைகள் உணர்வில் மோதியவுடன்… இவ்வெண்ணம் மாற்று நிலையில் செல்லாமல்… உணர்வின் வேதனையை உணர்ந்தே உயிரின் ஆத்மாவும் செயல் கொள்ள வேண்டியுள்ளது. அதே போன்று உடலில் ஏற்படும் இன்ப உனர்விற்கும் இவ்வுயிராத்மாவின் செயல் நடக்கின்றது.

உடலின் உணர்வும் உடலில் வளரும் கோடானு கோடி அணுக்களும் உள்ளதென்றால் அவ்வணுக்களில் பல நிலைகள் உண்டு. இந்த உடல் திடம் கொள்ள… ஆறு நிலையான அமிலச் சேர்க்கையின் வளர்ச்சி கூடி ஏழாம் உருவ திடச் செயல் தான் “இப்பிம்பக் கூடு…!”

இந்த உடல் கலவையில் எல்லாமே உண்டு…!

இந்தப் பூமியில் பல இரசாயண அமிலத் தன்மைகள் வளர்ந்துள்ளனவோ அவற்றின் சீரிய குணம் கொண்ட ரசச் சக்தியும் தங்கச் சத்தும் இரும்பின் கருமை நிற அமில சத்தும் காந்த மின் ஒளி நிலையும் இதன் தொடர்பில் பல இரசாயண அமிலங்களும் உண்டு.

நீர் வாயு குண்டு… அணு குண்டு (HYDROGEN AND NUCLEAR BOMBS) போன்றவற்றைச் செய்விக்க பல உலோக மண் கலவைகளில் இருந்து அதனுடைய சத்தை நுண்ணிய அளவில் எடுத்துச் செய்விக்கின்றனர்.

அந்த நுண்ணிய பொருளினால் உலக்த்தையே அழிக்கவல்ல சத்து நிலை எப்படிச் சேர்க்கபப்டுகின்றதோ அதைப் போன்று இந்த உடல் சேர்த்த அமிலத்தில் சில விஷத் தன்மை கொண்ட அமிலச் சத்துகளும் உண்டு.

மனிதன் இட்ட பெயரில் அவ்வமிலத்தின் செயல் இல்லை. (விஞ்ஞானம் இன்னும் அதைக் காணவில்லை).

உயிரணுக்கள் ஜீவ சரீர ஞானச் செயல்… சொல்லாற்றல் கொண்ட… உருவ உணர்வு எண்ணச் சரீரம் அமைய… அதற்கு வேண்டிய அமிலக் கூறுகள் இந்தப் பூமியில் குறிப்பிட்ட சில இடங்களில் உண்டு.

கடலில் மலைப் பிரேதசங்கள் சிலவற்றிலும்… ஆழ் கிணறுகளிலும்… மனிதக் கரு உருப் பெற வேண்டிய அந்த அமிலச் சத்தை இந்தப் பூமி எடுத்து வெளிக்கக்கும் காற்றின் தொடர்பலைக்குச் செயல்பட
1.பல தெய்வத் தொடர்பு கொண்ட சப்தரிஷிகள் செயல் உருவிலேயே
2.பல ஆயிரம் காலங்களுக்கு முன்பே செயல்படுத்தியுள்ளனர்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

தீமைகளை அகற்றும் ஆற்றலை நாம் எப்படிப் பயிற்சியாக எடுத்துப் பழகிக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் இதை யாம் உபதேசிக்கின்றோம்.

உதாரணமாக இரண்டு பேர் கடுமையாகச் சண்டை போடுகின்றார்கள். ஒருவருக்கொருவர் சாபமிட்டுக் கொள்கின்றார்கள். சாபமிடுவோரை நீங்கள் பார்க்கின்றீர்கள். அடுத்த கணம் என்ன செய்ய வேண்டும்?

1.ஓ..ம் ஈஸ்வரா… என்று உங்கள் உயிரை வேண்டுங்கள்.
2.கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வாருங்கள்.
3.சாபமிட்ட நினைவு உயிரில் மோதாமல் தடுக்க வேண்டும்.
4.இது ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் ஏங்கி நினைக்க வேண்டும்.

1.தீமைகள் மூக்கு வழியாகப் போவதற்கு மாறாக
2.இந்த வழியில் திருப்பி விட்டுவிட வேண்டும்.

இதில் உங்களுக்கு என்ன என்று சந்தேகம் இருந்தால் ஒரு எலுமிச்சம் பழத்தை நீங்கள் புருவ மத்தியில் வையுங்கள். அது எப்படி இழுக்கிறது…? என்று தெரியும்.

அதே மாதிரி ஒவ்வொன்றையும் விஷமான பொருளை எடுத்து இந்த இடத்தில் நெற்றிக்கு அருகில் ஆட்டிப் பாருங்கள். அது எவ்வளவு இழுக்கின்றது என்று தெரியும்.

ஏனென்றால் நம் உயிர் உள்ளுக்குள் (புருவ மத்திக்குள்) இருக்கிறது.

நாம் கண்ணால் தான் பார்க்கிறோம். கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் எடுத்து நம் ஆன்மாவில் கொடுக்கிறது. அப்பொழுது அவர் கெட்டது செய்தார் என்று தெரிந்து கொள்கிறோம். அவர் திட்டுகிறார் என்று தெரிந்து கொள்கிறோம்.

ஆனாலும் நம் உயிரில் படும் போது தான் அதைத் தெரிந்து கொள்ள முடியும்.

தெரிந்த பிற்பாடு என்ன செய்கிறது?

உதாரணமாகத் தீ எரிகிறது பார்க்கின்றோம். காலை வைத்தால் சுடுகிறது. தெரிந்தும்… காலை வைத்தால் சுடாமல் என்ன செய்யும்…? சுடத்தானே செய்யும்.

“சுருக்…” என்று சுட்டவுடனே நாம் காலை எடுத்துக் கொள்ள வேண்டுமல்லவா.

அதே போல் சுடு தண்ணீரைக் காய வைக்கிறோம். தண்ணீர் காய்கின்றது என்று தெரிகிறது.

முதலில் கையை வைக்கிறோம். வைத்தவுடனே என்ன செய்ய வேண்டும்? “சுரீர்…ர்ர்…” என்றதும் “வெடுக்…” என்று எடுக்க வேண்டும்.

சுட்டுவிடும் என்று தெரிந்தும் “லபக்..”. என்று உள்ளுக்குள் கையை விட்டால் என்ன செய்யும்? கை பொத்துப் போகுமா… இல்லையா…?

தண்ணீராகத்தான் தெரிகிறது. ஆனால் “எவ்வளவு சூடு..?” என்று தெரியவில்லை.

விரலை விட்டுத் தொட்டுப் பார்க்கிறோம். தொட்டுப் பார்க்கும் போது முதலிலேயே முழுவதும் கையை விட்டால் என்ன செய்யும்?

கை வெந்து போகுதா… இல்லையா…?

இதே மாதிரித்தான் ஒரு சாபமிடுவோரைப் பார்த்தோம் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு போக வேண்டும்.

அதாவது உங்கள் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வரவேண்டும். அப்பொழுது சாபமிட்டது உள்ளுக்குள் போகாமல் தடுக்கப்படுகின்றது.

தண்ணீர் சுடும் என்று தெரிந்து கையை “விசுக்.,.” என்று எடுக்கின்றோம் அல்லவா…! அதைப் போன்று தான் சாபம் விடுகிறார்கள் என்று தெரிகிறது அல்லவா…!

அப்பொழுது உடனே என்ன செய்ய வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் படர வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று புருவ மத்தியின் வழியாக உடலுக்குள் செலுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து இதன் வழி நம் உயிரில் மோதினால் அகக்கண்.

1.நம் உயிர் என்ன செய்கிறது. உடலுக்குள் உணர்த்துகின்றது.
2.அதைப் பார்க்க முடியுமா? என்றால் முடியாது.
3.கண்ணால் பார்க்கிறோம்… அந்த உணர்ச்சிகள் உயிரிலே பட்டபின் அந்த அறிவாக நாம் தெரிந்து கொள்கிறோம்.
4.வேதனைப்படுகின்றான் அல்லது வேதனைப்படுத்துகின்றார்கள் என்று தெரிகிறது. அது ஹரி ஓம்… = அதை அறிவோம்.

சாபமிட்ட உணர்வுகள் நம் உயிரிலே பட்டவுடனே அந்த எண்ணம்… சொல்… பதட்டம்… என்று எல்லாம் வருகிறது. “இப்படிச் சொல்லிவிட்டானே பாவிப் பயல்…!” அடுத்து உள்ளுக்குள் இழுக்கின்றது.

அப்பொழுது அதைத் தடுக்க வேண்டும்.

தடுப்பதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்தல் வேண்டும். எடுத்தால் உள்ளுக்குள் கண்ணின் நினைவு கொண்டு இங்கே வலுவாகின்றது.

வலுவான பிற்பாடு – இங்கே உள்ளுக்குள் போகாமல் தடுத்து நிறுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றபின் என்ன செய்கிறது?

உள்ளுக்குள் இழுக்க மறுக்கின்றது. அப்பொழுது சாபமிட்ட வேதனைப்பட்ட உணர்வுகள் “அனாதையாக…” போகின்றது,

“ஒரு நிமிடம்… இரண்டு நொடி…” எண்ணினால் கூட போதும்.

நமக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் வலுவான பிற்பாடு அதைச் சூரியன் இழுத்துச் சென்றுவிடுகிறது. நம் ஆன்மா சுத்தமாகின்றது.

ஏனென்றால் நாம் இங்கே இழுக்க மறுக்கின்றோம்.

சாபமிடும் உணர்வுகள் அவர்களை விட்டு வெளியே வருகிறது. சூரியனின் காந்த சக்தி இழுத்து வைத்துக் கொள்கிறது. யார்…? சாபமிட்ட உணர்வைச் சூரியன் இழுத்து வைத்துக் கொள்கிறது.

நமது கண் என்ன செய்கிறது…?

அவனைப் பார்த்தவுடனே நமக்குள் பதிவாக்குகிறது. பதிவாக்கிய பின் என்ன செய்கிறது…?

கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் அவர் பேசியது வெளி வந்ததை அதை இழுத்து நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.

நம் உயிர் கண்ணை ஒட்டி இருக்கிறதால் அதை இழுத்து இங்கே கொண்டு வந்து கொடுக்கின்றது.

உயிருக்குக் கொடுத்தவுடன் அவர் சாபமிடுவது கண்களுக்குத் தெரிந்தாலும் அந்த உணர்ச்சியாகவும் அதனின் அறிவாகவும் தெரிகிறது. “அவன் சாபமிடுகின்றான்…” என்று எல்லாம் தெரிகிறது.

ஒரு பயிற்சி:-
1.நீங்கள் கண்களைத் திறந்து பார்த்துக் கொண்டே இருங்கள்.
2.கண் பார்த்துக் கொண்டு இருப்பதை (எண்ணாமல்) உயிரான நிலைகள் இழுக்காமல் நினைவை வேறு பக்கம் செலுத்திக் கொண்டு இருங்கள்.
3.நம் கண் பார்வையில் படும் உணர்வுகள் நம்மை இயக்க முடியாது
4.நம் நினைவு எங்கே செல்கிறதோ அது தான் இயக்கும்

செய்து பாருங்கள்.

இதைப் போன்று தான் அவர் சாபமிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த நேரத்தில்… அந்த இடத்தில்… உங்களை வேறு யாராவது (நண்பர்கள்) “அங்கே வரச்சொன்னார்களே… நேரம் ஆகிப் போயிற்றே… இன்னும் காணோமே…!” என்று நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

சாபமிட்ட அலைகள்… அந்த நினைவுகள்.. உங்களுக்குள் வராது. ஏனென்றால் நீங்கள் எண்ணிய எண்ணம் அங்கே அது முதலில் வந்துவிடுகின்றது.

நண்பர் நம்மை பார்ப்பதற்காக அங்கே வரச் சொல்லி முதலில் சொன்னார் இல்லையா. அவர் சொன்ன அந்தப் பதிவை நமக்குள் வைத்தவுடனே..,
1.ஐயோ.. நேரமாகிப் போய்விட்டதே…! என்று எண்ணிப் பாருங்கள்.
2.அந்த நேரத்தில் “நின்று…”
3.சாபமிடுபவன் சொல்வதைக் கேட்க முடியாது.
4.அப்பொழுது அந்தச் சாபம் இட்டது உங்களுக்குச் சுத்தமாகவே தெரியாது.
5.எவனோ… என்னமோ பேசுகிறான்…! என்று எண்ணிவிட்டு நீங்கள் போவீர்கள்.

இந்த மாதிரி உங்கள் வேலைக்கு அவசரமாகப் போவதை இங்கே பதிவாகிக் கொண்டு போகும் போது அந்தச் சாப உணர்வுகள் உள்ளுக்குள் வருவதில்லை.

அதே மாதிரித்தான் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவு செய்து கொள்ளுங்கள். அதற்குத்தான் இந்த உபதேசமே செய்கின்றோம்.

அவன் உணர்வு நம்மிடம் பட்டது. சாபமிடுகின்றான் என்று தெரிந்து கொள்கின்றோம்.

அடுத்தது என்ன எண்ண வேண்டும்…?

1.பதிவு செய்த அந்தத் துருவ நட்சத்திரத்தை நினைவுக்குக் கொண்டு வந்து
2.ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் படர வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாம் வேலைக்குப் போகும் போது அதைப் பார்க்காமல் போவது வேறு.

ஆனால் நாம் சாபமிடும் உணர்வைக் கேட்டுப் பதிவாக்கிக் கொண்டு அதிலிருந்து போன பிற்பாடு நமக்குள் சுத்தப்படுத்த வேண்டுமல்லவா…!

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று உடலைச் சுத்தப்படுத்திவிட்டு அவர்கள் இரண்டு பேருக்குள்ளும் ஒன்றுபட்டு வாழக்கூடிய அந்த சக்தி வரவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.நல்ல குணங்களை இப்படி நாம் காக்க வேண்டும்
2.இப்படிச் சுவாசித்துக் கொண்டோம் என்றால் நம் உடல் என்ன செய்கிறது?
3.சாப அலைகள் உடலுக்குள் விளையவிடாமல் தடுக்கச் செய்கிறது.

அப்பொழுது நமக்குள் ஒரு சந்தோஷ உணர்வு வருகின்றது. நாம் அந்த நல்லதைச் சொல்லால் சொல்லிவிட்டுப் போய்விடுகிறோம்.

சாபமிட்டவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று சொன்னோம் அல்லவா. அவர்கள் இரண்டு பேர் உணர்வு இங்கே பதிவாகி இருப்பதால் நாம் இங்கே சமைத்து அனுப்பிய உணர்வுகள் என்ன செய்யும்?

1.நம் உடலைச் சுற்றிக் கொண்டே இருக்கும்.
2.இதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.
3.அவர்கள் ஒன்று பட்டு வாழவேண்டும் என்று மீண்டும் மீண்டும் நம்மை நினைக்க வைக்கின்றது.

இப்படிச் செய்யாமல் போனால் அவர்களை நினைக்கும் போதெல்லாம் என்ன செய்யும்?

நடு ரோட்டில் சாபமிட்டார்கள் என்று நினைக்கும் போதெல்லாம் இவர்கள் விட்ட சாபத்தையெல்லாம் அடுத்தவர்களிடம் சொல்லி
1.அவர்களிடம் இந்த வித்தை எடுத்துக் கொடுத்து
2.நமக்குள்ளும் இதை வளர்த்துக் கொள்கிறோம்.

நம் எண்ணத்தின் கூர்மை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்…?

 

ரோட்டிலே நாம் சென்று கொண்டிருக்கின்றோம். அப்போது நெடு நாள் பார்க்காத ஒரு நண்பரைப் பார்க்கின்றோம். அந்த ஆர்வத்தில் செல்கின்றோம்.

இரண்டு பேரும் சந்திக்கக்கூடிய நேரத்திலே அந்த இடம் அசுத்தமாக இருக்கின்றது.. அசூசையாக இருக்கின்றது. ஆனால் நண்பன் என்ற ஆர்வத்தில் எண்ணும் பொழுது அதை நுகர்வது இல்லை.

1.பேச்செல்லாம் முடிந்த பின்பு திரும்பிப் பார்க்கும் போதுதான்
2.ஐய்யய்யோ… இங்கே நின்று கொண்டல்லவா இவ்வளவு நேரம் பேசியிருக்கிறோம் என்று தெரிகிறது… நாற்றமும் அப்போது தான் தெரிகிறது.

அப்பொழுது எது இயக்குகின்றது…? அந்தக் கூர்மையான எண்ணங்கள் தான் அப்படி வருகின்றது.

ஒரு சிலர் என்ன செய்வார்கள்…?

எப்பொழுது பார்த்தாலும் குறைகளையே பேசிக்கொண்டிருப்பார்கள் அவர் உட்கார்ந்திருக்கும் இடத்தில் பார்த்தால் ஐயோ… இங்கே ஏதோ நாற்றம் அடிக்கிறது என்றே சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் நாற்றத்தை எண்ணாதவர்கள் அங்கே வந்த பின் அவர்களுக்கு அது தெரியாது. ஆனால் இவர்கள் சொன்ன பின் அப்படியா… இப்போது தான் தெரிகிறது…! என்றும் சொல்வார்கள்.

அதே உணர்வை நுகர்ந்த பின் அவர் செய்த நிலையை ஆமாம் என்று சொல்வார்கள்.

இது எல்லாம் எது இயக்குகின்றது…? கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாக ஆகின்றாய்…! என்பது போன்று அதனின் உணர்வு கொண்டே நமக்குள் வளர்கின்றது.

ஆகவே நாம் எதை எண்ண வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று சதா எண்ண வேண்டும். அது தான் தியானம்…!

எப்பொழுது கெட்டதைச் சந்திக்கின்றோமோ அந்தக் கெட்டது நமக்குள் வராதபடி உயிரான ஈசனிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று எண்ணிச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பையனுக்கு உடம்புச் சரியில்லை என்றால் உடனடியாகத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் பையன் உடலில் படர வேண்டும். அவன் உடல் நலமாக வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சி பையனுடைய உணர்வு (உடல் நலக்குறைவான) நமக்குள் வராதபடி தடுக்க வேண்டும்.

அவனிடமும் இதைச் சொல்லி… “அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி எடு… உனக்கு நல்லதாகும்…!” என்று நினைவுபடுத்த வேண்டும். நாம் சொல்லிப் பதிவு செய்ததை அவனும் எண்ணி எடுக்கும்பொழுது அவனைப் பாதுகாத்துக் கொள்கின்றான்.

செடி கொடிகள் எப்படித் தன் மணத்தால் தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றது. அதே போல் மாடு ஆடு எல்லாம் முகர்ந்து பார்க்கிறது. தனக்கு உகந்ததாக இல்லை என்றால் விலகிச் சென்று விடுகின்றது.

ஆனால் மனிதனாக இருக்கும் நாம் கருணைக் கிழங்காக இருந்தாலும் அதை வேக வைத்து விஷத்தை நீக்கி விட்டுப் பலசரக்குகளை அதற்குள் போட்டு நமக்கு உகந்ததாகச் சுவையாக உருவாக்கி உட்கொண்டு மகிழ்கின்றோம்.

அதைப் போன்று தான்
1.தீமை என்ற உணர்வு வந்தாலும் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து
2.இருளை நீக்கி ஒளியான அணுவாக நமக்குள் மாற்ற வேண்டும்.

விஞ்ஞானி ஆடு மாடு மற்ற உயிரினங்களின் செல்களை எடுத்துப் புதிது புதிதாக மாற்றுகின்றான். செடி கொடிகளில் ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து வீரிய விதைகளை உருவாக்குகின்றான்.

அது போல் நாமும்
1.அந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சக்தி வாய்ந்ததாகச் சேர்த்துத் தீய வினைகளை மாற்றி கொள்ள முடியும்.
2.தீமைகளில் இருந்து நாம் விடுபட முடியும் அருள் ஒளியை நமக்குள் பெருக்கவும் முடியும்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை எலும்புக்குள் உள்ள ஊனிலே வலுவாக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

ஈரமுள்ள பொருள் எதுவாகிலும்… அதன் மேல் காற்று பட்டவுடன் அதன் மணம் வெளிப்படுகின்றது. மூடி வைத்துள்ள சமைக்கப்பட்ட பொருளைத் திறந்தவுடன் அதன் மேல் காற்று படும் பொழுதும் மணம் வீசுகின்றது.

மண் மரம் போன்றவற்றில் நீர் பட்டவுடன் அதிலிருந்து உஷ்ண ஆவி வெளிப்படும் பொழுது காற்றின் மேல் அந்த ஆவி வெளிப்பட்டு மணம் வெளி வருகின்றது.

எந்தப் பொருளைச் சமைத்தாலும் அச்சமைப்பின் உஷ்ணத்திற்கொப்ப “சமைக்கப்படும் பொருளின் ஆவி நிலையின் மணம்” வெளிப்படுகின்றது. இந்தக் காற்றில் தான் இந்தப் பூமி வளர்த்துப் பக்குவப்படுத்திய அனைத்து அமிலச் சத்துகளும் நிறைந்துள்ளன.

ஒன்றுடன் ஒன்று உராயும் உராய்வில் அதனுடைய மணமும் மாற்று நிலையும் செயல் கொள்கின்றது. இதைப் போன்று தான் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளி காந்த மின் அலைகளுடன் பூமியின் ஈர்ப்பு சக்தி மோதலினால் உராய்வாகின்றது.

ஒன்றின் மோதலில் இருந்து வெளிப்படுத்தும் உராய்வைக் கொண்டு அதனதன் மணம் எப்படி வெளிப்படுகின்றதோ… அதைப் போன்று சூரியனின் சமைப்பு அணு காந்த மின் ஒளியை இப்பூமியின் சமைப்பு ஓட்ட உராய்வினால் ஒளியாகக் காண்கின்றோம்.

சூரியனின் ஒளியை நம் பூமி எடுக்கும் உஷ்ண மின் அழுத்தத்திற்கொப்ப சுழலுகின்றது. அதே போல் சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற சுழற்சிக் கோளங்களான சந்திரன் செவ்வாய் வியாழன் புதன் சனி முதலான நாற்பத்தி எட்டுக் கோளங்களும் மற்ற நட்சத்திரக் கோளங்களும் அவை அவை வளர்ந்த விதம் தூர விகித நிலைக்கொப்ப அவை ஒளி மணம் பெறும் நிலை பெற்றுச் சுழன்று கொண்டுள்ளன.

சூரியக் குடும்பத்தின் சுழற்சி மண்டலத் தொடர்பு கொண்டு தான் சூரியனும் ஒளி பெற்று ஒளிர்ந்து கொண்டுள்ளது.

சாதாரணப் பொருளுக்கே காற்றின் மோதலினால் மணம் வெளிப்படுகின்றது.
1.சமைக்கப்படாத பொருளின் மேல் காற்று மோதி வெளிப்படும் மணத்தைக் காட்டிலும்…
2.“அதி உஷ்ணத்தைக் கொண்டு” சமைக்கப்படும் பொருளின் மணம் சமைக்கப்படும் காலத்தில் அதிகமாக வீசுகின்றது.

பூமியின் பொருளின் மணங்கள் சுழன்று கொண்டே… மோதலின் மாற்றம் கொண்டே… ஒளியாகி ஒளிர்வதைப் போன்று…
1.இந்த ஆத்ம ஜீவ சரீரத்தின் அணு வளர்ப்பை ஒளியாக்கும் நிலைக்கு
2.ஒளி கொண்டு வளர்வதற்கு வழி காட்டும் முறை தான் இந்த உபதேசம்.

பூமியின் சுழற்சியில் ஒலியாகி ஒளியாகி பூமி ஈர்ப்பின் சுவாசம் வெளிப்பட்டு பூமி சத்தெடுத்து ஆவி அலைகளை வெளிக் கக்குகிறது.

நிலத்திற்கு மேல் உள்ள நீர் நிலையான வட துருவம் தென் துருவம் மற்ற ஆறுகள் குளங்கள் கடல் ஆகியவை வெளிப்படுத்தும் ஆவி அலையின் சமைப்பு மணம் கொண்டு பூமி ஒளி பெற்று மணம் பெற்று ஜீவ ஞான செயல் வித்துக்களை உருவாக்கிக் கொண்டே உள்ளது.

ஆறறிவு கொண்ட பகுத்தறியக் கூடிய எண்ணம் செயல் கொண்ட மனித உருவகங்களை உருவாக்கிடும் கோடானு கோடி உயிரணுக்களை வளர்க்கும் சக்தி கொண்டது தான் இந்தப் பூமி.

இத்தகைய உருவாக்கும் சக்திகள் கொண்ட பூமியின் உண்மைகளை உணர்ந்து…
1.மனிதன் உன்னத உயர்வு ஒளி ஞானத்தைப் பெற
2.எண்ணத்தின் சமைப்பாகச் சுவாசம் எடுக்கும் எண்ணத்தின் உணர்வுக்கொப்ப இச்சரீர்த்தை மணமாக்கி
3.மணத்தின் ஒளி காந்த நுண் அணுவை இச் சரீரம் வளர்த்து
4.காந்த மின் அணுவின் வலுவை எலும்புகளின் ஊன் நிலையில் வலு ஏற்றி
5.அந்த வலுவின் ஆவி அமில முலாமினால் ஆத்ம வலு கூடி
6.ஆத்ம வலுவினால் வளரப் பெறும் ஒளித் தன்மைக்கு
7.மகரிஷிகள் வளர்த்துக் கொண்ட ஒளியின் வலுவை… காந்த மின் அலை வளர்ச்சியை…
8.மனிதச் சரீரத்திலே வளர்த்து வலுவாக்கும் வழி முறையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஆரம்பக் காலத்தில் குருநாதர் கண்ணின் நினைவாற்றலைக் கொண்டு என்னை ஒரு மனிதனை உற்றுப் பார்க்கச் செய்வார்.

உதாரணமாக ஒருவர் நோயால் உடலுக்குள் அவர் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பார். எனக்கு மேல் வலிக்கிறது என்று சொல்வார்.

குருநாதர் அவர் ஒரு முறைப்படி எனக்குச் சொல்லி இருப்பார். அந்த முறைப்படி அந்த உணர்வின் நினைவு கொண்டு கண்ணிலே பார்ப்பேன்.

பார்த்தால்…
1.அந்த உடலுக்குள் மற்ற எதிர் அணுக்கள் இந்த உடலை உருவாக்கிய அணுக்களுடன்
2.இது போராடி அதைக் கொன்று புசிப்பது தெரியும்.
3.உடலை உருவாக்கிய அணுக்களை அது தின்பதால் அவருக்கு இங்கே வலி ஏற்படும்.

ஆரம்பக் காலத்தில் வெகு பேருக்குத் தெரியும். இதையெல்லாம் வெளிப்படுத்திக் காட்டினேன்.

உங்கள் உடலில் என்ன இருக்கும் என்று பாருங்கள் என்று காண்பிப்பேன். கை முறிந்திருந்தால் அந்த இடத்தில் என்ன ஆகும்…? இவர்கள் உடலில் என்னென்ன உருவாகிறது?

வயிற்றுக்குள் “கேன்சர்…” என்றால் அந்தக் கட்டியினுடைய நிலைகள் எப்படி இருக்கும்…? என்றெல்லாம் பார்க்க வைத்தேன். ஏனென்றால்
1.அந்த உணர்வுகள் எப்படி இயங்குகிறது என்று
2.குருநாதர் எனக்குக் காட்டிய அதே அருள் வழியில் எல்லோரையும் பார்க்க வைத்தேன்.

ஆனால் அந்த மாதிரிப் பார்க்கப்படும் போது பெரும்பகுதியானவர்கள் பிறருடைய நோய்களை “என்ன…! ஏது…?” என்று அதிகமாகக் கவர்ந்து விடுவார்கள். பின் அந்த நோயைத்தான் இவர்களுக்குள்ளும் வளர்த்துக் கொள்வார்கள்.

அந்த அருள் ஞானத்தை இவர்கள் வளர்க்கும் நிலைகள் வரவில்லை.

உடலுக்குள் இருப்பதைப் பார்த்ததும் அவர்களுக்கு இ்து பேராச்சர்யமாகப் போகும். பார்த்தவுடனே…
1.உங்கள் குடும்பத்தில் இப்படியெல்லாம் வந்தது… சண்டை வந்தது…
2.இதை நுகர வந்தவுடனே இது எல்லாம் சொல்வார்கள்.
3.கெட்டதெல்லாம் சொல்வார்கள்.
4.நல்லதை இவர்களால் சொல்ல முடியாது.

ஒரு மனிதன் தெய்வங்களைப் பற்றி எதை வணங்கினாரோ இந்த உணர்வலைகள் இது உடலில் செல்களாக அமைகிறது.

1.அதே தெய்வ பக்தி கொண்டு அந்த மனிதன் இறந்து விட்டால்
2.அதே பக்தி கொண்ட இன்னொரு மனிதன் ஏங்கப்படும் போது
3.அவன் (முதல் மனிதன்) இங்கே வந்து தெய்வமாகக் காட்சி அளிப்பான்.

இவையெல்லாம் எப்படி உருவாகிறதென்ற நிலையைத் தெளிவாக்கினதால் ஆரம்பக் காலங்களில் இதெல்லாம் எல்லாருக்கும் அந்தக் காட்சி வந்ததுதான்.

கடைசியில் என்ன செய்கிறார்கள்…?

இவர்கள் எந்தெந்த ஆசை கொண்டு தெய்வங்களை வணங்கினார்களோ அந்த மனிதன் இறந்த பிற்பாடு அதே தெய்வ பக்தி கொண்ட மனிதன் ஏங்கினால் அதே ஆன்மா இங்கு வரும்.

இவர் எந்தத் தெய்வத்தை வணங்கினாரோ அதே தெய்வ உணர்வுடன் இறந்த அந்த ஆன்மா கூடி வரும்.

ஆஹா…! நான் காமாட்சியைப் பார்த்தேன்…, மீனாட்சியைப் பார்த்தேன்… எங்கள் குலதெய்வத்தைப் பார்த்தேன்…. முருகனைப் பார்த்தேன்…

அவர்கள் தெய்வத்தை வழிபட்ட உணர்வுகள் கொண்டு அதன் வழிகளிலே பார்ப்பார்கள். அப்போது அந்த உணர்வின் தன்மை
1.அவர் எந்த வேதனைப்பட்டாரோ அதுவும் இவர்களுக்குள் விளையும்.
2.தெய்வம் எனக்குக் காட்சி கொடுத்தது என்று.
3.அவர் எந்தெந்த தெய்வத்தை எண்ணி நோயால் மடிந்தாரோ
4.அந்த மடிந்த உணர்வின் தன்மையும் இங்கு வரும்.

இதைப் பார்க்கலாம். அவருக்கு அருள் ஆடும்.

என்னை இப்படிச் சோதிக்கின்றானே… முருகன். என்னை இப்படிக் காளி சோதிக்கின்றதே… என் குலதெய்வம் என்னைச் சோதிக்கின்றதே… என்று சொல்வார்கள்,

இவைகளெல்லாம் நாம் எடுத்த உணர்வின் தன்மை அணுக்கள் நமக்குள் செல்லாக விளைகின்றது. இறந்தபின் அது அலைகளாகப் படர்கின்றது.

அதே எண்ணம் கொண்டு கவர்ந்த பின் அந்த உருவங்கள் நமக்குள் தெரிகின்றது. இதைப் போன்ற நிலைகளைத்தான் அது உருவாகும்

ஏனென்றால் ஆரம்பக் காலத்தில் தியான வழி அன்பர்களில் பழகப் போகும் போது உலக நிலையை அறிவிக்கச் சில நிலைகளைச் செய்தோம்.

அவர்கள் இதை மேல் ஆசைப்படும் போது ஜோதிடம் சொல்கின்ற மாதிரிச் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுடைய உணர்வுகளை எல்லாம் கவர்ந்திடுவார்கள்.

திருநெல்வேலியில் ஒரு இடத்தில் இந்த மாதிரி காட்சிகளைக் காட்டியவுடனே அந்தப் பையனுக்குக் காட்சிகள் தெரிந்தது.

உடனே எனக்குக் கொய்யாப்பழம் வேண்டும் என்று எண்ணுகின்றான். அந்தக் கொய்யாப்பழம் வருகிறது. எனக்குக் காசு வேண்டும் என்று எண்ணுகின்றான். அந்தக் காசு வருகிறது.

அவர்கள் வீட்டிலேயோ அடேயப்பா…! குருநாதர் கொய்யாப்பழம் கொண்டு வந்து கொடுக்கிறார். இதெல்லாம் கொடுக்கிறார் என்று அதிசயப்படுகிறார்கள்.

அப்பொழுது அவன் இந்த நிலைகளை வளர்த்துக் கொண்ட பின் ஒரு பூனைக் குட்டியை வளர்க்கச் சொல்லிச் சொல்கிறார் குருநாதர் என்றான்.

பூனைக் குட்டி கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.

அதே சமயத்தில் சினிமாவுக்குச் செல்வதற்காகவும் அதைப் போன்ற செலவுக்காகவும் குருநாதர் உங்களிடம் ஐந்து ரூபாய் கேட்கச் சொல்கிறார் என்கிறான்.

கேட்கச் சொல்கிறார் என்றவுடன் கொடுக்கின்றார்கள். அடுத்தாற்போல “என்னடா இப்படித் தியானம்…?! என்று கேட்கிறார்கள.

இவர்கள் பணம் “இல்லை…” என்று சொன்னால் போதும்.

உடனே குருநாதர் வந்தார் உங்களைப் பஸ் ஸ்டாண்டில் போய்ப் படுக்கச் சொன்னார் என்று சொல்லிவிட்டான். இது நடந்த நிகழ்ச்சி.

பஸ் நிலையத்தில் போய் படுக்கச் சொன்னார் என்று அந்தப் பையன் சொல்கிறான்.

எதற்காக…? என்று கேட்கிறார்கள்.

இங்கே பல கஷ்டமான நிலைகள் வருகிறது. ஆகையினால் ஒரு பத்து நாட்களுக்குப் பஸ் நிலையத்தில் போய் பாய் தலையணை எடுத்துக் கொண்டு போய்ப் படுத்துத் தூங்க வேண்டும் என்கிறான்.

“குருநாதர் கட்டளை இட்டார்…” என்று அதே மாதிரி அவர்கள் செய்தார்கள்.

நான் இங்கிருந்து திருநெல்வேலி யதார்த்தமாகப் போகிறேன். அன்றைக்குக் காலையில் தான் பஸ் நிலையத்தில் இறங்கினேன்.

பாயும் தலையணையும் தூக்கிக் கொண்டு “சாமி…!” என்று கூப்பிட்டார்.

என்ன..? என்றேன்.

குருநாதர் எனக்குக் கட்டளை இட்டார். “பத்து நாட்கள் வீட்டில் படுக்க வேண்டாம்…” என்று. இப்போது நீங்கள் வந்து விட்டீர்கள் பார்த்தீர்களா…! “அதற்காகத் தான் சொல்லி இருப்பார்” போலிருக்கிறது. இது அவர்களுடைய எண்ணம்.

அப்படிச் சொல்லி வந்தவுடனே… “என்ன ஐயா சொல்கிறீர்கள்…!” என்றேன்.

என்ன என்றே தெரியவில்லை…! குருநாதர் நீ போய்ப் படுத்துக்கொள் என்றார். படுத்துக் கொண்டேன். பையனிடம் தானே “குருநாதர்… பேசுகிறார்”.

அதனால் இதெல்லாம் நன்றாக நடக்கும் என்று அவர் சொன்னபடி வந்து விட்டேன். அப்புறம் பாருங்கள்…! அவர் சொன்ன மாதிரி பத்து நாள் இங்கே படுக்கச் சொன்னால் பத்தாவது நாள் நீங்கள் சரியாக வந்து விட்டீர்கள் பாருங்கள்.

“உங்களிடம் ஆசி வாங்குவதற்காக… இப்படி அனுப்பி இருப்பார்…” என்று அவர் அனுமானங்கள் இப்படிச் செயல்படுத்துகினறது.

அப்புறம் அவர்களிடம் நான் என்ன சொல்வது?

இப்படியெல்லாம் அவன் சொல்ல ஆரம்பித்தவுடனே அந்தப் பையன் சிறுகச் சிறுகக் காசு கேட்பதற்கு ஆரம்பித்தான்.

எனக்கு அந்த வேஷ்டி வேண்டும், இந்தக் கடையில் இன்ன மாதிரியான பதார்த்தங்கள் வாங்கி வர வேண்டும் என்று கேட்டான்.

ஓஹோ…! இது குருநாதர் அல்ல போலிருக்கிறது. இவன் குருநாதர் பேரைச் சொல்லிக் கொண்டு அல்லவா காசு கேட்கிறான் என்று அப்புறம்தான் தெரிய வருகின்றது.

இது திருநெல்வேலி அன்பர்களுக்கு வெகு பேருக்கு இது தெரியும்.

இந்த மாதிரிக் காட்சிகளை கொடுக்கும் போது குழந்தைகள் யதார்த்தமாக இருக்கும் போது அந்த உணர்வுகளை அறியச் செய்தது. ஆனால் “இது எப்படி…?” என்று அறியும் நிலைக்குச் செயல்படுத்த முற்பட்டாலும் அதிலே தீமைகள் தான் வருகின்றது.

சிலர் தெய்வம் என்னிடம் பேசுகிறது. அதை வசப்படுத்தியுள்ளேன். என்றெல்லாம் சொல்வார்கள்.

அதைப் பற்றிய உண்மைகளை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் சொல்கிறோம்.

மகரிஷிகளின் தூய்மைப்படுத்தும் அருள் உணர்வுகள்

 

இப்போது ஒரு வேதனைப்படுவோரின் உணர்வை நாம் நுகர்ந்தால் உற்றுப் பார்த்த உணர்வுகள் நமக்குள் வேதனை உணர்ச்சிகளைத் தூண்டி நமது உடலையும் வலு இழக்கச் செய்கின்றது.

ஆகவே நாம் நுகர்ந்த உணர்வே நம்மை இயக்குகின்றது. அதன் வழி அன்றைய வாழ்க்கையும் அமைகின்றது.

ஒரு குடம் பாலில் நீங்கள் பாதாமைப் போட்டாலும் அதைக் காட்டிலும் பல உயர்ந்த சரக்குகளைப் போட்டாலும் ஒரு துளி விஷம் பட்டால் பால் அனைத்தும் நஞ்சாகி விடுகின்றது.

அதில் ஆயிரம் குடம் பாலை விட்டால் நஞ்சின் தன்மை சிறுத்துப் பாலின் தன்மை வீரியத்தன்மை அடைகின்றது.

ஒரு சமயம் 100 தரம் நாம் நல்லதைச் செய்தாலும் ஒரு நொடி அந்த வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் அந்த வேதனை தான் நம்மை இயக்குகின்றது.

100 மணி நேரம் நாம் நல்லதை நுகர்ந்தாலும் அந்த 100 மணி நேரமும் நல்லவைகளை உருவாக்குகின்றது நமது உயிர். ஆனால் ஒரு நொடி வேதனை என்ற உணர்வை நுகரப்படும்போது அது நம் நல்ல குணங்கள் அனைத்தையும் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.

இது இயற்கையின் நியதிகள். இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பண்புடன் அன்புடன் பரிவுடன் நாம் நடந்தாலும் சந்தர்ப்பத்தால் நாம் நுகர நேரும் அந்தத் தீமையான உணர்வுகளை அகற்றியே ஆக வேண்டும்.

அன்றாடம் உடலையும் உடைமைகளையும் நாம் எப்படித்தான் தூய்மைபடுத்தினாலும் அழுக்குப்படியத்தான் செய்யும். அதைத் தூய்மையாக்கவில்லை என்றால் அழுக்குகள் கூடிவிடும்.

அதைப் போன்று நம் மனதையும் அடிக்கடி தூய்மைப்படுத்த வேண்டும் தூய்மைப்படுத்தும் அருள் உணர்வினை நுகர்தல் வேண்டும்.

பாற்கடலில் பள்ளி கொண்ட மூலவன் யார் – ஈஸ்வரபட்டர்

 

“இம்மனிதச் சரீர அமைப்பு” உருவாகும் வளர்ச்சியே… இப்பூமியின் சத்து நிலையின் உயர் குணமாய் இப்பூமி வளர்த்த வலுவின் முற்றல் தான்…!

1.பலவாக மோதுண்டு… பல பல கோடி மாற்றங்களுக்குப் பிறகு
2.உயர்ந்த சத்தாய் உருவகம் பெற்ற நரம்போட்ட உப்பின் சுவை உணர்வில்
4.உரு வளர்ச்சி தரவல்ல உருவம் இது.

மனிதச் சுவை ஆறு…! பல சுவையை உண்டு உரமாக உடலெடுக்கும் சத்து வளர்ச்சியை… வளர்ச்சியின் ஓட்டத் தொடரில்…
1.நாவின் சுவைக்கொப்ப உணவுண்டு வாழுகின்ற வழித் தொடரில் உள்ள நாம்
2.இந்த வாழ்க்கைக்குப் பிறகு நடக்கும் நிலை என்ன…? என்று நாம் உணரவில்லை.

மனிதச் சுவை இப்பூமியின் ஆறு வண்ணத்தைப் போன்று அறு சுவையை உண்டு உணரும், எண்ண நிலை பெறத்தக்க வளர்ப்பில் நீர், கனி வளங்கள், திரவங்கள், தாவரங்கள், புழு பூச்சிகள் இவற்றிலிருந்தெல்லாம் வார்ப்பு கொண்டு வார்ப்பு கொண்டு ஒவ்வொரு முலாமையும் இப்பூமியிலுள்ள அனைத்து அமிலத் தொடர்புடனும் இச்சரீரக் கோளம் உராய்வு பெற்று…
1.எண்ணம் சுவை குணம் என்ற வார்ப்பில் வடிவம் கொண்டுள்ள
2.மனித வளர்ச்சியை வளர்க்கும் நிலைக்கு வடிகாலாய் அமைந்துள்ள எண்ணத்தின் உணர்வு வழித் தொடர்பை
3.உயர்வு வழியினால் இவ்வுடல் கோளத்திற்கு ஏற்படுத்திக் கொள்ளும் வலுவை வளர்க்கும் நிலை யாது…?

ஒவ்வொரு செயலிலும் அச்செயலுக்குப் பிறகு “வளரும் நிலை” ஒன்று உண்டு. மாறி மாறி உருவாகும்… உருண்டோடும்… இப்பூமியின் வளர்ச்சிக்கே வலுத் தந்து கொண்டுள்ளவைகள் தான் “வட துருவ தென் துருவங்கள்…”

அதிலே மையம் கொண்டுள்ளது தான் “இப்பூமியின் பொக்கிஷமான கடல் நீர்…!” அந்தக் கடலில் ஏற்படும் உப்பின் சுவையினால் தான் இப்பூமி வளர்க்கும் வளர் செயலின் உயிரணுவின் ஜீவித வளர்ச்சி நிலை உள்ளது.

கடலில் உப்புத் தன்மை இல்லாவிட்டால் ஜீவ சக்திக்கு ஜீவித வாழ்க்கையில்லை. “கடல் நீர் உப்புக் கரிக்கின்றது” என்ற சாதாரண எண்ணத்தில்தான் நம் எண்ணம் செல்கின்றது.

ஆனால் இப்பூமியில் வளர்ச்சி கொள்ளும் வளர்ச்சி வார்ப்பகங்கள் எல்லாவற்றுக்குமே மூலப் பொருளை அளிப்பது நம் கடல்தான்.

1.வட துருவமும் தென் துருவமும் எதிர்கொள்ளும்
2.எதிர் எதிர் செயலினால் உருவாகும் உருவகங்கள்தான்
3.ஜீவ பிம்ப சரீரமும் மற்றெல்லா உயிர் வளர்ப்பின் வளர்ச்சியும்.
4.பாற்கடலில் பள்ளி கொண்டான் “மூலவன்…!” என்று
5.சூட்சமத்தில் மறைக்கப்பட்ட புராண காவியத்தின் உண்மையும் இதுவே…!

கடலின் உண்மை நிலையை உணர்த்தும் செயலின் பொருள் யாது…? என்ற வினா எழும்பலாம்.

உண்மை நடை முறையை உணர்த்தி… ஆத்ம உயிரை வலுவாக்க வேண்டிய வழியை முறைப்படுத்தி…
1.விளக்கிடும் இந்த உண்மை நிலையிலிருந்து
2.ஒவ்வொருவரும் ஆத்ம வலுவைக் கூட்டிக் கொள்ள
3.இச்சரீர இயக்கத்தின் வலுவை வளர்த்துக் கொள்ள வழி காட்டுகின்றேன் (ஈஸ்வரபட்டர்)

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக எங்கெங்கே கோயில்கள் இருக்கினறதோ அங்கெல்லாம் செல்கின்றோம், அங்கே போய் என்ன செய்கின்றோம்…?

உண்மையின் தன்மையைச் சொல்லி “யாராவது நினைக்கின்றோமா…” என்றால் இல்லை.

உதாரணமாக நீங்கள் கோவிலுக்குப் போகின்றீர்கள். கோயிலுக்குப் போய்விட்டு வரும் போது வரும் வழியில் ரெண்டு போ் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.

அவர்களை நாம் வேடிக்கை பார்த்தால் போதும்.

இந்த நல்ல நாளும் அதுவுமா ரெண்டு பேர் இப்படிக் சண்டை போட்டுக் கொள்கிறார்களே… அயோக்கியர்கள்…! என்று நாம் சொல்வோம்.

அப்பொழுது இந்த உணா்வுகள் சிறு திரையாக (சித்திரை) உங்கள் நல்ல குணங்களை மறைத்துவிடுகின்றது.

அப்பொழுது உங்கள் (உங்களுக்குள் நின்று ஆண்டு கொண்டிருக்கும்) ஆண்டவன் என்ன செய்கின்றான்?

1.நீ கேட்டாய்…! (சண்டை போடுபவர்களின் உணர்வுகளை)
2.அதைப் பெற்றாய்…!
3.அதை நீ அறிந்துகொள்…! என்ற நிலை தான் வருகின்றது.

அதைத் துடைக்க வேண்டுமல்லவா…! கோவிலில் இருக்கும் ஆண்டவன் வந்து அதைத் துடைப்பானா…! சிந்தித்துப் பாருங்கள்.

அதை நீக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

மெய் ஞானிகளின் உணா்வலைகள் என் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா…! என்று அதை வேண்டி எடுத்து உள் புகுந்த… அந்தத் தீமையான உணர்வுகளைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இருளை நீக்கி ஒளி என்ற உணர்வை வளர்க்கும் நிலையைக் காட்டும் இடம் தான் கோவில்.

உதாரணமாக ஒரு இஞ்சினியராகப் போக வேண்டும் என்றால் அது சம்பந்தமாகப் படிக்கின்றீர்கள். அதைப் படித்து இன்ஜின் எப்படி ஓட்டவேண்டும் என்று தெரிந்து கொள்கிறீர்கள்.

விஞ்ஞானி ஒவ்வொரு பொருளையும் உணா்ந்து ஒவ்வொரு இயக்கத்திற்கும் எதை எதை இணைத்தால் எப்படிச் செயல்படும் என்ற தன்மையைக் கண்டுபிடித்துச் சொல்கின்றான்.

இஞ்சினியரோ அதற்குத் தகுந்த சாதனங்களை உறுப்புக்களை உருவாக்கி அதனைச் செயல்படுத்துகின்றான். மெக்கானிக்கோ (MECHANIC) இதை இந்த வழியில் செய்தால் எடை கூடி இப்படி இருக்குமென்று செய்கின்றான்.

இப்படி அவரவா்கள் எடுக்கக்கூடிய உணா்வுகளுக்கு ஒப்பத்தான் அதை அதைச் செய்கின்றார்கள்

பள்ளியில் சென்று எதனெதன் வழிகளில் பதிவு செய்கின்றீர்களோ நினைவு வரப்படும் பொழுது இது இப்படி வருகின்றது…! அதை உணா்ந்து சொல்ல முடியும்.

விஞ்ஞான அடிப்படையில் தான் கற்றுணா்ந்த உணா்வின் தன்மையில் எதிலே எண்ணங்கள் செல்கின்றதோ அது நம்மில் பதிவாகின்றது.

அதைப் போன்று தான் அந்த மெய்ஞானிகள் சொன்னதைப் பாட நிலையாக உபதேச வாயிலாக உங்களுக்குள் மீண்டும் மீண்டும் மீண்டும் குருநாதர் காட்டிய அருள் வழியில் பதிவு செய்கினறேன்.

இதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்த மெய்ஞானிகள் எப்படித் தீமைகளை நீக்கினார்களோ உணர்வுகளை ஒளியாக மாற்றினார்களோ உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலமாக இன்றும் உள்ளார்களோ அந்த இடத்திற்குச் செல்ல முடியும்.

மெய்ஞானிகள் உணர்வை வளர்த்துக் கொண்டால் நீங்கள் மெய்ஞானிகள் ஆகின்றீர்கள்.

நம் உடலுடன் ஒட்டி இருக்கக்கூடிய தீய வினைகளைக் கரைக்கும் வழி

 

நம் பூமியினுடைய காற்றழுத்த மண்டலத்தில் மோதியபின் நெருப்பாகப் புகையாக மாறுகிறது. அது எந்தப் பக்கம் அதிகமாகப் படர்கிறதோ அந்த இடத்தில் வித்தியாசமான நிலைகள் வரும். அதைத் தான் “வால் நட்சத்திரம்” (COMET) என்று சொல்வது.

இதே மாதிரி நாம் பேசக்கூடிய பேச்சு வெளிப்படுத்தும் மூச்சலைகள் எல்லாமே இங்கே இருக்கிறது. நம் உடலிலும் இருக்கிறது… சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு இந்தக் காற்றிலும் இருக்கின்றது.

உதாரணமாக டி.வி. ரேடியாவில் ஒலி/ஒளிபரப்பு செய்தவுடன் எந்த ஸ்டேஷனை நாம் திருப்பி வைக்கின்றோமோ அந்த அலைகளை இழுக்கின்றது… ஒலியையும் ஒளியையும் காட்டுகின்றது.

அது போல் மனிதன் உயிருடன் வாழும் நிலையில் வெளிப்படுத்தும் ஒவ்வொரு உணர்வும் இங்கே சுழன்று கொண்டிருக்கின்றது.
1.இரவிலே நாம் புலனடங்கித் தூங்கினாலும் கூட
2.நாம் பகலில் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப அந்த உணர்வுகள் ஆன்மாவில் வந்து சேருகின்றது.

எந்த வேதனையையோ கோபத்தையோ ஆத்திரத்தையோ படுகின்றோமோ அந்த உணர்வெல்லாம் உயிரிலே பட்டுக் கனவுகளாக வருகின்றது.

அந்த உணர்ச்சிகள் திடீரென்று நம்மைத் தூக்கத்திலிருந்து எழும்படி செய்து “என்னை அடிக்க வருகின்றான்…” என்று கத்த வைக்கின்றது. இதையெல்லாம் நாம் பார்க்கின்றோம் அல்லவா.

நமக்குள் இருப்பது பரமாத்மாவிலிருந்து தான் இதையெல்லாம் இழுக்கின்றது. எதன் வலுவோ அதன் வழி கூடி நம்மை இயக்குகின்றது.

ஆகவே
1.காற்றிலே இது போன்ற நிலைகளை எல்லாம் இல்லாமல் செய்ய வேண்டுமா இல்லையா.
2.அதுதான் விநாயகர் சதுர்த்தி…! தீமை செய்யும் உணர்வுகளை நாம் வராதபடி நிறுத்த வேண்டும்.

நம்முடைய சாஸ்திரங்களில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நாம் யாராவது சிந்தித்திறோமா…? இல்லை.

நாம் பேசியது இன்னொருவர் உடலிலே ஊழ்வினை என்ற வித்ததாக இருக்கிறது. நாம் பேசியது… நாம் சண்டை போட்டது… அடுத்தவர் சொன்னது… அடுத்தவர் சங்கடப்பட்டது… நோய்வாய்ப்பட்டது எல்லாமே சூரியன் எடுத்து அலைகளாக வைத்திருக்கின்றது.

நம் உடலிலிருக்கும் உணர்ச்சிகள் உந்தியவுடன் அந்த அணுக்களுக்குப் பசிக்கும்போது உயிருக்கு வருகின்றது.. கண் வழி கவர்கின்றோம்… நுகர்கின்றோம்.
1.அதே எண்ணம் வருகின்றது..
2.தீய வினைகளை நம் உடலாக மாற்றுகின்றது… நல்ல உணர்வின் அணுக்கள் ஒடுங்குகின்றது.
3.இதை எல்லாம் கரைக்க வேண்டுமா இல்லையா…?

அதற்காகத்தான் விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணில் பொம்மையைச் செய்து தீயவினைகளைக் கரைக்க வேண்டும் என்று காட்டப்பட்டது. ஆனால் இன்று நாம் வெறும் களிமண்ணில் பொம்மையைச் செய்து நீரிலே கரைக்கின்றோம்.

ஆனால் நம்மை அறியாது உடலிலே சேர்ந்த… நம் உடலுடன் ஒட்டி இருக்கக் கூடிய அந்தத் தீய வினைகளைக் கரைக்க வேண்டும் என்பது தான் ஞானிகள் சொன்னது.

1.சாப்பாடு இல்லாமல் செய்து விட்டாலே எதுவுமே கரைந்துவிடும்.
2.அது போல் தான் நம் உடலில் உள்ள தீய அணுக்களுக்குச் சாப்பாடு இல்லை என்றால் தன்னாலே கரைகின்றது.

அதற்குச் சாப்பாடு எங்கிருந்து எடுக்கின்றது…?

நம் பூமி ஒரு பரம். இந்தப் பரமாத்மாவில் தான் எல்லாமே இருக்கின்றது. அதிலிருந்து எடுத்துத் தான் உடலில் இருப்பது வளர்கிறது.

எந்தச் செடியில் வித்து விளைந்ததோ அதை மீண்டும் பூமியில் ஊன்றினோம் என்றால் பரமாத்மாவில் இருக்கும் தாய்ச் செடி வெளியிட்ட அதனின் சத்தைக் கவர்ந்து விளைகிறது.

இது எல்லாம் செடி கொடிகளுக்குச் தெரியாது.. மிருகங்களுக்கும் தெரியாது. எதனின் உணர்வை நுகர்ந்ததோ அந்த உணர்வின் இயக்கமாகத்தான் அவை இருக்கும்.

ஆனால் மனிதன் இதை எல்லாம் அறியும் ஆற்றல் பெற்றவன். மாற்றி அமைக்கும் சக்தியும் பெற்றவன்.

ஆகையினால் எத்தகைய தீமைகளாக இருந்தாலும் அதை எல்லாம் ஞானிகள் உணர்வு கொண்டு வேக வைக்க வேண்டும். ஒரு பருப்பை வேக வைத்த பின் மீண்டும் அதை மண்ணிலே விதைத்தால் அது முளைக்காது.

ஆகவே அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று எண்ணி
3.உள்முகமாக உடலுக்குள் செலுத்தித் தீய வினைகளை வேக வைத்து நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்

கலி புருஷனின் உண்மையான வலு – ஈஸ்வரபட்டர்

 

நடக்கின்றோம் கேட்கின்றோம் பேசுகின்றோம் சுவைக்கின்றோம் பார்க்கின்றோம் நுகர்கின்றோம்..!

இந்த ஒவ்வொரு செயல் நிலையிலும் “ஞான வளர்ச்சி” காலமுடன் ஒன்றியதாகச் சத்து பெற்றுள்ள இத்தருணத்தை இன்றைய மனிதச் செயலின் அடுத்த நிலையான பறக்கும் நிலைக்கு மனிதனின் உருவக உயர்வு நிலை வந்திருக்க வேண்டும்.

கல்வித் தரத்தில் எப்படி முதல் வகுப்பு… இர்ண்டாம் வகுப்பு… என்று கல்வித் தரத்தை (தேர்ச்சி பெற்றதை) உயர்த்துகின்றார்களோ அதைப் போன்று
ஒலி…
ஒளி…
நீர்…
தாவரம்…
ஜீவ சக்தி… (உயிரினங்கள்)
ஞான சக்தி (தற்போதைய மனிதன்)
இத்தொடரில் அடுத்த நிலையான தெய்வ வளர்ப்பு சக்தியை மனிதன் பெற வேண்டும்.

ஏனென்றால் இந்தப் பூமி பெற்ற எல்லாச் சக்தியுமே இந்த மனிதக் கோளத்தில் தொடர்பு கொண்டுள்ளது.

அத்தகைய வளர்ப்பின் வலு கூடிய பிறகு தான் (மனிதனின்) எண்ணத்தின் பகுத்தறியும் சொல் செயல் ஆற்றல் முதிர்வு நிலை பெறுகின்றது.

பூமியின் வளர்ச்சியில் முதிர்வு கொண்ட வளர்ப்பு தான் மனிதர்கள். மனிதனுக்கு அடுத்த நிலையான…
1.தெய்வ நிலை பெறக்கூடிய பூமியின் சத்து வித்தாக வளர்ச்சிப்படுத்த
2.பூமி சேமிக்கும் தன் வம்சத் தொடரின் தொடர்கள் தானப்பா
3.மனிதன் பெற்ற உயர் ஞான பகுத்தறிவு வித்து நிலை என்பது.

ஆனால் தன் உடல் கோளத்தில் உணரும் உயர் ஞானத்தை இக்கலி தந்த காலத்தில் வளர்க்கத் தெரியாமல்… கலிக்கு அடுத்த கல்கியின் உயர்ந்த சத்தாகப் பெறவல்ல உயர்ந்த சந்தர்ப்பத்தை… கல்கி யுகமாக்கிப் “பறக்கும் சக்தியை…” இந்தப் பூமி வளர்ப்பில் வளர்ந்த வித்துக்கள் (மனிதர்கள்) உயர்வு நிலைப்படுத்த முயற்சிக்கவில்லை.

“கலி” என்றாலே பகுத்தறியும் உயர் ஞான வளர்ச்சி முற்றலின் வலு என்று உணராமல்
1.இக்கலியையே செயற்கைக் கலியாக்கி
2.உன்னத வளர்ச்சியில் சுழன்ற இந்தப் பூமியின் சத்தையே
3.இன்றைய மனித ஞானம் அழிக்கும் நிலைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளது.

ஆக.. கல்கியுகத் தொடர்பை இந்தக் கலியில் இங்கே இந்தப் பூமியில் வளர்க்க முடியா விட்டாலும் நம் சூரியக் குடும்பத் தொடர்பில் (மற்றொரு கோளத்தில்) நாம் எடுக்கும் ஜெபத்தால் கல்கி யுகத்தை வளர்க்க முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

வக்கீல் படிப்பைப் பயின்றபின் பல சட்ட நுணுக்கங்களை அறிந்து கொள்கின்றோம். சட்டத்தின் நுணுக்கங்கள் அறிந்து கொண்டாலும் இதிலே பிழைகள் எது…? என்ற நிலைகள் நீக்கக் கற்றுக் கொள்கிறோம்.

கற்றுக் கொண்டாலும் தனக்கு நெருங்கிய ஒரு நண்பன் இருக்கின்றான் என்றால் அவன் தவறு செய்தால் அவனைக் காக்க முற்படுகின்றோம்.

1.“சட்டத்தில் எங்கே குறை இருக்கிறது…?” என்று நண்பனைக் காக்கத் தவறும் செய்கின்றோம்.
2.யாரும் கோபித்துக் கொள்ளாதீர்கள். சில நிலைகளில் நடப்பதைச் சொல்கிறேன். (சட்டங்கள் எவ்வாறு இருக்கின்றது என்ற நிலைகள் இப்படி)

அதே மாதிரி ஆடிட்டர் படித்தவர்கள் அதன் வழிகளிலே கற்றுணர்ந்தாலும் அவர் கற்றுணர்ந்த நிலைகள் கொண்டு தன் வாடிக்கையாளர்களை எப்படிக் காப்பாற்றுவது…? என்று தான் அவருடைய தத்துவமாக இருக்கின்றது.

விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற சர்க்கார் நிலைகளிலிருந்து தன்னை மாற்றிக் கொள்ளும் நிலை தான் இங்கே வருகின்றதே தவிர பொது விதியான நிலைகள் கொண்டு செயல்படும் நிலைகள் இல்லை.

1.தவறு அங்கேயும் அங்கே வரக்கூடாது
2.இங்கேயும் நாம் தவறான நிலைகள் செய்யக்கூடாது என்ற நிலைகள்
3.அதிலே எது மையமாக இருக்கிறதோ அதை உணர்ந்து
4.அதை ஏற்றுக்கொண்டு செயல்படும் இந்த நிலையும் இல்லை.

ஏனென்றால் அப்படிப் போனால் இவர் “பிழைக்கத் தெரியாதவர்…” என்ற பட்டமே வந்து விடும். இந்த ஆறாவது அறிவால் வரக்கூடிய நிலைகளை
1.இவர் இந்த வேலைக்கு லாயக்கில்லை.
2.இவர் எதற்காக இங்கே வந்தார்..? என்று சொல்வார்கள்.

நியாயத்திற்காகப் போராடினால் அவர் “பைத்தியக்கார வக்கீல்…” என்று சொல்வார்கள்.

நியாயத்திற்காக வேண்டி ஆடிட்டர் சொன்னால் இவருக்குப் “பிழைக்கத் தெரியவில்லை..!” என்று சொல்வார்கள்.

இப்படித் தவறு செய்பவனுடைய நிலைகள்
1.தவறு செய்து விட்டேன் என்றால்
2.அந்தத் தவறை அது சாதகமாக வைத்து
3.எந்தச் சட்டத்தில் எது ஓட்டை இருக்கின்றதோ
4.அதைப் பிடித்து தவறு செய்தவரைக் காப்பாற்றிக் கெட்டிக்காரராகும் நிலை தான்,

அப்பொழுது எங்கள் வக்கீல் “மிகவும் கெட்டிக்காரர்…!” என்பார்கள்

குற்றவாளியாக இருப்பவன் இவன் முதன்மையாக (நல்லவனாக) வந்து விடுகின்றான். குற்றவாளி செய்யக்கூடிய தவறை அவர் ஏற்றுக் கொண்டு வக்கீல் குற்றவாளியாக வேண்டும்.

குற்றத்தைச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற நிலைகளுக்கு இவர் வாதிடுகின்றார்.
1.இப்படித்தான் இன்றைய நிலைகள்
2.கல்வியில் ஞானங்கள் வரப்படும் போது
3.இது தான் வருகின்றது.

ஏனென்றால் இது விஞ்ஞான அறிவால் மனிதனால் கற்றுணர்ந்த நிலைகள் இத்தகைய இயல்புகள் வருகின்றது.

நான் யாரையும் குறை கூறவில்லை.

மெய் ஞானியின் உணர்வுகளை நாம் ஒவ்வொரு சமயம் நாம் எடுக்கப்படும் போது நம்மை அறியாமல் இயக்கும் தீமைகளிலிருந்து குற்ற இயல்புகளை அகற்றச் செய்யும்.

1.இயற்கையின் உணர்வுகள் எவ்வாறு இயங்குகின்றது…?
2.அந்த உணர்வின் ஆற்றல் மனிதனை எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையை அறிந்தவர்கள் ஞானிகள்.

காலத்தால் சந்தர்ப்பத்தால் இணைந்த இந்த நிலைகளை இது எவ்வாறு முறியடிப்பது…? என்ற ஆற்றல்களை வளர்த்துக் கொண்டவர்கள் மகரிஷிகள்.

1.சாதாரண மனித உணர்வின் இயக்க நிலைகள் இது மற்றவர்களைக் குற்றவாளியாக்கும்.
2.அந்த மெய் ஞானிகள் யாரையும் குற்றவாளி ஆக்குவதில்லை.

சந்தர்ப்ப பேதத்தால் தான் இந்தக் குற்றங்கள் ஏற்படுகின்றது என்பதை உணர்ந்தவர்கள் ஞானிகள்.

1.குற்றமற்ற உணர்வை உருவாக்குவதற்காகச் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி
2.தான் கண்டுணர்ந்த மெய் ஒளியை அவர்கள் பால் பாய்ச்சி
3.அவர்களைத் தன்னைத் தான் அறியும்… மெய்யை அறியும்… மெய் ஞானிகளாக… ஆக்குபவர்கள் மகரிஷிகள்.

எப்படித் தான் இருந்தாலும் முதுமை (முதிர்வு) என்று வரும் போது எதிலுமே மாற்றம் இருக்கத் தான் செய்யும்

 

பல பல செடிகளில் எடுத்துக் கொண்ட விதைகளை நிலத்தில் ஒரே பாத்தியில் வைத்து ஊன்றினாலும் கூட அதனதன் உணர்வுக்கொப்பத் தான் அந்தச் செடிகள் விளையும்.

அதே போல் தான்
1.நாம் பிறருடைய உணர்வுகளைக் கண் கொண்டு கூர்ந்து பார்த்து எடுத்துக் கொண்டால்
2.அந்த உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்துக்களாக நம் எலும்புக்குள் பதிவாகின்றது.
3.இப்படிப் பதிவானால் தான் அந்த மனித உடலிலிருந்து வரக்கூடியதை நுகர்ந்து நாம் அறிய முடியும்.

உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டு அவருக்கு உதவி செய்து அவரைக் காப்பாற்றுகின்றோம். ஆனால் அவருடைய தீய வினைகள் நமக்குள் ஒட்டிக் கொள்கின்றது.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் தீமைகளில் இருந்து மீள வேண்டும் என்ற வினைகள் தான் உடலில் வினையாகச் சேர்கிறது. இந்த உணர்வுகள் கணங்களுக்கு அதிபதி ஆகி மனிதனாக உருவாகின்றது

மனிதனாக ஆனபின் அன்பும் பண்பும் பரிவும் கொண்டு தீமைகளை நீக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம். நமக்குள் ஊழ்வினை என்ற வித்தாகின்றது.

ஆனால் இது எங்கிருந்து வருகின்றது…? காற்றில் இருந்து தான் வருகிறது.

நோயாளியின் உணர்வுகள் வெளி வரும் பொழுது நுகர்ந்த பின் அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது. “அவனைக் காக்க வேண்டும்” என்று எண்ணுகின்றோம். ஆனால் நல்ல குணங்களுக்குள் அவர் பட்ட வேதனைகள் இணைந்து விடுகின்றது.

எல்லோரிடத்திலும் இது உண்டு.

ரோட்டில் ஒரு பிச்சைக்காரன் சென்று கொண்டிருந்தாலும் இரக்க மனம் கொண்டு அடப்பாவமே… இப்படி இருகின்றானே…! என்று எண்ணினால் போதும். அவன் உணர்வை நுகர்ந்து விடுகிறோம்…

1.அழுகிய உணர்வின் வித்து அவன் உடலில் இருப்பது வினை இயக்கம்
2.நாம் நுகர்ந்தவுடனே நமக்குள் வருகின்றது.

இப்படி நம்மை அறியாமலே தீயவினைகள் ஏராளமாகச் சேர்கிறது. மனிதனுடைய உடலில் எத்தனையோ விதமான நோய்கள் வருகின்றது… பார்க்கலாம். அந்தந்த உணர்வுக்கொப்ப நம்மை மாற்றி அமைக்கின்றது.

இது எல்லாம் எங்கே இருக்கின்றது…?

செடி கொடிகள் எல்லாம் விளைகின்றது. அதனுடைய சத்தை எல்லாம் சூரியனின் காந்த சக்தி எடுத்து வைத்திருக்கின்றது

அதே போல் மனிதனுக்குள் விளைந்த உணர்வுகள் ஒவ்வொன்றையும் சூரியனின் காந்த சக்தி எடுத்துப் பரமாத்மாவில் கலக்கி வைத்திருக்கின்றது.

உதாரணமாக நான் பேசியது உங்களுக்குள் வித்தாகப் பதிவாகி இருக்கிறது. நீங்கள் பேசியது என் உடலில் பதிவாகி இருக்கின்றது.

மீண்டும் நீங்கள் என்னை நினைக்கும் பொழுது
1.நான் (ஞானகுரு) அமெரிக்காவில் இருந்தாலும் கூட
2.சாமி எல்லோருக்கும் உபதேசம் செய்தார்… இன்று அவர் வேதனையுடன் இருக்கின்றார் என்று நினைத்தால்
3.உடனே இங்கே வரும்… உங்களைச் சோர்வடையச் செய்யும்.

ஆனால் இப்பொழுது இங்கே யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளைக் கேட்டால் சோர்வை நீக்கச் செய்கிறது. ஆனால் சாமி மீது பற்றாக இருக்கும் பொழுது நான் எடுத்துக் கொண்ட உணர்வுகள் “வேதனை” என்று நீங்கள் எண்ணினால் உங்களைச் சோர்வடையச் செய்கிறது.

ஆக… எப்படித் தான் இருந்தாலும் ஒரு கனிந்த பழம் முதலில் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் நாளடைவில் அது அழுகத் தான் செய்யும்.

அது போல் எத்தகைய தன்மையாக இருந்தாலும்…
1.அது முழுமை அடையும் போது அதனுடைய தன்மை மாறத்தான் செய்யும்.
2.அருள் ஒளி என்ற உணர்வை நாம் எடுத்தாலும் கூட தீய வினைகள் அழுகுகின்றது…
3.உடல் மாறுகின்றது… “உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது…”

அதே சமயத்தில் தீய வினையின் உணர்வுகள் நமக்குள் வந்து விட்டால் உடலில் உள்ள நல்ல உணர்வுகளை அழுகச் செய்து விடுகிறது. தீவினையின் உணர்வின் அணுக்கள் நோயாகின்றது… உடல் மாறுகின்றது.

1.சாமியைப் பார்த்தேன்… சாமியாரைப் பார்த்தேன்…
2.எல்லோரையும் பார்த்தேன் நன்றாகிவிடும்…! என்று சொன்னாலும்
3.நாம் நுகர்ந்த உணர்வைத் தான் உயிர் இயக்கும்… அதற்கொப்ப அடுத்த உடலை உருவாக்கியே தீரும்.

இதிலிருந்து யாரும் தப்ப முடியாது.

பறக்கும் யுகம் – ஈஸ்வரபட்டர்

 

காட்சி:
நீரே பெரும் கடலாகத் தெரிந்தது. அதைப் பார்த்ததும் கடல் தான் பூமிக்கு முதல் நிலையா…? என்ற எண்ணம் தோன்றியது.

அந்த எண்ணத்திற்கு “இல்லை…!” என்ற சொல் ஒலித்தது. பிறகு வரிசையாக ஒலி ஒளி நீர் செடி கொடி புழு பூச்சிகள் தெரிந்து கடைசியில் மனித உருவமும் தெரிந்தது.

பிறகு இது எதுவும் நம் பூமிக்கு முதல் நிலையல்ல…! என்ற சொல் ஒலித்தது.

வானத்தில் கறுத்த மண் போன்ற… மண் என்பது கரியை இடித்த சாம்பல் போன்ற கறுப்பான சில மணங்கள் உருள்வதைப் போன்றும்… அதுவே கட்டியாகிச் சிறு சிறு வெண்மையான மின்னும் மணல்களைப் போன்றும்… கறுப்பு மணலிலிருந்து வெள்ளை மணல் தெரிந்தது.

அதன் பிறகு பல வண்ணங்கள் கொண்ட மண்கள் மண் வடிவம் போன்றும்… வெள்ளி தங்கம் போன்ற பல உலோக வண்ணங்கள் மாறி மாறித் தெரிந்தது.

அதன் பின் பச்சையான படிவக் கற்களும் அதற்கு உள் ஊடுருவலில் ஒளியான வைரப் படிமனின் ஒளியும் அப்படித் தெரிந்த படிவங்களிலிருந்து – அந்தந்தப் படிமன் வண்ண உலோகத்திலிருந்து ஆவியாக மேலே செல்வது போன்றும்… அந்தந்த ஆவி சுழல் ஒலியும்… அதிலிருந்து ஒளியும்… பிறகு அந்த ஒளி கடல் நீரின் மேல் மோதுவதைப் போன்றும்… அந்த நீரிலிருந்து பல திரவ வண்ண நீர்கள் தனித் தனியாக அந்தந்த இடங்களில் தெரிகின்றன.

பின்… பாதரசத் திரவமும் சில இடங்களில் பழுப்பு வண்ணம் போன்ற ஒரே திடமாக பூமியின் ஈர்ப்பில் கொதிப்பதைப் போன்றும் மாறி மாறித் தெரிகின்றது.

மனித எண்ண உணர்வு… (சரீரத்தின் சுவை) அறு சுவையை உணர்ந்து இச்சரீரச் சமைப்பின் சுவை ஏழாகி ஆத்ம வளர்ச்சிக்கு உரம் தருகின்றது.

“சூரியனின் சத்தை…” மற்றக் கோளங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி வெளிப்படுத்துவதை இந்தப் பூமி எடுத்து வளரும் வழிக்கு சூரியனின் அமிலச் சத்தை பூமி தனக்குகந்த சத்தாகப் பெறத் தன்னைத் தானே ஒலி கொண்டு ஒளி பெற்று எடுத்துக் கொள்கிறது.

பூமி வளர்த்த ஜீவ வளர்ப்புகளான உலோகங்களாகி… அத்திடத்திலிருந்து ஆவி மீண்டும் வெளிப்பட்டு…
ஆவி…
திடம்…
உராய்வு… என்று
மீண்டும் மீண்டும் ஆகித் தான் எல்லாமே வளர்ந்தது.

இப்படி… பூமி தான் பெற்ற வழித் தொடரிலிருந்தே வளர் தொடர் கொண்ட கனி வளங்களை (உலோகங்கள்) வளர்த்து
1.பல உன்னத உலோகங்களின் திரவக வளர்ப்பில் உயர் நிலை வளர்ப்பாகப் பல கோடி கோடி ஆண்டுகளாக வளர்த்து
2.அத்தொடரின் சத்தில் சத்தாக… உயர்ந்த சத்து குணம் கொண்ட மனித உருவங்கள் வளர்ந்து
3.எண்ணம் உணர்வு சுவை ஞானம் என்ற சக்தி பெறப் பெற்ற இந்த மனிதச் சரீரம் ஒவ்வொன்றிலுமே
4.ஆறாவது அறிவு கொண்ட மனித சக்தியின் உன்னதச் செயலை
5.ஏழாவது உயர் ஞான வளர்ச்சிக்கு வலுக் கூட்டினால்
6.கல்கி யுகம் என்ற பறக்கும் யுகத்தை நாம் உருவாக்க முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஆதிமூலம் என்ற இந்த (நம்) உயிர் பல கோடிச் சரீரங்களில் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்… விடுபடவேண்டும்… என்று தான் பார்த்துத் தப்பித்த உணர்வுகள் வலுப்பெற்றது தான் மூஷிக வாகனா என்பது.
1.அந்தக் கடுமையான உணர்வுகளைச் சுவாசித்து
2.அதிலிருந்து தப்பிக்கொள்ளும் உணர்வு கொண்டு இது ஓடுகின்றது.

இருந்தாலும் அந்தத் தப்பிக்கும் உணர்வுகளில் வேதனை என்ற உணர்வுகள் அதிகமாகச் சுவாசித்தால் கணங்களுக்கு அதிபதியாகி விடுகின்றது.

அதன் வாழ்க்கையில் எந்த உடலை உற்றுப் பார்த்து அதனால் பயந்து உணர்வின் வேகங்கள் கூடியதோ அந்த உணர்வுகள் வளர்ந்த பின் இந்த உடலை விட்டுச் சென்ற இந்த உயிரான்மா அந்த வலுவான உடலுக்குள் சென்றுவிடுகின்றது.

அந்த உடலுக்குள் சென்று அதனின் உணர்வின் கருவாகப் பரிணாம வளர்ச்சி அடைந்து அதனின் ரூபமாக ஆகின்றது என்ற நிலை சாஸ்திரங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாழ்க்கையிலும் தன் வாழ்க்கையை அது வாழத் தன்னைக் காட்டிலும் எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் நிலைகளில் வலுவானதைச் சுவாசிக்கும் நிலை வருகின்றது. இவ்வாறு பரிணாம வளர்ச்சியாகின்றது.

காகத்தை எடுத்துக் கொள்வோம். தன் ஆகாரத்தை எடுக்கும் போது ஒரு கொத்துக் கொத்திவிட்டு
1.எதிரிகள் எவராவது வருகின்றனரா
2.தன்னைத் தாக்க முற்படுகிறதா என்று எண்ணிப் பார்க்கிறது.

குருவியானாலும் தன் ஆகாரத்தை எடுத்தவுடன் கொத்தி வைத்து விடுகின்றது.
1.மீண்டும் திரும்பிப் பார்க்கின்றது.
2.ஒவ்வொரு நிமிடத்திலும் தன் உடலைப் பாதுகாக்கும் உணர்வுகளே அங்கே வருகின்றது.

அதே சமயத்தில் ஒரு பூனை சீறித் தாக்கி சந்தர்ப்பவசத்தால் குருவி சிக்கி விட்டால் குருவியின் உணர்வுகள் அனைத்தும் இந்தப் பூனையின் வாயில் சிக்கிய பின் பூனையின் நினைவே வருகின்றது.

குருவியின் தசைகள் பூனைக்கு இரையாகின்றது. ஆனால்
1.குருவியின் எண்ணங்களோ பூனையின் பால் நினைவாற்றல்கள் அதிகமாகி
2.உயிராத்மா வெளியே போகும்போது பூனையின் கருவறைக்குள் சென்று
3.இந்த உணர்வின் தன்மை கருவாகி
4.அடுத்து பூனையாகப் பிறக்கும்.

இரவிலே பல பட்சிகள் ஒன்று சேர்ந்து மரங்களில் அடங்கி இருக்கின்றது. அந்தப் பட்சிகள் ஒன்றுக்கொன்று நுனியில் தான் அது இருக்கும்.

கொப்புகள் அசைந்தால் அல்லது இதைக் காட்டிலும் கடுமையான நிலை அங்கு வந்தால் எடை தாங்காது அங்கு வர முடியாத எல்லையாகப் பார்த்துத் தான் அந்தச் சிறு நுனியில் தான் எல்லாமே இருக்கும்.

காரணம் ஒரு குருவி இனமாக இருப்பினும் அந்த அசைவைக் கண்டு தான் விழித்துக் கொள்வதற்காக இப்படிப் பாதுகாக்கும் எண்ணங்களை உருவாக்கி அந்த மரண பயத்துடன்தான் வாழ்கின்றது.

ஆனால் எதிரி தாக்கப்படும்போது உணவாகப் புசிக்கும் நிலையில் வந்தால் மரண பயமாக அது ஒன்று சப்தம் இட்டால் போதும். எல்லாம் எழுந்து கொள்ளும்.

இதைப்போல நாம் குருவியாக பூச்சியாக இருக்கப்படும் போது எதிரியிடமிருந்து தப்பிக்கும் உணர்வின் தன்மைகளைக் கூர்மையாக்கி அந்த உணர்வின் வலிமை பெற்று அதிலிருந்து தப்பிக்கும் உணர்வுகளைச் சேர்த்துச் சேர்த்துத்தான் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக வந்துள்ளோம்.

இதனை உணர்த்துவதற்குதான் மூஷிகவாகனா. கணங்களுக்கு அதிபதி கணபதி என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

பரிணாம வளர்ச்சியாகி மனிதனான பின் முன் சேர்த்து கொண்ட வினைகளுக்கெல்லாம் நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது நமது உயிர் தான் என்பதை எல்லோரும் அறிவதற்காக “ஆதிமூலம்” என்று உயிருக்குப் பெயர் வைக்கின்றார்கள்.

ஒவ்வொரு சரீரத்திலும் சுவாசித்த உணர்வுகள் இந்த கணங்களுக்கெல்லாம் அதிபதி கணபதி என்று அடுத்த ரூபம் பெறுகின்றோம்.

பல கோடிச் சரீரங்களில் தப்பித்து வாழ்ந்திடும் உணர்வு ஆறாவது அறிவாக வந்து மற்றதை அடக்கி ஆட்சி புரியும் கணங்களுக்கு அதிபதியாக நம்முடைய எண்ணங்கள் உருவாகி உள்ளது கணபதி.

கணங்களுக்கெல்லாம் அதிபதி என்ற நிலையில் உடல் பெற்றாலும் இந்தக் கணங்களுக்கெல்லாம் ஈசனாக இருந்து இயக்கியது உயிர் தான் என்று நம் உயிரை வணங்கும்படி செய்கிறார்கள் ஞானிகள்.

எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து வந்த நாம் இனி வரும் எத்தகைய தீமைகளிலிருந்தும் விடுபட்டு தீமையற்ற மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ்வோம்.

எம்முடைய உபதேசத்தை நீங்கள் கூர்ந்து கவனித்து எடுத்துக் கொள்ள வேண்டிய முறைகள்

 

ஞானிகள் காட்டிய நிலையில் இந்து என்றோ முஸ்லீம் என்றோ கிறிஸ்தவர் என்றோ எதுவுமே கிடையாது.
1.உணர்வுக்கொப்ப உணர்ச்சியும்
2.உணர்ச்சிக்கொப்ப அதன் இயக்கமும் என்ற நிலைகள் தான் ஞானிகளால் காட்டப்பட்டது.

எங்களுக்கு ஆண்டவன் இப்படிச் சொல்லி இருக்கின்றார் என்று ஒரு மதத்தின் சாரார் சொல்கின்றார்கள். அதை அவர்கள் பதிவு செய்கின்றார்கள்.

இன்னொரு சாரார் எங்களுக்குக் கடவுள் இப்படிச் சொல்கிறார் என்று சொல்கின்றார்கள். அந்த உணர்வை எடுத்துக் கொண்டபின் இந்த உணர்வுக்கும் அந்த உணர்வுக்கும் ஒத்துக் கொள்ளாது.

கர்த்தர் வான்வீதியிலிருந்து கொண்டு வந்தார் என்று சொல்கின்றார்கள். ஞானிகள் சொன்ன உண்மையின் வழிப்படி கர்த்தர் என்றால் நமது உயிரே கர்த்தராக இருக்கின்றது. நாம் எண்ணிய வழிப்படி அது இயக்குகின்றது.

இன்னொரு சாரார் “ஆண்டவா…” என்று சொல்கின்றார்கள். நம்மை ஆள்வது யார்…?
1.எதனின் உணர்வை எடுத்தோமோ அது உடலாக மாறுகின்றது
2.அதை ஆள்வது யார்…? நம் உயிர் தான்.
3.உள் நின்று இயக்கும் சக்தி உடலை உருவாக்குவது கடவுள்.
4.உருவாக்குவதால் அவனுக்குப் பெயர் ஈஸ்வரா… என்று சொல்கின்றோம்.

உருவாக்கிய உணர்வுகள் கொண்டு நம்மை ஆளும் ஆண்டவனாக உயிர் இருக்கின்றான். அவன் தான்… நாம் எண்ணிய உணர்வை நுகர்ந்து அந்த உணர்வின் தன்மை இறையாக்குகின்றான்.
1.இறையின் உணர்வு உடலாகின்றது
2.இந்த உணர்வின் இயக்கம் செயலாக மாறுகிறது… தெய்வம் ஆகின்றது…! என்று
3.அகஸ்தியன் இதைத் தெளிவாகக் காட்டியுள்ளார்… இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதை எல்லாம் உங்களுக்கு இடையில் இடையில் இணைத்துக் கொடுக்கின்றோம். அடுத்து உபதேசம் கொடுக்கும்போது எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்த்தால்… தெளிவாக ஒன்று போல நீங்கள் உண்மைகளை உணர முடியும்.

உதாரணமாக காரின் உறுப்புகளைத் தனித்தனியாகச் செய்து எடுத்து வைத்திருந்தாலும் இது இன்னது தான் செய்யும்… இது இன்னதுதான் செய்யும்… என்று அது எல்லாவற்றையும் சேர்த்து இணைத்து வந்த பிற்பாடு அதனதன் வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கிறது. கார் முழுமையாகிறது.

அதே போன்று இங்கே நான் (ஞானகுரு) பேசுகிறேன் என்றால் மைக் இருக்கின்றது. அது ஒன்றோடு ஒன்று இணைத்து ட்ரான்சாக்சன் (TRANSACTION) செய்கின்றது. அப்படிப்பட்ட இடத்தில் ரிப்பேர் ஆகிவிட்டால் கரா…புரா… என்று சப்தம் போடும்.

அதைப் போன்றுதான் இயற்கையின் உண்மை நிலைகளை இந்த உபதேச வாயிலாக உங்களுக்குத் தெளிவாக்குகின்றோம். அந்த இயற்கையின் உண்மை நிலைகளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இருந்தாலும் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்…?

1.தெய்வத்தை நாங்கள் இப்படி எல்லாம் கும்பிட்டு வந்தோம்.
2.ஆனால் இவர் இப்படிச் சொல்கிறாரே…! என்று எண்ணினால் கரா… புரா… ஆகிவிடும்.

விநாயகரை எப்படி எல்லாம் நாம் கும்பிட்டோம்…! களிமண்ணால் செய்து வைத்த விநாயகரைக் கரைத்தோமே. எல்லாமே நன்றாக இருந்தது. ஆனால் சாமி இப்படிச் சொல்கிறார்… என்று
1.இரண்டையும் கிராஸ் (இடைமறித்து) செய்து கொண்டிருந்தால்
2.நான் சொல்வதை நீங்கள் கிராஸ் செய்து கொண்டே இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்
3.கரா… புரா… என்று கடைசியில் எதுவுமே அர்த்தமே ஆகாது.

ஆகவே…
1.யாம் உபதேசிப்பதை முதலில் பதிவு (ரெக்கார்ட்) செய்து கொள்ள வேண்டும்
2.பதிவு செய்த பிற்பாடு அப்புறம் வாழ்க்கையில் எது எப்படி இருக்கின்றது…? என்று தெரிந்து கொள்ள முடியும்.

கரா..புரா… பண்ண விடாதபடி யாம் சொல்வதை அப்படியே கிரகித்துக் கொண்டு வாருங்கள். ரெக்கார்ட் ஆகிக் கொண்டே இருக்கும்
1.அதற்கு அப்புறம் உங்கள் உடலில் இருக்கக்கூடிய நிலைகள்
2.வாழ்க்கையில் ஒவ்வொன்றும் அது எப்படி வந்தது என்று எண்ணிப் பார்த்தீர்கள் என்றால்
3.இது நல்லது… இது கெட்டது… என்று அறிய முடியும்
4.உங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் சொல்கின்றேன்.

காரணம் இயற்கை எப்படி வளர்ந்தது…? நாம் எப்படி மனிதனாக வந்துள்ளோம்…? இனி அடுத்து எங்கே செல்ல வேண்டும்…? என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குத் தான் இதைச் சொல்வது.

கணவன் மனைவி இணைந்த நிலையில் இரண்டாயிரம் சூரியக் குடும்பங்களின் ஓட்டத்தையும் காணலாம் – ஈஸ்வரபட்டர்

 

உருக்கொண்ட உயிரணு வளர்ச்சி யாவையுமே… அவை அவை எடுத்த சுவை கொண்டு வளர்ச்சி பெற்ற வலுவின் செயல் கொண்டு… செயல் வழி குண நிலை தொடர் கொண்டு வளருகின்ற தொடர் வளர்ப்பில்… சரீர எண்ண குண வாழ்க்கையில்… சுவையும் காம இச்சையும் கொண்ட தொடர் வாழ்க்கையில் மனித எண்ண வழித் தொடர் கொண்ட வாழ்க்கை அமைந்துள்ளது

இச்சரீர ஈர்ப்பில்… சரீர உணர்வில் வளர்த்துக் கொண்ட குண நிலையை… உணர்வின் உந்தலை… எவ்விச்சையையும் “ஆவேச உணர்வு ஈர்ப்பில் செலுத்தாமல்… சமம் கொண்ட சாந்த குண ஈர்ப்பினாலேயே” செலுத்த வேண்டும்.

இவ்வுடலில் காந்த மின் அணு வலுவைக் கூட்டிய ஆத்ம பலத்தை
1.ஆண் பெண் என்ற தாம்பத்ய இணைப்பு ரிஷித் தொடர்பில்
2.இரண்டு ஆத்மாவும் ஒரு நிலை கொண்டு
3.ஓர் ஆத்மாவாக ஈருயிர் ஓர் ஆத்மாவாக வலுக் கொண்ட தொடரில் சென்றால்
4.ரிஷி சக்தி (சிவ சக்தி) கொண்ட வலுக் கூடும்.

அதன் மூலம் வளர்ச்சி கொண்ட ஜீவ வளர்ச்சி வளரத்தக்க வழித் தொடர்பிற்கு… சிவ சக்தி நிலை கொண்ட ஆத்ம ஜெபம் பெற்ற இந்த ஆத்மாக்கள் இரண்டாயிரம் சூரியக் குடும்ப இயக்க ஓட்டத்தில் எம்மண்டலத்தையும் தம் மண்டலமாக்கிட முடியும்.

மண்டல வளர்ப்பிற்கு… மனித அலை உயர் தெய்வ குண எண்ண பகுத்தறியும் ஆற்றல் கொண்ட வித்துத் தொடரை சிவ சக்தியின் செயல் கொண்டு தான் வளர்க்க முடியும்.

வளர்க்க வேண்டிய வளர் சக்தி கொண்ட “தெய்வ நிலை” மனித எண்ணத்திற்கு மட்டும் தான் உண்டு.

ஆகவே…
1.உண்டு கழித்து உறங்கும் இயந்திர பூமியின் பிடிப்பில் சுழலும் மனித ஆத்மாக்களே…
2.உங்களுக்குகந்த அறிவு ஞானத்தை இவ்வுடல் ஒன்று பெற
3.இம்மனிதச் செயல் செயல் கொள்ள
4.இரண்டாயிரம் சூரியக் குடும்பங்களின் தொடர்புடன் பல காலமாக வளர்ச்சி கொண்டு
5.வார்ப்புப்படுத்தி வார்ப்புப்படுத்தி வளர்ச்சி பெற்ற இம்மனித உயர் ஞான எண்ண உணர்வு கொண்ட இச்சரீரத்தை
6.மீண்டும் இச்சரீரக் கோளத்தின் சத்தையே எடுத்து எடுத்து
7.தன் ஆத்மாவின் வித்தை – தன்னைத் தான் உணராத நிலையில் விரயப்படுத்தி உழலும் இத்தொடரை விடுத்து விட்டு
8.உயரும் வழித் தொடரின் வழியறிந்தே நீங்கள் செல்லுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இன்று நாம் பத்திரிகையின் வாயிலாகப் படிக்கின்றோம். ஓடும் பாதையில் இரயிலே கொள்ளையடித்தான் என்ற அதிர்ச்சியான செய்திகளைக் கண்டபின் அந்த உணர்வை நுகரும் போது அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவாகின்றது.

பதிவான பின் அடுத்து என்ன செய்கின்றது…?

அடுத்து இரயிலில் செல்லப்படும் போது அதே நினைவு வந்து அதிர்வின் நிலை ஆகின்றது. உடனே அச்சுறுத்தும் உணர்வு வருகிறது.

“கொள்ளையன் வந்து விடுவானோ…!” என்ற உணர்வின் தன்மை அச்சுறுத்தினால் மற்ற பெட்டிகளில் கொள்ளையடிக்கவில்லை என்றாலும்
1.நாம் வெளிப்படுத்தும் அச்சுறுத்தும் உணர்வின் அலைகள் படரும் போது
2.அதை நுகர்ந்து கொள்ளையடிப்பவன் நாம் இருக்கும் அந்தப் பெட்டிக்கேதான் வந்து சேருவான்.

பார்க்கலாம்.

இதே போன்றுதான் வாகனங்களில் செல்லும் போது “விபத்தில் சிக்கி விடுவோமோ…!” என்று அதிர்ச்சியாகி டிரைவரை எண்ணினால் இந்த உணர்வுகள் ஊடுருவி அதற்குத் தகுந்தாற்போல் அணைத்து அடுத்து ஆக்ஸிடண்ட் ஆகும்.

இவன் எண்ணியபடி டிரைவரின் உணர்வை அணைத்து வண்டிக்குள் இருந்தாலும் இவன் மேல் உராய்ந்து இவன் அடிபடுவான். மற்றவருக்கு ஆவதில்லை… பார்க்கலாம்.

இவர்களின் எண்ணத்திற்கு ஒப்ப அந்த உணர்வின் தன்மைகள் டிரைவரையும் இயக்குகின்றது.

எப்படி ஒரு கம்ப்யூட்டர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் உணர்வை இயக்குகின்றதோ… இதன் வழி தான் நம் உயிர் எலக்ட்ரிக்… நாம் நுகர்வைதை எலக்ட்ரானிக்காக… உணர்வாக மாற்றுகின்றது.

அதன் வழி தான் (உயிரிலே மோதினால் உணர்ச்சிகளாகின்றது) இந்த உடலை இயக்குகின்றது என்பதை விஞ்ஞான அறிவு கொண்டு நாம் தெரிந்து கொள்வது நல்லது.

விஞ்ஞான அறிவில் வளர்கின்றோம். விஞ்ஞானியும் காட்டுகின்றான். அதன் உணர்வின் இயக்கம் எப்படி என்று காட்டிய பின்
1.இனியாவது நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது…?
2.நம்மையறியாது தவறு எப்படி வருகின்றது…?
3.நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் எப்படி நோயாகின்றது…
4.நோயின் தன்மை வளர்ந்தபின் உடலை எப்படி இழக்கச் செய்கிறது…? என்பதை
5.மெய்ஞானிகள் காட்டிய உணர்வு கொண்டு அறிந்து உணர்வோம்.
6.வரும் தீமைகளிலிருந்து விடுபடும் அருள் சக்திகளை வளர்த்துக் கொள்வோம்.

விஞ்ஞானத்தின் தன்மையில் வளர்ந்து காட்டினாலும் அஞ்ஞான வாழ்க்கையை வாழ்கின்றனர்.

பக்தி மார்க்கத்தில் பற்று கொண்டவர்களும் உண்மையின் உணர்வை அருள் ஞானிகள் காட்டிய வழியில் நுகராது அதை வளர்த்திடாது அதனுடைய நிலைகள் தணியப்படும் போது அஞ்ஞான வாழ்க்கை வாழும் நிலையே பக்தி மார்க்கத்திலும் வருகிறது.

பத்திரிகைகளில் படிக்கும் போது எப்படி இந்த உணர்ச்சி கொள்ளையர்கள் வந்து விடுவார்களோ என்ற இயக்கத்தின் தன்மை ஆகின்றது.

நாம் இதற்கு என்ன செய்வது…? அந்த உணர்வைத் தூண்டுகின்றது. உணர்வின் தன்மை வளர்ந்த பின் பயந்து வாழும் நிலைகளே வருகின்றது.

இரயிலிலே அல்லது வாகனங்களில் செல்லப்படும் போது இந்த உணர்வுகளை அதிகமாகத் தூண்டி நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் அந்த அணுக்களுக்கு அதை வீரிய உணர்வாக ஊட்டி நமக்குள் அச்சுறுத்தும் அணுக்களை வளர்த்து இந்த உடலையே பறி கொடுத்த உணர்வு கொண்டு நல்ல உணர்வையே நாம் பறி கொடுத்து விடுகின்றோம்.

அவன் பொருளைப் பறிகொடுத்தான். உடலைப் பறிகொடுத்தான். இந்தச் செய்தியைப் படிக்கின்றோம் பதிவாக்கிக் கொள்கின்றோம். நாம் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் கடும் நோயாக வரத்தொடங்கி விடுகிறது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபடுவதற்குத்தான் ஆலயங்களில் அந்தச் சிலையை உருவாக்கிக் காவியத்தைப் படைத்துக் கருத்தினை நுகரும்படி செய்கின்றார்கள் ஞானிகள்.

அவ்வாறு நுகர்ந்த கருத்து அருள் உணர்வின் தன்மை இயக்கமாகி அந்த உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் நல்ல அணுக்களை உருவாக்கிப் பகைமை உணர்வுகளை அகற்றி நம் சொல் பிறரைக் காக்கும் நிலை வருகின்றது.

ஆலயத்திற்குச் சென்றபின் தீப ஆராதனை காட்டும் போது மகரிஷிகளின் அருள் சக்தியால்
1.இந்த ஆலயம் வருவோர் எல்லாம் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.
2.அவர்கள் குடும்பமெல்லாம் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.
3.தொழில் செய்யும் இடமெல்லாம் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.
4.நான் பார்ப்போர் எல்லாம் பொருளறிந்து செயல் படும் தன்மை பெற வேண்டும் என்று இப்படிப்பட்ட உணர்வுகளை நாம் நுகர்தல் வேண்டும்.

தீப ஆராதனை காட்டும் போது அங்கு இருக்கக்கூடிய பொருள்கள் அனைத்தும் தெரியும். பொருள் தெரிந்தபின் அந்தத் தெய்வத்தைப் பார்க்கின்றோம். அது துவைதம்.

“இந்தத் தெய்வம் நல்லது செய்யும்…” என்று உருவமாக்கி அந்த எண்ணத்தை எடுத்து அதைக் காவியமாக்கிப் படிக்கும் போது அந்த நல்ல உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றது.

அதைப் பதிய வைத்தனர் ஞானிகள். அதன் வழி நாம் நடந்தோம் என்றால் நாமும் தெய்வமாகின்றோம்.

நாம் யாரும் பிரிந்து இல்லை

 

நாம் ஒருவருக்கொருவர் எத்தனையோ பேரிடம் பேசினாலும் அவர்களின் உணர்வுகள் நமக்குள் உண்டு. நம்முடைய உணர்வுகள் அவருக்குள் உண்டு. யாரும் பிரிந்து இல்லை.

யாரிடமும் எனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று நாம் தப்பிக்க முடியுமா என்றால் முடியாது.
1.ஒருவர் உங்களைச் சாபமிடுகிறார்…
2.அதைப் பதிவாக்கிக் கொண்டு விட்டீர்கள் அவரிடமிருந்து நீங்கள் விலக முடியாது.

அதே போல் நீங்கள் சாபமிட்டால் அவர்களும் விலக முடியாது. இந்த உணர்வுகள் பதிவாகியிருக்கின்றது
1.உங்களை இணைத்துக் கொண்டே இருக்கும்
2.பாவிப்பயல் இப்படிச் செய்தான்… செய்தான்… செய்தான்… செய்தான்… என்று இணைத்துக் கொண்டே இருக்கும்.

நண்பனாக இருக்கும் பொழுது “எனக்கு உதவி செய்தான்” என்று எண்ணுகின்றோம் அது பதிவாகியிருக்கின்றது. அப்பொழுது இணைந்து தான் இருக்கின்றோம். அந்த நன்மையின் தன்மை வரும் பொழுது இருவருக்குமே அது நல்லதாக விளைகின்றது.

சந்தர்ப்பத்தால் பகைமையாகி… இருவருமே தீமையான உணர்வுகளைப் பதிவு செய்து விட்டால் இரண்டு பேருமே அதிலிருந்து பிரிந்து இல்லை.

இதில் எந்த அடிப்படையில் அதிகமாக அந்த நண்பரின் உணர்வுகளைப் பதிவு செய்திருக்கிறீர்களோ அந்த உணர்வின் தன்மை வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.

இதை எல்லாம் மாற்றிட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நமக்குள் வலுவாக்கிக் கொண்ட பின்
1.நாம் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகள் சக்தி கிடைக்க வேண்டும்
2.அவர்கள் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும்
3.அவர்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
4.மெய்ப் பொருள் காணும் சக்தி அவர்கள் பெற வேண்டும்
5.வசிஷ்டரும் அருந்ததியும் போன்று அவர்கள் குடும்பங்கள் வாழ வேண்டும்
6.நாளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும்
7.சாவித்திரி போன்ற இரு உயிரும் ஒன்றி இணைந்த நிலைகள் வளர வேண்டும்
8.அவர்கள் குழந்தைகள் உலக ஞானம் பெற வேண்டும்
9.அவர்கள் தொழில்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

இப்படி நாம் எண்ணினால் நம் தொழிலும் சீராகிறது. அருள் ஞானிகள் உணர்வுகள் இங்கே விளைகின்றது… வளர்கின்றது.

மகரிஷிகளின் அருள் சக்தி மற்றவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நாம் வலுவாக எண்ணும்போது
1.நமக்குள் பதிவான மற்றவரின் தீமையான உணர்வுகளை
2.அந்த மகரிஷியின் அருள் சக்தி மறைக்கின்றது.

ஆகவே… நமக்குள் பதிவான பிறருடைய நிலைகளைத் துருவ தியானத்தின் மூலம் குறைத்தல் வேண்டும்… அதைத் தூய்மைப்படுத்துதல் வேண்டும்… பகைமைகளை நிறுத்துதல் வேண்டும்.

தீமை என்ற நிலைகளை எண்ணாது அந்த மகரிஷிகள் சக்தி நாம் பார்க்கும் அனைவரும் பெற வேண்டும் என்று அந்த உயர்ந்த நிலைகளை எண்ண வேண்டும். நமக்குள் அது உயர்ந்த நிலைகளாக வளர்கின்றது.

ஒவ்வொரு நாளும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி நமக்குள் வரும் தீவினைகளை நிறுத்துதல் வேண்டும்.

இப்படி எல்லோருமே ஏகோபித்த நிலைகள் செயல்பட்டு இந்தப் பூமியில் கலந்துள்ள தீமையின் உணர்வுகளை வளராது நிறுத்துதல் வேண்டும்.

நாம் அனைவரும் இதன் வழி கொண்டு சொல்லப்படும் பொழுது பகைமை உணர்வை உருவாக்கும் அணுக்கள் உருவாவதில்லை. அத்தகைய உணர்வைச் சுவாசிக்கும் தன்மைகளும் அடைபடுகின்றது.

துருவ நட்சத்திரத்திலிருந்து அதிகாலையில் ஒளியான அலைகள் வருகிறது. அந்த ஆற்றலை நமக்குள் பெருக்குகின்றோம். எல்லோரும் ஏகோபித்த நிலைகள் அதைப் பரவச் செய்யும் போது
1.பகைமையை உருவாக்கும் உணர்வுகளுக்கு… அந்த அணுக்களுக்கு ஆகாரம் இல்லாது துரத்தி விடுகின்றோம்.
2.அஞ்சி ஓடும் நிலை வருகின்றது… சூரியனின் காந்த சக்தி கவர்ந்து சென்று விடுகிறது.

மனித உடலில் எடுத்துக் கொண்ட அத்தகைய பகைமை உணர்வுகள் தாவர இனங்கள் இருக்கும் பக்கம் செல்லாது. ஆனால் அந்த உணர்வின் தன்மை அதிலிருந்து தோன்றியது தான்.

பூமியின் சுழற்சியின் நிலைகள் கொண்டு கடல் அலைகள் அதை இழுத்துக் கொள்கிறது. பகைமை உணர்வுகளைத் தனக்குள் அணைத்துக் கொள்வதும் (அமிழ்த்தி) தனக்குள் மோதும் வெப்பத்தால் அதை அடக்கி இந்த உணர்வின் தன்மை ஆவியாக மாற்றிவிடும்.

காற்று மண்டலமான இந்தப் பரமாத்மா தூய்மை அடைகின்றது… நம் ஆன்மாவும் தூய்மை அடைகிறது.

உயிரான்மாவின் (நம்முடைய) வளர்ச்சி எது…? – ஈஸ்வரபட்டர்

 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நாம் எடுக்கும் பலதரப்பட்ட குணங்களில் புளிப்பு இனிப்பு துவர்ப்பு கரிப்பு கசப்பு எரிப்பு போன்ற ஆறு வகைச் சுவையை உடல் சமைக்கும் ஏழாம் சுவை அமில வளர்ப்பைக் கொண்டு… உடல் அணுக்கள் வளர்ச்சியில் வளரும் வலுவை… உடலை இயக்கும் ஆத்மாவானது அச்சுவையின் அலையை எடுத்து இயங்குகிறது… இயக்குகிறது… வலுப் பெறுகின்றது.

அலை என்பது… என்ன…?

1.உடல் சமைக்கும் ஆவி உணர்வை ஆத்மா இழுத்து ஆத்மாவின் உடல் இயக்க உயிர் செயல் கொள்ள
2.நாம் எடுத்த உணர்வு நிலைக்கொப்ப… உடல் என்ற சட்டியில் அது சமைக்கப்பட்டு… உடல் வெளிப்படுத்தும் வெக்கை நிலைக்கொப்ப
3.எச்சுவையின் வார்ப்பகத் தன்மையில் இந்த உடலின் இயக்கம் செயல் கொள்கின்றதோ
4.அதற்குகந்த அலை காற்றுடன் கலந்துள்ள அமிலம் காந்த ஜீவத் துடிப்பு கொண்ட ஆத்ம ஈர்ப்பிற்கு வலுக்கூட்டி
5.எச்சுவையின் தன்மையை உடலின் இயக்கம் அதிகப்படுத்தி (முன்னணியில் உள்ள குணம்) வளர்ச்சி கொள்கின்றதோ
6.அத்தொடருக்குகந்த வலுத் தொடரைத் தான்
7.உடல் வளர்க்கும் அணு வளர்ச்சியின் ஈர்ப்பிற்கு இந்தக் காற்றலையின் தொடரிலிருந்தும் பெறுகின்றோம்.

உதாரணமாக மிளகாய்ச் செடியின் வித்து நீர் சக்தியைக் கொண்டு உயிர் சக்தி ஜீவ வளர்ப்பு சக்தியை எப்படிப் பெற்றதோ… அத் தொடரின் வலுவைக் கூட்டி அச்செடி வளர்ந்து… அது எடுத்த கார உணர்வின் வளர்ப்பு நிலை கூடி… வித்து நிலையில் காரமுடன் கூடிய “மிளகாயின் பலன்” கிடைக்கின்றது.

இதைப் போன்று…
1.எந்தச் சுவையில் எந்த உயிரணு ஜீவன் கொண்டதோ…
2.அதற்குகந்த வளர்ப்புத் தொடரில் பல மாற்றத்திற்குப் பிறகு
3.வலுக்கூடிய வளர்ச்சி உன்னத உயிர் ஆத்ம நிலையில்
4.எண்ண உணர்வுடன் இயங்கக்கூடிய இவ்வுடல் கோளத்தின் சமைப்பில்
5.குணங்களைக் கொண்ட உணர்வு… உணர்வுக்குகந்த சுவை… சுவைக்குகந்த செயலாக… மனித வாழ்க்கை நிலை ஓடும் வழித் தொடரை…
6.நம் எண்ணத்தால் குண நிலையை நல்வழிப்படுத்தி
7.சாந்தமுடன் கூடிய வீரமான ஞானத்தைக் கொண்டு
8.இதுகாறும் இந்த உடல் இயக்கத்தில் நம்மை அறியாமல் நாம் வளர்த்துக் கொண்ட
9.குணமும் சுவையும் செயலும் வழித் தொடர் கொள்ளும் வழி நிலையைச் சமமான குணம் கொண்டு
10.நமக்கு மேல் வலுவாகத் தெய்வ நிலை பெற்ற… தெய்வ சக்தி பெற்ற “மகரிஷிகளின் தொடர்புடன்”
11.மேல் நோக்கிய காந்த மின் அலைத் தொடர்பினை நம் சுவாசத்தால் எடுக்க
12.நாம் இந்த உடலின் இயக்கத்தை உட்படுத்தினோம் என்றால்
13.மனித சக்தியின் உயர்ந்த உன்னத சக்தியை ஒவ்வொரு உயிராத்மாவும் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

சாமியைப் பார்த்ததும்… அல்லது சாமியாரைப் பார்த்தால்… அவர்கள் ஆசிர்வாதம் கொடுத்தால்… “நமக்கு எல்லாம் கிடைத்துவிடும்…!” என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்.

ஆனால்
1.நாம் எதை நுகர்கின்றோமோ
2.அதைத் தான் நம் உயிர் இயக்கி
3.அந்த உணர்வின் வழிப்படி செயல்படுகிறது என்பதை அடிக்கடி நான் சொல்லி வருகிறேன்.

நீங்கள் இருந்த இடத்திலிருந்து நல்ல சக்திகளைப் பெற முடியும். அந்தத் தன்னம்பிக்கை வேண்டும்.

உதாரணமாக ஒருவர் திட்டும் போது அதை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டு என்ன செய்கிறீர்கள்…?
1.“என்னைத் திட்டினார்… திட்டினார்…” என்று எண்ணுகிறீர்கள்
2.என்னைத் திட்டினால் “உருப்படுவானா… அவன் உருப்படுவானா” என்றும் எண்ணுகிறீர்கள்.
3.இந்த உணர்வு அங்கேயும் போய் இயக்குகிறது. இங்கேயும் இயக்குகிறது.

உங்கள் குழந்தை மீது பாசமாக இருக்கின்றீர்கள். குழந்தை வெளியூரில் படிக்கிறது. ஒரு வாரம் குழந்தையிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்றால் என்ன நினைக்கின்றீர்கள்…!

அதன் மீது கொண்ட பாசம் காரணமாக என்ன ஆயிற்றோ… ஏது ஆயிற்றோ…! என்று வேதனைப்படுகிறீர்கள்.

இப்படி வேதனைப்படும் போது
1.இதே வேதனை உங்களுக்குள்ளும் விளைகிறது
2.அந்தக் குழந்தைக்கும் அதனால் வேதனை ஏற்பட்டு
3.சிந்திக்கும் தன்மை இழந்து அதனுடைய படிப்பும் கெடுகிறது.

இதற்கு முன்னால் நன்றாகப் படித்துக் கொண்டிருக்கிறது என்று நீங்கள் எண்ணுவீர்கள்.

நீங்கள் இவ்வாறு குழந்தையை வேதனையுடன் எண்ணும் போது அந்தக் குழந்தை சிந்திக்க முடியாமல் படிப்பில் ஓரளவிற்கு நினைவை இழக்கச் செய்கிறது.

முக்கியமான பாடங்கள் இருக்கும் போது நீங்கள் வேதனைப்பட்டீர்கள் என்றால் அங்கே குழந்தைக்கு நினைவில்லாமல் போகிறது.

நினைவில்லாமல் போகும் போது “இன்று நன்றாகப் படித்துக் கொண்டு வந்தோமே…! தேர்வு எழுதும்போது இப்படி ஆகிப் போய்விட்டதே…!” என்று அதுவும் வேதனைப்படும்.

“இது எல்லாம் நம்மை அறியாது செயல்படும் உணர்வின் இயக்கங்களே…” என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

1.நீங்கள் எல்லாம் அருள் ஞானம் பெற வேண்டும் என்று தான்
2.“உங்கள் உயிரை… நான் கடவுளாக” வணங்குகிறேன்
3.உங்கள் உயிரை “ஈசனாக” மதிக்கின்றேன்.

ஈசனால் உருவாக்கப்பட்டது தான் உடல். உயிரால் உருவாக்கப்பட்ட உடலைச் “சிவம்” என்று மதிக்கின்றேன்.

1.எண்ணத்தால் உருவானதுதான் “கண்” என்றும்
2.கண்ணால் தான் உருவாகி “எண்ணத்தைக் கொடுக்கிறது” என்றும் குருநாதர் காட்டிய அருள் வழியில் “உங்களை” நான் மதிக்கின்றேன்.

எண்ணத்தால் தான் நாம் எல்லாவற்றையும் இயக்குகிறோம்.
1.நம் சொல்லே இராமனாகிறது
2.நம் கண்ணே கண்ணனாகிறது
3.நம் உடலே சிவமாகிறது என்ற நிலையில் வைத்து
4.ஒவ்வொருவரும் இதைப் போல நினைக்க நேர்ந்தால்
5.ஒவ்வொரு உடலையும் உயிரையும் கோவிலாகவும் ஈசனாகவும் சிவனாகவும் விநாயகனாகவும்
6.சொல்லை இராமனாகவும் கண்ணைக் கண்ணனாகவும் நாம் மதிக்க முடியும்.

இவ்வாறு நாம் மதித்து விட்டால் நம்மை அறியாது வரும் தீமைகளை அகற்றும் சக்தியை… “நாமே பெறுகின்றோம்”.

ஏனென்றால் தீமை என்ற உணர்வு நுகரப்படும் போது நம் உயிரிலே பட்டுத் தீமைகளை விளைவிக்கும் உணர்ச்சிகள் நம் உடலிலே சுழல்கின்றது.

உயிருக்கு “விஷ்ணு..” என்று காரணப் பெயர் வைத்து அழைக்கின்றனர்.
1.இயக்கத்தின் நிலையை “ஈசன்…” என்றும்
2.இயக்கத்தால் ஏற்படும் வெப்பத்தை “விஷ்ணு…” என்றும்
3.இயக்கத்தால் ஈர்க்கும் காந்தத்தை “இலட்சுமி…” என்றும் தெளிவாக நமது ஞானிகள் எடுத்து உரைத்துள்ளார்கள்.

உயிரான ஈசனிடம் (ஈசனுக்கு) நாம் எதை எண்ணுகின்றோம் என்பதைப் பற்றிச் சிந்தித்திருக்கின்றோமா…?

நாம் எதை எண்ணுகின்றோமோ அது “உயிரிலே மோதும் போது தான்” அந்த உணர்ச்சிகள் நம் உடலிலே இயக்கத் தொடங்குகின்றது.

அதனால் தான் அவனைச் “சங்கு சக்கரதாரி” என்றும் தெளிவாகக் கூறுகிறது நமது சாஸ்திரம்.

இதைப் பலமுறை உங்களுக்கு எடுத்துச் சொல்லியுள்ளேன்.

பிறருடைய வேதனைகளை நாம் சுவாசித்தோம் என்றால் முதலில் அந்த வேதனை உணர்ச்சிகள் நம் உடலுக்குள் சேர்கின்றது.
1.நம் உடலான ஆலயத்தில் அசுத்தத்தைச் சேர்க்கின்றோம்
2.நம்மை ஆண்டு கொண்டிருக்கும் உயிரான ஈசனுக்கும் துயரைக் கொடுக்கின்றோம்.

கண்ணால் உற்றுப் பார்த்து உணர்வின் தன்மை தெளிவாக்கும் நம் கண்ணுக்கு வேதனை என்ற உணர்வு வரும் போது கண் மங்கும் நிலையும்… “சிந்திக்கும் தன்மையும் சீரான உணர்வைக் கவரும் தன்மையும் இழக்கிறது…” என்பதனைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

இதனை மனதில் வைத்து ஒவ்வொரு மனிதனையும் நாம் மதிக்கும் தன்மை வந்தால் “நம்மை நாம் மதிக்கிறோம்” என்று பொருள்.

இதனை நீங்கள் கருத்தில் கொண்டு வாழ்க்கையில் வரும் சந்தர்ப்பத்தால் நுகரும் தீமையான உணர்வுகளைத் துடைத்துப் பழக வேண்டும்.

இதைத் துடைப்பதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். பதிவாக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால்
1.”இருந்த இடத்திலிருந்து…” தீமைகளை அகற்றலாம்.
2.உயர்ந்த உணர்வின் சக்திகளை நீங்கள் பெறலாம் என்று தான் சொல்லுகின்றேன்.

“எப்பொழுதுமே… உங்களிடம் தான்… வரம் கேட்கின்றேன் நான்..!”.

காரணம்… உடலான ஈசன் வீற்றிருக்கும் இடத்தில் அமைதி கொண்ட உணர்வுகளை நீங்கள் சுவாசித்தால் அந்த அருள் உணர்வுகள் வெளி வரும் போது… அதைக் கண்டு… “நான் ஆனந்தப்படுகின்றேன்”.
1.என் உயிரான ஈசனுக்கும்
2.அந்த அமுதைக் கொடுக்கின்றேன்.

அந்த ஆனந்தத்தை நீங்கள் பெறவேண்டும் என்பதற்குத்தான் இதைத் தெளிவாக்குகின்றோம்.

குறைகளை அகற்றி அருளைப் பெருக்கி இருளை அகற்றி மெய்ப் பொருளைக் காணும் அந்த அருள் சக்தி பெற ஒவ்வொரு மனிதனின் உணர்விலும் கடவுள் என்ற நிலையில் எடுத்தல் வேண்டும்.

யாம் கொடுக்கும் வாக்கைப் பயன்படுத்த வேண்டிய முறை

 

சாமி (ஞானகுரு) எனக்கு அருள் வாக்கு கொடுத்தார்… நடக்கவில்லையே…! என்று சிலர் எண்ணுவார்கள்.

காரணம் என்ன…?

1.நீங்கள் இதைச் செய்யுங்கள்… உங்களுக்கு நடக்கும்…! என்று யாம் வாக்காகச் சொல்கின்றோம்
2.ஆனால்… தான் எதை எண்ணிக் கேட்டார்களோ அது மேலே மட்டுமே எண்ணம் இருக்கும்… அதே உணர்வுகள் வரும்…
3.யாம் சொல்லும் உபாயத்தை எடுத்து அதைப் பாய்ச்ச வேண்டுமென்றால் அது வராது.

அந்த நேரத்தில் வேதனை உணர்வுகள் அதிகமான பிற்பாடு “நடக்கவில்லையே…. சாமி..! இப்படி இருக்கின்றதே…!” என்ற வேதனையை எடுத்து எனக்குள் பாய்ச்ச முடிகிறது.
1.அந்த வேதனை உணர்வு நல்ல உணர்வுகளை உங்களுக்குள் அழித்துவிடும்.
2.நான் கொடுத்த வாக்கை அங்கேயே மடியச் செய்து விடுகின்றது.

கடும் நோயாக இருந்தாலும் சரி…
1.உங்களுக்கு நோயில்லை போ…! என்ற வித்தைத் தான் யாம் விதைக்கின்றோம்
2.அதை எடுத்தால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெருகுகிறது
3.மகரிஷிகள் அருள் சக்தி உள்ளே சென்றால் நோய் நீங்குகிறது
4.இதையே திரும்ப எண்ணுங்கள் என்று சொல்கிறோம்

யார் செய்கின்றார்கள்…? இல்லை…!

சாமி நீங்கள் வாக்கு கொடுத்தீர்களே…! அது எங்கே சென்று விட்டது…? இன்று இப்படி என்னைத் தான் (ஞானகுரு) நம்ப முடிகின்றதே தவிர உங்களை நம்புவதே இல்லை.

1.ஆனால் நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ
2.அதை உங்கள் உயிர் உணர்வின் அணுவாக மாற்றும்…!

விநாயகர் சதுர்த்தி என்ற நிலையில் தீமைகளையும்… தீய வினைகளையும் நிறுத்துதல் வேண்டும். ஆனால் ஆசை நிலைகளில் தான் நாம் இன்று அலைந்து கொண்டிருக்கின்றோம்.

தீமைகளை நிறுத்தும் ஆற்றல் “அங்குசபாசவா” என்ற நிலையில் ஆத்ம சுத்தி என்ற கடுமையான ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்திருக்கின்றோம். தீமையைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் உங்களுக்கு உண்டு.

புழுவிலிருந்து மனிதனாக வளர்ந்து வந்த நிலையின் வல்லமையைக் காட்டுவதற்குத் தான் விநாயகர் கையிலே அங்குசத்தைக் கொடுத்துக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

மனிதன் எதனையுமே அடக்கி ஆளும் சக்தி பெற்றவன் என்ற நிலையில் ஏன் இதைச் செய்ய முடியவில்லை…!

எவ்வளவு பெரிய யானையாக இருந்தாலும் சிறு அங்குசத்தை வைத்துதான் அதை அடக்குகிறார்கள். அதே போல் தான்
1.கடும் நிலையாக வாழ்க்கையில் வந்தாலும்
2.அந்த அருள் ஞானிகளின் உணர்வை வைத்து அடக்க முடியும்… அடக்குவீர்கள்.

குறுகிய காலமே மனித உடலில் வாழ்கின்றோம் என்பதை உணர்ந்து வரும் தீமைகள் அனைத்தையும் மகரிஷிகள் உணர்வை வைத்து அடக்கப் பழகவேண்டும். அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் வளர்த்தல் வேண்டும்.

அது அல்லாது…
1.மனிதனாகப் பிறந்திருக்கின்றோம் என்று இந்த உடலையே நாம் பெரிதாக மதித்தால்
2.இந்த உடல் நமக்குச் சொந்தமானது அல்ல…!
3.இதைத் தெளிவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே யாம் பதிவு செய்யும் அருள் ஞானத்தை உங்களுக்குள் மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து எத்தகைய தீய வினைகள் வந்தாலும் அதை நிறுத்தும் ஆற்றலை உங்களுக்குள் வளர்த்தல் வேண்டும்.

உலகெங்கிலும் நடக்கும் விபரீத விளைவுகள் – ஈஸ்வரபட்டர்

 

மனித ஞானம் பெற்றுள்ள இன்றைய வளர் நிலைத் தொடர் நிலையையும்… மனிதன் தன் உயர்வின் வழி தெரியாமல் வாழ்க்கை ஓட்ட உருவ பிம்ப சரீர இச்சைக்கொப்ப மனிதனின் ஞானம் செயல் வழி சென்றதன் விளைவுகளையும்… காணும் நிலை வந்து விட்டது.

விஞ்ஞான விபரீதத்தால் அணுக் கதிர் இயக்க வீச்சின் விஷத் தன்மை அதிக அளவில் பரவியதால் இக்கலிக்குப் பிறகு பூமியின் பிரளய மாற்றமும் அதற்குப் பின் அடுத்த இன வளர்ச்சி நிலை… மனித வித்தின் ஞானம் செயல்படா வண்ணம்… செயலின் தொடரே மாறப் போகின்றது.

1.எந்த வளர்ச்சியில் மனிதக் கரு பல ஆயிரம் வருடங்களாக வளர்ச்சியுற்று வளர்ந்ததுவோ…
2.அவ்வளர்ச்சியின் தொடர் வலுத் தன்மை வளரக் கூடிய வளர்ச்சி நிலை…
3.பூமியின் விஷ அலையினால் மாற்றமாகிக் கொண்டிருக்கின்றது.

ஆகவே மாறப் போகும் இத்தருணத்தை ஒவ்வொரு மனிதனும் தன் உயர்வின் ஞானத்திற்கு உணர்வின் எண்ணத்தை உயிரின் ஆத்மாவிற்கு வலுக்கூட்டிக் கொள்வதே நல்லது.

வரப் போகும் விஷ அலையின் மாற்றத்திலிருந்து…
1.மனிதன் பெற்ற உயர்ந்த சக்தி நிலையான
2.பகுத்தறியும் ஞான வளர்ச்சி… செயல் திறமை… சொல்லாற்றலின் செயல் நிலை… யாவற்றையும்
3.எண்ணத்தின் உணர்வைக் கொண்டு சமமான சாந்த குணத்தால்
4.உடலில் உருவாகும் உயிரணு யாவற்றையும் உயர் ஞான அணுக்களாக
5.உயிர் ஆத்மாவின் வலுவுடன் வலுச் சேர்க்கும் வளர்ச்சி நிலைக்குக் கொண்டு செலுத்த வேண்டும்.

அதற்கு… மெய் ஞானிகளின் அலைத் தொடர்பைப் பெற்று இச்சரீர இயக்க ஓட்டத்தில் எண்ணத்தால் எடுக்கக்கூடிய வலுவைக் கொண்டு உயிர் ஆத்மாவின் வலுச் சக்தியைக் கூட்ட வேண்டும்.

காந்த மின் அணுக்கள் தன் இனமுடன் இனத்தை எப்படிச் சேர்த்துக் கொள்கின்றதோ அதைப் போன்று இச்சரீர இயக்கத்தில் ஓடும் அணுத் தன்மை யாவையும் மெய் ஞானிகளின் உயர் காந்த மின் அலையை ஜெபதபத்தினால் எடுத்துப் பழக வேண்டும்.

1.அதனின் வளர்ச்சி கொண்டு இயக்கப்படும் இணைப்பைக் கொண்டு
2.உயிராத்மாவின் வலுக்கூடக் கூட
3.இந்த உடல் என்ற கோளத்தின் உருண்டோடும் அணுவின் வளர்ச்சியில் இருந்து
4.ஆத்ம உயிரின் கன நிலை கூடிக் கொண்டே செயல் கொள்கின்றது.

சூரியன் தான் வளர்க்கும் கோளத்திலிருந்து… சூரியனின் தொடர்பு கொண்டு ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று வலுக் கூடி வளர்ந்து கொண்டே உள்ளதோ அதைப் போன்று இச் சரீரத்தின் ஆத்ம உயிரின் வலுவும் வளர்கின்றது.

ஓர் உயிராத்மா பிறப்பெடுத்து வளர்ச்சி நிலை குறிப்பிட்ட வயது வரம்புடன் ஆத்ம வித்து வலுக் கொண்ட தன்மை கொண்டு உருவக வளர்ச்சி நின்று விடுகின்றது.

இந்தப் பூமி வளர்க்கும் ஜீவ சரீர இயக்கமும் தாவர வளர்ச்சியும் அவை எடுத்த வித்தின் உயிர் ஆத்ம வலுவின் நிலைக்கொப்ப வளர்ச்சி நிலை வாழும் காலம் மாறி மாறிச் செல்கிறது.

மாறி மாறி என்பது…
1.விதை ஒன்று போட்டு
2.அவ்விதையில் மரம் வளர்ந்து பலன் தந்து
3.அதன் சத்து நிலை உள்ள காலங்கள் வரை சததெடுத்து வளர்ந்து
4.பலன் தந்து கடைசியில் பட்டுவிடுகின்றது.

அதே சமயத்தில் இந்தப் பூமியின் உள் பகுதியில் உள்ள நீர்… மண் வளம்… கனி வளம்… இவற்றின் வளர்ப்பு நிலை கூடிக் கொண்டே உள்ளது. ஆக… உருவகத்தில் கனத்துக் கொண்டே “பூமி வளர்க்கும் உயிர் வளர்ப்பு யாவையும்” குறிப்பிட்ட சத்து நிலைக்கொப்ப தாவரமும் ஜீவராசிகளும் வாழ்ந்து மடிகின்றன.

ஆகவே பிறப்பு… வளர்ப்பு… இறப்பு… என்ற தொடர்புடனேயே மீண்டும் மீண்டும் சுழல விடாமல் உடல் கோளத்தின் உயிராத்மாவை என்றும் அழியா நிலைக்கு உயர்த்த வேண்டும்.

சூரியனுக்கும் பூமிக்கும் மற்றெந்தக் கோளத்திற்கும் இல்லா உயர் செயலை… நம் ஆத்ம உயிர் வலுவைக் கொண்டு
1.இன்றெப்படி சுவை எண்ணம் உணர்வு செயல் ஞானம் எல்லா இன்ப நிலைகளில் உடலில் பெறுகின்றோமோ
2.அதைக் காட்டிலும் இந்த உடலில் உள்ள எதிரிகளின் எதிர்ப்பு நிலையற்று மகிழ்ந்து வாழலாம்.

எதிரி என்பது இந்த உடல் அவயங்களில் ஏற்படக்கூடிய சோர்வு… பிணி… பசி… தூக்கம்… இத்தகைய எதிரிகளின் நிலையுமன்றி ஆத்ம வலுவின் வலுவைக் கூட்டி வலுவாக்கிக் கொண்டோமானால் வளர் தொடர் வளர்ச்சியின் வலுவாக நம் இயக்கச் செயல் “பிறவா நித்திய நிலையாகச் செயல் கொள்ளும்…!”

அதற்குத்தான் இந்த உபதேசமே…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

யாம் (ஞானகுரு) இராஜரத்தினம் மில்லில் வேலை பார்க்கும்போது அங்கிருந்த சூப்பர்வைசர் மகன் சாராயக் கடை எல்லாம் வைத்து நடத்திக் கொண்டிருந்தான்.

அவன் என்ன செய்தான்…? என்னிடம் அவன் வரும் போது கொஞ்சம் மரியாதையாக இருப்பான். அல்சேஷசன் நாய் ஒன்று அவன் வைத்திருந்தான்.

அப்பொழுது குருநாதர் அங்கே வந்து என்னைக் கடுமையாகத் திட்டிக் கொண்டு இருக்கின்றார். குருநாதர் என் வீட்டுச் சந்துக்கு முன்னாடிதான் நின்று என்னைப் பயங்கரமாகத் திட்டிக் கொண்டு இருந்தார்.

இதைப் பார்த்த அந்தச் சூப்பர்வைசர் மகன்… இந்தக் கிழட்டுப் பயலுக்குப் பார்… பிடிடா…! “அவரைப் பிடிடா…” என்று அவன் தன் நாயிடம் சொன்னான்.

அந்த நாய் என்ன செய்தது…?

“பிடிடா…!” என்று சொன்னவுடன் குருநாதரை ஒரு சுற்றுச் சுற்றி வந்து அவனையே (பிடிக்கச் சொன்னவனை) பிடிக்கின்றது.

துரத்து…துரத்து… என்று துரத்த ஆரம்பித்தது. “அட… நன்றி கெட்ட நாயே…!” என்று சொல்லிக் கொண்டு ஓடுகிறான்,

ஓடினாலும்…. அவனை நாய் விடமாட்டேன் என்கிறது.

அவன் போட்டிருந்த சட்டை எல்லாம் கிழித்துவிட்டது. குருநாதர் சிரிக்கிறார்.

கடைசியில் அந்த ஆள் அரிவாளை எடுத்துத் தன் நாயையே வெட்டி விட்டான். நான் வளர்க்கிறேன்….! என்னையே இந்த மாதிரிச் செய்கிறது… என்று அதைக் கொன்று விட்டான்.

அந்த மாதிரி குருநாதருடைய புத்திகள் அந்த இடத்தில் இந்த மாதிரிச் செய்தார்.

இப்படி குருநாதர் செய்வதை எல்லாம் பார்த்திருக்கின்றேன். பழகியிருக்கின்றேன் அல்லவா…! நான் எங்கேயாவது தனியாகப் போனால் என்னை நாய் விரட்டிக் கொண்டே இருக்கும்.

அப்பொழுது குருநாதர் செய்கிற மாதிரி செய்து பார்க்கிறேன். நாய் ஒன்றும் “நிற்க மாட்டேன்…” என்கிறது.

ஏனென்றால் ஆரம்பத்தில் நான் எங்கே சென்றாலும் நாய் விரட்டிக் கொண்டே வரும்.

அப்புறம் நான் குருநாதரிடம் “சாமி… நாய் விரட்டிக் கொண்டே வருகிறது. என்ன செய்வது…?” என்றேன்.

நீ ஏதாவது திட்டி இருப்பாய்… அதனால் அது விரட்டுகிறது. நீ குறும்புத்தனம் செய்யாதபடி “அது சும்மா விரட்டாது…” என்றார்.

எனக்கு அப்பொழுது குருநாதர் முழு சக்தியும் (POWER) கொடுத்திருக்கிறார். என்ன பவர் கொடுத்திருக்கிறார்…?

நாய்க்கு இந்த நிலையைச் செய்தாய் என்றால் கால் முடமாகும். அது வாய் நின்று போகும். அப்படியெல்லாம் செய்யலாம்…! என்று சக்தி கொடுத்திருக்கிறார்.

இதைச் சொல்லிக் கொடுத்தாலும் அடுத்து இன்னொன்று என்ன சொல்கிறார்…?
1.நீ இந்த மாதிரிச் செய்தால்
2.அந்த நாயின் நினைவெல்லாம் உன் மீது தான் இருக்கும்.

நாய்களுக்கு மோப்பச் சக்தி ஜாஸ்தி.

அது உன்னை நினைத்தது என்றால் அது உடலில் உருவாகின்ற அணுக்களெல்லாம் உன் உடலில் உருவாகும். நாயின் வாயை நீ அடக்கின மாதிரி கடைசியில் “உன் வாயும் அப்படியாகிவிடும்…” என்று சொல்கிறார்.

சக்தியை எப்படி உபயோகப்படுத்த வேண்டும்…? என்று சொல்லிக் கொடுத்துவிட்டு அதைச் செய்தால் இப்படி ஆகிவிடுவாய்…! என்று இதையும் சொல்கிறார்.

நாயின் வாயை நீ அடக்கினாய் என்றால் அது எச்சில் ஒழுகும். அதில் இருந்து காற்றில் பரவும். அது உன்னையே நினைக்கும். மோப்பச் சக்தி ஜாஸ்தி. அதனின் விளைவு என்ன செய்யும் என்றால் இப்படித் தான் வரும்.

1.வாயை அடக்கும் சக்தி கொண்டு நீ இதைச் செய்தாய் என்றால்
2.உன் வாயும் சீக்கிரத்தில் இது ஒடுங்கிப் போகும் என்கிறார் குருநாதர்.

அப்புறம்… எதற்காக சாமி இதைக் கொடுத்தீர்கள்…? என்று நான் கேட்டேன்.

அப்பொழுது நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்கிறாய். பின்னால் என்ன ஆகப் போகிறது…? நீ அதுவாகிறாய்.

அந்த மாதிரி இருந்தாலும் இந்தத் தீமையை விளைவிக்காது அது எப்படிச் செய்வது…? என்ற இந்த மாற்று முறைகளை பவர் கொடுத்தாலும் இதைச் சொல்கிகிறார்.

அப்புறம் தான் அதற்கு என்னென்ன நீ செய்ய வேண்டும்…? நாய்கள் அதிகமாக விரட்டிக் கொண்டு வருகிறது என்று சொன்னால் உன் உணர்வுகளை எப்படிப் பாய்ச்ச வேண்டும்…? என்று உணர்த்திக் காட்டுகின்றார்.

நாயை அடித்துக் கொன்றாய் என்றால் அந்த உயிர் உன்னிடம் வருகிறது, அது மனிதனாகப் பிறக்கின்றது.

ஆனால் நாய்களின் கால்களையோ வாயையோ கட்டி “இம்சை கொடுத்தாய்…” என்றால் என்ன ஆகும்…?

நாய் கடுமையாக வேதனைப்படும். அது சுவாசித்த உணர்வுகள் உடலுக்குள் விஷமான அணுக்களாக விளையும்.
1.விளைந்த அந்த அணுக்களின் தன்மை உனக்குள் வந்து
2.கடுமையான துன்பங்களை விளைவிக்கத்தான் செய்யும்.

இப்படிச் சொல்கிறார் குருநாதர்.

எந்த உயிரையும் இம்சித்தால் அதனின் உணர்வின் நினைவாற்றல் அதிகமாக இருக்கும். ஏனென்றால் மற்ற உயிர் இனங்களுக்கு நுகரும் ஆற்றலும் தன்னுடைய கூர்மை எண்ணங்களும் அதிகமாக இருக்கிறது.

ஏனென்றால் அந்த உணர்வின் வலிமை அப்படி வரும். அது தான் மூஷிகவாகனா. நீ சுவாசித்த உணர்வுகள் கொண்டு செயலாக்கினாலும் நாயை இம்சிக்கும் உணர்வுகள் கணங்களுக்கு அதிபதியாகி விட்டால் என்ன செய்யும்…?

அந்த உணர்வுகள் உனக்குள் வந்துவிடும்.

அது சிறுகச் சிறுக விளைந்து அந்த மிருகத்தின் நிலையே உனக்கும் வரும். இது அதிகரித்து விட்டால் இந்த மிருகத்தின் நிலைக்கே உன்னை அழைத்துச் செல்லும்.

மிருகமாகத்தான் பிறப்பாய்…! என்கிறார். இதெல்லாம் தெளிவாகக் கொடுக்கிறார் குருநாதர்.

நாஸ்டர்டாமஸ் வெளிப்படுத்தியுள்ள குறிப்புகளில் தென்னாட்டைப் பற்றிய சாராம்சம்

 

சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சு நாட்டைச் செர்ந்த தத்துவ ஞானியான நாஸ்டர்டாமஸ் இந்தப் பூமியில் நடக்கப் போகும் சில மாற்றங்களை அன்றே குறிப்பிட்டிருந்தார்.
1.காரணம்… மெய் வழியைக் காணும் ஒரு ஆன்மா அவரிடத்தில் சென்று
2.அவருக்குள் இருந்து வெளிப்படுத்திய நிலைகள் தான் அது.

நம் பூமியின் இயக்கங்களையும் அதனின் உணர்வின் அலைகள் எங்கே மோதுகின்றது… எங்கே இணைகிறது…? ஒவ்வொரு நாட்டின் இயக்கங்கள் எப்படி ஆகின்றது…? உலக மாற்றம் எப்படி ஆகின்றது…? மதத்தின் தன்மைகள் எப்படி உருவாகின்றது…? என்ற நிலையைத் தெளிவாகக் கூறியுள்ளார்.

அவர் எல்லாவற்றையும் கூறியிருந்தாலும் இங்கே படித்த வர்க்கங்கள் அதை எடுத்து வைத்துக் கொண்டாலும் அதை மீட்டி உண்மையின் உணர்வை உணர்வதற்கில்லை. விஞ்ஞான அறிவில் தான் எண்ணத்தைச் செலுத்துகின்றார்கள்.

பிற்காலத்தில் விஞ்ஞான அறிவுகள் வளரப்படும்போது…
1.அதனால் இன்னென்ன நாடுகள் அழியும்…
2.இன்னென்ன மதங்கள் அழியும்…
3.இன்னென்ன இனங்கள் அழியும்… என்று நாஸ்டர்டாமஸ் அன்றே சொல்லியிருக்கின்றார்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தென்னாட்டிலே அன்று தோன்றிய அகஸ்தியன் தான் பெற்ற மெய் உணர்வின் நிலைகளை எந்நாட்டவர்க்கும் பெறும்படியாகப் பரப்பிச் சென்றுள்ளார்.

“தன்னை அறிதல்” என்ற நிலைகள் கொண்டு உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது அதனுடைய செயலாக்கம் எப்படி உயர்கிறது…? என்று நிலைகளையும் அகஸ்தியன் தெளிவாக்கிக் காட்டியுள்ளார்.

அவர் வெளிப்படுத்திய உணர்வுகள் தான் உலகம் முழுவதற்கும் பரவியது. ஒளியின் சுடராகத் துருவ நட்சத்திரமாக அகஸ்தியர் இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்.

ஆக… பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அவருக்குள் விளைந்த உணர்வுகளை யாரெல்லாம் உண்மையின் உணர்வுகளை அறிய வேண்டும் என்று எண்ணி ஏங்குகிறார்களோ அவர்களுக்குள் அது ஈர்க்கப்பட்டு உணர்வின் அறிவாக மனிதனை வாழச் செய்கின்றது.

உலகத்தின் தன்மையில் விஷத் தன்மைகள் படர்ந்தாலும் தென்னாட்டில் தான் அதை மீட்டிடும் வளர்ச்சியின் தன்மை இருக்கின்றது என்று நாஸ்டர்டாமஸ் வெளியிட்ட குறிப்புகளில் உணர்த்திச் சென்றுள்ளார்.

துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றிச் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார்கள் என்ற நிலையையும் நாஸ்டர்டாமஸ் தெளிவாகக் கொடுத்துள்ளார். ஆனால் இந்த அறிவின் தன்மையை உணர்வதற்குக் கல்வி அறிவால் முடியாது.

ஆகவே
1.அத்தகைய அருள் ஞானி தென்னாட்டிலே தான் தோன்றுகின்றான்.
2.தீமைகளில் இருந்து மீட்டுவதற்கு உலகைக் காக்கும் சித்தனாக வருகின்றான்.

நஞ்சு கொண்ட நிலைகள் இன்று வளர்ந்தாலும் அது அழிந்தே தீரும். தவறான நிலைகள் செய்து கொண்டு இந்த உடலிலே இருப்பினும் கற்றுணர்ந்த உணர்வுகள் ஒரு நாள் அழித்தே தீரும்.

அதே சமயத்தில் அருள் ஒளி என்ற உணர்வின் தன்மை தனக்குள் வரும்போது தீமை என்ற நிலைகளை நீக்கியே தீரும். தீமையற்ற உணர்வாக உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாறத்தான் செய்யும்.

ஆனால் தீமையின் உணர்வுகள் வரும் பொழுது ஒளி பெறும் உணர்வுகளை அழிக்கும்… நல்ல அணுக்களை அழித்தே தீரும்.
1.பின் அசுர உணர்வுகள் கொண்டு தீமையின் நிலைகளே உருபெறும் என்ற நிலைகளை
2.பல பல குறிப்புகளாக அன்றைய பாஷையிலே நாஸ்டர்டாமஸ் எழுதி இருந்தாலும்
3.அதனுடைய விளக்க உரைகளக் கொண்டு வருவதற்குச் சில காலம் ஆகும்.

எது எப்படி இருந்தாலும்… தென்னாட்டிலே வாழ்ந்த அகஸ்தியனின் கரு உணர்வுகள் இங்கே வீரியம் பெறுகின்றது. கருவிலே வளரும் சிசுக்களுக்கு உயர்வு பெறுகிறது.

அந்த உணர்வின் ஞானம் நிச்சயம் வெளிப்படும்…!.

பிரளய கால மாற்றத்திற்குப் பின் மனித உரு இருக்குமா…? – ஈஸ்வரபட்டர்

 

இன்றைய மனிதக் கரு ஜீவ சக்திகளும்… இப்பூமியில் பிறப்பெடுத்து உடலற்ற ஆத்ம உயிர்களும்…
1.இன்றுள்ள விஷ நிலையான எண்ண வளர்ச்சித் தொடர்பலையினால்
2.இன்றைய அறிவு… ஞான செயல்… திறமை… உருவ அழகு… இவற்றின் நிலை யாவையுமே
3.இனி நிகழப் போகும் பிரளய காலத்திற்குப் பிறகு மாறப் போகின்றன.

மனித உணர்வின் எண்ணமே விஞ்ஞான அணுக் கதிரியக்கச் செயற்கைப் பூகம்ப நிலையாலும்.. லேசர் இயக்கச் செயலுக்காக சூரிய அலையில் பூமிக்கு எவ்வலையை பூமி சமைத்து வடிகட்டிப் பூமி வளர்ந்து வாழுகின்றதோ சூரிய சக்தியிலிருந்து அதைப் பிரித்ததாலும் பல பல மாற்றங்கள் ஆகிவிட்டது.

(அந்த அமில வண்ணம் (ULTRA VIOLET) பிரகாசமான VIOLET கலர் காட்சியாகத் தெரிகிறது)

இப்படி அந்த அணுக் கதிர்களை விஞ்ஞானச் செயலுக்காகச் சில நாடுகள்…
1.பூமி எதைத் தன் ஈர்ப்பிற்கு எடுக்காமல் பூமியின் சுழற்சியில் வடிகட்டி (FILTER செய்து) தன் வளர்ப்பை வளர்த்துக் கொண்டுள்ளதோ
2.அதையே மனித விஞ்ஞானம் தனித்துப் பிரித்து எடுத்து விட்டது…
3.அதனால் பூமியில் விஷம் கொண்ட காற்றாக இன்று மாறி விட்டது.

ஆத்ம ஜீவ வாழ்க்கை சக்தியின் உன்னத ஞான வாழ்க்கையை உணர்ந்து வாழாமல்… செயற்கை வாழ்க்கை விஞ்ஞானச் செயலுக்காக… மனிதனின் தன் நிலை மறந்த “போதை” உணர்வு வலு நிலைக்கு உணவு நிலையாக… விஞ்ஞான அணுக் கதிர்களை உபயோகிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டனர்.

நிகரில்லா நிலை பெற்ற.. நித்தியமான நிலையில் வளரும் மனித ஞான வளர்ச்சியையே குரோத வஞ்சனை வெறி தேச மத உணர்வு நிலையில் ஒருவரை ஒருவர் அழிக்க வந்து விட்டனர்.

தன்னுடைய பேராசையாலும் குரோதத்தாலும் விஞ்ஞான வளர்ச்சியைக் கொண்டு இவ் அணு சக்தியை சூரியனிலிருந்து பிரித்தெடுத்து
1.அழிவுச் சக்திக்காகப் பயன்படுத்துகின்றோம்…! என்ற உண்மையை மறைத்து
2.திரை போட்டு ஆக்கச் சக்தியென்ற வழியைச் சொல்லி
3.மனித விஞ்ஞானம் இன்று வளர்ந்துள்ளது.

அதனால் இன்றைய மனித உணர்வின் எண்ணச் சிதறல்களும் தன்னைத் தான் உணராத நிலையும் ஏற்பட்டு விட்டது.

இத்தகைய தருணத்தில் தனக்குள் உள்ள இறை நிலையை உணர்ந்து… தான் உடல் பெற்று… உணர்வு பெற்று… சுவையும் குணமும் பெற்று… சரீர ஞானச் செயல் கொண்ட மனித வாழ்க்கை உன்னதச் செயலில் இருந்து உயர்வு நிலை கொள்ளும் வழித் தொடரை ஒவ்வொரு ஜீவ ஆத்மாவும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஊசி முனைக்கு மேல் உருவத்தில் ஆயிரம் மடங்கு சிறிதாயுள்ள உயிராத்மா உருவக சரீர ஜெட ஜீவச் செயல் பெற்றுச் செயல் புரியும் உயிராத்மாவை நல்லுணர்வின் ஞான ஜெபத்தால் வளர்த்திட வேண்டும்.

இச்சரீர அணு அனைத்தையுமே உயர் ஞான உணர்வு எண்ணம் கொண்டு செயல்பட்டு ஜோதி நிலையான ஒளி நிலைக்கு ஆத்ம உயிரின் வலுவைக் கூட்ட வேண்டும்.

தெய்வம் என்பது நம் உயிரே நமக்குத் தெய்வம் தான் என்று உணர வேண்டும். ஆகவே… நமக்குள் உள்ள தெய்வ உயிரைப் பிறிதொரு ஈர்ப்புப் பிடியில் தன் உணர்வற்ற இன்பம் என்ற உணரும் சுவை ஈர்ப்பில் சிக்க விடக் கூடாது.

போதை… காமம்… அதி விரைவு… வெறியான சுவை உணவின் இச்சை… போன்ற இவ் இன்ப உணர்வின் தொடர்பிலெல்லாம் எண்ணத்தின் வலுவைச் செலுத்தாமல்
1.தன்னுள் உள்ள இறை உயிர் ஆத்மாவை வலுவாக்கிக் கொள்ள
2.உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையுமே
3.உயர்வு ஞான நற் குண ஜெப நிலையினாலும்
4.சம நிலைகொண்ட சாந்த உணர்வு வலுத் தொடரினாலும் உயர்த்திட வேண்டும்.

ஏனென்றால்… இன்றுள்ள தன்மை பிரளய மாற்றத்திற்குப் பிறகு பூமியின் மாற்றுச் சக்தியால் பூமி வளர்த்த அணு யாவையும் எப்படி நெற் செடியில் அதற்குகந்த ஆகார நிலை கிடைக்கவில்லை என்றால் “பதர் அரிசி மணி” வளர்கின்றதோ அதைப் போன்று மனித ஆத்ம உயிர்கள் ஜீவ உயிர்கள் யாவையுமே பிறப்புப் பெற்றாலும் சரீரம் எண்ணம் செயல் ஒலி ஒளி ஆகிய எவையுமே இன்றுள்ள நிலை பெற முடியாது…!

தனக்குகந்த ஆகார சக்தி கிடைக்கா விட்டால் காய்கறி கனிகளில் கரடு நிலை தட்டிய காய் கனிகள் வளருவதைப் போன்று தான் வரும்.
1.சில பிராணிகள் ஜீவ சக்தி பெற்றிருந்தாலும் “தேவாங்கு” போன்று
2.அமர்ந்தது அமர்ந்த நிலையிலேயே பிறப்பெடுத்து வாழ்ந்து மடிகின்றதோ
3.அதைப் போன்ற பிறப்பு நிலைதான் பிரளய நிலைக்குப் பின் வரும்.

பிறப்பு நிலை இன்றைய நிலை போல் மீண்டும் வளராது…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

குருநாதர் என்னைக் காட்டுக்குள் அழைத்துச் சென்று யானையிடமும் புலியிடமும் பாம்பிடமும் இருந்து தப்பிக்கப் பல அனுபவங்களைப் பெறச் செய்தார்.

அதே போல் எறும்புப் புற்றிலும் கரையான் புற்றிலும் அமரச் செய்து அதனின் இயக்கங்களையும் அனுபவபூர்வமாகக் காணச் செய்தார்.

காட்டிற்குள் செல்லும்போது மிருகம் தாக்கும் என்றால் மிருகங்களுடைய செயலாக்கங்களை உணர்த்தி அதிலிந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்ற உணர்வைக் குருநாதர் கொடுத்தார்.

குருநாதருடைய பரிபாஷையில் “இந்த இந்த நிலையிலே நீ இப்படி எடு…” என்பார்.
1.அவர் சொன்ன முறைப்படிக் கண்ணுற்றுப் பார்த்தோம் என்றால்
2.மிருகங்கள் அமைதியாக இருக்கும்… ஒன்றும் செய்யாது.
3.பக்கத்திலேயே அதுபாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கும்.
4.நம்மைப் பார்க்காது…!

திருப்பதி மலையின் மேலே நாரதர் மன்றம் என்று இருக்கின்றது. அதை விட்டுக் கொஞ்சம் தள்ளிப் போனால் ஒரு காடு. அந்தக் காட்டுக்குள் போகச் சொன்னார் குருநாதர்.

அங்கே நான் போய் உட்கார்ந்த உடனே நடுநிசியில் கரடிகள் வருகிறது.

ஊ…ம் ஊ..ம் ஊ…ம் என்று ஊறுமிக் கொண்டு வருகிறது.

கொஞ்சம் ஏமாந்தோம் என்றால் அவ்வளவு தான் ஆளைக் கொன்றுவிடும். கரடி மாமிசப் பட்சினி தான். தாவர இனத்தையும் சாப்பிடுகிறது. உயிரினங்களையும் உட்கொள்ளுகிறது.

அது வந்தது என்றால் “லபக்..” என்று பிடித்து இரத்தத்தை உறிஞ்சி விடும். போட்டுத் தாக்கிடும். மண்டையைப் பிளந்து மூளையை எடுத்துச் சாப்பிடும்.

பாக்கி தசைகளை எடுக்காமல் மூளையை எடுத்துச் சாப்பிடும்.
இரத்தத்தைக் குடிக்கும். அதை எல்லாம் எமக்குக் குருநாதர் சொல்லியிருக்கின்றார்.

அங்கே உட்கார்ந்திருக்கும் பொழுது 7, 8 கரடி வருகிறது. நான் எப்படித் தப்பிப்பது…?

அப்பொழுது குருநாதர் சொன்ன உணர்வு அந்த “மேக்னட்டார்”. அதாவது எதிர் நிலையான உணர்வுகள் வருகிறது என்றால் உடனே அதைக் கவர்ந்து நமக்கு உணர்த்தி அதிலிருந்து ரிமோட் (நம்மைத் தப்பச்) செய்யும்.

குருநாதருடைய துணை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் பாய்ச்சியவுடன் கரடிகள் அமைதியாகப் போகிறது. என்னை ஒன்றும் செய்யவில்லை. அதுவாக விலகிச் செல்கின்றது.

குருநாதர் எனக்குச் சொல்லிக் கொடுத்த நிலையில் யானைக் கூட்டத்திற்குள்ளும் புலி இருக்கும் இடத்திலேயும் ஒவ்வொரு அனுபவத்தைக் கொடுத்தார்.

எறும்புக் கூட்டுக்கு மேல் உட்கார வைத்தும் அனுபவத்தைக் கொடுத்தார். எறும்புக் கூட்டத்திற்குள் இருந்தால் என்னாகும்…?

முதலில் ஒரு எறும்பு என்னை கடித்தது. அதை நசுக்கினேன். அப்பொழுது என்ன ஆனது…?

நான் உட்கார்ந்த உடனே எறும்பு வந்து “மொய்…” என்று என்னை மொய்க்கிறது.
1.ஒரு எறும்பு செத்தது.
2.அடுத்து எல்லா எறும்புகளும் என்னைக் கடி…கடி… என்று கடிக்கிறது.
3.ஒரு நொடிக்குள் அந்தச் செய்தி எல்லா எறும்புகளுக்கும் எப்படிப் போகிறது…?
4.அந்த உணர்வு பரிபாஷையில் உணர்வின் எண்ணங்கள் ஒன்றுக்கொன்று எப்படித் தொடர்பு கொள்கிறது…? என்பதை உணர்த்திக் காட்டுகின்றார்.

எறும்புக்குள் இருக்கக்கூடிய ஒற்றுமையை நீங்கள் பாருங்கள்.

ஒரு இடத்தில் பொருள் இருந்தால் அந்த எறும்புகள் ஒன்றுக்கொன்று சந்தித்தவுடனே அந்தப் பொருளைப் பார்த்த உணர்வுகளைத் தன் “மீசையிலேயே” காட்டுகிறது.

டி.வி. ரேடியோவில் வைத்திருக்கும் ஆன்டென்னா… ஏரியல்… அந்த மேக்னட் வயர் என்ன செய்கிறது…? அந்தந்தத் திசையிலிருந்து வருவதை ஈர்க்கின்றது. அதன் வழி ஈர்த்துக் கேட்கின்றோம்.

சாதாரணமாக எறும்பு தானே என்று நாம் பார்க்கின்றோம்.
1.நீளமான ஏரியல் மாதிரி அந்த எறும்பு தன் மீசைகளை ஆட்டிக் கொண்டே இருக்கும்.
2.அது எந்தப் பக்கம் போகின்றதோ அந்த உணர்வை ஈர்த்து அங்கே நடக்கிறதைச் சொல்கிறது.
3.எடுத்து அந்த திசையைக் கொடுக்கின்றது.
4.எறும்புகள் எல்லாம் அங்கே போகிறது.

இன்று விஞ்ஞானிகள் என்ன செய்கிறார்கள்…?

ஒரு ரேடியோ வைத்து (TRANSISTOR) என்னென்ன அலைகள் எங்கெங்கே போகிறது என்று தெரிந்து கொள்வதற்காக மிருகங்கள் கழுத்தில் அதைக் கட்டி விட்டு விடுகின்றார்கள். அது காட்டுக்குள்ளே போகிறது.

அந்த மிருகம் என்னென்ன திசையில் சென்று மேய்ந்து கொண்டிருக்கின்றது…? அது மேயும் போது என்னென்ன அதிசயத்தைப் பார்க்கின்றது…? தன் எதிரிகளிடமிருந்து எப்படித் தப்பிக்கின்றது…? அதனுடைய குணங்கள் எப்படி இருக்கிறது…? என்று விஞ்ஞானி அறிகின்றான்.

ஒரு மிருகத்தைப் பிடித்துப் பக்குவப்படுத்தி அந்த உடலில் வரும் எதிர் நிலைகளை அறிவதற்காக வேண்டி கழுத்திலேயும் போட்டு அதன் உடலுக்குள்ளும் பதிவு செய்துவிடுகிறார்கள்.

உடம்புக்குள் பதிவு செய்து கழுத்தில் வார் (BAND) மாதிரி மாட்டி அதனின் எக்கோ (ECHO) வருவதை அறிவதற்காக ஏரியல் போலக் கட்டி விடுகிறார்கள்.

ஏரியல் போலக் கட்டி விட்டவுடனே… எதிரியிடமிருந்து எப்படி இந்த மிருகம் தப்புகின்றது. இதனுடைய குணங்கள் என்ன…? எதிரியின் உணர்வுகள் எப்படி ஆகின்றது…? இது எந்த நிலைகள் என்று விஞ்ஞானி கண்டறிகின்றான்.

காட்டுக்குள்ளே மிருகங்கள் என்னென்ன செய்கிறது என்று “டிவி…க்களில்” இன்று படங்களாகப் பார்க்கிறோம் அல்லவா.

காட்டிற்குள் என்னென்ன நடக்கின்றது என்று அறிவதற்காக அந்தந்த மிருகங்களுக்கு இப்படி மாட்டி விடுகிறார்கள். அது பாட்டுக்குக் காட்டுக்குள்ளே விளையாடுகிறது.

அப்பொழுது அது அது எங்கெங்கு என்ன நடக்கின்றது…? என்பதைப் பார்த்து அதனுடைய செய்திகளை எல்லாம் தெரிந்து கொள்கிறார்கள்.

ஒரு எலியாக இருந்தாலும் தன் எதிரியிடமிருந்து அது எப்படி தப்புகின்றது…? அதனுடைய குணங்கள் என்ன…? எந்த மணத்தை நுகர்கிறது…? எதனால் அது மாறுகிறது…? என்ற வகைகளில் விஞ்ஞானி இதைச் செய்கிறான்.

இதே மாதிரித் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்
1.அவர் பாய்ச்சிய உணர்வின் தன்மை கொண்டு நான் செல்லப்படும் போது
2.ஒவ்வொரு மிருகங்களுடைய உணர்வுகளும்
3.அதனுடைய தொடர்வரிசை எப்படி இருக்கிறது…? என்று சொல்லி என்னை அறிய வைத்தார்….
4.நான் அறிந்து கொண்டேன்… நீங்களும் அதை அறிய முடியும்.

மனிதன் மிருகத்தினுடைய நிலைகளை அறிந்தாலும் பிறிதொரு மனித உடலில் விளையக்கூடிய தீமையின் விளைவுகளை நமக்குள் வராதபடி ரிமோட் செய்யக் கூடிய சக்தி வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நாம் எடுக்கும் போது
1.தீமைகளை நமக்குள் வராதபடி தடுத்து நம்மைப் பாதுகாக்க முடியும்.
2.நமக்கு அமைதியும் பாதுகாப்பும் கிடைக்கும்.

தீமைகளை வென்று நஞ்சினை ஒளியாக மாற்றிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத்தான் குருநாதர் எம்மைப் பெறச் செய்தார். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத்தான் உங்களையும் பெறச் செய்கின்றோம்.

மனதைச் சமப்படுத்துங்கள்…!

 

ஒரு சமயம் ஒருவர் தவறு செய்தார் என்றால் அந்தத் தவறின் நிலையை நாம் சுட்டிக்காட்ட நேர்கின்றது. ஆனால்
1.சுட்டிக்காட்டும் நிலை தவறினால் வெறுப்பின் உணர்வையே ஊட்டுகின்றது.
2.வெறுப்பின் நிலை வளர்த்து விட்டால் ஏற்றுக் கொள்ளும் பண்பே வராது.

இதைப்போன்ற நிலைகளிலிருந்து நாம்
1.எதனை…
2.எவ்வாறு…
3.எதன் வழியில் உருவாக்குதல் வேண்டும்…? என்ற நிலைகளை அறிந்துணர வேண்டும்.

அதை நாம் பக்குவப்படுத்தும் நிலைகளுக்குச் சமப்படுத்தல் வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் மனதைச் சமப்படுத்தினால்… “பக்குவப்படுத்தும் பண்பு” வருகின்றது.

பக்குவப்படுத்தும் பண்பு வர வேண்டும் என்றால் “அருள் ஞானத்தின் உணர்வை” அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் விளைவிக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் உணர்வுகளை விளைய வைத்துக் கொண்டால் நம் வாழ்க்கையில் வரும் தீமையான உணர்வுகளையும் நஞ்சான உணர்வுகளையும் கார உணர்ச்சிகளையும் “அடக்கும் தன்மை” வருகின்றது.

தீமைகளை அடக்கும் தன்மை வந்தால் “சிந்திக்கும் தன்மை” வருகின்றது.

சிந்திக்கும் தன்மை வந்தால் நம் செயல்கள் அனைத்தும் “சீராக அமைய” இது உதவும்.

இந்த மனித வாழ்க்கையில் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று அதை நமக்குள் அணுக்களாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

அருள் ஒளியினை வளர்த்துப் “பேரின்பப் பெருவாழ்வு” என்ற நிலையை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.

நாம் உலகில் யார் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்கள் அனைவரும்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்
2.அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்.
3.அவர்கள் குடும்பத்தில் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.
4.தெளிந்த மனம் அவர்கள் பெற வேண்டும்.
5.மகரிஷிகள் அருள் வட்டத்தில் அவர்கள் வாழ வேண்டும்.
6.அருள் ஞானம் அவர்களுக்குள் பெருக வேண்டும்.
7.இருளை நீக்கிடும் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும்.
8.நஞ்சினை வென்றிடும் அருள் ஞானம் அவர்கள் பெற வேண்டும்.
9.அருள் வாழ்க்கை வாழும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நாம் சந்தித்தோர் பார்த்தோர்… நாம் தொழிலின் நிமித்தம் சந்தித்தோர்… தொழிலின் நிமித்தம் இணைந்து வாழ்ந்தோர்… “இவர்கள் அனைவரையும்” நாம் இவ்வாறு நாம் எண்ணினோம் என்றால்
1.நமக்குள் பகைமை என்ற உணர்வை மாற்றி
2.அருள் ஞானத்தின் உணர்வை வளர்க்கச் செய்கின்றது.

உலக மாற்றத்தின் அறிகுறிகள் – ஈஸ்வரபட்டர்

 

ஆவியாகி அமிலமாகித் திடம் கொண்டு உருவாகும் உருவக சக்தி அனைத்திற்குமே “ஒளி நிலை கொண்ட ஈர்ப்பு சக்தி நிலை” செயல் கொண்டால் தான் திட பிம்ப வளர்ச்சி வருகின்றது.

அண்டசராசரத்தில் உள்ள அனைத்து வளர்ச்சியிலும்..
1.திடச் செயல்களில் நிலைத்திருப்பது எவையுமே இல்லை.
2.மாறிக் கொண்டே சுழலுகின்ற சுழற்சி ஓட்ட வஸ்துவாய்த்தான் வளருகின்றது… மாறுகின்றது… ஒவ்வொரு திடச் செயலுமே.

திடச் செயல் கொள்ள ஒளி நிலை கொண்ட ஜோதி நிலை வளர்ந்தால்தான் வளர்ச்சி நிலை கொள்கின்றது.

அண்டத்தின் அமிலச் சுழற்சி சுழலுகின்ற வழித் தொடரில்… அதனதன் அமிலச் சேர்க்கையின் திட நிலையில்… ஒளி நிலை ஈர்ப்பு கொண்டவுடன்… செயல் நிலை சேர்க்கையின் அமில நிலைக்கொப்ப வழி பெறுகின்றது.

உயர்வு எது…? தாழ்வு எது…? நன்மை எது…? தீமை எது…? என்ற பாகுபாடின்றி அண்டசராசரக் கோளங்கள் வளர்ச்சி நிலை கொள்ளவில்லை.

அதனதன் ஈர்ப்பின் சுழற்சி வலு நிலை வளர்ந்து ஓடினாலும்…
1.இன்றைய விஞ்ஞானத்திற்கு எட்டாத உயர்வு ஞானத்தால்
2.ரிஷி சக்திகளின் கூட்டுக் குடும்பச் செயலாய்த்தான்
3.ரிஷிகளின் ஒளி சக்தி வலுவைக் கொண்டு மண்டலக் கோளங்கள் குடும்பம் குடும்பமாகச் சுழன்று கொண்டுள்ளன.

இக்குறிப்பைக் கொண்டு விஞ்ஞானிகள் குறிப்பெடுக்கட்டும்…!

நம் சூரியன்… சூரியனின் சுழற்சி ஓட்டக் குடும்பமாக நாற்பத்தி ஏழு… சூரியனைச் சேர்த்து நாற்பத்தி எட்டாகக் கோளங்களின் அங்கங்கள் கொண்டு சனி வளர்க்கும் பன்னிரண்டு கோளங்களுடன் அறுபது கோளங்கள் சூரிய குடும்பச் சுழற்சியில் சுழன்று கொண்டே வருகின்றது.

மனிதனுக்கு… ஆத்மா இயக்க உடலும்… உடலின் அங்க அவயங்களும்… இவ் அங்க அவயவத்தில் சேர்க்கவல்ல அமிலத்திலேயே சதையாயும் நகமாயும் ரோமமாகவும் பல்லாகவும் பல மாறு கொண்ட வளர்ச்சி உண்டு.

அவைகளின் கூட்டு அமில உலோக ஈர்ப்புத் தொடர்பில்… இச்சரீர அங்கத்தின் உருவ நிலையில் எலும்பும் மண்டை ஓடுகளும் வலுக் கொண்ட இரச சக்தியின் வளர்ச்சி கொண்டு
1.ஓர் சரீரத்தில் பல நிலை கொண்டு
2.இயக்க ஓட்ட மனிதச் செயல் நடக்கின்றதோ
3.அதைப் போன்று தான் தனித்த சூரியனுக்குச் சக்தி இல்லை.

சூரிய ஆத்மாவின் உருவ… திட… பிம்பக் கோளம் சூரியக் கோளமென்றால் சூரியன் அங்க அவயங்கள்தான் பூமியும் சந்திரனும் வியாழன் செவ்வாய் எல்லாமே. ஒவ்வொரு கோளமும் சூரியனுக்கு அங்கமாகச் சுழலுகின்றது.

நம் சூரியக் குடும்பம் மட்டுமல்ல… இரண்டாயிரம் குடும்பச் சுழற்சி ஓட்டங்கள் சுழலுகின்றன இவ்வண்ட வெளியில்…!

அவையும் அல்லாமல் உருவாகி உருவாகி மாறுகின்ற நட்சத்திரக் கோளங்கள் எண்ணிலடங்கா வளர் நிலையில் வளர்ந்தோடுகின்றன.

ஒன்றின் தொடர்புடன் ஒன்று சுழலும் இவ்வண்டக் கோளத்தில் இரண்டாயிரம் குடும்ப நிலையில்… சூரியக் குடும்பத்தின் அறுபது கோளங்களில் வளர்ந்த மிகப் பெரிய கோளம் ஒன்று பிரிந்து… கரைந்து… மாறு கொண்டு… தன் வளர்ச்சி நிலை செயலற்றுச் சுழற்சி ஈர்ப்புப் பிடியிலிருந்து நழுவி விட்டது.

நாற்பத்தி எட்டு கோளத்தில் ஒன்று கரைந்ததனால் நாற்பத்தி ஏழாய் இச்சூரியக் குடும்பம் சுழல்வதோடு அல்லாமல் சனி வளர்க்கும் பன்னிரண்டு கோளங்களில் தனித்து இயங்கும் திடமாகக் கூடிய வலுக் கோளமாய் இரண்டு கோளங்கள் ஒன்று படப்போகின்றன.

சனி வளர்க்கும் பன்னிரண்டு கோளம் என்பது பூமியை ஒத்த திடக்கோளமல்ல…! ஒவ்வொரு பருவக் காலத்திலும் பல நூறு மைல் அகல அளவிலும் அதே சுற்றுக் கன அளவிலும் பாதரசமணி எப்படி உள்ளதோ அதைப் போன்று திடமும் அல்ல… நீரும் அல்ல… வெண்மையும் கருமையும் கொண்ட வெள்ளியின் வண்ண நிலைக்கொப்ப அமில உலோகக் கோளமாய்த்தான் வளர… கரைய… பருவ கால நிலைக்கொப்பச் செயல் கொள்ளும்.
1.இக்கோளத்தின் பல மாற்று நிலைகள்
2.இனி வரப்போகும் “பிரளய காலத்தில்” செயல் கொள்ளப் போகின்றன.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இன்று உலகெங்கிலும் விஞ்ஞான அறிவு கொண்டு டி.வி..க்களில் ஒலி ஒளி பரப்பச் செய்யப்படும் பொழுது அந்த ஒலி ஒளி அலைகளை அதே அலைவரிசையில் வைக்கப்படும் பொழுது அங்கே நடக்கும் காட்சிகளைக் காணுகின்றோம்.

ஒரு பக்கம் நடக்கும் நிகழ்ச்சிகளை அங்கே படமாக்கிப் பதிவாக்குகின்றார்கள். அதை அலை வரிசைகளாக அலைகளாக மாற்றுகின்றார்கள்.

இருக்கும் இடத்திலேயே அந்த உணர்வின் தன்மையை ஒலியைப் பதிவாக்குகின்றார்கள். அந்த உணர்வலைகளை உலகம் முழுவதும் எல்லோருக்கும் பரப்பச் செய்கின்றார்கள்.

உலகம் முழுவதும் பரவச் செய்யும் பொழுது இதன் அலைவரிசையில் இங்கே ஒலிபரப்பு செய்யப்படும் பொழுது அதே அலை வரிசையில் மற்றவர்கள் அவர்கள் இருப்பிடத்திலிருந்தே உற்றுப் பார்க்கும் நிலை வருகின்றது.

இன்றும் பார்க்கலாம். நண்பர்களுக்குள் பதிவாக்கிவிட்டால் நண்பனை எண்ணி அவனை நினைவு கொள்ளும் பொழுது அவனின் உருவ நிலை உங்கள் முன் நிற்பதைக் காணலாம்.

ஆக… இதைப் போல மனித உடலுக்குள் ஒன்றைப் பதிவாக்கி விட்டால் அவனின்று வெளிப்படும் உணர்வின் அலைகள் இங்கே பதிவாகின்றது… அலைகளாக மாறுகின்றது.

பதிவான உணர்வினை நினைவு கொள்ளும் பொழுது குவித்து அந்த உணர்வின் தன்மைகளை அறிகின்றோம். அவனிடம் எந்த உணர்வுடன் உறவாடினோமோ அந்த உணர்வின் தன்மை நமக்குள் நுகரப்படும் பொழுது உணர்ச்சியின் தன்மையால் உடலை இயக்குகின்றது.

1.பண்புடன் எனக்கு உதவி செய்தான் உபகாரம் செய்தான் என்ற உணர்வை நுகரும் பொழுது
2.நமக்குள் மகிழ்ச்சியான உணர்வுகளைத் தோற்றுவிக்கின்றது.
3.அப்பொழுது நண்பனின் நினைவாற்றல் நமக்குள் மகிழச் செய்யும் நிலைகளாக வருகின்றது.

ஆனால், பண்புடன் வாழ்ந்து பகைமை உணர்வை எடுத்துத் அவனால் தீமைகள் விளைந்தது என்ற உணர்வுகளை இருவரும் பதிவாக்கிக் கொண்டால் என்ன நடக்கின்றது…?

இங்கே தன் வாழ்க்கையில் “சிரமம்…” என்ற உணர்வுகள் உந்தப்படும் பொழுது
1.“எனக்குத் துரோகம் செய்தான்…” என்ற உணர்வின் வேகத்தைக் கூட்டும் பொழுது
2.அவனில் உருவான இந்த உணர்வுகள் இவனின் உணர்வுகள் அங்கே பதிவானதால்
3.அந்த உணர்வுகள் இரண்டுக்கும் மோதலாகின்றது.

அப்படி மோதலாகி அங்கே பகைமை உணர்ச்சிகளைத் தூண்டி அவன் உணவாக உட்கொள்ளும் நேரமாக இருந்தால்
1.உள் இழுக்கும் செயல் இழந்துவிடுகின்றது.
2.அப்பொழுது “புரையோடுகின்றது…” புரையேறும் போது நுரையீரலுக்குள் (சாதம்) ஒரு பருக்கை போனால் மடிந்துவிடுவான்.

அல்லது ஒரு வாகனத்தை ஓட்டிச் செல்கிறான் என்று வைத்துக் கொள்வோம். கண்ணுற்றுப் பார்த்து வாகனத்தை ஓட்டிச் செல்லும் நிலையில் அங்கிருந்து (அவனின் உணர்வுகள்) கவர்ந்து வாகனத்தைச் சீராக இயக்கவிடாது இடைமறிக்கும்.

வாகனம் ஓட்டும் பொழுது எதிரில் வரும் நிலைகளைக் கவர்ந்து… அதற்குத்தக்க இவன் நிலைகள் கொண்டு சீராக இந்த வாகனத்தை ஓட்டினாலும்
1.அவனின் உணர்வுகள் (புரை) இடைமறிக்கும்.
2.அப்படி இடைமறிக்கும் உணர்வால் அவனை இவன் எண்ணும் பொழுது
3.அவனுக்குள் இருக்கும் உணர்வுகள் இயக்கப்பட்டு எதிர்மறை கொண்டு தாக்கப்படும் பொழுது
4.“ஒரு நொடி…” அவன் சிந்திக்கும் நிலை இழந்தால் “ஆக்சிடென்ட்…”

இதே போல மனிதனுக்கு மனிதன் வாழும் பொழுது பகைமை உணர்வு கொண்டால் அந்தச் சந்தர்ப்பத்தில் தொழில் செய்யும் பொழுது இத்தகையை நிலை ஆனால் புரையினால் அவன் மரணமடையும் நிலையும் வருகின்றது.

இதைப் போல ஒரு எலெக்ட்ரிக்கில் வேலை செய்கின்றான் என்றால் இதைப் போல் புரை ஆகி தன்னுடைய வேகத்தின் உணர்வைக் கூட்டினால் சிந்திக்கும் திறன் இழந்து விடுகின்றான்.

தான் சிந்திக்கும் செயலிழந்து அங்கே மின்சாரம் பாயும் கம்பியில் கையை வைத்து இவன் மடிந்து விடுகின்றான். இதைப் போன்று நாம் பல நிலைகளில் செல்லும் பொழுது “ஒரு நொடி தவறினால்… மனிதனை வீழ்த்தி விடுகின்றது”.

ஆகவே, “மனிதனுக்கு மனிதன் தொடர்பு இல்லாதவர்… எவருமே இல்லை…”

பகைமை கொண்டாலும் உணர்வுகள் தொடர்பு உண்டு. மகிழ்ந்தாலும் நமக்குள் தொடர்புண்டு.

மனிதர்கள் எவரும் பிரிந்து வாழ்ந்ததில்லை. பிரிந்து வாழ்கின்றோம் என்று நாம் நினைக்கின்றோம்.

ஆனால் நமக்குள் அங்கே பிரிவின் எண்ணங்கள் நுகரப்படும் பொழுது நம் உடலுக்குள் “அந்தப் பகைமையான உணர்வின் அணுக்களும்… இந்தப் பண்புடன் வளர்த்த இந்த உடலுக்குள் இருக்கும் அணுக்களும்…” அதுவும் இதுவும் போர் முறையாக மாறி விடுகின்றது.

ஒன்றை ஒன்று உணர்ச்சிகளால் தாக்கப்படும் பொழுது நம் உடலில் மேல் வலியும் கை கால் குடைச்சலும் குத்தலும் ஏற்படுகின்றது.

சில பேர் சொல்வார்கள்…
1.உடலில் “பளீர்…” என்று ஊசி குத்துவது போல் இருக்கின்றது என்பார்கள்
2.பகைமை உணர்ச்சிகள் கொண்ட அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது
3.அந்த உணர்ச்சியின் தன்மை நம் உடலுக்குள் வேதனையைக் கொடுக்கும் நிலையாக வருகின்றது.

இதைப் போன்று நாம் “எங்கேயோ… பகைமை உணர்வைப் பெற்றோம்…. அவனின்று விடுபட்டிருக்கிறோம்…” என்று நினைக்கின்றோம்.

ஆனால்… “அவனின்று நுகர்ந்த உணர்வு… நமக்குள் நின்று அதனின் வீரியத்தை ஊட்டும் பொழுது… நல் உணர்வை ஊட்டிய அணுக்கள் இங்கே அஞ்சி நடுங்குகின்றது…”

இந்த உணர்வின் தன்மை வரும் பொழுது இதனால் உடலில் ஏற்பட்ட உணர்வுகள் சிந்திக்கும் திறன் இழக்கின்றது. ஒரு செயலின் தன்மை சீராக நடக்காது குறையப்படும் பொழுது வேதனைப்படுகின்றோம்.

வேதனையான உணர்வுகளை நுகரப்படும் பொழுது சிந்திக்கும் திறனும் இழக்கப்படுகின்றது.

1.“நினைத்த காரியம்… நடக்கவில்லை” என்றால் உணர்வுகள் உந்தப்பட்டு
2.கோபத்தின் உணர்ச்சிகள் ஏறுகின்றது… தன்னையே அழித்திடும் நிலைகள் வருகின்றது.

அல்லது தன்னுடைய சார்புடையோர்கள் இதன் வழி நடக்கவில்லை என்றால் அவர்களைக் கொன்றுவிடும் உணர்ச்சிகளையே தூண்டுகின்றது.

ஆகவே இத்தகைய உணர்வுகளிலிருந்து நாம் தப்ப நீங்கள் ஒவ்வொருவரும் ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள். நீங்கள் இந்த வாழ்க்கையில் புனிதம் பெறுவதற்கு எடுத்துக் கொள்ளும் இந்த முயற்சி… உங்களுக்கு வெற்றியைத் தரும்.

அகஸ்தியனின் ஆற்றல்களும் அவனின் தாய் தந்தையரின் ஆற்றல்களும்

 

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் காடுகளில் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர்கள்… சூரியன் பால் நினைவினைச் செலுத்தும் போது அதன் அருகில்… விளிம்பில் வரும் விஷத்தன்மைகளை இவர்கள் உற்றுப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கின்றது.

சூரியனின் இயக்கத்தின் தன்மையை அந்தக் காட்டுவாசிகள் காண முடிந்தது. அவர்கள் கண்டுணர்ந்த உணர்வுகள் அனைத்தும் கருவிலே விளையும் அந்தச் சிசுவிற்கும் (அகஸ்தியன்) படர்கின்றது.

அதன் தொடர் வரிசையாக நட்சத்திரங்கள் பிற மண்டலங்களில் இருந்து எவ்வாறு அதனதன் சக்திகளைக் கவர்கிறது…? என்ற நிலையைக் காண்கின்றார்கள்.

1.ஒரு விஷம் எவ்வளவு தூரம் வேகமாக ஊடுருவிச் செல்கின்றதோ
2.அதைப்போல அவர்கள் தன் எண்ணங்களை விண்ணை நோக்கிச் செலுத்தப்படும் பொழுது
3.கண் ஒளியால் மற்றதை ஈர்க்கும் தன்மையை அவர்கள் பெறுகின்றார்கள்
4.வெகு தொலைவில் இருப்பதையும் காணும் சக்தி பெறுகின்றார்கள்.

அவ்வாறு கண்டுணர்ந்த உணர்வின் தன்மை தான்
1.நட்சத்திரங்கள் எவ்வாறு இயங்குகின்றது…?
2.நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து தனக்கு உணவை எப்படி எடுத்துக் கொள்கின்றது..?
3.அதை நம் பிரபஞ்சத்திற்குள் எப்படிச் செலுத்துகிறது…?
4.மற்ற கோள்கள் தனக்குள் அதை எடுத்து எப்படி வளர்கின்றது…?
5.அது உமிழ்த்தி வெளிப்படுத்தும் சக்தியை சூரியன் எவ்வாறு கவர்ந்து கொள்கிறது…? என்ற பேருண்மைகளை
6.அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் காணுகின்றார்கள்… கருவில் இருக்கும் அந்தச் சிசுவிற்கும் அது பதிவாகின்றது.

தாய் தந்தையர் கொஞ்சம்தான் கண்டார்கள். ஆனால் கருவிலே வளரும் அகஸ்தியனுக்கோ இது வீரிய சத்தாக உருவாகின்றது.

மற்ற மிருகங்களிடமிருந்தும் விஷ ஜெந்துக்களிடமிருந்தும் தங்களைக் காத்திட அகஸ்தியன் தாய் தந்தையர்கள் அவர்கள் தங்கள் உடலிலே விஷம் கொண்ட பல தாவர இனங்களை மேலே பூசும் பொழுது அது உடலில் உள்ள நல்ல அணுக்களைக் கொல்கிறது… கொல்லும் ஆற்றல் அந்த உடலிலே வளர்கின்றது. ஆனால்…
1.அந்தக் கருவிலே விளையும் சிசுவிற்கோ விஷத்தை அடக்கும் ஆற்றல் மிக்க சக்தியாக வளர்கின்றது.
2.இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் இது தான்.

பத்து மாதம் ஆன பின் குழந்தை (அகஸ்தியன்) பிறக்கின்றது. குழந்தைகள் பிறந்தால் பொதுவாக மேலே தான் பார்க்கும். காடுகளில் படுத்திருக்கும்போது வானை நோக்கிப் பார்க்கும் பொழுது சூரியனை உற்று பார்க்கின்றது.

தாய் தந்தையர்கள் எதைப் பெற்று அவர்களுக்குள் பதிவாக்கினார்களோ அந்த நினைவாற்றல் குழந்தையை விண்ணை உற்றுப் பார்க்கவும் வைக்கின்றது.
1.அவர்கள் கண்ட நட்சத்திரங்களை அவன் காண்கின்றான்
2.நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து வரக்கூடியதைக் கவர்ந்து பால்வெளி மண்டலங்களாக மாற்றுவதும்… துகள்களாக மாற்றுவதையும்
3.கோள்கள் அதைக் கவர்வதையும் அது வெளிப்படுத்துவதைச் சூரியன் கவர்வதையும் இவன் காணுகின்றான்.

அந்த இளம் வயதில் அகஸ்தியனுக்குத் தெரியாது. ஆனாலும் அந்த உணர்வுகளை எல்லாம் காட்சியாகக் காணுகின்றான். அவனுக்குள் அந்த ஆற்றல்கள் வளர்கின்றது.

குருநாதர் இதை எல்லாம் காட்டிற்குள் அழைத்துச் சென்று எமக்குக் காட்டினார். அதை எல்லாம் நீங்களும் காண வேண்டும் என்பதற்கே இதைப் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு).

எல்லாவற்றையும் அறிய வேண்டும் என்று விரும்பும் மனிதன் “உடலுக்குப் பின் எங்கே செல்கிறோம்…!” என்பதை ஏன் அறிய முற்படவில்லை – ஈஸ்வரபட்டர்

 

பக்தி மார்க்கத்தில்… ஜெப நிலையில்… மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே எத்தனையோ காலங்களாகத் தெய்வ சக்தி கிட்டும்… என்ற எண்ணத் தொடரில் சுழற்சி வட்டத் தொடரில் ஜெப மந்திரங்களை ஓதி யோக நிலை பக்தி நிலை என்ற நிலையில் எல்லாம் கால நிலையைக் கடத்தி… ஆழ் நிலையில் இச்சரீரத்தையே பயிற்சி செயலில் ஆரோக்கிய நிலையில் செயலாக்கி இருந்தாலும் காணப் போகும் பலன் என்ன…?

1.எண்ண நிலையைக் கொண்டு அறியும் ஞான வழியின்
2.காந்த மின் நுண் அலை கூடிய வலுவாகிய உடல் சமைப்பின் ஆத்ம உயிரின் வலு நிலை பெற்றால் தான்
3.பக்தி மார்க்கத்திலும் யோக மார்க்கத்திலும் மற்ற எந்த விஞ்ஞான மார்க்கமானாலும்
4.இத்தொடர் நிலையை மனித ஆத்மா பெற்றதென்றால் தான்
5.மனித சக்தியின் தெய்வ சக்தியை இவ்வுடல் சமைக்கும் உணர்வின் எண்ணத்தை – அறியும் ஞான ஆற்றலை
6.அறிந்தோரின் ரிஷி சமைப்பின் அலைத் தொடரை உணர்வின் எண்ணத்தில் அறிந்து உயர்வு நிலையை நாம் பெற முடியும்.

இப்பூமி சமைக்கும் வழித் தொடரில் சுழலும் எண்ண நிலையை… இப்பூமியையே இயக்கவல்ல உயர் வழியை அறிய… இவ்வண்ணத்தைக் கொண்டு அறியும் நிலை கொண்டு செயல்படுத்த வேண்டும்.

அதற்காக வேண்டி இச்சரீரக் கோளத்தின் அணுக் கோடிகளுக்கெல்லாம் “ரிஷித் தொடர்பை ஏற்படுத்தி” உயர் ஞானம் அறிந்த அந்தச் சமைப்பு நிலை கொண்டு
1.இச்சரீரத்தைக் கொண்டே உயர்வு நிலை பெறவல்ல செயலுக்கு
2.நம் உணர்வின் எண்ணம் அறியும் தன்மை கொண்டு
3.நம் தியான நிலை செயல்பட வேண்டும்.

பொருள் சேர்க்கையும்… சரீர பிம்பத்தைக் காக்கும் வழி முறையும்… இத்தொடரில் வாழ்க்கை நிலையில் மோதப்படும் வழி முறைக்கு மட்டும்… எண்ணத்தின் உணர்வைச் செலுத்திச் சுழல் வட்டத்தில் சுழலும் வாழ்க்கையில்…
1.பிறப்பும் இறப்பும் இயற்கை நிலை…! என்று எண்ணத்தைச் செலுத்தி விடாமல்
2.எண்ணத்தின் ஞானத்தைக் கொண்டுதான் இயற்கை நிலையே உருப்பெறுகின்றது…! என்பதை மனிதன் உணரல் வேண்டும்.

ஆதிசக்தியின் அமில சக்தி உருவாகிப் பல கோடி மாற்றங்களில் சுழலுகின்ற சுழல் வட்டத்தில்… மனித எண்ணத்தைக் கொண்டு அறியும் வழித் தொடரில் உருவாகும் உயர்வு நிலை சமைப்புத் தன்மை மாறவே… ஒன்றில் இருந்து ஒன்று மாற “இவ்வெண்ண நிலையின் தொடர் நிலை உருவாக்கித் தந்த உரு நிலை தான் இப்பூமியின் நிலை…!”

பிறப்பு இறப்பு இயற்கை என்றால்…!
1.இயற்கையாக வாழ்க்கை நிலையை மனிதன் ஏன் ஒன்றி விடாமல்
2.ஒவ்வொரு செயலையும் பக்குவம் கொண்டு பகுத்தறிவினால் செயல்படுத்துகின்றான்…?

விஞ்ஞானம்… மருத்துவம்… விவசாயம்… போன்ற எல்லா துறைகளையும் மனிதனின் எண்ணம் பகுத்தறியும் நிலைக்குச் செல்லும் பொழுது
1.மனித சரீரத்திற்கு அடுத்த உயர்வு நிலைக்கு
2.தன் பகுத்தறிவின் ஞானத்தை ஏன் செலுத்தவில்லை…?!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒரு சமயம் ஒரு பெண்ணுக்குச் சோக நீர் போன்று உடலில் வந்ததும் வயிறு உப்புசமாகிவிட்டது. உடலில் எந்த நோயும் இல்லை.

ஒரு ஆன்மா அந்த உடலுக்குள் ஆனபின் அந்த உடலில் எப்படி வயிற்றுக்குள் பொறுமலானதோ அதே உணர்வுகள் இந்தப் பெண்ணுக்கு இங்கே வருகின்றது.

ஆனால், அவர்கள் எல்லா வைத்தியமும் பார்த்துவிட்டு “ஒன்றும் முடியவில்லை…” என்று கைவிட்டார்கள்.

என்னிடம் (ஞானகுரு) வந்து கேட்டார்கள்.

1.இன்னொரு ஆன்மா இங்கே இருக்கின்றது.
2.அந்த ஆன்மாவின் வலுவைக் குறைக்க வேண்டுமென்றால்
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் அனைவரும் எண்ணி
4.அதன் உடலுக்குள் அந்தச் சக்திகளைச் சேர்ப்பிக்க வேண்டும் என்ற உணர்வுகளை ஊட்டும்படிச் செய்தேன்.

குணமாகி நல்ல நிலைகள் வந்தது.

ஓரளவிற்கு வலிமை பெறும் பொழுது குடும்ப வாழ்க்கையில் “எனக்கு இப்படி ஆகிவிட்டதே…! நான் என்ன பாவம் செய்தேன்..?” என்ற உணர்வை “மீண்டும்” அந்தப் பெண் நினைவாக்குகின்றது.

குணமாகி வந்த நிலைகளில் “எனக்கெல்லாம்… இப்படிப்பட்ட அவஸ்தைகள் வந்துவிட்டதே…” என்ற உணர்வை எண்ணும் பொழுது மறுபடியும் பதிந்த உணர்வுகள் கிளர்ந்துவிட்டது.

1.மண்ணுக்கள் மறைந்த வித்து மழை நீரைக் கண்டபின் கிளர்ந்தெழுவது போல்
2.இந்த உணர்வின் எண்ணங்கள் வரும்பொழுது உணர்வைக் குவித்தபின்
3.தன் செயலே இல்லாதபடி அந்தப் பெண் மயங்கிவிட்டது.

டாக்டர்களிடம் சென்று பார்க்கப்படும் பொழுது “இது.., விசித்திர நோயாக இருக்கின்றது..! என்ன செய்வது…?” என்று தெரியவில்லை என்கிறார்கள்.

தன்னுடைய நிலைகளில் செயலிழந்து பேச்சு மூச்சோ எழுந்து நடக்கும் நிலைகளோ அங்கங்கள் அனைத்தும் விரிந்த நிலையில் கிடக்கின்றது. “என்ன செய்வது…?” என்று மற்றவர்கள் துடிக்கின்றனர்.

டாக்டர்கள் கைவிட்டபின் அங்கிருந்து கொண்டே எனக்குப் ஃபோன் செய்தார்கள்.

ஃபோனை அந்தப் பெண்ணின் செவிகளில் வையுங்கள் என்று சொன்னேன். அருள் மகரிஷிகளின் உணர்வைச் சொல்லும் பொழுது அந்த உணர்ச்சிகள் செவிகளில் விழுந்தபின் அந்த உணர்வு கொண்டு “ஓ…ம்…” என்று சொல்லத் தொடங்கியது.

அங்கே அந்த டாக்டரும் இருக்கின்றார்.

இதுவரையிலும் பேச வைக்க முடியவில்லை. ஆனால், (ஃபோன் மூலம்) இந்த ஒலியைக் கேட்டபின் பேசுகின்றது, என்ன… விசித்திரமாக இருக்கின்றது…! என்கிறார்.

பிறகு சிறிது நேரம் பொறுத்திருங்கள். அதற்கு முழுச் சுய நினைவு வரட்டும். வந்தபின் அந்தப் பெண்ணையே ஃபோன் செய்யச் சொல்லுங்கள் என்று சொன்னேன்.

அதே மாதிரி அந்தப் பெண் எழுந்து வந்து பேசுகின்றது.

என் நினைவினை இழக்கும் நிலைகள் எது…? என்றே எனக்குத் தெரியவில்லை என்னை இயக்கிவிட்டது. ஆக “நான் மரணமடைவேன்…” என்ற உணர்வு மட்டும் தோன்றுகின்றது.

ஏனென்றால்…
1.மடிந்த உணர்வின் தன்மை இது மடியச் செய்யும் உணர்ச்சிகளை
2.அந்தப் பெண்ணுக்குள் தூண்டுகின்றது என்ற நிலையை அங்கே தெளிவுபடுத்தினேன்.

பின் இதிலிருந்தது விடுபடும் என்ற நிலையை எல்லோருக்கும் சொல்லி அந்த மகரிஷிகளின் உணர்வைப் பெறும்படிச் செய்தபின் அந்தப் பெண் தப்பித்தது.

இது நடந்த நிகழ்ச்சி.

இவ்வாறு தவறு நாம் செய்யாமலேயே பண்பால் அன்பால் நாம் மனித வாழ்க்கையில் அன்பு கொண்டு வாழ்ந்தாலும் மற்றவர்கள் உடலில் சில நோய்கள் உருவாக்கப்படும் பொழுது நம்மை அறியாமலே நமக்குள் பதிவாகிவிடுகின்றது.

நாம் அவர்களுக்கு உதவி செய்தாலும் நல்லதானதும், அடுத்து “மகராசி… எனக்கு நல்ல உதவி செய்தாள்…!” என்ற இந்த எண்ணம் வரும் பொழுது அந்த ஆன்மா இந்த உடலுக்குள் வந்துவிடுகின்றது.

அந்த உடலில் “எந்த நோய்” இருந்ததோ அந்த நோயின் தன்மை இந்த உடலிலும் உருவாகின்றது.

இதைப் போன்று மனிதன் தவறு செய்யாமலேயே நமக்குள் இன்னொரு ஆன்மாவின் உணர்ச்சிகள் வளர்ச்சி பெறும் பொழுது அந்த ஆன்மாவை அழைத்து நமக்குள் நல்ல அணுக்களின் தன்மையை இழக்கச் செய்து விடுகின்றது.

அதை மாற்றிட… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒரு இரண்டு நிமிடம் உங்களுக்குள் வலுவாக்கிக் கொள்ளுங்கள்.

பின் யாரைப் பற்றிக் கேட்டுணர்ந்தீர்களோ அவர்களும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவர்கள் வேதனைகளிலிருந்து விடுபடும் அருள் சக்தி பெற வேண்டும் என்று உங்கள் உணர்வைப் பாய்ச்சுங்கள்.

“மகரிஷிகளின் அருள் சக்தியை எண்ணுங்கள்… உங்கள் உடல் நலமாகும்…!” என்று சொல்லுங்கள்.

அதைப் போல அவர்கள் எண்ணினார்கள் என்றால் அவர்கள் வேதனைகளும் அகலும். அவர்களும் உடல் நலம் பெறுவார்கள்.

அதே சமயத்தில் அவர்கள் வேதனை உணர்வுகள் உங்களுக்குள் வராது… உங்களை இயக்காது. உங்கள் ஆன்மாவும் உடலும் தூய்மை ஆகும்.

அன்றாட வாழ்க்கையில் நம் ஆசையின் செயலாக்கங்கள் எப்படி இருக்கிறது…!

 

இந்த வாழ்க்கை என்ற குறியைத் தான் வைக்கின்றோமே தவிர சந்தர்ப்பத்தில் நம்மைத் தாக்கும் உணர்வுகளை மறந்துவிட்டோம்.

நாம் ரோட்டில் செல்லும்போது ரோட்டின் அந்தப் பக்கம் தெரியும் ஒரு நல்ல பொருளின் மீது ஆசைப்படுகின்றோம். எடுக்க வேண்டுமென்ற ஆசை தூண்டப்படுகின்றது. ஆனால் இடையிலே வரும் நிலைகளை… அறிய வேண்டும் என்ற சிந்தனையை மறைத்து விடுகின்றது.

1.நினைவை நாம் அங்கே செலுத்தி அந்தப் பொருளை எடுக்கத் தாவப்படும் பொழுது
2.குறுக்கே வரும் வாகனத்தைப் பற்றிச் சிந்திக்காமல் திரும்பிப் பார்க்காதபடி எடுக்கச் சென்றால்
3.வாகனம் மோதி விட்டால் என்ன ஆகும்… பொருளைப் பெற முடியாது.

ஆசையின் உணர்வுதான் வருகிறது. இந்த உணர்வினை அறியப்படும் பொழுது “கிடைக்கவில்லை…” என்கிற போது அந்த உணர்வினை வளர்த்து விட்டால்… மடிந்து விட்டால் அதே உணர்வுடன் தான் அந்த ஆன்மா அங்கே சுழன்று கொண்டிருக்கும்.

இதே ஆசை கொண்ட மனிதர்கள் அங்கே நடமாடும் போது அவருக்குள் இந்த ஆன்மா புகுந்து… தன் ஆசையைத் தூண்டி “அதைப் பெற வேண்டும்… இதைப் பெற வேண்டும்…” என்ற உணர்ச்சிகளையே தான் தூண்டும்.

இப்படிப் பல மனிதர்கள் இருப்பதையும் இன்று காணலாம். ஆனால் யாரும் தவறு செய்யவில்லை. இருந்தாலும்
1.நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை எதுவோ அந்த வலிமையைத் தனக்குள் எடுத்து
2.அதே ஆசை கொண்ட மனிதர்களிடம் விளைந்த உணர்வுகள் காற்றிலே இருக்கிறது.
3.அதன் வழிகளிலே நம்மை அழைத்துச் செல்கின்றது.

இத்தகைய தீமைகளிலிருந்து மனிதன் விடுபடுதல் வேண்டும். உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீவினைகளை நீங்கள் நிறுத்துதல் வேண்டும். அது தான் விநாயகர் சதுர்த்தி.

உங்கள் உடலுக்குள் ஊடுருவிய தீமை என்ற நிலைகளை நிறுத்துவதற்கு குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானியின் உணர்வை அருள் ஞான வித்தாக ஆழமாகப் பதியச் செய்கின்றோம்.

பதிவாக்கியதை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் உங்களுக்கு முன் காற்றில் இருக்கும் அருள் மகரிஷிகள் உணர்வை நுகர்ந்து தீமைகளை அகற்றும் ஆற்றல் பெறுகின்றீர்கள்.

என்றென்றும் அதன் வழிகளிலே மெய்ப் பொருளாக இருக்கும் உயிருடன் ஒன்றி நீங்கள் வாழ முடியும்.
1.மெய் என்பது உயிர்… எல்லாவற்றையும் அந்த உண்மையின் உணர்வை நமக்கு அறிவிப்பது மெய் உயிர்.
2.உயிருடன் ஒன்றி எல்லாவற்றையும் மெய்யாக மாற்றும் ஆற்றல் பெற முடியும்.

குருநாதர் எனக்கு இதையெல்லாம் காட்டினார். காட்சிகளாகவும் காண்பித்தார். அதைத் தெளிவாகத் தெரிய முடிந்தது… அதை நுகரவும் முடிந்தது.

எனக்குள் பதிவான அந்த உணர்வின் தன்மையை நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது… கடந்த கால நிலைகளை நினைவுபடுத்தி எண்ணங்களாக (உபதேசமாக) வெளி வரப்படும் பொழுது… அந்த உணர்வுகளை நீங்கள் பதிவாக்கப்படும் பொழுது
1.இதே எண்ணம் உங்களைத் தீமைகளிலிருந்து அகற்றச் செய்யும்
2.மெய்ப்பொருள் காணும் நிலைகளுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.

மனிதன் பெற வேண்டியது மெய் ஞானத்தின் வளர்ச்சி தான் – ஈஸ்வரபட்டர்

 

விஞ்ஞானி ஓர் பொருளை அறிந்து உருவாக்குகின்ற செயலில் அப்பொருளின் தேவை நிலையில் “சிக்கல்கள் ஏற்படும் போது…”
1.மாற்று நிலை என்ன செய்யலாம்…? என்ற அறிவின் ஞானத்தைக் கூட்டி
2.தன் தேவைக்குகந்த செயலைச் செயலாக்கிட
3.மீண்டும் வளர்ந்த புதுப்பிக்கும் அறிவு ஞானத்தைக் கொண்டு
4.வளர்த்துக் கொண்டே செல்கின்றான் – விஞ்ஞானத்தில்.

காட்சி:-
ஆதிகாலத்தில் இருந்த இரண்டு சக்கரமுடன் கூடிய வண்டியைப் போன்றும்… அவ்வண்டியே அடுத்த நிலையில் பெரிய சக்கரமாக அமையப் பெற்றதைப் போன்றும்… அச்சக்கரத்தில் டயர் வைத்து உருள்வதைப் போன்ற வண்டியும் தெரிகின்றது.
1.ஆரம்பக் காலத்தில் இருந்த வண்டியும் இன்று நூதனத்தில் அமைக்கப்படும் வண்டியும்
2.அதைப் போன்றே ஆரம்பக் காலத்தில் ஓடிய நான்கு சக்கரங்கள் கொண்ட குதிரைகள் பூட்டிய ரதத்தையும் அதற்குப் பின் உருவான மோட்டார் வாகனத்தையும்
3.அதன் தொடரில் இன்றைய நூதன வசதியுடன் கூடிய மோட்டார் வாகனமும் காட்சியில் மாறி மாறித் தெரிகின்றன.

மெய் ஞான வழித் தொடரிலும்… மனித ஆத்மா தன் ஞானத்தைக் கூட்டி மனித ஆத்மாவின் உயர்வு நிலைக்கு வழிகாட்டிய பக்தி மார்க்க நெறி முறைகளை நம் அறிவின் ஞானத்தைக் கொண்டு உயர்த்திப் பார்ப்போமானால் “அதிலுள்ள உண்மை விளக்கங்களையும்… அதன் தொடரில் அறியக்கூடிய ஞானச் சித்துவையும்…” மனிதன் பெற முடியும்.

எண்ணத்தின் பகுத்தறியும் அறிவு நிலையினால் மனிதன் ஒன்றின் உருவகத்தில் பிறிதொன்றைச் சேர்த்து வாழ்க்கை வசதிக்கு அறிவின் ஞானச் செயலினால் முற்படுத்துகின்றான்.

காட்சி:-.
ஓர் ஓவியன் ஓவியம் வரைவதைப் போன்றும் பிறகு ஒரு பெண் தலையில் மல்லிகைப் புஷ்பத்தைச் செண்டாக்கி வைப்பதைப் போலவும் காட்சி தெரிகின்றது.

இதன் பொருள் யாது…?

போதனையில் புகட்டப்படும் பாட முறைக் கல்வியை… செயல் முறையில் செயல்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் ஆரம்பக் காலம் தொட்டு வெறும் போதனையை ஒத்த செயலுடன் நின்றிருந்தால்… எந்த மனிதனின் அறிவுத் திறனும் வளர முடியாது.

ஓவியன் தன் எண்ணத்தைக் குவித்து ஓவியம் எழுதும் பொழுது…
1.தன் ஞானத்தில் அந்தந்த இடங்களுக்குகந்த பகுத்தறிவைக் கொண்டு வண்ணங்களைச் செலுத்தினால் தான்
2.அந்த ஓவியத்தின் அழகே பொலிவு பெறுகின்றது.

பெண்ணிற்குத் தலையில் பூச்சூடும் வழி நிலையே நம் முன்னோர்கள் தான் வழிகாட்டியுள்ளார்கள். அதில் பல ஜீவ சக்தியுடன் கூடிய உண்மை நிலைகள் அதில் பொருந்தியுள்ளன.

இயற்கைத் தாவரத்தில் மலருடன் தன் சக்தியை வெளிப்படுத்தும் தாவரமும்… பூவாகிக் காயாகிக் கனி தரும் தாவர இனமும் இப்படி பல உண்டு.

மணமுடன் கூடிய மல்லிகையின் அமில குணமானது பெண் இன ஜீவ சக்திக்கு ஈர்ப்பு சக்தியை தரவல்லது.

மல்லிகை மலரைத் தலையில் சூடும் பொழுது
1.மனித இயக்கத்தின் அறிவு ஞானத்தை வளர்க்கும்
2.கவன நரம்பின் சிறு மூளை இயக்கத்தில் ஏற்படும் உஷ்ன அலையை
3.மல்லிகையின் மணமுடன் கூடிய அமிலத் தன்மை… பின் தலையில் இருந்து வெளிப்படும் உஷ்ண அலையில் மோதும் பொழுது
4.அதனுடைய குண நிலை – பெண்களின் அறிவின் ஞான வளர்ச்சியில் ஏற்படும் உயர்வு நிலைக்கு “வித்தாகின்றது…”

முன்னோர்கள் உணர்த்திய இத்தகைய வழியிலும் நாம் அறியாத பல உண்மைகள் உண்டு. ஆகவே எண்ணத்தின் உணர்வை அறியும் ஞானம் கொண்டு வளர்க்கும் ஜெப நிலையில்…
1.வளர்ந்தோரின் தொடருடன் செலுத்தி
2.மேல் நோக்கிய எண்ணமுடன்
3.அவர்களிடமிருந்து உயர்வு ஞானத்தை நம் ஆத்மாவில் பதித்துக் கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஆலயங்களில் சாமி மேல் மலரைப் போடுகின்றார்கள். சாமிக்கு மேல் அது ஆடையாகின்றது.

நாம் எண்ணும் உணர்வுகள் நம் உடலிலே அந்தக் குணங்களானால் அந்த மலரைப் போல மணம் பெறும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். நாங்கள் பார்ப்போரெல்லாம் மலரைப் போல மணம் பெற வேண்டும், மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் நாம் அனைவரும் அந்த நிலை அடைகின்றோம்.

நாங்கள் பார்க்கும் குடும்பமெல்லாம் மலரைப் போல மணம் பெற வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். நாங்கள் தொழில் செய்யும் இடங்களிலெல்லாம் மலரைப் போல மணம் பெற வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்.

இப்படி எண்ணி நமக்குள் இத்தகைய உணர்வுகளைச் சேர்க்க வேண்டும். சேர்த்து நமக்குள் வரும் பகைமை உணர்வுகளை அழித்திடல் வேண்டும்.

நாம் அனைவரும் கல்யாணராமனாக மாற வேண்டும்.

சூரியன் எவ்வாறு பிரபஞ்சத்தில் உருவாகும் “நஞ்சினை அரவணைத்து… ஒளியின் சுடராக மாற்றுகின்றதோ…” இதைப் போல
1.மனிதன் மற்றவர்களுடைய உணர்வுகளை மாற்றி
2.தீமைகளயும் பகைமைகளையும் மாற்றி
3.அந்த உணர்வுகளை ஒளியாக்கும் பொழுது அருள் ஒளி பெற்று
4.“உயிருடன் ஒன்றி… ஒளியின் சரீரம் பெறுவது திண்ணம்…”

இது நமது சாஸ்திரங்களில் மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நாம் யாரும் இதைச் சிந்திக்கின்றோமா..,?

தெய்வத்திற்கு மலர்களையும் மாலைகளையும் அணிவிக்கும் பொழுது அந்த அருள் உணர்வுகளை நாம் பெற வேண்டும் என்று சாஸ்திரப்படி எண்ணிச் சுவாசிக்கின்றோமா..,?

அன்றைய ஞானிகள் சொன்ன பேருண்மைகளைத்தான் இங்கே சொல்லி வருகின்றோம். ஆனால் யாம் (ஞானகுரு) இப்பொழுது சொன்னாலும் கேட்பவர்கள்…
1.“சாமி… அற்புதமாகப் பேசுகின்றார், நம்மால் இது முடியுமா..,?” என்ற வினாக்களை எழுப்பி
2.தன்னைச் சோர்வடையும் நிலைக்குத்தான் கொண்டு செல்கின்றார்கள்.

“நீங்கள் எல்லோரும் அருள் உணர்வைப் பெற வேண்டும், அருள் ஞானிகளாக வேண்டும்” என்ற ஆசையில் தான் யாம் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

1.“என்னால் முடியுமா..,?” “நானே..,” (சாமிகள் சொல்வதை) இதைப் பெற முடியவில்லை
2.“ஒன்றும் தெரியாத மற்றவர்கள்..,” எப்படி பெறப் போகின்றார்கள்..,? என்று
3.தானும் பெறாது மற்றவர்களையும் பெறவிடாதபடி செய்து கொண்டிருப்பார்கள்.

சாமி உயர்ந்த உணர்வுகளைச் சொல்கிறார். அதை “என்னாலேயே..,” பெற முடியவில்லை. “நீங்கள் எப்படிப் பெறப் போகின்றீர்கள்..,?” என்று சொல்லி இதைப் பெறுபவர்களையும் கெடுத்து விடுகின்றார்கள்.

ஏனென்றால் ஒரு சாக்கடைக்குள் நல்ல நீரை ஊற்றினால் உடனே என்ன ஆகும்..,?

அதுவும் நாற்றமாகும்.

ஆனால் நல்ல நீர் அதிகரித்து விட்டால் அது ஓடிவிடும்.

ஆகவே இந்த வாழ்க்கையில் அருள் ஒளியை நமக்குள் “கூட்டினால்…” நம்மையறியாது இயக்கும் இருளை அகற்றிடும் ஆற்றல் பெறுவோம்.

இதைக் காட்டுவதற்குத்தான்…
அந்த அருள் சக்திகளைப் பெறத்தான்;
அனைத்து மக்களும் அந்த அருள் சக்தியைப் பெறுவதற்காகத்தான்;
பெற்று மகிழ்ந்து வாழச் செய்வற்காகத்தான்;
“ஆலயத்தை” உருவாக்கினார்கள் ஞானிகள்

நம் உயிரை “ஈசனாகவும்”, கண்களைக் “கண்ணனாகவும்”, உடலைச் “சிவமாகவும்” நாம் எடுத்துக் கொண்ட எண்ணங்களை வினையாகவும் வினைக்கு நாயகனாக (“விநாயகனாக”) மனித உடலும் பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட வினைகள் ஆறாவது அறிவை “முருகு” மாற்றியமைக்கும் சக்தி பெற்றது என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றது.

இந்த மனித வாழ்க்கையில் “நாம் எதைப் பெற வேண்டும்..,?” என்று தெளிவாக்கப்பட்டது. அன்றைய மெய்ஞானி சாமானிய மனிதனும் அருள் வழியில் நடந்து அருள் ஞானம் பெறுவதற்குத்தான் ஆலயத்தைக் கட்டினான்.

விஞ்ஞானம் எப்படி வளர்ந்தது… ஆதியிலே மெய் ஞானம் எப்படி வந்தது…?

 

ஒரு எருக்கண் செடி இருக்கிறது என்றால் இரவில் அல்லது இருட்டிலே பார்த்தோம் என்றால் அதில் இருக்கக்கூடிய தோடுகள் பளீர்.. பளீர்… என்று மின்னும்.

அப்படி மின்னுவதைப் பார்க்கும் போது நான் பேயைப் பார்த்தேன்…! என்று ஒருவன் சொல்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனிலே அதைப் பதிவு செய்கின்றான்… அடுத்தவனுக்கும் இதைச் சொல்கிறான்.

அது இன்ன உருவமாகக் காட்சி தெரிந்தது என்றால் அங்கே போன பின் இவன் காண்பித்த அந்தக் கற்பனை இவன் உடலிலே உருவாக்கப்பட்டு
1.அந்த எருக்கண் செடி மின்னிக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடனே
2.இங்கே பேய் இருக்கிறது பார்… ஆடுகிறது பார்…! என்று இவனுக்கு அவன் சொன்ன ரூபமே தெரியும்.

அவனுக்குள் பதிவு செய்த உணர்வுகள் இவன் பார்க்கப்படும் பொழுது அவன் பார்த்தது எருக்கண் செடி… ஆனால் இவனுக்குள் கற்பனை செய்து கொண்டது இந்த நிலை.

அதைப் பார்க்கப்படும் போது அதை இவன் சொல்லி அஞ்சி வருகின்றான். இயக்கினாலும் வேறு பக்கம் சென்று விடுகின்றான். ஆனால் அஞ்சிய உணர்வு இவனுக்குள் வளர்த்ததைத் தன் நண்பனுக்கும் சொல்கின்றான்.

அந்த நண்பனும் அந்தப் பக்கம் செல்லும் பொழுது “அவன் சொன்னது உண்மை…” என்று அந்த உணர்வுகள் அவனுக்குள் பதிந்தது… இயக்கத் தொடங்குகிறது.

இதைப் போன்றுதான்…
1.எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் தன்மை அங்கே பதிவாகின்றது
2.அந்த உணர்வின் தன்மை இவனுக்குள் ரூபமாகச் சிருஷ்டிக்கின்றது.

கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்றால் நாம் எண்ணும் எண்ணங்கள் அந்தப் பயத்தின் உணர்வுகள் எண்ணும் பொழுது அதே பயத்தை உருவாக்குகிறது.
1.அதுவாக அவன் மாறுகின்றான்
2.பயத்தின் நிலைகளையே அடைகின்றான்.

அன்று அகஸ்தியன் தனது நிலைகளில் அணுவின் ஆற்றலை அவனுக்குள் பெருக்கினாலும் துருவப் பகுதியிலிருந்து புவிக்குள் வரும் உண்மையின் நிலைகளை அறிகின்றான்.

ஏனென்றால் தாயின் கருவிலே இருக்கப்படும் பொழுது உண்மை எது…? என்று அறியப்படும் பொழுது அதை அறிய வேண்டுமென்ற நிலையில் பிறந்த பின் விண்ணுலக ஆற்றலை அறிகின்றான்.

ஆனால் நாம் சாதாரணமாக இந்தப் பயத்தின் நிலைகள் வரும் போது இப்படி எண்ணுகின்றோம்.

விஞ்ஞானிகள் அவர்கள் கணக்கின் பிரகாரம் ஆரம்பத்தில் பூமி தட்டை என்று தான் சொன்னார்கள். இதுதான் உண்மை என்று அக்காலத்தில் உள்ளோர் ஏற்றுக் கொண்டார்கள் மறுப்பு கொடுக்கும் பொழுது பின்னாடி வந்தவர்களைப் பைத்தியம் என்றார்கள்

அடுத்து உருண்டை வடிவம் என்று சொன்னார்கள் அதற்குப் பின் வந்தவர்கள் முட்டை வடிவம் என்று சொன்னார்கள். அவனின் கணக்கின் பிரகாரம் இவன் பதிவு செய்து இவன் கணக்கிற்குள் கொண்டு செல்கின்றான்.

ஆனால் இதே ஆராய்ச்சியில் இருக்கப்படும் போது ஒவ்வொன்றாகத் தெளிவாக்கி அந்த உணர்வின் தன்மையை அவன் கூர்மையாகக் கவனிக்கப்படும் பொழுது
1.பூமியின் இயற்கையின் உண்மைகளை இவன் அறியும் தன்மை வருகின்றது
2.அந்த நுண்ணிய அலைகளின் தன்மை கொண்டு விஞ்ஞான அறிவே வளர்கிறது.
3.இப்படித் தான் விஞ்ஞான அறிவு வளர்ந்தது.

மெய் ஞானியான அகஸ்தியனின் நிலைகளோ இளமைப் பருவத்திலே வளர்ந்து அந்த மெய் உணர்வினைக் காணும் நிலைகள் வருகிறது.

ஆனால் தான் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு மனிதனுக்குள் எப்படி இயக்க வேண்டும்…? என்ற விஞ்ஞான அறிவைக் காணுகின்றான். மெய் ஞானியோ அவன் மெய் ஞான அறிவினைக் கொண்டு செல்கிறான்.

ஆகவே மெய்யின் உணர்வின் நிலைகள்
1.எப்படி அணுவாக உருவானது…
2.கோளாக எப்படி ஆனது…? நட்சத்திரமாக எப்படி ஆனது…? சூரியனாக ஏப்படி ஆனது…? என்று
3.மெய் உணர்வின் ஆற்றலைக் கண்டான் அகஸ்தியன்.

சூரியன் ஆன பின் அதன் உணர்வின் இயக்கத்தில் அணுக்களின் தன்மை மற்ற பாறைகளிலும் கற்களிலும் தாவர இனங்களையும் உருவாக்க உதவியது.

ஆனால் இதற்குள் மோதுண்டு வரப்படும் பொழுது உயிரணுக்கள் எப்படித் தோன்றுகின்றது…? என்ற நிலையை அன்று அகஸ்தியன் காண்கின்றான்.

அவன் உணர்வை நாம் பெற்றால் படைக்கும் சக்தி கொண்ட மெய் ஞானியாக நாம் உருவாக முடியும்.

ஆழ்நிலை தியானத்தால் அமைதி கிடைத்தாலும் “உயர் நிலைக்குச் செல்ல முடியாது” – ஈஸ்வரபட்டர்

 

உதாரணமாக நத்தையை ஒத்த பல பிராணிகள் உருவ நிலைக்குகந்த உணர்வு நிலையிலேயே அதன் உருவத்திலேயே “பாதுகாப்பபு நிலை கொண்டு” (ஓடு) அறிவின் எண்ண நிலை பெறுகின்றது.

எப்படிப் பாலை உஷ்ணப்படுத்திய பின் அதன் ஆவி நிலை வெளிப்பட்டு ஏடு (ஆடை) நிலை அடைகின்றதோ அந்நிலையின் தொடர் போன்று
1.தாய் எடுக்கும் சுவாசத்தில்
2.தாயின் உடல் நிலையின் உதிரத் தொடர்புடன் உருக்கொள்ளும் கர்ப்ப சிசு
3.உதிரத்தின் தொடர்பு உஷ்ண நிலை பெற்று
4.அதனுடைய அமில நிலைக்கொப்ப உராய்வு நிலை கொண்டு உருவ நிலை (மனித உடல்) பெறுகிறது.

அதனின் வளர்ச்சி நிலை முற்றிய தன்மையில் உணரும் நிலையும் எண்ண நிலையும் பெறுகின்றது. “எண்ண நிலை” என்பது அதனுடைய ஆவி (ஆத்ம) நிலையிலேயே அதற்குத்தக்க எண்ண நிலையில் தான் தாய் உடலில் புகுந்து பிறப்பிற்கே வருகின்றது.

பிறப்புத் தொடரில்… ஜீவ சக்தி கொண்ட சரீர நிலை முற்றிய நிலையின் பிறப்பு நிலை கொண்ட பிறகு தான் சரீர மனித நிலை செயல் நிலை யாவும் “பகுத்தறிந்து…” செயல் கொள்கின்றன.

1.இதற்குப் பின் வளரும் நிலைக்கும்…
2.வழி கொள்ளும் வளர்ச்சி நிலைக்கு வழி காட்டும் நிலைக்காகவும் தான்
3.இயற்கை நிலையையும் இயற்கைத் தொடர்பு நிலையையும்
4.அதில் வளர்ச்சி கொண்டு மாற்றப்படும் தொடர் நிலையையும் உணர்த்தி வந்தேன் (ஈஸ்வரபட்டர்).

ஆனால் தான் வளர்ந்த தொடரிலேயே பகுத்தறியும் அறிவு நிலை கொண்ட மனித ஆத்மாவும் “இயற்கை” என்ற பிடிப்பிலேயே சிக்குண்டு வாழ்ந்து விட்டால் “பிறப்பின் பலன்” இல்லாது போகின்றது.

ஏனென்றால் எண்ணத்தின் தொடர்பைக் கொண்டு உருவாக்கும் ஆதி சக்தியின் அகில சக்தியுடன் தெய்வ சக்தி கொண்டு படைப்பு நிலையைப் படைக்கவல்ல சக்தி கொண்ட பகுத்தறியும் எண்ணத்தால் உயரவல்ல நிலையை அடைய வேண்டும்.

இயற்கை என்ற சுழற்சியிலேயே சுழன்று… தன் சக்தியை உணராமல்… முக்தி நிலை பெறும் மார்க்க நிலைக்குச் சிலரின் உபதேச நிலைகளைக் கேட்டு… ஐம்புலனை அடக்கி ஆழ்நிலையில் உயர்வு நிலை பெறலாம்…! என்ற வழி காட்டும் தொடரில் சென்றால்… சரீர வாழ்க்கை நிலையில் மட்டும் தான் ஆரோக்கிய நிலையும் அமைதியும் கிட்டும்.

உயர்வு நிலைக்குச் செல்ல வேண்டும் என்றால்
1.உணர்வின் எண்ணம் பகுத்தறியும் எண்ணத்தால்
2.அறியும் ஞான வழியில் தான் உயர்வு நிலை கொள்ள முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஞானிகள் அனைவரும் மக்கள் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்று தான் வழி காட்டினார்கள். ஆனால் அரசர்கள் அதைத் தன் சுகபோகங்களுக்காக மாற்றிவிட்டனர்.

அந்த அரசர்களுக்குக் கீழ் வந்த மக்கள் தன்னை அறியாமலே அந்த அரசன் வழியில் சென்று அதன் வழியிலே தான் இன்று வரையிலும் செயல்படுத்துகின்றனர்.

ஒவ்வொரு அரசனுக்கும் அவனுக்கென்று மத குருவை வைத்து அந்த மதத்தைக் காக்க அவன் இடும் சட்டத்தை அதன் கீழ் மக்களை ஒழுங்குபடுத்தச் செய்தனர்.

அந்த மத குரு சொன்ன நிலைதான் அங்கே ஆண்டது. எல்லா நாடுகளிலும் எல்லா மதங்களிலும் அந்த மத குருவின் தன்மையே வருகின்றது.

இன்று நம் நாட்டிலும் எடுத்துக் கொண்டால் ஞானிகள் காட்டிய உணர்வின் தன்மை வரும் பொழுது ஒவ்வொரு நிலைக்கும் மத குருவை உருவாக்குகின்றனர்.

எந்த மதத்தை உருவாக்கி அந்த அரசியல் சட்டத்தை வகுத்தார்களோ அதன்படி மத குரு மக்களுக்கு எடுத்துக் கூறினார்கள். அதன் வழியில் அரசனுக்குக் கீழ் நடக்க வேண்டும் என்று சட்டங்களை இயக்கினார்கள்.

அப்படித்தான் உலகம் முழுவதும் இயங்கி வந்தது.

ஆக அந்த மத குருக்கள் காட்டும் கடவுள் தான் “கடவுள்…”

ஒரு மதத்தைக் காட்டினாலும் அதில் கடவுள் என்ற நிலையைக் காட்டினாலும் மனிதனுக்கு மனிதன் கொன்று குவிக்கும் தன்மை தான் மனிதனுக்குள் வளர்கின்றது.

ஆனால்
1.“மனிதனை உயர்ந்த பண்புள்ளவனாக்கு…
2.இந்தப் பூமியைப் பண்புள்ள பூமியாக மாற்று..!” என்று தான் ஞானிகள் உணர்த்தினார்கள்.

மனிதர்கள் தங்கள் உடலின் இச்சைக்காக வாழும் உணர்வின் தன்மை பட்டதும் அந்த உணர்வின் தன்மை கொண்டுதான் இந்த உலகம் முழுவதும் இன்று மடிந்து கொண்டுள்ளது.

மனித இனமே மடிந்து சிதைந்து கொண்டுள்ளது. மனித உரு இருப்பினும் மனித உருவையே சீர்குலைக்கும் உணர்வே வளர்ந்து கொண்டுள்ளது.

இத்தகைய நிலையை நம் பூமியில் வாழ்ந்த மகான்கள் இயேசு கிருஸ்துவோ, நபிகள் நாயகமோ சொல்லவில்லை. அதே போல நம் நாட்டில் தோன்றிய அகஸ்தியமாமகரிஷியோ வியாசக பகவானோ சொல்லவில்லை.

1. “உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு தோன்றுகின்றது..?”
2.கவர்ந்த உணர்வுகள் நுகர்ந்தவுடன் எண்ணங்கள் எப்படி உருவாகின்றது…?
3. உணர்வின் தன்மை உடலை எப்படி இயக்குகின்றது…?
4. நீ எதை நுகர வேண்டும்…?
5.நீ எதனைச் செயலாக்க வேண்டும்…? என்று
6.இராமாயணக் காவியம் மூலம் வான்மீகி மகரிஷி தெளிவாக உணர்த்தியுள்ளார்.

ஆனால்… தான் செய்யும் பாவச் செயல்களை எல்லாம் செய்துவிட்டு ஞானிகளை எண்ணி விட்டால் பாவங்களைப் போக்க முடியுமா…! என்றால் முடியாது.

நான் தவறு செய்துவிட்டேன். ஆகையினால், “என்னை மன்னித்துக்கொள்.., என்றால் அவன் மன்னிப்பானா..?” மன்னிக்க மாட்டான்.

ஏனென்றால் தீமை செய்யும் உணர்வினை நாம் நுகர்ந்து விட்டால் நம் “உயிரே” அதை உருவாக்குகின்றது. அந்த உணர்வின் தன்மைகளை அணுவாக வளர்த்து உடலுக்குள் விளையச் செய்துவிடுகின்றது.

அவன் எப்படிப் பாவ மன்னிப்புக் கொடுப்பான்…?

எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையை “நீ அனுபவித்துப் பார்…” என்று தான் நம் உயிர் இயக்கிக் காட்டும்.

இதைத்தான் கீதையிலே “நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்” என்று தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது.

ஆகவே தீமைகளை மாற்றிட, பகைமைகளை மாற்றிட, நம்மை அறியாமல் இருள் சூழச் செய்யும் நிலைகளிலிருந்து முழுவதும் விடுபட வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

மக்கள் அனைவரையும் இணைத்து உணர்வின் தன்மை ஒளி பெற வேண்டும் என்று உணர்த்திய அந்த ஞானிகள் அனைவருமே விண்ணிலே இன்றும் ஒளியின் சரீரமாகச் சப்தரிஷி மண்டலமாக.. வாழ்கின்றார்கள்.

அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் செல்ல வேண்டும். தீமைகளை வென்று ஒளியாக மாற்றிய அருள் உணர்வை எடுத்து பாவம் செய்யும் உணர்வுகளைத் தடுத்துப் பழக வேண்டும்.

ஒவ்வொரு நொடிப் பொழுதும் புருவ மத்தியில் நம் உயிரில் மோதும் உணர்வுகளை அருள் ஒளியின் சுடராக மாற்றிடல் வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் ஒளியினை உயிர் வழியாகச் சுவாசித்துப் பழக வேண்டும்.

அப்பொழுது, நம் உயிர் “நீ எதை எண்ணுகின்றாயோ… அதுவாகின்றாய்” என்ற நிலைக்கொப்ப நமக்குள் அருள் ஒளியின் அணுக்களாக வளர்த்து அருள் சக்திகளை நமக்குள் விளையச் செய்யும்.

குருநாதர் எனக்குக் கொடுத்த ஞானத்தின் விளக்கவுரைகள்

 

குருநாதர் காட்டிய வழியில் இயற்கையின் உண்மை நிலைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான் மீண்டும் மீண்டும் இங்கே உபதேசிப்பது.
1.ஒவ்வொரு முறை சொல்லும் போதும் ஒவ்வொரு விளக்கவுரையைக் கொடுத்து
2.உங்களுக்குத் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றோம் (ஞானகுரு)

குருநாதர் முதலிலே இப்படித்தான் எனக்கும் சொல்வார். பின் ஒவ்வொன்றும் விளக்கவுரையாகக் கொடுத்து என்னைத் தெளிவாக்கிக் கொண்டு வருவார்.

எதையோ ஒன்றைச் சொல்வார். நான் அவர் சொன்ன இடத்திற்குப் போவேன். என்ன…? என்று எனக்கு அர்த்தம் தெரியாது. நான் அவர் சொன்னதைப் பார்த்துவிட்டு நான் திரும்ப வந்தவுடன்…
1.நீ பார்த்தது எல்லாம் என்ன…? என்ற நிலையில் கேள்விகளைக் கேட்பார்
2.அவர் கேட்டதற்குண்டான விடைகளைச் சொல்லத் தெரியவில்லை என்றால்
3.அதன் உணர்வுகளை நீ இவ்வாறு பார்…! இண்னென்னெ வழிகளிலே அது தெரியும்…! என்பார்.

இப்படித்தான் நான் கண்டுணர்ந்தது. குருநாதர் என்னைக் காட்டிற்குள் செல்லச் செய்ததும் இதற்குத் தான். ஆனால் நீங்கள் இங்கே அமர்ந்துள்ள நிலையிலே இதைக் கேட்டுக் கொண்டுள்ளீர்கள்.

அருள் ஞான வித்தாக குருநாதர் எமக்குள் விளைவித்ததை உங்களுக்குள் பதிவு செய்யப்படும் போது இந்த உணர்வினைப் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டால் அதை நீங்கள் கவர முடியும்.

1.விண்ணுலக ஆற்றலை அறிய முடியும்.
2.அந்த அருள் ஞானிகள் பெற்றதை நீங்களும் பார்க்க முடியும்.

ஒரு வெளிச்சத்தைப் போட்டால் அங்கே இருக்கும் பொருள்கள் நீங்குகிறது. இதைப் போல் இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் கவரப்படும் போது உங்களை அறியாது வந்த இருளை மாய்க்க முடிகிறது…. “உங்களை நீங்கள் அறியும் ஆற்றல்கள் பெருகுகின்றது…” அதனின் உணர்வின் வலிமை கொண்டு இந்தக் காற்று மண்டலத்திற்குள் மறைந்துள்ள தீமைகளை அகற்றவும் முடியும்.

உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியின் சிகரமாக மாற்றிய அந்த அகஸ்தியனின் உணர்வுகளை நீங்கள் நுகர்ந்து கவரும்படிச் செய்வதற்கு அந்த அருள் ஞான வித்தாக இந்த உபதேச வாயிலாகப் பதியச் செய்கிறேன்.

குருநாதர் எனக்குள் எவ்வாறு அந்த ஞான வித்தைப் பதிவு செய்தாரோ… அந்த அருள் ஞானிகளின் வித்தை விளைவித்தாரோ… அதை நினைவு கொண்டு வளர்க்கப்படும் போது அதை நான் காண முடிந்தது.

1.முதலில் வெறும் வித்தாக இருக்கும் போது புரியவில்லை
2.பின்னால் அவர் உபதேசித்த உணர்வுகள் சந்தர்ப்பத்தில் உருவாக்கப்பட்டு அதை நானும் காண முடிகின்றது.
3.கண்ட உணர்வுகளை எனக்குள்ளும் விளைவிக்க முடிகிறது.
4.அதைச் சொல்லாகச் சொல்லும் போது அந்தச் சொல்லின் தன்மை வினையாகிறது.
5.அதை நீங்கள் நுகர்ந்து வரப்படும் போது வினையாக உங்களுக்குள் பதிவாகிறது.
6.மீண்டும் அதை நீங்கள் நினைக்கப்படும் போது வினைக்கு நாயகனாகவும்
7.உங்களுக்குள் இருக்கும் இருளைப் போக்கிடும் நிலையாகவும் ஆற்றலும் பெருகுகிறது.

உதாரணமாக வைத்தீய ரீதியில் ஒரு மருந்தினைச் செய்தால் இந்த நோயைப் போக்கும் என்று எப்படிச் செய்கிறோமோ இதைப் போல் மெய்ப் பொருளை உணர்ந்த அந்த மகரிஷிகள் வெளிப்படுத்திய உணர்வலைகள் அலைகளாகப் படர்ந்திருப்பதை எம்மைக் கவரச் செய்தார் குருநாதர்.

அவருக்குள் அருள் ஞான வித்தாக விளைவித்தார். அதே வித்தினை எனக்குள் பதியச் செய்தார். அந்த மெய்ப் பொருளைக் குருநாதர் வழிகளில் காண முடிகிறது.

அதே போன்று குருநாதர் கொடுத்த அந்த அருள் ஞான வித்தினை உங்களுக்குள் பதியச் செய்யப்படும் போது உங்கள் வாழ்க்கையில் அறியாது வந்த இருளைப் போக்க முடியும்… என்றுமே ஒளியாக வாழ முடியும்.

மாறி மாறி ஏற்படும் வெப்ப நிலையால் தான் சிருஷ்டியே நடக்கின்றது – ஈஸ்வரபட்டர்

 

அண்ட கோளத்தில் அமில சுழற்சியில் சுழன்று கொண்டே மிதந்து கொண்டுள்ள அமில நிலைகள் அவை அவை சுழற்சி ஓட்டத்தில் சந்திக்கின்ற சீதோஷ்ண நிலையின் தொடர்பு நிலைக்கொப்ப மாற்றத் தன்மைகளை ஏற்படுத்தி சீதோஷ்ண நிலை மோதலின் தொடரைக் கொண்டு அதனுடைய குணத் தன்மையில் வலுத்தன்மை பெறுகின்றது.

உதாரணமாக நாம் பால்… காபி… கஞ்சி… போன்ற வஸ்துக்களைச் சமைத்து வைத்துள்ள நிலையில் அதைக் காய்ச்சி வைத்துள்ள பாத்திரத்தில் அதைக் காய்ச்சி அப்படியே வைத்தவுடன்
1.அதிலுள்ள ஆவி நிலை வெளிப்பட்டு மேல் நிலையில் “ஆடையாக” திடம் கொண்டு படிந்து விடுகின்றது.
2.உஷ்ணம் உள்ள வரை பாலில் ஆடை கட்டுவதில்லை
3.குளிர்ந்த நிலையிலும் அதே தன்மையில் அது உள்ளது.

ஆனால் உஷ்ணப்படுத்தி ஆறிய நிலையில் அதன் குறிப்பிட்ட கால நிலைக்குப் பிறகு அதன் நிலையில் புளிப்பு நிலை கொண்டு மாற்று நிலை ஏற்பட்டு அதை எடுக்காமல் அப்ப்டியே வைத்து விட்டால் என்ன நடக்கின்றது…?

அதில் இரண்டு மூன்று நாட்களில் பூமியின் உஷ்ண நிலைக்கொப்ப புழுக்கள் வளர்கின்றன. அந்தப் புழுக்கள் வளரும் நிலையில் அதையும் அப்படியே விட்டு விட்டால் மேலும் என்ன நடக்கின்றது…?

அதுவே பாலில் அதிகமாக வளர்ந்த புழு ஒன்றை ஒன்று உட்கொண்டு… அதற்குகந்த ஆகாரம் வேண்டி நிலையில் ஒன்றுக்கொன்று உட்கொண்ட நிலையில் பெரும் புழுக்களாகின்றது.

1.பின் ஆகாரம் கிடைக்காத நிலையில் அதனுடைய ஜீவ நிலை பிரிந்து
2.நீர் சக்தி வெளியாகி படிம நிலைக்கு அந்தப் புழு உட்படுகின்றது.
3.இதற்குப் பிறகும் அத்தொடரில் பல நிலைகள் மாறு கொள்கின்றன.

இத்தொடரைப் போன்றே அண்டத்தின் அமிலத் தொடரும் உஷ்ண நிலைக்கொப்பவும் குளிர் நிலைக்கொப்பவும் அமில நிலைச் சேர்க்கைக்குச் சமைப்பு நிலையில் “பல பல உருக்கள்…” உருப்பெறுகின்றன.

சூரியன் சமைத்த ஆறு வகைக் குணத்தின் வண்ண நிலை பூமி சமைக்கும் ஏழாம் வண்ணமாகி மோதலுடன் தொடர்பெடுத்து பூமியின் ஈர்ப்பு நிலைக்கு பூமித் தொடர்பு கொண்ட பூமி சுழற்சியுடன் சுழலுகின்ற அமிலச் சமைப்பில் தொடர் வளர்ச்சியின் தன்மையைத்தான் “இயற்கை” என்றுணர்த்துகிறோம்.

1.இதிலே மாற்ற நிலைகள் பலவாக உருப்பெற்று மாறி மாறித் தொடர்கின்ற நிலையினில்
2.ஜீவ சக்தி கொண்டு உயிரணுத் தன்மை உருவான நிலையில்
3.உணர்வுத் தன்மை வளர்கின்ற இயற்கைத் தாவர நிலை மாறி
4.சரீர நிலை உணர்வு கொள்ளும் பொழுது அறிவு நிலை கொண்ட எண்ண நிலையும் உருவாகிறது.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நமது வாழ்க்கையில் பிறருடைய தீமைகளைக் கேட்டுணர்ந்து அவர்களுக்கு நாம் நன்மை செய்திருப்போம். ஆனால்
1.அவர்கள் நாம் செய்த நன்மையைக் கூட மறந்து
2.நமக்கே தீமை செய்யக்கூடிய நிலைக்கு வருவார்கள்.

அப்பொழுது நாம்… “இவ்வளவு உதவிகள் செய்தேனே… என்னை இப்படித் துன்புறுத்துகின்றார்களே… எனக்கு இடைஞ்சல் செய்கின்றார்களே…!” என்ற உணர்வுகளை எண்ணினால் அந்த உணர்வுகள் வளரப்படும் பொழுது அதைப் “பிடிவாதமாகப் பிடித்துக் கொள்வோம்…”

அவன் செயலை நமக்குள் உருவாக்கினால் அவன் தீமையின் உணர்வே நமக்குள் வந்து “உடலுக்குள் தீமைகள் விளைந்து விடுகின்றது” என்பதை நாம் மறந்திருக்கின்றோம்.

“அவன் தீமை செய்கின்றான்…” என்பதை உணர்கின்றோம்.

ஆனால் “இப்படிச் செய்கின்றானே…” என்று தொடர் வரிசையில் அதைச் செயல்படும் பொழுது அவன் உணர்வுகள் நமக்குள் வந்து தீமையின் அணுக்களை நமக்குள் உருவாக்கி நம் உடலையே நசியச் செய்துவிடுகின்றது.

இதைப் போன்ற தீமைகளிலிருந்து விடுபடும் மார்க்கம் என்ன…?

வியாசக பகவான் காட்டிய நிலைகளில்
1.“அதோ வருகின்றான் நாரதன்…” என்ற நிலையில் கண்ணன் கூறியடி
2.கண்கள் கூறிய நிலைகள் கொண்டு “நாம் உற்று நோக்கி…” வானை நோக்கி நினைவினைச் செலுத்துதல் வேண்டும்.

ரிஷியின் மகன் நாரதன் “நாராயணனின் அபிமானப் புத்திரன்” அவன். அவனிடம் கேட்டால் “பிடிவாதமாக… நமக்குள் இயக்கும்” நிலைகளிலிருந்து விடுபடும் உபாயத்தை விளக்கிச் சொல்வான்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் “ஈஸ்வரா…” என்று நம் உயிரை வேண்டி இந்த உணர்வை நம் உடலுக்குள் பரப்ப வேண்டும்.

ஏனென்றால் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிவரும் உணர்வலைகளைச் சூரியன் காந்த சக்தி கவர்ந்து வருவதைத்தான் நாரதனாகக் காட்டினார்கள்.

அவனோ “கலகப்பிரியன்…” கலகமோ நன்மையில் முடியும். நாம் பிடிவாதமாகப் பிடித்திருக்கும் தீமையின் அணுக்களுக்குள் கலகமாகி அதை நமக்குள் நன்மை பயக்கும் சக்தியாக மாற்றும் என்பதை வியாசக பகவான் தெளிவாக உணர்த்தினார்.

ஆகவே அருள் ஒளியின் சுடராக நாம் மாற்றிட ஒளியின் சரீரமாக மாற நம் உயிரே சொர்க்கவாசலாக அமைகின்றது.

எதனைக் கூர்மையாக எண்ணி வளர்க்கின்றோமோ அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து “சொர்க்கலோகம்” அடைகின்றோம்.

இதையெல்லாம் தெளிவாக்குகின்றது நம் சாஸ்திரங்கள்.

November 2021 உபதேசம்

ஞானத்தை வளர்க்க வேண்டும் என்றால் அதற்கு ஆதாரமான விழுதுகள் தேவை

 

நம் குருநாதர் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தின் தன்மையைத் தன்னுள் கண்டுணர்ந்தார்.
1.இந்த மண்ணுலகை வென்று எப்படி விண்ணுலகிற்குச் செல்ல வேண்டும்…? என்று முழுமை பெற்றார்.
2.தான் முழுமை பெறுவதற்குண்டான பாதையைக் கற்றார்.
3.முழுமை பெறுவதற்குத் தனக்குத் துணை வேண்டுமென்று எண்ணினார்.

விண்ணுலகம் செல்ல வேண்டும் என்றால் உயிராத்மாவை விண்ணிற்கு உந்தி தள்ளத் தனக்குகந்த ஆதாரங்கள் தேவை.

1.விழுதுகள் இல்லாது எந்த மரமும் வளர்ந்திடாது.
2.ஆகவே தனக்கென்று விழுதுகளை உருவாக்குகின்றார்.

தான் பெற்ற சக்திகளை “ஒவ்வொரு உயிரும் பெற வேண்டும்” என்ற நிலையினை அவர் தான் இங்கே செயல்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் இந்த உணர்வலைகள் கொண்டு எல்லோரும் ஏகோபித்த நிலைகளில் நமது குரு காட்டிய வழியில் தியானத்து அதைச் செயல்படுத்துவோம்.

1.உங்களுக்கு நான் விழுது… எனக்கு நீங்கள் விழுது…! என்ற இந்த உணர்வுகள் வளர வேண்டும்.
2.ஒன்றின் துணை கொண்டு தான் ஒன்று வளர முடியும். ஒன்றில்லாது ஒன்று விளையாது

அனைத்தையும் வெறுத்தேன்… நான் தனித்துச் சக்தி பெறுவேன் என்றால் அது சாத்தியம் இல்லை

அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனும் தனக்குள் அனைத்தையும் இணைத்துத் தான் ஒளியாக்கினான். தனக்குள் அரவணைத்தான்… எதற்கும் தீங்கு செய்யாது அடக்கினான்.

ஆகவே தான் எதனையும் ஒளியாக மாற்றும் திறன் பெற்றான். அவன் பெற்ற அந்த உணர்வுகளைத் தியானத்தின் மூலம் நமக்குள் கவரப்படும்போது நிச்சயம் நாமும் அதைப் பெறலாம்.

துணுக்குத் துணுக்காகச் சொல்கின்றேன் என்று எண்ண வேண்டாம். இதை இப்போது உங்களுக்குள் பதிவு செய்கிறேன். சந்தர்ப்பத்தில் நினைவாக்கித் தீமைகளை அகற்றும் சக்தியாக உங்களுக்குள் விளையும்… அப்படி விளைய வேண்டும் என்பதற்குத்தான் இதைத் தெளிவாக்குகின்றேன்.

குருநாதர் எனக்கு எப்படி கற்றுக் கொடுத்தாரோ… பெறும்படி செய்தாரோ… அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நீங்களும் பெற வேண்டும்… உங்களால் அதைப் பெற முடியும் என்ற முழு நம்பிக்கையில் சொல்கின்றேன்.

ஆகவே… உங்களுடைய நினைவுகள் கூர்மையாக இருத்தல் வேண்டும்.யாம் உபதேசிப்பதை ஆழமாகப் பதிவு செய்தல் வேண்டும். பதிந்ததை மீண்டும் நினைவிற்குக் கொண்டு வர வேண்டும். அந்த நினைவின் ஆற்றல்… அதுவே உங்களை வளர்க்கும். அதாவது
1.முதலில் அதனை நீங்கள் எடுத்து வளர்க்க வேண்டும்
2.பின் அது உங்களை வளர்க்கும்
3.இந்த அருள் ஞானத்தை உங்களுக்குள் போதிக்கும்
4.உங்களை அருள் வழியிலே என்றுமே அழைத்துச் செல்லும்.

உள் மனம்… வெளி மனம்… என்ற இரு நிலையால் வரும் போராட்டம் நல்லதா கெட்டதா…? – ஈஸ்வரபட்டர்

பிறப்பெடுத்த நாளிலிருந்து நாம் இறக்கும் காலம் வரை… “நினைவின் ஓட்ட நிலை” சுழன்று கொண்டே தான் உள்ளது.

எண்ணத்தின் சரீர உணர்வின் நினைவு நிலை இச்சரீர வாழ்க்கையில் மட்டும் தானா…? ஆவி நிலையில்… கர்ப்பக் காலத்தில்… இதன் ஓட்ட நிலை யாது…? என்ற நிலையை உணரல் வேண்டும்.

ஆத்ம பிம்பத்தில் இந்நினைவலைகளின் சுழற்சி ஓட்ட எண்ண உணர்வு ஒவ்வொரு நொடிப் பொழுதும் ஓடக்கூடிய நிலைக்கொப்ப எண்ணத்தின் நினைவின் ஆணைக்கொப்ப சரீரச் செயல் சொல்லாகவும் செயலாகவும் நடைபெறுகின்றது.

எண்ணத்தின் ஓட்ட இயக்க நிலைக்கொப்பச் சரீரச் செயல் நடக்கவும்… உண்ணவும்… எழுதவும்… சரீரத்தால் இயங்கத்தக்க அவய நிலைகள் எண்ணத்தின் உணர்வு உந்தியவுடன்… தன் தன் செயலைப் புரிகின்றது.

எண்ணத்தின் நினைவோட்டத்தை
1.செய்த நிலை… செய்யப் போகும் நிலை… செய்யும் நிலை என்ற தொடரில் எண்ணத்தைச் செலுத்தும் நிலையிலும்
2.சரீர அங்கத்தின் செயல் நிலை செயல் கொள்ளா எண்ண நிலையிலும்
3.எதில் எதிலெல்லாம் எண்ணத்தின் உணர்வுகள் உருள்கின்றதோ அத்தொடரில் எல்லாம்
4.ஜீவ சக்தியுடன் கூடிய உஷ்ண அலை கொண்ட இச்சரீர ஓட்ட இயக்கத் தன்மையிலேயே
5.சுவாசத்தின் மோதலில் – நடக்கப் போகும் நினைவின் எண்ண உணர்வு செலுத்தக் கூடிய தருணத்திலும்
6.சுவாச அலையின் துடிப்பு நிலை அணு வளர்ப்பைக் கொண்டு
7.நினைவலையின் எண்ண உணர்வை இச்சரீர பிம்ப வாழ்க்கையில்
8.ஆத்மா தன் பதிவு நிலைக்குப் பதித்துக் கொள்கின்றது.

ஆனால் நடை முறையில் அவரவர்கள் உடல் அமைப்பு நிலைக்கொப்ப நினைவின் எண்ண ஓட்டம் சுழன்று கொண்டேயுள்ள நிலையில் “ஒரே சமயத்தில்” இரண்டு நிலையான போராட்ட நிலையும் இச்சரீரத்திற்கு உண்டு.

நினைவின் எண்ணத்தால் ஆத்மாவில் பதியப் பெற்ற எண்ண நிலையும்… எண்ணத்தின் உணர்வை ஆத்மா சமைக்கும் தருண நிலை மோதலில்
1.“பதிவு பெற்ற நிலை… பதிவாக்கும் நிலை…!” இந்த இரண்டு நிலையில்
2.ஒன்றை நாம் முடிவெடுக்க எண்ணத்தைச் செலுத்தும் தருணத்தில் போராட்டமாகின்றது.

எச்செயலுக்காக எண்ணத்தைச் செலுத்திச் செயல் கொள்ள விழைகின்றோமோ அதே செயலைச் செய்விக்க வேண்டிய நிலைக்காக
1.ஆத்மாவின் பதிவு நிலையில் ஏற்கனவே பதியப் பெற்ற நிலையில் எண்ணங்கள் மோதும் பொழுது
2.:உள் மனம் வெளி மனம்” என்ற இரண்டு நிலையான ஓட்ட நிலையில் மோதும் எண்ணச் செயலை
3.இச்சரீர பிம்ப வாழ்க்கையில் காண்கின்றோம்.

அதில் சில போராட்ட நிலைகளும் எண்ணத்தில் ஏற்பட்டு அதன் வழியிலும் சில முடிவுகள் ஏடுக்கின்றோம்.

சரீர அங்கத்தில்… ஆத்மாவின் செயல் இயக்கும் பிறப்பு இறப்பு கால ஓட்டத்தில்… எண்ணத்தின் நினைவோட்ட நிலை “இரண்டு நிலையில்” செயல் கொள்ளும்.
1.இத்தகைய இரண்டு நிலையே
2.மனிதனின் அறிவு… பகுத்தறியக் கூடிய உயர் ஞானத்திற்கு வித்தாக அமைந்துள்ளது.

மிருகங்களின் செயலில் இத்தகைய இரண்டு நிலை கொண்ட எண்ண ஓட்ட அறிவின் பகுத்தறியும் தன்மை நிலை குறைவாக உள்ளது. மேலும் சரீர அங்கத்தின் செயல் தன்மையும் மனிதனை ஒத்த சொல்லாற்றல் நிலையும் குறைவு.

ஆகையினால்… சரீர உணர்வின் நிலைக்கொப்ப ஆத்மாவின் பதிவு நிலை செயலை “எண்ண உணர்வின் மோதாத சரீர எண்ண நிலைக்கொப்ப… ஒரு நிலையில் தான்” மிருகத்தின் செயல் உள்ளது.

ஆனால் மனித ஞானத்தில் உயர்ந்த சக்தி நிலையாக ஆத்மாவின் பதிவு நிலை செயல் ஞானம் அமைந்துள்ளது.

உடலுடன் உள்ள சரீர ஜீவ சக்தியின் செயலினால் மனித ஆத்மாவின் உயர்வு நிலையே “உள் மனம்… வெளி மனம்…” என்ற நினைவின் எண்ண உணர்வு செயல் கொள்ளும் செயலினால்…
1.அறிவின் பகுத்தறிவு நிலை கொண்டு
2.ஞானத்தின் வளர்ச்சியை எந்நிலைக்கும் வளர்த்துக் கொள்ள முடியும்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆத்மாக்கள்… சரீரத்தில் உள்ள பொழுது பதித்துக் கொண்ட அதனின் நினைவோட்டங்கள் ஆத்மாவுடன் பதிவாகி… ஆவி நிலையில் சுழன்று ஓடினாலும் எவ் எண்ண அலையாக இந்த ஆத்மா பதித்துக் கொண்டதோ அதே எண்ண நிலைக்கொப்பத்தான் சுழல முடியும்.

அவ்வாறு சுழலும் நிலையில் தான் பெற்ற சுவை குண எண்ண நிலைக்கொப்பச் சரீரங்கள் கிடைக்கும் பொழுது அவ் ஈர்ப்பில் இவை சிக்கி ஆவி நிலையில் உள்ள ஆத்மா சரீர ஈர்ப்பில் உட்புகுந்து விடுகின்றது.

அதாவது…
1.ஜீவ சக்தி கொண்ட அலை கிடைத்தவுடன்
2.தன் ஆத்மாவின் வலுவை வளர்க்க நீர் சத்தின் உஷ்ண நிலை கிட்டியவுடன்
3.அதனுடைய வளர்ப்பு நிலை வளர்ச்சி கொண்டு பிறப்பு நிலைக்கு வருகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இன்று நாம் ஆலயத்திற்குச் செல்லும் நிலையில் என்ன செய்கின்றோம்…? பழனியில் முருகன் கோவிலில் பார்க்கலாம்.

உள்ளே வரிசைப்படுத்திச் செல்லும் பொழுது அங்கே மணியடித்துத் தீபாரதனை காட்டினால் போதும். உடனே என்ன நடக்கும்…? இவர் அவரைத் தள்ளுவார்,.. அவர் இவரைத் தள்ளுவார்.

அப்படித் தள்ளும்போது, “ஏனய்யா… எருமை மாதிரி இப்படித் தள்ளுகின்றாய்…?” என்று இந்தப் பக்கம் திரும்புவார்.

உடனே அவர் “நீ ஏனய்யா… எனக்கு மறைக்கின்றாய்…?” என்ற இந்த உணர்வு வரும்.
1.இங்கே மறைக்கப்படும்…
2.ஆனால்… இந்தப் பக்கம் காசைக் கொடுத்துச் சாமியைத் தரிசனம் செய்ய வருவோரைப் பார்த்தபின் என்ன செய்வார்கள்…?

“ஐயா…! வாங்க வாங்க…” என்று வாட்ச்மேன் இவர்களைக் கூப்பிடுவார். ஏனென்றால், அவர் 50 அல்லது 100 ரூபாய் பணம் கொடுக்கின்றார். “ஐயரே…, நீ சீக்கிரம் மணி அடி ஐயா…” என்று இவர் அவருக்குக் கட்டளை இடுவார்.

கோவிலின் இன்றையப் பண்புகள் இப்படித்தான் இருக்கின்றது.

நான் (ஞானகுரு) பழனியில் வாழ்ந்தவன். இதையெல்லாம் அடிக்கடி பார்த்தவன்.

உயர்ந்த பண்பு கொண்டு அன்று போகன் மனிதனுக்குள் அறியாது சேர்ந்த தீமைகளை அகற்றிடும் நிலைக்காக இந்த முருகன் சிலையை அமைத்தான்.
1.அந்தச் சிலையை உற்றுப் பார்த்து நம் எண்ணத்தால் அந்தச் சக்தியைக் கவரப்படும் பொழுது
2.நம்மையறியாது வந்த தீமைகளை அகற்றும்படிச் செய்தான்.

ஆனால் நாம் யாரும் அதைச் சிந்திக்கவில்லை.

இன்று முருகனைப் பற்றிய பக்திப் பாடல்களும் பல நிலைகள் கொண்டு எங்கிருந்தோ கால்நடையாக நடந்து சென்று அந்த முருகன் சிலைக்கு அபிஷேகம் செய்தால் நமக்குப் பண்பு கொண்டு செய்வான். அவன் நமக்கு அருள்பாலிப்பான் என்ற நம்பிக்கையைத்தான் அங்கே காட்டுகின்றார்கள்.

1.ஆசையையும் ஆர்வத்தையும் தூண்டுகின்றார்களே தவிர
2.எதனை ஆசைப்பட வேண்டும்…? எதன் மேல் நாம் ஆர்வத்தைக் காட்ட வேண்டும்…? என்ற நிலைகள் அங்கே இல்லை.

ஆகவே இதை போலப் பண்புகளை மறந்து நல்ல ஒழுக்கங்களை மாற்றிவிட்டு நம்மையறியாமலே நமக்குள் தண்டனை கொடுக்கும் அணுக்களை நமக்குள் வளர்த்துக் கொண்டுள்ளோம்.

ஒருவர் மேல் பகைமையாகி விட்டால் அந்தப் பகைமையை ஊட்டும் சக்தியாக எனக்குள் வந்துவிடும். பின் அவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவருக்கு எதையாவது இடைஞ்சல் செய்ய வேண்டும்… என்ற எண்ணங்கள் வரும்.

நண்பர்களுக்குள் பகைமை ஆகிவிட்டால் அவர் தொழிலில் முன்னேற்றம் அடைந்து வந்தால் போதும்.

அடுத்து இதைத் தலைகீழாக எப்படி மாற்றிட வேண்டும் என்றும்… பகைமை உணர்வு கொண்டு அடுத்து வியாபாரத்திற்குச் சென்றால் அவரைப் பற்றித் தவறாகச் சொல்லி அவரைக் கீழே வீழ்த்திவிடும் உணர்வுகள்தான் அங்கே தோன்றுகின்றது.

1.அவருக்குக் கெடுதல் செய்து விட்டால் அவர் வாழ மாட்டார்…! என்று எண்ணுகின்றோம்.
2.அதே உணர்வுகள் நமக்குள் வளர்ந்து விட்டால்
3.நமக்குள் உள்ள நல்ல குணங்கள அது செயலற்றதாக மாற்றுகின்றது என்று எண்ணுவதில்லை.

இதைப் போன்ற நிலைகளை மாற்றியமைப்பதற்குத்தான் பக்தி என்ற பெயரால் உருவங்களை அமைத்து உயர்ந்த குணங்களைக் காவியமாக்கியுள்ளனர்.

1.அந்தக் காவியத்தின் தன்மையை நாம் எண்ணத்தால் எடுத்தோம் என்றால் “அத்வைதம்…”
2.இந்த உருவத்தைப் பார்க்கும் பொழுது “துவைதம்…”
3.அந்த உயர்ந்த குணங்களை நாம் நுகர்ந்தால் நம் உயிரிலே பட்டால் “விசிஷ்டாத்வைதம்…” உணர்ச்சிகள் நம்மைத் தூண்டுகின்றது.

அந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டபின் உணர்வின் அணுவாக மாறும் பொழுது நம் உடலாக மாறுகின்றது… துவைதம்.

இவ்வாறு நம் உடலை ஆக்கவேண்டும் என்று நல்ல பண்பு கொண்டு ஆலயங்களைக் காட்டியுள்ளார்கள். இதை நாம் இப்படி வணங்கி வந்தாலும் அடுத்த கணம் ஒருவர் நம்மிடம் கேட்கின்றார்.

இந்தக் கல்லை வணங்கி உனக்கு என்ன கிடைத்தது என்று கேட்கின்றார். இந்தக் கல் உனக்குத் தருமா..,? என்று எண்ணுகின்றார்கள்.

ஆனால்…
1.அந்தக் கல்லிலே காட்டப்பட்ட காவியக் கருத்துக்களை
2.நாம் எண்ணத்தால் எடுக்கப்படும் பொழுது இது அத்வைதமாகி
3.நம் உயிரிலே படப்பட்டு அந்த உணர்வின் அணுவாகி
4.அந்த அணுவான பின் அதற்கு இரையாகத் தேவைப்படுகின்றது.

அந்த நல்ல குணங்களைத்தான் அது உணவாக உட்கொள்ளும்.

அந்த நல்ல குணங்களை உணவாக உட்கொள்ளும் அதை ஈர்க்கப்படும் பொழுது நாம் சுவாசித்து நம் உயிரிலே படும் பொழுது அந்த நல்ல செயல்களைச் செயல்படும் நிலைகளும் மகிழ்ச்சி பெறும் நிலைகளும் நமக்குள் உருவாகின்றது.

அதே சமயத்தில் அந்த அணுவின் தன்மை வளர்ச்சி பெற்றால் உடல் ஆரோக்கிய நிலையும் பெறுகின்றது. இதையெல்லாம் தத்துவ ஞானிகள் சாதாரண மக்களும் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள இவ்வழியைக் காட்டினார்கள்.

தெய்வங்களுக்குப் பல பல வாகனங்களை ஏன் போட்டுள்ளார்கள் ஞானிகள்…?

 

கருப்பணசாமிக்கு முன் மோப்ப நாயை வைத்திருப்பார்கள். ஞானிகள் காட்டிய வழியில் அதனின் உட்பொருளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்,

உதாரணமாக ஒரு நாயை யார் வளர்க்கின்றாரோ அவருக்குச் சாதகமாகத்தான் அந்த நாயும் இருக்கும்.
1.அவர் நல்லவராக இருந்தால் அவர் சொன்னபடி எல்லாம் அது செய்யும்.
2.அவர் போக்கிரித்தனம் செய்தால் மற்றவர்கள் தாக்க வந்தால் அவர் மீது உள்ள விசுவாசத்தின் நிலை கொண்டு
3.அவரைக் காக்க அந்தப் போக்கிரித்தனமான நிலைகளில் நல்லவரைத் தாக்க அந்த நாய் வருகின்றது.

இதைப் போன்றுதான் நாம் எடுக்கும் மோப்பங்கள் (சுவாசம்) சந்தர்ப்பத்திலே தீமையான உணர்வுகளைச் சுவாசித்து விட்டால் அந்த உணர்வுகள் அனைத்தும் நம்மை இருள் சூழச் செய்து…
1.நம்மை அறியாமலேயே தவறு செய்யும் நிலைகளுக்கு அழைத்துச் செல்லும்
2.கொடூர நிலைகளுக்குப் பழி தீர்க்கும் உணர்வினை உருவாக்கும்.

ஆகவே… இருண்ட நிலைகள் வரும்போது மனிதனுக்குள் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது… நல்ல உணர்வுகளைக் கொன்று விடுகிறது… என்ற இந்த உணர்வினைக் காட்டுவதற்குத்தான் கருப்பணச்சாமிக்கு முன் வாகனமாக நாயை வைத்துக் காட்டியுள்ளனர் ஞானிகள்… கையிலே அரிவாளையும் வைத்துக் காட்டி இருப்பார்கள்.

நமக்குள் இயங்கும் ஒவ்வொரு குணத்தின் இயக்கத்தையும் உணர்த்துவதற்காக ஒவ்வொரு நிலைகளிலும் தெய்வத்திற்கு உருவங்கள் அமைத்து அதற்கு முன் வாகனங்களையும் ஞானிகள் அமைத்துள்ளனர்.

1.கடவுளின் அவதாரம் பத்து என்றாலும்
2.ஒவ்வொரு ஊரிலும் அமைக்கப்பட்டுள்ள தெய்வங்களுக்குப் பத்து நாள் திருவிழா என்றாலும்
3.ஒவ்வொரு கோயில்களிலும் புலி வாகனம் அன்ன வாகனம் மயில் வாகனம் பரி வாகனம் சிம்ம வாகனம் என்று வாகனங்களை வைத்திருப்பார்கள்.

மாரியம்மனோ அல்லது காமாட்சியோ மற்ற தெய்வங்களோ அந்தந்த உணர்வின் குணங்களுக்கு
1.ஒவ்வொன்றும் தன் உணர்வின் தன்மை கொண்டு எடுத்து
2.அந்த உணர்வின் சக்தியை இணைத்து… அது ஒரு எண்ணமாக உருவாகி… அந்த எண்ணமே காக்கும் நிலையாகி
3.அது இப்படி ஒவ்வொன்றும் இணை சேர்த்து 1008 குணங்களாக மாறி
4/மனிதனாக உருவாக்கக் காரணமாக இருந்தது.

நாய் நரி பூனை இதைப் போன்று பல உயிரினங்கள் அது ஒன்றை ஒன்று விழுங்கினாலும் வலுவானவற்றிலிருந்து தன்னைக் காத்திடும் உணர்வு கொண்டு ஒரு அணுவின் தன்மையாக விளைந்து அடுத்த உடல் பெறுகின்றது.

1.அதன் வழிகளில் ஒவ்வொரு குணங்களையும் சிருஷ்டித்து
2.இப்படி மனித உடலுக்குள் 1008 குணங்களாக உருவானது என்று
3.1008 தெய்வங்களை வைத்துக் காட்டுகின்றார்கள்.

இத்தகைய இயற்கையின் நிலைகளை உணர்ந்து நமக்குத் தெளிவாக வகுத்துக் கொடுத்தவன் அன்றைய மகா ஞானியான அகஸ்தியன் தான்

எண்ணத்தின் கூர்மை எது…! அதைப் பயன்படுத்த வேண்டிய முறை எது…? – ஈஸ்வரபட்டர்

 

1.நம் செவியில் படும் ஒலி நாதத்தின் ஈர்ப்பிற்கொப்ப…
2.எண்ண உணர்வு சமைக்கப்படும் அணு வளர்ச்சி கொண்டு தான்
3.“உடல் வாழ்க்கை” நடக்கின்றது.

உடலின் இயக்கத்தால் எடுக்கக்கூடிய நம் எண்ண நிலையின் செயல் உணர்வு நிலைக்கொப்ப அணு வளர்ப்பின் முலாமைத் தான் (ஆத்மாவில்) நாம் பெறுகின்றோம்.

அதனால் வாழ்க்கையுடன் ஒன்றிய ஈர்ப்பு வட்டத்தில் ஒலி கொண்டு ஒலி பெறும் இச் சரீர இயக்கத்தை
1.உயர் நாத விந்து வளர்ப்பு நிலை பெறத்தக்க
2.ஒலி நிலை கொண்ட ஒளி பெறும் (மகரிஷிகளின்)
3.காந்த மின் அலைத்தொடர் வளர்ச்சிக்குக் கொண்டு செல்லுதல் வேண்டும்.

உயர் ஞான சக்திகளின் வளர்ப்பாக உடலில் ஒளியான அணுக்களை உருவாக்கி… அதன் மூலம் உடலின் எலும்புகளின் ஊன்களை உறுதியாக்கும் தன்மை பெற்றால் நம் ஆத்மாவே ஒளி நிலை கொண்ட “ஜோதி நிலை” அடைகின்றது.

1.எதனின் ஈர்ப்புப் பிடியிலும் சிக்காத இந்த ஆத்மாவின் ஒளிப் படர்வின் செயலினால்
2.ஒளி பெற்ற ஆத்ம சரீர அலையிலிருந்து வெளிப்படும் ஒலி அலைகள்
3.ஒளி கொண்டு திக்கெட்டும் பாயும் உயர் ஞான ஒலிகளாக…!

ஒலி பாய்ச்சி ஒளி கொண்டு எத்தொடரில் உயர் ஞான சக்தியினால் எடுக்கப்பட்ட சொல் நாதம் ஒலிக்கின்றதோ அச்சொல்லின் செயல் “வாக்காகச் செயல் கொள்ளும்…”

“சொல் வாக்குப் பெற்ற சக்தி நிலை” என்பது விழி கொண்டு பாய்ச்சப்படும் ஒளியின் கூர்மை கொண்டு… ஒளி வழித் தொடர் அலையின் உயர்வு நிலை… “ஒளி பட்ட இடத்திலேயே செயலாக்கம் ஆகும்…”

அதாவது…
1.எரியும் பொருள்களில் சிறு நெருப்புப் பொறி பட்டவுடன்…
2.சிறு நெருப்புப் பொறியானது பெரும் நெருப்பாகச் சகலத்தையும் பஸ்பமாக்குகின்றது.

அதைப் போன்று இவ்வொளியைப் பாய்ச்சி உயரக்கூடிய வழி நிலைக்கும்
1.ஒலி கொண்டு ஒளி பெற்ற “விழி ஒளியின் கூர்மை கொண்டு”
2.எந்த அலைத் தொடரையும் மாற்றவல்ல “ஒளி நிலை பெறலாம்…” இந்த ஒளி நிலை ஞானத்தால்.

சரீரத்தின் எண்ண உணர்வைச் செலுத்தப்படும் செயல் கொண்டு
1.செயலின் வழி ஞானம் மிகவும் கூர் பாய்ச்சிய தன்மையில்
2.வாழ்க்கை வழி முறையில் அதை மிகவும் சாந்தத் தன்மையில் செயல்படுத்த வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நமது வாழ்க்கையில் எப்பொழுது துன்பத்தைக் காணுகின்றோமோ அந்த உணர்வுகள் நமக்குள் விளையாது அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஒருவர் நம்மைத் துன்பப்படுத்தினாலும்…
1.எங்கள் பார்வை அவரை நல்லவராக்க வேண்டும்
2.எங்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அவர் தீங்கின் உணர்வுகள் நமக்குள் பதிவாகி அவரின் உணர்வு நமக்குள் வளர்ந்து விட்டால் “நமக்குத் தீமை செய்யவேண்டும்…” என்று அவர் எண்ணிய உணர்வுகள்
1.அவரை எண்ணும் பொழுதெல்லாம்
2.இந்த உணர்வுகள் நமக்குள்ளே தீமையை விளைய வைக்கும்.

அப்பொழுது அந்தத் தீமை செய்தவன் நம்மைப் பார்த்துச் சொல்வான். “பார்…! அவன் செய்த வினைக்குத்தான் அனுபவிக்கின்றான்…” என்று அவன் அதைக் கண்டு இரசிப்பான்.

அப்படி இரசிக்கப்படும் பொழுது அதே உணர்வின் தன்மை வருகின்றது.

தீமைகள் விளைந்த இவன் இறந்தபின்
1.அவன் (தீமையை ரசித்தவன்) உடலுக்குள்ளே சென்று
2.அந்தத் தீமையை விளைய வைத்து அவனை வீழ்த்திவிடுவான்…! என்பதை மறந்து விடுகின்றான்.

இயற்கையின் நியதியாக இவ்வாறு இயக்கும் நிலைகளிலிருந்து யாரும் தப்ப முடியாது.

நம்மை உருவாக்கிய ஈசனின் துணை கொண்டு ஒளியின் சரீரமான அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பெருக்கி அந்த உணர்வுகளை நம் உடலுக்குள் கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்.

மனிதனின் வாழ்க்கையில் எதைச் சுவாசிக்கின்றோமோ விநாயகர் தத்துவத்தில் மூஷிகவாகனா என்று காட்டியுள்ளார்கள்.

கசந்த வாழ்க்கையை நடத்தி அப்படிக் கசந்த வாழ்க்கையே கணங்களுக்கு அதிபதியானால் இந்த மனிதப் பிறவியில் எதன் நிலைகளை எடுத்தாயோ அதற்குத்தக்கவாறு பரிணாம வளர்ச்சியில் தேய்பிறையாகக் கீழே போவாய்…! என்று காட்டுகின்றார்கள்.

உதாரணமாக பௌர்ணமி அன்று முழு நிலாவாக இருக்கின்றது. ஆனால் அடுத்த நாள் பார்த்தால் மற்ற கோள்கள் மறைக்கின்றது. சூரியனின் கதிரியக்கங்கள் இதற்கு வராது தடுக்கப்படும் பொழுது ஒரு பக்கம் இருள் சூழ்ந்த நிலையாக வருகின்றது.

இப்படி நாளுக்கு நாள் இதன் ஒளிக்கதிர்கள் மங்க மங்க சந்திரனே நம் கண்ணுக்குப் புலப்படாமல் இருள் சூழ்ந்த நிலை ஆகிவிடுகின்றது. பின்… சூரியனின் ஒளிக்கதிர்களை அது எடுக்கப்படும் பொழுது சிறுகச் சிறுக மீண்டும் ஒளியாகின்றது.

இதைப் போன்று தான்
1.நம் உயிர் மற்றவர்களுடைய துன்பங்களை எடுக்கபப்படும் பொழுது
2.மனிதனாக வளர்த்த இந்த அணுக்கள் சிறுகச் சிறுக மறைகின்றது.
3.இந்த உணர்வின் தன்மை வரும் பொழுது நோயாகின்றது.
4.இந்த உடலை விட்டுச் சென்றபின் மனிதனல்லாத உணர்வின் உருக்களாக அது உருப்பெறச் செய்கின்றது.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக அன்று ஞானிகள் காவியங்களைத் தீட்டியுள்ளார்கள். இதைப் போன்ற கொடுமைகளிலிருந்து நாம் மீள்தல் வேண்டும்.

மீள வேண்டும் என்றால் அந்த விநாயகர் தத்துவத்தில் காட்டியபடி நம்முடன் வாழ்ந்த வளர்ந்த முன்னோர்களை விண் செலுத்த வேண்டும்.

எங்கள் குலதெய்வங்களான பாட்டன் பாட்டி உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து என்றும் பேரின்பப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்று குடும்பத்திலுள்ளோர் அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாலையில் துருவ தியானத்தில் விண் செலுத்த வேண்டும்.

அப்பொழுது உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாக்கள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலுள்ள சப்தரிஷி மண்டலங்களுடன் இணைகின்றது.

மனிதனின் வாழ்க்கையில் தெளிந்திட வேண்டும் என்ற எண்ணத்தின் ஒளிகள் அங்கே மிஞ்சுகின்றது. அதன் வழி நாமும் விண் செல்லலாம்.

அதை நாம் பெற்று இந்த வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளிலிருந்து விடுபட முடியும். உடலை விட்டுச் செல்லும் பொழுது நாமும் அவர்கள் சென்ற எல்லையை எளிதில் அடைய முடியும்.

சகுணம் பார்க்க வேண்டுமா…? எப்படிப் பார்க்க வேண்டும்…? ஈஸ்வரபட்டர்

 

கழுதையின் சரீரச் செயலே பல சுமைகளைச் சுமக்கவல்ல ஜட உணர்வு கொண்ட அமைப்பில் உள்ளது. கழுதை அதன் கூட்டமைப்பு உருவம் பெற்ற ஜெனிப்புத் தன்மைக்கொப்ப அதனுடைய ஒலித் தன்மை “விகார நிலையில் ஒலிக்கின்றது…!”

இதனை நம் முன்னோர்கள் ஒலியின் விகாரத்தை மனித உணர்வு பெற்றால் என்ன நடக்கும்…? என்று உணர்த்தினார்கள்.

ஒரு விகாரமான ஒலித் தன்மையை செவி நிலை பெற்று அதன் மூலம் அமையும் சுவாசத்தின் அணு வளர்ப்பு வளர்க்கும் நிலைக்கொப்ப எண்ணத்தின் உணர்வு செயல்படுவதை “அன்றே” நம் முன்னோர்கள் காட்டினார்கள்.

அதாவது மனித வாழ்க்கைக்கு… பூமி சுழற்சியில் பிறப்பெடுத்த ஜீவ ஜெந்துக்களின் தொடர்புடன் வாழ்க்கை நிலை ஒன்றியதனை
1.ஒலியின் நாதத்தால் மனித உணர்வு ஞானம் வழித் தொடர் அமையவல்ல நிலையை
2.நன்மை தீமை என்ற சகுணங்களை அடிப்படைக் குணமாகக் காட்டி
3.கழுதை கத்தும் ஒலியையே நன்மை என்ற சகுண நிலையைக் காட்டி
4.நல்லது நடக்க கழுதையின் கத்தல் உகந்தது…! என்று உணர்த்தினார்கள்.

மனித வாழ்க்கை அமைப்பில் மோதுண்டு சுழலுகின்ற ஜீவ ஜெந்துக்களின் தொடர்பில் இருந்தெல்லாம் மனித ஒலி ஒளி சமைப்பு நிலைக்கொப்பத் தான் மனிதனின் எண்ண உணர்வு செயல்முறை எண்ண வளர்ச்சி ஆகியன வளர்கிறது என்ற உண்மையை உணர்ந்த நம் முன்னோர்கள் தான் இதை இப்படி வழிப்படுத்தினர்.

இன்றல்ல நேற்றல்ல…! பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே
1.ஒளியின் ஒலி நாதம் கொண்டு
2.உயருகின்ற உயர்வு நிலைக்காக வழியமைத்துக் காட்டினார்கள்.

ஒலி கொண்டு சேமிக்கப்பட்ட அமில உணர்வு எண்ண நிலைக்கொப்ப அதனதன் அணு வளர்ந்து… அந்த அணுவிற்குகந்த அமில முலாமின் கரைசலை ஜீவ சரீரங்கள் பெற்று… வளருகின்ற வளர்ச்சி நிலை ஒவ்வொன்றின் தொடரும் “ஒலி கொண்டு ஒளிரும் நிலை பெற்றது தான்…!”

அந்தந்தச் சரீரக்கூறின் அமிலச் சேர்க்கைக்கு ஒப்பத்தான் ஒலித் தன்மை ஒலிக்கின்றது.

கழுதை கத்தும் தருணத்தில்… அதனுடைய உணர்வின் சந்தோஷ மிகுதி உந்தும் வேளையில் அதன் கத்தும் ஒலியானது ஜீவ உணர்வுடன் தான் வெளிப்படுகிறது. அதை நாம் கேட்கும் பொழுது
1.அதனுடைய (சந்தோஷ) இனிமை உணர்வுக்கொப்ப இனிமை பெற்று
2.இனிய நற்காரியங்கள் நடைபெறுவதை உணர்த்தியது
3.நம் முன்னோர் காலத்திலிருந்தே வழி வழியாக வந்தது தான்.

ஒலிக்கும் ஒலியைக் கொண்டு… அவ்வொலியை நாம் ஈர்க்கும் நிலைக்கொப்ப…
1.நம் எண்ணத்தின் உணர்வு எடுக்கும் அலைத் தொடரைக் கொண்டு
2.மனித வாழ்க்கையில் செயல் கொள்ளகூடிய செயல் முறை உந்தல் நடைபெறுகின்றது என்று தெளிவாக்கினார்கள் முன்னோர்கள்…!

இன்று நாம் எல்லாவற்றையுமே பார்த்தாலும் நல்லதை நுகர்கின்றோமா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நாம் பிறருடைய கஷ்டங்களைப் பார்த்து விட்டால் அது நமக்குள் மாறி கணங்களுக்கு அதிபதியாகி விட்டால் தீய வினைகளே நமக்குள் உருவாகின்றது.

ஏனென்றால் நாம் வாழ்க்கையில் எத்தனையோ கசந்த நிலைகளைப் பார்க்க நேருகின்றது, கேட்க நேருகின்றது, நுகர நேருகின்றது. அதைத்தான் அங்கே “வேம்பாக…” வைத்துக் காட்டுகின்றார்கள்.

அதே சமயத்தில் கசந்த நிலைகள் வந்தாலும் அதைத் துடைப்பதற்காக விநாயகருக்கு அந்தப் பக்கம் அரசை வைத்தது. “அரசு…” என்றால் துருவ நட்சத்திரம்

இந்தச் சூரியக் குடும்பத்திற்குள் தீமைகளை அடக்கி ஆட்சி புரிந்து கொண்டிருப்பது துருவ நட்சத்திரம். அதன் வழிகளில் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலம்.

துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகளை நாம் நுகர்ந்து நமக்குள் வரும் தீமைகளை அடக்கும் வல்லமை பெறவேண்டும்.

எதன் துணை கொண்டு…?

1.ஆறாவது அறிவால் தான் உருவாக்க முடியும்.
2.இதைத்தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்று காவியங்களில் காட்டப்பட்டுள்ளது.

“நாம் நுகரும் உணர்வுகள்…” உயிருடன் இணைக்கும் பொழுது அது உருவாக்கும்.

இல்லை என்றால் சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வுகள் கோபம் வேதனை ஆத்திரம் பயம் இதைப் போன்ற தீமையான குணங்களை நம் உயிர் நமக்குள் உருவாக்கிவிடுகின்றது.

அவை அனைத்தும் கருவாகி விட்டால் உடலுக்குள் அணுவாக்கி விடுகின்றது நம் உயிர்.

இதை மாற்ற வேண்டுமல்லவா…!

தீமையான அணுக்கள் நமக்குள் விளையாமல் தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

அதிகாலையில் 4 மணிக்கெல்லாம் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வலைகள் பிரபஞ்சத்தில் படர்ந்து வருகின்றது. பிரபஞ்சத்திலிருந்து வரும் அந்த உணர்வுகளைத் துருவப் பகுதி வழியாக நம் பூமி கவர்கின்றது.

நம் பூமிக்குள் வருவதற்கு முன் நம் நினைவாற்றலைப் பெருக்கி விண்ணை நோக்கிச் செலுத்துதல் வேண்டும்.

1.அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும்
2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும்
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும்
4.சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும்
5.நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி அதை நாம் கவர்தல் வேண்டும்.

அகஸ்தியன் துருவனான்.. துருவ மகரிஷி ஆனான்.. துருவ நட்சத்திரமானான்…! அதனின்று உருவானவர்கள் அனைத்தும் சப்தரிஷி மண்டலமாக ஆனார்கள்.

ஆகவே நஞ்சினை வென்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் அணுவாக்கி விட்டால் நமக்குள் அறியாது உட்புகுந்த இருளை மாய்த்துவிடும்.

ஓமுக்குள் ஓம் நாம்…! ஒ..ம் ஆக… ஓமை… நாம் வளர்க்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

சப்த கோடிகளே….!
சகல நாத விந்துக்களே…!
மணமாகி ஒளியாகி நீராகி நிகழுகின்ற உருக்கோல ஜீவ திட சக்தி தொடர் நிலைகளே…!
“கல்கி நிலை உருவாக உருத்தாருங்கள்…!”

ஒலி கொண்டு ஒளி பெற்று… ஒலிக்கின்ற “ஓ…ம்” என்ற இப்பூமியின் நாத சுழற்சியில்… ஓ…ம்ம்ம்ம்… என்ற நாதத்தில் தான் நம் பூமி ஜெனித்து ஓடிக் கொண்டுள்ளது.

பூமியின் நாதத்தில் வளர்கின்ற பல கோடி நாதத் தொடர்பால் ஒலி கொண்டு ஒளி பெற்ற இச்சரீர (நம் உடல்) கோள நாதமாக
1.ஓமுக்குள் ஒமாக… நாதத்திலிருந்து நாதமாக
2.நம் நாத ஒலி சுழற்சியில் ஓம் என்ற கோளமாக
3.பிறிதொரு கோளத்தை உருவாக்கும் நாத விந்து வளர்ச்சியை நாம் பெற வேண்டும். (அது தான் மண்டலப் படைப்பு)

அதைப் பெற்றோமானால் ஓ…ம் என்ற நாதத்துடன் உருளுகின்ற உலகைப் போல் இம்மனித சரீர பிம்பத்தில் ஒலி கொண்டு ஒளி பாய்ச்சி சுவாச நாதம் வளர்க்கும் விந்துவின் இந்திரிய வலுவைக் கொண்டு உடலை இயக்கும் ஆத்மாவின் ஈர்ப்பு வட்டத்தில் ஜோதி நிலை (ஓளி நிலை) அடையலாம்.

சூரியன் தன் ஒளியின் நாத சுழற்சியைக் கொண்டு சூரிய வட்டத்தில் உள்ள பல கோள்களுக்கும் “ஒளி தந்து…” ஒலி பெற்று… தன் சுழற்சியின் கூட்டமைப்பின் சக்தியுடன் ஒன்றித் தானும் வளர்கின்றது.

அதே போல் நம் பூமியும் ஓ…ம் என்ற நாதத்துடன் “ஒளி பெற்று” ஒளியாக்கிச் சுழலும் தொடர்பைப் போன்று தான் மனித சரீரம் பல கோடி ஒலித் தொடர்புடன் ஒளி பெற்றுள்ளது.

அவ்வாறு உருவான இந்த ஆத்மாவிற்கு வலு கூட்டிக் கொள்ள சூரியனின் நிலையை ஒத்த குண சமைப்பைப் போன்று சரீர உணர்வின் எண்ண சமைப்பு பிறிதொரு ஆத்மாவின் மேல் “ஒளி பாய்ச்சி” ஒலி பெற்று வலுக் கூட்ட வேண்டும்.

“ஒளி பாய்ச்சி” என்பது என்ன…?

இந்தப் பூமியின் சுழற்சியில் திடம் பெற்ற பல கோடிச் சரீரங்களும் ஒன்றை ஒத்து ஒன்று இல்லை. ஒருந்தாலும்… ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சக்தி நிலை “உயர்வு” கொண்டு இயங்குகிறது.

அவ்வாறு இயங்கக்கூடிய ஒலி… ஒளி… ஞானம்… செயல் திறன்… பொருந்திய சரீர உணர்வு கொண்ட எண்ண உணர்வுடன் தான் நாம் மனிதர்கள் செயல் கொள்கிறோம்.

சரீரத் தொடர்புடன் நம்முடைய உணர்வின் எண்ணம் செலுத்தும் வழிதனில்…
1.ஒருவரை நாம் பார்க்கும்… ஒளி பாய்ச்சும் நிலையிலேயே…
2.விழி படமெடுத்து…
3.நாசி சுவாசம் எடுத்து
4.ஒளியின் ஒலியாக நாத விந்துக்கள் உடலின் இந்திரிய அணு வளர்ப்பாக வளர்ந்து விடுகிறது.

இப்படி… “ஒளி பாய்ச்சி” ஒலி பெறும் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் சரீர சமைப்பு சுழற்சி சுழன்று கொண்டேயுள்ள இத்தொடரில்
1.நம்முடைய உணர்வின் எண்ணத்தைப் பிறிதொரு ஈர்ப்பில் சிக்காமல்
2.நம் ஆன்ம வளர்ப்பு நிலையின் வலுத்தன்மை கொண்டு
3.ஞான குண ஒளி பாய்ச்சும் தன்மையினால்
4.எந்த உயர்ந்த எண்ணத்தைக் கொண்டு பிறிதொருவரின் மேல் நாம் ஒளி பாய்ச்சுகின்றோமோ
5.அதன் தொடர் காந்த மின் அலை ஒளி ஈர்ப்புடன்
6.இச்சரீர ஈர்ப்பிற்கு சுவாச ஒலி எடுத்து வித்துக்கள் வளர்ந்து
7.”ஆத்மாவின் வலு” ஒலி “ஒளியாகப் பதிவு கொள்கின்றது…”

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஆட்டை வெட்டிக் கருப்பணச் சாமிக்குக் கொடுத்து விட்டால் நம்மைக் காப்பாற்றுவான் என்ற நிலையில் ஆட்டை வெட்டி ஆட்டின் உயிரை மனிதனாக ஆக்குகின்றோம்.

ஆட்டின் கறியை ருசித்துச் சாப்பிட்டு மனிதனாக இருக்கும் நாம் அடுத்து ஆடாகப் பிறக்கின்றோம். இதைப் போன்ற அசுர உணர்வின் தன்மையைத்தான் நமக்குள் வளர்க்க முடிகின்றது.

இன்றைய உலகில் விஞ்ஞான அறிவு கொண்டிருந்தாலும் மன பேதம் இன பேதம் மொழி பேதங்களை உருவாக்கிவிட்டார்கள்.

இன்று மனிதன் வெளியிலே செல்ல முடியவில்லை. இன்று ஒவ்வொரு நிமிடமும் மரண பயம் கொண்டு வாழ்கின்றோம். ஆகவே, தீமையான உணர்வுகளை நாம் எண்ணப்படும் பொழுது மனிதனல்லாத உருவை உருவாக்கிவிடும் நம் உயிர்.

பாம்பு எப்படித் அதனைத் தாக்கிவிடுவோம் என்று அது முந்தித் தாக்குகின்றதோ அது போன்றே
1.“சாந்த மனம் கொண்டவன் கூட…”
2.அவனுக்குமுன் எதிரிகள் வந்தார்கள் என்றால்
3.அவர்களுக்கு முந்தி இவன் தாக்கும் நிலைக்கு வருகின்றான்.

தீமைச் செய்வோனைக் காட்டிலும் தீமையற்ற நிலையில் இருப்பவர் “சாது மிரண்டால் காடு கொள்ளாது..,” என்ற நிலைகளில் சாந்த உணர்வு கொண்டோர் இத்தகையை தீமைகளைக் கண்டால் வேகமாக எதிர்த்துத் தாக்கும் நிலைக்கு வந்துவிடுகின்றார்கள்.

ஆக மனிதன் என்ற உருவையே இன்று அழித்திடும் நிலை வந்துவிட்டது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டும். மீண்டிடும் நிலைக்குத் தான் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி நாம் அந்த அருள் ஞானிகள் கண்ட உணர்வினை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

விண்வெளியில் இன்றும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும்…
1.சப்தரிஷி மண்டலங்கள் துருவ நட்சத்திரம் அவைகளிலிருந்து வெளிப்படும் உணர்வின் தன்மையை
2.உங்களுடைய நினைவினை அங்கே செலுத்தச் செய்து அந்த உணர்வினை ஈர்க்கும்படிச் செய்கின்றோம்.

இன்று நாட்டில் விஞ்ஞானத் தன்மை கொண்டு காற்றில் கலந்து வரும் நஞ்சின் தன்மையிலிருந்து வராக அவதாரத்தில் காட்டியபடி தீமைககள நீக்கி நாற்றத்தைப் பிளந்து நல்லதை நுகர்ந்ததோ அதைப் போன்று இந்தக் காற்று மண்டலத்தில் மிதந்து கொண்டிருக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வைப் பதிவாக்கி அந்த எண்ணத்தை வலுவாக்கி அருள் உணர்வை நுகர்வோம்.

மெய்ஞானிகளின் அருள் ஒளியைப் பெறுவோம். அதன் தொடர்பு கொண்டு நம் முன்னோர்கள் இன்னொரு உடலுக்குள் சென்றிருந்தாலும் அவர்கள் வெளி வரும் பொழுது இந்த உணர்வின் துணை கொண்டு அவர்களையும் நாம் விண் செலுத்துவோம்.

ஏனென்றால் இதற்கு முன் நாம் நமது முன்னோர்களை விண் செலுத்தத் தவறிவிட்டோம். அவர்கள் இந்தக் காற்று மண்டலத்தில் தான் சுழன்று கொண்டுள்ளார்கள்.

நம் முன்னோர்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்.

அதன் துணை கொண்டு அந்த அருள் ஒளிகளை நமக்குள் பாய்ச்ச வேண்டும். நம்மை அறியாது வரும் இருளை நீக்க வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.

எங்கோ இருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை… நினைத்தவுடன் உங்களுக்குக் கிடைக்கும்படி செய்கின்றோம்

 

அன்புடன் பண்புடன் மற்றவர்களுக்கு உதவி செய்து நாம் வாழக் கூடியவர்களாக இருந்தாலும் அவர்கள் பட்ட வேதனை நமக்குள்ளும் பதிவாகிறது.

அந்த வேதனையை உருவாக்கும் உணர்வுகள் நமக்குள் வலுப் பெற்று விட்டால்
1.அதனின் உணர்வு நம் ஆன்மாவாக மாறும் பொழுது
2.அதிலிருந்து இழுத்து நாம் சுவாசிக்கும் போது
3.அந்த வேதனையான எண்ணங்கள் தான் மீண்டும் மீண்டும் வரும்.

இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் விடுபட இங்கே உபதேசத்தின் வாயிலாகக் காட்டும் வழிகளைச் சீராகக் கடைப்பிடித்து வாருங்கள். ஞானிகளின் உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்,
1.சந்தர்ப்பத்தில் இது உங்கள் நினைவுக்கு வரும்
2.உங்களைக் காக்க உங்கள் எண்ணம் உதவும்.

பள்ளிக்கூடத்திற்குச் சென்று முதலில் படிக்கச் செல்லும் பொழுது எல்லாவற்றையும் உடனடியாக நாம் தெரிந்து கொள்வதில்லை. திரும்பத் திரும்பப் படிக்கும்போதுதான் அந்த நினைவாற்றல் நமக்குள் பெருகுகிறது.

அது போல் தான் இங்கே உபதேச வாயிலாகக் கொடுக்கும் அருள் உரைகளை…
1.ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ பதிவு செய்து விட்டாலும்
2.அதைப் பெற வேண்டும் என்ற எண்ணம் வலுவாக இருந்தால் தான்
3.திரும்பத் திரும்ப அதை மனதில் பதியச் செய்வோம்… அதை வளர்க்கவும் செய்வோம்.
4.திட்டியவர்களை மீண்டும்…மீண்டும்… மீண்டும்…மீண்டும் எண்ணுவது போல்…!

ஆனால் நாம் எல்லாம் ஆரம்பத்தில் பக்தியிலே ஆலயத்திற்குச் சென்று… விநாயகருக்கு அருகம்புல்லை வைத்துச் சூட தீபாராதனை காட்டி… தேங்காய் பழம் வைத்துக் கும்பிட்டுப் பழகியவர்கள்.

இருந்தாலும்…
1.எங்கோ இருக்கக்கூடிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை
2.ஒரு நிமிடத்திற்குள் எண்ணி எடுக்கும் சக்தியை… அந்த ஆற்றலை இப்பொழுது பெறுகின்றோம்.

இதைச் சொல்லும் போது முதலிலே சிறிது கடினமாக தோன்றும். ஆனால் உடனே பெறக்கூடிய தகுதிக்குத் தான் இந்த உபதேசமே கொடுக்கின்றோம். ஞான வித்தாக உங்களுக்குள் கொடுக்கின்றோம்.

அதை நீங்கள் வளர்த்துக் கொள்வதில் தான் உங்களுடைய வளர்ச்சி இருக்கின்றது. அதற்குண்டான நீரான அருள் சக்தியை எடுக்கும்போது தான் உங்களுக்குள் அந்த ஞான வித்து ஓங்கி வளரும்.

யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி காலையில் நான்கு மணிக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் சக்திகளை எடுத்துக் கொள்ளலாம்.
1.அந்த நேரத்தில் வேறு ஒன்றும் செய்ய வேண்டாம்.
2.எழுத்து உட்கார்வதற்குச் சோம்பேறித்தனமாக இருந்தாலும் கூட
3.உங்கள் எண்ணத்தை நேரடியாகத் துருவ நட்சத்திரத்திற்கு அனுப்புங்கள்.
4.துருவ நட்சத்திரத்திலிருந்து ஒளிக் கதிராக வருவதைத் தியானித்து எடுத்துக் கொள்ளலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி இந்த உணர்வை உங்கள் உடலுக்குள் வலிமையாக்குங்கள்.

எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை விண்ணில் செலுத்தி… உடல் முழுவதும் படர வேண்டும் என்ற மீண்டும் உடலுக்குள் செலுத்துங்கள். உள்ளுக்குள் செலுத்தச் செலுத்த தீமைகள் எல்லாம் கரைந்து விடும்

உடல் அழுக்கைப் போக்கத் தினசரி தண்ணீரை விட்டுக் குளிக்கின்றீர்களோ அதை போல் அருள் ஞானிகளின் உணர்வை உங்கள் உடலுக்குள் சேர்த்து உங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

குறிக்கோளுடன் தான் தியானம் செய்ய வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

இன்றைய மனித வாழ்க்கையில் பக்தி வழியில் நந்நெறியில் வாழ வேண்டும் என்று எண்ணி நடந்தாலும் நம் வாழ்க்கை நாம் எண்ணியபடி அமைவதில்லை.
1.அதற்கு ஊழ்வினை காரணம் என்று சொல்லப்படுகின்றது.
2,அதாவது விதி வழித்தான் எல்லாமே நடக்கும்…! என நம்புகின்றோம்.

துன்பங்களிலிருந்து மீள தெய்வ வழிபாடு முதலியன செய்கின்றோம். இருந்தாலும் முழுப் பயன் எவருக்கும் கிட்டுவதில்லை.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களும் மகரிஷிகளும் மனிதன் மெய் ஞானம் கொண்டு “விதியை மதியால் வெல்லலாம்” என்று சொல்லியுள்ளார்கள்.

“அந்த வழியில் மனித இனம் இது வரையிலும் கவனம் செலுத்தவில்லை…!” ஆனால்…
1.இன்றைய நிலை முழுக்க முழுக்க விஞ்ஞானத்தைப் போற்றும் நிலைக்கும்
2.விGnaaGnaagaaaaஞ்ஞான வாழ்க்கைக்கு நம்மை அடிமையாக்கும் நிலைக்கும் வந்துள்ளோம்.

ஏனென்றால் விஞ்ஞான முன்னேற்ற வசதிகள் எல்லாம் இந்த உடல் வாழ்க்கைக்குத் தான் பயன்படும். இன்னும் சொல்லப் போனால் இன்று இந்த விஞ்ஞானத்தின் அபரிதமான வளர்ச்சி காரணமாக “சகல ஜீவராசிகளும் மடிந்து போகும் தருணம்” வந்து விட்டது. உலகமே நடுங்கும் நிலைக்கு வந்து விட்டது.

இங்கே பாரத புண்ணிய பூமியில் ஞானிகள் சொன்னதெல்லாம் மறந்து விட்டோம். ஆனால் விஞ்ஞானியால் எதைச் செய்ய முடியுமோ அதை விட அதி அற்புத சக்தி வாய்ந்த எந்தச் செயலையும் மெய் ஞானிகளால் செய்ய முடியும்… அடைய முடியும்.

இப்படி இந்த உலகமே கேள்விக்குறியில் நிற்கும் இத்தருணத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன…?

மாமகரிஷிகள் மனித இனம் உய்ய மெய் வழியைக் காட்டுகின்றார்கள். அதன் வழியில் நடந்திட வேண்டும்.

1.முதலில் தாய் தந்தையரை தெய்வமாக வணங்கி
2.உயிரான ஈஸ்வரனைப் புருவ மத்தியில் எண்ணி வணங்கி
3.உணர்வுடன் கூடிய தியானத்தில் மகரிஷிகளை எண்ணி
4.அனு தினமும் தியானிப்பதன் மூலம் நம் உடலில் உயர் காந்த மின் நுண் அலைகள் பதிவாகும்
5.அதன் வளர்ச்சியைப் பொருத்து நம் ஊழ்வினையான தீய வினைகளைச் சக்தி இழக்கச் செய்ய முடியும்.

முருக குணங்களான அன்பு… பரிவு… பாசம்… வீரம்… ஞானம்… சாந்தம்.. மூலம் உயரிய சக்திகளைப் பெற்று… அதன் மூலம் நம் உயிராத்மாவிற்கு வலுக் கூட்டி… நாம் எண்ணியபடி வாழ்வை அமைத்துக் கொள்ள “மகரிஷிகள் தியானம்” ஒன்றே வழி.

ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் தியானிப்பதன் மூலம்
1.நம்மை விட மேம்பட்ட சக்திகளான
2.மாமகரிஷிகளின் நேரடித் தொடர்பு கிடைக்கும்
3.அவர்கள் துணையும் கிடைக்கும்.

ஆனால் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய சூட்சமம் எந்தக் குறிக்கோளுடன் தியானம் செய்வது என்பது தான். நம் ஆத்மாவுக்கு வலுக்கூட்டிப் பிறவா நிலை என்னும் “தெய்வ சக்தி” நிலையைப் பெறுவது தான் நம் குறிகோள்.

அதற்கு நம் எண்ணம் பரிசுத்தமாக வேண்டும். தியானத்தின் மூலம் எண்ணத்தைப் பரிசுத்தப்படுத்த முடியும். இத்தகைய முறைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கு மகரிஷிகளின் துணை எளிதில் கிடைக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இந்த உலகில் நஞ்சினை வென்ற அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை உணர்த்துவதற்குத்தான் அதை நினைவாக்குவதற்காக விநாயகருக்கு அருகில் அரச மரத்தை வைத்தார்கள்.

நம் வாழ்க்கையில் எப்பொழுது தீமைகளைப் பார்க்கின்றோமோ உடனே நாம் வானை நோக்கி அந்தத் துருவ நட்சத்திரத்தின்பால் நினைவினைச் செலுத்த வேண்டும்.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நம் உடலுக்குள் உள் செலுத்தினால்
2.அது அரசாக இருந்து அதன் கீழ் உள்ளதை அடக்கும் வல்லமையாக
3.தீமைகளை வென்றிடும் சக்தியாக நமக்குள் உருப்பெறும்.

அதைத்தான் “அங்குசபாசவா…” என்று விநயகர் தத்துவத்தில் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

ஏனென்றால், குருநாதர் காட்டிய அருள் வழியில் ஆழமாகவும் அழுத்தமாகவும் அந்த ஞானிகளின் அருள் வித்துக்களை உங்களுக்குள் இந்த உபதேசத்தின் வாயிலாகப் பதியச் செய்கின்றோம்.

இதை எவரொருவர் கூர்மையாக உற்று நோக்கிப் பதிவு செய்து கொள்கின்றார்களோ அவர் உடலில் இது பெருகும். அதன் நினைவு கொண்டு நீங்கள் தீமைகளை அகற்றும் வல்லமை பெறுகின்றீர்கள்.

1.யாம் சொல்வது “ஒன்றும் புரியவில்லை…” என்று எண்ணினால்
2.புரியவில்லை என்ற உணர்வைக் கலக்கப்படும் பொழுது புரியாத நிலைதான் ஆகும்.

ஒரு கம்ப்யூட்டரை இயக்கப்படும் பொழுது எலெக்ட்ரிக்கை வைத்து… எலெக்ட்ரானிக்காக… மாற்றுகின்றார்கள்.

ஒரு தகட்டில் அல்லது நாடாவில் முலாமைப் பூசி உயர் அழுத்தத்தில் இணைக்கப்படும் பொழுது இந்த உணர்வின் ஒலிகள் அதிலுள்ள அதிர்வுகள் எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.

அதன் ஒலி அதிர்வுகளை இந்த எலெக்ட்ரிக் தன்னுடைய ஒலிப்பேழைகளில் (MEMORY CONTROL) மாற்றியமைத்து உள்முகமாகக் கூட்டுகின்றது.

ஆகவே இதிலே இடைமறித்து ஏதாவது தவறுதலாக (COMMAND) ஒலி ஓசை மாறிவிட்டால் உடனே அதன் அழுத்தங்கள் மாறிவிடுகின்றது.

ஏனென்றால் ஒரு இயந்திரத்தை இயக்க வேண்டும் என்றால் அதைத் தடைப்படுத்தவில்லை. இடைமறித்து இது தாக்கப்படும் பொழுது அது குறித்த நேரத்தில் (ALARM CONTROL) தாக்கி நிறுத்திவிடும்.

இப்படித்தான்…
1.இயந்திரங்களை இயக்குவதும்
2.விமானங்களை ஓட்டுவதும்
3.இராக்கெட்டுகளை இயக்குவதும்
4.எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்று பேழைகளில் வைத்து அதன் செயலாக்கங்கள் மூலம் இயக்குகின்றார்கள்.

பின் அதனில் ஒலி அதிர்வின் கதிர்களை இயக்கப்படும் பொழுது அந்த இராக்கெட்டையே இயக்கச் செய்கின்றது.

அதே சமயத்தில் இராக்கெட்டில் குறைகள் இருந்தாலும் இந்த ஒலி அதிர்வுகளை ஏவி அது கட்டளையிடப்பட்டு அதைச் சீராக்குகின்றான் மனிதன். ஆக, விஞ்ஞான அறிவு கொண்டு எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் முறையில் இதை இவ்வாறு இயக்கச் செய்கின்றார்கள்.

இன்று விஞ்ஞான அறிவில் வளர்ந்த நாம் இந்த விஞ்ஞானத்தை நம்புகின்றோம். ஆனால்… மெய்ஞானத்தை இழந்துவிட்டோம்.

மெய்ஞானத்தின் மூலக் கூறுகளை நாம் அறிந்து கொண்டால் மனிதன் பிறவியில்லா நிலை அடையவும்… அழியா ஒளிச் சரீரம் பெறவும் இது உதவும்.

ஆனால் அதற்கு மாறாக மனித ஆசையின் உணர்வுகளை ஒவ்வொரு நிலைகளிலும் வளர்க்கப்படும் பொழுது இந்த உடலையே அழிக்கும் நிலையாகிவிடுகின்றது. உடல் அழிந்து விட்டால் இதிலே சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப அடுத்த உடலை மாற்றிவிடும் நம் உயிர்.

ஆகவே அந்த மெய்ஞானியின் உணர்வை நமக்குள் அவ்வப்போது சேர்த்து அதை அதிகமாக வளர்த்து விட்டால் இந்த உடலை விட்டு அகன்றபின் அந்த மெய் ஞானியின் உணர்வுடன் நம்மை ஒன்றச் செய்யும்.

ஆறாவது அறிவினை ஏழாவது நிலையாக ஒளியின் நிலை பெறச் செய்யும்.

கண்களை மூடி இருந்தாலும் சரி… அல்லது திறந்திருந்தாலும் சரி… நம் நினைவுகள் துருவ நட்சத்திரத்தின் பால் செல்ல வேண்டும்

 

காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் எப்பொழுது விழிப்பு வருகிறதோ அப்போதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று குறைந்தபட்சம் பத்து நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரையாவது எடுக்க வேண்டும்.
1.கண் விழித்து இருந்தாலும் சரி… கண்களை மூடி இருந்தாலும் சரி…
2.கண்ணின் நினைவலைகள் புருவ மத்தியில் வரவேண்டும் (முக்கியம்)
3.உயிர் வழி தான் நாம் உடலுக்குள் அனுப்ப வேண்டும்.

காரணம்… நாம் வெளியிலே பார்த்துணர்ந்த… கேட்டுணர்ந்த… உணர்வுகள் அனைத்தும் ஆன்மாவாக இருக்கின்றது… நல்ல எண்ணங்களை எண்ண விடாது. ஏனென்றால் நாம் எத்தனை பேருடைய தீமைகளைப் பார்த்தோமோ அதற்கெல்லாம் வலு அதிகம்.

பாலிலே பாதாமைப் போட்டாலும் மற்ற பொருள்களைப் போட்டாலும்… சிறிதளவு விஷத்தைப் போட்டு விட்டால் பாதாமிற்கும் சக்தி இல்லை… பாலுக்கும் சக்தி இல்லை.

அதே போல் அதில் சிறிதளவு காரத்தைப் போட்டுவிட்டால் அதனுடைய சுவைகளை அறிய முடியாது. காரத்தின் சுவை தான் முன்னணியில் இருக்கும். உப்பின் தன்மை இணைத்து விட்டால் அந்த உப்பின் தன்மை முன்னணியில் வந்து விடும்.

இதைப் போன்று தான் நமது வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் பிறரிடம் கோபப்பட்டது ஆத்திரப்பட்டது வேதனைப்பட்டது சலிப்புப்பட்டது எல்லாமே நம் ஆன்மாவில் வந்துவிடுகிறது.

அதையெல்லாம் மாற்றி அமைக்க அதிகாலையில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்ற உணர்வினை நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் கூட்டிக் கொள்ள வேண்டும். அந்தச் சக்திகள் கூடிய பின் உடலிலிருந்து வரக்கூடிய மணம் நம் கேட்டறிந்த தீமைகளை ஆன்மாவிலிருந்து அப்புறப்படுத்தும் நிலையாக வரும்.

1.காரணம் மகரிஷிகள் அருள் சக்தியை உடலுக்குள் கூட்டும் போது
2.ஆன்மாவில் இருக்கும் தீமை செய்யும் உணர்வுகளின் பிடிப்பு அற்றுப் போய்விடும்… ஆன்மாவிலே நிற்காது.
3.அப்போது கஷ்டமான எண்ணங்கள் நமக்குள் வராது

இதை நாம் பழகிக் கொண்டால் மிகவும் நல்லது.

வாழ்க்கையில் பிறருடைய கஷ்டங்களைக் கேட்கப்படும் போதோ அல்லது விபத்தைப் பற்றி அறிய நேரும் பொழுதோ வேதனைப்பட்டுக் கொண்டிருப்போரை அவர்களைக் கண் கொண்டு பார்க்கும் பொழுதோ அது எல்லாம் பதிவாகி விடுகிறது.

அது எல்லாம் ஒரு வித்தாக மாறிவிடுகிறது. மீண்டும் அதை நுகரப்படும் பொழுது அணுவாக மாறுகின்றது. உடலிலே உருவான அந்த அணுக்கள் தன் இரைக்காக அதே (விபத்து வேதனை) உணர்வலைகளைத் தனக்குள் கவர்ந்து தன் இனத்தை வளர்க்கத் தொடங்குகிறது.

அது வளரத் தொடங்கி விட்டால் நம் ஆன்மாவாக மாறுகின்றது
1.எத்தகைய உணர்வாக இருந்தாலும் அது நம் உயிரிலே படும் போது தான் நம்மை இயக்கும்.
2.நல்லவனாக்குவதும்… கெட்டவனாக்குவதும்… அல்லது நோயாக மாறுவதும் இது போன்று தான்.

இதைப் போன்ற நிலைகளை நாம் தூய்மைப்படுத்த அதிகாலையில் விழித்தவுடனே துருவ நட்சத்திரத்தின் சக்தியை எண்ணி எடுக்க வேண்டும்.

1.உட்கார்ந்து தான் இதைச் செயல்படுத்த வேண்டும் என்று இல்லை
2.எழுந்து உட்கார வசதியாக உள்ளவர்கள் அப்படிச் செய்யலாம்.
3.படுக்கையில் விழிப்பு வந்த பின்… நேராகத் துருவ நட்சத்திரத்தை எண்ணி
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று
5.புருவ மத்தியில் எண்ணி உடலுக்குள் உள்முகமாக உடல் முழுமைக்கும் செலுத்துங்கள்.
6.உள்முகமாகச் செலுத்தச் செலுத்த ஆன்மாவில் இருக்கும் தீமைகளை அதை நீக்கிக் கொண்டே இருக்கும்.

தினசரி நீரை ஊற்றி உடல் அழுக்கை எப்படிப் போக்குகின்றோமோ அதைப் போல நம் ஆன்மாவில் பட்ட தீமைகளை நீக்க அந்த மகரிஷியின் அருள் சக்தியை நம் உடலுக்குள் அவ்வப்போது செலுத்த வேண்டும்.

அது வலுப் பெற்றால் தான்… உடலுக்குள் வலுவானால் தான்… தீமைகளை நீக்க முடியும். எப்படியும் உங்களுக்குள் அதை வலுவாக்க வேண்டும் என்பதற்குத் தான் மீண்டும் மீண்டும் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).

நம்மை அறியாமலே “செயற்கை அறிவு” கொண்ட மனிதர்களாக மாறிக் கொண்டிருக்கின்றோம் – ஈஸ்வரபட்டர்

 

இக்கலியின் கடைசிக் காலத்தில் மனித ஆத்மா உயரும் ஞான போதனை வழித் தொடர் அற்று மனித எண்ணங்களும் ஆவி உலகில் உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களும் செயற்கை விஞ்ஞான ஒலி ஈர்ப்பில் உணர்வைச் செலுத்தியே இன்று இயங்கி வருகின்றது.

ஆகையினால் இன்றைய மனித உணர்வின் சுவாசமே இயந்திர கதியின் ஒளி ஈர்ப்பில் உணர்வெடுக்கும் எண்ண சுவாச அணுக் கதிர்களாகத் தான் சுவாசத்திலிருந்து வெளி வந்து கொண்டுள்ளது.

இப்படி…
1.அன்றைய இயற்கைத் தாவர நறுமண மூலிகைகளின் தொடர்பற்ற நிலையில்
2.இயந்திர ஓட்டச் செயற்கை மனித நிலையில் வெளிப்படும் சுவாச அலையின் அணுக் கதிர்களிலிருந்து
3.அதிலிருந்து வளரவல்ல உயிரணுக்களே கலி மனிதன் வெளிப்படுத்தும் அலைக்குகந்த
4.புதிய புதிய குறுகிய எண்ண ஆசைகள் கொண்ட ஞானச் செயலற்ற ஜீவ ஜெந்துக்கள் தான்
5.தற்பொழுது வளரும் ஜீவ அணு உயிர் வளர்ப்புகளும் தாவர இன வளர்ப்புகளும்…!

இந்தத் தொடரிலேயே செல்லும் நிலை தான் இன்றைய காலமும் இனி வரும் காலமும்…!

பல நூறாண்டுகளுக்கு முன்… மனித உருவங்களும் மனிதனைக் காட்டிலும் மிருக உருவங்களும் இன்றுள்ள நிலையைக் காட்டிலும் உருவத்தில் வளர்ந்து வண்ணமும் பொலிவும் மிக்க ஒளியுடன் மிளிர்ந்தன.

இராமாயணக் காவியத்தில் வான்மீகியார் எழுதிய குணத்தின் அடிப்படைக் கதாபாத்திரமே அந்தந்தக் குணத்திற்கொப்ப எண்ணத்தில் குறுகியவருக்குக் “கூனி” என்றும் “சகுனி” என்றும் (வியாசர்) காட்டினார்கள்.

எண்ணத்தில் உயர்ந்தவருக்கு அவரின் உருவ அழகை இராமனாகச் சித்தரித்துக் காட்டினார் வான்மீகியார்.

ஆனால் இன்றைய கலி ஓட்டத்தில் “இயந்திரத் தொடர்பு கொண்ட… செயற்கை ஒலி ஈர்ப்பில்…” வாழக்கூடிய மனித எண்ணங்களின் உணர்வுகள் தான் அதிகமாகச் சுழன்று கொண்டுள்ளது.

இதன் தொடர்பில் செலுத்தப்படும் வழித் தொடர் வளர்ச்சியின் வழி முறையில் எந்தச் செயற்கை ஒலியை அதிகமாகக் கேட்டு அவ் ஒலி ஈர்ப்பின் சுழற்சியில் சுழல் கொண்டு மீண்டும் பிறப்பிற்கு வரும் பொழுது…
1.ஞானத்தின் வளர்ச்சி கொண்ட மக்கள் பிறப்பதைக் காட்டிலும்
2.தன் ஞானமற்று விஞ்ஞான வேட்கை வழி தந்த உணர்வு ஈர்ப்பில் கர்ப்பம் கொள்ளும் சிசு நிலையிலேயே
3.விஞ்ஞான செயற்கை நிலைக்கொத்த கலி மக்கள் தான்
4.இனி வரும் காலப் பிறப்புகளும் கலி மாற்றப் பிறப்புத் தொடர்புகளும்.

அன்றைய காலங்களில் “ஆயகலைகள் அறுபத்தி நான்கு” என்று பிறக்கும் மக்களுக்குப் பயில்விக்கும் பயிற்சி ஞான போதனைகள் இருந்தது.

இன்றைய செயற்கைப் போதனையோ… தன்னைத் தான் நம்பாமல் செயற்கைப் பிடியில் நம்பிக்கை கொண்டு அந்தச் சுழற்சி ஓட்ட கதியுடன் மனிதனின் எண்ணம் சென்று கொண்டுள்ளது.

இதிலே சிக்குண்டு அந்த ஏக்கமுடனே இன்பத்தின் எல்லை எது…? என்று அறியாதபடி… வாழ்க்கையின் வேட்கையில் சுழன்றிடும் தன்மையை மாற்றி
1.ஆத்ம பலத்தின் உயர்வைக் கொண்டு
2.ஜீவ மனித எண்ண உணர்வின் ஞானம் கொண்டு அடையும் இன்ப நிலையின் வழித் தொடரை
3.இங்கே உபதேச போதனையாக உயரும் வழியைக் காட்டி
4.ஒவ்வொரு ஆத்மாவும் மனிதனுக்கடுத்த நிலையான “தெய்வ நிலை” பெறவல்ல வழித் தொடருக்கு வழி காட்டுகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

அகஸ்தியன் தன் தாயின் கருவிலே சிசுவாக இருக்கும்போது பல பச்சிலைகளின் வாசனைகளையும் மூலிகைகளின் மணங்களையும் அவன் நுகர்ந்ததால் நஞ்சினை வென்றிடும் சக்தி பெற்றான்.

அவ்வாறு அவன் நுகர்ந்தறிந்த உணர்வின் அணுவாக விளைய வைத்த உணர்வலைகள் இந்தப் பூமியிலே உண்டு. அதை நாம் பெற முடியும்.

அகஸ்தியன் தாய் கருவிலிருக்கும் பொழுது அவனுக்குள் விளைந்த சக்திகளை நம் உடலில் வளரும் அணுக்கருக்களின் கருவில் அருள் ஞானத்தை இப்பொழுது உருவாக்குவோம்.

அகஸ்தியன் பெற்ற மூலிகைகளின் வாசனைகளை எண்ணித் தியானிக்கும் பொழுது எவர் எவருக்குக் கிடைக்கின்றதோ அவர்கள் அருள் ஒளியின் சக்தியைப் பெற்றவர்கள் ஆவார்கள்.

கிடைக்கவில்லை என்றால் விரக்தி அடைய வேண்டாம்.

அகஸ்தியன் பெற்ற மூலிகைகளின் மணங்களைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். நிச்சயம் அதைப் பெற்று வளர்த்துக் கொள்ள முடியும். அதை உருவாக்கிட முடியும்.

இப்பொழுது யாம் (ஞானகுரு) சொல்லக்கூடியதை எல்லாம் ஏங்கிப் பெற வேண்டும் என்ற அந்த ஈர்ப்புடன் தான் இருத்தல் வேண்டும்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொண்டு ஏங்கித் தியானியுங்கள்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்
1.அகஸ்தியன் அவன் வாழ்ந்த காலங்களில் அவனிடமிருந்து வெளிப்பட்ட உணர்வுகளை
2.நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
3.அகஸ்தியன் அவன் கருவில் வளரும் பொழுது நுகர்ந்ததும்
4.பிறந்தபின் அவன் நுகர்ந்தறிந்த ஆற்றல்மிக்க சக்திகளும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

இதையே திரும்பத் திரும்ப ஏங்கி அந்த உணர்வுகளை உங்கள் உடலுக்குள் பரப்புங்கள். உங்கள் உடலில் உள்ள அணுக்களின் நிலைகளில் அகஸ்தியன் பெற்ற பச்சிலை மணங்களையும் மூலிகை வாசனைகளையும் பெருக்குங்கள்.

அவன் நுகர்ந்தறிந்த நறுமணங்கள் உங்கள் உடலுக்குள் புகுவதை நீங்கள் அறியலாம்.

இதை நுகரப்படும் பொழுது அந்த நறுமணங்கள் உங்களுக்குக் கிடைக்கும். நஞ்சினை வென்றிடும் ஆனந்த நிலைகளான அந்தச் சக்திகள் தியானிக்கும் பொழுது உங்களுக்குள் இணையும்.

உடலை இயக்கும் நரம்பு மண்டலங்களில் ஏற்படும் சில நுண்ணிய மாற்றங்களும் அதனின் விளைவுகளும்

 

ஆதியிலே உருவான விஷம்…
1.மற்ற விஷமற்றதைத் தாக்கும் போது அது நகர்ந்து ஓடுகிறது.
2.தாக்கும் போது வெப்பமும்… நகர்ந்து ஓடும் போது ஈர்க்கும் காந்தமும் உருவாகிறது.

அந்த உணர்வின் சக்தியால் அது எதைத் தனக்குள் இணைத்ததோ அதை உருவாக்கச் செய்கின்றது. இதற்கெல்லாம் மூலம் ஆதியிலே உருவான விஷம் தான்.

அந்த விஷத்தின் அளவுகோல் எதுவோ அதனின் இயக்கமாக இயக்கும். அதற்குக் காரணப் பெயர் ஆதிசக்தி. ஆகவே ஆதிசக்தி என்பது கடுமையான விஷம்.

ஆரம்பத்திலே ஈர்க்கும் சக்தியாக வந்தது ஆதிலட்சுமி. ஆதியிலே உருவான அந்த வெப்பம் ஆதிபராசக்தி. சர்வத்தையும் உருவாக்கும் வெப்பமாகின்றது.
1.ஒன்று இயக்கும் சக்தி
2.ஒன்று உருவாக்கும் சக்தி
3,ஒன்று கவரும் சக்தி

விஷத்தின் தாக்குதலால் தான் வெப்பம் உருவாகிறது. அதைப் போன்று தான் நாம் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் எதிர்நிலையான உணர்வுகள் மோதலானால் உடலிலே வெப்பமாகிறது.

அடுத்தவர் செய்யும் தவறான உணர்வுகளைக் கூர்மையாக உற்று நோக்கி அதை எடுத்துக் கொண்டால் நமக்குள் கோப உணர்வின் தன்மை அதிகமாகிறது. அவர்கள் செயல்படுத்தும் வேதனை என்ற நஞ்சான உணர்வுகள் நம் மீது மோதுகிறது.

அப்படி மோதும்போது நமக்குள் அந்த உணர்வின் தன்மை கொதிப்பாகி அணுவின் தன்மை நம் உடலிலே பெருக்கம் ஆகின்றது… இரத்தக் கொதிப்பு என்று சொல்வார்கள்.

1.நம் உணர்வை இயக்கும் அந்தக் கொதிகலனான சுடு நீர் உடலுக்குள் சென்று
2.கவன நரம்புகளில் தாக்கப்பட்ட பின் அது தாங்காது வெப்பம் அதிகமாகின்றது.

உதாரணமாக ஒரு குக்கரில் கேஸ் அதிகமாக உருவானால் அந்தப் பாத்திரம் எப்படி வெடிக்கின்றதோ அதைப் போன்றுதான் இந்தக் கொதிகலனாகும் விஷத்தின் அழுத்தத்தின் தன்மைகள் நாம் கவன நரம்புகளிலே ஊடுருவுகிறது.

எந்த உணர்வாக இருந்தாலும் சிறு மூளை வழியாகச் சென்றுதான் நம் உடல் உறுப்புகளை இயக்கும். நரம்புகளுக்குள் அமிலமாக (ACID) மாற்றும் தன்மைகளும் வரும்.

1.எந்தப் பாகத்தின் தன்மையிலே இந்தக் கோபமும் விஷமும் கலந்து அதிகமாகச் செல்கிறதோ…
2.அந்த அழுத்த நிலைகள் அங்கே ஏற்படும் பொழுது அந்த இடம் விரிந்துவிடும்.
3.விரியும் தன்மை வரப்படும் போது மனிதனுக்கு மயக்க நிலை (தலை சுற்றல்) வருகின்றது.

ஆனாலும் மயக்கம் வருவதற்கு முன் சிறிதளவு நினைவு இருக்கும் போது எனக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்ற எண்ணம் வந்தால் வெடித்துவிடும்.

அதே போன்று
1.“மயக்க நிலைகள் வருகிறதே…!” என்ற எண்ணத்தை மீண்டும் அதிகரித்து விட்டாலும்
2.இந்த உணர்வின் தன்மை கொதிப்பாகி சிறு நாளங்கள் வெடித்து இரத்தங்கள் கசிவாகிவிடும்…
3.அடுத்த கணம் மரணம் தான்.

ஏனென்றால் இதை போன்ற உணர்வின் இயக்கங்கள் நம் உடலுக்குள் மோதலாகும் போது போராட்டங்கள் அதிகமாகிக் கொதிகலனாக எப்படி வருகிறது…? என்று ஞானிகள் அன்றே அதைச் சொல்லியுள்ளார்கள்.

சாதாரண மனிதனும் இதை அறிவதற்காக வேண்டி தெய்வச் சிலைகளை உருவம் அமைத்து 1008 குணங்களையும் தனித் தனியாகக் காட்டியுள்ளார்கள்.

பரிணாம வளர்ச்சியில் பல கோடிச் சரீரங்களில் வளர் பிறையாகி மனிதனாக வளர்வதற்கு மூலம் எது…? என்றும்… மனிதனாக ஆன பின் அவன் எடுத்துக் கொண்ட குணநலன்களின் இயக்கத்தையும்… அதனின் பின் விளைவுகளையும் உணர்த்துவதற்குத் தெய்வச்சிலைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனி வாகனத்தையும் கொடுத்துள்ளார்கள்.

எதனின்று நல்ல உணர்வுகளைச் சுவாசித்து… அதுவே வாகனமாக அமைந்து வளர்பிறையாக மனிதனாக எப்படி வந்தோம் என்றும்… மனிதனான பின்
1.கோபம் வேதனை ஆத்திரம் போன்ற குணங்களச் சுவாசிக்கும் பொழுது தேய் பிறையாகி
2.மனிதனல்லாத உடல்களுக்கு எப்படிச் செல்கிறோம்…? என்றும் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் நாம் மீண்டும் இன்னொரு பிறவிக்கு வர மாட்டோம்… அழியாத ஒளி உடல் பெறலாம்.

சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

தெய்வ சக்திகளாக நீங்கள் உருவாக வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

சொந்தபந்தம்…
தொழில்…
சுற்றுப்புறம்…
விஞ்ஞானம்…
வியாபாரம்…
மருத்துவம்…
இதிலே ஏதாவது ஒன்றிலே இன்றைய மனித வாழ்க்கை அமைந்திருக்கின்றது.

இந்த வாழ்க்கைத் தொடர் சுழற்சியுடனேயே நம் வளர்ச்சியின் வலுவைக் கூட்டிக் கொண்டு இந்த வாழ்க்கைப் பிடிப்பைத் தான்
1.மனிதனின் முற்றிய நிலை என்று இன்பத்தைக் கொள்ளாமல்
2.மனித ஆத்மாவின் உயர்வு வழிக்கு வழிகாட்டி வருகின்றேன் (ஈஸ்வரபட்டர்)

இதைத் தொடர்ந்து படிப்போர் பதிவாக்கி அதைச் செயலாக்கி வரும் நிலையில்
1.இதில் உணர்த்தபப்டாத பல உண்மைகளும் உண்டு…!
2.நேரடியாக உணர்த்தப்படாதவைகளைத் தங்களின் ஞானத்தைக் கொண்டு உணர்ந்து
3.உயரக் கூடிய நிலைகளுக்குத் தான் அவ்வாறு விடப்பட்டுள்ளது.

இனி வரப் போகும் கால நிலையில் துர்மார்க்க… அச்சம் கொள்ளும் அலை உணர்வு தான்… காற்றலையில் நச்சுத் தன்மையாக வளர்ந்தோங்கிச் சுழலும் தருணமாக உள்ளது.

இதிலே மனிதன் தன்னைத் தான் உணர்ந்து
1.தன் ஆத்ம வலுவைக் கூட்டி
2.பிற ஈர்ப்பின் பிடிப்பில் சிக்காமல்
3.உயர் ஞான வழித் தொடரின் தொடர்பைக் கொண்டு
4.வளர்ந்த பல கோடி தேவாதி தேவர்களான சகல சக்திகளையும் சமைக்கவல்ல
5.பேராற்றல் கொண்ட சப்தரிஷிகளின் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆகவே… உயர்ந்தோரின் உயர்வுடன் உயரும் எண்ணத்தில் உள்ள ஒவ்வொரு ஆன்மாவும் உயர்ந்தே செல்லும் வழி முறைக்காக
1.இங்கே வழி காட்டும் உண்மையை ஏற்று
2.ஞான விளக்கப் போதனைகளை ஒவ்வொரு ஆத்மாவும் பெற்று
3.மனித சக்திகளைத் “தெய்வச் சக்தியாக” உருவாக்குங்கள் ஒவ்வொருவருமே.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நாம் பெற வேண்டியது எது…? பெறக் கூடியது எது…? பெறப்படாதது எது…? என்ற நிலைகளைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

ஒருவன் தீமை செய்கிறான் என்று பதிய வைத்துக் கொண்டால் “அவன் தீமை செய்தான்… ஆகவே அவனை விடுவேனா பார்…?” என்று எண்ணினால் என்ன ஆகும்…?

இந்தக் கணக்கின் பிரகாரம் நாம் சிந்தனை இழந்த நிலையாகச் செயல்படுவோம்.

எந்த எண்ணத்தால் அடுத்தவனை அழித்திட வேண்டும் என்ற எண்ணம் ஓங்கி வளர்கின்றதோ அதன் மேல் நாம் கொள்ளும் பாசம் அவனுக்குள் விளைந்த தீயவினைகள் நமக்குள் விளையத் தொடங்குகின்றது.

அதே சமயத்தில் ஒரு நோயாளியை நாம் உற்றுப் பார்த்துப் பதிவாக்கி விட்டால் பாசத்தால் “இப்படி வேதனைப்படுகின்றாரே…” என்று எண்ணினால் அவர் நோயின் உணர்வுகள் நமக்குள் வருகிறது.

அப்படி நோயாளியை உற்றுப் பார்த்த அந்தக் கணக்கின் பிரகாரம் அவரையே நாம் எண்ணிக் கொண்டிருந்தால் அந்த நோயின் தன்மை நமக்குள் வளர்ந்துவிடுகிறது. அடுத்து நாமும் வேதனைப்படுவோம்.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் நாம் கண்ணுற்றுப் பார்க்கப்படும்போது அவர்களைப் படமெடுத்து அவர்களில் உருவான உணர்வுகள் அவருடைய நிலைகளை
1.“எவ்வளவு நேரம் எண்ணுகின்றோமோ…
2.எவ்வளவு நேரம் அறிகின்றோமோ… அந்தக் கணக்குகள் கூடிவிடும்.
3.ஆகவே “இந்த மனித வாழ்க்கையில் பெறப்படாதது… பெறக் கூடாதது.. மனிதனின் ஆசை”.

ஆலயங்களில் இது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. சிவன் ஆலயத்தில் “நந்தீஸ்வரா…” என்று காட்டுகின்றார்கள்.

ஆகவே நந்தீஸ்வரன் எதுவாக இருக்க வேண்டும்…?

நம்மைப் போன்று இந்தப் பூமியில் வாழ்ந்தவர்கள் தன் மனித வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்களை வென்று நஞ்சினை ஒளியாக மாற்றினார்கள்.

உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை ஒளியின் சரீரமாகப் பெற்று கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து அந்த உணர்வின் தன்மை கொண்டு அவர்கள் விண்ணிலே துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று நந்தி நமக்குள் சென்று அவன் எப்படித் தீமைகளை நீக்கினானோ அதைப் போல நாமும் நமக்குள் தீமைகளை நீக்க வேண்டும்.

அப்படி நீக்குவதற்கு நாம் எப்படிச் சுவாசிக்க வேண்டும்…?

அதிகாலை 4 மணிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலந்து, எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்த சக்தியைப் பெறவேண்டும் என்று நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு இப்படிச் சாப்பாடு கொடுக்க வேண்டும்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அவரின் துணை கொண்டு அதனை நாம் பெறுதல் வேண்டும். ஆகவே நாம் பெற வேண்டியது இதைத் தான்…!

சாமி இருக்கிறார்… எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்வார்…! என்ற எண்ணத்தில் நிறையப் பேர் இருக்கின்றார்கள்

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்கள் உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டுமென்பதற்காகச் சுலபமாகக் கொடுக்கிறோம். அதை நீங்கள் நல்ல முறையிலே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

எந்தச் சங்கடமான உணர்வு வந்தாலும் சரி… உடனே ஆத்மசுத்தி செய்யுங்கள். உங்களிடம் அந்த அழுக்குச் சேராது.

உங்களிடம் அவ்வளவு பவரைக் கொடுக்கிறோம் என்றால் யாம் அனுபவித்து வந்தது.
1.நொடிக்கு நொடி… எம்மை இம்சை பண்ணியே குருநாதர் சக்திகளைக் கொடுத்தார்.
2.உங்களுக்கு இம்சை வரும்போதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து
3.ஆத்ம சுத்தி மூலம் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோம்.

ஆனால்… சாமியை எண்ணிக் கொண்டிருந்தோம்… எனக்கு இப்படி இருக்கிறதே…! என்று (சாமியை) நினைத்துக் கொண்டே ஏங்கிக் கொண்டிருப்பார்கள்.

ஏதாவது உடலிலே வலித்தால் போதும். எம்மைத் திட்டத்தான் செய்கிறார்கள். சாமி… இப்படி இருக்கிறதே…! தலை வலிக்கிறதே… மேல் வலிக்கிறதே… என்றுதான் எண்ணுகிறார்களே தவிர ஆத்ம சுத்தி செய்யுங்கள் என்றால் எத்தனையோ பேர் விட்டுவிடுகிறார்கள்.

யாம் (ஞானகுரு) உங்களுக்கு லேசாகச் சொல்கிறோம். ஆனால் கஷ்டப்பட்டுத் தான் எல்லாவற்றையும் பார்த்து வந்தோம்.

உங்களுக்குள் வரக்கூடிய துன்பத்தைப் போக்க ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள்..! என்று அடிக்கடி சொல்லிக் கொண்டு வருகின்றேன். லேசாகச் சொன்னால் சொன்னால் பெரும்பகுதியானோர் அதைச் செய்வதில்லை.

சாமி மீது ரொம்பப் பற்று இருந்தால் போதும்…!
1.அவர்கள் என்ன தவறு செய்தாலும் சரி…
2.“சாமி இருக்கிறார்…” அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்…! என்ற எண்ணத்தில்
3.தன்னைத் திருத்திக் கொள்ள மாட்டார்கள்.
4.சாமி இருக்கிறார்…! என்ற எண்ணம் தான் வருகிறதே தவிர
5.சாமி சொன்னதை எடுத்துத் தன்னிடம் வரக்கூடிய தீமைகளைத் தடுப்பதற்கு இல்லை.

கோபத்தையும் ஆத்திரத்தையும் மற்றதையும் தான் எடுத்துக் கொள்கிறார்கள். சாமியிடம் ரொம்ப நெருங்கிப் பழகியவர்கள் இப்படிச் செய்கிறார்கள். நல்லதை எடுப்பதற்கு அவர்கள் எண்ணமே தடையாகிப் போகிறது.

ஐயா இப்படி இருங்கள்… உங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு ஞானிகளின் அருள் சக்தியை எடுங்கள் என்று சொன்னால் “சாமி தான் இருக்கிறாரே… சாமி செய்வார்…” என்றே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

சாமி என்ன செய்வார்…?

ஒவ்வொருவர் உயிரையும் கடவுளாக மதித்து உங்களை அறியாது ஆட்டிப்படைக்கும் தீமையான உணர்வுகள் மாற வேண்டும் என்று யாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

அந்த அடிப்படையிலே நீங்கள் எண்ணினால் தான் உங்களுக்குள் அந்த ஆற்றல்கள் பெருகும். ஆகவே…
1.சாமி சொன்ன உயர்ந்த சக்தியைத் தனக்குள் ஊன்றி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பற்றிப் பேச வேண்டும்… அதை எடுத்துத் தனக்குள் வளர்க்க வேண்டும்.

தியானத்தின் மூலம் நம் கேள்விகளுக்கு விடையை எப்படிப் பெறுவது…? – ஈஸ்வரபட்டர்

 

ஆண் பெண் ஆத்மக் கூட்டு ஐக்கியத் தொடருடன் பிறக்கும்… ஒளியின் உயர்வு வட்ட வளர் தொடர் சக்தியான “ஆதிமூலம்” என்று உணர்த்தும் மூலத்தையே
1.ரிஷி பத்தினி மூலத்தால் உருவாகும் வழியில் செல்லும் வழி முறைகளையும்
2.மனித ஆத்மாவின் உணர்வு எண்ண மோதலைக் கொண்டு தெய்வ குண சக்திகளைப் பெறும் நிலைக்கு
3.மனிதனின் எண்ண ஓட்டச் சமைப்பினால் செல்லும் வளர் முறைகளை இது நாள் வரை வழிப்படுத்தி வந்துள்ளேன்.

இதைப் படிக்கும் ஒவ்வொரு ஆத்மாவும் இங்கே காட்டியதைச் செயல் முறைப்படுத்தி வளர்ந்து வரும் தொடரில் தங்களுக்கு ஏற்படும் வினாக்களைத் தெளிவு முறை பெறும் மார்க்கத்திற்கு வழி உண்டு.

அதாவது இதைப் படிக்கும் போது ஏற்படக்கூடிய எண்ண மாற்ற நிலைகளைத் தெளிவு காணும் அறியும் நிலைக்கு… நீங்கள் எதை அறிய விரும்புகின்றீர்களோ
1.அறியும் எண்ணத்துடன் புருவ மத்தியில் நினைவைக் கூர் பாய்ச்சிச் செலுத்துங்கள்..
2.பின்… மேல் நோக்கிய சுவாசத் தொடர்பினால் உயர்ந்தோரின் நிலையுடன் எண்ணத்தைச் செலுத்துங்கள்…
3.வளர்ந்த ரிஷிகளுடன் நம் அறியும் எண்ண ஞானத்தைச் செலுத்துங்கள்.

அறிந்து கொள்ளும் உயர் ஞான அறிவாற்றலினால் இவ் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது
1.உயர் ஞானம் பெற்ற அலை சக்தியின் தொடர் நமக்குக் கிடைத்து
2.நம் உடலின் காந்த நுண் அலை ஈர்ப்பில்
3.நாம் அறிய விரும்பிய அனைத்திற்கும் விடைகள் கிடைக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

அன்பும் பரிவும் பாசமும் கொண்ட நாம் இன்று சாதாரண வாழ்க்கையில் நாம் எப்படி எண்ணுகின்றோம்…?

அவர்கள் செல்வச் செழிப்புடன் நன்றாக இருந்தார்கள். எல்லோருக்கும் அவர்கள் பல உபகாரங்களைச் செய்தார்கள். ஆனால், “பாவம்… இன்று இப்படி வேதனைப்படுகின்றார்கள்”.

அவர்கள் குடும்பமெல்லாம் “இப்படி வேதனைப்படுகின்றது…” என்று பரிவும் பண்பும் கொண்டு “பயன்படுத்தும் முறையைத் தவறி…” நாம் பாசத்தால் அவர்கள் படும் வேதனையை நுகரப்படும் பொழுது நம்முள் உள்ள நல்ல குணங்களை இழக்கச் செய்துவிடுகின்றது.

1.நல்ல குணங்களை விலுவிழக்கச் செய்துவிடுகின்றது.
2.இதை மாற்றுவதற்கு என்ன வைத்திருக்கின்றோம்…?
3.ஏதாவது வழி இருக்கின்றதா..,?

மனிதன் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கும் தன்னை அறியாது வரும் பகைமைகளை நீக்குவதற்கும் சந்தர்ப்ப பேதத்தால் நமக்குள் பகைமை உருவாக்கும் அணுக்கள் விளைவதைத் தடைப்படுத்துவதற்கும் பல உபாயங்களைக் கண்டுபிடித்து “ஆலயங்களை அமைத்தார்கள்… அன்றைய மெய்ஞானிகள்”.

ஆனால், அந்த ஞானிகள் காட்டிய வழியில் இன்று யாராவது ஆலயத்திற்குச் செல்கின்றோமா…? என்றால் எவரும் இல்லை.

வைகுண்ட ஏகாதசி – சொர்க்க வாசல் அன்று சொர்க்கத்திற்குப் போகும் பாதை…! என்று விடிய விடிய உட்கார்ந்து கொண்டு பேசுவார்கள்.

அப்போது அங்கே எதைப் பேசுவோம் என்றால் அமைதி கொண்டு இருக்கும் பொழுது “அவர் குடும்பத்தில் இப்படி… இவர் குடும்பத்தில் இப்படி… இவர்கள் இப்படி இருந்தார்கள்..!” என்று அந்த இரவு முழித்திருக்கும் பொழுது பேசுவார்கள்.

ஏனென்றால்…
1.சோர்வடையும் பொழுது அந்தச் சோர்வில் கிளம்பும் இத்தகைய உணர்வுகளைப் பேசிக் கொண்டிருப்பதுதான்
2.சொர்க்க வாசல் அன்றைக்கு வேலை.

பெரும்பகுதியானவர்களைப் பார்த்தோம் என்றால் இரவு முழுவதும் அடுத்தவர்களைப் பற்றிய குறைகளை விடிய விடியப் பேசுவார்கள்.

காலையில் சொர்க்க வாசலைத் திறந்தபின் “திபு திபு…” என்று தள்ளுவார்கள். ஆக தன்னை மறந்து இவ்வாறு செய்வார்கள்.

காரண அங்கே மோட்சத்திற்குப் போகக்கூடிய… “பாதை..” திறந்துவிட்டது. தான் முண்டியடித்துக் கொண்டு போய் அங்கே அபிஷேகத்தைச் சாற்றிவிடலாம் என்று செல்வார்கள்.

உடனே ஆண்டவன் மெச்சி…
1.“எல்லோரையும் தள்ளிவிட்டு..,” என்னை வந்து தரிசிக்க வந்தான்
2.அதனால் அவனுக்கு “அருளைப் பாலிக்கலாம்..,” என்று கடவுள் கொடுப்பான் என்று
3.இப்படித்தான் நம்பிக்கையை நாம் வளர்த்துக் கொண்டு நம்மை அறியாமலே தவறுகள் செய்கின்றோம்.

இதைப் போன்ற நிலைகளை நாம் மாற்ற வேண்டும்.

ஒரு மனிதன் துயரப்படுவதைக் கண்டபின் நாம் மகிழ்ச்சி அடையக் கூடாது. அவர்கள் துயரத்திலிருந்து மீள வேண்டும். மகரிஷிகளின் அருள் ஒளி அவர் பெறவேண்டும். அவர்கள் குடும்பத்தில் உள்ளோர் நலமும் வளமும் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இந்த உணர்வுகளை நமக்குள் சேர்த்து விட்டால் “இந்தப் பாதை…” நாம் உயர வேண்டும் என்ற உணர்வுகள் நமக்குள் விளைகின்றது.

எதன் வழிகளில் இதை எண்ணுகின்றோம்..?

1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதன் வழிகளில்தான் எண்ணுகின்றோம்.
2.அந்த அருளை முதலில் நாம் எண்ணுகின்றோம்.
3.அடுத்துத் துன்பப்படுவோர்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணுகின்றோம்.

அப்பொழுது அவர்கள் துன்பத்தை நாம் நுகர்வதில்லை.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற கடமை உணர்வு நமக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும்

 

வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி மெய்ப் பொருளைக் காணும் நிலைகளுக்குச் சூரியனைப் போன்று நாம் ஒவ்வொருவரும் பிரகாசிக்க வேண்டும்.

நம் உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் நம் உயிரே சூரியனாக இருந்து இயக்குகின்றது. அதே மாதிரி நாமும் பிறருடைய நிலைகளுக்குப் பிரகாசிக்கும் நிலையாக ஒளியின் சுடராக சூரியனாக மாற வேண்டும்.

அதாவது… சூரியனைப் போன்று
1.துருவ மகரிஷி ஒளியின் சுடராகத் துருவ நட்சத்திரமாக அறிவின் ஞானமாக எப்படி வளர்கின்றதோ
2.நாம் ஒவ்வொருவரும் அந்தத் துருவ மகரிஷியாக மலர வேண்டும்.
3.அந்த மகரிஷி காட்டிய நிலைகளை நாம் பின்பற்ற வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி என்ற நிலையில் தீமைகளை அடக்கித் தீமைகளை அகற்றிடும் உணர்வாக உடலான பிரபஞ்சத்திற்குள் நாம் வளர்த்தல் வேண்டும்.

ஆகவே நீங்கள் அனைவரும் தீமைகளை அகற்றி விடுவீர்கள் என்று நம்புகின்றேன்.

1.குரு பக்தி என்ற நிலையில்… குரு என்று நாம் எதைச் சொல்கின்றோமோ
2.நமது குருநாதர் எதைச் சொன்னாரோ அதன் வழிகளிலே நாம் கடைப்பிடித்து
3.ஒருங்கிணைந்த நிலைகளில் வழிப்படுவோம்.

நம்மைக் காப்போம்… நம்மைச் சார்ந்தவரைக் காப்போம்… உலகைக் காப்போம்…! என்ற நிலைகளில் அந்த உயர்ந்த எண்ணங்களை வளர்ப்போம்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் “அந்தச் சப்தரிஷி மண்டலமே நமக்கு எல்லை…!” என்ற நிலையினை வகுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியாகத் தியானிப்போம்.

சப்தரிஷிகளின் அருள் சக்தி நாம் பார்க்கும் அனைவரும் பெற்று அவர்கள் வாழ்க்கையில் மன பலமும் மன வளமும் பெற்று தொழில் வளம் பெருகி செல்வம் செல்வாக்கு பெற்று மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தை ஒவ்வொரு நாளும் எடுத்து நாம் வளர்க்க வேண்டும்.

குரு வழியில் நாம் அனைவரும் அந்த ஞானத்தின் தொடர்பில் வளர வேண்டும். அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏககத்துடன் நாம் தியானிக்க வேண்டும்.

1.குரு நமக்கு எதை உபதேசித்தாரோ நமக்குள் ஒவ்வொரு நாளும் அதை வளர்க்க வேண்டும்
2.நம் பார்வையால் பிறருடைய தீமைகள் நீக்கப்பட வேண்டும்
3.நம் சொல்லால் பிறருடைய கஷ்டங்கள் நீக்கப்பட வேண்டும்.
4.குரு அருளால் அந்தச் சக்தியைப் பெற்று எல்லோரும் நலம் பெற வேண்டும் என்று நாம் தவமிருக்க வேண்டும்.

எல்லோருடைய குடும்பத்திலும் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து அவர்கள் மனமகிழ்ந்து வாழ வேண்டும் என்று நாம் தவமிருக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்ற கடமை உணர்வுடன் நாம் செயல்பட வேண்டும்.

மற்றவர்களுக்கு அந்த அருள் உணர்வினை எடுத்துப் போதிக்கும் தன்மைகள் பெற வேண்டும். அவர்களுக்கு எடுத்துக்காட்டாக நம்முடைய வாழ்க்கைத் தரம் அமைதல் வேண்டும்.

1.அவர்களை நல்வழிப்படுத்தும்… மன பலம் பெறச் செய்யும்… நிலையான வளர்ச்சியாக நீங்கள் பெற வேண்டும்…
2.அந்த நிலையை நீங்கள் அடைய வேண்டும் என்று நான் (ஞானகுரு) பிரார்த்திக்கிறேன்.

ஆண் பாதி பெண் பாதி… என்ற அகில உலகங்களையும் படைக்கும் சக்தி – ஈஸ்வரபட்டர்

 

ஆண் பெண் இன விருத்தியில் ஆணின் அமில சக்தியின் பெண் ஈர்ப்பு ஜீவ நிலையில் சரீர வாழ்க்கை திருமண பந்த சொந்தத்தால் மனிதனின் வம்சத் தொடர் மக்கள் செல்வ நிலை பெற்று வாழும் வழித் தொடர் பூமிப் பிடிப்புச் செயலுடன் ஒன்றிய வாழ்க்கையாக உள்ளது.

இதனை ஒத்த பிறப்பு வளர்ப்பு இறப்புடன் ஒன்றிய சுழற்சியையே எப்படி இரண்டு இரண்டு உறுப்புகளின் உருவ உடல் ஞான ஒன்றிச் செயல்படுகின்றதோ அதற்கொத்த தன்மை போன்றே
1.ஆண் இன அமில ஆத்ம அலையும்
2.பெண் இன ஜீவ வளர்ப்புக்குகந்த ஆத்ம அலையும் ஒன்றாக
3.இரண்டு ஜீவ சரீர பிம்ப ஆத்மாக்களின் தொடர்பு பிறப்பு சிசு பிறப்பதைப் போன்று
4.வலுக் கொண்ட ஆத்ம இணைப்பின் தொடரில் பிறக்கும் நிலைதான் “அர்த்தநாரீஸ்வரர்” என்று காட்டினார்கள்.

ஆண் பாதி… பெண் பாதி… “சிவ சக்தி…” என்றுணர்த்திய தெய்வ நிலையில் வழிகாட்டிய உண்மைத் தத்துவ விளக்க நிலைக்கொத்த ஆத்ம ஐக்கியத்தில் பிறக்கப்படும் வளர்ச்சி நிலையுடன் சுழற்சியுடன் இச்சுழற்சியுடன் ஒத்த ஆத்ம தொடர் கொண்டோரின் ஈர்ப்பு நிலை மகவுகளை சரீரப் பிறப்பில் சரீர சிசு வளர்வதைப் போன்று
1.ஆண் பெண் இன ஆத்ம உயர் சக்தியைக் கொண்டு கூட்டமைப்பின் ஞான சித்தால்
2.“ரிஷி பத்தினி..” என்ற ஒளி நிலை பெறும் ஆத்ம சக்தியைக் கொண்டு
3.இந்தப் பூமி மட்டுமல்லாமல் மற்ற ஏனைய மண்டலங்களுக்கும் உயர்வைக் காட்டிட முடியும்.

ஞானச் சித்து கொண்டு “இரண்டு ஆத்ம ஐக்கியத்தில் ஒன்றானவர்கள்…”
1.உயர்வு கொள்ளாத் தனித்த நிலையில்
2.சித்து நிலையுடன் வளர்ச்சி பெற முடியா உயர் சக்தி கொண்ட தொடர்புகளும்
3.ஆத்ம இணக்க ஆண் பெண் சரீர இயக்கமுடன் ஒத்த நிலையில்
4.சித்து நிலை கொள்ளக்கூடிய ஜீவ சக்தித் தொடர்புடன் வளரும் ஆத்ம ஐக்கிய வளர் சக்தியின் கூட்டமைப்பில்
5.அந்த வலுவாகும் சக்திகள் ஐக்கியம் கொள்ளும்… தன் வளர்ப்பின் நிலைக்காக…!

பல கோடி உண்மைத் தத்துவ உயர் வளர்ச்சி “இன்பத்தின் கோடி…” என்று உணர்த்துகின்றார்களே அத் தொடருக்கும் உயர்ந்த சக்தி நிலைகளை இச்சரீர வாழ்க்கை பந்த ஆண் பெண் ஆத்ம வலுவைக் கொண்டு உயர முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நம்மைப் பண்படுத்துவதற்காக வைக்கப்பட்ட ஆலயங்களில் நாம் எப்படி வழிபட வேண்டும் என்று ஞானிகள் முறைப்படுத்திக் காட்டியுள்ளார்கள்.

தன் அருகிலே இருப்போரை நல்ல பண்புகள் கொண்டு நல்வழிப்படுத்துவதும்… உயர வேண்டும் என்ற பண்பினை வளர்த்துக் கொள்வதற்கும்… பகைமை உணர்வுகள் தனக்குள் வளராது அந்த நிலையைச் சீர்படுத்துவதற்குத்தான் ஆலயம்.

நாம் எல்லோரும் ஏகாந்த நிலைகள் கொண்டு மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும். நாங்கள் பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் நலம் பெற வேண்டும். அவர்கள் தொழில்கள் அனைத்தும் வளம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வுடன் ஆலயத்திற்குள் செல்ல வேண்டும்.

ஒரு நூலால் கடினமான ஒரு பொருளைத் தூக்க முடியவில்லை என்றாலும் பல நூலை ஒன்றாக இணைத்து ஒரு கனமான பொருளைத் தூக்க முடியும்.

இதைப் போல எல்லோரும் எல்லோருக்குள்ளும் உள்ள பகைமை என்ற உணர்வை மறந்துவிட்டு அருள் ஞானியின் உணர்வைத் தனக்குள் வலு சேர்த்துக் கொள்தல் வேண்டும்.

பின்பு…
1.இந்த ஆலயத்திற்கு வருவோர் அனைவரும் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று அமைதி கொண்டு…
2.இந்த உணர்வின் தன்மையை எண்ணியவாறு…. ஆலயத்தை வலம் வந்தால் போதும்.

“எவ்வளவு தூரம் நடக்கின்றீர்களோ..” அந்தத் தூரம் வரையிலும் இந்த எண்ணத்தைக் கொண்டு
1.“ஆலயத்தை ஒரு சுற்று சுற்றி வந்து…”
2.நேராக உங்கள் வீட்டிற்குள் சென்றால் போதும்.

இந்த நல்ல உணர்வுடனே வீட்டிற்குச் செல்லப்படும் பொழுது நீங்கள் எண்ணிய உணர்வுகள் உங்கள் உயிரிலே (புருவ மத்தியில்) படும் பொழுது… அங்கே அபிஷேகம் ஆகின்றது.

அந்த அருள் உணர்வின் அலைகள் உடலுக்குள் பரவப்படும் பொழுது எந்த நல்ல குணங்களோ அந்த நல்ல குணங்களுக்கெல்லாம் அமுதாகின்றது.

நல்ல குணங்கள் அனைத்திற்கும் அமுதின் தன்மையைப் பெறச் செய்யும் பொழுது அவைகள் நல்ல உற்சாகம் பெறுகின்றது.

அப்பொழுது. தீமையான உணர்வுகள் நமக்குள் வளராது.., அதற்கு “ஆகாரம் கொடுக்காது” தடைப்படுத்துகின்றோம். இதைத்தான் “விரதம்” என்பது.

ஒரு நிலைப்படுத்தும் வழி – ஈஸ்வரபட்டர்

 

உலக வாழ்க்கை… பந்த… கர்ம… காரியங்கள் நடத்திட…
1.உலகச் சுழற்சியுடன் ஒன்றி வாழும் வாழ்க்கையையே
2.நாம் வளரும் வாழ்க்கைக்கு வலுவாக்கிக் கொள்ளும் சத்தாக
3.அவற்றின் நிலையை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

எப்படி ஒரு மரமானது பல விழுதுகளிட்டு வேர் ஓடி… விழுதின் மூலம் சத்தை எடுத்து அம்மரமானது வளருகின்றதோ அதைப் போன்றே வாழ்க்கை கர்ம காரியங்கள் யாவையும் “நம் உயர்வின் வளர்ச்சிக்குச் சத்தெடுக்கும் விழுதுகளாக” அமைக்க வேண்டும்.

1.தீயது என்று எதனையும் ஒதுக்காமல
2.தீயதில் இருந்து தான் “நல் முத்தை” எடுக்கும் வழி முறை போன்று
3.எண்ணத்தின் உணர்வைச் செலுத்தும் ஒவ்வொரு செயலையுமே
4.ஞானிகள் காட்டிய வழியில் வழி நடந்து பக்குவப்படுத்திடல் வேண்டும்.

மனித எண்ணமுடன் பலருடன் கலந்துறவாடும் நிலையிலும் அவர்கள் எந்தக் குண எந்த வளர்ச்சியில் ஒன்றியிருந்தாலும்… நம் உணர்வின் எண்ணம் செலுத்தும் அலைக்குகந்த… அலை உணர்வின் எதிர் அலை சக்தியை நாம் பெறும் நிலை தான் உண்டு.

ஆகவே ஒவ்வொரு காலங்களிலும்
1.பூமியின் சுழற்சியில் இருந்து தான் – இருட்டில் இருந்து தான் ஒளி பெறும் நிலையாக
2.உணர்வின் எண்ணம் செயல்படும் வலுவைக் கொண்டு தான்
3.ஆத்மாவின் வலுக்கூடிய நிலையில் ஆத்மாவின் இயக்க நிலை ரிஷித் தொடர்புடன் ஒன்றிய உயர் நிலைக்குச் செல்லும்.

இத்தகைய நிலை பெற வேண்டும் என்றால் நாம் எப்படி முயற்சிக்க வேண்டும்…?

அதாவது சரீர அவயங்களில் இரண்டு நிலை கொண்ட உறுப்புகள்
1.இரண்டு கால்களைக் கொண்டு ஒத்த நிலையில் “நடை” போடும் இயக்க நிலை போன்றும்
2.இரண்டு கைகளைக் கொண்டு (“இணைந்த கைகளாக”) ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல் கொள்ளும் இயக்க நிலை போன்றும்
3.ஒளி ஈர்க்கும் கண்களை… ஒத்த நிலை ஒன்று போல் கூர் பாய்ச்சிக் காணும் நிலை போன்றும் இருத்தல் வேண்டும்.

ஏனென்றால் கண்களின் விழிகளின் அமைப்புச் சிறிது மாறினாலும் இரண்டு உருவ நிலையைத்தான் காண முடியும். ஒரு உருவமாகக் காண முடியாது.

ஆக.. ஏற்றத்தாழ்வு நிலையின்றி…
1.இரண்டு விழியைக் கொண்டு ஒன்றாக காணும் ஒளி நிலையைப் போன்றும்
2.செவி… சுவாசம்… “இவற்றின் இணைப்பு” இந்த இரண்டின்
3.ஒரு நிலை கூடும் செயலை ஒத்தும் அமைத்தல் வேண்டும்.

அது மட்டுமல்ல…!

1.“சிவம்” என்ற அமிலமும்..
2.“சக்தி” என்ற ஈர்ப்பும்…
3.பூமியாக உருப்பெற்ற தொடரில்
4.சிவசக்தி விநாயகனாக உருவம் பெற்ற ஆத்ம சரீர பிம்ப வளர்ப்பானது
5.எப்படி அந்த “ஆண் பெண் அமில உணர்வு” வளர்ச்சியில் வலுக் கொண்ட ஜீவ நிலை (ஜீவனுள்ள உடலை) பெற்றதுவோ
6.அதைப் போன்று இவ்வாத்ம வழித் தொடர் நிலையிலும்
7.ஆண் பெண் என்ற இணைப்பால் தொடர் கொள்ளும் வழி முறையில் ஆத்மீக வளர்ச்சி கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்துடன் என்னை ஆயுள் மெம்பராக இணைத்தார் குருநாதர்… உங்களையும் இணைக்கின்றோம்

 

சாதாரணமாக மனிதனானவன் தீமையை அதிகமாக அவன் செயல்படுத்த வேண்டும் என்று எண்ணுவதில்லை. நன்மை செய்யவே முற்படுகின்றான். ஆனால்
1.நன்மை செய்ய முற்பட்டாலும்
பிறருடைய துயரப்படுத்தும் நிலையோ வேதனைப்படுத்தும் உணர்வோ அவன் நுகர்ந்து விட்டால்
3.அவன் நல்ல குணங்களை மறைத்து செயலற்றவனாக மாறி
4.இவனும் தீயவனாகத்தான் மாறுகின்றான்.

ஒருவர் நம்மை அடிக்க வருகிறான் என்று வைத்துக் கொண்டால் அவன் நம்மை அடித்து விடுவான் என்று பயந்து ஓடுகின்றோம்.

அப்படி ஓடினாலும் ஒரு சமயம்… “ஏன் இப்படி…?” என்று திரும்பினால் அவன் செய்வதற்கு முன் நாம் தவறு செய்பவனாக மாறுகின்றோம். இப்படித் தான் மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு அறியாத நிலைகளில் மக்கள் வாழ்ந்து கொண்டு வருகின்றனர். அதிலிருந்து அவர்களை மீட்க “மெய் ஞானிகளின் உணர்வினை நீ பதிவு செய்…” என்றார் குருநாதர்.

ஒவ்வொரு உயிரும் கடவுள். உயிரால் உருவாக்கப்பட்ட அந்த உடல் ஆலயம். மனிதனை உருவாக்கிய நல்ல குணங்களைத் தெய்வமாக மதித்து அதைப் பாதுகாக்கும் உணர்வுடன் நீ செயல்பட வேண்டும் என்றார்.

தீமைகளை நீ பார்க்க நேர்ந்தால்… கேட்க நேர்ந்தால்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்று எண்ணி அந்தச் சக்திகளை நீ எடுத்துக் கொள்.

அவர்கள் நலம் பெற வேண்டும் என்றும்… அந்த ஈசன் வீற்றிருக்கும் ஆலயம் பரி்சுத்தம் ஆக வேண்டும் என்றும்…
1.நீ அந்த உயிரைக் கடவுளாக மதி. அவர் உடலை நீ கோயிலாக மதி.
2.மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்கள் அங்கே வளர வேண்டும் என்று நீ எண்ணு.

அதன் வழி நீ செயல்பட வேண்டும், அதற்கேதான் துருவ நட்சத்திரத்துடன் உன்னை (ஞானகுரு) ஆயுள் கால மெம்பராக இணைக்கிறேன் என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

1.நான் (ஈஸ்வரபட்டர்) அதிலே இணைந்தேன்.
2.நான் அங்கே செல்கின்றேன்.
3.நான் சென்ற பின்பும் இதன் உணர்வை நீ தொடர்பு கொண்டால்
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வை நீ பெற முடியும்.
5.அதை நீ எளிதில் பெற்று அனைவருக்கும் கொடுக்க முடியும்.
6.இருளிலிருந்து அனைவரையும் மீட்க முடியும் என்று உணர்த்தினார் குருநாதர்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

அடிக்கடி இடைஞ்சல் செய்கிறார் என்று ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் அவர்கள் குடும்பம் நாசமாகப் போக வேண்டும், உங்கள் குடும்பம் மண்ணில் போகும் என்ற இந்த நிலைக்குச் சிலர் எண்ணத் தொடங்கிவிடுகின்றார்கள்.

இந்த உணர்வுகளை அவர்கள் எடுக்கப்படும் போது இதே உணர்வு அவர் உயிரால் இயக்கப்பட்டு அந்த உணர்வுகள் உடல் முழுவதும் பெருக்கப்படுகின்றது.

இவ்வாறு எடுத்த உணர்வையே உயிர் உடலாக உருவாக்கி அவர்களுக்கேதான் அது பாதகமாக்கும்.

ஏனென்றால் ஒரு வித்தினை உருவாக்கினால் மீண்டும் அதை நிலத்தில் ஊன்றும்போது அதனின் வித்துக்களாக விளையத் தொடங்குகின்றது.

கெடுதல் செய்தவர் “நாசமாகப்போக வேண்டும்…” என்ற உணர்வினை முதலில் இவர்கள் எண்ணுகின்றனர்.

அந்த உணர்வின் தன்மை ஊழ்வினை என்ற வித்தாக இவருக்குள் உருவாகின்றது. அதைக் கெடுதல் செய்தவரிடம் சொல்லாகச் சொல்லப்படும் போது இங்கே விளைந்த சொல்கள்
1.அந்த ஆகாத எதிரியின் செவிகளில் படுகிறது.
2.அந்த உணர்ச்சிகள் கண் வழி கவருகின்றது.

ஆகா… என்னை இவ்வாறு சொல்லத் தொடங்கிவிட்டாயா…? என்று எதிர் பதிலாக இரண்டு பேருமே இந்த உணர்வுகளைப் பேசுகின்றனர்.

இப்படிப் பேசும் உணர்வுகள் என்ன செய்கின்றது…?

இருவரையுமே அது கொல்லுகின்றதே தவிர அவர்களுக்குள் நல்ல குணங்களை எண்ணுவதற்கு வழியில்லை. இருவரிடத்திலும் உள்ள நல்ல குணங்கள் அனைத்தும் மடிகின்றது.

மனிதனுக்கு மனிதன் நாம் எப்படி வாழ வேண்டும் என்று அறியாதபடி நாம் என்ன செய்கிறோம்…?
ஆலயங்களுக்குச் சென்று
1.என் எதிரி வீழ வேண்டும்
2.என் வாழ்க்கை நல்லதாக அமைய வேண்டும் என்று
3.தவறான வழியில் வரம் கேட்கின்றார்கள்.

இப்படி சந்தர்ப்பத்தால் மோதிய உணர்வுகள் அந்த வெறுப்பின் அலைகளுக்குத்தான் செல்லச் செய்கின்றது…! என்று குருநாதர் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

கருப்பணச்சாமி – இதைப் போலக் கொடூர தெய்வங்களைக் காட்டும் போது ஆட்டையோ கோழியையோ பலி கொடுக்கின்றோம்…! என்று வேண்டுகிறார்கள்.

ஆக சிந்திக்கும் தன்மை இழந்தால் அப்பொழுது அதற்குத்தக்க பிறிதொன்றைக் கொல்லும் உணர்ச்சிகளைத் தான் நமக்குள் ஊட்டுகின்றது.

நல்ல சிந்திக்கும் தன்மையை நமக்குள் மாற்றும் அத்தகைய நிலைகளில் இருந்து மீள்வதற்குத்தான் கருப்பணச்சாமி போன்ற உருவங்களைக் காட்டினார்கள் ஞானிகள்.

நம்மை மறைக்கும் தீமைகளிலிருந்து மீள
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா பெற வேண்டும்.
4.எங்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும்.
5.எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும்.
6.நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று இப்படி மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்…?

கருப்பணச்சாமியை எண்ணி
1.என் எதிரி வீழ்ந்தால் என் தொழில் விருத்தியானால்
2.உனக்கு ஆட்டைக் கொடுக்கிறேன் பலி கொடுக்கிறேன் என்ற உணர்வுகளில் தான்
3.நாம் பக்தியில் செல்லுகின்றோம்.

நமக்குள் தீமை வருகிறது என்று அறியவில்லை.

நாம் வேதனைப்படும் உணர்வினை நுகர்ந்தால் வேதனைப்படுவோர் உணர்வினை நுகர்ந்தால் பாசத்துடன் இருக்கும்போது குழந்தைக்கு நோய் என்று உணர்வானால் நாம் சிந்திக்கும் தன்மை இழந்துவிடுகின்றோம்.

அவனைப் பாதுகாப்பதற்கு மாறாக… அவசரத்தில் இந்த வைத்தியரிடம் போவோமா… அந்த வைத்தியரிடம் போவோமா… என்று அதில் முழுமை பெறாதபடி இந்த “ஆவேச உணர்வுகள் தான்” வருகின்றது.

தீமையின் உணர்வை நமக்குள் வளர்த்து அந்த ஆவேசத்தால் காக்கும் உணர்வை இழந்து அவனையும் காக்க முடியாது. கடைசியில் அவனால் எடுத்துக் கொண்ட வேதனைகள் கடும் நோயாகவும் மாறுகின்றது.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் அந்த மெய் ஞானிகள் காட்டிய வழியில் பகைமைகளை மறந்து சகோதர உணர்வை வளர்த்து அன்பைப் பெருக்கி பண்புகளை வளர்த்துத் தெய்வீக நிலையாக நாம் பெற வேண்டும்.

அந்த நிலையை ஒவ்வொருவரும் வளர்த்து உடல் நலம் பெற்று மன நலம் பெற்று மன பலம் பெற்று மன வளம் பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நீங்கள் என்றென்றும் இணைந்து வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

நல்லதைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் வருவோருக்கு என்றுமே நாம் தடையாக இருக்கக் கூடாது

 

அருள் ஞானத்தைப் பெற வேண்டும் என்று எவ்வளவோ ஆர்வத்தில் இங்கே வருகின்றார்கள். ஆனால் இங்கே நானா… நீயா…? என்ற நிலைகளில் ஒரு சிலர் செயல்படுகின்றனர்.

ஞானம் பெற வேண்டும் என்று இங்கே எந்தப் பக்குவத்துடன் வருகின்றார்களோ அவர்கள் மனம் புண்பட்டால் அதனுடைய விளைவுகள் நம்முடைய வளர்ச்சியைக் குன்றச் செய்ததுவிடும்.

ஒரு மனிதன் எந்த ஏக்கத்துடன் வருகின்றானோ… அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் வரும் பொழுது… அதற்குத் தடையாக நாம் இருந்தால் அவன் எண்ணங்கள் எவ்வளவு பெரிய நிலையை நமக்கு உருவாக்கும்…! என்று உங்களுக்கே தெரியாது.

இதையெல்லாம் நாம் நம்மிடம் இருந்து அப்புறப்படுத்துதல் வேண்டும். பிறரை நாம் வாழ்த்த வேண்டும்.
1.பிறரை மதித்துத் தான் பழக வேண்டுமே தவிர
2.அவர்களை நாம் தாழ்த்திப் பழகவே கூடாது

குருநாதர் இதைத்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தார். தாயாகவும் நீ இரு… சேயாகவும் நீ இரு…! என்றார்.

1.குழந்தை தாயை ஏசிவிட்டாலும் அந்தத் தாய் “தன் குழந்தை” என்று அரவணைத்துத் தான் செயல்படும்
2.அதே சமயத்தில் குழந்தையைத் தாய் அடித்து விட்டாலும் மீண்டும் அந்தக் குழந்தை தாயை அணுகியே தான் வரும்.

தாயாகவும் சேயாகவும் நாம் ஒருங்கிணைந்த நிலையில் கொண்டு வாழ வேண்டும் என்று குருநாதர் எனக்கு இதைத்தான் முதலில் கொடுத்தார்.

எத்தனையோ பேர் உன்னை ஏசுவார்கள் பேசுவார்கள். ஆனால் தாயாக இருந்து அதை நீ ஏற்று… அவர்களுக்கு… சேய்க்கு உபதேசிப்பது போன்று ஒவ்வொரு நிலைகளிலும் நீ காத்தருள வேண்டும். தாய் தன் குழந்தையை எப்படிக் காக்கின்றதோ அதைப் போல நீ வரவேண்டும்.

ஆகவே நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் தாயாக மாற வேண்டும். சேயை எப்படி வளர்க்கின்றோமோ அது போலச் செயல்பட வேண்டும்.

குழந்தையிடம் யார் எதைப் பேசினாலும் அல்லது குழந்தையைத் திட்டிவிட்டு அடுத்து ஒரு பிஸ்கட்டைக் கையில் கொடுத்தால் அது வாங்கிக் கொள்ளும்.
1.அந்தக் குழந்தையின் செயலைப் போல
2.நாமும் பகைமையை மறத்தல் வேண்டும்

அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பார்க்கும் அனைவரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தை நமக்குள் உயர்த்த வேண்டும். இதைப் போன்ற நிலைகளை நாம் பின்பற்றுதலே நலம்.

அதற்குத்தான் இந்தக் கூட்டமைப்பை… ஸ்தாபனத்தை அமைத்திருக்கின்றோம். குருவின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்துள்ள நாம் அனைவரும் அதைச் செம்மையான முறையில் கடைப்பிடித்து வழி நடத்துதல் வேண்டும்.

பல்லாயிரக் கணக்கானோர் நல்வழியினை விரும்ப… இதற்குள் இரு நூறு பேர் தடைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்ற நிலையில் நானும் (ஞானகுரு) காட்டிற்குள் சென்று இதைச் செயல்படுத்த முடியும்.

ஏனென்றால் அந்த இடைஞ்சலான இடத்தில் போய் உட்கார்ந்தாலும் அங்கே வருபவர்கள் எத்தனையோ கஷ்டம் என்று ஒரு நான்கு பேர் அந்த “நல்லதைப் பெற வேண்டும்…” என்ற எண்ணத்தில் வருவார்கள்.

அவர்களுக்கு மட்டும் நான் அருள் ஞானத்தைப் பெறச் செய்ய முடியும். கஷ்டப்பட்டு எபப்டியும் நல்லதைப் பெற வேண்டும் என்ற நிலைகளில் வருவோர் நிச்சயம் அதைப் பெறுவார்கள்.

ஆனால் கஷ்டமில்லாமல் நல்லதைப் பெற வேண்டும் என்ற நிலைக்கு வரும் பொழுது எப்படி இருக்கும்…? அது இலேசாகத் தான் தெரியும்.

அது போன்று நீங்கள் ஆகிவிடக் கூடாது என்பதற்குத் தான் இதைச் சொல்லி எச்சரிக்கை செய்கிறேன் (ஞானகுரு).

உயிராத்மாவைப் பாதுகாக்க வேண்டிய முறை – ஈஸ்வரபட்டர்

 

நீர்ச் சத்து நிறைந்த பொருளை உஷ்ணப்படுத்தி வேக விடும் தருணத்தில் நீர் சத்து சுண்டி அப்பொருளும் வெந்து விடுகின்றது.

அதையே இன்னும் அதிக உஷ்ணமுடன் வேக விட.. வேக விட… உஷ்ணத்தினால் எரிசக்தியின் காந்தலுக்குகந்த கருகும் நிலை கொண்டு எந்தப் பாத்திரத்தில் வேக விடுகின்றோமோ கருகிய நிலையுடன் அதிலே ஒட்டி உலர்ந்த பக்குவம் பெற்று விடுகின்றது.

அதுவே நீர் சக்தி இல்லாத எண்ணை வித்தை ஓர் வாணலியில் எண்ணை விட்டு அதைக் காய்ச்சும் பொழுது
1.எவ்வளவு நேரம் அந்த எண்ணை காய்ந்தாலும்
2.மெழுகு போல் திடம் கொண்டு… பிசின் போன்ற நிலை பெறுகின்றது.
3.உலர்ந்த தன்மை பெறுவது இல்லை.

இதைப் போன்றுதான் நம் உடலில்… ஜீவ உணர்வு எண்ண பூமி சமைப்பின்…
1.நீர் சக்தியுடன் நாம் எடுக்கும் சுவாச அலையானது…
2.பூமி ஈர்ப்புப் பிடியுடன் ஒன்றிய சரீர இயக்க வலுத் தன்மையாக
3.இந்தப் பூமி சமைக்கும் நிலைக்கொப்ப ஒன்றிய உடல் வாழ்க்கையாக நிலை அமைகின்றது.

ஆனால் வலுக் கூடிய வளர்ச்சி கொண்ட… இந்தப் பூமியின் வலுப் பெற்ற… பிற மண்டலத்தில் இருந்து அகிலத்தையும் அறியவல்ல ஆற்றல் கொண்ட ரிஷிக் கோடிகளான தேவாதி தேவர்களின் சக்தியை நாம் பெற வேண்டும்.

அத்தகைய வலுக் கொண்டோரிடம் எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி நாம் எடுக்கும் சுவாச வலுவால்
1.சரீர இயக்க வலுத்தன்மையும்
2.எலும்புகளின் உறுதி ஊட்டச் சத்தும்
3.உண்ணும் உணவைக் காட்டிலும் சத்தாக
4.எலும்புகளின் வளர்ச்சி முற்றி ஆத்ம வலு நிலை கொள்கின்றது.

நீரின் சத்தை எடுத்துத்தான் வித்தாகின்றன எண்ணைச் சத்து தரும் வித்துக்கள். அதைப் போன்று நம் ஆத்மாவை “சரீர ஜீவ நீர் சத்தைக் கொண்டு”
1.எலும்புகளை எல்லாம் எண்ணை வித்தின் வளர்ப்பு நிலை போன்று வலுவாக்கி
2.அந்த வலுவின் தொடரைக் கொண்டு ஆத்ம இயக்கம் செயல் கொள்ள வேண்டும்.

உதாரணமாக நீர் சத்தால் துருப்பிடிக்கும் இரும்பு உலோகத்தை எண்ணைச் சத்தை இட்டு அதைத் துருப்பிடிக்காமல் செய்கின்றோம் அல்லவா…!

அந்த இரும்பைப் பாதுகாக்கும் செயல் தன்மை போன்று நம் ஆன்மாவைப் பாதுகாக்க வேண்டும்.

அதாவது…
1.ஜீவ இயக்க எண்ண உணர்வானது இந்தப் பூமி சமைப்பின் உணர்வு எண்ண
2.கர்ம காரிய வாழ்க்கையுடன் சிக்கித் துருப்பிடிக்கும் கரையும் நிலை போன்ற நிலைப்படுத்தாமல்
3.எண்ணை வித்தைப் போன்று
4.சத்து நிலை பூண்ட… சத்து குண வலுக் கொண்டோரின் வலுவைப் பூசி
5.ஆத்ம உடலைப் பாதுகாத்திடல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

வடை சுடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். நெருப்பில் நாம் என்ன செய்கிறோம்..? பொருளைப் போடுகின்றோம். எண்ணெய் சூடாகுவதற்கு முன் வடையைத் தட்டிப் போட்டால் என்ன செய்யும்…?

வடை சீராக வேகாது. எண்ணெய் வெளியில் வரும். பின் அது சூடாகச் சூடாக வடையின் ருசியே மாறிவிடும்.

எண்ணெயின் நிலையை அதிகமாகக் காய்ச்சி வடையின் தன்மை போட்டால் மேல் பாகம் கருகி விடுகின்றது. ஆனால் உள்ளே வேகாமல் மாவாகவே இருந்து விடுகிறது.

1.சமப்படுத்தும் உணர்வின் தன்மை கொண்டு
2.அதைப் பக்குவப்படுத்தும் நிலை கொண்டு தான் நாம் பதார்த்தங்களை உருவாக்குவோம்
3.அப்பொழுது தான் அவைகள் சுவையாக இருக்கும்.

பக்குவம் இல்லாது பதார்த்தங்களைச் செய்தால் ருசி இருக்காது.

இதைப் போலத் தான் குடும்பத்தில் நம் குழந்தை ஒரு தவறு செய்கிறான் என்றால் அந்தப் பருவம் பார்த்து அந்த உணர்வின் தன்மையச் சொல்லுதல் வேண்டும்.

பருவம் பார்த்து அந்த உணர்ச்சிகளை ஊட்டும் நிலை வரும் போது ஏற்றுக் கொள்ளும் பருவம் அங்கே வர வேண்டும்.. வரும்.

ஏற்றுக் கொள்ளும் பருவம் அங்கே இல்லை என்றால் நாம் கூறிய உணர்வுகளும் அங்கே விளையாது. அது விளையும் பருவம் அங்கே இழக்கப்படுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் ஒவ்வொரு நொடிகளிலேயும்
1.நம்மை எப்படிக் காக்க வேண்டும்…?
2.நமக்குள் சுவை மிக்க உணர்வை எப்படி உருவாக்க வேண்டும்…?
3.நம் சிந்தனை எப்படி இருக்க வேண்டும்…? என்ற நிலைகளுக்குத் தான் அருள் ஞானிகளைப் பற்றி உபதேசிக்கின்றோம்.

ஏனென்றால் இந்த உலகில் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ வகையில் தீமைகள் வருகிறது. வந்தாலும் தீமை செய்தார்கள்… தீமை செய்து கொண்டேயிருக்கின்றார்கள்… என்று அறிகின்றோம்.

அறிந்து கொண்டாலும் அந்தத் தீமையான உணர்வுகள் நமக்குள் வளராது தடுத்தல் வேண்டும்.

அவ்வாறு தடுத்தல் வேண்டும் என்றால் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று நம் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் உயிரின் பால் செலுத்துதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிர் வழி சுவாசிக்க வேண்டும். அப்பொழுது அந்தத் தீமை என்ற உணர்வின் தன்மையத் தடைப்படுத்திக் கொள்ள முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை இவ்வாறு சேர்க்கப்படும்போது தீமையின் வீரியம் குறைகின்றது. அருள் ஞானிகள் வளர்த்துக் கொண்ட உயர்ந்த குணங்களை நமக்குள் சமைத்தல் வேண்டும்.

“மிளகாய்” தனித்துக் காரமாகத் தான் இருக்கின்றது. மற்ற பொருளுடன் இணைக்கும் போது சுவையாக மாறுகின்றது.

ஒருவன் தவறு செய்கிறான் என்ற உணர்வை நாம் உற்றுப் பார்த்து நுகர்ந்தாலும் அடுத்த கணம் அருள் ஒளி என்ற உணர்வை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

அருள் சக்திகளை நமக்குள் சேர்த்து வலுவாக்கிய பின்
1.தவறு செய்தவன் அறியாமையிலிருந்து விடுபட வேண்டும்
2.அருள் ஞானம் அவனில் பெருக வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்தி அவன் பெற வேண்டும்.
4.அவன் அறியாத இருளில் இருந்து விடுபட வேண்டும்.
5.தெளிந்த மனம் பெற வேண்டும்
6.தெளிவான உணர்வுகள் பெற வேண்டும் என்று எண்ணும் போது
7.அவன் உணர்வு நமக்குள் வந்தாலும்
8.அவனை அந்தத் இயக்குவது போல நமக்குள் தீமைகள் விளையாது.

நம்மைப் பாதுகாக்க இது உதவுகிறது. அதே சமயத்தில் “அவன் வேகத் துடிப்பு… நமக்குள் வளராமல் தடுக்கப்படுகின்றது…”

அவனிடம் சொல்லும் போது அப்போது உடனுக்குடன் சொன்னால் கேட்க மாட்டான். சில நிமிடம் கழித்து
1.அவன் சாந்தமாக இருக்கப்படும் போது
2.”நீ இப்படிச் செய்தால்… உனக்கு நல்லது…” என்று சொன்னால்
3.ஏற்றுக் கொள்ளும் பருவம் அவனுக்கு வரும்.

ஆகவே இப்படிப் “பருவம் அறிந்து தான்” நாம் சொல்ல வேண்டும்.

கடல் நீர் உப்பாக இருந்தாலும் ஆவியாகி மேகமாகி மழையாகப் பெய்யும் போது மழை நீர் “உயிர் நீராக” மாறுவதன் சூட்சமம்

 

கடல் நீர் உப்பாக உள்ளது. காரணம் அதில் உள்ள ஹைட்ரஜன். கடலில் சூரிய வெப்பம் பட்டபின் நீர் ஆவியாகப் போகின்றது. ஆவியாகச் செல்லும் பொழுது அதில் உள்ள ஹைட்ரஜன்… உப்பு தனியாகப் பிரிந்து விடுகிறது.

ஆவி மேகங்களாக மாறுகிறது. அதிலே உப்புச் சத்து (ஹைட்ரஜன்) மறுபடியும் பட்டபின் நந்நீராக மழையாகப் பொழிகின்றது.

1.முதலில் ஆவியாக மாறும் போது உப்பைப் பிரிக்கின்றது.
2.இருந்தாலும் மழையாகக் கொட்டும் பொழுது கணம் தாங்காதபடி
3.உப்புசத்திற்கு மூல காரணமான ஹைட்ரஜன் இதற்குள் சேர்கிறது.

ஹைட்ரஜன் ஆக மாறும் போது அதற்குள் இருக்கும் தீமைகளை முறித்துவிட்டு நல்ல தண்ணீராக மழையாகப் பெய்கின்றது.

1.அந்த ஹைட்ரஜன் கலந்து வரப்படும் போது செடி கொடிகள் எல்லாம் ஜோராக இருக்கும்.
2.மழை பெய்யும் போது பார்த்தோமென்றால் செடி கொடி தாவரங்கள் எல்லாம் அப்படியே ஒடுங்கும்.
3.மழையினால் தள…தள… என்று செழித்து வளர்வதையும் காணலாம்.

மனிதர்களான நமக்கும் மழை பெய்யும் அந்த நேரம் உஹ்குகு..உஹ்குகுகு… என்று அந்தக் குளிரின் நடுக்கம் நம் உடலில் வருவதைப் பார்க்கலாம். அது இனிமையாக இருப்பதையும் பார்க்கலாம்.

நம்மை அறியாமலே அந்த உணர்வு என்ன செய்கிறது…? என்று அனுபவத்தில் நீங்களே தெரிந்து கொள்ளலாம். குருநாதர் எனக்குக் கொடுத்தார். அதையேதான் உங்களுக்கும் சொல்கிறேன்.

உங்கள் வாழ்க்கையில் கஷ்டம் என்ற சொல் வரும் பொழுது யாம் (ஞானகுரு) சொன்ன மெய் ஞானிகள் அருள் உணர்வுகளை நினைவுபடுத்தி எடுத்தால் கஷ்டங்களிலிருந்து விடுபடலாம்.

ஒவ்வொரு நொடியிலும் சந்தர்ப்பங்களால் நாம் சந்தித்த உணர்வுகள் நம்மை என்ன செய்கின்றது…? என்பதை நீங்களே தெரிந்து கொள்ளலாம்

அன்றாட வாழ்க்கையில் நம் உடலில் சேர்த்துக் கொண்ட அந்தந்தக் குணங்கள் வினைக்கு நாயகனாக நோயாகவும் வெறுப்பாகவும் இருக்கின்றது.
1.அதை எல்லாம் நமக்குள் வளராதபடி தடுப்பதற்குத் தான் “விநாயகர் சதுர்த்தி…” அதாவது நிறுத்த வேண்டும்.
2.தீய உணர்வுகளைக் கடலில் கொண்டு போய்க் கரைக்க வேண்டும்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான உணர்வுகளை எடுத்திருந்தாலும் ஏகோபித்த நிலைகளில் மகரிஷிகளின் அருள் சக்தியின் துணை கொண்டு தீமைகளைக் கரைக்க முடியும்.

நாம் ஈர்க்க மறுத்த அந்தக் கெட்டதை எல்லாம் கடல் நீர் இழுத்துக் கொள்கிறது. விநாயகர் சதுர்த்தியன்று அங்கே கரைத்து விடுகின்றோம்.

1.கடலில் கரைக்கும்படியான இத்தகைய சாஸ்திரங்கள் நமது மெய் ஞானிகள் கொடுத்தது.
2.யார் மீது எந்தப் பகைமை இருந்தாலும் அதை எல்லாம் நம் உடலை விட்டு நீக்கப் பழகிக் கொள்ள வேண்டும்…
3.அவர்கள் மீது பகைமையே வரக்கூடாது.

மற்றவர்கள் யாருக்கும் நாம் எண்ண முடியவில்லை என்றாலும் குறைந்தபட்சம் கூட்டாக இருக்கும் நம்மைச் சார்ந்தவர்களிடமாவது பகைமை இல்லாது நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

இதனைப் பழகிக் கொண்டால் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறும். அடுத்து பகைமை வந்தாலும் அதை எதிர்த்து நமக்குள் புகாதபடி பாதுகாத்துக் கொள்ளும் உயர்ந்த சக்தியாக வளரும். நமக்குள் நல்ல குணங்கள் ஓங்கி வளரும். நம் உணர்வுகள் எல்லாம் உயிருடன் ஒன்றி ஒளியாக மாறும்.

உள் மனமும் வெளி மனமும் – ஈஸ்வரபட்டர்

 

சில நேரங்களில் மனித உணர்வின் எண்ணம் செயல் கொள்ளும் காலங்களிலேயே “உள் மனம்… வெளி மனம்…” என்ற இரண்டு நிலை கொண்ட எண்ண ஓட்டங்கள் உருவாவதை அறிகின்றோம்.

1.ஆத்ம இயக்கத்தின் சரீர உந்தலில் சரீரம் சமைக்கும் எண்ண உணர்வு
2.ஆத்மாவின் பதிவு – சரீர மோதலின் எண்ண உணர்வு என்ற
3.இந்த இரண்டு வகையான போராட்டக் காலங்களில் தான்
4.மனிதன் சொல்லும் உள் மனம் வெளி மனம் என்ற இரண்டு நிலை கொண்ட எண்ணங்களே ஓடுகிறது.

சில ஆத்மாக்களுக்குச் சபல நிலையின் இரண்டு குண மோதலில்… வாழ்க்கை நிலை நடைபெறும் நிலையும் நிகழ்கின்றன.

1.உள் மனது என்பது ஆழமாகப் பதிவாகும் வித்து போன்றது
2.வெளி மனது என்பது சாதாரணமாக மண் மீது போட்ட வித்து போன்றது.

நம்முடைய உள் மனதில் எண்ணும் எண்ணங்களும் உணர்வுகளும் சக்தி வாய்ந்தது. ஆத்ம உயிர் அதற்குத்தான் அதிகமாகச் சக்தி கொடுத்து வளர்க்கும்… அதைக் காக்கும்…!

வெளி மனதில் இருப்பது சிறிது நேரமோ அல்லது காலமோ இருக்கும். பின் மறந்து போகும்…. அல்லது வலிமை இருக்காது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்று அறிந்து கொண்ட நிலையில்.. மேல் நோக்கிய சுவாசமாக எடுக்கும் ஞானியரின் உணர்வுகளை ஆழமாக நமக்குள் பதிவாக்கிடல் வேண்டும். அதை வலுக் கொண்ட பதிவாக நம் ஆத்மாவில் ஏற்றிடல் வேண்டும்.

1.ஆத்மாவின் அத்தகைய வலுவைக் கொண்டு சரீரத்தை மட்டுமல்ல…!
2.சகல சித்துக்களையும்… சகல நிலைகளையுமே… அந்த ஆத்ம வளர்ச்சியினால் மட்டும் தான் வலுப்படுத்திட முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

அனுபவம் பெறுவதற்கு என்னை (ஞானகுரு) காட்டுக்குள்ளும் அழைத்துச் சென்றார்… நாட்டுக்குள்ளும் அழைத்துச் சென்றார் குருநாதர்.

காட்டுக்குள் அழைத்துச் செல்லப்படும் போது மனிதனைக் கண்டு அஞ்சி ஓடுகின்றது புலி. மனிதனைக் கண்டு அஞ்சி ஓடுகின்றது நரி. மனிதனைக் கண்டு விஷம் கொண்ட பாம்பும் தன்னைக் காக்க அஞ்சி ஓடுகின்றது.

ஏனென்றால் அதைப் போன்ற மிருகங்களாக இருந்துதான் மனிதனாக வந்தது. அனைத்தையும் வென்றிடும் சக்தி பெற்றது மனித உடலின் உணர்வுகள் (மனிதனின் மணம்).

1.எந்தெந்த உடல்களிலிருந்து
2.தன்னைக் காத்திடும் உணர்வு ஒவ்வொன்றிலும் விளைந்ததோ அதன் வழிப்படி
3.மனிதனைக் கண்ட பின் (மனிதனின்) மணத்தைக் கண்ட பின்
4.மற்ற உயிரினங்கள் அஞ்சி ஓடுகிறது.

யானை உடலில் பெரிது. வலிமையிலும் பெரிது. ஆனால் தனித்து வரும் யானை மனிதனைக் கண்டு விட்டால் ஆள் கூட்டம் இல்லை என்று அவனை விரட்டிச் சென்று அடிக்கப் பார்க்கும்.

யானைகள் கூட்டமாக இருக்கும் போது நம்மை ஒன்றும் செய்ய மாட்டான் என்று எட்டிப் பார்த்து விட்டு ஒதுங்கிச் செல்கிறது.

காட்டுக்குள் அழைத்துச் சென்று இதையும் காட்டுகின்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். குருநாதர் ஒரு பக்கம் அமர்ந்து கொண்டு “நீ இந்தப் பக்கமாகப் போடா…” என்கிறார்.

புலி கொடூரமானது தான். அங்கே புலி மேலே இருக்கின்றது. அந்தப் புலி தலையை எட்டி எட்டிப் பார்க்கிறது. (அந்த இடத்தில்) இரண்டு நாள் அங்கே இருந்தோம்.

அப்படி இருக்கும் போது “கேளை ஆடுகள்” கூட்டம் அங்கே வருகின்றது. அந்தக் குகைக்குள் புலி பம்மி இருக்கின்றது.

கேளை ஆடுகள் அங்கே வரப்படும் போது புலி என்ன செய்கிறது…? புலி தன் மணத்தைச் “சாந்த உணர்வாக” வெளிப்படுத்துகின்றது.

கேளை ஆடுகள் எல்லாம் மெதுவாக அதுவாக மேய்ச்சலுக்கு வருகின்றது. அது வரையிலும் புலி சாந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றது. கேளை ஆடுகளும் இதைப் பார்க்கின்றது.

அந்த மாதிரி நேரத்தில் இதை… “நீ போய்ப் பாருடா…!” என்கிறார் குருநாதர். என்னைத் “தனித்துப் போடா…” என்று சொன்னவுடனே அப்பொழுது அங்கே என்ன நடக்கிறது “சமாச்சாரம்…?”

நான் எட்டிப் பார்க்கப்படும் போது ஒரு உடும்பு என்ன செய்கிறது? கல்லுக்கு கீழே அடியிலிருந்து வெளியே வந்தது. வெளியே வந்ததும் என்ன ஆனது..?

“புலி என்ன செய்கிறது…?” என்று நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். கேளை ஆடுகள் பக்கத்தில் புலி இருக்கிறது. ஆனால் அதை அடித்துச் சாப்பிடவில்லை.

நான் இருந்த இடத்தில் பார்த்தால் உடும்பு கல்லுக்கு இடையில் உள்ளே இருக்கின்றது.

புலியைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த உடும்பு என் பக்கத்திலிருந்து திடீரென வந்தவுடன் எனக்குப் பயமாகிவிட்டது. அது கல்லுக்கிடையில் இருந்து “தலையை… வெளியே நீட்டுகின்றது”.

அந்தக் கல் “படார்…” என்று கீழே விழுந்தது. “ஊஹ்…ம்…” என்று சப்தம் போட்டேன். அவ்வளவு தான். புலி எனக்கு மேலே தவ்வி ஓடுகிறது.

கேளை ஆடுகள் எல்லாம் என்ன செய்கிறது…?

“வரையாடு” (மலையிலிருக்கும் ஆட்டு இனம்) என்று சொல்வார்கள். அப்படியே “சப்…சப்…” என்று பாறையில் ஒட்டி அப்படியே ஓடுகிறது. புலி அதை ஒன்றும் செய்யவில்லை.

1.திடீரென்று உடும்பு தலையை நீட்டியதைப் பார்த்து நான் பயந்துவிட்டேன்.
2.நான் பயந்ததைப் பார்த்துப் புலி பயந்தது.
3.பயந்த வேகத்தில் நான் உருண்டு ஒரு மரத்தில் விழுகிறேன்.

நடந்த நிகழ்ச்சி.

இதெல்லாம் அனுபவத்தில் தெரிய வைக்கிறார் குருநாதர்.

இவையெல்லாம் நீ கடந்து நீ வந்தாய். இருந்தாலும் இந்தக் கல் உருண்டவுடனே இந்தச் சப்தத்தை கேட்டவுடன் புலி மனிதனை (உன்னை) அடிக்கவில்லை. அஞ்சி ஓடுகிறது.

அது வருவதைக் கண்டு ஆடுகள் அஞ்சி ஓடுகிறது. அஞ்சிய நிலைகள் கொண்டு உருண்டு நீ விழுந்து விட்டாய்.

அதனதன் நிலைகள் இப்படி ஆகின்றது “பார்…” என்கிறார் குருநாதர்.

புலியின் வேகத்தை நுகர்ந்த பின் என் செயலாக்கங்கள் – நான் எப்படி உருண்டு விழுந்தேன்…? அனுபவத்தில் இந்த உணர்வின் செயலாக்கங்கள் இது எப்படி இருந்தது…? என்று காண்பிக்கின்றார்.

புலி அடித்துவிடுமோ…! என்ற உணர்வில் முதலில் புலியையே பார்த்துக் கொண்டிருந்தேன். நான் இருந்த இடத்தில் ஒரு கல்லுக்கு அடியில் இருந்த உடும்பைக் கண்டவுடனே அது எனக்குப் “பாம்பு மாதிரி… தலை தெரிகிறது”.

இரண்டு பயமும் சேர்த்து வருகிறது. கல் விழுந்து சப்தம் போட்டவுடன் புலி தாவுகிறது.

கடைசியில் நான் மரத்தில் விழுந்தது தான் மிச்சம். அந்த மரம் இல்லை என்றால் நேராகப் பாதாளத்திற்குள் போய் விழுந்து… “சுக்குநூறாகப் போயிருப்பேன்”.

ஏனென்றால் அதற்குத் தகுந்த இடத்தில் வைத்துத் தான் அங்கே என்னைப் பார்க்கச் சொல்கிறார். “இந்த இடத்தில் இருந்து பாருடா…” என்று (முதலில்) சொல்கிறார் குருநாதர்.

கடைசியில் “இப்படி நடக்கும்… என்று எனக்கு என்ன தெரியும்…!” தெரியாது.

ஆனால் அதற்குத் தகுந்தாற்போல் மரமும் இருக்கின்றது. நான் காப்பாற்றப்படுகிறேன். இதெல்லாம் என் அனுபவத்தில் கண்ட உண்மைகளை உங்களிடத்தில் சொல்கிறேன்.

இப்படியெல்லாம் நாம் வளர்ந்து வந்தவர்கள் தான். மனிதனைக் கண்டால் எல்லா உயிரினங்களும் அஞ்சும். இதை அனுபபூர்வமாக அங்கே வைத்துக் காட்டுகின்றார் குருநாதர்.

ஒரு தேன் கூடு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு குச்சியை எடுத்து அதைத் தட்டுங்கள். உங்களைத் “துரத்து…துரத்து…” என்று துரத்தும்.

அல்லது குச்சி கொண்டு கூடத் தட்ட வேண்டாம். “உற்றுப் பார்த்து… அந்தத் தேனை எடுக்க வேண்டும்…” என்று உணர்வைப் பாய்ச்சினால் போதும்.

அப்பொழுதே கூட்டிலிருந்து களைந்து வெளியே வரும். எல்லாம் தலையைத் தூக்கி நம்மைப் பார்க்கும்.

“தேனை எடுக்க வந்தோம்” என்ற நிலையில் வந்து நம்மைக் கொட்டும். ஏனென்றால்
1.அது உணர்வால் அறிந்து தன்னைக் காக்கும் நிலை
2.உணர்வால் நுகர்ந்து உணர்வால் தனக்குள் உணவாக எடுத்து வாழும் சக்தி பெற்றது.
3.அது நுகர்ந்த உணர்வே அதற்கு அறிவாகின்றது.
4.அதுவே அதைக் காக்கின்றது. அதுவே அதற்குச் செயலாகின்றது.
5,இது தெளிவாக்கப்பட்ட உண்மைகள்.

இது போலத் தான் பல கோடிச் சரீரங்களில் நுகர்ந்து வந்த உணர்வுகள் மனிதனான பின் புலியைக் கண்டு நான் அஞ்சினேன்.

அந்த அஞ்சிடும் உணர்வுகள் எனக்குள் பதிவான பிற்பாடு… ஏதாவது வந்தால்… சப்தம் கேட்டால்…. அந்தப் “புலியின் நினைவே” எனக்கு வருகிறது.

திடீர் என்று உடும்பைப் பார்த்தவுடனே பயந்தேன். ஆனால் புலி தாவிய போது “நம்மை தாக்கிடுமோ…?” என்ற வேகமான உணர்வுகள் பதிவான பின் இரவு படுத்தாலும் பயம் தான் எனக்கு வருகிறது.

குருநாதர் என் கூடவே தான் படுத்து இருக்கிறார்கள்.

புலி வருகிறது…! புலி வருகிறது…! புலி வருகிறது…! என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.

“எங்கடா… புலி வருகிறது…?” என்று கேட்கிறார் குருநாதர்.

என்னைத் தனியாக ஒரு பக்கத்தில் படுக்கச் சொன்னார். அவர் ஒரு பக்கம் படுத்திருக்கிறார்.

“நான் புலி வருகிறது… புலி வருகிறது..!” என்று சொல்லி பயந்து எழுந்து விடுகிறேன்.

அப்பொழுது ஒரு தரம் நான் பார்த்த உணர்வுகள் நுகர்ந்து எனக்குள் கருவாகி உருவாகி விட்டது.

1.அந்தப் புலியின் உருவங்கள் அலைகளாக வரப்படும்போது
2.நினைவு வருகின்றது. புலியின் உருவத்தையே (கனவாக) பார்க்கிறேன்.

இதைக் கனவாகக் காண்கிறாய். அந்த உணர்வின் தன்மை கருவாக்கி விட்டால் இதுவே அதிகமாகப் பெருகிவிட்டால் புலி எப்படி மற்றதைக் கொன்று சாப்பிட்டதோ இந்த உணர்வின் தன்மை அதிகமாகிவிட்டால் புலியின் நினைவே உனக்குள் உருவாகிவிடும்.

1.இந்த உடலை விட்டுப் போனவுடன் நீ எங்கே போவாய்…?
2.நீ… “புலி உடலுக்குத்தான் போவாய்” என்று தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

நுகர்ந்த உணர்வுகள் உடலுக்குள் அணுக்களாக விளைந்து உயிராத்மாவில் சேர்ந்த பின் எது வலுவோ அங்கே (அத்தகைய உடல்களுக்கு) உயிர் அழைத்துச் செல்லும் என்பதை அங்கே உணர்த்துகின்றார் குருநாதர்.

நம்மைச் சுற்றி ஆன்மாவில் இருக்கும் வட்டங்கள்

 

உதாரணமாக ஒரு வேப்பமரத்தின் கசப்பான உணர்வலைகள் அதிகரித்து விட்டால் அதனருகே ரோஜாச் செடியின் மணங்கள் சிறிதாக இருப்பினும் அதை விரட்டிக் கொண்டே போகும்.

அதே போல் ரோஜாச் செடியின் மணங்கள் அதிகரித்து விட்டால் அதனருகே வேப்பமரத்தின் கசப்பான உணர்வலைகள் சிறிதாக இருந்தால் அதை இது துரத்திக் கொண்டே போகும். ஏனென்றால் ரோஜாவின் மணம் வலு கூடிவிடுகிறது.

இதே மாதிரித் தான் ஒரு விஷச் செடியின் மணங்கள் அதிகரித்து விட்டால் அருகே ரோஜாச் செடியின் மணம் இருந்தால் அதை விரட்டிக்கொண்டு போகும்.

ரோஜாச் செடியின் என்று சத்து அதிகரித்து விட்டால் விஷச் செடியின் மணங்கள் தன்னாலே ஓடிவிடும்.

1.தாவர இனத்தின் மணங்கள் வலு கூடிக் குறையும் போது ஏற்படும் இத்தகைய இயக்கம் போல் தான்
2.மனிதருக்குள் எடுத்துக் கொண்ட அந்தந்த குணங்கள் கொண்ட உணர்வுகளின் இயக்கமும் இருக்கும்.

உதாரணமாக பகைமை ஊட்டக்கூடிய உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்திருக்கின்றது. அது நமக்குள் பதிவாகி விட்டால் அந்த உணர்வை இழுத்து இழுத்து நம் ஆன்மாவாகப் பெருக்கிக் கொண்டே இருக்கும்.

அதாவது நம் ஆன்மாவில்…
1.முதல் வட்டம்
2.இரண்டாவது வட்டம்
3.மூன்றாவது வட்டம் என்று
4.அந்தந்தக் குணத்தின் உணர்வலைகளாக வரும்.

முதல் வட்டம் நல்லதாக இருக்கின்றது. இரண்டாவது வட்டம் ஒரு வேதனை என்ற கசப்பான உணர்வாக இருக்கின்றது. மூன்றாவது வட்டம் வெறுப்பான உணர்வுகளாக இருக்கிறது.

1.அப்போது வேதனை கோபம் என்று அது தான் முன்னாடி வருகின்றது.
2.அதைக் கடந்துதான் அந்த நல்ல உணர்வு நமக்குள் வரவேண்டும்.
3.இரண்டாவது வட்டம்… மூன்றாவது வட்டத்திற்குள் இருக்கும் வேதனை வெறுப்பு அவைகளுடன் கலந்து நாம் சுவாசித்தோம் என்றால்
4.நல்லதை நம்மால் சீராக இயக்க முடிவதில்லை.

அந்த வெறுப்பும் வேதனையும் கலந்தே பேசத் தொடங்குவோம். யாரிடம் பேசினாலும் என்னத்தைச் சொல்லி… யாருக்கு நல்லதைச் செய்து… என்ன பலன்…? என்ற இந்த உணர்வு முன்னாடி வரும்.

காரணம் நமக்குள் நல்ல குணங்கள் இருந்தாலும்… உள்ளே பதிந்திருந்தாலும்… நம் ஆன்மாவிலிருந்து இழுத்துச் சுவாசிக்கும் போது இடையில் இருக்கும் உணர்வுகளுடன் கலந்து வந்துவிடுகிறது.

1.நம் ஆன்மாவில் இருக்கும் உணர்வலைகளில் ஒரு அடி வித்தியாசத்தில் இபபடி வந்து கொண்டே இருக்கும்.
2.இந்த உணர்வுகள் வரப்படும் பொழுது வேதனையும் கோபம் தான் அதிகமாக வரும்.
3.எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும் அவைகளைக் கடந்துதான் வர முடியும்.
4.அதைக் கடந்து வரும் பொழுது அதுதான் இயக்குகின்றது.

சூரியன் பல விஷத்தன்மையுள்ள உணர்வுகளை எடுக்கின்றது. அதையெல்லாம் தன் முகப்பிலே மோதி ஒளியாக மாறுகின்றது… காந்தப் புலனாக மாற்றுகின்றது.

சூரியன் அல்ட்ரா வயலட் என்ற நஞ்சைப் பிரித்து விடுகின்றது. ஆனாலும் சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்ப காந்தங்கள் அந்த அல்ட்ரா வயலட் என்ற நஞ்சுக்குள் புகுந்து தான் வெளியிலே வருகின்றது.

அந்த உணர்வின் சத்து எதுவோ எந்த மணத்தை இது தாங்கியதோ எதனுடன் தாங்குகிரதோ அந்த உணர்வின் குணம் கொண்டு தான் அதை இயக்கும்.

இதைப் போல தான் நாம் உயர்ந்த குணங்கள் கொண்டு உள்ளுக்குள் இருந்தாலும் வேதனை வெறுப்பு கோபம் என்ற இந்த குணங்களை எடுத்தால் இது முன்னாடி வந்து விடுகின்றது.

அடுத்து நாம் நல்லதை எண்ணி வந்தாலும் ஆன்மாவில் பட்டு அதனுடன் சேர்த்து அந்த தான் வரும். இது உள்ளே நுழைந்து நமக்குள் எண்ணங்களாக வருவதற்கு முன்னாடி நல்ல குணங்கள் கார குணமாகவே வரும்.

அந்த மாதிரி நேரத்தில் யாராவது நல்லவர்கள் வரட்டும். கொஞ்சம் இனிமையாக அவர் சொன்னால் போதும்.
1.இன்றைக்கு இவர் நல்லது செய்ய வந்து விட்டாராக்கும்…!
2.எந்த எண்ணத்துடன் வந்திருப்பாரோ… யாருக்குத் தெரியும்…? என்ற அந்தக் குறையான எண்ணமே வரும்.

அதே போல் பிரசாதம் கொடுக்கும் இடங்களில் பார்க்கலாம். கொஞ்சம் வெறுப்பாக இருந்தால்… டக்கென்று கையிலே இடித்துத் தான் கொடுக்க வைக்கும். இந்த உணர்வுகளைப் பார்க்கலாம்.

ஒரு பொருளைக் கொடுக்கும் பொழுதே
1.இந்தா…! என்று அழுத்தமாகச் சொல்ல வரும். கொடுக்கும் பொழுதே பார்க்கலாம்.
2.அந்த உணர்வுகள் எப்படி… அது என்ன எல்லாம் செய்கிறது…? என்று…!
3.நல்ல குணம் நமக்குள் இருந்தாலும் மற்ற உணர்வுடன் சேர்ந்து நம் உடலையே இப்படி இயக்கிக் காட்டும்.

அனுபவத்தில் பார்க்கலாம்.

இதை எல்லாம் நிறுத்துவதற்குத் தான் “சதுர்த்தி…” என்று வைத்தார்கள். தீமைகளை நாம் நிறுத்த வேண்டும்.

யார் மீதெல்லாம் நாம் வெறுப்பைப் பதிவு செய்து வைத்திருந்தோமோ அவர்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்… நாங்கள் அனைவரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று நாம் வலுவாகத் தியானிக்க வேண்டும்.

1.அப்போது அந்த வெறுப்பான அணுக்களுக்கு நாம் சாப்பாடு கொடுப்பதில்லை.
2.வெறுப்பான எண்ணங்களை நீக்கி விடுகிறோம்.
3.எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுக்கின்றோம்.

நாம் எண்ணிய இந்த உயர்ந்த உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரவச் செய்கின்றது. இந்தக் காற்று மண்டலத்தில்
1.நமக்கு முன்பு இருக்கும் தீமைகளை விரட்டிச் செல்கிறது.
2.நம் ஆன்மாவும் தூய்மை அடைகிறது… பரமாத்மாவும் தூய்மை அடைகிறது.

தெய்வீக சக்தியை வளர்த்து அதன் துணை கொண்டே இந்த உடலை இயக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

பூமியின் ஈர்ப்புக்குள் சரீர வாழ்க்கை உணர்வின் எண்ணத்திற்கு உட்பட்ட ஒரு உயிரணு அதன் வளர்ச்சியில் “வித்தாக… முற்றிய தன்மை” எத்தருணத்தில் அதற்கு ஏற்படுகின்றது…?

மனித உடல் பெற்ற பின்… ஆண் பெண் அமில ஜீவனின் கூட்டுடன் வளர்ச்சி கொள்ளும் அணு வளர்ப்பின் வலு நிலையானது கர்ப்பக் காலத்தில் தாயின் உதிரத்தில் சிசுவாக உருப் பெறுகின்றது.

பிறந்த பின்… உண்டு… உறங்கி… சுவாசித்து… மனித ஓட்ட நடைமுறை யாவையும் வளர்ச்சி கொண்டு பார்த்து… கேட்டு… சுவைத்து… வளரும் அந்தந்தக் கால வளர்ச்சி முற்றிய முதிர்வுக்குகந்த தவழ்ந்து… நடந்து… ஓடி.. பேசி… வளர்ச்சியுற்றுத் தன் அறிவின் ஞானத்தை உயர்த்திக் கொள்கின்றது.

அதே சமயத்தில் உடலின் உருவக வளர்ச்சியும்… உணர்வின் எண்ண அணு வளர்ப்பினால் எடுக்கவல்ல… வலுவின் முற்றிய தன்மையின்… ஆண் பெண் இரு பாலரின் எண்ணத்தின் வலு நிலைக்குகந்த உணர்வின் எண்ணத்தின் சமைப்பு நிலையில் “மாற்று வளர்ச்சி நிலையும்” பெறுகின்றது.

மாற்று நிலையின் காலம் என்பது… பருவ கால வளர்ச்சியே ஆகும்.

1.மனித இனம்.. வளர்ச்சியின் நிலையை அடையும்
2.அந்தப் பருவ காலங்களில் எடுக்கும்
3.உணர்வின் எண்ண குண உந்தலின் அணு வளர்ப்பு அமிலச் சேர்க்கையால்
4.மனித வாழ்க்கையின் ஆயுட்காலம் அமைந்து
5.அதுவே மனிதப் பிறப்பின் “பிறப்புப் பலன் தரவல்ல” காலமாகின்றது.

பிறப்பின் பலன் தரவல்ல காலம் என்பது உடலில் அணு வளர்ச்சியின் வலுக்கூடிய நிலையில்… பிறப்பின் பிறப்பு நிலையை வளர்க்கவல்ல அமிலக் கூறுகள் வளர்ச்சியுற்ற நிலையில்… ஜீவ சக்தியை ஜீவிக்கச் செய்யும் அந்த வளர்ச்சிப் பருவம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் “பதினான்கிலிருந்து பதினெட்டு வயதிற்குள் தான்…!”

இரு சாராரின் ஞானத்தை எடுத்துச் செயல்படும் காலமும் அதே காலம் தான்…! அந்த வயதில் மனித உணர்வின் எண்ண வேட்கை (ஆசை) செலுத்தும் நிலைக்கொப்ப
1.உடலின் வலுத் தன்மையும்
2.ஆத்மாவின் வலுத் தன்மையும் கூடப் பெறும் தருணத்தில்
3.உணர்வின் எண்ணம் கொண்டு செயலாக்கும் ஆத்மாவின் பதிவு நிலை வலுத் தன்மை எல்லாமே அமையப் பெறுகின்றன.

அணுவின்… அணு வளர்ப்பின் வளர் தொடர் அணு சமைப்பு… சரீர மலம் தான் இந்த உடல் பிம்பக்கூறு. இக்கூறின் வலுவை எடுத்துக் கொள்வது ஆத்மா தான்.

1.ஆத்மாவின் உண்மை வலுவைக் கூட்டிக் கொள்ள
2.உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் பதிவு நிலை தான் “மனித வாழ்க்கை…!”

ஆகவே வாழ்க்கைக்கடுத்த மனிதச் சக்தியின் உயர் தெய்வ சக்தியான ஆத்மாவைக் கொண்டு உடலை இயக்கும் வழித் தொடர் ஞான அலையை வளர்க்கும் பக்குவத்தை ஒவ்வொருவரும் பெற வேண்டும்.

ஆனால் ஆரம்ப கால உணர்வின் உந்தலால் உட்படும் உயிரணு… தன் வளர்ச்சியின் வளர் நிலையின் சரீர எண்ண ஓட்ட உணர்வுப் பிடியில் வாழும் வாழ்க்கை கதியின் பிடிப்பிலேயே வாழ்ந்தால்… பாடத்தில் இது நாள் வரை உணர்த்திய படி…
1.உணர்வின் எண்ன வேட்கை (ஆசை உணர்வுகள்) சமைப்பில் எத்தனை காலங்கள் வாழ்ந்தாலும்
2.கண் காது மூக்கு வாய் இவற்றின் செயல் உணர்வு அணு வளர்ச்சி வார்ப்பாகச்
3.இந்தச் சரீர இயந்திர ஓட்டத்தின் இச்சையின் எண்ண ஓட்டத்திற்கு அடிமைப்பட்டே தான் வாழ்ந்திட முடியும்.

அதை மாற்றி அமைக்கும் நிலையாக… வாழ்க்கையின் வழித் தொடரிலேயே “சமமாக ஏற்கும் எண்ண உணர்வுடன்… மேல் நோக்கிய சுவாச ஈர்ப்பால்… உயர் ஞானிகளின் அலை ஈர்ப்பில் எண்ணத்தைச் செலுத்தி…” அதைப் பெறும் பழக்கம் வர வேண்டும்.

இந்தப் பூமி சமைக்கும் அலையுடன் ஒன்றி வாழும் இந்தப் பூமி வளர்த்த வளர்ப்பான நாம் வளர்ப்புடன் ஒன்றிய நிலையிலிருந்து காந்த மின் அலை ஒளித் தன்மையை ஆத்மாவின் வலுவாக வலுப்படுத்தும் வளர்ச்சி ஞானத்தைக் கொண்டிடல் வேண்டும்.

ஆகவே…
1.சரீர உணர்வு எண்ணத்தில் வாழும் வழி முறையிலிருந்து
2.ஆத்மாவின் இயக்க வலுவாகச் இச்சரீரத்தை இயக்கவல்ல வாழ்க்கை நிலைக்கு
3.வாழ்க்கை நிலை மட்டுமல்ல…! வளர்ச்சியின் வளர்ப்பான ஆதிசக்தியின் நிலைக்கே உயரலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒரு வேதனைப்படுவோரின் உணர்வை நாம் நுகர்ந்தால் எவை இயக்குகின்றது…?

உற்றுப் பார்த்த உணர்வுகள் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் வேதனை உணர்ச்சிகளைத் தூண்டி நமது உடலையும் வலு இழக்கச் செய்கின்றது.

ஆகவே நாம் நுகர்ந்த உணர்வே நம்மை இயக்குகின்றது. அதன் வழி அன்றைய வாழ்க்கையும் அமைகின்றது.

ஒரு குடம் பாலில் நீங்கள் பாதாமைப் போட்டாலும் அதைக் காட்டிலும் பல உயர்ந்த சரக்குகளைப் போட்டாலும்
1,ஒரு துளி விஷம் பட்டால் பால் அனைத்தும் நஞ்சாகி விடுகின்றது.
2.அதில் ஆயிரம் குடம் பாலை விட்டால் நஞ்சின் தன்மை சிறுத்துப் பாலின் தன்மை வீரியத்தன்மை அடைகின்றது.

ஒரு சமயம் 100 தரம் நாம் நல்லதைச் செய்தாலும் ஒரு நொடி அந்த வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் அந்த வேதனை தான் நம்மை இயக்குகின்றது.

100 மணி நேரம் நாம் நல்லதை நுகர்ந்தாலும் அந்த 100 மணி நேரமும் நல்லவைகளை உருவாக்குகின்றது நமது உயிர்.
1.ஆனால் ஒரு நொடி வேதனை என்ற உணர்வை நுகரப்படும்போது
2.அது நம் நல்ல குணங்கள் அனைத்தையும் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.

இது இயற்கையின் நியதிகள். இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பண்புடன் அன்புடன் பரிவுடன் நாம் நடந்தாலும் சந்தர்ப்பத்தால் நாம் நுகர நேரும் அந்தத் தீமையான உணர்வுகளை அகற்றியே ஆக வேண்டும்.

அன்றாடம் உடலையும் உடைமைகளையும் நாம் எப்படித்தான் தூய்மைபடுத்தினாலும் அழுக்கு படியத்தான் செய்யும். அதைத் தூய்மையாக்கவில்லை என்றால் அழுக்குகள் கூடிவிடும். அதற்குத்தக்க நமக்குக் கெடுதலும் ஏற்படும்.

அதைப் போன்று தான் நாம் அவ்வப்போது நம் மனதைத் தூய்மைப்படுத்த வேண்டும். மனதைத் தூய்மை செய்தால்
1.நம் உடலிலுள்ள அணுத் தன்மைகள் தூய்மை ஆகும்.
2.நம் உணர்வுகள் தூய்மை ஆகும்.
3.நம்முடைய எண்ணங்கள் தூய்மை ஆகும்.

இப்படி அடிக்கடி நாம் தூய்மைப்படுத்தும் உணர்வினை நுகர்தல் வேண்டும்.

அதற்காகத்தான் உங்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அடிக்கடி சொல்லி அதை வலுவாக உங்களுக்குள் நினைவு படுத்திக் கொண்டே வருகின்றோம்.

கடல் நீரிலே இருக்கும் தீமைகளைக் கரைக்கும் சக்தி பற்றித் தெரிந்திருக்கின்றோமா…!

 

ஒருவரைப் பார்க்கப்படும் பொழுது வெறுப்பின் தன்மையை நாம் அதிகமாக வளர்த்து விட்டால் அது நம் உடலுக்குள் வந்து எத்தனையோ கெடுதலான வேலைகளைச் செய்யும்.

அதை எல்லாம் முழுவதுமாக நான் (ஞானகுரு) உணர்வதற்காக வேண்டி மூன்று இலட்சம் பேருடைய (அந்தக் குடும்பங்கள்) உணர்வுகளை ஏககாலத்தில் ஒவ்வொன்றாகப் படிப்படியாகக் குருநாதர் காண்பித்தார்.

அவர்களையும்… அந்தக் குடும்பத்தின் உணர்வுகளை எல்லாம் நுகர்ந்தபின் அங்கிருக்கும் கெட்டது எல்லாம் உன்னை என்ன செய்கின்றது… உன் உடலில் என்ன செய்கிறது என்று பார்…! என்று சொன்னார் குருநாதர்.

அந்தக் குடும்பங்களில் நடந்ததை எல்லாம் நீ ஜோதிடம் பார்ப்பது போல் பார்த்து விடாதே… ஆனால் நீ தெரிந்து கொள்கின்றாய்.

யாராவது வந்து கேட்டால்… உன்னிடம் கஷ்டத்தைச் சொன்னால் நீ கேட்பாய். கேட்ட பின்…
1.ஐயா…! நீங்கள் இன்ன மாதிரியான காரணத்தினால் கஷ்டப்படுகிறீர்கள்
2.உங்கள் வீட்டில் உள்ள சண்டையெல்லாம் போய்விடும் என்று கண்டறிந்து நீ சொன்னால்
3.கடவுளே நீ தான்…! என்று உன்னைப் போற்றுவார்கள்
4.ஆனால் அவன் கஷ்டம் எல்லாம் உன்னிடம் வந்துவிடும் “ஜாக்கிரதை…!” என்று சொல்லி விட்டார்.

காரணம் எல்லாவற்றையும் நீ தெளிவாகத் தெரிந்து கொள்கின்றாய் தெரிந்து கொண்ட பின் “உனக்குக் கஷ்டம் இப்படி இருக்கின்றது… தொழில் நஷ்டமாகி விட்டது…!” என்று நீ அவரிடம் சொல்வாய்.

அந்தக் கஷ்டத்தை எல்லாம் நீ வாங்கிய பின் தான் “நல்லதாகும்” என்று நீ சொல்ல முடியும். ஆக… கஷ்டத்தை நுகர்ந்து அவர்களுக்கு மீண்டும் கஷ்டத்தை தான் கொடுக்க முடியுமே தவிர நல்லதைக் கொடுக்க முடியாது.

ஆனால் உன்னைக் கடவுளாக அவன் போற்றுவான். இவரிடம் போனேன்… என் குடும்பத்தைப் பற்றி எல்லாமே சொன்னார்… இவர் கடவுள்…! என்பான்.

1.ஆனால் அவருடைய நோய் எல்லாம் உன்னிடம் வந்து வடும்
2.அவனுடைய இந்த கஷ்டமெல்லாம் உன்னிடம் வந்துவிடும் “ஜாக்கிரதை…!” என்று சொல்லிவிட்டார் குருநாதர்.

அதையும் சொல்வார்… இதையும் சொல்வார்… நான் தெரிந்து கொள்ளவும் செய்வேன் (ஞானகுரு).

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால்
1.அவர்களுடைய அந்தக் கஷ்டமான உணர்வுகள் உனக்குள் வராதபடி நீ நிறுத்த வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
4.எங்கள் ஜீவாத்மாவிலே அந்த அருள் சக்திகள் பெற வேண்டும் என்று இதை முதலில் நீ எடுக்க வேண்டும்.

எடுத்துக் கொண்ட பின் அவரிடம் என்ன சொல்ல வேண்டும்…?

மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள்… உங்கள் கஷ்டம் எல்லாம் நீங்கும்…! என்று வாக்கினைப் பதிவு செய்து அந்தக் கஷ்டத்தை நிறுத்த “அவரைப் பழக்கச் செய்ய வேண்டும்…”

கஷ்டம்…! என்று அவர் சொன்னால் ஐயோ… உனக்கு இப்படி ஆகிவிட்டதா…? என்று கேட்டு அதை இழுத்துக் கொள்கிறோம்.

அவருக்குள் நடக்கும் விஷயங்களைத் தெரிந்து கொண்ட பின் “உனக்கு நல்லதாகும்…” என்று நியாயத்தைச் சொல்வாய். ஆனால் அவர்கள் கஷ்டம் எல்லாம் இங்கே வந்துவிடும்.

ரொம்பப் பேர் என்ன செய்வார்கள்…?
1.இரக்க மனமாகப் போய் எல்லோருக்கும் நியாயத்தைச் சொல்வார்கள்
2.ஆனால் தனக்குள் பிறருடைய அந்தக் கஷ்டமான உணர்வுகள் தனக்குள் உட்புகுவதை நிறுத்தத் தெரியாமல் இருப்பார்கள்.

அதை நிறுத்த வேண்டும் என்பது தான் சதுர்த்தி…!

ஏகக்காலத்தில் எல்லோரும் சேர்ந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஒருவருக்கொருவர் இருக்கும் பகைமை நீங்க வேண்டும் என்று எண்ணிய பின் இந்த அலைகள் போனபின் என்ன செய்கிறது…?
1.மனிதனான நானும் எனக்குள் அந்தப் பிடிப்பை அறுத்து விடுகிறேன்.
2.என் மீது பகைமை கொண்டிருப்பவர்களும் என் மீது வெறுப்பில்லாதபடி அதை அறுத்து விடுகின்றார்கள்.

அப்போது அந்தத் தீமை செய்யும் அலைகள் அனாதையாகப் படர்ந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் முதலிலே ஒருவருக்கொருவர் சண்டை போட்டதெல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கின்றது. இருந்தாலும்
1.நாம் இப்போது எண்ணும் இந்த வலுவான உணர்வுகள் என்ன செய்கிறது…?
2.அதைத் துரத்திக் கொண்டு போகிறது.

துரத்திக் கொண்டு சென்றாலும் செடிகள் மரங்கள் இருக்கும் பக்கம் அவைகள் போகாது. நேராகக் கடல் பக்கம் தான் போகும்.

ஏனென்றால் கடல் பக்கம் யாரும் அதிகம் (நடமாட்டம்) போவதில்லை. அங்கே அலைகள் தொடர்ந்து வீசிக் கொண்டிருக்கும்.
1.கடல் அலைகள் மாறி மாறி வரும் பொழுது
2.நாம் ஈர்க்க மறுத்த தீய வினைகளை எல்லாம் இழுத்து இழுத்து உள்ளே கொண்டு போய் அமிழ்த்திவிடும்
3.அந்த உப்பு நீர் (ஹைட்ரஜன்) அவைகளைக் கரைத்துவிடும்.

இது எல்லாம் அக்கால மெய் ஞானிகள் கண்டுணர்ந்து நமக்கு வழி காட்டிய பேருண்மைகள். ஞானிகள் காட்டிய வழிப்படி நாம் நடக்க வேண்டும்.

கண் வழி கவர்வதையும் செவி வழி கேட்பதையும் நம்மை அப்படியே இயக்கும்படி விட்டுவிடலாமா…? – ஈஸ்வரபட்டர்

 

ஒவ்வொரு நொடிப்பொழுதும்
1.ஒளி… ஒலி… மணம்… இவற்றின் மோதலின் உணர்வு கொண்ட…
2.எண்ண ஓட்டச் சரீர வாழ்க்கை வழி முறையில் தான் நாம் வாழுகின்றோம்.

இத்தகைய தொடர் நிலைக்கொப்ப வாழும் சுழற்சித் தொடர்பில் ஒன்றி அந்தந்த உணர்வைத் தான் வளர்த்துக் கொண்டுள்ளோம்.

இதனின் பிடிப்புச் சுழலில் சிக்குண்டு அந்த வழி நிலையிலேயே வாழுகின்றோமே அன்றி அதை மாற்றும் நிலையை நாம் மேற்கொள்வதில்லை.

ஒன்றைப் பார்த்தவுடன் ஒளியின் விழி நிலையின் உணர்வு நிலை செயல் கொள்கிறது. ஒளி கொண்டு காணக்கூடிய விழி நிலையின் ஒளி உணர்வு ஒவ்வொரு நொடிப் பொழுதும் எண்ணத்தின் உணர்வுடன் மோதிய அலை அணுக்களையே வளர்த்துக் கொள்கின்றது.

ஆனால் பார்வையில் எதிர்ப்படும் செயலில் ஏற்படும் நிலைக்கொப்ப “மாற்றி அமைக்க வேண்டும்…” என்ற நிலை வருவதில்லை.

இப்படி… சாதாரண நடைமுறையில் பழக்கப்பட்ட விழி நிலையில் காணும் ஒளி அலை உணர்வு எண்ண வேட்கைக்கொப்ப அணு வளர்க்கும் வளர் தன்மை மிக அழுத்தமான இயக்கம் வந்தால் மாற்றமாகின்றது. எப்படி…?

அதிர்வு…
ஆனந்தம்…
இனிமை…
கடுமை…
இதைப் போன்ற குணம் கொண்ட ஒளியின் விழி ஊடுருவல் செயல்படும் தன்மையால் அதற்குகந்த உணர்வின் எண்ண நிலைக்கொப்ப அணுத்தன்மை இச்சரீரத்தின் (இயந்திர) செயல் மாறிச் செயல்படுகின்றது.

அதாவது ஒளியினால் காணும் விழி நிலையின் உணர்வுக்கொப்ப பல பல ஒலிகளை வெளிப்படுத்துகின்றோம்..

1.அதிர்வு நிலை ஏற்படத்தக்க காட்சிகளைக் காணும் பொழுது
2.நம்மை அறியாமலேயே காணும் காட்சிக்கொப்ப
3.ஆ… ஓ… இச்.. இச்…! என்ற ஒலிகளை எழுப்புகின்றோம்.
4.இனிமை கலந்த காட்சி நிலையைக் காணும் பொழுது அதற்குகந்த ஆனந்த ஒலியை
5.நம்மை அறியாமலே ஆஹா… ஓஹோ…! என்று இனிமையுடன் கூடிய ஒலியைச் சிரிப்பலையுடன் வெளிப்படுத்துகின்றோம்.

இதன் தொடரிலேயே ஒலி அலையை ஈர்க்கவல்ல… செவி ஈர்ப்பு.. ஒலி கேட்கும் மோதலின் ஈர்ப்புக்கொப்ப… எண்ணத்தின் உணர்வு செயல்படுகின்றது.

ஆக… தான் கேட்கும் ஒலி ஈர்ப்புக்கொப்ப உணர்வின் எண்ணச் சுவாசத்தால் உடலின் அணு வளர்ப்பு நிலையும் ஏற்றத் தாழ்வு பெறுகின்றது.

இதன் தொடர்பைப் போன்றே…
1.சுவாசத்தில் மோதும் மணமும்
2.சுவையில் உண்ணும் உணவும்
3.மனித உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் அந்தந்த குண நிலைக்கொப்ப
4.அமில உணர்வின்… அணு வளர்ப்பின்… இந்திரிய ஆவி நிலையின் உதிர ஓட்டமாக சரீரத்தின் செயல் நடைபெறுகிறது.

இத்தகைய வாழ்க்கைச் செயலில் வாழும் நாம் இவ்வாழ்க்கையின் ஜீவாதார குறுகிய ஆண்டுகளில் பிம்ப உடலில் சமைக்கும் அணு வளர்ப்பின் ஆவி நிலையின்… “ஆத்ம உயிரின் உண்மை நிலை” புரியாமலேயே வாழ்கின்றோம்.

ஏனென்றால் இந்த மனிதத் திட பிம்பத்தின் இயந்திர ஓட்டச் செயல் சமைப்பின் வலுவைக் கொண்டு தான் மனிதனின் ஆரோக்கிய நிலையும்… ஞானத்தின் வழியில் செல்லும் குணச் செயல் முறையும்… அமைகின்றன.

உணர்வின் இந்திரிய ஓட்டத்திற்கொப்ப ஒருவரின் செயல் திறன் ஞானம் வெளிப்படுகின்றது. அந்த ஞானத்திற்கொப்பத்தான் வாழ்க்கையின் மேம்பாட்டு நிலையும் செயல் கொள்கின்றது.

இத்தொடரின் வழி நிலை வாழ்க்கையில் எப்படி ஒன்றியுள்ளதோ அத்தொடரைக் காட்டிலும் மிகத் துரித நிலையில் உயர்வு நிலைக்குச் செல்லக்கூடிய ஞான மார்க்கம்… சித்து மார்க்கம்…! இவ்வழியில் எண்ணத்தின் உணர்வைச் செலுத்திடல் வேண்டும்.

1.விழி ஒளி
2.செவி ஒலி
3.சுவாச மணம்
4.வாயின் சுவை
5.இவ் அலை உணர்வு எண்ணத்தில்
6.உயர்வு வழித் தொடர் நிலையில் செல்லும் செயல் முறைக்கு
7.இவற்றின் செயலால் உந்தப்படும் வேட்கையின் வழி முறையை வழியமைக்கும்
8.ஞான ஒளியை நாம் அறிதல் வேண்டுமப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இன்று நாம் பத்திரிகை வாயிலாகப் படிக்கின்றோம். பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. அந்த இடத்திலேயே இத்தனை பேர் இறந்தனர். பலர் அவஸ்தைப்பட்டனர் என்று பார்க்கின்றோம்.

இன்றைய விஞ்ஞான உலகில் இந்தப் பூமிக்குள் அது எங்கே சம்பவங்கள் நடந்தாலும் அடுத்த “பதினைந்து நிமிடத்திற்குள்” நாம் இங்கே அதைக் கண்டுணர முடிகின்றது.

இத்தகைய துரித நிலைகள் கொண்டு விஞ்ஞான அறிவால் நாம் கண்டுணர்கின்றோம். உலகில் எங்கே நடந்தாலும் உடனடியாக டி.வி. மூலமாகவோ அல்லது ரேடியோ மூலமாகவோ நாம் இதை அறிந்து கொள்ள முடிகின்றது.

அடுத்து பத்திரிகை வாயிலாகவும் அறிந்து கொள்ள முடிகின்றது.

நமக்கு அனைத்தையும் அறிந்து கொள்ளக்கூடிய திறன் இருந்தாலும் ஆக்ஸிடென்ட் ஆனதை நாம் கூர்ந்து படிக்கும் போது நமக்குள் அது பதிவாகிவிடுகின்றது.

டி.வி.க்களில் ஒளி பரப்புச் செய்வதை அதே உணர்வின் இயக்கமாக நாம் வீட்டிலே டி.வி.யை இயக்கப்படும் போது எங்கேயோ ஒளிபரப்பு செய்யக் கூடியதை நாம் இங்கு வீட்டிலே இயந்திரம் மூலமாகப் பார்க்கின்றோம்.

இதே போல் எங்கேயோ நடக்கும் சம்பவங்களைப் படமாக்கி விஞ்ஞான அறிவு கொண்டு பத்திரிகையில் அவர்கள் வெளியிடுகின்றார்கள்.

அங்கே நடந்த சம்பவங்களயும் அசம்பாவிதங்களையும் அதனால் வேதனைப்பட்ட செயல்களை விரிவாக்கி அது எழுத்து வடிவில் கொடுக்கின்றார்கள்.

எழுத்து வடிவில் எழுதியதைக் கூர்ந்து கவனித்து
1.அங்கே நடக்கும் அந்த விஷயங்களை ஆர்வமாகப் படிக்கின்றோம்.
2.கூர்ந்து கவனித்து அந்தப் படத்தையும் பார்க்கின்றோம்
3.அதற்குக் கீழ்… “நடந்த சம்பவங்களையும்” கூர்ந்து படிக்கின்றோம்.

எந்த மனிதன் அங்கே அடிபட்டு வேதனைப்பட்டு வேதனையான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றானோ அந்த உணர்வுகள் அனைத்தும் சூரியன் காந்த சக்தியால் கவரப்பட்டு அலை அலைகளாக நம் பூமியில் படர்ந்து கொண்டிருக்கின்றது.

இன்று ஒரு மனிதன் பேசியதை அல்லது படம் எடுத்ததை அதைத் தனக்குள் கவர்ந்து அது மீண்டும் படச் சுருளாக்கி அதனை மீண்டும் ஒளி பரப்புச் செய்யப்படும் போது அந்தப் பேழைகள் (PLAYER மூலம்) ஒளி அலைகளை வெளிப்படுத்தும் போது அதையும் இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலை அலைகளாக வெளிப்படுத்துகின்றது.

எதனின் துணை கொண்டு ஒளி பரப்புச் செய்தனரோ அதே துணை கொண்டு டி.வி.யோ ரேடியோவோ இயக்கப்படும் போது இந்தக் காற்றிலே அலை அலைகளாக வருவதைக் கவர்ந்து அந்த உணர்வின் நிலைகளைப் படமாகவும் பார்க்கின்றோம். ஒலி நாதங்களாகவும் நாம் கேட்கின்றோம்.

இதைப்போல தான்
1.இங்கே ஒரு மனிதனுக்கு மனிதன் நாம் அதைக் கூர்ந்து கவனிக்கும் போது
2.அந்த மனிதன் வேதனைப்பட்ட உணர்ச்சிகள் நமக்குள்ளும் வந்துவிடுகின்றது.

இயற்கையின் நியதிகள் இது.

மனிதன் வேதனைப்பட்டு வெளிப்படுத்திய உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி அலைகளாகப் பரப்பும் போது
1.பத்திரிக்கை வாயிலாகக் கூர்ந்து படிப்போம் என்றால்
2.எப்படி டி.வி.யைச் சுவிட்சைப் போட்டு எந்த ஸ்டேஷன் என்று எண்ணுகின்றமோ
3.அந்த ஸ்டேஷனிலிருந்து வரும் ஒலி அலைகளை கவர்ந்து படமாகக் காட்டுவது போல
4.நமது உணர்வுக்குள் ஆழமாகப் பதிந்தவுடனே அதனின் நினைவலைகளாக மாறுகின்றது.

ஆனாலும் அவர்கள் பட்ட இந்த உணர்வுகள் நம் நினைவலைகளாக மாற்றினாலும் அவர்கள் வேதனைப்பட்ட உணர்வுகளும் நமக்குள் அது பதிவாகி விடுகின்றது.

நாம் உலக நடப்புகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றோம்.

இருந்தாலும் அடிபட்டவர்கள் வாழ்க்கை இருண்ட உலகமாக உடலை இழந்து… இப்படி ஆகிவிட்டோமே…! என்று மறைக்கும் உணர்வாக வெளிப்படுவதை நாம் கூர்ந்து கவனித்தவுடனே
1.நம் அறிந்து கொள்ளும் உணர்வுடன் அது கலந்து
2.நாம் அறிந்திடும் நிலையைத் தடைபடுத்தும் நிலை வந்து விடுகின்றது.

இப்படி ஆக்ஸிடென்ட் ஆனதை நாம் அதிகமாகக் கவர்ந்து வைத்திருந்தோம் என்றால் நாம் பஸ்ஸிலே செல்லப்படும் போது இதே உணர்வுகளின் வேகங்கள் நமக்குள் வருவது உண்டு.

உதாரணமாக பஸ் வேகமாகப் போகும் போது நாம் ஏற்கனவே பத்திரிக்கையில் படித்துப் பதிவான உணர்வுகள் அந்த நினைவலைகள் மீண்டும் நமக்குள் உந்தப்பட்டு… “ஆக்ஸிடென்ட் ஆகி விடுமோ…!” என்ற உணர்வைத் தூண்டும்.

அந்த உணர்வைத் தூண்டப்படும் போது வேகமாகப் பஸ் போகிறதே என்று எண்ணினாலும் அடுத்து பஸ்ஸை எங்கேயாவது நிறுத்தினால் பாதுகாப்பாக ஒதுங்கி உட்காரலாம் என்று வேறு இடத்தில் உட்காருவார்கள்.

எந்த பஸ்ஸின் ஆக்ஸிடென்ட்டை இவர்கள் உணர்வாகப் பதிவு செய்தனரோ அதே உணர்வின் அலைகள் நினைவாகி
1.யார் ஓட்டுநரோ அவர்பால் இந்த எண்ணங்கள் செல்லும்.
2.நம் எண்ணங்கள் அவர் மீது மோதும்

அவ்வாறு எண்ணங்களைச் செலுத்தப்படும் போது என்ன நடக்கும் என்று நினைக்கின்றீர்கள்…?

விமானங்களை வெகு தொலைவில் பறந்து கொண்டிருப்பதை அது ரிமோட் கண்ட்ரோல் (RADAR மூலம்) கொண்டு சீர் படுத்தி இயக்குகின்றனர்.

இதைப் போல பயந்த உணர்வும் ஆக்ஸிடென்ட் ஆன நிலைகளையும் படித்துணர்ந்த நாம் அந்தப் பஸ்ஸிலே செல்லும்போது பய உணர்வுடன் எண்ணினால் ஓட்டுநர் பால் நம்முடைய எண்ணம் ரிமோட் கண்ட்ரோல் போல இயக்கி விபத்துக்கு அழைத்துச் செல்லும்.

1.பாதுகாப்பான இடத்தில் ஓரத்தில் கடைசியில் உட்கார்ந்திருப்போம் என்று எண்ணுவோம்.
2.அல்லது ஏதாவது நடு மையத்தில் உட்கார்ந்தாலும் கூட அந்தப் பய உணர்வு கொண்டு நாம் ஓரத்தில் ஒதுங்கினாலும்
3.ஆக்ஸிடென்ட் ஆனால் இங்கிருந்து அடித்து முன்னாலே தூக்கிக் கொண்டு எறியும்.

ஏனென்றால் நாம் எடுத்துக் கொண்ட எண்ண உணர்வுகள் நம்மை அது இயக்கச் செய்யும். நாம் தவறு செய்யவில்லை.

எங்கேயோ மனிதன் ஆக்ஸிடென்ட்டில் இறந்தான், விஞ்ஞான அறிவு கொண்டு நாம் கண்டுணர்ந்தாலும் இந்த நினைவலைகள் நமக்குள் இவ்வாறு அது செயல்படுகின்றது.

நம்மை அறியாமலே அந்த விபத்தான உணர்வுகளுக்கு நமக்குள் பதிவான உணர்வுகள் அழைத்துச் செல்லுகின்றது.

இதிலிருந்து தப்பிக்க என்ன வைத்திருக்கின்றோம்…?

சாமி காப்பாற்றுமா? சாமியார் காப்பாற்றுவாரா…? ஜாதகம் காப்பாற்றுமா…? ஒன்றும் காப்பாற்றாது…!

பத்திரிகை வாயிலாகவோ அல்லது டி.வி மற்ற இன்டெர்னெட் மூலமாக அசம்பாவிதங்களக் கண்டாலோ படிக்க நேர்ந்தாலோ அடுத்த கணம் நமக்குள் அது பதிவாகாதபடி தடுத்துப் பழக வேண்டும்.

“ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடலிலுள்ள இரத்தங்கள் முழுவதும் படர வேண்டும்.

எங்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்று உடல் முழுவதும் “சர்குலேசன்” செய்ய வேண்டும். இது தான் ஆத்ம சுத்தி.

பின் மகரிஷிகளின் அருள் சக்தி இந்த உலகம் முழுவதும் படர வேண்டும். உலக மக்கள் அனைவரும் பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ண வேண்டும்.

அடுத்து மகரிஷிகளின் அருள் சக்தியால் நாளை நடப்பதெல்லாம் இந்த உலகிற்கும் உலக மக்களுக்கும் நன்மை பயப்பனவாக இருக்க வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வைப் பாய்ச்சுதல் வேண்டும்.

அதே சமயத்தில் நாம் பார்த்த உணர்வுகள் நமக்குள் பயத்தையோ அல்லது அதிர்ச்சியையோ ஊட்டியது என்றால்
1.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
2.நம் உடலுக்குள் செலுத்திப் பழக வேண்டும்.

இவ்வாறு செய்தால் பயமுறுத்தும் உணர்வுகளுக்கு “இது அச்சுறுத்தலாக அமையும்…” அடுத்து நமக்கு அந்தப் பயம் தொடராது.

மேலும் எங்கே செல்வதாக இருந்தாலும் ஆத்ம சுத்தி செய்து விட்டு வெளியில் செல்லுங்கள்… அவசியம் இதைச் செய்ய வேண்டும்.

ஒன்று சேர்ந்து வாழும் தத்துவம் இல்லை என்றால் இயற்கையில் எதுவுமே வளர்ச்சி அடைய முடியாது

 

கார்த்திகை நட்சத்திரம் ஒளியின் சுடராக வளர்ந்து தனக்கென்று கோள்களை உருவாக்கிக் கொண்டு தனிச் சூரியக் குடும்பமாகும் பருவம் பெற்று விட்டது.
1.அது தனித்தன்மையாக வாழ ஆரம்பித்து விட்டது.
2.அதனால் நம் பிரபஞ்சத்திற்குக் கிடைக்க வேண்டிய அதனுடைய சக்திகள் கிடைக்காது போய் விட்டது.

ஒரு சூரியக் குடும்பத்தில் உள்ள நட்சத்திரங்கள் முதிர்ந்த பின் எப்படித் தனித்துச் சூரியக் குடும்பமாகிறதோ அது போல் மனிதர்கள் குடும்பமாக வாழும் நாமும் ஒரு வெறுப்பின் தன்மையை வளர்த்துக் கொண்டால் பிரித்து வாழும் உணர்வையே நமக்குள் உருவாக்கி விடுகின்றது.

இதைப்போல குடும்பத்திற்குள் ஒருவருக்கொருவர் வெறுப்பும் வேதனையும் அதிகமாகி தீய வினையாக வளர்ந்து வருவதை நிறுத்த வேண்டும் அல்லவா.

தொழிலில் வரவு செலவு நடத்துகின்றோம். கடையில் நம்மிடம் வந்து வாங்கிச் செல்வார்கள். பொருளுக்குண்டான பணத்தைக் காலத்திலே வந்து கொடுப்பார்கள்.

ஆனால் ஒருவரின் சந்தர்ப்பம் அவர் குடும்பத்தில் ஏதோ சில சிக்கலாகி விட்டால் வாங்கியதற்குரிய பணத்தைத் திரும்பக் கொடுக்க முடியாது போய்விடுகிறது.

அது போன்ற ஒரு சந்தர்ப்பத்திலே நாம் என்ன நினைப்போம்…?

1.இதற்கு முன் அவன் யோக்கியனாக இருந்தான்… சரியான முறையிலே பணத்தைக் கொடுத்தான்.
2.இப்பொழுது வர வரக் கெட்டுப் போய்விட்டான்…! என்ற இந்த நிலை வருகின்றது.

இந்த உணர்வை எடுத்துக் கொண்ட பின் நான் அன்றைக்கெல்லாம் உனக்குச் சரியாகக் கொடுத்தேன். நீயும் பணத்தைத் திரும்பக் கொடுத்தாய். ஆனால் இப்போது இருக்க இருக்க நீ கெட்டுப் போய்க் கொண்டே இருக்கிறாய். ஆகையினால் உனக்கு இனிமேல் கடன் இல்லை… போ…! என்ற சொல் வரும்.

ஆனால் அவரோ கெஞ்சிக் கெஞ்சிக் கேட்பார்…! “கொடுக்க முடியாது…” என்று சொல்லி விட்டால் கொஞ்சம் முறைப்பார். அந்தச் சமயம் அவரிடமிருந்து வர வேண்டிய பாக்கியும் இருக்கும்.

சரக்கை இவர் என்ன கொடுப்பது…! சரக்கை நாம் அடுத்தவரிடம் வாங்கிச் செல்வோம்…! என்று சென்று விடுவார்.

இதைப் பார்த்தவுடனே… பார்…! அன்று கடன் கொடுத்தேன் என்னிடம் வாங்கினான். இன்று அடுத்தவரிடம் போகின்றான் பார்…! என்று இப்படித்தான் நமக்குள் பகைமை உணர்வு அதிகமாக வளர்ந்து விடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் நமக்குள் பகைமையாக உருவாகிவிடுகிறது.

வியாபாரத்திலே நாம் எத்தனையோ பேரிடம் பழகி இருப்போம். சந்தர்ப்பத்தில் யாரிடமாவது வெறுப்பாகி இருப்போம். அவரை நினைக்கும் போதெல்லாம் வேதனைப்படுகின்றோம்.

1.அந்த வேதனைப்படும் உணர்வுகளை எல்லாம் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பதிவாக்கிக் கொள்கின்றது.
2.அடுத்தாற்போல் அதை நினைக்கும் போதெல்லாம் நமக்குள் வேதனையைத் தூண்டும்.

உதாரணமாக ஒரு வேப்ப மரத்தின் விதையைப் பூமியிலே போட்டபின் அது அந்தத் தாய் மரம் வெளிபடுத்திய கசப்பான சத்தை எடுத்து வளர்ந்து கொண்டே இருக்கும்.

அதே போன்று தான் மனிதனுக்கு மனிதன் வெறுப்பாகி உடலில் அந்த உணர்வின் சத்து எண்ணமாக ஆனால் அது ஒரு வித்தாகி விடுகின்றது. கேட்டறிந்த பின் ஊழ்வினையாகப் பதிவாகின்றது.

பதிந்த நிலைகள் கொண்டு அவரை நினைத்தோம் என்றால் அவர் மேலே உண்டான வெறுப்பு நம்மிடமும் வெறுப்பான உணர்வாக வளர்கின்றது. நம்மிடம் இருக்கும் நல்ல உணர்வுடன் சண்டையிடுகின்றது.

உடலுக்குள் அது சண்டையிட ஆரம்பித்த பின்…
இடுப்பு வலிக்கிறது…
மேல் வலிக்கிறது…
நெஞ்சு வலிக்கிறது…
முதுகு வலிக்கிறது…
தலை வலிக்கிறது…
கண் எரிகிறது…! என்று சொல்வதைப் பார்க்கலாம்.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. நம்முடைய சந்தர்ப்பம் நல்ல உணர்வை இயக்காதபடி தீய வினைகளாக நமக்குள் சேர்கிறது. அதை நிறுத்த வேண்டும் அல்லவா…!

ஆகவே “எப்பொழுதெல்லாம் நம் உணர்வுகள் மாறுகின்றதோ…. அப்பொழுதெல்லாம்…” மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்… எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று இப்படி எண்ணி அந்த உயர்ந்த சக்திகளை நமக்குள் சேர்க்க வேண்டும்.

பின் யார் மேல் வெறுப்பு வந்ததோ அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும். என் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும் என்று எண்ணுங்கள். இதைத் தியானித்துப் பாருங்கள்.
1.உங்களிடம் கெட்டது வராது
2.மன பலம் வரும்.
3.உடல் நலம் பெறும்.
4.சொல்லில் இனிமை பெறும்.
5.உங்கள் பார்வை எல்லோரையும் நல்லதாக்கும்.

ஞானதிருஷ்டி…! – ஈஸ்வரபட்டர்

 

உயிரணு வளர்ச்சியில் பல நிலைகள் பல கோடி ஆண்டுகளுக்குப் பல மாற்ற நிலைகள் உருமாறி உருமாறி… வலுத் தன்மை கூடிக் கூடி… வளர் கொண்ட நிலை கொண்ட பிறகுதான் அவ்வுயிரணுவின் ஆத்ம வலு கூடப் பெறுகின்றது.

இப்படிப் பல முலாம் தன்மை கொண்டு உருவாகி உருவாகி உயர் கொண்ட வார்ப்பலையில்
நீர்…
நிலம்…
தாவர… தொடர் வளர்ச்சி நிலை
ஜீவ பிம்ப நிலை…
இப்படிப் பல முலாமில் வளரும் வளர்ச்சி நிலையில்
“ஒளி காணும் நிலை” தாவர வளர்ச்சி நிலைக்கும் இல்லை.

ஆரம்ப இனப் புழு வளர்ச்சிகளுக்கும் சுவாச நிலை மட்டும் கூடுகின்றது. ஒளி நிலை வருவதில்லை.

சுவாசத்தை எடுத்து மணம் தரும் வளர்ப்பு நிலை தாவர இன நிலையிலும் தாவர நிலைக்கு அடுத்த நிலையான தாவரத்திலிருந்து சத்தெடுத்து வளரும் ஜீவ உயிரணு புழு நிலைக்கு சுவாச நிலை எடுக்கும் வளர்ப்பு நிலை கூடுகின்றது.

அடுத்த வளர்ப்பின் வார்ப்பு நிலை வளர்ச்சியில் தான்
1.சரீர பிம்பத்தில் எலும்புகளின் வளர்ச்சி நிலையின் வலு கூடிய தன்மையிலிருந்து
2.ஒளி காணும் விழி அமைப்பு நிலை தான் சரீர ஜீவன்களின் வார்ப்பு நிலையாக வழி கொண்டுள்ளது.

இதற்கு அடுத்த நிலை யாது…?

விழி நிலையின் ஒளி காணும் வழி நிலைக்கே… பிம்பக் கூட்டின் “எலும்புகளின் ஊன் நிலை உயர்வின் நிலைக்கொப்ப…” விழியின் ஒளி நிலை அமைகின்றது.

சுவாசத்தால் உண்ணும் உணவின் சத்தெடுத்து ஆவியானது அமிலமாகி உதிரமாகின்றது.
1.அந்த உதிர ஓட்டத்தால் எலும்புகளின் சத்து நிலை
2.எலும்பின் உள் நிலையின் ஊன் நிலை உறுதியின் வலுவால்
3.எலும்புகளின் வளர்ச்சி முற்ற முற்ற
4.ஒளி நிலையின் பிரகாச கூர் நிலை… “ஊடுருவும்” வளர்ச்சி நிலை உருவாகின்றது.

சரீர பிம்ப வாழ்க்கையில் முன்னோக்கி ஒளி காணும் விழி நிலையின் அடுத்த நிலையான ஞான திருஷ்டி கொண்டு விழியை மூடிக் கொண்டே
1.முன்புறம் காணப்படும் எதிர் நிலையின் ஒளி ஈர்ப்பு மட்டுமின்றி
2.விழியை மூடிய தன்மையிலும் விழித்திருக்கும் தன்மையிலும்
3.பின்புறக் காட்சிகளையும் நம் கண்ணுக்கெட்டாத் தொலைவில்
4.இந்தப் பூமி மட்டுமல்லாமல் எந்தப் பூமியானாலும் எண்ணத்தின் உணர்வைச் செலுத்தும் வழி நிலையில்
5.அங்குள்ள எந்த நிலைகளையும் காணவல்ல உயர்வு நிலை பெறலாம்.

அந்த ஞானதிருஷ்டி என்ற நிலையை இச்சரீர பிம்ப இயக்கத்திலிருந்து தான் செயல்படுத்த முடியும்.

அதாவது ஜீவ சக்தியுடன் கூடிய இயக்க ஓட்டத்தில் மேல் நோக்கிச் செலுத்தி எடுக்கும் சூரிய அலையின் காந்த மின் அலைத் தொடர்புகளை ஆற்றலாக எடுத்து எலும்புகளை வலுப்படுத்த வேண்டும்.

இவ்வெலும்புகளின் வலுத் தன்மையில் எலும்பின் ஊன் வளர்ச்சி பெருகப் பெருக விழி நிலை கொண்டு எதிர் நிலையில் தெரியும் ஒளி நிலை பெற்ற மனித நிலை
1.அதற்கடுத்த நிலையான எங்குள்ளவற்றையும்
2.உள்ள நிலையிலிருந்தே ஞானதிருஷ்டி என்ற
3.ஊடுருவி ஒளி காணும் ஒளி ஈர்ப்பு வளர்ச்சி நிலை பெற முடியும்.

இன்றைய விஞ்ஞான வைத்தியத்தால் உடல் உறுப்பின் உள் நிலை காணும் ஊடுருவல் புகைப்படப் பதிவு நிலை (எக்ஸ்ரே) செயல்படுவதைக் காட்டிலும் உயர்ந்த காந்த மின் அலைத் தொடர்பின் வார்ப்பக வளர்ச்சியை இச்சரீர இயக்கத்தில் பெற்ற ஆத்ம நிலையின் வலுத் தன்மையால் பெற்றிட முடியும்.

1.ஊடுருவிக் காணும் அந்த உயர் தன்மை கொண்ட விழித் தன்மையின் செயலை வைத்து
2.பூமியின் உள் நிலையில் உள்ள தன்மைகளையும் காணும் நிலை
3.இச்சரீர பிம்ப ஆத்மாவிலிருந்து ஒவ்வொரு மனிதனும் பெறலாம்.

ஆத்மீக வழித் தொடரினால் ஆத்ம வளர்ச்சியினால் அடையும் தன்மை யாது…? என்ற வினாவிற்கு இந்தப் போதனையிலிருந்து விடை காணலாம் பலரும்.

இச்சரீர பிம்ப ஆத்மாவை வலுவாக்கிக் கொள்ளும் ஆற்றலினால்
1.ஊடுருவிக் காணும் விழி ஞான ஒளித் தன்மையால்
2.விஞ்ஞானத்தில் வளர்ச்சி முற்றிய செயற்கைக் கோளினால் அறியும் வழியைக் காட்டிலும்
3.உயிராத்மாவின் ஊடுருவிக் காணும் ஒளி ஞான ஒளி அலையினால்
4.எத்தொடரையும் உயிராத்மா தொடர்பைக் கொண்டு
5.ஒன்றுடன் ஒன்று சேர்க்கப்படும் நிலைத் தொடர்பிலிருந்து நிலைப்படுத்தும் வழி முறையையும்
6.உருவாகும் ஊடுருவச் சேர்க்கையில் “நிகரில்லா நிலைதனைப் பெறலாம்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

“எல்லோருக்கும்… நான் நல்லது செய்தேனே… என்னை இப்படிச் சோதிக்கின்றாயே…” என்று பெரும் பகுதியானவர்கள் தான் வணங்கும் தெய்வங்களை எண்ணி வேதனைப்படுவார்கள்.

இப்படி எண்ணினால் அந்தச் சோதிக்கும் எண்ணம் தான் உங்களிடம் வளரும். ஒவ்வொரு நிமிடத்திலும்… “சோதனையாகவே தான்” நடந்து கொண்டிருக்கும்.

இதைப் போன்ற நிலைகளையெல்லாம் நாம் மாற்றிப் பழக வேண்டும். உங்களை நீங்கள் நம்புங்கள். நமக்குள் நல்லதைப் பெறும் அந்தச் சக்தி இருக்கின்றது. மனிதனான நாம் அந்த ஆற்றல்களைப் பெற முடியும்.

ஒட்டுச் செடியை வைத்து நல்ல வித்துக்களை உருவாக்குகின்றோம். அதைப் போல
1.அந்த மெய் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் ஒட்ட வையுங்கள்.
2.அதைப் பற்ற (பற்று) வையுங்கள். அந்தப் பற்றுடனே வாழுங்கள்.
3.அருள் ஞானிகளின் மீது பற்றாகி உங்கள் தீமைகளைப் பற்றற்றதாக்கி
4.ஞானிகள் உணர்வுடனே வாழுங்கள்.

உங்களால் முடியும்.

நீங்கள் எண்ணியதையெல்லாம்
1.உங்கள் உயிர் படைக்கின்றது. ஜீவன் பெறச் செய்கின்றது. உங்கள் உடலாக ஆக்குகின்றது.
2,அந்தச் சக்தியாக உங்களை இயக்குகின்றது.
3.அந்தச் சக்தியாக உங்களுக்குள் விளையச் செய்கின்றது.
4.எது விளைந்ததோ அந்த விளைந்ததைத் தன்னுடன் அணைத்துச் செல்கின்றது.

இந்த உடலில் எதை வளர்க்கின்றீர்களோ அதன் வழி அதை உங்கள் உயிர் உருவாக்கிக் கொடுக்கின்றது. மெய் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் விளைய வைத்தீர்கள் என்றால் அந்த “ஞானிகள் சென்ற பாதையில்” நீங்கள் செல்லலாம்.

“பாவி…! என்னை இப்படிப் பேசினானே…!” என்று நீங்கள் எண்ணினீர்கள் என்றால் அடுத்து அவர்கள் உடலில் போய்த்தான் பிறக்க வேண்டும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நீங்கள் தப்ப வேண்டும் என்பதற்காகத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உங்கள் உடலை ஆலயமாக மதித்து நீங்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உபதேசிக்கின்றோம்.

நீங்கள் நல்ல எண்ணத்துடன் பிறருக்குச் செய்த நன்மைகள் உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும். அதே சமயத்தில் கேட்டறிந்து உங்களுக்குள் அறியாது உட்புகந்த தீமைகள் நீங்க வேண்டும். மெய்ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் விளைய வேண்டும் என்று தான் வேண்டுகிறேன்.

மாமகரிஷி ஈஸ்வரய குருதேவர் எம்மை இவ்வாறு செய்யச் சொன்னார். ஆகையினால்
1.நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது
2.நான் அந்தச் சக்தியாக மாறுகின்றேன்.

என் சொல்லை நீங்கள் கேட்கும் பொழுது உங்களுக்கு அது நல்லதாகின்றது. நான் ஞானிகளின் வாக்குகளைச் சொல்லிக் கொண்டு வரும் பொழுது நீங்கள் இதைக் கூர்மையாகக் கவனித்தாலே உங்கள் நோய்கள் அனைத்தும் போகும்…. பார்க்கலாம்…!

ஆனால் அதை விட்டுவிட்டு
1.என் தலை விதி என்னைப் பிடித்து ஆட்டுகிறது.
2.என் துன்பம் என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது என்று எண்ணினால் என்ன செய்ய முடியும்…?
3.நான் கொடுக்கும் ஞானிகளின் வாக்கு உங்களுக்குள் பதியாது.

எப்படியும் உங்களுக்குள் அந்த ஞானிகளின் வாக்கைப் பதிய வைக்க வேண்டும் என்று தான் திரும்பத் திரும்பச் சொல்கிறோம். பதிய வைத்துக் கொண்டு அதை மீண்டும் நினைவாக்கினால் உங்கள் உயிர் அதைப் படைக்கின்றது. ஞானிகளின் சக்திகளை விளைவிக்கின்றது.

தேவர்கள் அசுரர்கள்… நெகடிவ் பாசிடிவ்… நேர்நிலை எதிர்நிலை…

 

சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் எழுத்தறிவில்லாத அந்தக் காலத்தில் அகஸ்தியனின் உணர்வினை வியாசகர் கண்டுணர்ந்து வெளிப்படுத்தினார்.

அதாவது
1.மேரு என்ற மலையை மத்தாக வைத்து
2.வாசுகி என்ற பாம்பைக் கயிறாக வைத்துப் பாற் கடலிலே கடைந்து
3.கடைந்தவற்றில் வந்ததை விழுங்கியது அனைத்தையும் தேவர்கள் என்றும்
4.விழுங்கிய பின் மலமாகக் கழித்ததை எல்லாம் அசுரர்கள் என்றும் காட்டினார்.

மனிதர்களாக இருக்கும் நாம் ஒரு பொருளை உணவாக எடுத்து உட்கொண்ட பின் அதில் உள்ள சத்துகள் நம் உடலாக உருப்பெறும் சக்தியாகிறது.

உடலாக உருவானபின் கழிவின் சத்தை மலமாக வெளிப்படும்போது அது நஞ்சின் தன்மை கொண்டதாக வெளி வருகிறது. அந்த நஞ்சின் தன்மையை விழுங்கிய அனைத்தும் மற்றதை அழித்திடும் நிலையாக வருகின்றது.

மனிதனாக இருக்கும் உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்த நஞ்சினை அகற்றிய பின் அது வெளியே சென்றாலும் அது இன்னொரு தீமையின் நிலையாக வளர்ந்து அதனின் நிலைகள் வளர்ச்சியாகின்றது.

இதைத் தான்
1.தேவர்கள் அசுரர்கள் என்றும்… நெகட்டிவ் பாசிட்டிவ் (+/-) என்றும் சொல்வது
2.எந்த ஒரு இயக்கத்தின் தன்மையானாலும் அது எதிர்நிலை மறைகள் இருந்தால்தான் இயங்கும். (இல்லை என்றால் சூனியமாகிவிடும்)

அதைப் போலத்தான் மனித உடலுக்குள்ளும் ஒரு உணர்வின் தன்மை எதிர்நிலை ஆனால்தான் நம் உடலின் அணுக்களின் தன்மை இயங்கும்.

ஆனால் அதே சமயம் எதிர்நிலையான உணர்வின் தன்மை அதிகரித்து விட்டால் நல்ல உணர்வின் தன்மைகள் இங்கே ஒடுங்கி விடுகின்றது.

ஆக நல்ல உணர்வுக்குள் எதிர்நிலைகள் ஓங்கி வளர்ந்தால் அந்தத் தீமையின் நிலைகள் நல்லதை ஒடுக்கி விடுகின்றது.

உதாரணமாக…
1.மிகவும் ஒரு காரமான பொருளை நாம் வாயிலே போட்டால் நம் உமிழ் நீர்கள் அனைத்தும் காணாமல் போய் விடுகின்றது.
2.ஆனால் மற்ற பொருளுடன் இந்தக் காரத்தை இணைத்து உட்கொண்டால் உமிழ் நீரை அதிகமாகச் சுரக்கச் செய்து
3.சாப்பிடும் உணவைத் தாராளமாக இழுத்துச் சென்று சுவைமிக்கதாக மாற்றுகின்றது.
4.ஆக… தீமையின் நிலைகளுக்குள் நல்லவைகள் அதிகரித்து விட்டால் தீமைகள் ஒடுங்குகின்றது.

ஆனால் தீமையின் தன்மை சிறிதாக இருப்பினும் நல்லவைகள் பலவாக இருந்தாலும் இது ஒரு நொடியில் அமுக்கிவிடும்.

அது போல் தீமைகளை ஒடுக்கிய
1.அருள் ஞானியின் உணர்வுகள் மிக மிக சக்தி வாய்ந்த அணுக்களாக இங்கே உண்டு
2.அதனை நாம் பருகும் நிலைகள் கொண்டு வந்தால் எத்தகைய தீமையாக இருந்தாலும் அதனைச் செயலிழக்கச் செய்துவிடும்.

ஆகவே நம் வாழ்க்கையில் வரும் எந்தத் தீமையாக இருந்தாலும் அந்த அருள் ஞானிகளின் அருள் சக்தி கொண்டு அதை விழுங்கிடல் வேண்டும். உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிடும் பழக்கம் வர வேண்டும்.

ஆறு நிலை கொண்ட வண்ண ஒளி அலைகளை எடுத்து ஜோதி நிலை பெற வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

சரீரமற்ற ஆவி ஆத்மாவிற்குச் சுவாச நிலை இல்லாததனால் அதனுடைய உண்மைத் துடிப்பு நிலை காற்றின் அலைத் தொடர்புடன் உயிர் ஆத்மாவானது இருக்கின்றது.

அதாவது நாம் எப்படி நட்சத்திரங்களைக் காணும் பொழுது மின்னும் நிலையைக் காணுகின்றோமோ அதைப் போன்றே
1.ஆத்ம அலையின் துடிப்பு நிலையின் செயல் கொண்ட சுழற்சியில் தான்
2.உடலை விட்டுப் பிரிந்த ஆத்மா செயல் கொள்கின்றது.

பூமியின் பிடிப்பலை எண்ண உணர்வுடன்… வாழ்க்கையுடன் ஒன்றிய வாழ் நாளில் எண்ணத்தின் சுவாசத்தை எடுத்து… அச்சுவாசம் சமைக்கும் தொடர்பு வாழ்க்கையின் வழி முறைப்படி… ஆத்மாவின் உயர் சக்தியை அறியாமல்… வாழ்க்கைப் பிடிப்பில் சிக்கி வாழ்ந்து மடியும் உயிராத்மா… அதன் உயர்வு நிலை பெறாமல்… வளர்ச்சியற்றுப் போய் மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பு என்ற சுழற்சியிலேயேதான் இருக்க முடியும். உயிராத்மா வளர்ச்சி கொள்ள முடியாது.

ஆகவே…
1.பல கோடி ஆண்டுகளாக வார்ப்புப்படுத்தி வார்ப்புப்படுத்தி வளர்ச்சி கொண்டு வந்த
2.ஆத்ம வளர்ச்சியின் மனிதச் சரீரத்தின் வலுப் பெற்ற வளர்ச்சி நிலையிலிருந்து
3.உயர் நிலை பெற – சுவாசத்தைக் கீழ் நோக்கிய பூமி ஈர்ப்பு எண்ணமுடன் செலுத்தாமல்
4.சூரியனின் சமைப்பின் வழித் தொடர் பல நிலையில் மாறு கொண்டு வளரும் தன்மையில்
5.பூமி சமைத்து வெளிப்படுத்தும் அலையை எடுக்காமல்
6.பூமி சமைப்பினால் சரீரம் பெற்று எண்ணத்தின் உணர்வு நல்ல நினைவு உள்ள காலங்களிலேயே
7.மேல் நோக்கிய சுவாசத்தால் நாம் எடுக்கும் நேரடி காந்த நுண் அலைகளைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

அதாவது ஏழு வகை வண்ணத்தில் சமைக்கப்பட்ட ஆறு நிலை கொண்ட வண்ண ஒளி அலைகளை… காந்த ஈர்ப்பு நுண் அலையின் தொடர் வளர்ச்சி நிலை எண்ணத்தின் மோதலினால் நேரடியாகப் பெற வேண்டும்.

இப்படிப் பெற்ற வளர்ச்சியைக் கொண்டு பூமியின் பிடிப்பற்ற நிலைக்கு வர முடியும். அதன் மூலம் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் வழி முறையிலிருந்து மனிதனுக்கு அடுத்த நிலையான வளர்க்கும் நிலையான “வண்ண ஒளி ஜோதியாகலாம்…!”

மனிதனின் எண்ணத்தால் எடுக்கும் நிலை கொண்ட வார்ப்பு நிலை தான் ஆத்மாவின் வளர்ச்சி நிலை. ஆகவே இவ்வாத்மாவில் சேமிக்கும் வண்ண ஒளியின் வளர்ச்சி நிலையில் தான் மனித நிலையிலிருந்து வளர்ச்சி பெறும் அடுத்த நிலை உருவாகின்றது.

சீப்பை எடுத்து நாம் தலையை வாரும் பொழுது கீழ் நோக்கி வாரும் பொழுது
1.பூமியின் ஈர்ப்புடன் ஒன்றியதாக ரோமக்கால்களின் அணு வளர்ச்சியும்
2.கீழ் நோக்கி வளரும் வளர் நிலைக்கொப்ப ஈர்ப்பில் சீவப்படும் நிலையில் எந்நிலையான பாதிப்பும் தெரிவதில்லை.
3.அதே சீப்பைக் கொண்டு மேல் நோக்கி நம் கூந்தலைச் சீவினோம் என்றால்
4.உடல் நிலையே சிலிர்ப்புத் தன்மை இவ்வுணர்வு பெறுகின்றது.

இதை எப்படி அனுபவத்தில் காணுகின்றோமோ அதைப் போன்ற உண்மை நிலையை சுவாச நிலையால் எண்ணத்தை மேல் நோக்கிச் செலுத்தும் பொழுதும்… நேரடி சுவாசத்தை மேல் நோக்கி எடுக்கும் அலையை இந்த உடல் உடனே பெறுகின்றது…!

இத்தொடர் வளர வளர… மனிதச் சக்தியின் வலுச் சக்தியை இந்த ஆத்மா பெற்று… இவ்வாத்மாவின் ஒளி அலைகளைத் தனித்து இயக்கவல்ல வளர்ச்சி வழி கொள்ள முடியும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நம் முன்னோர்கள் (குலதெய்வங்கள்) குடும்பத்தில் எத்தனையோ இன்னல்களைத் தாங்கி நம்மை வளர்த்திட வாழ்ந்திட அவர்கள் எத்தனையோ வேதனைகள் பட்டுள்ளார்கள்.

அந்த வேதனையான உணர்வுகள் அவர்களுக்குள் உடலில் நோயாகி உடலை விட்டு வந்த பின் மீண்டும் புழுவிலிருந்து மனிதனாக வந்து கீழ் இறங்கி (மறு பிறவியில்) வேறொரு சரீரங்களைப் பெறுகின்றனர்.

1.அவர்கள் இன்னோரு உடல் பெறாத வண்ணம்
2.நாம் அனைவரும் கூட்டுத் தியானம் செய்து
3.முன்னோர்களின் உயிரான்மாக்களை உந்தி விண்ணிலே செலுத்தி
4.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்தால் அங்கே உடல் பெறும் உணர்வுகள் அழிந்து ஒளி பெறும் உணர்வுகள் உயிருடன் ஒன்றி மகரிஷிகள் உமிழ்த்தும் ஒளியான உணர்வை உணவாக எடுத்து ஒளியாக அங்கே வாழத் தொடங்குகின்றனர்.

அவர்கள் முன் சென்றால் பின் அதே வலுக்கொண்டு நாமும் அங்கே அழியாச் சரீரமாக விண் செல்லலாம்.

ஆனால் அமாவாசை அன்று இப்பொழுது வழக்கப்படி சாங்கியங்கள் செய்து மந்திரங்களைச் சொல்லி பெரியவர்களுக்கு வைத்துப் படைத்து நாம் இழுத்தோம் என்றால் அவர்களைப் பூமிக்குள் இழுப்பதாகத்தான் அர்த்தம். அதே போல்
1.இறந்தவர்கள் கனவில் வந்து விட்டார்கள் என்றால்
2.“நாமும் சீக்கிரம் போய்விடுவோம்…” போலத் தெரிகின்றது என்று
3.இப்படிப் பேசுவோரும் உண்டு.

இவைகளை எல்லாம் மறந்து மெய்ஞானியின் அருள் வழியில் நாம் சென்று நம்முடைய மூதாதயர்களை அங்கே பிறவா நிலை என்ற நிலை அடையச் செய்ய வேண்டும்.

இங்கே கேட்டுணர்ந்தோர் இனிமேல் அமாவாசை நாள் கொண்டாடும் போது அங்கு பிண்டம் வைத்து உணவு வைத்து உங்கம் முன்னோர்களை அழைக்காதீர்கள்.

அதற்குப் பதில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை உங்களுக்குள் செருகேற்றி முன்னோர்களின் உயிரான்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்தோடு இணையச் செய்யுங்கள்.

1.ஒரு உயிரான்மா உடலை விட்டு வெளியே சென்றால்
2.யார் மேல் பற்று இருக்கின்றதோ
3.48 நாட்களுக்குள் அந்த உடலின் ஈர்ப்பு வட்டத்திலே செல்லும்.
4.உணர்வின் தன்மை சிறுகச் சிறுக சேர்ந்து அந்த உடலுக்குள் செல்லும்.

ஆகவே அதற்கு முன் நாம் விண் செலுத்துதல் அவசியம். தற்சமயத்தில் இறந்தவர்களை அந்த 48 நாட்களுக்குள் சுலபமாக விண் செலுத்த முடியும்.

இதற்கு முன் அறியாத நிலைகள் இருந்து மூதாதையர்கள் உடலை விட்டுச் சென்றிருந்தால் அவர்கள் இன்னொரு உடலுக்குள் சென்றாலும் இருளுக்குள் தான் அமிழ்ந்துள்ளார்கள்.

அவர்கள் உணர்வுகள் தான் நம் உடலாக உருவாகியுள்ளோம். அவர்கள் எண்ணங்கள் நமக்குள் ஆழப் பதிந்து இருக்கும் நிலை கொண்டு நாம் அடிக்கடி “அவர்கள் விண் செல்ல வேண்டும்…” என்று உந்தித் தள்ளிக் கொண்டேயிருக்க வேண்டும்.

இன்னொரு உடலை விட்டு எப்பொழுது வெளியே வந்தாலும் இதைப் போல நாம் சொல்லிக் கொண்டிருந்தால் இன்னொரு பிறவிக்குப் போகாதவாறு நம் முன்னோர்களை விண் உலகம் சேர்த்து ஒளியின் சரீரம் பெறச் செய்ய முடியும்.

கடந்த காலத்தில் நாம் இந்த முறைப்படி செய்யவில்லை. அந்த உயிரான்மாக்கள் மாறிய நிலையில் இருந்து இப்பொழுதாவது நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் செய்வோம்.

இதற்காக வேண்டித்தான் பௌர்ணமி தியானத்தையே அமைத்துள்ளோம். 48 நாளுக்குள் உங்கள் வீட்டில் குடும்ப சகிதமாக கூட்டு தியானம் இருந்து உடலை விட்டுப் பிரிந்து சென்றவர்களை விண் செலுத்துங்கள்.

1.அவர்கள் முதலில் விண் சென்றால் பின் நாம் அங்கே செல்கின்றோம்.
2.அந்தச் சக்தியைப் பெறக்கூடிய தகுதியை பெறுகின்றோம்.

நம் மூதாதையர்கள் முதலில் மனிதர்கள் ஆனார்கள். அவர்கள் நம்மை மனிதனாக உருவாக்கினார்கள்.

ஒரு மரம் கெடாது இருப்பதற்கு அதனின் விழுதுகள் மிகவும் முக்கியம். மூதாதையர்களின் விழுதுகளாகத்தான் நாம் இருக்கின்றோம்.

நம் முன்னோர்கள் உடலை விட்டு பிரிந்து சென்றாலும் விழுதாக இருக்கும் நாம் அருள் ஞானிகள் காட்டிய உணர்வை சத்தாக நாம் எடுத்து ஞானிகளின் உணர்வின் துணை கொண்டு விண் செலுத்துதல் நம் தலையாயக் கடமையாகும்.

பின் நாமும் அவர்கள் சென்றடைந்த சப்தரிஷி மண்டல வட்டத்தில் இணைந்திட முடியும். அதைச் செய்வதற்கே குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் இதை செய்கின்றோம்.

இது தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் காட்டிய “விண் செல்லும் மார்க்கம்.”

கனவுகள் எப்படி வருகிறது…? – ஈஸ்வரபட்டர்

விஞ்ஞானி ஓர் இடத்திலிருந்து வண்ண ஒளிக்காட்சிகளைப் படமாக அமிலமுடன் பதியச் செய்கின்றான். ஜீவனற்ற பொருள் நிலையை அந்தந்த வண்ண நிலையுடன் இவன் பூசிய முலாமின் பிடிப்பலையில் எடுக்கும் அந்தக் காட்சிகளைக் காற்றலையுடன் கலக்கச் செய்து பரப்புகின்றான்.

பரப்பிய அலைகளின் அதே தொடர்பலையைப் பல நூறு ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அதற்கென்ற சாதனங்களை உருவாக்கி அதை கவரச் செய்கின்றான்.

இப்படி ஒரு நொடிக்குள் அந்த வண்ணக் காட்சிகளைப் பார்க்கும் நிலைக்கு விஞ்ஞான முன்னேற்றம் அடைந்துள்ளது.
1.ஒளி பாய்ச்சி ஒளி ஈர்க்கும்…
2.பார்வையால் படம் பிடிக்கும்…
3.ஒளி நிலை காணும்… விழி நிலையில் காணுகின்றோம்.

இதே போலத் தான் கனவுகளும் ஏற்படுகின்றன.

காற்றலையின் அமில ஈர்ப்பு இந்த உடலின் மீது மோதுண்டு… சுவாசத்தின் ஈர்ப்புடன் இவ்வுடலின் அமிலத்தின் மோதலான பின்… ஆத்மாவின் தொடர்புடன் உடல் உறங்கினாலும் இவாத்மாவுடன் அமிலங்கள் மோதுண்டு… அந்த மோதலினால் காட்சிகள் தெரிகின்றன.

உறக்கத்தில் விழி மூடிய நிலையில் எண்ணத்தைக் கொண்டு செயல்படுத்தாத அலை நிலையை உடல் சமைக்கும் அமில உராய்வின் காட்சி நிலைகள் கொண்டு… ஆத்மத் தொடர்புடன் செயல்படும் நிலைகளில் தான்… சம்பந்தம் இன்றிப் பல கனவுகள் வருகின்றது.

எண்ணம் கொண்டு செயல்படாத் தன்மையில் சுவாச அலையில் மோதும் அமிலத்தில் இவ்வுடல் எவ் அமிலச் சேர்க்கை எடுக்குமோ அதற்குகந்த ஈர்ப்பு அலைகள் சுவாச வட்டத்தில் மோதுண்ட பின் ஆத்மாவின் விழிப்பு நிலையில் அத்தகைய கனவுகளை எல்லாம் காணுகின்றோம்.

காட்சிகளைக் கண்ட நிலைகளில் சிலர் ஆவி பிடித்தது… அருளாடுகிறது… என்றெல்லாம் சொல்வார்கள்…! தனக்கே தெரியாதபடி பல மொழிகளீல் பேசுவோரும் உண்டு.

ஆவி நிலை உணர்வு என்பது… இன்று மருத்துவத்தில் மன நோய் என்று உணர்த்தும் ஒரு சாராரின் விஞ்ஞான நிலையும்… தெய்வத் தொடர்பு கொண்டு பக்தி மார்க்கத்தாரால் அருளாடும் நிலையில் முருகன் வந்தான்… காளி வந்தாள்… என்று உணர்த்தும் நிலைக்கும் உள்ளது.

பேய் பிசாசு என்று பேயைக் கண்டேன்… இரத்தக் காட்டேரி வருகிறது என்று பயந்த நிலையும் மக்களிடையே உள்ளது.

அதே போல் அன்பு பாசப் பிணைப்புடன்… குடும்பத்தில் பற்றுடன் பல காலம் வாழ்ந்த முன்னோர்கள்… அவர்கள் ஆத்மா பிரிந்தவுடன்
1.குடும்பத்துடன் உறவாடும் நிலையில்
2.இறந்த பின்னும் அவர்கள் வருவது போன்றும் பேசுவது போன்றும்
3.சில நேரங்களில் குடும்பங்களுக்கு வழிகாட்டும் நிலை ஏற்படுத்திச் செல்வதும் நடக்கின்றது.

இது எல்லாம் எத்தொடர்பலையில் மனித ஆத்மாவின் எண்ணம் செயல் கொள்கின்றதோ… ஏற்கனவே பூமியில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து இறந்த ஆத்மாக்களின் அலை எண்ணத்தில் ஒன்றுபட்டவுடன் அவைகள் இயக்கத் தொடங்கும்.

அதாவது உடலுடன் உள்ள மனிதனின் எண்ணம் எதிலே அதிக எண்ணத்தைச் செலுத்திச் செயல்படுகின்றதோ அவ்வலை ஈர்ப்பின் நிலைக்கொப்ப உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்கள் ஜீவ சக்தி கொண்ட அமில உணர்வுகள்
1.ஜீவ சக்தி கொண்டவர்களுடன் அவ்வலை மோதி
2.ஹிஸ்டீரியா என்றுணர்த்தும் மன நோய்க்கும்
3.பல மொழிகளில் பேசி அருளாடும் தெய்வ நிலைக்கும்
4.பேயாடும் நிலைக்கும்
5.முன்னோர்களைக் காணும் பாசப் பிணைப்பினால் வழி நடத்திச் செல்லும் நிலைக்கும் இயக்கத் தொடங்கும்.

ஆனால் மகரிஷிகளின் அலைச் சக்தியுடன் தொடர்புடன் நம் ஆத்ம வலுவைக் கூட்டிக் கொண்டால் எத்தன்மை கொண்ட வேட்கை அலையிலும் பிறரின் ஈர்ப்பின் சொல் செயல் எண்ணங்களிலும் நம் ஆத்மா சிக்காமல் சமநிலை கொண்ட நற்குண சாந்த ஞான வீரத்தால் இவ்வாத்மாவின் வலுக் கூடிய தன்மையைப் பெறலாம்.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே சொல்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

பால் இருக்கிறது என்றால் அதில் ஒரு துளி பட்டால் நஞ்சாக மாறுகின்றது. அந்தப் பாலில் ஆயிரம் குடம் பாலை விட்டால் நஞ்சின் தன்மை குறைந்து அந்தப் பாலுக்கே ஊட்டச் சக்தி கொடுக்கின்றது.

அருள் ஞானிகள் என்பவர்கள் பல ஆயிரம் குடம் பாலைச் (அந்த ஆற்றல்மிக்க சக்திகளை) சம்பாரித்தவர்கள். எத்தகைய கடுமையான நஞ்சினையும் நீக்கிடும் நிலை பெற்றவர்கள்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்று எண்ணினால்
2.அது ஆயிரம் குடம் பாலை ஊற்றியதற்குச் சமமாகின்றது
3.நம் வாழ்க்கையில் வந்த தீமைகளை நீக்க
4.ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்யும் பொழுது
5.அந்த ஆயிரம் குடம் பாலின் சக்தி சேர்க்கப்படுகின்றது.

இதைப் போல் ஒவ்வொருவரும் எண்ணித் தியானியுங்கள். உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணித் தியானியுங்கள்.

எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் இதே மாதிரி எண்ணிப் பழகுங்கள். விநாயகரைப் பார்த்தவுடன் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பம் முழுவதும் படர வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தொழில் வளம் பெருக வேண்டும் என்று எண்ணுங்கள்.

வெளியிலே ஏதாவது சலசலப்போ சங்கடமோ இருந்தாலும் யார் மீது வெறுப்பாக இருந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணி எடுத்து அந்த உணர்வை அவர்களுக்குப் பாய்ச்சுங்கள்.
1.அவர்கள் அறியாத இருளிலிருந்து விடுபட வேண்டும்.
2.எங்களுக்குள் அந்தச் சகோதர ஒற்றுமை வளர வேண்டும் என்று எண்ணுங்கள்.
3.பகைமைகள் நீங்கும்.
4.நமக்குள் அந்தத் தீய வினை ரொம்ப நாளைக்கு நீடிக்காது.
5.பகைமை ஊட்டும் உணர்வுகள் நமக்குள் குறைந்து கொண்டே வரும்.

இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

பகைமை நீக்க வேண்டும் என்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைக் கூட்டும் பொழுது அந்த அருள் ஞானிகளின் மேல் பற்று அதிகமாகின்றது.

அருள் ஞானிகளின் மேல் நாம் பற்றை வளர்த்துக் கொண்டால் அதனின் ஆற்றலாக அந்த ஞானிகளின் வழிகளிலேயே நம்மை அழைத்துச் செல்லும்.

ஆனால் இந்த உலக வாழ்க்கையில் ஏற்படும் நிலைகளில் அவன் இப்படிச் செய்கிறான்… இவன் எனக்குத் தொல்லை கொடுக்கின்றான்… என் பையன் சொன்னபடியே கேட்க மாட்டேன் என்கிறான்… என்று இந்தப் பற்றை நாம் எடுத்துக் கொண்டால் இங்கே இன்னொரு உடலுக்குள் தான் போக முடியும்.

அங்கே சென்று அவர்கள் படும் கஷ்டங்களையும் வேதனைகளை நாமும் எடுத்து அந்த உடலிலும் வேதனையை வளர்த்து அடுத்தாற்போல் ஆடாகவோ மாடாகவோ தான் பிறக்க நேரும்.

அதனால் இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்காக உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் அந்த அருள் ஞானிகளின் ஆற்றல்களைப் பெற வேண்டும் என்று தான் விநாயகர் தத்துவத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

நீடித்த நாள் வாழ்வோம் என்ற ஆசையில் கௌரவத்தைக் காக்க விரும்புகிறோம்… உயிரான்மாவைக் (தன்னைக்) காக்கின்றோமா…?

மனித வாழ்க்கையில்…
1.நிலையற்ற இந்த உடலுக்கு… நிலை உண்டு…! என்ற நிலைகளில்
2.பல ஆயிரம் ஆண்டு காலம் வாழ்கின்றோம்.. வாழ்வோம்… என்ற எண்ணத்திலேயே தன்னைக் கௌரவப்படுத்திக் கொண்டு
3.நாம் கொஞ்சம் வசதியாக இருக்கின்றோம் என்ற நிலைகள் இருந்தாலும்
4.நம் சொல்லை யாராவது ஒருவர் சிறிதளவு மதிக்கவில்லை என்றாலும்
5.இவனுக்குத் திமிரைப் பார்… என்ற நிலைக்கு வந்து விடுகின்றோம்… நம்முடைய சொல்லின் தன்மைகள்.

அதே சமயத்தில் பொறுப்புடன் ஒரு இடத்தில் வேலை செய்கின்றோம் என்றாலும் பிறரைப் பார்த்தவுடனே தன் கௌரவத்தைக் காக்கப் பிறரின் செயல்களைப் புண்படும் செயலாக… சொல்லாக… அந்த உணர்வுகள் அது தாக்கிக் பேசும் நிலைகள் வந்து விடுகின்றது

அவர்களைக் குறைத்துப் பேசினாலும்… அவர்கள் செயலைச் சுட்டிக் காட்டினாலும் பொறுத்துக் கொள்ளும் நிலையற்று… பொறுப்பற்ற செயலைச் செயலாக்கி… அந்தப் பொறுப்பற்ற உணர்வினையே வளர்த்துக் கொள்ளும் நிலையாகித் தன் உடலுக்குள் அந்தத் தீமையின் நிலையையே உருவாக்கி விடுன்றது.

தியான மண்டபத்தில் தியானம் செய்ய வேண்டும் என்ற நிலையில் வருகிறோம். நமக்குள் அறியாது வந்த தீமைகளையும் குறைகளையும் நீக்கிக் கொள்ளவே இங்கே வந்து தியானிக்கின்றோம்.

இருந்தாலும்… யாம் உபதேசிப்பதை எல்லாம் கேட்டு விட்டுப் பிரசாதம் வாங்கும் போதும் சரி… அல்லது மற்ற நிலைகளிலும் சரி… அடுத்தவரைத் தள்ளிவிட்டு நாம் தான் முதலில் வாங்க வேண்டும் என்ற நிலைகள் வந்துவிடுகிறது.

1.பொறுப்பான நிலைகள் கொண்டு இங்கே வந்தபின்
2.பொறுப்பற்ற நிலையில் “என் கௌரவத்தைக் காத்துக் கொள்வேன்…” என்ற எண்ணம் தான் வருகிறது.

இங்கே மற்றவர்கள்… அவர்களை அறியாது சில குறைகளைச் செய்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் அந்தச் சக்திகளைப் பெற்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தி மற்றவர்களும் பெற வேண்டும் அவர்கள் குறைகள் அகல வேண்டும் என்ற ஏக்க உணர்வினை எடுத்தால் குறைகள் இங்கே அகலும்.

அவ்வாறு செய்யாது…
1.மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு குறைகளை அகற்ற வேண்டும் என்று எண்ணாது
2.அந்தக் குறையின் உணர்வையே வளர்த்துக் கொண்டு
3.தன்னுடைய கௌரவத்தை காக்க வேண்டுமென்ற உணர்வே மேலோங்குகிறது.

தன்னைக் காத்திடும் எண்ணம் கொண்டு ஏங்கி இங்கே வந்தாலும் இது போன்ற குறை காணும் உணர்வுகள் அது நம்மை அழித்துக் கொண்டுதான் இருக்கின்றது.

ஏனென்றால் நஞ்சின் வேகம் அவ்வாறு போகின்றது…!

அதை எல்லாம் மாற்றியே ஆக வேண்டும் என்பதற்குத் தான் திரும்பத் திரும்ப இதை ஞாபகப்படுத்துகின்றோம் (ஞானகுரு).

ஞானத்தை வளர்க்க உதவும் “உண(ர்)வு – ஈஸ்வரபட்டர்

1.ஜீவ சக்தி கொண்ட காந்த ஈர்ப்பு அணு வளர்க்கும்… வளர்ச்சியின் வித்தான சரீரச் செயலின் ஜீவனுக்கு…
2.ஜீவாதார முக்கிய நிலையான “உணர்வு…” இல்லை என்றால் ஞானச் செயல் செயல்படாது.

உணர்வின் சமைப்பினால்தான் எச்செயலுக்கும் எண்ணத்தைச் செலுத்திட முடியும். எண்ணத்துடன் மோதும் அலையின் ஈர்ப்பிற்கு காந்த மின் தொடர் அலைகள் மோதுண்டு… அதன் பதிவு கொண்டு தான்… “ஆத்மா” ஜீவ சக்தியிலிருந்து தனக்கு வேண்டிய வலுவைப் பெறுகின்றது.

ரிஷிகளின் வளர்ப்பலையுடன் வளரும் சக்தியில்… “உயர்ந்த ஆதி சக்தியின் படைப்பு சக்தியைப் பெற்ற…” அவர்கள் படைப்பின் தொடரை நாம் முதலில் பெற்றுப் பழக வேண்டும்.

அடுத்து நாம் பெற்ற அந்தத் தொடர் அலையை நம்முடைய வளர்ப்பைக் கொண்டு வளரும் ஆத்மாக்களுக்கு நல் வழி காட்டிடல் வேண்டும். அவ்வலையின் தொடரை நாம் எடுத்து அந்தத் (நம்) தொடர்பின் அலையை ரிஷித் தொடர்பிற்குத் தந்திட வேண்டும்.

அதன் மூலம்… அந்த ரிஷி வளர்ப்பின் ஆதி சக்தியின் அனைத்து சக்திகளிலிருந்து வளரும் சக்தியை அவர்கள் பெற்றுச் சுழலும் சுழற்சி ஓட்ட அலையில்
1.உயர்ந்த ஒளி வட்டமுடன் கலந்து அந்த ஞான சக்தியைக் கொண்டு
2.தன்னுள் உள்ள இறை சக்தியை… இறை ஆத்மாவாக… ஆத்மலிங்க ஜோதியாக… அடையும் வழியை நாம் பெற வேண்டும்.

அதை அடைய வேண்டும் என்றால் இந்த வாழ்க்கையில் மோதும் எண்ண உணர்வை நாம் எடுக்கும் சமைப்பு பிறரின் ஈர்ப்பில் சிக்காமல் இருத்தல் வேண்டும். ஏனென்றால்
1.பிறர் செய்யும் தவறில் நாம் தண்டனை பெறுவது போன்று நம் உணர்வுகளை மாற்றிடாமல்
2.அவர்கள் செய்த நிலைக்கு நாம் தண்டனை பெற்றுச் செல்லும் நிலையிலிருந்து மீள வேண்டியது மிகவும் அவசியம்.

அத்தகையை நிலை பெற்று… நம் அலைச் சக்தியின் உயர்வலைகளைப் பிறர் மேல் செலுத்தி… மேல் நோக்கிய ஈர்ப்பில் ரிஷிகளின் சக்தியை நாம் வளர்த்தால்… நம் ஒளி ஈர்ப்பிலிருந்தும் சொல் ஆலையிலிருந்தும் வெளிப்படும் உயர்ந்த உணர்வலைகள் அங்கே பதிந்து… அவர்களும் வளர்வார்கள். பிறரின் சங்கட சோர்வும் எத்தன்மை கொண்ட மற்ற வழித் தொடரும் நம்மைப் பாதிக்காது.

எப்படித் திரவகத்தில் போடப்படும் பித்தளை செம்பு போன்ற மற்ற உலோகங்கள் எல்லாமே கரைந்தாலும் தங்கத்தின் நிலை கரைக்கப்படுவதில்லையோ அதைப் போன்று
1.இவ் ஆத்மாவின் வலுவைக் கொண்டு
2.ஞானத்தால் பயம் என்ற அச்ச உணர்வை நீக்கி
3.சாந்தத்தை ஞானம் கொண்டு வீரத்தால் செலுத்தும் எண்ணத்தின் சரீர உணர்வலையின் ஈர்ப்பு வழித் தொடரில்
4.காந்த மின் அலையின் தொடர்பலையை ரிஷிகளின் சத்தலையுடன் செலுத்தி
5.அவர்கள் வளர்க்கும் ஒளி நிலைத் தொடருடன் நாமும் ஐக்கியமாகலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒருவர் கோபமான குணத்தை வைத்திருப்பார். அது கணங்களுக்கு அதிபதியாகி விட்டால் அவர் உடலிலே ரத்தக் கொதிப்பும் அடிக்கடி பிறரைத் தாக்கும் உணர்வுகளும் தன்னை அறியாமலே கோபிக்கும் நிலைகளும் வரும்.

சாதாரணமாக வேலை செய்து கொண்டிருக்கும் ஒருவரை இந்தக் கோபக்காரர் பார்த்தாலே அந்தக் கோபம் வரும்.
1.இவன் வேலை செய்கிறதைப் பார்…!
2.அவன் போகின்ற போக்கைப் பார்…!
3.அவன் நடப்பதைப் பார்…! என்பார்கள்.

கோபங்கள் அதிகமாக எடுப்பவர்கள் வீட்டில் அவர் சொன்னவுடனே… “போ…” என்றால் போகவேண்டும் இரண்டு எட்டு வைத்தானென்றால் ஓட வேண்டும்.

ஓடவில்லை என்றால் நடக்கிறான் பார்… போகிறான் பார்… சொல்வதைக் கேட்கிறானா என்று பார்… என்று இப்படித் தன்னை அறியாமலே இந்த உணர்வுகள் கணங்களுக்கு அதிபதியாக்கி இந்த உணர்வின் செயலை அது உருவாக்கும்.

இந்த நிலைகளை நாம் எடுப்போமேயென்றால் நாம் எடுக்கும் இந்த உமிழ் நீர் நம் ஆகாரத்துடன் கலந்து அப்படிக் கலந்த நிலைகள் நம் உடலுக்குள் சேர்ந்த பின் அது இரத்தமாக மாற்றும்போது அந்த இரத்தத்துடன் இந்தக் கோப உணர்ச்சிகள் அதிகமாகத் தூண்டுகின்றது.

இந்தக் கோபம் வருவது ஒன்று மட்டும் தனியாக இருப்பதில்லை.

கோபம் வந்ததென்றால் உடனே “இப்படிச் செய்கிறானே… இவனெல்லாம் உருப்படுவானா…?” என்று வேதனைப்படுவார்கள்.

வேதனை என்பது விஷம்.

இந்தக் காரமும் விஷமும் இரண்டும் கலந்து இந்த உணர்வின் சத்து இது இரத்தமாக மாறுமேயானால் நம் இருதயத்தில் உள்ள வால்வு அந்த இரத்தத்தை உறிந்து உடல் முழுவதும் பரவச் செய்யும்.
1.முதலில் அந்த இரத்தத்தை உறிஞ்சும் இந்தப் பிஸ்டன்
2.அது இழுத்துச் சுவாசப்பைக்குள் அது பம்ப் செய்து
3.மீண்டும் கிட்னிக்கு அனுப்பும்.

கிட்னிக்கு வந்தவுடனே அது இரத்தத்தில் இருக்கக்கூடிய நிலையை அது சுத்திகரிக்கும். ஆனால் நாம் எடுத்துக் கொண்ட இந்த வேதனையான உணர்வுகள் இந்த வால்விலே உராயப்படும் போது அங்கே “எரிச்சல்…” ஏற்படும்.

எரிச்சல் – நாம் காரமான நிலைகள் கோபப்பட்டோருடைய உணர்வும் அந்த வேதனைப்பட்ட இரண்டு உணர்வும் கலந்தவுடனே எறும்பு கடித்தால் எப்படி வீங்கி விடுகின்றதோ இதைப் போல
1.இந்த வேதனையும் காரமான குணங்கள் கலந்த இரத்தத்தை இது பம்ப் செய்யும் போது
2.இந்த ரத்தங்கள் வால்வுகளிலே உராயப்படும் போது
3.வால்வுகள் வீக்கமடைந்து விடுகிறது.

அப்போது நம் வால்வுகளிலே இந்த ஒரு பக்கம் பார்த்தோம் என்றால் இந்தப் பக்கம் நெஞ்சு எரிகிறது என்பார்கள். இந்தப் பக்கம் முதலில் எரியும். இந்தப் பக்கம் எடுத்துக் கொண்டால் “பளீர்… பளீர்…” என்று மின்னும்

இந்தப் பிஸ்டன் பம்ப் செய்து உடல் முழுவதும் பம்ப் செய்யும் போது இந்த நிலையை மறு பக்கம் உறுப்புகள் மாற்றி அமைக்கும் இந்த வேளையில் வலி எடுக்க ஆரம்பிக்கும்.

இது வலி எடுக்க ஆரம்பித்த உடனே
1.நெஞ்சு வலி வந்துவிட்டது
2.ஹார்ட் அட்டாக் வந்து விடுமோ….! என்ற பய உணர்வுகள் அதிகமாக வந்துவிடும்
3.நம்மை அறியாமலேயே பல செயல்கள் நடந்துவிடுகின்றது.

இதைப்போல வேதனையும் கோபமும் அதிகமாகி விட்டால் இதனுடைய நிலைகள் அதிகமாக வீக்கமாகி விட்டாலோ
1.பம்ப் செய்யும் அந்த இரத்தத்தை அது சுத்தமாக நிறுத்திவிடும.
2.இதை இயக்கும் சிறு மூளையின் பாகமும் அது இயக்க மறுக்கும்.

இவ்வாறு இயக்க மறுக்குமேயானால் தன் உறுப்புகளில் சுவாசப்பையை அது செயல்படாது நிறுத்தி விட்டால் ஒரு நிமிடத்திற்குள்
1.“பளீர்…” என்று மின்னியது என்ற நிலையில்
2.விரிந்த நிலைகள் மூடாது நிறுத்தி விட்டால்
3.உடனே தன் மூச்சு வெளியிலே போய்விடும்.

தனக்குள் எடுக்கும் காற்றில் இருந்து வரக்கூடிய நாம் எந்தெந்தக் குணங்கள் எண்ணுகின்றமோ இவை அனைத்தும் சூரியன் காந்த சக்தி அது கவர்ந்து அந்த உணர்வின் சத்தாக நாம் எண்ணும் போது
1.நாம் எந்தக் குணத்தை எண்ணுகின்றமோ அதன் வழி கொண்டு
2.நம் உடலுக்குள் இந்த காந்தப்புலன்கள் மற்றதோடு உராயப்படும் போது தான்
3.நாம் இயங்குகின்றோம்

ஒரு் மோட்டாருக்குள் மேக்னட் பவர் இருக்கப்படும் போது அதனைச் சுழற்றப்படும் போது இடைவெளி விட்டபின் அதனுடைய தன்மைகள் விட்டு விட்டு இருந்தால் அது தான் சுண்டி இழுக்கும் தன்மை பெறுகிறது

இதைப்போலத் தான் நாம் சுவாசிக்கும் உணர்வுகள் எந்தக் குணமானாலும் நாம் சுவாசித்த நிலைகள் உயிருடன் உராயப்பட்டு இந்த உணர்வுகள் நமக்குள் கரண்டை உற்பத்தி செய்கின்றது.

அது நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் சத்தை உமிழ் நீராக மாற்றி நம் உடலுக்குள் மற்ற உணர்வுகளுக்கு ஆகாரமாகக் கொடுப்பதும் செயல்படும் இந்த உயிருக்குள்
1.பம்ப் – இழுக்கும் இந்தச் சக்தி (உயிருக்குள்) குறையப்படும் போது
2.இதற்குள் இயக்கச் சக்தி கம்மியானால்
3.நமக்குள் இருக்கக்கூடிய உறுப்புகள் அனைத்தும் செயலற்றதாகி விடும்.
4.இது தான் ஹார்ட் அட்டாக்…!

ஆனால் இந்த ஹார்ட் அட்டாக் வரக்கூடியவர்களுக்கு உயிரின் துடிப்பு மட்டும் இருந்து கொண்டிருக்கும். நாடியைப் பார்த்தால் இன்னும் கொஞ்சம் இருக்கும் என்று சொல்வார்கள்.

உயிரின் துடிப்பு என்றும் அழிவதில்லை.

ஆனால் அதே சமயம் ஒரு மனிதன் தீயிலே குதித்தாலும் இந்த உயிரின் தன்மை நெருப்பில் வேகுவதில்லை. இந்தத் துடிப்பின் இயக்கமாகத்தான் இருக்கும்.

இந்தக் கார உணர்வுகள் கணங்களுக்கு அதிபதியாக அது இயக்கப்படும் போது மற்ற உறுப்புகளைத் தனக்குகந்ததாக அது செயல் பட்டாலும்
1.அது செயல்பட முடியவில்லை என்றால்
2.தன் உணர்வின் வேகம் கொண்டு
3.நல்ல குணங்களால் உருவாக்கப்பட்ட அந்த உணர்வின் உறுப்புகளை அது பாழாக்கிவிடுகின்றது.. வீணாக்கிவிடுகின்றது.

இந்த இயற்கையின் நிலைகளில் இது எவ்வாறு இயங்குகின்றது என்ற நிலையை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் இதை உணர்த்துகின்றோம்.

இதைப் போன்ற தீமையான நிலைகளைத் தடுக்க வேண்டும் என்றால் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரான ஈசனை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்தங்கள் முழுவதும் படரவேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்தங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் பெறவேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இருதயம் முழுவதும் படர வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இருதயத்தில் உள்ள வால்வுகள் முழுவதும் படர வேண்டும் என்று ஒரு ஐம்பது முறையாவது தியானிக்க வேண்டும்.

நல்ல வரன்… நல்ல பெண்… கிடைக்க வேண்டும் என்றால் அதற்காக நாம் தியானிக்க வேண்டிய சரியான நெறி முறை

ஒரு சில குடும்பங்களில் தன் பெண்ணிற்கு அந்தந்தக் காலத்தில் திருமணம் நடக்கவில்லை என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள்.
1.அடிக்கடி வீட்டிற்கு வந்து பெண்ணை விசாரித்துக் கேட்டு விட்டு அல்லது
2.பெண்ணைப் பார்த்து விட்டுச் செல்கின்றார்கள் என்று வேதனைப்படுவோர் உண்டு.

அத்தகைய வேதனையான உணர்வுகள் ஆன்மாவில் சேரும் பொழுது அதை மாற்றி அமைக்க அந்த மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் செலுத்திக் கொண்டால் இது “பிராணாயாமம்…”

பிராணாயாமம் என்றால் மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் வளரச் செய்து நம் உடலிலிருந்து வெளி வரும் அந்த அருள் சக்திகளை வைத்துக் குழந்தைக்குத் திருமணம் ஆகவில்லையே என்று வேதனைப்பட்ட இந்த உணர்வைப் பிளக்க வேண்டும்.

1.மகரிஷிகளின் அருளால் சீக்கிரம் என் குழந்தைக்குத் திருமணமாக வேண்டும்
2.எந்தக் குடும்பத்திற்கு என் பெண் திருமணமாகிச் சென்றாலும் அந்தக் குடும்பம் செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும்
3.அருள் வழியில் ஆனந்தமான வாழ்க்கை அங்கே வாழ வேண்டும்
3.அத்தகைய அருள் சக்தி என் பெண்ணிற்குக் கிடைக்க வேண்டுமென்று தாய் தந்தையர்கள் எண்ண வேண்டும்.

ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடலுக்குள் பெற வேண்டுமென்று எண்ணும்போது அப்போது நமது உயிர் நரநாராயணன் ஆகிறது.

அதாவது நம் உயிரான நிலைகள் கொண்டு நரசிம்ம ரூபம் எடுத்து அந்த நஞ்சினைப் பிளந்துவிட்டுத் தன் குழந்தையின் எதிர்காலம் செழிப்புடன் இருக்க வேண்டுமென்று இந்த நினைவினைக் குழந்தை மேல் பாய்ச்சுதல் வேண்டும்.

இப்படிச் சிறிது நாளைக்குப் பாய்ச்சிப் பழகி விட்டால் அந்த குழந்தைக்கு வரன் அமைந்து சீக்கிரம் திருமணம் நடப்பதைப் பார்க்கலாம்

அப்பொழுது நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அதை உங்கள் உயிர் ஜீவன் பெறச் செய்து உங்கள் உடலுக்குள் அது ம்… என்று அணுவாக உருவாக்கத் தொடங்குகிறது.

இப்படி யாம் (ஞானகுரு) கொடுக்கும் அந்த அருள் வாக்கின் பிரகாரம் அந்த நல்லது நடக்க வேண்டும் என்ற உணர்வினை வளர்த்துக் கொள்ளும் போது அந்த மணம் உங்கள் ஆன்மாவாக மாறுகிறது.

அடுத்தவர்கள் உங்களைப் பார்த்தவுடனே உங்கள் ஆன்மாவிலிருந்து வெளிப்படும் அந்த அருள் சக்திகளை இந்த அருள் உணர்வுகள் அவர்களுக்குப் பாயும்.

1.உங்கள் பெண் அது எவ்வளவு உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்… வாழ வேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ
2.இந்த உணர்வின் தன்மை பெண்ணைக் கேட்போரின் நிலைகள் அது புகுந்து
3.உங்கள் பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டுமென்று விரும்பி
4.அவர்கள் ஏங்கித் திருமணம் செய்து கொண்டு செல்வதைப் பார்க்கலாம்.

உங்கள் அனுபவத்தில் நிச்சயம் பார்க்கலாம்.

சக்தி பெற்றவர்கள் என்று மகரிஷிகளைச் சொல்வதன் காரணம் என்ன…? – ஈஸ்வரபட்டர்

கதைகளிலும் காவியங்களிலும் “தொட்டவுடன் பொன்னாகும்…!” சில வழி முறைகளை முந்தைய காலங்களில் உணர்த்தியதன் உண்மை நிலை என்ன…?

ஒரு பொருளைத் தொட்டால் அந்தப் பொருள் எதுவாகிலும் பொன்மயமாக மின்னுவதாகச் சொல் வாக்கிய வழி முறையிலும் காவியக் கதைகளிலும் உண்டு.

ஒரே மரத்தில் பறித்த எலுமிச்சங்கனியைப் பத்து பேர்களிடம் கொடுத்து வைத்திருக்கச் சொல்லி விட்டுப் பிறகு பார்த்தோம் என்றால் அவரவர்கள் பெற்ற அமிலச் சேர்க்கையின் உருவக உஷ்ண அலையின் வெப்ப நிலைக்கொப்ப அந்த கனியின் தன்மை மாறுபடும்.

இதைப் போன்றே…
1.உயர் காந்த சக்தியின் எண்ண வலுக் கொண்டு
2.ஞானத்தின் வழி சக்தியால் உயர்ந்தோரின் தெய்வத் தொடர்புடன் சங்கமித்த வழித் தொடரில்
3.எவ்வலையையும் இச்சரீர இயக்கம் எடுத்துச் சமைத்து ஆத்மாவை வளர்க்கும் ஆத்ம ஜோதி நிலை கொண்டவர்களினால்
4.ஒரு பொருளை எவ்வமிலத்தினால் எவ் உலோகத்தில் செய்யப்பட்டிருந்தாலும்
5.சில அலைச் சக்திகளைக் கொண்டு அதனை உருமாற்றவும்
6.சில நிலைகளைச் சுட்டிக் காட்டும் தன்மையை உருவாக்கும் நிலையையும் உருவகப்படுத்தலாம்.

இந்நிலையில் ரிஷித் தன்மை கொண்ட ரிஷிகள் பலர் காயகல்ப சித்து என்ற சில சக்தி நிலைகளைச் செய்து காட்டினர்.

போகர் சித்து நிலை பெற்று ரிஷித் தன்மை வலுக்கூடிய நாளில் அவர் எடுத்த அலைகளின் சக்தியினால் இந்தப் பூமிக்குப் பல மூலிகைகளை மருத்துவச் செயலுக்காகப் பூமியில் பதிய வைத்து வளரும் தன்மையை உருவாக்கினார்.

இந்தப் பூமியில் சித்து நிலை பெற்று வளர்ந்த பல மகரிஷிகள்…
1.இன்றளவும் தான் பெற்ற அலைத் தொடரின் சக்தியை
2.தான் பிறப்பெடுத்து வளர்ந்த பூமி அலையின் பதிவில்
3.ஜீவாத்மாககளின் வளர்ப்புக் காப்பக நிலைக்காக
4.பல ஆற்றல் மிக்க சக்திகளைப் பூமியில் பதித்து வளர வழி காட்டுகின்றனர்.

ஆனால் தன் இனத்தின் உண்மை குண நிலையைப் புரியாமல்… உண்மை உயர்வின் வழியில் செல்லாமல்… பூமிப் பிடிப்பில் புதையுண்டு மீண்டும் மீண்டும் பிறவிக்குள்ளேயே சுழன்று வாழ்கின்றனரப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

அடிக்கடி நீங்கள் சலிப்படைந்தால் உங்கள் உடலில் எப்படி உமிழ் நீர் சுரக்கிறது…?

புளியங்காயை வெயில் காலங்களில் சாப்பிட்டால் எப்படி இருக்கும்…? எச்சில் ஊறும். மாங்காயை நீங்கள் வெயில் காலத்தில் சாப்பிட்டிருக்கிறீர்களா…? அது சாப்பிட்டால் எப்படி இருக்கும்…?
1.மாங்காய் என்று சொல்லும் போதே
2.உங்கள் உணர்வுகள் அந்த உமிழ் நீர் அது எப்படிச் சுரக்கின்றது…?

இதைப் போன்று தான் அடிக்கடி சலிப்படைவோருக்கு சலிப்பென்ற எண்ணங்கள் தான் இருக்கும். சலிப்பு என்றால் புளிப்பு.

இருப்பினும் நாம் சுவாசித்த உணர்வுகள் இந்தச் சலிப்பின் உமிழ் நீர்கள் அதிகமாகச் சேர்ந்தவுடனே அடிக்கடி “இப்படிச் செய்தான்…! இப்படிச் செய்தானே…!” என்ற கோப உணர்வுகளைத் தூண்டச் செய்யும்

கோப உணர்வுகளைத் தூண்டச் செய்யும் போது
1.சலிப்பால் ஏற்பட்ட உமிழ் நீர் உறையும் தன்மை அடைகின்றது.
2.நாம் தண்ணீரைச் சுண்ட வைத்தால் எப்படி ஆகின்றதோ
3.இதைப் போல் உமிழ் நீர் இது போல ஆகி அது சளி என்ற நிலைகள் கட்டியாக மாறும்.

சளி கட்டியாக மாறும் போது இந்தச் சலிப்பின் தன்மை உமிழ் நீரைச் சுரக்கச் செய்ய
1.சுரந்த உமிழ் நீர் உறையச் செய்ய
2.உறைந்த நிலைகள் சுவாசப் பையில் உறைந்தபின்
3.ஆஸ்துமா போன்ற நோய்கள் “கிஷ்ஷு… கிஷ்…” என்று
4.நமக்குள் திகைப்பின் நிலைகள் ஆகிவிடும்.

எவர் ஒருவர் சலிப்பும் சஞ்சலமும் அதிகமாக எடுக்கின்றனரோ அவர்களுக்கு இந்த உணர்வின் நோய் நிச்சயம் வரும்.

நாம் தவறு செய்யவில்லை.

ஆனால் இந்த உணர்வின் தன்மை நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறும் போது ஒரு குழம்பிற்குள் புளிப்பை அதிகமாகப் போட்டால் அந்தப் புளிப்பின் சுவை இருப்பது போல நம் ஆன்மாவில் புளிப்பின் உணர்ச்சிகளே முன்னணியில் நிற்கும்.

இதைத்தான் விநாயகத் தத்துவத்தில் கணங்களுக்கு அதிபதி “கணபதி” என்று சொல்வார்கள்.

நமது உடலில் எத்தனை குணங்கள் இருந்தாலும் இந்தப் புளிப்பான உணர்வுகள் நாம் அதிகமாக எடுத்து விட்டால் நமது உடலில் இருக்கக்கூடிய நல்ல குணங்களுக்கெல்லாம் அதிபதியாகி
1.அடிக்கடி புளிப்பாகப் பேசுவதும்
2.சலிப்பான நிலைகள் செயல்படுத்தும் தன்மை வந்துவிடும்.

அதுதான் கணங்களுக்கு அதிபதி கணபதி.

அதே சமயம் சலிப்பின் தன்மை அதிகமாகும் போது நாம் சுவாசிக்கும் உணர்வுகள் நமக்குள் மூஷிகவாகனா.

நாம் எந்தக் குணத்தைச் சுவாசிக்கின்றோமோ இந்த உணர்வின் சக்தி அதிகமாக அந்தப் புளிப்பான செயல்களைச் செயல்படுத்தும் போது இந்த குணமான நிலைகள் இந்த உடலை அழைத்துச் செல்லும்.
1.இந்த உடலுக்குள் உணர்வலைகளை இயக்கிக் காட்டும்.
2.அதனால் தான் மூஷிகவாகனா.

எலி என்ன செய்கின்றது..? ஒரு நிலத்தில் தனக்கு வேண்டிய வீட்டை வசதியாக ஏற்படுத்திக் கொள்ளுகின்றது. சமமாக இருக்கும் நிலத்தை அது வங்கிட்டு கொள்கின்றது.

இதைப் போல நமக்குள் இருக்கும் குணங்கள் அனைத்தும் நாம் அடிக்கடி சலிப்பு என்ற புளிப்பான செயல்களைச் செய்வோம் என்றால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்களைச் செயலற்றதாக்கி இந்தப் புளிப்பின் உணர்வுகள் தனக்குள் வங்கிட்டுக் கொள்ளும்.

இந்தப் புளிப்பின் தன்மை அடையப்படும்போது அதிகமாகச் சாப்பிட்டவுடன் உமிழ் நீர் சுரக்கும். ஆஸ்துமா போன்ற நோய்கள் வரும். வாயில் ரணங்கள் வரும்.
1.சோறு சாப்பிட முடியாது.
2.வயிறு நிறைந்த மாதிரி இருக்கும்.
3.அதே சமயத்தில் கை கால் குடைச்சல் வரும்.
4.நமக்குள் நம்மை அறியாமலே கோப உணர்வுகளைத் தூண்டும்.
5.உமிழ் நீர் அது மீண்டும் உறையச் செய்யும்.
6.சளியின் தன்மை அதிகம் அடைகிறது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. இதை மாற்ற வேண்டுமா இல்லையா…!

யாம் ஆசீர்வாதம் கொடுக்கும் போது நீங்கள் சுவாசிக்க வேண்டிய அருள் உணர்வுகளும் அதனின் வழி முறைகளும்

இந்த வாழ்க்கையில் உங்களை அறியாது தீமைகளைச் சந்திக்கும் நேரங்கள் எல்லாம் அடுத்த கணமே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும். இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி
1.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் உடலில் அறியாது வந்த தீமைகள் நீங்க வேண்டும்
3.எங்கள் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும் என்று எண்ணி
4.ஒவ்வொரு நொடியிலும் நம்மை அறியாது உட்புகுந்த தீமைகளைச் சுத்தப்படுத்த வேண்டும்.

இவ்வாறு செய்தால் ஆத்ம சுத்தி என்ற நிலை ஆகின்றது. அருள் ஞானியின் உணர்வுகள் நமக்குள் விளையத் தொடங்குகிறது.

ஆகவே இந்த மனிதப் பிறவியில் நல்லதை வளர்க்கும் நிலைகள் பெற்ற நாம் அடுத்து இந்த உடலை விட்டு உயிரான்மா வெளியே சென்றால் கல்கி அவதாரம் என்ற நிலையை அடைய வேண்டும். கல்கி என்பது ஒளிச் சரீரம்.

1.எந்த மனிதனின் ஈர்ப்புக்கும் எந்த மிருகத்தின் ஈர்ப்புக்கும் செல்லாது
2.மெய் ஒளி செல்லும் பாதைகளில் நீங்கள் ஒவ்வொருவரும் சென்று
3.என்றும் பதினாறு என்ற ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்பதற்குத்தான் இந்த உபதேசத்தைக் கொடுப்பது.

உடலை விட்டுச் சென்றால் எவரின் உடலும் நம்மை ஈர்த்திடாது எவரின் உடலுக்குள்ளும் நாம் சிக்க மாட்டோம். எதிலுமே நாம் சிக்காது அந்த அருள் ஞானியின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று பிறவா நிலை என்னும் அழியா ஒளி சரீரமாக பெறும் தகுதியை நாம் பெறுகின்றோம்.

அதை நீங்கள் பெற வேண்டும் என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் பிரார்த்திக்கிறேன்… உங்களை ஆசீர்வதிக்கின்றேன் (ஞானகுரு).

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் அனைவரும் பெற வேண்டும்… நாங்கள் பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் நலம் பெற வேண்டும்… அவர்கள் தொழில்கள் எல்லாம் நலம் பெற வேண்டும்…! என்ற எண்ணத்துடன் எம்மை அணுகினால் யாம் கொடுக்கும் ஆசீர்வாதம் நல்ல பலனைத் தரும்.

தீய உணர்வுகள் உங்களுக்குள் அடங்கி நிற்க வேண்டும் என்ற நிலையிலே தான் அருள் வாக்குகளை உங்களைப் பார்த்து ஆசியாகக் கொடுக்கின்றோம்.

1.ஆகவே ஆசி கொடுக்கும்போது சீராக நேராகப் பார்க்க வேண்டும்.
2.என் (ஞானகுரு) கையில் ஆசீர்வதிக்கும் போது இந்தக் கையிலிருந்து வெளிப்படும் உணர்வை நீங்கள் சுவாசிக்க நேர்கிறது.
3.அப்போது தீயது விளையாது தடுத்து நிறுத்த உதவும்

அந்த அருள் ஞானியின் சக்திகளை உங்களுக்குள் மீண்டும் மீண்டும் எடுத்தால் தீமை விளைவிக்கும் உணர்வுகள் அனைத்தும் உங்களுக்குள் அடிபணிகின்றது.

அதே சமயத்தில்
1.ஞானிகள் உணர்வுகள் மிகச் சக்தி வாய்ந்ததாக உங்களுக்குள் வளர்ந்து
2.உங்கள் சொல்லும் உங்கள் உடலிலிருந்து வரக்கூடிய மணமும்
3.பிறிதொருவர் உங்களைப் பார்க்கும் போது இந்த உணர்வுகள் அவர் உடலிலே ஊடுருவி
4.உங்களுக்கு நண்பனாகவும் உதவி செய்வதாகவும் அமைந்து
5.பகைமையை நீக்கிடும் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து
6.பகைமையற்ற நிலைகள் கொண்டு மனித வாழ்க்கையில் மகிழ்ச்சியான நிலையில் வாழ முடியும்.

ஆகவே…
1.இந்த மனித வாழ்க்கையில் வரும் தீயவினைகள் எதுவானாலும் அது சந்தர்ப்பத்தால் ஏற்படுவது தான்.
2.மனிதனான நாம் அருள் ஞானியின் நிலையை இப்போது நமக்குள் சேர்ப்பதும் ஒரு சந்தர்ப்பம் தான்.

நாம் வாழ்க்கையில் பிறர் சண்டையிடும் போது நாம் அதைக் கூர்ந்து கவனிப்போம் என்றால் அந்தச் சந்தர்ப்பம் நமக்குள் சண்டையை ஊட்டும் உணர்வாக விளைந்து விடுகிறது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீண்டு அதைக் கடந்து சென்ற அந்த ஞானிகள் உணர்வுகள் தீமையற்ற உணர்வாக நமக்குள் விளைய வைத்து அகப்பொருளையும் புறப்பொருளையும் நாம் தெரிந்துணர்தல் வேண்டும்.

அப்படி உணரும் உணர்வுகளை நமக்குள் சேர்த்துப் பெரு வீடு பெரு நிலைகள் அடைந்து என்றும் அழியா ஒளி சரீரத்தைப் பெறும் நிலைகள் நீங்கள் பெற வேண்டும் என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களைப் பிரார்த்திக்கின்றேன்.

ஞானிகளின் உணர்வை எளிதில் எப்படிப் பெறுவது…! – ஈஸ்வரபட்டர்

1.ஒருவர் நீர் அருந்தும் பொழுது நாம் பார்த்தால் நமக்கும் தாக நிலை ஏற்படுகின்றது.
2.ஒருவர் கொட்டாவி விட்டால் அதே நிலை நமக்கும் ஏற்படுகின்றது,

ஜீவ சக்தியில் சரீர பிம்ப வாழ்க்கை நிலையில்.. உணர்வுடன் கூடிய எண்ணத்தில் செயல்படும் வழிமுறை ஆற்றல்… மனிதச் சக்திக்கே ஒருவருடன் ஒருவர் கூடி வாழும் வாழ்க்கையில்… இவ்வீர்ப்பின் தொடர்பில் “ஒருவரை ஒத்து” ஒருவரை இப்படித்தான் சாடுகின்றது.

இதே போல் தான் ஆத்ம இயக்கத்தின் தொடர்பிலும் உண்டு. தாம்பத்ய எண்ண வாழ்க்கையில் ஆண் பெண் ஒத்த இல்லற உணர்வால் ஒருவரின் அலைத் தொடர்பைப் பிறிதொருவர் அதிவிரைவில் எடுக்கும் வல்லமை கூடிய இல்லற எண்ண ஒற்றுமைகள் நடைபெறுகின்றன.

1.உயர் அலையின் தொடர்பலையால்
2.காந்த மின் அலையின் வீரிய உயர் குண வழித் தொடரில்
3.ஜெபம் கொண்ட சக்திமிக்க வாழ்க்கை நிலை ஏற்படும் பொழுது
4.இரண்டு எண்ணங்களின் ஒருமித்த கூட்டு ஐக்கிய குண நிலை அமையும் பொழுது
5.அத்தொடரினால் பெறப்படும் உயிராத்மாவின் வலுவில் கூட்டு ஐக்கியம் கொண்டு
6.சிவசக்தி… என்ற “ரிஷிபத்தினி” நிலையைப் பெற முடியும்.

அந்நிலையின் வழித் தொடரில் தனித்த அலைத் தொடர்பைக் காட்டிலும் வளர்க்கும் தன்மைக்கு வளர்ச்சி பெறும் ஜீவ சக்தியைச் சிருஷ்டிக்கும் ஆற்றல் நிலை பெற முடியும்.

மனித ஆத்மாவின் அலைச் சக்தி எண்ணத்தின் ஆவி நிலையின் பதிவு நிலை… பூமி இழுத்து வெளிப்படுத்தும் அலையுடன் ஒன்றிய வாழ்க்கை நிலையில்… இவ்வுணர்வின் எண்ணத்தின் சரீர அலைத் தொடர்பு இந்த உடல் செல்லும் இடங்களில் எல்லாம் “பூமியின் ஈர்ப்பில் பதிந்து கொண்டே உள்ளது…!”

அதைப் போன்றே…. ஒத்த நிலையிலோ மாற்று நிலையிலோ உள்ளவர்களுடன் கூடிய எண்ண உறவாட்டத்தில்… பிறரின் அலை உணர்வை… நாம் ஒவ்வொரு நிமிடமும் சுவாசிக்கத்தான் செய்கின்றோம்.

எப்படி தாகம் எடுப்பதும் கொட்டாவி விடுவதும் பிறரின் தொடர்பு கொண்டு உள்ளது போன்றே
1.பிறர் வளர்த்த அலைத் தொடர்பை
2.ஒளி பாய்ச்சி உணர்வும் எண்ணமும் ஈர்க்கும் ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல்
3.பிறரின் சோகத்தையும் சஞ்சலம் சந்தோஷம் எதுவாகிலும் எடுக்கும் நிலையில் தான்
4.இன்றைய வாழ்க்கை நடைமுறையில் நாம் உள்ளோம்.

அதை மாற்றி எண்ணத்தால் எடுக்கும் ஞான உணர்வின் வழி முறையில் உயர்ந்த ரிஷித் தொடர்புடன் செயல்படும் வாழ்க்கை வழிமுறையை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி அமைத்துக் கொண்டோமானால்
1.இவ்வாத்ம அலையை ஒளிரும் சக்தியில் வலுக் கொண்டு இயங்க
2.நாம் வளர்த்த உயர் தொடர்பின் வலுத் தன்மையுடன்
3.மாற்று நிலை கொண்ட பிறருடன் கலந்துறவாடும் எண்ண நிலை ஏற்பட்டாலும்
4.தணலில் போடும் பொருளைப் போன்று அவை நம்மைச் சாடாமல் பஸ்பமாக்கும் தன்மைக்கு
5.நம் ஆத்ம அலையின் வலு நிலை கூடிவிடும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நாம் தியானத்தின் மூலம் எடுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நம் உடல் முழுவதும் படர்ந்து நம் உடலிலுள்ள ஜீவ அணுக்களில் இந்த உணர்வின் ஆற்றல் பெருகுகின்றது.

அதன் மூலம் விண்ணில் பரவிக் கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் உணர்வலைகளை எளிதில் பெறும் தகுதியும் இந்த மனித வாழ்க்கையில் இருள் நீக்கிப் பொருள் காணும் நிலைகளும் பெறும் தகுதியினைப் பெறுகின்றோம்.

1.உங்கள் நினைவலைகளை விண்ணில் செலுத்தப்பட்டு
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் கதிர் பொறிகளை உங்கள் உடலுக்குள் பரவச் செய்து
3,உங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் பெறும்படி செய்வது தான்
4.குருநாதர் காட்டிய வழியில் எமது வேலை.

இந்த முறைப்படி செய்தால் துருவ தியான நேரத்தில் உங்களுக்குள் புதுப் புது உணர்வுகள் பரவி
1.உங்கள் ஈர்ப்பு வட்டத்திற்குள் அந்த ஒளிக் கதிர்கள்
2.அலைகளைப் போன்று சுழன்று கொண்டிருப்பதையும் உங்களால் காண முடியும்.

இதை யாரெல்லாம் பெறுகின்றனரோ அவை அனைத்தும் உங்கள் வாழ்வில் இந்த மனித வாழ்க்கையில் சேரும் தீமைகளை அகற்றி உங்கள் ஆன்மாவைத் தூய்மையாக்கச் செய்யும்.

நீங்கள் சுவாசிக்கும் உணர்வுகள் தெளிந்த மனதுடன் வாழ்ந்திடவும் இந்த வாழ்க்கையில் எத்தகைய எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் நுகர்ந்தறியும் உணர்வுக்குள் தீமைகளைப் பிளந்திடவும் முடியும்.

அந்தத் தீமையற்ற உணர்வின் தன்மை அறியும் ஆற்றலும் உங்கள் நினைவிற்குள் வரப்பட்டு உடலில் உள்ள அணுக்களை ஒவ்வொரு நொடிகளிலும் இந்த விண்ணின் ஆற்றலை ஒளிக்கதிர்களாக மாற்றும் திறன் பெறுவீர்கள்.

இதை ஒவ்வொரு நாளும் காலை துருவ தியானத்தில் மறவாது இதைச் செய்யுங்கள்.

அதைப் பெறும் தகுதியை துருவ நட்சத்திரத்திலிருந்து விளைந்த உணர்வுகளை உங்களுக்குள் இணைக்கச் செய்கின்றோம். இதே நினைவினை
1.விண்ணிலே நீங்கள் எண்ணி ஏங்கும் போதெல்லாம்
2.இந்த உணர்வுகள் உங்களுக்குள் வளர்ச்சியாகி
3.உங்கள் நினைவின் ஆற்றல் விண்ணுக்கே செல்லும்.

விண்ணுலகில் அதாவது வானவியலில் விளைந்த உணர்வுகள் புவியில் ஈர்க்கப்பட்டு தாவர இனங்களாக வளர்க்கப்பட்டு தாவர இனங்களில் உணர்வின் செயலாக உயிரினங்களில் எண்ணங்கள் உருவாக்கப்பட்டு அது பல கோடிச் சரீரங்களை நாம் கடந்து வந்து இன்று மனிதனாக உருவாகி வந்துள்ளோம்.

எத்தனையோ வகையான இன்னல்களிலிருந்து விடுபடும் எண்ணங்கள் நமக்குள் உருவாகி அதனின் உணர்வின் வலுவாக உணர்வுகள் வலுப்பெற்று உடல்கள் பரிணாம வளர்ச்சியாகி வந்துள்ளோம்.

நம்மை மனிதனாக உருவாக்கிய இந்த உயிரால் இந்த உடலுக்குள் விளைந்த உணர்வின் தன்மை தான் கார்த்திகேயா என்று நாம் எதனையும் அறிந்திடும் ஆற்றலும் தெளிந்திடும் மனமும் கொண்டவர்கள் நாம்.

இருளைப் பிளந்து அங்கிருக்கும் பொருளைக் காணும் நிலைகள் பெற்றது நமது ஆறாவது அறிவு. ஒரு தீபத்தை ஏற்றினோம் என்றால் அங்கே இருளை மாய்த்து விட்டுப் பொருள் இருக்கும் நிலைகளை நாம் காணுகின்றோம்.

இதைப் போன்றுதான் துருவ நட்சத்திரத்தின் ஒளிக் கதிர்களை உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களில்
1.சிறுகச் சிறுகச் சேர்க்கச் செய்கின்றோம்.
2அதிகமாகச் சேர்த்தால் உங்களால் தாங்க முடியாது.
3.அது உடலிலே சூடாகி விடும்.
4.அதே சமயத்தில் அதனுடைய வேகத் துடிப்புகளை நாம் தாங்கும் சக்தி இல்லை.

அதனால் தான் ஒவ்வொரு நொடிக்கும் இந்தத் துருவ தியான நேரங்களில் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்கள் ஈர்ப்புக்குள் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

சிறுகச் சிறுக உங்கள் உடலுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளைப் பரவச் செய்து ஒவ்வொரு அணுக்களிலும் இதை இணைக்கும்படிச் செய்கின்றோம்.

அணுக்கள் என்றால் நம் உடலில் எத்தனையோ விதமான குணங்களை எண்ணியுள்ளோம்… வளர்த்துள்ளோம். அதன் உணர்வின் தன்மை கொண்டு அணுக்கள் விளைகின்றது.

அந்த அணுக்களில் துருவ நட்சத்திரத்தின் ஒளிக்கதிர்களை இணைக்கப்படும் போது அந்த அணுக்களில் விளைந்துள்ள தீமைகள் சிறுகச் சிறுகக் குறையும்.

உங்கள் நினைவின் ஆற்றல் விண்ணுக்கே செல்லும். அந்த விண்ணின் ஆற்றலைப் பருகும் தகுதியைப் பெறுவீர்கள்.

உலகில் அன்றாடம் நடக்கும் அசம்பாவிதங்களைப் பார்த்தோ படித்தோ நமக்குள் பதிவாக்கி விடக் கூடாது

பத்திரிக்கைகளைப் படிக்கும் போது “எங்கெங்கோ அசம்பாவிதங்கள் நடக்கிறது…” என்று பார்க்கின்றோம்.

பட்டப்பகலில் கொள்ளை அடித்தனர். ஆட்கள் நடமாட்டம் இருந்த இடத்திலேயே நடந்தது. கைகளில் ஆயுதங்களை ஏந்தி அதைச் செயல்ப்படுத்தும் போது மற்றவர்கள் சிதறி ஓடினர். இருக்கும் பணத்தை எல்லாம் பறித்துச் சென்றார்கள்.

அவ்வளவு கூட்டத்திலே இது நடந்தது. போலீஸ் இருந்தும் யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று பத்திரிக்கை வாயிலாகப் படிக்கும் பொழுது பய உணர்வுகள் ஊடுருவி நமக்குள் அதிகமாகப் பதிவாகி விடுகிறது.

உதாரணமாக… அந்த நேரம் நாம் பஸ்ஸிலே பிராயணம் செய்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நாம் செல்லும் பொழுது ஒரு பத்துப் பேர் இது சம்பந்தமாகப் படித்து அந்தப் பய உணர்வுடன் பஸ்ஸிலே பயணம் செய்தால் போதும்.

1.டிரைவர் அங்கே ஓட்டிக் கொண்டிருந்தாலும் இந்தப் பய உணர்வலைகள் அவருக்குள்ளும் பாயப்பட்டு
2.அவரையும் சிந்தனையற்றதாக்கி விபத்தாக வைத்துவிடும்.

காரணம் நாம் படித்த இந்த உணர்வுகள் அடுத்தவர்களுக்குச் சொல்லாகச் சொல்லப்படும்போது சொல்லின் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து படரச் செய்கிறது. அது டிரைவரையும் இயக்கிவிடுகிறது.

ஆக… நாம் வண்டிக்குள் அமர்ந்து சாதாரணமாகச் சென்று கொண்டிருந்தாலும் அங்கே நமக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலையாக உருவாக்கி விடுகின்றது.

இவ்வாறு தான் மனித வாழ்க்கையில் பத்திரிக்கையைப் பார்த்த உணர்வுகள்…
1.எங்கோ நடக்கும் சம்பவங்களைக் கூர்ந்து கவனிப்போமேயானால்
2.அந்த உணர்வின் தன்மை எங்கே படர்ந்திருந்தாலும் அது நம் ஈப்பிற்குள் வந்து
3.நமக்குள் பய உணர்ச்சிகளைத் தூண்டி விடுகின்றது.

அதே போல் வீட்டிற்குள் படுத்திருக்கும் பொழுது கொள்ளையன் கதவை உடைத்து நொறுக்கி விட்டுப் பணத்தை எடுத்துச் சென்றான் என்று பத்திரிக்கை வாயிலாகப் படித்து அதைப் பதிவாக்கினால் போதும்.
1.அந்த உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறி நம் ஆறாவது அறிவில் உள்ள வலுவை இழக்கச் செய்து
2.நாம் தூங்கும் போது காற்றுக்கு ஒரு கதவு டப்… டப்… என்று அடித்தாலோ
3.அல்லது பகலிலேயே டம்… என்று ஒரு கதவின் சப்தம் கேட்டாலோ
4.”உடனே எவனோ கதவை உடைக்கின்றான்…” என்று திடுக்கிடச் செய்து நாம் திரும்பிப் பார்க்கும் நிலை வருகின்றது

அப்படித் திரும்பிப் பார்க்கும் நிலை வரும் போது நம்மை அறியாமலேயே காற்றிலே மறைந்துள்ள இந்த பயமான உணர்வை நுகர நேர்கிறது.

பத்திரிக்கை வாயிலாக அதைப் படிக்கப்படும் போது…
1.எங்கே அசம்பாவிதமாக வெளியிடப்பட்டதோ
2.அந்தச் சம்பவம் நடந்ததை யார் அதைக் கண்ணுற்று வெளிப்ப்படுத்துகின்றனரோ
3.அதே உணர்வுகளை நாம் சுவாசிக்க நேருகின்றது.

ரேடியோ டிவி.யில் ஒலி/ஒளிபரப்பு செய்தார்கள் என்றால் அந்தந்த ஸ்டசனைத் திருப்பி வைக்கும் போது அதனதன் நிலைகளை நம் வீட்டில் உள்ள ரேடியோ டி.வி ஈர்க்கிறது… நாம் பார்க்கின்றோம்… கேட்கின்றோம்.

இயற்கையிலே ஒரு வேப்பமரம் தன் கசப்பான சத்தினை மணமாக வெளிப்படுத்துகிறது. அதே சமயத்தில் அதிலே விளைந்த வித்தினை எடுத்துப் பல நூறு மைல்களுக்கு அந்தப் பக்கம் நாம் பதியச் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

இங்கே பதிவான வித்து பூமியின் ஈர்ப்புக்குள் நின்று அது சரியான பருவத்தில் முளைக்கத் தொடங்கினால்
1.தாய் வேப்ப மரம் வெளிப்படுத்தும் அந்தக் கசப்பான சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்தாலும்
2.நூறு மைலுக்கு அப்பால் இருந்து அதை இழுத்துக் கவர்ந்து அதே இனமாகத் தன்னை வளர்த்துக் கொள்கின்றது.

இதைப் போன்றுதான் நாம் பத்திரிக்கையைப் படிக்கிறோம் என்று இருந்தாலும் அதிலே சம்பந்தப்பட்ட மனிதனின் எண்ண அலைகள் நம் உணர்வுடன் கலந்து உடலுடன் இணைக்கப்பட்டு நம் உடலிலே ஊழ்வினையாகப் பதிவாகி ஒரு வித்தின் தன்மை அடைந்து விடுகின்றது.

வித்தின் தன்மை அடைந்த பின் அது தன் இனத்தைப் பெருக்கி நம்மை அறியாமல் அதே தீமையின் விளைவுகளையே இயக்கிவிடுகிறது. விபத்தினால் வேதனைப்படும் நிலைகள் வருகின்றது.

மனிதனின் வாழ்க்கையில் அடிக்கடி வேதனை என்ற உணர்வுகள் அதிகரித்து விட்டால் அதனின் செயலாக்கமாக அந்த உணர்வுகள் நம்மை வேதனைப்படும் செயலுக்கே நம்மை அழைத்துச் செல்லும்.

நமது உயிருடைய வேலை என்ன?
1.நாம் கவர்ந்த உணர்வினை நமக்குள் ஆழப்பதியச் செய்வதும்
2.பதிந்த உணர்வுகள் கவரும் நிலைகள் ஆன்மாவாக மாற்றுவதும்
3.ஆன்மாவிலிருந்து நுகர்ந்தறிந்து இயக்கிக் காட்டுவதும் தான் உயிரின் வேலை.
இயக்கிக் காட்டிய உணர்வின் அலைகள் கண்ணின் புலனறிவிலே படப்படும் பொழுது
1.நேர்முகமாக இருப்பதை அறிந்து விடுகின்றோம்.
2.மறைமுகமாக சூட்சமத்தில் இருப்பதை அறியமுடிவதில்லை.

சூட்சமமாக இருப்பதை நாம் எப்படி அறிய முடிகின்றது..?

அந்த உணர்வின் தன்மையை நாம் சுவாசித்து அதன் வழியில் இந்த உடலை அழைத்துச் செல்வதும் அங்கு நடக்கும் நிகழ்ச்சி “உடலிலே அனுபவித்தபின் தான்… அதை அறிய முடியும்”.

ஆனால் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் அதிகமாக விளைந்திருந்தால்
1.எதிர் கொண்டு அலைகள் வந்தால் அதை மாற்றி அமைக்கும் சக்தியாக
2.நம்மைக் காத்திடும் “ரிமோட் கன்ட்ரோல்…” போன்று செயல்படும்.

ஆகவே நாம் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி “எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்” என்று தியானிக்க வேண்டும், தவமிருக்க வேண்டும்.
1.இந்த உணர்வுகள் வலுப் பெறும் பொழுது
2.விபத்துக்கள் ஏற்பட்டாலும் அதிலிருந்து “நம்மைக் காத்திடும் சந்தர்ப்பங்கள்” உண்டு.

ஆத்மாவின் விழிநிலை ஆற்றலை வளர்க்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

சகல ஜீவ சக்திகளிலும் சரீர உணர்வினால் செயல்படும் ஒளித் தன்மையின் விழி நிலை (கண் பார்வை) ஜீவராசிகளுக்குத்தான் உண்டு.

பூமியும் பூமி வளர்க்கும் தாவர இனம் மற்றைய தாதுப் பொருள்கள் ஒவ்வொன்றும் ஜீவ சக்தி கொண்டது தான். இருந்தாலும் அவற்றின் முலாம் வளர்ச்சியின் முதிர்வு நிலையில் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்றாக மாறி மாறி வரும் நிலை வளர்ப்பு… அழிவு… வளர்ப்பு… என்றே வந்தது.

அதன் வளர்ச்சி நிலையில் அணு சமைத்து வளர்ந்த முலாம் கொண்டு உயிரணுவாகத் தோன்றியது. உயிரணுவாகத் தோன்றினாலும் அவை ஒவ்வொன்றூம் பல வார்ப்பு நிலையில் வளர்ந்து… அழிந்து… சக்தி கொண்டு… பல நிலைகளுக்குப் பிறகு ஜீவனுள்ள சரீரம் பெறுகிறது.

சரீரம் பெற்ற நிலையில் ஊர்வன நீந்துவன பறப்பன நடப்பன என்ற ஜீவராசிகளின் வளர்ச்சியில் விழிநிலையில் ஒளி காணும்… உருவக எதிர் நிலையை… அறியும் ஆற்றல் வருகின்றது. அதாவது
1.விழியின் ஒளியை எதிர்ப்படும் பொருள் கண்டு
2.விழியின் பாப்பாவில் படம் பிடித்து
3.அதனதன் உணர்வு கொண்ட எண்ணத்தில் அறிந்து செயல்படும் வாழ்க்கை நிலை நடக்கின்றது.

ஆனால் சாதாரண பிறப்பு இறப்பு என்ற நிலையில் ஜீவ சக்தி பிரிந்து உடலை விட்ட உயிராத்மாவிற்கு ஆத்ம ஒளி வட்டம் தான் உண்டு. இந்தக் காற்றலையில் தான் சுழலும்.

ஜீவன் பிரிந்த ஆத்மாக்கள் காற்றலையில் மிதந்து கொண்டே இந்தப் பூமி ஈர்ப்பில் சுழன்றாலும் விழியால் பார்க்கும் நிலை அந்த ஆத்மாக்களுக்கு இல்லை. சுவையையும் மணத்தையும் நுகரும் சுழற்சி வட்டத்தில் தான் அவை சுழலுகின்றது.

ஜீவனுடன் உள்ளவர்களின் சரீர எண்ணத்தால்…
1.உடலை விட்டுப் பிரிந்தவர்களின் நினைவில் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது
2.அவ்வலையின் உணர்வு இவர்களின் மேல் மோதி
3.அந்தத் தொடர்புடன் அவர்களுக்கும் ஜீவ காந்த அலைத் தொடர்பு கிட்டியவுடன்
4.அவர்கள் தொடர்புடன் ஆவி ஆத்மாவும் விழி அலை பிம்பத்தை எதிர் கொண்டு பார்க்க முடிகின்றது.

அலை உணர்வின் தொடர்பைக் கொண்டு “பார்க்கும் நிலையானது” எப்படி..?

ஒரு புகைப்படக் கருவியைக் கொண்டு (CAMERA) அதில் பூசப்பட்ட அமிலப் புகை பிம்பத் தாள்களை (FILM) அக்கருவியுடன் பொருத்தி அதற்குகந்த விசை அழுத்தத்தைத் தந்தால் எதிர் பிம்பத்தைப் பதிவு செய்வதைப் போன்று தான் ஆவி ஆத்மாக்களின் செயல்கள் உண்டு.

எதிர் நிலையில் காண்பதை விழியில் காணும் நிலை தான் மனித சரீரத்திற்கே உண்டு. தன் முதுகைத் தானே காண முடியாது. தன் பிம்பத்தையே எதிர் அலையின் நிலைக்கண்ணாடியிலோ நீரிலோ தான் பார்க்கும் நிலை உண்டு.

ஆதம தியான சக்தியைக் கொண்டு… ஞான திருஷ்டியால்… விழியை மூடிக் கொண்டு… ஞானத்தால் பெறும் தியான சக்தியில்… ஆத்ம சக்தியின் உயர்வு நிலையால்…
1.இச் சரீரக் கூட்டிலிருந்தே சகல சித்துக்களையும் பெறும் வழித் தொடர் கொண்டு
2.ஞானத்தால் காணும் விழியின் ஒளி நிலைக் காட்சிகளை
3.எண்ணியவை யாவையுமே காணத்தக்க விழி நிலையின் ஒளித் தன்மை… இவ்வாத்ம அலையைப் பெற்றுவிட்டால்
4.ஏகமும் ஒன்றான அகில சக்தியின் தொடர்பிலும் விழி அலை ஒளி நிலையில் காண முடியும்.

அத்தகைய நிலை பெற வேண்டும் என்றால் இச்சரீரக் கூட்டின் சமைப்பில் காந்த மின் அலையின் வலுத்தன்மையை எலும்புக் கூடுகள் பெற்றிருக்க வேண்டும்.

அப்படிப் பெற்ற தன்மை கொண்டு தான்…
1.ஆத்மாவின் விழி நிலையின் ஜோதி நிலை கொண்டு
2.நம் வளர்ப்பின் தொடருக்கு வழி காட்டிய ரிஷிச் சக்தியின் உயர்வுத் தொடர்புடன்
3.மகரிஷிகளின் அருள் வட்டமுடன் நம் ஐக்கியச் செயலையும் ஐக்கியப்படுத்தலாம்.

இது எல்லோராலும் சாத்தியமானதே…!

ஆகவே பிறவா வரம் கொண்ட ஜோதி நிலை பெறும் ஒளி நிலையின் உயர் தத்துவத்தை ஒவ்வொருவரும் உணர்ந்தீர்கள் என்றால் உயர்வு கொண்ட அந்த “ஒளி நிலையின்…” உண்மை புரியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒரு பையனை நாம் நல்லவன் என்று கருதி விட்டால் அந்த உணர்வின் சத்தை நாம் சுவாசிக்கின்றோம்.

நல்லவன் என்ற உணர்வுகள் நமக்குள் வந்தவுடனே நம் கண் அந்தப் பையனைப் பார்த்தவுடன் “வாப்பா… என் கண்ணு…!” என்ற நிலைகளிலே மகிழ்ச்சியாக அழைக்கின்றோம்.

ஆனால் அதே சமயம் அதே பையன் அவன் தவறு செய்கின்றான் என்ற எண்ணத்தை எண்ணி அந்த எண்ணத்தால் நாம் பார்த்தால் அவனைப் பார்த்தவுடனே என்ன சொல்கிறோம்…?

ஆளைப் பார்… அயோக்கியன்…! என்ற இந்த உணர்வுகள் நமக்குள் தோன்றி அந்த உணர்வின் சக்தி நமக்குள் ஆகி நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களெல்லாம் நடுங்கும்.
1.அவனைக் கண்டவுடனே இந்த உணர்வுகள்
2.நம் நல்ல குணங்களுக்கு எதிரியாகி
3.அவனை ஏசும்படி வைக்கும்.

நாம் எதை எண்ணுகின்றமோ அந்த உணர்வின் தன்மை கொண்டுதான் நம் கண் அதை வழி காட்டும். நாம் எதை எண்ணுகின்றமோ அதனின் உணர்வை நம் உயிர் இயக்கி நம் உடலாக இயக்கும்.

எதை…?

அதாவது கெட்டவனைப் பார்த்துப் பதட்டத்துடன் நாம் பார்ப்போம் என்றால் அந்த உணர்வுகள் வந்து
1.துரித நிலைகள் வேகமாக வேலை செய்யும் உணர்வுகளுடன்
2.பதட்டமான உணர்வுகள் கலந்து
3.நாம் வேகமாக வேலை செய்யும் நிலையை அது நடுங்கச் செய்யும்.

வேகமாக ஏதாவது செய்தால் அந்த வேலைகளைச் சரியாகச் செயல்படுத்தவிடாதபடி அது செயலாக்கிவிடும். ஒரு பொருளைத் தூக்கினால் அதிக வலு கொடுத்தால் நடுக்கங்கள் வரும்.

ஒருவனைப் பார்க்கப்படும் போது… “இப்படிச் செய்கிறான்…!” என்று அசுர உணர்வு கொண்டு பார்த்தோம் என்றால் நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் அது நடுங்கும்.

உதாரணமாக உங்களுக்கு ஆகாதவரைப் பார்த்தவுடனே உங்கள் உடலிலே நடுக்கங்கள் வருவதைப் பார்க்கலாம். அந்தப் பதட்டம் கொடுப்பதைப் பார்க்கலாம்.

இவையெல்லாம் காரணம் உங்கள் கண்ணால் “வேண்டாதவன்…” என்று எண்ணும் போது எண்ணிய உணர்வுகள் நமக்குள் பதிவாகின்றது.

நாம் எண்ணியது அவர் மேல் பதியச் செய்த இந்த உணர்வுகள் அவனைப் பார்த்தவுடனே
1.நாம் முதலிலே எதனால் கோபப்பட்டு பதட்டப்பட்டோமோ
2.அந்த அலைகள் நமக்கு முன் நிற்கிறது
3.அது சூரியன் காந்த சக்தியால் கவர்ந்து நமக்கு முன் படர்ந்து கொண்டிருக்கின்றது.

அவனைப் பார்த்த பின் அதே உணர்வுகளை நாம் கவர்ந்து நமக்குள் பதட்டத்தையும் அதே சமயத்தில் சிந்தனையற்ற சொல்லையும் சொல்லச் செய்யும்.

அவனைக் கோபிக்கும் நிலையும் வரும்.

இந்த உணர்வுகள் நம் நல்ல குணங்களுக்கு அது வேண்டாத நிலையாகி அது உடலுக்குள் சேர்த்த பின்
1.நாம் ஏதாவது ஒன்றைச் சிந்தனை செய்ய நேர்ந்தால்
2,நமக்குள் பதட்டமும் அவசரமும் வரும்
3.அவசரப்படும் சொல்களைச் சொல்லச் சொல்லும்.

நம்முடைய எண்ணம் ஒரு பொருளை நல்ல விதத்தில் செயல்படுத்த வேண்டும் என்று எண்ணி அடுத்தவரிடம் சொல்வோம்.

ஆனால் அவசரப்பட்டு நாம் சொல்லும் வார்த்தையை அவன் சிறிது மந்தமாகச் செயல்பட்டால்
1.உடனே ஏசச் சொல்லும்… பேசச் சொல்லும்,
2.அவனை தள்ளிவிடச் சொல்லும்.
3.இந்த உணர்வெல்லாம் நமக்குள் உண்டாகும்.

இந்த உணர்வுகள் அவ்வாறு ஏற்பட்டால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்கு அது தீமையே உருவாக்கும்.

இவையெல்லாம் நாம் சுவாசிக்கும் உணர்வுகளை “நம் உயிர் இயக்கும் நிலைகள் எப்படி…?” என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.ஒவ்வொரு உயிரும் கடவுள்
2.அவனால் உருவாக்கப்பட்ட ஆலயம் அந்த உடல்
3.மனித உடலை உருவாக்கிய நல்ல குணங்கள் அந்த உடலுக்குள் தெய்வமாக இருக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

யாரும் தவறு செய்யவில்லை. நாமும் தவறு செய்யவில்லை.

நாம் நுகர்ந்த உணர்வுகள் தான் உயிரிலே பட்டபின் அதனின் உணர்ச்சிகளாகி அதுவே உடலை இயக்கச் செய்து சொல்களாகவும் செயலாகவும் வெளி வருகின்றது.

குருநாதர் எனக்கு அனுபவ வாயிலாகக் கொடுத்த அருளாற்றலை அப்படியே உங்களுக்கும் கிடைக்கச் செய்கிறேன்

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்
1.ஒவ்வொரு அணுவின் ஆற்றலின் நிலையையும்… நஞ்சின் இயக்க நிலையையும்
2.நஞ்சுடன் இணைந்த உணர்வின் அலையையும் அவர் தெளிவுறக் கண்டுணர்ந்து
3.இயற்கை எப்படி விளைந்தது என்ற நிலையையும் அறிந்தார்.

அதை எல்லாம் யாமும் (ஞானகுரு) அறிவதற்காக வேண்டிச் சுமார் 15 வருடம் காட்டுக்குள் செல்லச் செய்து அனுபவங்களைப் பெறச் செய்தார்.

பல பல தாவர இனச் சத்தை நுகர்ந்தறிந்து அந்த மணங்களை உயிரினங்கள் சுவாசிக்கும் பொழுது
1.அந்த மணம் உயிரினத்திற்குள் எண்ணமாக எப்படி வருகிறது…?
2.அந்த எண்ணத்தின் துணை கொண்டு தன் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்கின்றது…?
3.ஒரு மரமாக இருப்பது தன் மணத்தைக் கொண்டு மற்ற நிலைகள் தன் அருகிலே வராதபடி தன்னை எப்படிப் பாதுகாத்துக் கொள்கிறது…?
4.அதே சமயம் தன் உணர்வால் அதனின் இனத்தின் சத்தை எப்படி எடுத்துக் கொள்கிறது…? என்ற நிலையையும் காட்டினார்.

அதே போல் செடிகளை எடுத்துக் கொண்டாலும் அந்த செடியில் வரும் மணத்தை உயிரினங்கள் நுகர்ந்தால்… அந்த உணர்வின் சத்து உடலாகி…
1.அதற்குள் இருக்கும் இந்த விஷமும்
2.அதனின் மணமும்
3.அதனின் உணர்வும்
4.எண்ணமாக எப்படி இயங்குகின்றது…? என்ற நிலையையும் அதை எல்லாம் நேரடியாகக் கண்டுணரும்படிச் செய்தார்

அவ்வாறு 15 வருடம் காட்டிற்குள் பெற்ற அந்த அனுபவத்தின் பயன் கொண்டு தான் மூன்று லட்சம் பேரைச் சந்திக்கும்படி செய்தார்.

அவ்வாறு சந்திக்கப்படும் பொழுது ஒவ்வொரு மனிதரும் எந்தக் குணத்தை முன்னணியில் வைத்து வளர்த்துள்ளார்களோ அதன் ஈர்ப்பு வட்டத்திற்குள் பிறிதொரு ஆத்மா அவர்களுக்குள் எப்படி இயங்குகின்றது…? என்றும் காட்டினார்.

அந்த ஆன்மாக்கள்
1.அவர்கள் எண்ணங்களுக்கு ஒத்ததாக இயங்குவதும்
2.எண்ணங்களுக்கு மாறாக இயங்குவதும்
3.ஆசையால் எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றல் அவர்களுக்குள் வளர்ந்து கொண்ட பின்
4.அதனின் உணர்வுகள் இவர்கள் உடலிலே எவ்வாறு இயங்குகின்றது என்ற நிலையை அதைத் தெளிவாகத் தெரியும்படிச் செய்தார்.

அதை எல்லாம் அறிந்து கொண்ட பின்… அடுத்த கணம்
1.அதை நீக்கிடும் உணர்வின் ஆற்றலை… அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நீ எப்படிப் பருக வேண்டும்…?
2.அதை உனக்குள் எப்படி வளர்க்க வேண்டும்…?
3.அந்த உணர்வின் எண்ணத்தை மற்றவர்களுக்கு ஒரு நல்ல சக்தி வாய்ந்த வித்தாக எப்படிப் பதிவு செய்ய வேண்டும்..?
4.அத்தகைய ஞான வித்தைப் பதிவு செய்து கொண்ட நிலையில்
5.அந்த அருள் ஞானிகளின் உணர்வினை அவர்கள் எண்ணி அதை நுகர்ந்து
6.அதன் மூலம் வாழ்க்கையில் தனக்குள் அறியாது வந்த தீய வினைகளை எப்படி அவர்களே நீக்கிக் கொள்வது…? என்ற நிலையையும்
7.குருநாதர் எனக்குத் தெளிவாகப் போதித்தார்.
8.அவர் எனக்குப் போதித்த அருள் வழிப்படித் தான் உங்களுக்கும் வழிகாட்டுகின்றேன்.

ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணி ஏங்கினால் அந்த அருள் சக்தி உங்களைக் காத்திடும் அரும் பெரும் சக்தியாக உங்களுக்கு உறுதுணையாக வரும்.

காஷாயம் பூண்டு… மந்திரங்கள் ஓதி.. சாமியார் என்று பெயருடன் பெறுவதல்ல ரிஷித் தன்மை – ஈஸ்வரபட்டர்

நீரை உண்டு பூமியின் சத்தெடுத்துத் தாவரம் வளர்ந்து அந்தத் தாவரங்களில் புழு பூச்சிகள் உண்டாகின்றது. அத் தாவரத்தில் பூக்கள் பூத்துப் பூக்களின் சுவையை அத்தாவரத்தில் வளர்ந்த வண்டுகளே அதற்குகந்த சுவை சத்தான தேனைப் புஷ்பங்களிலிருந்து பெற்று தேன் என்ற சுவை கொண்ட திரவகம் கிடைக்கின்றது.

இதைப் போன்று இதை ஒத்த ஒன்றின் தொடர் கொண்டு ஒவ்வொன்றும் ஜீவ சக்தி கொண்ட நீரைக் கொண்டு அதனதன் வளர்ப்புப் பலன் பெறுகின்றது.

இப்படி இக்காற்று அமிலத்தில் பூமி சுழற்சி காற்று மண்டலத்தில் இந்தப் பூமி சமைத்த அமிலக்கூறுகளின் வளர்ப்பு நிலைக்கொப்ப பூமியின் சத்து நிலை ஒன்றின் தொடர்பு கொண்டு ஒன்றொன்றும் அதன் தொடர்ச்சியில் மாற்றுத் தன்மைகள் பெறுகிறது.

மாற்றங்கள் பெற்றாலும்…
1.இந்தப் பூமியின் அமிலக்கூறே இப்பூமியின் ஈர்ப்புக்குகந்த பூமியுடன் தொடர்பு கொண்ட மற்றக் கோள்களின் சத்தெடுத்து
2.அச்சத்துத் தன்மையை பூமி சமைத்து ஆவியாக்கி அமிலமாக்கி நீராக்கி
3.பூமி வளரும் வளர்ப்பிற்கு தன் சமைப்பின் சத்தைக் கொண்டு பூமி வளர்ந்து
4.பலதையும் கொண்டு அவை அவை வாழ்கிறது.

அதைப் போல் இச்சரீரக் கோளத்தில் எண்ணத்தின் ஞானம் கொண்டு சுவாசத்தால் பெறும் சத்துத் தன்மையைக் கொண்டு
1.தனக்கு வேண்டிய உயர்ந்த சத்துக் குணத்தை எத்தன்மையில் பெற முடியும்…? என்று
2.ஞான சக்தியைக் கொண்டு உணரும் ஆற்றல் தொடர்பினால் எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் சுவாசத்தால்
3.உடலை விட்டுப் பிரிந்த முன்னோர் தொடர்பும் ஞானிகள் சித்தர்கள் சப்தரிஷிகள் வளர்ந்த வளரும் சூரியக் குடும்பங்களின் தொடர்பையும் பெறலாம்.

இந்தப் பால்வெளி அண்டசராசரங்கள் எதுவாகிலும்… எண்ணத்தால் அவற்றுடன் நம் உணர்வின் தொடர்பைச் செலுத்தி.. ஞானத்தின் செயல் அலைக்குச் சுவாசத்தால் இந்த உடலின் அணுத் தன்மையை நாம் எண்ணும் நிலைக்கொப்பச் சத்தாக்கிக் கொள்ளலாம்.

அச்சத்தின் பலனால் ஆத்ம வளர்ப்பை நாம் வளர்க்க சுவாசத்தின் மோதலினால்
1.கவன நரம்பின் காந்த ஈர்ப்புச் சக்தியைக் கொண்டு
2.அவை மோதி வளரும் வளர்ச்சியால்..
3.இந்த எலும்புக்கூடு கூறு அனைத்திற்குமே வலுவாக்கிட முடியும்.

அதிலே… முதலில் இச்சிரசு பாகம் காந்த மின் சக்தியின் வளர்ச்சியைக் கொண்டு மேல் நோக்கி நேராக எடுக்கும் சுவாசத்தால் நாம் பதிய வைக்கும் அலைத் தொடர்பு அனைத்துமே சுவாசத்தின் உணர்வால் சரீர எலும்புகளின் வளர்ச்சி அடையும்.

அந்தச் சத்தின் பலனாக ஆத்ம உயிர் வலு சரீர இயக்கத்தால் எண்ணத்தின் தொடர்புடனே ஆரம்பத்தில் எடுத்த சுவாச அலையின் வளர்ப்புத் தன்மையில் வலுக் கொண்ட அடுத்த வளர்ச்சியாக ஆத்மாவின் இயக்கத்தைத் தனித்து இயங்கவல்ல இயக்கத் தொடர்பிற்குச் செயலாக்க முடியும்.

தனித்து இயங்கும் நிலை பெற்று ஒவ்வொன்றையும் சித்தின் தன்மை கொண்டு ரிஷித் தொடர்பில் வளர்ச்சியாகி… ரிஷித் தன்மை கொண்டு இந்த வாழ்க்கையில் வாழும் தொடர்பிலேயே அதைப் பெறுதல் வேண்டும்.

ஆனால் காட்டிலிருந்தும்… ஜடா முடி தரித்தும்… சாமியார்கள் என்ற காஷாயம் பூண்டு… ஜெப மந்திரம் ஓதி பகவானின் அடிமையாக அடி பணிந்து அடைவதல்ல ரிஷித் தன்மை…!

ஞானத்தின் தொடர்பலையால் சுவாசத்தால் பெறும் உயர் காந்த சக்தியின் தொடர்பை
1.இச்சரீரம் எடுத்துச் சமைக்கும் காலங்களில் அடையக்கூடிய இன்பமும் உடல் ஆரோக்கியத் தன்மையும்
2.இனிமை கலந்த உயர் அலையின் சுழற்சியாக
3.தாம்பத்ய வாழ்க்கை இனிய அன்பு நற்குணத் தொடர்பால் பெறவல்ல இனிய சக்தியைக் கொண்டே
4.உலக சிருஷ்டியைச் சிருஷ்டிக்கும் ஆற்றல் மனித எண்ண உணர்வு செயலுக்குத்தான் உண்டு.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

பழனி முருகன் கோவிலிலிருந்து ஒருவன் ஒரு தடியை வைத்துக் கொண்டு வருவான். அவனால் நடக்க முடியாது. சிறிது தூரம் நடக்கவே ரொம்பக் கஷ்டப்படுவான். இப்படி… அப்படி… என்று பின்னல் போட்ட மாதிரித் தடுமாறி நடந்து வருவான்.

கையில் ஒரு டப்பாவை வைத்துக் கொண்டு அல்லாடிக் கொண்டு வருவான்.

டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் இருக்கின்றது. அதற்குப் பக்கத்தில் ஒரு திண்ணை இருக்கின்றது. அங்கே தான் குருநாதர் அடிக்கடி உட்கார்வார்.

நான் அங்கே போனதும் “இங்கே வாடா…” என்றார். ஒரு திருடன் வருகிறான் “பாருடா…” என்றார்.

அவர் சொல்லி நான் பார்க்கிறேன். அவன் அங்கிருந்து வருவதற்கு அரை மணி நேரம் ஆகிவிட்டது.

ஒரு பத்து அடி தள்ளி வந்து கொண்டிருந்தான். அவன் பக்காத் திருடன்… ஊரை ஏமாற்றிப் பிழைக்கின்றான்…! என்று சொல்கிறார் குருநாதர்.

யாரை…? அந்த நடக்க முடியாதவனை அப்படிச் சொல்கிறார் குருநாதர்.

அவனைப் பல நாள் பார்த்திருக்கின்றேன். கையில் ஒரு கம்பை வைத்துக் கொண்டு அவன் நடக்கிறதே மிகுந்த கஷ்டம். காசு வாங்குவதற்கும் அதைப் பேசிக் கேட்பதற்குமே மிகவும் கஷ்டம்.

இப்படிப் பின்னிப் பின்னி வரப்படும் போது பக்கத்திலே வந்தான்.

அவனுக்கு வடையும் காபியும் வாங்கி வா என்று சொல்கிறார் குருநாதர். அவன் பக்கத்தில் வருகிற வரையிலும் “திருடன்… திருடன்…” என்று சொல்லிவிட்டு அப்புறம் வடையும் காபியும் வாங்கச் சொல்கிறார்.

காபி வாங்கி வந்ததும் அவனிடமிருந்த “தடியை வாங்கிக் கொள்…” என்று சொல்கிறார். அவனை உட்காரச் சொல்கிறார்.

அவனால் காலை மடக்கி உட்கார முடியவில்லை. எப்படியோ மடக்கி உட்கார வைத்தாகிவிட்டது.

காலை நீட்டித்தான் உட்கார முடியும். மடக்கி உட்கார வைக்க முடியாது. உட்கார்ந்து அந்தக் காபியைக் கூடப் பிடித்து அவனால் குடிக்க முடியாது. இந்தப் பக்கம் உள்ள பலகையின் பக்கமாக அவனைச் சாத்தி உட்கார வைத்துக் “காபியைக் கொடுடா…” என்றார் குருநாதர்.

ஆனால் குருநாதர் அவன் நன்றாக நம்மை ஏமாற்றுகிறான். “பெரிய திருடன்டா…” என்று சொல்கிறார்.

ஆனால் அவனால் பதிலும் சொல்ல முடியவில்லை.

காபியை எடுத்துக் குடி என்று சொல்கிறார். அவனால் குடிக்கவே முடியவில்லை. எப்படியோ ரொம்ப நேரம் முகவும் சிரமப்பட்டே குடித்தான். பகுதி கீழே தான் போகின்றது. எப்படியோ அவனைக் குடிக்க வைத்தேன்.

இத்தனையும் திருட்டுத்தனம் பண்ணுகிறான் “பாருடா…” என்கிறார் குருநாதர். அப்பறம் அந்தக் குச்சியை (கம்பை) எடுத்துக் கொண்டு இவனை என்ன செய்ய வேண்டும் தெரியுமாடா…? என்று கேட்டார்.

என்ன செய்ய வேண்டும் சாமி என்று கேட்டேன்…?

இவன் திருடன்டா…! அதனால் இவனை இந்தக் குச்சியைக் கொண்டு ஓங்கி அடிக்க வேண்டும் என்று சொல்கிறார். அவன் முதுகிலே அடித்துவிடு. அப்பொழுது தான் “அவனுக்கு அறிவு வரும்டா…!” என்று சொல்கிறார் குருநாதர்.

நான் என்ன நினைத்தேன்…? இந்த மாதிரி காபியையும் வாங்கிக் கொடுத்து விட்டு இப்படி உதைக்கச் சொல்கிறாரே…! என்று யோசனை செய்துவிட்டு சும்மா ஜாடை காண்பித்து அவனை லேசாக அடித்தேன்.

“அடித்துவிட்டேன் சாமி…!” என்று குருநாதரிடம் சொன்னேன்.

உனக்கு அடிக்கவே தெரியவில்லை. “குச்சியைக் கொண்டா…” என்று சொல்லிவிட்டு என்னை ஓங்கி அடித்தார். “டொம்..” என்று அடி விழுந்தது. கை ரெண்டும் வீங்கிவிட்டது. இப்படி “வீரமாக” அடிக்கணும்டா…! என்கிறார்.

ரெண்டாவது தடவையும் ஓங்கிக் கொண்டு போனேன். ஆனால் நான் அடிக்கவில்லை.

இன்னமும் உனக்கு அடிக்கவே தெரியவில்லைடா… என்று சொல்லிவிட்டு மறுபடி என்னை இந்தப் பக்கம் அடிக்கின்றார். இப்படி அடிக்க வேண்டும் என்று மறுபடியும் சொல்கிறார் குருநாதர்.

இதையெல்லாம் அவன் பார்க்கின்றான். ஆனால் அவனால் எழுந்திரிக்கவும் முடியவில்லை. எழுந்திருக்க வேண்டும் என்றாலும் அரை மணி நேரமாவது ஆகும்.

மறுபடியும் “திருடன்…. சரியான திருடன்… ஏமாற்றுகின்றான்…!” என்று மறுபடியும் சொல்கிறார் குருநாதர்.

அப்புறம் என்ன செய்தார் குருநாதர்.

அவன் முதுகு அந்தப் பக்கமாக (பலகைப் பக்கமாக) இருக்கின்றது. அதனால் அவனை நீ அடிக்க முடியாது.

அவன் சிரசு மேலே இருக்கிறது. நல்ல கச்சிதமாக இருக்கின்றது. தலையில் அணை கொடுத்திருக்கின்றது. ஓங்கி அந்த நடு மண்டையில் அடிக்க வேண்டும். அடித்தால் மண்டை இப்படி ரெண்டாகப் பிளக்க வேண்டும் என்று சொல்கிறார்.

எப்படி இருக்கும் அவனுக்கு…? இதைக் கேட்டது, அவனால் பேசவும் முடியவில்லை. ஆ… ஊ… என்று சொல்கிறான்.

காபி வாங்கிக் கொடுத்துவிட்டு அவனை அடித்து அவன் செத்துவிட்டால் நான் பிள்ளை குட்டிக்காரன் என்னை உள்ளே தள்ளிவிடுவார்கள். “என்ன செய்வது…?” என்று நான் இங்கே பயப்படுகிறேன்.

ஆக ரெண்டு பேருக்குமே (எனக்கும் நடக்க முடியாவனுக்கும்) பயம்தான்.

அடுத்து என்னை என்ன செய்தார் குருநாதர்…? ஓங்கி என் மண்டையிலே அடித்தார். எப்படி அடித்தார் என்றால் அவர் அடித்தது எனக்கு வலி தெரியவில்லை.

இப்படி அடிக்க வேண்டும் என்று சொல்கிறார்.

ஆனால் நேரடியாகப் பார்க்கும் போது என் மண்டையில் அடித்த சப்தம் “பயங்கரமாக…” வருகிறது. ஆனால் சாதாரணமாகத் தொட்டால் எப்படியோ அப்படித்தான் எனக்கு வலி இருந்தது. என் மண்டை பிளக்கவில்லை.

நீ அவனை இப்படி அடிக்க வேண்டும்…! என்று சொல்கிறார். நீ அடித்தால் அவன் மண்டையைப் பிளக்க வேண்டும்…! என்று சொல்கிறார்.

உன்னை அடித்துக் காட்டட்டுமாடா? உன் மண்டையைப் பிளந்து காட்டட்டுமா…? என்று திரும்பவும் என்னிடம் கேட்கிறார்.

சாமி…! என்னை நீங்கள் அடிக்க வேண்டாம். நான் அவனை அடிக்கிறேன். மண்டையைப் பிளக்கிறேன். நான் உள்ளே (ஜெயிலுக்குப்) போகிறேன். நீங்கள் என் பிள்ளை குட்டிகளைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லிவிட்டு ஓங்கி அடித்தேன்.

நான் அவனை அடித்தவுடனே… “ஆ…ஆஅ…” என்று அலறிக் கொண்டு எழுந்து ஓடுகிறான். தன்னை அறியாமலே எழுந்து ஓடுகிறான்.

நான் சொன்னேன் அல்லவா. “பார்த்தாயா…! அவன் திருடன்டா…! விடாதே பிடி…” என்கிறார். நானும் என் வேஷ்டியைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுகிறேன்.

அவன் என்னிடம் “ஐயா…! என்னை விட்டுவிடுங்கள்…” என்று சொல்லிக் கொண்டு ஓடுகிறான்.

“அட… நேற்று வரை நடக்க முடியாமல் காலைப் பின்னிக் கொண்டிருந்தவன் இப்பொழுது இப்படி ஓடுகின்றானே…” என்று அங்கே இருக்கும் கடையில் உள்ளவர் கேட்கிறார்.

“எப்படி நடக்க முடிந்தது…?” என்று அவனுக்கும் தெரியவில்லை. இவ்வளவு அதிசயம் நடந்திருக்கின்றது.

அப்பறம் அவனைப் பிடித்துக் கொண்டேன். அவன்… நான் எப்படி ஓடி வந்தேன்…! என்கிறான். இங்கே வா… குருநாதர் கூப்பிடுகிறார்…! என்று சொல்லிக் கூட்டிக்கொண்டு வந்தேன்.

கூட்டிக் கொண்டு வந்ததும் குருநாதர் சொல்கிறார். “இவன் நல்லவன்டா…!” இவனுக்குப் பிள்ளை இல்லை. செய்வினை செய்து இவனை அறியாமல் இவனிடம் கையெழுத்து வாங்கி இவன் சொத்தையெல்லாம் வாங்கிக் கொண்டார்கள்.

இவன் முருகா பக்தன். இப்பொழுது ரோட்டில் சுற்றிக் கொண்டிருக்கின்றான். பிச்சை எடுத்து இவ்வளவு அவஸ்தையும் படுகிறான். இந்த முருகன் இவனைப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றான் என்று இப்படிச் சொல்கிறார் குருநாதர்.

முருகனின் பக்தனாக இருந்தான். கையெழுத்து வாங்கி கொண்டு போய்விட்டார்கள். சொத்தை இழந்து விட்டான். செய்வினை செய்த ஆவி இவனுக்குள் இருக்கின்றது. அந்தத் திருடன் உள்ளுக்குள் இருந்து கொண்டு செயல்படாமல் இருக்கின்றான் என்று சொல்கிறார் குருநாதர்,

அனுபவரீதியில் நான் கண்டது.

இவனுக்குப் பிள்ளை இல்லை என்று சொத்தை எழுதி வாங்கியவர்கள் சுகமாக இருக்கிறார்கள். ஆனால் பின்னாடி தான் தெரியும். இப்பொழுது அவனுக்குத் தெரியாது.

இவன் வேதனைப்படுவதைப் பார்த்து அவன் எவ்வளவு ரசிக்கிறானோ அதற்குத்தக்க பின்னாடி அவன் பாம்பாகப் பிறப்பான்.

ஒவ்வொரு ஆகாரம் விழுங்கும் போதும் எப்படிப் பாம்பு (வாய் சிறிதாக இருப்பதால்) நரக வேதனைப் படுகின்றது. நரக வேதனைப்பட்டுத்தான் ஆகாரத்தை விழுங்குகின்றது.

அந்த நிலைக்குப் போவான்…! என்று இந்த நிலையை குருநாதர் உணர்த்திக் காட்டுகின்றார். இவனுடைய சொத்தை அபகரித்து அவன் ரசிக்கின்றான். வேதனையை ரசிக்கப்படும் பொழுது இது தான் வரும்.

இதே போல தன் குழந்தையைப் பாசமாக வளர்த்து அவன் இப்படிச் செய்கின்றானே… இப்படிச் செய்கின்றானே… என்று வேதனைப்பட்டால் இப்படித்தான் ஆகும்…! என்று உணர்த்துகின்றார்.

பாசத்தாலும் சரி… பிறர் வேதனைப்படுவதைப் பார்த்து ரசித்தாலும் சரி… ரெண்டும் ஒன்றாகின்றது. அந்த இடத்தில் இதை உணர்த்திக் காட்டுகின்றார்.

1.நாம் எடுக்கும் உணர்வின் தன்மை எதுவோ அதை நமது உயிர் இவ்வாறு தான் பிரம்மமாக்கி உடலாகச் சிருஷ்டித்து விடுகின்றது.
2.இதிலிருந்து நாம் எவ்வாறு மீளவேண்டும்…? என்று அவர் வழிவகுத்துக் காட்டுகின்றார்.

அப்போது தான் அவனிடம் சொல்கின்றார். நீ நல்லவன்…! என்று சொல்லிவிட்டு அவன் கையில் நூறு ரூபாயைக் கொடுத்தார். நீ உன் ஊருக்குப் போ என்று சொல்லிவிட்டு இதைத் தருகிறேன். (என்னமோ கையில் கொடுத்தார்)

1.உன்னைக் கண்டால் அவனெல்லாம் ஒரு வழி ஆகிவிடுவான்.
2.உன்னிடம் எவன் ஏவினானோ
3.அந்த ஏவலின் உணர்வு அவனுக்கே போகும்.
4.நீ போ… உன் சொத்து நிலம் எல்லாமே கிடைக்கும் போ…! என்று சொல்லி அனுப்பினார்.

நடந்த நிகழ்ச்சி இது.

குருநாதர் சொல்கிறார்… என்னால் முடியவில்லையே…! என்ற நிலைக்கு நீங்கள் வரக்கூடாது

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நாம் சுவாசிக்கும் உணர்வுகள் வினையாக (அணுக்களாக) உடலிலே எப்படிச் சேர்கின்றது…? வினைக்கு நாயகனாக நம் செயலை எல்லாம் எப்படி மாற்றுகின்றது…? என்று இந்த உணர்வின் எண்ணங்களை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் விளக்க உரைகளைக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

ஆனால் இதை எல்லாம் கேட்டுவிட்டு
1.சாமி (ஞானகுரு) பிரமாதமாகச் சொல்லி விட்டார் என்ற எண்ணத்தில் வெறுமனே சென்று விடாதீர்கள்
2.ஒவ்வொன்றிலும் நீங்கள் அந்தத் தெளிவுக்கு வர வேண்டும்.

உபதேசத்தை எல்லாம் கேட்ட பின் “சாமி சொன்னார்…” நாம் இந்தத் தவறை எல்லாம் செய்யக் கூடாது என்று நினைப்பீர்கள். பிற்பாடு என்ன சொல்வீர்கள்…?

கடலில் பெருங்காயத்தைக் கொண்டு போய்க் கரைத்தால் சிறிது நேரம் கம…கம… என்று வாசனையாக இருக்கும். கடலுக்குள் பெருங்காயம் மறைந்தபின்… “ஐய்யய்யோ… வாசனையையே காணோம்…” என்று தான் சொல்ல முடியும்.

அதைப் போல இங்கே இந்த உபதேசத்தின் வாயிலாக
1.அந்த அருள் ஞானிகள் பெற்ற ஆற்றல்களை ஊழ்வினை என்று வித்தாக உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கிறேன்.
2.அந்த ஞானியின் உணர்வுகள் உங்களுக்குள் இயங்கக் கூடிய அனைத்தையும் திரும்பிப் பார்க்கச் செய்கிறது.
3.உங்கள் நிலைகளையும் அது என்ன…? என்று உணர்கிறீர்கள்.

ஆனாலும் சிறிது நேரம் சென்றபின் கடலுக்குள் இருக்கும் உப்பின் தன்மை பெருங்காயத்தின் நறுமணத்தை மறைத்து விடுவது போன்று ஆகிவிடுகிறது.

ஏன்…?

உங்கள் வாழ்க்கையில் இதற்கு முந்தி எடுத்துக் கொண்ட விருப்பு வெறுப்பு வேதனை ஆத்திரம் என்ற அந்தக் கைப்பின் (உப்பு) தன்மைகள் அதிகமாகி உண்மையின் நிலைகளைப் புரிந்து கொள்ளாத வண்ணம் அதைத் தடைப்படுத்தும் உணர்வுகளாக வந்துவிடுகிறது.

1.பின்… “சாமி சொல்கிறார்… என்னால் முடியவில்லையே…….!” என்ற இந்த நிலைதான் வரும்.
2.அதை எப்படியும் முடிய வைக்க வேண்டும் என்று நான் உபதேச வாயிலாக வலுப்படுத்துகிறேன்.

ஆனாலும் அதை நீங்கள் வலுப்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக என்ன சொல்வீர்கள்…?

1.சாமி…! எத்தனையோ நல்லதை எல்லாம் நீங்கள் சொன்னீர்கள்… கேட்டேன்.
2.நான் திருந்தி விடலாம் என்று நினைத்தேன்…
3.ஆனால் “என்னை விட மாட்டேன் என்கிறதே…!” என்று பெரும்பகுதியானோர் சொல்கின்றார்கள்.
4.செய்ய முடியவில்லையே… செய்ய முடியவில்லையே…! என்று தான் சொல்கிறார்கள்.

செய்ய முடியவில்லை என்று சொல்வதன் காரணம் என்ன…?

கடலில் கலக்கிய பெருங்காயம் போன்றுதான் நீங்கள் எண்ணும் உணர்வுகள் அமைந்து விடுகிறது.

அதாவது நமக்கு ஏதாவது வந்தால் உடனே கோவிலுக்குச் சென்று சாமிக்கு அபிஷேகம் ஆராதனை செய்ய வேண்டும். அதிலே மீறி விட்டால் ஜோசியரிடம் சென்று கேட்க வேண்டும். அவர்கள் விவரத்தைச் சொல்வார்கள். தப்பித்துக் கொண்டு வந்துவிடலாம்.

முருகனுக்கோ அல்லது மற்ற தெய்வங்களின் ஆலயத்திற்கோ சென்று சாந்தி செய்து விடு…! என்றும் அங்கே போ… இங்கே போ…! எல்லாம் சரியாகிவிடும்…! என்று சொல்வார்கள்.

உங்களுக்குப் பகைமைகள் நிறைய இருக்கின்றது. அது தீரவேண்டும் என்றால் மாரியம்மன் கோவிலுக்குச் சென்று இரண்டு மண்ணை வாரித் தூற்றிவிட்டு வந்து விட்டால் சரியாகிவிடும் என்று இப்படித்தான் ஆலோசனை சொல்கிறார்கள்.

ஆகையினால் நாம் எல்லோரும் என்ன செய்கிறோம்…? என்றால் சாமியார் செய்து தருவார்… சாமி செய்யும்.. ஜாதகம் செய்யும்… மந்திரம் செய்யும்… யாகம் செய்யும்…! என்று இப்படித்தான் சுற்றிக் கொண்டிருக்கின்றோமே தவிர
1.மனிதனான பின் தனக்குள் நாம் எண்ணியதைச் செயலாக்கும் சக்தி
2.”நம் உயிர் தான்…!” என்பதை மறந்தே இருக்கின்றோம்.

கோபத்தையும் வெறுப்பையும் வேதனையையும் மட்டும் அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோம். நல்லதை மட்டும் எண்ணவே முடியவில்லை…!

காரணம்… ஒரு விஷம் கொண்ட பொருளுக்குள் நல்ல பொருளைப் போட்டால் அந்த நல்ல பொருளும் ஒடுங்கிவிடுகின்றது.

விஷம் கொண்ட உலகமாக இருக்கும் பொழுது விஷம் கொண்ட இயக்கமாக இருக்கும் பொழுது இன்றைய மனிதனின் வாழ்க்கையில் அந்த உணர்வின் செயலாக்கமே நம் நல்ல உணர்வை அறியவிடாது தடைப்படுத்துகின்றது.

நல்ல உணர்வுகளை அறிய வேண்டும் என்றால் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் யாம் கூறும் உபாயத்தைக் கடைப்பிடித்து
1.மகரிஷிகளின் அருள் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்துக் கொண்டால்
2.உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.
3.அடுத்து உங்களைப் பிறவியில்லா நிலையை நிச்சயம் அடைய முடியும்.
4.இந்த விஞ்ஞான உலகின் பேரழிவிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள இது உதவும்.
5.உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

துன்பங்கள் வந்தாலே அது ஆண்டவனின் சோதனையா…? – ஈஸ்வரபட்டர்

இன்று மனித ஆத்மாக்களின் பெருக்கத்தில் உள்ள இந்தப் பூமியின் எண்ண உணர்வு
1.செயற்கையின் சுழற்சியில் சிக்காமலும்
2.விஞ்ஞானத்தை நம்பி வாழும் உரு நிலை பெறாமலும் இருந்திருந்தால்
4.வளர்ந்துள்ள ஜீவ வளர்ச்சியின் சொல் செயல் ஞானம் கொண்ட வழித் தொடரினால்
5.நம் அனைவரது ஞானமும் உயரும் நிலை பெற்றிருந்திருக்கும்.

அப்படிப் பெற்றிருந்தது என்றால்… இந்தப் பூமி பெற்ற உன்னத உயர்ந்த சக்தியே “மிகவும் உன்னத சக்தியாக…” இன்னும் பல கோடி கோடி ஆண்டுகளுக்குச் சொல்லாற்றலும் செயலாற்றலும் கொண்ட மனிதர்களை வளர்த்து… மிக உயர்ந்த குணச் சக்தியின் ஆனந்த அன்பு கொண்ட… இனிமை வாழ்க்கையை வாழக்கூடிய தன்மையாகப் பெற்றிருக்கும்.

ஆனால் இன்றைய வாழ்க்கை முறை இன்னலின் பிடிப்பில் இறுக்கம் கொண்டு மனிதனை மனிதனே அழித்திடும் தன்மைக்கு வந்து விட்டான்,

அழித்து என்பதன் பொருள்…
1.இல்லற வாழ்க்கையில் கூடி மனிதப் பிறப்புக்களுக்கு வரும் சிசுக்களை
2.சிசுவைக் கருவுக்கே வரவிடாமல்
3.பல காலமாகச் சேமித்த சக்தி நிலையையே கருவில் வந்து மறைக்கப்பட்ட தன்மையிலேயே
4.இந்த மனிதனே அந்த மனிதக் கருவை அழித்து (கருத்தடை)
5.அதனை ஞானம் வளர விடாமல் இழி நிலையான சுழற்சியில் அமிழ்த்தி விடுகின்றான்.

மேலும்… தான் படும் வாழ்க்கைச் சுழற்சியில்…
1.இன்பங்கள் தனக்குச் சொந்தமானதாகவும்
2.துன்பங்கள் ஆண்டவனின் சோதனையாகவும் தான்
3.எண்ணத்தில் கொண்டு வாழுகின்றர்கள் இன்றைய மனிதர்கள்.

இப்படிப்பட்ட வாழும் ஓட்ட நிலையினால்… எண்ணத்தில் ஏக்கமுடனும்… பேராசை எதிர் நிலையிலும் தான்… மக்களை வழி நடத்திச் செல்லும் “மத வழி போதனைகளும்… அரசியல் சுழற்சிகளும்…” சுழன்று கொண்டுள்ளன.

ஆனால் தன் ஆத்ம ஞானத்தைக் கொண்டு உலகையே சிருஷ்டிக்க வல்ல “ஆதி முதலாம்… விநாயக சக்தி கொண்ட…” சொல் செயல் ஞானம் கொண்டவர்கள் தான் மனித ஆத்மாக்கள்.

பூமியில் இந்தச் சரீர வாழ்க்கையிலிருந்தே தன் ஆத்ம ஞானத்தை வளர்க்கும் தகுதி கொண்டவர்கள் தான்…!

எப்படி ஆண் பெண் வாழ்க்கை இணைப்புச் சேர்க்கையில் கருவாகி சரீரம் பெற்று வாழ்க்கை வழித் தொடருக்கு வந்தோமோ அதே தொடரில் ஆண் பெண் என்ற இரண்டு ஆத்மாக்களும்
1.தன் ஞான சக்தியினால் சித்து நிலை பெற்று ஒளி நிலைத் தன்மையுடன்
2.உடல் இயக்க உறவு நிலையில் கரு தோன்றி வளர்வதைப் போல்
3.ஆத்ம இணைப்பில் ஒளி வட்டத்தின் ஆத்மச் சேர்க்கையிலிருந்து பிறக்கும் ஒளி நிலையைக் கொண்டு
4.ஞான வட்டமாக அவ்வலைத் தொடரை எந்த மண்டலத்திற்கு அனுப்புகின்றோமோ
5.அந்த மண்டலத்தில் எல்லாம் ஜீவச் சிசுவை வளர்க்கவும்…
6.ஜீவ சக்தியை வளர்க்கவல்ல வழி முறை ஆத்ம சக்தியை…
7.”ஆத்மச் சேர்க்கையைக் கொண்டு” செயல்படுத்த முடியும்…!

இதைத் தான் அன்றைய இராமாயணக் காலத்தில் இராமாயணத்தை எழுதிய வான்மீகி மகரிஷியால் சூட்சமத்தால் லவ குசா என்ற குழந்தைகளின் படைப்பு நிலையை மறைக்கப்பட்ட நிலையில் உணர்த்தப்பட்டது.

அதே போல் காந்தர்வன் என்றும்… கன்னி என்றும்… கன்னி நீரில் வாழும் பொழுது மேகக் கூட்டத்தில் இருந்து விந்துகள் தோன்றி கன்னி கருத்தரித்து ஞானத் தெய்வக் குழந்தை பிறந்தது என்றும் அன்றைய சித்தர்களால் காட்டப்பட்டது.

கார்த்திகைப் பெண்கள் தான் முருகனை வளர்த்தனர் என்ற கதையில் சொல்லப்பட்ட உண்மைதனை…
1ஒவ்வொரு மனிதனும் ஞானம் கொண்டு அதிலுள்ள சூட்சமத்தை உணர்ந்தீர்கள் என்றால்
2.சிவ சக்தி கருத்தரிக்கவில்லை… சிவன் உருவாக்கிய குழந்தை முருகன் என்று
3.மறைக்கப்பட்ட பல உண்மைகளை எல்லாம் அறியலாம்… உணரலாம்.

என்றோ நடந்தவை அவை…! அவற்றின் சக்தி தான் இன்று நாம் வாழ்வது என்ற எண்ணம் தான் உலாவிக் கொண்டுள்ளதேயன்றி இன்று நடப்பவையும் அத்தன்மை தான் என்று அறிய வேண்டும்.

ஏனென்றால் ஜீவக் கரு எத்தனை கோடி ஆண்டுகள் எந்த மண்டலத்தில் வளர்ந்து வாழ்ந்தாலும்… இங்கே உணர்த்திய இத்தொடரின் உண்மை போன்று தான்
1.ஜீவ சக்தியின் ஆண் பெண் ஆத்ம சக்தியால் தான்
2.ஜீவ ஆத்மாவில் பெறப்படும் சித்துத் தன்மையும் ரிஷித் தன்மையும் கொண்ட
3.ரிஷிபத்தினி… ரிஷித் தன்மையைக் கொண்டு தான் உருவாகும் ஜீவனுக்கே ஜீவ வித்து விருட்சகம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

குடும்பத்தில் நீங்கள் அனைவருமே ஒற்றுமையாக இருக்க வேண்டும். பெண்களுக்கு அதிகமான சக்தி இருக்கிறது என்பதை நீங்கள் மறந்திட வேண்டாம்.

பெண்கள் சாபமிட்டால்
1.அந்தச் சாப அலைகள் பிறரைத் தாக்கும்.
2.சாப அலைகள் வரும் போது தீமைகளை உருவாக்கும் உடலாகத்தான் மாறும்.
3.தீமை செய்யும் பூச்சியும் புழுவாகத் தான் நம்மை மாற்றி விடும்.

பெண்பாலுக்கு அதிகமான சக்தி இருக்கிறது என்றால் குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழ வேண்டும். உணர்வின் தன்மை ஒன்றான செயலில் வளர வேண்டும் என்று இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால் அதன் வழி வாழும்.

உதாரணமாகக் குடும்பத்தில் கஷ்டம் என்று வந்து விட்டால்
1.கணவனுக்கு இப்படிக் “கஷ்டம் வந்து விட்டதே…” என்று மனைவி வேதனையுடன் எண்ணினால்
2.மீண்டும் கணவனுக்கு அந்தத் தொல்லைகள் தாக்கும்.
3.கணவன் தொல்லைகளிலிருந்து மீள வேண்டும்
4.அருள் ஒளி பெற வேண்டும்,
5.அவர் தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் என்று மனைவியின் உணர்வுகள் வலுப் பெற்றால்
6.அதை மாற்றியமைத்துத் தொல்லைகள் மாறி கணவனுக்கு உறுதுணையாக இருக்கும்.

இதைப் போன்ற நிலைகள் பெண்கள் நாளை வரும் உலகத்தை உயர்வாக்கச் செய்யும் நிலையாக வளர வேண்டும்.

ஏனென்றால் முதலில் ஆதி சக்தியாக இருந்தது விஷம் தான். அது தாக்குதலால் ஏற்படும் நிலைகளில் தான் அதிகமாகி… விஷத்தின் தன்மை அழுத்தம் அதிகமாகும் போது… வெப்பமாகின்றது.

வெப்பமான பின் தான் அணுக்களாகப் பிரிந்து ஓடும் தன்மை வரும். ஓடும் நிலைகளில் தான் காந்தமாகிறது. இநத மூன்று விளைவிற்கும் தான் காரணப் பெயர் வைக்கிறார்கள் ஞானிகள்.

முதலில் பெண்பால் தான் உருவாகிறது.
1.ஆதிசக்தி என்பது விஷம்.
2.ஆதிபராசக்தி என்பது இரண்டாவது வெப்பம்
3.வெப்பமான பின் ஈர்க்கும் தன்மை வரும்போது ஆதிலட்சுமி என்பது காந்தம்.

(பெண் பால் என்ற நிலையில்) காந்தம் இழுத்து ஒரு பொருளை உருவாக்கும் தன்மை வரும்போது தான் பிரம்மம். ஒரு உருவின் தன்மை ஆண்பால் என்ற நிலை வருகிறது. ஆக பெண்பால் என்ற உணர்வுகள் அதனுடன் சேர்க்கப்படும் பொழுதுதான் ஒரு உருவத்தின் அமைப்பே வருகிறது.

முதலில்
1.அணுவின் தன்மையும் துடிப்பின் தன்மையும் தான் இருக்கும்
2.ஒரு உணர்வின் தன்மை மோதலாகி அந்த உணர்வின் சத்தைத் தன்னுள் எடுத்தால் அணுத்தன்மை என்ற நிலையை அடையும்.
3.அப்பொழுது ஆண்பால் என்ற நிலை வருகிறது.

எதன் உணர்வைப் பெற்றதோ காந்தம் வெப்பம் விஷம் என்ற மூன்று உணர்வும் நுகர்ந்து கொண்ட உணர்வினை இயக்கி ஒரு இயக்கச் சக்தியாக மாற்றுகிறது.

இதைப் போன்ற நிலைகளில் பெண்பால் தான்… சக்தி தான் சிவமாகின்றது. சிவத்துக்குள் சக்தியாக இருக்கின்றது.

நாம் எவ்வளவு பெரிய உடலாக இருந்தாலும் வேதனையின் உணர்வுகள் அதிகமாகி விட்டால் அந்தச் சக்தி வேதனையின் உணர்ச்சி கொண்டு நம்மை அழிவின் பாதைக்கு அழைத்துச் செல்லும்.

உருவாக்க வேண்டும் என்ற உணர்வினை அந்தப் பெண்பாலின் சக்தியைக் கூட்டினால் அந்த உயர்ந்த உணர்வினை வளர்க்கும் சக்தியைப் பெறுகின்றோம்.

இன்று பெண்கள் திருமணமாகும் போது
1.வரதட்சணை வரவில்லை என்றால்
2.பெண்பால் என்று உணராதபடி அவர்கள் ஒவ்வொருவரும் வரும் மருமகளைச் செல்வத்திற்காக அவமதிப்பதும்
3.செல்வம் கிடைக்கவில்லை என்றால் தூஷிப்பதும்
4.இதைப்போன்ற நிலைகளில் செல்வத்திற்கு அடிமையாகி
5.அருள் உணர்வை இழந்து ஒவ்வொரு குடும்பத்திலும் பகைமை உணர்வுதான் வளர்ந்து கொண்டு உள்ளது.

நல்ல குணங்கள் இருந்தால்… நல்ல பண்புகள் இருந்தால்… செல்வம் இல்லை என்றாலும்
1.அந்த அருள் செல்வத்தை வைத்து நாம் வேண்டும் செல்வத்தைப் பெற்றுக் கொள்ளும் நிலை வருகிறது.
2.செல்வத்தின் அழியாத் தன்மையும் செல்வத்தில் மகிழ்ந்து வாழும் நிலையையும் கூட்டும்.

கல்யாணம் ஆகும்போது வரதட்சணையாக ஒரு லட்சம் கொடுத்தாயா..? இரண்டு லட்சம் கொடுத்தாயா..? உன் அப்பன் வீட்டிலிருந்து “கார் வாங்கி வா…” என்பது எல்லாமே விலை பேசி வாங்கும் தன்மை தான்.

பெண்கள் இதைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பெண்களை எந்த அளவிற்கு அடிமைகளாக அறிவிலிகளாக வைத்துள்ளது இந்தச் சமுதாயம். இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுதல் வேண்டும்.

நல்ல குணங்கள் இருந்தால் ஒன்றுபட்டு வாழும் போது செல்வம் எவ்வளவு வேண்டுமானாலும் கூடி வருகிறது.

செல்வத்தை வாங்கி வைத்து அடுத்து அந்தச் செல்வத்தின் மீது ஆசைப்படும் போது உங்கள் அப்பன் வீட்டிலிருந்து என்ன வாங்கி வந்துவிட்டாய்…? என்று இதே பெண்கள் தான் பேசுகின்றனர். பெண்களைப் பெண்களே அவமதிக்கின்றனர்.

இந்த உணர்வின் தன்மை வரப்படும் போது
1.அதனால் வரக்கூடிய பகைமை
2.இந்தச் செல்வத்தையும் பாதுகாக்க முடியவில்லை.
3.நாம் தேடிக் கொண்டிருக்கும் செல்வத்தையும் இடைமறித்து வேதனை என்ற உணர்வுகள் வருகின்றது.

வேதனைகள் வந்த பின் தன்னை அறியாமலேயே உடலிலே கடும் விஷத் தன்மையான நோய்கள் வருகின்றன என்பதையும் மறந்து விடுகின்றார்கள்.

ஆக உடல் நலம் பெற்று உணர்வுகள் வளம் பெற்றால் அந்த வலுப் பெற்றால்
1.செல்வத்தை நீங்கள் தேடிச் செல்ல வேண்டியதில்லை
2.செல்வம் தானாக வந்து சேரும்.

தீமைகளை அகற்றும் நிலைகளை அடைய எனக்குக் குருநாதர் இந்த உண்மையை உணர்த்தினார். அனுபவபூர்வமாக அறியச் செய்தார்

1.சக்தி என்ற நிலைகளாகி உணர்வின் தன்மை அதிகமாகி
2.இந்தச் சூரியனை உருவாக்கியதும் இதே சக்தி தான்
3.அது தான் “இலட்சுமி நாராயணா” என்பது பெண்பால்தான் – சூரியனை வளர்க்கிறது.

பெண்பால் என்று வளர்ந்தாலும் ஸ்ரீதேவி பூதேவி என்று உணர்வின் தன்மை இந்த உடலாக உருவாக்கியதும் இந்தப் பெண்பால் தான் என்ற நிலைகளை நீங்கள் மறந்திடலாகாது.

நீங்கள் வேதனை என்றோ வெறுப்பு என்றோ பகைமை என்றோ உணர்வுகளை எடுத்தால் அந்த உணர்வுகள் அதிகமாகத்தான் வளரும்.

நன்மை என்ற உணர்வு நம்மிலும் வளராது, நம் குடும்பத்திலும் வளராது, நமக்குள்ளும் அது வளராது. பகைமை உணர்வு தான் பூமியிலும் ஊரிலும் பரவும்.

குரு காட்டிய அருள் வழியில்… நீங்கள் தாய்மார்கள் உயர்ந்த சக்தி பெற்றவர்கள் வேதனைப்படுதல் கூடாது. வெறுப்படையும் செயல்கள் கூடாது.

1.அருள் ஒளி பெற வேண்டும்
2.நம் வீட்டில் இருள் அகல வேண்டும்
3.மெய்ப் பொருள் காணவேண்டும்
4.அருள் வழியில் நம் குடும்பம் வளர வேண்டும் என்ற உணர்வினை நீங்கள் பெற வேண்டும்.
5.உங்கள் சக்தி அங்கே செயல்படும்.

சிறு குறைகளைக் கண்டாலும் மனம் தாங்காது பெண்பால் அந்த உணர்வின் தன்மை வேதனைப்படும் போது அந்தக் குடும்பமே எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகிவிடும்.

அதிகமான பாசமும் பற்றும் இருக்கும். ஆனால் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் வேதனை என்ற உணர்வு வந்துவிடுகின்றது. இதைப் போன்ற உணர்வுகள் குடும்பத்திலே வளரப்படும்போது நஞ்சான நிலைகளுக்கு மாற்றிடும்.

நம் குரு காட்டிய அருள் வழியில் ஒவ்வொரு தாய்மார்களும்
1.உங்களுக்குண்டான சக்தியைச் சீராக்குங்கள்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்.
3.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும்
4.என் கணவர் உடல் முழுவதும் பரவ வேண்டும் அவர் அருள் ஞானம் பெற வேண்டும்
5.எங்கள் குடும்பத்தில் அருள் ஒளி படர்ந்து இருளை அகற்றிடும் அருள் ஞானக் குடும்பமாக வளர வேண்டும்
6.கருவுற்றிருந்தால் கருவிலிருக்கும் குழந்தைக்கும் அருள் உணர்வுகள் பெற வேண்டும் என்று ஊட்டுங்கள்.

இந்த உலகையே இருளிலிருந்து மீட்டிடும் சக்தி உங்களுக்குத் தான் உண்டு. நீங்கள் அருள் ஞானத்தைப் பெற வேண்டும். என் கணவர் உயர வேண்டுமென்றால் உயர்த்திக் கொள்ளும் நிலைகள் அங்கே உண்டு.

ஒரு செடியானாலும்… பெண்பால் என்ற உணர்வு – தான் கவர்ந்து கொண்ட நிலைகள் தான் அதனின் வித்தினை உருவாக்குகிறது.

பெண்கள் எந்த உயர்ந்த குணத்தை எடுக்கிறார்களோ அது அவர்களுக்குள் வளர்கிறது. கணவன்பாலும் அது வளர்க்கச் செய்கிறது.

அன்பு கலந்த உணர்வைத்தான் வளர்க்க வேண்டுமே தவிர பண்பிழந்த நிலைகளை அல்ல. அதேபோல ஆண்களும் பெண்களை மதித்து நடத்தல் வேண்டும்.

அது உயர்ந்த நிலை. பெண் தாய்க்குச் சமம். நாம் சொல்லும் உணர்வினை அது தன் கருவாக உருவாக்குகிறது. நம்மைப் பார்க்கும் போது நல்லவரென்றால் நல்லது என்று உருவாகிறது. நல்லது என்று சொல்லே இங்கே வருகின்றது.

வேதனை என்ற உணர்வுகளை அங்கே வளர்க்கப்படும் போது மனதிற்கும் அந்த நிலை வரும். வெறுப்பின் உணர்வு வரும் போது அதை மாற்றி அமைத்திடும் சக்திகளை நாம் மாற்றிட வேண்டும்.

ஆண்கள் ஒவ்வொருவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் தன் மனைவி பெற்று அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று தன் மனைவிக்கு இந்த உணர்வைப் பாய்ச்சுதல் வேண்டும்.

பெண்கள் எப்பொழுதுமே ஈர்க்கும் தன்மை – கவரும் சக்தி பெற்றவர்கள்.

ஒரு வேதனை என்ற உணர்வை நுகர்ந்து விட்டால் அவர்கள் அறியாமலே அந்த உணர்வுகள் அவர்களுக்குள் சென்று அவர்கள் சிந்திக்கும் தன்மை இழந்து விடுகிறது. அவ்வாறு நாம் ஆக்கிவிடக் கூடாது.

இரவிலே “மகரிஷிகள் உலகில் சஞ்சரித்து…” ஆனந்தமயமாக… பேரானந்தமாக… நாம் தூங்க முடியும்…!

விழித்த நிலையில் புற உலகை மட்டும் தான் பார்க்கின்றோம்.
1.அதனால் காலையிலிருந்து இரவு கண்களை மூடும் வரை பலவிதமான உணர்வுகளும் எண்ணங்களும் மோதிக் கொண்டு
2.நம்மைப் பல வகைகளிலும் அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றது.
3.அதில் சில மோதல்கள் நம்மை ரொம்பவும் பாதிக்கவே செய்கின்றது.

ஆனாலும் அதைச் சமப்படுத்த எந்த அளவிற்கு நாம் முயற்சிக்கின்றோம்….! என்பது கேள்விக்குறி தான்,

பெரும்பகுதி அதற்குத் தீர்வு காணாமல் வேறு வேலைகளையே செய்து கொண்டிருப்போம். ஆனால் எல்லாம் முடிந்து தூங்கப் போகும் சமயம் பாதித்த அத்தனையும் நினைவுக்கு வந்து நம்மைத் தூங்கவே விடாது.

அதற்கு மீறித் தூங்கினாலும் நிம்மதியான தூக்கமாகவும் இருக்காது. காலையில் எழும் போது மறுபடியும் அந்த எண்ணம் வரும். உடலும் ஆரோக்கியமாக இருக்காது.

எழும் பொழுதே ஒருவிதமான எரிச்சலுடனே தான் ஆரம்பிப்போம். இதை எப்படி மாற்றுவது…?

படுக்கப் போகும் முன் அவசியம் ஒரு 10 நிமிடமாவது ஞானிகளைப் பற்றிய உபதேசக் கருத்துக்களைப் படித்துப் பதிய வைக்க வேண்டும்.

1.கண்களை மூடியவுடன் நினைவு முழுவதும் வானை நோக்கி இருக்க வேண்டும்…. அந்த மகரிஷிகளின் பால் இருக்க வேண்டும்.
2.அதாவது புற உலகை மறந்து விட்டுக் கண்களை மூடிய நிலையில்
3.மகரிஷிகள் வாழும் சப்தரிஷி மண்டலத்திற்குள் நம் நினைவு செல்ல வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள எல்லா அணுக்களும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதையே திரும்பத் திரும்ப எண்ணி ஏங்கி இருக்க வேண்டும்.

ஒரு ஐந்து நிமிடமோ அல்லது பத்து நிமிடமோ பூமியின் வடக்குத் திசையில் இவ்வாறு எண்ணிக் கொண்டிருந்தால் போதும். சப்தரிஷி மண்டலங்களுடன் தொடர்பு ஏற்படும்.

அந்த மகரிஷிகளின் தொடர்பு அலையும் நம் ஈர்ப்புக்கு வரும். அப்படியே ஒவ்வொரு மகரிஷியாக எண்ணலாம். ஒவ்வொருவரையும் எண்ணி அவர்கள் பெற்ற விண்ணின் ஆற்றலைப் பெற வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தால் போதும்.

சிறிது நாள் பழகிவிட்டால் போதும்.
1.அப்புறம் கண்களை மூடித் தூங்க ஆரம்பித்தாலே நம் நினைவுகள் விண்ணுலகம் செல்லும். மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.
2.காலையில் எழும் பொழுதும் மிகுந்த உற்சாகம் இருக்கும்.
3.அன்றைய நாள் வரும் சிக்கல்களை எப்படியெல்லாம் நீக்கித் தெளிவாக வழி நடத்த வேண்டும் என்ற சிந்தனைகள் படிப்படியாக வரும்.
4.மகரிஷிகள் இருக்கும் இடத்திற்குள் நாம் சஞ்சரித்த உணர்வுகள் தோன்றும்.
5.அந்தப் பழக்கம் அப்புறம் எல்லா நேரத்திலும் சப்தரிஷி மண்டலத்துடன் சஞ்சரிக்க முடியும்.

தூங்கப் போகும் முன் மகரிஷிகளுடன் நம் நினைவுகள் ஒன்றினால் அது நிஜமான தொடர்பை ஏற்படுத்தும்.

ஆதி சக்தியின் இயக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் – ஈஸ்வரபட்டர்

பால்வெளி மண்டலத்தில் படர்ந்துள்ள பல கோடி அமில குணங்கள்… அதனதன் சுழற்சி ஓட்டத்தில் அங்கங்கு உள்ள படர்ந்த அமில குணங்களுக்கொப்ப… ஒன்றுடன் ஒன்று உராய்ந்து… தன் தன் இன வளர்ச்சிக்கொப்ப வளர்ந்த மண்டலமாக உருவாகின்றது.

அப்படி உருவான மண்டலங்கள்… கோள்கள்… நட்சத்திரங்கள்… சூரியன்கள்… அதனதன் ஈர்ப்புச் சுழற்சியில் சுழன்று கொண்டே வளர்ந்து கொண்டே… வழி கொள்ளும் வளர் முறைக்கு வருகின்றது.

இந்தப் பூமியில் மணல் உண்டு.. நீர் உண்டு… சுண்ணாம்பும் உண்டு… இப்படி மரம் மண் இவை யாவையும் இருந்தாலும்… அவை எல்லாற்றையும் நாம் எடுத்து நமக்கு வேண்டிய பக்குவச் செயலுக்காக வீடுகளாகக் கட்டிப் பாதுகாப்பு இடமாகத் தேடி அமைத்து வாழ்கின்றோம்.

1.எப்படி வீட்டை அமைக்கப் பல பொருள்களை எடுத்துப் பக்குவப்படுத்திக் கட்டி வாழுகின்றோமோ அதைப் போன்று
2.பால்வெளியில் நிறைந்துள்ள அமிலச் சுழற்சியில்
3.தன்னிச்சையில் வளர்ந்து கொண்டே மாறிக் கொண்டே சுழலும் வழித் தொடரிலிருந்து
4.அமிலச் சுழற்சியின் உயர்வு நிலை சக்தி கொண்ட ஆத்ம நிலை கொண்டு… எண்ணத்தின் ஞானம் கொண்டு…
5.உயர்ந்த ரிஷிக் கோடிகளின் அமைப்பு நிலை உருவகங்கள் தான்
6.ஆதி சக்தியின் வழி வந்த மகரிஷிகளின் வழி மண்டல அமைப்பின்
7.ஜீவ ஆத்ம ஞான சக்தியின் ஜீவ வளர்ச்சி வருகின்றது.

அது அது எடுத்து வளர்ந்த நிலைக்கொப்ப… வளர்ச்சியின் உயர்ந்த தன்மை கூடும் நிலை வழி பெற…
1.மனித ஞான உயர்வினால் மட்டும் தான்
2.உயர்வின் உருவகத்தையே உருவாக்கும் தன்மை உருப்பெறும் என்பதனை உணர்த்தியுள்ளேன்…
3.உண்மையின் உன்னத சக்தியினை உணர்த்தினால்… உருவாக்கினால்…
4.ஒவ்வொருவரும் உருவாக்கிடலாம் உலக சிருஷ்டியையே…!

இந்தப் பூமிக்கு “மனிதக் கரு வர” ஆண் பெண் என்ற இரண்டு ரிஷித் தன்மை கொண்ட ஆத்ம சுழற்சி பூமியான இந்தப் பூமியின் சிவ சக்தி என்ற ஆத்மக் கரு எங்கிருந்து வந்தது…?

இந்தப் பூமியில் மட்டுமல்ல…
1.நம்மைக் காட்டிலும் உயர்ந்த ஞான சக்தி கொண்ட மனித ஆத்மாக்கள்
2.நம் சூரியக் குடும்பமல்லா மண்டலங்களில் ஜீவிக்கின்றார்கள்.

ஞானச் சித்து கொண்டு அவர்கள் நம் பூமியுடனும்… மற்ற எல்லா பூமித் தொடருடனும் தொடர்பு கொண்டுள்ள நிலையில் செயல் கொண்டுள்ளனர்.

அவர்களின் கூட்டுச் செயல் தான் ஆதி சக்தியின் இயக்கமே…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் பைத்தியக்காரராகத்தான் இருந்தார்.

அவரை மாதிரி நான் இருந்தால் உங்களுக்கு வித்தியாசமாகப் போய்விடும் என்பதற்காகத்தான் நான் வெள்ளைச் சட்டை போட்டுக் கொள்வது.

வெள்ளை என்பது தூய்மை. ஒரு நல்ல துணியைப் போட்டுப் பார்த்தோம் என்றால் மனது கொஞ்சம் தூய்மையாக இருக்கும்.

கலர் சட்டையைப் போட்டவர்களை நீங்கள் பாருங்கள். அவர் எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும் முதலில் போரடிக்கும்.

ஒரு தூய்மையான துணியைப் போட்டிருப்பவர்களைப் பாருங்கள் கொஞ்சம் ஒரு தெளிவாக வரும். ஆகையினால் கலர் சட்டை என்றால் அது அந்த நிலை வராது.

இரண்டு நாளைக்கு அழுக்கு வேஷ்டியைக் கட்டிக் கொண்டு போனால் “இந்தச் சாமியார் எப்படி…? என்பார்கள். சில நேரங்களில் நான் பனியனும் வேஷ்டியும் போட்டுக் கொண்டு இருப்பேன்.

வேலை செய்யும்போது அழுக்குத் துணியாகத் தெரியும்போது என்னிடம் வந்து சாமி இருக்கிறார்களா…? அவரைப் பார்க்க வேண்டும்…! என்று சிலர் வந்து என்னிடமே கேட்கிறார்கள்.

போய் உட்காருங்கள். வருவார் பார்க்கலாம்..! என்று சொல்வேன்.

அப்புறம் யாம் இங்கிருந்து வந்தவுடனே “இவர் தானா… சாமி….! என்று எண்ணுகிறார்கள். நான் வேஷம் போடவில்லையே.

இவர் தானா சாமி…! என்று சொல்லிவிட்டு அந்த நேரத்தில் நல்ல கேள்வியைக் கேட்காமல் விட்டு விட்டு போய்விடுவார்கள்.

ஆசிர்வாதம் மட்டும் கொடுங்கள். நான் வருகிறேன்…! என்று சொல்லிவிட்டுப் போய் விடுவார். அவர்கள் எண்ணம் அப்படிப்பட்டதாக இருக்கின்றது.

இந்த மாதிரிச் சமுதாயத்தில் ஒவ்வொன்றும் நன்மை பெறும் சந்தர்ப்பங்கள் இருந்தாலும் அதைப் பெற முடியாத நிலையாக இருக்கின்றது.

(அதனால் தான்) குருநாதர் சொல்கிறார். என்னைப் பைத்தியக்காரன் என்று சொன்னார்கள், உனக்குச் சக்தி கொடுக்கிறேன்…! என்றார் குருநாதர்.

நல்ல கடைக்குக் கூட்டிக் கொண்டுபோய் உயர் தரமான பேண்ட் (PANT) எடுத்து நீ தைத்துக் கொள்ளடா…! என்று சொல்கிறார். துணி எடுத்து நீ நல்ல சூட்டும் கோட்டும் போட்டுப் போடா…! என்று சொல்கிறார்.

அப்பொழுது தான் உன்னை மதிப்பார்கள் என்று சொன்னார். உனக்கு நிறையச் சக்தி கொடுக்கிறேன்டா…! என்று சொன்னார்.

இது எதிலே கொண்டு போய்த் தள்ளப் பார்க்கிறார்…! என்று எண்ணினேன். அவர் சொல்லில் ஒவ்வொன்றிலும் பயம் இருக்கும்.

அப்பொழுது நான் சொன்னேன். நீங்கள் கட்டுகின்ற வேஷ்டி இருந்தால எனக்குப் போதும் சாமி. நான் இந்தச் சூட்டும் கோட்டும் போடுவதற்குண்டான தகுதி என் படிப்பில் இல்லை.

படித்திருந்தால் இங்லீஷில் நீங்கள் சொல்கின்ற மாதிரி வரலாம். நீங்கள் அத்தனையோ பாஷைகள் பேசுகின்றீர்கள். எனக்கு ஏது இத்தனை பாஷை…? அதனால் நான் “வேண்டாம் சாமி…” என்றேன்.

அவர் சிரித்துக் கொண்டார்.

ஏனென்றால் சில பவர்களைச் (சக்தி வாய்ந்த) செய்யப்படும்போது “ஷோக்…” (பந்தா) பண்ண வேண்டும் என்ற இந்த ஆசை வரும் என்று சொல்கிறார்.

நீ ஒரு வேளை அந்த ஷோக் பண்ணுவதற்கு “ஆசைப்படுகின்றாயோ… என்னமோ…” என்று அதுதான்டா கேட்டேன்…! என்று இவ்வாறு சொல்கிறார். அப்படியும் கேட்கிறார் குருநாதர்.

இந்த மாதிரி நம் குருநாதருடைய இயல்புகள் ஒவ்வொரு மனிதனுடைய இயக்கங்கள் எப்படி இயக்குகின்றது…? என்று தெளிவாக எனக்கு உணர்த்தினார். அதனால் தான் யாம் உங்களை அணுகி வர முடிகின்றது.

1.நீங்கள் தவறு செய்யவில்லை.
2.சந்தர்ப்பங்கள் உங்களை எப்படி இயக்குகின்றது..?
3.அதிலே நீங்கள் நல்ல சந்தர்ப்பத்தை எப்படி உருவாக்கிக் கொள்ள வேண்டும்…? என்ற நிலைக்குத்தான் சொல்கிறோம்.

எனக்குக் குருநாதர் கொடுத்த அந்த உணர்வை அந்தச் சந்தர்ப்பத்தை நீங்கள் சிந்தித்து எடுக்கக்கூடிய ஆற்றல்களைத்தான் உங்களைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றேன்.

அந்தச் சிந்தித்துச் செயல்படும் தன்மை உங்களுக்குள் வர வேண்டும். அதனால் தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் பெறும்படிச் செய்கிறோம்.

நொடிக்கு நொடி… நொடிக்கு நொடி… ஒவ்வொரு வித்தியாசமான நிலைகள் வருகின்றது, அதையெல்லாம் நீங்கள் மாற்றியமைத்து இந்த வாழ்க்கைப் பயணத்தை இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.

வைகுண்ட ஏகாதசி அன்று குரு எந்த வழியில் பெற்றார்களோ அந்த உணர்வின் ஈர்ப்பு மணங்களை உங்களுக்குள் கொண்டு வருகின்றோம். அவர் பெற்ற நிலையை எல்லோரும் பெறவேண்டும் என்ற ஆசை உணர்வைத் தூண்டச் செய்வதற்குத்தான் வருடம் வருடம் “குரு பூஜையே” வைப்பது.

குரு இப்படி எல்லாம் செய்தார்…! என்று அவரைப் பெருமைப்படுத்துவதற்கு அல்ல. குரு காட்டிய அருள் வழியில் நாம் சென்றால் நாமும் மகிழலாம்,

இந்த உலகம் இயக்கப்படும் போது நமக்குச் சொந்தமாக்க வேண்டியது ஒன்றே ஒன்று. நாம் இந்த மனித உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடையலாம்.

நமது மூச்சலைகள் மற்றவர்களைச் சிந்திக்கச் செய்யும் தன்மையும் தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வுகள் வர வேண்டும் என்று தான் இதை உபதேசிக்கின்றேன்.

நமது குருநாதர் அவர் பைத்தியக்காரராக இருந்தார். அவர் இந்த உடலுக்கு இச்சைப்படவில்லை.

அது தான்
1.ஒவ்வொரு உயிருக்கும் டெலிஃபோன் கம்பியை அடித்து
2.அவர்களுக்கு ஞானத்தை கொடு…
3.நல் வழியைக் கொடு… என்று சொன்னேன்,

அதற்காக வேண்டித்தான் டெலிஃபோன் அடித்தேன் என்பார்.

1.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் சொன்னால் எனக்கு நல்லதாகின்றது.
2.நீங்கள் உயர வேண்டும் என்று சொன்னால் (என் உயிர்) எனக்கு நல்லதைச் செய்வான்.

அதற்குத் தான் இப்படிச் சொன்னேன் என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சொல்கிறார்.

இப்படி சூட்சம நிலையில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் விளக்கம் கொடுத்துக் கொண்டு வந்தார். அதைத்தான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

வைரம் வைடூரியங்கள் எல்லாம் எப்படி உருவாகிறது…?

நம் பிரபஞ்சத்தில் உள்ள இருபத்தேழு நட்சத்திரத்தின் உணர்வுகள் பூமிக்குள் பட்டுப் பாறைகளாக ஆகும் போது எதிர்நிலையான மறைகள் ஆகி இதற்குள் கார்த்திகை நட்சத்திரத்தின் நிலைகள் அதிகமாக இணையுமேயானால் அது மற்றதை அடக்குகிறது.

மற்ற நட்சத்திரத்தின் கலர்கள் எதுவானாலும்…
1.கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வுகள் அதனுடன் இணைக்கப்படும்போது
2.பூமேதகம் மேதகம் வைரம் வைடூரியம் என்று மண்ணுக்குள் உருவாகிறது.

இதைப்போல மற்ற நட்சத்திரங்களின் எதிர்ப்பு நிலை வரப்படும்போது இந்த உணர்வின் தன்மை மூன்றும் மோதி தாவர இனச் சத்தாகக் கருவாகிப் பூமிக்குள் வருகிறது.

அதாவது பூமிக்குள் வரும்போது எதிர்நிலையான நிலைகளானால் கார்த்திகை நட்சத்திரத்தையும் ரேவதி நட்சத்திரத்தையும் மற்ற எதிர்க்கும் நிலையான மற்ற நட்சத்திரத்தினுடைய நிலைகள் ஆகும்போது மூன்றும் மும்முனையாக இயக்குகிறது.

காரணம்… எதுவுமே மூன்று மண்டலமாகத்தான் இயக்கும். வெப்பம் காந்தம் விஷம் இது மூன்றும்
1.வெப்பம் உருவாக்கும் சக்தியாகவும்
2.காந்தம் தனக்குள் அணைத்துக் கொள்ளும் ஆற்றலாகவும்
3.விஷம் மற்ற உணர்வின் தன்மையைத் துடிக்கச் செய்யும் விசையாகவும் இயக்குவது போல
4.நட்சத்திரத்தின் இயக்கம் தன் உணர்வின் ஆற்றல் கொண்டு மூன்று மண்டலங்களாக இப்படி இயக்குகின்றது.

முதலிலே இது வெறும் கல் பாறைகளாக ஆனாலும் பாறைக்குள் இது மோதும் நிலைகள் கொண்டு உணர்வின் ஈர்ப்பு கிளரும் பொழுது தனக்குள் ஈர்க்கும் இந்தக் கருவின் மோதலுக்குள் மண்ணிலே மறைந்து அது கருவாக உருவாகிறது.

1.பின் இதற்குள் வடித்துக் கொண்டு வைரத்தின் நிலைகள் ஆகி
2.இதனுடைய வீரியத்தன்மை ஆனபின் வெடித்துவிட்டு முழுமை அடைந்தபின் இறக்கும் தன்மையாக வெளி வருகின்றது.
3.அதைத் தான் வைரங்களாக நாம் பார்க்கின்றோம்.

ஆக நட்சத்திரங்களின் விஷத்தன்மையான உணர்வுகள் இரண்டறக் கலந்து அது எவ்வாறு வைரங்களாக ஆனது…? என்ற நிலையைக் காட்டினார் குருநாதர்.

நட்சத்திரங்களின் மோதலையும் வான மண்டலத்தின் இயக்கங்களையும் அது எடுத்துக் கொண்ட நிலைகள் விண்ணுலகிலிருந்து பூமிக்குள் வரப்படும்போது
1.மற்ற பாறைகளின் தன்மைகளுக்குள் இது நுகர்ந்து கொண்ட நிலைகளும்
2.மண்ணுக்குள் மறைந்தாலும் இந்த உணர்வின் ஈர்ப்பால் அந்த மண்களிள் மாற்றம் ஆவதும்
3.அதற்கடுத்த நிலைகளில் இந்த மண்ணின் தன்மைகள் மாறுவதும்
4.அதற்குண்டான நிலைகளை ஈர்ப்பதும்… ஈர்த்த நிலைகள் கல்லாவதும்
5.அதற்குள் எதிர்ப்பு உணர்வுகள் கொண்டு தன் இனத்தை வளர்த்து அது வைரமாகி எப்படி வெடிக்கின்றது…? என்ற நிலையும்
6.அந்த உணர்வின் வளர்ச்சியின் ஈர்ப்பும் காந்தப் புலனறிவின் ஆற்றல் எவ்வாறு…? என்ற நிலைகளையும் நேரடியாகக் காட்டினார் குருநாதர்.

ஏனென்றால்
1.வித்திலிருந்து செடியா… செடியிலிருந்து வித்தா…?
2.வைரம் எதிலிருந்து வருகின்றது…? வைரத்தின் ஆற்றல் எது…? என்ற நிலைகளைக் கண்டுணர்வதற்குத்தான்
3.ஒவ்வொரு பகுதிகளிலும் சென்று பார்க்கும்படி செய்தார்.

அந்தந்தப் பகுதியில் சேர்த்துக் கொண்ட உணர்வுகள்
1.தாவர இனச்சத்துக்குள் வரும்போது பாறைக்குள்ளும் அந்த நார் இந்த நார் என்று
2.பல பல சத்தின் தன்மையை அது எடுத்து தனக்குள் இந்த சத்து அதிகமாகி வெப்பத்தின் தன்மை வரும்போது
3.”கல் நார்…” என்ற நிலைகள் அது குமிழ்ந்து வெளி வருவதையும்
4.அதை எடுத்து மருந்தாகப் பயன்படுத்துவோரும் வைத்தியத்தில் உண்டு.

இயற்கையின் செயலாக்கங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான் இதை உணர்த்துகின்றேன் (ஞானகுரு).

தியானத்தில் பெற்ற அனுபவம் – ஈஸ்வரபட்டர்

ஈஸ்வரபட்டர்:-
“ஆத்மாவின் இயக்கம் தான்… சரீரச் செயல் வழித் தொடர்…!” என்பதனை நான் போதனை நிலையில் உணர்த்தியதற்கு ஒப்ப ஆத்ம வளர்ச்சியால் தியானத்தில் கண்ட உண்மைகளை நீங்கள் வெளிப்படுத்துங்கள்.

அன்பரின் அனுபவம்:-
கண்களை மூடித் தியானத்தில் அமர்ந்ததும் உபதேசம் செய்யும் ஞானகுருவை நினைத்தேன். ஞானகுரு கையை உயர்த்தி என்னை ஆசீர்வதித்தார். ஞானகுருவின் உள்ளங்கையிலிருந்து குருதேவரின் முகம் மட்டும் என்னை நோக்கி வருவதாக உணர்ந்தேன்.

வந்த முகம் பிறகு முழு உருவமாகவும் கையில் ஒரு தடியுடனும் அவரைச் சுற்றி ஆட்டுக் கூட்டம் இருப்பது போலவும் தெரிகின்றது. பிறகு வெண்மையான முகிலைப் போன்று படர்ந்த ஒளியாகத் தெரிந்தது.

இன்னொரு அன்பரின் அனுபவம்:-
உடல் முழுவதையும் சுற்றி ஓர் ஒலி சுழல்வதைப் போலவும்… செவியில் “உய்…ய்ய்ய்…” என்ற ஒலி நாதம் கேட்டது.

உடல் முழுவதுமே அந்த ஒலியுடன் ஒளியும் சேர்த்து இயக்கக்கூடிய இழுப்பு நிலை போன்று… உடலே ஜிவ்…வ்வ்.. என்று மேல் நோக்கி உச்சந்தலையிலிருந்து இழுப்பதைப் போன்று “ஆனந்தமான நிலை” ஏற்பட்டது.

உடலோ மற்ற உணர்வுகளோ எதுவுமே தெரியாத நிலையில் நான் இருப்பது தெரிகின்றது. ஆனால் உடலின் எண்ண ஓட்டங்கள் இயங்குவது தெரிகின்றது. உடல் கனமோ உடலுக்குகந்த மற்ற உறுப்புகளின் நிலையோ மறந்து “எண்ணம் மட்டும்” ஓடுவது தெரிந்தது.

1.பிறகு ஒரு மிளகைப் போன்ற அளவில்
2.மிகவும் பிரகாசமான நீல நிற ஒளி
3.நெற்றியின் புருவத்திற்கு இடையில் (ஆத்ம ஜோதி) தெரிந்தது.

பின் மஞ்சள் நிறமான பெரிய சூரியனைப் போன்று ஒளி தெரிகின்றது. அந்த ஒளி சுழன்று ஓடுகின்றது. அப்படிச் சுழலும் பொழுது அதிலிருந்து வானவில்லில் காணும் ஒளியைக் காட்டிலும் மிக மிகப் பிரகாசமாகச் சில ஒளிகளும் அந்த ஒளிகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து அதிலிருந்து பல ஒளிகளும் தெரிந்தது.

வான மண்டலம் மஞ்சள் நிறமான பிரகாசமான ஒளி நிலைக்கு அது சுழன்று ஓடும் ஓட்டத்துடன் செல்வதைப் போன்றும் சில இடங்களில் உஷ்ணமாகவும் குளிராகவும் நெருப்பும் மற்றும் விவரிக்க முடியாத பஞ்சைப் போன்று தெரிந்தது…!

மேலும்… அதை எப்படிச் சொல்வது என்றே புரியாத நிலையில்
1.வெண்மை முகிலுமல்லாமல் கனத்த தன்மையும் இல்லாமல் சொல்லால் உணர்த்த முடியாத சிலவும்
2.இதே தொடரில் அவ் ஒளி வட்டத்துடனே செல்லப்படும் பொழுது
3.மனித உருவத்தைப் போன்றும் ஆனால் உருவமல்லா ஒளியைப் போன்றும்
4.பிரகாசத் தன்மையுடன் வரிசையாக உள்ளனர்….
5.ஒருவர் முதுகில் மட்டும் ஏதோ ஒரு மிருகம் உள்ளதைப் போன்று தெரிகின்றது.

அவர்களை எல்லாம் பார்த்தவுடன் “ஆசீர்வாதம்…” வாங்கும் எண்ணம் வந்தது. உங்கள் உயர்வைப் போன்று… நானும் உயர வேண்டும்…! என்று வணங்கச் செல்லும் பொழுது அவர்கள் என்னைத் தடுத்து நிறுத்தினார்கள்.

ஜீவ சரீர பிம்ப வாழ்க்கையில்…
1.உங்களை ஒத்தவர்கள் பெறும் ஞானத்தைக் கொண்டு தான் எங்கள் வளர்ச்சி நிலையே உள்ளது
2.உங்களைக் கொண்டு தான் எங்கள் உயர்வே
3.நீ அவரிடம் ஆசி பெறு…! என்று ஓர் இடத்தைச் சுட்டிக் காட்டுகின்றார்கள்.
4.அவ்விடம் ஒன்றுமே இல்லா பால்வெளி வான மண்டலத்தைப் போல் கண்ணுக்கு எட்டியவரை எதுவுமே இல்லாமல் தெரிகிறது.

பிறகு முகிலைப் போன்று படர்ந்த திட்டுத் திட்டாகத் தெரிகின்றது. வார்த்தையிலும் இது வரைக்கும் கண்ணிலும் கண்டிராத ஒளிகள் மிக மிகப் பிரகாசமாகப் பல வண்ணத்தில் நாட்டியமாடுவதைப் போன்று மிகவும் துரிதமாகச் சுழன்று “ஓர் உயர்ந்த முப்பது நாற்பது அடி உயரத்திற்குப் பெண்ணின் உருவம் போன்று… ஒளியிலேயே… ஆனதைப் போன்று…” தெரிகின்றது.

ஊன்றிப் பார்க்கும் பொழுது ஆணின் உருவமாகவும் பெண்ணின் உருவமாகவும் மாறி மாறித் தெரிந்தது. பின் சாதாரணப் பெண்ணை ஒத்த உருவமாக ஒளி வண்ணங்களாகத் தெரிந்தது.

ஆசீர்வாதம் வாங்கும் நோக்கத்தில் காலில் விழுந்து வணங்கியவுடன்
1.என் செயலை வளர்ப்பாயா..? என்ற குரல் கேட்டது…!
2.அங்கே ஞானகுருவும் ஈஸ்வரபட்டரும் நிற்பதும் தெரிகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இன்று உலக நாடுகள் சில பகுதிகளில் குரங்கின் சத்தை நாம் சாப்பிட்டால் உடலுக்குச் சத்து என்று சாப்பிடுகின்றார்கள்.

ஒரு இடுக்கி மாதிரிக் குரங்கின் கழுத்தில் கொண்டு வந்து மாட்டி வைத்து விடுவது. அதை மாட்டி வைத்து என்ன செய்கிறார்கள்…?

மேல் ஓட்டை அப்படியே தட்டி விடுவது. அதில் இரண்டு மிளகாய்த் தூள் இதெல்லாம் போட்டு உறிஞ்சிச் சாப்பிட்டால் அது மனிதனுக்குச் சத்து என்ற நிலைகள் இப்படியும் உண்டு.

சில பகுதிகளில் போதை மருந்து சாப்பிட்டாலும் அதனால் தனக்குள் போதை ஏறவில்லை என்றால் அதற்காக வேண்டி நாகனை (பாம்பை) வைத்துள்ளார்கள்.

அதைச் சில கடைகளில் வைத்து இந்த போதை பத்தாததற்கும் தனக்கு அந்தப் போதையின் சத்தைச் சேர்ப்பதற்காகவும் மனிதன் அந்த மண்ணின் சத்துக்கும் இந்த உணர்வின் சத்து இது பழக்கப்பட்டதனால் இதனின் உணர்வின் துணை கொண்டு அந்தப் பாம்பைச் சீறச் செய்து நாக்கில் கொத்த வைக்கிறது.

அது கொத்தியவுடனே இவர்களுக்குப் போதை ஏற்படும். அதற்கு இருநூறு ரூபாய்… முன்னூறு ரூபாய் என்று ரேட்.

நாகன்களிலேயே பல விதமான நாகன் உண்டு. அதற்குத் தகுந்த காசு உண்டு. இவைகளெல்லாம் மனிதன் விஞ்ஞான அறிவால் தன் உடலின் சுகத்திற்கு இத்தனை நிலைகளையும் செய்கின்றான்.

சில இடங்களிலெல்லாம் பார்த்தோம் என்றால் இன்றைக்கு மறைமுகமாக சுவையாக இருக்கிறது என்று மனிதனுடைய பிரேதங்களையே உணவாக உட்கொள்கிறார்கள்.

நோயில்லாது பிரேதம் வந்தால் அல்லது ஆக்சிடென்ட் ஆகியவர்களைப் புதைத்தால் புதை குழியில் உள்ளே வைப்பதற்குப் பதில் அங்கே உள்ளவர்களிடம் காசைக் கொடுத்து ஆளுக்கொரு பகுதி என்ற நிலைகள் வாங்கிக் கொள்கிறார்கள்.

பின் அந்தத் தசைகளை முழுவதும் சீவி எடுத்து புதை குழியில் எலும்பைப் போட்டு மூடி வைத்து விட்டுவிடுகின்றார்கள். அந்தத் தசைகள் எல்லாம் இன்றைக்கு ஹோட்டல்களில் நாகரீகமானதாகச் சாப்பாட்டுக்கும் போய்க் கொண்டு இருக்கிறது.

இன்று அமெரிக்காவில் விஞ்ஞான அறிவு வளர்ந்திருந்துள்ளது என்றாலும் அசுர உணர்வுகள் கொண்டு அவன் நர மாமிசமாக உணவாக உட்கொண்டுள்ளார்கள்.

ரோட்டில் நடந்து சென்றால் போதும். அலுங்காமல்… “வாருங்கள் என் வீட்டிற்குப் போகலாம்…” என்று நண்பரைப் போல் பழகுகின்றான். வீட்டுக்குள் போனவுடன் “டக்…” என்று ஆளைக் கத்தரித்து விடுகிறான். உறுப்புகள் எல்லாம் ஐஸ் பெட்டிக்குள் போய் விடுகிறது.

எலும்பெல்லாம் தூக்கிப் புதைத்துவிடுகின்றான். ஐஸ் பெட்டியிலிருந்து எடுத்து அதைச் சாப்பாடாகச் சாப்பிட்டுக் கொள்கிறான். (தினசரி பத்திரிக்கை படிப்பவர்களுக்கு இது தெரியும் – பார்க்கலாம் ஃப்ரிட்ஜைத் திறந்தால் மனித உறுப்புகள் இருந்தது. மேலை நாடுகளில் இப்படி நடக்கிறது என்று)

இப்படியும் நடக்கின்றது. (சாமிகள் இதை உபதேசித்த வருடம் 1993)

அதை போல இன்றைக்குக் குழந்தைகள் காணாமல் போனதென்றால் இங்கிருந்து வியாபாரத்திற்கு ஆகின்றது. மனிதனின் கண்கள் நல்ல பேரத்திற்குப் (பணம்) போகின்றது.

இன்றைக்கு சாதாரணமாக ஒரு வீட்டில் கொள்ளையடிப்பதைக் காட்டிலும் ஒரு பையனைக் கடத்திக் கொண்டு போய்விடுகிறார்கள்.

கண்களை எடுப்பதற்கு அதற்கென்று ஒரு டாக்டர் இருக்கிறார். அந்த டாக்டர் தான் கற்றுக் கொண்ட நிலைகளில் எல்லாம் தெரிந்து கொள்கிறான். கண்களை எப்படி நோண்டி எடுப்பது…? இதை ஐஸ் பெட்டியில் எப்படி வைப்பது…?

அடுத்து இதை எடுத்துக் கொண்டு போய் விற்று விட்டால் இதற்கு நிறையப் பணம் கிடைக்கிறது. அதில் வரக்கூடிய இரத்தத்தைத் தனியாகப் பிடித்துச் சேமித்து அதை விற்றால் அதற்கும் பணம் கிடைக்கிறது.

அதே சமயத்தில் கிட்னியைப் பக்குவப்படுத்தி சரியான நேரத்தில் எடுத்துக் கொள்கிறார்கள். அதையும் விற்றுக் காசாக்குகின்றார்கள்.

இது கூடப் பரவாயில்லை. மண்டையைப் பிளந்து அவர் மூளையை எடுத்து அதனுடைய நிலைகள் திரவமாக்கிக் கொள்கிறார்கள். ஒரு செத்துப் போகக்கூடிய கிழவன் இருந்தால் உடனே அவனுக்கு இந்தத் திரவத்தை ஏற்றிவிட்டால் அவன் வாலிபனாகின்றான்.

இன்றைக்கு ஹாஸ்பிட்டலில் காணாமல் போகின்ற குழந்தை எல்லாம் இப்படித்தான் நடக்கின்றது. ஏனென்றால் விஞ்ஞான அறிவில் நாம் எல்லாம் அந்த அளவிற்குத் தான் இருக்கின்றோம்.

உயிர் என்ற தாயால் உருவாக்கப்பட்ட பிள்ளை தான் நாம்

நாம் எந்தெந்த எண்ணங்களை எடுக்கிறோமோ அந்த எண்ணமே நமக்குள் தாயாக இருக்கின்றது.

தாயாக இருக்கும் உயிர் தனக்குள் (உடலுக்குள்) வளர்த்திட்ட உணர்வின் அணுக்கள் அனைத்தையும் “காத்திட வேண்டும்…” என்ற உணர்வை தூண்டித் தூண்டி அதனின் நிலைகள் கொண்டு தான் ஒவ்வொரு உடலையும் காத்து… அதாவது தன் குழந்தையை காத்திடும் நிலையாக நம்மை வளர்த்தது உயிர் தான். உயிரால் வளர்க்கப்பட்ட பிள்ளை தான் நாம்.

தீமையில் இருந்து தன் குழந்தையைக் காத்துக் கொள்ள தாய் படும் அவஸ்தைகளை நாம் பார்க்கின்றோம்.
1.நம்மைக் காத்திட தாய் தந்தையர்கள் கடந்த காலத்தில் ஞானிகளை எண்ணி ஏங்கினார்கள்.
2.இப்போதுள்ள நமது தாய்மார்கள் தெய்வத்தை எண்ணித் தான் ஏங்குகின்றார்கள்.

இன்றைய மனித வாழ்க்கையில் எந்தெந்த ஆசைகளைக் கூட்டுகின்றோமோ… தெய்வங்களை எண்ணி இந்தத் தெய்வம் என்னைக் காக்கும்…! என்ற நிலையும் மனித உடலில் உருவான இந்த ஆசையின் நிலைகள் கொண்டே எண்ணும் பொழுது மனித உடலின் செயலுக்கே நாம் வந்து விடுகின்றோம்.

ஆகவே நமக்குள் தாயாக ஆக்க வேண்டிய முறை எது…? என்று தெரிந்து கொள்ள வேண்டும். அந்த அருள் ஞானியிகள் தன் உயிருடன் ஒன்றிய ஒளியின் தன்மையை அடைந்தார்கள்.

1.உயிர் ஒளியான அந்த உணர்வின் தன்மையை அதை நாம் தாயாக எண்ணி
2.அந்த தாயின் அணைப்பிலேயே நம் உணர்வின் தன்மை ஒளியாக மாற வேண்டும் என்று
3.அதை தாயாகக் கருதி அந்தத் தாயின் அணைப்பிலேயே ஒளி நிலை பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

நம் குழந்தைகளை எப்படிக் காக்கின்றோமோ… நம்முடன் அரவணைப்பாக இருக்கும் குழந்தைகளுக்கு நாம் பரிவுடன் எப்படிச் செயல்படுத்துகின்றோமோ… பரிவற்ற குழந்தைகளை நாம் எப்படி ஒதுக்குகின்றோமோ அதைப் போலத் தான்
1.உயிருடன் ஒன்றி பரிவு காட்டும் அந்த உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு
2.அனைத்தையும் ஒளியாக மாற்றும் உணர்வினைப் பெற்று
3.தாயின் (உயிர்) அணைப்பின் உணர்வுகள் கொண்டு நமக்குள் தெளிந்து பின் தெளிவான உணர்வுளாக அது விளையும்.

நம் உயிரைத் தாயைப் போலவும்… கடவுளாகவும்… நம்மை ஆளும் ஆண்டவனாகவும் எண்ணி… எந்தக் குறைபாடுகள் வந்தாலும் அது நமக்குள் உட்புகாது தடுக்க வேண்டும்.

எதை வைத்து…?

முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக இருக்கும் நம் ஆறாவது அறிவின் தன்மையைப் பயன்படுத்திப் பிரம்மாவைச் சிறைபிடித்தான் என்ற நிலைகள் நமக்குள் உருவாக்கிக் கொடுத்த
1.தாயான நம் உயிரின் துணை கொண்டு
2.மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற மெய் ஞானிகள்
4. ஒளியின் சரீரமாகி அவர்கள் வெளியிட்ட மூச்சலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வருவதை
5.அதை நாம் கவர்ந்து நமக்குள் வலுவாக்க வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் நமது வாழ்க்கையில் எத்தனையோ வேதனைப்படுகிறோம்… சலிப்புப்படுகிறோம்.. வேதனைப்படுவோரையும் பார்க்கின்றோம்.

வேதனைப்பட்டவரைப் பார்த்தாலும்… அதை அறிந்து கொள்ளும் நிலைகள் கொண்டு உயிரிலே பட்டு ஈசனுக்கு அந்தத் துன்பங்கள் வரும்போது தான் துன்ப்ப்படுகிறான் என்று அறிந்து கொள்கின்றோம்.

அந்தத் துன்பம் இல்லாத நிலைகள் பெற அந்த மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
1.நம் உயிரான நிலைகள் கொண்டு அந்தத் தாயை அந்த ஞானிகள் தன் உணர்வின் தன்மை கொண்டு
2.தன் உயிரைத் தாயாக மதித்து… அதையே குருவாக மதித்து… அதையே ஆண்டவனாக மதித்து
3.அந்த ஈசனுக்குத் தீங்கிழைக்கும் உணர்வினை நீக்கப் பழகுவோம்.

உயிருடன் ஒன்றி அவனின் அணைப்பிலேயே என்றும் நிலையாக இருக்கும் அந்த அருள் ஞானிகள் வெளியிட்ட தீங்கினை நீக்கும் உணர்வினை நாம் பருகுவோம்… அதைத் தனக்குள் வளர்ப்போம்,

ஆகவே
1.ஞானிகள் காட்டிய அருள் வழியில் உயிரைத் தாயாக மதித்து…
2.மெய் ஒளியைப் பெறுவேன்… மெய் வழியைப் பெறுவேன்…
3.என்னை அறியாது வந்த இருளை நீக்குவேன் என்று
4.ஆறாவது அறிவின் துணை கொண்டு உறுதியுடன் நாம் செயல்படுத்துவோம்.

ஆத்மாவின் வளர்ச்சிக்கு மகரிஷிகளின் ஞானப்பாலை ஊட்ட வேண்டும் – ஈஸ்வரபட்டர்

ஆத்மாவின் இயக்கம் தான் இச்சரீரக் கூடு…!

1.ஆத்மாவின் பதிவு நிலை கொண்டு
2.ஆத்மாவின் உந்துதலுக்குகந்த எண்ண மோதலினால் சரீர இயக்கம் உட்பட்டு
3.சரீரத்தின் செயலைக் கொண்டு ஆத்மா சத்தெடுத்து
4.ஆத்மா எண்ணத்தை உருவாக்கி…
5.சரீரத்தின் செயலால் தன் சத்தெடுக்கும் சுழற்சியில் சுழன்று வாழுகிறது…! என்று
6.முந்தைய பாடங்களில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.

அப்படிப்பட்ட எண்ணத்தின் உணர்வுக்கொப்ப… காற்றலையில் கலந்துள்ள சத்துத் தன்மையை உரமாகப் பெறும் சுழற்சி ஓட்டத்திலிருந்து… உண்மைச் சக்தியான உயிராத்மாவை… இக்கர்ம உடலை… உடலில் கர்ம எண்ணங்களிலேயே செலுத்தக்கூடிய வழி முறையை… எண்ணத்தின் பால்… மேல் நோக்கிய சுவாசமாக… இது வரை வழிப்படுத்திய வழி காட்டிய தன்மை கொண்டு…
1.நம் எண்ணத்தின் செயலைக் கொண்டு
2.நம் ஆத்மா ஞானப்பால் கொள்ளும் சுவையாக வளர்ப்படுத்துங்கள்.

புஷ்பங்கள் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் அப்புஷ்பத்திலேயே அணுவாக வளர்ந்து புழுவாகிப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகள் எந்த அமில முலாமின் அணுப் பெற்று ஜீவன் கொண்டு சத்தெடுத்து வளர்ந்ததோ அச்சத்தின் வண்ணக் கோர்வையை வண்ணத்துப் பூச்சியின் அழகு நிலை பெறுகின்றது. அதே போல் பூவில் பிறந்த வண்டு தேன் சுவையைப் பெறுகின்றது.

இவைகளைப் போன்று தான்
1.எச்சத்து நிலையில் எத்தன்மை வளர்ச்சி கொள்கின்றதோ அதன் வளர்ச்சி நிலைக்கொப்ப
2.எதில் எதில் எல்லாம் இவ்வெண்ண நிலை மோதி சத்தெடுக்கின்றோமோ
3.அதன் முலாம் வார்ப்பைத்தான் ஆத்மா பெறுகிறது என்பதை உணர்ந்து
4.ஆத்ம பலத்தின் உணர்வைக் கொண்டு அடைய முடியாப் பெரு நிலையை
5.இவ்வெண்ணத்தைச் செலுத்தும் உயர் ஞானத்தால் பெறலாம்.

இது நாள் வரை தெரிந்தோ தெரியாமலோ ஜெப வழியில் பல கோடி ஆத்மாக்கள் தனக்குத் தெரிந்த பாதை வழியில்… உயர்வைக் காண ஜெபம் கொண்டு செல்கின்றனர்.

அவர்களுக்கும்…
1.இந்தத் தியான மார்க்கத்தின் மூலம் இந்த ஞானத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பும்
2.மகரிஷிகளின் அருள் ஒளி வட்டத்தில் வாழும் தன்மைக்கும்
3.நாம் பெறும் போதனை ஞான வளர்ச்சியைக் கொண்டு
4.நம் ஈர்ப்பலையின் வட்டத்தில் ஆத்ம ஐக்கிய இயக்கத் தொடர்பு கொண்டு செயல் கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

பச்சைக் காய்கறிகளை “வேக வைக்காமலே நான் சாப்பிடுவேன்…!” என்று சிலர் சாப்பிடுவார்கள்.

அந்தப் “பச்சை காய்கறி ஒன்றை மட்டும்” தேடி அது விரும்பி்ச் சாப்பிட்டால் என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

காய்கறிக்குள் புழு இருக்கும். அந்தப் புழு அந்த உணர்வை மட்டும் எடுத்து உணவாக உட்கொண்டு வாழ்கிறது.

நாம் இந்த மனித வாழ்க்கையில் காய்களை வேக வைக்காமல் பச்சையாகச் சாப்பிட்டால்
1.நான் மிக வலுவாக இருப்பேன் என்று எண்ணுவார்கள்.
2.அந்த வலுவின் தன்மை இங்கே அதிகரிக்கும்.

மாடு அந்தக் காயை அதிகமாகச் சாப்பிட்டு இருந்தால் நாம் உடலை விட்டுச் சென்றபின் நம் உயிரான்மா அந்த “மாட்டின் ஈர்ப்புக்குள்” போகும்.

ஆனால் மாடு மற்ற உணர்வின் சத்து அதிகமாகப் போகும் போது அதன் நிலைக்குச் செல்லாது மற்ற உணர்வுகள் அதிகமாக இருக்கும்.

ஓர் புழு காய்கறியின் நிலைகளில் வீழ்ந்தாலும் அந்தப் புழு அதை உணவாக உட்கொண்டால் அதனின் வலுவே அதனின் உணர்வில் உண்டு.
முட்டைக்கோஸைப் பச்சைச் சாப்பிட்டு நான் நன்றாக இருப்பேன் என்று எண்ணினால் அந்த முட்டைக்கோஸில் உள்ள
1.புழுவின் ஈர்ப்புக்குள் போகும்.
2.புழுவாகப் பிறப்போம்… இது கூர்மை அவதாரம்.

இவைகளெல்லாம் தெளிவாக வியாசகரால் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அதாவது உபநிஷத்துக்களில்
1.தான் எடுத்துக் கொண்ட உணர்வின் இயக்கம்
2.உணர்வுகளின் மாற்றத்தினால் நாம் எவ்வாறு இருக்கிறோம்
3.அடுத்து எவ்வாறு ஆவோம்…? என்ற நிலைகளைக் காட்டியுள்ளார்.

மனிதனின் குணத்தின் நிலையும் மனிதன் வாழ்க்கையில் எண்ணும் நிலைகளையும் காட்டியுள்ளார் வியாசகர்.

காய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிட்டுப் பாருங்கள்.
1.எந்தக் காயைப் பச்சையாக உட்கொண்டீர்களோ
2.அந்த மணம் உங்கள் உடலிலிருந்து வெளிப்படுவதைக் காணலாம்.

ஆனால் தாவர இனத்தின் சத்துக்குள் இருக்கும் மணமே மனிதனுக்குள் வரும் போது அதுவே எண்ணமாகின்றது. அதன் குணத்தின் சிறப்பாக அது வேலை செய்யும்.

உதாரணமாக மிளகாயினுடைய குணம் காரம்.

அந்தக் காரத்தை நாம் உணவாக விரும்பிச் சாப்பிட்டால் நம் உடலில் நாக்கு எரிச்சல் கண் எரிச்சல் என்று இதைப் போன்ற நிலைகள் வருகின்றது.
1.அதே காரத்தின் உணர்வுகளை நாம் அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க
2.நம்மிடமிருந்து வெளிப்படும் சொல்லை மற்றவர்கள் கேட்கப்படும் போது
3.கேட்போருக்கு நம்மைப் பார்க்கும் போது எரிச்சல் வருகின்றது.

அந்தக் குணத்தின் தன்மை எதுவோ அந்த எண்ணம் தான் நமக்குள் வரும். அதைப்போல ஒருவர் எரிந்து பேசுவதும் எரிச்சலான செயல்களைச் செயல்படுத்துவதும் அந்தக் குணத்தின் தன்மையே இங்கு வரும்.

ஆகவே அந்தத் தாவர இனச் சத்தைக் காரத்தை அதிகமாகச் சாப்பிடுகிறேன் என்று வந்தால் கடைசியில் எங்கே செல்வோம்…?

அந்தக் காரத்தைக் கிளி சாப்பிடுகின்றது. மிளகாயைக் கிளி விரும்பி உட்கொள்ளும். மிளகாயை நாம் விரும்பி உட்கொண்டால் கிளி காரத்தைச் சாப்பிடும்போது அதனுடைய உடலுக்குள் தான் நம் உயிரான்மா செல்லும்.

அதே போல் எலி காரத்தைத் தாங்கும் அளவுக்கு மிளகாயைச் சாப்பிட்டு அதிகமாக இந்த நெடியைத் தாங்கும் நிலைக்கு வருகின்றது.

ஆனால் கார உணர்வின் சத்தை நாம் அதிகமாக எடுத்துக் கொண்டால் நாம் கை கால் இயங்காது வாதம் ஆகின்றது. மேலும் ரத்தக் கொதிப்பாக மாறி நம் உடலே குறுகுகின்றது.

எத்தகைய காரத்தின் தன்மையை நாம் அதிகமாக எடுத்துக் கொண்டமோ அது முன்னணியிலே வந்து விடுகிறது.

இதனை அறிவதற்குத்தான் கணங்களுக்கு அதிபதி கணபதி என்று பெயரை வைத்துள்ளார்கள் ஞானிகள்.

நம் உடலிலே ஆயிரக்கணக்கான குணங்கள் இருப்பினும் அதிலே
1.நாம் எந்தக் குணத்தை அதிகமாகச் சேர்க்கின்றமோ
2.அது கணங்களுக்கு அதிபதியாகி அதன் வழிகளிலே தான்
3.நம்முடைய சொல் செயல் பார்வை எல்லாமே இருக்கும்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

”பிறவா வரம்…” என்ற முத்தாகும் “ஒளி நிலை” பெறுவது தானப்பா உண்மையான உயர்வு நிலை – ஈஸ்வரபட்டர்

இயற்கையில் வளரும் தாவர இன வளர்ச்சியில் அதன் பலனின் தரவல்ல வித்துக்களும் மற்றைய கனிகளும் அதன் சுவை மணம் அழகு எல்லாமே அதற்கு உண்டு.

அது அல்லாமல் நாம் பயிர் செய்யும் தானியங்களில் அவை பலன் தரவல்ல காலங்களில் உதாரணமாக நெல் மணியில் அதன் சத்து நிலை தரவல்ல காலங்களில் பூத்து பின் நெல் மணிகள் அழகு பெற்று வளர்ந்து குலுங்குகின்றது.

அந்தந்தக் காலங்களில் இவைகளின் மணத்தைக் கொண்டு உணவைத் தேடி வரும் பட்சிகளின் ரோமத்தின் மிருதுத் தன்மையும் அவற்றின் வண்ண அழகுகளும் எத்தனையோ உள்ளது.

1.அது அது எடுத்து வளரத்தக்க அமில வார்ப்பின் வளர்ப்பின் வளர் நிலையில்
2.அதன் பலன் தரும் வளர்ச்சி அழகை இயற்கை என்ற நியதியுடன் கண்ணுற்றுப் பார்க்கும்
3.செயற்கையுடன் ஒன்றி வாழும் நாம் அது வளரும் உண்மையை அறியாமல்
4.ஆனந்த ரசிப்பில் இயற்கையாக எண்ணித்தான் அதனைக் காண்கின்றோம்.

ஆனால் ஒவ்வொரு வளர்ப்பிலுமே “அதன் பலன் ஒன்று…” வளரும் தன்மையில்தான் சகல சக்திகளும் வளர்கின்றன.

கடல் வழியில் பல கோடி வளர்ப்புகள் கடல் நீரில் சத்தெடுக்கின்றன. நீரின் நிலைகளில் ஆற்றுப்படுகைகளில் நீர் நிலை உருளும் தனமையிலேயே பல வளர்ச்சி நிலைகள் நிறைந்துள்ளன.

1.எல்லாவற்றிலும் மோதுண்டு மோதுண்டு பல வளர்ச்சியில் முலாம் கொண்ட உயிரணு
2.மோதுண்ட வளர்ச்சி நிலைக்கொப்ப ஆத்ம நிலை கொண்டு
3.சக்தி நிலை பெறவல்ல எண்ணச் செயல் பூண்டு
4.ஜீவ ஆத்மாவாகக் கரு தோன்றி கரு வளரும் அமில முலாமாக
5.எண்ணத்தின் ஞானத்தால் ஞானப்பாலின் சத்தெடுத்து
6.ஆத்ம முலாம் மனித வித்தின் ஜீவிதத்தில் வளர்ச்சியுறும் காலத் தன்மையில்
7.ஆத்மாவின் ஒளி நிலை பெறும் வளர் நிலை தான் மனித வித்தின் ஜீவ வளர்ச்சியின் அடுத்த நிலை.

மாமரம் மாங்கனிகளைத் தன்னுடைய சத்தாக வெளிப்படுத்துகின்றது. ஆனால் மனிதன் தன்னுடைய பிறப்பின் வளர்ச்சி என்பது… “தான் பெறும் மக்கள் செல்வம்தான்…” என்ற எண்ணத்திலேயே உள்ளான்.

ஆக…
1.தன் பெயர் சொல்லும் வாரிசு நிலையைத்தான் உயர்வு கண்டு வாழ்கின்றனரேயன்றி
2.தான் பெறவேண்டிய முதிர்வு நிலையைப் பற்றி எண்ணவில்லை.

அன்றைய போகமகரிஷிக்கும் கொங்கண தேவருக்கும் கோலமாமகரிஷிக்கும் கிடைத்த வாரிசு நிலை அவர்களின் நிலையுணர்ந்த ஞானவான்களுக்குத் தெரியும்.

1.பிறவியுடன் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் செல்வம் மட்டும் தான் செல்வம். என்று எண்ணாமல்
2.”பிறவா வரம்…” என்ற முத்தாகும் “ஒளி நிலை” பெறுவது தானப்பா உண்மையான உயர்வு நிலை….!

இன்றைய கால நிலையில் இத்தகைய ஆத்ம ஞானத்தால் பெறும் தியான வழி முறையையோ தன்னுள் உள்ள தெய்வச் செயலையோ அறிய விரும்புவோர் அரிதிலும் அரிதாகத்தான் உள்ளார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒரு சமயம் ஒரு கிராமத்துப் பக்கம் செல்கின்றேன். வெறும் ஒரு துண்டு வேஷ்டி கட்டிக் கொண்டு செல்கின்றேன்.

நான் யார் வீட்டிலேயும் சாப்பாடு வாங்கிச் சாப்பிடக் கூடாது…! என்று சொல்லிவிட்டார் குருநாதர்.

ஒரு டப்பாவில் அரிசி வைத்துக் கொள்ள வேண்டும். அப்புறம் ரெண்டு தீப்பெட்டி. கத்திரிக்காயை மோரில் போட்டு ஊற வைத்துக் காய வைத்துக் கொள்ள வேண்டும். மிளகாயை ஊறப் போட்டு காயப் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

அதில் உப்பெல்லாம் போட்டு வைத்த்துக் கொள்ள வேண்டும். உப்பைத் தனியாக எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.

அந்த டப்பாவில் கயிறைக் கட்டிக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். யார் வீட்டிலேயும் தண்ணீர் கூட வாங்கக் கூடாது என்றும் சொல்கிறார் குருநாதர்.

ரெண்டு விறகுக் கட்டையை செத்தையை எடுத்து வந்து நெருப்பை மூட்டி அந்த டப்பாவில் அரிசியைப் போட்டு வேக வைக்க வேண்டும்.

அந்தத் தண்ணீர் கொதிக்கும் பொழுது சிறிதளவு அரிசி போட்டால் போதும். அந்த அரிசி உப்பு எல்லாம் வெந்து வரும்போது நல்ல மணமாக இருக்கும்.

இதுதான் குருநாதர் எனக்குக் காட்டிய நிலைகள்.

பசி என்று உனக்கு வரப்படும்பொழுது நீ பிறரிடம் போய் நிற்கக்கூடாது. “நீ சமைத்து… அதை நீ ரசித்து… நீ உணவாக உட்கொள்” என்கிறார்.

இப்படி அனுபவத்தைக் கொடுக்கிறார்.

இப்படி வரப்படும் பொழுது ஒரு சமயம் ஒரு வீட்டுப் பக்கம் போகச் சொன்னார் குருநாதர்.

அது ஒரு சிறிய வீடு. வெளியில் ஒரு திண்ணை. அங்கே போய் “எம்மா…! என்று உட்காந்தேன். எனக்கு மிகவும் களைப்பு.

அடுத்து “குருதேவா…!” என்று சொல்லி உட்கார்ந்தேன்,

அவரை (குருநாதரை) நினைத்து என்னை இப்படியெல்லாம் சோதிக்கின்றாயே…! சம்சாரத்தைக் காப்பாற்றிக் கொடுத்தீர்கள். நான்கைந்து குழந்தை குட்டியும் இருக்கின்றது. என்னைப் பிச்சைக்காரனாக இப்படிச் சுற்ற விட்டுவிட்டாயே…! “இது உனக்கே நியாயமா…?” என்று கேட்டு (புலம்பி) அங்கே திண்ணையில் உட்கார்தேன்.

இந்தக் குரலைக் கேட்டவுடன் உள்ளே உட்கார்ந்திருக்கின்ற ஒரு அம்மா சப்தம் போட்டது.

முருகா…! நான் நன்றாக இருக்கும் பொது எல்லோரும் இருந்தார்களே. என் சொத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு போய்விட்டார்களே. என்னை ஒருவரும் பார்க்க வரவில்லை. கையெழுத்து வாங்குகிற வரையிலே “அம்மா… அப்பா… தாயே…” என்றெல்லாம் சொன்னார்கள். எல்லாம் எழுதி வாங்கிக் கொண்ட பிறகு இப்பொழுது ஒருவரும் வரவில்லையே….!

முருகா…!

“அன்றைக்கு என் மடி மீது உட்கார்ந்து ஆடுவாயே… பாடுவாயே… முருகா…!” என்று சொல்லி வருத்தப்படுகின்றது.

நான் இங்கே திண்ணையில் உட்கார்ந்து “என்னைக் கஷ்டப்படுத்துகின்றாயே… ஈஸ்வரா… குருதேவா…” என்று குருவை நினைத்துப் புலம்பினால் அங்கே அந்த அம்மா அப்படிச் சொல்லி வருத்தப்படுகின்றது.

இது நடந்த நிகழ்ச்சி.

உள்ளேயிருந்து அந்தக் குரல் வருகின்றது. நான் எவ்வளவு சொத்து வைத்திருந்தேன். எனக்குப் பிள்ளை இல்லையே. முருகா…! என்று உன்னைத் தானே பிள்ளையாக நினைத்தேன்.

நீ என் பிள்ளை மாதிரி என் மடிமேல் வந்து உட்காருவாயே. எல்லாவற்றையும் பார்த்தேனே. என் பிள்ளையாக உன்னை நினைத்தேனே. உன்னையே நான் வணங்கினேனே. உன்னையே தஞ்சம் என்று இருந்தேனே. என்னை இப்படிச் சோதிக்கின்றாயே.

நான் உன்னையே நம்பி இருந்தேன். சொத்தையெல்லாம் எழுதிக் கொடுத்துவிட்டேன்.

எல்லாவற்றையும் வாங்கிவிட்டார்கள். இப்பொழுது ஒருவரையும் காணோமே. நான் அனாதையாக இருக்கின்றேனே… முருகா…! என்று அந்த அம்மா புலம்புகின்றது.

நான் இங்கே “ஈஸ்வரா…” என்று சொல்லித் தவித்துக் கொண்டிருக்கிறேன். அங்கே அந்தச் சந்தர்ப்பத்தில் இப்படியெல்லாம் உணர்த்துகின்றார் குருநாதர்.

என் வாழ்க்கையில் கண்ட நிகழ்ச்சி இது.

நான் உள்ளே சென்றேன். அந்த அம்மா இயற்கைக் கழிவுகள் எல்லாம் போய் அப்படியே அசிங்கமாகத் துணி ஏதும் இல்லாமல் இருந்தது.

முருகன் மேல் மிகுந்த பக்தியாக அந்த அம்மா இருந்ததாலே “நான் வேண்டியதற்காக முருகன் வந்து விட்டான்…! முருகன் வந்து விட்டான்…! முருகா…!” என்று சப்தம் போடுகின்றது.

வீட்டிலிருந்த பாத்திரத்தை எடுத்துத் தண்ணீரை எடுத்துக் கழுவிவிட்டு அந்த அம்மா துணிகளைத் துவைத்துக் கொடுத்தேன்.

அப்புறம் வேறு துணியை எடுத்து கட்டச் சொன்னேன். “என்ன அம்மா விவரம்…? என்று கேட்டேன்.

அந்த அம்மாவிற்கு வயிற்றால் போய்க் கிடக்கின்றது. கண்கள் எல்லாம் மங்கிப் போயிருக்கிறது. நினைவு “முருகன்…” என்ற நிலையில் வருகிறது.

முருகனை அழைத்த போது “உடனே… அவன் ஓடி வந்தான்…” என்று கதைகளில் சொல்வார்கள் அல்லவா. அந்த மாதிரி நினைத்து இந்த எண்ணத்தைக் கொண்டு என்னை எண்ணுகின்றது.

உன் முருகன் உன்னிடம் தான் இருக்கிறான். முருகன் உன்னைக் காப்பாற்றிவிட்டான். உன் முருகன் சொல்லித்தான் நான் இங்கே வந்தேன் என்று அந்த அம்மாவிற்கு ஆறுதல் சொன்னேன்.

என்னை இங்கே வரச் சொன்னான். அதனால் நான் இங்கே வந்தேன். உன்னுடைய கஷ்டத்தையெல்லாம் நீக்கி விட்டான்.

அந்த முருகன் சென்ற இடம் ஆறாவது அறிவின் தன்மையான கார்த்திகேயா..,
1.இன்று ஒளியின் தன்மையாக இன்று விண்ணிலே வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
2.நீ அவனை நினை அம்மா… அவன் விண்ணிலே இருக்கிறான்.
3.அந்தக் கார்த்திகேயா என்று சொல்லி நீ அவன் நிலையை அடைய வேண்டும் என்று
4.நீ இதையே நினைத்துக் கொண்டிரு அம்மா.
5.நீ அவனுடன் போய்ச் சேர்ந்து விடுவாய்.
6.இந்த இடம் வேண்டாம் அம்மா.
7.பழி தீர்க்கும் எண்ணம் வேண்டாம் அம்மா…! என்று சொல்லி அப்பொழுது இதை உணர்த்தினேன்.

ஏனென்றால் என் சொத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள் என்று நினைத்துப் “பாவிகள் உருப்பட மாட்டார்கள்…” என்ற எண்ணத்தை எடுத்தால் அவர்கள் உடலுக்குள் சென்று பேயாகப் பிறப்பாய் அம்மா. “அது வேண்டாம் அம்மா…” என்று சொன்னேன்.

இது என் வாழ்க்கையில் அனுபவித்த நிலைகள் கொண்டு அந்த அம்மாவிற்குச் சொன்னேன். அதற்கப்புறம் அந்த அம்மாவிற்கு உதவியெல்லாம் செய்தேன்.

அந்த நேரத்தில் குருநாதர் உணர்த்தி “நீ உடனே வெளியே போ…” என்று என்னைப் போகச் சொல்லிவிட்டார்.

அந்த அம்மாவிற்கு வேண்டிய உதவி எல்லாம் நீ செய்துவிட்டாய். அந்த ஆன்மா வெளியேறப் போகும் போது உன்னை எண்ணி “அது உனக்குள் வந்துவிடும்டா…!” என்று சொல்கிறார்,

“இது என்னடா… வம்பு…!” என்று நான் நினைத்தேன்,

இப்பொழுது நீ உதவி செய்தற்கு நன்றிக் கடனாக அது இறந்தது என்றால் அது உன்னிடம் தான் வரும்.

அப்புறம் “முருகா…! என்ற நிலைகளில் நீயும் “முருகா…முருகா…” என்று தெருவில் போக வேண்டியது தான்…! என்று இதையும் உணர்த்துகின்றார் குருநாதர்.

உதவி செய்த அந்த உணர்வு கொண்டு அந்த ஆன்மா வரப்படும் பொழுது அந்த (அம்மாவின் எண்ணம்) வலுவின் தன்மையால் நீ ஏங்கப்படுவாய்.

ஏனென்றால் அந்த ஒவ்வொரு நிலையையும் இப்படி அனுபவ ரீதியாகத்தான் குருநாதர் எனக்கு உணர்த்தினார்.

காரணம் பிறிதொரு ஆன்மா இந்த உடலில் பக்தி கொண்ட நிலைகளில் இருந்தாலும்
1.“அது எவ்வாறு இருக்கும்…?
2.அதிலிருந்து நீ எவ்வாறு மீள வேண்டும்…? என்பதற்காகத்தான்
3.அங்கே அவர் அந்த உடலில் இப்படித் திசை திருப்பச் சொல்கிறார்.

மகரிஷியின் அருள் சக்தி நான் பெற வேண்டும் என்று அந்த அம்மாவிடம் சொல்ல முடியாது. சொன்னால் புரியாது. அதை அந்த அம்மாவிற்குப் புரிவதற்காக அந்த அம்மா பாஷையிலேயே சொன்னேன்.

போக மாமகரிஷி ஆறாவது அறிவைத் தெரிந்து கொண்டவன், அவன் ஒளியின் சரீரமாகி விண்ணிலே இருக்கின்றான்.

முருகனின் அருள் பெற்று அந்தப் போக மாமகரிஷி சப்தரிஷி மண்டலத்தில் இருக்கின்றான். அவர்களுக்குத் தகுந்த மாதிரி அந்தப் பக்தியின் நிலைகளில் அப்படிச் சொன்னேன்.

(ஆறாவது அறிவின் தன்மை கொண்டு கார்த்திகேயா என்று போக மாமகரிஷி ஒளியின் சரீரமானான் என்று அதைச் சொன்னால் அந்த அம்மாவிற்குப் புரியாது.)

ஆகவே முருகன் அருள் பெற்று போகன் இன்று அங்கே இருக்கின்றான். அவனுக்குக் கொடுத்த அருளும் முருகன் உனக்குக் கொடுப்பான்.

போகன் சப்தரிஷி மண்டலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அங்கே சிருஷ்டித்துக் கொண்டிருக்கிறான்.
1.நீ அந்தச் சப்தரிஷி மண்டலத்தையே எண்ணிக் கொண்டிரு அம்மா..
2.நீ அங்கே அவனிடம் போய்ச் சேரம்மா…! என்று சொல்லிவிட்டுக்
3.கடைசியில் திண்ணைப் பக்கம் வந்து நான் உட்கார்ந்து விட்டேன்.

அந்த அம்மா இறந்து விட்டது என்றால் நான் தான் ஏதாவது செய்துவிட்டேன் என்று சொல்லி அந்தப் பக்கம் யாராவது வந்தாலும் வம்பு…! என்று வந்துவிட்டேன்.

அந்த அம்மாவின் செயலாக்கங்களும் உடலை விட்டு எப்படி அந்த அம்மாவின் உயிராத்மா பிரிகிறது என்றும்
1.சிறிது தூரம் சென்று
2.அதை தியானத்தால் அப்படியே பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.

அந்த அம்மாவின் சொல் இப்படி மாறுகிறது.

எதைப் பதிவு செய்தோமோ
1.“முருகா…! போக மாமகரிஷி போன அந்த இடத்திலேதான்
2.நீ இருக்கின்றாயாமே…! என்னை அங்கே கொண்டு போய்ச் சேர்த்து விடப்பா…! என்று
3.”அந்தக் கடைசிக் குரல்…” அப்படியே சன்னம் சன்னமாக இறங்குகிறது.

அந்த உணர்வின் தன்மை வந்தபின் அந்த ஆன்மா வலு பெறுகின்றது. அங்கே சப்தரிஷி மண்டலமே போய்ச் சேருகிறது.

இது அனுபவ ரீதியில் தெரிந்து கொண்ட நிலை.

ஈசனுக்கு அபிஷேகம் எப்படிச் செய்ய வேண்டும்…? என்று குருநாதர் உணர்த்தினார்

பள்ளியிலே ஆசிரியராகப் போவோர் அனைவருமே பாட நிலையை எப்படிப் பிறருக்கு போதிப்பது…? என்றும் அவர்கள் குணங்களை எப்படிச் சீர்படுத்துவது…? என்றும் செயலாக்குவார்கள்.

அதைப் போல நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் விண்ணின் ஆற்றலைத் தான் பருகினாலும் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் வழியினை எமக்கு (ஞானகுரு) உபதேசித்து அருளினார்.

1.அந்தப் பண்படுத்தும் பருவம் வரும்போது உயர்ந்த ஞானத்தின் வித்தை அவர்களுக்குள் எப்படி ஊன்றச் செய்வது…?
2.ஞானத்தை வளர்க்கும் நிலைக்கு அவர்கள் நினைவலைகளை எப்படிக் கூட்டச் செய்வது…?
3.ஞானிகளின் அருள் உணர்வுகளை ஊழ் வினையாக அவர்களுக்குள் எப்படிப் பதிவு செய்ய வேண்டும்…? என்று எனக்கு உணர்த்தினார்.

ஆகவே மக்களை இயக்கும் உயிரான ஈசனை நீ வணங்கு…!
1.அவர்களைப் படைப்பதும்…
2.அவர்கள் எண்ணியதை இயக்குவதும்… எண்ணியதை உடலாக்குவதும்
3.உடலில் விளைந்ததை எடுத்துச் செல்வதும்
4.விளைந்த உணர்வுகளுக்கொப்ப அடுத்த உடலை உருவாக்குவதும் உயிரே.

பிறர் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில்… அந்த மெய் ஞானியின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று நீ எண்ணும் போது “அதை நீ பெறக் கூடிய தகுதி பெறுகின்றாய்…!”

ஆகவே அந்த ஞானிகளின் உணர்வை நீ பெற்று அதன் பின் அவர்கள் அதைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வு கொண்டு உபதேசத்தின் வாயிலாக ஊழ்வினையாகப் பதிவு செய்.

அந்த மெய் ஞானிகளின் உணர்வின் ஆற்றலை அவர்களுக்குள் ஆழமாக ஊன்றி நினைவலைகளை அங்கே அந்த ஞானிகளுடன் அவர்களை ஒன்றச் செய்யும் பொழுது தான் அவர்களும் அதைப் பெறும் தகுதி பெறுகின்றனர்
அவ்வாறு பெறும் தகுதியை நீ ஏற்படுத்தி
1.அவர்கள் பெற வேண்டும் பெற வேண்டும் என்று அவர்களை நீ பிரார்த்திக்கும் போது
2.அவரை வளர்த்த அந்த உயிருக்குள் உயர்ந்த உணர்வுகள் அபிஷேகமாகிறது.

அந்த ஒவ்வொரு உயிரும்… உடலை அமைத்துக் கொண்ட நிலைகளில் தனது அவாவினாலும் ஆசையாலும் எந்த உணர்வின் தன்மை அந்த உடலுக்குள் ஆசை பாசம் என்ற நிலையில் பிறரைக் காக்க வேண்டும் என்ற நல்ல உணர்வை எடுத்தனரோ…
1.அப்படி இரக்க உணர்வு கொண்டோருக்குள் பிறிதொரு தீய உணர்வுகள் சென்று
2.அதே உணர்வுகள் அவர்களுக்குள் மீண்டும் ஆன்மாவாக மாறி
3.அந்த ஆன்மாவிலிருந்து அவர்கள் சதா சுவாசிக்கும் பொழுது
4.அந்த உயிரான ஈசனுக்கு அவர்களை அறியாமலேயே தீய உணர்வுகளை அபிஷேகிக்கின்றனர்.

தண்ணீரைக் கொதிக்க வைத்து அந்தச் சுடு தண்ணீரை மேலே ஊற்றினால் எப்படியோ… மிளகாயைப் போட்டு நீரைக் காய்ச்சி அதை நம் மேல் ஊற்றினால் எப்படி எரிகின்றதோ… அதைப் போல எந்தெந்தப் பொருள் இருந்தாலும் அதை அரைத்து நீருடன் கலந்து நாம் மேலே ஊற்றும் போது நம் உடல் எப்படி எரிகின்றதோ… எப்படி வேதனைப்படுகின்றோமோ… இதைப் போலத்தான்
1.இந்த உடலுக்குள் இருக்கும் உணர்வின் அணுக்களுக்கு எதிர் நிலையாகும் போது உடலில் எரிவது போல
2.இந்த உடலை இயக்கும் உயிருக்கும் அந்த உணர்வுகளை நாம் சுவாசிக்கும் பொழுது அங்கே எரிச்சல் ஏற்பட்டு
3.உடல் முழுவதும் எரிச்சலும் நல்ல எண்ணங்களை எண்ண முடியாத நிலையும்
4.அந்த எரிச்சலான உணர்வுகள் உடலான சிவனுக்குள் அந்த எரிச்சலை ஊட்டும் தன்மையாக அந்தச் சக்திகள் மாறுகின்றது.

அவ்வாறு ஆகாதபடி உங்கள் உயிரான ஈசனை மகிழச் செய்ய உடலான சிவனுக்கு அமுதை ஊட்ட… குரு காட்டிய அருள் வழிப்படி நீங்கள் எல்லோரும் அந்த மாமகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும். அதை நீங்கள் பெற்று வாழ்க்கையில் அறியாது வந்த அந்த்த் தீமைகள் அனைத்தையும் உங்களுக்குள் வளராது நிறுத்த வேண்டும் என்பதற்குத் தான் இந்த உபதேசம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒரு சமயம் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என் பிள்ளை மீராவிற்குக் காட்சிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார். எனக்கு (ஞானகுரு) ஒன்றும் தெரியாது. என் பிள்ளைக்குக் காட்சி கொடுத்து எனக்குத் தெரிய வைப்பார் குருநாதர்.

அப்பொழுது ஒரு சந்தர்ப்பம்… என் நண்பரின் மனைவிக்கு உதிரப் போக்கு போய்க் கொண்டிருந்தது.

என் நண்பர் AGRICULTUREல் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் மனைவி டீச்சர். நான்கைந்து பெண் குழந்தைகள், அதில் கண் பார்வையற்ற பெண் குழந்தை ஒன்று. அதிக உதிரப் போக்கால் வேலைக்குச் செல்ல முடியாத நிலைமை.

குருநாதரின் சித்தி எனக்குக் கிடைத்திருக்கிறது என்று தெரிந்து அந்த நண்பர் என்னிடம் வந்தார்.

நான் அப்பொழுது கொஞ்சம் குருநாதரிடம் சற்றுக் கோபித்தே பேசிக் கொண்டிருப்பேன். அதனால் “உனக்குக் காட்சி கொடுக்க மாட்டேன்… போ….! உன் பிள்ளைக்குத் தான் காட்சி கொடுப்பேன்…! என்று காட்சி கொடுத்துக் கொண்டிருப்பார்.

அது சமயம் பக்கத்து வீட்டுக்காரர் தேவர் வந்தார்.

“ஏய்…! நல்லய்யா நாயக்கர் எல்லாவற்றையும் சம்பாரித்து வைக்க நீ என்னென்னவோ வேலை எல்லாம் செய்து கொண்டிருக்கிறாய்…! வித்தையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறாய்…!” என்று சொல்லி என்னைக் கிண்டல் பண்ணினார்.

என் பெண் பிள்ளை (மீரா) அந்த நேரம் பூஜை செய்து கொண்டிருந்தது. குருநாதர் அதற்குக் காட்சி கொடுத்து “உங்களுக்கு லட்டு கொடுக்கிறார்” என்று சொல்லிக் கொண்டு வந்தது.

எங்கே பிள்ளை…? “லட்டைக் காணோம்…” என்று அவர் (தேவர்) கேட்கிறார்.

“கையில் வாங்கிப் பாருங்கள்..” என்று பிள்ளை சொல்கிறது.

“லட்டைக் காணவில்லையே…!” என்று அவர் கேட்கிறார்.

இந்த லட்டின் வாசனையைப் பாருங்கள் என்று பிள்ளை சொல்கிறது “வாசனை வருகிறதா…?”

“எனக்கு மூக்கடைத்திருக்கிறது. வாசனையே தெரியாது” என்கிறார்.

இன்னும் வேறு என்னென்னவோ கொடுக்கிறார்கள். அடுத்து மாம்பழம் தருகிறார்.

“இல்லை பிள்ளை… எனக்கு வாசனையே தெரியாது” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியே வாதம் செய்து கொண்டிருக்கின்றார்.

“நிஜமாகவே வாசனை தெரியவில்லையா…?”

தெரியவில்லை…! என்கிறார்.

நன்றாக வாய் நிறைய வெற்றிலை போட்டிருந்தார்.

அவர் இப்படியே சொல்லிக் கொண்டிருந்தவுடன் பிள்ளைக்குக் காட்சியைக் கொடுத்து.., “இப்பொழுது முகர்ந்து பாருங்கள். நன்றாக உறிஞ்சிப் பாருங்கள்” என்று சொல்கிறது.

“நான் என்னத்தை உறிஞ்சினாலும் வாசனை தெரியாது” என்கிறார்.

“நன்றாக… உறிஞ்சிப் பாருங்கள்…” என்று சொல்லவும் “அவ்வளவு தான்…” “நச்…நச்…நச்…,” என்று தும்ம ஆரம்பித்தார்,

வாயில் போட்டிருக்கும் வெற்றிலை சட்டை வேஷ்டி முழுவதும் தெறித்தது ஒன்றும்l பண்ண முடியாமல் அவர் உதறிக் கொண்டு எழுகிறார்.

“ஏய்… பிள்ளை… நிறுத்து பிள்ளை…! தும்மலை நிறுத்த முடியவில்லை. எனக்கு எப்படியோ… உயிர் போகிற மாதிரி இருக்கின்றது…! உன் குருநாதரிடம் சொல்லி “என்னைக் காப்பாற்று.. பிள்ளை…” என்று சொல்ல ஆரம்பிக்கிறார்.

நடந்த நிகழ்ச்சி இது.

இனிமேல் சொல்ல மாட்டேன் இந்த மாதிரி எல்லாம் சொல்லமாட்டேன் என்று சொல். உங்கள் தும்மல் நிற்கும் என்று பிள்ளை சொல்கிறது.

“நான் இனிமேல் உங்கள் அப்பாவைக் கிண்டலாகச் சொல்ல மாட்டேன்” என்று சொன்ன பிறகு தும்மல் நின்றது.

இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது உதிரப் போக்கை நீக்க என் நண்பரும் அங்கே வந்திருந்தார்.

மனைவிக்கு உதிரப் போக்கு. ஆனால் டாக்டர்கள் எல்லாம் கைவிட்டு விட்டனர். ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆபரேஷம் செய்தும் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை.

தினம் அது போய்க் கொண்டே இருக்கிறது. இந்தா… அந்தா.., என்று இப்படி ஆகிவிட்டது.

அப்படியா…! நிஜமாவா…? என்று பிள்ளை மூலம் குருநாதர் கேட்க அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இவர் என் நண்பர். அவருக்குக் கொஞ்சம் “உதவி செய்யுங்கள் சாமி…” என்று நான் குருநாதரிடம் கேட்கிறேன்.

“ஏன்டா…?” உனக்கே மூல நோய் இருக்கிறது. அதை விட்டுவிட்டு அங்கே இரத்தம் போய்க் கொண்டிருக்கிறது என்று இதைக் கேட்கிறாய். நீ உன் மூல நோயைச் சௌகரியமாவதை விட்டுவிட்டு உதிரப் போக்கைக் கேட்கின்றாயா…?”

இப்படித் திடீர் என்று என்னிடம் கேட்கிறார்.

என் பிள்ளை மூலமாகப் பேசிக் கொண்டிருந்த குருநாதர் என் பிள்ளையிடம் சொல்வதை விட்டு விட்டு என்னிடம் நேரடியாகக் கேட்கிறார்.

உனக்கு மூல நோய் இருக்கிறது. அதே போகவில்லை. நீ அவர்களுக்குக் கேட்கிறாயே என்கிறார். “உனக்குக் கேள்…!” என்றார் குருநாதர்.

இல்லை…! பாவம்… அந்த அம்மாவிற்கு உதவி செய்தால் போறும். எனக்கு மூலம் இருந்தாலும் நான் “எப்படியோ சமாளித்துக் கொள்வேன்” என்று சொன்னேன்.

இப்படிச் சொன்னவுடன் “சமாளித்துக் கொள்வாயா…” என்று குருநாதர் சொல்லிவிட்டுச் சிறிது நேரத்தில் பார்த்தால் “பளீர்…ர்ர்..” என்று ஒரு இது கேட்டது. (நீளமான) ஆணி வெளியே வந்து என் வேஷ்டியெல்லாம் இரத்தமாக ஆகிவிட்டது.

தும்மித் தும்மி அலுத்துப் போனார் தேவர் இந்த மாதிரிப் பார்த்தவுடன் “இது என்னடா….! பெரிய கூத்தாக இருக்கிறது…!” என்று சொல்லிவிட்டு என்ன செய்கிறார்…?

“ஓ… மாப்பிள்ளை…! இது என்னமோ வேலை…!? இனிமே நான் உன்னைத் திட்டவும் மாட்டேன். என்னை ஆளை விட்டு விடு”. உனக்கே இரத்தம் வந்து விட்டது. இப்படி நடந்து கொண்டிருக்கிறது…! என்று அவர் அரண்டு போய் விட்டார்.

உதிரப் போக்குக்காக வந்த நண்பரிடம் ஓமப் பொடி வாங்கிக் கொண்டு வரச் சொன்னார் குருநாதர்.

அவர் வாங்கிக் கொண்டு வந்தார்.

“இதை சாப்பிடச் சொல்லு. உதிரப் போக்கு நின்றுவிடும். போ…” என்கிறார் குருநாதர்.

“என்னங்க…! ஓமப் பொடியைப் போய்ச் சாப்பிடச் சொல்கிறீர்கள் என்கிறார், நண்பர்.

“உதிரப் போக்கு நிற்க வேண்டுமா வேண்டாமா…? நிற்க வேண்டும் என்றால் கொண்டு போய்க் கொடு. இல்லை என்றால் விட்டுவிட்டுப் போய்விடு.

அவனுக்கு இ்ரத்தமாகப் போகிறது அவன் சாப்பிடட்டும்” என்கிறார்.

இப்படிச் சொல்கிறார்… குருநாதர்…!

என் பிள்ளை மீராவிடம் சொல்லித் தான் இதைச் சொல்கிறார்.

அப்புறம் அந்த நண்பர் ஓமப் பொடியைக் கொண்டு போய்த் தன் மனைவிக்குக் கொடுத்தார். கொடுத்தவுடன்… உடனடியாக பிரேக் போட்டது போல் இரத்தப் போக்கு நின்றுவிட்டது.

திரும்ப வந்த நண்பர் உதிரம் போய்க் கொண்டேயிருக்கும். இப்பொழுது “அப்படியே நின்று போய்விட்டது.” நைனா… இது அபூர்வ சக்தியாக இருக்கிறது என்றார்.

எனக்குச் சாபம் ஏதும் குருநாதர் கொடுத்து விடாமல் இருக்க வேண்டும். என்னை ஆளை விட்டுவிடு என்கிறார். யார்…?

இவ்வளவு நேரம் விரட்டிக் கொண்டு இருந்த தேவர் இப்போது இப்படிச் சொல்கிறார்.

“இனிமேல் நான் சொல்ல மாட்டேன்”. குருநாதரிடம் சொல்லிக் கேள் பிள்ளை…! என்று என் பெண் மீராவிடம் சொல்கிறார்.

வீட்டை கவனிக்காமல் இருக்கின்றார் என்று நான் சும்மா உன் அப்பா மேல இருக்கின்ற பிரியத்தில் அப்படிச் சொல்லிவிட்டேன். இனி மேல் நான் சொல்ல மாட்டேன் என்கிறார்.

இது நடந்த நிகழ்ச்சி.

அந்தக் காட்சிகளில் அந்த அளவிற்கு அனுபவத்தைக் கொடுத்துத்தான் உலகம் முழுவதற்கும் என் அனுபவத்திலேயே தெரிந்து கொள்ளச் செய்தார் குருநாதர். அதைத் தான் இப்போது நான் உங்களிடம் நான் சொல்வது.

சூட்சமத்தில் நடப்பதை அது எப்படி நடக்கிறது என்று காட்சியாகவும் காட்டுவார்,

ரிஷிபத்தினியின் சக்தி – ஈஸ்வரபட்டர்

நீர் சக்தி இல்லை என்றால்… நெருப்பு எரிய சக்தி இல்லை. நெருப்பாக ஆவி கொண்டு (உஷ்ண அலை) நீர் நிலை பெறாவிட்டால்… நீருக்கும் வளர்ச்சி இல்லை.

தனித்த சக்தி.. தனி அணு… தனித்த ஒன்றுக்கு… எப்படிச் செயல் இல்லையோ அதைப் போன்று ஆத்ம சக்தியின் சித்து வளர்ப்பிற்கு ஆண் பெண் இயக்கத் தொடர்பு ஆத்மக் கூட்டு நிலை செயல் கொள்ளும் வளர்ப்பு நிலை அவசியம் வேண்டும்.

ரிஷிபத்தினி… ரிஷி சக்தி… என்ற கூட்டு ஐக்கிய ஆத்ம தொடர் சித்து பெறும் தம்பதியின் வழித் தொடரினால் தான்
1.உணர்வின் எண்ணத்தால் செயல் கொள்ளும் படைப்புத் தொடர் ஆத்ம அணு வளர்ப்பின் தொடர் அலையை
2.இன்று நம் பூமியில் உள்ள மனித சக்தியைப் போன்ற தொடர் அலையை வழிப்படுத்தும் வளர் நிலைக்கு
3.பிறிதொரு மண்டலத்தில் இதைப் போன்று வளர வேண்டிய நிலை ஏற்பட வேண்டிய தொடருக்கே
4.இத்தொடர் நிலை கொண்ட சக்தி நிலை ரிஷித் தன்மை செயல்பட வேண்டும்.

படர்ந்து கொண்டேயுள்ள ஆவி அமிலம் திடம் கொண்டு அண்டசராசர அனைத்துக் கோடி சுழற்சியிலும் மாறிக் கொண்டே வழித் தொடர் கொள்ளும் ஒவ்வொன்றின் நிலை அனைத்திற்குமே வளர்நிலை தொடர் வளர்ச்சிக்கு “ரிஷித் தன்மை கொண்ட அலைத் தொடர் வளர்ப்பு தேவை…!”

அந்த வளர்ப்பைக் கொண்டு எச்சக்தி நிலையையும் உயர்வுபடுத்திச் செயலாக்கும் வளர் சக்தியின் சக்தியே ஆண் பெண் என்ற எண்ண சக்தியில் மனித வளர்ப்பு வார்ப்பில் உருவாக்கும் தொடர் அலையில் தான்

நாம் வாழும் இந்தப் பூமியே “சிவ சக்தி” என்ற இரண்டு ஆத்மாக்களின் தொடர்பில் உருவாகிப் பல கோடி ஆண்டுகளாகத் தன் உருவின் உருக்களை வளர்த்துக் கொண்டுள்ளது.

அப்படிப்பட்ட உருவின் உருவைக் கொள்ளும்
1.உயர் ஆத்ம தொடர்பு – ஆண் பெண் ரிஷித் தன்மையின்
2.வழித் தொடர் ஆத்மாக்களை வளர் கொள்ளும் செயல் தன்மை
3.அரிதிலும் அரிதாகத்தான் இன்று வரை செயல்பட்டுள்ளது.

இதைப் படிப்போர் ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண் பெண் தொடர்பு ஆத்ம தியான சித்தைப் பெற்று… வாழ்க்கையுடன் ஒன்றிய கூட்டு ஐக்கிய தியான வளர்ச்சியால்…. இந்தப் பூமியின் சக்தியைப் போன்று.. நம் சூரியக் குடும்பத்தின் சுழல் கொண்டு மிதந்து ஓடும் மண்டல சுழற்சி ஒவ்வொன்றிலுமே… அதன் சக்தி நிலைக்கொப்ப “அதன் வளர் சக்தியின் வளர்ப்பிற்கு வழி செய்யலாம்…!”

நம் பூமியைத் தவிர சூரியக் குடும்பத்தில் வளர்ந்த மற்ற மண்டலங்கள் விஷத் தன்மை கொண்டதாகத்தான் இன்றைய நிலையில் உள்ளது.

இதே சுழற்சி நீடித்து நம் பூமியும் இன்றுள்ள விஷத் தன்மையில் (செயற்கை என்ற காந்த மின் சக்தியைப் பிரித்தெடுத்ததன் விஷத்தால்) சுழன்றது என்றால்
1.இக்கலி மாற்றத்தில் வரப் போகும் கல்கியில்
2.தன் ஞானம் மிஞ்சாது… விஞ்ஞானம் எஞ்சி நிற்கும்.

ஆகவே ஒவ்வொரு ஆத்மாவுமே தன்னுள் உயர் சக்தியை உருவாக்குங்கள் “ரிஷிபத்தினி என்ற ரிஷிச் சக்தியை…!”

உயிராத்மாவுக்குத் தேவையான உணவைக் கொடுப்பது எப்படி…? ஈஸ்வரபட்டர்

ஜீவன் கொண்ட ஒவ்வொரு செயலுமே தன் ஜீவித உணவை எடுத்து எப்படி வளர்கின்றதோ அதைப் போன்றே இவ் ஆத்ம வலுத் தன்மைக்கு வலுக்கூடிய பிறகு… அதுவே ஒளிரும் தன்மையில் தனித்து இயங்கக்கூடிய வழித் தொடருக்கு “உணவு நிலை தேவை…!”

அதைப் பெறும் வழி முறை எப்படி…?

கல் மண் தாவரங்கள் உலோகங்கள் திரவகங்கள் ஜீவராசிகள் ஒவ்வொன்றுக்கும் ஜீவ சக்தியுடன் வாழும் காலத்தில் அது அதற்குகந்த உணவு நிலையை உட்கொண்டு ஜீவத் துடிப்புடன் வாழ்கின்றது.

கல்லும் மண்ணும் உலோகமும் திரவகமும் தாவர இன வர்க்கங்கள் எல்லாமே வளரும் பிடிப்பிலிருந்து எடுத்தவுடன் அதனுடைய வளர்ச்சி நிலை நின்று விடுகின்றது.

இப்படி அதனை உருமாற்றிச் செயல்படுத்தும் ஜீவனற்ற மாற்று நிலைக்கு உட்படுத்தியவுடன் அதன் வளர்ப்பு நின்று ஜட பிம்பப் பொருளாக கரையும் ஆவி நிலைக்கு உட்படும் வழித் தொடருக்குச் சென்று விடுகின்றது.
1.இதே போல் தான் ஜீவராசிகளின் உயிர்ச் சக்தியும்
2.உயிர் ஆத்மா பிரிந்தவுடன் திடப் பொருளாகி உணவு உட்கொள்ளும் நிலை மாறி ஆத்மா பிரிந்து செல்கிறது.

ஜீவ சக்தி கொண்ட ஒவ்வொன்றுமே தன் வளர்ப்பின் வளர்ப்பிற்கு உணவை உட்கொண்டு வாழ்வதைப் போன்று அழியாத நிலை என்னும் பிறவி இல்லா நிலை பெறும் சக்திக்கும் அதன் வளர்ச்சி வளர் கொள்ள உட்கொள்ளும் (உணவு) வழித் தொடர் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

வளர் தன்மைக்கு ஆண் பெண் அமிலச் சேர்க்கை ஜீவத் துடிப்பு எப்படி அவசியமோ அதைப் போன்றே
1.ஆத்மாவைச் சரீரத்திலிருந்து பிரித்துச் செயல்படுத்தும் வழி முறைக்கு
2.உடலுக்கு வேண்டிய உணவை உட்கொள்வது போன்றே
3.ஆத்மாவிற்கான உணவைச் செயல்படுத்தும் வழி முறை செயல் தான் “அஷ்டமா சித்து” கொண்ட வளர் நிலை.

பலவற்றில் இருந்து விளைந்து உயர்வின் முற்றிய தன்மையான மனித சக்தியின் எண்ண உணர்வு சொல் செயல் ஆற்றல் கொண்ட ஆத்ம சரீர சக்தியில் இருந்து தான் மனிதச் சக்திக்கு அடுத்த வளர்ப்பு சக்தியான தன் ஆத்மாவைப் பிரித்துச் செயல்படுத்தும் வழி முறை வளர்ச்சி நிலைக்குச் செல்ல முடியும்.

அதற்குரிய ஆரம்பத் தொடர் உணவு நிலையாக… ஆத்மா பெறும் நிலை எண்ணத்தைச் செலுத்திக் காற்றலையின் தொடர்பிலிருந்து தன் சுவாச ஈர்ப்பிற்கு நறுமண அலைத் தொடர்பையும் கனிகளின் சுவை அலையையும் பெற்று அச்சுவைகளை உணவாக எடுக்கும் வழித் தொடரை ஆத்மா பெறுகின்றது.

1.காந்த மின் அலையின் வார்ப்பு சக்தியை ஜெபத்தால் எடுக்கும் ஞான சக்தியில்
2.தன் ஆத்மாவைத் தானே காணக்கூடிய வழி முறை பெற்றவுடன்
3.சரீர இயக்கத்திலிருந்தே உணர்வின் எண்ணத்தைச் செலுத்தி உணவு எடுக்கும் வழி முறை பெற்று
4.அவ்வழி முறைத் தொடர்பில் இருந்து ஆத்மா தனித்து இயங்க
5.ஆத்மாவுக்கந்த ஆத்ம அலைத் தொடரில் தொடர்பு கொண்டு
6.ஆத்மாவிற்கும் ஆத்மாவிற்கும் உள்ள தொடர்பலையின் ஈர்ப்பலையின் ஈர்ப்பிலிருந்தே தன் ஆத்மாவிற்கு உணவெடுத்துக் கொள்கின்றது.

வலுக் கொண்ட நிலையில் தனித்து இயங்கும் ஆத்மாவின் செயல் ஒன்றை அறிய… அணுவுக்குள் அணுவாக… இச்சரீர பிம்ப இயக்கத் தொடர்புடன்…
1.சரீரத்தில் இருந்து எண்ணத்தை வெளிப்படுத்திய ஆத்மா செயல் கொள்ளும் வழித் தொடரில் மோதும் பொழுது…
2.இச்சரீர சுவாச ஈர்ப்பிற்கு அவ் அணு அலை வளர்ச்சி கொண்ட
3.சேமித காந்த நுண் அலை சுவாசத்தின் உணர்வில் சமைத்து
4.எலும்புகளின் உராய்வு கொண்டு – ஆத்மாவின் செயலுடன் ஒன்றுகின்றது… “உணவாக…!”

இத்தகைய நிலை பெற்றால் ரிஷிகளின் தொடர்பலையுடன் ஒன்றிட முடியும். அவர்கள் பெற்ற வளர்ச்சியையும் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

கடல்களிலே படகுகளில் சென்றாலும் அவர்கள் அலை கடலிலே எதைக் குறிக்கோளாக வைத்துச் செல்லுகின்றனரோ அந்த அலை கடலில் எதிர் நீச்சலாடி அந்தக் கரையைக் கடந்து செல்கிறார்கள்.

தான் எண்ணிய காரியங்களை நிறைவேற்ற ஒரு ஊரைக் கடக்க வேண்டும் என்றாலும் அல்லது கடலுக்குள் மீன் பிடிக்க வேண்டும் என்றாலும் ஒரு எல்லை வகுத்துத் தான் செல்லுகின்றனர். இதைப்போலத் தான்
1.மனிதனான நாம் இந்த உடலிலே இருந்தாலும்
2.உடலுக்குப் பின் என்ன…? என்ற எல்லையை வகுத்து கொள்ள வேண்டும்.
3.அருள் ஞானிகள் சென்ற அந்த உணர்வுடன் நாம் ஒன்ற வேண்டும்.

இந்த மனித வாழ்க்கையில் வெறுப்பு வேதனை சங்கடம் சலிப்பு கோபம் குரோதம் என்ற கடுமையான புயல் நிலைகளில் அந்த அலைகளில் சிக்கி இன்று ஒவ்வொருவருமே தவித்துக் கொண்டிருக்கின்றோம்

இதையெல்லாம் மாற்றிவிட்டுச் சீரான நிலைகள் பெற வேண்டும் என்று வரப்படும் போது தான் அந்த அலைகளைப் பிளந்து நாம் எண்ணும் எல்லைகளை அடைய முடியும்.

இன்று ஒரு தெய்வத்தை வணங்க வேண்டும் என்று சென்றாலும் கூட… ஒருவருக்கொருவர் எதிர்க்கும் நிலையில் புயல் போன்று கொந்தளித்து இந்த “வாழ்க்கையில் என்ன ஆகுமோ…?” என்று எதிர் சிந்தனையாடிக் கொண்டுள்ளார்கள்.

1.நம் நாட்டில் வாழும் மக்களும் உலக மக்களும் எத்தனையோ வகைகளில் சிந்தனை சிதறி
2.இன்று அவதிப்பட்டுக் கொண்டு பெரும் புயலில் அந்த அலையில் சிக்கித் தவித்துக் கொண்டுள்ளார்கள்.

இந்த நேரத்திலும் நாம் ஒவ்வொருவரும் அதைச் சீராக்கிட அந்த மகரிஷியின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வை நமக்குள் செலுத்துதல் வேண்டும்.

நாம் அந்த மகரிஷிகளின் அலைகளை எண்ணி இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து நம்மை நம்மைக் காத்து நம்மைச் சார்ந்தோர் அனைவருக்கும் அதைக் கிடைக்கப் பெறச் செய்யவேண்டும்.

மகரிஷியின் அருள் ஒளி எல்லோரும் பெற வேண்டும் அவர்கள் பொருள் கண்டுணர்ந்து செயல்பட வேண்டும் என்ற இந்த நிலைக்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு யாம் உங்களுக்கு இதை உபதேசித்துக் கொண்டுள்ளோம்.

நாம் எண்ணும் நல்ல எண்ண அலைகளை மறைத்திடாது அருள் உணர்வின் வலுகொண்டு இந்த வாழ்க்கையில்… வரும் உலகத்தில் வரும்… தீமைகளை வென்றிட வேண்டும்.

ஏனென்றால் விஞ்ஞான அறிவால் நஞ்சு கொண்ட உணர்வாக வளர்ந்து நாம் அந்த விஞ்ஞான அறிவால் தாவர இனங்களுக்குள் நஞ்சினைக் கலந்து அந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் சென்று சிந்திக்கும் எண்ணங்களை மறைத்துக் கொண்டுள்ளது.

அதனால்
1.நமக்குள் கடு கடுக்கும் உணர்வின் தன்மை வேட்கையைக் கூட்டிச் சிந்தனையற்ற நிலைகளாகி
2.மனித எண்ணங்களே அழிந்து கொண்டிருக்கும் நிலைக்கு வந்துவிட்டது.

இதிலிருந்து மீளும் நிலையாக அருள் ஞானியின் உணர்வின் துணை கொண்டு அந்த நஞ்சினை அடக்கி உணர்வினை ஒளியாக மாற்றி நாம் விண் செல்லும் நிலையை அடைவோம்.

அருள் ஞானியின் உணர்வை நாம் பெற்று இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி மெய் ஞானியின் உணர்வுடன் நாம் சென்றடைவோம்

அந்த எல்லையை அடையும் செயலாக இந்த மனித வாழ்க்கையில் மகிழ்ந்திடும் செயலாகவும் இருளை வென்று ஒளியின் சரீரமாகப் பெறும் அந்த நிலைக்காக நாம் தியானிப்போம்.

இந்த மனிதன் என்ற முழுமையை நாம் அடைவோம்.

உயிருடன் ஒன்றிய ஒளியின் நிலையாக உணர்வின் தன்மை ஒளியாக நிலைத்திருப்போம். அதனின் உணர்வை நமக்குள் வளர்ப்போம். இந்த நஞ்சு கொண்ட உலகிலிருந்து நம்மை மீட்டுவோம்.

1.நமக்குள் ஆண்டு கொண்டிருக்கும் உயிரான ஆண்டவனுடன்
2.என்றும் அழியாத உணர்வாக அவனுடன் நாம் வாழ்ந்து
3.அவன் உறுதுணையுடன் வாழ்வோம் என்று நாம் தியானிப்போம்.

நாம் அடிபணியச் செய்ய வேண்டியது எதை…? தலை நிமிர்ந்து பார்த்துப் பெற வேண்டியது எதை…?

யாம் (ஞானகுரு) உங்களுக்கு ஆசீர்வாதம் கொடுக்கும் பொழுது
1.மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும்
2.உங்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டும்
3.அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நீங்கள் செல்ல வேண்டும்
4.இந்த மெய் வழி உங்களுக்குள் வளர வேண்டும் என்று ஆசீர்வதிக்கிறேன்

அந்த நேரத்தில் அந்த உணர்வின் சக்தியைப் பெற வேண்டும் என்று அதையே நீங்களும் ஏங்கிப் பெற வேண்டும்.

உதாரணமாக மைக்குக்கு முன்னாடி வந்து நேராகப் பேசினால் தான் அந்த ஒலி அதன் மூலம் பதிவாகின்றது. மைக்கைத் திருப்பி வைத்து விட்டால் எந்தச் சப்தமும் வராது.

அதைப் போலத் தான்
1.உங்களுடைய ஏக்க உணர்வுகள்
2.நான் கொடுக்கும் ஆசியுடன் அதே எண்ணத்துடன் ஏங்கி இருந்தால்தான் அது பதிவாகும்.
3.ஆகவே மகரிஷிகளின் ஆற்றலைப் பதிவு செய்வதற்குத் தான் உங்களுக்கு அந்த ஆசிர்வாதமாகக் கொடுப்பது.

ஆனால் உங்கள் தாய் தந்தையரிடம் மட்டும் நீங்கள் பாதம் பணிந்து ஆசிர்வாதம் பெற வேண்டும்.

பள்ளிக்குச் சென்றாலும் இங்கே குருவிடம் வரும் பொழுதும் அது எல்லாம் குருவின் தன்மை தான். நல்வழி செல்வதற்கும் ஞானிகளின் அருள் சக்திகளைப் பெறுவதற்கும் வழி காட்டுகின்றோம்.

1.ஞானிகளைப் பற்றி யாம் உங்களுக்கு ஆசி கொடுக்கும் போது
2.ஏக்க உணர்வுடன் நேர்முகமாகப் பார்த்து நீங்கள் பதிவு செய்து கொள்வதுதான் முறை.

ஆனால் பெரியவர் என்று ஒருவரை நாம் வணங்குகிறோம் என்று சொன்னால் அந்தப் பெரியவரின் உணர்வுகளை நமக்குள் பதிந்து கொண்டால் தான்… அது பெரிதாக நமக்குள் வேலை செய்யும். பெரியவருக்கு வணக்கம் செய்கிறேன் என்று நாம் தலை குனிந்து செயல்படுத்துவது அல்ல.

1.தலை நிமிர்ந்து நேராகப் பார்த்து…
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று நுகர்ந்து அதை உடலுக்குள் செலுத்தி
3.தீமை பயக்கும் உணர்வுகளை அடிபணியச் செய்வதற்குத்தான் யாம் ஆசி கொடுக்கின்றோம்
4.இதை நீங்கள் பழகிக் கொண்டால் அந்த அருள் சக்திகள் உங்களுக்குள் சுலபமாக வரும்.
5.குருவின் ஆசி என்றுமே உறுதுணையாக இருக்கும்.

நல்வழி பெறும் மார்க்கத்தை உங்களுக்குள் பதிவு செய்வதற்குத் தான் இதைப் பதிவாக்குகின்றேன். பதிவானதை நீங்கள் திரும்ப எண்ணி அதை ஏங்கிப் பெற்றால் அது நல்வழி காட்டுகின்றது.

ரேடியோ பேட்டியில் எந்த அலை வரிசையைப் பதிவு செய்கிறோமோ அதைத்தான் அது இயக்கும்.

அதைப்போல உங்களுக்குள் உயர்ந்த கருத்துக்களை பதிவு செய்யும்போது அதை நீங்கள் திருப்பி எண்ணினால்
1.அந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் வழிகாட்டியாக வரும்… உங்கள் செயலின் தன்மையும் நல்லதாகும்.
2.உங்கள் உடலுக்குள் அது மகிழ்ச்சி பெற செய்யும் சக்தியாக வளரும்.

அதை எல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்று சதா தியானிப்பது தான் என்னுடைய வேலை. மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று யாம் தியானிக்கும் பொழுது… எந்தெந்த உயர்ந்த எண்ணங்களை எந்தெந்த உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களோ அது எல்லாம் எனக்குள் விளைகின்றது.

நீங்களும் அதைப் போல எண்ணி
1.உங்கள் குழந்தைகள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்
2.என் அம்மா அப்பா ஆரோக்கிய நிலை பெற வேண்டும்
3.என் மூதாதையர்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும்
4.எங்களை பார்க்கும் பொழுது மகிழ்ச்சி அடைய வேண்டும் என்று எண்ணுங்கள்.

எந்தக் குறைகளையும் காணாதபடி இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்… குறை என்பதே நம்மை விட்டு அகன்றுவிடும். குறைந்தபட்சம் உங்கள் குடும்பத்திலாவது இதைப் பழகிக் கொள்ளுங்கள்.

நான் எதை எல்லாம் எண்ணுகின்றோமோ நம் உயிர் அதைத் தான் படைக்கின்றது எதை எண்ணுகின்றோமோ அதை உடலாக மாற்றுகின்றது. அது போல்
1.இங்கே கொடுக்கும் ஞானிகளின் உணர்வுகளைப் பதிவாக்கினால்
2.மீண்டும் நினைக்கும் பொழுதெல்லாம் அதுவே நம்மை இயக்கத் தொடங்கும்.

“உயர்ந்த எண்ணத்தை எடுக்க வேண்டிய முறை…” – ஈஸ்வரபட்டர்

நம் எண்ணத்தின் உயர்வினால் பெற்ற ஆத்ம பலம் கொண்டு நாம் செலுத்துவது எல்லாமே… நாம் எடுத்த ஜெப உணர்வின் நற்குண எண்ண அலை வெளிப்படும் பொழுது…
1.எவ்வளவு கொடிய எண்ணம் கொண்ட குரோதம் கொண்டவனாக ஒருவன் நம்மைச் சந்தித்து எதிர்பட்டாலும்
2.அந்தக் கொடிய எண்ணத்தைக் கொண்டவனின் குரோத நிலை
3.நாம் வெளிப்படுத்தும் சாந்தத் தன்மையினால் அண்ட முடியாது.

பதட்டம் சோர்வு சங்கடம் சலிப்பு போன்ற உணர்வு நிலைக்கே இடம் தரா ஆத்மாவாக நம் ஆத்மா வலுப் பெற்ற தன்மையாக இருந்தால் எதிர் நிலை கொண்ட எந்த உணர்வு எண்ணமும் நம்மைப் பாதிக்காது.

குரோதத்தாலும் வஞ்சனையினாலும் பதட்டம் கொண்ட சோம்பல் கொண்ட எச்சுழற்சி வட்ட ஈர்ப்பில் உள்ளவராக இருப்பினும் அவைகளும் நம்மைப் பாதிக்காது.

நாம் பெற்ற அந்த நற்குண வலுத் தன்மையினால்
1.எந்த ஆத்மாவின் மேல் எண்ணத்தின் பார்வையின் ஒளியை
2.எதை எண்ணிச் செலுத்துகின்றோமோ அந்நிலை அங்கே நடக்கும்.

ஆனால் அதே சமயத்தில் கொடிய குரோத எண்ணம் கொண்டவனாக இருந்தாலும்… தெய்வ சக்தியின் உயர்வு ஆத்ம சித்துவை நாம் பெற்றிருந்தாலும்… நாம் செலுத்தும் சக்தி அங்கு நடக்கும்…! என்ற உண்மை தெரிந்தாலும்…
1.தீய சக்தியை… அந்தத் தீயதை அழிக்க வேண்டும்…! என்று நம்மை உயர்த்தி எண்ணத்தைச் செலுத்தினோம் என்றால்
2.அவன் பெற்ற தீய அலைத் தொடர்பின் ஈர்ப்பில் நாமும் மீண்டும் சிக்கி
3.அவன் பால் செலுத்தும் எண்ணத்திலேயே மனிதனுக்கு மனிதன் விடும் சுவாசத்தின் மோதலினால்
3.காந்த நுண் அலையின் தொடர்பு ஈர்ப்பு அணு வளர்ப்பின் செயலுக்கு நம் உடலும் உட்படுகின்றது.

ஆகவே எண்ணத்தை உயர்த்தி நாம் சந்திக்கும் ஒவ்வொரு ஆத்மாவையுமே தெய்வ சக்தி கொண்டதாக எண்ணத்தில் கொண்ட ஆத்மத் தொடர்பினால் தான் நம் ஆத்மா வலுக் கொள்ள முடியும்.

அதாவது நாம் செலுத்தும் எதிர் அலையின் உணர்வலையைத் தான் நாமும் திரும்பப் பெற முடியும்.

எந்நிலை எக்குண வழித் தொடரில் இருந்தாலும் அவ் ஈர்ப்புப் பிடியில் நாம் சிக்காமல் எண்ணத்தின் உயர்வைக் கொண்டு உயர்ந்த ஒலி அலைகளையே பிறர்பால் செலுத்தி எண்ணத்தில் ஒவ்வொரு ஆத்மாவையும் நாம் உயர்த்தி நமக்கு வேண்டிய நல் சத்தை நாம் பெறலாம்.

1.தீயது… நல்லது…! என்ற பாகுபாட்டுடன் நம் உணர்வின் எண்ணத்தைச் செலுத்தாமல்
2.நம் உயர்வின் உயர்விற்கு உயர்ந்த எண்ணத்தால் சக்தி பெறலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை மனிதனாக உருவாக்கிய உயிரை ஈசனாக மதித்து அவனால் உருவாக்கப்பட்ட இந்த மனித உடலைக் காத்திட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுங்கள்.

இந்த உடல் உங்களது அல்ல. உயிரால் தான் உருவாக்கப்பட்டது.

அறிவால் உணரப்பட்ட உணர்வின் தன்மை “தன்னை யார்…? என்று அறிந்து தனக்குள் விளையும் தீமைகளை நாம் அகற்றக் கற்றுக் கொண்டால் நம்மை இயக்கிய நம்மை உருவாக்கிய உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக என்றும் நிலைத்திருந்து பிறவியில்லா நிலைகளை அடையலாம்.

யாம் உபதேசத்தின் வாயிலாகப் பதிவாக்கும் நிலைகளை நீங்கள் ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டு மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அதைப் பெற முடியும்.

ஒவ்வொரு நொடியிலேயும் சங்கடங்களோ சலிப்போ மற்ற தீமைகள் வரப்படும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணிப் புருவ மத்தியில் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி
1.உங்கள் ஏக்கத்தை விண்ணை நோக்கிச் செலுத்துங்கள்.
2.இலேசாக உங்கள் எண்ணத்தை உயர்வாக (மேல் நோக்கி) எண்ணுங்கள்.
3.இப்பொழுது உங்கள் எண்ணம் ஆன்மாவைக் கடந்து செல்கின்றது.
4.மேல் நோக்கிய நிலைகளில் ஆன்மாவைக் கடந்து நுகரப்படும் பொழுது அந்த ஒளிக்கற்றைகளை நுகர முடியும்.

அமைதியாக இருக்கும் தண்ணீரில் ஒரு கல்லைப் போட்டால் அலைகள் தனக்குள் அலை அலைகளாக மாறுகின்றது. இதைப் போல
1.மகரிஷிகளின் உணர்வின் அலைகள் உங்களுக்குள் வருவதை
2.அந்த ஒளிக்கதிர்களை உங்களால் உணர முடியும்.
3.கண்களால் பார்க்கவும் முடியும்.

உங்கள் ஆன்மாவில் பட்ட தீமைகளை இது அகற்றும். உங்கள் உடலுக்குள் ஊடுருவி ஒளியான உணர்வின் ஆற்றல் பெருகும். இதை உங்களால் நுகர முடியும்.

ஆனால் அதே சமயத்தில் அதிகமாகக் காட்சிகளைக் கொடுத்துவிட்டால் பயப்படுவோர் நிறைய உண்டு.

“ஐய்யய்யோ.., திடீரென்று என்னமோ தெரிகின்றது. இதனால் என்ன ஆகுமோ…?” என்று எண்ணுவார்கள்.

1.கிடைப்பதைப் பற்றிச் சந்தோஷப்பட்டு
2.”மேலும் பெற வேண்டும்” என்று எண்ணுவது ஒரு சிலரே.

ஆனால் பலர் இந்த மாதிரித் தெரிகிறது. இது ரைட்டா…? தப்பா…? இந்தக் கால்குலேசன் (CALCULATION) போட ஆரம்பித்துவிடுகின்றார்கள்.
1.இதனால் ஏதாவது நல்லதாகுமா…?
2.அல்லது இதனால் கெட்டதாகி விடுமோ…?

கிடைத்ததையும் இழக்கும் நிலைகளில் தான் இன்றைய மனிதனின் வாழ்க்கை இருக்கின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட்டு மன பலத்துடன் மகரிஷிகள் கண்டதை முழுமையாக உணர வேண்டும் பார்க்க வேண்டும் என்று எண்ணினால் அந்த வலிமையைக் கூட்டினால் “உங்கள் வளர்ச்சியை நீங்களே பார்க்கலாம்.”

October 2021 உபதேசம்

“எந்தச் சக்தியும் தனித்துச் செயல்பட முடியாது…!” – ஈஸ்வரபட்டர்

 

1.இச்சரீர அணுத் தன்மை ஒவ்வொன்றுமே மலம் தான்.
2.இச்சரீர சதை அணு மலத்தின் வளர் அணு வளர்ப்பு வார்ப்பு எலும்புகளின் வலுத் தன்மைதான்.
3.ஒளி பெறும் ஆத்ம சக்தியை எண்ணத்தில் எடுக்கும் உயர்ந்த குணத் தன்மையால்
4.சரீரம் வளர்க்கும் ஒவ்வொரு அணுவையுமே
5.ஏற்கனவே எக்குணத்தின் வழித் தொடரில் பழக்கப்பட்டு வழி பெற்றிருந்தாலும்
6.எண்ணத்தால் எடுக்கும் ஞானத்தின் நற்குணத் தொடர்பைக் கொண்டு உடலில் அணு வளர்ந்து
7.அதனின் சமைப்பினால் எலும்புகள் வளர்ந்து
8.காந்த மின் அலை உணர்வுத் தன்மையினால் எலும்புத் தன்மை உறுதி கொள்ளும் வார்ப்பு நிலைக்கொப்ப ஆத்ம வலு கூடுகின்றது.

இச்சரீர பிம்ப அணுக்களின் வளர்ப்பு நிலைக்கொப்பத்தான் இவ் எலும்பின் வளர்ப்பு அமைகின்றது. காந்த மின் சக்தியின் ஈர்ப்பினால் எலும்புகள் உறுதியாகி ஆத்ம வலு கூடுகின்றது.

அப்படிப்பட்ட வலுத் தன்மை பெற்று ஒளி பெறும் உயர்ந்த சக்தியாக்கி விட்டால்… காந்த மின் சக்தியின் வார்ப்பான எலும்பின் வலுத் தொடரைக் கொண்டு
1.ஒளி கொண்ட ஆத்ம சக்தியை எதனிலும் ஊடுருவவிட்டு
2.உயர் தன்மையின் வார்ப்பாக ஆத்ம சக்தியை ஒளி பெறச் செய்யலாம்.

உயர் குண சக்தியால்… தன்னைத்தான் நம்பி தன்னுள் வளரும் பல கோடி கோடி உயிரணுக்களையும்
1.உயர் நிலை அணுக்களாக வளர விட்டு
2.அவ்வுயர்வின் வலுவை எலும்புத் தன்மையில் வலுவாக்கி
3.ஆத்ம சக்தியை உயர்த்திக் கொண்டோமோனால்
4.தன் ஆத்மாவைத் தானே பார்க்கவும் பேசவும்
5.ஆத்மாவைக் கொண்டு எச்சக்தியும் பெறவும் உயர்வு ஞான சக்தியால் வழிப்படுத்தவும் முடியும்.

ஆத்ம வலு தான் மனிதனுக்கு அடுத்த தெய்வ சக்தி நிலை…!

ஆத்ம வலுக் கொண்ட தன்மையினால் இவ்வாத்மாவின் ஒளித் தன்மையைக் கொண்டு முன்கூட்டி அறியும் ஞானத்தையும்… உலகச் சுழற்சி தொடர்பு முறையினால்..
1.உலகத் தன்மையில் எங்கெங்கு மாற்று நிலைகள் ஏற்படும் நிலையை அறியவும்
2.ஏற்படக்கூடிய மாற்றத்தின் அபாயத்தை ஆத்ம வலுக் கொண்டு அறியும் தன்மையில் மாற்றியமைக்கவும் முடியும்.

பிற ஈர்ப்பலையில் சிக்கா ஒளி வட்ட ஞானத்தால் ஆத்ம வலுவின் சித்துத் தன்மையில் அறியும் அஷ்டமாசித்து நிலை அனைத்தும் ஆத்ம வலுவில் பெற்றாலும்
1.எவ்வாத்ம வலுவை எவ்வழித் தொடரில் பெறுகின்றோமோ
2.அவ்வலுவுக்குத் தகுந்த உணவு நிலையைப் படைத்துக் கொண்டே தான் இருக்க வேண்டும்.

உடலுக்கு உணவை உண்ணுகின்றோம். உணர்வுக்குத் தக்க உறக்கம் கொள்கின்றோம். அதைப் போன்றே ஆத்ம வளர்ப்பிற்கு வளர் தொடர் சக்தி நிலைக்கு உணவாக
1.மனித ஆத்ம பிம்பத்தால் பெற்ற ஆத்மாவின் வலுவிற்கு உணவு
2.எவ்வழித் தொடரில் உயர்வு கொண்ட ஆத்ம நிலை பெற்றோமோ
3.அத்தொடர்பு கொண்ட சரீர பிம்ப ஆத்மாக்களின் பால் இருந்து வெளிப்படும்
4.எண்ண உணர்வின் சப்த அலையின் தொடர்பு நிலை சுழற்சி நிலை இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

தனித்து ஆத்ம சக்தி பெற முடியாது…! ஆணுக்குப் பெண் சக்தியும் பெண்ணிற்கு ஆணின் சக்தியும் கூட்டுச் சக்தியின் போதனைத் தொடர் அலை சக்தியும் அவசியம்.

எண்ணத்தின் உணர்வைக் கொண்டு… அன்பு பாசம் வீரம் சாந்தம் கொண்ட உயர் குணத்தின் வழித் தொடர் வாழ்க்கையில் கலந்துறவாடும்… ஆத்மாக்களின் நம் பால் செலுத்தப்படும் அலை உணர்வின் ஈர்ப்பினால்… நம் ஆத்மாவிற்கு நாம் செலுத்தும் உணவு… நாம் எத்தொடரில் ஞானம் பெற்றோமோ அத்தொடர்பின் உணவாக நமக்குக் கிட்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இப்பொழுது வேதங்கள் என்று சொல்வது… அன்று சாஸ்திரங்களில் தமிழ் சித்தாந்தம் வழி… சைவ சித்தாந்தத்தின் தன்மை தான் அங்கே உருவாக்கப்பட்டது. பின் வேதங்கள் என்ற நிலைகள் உருமாற்றப்பட்டது.

ஏனென்றால் சைவ சித்தாந்தம் என்பது அகஸ்தியனால் வெளியிடப்பட்டது.

அந்த உணர்வின் தன்மை வெளிப்பட்டதை இவர்கள் வேதங்களாக இதே தமிழ் மொழியைத்தான் வடிவமைக்கும் தன்மைகள் மாற்றி ஒலியின் தன்மையை மாற்றி வேறு ஒரு ரூபத்தில் அலைகளாக மாற்றினார்கள்,

1.அகஸ்தியனால் வெளிப்படுத்தப்பட்ட சைவ சித்தாந்தத்தின் பேருண்மைகள்
2;.இன்றும் அழியாதவண்னம் நம் பூமியில் படர்ந்திருக்கின்றது… பிரபஞ்சத்திலும் படர்ந்துள்ளது.

அகஸ்திய மாமகரிஷி பெற்ற அருள் சக்திகளை நமக்குள் சேர்த்து நாம் அந்த விண்ணில் உருப்பெறும் உணர்வின் தன்மையை நமக்குள் கவர்ந்து ஒளிக் கதிராக மாற்றிடல் வேண்டும்.

1.சப்தரிஷி மண்டலங்களும் துருவ நட்சத்திரமும்
2.அகண்ட அண்டத்தில் வருவதை எப்படி ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளதோ
3.அதைப் போல அந்த உணர்வினை நமக்குள் இணைத்து விட்டால்
4.ஒளியின் தன்மையாக நாம் உயிருடன் ஒன்றி
5.என்றும் பேரின்பப் பெரு வாழ்வாக வாழ முடியும்.

இதைச் சுருங்கச் சொல்கிறேன்… விரிவாகச் சொன்னால் இன்னும் எத்தனையோ வகைகளில் சொல்லலாம். ஆனால் ஏதோ என்றும்… இது மிகவும் எளிதில் கிடைக்கிறது என்று யாரும் அலட்சியப்படுத்திவிட வேண்டாம்.

குருநாதர் எனக்குள் பதிவு செய்த உணர்வின் தன்மைகளை அதை எல்லாம் அறியும் தன்மையாக 20 வருடங்கள் தனித்து அனுபவம் பெறும்படி செய்தார்.

ஞானிகள் கண்ட பேருண்மையை அறிவதற்காகக் குடும்பத்தைப் பிரிந்து காடு மேடெல்லாம் அலைந்து உண்மையை உணர்ந்து அதைப் பெறும் தகுதியைப் பெற்றேன்.

1.அதை அனைவருக்கும் பெறச் செய்ய முடியும்…
2.அனைவரும் பெற முடியும்… என்ற இந்த உண்மையைக் குருநாதர் காட்டியதால்
3.உங்களுக்கும் இதைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றேன்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வேறு வேறு விதமாக நான் சொல்வேன்.
1.காரணம்… அந்தச் சந்தர்ப்பத்தில் கிட்டும் அந்த மெய் உணர்வின் சக்தியை
2.உங்களுக்குள் எப்படியும் அதைப் பாய்ச்சிட வேண்டும்
3.அதை நீங்கள் பெறும் தகுதியை உருவாக்கிட வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்வது.

ஏனென்றால் காலத்தால் அழியாத இது “மிகப் பெரிய பொக்கிஷம்…” கிடைப்பது… “மிக மிக அபூர்வம்”.
1.என்னில் இது கிடைத்து
2.என்னுடன் இது மறைந்திடாது
3.எல்லோரையும் இதைப் பெறச் செய்து இது மறைந்திடாது
4.எல்லோரும் வளர்ந்திட வேண்டும் என்பதற்கே இதை நான் சொல்வது.

நல்லது செய்பவர்களைக் காப்பாற்றி… நல்லதை ஓங்கச் செய்வது தான் தர்மம்

 

யதார்த்தமாக நல்லதையே நாம் சொல்லிக் கொண்டு வருகிறோம் என்று சொன்னாலும் நம்மை ஏமாற்றுபவர்கள் என்ன செய்கின்றார்கள்…?

வீட்டில் பணமெல்லாம் நிறைய வைத்திருக்கின்றேன்.
1.இரவெல்லாம் கூடக் கதவைத் திறந்து வைத்திருப்பேன்… எதையும் பூட்டுவதில்லை என்று சொல்லி இருந்தால்
2.அடுத்தாற்படி அதைக் கேட்பவர்கள் ஓஹோ… அப்படியா… சரி…! என்று சொல்லிவிட்டு லேசாகத் தாராளமாக வந்து எடுப்பார்கள்.

நாம் யதார்த்தமாகச் சொல்கின்றோம். ஆனால் கபடு சூதில்லாதபடி சொல்கின்றோம். ஆனால் அதை மூடி மறைக்கவில்லை என்கிற போது என்ன செய்யும்…?

அவர்களிடம் நாம் தன்னை அறியாமலேயே…
1.எப்பொழுதெல்லாம் வீட்டில் இல்லாது வெளியிலே இருப்போம் என்றும் சொல்லியிருப்போம்
2.எங்கள் வீட்டிற்குள் யாரும் வந்து திருடுவதில்லை என்றும் நல்லதாகச் சொல்லியிருப்போம்.

அடுத்தாற்படி இதைக் கேட்டவுடனே நேராக வந்து எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள்.

இதே மாதிரித் தான் நான் பொய்யே சொல்ல மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் என்ன ஆகும்…?

நான் பெரிய சாமியாராக இருக்கின்றேன். காட்டிற்குள் நான் தவம் இருந்து கொண்டிருக்கின்றேன். அந்தப் பாதையில் நல்லவர்களும் கெட்டவர்களும் வந்து போய்க் கொண்டிருக்கின்றார்கள்.

திருடன் வருவதும் தெரிகின்றது. மற்றவர்கள் அவரவர்கள் வாழ்க்கைக்குச் செல்வதும் தெரிகிறது. அங்கே “பொய்யே சொல்ல மாட்டேன்…!” என்கிற வைராக்கியத்தில் நான் இருக்கின்றேன் என்று வைத்துக் கொள்வோம்,

அந்த வைராக்கியத்துடன் இருக்கும் பொழுது என்ன நடக்கிறது…?

நகை நட்டுகளுடன் குடும்பத்துடன் முன்னாடி வருகின்றார்கள். அவர்கள் வருவதைப் பார்த்தவுடனே “நீங்கள் எந்த ஊருக்குச் செல்கின்றீர்கள்…?” என்று கேட்கின்றேன்.

இன்ன ஊருக்குப் போகிறோம்… இந்தப் பாதையில் தான் போகிறோம் என்றும் சொல்கிறார்கள்.

சரி நல்லபடியாகச் சென்று வாருங்கள்…! என்று நான் ஆசிர்வாதமும் கொடுக்கின்றேன்.

இவர்கள் நகை போட்டு வந்ததைப் பார்த்துவிட்டு அடுத்தாற்படி ஒரு திருடன் வேகமாக வருகின்றான்.

வந்தவுடன் பார்க்கின்றான். நான் உட்கார்ந்திருக்கின்றேன். நான் தான் பொய்யே சொல்ல மாட்டேன் அல்லவா…!

சாமி…! இந்தப் பக்கம் ஒரு நான்கு ஐந்து பேர் போனார்களா…? எங்கே போகின்றார்கள்…? என்று என்னிடம் அவன் கேட்கிறான்.

1.இவன் திருடன் என்று எனக்குத் தெரிகிறது
2.அவன் கேட்பவர்கள் நகைகளை அணிந்து கொண்டு செல்கின்றார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.
3.அப்போது… ஆமாம்… இந்தப் பாதையில்தான் செல்கின்றார்கள் என்று நான் சொன்னால் என்ன ஆகும்…?

இந்த இடத்தில் “நான் பொய்யே சொல்லக் கூடாது…” என்ற விரதத்தில் இருந்தேன் என்றால் நல்லவர்களைக் காப்பாற்ற முடியாதபடி ஆகி நேராகத் திருடனுக்கு வழி காட்டியது போல ஆகிவிடும்.

அவன் போனால் என்ன செய்வான்…?

அவர்கள் கழுத்தை அறுத்துவிட்டு போட்டிருக்கும் நகைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு போய்விடுவான்.

1.நான் என் தர்மத்தைக் காப்பாற்ற நினைத்தாலும் அந்த நல்லவர்களை எப்பொழுது காப்பாற்றுவது…?
2.காப்பாற்ற முடியுமா…? இல்லை.

ஓரு பெரிய கட்டிடத்தை நாம் கட்டும்போது பொய்க்கால் வைத்துத் தான் சிமெண்ட்டைப் போடுகின்றோம். அந்தப் பொய்க்கால் இல்லை என்றால் நம்மால் சிமெண்ட்டை வைக்க முடியாது.

ஆகவே ஒரு நல்லது செய்ய வேண்டும் என்றால் எதிலுமே அந்த வலுவான எண்ணம் வேண்டும். ஆக…
1.விஷம் இல்லை என்றால் சூரியன் இயங்காது.
2.விஷம் இல்லை என்றால் எந்த அணுவும் இயங்காது.

விஷம் இருந்தால் தான் நெகட்டிவ் பாசிட்டிவ் ஒரு இயக்கச் சக்தியாக வரும். “கரண்ட்” அப்படி இல்லையென்றால் அது இயங்காது.

ஆகவே எல்லாவற்றிலுமே இயக்கத்தின் தன்மையை நாம் சமப்படுத்த வேண்டும்.

இந்த மனித வாழ்க்கையில் நாம் எப்படி நடக்க வேண்டும் என்று ஞானிகள் சொல்லியிருக்கின்றார்கள். இப்பொழுது அதைத் தான் உங்களுக்குள் பதிவு செய்கிறேன்.

1.இதற்கு முன்னாடி எந்தத் துன்ப நிலைகள் இருந்தாலும் அதையெல்லாம் நீங்கள் நிறுத்திவிட்டு
2.மெய் ஞானிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் ஓங்கி வளரச் செய்வதற்குத்தான் இதை எல்லாம் சொல்வது (ஞானகுரு).

முக்காலமும் அறியவல்ல சக்தியை நாம் ஒவ்வொருவரும் பெற முடியும்…! – ஈஸ்வரபட்டர்

 

அகம் புறம் சூட்சமம் இவற்றின் உண்மைத் தத்துவத்தை உணராமல் புற நிலையைக் காணும் வாழ்க்கையின் சுழற்சி ஓட்டம் தான் இன்று உள்ளது. சூட்சமத்தால் வெளிப்படுத்தப்பட்ட பல தத்துவங்கள் மறைக்கப்பட்ட நிலையில் தான் இன்றளவும் உள்ளது.

மனித ஞானம் பக்குவம் பெற்று… வாழ்க்கை என்ற கூட்டமைப்பு நெறி முறை நிகழ்ந்த காலத்திலிருந்தே… மனித ஞானத்தின் வாழ்க்கையின் வழி முறைச் செயலுக்கு “பல பக்குவ ஆரோக்கிய நிலைகளைச் சித்தர்கள் காட்டிச் சென்றனர்…!”

சமைத்து உண்ணும் உணவைப் பச்சை வாழை இலையில் சூடாகப் படைத்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தியது சித்தர்கள் தான்…!

உணவின் உஷ்ணம் வாழையிலையின் மீது பட்டு அதிலிருந்து வெளிப்படும் ஆவிச் சத்துடன் உணவை உண்ணும் பொழுது
1.உணவின் சுவையும்…
2.அவ்வாவியிலிருந்து வெளிப்படும் இரசசத்தான அமில குணம் உடலுக்குள் சேர்ந்து
3.உணவின் செரிப்பிற்கும் உடல் ஆரோக்கியத் தன்மைக்கும் வழிகாட்டியாக உள்ளதன் நிலையை உணர்ந்து
4.அந்தப் பக்குவ முறையைச் சித்தர்கள் காட்டிச் சென்றனர்.

இதைப் போன்று வாழ்க்கை நெறிக்குப் பல உண்மைகளை உணர்த்திச் சென்றார்கள். அதைப் போன்ற சூட்சமத்தால் மறைக்கப்பட்ட பல நிலைகள் இன்றும் உள்ளன வாழ்க்கையில்…!

ஆதி சக்தியின் பரம்பொருளின் சக்தி நிலையைச் சிறிய இவ் இரண்டு கண்களைக் கொண்டு பரந்த கண்ணுக்கெட்டிய பலவற்றையும் பார்க்கும் சக்தி கொண்ட மனிதப் படைப்பு தான் நாம்…!

விஞ்ஞானத்தில்… இன்று ஓர் இடத்திலிருந்து ஒளி பரப்பபடும் உருவத் தொடர் காட்சிகளை இக்காற்றில் கலக்க விட்டுப் பல மைல்களுக்கு அப்பால் அதே உருவத்தின் செயலை அமிலச் சேர்க்கையின் உலோக அலைத் தொடரில் காணும்படி செய்கிறார்கள்.

அதாவது மின் அலையின் மோதலினால் எங்கோ தொலைவில் நடைபெறும் நிகழ்ச்சிதனை… காற்றலையில் கலந்து வரும் அந்த அலைத் தொடரை உருவமாக்கி இருந்த இடத்திலேயே பார்க்கச் செய்கின்றனர்.

இதைப் போன்ற ஞானத்தைக் கொண்டு
1.ஆத்ம தியானத் தொடரால் இவ் எண்ணத்தின் உந்தலை எதில் செலுத்துகின்றோமோ
2.அத்தொடரில் உள்ள நிலைகள் அனைத்தும்
3.புருவத்தின் மத்தியில் உள்ள எலும்பு கவன நரம்புகளில் எண்ணிய சுவாச மோதல் ஏற்பட்டவுடன்
4.எதை எண்ணித் தியான நிலை எண்ணம் செல்கின்றதோ
5.அங்கு நடக்கும் நிலையைத் தொலைக்காட்சியில் காண்பதைப் போன்று
6.பக்குவம் பெற்ற ஆத்ம ஞானத்தால் காணவும் ஒலி/ஒளி கேட்கவும் முடியும்.

ஆத்ம ஞானத்தால் முக்காலமும் அறியவல்ல சக்தியை ஒவ்வொரு ஆத்மாவும் பெற முடியும்…!

சென்ற காலம் நடந்தவை யாவையுமே இக்காற்றலையில் தான் கலந்துள்ளன. உணர்வின் எண்ணத்தைப் பின்னோக்கிய அலைத் தொடரில் செலுத்தப்படும் நிலைக்கொப்ப உயிரணு தோன்றிய காலம் தொட்டே மனித ஞான சக்தியால் எதனையும் காண முடியும்.

நிகழ் நிலையையும் எண்ணத்தைச் செலுத்தும் உணர்வின் மோதலினால் “ஞானதிருஷ்டி” என்று சித்தர்கள் உணர்த்திய நிலையால் நிகழும் காலத்தையும் அறியலாம்.

எதிர் கால நிலையை நாளை நடப்பதை இன்றெப்படி அறிய முடியும்…! என்ற வினா தான் இன்றைய செயலில் உள்ளது.

பிறப்பும் இறப்பும் ஆண்டவன் செயல்… காலதேவனின் கருணை…! என்ற எண்ணம் பக்தி மார்க்கத்தில் உணர்த்துகின்றார்கள்.

அதையே விஞ்ஞானின் அமிலச் சேர்க்கையின் நிலையை இயந்திரச் சாதனங்களின் துணையைக் கொண்டு கால நிலைகளின் மாற்றத்தையும் மண்டலச் சேர்க்கைக் காலங்களில் புள்ளி விவரங்களையும் வைத்து உணர்த்தத்தான் செய்கின்றனர்.

ஒரு இயந்திரத்தால் உணரக்கூடிய எதிர்கால நிலைகளை
1.ஆத்ம ஞான வலுக்கூட்டிக் கொண்ட ஞான சக்தியினால்
2.எதிர் காலத்தில் நடக்கும் நிலைகளை இன்றே உணரக்கூடிய உண்மை பெறும் நிலைய அடையலாம்.

“முக்காலமும் உணரும் பொற்காலமாக..” இவ்வாத்ம காலத்தைப் பக்குவப்படுத்துங்கள் “பொற்கோவிலாக..” ஆத்மாவின் வளர்ப்பில் எவ் ஈர்ப்பின் உணர்வும் மோதாமல் “புடம் போட்ட பொன்னாகப் பக்குவப்படுத்துங்கள்…”

ஈயம் பித்தளை செம்பு தங்கம் இவற்றில் திரவகத்தை விடும் பொழுது மற்ற உலோகங்கள் கரைந்தாலும் தங்கம் எப்படித் தனித்து நிற்கின்றதோ அதைப் போன்ற புடம் போட்ட தங்கமாக இவ்வாத்ம வலுவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

எக்காலமும் அறியவல்ல ஆற்றலும்… முக்காலமும் உணரும் சக்தி நிலையும்.. இவ்வாத்ம ஞானத்தால் பெறவல்ல சக்தியை.. இந்த உபதேசத்தின் சக்தியால் பெறும் ஜெப தியானத்தால்…
1.என் ஈர்ப்பின் வட்டத்தில் வழி வந்த
2.ஆத்ம தியானம் கொண்ட தம்பதிகள் ஆண் பெண் இருவரும் இணைந்து
3.என் சக்தி நிலையில் உணர்த்தப் பெற்ற உபதேசத்தின் உயர்வை இதைப் படிக்கும் ஒவ்வொரு ஆத்மாவும் வளர்த்து
4.தன் ஆத்ம தொடர்பு கொண்ட பல ஆத்மாக்களுக்கும் இந்த ஆத்ம தியானத்தின் உண்மைச் சத்தியத்தை உனர்த்தி
5.ஆதி பரம்பொருளின் சக்தியின் படைப்ப்பின் உயர்வுப் படைப்பை ஒவ்வொரு ஆத்மாவும் பெற்று
6.”சக்தியின் சக்திக்கே… ஆண் பெண் இனம் வளரச் சக்தி தாருங்கள்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

மாடு ஆடு இவை எல்லாம் நஞ்சின் சத்தைத் தன் உடலாக மாற்றிக் கொள்கின்றது. ஆனால் அசிங்கமான பொருள்களையும் பல தாவர இனங்களையும் உணவாக உட்கொள்கிறது.

அவைகளை உணவாக உட்கொண்டாலும் அந்த நஞ்சின் தன்மையைத் தன் உடலாக வலுவாக சேர்த்துக் கொள்கின்றது. ஆனால் அதே சமயம்
1.நஞ்சின் சத்தை உடலாக்கிக் கொண்டாலும்
2.நல்ல சத்தினை மலமாக மாற்றுகிறது.

உதாரணமாக விஷத்தை ஒருவர் உட்கொண்டு விட்டார் என்று வைத்துக் கொள்வோம். அதனால் உடலு முழுவதும் நஞ்சாக மாறுகின்றது.

அதற்கு எருமை மாட்டின் சாணத்தைக் கரைத்து விஷத்தைக் குடித்தவரின் பாதத்தை அதன் மேல் வைத்தால் அவர் உடலில் இருக்கக்கூடிய நஞ்சின் தன்மை கீழே இறங்கிவிடும்.

இது வைத்தியரீதியிலேயே இவ்வாறு உண்டு.

ஒரு விஷம் கொண்ட தண்ணீரில் மருந்துகளை அதிகமாகக் கொடுத்து அதனின் தன்மை அந்த உடலிலே விஷங்கள் பரவச் செய்தாலும் அவரைக் காக்க முடியும்.

உடனடியாக எருமைச் சாணத்தை எடுத்துக் கொண்டு இது கரைக்கச் செய்து
1.அவருடைய பாதத்தை அதன் மேல் வைத்து விட்டால்
2.பூமியின் நிலைகள் இருக்கும் இந்த காந்தப்புலன்
3.அதை இழுத்துவிடும்.

தாவர இனத்தில் இருக்கும் சத்தினை எப்படி இந்த மாட்டின் தன்மை உணவாக எடுத்துக் கொண்டதோ இந்த மாட்டின் உடலிலே இருந்த இந்தச் சத்து இது கரைத்தது போல்
1.இந்த மாட்டுச்சாணம் உடலிலுள்ள விஷத்தினை இழுத்துக் கவர்ந்து
2.பூமியிலே விட்டுவிடும்.

ஆகவே இதைப் போல ஒரு விஷத்தின் உணர்வின் சத்து எவ்வாறோ அதனின் நிலைகள் இதைச் செய்யும். இது தான் கூர்மை அவதாரம் என்பது.

நஞ்சின் இயக்க நிலைகளையும் அதை முறியடிக்கக்கூடிய ஆற்றல்களையும் அந்த ஞானிகள் கண்டுணர்ந்த பேருண்மைகளைக் குருநாதர் காட்டிய அருள் வழியில் இங்கே உணர்த்துகின்றோம்.

1.நஞ்சை இழுத்துத் தனக்குள் சேர்த்து சாணத்தை நல்லதாக்குகின்றது மாடு.
2.அந்தச் சாணத்தை நாம் மிதித்தால் நம் உடலிலுள்ள விஷத்தை இழுத்து நம் உடலை நல்லதாக்குகின்றது.

ஆண் பெண் அமில சக்தி தான் நம் பூமியின் சக்தியே…! – ஈஸ்வரபட்டர் சொன்னது

சரீரத்தைக் கொண்டு யோகாசனம் சில வித்தை விளையாட்டுக்கள் எல்லாம் செயல் புரிகிறார்கள். அவர்களின் அங்கக்கூறின் அமிலத் தன்மையே அவ் ஈர்ப்பின் எண்ண உணர்வின் வலுவான அணு வளர்ப்பினால்
1.சரீரத்தைப் பத்து நாட்கள் அல்லது பதினைந்து நாட்கள்
2.சுவாசத்தை அடக்கிய முறையிலேயே சில விந்தை புரிபவர்களும் உண்டு.

அதைப் போன்றே சரீர இயக்கத்தால் சரீரத்தைப் பல விந்தைச் செயலாக யோகாசனம் (GYMNASTICS) போன்ற வழி முறையில் செயல்படும் முறையும் இதன் தன்மைக்கு உகந்தது தான்.

நாட்டியம்… சங்கீதம்.. உடல் பயிற்சி… சில விளையாட்டு வழி முறைகள் இவற்றில் ஒவ்வொன்றிலுமே
1.எண்ணத்தின் உணர்வைக் கூர்மையாக்கி
2.எத்துறையின் வழிப்படி இச்சரீர இயக்கம் அதிகப்படியாகச் செயல் கொள்கின்றதோ
3.அதற்குகந்த அணு வளர்ப்பை இச்சரீரம் பெற்று
4.எடுக்கும் எண்ணத்தினாலேயே அவ்வமிலத்தைக் காந்த மின் அணு வளர்ப்பாக சரீரம் வளர்ச்சி கொள்கின்றது.

அதாவது… எண்ணத்தின் உணர்வைக் கூர்மையாக்கி… துரிதம் கொண்ட ஆர்வ உணர்வின் உந்தலுக்குகந்த வார்ப்பாகச் சரீரம் வழி வகுத்துக் கொள்கின்றது.

இத்தொடர் சரீர இயக்கத்தில் மட்டும் அல்லாமல்… தொழில் முறையிலும்… மற்ற கலைகள் ஒவ்வொன்றிலுமே… ஒரு மனிதன் தன் வாழ் நாளில்…
1.எண்ணத்தின் உணர்வு சுவாசத்தை எச்செயலுடன் ஒன்றிய சுழலில் வாழ்கின்றானோ
2.அவ்வலையின் வளர்ப்பைச் சரீர அணுக்களே வளர்ப்பதோடு மட்டுமல்லாமல்
3.அதே நிலை கொண்ட அமிலக்கூறின் ஆவி நிலை அமிலத் தொடர்பும்
4.இவ்வளர்ப்பின் தொடர்புடன் வளரும் அலைத் தொடர்பாக இவ் ஈர்ப்புடன் தொடர்ந்து வளர்கின்றது.

“இனம் இனத்துடன் சேரும்…” என்ற உண்மையின் தத்துவ உணர்வு இதன் அடிப்படையில் சொல்லப்பட்டது தான்.

ஆகவே இச்சரீர உணர்வின் எண்ணத்தைச் “செலுத்தும் வழி முறையைக் கொண்டு” வாழ்க்கையின் நடைமுறைச் செயலையே..
1.மனித சக்தியின் செயலை உயர்வின் வழியமைக்கச் செயல்படுத்தும் முறை அறிந்து
2.எண்ணத்தின் உணர்வை உயர்வு கொண்ட மகரிஷிகளின் தொடர்புடன் தன் ஞானத்தை வளர்த்து
3.சகல சித்தும் அறியும் ரிஷித் தன்மையின் வழி பெறலாம்.

சரீர உணர்வுடன் இந்த ரிஷித் தன்மை பெற ஆண் பெண் கூட்டு உணர்வு எண்ண வழி முறையின் வளர்ச்சியினால் தான் முடியும். சகல சித்துவும் பெறும் தன்மை அடைய வேண்டும் என்றால் வாழ்க்கையில் ஆண் பெண் எண்ணக் கூட்டு நிலை தேவைப்படுகின்றது.

ஒவ்வொரு சித்தரும் ஒவ்வொரு நிலையில் சக்தி பெற்றார்கள்.

ஞானச் சித்தின் வளர்ப்பு நிலைக்குச் சிவ சக்தி என்ற ஆண் பெண் அமிலக் கூட்டின் உணர்வுத் தொடர்பு அவசியம்.

தனித்த சக்தியினால் நான் செயல்படுவேன்…! என்பது வளர்ப்புத் தன்மையக் காட்டிலும் மலட்டுத் தன்மையான முனிவர்களின் நிலையை ஒத்துத்தான் தனித்து இயங்க முடியும்.

ஏனென்றால் ஆண் பெண் அமில சக்தி தான் நம் பூமியின் சக்தியே…!

அச்சக்தியின் தொடர்பு போன்றே பூமியில் உள்ள சகல நிலைகளும் இன்றளவும் வளர்ந்துள்ளதைப் போன்று ஞானத்தின் தொடருக்கும் இவ்வழி முறையைப் பெற்றிடுங்கள்.

நன்மை என்று விரும்புவதா…! தீமை என்று வெறுப்பதா…?

 

எப்படித்தான் இருந்தாலும்… காற்று அடிக்கிறது…! மழை பெய்கின்றது…! வெயில் அடிக்கிறது…! குளிர் அடிக்கிறது…! நான்கு காலமே இங்கே மாறி மாறித்தான் வருகின்றது.

இதைப் போன்றுதான் நாம் இன்று மகிழ்ச்சியாகச் சென்றாலும் போகும் போதே ஒருவன் வாகனத்திற்குக் குறுக்கே போகின்றான்… ஒருவன் கீழே விழுந்து விடுகின்றான்.
1.அதைப் பார்த்து வேதனைப்படுகின்றோம்
2.பயமாகி நடுக்கம் அடைந்து குளிர் போல் ஆகி விடுகின்றது.

இரண்டு பேர் சண்டை போடுகின்றனர். எரிச்சலான பேச்சுகளைப் பேசுகின்றனர்.
1.அதை நுகர்ந்த உடனே நமக்கும் எரிச்சல் வருகின்றது
2.வெப்பமாகிறது…!

அதே சமயத்தில் ஒருவருக்கொருவர் பரபரப்பான நிலைகள் கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றனர். அதை நாம் பார்க்கப்படும் பொழுது பெரும் புயலாக மாறுகிறது,
1.ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதைப் பார்க்கும் பொழுது
2.பெரும் புயலாக (காற்று) மாறி நம் எண்ணங்களைச் சிதறச் செய்து நம்மை ஓட வைக்கிறது.

இப்படி ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் வரக்கூடிய நிலைகள் ஒவ்வொன்றும் மாறி மாறி காலங்கள் மாறுவது போல் வந்து கொண்டே தான் இருக்கின்றது.

குளிர் அடித்தால் நாம் என்ன செய்கின்றோம்…? வெயில் அடித்தால் பரவாயில்லை என்கிறோம்.

அதே சமயத்தில் வெயில் அடிக்கும் பொழுது காற்றே அடிக்கவில்லை என்றால் “காற்று வந்தால் பரவாயில்லை…!” என்று நினைக்கின்றோம்.

காற்று அதிகமாக வந்தபின் “காற்று அதிகமாகி விட்டது… நம்மால் தாங்க முடியவில்லை…!” என்று சொல்கின்றோம்.
1.ஒன்றை நாம் நாம் விரும்புகிறோம்
2.ஆனால் வந்தபின் அதை வெறுக்கின்றோம்.

வெயில் அடிக்கின்றது… பொருளைக் காய வைக்க வேண்டும் என்றால் அந்த வெயில் தேவைப்படுகிறது. ஆனால் பொருளை காய வைப்பதற்கு முன் வெயில் அதிகமாகி விட்டால் “அப்பப்பப்பா… உடம்பெல்லாம் எரிகிறது…!” என்று சொல்கின்றோம்.

பொருளும் காய வேண்டும் தான்…! ஆனால் வேதனையும் படுகின்றோம்.
1.ஒன்று நன்மை செய்தாலும்… அதனின் நன்மைக்காக வேண்டி எண்ணுகின்றோம்
2.அடுத்த நிமிடம் அதனாலேயே வேதனைப்படுகின்றோம்.

துணி காய வேண்டும் என்றால் காற்று அடிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். காற்று அதிகமாகித் துணியைத் தூக்கி எறிந்து விட்டால் இப்படித் தூக்கி எறிந்து விட்டதே…! என்று வேதனைப்படுகின்றோம். ஆக… அதிகமாகக் காற்றடித்தால் எதுவாக இருந்தாலும் தூக்கி எறிந்து விடுகிறது.

இப்படி
1.எல்லாமே நமக்கு நன்மை செய்தாலும்
2.அதிலேயும் சில தீமைகள் இருக்கத்தான் செய்கின்றது…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒரு மின் மினிப் பூச்சி தன் ஒளிகளைப் பாய்ச்சும் பொழுது விஷ அணுக்கள் விலகி அந்தத் தாவர இனங்களை உணவாக உட்கொள்கின்றது.

அதைப் போன்று வாழ்க்கையில் எப்பொழுது வேதனையான உணர்வுகளை நாம் நுகர நேர்ந்தாலும் அதை நீக்க அருள் மகரிஷிகளின் உணர்வைத் தனக்குள் நுகர்ந்து இதை இணைத்துவிட வேண்டும்.

பின் எந்த வேதனையின் நிலை வந்தாலும் நமக்குள் வராதபடி அவருக்குள் வேதனைப்பட்ட நிலைகள் இருளை நீக்கிவிட்டு நமக்குள் அடுத்து பொருள் காணும் நிலைக்கு வரவேண்டும்.

மின் மினிப் பூச்சி தன் ஒளியைப் பாய்ச்சி விஷமானதை விலக்குவது போல் “மகரிஷிகளின் அருள் ஒளிகளை அந்த மின்னணுக்களை எடுத்து” நமக்குள் வரும் விஷத் தன்மைகளை ஒளியாக்க வேண்டும்

நீங்கள் எவ்வளவு பெரிய உயர்ந்தவராக இருந்தாலும் கோடிச் செல்வங்கள் இருப்பினும் பிறர் படும் துயரங்களைப் பார்க்காமல் இருக்க முடியாது.

ரோட்டில் நீங்கள் செல்லும் போது ஒரு பையன் தவறிக் கீழே விழுந்து விடுகின்றான். விழுந்தவன் உங்கள் பையன் இல்லை… என்று “கிடக்கிறான் விடு… என்று அப்படியே விட்டுவிட்டுச் செல்வீர்களா…? இல்லையே…!

அடப் பாவமே.., யார் பெற்ற பிள்ளையோ….! இந்த மாதிரி விழுந்து விட்டானே…! இரத்தம் வந்து விட்டால் இங்கே உங்களுக்குப் பட..பட.. என்று வந்துவிடும்.

உங்கள் நல்ல மனம் இருள் சூழ்ந்து விடுகின்றது. ஆக நீங்கள் தப்பா செய்தீர்கள்…?

இந்தப் படபடப்பு வந்தவுடனே என்ன நினைப்பீர்கள்.

அதே சமயத்தில் தன் பிள்ளைகள் வேகமாக வந்தால் “டேய்..டேய்…டேய்..! கீழே விழுந்துவிடாதடா…” என்று சொல்லத் தோன்றும்.

இரண்டு தடவை சொல்வீர்கள். மூன்றாவது தடவை சொல்வீர்கள். கீழே விழுவான்.

நான் நினைத்தேன்…! கீழே விழுவான் என்று… சொன்ன மாதிரியே விழுந்துவிட்டான்.

இந்த உணர்வின் வேகத் துடிப்புகள் இவ்வாறு இயங்குகின்றது.

இதைப் போன்ற தீமைகளை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் ஆழமாக இப்பொழுது பதியச் செய்கின்றேன்.

யாரை நீங்கள் நோயுடன் கண்டாலும் அந்த நோயின் தன்மை உங்களைப் பற்றிவிடாது அந்த மகரிஷிகளின் உணர்வை இணைக்கப்படும் பொழுது அந்த நோயின் சாரம் உங்களுக்குள் வராதபடி தடுக்க முடியும்.

அருள் மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து வளர்த்து உங்களுக்குள் தெளிவாக்கி உங்கள் எண்ணம் உங்கள் வாக்கு அவர்களைப் பார்க்கப்படும் பொழுது
1.உனக்குப் பிணிகள் இல்லை
2.நீ நலமாக இருப்பாய்…! என்ற இந்த உணர்வினை அதை எடுத்துப் பாய்ச்சுங்கள்.
3.அங்கே இருள் மாயும். ஒளிகள் தெரியும்.
4.அவர்கள் நோயும் நீங்கும்.

நடப்பதெல்லாம் “ஞானத்தைப் பெறச் செய்வதற்குத் தான்…!” – ஈஸ்வரபட்டர்

 

ஆத்ம வலுப் பெறுவது என்பது ஆண்டவன் அருளால் ஒரு நொடிப் பொழுதில் கிட்டிவிடுவது என்பதல்ல…!

இச்சரீரக்கூறின் உணர்வின் எண்ணத்தையே உயர் ஞான வழி முறைக்குச் செயல்படும் ஒவ்வொரு செயலுக்குமே செயலின் வழி முறையில் செலுத்தப்படும் எண்ணத்தில் உடல் ஏற்கும் உணர்வு நிலைக்கொப்பத்தான் செயல்படுத்த முடியும்.

உணர்வு நிலை என்பது…
1.சகல நிலைகளிலும் இவ்வெண்ணம் மோதும் பொழுது
2.சமமான சாந்த நிலையுடன் கூடிய எண்ணத்தின் பால்
3.அந்த உணர்வின் செயகையை உடல் நிலை ஏற்று வழிப்படுத்தும் நிலைக்கொப்ப
4.சகல சக்திகளிலும் சமமான சாந்த சக்தியைச் செயல்படுத்தும் வழி முறையினால் தான்
4.ஆத்ம பலத்தைக் கூட்டிக் கொள்ள முடிகிறது.

ஆத்ம பலம் பெற்ற… ஞானத் தன்மையினால் எண்ணத்தின் உணர்வைச் சாந்தப்படுத்தும் வழிச் செயலை “அவ்வாத்மாவே…” பிறகு செயல்படுத்தி வழி நடத்தும்.

சிறு சிறு துளிகள் சேர்ந்து தான் பெரு வெள்ளமாகின்றது. அதைப் போன்று ஒவ்வொரு செயலிலும் எண்ணத்தின் வழி முறையைச் செயல்படுத்தும் தனமை கொண்டு தான் ஆத்ம பலம் கூடி வலுவாகின்றது.

1.ஆத்ம பலம் பெற்று விட்டாலும்
2.வாழ்க்கையில் நடக்கும் எதிர் நிலை உந்தல்கள் பல மோதத்தான் செய்யும்.

பெரும் வெள்ளத்தில் எதிர்படும் குப்பைகள் எப்படி அடித்துச் செல்லப்படுகின்றனவோ அதைப் போன்றே ஆத்ம பலம் பெற்ற வாழ்க்கையில் எதிர்ப்படும்
1.உணர்ச்சிகளை உந்தக்கூடிய சில நிலைகள் ஏற்பட்டாலும்
2.வெள்ளத்தில் அடித்துச் செல்லும் குப்பைகளைப் போன்று
3.அது நம் ஆத்மாவுடன் கலக்காது.

பல காலமாக உழைத்துச் சம்பாதித்து வீடு கட்டும் பொழுது… வீட்டின் அஸ்திவாரத்தைப் பலம் கொண்டு கட்டியவுடன்… அதற்கு அழகு செய்வது கடினமல்ல…!

அப்படிக் கட்டப்பட்ட வீட்டில் ஆங்காங்கு ஏற்படும் துப்புரவு நிலைகள் சில செய்து கொண்டே தான் இருக்க வேண்டும்.

அதைப் போன்றே ஞானத்தால் சித்து கொண்ட ஆத்ம பலம் பெற்று இச்சரீரமுடன் வாழும் காலத்தில்
1.கட்டப்பட்ட வீட்டின் குப்பைகள் அண்டுவதைப் போன்றும்
2.காரைகள் உதிர்வதைப் போன்றும் சில நிலைகள் ஏற்படத்தான் செய்யும்.

அதைத் துப்புரவுபடுத்திக் கொண்டு தான் இருக்க வேண்டும்.

உடலுடன் கொண்ட வாழ்க்கையில் எதிர்ப்படும் யாவையுமே
1.நம் ஞானத்தை வளர்க்கவல்ல வழி முறையாக
2.ஆத்மாவின் செயலைக் கொண்டு வழி பெறும் பக்குவத்தை நாம் பெறல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

மனிதனின் வாழ்க்கையில் பிறர் படும் வேதனையை நாம் நுகர்ந்தோம் என்றால் அந்த வேதனையின் உணர்வுகள் நம் நல்ல குணங்களை அந்த வேதனை என்ற விஷம் இயக்கித் தெளிவாக்காதபடி நம்மை இருள் சூழச் செய்து விடுகின்றது.

அப்பொழுது சிந்தித்துச் செயல்படும் தன்மை இழக்கப்படுகின்றது. நல்ல சொல்களோ நல்ல பாதைகளோ நாம் சொல்லத் தவறி விடுகின்றோம்.

ஆக அந்த நிமிடத்தில் ஒரு நல்லதை நாம் செய்ய வேண்டும் என்றாலும்
1.நல்லதை நம்மால் சொல்ல முடியாது போய்விடுகின்றது.
2.நல்ல உணர்வுகள் நமக்குள் நினைவே இல்லாது போய்விடுகின்றது.
3.நல்ல காரியத்தைச் செயல்படுத்த முடியாது போய்விடுகிறது.

உதாரணமாக நான் புதிதாகத் தொழில் ஆரம்பிக்கப் போகிறேன் என்று வைத்துக் கொள்வோம். இந்த எண்ணத்தை வலுவாக்கிக் கொண்டு செய்யப்படும் பொழுது அதற்குண்டான எண்ணங்களை எடுத்துச் செயலுக்குப் போகின்றோம்.

ஆனால் செயலுக்குப் போகும் பொழுது ஒருவர் அசரீரி போல இடைவெளியில் வந்து
1.அவன் எல்லாம் செய்தான்…
2.ஆனால் நஷ்டமாகி விட்டான்…! என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டிருப்பார்கள்.

தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செல்லும் பொழுது இந்த உணர்வுகள் பட்டவுடன்
1.போகும் பொழுதே இப்படி எதிரொலி வருகிறதே என்ன ஆகுமோ…?!
2.இதை இணைத்துக் கொள்கின்றார்கள்.

வாழ்க்கைக்கு எப்படியும் தொழிலும் செய்ய வேண்டும். எடுத்த காரியத்தை நடத்த முயற்சி எடுக்க வேண்டும் என்று எண்ணினாலும் “இந்தச் சந்தேக உணர்வுகள்” கலந்து விடுகின்றது.

இப்படிக் கலந்து விட்டால் அதனின் துணையாக நீங்கள் போகும் பொழுது இந்த இக்கட்டான உணர்வுகளே அங்கே தோன்றும்.

ஆகவே இந்த உணர்வின் தன்மை தனக்குள் வரப்படும் பொழுது எண்ணங்கள் வலுப் பெற்றுவிடுகின்றது. அப்புறம் அந்த வியாபாரத்தை வைக்கும் பொழுதே தொழில் ஆரம்பித்தவுடன்
1.இது விற்குமா விற்காதா…!
2.வாங்குவார்களா வாங்க மாட்டார்களா…? இந்த எண்ணம் வரும்.
3.இந்த உணர்வுகள் தான் வெளி வரும்… இந்த மணங்கள் வந்துவிடுகின்றது.

இந்த எண்ணம் நம்மிடமிருந்து வெளிவந்த பின் என்ன ஆகும்…?

வாடிக்கையாளர்கள் நாம் வைத்திருக்கும் சரக்கைப் பார்ப்பார்கள்.

சரக்கை எடுத்துப் பார்க்கும் பொழுதே இந்த மனிதன் எடுத்துப் பார்க்கிறான்… என்ன சொல்லப் போகின்றானா…? இந்த உணர்வு ஓடும்.

அந்த வெறுப்பின் தன்மை வரப்படும் பொழுது “இது என்ன விலைங்க…” என்பார்கள்…?

“இது என்ன விலைங்க…” என்று சொல்லப்படும் பொழுது இது இன்ன விலை… என்று எடுத்தவுடன் ஆரம்பித்துவிடுவோம்.
1.நான் இதைப் பத்து ரூபாய்க்கு வாங்கி வந்தேன்.
2.அதில் ஐம்பது காசு தான் லாபம் வைத்திருக்கின்றேன்.
3.10.50க்குத் தருகிறேன்.

இப்படி உண்மையைச் சொல்லி நாம் விற்கலாம் என்று சொல்வோம். ஆனால் இப்படிச் சொன்னவுடன் அவர்கள் என்ன சொல்வார்கள்…?

“சரி… சரி… ஒன்பது ரூபாய்க்குத் தருகிறீர்களா…?” என்பார்கள்.

இப்படி… இந்த உணர்வுகள் என்ன செய்யும்…? 9 ரூபாய்க்குத் தருகிறீர்களா…! என்று வரும்.

இந்த உணர்வுகள் அங்கே பட்ட பின் வியாபாரம் எதை எண்ணி வந்தோமோ அதிலே “சந்தேகத்தை” இங்கே உருவாக்கிக் கொண்டேயிருக்கும்.

இதுவெல்லாம் நமக்குள் விளைந்த உணர்வுகளே நமக்குள் அணுக்களாக விளைந்து அந்த அணுக்களுக்கு உணவு தேடும் பொழுது இந்த உணர்வின் ஆன்மாக்கள் வரும்.

அந்த மாதிரி நேரத்தில் எதைச் செய்ய வேண்டும்…?

பிள்ளையார் சுழி போட்டு அவருக்கு இரண்டு அபிஷேகத்தையும் அர்ச்சனையும் செய்து விட்டு அருகம்புல்லையும் தேங்காய் வாழைப் பழத்தையும் கொடுத்துவிட்டுப் பார்த்தால் அந்த வினை இங்கே ஆகாது.

அதற்காகத்தான் விநாயகரை வைத்து நாம் எதை நமக்குள் வினையாக்க வேண்டும்…? வினைக்கு நாயகனாக எதை இணைக்க வேண்டும் என்றும் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

உயிரணு தோன்றிப் பல கோடிச் சரீரங்கள் எடுத்து இன்று நம்மை மனிதனாக உருவாக்கி மனிதனான பின் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி இன்றும் துருவ நட்சத்திரமாக ஒளியின் சுடராக வாழ்ந்தும் வளர்ந்தும் கொண்டுள்ளான் அகஸ்திய மாமகரிஷி.

நமக்குள் மகிழ்ச்சியாக உருவாக்கும் தன்மையை அந்த மகரிஷிகளின் சக்தியை நாம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

பரம்பரை நோயை நீக்கும் வழி

 

நம் குடும்பத்தில் மூதாதையர்களோ உடலை விட்டு பிரிந்து சென்றிருந்தாலும் அவர்களுடன் நாம் பழகி இருக்கும் பொழுது அவர்கள் உணர்வுகள் நம் உடலில் உண்டு.

அவர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்ற பின் பாசத்தின் வலிமையிலே நாம் ஈர்த்தோம் என்றால் அந்த ஆன்மாக்கள் நம் உடலுக்குள் வந்துவிடும்.

அவ்வாறு வந்தால்…
1.அந்த உடலில் ஏற்பட்ட நோய்களும் அவர் பேசிய புலம்பிய உணர்வுகளும் நம்மையும் புலம்ப வைத்து விடும்.
2.பின் நம் உடலிலும் அதைப் போன்ற சில நிலைகள் வந்துவிடும்.

அவருடன் பழகி ரொம்ப காலம் இருந்தாலும் ஒருவர் உடலுக்குள் போனாலும் மற்றொரு உடல்கள் அவர் உடலிலிருந்த நோய் சிறிதளவு இருக்கும். இருந்தாலும் அது பரம்பரை நோயாக விளையும்.
1.ஆஸ்மா நோய் இருக்கிறது என்றால் பரம்பரை நோயாக அடுத்த மக்களுக்கும் அது வந்து சேரும்.
2.இரத்தக் கொதிப்பு இருந்து அதன் வழி அவர் இறந்திருந்தால அது பரம்பரை நோயாக வரும்
3.சர்க்கரை சத்து இருந்தால் அது பரம்பரை நோயாக அடுத்தவர்களுக்கு வரும்
4.சரவாங்கி நோய் மற்ற எந்த நோயாக இருந்தாலும் இது போன்று பரம்பரையாக வரும்.

ஏனென்றால் அந்த உணர்வின் வேகம் துடிப்புகள் பழகிய உணர்வுகள் சேர்க்கப்படும் பொழுது அவர் இறந்தால் இந்த உடலில் அணுக்கள் பெருக்கப்பட்டு அந்த நோயின் வன்மையை இங்கே காட்டும்.

அதே சமயத்தில் கருவில் வளரும் குழந்தைகளுக்கும் கூட…
1.அந்தத் தாய் அது வேறு ஒரு குடும்பத்தில் இருந்து வந்தாலும் அந்தத் தாயின் கருவிலே சிசு வளரப்படும் பொழுது
2.இந்த உணர்வுகள் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தன் பரம்பரையின் கதைகளைச் சொன்னால் அந்த நோய்கள் வந்துவிடும்.

ஒரே குடும்பத்தில் ஒரே வம்சத்தில் சேர்ந்த அக்கா மகள்… தம்பி மகள்… இந்த மாதிரி இரத்த சம்பந்தம் உள்ளவர்களைச் சம்பந்தம் செய்யும் பொழுது “பரம்பரை நோயென்ற நிலைகளே வரும்…”

அந்நியத்தில் பெண் எடுத்து வந்தால் அவர்கள் உணர்வுக்கு ஒத்து வராது. ஆனால் அங்கே இந்தக் குழந்தைகளுக்குப் பரம்பரை நோய் வருவதில்லை.

1.ஆனால் அவர்கள் தாய் வழி இந்தப் பரம்பரை நோய் அங்கே இருந்தால் அதன் வழி இங்கே வந்து சேருகின்றது
2.ஆண் வழியில் இருந்தாலும் இதே மாதிரி ஒரு உடலின் உணர்வுகள் கலக்கப்படும் பொழுது அதன் வழி வந்துவிடும்.

தாத்தா பாட்டிக்கு அந்த நோய் இருந்தால் அந்த அம்மாவுக்கும் இருக்கும். அதன் உணர்வு வரப்படும் பொழுது தாய் கருவிலே இருக்கும் பொழுது குழந்தைக்கு வந்துவிடும்.

இதைப் போன்ற நிலைகள் எல்லாம் நாம் தவிர்க்க வேண்டுமென்றால் காலையில் துருவ தியான நேரங்களில் உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாக்களை அவசியம் விண் செலுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று முதலிலே நமக்குள் வலுவை ஏற்றிக் கொண்டு அதன் பின் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த எல்லா ஆன்மாக்களையும்
1.சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்…
2.அங்கே உந்தித் தள்ள வேண்டும்.

அந்த ஒளிக் கடலில் முன்னோர்களின் உயிராத்மாக்கள் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பிறவியில்லா நிலையை அடைய வேண்டும்… அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று இதைப் போல தினமும் அந்த ஆன்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கலாம்.

யார் உடலை விட்டுப் பிரிந்தாலும் உடனடியாக நினைவுபடுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருளை வலுப் பெறச் செய்து… உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்.

இந்த முறைப்படி செய்தால் பரம்பரை நோய்களை மாற்ற முடியும்.

பசி… தூக்கம்… கழிவு… காமம்… போன்ற உடலின் செயல் இயக்கத்தை ஆத்ம வலுவைக் கொண்டு மாற்றியமைக்க முடியும் – ஈஸ்வரபட்டர்

 

நம் பூமியின் இயக்கத்தில் எப்படி இருள் அதிகமாகவும் ஒளி குறைவாகவும் உள்ளதுவோ அதைப் போன்றுதான் மனிதனின் எண்ணச் செயலும் உள்ளது.

1.கடும் இருட்டிலும் சிறிது வெளிச்சம் ஊடுருவி ஒளி பாய்ச்ச முடியும்.
2.ஆனால் சிறிது வெளிச்சத்தையே மறைக்கக் கடும் இருட்டு தேவையாக உள்ளது.

நம் எண்ணத்தின் இருளை ஒளியாக்கும் ஆத்ம வலுவை நாம் பெற்றோமானால்
1.உடலின் எண்ண நிலைக்கொப்பச் செயல்படும் குணத்தையே
2.ஆத்மாவின் செயலாக உடலைச் செயல்படும் வகையில் செயலாக்கி
4.இருளில் இருந்து ஒளி பெறும் ஞான ஒளியாக
5.நம் ஆத்ம ஒளி பிரகாசிக்கும் சக்தியைப் பெறும்.

எண்ணத்தில் உள்ள இருள்கள் எவை…?

சலிப்பு… சோர்வு… பிறரிடம் உள்ள குறை காணல்.. புகழுக்காக ஏங்கும் ஏக்க நிலை… மரண பயம்…! போன்ற இருள் தன்மைகள் எல்லாவற்றையும் எண்ணத்தால் எடுக்கும் ஞான சக்தி கொண்டு நாம் மாய்க்க வேண்டும்.

குரோதம் வஞ்சனை என்ற தீய குணங்கள் வேறு. எண்ணத்தால் மறைத்துவிடும் இருள் குணங்கள் வேறு.

ஆத்ம ஞானத்தால் நாம் வளர்ந்து வரும் காலங்களில் சலிப்பின் சோர்வை அண்ட விடக் கூடாது.

சலிப்பின் ஏக்கத்தால் “உயர்வு கொள்வோம்” என்ற
1.உயர் ஞான வழிக்கு அந்த ஏக்க நிலையைச் செலுத்தி
2.அந்த ஏக்கத்திலேயே ஆத்ம வளர்ப்பை வளர்க்கவும் முடியும்.

ஆனால்… பிறர்பால் பொருளைப் பார்த்து ஏக்கப்படும் ஏக்கத்தால் மனித வாழ்க்கை அழிவிற்கும் செல்வதுண்டு.

குணங்களை வழிப்படுத்தும் ஞானத்தால் பெறவல்ல ஆத்ம பலத்தால் தான் இருள் என்ற நிலை நீங்கும். மேலும் ஒளியான ஆத்ம வலுவைப் பெற்ற ஆத்ம ஞானத்தால்… எண்ணிய எண்ண நிலைக்கொப்ப கடும் பசியையும்… உடல் சோர்வையும்… கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

அதே போல் உடலின் எந்தப் பாகத்தில் எந்த வகையான உபாதைகள் ஏற்பட்டிருந்தாலும்… இவ்வுடலின் செயலுக்கும்…
1.இவ்வாத்ம ஞானத்தால் மகரிஷிகளின் அலைத் தொடர்பில் தொடர்பு கொண்டு
2.அவர்கள் ஈர்ப்பலை வரிசையில் எண்ணத்தைச் செலுத்தி சுவாசம் எடுக்கும் பொழுது
3.எதை எண்ணிச் சுவாசம் எடுக்கின்றோமோ… அவ்வலை அமில உணர்வு இந்த உடலில் சாடி ஏற்படும் எண்ண நிலைக்கொப்ப…
4.”ஆத்ம பலத்தைக் கொண்டு” இவ்வுடலின் செயலையும் சீராக்கிடும் வழியை வகுத்துக் கொள்ளலாம்.

இந்த உடல் ஒரு அடுப்பு தான். இந்த உடலில் சமைக்கும் அமில உணர்வின் ஆவி நிலையை ஆத்மா பெற்று அதன் வழியில் ஆத்மா வாழ்வது என்பது “சாதாரண வாழ்க்கை நிலை…!”

ஆனால் வாழ்க்கையின் ஞான ஈர்ப்பு நற்குணத் தியானச் செயலால்… எண்ணத்தின் சுவாசத்தில் ஆத்ம பலம் பெற்ற ஒரு ஞானியினால்…
1.உடல் சமைப்பிலிருந்து ஆத்மா பலம் பெறும் நிலை மாறி
2.ஆத்மாவின் செயலுக்குகந்த சமைப்பாக இந்த உடலை இயக்க முடியும்.

பசி… தூக்கம்… கழிவு… காமம்… போன்ற உடலின் செயல் இயக்கத்தையே ஆத்ம வலுக்கூடிய ஞானியினால் ஆத்ம வலுவைக் கொண்டு மாற்றியமைக்க முடியும்.

அத்தகைய தன்மைக்கு… இச்சரீரக்கூறின் எலும்புகளை மின் காந்த வலுக் கொண்ட உறுப்புக்களாக உறுதி கொண்டிடும் செயலால்
1.சரீர உணர்வின் சாதாரண நிலையையே
2.எண்ணத்தின் இயக்க நிலைக்கொப்ப மாற்றியமைக்கும்
3.ஆத்ம வலுவைக் கொண்டு செயலாக்கத்திற்குக் கொண்டு வர முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

மின் மினிப் பூச்சி உடலிலிருந்து வெளிப்படும் உணர்வின் தன்மை அந்த ஒளிக்கற்றைகள் பட்ட பின் சிறு அணுக்கள் விலகிச் சென்றுவிடும். அதன் மூலம் இலையிலுள்ள அந்த நுண்ணிய அணுக்களை உணவாக உட்கொள்ளும்.

மின் மினிப் பூச்சி வந்ததென்றால் ஒரு தூக்கணாங்குருவி என்ன செய்யும்…?

இந்த மின் மினிப் பூச்சியைப் பிடித்துக் கொண்டு தன் கூட்டில் களிமண்ணை ஒட்ட வைத்து அதில் இந்த மின் மினிப் பூச்சியை ஒட்ட வைத்துக் கொள்ளும்.

எதற்காக…?

தன் கூட்டில் வெளிச்சத்திற்காக அதை ஒரு விளக்காக (LIGHT) வைத்துக் கொள்கிறது.

தூக்கணாங்குருவி இருக்கும் கூட்டுக்குள் பார்த்தால் களிமண் இருக்கும். பறந்து செல்லும் மின்மினிப் பூச்சியைக் கொத்தித் தன் கூட்டிற்குள் ஒட்ட வைத்துத் தன் குஞ்சுகளுக்கு வெளிச்சத்தைக் காட்டி வழி கொடுக்கின்றது.

குஞ்சுகள் இருட்டுக்குள் தவிக்காதபடி இந்த உணர்வின் தன்மை அஞ்சிடாமல் சப்தமிடாமல் இருப்பதற்காகவும் சப்தமிட்டால் மற்ற எதிரிகள் இங்கே வந்துவிடும் என்பதற்காகவும் இவ்வாறு செய்கின்றது.

தூக்கணாங்குருவி கனமான இடத்தில் அது கூடு கட்டாது.

ஏனென்றால் எலியோ மற்ற தன் எதிரிகளோ அந்த இடத்திற்குள் வந்துவிடாமல் இருப்பதற்காக மரத்தில் அந்த இலை நுனியில் வைத்துத்தான் தன் கூட்டைக் கட்டும்.

இலை நுனியில் ஏன் கூட்டைக் கட்டுகிறது…?

பலவீனமான இடத்தில் கூடு இருப்பதால் அங்கே வேறு எதிரிகள் வந்து உட்கார்ந்தால்
1.உடனே தெரிந்துவிடும்.
2.கூடு கட்டியிருக்கும் இடத்தின் வலு குறைந்துவிடும்.
3.இவ்வாறு அதற்குண்டான ஞானத்தைக் கொண்டு செயல்படுத்துகிறது.

தன் அறிவின் தெளிவு கொண்டு ஒரு மரத்தில் கூட்டைக் கட்டி மின்மினிப் பூச்சியை ஒட்ட வைத்து அதன் வெளிச்சத்தால் குஞ்சுகள் சப்தம் எழுப்பாதபடி செய்கிறது.

ஏனென்றால் வெளிச்சம் இல்லாத பொழுது குஞ்சுகள் சப்தங்களை எழுப்பும். அந்த உணர்வின் ஒலிகளைக் கேட்டுப் பூனையோ அதைப் போன்று வௌவாலோ வந்து குஞ்சுகளை இரையாக்கி கொள்ளும்.

வௌவாலெல்லாம் தன் உணர்வின் ஒலி கொண்டு குஞ்சுகளைக் கொன்று தன் உணவாகப் புசித்துவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து தன் குஞ்சுகளைக் காக்க குஞ்சுகளிடமிருந்து அந்த ஒலிகள் வராதபடி தடுப்பதற்காக அதனின் சப்தத்தை அமுக்க மின் மினிப் பூச்சியை ஒளியாக அங்கே வைக்கின்றது.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இயற்கையின் தன்மை வரப்படும் பொழுது
1.ஒவ்வொரு உயிரினமும் எவ்வாறு விளைந்தது?
2.அதனின் ஞானம் எப்படி இருக்கிறது?
3.”அதை நீ உற்றுப் பார்…” என்று காட்டினார் குருநாதர்.

தூக்கணாங்குருவி இரவிலே இரை தேடச் செல்ல முடியாது. அது வரையிலும் மின்னிக் கொண்டிருக்கும் அந்த வெளிச்சத்தைப் பார்த்துக் குஞ்சுகள் அப்படியே ஏங்கிக் கொண்டிருக்கும்.

அந்த நிலையிலேயே உறங்கிவிடும்.

குருநாதர் காட்டிய வழி கொண்டு இரவு முழுவதும் தூக்கணாங்குருவி என்ன செய்கிறது…? அதனின் எண்ணங்கள் எப்படி இருக்கிறது…? குஞ்சுகள் என்ன செய்கிறது…? என்று இரவு முழுவதும் பார்த்த்துக் கொண்டிருந்தேன்.

1.இதை அறிவால் அறியக் கூடிய நிலை இருந்தாலும்
2.அதை உணர்வால் எப்படி நீ அறிய வேண்டும்…? என்று குருநாதர் காட்டிய நிலைகள் தான் இது.

இன்றைய உலகில் நல்லதோ… கெட்டதோ… எல்லாமே “அதீத வேகமாக” இயக்கப்படுகிறது – ஈஸ்வரபட்டர்

 

சூரிய அலை ஈர்ப்பிலிருந்து (SOLAR) இன்றைய விஞ்ஞானத்திற்காகச் செயற்கை மின் காந்த அலையை மிகத் துரித இயக்கமாக இந்த நூற்றாண்டில் மனித விஞ்ஞானம் பிரித்தெடுத்துக் கொண்டே உள்ளது.

செயற்கை ஒளி காண… சூரிய சக்தியின் அலையை இந்தப் பூமிக்குத் துரிதப்படுத்தியதன் “செயற்கை இயக்க வேகம்…” உயிரினங்களின் ஈர்ப்பு வார்ப்பிலும் இக்காற்றலையின் தொடர்பினால் பெறவல்ல துரித இயக்கத்தினாலும்
1.இக்கலி மனிதர்களின் ஞான ஈர்ப்பும்
2.இயக்கத் துரிதமும் மிக வேகமாக முன்னேறியுள்ளது.

முன்னேறியுள்ளது…! என்பது இயற்கையின் அலை ஈர்ப்பானது உயிரினங்களின் சுவாச ஈர்ப்பிற்குத் துரிதம் கொள்ளும்… காந்த அணுக்களின் மின் ஈர்ப்பு நிலை… உயிரின வளர்ப்பு யாவற்றுக்குமே துரிதப்பட்டுள்ளது இயற்கை.

“செயற்கையின் செயலுக்காக” சூரிய அலையின் மின் காந்த அலைகளைப் பிரித்தெடுக்கும் இயக்கத்தால்… பூமியின் தன்மைக்கே அந்தக் குணம் கூடிவிட்டது.

அத்தகைய வேகத்தின் செயலினால்தான்… இந்நூற்றாண்டில் மனித விஞ்ஞானச் செயல்கள் அனைத்தும்… துரித வேக ஓட்டம் கொண்டு… மிகவும் வளர்ச்சியுற்று ஓடிக் கொண்டுள்ளது இன்று.

இத் துரித ஓட்டத்தையே சீர்படுத்தி வழிப்படுத்தும் ஞான ஈர்ப்பின் இயற்கைச் சக்திக்கு ஆத்ம தொடர்புடன் செயல்படுத்தினோமானால் ஆயிரம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வளர்ச்சியுற்ற நிலையைக் காட்டிலும் உயர் வளர்ச்சிக்குக் கொண்டு போகலாம்.

அதாவது இன்றைய (இக்கலியின்) மின் அலைச் செயலுக்கு உட்படுத்தப்பட்ட மின் சக்தியின் துரிதம் போன்றே
1.எண்ணத்தில் எடுக்கும் சுவாசத்தால்… ஞானத்தின் ஈர்ப்பு நிலையினால்…
2.இவ்வாத்ம வார்ப்பை ஒளி நிலையாக்கி…
3.உயர் ரிஷிகளின் தொடர்பில்… சித்து நிலை கொண்ட ரிஷித் தன்மைக்கு உட்படுத்த முடியும்.

அதே சமயத்தில் தீய சக்தியின் செயல்களும் இன்று பல நிலைகளில் துரிதம் கொண்டு மாந்திரீகத்தாரால் அவர்கள் அறியாத நிலையிலேயே அவர்களுக்குள் சில துரித ஆவேச அலை உணர்வு கொண்ட ஆவி ஆத்மாக்கள் அவர்கள் ஈர்ப்புக்குள் சிக்கிவிடுகின்றன.

அவ்வாத்மாவின் உந்தலின் சுவைக்கு உகந்த ஆகாரத்தை இவர்கள் தந்து… மந்திரவாதியின் (சூனியக்காரர்களின்) செயலுக்காக அவ்வாவிகள் எச்செயலையும் செய்விக்கும் தன்மையில் பல விபரீதச் செயல்களும் நடை பெற்றுக் கொண்டுள்ளன.

அதிலெல்லாம் சிக்காது… உண்மையின் இயற்கை ஆத்ம வலுவை
1.நாம் நற்குணங்களின் வார்ப்பாக இயக்கவல்ல இயக்கத்தால்
2.இவ்வாத்ம வலுவைக் கொண்டு துரிதமாக ரிஷித் தன்மை பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

1.சித்தி
2.சைவ சித்தி
3.சைவ சித்தாந்தம்
4.சித்தாந்தம்
5.ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது வேதங்களில் உபநிஷத்துக்கள் – பிரித்துக் காட்டும் நிலை கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல்.

ஒரு பொருளுடன் ஒரு உணர்வு இணைந்தால் அதனுடன் இணை சேர்த்த உணர்வின் தன்மை மாறுகின்றது.

இதைப் போலத் தான் சைவத்தில் அசைவம் என்ற நிலை எப்பொழுது உருவாகின்றது…?

கோபமான ஆத்திரமான வீரிய உணர்வுகள் நமக்குள் அதிகமாக வரும் பொழுது அது நம் உடலிலுள்ள மற்ற அணுக்களின் தன்மையைக் கொன்று புசிக்கின்றது.

கொன்று புசிக்கும் உணர்வுகள் நம் உடலுக்குள் விளைந்தாலும் நாம் மடிந்த பின் இதே அணுவின் தன்மை உடல்களிலிருந்து உருவாகி விடுகின்றது. அவ்வாறு உடலிலிருந்து வெளிப்பட்டதை சூரியனின் காந்தச் சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.

அதை யார் பற்று கொண்டு
1.அந்த மடிந்த மனிதனை மீண்டும் எண்ணும் பொழுது
2.அந்த மனித உடலில் விளைய வைத்த தீமையான உணர்வுகளை இவர் தனக்குள் நுகரப்படும் பொழுது
3.அந்த அசைவத்தை உணவாக உட்கொள்ளும் அணுவாக வருகின்றது.

இவர்கள் நல்ல குணங்கள் கொண்டிருந்தாலும் ஒரு மனிதன் பால் அன்பு பண்பு கொண்டிருந்தாலும்
1.அந்த மனித உடலில் இந்த வேதனை என்ற உணர்வுகள் உருவாகி
2.நல்ல அணுக்களைக் கொன்று புசித்த நிலைகள் இந்த உடலில் நோயாக மாற்றுகின்றது.

இந்த உடலில் நல்ல அணுக்கள் வளர்ச்சியற்ற நிலை வரும் பொழுது மற்றொன்றைக் கொன்று புசிக்கும் உடலாக உருவாக்கும் பொழுது நல்ல அணுக்களால் உருவான இந்த உடலும் நலியத் தொடங்குகின்றது.

இவ்வாறு அந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது தான் இது அசைவமாகின்றது.

தாவர இனத்தின் சத்தை நாம் உணவாக உட் கொண்டு அணுவின் தன்மை அடைந்தாலும் இந்த வேதனை என்ற விஷத்தின் தன்மை அணுக்களில் உருவாகிவிட்டால் என்ன ஆகின்றது…?

நம் உடலில் டி.பி. போன்ற நோய்களும் உடல் அரிப்பின் நிலைகளும்
1.உடலின் தசைகளை உணவாக உட்கொள்ளும் அணுக்கள் உருவாகி
2.தசைகள் சீழ் பிடித்து
3.நல்ல இரத்தங்கள் உருவாவதைத் தடைப்படுத்துகின்றது.

அதே சமயத்தில் இரத்த ஓட்டங்களைச் சீராக இயக்காதபடி அதில் வரும் உணர்வின் தன்மைகள் உடலை உணவாக்கும் நிலையாக உணவாக உருவாகும் அணுக்களை இடைமறித்து வெள்ளணுக்கள் அது உணவாக உட்கொள்ளத் தொடங்குகின்றது.

இவ்வாறு வெள்ளை அணுக்களின் தன்மை அதிகமாகி விட்டால் நீரின் சத்தாக மாற்றுவதும் சுவையின் இனிப்பாகத் (குளுகோஸ்) தனக்குள் வரும் பொழுது
1.கரையும் தன்மை கொண்டு
2.எதிலே கலந்தாலும் நீராக வடித்து விடுவதும்
3.இதைப் போன்ற உணர்வின் அணுக்கள் அது மாறிவிடுகின்றது.

வேதனையான நிலைகளை நாம் அதிகமாக எடுத்துக் கொண்டால் இந்த விஷத்தின் தன்மை ஊடுருவப்படும் பொழுது நம் உடலில் உள்ள அணுக்கள் சீராக இயக்கவில்லை என்றால்
1.நம் உடலில் இரத்தத்தை உருவாக்கும் அணுக்களை மடியச் செய்து
2.உடல் முழுவதும் நீராக மாற்றிவிடுகின்றது.

பார்த்தால்… “இரத்தம் காணவில்லையே…!” என்று இதற்காக செவ்வணுக்களை உருவாக்கும் உணர்வின் அணுக்களை மற்றொரு உடலிலிருந்து இந்த உடல்களுக்கு விஞ்ஞான அறிவு கொண்டு மாற்றி இதை உருமாற்றி செவ்வணுக்களை உருவாக்குகின்றார்கள்.

ஆனால் அதே சமயத்தில் அடிக்கடி அந்த இரத்தங்களை இங்கே கொடுத்தால் தான் அது வளரும் தன்மை வருகின்றது.

அதற்குள் இந்த உணர்வின் தன்மை வளர்ந்து கொண்டு மற்ற உணர்வின் அணுக்களை உருவாக்கி அந்த உடலை நலமாக்கும் தன்மைகள் விஞ்ஞான அறிவால் வருகின்றது.

இதைப் போலத்தான் மெய் ஞான அறிவு கொண்டோரும்
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகளைத் தனக்குள் எடுத்து
2.தீமையான உணர்வின் அணுக்களைச் சமப்படுத்தி
3.அந்தத் தீமையின் உணர்வுகளை “ஒளியாக மாற்றும் அறிவின் ஞானமாக” மாற்றினார்கள்.

அதைத்தான் அன்று சைவ சித்தாந்தத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த மகரிஷிகளின் உணர்வுகள் தன்னுடன் ஒன்றிய நிலைகள் அனைத்தையும் ஒளி கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் அணுக்களாக மாற்றி விண்ணுலகில் வாழ்ந்து ஒளிர்ந்து கொண்டுள்ளார்கள். பேரொளியாக உமிழ்த்திக் கொண்டுள்ளார்கள்.

மின் மினிப் பூச்சியைப் பார்க்கின்றோம்.

அது தன் சுவாசத்தை எடுக்கப்படும் பொழுது அந்த உணர்வின் அலைகள் மூச்சலைகளாக மாறும் பொழுது
1.அதற்குள் இருக்கக்கூடிய கந்தகம் போன்ற நிலைகள்
2.உராயப்படும் பொழுது அது மின்னித் தனக்குள் வெளிச்சமாகி ஒளிக்கற்றைகளை உமிழ்த்துகின்றது.

இதைப் போன்று தான் நம் ஒவ்வொரு உணர்வின் அணுக்களிலேயும் அந்த மகரிஷிகளின் ஆற்றலை இதனுடன் இணைக்கப்படும் பொழுது என்ன ஆகும்…?

நமது வாழ்க்கையில் எண்ணங்கள் இருள் சூழும் பொழுது அந்த இருளிலிருந்து வெளிப்படும் நிலைகளை
1.மகரிஷிகளின் ஒளியின் தன்மை கொண்டு (இருளுக்குள் இந்த ஒளியைப் பாய்ச்சும்போது)
2.நமக்குள் இருக்கும் இருள் சூழ்ந்த நிலையை நீக்கிவிட்டு
3.உட்பொருளின் தன்மையை நாம் அறியும் சக்தியாக வரும்.

ஆகவே நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடிப் பொழுதும் அந்த மகரிஷிகளின் ஆற்றலை இணைக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

திடீரென்று நம்முடைய உணர்ச்சிகள் மாறி அதைக் கட்டுப்படுத்த முடியாது போவது ஏன்…?

 

உதாரணமாக நம்மைக் கோபித்தவனின் உணர்வை நாம் பதிவாக்கினால் அது ஒரு ஸ்டேசனாக அமைகின்றது
1.அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வலைகள் அங்கு இருக்கின்றது… நமது உணர்வும் அவனிடம் இருக்கின்றது.
2.என்னை இப்படி மோசம் செய்தான் என்று அவனை எண்ணினால் அந்த அலைகள் வரும்.

அதே நேரத்தில் அந்த உணர்ச்சிகள் என்ன செய்கிறது…?

அந்த உணர்ச்சிகள் நமக்கு ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது நம்மை அறியாமலேயே தவறு செய்ய ஆரம்பித்து விடுகின்றோம் இதைப் போன்று உலகில் எத்தனையோ உணர்வுகள் நம்மை ஒவ்வொரு நிமிடமும் இயக்குகின்றது.

1.ஒரு விபத்தை நேரடியாகப் பார்க்கின்றோம்… அது ஒரு ஸ்டேஷன் ஆக அமைந்து விடுகின்றது
2.இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள்… ஆத்திரமாக அது பதிவாகி ஒரு ஸ்டேஷன் ஆகிவிடுகிறது
3.ஒருவன் ஒருவனைக் கடுமையாக மிரட்டிச் செல்கின்றான்… அந்த அலைகள் இங்கே இருக்கின்றது… பதிவாகி ஒரு ஸ்டேஷனாக அமைகின்றது
4அந்த உடலிலிருந்து வந்த அலைகள் இங்கே இருக்கின்றது… அழிவதில்லை.

அவனுக்குள் விளைந்திருக்கின்றது… அவரிடம் இருந்து வெளிவருகிறது. நமக்குள்ளும் பதிவு இருக்கிறது. அந்த அலைகளை நுகரச் செய்கிறது அது அழிவதில்லை.

ஆனால் அதை அழிக்க வேண்டுமா இல்லையா…!

இது எல்லாம் நமக்குள் இருக்கும் போது என்ன செய்கின்றது…? நாம் சோர்வடையும் நேரத்தில் எல்லாம் காரமான உணர்ச்சி கொண்டு நம்மை இயக்குகின்றது.

1.திடீரென்று நமக்குக் கோபம் வரும்.
2.அந்த நேரத்தில் எதை எடுத்தாலும் அந்த வேகம் வரும்.

பெண்கள் வேலை செய்யும் போது பார்க்கலாம். காயை நறுக்கி மெதுவாகப் போட்டுக் கொண்டிருப்பார்கள். சோர்வடைந்த நேரத்திலே காயைத் தூக்கி எறிவார்கள்.

அதே போன்று பலகாரம் சுட்டுக் கொண்டிருந்தால் வித்தியாசமான உணர்வுகள் வந்தது என்றால் வடையை சட்டியிலே மெதுவாகப் போடுவதற்கு பதில் டப்… என்று போடுவார்கள்.

எண்ணெய் மேலே தெறித்துவிடும்.

இதை எல்லாம் செய்வது எது…? நாம் நுகர்ந்த உணர்வுகள் தான்…!

இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் நாம் அதை அடக்கப் பழக வேண்டும் அப்போது அந்த உணர்வுகள் அது நம்மை இயக்காது.

ரேடியோ டிவி ஸ்டேஷன்களில் சந்தோஷமாக பேசியதை ஒலி பரப்பு செய்கிறார்கள் என்றால் அதைக் கேட்கின்றோம்… பார்க்கின்றோம்.

ஒரு சில நேரங்களில் காரசாரமான உணர்வின் உணர்ச்சிகள் இன்னொரு அலைவரிசையில் வருகிறது என்றால் இதே அலைவரிசையில் சேர்ந்து வரப்படும் பொழுது என்ன நடக்கிறது…?

ஏரியல் அல்லது ஆண்டென்னா மூலம் தான் வருகின்றது.

அலைவரிசை அதிகமாக வந்து விட்டதென்றால்… வரக்கூடிய அதிர்வு அதிகமான பின் ஜிர்… என்று சத்தம் போடும். அலைவரிசையில் வரும் பொழுது எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையில் வந்தாலும்
1.எலக்ட்ரிகல் என்று அந்த உணர்வலைகள் வரும்பொழுது எலக்ட்ரிக்கின் (நம் வீட்டில்) துணை கொண்டு தான் இயங்குகின்றது.
2.அதன் தொடர்புடைய ஏரியலின் நிலைகளில் வந்தாலும் இதனுடன் எர்த் (EARTH) ஆனபின்
3.இன்னொரு ஸ்டேசன் வலுவான நிலைகள் ஆன பின் அதை இழுத்து அந்த அதிர்வுகளையே (கர்… புர்… என்ற சப்தமாக) காட்டுகின்றது.

அதே போல் தான் நம் உயிர் எலக்ட்ரிக்காக இயக்கினாலும் ஒரு எதிர் உணர்வான எலக்ட்ரிக்கை அந்த எலக்ட்ரானிக் ஆக (உணர்ச்சியாக) மாற்றப்படும் போது
1.நம்முடைய சிந்தனையைக் குறைக்கச் செய்து
2.நம்மை அறியாமலே தவறான சொற்களை இயக்கி
3.தவறான செயல்களைச் செய்ய வைக்கிறது… நம்மை இயக்க வைக்கின்றது.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா…!

அக்கால வழக்கங்களையே வலியுறுத்தாமல் இன்றைய கலி காலத்திற்கொப்ப ஆத்ம வலுவைக் கூட்ட முடியும் – ஈஸ்வரபட்டர்

 

ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் நாம் எடுக்கும் சுவாசத்தால் ஆத்ம அலையின் தொடர்பு கொண்டுதான் சரீர இயக்கச் செயலினால் ஆத்மாவின் வலுவும் கூடிக் கொண்டே உள்ளது.

இயற்கையின் மாற்றக் குணங்களும்… உருவாகும் ஒவ்வொரு சக்தியுமே…
1.நொடிக்கு நொடி மாற்ற உராய்வு வளர்ப்பு தன்மையில் தான் மாற்றமும் வளர்ப்பும்
2.சுழற்சி ஓட்டத்தில் எல்லா வகை குண வளர்ப்பு முறையிலும் வளர்ந்து கொண்டுள்ளது.

காட்சி:-
அடர்ந்த காட்டுப் பகுதியில் மேடான மலைப் பகுதி தெரிகிறது. அதிலே மலையும் பாறைகளும் தெரிகிறது. மலையும் பாறையும் சேர்ந்து இருந்தாலும் ஓரிடத்தில் “மிகப் பெரிய பாறை ஒன்று” நிற்பதைப் போன்றும் தெரிகின்றது.

பிறிதொரு இடத்தில் அழகான குளமும் அக்குளத்தின் நீர் பாசி படிந்த கிளிப் பச்சையும் நிறம் போலவும் அப்பச்சையின் நிறம் மாறி மாறி கரும் பச்சையைப் போலவும் அதைச் சுற்றிச் சுற்றி மேலும் சில செடி கொடிகள் வளர்வதைப் போன்றும் தெரிகிறது.

பிறிதொரு இடத்தில் ஏற்றம் இறைக்கும் கிணறு இருக்கின்றது அதிலே நீர் உயர்ந்து குறைந்து இருப்பதைப் போன்றும் ஆனால் நீரின் நிறம் தெளிவு கொண்ட நீராகவும் காட்சியில் தெரிகின்றது.

இதன் விளக்கம் என்ன…?

பூமியின் பிடிப்புள்ள பாறைக்கும் அதற்கு மேல் பிடிப்பற்ற… அதாவது
1.பூமியின் வளர்ப்பு நிலையிலிருந்து மாறி
2.ஒரு பாறையின் மேல் ஒரு பாறை நிற்கின்றது என்றால்
3.அப்படி நிற்கும் நிலை எப்படி ஏற்படுகின்றது…?

பூமியின் வளர்ப்புப் பிடியுடன் வளரும் பாறைகள் இப்பூமியில் ஏற்படும் பிரளய காலங்களில்
1.சில மண்டல ஓட்டங்களின் சேர்க்கைக் காலங்களிலும்
2.பூமி ஈர்க்கும் அமில மாற்றத்திலும்
3.பூமி ஈர்த்து வெளிக் கக்கும் உஷ்ண அலையின் அமில வளர்ப்பில் அந்தந்த இடங்களில் வளரும்
4.கனி வளங்களுக்கும் கல் மண் இவற்றின் வளர்ப்பு நிலைகளுக்கும்
5.அதற்குக் கிடைக்கப் பெறும் ஊட்டச் சத்து மாறுபட்டவுடன்
6.பழக்கப்பட்டு எடுத்த வளர்ப்பு நிலை குன்றிய நிலையில் அக்கல்களில் சில வெடிப்பு நிலைகள் ஏற்பட்டு விடுகின்றது.

ஆகவே வளர்ந்த நிலையில் அதனுடைய சக்தி கிடைக்காமல் தடைப்பட்ட பின் அதன் தன்மை அதே நிலையிலேயே வெடிப்புப் பெற்று கீழிருந்து வளரும் பாறையின் மேல்… இப்பாறைகள் கரடு முரடாக… மலைகளில் ஒன்றுக்கு மேல் தனித் தனிப் பாறைகளாக உருண்டு நிற்கின்றன.

ஆனால் பூமியின் பிடிப்புடன் வளரும் பாறை மாறு கொண்ட வளர்ப்புடனே வளர்ந்து கொண்டுள்ளது.

நீரின் நிலை பாசி படர்ந்து வண்ணங்கள் மாறி தெரிந்ததன் நிலையும் இதைப் போன்றே ஒவ்வொரு நொடிக்கும் மாறும் உஷ்ண வெக்கையின் ஆவி நிலைக்கொப்ப மாற்றத் தன்மைகள் வருவதால் தான்.

இத்தகைய இயற்கையின் உண்மைகளை எல்லாம் எப்படி இதைப் போன்று அறிகின்றோமோ அதைப் போன்று தான் வளரும் மனித ஆத்ம வளர்ப்பிலும் மாற்றங்கள் உண்டு.

இப்பூமியின் பிடியுடன் வாழும் தன்மையில்… மாறி மாறி வளர்ந்து கொண்டுள்ள இயற்கையின் சுழற்சியில்… ஒன்றை ஒத்த தன்மையில் ஒன்றில்லாத உலகச் சுழற்சி நிலையில்
1.பல கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த மனிதனின் வளர்ப்பு ஞானமும்
2.பத்தாயிரம் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த சித்தர்கள் பெற்ற ஞான சக்திக்கும்
3.இன்றைய வளர்ந்த கலியின் ஆத்ம ஞான சக்திக்கும் மிக மிக மாறுபாடுகள் உண்டு.

இன்றைய விஞ்ஞான காலத்திலும்
1.நம் செயலும் இயற்கையுடன் ஒன்றிச் சென்றுதான் ஞான சக்தி பெறவேண்டும் என்ற எண்ணத்தின் ஈர்ப்பைச் செலுத்தி
2.ஆசார அனுஷ்டானங்களை வலியுறுத்தி வகைப்படுத்தித்தான் எண்ணத்தைச் செலுத்தி வழி பெறவேண்டும் என்று உணராமல்
3.இக்கலியின் காலத்தில் மனித ஈர்ப்புத் துரித அறிவாற்றலின் சக்தியை
4.இக்கால நிலையின் சுழற்சியுடன் கலந்துள்ள தன்மையிலிருந்தே
5.அவரவர்களுக்கு அமைந்த வாழ்க்கையின் வளர்ப்பில் ஒவ்வொரு செயலிலுமே உயர்வின் ஞானத்தைச் செலுத்தி
6.ஆத்மாவின் வலுவுக்கு வலுக் கூட்டும் வழி முறையை வகுத்துக் கொள்ளுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

எம்மிடம் நல்ல வாக்குகளை வாங்க வருகிறார்கள்.

அதை யாம் இலேசாகக் கொடுத்தாலும்… அதை எளிதில் பெறச் செய்தாலும் கூட உங்களால் அது முடியவில்லை.

அங்கிருந்து வந்து சாமியிடம் (ஞானகுரு) உபதேசம் கேட்பதற்காக வருகிறோம். உபதேசம் கேட்டு முடிந்த பிறகு சாமியிடம் ஆசி கேட்போம் என்று இல்லை.

ஏனென்றால் வந்தவுடன் ஒரு முறை ஆசி வாங்க வேண்டும். இரண்டாவது முறை இங்கு வந்து ஆசி வாங்க வேண்டும். ஆசீர்வாதம் வாங்கி விட்டால் சரியாகப் போகும் என்று தான் நினைக்கிறார்கள்.

அந்த ஆசீர்வாதத்தைக் காட்டிலும் உபதேசம் செய்வதை முழுமையாகக் கேட்டுணர்ந்து… அதன் பின் வரிசையில் நின்று கேட்கும் போது
1.மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் பரவ வேண்டும்
3.எங்கள் உடலில் உள்ள நோய்கள் நீங்க வேண்டும்
4.எங்கள் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் நீங்க வேண்டும்
5.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பத்தின் மீது படர வேண்டும்
6.நாங்கள் எல்லோரும் மன பலம் பெற வேண்டும்
7.எங்கள் விவசாயம் நன்றாக இருக்க வேண்டும்
8.நாங்கள் ஆரம்பித்த தொழில் நன்றாக இருக்க வேண்டும்
9.என் பிள்ளைகளுக்குச் சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டி வந்தீர்களானால்
10.இந்த வாக்குகளை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்ய முடியும்.

பிள்ளைகளுக்குக் கல்யாணம் ஆக வேண்டும் என்று எண்ணிக் கேட்கலாம். அதற்குள்ளேயே நான்கு ஐந்து கோரிக்கைகளுடன் வரக் கூடாது. நான்கு ஐந்து வாக்குக் கொண்டு வந்தால் அத்தனையும் FAIL தான்.

காரணம் பெண்ணிற்கு நல்ல வரன் வர வேண்டும், சீக்கிரம் திருமணம் நடைபெற வேண்டும் என்று கேட்டால் அந்த பெண்ணிற்கு சீக்கிரம் திருமணம் நடக்கும்.

“பத்திரிக்கையைக் கொண்டு வாருங்கள்…” என்று வாக்கைப் பதிவு செய்கிறோம்.

பதிவு செய்தபடி நீங்கள் எண்ணி எடுத்தால் அதை நீங்கள் திருப்பிக் கொண்டு வந்தால் சீக்கிரமாகவே அந்தத் திருமணம் நடக்கும். ஏனென்றால் யாம் ஜெபித்த இந்த உணர்வின் ஆழமான சத்தான நிலைகளை “ஒருமுகமாகப் பதிவு செய்கிறோம்.”

அப்பொழுது நீங்கள்… சரி…! என்ற நிலையில் அதே மகிழ்ச்சியோடு போக வேண்டும்.

இந்த வாக்கை முதலில் வாங்கிக் கொள்வார்கள்.

ஆனால் அடுத்தாற்போல் வீட்டில் கஷ்டமாக இருக்கிறது பணத்திற்கே கஷ்டமாக இருக்கிறது என்பார்கள்.

சரி… “அதுவும் நடக்கும்” என்று யாம் சொல்வோம்.

பிறகு என் பையன் எப்பொழுது பாத்தாலும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறான். பக்கத்து வீட்டுக்காரர்கள் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்று வரிசையாக “அடுக்கிக் கொண்டே இருப்பார்கள்”.

1.நாம் எதன் அடிப்படையில் வருகிறோமோ… “ஒன்று தான்”.
2.வாக்கிற்கு வன்மை.

அங்கிருந்து வருகிறீர்கள் என்றால் அதில் முக்கியமான ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும், எங்கள் குடும்பத்தில் உள்ள கஷ்டம் எல்லாம் நீங்க வேண்டும். மகரிஷிகளின் சக்தியால் தொழில் வளமும் செல்வமும் பெற வேண்டும் என்று எண்ணினால் “இந்த ஒரு வாக்கில் எல்லாமே நடக்கும்”.

செல்வம் வந்தால் உங்கள் கஷ்டத்தை நிவர்த்தி செய்துவிடலாம்.

ஆனால் அதற்கு இப்படி நல்ல வாக்குகளைப் பெறக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தாலும் கூட… அதை ஏற்றுக் கொள்ள சமுதாயத்தில் இடம் இல்லை.

எதைச் சொன்னாலும் சாமியிடம் ஒரு ஐந்து முறையாவது ஆசிர்வாதம் வாங்கினால் தான் அது நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறார்கள்.

1.சாமி வாக்கை ஏற்று அந்த ஒரு வாக்கு இருந்தாலும் போதும்.
2.இரண்டாவது ஒரு முறை பதிவு செய்து… தியான மண்டபத்திற்குள் வந்து தியானித்து
3.சாமி சொன்ன வாக்கு நிறைவேற வேண்டும்.
4.எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்
5.என் குழந்தைக்குச் சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என்று எண்ணினால் போதும்.

“திருமணம் நடக்கும்” என்று சொல்லி வாக்கினைக் கொடுக்கிறேன்.

அடுத்துப் பணத்திற்குக் கஷ்டம் என்பார்கள். திருமணம் நடக்க வேண்டும் என்று கேட்பார்கள். ஆனால் அவர்களே இரண்டாவது “பணம் இல்லையே…” என்பார்கள்.

இதெல்லாம் அவர்களே இதற்குத் தடை விதிப்பதாகும்.

இது போன்ற நிலைகளை விடுத்துத் திருமணம் நடக்கும்…, பத்திரிக்கை கொண்டு வாருங்கள்…! என்று சொன்னால் அதற்கு வேண்டிய வழிகள் நடக்கும்.

1.வாக்கு சாதாரணமானது அல்ல.
2.பல லட்சம் கொடுத்தாலும் இந்த மாதிரியான வாக்குகள் உங்களுக்கு அமைவது கடினம்.

அந்த வாக்கை நீங்கள் பதிவு செய்து கொண்டீர்களானால் அது உங்களுக்கு நன்மை செய்யும்.

ஒருவர் திட்டுவதையும் வேதனைப்படுவதையும் பதிவு செய்கிறீர்கள். அவர்களை நினைக்கும் போதெல்லாம் உங்களுக்குக் கோபம் வருகிறது. வேதனை உங்களுக்குள் பதிவாகிறது. அது உங்களுக்குள் விளைகிறது.

இதைப் போலத்தான் சாமி அன்று என் பிள்ளைக்குத் திருமணம் நடக்கும்… நல்ல வரன் கிடைக்கும்…! என்று சொன்னார்கள் என்று எண்ணி…
1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என் குடும்பத்தில் அது படர வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் என் மகளுக்கு நல்ல வரன் வர வேண்டும்,
3.அந்தக் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். அது குடிபுகும் இடத்தில் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எடுத்துப் பாருங்கள்.

அது எவ்வளவு பெரிய உண்மை என்று நீங்கள் பார்க்கலாம்.

யாம் கொடுத்த வாக்கும் உங்கள் எண்ணமும் உங்கள் நினைவும்
1.உங்களை எப்படிக் காக்கிறது…?
2.உங்களுக்கு நல்ல வழியை எப்படிக் கொண்டு வருகிறது…? என்பதை
3.நீங்கள் சிந்தித்துப் பார்த்தால் தெரியும்.

ஏனென்றால் நாம் பல முறை சொல்கிறோம். உங்கள் வாழ்க்கையிலே எப்பொழுதும் “சாமி சொன்ன வாக்கு நிறைவேறும்” என்று எண்ணினீர்கள் என்றால் அது நிறைவேற்றிக் கொண்டே இருக்கும்.

அதைப் பதிவு செய்த பிற்பாடு… சாமி அன்றைக்கு வாக்குக் கொடுத்தார். அது எங்கிட்டு…? என்று விட்டீர்கள் என்றால் போய்விட்டது.

ஒரு விதையை ஊன்றிவிட்டோம் என்றால் அதற்குத் தகுந்த தண்ணீர் ஊற்ற வேண்டும். அந்தந்தக் காலத்திற்குத் தகுந்தாற் போல் உரத்தையும் போட வேண்டும்.

அது போலத் தான் சாமி சொன்ணார்கள். எப்படியும் பெண்ணிற்குத் திருமணம் நடக்கும்… நல்ல வரன் வரும்…! என்ற உணர்வை மட்டும் வைத்திருந்தால் போதும்.

1.ரொம்பச் சீக்கிரமும் நடக்கும்…
2.காலம் தாமதமானாலும்… “ஒரு நல்ல வரனாகவும்” கிடைக்கும்.

ஏனென்றால் உங்கள் உணர்வுகளில் மிகவும் கடுமையான நிலைகளைப் பதிவு செய்து வைத்திருப்பதால் உங்கள் பதிவே உங்களுக்கு எதிரியாகும். நீங்கள் எந்தெந்த அளவிற்கு வேதனையையும் கஷ்டத்தையும் வைத்திருக்கிறீர்களோ உங்கள் ஆன்மாவில் அது அதிகமாகப் பரவியிருக்கும்.

எந்த நல்ல சமாச்சாரத்தைப் பேசினாலும்
1.உங்களை அறியாமலேயே உங்கள் கஷ்டத்தைச் சொல்லி விடுவீர்கள்.
2.உங்களை அறியாமலேயே என் கஷ்டம் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது என்றே சொல்வீர்கள்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ரேடியோ டி.வி அலைகளில் எந்தெந்த ஸ்டேசனை வைக்கின்றோமோ அந்தந்த அலையில் தான் வருகின்றது. கோபித்தவனுடைய உணர்வைப் பதிவாக்கிவிட்டால் அது ஒரு ஸ்டேசன் ஆகின்றது.

அவன் உடலில் விளைந்த உணர்வு அங்கே இருக்கின்றது. நம் உணர்வு அவனிடம் இருக்கின்றது. “என்னை இப்படி மோசம் செய்தான்…” என்று எண்ணினால் அந்த அலைகள் வருகின்றது.

அதே நேரத்தில் அந்த உணர்ச்சிகள் நம்மை ஞாபகப்படுத்துகின்றது. உடனே நம்மை அறியாமலே இங்கே தவறுகள் செய்ய ஆரம்பித்துவிடுகின்றோம்.

இதைப் போன்ற நிலைகளில் உலகில் எத்தனையோ உணர்வுகளைப் பார்க்கின்றோம். ஒரு ஆக்சிடென்டைப் பார்க்கின்றோம். அப்பொழுது அது ஒரு ஸ்டேசனாக அமைந்துவிடுகின்றது.

இரண்டு பேர் கடுமையாகச் சண்டை போடுவதைப் பார்க்கின்றோம். ஒருவன் மற்றொருவனை மிரட்டிப் பேசுகின்றான்.
1.அவன் உடலிலிருந்து வெளிவந்த அலைகள் இங்கே இருக்கின்றது.
2.அவனுக்குள் விளைந்திருக்கின்றது. அவனிடமிருந்து வெளி வருகின்றது.
3.நமக்குள் பதிவாகியிருக்கின்றது. அந்த அலைகளை நுகரச் செய்கின்றது.
4.அது அழிவதில்லை.
5.அதை (அந்த ஸ்டேசனை) அழிக்க வேண்டுமல்லவா…!

அது நமக்குள் இருக்கும் பொழுது என்ன செய்கின்றது?

நாம் சோர்வடையப்படும் பொழுது காரமான உணர்ச்சி கொண்டு நம்மை இயக்கச் செய்கின்றது. திடீரென்று நமக்குக் கோபம் வரும்.

அப்பொழுது எதை எடுத்தாலும் வேகம் வரும். ஒரு பொருளை எடுத்தாலும் அந்த வேகம் வரும். சோர்வடைந்த அந்த நேரத்தில் தூக்கி எறிவார்கள்.

ஒரு பலகாரம் சுட்டுக் கொண்டிருக்கும் பொழுது இந்த மாதிரி ஆகட்டும். உடனே என்ன செய்வார்கள்?

வடையை எணணெய்ச் சட்டிக்குள் மெதுவாகப் போடுவதற்குப் பதில் தூக்கி “டப்..” என்று போடுவார்கள். எண்ணெய் மேலே படும்.

செய்வது எது…? நாம் நுகர்ந்த அந்த உணர்வுகள் தான்.

இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் அந்த உணர்வுகள் நம்மை இயக்காது நாம் அதை அடக்க வேண்டும்.

ஒரு ரேடியோ ஸ்டேசனில் உணர்வலைகள் சந்தோசமாகப் பேசிக் கொண்டிருக்கின்றது. சில நேரங்களில் காரசாரமான உணர்ச்சிகள் இன்னொரு அலைவரிசையில் வருகிறது என்றால் இதே அலைவரிசையில் வரப்படும் பொழுது இதிலிருந்து இந்த ஏரியல் வழி கூடித்தான் எடுக்கும்.

அந்த ஏரியலில் வரும் பொழுது இந்த அலை வரிசை அதிகமாகிவிட்டதென்றால் இதனின் அதிர்வலை “ஜிர்..ர்ர்..ர்ர்” என்று சப்தம் போடும்.

ஆகவே இதில் அலை வரிசையில் வரும் பொழுது எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலையில் வந்தாலும் எலெக்ட்ரிக்கின் உணர்வலைகள் வரப்படும் பொழுது அந்த எலெக்ட்ரிக்கின் தொடர்பு கொண்டுதான் இங்கே இயக்குகின்றது.

அந்த உணர்வின் தன்மை எரியல் வழி கூடி அது வந்தாலும் இது எர்த் ஆன பின் இன்னொரு ஸ்டேசனை வலுவான நிலைகளை இழுத்து என்ன செய்கின்றது?

அந்த அதிர்வுகளையே காட்டுகின்றது. (நீங்கள் கேட்டிருப்பீர்கள் – இரண்டு ஸ்டேசன் ஒரே அலைவரிசையில் வந்தால் ரேடியோவாக இருந்தாலும் டி.வி.யாக இருந்தாலும் அதிர்வாகி இரைச்சலாகும்) இதைப் போல
1.நம் உயிர் எலெக்ட்ரிக் என்றாலும்
2.ஒரு எதிர் உணர்வான எலெக்ட்ரிக் அந்த எலெக்ட்ரானிக்காக மாற்றப்படும் பொழுது
3.நம்முடைய சிந்தனை குலைந்து
4.நம்மை அறியாமலே தவறான சொல்களைச் சொல்லச் செய்து
5.தவறான செயல்களைச் செய்யச் செய்துவிடுகின்றது.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதா…?

ஆத்ம சுத்தி மூலம் நாம் சக்தி பெறும் மார்க்கம்

 

ஒரு பொருளுக்குள் ஒரு விஷம் பட்டால் அனைத்தையுமே நாசமாக்குகின்றது. இதைப் போன்று
1.நம் உணர்வுக்குள் சிறிதளவு வேதனையாகி விட்டால்
2.நமக்கு மட்டுமல்ல… மற்றவர்களுக்கும் சேர்கிறது.

ஒரு குழந்தை தவறு செய்தால் “இப்படி ஆகிவிட்டதே…” என்று வேதனையை எடுத்தீர்கள் என்றால் இது விஷம்.

இந்த விஷமான உணர்வு கொண்டு குழந்தையைப் பார்க்கப்படும் பொழுது விஷம் அதிகமாகக் கூடி அவன் புத்தியையே மட்டமாக்கும்.

இப்படிப் பண்ணிவிட்டாயே…? பாவி…! என்று சொல்லி இந்த விஷத்தின் தன்மை கொண்டு ஆக்கப்படும் பொழுது அவனிடம் இருக்கக்கூடிய அந்த வளர்ச்சியின் தன்மையை மட்டமாக்கி… அங்கே விஷமாகி… அவன் சிந்திக்கும் செயலையும் இழந்து விடுகின்றான்.

நமக்குள் என்ன சக்தி இருக்கின்றது…? என்று நினைத்துப் பார்த்தால், சிந்தித்துப் பார்த்தால் இந்தச் சொல் எதிலிருந்து வருகின்றது…? என்பது தெரியும்.

நாம் சுவாசித்த உணர்வின் தன்மைகள் உயிரில் பட்டு உணர்ச்சிகளாகின்றது.
1.நாம் பேசும் பொழுது அந்த உணர்வின் ஒலியாக மாறி
2.இந்த உணர்வுகள் மற்றொன்றுடன் கலக்கப்படும் பொழுது
3.அந்த உணர்ச்சிகளைத் தூண்டிச் சுவாசிக்கச் செய்து அங்கே விளைந்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் மீள்வதற்கு மெய் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி ஆத்ம சுத்தி செய்து நமக்குள் துனபங்கள் தாக்கும் துன்பங்களை உருவாக்கும் நிலையை மாற்ற வேண்டும்.

கருணைக் கிழங்கை வேக வைத்து விஷத்தின் தன்மையை நீக்குகின்றோம். எத்தனையோ விஷத்தன்மை கொண்ட எத்தனையோ உணர்வு கொண்ட காய்கறிகளை வேக வைத்து அதிலிருக்கக்கூடிய காரல்களை நீக்கிச் சுவை கொண்டதாக மாற்றிக் கொள்கின்றோம்.

இதைப் போன்று நம் மனித வாழ்க்கையில் எத்தகைய துன்பமான நிலைகள் வந்தாலும் அதைத் நமக்குச் சாதகப்படுத்துவதற்கு வேக வைத்துச் சுவையாக்கும் நிலையாக ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

அப்படிச் செய்தால் அது சுவைமிக்க சொல்லாக நமக்குள் சென்று சுவையான செயல்களைச் செய்யக் கூடிய உணர்வுகளாகத் திருப்பிப் பேசும்படி செய்யும்.

அப்பொழுது நம் சொல்லைக் கேட்பவர்களுக்கும் மகிழ்ச்சியுட்டும் நிலைகளாக மாற்றும் சக்தி கிடைக்கின்றது.

நம் உணர்வைச் சுவையற்றதாக ஆக்காதபடி சுவையான தன்மையாக நமக்குள் வளர்த்துக் கொள்ள முடியும்.

சிறிது காலம் யாம் சொல்வதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பக்குவப்படுத்திக் கொண்டால் அது தானாகவே பேசும்.

கோபம் வந்துவிட்டால் அடங்காத பையனை அடிக்கடி நினைத்தவுடன் கோபம் வருகின்றது. அதே மாதிரி அந்தப் பையன் நன்றாக ஆகவேண்டும் என்று தியானத்தில் எடுத்துக் கொண்டு
1.“நன்றாக ஆகவேண்டும்… நன்றாக ஆகவேண்டும்…” என்று
2.அடிக்கடி எண்ணினால் பையன் நல்லவனாக ஆகிவிடுகின்றான்.
3.தன்னாலே தன்னிச்சையாக வரும்.

இப்படிச் சொல்லிப் பழகிவிட்டால் அதே நிலைகள் வரும்.

ஒரு குழந்தை படிப்பிலே மட்டமாக இருக்கிறது. “படிப்பிலே இப்படி இருக்கிறானே…” என்று நாம் எண்ணும் பொழுதெல்லாம் மற்றவர்களிடத்தில் எல்லாம் சொல்வோம். நினைக்கும் பொழுதெல்லாம் இந்த வேதனைப்பட்டே நினைப்போம்.

இவ்வாறு நினைக்கும் பொழுது இந்த வேதனைகள் அவன் உடலிலே சேர்ந்து இதையேதான் உருவாக்கும்.

ஆகையினாலே இதையெல்லாம் நீங்கள் மனதிலே பக்குவப்படுத்தி இந்த நிலைகளெல்லாம் நீங்கவேண்டும் என்று ஆத்ம சுத்தியைச் செய்து வரும் தீமைகளைப் போக்கிக் கொள்ளுங்கள்.

1.“ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் உங்கள் உயிரிடம் நினைவைச் செலுத்துங்கள்
2.ஓம் ஈஸ்வரா குருதேவா… உங்கள் அருளால் மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கியிருங்கள்
3.திரும்பத் திரும்ப மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்ற நினைவுடன் ஏங்கி இருங்கள்
4.நினைக்கும் பொழுதெல்லாம்… “அந்த அலைகள் இழுக்கும்…”

மகரிஷிகளின் அருள் சக்தியை எங்கள் ஜீவாத்மா பெற அருள்வாய் ஈஸ்வரா என்று மெதுவாகக் கண்களை மூடிக் கண்ணின் நினைவை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.

கண்ணுக்குள் இருந்து மெதுவாக உங்கள் உடலுக்குள் முழுமையாகச் செலுத்திக் கொண்டு வாருங்கள். இப்பொழுது மகரிஷிகளின் அருள் சக்தியை எங்கள் ஜீவாத்மா பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நினையுங்கள்.

இதுதான் ஆத்ம சுத்தி.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

எம்முடைய (ஞானகுரு) உபதேசத்தை எல்லோரும் ஆர்வமாகக் கேட்கின்றனர்.

உங்களுக்கு “நோயில்லை… துன்பம் இல்லை…” என்று நான் வாக்காகக் கொடுக்கின்றேன்.

நல்ல வாக்கைக் கொடுத்தாலும் நான் படும் அவஸ்தை “எனக்குத்தான் தெரியும்” என்கிறார்கள்.

சரி இனிமேல் நோய் நீங்கிப் போகும்…! என்று யாம் சொல்கிறோம்.

“இல்லைங்க..,!” என் தொல்லை என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது என்று சொல்கிறார்கள்…!

ஒரு அம்மாவிடம் நான் நல்ல உணர்வை வாக்காகச் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். அந்த அம்மா எல்லாவற்றையும் கேட்டுவிட்டு என்ன சொல்கிறது…?

நான் இங்கே வந்தால் நன்றாக இருக்கின்றது. வீட்டிற்குச் சென்றால் சுத்தமாக எல்லாம் மாறிப் போகின்றது. என்னென்னவோ நடக்கிறது… என்று சொல்கிறது.

வீட்டிற்குப் போனாலும் என்ன அம்மா…? எங்கே போனாலும் இதே மாதிரி நல்லதை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள் என்று சொல்கின்றேன்.

“அதற்கு இல்லைங்க….!” வீட்டிற்குப் போனாலே என் தொல்லை என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது…! என்று அதை “இறுகப் பிடித்துக் கொள்கிறார்கள்”.

அதே மாதிரி இனி நோய் இல்லை போங்கள்… இதைப் பின்பற்றுங்கள் நீங்கள் நன்றாக ஆகிவிடுவீர்கள்…! என்று நல்ல வாக்கைக் கொடுக்கின்றோம்.

ஆனால் இதைக் கேட்பார் யாரும் இல்லை.

1.சாமிக்கு என்ன தெரியும்…?
2.நான் படுகிற அவஸ்தை எனக்குத் தானே தெரியும் என்கிறார்கள்.

ஆனால் தன்னைத் “திட்டுபவர்களை” மட்டும் மனதில் எண்ணி “என்னை இப்படிப் பேசினாய் அல்லவா…, இரு நான் பார்க்கிறேன்… உன் குடும்பத்தை நான் தொலைத்துக் காட்டுகிறேன்…” என்று மட்டும் இறுக்கிப் பிடித்துக் கொள்கிறார்கள்.

இந்த உணர்வு
1.அவர்களை இவர்கள் தொலைத்துக் கட்டுவதற்கு முன்னால்
2.இவர்கள் உடலுக்குள் புகுந்து இந்த உடலைத் தொலைத்துக் கட்டும் என்பதை மறந்து போகின்றார்கள்.

சிலர் வீட்டில் பார்க்கலாம். கொஞ்சம் “சுருக்…” என்று சொன்னால் போதும். ஆ… நீ என்னை என்ன சொன்னாய்…! உன்னை விடுவதா…? இருக்கட்டும்… நான் உன்னை என்ன செய்கிறேன் பார்…! என்று சொல்லிவிட்டு வாயில் வந்ததையெல்லாம் பேசுவார்கள்.

நீ அப்படிப் போவாய்… இப்படிப் போவாய்… இந்த மாதிரியெல்லாம் உனக்கு ஆகும்…! என்றெல்லாம் பேசுவார்கள்.

ஆனால் இப்படிப் பேசுபவர்கள் எல்லோரையும் பாருங்கள். உடலில் கை கால் குடைச்சல் கண் எரிச்சல் தலை வலி இடுப்பு வலி கால் வலி மூட்டு வலி எல்லாம் இருக்கும். “இது பேசியவர்களுக்கு”.

சிலர் பேசாமல் இதைப் பொழுது போக்காக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

1.இப்படிப் பேசுகின்றார்களே பாவிகள்… அந்த அம்மா நல்ல அம்மா…!
2.இப்படிப் பேசுகின்றார்களே பாவிகள்…. அந்த அம்மா நல்ல அம்மா…! என்று
3.இப்படியே திரும்பத் திரும்ப எண்ணி
4.அந்தச் சண்டை போடுபவர்களை உற்றுப் பார்த்துத் தனக்குள் பதிவாக்கிக் கொள்வார்கள்.

ஒரு பொல்லாதவரை எண்ணுவது. நல்லவரைப் பார்த்து இங்கே “இப்படி ஆகிறதே…” என்று இதை வளர்த்துக் கொள்வது.
1.நல்லவர் மேல் இரக்கமும்
2.பொல்லாதவர் மேல் ஆத்திரமும் இந்த இரண்டும் இங்கே வரும்.

இப்படி வந்தவுடனே “அம்மம்மா…ஆ…” வயிறெல்லாம் வலிக்கிறதே… குடலெல்லாம் முட்டுகிறதே… அவர்களுக்கு இந்த நோய் வரும்.

ஆனால் நல்லவர்கள் தான்.

இந்த மாதிரிச் சண்டை நடக்கும் இடங்களில் என்ன நடக்கிறது என்று பார்க்கும் பொழுது என்ன ஆகிறது…?

1.எனக்கு எப்படியோ வருகிறது… என்னென்னமோ செய்கிறது.
2.நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லையே…
3.தெய்வம் என்னை இப்படிச் சோதிக்கிறதே…
3.நான் அடிக்கடி வணங்கும் தெய்வமும் இப்படிப் பண்ணுகிறதே…!
4.இப்படித்தான் எண்ணி இதைத்தான் கூட்டிக் கொள்ள முடிகின்றது.

தெய்வம் எங்கே இருக்கின்றது…? எந்த ரூபத்தில் இருக்கின்றது…? என்பதை வியாசகர் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.

நம் உயிரே கடவுள் நம் உடலே கோவில். எண்ணும் எண்ணமே இறைவன். இறையின் செயலே தெய்வமாக அமைகின்றது.

நாம் எண்ணியதை உயிர் “ஓ…” என்று இயக்கி “ம்…” என்று உடலாக ஒவ்வொரு நொடிப்பொழுதும் உருவாக்கிக் கொண்டேயுள்ளது.

நாம் யார்? நாம் எண்ண வேண்டியது எது? நமக்குள் சேர்க்க வேண்டியது எது? நாம் அடைய வேண்டிய எல்லை எது…? இந்த உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும்…?

இத்தகைய நிலைகளை எல்லோருக்கும் அறிவிப்பதற்காகத்தான் தன்னை அறிந்து கொள்ளும் நிலைக்காகத்தான் ஆலயங்களை அமைத்தார்கள் ஞானிகள்.

இதை அறியாதபடி நாம் வாழ்ந்தால் எந்த உணர்வைச் சுவாசிக்கின்றோமோ அதனின் இயக்கமாக இயங்கி அதன் வழியில் தான் செல்ல வேண்டியதிருக்கும்.

அத்தகைய நிலைகளிலிருந்து விடுபடும் நிலைக்குத்தான் உங்களுக்கு அந்த ஞானிகளைப் பற்றிய உணர்வுகளைப் பதிவாக்கிக் கொண்டே வருகிறோம்.

“இப்படி ஆகிவிட்டதே… இப்படிச் செய்து விட்டாயே…” என்று உணர்ச்சி வசப்பட்டால் இருளாகிறது. அந்த உணர்ச்சிகளை “மகரிஷிகளின் உணர்வு கொண்டு வேக வைத்து” நமக்குச் சாதகமாக்க வேண்டும்.

நாம் வெளிப்படுத்தும் உணர்வுகள் பிறர் மீது தாக்கப்பட்டு… மீண்டும் நமக்கே எப்படிக் கெடுதலாக வருகிறது…?

 

இரண்டு பேர் நீங்கள் சண்டை போடுகிறீர்கள் என்றால் அந்தச் சண்டையிட்ட உணர்வுகள் இருவர் உடலிலும் இருக்கின்றது. இருந்தாலும் அவர் மீது நீங்கள் வெறுப்பாக இருக்கின்றார்கள்.

அவருக்கும் உங்களுக்கும் சேர்த்த நண்பர் இங்கே வருகிறார். இவர் எதிர்பாராதபடி அந்தப் பழைய நண்பரைச் சந்திக்கின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

நான் ஊருக்குப் போயிருந்தேன். உங்களை இந்த மாதிரி மோசம் செய்துவிட்டுப் போன நண்பன் இப்பொழுது அங்கே நன்றாக இருக்கின்றான்…! என்று சொன்னால் போதும்.

உடனே உணரச்சி வசப்படுவீர்கள். பாவிப்பயல்… அவனெல்லாம் உருப்பட மாட்டான்…! என்ற இந்த உணர்வு தோன்றியவுடன் எதிர்நிலையாகிறது.

தூண்டியவுடன் இந்த உணர்ச்சிகள் என்ன செய்கிறது…?

1.இதே உணர்வு கண்ணின் நினைவு அங்கே ஓடுகின்றது.
2.ஏனென்றால் சொன்னவுடன் பார்க்கலாம்… அந்த உருவம் தெரியும்.
3.உணர்ச்சிகள் (அலைகள்) அங்கே போகும்… திடீரென்று அவனுக்கும் உணர்ச்சிகள் தாக்கிய உடனே
4.எதிர்பாராத இந்த நினைவு அவனுக்கும் வரும்… பார்க்கலாம்.

அதனின் நினைவு வரப்படும் போது நம் உருவம் அங்கே தெரியும். இந்த உணர்ச்சிகள் அங்கே சென்ற பின் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் என்றால் உள்ளே சாப்பாடு போகாது.

ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தான் என்றால் சிந்திக்கும் தன்மை குறைந்து ஓரத்தில் போய்க் கொண்டிருப்பவன் திடீரென்று நடுரோட்டுக்குச் செல்வான்… விபத்து ஆகிவிடும்.

காரை ஓட்டிச் சென்றால் விபத்து ஆகிவிடும். ஒரு எலக்ட்ரிகல் வேலை செய்து கொண்டிருந்தான் என்றால் சிந்தனை இழந்து ஷாக் அடித்துவிடும்.

இது எல்லாம் புரை என்ற நிலையின் இயக்கங்கள். வெறுப்பின் தன்மையால் மட்டும் தான் இது போன்ற கெடுதல் செய்யவில்லை.

பாசத்துடன் இருக்கின்றோம்… வெளி ஊரிலிருந்து பையன் தகவல் கொடுக்கவில்லை… அவன் பேசவில்லையே… என்று எண்ணிக் கொண்டிருந்தால் போதும்.

இந்த உணர்வின் தன்மை இயக்கப்பட்டு அவன் சாப்பிடும் பொழுது இதே உணர்வு புரை ஓடும்.
1.பாசத்தினால் உணர்வின் வேகங்கள் கொண்டு
2.வேதனை என்ற உணர்வு கலக்கப்படும் போது உறுப்புகளின் இயக்கச் சக்தியும் குறையும்.

பிள்ளையை எண்ணி வேதனைப்படும் சமயத்தில் ஒரு கணக்கை நீங்கள் எழுதிக் கொண்டிருந்தால் என்ன ஆகும்…? கணக்கைத் தவற விட்டு விடுவோம்… ஆபீசில் குற்றவாளி ஆகி விடுவோம்.

தினசரி தகவல் கொடுக்கக் கூடிய பையன் கொடுக்கவில்லை என்றால் என்ன ஆச்சோ…? ஏது ஆச்சோ…? என்று எண்ணினால்
1.அந்தச் சந்தர்ப்பம் அவன் மீது இருக்கும் பிரியத்திலே வேதனைப் படும்போது
2.பாசத்திலே கலந்து இது தாக்கப்பட்ட உடனே
3.நாம் பார்த்துக் கொண்டிருந்த கணக்கே தவறாகி விடுகிறது.
4.அங்கே அவனுடைய செயலையும் குன்றச் செய்கின்றது.

இந்த மாதிரி இயக்குகிறது. ஐயோ நான் நினைத்தேனே… நான் நினைத்த மாதிரி என் பையனுக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று சொல்கிறோம் அல்லவா..!

குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். பிள்ளை படிப்பிலே ஒரு மக்காக இருக்கின்றானே. இவன் என்றைக்குத் தான் நன்றாகப் படிக்கப் போகின்றானோ…? என்று இந்த வேதனைப்படும் நிலைகளைச் செயல்படுத்தினால் இந்த உணர்வுகள் பாய்ந்து அவனுடைய நல்ல சிந்தனையை அது குறைக்குமே தவிர நல்லதாக ஆக்காது.

1.அவன் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும்… உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று
3.நாம் யாராவது சொல்கிறோமா என்றால் இல்லை…!

இப்படியே இருக்கின்றான்… சரியான ஞாபகசக்தி வர மாட்டேன் என்கிறது என்ற இந்த உணர்வை எடுத்துப் பாய்ச்சும்போது கொஞ்ச நஞ்சம் இருக்கக்கூடிய நல்ல உணர்வுகளின் இயக்கமும் தடைபட்டுப் பாடம் சுத்தமாக வருவதில்லை.

பள்ளிக்கூடம் போகச் சொன்னால் போகவே மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருப்பான். காரணம்…
1.நம்முடைய ஆசை உணர்வின் வேகம் இந்த மாதிரிப் பாய்ச்சுகிறது.
2.நம் உடலில் விளைந்தது எதுவோ இந்தப் பாசத்தினால் தவறாகிவிடுகிறது.

பையன் படிக்கவில்லை என்று அவனை நாம் வெறுத்தோம் என்றால் “பள்ளிக்கூடமே நான் போகவில்லை…!” என்பான். ஆக மேலும் மேலும் படிப்பு குறையும்.

இது எல்லாம் ஒருவருக்கொருவர் இணைந்து வாழும் நிலையில் நாம் வெளிப்படுத்தும் உணர்வுகள் தாக்கப்பட்டுக் கெடுதலாக மீண்டும் நமக்கே எப்படி வருகிறது…? என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதற்குத் தான் இதை உணர்த்துகின்றோம்.

ஓருவரின் குறையிலோ நிறைவிலோ ஆத்மாவிற்கு வலுப் பெறும் தன்மையோ வளரும் தன்மையோ யாரும் பெற முடியாது – ஈஸ்வரபட்டர்

 

இன்றைய பக்தி மார்க்கத்தில் மதில் சுவர் எழுப்பி… ஆலயக் கோபுரம் கட்டித் தெய்வத்தின் உருவச் சிலையைப் பஞ்சலோகங்களைக் கொண்டு பிரதிஷ்டை செய்து… அழகிய ஆடை ஆபரணங்கள் அணிவித்து… மேளங்கள் முழங்க வேதனகள் ஓதி… தீபாராதனை காட்டி… தெய்வங்களை வழிபடுகின்றார்கள்.

மேலும் அதற்கென்ற அறங்காவலர்களையும் பொறுப்பேர்க்கும் பொருட் காவலர்களையும் நியமித்துத் “தெய்வ சங்கல்பம் பெறும்” பக்தி மார்க்கத்தால் கிடைக்கப் பெறும்… நடைமுறைச் செயல் வழியை வழிப்படுத்துகின்றனர்.

ஆனாலும்…
1.தன் ஜீவாதாரத்திற்கே பொருளீட்ட முடியாத…
2.செயல் நிலை கொள்ளா மனிதக் கூட்டங்கள்… போற்றலில் புகழ் கொண்டு
3.பொருளைப் போட்டு தெய்வ பக்தியை வளர்க்கும்
4.தேவக் கூட்டங்களை எதிர்க்கும் எண்ணம் கொண்டு குரோத… பொறாமை… ஆவேச உணர்வுடன்
5.தான் வளர்க்க வேண்டிய உயர் குணத்தையே மறந்து
6.பொருள் கொண்ட பக்தி உணர்வின் கூட்டத்தைக் கூடச் செய்து
7.பொருளற்ற ஏக்க உணர்வு கொண்ட மனிதக் கூட்டங்களின் சலிப்பின் சோர்வினால்… பொறாமை உணர்வு ஏற்பட்டு
8.தான் அடைய முடியாத நிலையால்… ஏமாற்றும் குணங்களை வளர்த்து
9.ஆலயங்களில் நடைபெறும் பஜனைக் கூட்டத்தின் வலுவைக் காட்டிலும்
10.ஏமாற்றும் உணர்வு கொண்ட… “திருடும் நிலைக் கூட்டங்கள் தான்…” இன்று வளர்ந்துள்ளது

ஆலயத்திற்குச் செல்லும் அத்தகைய இரு சாராரும் பயந்த உணர்வு கொண்டே செல்கின்றனர்.

ஏன்…? எதற்காக…!

ஆலயத்திற்குச் செல்வோருக்கு… எங்கே தான் அணிந்து செல்லும் நகைகளோ பொருளோ “பறிபோய்விடுமோ…!” என்ற பய உணர்வின் அச்சம் ஒரு பக்கம்.

மறுபக்கம்… பக்தியுடன் வருபவர்களிடம் ஒன்றுக்கு இரண்டாக ஏமாற்றிப் பூஜை சாமான்களின் விலையை ஏற்றி விற்கின்றனர். அப்படி விற்பவரின் உணர்வோ… “தான் ஏமாற்றிப் பிழைக்கும் செயலுக்காக” இந்தத் தெய்வம் தண்டித்துவிடுமோ…? என்ற பய உணர்வு கொண்ட தன்மையும் உள்ளதப்பா.

அது எல்லாம் போக.. அந்தத் தெய்வச் சிலையை “களவாடும் உணர்விலும்” தான் இன்றைய ஆலய நிலைகள் யாவும் உள்ளதப்பா…!

இதிலிருந்து… உண்மை தெய்வ சக்தியின் அலையைப் பெறும் நிலை மனித உணர்வின் பால் செலுத்த முடியாத செயலாகத் தான் வளர்ந்து விட்டதப்பா…!

1.இன்றைய மனிதக் கூட்டங்களின் இத்தகைய செயலிலிருந்து
2.ஞான அலையை ஈர்க்கும் வழியற்ற ஈர்ப்புப் பிடியினால்
3.வலுக் கொண்ட மகரிஷிகளின் செயலையே இக்கலியில் கலக்க விடாதபடி
4.மனிதனின் எண்ண ஓட்டங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றது.

பொறாமை உணர்வுகளும் பேராசை உணர்வும் தான் வலுவாகி உள்ளதே அன்றி முருகனின் குண நிலையை ஒத்த சாந்த சக்தி நிலை வளர முடியாத “கலியாக” இன்றைய நிலை உள்ளது.

எண்ணத்தின் வீரியத்தைப் பிறர் மேல் நாம் செலுத்தும் அலை தெய்வத் தொடர்பு கொண்டு
1.சாந்த வழித் தொடரின் ஞானத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு வந்தாலும்
2.தெய்வத்தின் தெய்வமாகவே நம் ஞான சக்தி உயர்ந்து இருந்தாலும்
3.பிறர் மேல் நாம் செலுத்தும் அலைத் தொடர் குறை காணும் எண்ணத்தைச் செலுத்தாமல்
4.நிறைவு கொண்ட நல் அலைகளை நலம் பெறவேண்டும் என்ற உணர்வு கொண்டு செலுத்தி
5.கீழிருந்து மேலாகத்தான் – ஒவ்வொரு ஆத்மாவையும் தெய்வ உருவாக எண்ணி
6.நல் வழியில் சென்று அந்த அலையின் சக்தியை எடுத்து வளர வேண்டுமே அன்றி
7.வேறு ஓருவரின் குறையிலோ நிறைவிலோ ஆத்மாவிற்கு வலுப் பெறும் தன்மையோ வளரும் தன்மையோ யாரும் பெற முடியாது.

பிறர் பால் செலுத்தும் எண்ணத்தில் அவ்வீர்ப்புப் பிடியில் நம் உணர்வைச் செலுத்திவிட்டோமேயானால் “அவர்கள் பிடியில் சிக்குண்ட ஆத்மாவாகத்தான்” நாம் எடுக்கும் சுவாசத்தால் நம் ஆத்மாவும் வழி பெறும்.

ஞான வழியில் பயணிப்போர் இதை அவசியம் தெரிந்து கொள்வது நல்லது…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

வைரம் தனக்குள் நஞ்சினை அடக்கி அது தன் பிரகாசமான நிலைகளை வெளிப்படுத்துகின்றது. இதைப் போல் தான்
1.மகரிஷிகள் அனைவரும் நஞ்சு கொண்ட உணர்வுகள் எதுவாகினும்
2.அதனை அடக்கித் தன் உயிருடன் ஒன்றிய
3.ஒளியின் சரீரமாக என்றும் நிலைத்துள்ளார்கள்.

அத்தகைய ஞானிகள் இன்னொரு மனிதனின் ஈர்ப்புக்குச் செல்லாது தன் உணர்வின் தன்மையைத் தன் நிலை அடைந்து உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகச் சப்தரிஷி மண்டலமாகத் திகழ்ந்து கொண்டுள்ளார்கள்.

ஒளியின் உணர்வாக அந்த அருள் ஞானிகள் உடலிலிருந்து வெளிப்பட்ட அந்த உணர்வின் சத்தை நாம் கவர வேண்டும் என்றால் நமக்கு அத்தகைய வலு வேண்டும்.

சாதாரணமாக ஒரு நூலை வைத்து ஒரு கடினமான பொருளைத் தூக்குவோம் என்றால் அது அறுந்துவிடுகின்றது.

இதைப் போல சாதாரண மக்களாக இருக்ககூடிய நாம் ஞானிகள் மகரிஷிகளின் மிகச் சக்திவாய்ந்த எண்ணங்களை அவர்களின் உணர்வுகளை
1.நம் எண்ணத்தால் கவர வேண்டும் என்றால் அது முடியாத காரியம்.
2.நம்முடைய எண்ணத்திற்கு வலு இல்லை.
3.அது செயலற்றதாக ஆகிவிடுகின்றது.
4.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற நம் எண்ணத்திற்கு வலிமை வேண்டும்.

ஒரு சிறு கல்லாக இருந்தால் அதை ஒரு மனிதன் தூக்கிவிடுவான். பெரும் கல்லாகும் பொழுது அவனால் தூக்க முடியாது. ஆனால் பலரும் சேர்ந்தால் அதை எளிதாகத் தூக்க முடிகிறது.

ஒரு நூல் நிலையாக இருப்பினும் பல நூல்கள் கொண்டு அதை ஒருக்கிணைந்து கயிறாகத் திரிக்கும் பொழுது அந்தக் கயிறால் ஒரு கடினமான பொருளையும் தூக்கிட முடிகின்றது.

இதைப் போலத்தான் நாம் அனைவரும் சேர்ந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எல்லோரும் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வை கூட்டுத் தியானங்களில் தூண்டச் செய்கிறோம்.

1.அந்த உணர்வால் உந்தச் செய்து தியானிக்கச் செய்து
2.அவ்வாறு தியானிக்கும் பொழுது தான்
3.படர்ந்திருக்கும் அருள் ஞானியின் உணர்வை
4.நம் உடலின் அருகே கொண்டு வர முடியும்.

ஆலயங்களில் உள்ள பெரும் தேரை நாம் வடம் பிடித்து இழுக்கப்படும் பொழுது பலரும் ஒருக்கிணைந்த நினைவுடன் தேரை இழுத்தால்தான் அது எல்லை வந்து சேரும்.

ஒருவர் தெற்கே ஒருவர் கிழக்கே ஒருவர் மேற்கே ஒருவர் வடக்கே என்று அந்த வடத்தை இழுத்தால் அந்தத் தேர் எல்லை வந்து சேராது.

இதைப் போல் தான் நாம் அனைவரும் ஒருக்கிணைந்த நிலைகள் கொண்டு
1.அந்த மகரிஷிகளின் நினைவலைகளைக் குவித்து
2.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று உங்களை எண்ணச் செய்கிறோம்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் உயிரை ஈசனாக மதித்து
1.ஈசன் வீற்றிருக்கும் இந்த ஆலயத்திற்குள்
2.மகரிஷிகளின் அருள் சக்தி அது கிடைக்க வேண்டும்
3.அந்த ஆலயம் புனிதமாக வேண்டும்
4.அதற்குள் இருக்கும் நல்ல குணங்கள் தெளிந்திட வேண்டும்
5.அந்தத் தெய்வ நிலைகள் அங்கே வளர வேண்டும் என்று
6.உங்களை நான் தியானிக்கின்றேன்.

உங்களுக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு நீங்கள் எண்ணி ஏங்கும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று உங்களை நான் எண்ணும் பொழுது அந்தச் சக்தியின் தொடரை நீங்கள் பெற முடிகின்றது. கவர முடிகிறது.

இன்று டி.வி.யோ மற்ற சக்தி வாய்ந்த எதுவாக இருந்தாலும் அதைக் கவர்வதற்கு “ஆன்டெனா” வைத்துள்ளார்கள்.

அதனுடன் சக்தி வாய்ந்த இயந்திரங்களையும் நுண்ணிய கருவிகளையும் பொருதி அதன் துணை கொண்டுதான் இந்த ஆன்டெனா தனக்கு முன் இருக்கும் மிகச் சக்திவாய்ந்த அலை வரிசைகளைக் கவர்கின்றது,

அவ்வாறு ஆன்டெனா கவரும்போது நிசப்தமான நிலைகளிலும் சீராகவும் திரைப்படங்களில் காண்பது போல் அந்த அலைகளை ஒருமித்த நிலை கொண்டு சீராக நாம் பார்க்க முடிகின்றது.

இதைப் போல் தான் எண்ணங்கள் அனைத்தும் ஒருக்கிணையச் செய்கின்றோம். நீங்கள் அதைப் பெறுவதற்காக
1.உங்களை நான் தியானிக்கும்போது
2.நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நான் தியானிக்கும் பொழுது
3.அந்தச் சக்திகளை நீங்கள் பெற முடிகிறது.

நீங்கள் ஒவ்வொருவரும் குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியால்
1.உங்களை அறியாது சேர்ந்த தீமைகள் அகல வேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் திறன் நீங்கள் பெறவேண்டும்.
3.உயிரான ஈசனுக்கு நீங்கள் எண்ணும் உயர்ந்த எண்ணங்கள் அது மகிழ்ச்சியூட்டும் செயலாக வளர வேண்டும்.
4.அந்த உணர்வின் தன்மை உங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்
5.உங்கள் உடலுக்குள் மனிதனாக உருவாக்கிய மகிழ்ந்திடச் செய்யும் அந்த ஆற்றல்மிக்க நல் உணர்வுகள் அனைத்தும் சீராக விளைந்திட வேண்டும்
6.அது நல்ல வலுவின் தன்மை அடைய வேண்டும்.
7.என்றுமே உங்களுக்குள் மகிழ்ச்சி நிலைத்திட வேண்டும்
8.தீமைகள் வரும்போது அதை போக்கிடும் ஆற்றல்கள் நீங்கள் பெறவேண்டும் என்ற
9.இந்த நிலையில் தான் உங்களை நான் தியானிக்கின்றேன்.

அதே சமயம் “நீங்களும்…” மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது உங்களுக்கு முன் காற்றிலே படர்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க இச்சக்திகளைக் கவர முடிகிறது.

அவ்வாறு கவரும் பொழுது ஒவ்வொருவருடைய ஆன்மாவின் நிலைகளிலும் மகரிஷிகளின் அருள் சக்தி வந்து கலக்கின்றது.

இதை நீங்கள் சுவாசிக்கும் பொழுது உங்களுக்குள் அந்த அருள் ஞானியின் உணர்வைச் சேர்ப்பிக்கும் நிலையாக அமைகின்றது.

அதற்குத்தான் இத்தகைய “கூட்டுத் தியானங்களை” அமைப்பது.

விஷம் தாக்கினால் இருளாகும்… விஷத்தை அடக்கினால் ஒளியாக மாறும்

 

ஆதியிலே உருவான உயிர் பல கோடிச் சரீரங்களை எடுத்துத் தீமைகளை வெல்லும் சக்தி பெற்றவன் முதல் மனிதன் அகஸ்தியன். அவனுக்கு எப்படிப் பேராற்றல்கள் கிடைத்தது…? என்று பார்ப்போம்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர் விஷம் கொண்ட மிருகங்களிடமிருந்தும் கொடூரமான பாம்பினங்களிடமிருந்தும் பூச்சிகளிடமிருந்தும் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக
1.விஷங்களை வென்றிடும் தாவர இனங்களையும் பச்சிலைகளையும் மூலிகைகளையும்
2.தன் அருகிலே பரப்பியும் தன் உடலில் பூசிக்கொண்டும் வாழ்ந்து வந்தனர்
3.சந்தர்ப்பத்தால் அந்தத் தாய் கருவுறுகிறது… அகஸ்தியன் என்று சிசு உருவாகிறது.

கருவுற்ற தாயின் உடலில் பூசிய மணங்கள் உடல் வெப்பத்தால் வெளிப்படும் பொழுது அந்தத் தாய் அதை நுகர்கின்றது கருவில் இருக்கும் குழந்தையும் அதை நுகர்கிறது. விஷத்தை முறிக்கும் ஆற்றலாக அதற்குக் கிடைக்கின்றது.

தாய் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் கருவிலே விளைந்த குழந்தைக்குள் உருவாகி… உருவாகி…
1.தீமைகளை அகற்றும் நிலையும்
2.நஞ்சை அடக்கும் உணர்வுகளும்
3.ஒரு பொருளை அறிந்துணர்ந்து செயல்படும் ஞானமும் அங்கே வருகின்றது

உதாரணமாக… விஷம் தாக்கி விட்டால் சிந்தனை போய்விடும். ஆனால் விஷத்தை அடக்கும் பொழுது அதனின் செயலாக்கங்களை அறியும் ஆற்றலாக வரும்.

ஆகையினால் விஷங்களை நீக்கும் உணர்வுகளை அகஸ்தியனின் தாய் நுகரப்படும் பொழுது… அது இரத்தத்தில் கலந்து அதன் மூலம் சிசுவிற்குக் கிடைத்து
1.நஞ்சை அடக்கிடும் அரும் பெரும் சக்தியாக
2.வாழ்க்கையில் சிந்தித்து செயல்படும் உணர்ச்சிகளாக அகஸ்தியனுக்குள் அங்கே உருப்பெறுகின்றது.

அகஸ்தியன் என்று அவனுக்குப் பெயர் வரக் காரணமே அணுவின் இயக்கங்களை அறிந்துணர்ந்து அதனின் ஆக்கச் செயல்கள் எது…? என்றும் அவன் உணர்ந்தவன் என்பதனால் தான்..!

சாதாரணமாக ஒரு பச்சிலையின் மணத்தை நாம் நுகர்ந்தால் அந்த ஞானவழிப்படி தான் நாம் செயல்படுவோம். அதே போன்று ஒரு நறுமணமான பூவை நுகர்ந்தால் அதன் மணம் அதனின் ஞானத்தின் வழி நம்மை மகிழ்ச்சி பெறச் செய்கின்றது.

மற்றவரிடம் ரோஜாவின் மணம் எப்படி இருக்கிறது தெரியுமா…? என்று இந்த மகிழ்ச்சியான உணர்வைச் சொன்னபின் கேட்போர் உணர்வுகளிலும் அதே மகிழ்ச்சி வருகின்றது. அவருக்குள்ளும் அந்த மகிழ்ச்சியை ஊட்டுகின்றது.

காரணம்… இந்த ஞானம் “ஆயுதமாக…” அவருக்குள் இயக்கப்படுகின்றது.

அதே போல் ஒரு மிளகாயிற்குள் காரம் மறைந்திருக்கின்றது. ஆனால் தெரியாமல் கடித்தவுடன் “ஆ…” என்று அலறுகின்றனர்.

இந்த உணர்வின் ஒலியைக் கேட்டவுடனே அடுத்தவருக்கும் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது. அவர் மீது இவருக்குப் பரிவு இருந்தால் உடனே தண்ணீரை எடுத்துக் கொடுக்கச் சொல்லி அதைத் தணிக்கச் செய்கிறது.

தவறான நிலைகள் கொண்டு ஆசையில் எடுத்து அவர் மிளகாயைக் கடித்து விட்டாலும்கூட… ஏம்ப்பா…! பார்த்துச் சாப்பிடக் கூடாதா..? என்று சொல்லச் செய்கின்றது.

காரணம் இந்த உணர்வுகள் அங்கு எதிர் நிலையாகப் படும் பொழுது இந்த உணர்ச்சியின் தன்மை பெறுகின்றது.

அவன் அறியாது உட்கொண்டாலும் பார்த்துச் செய்யப்பா…! என்று சொல்லி உடனே தண்ணீரை எடுத்துக் கொடுப்பது… ஞானம் “சரஸ்வதி…” பாசத்தால் இப்படி அவனை அமைதிப்படுத்தும் நிலைகளுக்கு உதவுகின்றது இந்த உணர்வின் ஞானம்.

இப்படிப் பல கோடித் தீமைகளை அகற்றிடும் ஞானம் பெற்றுத் தான் நாம் ஒவ்வொருவரும் மனிதனாக இன்று வளர்ச்சி அடைந்து வந்துள்ளோம்.

உதாரணமாக…
1.வான்வீதியில் மின்னல்கள் பாயும் பொழுது அங்கே இருள் மறைகின்றது.
2.பளீர்…ர்ர்… என்று ஒளி தெரிகின்றது. ஆனால் அந்த மின்னலும் விஷமே…!

அந்த மின்னல் ஊடுருவி மற்றொன்றோடு தாக்கப்படும் போது
1.அதையும் ஒளிக் கற்றையாக… ஒளியாக மாற்றுகின்றது.
2.அதிலிருக்கும் விஷத்தை அடக்கி தனக்குள் அந்த ஒளியின் அணுவாக மாற்றுகிறது.

விஷத்தை அடக்கும் சக்தியைத் தாய் கருவிலேயே அகஸ்தியன் பெற்றதனால் அந்த உணர்வின் வலிமை கொண்டு மின்னலிலிருந்து வரக்கூடிய விஷத்தைத் தனக்குள் அடக்கி உடலில் இருக்கும் அணுக்களை எல்லாம் ஒளியாக மாற்றும் திறன் பெற்றான்.

உயிர் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக வந்தாலும்… சந்தர்ப்பம் தாய் கருவிலேயே விஷத்தை அடக்கும் சக்தியை அகஸ்தியன் பெற்ற நிலையில்
1.அந்த வினைக்கு நாயகனாகத் தீமையை அடக்கும் உணர்வின் ஒளியாக அது செயல்படுகின்றது…
2.அதனின் ஞானமாக அது இயக்குகின்றது… அவ்வாறு பெற்று வளர்ந்தவன் தான் அகஸ்தியன்.
3.இன்றும் அவன் துருவ நட்சத்திரமாக உள்ளான்.

அதிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் தீமையை அகற்றும்… எதையுமே ஒளியாக மாற்றும்…! என்று தெரிந்து கொண்டோம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் எடுக்கப் பழகிக் கொண்டால் அகஸ்தியன் ஒளியாக ஆனது போன்று நாமும் ஆக முடியும்.

பேரின்பம் என்ற “பேரானந்தப் பெரு நிலை” – ஈஸ்வரபட்டர்

 

இன்றைய விஞ்ஞான முன்னேற்றத்தால் அணுக் கதிர்களின் (கதிரியக்கம்) செயலைக் கொண்டு மிக மிக நுண்ணிய வைத்திய முறைகளைச் செயல்படுத்துகின்றார்கள்.

மேலும் அதை வைத்துத் தொழில் நுட்ப முறைக்கும்… வானக் கோளங்களின் தொடர்பு நிலைகளை அறியவும் இந்தப் பூமியின் உள் நிலையை அறியவும் முற்படுகின்றார்கள்.

இருந்தாலும் ஒவ்வொரு நாடுமே…
1.ஒன்றுக்கொன்று தெரியாத நிலையில்
2.பூமத்திய ரேகையின் மையப் பகுதியில் அணுச் சேர்க்கையின் நுண் அணு வீச்சுக் கதிர்களைக் கொண்டு
3.பூமியின் உள் பாகத்தில் கிடைக்கப் பெறும்
4.சில ஆக்கச் சக்தியின் அலைத் தொடர்பு வளர்ப்புக்களைத் தன் பாகத்திற்குத் திருப்பி
5.தன் நாட்டை வளப்படுத்துவதற்காகவும்
6.அதே சமயத்தில் தனக்கு மேல் விஞ்ஞானத்தில் வளர்ந்த சில நாடுகளை வளரவிடாத தன்மைக்காகவும்
7.பூமியின் உள் பாகங்களிலேயே விஞ்ஞானத்தால் இவ்வொளிக் கதிர்வீச்சினைப் பாய்ச்சி
7.அதாவது நீர் வாயு லேசர் இயக்க அலைகளைப் பாய்ச்சிப் பல பாகங்களில் பூகம்ப நிலை ஏற்படும் வண்ணம்
8.பல வேலைகளை நடத்திக் கொண்டிருக்கின்றனர்
9.(வளர்ச்சி அடைந்த நாடுகள் செய்கின்றன இன்று வரையிலும்)

விஞ்ஞானத்தின் செயலைக் கொண்டு… உயிர் காக்கும் நிலைக்காக மருத்துவ ஞானங்கள் பல செயல்படுத்தியிருந்தாலும்… செயலின் வேகத்தில்… உண்மை உயர்வு வாழ்க்கை எது..? என்று மனிதன் இன்று அறியவில்லை.

தன்னுடைய இனம் புரியாத இன்பத்திற்காக உயர் குண உயிரை உணரும் பக்குவ நிலை இன்றித்தான் இன்றைய மனித வாழ்வு உள்ளது.

உடலை விட்டுப் பிரிந்த ஆத்ம உணர்விற்கு இன்பம் உண்டா…?

1.ஜீவ சக்தியின் சரீர வாழ்க்கையில் பெறும் இன்பம் தான் இன்பம் என்ற எண்ணம் மனிதனுக்கு உண்டே தவிர
2.ஆத்ம ஞானத்தில் உணரும் உயர் இன்ப நிலையின் உண்மை நிலை புரியவில்லை…!

சரீர நிலையில் உணரும் இன்பத்தைக் காட்டிலும்… “பேரானந்த பெரு நிலை…” என்று நம் முன்னோர்கள் உணர்த்திய உயர் நிலையின் உண்மை நிலையை வளர்ந்த ஆத்ம ஞானத்தின் சித்து நிலையிலே உணரலாம்.

உணவின் சுவையும்… மணத்தின் மகிழ்வும்… இசையின் இனிமையும்… இயற்கையின் எழிலையும்… பிள்ளைக் கனியமுதின் சொல் அமுதையும்…
1.இந்த உடல் வாழ்க்கையில் உணரும் பக்குவத்தைக் காட்டிலும்
2.ஆத்ம சித்து சக்தியின் தொடர்பினால் ஆத்மா பெறும்
3.இன்பத்தின் பெரு நிலையை உணரும் சக்தி நிலை பெற்றால்
4.சரீர வாழ்க்கையில் பெற்ற இன்பத்தைக் காட்டிலும்
5.பல கோடி இன்ப நிலைகள் சித்து ஞானத்தில் பெற முடியும்.

வாழ்க்கை நிலையில் கலந்து உறவாடும் எண்ணப் பரிமாற்ற நிலை எபப்டி உள்ளதோ… அதைப் போன்றே.. ஆத்ம தொடர் ஞான சித்துவின் வலுக் கொண்ட வளர்ச்சி பெற்ற தொடர்பு நிலையும் பலவாக உண்டு.

கூடிய வாழ்க்கையும்… கலந்துறவாடும் எண்ண நிலையும்… வாழ்க்கைத் தொடர்பில் எப்படி உண்டோ அதைப் போன்றே
1.ஞானச் சித்தின் ஞானிகளும் ஆத்ம சொந்தம் கொண்டு
2.இன்பம் கொண்ட இரு நிலை இன்பத்தையும் பெறுகின்றனர்.

ஜாதி… மதம்… உற்றார்… உறவினர்… என்ற பிடிப்பு வேலியற்ற “உயர் ஞான சொந்த பந்தங்கள்” ஆத்ம தொடர் கொண்டு அடையும் நிலையில்…
1.இரு நிலை இன்பத்தின் பெரு நிலை பெறும்
2.வளர்ப்பு நிலை இப்படி உண்டு.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நாம் ரோட்டில் செல்லும் பொழுது ஒரு வாகனம் வேகமாகச் செல்கிறது என்று வைத்துக் கொல்வோம். இது யார் மீதாவது மோதிவிட்டால் “அவர்கள் அவதிப்படுவார்களே…” என்ற எண்ணங்கள் நமக்குள் தோன்றுகிறது.

அந்த எண்ணங்கள் தோன்றும் பொழுது நமக்குள் அந்த வாகனத்தின் வேக உணர்வுகள் காணும் பொழுதே மனது நமக்குள் “பட… பட…” என்று துடிக்கின்றது.

அப்படிப் பயத்தின் உணர்வுகள் துடிக்கப்படும் பொழுது பய அலைகள் நமக்குள் பெருகி விட்டால் நம் சிந்திக்கும் திறனே இங்கே இழக்கப்படுகின்றது.

அப்பொழுது அந்த வேதனையின் உணர்வுகள் “இது என்ன ஆகுமோ…!” என்ற மன பயத்தால் வேதனை என்ற உணர்வுகள் தூண்டுகின்றது.

வேதனை என்ற அந்த நஞ்சு இதனுடன் கலக்கப்படும் பொழுது என்ன ஆகும்…?

1.ஏதாவது ஒரு பொருளைப் பார்த்தவுடன்
2.“அது கீழே விழுந்துவிடுமோ…” என்ற பயமாகி விட்டால்
3.அந்தப் பொருளை அந்த எண்ணத்தால் எண்ணும் பொழுது பார்க்கலாம்.
4.அந்தப் பொருள் கீழே கண்டிப்பாக விழுகும்.

ஆனால் அதே சமயத்தில்
1.அந்த மன வலுக் கொண்டு
2.இதை மாற்றி வைக்க வேண்டும் என்று எண்ணினால்
3.உடனே அது வரும்.

நாம் அப்படி எண்ணாமல் “இது கீழே விழுந்துவிடும்..” என்று தான் எண்ணுவோம். ஆனால் எடுத்து அதை “மாற்றி வைக்க வேண்டும்” என்ற மனம் வராது.

ஆகவே இந்த உணர்வுகள் இத்தகைய நிலைகள் கொண்டு அதே எண்ணத்திலிருக்கும் பொழுது இந்த உணர்வின் அலைகள் மோதும் பொழுது
1.நாம் எண்ணிய எண்ணங்களும்
2.எதிர்படும் உணர்வுகளும் மோதப்படும் பொழுது
4.காற்றலை போல் வந்து
4.அந்தப் பொருள் ஆடுவதைப் பார்க்கலாம்.

ஆக “மனிதனின் உணர்வின் உணர்ச்சிகள்” அது சிறிதளவு இருப்பதை இதிலுள்ள காந்தப் புலன் இழுத்து “டப்…” என்று கீழே விழுகச் செய்யும்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

தீமையை உருவாக்கும் சந்தர்ப்பங்களைத் தீமையை அகற்றும் சந்தர்ப்பங்களாக மாற்ற வேண்டும்

 

நண்பராகப் பழகுகின்றோம்… அவருக்குத் தக்க சமயத்தில் உதவியும் செய்கின்றோம். சந்தர்ப்பத்ததில் நாம் ரோட்டில் செல்லும் போது அந்த நண்பர் எதிரே வருகின்றார்.

ஆனால் அவரோ அவசரமாகச் சென்று கொண்டிருக்கின்றார் அது நமக்குத் தெரியவில்லை.

அவரை பார்த்தவுடன் இங்கே வாப்பா…! என்று கூறுகின்றோம்.

கூப்பிட்டவுடனே அவர் “இருங்கள்… நான் வருகிறேன்…” என்று சொல்லி விட்டுச் சென்று விடுகின்றார்.

அட… இங்கே வந்து விட்டுப் போப்பா…! என்று இரண்டாம் முறையும் கூப்பிடுகின்றோம். அவர் அப்படியே சென்று விடுகிறார்.

இவனுக்கு வந்த கிராக்கியைப் பார்…! அன்றைக்குத் தேவைக்கு நம்மிடம் வந்தான். இன்றைக்குக் கவனிக்கவே இல்லை. நாம் கூப்பிட்டால் வர மாட்டேன் என்கிறான்.

அனால் தேவை என்று அவன் கேட்கும்போது அவனுக்கு நாம் கொடுத்தோமே…! என்று இப்படி அந்த உதவி செய்த நிலைகள் தான் வருகின்றதே தவிர “அவருடைய சந்தர்ப்பத்தைப் பற்றிச் சிந்திக்கும் தன்மை வருவதில்லை…”

1.அவர் எந்த அவசரத்தில் போகின்றாரோ…!
2.போகும் வேகத்தைப் பார்த்த பின் அந்த உணர்வுகள்… அந்த ஞானம்…
3.சரி போகட்டும் ஏதாவது அவசர வேலையாக இருக்கும் போல் தெரிகின்றது என்று
4.அந்த நேரத்தில் நம் மனதைச் சமப்படுத்திக் கொள்ள வேண்டும்.
5.அவன் போகக் கூடிய காரியத்தைத் தடைப்படுத்திவிட்டோமோ…? என்னமோ…!
6.அவன் போகும் காரியங்கள் ஜெயமாக வேண்டும் என்று நாம் எண்ணிவிட வேண்டும்.

இப்படி எண்ணினால் நம் மனதும் அமைதிப்படும்.

அடுத்ததாக ஒரு பொருளை எடுக்க வேண்டும் என்றாலும் கூட சிந்தனைக்குத் தகுந்த மாதிரி நாமே சென்று அதை சீராக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.

இப்படி எண்ணவில்லை என்றால் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும்…
1.அந்த ஒரு நிமிடம் அல்லது அந்த ஒரு நொடியானால்
2.நமக்குள் மனதைக் கெடுக்கக்கூடிய நிலை ஆகி நம் நல்ல குணங்களை மாற்றி அமைத்து விடுகின்றோம்.

நல்ல குணங்களை நமக்குள்ளும் செயலற்றதாக மாற்றுகின்றோம். அதே போல் அந்த நண்பருக்குள்ளும் செயலற்றதாக ஆக்குகின்றோம். அப்பொழுது இரண்டு பேருடைய நல்ல மனமும் கெடுகின்றது.

ஆக… எதன் உணர்வைச் சேர்க்கின்றோமோ அதன் ஞானமாகத்தான் உயிர் நம்மை இயக்குகிறது. எதன் உணர்ச்சியோ அதை நுகரப்படும் பொழுது அதன் வழிதான் நம்மை இயக்குகின்றது.

எதன் உணர்வு நம் நம் உடலில் சேர்கின்றதோ அந்த இணைந்த உணர்வு கொண்டு தான் பிரம்மமாகி அதனின் சக்தியாக நம்மை இயக்குகின்றது.

இணைந்த நிலைகள் நம் உடலில் இருக்கும் பொழுது
1.உயிர்… வசிஷ்டர் – கவர்ந்து கொண்ட உணர்வுகள் உடலாகிறது.
2.அதனின் சக்தியாகவே அது இயக்குகிறது.

அதாவது மனித உடலுக்குள் உயிரின் தன்மை ஈசன் என்றாலும் உணர்வின் தன்மை உடலாகின்றது பிரம்மம் என்பதை இப்படிக் காவியங்களில் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

நன்றாகப் படித்து பாருங்கள். நான் மனிதன் வாழ எத்தனையோ வழிகளை ஞானிகள் காட்டி உள்ளார்கள்.

விஜயதசமி என்று சொல்லும் பொழுது தீமைகளை அகற்றிப் பழக வேண்டும். நம் உயிர் பூமிக்குள் விஜயம் செய்து பல கோடிச் சரீரங்கள் பெற்றுத் தான் மனிதனாக இன்று நம்மை உருவாக்கி உள்ளது.

1.ஒருவன் தீமை செய்வதைச் சந்தர்ப்பத்தால் பார்த்துணர்ந்தால்
2.அல்லது நாம் சந்திக்கும் உணர்வுகள் தீமையாக இருந்தால்…
3.அதை எல்லாம் ஒவ்வொரு நொடிகளிலும் நாம் சுத்தப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.

சுத்தப்படுத்தத் தவறினால் பத்தாவது நிலையை (தசமி) அடையக்கூடிய தருணம் தடைபட்டு மீண்டும் புவியின் ஈர்ப்புக்கே வந்து விடுகின்றோம்.

காரணம் நல்ல குணங்கள் கொண்டு வேதனைப்படுவோரை நுகர்ந்தால் நம் நல்ல குணத்திற்குள் விஷத்தின் தன்மை பட்டு… விஷத்தின் ஆற்றல் வலுவான பின் நல்ல குணங்கள் மடிகின்றது.

அதை மாற்ற மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நம்முடைய எண்ணங்கள் கூர்மையானால் தீமைகளை விலக்கும் நிலை வருகின்றது.

1.தீமையை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வை நாம் அவ்வப்போது நுகர்ந்தால்
2.எந்தத் தீமையும் அணுகாதபடி நம்மை நாம் காத்துக் கொள்ளலாம்…
3.நம் நல்ல குணங்களையும் காக்க முடியும்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தன் வாழ்க்கை முடியும் தறுவாயில்… கடைசியாகத்தான்… தெய்வீகத் தன்மையை இன்று தேட ஆரம்பிக்கின்றார்கள் – ஈஸ்வரபட்டர்

 

இச்சரீர பிம்ப உடலில் உணர்வின் எண்ணத்தில் காணும் இன்ப நிலை ஒன்றைத்தான் மனிதன் பெரு நிலையாக எண்ணத்தின் ஏக்கத்துடன் வாழ்கின்றான்.

1.உணவின் சுவை…
2.நுகரும் மணத்தின் நிலை…
3.உறக்கத்தின் இன்ப நிலை…
4.உடல் இச்சையின் காதல் களிப்பு நிலை.. இவற்றின் இன்பத்தையும்
5.ஒளி கொண்டு காணும் இயற்கை அழகு… கலை இன்ப நிலை…
6.நகைச்சுவை நிலை… பிள்ளைக் கனியமுதின் வளர்ப்பு நிலை…
7.அன்பு பாசம் பரிவு பரவசச் செயல் நிலை…
8.இவற்றின் தொடரில் எல்லாம் மனித உணர்வின் எண்ணம் இன்பம் கண்டு
9.இவற்றின் தொடரில் கிடைக்கப் பெறும் அமைதிக்காக
10.பொருள் சேர்க்கையின் வரவு நிலையிலும் இன்பம் உள்ளது என்ற தொடர் வாழ்க்கையில் “இன்பம்” அடைகிறான் மனிதன்

ஆனால் அதே சமயத்தில்…
1.உடல் உபாதையில் ஏற்படும் எதிர்ப்பு நிலையில் அவதிக்கும்
2.குடும்ப வாழ்க்கையில் உண்டாகும் மற்றவரின் எதிர்நிலையின் சோர்வுக்கும்
3.இன்ப நிலை என்று உணரும் தன்மையில் எதிர்ப்படும் மோதல் நிலை எதுவாகிலும்
4.”துன்ப வாழ்க்கை” என்ற சோர்வில் எண்ணத்தைச் சோர்வுப்பட்டு
5.முந்தைய நிலையைச் சுட்டிக் காட்டி – இன்ப நிலைக்காக எதிர்படும் எவையுமே துன்பம் என்ற அச்ச உணர்வினால்
6.வாழ்க்கையில் ஏற்படும் எதிர்நிலை சோர்வைக் கொண்டு
7.எண்ணத்தின் உணர்வில் (முதலில்) ஏற்றிக் கொண்ட இன்பத்தைத்தான்
8.“மனித வாழ்க்கையின் இன்பமே அடங்கி உள்ளது…!” என்று மனித ஓட்டக் காலங்கள் ஓடுகின்றன இன்று.

ஆத்ம நிலையின் தொடர்பையும் அதில் உள்ள உன்னத நிலையையும் ஞானிகள் உணர்த்தினால்
1.வாழ்ந்த வாழ்க்கையில் சலிப்புற்ற நிலையில்… கடைசியாகத்தான்…
2.வாழ்க்கையிலிருந்து அடையக் கூடிய தெய்வீக பக்தி மார்க்கத்திற்காக
3.ஆத்ம ஞான போதனையைச் செலுத்த வேண்டும் என்ற உணர்வுடன் உள்ளார்கள் இன்றைய மனிதர்கள்.

ஏனென்றால் மனித சக்தியினால் இன்று முன்னேறிய தொழில்நுட்ப வைத்திய முன்னேற்ற செயலின் விஞ்ஞான வளர்ச்சியைக் காட்டிலும் வளரும்
1.இவ்வாத்ம ஞானத்தைக் கொண்டு
2.ஆத்ம ஞானத்தின் ஆற்றலைக் கொண்டு
4.பல உன்னத உணர்வு ஞானத்தையே உருவாக்கலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒரு மனிதன் அரிப்பின் காரணமாக மேலில் அரித்துக் கொண்டிருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். உற்று நாம் அதைப் பார்த்தால் போதும்.

பார்க்கலாம்…! உடனே நம்மை அறியாமலே நம் உடலில் எங்கேயாவது கையை வைத்துத் தேய்க்க (அரிக்க) ஆரம்பிப்போம். அந்த உணர்வின் உணர்ச்சிகள் நம்மை அறியாமலே அதே உணர்ச்சிகளைத் தூண்டச் செய்யும்.

ஏனென்றால் இது இயற்கையின் உணர்வுகள்.

1.நாம் எதை உற்றுப் பார்க்கின்றோமோ
2.அது நம் சுவாசத்திற்கு வருகின்றது. அதை நுகர்கின்றோம்.
3.”அதே உணர்வு” நம்மை அறியாமலே அந்தச் செயல்களைச் செயல்படுத்துகின்றது.

ஒருவர் தன் தலையைச் சொறிவதைப் பார்த்துக் கொண்டேயிருந்தால் போதும். நம்மை அறியாமலே நம் கை என்ன செய்யும்…? தலையைச் சொறியப் போகும்.

காரணம் அந்த உணர்வின் எண்ணங்கள் நாம் நுகரப்படும் பொழுது அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.

1.கண்களால் பார்க்கின்றோம் தெரிந்து கொள்கிறோம்
2.காதால் கேட்கிறோம் அறிகிறோம்
3.உடலால் உணர்ச்சிகளை அறிகின்றோம்…
4.வாயில் சுவையை அறிகின்றோம்.

ஒவ்வொரு நொடிப்பொழுதும் நாம் சுவாசிக்கும் உணர்வின் தன்மைகளை நாம் யாரும் அறிவதில்லை. அதைப் பற்றிச் சிந்திப்பதுமில்லை.
1.மனிதனுடைய ஆணிவேர்
2.அவனுடைய சுவாசம் தான்.

நாம் எண்ணக்கூடிய உணர்வின் எண்ணங்கள் தான் இயக்குகின்றது. இதைத் தெளிவாக நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

ஞானத்தைப் பெற வேண்டும் என்றால் நமக்கு நாமே விசாரணை செய்ய வேண்டும்…!

 

சரஸ்வதி பூஜையை நாம் கொண்டாடுகின்றோம். சரஸ்வதி என்றால் ஞானம். அன்றைய நாள் முழுமைக்குமே ஞானத்தை வளர்த்திடும் நாளாக நாம் அமைக்க வேண்டும்.

அதற்காக நமக்கு நாமே விசாரணை செய்ய வேண்டும்…1

1.என் குடும்பத்தில் நான் என்ன செய்தேன்…?
2.கல்வியில் நான் எதை எதைத் தவறவிட்டேன்…?
3.தொழிலில் நான் என்னென்ன செய்தேன்…? அதிலே எந்தெந்தக் குற்றங்கள் வந்தது…? அதனால் தொழில் எப்படி மந்தமானது…?

இதைப் போன்று ஒவ்வொரு நிலையிலும் சிந்திக்கும் நாள் தான் ஆயுத பூஜை நந்நாள் என்பது.

நமது வாழ்க்கையில்
1.இந்த வருடம் முழுவதுமே நாம் என்ன செய்தோம்..?
2.குடும்பத்தில் எப்படி ஒற்றுமையாக இருந்தோம்…?
3.நம் சொல்லால் குடும்பம் எப்படி ஒற்றுமையானது…? என்ற நிலையில் இந்த ஞானத்தை அறிதல் வேண்டும்.

ஆனால் சந்தர்ப்பத்தால் அந்த ஞானம் குறையப்படும் போது… அந்தக் குறைந்த நிலைகள் எப்படி இயக்குகின்றது…? ஞானம் குறைந்ததன் காரணமாக
1.வாழ்க்கையில் சிரமங்கள் எப்படி வந்தது…? துன்பங்கள் எப்படி வந்தது…? தொழில் எப்படி நஷ்டமானது…?
2.ஞானம் தவறி நுகர்ந்த உணர்வால் நம் உடலில் நோய்கள் எப்படி வந்தது…? என்று
3.அதை எல்லாம் விசாரணை செய்து நம்மை நாமே சிந்திக்கக் கூடிய நாள் தான் இது.

ஒவ்வொரு நாளும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நம்மை நாமே தூய்மைப்படுத்தி இந்த அருள் ஞான சக்தியை வளர்க்க வேண்டும்.

உதாரணமாக கடையிலே நஷ்டமாகி இருந்தால் அந்த நஷ்டம் எதனால் ஆனது…? என்று சிந்தனை செய்ய வேண்டும். ஆனால் சிந்தனைக்கே வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்…?

அழுக்குப்பட்டுப் பட்டு ஒரு பொருள் அங்கே மறைந்திருந்தால் அதைத் துடைத்தால் தான் மீண்டும் உள்ளிருக்கும் அந்தப் பொருள் தெரிகிறது… தெளிவாகத் தெரிகின்றது.

அதைப் போன்று…
1.வாழ்க்கையில் அப்படித் தெரியப்படுத்தும் உணர்வுகளை
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நாம் தூய்மைப் படுத்தும் பொழுது
3.எது நம் நல்ல குணங்களை மறைத்தது…? எதனால் வியாபாரம் நஷ்டமானது…?
4.ஒற்றுமையாக இருந்த நம் குடும்பம் எதனால் பிரிந்து செல்லும் நிலை வந்தது…?
5.பிரிந்து வாழ்ந்ததனால் நமக்குள் நல்ல சொல்கள் எப்படி இழக்கப்பட்டது…?
6.நல்ல சொல்கள் இழந்த நிலையினால் நம் தொழில்கள் எப்படிக் குன்றியது…?

இது எல்லாம் சீர்கெடும் போது நம் உடலில் நல்ல உணர்வுகள் மாறி ஒருவருக்கொருவர் கடும் சொல் சொல்லும் போது
1.அன்னை தந்தையைப் பிரிந்து வாழும் நிலை எப்படி வருகின்றது…?
2.சகோதர உணர்வுகள் எப்படி மறைகிறது…? சகோதரர்களுக்குள் போர் செய்யும் முறைகள் எப்படி வருகின்றது…?
3.எந்தெந்தக் குற்றங்களால் நன்றாக வாழ்ந்தவரின் நிலைகள் மாறுகிறது…?
4.ஒற்றுமையாக இருந்த நண்பர்கள் எல்லாம் எப்படிப் பகைமையானார்கள்…? என்று
5.மேலே சொன்ன தீமைகளிலிருந்தெல்லாம் நாம் விடுபடும் முறைகள் எது…? என்று
6.நமக்கு நாமே விசாரணை செய்ய வேண்டும்.

ஆகவே சரஸ்வதி பூஜை என்றால் அந்த அருள் ஞானத்தை எடுத்து நமக்குள் வளர்த்துக் கொள்ளும் நாளாக நாம் கொண்டு வருதல் வேண்டும்.

ஞானிகள் காட்டிய வழியில் அந்த அருள் ஞானத்தை எடுத்து அருள் சக்திகளை வளர்த்து தீமைகளிலிருந்து மீட்கும் உபாயத்தைக் கடைப்பிடித்தல் வேண்டும்.

எது எது அழுக்குகள் இருந்தததோ அதை எல்லாம் தூய்மைப்படுத்துதல் வேண்டும்.
1.நம் நல்ல எண்ணங்களைக் கூர்மையாக்கி… அதனுடன் ஞானிகள் உணர்வை இணைத்து வலிமை பெறச் செய்து
2.நம் சொல்லால் செயலால் மூச்சால் எல்லோருக்கும் நன்மை பெறச் செய்யும் சக்தியாக நாம் மாற வேண்டும்.

மனிதனால் தான் “தெய்வ சக்தியை உருவாக்க முடியும்…” பிறந்த பலனை இழக்காதீர்கள் – ஈஸ்வரபட்டர்

 

இச்சரீர உடலில் உணரும் எண்ண வேட்கைகள் யாவையும்… சாதாரண வாழ்க்கை நிலையில் உள்ள மனிதனுக்குப் பூமியின் ஈர்ப்புப் பிடியுடனே சிக்கி உள்ளது.

பூமியின் அலைத் தொடர்பை இவன் எடுத்து…
1.உணர்வின் பிடியை எண்ணத்தின் வேட்கைக்கொப்பச் சம நிலை கொள்ளாத் தன்மையாலும்
2.சந்தர்ப்பத்தால் எடுக்கும் உணர்வின் வேக உந்தலினாலும்
3.ஒவ்வொரு மனித உடலிலும் ஜீவனற்ற ஆத்ம உயிர்கள் குடியேறி உள்ளது.

அவ்வாறு “குடியேறிய ஆத்மாக்கள்” மனிதனின் எண்ண உணர்வையே தன் இச்சையில் செயல்படும் “ஞான அணு” வளர்ப்பை வளர்க்க விடாமல்… “அந்த ஆத்மாக்கள் வளர்க்கும்” உணர்வின் எண்ண நிலைக்கொப்ப வளரும் தன்மையே உருவாகின்றது.

அந்த மாறு கொண்ட தன்மையால் குடியேறிய ஆத்மாவின் அணு வளர்ப்பினால் சரீர பிம்பத்தில் ஏற்படும் தொல்லைகளில் ஆங்காங்கு ஏற்படும் உடலின் கட்டிகளினாலும் சில புண்களினாலும் கரப்பான் சொறி போன்ற சரும வியாதியினாலும் உதிரமே சீழாகி அச்சீழ் வளர்க்கும் அணுவை மேன் மேலும் வளர்க்கும் நிலையினால் கடுமையான நோய்களும் உருவாகின்றது.

ஆக மொத்தம்… உணர்வின் எண்ணத்தின் செயலுக்கொப்ப…
1.உட்கொள்ளும் உணவிலும் போதைவஸ்தின் ஈர்ப்பிலும் காம இச்சை வெறியிலும் இச்சரீர பிம்பத்தையே “அழுகும் மூட்டையாக்கி”
2.ஆத்மாவின் செயலையே இவ்வீர்ப்பின் ஆத்மாவாக்கி
3.பல காலமாக… பல கோடி உயிர் தொடர் பிம்பத் தொடர்பில் எல்லாம் முலாம் பெற்ற ஆத்மாவை…
4.உயர்ந்த தெய்வ சக்தியாக செயல் கொள்ளும் எண்ணத்தால்… எதனையும் செயல் புரியும் மனித சக்தி பெற்ற பிறகு…
5.உடல் உணர்வின் உந்தலின் வேட்கைக்காக மனித ஆத்மாக்களின் இன்றைய செயல்
6.தன்னைத் தானே இழக்கும் நிலையாகச் (மனித வித்துக்கள்) சென்று கொண்டிருக்கின்றது.

அதை மாற்றிடத் தெய்வ சக்தி பெற்ற தேவர்களின் (மகரிஷிகளின்) தொடர்பைக் கொண்டு மேல் நோக்கிய வளர்ச்சியினால் நம் வளர்ப்பலையின் தொடர்பை எவ்வீர்ப்பு அலையிலும் சிக்காமல் சகல சக்திகளையும் உணர்ந்திடலாம்.

இயற்கைச் சக்தியின் செயலாகச் செயலாற்றும் சப்தரிஷிகளின் ஞானத் தொடர்பலையுடன் உணர்வின் எண்ணமுடன் அந்த ஞான ஈர்ப்புத் தொடர்பலையை பெற்றோமானால்
1.இஜ்ஜட சரீர அணு மூட்டையின் பிடிப்பிலிருந்து
2.உயர் கொண்ட ஞான ஈர்ப்பிற்குச் செல்லலாம்.

மனிதனைக் காட்டிலும் உருவத்திலும்.. பலத்திலும்… அறிவிலும்… சுவாச ஈர்ப்பு நிலையிலும்… சக்தி கொண்ட “யானைக்கே…” மனிதனை ஒத்த செயல் அங்கங்களோ சொல்லாற்றும் திறமையோ அற்றதினால் எல்லா நிலைகளும் உணர்வும் தன்மை இருந்தும் ஞானத்தை வளர்க்கும் வளர் நிலைக்குச் செல்ல முடியவில்லை. இதைப் போன்ற நிலை மிருகங்களில் பலவற்றுக்கும் உண்டு.

எறும்போ கொசுவோ மூட்டைப் பூச்சியோ உருவத்தில் மிகச் சிறியதாக இருந்தாலும் அவை மனிதனைத் தாக்கும் பொழுது அதன் கடி நிலைக்குப் பயந்து பல முன் ஏற்பாடுகளைச் செய்து பல நிலைகளைச் செய்கின்றான் மனிதன்.

1.ஒவ்வொரு நொடிக்குமே இச்சரீர ஜட பிம்பத்தின் ஈர்ப்பு எண்ண வேட்கைக்குத் தான் மனிதன் வாழுகின்றான்.
2.அதிலிருந்து மீண்டு ஆத்ம ஞானத்தின் உணர்வை மனித ஞானம் பெற முடியும்.
3.மனிதன் மட்டும் தான் அந்தத் “தெய்வ சக்தியை” உருவாக்க முடியும்.

அன்று போகன் தன் உடலால் பெற்ற சக்தியை இந்த உலகம் முழுமைக்கும் பரப்பும் நிலை கொண்டு தன் ஆத்மாவில் பெற்ற உயர் அலையின் தொடரை இந்த உலகம் முழுமைக்கும் அந்தந்த இடங்களில் ஜீவன் கொண்ட சக்தி அலைத் தொடர்புகளை பூமியில் பதிய வைத்துள்ளான்.

அவ்வலையின் ஞானத்தால் பல கோவில்களை அமைத்து மனிதனின் எண்ணத்தில் தெய்வ ஞான சக்தியை வளரச் செய்தான்.

போகரும் கோலமாமகரிஷியும் கொங்கணவரும் அகஸ்தியரும் ஐயப்பனும் ஆதிசங்கரர் போன்று பல எண்ணற்ற ரிஷிகளும் இன்றளவும் சரீரத்தின் தொடர்பு கொண்டு அன்று பதிய வைத்த அலைத் தொடர்பின் வழித் தொடர்பினால் செயலாற்றிக் கொண்டுள்ளார்கள்.

இக்கலியின் கடைசியில் எண்ணத்தின் உணர்வைக் கொண்டு நாம் எடுக்கும் தியானத்தால் அந்த உயர்ந்தோரின் உயர்வுடன் அவர்களின் செயல் நிலைக்கொத்த தன்மைக்கு நாமும் வளரலாம்.

மேல் நோக்கிய சுவாச அலையினால் எண்ணத்தின் உணர்வை ஞானத்தின் பால் செலுத்தி இச்சரீர ஜடப் பொருளை கொண்டு ஆத்மாவின் வலுவைக் கூட்டிக் கொண்டோமானால்
1.இப்பூமியிலே மனிதனாக பிறந்து சகல சித்தியும் அடைந்து
2.சப்தரிஷியாக வாழும் பலரின் நிலை போன்று நாமும் வாழ்வாங்கு வாழ முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒரு ரோஜாப்பூவின் மணம் அதிகமாக வீசும் இடத்தில் அதன் அருகில் இருக்கும் தீமை விளைவிக்கக்கூடிய ஒரு நஞ்சான செடியிருந்தாலும் அதனின் மணம் விலகிச் சென்றுவிடும்.

இதைப் போல நாம் அடிக்கடி வேதனை என்ற உணர்வை அதிகமாகக் கூட்டும் பொழுது நமக்குள் வந்து சேரும் நல்ல குணங்களை விலக்கித் தள்ளிவிட்டுத் தீமையின் உணர்வையே செய்து தீமையின் உடலாகவே நம்மை மாற்றிவிடும்.

1.ஒரு தாவர இனத்தின் “மணம்”
2.இன்னொரு தாவர இனத்தின் மணத்தை “விலக்கித் தள்ளுவது போல்”
3.நாம் தீமைகளை நம்மிடமிருந்து விலக்கித் தள்ள வேண்டும் என்றால்
4.தீமைகளை அகற்றிட்ட அந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் அதிகமாகச் சேர்ப்பித்துக் கொள்ள வேண்டும்.

1.கூட்டுத் தியானத்தால் எடுத்துக் கொண்ட உணர்வின் வலுக் கொண்டு
2.அந்த உணர்வின் தன்மை ஒருக்கிணைந்து நாம் விடும் மூச்சலைகள் கொண்டு
3.தீமையை விளைவிக்கும் உணர்வுகளை நம்மிடமிருந்து விலகிச் செல்லச் செய்ய முடியும்.

நாம் அந்த அருள் ஞானியின் உணர்வை நமக்குள் பருகும் நிலையாக நாம் அனைவரும் ஒருக்கிணைந்து எடுக்கும் இந்த எண்ண வலுவின் துணை கொண்டு தான் நாம் இவ்வாறு செய்ய முடியும்.

ஒரு நெல்லை வைத்து ஒருவர் உணவாக உட்கொள்ள முடியாது.

நாம் எல்லோரும் சேர்ந்து எடுக்கும் உயர்ந்த எண்ணங்கள் கொண்டு அது பல நெல்களாகக் குவிகின்றது. அதைச் சமைத்துச் சாப்பிட்டால் அவரவர் பசி தீர்வதைப் போல்
1.நம்முடைய எண்ணங்கள் அனைத்தும் ஒருக்கிணைந்து
2.அந்த வலுவின் தன்மை கொண்டு
3.உயர்ந்த ஞானியின் உணர்வை நமக்குள் சமைத்து
4.அருள் ஞான உணர்வை நமக்குள் விளையச் செய்ய முடியும்.

ஒரு பொருளுக்குள் இருக்கும் நஞ்சினை வேக வைத்து நீக்குவது போல் அருள் ஞானிகளின் உணர்வை நம் நற்குணங்களுடன் இணைத்து நம்மை அறியாது வந்த தீமையை அகற்றிடல் வேண்டும்.

அருள் ஞானிகள் உணர்வை… “இணைத்து இணைத்து” நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிட முடியும். அனைவரும் இதைப் பெற வேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் பிரார்த்திக்கின்றேன்.

புத்தி மழுங்கி விட்டது… என்று சொல்வதன் உட்பொருள் என்ன…?

 

மாணவ மாணவிகள் தங்கள் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ வேதனைப்படுத்தும் உணர்வுகளையோ அல்லது கோபப்படுத்தும் உணர்வுகளையோ கேட்க நேர்ந்தால் அந்த உணர்வுகளை நுகர்ந்து கொண்டபின் பாடம் கற்பதிலே குறைபாடுகள் ஏற்படுகிறது.

பள்ளிக்குச் சென்று நன்கு படிக்க வேண்டும்… ஞானத்தை வளர்க்க வேண்டும்… ஞான சக்திகளை வளர்க்க வேண்டும்… என்று எண்ணினாலும் கூட யாரைப் பார்த்துக் கோபத்தை வளர்த்தார்களோ அதைச் சேர்க்கப்படும் பொழுது இந்த உணர்ச்சியின் வேகமே கலக்கின்றது.

ஆனால் பள்ளியில் பாட நிலைகளிலோ முக்கிய குறிப்புகள் இருக்கும். இந்தக் கோப உணர்ச்சிகளின் வேகம் இருக்கும் போது அந்தக் குறிப்புகளைப் பற்றிய சிந்தனைகள் வராது… படித்த நிலைதான் வரும்.

ஆகவே அந்தக் கோப உணர்வுடன் படித்த நிலைகள் வரப்படும் பொழுது என்ன ஆகிறது…?

1.உணர்ச்சி வேகத்தால் படித்து மீண்டும் பாடத்தை நினைவுக்குக் கொண்டு வரலாம்.
2.ஆனால் மீண்டும் அவர்களைக் கண்டபின் உணர்ச்சிவசப்படும் அந்த ஞானம் தான் வரும்.
3.அதோடு சேர்ந்து இந்தக் கோபமும் வரும்
4.அந்தக் கோபத்தால் அவனை எப்படித் திட்டலாம்…? எப்படி விரட்டலாம்…? என்ற உணர்வுதான் வரும்.

அப்படிப்பட்ட உணர்வு வரப்படும் பொழுது
1.நல்லதுக்குள் இது கலந்து நல்லதற்றவையாக அதை மாற்றி…
2.கூர்மையாகச் செயல்படும் அறிவின் ஞானத்தை அந்த ஆயுதத்தை… நல்ல குணங்களை மழுங்கச் செய்து விடுகிறது
3.சிந்தனையற்ற நிலையில் போகின்றது. (புத்தி மழுங்கி விட்டது என்று சொல்கிறோம் அல்லவா..!)

எந்தச் செயலும் சரியாக வேலை செய்வதில்லை அதே சங்கட நிலைகளிலில் யாரிடமாவது ஒரு சொல்லைச் சொன்னாலும் அவர்களையும் அது சங்கடப்படச் செய்யும்.

இதைப் போன்ற நிலைகளை மாற்றிட நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று அடிக்கடி இந்த உணர்வுகளை எண்ணி எடுத்து உடலுக்குள் சேர்க்க வேண்டும்.

நாம் எந்ததெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ அது எல்லாம் ஓ…ம் நமச்சிவாய… என்று நம் உடலாகிப் பிரம்மமாக உருவாகின்றது. பிரம்மாவின் மனைவி சரஸ்வதி… அந்த ஞானமாக நம்மை இயக்குகிறது.

அதாவது…
1.எக்குணத்தின் அணுவின் தன்மை நமக்குள் பெறுகின்றதோ
2.அதன் வழிப்படி தான் அந்த அணு வளரத் தொடங்கும்.

ஒரு மரமோ செடியோ எந்த உணர்வின் தன்மை பெற்றதோ அதிலே விளைந்த வித்தினை மீண்டும் நிலத்தில் ஊன்றினால்… அந்த வித்தின் உணர்வுகள் எதைச் சேர்த்ததோ… அந்த உணர்வுக்கொப்ப
1.மரத்தின் ரூபமும்
2.அதனுடைய மணமும் குணமும்
3.அதனுடைய வளர்ச்சியும் அடைகின்றது.

இதைப் போன்றுதான் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் சேர்க்கப்படும் பொழுது அந்தக் குணத்திற்கொப்ப அணுவின் தன்மை நம் உடலிலே வளர்ச்சி அடைகிறது.

அத்தகைய நல்லவைகளை நுகரப்படும் போது நம் உடல் நன்றாக இருக்கிறது… சந்தோஷமாக இருக்கின்றது… மகிழச் செய்கிறது…! நம் சொல்களும் இனிமையாக வருகின்றது. நம் சொல்லைக் கேட்போருக்கும் மகிழ்ச்சியாகி நம்முடன் இணைந்து வாழும் செயலாக அமைகின்றது.

சப்தரிஷிகளின் செயல்கள் – ஈஸ்வரபட்டர்

 

தன் பெருமைக்காகவோ… புகழுக்காகவோ… சித்து நிலை வளர்ப்புப் பெற்ற ரிஷித் தன்மையின் “ஆக்கத் தன்மை” செயல்படவில்லை.

மனித இனத்தின்… வளர்ப்பின் ஞான வித்தின் வழித் தொடரை அந்த வித்து அழியாமல் செயல்படும் செயலுக்காகத் தன் சக்தி நிலையைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

1.மனிதக் கரு உயர் ஞானம் பெற வல்லமை பெற்ற
2.அத்தகைய செயல் கொள்ளும் கோளங்களில் எல்லாம்
3.அவ்வித்தின் நிலை வளர்ந்திட சப்தரிஷிகளின் செயல் முறை செயல்படும் தன்மை தான்
4.ரிஷித் தன்மை பெற்ற வளர் குணத்தின் வளர்ப்பு நிலை.

நம் பூமியைக் காட்டிலும் ஞானத்தில் உயர்ந்து மனித குண வீரிய உயர் சக்தி கொண்ட ஞான வளர்ச்சி பெற்ற மக்கள் நம் சூரியக் குடும்பமல்லாதபடி பேரண்டத்தில் மற்ற இரண்டாயிரம் சூரியக் குடும்பங்களில் உண்டு.

ஆனால் விஞ்ஞானத்தைக் கொண்டு செயற்கையின் ஞானம் பெற்ற இனத் தன்மை நம் பூமியில் உள்ள மனிதனுக்குத்தான் உண்டு.

மற்ற கோளங்களில் உள்ள மனித இனங்கள் எல்லாம் ஞானத்தால் உயர்ந்து… “பறக்கும் தன்மை கொண்ட” சரீர உடல் வளர்ந்த பக்குவ வளர்ப்பாகச் செயல் கொள்கின்றனர்.

நம் பூமியில் தன் ஞானத்தை இயந்திரங்களில் செலுத்திப் பழக்கும் நிலையை இன்று கொண்டுள்ளான் மனிதன்.

இந்தப் பூமியில் ஆதியிலே உயிரணுத் தோன்றி வளர்ச்சி கொள்ளும் வளர்ப்புத் தன்மையில் மோதுண்டு… மோதுண்டு… வளர்ச்சி பெறும் வளர்ச்சி நிலையில் கனி வளங்களும் தாவர இனங்களும் வளர்ச்சி கொண்டு… வளர்ச்சி கொண்டு… வளர்ச்சியின் முற்றிய தன்மை கொண்ட பிறகு தான் “மனித இனங்களே” உருவானது.

தன் உணர்வின் எண்ணத்தால் செயல்படும் அங்க அவயங்களும் சொல்லாற்றும் திறமையின் வளர்ச்சியும் பெற்று வளர்ந்து வந்தாலும்
1.அநத் தொடரின் வளர் தன்மை
2.அடுத்த உயர்ந்த நிலைக்கு மனித இன வர்க்கம் செல்லாதபடி தடையாகி விட்டது.

இப்பூமியில் கிருஷ்ணாவதாரக் காலம் தொட்டே (3000 – 4000 ஆண்டுகளுக்குள்) பேராசைப் பிடி உல்லாச வாழ்க்கை எண்ண உரு வளர்ப்பு வளர்ச்சி பெற்றதனால் மனித வளர்ப்பின் சரீர செயல் எண்ண வளர்ப்பும் தடைப்பட்டு தன் ஞானத்தில் செயல்படும் நிலை மாறி விட்டது.

கல்வி என்பதும் அடிமை கொண்ட குண போதனை ஆகி விட்டது. குரு சிஷ்யன் என்ற குரு குலத் தொடர்பு நிலையில்
1.மனிதனின் எண்ணத்தில் தன் உயர்வின் பெருமையில்
2.பிறரின் நிலையை அடக்கி ஆளும் வழித் தொடரில்
3.ஞானிகளால் கொடுக்கப்பட்ட உண்மைகள் அனைத்தும் மறைக்கப்பட்ட போதனையாகி
4.இந்தப் பூமியில் வளர்ச்சி கொண்ட அந்த ஞான வித்தின் வித்தகத் தன்மையே
5.சூழ்ச்சி கொண்ட சூட்சம நிலையில் மறைக்கப்பட்டு விட்டது.

ஆனால் அதே சமயத்தில்…
1.சூட்சமத்தால் வெளியிடப்பட்ட சில சுவடிகளின்படி
2.உண்மையைக் காவியக் கதை கற்பனை ரூபமாகக் காட்டிய தொடர் கொண்டு
3.விஞ்ஞான ஆராய்ச்சியின் செயல் திறமையினால்
4.மனித உருவக வளர்ச்சியும் ஞான வளர்ச்சியும் தடைப்பட்டு விட்டது.

விஞ்ஞான வளர்ச்சியினால் இன்று சூரிய அலையுடன் சில அலைத் தொடர்களைப் பாய்ச்சி தன் விஞ்ஞானச் செயலுக்காக சில சக்தி அலைகளைப் பிரித்தெடுத்துக் கொண்டேயுள்ளார்கள்.

அதனால் மனித ஞானத்தை வளர்க்கவல்ல காந்த மின் அலையின் ஒளி அலையில்… “வெண்மை அணு சக்தியின் வளர் சக்தியே” தடைப்பட்டு… ஞான வளர்ச்சியும் தடைப்பட்டு விட்டது.

இதிலிருந்தெல்லாம் எண்ணத்தின் வீரிய குணம் கொண்டு இந்தப் பூமியின் பிடிப்பிலிருந்து விடுபட்டு ஒவ்வொருவரும் விண்ணுலக மகரிஷிகளின் அலைத் தொடர்பைப் பெறவேண்டும்.

இன்று பலவாக உள்ள எண்ண குண ஈர்ப்பின் சரீர உணர்வை… நல் அணு வளர்ப்பின் குணத் தன்மை கொண்டு… மகரிஷிகளின் அருள் சக்தியை எண்ணத்தின் ஞானத்தால் “நேராக எடுக்கும்” பக்குவத்திற்கு வர வேண்டும்.

அப்படிப் பெற்றால்…
1.தன் ஆத்ம பலம் பெற்ற தன்மையில் எவ்வீர்ப்புப் பிடியிலும் இந்த ஆத்மா சிக்காமல்
2.இந்தப் பூமியின் மாற்றத் தன்மை எதுவாக இருந்தாலும்
3.வளர்ப்பின் வளர்ப்பை வளர்க்கும் ரிஷித் தன்மையின் வலுவுடன் நாமும் கலந்து
4.மனித வித்துக்களை அழியாத் தன்மைப் படுத்தலாம்.

அதற்குத்தான் ஈஸ்வரபட்டனாகிய யான் இதை உணர்த்திக் கொண்டு வருகின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நம் பிரபஞ்சத்திலுள்ள வியாழன் செவ்வாய் இராகு கேது சனி என்று நவக் கோள்களின் தன்மையும் ஒவ்வொன்றும் தனித் தன்மை கொண்டது.

இருப்பினும் அவை அனைத்தும் உமிழ்த்துவதைச் சூரியன் தனக்குள் கவர்ந்து “ஒளியின் சிகரமாக…” மாற்றுகின்றது. இதைப் போல தான் நம் உயிரான நிலையும் நமக்குள் சூரியனாக இருக்கின்றது.

தினசரி நம் வாழ்க்கையில் எத்தனையோ பேரைச் சந்திக்கின்றோம். நாம் சந்திப்போர் ஒவ்வொரு உடலிலேயும் சில சில கஷ்டங்களும் இருக்கும் துன்பங்களும் இருக்கும் அனைத்தும் இருக்கும்.

1.நாம் (அனைவரும்) ஒன்றிய நிலைகள் கொண்டு
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளியுடன் இணைக்கப்படும் பொழுது
3.இந்தத் துன்பங்களை நீக்கிடும் அகற்றிடும் அந்தச் சக்தியாக நாம் விளைய முடியும்.

1.பாசத்தின் நிலைகள் கொண்டு வேதனை என்ற நிலைகளைச் சுவாசிப்பதற்குப் பதில்
2.பாசத்தின் பற்று கொண்டு மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அவ்வாறு எண்ணும் பொழுது அந்தப் பற்றுதல் அதனின் நிலைகள் கொண்டு நமக்குள்ளும் அந்தப் பாசத்தின் நிலைகள் கொண்டு அருள் ஞானியின் உணர்வைப் பருக முடிகின்றது.

நமக்குள் தீமையை அகற்றும் சக்தியாக விளைகின்றது. ஒவ்வொரு நாளும் இதிலிருந்து நீங்கள் ஆரம்பித்துப் பாருங்கள்.
1.உங்களை நீங்கள் நம்பிப் பாருங்கள்.
2.எண்ணியதை உங்கள் உயிர் இயக்குகின்றது.
3.அந்த இயக்கத்தின் நிலைகளை அறிந்து கொள்கின்றீர்கள்.
4.அறிந்த உணர்வை உயிர் உடலாக்குகின்றது.
5.மீண்டும் நினைவாக்கும் பொழுது நன்மையின் தன்மையை உயிர் உருவாக்கிக் காட்டுகின்றது.
6.எதனின் உணர்வை நமக்குள் விளைய வைக்கின்றோமோ விளைய வைத்த நிலையை உயிர் தன்னுடன் அணைத்துச் செல்கிறது.
7.எண்ணிய பாதையில் உயிர் அங்கே அழைத்துச் செல்கிறது.
8.என்றும் அழியா நிலையான ஒளியின் சரீரமாக பெருவீடு பெரு நிலையாக உயிர் நம்மை அடையச் செய்கின்றது.
8.மனிதன் அடைய வேண்டிய முழுமையான நிலை அது தான்.

ஆகவே பிறவியில்லா நிலையை நாம் அடைய வேண்டும்.

மனிதன் முழுமையடையும் தருணம் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகும் இந்தத் தருணத்தை நழுவவிடாது அருள் ஞானிகள் காட்டிய நிலைகள் கொண்டு என்றும் உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு அவர்கள் காட்டிய நெறியின் நிலைகள் கொண்டு உணர்வின் தன்மை என்றும் ஒளியாக நிலைத்திருப்போம்.

நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் நிலை என்றால் என்ன…? எப்படி விடுபடுவது…?

 

நமது வாழ்க்கையில்
1.தெளிந்த சக்தியான நல்ல குணங்கள் நமக்குள் இருப்பினும்…
2.பிறர் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்து விட்டால் என்ன ஆகின்றது…?

பாலில் பாதாமைப் போட்டு வைத்திருந்தாலும் அதில் ஒரு துளி விஷம் பட்டால் அந்தப் பாதாமிற்கே சக்தி இழந்தது போல வேதனையை நுகர்ந்து விட்டால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் அனைத்தும் சக்தி இழந்து விடுகின்றது.

1.ஒரு விஷம் பட்டால் எப்படி நம் தலை சுற்றுகின்றதோ
2.விஷம் பட்டால் நம் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றதோ அதைப் போல
3.எதை எடுத்தாலும் பெரும் பாரம் போலத் தோன்றும்.

நம் காரியத்தைச் செய்ய முடியவில்லை என்றால் “கோபம்…” என்ற உணர்ச்சிகள் வரும். நம்மை அறியாமலேயே தவறு செய்யும் நிலைகள் உருவாகும்.

நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் நிலையும் வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் எல்லாம் இருந்து விடுபடுவதற்கு அதிகாலையில் துருவ தியானத்தை எடுத்து “வாழ்க்கையே தியானம்” என்ற நிலைகள் கொண்டு வாருங்கள்.

உங்கள் நினைவு எப்பொழுதும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றியே இருக்கட்டும். உங்கள் மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள யாம் உபதேச வாயிலாகப் பதிவு செய்ததை எண்ணினால்
1.இந்தக் காற்றில் உள்ளதை அருள் சக்திகளைக் கவர்ந்து உங்கள் தீமைகளை நீக்கச் செய்யும்.
2.சிந்திக்கும் ஆற்றல் உங்களுக்குள் பெருகி வாழ்க்கையை நல் வழியில் வழி நடத்தும் உணர்வுகள் உங்களுக்குள் இயக்கும்.

உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை பெறச் செய்வதே நமது குரு காட்டிய அருள் வழியில் இந்தத் தியானம்

உதாரணமாக ஒரு பேட்டரியை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு நொடியிலேயும் அது இயங்கிக் கொண்டே உள்ளது.

அதில் சார்ஜ் குறைவாகி விட்டால் மறுபடியும் பேட்டரியைச் சார்ஜ் செய்ய வேண்டும். சார்ஜ் செய்யவில்லை என்றால் அதிலுள்ள மற்ற செல்கள் எதுவும் இயங்காது.

இதைப் போல… உயிரிலும்… உயிர் வழியாக உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் வீரியத்தை ஊட்டினால் சிந்திக்கும் வலிமையான ஆற்றல்கள் கிடைக்கும்.

பேட்டரியில் சார்ஜ் சரியாக இருந்தால் தான் அதன் மூலம் அந்தக் கருவிகள் எல்லாம் சீராக இயக்கும். அது உறுதுணையாக இருக்கும்.

1.மற்ற உணர்வுகளைக் கேட்டுச் சோர்வின் தன்மை வரப்போகும் போதெல்லாம்
2.மீண்டும் மீண்டும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வைத்து நாம் இயக்கி
3.நமக்குள் அந்த வலிமை பெறச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

“அஷ்டமாசித்து” – ஈஸ்வரபட்டர்

 

இக்கர்ம வாழ்க்கையின் முறையிலிருந்து… ஆத்ம ஞானத்தின் சூட்சம நிலையான “நிர்வாண நிலை அடையக்கூடிய வலு ஈர்ப்பிற்கு… இஜ்ஜீவ சரீரப் பாத்திரம்…” இருந்தால் தான் ஆத்ம வளம் பெற முடியும்.

எவ்வுலோகத்தால் செய்த பாண்டமானாலும் அதனை அடுப்பில் வைத்து நீரில்லாமல் எரிக்கும் பொழுது உஷ்ணத்தின் நிலை கூடக் கூட அடுப்பில் ஏற்றிய அப்பாண்டமும் உருக்குலைந்த நிலை ஏற்பட்டு மாற்று நிலை கொள்கிறது.

ஆனால் அதையே சமையல் செய்யும் பக்குவத்தில்
1.”நீர் சக்தியைக் கொண்டு” அதில் சமைக்கப்படும் நிலைக்கு
2.எத்தனை காலங்கள் ஆனாலும் அதன் தேய்மானமோ துவார நிலையோ ஏற்படாத காலங்கள் வரை
3.அடுப்பில் ஏற்றிச் சமைக்க இப்பாண்டம் உபயோகப்படுகின்றது.

அதைப் போன்று தான்… இச்சரீர சமைப்பிற்கு ஜீவ சக்தியின் தொடர்பு கொண்டு இவ்வாத்ம பாத்திரம் செயல்படும் வழி முறையில்… எண்ணத்தில் எடுத்து உணர்வில் சமைக்கும் ஜீவ சக்தியின் வலுக்கொண்டு இவ்வாத்மா வளர்கின்றது.

இக்கர்ம வாழ்க்கைக்கு உட்பட்ட தேவையின் விகித நிலை ஒவ்வொன்றிலும் இருந்துதான் வாழ்க்கைச் செயலே ஓட வேண்டியுள்ளது.

அவ்வீர்ப்பின் பிடியில் பேராசை கொண்டு “கர்மம்” என்ற சிந்தையில் செயல் பிடியின் உணர்வாகி… எண்ணத்தின் சுவாசமே அந்தக் கர்ம சிந்தனையில் சிக்கி விட்டால்
1.தன்னுள் உள்ள தன் வளர்ப்பின் வளர்ப்பான
2.”ஆத்மாவின் வளர்ப்பு தான் இச்சரீர கர்ம வாழ்க்கை..!” என்பதனை மறந்து
3.இது தான் (இப்பொழுது வாழும் கர்மா) வாழ்க்கை…! என்ற பிடி உணர்வுடன்
4.பூமி ஈர்ப்புடன் ஈர்ப்பாக்கிச் சுழலும் வட்டத்திலேயே ரங்கராட்டினம் போல் சுழல வேண்டியிருக்கும்.

இதிலிருந்து மீள
1.மேல் நோக்கிய சுவாசத்தால்…
2.எண்ணத்தின் ஞானத்தை இச்சரீரப் பிடிப்பிலிருந்து
3.உயரும் ஞான ஈர்ப்பிற்குச் செல்வதாக நம் செயல் வழி இருக்க வேண்டும்.

காந்தம் தன் ஈர்ப்பிற்கு இரும்பை இழுப்பதைப் போன்று… இந்தப் பூமி வளர்த்த வளர்ப்பின் வளர்ப்பை தன் ஈர்ப்புப் பிடிக்கு சுழல் ஓட்டத்தின் சுழற்சியுடன் பிடித்துக் கொண்டுள்ள “அத்தகைய ஈர்ப்புப் பிடியில் தான்” இன்று நாம் வாழுகின்றோம்.

ஆக… இன்றைய சூழலில் (கலியில்) இந்தப் பூமி… மனித இன ஞானத்தின் வளர்ப்பலையை வளர்த்த செயல் அலைத் தொடர் குன்றியுள்ளது.

இந்தக் கலியில் நாம் மேல் நோக்கிய சுவாசத்தால்… ஞானத் தொடர்புடைய மகரிஷிகளின் எண்ண ஜெப தியானத்தால்… இப்பிடியின் உணர்விலிருந்து… எவ்வலையிலும் மனித ஞானம் வளரும் வளர்ப்பில்… நாம் பெற்ற வலுவின் வலுவால் வளர்ச்சி கொள்ள வேண்டும்.

ஆகவே… இக்கர்ம வாழ்க்கைச் சிந்தையில் சிக்குண்டு…
1.பக்தி என்று பகவானை எண்ணியே ஏங்காமல்
2.ஞானத்தின் உயர்வால் தன்னுள் உள்ள ஆத்மாண்டவனை உயர்த்தும் உயர்வான எண்ணத்தை
3.ஞான வளர்ப்பு ஈர்ப்பலையினால் வலுக் கூட்டிடல் வேண்டும்.

ஆகாய விமானத்தை மேல் நோக்கிய உந்தலினால் அதற்குகந்த காற்றழுத்த இயந்திரச் செயலைக் கொண்டு மனித விஞ்ஞானம் பறக்க விடுகின்றதல்லவா…!

அதைப் போன்று உணர்வின் எண்ணத்தால்… தன் ஞானத்தால் இச்சரீர பிம்பத்தை மேல் நோக்கிய சுவாச ஈர்ப்பினால் எந்நிலைக்கும் இச்சரீரத்தைப் பறக்க விடவும் முடியும்… பிரித்து மீண்டும் கூட்டுச் சேர்க்கையாக்கவும் முடியும்.

அத்தகைய தன்மைக்கு இவ்வுடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஒவ்வொன்றையும் ஒளியான உயிராத்மாவாக்கி
1.இவ் ஒரு சரீரத்தில் இருந்தே
2.பல கோடிச் சரீர செயல் அலைக்கே
3.உயர் ஆத்ம வலு கொண்டவர்களினால் செயலாக்குவது என்பது தான்
4.அஷ்டமா சித்து என்பதின் மூன்றாம் சித்து.

முருகா…! என்றதும் முருகன் ஓடி வந்து செய்வானா…? என்பது வேறு கதை. போகநாதனின் வலுத் தன்மையினால்… எண்ணத்தால் எண்ணும் பல கோடி ஆத்மாக்களுக்கும் “அவன் அருள் ஞான ஆசி கிட்டுகிறது…” என்றால் அவனின் அலைத் தொடரின் அருளும் ஆசியும் தான்.

1.ஆயிரம் கண்ணுடையாள் அகிலத்தைக் காத்தருள்வாள் அமராவதி… அபிராமவல்லி…! என்றெல்லாம் உணர்த்தும்
2.சித்தின் தொடர் அப்படிப்பட்டது தான்.

அதாவது பல கோடி ஆத்மாக்களும் ஒரே சமயத்தில் அத்தேவியின் பால் செலுத்தும் பக்தியின் ஜீவ சக்தி கொண்ட சித்தினால் அழியாத் தன்மை கொண்ட சரீர ஆத்மாவினால் ஆயிரம் கண்ணல்ல… அகிலத்தையே கண்ணாகக் கொண்டு வளரும் சக்தியைப் பெற்றவர்கள் தான் அவர்கள்.

நம் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு சுவாச அலையின் வளர்ப்பினால் இந்தக் கர்ம வாழ்க்கையின் சிக்கலில் இருந்து மீண்டு உயர் ஞான ஈர்ப்புடன் சித்துத் தன்மையில் வழித்தொடரை நாம் பெற வேண்டும்.

1.போற்றி வணங்கும் தெய்வ சக்தியின் அருளை வேண்டி
2.பக்தியுடன் பணிவெய்திப் பணிந்திடமால்
3.அத்தெய்வத்தின் சக்தியையே மேல் நோக்கிய ஞான தொடர்பின் ஈர்ப்பினால்
4.அத்தெய்வத்தின் தொடர்புடனே நாமும் தெய்வ சக்தி பெறும் தன்மையைத் தொடரலாம்.

இது எல்லோராலும் சாத்தியமானதே..!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

உங்கள் வாழ்க்கையில் குறைகள் இருந்தது என்றால் “ஈஸ்வரா…” என்று எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் குடும்பம் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று எண்ணுங்கள்.

யாரும் சொன்னபடி கேட்கவில்லை என்றால் “சொன்னபடி கேட்கவில்லையே…” என்று எண்ணக் கூடாது. அவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தியால்
1.குடும்பப் பொறுப்புடன் அவர்கள் நடக்க வேண்டும்
2.அந்தச் சக்திகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று இப்படித்தான் நாம் எண்ண வேண்டும்.

அதைப் பெறச் செய்வதற்குத்தான் தபோவனத்தை அமைத்துள்ளோம்.

பௌர்ணமி அன்று எல்லோரையும் இங்கே வரச் சொல்லி
1.எல்லோருக்கும் “உயர்ந்த சக்திகளைக் கூட்டிக் கொடுப்பதற்காக”
2.இங்கே கூட்டுத் தியானத்தை அமைத்துள்ளோம்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் எல்லோருக்கும் உடல் நலம் பெற வேண்டும் மன வளம் பெற வேண்டும் மன பலம் பெற வேண்டும் என்று வேண்டித் தியானிக்கின்றோம்.

இந்தச் சொல்லை உங்களிடம் பதியச் செய்த பிற்பாடு வீட்டிக்குச் சென்றாலும் தொழிலில் இருந்தாலும் வெளியில் எங்கு சென்றாலும் “ஈஸ்வரா..” என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டுச் செல்ல வேண்டும்.

யாருக்கும் உடல் நலம் இல்லை என்றால் அவர்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் நன்றாக ஆக வேண்டும் என்று எண்ண வேண்டும்.

மற்றவர்கள் நலம் பெற வேண்டும் என்று நாம் முதலில் எண்ணித் தியானித்தால் நமக்கு முதலில் அந்தச் சக்தி கிடைக்கின்றது. நாம் சொல்லும் பொழுது அவர்களுக்கும் அந்த நல்லது நடக்கின்றது.

இந்த மாதிரிப் பழக்கத்திற்கு வந்துவிட்டால் அது… இது… என்று சொல்லி உங்களை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றாதபடி உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். நீங்கள் சம்பாரித்த பணம் உங்களுக்கு மிச்சமாகும்.

மற்றவர்கள் சொல்லக்கூடிய மாதிரி “அவருக்குப் பேய் பிடித்திருக்கிறது… அவருக்கு அந்தக் குணம் இருக்கிறது… இந்தக் குணம் இருக்கிறது…
1.உங்கள் மனதிற்குத் தகுந்த மாதிரி ஏதோதோ சொல்லும் பொழுது
2.அதை மனதில் பதிய வைத்துக் கொண்டால்
3.அதையே உங்களுக்குள் விளைய வைத்துக் கொள்கின்றீர்கள்.
4.“அந்த மாதிரி இல்லாதபடி” நீங்கள் உங்களை நம்ப வேண்டும்.

உங்களுக்குள் இருக்கக்கூடிய சக்தியை நீங்கள் முழுமையாக அதைப் பெற வேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் தபோவனத்தை அமைத்தது.

இங்கே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்திற்கு வரக்கூடிய அனைவரும் கூட்டுத் தியானத்தில் கலந்து கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் செருகேற்றிக் கொள்ளுங்கள்.

இதை நீங்கள் செம்மையாகப் பயன்படுத்தி எதையெல்லாம் நல்லதாக வேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ அதை எண்ணி “நல்லதாக வேண்டும்” என்று திரும்பத் திரும்ப எண்ணினீர்கள் என்றால் அது நடக்கும். நல்லதாகும்,

நாம் உருவாக்க வேண்டிய சொர்க்கலோகம்

 

எதையெல்லாம் எண்ணினோமோ… எதையெல்லாம் கேட்டோமோ… எவையெல்லாம் நுகர்ந்தோமோ… உயிரால் நுகரப்பட்டது அனைத்தும் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று உடலாக மாறுகின்றது,

1.இப்போது இங்கே யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் போது நீங்கள் கேட்டறிந்த உணர்வுகள்…
2.நீங்கள் எண்ணிய உணர்வின் குணங்களை உயிரான ஈசன் உருவாக்கி…
3.உடலில் இந்திரலோகமாக மாற்றி… உடலுக்குள் அந்த குணங்களை உருவாக்கும்
4.“பிரம்மமாக்கும்” உணர்வினை உருவாக்குகின்றது.

ஆகவே சிந்தித்துச் செயல்படும் ஞானிகள் உணர்வினை நாம் அறிந்தால் இதே உணர்வுகள் சிந்தித்துச் செயல்படும் சக்தியின் உணர்வாக நம் உடலில் அணுவாக… பிரம்மமாக… உருவாக்கும்.

அதனின் உணர்வு உடலாகச் சேர்க்கப்படும் பொழுது அணுவின் மலம் சிவமாக மாறுகின்றது. அதைத் தான் ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய என்று சொல்வது.

அதாவது நாம் எண்ணிய உணர்வுகளை உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது உயிர். உடலில் சதாசிவமாக ஆக்கிக் கொண்டே உளளது நமது உயிர்.

எதை எண்ணுகின்றோமோ… எதைக் கேட்கின்றோமோ… அது எத்தகைய குணமாக இருந்தாலும்… அதை எல்லாம் சதாசிவமாக… உடலாக… நம் உயிர் மாற்றிக் கொண்டே இருக்கின்றது என்பது தான் இதனின் பொருள்.

தீமையை அகற்றும்… சிந்தித்துச் செயல்படும் அந்த அருள் ஞானிகள் உணர்வினை
1.நீங்கள் உபதேச வாயிலாக இப்பொழுது நுகர்கின்றீர்கள்
2.அது ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றும் இந்திரலோகமாக உங்களுக்குள் மாறுகின்றது.

அதனின் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது அதை அணுவாக உருவாக்கும் கருவின் தன்மை அடைந்து பிரம்மலோகமாக மாறுகின்றது.

உபதேசிக்கும் உணர்வைக் கேட்டறிந்த பின் அந்த உணர்வுகள் உங்கள் இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது இந்திரலோகமாகி… மகிழ்ச்சிக்குரிய உணர்வுகளாக உங்களுக்குள் தோற்றுவிக்கின்றது.

மகிழ்ந்திடும் இந்த உணர்வுகளைத் திரும்பத் திரும்ப வளர்த்துக் கொண்டே சென்றோம் என்றால் குறித்த காலத்திற்குள் அணுக்களாக உருவாகின்றது.

அணுக்களாக உருவான பின் அதனின் ஞானமாக நம் சொல்லும் செயலும் புனிதம் பெறும் தன்மை அடைகிறது… இது பிரம்மலோகம்.

எதனின் உணர்வை நமக்குள் எடுத்தோமோ அதனின் ஞானமாக நம் சொல்லும் செயலும் அமைந்து… தீமைகளிலிருந்து விடுபடும் உணர்ச்சிகள் நமக்குள் வளர்ந்து ஞானிகள் வழியிலே நம்மை வாழச் செய்யும்.

ஆகவே… பிரம்மலோகம் எதுவாக எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கப்படும் போது சொர்க்கலோகமாக மாற்றுகின்றது.

எதன் வழி மாற்றுகின்றது…? நம் உயிர் வழி…!

1.நம் நெற்றி பாகம்… உருவாக்குமிடம் ஈஸ்வரலோகம் என்றும்
2.பிரம்மலோகமாகி… இந்திரலோகம் என்று உடலாக அமைகின்றது என்றும்
3.உயர்ந்த குணங்களை வளர்க்கப்படும் பொழுது சொர்க்கலோகமாக மாற்றுகின்றது என்பதையும் சாஸ்திரங்கள் கூறுகிறது.

ஆகவே சொர்க்க வாசல் என்பது உயிர் இருக்கும் இடமே…!
1.அந்த வாசல் வழி தான் வந்தது
2.அதன் வாசல் வழியிலே தான் நாம் வெளியிலே செல்ல வேண்டும்.

ஆனால் வேதனை என்ற உணர்வை வாழ்க்கையில் எடுத்தால் நரகலோகம். அந்த நரகலோகத்தைச் சிருஷ்டிப்பது எது…?
1.நம் உயிரான நிலைகளிலிருந்து தான்
2.நாம் சுவாசித்த நிலைகள் இருந்துதான்.

இதை உருவாக்குவது எது…?

ஈஸ்வரலோகத்தில் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் வேதனைகளாக அமைந்து விட்டால் நரகலோகமாக மாற்றி விடுகின்றது.
1.கடும் வேதனையாகும் போதுதான் உடலுக்குள் நரகலோகமாக மாறுகின்றது
2.நரகத்திற்குச் செல்லும் வாசலாகவும் இது அமைந்து விடுகிறது.
3.எதன் வழி சென்றோமோ உயிர் வேதனைப்படும் உடல்களுக்குள் அழைத்துச் செல்கிறது.

பாம்பு மற்ற உயிரினங்கள் மீது தன் விஷத்தைப் பாய்ச்சி ரசிக்கின்றது… தன் உணவாக்கிக் கொள்கிறது. அது போன்று மனிதனின் வாழ்க்கையில் வேதனை என்ற உணர்வுடனே வாழ்ந்து அதே உணர்வுடன் உடலை விட்டுச் சென்றால் பாம்பாகப் பிறந்த பின் தான் அது அடங்குகின்றது.

கோபமும் கொதித்தெழும் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் புலியின் ரூபமாகப் பெற்று அதில் சென்று ஒடுங்குகின்றது. பின் புலியின் ரூபமாக உயிர் நம்மை மாற்றி விடுகின்றது.

இப்படித்தான்…
1.மனிதன் தான் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப
2.நரகமும் சொர்க்கமும் நமக்குள்ளே தான் உருவாகின்றது.

சொர்க்கவாசல் என்ற உயிரின் உணர்வு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துச் சேர்த்துச் சொர்க்கலோகமாக நாம் மாற்றுதல் வேண்டும்.

ஆகவே
1.சொர்க்க வாசல் என்ற உயிர் வழி சென்று துருவ நட்சத்திரத்துடன் இணைந்து
2.பிறவியில்லா நிலை என்றும்… பகைமையே இல்லாது ஏகாந்த நிலை என்றும்… சொர்க்கம் என்றும்… அங்கே அடைய முடிகின்றது.

வெண்மை நிறத்திற்குண்டான உண்மையான சக்தி என்ன…? – ஈஸ்வரபட்டர்

 

பன்னிரெண்டு வகை குண அமிலங்கள் கொண்ட… உணர்வின் எண்ணம் கொண்ட சரீர பிம்ப இயக்கத்தில்… ஆத்மீக போதனையின் வழித் தொடரில்… ஞானத்தின் பால் செயல்படும் உணர்வின் எண்ணத்தைச் செயல்படுத்த வேண்டிய பக்குவ முறை யாது…?

பல குணங்களின் உணர்வின் உந்தல் கொண்ட வாழ்க்கையில் மனிதனின் எண்ண உணர்வு தான் வளர வேண்டிய ஆத்ம வளர்ப்பின் வலு நிலையைக் கூட்ட என்ன செய்ய வேண்டும்…?

இச்சரீர பிம்ப இயக்க எண்ணத்தை சமநிலை கொண்ட நற்குணத் தொடர்பினால்
1.சாந்த குண அமிலமான “வெண்மையின் அமிலத்தின்” சேர்க்கை விகிதம் கூடிடல் வேண்டும்.
2.அதன் தொடர்பு கொண்ட காந்த மின் அலை ஈர்ப்பு செயலினால்
3.இச்சரீர பிம்பமே ஆத்ம வார்ப்பிற்கு வளர் நிலை தரத்தக்க “இயந்திர நிலையாக” உயரும்.

அதாவது சூரியனின் சக்தியைக் கொண்டு… காந்த மின் அலையின் தொடர்பினால்… ஜீவ சக்தியான நீர் சக்தியின் தொடர்புடன்… உலோக ஈர்ப்பில் மின் அலையைச் செலுத்தி.. அதன் செயலின் வீரிய குணத்தை (SOLAR POWER) எடுக்கின்றார்கள் அல்லவா..!

அதைப் போன்ற இயக்கச் செயலாக…
1.சரீர பிம்பத்தின் நீர் சக்தியைக் கொண்டு
2.இச்சம குண உணர்வினால் பெற்ற உறுப்புகளின் வளர்ப்பினால் உருவாகும் காந்த மின் அலைத் தொடர்பினால்
3.இச்சரீர உணர்வு எண்ணத்தைச் சகலத்திலும் கலக்கச் செய்து
4.எவ்வீர்ப்புப் பிடியிலும் இவ்வெண்ணத்தின் உணர்வு மோதாமல்
5.எண்ணத்தின் செயல் கொண்டே ஆத்ம அலையை எல்லாவற்றிலும் எல்லாமாகக் கலக்கச் செய்து
6.நிர்வாண சக்தியாக நிலை பெறச் செய்யலாம் இந்த ஆத்ம சக்தியை.

“வெண்மை அமிலத்தின்” தொடர்பு கொண்டு தான் மின் அலையே உருவாகின்றது. வண்ணத்தின் கூட்டு நிலைக்கொப்பத்தான் வளர்ப்பு நிலை ஒவ்வொன்றுமே உருவாகிறது.

வானவில்லின் வண்ணத்தைக் காட்டி இராமாயணக் காலத்தில் வான்மீகியார் எழுதிய காவியத்தின் உட் கருத்தை மாற்றப்படாமல் வைத்திருந்தால்
1.வண்ணங்களின் தொடர்பு கொண்டு
2.உயிர் வளர்ப்பின் அணுத் தொடர் வளர்ச்சியின்
3.அணுவுக்குள் அணு வளரும் உயர் சக்திகளை இன்று நாம் அறிந்திருக்கலாம்.

வெண்மையின் அமிலமான சக்திகளால் தான் நம் உடல் உறுப்பின் எலும்புக்கூறுகள் உருவாகி அதன் தொடர்பு கொண்ட அணு வளர்ச்சி வார்ப்பாக ஆத்மாவின் வலு வலுக் கொள்கின்றது.

சூரியனின் அலைத் தொடர்பிலிருந்து பூமியின் சுழற்சிக்கு பூமிக்கு வடிகட்டி பூமியின் ஈர்ப்பிற்கு வரும் அமிலச் சத்தின் உயிர்ணு வளர்ப்பு அமிலமே “இந்த வெண்மையின் சக்தி தான்…!”

சாந்த குணமான வெண்மையின் சக்தி அலைகளை உணர்த்தத்தான் வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் கலைமகள்… ஞானமகள்…! என்றனர்.

ஆகவே…
1.ஞானத்தின் ஈர்ப்பு நிலைக்கு வெண்மை உடுத்தும் தாய் குண சரஸ்வதி என்றும்
2.”ஞானத்தின் தொடர்பு கலைமகள்” என்ற சூட்சம வட்டத்திற்குள்
3.அச்சக்தியின் தொடர்பை நமக்குத் தெளிவாக உணர்த்தினர் நம் சித்தர்கள்.

வண்ணத்தின் சேர்க்கைக்கொப்பத்தான் உருவக செயல் உருவாகின்றது. அதன் தொடர்பு கொண்ட உணர்வின் செயல் தான் மாற்றங்களின் நிலையும்.

இன்றைய இக்கோளத்தின் உயர் வார்ப்பான உயர் வண்ணமான வெண்மையின் தன்மைக்கே கருமையின் பழுப்பு நிலை கூடிக் கொண்டே வருகின்றது.

இன்றைய கலி காலத்தில்…
1.மனிதனின் ஞானம் நிர்வாண உணர்வாக… வார்ப்பின் வார்ப்பாக
2.ஆத்ம வளர்ப்பை வளர்க்கும் ஞானம் பெற்று
3.நிர்மலமான ஜோதி நிலையுடன் கலந்திட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

1.ஆண்டவன் எங்கோ இருக்கின்றான்
2.இறைவன் எங்கோ இருக்கின்றான்
3.தெய்வங்கள் எங்கோ இருக்கின்றது என்று தான்
இன்றும் நாம் தேடிக் கொண்டேயுள்ளோம்.

ஆனால்
1.நாம் எண்ணிய உயர்ந்த குணங்கள் தான் நமக்குள் தெய்வமாக இருந்து
2.உயர்ந்த குணங்களை எண்ணியதை நம் உயிர் ஆள்கின்றது
3.அந்த நல்ல வழியில் நம்மை இயக்குகின்றது என்பதை நாம் மறந்து விட்டோம்.

நாம் எதையெல்லாம் நல்லதாக எண்ணுகின்றோமோ அதன் வழி கொண்டு நமக்குள் இருக்கும் கண்கள் அந்த நல்ல வழியைக் காட்டிக் கொண்டிருக்கின்றது.

இதை மகாபாரதத்தில் கண்ணன் (கண்கள்) கீதா உபதேசம் செய்கிறான் என்று தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

ஒவ்வொரு நிலையிலும் உலகிலுள்ள உணர்வுகள் அனைத்தும் நம் உடலுக்குள் அடக்கி மெய்ப்பொருளின் தன்மையைக் காட்டுவது கண்களே.

நாம் எதை எண்ணுகின்றோமோ அவை அனைத்திற்கும் கண்களே தான் காரணமாக இருக்கின்றது
1.கண்களே தான் கெட்டதைக் காட்டுகின்றது
2.அந்த உணர்வைப் பதிவு செய்வதும் கண்கள் தான்.
3.மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது அதே கண் தான் அந்த வழியைக் காட்டுகின்றது.

பார்த்த உணர்வுகள் கொண்டு ஒவ்வொரு உறுப்புகளும் எவ்வாறு இயங்குகின்றது என்ற நிலையைத் தெளிவுறக் காட்டுவற்காக வேண்டி மகாபாரதப் போர் என்று காவியமாக உருவாக்கினார்கள்.

அதில் நடு மையமாகக் கீதை என்ற நிலையை வைத்துக் கண்ணன் “சாரதியாக வந்து” வழி நடத்துகின்றான் என்றும் “குருக்ஷேத்திரப் போர்” என்றும் எத்தனையோ வகைகளில் நாம் தெளிவாகத் தெரிந்திட நாம் புரிந்து கொள்ளும் வண்ணம் மாமகரிஷிகள் காட்டியுள்ளார்கள்.

ஆனால் மகரிஷிகள் காட்டியதைக் காலத்தால் படித்துணர்ந்தவர்கள் அவரவர் சுயநலன்களுக்காகத் திசை திருப்பிவிட்டு விட்டார்கள்.

தான் எல்லாவற்றையும் கற்றுக் கொண்ட பெரிய மகான் என்ற நிலைகள் கொண்டு அவரைக் கண்டு நாம் வணங்கும் நிலையும் அவருக்குப் பொருள்களைக் கொண்டு குவிக்கும் நிலை தான் இன்று உள்ளது.

1.உண்மையின் நிலைகள் மறைந்து விட்டது
2.மறைந்த நிலைகள் கொண்டு தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இதிலிருந்து விடுபட்டு இந்த விஞ்ஞான உலகால் மனிதனின் நினைவு அழிந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் நாம் அனைவரும் மகரிஷிகள் காட்டிய அருள் நெறிகளைப் பின்பற்றி அதனின் சக்தியைப் பெறுவோம்.

நமது குருநாதரோ பித்தரைப் போன்று மிகவும் எளிய நிலையில் அவர் சாக்கடையிலும் மற்ற அதைப் போன்ற இடங்களிலும் தான் அமர்ந்திருந்தார்.

அந்தச் சாக்கடையைச் சாக்கடை என்று எண்ணவில்லை. உலகத்தைச் சாக்கடையாகக் கருதினார்.
1.அந்தச் சாக்கடையிலிருந்து விலகி நிற்க வேண்டும் என்று
2.அருள் ஞானிகளின் உணர்வின் சத்தைத்தான் அவர் நுகர்ந்து கொண்டிருந்தார்.

தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வின் தன்மையை நீ உலகுக்கு எவ்வாறு காட்ட வேண்டும்…? என்ற நிலையை எனக்கு (ஞானகுரு) உணர்த்துவதற்காக என்னைச் சாக்கடையில் அமரச் செய்தார்.

மகரிஷிகள் கண்டுணர்ந்த உண்மைகளை எனக்குச் சாக்கடை உபதேசமாகக் கொடுத்துத் தீமைகளிலிருந்து விடுபடும் நிலையைத் தெளிவாக உணர்த்தினார் பித்தரைப் போன்று திரிந்த குருநாதர்.

எனக்குக் கல்வியறிவு இல்லை என்றாலும் இந்த உணர்வின் ஆற்றல்மிக்க நிலையும் அது அவர் உணர்த்திய உபதேசத்தின் அருள் வழியில் அவர் காட்டிய நெறிப்படி அதை நான் கவர முடிந்தது.

எனக்குள் அந்த மெய் ஞானத்தை வளர்த்துக் கொண்டேன்.

தீமைகள் வராதபடி காத்திடும் நிலையாக அனைவருக்கும் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று அவர் உபதேசித்தார். அந்த அருள் வழிப்படித்தான் உங்களுக்கும் உபதேசிக்கின்றேன்.

சக்கரம் போன்று சுழன்று எடுக்க வேண்டிய தியானம்

 

1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும்
2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் பெற வேண்டும் என்று
3.அடுக்கடுக்காக நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தி அந்த இயக்க நிலை கொண்டு
1.“அகஸ்தியர் வாழ்ந்த காலத்திற்கு உங்கள் நினைவினைச் செலுத்துங்கள்…”
2.அகஸ்தியனை நினைவுக்குக் கொண்டு வந்து அவரின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

ஈஸ்வரா என்று உயிரை எண்ணி…
1.அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று
2.மீண்டும் மீண்டும் இந்த நினைவினை ஒரு சக்கரம் சுழல்வது போன்ற திரும்பத் திரும்ப இணைத்து
3.இரத்த நாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்ற நினைவினை
4.அதன் அடிப்படையிலேயே சுழல விடுங்கள்… உங்கள் இரத்த நாளங்களில் அந்த ஆற்றலைப் பெருக்குங்கள்.

இப்படி ஒரு ஐந்து முறையாவது திரும்பத் திரும்ப எண்ணி எடுத்துச் செயல்படுத்துங்கள். உங்கள் உடலில் எந்த உறுப்புகளில் எல்லாம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோ அங்கெல்லாம் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று கண்ணின் நினைவைக் கொண்டு அங்கே உள்ளே செலுத்துங்கள்.

இதே மாதிரி சுவாசத்தை எடுத்து அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று உடல் முழுவதும் பரப்புங்கள்.
1.எத்தகைய நோயாக இருப்பினும்… நோய்க்குக் காரணமாக எத்தகைய அணுக்கள் இருப்பினும்
2.அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று அந்தச் சக்திகளை உடலுக்குள் அடிக்கடி செலுத்துங்கள்.

இந்த அருள் சக்தி உயரும் பொழுது நோயை உருவாக்கும் அணுக்களின் செயலாக்கங்கள் சிறுகச் சிறுக தணியும். இதற்கு முன் உடலில் அறியாது சேர்ந்த நோய்களை உருவாக்கும் அந்த அணுக்களின் வீரிய சக்திகளைக் குறையச் செய்யும். நோயை உருவாக்கும் அணுக்கள் பலவீனமடையும்.

ஒவ்வொரு நாளும் இரவு முழுவதும் அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடனே உறங்கச் செல்லுங்கள்.

1.இந்த நினைவாற்றல் உங்களுக்கு அரும் பெரும் சக்தியாக வளரும்
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உங்கள் உணர்வலைகளை அழைத்துச் செல்லும்
3.இயற்கையின் உண்மையின் உணர்வினை உங்களுக்குள் உணரச் செய்யும்.
4.அகண்ட அண்டத்தின் ஆற்றல்… உடலான நம் பிண்டத்திற்குள் எப்படி இயங்குகிறது…? என்ற உணர்வினை அறிய முடியும்.

அந்தச் சக்தி இந்த உபதேசத்தைக் கேட்போர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று உங்களுக்காக நானும் (ஞானகுரு) இரவில் பிரார்த்திக்கப் போகிறேன்… தியானிக்கப் போகின்றேன்.

நீங்களும் அதே நிலையில் அந்த உணர்வின் சக்தியை எடுத்து தியானனத்தின் மூலம் உங்கள் இரத்த நாளங்களில் அந்த அருள் சக்தியைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் நினைவாற்றலைப் பெருக்கி பிறவியில்லா நிலை அடைய வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.

உலக ஓட்டத்தில் செல்வதா…? அல்லது ஞானிகள் வழியில் செல்வதா…? – ஈஸ்வரபட்டர்

 

மணம்… ஒலி… இவற்றுடன் கூடிய அமிலச் சேர்க்கையின் உருவக உணர்வு… வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு மோதலின் உணர்வு நிலைக்கொப்ப எல்லாம்.. நாம் எடுக்கும் சுவாசத்தின் மூலம் உடலில் அணுக்கள் வளர்கிறது.

இத்தொடரின் வாழ்க்கை நிலையில் எவை எவை நம்மிடம் (எண்ணங்கள் உணர்வுகள்) மோதுகின்றனவோ… அவற்றின் உணர்வை அதிகமாக ஈர்க்கவல்ல தன்மையில்…
1.நாம் நுகரும் ஈர்ப்பு நிலைக்கொப்ப அணு வளர்ப்பு கூடுவதினால்
2.அதை அப்படியே விட்டுவிடலாமா…?

அதாவது… சுழற்சி ஓட்ட வாழ்க்கையில் சுழன்று ஓடும் நாம்… ஓடும் நிலைக்கொப்ப எல்லாம் நம் வாழ்க்கை ஓட்டத்தை ஓட விடாமல்… இவ்வெண்ணத்தின் உணர்வை அந்தந்தக் கால நிலைக்கொப்ப ஏற்படும் மோதலை எல்லாம் தன் ஈர்ப்புப் பிடியில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

சூடான பொருளை நாம் உண்ணும் பொழுது நம் உடலில் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திற்கு அதனை ஆறவைத்துத் தான் உட்கொள்கின்றோம். அதைப் போன்று…
1.எண்ணத்தில் மோதும் செயல் எதனையும்
2.மிகத் துரித வேகத்தில் பிறரிடம் இருந்து எதிர்ப்படும் சொல் அலையானாலும்
3.குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் இன்னலின் துன்பச் சம்பவமானாலும்
4.மகிழ்ச்சியின் ஆராவாரச் செயலானாலும்
5.உட்கொள்ளும் உணவை எப்படி உடல் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் மட்டும் நாம் உண்ணுவது போல்
6.இவ்வெண்ணத்தின் செயலைக் கொண்டு அந்தந்தக் காலங்களில் ஏற்படும் மாற்றத்தை
7.ஞானம் கொண்ட சிந்தனை வழியிலும் அமைதி கொண்டு ஏற்படும் தொடருக்கு உட்பட்ட உணர்வை எடுத்துப் பழகுங்கள்.

மனித உணர்விற்கு… உடலின் மேல் காரத்தையோ.. புளிப்பையோ… பிய்ப்பெடுக்கும் சில காய்கறிகளின் சாறுகளையோ… வைத்தவுடன் உடலின் உணர்வு அதைத் தெரிந்து கொள்கின்றது.

அதைப் போன்ற தொடர் அலை அமிலத்தின் சேர்க்கை குணம் யாவையும் இக்காற்றலையில் கலந்துள்ள நிலையில்… இவ்வெண்ணத்தில் எடுக்கும் சலிப்பு சாந்தம் கோபம் எதுவாகிலும்… அத்தொடர்பு கொண்ட அணு வளர்ப்பின் வார்ப்பால் உடல் வளர… உடலில் வலுவான ஆத்மாவிற்கு அம்முலாமின் வலுக் கூட… இப்பிடிப்பிலிருந்து மீள முடியா நிலைக்கு நம் ஆத்மாவைச் செயல்படுத்தி விடுகின்றோம்.

இச்சரீர வாழ்க்கையின் எண்ணத்தில் சம நிலை உணர்வினால்… ஞானத்தின் ஒளி அலையை நாம் எடுக்கும் சுவாச வலுக் கொண்டு… நம் ஆத்மா வலுக் கொள்ளும் வளர்ச்சி அலையை… சமமான குணத்தினால் எடுக்கும் முறையில் இவ்வாத்மா வலுப் பெற்று விட்டால்… இவ்வாத்மாவைக் கொண்டு உருவாக்கும் சக்தி அலை தான் சகல அலைகளுமே…!

தெய்வீக சக்தி… பிறவா வரம்… முக்தி நிலை… மோனப் பெரு நிலை.. நிர்வாண நிலை.. இதைப் போன்ற
1.தான் தான் உணர்ந்த நிலைகளில்…
2.ஒவ்வொருவரும் உணர்த்திய தொடர் நிலையின் செயல் நிலை என்பது
3.ஞானத்தால் பெறும் சமமான நிலை கொண்ட சாந்த குண உயர் ஞானச் சித்தை அறியும் நிலை தான்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நம் வாழ்க்கையில் நஞ்சான நிலைகள் வேதனை என்ற நிலைகள் வந்தாலும் அதைத் துடைக்க துடைத்திட்ட அருள் ஞானிகளின் உணர்வை நாம் பருக வேண்டும் என்ற இந்த நிலையைத்தான் அன்றைய ஞானிகள் தெளிவுறக் காட்டியுள்ளார்கள்.

1.எந்த உயிர் நம்மை சிருஷ்டித்ததோ
2.அந்த உயிரிடமே வேண்டி
3.என்னை அறியாத பிழைகளை நீக்கி
4.அந்த மெய் ஞானிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்று
5.எந்த மனிதன் ஏங்குகின்றானோ
6.அந்த உணர்வின் துணை கொண்டு அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும்.

நம்மை ஆண்டு கொண்டிருக்கும் இந்த உயிரை ஈசனாக மதித்து நாம் எண்ணியது அனைத்தையும் சிருஷ்டித்துக் கொண்டிருக்கின்றது நமது உயிர் என்ற இந்த நிலையை உணர்த்துவதற்குத்தான் இராமாயாணம் மகாபாரதம் கந்தபுராணம் என்ற காவியங்களைச் சாதாரண மக்கள் புரிந்து கொள்வதற்குத் தீட்டினர் ஞானிகள்.

நம் முன் சூட்சமத்தில் காற்றலைகளுக்குள் படர்ந்திருக்கும் நிலையும் நாம் எண்ணிய உணர்வுகள் சூட்சமமாக மறைந்திருக்கும் நிலையை உயிருக்குள் பட்டு “ஓ…” என்று ஜீவனாகின்றது.

அந்த உணர்வின் சத்து “ம்…” என்று நம் சரீரமாகி நம் சரீரத்திற்குள் நின்று நாம் எந்தெந்த குணங்களை எண்ணினோமோ அதனின் சக்தியாக நமக்குள் இயங்குகின்றது.

பின் அதே உணர்வு நமக்குள் இயக்கப்பட்டு அதன் துணை கொண்டு நாம் உயர்ந்த குணங்களை எடுத்தால் உடல் ஆரோக்கிய நிலை பெறுகின்றோம்.

ஆனாலும் உயர்ந்த குணங்களை எடுத்துக் கொண்டாலும் வேதனை என்ற உணர்வினை ஒரு துளி எடுத்தாலும் இந்த உடல் அனைத்தும் சோர்வடைந்து நல்ல குணங்கள் அனைத்தும் மறைந்து விடுகின்றது.

இதையெல்லாம் நாம் அறிந்து கொள்வதற்காகப் பல காவியங்களை எழுதி மனிதன் இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு நாம் அதைத் தீமைகளை நீக்கிட முடியும் என்று காட்டினார்கள் ஞானிகள்.

ஆறாவது அறிவைத்தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்பது. முருகு என்பது மாற்றியமைக்கும் நிலை. முருகா என்பது அழகுபடுத்தும் நிலை.

இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு நமக்குள் நம்மை அறியாது புகுந்த தீமைகளை அகற்றிடும் நிலையாகத்தான் இந்த நிலையைத் தெளிவுற எடுத்து உணர்த்தினார் குருநாதர்.
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக ஈசனாக மதி என்றார்.
2.அவர்கள் உடலை ஆலயமாக மதி என்றார்.
3.அந்த ஆலயங்களில் அமைந்துள்ள உயர்ந்த குணங்கள் அனைத்தும்
4.மனிதனாக உருவாக்க உதவிய அந்த நற்குணங்களைத் தெய்வமாக மதி என்றார்.

1.ஒவ்வொரு மனிதனையும் தீமைகளிலிருந்து அகற்றிடவும்
2.மனிதன் என்ற புனிதத் தன்மை பெறவும்
மனித நிலையிலிருந்து விடுபட்டு ஒளியின் சரீரமாக என்றும் நிலையாக நிலைத்திருக்கும் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று “நீ பிரார்த்தனை செய்” என்றார்.

1.உனக்குக் கிடைக்க வேண்டும் என்று எதை நான் பிரார்த்தித்தேனோ
2.எதை உபதேசித்தேனோ
3.அதை நீ எவ்வாறு கூர்ந்து கவனித்தாயோ
4.இந்த உணர்வுகள் உனக்குள் பதிவாகின்றது

அந்தப் பதிவை மீண்டும் நீ நினைவாக்கப்படும் பொழுது நான் கூறிய உணர்வும் நான் உணர்த்திய உணர்வும் நீ பெறும் தகுதியைப் பெறுகின்றாய்.

“நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்”.

பிறருடைய தீமைகளை அகற்றி அதன் வழியில் மெய் வழி பெற வேண்டும் என்று ஏங்கி அதனை நீ ஒவ்வொரு உயிரையும் ஈசனாக மதித்து நீ செயல்படு என்றார்.

நான் உனக்குக் காட்டிய அருள் வழிப்படி அந்த ஆற்றல்மிக்க சக்தியின் துணை கொண்டு விண்ணின் ஆற்றலைப் பருக நீ எண்ணு.

“எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்…” என்ற ஏக்க உணர்வுடன் நீ பெறுவாய் என்றால்
1.எல்லோருடைய வலுவும் உனக்குக் கிடைக்கின்றது.
2.அவர்களின் துணை கொண்டு மெய் ஒளியினைப் பெறுகின்றாய்.
3.அது உனக்குள் விளைந்து உன் சொல்லைக் கேட்போர் உடலுக்குள்ளும் விளையும்.

அவ்வாறு விளையச் செய்ய அந்த மெய்ஞானிகளின் அருள் உணர்வுகளை ஆழப் பதியச் செய் என்றார். அவர்களை மீண்டும் நினைவு கொள்ளும்படிச் செய்.

அவர்கள் நினைவு கொள்ளும் பொழுது அவர்களும் தீமைகளிலிருந்து விடுபடுகின்றனர் என்றார் குருநாதர்.

உடலை ஆலயமாக மதிக்க வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஞானத்தின் சுழற்சி வட்டச் செயலில் பல ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் அறியப்பட்ட சித்து நிலை பெற்றோரின்… செயல் சித்தைப் பெற்றவர்கள் (பின் வந்தோர்) எப்படியப்பா செயல்பட்டார்கள்…?

1.உண்மை வழி ஆத்ம வலுவை வளர்க்கும் செயல் சித்தை உணராமல்
2.சுயநல ஈர்ப்புப் பிடியில் விருப்பு வெறுப்பு ஏற்பட்ட காலங்களில்
3.ஜெப முறை பக்தி மார்க்கம் சிலை வைத்துப் பூஜித்ததின் செயல் வழி இவற்றின் பிடியிலே சென்று
4.உருவக நாமகரண வேதாந்த பாராயணத்தால் (பல மொழிகளில்) புரிய முடியாத தன்மையில்
5.இறை சக்தியின் உண்மை ஆத்ம வலுவை ஒவ்வொரு ஆத்மாவும் உணர முடியாமல் சென்று
6.இச்சரீரப் பிடிப்பின் அலைத் தொடரில் தான் இன்று வரையும் வாழ்க்கை பந்தம் உள்ளது.

பெற முடியாத பொக்கிஷமான ஞான வளர்ப்பின் சரீரத்தை… (மனித உடலை) அதன் உண்மை நிலையை அறியவில்லை… அறிய முற்படவும் இல்லை…!

1.சரீரம் என்பது நாம் தங்கி எடுக்கும் புனிதமான கோவில் தான்…!
2.அவ்வாத்மாண்டவனை வளர்க்கும் இல்லமாக எண்ணாமல்
3.சரீரத்தைத்தான் “நான்…!” என்ற சுகபோகச் சுவையில்
4.உண்டு கழிக்கும் நிலையில் நாம் வைத்துள்ளோம்.

ஆக… உண்மையான பேரானந்தத்தை வளர்க்கும் ஆலயத்தை செயற்கை இயந்திர கதியைப் போன்ற… “உண்டு கழிக்கும் இயந்திரமாகத் தான்” நாம் வைத்துள்ளோம்.

இவ்வுலக ஈர்ப்பில் உள்ள நன்மை தீமை என்ற வட்டத்தில்… தீமையில் நன்மையைக் காண்பதைப் போன்று உணர்வில் மோதும் செயலில் ஏற்படும் எண்ணக் கோவையில் நாம் எடுக்கும் உணர்வானது… நல்வழிப்படுத்தும் செயல்வழி சேமிப்பாக இச்சரீர ஈர்ப்பு சமைத்து… இவ்வாத்ம வலுவின் வலுக்கூடிய தன்மையை செயல் சித்திற்கு ஆரம்பக் காலங்களில் செயல்படுத்தலாம்.

உயிரை விட்டு ஆத்மா பிரிந்து செல்லுமா…? உயிரற்ற ஜட பிம்பமாக இச்சரீரத்தை வைத்து உயிராத்மா பிரிந்து செல்லாது. இவ்வுயிர்ச் சரீரக் கூட்டின் இயக்கமுடன் வலுக்கூடிய ஆத்ம அலையைக் காண முடியுமா…? முடியும்.

எப்படி நிலைக்கண்ணாடியில் நம் உருவத்தைப் பார்த்தால் எதிர்பிம்பம் தெரிகின்றதோ… அதைப் போன்றே இவ்வாத்ம பிம்பத்தைப் பார்க்கவும்… இவ்வாத்ம அலையைச் செலுத்தி எச்செயலிலும் ஊடுருவி ஒவ்வொரு நிலையையும் அறிய முடியும் என்பதை ஏற்கனவே உணர்த்தி உள்ளேன்.

இச்சரீர பிம்ப செயலில் நற்குண அலைத் தொடரினால் பெறக்கூடிய ஆத்ம பலத்தின் வளர் தன்மையின் செயல் சித்தின் செயல் முறையினால் தான் ஞானத்தின் தொடரைப் பெற முடியும்.

1.விருப்பு வெறுப்பற்ற உண்மை வலுவின் அலைத் தொடரின் வளர்ச்சி கொண்டு
2.வேறு எந்த ஒரு ஈர்ப்பின் பிடியில் சிக்காமல் உயர் வழியில் சென்று
3.“என்றுமே அழியாத் தொடர் வழி வளர்ப்பை வளர்க்க முடியும்…!”
4.இந்தச் செயல் வழியின் உண்மைச் சித்தறியும் வழி பெற்ற ஆத்மாக்கள்தான்
5.உயர் வழித் தொடர் கொண்ட “ரிஷித் தன்மை” பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

உதாரணமாக ஒரு கருவுற்ற தாய் வேதனைப்படுபவர்களை உற்றுப் பார்த்து நுகர்ந்து விட்டால் அதனின் கருவிலே வளரும் அந்த உணர்ச்சிகள் சிசுவுக்கும் பதிவாகின்றது.

அவருடைய கஷ்டங்களை தாய் உணர முடியும். ஆனால் தாயின் உடலிலும் இத்தகைய அணுக்கள் விளைகின்றது.

ஆஸ்த்மாவோ கான்சரோ மற்ற கடுமையான நோய்வாய்ப்பட்டவர்களின் உணர்வுகளை கர்ப்பமாக இருக்கும் தாய்
1.ஒன்றிலிருந்து தொண்ணூறு நாளுக்குள் நுகர்ந்தால்
2.அந்தத் தாய் கருவிலே விளையும் சிசுவுக்கும் அந்த உணர்வுகள் பட்டு
3.அந்த உடலுக்குள் விஷ அணுக்களை உருவாக்கும் நிலைகள் வருகின்றது.

குழந்தைப் பருவத்தில் தெரியவில்லை என்றாலும்
1.எந்தப் பருவத்தில் எந்த மனிதனின் உடலிலிருந்து அந்த உணர்வுகள் வந்ததோ
2.அந்தப் பருவம் வரும்போது அவர் உடலில் எது விளைந்ததோ
3.அதைப் போல அதே நோயின் தன்மை
4.குழந்தை உடலில் விளையத் தொடங்கிவிடும்.

இன்று இதையெல்லாம் நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.

இவையெல்லாம் தாய் கருவிலே விளையும் உணர்வுகள். தாய் நுகர்ந்த வேதனையான உணர்வுகள் அது உடலுக்குள் ஊழ்வினையாக என்ற வித்தாக மாறி விடுகின்றது.

அதே சமயத்தில் அந்த வேதனையான உணர்வு குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து விடுகின்றது.

நாம் நல்ல மனிதர்களாக இருக்கிறோம் என்றால் நம் தாய் கருவிலே இருக்கப்படும் போது இத்தகைய தீமைகளிலிருந்து தப்பியவர்கள்… இன்று நல்ல உடல்களை நாம் உருவாக்கி உள்ளோம்.

ஆனாலும் நாம் கருவிலிருக்கும்போது பிறருடைய கஷ்டங்களையும் துன்பங்களையும் சாப வினைகளையும் கேட்டு அறிந்திருந்தால் அந்தச் சாப அலைக்குள் நம்முடைய திறமை எது இருந்தாலும் அது செயலிழந்து இந்த வாழ்க்கையில் அதனால் நமக்குத் தொல்லைகள் வரும்.

இந்த உணர்வுகளை நம் உயிர் நுகர்ந்தபின் அந்த உணர்வின் இயக்கமாக மாற்றுகின்றது.
1.”இப்போது அல்ல…”
2.தாய் கருவிலே விளையும் போது தாய் எடுத்த உணர்வின் வித்து
3.அதனுடைய பருவம் வரும் போது அதை விளைய வைத்துவிடும்.

தென்னை மரங்களை எடுத்துக் கொண்டால் அதனுடைய காலம் வரும்போது தான் அதனுடைய காய்களை விளைவிக்கின்றது.

ஒரு செடியின் தன்மை எடுத்துக் கொண்டால் அதன் காலம் வரும் பொழுது தான் அதனுடைய விளைச்சலைக் கொடுக்கின்றது.

நெல் பயிரை எடுத்துக் கொண்டால் ஆறு மாதம் கழித்து நெல் மணிகளை உருவாக்குகின்றது.

இப்பொழுது 3 மாதத்திலும் 2.5 மாதத்திலும் அதற்குத் தக்க உணர்வுகள் உண்டாக்கித் துரித நிலையில் கொண்டு விளையும் பருவத்தையும் விஞ்ஞான அறிவால் கண்டுபிடித்துள்ளார்கள்.

இணை சேர்த்த உணர்வின் தன்மை கொண்டு துரித நிலைகளில் இவ்வாறு வளர்வதும் உண்டு.

இதைப் போன்று கருவிலே இருக்கும் போது தாய் உற்றுப் பார்த்த உணர்வுகள் அனைத்தும் விளைந்து அதற்குத்தக்க நம்மை இப்படியெல்லாம் மாற்றி விடுகின்றது.

இதைத்தான் “பூர்வ புண்ணியம்” என்று சொல்வது.

ஒரு தீமை செய்பவனையோ திருடுபவனையோ அல்லது தவறான வழிகளில் நடப்பவனையோ உற்றுப் பார்த்து அந்த உணர்வினை கருவுற்ற தாய் நுகர்ந்திருந்தால் கருவிலே அந்த உணர்வுகள் விளைந்து
1.குழந்தை வளர வளர
2.அவன் “தவறு செய்பவனாகவே…” மாறிவிடுகிறான்.
3.நீங்கள் என்ன தான் சொல்லி அவனைத் திருத்திப் பார்த்தாலும் முடியாது.

இதுவெல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

ஏனென்றால் நமது உயிர் நாம் நுகர்வதையெல்லாம் “ஓ…” என்று இயக்கி “ம்…” என்று நமக்குள் அணுவாக உருவாக்கும் உடலாக மாற்றிக் கொண்டேயுள்ளது

இன்று சாதாரண நிலைகளில் சாமிக்குத் தீபாராதனை காட்டியோ சாமியாருக்கு இலஞ்சம் கொடுத்துப் பார்த்தோ யாரை வேண்டிக் கொண்டு எதைப் பண்ணினாலும் அவனை மாற்ற முடியாது.

ஆனால் அதே தாய் “மகரிஷியின் அருள் உணர்வுகள் தன் குழந்தை பெற வேண்டும்…” என்று ஏங்கித் தன் குழந்தைக்கு அந்த உணர்வினைப் பாய்ச்சினால் ஒழிய அதை மாற்ற முடியாது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பேரண்டத்தில் உள்ள ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் ஒளியாக வாழும் உயிரான்மாக்கள் உண்டு

 

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனைப் பற்றி இங்கே உபதேசிக்கும் பொழுது… அவன் கண்ட உணர்வுகளை நீங்கள் நுகர நுகர… அந்த அணுக்கருக்களாகப் படிப்படியாக உங்கள் உடலுக்குள் மாற்றம் ஆகும்.

அதை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்த உணர்வின் சத்தாக உங்களுக்குள் மாறி அதன் வழி கொண்டு தீமைகளை அகற்றிடும் அணுக்கள் பெருகும்.

அத்தகைய அணுக்கள் பெருகினால்…
1.பிறவியில்லா நிலை அடைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அகஸ்தியரிடம் அழைத்துச் செல்லும்
2,அடுத்து நாம் பிறவியில்லா நிலையை அடையலாம்.

உதாரணமாக ஒரு நண்பர் வேதனைப்படுவதை நாம் பார்க்கின்றோம். அந்த வேதனையை அதிகமாக நாம் நேசித்து விட்டால் அவரின் உனர்வு நமக்குள் விளையத் தொடங்குகிரது.

ஆனால் நண்பர் உடலில் வேதனை அணுக்கள் பெருகி வளர்ந்த நிலையில் நோயை விளைய வைத்த அந்த உயிரான்மா வெளி வந்துவிடுகிறது.

வெளி வந்தபின் நம் உடலில் புகுந்து விடும். ஏனென்றால் அவருடைய உணர்வு நம் உடல் வலிமையாக இருக்கும் பொழுது நமக்குள் வந்துவிடுகின்றது

உதாரணமாக ஒரு ஆடு நரியைப் பார்த்து அதனுடைய வேக உணர்வைக் கண்டு அஞ்சி… அதையே சுவாசித்தது என்றால் நரியின் உணர்வை ஆடு நுகர… நுகர… அந்த நரியின் வலுவான உணர்வு ஆட்டின் உடலுக்குள் வந்த பின் நோயாக மாறுகின்றது.

பின் நரியை எண்ணி எண்ணி இந்த உடலின் தன்மை வலுப் பெற்று விட்டால் ஆடு மடிந்த பின் உடலை விட்டு வெளி வரும் ஆட்டின் உயிரான்மா நரியின் உடலுக்குள் சென்று பரிணாம வளர்ச்சியில் நரியாக விளைகின்றது.

இப்படித் தான் நாம் பரிணாம வளர்ச்சியில் பல கோடிச் சரீரங்களைப் பெற்று மனிதனாக இன்று வந்துள்ளோம். ஆனால் நோயுற்றவரின் உணர்வுகளை நமக்குள் அதிகமாகப் பெருக்கிய பின் அதே நோயின் தன்மை நமக்குள்ளும் வளர்கிறது.

நோயினால்…
1.நம் உடலை உருவாக்கிய நல்ல அணுக்களின் வளர்ச்சி குன்றி… விஷத்தின் தன்மை அதிகமாகப் பெருகி
2.எந்த மனிதன் பாசத்துடன் நம்மை அதிகமாக நேசித்தானோ
3.நாம் இறந்தபின் அந்த உடலுக்குள் தான் செல்வோம்… நம் இருப்பிடம் அதுதான்

ஆனால் இந்த மனிதனின் வாழ்க்கையில் முழுமை பெற்ற ஞானிகளும் மகரிஷிகளும் பிறவியில்லா நிலையை அடைந்து அகண்ட அண்டத்தில் இன்றும் ஒளியின் சுடராக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

1.இறப்பும் இல்லை பிறப்பும் இல்லை என்று முடிவடைந்த அந்த உயிர்கள்
2.அகண்ட அண்டத்தில் எங்கே… எது… உருவானாலும்
3.அதனின் உணர்வை ஒளியாக மாற்றி என்றும் பதினாறு என்ற நிலையில் வாழ்ந்து கொண்டுள்ளனர்.
3.இப்படி ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் ஒளியாக ஆனவர்கள் உண்டு.

நம் சூரியக் குடும்பம் மட்டும் இந்த அண்டத்தில் வாழவில்லை. எண்ணிலடங்காத சூரியக் குடும்பங்கள் உண்டு ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் நம் பூமியைப் போன்று ஒரு பூமி உண்டு.

அதிலே வடித்த உணர்வுகள்… அதிலே உருவான உயிர்களுக்கு ஒளியாக மாறும் ஆற்றலும் உண்டு, அத்தகைய நிலையை நாமும் பெறுவதற்குத் தான் இந்த உபதேசம்.

மனித ஜெனனம் எப்படி நடக்கிறது…? – ஈஸ்வரபட்டர்

 

“ஒலி கொண்டு உராயும்…” அமிலச் சேர்க்கையின் வார்ப்பின் வார்ப்பாகத்தான் பல தொடர்பலையில் வலுக் கொண்ட உயிராத்மாவானது… சுவாச ஈர்ப்பில் நம் உடலுக்குள் எண்ண நிலைக்கொப்ப குண நல ஈர்ப்புப் பிடியில்… சில சில காலங்களில் வந்து சேர்கிறது.

அதாவது மனித எண்ணத்தின் பன்னிரெண்டு வகை குண அமில நிலைக்கொப்ப எந்தக் குண நிலை கொண்டுள்ளோமோ அக்குண ஈர்ப்புத் தொடர் கொண்ட ஆத்ம உயிரானது… நாம் எடுக்கும் சுவாசத்தால் நம் உணர்வின் குண நிலைக்கொப்ப “நம் சுவாசமுடன்” நுரையீரலில் உட்புகுந்து விடுகிறது.

எந்த ஆத்மா நம் குண ஈர்ப்பிற்கு நம் சுவாசமுடன் வந்ததோ அவ்வுயிராத்மாவின் துடிப்பு நிலை நம் சுவாசமுடன் நுரையீரலில் உட்புகுந்து அதன் துடிப்பான அணுக்களை வளர்த்து இரத்த நாளங்களில் உட்புகுந்து விடுகிறது.
1.ஆத்மாக்கள் பெரும்பகுதி குடியிருக்கும் இடம் இரத்தநாளங்கள் தான்.
2.அதிலே சுழன்று கொண்டே இருக்கும்.

அப்படிச் சுழலும் நிலையில் அதற்குகந்த வேட்கை குண அணுக்களை நம் உடலில் வளர்க்கத் தொடங்குகிறது.

நாம் சில சந்தர்ப்ப காலங்களில்
1.தன் நிலை மறந்த உணர்வுடன் கூடிய ஈர்ப்பு எண்ணத்தில் செல்லும் பொழுது
2.நம் உடலுக்குள் குடி வந்த ஆத்மாவானது
3.அது வளர்க்கும் அணுக்களின் அதன் எண்ணச் செயலில் வேகத்தால்
4.அதன் ஈர்ப்புப் பிடிக்கு நம்மை உட்படுத்தி… அதன் வசத்திற்கு நாம் செல்லும் காலங்களும் உண்டு.
5.அவையே நம் வளர்ப்பின் கருவாக உருப்பெற்று குழந்தைகளாக ஜெனனம் பெறுவதும் உண்டு.

நற்குண சுவாச ஈர்ப்பில் முந்தைய காலத் தொடர்பு கொண்ட வலுப் பெற்ற உயிராத்மாக்களும் தொடர்பு கொண்டு ஈர்ப்புப் பிடியில் ஜெனனத்திற்கு வருகின்றன.

இரத்தநாளங்களில் உள்ள இவ்வுயிராத்மாக்கள் தான் ஆண் பெண் உறவு நிலையில்
1.காந்த ஈர்ப்பு நுண் அலையை வளர்க்க வல்ல வண்ணங்களில்
2.வெண்மை அமிலக்கூறின் வார்ப்புச் செயலான ஆணின் அணு வளர்ப்பின் சேர்க்கை வித்துடன்
3.காந்த மின் அலையை ஈர்க்க வல்ல வீரிய உணர்வு கொண்ட உஷ்ண அலையின் சேர்க்கைக் காலங்களில்
4.நம் உடலில் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்
5.பெண்ணின் வீரிய குண உஷ்ண அணுக்களின் உயிரணு வளர்க்கும் காலங்களில்
6.ஆணின் அமிலச் சேர்க்கையில் கரு ஈர்ப்பிற்கு வந்து கருத்தரிக்கின்றது.

கருத்தரித்த காலத்தில் தாய் எடுக்கும் சுவாசத்தால் இக்கருவானது அதன் உயிர் ஆத்மா திடம் (உடல்) கொள்கிறது, திடம் கொண்ட நிலையில் அவ்வாத்மா வளர்க்கும் அவ்வமிலத்தின் உஷ்ண அலையில் உயிரணுக்கள் வளரத் தொடங்குகிறது.

கருவுற்ற நிலையில் அந்த ஆத்மா உராய்ந்து உராய்ந்து வலுப் பெற்று உருவாகி வளரும் அந்த அணுக்களின் மலம் வெளிப்பட்டு அதுவே மீண்டும் அணுவாகி வளரும் கரு வளர்ப்பு வார்ப்பு சரீர நிலையாக உருவாகின்றது.

தாயின் கர்ப்பத்திலேயே கர்ப்பப் பையில் தான் அவ்வாத்மாவும் வளர்கின்றது. ஆத்மாவின் ஈர்ப்பு உஷ்ண அலையின் வார்ப்பாகத்தான் அக்கரு வளர்ந்து அக்கருவின் எலும்புப் பாகங்கள் உறுதி கொள்கிறது.

எலும்பின் ஈர்ப்பு வளர்ச்சி வளர்ந்த பின்பு தான் அந்த உயிராத்மாவானது ஜெனனப் பிறப்பிற்கு வருகின்றது.

வலுக் கொண்ட காந்த ஈர்ப்பு வார்ப்பு வார்ப்பாக சரீரம் உருவான பிறகு…
1.அச்சரீரத்தை இயக்கி வளர்ந்த ஆத்மா வலுக் கொண்ட பிறகு
2.தாயின் சரீரத்திற்கும் சேயின் சரீரத்திற்கும் தொடர்பு கொண்ட
3.தொப்புள் கொடியின் தொடர் ஓட்ட நிலை சேய் வளர்ச்சி கொண்ட நிலையில்
4.தாயின்றித் தனித்துச் சக்தி பெறும் ஆற்றல் கொண்ட நேரத்திலேயே
5.அதன் துடிப்பு வேகம் அதிகப்பட்டு…
6.தாய்க்கும் சேய்க்கும் தொடர்பான தொப்புள் கொடியைப் பிரித்துக் கொண்டு
7.தன் இச்சைக்கு வளரும் சிசுவாகப் பிறக்கின்றது.

தாயின் கருவில் சிசுவாக வளரும் காலத்தில் துடிப்பு நிலையின் இயக்கம் ஒன்று தான் அச்சிசுவிற்கு உண்டே தவிர… சிறுநீர் கழிப்பதோ.. மலம் கழிப்பதோ… சுவாசம் எடுப்பதோ… உணவு எடுப்பதோ… இச்செயல்கள் எவையும் இல்லை.

ஆனால் தாயெடுக்கும் சுவாசத்தால்… தாய் எடுக்கும் உணர்வுகளின் எண்ணத்தின் அலைத் தொடர்பு யாவையுமே… ஒலி ஈர்ப்பின் தொடர்பை அச்சிசு பெறுகின்றது.

கரு வளர்ப்பில் அக்கருவின் ஆத்மா தாய்க்கும் சேய்க் கருவிற்கும் தொடர்பு கொண்ட “உதிரத் தொடர்பில்”
1.உதிர அணுக்களின் வளர்ப்பணு உராய்வு திட வளர்ப்பினால் தான்
2.அணு முட்டையாகத்தான் கரு உருவகம் பெறுகின்றது
3.உண்டு கழித்து உருவாகுவது இல்லை… “உருவாகும் உயிரணுக் கரு…!”

உஷ்ண அலையின் வார்ப்பாகத்தான் உயிராத்மா தாயின் உதிரத் தொடர்பைக் கொண்டு தன் வளர்ப்பிற்குச் சத்தெடுத்து உருவாகின்றது.. வளர்கின்றது… பிறக்கின்றது.

பிறந்த பிறகுதான் தன் இச்சையில் சுவாசம் எடுத்து உணவெடுத்து செவி ஈர்ப்பும் ஒளிப் பார்வையும் ஒளி வீச்சும் செயல்பட ஆரம்பிக்கின்றன.

மனித உரு கரு உருவாகும் தருணத்தில் உருவங்களும் நிறங்களும் அங்க அவயங்களின் வார்ப்புகளும் தாயின் உதிர உஷ்ண ஓட்டத்தால் இவ்வாத்ம உயிர்…
1.ஏற்கனவே எந்தெந்த முலாமில் எல்லாம் வார்ப்பாகி வார்ப்பாகி வலுக் கொண்டு வழித் தொடர் பெற்று
2.எதை வளர்க்கக்கூடிய வித்தாக அவ்வுயிராத்மாவின் முலாம் இருந்ததோ
3.அதன் தொடர்பு கொண்ட உருவக அங்க இலட்சணங்கள் தான்
4.கருவகக் காலத்தில் பெற்று வந்த வார்ப்பு உருவாகப் பிறப்பெடுத்து வளர முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

(1).பையனை எண்ணி வேதனைப்பட்டு வெறுப்படைந்த உணர்வுகள் அவன் தொழிலுக்குச் செல்லும்போது அவனை எப்படி இயக்குகின்றது…?

நம் பையன் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறான் என்று வைத்துக் கொள்வோம். வீட்டில் இந்த மாதிரிச் சொல்லி ஏதாவது கேட்கவில்லை என்றால் அதே வேதனையான நிலைகளில் அங்கே போய் வேலை பார்ப்பான்.

அந்தச் சங்கடமான நிலைகளில் இருக்கும்போது “ஏனப்பா… இது இந்த மாதிரி இருக்கிறது இதை எடுத்து இந்த மாதிரி வையப்பா…” என்று அங்குள்ளவர்கள் சொன்னால் பையன் என்ன சொல்வான்?

“அ..ஆ…, என்று மறுத்து…” அதெல்லாம் முடியாது…! நீ என்ன சொல்கிறது… நான் என்ன செய்கிறது… “நீயே செய்…! என்று வரும்.

ஏனென்றால் இங்கே வீட்டில் வந்த வெறுக்கும் உணர்வு அங்கே தொழிற்சாலையில் மேலதிகாரி வேலையைச் சொன்னவுடனே
1.“ஜிர்…’ என்று கோபமாகி முறைத்துப் பார்க்கச் சொல்லும்.
2.அங்கே எதிர்ப்பான். நீயே செய் என்பான்.

இதைப் பார்க்கலாம் நீங்கள்.

ஏதாவது உங்கள் வீட்டில் சங்கடப்பட்டு வேலைக்குச் சென்றால் உங்கள் மேலதிகாரி வேலை சொன்னால் உங்களுக்கு என்ன எண்ணம் வருகிறது என்று பாருங்கள்…!

உங்களுக்குத் தெரியாமலே அங்கே சண்டை போட வைக்கும். உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

இந்தச் சண்டையை அங்கேயும் மூட்டிவிட்டு யாரிடம் பதில் சொன்னாலும் விடாப்பிடியாக
1.எனக்கு இப்படி இடைஞ்சல் செய்கிறார்கள்
2.என்னை அப்படிச் சொல்கிறார்கள் என்று
3.இதைத் தான் சொல்லச் சொல்லும்.

உங்கள் வீட்டில் வந்த இந்தக் குறை அங்கே போய் மோதி உங்கள் தொழிலேயும் இடைஞ்சல் கொடுக்கும்.

இந்த மாதிரி ஆனவுடன் நம் உடலுக்குள் உள்ள நல்ல குணங்களுக்கு இதெல்லாம் எதிரியாகிவிடும். உடலுக்குள் வெறுப்பும் வேதனையும் உண்டாகிக் கொண்டேயிருக்கும்.

அதே போல நம் நண்பர்களுக்கும் நம்மைப் பார்க்கும் பொழுது அதே வேதனையும் வெறுப்பும் வந்து கொண்டேயிருக்கும்.

இந்த விஷம் எல்லா இடத்திலும் பரவிவிடுகின்றது. இதே மாதிரித் தொழில் செய்யும் இடங்களில் அவரவர்கள் குடும்பத்திலேயும் இந்த மாதிரி இருக்கின்றது.

நாம் என்ன நினைக்கிறோம். நான் நல்லது தான் நினைக்கின்றேன். ஆனால் என் வீட்டிலும் தொழிலும் இப்படி இருக்கின்றது என்று எண்ணி வேதனைப்படுவோம்.

நம் பையன் மீது பிரியமாக இருக்கும் பொழுது இந்த மாதிரி நடந்தால் “அடப் பாவிகளா.. இந்த மாதிரிச் செய்கிறார்களே…! என்று உணர்ச்சி வசப்படுவோம்.

“பார்த்து வேலை செய்டா” என்று சொல்லிவிட்டு “உனக்கு இப்படித் தொல்லை கொடுக்கின்றார்களே” என்று எண்ணி அதிலும் வேதனை வரும். ஏனென்றால் அங்கே இடைஞ்சல் வரும் போது தாய் என்பதால் பையன் எல்லாவற்றையும் இங்கே வந்து சொல்வான்.

அதே சமயத்தில் நண்பர்களிடம் சொல்லும் போது இப்படிப் பண்ணுகின்றார்கள் பாருங்கள் என்று சொல்வோம். எதற்கெடுத்தாலும் என் பையனுக்கு இடைஞ்சல் செய்கிறார்கள் என்று அவர்களிடம் சொல்லி அவர்கள் உடலிலேயும் இந்த வேதனையைச் சேர்ப்போம்.

நாலு தடவை இப்படிச் சொன்னால் ஐந்தாவது தடவை நம் நண்பர்கள் அப்புறம் நம்மைக் கண்டாலே ஒதுங்கிப் போய்விடுவார்கள். இவன் என்னடா எப்பொழுது பார்த்தாலும் இந்த மாதிரிக் குறையையே சொல்லிக் கொண்டுள்ளான் என்று விலகிச் செல்வார்கள்.

இத்தகைய நிலைகள் கடைசியில் பகைமையாகி எதிரியாக்கிவிடும்.

காரணம் என்ன…?

1.நாம் நல்லதை எண்ணுவோம் ஆனால் நல்லதைக் காப்பதில்லை
2.உடலிலுள்ள நல்ல குணங்களுக்குத் தேவையான நல்ல சக்திகளை நாம் கொடுப்பதில்லை

நல்ல செடிகள் விளையும் இடத்தில் விஷச் செடிகளை விதைத்தால் நல்ல செடிகளுக்குண்டான சத்தையெல்லாம் அது எடுத்துக் கொண்டு நல்ல செடிகளுக்கு உணவே இல்லாது செய்துவிடும்.

களை அதிகமாகிவிட்டால் நல்ல செடிகள் விளையுமோ…?

நல்ல செடிக்கு வரும் சத்தெல்லாம் களை “லபக்..” என்று எடுத்து அது நன்றாக வளரும். ஏனென்றால் அது விஷம். இதே மாதிரித்தான்
1.நம் நல்ல குணங்களுக்குக் கிடைக்க வேண்டிய சத்தையெல்லாம் அது எடுத்துக் கொள்ளும்.
2.அப்பொழுது நல்ல குணங்களையே எண்ண முடியாதபடி அது தவிக்கும்.
3.நல்ல குணங்கள் உடலை வளர்த்தது அனைத்தும் சோர்வடையும்.

நல்ல குணங்களை எண்ணவிடவில்லை என்றால் இந்தத் தீமை செய்யும் குணங்கள் “ஆட்சிக்கு” வந்துவிடும்.

நாம் தவறு செய்யவில்லை பாசத்தினால் இப்படி வந்துவிடுகின்றது.

இந்த மாதிரியெல்லாம் நடந்ததால் பையனுக்கு அவன் வேலை செய்யும் தொழிற்சாலையில் கெட்ட பேர் வருகின்றது. அவனுக்குள் வெறுப்பாகும் பொழுது அந்த வெறுப்பான நிலைகளிலே அங்கே எதிரியாகின்றது.

அங்கே வேலை செய்ய முடியாது. வீட்டுக்கு வர மாட்டான். ஹோட்டலில் போய்ச் சாப்பிடுவான். காசே பையன் சரியாக வீட்டுக்குத் தர மாட்டேன் என்கிறானே என்று வேதனைப்படுவோம்.

இதெல்லாம் செய்வது யார்…? நம் உயிர் தான்.

நம் உயிர் தான் நாம் எண்ணிய அனைத்தையும் இயக்குகின்றது. நாம் எண்ணியது அனைத்தும் தெய்வமாக இருக்கின்றது .அதையும் காட்டுகிறார்கள் ஞானிகள்

(2).காளி – கோபம் – காளிக்கு முன்னாடி புலி

காளி மாரியம்மன் இப்படி எத்தனையோ தெய்வங்களைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்.

பையன் மேல் ரொம்பப் பிரியமாக இருக்கின்றேன். ஆனால் எனக்குப் பிடிக்காததைச் செய்தான் என்றால் “ஜிர்ர்ர்….” என்று கோபம் வந்துவிடுகின்றது.

நம் சொன்னபடி பையன் கேட்கவில்லை என்றால் காளியாகவே மாறிவிடுகின்றோம்.

காளிக்கு முன்னாடி என்ன வைத்திருக்கின்றார்கள்?

புலியை வைத்துக் காண்பித்துள்ளார்கள். ஏன் வைத்துள்ளார்கள்? எனக்குக் கோபம் வந்துவிட்டால் முன்னாடி நிற்பதைப் பார்க்கின்றேனா?

புலி தன் பசியைத் தீர்க்க மற்றவைகளை அது இரக்கமற்றுக் கொன்று அது சாப்பிடுகின்றது.

அது எவ்வளவு தான் “விர்ர்ரா…விர்ர்ரா” என்று கத்தினாலும் அதைக் கேட்காது தன் பசியினுடைய அந்த ஆவேசத்தில் தான் இருக்கும். கடித்துக் குதறும். உணவாகப் புசிக்கும்.

அதே மாதிரித்தான் பையன் சொன்னபடி கேட்கவில்லை என்கிற பொழுது உன்னை அடித்து நொறுக்கினால் தான் உனக்குப் புத்தி வரும் என்று சொல்லி ஆவேசமாக அடிப்பார்கள்.

1.இந்தக் காளி இப்படி நொறுக்கும்.
2.புலி தன் பசியைப் போக்க எப்படி ஆவேசப்படுகின்றதோ அதே ஆவேசம் இங்கே வரும்.
3.அதனால் தான் “காளி – கோபம்” என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

இந்த வாழ்க்கையில் கோபமும் கொதிப்பும் அடிக்கடி எடுத்துப் பேச ஆரம்பித்தார்கள் என்றால் அடுத்த பிறவி “நிச்சயம் புலி தான்”.

இந்தக் கோபமான எண்ணத்தை எண்ணினால் உயிரான ஈசன் அதைப் படைத்து உடலுக்குள் வினையாகச் சேர்க்கின்றான்.
1.அப்பொழுது இந்த உடல் அது வினைக்கு நாயகனாக விநாயகா
2.அந்தப் புலியின் உடலாகவே மாற்றுகின்றது நம் உயிரான ஈசன்.

இதைக் காண்பிப்பதற்குத்தான் கோவிலில் இப்படி வைத்துள்ளார்கள். ஏனென்றால் இதெல்லாம் நம் உயிரின் இயக்க நிலைகள். தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

(3).மற்றவரை ஏமாற்றினாலும் உயிரிடமிருந்து யாரும் தப்ப முடியாது

1.நான் உங்களை ஏமாற்றலாம்.
2.யாரை வேண்டுமானாலும் ஏமாற்றிவிடலாம்.
3.எனக்குள் இருக்கும் உயிரிடம் நான் ஏமாற்றவே முடியாது.

உங்களை நான் ஏமாற்றுகின்றேன் என்று வைத்துக் கொள்வோம். ஏமாற்றும் உணர்வு எனக்குள் வந்துவிடும்.

1.ஏமாற்றும் உணர்வு எனக்குள் வந்தவுடன்
2.என்னிடம் உள்ள நல்ல குணங்களை எல்லாம்
3.இது ஏமாற்றிக் கொண்டேயிருக்கும்.

ஏமாற்றியவுடனே நாம் என்ன செய்வோம்? அதைக் கண்டு நாம் இரசிப்போம். ஆனால் ஏமாற்றப்பட்டவன் வேதனைப்படுவான்.

அவன் வேதனைப்படும் உணர்வுகள் வெளிப்படுவதைக் கண்டு நாம் இரசித்தோம் என்றால் நமக்குள் வந்து நம் நல்ல குணங்களை எல்லாம் ஏமாற்றிவிடும்.

நான் அவனை ஏமாற்றி விட்டேன் என்று எண்ணினேன். ஆனால் எனக்குள் வந்து வேதனையாகிவிடுகிறது. இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் தெரிந்து கொள்வதற்காகத்தான் கோவிலைக் கட்டி வைத்து விநாயகரை முன்னாடி நிறுத்தி நம்மை நாம் அறியும்படிச் செய்தார்கள் ஞானிகள்.

வினைக்கு நாயகனான அமைந்த இந்த மனித உடலை எப்படிப் பெற்றோம்…?

முந்தி மிருக நிலையிலிருந்தோம். மிருகமாக இருக்கும்போது சேர்த்துக் கொண்ட நல் வினைகளால் மிருக நிலையிலிருந்து மீண்டு மனிதனாக உருவாக்கியது நம் உயிர்.

மனிதாக இருக்கும் நாம் இன்று எந்த வினைகளைச் சேர்க்க வேண்டும் என்பதை நீ சிந்தித்துப் பார்…! என்று “கேள்விக் குறியும்” போட்டுப் பச்சையாகவே காட்டுகின்றார்கள்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய முதல் மனிதன் உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியாக மாற்றிப் பிறவா நிலை அடைந்தான் அகஸ்தியமாமகரிஷி.

1.அவன் கண்டுணர்ந்த இயற்கையின் பேருண்மகள்
2.அவன் உடலில் விளைய வைத்த அந்தச் சக்திகள்
3.இப்பொழுது உபதேசிக்கின்ற மாதிரி
4.அவன் உடலிலிருந்து வந்த வாசனைகளை எல்லாம்
5.சூரியனின் காந்தச் சக்தி கவர்ந்து வைத்துள்ளது.

அகஸ்தியா மாமகரிஷிகளின் உணர்வலைகளை நாம் கவர்ந்து இந்த வாழ்க்கையில் நம் உடலிலிருந்து வரும் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்ற வேண்டும்.

படித்தவர்கள் என்னவோ…! என்று விட்டுவிடுகிறார்கள்… படிக்காதவர்கள் “கூர்ந்து பதிவாக்குகின்றார்கள்…”

 

அணுவின் ஆற்றலை அறிந்து துருவத்தின் ஆற்றலைப் பெற்று அகஸ்தியன் ஒளியின் சரீரமாககித் துருவ நட்சத்திரமாக நிலை கொண்டுள்ளான்.

அவனைப் பின்பற்றிச் சென்றோர் அனைவரும் அவன் உணர்வைக் கவர்ந்து துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக ஒளியாக வாழுகின்றனர்.

இதை எல்லாம் கேட்கும் நீங்கள்… சாமி (ஞானகுரு) என்னமோ சொல்கிறார் அர்த்தமாகவில்லை…! எதை எதையோ பேசுகிறார்…! என்று எண்ண வேண்டியதில்லை.

காரணம்… படிக்காதவன் தான் இத்தனையும் நான் பேசுகிறேன். எம்முடைய பேச்சைக் கேட்பவர்களில்…
1.படித்தவர்கள் சிந்திக்கும்போது அவர்கள் படித்ததை வைத்து… “சாமி என்னமோ சொல்கிறார்…!” என்ற நிலைகளில் விட்டு விடுகின்றார்கள்
2.மிகவும் படிக்காதவர்கள் “சாமி என்ன சொல்கிறார்…?” என்று கூர்மையாக உற்றுக் கவனிக்கின்றார்கள்.

படிக்காதவர்களுக்குள் யாம் உபதேசிக்கும் இந்த உணர்வின் தன்மை கருவாகி விட்டால்
1.தன்னையும் அறிகின்றனர்… அண்டத்தையும் அறிகின்றனர்… அகண்ட அண்டத்தையும் அறிகின்றனர்.
2.அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆகி
3.எப்படி ஒளியின் தன்மையாக மாற்றுகின்றானோ அந்த நிலையை அவர்கள் அடைகின்றார்கள்.

உதாரணமாக ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார் என்று கண்டறிந்த பின் அந்த உணர்வின் தன்மை நமக்குள் கருவாக உருவாகி விட்டால் அதே நோயின் தன்மை நமக்குள் உருவாகின்றது.

நோயாளியைப் பார்த்துத் திரும்பத் திரும்ப அவனை எண்ணும் பொழுது
1.கோழி கேறுவது போன்று அந்த உணர்வின் தன்மையாகி
2.நோயை உருவாக்கும் கரு முட்டையாகி அந்தக் குஞ்சாக ஆன பின் அதே நோயின் தன்மையை ஊட்டி
3.இரத்த நாளங்களில் கலந்து உயிருக்கு எட்டி
4.அந்த நோயின் உணர்வைக் கண் காது மூக்கு என்று அனைத்திற்கும் இழுத்துக் கொண்டு வரும்.

வேதனையாக இருக்கும் பொழுது உங்கள் மேலே யாராவது தொட்டால் உடனே சுருக்… என்று கோபம் வரும். வேதனையாக இருக்கும் பொழுது ஒருவர் நம்மிடம் மகிழ்ச்சியாக ஒரு சொல்லைச் சொன்னால் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது… அந்த மணம் நம்மைத் தடுத்துவிடும்.

ஆனால் வேதனையைப் பற்றிச் சொன்னால் இந்த உடல் மிகவும் ரசிக்கும். ஆகவே… வேதனையாக இருக்கும் பொழுது
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் ஆன்மாவிலிருந்து இதைத்தான் பிரித்தெடுத்து உயிருக்குக் கொடுக்கும்.
2.அந்த உணர்வின் தன்மை தான் உடலுக்குள் சென்று அந்த அணுவிற்கு ஆகாரமாகப் போய்ச் சேரும்.

இதைப் போன்று…
1.நோயை அகற்றிய அருள் ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
2.அதைத் திரும்பத் திரும்ப நீங்கள் எண்ணினால் போதும்
3அந்தக் கரு முட்டை உங்களுக்குள் வளர்ச்சி அடைந்து அணுக்களாகப் பெருக்கப்படும் பொழுது அது உணவுக்காக உந்தும்.
4.அந்த உணர்வின் தன்மை உந்தும் போது அந்த அருள் ஒளியின் உணர்வுகள் உங்களுக்குள் பெருகும்.

ஞானிகளின் உனர்வை இப்படித்தான் நமக்குள் பெருக்கிக் கோண்டு வர முடியும்.

நம் ஆன்மாவுடன் பேச முடியுமா…? – ஈஸ்வரபட்டர்

 

நம் பூமியின் முக்கியத் தாதுப் பொருள் இரும்பு. இதன் நிலையில் ஒத்த ஜீவ ஜெந்துக்களும் தாவர இன வளர்ப்புகளும் இதன் தொடர் வளர்ச்சியுடையதாகத்தான் வளர்ந்து வந்துள்ளன இன்றளவும்.

எப்படி உலோகங்களிலேயே ஒவ்வொரு உலோகத்திற்கும் அதன் கன அளவுக்குக் கொள்ளளவு நிறையில் வித்தியாசம் உள்ளதோ… அதாவாது ஒரு எடை போடும் தராசில்
1.இரும்பின் கனம் ஒரு கிலோவுக்குள்ள எடையின் கொள்ளளவைக் காட்டிலும்
2.பிற உலோகங்கள் அதிகமாக நிறை தெரிகின்றது அல்லவா…! (உருவ நிலை)

இதன் நிலைக்கொப்ப “நம் பூமியின் நிறை” கனம் பொருந்திய ஜீவ ஈர்ப்பில் நீர் சக்தி வளர்ந்துள்ள இரும்புத் தாதுப் பொருளின் கூடுதல் நிறை கொண்டது அத்தகைய வளர்ப்பில் தான் பூமியில் உள்ள வளர்ப்பு யாவும் உள்ளன.

இniniனி வரும் காலத்தில் இம்மண்டலச் சேர்க்கைக் காலத்தில் பூமியைப் பாதிக்கவல்ல சில நிலைகள் ஏற்படப் போகிறது.

அத்தொடரிலிருந்து நாம் தப்ப இந்தப் பூமி ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபடக்கூடிய தன்மைக்கு நம் சுவாசத்தில் மேல் நோக்கிய தொடர்புடையதாக சூரிய அலை வட்டத்தில் நுண்ணிய காந்த அலையை நாம் எடுக்கப் பக்குவப்பட வேண்டும்.

அந்த விண்ணின் ஆற்றலை நம் உடல் உறுப்பான எலும்புகளில் சேர்த்து அவ்வலைத் தொடரான குண ஈர்ப்பு வார்ப்பு அணுக்களை இவ்வெலும்புக்குள் ஒளியான அணுக்களாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒளியான அணுக்களை வளர்க்க வளர்க்க…
1.இச்சரீரக் கூட்டையே பூமியின் பாதிப்பு நிலை ஏற்பட்டாலும்
2.விண்ணின் ஆற்றலை நாம் எடுக்கும் சுவாச அலையின் சுவாச அலை வளர்ப்பினால்
3.இவ்வுடல் வாழ்க்கை இந்தப் பூமியில் வாழ்ந்தாலும்
4.நம் எண்ணத்தில் எடுத்த சுவாசத்தால் தன் ஆத்ம வலு கூடி
5.சூரியக் குடும்பத்திற்குச் சொந்தப்பட்டதாகச் செயல்படத்தக்க பக்குவ ஆத்மாவாகின்றது.

இங்கே பாடத்தில் உணர்த்துவதும்… போதனை தருவதும்… சாதாரண நிலையிலும் விளையாட்டுப் போன்ற உணர்விலும் இருக்கலாம்.

ஆனால் நடக்கப் போகும் காலத்தில்…
1.இனி நிகழ்பவை எல்லாமே ஞானத்தைச் செயலாக்கும் மனிதனின் சித்தமெல்லாம் கலங்கி
2.சிதறும் அழிவு நிலையில் தான் ஓடிக் கொண்டுள்ளது.

மனிதன் தன்னைத் தான் உணர்ந்து.. ஆத்ம வலுவை உயர் ஞான ரிஷிகளின் அலையுடன் தொடர்பு படுத்தினால் அன்றி… இந்தப் பூமிப் பிடிப்பு சாதாரண வாழ்க்கை நிலையில்.. “தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் நிலைதான் ஏற்படும்…!”

1.ஆத்மாவின் உண்மை அறிந்து
2.ஆத்மாவைக் காணவும்
3.ஆத்மாவுடன் நாம் பேசவும்
4.ஆத்மாவைக் கொண்டே அகிலத்தையும் அறியும் ஆற்றலையும் நாம் பெறும் பக்குவத்திற்கு
5.இச்சரீர எண்ணத்தின் சுவாசத்தை இது நாள் வரை சொன்ன முறைக்கொப்ப தியானத்தால் வலுக்கூட்டுங்கள்.

சநதிர மண்டலத்தின் ஒளி பிரகாசமாக ஒளிராமல் இருப்பதற்கு அதன் ஈர்ப்பில் பூமியை ஒத்த கனம் பொருந்திய இரும்புத் தாதுப் பொருள் குறைவாக உள்ளது தான் காரணம்.

சந்திர மண்டலத்தைச் சுற்றியுள்ள காற்று மண்டலமே மண்ணும் நீரும் கலந்த கனத்த காற்றாக அங்கு வீசிக் கொண்டிருப்பதனால் அதன் ஒளி வீச்சு குறைவாக உள்ளது.

அதைப் போன்று ஒவ்வொரு மண்டலத்திற்குமே தனித் தனி மாறு கொண்ட ஈர்ப்பு நிலை உள்ளது. சூரியக் குடும்ப மண்டலங்களிலேயே ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நிலை. ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட வளர்ப்பிலேயே “பல மாற்றங்கள் உண்டு…”

அதைப் போன்று மனிதனின் எண்ண குணத்திலும் மற்றெல்லா வளர்ப்புத் தன்மையிலும் மாற்றங்கள் உண்டு…!

ஒலி கொண்டு ஒளியான உயிரணு அமிலக்கூட்டு நிலைக்கொப்ப வளரப்பெற்ற வளர்ப்பில்…
1.ஞான வளர்ச்சி கொண்ட மனிதக் கரு வார்ப்பு மனிதன்
2.ஒருவரைப் போன்று ஒருவருக்கு ஞான வழிச் சித்து அமையும் என்று எண்ணாமல்
3.மேல் நோக்கிய சுவாச ஈர்ப்பு வலுவினால்
4.தன் ஆத்ம வலுவை தன் அமிலக் கூட்டின் நிலைக்கொப்ப உயர்வாக்கிக் காணுங்கள்.

வரப் போகும் மாற்றத்திலிருந்து உங்களால் விடுபட முடியும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

(1).வேதனையான உணர்வுடன் கடைக்குச் சென்றால் நல்ல பொருளை நிச்சயம் வாங்க முடியாது

உதாரணமாக துணிக்கடைக்குச் சென்று துணி எடுக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள். உங்கள் பையன் வந்து “நானும் அங்கே வருவேன்…” என்று அடம் பிடித்தால் அப்பொழுது சங்கடமாகும்.

அப்பொழுது என்ன எண்ணுவீர்கள்…?

பார்…, இந்தப் பையன் இப்படியே பண்ணிக் கொண்டிருக்கின்றான் எங்கேயும் போகவும் முடியவில்லை… வரவும் முடியவில்லை…! என்ற வேதனைப்படுவீர்கள்.

கடைசியில் அந்த வேதனையுடன் தான் கடைக்குச் செல்வீர்கள்.

அந்த வேதனைப்படும் உணர்ச்சியுடன் ஜவுளிக் கடைக்குச் சென்று நீங்கள் நல்ல துணி மட்டும் தேர்ந்தெடுத்துக் கொண்டு வாருங்கள் பார்ப்போம்.

யாம் உங்களிடம் பந்தயமிடுகின்றோம்… உங்களால் முடியாது.

வேதனைப்பட்டதற்குத் தகுந்த மாதிரித் துணியைத்தான் தேர்ந்தெடுப்பீர்கள். கடையில் உள்ளவர்கள் நல்ல துணிகளாக எடுத்துப் போட்டால்… “வேண்டாம்… இது வேண்டாம்…! இது வேண்டாம்…!” என்று ஒதுக்கித் தள்ளிக் கொண்டேயிருப்பீர்கள்.

எந்த அளவிற்கு வேதனைப்பட்டு வந்தீர்களோ அது இயக்கும். ஒவ்வொரு குணத்திற்கும் ஒரு நிறம் உண்டு. அந்த வேதனைப்பட்ட குணத்திற்குண்டான நிறம் தான் உங்களுக்குப் பிடிக்கும்.

கரு நீலமான நிறம் என்றால் ரொம்பவும் பிடிக்கும். அது விஷம். இந்த நிறம் கொண்ட துணியை எடுத்து வந்துவிடுவீர்கள். நீங்கள் “உங்கள் மனதுக்குப் பிடித்தது…” என்று எண்ணி எடுத்து வீட்டுக்கு வந்தபின் அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள்?

“இது என்ன…! இந்தத் துணியைப் போய் எடுத்துக் கொண்டு வந்திருக்கின்றீர்கள்…?” என்பார்கள்.

ஏன்…? “இந்தத் துணிக்கு…, என்ன வந்துவிட்டது…!” என்று சொல்லிக் கொண்டு சண்டைக்குப் போவோம்.

மறு நாள் எல்லாம் சாந்தமான பிற்பாடு எடுத்து வந்த துணியைப் பார்த்தால் என்ன நினைப்போம்…?

நேற்றுப் போகும் பொழுதே சனியன் மாதிரி வந்து என்னை இப்படித் தொல்லை பண்ணிக் கொண்டிருந்தான் என்று சொல்லிவிட்டு “எல்லாம் என் நேரம்…” என்று வேதனைப்படுவோம்.

கடைக்காரனிடம் திருப்பிக் கொடுத்தால்… “வாங்குவானோ இல்லையோ… தெரியவில்லை…!” என்போம். அப்பொழுது தான் கண்ணுக்கே “நல்லதா கெட்டதா” என்று தெரிய வரும்.

(2).நம் குணத்திற்குத் தக்கதான் ருசியும் நம் சொல்லும் வரும்

நீங்கள் கோபமாக இருக்கும் பொழுது பாருங்கள். கொஞ்சம் காரமானதைக் கொடுத்துச் சாப்பிட்டவுடனே “ஸ்ஸ்… ஆகா…” என்று கொஞ்சம் உற்சாகமாகச் சாப்பிடுவீர்கள்.

ஆனால் அதே கோபமான நேரத்தின் ஒரு இனிப்பானதைச் சாப்பிடச் சொல்லிப் பாருங்கள்.

“தூ…” என்று துப்புவீர்கள். அந்த இடத்தில் உமட்டலாக வரும். எதிர்த்து வரும். வாந்தி வருகிற மாதிரித் தெரியும்.

மகிழ்ச்சியாக (இனிப்பாக) இருப்பவர்களுக்கு இந்தக் காரத்தைக் கொடுத்தோம் என்றால் “அப்பப்பா…யப்பப்பா…” என்று சப்தம் போட ஆரம்பிப்பார்கள்.

1.நம் உடலில் இருக்கக்கூடிய குணத்திற்குத் தகுந்த மாதிரித்தான் “ருசியும்” வருகின்றது.
2.நம் குணத்திற்குத் தக்கவாறு தான் “நம் சொல்லும்” வருகின்றது.

நம் சொல் அடுத்தவர்கள் காதில் பட்டவுடனே அதே திருப்பி அந்தப் பதில் திரும்ப வரும். ஆனால் நாம் தவறு செய்யவில்லை. நம் ஆன்மாவில் பட்டது இந்த மாதிரி இயக்குகின்றது.

பையன் மீது பிரியமாகத் தான் இருந்தோம். ஆனால் நம் மீது பட்ட அழுக்கைத் துடைக்கத் தெரியவில்லை.

தினசரி உடலில் உள்ள அழுக்கைப் போக்கக் குளிக்கின்றோம். துணியில் உள்ள அழுக்கைப் போக்கத் துவைத்துக் கொள்கிறோம்.
1.நம் எண்ணத்தால் பட்ட அழுக்கு நமக்குள் போனதே.
2.அந்த அழுக்கைத் துடைக்கின்றோமா…?

யாரும் காண்பிக்கவில்லை. நாம் துடைக்கவில்லை. துடைக்கத் தெரியவில்லை.

எனக்கு வந்த தீமைகள் மற்றவர்களுக்கு வரக்கூடாது… உலக மக்கள் காக்கப்பட வேண்டும் என்ற இந்த எண்ணத்தைப் பரப்புங்கள்

 

எந்தச் செல்வமும் நம்மைக் காப்பது இல்லை. எந்த உயர்ந்த குணமும் நம்மைக் காப்பதில்லை.
1.அருள் மகரிஷியின் அருள் சக்தியின் துணை கொண்டு தான்
2.அந்த உயர்ந்த குணங்களை நாம் காத்திடல் வேண்டும்.
3.உலகைக் காத்திடும் உணர்வு வரவேண்டும்
4.உலகைக் காத்திடும் உணர்வுகள் நம்மில் விளைய வேண்டும்.

நாம் வெளியிட்ட உணர்வுகள் இந்தக் காற்றிலே பரவ வேண்டும். இதனின் துணை கொண்டு வந்தால் தான் இந்தப் பூமியும் சுகம் பெறும்… நம் உடலும் சுகம் பெறும்… நம் உணர்வும் சுகம் பெறும்…!

ஆகவே மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாம் இதைப் பெறுவோம் என்று உறுதி கொள்ளுங்கள்.

உலகில் நடக்கும் அசம்பாவிதங்கள் இன்று எத்தனையோ… சொல்ல முடியாது. பத்திரிக்கையை வாங்கிப் படித்தால் அல்லது டி.வி.யைப் பார்த்தால் உலகில் நடக்கும் அந்தத் தீமைகள் எதுவோ அதைக் கண்ணுற்று பார்க்க நேர்கிறது.

அந்த உணர்வின் தன்மைகளை எல்லாம் நமக்குள் பதிவு செய்து “அந்த நினைவினைக் கொண்டே தான்” உலகில் இன்று நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம்.

ஒரு சம்பவம் நடக்கிறது என்றால் அடுத்த சில நொடிகளுக்குள் அது உலகம் முழுவதும் பரவும் அளவிற்கு விஞ்ஞான அறிவு வந்துவிட்டது.
1.இங்கே நடக்கும் செயல்களை அங்கே பார்க்கின்றோம்…
2.அங்கே நடக்கும் செயல்களை இங்கே பார்க்கின்றோம்.

நாம் பார்த்து… கேட்டு… உணர்ந்து வெளிப்படும் இதைப் போன்ற உணர்வலைகளைச் சூரியன் காந்த சக்தி கவர்ந்து உலகெங்கிலும் தீமையை விளைவிக்கும் உணர்வுகளாகப் பரவச் செய்து கொண்டிருக்கின்றது.

இத்தகைய வேளையில் யாம் உபதேசமாகக் கொடுக்கும் இந்த உணர்வின் துணை கொண்டு பத்திரிகையையோ டிவியையோ பார்த்தாலும்
1.அதற்கு பின் ஒரு நிமிடமாவது ஒதுக்கி
2.அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வினை எடுத்து
3.உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்… உடனே தூய்மைப்படுத்துங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி உலகம் முழுவதும் படர வேண்டும் என்ற ஏக்கத்தின் உணர்வலைகளைப் படரச் செய்யுங்கள்.

நாளை நடப்பது அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரது உணர்வுகளிலும் ஊடுருவ வேண்டும். தீமைகள் மறைந்து விட வேண்டும்.

மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் உலகம் எங்கும் பரவ வேண்டும். உலக மக்களைக் காத்திட வேண்டும் என்ற இந்த உணர்வுகளை அனைவரும் ஒருங்கிணைந்து பரப்புங்கள்.

1.நாம் விடும் மூச்சலைகள் வீண் அல்ல
2.நாம் எண்ணிய உணர்வுகள் நமக்குள்ளும் தீமையை நீக்கிடும் உணர்வாக விளைகின்றது
3.மற்றவரின் தீமையைப் போக்கும் சக்தியாகவும் வளர்கிறது.

ஆகவே உங்கள் வாழ்க்கையில் எத்தகைய தீமையைக் கேட்டுணர்ந்தாலும் இப்போது கொடுக்கும் அருள் சக்தியின் துணை கொண்டு அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று பல முறை சொல்லுங்கள்.

வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரை வரும் சிக்கல்கள் எதுவாக இருந்தாலும்… துயர்பட்ட நிலைகள் இருந்தாலும்… வேதனைகள் எது இருந்தாலும் அதை எல்லாம் கொடுக்கும் சக்தியை வைத்து மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.

இதற்கு முன் அறியாது சேர்ந்த நம் உடலில் பல நோய்கள் இருக்கும். பல இன்னல்கள் இருக்கும். அந்த நோய்கள் இருப்பினும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அது என் உடல் முழுவதும் படரவேண்டும் என் உடலில் அறியாது சேர்ந்த தீய வினைகள் நீங்க வேண்டும். தீய வினையால் வந்த நோய்கள் நீங்க வேண்டும் என்று இதை எண்ணிச் செய்யுங்கள்.

நோய்களை மறக்க இதைச் செய்யுங்கள் அந்த மகரிஷிகள் சக்தியைப் பற்றுடன் பற்றுங்கள்.

1.எனக்கு வந்த தீமைகள் மற்றவர்களுக்கு வரக்கூடாது…
2.உலக மக்களைக் காத்திட வேண்டும் என்ற இந்த எண்ணத்தைப் பரப்புங்கள்.

ஒவ்வொருவரும் இதைச் செய்வோம் என்றால் இந்த உலகில் உள்ள தீமைகள் மாறும். தீமையை அகற்றும் உணர்வுகள் நமக்குள் விளைய விளைய… கல்கி என்ற பத்தாவது நிலையான ஒளி நிலை அடைகின்றோம்.

ஒளியாக விளைந்த உணர்வின் தன்மை கொண்டு இந்த உடலை விட்டு நாம் அகன்றால் தீமையற்ற உலகில் நாம் வாழ்ந்திட முடியும். இங்கேயும் வாழ்ந்திட முடியும். தீமைகள் நாடாத நிலைகள் கொண்டு நிச்சயம் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.

மனிதனை மனிதனே இனம் காண முடியாத நிலை தான் இனி வரப் போகும் கால நிலை (கலி முடிவு) – ஈஸ்வரபட்டர்

 

1.ஆத்மாவாகித்தான் சரீர பிம்பத்தையே பெறுகின்றோம்
2.சரீர பிம்பத்தின் சமைப்பைக் கொண்டுதான் ஆத்மாவின் வலுவைக் கூட்ட முடிகின்றது.

சரீர எண்ண இயக்கத்தின் பிடிப்பு வாழ்க்கை அலையிலேயே நம் எண்ணங்கள் சென்று கொண்டிருந்தால் அதே அமிலச் சத்தின் குண வலுவை ஆத்மா பெற்றுப் பெற்று… அதன் தொடரிலேயே தான் செல்லும்.

அத்தகைய சரீர இயக்க ஈர்ப்பலையின் பிடியிலிருந்து…
1.எண்ணத்தின் உணர்வை உயர் ஞான ஜெப முறையினால்
2.மேல் நோக்கிய சுவாசம் கொண்டு விண்ணிலிருந்து வரும் ஆற்றல்களின் வலுவை
3.உடலில் உள்ள எலும்புகளில் அந்த வலுத்தன்மையைக் கூட்டிக் கொண்டால்
4.அந்த வலுவின் அமிலத்தால் ஆத்ம வலுவும் உன்னத வலுத் தன்மை பெற்று விடும்.

இப்படி… சரீர இயக்க எண்ண உணர்வையே இவ்வுயர் ஞான ஈர்ப்பலை வலு ஆத்மா பெற்றால் ஆத்மாவானது தனித்து எங்கும் சென்று செயலாற்றக்கூடிய வலு பெறும்.

1.இவ்வுடலின் இயக்கத்தால் ஏற்படும் காந்த ஈர்ப்புத் தொடர் அலையால் எங்கும் ஆத்மாவைச் செலுத்தி
2.பால்வெளி மண்டல எந்நிலையிலும் ஆத்மாவைச் செலுத்தி
3.உடல் ஈர்ப்பின் தொடரிலேயே எதனையும் அறிய முடியும்.

ஆகவே இச்சரீர எலும்புக்கூட்டினை வலுவாக்கி அதன் காந்த மின் அலையின் ஈர்ப்பை வலுக் கொண்டதாகச் செயல்படுத்தி இவ்வாத்மாவை இவ்ஈர்ப்புப் பிடியிலிருந்தே தனித்து அனுப்பி… உடல் தொடர்புடனே உணரும் பக்குவம் அடைய வேண்டும்.

உடலைச் சுற்றித் தான் இவ்வாத்மா உள்ளது…!
1.ஆத்மாவின் அலை மோதலில் உடல் உருவாகிச் செயல் கொண்ட நிலையை
2.உடலின் இயக்கம் கொண்டே இவ்வாத்ம வலுவால் நாம் பெறும் உயர் ஞானச் சித்து செயலினால்
3.”சகல சித்துத் தன்மையுமே” நாம் பெற முடியும்.

ஒரு காந்தமானது எப்படி இரும்பைத் தன் வசத்திற்கு இழுத்துக் கொள்கின்றதோ அதைப் போன்று உயர் ஞான வசத்தில் (ஈர்ப்பில்) எண்ணத்தின் ஈர்ப்புச் செயல் இருக்குமேயானால் “மனிதனின் உயர் குணத்தை மனிதனே அறிய முடியும்…!”

ஆனால் பல காலமாகச் சேமித்த ஆத்ம வலுவினை… இன்றைய செயற்கை முறை வாழ்க்கைக்காக… உன்னத நிலை பெறும் ஞான வழித் தொடர் அறியும் “உயர் தியான முறையை…” வாழ்க்கையின் செயலுடன் ஒன்றச் செய்து விட்டால் அதன் விளைவு எப்படி இருக்கும்…?

1.மாறு கொள்ளப் போகும் மண்டல ஈர்ப்புச் சுழற்சி ஓட்ட கதியில்
2.மண்டலச் சேர்க்கையின் காலங்கள் (கல்கியுகம்) உருவாகும் தருணத்தில்
3.ஞானத்தின் ஈர்ப்பை எடுக்கவல்ல காற்றலையின் தொடர் நிலையே
4.மண்டல ஓட்டச் சேர்க்கைக் காலத்தால் பாதிப்பு ஏற்பட்டு
5.மனிதனின் எண்ண உணர்வே சித்தம் கொண்ட பிரமை கொண்ட நிலையில்
6.மனிதனை மனிதனே இனம் காண முடியாத நிலை தான் இனி வரப் போகும் கால நிலை (கலி முடிவு).

இதிலிருந்தெல்லாம் தப்பி… தன் ஞான சக்தியை உயர்த்தி… தன் ஆத்ம வலுவையே… தான் உணரும் பக்குவத்தின் உண்மைச் செயலாகச் செயல்படுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

(1).தெய்வத்தை எங்கே போய்த் தேடுகின்றோம்…?

சாமியாரைப் போல உள்ளவர்களைத் தேடிச் செல்கின்றோம். ஏனென்றால் அவர்களிடம் தெய்வம் அடிமையாக இருக்கிறது என்று செல்கிறோம்.

அவர்களிடம் சென்றால் நமக்கும் “ஏதாவது கிடைக்கும்…!” என்று செல்கிறோம். ஆனால் அந்தத் தெய்வம் எங்கே இருக்கின்றது…?

நீங்கள் தேடும் அந்தத் தெய்வம் உங்கள் எண்ணத்தில் தான் இருக்கின்றது. உயர்ந்த எண்ணங்களை எடுத்து நமக்குள் சேர்த்தோம் என்றால் நம் உயிர் என்ன செய்கிறது…?
1.“ஓ…” என்று இயக்கச் செய்கிறது.
2.“ம்…” என்று நம் உடலாக்குகிறது.
3.“ஓம் நமச்சிவாய” என்று சிவமாக நம் உடலாகின்றது.
4.அப்பொழுது நம் உடலைச் சிவமாக வணங்க வேண்டும்.

ரோஜாப்பூவின் மணத்தைக் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்வது மாதிரித்தான்
1.இந்த உடலான சிவத்திற்கு…
2.உயிரான ஈசனுக்குச் செய்ய வேண்டும்.

மலரைப் போல் மணம் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உள்ளுக்குள் எண்ணினோம் என்றால் இந்த வாசனை நம் உடல் முழுவதும் பரவி “ம்…” என்று உடலான சிவனுக்கு அமுதாகச் சேர்கின்றது. “அழகான உடலாக்குகின்றது”.

கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டினால் “உடலுக்குள் சந்தோஷம் வரும்.”

அப்பொழுது உங்கள் உடலிலிருந்து வரக்கூடிய வாசனை இனிமையானதாக இருக்கும். நம் சொல் யாரிடம் சொன்னாலும் அந்தக் கனிவாகச் சொல்லச் சொல்லும்.

அப்பொழுது அவர்கள் உங்கள் சொல்லைக் கேட்டாலே மகிழ்ச்சி அடைவார்கள்.

(2).குடும்பத்தில் வரும் வேதனைகளை அதிகமாக எண்ணினால் அதனின் விளைவுகள் எப்படி எல்லாம் இருக்கும்…?

ஒரு வேதனையான உணர்வை எடுக்கின்றீர்கள் என்றால் உங்கள் உயிருக்குள் பட்டவுடனே அந்த வேதனையை உங்களுக்குள் உருவாக்குகின்றது.

எப்புறம் என்ன சொல்வீர்கள்…?

இராத்திரிக்கெல்லாம்…, என் மேல் வலிக்கின்றது என் இடுப்பு வலிக்கின்றது. என் பையன் சொன்னபடி கேட்கவில்லை. வியாபாரம் சரியில்லை. கொடுத்த பணமெல்லாம் திரும்ப வரவில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை…!

ஆண்டவன் இன்னும்… என்னைச் சோதித்துக் கொண்டே இருக்கின்றான்… என்று சொல்லி வேதனையைத்தான் அதிகமாக எடுக்கின்றோமே தவிர நல்லதை எண்ணுவதில்லை.

1.நமக்கு ஆண்டவன் தான் எல்லாம் செய்து கொடுக்கின்றான் என்று நினைக்கின்றோமே தவிர
2.நம் உயிர் நாம் கொடுப்பதைப் (எண்ணிச் சுவாசிப்பதை) படைக்கின்றான் என்று
3.நாம் மறந்தே போய்விட்டோம்…, மறக்க வைத்துவிட்டார்கள்.

ஆகவே அந்த வேதனைப்படும் உணர்வை எடுத்தவுடன் வேதனையான சொல்களையே நாம் சொல்வோம். அதைக் கேட்பவர்கள் கொஞ்ச நேரம் நம் வேதனைகளைக் கேட்பார்கள்.

அப்புறம் என்ன ஆகும்…?

இவன் எப்பொழுது பார்த்தாலும் வேதனை வேதனை என்று சொல்லிக் கொண்டேயிருக்கின்றான். நம்மைக் கண்டாலே அவர்கள் வெறுத்துப் போக ஆரம்பிப்பார்கள்.

இந்த வெறுப்பான உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறினால் கடையிலிருந்து சரக்கை எடுத்துக் கொடுக்கும்போது என்ன ஆகும்…?

என்ன சரக்கு வேண்டும்…? “உம்ம்ம்ம்…” என்று சொல்லிச் சங்கட சலிப்பு வெறுப்போடு தான் சரக்கை எடுத்துக் கொடுப்போம்.

ஒரு நாள் பூராம் இப்படிச் சொல்லிக் கொடுத்தால் “இவன் எப்பொழுது பார்த்தாலும் இப்படிச் சலித்துக் கொள்கிறான்” என்று சொல்லிவிட்டு யாரும் வரவில்லை என்றால் அப்புறம் “கடையில் வியாபாரமே ஆகவில்லை…” என்போம்.

வியாபாரம் நல்லாக வேண்டும் என்ற நோக்குடன் கடன் வாங்கியாவது கடையில் நல்ல சரக்காக வாங்கி வைத்திருப்போம்.

இந்தச் சலிப்பான உணர்வுடன் பேசியவுடன் மற்றவர்கள் காதில் பட்டு இந்தச் சலிப்பான உணர்ச்சிகள் மாறி நாம் அடுத்து அவர்களைப் பார்த்தோம் என்றால் கண்களிலிருந்தும் வேதனையான உணர்வுகள் தான் வெளி வரும்.

வேதனை உணர்வுடன் சரக்கைப் பார்த்தால் நல்ல சரக்குகளைத் தேர்ந்தெடுக்க முடியாது.

துருவப்பகுதி கரைந்து கடல்கள் பெருகிக் கொண்டுள்ளது… கடலுக்குள் ஆழ்த்தப் போகின்றான் விஞ்ஞானி

 

மீண்டும் மீண்டும் தீமையின் உணர்வின் எல்லைக்கே சென்று இன்று உலகம் முழுமைக்கும் அசுர உணர்வுகள் பெருகும் நிலை வந்துவிட்டது.

இந்தக் காற்று மண்டலத்தில் விஷத்தின் தன்மை அதிகமாகப் பரவி மனிதனின் சிந்தனை இழக்கப்பட்டு, மனிதனுக்கு மனிதனே இரக்கமற்றுக் கொல்லும் உணர்ச்சிகள் அதிகமாகி விட்டது. மனிதனைக் காக்கும் உணர்ச்சிகள் எங்கும் இல்லை.

மனிதனுக்குள் அரக்க உணர்வு கொண்டு உடலுக்குள் உள்ள நல்ல பண்புகளை இழக்கச் செய்து எடுத்துக் கொண்ட அசுர உணர்வுகள்தான் நம்மை ஆளுகின்றதே தவிர நமது நல்ல உணர்வு கொண்டு ஆட்சி புரியும் செயலை இழந்திருக்கின்றோம்.

உலக நிலையில் இன்று பார்த்தால் தீவிரவாதம் என்று மதம் இனம் மொழி என்ற நிலையில்தான் அரக்க உணர்வுகளின் செயல்கள் உண்டாகி இன்று மனிதனை மனிதனே ஒரு நொடிக்குள் கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றான்.

ஒரு குண்டு வெடித்தால் 1000 கிலோமீட்டர் வரையிலும் அந்த மனிதர்கள் மடிவார்கள். இப்படிப் பல குண்டுகளை வெடித்தால் வெடித்த ஆவியின் தன்மை வெளியிலே படரும்.

அந்த ஆவித்தன்மை படர்ந்து சூரியனின் ஒளிக்கதிர்கள் எங்கே அதிகமாகத் தாக்குகின்றதோ அங்கே குளிர் பிரதேசமாக மாறும்.
1.ஒரு பக்கம் அந்த நீரின் தன்மை குளிர் பிரதேசமாகி எடை கூடப் போகின்றது
2.கடல் மாறப் போகின்றது.

இதைப் போன்ற நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நிமிடமும் நாளுக்கு நாள் இப்பொழுது மாறிக் கொண்டுதான் வருகின்றது.

ஓசோன் திரை கிழிந்ததனால் அதனின் வலு குறைந்ததால் துருவப் பகுதியில் விஷத்தின் அழுத்தம் வெப்பத்தின் தணல் அதிகமாக்கப்பட்டும் விட்டது.

அணு விஷக் கதிர்கள் (கதிரியக்கங்கள்) எவ்வளவு துரிதமாக ஒரு இயந்திரத்தை இயக்குகின்றதோ… அணுகுண்டை வெடிக்கச் செய்த உணர்வுகள் துருவப் பாதையில் அங்கே வந்தவுடனே வான்வீதியில் பறந்து செல்கிறது.

அப்பொழுது…
1.விஷக் கதிரியக்கங்கள் துருவத்தின் வழி கவரப்பட்டு
2.நமது துருவ எல்லையில் உள்ள பனிப் பாறைகளைக் கரைத்து
3.கடல்களும் பெருகிக் கொண்டே வருகின்றது (உபதேசித்த வருடம் 2001).

தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று சொல்லும் முதலிலே தோன்றிய அகஸ்தியன் இந்தப் பூமியை நல் வழியில் திசையில் சீராகத் திரும்பும்படி அவனுடைய சக்தியின் திறமை கொண்டு செய்தான்.

இன்று அதே போலத்தான் விஞ்ஞான உலகின் தன்மை வரப்படும்போது அணுக் கதிரியக்கங்களைச் செயல்படுத்தும்போது ஒரு பக்கமிருந்து சீராக்குவதற்குப் பதில் நம்மையெல்லாம் கடலுக்குள் ஆழ்த்தப் போகின்றான் விஞ்ஞானி.

குண்டை ஒரு பக்கம் வெடித்தால் இதற்குள் சென்று விஷத்தை நுகர்ந்த உயிரணு (நம் உயிர்) விஷத்தின் உணர்வின் அணுக்களை உருவாக்கும். இறந்தபின் விஷப் பூச்சிகளாகத் தான் நாம் பிறக்க வேண்டுமே தவிர மனிதனாகப் பிறக்கும் நிலை இல்லை.

மனிதன் என்ற நிலையில் ஒன்று இரண்டு தப்பினாலும் அவனும் வாழும் சந்தர்ப்பம் இழந்திருக்கின்றான்.

ஆகவே இதிலிருந்து நாம் தப்ப வேண்டும் என்றால்…
1.ஒவ்வொரு நொடிப்பொழுதும் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து
2.இருள் சூழாத நிலைகள் கொண்டு நம்மைக் காத்துக் கொள்வதற்கு நாம் செயல்பட வேண்டும்.

ஐந்துமுகச் செயலின் வலுவால் ஆத்ம சக்தியைக் கூட்ட முடியும் – ஈஸ்வரபட்டர்

 

ஜீவராசிகளின் எண்ண ஈர்ப்பின் சமைப்பு நிலையில் ஏற்படும் ஆவியான உஷ்ண அலைகள் வளர்வதினால் தான் இவ்வெண்ணத்தின் ஓட்ட அடக்க நிலையின் உறக்க நிலையால் சரீர பிம்பம் சாந்தம் கொண்டு மீண்டும் விழிப்பிற்கு வந்து செயல் கொள்கிறது.

இவ்வெண்ணச் ஓட்டச் செயல் ஒவ்வொரு ஜீவராசிக்கும் உறக்க விகிதம் மாறுபட்டு இருந்தாலும் உறங்கா நிலையின்றி ஜீவராசிகளால் இருக்க முடியாது. வலு நிலை கூடிய ஆத்மாவிற்கு உறக்க நிலையும் வேண்டியுள்ளது.

1.”ஐம்புலனை அடக்கி…!” நாம் பெறும் தியானம் என்பது
2.ஞானத்தின் வளர் கூட்டை வளர்க்கும் தன்மையற்று உறக்க நிலையும்
3.சமாதி நிலை பூண்டு புலன் அடங்கிய தன்மையில்
4.இச்சரீர பிம்பத்தின் எண்ணத்தின் உணர்வின் செலுத்தும் ஞானத்தின் வலுவை
5.இவ்வாத்மா வலுவாக்கிக் கொள்ள முடியாது.

உறக்க நிலையினால் சரீர சமைப்புச் செயல் அங்கங்கள் ஓய்வு பெறும் நிலை தான் ஏற்படுகிறது.

ஒலி ஈர்த்து… ஒளி கண்டு… உணர்வின் எண்ணம் எடுக்கும்… சுவாச அலையின்
1.ஒளி
2.ஒலி
3.உணர்வு
4.எண்ணம்
5.சுவாசம் என்ற
6.இந்திரிய ஐந்துமுகச் செயல் வடிவில் தான் சரீர பிம்ப இயக்கமும்
7.இயக்கத்தால் வலுக் கொள்ளும் ஆத்ம வலுவும் வலுவாகிறது.
8.எண்ணத்தின் சுவாசத் தொடர் இருந்தால் தான் இவ்வாத்மாவின் வலுவை வளர்க்க முடியும்.

எண்ணத்தின் உணர்வை
1.இனிமை கொண்ட இனிய செயலில் இனியன வளர்க்க
2.இனிது வாழும் வாழ்க்கையில்
3.இல்லறச் சுவையில் இனிய சொல்லை உரமாக இட்டு
4.இனிய மணமாக இவ்வாத்மா வலுப் பெறும் வளர்ப்பிற்காக
5.எண்ணத்தின் உணர்வைப் பிற ஈர்ப்பின் மோதலை ஏற்கக்கூடிய ஈர்ப்புப்பிடியில் சிக்க விடக்கூடாது.

இனிய குண வழித் தொடர் வார்ப்பாத்மாவாக இவ்வாத்மாவை… இனிமை கொள்ளும் ஞானத்தால்… உயர் ஞானத் தொடர்பு கொண்ட ஆத்மத் தொடரில் அறியும் உண்மைகளை…
1.சஞ்சல சபல பேராசை என்ற ஈர்ப்புப் பிடிக்குச் செயல்படுத்தாமல்
2.உண்மையான இறை நிலையை வளர்க்க
3.இனிய குண வார்ப்பாத்மாவின் தொடர் செயல் கொள்ளுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒரு கருவுற்ற தாயைத் தேள் கொட்டிவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். மருந்து போட்டுத் தாய் தப்பித்துக் கொள்கின்றது. ஆனால் கருவில் வளர்ந்த அந்தக் குழந்தை பிறந்த பின்பு
1.தேள் அவனைக் கொட்டினால்
2.தேளின் விஷம் அவனை ஒன்றும் செய்யாது.

இதே மாதிரிக் கருவிலே இருக்கும் போது ஒரு தேனீ கொட்டினால் இந்தக் குழந்தை தேனீயைப் பிடித்தானென்றால் அவனைக் கொட்டாது. இதைப் போல
1.கருவுக்குள் (சிசு) உணரும் உணர்வுகள் அதன் வழி கொண்டு
2.இங்கே சந்தர்ப்பத்தால் இத்தகைய தன்மை பெறுகின்றது.

இப்போது இங்கே மெய் ஞானிகளைப் பற்றிப் பேசுகின்றோம். ஒரு கருவுற்ற தாய் இதைக் காதில் கேட்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

இந்த ஞானத்தைப் பேசும் போது
1.அது தாயின் உணர்வுக்குள் பதிவாகின்றது.
2.ஞானிகளின் உணர்வுகளை நுகர்கின்றது.
3.கருவுக்குள் இருக்கும் சிசுவும் ஞானிகளின் உணர்வைப் பெறுகின்றது.
4.அந்த உணர்வின் தன்மை வளர்ச்சி அடைகின்றது.

எதனின் தன்மை அங்கு உருவாகின்றதோ அந்தக் குழந்தை பிறந்தபின் இந்தத் தத்துவத்தைப் பெறும் சக்தி பெறுகின்றது.

ஆகவே கருவுற்ற தாய்மார்கள் தீமைகளை அகற்றிவிட்டு உண்மையின் உணர்வைப் பேசும் அருள் ஞானிகளின் உணர்வை நுகரப் பழகிக் கொள்ளுங்கள்.

கருவுற்ற காலங்களில் அருள் உணர்வுகளை நுகர்தறிந்தால் அந்த உணர்வின் கருவே சிசுக்களுக்குத் தீமையை அகற்றும் வல்லமை கிடைக்கின்றது.

அந்தக் குழந்தை பிறந்தபின் உங்கள் துன்பத்தைப் போக்கும். நீங்கள் பேரின்பத்தைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.

பல இன்னல்கள் பட்ட குடும்பங்களில் பார்தோம் என்றால் அந்தக் குடும்பங்களில் ரொம்பத் தரித்திரத்திலும் சிரமத்திலும் இருப்பார்கள்.

பல நோய்வாய்ப்பட்டுப் பல இன்னல்கள் கொண்டு பல தரித்திரத்தில் வாழப்படும் போது இதையெல்லாம் மறந்துவிட்டு கருவுற்ற தாய்
1.தான் “என்றைக்கு நல்லதைப் பெறப் போகிறோம்… என்று ஏங்கித் தவிக்கின்றதோ”
2.அந்தச் சிரமமான காலங்களில் தாய் தான் எப்படியும் மீளவேண்டும் என்ற உணர்வினை அது சிந்தித்து
3.ஞானிகளையோ தன்னைக் காக்கும் உணர்வு கொண்ட ஞானத்தின் உணர்வுகளை நுகர்ந்தது என்றால்
4.அந்தக் கருவில் வளரும் குழந்தைக்கும் அந்த நிலைகள் பெற்று
5.அது பிறந்தபின் பெரிய தத்துவ ஞானியாக உலகம் போற்றும் நிலைக்கு வருகின்றான்.

அவனுடைய சந்தர்ப்பம் தரித்திரத்தில் வாழ்ந்தாலும் தாய் பல சிரமங்களிலிருந்து மீளவேண்டும் என்ற உணர்வை அது நுகர்ந்ததால் அந்தக் குழந்தை அத்தகைய நிலை பெறுகின்றது.

சில குடும்பங்களில் படிப்பதற்கே வசதி இல்லை என்றாலும் அவன் ஞானத்தின் நிலை கொண்டு அதீத வளர்ச்சி அடைந்திருப்பதை நாம் பார்க்கலாம். இதைப் போன்ற நிலைகள்
1.”அத்தகைய சந்தர்ப்பங்கள் தான்”
2.அந்த நேரத்தில் நாம் “நுகரும் உணர்வுகள்” தான்
3.நம்மை உருமாற்றுகின்றது வாழ வைக்கின்றது.

ஆனாலும்
1.அருள் மகரிஷியின் உணர்வு கொண்டு
2.நாம் எந்தச் சந்தர்ப்பத்தையும் உருமாற்றக் கூடிய சக்தி பெற்றவர்கள் என்பதை
3.உணர்தல் வேண்டும்.

சந்தர்ப்பத்தால் பகைமை கொண்ட உணர்வுகளையோ நோய்வாய்ப்படும் உணர்வுகளையோ தீமை செய்யும் உணர்வுகளையோ நுகர்ந்து விட்டால் உடனே நாம் என்ன செய்ய வேண்டும்…?

அடுத்த கணமே அருள் ஞானிகளின் உணர்வை நாம் நுகர்ந்து அந்தச் சந்தர்ப்பத்தால் வந்த தீமைகளை அகற்றிடல் வேண்டும். ஏனென்றால் ஆறாவது அறிவு கொண்ட நாம் நல்லதை உருவாக்கும் பண்பு பெற்றவர்கள் என்று உணர்தல் வேண்டும்.
1.நாம் இதைச் செய்யத் தொடங்கினால்
2.நமக்குள் தீமைகள் வராது தடுக்கலாம்.
3.இதைத்தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்பது.

அதே சமயத்தில் உங்களுக்குள் உபதேசத்தின் உணர்வின் நினைவுகள் பதிவானால்தான் அது செயல் முறைக்கு வரும்.

டாக்டருக்குப் பயிற்சிக்குச் செல்பவர்கள் மற்ற கற்றுணர்ந்த டாக்டர்கள் சொல்லும் கருத்துக்களைப் பின்பற்றி அதன் வழி பெற வேண்டும் என்ற அந்த ஞானத்தைச் செலுத்தினால் உயர்ந்த டாக்டர் ஆகின்றார்.

ஆனால் பயிற்சி செய்யும் நேரத்தில் சிந்தனை இழந்திருந்தால் அவர் டாக்டர் ஆவதற்குப் பதில் சோர்வின் தன்மை அடைந்து அவர் வைத்தியம் பார்த்தாலும் அதனால் பிறருக்குத் தீமையே உருவாகும்.

கல்வி கற்கும் நிலையும் இதே போலத்தான். எதைப் பெறவேண்டும் என்று குறிக்கோள் வைத்துச் செலுத்துகின்றோமோ அதன் வழி அங்கே வழி செய்கின்றது.

ஆகவே உங்கள் வாழ்க்கையில் அருள் ஞானத்தின் உணர்வைப் பதிவாக்கப்படும் போது
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்களை வாழவைக்கும்
2.தீமைகளிலிருந்து விடுபடச் செய்யும்
3.பொருளறிந்து செயல்படும் சக்தியும் நீங்கள் பெற முடியும்.
4.பேரின்பத்தை இந்த வாழ்க்கையில் நீங்கள் பெற முடியும்.

தியானம் செய்பவர்கள் மிக முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது

 

மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).

உதாரணமாக இங்கே தியான மண்டபம் இருக்கிறது என்றால் அடிக்கடி இதில் குப்பைகளும் தூசிகளும் வரத்தான் செய்கின்றது அதை உடனுக்குடன் தூய்மைப்படுத்தித் துடைத்தால் தான் மண்டபம் தூய்மையாக இருக்கும்.

அது போன்று நம்முடைய உடலில் ஏற்கனவே பதிவான அழுக்குகள் எத்தனையோ உண்டு.
1.நம் உடலில் உள்ள அணுக்கள் அதனதன் உணவுக்காக ஏங்கும் பொழுது
2.அந்த மணம் குவிந்து அதைச் சுவாசிக்கும் பொழுது அத்தகைய குணங்களே நமக்குள் வரும்.

தியானம் செய்கின்றேன் எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை… என்னால் தியானிக்க முடியவில்லை என்ற நிலையை எண்ணாது
1.எப்படியும் அருள் ஒளியை நான் பெறுவேன்…
2.வலு கொண்டு நான் தியானிப்பேன்…
3.தியானித்து அருள் சக்தியை எனக்குள் சேர்ப்பேன்… என்று
4.வலுக்கட்டாயமாகத் தனக்குள் உள் செலுத்திக் கொண்டே வர வேண்டும்.

எப்படி இந்தத் தியான மண்டபத்தை அடிக்கடி தூய்மைப்படுத்துகின்றோமோ அதைப் போல நாம் திரும்பத் திரும்ப எண்ணி அருள் சக்திகளைச் சேர்த்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

காரணம்… நமது வாழ்க்கையில் அன்பும் பண்பும் பரிவும் கொண்டு தான் வாழுகிறோம். பிறர் வேதனைப்படுவதைப் பார்த்து அவர்களைப் பண்புடன் அணுகிக் கேட்டறியும் போது அவர்படும் வேதனைகளை நாம் நுகர்ந்தறிந்தாலும் நம் உடலில் அவை “அணுக்கருக்களாக…” மாறி விடுகின்றது.

குடும்பத்திற்குத் தேவையான செல்வத்தையும் சொத்தையும் சேர்த்தோமே… நோயினால் உடலை விட்டுப் பிரியப் போகிறோமே… என்ற ஏக்கத்துடன் அவர்கள் கடைசியில் வாழ்ந்தாலும் அவரின் உணர்வைக் கேட்டறிந்த நமக்குள் அந்த அணுவின் தன்மை வளர்ந்திருந்தால் அவர் இறந்தால் அந்த ஆன்மா நம் உடலுக்குள் வந்துவிடும்.

அவர் வேதனைப்பட்ட உணர்வுகள் அனைத்தும் நமக்குள் அணுக்களாகத் தோன்றி மன வேதனையைக் கொடுக்கும் நிலையாக மாறிவிடும்.

அதே சமயத்தில் அந்த ஆன்மா நம் உடலுக்குள் இருந்து மீண்டும் மீண்டும் அதே வேதனையான உணர்வை உணவாக எடுத்து அதன் இனங்களை நம் உடலிலே பெருக்கிவிடும்.

1.ஞானிகளைப் பற்றி இங்கே யாம் (ஞானகுரு) சொல்லும் போது நல்ல உணர்வுகளை நுகர விடாது அது தடுக்கும்.
2.தடைப்படுத்தும் நிலை வரும் பொழுது உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காது.
3.தியானத்தில் அமர்ந்தாலும் எழுந்து ஓட வைக்கும்.

காரணம் அதனுடைய விஷத்தன்மை வீரியம் கொண்டதாக இருப்பதால் அதன் படியே வெளிப்படுத்தும். நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அதை அதை அடக்கப் பழகுவதே யாம் சொல்லும் தியானம்.

அதை நாம் அடக்கப் பழகவில்லை என்றால் அதன் வழியே நம்மை அழைத்துச் சென்று மீண்டும் இன்னொரு உடல் பெறும் நிலையாகப் பெறச் செய்துவிடும்.

உடல் பெறும் உணர்வுகள் இருந்தாலும் மன வேதனை வரும் பொழுது மன நோயாக வருகின்றது. பின் உடல் நோயாக மாறி மனித உடலையே மாற்றி அமைக்கும் சக்தியாக வந்து விடுகிறது.

இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபடுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?

எத்தகைய நிலைகள் இருந்தாலும் சரி… நல்லதை எண்ண விடவில்லை என்றாலும்
1.கண்களைத் திறந்து நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்
2.அந்த அருள் ஒளி எனக்குள் படர வேண்டும்
3.இருள் மறைய வேண்டும் மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும்
4.மெய் ஒளியுடன் ஒன்றிட வேண்டும் என்று இதை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

1.என் உடலில் உள்ள ஆத்மாக்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று…
2.அது அடங்கி… உயர்ந்த நிலைகளை என்னுள் இருந்து பெற வேண்டும் என்று எண்ணி ஏங்குங்கள்.

இதனால் நம் உடலில் உள்ள அந்த ஆன்மாக்களுக்கும் ஒரு நற்பயன் ஏற்படுகின்றது. நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் ஒளியாக மாறும் சந்தர்ப்பம் உருவாகின்றது.

இதை மறவாது நாம் செய்து பழக வேண்டும்.

தியானத்தில் உட்கார்ந்தால் என்னால் முடியவில்லை… வெறுப்பாக இருக்கின்றது… எங்கெங்கோ நினைவுகள் போகின்றது…! என்று நிறையப் பேர் சொல்வார்கள்.

தியானத்தில் கண்ணை மூடிய பின் இப்படிப் பல உணர்வு வந்தால் உடனே கண்ணைத் திறந்து விண்ணிலே நினைவைச் செலுத்தி மகரிஷிகளை எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால்
1.தன்னிச்சையாகவே நம் கண்களை மூட வைக்கும்.
2.நம் நினைவுகளைத் தன்னிச்சையாகத் துருவ நட்சத்திரத்திற்கு அழைத்துச் செல்லும்.
3.அப்பொழுது துருவ மகரிஷியின் உணர்வுகள் துருவ நட்சத்திரத்தின் வழி வருவதை
3.துருவப் பகுதி வழியாகப் பூமிக்குள் வருவதை நாம் நுகரும் பருவத்தைப் பெறுகின்றோம்.

தொடர்ந்து இதை வழிப்படுத்தி வாருங்கள்… நல்லதாக அமையும்.

விஞ்ஞான வளர்ச்சியின் தவறான செயல்கள் – ஈஸ்வரபட்டர்

 

அன்றைய ஞானிகள் காட்டிய “ஞானச் சித்தின் செயல் வளர்ப்பு…” வளர்ந்துவிட்ட மனித ஆத்மாவின் சரீர வளர்ச்சியின் பெருக்கத்தால் இன்றளவும் வளரவில்லை. உயர் ஞானத்தின் செழிப்பைக் காண முடியவிலை.

இன்று பக்தி மார்க்கம்… மத வழி போதனை… விஞ்ஞானச் செயல் எல்லாமே செயற்கை உருவாகத் தான்… செயற்கை உல்லாசப் பிடிப்பு வாழ்க்கையுடன் ஒன்றியதாகத் தான் உள்ளது.

இவாத்மாவின் உண்மை நிலை அறியாத தன்மையில்… உலக நிலையே மாசு கொண்ட நிலையில்… எண்ணத்தின் ஈர்ப்பு வட்டமே பேராசைப் பிடியில் சிக்குண்ட நிலையில் உள்ளது.

இப்பூமியில் உள்ள சத்து நிலையையே செயற்கையின் செயலுக்காக வளர்ப்பின் தன்மை குணங்களை இம்மனித விஞ்ஞானம்… தொடர்ந்து பிரித்துக் கொண்டே உள்ளது.

சூரிய இயக்கத்தின் நுண்ணிய கதிரியக்க வலுவைப் பிரித்து அதை வைத்துப் பல பல வேலைகளைச் செய்கிறார்கள். இப்பூமியில் சில பாகங்களில்
1.இவ்வரசியல் நாட்டுப் பற்றின் விஞ்ஞான வேவு செயலுக்காக
2.ஒருவரை ஒருவர் அழிக்க அந்தச் சூரிய அலைக் கதிரின் சக்தியைக் கொண்டே
3.செயற்கை நிலையில் நில அதிர்வுகளையும் எரிமலை வெடிப்புகளையும்
4.இன்றைய விஞ்ஞானச் செயல் செய்விக்கின்றதப்பா…!

பிற கோளங்களுக்கு ஏவப்படும் ஏவுகணையில் வீரியமான கதிரியக்கச் சக்திகளைச் சேமிக்கப்பட்டு அனுப்புவதால் அதன் இயக்கத்தின் அலை வீச்சின் தொடராகத் தான் பூமியில் இன்றைய மனிதனின் விஞ்ஞானச் செயல் செல்கின்றது.

இத்தகைய தொடரினால் மனித உணர்வின் எண்ணங்கள் அனைத்தும் சிதறுண்ட குண வட்டங்களாக இன்றைய பூமி ஆத்மாக்களின் தன்மை உள்ளது.

இதன் இயக்க வட்டத்திலிருந்து தன் ஞானத்தால் ஆத்ம வலுவைப் பெருக்கிக் கொண்டால் இவ்வாத்ம வலுவானது எவ்வீர்ப்புப் பிடியிலும் சிக்காமல் இருக்கலாம்.

ஞான ஈர்ப்புத் தொடர்பில் பெற்ற ஆத்ம பலத்தைக் கொண்டு இப்பூமியின் நிலையே மற்றெந்த செயல் பிடிப்போ எவற்றிலுமே இவ்வாத்மா சிக்காமல் உயர் சக்தி கொண்ட ரிஷி அலையுடன் தொடர்பு கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல்…
1.இந்தச் சூரியக் குடும்பமல்லா மற்ற சூரியக் குடும்ப அலைத் தொடரிலும்
2.நம்மைக் காட்டிலும் ஞான வலுக் கொண்ட ஆத்மாக்களின் மனித வாழ்க்கை முறையையும் காண முடியும்.

மேலும் ஆதிசக்தியின் சக்தி வார்ப்பின் தொடர் அனைத்தின் கூட்டுச் சேர்க்கை வார்ப்பையும்… மாற்றத் தன்மையையும் வளர்த்துக் கொள்ளும் சக்தி வலு அனைத்தையும் காண முடியும்.

பிறவா வரம் என்பது… ஞான வார்ப்பின்… சித்து நிலை வளர்ப்பின் வளர்ப்பை வளர வைக்கும் அந்த வலு சக்தி தான் “பிறவா நிலை…!

ஆகவே
1.மனிதனின் உண்மையை மனிதனே அறியாமல்
2.தன்னைத் தானே செயற்கைக்கு அடகு வைத்து
3.மீளமுடியா வட்டிச் சுமையாக மூழ்கி விடும் தன் நிலை இழக்கின்ற இன்றைய கலி காலத்திலிருந்து
4.இந்த உடலின் உண்மைத் தத்துவ உயர்வை உணரும் ஆத்மாவாக நீங்கள் ஒவ்வொருவரும் ஆகுங்கள்.

மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டிய முறையைப் பற்றிச் சிறிது பார்ப்போம்

கண்களின் நினைவினைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து பூமியின் வட கிழக்குப் பகுதியில் நினைவினை விண்ணிலே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியின் வழியாக ஏங்கிச் சுவாசிக்க வேண்டும்.

“கிரகணம்” பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். உதாரணமாக சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வந்து முழுவதும் மறைத்தால் அந்த நேரத்தில் சூரியனின் சக்தி முழுவதும் தடைப்படுத்தப்படுகின்றது.

ஆனால் சந்திரனுக்கோ பூமிக்கு வந்து சேரும் சூரியனின் அனைத்து சக்திகளையும் பெற அந்தச் சந்தர்ப்பம் ஏதுவாகின்றது.

அதே சமயத்தில் பூமிக்கோ சூரியனின் சக்திக்குப் பதிலாகச் சந்திரனின் சக்தியை நுகர வேண்டிய கட்டாயமாகின்றது.

ஏனென்றால் இவை ஒரே நேர்கோட்டில் வருவதால் இத்தகைய நிலை ஏற்படுகின்றது. அதிக பலன் இதிலே சந்திரனுக்குத்தான்.

இதைப் போன்று தான் துருவ நட்சத்திரத்திலிருந்து உணர்வலைகள் வெளி வரும்போது அதை நாம் இடைவெளியில் “கிரகணம்” போன்று பிடிக்க வேண்டும்.

இதைத்தான் தடுத்து நிறுத்துவது என்பது. அப்பொழுது நம் ஆன்மாவில் உள்ள மற்ற உணர்வலைகளுக்கு ஆகாரம் கிடைக்காது துருவ நட்சத்திர உணர்வே ஆகாரம் ஆகின்றது.

ஆகவே இவ்வாறு தடுத்து நிறுத்தும்போது… தியானத்தில் சிலர் எனக்கு..
1.ஒளி அலைகள் தெரிந்தது
2.வெளிச்சமாக இருந்தது
3.புருவ மத்தியில் குறு..குறு.. என்று இருந்தது
4.சூடாகித் தலை பாரமானது
5.மிதப்பது போல் இருந்தது
6.நல்ல நறுமணங்கள் வந்தது
7.உமிழ் நீர் சுவையாகச் சுரந்தது
8.இனம் புரியாத மகிழ்ச்சியாக இருந்தது என்றெல்லாம் சொல்வார்கள்.

அதே போன்று மாறுபட்ட எண்ணம் கொண்ட சிலருக்கு
1.தொண்டை கர.. கர.. என்று ஆகிவிட்டது
2.சிந்தனைகள் ஒரு நிலைப்படுத்த முடியாமல் கட கட என்று எங்கெங்கோ செல்கிறது
3.என்னை உட்காரவே விட மாட்டேன் என்கிறது என்றெல்லாம் சொல்வார்கள்.

தடுக்கவும் இல்லை… நிறுத்தவும் இல்லை… என்பவர்களுக்கு – ஒரே வார்த்தையில் “அமைதியாக நன்றாக இருந்தது” என்று சொல்லிவிடுவார்கள்.

தன் ஆன்மாவில் உள்ளது மீண்டும் மீண்டும் சர்க்குலேசன் ஆகிக் கொண்டேயிருப்பதால் இவ்வாறு சொல்வார்கள்.

ஆகவே நாம் துருவ நட்சத்துரத்துடன் மோதியே ஆகவேண்டும். அதைத் தடுத்து நிறுத்தினால் தான் அது நமக்குள் வரும். உணர முடியும்.

ஆனாலும் அந்த மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் மேலே சொன்ன (நல்லது கெட்டது) அந்த அத்தனை உணர்வலைகளையும் மறுபடியும் தடுத்து நிறுத்தி விசாரணை செய்ய வேண்டும்.

1.“விசாரணை” என்பது தனக்குத் தானே கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பி தானே உணர்தல் என்று பொருள்.

2.“கேள்வி எழுப்புதல்” என்றால் புருவ மத்தியில் உயிரின் தொடர்பு கொண்டு குரு உபதேசித்ததை எண்ணி மறுபடியும் துருவ நட்சத்திரத்துடன் 1, 10, 100, 100000… கோடி… கோடி… என்று மோதிக் கொண்டேயிருந்தால் பதிலை வாங்க முடியும்.

3.“உணர்தல்” என்பது ஒரு வருடத்திலோ ஒரு மாதத்திலோ ஒரே நாளிலோ ஒரு நிமிடத்திலோ வரும். அதனின் வளர்ச்சி ஆக ஆக கணப்பொழுதில் (சுவிட்சைப் போட்டவுடன் லைட் எரிவது போல்) உணர முடியும்.

இந்த உணர்தல் வந்துவிட்டால் நாம் உணர்வது அனைத்துமே அல்லது அப்பொழுது நாம் “மகரிஷிகளுடன் பேசிக் கொண்டிருக்கின்றோம்” என்று அர்த்தம்.

நோய் நீக்கும் மூச்சுப் பயிற்சிகள்

 

நேராக நின்று கைகளை மேலே தூக்கிப் பின் கீழே இறக்கிச் சாதாரணமாகத் தொங்க விட்டு உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்ற எண்ணங்களை எண்ணிச் சுவாசத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
1.இது தீயவினைகளைத் தடுக்கவும்
2.கலக்க உணர்வுகள் வராது தடுக்கவும் உதவும்.

மகரிஷிகளை எண்ணி இதனின் சுவாசத்தை எடுக்க எடுக்க இதனின் உணர்வுகள் வளர வளர… நோயை உருவாக்கும் அணுக்கள் தணியத் தொடங்கும்.

1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்திகளையும்
2.துருவ மகரிஷியின் அருள் சக்திகளையும்
2.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளையும்
4.இந்த மூன்று நிலைகளையும் எண்ணி
5.அந்தச் சுவாசத்தை உடலுக்குள் அடுக்கடுக்காகக் கொண்டு வரவேண்டும்.

இடுப்பிலே பிடிப்பு இருந்தால்… கையை மேலே உயர்த்தி மாறு கால் மாறு கை தொட்டுவிட்டு… மீண்டும் மேலே கொண்டு வந்து சமப்படுத்தி அந்த மகரிஷிகளின் அருள் சகதி பெற வேண்டும் என்று சுவாசத்தை இழுத்து உள் செலுத்த வேண்டும்.

இப்படிச் செய்தால் கை கால் குடைச்சலோ… உடலில் உள்ள மற்ற பிடிப்புகளோ எல்லாம் அகன்றுவிடும். வாத நோய்கள் குறையத் தொடங்கும்.

வாத நோயால் கை கால்களைச் சீராக இயக்க முடியவில்லை என்றாலும் கூட
1.கீழே அமர்ந்து கைகளை உயர்த்தி இந்தப் பயிற்சியைக் கூடுமானவரை செய்ய முற்படுங்கள்.
2.ஒரு நான்கைந்து முறை செய்ய முற்படுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளை எண்ணி அந்தச் சுவாசத்தை எடுத்து உடல் முழுவதும் அந்த உணர்வுகளை உள் செலுத்துங்கள். அந்த மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்ற சுவாசத்தை எடுத்து எடுத்து அந்த மூச்சலைகளை உடல் முழுவதும் பரவச் செய்யுங்கள.

இரத்தக் கொதிப்பினாலோ வாதத்தாலோ கை கால்கள் முடங்கி இருந்தால் தரையிலே சீராகப் படுங்கள். கூடுமான வரையிலும் அந்த மகரிஷிகளை எண்ணிச் சுவாசித்து உங்கள் கையையும் காலையும் தூக்கிப் பாருங்கள்… மெதுவாக…!

சிறிது நேரம் பயிற்சி செய்துவிட்டு மறுபடியும் அந்த மாதிரி சக்தி பெற வேண்டும் என்று அந்த மூச்சுகளை எடுத்து உடல் முழுவதும் பரவச் செய்யுங்கள்.

ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி…
1.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து
2.இரத்தக்கொதிப்பு நீங்கி நரம்பு மண்டலங்களில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் நீங்கி
3.உடல் நலம் பெற வேண்டும் என்ற நினைவுகளைக் கொண்டு வாருங்கள்.

இப்படி எண்ணி விட்டு மீண்டும் கை கால்களைத் தூக்கிப் பாருங்கள். மேலே தூக்கி பின் கீழே இறக்கிப் பாருங்கள்.

மறுபடி நிமிர்ந்து உட்கார்ந்த பின் உடலில் அந்த இயக்கங்கள் சீராக வருவதற்குண்டான நிலைகள் ஏற்படுகின்றதா…? என்று முயற்சி செய்து பாருங்கள்.

அதிகமாகத் துருவ நட்சத்திரத்தை எண்ணி மூச்சுகளை இழுத்து இந்தப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து பாருங்கள். எத்தகைய நோயாக இருப்பினும்
1.நரம்பு மண்டலங்களுக்கு அந்த மகரிஷியின் அருள் உணர்வினை
2.இயக்க ஓட்டங்களாகக் கொடுத்துப் பயிற்சி செய்து வந்தால் எல்லாம் சீராகும்.

முடக்குவாதம் இருந்தாலும் இந்தப் பயிற்சிகளைச் சிறுகச் சிறுக செய்து வரலாம்.

நரம்பு மண்டலங்களுக்கு இத்தகைய பயிற்சி மூலம் வேலையைக் கொடுத்து அந்த மகரிஷிகள் சக்திகளை உடலில் ஓட்டங்களாக கொடுக்கப்படும் பொழுது ஓரளவுக்கு உடல் வலிமை பெறுவதற்கும் உடல் முழுவதும் நல்ல சக்திகளைப் பரப்புவதற்கும் தீமையான உணர்வின் அணுக்களை மாற்றியமைக்கவும் இது உதவியாக இருக்கும்.

எந்த அளவிற்கு அதை எடுத்து நமக்குள் சேர்க்கின்றோமோ அந்த அளவுக்குத் தீமையை உருவாக்கும் சக்திகளை மாற்றி அமைக்க முடியும்.
1.அகஸ்தியமாமகரிஷிகளை எண்ணி இந்தப் பயிற்சி செய்யும் பொழுது
2.அவர் பெற்ற மூலிகை மணங்களும் பச்சிலை வாசனைகளும் நிச்சயம் கிடைக்கும்.

துருவ மகரிஷியையும் துருவ நட்சத்திரத்தையும் எண்ணும் போது அது உடலில் மிகவும் வலிமை மிக்கதாக சக்தி வாய்ந்ததாக மாறும். மனச் சோர்வையும் மனச் சஞ்சலத்தையும் நீக்கக்கூடிய சக்தி கிடைக்கும்.

கூடுமானவரை வயிற்றில் ஆகாரம் இல்லாத பொழுது இந்த முயற்சிகளை எடுங்கள். நல்ல பலனைத் தரும்.

அதே போல் கல்வி கற்கும் குழந்தைகளுக்கு ஞாபகமறதி இருந்தாலும் இந்தப் பயிற்சிகளைச் செய்தால் நல்ல ஞாபக சக்தி கிடைக்கும். கல்வி சீராக இருக்கும்… மன வலிமை கிடைக்கும்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணினால் உங்கள் எண்ணச் சிதறல்களை மாற்றி உங்கள் எண்ணம் வலு பெறும்.

ஆஸ்த்மாவோ சளித் தொல்லைகளோ இருந்தாலும் அதுவும் தணியும்.

தொடர்ந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்க்கச் சேர்க்க
1.உயிருடன் ஒன்றிடும் உணர்வுகள் ஒளியாகும்
2.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து பிறவியில்லா நிலை அடைய முடியும்.

நாம் அடைய வேண்டிய அஷ்டமாசித்து… ஞானச் சித்து – ஈஸ்வரபட்டர்

 

இப்பூமியின் பிடிப்பு வாழ்க்கையில் சத்தெடுத்து இவ்வுடல் பிம்ப ஆத்மாவிற்குச் சித்தாக்கி ஒளி பெறும் வளர்நிலையாகி வளரின்பம் நாம் பெற முடியும். இருந்தாலும்…
1.இந்த வாழ்க்கையில் நாம் எடுக்கும் சத்தானது
2.ஞான வளர்ப்பு கொண்ட நிலை பெற்றால் தான்
3.சித்து நிலையைப் பெற முடியும்.

மனித எண்ண ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்த அன்றைய அரசர்கள் காலத்தில் சித்து நிலை பெற்றவர்களின் செயல்கள் எப்படி இருந்தது..?

தான் பெற்ற சித்தைக் கொண்டு அரசைக் காக்கவும்… தன் குடும்பச் சுழற்சியின் ஈர்ப்புப் பிடியிலும்… தன் சித்து நிலையின் சக்தியைச் சிலர் செயல்படுத்தினர். தான் பெற்ற சித்தை இயற்கையை வளர்க்கும் நன்மைக்குப் பயன்படுத்தவில்லை.

இயற்கை என்பது என்ன…?

அதாவது… இப்பூமியின் வளர் நிலைத் தொடர் அணு வளர்ச்சியின் செயலில் எல்லாம் அணுவுக்குள் அணுவாக… உயர் அலைத் தொடரில் சூரிய அலையின் அலைத் தொடர்புடன்.. தன் ஆத்ம அலையைச் செயல்படுத்தவில்லை.

மாறாக… தன் ஜீவ சரீர இயக்கத்திலேயே சித்துக்களைச் செயல்படுத்தினர்.
1.உடலைக் காக்கும் சித்துக்களையும்
2.அதற்குண்டான ஞானங்களையும் தான் செயல்படுத்தினர்.

இன்றளவும் அந்த ஆத்ம உணர்வு ஞானச் சுழற்சியில் தான் அத்தகைய சித்து நிலை கொண்டோரின் நிலையுள்ளது. உயர் ஞானச் சித்தை எட்டிப் பார்க்கும் நிலை இல்லை.

ஏனென்றால்…
1.காரிய சித்துடனே தன் ஞானச் சித்தை இவ்வீர்ப்புப் பிடியில் சுழல விடாமல்
2.அணுவுக்குள் அணுவாக இவ்வுலக வளர்ப்பு வளர்ச்சி அணுவுடனும்
3.இவ்வுலகையே வளர்க்கும் சூரியக் குடும்பமான நாற்பத்தி எட்டு மண்டலத் தொடர்பிலும்
4.இந்நாற்பத்தி எட்டின் வளர்ப்பான வளரும் பன்னிரெண்டு கோள்களிலும்
5.ஒவ்வொன்றின் தொடர் வளர்ப்பிலும் தன் காரிய சித்து ஆத்ம செயலைச் செயல்படுத்தி
6.இதைப் போன்று சுழலுகின்ற ஏனைய எண்ணிலடங்காச் சூரியக் குடும்பங்களில் செலுத்தப்பட்டு
7.அங்கிருக்கும் பல கோளங்களின் உண்மையையும் இந்த ஞானத்தால் பெற்று
8.காரிய சித்தை மேல் நோக்கிய ஈர்ப்பு வட்டத்தில் (இது முக்கியம்) இவ்வுயிராத்மாவை வளர விட வேண்டும்.

சித்தான நிலையில் தான் பெற்ற வளர்ப்பு நிலையை எவ் ஈர்ப்புப் பிடியிலும் நிலைக்கச் செய்யும் செயலாக இக்காரியச் சித்தை நிலை நிறுத்தக் கூடாது.

அதைப் பெறுவதற்காக வேண்டி.. குடும்பத்தை விட்டுவிட்டோ… காட்டிற்குச் சென்றோ… துறவு பூண்டோ… செல்லாமல் இந்தப் பூமியின் வாழ்க்கைப் பிடியின் சத்தெடுக்கும் வழியிலேயே தான் அந்த ஆத்ம சித்தைப் பெறவேண்டும்.

தினசரி வாழ்க்கையில் ஏற்படும் தொடர் நிலைகள் ஒவ்வொன்றிலும்
1.தீயவை… நல்லவை… என்ற தன் ஈர்ப்பின் எண்ணத்தை
2.துவேஷத்திற்கோ புகழுக்கோ செலுத்தாமல்
3.முள்ளை (வேலி முள்) நாம் பாதுகாப்பிற்கு வேலியாக உபயோகித்துச் செயல்படுத்துவதைப் போன்று இருத்தல் வேண்டும்.

அதாவது…
1.தீயவை என்ற நிலையிலிருந்து… அதிலிருந்தே…
2.நாம் அறிந்த முறை கொண்டு… மீண்டும் அதில் போய்ச் சிக்காமல்
3.அதன் செயலின் உண்மையை உணர்ந்து
4.நமக்குப் பாதுகாப்பு வேலியாக – அதை நன்மைப்படுத்தும் பக்குவத்தை நாம் பெறல் வேண்டும்.

இனிமை என்ற நிலையிலேயே இவ்வெண்ணத்தின் செயலைச் சுழலவிடாமல்… “செயல்படும் ஒவ்வொரு செயலையுமே… இனிமை ஆனதாக…” இவ்வாத்ம அலை பெறகூடிய தன்மைக்குத் தன் ஞானம் செல்ல வேண்டும்

1,இனிமைக்காக ஏங்கும் ஏக்கத்தின் வார்ப்பாக இவ்வுடலின் அமில உராய்வு இல்லாமல்
2.இனிமையை வளர்க்கும் அமிலமாக
3.இவ்வெண்ணத்தின் உணர்வைச் சுவை கொண்ட சத்தாக இப்பூமி ஈர்ப்பு வாழ்க்கையிலிருந்து சத்தெடுத்து
4.ஞானச் சித்தை வளர்க்க வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

மகரிஷிகள் விண்ணுலகம் சென்றார்கள். அவர்கள் வாழ்ந்த காலத்தில் எடுத்துக் கொண்ட நிலையை நம் குருநாதர் பெற்றார். அவர் காட்டிய வழியில் என் அம்மா அப்பாவையும் விண் செலுத்தும்படிச் சொன்னார்.

அது வரைக்கும் எனக்கு அந்தச் சக்தி கிடைக்கவில்லை. என் அம்மா அப்பா இறந்த பிற்பாடு அந்த உடலின் நிலைகளை நீ எப்படி எப்படிச் செய்ய வேண்டும்…? என்னைப் பக்குவப்படுத்தினார்.

என் அப்பா இராஜபாளையத்தில் இருந்தார். நான் அங்கே போனவுடனே நீ சீக்கிரம் வீட்டை விட்டுப் புறப்படு என்றார். ஏன் இப்படி குருநாதர் சொல்கிறார்…! என்று எனக்கு அர்த்தமாகவில்லை.

ஏனென்றால் என் அப்பா நன்றாக உடல் நலத்துடன் தான் இருந்தார்.

1.“நீ சீக்கிரம் புறப்படு…” என்று சொல்லிக் கொண்டிருந்தார் குருநாதர்.
2.நீ ஊருக்கெல்லாம் சொல்ல வேண்டும்
3.வீட்டில் வந்து நீ சொந்தமாக இருக்க வரவில்லை “நீ நட…” என்கிறார் குருநாதர்.

கிளம்பி வந்துவிட்டேன். அப்புறம் உடலை விட்டுப் பிரிந்தார் என்று எனக்குத் தகவல் வந்தது.

உன் அப்பா உன் மேல் பாசமாக இருந்தார். நீ அங்கே இருந்தாய் என்றால் அந்த உயிரான்மா உடனடியாக உன்னிடம் தான் வரும் என்றார் குருநாதர்.

நான் வீட்டை விட்டுப் புறப்பட்டவுடன் என் அப்பா… எங்கடா.. அந்தச் “சாமியார் பயலை…?” என்று தான் என்னைக் கேட்டிருக்கின்றார். சாமியார் பயல் எல்லாவற்றையும் இந்த மாதிரிச் செய்துவிட்டு எங்கே போனான்…? பைத்தியத்துடன் சேர்ந்து அவனுக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று சொல்லி வேகமாகக் கேட்டுள்ளார்.

ஆகையினால் அவர் அருகில் இருந்திருந்தோம் என்றால் உடலுக்குள் வந்துவிடுவார் என்பதற்காகத்தான் குருநாதர் “எம்மை வீட்டை விட்டு உடனடியாகப் புறப்படு…” என்று சொல்லியுள்ளார்.

நடந்து போகப்படும் பொழுது இதற்கு மத்தியிலே என் அப்பாவின் ஆன்மா வெளியில் வருகின்றது.

அப்பொழுது அது தெரிந்தவுடனே அதற்கு வேண்டியதுகளைச் செய்து அந்த உயிரான்மாவை அங்கேயே உட்கார்ந்து அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று இணைக்கச் செய்தேன்.

உன் ஊருக்குச் சென்று போய்ப் பார்…! என்று குருநாதர் சொன்னார். அப்புறம் அப்பா இறந்தார் என்று சொன்னேன்.

உங்களுக்கு எப்படித் தெரிந்தது என்றார்கள்.

ஆன்மா வெளியில் வந்தது தெரிந்தது என்றேன்.

பழனிக்கு வந்து என் பையன் தண்டபானியைக் கூப்பிட்டு இராஜபாளையம் சென்றேன். என் மனைவி முதலில் அங்கே சென்றது.

உன் அப்பாவின் ஆன்மா உடலை விட்டுப் பிரியும் நேரம் அங்கே இருக்கக்கூடாது. ஏனென்றால் நீ அந்த அளவிற்கு மனப் பக்குவம் பெறவில்லை. ஆகையினால் “நீ விலகி இருப்பது தான் நல்லது” என்றார் குருநாதர்.

இதே மாதிரித்தான் “என் அம்மா உடலை விட்டுப் பிரியும் சமயமும்” நான் அருகில் இல்லை.

என் அம்மா உடல் நலிவுற்றதைப் பார்க்கச் சென்றிருந்தோம்.

அப்பொழுது என் மனைவியிடம் என் அம்மா இரண்டு கோழி முட்டைய வறுத்து வேக வைத்துக் கொஞ்சம் மிளாகய்த் தூளும் உப்பும் வைத்து எனக்குக் கொடு என்று கேட்டது.

அந்த நேரத்தில் என் அம்மாவால் சாப்பிட முடியாது. ஆனாலும் அந்த உணவின் மேல் இருந்த ஆசை விடவில்லை.

குருநாதர் சொன்னார். உங்கள் அம்மாவால் சாப்பிட முடியாது. ஆனால் கோழி முட்டையைப் பிரியமாகச் சாப்பிட்டிருக்கின்றார்கள். இந்தச் சமயத்தில் ஆன்மா பிரிந்தது என்றால் வேறு எங்கும் போகாது.

அதே சமயத்தில்
1.உன் மீது பிரியமாக எண்ணியது
2.உன்னைக் “கடவுளின் அவதாரம்” என்று எண்ணுகிறது என்று சொல்கிறார் குருநாதர்.

ஆனாலும் தாயின் கடைசி ஆசை கோழி முட்டை மீது செல்கிறது. அவர்களை அங்கே விட்டு விடக்கூடாது…! என்று சொல்கிறார்.

அன்றைக்குத் தாரமங்கலத்தில் கூட்டுத் தியான நிகழ்ச்சி என்று ஏற்பாடு செய்திருந்தார்கள். நான் கலந்து கொள்வதாகவும் எல்லோருக்கும் தகவல் ஏற்கனவே சொல்லி வைத்திருந்தார்கள்.

அதன்படி நான் அங்கே சென்றுவிட்டேன்.

அங்கே தியானமிருக்கும்போது என் தாயின் ஆன்மா வெளி வருகின்றது. அங்கே இருந்த பலரும் அதைப் பார்த்தார்கள். அந்த ஆன்மாவின் உருவம் தெரிந்தது.

அப்பொழுதே அதற்குண்டான நிலைகளைச் செய்து என் தாயின் உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து பிறவா நிலை என்ற பெரு நிலை பெற வேண்டும் என்று உந்திச் செலுத்தினேன்.

சேலத்தில் சொல்லி வைத்திருந்தேன். ஏதாவது தந்தி வந்தால் உடனடியாகத் தாரமங்கலத்திற்குத் தகவல் கொடுக்கும்படி சொல்லியிருந்தேன்.

இப்படி என் தாய் தந்தை இரண்டு பேரும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்த பிற்பாடு தான்
1.அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து சில நுண்ணிய அலைகளை நான் பெற முடிந்தது.
2.அதை எடுத்து எல்லோருக்கும் என்னால் கொடுக்க முடிந்தது.
3.இல்லாமல் போனால் இந்த அளவிற்குத் தைரியமாக நான் உங்களிடம் சொல்ல முடியாது.

என் தாய் கடவுளாக தெய்வமாக இருந்து என்னைக் காத்தது. குருவாகவும் இருந்து நல் வழி காட்டியது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இதையெல்லாம் தெளிவாக எடுத்து உரைத்ததால் அதன் வழியில் தாய் தந்தையின் உயிரான்மாக்களை விண் செலுத்த முடிந்தது.
1.அவர்களை விண்ணுக்குச் செலுத்திய பின்பு தான்
2.நான் அந்தச் சக்திகளை அதிகமாகப் பெற முடிந்தது.

மகரிஷிகளுடன் இணைந்து நீங்கள் வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்

 

மீண்டும் மீண்டும் யாம் (ஞானகுரு) ஞாபகப்படுத்துவது… யாரும் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பங்கள் தான் அந்த நிலையை உருவாக்கி விடுன்றது.
1.அந்தச் சந்தர்ப்ப சூழ்நிலையில் இருந்து விடுபடவே
2.மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களை அடிக்கடி அடிக்கடி பெறச் செய்கின்றோம்.

இதை உறுதுணையாகக் கொண்டு வாழ்க்கையில் அறியாத வந்த தீமைகளை அகற்றிட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

உலகம் காக்கப்பட வேண்டும்… உலக மக்கள் காக்கப்பட வேண்டும். வரும் எதிர்காலக் குழந்தைகள் அருள் ஞானக் குழந்தைகளாக வளர வேண்டும். உலகைக் காத்திடும் உணர்வாக விளைய வேண்டும் என்று அந்தந்தக் குடும்பத்தில் இதைக் கடைப்பிடியுங்கள். விஜயதசமி… கல்கி என்ற பத்தாவது நிலையை அடையுங்கள்.

ஒவ்வொரு மாதம் தசமி என்று இருப்பினும் சதுர்த்தி என்று இருப்பினும் அதை எல்லாம் தீமைகளை அகற்றும் நாளாக மாற்றி ஒவ்வொரு மாதத்திலும் இதைச் சீராகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த அருள் ஞானிகள் காட்டிய வழிகளில் முழுமையான நிலைகள் கொண்டு
1.உயிருடன் ஒன்றி நாம் வாழ்வோம்
2.இந்த உணர்வுகளை வலுப் பெறச் செய்து இந்த வாழ்க்கையை வாழ்வோம்… வளர்வோம்.
3.யாரையும் பகைமை கொண்டு பார்க்க வேண்டாம்
4.பகைமைகளைத் தனக்குள் புக விடவும் வேண்டாம்.

மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு நாம் இணைந்திடும் உணர்வை வளர்ப்போம்… உலகைக் காத்திடும் நிலைகள் பெறுவோம்.

கருவில் வளர்ந்து வரக்கூடிய குழந்தைகள் தான் உலகில் வரும் நஞ்சினை அடக்கி உயர்ந்த ஒளியின் சரீரம் பெறும் தகுதியை இனி பெறுவார்கள்.

ஒவ்வொருவரும் நீங்கள் இதைச் செய்யுங்கள் உலகைக் காத்திடுங்கள்… உங்களைக் காத்திடுங்கள். பிறவா நிலை என்ற நிலையை அடையுங்கள். பிறவி இல்லா நிலை அடைந்த மகரிஷிகளின் உணர்வின் தன்மையை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

என்றென்றும் உயிருடன் ஒன்றி வாழும் அந்த மகரிஷிகளுடன் இணைந்து வாழ வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன். அந்த நிலையை நிச்சயம் நீங்கள் பெறுவீர்கள் என்று பிரார்த்திக்கின்றேன் (ஞானகுரு).

சப்தரிஷிகளின் சித்து நிலை – ஈஸ்வரபட்டர்

 

கூடு விட்டுக் கூடு பாயும் நிலை என்பது…
1.தன் நிலை வளராத
2.ஆத்ம பலமின்றி
3.ஆரம்ப ஆவி நிலைத் தொடர்பு நிலையில் பெற்ற
4.பக்தி வாய்ந்த… மந்திர… தந்திர.. செயல் கொண்ட
5.உடலின் ஆத்மாவைக் காட்டிலும் பிறிதொரு சக்தி வாய்ந்த வலுவான இயக்கத்தின் செயலாகும்.

சக்தி வாய்ந்த… என்பது அதற்கு மேல் வலுக் கொண்ட ஆத்ம அலையின் தொடரின் ஈர்ப்புப் பிடி… ஞானச் சித்து பெற்ற… இயக்க வழிச் சித்தில்தான்… இக்கூடு விட்டுக் கூடு பாயும் செயல் செயல்படுவது.

அதாவது தன் சரீர இயக்கத்தைச் செயல்படாத வண்ணம் அந்தச் சரீரத்தை ஓரிடத்தில் நிறுத்தி விட்டுத் தன் ஆத்ம உயிரைப் பிறிதொரு சரீரத்தின் பாலோ.. மற்ற ஜீவ ஜெந்துக்களின் பாலோ செலுத்தி… அதற்குள் நின்று இயக்குவது.

அப்படி இயக்கப்படும் தன்மையில் சிறிது இசகு பிசகான நிலை கொண்டு மாறுபடும் தன்மை ஏற்பட்டாலும் மீண்டும் சரீர இயக்கத்திற்கு வந்து செயல்பட முடியாத நிலை ஆகிவிடும்.

அது மட்டுமல்ல…!

1.இப்படிப் பிரிந்த ஆத்ம உயிர் வேறு ஒரு பிடிப்பலையில் சிக்கிச் செயல்படுத்தப்பட்ட ஈர்ப்புப் பிடியின் செயலினால்
2.மீண்டும் சரீர நிலையும்… பிறப்பும் அற்று ஆத்ம வளர்ச்சியே இல்லா நிலையாக
3.தான் வளர முடியாத வேறு ஒரு ஈனமான விஷம் கொண்ட ஈர்ப்பு நிலைக்குச் சென்று விடுகின்றது.

ஆனால் சப்தரிஷிகளின் வளர் சித்து நிலை எல்லாம் எப்படிப்பட்டது…?

தன்னைத் தான் உணர்ந்து… இச்சரீர பிம்பச் சேர்க்கை அமிலக் கூட்டின் வலுவிலிருந்து ஆத்ம வலுவைக் கூட்டி… இவ்வாத்மாவைச் சரீர பிம்பத்திற்கு மேல் சக்தி வாய்ந்த செயலாகச் செயல் கொள்ளும் தன்மைக்கு இவ்வாத்ம வலுவை வலுவாக்கிக கொண்டவர்கள் தான் சப்தரிஷிகள்.

1.தன் ஆத்மாவைத் தானே இயக்கக்கூடிய இயக்கச் செயலின் செயல் சித்தாக
2.ஜீவ பிம்ப சரீர இயக்கத்தின் தொடர்புடனே இவ்வாத்மாவைத் தனித்து நிறுத்தி
3.தன் ஆத்ம அலையை எவ் அலைக்கும் செலுத்தும் திறன் பெற்றவர்கள்.

எவ்வலைக்கும் என்பது என்ன…?

1.சரீர பிம்ப தொடர் கொண்டவர் அலைக்கும்… சக்தி வாய்ந்த சித்தர்களின் அலைக்கும் செயல்படுத்தவும்
2.இவ்வாத்மாவின் ஈர்ப்பு சக்தியைக் கொண்டு எந்நிலையையும் அணுவுக்குள் அணுவாக இவ்வாத்ம அலையை அனுப்பி
3.அணு வளர்ச்சியின் உண்மையையும் உருவாகும் சக்தி அனைத்தையுமே உணரக்கூடிய அலைத் தொடர்பு யாவைக்குமே
4.இச்சரீர பிம்ப நினைவு மாறாமலும்…
5.இஜ்ஜீவத் துடிப்போ மற்றெந்தத் தன்மையும் மாற்றம் கொள்ளாத் தன்மையில்
6.இவ்வாத்மாவைத் தனித்து எச்செயலுக்கும் செலுத்திச் செயல் சித்தைச் செயல்படுத்துபவர்களே சப்தரிஷிகள்.

அந்த நிலையை நீங்கள் பெற என் ஆசிகள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

“நாஸ்டர்டாமஸ்” என்ற பிரெஞ்சு அறிஞர் அவர் எழுதிய நிலைகள் கொண்டு விஞ்ஞான ரூபமாகவும் “உலகம் அழியும்” என்று அந்தத் தத்துவ ஞானி அன்றே சொல்லி உள்ளார்.

பித்தரைப் போன்று இருந்த நமது குருநாதரும் காலத்தால் சொல்லிக் கொண்டு இருக்கும் போது இவர் சொல்வதற்கு முன்னாடி இதனுடைய நிலைகள் எவ்வாறு இருக்கும்…? என்று சொன்னது அனைத்தும் நடந்துவிட்டது.

ரஷ்யாவும் அமெரிக்காவும் மோதிக் கொண்டிருக்கும் வேளையில் ரஷ்யாவின் நிலைகள் அது சீர் குலைந்துவிடும் என்று ஏற்கனவே (அது நடப்பதற்கு முன்பே) சொல்லியிருந்தோம்.

முதலிலே எமது உபதேசங்களைக் கேட்ட சில நண்பரகளுக்கெல்லாம் இது தெரியும். ரஷ்யாவின் நிலைகள் சுக்குநூறாகிவிடும்… அது சீர்குலைந்துவிடும்…! என்று சொன்ன மாதிரியே அதனின் நிலை ஆகியது.

மதத்தின் நிலைகள் இன்று எடுத்துக் கொண்டாலும் போர் உருவாகி மதத்திற்கு மதம் போர் செய்யும் நிலைகளும் அதிகமாகிவிட்டது. கிறிஸ்துவ மதமும் முகமதிய மதமும் உலகில் அதிகமான நிலையில் உள்ளது.

கிறிஸ்தவ மதத்திற்குள்ளும் இன பேதங்கள் அதிகமாகின்றது. முகமதிய மதத்திலும் அதிகமான மத பேதங்கள் இன பேதங்கள் வருகின்றது.

மதத்தின் தன்மை கொண்டு போர் செய்தாலும் அந்த உணர்வுக்குள் இன பேதங்கள் வரும் பொது இவனை இவனுக்குள் அழித்திடும் நிலையும் அவர் அவருக்குள் அழித்திடும் நிலையும் வளர்ந்து கொண்டேதான் உள்ளது.

யூத வம்சத்திலிருந்து அன்றைய நிலைகளில் வெளிப்பட்ட உணர்வுகள் பல பல. விஞ்ஞான அறிவு அதற்குள் அந்த நுண்ணிய அறிவினுடைய நிலைகள் விளைந்தது இந்த யூத வம்சத்திலிருந்து தான்.

யூதர்கள் செய்த மந்திர ஒலியாலும் அவர்களுடைய சாணக்கியத்தனத்தாலும் மெய் ஞான அறிவைக் கண்டுணர்ந்த அவனாலும் அவனுடைய காலத்தால் உண்மை அறியாது அந்தத் தத்துவ ஞானியை இம்சித்தார்கள்.

யாரை இம்சித்தார்களோ அதனால் இந்த யூத வம்சமே பெரும் பிரளயத்திற்கு ஆளாகி அதே இம்சை நிலைகளைப் பெற்றார்கள்.

அதே சமயத்தில் அது மதமாக்கப் படும்பொழுது இதனுடைய சலுகையும் மற்ற நிலைகள் கொண்டு வரப்படும் பொழுது இன்றும் பார்க்கலாம். அதில் சாமியார்களாக வரக்கூடியவர்கள் இந்த உலகத்தையே சொர்க்க பூமியாக ஆக்கிக் கொண்டுள்ளார்கள் (அவர்களுக்குள்).

இதனின் நிலைகள் கொண்டு எதிலிருந்து உட்பிரிவுகள் வந்ததோ கிறிஸ்ததுவ மதமும் இந்த யூத மதத்திலிருந்து தான் வந்தது. அதே சமயத்தில் முகமதிய மதமும் இதிலிருந்து தான் வந்தது.

இந்த மூன்றும் ஒருங்கிணைந்த நிலைகள் கொண்டு உட்பிரிவாகப் பிரிக்கப்பட்டு “என் மதம் வேறு… உன் மதம் வேறு…” என்ற நிலைகள் தத்துவ ஞானிகள் காட்டிய உண்மைகள் மறைந்து மத பேதங்கள் அதிகமாக உருவாகி விட்டது.

மத பேதத்தினால் போர் முறைகள் பரப்பும் போது அதற்குள் உள் மதத்தின் உட்கிளைகளின் நிலைகள் கொண்டு ஒருவருக்கொருவர் அடித்து இந்த அந்த ஞானிகள் காட்டிய நிலைகளைப் பிழையான நிலைகளுக்குக் கொண்டு வந்து விட்டார்கள்.
1.அத்தகைய பிழையினாலேயே
2.இவர்களை வீழ்த்திடும் நிலைகள் இன்று வருகின்றது.

இதிலிருந்து மனிதர்கள் நாம் மீள வேண்டுமா இல்லையா…?

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று தென்னாட்டில் தோன்றிய அந்த அணுவின் ஆற்றல் கொண்ட “அகஸ்தியனின் உணர்வுகள்” உலகெங்கும் பரவி உள்ளது.

அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் உணர்வுகளை உங்கள் கருவிலே வளரும் குழந்தைக்குப் பெறச் செய்யுங்கள்.
1.அதன் மூலம் உங்களைக் காக்கின்றீர்கள்.
2.உலகிலுள்ள நஞ்சினை மாற்றிட முடியும்.
3.மதப்போரை அகற்றிட முடியும்
4.உலகைக் காத்திடவும் முடியும்.
5.உங்களையும் காத்திட முடியும்.
6.அந்த ஞானிகளின் உணர்வுடன் ஒன்றிட முடியும்.
7.என்றும் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக ஆக முடியும் என்று
8.உங்களை நீங்கள் நம்பி அந்த ஆற்றல்களைப் பெற வேண்டும்.

புதுத் தம்பதிகள் இனித் தங்கள் கருவிலே வளரும் குழந்தைகளுக்கு இதை போன்று யாம் உபதேசித்த இந்த உணர்வுப்படி அந்தச் “சப்தரிஷிகளின் அருள் பெற வேண்டும்” என்று குடும்பத்தைச் சார்ந்தோர் அனைவரும் இதைச் செய்யுங்கள்.

நான் இதைப் பேசுகிறேன் என்று எண்ண வேண்டாம். மூன்றாம் வகுப்பு கூட நான் முறையாகப் படிக்கவில்லை. எனக்கு இதெல்லாம் தெரியாது. இதைப் பேசுகிறேன் என்றல் குரு வழி உணர்வின் செயலாக்கங்கள் தான் இதைப் பேசுகின்றது.

அன்று நாஸ்டர்டாமஸ் சொன்னார் என்றல் உணர்வின் இயக்கத்தின் நிலைகளை அவருக்குள் எடுத்து அதைக் கணக்கிட்டுப் பார்க்கும் பொழுது இன்ன இன்ன திசைகளில்… இன்ன இன்ன நிலைகள்… என்று விஞ்ஞான அறிவின்படி கண்டு கொள்கிறார்.

மெய்ஞானிகள் காட்டிய உணர்வின் தன்மை உங்களுக்குள் வளர்த்து உலகின் நிலைகளில் எவ்வாறு இருக்கின்றது என்ற நிலைகளைக் கருவிலே வளரும் உங்கள் குழந்தைக்குப் போதித்துப் பாருங்கள்.
1.அந்த குழந்தை உலகின் அறிவை உங்களுக்குள் ஊட்டும்.
2.உங்களை அறியாது வந்த இருளைப் போக்கும். அதை ஓட்டும்.
3.மெய் உணர்வின் தன்மை உங்களுக்குள் வளரும் அதை நீங்கள் பெற முடியும்.

“நீங்கள் எண்ணியதைத்தான்..” உங்கள் உயிர் இயக்குகின்றது. உணர்வின் அலைகளாகப் பரப்புகின்றது. உணர்வின் சொல் அம்பாக அந்தக் கருவின் நிலைகள் ஊடுருவுகின்றது.

உணர்வின் தன்மையை இணைக்கின்றது. மெய் ஒளியைப் பெருக்கும் தன்மையை அதை நீங்கள் பெறும் தகுதியை உருவாக்குகின்றது.

மகரிஷிகளின் அருள் சக்திகளை உள் நுகர்ந்து… உள் புகுத்த வேண்டும்…! – பிராணாயாமம்

 

அன்றாட வாழ்க்கையில் நாம் பல பல கஷ்டங்களைக் கேட்டு உணர்ந்தாலும் அவை எல்லாம் நம் ஆன்மாவில் முன் வந்து விடுகின்றது. சுவாசிக்கும் போதெல்லாம் அந்த உணர்வின் தன்மை சங்கடமோ சலிப்போ வெறுப்போ கோபமோ வேதனையோ அனைத்தும் வருகின்றது.

இதையெல்லாம் மாற்றி அமைக்கும் தன்மை தான் ஒன்பதாவது நிலையான கடவுளின் அவதாரம் நரசிம்மா என்பது.

எதையுமே சிருஷ்டிக்கும் பண்பு பெற்றது தான் மனிதனின் ஆறாவது அறிவு.
1.உருவாக்கும் தன்மை பெற்ற இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிய அருள் மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து
3.நாம் உள் நுகர்ந்து அந்த உணர்வின் தன்மையை உடலுக்குள் புகுத்தி
4.நமக்குள் தீமை புகாது பிளத்தல் வேண்டும்… நரசிம்மா…!

தனது வலிமையின் தன்மை கொண்டு சாக்கடையை வராகன் எப்படிப் பிளந்ததோ நல்ல உணர்வை எப்படி உணவாக எடுத்ததோ அதைப் போல ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமையைப் பிளந்து தனக்குள் ஒளியாகச் சிருஷ்டித்துக் கொண்ட அந்த மகரிஷியின் உணர்வுகளை நாம் நுகர்ந்திடல் வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் புகுத்தி… “உள் நுகர்ந்து”
2.அதனின் துணை கொண்டு தீமைகள் புகாது தடுத்து
3.நமக்குள் புகக் காத்திருக்கும் அந்தத் தீமையான உணர்வைப் பிளந்து
4.முந்திய நிலையில் புகுந்த தீமைகளையும் அகற்ற வேண்டும்
5.தீமை அகற்றிடும் உணர்வின் தன்மையாக நமக்குள் விளைந்திடல் வேண்டும்.

இந்த உடலை விட்டு நாம் எப்போது… எந்த நேரம் அகன்றாலும்
1.எந்த உடலும் நம்மை இழுத்து விடாது… எதிலும் சிக்காது…
2.எந்த ஞானியின் பால் நம்முடைய கூர்மை சென்றதோ… அவனின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நாம் அங்கே நிலை கொள்ள முடியும்.

இது தான் பத்தாவது நிலை தசமி.

வாழும்போது நாம் பிறருக்குத் தீங்கு செய்யவில்லை என்றாலும் கேட்டுணர்ந்த தீமைகள் அதிகமாகி… அதிகமாகி… அதே சமயத்தில் அதிகமான பின்… அதிலிருந்து விடுபட நமக்கு எவர் ஒருவர் உதவி செய்கின்றாரோ அவரின் நினைவே கடைசியில் வரும்.

மகராசன்…! நான் துயரப்படும் நேரத்தில் எல்லாம் எனக்கு நல்லதைச் செய்தான். அவனுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகின்றேன்…? என்று அவரின் எண்ணத்தைக் கூர்மையாக எண்ணி அதனின் வலுவை நமக்குள் சேர்த்து விட்டால் அவர் இறந்த பின் அவர் உடலுக்குள் தான் புக முடியும்.

1.இந்த உடலில் உருவான நோயான உணர்வின் துணை கொண்டு
2.அவரின் ஈர்ப்புக்குள் சென்று அந்த இனமாக இணைத்து
3.அந்த எல்லைக்குள் நம் உடலில் வந்த தீமைகளை உருவாக்கி
4.நமக்கு உதவி செய்தவரையும் தீமையின் நிலைகளிலேயே அழித்து
5.நமக்கு நல்ல இருப்பிடம் இல்லாதபடி நஞ்சின் தன்மையை வளர்த்து
6.பரிணாம வளர்ச்சியில் கீழிருந்து எப்படி மேலே வளர்ந்து வந்தோமோ
7.அதை மாற்றி மீண்டும் கீழான பிறவிக்கே சென்று விடுகிறோம்… தேய்பிறையாகின்றது.

இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் “தசமி…” பத்தாவது நிலையை அடைந்த அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் நுகர்ந்து அந்த உணர்வின் தன்மையை நமக்குள் மீண்டும் மீண்டும் உள் செலுத்த வேண்டும்.

வாழ்க்கையில் வந்த வேதனையோ கஷ்டமோ துயரமோ எதையெல்லாம் கேட்டறிந்தோமோ… நம் ஆன்மாவில் அவ்வாறு படர்ந்து கொண்டிருக்கும் தீமைகளை எல்லாம் பிளத்தல் வேண்டும்.

அது தான் நரசிம்மா…!

தன்னைத் தான் உணர்ந்து… தன்னுள் உள்ள இறைவனான ஆத்மாவை அறியவல்ல செயல் தான் சித்து வழியில் “முதல் சித்து” – ஈஸ்வரபட்டர்

 

அல்லி மலர் சூரியனைக் கண்டவுடன் மலர்ந்து சூரிய ஒளி மறைந்தவுடன் கூம்பி விடுகின்றது. இன்னும் சில மலர்கள்… சூரிய ஒளியின் அலை பாயும் இடத்தில் எல்லாம் அதன் மலர் முகம் காட்டி மலர்ந்து “அதன் ஒளி திக்கிலேயே…” அதன் ஈர்ப்பும் திரும்பிய நிலையில் வாடிவிடுகின்றது.

இவை எல்லாமே “இயற்கை…” என்கிறான் மனிதன்…!

1.எல்லாச் சக்தியைக் காட்டிலும் இனி தன் செயற்கைக்கு உதவுவது சூரிய சக்தி தான்…! என்ற உண்மையைத் தெரிந்தும்
2.சூரியனின் சக்தியைச் செயற்கைக்குப் பாழ்படுத்தும் இன்றைய மனிதன்
3.அடுப்பான இந்தப் பூமியில் – பாத்திரமான இச்சரீரத்தில் ஒளியான ஜீவ சக்தி தரவல்ல சூரிய சக்திகளைப் போட்டு
4.இவன் சமைக்கும் கலவையில் எச்சுவையையும் பெறவல்ல சக்தி
5.”இச்சரீர ஜீவனின் உள்ளதை” மனிதன் அறியவில்லை.

இயந்திரத்தின் துணை கொண்டு சூரிய அலையைச் சில உலோகங்களின் தொடர்பைக் கொண்டு சக்தி பெறும் மனிதன்…
1.தன் எண்ணத்தின் ஆற்றலைக் கொண்டு…
2.எதனையும் செயல்படுத்தக்கூடிய செயல் தெய்வமாகத் தன்னுள் உள்ள ஆத்ம சக்தியைச் செயல்படுத்தி
3.இவ்வாத்மாவின் தொடர்பலையால் எவ்வலையையும் அதன் தொடர்பு கொண்டு தொடர்புபடுத்தி
4.அதன் மூலம் செயலாக்கக்கூடிய ஆற்றல் இந்த ஆத்ம ஞானத்திற்குண்டு…! என்பதை உணர வேண்டும்.

இவ்வுடலின் செயலுக்கொப்ப… இவ்வெண்ண ஈர்ப்பு செல்லும் முறையைச் சிறிது மாற்றி… இவ்வுடலை இயக்கும் ஆத்மாவை… இவ்வெண்ணத்தில் நாம் செலுத்தும் ஞானத்திற்கு வர வேண்டும்.

இது நாள் வரை உணர்த்திய ஞான உபதேசத்தின் தியான வலுவால்
1.இவ்வாத்மாவைச் சக்தி வாய்ந்த ரிஷிகளின் ஆத்மாவுடன் தொடர்புபடுத்தி
2.அவர்கள் பெற்ற சக்தி நிலையை நாமும் பெறவல்ல இயக்க நிலையை
3.இம்மனித ஞானத்தால் செயல்படுத்துங்கள்.

இச்சரீரக்கூடு ஜீவத் துடிப்புடன் (உயிர் உடலில்) இருந்தால் தான் இவ்வியக்கத்தின் காந்த மின் அலையின் வளர்ப்பைக் கொண்டு “ஆத்ம பலத்தை நாம் பெருக்க முடியும்…”

அதன் மூலம்… ஆத்ம பலம் பெற்ற நிலையில் வேறு ஒரு ஈர்ப்புப் பிடிப்புக்கு நாம் சிக்காமலும்… இக்காற்றுடன் கலந்துள்ள பல கோடி நிலைகளில் நம் சரீர சுவாச ஈர்ப்பிற்கு எவ்வலையும் உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாவானாலும் சரி… உடலுடன் உள்ளவர்களின் எண்ண அலைகளானாலும் சரி… இவ்வீர்ப்பு வட்டத்தில் சிக்காமல் இருக்க முடியும்.

அதாவது ஒரு எரியும் நெருப்பில் எது போட்டாலும் அதுவும் பஸ்பமாகி விடுவதைப் போல்
1.இச்சரீர இயக்கத்தால் நாம் பெற்ற ஆத்ம பலம் கூடக் கூட
2.இவ்வாத்மாவின் வலுவை நாம் தனித்துக் காண முடியும்
3.வலுப் பெற்ற ஆத்மாவை நாம் உள்ள இடத்திலிருந்தே எங்கும் அனுப்பி எதனையும் அறிந்து வரச் செயல்படுத்த முடியும்
4.தன்னைத் தான் உணர்ந்து… தன்னுள் உள்ள இறைவனான ஆத்மாவை அறியவல்ல செயல் தான் “சித்து வழியில் முதல் சித்து…!”

ஆகவே ஆத்ம பலம் பெற்று வேறு ஒரு ஈர்ப்பலைக்கு இவ்வாத்மா செல்லாத வலுவாக நம் எண்ண ஞானம் வளர்ந்திருக்க வேண்டும்.

வாழ்க்கைப் பந்தத்தில் சுவைக்கும்… மற்ற பொருள் நிலை எவற்றுக்கும் இவ்வெண்ணமானது பேராசைக்கோ… ஏக்கத்திற்கோ… சஞ்சல சலிப்பு நிலைக்கோ… செல்லும் வழி முறை சிறிது இருந்தாலும்
1.இவ்வாத்மாவின் செயல் தனித்து தன்னிச்சைக்கு இயங்க
2. இச்சரீர பிம்பத்தின் உணர்வில் செயல் நிலை தடைப்படும்.

எவ் ஈர்ப்பலையின் பிடிப்பிலும் இவ்வெண்ணச் செயலின் உணர்வு ஞானத்தின் வளர்ச்சியானது செயல் கொள்ளும் பக்குவம் கொண்டு தான் இவ்வாத்ம பலம் கூடியுள்ள தருணத்தில்
1.நாம் ஜெபித்த… தியானித்த… சித்தர்களின் வளர்ந்த ரிஷிகளின் தொடர்பு வட்ட அலை ஈர்ப்பு கிடைத்து
2.நம் ஆத்ம வலு வளர்ந்த வளர்ப்பின் “பதம் பார்த்து” நம்மை வழி நடத்துவார்கள்.

ஆத்ம வலுவை மட்டும் இச்சரீர பிம்ப வாழ்க்கையில் இருந்துதான்… இந்த ஞானத்தால் வளர்ச்சியுறச் செய்ய முடியும். ஆத்ம பலம் பெற்ற ஞானத்தால் இவ்வாத்மாவின் பலம் கொண்டே இச்சித்துத் தொடரின் செயல் சித்துக்களை இவ்வாத்மாவினால் தான் வளர்த்துக் காட்ட முடியும். “வெறும் சரீர பிம்ப இயக்கத்தால் பெற முடியாது…!”

முதல் சித்தான ஆத்ம பலம் பெற… இச்சரீர பிம்ப எண்ணத்தின் அறியும் ஞானத்தைக் கொண்டு… ஆத்ம பலத்தால் சித்து நிலைத் தொடர் யாவையும் நாம் பெற முடியும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து கொண்டு “நாம்…” என்ற அணைப்பிலேயே செல்வோம். ஏனென்றால் எல்லாமே “நமக்குள்..” தான் இருக்கின்றது.

பல கோடி அணுக்கள் சேர்த்துத்தான் “நாம்” ஆகின்றோம். ஆனால் எந்தெந்த அணுக்களைச் சேர்த்துக் கொள்கின்றோமோ அந்த “நான்…” ஆகின்றோம்.

கோள்களும் நட்சத்திரங்களும் சூரியனும் மற்றவைகளும் கூட்டு ஐக்கியமான நிலைகளில் இயங்குகின்றன. ஒரு மரத்தை எடுத்துக் கொண்டால் கூட்டு ஐக்கியமான நிலைகளில்தான் அது மரமாக வளர்கின்றது. அதற்குள் பிரித்திருந்தால் தசையினுடைய நிலைகள் வளராது

அதைப் போன்று தான் நமக்குள்ளும் கூட்டு ஐக்கியமான நிலைகளில் இருந்தாலும்
1.வெறுப்பான உணர்வுகளை நாம் சேர்க்கும்பொழுது
2.ஒரு அணுவின் தன்மை இரத்தத்தை உருவாக்கினாலும்
3.இன்னொரு அணு அதன் மேலே பட்டவுடன்
4.அதனுடைய மலம் நம் இரத்தைத்தைக் குடித்துவிட்டு
5.அந்த அணுவின் மலம் உடலிலே பீய்ச்சும் பொழுது
6.நம் தசைகளும் கரைந்து அழுகிப் போகின்றது.
7.நமக்குள் அது பிரியும் தன்மை பெறுகின்றது.

இதைப் போன்று நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் பிறரைப்பற்றி வேதனை உணர்வுடன் எண்ணும் பொழுது அந்த வேற்றுமையான உணர்வுகள் நமக்குள் வந்து அவர்களை அழிக்க வேண்டுமென்று விரும்புகின்றோம்.

நமக்குள் எடுத்துக் கொண்ட அந்த அழிக்கும் உணர்வுடன் நாம் பேசினாலும் அதே சமயத்தில் அவரிடமிருந்து கெடுதலான அந்த அலைகள் நம் தசைகளிலே படும் பொழுது அந்த உணர்வுகள் பட்டு அரிப்பு ஆகின்றது.

அந்த அரிப்பினாலே சில கிருமிகளாகி நம் தசைகளையும் அது கரைத்து விடுகின்றது.

பல வகைகளிலும் மனிதனுக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் இப்படி வருகின்றது. ஏனென்றால் மனிதனாகத் தோன்றியபின் மனிதனிலிருந்து தோன்றும் இத்தகைய உணர்வுகள் “உருவாக்கும் ஆற்றல்” பெற்றது.

இவ்வாறு நாம் அடிக்கடி பேசும் பொழுது இதைப் போன்ற நோய்களும் புற சரீர நோய்களும் உள் சரீரத்திற்குள்ளும் உணர்வின் அணுக்களாக மாறி விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் தப்பிக்க வேண்டும்.

அதிலிருந்து நாம் விடுபட துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறுவதற்காக யாம் இந்தத் தியானமும் ஆத்ம சுத்திப் பயிற்சியும் கொடுக்கின்றோம்.

1.இப்பொழுது யாம் இதைச் சொல்கிறோம்… நீங்கள் கேட்கின்றீர்கள்.
2.இதைப் போல நீங்களும் ஒவ்வொருவராகச் சொல்லும் பொழுது கேட்பவர்களுக்கும் இது பதிவாகின்றது
3.அவர்களுடைய உணர்வுகள் அங்கே பதிவாகி எண்ணத் தொடருடன் நல்லதாகின்றது.

இதைப் போன்று ஒவ்வொருத்தரும் ஒரு குடும்பத்தில் இருந்தாலும் சரி நம் தியான வழி அன்பர்கள் கூட்டுக் குடும்பத் தியானமிருக்கும் பொழுது ஒரு நாளைக்கு ஒவ்வொருவராகச் சொல்லிப் பழக வேண்டும்.

நாம் வீட்டிலிருந்தாலும் நம் குழந்தைகளையும் இதே மாதிரி அவர்களைச் சொல்லச் சொல்லி நாம் கேட்க வேண்டும். இந்த முறைகளில் நாம் பக்குவத்திற்கு வரவேண்டும்.

காரணம் “உணர்வுபூர்வமாக எடுத்து…” அதைச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லும்போது கேட்போருடைய செவிகளிலும் அது பதிவாகின்றது.
1.இவருடைய நல்ல எண்ணம் அவருக்குள் உருவாகும் பொழுது,
2.அந்த நல்ல எண்ணம் இவர் மேல் அன்பைப் பாய்ச்சுகின்றது.

கூட்டுக் குடும்ப தியானங்கள் இருக்கப்படும் பொழுது ஒவ்வொரு மெம்பர்களும் இன்று ஒருவர் சொன்னாலும் நாளை ஒருவரைச் சொல்ல வைக்க வேண்டும். நான்கு பேர் இருந்தாலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தரும் செய்து பழக வேண்டும்.

ஆத்ம சுத்தியும் பயிற்சியும் செய்யும் பொழுதும் ஒருவரே செய்ய வேண்டுமென்பது அல்ல. ஒவ்வொருத்தரும் இந்த நிலைகளைச் செய்து பழக வேண்டும்.

இப்படி ஒருவருக்கொருவர் அந்தக் கலப்பு உணர்வினுடைய நிலைகளில் ஒன்று சேர்ந்தோம் என்றால்
1.அந்தப் பிரியத்துடன் பாசத்துடன் நாம் சொல்லப்படும் பொழுது
2.அதே பாசம் இங்கே வளர்கின்றது.

ஏனென்றால் இந்த உணர்ச்சிகளை அங்கே தூண்டச் செய்வதற்கும் அந்த ஐக்கிய மனோபாவத்தின் நிலைகளும் இந்தப் பற்றுதலுடன் ஒன்று சேர்வதற்கும் இதைப் போன்று நாம் முறைப்படி செய்ய வேண்டும்.

என்னை நீ காண்… உன்னை நீ காண்…! – ஈஸ்வரபட்டர்

 

இது நாள் வரை நீங்கள் தியானத்தில் அறிந்த மார்க்கம் “ஞானத்தால் அறியும் மார்க்கம்…” நீங்கள் எடுத்துக் கொண்ட பக்தி முறை ஜெபவழி தியான வழி முறையில் ஞானம் கொண்ட ஞான வழித் தொடரினால்
1.உம் எண்ண அலைத் தொடரில்
2.எம் அலைத் தொடரின் தொடர்புடன்
3.ஞானத்தில் அறிந்த உண்மைகள் யாவையும்
4.செயல் முறையில் சித்துடன் காணப்படும் உண்மையையும்
5.செயல்படும் வழித் தொடர் நிலையையும் பாட முறைக்கு அறியுங்கள்.

காட்சி:-
ஒரு புட்டியில் தேன் உள்ளதைப் போன்றும் அத்தேனை உள்ளங்கையில் சிறிது விட்டுச் சுவைப்பதைப் போன்றும் தெரிகின்றது. இதன் விளக்கம் என்ன…?

விளக்கம்:-
பல தேனீக்கள் தன் உழைப்பால் சேமித்ததைச் சேமித்து வைத்த நிலை தான் புட்டியிலுள்ள தேன். அதைப் போன்று… சுவையான ஞானத் தேனின் சேகரிப்பு தான்… சக்தி பூண்ட ஞானிகளின் செயல் சேகரிப்பு…!

1.அவர்களின் ஞான அலைத் தொடரின் எண்ணமுடன்…
2.அவர்களின் அலை சக்தியான ஞான முறையை
3.இந்தத் தொடர் உபதேசத்தில் நீங்கள் அறிந்துள்ள தன்மையில்…
4.சேகரிக்கப்பட்ட இந்த ஞான அலையின் உண்மைதனை
5.புட்டியிலுள்ள தேனைச் சிறுகச் சிறுகக் கையில் ஊற்றிச் சுவைத்துப் பருகும் இனிமையான செயல் தன்மையில்
6.உங்களின் ஞானத்தால் அறிந்த நிலையின் செயல் வழிச் சித்து நிலை இருக்க வேண்டும்.

புட்டியிலுள்ள தேனை அப்படியே பருகினால் அதன் சுவையே தித்திப்பு திகட்டக்கூடிய எதிர்க்கும் தன்மை ஏற்படும். இதை உணர்ந்து ஞானத்தால் அறிந்து உண்மைதனைச் சித்து வழியில் அறிந்திட முதல் நிலை தான் “என்னை நீ காண்…!”

உன்னுள் உள்ள இறைவன் யார்…? என்பதை நீ முதலில் அறிந்து கொள்.

1.நான் என்பது யார்…?
2.இச்சரீர பிம்பக் கூட்டில் ஒளி அலைகள் மோதலில் காணப்படும் நிழல் பிம்பம் ஒன்று.
3.நீரிலோ நிலைக் கண்ணாடியிலோ காணப்படுவது எதிர் பிம்பம்.
4.செயலாக உண்ணுவது கழிப்பது உறங்குவது செயல் பிம்பம்.
5.இதனை இயக்கக்கூடிய ஆத்ம பிம்பம் தான் இப்பிம்பத்தையும் இப்பிம்ப எண்ணத்தையும் வழி நடத்திச் செல்வது…!

இதில் நான் என்பது யார்…?

ஆத்மாவாகித்தான் இச்சரீர பிம்ப எண்ணம் செயல் கொள்கின்றது. இச்சரீர பிம்ப செயலைத்தான் “நான்…” என்று உணர்ந்து நாம் எதனையுமே செயல்படுத்துகின்றோம்.

இச்சரீர பிம்பத்தில் ஓடும் எண்ணங்கள் யாவும் இச்சரீர சுழற்சியின் மோதலின் உணர்வுடனே செல்கிறது. செவி ஈர்த்து… கண் பார்க்கும் ஒளி வட்டத்தின் உணர்வுடனே… இவ்வெண்ணத்தைப் பாய்ச்சி “வாழ்க்கை” என்ற சூழலில் சுழலும் வட்டத்தின் செயலுக்காகவே வாழ்கிறோம்.

1.இச்சரீர பிம்பத்தின் நினைவுக்கும் – பிம்பத்தை அழகுபடுத்த ஆடை அணிகலன்களையும்
2.இப்பிம்பத்தின் வார்ப்பைப் பாதுகாக்க அதற்குகந்த சொகுசு முறையிலும் – பிம்பத்தின் சுவை ருசிக்காகவும்
3.இப்பிம்பத்தின் செயலை ஒத்த எண்ண ஓட்டமும் – பந்த பாசச் சுற்றுபுறச் சூழல் இவற்றின் செயல் வழிக்கொத்த உணர்வையும்
4.அதைப் போன்ற சரீர பிம்பச் செயல்களில் தான் இவ்வெண்ண ஓட்டங்கள் செயல்படுகின்றது.

அதிலிருந்து வடுபட்டு இச்சரீரத்தில் உள்ள உண்மை ஜீவ சக்தியான “ஆதிசக்தியின் உண்மைச் சக்தியை” ஆத்மா பெறவல்ல தன்மைக்கு நம் ஞானங்கள் செயல்பட வேண்டும்.

“ஆதி சக்தியான… நீர் சக்தியின் சக்தித் தொடர்பு தான்… சர்வ சக்தியையும் வளர்க்கவல்ல சக்தி…!”
1.ஆத்ம உயிருக்கு… இவ்வாத்மாண்டவன் வளரவல்ல தொடருக்கு
2.ஜீவத் துடிப்பு இயக்கத்தில் இருந்தால் தான்
3.அதன் வலுத் தன்மை கூட முடியும்.

காட்சி:-
கீழே ஒரு அடுப்பை எரிப்பதைப் போன்றும் பானை ஒன்றை அந்த அடுப்பில் ஏற்றி அந்தப் பானைக்குள் எதுவோ வெந்து கொண்டிருப்பது போன்றும் வேகப்படும் பொருளின் ஆவி வெளிப்படுவதைப் போன்றும் தெரிகின்றது.

விளக்கம்:-
இந்தப் பூமி அடுப்பைப் போன்றது. இச்சரீரம் பாத்திரம் போன்றது. அதில் வேகப்படும் பொருள் எவ்வெண்ணத்தை எல்லாம் கொண்டு இச்சரீரத்தில் நாம் போடுகின்றோமோ… அதன் சுவை தான் சொல்லாகவும் செயலாகவும் வெளிப்படும்.

பாத்திரத்தில் போட்டு வேகப்படுவதைப் போன்று இவ்வெண்ணத்தால் போடப்படும் நிலையின் சுவைதான் “இச்சரீரத்தை இயக்கும் உயிராத்மா பெறுகின்றது…”

பாத்திரத்தில் வேகப்படும் பொருளின் சுவை… மணம்… எப்படி ஆவியான தன்மையில் வெளிப்படுகின்றதோ அதைப் போன்று தான் இப்பால்வெளி மண்டலத்தின் சூரியனின் வளர்ப்புப் பிடியின் மோதலினால் இந்தப் பிம்ப இயக்கம் உள்ளது.

1.நீங்கள் பெற்ற ஞானத்தின் செயல் தொடர்பில்..
2.ஆத்மாவின் உண்மை இயக்கத்தை…
3.“உன்னை நீ காண்…!” என்ற பொருளின் உண்மையை செயல் அறிந்திடுங்கள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நம் உடலான சிவனுக்குள் எதனையும் வலுவாக்கும் அந்த உணர்வுகள் வலுப்பெற்றாலும்
1.எதனின் உணர்வு அதிகமோ
2.அதனின் உணர்வு கொண்டு நமக்குள் விளைந்து
3.நம் அடுத்த சரீரத்தை இது நிர்ணயிக்கின்றது.

இதை உணர்த்துவதற்குத்தான் சிவன் ஆலயங்களில் நாம் சுவாசிக்கும் நிலையைக் காட்ட (அந்தக் கணக்குகளைக் காட்ட) நந்தீஸ்வரனைப் போட்டுக் காட்டியுள்ளார்கள்.

ஐந்து புலனறிவு கொண்ட அந்த மிருகங்கள் தன் உணவை உட்கொள்ளும் பொழுது அது விஷத்தைத் தன் உடலாக எடுத்துக் கொள்ளும். நல்லதை மலமாக மாற்றிவிடும்.

இதைப் போல்
1.ஒரு விஷம் கொண்ட வேதனை கொண்ட
2.ஒரு மனிதனின் உணர்வுகளை நாம் நுகர்வோம் என்றால்
3.இது நம் உடலுக்குள் சென்று அதனின் தன்மை உருவாகி
4.நம் உடலின் தன்மையை விஷம் கொண்டதாக மாற்றிவிடும்.

இதனின் கணக்கின் தன்மை அதிகரித்து விட்டால் அடுத்து மிருக நிலைகளில் அல்லது விஷத் தன்மை கொண்ட அணுக்களின் தன்மையில் எதை அதிகரிக்கின்றோமோ அதனின் அணுவாக உருவாகிவிடும்.

விஷத் தன்மை உருவாகி விட்டால் அதன் வழிகளில் நம் அடுத்த சரீரத்தை இந்தக் கணக்கின் பிரகாரம் உருவாக்கும் என்ற நிலையைத் தெளிவாகக் கூறுகின்றது நம் சாஸ்திரங்கள். நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை.

1.இதை நாம் அறிவதில்லை.
2.இதை உணர்த்துவாரும் இல்லை.
3.உணரச் செய்யும் மனிதர்கள் இல்லை.
4.இதை உணர்த்தினாலும் இன்று ஏற்றுக் கொள்ளும் மனிதனும் இல்லை என்று
5.வேதனைப்பட்டுச் சொன்னார் குருநாதர்.

நீ இதனின் நிலைகள் கூறப் போகின்றாய்.

சாங்கியங்களும் சாஸ்திரங்களும் சொல்லிச் சிவனுக்கு அபிஷேகம் என்றும் ஆராதனைகள் என்றும் இவ்வாறெல்லாம் அபிஷேகித்து விட்டால் அந்தச் சிவன் எனக்கு ஓடி ஓடிச் செய்வான் என்று செயல்படுத்துகின்றனர்.

இத்தகைய உணர்வைத் தனக்குள் பதிவாக்கிய பின் அதே அணு அதன் உணர்வின் எண்ணங்களைத்தான் அவர்களுக்குள் உருவாக்கும்.

அதன் வழிப்படி மந்திரங்களையும் இந்த உணர்வின் தன்மையும் அதற்காக அபிஷேக உணர்வுகளைக் கொடுத்து இந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து விட்டால் “நந்தீஸ்வரா…” தன் எண்ணத்தின் தன்மை உருவாக்கி உணர்வின் அணுவாக உடலுக்குள் உருவாகிவிடும்.

இதையே மீண்டும்… “இந்த மந்திர ஒலியையே” மீண்டும் மீண்டும் எழுப்புவான் என்றால் இதன் கணக்கின் பிரகாரம் அடுத்த உடலின் ஈர்ப்புக்குள் சென்றுவிடுகின்றது.

பிறவியில்லா நிலை அடைவதில்லை.

ஆகவே
1.அந்தச் சிவன் ஆலயத்தில் எதை எண்ண வேண்டும்…?
2.எதைப் பெற வேண்டும்…? என்று மக்களுக்குத் தெளிவவாக நீ எடுத்துச் சொல்…! என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு உபதேசம் செய்த விதம்

 

அக்காலங்களில் எழுத்தறிவே இல்லை என்றாலும் ஞானிகள் தனக்குள் விளைய வைத்த உணர்வுகள் இன்றும் இந்தக் காற்றிலே உண்டு.

தன் உணர்வால் இயக்கப்பட்டு… இயக்கச் சக்திகளைத் தனக்குள் கவர்ந்து… உண்மையின் உணர்வலைகள் அவர்கள் கண்டுணர்ந்து வெளிப்படுத்தியதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பூமியில் இன்றும் அழியாச் சக்தியாகப் பரவிக் கொண்டுள்ளது.

அன்று ஞானிகள் வெளிப்படுத்தியதை உங்களுக்குள் நினைவுபடுத்தி இப்பொழுது கூர்மையாகப் பதிவு செய்யும் பொழுது அந்தப் பதிந்ததை நீங்கள் எடுக்க முடியும்.

ஒரு மரத்தில் விளைந்த வித்தினை மற்ற எந்த இடத்தில் கொண்டு போய் அதை ஊன்றினாலும்… புவி ஈர்ப்பின் துணை கொண்டு தாய் மரத்தின் உணர்வை அது நுகர்ந்து… செடியாகி மரமாகி தன் இனத்தை விருத்தி செய்கின்றது “வித்தாக…”

இதைப் போன்றுதான்
1.மெய் ஞானிகள் விண்ணுலக ஆற்றலை அறிந்து…
2.உணர்வின் எண்ணத்தால் தனக்குள் பதிவு செய்த உணர்வுகள்
3.அவருக்குள் விளைந்த நிலைகள் அனைத்தும் ஆற்றல் மிக்க சக்திகளாக அலைகளாக இன்றும் படர்ந்துள்ளது.

அதனை நுகர்வதற்கு நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அவர் கண்டுணர்ந்த உணர்வினை நினைவுபடுத்தி உங்களைக் கூர்மையாக கேட்கும்படி செய்கிறோம். இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் பதிவாகின்றது.

ஒரு மரத்தின் வித்து அதற்குள் இருக்கும் உணர்வின் துணை கொண்டு தான் அதனின் இனமான சத்தைக் கவர்ந்து அது விளைகிறது.

அதே போல்
1.ஞானிகள் பெற்ற அறிவின் ஞானத்தினை உங்களுக்குள் ஊன்றும் பொழுது
2.அதைக் கூர்மையாகக் கவனித்து நீங்கள் ஆழமாகப் பதிவு செய்து கொண்டாலே போதுமானது.

அந்த வித்தின் தன்மை விளையத் தொடங்கி விட்டால் இருளைப் போக்கி ஒளி காணும் உணர்வின் தன்மை நிச்சயம் நீங்கள் உங்களுக்குள் விளையும்… “அப்படி விளைய வேண்டும்…” என்பதற்குத்தான் இதை உபதேசிப்பது.

நான் (ஞானகுரு) கல்வி கற்றவன் தான். இருப்பினும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் அறிந்த உணர்வின் தன்மையை எனக்குள் பதிவு செய்தார்.

அவரைக் கூர்ந்து கவனிக்கும் அளவில் அவர் சொல்வது எனக்குப் புரியவில்லை என்று விலகினாலும்…
1.மீண்டும் அதை நான் புரியும்படி செய்வதற்காக வேண்டி என்னை உதைப்பார்…
2.திருப்பி அவருடன் என் எண்ணங்கள் கொண்டு எண்ணும் பொழுது… என்ன…? என்று கேட்கும்படி வைப்பார்
3.அந்தந்த நிலைகளில் அவர் எண்ணிய உணர்வுகளைத் திரும்ப எண்ணும் பொழுது
4.அவர் எதைக் கற்றுணர்ந்தாரோ அந்த உணர்வின் சக்தி எனக்குள் வருகின்றது

என்னை அடித்துத்தான் குருநாதர் ஒவ்வொன்றையும் உபதேசித்தார். ஆனால் அதை எல்லாம் உங்களுக்கு இப்பொழுது சொல்லாக… வாக்காகப் பதிவு செய்கின்றேன்.

கவனங்களை வேறு பக்கம் நீங்கள் திருப்பி இருப்பினும்
1.இடைமறித்து உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து
2.ஞானிகள் உணர்வின் இயக்கமாக நீங்கள் பெற வேண்டும் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

உபதேச வாயிலாக உணர்வின் வித்தாக ஆழமாக உங்களில் பதிவு செய்து கொண்டிருக்கின்றேன்… வளர்த்துக் கொள்ளுங்கள்.

இப்பிரபஞ்ச திரவகத்திலிருந்து கரையப்படா தங்கமாக… ஜொலிக்கக்கூடிய தன்மையாக நம் ஆன்மா வளர வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

ஆத்ம சக்தியின் உண்மையை உணர்ந்து ஞானத்தைப் பெருக்கும் உயர் ஞானச் செயலை அறிய ஏக்கம் கொண்டவர்கள்… இச்சரீர பிம்ப ஆத்ம எண்ண அலையை மகரிஷிகளின் பால் செலுத்தினால் சகலத்தையும் அறியும் ஆற்றல் பெற முடியும்.

அந்த அலைத் தொடரைப் பற்றிடல் வேண்டும். மகரிஷிகளின் அலைத் தொடர் என்பது என்ன…?

1.சகலத்தையும் அறியவல்ல.. சகலத்திலும் கலந்துள்ள… உயர் சக்தி கொண்ட சப்தரிஷிகளின் தொடர்பலையின் தொடர்பாக
2.இச்சரீர எண்ணமானது செலுத்தப்படும் தொடர் கொண்டு
3.இச்சரீர உணர்வு அமிலக்கூட்டின் வளர்ச்சி நிலைக்கு உகந்த அலைத் தொடர்பின் சக்தி தியானத்தால்
4.இச்சரீர பிம்ப உணர்வுகளோ.. இயக்கங்களோ… தன் நிலை மறந்த மயக்க நிலையோ அன்றி…
5.இந்த ஞான ஆத்ம பலத்தின் எண்ண ஞானத்தால் – உயர் தொடர்புடைய அலைச் சக்தியின் தொடரினால்
6.இந்தப் பிரபஞ்ச உண்மைகளையும் இதன் தொடர்பு கொண்ட பால்வெளி மண்டல வளர்ப்புத் தொடர் யாவையுமே
7.தன் நிலை மறக்கா உணர்வுடனே ஒவ்வொருவரும் காண முடியும்.

“சித்து நிலை” பெறுவது என்பதுவும் இதன் தொடர் அலை வழித் தொடரினால் தான்.

ஆகவே அத்தகைய ஆத்ம வலுவைக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்றால் இச்சரீர பிம்ப வளர்ப்பிற்கு நல் உர சக்தியைப் போட வேண்டும்.

நல் உர சக்தி என்பது… எது…?

1.தனித்த ஆத்மாவாக எண்ணத்தாலும் செயலாலும் பிற ஆத்மாவின் தொடரில் இருந்தெல்லாம் விலகி
2.தன் குணத்தின் நற்குணம் எது…? என்று அறிந்து
3.அதன் சுழற்சியில் பக்தி கொண்ட ஜெப ஞான தியானத்தால் மட்டும்
4.உயர் சக்தியை இவ்வாத்மாவுக்கு உரமாகச் செலுத்த முடியாது,

நறுமணமான நிலையிலிருந்தோ… அமைதியான சுற்றுச் சூழல் தனித்த வாழ்க்கை முறையிலோ… அதிலும் இவ்வாத்ம ஞானம் வலுக் கூடாது.

அதே சமயம்… பல மனிதர்களுடன் மத்தியில் வாழக்கூடிய தொடர் வாழ்க்கையில்… (இப்பொழுது வாழும் நிலை) அவர்களின் அலை ஈர்ப்பின் பிடிப்பில்… அவர்கள் செய்யும் குரோத வஞ்சனை உல்லாச கேளிக்கைகளுக்குள்… நம் உணர்வால் எடுக்கக்கூடிய எண்ன மோதலின் பிடியில் சிக்கி விட்டாலும்… இவ்வாத்மாவிற்கு நாம் போடக்கூடிய உரம் தடைப்படுகின்றது.

மனித ஆத்மாவிற்கு வலு உரம்… பின் எங்கிருந்து எப்படி எடுக்க முடியும்..?

ஒரு உயர்ந்த குண உலோகமான தங்கம் அது வளரக்கூடிய பகுதியில் மண்ணுடன் மண்ணாக ஒவ்வொரு இடத்திலும் அதன் வளர் தனமை வளர்ச்சி நிலை கூடிக் கூடி உயர்ந்த வார்ப்புப் படிவமாகின்றது.

அதாவது…
1.மண்ணின் சத்துப் படிவத்துடன் அடுக்கடுக்கான படிவமாக வளர்ந்து வலுக் கொண்ட உலோக வார்ப்பாக அத்தங்கம் வளர்வதைப் போன்றும்
2.நெருப்புடன் நாம் எப்பொருளைப் போட்டாலும் போடப்படும் பொருள் யாவையுமே அந்த நெருப்புடன் பஸ்பமாகும் நிலை போன்றும்
3.இந்த உலகச் சுழற்சி பந்த வாழ்க்கையில் இச்சரீர பிம்பம் சிக்குண்ட பிடியிலிருந்து தங்கத்தின் படிவமான வளர்ப்பைப் போன்று
4.இம்மண்ணான பிரபஞ்சத் தொடரின் உயர் உரமாக இச்சரீர பிம்ப ஆத்மாவிற்கு நாம் அளிக்கக்கூடிய உரமானது
5.தங்கத்தின் படிவமான வளர்ப்பை ஒத்த வளர்ப்பைப் போல் நாம் எடுக்கக்கூடிய சத்துத் தன்மை
6.திரவகத்தில் செலுத்தப்படும் செம்பு பித்தளை இரும்பு போன்று கரைந்தாலும் இத்தங்கம் கரையாத நிலை பெறுவதைப் போலவும்
7.நாம் அளித்த உரத்தின் தன்மை கொண்டு இந்த ஆத்ம சக்தி எவ்வீர்ப்புப் பிடியிலும் போய்ச் சிக்காமலும்
8.வந்து மோதும் பிரபஞ்சத் தொடர்பு வேண்டப்படாத தீய எண்ணங்களிலிருந்தெல்லாம் விடுபட்டு இவ்வாத்மா வலு தங்கத்தைப் போன்றும்
9.இப்பிரபஞ்ச திரவகக்திலிருந்து கரையப்படா தங்கமாக ஜொலிக்கக்கூடிய தன்மைக்குக் கொண்டு வர வேண்டும்.

இப்பொழுது வாழும் இந்தச் சுழற்சி வாழ்க்கையில் நம்முடன் தொடர்பு கொண்ட ஆத்மாக்களின் எண்ண உணர்வின் ஈர்ப்பு அலைத் தொடர்பை இச்சரீர பிம்ப எண்ணத்தில் நாம் எடுத்துத் தான் நம் ஆத்மாவிற்கு உரம் போட்டு உரமாக்க முடியும்.

ஆத்மத் தொடர்பின்றி ஆத்ம வலுவை நாம் பெருக்க முடியாது என்ற உண்மையைத் தெளிவாக உணர்ந்திடல் மிகவும் அவசியம்.

ஆனால் எந்த எண்ணத்தைப் பிற எண்ணத்தின் பால் நாம் செலுத்துகின்றோமோ அதே எண்ணத்தின் பிரதிபிம்ப அலை உணர்வின் எதிர் நிலைதான் நம் எண்ணத்திற்குள்ளும் வந்து அந்த அலை பாயும்.

பெண்மைக்கு ஆண்மைத் தொடர் அமில குணவார்ப்பு சக்தி இல்லாவிட்டாலும்… ஆணிற்குப் பெண்ணின் ஜீவ ஈர்ப்பு வளர்ப்பு இல்லாவிட்டாலும்… இவ்வாத்ம வலுவைத் தனித்த உணர்வு எண்ணத்தைச் செலுத்தி வளர்த்துக் கொள்ள முடியாது.

இவ்வாத்மாவிற்கு உரமே…
1.பிற ஆத்மாக்களில் செலுத்தும் எண்ண உணர்வின் தொடர்பலையிலிருந்து
2.இந்த ஞானத்தின் வலு செயல் கொள்ளத் தகக முறையால்
3.அமில உணர்வு வளர்ப்பு அணு வளர்ச்சியின் வலுக் கொண்ட உராய்வால் தான்
4.இவ்வாத்ம வலுவின் வளர் தன்மை உயரும்.

அத்தகைய உயர்வினால்… இச்சரீர ஜீவத் துடிப்பலையின் தொடர்பு கொண்ட வளர்ச்சியிலிருந்துதான்… “சகலத்தையும் அறியும் வளர்க்கும் சப்தரிஷியே… உருவானானப்பா…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் சென்றார். பல பல தாவர இனங்கள் உருவாகி அதனின் சத்து வெளிவரும் பொழுது சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து அந்தக் கவர்ந்த உணர்வலைகள் அலைகளாகப் படர்கின்றது.

பல பல செடிகள் உருவாகி வந்தாலும் அந்த உணர்வின் மணம் வரப்படும் பொழுது ஒவ்வொரு செடி உருவாகி வெளிப்பட்ட உணர்வலைகள் சூரியனின் காந்த சக்தி இங்கே கவர்ந்திருந்தாலும்
1.எந்தச் செடி உருவாகியதோ
2.அந்தச் செடியிலிருந்து வெளிப்பட்ட இந்த உணர்வின் வித்து இன்னொரு பக்கம் பட்டபின்
3.தன் தாய்ச் செடியிலிருந்து வந்ததைத் தன் இனமாகக் கவர்ந்து
4.அந்தச் செடிகள் எவ்வாறு உருவாகின்றது பார்…! என்று இதைக் காட்டினார் குருநாதர்.

அப்பொழுது அந்தச் செடிகள் ஒன்றுடன் ஒன்று அப்படி இணையப்படும் பொழுது சுழிக் காற்று வருவதைப் பார்க்கலாம்.

மற்ற செடியின் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று இணையப்படும் பொழுது
1.சுழிக்காற்றாக வீசி
2.அதிலே எந்த உணர்வின் சத்து அதிகமாகின்றதோ அது இதைக் கவர்ந்து
3.அதற்குள் சேர்த்து ஓர் உணர்வின் கருவாக உருவாகி
4.புவியின் ஈர்ப்புக்குள் சென்று “ஓர் புதுச் செடியாக” உருவாகின்றது.
5.புதுப் புது செடிகள் இப்படித்தான் தோன்றுகிறது.

இதைப் போல் தான் மனித வாழ்க்கையில் நாம் உயர்ந்த குணங்கள் கொண்டிருந்தாலும் பிறர் செய்யும் எண்ணத்தின் உணர்வுகள் நாம் சுவாசித்து உயிருக்குள் பட்டவுடனே சுழிக்காற்று போல் நமக்குள் சுழலும் தன்மை அடைகின்றது.

நாம் ஒன்றைப் பார்த்த உணர்வின் தன்மை பொறுமையாகக் கண் எடுத்துப் பதிவு செய்தாலும் இந்தச் சுழலின் தன்மை இரண்டும் ஒன்றாகி இது விளையும் கருவாக இரண்டும் சேர்ந்த ஒரு வித்தாகின்றது.

அது (இரண்டும் கலந்த) தான் ஈர்க்கும் சக்தியாக உருவாவதை “நீ பார்…” என்று அங்கே உணர்த்தினார் குருநாதர்.

இவ்வாறு உணர்த்திய பின் இந்த வாழ்க்கையில் மனிதர்கள் தவறு செய்யாமலேயே எவ்வாறு அவர்கள் தன்னையறியாமலே பல வேதனைப்படுகின்றனர் என்ற நிலையைக் காட்டுகின்றார்.

பிறருடைய எண்ணங்களை ஒருவருகொருவர் அந்த எண்ணங்களை எண்ணிய பின் அந்தந்த உணர்வின் ஆற்றல் மறைந்து
1.அந்த உடலுக்குள் புதுப் புதுக் கரு வித்துக்களாக ஊன்றி
2.இந்தக் காற்றிலே படர்ந்து வெளிப்படுத்தும் உணர்வுகளை அது தன்னிச்சையாகக் கவர்ந்து
3.மனிதனின் நிலைகளைச் சீர் கெடும் நிலைகளுக்கு எவ்வாறு எப்படி உருவாகின்றது என்ற நிலையைக் காட்டினார் குருநாதர்.

அங்கே காடும் இங்கே ஊரும் மற்ற நிலைகள் கொண்டு சுற்றிக் காண்பித்து… “இதிலிருந்து நீ மீளும் வழி என்ன…?” என்ற நிலையும் தீமைகளை வென்ற அருள் ஞானிகளுடைய நிலை என்ன…? என்பதையும் உணர்த்தினார்.

அன்று அகஸ்தியர் தனக்குள் வந்த தீமைகளை வென்றிட அந்த உணர்வின் சத்தைக் கொண்டு தன் எண்ணத்தால் மேகங்களை உற்றுப் பார்க்கப்படும் பொழுது அதனின் தன்மையைக் கவர்ந்து உடலுக்குள் வரும் பொழுது நீராகச் சுரக்கின்றது.

அத்தகைய ஜீவித நிலைகளைத் தனக்குள் வளர்த்துக் கொண்டார். அதைப் போல மற்ற தாவர இனச் சத்துக்களையும் அகஸ்தியர் நுகர்ந்தறிந்து வளர்த்துக் கொண்டார்.

இவ்வாறு
1.அகஸ்தியர் உடலிலே பதிந்த நிலைகள்
2.எங்கே நின்று அவர் உணர்வின் தன்மை கவர்ந்தாரோ
3.அப்பகுதிகளுக்கெல்லாம் குருநாதர் என்னை அழைத்துச் சென்றார்.

அவர் நின்ற பகுதியின் நிலைகளில் அந்த உணர்வுகள் பூமியிலே படரப்பட்டு இன்றும் அது பல நீர் சத்துக்களை அது கவர்ந்து கொண்டிருப்பதைக் காட்டுகின்றார்.

நீர் சத்தைக் கவர்ந்து அது அந்தப் பகுதியில் இருக்கும் பாறைகளுக்கும் அது உணவாக எடுத்து பல சத்தின் தன்மைகளை எப்படி மாற்றிக் கொண்டிருக்கின்றது…? என்பதனை “நீ பார்…” என்றார் குருநாதர்.

மனிதர்கள் பல தாவர இனச் சத்துக்களை உணவாக எடுத்து வளர்ந்தாலும் வளர்ந்த உணர்வின் சத்து எண்ணங்களாக மாறி அந்த எண்ணத்தின் வலுத் தொடர் கொண்டு தான் நாம் வாழ்கின்றோம்.

நஞ்சின் தன்மை கொண்டு ஒவ்வொரு செடியும் இயக்கப்பட்டாலும் அந்தச் செடிக்குள் கலந்த நஞ்சின் சத்தை அகஸ்தியர் விண்ணின் ஆற்றலை நுகர்ந்து தனக்குள் பெற்று அதை முறியடித்தார். தன் உணர்வுகளை ஒளியின் தன்மையாக மாற்றினார்.

ஒரு பாம்பு தனக்குள் இருக்கக்கூடிய நஞ்சின் தன்மையை மற்றதன் மீது பாய்ச்சி அதனைக் கரையச் செய்து தனக்கு உணவாக எடுத்துக் கொள்கின்றது. இதைப் போல
1.மனிதனின் உணர்வுக்குள் வரும் நஞ்சினை உணர்ந்து
2.அதனின் நிலைகள் கரைக்கச் செய்து அதைச் செயலற்றதாக ஆக்கி
3.உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக மாற்றியவன் அகஸ்தியன்.

அகஸ்தியன் உணர்வைக் கவர்ந்து நம்மையறியாமல் நமக்குள் புகும் பிறிதோரு வேதனையோ வெறுப்போ ஆத்திரமோ கோபமோ குரோதமோ அவைகளைக் கரைத்து நாமும் ஒளியாக மாற்றுவோம்.

“அகஸ்தியன் சென்ற பாதையில் வேகா நிலை அடைவோம்…”

அகஸ்தியன் உணர்வைக் கவர்ந்து நமக்குள் விளைய வைத்தால் அவன் வாழும் இடத்திற்கே நாம் செல்வோம்

 

அகஸ்திய மாமகரிஷி தனக்குள் ஒளியான உணர்வின் ஆற்றல் பெற்று விண்ணிலே சென்றபின் அங்கிருந்து வெளிப்படும் அலைகள் வானிலே மிதந்து கொண்டிருக்கின்றது.

பிரபஞ்சத்துக்குள் மிதந்து கொண்டிருக்கக் கூடிய, அந்த உணர்வின் சக்தியை நாம் நினைவு கொள்ளும் பொழுது…
1.அன்று அகஸ்திய மாமகரிஷி மனிதனாக வாழ்ந்த காலத்தில்
2.அவர் உடலில் விளைவித்த மூச்சின் உணர்வு அலைகள்
3.எண்ண ஒலிகளாக ஒலிபரப்பப்பட்டிருப்பதை நாம் அனைவரும் பெற முடியும்.

இப்பொழுது நாம் எந்தக் குணத்தை எண்ணிப் பேசுகின்றோமோ இதைப் போன்று அகஸ்திய மாமகரிஷி
1.தன் உணர்வின் ஆற்றல்மிக்க நிலைகளை வெளிப்படுத்திய நிலையும்,
2.வளர்ந்த நிலையும்… தான் வளர்ந்து கொண்ட நிலையும்… வளர வேண்டிய நிலையும்,
3.தன் உணர்வாற்றலால் வெளிப்படுத்திய அந்த நிலைகள்
4.இங்கே நமக்கு முன் பரவிக் கொண்டிருக்கின்றது.

அந்த வளர்ந்த நிலை… வளர வேண்டிய நிலை… இவை அனைத்துமே எவ்வாறு…? என்ற நிலைகளைத் தான் விநாயகத் தத்துவத்தில் கேள்விக் குறியாகப் போட்டுக் காட்டியுள்ளார்கள்.

விநாயகனைப் பார்க்கும் பொழுது… மேற்கே பார்த்து அந்த விநாயகனை வைத்திருப்பார்கள். நீர் நிலை இருக்கும் பக்கம்தான்,

ஏனென்றால்… அது ஜீவ நீர், ஆக அந்த ஜீவ நீர் நிலைகள் பக்கம் அதை நிலை நிறுத்தி நாம் நீரிலே மூழ்கி வந்தபின் இந்த விநாயகரைப் பார்த்ததும் நம் கண்ணுக்குள் இந்தக் கதையாக உணர்த்திய நினைவலைகள் வருகின்றது.

நாம் இந்த உடலை… மிருகத்திலிருந்து வளர்ச்சியாகி மனிதனாகப் பெற்றோம் என்ற உண்மையை உணர்த்திய அந்தத் துருவ மகரிஷியின் எண்ணத்தை நாம் எண்ணி வானை நோக்கி எண்ணி ஏங்கும்படி செய்கிறார்கள்.

அப்படி எண்ணும் பொழுது… கிழக்கிலிருந்து வரும் அந்தச் சூரியனின் கதிர் அலைகள் நமக்குள் காந்த அலைகளாகப் பட்டபின் அந்த உணர்வின் அலைகள் நமக்குள் ஈர்க்கப்பட்டு எந்த மகரிஷி உணர்த்தினாரோ, அவரின் உணர்வின் ஆற்றலைப் பெறும் நிலைகள் பெறப்படுகின்றது.

அப்பொழுது
1.அகஸ்திய மாமகரிஷி உணர்த்திய உணர்வின் ஆற்றல்
2.அவர் வெளிப்படுத்திய உணர்வின் தன்மைகள் இந்த பூமியிலே மிதந்து கொண்டிருப்பதினால்
3.அந்த உணர்வின் ஆற்றல் ஈர்க்கப்படுகின்றது.

அப்பொழுது அந்தச் சந்தர்ப்பம் நமக்குள் உயர்ந்த ஒளியின் தன்மையைப் பெறக்கூடிய வாய்ப்பு உருவாகின்றது.

ஆக… எந்த மனிதன் (அகஸ்திய மாமகரிஷி) தன் ஒளியின் தன்மையிலே விண் சென்றானோ அவன் வழியைத் தான் உணர்த்தியிருக்கின்றான்.
1.அவன் வழியை நாம் பின்பற்றிச் செல்லும் பொழுது
2.அவன் சென்ற இடமே நாம் போய்ச் சேர முடியும்.

ஆகவே… நாம் அனைவரும் அந்த அகஸ்தியன் சென்ற பாதையில் நடந்து… அருள் வாழ்க்கை வாழ்ந்து… இந்தப் பிறவியிலேயே பிறவியில்லா நிலை என்னும் நிலையாக அழியா ஒளிசரீரம் பெற்று… மகிழ்ந்து வாழ்ந்து… என்றும் பதினாறு என்ற நிலையை அடைவோம்.

தனக்குள் உள்ள இறை சக்தியை உணர்ந்து அதைப் பூஜித்தால் தான் முழுமையான வளர்ச்சி கிடைக்கும் – ஈஸ்வரபட்டர்

 

1.ஜீவ பிம்ப சரீரத்திலிருந்து தான் ஆத்ம உயிர் வலுப் பெற வேண்டும்.
2.ஆத்ம உயிர் வலுப் பெற ஜீவ சக்தி வேண்டும்.

“நீரின் சக்தியைக் கொண்டு” ஆவியாகும் காற்றும்… நெருப்பும்… கொண்ட தொடர் வளர்ச்சி இப்பூமியைச் சுழல வைப்பதைப் போல் எச்சக்தி வளரவும்… “இஜ்ஜீவ சக்தி தேவை…”

இஜ்ஜீவ சக்தி ஆவியாகிச் சமைக்கப்படும் சத்து நிலை தான் சரீரக் கூறின் எலும்புகளின் வளர்ச்சியைக் கொண்டு பிம்பத்தின் வார்ப்பு ஆரோக்கிய நிலை பெறுகின்றது. அதன் வலுச் சக்தியைச் சரீரத்தைச் சுற்றியுள்ள ஆத்ம வலுவேற்றிக் கொள்கின்றது.

இந்தச் சரீரக் கூடு சமைக்கும் சத்தெடுத்து வளரும் ஆத்மாவிற்கு இந்த உலகப் பந்தத்தில் சுழலில் விஷமாகக் கலந்துள்ள இன்றைய எண்ண குரோத நிலையிலிருந்து நம் ஆத்மா வலுப் பெறும் மார்க்கம் என்ன…?

எப்படி விஷமான நாக சர்ப்பத்தின் உடலில் மாணிக்கக்கல் வளர்கிறதோ… அதைப் போன்று
1.இவ்விஷ உலகப் பிடியிலிருந்து உயர் ஞான அலைத் தொடருக்கு நாம் சென்று
2.அந்த அலைச் சக்தியையே நம் உணர்வின் எண்ணச் சுவாசம் வளர்க்கும் நிலை கொண்டு
3.அவ்வளர்ப்பின் சக்தி வலுவை இவ்வுயிர் ஆத்மா பெறப் பெற
4.ஆத்மா வலுப் பெற்ற ஞான வளர்ச்சி நிலைக்குப் பிறகு
5.தன் வலுவைத் தானே வளர்க்கக்கூடிய “ஆத்ம சித்து” நிலையின் செயல் முறையும் அடையலாம்.

எண்ணத்தின் வீரியத்தில் ஜெப முறையின் பக்தி மார்க்க ஆவேச அலைத் தொடரில் அதே அலைத் தொடர் கொண்ட ஆத்ம குடியிருப்புக்கு இந்தச் சரீரத்தில் குடியிருக்க இடம் தந்து அவ்வலை ஞானத்தை இச்சரீரத்தின் உதவி கொண்டு அவற்றின் ஞானத்தால் பெயரும் புகழும் அடைந்தாலும் இந்த உலகச் சுழற்சிக்குள் தான் மீண்டும் மீண்டும் சுழல முடியும்.

1.எக்கவி பாடினாலும்…
2.எவ்விஞ்ஞானத்தை அறிந்தாலும்…
3.தன்னைத் தான் உணர்ந்து
4.தனக்குள் உள்ள இறை சக்தியைத் தான் வளர்த்து
5.ஒவ்வொரு நொடிப் பொழுதும் உயர் ஞான ஈர்ப்பலையின் தொடர் அமிலத்தை வளர்க்கவல்ல
6.சுவாச ஈர்ப்பு மின் காந்த வளர்ச்சி ஓட்ட வளர்ப்பினால் மட்டும் தான் உயிர் ஆத்மா வலுக்கூடும்
7.எவ் ஈர்ப்பலைக்கும் சென்று இந்த உடலை விட்டு எந்த நிமிடத்திலும் உடலிலிருந்து இயக்கவும்
8.உடல் அற்ற நிலையிலும் வலுக் கொண்ட ஆத்மா எவற்றிலும் சிக்காவண்ணம்
9.செயல்படுத்தும் சித்து நிலையும்… இதன் வளர்ச்சித் தொடர் யாவையுமே பெற முடியும்.

ஆனால் சில அலைத் தொடர்பின் பக்தி முறை ஜெப வழியில்… கூடு விட்டுக் கூடு பாயும்… உடலை அடக்கி ஆத்மாவைப் பிற உடலுக்குச் செலுத்தி செயல்படுத்திய பல மாந்திரீகத் தொடர்பு கொண்டவர்கள்… அதன் தொடர்பால் வேறு ஒரு ஈர்ப்பலையில் சிக்குண்டு… “தான் பெற்ற சித்துகளின் சக்தியையே அழித்துக் கொண்டனர்…”

உயர் ஞானத் தொடர்பின் அலைத் தொடரில்…
1.“தன்னைத் தான் நம்பி… தனக்குள் உள்ள இறை சக்திக்குப் பூஜிப்பு நடத்தி வளர்த்தால் அன்றி
2.வளர் சக்தி பெறுவது… மற்றெந்த நிலையிலும் கடினம்.

“தன் ஆத்ம உயிரைக் கொண்டு…” ஆத்மாவின் சக்தி தான் இந்த உடல். இந்த உடலை இயக்குவதே இவ்வாத்மா தான் என்பதை முதலில் உணர வேண்டும்.

1.தன் உயிராத்மா வளர… வலுப் பெற…
2.ஜீவ சக்தி தரவல்ல இச்சரீர கோளத்தின் உண்மை உணர்ந்து
3.உயிர்த் துடிப்பின் செயலுக்கு வலுத் தந்த
4.தாய்மைச் சக்தியின் தொடர்பைப் பூஜித்தே
5.ஒவ்வொரு ஆத்மாவும் இதன் உண்மையின் வழித் தொடரைப் பெறுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

1.விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் “மகரிஷிகள்” உணர்வலைகளை நாம் நுகர்ந்து
2.நமக்குள் உள்ள உணர்வு அனைத்தையும் ஒளியாக மாற்ற வேண்டும்.

அந்த மகரிஷிகள் எப்படி வேகா நிலைகள் கொண்டு ஒளியாக இருக்கின்றனரோ அதைப் போல அவர்களின் உணர்வை நம் நல்ல உணர்வுடன் செருகேற்றி வேகா நிலை என்ற நிலை அடைந்து என்றும் போகாப்புனல் போல பிறவியில்லாத நிலைகள் அடைவது திண்ணம்.

வேகா நிலை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதை உபதேசிக்கின்றேன். வேகா நிலை நீங்கள் அடைய வேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேன்
1.நீங்கள் அருள் ஒளி பெற வேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேன்
2.உங்களை அறியாது வந்த தீமைகள் அகல வேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேன்
3.மகரிஷிகளின் அருள் ஒளி நீங்கள் பெற வேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேன்
4.இவ்வாறு நான் ஆசைப்படுவதை என் உயிர் எனக்குள் படைக்கின்றது.

இதைப் போல நீங்களும் ஒவ்வொரு நிமிடமும் “ஈஸ்வரா…” என்று விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று உங்கள் உடலுக்குள் வரும் தீமைகளை நீக்கிக் கொள்ளுங்கள்.

உங்களைப் பார்ப்போர் அனைவருக்கும் கஷ்டத்தைக் கேட்டுணர்ந்தோர் அவர்களுக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வினைப் பாய்ச்சுங்கள்.

உங்களுடைய நிலைகளை நான் எண்ணும் பொழுது அந்த எண்ணத்தை என் உயிர் அதைப் படைக்கின்றது. இயக்குகின்றது. குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அவர் எனக்கு இதைத்தான் சொன்னார்.

1.உங்கள் உயிரை நான் கடவுளாக மதிக்கின்றேன்.
2.உங்கள் உயிரை நீங்கள் கடவுளாக மதியுங்கள்.
3.பிறருடைய உயிரையும் கடவுளாக மதியுங்கள்.
4.ஒவ்வொரு உடலையும் “அந்தக் கடவுள் தான் எடுத்தது…” என்று மதியுங்கள்.

இதைப் போல நீங்கள் எண்ண வேண்டும். அந்தச் சக்திகளை நீங்கள் பெற வேண்டும் என்ற இந்த நோக்கத்தில் தான் மீண்டும் மீண்டும் இதைப் பதிவாக்குகின்றோம்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியை நீங்களும் பெற்று மனிதன் என்ற புனிதச் சரீரத்தை அழியாச் சரீரமாக ஒளியின் தன்மையாக மாற்றி என்றும் விண்ணுலகில் பெரு வீடு பெரு நிலை என்ற நிலையில் சென்றடைந்த அந்த மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்தில் சென்றடையலாம்.

இருள் சூழ்ந்த இந்த நஞ்சு கொண்ட மனித வாழ்க்கையில் நஞ்சினை நீக்கி நாம் உயர்ந்த நிலைகள் பெறுவோம் என்ற இந்த நிலைக்குத்தான் தியானமும் பயிற்சியும் கொடுக்கின்றோம்.

அதே சமயத்தில் நம்மைச் சார்ந்தோர்களான நம் மூதாதையர்கள் குலதெய்வங்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை நாம் விண் செலுத்துதல் வேண்டும்.

அவர்களை விண் செலுத்தினால் தான் அவர்களின் துணை கொண்டு இந்தச் சக்திகளை நாம் எளிதில் பெற முடியும்.

அரசன் என்ற அசுர உணர்வை விடுத்து விட்டு அருள் ஞானிகளின் அருள் உணர்வை வளர்ப்போம்

 

அரசர்கள் மக்களுக்கு நல்லது செய்தாலும் தனக்கு மரியாதை வேண்டும் என்று எண்ணும் போது அதிலே சிறிதளவு மரியாதை குறைந்தாலும் பழி தீர்க்கும் உணர்வுடன் அழிக்கும் எண்ணம் கொண்டு அவர்களை அழித்து விடுகின்றார்கள் அரசர்கள். இது அரசனுடைய நியதிகள்.

அரசர்கள் அவர்கள் எதைச் செய்தாலும் மற்றவர்கள் அவர்களை ஒத்துச் செல்ல வேண்டும். மற்றவர்கள் அவனுக்கு அடிமையாக இருக்க வேண்டும். ஏனென்றால் மற்றவர்கள் ஓங்கி வளர்ந்து விட்டால் தன்னை அழித்து விடுவார்கள் என்று இந்தப் பய உணர்வு கொண்டு தான் ஒவ்வொரு அரசரும் செயல்பட்டார்கள்.

இன்று அத்தகைய அரசாட்சி இல்லை என்றாலும் அன்றைய அரசர்கள் தனக்குள் ஏற்படுத்திக் கொண்ட அதே நிலைகள் தான் கௌரவப் பிரச்னையாக நம்முடைய மனித வாழ்கையினுடைய நிலைகளிலும் வந்துவிட்டது.

தன் சொல் மற்றவர்களுக்குக் கீழ் அடிபணிந்துவிடக் கூடாது என்ற இந்த உணர்வின் அடிப்படையில் ஒவ்வொருவரும் இயங்கப்படும் போது
1.எதைக் காக்க வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோமோ
2.அதைக் காக்க முடியாமல் அதையே அழிக்கும் நிலைகளுக்கு வந்துவிட்டோம்.

எந்த அரசனும் அவன் இட்ட நிலைகளில் இருந்து நீடித்த நாள் வாழ்ந்ததில்லை. வாழ்ந்து விடுவோம் என்று எண்ணிய உணர்வுகள் கொண்டு அதே விஷத்தின் துடிப்பு கொண்டு கடைசியில் தன்னையே அழித்துக் கொண்டான்.
1.அவன் சென்ற வழிகளில் மக்களை அழித்து விட்டான்
2.அழிக்கும் எண்ணத்தை மக்கள் மத்தியிலும் ஊட்டி விட்டான்.

ஆக மொத்தம் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்தாலும் “தான்…!” என்ற நிலைகள் வரும் போது தன்னையும் அழித்து தன்னைச் சார்ந்தோரையும் அழித்து மனித வர்க்கத்தையே இழிவான நிலைகளுக்கு இட்டுச் சென்று விட்டார்கள் அன்றைய அரசரகள்.

ஆனால் மனிதனாகத் தோன்றிய நிலையில் மகரிஷிகள் ஒவ்வொருவரும் தான் மெய்யை உணர வேண்டும் என்ற நிலையில் தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றி என்றும் பதினாறு என்று பெரு வீடான பெரு நிலைகள் பெற்றுச் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் உணர்வலைகள் இன்று விண்ணிலேயும் நம் பூமிக்குள்ளும் படர்ந்து கொண்டுள்ளது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி அந்த மாமகரிஷிகள் வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்க சக்திகளை யாம் (ஞானகுரு) சுவாசித்து அந்த உணர்வின் ஆற்றல்களை உங்களுக்குள்ளும் பாய்ச்சுகின்றோம்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று வாழ்க்கையில் உங்களை அறியாது வரக்கூடிய துன்பங்களிலிருந்து நீங்கள் எல்லோரும் மீள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
1.எனக்குள் இந்த ஆசை தோற்றுவித்ததற்குக் காரணமே அந்த மகரிஷிகளின் உணர்வுகள் தான்.
2.அந்த மகரிஷிகளின் உணர்வின் அலைகள் தான் இங்கே பேசுகின்றது. நான் பேசவில்லை…!

அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருப்பதால் தான் அதை நான் பெறுகின்றேன்.

அதைப் போன்று நீங்கள் எதைப் பெற வேண்டும் என்று எந்த ஆசையுடன் வருகிறீர்களோ அந்த ஆசை உங்களுக்குள் இந்த நிலைகளுடன் அதற்கு வழி வகுத்து உங்களை அறியாது வந்த தீமைகளை நீக்கி ஒளியின் சரீரம் பெறுவோம் என்று உறுதி கொள்ளுங்கள்.

அன்று போகமாமகரிஷி எப்படிப் பிரபஞ்சத்தின் நிலையைத் தனக்குள் அடக்கி புவனேஸ்வரி என்ற சக்தியைத் தனக்குள் உணர்த்தினாரோ அதே போல இந்த புவனத்துக்குள் இருக்கக்கூடிய சக்தியும் உங்களுக்குள் ஐக்கியமாகி உங்கள் மூச்சும் பேச்சும் பிறரை மகிழச் செய்யும் உணர்வாகத் தோன்ற வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்திகள் உங்கள் உடலுக்குள் விளைந்து உங்கள் உயிரில் ஒன்றும் உணர்வின் தன்மையை நீங்கள் ஒளியாக மாற்றி
1.உலகத்துக்கு வழி காட்டும் உணர்வின் ஒளி அலைகளாக…
2.”அது பரவ வேண்டும்…!” என்று பிரார்த்திக்கின்றேன்.

இந்தச் சரீர பிம்ப மூட்டையே பல எண்ணத்தில் சுழல்கின்ற உருவ மூட்டை தான்…! – ஈஸ்வரபட்டர்

 

கை வண்டியில் பல மூட்டைகளைப் போட்டு வண்டியை இழுத்துச் செல்வதைப் போல் ஒரு காட்சி தெரிகின்றது.

அந்த மூட்டையில் உள்ள பொருள் எது..? என்று அறியாமல் அந்த மூட்டையைப் பார்த்தவுடன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம் உதயமாகின்றது.
1.அரிசியாக இருக்கும்… பருப்பாக இருக்கும்…! என்று சில எண்ணங்களும்
2.சிலருக்கு அதே தொடர்புத் தொழிலில் ஊறிய நிலை பெற்றவர்கள்
3.அந்த மூட்டையின் கோணத்தைக் கொண்டே பருப்பு மூட்டை சர்க்கரை மூட்டை அரிசி மூட்டை என்று யூகிப்பவர்களும் உண்டு.

ஆனால் அந்த மூட்டையைக் கட்டியவனுக்கும் இழுத்துச் செல்பவனுக்கும் “அதில் என்ன உள்ளது…?” என்று தெரியும்.

இதைப் போன்றே இந்த உடல் மூட்டையில் எந்த எண்ணத்தைப் போட்டு வளர்த்திருந்தாலும்… அந்த மனிதனின் புற உருவத்தைக் கொண்டு… செய்யும் தொழில் உற்ற பந்தங்களின் தொடர் பொருளாதார நிலை இதனைக் கொண்டு… ஒரு மனிதனின் நிலையை யூகிக்கும் தன்மை தான் புற உலக எண்ணங்களில் பருப்பாக இருக்குமோ… அரிசியாக இருக்குமோ… என்ற நிலைப்படி….!

கலந்துறவாடித் தொடர்பு கொண்டவர்கள்… தொடர்பு நிலையால் மூட்டையின் வடிவ நிலையைக் கொண்டு அதனதன் பொருள் தான்… என்று எப்படி உணர்த்துகின்றோமோ இதைப் போன்று தான் கலந்து வாழ்பவர்கள் “ஒரு மனிதனின் குணத்தை இந்தக் குணமுடையவன் தான்…” என்று உணர்கின்றார்கள்.

1.ஆனால் இந்த உடல் என்ற மூட்டையில்..
2.எதை எண்ணத்தால் ஒரு மனிதன் போடுகின்றானோ
3.அதன் நிலை போடுபவனுக்கு எப்பொருள் என்று தெரிகின்றதோ அதைப் போன்றே
4.ஒரு மனிதனின் எண்ண குணம் அவ\னுக்குத் தான் தெரியும்.

அவன் எண்ணத்தால் போட்டதன் பொருள் நிலை அறிந்து… அவனை இயக்கிச் செல்லக்கூடிய அவன் எண்ணத் தொடர்பு கொண்ட உயர் சக்திகளுக்கும்… அவ்வண்டியோட்டியின் நிலையை ஒத்த நிலையில் அறிய வாய்ப்பு உண்டு.

இந்தச் சரீர பிம்ப மூட்டையே பல எண்ணத்தில் சுழல்கின்ற உருவ மூட்டை தான்…!

இச்சரீர பிம்பத்தில் ஓடக்கூடிய எண்ண ஒலியின் உணர்வலைகள் இப்பொழுது வாழும் வாழ்க்கையும்… முந்தைய காலச் சேமிப்புத் தொடர்பையும்… சுழன்று ஓடும் இந்த எண்ண ஓட்டத்தின் செயலில் வாழ்ந்தது… உண்டது… கழித்தது… ஆகிய
1.எல்லா நிலைப்பட்ட குப்பையின் மத்தியில் தான்
2.உயர் ஞானத்தை வளர்க்கவல்ல உயிர் ஆத்மா உள்ளது.
3.இந்த உயிராத்மாவிற்கு நாம் வலுக் கூட்டிக் கொள்ள…
4.இந்தக் குப்பையான சரீர எண்ணத்தில் உள்ள சத்து நிலையை உரமாக இவ்வாத்மா எடுத்து
5.உயர் ஞான வித்தாக பிறிதொரு ஈர்ப்புச் சுழற்சியில் சிக்காவண்ணம் உயர் ஞானம் பெறல் வேண்டும்.

குப்பையின் மத்தியில் வளரும் மணியான வித்து தன் வளர்ப்பில் அக்குப்பையின் சத்தை எடுத்து பல வித்துக்களைத் தரவல்ல சக்தியைப் போன்று நாம் பிரிக்கும் சக்தி பெற வேண்டும்.

இச்சரீர பிம்ப மூட்டையில் சேமித்துள்ள குப்பையான பல வாழ்க்கைத் தொடர்புகளையும் இவ்வுலகப் பந்தச் செயல் எண்ண உருவத்தில் எல்லாம் இந்த எண்ண ஓட்டத்தை “எப்படியும் செலுத்தி வாழலாம்…” என்று இருக்கக் கூடாது.

ஏனென்றால் வாழ்க்கையில் எந்தெந்த நிகழ்ச்சி ஓட்டத்தில் எல்லாம் நம் எண்ணங்கள் மோதுகின்றதோ அதன் வழித் தொடர் பெற்ற பின் அதன் அலை ஈர்ப்பு வார்ப்பாகத்தான் இச்சரீர பிம்பம் வளர்க்கும் ஆத்ம நிலையும் செல்லும்.

அவ்வாறு ஆகாதபடி… நமக்குத் தொடர்பு கொண்ட இச்சரீர எண்ண மோதலின் வாழ்க்கை தொடர்பு நிலையிலுள்ள செயலில்
1.குப்பையான உணர்வை எடுத்து இந்தச் சரீரத்தை மேலும் குப்பையாக்காமல்
2.நம்மைச் சுற்றியுள்ள நாம் செல்லும் செயல் வழியிலும் இவ்வெண்ணத்தை நாம் செலுத்தும் முறையே
3.குப்பையில் உள்ள சத்தை எப்படி அவ்வித்து தனக்கு உரமாக எடுத்து வளர்கின்றதோ
4.அதைப் போன்ற எண்ணமுடன் நம் ஞானம் செல்லுமானால்
5.நம் உயிராத்மாவின் வலு வலுவாகும் சக்தி நிலையை நாம் பெற முடியும்.

மின்சாரத்தை எடுத்து அதன் சக்தியைப் பல சாதனையாக ஒளி பெறவும் நாம் இயக்கக்கூடிய இயந்திர ஓட்டங்களுக்கும் அதன் உபயோகத்தைக் கொண்டு குளிர்ச்சியையும் வெப்பத்தையும் சாதனைக்குகந்த செயலாக உபயோகப்படுத்திக் கொள்கின்றோம்.

சக்தி கொண்ட அந்த மின்சாரம் ஒரு நொடிப்பொழுது இந்த மனித ஜீவனுடன் மோதினால் மனிதனையே அழிக்கக்கூடியது. அப்படிப்பட்ட வலுக் கொண்ட மின்சாரத்தைத் தனக்குச் சாதகப் பக்குவத்தைக் கையாண்டு பல செயல்களை அதன் உதவி நிலையில் பெறுகிறோம்,.

அதைப் போல் இந்த வாழ்க்கைச் சுழற்சியில் ஓடக்கூடிய மின் அலையின் வீரிய சக்தியே விஷமான உணர்வுடன் சுழல்வதால்… இவ்வெண்ணத்தின் ஈர்ப்பை ஒரு நொடி அவ்வலையில் செலுத்தினாலும்… மின்சாரத்தின் தாக்குதலைப் போன்று அழிவு நிலைக்குத் தான் செல்ல முடியும்.

1.அதனையே நாம் அந்த மின்சாரத்தின் செயலை நமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் வழி முறை போன்று
2.நம் ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்… நம்மால் முடியும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இந்த மனித உடல் நமக்குச் சொந்தமல்ல.

ஆனால் கோபமோ ஆத்திரமோ வந்து
1.என்னை அவர்கள் இப்படிப் பேசினார்கள்…
2.இவர்கள் குறையாகப் பேசினார்கள்…
3.கேவலமாகப் பேசினார்கள் அவமதித்துப் பேசினார்கள்…! என்கிற
4.இந்த உணர்வுகளைத்தான் நாம் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

இந்த உடலே நமக்குச் சொந்தமில்லை என்கிறபோது இந்த உடலைத்தானே அப்படிப் பேசுகின்றார்கள்.

இந்த உடலை விட்டு உயிரான்மா வெளியே போய்விட்டால் இதை யாராவது மதிக்கின்றார்களா…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்த உடலை யாரும் மதிப்பதில்லை.

எவ்வளவு அழகான உடலாக இருந்தாலும் திடீரென்று ஒரு ஹார்ட் அட்டாக்கோ மற்ற ஏதோ வந்தால் எத்தனை அவஸ்தைப்படுகின்றோம்…? என்னென்னவோ செய்து முட்டி மோதுகிறோம்…!

இருந்தாலும் இந்த உடலை விட்டு இந்த உயிரான்மா போய்விட்டது என்றால் இந்தச் சரீரத்தை யார் மதிக்கின்றார்கள்…?

கூடக் கொஞ்சம் நேரம் வைத்திருக்கலாம் என்றால் “இல்லை… நாற்றமாகிவிட்டது… சீக்கிரம் கொண்டு போக வேண்டும்…” என்று தான் சொல்கின்றோம்.

ஏனென்றால் வைத்திருக்கலாம் என்றால் அதற்குள் உடல் அழுகிப் போய்விடும் வீடே நாற்றமாகிக் கெட்டுப் போய்விடும்… “கொண்டு போய்ச் சேருங்கள்…” என்று தான் சொல்கின்றோம்.

ஆக இவை அனைத்திற்கும் எங்கே இருக்கின்றது…?

உயிர் தான் மூலமாக இருக்கின்றது. அந்த உயிர் இருக்கும் வரை தான் “இந்த மரியாதை”.

ஆனால் நாம் அந்த மகரிஷிகளின் உணர்வை இந்த உயிருடன் ஒன்றிச் சேர்த்துவிட்டால்
1.இந்த உடல் என்ற மரியாதை போய்
2.உயிர் என்ற நிலைகள் கொண்டு உயிருடன் ஒன்றிய
3.அந்த மகரிஷிகள் அருள் உணர்வுடன் “அந்த மரியாதை” நமக்குள் வந்துவிடும்.

இதை நாம் பழகிக் கொண்டால் இந்த உடலின் தன்மையைப் பற்றி அதிகமாக நாம் நினைக்க வேண்டியது இல்லை. நினைப்பு வராது…!

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குத் துடுப்பாகக் கொடுக்கின்றோம். அதை வைத்து இந்த வாழ்க்கையின் கடைசி எல்லையான
1.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் சென்றடைய முடியும்.
2.அந்த மெய்ஞானிகளுடன் ஒன்றி வாழ வேண்டும்.

இவ்வாறு தீமைகள் அகற்றும் நிலைகள் கொண்டு அந்த மகரிஷிகளின் ஆற்றலை நமக்குள் பெற்றால் இது தான் “நரசிம்மா…”

ஒவ்வொரு நிலைகளிலும் தீமைகளை அகற்றித் தீமைகளை அகற்றி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நமக்குள் வளரும் பொழுது என்றுமே அது தீமைகளை நாடாது நம்மைப் பாதுகாக்கின்றது.

அதனின் தன்மை கொண்டு நாம் “ஒளியாக…” மாறுகின்றோம். அவ்வளவு தான்.

27 நட்சத்திரங்களின் சக்தியை எடுத்துத் தான் எதுவுமே நம்மை எதிர்மறையாக இயக்காதபடி சமமாக்க முடியும்

 

27 நட்சத்திரங்களில் இருந்து வரக்கூடிய சக்திதான் விண்வெளியில் இருந்து வரும் நஞ்சினை வென்று நம் பூமிக்குள்ளும் அந்தச் சக்திகள் பரவிக் கொண்டு வருகின்றது.

27 நட்சத்திரங்களின் உணர்வுகளைப் போன்றது தான் மனிதனுடைய எண்ணங்களும். மனிதனின் எண்ணங்கள் அனைத்துமே நட்சத்திரம்தான்.

நட்சத்திரங்களுடைய ஆற்றல்கள் மற்ற பாறைக்குள் புகுந்து தாவர இன சத்தாக அது விளைகின்றது. அந்தக் கதிரியக்கம் தான் மற்ற மணத்தைத் தூண்டி இயக்கச் செய்கின்றது.

அந்த 27 நட்சத்திரங்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு குணங்கள் கொண்டது. ஒவ்வொன்றுடன் அவை இணையும் பொழுது பல கோடிப் பிரிவுகளாக அது பிரிகின்றது.

1.அந்த 27 நட்சத்திரங்கள் எத்தகைய ஆற்றல் பெற்றதோ அதைப் போல அந்த உணர்வின் சக்தி நமக்குள் பெற வேண்டும் என்று
2.அந்த மெய் ஞானிகளின் சக்தியை நாம் பெறுதல் வேண்டும்.

நம் உடல் அனைத்தும் கோள்தான். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நம் உயிரிடம் வேண்டுகிறோம்… உயிர் சூரியன்.

உயிர் வழி அந்த ஞானியின் உணர்வை எண்ணும் பொழுது அந்த எண்ணம் வலுப் பெறுகின்றது. மகரிஷிகளின் அருள் சக்தி நம் ஆன்மாவாக மாறுகின்றது. அந்த உணர்வின் துணை கொண்டு தான் நஞ்சினை வென்றிடும் ஆற்றலைப் பெறுகின்றோம்.

ஆகையினால்தான் ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று எண்ணி அந்த 27 நட்சத்திரங்களைப் பற்றி எண்ணச் சொல்கிறோம்.

1.அந்த 27 நட்சத்திரங்களைப் பற்றி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டி
2.அதை எப்படி நீ தொட வேண்டும் என்ற பக்குவத்தைக் கொடுத்துள்ளார்.
3.அந்த 27 நட்சத்திரங்களின் சக்திகளை எதனுடன் இணைக்க வேண்டும்…?
4.அதை எடுத்தால் உன்னை எப்படி அது சுடாது இருக்கும்…?
5.அந்தக் கதிரியக்கங்கள் உன்னைப் பாதிக்காது எப்படி இருக்கும்…? என்ற நிலையைக் காட்டினார்.

ஆகவே குருவின் துணை கொண்டு அதனை நான் (ஞானகுரு) கவர்கின்றேன். அப்படிக் கவர்ந்த நிலைகள் கொண்டு
1.27 நட்சத்திரங்ளின் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று உங்களை எண்ணச் சொல்லி விட்டு
2.இந்த இணைப்புடன் ஊழ்வினையாகப் பதிவு செய்கின்றேன்.

சிறுகச் சிறுகப் அந்த 27 நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் கிடைக்கப் பெறச் செய்கிறோம். அந்த 27 நட்சத்திரங்கள் சக்தி கொண்டு சமப்படுத்தும் நிலையை நீங்கள் முழுமையாகப் பெற முடியும்.

1.அந்த 27 நட்சத்திரங்களின் உணர்வுகளை எடுத்துத்தான் மகரிஷிகள் அனைத்தும் தனக்குள் ஒன்றாக்கி
2.உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றியுள்ளார்கள்.

அதாவது
1.எதுவுமே இயக்கம் அல்லாது அதனின் உணர்வின் இயக்கமாக மாற்றி
2.நெகடிவ் பாசிடிவ் என்று கரண்ட் எப்படி உண்டாகின்றதோ இதைப்போல சமநிலைப்படுத்தி…
3.ஒரு நிலை கொண்டு ஒன்றைத் தனக்குள் இரையாக்கி… உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றியவர்கள்.

அந்த மகரிஷிகள் பெற்றது போன்று நீங்களும் பெற வேண்டும் என்பதற்குத் தான் இருபத்தியேழு நட்சத்திரத்தையும் நவக்கோளின் சக்தியையும் பெறச் சொல்வது.

மகரிஷிகள் இதையெல்லாம் வடித்துக் கொண்டவர்கள். அதனால்
1.அந்த உணர்வின் சத்தை இதனுடன் கலந்து புது எண்ணங்களாக உருவாக்கி
2.அதனை நீங்கள் பருகும் நிலைக்குத் தான் இதைச் செய்வது.

எதை எண்ணினாலும்…
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் நீங்கள் இருப்பீர்கள் என்றால்
2.அது ஊழ்வினையாகப் பதிவாகி அதனின் செயலாக உங்கள் உணர்வுகள் இயங்கி
3.மெய்ஞானியின் உணர்வை ஒளியாக நீங்கள் பெறக்கூடிய தகுதி பெறுவீர்கள்.

ஆகவே அடிக்கடி உங்கள் உயிரை ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று எண்ணி மேலே சொன்ன மாதிரி நினைவுக்குக் கொண்டு வந்து அந்த ஆற்றல்களைச் செயல்படுத்த வேண்டும். எமது அருளாசிகள்.

தன்னை நம்பாது… பிறரை நம்பியே வாழ்கிறார்கள் இன்றைய மனிதர்கள் – ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.தன்னைத்தான் நம்பாமல்…
2.தனக்கு மேல் வலுவான பூஜிப்பு முறையால்…
3.பல அலைத் தொடர்புகளின் சக்தி அலையை நம்பி…
4.அதன் தொடர்புடன் தான் இன்றளவும் “பக்தி பூஜிப்பு வழி முறை…“ இருக்கின்றது.

நமக்கு மேல் சக்தி கொண்ட தெய்வங்களை அடிபணிந்து… அருள் வேண்டி… அவ்வலையின் வசத்தில் நாம் வளரும் பக்குவத்திலேயே இன்றளவும் காலம் சென்று விட்டது.

1.தன் வலுவைத் தான் கூட்டி
2.தன்னையே தான் நம்பி
3.தானும் வலுவான தெய்வ சக்தியின் சக்தியாகலாம்…! என்பதையே மறந்து வாழ்கின்றனர்.

மற்றொன்றிடம் யாசித்து… பக்தி உணர்வு கொண்டு வேண்டிப் பெறும் குண வழிச் செயலாகத் தான் இன்றளவும் செயல்கள் உள்ளது.

ஞானத்தை எட்டிப் பார்க்கும் தன்மை இல்லை…!

ஒவ்வொரு ஜீவ சக்தியிலுமே தன் வலுவை வளர்க்கக்கூடிய வலுத் தன்மை உண்டு.
1.உடல் வேறு… ஆத்மா வேறு…!
2.ஆத்மா பிரிந்து விட்டால் உடல் செயல் இழந்துவிடும் என்ற உண்மையை உணர்ந்த மனிதன்
3.தன் ஆத்ம இயக்கத்தின் உண்மையை உணரவில்லை.

உடலை விட்டுப் பிரிந்தவர்களுக்கும் ஆத்ம உயிர் உண்டு. சரீர பிம்ப உடலை இயக்குவதும் அவ்வாத்ம பிம்பம் தான். உடலைச் சுற்றி இவ்வாத்மாவின் இயக்கம் செயலாற்றும் தன்மைக்கு… “ஜீவத் துடிப்பு கொண்ட” இயக்க இயந்திரம் தான் இவ்வுடல் கோளம்.

எண்ணம் எப்படி உதயமாகின்றது…?

மூளையின் பதிவு நிலையிலோ… மற்ற சரீர பிம்ப உடல் உறுப்பின் நெஞ்சிலிருந்தோ… எண்ணம் உதயம் பெறவில்லை…!

இவ்வாத்மாவின் உந்தலின் எண்ணம் கொண்டுதான்… இவ்வுடல் இயந்திரத் துடிப்புக் கோளத்தின் ஆத்ம உயிரின் மோதலினால்.. இச்சுவாசம் எடுத்த உயிர்த் துடிப்பின் மோதல் இருந்தால்தான் சுவாசம் எடுக்க முடியும்.

1.ஆத்மாவின் செயலாக இந்த உயிர்த் துடிப்பு ஏற்பட்டு
2.உயிர்த் துடிப்பின் உந்தலுக்கு இச்சுவாசத்தின் மூலமாக
3.ஆத்மாவின் எண்ண செயல் கவன நரம்பில் மோதி
4.சிறு மூளையின் இயக்கத்தால் செவி ஒலி ஈர்த்து எண்ணச் செயல் நடக்கின்றது.
5.ஆத்மாவின் உந்தலுக்குகந்த எண்ணச் செயலை
6.உடல் கோளத்தைக் கொண்டு செயலாக்கிக் கொள்கின்றனர்.

காற்றலையில் கலந்துள்ள ஒலி அலையை வானொலிப் பெட்டி மின் தொடர்பு ஏற்படுத்தியவுடன் எவ்வலைத் தொடரில் அம்முள்ளை வைக்கின்றோமோ அவ்வலையின் ஒலி கேட்பதைப் போல்
1.இவ்வாத்மா அலையின் உந்தல் இவ்வுயிர் சிரசில் பட்டு
2.உயிர்த் துடிப்பைக் கொண்டு… சுவாசத்தின் எண்ணச் செயல் நடக்கின்றது.

இவ்வெண்ணத்தின் செயலை மாற்றியமைக்கும் நிலை… வளர்க்கும் நிலை… குறைக்கும் நிலை… எதுவாக இருந்தாலும்
1.இஜ்ஜீவத் துடிப்பு கொண்ட சரீர இயக்க அணு வளர்ப்பின் வளர்ப்பில் இருந்து தான்
2.இவ்வாத்மாவின் வலுவையே வலுவாக்கக்கூடிய வழித் தொடர் பெற முடியும்.

ஆத்மாவின் செயலான எண்ணத்தை உயர் அலையின்பால் செலுத்தி அதை வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

உயர் அலை என்பது இந்தப் பூமியின் பிடிப்பலையில் இந்தப் பூமியின் சுழற்சியுடன் சுழலும் அலைத் தொடர்பின் வட்ட ஈர்ப்பில் வாழும் நிலையிலிருந்து மகரிஷிகளின் அலைத் தொடர்பு ஞானத்தை மேல் நோக்கிய சுவாசத்தால் எடுக்கப் பழகுதல் வேண்டும்.

1.எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் முறை வழியால்
2.அந்த உயர் காந்த மின் அலையின் தொடர்பை நாம் எடுக்க எடுக்க
3.இந்த உடலில் இருந்தே சரீர அணுக்களின் ஈர்ப்பு வளர்ப்பலையால் ஆத்மாவின் வலுவைக் கூட்டி
4.இவ்வாத்மாவை எந்த நிலைக்கும் செலுத்திச் செயலாக்ககூடிய வலுவை இந்த மனிதச் சரீரம் பெற முடியும்.

தன்னைத் தான் நம்பி…! தனக்குள் உள்ள இறை சக்தியின் உயர் அலையைப் பிற அலைகள் தங்க இடம் தராமல் நல்லதாக மாற்றிட முடியும்.

ஏற்கனவே நம் உடலில் குடிவந்துள்ள எந்த வகையான குண வலு கொண்ட ஆத்மா இருந்தாலும்… நம் ஆன்மா வலு கூடக் கூட… நம் வசப்பிடி வலுவாக… அதனையும் செயலாக்கும் வலுவாக்கி… நம் ஆத்ம சக்தியை நாம் வளர்த்து… “ஒவ்வொருவருமே இறைவனாகலாம்…!”

எங்கோ இல்லை இறைவன்…! இங்குள்ள இறைவனை நாம் தூசிக்காமல் ஒவ்வொருவருமே நாம் இறைவனாகலாம்.

மனிதனும் தெய்வமாகலாம் என்பது… போற்றலில் பிறர் போற்றி வணங்கும் தெய்வமல்ல…!
1.மனிதன்தான் தெய்வ சக்தியைப் படைக்கவல்லவன்.
2.தெய்வ குண வழி முறை செயல்பாடு உருவக குண செயலையே உருவாக்க வல்ல சக்தி… “மனித சக்தி தான்…”

ஒவ்வொரு ஆத்மாவும் அந்த நிலை பெறலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இன்று உலகில் எங்கேயோ இருக்கும் செய்திகளைக் கேட்டறிய பார்த்துணர விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட ரேடியோ டி.வி கம்ப்யூட்டர் மூலம் எத்தனையோ விதமான நிலைகளை
1.உற்றுப் பார்த்து நமக்குள் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்
2.அவை அனைத்தும் நம் உடலுக்குள் பதிந்து கொண்டேயுள்ளது.

உதாரணமாக
1.கடுமையான நிலைகளும்
2.மனிதனுடைய சிந்தனையைக் குழப்பும் நிலைகளும்
3.பல விதமான விளையாட்டுகளையும்
3.போர் முரசு கொண்டு அரக்கத்தனமான ஓர் போர் முறையைக் காண்பிப்பதும்
4.ஈவு இரக்கமற்ற செயல்களைச் செய்வதையும்
5.அதன் அருகில் இருந்து மற்றவர்கள் சிரிப்பதைப் போன்றும்
6.அதை வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்றும் காட்டுகின்றார்கள்.

இதைப் போன்ற நிலைகளை நமக்குள் பதிவாக்கி விட்டால் அந்த அசுர குணங்களின் உணர்வுகள் அனைத்தும் பதிவாகின்றது. அணுக்களாக விளையத் தொடங்குகின்றது.

அதிலே இந்தப் படவிழிகளிலே (படத்தைக் காட்டும் திரை – MONITOR) எர்த் இந்தப் படங்களை அடிக்கடி மாற்றி அந்த உணர்வின் தன்மையை நமக்குள் மாறுபடும் நிலைக்குக் கொண்டு வருகின்றார்கள்.

இவ்வாறு மாறுபடும் தன்மையாகும் அதற்குள் விஞ்ஞான அறிவு கொண்டு நம் சிந்தனையைக் குறைக்கும் நிலையாகச் சில நிலைகளைப் பரப்பியுள்ளார்கள்.

அதையெல்லாம் நாம் வேடிக்கையாகப் பார்த்தாலும் உற்றுப் பார்க்கும் பொழுது நமக்குள் பதிவாகிவிடுகின்றது.

பதிவாக்கியதன் துணை கொண்டு ஒரு இடத்திலிருந்து கொண்டு நம்மையெல்லாம் “புத்தி பேதமாக்கி…” உலகம் முழுவதற்கும் உள்ள மக்களைத் தன் மதமாக மாற்றிடவும் உலகையே ஆட்சி புரிய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

1.இயற்கையாகத் தாவர இனங்கள் வெளிப்படுத்தும் உணர்வலைகளை நாம் சுவாசிப்பதற்குப் பதில்
2.கெமிக்கல் கலந்த உலோகக் கலவையால் கலந்து உருவாக்கப்பட்ட திரைகள் மூலம்
3.நாம் பார்த்துச் சுவாசிக்கும் உணர்வலைகள் அதனின் இயக்கமாக
4.மனிதன் என்ற சிந்தனையைச் சிறுகச் சிறுக இழக்கச் செய்து கொண்டுள்ளது.

இத்தகைய செயற்கையால் உருவாக்கப்பட்ட “விஷம் கொண்ட மின் காந்த உணர்வலைகள்” உலகம் முழுவதும் பரவி ஆறாவது அறிவு கொண்ட மனிதனை “ஐந்தறிவு…” கொண்ட மிருகமாக மாற்றும் நிலைக்கே வந்துவிட்டது.

மனிதர்கள் மனித ரூபத்தில் இருந்தாலும் ஐந்தறிவு கொண்ட மிருகத்தின் செயலாகத்தான் செயல்படுவார்கள். ஏற்கனவே இந்த நிலை ஆகிவிட்டது. மனிதனை மனிதனே உணவாக உட்கொள்ளும் செயல்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

இதிலிருந்து விடுபட வேண்டும் என்ற நிலைக்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமான உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்கின்றோம்.

பதிவாக்கியதை நினைவுக்குக் கொண்டு வந்து துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறுங்கள்.
1.துருவ நட்சத்திரம் சிறிதளவு விஷத்தையும் ஒளியாக மாற்றும் ஆற்றல் பெற்றது.
2.அதன் ஆற்றல் கொண்டு விஞ்ஞானத்தால் உருவான நச்சுத் தன்மைகளைப் போக்குங்கள்.

உடலை விட்டு எப்பொழுது அகன்றாலும் அங்கே துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து பிறவியில்லா நிலை அடைவீர்கள்.

உங்கள் உயிரான்மா அழியாத நிலைகள் கொண்டு ஒளியின் சரீரமாகும்.

September 2021 உபதேசம்

சாமி (ஞானகுரு) சொன்னபடி “அருள் சக்தியைப் பெறுவேன்…” என்ற எண்ணத்திற்கு நீங்கள் வர வேண்டும்

 

ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கும் பொழுது அந்தச் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று அடிக்கடி தியானியுங்கள்.
1.கண்களைத் திறந்து ஒரு நிமிடம் எண்ணுங்கள்
2.கண்களை மூடி ஒரு நிமிடம் அந்தச் சக்திகளை உடலுக்குள் செலுத்துங்கள்.

இங்கே யாம் (ஞானகுரு) கொடுக்கும் உபதேச வாயிலாகப் மகரிஷிகளின் அருள் சக்திகளை இங்கே பதிவு செய்து வைத்திருக்கின்றோம்… காற்றிலேயும் பரப்பி வைத்திருக்கின்றோம்.

அதைப் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணி எடுக்கும் பொழுது உங்கள் உடலுக்குள் தன்னாலே வந்து சேருகிறது.
1.கண்களை மூடி… பின் திறந்து
2.மறுபடி கண்களை மூடி… திறந்து அந்தச் சக்திகளை எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
3.கண்களைத் திறந்த பின் “வீட்டில் கஷ்டம்…” என்று சொல்வதை விட்டு விடுங்கள்
4.உங்கள் வார்த்தையில் கஷ்டம் என்ற சொல்லை நீக்கி விட்டு
5.அதனை நீக்கும் அந்த அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

எங்கள் குடும்பத்தினர் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும். எங்கள் வீட்டில் உள்ளோர் அனைவரது உடல்களிலும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்.

எங்கள் குடும்பத்தில் நாங்கள் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும். சகோதர உணர்வுகள் வளர வேண்டும் நாங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று இப்படித் தொடர்ந்து எண்ணுங்கள்.

இதைத் தான் நான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு வருகின்றேன். “சாமியார் சொன்னார்” என்றால் அதை மட்டும் நீங்கள் நம்புகிறீர்கள். ஆனால் நீங்கள் எண்ணி எடுக்கலாம் அல்லவா…!

மிகவும் கஷ்டமாக இருக்கிறது… என் பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை… தொழில் சீராக இல்லை… என்று இங்கே வந்து இப்படித்தான் என்னிடம் கேட்கின்றார்கள்.

காற்றிலே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பரவியுள்ளது. வீட்டில் அமர்ந்தபடியே அந்த அருள் சக்திகளைப் பெற்று நீங்களே எடுத்து உங்கள் வீட்டிலே பரப்பிக் கொள்ள முடியும்.

இதை நீங்களே செய்யலாம்.

1.என்னை நம்பி என்னிடம் எதிர்பார்க்கின்றார்கள்.
2.ஆனால் தன்னை நம்பி நான் சொன்ன உணர்வுகளை நீங்களே எண்ணி எடுக்க முடியும்.
3.அதற்குத் தான் இங்கே தியான மண்டபம் அமைத்தது.

உயர்ந்த சக்திகளை அவரவர் எண்ணி எடுப்பதற்குத் தான் இந்த மண்டபமே தவிர அது எனக்காக அல்ல. இதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்…?

உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உங்களுக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று நான் எண்ணி எடுக்கும்போது நான் அங்கே செல்கின்றேன்.

அந்த மகரிஷிகள் அருள் சக்தியைப் பெறுகின்றேன். என்னை நாடி வருபவர்களுக்கெல்லாம் அது கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக நீ ஆகின்றாய் என்று கீதையிலே சொல்வது போல் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணும் போது “நான் அதுவாக ஆகின்றேன்…”

ஆகவே…
1.உங்களை அறியாது இருள்கள் நீங்க வேண்டும்
2.மெய்ப் பொருள் காணும் திறன் நீங்கள் பெற வேண்டும்
3.எல்லோரும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும்
4.தொழில் நன்றாக இருக்க வேண்டும்… செல்வச் செழிப்பாக வாழ வேண்டும்
5.உங்களுடைய மூச்சுகள் எல்லாம் பரமாத்மாவில் கலந்து அனைவரையும் நலமுடன் வாழச் செய்ய வேண்டும் என்று
6.நான் உங்களுக்குச் செய்வது போல் நீங்களும் மற்றவர்களுக்கு இப்படி எண்ணினால் நீங்களும் ஞானியாக முடியும்.

ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மக்கள் பெற வேண்டும் என்று முதலில் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின்…
1.எங்கள் வீடு முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
2.நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்
3,எங்கள் தாய் தந்தையின் அருளாசி எங்களுக்குக் கிடைக்க வேண்டும்
4.எங்கள் மூதாதையர்களின் நல்லாசி கிடைக்க வேண்டும்
5.எங்கள் வாடிக்கையாளர்கள் எல்லாம் நலமாக இருக்க வேண்டும்
6.எங்களுக்கு நல்ல மனதும் எங்களைப் பார்ப்பவர்களுக்கு நல்ல மனதும் வர வேண்டும் என்று
7.உங்கள் உயிரிடம் கேட்டால் அவன் அதை எல்லாம் உருவாக்கித் தருவான்…!

இதை நீங்கள் கேட்டுப் பெறலாம் அல்லவா.

சாமியிடம் தான் கேட்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. உங்களாலே அது முடியும்… உங்களை நீங்கள் நம்புங்கள் என்று சொல்கிறேன்.

என்னை நம்புகிறீர்கள்… ஏதோ பெரிய சக்தி படைத்தவர் என்று…!
1.ஆனால் நான் சொன்னபடி நீங்கள் எண்ணி எடுத்துப் பாருங்கள்.
2.உங்களுக்குள் எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது என்று நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.

காளி… பராசக்தி… என்று அம்மனை வணங்கும் வழி எல்லாம் அரசர்களால் உருவாக்கப்பட்டது தான் – ஈஸ்வரபட்டர்

 

ஆதிசங்கரர் காலங்களிலும் அதற்கு முந்தைய காலங்களிலும் இப்பூமியில் பல மகான்கள் வளர்ந்தார்கள். தன் ஞானத்தால் தெய்வசக்தி பெற்று சப்தரிஷியின் தன்மைக்குத் தன் வலுவையும் வலுவாக்கிக் கொண்ட மகான்களை வளர்த்த பூமி தான் “நம் தாய் பூமி…”

1.அதன் தன்மையின் தொடர் வளர்ப்பு நிலையற்று
2.அந்த ஞானச் செயலே விஞ்ஞானச் செயலாக
3.ஞானத்தின் தொடர் அலையின் செயல் “செயற்கை ரூபத்தில்…”
4.ஏட்டுப் படிப்பு வழி முறையிலும் இவ்வொலி அலை மின் சாதனத் தொடர்பலையிலும் சென்று விட்டது.

இதுவல்லாமல் தன் ஞானத்தால் வளர்ந்த சக்தியைச் செயல்படுத்த வந்தவர்கள் எல்லாம் தன் வலுத் தன்மையின் வலுவை எடுக்கவல்ல ஆத்ம வளர்ச்சி ஞானம் குன்றிய தன்மையில்
1. கல்லில் சிலை செய்து ரூப வழிபாட்டு முறைப்படுத்திக் கொண்டு
2.தன் பக்தியைக் காட்ட “வணங்கும் தொடரை” ஏற்படுத்திக் கொண்டார்கள்.

அதுவுமல்லாமல் இந்தப் பூமியின் வளர்ப்பில் சுழற்சி ஓட்ட கதியில் மண்டல ஈர்ப்பு சந்திப்பு நிலைகளிலெல்லாம் இப்பூமியின் வளர்ப்புத் தன்மையினால் பல மாற்ற “பிரளய காலங்கள்” ஏற்பட்டது.

ஒவ்வொரு பிரளய மாற்றத்திலும் இப்பூமியின் ஈர்ப்பு வளர்ப்பு செயல் ஓட்டமானது வளர்ப்பின் நிலைக்குகந்த மாற்றச் செயலினால் அந்தந்த மாற்றத்திற்குப் பிறகு வளரக்கூடிய அணு வளர்தன்மையும் மாறியே வந்தது.

1.குண ஈர்ப்பின் அமிலமே பிரளய மாற்றத்திற்கு முன் இருந்த நிலை வேறு…
2.மாறிய பிறகு வளரும் நிலை வேறாக
3.இப்பூமியில் படியும் அமில வலு மாறிவிடுகின்றது.

தங்கத்திலோ மற்ற உலோகத்திலோ செய்யப்படும் பொருள்களை மாறி மாறி அதை அழித்து நாம் மற்றொன்றாக உருவாக்கும் பொழுது அதனுடைய தரத்தில் மாற்றம் ஏற்படுகின்றதல்லவா…!

அதைப் போன்ற நிலை தான் இத்தொடரில் வந்துள்ள ஞான வளர்ப்பு நிலை வளர்ச்சி தொடர் அலையே இப்பூமி வெளிக்கக்கும் அமில வளர்ப்பின் நிலைக்கொப்பத்தான் ஞானமும் வளர்கின்றது இன்றளவும்.

இந்த ஞானத்தின் செயல் முறை வழித் தன்மையே ஆதிசங்கரரின் காலத்திற்கு முந்தைய காலத்திலிருந்து அவரின் காலம் வரைக்கும் ஞான சக்தி வளர்ச்சியின் பாதையில் இருந்தது.

அவருக்குப் பிந்தைய காலத்தில்…
1.அரசர்களின் போற்றலின் பேராசை உணர்வு நிலை அதிகப்பட்டு விட்டதாலும்
2.மனித இன (மக்கள் தொகை) வளர்ச்சிப் பெருக்க நிலையினாலும்
3.மனிதனின் எண்ண ஈர்ப்பே இப்பேராசை உணர்வில் சிக்கி
4.அரசர்கள் ஆண்ட கால உணர்வில் அவர்களின் ஆதிக்க ஈர்ப்புப் பிடிப்பில் சிக்கிய தொடர்பலை வளர்ப்பாக
5.ஒன்றின் தொடர் கொண்ட தொடர் வட்டச் சுழற்சியில் சுழன்று வருகின்றது இன்றளவும்.

அரசர்களின் காலத்தில் தான் இப்பக்தி வழி முறை அதிகமாக வளர்ந்தது.

அதுவுமல்லாமல் இவ்வரசர்களினால் சில அலைத் தொடர்களைச் சில சக்தி வாய்ந்த பக்தி கொண்ட தெய்வ குண சித்து நிலை கொண்ட அலைத் தொடர்புடைய தெய்வ ஆவி அலைகளைத் தன் வசப்படுத்திக் கொண்டார்கள்.

தன் ஆதிக்க அரசு வாழ பிற அரசர்களின் போர்த் தொடர்புகளுக்கு இவ்வாவி அலை தெய்வ குணச் சக்திகளை இவர்களின் பூஜாபலனால் உருவேற்றிக் கொண்டார்கள்,

விக்கிரமாதித்தன் காலத்திலும் அசோக சக்கரவர்த்தி காலத்திலும் அதைப் போன்றே வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்திலும் பல அரசர்களும் இப்பூஜை வழிபாட்டுச் சித்து முறை பெற்று ஆவிகளின் தெய்வ குண தேவதைகளின் தாய் சக்தியை வணங்கி வந்தார்கள்.
1.அவர்கள் நாட்டை அரசாண்ட காலத்தில்
2.அரசர்களின் வலுவுக்கு வலுவாக இச்சக்திகள் தான் ஆண்டன.

புராண இதிகாச நூல்களில் சித்தர்கள் பால் தொடர் கொண்ட காவியங்களில் எல்லாம் ஆண் பெண் குண சக்தியின் தொடர்பில் உணர்த்தித்தான் உண்மை நிலைகளை எல்லாம் காட்டினார்கள்.

சிவ சக்தி… விநாயகன்… முருகன்… விஷ்ணு… என்றும் நாரதர் என்றும் ஆணின் தொடர்பு முறையை வலியுறுத்திய தெய்வ குணங்களாக இராமரையும் கிருஷ்ணரையும் ஒவ்வொரு பிரளய மாற்றத்திலும் இராமரின் குண சக்தியையே பல ரூப அலை ஞான செயல் குண இராமனாக உணர்த்தினார்கள்.

சீதாராமன்… பலராமன்… பரசுராமன்… இப்படிக் கால மாற்றத்தின் குண நிலை வளர்ப்பு அமில எண்ணத்திற்குகந்த செயல் உருவ வளர்ப்பிற்கு அந்தந்தக் காலங்களின் வீரியத் தன்மைக்குகந்த நாமகரணங்களைச் சூட்டி ஆண் குண அமிலத் தன்மைக்குகந்த தெய்வச் செயலைத்தான் “சப்தரிஷிகளின் சித்தர்களின் காலங்கள்” உணர்த்தின.

“அரசர்கள் காலத்தில்” வணங்கிய தெய்வங்கள் யாவையுமே பெண் சக்தியான காளி மாதா… என்றும் அதன் தொடர்புடைய ரூபத்தில் பராசக்தி… என்றும் ஜக்கம்மா… என்ற தாய் சக்தியும் உஜ்ஜயினி காளி சக்தியும்… சௌண்டம்மனின்.. தொடர்பும் இத்தொடரால் வந்தவை தாம்.

1.மனித சக்தியின் தெய்வ சக்தி பெற்ற
2.சித்து நிலை கொண்ட தாய் குணத்தின் பூஜிப்பின் அலைத் தொடர் வசச் செயலினால் தான்
3.அரசர்கள் பலர் அத்தொடர்பினால் தன் வலுவுக்கு வலு கூட்டிக் கொண்டு அரசர்களின் காலம் நடந்தது.

அந்தத் தொடர்பின் வழி முறையில் தான் “இக்கலியே நடக்கின்றது…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒவ்வொரு நிமிடமும் “மெய்ஞானியின் அருள் ஒளியை…” யாம் உபதேசிக்கும் பொழுது நமது குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு
1.புலனறிவுகள் ஐந்திலும்
2.கண்ணின் பார்வையிலும் உணர்வைச் செலுத்தி
3.உங்கள்பால் யாம் செலுத்துகின்றோம்.

நீங்கள் எந்த ஏக்கத்துடன் வருகின்றீர்களோ அந்த ஏக்கத்திற்குள் நாம் இதைப் பாய்ச்சச் செய்கின்றோம்.

இதைப் போன்ற உணர்வின் வேகம் கொண்டு குருநாதர் காட்டிய அருள் வழிப்படி
1.யாம் உங்கள் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து
2.உங்கள் உயிரான காந்தத்துடன் தொடர்பு கொள்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை முதலில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டு மெய்ஞானியின் அருள் சக்திகளை யாம் சுவாசிக்கின்றோம்.

அவ்வாறு சுவாசிக்கும் பொழுது எனது புலனறிவான ஐந்திலும் அது பாய்கின்றது. அதே சமயம் எனது உணர்ச்சியின் சொல்லின் வடிவிலும் அது வருகின்றது.

அவ்வாறு வரும் நிலைகளைத்தான் உங்களுக்குள் யாம் எண்ணிப் பாய்ச்சுகின்றோம்.

அதைப் பெற வேண்டும் என்று சமமாக எண்ணும் பொழுதுதான் நீங்கள் அந்த நிலைகளைக் கேட்க முடியும். “கேட்க வேண்டும்” என்ற விருப்ப நிலைகள் வரப்படும் பொழுதுதான் இது உங்களுக்குள் பதிவாகின்றது.

ஆனால் வேறு பக்கம் எண்ண அலைகளைப் படரவிட்டு எண்ணிக் கொண்டிருந்தால் யாம் உபதேசிப்பதைக் கவராது உங்கள் ஈர்ப்பினுடைய நிலைகள் தடையாகும்.

உதாரணமாக பேசும் பொழுது மைக்கை (MIC) அந்தப் பக்கம் திருப்பி வைத்து விட்டால் சப்தம் குறையும். அதைப் போல
1.மற்ற உணர்வின் நிலைகளை நமக்குள் நினைவுபடுத்தும் பொழுது
2.நமது உணர்வுகள் நாம் பேசும் உணர்வலைகள் ஒன்றுக்கொன்று மாறுபடப் போகும் பொழுது
3.”அரத்தங்கள்…” உங்களுக்குள் பதிவாகாது
4.இதைப் படித்திருந்தாலும் கேட்டிருந்தாலும் இதற்குப் பின் “ஞாபக சக்தியும்” வராது.

அதனால் அர்த்தமற்ற உணர்வின் நிலைகளாகிப் போய்விடும். நீங்கள் தியானமிருக்கும் பொழுது இதை எண்ணினாலும் அந்தச் சக்திகள் கிடைப்பதும் அரிதாகிவிடும்.

ஏனென்றால் காற்றிலிருப்பதைச் சமப்படுத்திய நிலைகள் கொண்டு, உங்களுக்குள் பதியச் செய்திருந்தால்தான் நீங்கள் இதை “இயக்க…” முடியும்.

யாம் குருநாதர் மூலம் “அதைத் தெரிந்து கொண்டோம்… இதை அறிந்து கொண்டோம்…” என்று சொல்ல வரவில்லை.
1.அருள் ஞானிகள் தமக்குள் வளர்த்த அந்தச் சக்தி வாய்ந்த ஆற்றல்களை
2.அந்த ஞான வித்துக்களை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்வதற்குத்தான் இந்த உபதேசமே.

அந்த ஞான வித்து உங்களுக்குள் வளர்ந்தால் அந்த ஞானிகள் எதைச் செய்தார்களோ அதை நீங்களும் செய்வீர்கள்.

வாழ்க்கை வேதனையாகவே இருக்கிறது என்று சொன்னாலும் உடலுக்குப் பின் எங்கே செல்வோம் என்பதை அறிந்திருக்கின்றோமா…!

 

உதாரணமாக… வேதனைப்படுகிறார் என்று ஒருவர் மேல் எண்ணம் கொண்டு “அவரைக் காத்திட வேண்டும்…” என்ற எண்ணங்களைச் செலுத்துகின்றோம்.

ஆனால் அதை அதிகமாகச் சுவாசித்து நமக்குள் வளர்த்தாலே
1.அந்த உடலை விட்டு உயிராத்மா சென்றபின் அவருடைய மணமே நமக்குள் வந்து
2.அவர் இறந்தபின் உயிரான்மா நமக்குள் வந்துவிடும்.

எந்த நோயைத் தனக்குள் விளைய வைத்தாரோ… அதே உணர்வு… அதே புலம்பல்… அதே செயல்… என்று நமக்குள்ளும் வந்துவிடும்.

அவருடைய எண்ணமும் நம்முடைய எண்ணமும் ஒன்றான பின் நமக்குள்ளும் அவர் வளர்த்த அதே நஞ்சினை ஊட்டி இங்கிருந்து உணவாக உட்கொண்டு நம்மையும் வீழ்த்தி விட்டு அந்த உயிரான்மா வெளியே சென்று விடும்.

தன் உடலில் எத்தனை வேதனைப்பட்டதோ அடுத்த உடலிலும் எத்தனை வேதனைப்படுத்தியதோ அந்த வேதனை அதிகமான பின் மனிதனுடைய எண்ண அலைகளே வராது… நஞ்சு கொண்ட எண்ணம் தான் அந்த உயிரான்மாவில் இருக்கும்.

அந்த நஞ்சு உயிருடன் சேர்ந்து வேதனைப்பட்டுக் கொண்டே இருக்கும். இதைத் தான்
1.”உன் நிழல் உன்னுடனே தான் இருக்கும்…” என்று நமது சான்றோர்கள் அன்று சொன்னார்கள்
2.இந்த உயிர் உடலில் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் நிழல்
3.அதில் எத்தனை வேதனைப்பட்டதோ அந்த வேதனையை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும்

தேள் பாம்பினங்கள் இவை அனைத்தும் நஞ்சினை ரசித்துச் சாப்பிடும் உயிரினங்கள் தான். எந்த இரையைப் பிடித்தாலும் அதற்குள் தன் நஞ்சினைப் பாய்ச்சி அதை உணவாக எடுத்துத் தனக்குள் ஜீரணிக்கும் சக்தி கொண்டவைகள் தான்.

நஞ்சின் வலு கொண்டு அது ஊர்ந்து சென்றாலும் வேதனை அறியாத உடலாகத் தான் அவை பெறுகின்றது.

கட்டுவிரியனுக்கு ஒரு விஷம்… நல்ல பாம்பிற்கு ஒரு விஷம்… கண்ணாடி வீரியனுக்கு ஒரு விஷம்…! இப்படித் தரையிலே ஊர்ந்து செல்லும் பிராணிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான விஷம் உண்டு.

அதைப் போல்
1.மனித உடலில் எத்தனை வேதனைகளை எடுத்துக் கொண்டோமோ
2.எத்தகைய விஷத்தை நமக்குள் ஏற்றுக் கொண்டோமோ
3.அது எல்லாம் நாம் உடலில் கலந்து நம் உணர்வுகளில் கலந்து நோயாகிறது.

நோயின் உணர்வுகள் விளைந்து உடலை விட்டு ஆன்மா பிரிந்து சென்றபின் இன்னொரு உடலுக்குள் சென்றாலும் விஷத்தின் தன்மையை அங்கே பரப்பி அதையே உணவாக எடுத்து அந்த உடலையும் வீழ்த்திவிடும்.

உதாரணமாக நாம் செய்யும் பலகாரத்தில் சிறிதளவு விஷம் பட்டால் சாப்பிட்டால் மயக்கம் வருகின்றது. அதிகமான விஷம் பட்டு விட்டால் சாப்பிட்டவர் நினைவையே இழக்கச் செய்து விடுகின்றது.

அதைப் போன்று தான் மனிதனுக்குள் விளைந்த நஞ்சின் தன்மை மனித உருப் பெறச் செய்யும் நல்ல உணரவுகள் அனைத்தையும் அடக்கிவிடுகிறது.

இத்தகைய உயிரான்மா வெளியே வந்தபின் சிந்தனையற்ற நிலைகள் கொண்டு வேதனையை அனுபவித்துக் கொண்டே தான் இருக்க முடியும்.

1.கடைசியில் நஞ்சினை ரசித்துச் சாப்பிடும் உடல்களின் ஈர்ப்புக்குள் சென்று பாம்பாகவோ தேளாகவோ அது வாழும்.
2.மனித வாழ் நாளில் பெற்ற விஷத் தன்மை அங்கே சென்று தான் அடங்கும்.

அந்த உடலிலிருக்கும் போது ஒரு மனிதன் அடித்துக் கொன்றான் என்றால் மீண்டும் மனித உரு பெறும் வாய்ப்பு கிடைக்கும். அது அல்லாது பருந்தோ கோழியோ மற்ற பிராணிகள் உட்கொண்டால் அந்த உடலாகத் தான் பிறக்கும். மனித உடல் பெற முடியாது.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள். நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

உடலை விட்டுப் பிரிந்தவரின் உணர்வு தான் பெரும் பகுதி எல்லோரையும் இயக்கிக் கொண்டுள்ளது – ஈஸ்வரபட்டர்

 

பெரியோர்களின் வாக்குப்படி மிரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற சொல் கூற்று உள்ளது… அதன் தொடர் யாவை…?
1.பேயைப் பார்க்க முடியுமா…?
2.பிசாசு உண்டா…?
3.இரத்தக் காட்டேரிகள் வாழ்கின்றனவா..? என்பது யாவையும் உண்மைதான்.

தற்கொலை செய்து கொண்ட ஆவேச அலை உணர்வுடன் ஜீவன் பிரிந்த ஆவி உலக உயிர் ஆத்மாக்கள் சில இல்லங்களிலும் அவை வாழ்ந்த பழக்கப்பட்ட இடங்களிலும் அதன் எண்ண ஆசையைச் செயல்படுத்த வேண்டியவர்களின் தொடர் வட்டமுடன் இந்தக் காற்றலையின் சுழற்சியில் சுழன்று கொண்டே இருக்கும்.

அத்தகைய ஆவி உலக ஆத்ம உயிரின் அமிலக்கூறானது உள்ள இடங்களுக்கு சரீர ஜீவ பிம்ப உடல் கொண்ட எண்ண உணர்வுடைய மனிதன் பயம் கலந்த அச்ச நிலையுடன் பல உணர்வுகளில் செல்லும் பொழுது
1.ஆவி உலக ஆத்மாவின் அலைத் தொடரும்
2.சரீர பிம்ப உடலின் அலைத் தொடரும்
3.இவ் ஈர்ப்பலையில் மோதும் பொழுது ஒன்றுடன் ஒன்று மோதுண்ட நிலையில்
4.ஜீவ சக்தி கொண்ட துடிப்பு நிலை பெற்ற எண்ண உணர்வுடன் அவ்வெண்ணம் மோதியவுடன்
5.இக்காந்த ஈர்ப்புக் குண மின் அலைத் தொடர்பு கொண்ட இச் சரீர கோள நிலையுடன் மோதியவுடனே
6.எந்தப் பயமுடன் இந்த ஆத்மா சென்றதோ
7.அந்தத் தொடர் அலைக்குகந்த எண்ண குண ஆவி ஆத்மாவின் அமிலக் கூற்றை
8.நிழல் படம் போல் இவ்வொலி நாத் சக்தி கொண்ட சரீர சுவாச மோதல் அதன் அலை மேல் பாய்ந்தவுடன்
9.அது பேசிய நாதத்தையும் (வாழ்ந்த காலத்தில்) அதன் நிழல் உருவை மனிதனால் பார்க்க முடியும். (இன்று காணும் ஒளிக்காட்சி ஒலி அலையைப் போல்)

இதைப் போன்ற தொடர் அலையில் இருந்தெல்லாம் மனித உணர்வுப் பிடி சிக்காவண்ணம் தன் ஆத்ம வலுவை… ஞான ஈர்ப்பு வழித் தொடர்பு கொண்ட “மகரிஷிகளின் தொடர் அலையுடன்…” வலுவாக்கிக் கொள்ள வேண்டும். அத்தகைய வலுக் கொண்ட ஜீவத் துடிப்பு ஆத்ம நிலை பெற்று விட்டால் நம் எண்ணமே நம்மைக் காக்கும் சக்தியாக வரும்.

எண்ணத் தொடர் அலையின் செயல் இல்லா நிலை (மனிதனுக்குள்) ஒரு நொடிப் பொழுதும் இல்லை.

நித்திரை உணர்வுகளிலும்… இச்சரீரச் செயல் நடைபெறும் வழித் தொடரில்… சுவாசமுடன் கூடிய உணர்வு எண்ண அலை ஈர்ப்பில் தொடர் கொண்ட நிலையுடன் தான் எண்ணச் சுழற்சி கொண்ட இயந்திரக் கோளமாக இந்த உடல் உள்ளது.

பிரபஞ்சத்தில் மற்ற கோளங்கள் எல்லாம் எப்படி நிற்காமல் ஓடிக் கொண்டே உள்ளனவோ அதைப் போன்றே
1.ஓடிக் கொண்டே உள்ள இவ்வெண்ண உணர்வு வளர்ப்பு நிலை
2.ஜீவ சக்தி கொண்ட மனித உடலுக்குத்தான் உண்டு.

ஆவி உலக ஆத்மாக்களின் எண்ண ஓட்டத்தின் வலு எப்படி உள்ளது…?

இன்று நாம் எப்படி சில ஒலிப் பதிவுகளை நாடாக்களில் பதிய வைத்து ஒலி பரப்புகின்றோமோ… அதைப் போன்று அவை சரீரக் கூறுடன் வாழ்ந்த காலத்தில்… தன் ஆத்மாவில் பதிய வைத்த அலைத் தொடர் நாதச் சேர்க்கையுடன் தான்… அதே தொடர்பு சுழற்சியுடன் அதே சுற்றலில் சுற்றிக் கொண்டுள்ளது.

அந்த நிலையில்… வளர் நிலை கொண்ட எண்ண சரீர உணர்வு இயந்திர மின் அலைத் தொடர்பு அவ்வலைத் தொடர்புடன் பொருந்தும் பொழுது தான் இவ் இயந்திரக் கோளப் பெட்டியின் (மனித உடல்) செயலைக் கொண்டு அதன் நிலை பெறுகின்றது.

இவ்வாவிகளின் சுழற்சி வலுக் கூடி அதன் தொடர்பு விட்ட செயலாகச் செயல் கொண்டுள்ள வழித் தொடர் ஜீவ ஆத்மாக்கள் தான் “இன்று பிறப்பில் வரும் ஆத்மாக்களின் தொடர் அலையே உள்ளது…!”

1.தன் ஞானத்தை வளர்த்து சித்து நிலை கொண்ட ஆத்மாக்களின் நற்சக்தியின் தொடர் அலையை அறியாவண்ணம்
2.பல வலுக் கொண்ட வெறி கொண்ட பக்தி இயக்க ஆத்மாக்களின் தொடர்பு தான் இன்று வலுவாகியுள்ளது.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இது வரையிலும் உபதேசித்த உணர்வின் தன்மை கொண்டு நம் குரு அருள் அது உணர்த்தியது. ஏனென்றால்
1.நான் பேசுகின்றேன் என்று யாரும் எண்ணிவிடாதீர்கள்.
2.மகரிஷிகளின் உணர்வலைகளே
3.அந்த உணர்வின் ஒலிகளை அது எழுப்பிக் கொண்டுள்ளது,

நாடாக்களில் “காந்த ஊசியின்…” நிலைகள் கொண்டு எப்படிப் பதிவு செய்து கொள்கின்றோமோ மீண்டும் அதை இயக்கினால் பதிவானது மீண்டும் பேசுகின்றதோ அதைப் போல
1.நமது குரு அருள் எனக்குள் பதிந்த நிலைகளே பேசுகின்றது.
2.அவர் (எனக்குள்) உள் வந்து அல்ல.

சிலர் என்ன நினைக்கின்றார்கள்…? குருநாதர் என் உடலுக்குள் வந்து செயல்படுகின்றார் என்று எண்ணுகிறார்கள்.

அவர் என்ன…! இங்கே நரகலோகத்திற்குள்ளேயா வருவார்…!

அவர் உயர்ந்த நிலை பெற்றதை எனக்குள் பதிவாக்கினார். அந்தப் பதிவைத்தான் மீண்டும் நினைவாக்கி அந்த உணர்வின் தன்மை நீங்கள் பெற வேண்டும் என்று இதைச் செய்கின்றேன்.

அவர் உடலை விட்டு அகன்ற பின் ஒளியின் நிலைகள் பெற வேண்டும் என்றார். ஒளியின் நிலைகள் பெறும் உணர்வின் தன்மை எனக்குள் நாடாக்களில் பதிவு செய்தது போல் என் உடலுக்குள் அதை ஊழ்வினையாகப் பதிவு செய்து அதை நினைக்கும் பொழுது அது வினைக்கு நாயகனாக இயங்குகின்றது.
1.நானும் பெறுகின்றேன்.. உங்களையும் பெறச் செய்கின்றேன்.
2.இது தான் இதில் உள்ள விஷயம்.

இந்த உணர்வுகள் பதிந்த உணர்வுகள் அவர் கண்டுணர்ந்த உணர்வுகள்தான் “இங்கே இசையாக…” மாறுகின்றது.

நான் உங்களிடம் பேசுகின்றேன் என்றால் அந்த அருள் ஞானத்தை எனக்குள் அடக்கி வைத்து விட்டால் நுகரும் தன்மையே இல்லை.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டிய நிலைகள் 1, 2, 3 என்ற படி வரிசையில் தான் அவர் தொடச் சொன்னார்.

அந்த உணர்வின் தன்மை அந்த இசையை அவர் எந்த வழியில் பதித்தாரோ அந்த உணர்வின் தன்மை தான் இயக்கப்படும் பொழுது நானும் பெறுகின்றேன் உங்களைப் பெறும்படியும் செய்கின்றேன்.

அதில் பெறும்படி செய்த
1.யார் ஒருவர் பெற்று
2.அதில் நீங்கள் மகிழ்கின்றீர்களோ
3.அந்தப் பேரானந்தத்தை நீ நுகரு.., என்றார்
4.அந்த ஆனந்த நிலைகள் உனக்குள் வளரும் என்று சொன்னார்.

என்னைக் குருநாதர் காடு மேடெல்லாம் பல காலம் அலையச் செய்து அப்பொழுது அங்கே எனக்குள் ஆழப் பதிந்த நிலைகள் “கூர்ந்து கவனித்த உணர்வே… எனக்குள் பதிவானது”.

அவரிடம் எல்லாம் “சரி…” என்று சொல்லிவிட்டு “காசுக்காக வேண்டி என் எண்ணத்தை இணைத்திருந்தேன்…,” என்றால்
1.காசு பெறும் தன்மை தான் வந்திருக்கும் இந்த உடலுக்கு.
2.மெய் ஞானத்தை நான் பெறும் தகுதியும் மற்றவர்களைப் பெறச் செய்யும் நிலையும் வந்திருக்காது.

சரஸ்வதி இலட்சுமி பராசக்தி என்ற மூன்று தெய்வங்களையும் வணங்கச் சொல்வதற்குக் காரணம் என்ன…?

 

காந்தம் வெப்பம் மணம் இந்த மூன்றும் சேர்ந்துதான் ஒரு அணுவாக அதனின் இயக்கமாக இருக்கிறது என்பதனை அதை நாம் அறிந்து கொள்வதற்காகத் தான் காரணப் பெயர் அவ்வாறு வைத்திருக்கிறார்கள்.

நான் (ஞானகுரு) இப்பொழுது பேசுகிறேன் என்றால் மைக் என்றும் ஆம்ப்ளிபையர் என்றும் ஸ்பீக்கர் என்றும் சொல்வது போன்று ஞானிகள் அணுவிற்குள் இயங்கும் ஆற்றலுக்கு அவ்வாறு பெயர் வைத்திருக்கிறார்கள்.

நம் உயிரின் இயக்கத்தால் துடிப்பின் நிலை வரும் பொழுது அந்தத் துடிப்பின் இயக்கத்திற்குப் பெயர் ஈசன்.

சூரியன் பல விஷத்தன்மையான நிலைகளால் தாக்கப்படும்போது அதனின் சுழற்சியின் வேகம் அதிகமாகி வெப்பமாகி… அந்த வெப்பத்தால் அதில் கலந்துள்ள விஷத்தின் தன்மையை வெளியே பிரித்து விடுகின்றது.

அதிலிருந்து வந்த பல நிலைகள் சேர்ந்து ஒரு உயிரணுவாக உண்டாகின்றது. சாதாரண அணுக்கள் சூரியனிலிருந்து வெளிப்படும் போது வெப்பம் காந்தமாக வெளிப்படுகின்றது.

அந்த வெப்ப காந்த அணுக்கள் வெளியேறும் பொழுது சூரியனைச் சுற்றி வெளியே இருக்கக்கூடிய அல்ட்ரா வயலட் என்ற விஷத்தை காந்தம் இழுத்து வெளிவரும் பொழுது மூன்று நிலையாக மாறுகின்றது.

வெப்பம் காந்தம் விஷம் என்ற மூன்று இயக்கச் சக்தியாக மூன்று நிலைகள் கொண்டு இயங்குகிறது.
1.வெப்பம் உருவாக்கக்கூடிய சக்தியாக இருக்கிறது
2.காந்தம் எதனையும் தனக்குள் எடுத்து இணைத்துக் கொள்ளக் கூடிய திறன் கொண்டது
3.தேள் கொட்டினால் நாம் எப்படித் துடிக்கின்றோமோ அதே மாதிரி விஷம் என்பது ஒரு இயக்கச் சக்தியாக இருக்கின்றது.

வெப்பத்துடன் அது இணையப்படும் பொழுது மூன்று நிலையான இயக்கச் சக்தியாக மாறுகின்றது. சூரியனை விட்டு வெளி வரப்படும் பொழுது மூன்று நிலைகளில் இப்படித் தான் வெளிப்படுகின்றது.

அதே போல் ஒரு உயிரணுவும் சூரியனை விட்டு வெளிவரும் பொழுது இந்த மூன்று நிலை கொண்ட ஒரு இயக்கச் சக்தியாக மாறுகின்றது.

1.ஞானம் (மணம்) என்பது இயக்கச் சக்தியாகவும் – சரஸ்வதி
2.அது எந்த மணமோ அதனை ஈர்க்கப்படும் போது காந்தம் வளர்க்கும் சக்தியாகவும் – இலட்சுமி
3.ஈர்த்துத் தனக்குள் மோதியவுடன் வெப்பமாகி உருவாக்கும் சக்தியாகவும் – பராசக்தியாகவும்
4.இந்த மூன்று சக்திகளும் இயங்குகிறது.

பூமிக்குள் விஜயம் செய்யும் ஒவ்வொரு உயிரணுவிலும் இந்த மூன்று நிலைகள் கொண்ட இயக்கம் இருப்பதால் தான் பல கோடித் தாவர இனச் சத்துக்களை எடுத்து எடுத்துப் பல உடல்கள் மாறி இன்று நம்மை மனிதனாக உருவாக்கியுள்ளது.

1.ஒன்பதாவது நிலையான நவராத்திரியாக இருக்கும் மனிதர்கள் நாம்
2.பத்தாவது நிலையான தசமி என்ற அழியா ஒளிச் சரீரம் எப்படிப் பெற வேண்டும்…?
3.அதைப் பெறுவதற்கு ஞானிகள் உணர்வை எடுத்து எப்படி நமக்குள் அதை வளர்க்க வேண்டும்…? என்று
4.நாம் உணர்ந்து கொள்வதற்குத் தான் வியாசர் இதைக் காட்டியுள்ளார்.

ஆத்ம சுத்தி செய்யச் சொல்வதன் முக்கியமான நோக்கம் என்ன…? – ஈஸ்வரபட்டர்

 

உயிரணுவாகத் தோன்றிய பின் அவ்வுயிரணுவின் வளர்ப்பு முலாம் ஒவ்வொரு செயலிலும் வளர்ப்பு செயல் மோதுண்டு மோதுண்டு… அவ்வுயிரணுவின் மோதலின் வளர்ப்பு வலுக் கொண்டு… ஆத்ம நிலை பெறும் நிலையை முந்தைய பாடத்தில் உணர்த்தினேன்.

உயிரின் ஆத்ம நிலைக்கு எப்படி அதன் உராய்வுத் தன்மையால் வலுக் கூடுகின்றது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒரு தென்னை மரத்தின் பலனாக அதன் உச்சியிலே பல காய்கள் வருகின்றது.
1.அந்தக் காய்களில் இளநீர் வளர்ந்து
2.அந்த நீரானது அதன் உஷ்ண அலையில் அம்மட்டையில் உள் பாகத்தில் உராய்ந்து
3.வேடு கட்டி… வேடு கட்டி… நீரின் நிலை சுண்டி… பருப்பு வளர்ந்து… பின் முற்றி…
4.அதன் பலனான எண்ணை வித்தை வளர்க்கின்றது

தென்னை மரத்தின் வேர் நிலையிலிருந்து அது சத்து எடுப்பதில்லை.

மேல் நோக்கிய சுவாசம் கொண்டு தாவர இனத்தின் ஈர்ப்பு நிலையில் மோதலில் ஒளி பட்டு அது ஈர்த்துக் கீழிருந்து மேல் வளரும் வளர்ப்பின் பலனின் தன்மையில் பல வித்துக்களைத் தென்னை மரம் வளர்த்துக் கொள்கிறது.

இதைப் போன்று தான் ஒவ்வொரு வளர்ப்பின் வித்தின் தொடர் வளர்ப்பும். அதாவது ஒரு அணு வளர்ச்சியின் முலாம் ஒன்றில் மோதி வலுக்கொண்ட தன்மை பெறுவது போன்றே
1.இந்த மனித ஆத்ம உயிரின் வளர்ப்பு நிலையின் வலுவை
2.இவ்வாத்மா சேமித்துக் கொள்கின்றது.

சேமித்த வலுவின் தன்மை எத்தகையது…?

1.நீரில் மிதக்கும் மரங்களைப் போன்ற வலுக் கொண்ட நிலையை
2.இந்த ஆத்ம உயிர் பெற்றதென்றால்
3.எவ்வீர்ப்பின் பிடிக்கும் சிக்காமல்
4.இச்சரீர பிம்பமே காந்த மின அலை ஒளி சக்தி பூண்ட உயர்வு நிலை கொண்ட ஆத்மாவாகலாம்.

அன்றைய சித்தர்களும் சப்தரிஷிகளும் தன் சரீர பிம்பத்தையே இந்நிலைக்குகந்த வளர் நிலைக்கு உட்படுத்தித்தான் தன் வளர்ப்பின் வளர் நிலையைப் பெற்றார்கள்.

நல் வழியின் ஒளி நிலை கொண்ட உயர் ஆத்ம வழித் தொடர் பெறாத நிலையில் பல எண்ண நிலையுடன் வாழக்கூடிய தன்மையில் பிரிந்து சென்ற ஆன்மக்கள் அனைத்தும் நம்மைச் சுற்றியுள்ள இக்காற்றலையில் படர்ந்தே உள்ளது.

அத்தகைய பல எண்ணங்கள் கொண்ட ஆத்மாக்கள் அதற்குகந்த அதன் செயலைச் செய்விக்க அதற்குச் சொல்லாற்றலும் செயல் திறமையும் இல்லாத தன்மையில் அதன் எண்ண ஆசையை நிறைவேற்றிக் கொள்ள உடலுடன் வாழும் மனித உடலில் சாடுகிறது.

1.அப்படிச் சாடும் பொழுது தான் சிலருக்கு வாதத் தன்மையும் இதன் தொடர்பு கொண்ட சில வியாதிகளும்
2.அந்த அலைகள் உடல் மேல் பாய்ந்தவுடன் அதன் தன்மையை உடல் ஏற்காத பட்சத்தில்
3.எந்த இடத்தில் எவ்வலை சாடியதோ அவ்விடத்தில் வளரும் அணு வளர்ச்சி குன்றி
4.பாய்ந்த பிற ஆன்மாவின் குணத் தன்மைக்குகந்த அணுவை வளர்ப்பதனால்
5.அந்த வளர்ப்பின் வலுவை உடலுக்குகந்த ஆத்மா ஏற்காத பொழுது
6.உடலைச் சுற்றியுள்ள ஆத்மாவானது அவ்விடங்களுக்குத் தன் அலையை அனுப்ப முடியாதததனால்
7.அந்த இடங்களில் உள்ள உறுப்புகள் செயலிழந்த நிலை ஆகின்றது

இளம்பிள்ளை வாதங்களில் செயலற்ற தன்மையிருந்தாலும் அங்கங்களின் நரம்பு மண்டலத்தில் உதிர ஓட்டங்களும்… துடிப்பு நிலையும் உள்ளது.

உதிர ஓட்டம் இல்லாவிட்டால் உடல் அழுகிய தன்மையல்லவா பெற்றிருக்கும். உடல் முழுமைக்கும் தொடர்பு கொண்டல்லவா அச்செயல் இருக்க வேண்டும்.

சந்தர்ப்பத்தால் பாய்ந்த மாறு கொண்ட அணு வளர்ப்பின் நிலையினால் இவ்வாதத் தன்மை கொண்ட வியாதியின் வளர்ப்புகள் வளர்ந்துள்ளன.

சமமான வாழ்க்கையற்றவர்களின் வாழ்க்கையில் எல்லாம்… அவரவர்களின் குண நிலைக்குகந்த சுவாசத்தால்… அதற்குகந்த பலனான தொடர் அலை செயலைத்தான்… இந்தக் காற்று மண்டல ஈர்ப்பிலிருந்தும் பெற முடியும்.

அதாவது காற்றில் கலந்துள்ள ஆத்மாக்களுக்கு நாம் தரும் இடத்திற்குகந்த வலுவாகத்தான் நம் சரீர பிம்பத்தின் ஆரோக்கிய நிலையே வளர்கின்றது.

1.எதனையும் செயலாக்கக்கூடிய எண்ண சக்தியின் வலுவைக் கொண்ட மனித ஆத்மாக்கள்
2.ஆவி உலக ஆத்மப் பிடியில் தான் இன்றைய காலத்தில் சிக்கியுள்ளது (இது தான் உண்மை)
3.அதிலிருந்து மீளும் நிலையில்லாத செயலாகத் தான் தொடர்ந்து கொண்டுள்ளது.

இந்த ஆவி உலக ஆத்மாக்களின் பிடியிலிருந்து விடுபடத்தான் ஆத்ம சுத்தி பயிற்சியே கொடுக்கின்றோம்.. இந்தப் பாட நிலைகள் அனைத்துமே அதற்குத்தான்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

“ஓ..ம் ஈஸ்வரா… குருதேவா…,” என்று நாம் அடிக்கடி எல்லோரும் சேர்ந்து ஐக்கியமாகச் சொல்கிறோம்.

அப்படிச் சொல்லும் பொழுது சிலருடைய குரல் வித்தியாசப்பட்டாலும் சுருதி பேதங்கள் இருந்தாலும் ஏற்ற இறக்கம் இருந்தாலும்
1.அது மற்ற குரலுடன் இணைந்து
2.தனித்துப் பிரித்துக் காட்டாதபடி
3.சிறிது தொனியைக் குறைத்தால் இனிமையாக இருக்கும்.

ஒருவர் பாடுகிறார் என்றால் அதனுடன் இணைந்து மற்ற வாத்தியங்கள் வாசிக்கும் போது பலவிதமான நாதங்கள் வெளிப்படுகின்றது. அவை அனைத்தையும் “ஒருங்கிணைத்து” இனிமையாகக் கேட்க வைக்கின்றார்கள்.

அதைப் போல பலவிதமான நிலைகளில் நாம் வந்தாலும் ஒருமித்த எண்ணங்கள் கொண்டு ஒன்று போல “ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…” என்று சொல்லும் பொழுதே
1.எல்லோருடைய எண்ணங்களும்
2.நாம் எழுப்பும் குரல் ஒன்றி இருக்க வேண்டும்.

“ஓ..ம்” என்பது நமக்குள் ஜீவனாக இருந்து இயங்கிக் கொண்டிருக்கும் உயிரைக் குறிப்பிடுகின்றோம்.

நாம் எண்ணியதை ஜீவனாக்கச் செய்வது உயிர். ஜீவனான பின் உடலாக இணைக்கச் செய்வதும் உயிர். அதனால் தான் ஓ..ம் ஈஸ்வரா.

“ஈஸ்வரா…” என்பது இயக்கச் சக்தி.

“குருதேவா…” நம் உடலில் உள்ள அனைத்து உணர்வுகளுக்கும் நம் உயிரே குருவாக இருக்கின்றது. எல்லோரும் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வது நலம்.

ஒவ்வொரு சமயமும் யாம் உபதேசிக்கும் பொழுது இதைச் சொன்னாலும் கூட அடுத்தாற்போல் “ஓ..ம்” என்ற பிரணவத்தின் தன்மை என்ன…? என்று திருப்பிக் கேட்பார்கள்.

“ஓ..ம்” என்றால் எங்கேயோ எண்ணி பிரணவம் என்று எதையோ எண்ணிக் கொண்டுள்ளோம். அப்படிப் பழக்கப்பட்டதால் இப்பொழுது யாம் திரும்பத் திரும்பச் சொன்னாலும் கூட அதை மனதில் பதிய வைக்க முடியவில்லை.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால்
1.நாம் எதைப் பதிவாக்க வேண்டும்…?
2.எதை நமக்குள் இணைக்க வேண்டும்…? என்பதை அறிந்து
3.அதற்குத்தக்க சரி செய்து கொள்ள இது உதவும்.

யாம் இங்கே உபதேசிக்கின்றோம் என்றால் உபதேசத்தைக் கேட்பதற்கு முன் இந்த “மைக்கைச் (MIC)” சரி செய்து வைத்துக் கொள்கின்றோம். அது சரியாக இருந்தால்தான் பேசுவதை அது கிரகித்து ஒலியைப் பெருக்கிக் காட்ட முடியும்.

இதைப் போலத்தான் “ஓ..ம் ஈஸ்வரா குருதேவா…” என்று புருவ மத்தியில் எண்ணும் பொழுது (அல்லது சொல்லும்போது) நம் உயிரின் இயக்கம்
1.மற்ற இந்த உலகத் தொடர்பு கொண்ட உணர்வுகள் நம் ஆன்மாவாக இருக்கப்படும் பொழுது
2.அந்த நிலைகள் நமக்குள் இயங்காதவண்ணம் அதைத் தடுத்து நிறுத்தவும்
3.நம்முடைய எண்ண ஏக்க அலைகள்
4.உபதேசத்தின் வாயிலாக வரும் ஞானிகளின் உணர்வுகளை
5.எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்வதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும்.

ஏனென்றால் ஒருவர் நம்மைத் திட்டினால் அதை நாம் கூர்மையாக எண்ணினால் அந்தத் திட்டக்கூடிய எண்ணம் நமக்குள் பட்டவுடனே வேதனை என்ற உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

இந்த வேதனை என்ற உணர்ச்சியைத் தூண்டும் பொழுது அதன் வழிகளில் தான் நடக்கின்றோம்.

அடுத்து அந்த வேதனையான உணர்ச்சிகள் நம் உடலில் அது மற்ற உணர்வுடன் படரச் செய்யப்படும் பொழுது நமது நல்ல எண்ணங்கள் அதைச் சரியாக இயக்க முடியாத நிலைகள் செயல்படுத்திவிடும்.

இதைப் போன்று “எண்ணிலடங்காத உணர்வின் சுழற்சிகள்” நம் ஆன்மாவில் உண்டு.

1,அதையெல்லாம் நம் சுவாசத்திற்குள் வராதபடி தடுத்துவிட்டு
2.மெய்ஞானிகளின் உணர்வை உள் புகுத்துவதற்காகத்தான்
3.நாம் எல்லோரும் சேர்ந்து ஒரே உணர்வாக
4.“ஓ..ம் ஈஸ்வரா… குருதேவா…” என்று சொல்கிறோம்.

வெறுமனே சொல்வதால் பலன் இல்லை.

இருதய வாயில் என்பது என்ன…?

 

விஷ்ணு நரசிம்ம அவதாரமாக எடுத்து இரண்யனை மடி மீது வைத்து அவனைப் பிளந்தான் என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்..
1.விஷ்ணு என்பது நம் உயிர்
2.மடி என்பது நம் இருதயம்
3.இரண்யன் என்பது தீமை செய்யும் உணர்வுகள்.

இருதய வாயிலில் இருக்கும் “மேக்னட்…” புறத்தால் ஒரு பொருளைப் பார்க்கப்படும் போது அவர்கள் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வலைகளை இழுத்து அலையாகக் குவிக்கும் இடம் அது.

அது தான் மடியாகின்றது.

இங்கே தேங்கி நிற்கும் நிலைகளில் கெட்டவரின் நினைவுகளை எடுத்து இங்கிருந்து மறுபடியும் சுவாசித்து உயிரிலே பட்ட பின் எதுவோ அது இயக்குகின்றது.

ஒரு நாடாவிலே எதைப் பதிவு செய்கின்றோமோ அதை மீண்டும் ஓட்டப்படும் போது அந்த நாடாவில் உள்ளதைத்தான் ரேடியோவோ மற்ற இயந்திரங்களோ பேசுகின்றது. ட்ரான்சிஸ்டர் அந்த அலைகளை எடுத்துக் கொடுக்கின்றது.

இதைப் போல்
1.கூர்ந்து பார்க்கும் போது நம் கண்கள் அதை எடுத்து
2.அந்த உணர்வின் அலைகளை நமக்குள் அலைகளாகக் குவித்துக் கொடுப்பதைச் சுவாசித்து
3.அந்த அலைகளுக்குள் இருக்கும் உணர்வைத் தான் சொல்லாகவும் செயலாகவும் அது நம்மைப் பேசச் செய்கிறது.

ஆகவே இந்த உணர்வின் சக்தியை நாம் அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்தான் என்றால் நம் உயிர் இங்கே நரசிம்மனாக மாறி அதன் வழியில் தீமைகளைப் பிளக்க வேண்டும் என்று காவியங்களில் காட்டப்பட்டது.

ஒருவன் கெடுதல் செய்கிறான் என்று எண்ணும் போது அந்த உணர்வின் சக்தியை நாம் எடுத்து அவர்களைக் கவரப்படும் போது அந்த உடலிலிருந்து வந்த எண்ணங்கள் எல்லாம் நமக்குள் தெரிகின்றது.

அந்த உணர்வு நமக்குள் இயக்கி அவனை உதைக்க வேண்டும் என்று சொல்கிறது.
1.அதே உணர்வு என் உடலுக்குள் சென்றவுடனே என் நல்ல குணத்துடன் சண்டையிடுகின்றது.
2.நீ இரு நான் பார்த்துக் கொள்கிறேன்… என்று.

என் உடலுக்குள் நல்ல குணங்களுடன் கலந்தவுடனே நீ இரு… நான் பார்த்துக் கொள்கிறேன்..! என்று சொல்லப்படும் போது நல்ல குணங்கள் இந்த உணர்வைத் தாங்காது
1.மேல் வலிக்கிறது தலை வலிக்கிறது
2.கை குடைகிறது கால் குடைகிறது
3.நெஞ்சு வலிக்கிறது இரத்தக் கொதிப்பு வருகிறது வாத நோய் வருகிறது என்று
4.சீராக இயக்கக்கூடிய நிலைகள் அனைத்தையுமே நிறுத்தி விடுகின்றது.

இதை மாற்றுவதற்குத் தான் நரசிம்மா…!

கெடுதல் செய்தவர்களை எண்ணும் போது என்னை அந்தத் தீமை எப்படி இயக்குகிறதோ அதைத் துடைப்பதற்குத் துடைத்துப் பழகிய அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுதல் வேண்டும்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் மனித உடலில் உயிருடன் ஒன்றிய உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டான்.

துருவத்தை அறிந்தான்… துருவத்தை அடைந்தான்… துருவத்தின் உணர்வைத் தனக்குள் சேர்த்தான்… துருவ மகரிஷியானான். சிருஷ்டிக்கும் நிலை பெற்றான்… அந்த உணர்வு கொண்டு துருவ நட்சத்திரமாக இன்றும் ஒளியாக உள்ளான்…!

அவனைப் பின்பற்றிச் சென்றவர்கள் அனைவரும் ஏழாவது அறிவு கொண்டு சப்தரிஷிகளாக ஒளியாக மாறிச் சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றார்கள்.

அந்த அருள் சக்திகளைப் பெற்றால் நரசிம்மா..! தீமைகளை நீக்கி விட்டு ஒளியின் சரீரமாக மாற்ற வேண்டும். இந்த உடலிலிருந்து தான் அதை நாம் பெற வேண்டும்.

உடலைப் பற்றியும்… ஆத்மாவின் இயக்கத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள் – ஈஸ்வரபட்டர்

 

மனிதன் எடுக்கும் குண நிலையில்…. அவன் எண்ண உணர்வில் சமைக்கப்பட்ட ஆவியின் வலு தான்
1.ஆத்மாவின் உராய்வுக் கவசமாக உராய்ந்து உராய்ந்து
2.அதன் வலுத் தன்மையைக் காந்த ஈர்ப்பு வளர்ப்பாக
3.இந்தப் பிம்ப உடலின் அச்சான எலும்புகளின் வளர்ப்பின் உராய்வு வலுக்கூடி ஆத்மாவின் வலுவும் வளருகின்றது.

இந்தப் பிம்ப உடலின் நிலை கொண்டு பல செயல்களைச் செயல்படுத்த முடியும். பல கோடி ரூபத்தில் வளர்ப்பின் வளர்ப்பாக… பல கோடி மண்டலங்களை வளர்க்கக்கூடிய… “வளர் நிலைக்குகந்த வலுவான வித்துத்தான் இந்தப் பிம்ப உடல்….!”

சப்தரிஷிகளின் செயலை வளர்க்கவும் இவ்வொளி நாதச் செயல் கொண்ட… “ஜீவத் துடிப்பு உள்ள எண்ணத்தின் சரீரத்தினால் தான்” முடிகின்றது.
1.பல கோடிச் சக்திகளை உருவாக்கும் சப்தரிஷிகளே…
2.இப்பிம்ப உடலின் தொடர்பு கொண்டு தன் வலுவை வளர்க்கின்றார்கள்.

அதனின் உண்மைப் பொருள் தான் நாம் இன்றளவு காணும் இயேசு கிறிஸ்து ஐயப்பன் முகமது நபி ஆதிசங்கரர் போன்ற தெய்வீக வளர் நிலையின் உண்மைத் தன்மை கொண்டவர்கள்.

ஆகவே…
1.ஜீவ சக்தி கொண்ட துடிப்பு ஆத்மாவினால் தான்
2.இச்சரீரம் சமைக்கும் உணர்வின் வலுவைக் கொண்டு
3.பல வலுவான வளர்ப்பின் வளர்ப்பாக இச்சரீரக் கூட்டின் தொடருடன் வளர்க்கலாம் என்ற
4.இச்சரீர பிம்பத்தின் உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்திடல் வேண்டும்.

ஜீவன் பிரிந்த ஆத்ம உயிருக்குத் துடிப்பு நிலையும் நாத ஒலி வெளிப்படுத்தும் ஜீவத் தொடர்பும் இல்லாததனால் அதன் எண்ணத்தின் ஈர்ப்பைத் தன் எண்ண அலைக்குகந்த ஆத்ம உடலில் ஈர்க்கப்பட்டு தன் ஆத்மாவின் உயிரையே தன் குண நிலைக்கொத்த உணர்வு நிலை கொண்ட ஜீவ சரீர ஈர்ப்பிற்கு (தாய் உடலில்) வந்து பிறப்பெடுக்கும் ஆத்மாவும் உண்டு.

ஆனால் இப்படி
1.இயல்பாகப் பிறப்பிற்கு வரும் ஆத்மாவிற்கு மேல்
2.வலுவான எண்ண வேட்கை கொண்ட ஆத்ம உயிர் பிற உடலுடன் உள்ள ஆத்மாவின் மேல் படரும் பொழுது
3.அதனின் வலுவுக்கு மேல் வலுவான ஆத்மாக இது செயல்பட்டு
4.அதனால் சிலருக்குப் புத்தி பேதலித்த நிலையும்
5.சிலருக்குக் கொடூர எண்ணங்களின் வெறி நிலை கொண்ட குண நிலையும் அமைகின்றது.

இந்தக் குண நலத்தின் எண்ண மாற்ற உணர்வினால் சில அலைத் தொடர்புகளின் ஆத்ம உணர்வின் ஈர்ப்பினால் மனிதன் தன் நிலையையே மறக்கின்றான்.

பேய் பிடித்து விட்டது… பிசாசு பிடித்தது…! என்றெல்லாம் இதைத்தான் சொல்வது…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

மெய் ஞானியின் உணர்வை நமக்குள் செலுத்தி அந்த ஆற்றல்மிக்க உணர்வை நமக்குள் பெருக்கச் செய்வது தான் தீப நாள் – கார்த்திகை ஜோதி என்பது.

கார்த்திகை தீபம்… இந்த நாளில் முருகனுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆறாவது அறிவின் தன்மை கொண்டு “முருகு…” நாம் மாற்றியமைக்கும் தன்மை கொண்டவர்கள்.

அருள் ஞானியின் உணர்வை நமக்குள் சேர்த்து உணர்வு ஒவ்வொன்றையும் ஒளியின் சுடராக மாற்ற வேண்டும். நம் எண்ணத்தின் நிலைகள் ஒவ்வொன்றையும் ஒளிச் சுடராக மாற்ற வேண்டும்.

நாம் எந்த எண்ணங்களை எண்ணினாலும்.. அல்லது பிறர் குறையின் தன்மைகளைக் கண்டாலும்…
1.எப்படி வெளிச்சத்தைக் கண்டபின் அங்கிருக்கும் இருள் மறைந்து பொருள் தெரிகின்றதோ
2.இதைப் போல கார்த்திகை ஜோதி அன்று நம்முடைய எண்ணங்கள் நாம் எண்ணும் பொழுதே பிறருடைய தீமைகளை அகற்றிடும் சக்தியாக வளர வேண்டும்.

மற்றவர்கள் சொன்னாலும் அதைப் பிளந்து அந்த உணர்வுக்குள் இருக்கும் “மெய்ப் பொருளைக்” கண்டுணர வேண்டும்.

அந்தத் தீமைகள் இயக்காதபடி அதைப் பிளந்து அந்த அருள் ஞானியின் உணர்வுகள் கொண்டு உண்மையை அறிந்து கொள்வதும் அதற்குத் தகுந்தவாறு நாம் செயல்படும் தன்மைதான் திருஅண்ணாமலை தீபம் என்பது.

முருகன் வீற்றிருக்கும் இடங்கள் அனைத்திலும் கார்த்திகை நந்நாளைக் கொண்டாடுகின்றோம். கார்த்திகை மாதத்தில் தீபங்களை வீடு முழுவதும் பரப்பி வைக்கின்றோம்.

1.வெறுமனே இங்கே தீபங்களைப் பரப்புவதில் பயனில்லை.
2.இருளை அகற்றிட அந்த பேரருள் பேரொளியான உணர்வை நமக்குள் பரப்ப வேண்டும்
3.அதை நமக்குள் நினைவு கூறும் நாள் தான் கார்த்திகை ஜோதி என்பது.

தியானம் என்பது… உட்கார்ந்து தியானிப்பது மட்டும் தியானமல்ல. வாழ்க்கையையே தியானமாக்க வேண்டும்… எப்படி…?

 

நமக்குள் பெற்ற சக்தியின் தன்மையை நமது நண்பர்களோ மற்றவர்களோ நம்மை அணுகி தொழில் செய்யும் நிலைகள் வரப்படும் பொழுது “நாங்கள் பெற்ற சக்தி அவர்கள் பெற வேண்டும்…” என்ற எண்ணத்தை எடுங்கள்.

உதாரணமாக… ஒரு கஷ்டமோ நஷ்டமோ அவர்கள் படுகின்றார்களென்றால் அப்பொழுது நம்மை அணுகி வருவார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் நீங்கள் கற்றுணர்ந்த உணர்வை உபதேசமாகச் சொல்லுங்கள்.
1.அப்பொழுது நீங்கள் அதை தியானிக்கின்றீர்கள்
2.அருள் ஒளியை அவர்களுக்குக் கொடுக்கின்றீர்கள்.

ஏனென்றால் அவருடைய கஷ்டத்தையோ துன்பத்தையோ உங்களுக்குள் பதிவாகாதபடி
1.அருள் ஞானத்தின் சக்தியை அவர்களுக்குக் கொடுத்து
2.நீங்கள் இதைச் செய்யுங்கள்… நலமாக இருப்பீர்கள் என்று
3.இந்த அருளைப் பெறவதற்குண்டான வழியைச் சொல்லுங்கள்.

இதைப் படிப்போர் ஒவ்வொருவரும் ஒன்றுபட்டு உங்களுக்குள் கண்டுணர்ந்த இந்த நல் உணர்வின் தன்மை கொண்டு ஒருவருக்கொருவர் இதைப் பரிமாற்றம் செய்து எல்லோரையும் வளர்ச்சி பெறச் செய்யுங்கள்.

இந்த வாழ்க்கையையே… “துன்பங்கள் நுகராது… அருள் வழியின் உணர்வை நுகரச் செய்யும் பண்பாக உருவாக்குங்கள்…!”

நாம் நண்பர்களுடன் பழகும்போது அவர்களின் துன்பத்தைப் பற்றிக் கேட்டுணர்ந்தாலும் அதைப் பக்குவமாக்கிட வேண்டும். இப்பொழுது இருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் “இப்படியெல்லாம் பேசுகின்றார்கள் நியாயமா…?” என்று நம்மிடம் சொல்ல வருவார்கள்.

அந்த மாதிரி நேரங்களில் எல்லாம் சண்டை போடுபவர்களிடம் சென்று… கட்டாயப்படுத்தி அந்த நல்லதைச் சொல்லப் போனால் அதற்கு எதிர்ப்பு உணர்வுகள் தான் வரும்.

இப்படிச் சொல்கின்றார்கள் என்று நண்பர் உங்களிடம் அணுகி வரப்படும் பொழுது இந்தத் தத்துவத்தை அந்த நண்பருக்குச் சொல்லுங்கள்.

1.அவருடைய உணர்வை உங்களுக்குள் வளர்க்க வேண்டாம்.
2.எதிரியை உங்களுக்குள் ஒதுங்கிச் செல்ல வழி விடுங்கள்.
3.எதிர்த்துக் கொண்டே இருந்தால் அது உங்கள் நல்ல செயலை எல்லாம் குறைத்துவிடும்…! என்று
4.நண்பரிடம் தெளிவாக இதை எல்லாம் எடுத்துச் சொல்லுங்கள்.

சண்டை போட்டவர் உடலில் விளைந்த தீமையை உங்கள் உடலில் விளையாதபடி தடுக்க
1.“மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்…” என்று எண்ணுங்கள்.
2.உங்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவர்களுக்கு நல்ல எண்ணம் வர வேண்டும் என்று எண்ணுங்கள்
3.இந்த எண்ணங்களை நீங்கள் ஒரு பாதுகாப்புக் கவசமாக வளர்த்துக் கொள்ளுங்கள்…! என்று உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள்.

இதை எல்லாம் அவர் கடைப்பிடிக்க நேர்ந்தால் அவர்களது எதிரியின் உணர்வுகள்… “இந்த எதிரியான அணுக்கள்” நண்பர் உடலுக்குள் விளையாதபடி தடுக்க இது உதவும்.

அதே சமயத்தில் நண்பர் மூலமாகக் கேட்டறிந்த அந்த உணர்வுகள் நம்முள்ளும் வளராது தடுக்கப்படுகிறது. நண்பருக்குச் சொல்லும் நிலையில் அந்த அருள் ஞானத்தை நாம் நினைத்துச் சுவாசிக்கும் பொழுது இதுவே நமக்குத் தியானமாகி விடுகின்றது.
1.பிறருக்கு நாம் எடுத்துச் சொல்லும் பொழுது
2.நம் நினைவுகள் வேறு எங்கும் (தீமைகளுக்கு) போவதில்லை.

இதைப் போல வாழ்க்கையில் எப்பொழுது எங்கே எதனின் நிலைகளில் தீமைகள் ஏற்பட்டாலும் அப்பொழுது நீங்கள் ஒரு ஐந்து நிமிடம் ஆத்ம சுத்தி செய்துவிட்டு இந்தத் தத்துவத்தைச் சொல்லுங்கள்.

1.தீமைகள் எதனால் வருகின்றது..?
2.நாம் எண்ணியதை நம் உயிர் எப்படி உருவாக்குகின்றது…?
3.அதனால் நம் உடலில் தீமைகள் எப்படி உருவாகின்றது…?
4.தீமையை நாம் எந்த வழியில் அடக்க வேண்டும்…? என்று சிந்திக்கும்படி செய்து
5.ஆத்ம சுத்தி செய்யும் உணர்வுகளை அவர்களுக்குக் கொடுத்து
6.சிறிது நேரம் அந்த மகரிஷிகளின் ஆற்றலை எடுத்துச் சொல்ல முற்படுங்கள்.

இதன் மூலம் தீமைகளை அகற்றிய அருள் மகரிஷிகளின் உணர்வை நீங்கள் சுவாசித்து உங்கள் உடலில் சேர்த்துக் கொண்டால் அவர்கள் செய்த தீமைகள் நமக்குள் வருவதில்லை.

இவ்வாறு நாம் தடுக்கும் சமயத்தில் அருள் மகரிஷிகளின் உணர்வு நமக்குள் அதிகமாக இணைகின்றது. அதை நீங்கள் நினைவுபடுத்தும் பொழுது உங்கள் உடலிலுள்ள உணர்வுகளிலும் அணுக்களிலும் அது வளரத் தொடங்கி அதற்கு நல்ல ஆகாரமாகக் கிடைக்கின்றது.

ஆனால் சண்டை போடுபவர்களை நாம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும். அந்த உணர்வுகள் நமக்குள் வளர்ந்து சண்டை போடும் அணுக்களுக்கு (அந்த உணர்ச்சியைத் தூண்டும் அணுக்களுக்கு) ஆகாரமாகக் கிடைக்கும்.

அடுத்த நிமிடமே… மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும் என்று நமக்குள் எடுக்க வேண்டும். வேடிக்கை பார்த்தாலும்… அவர்களுக்குள் சகோதரத்துவம் வளரவேண்டும்.. எங்கள் பார்வை வைரத்தைப் போல் ஜொலிக்க வேண்டும்.. அவர்கள் வாழ்க்கையை ஜொலிக்கச் செய்யும் ஆற்றல் எங்களுக்குள் வளரவேண்டும்… என்று இப்படி உங்களுக்குள் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

எங்கள் செயல் அனைத்தும் எல்லோரையும் நல்லவராக்கும் செயலாக எங்களுக்குள் உருவாக வேண்டும்.

எங்கள் சொல்லைக் கேட்போர் வாழ்வில் மகிழும் சக்தி பெறவேண்டும் என்று இப்படி இதை ஒவ்வொரு நாளும் கூட்டிக் கொள்ளுங்கள்.

1.உங்களை உங்கள் எண்ணமே காக்கும்
2.அதுவே கடவுள் ஆகின்றது.

எண்ணியதை உயிர் ஈசனாக இருந்து உருவாக்குகின்றது. உங்கள் உணர்வின் தன்மையை இப்படி உருவாக்கப்படும் பொழுது அதுவே உங்களுக்குள் அதிகமாக உருவாகும் சக்தி பெறுகின்றது.

இப்படி அந்த உருவாக்கும் ஆற்றலை நமக்குள் பெருக்கிக் கொண்டே வந்தால் என்றும் அருள் ஒளியின் சுடராக இந்த வாழ்க்கையை நாம் நிச்சயமாக வாழலாம்.

உயிர் நெருப்பு… உடல் அடுப்பு… அதிலே சமைக்கப்படும் எண்ணங்களுக்கு ஒப்பத்தான் வாழ்க்கை…! – ஈஸ்வரபட்டர்

 

1.இந்தப் பிம்ப உடலையே அடுப்பாக்கி
2.இச்சரீர உடல் எதைச் சமைத்து அனுப்புகின்றதோ இதன் சத்தை ஆத்மா எடுத்து
3.அவ்வாத்மாவின் செயலுக்குகந்த நிலையைத்தான் உயிர் செயல்படுத்துகிறது.

சரீரத்தில்… சரீரத்தையே வளர்க்க… வலுவாக்கி.. ஆத்மாவின் அமில வளர்ச்சிக்குகந்த… சுவை கொண்ட உணர்வாகத்தான் இந்தச் சரீரக் கூடு உள்ளது.

ஆத்மா பெற்ற வலுவைக் கொண்டு அவ்வாத்மாவின் உயிரானது
1.எந்த நிலத்தில் (தாய் கருவில்) ஆத்ம உயிரின் அமிலக் கலவைக் கூடு உராய்ந்து
2.இவ்வாத்மாவின் ஆவி நிலை சுழற்சியில்… பிம்பமற்ற முறையில்…
3.தன் அமிலச் சுவைக்கு உணர்வு சொல் நாத சக்தியும் இல்லா நிலையில்…
4.நிலமான தாய்க் கருவில் வளர்ப்பு நிலைக்கு வந்தவுடன்
5.தாயின் உணர்வு சுவாச நாத நிலையினால் இவ்வாத்ம உயிருக்கு உணர்வு எண்ண மோதல் உருவாகும் தருணத்தில்
6.இந்நாதத்தின் துடிப்பு இயக்கத்தால்
7.ஆத்ம உயிரின் உராய்வு சேர்க்கை கொண்ட சரீர அவயங்களின் உருவக வளர்ப்பு நிலை கொண்டு பிறப்பெடுத்து வளரும் தருவாயில்
8.இதில் எடுக்கும் உணர்வுத் துடிப்பு சுவாசத்தில் உண்ணும் உணவை மட்டுமல்லாமல்
9.எந்தெந்த எண்ணக் கலவைகளை எண்ணி எண்ணி இச்சரீரச் சுவாசத் துடிப்பு உள்ளதுவோ
10.அதற்குகந்த அமில இனத்தை இச்சரீரம் சமைத்து வெளிப்படுத்தும் அலை உணர்வைத் தான்
11.ஒவ்வொரு ஆத்மாவும் வலு கூட்டிக் கொள்கின்றது.

இப்பிம்ப உடலின் மோதலினால்… அதாவது “மோதல்…” என்பது இந்தப் பூமியின் பிடிப்பிலும் சூரியனின் அலை வீச்சிலும்… இச்சுழற்சியின் சுழலுடன் இவ்வலை மோதலின் பிடிப்புடன் வாழும் இச்சரீரத்தின் மேல்… இந்தப் பூமியைச் சுழல வைக்கும் இக்காற்றலையின் ஆகர்ஷண சக்தியானது இந்தப் பிம்பத்தின் மேல் மோதுகிறது.

மோதி… அந்தப் பிம்பத்தின் துடிப்பு நிலை செயல்பட்டால் தான் சுவாச நிலை வரும். சுவாசமெடுத்த பின் நெற்றியில் கவன நரம்பிற்குள் மோதும். அடுத்து அதன் தொடர் கொண்ட ஈர்ப்பு சிறு மூளைக்குச் செல்கிறது.

அங்கே சென்ற பின் இந்தச் சரீர பிம்பக் கோளமே இயங்கவல்ல அடுப்பைப் போன்று அதில் போடப்படும் எண்ண உணர்வையும் உண்ணும் உணவும் சரீர அவயங்கள் அதைச் சமைத்து “ஆவியாக்குகின்றது…” அந்த ஆவியின் சக்தியை இவ்வாத்மா ஈர்த்துத் தான் இந்தப் பிம்ப உடல் வாழுகின்றது.

அப்படி வாழ்ந்தாலும்.. உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் குண நிலைக்குகந்த சம நிலை கொண்ட வாழ்க்கை நிலை அமைத்துக் கொண்ட மனிதனால் தான்… ஆரோக்கிய நிலையுடனும் நீண்ட நாள் வாழ்க்கை வாழ முடிகின்றது.

தான் பெற்ற வலுத் தன்மையின் சக்திக்கு உகந்த செயலை அந்த உடலுக்குத் தரும் பொழுது உடல் என்ற இயந்திரக் கோளமானது சீராகச் செயல் கொள்ளும்.

அதை விட்டு மனிதன் தன் எண்ண உணர்வையே இன்று பல ஈர்ப்பின் பிடியில் சிக்கிப் பேராசைப் பிடி அலைக்காகத் தன் எண்ணத்தைப் பல நிலைகளில் மோதவிட்டுத் தனக்கு எண்ணத்தின் சாதகமற்ற நிலை ஏற்படும் தருவாயிலெல்லாம்
1.சலிப்பு… கோபம்… ஆத்திரம்… வேதனை… என்ற இப்படிக் கனமான சுவாச அலையை எடுத்து எடுத்து
2.அக்குணமுடன் உள்ள நிலையில் எண்ணக்கூடிய உணவும்
3.அதே அமிலத்தைத்தான் இந்த உடலுக்குள் வளர்க்க முடிகின்றது.

இச்சரீரத்தில் சமைக்கப்படும் நிலையையே இந்த எண்ணத்தால் கனமாக்கி அதன் வலுவை அவ்வாத்ம உயிருக்குத் தரும் பொழுது ஏற்கனவே பழக்கப்பட்ட வலுவாகி வாழ்ந்திருக்கும் ஜீவத் துடிப்புடன் இது கலந்து… சிறுகச் சிறுக மாறு கொண்டு விடுகின்றது.

1.மாறு கொண்ட எண்ண உணர்வுகளை இந்தச் சரீர பிம்பம் எடுக்கும் பொழுது
2.அதை ஏற்காத நிலை கொண்டு இச்சரீர அமைப்பில் சுகவீனம் காணுகின்றது.

இதை மாற்ற வேண்டுமா இல்லையா…?

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒரு புயல் காற்று எப்படி வீசுகின்றதோ அதைப் போல் தான் சனிக்கோளின் இயக்க நிலைகள்.
1.சனிக் கோளிலிருந்து உமிழ்த்திய ஒவ்வொரு வட்டமும்
2.அது முதுமை அடைந்தவுடன் கழன்று வெளியிலே வரும்.
3.அதனின் அலையின் தொடர் எப்படிச் சக்கரமானதோ எதிர் நிலையாகும் பொழுது சுழற்சியாகின்றது.

ஒரு மோட்டார் பொருத்தப்பட்ட பம்பைப் (MOTOR PUMP) போட்டவுடன் (சுழலும்போது) தண்ணீரை எப்படி உறிஞ்சுகின்றதோ இதைப் போல
1.சனிக்கோள் மற்ற உணர்வின் தன்மையைத் தன் இனமான சத்தை அது கவர்ந்து கொள்ளும்போது
2.மற்றதுக்குள் இந்த சுழற்சியின் தன்மை கொண்டு மாற்றங்கள் ஏற்பட்டுவிடும்.

இது தான் “புயல்” என்பது.

ஆகவே அது எந்த அட்சரேகைப் பக்கம் இந்த முழுமையான வட்டச் சுடர்கள் வந்ததோ அந்தப் பகுதியில் இந்தப் புயல் செல்லும். இதை விஞ்ஞான அறிவு கொண்டு இயந்திரத்தின் துணையால் கண்டு கொள்கின்றனர்.

இன்றும் நீங்கள் இதைப் பார்க்கலாம்.

அன்று மெய் ஞானி சனிக் கோளின் இந்த நிலைகள் எவ்வாறு இங்கே மாற்றித் தன் உணர்வின் தன்மை ஒருக்கிணைந்து
1.இதனைச் சுழல் காற்றாக மாற்றி
2.அது மழை மேகங்களை எப்படிச் செயல்படுத்துகின்றது?
3.பெரும் மழையாக எப்படிக் கொட்டுகிறது? என்று தெளிவாக உணர்ந்து கொண்டார்கள்.

அதைப் போலத்தான் மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் அந்த ஞானியின் உணர்வை நமக்குள் எடுத்துப் புயல் போல் பேரருள் பேரொளியைப் பரப்பப்படும் பொழுது
1.தீமை செய்யும் நிலைகள் அனைத்தும் மறைந்து
2.நமக்கு முன் சுழலும் நச்சுத் தன்மைகள் அகன்று ஆன்மா சுத்தமாகின்றது.

ஆகவே அந்த உயர்ந்த உணர்வின் தன்மையை மறைக்கும் “நச்சுத் தன்மையைச் செயலிழக்கச் செய்து” அதற்கு உணவு கிடைக்காதபடி தடைப்படுத்துவதே யாம் சொல்லும் நம் குருநாதர் காட்டிய… அந்த மெய் ஞானிகள் காட்டிய உண்மையான சாஸ்திரம்.

இன்றைய மனித வாழ்க்கையில் நம்முடைய சபதம் எதுவாக இருக்க வேண்டும்…?

 

உயிரை ஈசனாக வணங்குங்கள். உடலைச் சிவனாக மதியுங்கள். கண்ணைக் கண்ணனாக மதியுங்கள்.

காரணம்… நல்லது கெட்டதைக் கண்ணன் உணர்த்துகின்றான். அவன் காட்டிய நெறியின் படி கெட்டது என்று வரும் பொழுது புறப்பொருளை நீக்கும் வழிகள் கொண்டிருக்கின்றோம்.

ஆகவே
1.நம்மை அறியாது புகும் தீமைகளைப் புறப் பொருளை அகற்றுவது போன்று
2.அந்த மகரிஷியின் அருள் ஒளியால் துடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்… துடைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

உடலான சிவத்திற்குள் தீய குணங்கள் பட்டபின் நோயாக மாறுகின்றது. அதைத் துடைப்பதற்கு… சிவனுக்கு அந்தத் தீமைகள் வராத வண்ணம் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.யாரோ உடல்…! என்று எண்ண வேண்டாம்
2.உங்களுடைய உடல் என்றும் எண்ண வேண்டாம்
3.நம் உயிரான நிலைகள் தான் இத்தனையும் படைத்திருக்கின்றான்
4.நமக்குள் செயலாற்றும் நிலைகள் கொண்டு அதை இயக்கும் சக்தியாக அதுவே இருக்கின்றது.

அதை உணர்ந்து இந்தப் பொறுப்பினை நீங்கள் எடுத்துக் கொண்டால் மனித வாழ்க்கையின் புனிதத் தன்மையை அடையலாம்.

1.தான் யார்… நான் யார்…? இந்தப் பிள்ளை யார்…? என்று பிள்ளையார் சுழி போட்டுக் காட்டிய நிலைகளை
2.முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு எல்லாம் நாயகனாக மனித உடலைக் கொடுத்து
3.உடலில் இருக்கக்கூடிய கணங்களுக்கெல்லாம் ஈசனாக உயிரே இயக்குகின்றது என்ற நிலைகளை உணர்ந்து கொள்ளுங்கள்.

மூஷிகவாகனா…! எந்தெந்த குணங்களை நாம் சுவாசித்தோமோ இந்த உணர்வின் தன்மை கொண்டு அதே வாகனமாக அன்றைய செயலும் இன்றைய சரீரமாக வைத்திருக்கின்றது உயிரான ஈசன்.

கணங்களுக்கு அதிபதி கணபதி ஆகவும் அவனே இருக்கின்றான். நாம் எந்தெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ அதை அதிபதியாக்கச் செய்து அதன் வழியே மற்றதை ஒடுக்கும் நிலைகளைக் கொண்டு வருகின்றது.

1.உயிரான ஈசனிடம் ஒன்றி ஒளியாகப் பெறுவோம்…
2.என்றும் நிலையாக இருக்கக்கூடிய அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டுமென்று
3.அதைப் பெறும் நிலையாகச் சபதம் எடுத்துக் கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் எந்தத் துன்பங்கள் வந்தாலும் நோய்கள் வந்தாலும் அதை எல்லாம் நீக்க மகரிஷிகளின் அருள் ஒளி சக்தி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை நான் வெறும் வாக்காக சொல்லவில்லை… வெறும் சொல்லாகச் சொல்லவில்லை… அருமருந்தாக உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

நீங்கள் எண்ணி எடுத்து உங்கள் துன்பத்தைப் போக்கிக் கொள்ளுங்கள். குருநாதர் எனக்கு இப்படித்தான் அருளினார். உங்களுக்கும் அதே உணர்வின் தன்மையைத் தான் பதிவு செய்கின்றேன்.

பதிவை மீண்டும் எண்ணி
1.வாழ்க்கையில் துன்பத்தைத் துடைக்கும் அந்த மகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவேன்
2.என்னை அறியாது வந்த இருளை நீக்குவேன்
3.மெய் ஒளியைக் காண்பேன்… மெய் வழி செல்வேன்
4.அந்த மகரிஷியின் அருள் ஒளி வட்டத்தில் என்றும் நிலையான அழியாத பெரு வீடு பெறுவேன்
5.பத்தாவது நிலையான ஒளி நிலை பெறுவேன் என்று
6.உங்கள் எண்ணத்தில் அதை எல்லாம் எடுத்து வளர்த்துக் கொண்டீர்கள் என்றால் நீங்கள் அதுவாக ஆகின்றீர்கள்.

அதை எல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்று நான் (ஞானகுரு) பிரார்த்திக்கிறேன்.

உயர் ஞானிகளுடன் தொடர்பு கொள்ளுங்களப்பா…! – ஈஸ்வரபட்டர்

 

நம்மைச் சுற்றியுள்ள பல ஒலிகளிலும்… நம்முடன் எதிர் கொண்டு கலந்துறவாடிப் பேசுபவர்களின் ஒலி அலையிலும்… நம் எண்ண ஈர்ப்பைச் செலுத்தும் நிலையில்… அதற்குகந்த சுவாச… அணு… வளர்ப்பு… உணர்வு சக்திகளைத்தான்… இவ்வாத்ம உயிர் சேமிக்கின்றது.

நம் வளர்ச்சித் தன்மையின் குணப்பிடியே இதில் தான் உள்ளது.

அது மட்டுமல்லாமல்
1.நாம் வாழக்கூடிய இல்லங்களிலும் நாம் அதிகமாக இருக்கக்கூடிய இடங்களிலும்
2.ஜீவனுடன் கூடிய உணர்வின் எண்ண ஒலி நாதம் வெளிப்படுத்தும் அலைத் தன்மையின் ஈர்ப்புத் தன்மை
3.எவ் ஒலி கொண்ட எண்ணத்தின் செயலாக குண நிலை சுவாசம் பதியப்பட்டதோ
4.அந்தந்த குணங்களின் அலைகளை இல்லங்களின் சுவர்களும் தரையும் ஈர்த்து
5.அவ்வொலி அலையின் எதிர் அலை சுழற்சி அவ் இல்லத்தில் சுழன்று கொண்டே தான் இருக்கும்.

அதை எல்லாம் சீர்படுத்தத்தான் பழங்கால மனையியல் சாஸ்திரங்களில் தெரிந்தோ தெரியாமலோ சில “நிலைக்கற்களை…” இல்லங்களில் பதிய வைப்பதிலிருந்து… சுவருக்குப் பூசும் “கலவை…” முதல் கொண்டு சில விதிமுறை வழி நிலை ஏற்படுத்தினர்.

பூமியின் தன்மை எப்படி அதன் குண ஈர்ப்புக்குகந்த அமில வெக்கையை வெளிப்படுத்துகின்றதோ அதைப் போன்றே
1.எண்ணத்தில் வெளிப்படுத்தும் உணர்வு குண நாத அலைகள்
2.இல்லங்களில் வாழ்பவர்களின் குண அலையின் எதிர் ஒலி ஒளி
3.அங்கே பரப்பிக் கொண்டே தான் இருக்கும்.

தன் வளர்ப்பின் ஞானச் செயலை வளர்க்க இந்த மனித ஆத்மாவானது தான் வளர்ந்து வெளிப்படுத்திய அலைத் தொடர்பிலிருந்தும் தன்னுடன் வாழும் சுற்றத்தின் உணர்வுத் தன்மையின் ஈர்ப்புப் பிடி குண நிலையிலிருந்தும் மீட்டுக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் சமம் கொண்ட ஈர்ப்பலை எண்ண உணர்வுடன்
1.உயர் ஞானிகளிடம் தொடர்பு கொண்ட நிலையில்
2.தன் ஜெப ஞானம் அவசியம் இருக்க வேண்டும்.

இதை எதற்காகப் பகர்கின்றேன் என்று அறிந்து கொள்ளுங்களப்பா…!

இன்றைய விஞ்ஞான செயற்கை யுகத்தாரால் இக்காற்று மண்டல முழுமைக்குமே இக்காந்த மின் அலையைப் பிரித்தெடுத்து ஒலி அலையாகச் செயற்கை முறையில் பல செயலுக்காக எடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள்.

ஒளிக் காட்சி… வானொலி… மற்றும் பல ஒலி அலைகளின் அரசியல் ஒலித் தன்மை தொடர்பு நிலைக்கும்… அரசாங்க வழி நிலைக்கு உகந்த சில அலைத் தொடர்பு சாதன நிலையினாலும்… இக்காற்று மண்டலத்தில் பலவிதமான அலைகளைப் படரவிட்டுள்ளார்கள்.

இன்று… இது இல்லாத இடமே இல்லை…! என்று கூடச் சொல்லலாம்.

ஆகையினால் ஜீவ சக்தி கொண்ட மனித உணர்வின் எண்ணமே இவ்வலைத் தொடர்பைக் கேட்பதினால் சுயமாகச் சிந்திக்கும் ஞான நிலையற்று விட்டது.

1.இத்தகைய செயற்கை அலையையே இன்று அனைவரும் சுவாசிப்பதால்
2.தன் உணர்வின் ஞான எண்ண ஈர்ப்பே… தன் ஞானத்தைத் தான் வளர்க்கும் செயலற்ற தன்மையினால்
3.மின் அலைத் தொடர்பு கொண்ட செயற்கை நாத மோதலினால்
4.ஜீவத் துடிப்பு நாதமே தன் நிலை மழுங்கிய உணர்வு செயலாகச் செயற்கையுடன் சிக்குண்ட மனித ஞானம் தான் பேசுகின்றது இன்று,..!

தன் வளர்ப்பின் உண்மை ஆத்ம ஞானத்தை உணர்ந்து இப்பிடி உணர்வின் இறுக்கத்திலிருந்து தன் வளர்ப்பை வளர்க்கும் உண்மை நிலை உணர்ந்து உயர் ஞானிகளுடன் தொடர்பு கொள்ளுங்கள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

உயிர் தான் சர்வத்தையும் ஆட்சி புரிகின்றான். அவனின்றி அணுவும் அசையாது. இந்த உயிர் இல்லை என்கிற பொழுது ஒன்றும் இயங்காது.

அவனுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு ஒளியான நிலைகள் வரும்போது அவனுக்குள் இருள் சூழாத நிலைகள் துடைக்கும் உணர்வு வருவதே “ஆறாவது அறிவின் ஆற்றல் சரஹணபவா…”

நாம் உணவாக உட்கொள்வதை நம் ஆறாவது அறிவு எப்படி நல்லதை உடலாகவும் கெட்டதை மலமாகவும் மாற்றுகின்றதோ அந்த உணர்வின் நினைவு கொண்டு விஷத்தை மாற்றும் நிலையாக வரும் பொழுது ஆறாவது நிலையை ஏழாக மாற்றச் செய்கின்றோம்.

இது தான் “சப்தரிஷி” என்பது.

ஒலி ஒளி – ஒலியின் தன்மை கொண்டு ஒன்றை இயக்குவது. சிருஷ்டிக்கும் தன்மை பெறுவது. ரிஷி என்ற நிலை எட்டாவது. எட்டுக் கோளின் உணர்வை ஒளியாக மாற்றுவது.

கோள்கள் தனக்குள் வெப்பத்தின் தன்மை எடுக்கும் பொழுது நட்சத்திரமாக மாறுகின்றது.

நட்சத்திரத்தின் தன்மை கதிரியக்கமாக மாறி தனக்குள் வரக்கூடிய விஷத்தின் தன்மையை விண்ணிலிருந்து வரும் தன்மையை வெகு தூரத்திலேயே மாய்த்து விடுகின்றது.

உணர்வின் தன்மை தனக்குள் வெப்பத்தின் தன்மை அதிகமாகக் கூட்டி காந்த அலைகளாகத் தனக்குள் ஈர்க்கும் நிலையாகும்போது சூரியனாக மாறுகின்றது.

இதைப் போலத்தான் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் தசைகளாகக் கோள்களாக மாறினாலும் எட்டுக் கோளின் நிலைகள் நட்சத்திரம் என்ற நிலைகள் அடைகின்றது.

இந்த உணர்வின் தன்மை ஒன்பதாக ஒளி நிலை பெறுகின்றது. நாம் வெளியில் வந்தவுடன் பத்தாவது நிலை விஜய தசமி.

1.விண்ணிலே உயிர் தோன்றி அது பூமிக்குள் விஜயம் செய்து மனித உடல் வரை வளர்ந்து
2.ஆறாவது அறிவு பெற்று ஏழாவதாக மாறி
3.எட்டின் நிலைகளாக விளைந்து
4.உயிருடன் ஒன்றிய நிலைகள் ஒன்பது ஒளியாக மாறி
5.உடலை விட்டுச் சென்றவுடன் நம் உடல் எப்படி விஷத்தைக் கழிவாக மாற்றுகின்றதோ நல்ல உடலாக நாம் எப்படிச் சிருஷ்டிக்கின்றோமோ உயிராத்மா வெளியில் வந்தவுடன் பத்தாவது நிலை கல்கி.

அதே சமயத்தில் இந்த வாழ்க்கையில் யாராவது உதவி செய்திருந்தார்கள் என்றால் இறக்கும்போது…, “நமக்கு ரொம்பவும் உதவி செய்தார்… மகராசன்” என்ற எண்ணத்தில் சென்றால் உயிராத்மா அந்த உடலுக்குள் சென்றுவிடும்.

இந்த உடலுக்குள் புகுந்தவுடன் என்ன செய்யும்…? துன்பத்தையெல்லாம் தனக்குள் சேர்த்துக் கொள்ளும். மனிதனல்லாத உடலாக உருவாக்கிவிடும் உயிர்.

ஆகவே எக்காரணம் கொண்டும்
1.இந்த உடலை விட்டுச் சென்ற பின்
2.நம் உயிராத்மாவை
3.உடலுடன் இருப்பவர்கள் யாரும் இழுத்துவிடக் கூடாது.

அருள் ஒளியின் தன்மைகளை உடலுக்குள் வளர்த்து வைத்திருந்தால் ஒளியின் சுடராகி இன்னொரு உடலுக்குள் போய்ச் சேராது.

இந்த உடலுக்குள் (எட்டுக் கோள் தசைகள்) எட்டானது போல் நாம் வெளியில் சென்ற பின் இந்த உணர்வின் தன்மை என்ன செய்கின்றது?

அதாவது
1.எட்டுத் திக்கிலிருந்தும் தனக்குள் எது வந்தாலும்
2.தன்னை அணுகாத நிலைகள் கொண்டு எட்டாவது
3.அது தான் பதினெட்டு நாள் போர் என்று மகாபாரதத்தில் நிரணயித்திருப்பார்கள்.

வெளியில் வரும் போது பத்தாவது நிலை. எட்டுத் திக்கிலிருந்து வந்தாலும் ஒளியாக ஆக்கும் நிலை “பதினெட்டு…” பதினெட்டாம் படி என்றும் சொல்வார்கள்.

உடலுக்குள் எட்டாகி வெளியில் வந்து எட்டுக் கோளின் தன்மையைத் தனக்குள் ஒளியாக மாற்றி
1.அந்த நிலையான நிலைகள் பெறும் நிலை “ஈரெட்டு பதினாறு”
2.என்றும் பதினாறு என்ற பெருவீடு பெருநிலை.

துன்பம் வரும் போது அதைக் கணக்குப் பார்க்க வேண்டியதில்லை… அது வரும்… போகும்… அவ்வளவு தான்…!

 

இன்றைய விஞ்ஞான உலகம் மிகவும் விஷத்தன்மையாகச் சென்று கொண்டிருக்கின்றது. எவ்வளவுதான் சம்பாதித்து வைத்து இருந்தாலும் கூட… அதை என் பணம் என்று உறுதியாகச் சொல்வதற்கு முடியவில்லை.

1.ஏதோ ஒரு வகையில் வலு கொண்டவன்
2.நம் பணத்தைத் தட்டிப் பறிக்கும் நிலையில் தான் உலகமே இன்று உள்ளது.

ஓரளவுக்கு பணம் வசதியாக இருப்பவர்கள் வசதி இல்லாதவர்களை ஏமாற்றிக் கொஞ்சம் தள்ளி விட்டு விடுவார்கள். ஏதாவது ரொம்பவும் மீறி விட்டால் அடுத்து சண்டைக்குச் செல்கின்றார்கள். இன்னும் கொஞ்சம் சிக்கலாகின்றது.

உன்னால் என்ன செய்ய முடியும்…? என்று கடைசியில் கோர்ட்டுக்குச் செல்கின்றார்கள். அங்கே சென்றால் வக்கீல்களுக்கும் நீதிபதிகளுக்கும் பண வசதி உள்ளவர்கள் காசைக் கொடுப்பார்கள்.

காசு தான் அங்கே வேலை செய்யும். நீதி இப்படித்தான் இருக்கின்றது வலு இருக்கும் பக்கம் தான் அந்த நீதி செல்லுபடியாகும். இல்லாதவர்கள் வேதனைப்படத்தான் செய்வார்கள்.

வசதியும் அதிகாரமும் உள்ளவர்கள் மற்றவரை அடித்துப் பறிக்கும் அந்த ராட்சஸ உணர்வாகத் தான் செயல்படுகிறது. அவர்களுக்கே அது சாதகமாகப் போய்ச் சேருகின்றது.

பொருளை இழந்தவர்களோ…
1.இப்படிச் செய்கின்றார்களே… இப்படி ஆகிவிட்டதே…! என்று எண்ணப்படும் பொழுது
2.அதே ராட்சஸ உணர்வு அவர்களை அழித்துவிட வேண்டும் என்று கூறுகின்றது.

கடைசியில் எல்லை கடந்தது என்றால் உன்னைச் சுட்டுப் பொசுக்கி விடுவேன்…! என்று வருகின்றது.

நீ வா…! நானும் உன்னை இரண்டில் ஒன்று பார்க்கிறேன்…! என்று இந்த அசுர குணங்கள் தான் ஓங்குகிறது. அழித்துவிடும் நிலையே வருகின்றது.

1.இந்த உணர்வுகள் உடலிலே விளைந்ததும் ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம்… என்று
2.அழிக்க வேண்டும் என்ற உணர்வுகள் இருவருக்குமே மாற்றி விடுகின்றது.

இதையெல்லாம் அன்றே ஞானிகள் மிகவும் தெளிவாகக் காட்டி உள்ளார்கள்.

காரணம் யாரும் தவறு செய்யவில்லை… தவறு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படவில்லை. சந்தர்ப்பத்தில் நுகர்ந்த உணர்வுகள் இத்தகைய தீமையின் விளைவுக்குக் கொண்டு செல்கிறது.

இதையெல்லாம் மாற்ற வேண்டும் அல்லவா. அந்தத் தீமையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு இந்தத் தியானம் அவசியம் தேவைப்படுகிறது.

1.இந்த மனித உடலை வைத்துத் தான் அந்த மெய் ஒளியை நாம் பெற முடியும்.
2.அந்த மெய் வழியைப் பெறுவதற்குத் தான் மகரிஷிகளும் ஞானிகளும் எத்தனையோ முயற்சி செய்தார்கள்.

அந்த அருள் சக்திகளை நீங்கள் எண்ணி எடுத்தீர்கள் என்றால் இந்த வாழ்க்கைக்குத் தேவையான செல்வமும் ஓரளவுக்கு நமக்கு வந்து சேரும். மனமும் அமைதி பெறும். குடும்பமும் நலமாக இருக்கும்.

நோயோ துன்பமோ வந்தால் அந்தத் துன்பத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்…
1.அது பாட்டுக்கு வரும் போகும்…
2.அது வந்து விட்டது என்றால் அது பாட்டுக்குப் போகும்
3.நாம் அந்த மகரிஷியின் அருள் ஒளி பெற வேண்டும்
4.என் உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி படர வேண்டும்
5.எனக்குள் அந்த அழுக்கு சேராத நிலையில் நிற்க வேண்டும்.
6.என் சொல்லைக் கேட்பவர்களுக்கு அந்த இனிமையான நிலை வரவேண்டும்
7.என் பார்வை அனைவருக்கும் நல்லதாக இருக்க வேண்டும்
8.இந்த சக்தி எனக்குள் விளைந்து கொண்டே இருக்க வேண்டும் ஈஸ்வரா…! என்று
9.உங்கள் உயிரிடம் சொல்லி முறையிடுங்கள்.
10.அவன் அதைப் பதிவு செய்து அதையே இயக்குவான்.

எப்படி ஒரு செடி அதனுடைய சத்தைச் சேர்க்கின்றதோ… அதை இழுத்து வளர்க்கிறதோ… அதைப் போன்று இந்த மனித வாழ்க்கையில் நாம் இருந்தாலும் அந்த ஞானிகளை எண்ணி நம் ஆன்மாவை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்.

இந்த மாதிரியே எண்ணிக் கொண்டிருந்தால்
1.மகரிஷிகளின் அருள் சக்திகள் நம் உடலில் இருக்கக்கூடிய எல்லா உணர்வுகளிலும் விளையும்.
2.உடலை விட்டுச் சென்றால் அந்தச் சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்திற்ககுள் நாம் செல்கின்றோம்.

திரைப்படம் போல் நம் மனதிற்குள் எப்படி ஒளி ஒலி வருகிறது…? ஈஸ்வரபட்டர்

 

நாம் சுவாசத்தால் எடுக்கும் மணத்தைக் கொண்டு தான் இவ்வுயிராத்மா அவ்வலையைச் சேமிக்கின்றது என்று முதல் பாடத்திலிருந்தே சொல்லி வருகின்றேன்.

1.அமிலத்தின் மோதலின் நாத ஈர்ப்பு உயிரணுத் தன்மை
2.எந்தெந்த அமிலமுடன் எவ்வலைச் சேர்க்கை சேர்ந்து அதன் நாதமாகப் பிறக்கின்றதோ
3.அந்த நாதத்திற்குகந்த சேமித அணுத் தன்மை தான்
4.எக்கூட்டுச் சேர்க்கை சேர்ந்ததோ அதன் வளர்ப்பு அணுவாகப் பிறக்கின்றது.

இவ்வுடல் பிம்பத்தின் எண்ண உணர்வில் எடுக்கும் சுவாச நாதத்தின் மோதலின் அணுத் தன்மையால் தான் இஜ்ஜீவ பிம்ப உடல் வளர்ந்து அதன் மூலம் இந்த ஆத்மா வலுக் கொள்கின்றது.

இப்பிம்ப உடலின் உணர்வு அணுக்களின் வளர் தன்மையில்
1.நாதத்தின் இனிமையான இசையின் (சங்கீதம்) தன்மையால் மகிழ்ச்சியானாலும்
2.அதிர்வு… வெடி… இடி.. இவற்றைப் போன்று பயங்கர ஒலி ஏற்பட்டால்
3.ஈர்ப்பின் நிலை செவிக்கு ஏற்கும் மோதலைக் கொண்டு
4.இச்சுவாச அலை உணர்வில் அச்சப்படக்கூடிய அணுக்களைத் தன் ஈர்ப்பில் வளர்க்கின்றது.

இந்த மனித ஆத்ம நாத… ஒலி… ஈர்ப்பு… செவி செயல் தன்மை… மற்றெல்லா ஜீவராசிகளைக் காட்டிலும் ஒலி ஈர்ப்பு விகித வீரியத் தன்மை கொண்டது.

மற்ற ஜீவராசிகள் “ஒளி பாய்ச்சி… சுவாச மண நுகர்வுத் தன்மை கொண்டு தான்” அதன் ஈர்ப்பு நாதத் தன்மை உள்ளது.

பார்வையின் ஒளி பட்டு… சுவாச மணத்தின் நுகர் தன்மை மனிதனைக் காட்டிலும் மிருக நிலைக்கு (சிலவற்றுக்கு) கூடி இருந்தாலும்… மனிதனை ஒத்த செவி ஈர்ப்பு நாத வளர் சக்தி மற்ற மிருகங்களுக்குக் குறைவு.

1.உணர்வால் எடுக்கும் எண்ண நிலைக்கொப்ப
2.சுவாச மோதல் வளர்க்கும் அணு வளர்ச்சி அலை சக்தியால் தான்
3.இந்த உடலைச் சுற்றியுள்ள ஆத்மா வலுப் பெறுகின்றது.

ஆத்மாவின் நிலைக்கொப்ப உணர்வுகளைத் தான் இந்த உடல் வெளிப்படுத்துகின்றது.
1.ஆத்மாவின் உணர்வையும்
2.உணர்வின் ஆத்மாவையும்
3.இவ்வெண்ணத்தின் ஈர்ப்பு நிலை கொண்டு ஒளி பாய்ச்சி… ஒலி கேட்டு…
4.இந்த மனித ஆத்மா மாற்றி அமைக்க முடியும்.

ஒளி பாய்ச்சி ஒலி ஈர்ப்பின் நிலைக்கொப்ப இவ்வண்ணக்கலவை (படம்) அமில வளர்ப்பு மோதலின் பிம்ப நிலையை எப்படிக் காண்கின்றோமோ அதைப் போன்றே
1.இவ்வொளி பாய்ச்சி ஒலி ஈர்க்கும் எண்ணத்தின் ஓட்ட நிலையை
2.இந்தப் பிம்பமல்லா ஆவி அணுச் சேர்க்கையின் நிலை முறையை
3.பிம்பத் தன்மை மாறிய அமிலக்கூட்டின் ஆத்ம வடிவுகளை
4.அமில உருவாக பிம்பமில்லாத் தன்மையில் நிழல் பட உருவத்தில் காண முடியும்.

இவ்வொளி பாய்ச்சி ஒலி ஈர்த்து இவ்வெண்ண ஓட்ட நிலைக்கொப்ப எதனையுமே அறியும் ஆற்றல் சப்தரிஷிகளுக்கு உண்டு.

எத்தகைய ஜீவ பிம்ப மாற்றம் கொண்ட ஆவி அமிலச் சேர்க்கை ஆத்ம உயிர்களையும்… அருகிலுள்ள இடங்களையும்… அல்லது எண்ணத்தில் செலுத்தும் எந்த இடமாக இருந்தாலும் இவ்வெண்ணத்தைச் செலுத்திச் செயல்முறைப்படுத்தும் நிலையில் காண முடியும்.

ஞானத்தின் வழித் தொடரில் இது சாத்தியமே…!

இதைப் போன்றே அச்ச அதிர்வு நிலையினாலும் ஒலி ஒளி படங்களைக் காண முடியும்…! சில ஆத்மாக்களின் அலைத் தொடர்புடன் இது வரும்.

அதாவது ஒளி ஒலி ஈர்ப்புத் தன்மையில்… அச்ச உணர்வுடன் உடலை விட்டுச் சென்ற ஆவி உலக உயிரின் தொடர்பில்… சில கோவில் விழாக்களில் எழுப்பப்படும் சில மண ஒலி ஈர்ப்புத் தன்மையில் அதே உணர்வு கொண்ட அலை உணர்வு மோதல் எற்பட்டவுடன்… என்ன நடக்கின்றது…?

உடல் இல்லாத ஆத்மாவின் மோதலும் உடலுடன் உள்ள ஜீவ பிம்ப ஆத்மாவின் மோதலும் ஒன்றுபட்டவுடன் அதன் தன்மையில்
1.அது சேமித்து வாழ்ந்த நிலைக்குகந்த தன்மை உணர்வு செயல் எல்லாவற்றையும் இங்கே இயக்கப்பட்டு
2.உடலுடன் உள்ளவர் தன்னையறியாமல் ஆடி அதன் நிலை எல்லாம் பேசத் தொடங்கும்.
3.பல மொழிகளிலும் பேசும்
4.அதன் சுவைக்குகந்த உணவை எல்லாம் கேட்டு அதை உட்கொள்ளும்
5.தெய்வமே வந்து தனக்கு உணர்த்தியதைப் போல் பேசும்.
6.(சாமியாடி அருளாடி மருளாடி வாக்கு சொல்வது எல்லாம் இது தான்)

கடைசியில் இவ் ஈர்ப்பலையின் நிலைக்கொப்ப ஆத்ம எண்ணம் சென்று விட்டால் “தன் நிலை மறந்து…” எவ்வலைத் தொடர் ஆத்மாக்களின் எண்ணத்தையெல்லாம் எடுத்ததோ அவ்வாத்மாவின் நிலைப்படி தான் இந்த ஜீவ ஆத்மா (உடலுடன் உள்ளவர்) வாழ முடியும்.

ஆகவே இந்நாதத்தால் எடுக்கப்படும் உருவங்கள் தான் அனைத்துமே…! இந்நாதச் சேர்க்கை எண்ணத்தை உணர்ந்து மெய் ஒலி பெற்று மெய் ஒளியாக உருவாகுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

கல்வி கற்கும் ஒரு மாணவன் தன் பாட நிலையைப் பொறுமையாகப் படித்தான் என்றால் அந்த உணர்வின் நினைவாற்றல் அவனுக்குள் பதிவாகின்றது.

பதிவான பின் அதே உணர்வின் சத்தைக் கவரும் ஆற்றல் கொண்ட அணுவாக அவனுக்குள் விளைகின்றது.

அணுவாக விளைந்தாலும் அவன் எண்ணத்தில் அவனுக்குள் விளைய வைத்த உணர்வின் ஞானம் அதனின் உணர்வுகளை இந்தச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரவச் செய்கின்றது.

அப்படிப் பரவச் செய்தாலும் தன் இணை சேர்க்கும் உணர்வாகத் அந்தப் பையனின் ஆன்மாவில் இங்கே வந்துவிடும்.

அதே போன்று தான் ஒருவன் வேதனைப்படும் உணர்வின் தன்மையை நுகர்ந்து விட்டால் அதே வேதனையின் உணர்வுகள் இங்கே ஆன்மாவில் அதிகரிக்கின்றது.

இது அதிகரித்துவிட்டால் அதே வேதனையின் உணர்வுகள் சுவாசிக்கப்பட்டு அந்த வேதனைப்படும் நிலையையே உருவாக்குகின்றது.

படிக்கும் அந்த மாணவனின் குடும்பத்தில் தொல்லையோ அல்லது தாய் தந்தையை வெறுப்புடன் பேசியிருந்தாலோ தன் சகோதரன் கோபத்துடன் பேசியிருந்தாலோ அந்த வேதனையின் உணர்வுகள் இவனுக்குள் பட்டுவிட்டால் என்ன ஆகும்…?

அடுத்து இவன் பள்ளிக்குச் சென்றாலும்
1.இந்த வேதனையின் உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது
2.அவன் பாட நிலையைச் சிந்தித்தாலும் இந்த வேதனை உணர்வுகள் அது கலக்கப்பட்டு
3.அவனுக்குள் சிந்தனையற்ற நிலையை உருவாக்கிவிடுகின்றது.
4.அதனால் அவனுடைய கல்வித்திறன் இழக்கப்படுகின்றது.

ஆனால் சிந்தனையில்லாத நிலையாக அவன் வெளியிட்ட உணர்வுகள் இது அதிகரிக்க அவனைச் சார்ந்தோர்கள் இவன் “இப்படி மக்காக… இருக்கின்றான்… சரியாகப் படிக்க மாட்டேன்…!” என்கிறான் என்பார்கள்.

சரியான பாட நிலை இல்லை என்று அவனின் தாய் தந்தையர்கள் இதைச் சுவாசித்தாலும் அடுத்தவர்கள் இதை உற்றுப் பார்த்து இதனின் உணர்வைச் சுவாசித்தாலும் அடுத்து என்ன ஆகின்றது…?

அந்த விஷத்தன்மை (முதலில் அவன் சுவாசித்த வேதனை) இவன் நினைவாற்றலை மாற்றியது போன்று மற்றவர்களும் அதை நுகர்ந்தறிந்து அவனைக் குற்றவாளியாகச் சொல்லத் தொடங்குவார்கள்.

அப்படிச் சொன்னாலும் இது அவர்கள் உடலில் கூடக் கூட கடைசியில் அவர்களைக் குற்றவாளியாக்கிவிடும்.

உதாரணமாக ஆசிரியர்கள் பள்ளிகளிலே பாடநிலைகளைச் சொல்லிக் கொடுக்கும்போது முதலில் கருத்துடன் சொல்வார்கள். தன்னிடம் படிப்பவன் நன்றாகத் தேற வேண்டும் என்று அந்த உணர்வினைப் பாய்ச்சுவார்கள்.

ஆனால் அவன் செய்யும் செயல்களை உற்றுப் பார்த்து
1.“படிக்க வந்தவன் சரியாக வரமாட்டேன் என்கிறான்…” என்ற உணர்வினைச் சுவாசித்துவிட்டால்
2.சுவாசித்த உணர்வுகள் இவரை அறியாமலே ஞானத்தைப் போதிப்பதற்குப் பதில் அவனை “உதைக்கத் தொடங்கிவிடுவார்கள்…”

இப்படிச் சிந்தனையற்ற உணர்வுகள் வரும் பொழுது இந்த விஷத்தின் தன்மை கொண்டு அந்தப் பையனும் குறும்புத்தனம் செய்யும் நிலையாக வந்துவிடுவான்.

குறும்புத்தனம் செய்வதை ஆசிரியர் பார்த்து விட்டால் அவனின் உணர்வை இவர் நுகர்ந்து அவனை உதைக்கும் தன்மையே வரும்.

உதைக்கும் தன்மை இங்கே வரும் பொழுது ஆசிரியர் உடலிலுள்ள நல்ல குணங்களையும் அவர் உடலிலுள்ள நல்ல அணுக்களையும் இது மாற்றிவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகள் சந்தர்ப்பத்தால் ஏற்படுகின்றது. மனிதனின் வாழ்க்கையில் உடலுக்குள் அணுக்களின் மாற்றம் எவ்வாறு அடைகின்றது என்ற நிலையில் நீங்கள் தெரிந்து கொண்டால் போதும்.

1.நாம் தவறு செய்கின்றோமா..,? அல்லது
2.நாம் சுவாசிக்கும் உணர்வுகள் நம்மைத் தவறு செய்ய வைக்கின்றதா…? என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆகவே சந்தர்ப்பவசத்தால் நம் ஆன்மாவிற்குள் நுழைந்த தீமையான உணர்வலைகளை நாம் சுத்தப்படுத்தியே ஆகவேண்டும். அதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம்.

அன்று ரிஷிகள் நடத்திய யாகம் எது…? ஈஸ்வரபட்டர்

 

ஏழு வகைக் குணச் சேர்க்கையில் அமிலத் தன்மை கொண்ட இந்தப் புவியின் நாத ஈர்ப்பு வளர்ச்சியின் உண்மையறிந்த ரிஷிகள் தன் ஞானத்தின் தொடர் சித்து நிலை கொண்ட காலத்திலேயே இவ்வொலி நாதத்தின் ஈர்ப்பைத் தன் ஆத்ம உயிர் சேமிதம் கொள்ள யாக பூஜை முறை மேற்கொண்டார்கள்.

இப்புவியின் மணம்.. சுவை… உலோகம்… இவற்றைப் போன்று ஏழு தன்மை கொண்ட வஸ்துக்களை அதிகமாக யாக குண்டத்தில் செலுத்தி அதிலிருந்து வரும் புகையினால் தன் சுவாச ஈர்ப்பிற்கு எடுக்கும் நிலையைப் பக்குவப்படுத்தினார்கள்.

1.இப்புகை மண்டலத்தின் அமில விகித நிலையைக் கொண்டு
2.எந்தெந்த அமிலச் சேர்க்கையின் புகை சுவாச நிலையைத் தன் ஈர்ப்பிற்கு எடுக்கின்றதோ
2.அதே மந்திர ஜெபத்தை ஜெபித்துக் கொண்டே அவ்வலைத் தொடரைக் கவர்ந்து
4.அதன் மூலம் மற்ற மண்டலங்களின் வழித் தொடர் அலை ஈர்ப்பைப் பெறுவதற்கு
5.உடல் பிம்ப இயந்திர அணுக்களின் வளர்ப்பை இயங்கச் செய்து
6.உயிராத்மாவின் செயலைக் கொண்டு அவ்வலைத் தொடரின் சக்தியை
7.தன் ஜீவ சக்தியுடன் கூடிய அணு மண்டல ஆத்ம உயிரின் வளர்ப்பிற்கு வலுவாக்கிக் கொண்டார்கள்.

வீணையின் நாதத்தில் சேர்க்கப்படும் அத்தந்திகளின் நிலையைக் கொண்டு எப்படி ஒலி மாறுபடுகின்றதோ… அதைப் போன்றே இவ் எண்ண ஒலி நாதத்தில் ஜெபிக்கப்படும் ஜெப ஒலியின் தன்மை கொண்ட அதனதன் தொடர் குண வலுவை எல்லாம் இந்த ஆத்ம உயிர் எடுத்துக் கொள்கின்றது.

1.ரிஷிகளும் சித்தர்களும் ஜெபமெடுத்த உண்மைத் தன்மைகளை எல்லாம்
2.பூஜை யாக வழித் தொடரில் நம் முன்னோர்கள் நமக்குச் சுட்டிக் காட்டியிருந்தாலும்
3.அதன் உண்மைகளை அறிய முடியாத விகிதத்தில் தான் இன்று நாம் உள்ளோம்.

இப்புவியின் வளர்ப்பிலிருந்தே தன் ஜீவ பிம்பத்தின் தன் ஞான வளர்ப்பை அறிந்து கொள்ளும் செயல் யாவையுமே இந்தப் பூஜை வழிபாட்டில் இம்மந்திர நாதத்தால் பல சக்திகளைப் பெற்றனர்.

நாற்பத்தி எட்டு நாள் விடாமல் யாகம் செய்தார்கள்…! என்றும்… சில ரிஷிகள் சில குறிப்பிட்ட மரங்களில் நதி ஒரங்களிலிருந்து ஜெபமிருந்தார்கள்…! என்றும் அறிந்திருப்பீர்கள்.

1.அந்த ஞானிகள் தன் வலுவின் சக்தியை வலுப்படுத்திக் கொள்ள
2.தன் உயிராத்மாவின் வளர்ப்பிற்கு பல அலைத் தொடர்புகளை எடுத்து
3.வலுவாக்கிக் கொள்ளும் வளர்ப்புக்குத் தானப்பா இந்த வழிபாட்டுத் தன்மையை ஜெபம் கொண்டு எடுத்தார்கள்.

இஜ்ஜெபத்தால் ஓதிய தியான ஈர்ப்பின் வலுத் தன்மை சேர்க்கையாக தன் உடல் கூறு அமில வளர்ப்பே அவ்வலைத் தொடர்பின் வளர்ப்பாக தன் உயிராத்மா வளர்ந்த பிறகு அவர்கள் சொல் நாதத்தின் வாக்குத் தன்மையின் பலிதமும் இப்பார்வையின் தன்மையிலேயே நினைத்த நினைப்பு நடைபெறும் வலுவைக் கூட்டிக் கொள்கின்றனர்.

அவர்கள் பார்வை பட்டாலே… எந்தக் குணத்தில் அப்பார்வை செலுத்துகின்றனரோ அவ்வமில ஈர்ப்பு… இச்சுவாசத்தின் அலையினால் அந்த இடத்தில் பாய்ந்து அதன் தன்மை தான் அங்கே நடக்கும்.

இஜ்ஜெபத்தால் தியானம் கொண்டு தன் வலுவை வளர்த்துக் கொண்ட ஆத்மாக்களின் (மகரிஷிகள் சித்தர்கள் ஞானிகள்) ஈர்ப்பு நிலையானது
1.நேராக மேலிருந்து வரும் விண்ணின் ஆற்றல் மிக்க அலைத் தொடரை
2.உடலின் மேல் சிரசில் படச் செய்தனர்.

காரணம்… இந்த உயிர்த் துடிப்பின் வளர்ப்பைக் கொண்டு சுவாச இயந்திரம் இயங்குகின்றது. அப்பொழுது பூமியின் ஈர்ப்பு பிடிப்பு குறைந்து விடுகின்றது.

ஆக பூமியின் கீழ் நோக்கிய சுவாச எண்ண அலையுடன் வாழும் தன்மையில் பல எண்ண மோதலின் சிக்கலுடன் இந்தக் கனம் கொண்ட சுவாசம் எடுக்க எடுக்க இப்புவிப் பிடிப்பின் சுழல் பிடிப்பாகத் தன் இருக்க முடியும்.

இதிலிருந்து விடுபடத்தான்… சப்தரிஷிகள் தன் ஞானத்தால் தன் வலுவின் சக்தியைப் பார்வையிலும்… சொல்லாற்றலிலும் எத்தன்மையையும் வளர வைத்தனர்.

இந்தப் புவியில் வாழும் ஆத்மாக்களான நாமும் இந்த வலுத் தன்மையை வலுவாக்கிக் கொண்டோமானால் அதன் வளர் தன்மையில் செயல் வழித் தொடராக அவர்கள் வாழும் இடத்தை அடையலாம்.

1.இந்நாத ஈர்ப்பின் வீரிய சக்தி கொண்ட
2.மனித ஆத்மாவின் செயலினால் மட்டும் தான் (நம்மால்)
3.இந்த வலுவின் வலுவைக் கூட்டிக் கொள்ள முடியும்.

உயிரிடமிருந்து (கடவுளிடமிருந்து) தப்பவே முடியாது…!

 

உதாரணமாக விஷத்தைக் குடித்து விட்டார்கள் என்றால் அவர்கள் எண்ணம் எல்லாம் போய்விடுகின்றது. நினைவுகள் இழந்து உடலையும் அழித்து விடுகின்றது.

விஷத்தை அருந்தி உடலை விட்டுச் செல்பவர்கள் எங்கே செல்வார்கள்…?
1.அடுத்து பாம்பாகவோ தேளாகவோ தான் பிறப்பார்கள்.
2.வேறு எங்கும் செல்ல முடியாது.

மனித உடலை விட்டுப் பிரிந்த உடனே அடுத்த உடலுக்குள் செல்வார்கள். யார் மீது பற்று இருந்ததோ அந்த உடலுக்குள் செல்லும். அல்லது சாகும் போது யார் நினைவை அதிகமாகக் கொண்டு வருகிறார்களோ அந்த உடலுக்குள் செல்லும்.

அங்கே சென்றவுடன் அந்த உடலிலும் விஷத்தைக் குடிக்க வைத்துச் சாக வைப்பார்கள். கடைசியில் இதிலே விளைந்த அந்த விஷமான உணர்வு உயிரோடு ஒன்றி இணைந்து தான் இருக்கும்.

வேறு எங்கும் தப்ப முடியாது…!

வாழும் போது இங்கே எப்படி இம்சைப்பட்டார்களோ விஷத்தைக் குடித்தபின் சாகும் போது எத்தனை துடிதுடித்தார்களோ உயிர் இழந்த பின்னும் அதே துடிப்பு உயிரான்மாவில் கொண்டே இருக்கும்.

அடுத்த உடலுக்குள் போனவுடன் இதே துடிப்புடன் அவர்களுக்குள்ளும் தற்கொலை செய்யும் உணர்வைத் தூண்டிக் கொண்டே இருக்கும். இந்த வேலையைச் செய்து கொண்டே தான் இருக்கும்.

1.சிலர் நினைக்கலாம்… வாழ்க்கையில் வந்த கஷ்டத்திலிருந்து விடுபடுவதற்காக
2.நான் தற்கொலை செய்து கொள்கின்றேன்…! உலகத்தை விட்டுப் போகிறேன் என்று…!
3.எங்கே போவது…? அவனிடம் (உயிரிடம்) இருந்து தப்பவே முடியாது.
4.தப்பு பண்ணினால் தப்பு தான்… ரைட் செய்தால் ரைட் தான்…
5.மார்க் போட்டுக் கொண்டே இருப்பான் இந்த உயிர்.

இதைத்தான் ஞானிகள் கீதையிலே சுருக்கமாகச் சொல்லி உள்ளார்கள். நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகின்றாய் என்று.

அதே போல் பிடிக்கவில்லை என்று… ஒருவரைச் சுட்டுக் கொன்று விடுவேன் என்று நினைக்கலாம்… கொன்றும் விடலாம். அந்த சுட்டுப் பொசுக்கும் எண்ணம் என்னிடம் வருகின்றது.

1.சுட்டவுடன் அவன் துடித்த உணர்வு எல்லாம் இங்கே வந்து விடுகிறது.
2.அந்த ஆன்மாவும் இங்கே வந்து விடும்.
3.அதே எண்ணத்தை கொண்டு எண்ண எண்ண அவனின் உணர்வு எனக்குள் வந்து
4.என்னைச் சுட்டுப் பொசுக்கிக் கொண்டே இருக்கும்.
5.உயிருடன் ஒன்றி இந்த இம்சையைப் பட்டுக் கொண்டே தான் இருக்க வேண்டியதிருக்கும்.

இதிலிருந்து யாரும் தப்ப முடியாது.

நாம் நினைக்கின்றோம் உடலை விட்டுப் போனால் ஒன்றும் தெரியாது என்று…! ஆனால் இப்பொழுது நல்லது என்று இருக்கும் போது அதைத் தெரிந்து கொண்டால் திருத்திக் கொள்ளலாம்… திருத்தவும் முடியும்.

ஆனால் உடலை விட்டுச் சென்றால் என்ன நடக்கும்…?

1.உயிருடன் ஒன்றிய அந்த இம்சைப் படுத்தும் உணர்வுகள்
2.நீ செய்தாய் அல்லவா… நீ படு…! என்று உயிர் இந்த வேலையைச் செய்யும்.

ஏனென்றால் அவன் (உயிர்) கடவுள். அவனுக்கு அழிவில்லை. நாம் அவனைப் போன்றே நாமும் அழியாத நிலை பெற வேண்டுமென்றால்
1.அருள் ஞானத்தின் தன்மையை சிருஷ்டித்தால் அதை நமக்குக் கொடுப்பான்.
2.ஞானிகள் அருள் உணர்வுகளை வளர்த்துக் கொண்ட பின் உடலை விட்டுப் போனால்
3.நம்மை அழியாத ஒளிச் சரீரமாகப் படைப்பான்…?

ஏனென்றால் அத்தகைய திறன் வாய்ந்தவர்கள் தான் நாம். முழுமுதற் கடவுளாக நாம் சிருஷ்டிக்கும் உடல் பெற்றவர்கள்.

ஆனால் நாம் மனிதனாகப் பிறந்த இந்த நல்ல சந்தர்ப்பத்தை இழந்து விட்டால் தீர்ந்தது… எல்லாம் போய்விடும்.

ஆகையினால் நாம் அனைவரும் அந்தப் பத்தாவது நிலையான கல்கி என்ற “ஓளியாக மாறும் பாதையில்… ஞானிகள் சென்ற பாதையில்…” செல்வோம். மனித வாழ்க்கையில் அறியாது வந்த இருளைப் போக்குவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நாம் புறக்கண்ணால் காணுகின்றோம். அந்த உணர்வை நுகர்ந்து உயிரிலே அகக்கண்ணாகப் படுகின்றது. இந்த உணர்வின் தன்மை தான் உடலுக்குள் பரப்பப்படுகின்றது.

இப்பொழுது நாம் சொல்லும் உணர்வுகளைப் புறக்கண்ணால் உங்களுக்குள் பதிவாக்கிக் கொள்கின்றீர்கள். மீண்டும் இதை நினைவாக்கப்படும் பொழுது எப்படி எண்ணுவீர்கள்…?

இதை விட்டு வெளியே சென்றால் அடுத்தகணம் நீங்கள் எப்படிச் சிந்திப்பீர்கள்…?
1.சாமி அன்றைக்கு என்ன சொன்னார்..,? என்று
2.உங்களின் நினைவாற்றல் “விண்ணிலே… மேல் நோக்கித்தான் செல்லும்”.

வியாபார ரீதியில் எடுத்துக் கொண்டால் ஒரு தடவை பதிவாக்கி விட்டால் இந்த உணர்வின் தன்மை மீண்டும் உங்கள் நினைவின் ஆற்றலை “அன்றைக்கு என்ன சொன்னார்…?” என்று கீழே பார்க்க மாட்டீர்கள்.

கீழே பார்த்தால் உங்களுக்குக் கவலையும் சிந்திக்கும் திறனும் இழக்கப்படுகின்றது.

இதைப் போல இயற்கையின் நியதி கொண்டு
1.உங்களுடைய சிந்தனையின் தன்மையை அந்த உயிரான ஈசனிடம்
2.உங்களை அறியாமல் இயக்கப்படும் பொழுது தான்
3.பதிந்த உணர்வுகள் உடலுக்குள் இருந்த நினைவைத் திருப்பி உங்களுக்குள் நினைவாகும்.

இதைப் போன்றுதான் இன்றைய நிலைகளில் உங்களுக்குள் உருவாக்கும் உணர்வின் தன்மையை அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை “ஈஸ்வரா…!” என்று நம் உயிருடன் (புருவ மத்தியில்) ஒன்றி அந்த அருள் ஞானத்தைப் பெறவேண்டும் என்று ஏங்கினால் அதை அப்பொழுதே உங்கள் உடலுக்குள் ஊடுருவி உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு அது சேர்ப்பிக்கும்.

அந்த உணர்வுகள் அங்கே உடல்களில் பரவும். அதனதன் உணர்வுகள் அங்கே இயக்கப்படும் பொழுது அந்த நல்ல உணர்வுகளை அது பெறுகின்றது.
1.இதைத்தான் சொர்க்கவாசல் என்பது
2.இது மனிதனால் தான் முடியும்.

மனிதன் தான் சிந்தித்து ஆறாவது அறிவு கொண்டு கார்த்திகேயா என்று அவன் தெரிந்து கொண்ட உணர்வு கொண்டு அவன் புருவ மத்தியை எண்ணும் இந்தப் பாதையை அறிந்து கொண்டவன்.

ஆகவே… இதன் வழி தான் அவன் சொர்க்கம் செல்ல வேண்டும்.

நாம் புறக்கண்ணால் பார்த்த அசுத்த உணர்வுகள் இங்கே இருப்பினும் இதன் வழி சுவாசிக்காதபடி இந்த அகக்கண்ணின் வழி கூடிய நினைவு கொண்டு இதனின் காந்தப்புலனைத் தனக்குள் சேர்த்து அதைப் பிராணாயாமம்.

இந்தப் புருவ மத்தியிலிருந்து மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உடலுக்குள் செலுத்தி உடலில் ஒளியான அணுவாக மாற்ற வேண்டும்.

“ஓ… ம்…” என்ற நாதத்தின் சூட்சம சக்தியின் ரகசியம் – ஈஸ்வரபட்டர்

 

நாதத்தால் வளர்ந்த விந்துவின் ஜீவ வளர்ப்புத்தான் இப்புவி வளர்ப்பு யாவையுமே…!

பால்வெளி மண்டலத்தின் வளர் தன்மை கொண்ட அமில மோதல் நாத முதற் கொண்டு… இப்புவியின் சுழற்சி நாதக் காற்று வளர்ப்பு ஒலி ஒளி நீராகி… இத்திடம் கொண்ட சத்துத் தன்மையின் நாத ஈர்ப்பின் சுழற்சியால் புவியில் இப்புவியின் வெக்கை அலை வெளிப்படுகிறது.

அந்த வெப்ப அலையால் ஈர்க்கப்படும் ஒலி நாதமான ஓ..ம் என்ற நாதத்தின் குணத் தன்மை ஒலியாகி.. ஒளியாகி… நீரான வளர் சுழற்சியில்..
1.ஓ..ம் எனக் கொண்ட நாத ஒலியின் தொடர் நாத விந்து வளர்ப்பு தானப்பா
2.இப்புவி நாத வளர்ப்பு யாவையுமே…!

விளக்கம்:-
இந்தப் புவி வளர்த்த நீரில்… சூரியனின் அலை ஈர்ப்பை இப்பூமி ஈர்த்து…
1.நீரின் மேல் சூரிய ஒளி பட்டு இப்பூமி ஈர்த்து
2.இப்பூமி வெளிப்படுத்தும் ஆவியான வெக்கை நிலை (வெப்பம்) மேல் நோக்கிச் செல்கிறது.

அதைப் போன்றே எரிக்கப்படும் எரி பொருளின் புகையானது மேல் நோக்கிச் செல்கின்றது.
1.இப்புவியில் வளரும் யாவும் மேல் நோக்கி வளர்கின்றது.
2.ஆனால் கனம் கொண்ட வளர்ப்பு யாவும் புவி ஈர்ப்பின் பிடியுடன் கீழ் நோக்கி வளர்கின்றது.

புவி வளர்ப்பா…? பால்வெளி மண்டலத்தின் வளர் தன்மையா…? இவ்வளர் நிலை யாவையும்…!

இந்தப் புவியில் வளரும் தன்மையின் வளர் சக்திக்கு நாதத்தின் வித்துத் தன்மையின் செயலுக்கே ஜீவ நாடி… இந்த “ஓ…ம்…” என்ற புவி நாதம் தான்.

இந்தப் பால்வெளி மண்டலத்தின் செயல் தன்மையில்… அந்தந்த மண்டல ஈர்ப்பு ஒலித் தன்மை கொண்டு நாதச் சேர்க்கையின் வளர் உயிரணுக்கள் ஒவ்வொரு மண்டலத் தன்மைக்குகந்த நிலையில் வளர்கின்றது.

மண்டலச் சுழற்சிக்கு மாறுபட்டுள்ள பால்வெளி மண்டலத்தில் காற்றுத் தன்மையே இல்லாத மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் எத்திசை என்ற செயலற்ற நிலையில் உள்ள இடங்களிலும் சில ஜீவராசிகள் பிறந்து மடிந்து வாழ்கின்றன.

காற்றுத் தன்மையே இல்லா நிலையில் ஜீவன்கள் எப்படிப் பிறக்கின்றன..?

இவ்வமிலத்தின் சேர்க்கை நிலையில் சிறு சிறு அமிலக்கூட்டின் மோதலின் ஒலி ஈர்ப்பின் ஜீவனாகி இவ்வொளியின் நாதமுடன் வளர்ச்சி கொண்ட வளர்நிலைக்குகந்த மிகக் குறுகிய கால சில அபூர்வச் செயல் கொண்ட ஜீவத் தன்மைகள் தோன்றி அதன் கனம் உந்தித் தள்ளப்பட்டு பிறப்பெடுத்தவுடன் மடிந்து கனம் கொண்ட அப்பிறப்பு அமிலக் கூட்டுச் சேர்க்கை உந்தித் தள்ளப்பட்ட நிலையில் தான் தனக்குகந்த மண்டல ஈர்ப்பின் வளர்ப்புத் தன்மைக்கு வலு நிலை கொண்ட வளர்ப்பு அமிலச் சத்து கிடைக்கின்றது.

1.இந்தப் பால்வெளி மண்டல செயல் வளர்ப்பு நிலை இல்லாவிட்டால்
2.மண்டல ஈர்ப்பு வளர்ப்பு செயல்படாது.

சூரிய மண்டலம் ஜீவராசிகள் வாழ முடியாத இடம். ஜீவ வளர்ப்பே இல்லாநிலை என்றெல்லாம் உணர்த்துகின்றனர். ஆனால்
1.இந்த அண்டகோடி அனைத்து வார்ப்பு நிலைகளிலும்
2.“இந்நாத விந்தற்ற நிலை இல்லா இடம் எதுவுமே இல்லை…!”

வளர்ப்பின் வளர்ப்புத் தன்மை கொண்ட வளர் வளர்ச்சி செயலுடன் ஒன்றின் செயல் தொடர் வளர்ப்பு “நாத விந்துக்கள் தான்” இம்மனிதனும் இம்மற்றெல்லா மண்டலங்களுமே…!

1.இந்நாத ஈர்ப்பு மோதலில் துடிப்பில்லா விட்டால்
2.எச்செயலின் வளர்ப்பு வளர்படுவதில்லை

வளர்ப்பின் வளர்ப்பே இந்நாதம் தான்…!

எண்ணத்தால் எடுக்கும் நாதத்தை உயர் நாதச் செயலாகச் சேமிக்கும் பொழுது தான் இந்த உயிர் காந்தத் துடிப்பின் சக்தியை இவ்வாத்மா சேமித்து அதன் வளர்ப்பிற்குகந்த அணு வளர்ச்சியின் வலுவைத் தன் வலுவாக்கி ஜீவ சக்தி வாழ முடிகின்றது.

இதன் தொடர்பில்…
1.தனக்குச் சாதகமான வலுத் தன்மையைக் கூட்டிக் கொள்ள
2.இந்த மனித எண்ண நாதத்திற்குத் தான் உண்டு.

இதன் தன்மையை உணர்ந்தவர்கள் தான் நம் ஞானிகளும்.. சித்தர்களும்… மகரிஷிகளும்…!

அந்தத் தத்துவ ஞானச் செயல் மணிகளாகப் பல ஞானிகள் இஜ்ஜெப முறையின் நாத ஒலி கொண்ட சில மந்திர ஒலிச் சேர்க்கையின் செயல் கொண்டு செயல்படுத்தினர்.

அதன் மூலம் அச்செயல் வளர்ப்பின் தன்மை கொண்ட
1.பல கோடி ஆண்டுகளாக வளர்ச்சி கொண்ட…
2.இச்சூரிய குடும்பமல்லா பல சூரியனின் வளர்ச்சி பெற்ற ரிஷி அலையின் தொடர் நிலை பெற
3.இந்த மந்திர நாத யாக ஜெப பூஜை வழிபாட்டில் ரிஷித் தன்மை வளர்ப்பு ஞானிகளாக ஒளிர்ந்தனரப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒவ்வொரு உடலிலும் தான் எடுத்துக் கொண்ட விஷத்திற்கொப்ப தன் உணர்வின் தன்மை தன் உயிருடன் ஒன்றி மலம் போன்று உண்டு.

அதன் உணர்வே மற்றதுடன் கலந்து கலந்து செயலாக்கும்.

அது தனது சுழற்சியில் தனக்குள் வந்து பெருகி வைரமாகிவிட்டால் பாம்பிற்கு எப்படி நாகரத்தினமாகின்றதோ மனிதனுக்குள்ளும் இந்த உயர்ந்த உணர்வின் தன்மை “ஒளியாக மின்னும் உணர்வின் சக்தியாக.., ஒன்று” உருவாகின்றது.

யானைக்கும் இத்தகைய நிலை உண்டு. “யானை மதக்கல்” என்பார்கள். நரிக்கும் ஒன்று உண்டு. “நரிக் கொம்பு” என்று சொல்வார்கள்.

உயிரின் இயக்கம் மையத்தில் உறைந்த உணர்வுகள் எதனை நுகர்ந்ததோ அதன் ஆயுள் காலம் நீடித்திருந்ததென்றால் உணர்வின் ஒளி மிகுந்து அதற்குள் அந்த ஒளியின் உணர்வின் உறைவிடத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

இவன் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு மனிதனுக்கு இது உண்டு.

அக்காலங்களில் முதுமையடைந்து 100-125-200 வயது வரை வாழ்பவர்கள் அவர்களால் நடமாட முடியவில்லை என்றால் “முதுமக்கள் தாழியில்.., போட்டு வைப்பார்கள்”.

அவர்கள் எடுத்து கொண்ட (சுவாசித்து உயிரிலே படும்) உணர்வின் தன்மை அவர் உயிரின் அருகில் உறைந்திருந்த உணர்வின் தன்மை எடுத்து அதிலே பார்த்தால் வைரம் போன்று “ஜொலிக்கும்”.

இது அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் உறைந்து ஒரு கல்லாகத்தான் மாறுகின்றது. அது செயலாக்கும் ஜீவனாவது இல்லை.

இதை அறிவதற்காகக் குருநாதர் என்னை மலைப்பாகங்களுக்கு அழைத்துச் சென்று கடந்த காலங்களில் நீடித்த ஆயுள் கொண்டு வாழ்ந்தவர்கள் உடல்களில் “இத்தகைய வளர்ச்சிகள் உண்டு..,” என்பதைக் காட்டினார்.

ஆனால், வைரத்தை அதில் போட்டு வைத்துள்ளார்கள் என்று நாம் நினைப்போம்.

120,130 வயதுக்கு மேல் ஆனவர்கள் எதனின் தன்மையைச் சீராக வைத்துள்ளார்களோ அதன் உணர்வின் வளர்ச்சி கொண்டு அவர் உயிர் அருகிலே ஒரு சுழற்சி வட்டம் இருக்கும்.

இந்த உணர்வின் தன்மை வெளிவிட்ட பின் மறு உடல் பெறும் இந்த உணர்வுக்கொப்ப மீண்டும் மனிதனுக்குள் சென்று இந்த உணர்ச்சியின் நற்குணங்களை உருவாக்கப்பட்டு அதனுள் கருவாகி மீண்டும் மனிதனாக உருப்பெறும் தன்மை உருவாகின்றது.

விண்ணிலிருந்து வரும் ஆற்றல்மிக்க சக்திகளை நுகர்ந்து உயிர் வழி நாம் சுவாசித்தால் உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறும். ஒளியின் சரீரம் பெற முடியும்.

அகண்ட அண்டத்தில் என்றுமே அழியாத நிலைகள் கொண்டு மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளுடன் ஒன்றிட முடியும். சப்தரிஷி மண்டலத்தில் நாம் இணையலாம்.

“உயிருடன் ஒன்றி..,” எவ்வாறு விண்ணுலகம் செல்ல வேண்டு என்பதைத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குத் தெளிவாக உணர்த்தினார்.

நம்முடைய சாஸ்திரங்களில் காட்டப்பட்டது வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல்.

கோவில் அனைத்திலும் வழக்கமாகப் போகும் பாதையை “விட்டுவிட்டு…, இடைமறித்து.., வேறுவாசல் வழி வந்து.., நாம் அதன் வழி செல்வது – சொர்க்கவாசல்”. சாதாரண மனிதனும் இதை அறிந்து கொள்வதற்காக சாஸ்திரப்படி ஆலயங்களில் காட்டப்பட்டது.

அன்றைய தினம் விரதம் இருக்க வேண்டும் என்று காட்டினார்கள். விரதம் என்றால் என்ன…? இந்த வாழ்க்கையில் வந்த தீமைகளை அன்றைய தினம் நாம் எண்ணாமல் இருப்பதே விரதம் ஆகும்.

“தீமைகளை எண்ணாமல் இருப்பதே.., விரதம்”. சாஸ்திரம் கூறுகின்றது.

தீமைகளை நாம் எண்ணாது அருள் மகரிஷிகளின் உணர்வுகளைத் தனக்குள் சேர்த்துக் கொள்ளும்படி செய்தார்கள் ஞானிகள். மகரிஷிகளின் அருள் உணர்வை நுகரும் ஆற்றலை அனைவருக்கும் கிடைக்கச் செய்தார்கள்.

தீமை செய்யும் உணர்வுகள் நம்மை இயக்காதபடி அதை வகுந்திட வேண்டும்

 

நரசிம்ம அவதாரம் என்றால்… ஒருவர் ஏசினாலோ பேசினாலோ அந்த உணர்வை நான் நுகரக்கூடாது. ஆனால் எதிரில் வரும் நிலைகளை நுகராமல் இருக்கவும் நம்மால் முடியாது.

உதாரணமாக நான் ரோட்டில் செல்லும் போது எங்கே போகின்றீர்கள்…? என்று கேட்கின்றார்கள்.
1.இந்தப் பாதையில் தானே செல்வார். வசதியான இடமாக இருக்கின்றது.
2.தட்டி எறிந்துவிட்டு என்னிடம் இருக்கும் பணத்தை பிடுங்கிச் செல்லலாம் என்று வருகின்றார்கள்.

ஆகவே இதை நான் கூர்ந்து கவனிக்கவில்லை என்றால் என்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் முடியாது.

ஆனாலும் திருடும் எண்ணம் கொண்டு தான் கேட்கின்றார்கள். அவர்கள் பேசிக் கொண்டு போகட்டும். நான் ஏன் அதைக் கேட்க வேண்டும்…? என்று இருக்க முடியுமா…!

1.அவர்கள் பேசிய உணர்வின் தன்மை எனக்குள் வரும் பொழுது அதைக் கேட்டு நுகர்கின்றேன்… அறிந்து கொள்கிறேன்…!
2.அது என்னைக் காத்துக் கொள்ள உதவுகின்றது.

இருந்தாலும் என்னைக் கொன்று விட்டுப் பணத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் எண்ணும் பொழுது அதைப் பார்த்தவுடனே எனக்கு பயமாகின்றது.

கொன்று விடுவேன் என்று சொன்னாலும்… சும்மா போகலாம்… சாமி சொன்னார் எனக்கு ஒன்றும் வராது…! என்று அப்படியே இருக்க முடியுமா…!

“என் காரியம்” என்று வரும் போது இந்தப் பாதையில் போகாமல் இருக்க முடியாது. அந்தப் பாதை வழியாகத்தான் நான் செல்ல முடியும்.

அவன் சொல்கிறான் நாம் பாட்டுக்குப் போகலாமே என்றால் அது அசட்டுத் தைரியம் தான்.

நாம் தர்மம் செய்பவர்கள்… எல்லோருக்கும் நன்மை செய்பவர்கள் தான்…! இப்போது ஒரு புலி இங்கே வருகின்றது என்று வைத்துக் கொள்வோம். புலி அதனுடைய பசியைப் போக்க நம்மைச் சும்மா விடுமா…? அது நம்மை அடித்துக் கொள்ளத்தான் எண்ணும்.

அது போல் அசுர குணம் கொண்டவர்கள் அந்தத் தவறைத் தான் செய்வார்கள். என்னை அடித்து விட வேண்டும் என்று பயத்தை ஊட்டுகிறார்கள். காதிலே கேட்டவுடன் உடல் நடுக்கம் ஆகின்றது

நாம் நல்லதை எண்ணிச் செயல்பட்டாலும் கூட அசுர உணர்வு கொண்டு பிறர் எண்ணிய உணர்வுகள் இங்கே உடலை இயக்குகிறது. பிறரின் நிலைகளை அறிந்து கொள்ள இது உதவுகின்றது

அறிந்த பின் அடுத்த கணம் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா…! என்று உயிரை புருவ மத்தியில் எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று வலு சேர்த்துக் கொண்டு நாம் செல்ல வேண்டும்.

குழம்பு வைக்கும்போது சுவை கெட்டு விட்டால் அதை மாற்றுவதற்கு மீண்டும் எத்தனையோ செய்கிறோம்.

கருணைக் கிழங்கு விஷம் என்று தெரிகிறது. அதனுடைய நமநமப்பைக் குறைப்பதற்குப் புளியைக் கரைத்து அதனுடன் சேர்க்கின்றோம். பின் வேக வைக்கின்றோம். அதை அடக்கி விடுகின்றோம். அப்பொழுது அது சுவைமிக்கதாக மாறுகின்றது.

இது போல்…
1.வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு நிலையிலிருந்தும் நம்மை நாம் மீட்டுக் கொள்ள
2.மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு அடக்கிக் கொண்டே வர வேண்டும்
3.தீமைகளைப் பிளந்து கொண்டே வர வேண்டும்.

அது தான் நரசிம்மா…!

மெய் ஒலியைப் பெறும் வழி முறை – ஈஸ்வரபட்டர்

 

எங்குமே… எதிலுமே… “எல்லாமே” ஒலியின் தன்மை கொண்டு உருவாக்கப்படுவது தான்…! உருவாக்கப்படும் நற்சக்தியும் தீய சக்தியும் எதுவாக இருந்தாலும்.. இந்த ஒலி கொண்டு தான் பிறக்கப்படுகின்றது.

இவ்வொலி நாதம் கொண்டு அமையப்படுவது தான் உயிரணுக்கள் யாவையுமே.
1.இந்த நாத விந்துச் சேர்க்கை செயலில் எடுக்கப்படும்
2.சுவாசத்தின் நிலைக்கொப்பத்தான் உயிராத்மாவின் செயலும் உள்ளது.

நெற் பயிரில் அந்தப் பலன் தருவாயிலும் “இக்காற்றலையின் நாதச் சேர்க்கையைத் தன் ஈர்ப்பில் சேமிக்கப்படும் நிலைக்கொப்பத்தான்” அக்கதிரின் மணியில் அரிசியின் நிலை வளர்கின்றது.

ஒரு கதிரில் வரும் நெல் விதையில் எல்லாமே மணியாக இருப்பதில்லை… பதர்களும் உண்டு…!

அதைப் போன்றே கனிகளாக உருவாகும் பொழுதும் ஒரு செடியில் பூக்கும் பூக்களிலும் ஒன்றை ஒத்த நிலையில் ஒன்றில்லாமல் ஒரே செடியில் பூக்கும் பூக்களிலும் சில சிறுத்துக் கரடு தட்டிய நிலையில் வரும்.

இதைப் போன்றே உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் அது எடுக்கும் நாதத்திற்குகந்த விந்துத் தன்மை தான் வளர்கின்றதப்பா…!

இந்நாதத்தால் எடுக்கும் உருவகத் தன்மையில் நம் சித்தர்கள் காட்டிய செயல் முறையின் “ஆரம்பத் தன்மை தான்…” பக்தியால் ஜெபிக்கும் “ஜெப நாதப் பாடல்கள்…!”

1.அன்பென்ற பக்தி பூண்டு
2.ஆசை என்ற நாத இனிமையைக் கூட்டி ஜெபப்படுத்தும் முறை தான்…
3.இவ்வுயிராத்மாவிற்குச் சக்தியைக் கூட்டும் “ஆரம்பச் சேர்க்கை வழி காட்டி முறை…!”

இப்புவியின் வளர்ப்புடனே நல் வளர்ப்பாக பல நாயன்மார்கள் இப்பாடலின் நாதத்தில் சுழல் விகிதத்தில் செயல்பட்ட முறை தான் பக்தியின் நாத ஜெப முறை.

இஜ்ஜெப முறையின் வளர்ச்சியால் நம் பூமியின் சுழல் நாதமான ஓ…ம் என்ற நாதத்தை உள் நாதமான ஓமுக்குள்.. ஓமாக… நம் உயிராத்மாவின் நாதத்தை… இப்புவிக்கே நாதம் தந்த சகல ரிஷிகளின் நாத அலையுடன் கலக்கவிட வேண்டும்.

1.ஓமுக்குள் ஓமாக இருந்து
2.அவ்வலை நாதத்துடன் தியானத்தில் எண்ணத்தைச் செலுத்தி
3.அவ்வலைத் தொடரின் தொடர்பலையை நம் சுவாசத்தால்
4.எச்சப்தரிஷியின் அலைத் தொடர்புடனும் தொடர் கொள்ள முடியும்.

எண்ணத்தால் செலுத்தும் சுவாச நாதம் கொண்டு அவ்வலையின் தொடர்பை நம் ஆத்ம உயிர் தன் ஈர்ப்பின் வளர்ச்சிக்கு எடுத்து அதை வளர்த்துக் கொள்ள முடியும்.

ஒவ்வொன்றின் தன்மையும்
1.“தனித் தன்மை கொண்ட உயர் நாதச் செயலாகத் தான்”
2.ரிஷித் தன்மையின் “வளர் வளர்ப்பு…” செயல் நிலை செயல்படுகிறது.

அவர்கள் வளர்ப்பாக நாம் உருவாக வேண்டும் என்றால்… அது உயிர் வழியாக எடுக்கும் தியானத்தின் சுவாச அலைத் தொடரின் வழி முறைச் செயலினால் தான் முடியும்.

தியானத்தில் எடுக்கும் இந்தச் சக்தியால் இப்பிம்பக் கூட்டின் ஜீவ சக்தி அணு வளர்ச்சிச் சேர்க்கையின் செயல் கொண்டு நம் எண்ணத்தால் எடுக்கும் சப்தரிஷிகளின் அலைத் தொடர்பின் சக்தியை இவ்வுயிராத்மா வளர்த்துக் கொள்ள முடியும்.

“காந்த ஈர்ப்பு சக்தி கொண்டது தான் இவ்வுயிராத்மா…” என்று ஏற்கனவே தெளிவாக்கினேன்.
1.எண்ணத்தின் செயலைக் கொண்டு எடுக்கும் இந்தத் தியான நிலையின் தொடர் நிலைக்கொப்ப
2.இப்புவி ஈர்ப்பின் பிடியிலிருந்து ஞான வளர்ச்சிச் செயலையும் சித்துத் தன்மை வளர்ப்பையும்
3.இவ்வலைத் தொடர்பின் எண்ண நாதச் சேர்க்கையைக் கொண்டு
4.உடல் என்ற இயந்திரத்தின் உதவியால்
5.இவ்வுயிராத்மாவையே உயர் ஞானக் கூட்டு ஆத்மாவாக உயர்த்த முடியும் – “இவ்வெண்ண நாதத்தால்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அகஸ்தியன் தன் ஐந்தாவது வயதில் இந்தப் பிரபஞ்சத்தை அறியும் ஆற்றல் பெற்று துருவன் ஆனான்.

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள சூரியன் தனக்குள் மோதும் நிலைகளை அதில் உள்ள விஷத்தை நீக்கிவிட்டு ஒளியாக மாற்றுகின்றது.

இதைப் போன்று துருவன் வான் வீதியில் அவன் உற்றுப் பார்க்கும் உணர்வுகள் அனைத்தையும் விஷத்தை நீக்கும் சக்தியாக அவன் உடலில் விளைகின்றது.

ஆக, எல்லாவற்றையும் அறியும் சக்தி பெறுகின்றான்.

அவ்வாறு தன் வளர்ச்சியில் பதினாறாவது வயதில் திருமணமாகும் பொழுது தன் மனைவிக்கும் தான் கண்டுணர்ந்த பிரபஞ்சத்தின் ஆற்றல்களை எடுத்துச் சொல்கின்றான்.
1.தான் பெற்ற சக்தியை அகஸ்தியன் தன் மனைவிக்குப் பாய்ச்சினான்.
2.அதன் வழி நஞ்சினை வென்றிடும் ஆற்றலை இருவரும் பெற்று
3.உணர்வின் தன்மை ஒளியின் சுடராக ஒளிச் சரீரம் பெற்றார்கள்.

அவர்கள் இரு உயிரும் ஒன்றாகி உணர்வினை ஒளியாக்கி இருவரும் எதை உற்றுப் பார்த்தார்களோ அதே எல்லையாக நிலை கொண்டு நம் பூமிக்குள் வரும் நஞ்சினை ஒடுக்கி ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

இந்தப் பூமிக்குள் வரும் அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளார்கள். ஒளியின் சிகரமாக வளர்க்கும் தன்மை பெற்றார்கள்.

அகஸ்தியனும் அவன் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று இரு மனமும் ஒரு மனமாகி நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரி போன்று இரு உயிரும் ஒன்றென இணைந்து வாழ்கின்றனர்.

இதைத்தான் “துருவ நட்சத்திரம்” என்பது.

அதில் விளைந்த உணர்வுகளைச் சூரியனின் காந்தசக்தி கவர்ந்து பிரபஞ்சத்தில் அலைகளாகப் படரச் செய்து கொண்டுள்ளது. ஆனால், பரவும் பகுதியில் அதன் எல்லைப் பகுதியிலிருந்து நுகர்ந்து ஈர்க்கும் சக்தி பெற்ற நமது பூமி சுழலும் பொழுது துருவப் பகுதியில் கவர்கின்றது.

ஏனென்றால்
1.துருவப்பகுதியின் நேராக துருவ நட்சத்திரம் இருப்பதால் பூமி கவர்ந்து அதிகமாகச் செலுத்துகின்றது
2.துருவ நட்சத்திரம் அந்தத் துருவத்திலேயே தான் இருக்கும்.

நாம் அதிகாலையில் அந்தத் துருவத்தை எண்ணி துருவ நட்சத்திரத்திலிருந்து வந்து கொண்டிருக்கும் பேரருள் பேரொளியை எளிதில் பெற முடியும்.

உயிரைப் போன்றே உணர்வுகளை ஒளியாக மாற்றிச் சென்ற முதல் மனிதன் அகஸ்தியன். அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமானது.

அதைப் பின்பற்றியவர்கள் அனைவரும் முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றார்கள்.

நாமும் அவர்கள் வழியில் செயல்படுத்தினோம் என்றால் இந்த வாழ்க்கையில் வந்த இருளை மாற்றி உயிரைப் போலவே உணர்வுகளை ஒளியாக மாற்றி இனி நாம் இந்த உடலையே ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.

மனிதனால் தான் இது சாத்தியமாகும்.

நாம் செய்யக்கூடிய தியானத்தைச் சாதாரணமாக நினைக்காதீர்கள்…!

 

1,துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கி
2.இந்த உணர்வின் தன்மையை நாம் உலகமெங்கும் பரவச் செய்யும் பொழுது
3.இந்தப் பூமியில் இருக்கக்கூடிய நச்சுத் தன்மைகளை நீக்க முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெற்று அதை உங்களுக்குள் விளைய வைக்கும் சந்தர்ப்பத்தைத் தான் இந்த உபதேச வாயிலாக ஏற்படுத்திக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெருக்கப் பெருக்க சூரியனுடைய காந்த சக்தி இதைக் கவரப்படும் போது சிறுகச் சிறுக ஒரு அடர்த்தியின் தன்மையாக வரும்.

அதன் மூலம் விஞ்ஞான அறிவால் வரும் விஷத் தன்மைகளோ மற்ற எதிர்ப்பு நிலைகளோ வந்தால் தடுக்க முடியும்.

1.சூறாவளி போன்ற கடுமையான காற்றுகள் வரும் பொழுது நம் பக்கம் அது வராதபடி அதனின் திசைகளை மாற்ற முடியும்.
2.நாம் எடுக்கும் தியானத்தினால் இது முடியும்… உங்கள் அனுபவத்தில் நீங்கள் பார்க்கலாம்
3.யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி எண்ணிப் பாருங்கள்… அது திசை மாறிப் போகும்.

அதே போல் அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் மேகங்களில் படர்ந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்ய வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சினோம் என்றால் நம்முடைய எண்ணமும் அந்தப் பார்வையும் அதில் சேர்கின்றது.

மேகங்களில் அருள் உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது அங்கே பெய்யும் அந்த மழை நீரால் தீமைகளை அகற்றிடும் சந்தர்ப்பம் உருவாகின்றது.

எந்தெந்த உணர்வுடன் மக்கள் ஆங்காங்கு இருக்கின்றார்களோ அதற்குத்தக்க தான் அங்கே மழை பெய்வதும் இருக்கும். ஊரில் உள்ள மக்கள் நல்ல உணர்வுடன் ஒன்றுபட்டு வாழ்ந்தால் அங்கே சீராக மழை பெய்யும்.

உதாரணமாக அந்த ஊர் மக்கள் வெறுப்பும் சண்டையும் சச்சரவும் குரோதமும் கொண்டிருந்தால் அங்கே மழை பெய்வது அரிதாகின்றது.
1.காரணம் அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் மோதல் ஏற்படும் பொழுது
2.மற்ற பக்கம் பெய்யும் ஆனால் இங்கே மழையை விலக்கித் தள்ளிக் கொண்டு போய்விடும்.

ஒவ்வொரு நிமிடமும் அன்பு கலந்து அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானித்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்ய வேண்டும் என்ற உணர்வை வானிலே பரவச் செய்தால் அந்தப் பகுதிகளில் நிச்சயம் நல்ல மழை பெய்ய வைக்கலாம்.
1.உங்களை நம்புங்கள்…
2.மனிதனுக்கு அவ்வளவு பெரிய சக்தி உண்டு…!

ஒரு பாடலை இனிமையாகப் பாடி அந்த இந்த உணர்வின் ஒலி கொண்டு அதை வைத்து அக்காலங்களில் மழை பெய்ய வைத்திருக்கின்றார்கள்.

மழை இல்லாது ஒரு வறட்சி என்று வந்து விட்டால் பெண்கள் எல்லோரும் கூடி குடங்களை எடுத்துக் கொண்டு ஒரு காட்டுப் பக்கம் செல்வார்கள்.

அங்கே இருக்கக்கூடிய கல்லுக்கோ மற்றதுக்கோ அந்த நீரை ஊற்றிய பின் சிறிது நேரத்தில் மேகங்கள் கூடும், மழையை இங்கே அழைத்துக் கொண்டு வருவார்கள்.

இது எல்லாம் அக்காலங்களில் செயல்படுத்தினார்கள். இன்றும் சில இடங்களில் இது போன்று உண்டு.

முன்னோர்களாகிய நம் ஞானிகள் காட்டிய அருள் வழியில் வழி நடந்தால் இனி வரும் எத்தகைய தீமைகளிலிருந்தும் தப்ப முடியும் என்பதற்கே இதைச் சொல்கிறோம்.

மனித வாழ்க்கையின் முற்றலின் பலன் ஒளிச் சரீரமே…! – ஈஸ்வரபட்டர்

 

அணு தோன்றி எத்தகைய வித்தான உயிரின் தாவரமாக வளர்ந்தாலும் அந்த வித்து துளிர் கொண்ட இலை விட்டு அதன் மூலம் ஈர்த்து வளரும் தன்மைக்கு வருகின்றது.

1.அந்த இலை பசுமையாக இருக்கும் அதன் காலத்திற்கு உகந்த அமிலச் சேர்க்கையின் வளர்ப்பு
2.அவ்விலை ஈரப்பசை கொண்ட வளர்ப்பின் முற்றிய நிலையில் தன் சக்தியை
3.தண்டுப் பாகத்தில் வளர்ப்பு வலு எடுத்த பிறகு
4.அந்த முற்றிய இலை உதிர்ந்து விடுகிறது “சருகாக…!”

வித்திட்ட அந்த விதையின் வளர்ப்பு தன் வளர்ச்சியிலே விழுதுகளாகி
1.அவ்விழுதின் வலுவைத் தன் வளர்ப்பின் வலுவாக்கி
2.வித்தின் வளர்ப்பின் வளர்ப்புகளை வளர்க்கின்றது.

ஆக சிறு வித்து பல வித்தாக வளர்ப்பெடுத்து மாறு கொண்ட வளர்ப்பை உருவாக்குகிறது.

இப்படி ஒவ்வொரு அணு வளர்ச்சியின் வளர்ப்பிலும் தொடர் வளர்ச்சி வளர்வதைப் போல் இந்தப் புவி மட்டுமல்லாது… ஒவ்வொரு மண்டலமுமே… தன் வளர்ப்பின் வளர்ப்பை வளர்த்துக் கொண்டே உள்ளது…!

சூரியக் குடும்பத்தின் வளர்ப்பைப் போன்றே ஒவ்வொரு மண்டல வளர்ப்பின் வளர்ப்பு வளர்ந்து கொண்டே தான் உள்ளது. அதாவது
1.மனித இனப் பெருக்க சுழற்சியைப் போன்றே
2.ஒவ்வொரு செயலும் தன் வளர்ப்பின் வளர்ப்பை வளர்த்துக் கொண்டே தான் உள்ளது.

சுழற்சி ஈர்ப்பு வளர்ப்பின் நிலைக்கொப்பச் சுழலவிடும் வளர்ப்பிலேயே
1.வளரும் தன்மை ஒன்றொன்றின் தொடர்ச்சி கூடக் கூட
2.வளர்ச்சியின் தன்மை வலு அதிகமாகின்றது.

தங்கத்தின் வளர்ப்பானது அவை வளரும் இடங்களில் ஆரம்ப இடத்தைக் காட்டிலும் அடுக்கடுக்காக அந்தத் தங்க வளர்ப்பு மண்ணானது சிறிது சிறிதாக வலுப் பெற்று அதன் தொடர்ச்சியில் கிடைக்கப்பெறும் இந்த உலோகச் சேர்க்கை வடிவமைப்பு மிகவும் உயர்ந்ததாகக் கிடைக்கின்றது.

அதைப் போன்றே இந்த உயிராத்மாவிற்கு சேமிக்கப்படும் சேர்க்கையின் தன்மை…
1.இந்த உடல் பிம்ப ஜீவனுக்கு அளிக்கப்படும் உணவிலிருந்தும்
2.சுவாசத்தால் எடுக்கும் எண்ணத்திலிருந்தும்… உணர்வின் தன்மை கொண்டும்
3.வளர்ச்சி பெறும் அணுக்களின் காந்த ஈர்ப்பு நிலைக்கொப்ப இந்த ஆத்மா அது வளர்கின்றது.

எண்ணத்தால் எடுக்கும் ஞான வளர்ச்சியின் வாழ்க்கை நெறி முறைச் செயல் உணர்வுகளில்… “எண்ண ஈர்ப்பை” நாம் செலுத்தும் உணர்வின் வலு அணுக்களைத்தான் இந்தப் பிம்பக் கூடு வளர்த்து “அந்த வளர்ப்பின் வலுவைத்தான்…” இந்த ஆத்மா பெறுகின்றது.

1.செடியின் ஆரம்ப வித்துத் தன்மை வளர வளர அதனின் பலன் பலவாக முற்றித் தருவதைப் போல
2.எண்ண ஈர்ப்பால் நாம் எடுக்கும் வலுத் தன்மையை இந்த ஆத்ம உயிரும் எடுத்துக் கொள்கின்றது.

இந்த ஆத்ம உயிரின் வலுத் தன்மையானது உணர்வின் ஈர்ப்புச் செயல் நிலைக்கொப்ப எல்லாம் வலு ஏறுகின்றது. நாம் சொல்லக்கூடிய ஜெப முறையாலும் தியான முறையாலும் மட்டும் வலு ஏறுவது என்பதல்ல.

இவ்வாத்ம உயிரின் வலு இவ்வுணர்வின் எண்ண ஈர்ப்பின் செயல் வலுவை எதன் வழியில் செலுத்தி வீரிய குணம் பெற்றிருந்தாலும் அதன் குண நிலைக்கொப்பவே வளரும்.

ஆக… தீய வழிகளில் செல்லும் ஆவேச அலை ஈர்ப்பில் உள்ளவர்களின் உயிராத்மாவின் வலுத் தன்மையும்… இதன் ஈர்ப்புப் பிடியில் வலுவாகிச் செயல் கொள்கின்றது.

அதே போல இந்த உணர்வின் ஈர்ப்பு வீரத்தின் செயலைச் சாந்த குண ஞான வழிக்குச் செலுத்தினாலும்… அசுர குண வஞ்சனையில் இவ்வீரத்தைச் செலுத்தினாலும்… இவ்வலை ஈர்ப்பு காந்த சக்தியின் வலுத் தன்மையை இவ்வுயிராத்மா எப்படி வலுவாக்கிக் கொள்கின்றதோ அதைப் போன்ற அசுர குண ஈர்ப்பு நிலைக்கும் வலு கூடுகின்றது.

இதை உணர்ந்து..
1.இந்த மனித உடலில் நாம் வாழும் காலத்தில்
2.நம் ஆத்ம உயிருக்குச் சேமிக்க வேண்டிய உயர் ஞான சக்தியை எடுத்து விளையச் செய்து
3.அந்த முற்றலாக நாம் ஒளி சரீரத்தைப் பலனாக எடுக்க வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

வைகுண்ட ஏகாதசி அன்று விடிய விடிய முழித்திருப்பார்கள். ஏகாதசி அன்று விரதமும் இருப்பார்கள். ஏனென்றால் சொர்க்க வாசலை அப்பொழுதுதான் திறப்பார்கள்.

முன்னாடி இருக்கும் வாசல் வழியாகத்தான் எல்லோரும் வழக்கமாக ஆலயத்திற்குள் செல்வார்கள். ஆனால், வைகுண்ட ஏகாதசி அன்று வடக்கு வாசலைத் திறப்பார்கள்.

அப்படி வடக்கு வாசலைத் திறப்பதில் உண்மை உண்டு.

உயர்ந்த உணர்வுகளைப் பெறக் கூடிய முறைகளை சாஸ்திரங்களின்படி வகுத்திருந்தாலும் நாம் அதை அறியவில்லை. ஆக, விடிய விடிய எதை எதையோ நினைத்துக் கொண்டிருப்போம்.

பெரும்பகுதி பெருமாள் கோவில்களில் தான் சொர்க்கவாசலைத் திறப்பார்கள். பெருமாள் கோவில் என்கிற பொழுது இந்த உடலுக்குள் எல்லாம் பெருமாளாக இருந்து ஆட்சி புரிவது.

விஷ்ணு என்றாலும் பெருமாள் என்றாலும் நாராயணன் என்றாலும் எல்லாமே இந்த உயிர் தான். இதை நாம் “திறப்பது… எப்பொழுது?” என்ற நிலையை அங்கே உருவாக்கப்பட்டுள்ளது.

விஷ்ணு கோவிலுக்குள் போனால் சுப்ரபாதம் பாடுவார்கள். ஆண்டாளுடைய திருப்பாவையை அந்த வெண்பாவைப் பாடுவார்கள்.

ஆனால், சாங்கிய சாஸ்திரங்களைத்தான் காட்டுகின்றார்கள். அந்தச் சொர்க்கவாசல் என்பது எது என்ற நிலைகளை யாருக்கும் ஞாபகப்படுத்தவில்லை.

நம் கண்கள் புறக்கண் ஆக இருக்கின்றது. புற நிலைகளைப் பார்க்க முடிகின்றது.

நாம் கண்ணால் பார்த்து அந்த உணர்வை நுகர்ந்து உயிரிலே படும் பொழுது அந்த உயிர் அகக்கண்ணாக இருக்கின்றது. அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் புகுத்துகின்றது.

சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கிவிடுவான் என்றும் இதைக் காட்டுகின்றார்கள்.

அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் பதிவாக்கி கண்ணின் நினைவினை உயிருடன் ஒன்றி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி சக்தி பெறவேண்டும் என்று இந்த உயிருடன் இணைத்து நம் உடலுக்குள் அதைப் பரவச் செய்தல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலுக்குள் இருக்கும் ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் பெறவேண்டும் என்ற உணர்வினை இவ்வாறு உள் செலுத்தினால் இது “சொர்க்கவாசல்”.

இதன் வழிப்படி நாம் செயல்படுத்த வேண்டும் என்று நினைவுபடுத்துகின்றனர்.

இது எப்பொழுது…?

அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் இந்த நினைவு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த வாசல் வழியாக நாம் கொண்டு செல்ல வேண்டும்.

அனுதினமும் இதை வளர்க்க நாம் விண் செல்லும் தகுதியை நாம் பெறுகின்றோம்.

மனிதனுடைய பரம்பரை வழியில் உடலைக் காப்பதா…? ஞானிகள் வழியில் உயிரான்மாவை ஒளியாக மாற்றுவதா…? – நடந்த நிகழ்ச்சி

 

சுமார் 12 அல்லது 13 வயது பெண் குழந்தை ஒன்று ஆஸ்த்மா நோயினால் மிகவும் வாடிக் கொண்டிருந்தது. எம்மிடம் (ஞானகுரு) அழைத்து வந்து விபரம் கேட்டார்கள்.

நோயின் கடுமையினால் வேதனை என்ற உணர்வையே எடுத்துக் கொண்டால் விஷத்தின் தன்மை அடைகின்றது. அதே சமயத்தில் விஞ்ஞான அறிவு கொண்டு
1.விஷத்தின் உணர்வை அதிகமாகச் சேர்த்திருப்பதால்
2.இந்த ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தால் மனிதன் அல்லாத பிறவியாகத்தான் பிறக்கும்..
3.ஆனால் அந்த உடலிலேயே அருள் மகரிஷிகளின் உணர்வை ஏற்றுக் கொண்டால்
4.இந்த உடலை விட்டுப் பிரிந்தால் அது பிறவியிலலா நிலை அடையும்…! என்று தெளிவாக்கினேன்.

அந்த மெய் ஞானிகளின் உணர்வின் தன்மை அந்தக் குழந்தைக்குச் செருகேற்றப்பட்டு உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்ற உணர்வுடனே தொடர்ந்து அதைச் செயல்படுத்தினார்கள்.

நுரையீரல் பாகத்தில் அதிகமான விஷ்த் தன்மை சேர்ந்து… நரம்பு இழுத்துப் பிடித்திருப்பதனால் அது அவஸ்தைப்படுகின்றது. அவர்கள் பரம்பரையில் அந்தப் பெண்ணின் அப்பாவிற்கு ஆஸ்த்மா இருந்தது.. தாத்தவிற்கும் உண்டு.

இப்படிப் பரம்பரை வழியாக வந்திருப்பதனால் இந்தப் பின்னம் அதிகமாக இருக்கும். இதிலிருந்து (பரம்பரை) விடுபட்டால் தான் நோயிலிருந்து தப்ப முடியும்.

இருந்தாலும்…
1.இந்த ஆன்மா பெண் குழந்தையாக இருக்கும் பொழுது அடுத்துத் திருமணமாகி
2.அதன் பின் இதன் வாழ்க்கையில் மீண்டும் அதீதமாக வேதனைப்பட்டால்
3.மனிதனல்லாத உருவாக உருவாக்கிவிடும்.

அதற்கு முன்னாடி… எம்மைச் சந்தித்த சந்தர்ப்பத்தில் அருள் ஒளியைச் சேர்க்கும் பருவமாக வரப்படும் பொழுது
1.இந்த ஆன்மா அருள் ஒளியின் தன்மை கொண்டு
2.மகிழ்ச்சியின் உணர்வு கொண்டு நஞ்சை வென்றிடும் உணர்வுகள் இதற்குள் பெறப்பட்டு
3.அதனுடைய வளர்ச்சியில் உடலை விட்டுப் பிரிந்தால்
4.அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணையவும்… உடல் பெறும் உணர்வுகள் கரையவும்…
5.பிறவியில்லா நிலையை அடையவும் இது உதவும்.

ஏனென்றால் கடும் நோய்வாய்ப்பட்டவரின் நிலைகளை அது மாற்றி அமைக்க வேண்டும். ஆனாலும் அந்தப் பெண்ணின் தாய் வேதனையை எடுக்கின்றது.

அதிலிருந்து மாற்றி ஒளியின் தன்மையாக மாற்றுவதற்கு “இந்த உடலிலேயே அந்த உணர்வுகளைக் கரைத்திட வேண்டும்…” என்ற நினைவை அங்கே கூட்டச் சொன்னேன்.

1.அதன் வழி பின்பற்றினால் எளிதிலே அங்கே சப்தரிஷி மண்டலம் போய்ச் சேரும்..
2.உடல் பெறும் உணர்வுகள் கரையும்…! என்றும் விளக்கமாகச் சொன்னேன்.

ஆகவே… மனிதன் இந்த உடலுக்கு இச்சையை அதிகமாகக் கூட்டாது அருள் ஒளி பெறவேண்டும்… இந்த வாழ்க்கையில் வரும் இருளை நீக்க வேண்டும்…! என்ற உணர்வை வலுவாக எடுத்தால் போதும்.

1.குறித்த காரியங்கள் பெறவேண்டும்…! என்று எண்ணுவதற்குப் பதில்
2.அருள் ஒளியின் உணர்வுகள் வரும் பொழுது தெளிவான உணர்வுகள் வரும்.
3.அப்பொழுது வழி அறிந்து செயல்படக்கூடிய திறன் வரும்.
4.சோர்வென்ற நிலைகள் விடாது தெளிந்த மனதைக் கூட்ட இது உதவும்.

ஆகவே எத்தகைய தொல்லைகள் வரினும் அருள் ஒளி எங்கள் உடலில் பெருக வேண்டும். இந்த உடலை விட்டுச் சென்றால் பிறவில்லா நிலை அடைய வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அந்த அரும் பெரும் சொத்தே… நமக்கு மிகப் பெரிய செல்வம் ஆகும்…!

நாம் தேடிச் செல்லும் எந்தச் செல்வங்களும் நம்முடன் வருவதில்லை. அழகான உடலும் நம்முடன் வருவதில்லை. அலங்காரப் பொருள்களும் நம்முடன் வருவதில்லை. ஆடம்பரமாகக் கட்டிய வீடும்… காரும்… நம்முடன் வருவதில்லை.

அருள் ஞானத்தை இந்த உடலில் வளர்த்துக் கொண்டால் உயிருடன் ஒன்றிய ஒள்யின் சரீரமாக நிலை பெறும். ஆகவே எதிலேயும் வேகாத நிலையாகப் பிறவி இல்லா நிலை அடைந்து… “அகண்ட அண்டத்தில் என்றுமே வாழலாம்…!”
1.அகண்ட அண்டத்தில் வாழும் பருவத்தை
2.இந்த உடலிலே சேர்த்தால் தான் அடுத்த நிலை வரும்.

ஏனென்றால் இந்த உடல் எந்த நேரத்திலும் போகத்தான் செய்யும். மிஞ்சிப் போனால்… கூட ஒரு பத்து இருபது வருடம் வாழப் போகின்றோம்… அவ்வளவு தான்…!

பெண் குழந்தை என்று வரப்படும் பொழுது “சீரான உடல் அமைப்பு இல்லை…” என்றால் திருமணம் ஆனாலும் மிகவும் வேதனைப்படும், குழந்தைப் பேறு போன்ற பருவங்கள் வரும் பொழுதெல்லாம் வேதனைப்படும்.

ஆகவே இந்த உடல் தேறாது என்ற நிலை வந்தவுடன் தேறுவது எது…?
1.அருள் உணர்வின் ஒளியே தேறும்.
2.அதுவே என்றும் பிறவியில்லா நிலை
3.இந்தப் பருவத்தில் ஒளியாகி விட்டால் நலமாகும்.

மாறாக… குழந்தை மேல் பாசமாக எண்ணி ஏங்கி விட்டால் அந்தப் பெண்ணின் ஆன்மா தாயின் உடலுக்குள் மீண்டும் வரும். இந்த உடலில் எந்த வேதனையை அது பட்டதோ தாயின் உடலுக்குள்ளும் அதே வேதனையைத் தான் உருவாக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நமது ஆலயப் பண்புகள் சாதாரணமானதல்ல. ஒவ்வொரு நோடியிலேயும் தீமைகளை அகற்றும் சக்தியாகவும் நமக்குள் ஒருவருக்கொருவர் இணைக்கும் சக்தியாகவும் தான் ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

உண்மையான விரதம் எது…?

விடிய விடிய நாம் விரதம் இருக்கின்றோம். சாப்பாடு சாப்பிடுவதில்லை. நான் அரிசி சாதம் சாப்பிடுவதில்லை, அதனால் கோதுமை சாதம் சாப்பிடுகின்றேன்.

இல்லையென்றால் அடுத்து வாழைப்பழத்தை மட்டும் சாப்பிடுகின்றேன். ஏனென்றால் இரண்டாவது தரம் அரிசி சாதம் சாப்பிட்டால் விரதத்திற்கு அர்த்தமில்லை…! என்றும் சொல்வார்கள்.

ஆனால் நீங்கள் நலமாக இருக்க வேண்டும்… உங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் நலமாக இருக்க வேண்டும்… என்று எண்ணுவதுதான் உண்மையான விரதம்.

வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கும் நாளில் விடிய விடிய முழித்துக் கொண்டிருப்பார்கள். “முழித்திருக்க வேண்டும்…” என்ற நிலையில் எதை எதையோ பேசி விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

இதுவெல்லாம் சாங்கிய சாஸ்திரம். ஆனால், நாம் எதை நினைக்க வேண்டும்…?

“துன்பங்களை அகற்றும்… துன்பங்களை அகற்றிய அந்த அருள் ஞானிகளின் அருள் சக்திகளைத்” தொடர்ந்து சுவாசிக்க வேண்டும். இந்த உணர்வுகளை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.

அதே போன்று மகரிஷிகளின் அருள் சக்தி உலக மக்கள் அனைவரது உடலிலும் படரவேண்டும். அவர்கள் இரத்த நாளங்களில் மகரிஷிகளின் அருள் சக்தி கலந்து அவர்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

இத்தகைய நிலைகளை நாம் எண்ணி விடிய விடிய இதே எண்ணம் கொண்டு இருத்தல் வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நாமும் பெற்று மகரிஷிகளின் அருள் சக்தியால் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும் என்ற உணர்வுகளைப் பாய்ச்சுதல் வேண்டும்.

1.“என்னைப் போலவே… பிறரை எண்ணுகின்றேன்”
2.பிறர் “துன்பமில்லாத நிலைகளில் வாழ வேண்டும்” என்று எண்ணுகின்றேன்.
3.அப்பொழுது, “துன்பமில்லாத வாழ்க்கை வாழும் அந்த அணுவின் தன்மை” எனக்குள் விளைகின்றது.

இத்தகையை நிலைகளை எவர் எண்ணுகின்றார்களோ அதுவே தான் உண்மையான விரதம் ஆகின்றது.

ஞானிகளின் உணர்வை ஏன் பற்ற வேண்டும்…? மற்றவைகளைப் பற்றற்றதாக ஏன் மாற்ற வேண்டும்…? என்பதை அறிந்து கொள்ளுங்கள்

 

ஒரு தெருவில் வளர்ந்த நாய் அடுத்த தெருப் பக்கம் வரும்போது அந்தத் தெருவில் இருக்கக்கூடிய நாய்கள் இதை விடுவதில்லை. பார்த்தோமென்றால் சண்டை போட்டுக் கொண்டே இருக்கும்.

காடுகளிலே வாழும் புலிகளை எடுத்துக் கொண்டாலும் ஒரு பக்கம் உருவான புலிகள் அடுத்த பக்கம் வாழும் புலிகள் இருக்கும் இடத்திற்குச் சென்றால் அங்கிருக்கும் புலிகள் எல்லாம் சேர்ந்து அதைக் கொல்லப் பார்க்கும்.

கூட்டமாக வாழும் மான் இனங்களும் ஒரு பகுதியில் உள்ளது அனைத்தும் இணைந்து வாழ்ந்தாலும் இன்னொரு பகுதிக்கு அவைகள் சென்றால் அங்கிருக்கும் மான்கள் எல்லாம் சேர்ந்து இதை எதிர்த்துத் தாக்கும் நிலை வருகின்றது.

ஏனென்றால்…
1.இங்கே வந்து விட்டால் தனக்குக் கிடைக்கும் உணவு பங்கு போய்விடுமே…! என்று தான்
2.இந்தப் போர் நிலை வருகின்றது… இயற்கையிலிருந்தே இந்த நிலை தான் வருகிறது.

இதைப் போன்றே மனிதனும் மாறுபட்டு வந்தான் என்ற நிலைகள் வரும் பொழுது அன்று வாழ்ந்த காட்டுவாசிகளும் அப்படித்தான் வாழ்ந்தார்கள்.

அதற்குப் பின் நாட்டுக்கு நாடு ஆளும் அரசர்கள் என்று வந்தாலும் அடுத்த நாட்டுக்காரன் இங்கே வந்தால் நம்மை அடிமைப்படுத்தி விடுவான் என்றும் இப்படி ஒருவருக்கொருவர் போர் செய்யும் நிலையும் அதன் வழியில் மற்றவரை அடிமைப்படுத்தும் தன்மை வந்தது.

இது வளர்ந்து வளர்ந்து உலகமெங்கும் இந்த உணர்வுகள் பரவி…
1.தன் இனத்தைத் தவிர மற்றது வந்தாலே
2.எதிர்த்துத் தாக்கும் நிலையே உள்ளது.

ஒருவன் தவறு செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அந்தத் தவறு செய்பவன் வெளிப்படுத்தும் உணர்வை ஒரு நல்ல மனிதன் நுகர்ந்தான் என்றால் அந்த உணர்ச்சியின் தன்மை அவனுக்குள் வருகிறது.

நல்ல மனிதன் அதை நுகரும்பொழுது “அவன் தவறு செய்கிறான்…” என்ற எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றது. தவறு செய்கிறான் என்று சுட்டிக் காட்டிச் சொன்னால் தவறு செய்தவனுக்கு நம்மைப் பற்றி இவன் தவறாகச் சொல்கிறான் என்ற பழி உணர்ச்சி வருகின்றது.

1.தவறு செய்கிறான் என்று சொன்னால்
2.என்னைப் பற்றித் தவறாகப் பேசுகிறார் என்று அவனை எதிரியாகப் பார்க்கின்றான்.
3.அவனுக்கு எப்படியும் தொல்லை கொடுக்க வேண்டும் என்ற உணர்வு தான் வருகின்றது.

இப்படித்தான் நாம் வெளிப்படுத்தும் உணர்வுகளை மற்றவர்கள் நுகர்ந்தால் அந்த நுகரந்த உணர்வு அவர்களை எப்படிச் செயல்படுத்துகிறது என்பதைப் பார்க்கலாம்.

நண்பர்களாகப் பழகுகின்றோம்… அன்பாகப் பழகுகிறோம் என்றும் என்று வைத்துக் கொள்வோம். நம்மிடம் பழகிய அந்த நண்பன் இன்னொரு பக்கம் தவறு செய்கிறான்.. பெரிய குற்றங்களை அவன் செய்து விட்டான்.

சம்பந்தப்பட்டவர்கள் ஏன் இப்படிச் செய்கிறாய்…? என்று கேட்கின்றார்கள். நண்பன் என்ற பற்று இருக்கும் போது
1.பாசத்தால் அவன் தவறை மறந்து
2.தவறு செய்ததை மற்றவர் கேட்கப்படும் பொழுது அவர்களைத் தாக்க ஆரம்பிக்கின்றோம்.

இது தான் இன்று இருக்கக்கூடிய உணர்வுகளின் இயக்கங்கள்.

காரணம்… பற்று எதன் மீது இருக்கின்றதா அவன் உணர்வும் இங்கே வந்து விடுகின்றது. அந்த உணர்வின் வழிப்படியே இவருடைய செயலும் மாறுகின்றது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டால் தான் ஞானிகள் காட்டிய பேருண்மைகளை நாம் உணர முடியும்… பகைமை இல்லாது துன்பம் இல்லாது உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.

செயற்கையின் பிடியிலிருந்து மீளுங்களப்பா…! – ஈஸ்வரபட்டர்

 

இப்புவியின் நாதமான ஓ…ம்… என்ற நாத அமிலமானது… சுவை கொண்டு பால்வெளி மண்டலத்தில் மிதந்துள்ள அமிலத்தின் சுவை சேர்க்கையின் கனம் கொண்டு தன் ஈர்ப்பின் சுழற்சி சக்தியிலேயே அந்தச் சுவையின் ஒலி பிறக்கின்றது.

அமிலச் சுவையின் ஒலி ஈர்ப்பாகி ஒளியாகின்றது. உயிர் அணு பிறக்க சுவையின் ஒலி கொண்ட ஒளியான அணு பிறக்கின்றது.

இந்த வழித் தொடரின் நிலைக்கொப்பச் சுவை… குணம் வளர்ச்சியின் ஒலி கொண்டு ஒளியாகி… வழி பெறும் ஒவ்வொரு தன்மையிலுமே… இயற்கை வளர்ச்சி ஒவ்வொன்றின் ஈர்ப்பிற்கும் அந்தத் துடிப்பின் நாதம் பிறக்கின்றது.

சுவையில் எப்படி ஒன்றை ஒத்து ஒன்று இல்லையோ அதைப் போன்றே இவ்வொலியும் ஒன்றுக்கொன்று மாறிய நாதமாகத்தான் பிறக்கின்றது.

செயற்கையின் சேர்க்கைப் பொருள் கொண்டு வாகனங்களில் அதனதன் உலோகச் சேர்க்கையின் நிலைக்கொப்ப மாட்டு வண்டிக்கும் புகை வண்டிக்கும் மிதி வண்டிக்கும் விமானத்திற்கும் நாத ஒலி மாறுபடுகின்றது.
இது ஒவ்வொன்றையும் பிரித்துக் காட்டுவதன் பொருள்…
1.செயற்கைச் சேர்க்கைப் பொருளைப் போன்றே
2.இயற்கைச் சேர்க்கையின் ஒலி நாதமும் மாறுபடுகின்றது.

ஞான வளர்ச்சிக்கு ஆத்ம ஜெபத்தால் உயர் ஞான தியானமாக ஒவ்வொரு சக்தி அலையின் ஒலி அலையையும் இந்த ஆத்ம உயிருக்கு எடுக்க வேண்டியுள்ளது.

அணுவுக்குள் அணுவாக பல சுவை முலாமைச் சித்தர்கள் தன் உயிராத்மாவிற்குச் சேமிக்கின்றனர் என்று ஏற்கனவே சொன்னேன்.

அதே போல் எண்ணத்தால் எடுக்கும் ஒலியின் நாதத்தை தியானத்தில்
1.சப்தரிஷிகளின் அவரவர்களுக்கு உகந்த சூட்டப்பட்ட நாமகரணத்தின் நாதத்தை
2.அகஸ்தியர் போகர் வியாசகர் வான்மீகி கொங்கணவர் கோலமாமகரிஷி இவர்கள் பால் எண்ணத்தைச் செலுத்தி
3.நாம் எடுக்கும் ஜெபத்தால் அவர்களின் நாத ஒலியை நம் ஆத்ம உயிரும் எடுத்துக் கொள்கின்றது.

மேலும் நம் சூரிய குடும்ப வளர்ச்சி கொண்ட உயர் சக்திகளின் மண்டல ஈர்ப்பின் ஒலியையும் எண்ணத்தின் ஈர்ப்பு கொண்டு எடுக்கும் சுவாசத்தால் அந்தந்த மண்டலங்களின் அதற்குகந்த ஒலிகளையும் நம் ஆத்ம உயிர் சேமித்துக் கொள்கின்றது.

1.நாம் எடுக்கும் ஜெபத்தால் இவ்வுயிராத்மாவின் சக்தி கூடினால் தான்
2.எந்த மண்டலத்திற்கும் செல்லலாம் என்று ஏற்கனவே சொன்னேன்.

ஆக எண்ணத்தால் எடுக்கும் ஒலி சேமிப்பின் தொடர் வளர்ச்சி விகிதத்திற்கொப்பத்தான் இந்தப் புவி ஈர்ப்பி பிடியிலிருந்து எந்த மண்டலத்திற்கும் செல்லத்தக்க சக்தி இவ்வொளி ஈர்ப்பினால் (தியானத்தில்) கிட்டுகின்றது.

மெய் ஞான ஈர்ப்பின் பக்தி பூண்ட பெரியோர்களின் ஆத்ம உயிரின் சேமித ஒளி சக்தியினால் தான் சிலரின் சொல்லாற்றல் சக்தியே… உயர்ந்த சொல்லாக வெளிப்பட்டு அந்தச் சொல்லின் செயல் நடப்பது பலிதம் கொள்வது எல்லாமே…!

சுவையின் தன்மைக்கே இவ்வொலிச் சேர்க்கை கொண்டு தான் வலுக்கூடுகின்றது.
1.எந்தெந்த எண்ணத்தில் எல்லாம் சுவாசம் எடுக்கின்றோமோ
2.அச்சுவாசத்தால் பிறக்கும் ஒலி.. ஒளியைக் கொண்டுதான்
3.இவ்வாத்ம உயிரின் நிலை உயருகின்றது.

இதன் நிலைக்கொப்பத்தான்… ஜெப முறை கொண்டு தியானத்தில் எண்ணத்தை எவ்வலை ஈர்ப்பு செயலில் செலுத்துகின்றார்களோ… அதன் ஒலி ஈர்ப்பைச் சித்து நிலை பெற்ற தன்மை கொண்டு… உடலுடன் வாழும் காலத்திலேயே ஒவ்வொரு மண்டலத்தின் ஒலி ஈர்ப்பையும்… தன் எண்ணத்தால் செலுத்தும் தியானத்தால்… ஆத்ம உயிரின் வளர்ச்சிக்கு ஒலி முலாமை ஏற்றார்கள் அன்றைய சித்தர்கள்.

இப்பொழுது உணர்த்தப்படும் முறைகள் எல்லாமே…
1.ஒவ்வொரு மனிதனும் இந்தப் புவி வாழ்க்கைதான் வாழ்க்கை என்ற
2.“இச்செயற்கைப் பிடியிலிருந்து மீண்டிடக் காட்டப்படும் முறைகள் ஆகும்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

பித்தரைப் போன்று இருந்த குருநாதர் பித்தரைப் போன்று இயங்கும் (இந்த உலக) நிலைகளிகலிருந்து மீண்டிட எமக்குத் தெளிவாக உபதேசித்தார்.

1.ஒவ்வொரு மனிதரின் உயிரையும் கடவுளாக எண்ணு
2.அவன் கட்டிய கோட்டை அந்த உடல் என்ற நிலைகளில் ஆலயமாக மதி
3.அவருக்குள் இருக்கும் நல்ல குணங்களைத் தெய்வங்களாக நீ மதி
4.அவருக்குள் இருக்கும் நல்ல உணர்வை ஈர்க்கும் நிலையை (காந்த சக்தி) “மகாலட்சுமி” என்று மதி
5.மகாலட்சுமி என்றாலும் அது கவர்ந்தாலும் அந்த உடலுக்குள் சேர்த்து ஞானங்களாக வளர்ந்தது “மகா சரஸ்வதி” சர்வத்தையும் அறிந்து கொள்ளும் மனித உடலுக்குள் இருக்கும் இந்த நிலையை அதை நீ மதி
6.தீமைகளை அகற்றி விண்ணுலகம் சென்ற அந்த அருள் ஞானியின் உணர்வுகளை ஒவ்வொரு மனிதனுக்குள் சேர்க்க வேண்டும்.
7.அந்த உணர்வுகள் அங்கே தீமையற்றதாக வளர வேண்டும்… இந்த உணர்வின் தன்மை ஓங்கி வளர்ந்திட வேண்டும் என்று உன் எண்ணத்திற்குள் நீ சேர்த்துவிடு.
8.உயிரைக் கடவுளாக மதித்து அந்த ஈசன் வீற்றிருக்கும் ஒவ்வொரு ஆலயமும் புனிதமாக வேண்டும் என்று எண்ணி அதை நீ பிரார்த்தனை செய்.
9.அதனை நீ தியானி என்றார்.

அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் சேர்ப்பித்து உங்களுக்குள் வீற்றிருக்கும் ஈசனுக்குத் துன்பமற்ற நிலைகள் கொண்டு மகிழ்ந்து இயக்கும் உணர்வாக நீங்கள் எண்ணும் எண்ணம் அந்த மகிழ்ச்சியான உணர்வின் அபிஷேகமாக நடக்க வேண்டும்.

நீங்கள் எண்ணிய எண்ணங்கள் எல்லாம் இனிமை கொண்டதாகவும் மலரைப் போன்ற மகிழ்ச்சி கொண்ட நல்ல நறுமணம் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

இந்த எண்ணத்தின் நிலைகள் உங்களுக்குள் பதிவாக வேண்டும். அப்பொழுது இந்த எண்ணமே
1.உங்கள் உயிரான ஈசனுக்கு நல்லது செய்விக்கும் நிலையும்
2.அவன் அருள் நீங்கள் பெறும் நிலையாகவும் அமையும்.

மனிதர்களான அனைவருக்கும் அருள் ஞானிகளின் உணர்வுகளைச் சேர்ப்பிக்கும் வண்ணமாக எல்லா மனிதர்களுடைய உணர்வுகளிலேயும் இயக்கும் உயிரைக் கடவுள் என நீ மதித்து நட என்றார் குருநாதர்.

அவர் காட்டிய அருள் வழியில் அந்த அருளாற்றல்களை நீங்கள் பெற வேண்டும் அருள் ஞானிகளின் ஆற்றலை நீங்கள் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

அதனின் துணை கொண்டு உங்கள் குலதெய்வங்களான முன்னோர்களை நீங்கள் விண் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் மூதாதையர்கள் உங்களை வளர்க்க எத்தனையோ வேதனைப்பட்டிருப்பார்கள். அதன் வழியில் வேதனையான உணர்வு கொண்டு அந்த உடலை இழந்திருப்பார்கள்.

அந்த உடலுக்குள் விளைய வைத்த வேதனையான உணர்வுகள் உயிருடன் ஒன்றி உயிருடன் வேதனையாக விளைந்து கொண்டிருக்கும் அந்த உயிரான்மாக்களை நீங்கள் விண்ணுலகம் செலுத்த வேண்டும்.

இது தலையாக் கடமையாகும்.

பிறிதொருவரின் இயக்கமாக நாம் இயங்கிவிடக் கூடாது

 

அன்றாட வாழ்க்கையில் கோபமோ வெறுப்போ வேதனையோ போன்ற உணர்வுகளை எல்லாம் நாம் அதிகமாகச் சந்திக்க நேருகிறது… நமக்குள் அது எல்லாம் பதிவாகின்றது.
1.அதன் வழி நாம் சுவாசிக்க சுவாசிக்க
2.நம் உடலிலே அந்தந்த குணங்களுக்குண்டான அணுக்கள் பெருகுகின்றது.

கோபமும் வேதனையும் வெறுப்பும் வளரும்போது நம் நல்ல குணங்களுக்குள் ஊடுருவி உடலுக்குள்ளே பெரும் போராக நடக்கின்றது.

கார உணர்வுகளை உணவாக உட்கொள்ளும் அத்தகைய அணுக்கள் அதனுடைய வளர்ப்புக்குக் காற்றிலிருந்து தன் தன் இனமான உணர்வுகளை நுகரச் செய்து அது உணவாக எடுத்துக் கொள்ளும்போது
1.நம் உயிரிலே பட்டுத் தான் இந்த உணர்வுகள் செல்கின்றது
2.அதனால் நம் உடலுக்குள் குழப்பமும் சிந்திக்கும் தன்மை இழக்கும் சந்தர்ப்பமும் வருகிறது.

நல்ல அணுக்கள் உணவுக்காக உணர்ச்சிகளை உந்தினால் அதற்கு உணவு கிடைக்காதபடி நம்மை அறியாதபடி ஒரு இருண்ட நிலையாக மாறுகின்றது.

உதாரணமாக ஒருவன் அரக்கத்தனமாகத் தாக்கப்படும்போது அவன் உடலில் இருந்து விளைந்த உணர்வுகளை நுகரும் பொழுது அது வாலி.

நாம் அதை நுகர்ந்தோமென்றால் உடனே நம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் அனைத்தும் நடுங்கத் தொடங்குகிறது. அவனுடைய கார உணர்ச்சிகளை நம் உடல் தாங்காது உடல் நடுக்கமாகிச் சிந்திக்கும் செயலும் இழக்கப்படுகின்றது.

சிந்திக்கும் செயல் இழக்கப்படும் போது…
1.அவன் நம்மைத் தாக்கிக் கொல்வவதற்கு முன்
2.அவனைத் தாக்க வேண்டும்…! என்ற உணர்வுகள் நமக்குள் வருகின்றது.

இப்படி… சாந்தமாக இருக்கும் ஒருவன் கொலை செய்ய எப்போது காரணம் ஆகின்றான் என்றால் மற்றொருவன் கொலை செய்யும் உணர்வுகளைப் பார்த்துப் பதிவாக்கி அந்த உணர்ச்சிகளை நுகரப்படும் பொழுது இவனுக்குள் வந்து விடுகின்றது.

தான் வாழ வேண்டும் என்ற நிலையில் அடிக்கடி பிறரைக் கொன்று குவித்து அதன் வழி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஒருவன் எண்ணி எடுக்கின்றான்.

1.அதை அடுத்தவர் உற்றுப் பார்த்து நுகரப்படும் போது ஓ…ம் நமச்சிவாய… அவர்கள் உடலாக மாறி
2.சிவாய நம ஓ…ம் நுகர்ந்த உணர்வுகள் அந்த எண்ணங்களாக அவனையும் கொலை செய்ய
3.இந்த உடலிலிருந்து மீண்டும் செயல்படுத்தத் தொடங்குகிறது.

கெடுதல் செய்கிறார் என்ற உணர்வினை நாம் அடிக்கடி நுகர நேர்ந்தால் சிவாய நம ஓ…ம் அவனின் அசுர உணர்வுகள் நம்மை இயக்கி நம் உடலில் உள்ள நல்ல அணுக்களை அது மாற்றி அமைக்கத் தொடங்கி விடுகின்றது.

ஆகவே…
1.எடுத்துக் கொண்ட (சுவாசித்த) உணர்வுக்கொப்ப நாம் எவ்வாறு இயங்குகிறோம்…?
2.பிறிதொரு உணர்வால் எவ்வாறு நாம் இயக்கப்படுகின்றோம்…?
3.இதிலிருந்தெல்லாம் நம்மை நாம் எப்படிக் காத்துக் கொள்ள வேண்டும்…? என்பதனை அறிந்து
4.தீமைகளை வென்ற மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்குத் தான்
5.இதை எல்லாம் உங்களுக்குள் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

நம் எண்ணத்தால் எந்த மண்டலத்திற்கும் செல்லலாம் – ஈஸ்வரபட்டர்

 

விக்கிரமாதித்தனின் கதையில் வரும் நிலை யாவையுமே கதையல்ல… உண்மைத் தன்மை உடையது…! விக்கிரமாதித்தன் பூஜித்த உஜ்ஜயினி காளியானவள்… பெண்ணாகப் பிறப்பெடுத்து ஞானத்தால் வளர்த்த சப்த காளியப்பா அவள்.

அவளின் வழித் தொடரைப் பிடித்தவன் தான் விக்கிரமாதித்த மகாராஜா. அக்கதையில் உள்ள யாவையுமே ஒரு சில மாறியிருந்தாலும் உண்மை நடப்புகள் தானப்பா அவை யாவுமே…!

அரசாண்டவனின் ஞானம்… சித்து நிலை பெற வழி வந்ததின் தன்மை பக்தி பூண்டு… பூஜித்துப் பூஜிப்பின் பலனால் அக்காளியின் ஞான அலைத் தொடர்பைப் பெற்று… அக்காளியின் செயலாகவே சித்து நிலை பல பெறும் தன்மைக்கே விக்கிரமாதித்தன் ஆளானான்.

காடாறு மாதம்… நாடாறு மாதம்… என்ற நிலையில் காடுகளில் வாழ்ந்த காலத் தன்மையில் தன் ஆத்ம உயிருக்கு வேண்டிய வலுத் தன்மையை… ஞானத்தின் வழியான சித்து மார்க்கம் பெறுவதற்காகவும் பல செயல்களை அறியவும் அணுவுக்குள் அணுவாக அணுவின் தன்மை முலாமை எல்லாம் தன் உயிராத்ம வலுவுக்கு ஏற்றிக் கொண்டான்.

இந்தப் பூமியின் கனி வள விகிதமானது ஏழு குணத் தன்மை கொண்டது. அதன் வளர்ச்சி கனி வளங்களின் தன்மை ஒவ்வொன்றில் பலவாக வளர்ந்துள்ளது.

வண்ணமும் ஏழு… சுவை குணங்களும் ஏழு… என்று சொல்கிறோம். இந்த ஏழின் தன்மை எதன் குண நிலை அடிப்படையில் கலவை பூண்டது…?

ஆவியாகிக் கனம் கொண்டு ஜீவனாகிச் சுழலும் இயற்கைத் தன்மையில் இவ் ஈர்ப்பின் இயற்கை நிலைச் செயலுக்கொப்ப
1.பால்வெளியின் கூட்டுக் கலவை அமிலத்தின் “குறிப்பிட்ட செயல் சேர்க்கையின் தன்மையில்”
2.சக்தி பெற்ற சப்தரிஷி மண்டலம் என்று உணர்த்துகின்றார்கள் அல்லவா…!
3.அவர்களின் ஈர்ப்பு வளர்ப்பு நிலை தான் (படைப்பு) இந்தப் பூமியின் தன்மை குணம்.

சுவையும்… வண்ணமும்.. மணமும் ஏழாக… ஈர்ப்புக் கூட்டுக் கலவைச் சேர்க்கை ஜீவன் கொண்ட சிவ சக்தி என்ற ஆண் பெண்ணின் செயல் கொண்டு உருவானது தான் இந்தப் பூமி.

பூமியின் குணத்தைச் சிருஷ்டித்து வழி நடத்தும் ரிஷிக் குணத்தில் ஒவ்வொருவர் பெற்ற தனித் தன்மையின் சக்தியை ஒன்றாக்கி வளர்த்த தன்மை தான் இந்தப் பூமியின் தன்மை.

1.இப்படி எத்தன்மை பூண்டு இந்தப் பூமி உருவானதோ…
2.அதன் கலவைக் கூட்டில் எல்லாம் தன் ஆத்ம உயிரைச் செலுத்தி
3.தன் வலுவை இந்தப் புவி ஈர்ப்பின் வலுவிலேயே தன் வலுவைக் கூட்டி
4.எந்த வலுத் தொடர்பைத் தந்து ஏழு குணச் சேர்க்கையில் இந்தப் பூமி உருவானதோ – அந்த ஏழில் முலாம் பெற்ற சித்தன்
5.இவ்வேழுக்கு மேல் சக்தி கொண்ட வலுச் சக்தியான பிற மண்டலங்களின் சக்தியுடன்
6.எந்தச் சக்தியையும் உருவாக்க வல்ல பத்தாவது நிலையான ரிஷித் தன்மை கொள்கின்றான்.

கங்கைத் தீர்த்தம் புனிதமானது… என்றும் இதை ஒட்டிய ஒவ்வொரு தீர்த்தத்திலும் தான் குளித்தெழுந்தால் புண்ணியம் என்றும்… புண்ணியத் தீர்த்தங்களை நாடி மனிதன் சென்று அங்கே குளித்து இந்த உடல் பிம்பத்திற்குப் புனிதம் என்று நீராடி வருகின்றான். இது பக்தி மார்க்க முறை.

ஆனால் இந்த எண்ணத்தை
1.இந்தப் பூமியின் சக்தி அலையான அமிலத் தீர்த்தத்தில்
2.தன் ஆத்ம உயிரையே குளிக்கச் செய்தானப்பா அன்றைய சித்தன்.

பக்தி மார்க்கமும் ஜெப முறையும் வழி காட்டிகள் தான். வழியின் வலு அறிந்து தியானத்தால் ஞானம் பெற வேண்டும்.

ஆகவே இந்தப் புவியில் பிறந்த பல கோடி எண்ண ஆத்ம உயிர்களின் ஈர்ப்புப் பிடி அலைச் சுழற்சியில் இருந்து…
1.இந்தப் புவி ஈர்ப்பின் உணர்வில் சிக்காத வண்ணம்
2.தன் ஆத்ம உயிரின் ஈர்ப்பிற்குத் தன் உணர்வின் எண்ணமானது
3.நாம் எடுக்கும் தியானத்தால் உயர் ஞானம் கொண்டு மாமகரிஷிகளின் அலை ஈர்ப்பின் செயலாக ஒன்றிட வேண்டும்.

இந்த மனித பிம்ப ஆத்ம உயிரின் நுண்ணிய காந்த ஈர்ப்பின் அலை சக்தி வளர்ப்பினால் இந்தப் புவி ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபட்டுச் மகரிஷிகளின் அலைத் தொடர்பில் வலுத் தொடர்பு கொண்ட பின்
1.தன் எண்ணத்தைக் கொண்டு
2.எந்த மண்டலத்திற்கும் தன் உயிரைச் செலுத்த முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நான் கல்வியறிவு அற்றவனாக இருப்பினும் அண்டத்தின் நிலைகள் இந்தப் பிண்டத்திற்குள் எவ்வாறு உணர்வின் இயக்கங்கள் இயங்குகின்றது என்ற நிலையை குருநாதர் எனக்கு உணர்த்தினார்.

அண்டத்தை அவர் கண்டுணர்ந்து அவருக்குள் விளைந்த நிலையை விளைவித்த உணர்வின் தன்மையை என் செவிப்புலனால் கேட்கச் செய்து உணர்ச்சிகளால் உந்தப்பட்டு அதனைக் கவனித்துக் கூர்ந்து உற்று நோக்கும்படி செய்தார்.

1.நான் அவர் சொல்வதைக் கவனித்துக் கூறவில்லை என்றால்
2.அதற்காக என்னைத் தூண்டுதலாக உணர்ச்சியின் நிலைகளைத் தூண்டச் செய்து
3.அதை எனக்குள் பதியச் செய்யும் நிலையாகப் பதியச் செய்வார்.

மேலும் இயற்கையில் மனிதனுக்குத் துயரங்களும் வேதனைகளும் வெறுப்புகளும் எவ்வாறு ஏற்படுகிறது என்ற நிலையை அனுபவபூர்வமாக எமக்குள் ஏற்படுத்திக் காட்டினார்.

அதனின் துணை கொண்டு அறிந்துணர்ந்த நான் உங்களுக்கும் பதிவு செய்யும் நோக்கிலே இதைச் சொல்கின்றேன்.

சொல்லும் நேரத்தில் உங்கள் நினைவலையை வேறு எங்கோ செலுத்திவிட்டு
1.“சாமி சொல்வது… எனக்குப் புரியவில்லை…!” என்ற உணர்வினைத் தடுத்து நிறுத்திவிட்டால்
2.கேட்டும் பலனில்லாமல் போய்விடும்.

அப்படிப் பயனற்ற நிலைகளில் செல்லாது இந்த மனித வாழ்க்கையில் மெய் ஞானிகளைப் பற்றிய உணர்வுகளைப் பெறும் நோக்குடன் “உங்கள் ஞானக் கதவுகளைத் திறந்து வையுங்கள்”.

ஏனென்றால் விஞ்ஞான உலகில் இன்று மனித எண்ணங்களை அழித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அந்த மெய்ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் “பதியச் செய்து” உங்கள் பொன்னான அருள் சக்தியான மனித உணர்வுக்குள் விளைந்த ஆற்றல்மிக்க உணர்வின் நிலைகள் தீமையை நீக்கிடும் ஆற்றலாகப் பெருக வேண்டும்.

மெய் உணர்வைக் கண்டுணர்ந்த நிலைகள் என்றும் அழியா ஒளியின் சரீரம் பெறும் அவ்வாறு பெற்ற அந்த ஞானியின் உணர்வலைகள் உங்களுக்குள் விளைய வேண்டும் என்ற ஆசையில் தான் இதைப் பதிவு செய்கின்றோம்.

ஆகையினால் உங்கள் கவனங்கள் வேறு எங்கும் செலுத்தாது “எதைச் சொல்கிறோம்…” என்று கூர்ந்து கவனித்து இதைப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.

பதிவு செய்து கொண்டபின்
1.உங்களுக்குத் துன்பம் வரும் பொழுது
2.அதை மாற்றிடும் நிலையாக உங்களுக்குள் உள் நின்று இப்பொழுது பதிவு செய்யும் உணர்வுகள்
3.மீண்டும் தன்னிச்சையாகவே உங்களைக் காக்கும்.

அந்த நிலை பெற வேண்டும் என்று தான் இதை உபதேசிக்கின்றேன். சொல்லும்போது கவனத்தை வேறு பக்கம் திருப்பிவிட்டால் இது வராது.

ஒரு முலாம் பூசிய நாடாவில் அதிலுள்ள காந்தப் புலன் கவர்ந்து மீண்டும் நாம் காந்த ஊசியைச் செருகும்போது அது நமக்குள் அந்த ஒலி அலைகளை அது ஒலிபரப்புச் செய்கின்றது.

இதைப் போல இப்பொழுது பதிவு செய்த நினைவை உயிருடன் ஒன்றச் செய்யும் பொழுது அந்த ஒலி அலைகளைப் பரப்பி மெய் உணர்வை நீங்கள் கண்டுணர்ந்து தீமைகளை அகற்றிடும் சக்தியாக உங்களின் செயலின் ஆற்றல் வரும்.

நாம் அனைவரும் சகோதரர்களே…!

 

அரசியல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் செல்வோர்கள் பகைமை உணர்வை வளர்த்துக் கொண்டால் அதே பகை உணர்வு மக்கள் மத்தியிலும் வளரும்.

ஆனால் பகைமையற்ற உணர்வுகளைத் தான் வளர்க்க வேண்டும்.

அன்றும் சோஷலிசம் கம்யூனிசம் என்று எத்தனையோ விதமான கட்சிகள் இருந்தது. எத்தனையோ மதங்களும் இனங்களும் இருந்தது.

1.மதம் என்ற நிலைகளைத் தூக்கி எறிந்துவிட்டு
2.கட்சி அடிப்படையில் ஒவ்வொருவருடைய கோட்பாடுகளையும் தூக்கி எறிந்துவிட்டு
3.எப்படி வாழ வேண்டும் என்று காந்திஜி சாந்த உணர்வு கொண்டு தனக்குள் செயல்படுத்திக் காட்டினார்.

தாழ்த்தப்பட்ட இடங்களுக்கெல்லாம் சென்று அவர்களைப் பார்த்து
1.தாழ்த்தப்பட்டவன் அல்ல…
2.நீ உயர்த்தப்பட்டவன்…! என்று சொன்னார்.
3.நோயாளியைப் பார்த்து… நீ நோயாளி அல்ல… நீ என்றுமே உயர்ந்த குணங்களை பெற்று உயர்ந்த நிலைகள் பெற்று…
4.நோயற்ற வாழ்வாக வாழ்வாய்…! என்று என்று உபதேசித்தார்.

எதிரி என்று மற்றவர்கள் சொன்னாலும் பாகிஸ்தானுக்குள் சென்றார். சுட்டுக் கொன்று விடுவார்கள் என்று இருந்தாலும்…
1.இந்த உடல் சொந்தமல்ல…
2.நண்பன் என்ற நிலை வளர வேண்டும்…! என்று அங்கே சென்றார்.

யாரும் யாருக்கும் பகைமை இல்லை. மதமும் இனமும் நம்மைப் பகைமை ஆக்கக்கூடாது. மதம் இனம் என்ற நிலையில் பிரித்து எண்ணினால் பகைமை என்ற நிலைக்கே நம்மை அழைத்துச் செல்லும் என்று தெளிவாக்கினார்.

“நாம் அனைவரும் சகோதரர்களே…!” என்ற அந்த உணர்வுகளை காந்திஜியைப் போன்று நாம் ஒவ்வொருவருமே வளர்த்த வேண்டும்.

மேலெழுந்தவாரியாக அரசியல் தலைவர்கள் செய்கிறார்கள் என்றால்
1.அவர்களுக்கெல்லாம் அருள் வழியில் நாம் ஒத்துழைப்பு தர வேண்டும்.
2.நல்ல செயல்களை நாம் செயல்படுத்திக் காட்டி அதைப் பார்த்து அவர்கள் பூரிப்படைய வேண்டும்.

“கட்சியில் நான் இருக்கிறேன்…” என்று தவறு செய்தால் கட்சிக்குள்ளேயே இப்படித் தவறு செய்கிறார்களே…! என்று மனம் நொந்து விடுகின்றது. இப்படி வரப்படும் பொழுது தான் தவறின் நிலைகள் வளர்க்கப்படுகின்றது.

இதையெல்லாம் நாம் விடுத்துப் பழக வேண்டும்.

ஆகவே… எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அதை நமது அரசு என்று தான் நாம் ஏற்று வழி நடக்க வேண்டும். ஆனால் கட்சியின் தோரணையில் பார்த்தால் தவறுகள் தான் வரும்.

அரசை நல்வழிப்படுத்த காந்திஜி போன்றவர்களின் வழி முறைகளைக் கடைப்பிடித்தால் அறிவின் ஒளியாக வளரும். அதன் வழியில் நாம் நடந்தால் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

“உயிர் வழி தான்” உயர்ந்த சக்திகளை நமக்குள் பெற வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

அன்ன பிண்ட உடலாக இஜ்ஜீவ உடலை வளர்த்துள்ள மனித இனச் சக்தியின் ஞானமும் அதன் செயற்கைப் பிடிப்புடனே சமைத்துண்டு இயற்கையின் பிடிப்பின்றி காற்று மழை வெயில் எதுவுமே தன்னைத் தாக்காமல் காத்துக் கொள்ள உறைவிடம் அமைத்து வாழத்தக்க வளர்ச்சி நிலையில் தான் இன்றைய (விஞ்ஞானம்) மனிதச் செயலே இருக்கின்றது.

ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதனுக்குகந்த பகுத்தறியும் ஞானத்தில் வளர்ந்து வந்ததையே
1.செயற்கையின் செயலின் வழியில் சில நூறு ஆண்டுகளாக வார்ப்புப் படுத்திவிட்டதனால்
2.இயற்கை உணர்வின் தன்மையைத் தன் ஞான உணர்வால் ஈர்க்க முடியவில்லையப்பா “இன்றைய மனிதனுக்கு…!”

சேவலிலிருந்து சில பட்சிகளும் நாய் நரி பூனை அனைத்துமே உலகச் சுழற்சியின் தன்மையைத் தன் சுவாச உணர்வில் அறிந்து கொள்ளும் திறன் கொண்டது தான். ஜாமக் கோழி கூவுகின்றது. அதே போல் அதிகாலையில் துயில் எழுந்து இரை தேடச் செல்கின்றன பறவை இனங்கள்.

சூரிய ஒளி உதயமாவதற்குள்ளேயே ஒளியின் தன்மையை மழை மேகம் மறைத்திருந்தாலும் இந்தப் பட்சிகள் எப்படி விடியலை அறிகின்றன…?

ஏனென்றால்…
1.இந்தப் பூமி சுழலும் சுழற்சித் தன்மையை மனிதனைக் காட்டிலும்
2.தன் உணர்வின் சுவாசத்தாலேயே அறியவல்ல தன்மை
3.சில தாவரங்களுக்கும் பட்சிகளுக்கும் பிராணிகளுக்கும் உண்டு.

ஐந்தறிவு கொண்ட மற்ற இனங்கள் சொல்லாற்றலும் செயலாற்றலும் இன்றி… இயற்கையுடன் ஒயற்கையாக ஒன்றி… இயற்கை உணர்வை அறிந்து கொள்கின்றன.

ஆறறிவு கொண்ட மனிதன் என்றுரைக்கப்படுபவன்.. செயலாற்றும் திறமை கொண்டவன்… சொல்லாற்றல் உடையவன்… விஞ்ஞான சக்தியைக் கொண்டு மனிதக் கருவையே தாயின்றி வளர்க்கச் செய்பவன்…
1.என்றெல்லாம் சொல்லப்படும் இன்றைய கலி மனிதன்
2.இந்த இயற்கைச் சுழற்சியைச் செயற்கைக் கருவிகள் கொண்டு தான் உணர்கின்றான்.

ஆனால் ஞானத்தால் உயர்ந்த அன்றைய சித்தர்கள் அணுவுக்குள் அணுவாகச் சித்து நிலை பெறத் தன் பிம்ப உடலின் ஆத்ம உயிரைப் பல மிருகங்களின் பல பட்சிகளின் ஆத்மாவுடன் இவ்வாத்மாவைக் கவசம் போல் அதன் ஈர்ப்பில் சென்று அதன் உடல் அமிலக் கூட்டின் முலாமையும் தன் உயிராத்மாவிற்குச் சேமிதம் செய்து வைத்துக் கொண்டார்கள்.

இதை உணர்த்தும் விதமாகத் தான் அந்தத் தெய்வீகக் குணத்திற்காகச் சிலை உருவிற்கு நாமகரணமிட்டு பல பல சிலையின் வடிவங்களைக் காட்டினார்கள்.

1.குண சக்தியின் வழியில் தெய்வ ஞானத்தை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு
2.அந்த அவதார மூர்த்திகளுக்குப் பாம்பையும் மயிலையும் சேவலையும் பசு பன்றி சிங்கம் புலி இவைகளையும்
3.இன்னும் பல பிராணிகளையும் வாகனமாகக் காட்டினார்கள்.

தன் உடலுக்குள் விளைந்த அமில முலாம் குண வளர்ச்சியின் ஈர்ப்பு விகித எண்ணச் செயலைக் காட்டிலும் இந்தப் புவி ஈர்ப்பின் வளர்ச்சி பெற்ற பல உயர்ந்த அமிலத் தன்மையின் வார்ப்புடன் தன் செயலைச் செய்விக்க
1.தன் ஆத்ம உயிரை அணுவுக்குள் அணுவாகச் சென்று
2.பிற வார்ப்பில் உள்ள அமிலச் சுவை முலாமையும் எடுத்து
3.தன் உயிராத்மாவிற்கு வலுவாக்கிக் கொள்கின்றான் ஞானத்தில் வளர்ந்த சித்தன்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இது நாள் வரை உணர்த்தியதெல்லாம் ஜெப முறையும் தியான வளர்ச்சிக்குகந்த ஞான வளர்ச்சி முறையும் தான்.

ஞானத்தால் உயர் ஞானம் கொள்ள இந்த உடல் முழுமைக்கும் உள்ள ஒவ்வொரு அணுவையுமே தன் ஞான வளர்ச்சியின் வழி செயல் வளர்க்க “ஆத்ம உயிரின் துணை கொண்டு தான்…” செயல்படுத்த வேண்டும்.

இவ்வாத்ம உயிரின் உயர் காந்த மின் அலை ஈர்ப்பு வளர்ச்சிக்கு
1.துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் வரும் அலைகளை
2.நேரடியாக உயிராத்மாவிற்குப் பாயத்தக்க செயலாக வழியமைத்தால்
3.அதன் மூலம் இந்தப் பிம்ப உடல் அணு வளர்ச்சியின் செயலாத்மாவாக இந்த உயிராத்மா உட்கொள்கின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள் 

கார்த்திகை ஜோதி (தீபம்) அன்று பக்தி மார்க்கத்தில் அந்த ஜோதியைப் பார்த்தால் நமக்குப் புனிதம் என்று ஐதீகப்படி எண்ணுவார்கள். ஆனால்
1.விண்ணுலகம் சென்ற அருள் ஞானிகளின் உணர்வை… நாம் பார்க்க வேண்டும்
2.இருளை நீக்கிய அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் பெற வேண்டும்.

அருள் ஞானிகளின் அருள் சக்தியால் நம்மை அறியாது வந்த இருளைப் பிளந்து நமக்குள் அந்த ஒளியின் சுடரைக் காணும் நிலைகளை எண்ணி ஏங்கும் நந்நாளைத் தான் “கார்த்திகை தீபம்” என்று வைத்தது.

திருவண்ணாமலையில் “திரு அண்ணாமலை” என்ற நிலைகள் அங்கே காட்டப்பட்டது.
1.இந்த உடலின் தன்மையில் உணர்வின் தன்மை கொண்டு
2.உயிர் உச்சியிலே நின்று இயக்குகின்றான் “திரு அண்ணாமலை”
3.நாம் மேல் நோக்கிப் பார்க்கும் உணர்வின் தன்மையை
4.அந்த ஜோதிச் சுடர் போல் நம் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றவேண்டும்.
5.நமக்குள் ஜோதியை உருவாக்க வேண்டும் என்று சொன்னால்…
6.நாம் இங்கிருந்து எங்கேயோ போய்க் கொண்டிருக்கின்றோம்.

நம் ஆசை இந்த உடலின் இச்சைக்குத்தான் செயல்படுகிறோமே தவிர வேறு எதுவும் இல்லை.

அருள் ஒளியின் சுடராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நன்னாளில் மகிழ்ச்சி பெறும் உணர்வைப் பெற்று, பகைமைகள் மறந்து ஒற்றுமை ஏற்படச் செய்யும் நிலைக்காக இருளை அகற்றும் நாள் என்று ஞானிகள் குறித்தார்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனவரது உடல்களிலும் படரவேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி ஈசன் வீற்றிருக்கும் ஒவ்வொரு உடலிகளிலும் படரவேண்டும் என்று எண்ணும்படிச் செய்தார்கள்.

இருள் அகற்றும் நிலைகளை நாம் ஒற்றுமையாக இருந்து தியானித்து அனைவரும் நலம் பெற வேண்டும். வளம் பெறவேண்டும் அவர்கள் உடலில் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று எண்ணத்தினை எல்லோரும் சேர்ந்து எடுத்துப் பேரொளியாக உருவாக்கும் நிலைகளுக்குச் செய்தார்கள் ஞானிகள்.

இருண்ட உணர்வின் தன்மையைத் துருவ நட்சத்திரத்தின் அருள் ஒளி கொண்டு அனைவருடைய உணர்வுகளும் ஒளி பெறவேண்டும் என்று நாம் எண்ணும் போது
1.நமக்குள் ஒளி பெறுகின்றது.
2.ஒளியின் உணர்வின் அணுக்களாக மாற்றுகின்றது.
3.இருளை அகற்றிப் பொருளைக் காட்டுகின்றது.

நம் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை நாம் மாற்றியமைக்கும் திறனும் பெறுகின்றோம். இதுதான் “ஜோதி தரிசனம்” (கார்த்திகை தீபம்) என்பது.

கார்த்திகை தீபம் நம் வீட்டு வாசற்படியில் வைப்பது போல நம் உணர்வின் தன்மையை ஆறாவது அறிவு கார்த்திகேயா என்று அந்த அருள் ஓளியின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக்கொண்டால் இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றும் நன்னாளாக இது அமைகின்றது.

நம்மை உருவாக்கிய முன்னோர்கள் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்தக் குலதெய்வங்களின் உயிரான்மாக்களை அவருடைய உணர்வின் தன்மை நம் உயிரான நிலைகள் கொண்டு ஒன்றி பிறவியில்லா நிலைகள் அடைந்த அந்த ஞானிகளின் உணர்வுடன் அங்கே இணைத்தல் வேண்டும்.

1.அந்த ஜோதியின் சுடராக விளைய வேண்டும் என்று
2.மூதாதையர்களின் உயிரான்மாக்களை அந்த ஒளியின் சுடராக மாற்றப்படும் பொழுது
3.அதனின் உணர்வை நாம் நுகரும் ஆற்றலே பெறுகின்றோம்.

சாஸ்திரங்கள் இவ்வளவு தெளிவாக எடுத்துரைத்தாலும் அதை ஐதீகம் என்ற நிலைகள் கொண்டு இவர்கள் காட்டும் நெருப்பைப் பார்த்தால்…, “பாப விமோசனம்” என்று சாதாரண நிலைகளில்தான் நாம் செல்கின்றோம்.

உடல் வலுவைக் காட்டிலும் நம் எண்ணத்திற்கு வலிமை வேண்டும்

 

1.“அந்நியன் வெளியேறு…!” என்று காந்திஜி அன்று சொன்னாலும்
2.அடிமைப்படுத்தும் அந்நிய குணங்கள் ஒவ்வொருவரிடத்திலிருந்தும் வெளியேற வேண்டும் என்று தான் சொன்னார்.

அந்நியர்கள் என்று யாரையும் அவர் கருதவில்லை அந்நியனாக்கும் குணங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்று அந்த எண்ணத்தை தான் உருவாக்கினார்.

ஒருவரைத் தாக்கிக் கொன்று விடுவதனால் யாரும் இறந்து விடவில்லை.
1.உடல்தான் மடிகின்றது… அவருக்குள் விளைந்த உணர்வுகள் பரவுகின்றது.
2.அந்தப் பரவும் உணர்வுகள் மற்ற உடலில் சேர்க்கப்பட்டு அவனும் தாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுதான் செயல்படுகின்றான்.

எங்கே மடிகின்றது…?

அவன் செய்த நிலைகள் மீண்டும் தாக்கப்படும் உணர்வுக்கே வளர்க்கப்படுகின்றது. நல்ல குணங்களைக் காக்கும் நிலை எங்கே இருக்கின்றது…?

1.இது வீரியம் (வீரம்) அல்ல…
2.தாக்குவோர் நிலையிலிருந்து மீள வேண்டும் என்று எவர் வலிமை கொள்கின்றாரோ அவர் தான் வீரியத்தில் சிறந்தவராகின்ரார்.

ஆகவே…
1.ஒருவரைத் தாக்குவது என்றால் அது கோழை தான்
2.மீண்டும் பதிலுக்கு அவரைத் தாக்கி அதிலிருந்து நான் மீள்வேன் என்று சொல்வதும் கோழை தான்.

ஆகவே இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள்தல் வேண்டும்.

சாமி ஆன்மீகம் பேசாமல் அரசியல் பேசுகிறார் என்று நினைக்கலாம். ஆனால் காந்திஜி தான் உண்மையான ஆன்மீகம்… அவர் வலிமை பெற்றவர்.

அந்த வலிமை இருந்தால் தான் உயர்ந்த நிலைகளை எண்ணித் தனக்குள் அதை வளர்த்து நம்மையும் காக்க முடியும்… நாட்டையும் காக்க முடியும்… மனிதன் என்ற முழுமையும் அடைய முடியும்.

1.அனைவரையும் ஒன்று சேர்த்து அரவணைத்தால் தான் மகிழ்ச்சி
2.அந்த மகிழ்ச்சியை வளர்க்கப்படும் போது தான் பிறவி இல்லாத நிலை அடைய முடியும்.

இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நான் (ஞானகுரு) அந்தத் தேசிய இயக்கத்தில் செயல்பட்டவன். தொண்டனாகச் சேர்ந்தவன். காந்திஜி வழியில் செயல்பட்டு தலையிலே அடி பட்டவன்.

குருநாதர் அருள் சக்திகளைக் கொடுத்தாலும் அந்த அருள் வழி கொண்டு நம்மையறியாமல் இயக்கும் தீமைகளிலிருந்து நாம் விடுபட வேண்டுமென்றால் காந்திஜியின் நினைவை நாம் கொள்தல் வேண்டும்.

இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து விடுபட அந்த ஆன்மீக வலிமை கிடைக்கும்.

1.வலிமை இருந்தால் தான் அருள் ஒளியைப் பெற முடியும்.
2.அது இல்லை என்றால் ஒன்றை நாம் எதிர்பார்ப்போம்
3.அது நடக்கவில்லை (அந்த வலிமை இல்லை) என்றால் கொடுத்த சக்தியை நீங்கள் இழந்து விடுவீர்கள்.

அவ்வாறு ஆகக்கூடாது என்பதற்குத் தான் இதை எல்லாம் உங்களுக்குள் தெளிவாக்குகின்றோம்.

உடல் என்பது ஆத்மாவிற்கு ஒரு வாடகை வீடு தான்…! – ஈஸ்வரபட்டர்

 

ஞான வளர்ச்சி எண்ணமுடன் செயல் கொள்ளும் உயர் காந்த மின் சக்தியை நாம் எடுக்கும் எண்ணச் சுவாசத்தால் வலுப் பெறும் தன்மை கொள்வதினால் வளர்ச்சி பெறும் தொடர் நிலை யாது…?

இந்த உடல் என்ற பிம்பமானது ஒரு அடுப்பைப் போன்றது.
1.அடுப்பில் எதைப் போட்டுச் சமைக்கின்றோமோ அதனை வேக வைப்பது தான் அடுப்பின் வேலை.
2.சேர்க்கப்படும் பொருளின் சேர்க்கையின் சுவை கொண்டு சுவை கொள்வது ஆத்மாவின் வேலை.

மோதுண்டு மோதுண்டு எந்தச் சுவையிலெல்லாம் தன் வலுவைக் கூட்டி இந்த உயிராத்மா வலுப் பெற்று வலுக் கொண்டதோ அந்த ஒவ்வொரு சேர்க்கையிலும் தன் வளர்ச்சி முலாமின் சக்தியை எடுப்பது உடலாக இருக்கின்றது.

அதே சமயத்தில் இஜ்ஜீவ பிம்ப உடலின்… “அணுச் சேர்க்கை சமைத்தனுப்பும் வலுவைத்தான்” இவ்வுயிராத்மா தனக்கு வலுவாக்கிக் கொள்கின்றது,

1.உண்ணும் உணவையும்
2.எண்ணும் எண்ணத்தையும்
3.செய்யும் செயலையும் இந்த உடலானது எடுத்து
4.அவை வளர்க்கும் அணுக்களின் வளர்ச்சியிலிருந்து
5.தன் வலுவை இந்த உயிராத்மா வளர்த்துக் கொள்கின்றது.

இந்த உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களின் தன்மையை நாம் எப்படி உணர்வது…? அதன் செயலை அறிய நம் ஆத்ம பலம் கூடியிருந்தால் தான் உணர முடியும்.

ஏனென்றால் மற்ற (ஒவ்வொரு) உயிராத்மாவின் வலுவைக் காட்டிலும் “ஜீவன் கொண்ட உயிராத்மாவின் சுழற்சி நிலை… ஜீவ சக்தியின் ஈர்ப்புடன் செயல்படுகிறது…”

அந்த வலுக் கொண்டு…
1.இந்த உடலையே காந்த மின் அலை ஈர்க்கக்கூடிய ஆத்மாவின் சுழற்சியாக
2.இந்த உடல் முழுமைக்கும் கவசம் போல் இந்த உடலைச் சுற்றிக் கொண்டுள்ளது.

இந்த உடல் பிம்பமானது இயந்திரச் செயலைத்தான் செய்விக்கின்றதேயன்றி இவ் இயந்திரத்தில் எதை எதைப் போட்டுச் சமைக்கின்றோமோ அதிலுள்ள சக்தியைப் பெறுவது இந்தக் கவசம் போல் அமைந்துள்ள உயிராத்மா தான்.

பசி தூக்கம் தாகம் இவற்றின் உந்தலின் எண்ணமும் இந்த ஆத்மாவின் செயலுக்குகந்த சக்தி நிலைக்கு (வளர்ப்பு நிலைக்கு) தேவைக்குகந்த செயலுக்கொப்பத்தான் பிம்ப உடலின் உணர்வை ஏற்படுத்திக் கொள்கிறது.

அந்தந்த உணர்வைக் கொண்டு எண்ணத் தோன்றல் உந்தப்பட்டு இவ்வெண்ணத்தால் செயல்படுத்துவது தான் இந்தப் பிம்ப உடலின் உடலுக்குகந்த நிலையை இவ்வுடல் எடுக்கும் முறை.

ஜீவாதாரத் தேவை என்பது இந்த உடலின் உந்தலின் செயல் உயிராத்மாவின் உந்தலுக்குகந்த செயல் தான். அதனால் தான் பல பெரியோர்கள்
1.இந்த உடலை வாடகை வீடு என்றும்
2.இந்த உடல் என்பது வெறும் சக்கைதான்… என்றும்
3.இந்த உடல் வேறு ஆத்மா வேறு என்றும்
4.ஆத்ம தியானத்தால் தான் இந்த மனித ஆத்மா வளர முடியும்…! என்று பகர்ந்ததன் பொருளும் இதுவே.

பல மோதலில் வலுக் கொண்ட உயிராத்மா ஜீவாத்மாவின் தன்மைக்கு வந்து வார்ப்பாகி… வார்ப்பில் வலுவைப் பெறும் செயலுக்குத்தான்… ஒவ்வொரு உயிராத்மாவும் “பல பிறப்பிற்கு…” வருகின்றது.

இச்சுழற்சி ஈர்ப்பின் பிடியிலேயே மோதுண்டு மோதுண்டு… வலுப் பெற்ற தன்மை கொண்டு… வலுவான காந்த சக்தி கொண்ட தன்மை கூடிய பிறகுதான்… இந்த உடல் பிம்பம் கொண்ட மனித ஆத்மாவின் எண்ண ஞான வளர்ச்சி செயல் நிலைக்கு இந்த ஆத்மா வலுப் பெறுகின்றது.

1.வலுக் கொண்ட உயிராத்மாவின் கவசம் பூண்ட ஜீவ பிம்ப மனிதன்
2.இந்த ஆத்ம உயிருக்கு மேலும் வலுத் தரக்கூடிய தன்மையை
3.தன் எண்ணத்தால் எடுக்கும் “உயிர் ஞானத்தை” வளர்க்கக்கூடிய தன்மை கொண்டு தான் வளர்க்க முடியும்.

மிருகங்களின் நிலைக்கு எண்ணம் இருந்தாலும்… ஞானம் இருந்தாலும்… பகுத்தறிந்து செயல்படக்கூடிய உயர் ஞானத்தை வளர்க்கும் ஆற்றல் வலு ஈர்ப்புச் செயல் அற்றதனால்… மனிதனை ஒத்த ஆத்ம வளர்ச்சியைப் பெருக்கக்கூடிய சக்தி அதற்கில்லை.

ஆனாலும் ஒவ்வொரு மிருகத்திற்கும் ஒவ்வொரு தனித் தன்மை வாய்ந்த உயர்ந்த குண வார்ப்பு அமில ஜீவ சக்தித் தன்மை உண்டு.

மனிதன் தன்னுடைய சாதாரண வாழ்க்கை முறைக்கு மிருகங்களை உணவாகவும் தன் செயலுக்குகந்த நிலைக்கும் அதனைப் பயன்படுத்துகின்றான்.

ஆனால் உயர் ஞானம் கொண்ட சப்தரிஷிகள்…
1.தான் உடலுடன் உள்ள பொழுதே தன் உயிராத்மாவின் பலத்திற்கு தன் வலுவைக் கூட்டிக் கொள்ள
2.எந்தப் புவியின் ஈர்ப்பில் தன் உயிராத்மாவானது வலுக் கொண்டு வலுப்பெற்றதோ
3.அந்த வலுவுக்குகந்த வலுத் தன்மை கொள்ள
4.இந்தப் புவியில் வளர்ந்த வளர்ச்சி நிலை ஒவ்வொன்றிலுமே
5.அணுவுக்குள் அணுவாக ஊடுருவி அணுவின் தன்மையிலெல்லாம் மோதுண்டு
6.இந்தப் புவி ஈர்ப்பில் அணு அமிலத் தன்மையின் பலவற்றின் நிலையையும்
7.தன் எண்ண ஞானத்தால் தன் உயிராத்மாவிற்கு வலுக் கொண்டனரப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

உங்கள் மனக் குழப்பத்தை அகற்ற “ஆத்ம சுத்தி” என்ற ஆற்றல் மிக்க ஆயுதத்தைக் கொடுக்கின்றோம் – அது பனிரெண்டு வருடம் காடு மேடெல்லாம் அலைந்து உருவாக்கப்பட்ட சக்தி வாய்ந்த ஆயுதமாகும்

ஆகவே எத்தகைய குறைகளைக் கண்டாலும் நமக்குள் உட்சென்று நம்மை வேதனைப்படச் செய்யும் செயல்களைத் தடுத்து நிறுத்தத் தான் அந்த “ஆத்ம சுத்தி…” என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

அதை நீங்கள் பயன்படுத்துவதற்கு யாம் பனிரெண்டு வருட காலம் நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி காடு மேடெல்லாம் அலைந்து அந்த ஆற்றலைப் பெற்றோம்.

ஒரு மருந்தைத் தயார் செய்து நோய் போய்விடும் என்று வைத்தியர்கள் சொல்கின்றார்கள்.

வைத்தியத்தின் முறைகளில் நோய் நீங்கினால் அவருக்குப் பொருள் கிடைக்கும் என்ற நிலைகளில் வைத்தியர்கள் செய்கின்றார்கள்.

நமது குருநாதர் கொடுத்த நிலைகளோ துன்பங்கள் விளைய வைக்கும் நிலைகளிலிருந்து மீள்வதற்கு என்னைப் பனிரெண்டு வருட காலம் காடு மேடெல்லாம் அலையச் செய்தார்.

அவர் சொன்ன முறைப்படி அங்கே அலைந்தோம்.

1.தாவர இனத்தின் உணர்வின் சத்து எவ்வாறு வேலை செய்கின்றது…? என்ற நிலையும்
2.மனித சஞ்சாரமே இல்லாத நிலைகள் அங்கே அமைதி கொண்டிருக்கப்படும் பொழுது
3..மனித உணர்வின் எண்ணங்கள் எவ்வாறு செயலபடுகின்றது…? என்ற எண்ணத்தை எடுத்து
4.அதைப் மனித உடலில் விளைய வைத்துத் துன்பத்தை நீக்கிடும் ஆற்றலை ஞானியர்கள் எவ்வாறு பெற்றார்கள் என்ற நிலையை
5.எம்மைப் பெறச் செய்தார் குருநாதர்.

அதைப் பெறச் செய்தபின் எனக்கு அடிக்கடி துன்பங்களை விளைய வைத்து அந்தத் துன்பத்தை நீக்க… நீ எப்படி எடுக்க வேண்டும்…? என்றும் உணர்த்தினார்.

அவர் காட்டிய வழிப்படி யாம் எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றலால்தான் எமக்குள் வரக்கூடிய துன்பத்தையும் எமக்குள் வரக்கூடிய வியாதியையும் நிவர்த்தி செய்ய முடிந்தது.

அப்படி நமது குருநாதர் காட்டிய வழியின் தன்மையை எமக்குள் பதியச் செய்து கொண்டேன்.

அதை ஒவ்வொரு நேரத்திலும் எடுத்து அதிலே வளர்த்துக் கொண்ட “அந்த உணர்வின் எண்ண அலைகளைத்தான்” உபதேச முறைப்படி
1.ஒவ்வொரு உணர்வின் அலைகளுக்கும் (நன்மை தீமைகளை உருவாக்கும்)
2.நன்மையை உருவாக்கும் உணர்வுடன் கலந்து உபதேசிக்கப்பட்டு
3.இந்த உணர்வுகளை உங்களுக்குள் திணிக்கின்றேன்.
4.உங்கள் துன்பத்தைப் போக்க உங்களுக்குள் அந்த நல்ல உணர்வினை பதியச் செய்கின்றேன்.

துன்பத்தை ஊட்டும் உணர்வுகள் உங்களை ஆட்டிப்படைக்கும் உணர்வுகளைத் தூண்டச் செய்கின்றது.

நீங்கள் அந்த மனதின் நிலைகளை அடக்கி உங்களைக் காக்கக்கூடிய அந்தச் சக்தியை நீங்கள் பெறுவற்குத்தான் இதைச் சொல்கின்றோம்.

அந்தப் பனிரெண்டு வருட கால அனுபவத்தின் நிலையை யாம் சொல்லும் பொழுது அந்தத் துன்பத்தினுடைய நிலைகளை மெய்ஞானியின் அருள் ஒளியுடன் கலந்து திரும்ப உபதேசத்தின் வாயிலாக “வாக்கின் நிலைகள் கொண்டு…, உங்கள் உடலிலே பதியச் செய்கின்றோம்”.

அவ்வாறு பதியச் செய்த அந்த வித்தின் நிலைகளுக்கு மெய்ஞானிகளின் சக்தியைப் பெறுவதற்கு நீங்கள் எந்த நிமிடமானாலும் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரை எண்ணி எடுக்க முடியும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி மகரிஷிகளின் அருள் சக்தியை எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று உங்கள் உடலுக்குள் நினைத்துச் செயல்படுவீர்கள் என்றால் துன்பத்தைப் போக்கக் கூடிய மெய் ஞானியின் அருள் சக்தி உங்களுக்குள் ஊடுருவச் செய்கின்றது.

1.உங்களையறியாமல் ஆட்டிப்படைக்கும் மனக்குழப்பத்தை மனக்குடைச்சலை இது நிவர்த்தி செய்கின்றது
2.உங்கள் எண்ணத்திற்குள் தெளிவாக்கி உங்கள் வாழ்க்கையில் உங்கள் செயலையும் தெளிவுபடச் செய்ய இது உதவுகின்றது.
3.வியாபாரத்திலும் உங்களைத் தெளிவாக்கச் செய்கின்றது.
4.குடும்பத்திலும் உங்களைத் தெளிவாக்கச் செய்கின்றது.
5.குடும்பத்திலும் ஒற்றுமையாக்கச் செய்கின்றது.

தெளிந்த நீராக இருந்தால் அதற்குக் கீழே இருக்கக் கூடிய பொருளை நாம் காண முடிகின்றது. நீர் தெளிவாக இருந்தாலும் அதே நீரின் தன்மைகள் “அலை பாயும் பொழுது… தெளிவாகத் தெரிவதில்லை”.

நன்மையான நிலைகளை நாம் தெளிவாக்க முடியாத நிலைகளில் இருக்கும் அந்த நேரத்தில் மெய்ஞானியின் உணர்வின் அலைகளை நமக்குள் செலுத்தப்படும் பொழுது
1.பல உணர்வின் அலைகள்
2.அலைந்து கொண்டிருக்கும் நிலையை
3.அது நமக்குள் சமப்படுத்தி நிறுத்தும்.

அந்த அருள் ஒளியின் தன்மை நமக்குள் உயிரான தன்மை கொண்டு “ஒளியாக வீசிக் கொண்டே இருக்கும்… வளர்ச்சியாகும்”.

நம் நல்ல குணங்கள் சீராக இயங்க சுதந்திரம் வேண்டும்

 

இன்று கோடிச் செல்வங்கள் வைத்திருப்போரும் சரி… அரசியலில் முன்னணியில் இருப்போரும் சரி… அரசியல் தலைவர்களும் சரி… யாரும் நிம்மதியாக இருப்பது இல்லை.

1.உலகம் முழுவதும் உள்ள அரசியல் வாழ்க்கை நடத்துபவர்கள் அனைவருமே
2.நிம்மதியற்ற வாழ்க்கை தான் வாழுகின்றனர்… “சுதந்திரம்” என்ற நிலை இல்லை.

அவர்கள் வெளியே வரவேண்டும் என்றாலும் அஞ்சித் தான் அவர்கள் வர வேண்டியுள்ளது. அவர்களுக்குப் பாதுகாப்பு பின்னாடியே வருகின்றது.

நாமும் இன்று பஸ்ஸில் சென்றாலும் அல்லது ரோட்டில் சென்றாலும் நமக்கும் அந்த முழுச் சுதந்திரம் இல்லை. எவன் பறிப்பான்…? எவன் அடிப்பான்…? அவன் கொல்வான்…? என்ற உணர்வில் தான் செல்ல வேண்டி இருக்கிறது.

சுதந்திரம் என்ற நிலை யாருக்கும் வரவில்லை. அரசியலிலும் சரி… செல்வாக்குடன் வாழ்வோரும் சரி… எல்லாம் ஓங்கி வளர்ந்து வந்தாலும் உடலில் சுதந்திரமான வாழ்க்கை இல்லை.

சுதந்திரமான வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் காந்திஜியை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
1.எத்தகைய தீமையும் அவருக்குள் புகாது “அனைவரும் சகோதரர்களே…” என்று
2.தன் உடலுக்குள் அந்த உணர்வை ஊட்டிக் கொண்டார்
3.அந்த சகோதரத்துவதைத் தான் அவர் தனக்குள் வளர்த்துக் கொண்டார்.

மதக் கலவரங்களும இனக் கலவரங்களும் இந்தியாவில் நடக்கும் போது மக்கள் மடிவதை… அசுர சக்திகள் இங்கே வந்து மாய்க்கின்றது என்று கூட அவர் எண்ணவில்லை. அசுர சக்தி என்ற எண்ணமே அவருக்குள் வரவில்லை.

“அனைவரும் ஒன்று…” என்ற நிலையில் உணர்ந்து சாந்த நிலைகள் கொண்டு நாம் மற்றவரையும் வாழ வைக்கும் போதுதான் இந்த உடலுக்குள் சுதந்திரம் கிடைக்கின்றது.

மனிதன் அழகாக இருப்பான்… செல்வமும் இருக்கும்… செருக்கும் இருக்கும். ஆனால் அவனுக்குச் சுதந்திரமில்லை.

காரணம்… அம்மம்மா…! என்று வேதனை உணர்வுடன் சாப்பிட முடியவில்லையே… படுக்க முடியவில்லையே… படுத்தால் தூங்க முடியவில்லையே…! என்றெல்லாம் புலம்பிக் கொண்டிருப்பார்கள்.
1.தூங்க வேண்டும் என்ற எண்ணம் கூட வருவதில்லை.
2.ஆனால் செல்வம் இருக்கும்… சுதந்திர வாழ்க்கை வாழ்வதில்லை.

ஆகவே அந்தச் சுதந்திரம் என்பது எது…?

1.தன் அருகில் இருக்கக்கூடிய மக்கள் அனைவரும் மகிழ வேண்டும்
2.நாங்கள் பார்க்கும் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று கல்யாணராமனாக
3.அந்த அரவணைக்கும் சக்தியாக எண்ணங்கள் ஒன்று சேர்ந்து வாழும்போது தான் நமக்குள் அந்த எண்ணங்கள் வளர்கின்றது

கல்யாணராமன் எப்போது ஆகின்றான்…?

திருமணம் ஆகும் போது நாம் எப்படி மகிழ்ச்சி பெறுகின்றோமோ அது போன்று நம் எண்ணங்கள் எல்லாம் ஒன்று சேர்க்கும் பொழுதுதான் அந்த மகிழ்ச்சி பொங்குகிறது.

பகைமை அற்ற நிலை உருவாகின்றது. இந்த மகிழ்ச்சி பேரானந்தத்தை நமக்குள் கூட்டுகின்றது.

ஒரு நண்பன் “அவன் உயர்ந்த நிலை பெற வேண்டும்” என்ற எண்ணத்தை நமக்குள் வளர்த்துக் கொண்டால் அவன் வளர… வளர… நமக்கு அந்த வளர்ச்சி உயர்ந்ததாக வளரும்.

அதே சமயத்தில் “எனக்கு இப்படி இடைஞ்சல் செய்கிறான்” என்ற உணர்வை எடுத்துக் கொண்டால் நமக்குள் இருக்கும் அந்த நல்ல மனம் சுதந்திரத்தை இழந்து விடுகின்றது.

அந்த உணர்வுகள் வளர வளர உடலுக்குள்ளேயே எதிரியாகி நம் நல்ல செயல்களை அழிதுக் கொண்டே இருக்கின்றது. சுதந்திரம் எங்கே இருக்கின்றது…? சுதந்திரமாக வாழும் தன்மை இல்லை.

காந்திஜி இதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றார். நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்… மடியவில்லை. உடல்தான் மடிந்தது. அவருக்குள் விளைந்த அந்த அரும் பெரும் சக்தி உலகம் முழுவதும் பரவி உள்ளது.

அவர் வாழ்ந்த காலத்தில் அவருடன் பழகிய நல்ல மக்கள் மத்தியிலும் இது பதிவாகியுள்ளது. ஆகவே…
1.அவர் உடலில் விளைந்த ஞான வித்தை நாம் வளர்த்துக் கொண்டால் அது அரும் பெரும் சக்தியாக மாறும்.
2.சாந்த குணத்தைப் பெறச் செய்யும்… சகோதர உணர்வுகளை வளர்க்கச் செய்யும்.
3.அதன் மூலமாக நாம் சுதந்திரமாக வாழ முடியும்…!

ஆத்ம வலுவின் சக்தியும்… அதன் மூலம் அடுத்த நிலை அடைவதும் – ஈஸ்வரபட்டர்

 

உயிரானது சிரசின் மேலிருந்தும் ஆத்மாவானது இந்த உடலைச் சுற்றியும் அமைந்துள்ளது. இந்த உடல் பிம்பத்தைக் கவசம் போல் சுற்றியுள்ளது இவ்வாத்மா.

உயிர் பிரியும் பொழுது இந்த உடல் தன்மை ஆரோக்கியம் அற்று செயலிழந்து உடல் மடியும் பொழுது இந்த உடலுடன் கூடிய உயிர் ஆத்மா
1.இந்த உடலிலிருந்து எப்படிப் பிரிகின்றது…?
2.இந்த உடலுடனே சுற்றிக் கொண்டுள்ளதா…?
3.பிம்பத்தை எரித்த பிறகு வெளிப்படுகின்றதா…?
4.புதையுண்ட பிறகு உடல் அழுகி வெளிப்படுகின்றதா…?

சாதாரண அமைதி கொண்ட வாழ்க்கையுள்ள அன்பு நெறியில்
1.வயது முதிர்ந்து உடல் உறுப்புகள் செயலிழந்து ஆத்மா பிரியும் உயிரணுவின் தன்மைக்கும்
2.பல இன்னல்களிலிருந்து வாழ்ந்து முடியும் உயிராத்மாவின் தன்மைக்கும்
3.தற்கொலையின் உயிராத்மா தன்மைக்கும்
4.கொலையுண்டு மடிந்த ஆத்மாவின் தன்மைக்கும்
5.விபத்துக்களில் இறந்த ஆத்மாக்களின் தன்மைக்கும்
6.சில ஈர்ப்பலையில் தன் ஆத்ம பலத்தால் விஞ்ஞானத்தாலோ மருத்துவத்தாலோ கலை உணர்வாலோ வளர்ந்த உயிராத்மாவிற்கும்
7.அவ்வுடல் பிம்ப உயிராத்மாவின் தன்மையில் வலுத் தன்மை ஒவ்வொன்றுக்கும் மாறுபடுகின்றது.

காந்த சக்தியினால் வளர்ச்சி கொண்டத் தான் இந்த உயிராத்மாவின் நிலை.

எப்படி மின்சார சக்தி (POWER) பாயும் பொழுது அதை எந்தெந்த அலை கொண்டு எந்த நிலை கொண்ட மின் அலை சாதனைத்தைச் செயல்படுத்தி எவ்விகித ஒளிக்குகந்த காந்த மின் சக்தி கொண்ட விளக்கைப் பொருத்துகின்றோமோ அதற்குகந்த வெளிச்சத்தைத்தான் அவை அவை எடுத்து வெளிப்படுத்துகின்றது.

அதைப் போன்றது தான்… இவ்வாத்ம உயிர்…
1.அவ்வுடலில் உள்ள அணு வளர்ப்பின் வலுக் கொண்ட சேமிப்பு வலுவை
2.அவ்வுயிராத்மா உடலில் உள்ள பொழுதே வலுக்கூட்டிக் கொண்ட நிலைக்கொப்ப
3.இந்த ஆத்மா பிரிந்த பிறகு இந்தக் காற்றலையின் இந்தப் புவி ஈர்ப்பில் சுழன்று கொண்டிருந்தாலும்
4.சேமித்த வலுத் தன்மையைக் கொண்டு தன் வலுவை மற்றொரு ஈர்ப்பலைக்குச் சிக்காமல்
5.தன்னைத்தானே பாதுகாத்து தனக்குகந்த வளர்ப்புப் பிடியில் தான் பிறிதொரு வார்ப்பு நிலைக்கு வாழ முடியும்,

உதாரணமாக… காற்றடிக்கும் பொழுது காற்றடிக்கும் வேகத்திற்கொப்ப லேசான காகிதங்களும் இலைச் சருகுகளும் கனமற்ற தன்மை கொண்ட பொருள்கள் பறக்கின்றன.

வலுவான காற்றும் வரும் பொழுது அதனைத் தாங்க முடியாமல் இன்னும் சில கனம் கொண்ட பொருள்கள் பறக்கின்றன.

ஆனால் பெரும் சூறாவளி வந்தால் இந்தப் புவியின் ஈர்ப்புடன் வளர்ந்த வளர்ப்புக்கள் அனைத்தையும் அந்தச் சூறாவளி பறக்கச் செய்கின்றது.

அதைப் போல்
1.எந்தெந்த வலுத் தன்மை கொண்டு இந்த உயிராத்ம வலுச் சக்தி கூடுகின்றதோ…
2.அதற்குகந்த வலுத் தன்மையை… இஜ்ஜீவ சக்தி கொண்ட உடல் உறுப்புக்களின் அணுக்களின் வளர்ப்பிலிருந்து…
3.தன் உயிராத்மாவின் வளர்ப்பணுவிலிருந்தே… தன் வலுவை வலுப் பெறச் செய்து கொள்கின்றது இந்த உயிராத்மா.

எண்ணத்தின் நிலைக்கொப்ப நாம் எடுக்கும் சுவாசம் கொண்ட அணுக்களின் வலுவைத்தான் உயிராத்மா சேமித்துக் கொள்ள முடிகின்றது. சேமித்த நிலைக்கொப்பத்தான் ஜீவன் பிரிகின்றது.

1.எந்த முலாமின் வளர்ப்பில் இந்த உயிராத்மா வலுக் கொண்டு வெளிப்பட்டதோ
2.அதன் வலு வித்து வளர்ச்சியில் தான் மீண்டும் சிக்க முடியும்.

நம்முடைய உயிராத்மாவில் எந்த முலாம் வலுவாக இருக்க வேண்டும்…? என்பதை முடிவு செய்து கொள்ளுங்களப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நமது பூமி சுழலும் பொழுது பிரபஞ்சத்திற்குள் காந்தங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அந்தக் காந்த அலைகள் மோதும் பொழுது தான் நம் பூமிக்குள் காந்தங்கள் உற்பத்தியாகின்றது.

அப்படிப் பிரபஞ்சத்திற்குள் உள்ள காந்தங்களின் அதீத மோதலினால் ஏற்படக்கூடிய வெப்பமும் அதில் ஏற்படக்கூடிய காந்தங்கள்தான் பூமிக்குள் மற்ற அணுக்களை இயக்கச் செய்கின்றது.

இதைப் போலத்தான் பூமி ஓடும் பாதையிலே அதன் இயக்கங்கள் அது ஓடிக்கொண்டே இருப்பதால்… “உராயும் சக்தி” கிடைக்கின்றது.

நாம் காற்றடிக்கும் பம்பை வைத்துக் காற்றடிக்கின்றோம். பெட்ரோல் இன்ஜின் ஓடும் பொழுது அதிலுள்ள பிஸ்டன் இழுத்துத் தனக்குள் எடுத்துக் கொள்கின்றது. இதைப் போல
1.நம் உயிரின் ஈர்ப்பு அது துடிக்கும் பொழுது
2.அதனின் “ஈர்ப்பின் சக்தி அதிகமாகின்றது”

அந்த ஈர்ப்புச் சக்திக்குத் தக்கவாறு நாம் எதைச் சுவாசிக்கின்றோமோ அந்தக் குணங்கள் ஒரு காந்த அணுவுக்குள் ஒரு வேப்ப மரத்தின் கசப்பின் தன்மை பட்டிருந்தால் அந்தக் கசப்பிற்குத் தகுந்த மாதிரி நம் உணர்ச்சிகள் தூண்டுகின்றது.

அதைப் போல மிளகாயினுடைய காரச் சக்தியினுடைய தன்மையை ஒரு வெப்ப காந்தம் இழுத்திருந்து அந்தக் குணத்தின் நிலைகள் கொண்டு நாம் சுவாசித்தோமேயானால் அது உயிரில் பட்டவுடன் நம் வாயிலே மிளகாயைப் போட்டால் எப்படி உணர்ச்சிகளைத் தூண்டுகின்றதோ இதைப் போன்ற உணர்ச்சிகளை நம் உடலிலே தூண்டச் செய்யும்.

ஏனென்றால் நாம் சுவாசிக்கும் உணர்வினுடைய நிலைகள் நாம் எந்தெந்த எண்ணத்தைச் செலுத்துகின்றோமோ அதற்குத் தக்கவாறுதான் இந்த உணர்வின் நிலைகளை நாம் சுவாசிக்க முடிகின்றது.

1.அவ்வாறு சுவாசித்த நிலைகள் நம் உயிருடன் சுழற்சியாகி
2.அந்தச் சுழற்சிக்குள் பட்டவுடன் உயிரின் காந்தத் துடிப்புகளுக்குள் மோதி
3.அதனுடைய நுண்ணிய அணுக்கள்
4.சுவாசித்த உணர்வினுடைய நிலைகளை உணரச் செய்கின்றது.

அந்த உணர்வின் அலைகளை நம் உடல் முழுவதற்கும் பரப்பச் செய்து தன் இனமான நிலைகளை அது இயக்கச் செய்கின்றது.

ஆகவே “ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் துடிப்பின் நிலைகளைக் கூட்டும் பொழுது நம் உயிரின் துடிப்பின் வேகம் கூடுகின்றது.

அப்பொழுது நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி அதனின்று வெளிப்படும் பேரருள் பேரொளியை நமக்குள் மோதச் செய்யும் பொழுது
1.ஏற்கனவே இருந்த துடிப்பைக் காட்டிலும்
2.அதிகமான நிலைகளை நமக்குள் சேர்க்கப்படுகின்றது
3.நம் உடலிலே காந்த சக்தி கூடுகின்றது.
4.இந்த வேகத்துடிப்புடன் நம் சுவாசத்தை மேல் நோக்கி எண்ண வேண்டும்.

நம் கண்ணான புலனறிவின் நிலைகளை உயிருடன் ஒன்றி இணைக்கச் செய்து இந்த ஆற்றலை நாம் செயல்படும் பொழுது அந்த உயிருக்குள் அந்த வேகத் துடிப்பின் நிலைகள் அதிகமாகின்றது.

துருவ நட்சத்திரத்தின் அலைகள் நம் சுவாச நாளங்களில் ஊடுருவி உடல் முழுவதற்கும் செல்கின்றது. இவ்வாறு நம் உயிரின் துணை கொண்டு ஆற்றல் மிக்க சக்திகளை நாம் பெற முடியும். நமக்குள் விளைய வைக்க முடியும்.

துருவ நட்சத்திரம் நஞ்சை ஒளியாக மாற்றுவது போல் நாமும் ஒளியாக மாற்ற முடியும். ஒளியின் சரீரம் பெற முடியும்.

உயிரைப் பற்றி நாம் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது

 

நாம் நுகர்ந்த உணர்வுகள் உடலுக்குள் உணர்ச்சிகளைத் தூண்டி சந்தர்ப்பத்தால் ஒருவர் வேதனைப்படுகிறார் என்று அறிவித்தாலும் உயிரில் மோதிய பின் அணுவின் கருவாக உருவாகி விடுகின்றது.

காரணம்…
1.அவன் வேதனைப்படுகிறான்… வேதனைப்படுகிறான்… என்ற எண்ணங்களை
2.மீண்டும் அதிகமாகக் கூட்டும்போது அது கருவாகும் சந்தர்ப்பமாகின்றது.

கோழி குருவி பல்லி போன்ற முட்டை இடும் இந்த உயிரினங்கள் அனைத்துமே “கேரும்…” அதைப் போன்று நாம் திரும்பத் திரும்ப அந்த வேதனைப்பட்ட மனிதனை எண்ணும் பொழுது அந்த மனிதனின் உணர்வு நமக்குள் கருவாக உருப்பெற தொடங்கி விடுகின்றது.

நோய்க்குக் காரணமாக எது அவர் உடலில் இருந்ததோ அதே மாதிரி நம் உடலுக்குள் வந்து கருவான பின் இரத்தங்களில் சுழன்று வரும்.
1.அப்பொழுது அது எந்தெந்தப் பாகங்களில தேங்கி நின்றதோ
2.அங்கே முட்டையாகி அணுவாக வெடித்து வெளி வரும்.

கோழி அடைகாத்துக் குஞ்சு பொரித்த பின் அவை வெளிவந்தபின் கத்துகிறது. தாய்க் கோழி கூப்பிட்டு ஆகாரம் கொடுக்கின்றது. அதே போல் நமது உயிர் கூப்பிட்டு உருவான அந்த அணுக்களுக்கு ஆகாரம் கொடுக்கும்.

எப்படி…?

நம் உடலுக்குள் அணுவின் தன்மை முழுமை அடைந்து விட்டால் அந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதும் பரவும்.
1.நம் சிறு மூளை பாகம் வந்து இந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.
2.பின் உயிர் நம் புலனறிவுகளான கண் காது மூக்கு உடம்பு வாய் இவைகளுக்கு ஆணைகள அனுப்பும்.
3.இந்த உணர்ச்சியின் தன்மை வந்தபின் எந்த மனித உடலில் இருந்து வெளி வந்ததோ அதே வேதனைப்படும் உணர்வுகளைக் கவரும்.

காரணம்.. வேதனைப்பட்ட அந்த மனித உடலில் இருந்து வெளிவந்த அந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது. அதைத் தான் ஐம்புலன்களும் கவர்ந்து நம் உடலுக்குள் அனுப்பும்.

உடலுக்குள் அனுப்புவதற்கு முன் நாம் நுகர்ந்தது உயிரிலே பட்டபின் அந்த வேதனைப்பட்ட மனிதன் எப்படி வேதனைப்பட்டாரோ அதே போல் அந்த மனிதனின் சோர்வும் வேதனையான உணர்ச்சிகளும் நம்மை அறியாமலே தோற்றுவிக்கும்… இனம் புரியாதபடி நாமும் வேதனைப்படுவோம்.

அவ்வாறு வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது
1.நாம் செய்து கொண்டிருக்கும் தொழிலில் இன்ன குறை இருக்கிறது என்று
2.எதையோ ஒன்றை எடுத்துச் சொல்ல ஒருவர் வருகிறார் என்றால் சரி…
3.நம் புலன்களில் அது ஏற்றுக் கொள்ளாது… கவனிக்க முடியாது.
4.அந்த வேதனைக்குண்டான அவருடைய நினைவை ஊட்டும்

அந்தச் சமயத்தில் ஒருவன் மகிழ்ச்சியான நிலையில் இருந்தால் நம் கண் பார்வை அதை ஏற்றுக் கொள்ளாது. கண் பார்வையில் அந்த வெறுப்பின் நிலையையே ஊட்டும். அந்த வேதனைப்படும் உணர்வையே ஊட்டும்.

நாம் பணத்தையோ ஒரு பொருளையோ கணக்குப் பார்க்க வேண்டுமென்றால் சரியான முறையில் பார்த்துத் தான் செயல்படுத்த வேண்டி இருக்கும்.

மேலே சொன்ன இந்த வேதனை உணர்வுகள் பார்வைக்கு வரும் பொழுது அதைச் சீராக இயக்கவிடாது. தப்பும் தவறுமாகச் செய்வோம்.

தொடர்ந்து இத்தகைய உணர்ச்சிகள் உடலிலே இயக்க இயக்க அந்த வேதனை உணர்வுகள் நம் கை கால் அங்கங்களைக் குறைத்துவிடும். காரணம் உடலில் உருவான அந்த அணுக்களுக்குண்டான ஆகாரமாக இதனைச் சுவாசிக்கச் செய்து அதைச் சாப்பாடாகக் கொடுக்கும்.

ஒரு பருந்து வருகிறது என்றால் அந்த இரைச்சல் கேட்ட உடனே தாய்க் கோழி சப்தமிடும். உடனே அந்தக் குஞ்சுகள் அனைத்தும் தாயின் இறக்கைக்குள் அடங்கி விடுகின்றது.

அதே மாதிரித்தான்
1.உடலில் உருவான இந்த வேதனையான அணுக்கள் எல்லாமே உயிருடன் ஒன்றி தன் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
2.உயிர் அதற்குப் பாதுகாப்புக் கொடுக்கின்றது.

மீண்டும் மீண்டும் உணர்ச்சிகளைத் தூண்டி தனது ஆகாரத்தை எடுத்துப் பெருக ஆரம்பிக்கிறது. இப்படி நம் உடலுக்குள் நம்மை அறியாமலேயே வேதனையான அணுக்கள் பெருகி கடும் நோயாக உருவாகின்றது.

எந்த மனிதனைப் பார்த்து அவரின் வேதனையை நுகர்ந்தோமோ அதே நிலை நமக்குள்ளும் உருவாகி நாமும் அவனைப் போன்றே நோயாகி வேதனைப்படுவோம்.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உடல் வாழ்க்கையின் முக்கியத்துவம் – ஈஸ்வரபட்டர்

 

1.இயற்கையுடன் ஒன்றி வளரும் உருமாற்ற வளர்ச்சித் தொடரும்
2.உருவாகும் கால நிலையும்… உருண்டோடும் ஈர்ப்புச் சுழற்சியும்… உருவாகும் தன்மை கொண்டு
3.உருளுகின்ற உயிரணுவின் சேர்க்கை கொண்டு உருவாவது தான்..
4.பிம்ப உடல்களின் அங்க அவயங்களும்… உருவ பிம்ப அச்சும்…!

இந்தப் பிம்ப ஜீவ உடலின் உயிராத்மாவிற்கு எத்தகைய எண்ணங்களை எல்லாம் ஈர்ப்பில் எடுத்து நாம் சேமிக்கின்றோமோ அந்த நிலைக்குத்தக்க உயிராத்மா வித்து தான் பிறிதொரு கூட்டுச் சேர்க்கை வளர்ப்பு ஜீவனுக்கு வழி காட்ட முடியும்.

இவ்வாத்ம ஜீவ உயிரானது காந்த சக்தி கொண்டது…!
1.நாம் எடுக்கும் சுவாசமானது
2.கவன நரம்பில் மோதுண்டுதான் நெற்றிப் பொட்டில் ஈர்க்கப்பட்டு
3.சிறு மூளையின் செயலுக்குச் சென்று இந்தப் பிம்ப உடல் ஜீவிக்கின்றது.
4.ஆகவே “காந்த சக்தி” கொண்டது தான் நம் உயிராத்மா…!

எந்த எண்ண சுவாசத்தை நாம் எடுக்கின்றோமோ… அதன் நிலைக்கொப்ப வலு சக்தி கொண்ட முலாமாக… இந்த உயிர் காந்த ஆத்மாவுக்கு அது வலு ஏறுகின்றது.

நாம் பூசிய முலாமின் ஈர்ப்பு காந்த உயிரணுவின் செயலானது இவ்வுடலில் இருக்கும் காலத்தில் சேமித்த தன்மை கொண்டுதான் பிறிதொரு ஜென்மப் பிறப்பு (அடுத்த) உடலுக்கு இந்த வித்தின் கலவைக் கூட்டுச் சேர்க்கைக்குகந்த பிறப்பெடுக்க முடிகின்றது.

தாவரங்களின் புவி ஈர்ப்புப் பிடியுடன் ஒன்றி வளர்ந்த உயிரணுக்களும்… இந்தப் புவியுடன் ஒன்றிய கனிவள உயிரணுக்களும்… ஒன்றிலிருந்து ஜீவன் பிரிந்து மற்றொரு ஜீவ சக்தி எடுப்பது என்பது இப்புவி ஈர்ப்புடன் ஒன்றிய பிறப்பில் இருந்ததால் குறுகிய காலத்தில் தொடர் பிறப்பின் பிறப்பு வளர்கின்றது.

அதுவே ஆத்ம பிறப்பெடுக்கும் இவ்வுயிராத்மா.. அது சேமிக்கும் முலாமின் அமில வளர்ச்சியின் சக்தி வலு இக்காந்த ஈர்ப்பு சக்தி கூடி விடுகின்றது,

அப்படிக் கூடி விடுவதனால் அவ்வுயிர் ஆத்ம வலுவினால் ஜீவ சக்தி கொண்ட வளர்ப்பாகும் தன்மைக்குத் தன் சேமிதக் கலவைக் கூட்டு அமிலத் தன்மைக்கொப்ப ஈர்ப்பு நிலையின் “உயிர் வித்தின் ஈர்ப்பில் தான்… பிறப்பெடுக்க முடியும்…!”

நெல் விதையைப் பக்குவப்பட்ட நஞ்சை நிலத்தில் போட்டால் தான் அது வளர்கின்றது. அதையே மேடு காடுகளில் போட்டால் அந்த நிலப் பகுதியில் நெல்லுக்குத் தேவையான பக்குவத் தன்மை இல்லாததால் இதன் வளர்ப்பு வளர்வதில்லை.

அதைப் போன்று இந்த உயிராத்ம சக்திக்கு…
1.எந்த ஈர்ப்பு அமிலக்கூட்டு முலாமாக மோதுண்டு
2.வாழும் காலத்தில் அதனின் வளர்ப்பு வளர்ந்ததோ
3.அதன் ஈர்ப்புப் பிம்பத்திற்கே செல்கிறது.

இயற்கைச் சுழற்சித் தன்மையில் சுழன்று வாழும் உயிராத்மாக்கள் “சுழற்சி ஈர்ப்பின் சுழலாகச் சுழலும் சுழற்சியையே…” (இயற்கையின் இயக்கம்) தன் உணர்வால் எடுக்கும் எண்ணம் மனிதனுக்குத் தான் உண்டு.

இப்படிப்பட்ட ஜீவன் கொண்ட பகுத்தறிவும் செயலாற்றும் பிம்ப உடலின் உயிராத்மா காந்த சக்தியினால்தான்
1.உருவாகும் இயற்கை கோளங்களையும்
2.உருவாகும் சக்திக்கே உரு நிலை தரும் சக்தியும்
3.இந்த மனித பிம்பத்திற்குத்தான் உண்டப்பா…!

அப்படிப்பட்ட தகுதி கொண்ட இந்த மனித உயிராத்மாவிற்கு நாம் சேமிக்கும் எண்ண உணர்வால்
1.நாம் எடுக்கும் “சுவாசத்தின் முலாம்” கொண்டுதான்
2.இந்த உயிராத்மாவின் உயர்வை நாம் காண முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவரின் அருள் சக்திகளை நாம் பெற்று அவர் வழியைப் பின்பற்றி பேரானந்தப் பெருநிலையை நாமும் பெறுவோம்.

1.அவரின் அருளை நாம் பெற வேண்டும் என்றால்
2.நாம் பார்ப்போரெல்லாம் பேரானந்தப் பெரு நிலை பெற வைக்க வேண்டும்
3.அவர்கள் பேரானந்தப் பெருநிலை பெறும் உணர்வலைகள் வருவதை நாம் நுகர வேண்டும்.
4.நமக்குள் பேரானந்தத்தை வளர்த்திட வேண்டும்.

ஒரு நெல் பயிரை நாம் விளைய வைத்து அதை நாமும் உட்கொண்டு மகிழ்கின்றோம். அதே சமயத்தில் இதை மற்றவரும் உட்கொண்டு மகிழ்ந்திட வேண்டும், நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணித்தான் நாம் அந்தப் பயிர்களை விளையச் செய்வோம்.

“யாரும் இதை வாங்கக் கூடாது.., உட்கொள்ளக் கூடாது..,” என்ற எண்ணத்தில் விளைய வைப்பதில்லை. இதைப் போல குரு அருளை வளர்ப்போம்… மற்றவர்களையும் நாம் பெறச் செய்வோம்.

ஏனென்றால் ஈஸ்வரபட்டாய குருதேவர் நமக்கு “எவ்வளவு பெரிய.., பொக்கிஷத்தைக் கொடுத்துள்ளார்…!” என்று எண்ணுங்கள்.

குறைகளை அகற்றுங்கள். மெய்ப்பொருளைக் காணும் உணர்வை உயர்த்துங்கள். உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள். அதையே தவமாக்குங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானியுங்கள். தியானம் என்பது முதலில் அந்த உயர்ந்த சக்தியை நமக்குள் வளர்த்துப் பழகுவது.

ஒரு பாத்திரத்தில் நாம் பல பொருள்களைப் போட்டுச் சமைக்கின்றோம் என்றால் அதில் சமைத்த பொருள்களுக்கொப்பத்தான் வாசனை வரும்.

எல்லாப் பொருள்களையும் நாம் போட்டுச் சமைத்தபின் “சிறிதளவு.., உப்பைப் போட்டுப் பார்க்கலாமே..!” என்று தன் இஷ்டத்திற்குச் சேர்த்தால் என்ன ஆகும்…?

சமைத்த அந்த உணவைச் சாப்பிடுபவர்கள் அனைவரும் “உப்பு அதிகமாகிவிட்டது..,” என்று தான் சொல்வார்கள். இதைப் போன்று நாம் சமைக்கும் உணர்வின் சுவையே அதைக் கேட்போரின் நிலைகள் மனம் மகிழும்.

1.அருள் ஞானியின் உணர்வுகளைத் தியானத்தால் நமக்குள் எடுத்து
2.அனைவரும் பெற வேண்டும் என்று ஏங்கி எல்லோருக்கும் அதைக் கிடைக்கச் செய்யவேண்டும்.

ஆகவே… “மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானிப்போம். மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரும் பெற வேண்டும் என்று தவமிருப்போம்”.

எல்லா ஆலயங்களுக்கும் சென்று அங்கே காட்டப்பட்டுள்ள தெய்வ குணத்தைப் பெறவேண்டும் என்று தியானிப்போம். இந்த ஆலயத்திற்குள் வரும் ஒவ்வொருவரும் அந்தத் தெய்வ குணத்தைப் பெறவேண்டும் என்று தவமிருப்போம்.

அங்கே வைத்திருக்கும் கனியைப் போன்று மலரைப் போன்று பாலைப் போன்று பன்னீரைப் போன்று சந்தனத்தைப் போன்று அந்த நறுமணங்கள் அனைத்தும் நாங்கள் பெறவேண்டும்.

இந்த ஆலயத்திற்கு வரும் அனைவருக்கும் அந்த நறுமணங்கள் கிடைக்க வேண்டும் என்று இதை நமக்குள் பெருக்குதல் வேண்டும்.

மலரைப் போன்ற மணமும் மகரிஷிகளின் அருள் சக்தியும் மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தியும் நாங்கள் பெற வேண்டும். இந்தக் கோவிலுக்கு வரும் அனைவரும் அந்த நிலை பெற வேண்டும் என்று நாம் தவமிருக்க வேண்டும்.

அதற்குப் பதில் கோவிலுக்குள் போய் “நான் தவமிருந்து… அந்தத் தெய்வத்தைப் பெறப் போகின்றேன்… பார்க்கப் போகிறேன்…” என்றால் இது தவமில்லை.

இயற்கையின் நியதிப்படி மனிதனின் அடுத்த நிலை எது…? – ஈஸ்வரபட்டர்

 

இப்புவி ஈர்ப்பு மட்டுமல்லாமல் உருவாகும் அனைத்து அணுத் தன்மையும் அணுத் தோன்றி அணு வளர்க்கும் வளர்ச்சியிலேயே மோதுண்டு மோதுண்டு வளர்ந்து வருகின்றது.

முதலில் அந்த அணு தாவரமாக வளர்ந்தாலும் அல்லது அணுவாக உலோகம் வளர்ந்தாலும் எத்தொடர் வழி அணுக் கொண்டு எதன் எதன் தொடர்பெல்லாம் அந்த ஆரம்ப உயிரணு மோதுண்டு வழி பெறும் தன்மை பெற்றதோ
1.அந்த அவ்வுயிரணுவின் அமில ஆத்மக் கலவையில் அதனின் வளர்ச்சித் தொடர்
2.ஒவ்வொரு சக்திக் கலவை வழி கொண்டு
3.அதன் சேர்க்கை உருவ அமைப்பை (MOULD) வளர்த்துக் கொள்கின்றது.

ஆரம்ப உயிரணுத் தோன்றி இவ்வீர்ப்பில் புல்லாக “புல் செடியாக” வளர்ந்து அப்புல் செடியானது மக்கி மடிந்து விடுகின்றது.

மடிந்தாலும் அது வளர்த்த அவ்வுயிரணு அப்புல் செடியாக வளர்ந்த கலவையின் முலாமுடன் பிறிதொரு வளர்ப்பிற்கு அவ்வுயிரணு வித்து அமிலத் தன்மை வளரும் பொழுது
1.புல்லாகிய முதல் உயிரணு
2.பிறிதொரு வளர்ப்பிற்கு வரும் பொழுது “வலுவான செடித் தன்மை” கொண்ட பிறப்பை எடுக்கின்றது.

இப்பிறப்புத் தன்மை செடி மக்கிய அவ்வுயிரணு அச்செடி வளர்ப்பில் பல அணுக்களை வளர்த்துத் தன் வலுவைக் கூட்டிக் கொண்டு இசெடியின் முலாமான அமிலக் கூட்டுத் தொடர்புடனும் பிறிதொரு வளர்ப்பில் இதற்கு மேல் “வலுவான பூவாகும்” வளர்ப்பாகின்றது.

இத்தொடர் கொண்டு ஒவ்வொரு வளர்ச்சியின் ஈர்ப்பிலும்…
1.எச்சுவை கொண்டு… எவ்வழித் தொடர் வளர்ப்பிலெல்லாம் ஓர் உயிரணு வழித் தொடர் கொண்டு
2.தன் கூட்டுக் கலவையின் வளர்ச்சி மோதலுக்குகந்த முலாமான அமிலத்தைச் சேமிக்கும் வலுக் கொண்டு
3.அவ்வுயிரணு உயிராத்மாவாக புவிஈர்ப்புப் பிடியில் சிக்குண்டு
4.வளரும் தாவர நிலை மாறி ஜீவ சக்தி பெறக்கூடிய நடக்கும்… பறக்கும்… ஊரும்.. நீந்தும்… நிலை பெறுகின்றது.

இந்த வழித் தொடர் எல்லாமே இயற்கையின் நியதிகள்.

ஆக… இந்த மனித உயிராத்மாவின் சக்தி மற்றெல்லா ஜீவ சக்தியினைக் காட்டிலும் உயர்ந்த ஈர்ப்பு சக்தி கொண்டது.
1.ஆத்ம உயிரைச் செயல்படுத்தும் தன்மை கொண்டு தான்
2.இந்தப் பிம்ப உடல் ஆரோக்கியமும் ஞான வளர்ச்சியும் வலுக் கொள்கின்றது.

அப்படி என்றால் உயிராத்மாவை வலுப் பெறும் தன்மைக்கு நம் உணர்வலையின் எண்ணத்தை எப்படிச் செயல்படுத்துவது…?

உடலுடன் கூடிய உயிராத்மாவை…
1.எப்பிம்பத்தில் இவ்வுயிர் ஆத்மக் கலவை செயல்படுகின்றதோ
2.அதே பிம்பத்திலிருந்து தான் இவ்வுயிராத்மாவையும் வலுப் பெறச் செய்ய முடியும்.

குயவன் செய்யும் பானையின் உருவிற்கு அவன் சேர்க்கும் மண்ணும்… அவன் வடிக்க எண்ணிய அச்சின் வடிவாகவும் தான்… பானை அமைகின்றது.

அதைப் போன்று ஒவ்வொரு உயிரணுவும் எப்புவி ஈர்ப்பில் ஜீவன் கொண்டு எதிலேயெல்லாம் மோதுண்டு மோதுண்டு உருவாகி வலுப்பெற்றதோ அதன் தன்மை போன்று
1.நம் உயிராத்மாவானது இந்தப் பிம்ப அச்சுக்கூட்டில் இருக்கும் பொழுது
2.ஆத்ம உயிர் வித்தை உயர்ந்த வித்தாக்க வேண்டும்.

இப்பொழுது நாம் வாழும் இந்தப் பிம்பக் கூட்டிலிருந்து தான் அந்த நிலை பெற வேண்டும் என்பதை உணர்ந்து கிடைத்த “இந்தப் பாக்கியத்தை நழுவ விடாதீர்கள்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நீங்கள் அனைவரும் இந்த உலகுக்கு எடுத்துக்காட்டாக நிறைவுபடுத்தி அந்த உணர்வின் தன்மை நாம் பெற வேண்டும் என்று
1.“நான்…,” மட்டும் இல்லாதபடி
2.அனைவரும் பெறவேண்டும் என்ற நிலைக்கு வரவேண்டும்.

அருள் ஞானத்தை நாம் நமக்குள் சமைத்து விளைய வைத்த அந்த அருள் ஞானிகளின் உணர்வை எல்லோருக்கும் ஊட்டுதல் வேண்டும்.

பிறர் அந்த எண்ணங்களை எண்ணும் பொழுது அவர்களும் அதைச் சுவைத்து அதன் வழியில் அவர்கள் பெற முடியும்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் இதைச் செயல்படுத்த வேண்டும்.
1.அருள் ஞானத்தின் நிலைகளே ஒளிச் சுடராக வளர வேண்டும்.
2.அனைவருக்குள்ளும் மகிழ்ச்சியின் தன்மை பெருக வேண்டும்
3.அருள் ஞானம் எல்லோரும் பெறவேண்டும்.

ஏனென்றால் “உலகைக் காக்கும் அருள் உணர்வுகள்..,” வளரவேண்டும் என்பதற்குத்தான் இதைச் செய்வது.

நான் ஒருவனாகச் செய்யவில்லை. நானாகச் செய்வதற்கு வலுவில்லை…!

அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் ஒலிக்கின்றது. உணர்வின் அலைகள் படர்கின்றது. உங்கள் மனங்கள் உருவாகின்றது. அந்த உணர்வின் செயலாக.., “நீங்கள் தான் உருவாக்குகின்றீர்களே.., தவிர நானல்ல”.

நீங்கள் எங்கே இருந்தாலும் சரி குருவின் உணர்வுகள் உங்களுக்குள் ஊடுருவி அந்த ஐக்கியமாகும் உணர்வு கொண்டு செயல்படுத்துங்கள். அருள் ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் இணைந்து அதுவே உங்களுக்குள் வளர்ந்து அதனின் செயலாக்கமாக உங்களை அது இயக்கத் தொடங்கும்.

பதிவு செய்த நாடாவில் உள்ள இசையை மீண்டும் போடும் பொழுது அதை மகிழ்ந்து கேட்கின்றோம், அதைப் போன்று மகரிஷிகளின் உணர்வு (அதைப்) பதிவு செய்த “நாடாவாகத்தான்.., நான் இருக்கின்றேன்”.

அந்த நாடாவில் வரும் ஒலியை நானும் நுகர்கின்றேன். எனக்குள் மகிழ்ந்திடும் நிலையைப் பெருக்குகின்றேன். எல்லோரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்ற நிலையைத்தான் உருவாக்குகின்றேன்.

ஒரு இனிமையான இசையைக் கேட்கும் பொழுது அகமகிழ்ந்திடும் நிலைகளை நீங்கள் வெளிப்படுத்துகின்றீர்கள்.

அதைப் போன்று உங்களுக்குள் அந்த அருள் உணர்வுகள் இசைந்து “உங்களை அது மகிழ்ச்சி அடையச் செய்யும் பொழுது..,” அதைக் கண்டு நான் சந்தோஷப்படுகின்றேன்.

இதைத்தான் குருநாதர் எனக்குக் காட்டினார்.

இதைச் சீராகக் கடைப்பிடிக்கும் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
1.எந்தத் துயரத்திற்கும் நீங்கள் இடம் தராதீர்கள்
2.குறையான உணர்வுகளை உங்களுக்குள் புகவிடாதீர்கள்.

கணவன் மனைவி நீங்கள் இருவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை வசிஷ்டரும் அருந்ததியும் போன்று கவர்ந்து கொள்ளுங்கள்.

எல்லோருக்கும் அந்த அருள் ஞானம் கிடைக்க வேண்டும் என்று உங்கள் மனதினை உயர்த்துங்கள். இவ்வாறு செய்து வந்தீர்கள் என்றால் அது சொர்க்கபூமியாக…” இருக்கும்.

தீமைகளிலிருந்து விடுபட்டு அருள் ஞான நிலைகள் கொண்டு உருவானது. அதை நாம் அனைவரும் உருவாக்கிக் கொண்டுள்ளோம்.

“அதனின்.., உருவின் தன்மையை.., உலகம் பார்க்க வேண்டும்” என்றால் அங்கே அருள் ஞானம் பேச வேண்டும். அருள் ஞானத்தின் உணர்வுகளை அங்கே பரப்ப வேண்டும். அருள் ஞானம் வளர வேண்டும்.

இந்தப் பூமியில் ஒவ்வொருவரும் தன்னை அறிதல் வேண்டும். தன்னை அறிந்து செயல்படும் திறன் அனைவரும் வேண்டும். “அனைவரும் வாழ வேண்டும்..,” என்ற எண்ண உணர்வுகள் உருப்பெறவேண்டும்.

உலகில் வாழும் அனைவரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்க வேண்டும். அதைத்தான் நமக்குள் பெருக்க வேண்டும்.

சாந்த குணத்திற்கு இருக்கும் வலிமை வேறு எதற்கும் இல்லை

 

கொடும் செயல்கள் நடப்பதையும்… கொடும் தவறு செய்பவர் உணர்வுகளையும்… கேட்டுக் கொண்டே இருந்தால் அதை நுகர்ந்து அறிந்தபின்
1.ஒரு பத்து நாளைக்குத் தொடர்ந்து கேட்டால் நம் உடலுக்குள் அந்தக் கொடூர உணர்வுகள் விளைந்து விடுகிறது.
2.நம்மையும் அந்தத் தவறு செய்யும் நிலைகளுக்கே இயக்கி நம்மையும் தவறுள்ளவர்களாக மாற்றி விடுகின்றது.

இதைப் போன்ற நிலையிலிருந்து மனிதர்கள் நாம் விடுபட வேண்டும் என்று செயல்பட்டவர் தான் நம் காலத்தில் வாழ்ந்த மகான் காந்திஜி.

அவர் பெற்ற ஞானத்தை நாம் தெரிந்து கொள்வது மிகவும் நலம். அவருடைய வழிகளை நாமும் கடைப்பிடிக்க வேண்டும்.

1.தீமை இல்லாத உடலாக நாம் உருவாக்க வேண்டும்
2.தீமை செய்யும் எண்ணங்கள் நமக்குள் உருவாக்காதபடி தடுக்க வேண்டும்
3.தீமையற்ற உலகம் உருவாக வேண்டும்
4.தீமையற்ற நாடாக உருவாக வேண்டும் என்று
5.தீமையற்ற மக்கள் உருவாக வேண்டும் என்று அவரை நாம் நினைவு கொண்டு
6.காந்திஜி வழியில் அரும்பெரும் சக்திகளைப் பெறும் நிலையாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்

அவருக்குள் பிறக்கச் செய்த ஞானத்தின் நிலைகளை அந்த அருள் உணர்வுகளை நமக்குள்ளும் உருவாக்குவோம்… அதைப் பிறக்கச் செய்வோம்… அருள் ஞானச் செல்வத்தை வளர்ப்போம்.

ஏனென்றால் பிறருக்குத் தீங்கு விளைவிக்காத நிலையை நாம் பெற வேண்டும். எதை வைத்து..?

சாந்தமான குணத்தை வைத்து…!

கோபத்தால் உடனடியாக ஒன்றைச் செய்து விடலாம்.
1.ஆனால் அதே உணர்வின் வேகம் நம்மை இயக்காது நிறுத்த வேண்டும் என்றால்
2.மன பலம் தேவை… சாந்தம் அவசியம் தேவை.

அத்தகைய சாந்தத்திற்குண்டான வலிமை வேறு எதற்கும் இல்லை. சாந்தத்தின் வலிமை கொண்டு தான் எதையும் சாதிக்க முடியும். சாந்தத்தால் சாதித்தவர் காந்திஜி. அவருடைய வலிமை எவருக்கும் இல்லை.

எல்லோரும் சொல்வார்கள்…
1.வீர தீரத்துடன் ஒருவரை அழித்து விடலாம்… நான் அழித்து விட்டேன்… அழித்துவிடுவேன்… என்று
2.ஆனால் அது வலிமை அல்ல… கோழைத்தனம் தான்
3.ஒருவரை ஏசிவிடலாம்… இதுவும் கோழைத்தனம் தான்
4.ஒருவருக்குத் தீங்கு செய்யலாம்… இதுவும் கோழைத்தனம் தான்.

மன வலிமை வேண்டும் என்றால் அந்தச் சாந்தம் நமக்கு வேண்டும். வரும் தீமைகளை அறிந்து அந்தத் தீமைகளை அகற்றும் வலிமை பெறுவதே சாந்தம் என்பது.

எத்தகைய தீமையும் தன்னைச் சாராது காந்திஜி அந்தச் சாந்தத்தைத் தனக்குள் வளர்த்துக் கொண்டார். காந்திஜி தான் சாந்தத்தால் வலிமை பெற்ற அந்த அரும் பெரும் சக்திகளை நாம் அனைவரும் பெற்றோம் என்றால் நம் குடும்பத்திலும் சரி… தொழிலிலும் சரி… வரும் சிறு குறைகளையும் மாற்றி அமைக்க முடியும்.

அந்த வலிமை கொண்ட சாந்தத்தை வைத்து நம்மை இயக்கும் தீமையான உணர்வின் வலிமையை அடக்க முடியும். குடும்பப் பற்றும் வரும்.

காந்திஜி நாம் வாழும் இந்தக் காலகட்டத்தில் இதைச் செயல்படுத்தியவர். அவர் மக்களுக்காக அரசியல் நிலைகளை எடுத்தாலும் அரசு என்ற நிலைகளுக்குச் செல்லவில்லை.

அருள் ஞானிகள் உணர்வைத் தனக்குள் நுகர்ந்தார். அந்த அருள் உணர்வுகளைத் தான் அனைவரும் பெற வேண்டும் என்று அரசியலில் புகுத்தினார்… அதை அவர் செயல்படுத்தினார்.

ஆகவே இத்தகைய சாந்தமே மிகவும் வலிமை கொண்டது.
1.சாந்தத்தின் உணர்வு கொண்டே நமக்குள் வரும் தீமையை அடக்கி
2.ஞானத்தின் வழியில் செல்லும் பொழுது நல் ஒழுக்கங்கள் நமக்குள் ஓங்கி வளரும்.
3.தீமைகளை அடக்கி ஆட்சி புரியும் சாந்த நிலைக்கு ஒவ்வொருவரும் வந்தால் இனி வரும் சமுதாயமும் சீர்படும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

உயர்ந்த குணங்கள் கொண்டு வந்தாலும் “சொந்தம்…” என்ற நிலைகள் வரும் பொழுது “பந்தம்…” என்று ஆகி பாசத்தால் வந்தவுடன் குடும்பத்திலோ மற்ற நிலைகளிலோ சிக்கல்கள் வந்தால் செய்வதறியாது தவிப்போர் உண்டு.

“பாசத்தால்… இப்படி ஆகிவிட்டதே…” என்ற நிலைகள் கொண்டு கற்றுணர்ந்த உணர்வை அறிய முடியாது செயல்படுத்த முடியாது அதைத் தவற விடும் நிலை வந்துவிடுகின்றது.

“நேசத்தால்…” உயர்ந்த நிலைகள் கொண்டு மகரிஷிகளின் உணர்வுகள் பெற வேண்டும் என்று எண்ணினால் அந்த நேசம் உயர்வைக் காட்டும். அனைவரையும் நாம் நேசிக்க வேண்டும்.

“எதைக் கொண்டு…” நேசிக்க வேண்டும்…?

“அருள் மகரிஷிகளின் உணர்வுகள் அனைவரும் பெற வேண்டும்…” என்று அந்த நேசத்தைக் கூட்ட வேண்டும். குரு காட்டிய வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோம்.

ஏனென்றால்…
1.உங்களுக்கு யாம் “படிப்படியாக… சிறுகச் சிறுகச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்…”
2.எல்லாம் “பூரணமாகச் சொல்ல வேண்டும்…” என்றால் காலம் இல்லை.
3.குருநாதர் எனக்குள் பதிவு செய்த பேருண்மைகள் “எண்ணிலடங்காதது…” இந்த மனித உடலுக்கு ஆயுள் பத்தாது.

அவ்வளவு பெரிய அண்டத்தின் (பிரம்மாண்டத்தின்) உணர்வுகள் பதிவு செய்ததை “எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்” என்று அவ்வப்பொழுது துணுக்குத் துணுக்காக எடுத்துக் கொடுக்கின்றோம்.

அந்த நினைவைக் கூட்டும் பொழுது உணர்வை ஒளியாக்கி உணர்வின் தன்மை எண்ணமாக்கி அதனின் நிலைகளைத்தான் செயல்படுத்துகின்றோம்.

1.ஒவ்வொரு நிலைகளிலும் ஒவ்வொரு ரூபத்திலும் குருநாதர் காட்டிய அருள் வழியை
2.அவர் பதிய வைத்த உணர்வின் ஏட்டை நினைவு கொள்ளும் பொழுது
3.எனக்குள் உணர்த்தி அந்த உணர்வின் தன்மையை அவரே தான் இங்கே வழி நடத்துகின்றார்.

ஏனென்றால் என்னுள் அவர் இருந்து அல்ல…!

“அவர் பதிவு செய்த நாடாவாக..,” (MEMORY DISC) நான் எண்ணும் பொழுது உணர்வுகள் இயக்கப்பட்டு அது பெறப்பட்டு “நீங்கள் பெற வேண்டும்… என்று அவர் செய்த உணர்வைத் தான்…” நான் செய்கின்றேன்.

அவருடைய உணர்வுகள் தான் என்னைச் செய்ய வைக்கின்றது.

ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளை நாம் அனைவரும் பெறுவோம். குரு காட்டிய அருள் வழிகளில் நாம் செல்வோம்.

இந்த மனித வாழ்க்கையில் அருள் ஞானிகளின் உணர்வைப் பெறுவோம். மகிழ்ச்சி பெறும் நிலையை இந்த உடலுக்கு மகிழ்ச்சி பெறச் செய்வோம். நாம் பார்க்கும் அனைவரது உடல்களையும் மகிழச் செய்வோம்.

மகரிஷிகளின் அருள் உணர்வுடன் ஒன்றியே இந்த வாழ்க்கையை வாழ்வோம். என்றும் பேரானந்த நிலைகள் பெற்று பெரு வாழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளுடன் வாழும் நிலையை நாம் உருவாக்குவோம்.

1.இதைப் படித்துணர்ந்தோர் அனைவரும் அவர்கள் வீட்டில் மகிழ்ச்சி போங்கும் நிலைகளாக உருவாகும்
2.கணவன் மனைவி இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்திட குரு அருளும் எமது அருளும் உறுதுணையாக இருக்கும்.
3.மெய் உணர்வை நீங்கள் அனைவரும் பெற்று உங்கள் வாழ்க்கையில் மகிழ்ந்திட வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெறத் தியானிப்போம். உலகம் நலம் பெற தவமிருப்போம். உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற தவமிருப்போம்.

ஞானகுரு – ஈஸ்வரபட்டர்

 

ஒன்று பலவாகும் வித்தை வளர்க்கும் சக்தி எத்தொடர்பின் வளர்ப்பில் வளர்கின்றதப்பா…? தான் பெற்ற சக்தியைப் பலரும் பெறவல்ல வழித் தொடரை வளர்க்கும் முறை எப்படி…?

மனித எண்ணத்தின் பகுத்தறியும் உணர்வு ஞானம் வளரும் ஈர்ப்பலைக்கு ஞானிகளின் வழி வகுத்து குடும்ப வாழ்க்கை முறையில் பல நெறி முறைகளைக் காவியக் கதைகளில் உணர்த்திச் சென்றார்கள்.

அதன் வழித் தொடரில் பக்தியை ஊட்டி மனித ஆத்மாக்களின் எண்ணச் சிதறலை வழி வகுத்து
1.மனிதன் தன்னை மறந்து சில தேவையின் இச்சையில் தன் உணர்வையே இழக்கும் நிலைக்குச் செல்வதை
2.அன்றே காவியங்களில் கதையாக – தெய்வங்களான நிலைக்குக் கதை உருவங்கள் தந்து செயல்படுத்தினார்கள்.

உடல் உறுப்புகள் செயலிழந்தாலும் கை கால்கள் முடம் ஏற்பட்டாலும் மனிதன் பகுத்தறியும் ஆற்றலினால் செயற்கை உபகரணத்தால் தன் தேவையை அமைத்துக் கொள்கின்றான்.

தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயற்கையின் மாறுபாட்டுக்கு ஏற்ப வெயில் குளிர் மழை காற்று இவைகளைத் தாங்கக்கூடிய வீடுகளை அமைத்துக் கொள்கின்றான்.

அதை எல்லாம் செய்தாலும்… இந்தப் புவியில் வாழும் மனிதன்
1.தன் வளர்ச்சியால் ஆத்ம பலம் கொண்டு
2.பூமியின் ஈர்ப்பலையில் இருந்து விடுபடும் உணர்வின் செயலுக்கு
3.தன் ஆத்ம ஞானத்தை வளர்த்துக் கொண்டால் தான் மனிதனின் ஆத்ம பலம் கூடும்.

ஞானத்தால் சக்தி கொண்டு
1.தான் பெற்ற சக்தியைப் பிறிதொரு ஆத்மாவும் பெறவல்ல போதனையால்
2.எச்சக்தி கொண்டு நம் ஆத்ம ஞானம் வளர்ந்ததோ
3.அதற்கு வலுவான ஆத்ம வலு அலைச் சக்தியை நம் ஆத்மாவும் பெற்று வலுப் பெறகின்றது.

ஏனென்றால் காந்த மின் ஈர்ப்பு ஜீவ உயிர் இது…!

இந்த உயிர்த் துடிப்பின் ஆத்ம ஈர்ப்பின் வலு கூட்ட இவ்வுணர்வின் எண்ணத்தைப் பக்குவம் கொண்டு ஞானம் வளர்த்து ஞானத்தால் அறியும் உயர் ஞான வழி முறையை
1.ஞானம் வளர்க்கப் பிறிதொரு ஆத்ம சுழற்சி எண்ணத்தில் செலுத்தி
2.அந்த வலு சக்தியை நம் உயிராத்மா பெற வேண்டும் (இது முக்கியம்).

உயிர் தந்தாய்… உடல் தந்தாய்… குருதியினைப் பாலாக்கி வளர்த்திட்டாய்… என்று அன்னையை முதல் தெய்வமாக குருவாக வணங்குகின்றோம். ஒவ்வொரு மனிதனுக்கும் குரு யார்…?

தன் உயிராத்மா தான் முதல் குரு. தாயானவள் நம் ஈர்ப்பிற்கு ஜீவன் பெற வழி தந்து வளர்ச்சி தந்து முதல் குருவானாலும் இந்த ஆத்ம குரு வளர்ப்பினால் தானே அக்குருவை நாம் அடைய முடிகின்றது.

குருவின் உண்மை நிலை என்ன..? போதனையால் பெறுவது குரு அல்ல…!
1.குருவின் போதனையை குரு காட்டிய போதனையாக நம் ஆத்ம குரு ஏற்கும் பொழுது தான்
2.எக்குருவின் போதனையையும் இந்தக் குரு செயலாக்கி வழிப்படுத்தும் முறைக்கு வருகின்றது

நம் ஆத்ம குரு வளர்ந்தால் தான் குரு சிஷ்யத் தன்மை வளர்கின்றதப்பா…! இக்குரு முறை அனைத்து நடை முறைச் செயல்களுக்கும் ஒன்றியது தான்.

இவ்வாத்ம குருவை… ஞானம் வளர்க்கும் நற்குருவின் செயல் குருவாக… இவ்வாத்ம குரு வளர்வது தான் குருத் தன்மை பெறும் நிலை.

1.ஒவ்வொரு ஆத்மாவும் தன் உயிர்க்குருவை உயர் குருவாக
2.இந்தப் புவி ஈர்ப்புப் பிடி சுழற்சியிலிருந்து விடுபட்டு
3.இந்த உயிராத்மாவை ஞான குருவாக்குங்கள்.

பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்று சொல்வதற்கல்ல மனித வாழ்க்கை – ஈஸ்வரபட்டர்

 

உணர்வால் உந்தப்படும் அச்சமுடன் கூடிய எண்ணத்தால் ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுக்கும் சுவாச முறை கொண்டு
1,வாழ்க்கை நெறி வழியிலும்
2.குடும்பச் சுழற்சிச் செயலிலும்
3.பந்த பாசச் சுற்றத்தாரின் உணர்வுடன்
4.இந்த உணர்வின் எண்ணத்தையே வெளிப்படுத்தினால்
5.வைத்தியனால் பலரின் உணர்வு எண்ணமுடன் கலந்து
6.அவர்களின் வியாதிக்கு இவர் எண்ணத்தைச் செலுத்திச் செலுத்தி அதனுடன் கூடிய சுவாசத்தை எடுப்பதனால்
7.இந்த வைத்தியனுடைய உணர்வே அவ் ஈர்ப்பின் பிடியில் சிக்குண்டு
8.அவ்வலைத் தொடர் எண்ணம் கொண்ட செயலுடனேயே ஒன்றிவிடும்.

ஆகையினால் வைத்தியர்களின் பெரும்பாலோரின் வாழ்க்கை நிலை அமைதி கொண்ட இன்ப இல்லற குடும்ப வாழ்க்கை அமையாமல் அவர்களின் வாழ்க்கையே அமைதியற்ற நிலையில் தற்கொலைக்குத் தன்னை ஆட்படுத்திக் கொள்ளக்கூடிய சுழற்சியுடன் ஊன்றிவிடுகின்றது.

அதே போன்று விஞ்ஞானத்தில் தன் ஞானத்தை வளரவிடுபவர்களும் எவ் அலை ஈர்ப்பில் தன் உணர்வின் எண்ணத்தைச் செலுத்தி தன் ஞானத்தை எவ் விஞ்ஞானச் செயல் கண்டு எவ் ஒரு மாற்றப்படைப்பைத் தன் அறிவின் ஞானம் கொண்டு உருவாக்க முற்படுகின்றார்களோ அதே ஈர்ப்பின் சுழற்சி வட்ட அலைத் தொடருடன் எண்ணத்தை ஒன்றிவிடுகின்றனர்.

தன் அறிவின் ஞானத்தால் அறியும் புதிய விஞ்ஞான அலையில் சிக்குண்டு அதனுடனே ஒன்றி தன் உணர்வின் எண்ணச் சுவாசத்தால் தன் ஆத்ம ஞானமும் அதுவாகவே உட்பட்டு விடுகின்றனர்.

அப்படிப்பட்ட விஞ்ஞானி தன் குடும்ப வாழ்க்கையையோ உற்றார் சுற்றார் மற்றோரின் எண்ண அலையை மனிதச் சுழற்சி நெறி முறை பழக்க வழக்கங்களையும் அறியும் தன்மை அற்று விடுகின்றனர்.

எந்த ஆராய்ச்சி ஈர்ப்பின் பிடி அலையில் சிக்குண்டனரோ பசி தாகம் மற்றெல்லா உணர்வுகளையும் மறந்து அவற்றின் பிடிக்குத் தன் ஞான அறிவின் ஆத்மாவையே செயலாக்குபவனுக்கு
1.வாழ்க்கையில் ஏற்படும் எவ் எதிர் நிலையான எதிர்ப்பையும் ஏற்க முடியாத தன்மையில்
2.விஞ்ஞானத்தால் தன் அறிவின் ஞானம் கொண்டு பல புதிய செயற்கைச் செயல்களைச் செய்விக்கும் அந்த விஞ்ஞானி
3.தன் உணர்வின் ஞானத்தில் அமைதி கொண்ட வாழ்க்கையை அமைக்க முடியாமல்
4.தற்கொலைப் பிடிப்பில் தன்னையே மாய்த்துக் கொள்கின்றான்.

ஆகவே உணர்வால் செலுத்தும் எண்ணம்…
1.எவ் ஈர்ப்பலையையும் தன் உடலுடன் எடுத்துக் கொள்ளும் செயலாக ஒன்றாமல்
2.தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் செயலாக இவ்வெண்ணம் செயல்பட வேண்டும்.

ஒன்றைக் கொண்டு பலவற்றை வளர்க்க வேண்டும் என்றால் அவ் ஒன்றான விதையை புழு பூச்சி அரிக்காமல்… சொத்தைப் பட்டு வெடிப்பு ஏற்படாமல்… விதை நன்றாக இருக்க வேண்டும்.

அப்படிப் பாதுகாக்கப்பட்ட அந்த விதையைத் தான் பக்குவப்படுத்திய நிலத்திலிட்டுப் பயிராக்கி அதன் மகசூலாகப் பல விதையை எடுக்க முடியும்.

அதைப் போன்று மனித வித்தின் வளர் வித்து ஆத்மாவை எப்படியப்பா வளர்ப்பது..?

நம் ஆத்ம ஜீவனை… இஜ்ஜீவனுடன் கூடிய உடலின் உணர்வால்
1.எண்ணத்தில் எடுக்கும் செயல் கொண்டு
2.நற்சத்தான வித்தாக்கி அந்த வித்தைக் கொண்டு
3.பல வித்துக்களை எடுக்க வேண்டும்.

பிறந்தோம்… வளர்ந்தோம்… மணந்தோம்.. பிள்ளைகளைப் பெற்றோம்… என்ற வழித் தொடரில் வளர்ப்பதல்ல ஆத்ம வித்தின் சக்தியை…!

இருதயத்தைச் சீராக இயங்கச் செய்யவும்… மன வலிமை பெறச் செய்யவும் நாம் தியானிக்க வேண்டிய முறை

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இருதயம் முழுவதும் படர்ந்து இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்ணின் நினைவை இருதயத்திலே செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை இருதயத்திலே செலுத்தி நல்ல அணுக்களை அங்கே உருவாக்கி
1.உடல் முழுவதற்கும் நல்ல இயக்கச் சக்தியாக மாற்றவும்
2.நல்ல இரத்தங்களை உறுப்புகள் முழுவதற்கும் பாய்ச்சக் கூடிய வலிமை பெறச் செயுங்கள்.
3.சிறு மூளை முதற் கொண்டு மேலே நல்ல இரத்தம் சென்று நல்ல உணர்வாக மாற்ற
4.அத்தகைய திறன் கொண்ட இதயத்தை உங்களிலே உருவாக்குங்கள்.

உங்கள் இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

மீண்டும் நினைவு படுத்துகிறேன். அருள் உணர்வின் இயக்கமாக அந்த அணுக்களுக்கு இதை ஊட்டுகின்றேன் (ஞானகுரு).

அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்தால் அதைப் பெறச் செய்யுங்கள்.
1.உங்களால்தான் முடியும்… நீங்கள் எண்ணினால் முடியும்.
2.அந்த உணர்வின் தன்மையை நீங்கள் ஈர்க்கக்கூடிய சக்திக்கு
3.எமது அருளும் குரு அருளும் உங்களுக்குள் கலந்து உறுதுணையாக இருக்கும்.

இப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி நேரடியாக இருதயத்திற்குக் கிடைக்கக்கூடிய திறன் பெறுகின்றது. அதைப் பெற்று உங்கள் இதயத்தைச் சீராக்கிக் கொள்ளுங்கள்.

இருதயத்தில் வலி இருந்தால்… வாய்வினாலேயோ மற்ற நிலைகளினாலோ… இருதயம் பலவீனமாக இருந்து ஹார்ட் அட்டாக் வரக்கூடிய அத்தகைய அணுக்கள் இருந்தால் அதை எல்லாம் மாற்றித் தெளிவான இருதயமாக நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும்.

துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளைப் பெருக்கி உடலில் எல்லா அணுக்களிலும் ஒளி என்ற உணர்வைப் பாய்ச்சி உடல் முழுமைக்கும் நல்ல உணர்வுகளை உருவாக்கும் திறன் கொண்ட இதயமாக உங்களுக்குள் உருவாக்குங்கள்.

1.அருள் உணர்வைச் சேர்த்து அசுர குணங்களை நீக்கச் செய்யும் சக்தியாக
2.அறியாது சேர்ந்த அசுர குணங்களை அகற்றிடும் சக்தியாக
2.நல் உணர்வை வளர்க்கும் சந்தர்ப்பமாக உருவாக்குங்கள்.

நரகாசுரனைக் கொன்ற நாள் என்று ஞானிகள் சொன்னது போல் கண்ணின் நினைவு கொண்டு அந்த அருள் உணர்வுகளை உடல் முழுவதும் பாய்ச்சி
1.அசுர குணங்களை… அசுர அணுக்களை
2.நமக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.

நல்ல உணர்வின் இயக்கம் கொண்ட உடல் உறுப்புகளாக நமக்குள் உருவாக்கச் செய்யும் அந்தச் சக்தி பெறச் செய்வதே இந்தத் தியானத்தின் நோக்கம்.

உதாரணமாக இருதயத்தில் பலவீனம் இருந்தால்
1.அது பம்ப் செய்யும் போது கிடைக்கவில்லை என்றால் துடிப்பு வேகமாக இருக்கும்.
2.சில உணர்வின் மோதல் அழுத்தமானல் இரத்தம் போகாது தடுக்கும் போது அந்த நேரத்தில் துடிப்பு அதிகமாகும்.
3.நரம்புகளில் அந்த இயக்கச் சக்தி அது போகும் பாதையில் பலவீனமானல் இழுக்கும் சக்தி குறையும்.

அந்த மாதிரி நேரங்களில் எல்லாம் வலியும் வேதனையும் தோன்றும்.

அதைப் போன்ற நிலையில் இருந்து தப்ப உங்கள் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள்.
1.சீரான நிலைகள் கொண்ட இருதயமாக நீங்கள் இயக்கச் செய்யுங்கள்
2.உங்கள் கண்ணின் நினைவினை இருதயத்தில் செலுத்தி அந்த உயர்ந்த சக்திகளைப் பெறச் செய்யுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

பையனோ தாயோ அல்லது தந்தையோ குடும்பத்தில் ஒற்றுமையாக இருப்பினும் குடும்பத்தில் ஏவரேனும் ஒருவர் பிறர் தவறு செய்யும் உணர்வினைத் தனக்குள் பதிவு செய்து விட்டால் கோப உணர்வின் கார வித்து விளைந்து விடுகின்றது.

பையனாக இருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம்.

கோபமாகப் பேசிய உணர்வுகள் இவனுக்குள் அதிகமாகக் கலந்து விட்டால் அவன் போகும் பொழுதெல்லாம் அடிக்கடி யாரைத் தவறு செய்தானோ அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் கோபத்தின் உணர்வுகள் தூண்டும்.

ஏனென்றால் நாம் பொது இடங்களில் பழகும் பொழுது அவனின் தவறை எண்ணும் பொழுதெல்லாம் அவன் செய்த தவறின் தன்மையே நமக்குள் விளைந்து கொண்டே இருக்கும்.

அப்பொழுது அந்தக் கார உணர்ச்சிகளைத் தூண்டும்.

அந்த உணர்ச்சியுடன் பையன் வீட்டிற்குள் வந்தவுடனே ஒரு வேலையின் காரணமாக அவன் அப்பா கூப்பிட்டு “நீ சிறிது அதைப் பார்த்துக்கொள்..,” என்று சொல்வார்.

பையன் உடனே “சரீ….!” என்று கார உணர்வுடன் சொல்வான்.

பையன் என்னடா… நம்மிடம் மரியாதை இல்லாமல் பேசுகின்றான்…? என்று அப்பா எண்னுவார். இந்தச் சந்தர்ப்பம் பையன் தவறு செய்யவில்லை.

ஒரு குழம்பு வைக்கும் பொழுது காரத்தைப் போட்டபின் அந்தக் காரத்தின் உணர்வுகள் எவ்வாறு இயங்குகின்றதோ இதைப் போன்று தான் அங்கே இயக்கமாகின்றது.

பையன் நல்லவனாக இருந்தான். ஆனால், அவன் தொழில் செய்யும் இடத்தில் ஒருவன் தவறு செய்கின்றான்.

1.தவறு செய்பவனைப் பார்த்தபின் அவன் இப்படித் தவறு செய்து கொண்டிருக்கின்றான் என்று வேதனைப்படுகின்றான்
2.வேதனை என்றால் நஞ்சு… நஞ்சு கலந்து விட்டால் சிந்திக்கும் தன்மையை இழந்து விடுகின்றோம்.
3.பின் அவன் செய்யும் தவறைப் பார்க்கும் பொழுது இந்த விஷத்தின் தன்மை உச்சகட்டம் அடைகின்றது… கோபமாக மாறுகின்றது.

அந்த உணர்வின் வேகம் அந்தக் கோபத்தின் தணல் அடையப்படும் பொழுது அந்த உணர்வின் எண்ணங்கள் தன் ஆன்மாவில் பெருக்கி விடுகின்றது.

இவ்வாறு தொழில் செய்யும் இடத்தில் “அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம்..,” அந்த எண்ணங்கள் இயக்கும். இவன் “அயோக்கியப் பயல்…, எப்பொழுது பார்த்தாலும் தவறு செய்து கொண்டிருப்பான்..,” என்ற நிலைகள் வரும்.

ஆனால்… அவன் (முதலில்) கோபித்தவனோ இவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் “பெரிய.., யோக்கியன் மாதிரிப் பேசுகின்றான் பார்..,” அடுத்து ஜாடையில் பேச ஆரம்பிப்பான்.

இவனை எண்ணும் பொழுது இரண்டு உணர்வுகளும் மாறி மாறி மாறி இந்த உணர்விற்கு அந்தத் தீமையை விளைவிக்கும் உணர்வாக அது பையன் உடலுக்குள் வளர்ச்சி அடைந்துவிடுகின்றது.

அதனுடைய வளர்ச்சிகள் அதிகமாகும் பொழுது ஆன்மாவில் அது பெருகிவிடுகின்றது. அதன் வளர்ச்சியின் தன்மை அவனிடமிருந்து வெளிப்படும் பொழுது சூரியன் காந்த சக்தியால் கவரப்பட்டு பரமாத்மாவில் பெருகுகின்றது.

ஆனால், அவன் எண்ணிய உணர்வு அவனுக்குள் ஒரு வித்தாகின்றது.

இப்படி இவர்கள் உரையாடும் உணர்வின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது கண்கள் அந்தக் காரமான வேதனையான உணர்வுகளைப் பரமாத்மாவிலிருந்து கவர்ந்து தன் ஆன்மாவாக மாற்றுகின்றது.

பின் உயிரின் நிலைகள் “இழுக்கும் பொழுது…” இது உடலுக்குள் உள்ள ஜீவான்மாக்களுக்கு உணவாகக் கொடுக்கின்றது.

1.ஏனென்றால் விஷ்ணு வரம் கொடுக்கின்றான்
2.தனக்குள் வளர்க்கப்பட்ட தன் பிள்ளைக்கு “பிரம்மா” அவன் சிருஷ்டிக்கும் உணர்வுகளுக்கு
3.விஷ்ணுவே அவனுக்கு ஆகாரம் கொடுத்து அதனின் உணர்வின் தன்மையை வளர்வதற்குத் தன் பிள்ளைக்கு உபகாரம் செய்கின்றான்.

அவனால் உருவான உணர்வின் தன்மை உடலான சிவனுக்குள் அந்த எரிச்சலூட்டும் உணர்வின் செயலாகவே இது மாறுகின்றது. ஆக, இந்த உயிரின் இயக்கம் விஷ்ணு.

“குரு பிரம்மா…. குரு விஷ்ணு… குரு சாட்சாத் மஹேஸ்வரா….”

ஆகவே எல்லாவற்றையும் நமக்குள் உருவாக்குவது “உயிர்…” என்று குரு பிரம்மா குரு விஷ்ணு குரு… “சாட்சாத் இந்த உயிரின் தன்மையே குருவாகின்றது…” இது சாட்சாத் மஹேஸ்வரா.

சர்வத்தையும் எனக்குள் உருவாக்கும் தன்மை பெற்றது (உயிர்) என்று மிகவும் தெளிவாகச் சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ளது.

குரு பிரம்மா குரு விஷ்ணு குரு சாட்சாத் மஹேஸ்வரா என்று சொல்வார்கள். ஆனால்
1.எதைக் குறிக்கின்றனர்..,?
2.எதைச் சொல்கின்றனர்..,?
3.எதற்காகச் சொல்கின்றனர்..,? என்ற நிலையை நாம் உணர்வதில்லை.

சாதாரண வழக்கில் இன்று சாஸ்திர ரீதியாகப் பலர் இதைப் படித்திருந்தாலும் இதைப் போல குரு பிரம்மா குரு விஷ்ணு குரு சாட்சாத் மஹேஸ்வரா என்று யாரை எண்ணுகிறார்கள்..,?

“உயிரை” எண்ணுவதில்லை.

கடவுள் என்ற எண்ணத்தில் புறத்தால் காட்டிய அந்த உணர்வை விஷ்ணு என்று சிலை வைத்ததை எண்ணுகின்றார்கள். குரு பிரம்மா என்று நான்கு தலை வைத்த சிலையைப் பார்த்து அது தான் பிரம்மா என்று எண்ணுகின்றார்கள்.

“எண்ணும் பொழுது” – நான்கு நமக்குள் அந்த உணர்வின் தன்மை சக்தியாக விளைகின்றது என்பதை மறந்துவிடுகின்றார்கள்.

இப்பொழுது ஒரு கோபமான உணர்வை எண்ணும் பொழுது குரு பிரம்மமாகின்றது. குரு விஷ்ணு தனக்குள் அது குரு பிரம்மமாக மாற்றுகின்றது. கார உணர்ச்சி நமக்குள் உருவாகின்றது.

தனக்குள் உள் செல்லும் பொழுது குரு மஹேஸ்வரா. தனக்குள் அதை உருவாக்கும் செயலாக நமக்குள் அந்த உருவைப் பெருக்கும் தன்மை வருகின்றது.

ஆனால்
1.நாம் எதை எண்ண வேண்டும்…?
2.குரு பிரம்மமாக எதை உருவாக்க வேண்டும்…?
3.குரு விஷ்ணுவாக அவனிடம் எதைக் கேட்க வேண்டும்…?
4.அந்த விஷ்ணுவிடம் வரம் கேட்பது எதுவாக இருக்க வேண்டும்…?

இதை உணர்த்துவதற்குப் பல நிலைகள் காட்டினாலும் அதை நாம் இது வரையிலும் “மூலத்தை… அறியாது” ஆக துவைதம் என்று உருவத்தைக் காட்டிய பின் சிலையை வடித்து வைத்து அந்தச் “சிலையைத்தான் நாம் கடவுளாக” மதிக்கின்றோம்.

அதற்கு நைவேத்தியம், சாங்கியம் செய்து அவனுக்குப் படைத்து விட்டால் அவன் எல்லாமே பார்த்துக் கொள்வான் என்று சாங்கிய சாஸ்திரத்தில் நாம் நாட்டம் செலுத்திக் கொண்டுள்ளோம்.

முதலில் சொன்ன நிலையில் தொழில் செய்யும் இடங்களில் ஏற்படும் தீமைகள் வீட்டுக்குள்ளும் வந்துவிடுகின்றது.

தாய் தன் பையனிடம் சொல்லி “நீ இதைச் செய்யப்பா…” என்று ஒரு வேலையைச் சொன்னால் அவன் என்ன சொல்வான்…?

“நீ என்ன…? சும்மா எதையாவது சொல்லிக் கொண்டே இருக்கின்றாய்…? என்று தாயிடம் வேகமாக எதிர்க்க ஆரம்பித்துவிடுவான்.

தாய் சாந்தமாகச் சொல்லும் பொழுது இந்தக் காரம் சாந்தத்திற்கு எதிர்ப்பு நிலை. அது ஏற்றுக் கொள்ளாது.

உடனே தாய்.., “ஏண்டாஆஆ… இப்படிப் பேசுகின்றாய்..,? சாந்த உணர்வுடன் சொல்லும்.

“ஏண்டா இப்படிப் பேசுகின்றாய்” என்ற சொல் வரும் பொழுது நீ எப்பொழுது பார்த்தாலும் “நச்சரித்துக் கொண்டே இருக்கின்றாய்…” என்று தாயை வெறுக்க ஆரம்பிப்பான் பையன்.

குரு பிரம்மா. அதாவது “நாம் எண்ணியதை” அது மீண்டும் அதிகமாக “குரு விஷ்ணு – குரு பிரம்மமாக மாற்றி விடுகின்றது”.

அதனின் வளர்ச்சியின் தன்மை பெருக ஆரம்பிக்கும்.

குரு மகா… அந்த உணர்வின் தன்மை “சாட்சாத் மஹேஸ்வரா”. அதை எல்லாம் (சர்வத்தையும்) மஹேஸ்வரனாக நமக்குள் இருந்து நாம் எண்ணியது ஒவ்வொன்றையும் அது உருவாக்குகின்றது.

குரு பிரம்மா குரு விஷ்ணு குரு சாட்சாத் மஹேஸ்வரா, “வெறும் சொல்லால் அல்ல”,

எதை விஷ்ணுவிடம் வரம் கேட்க வேண்டும்…? எதைப் பிரம்மமாக்க வேண்டும்…? எதை சாட்சாத் மஹேஸ்வரனாக நமக்குள் உருவாக்கும் சக்தியாக மாற்ற வேண்டும்…? என்ற நிலையை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதே மிகவும் நலம்.

தாய் சொன்னாலும் இதே மாதிரி அந்தக் கார உணர்வுகள் சொன்னவுடன் இந்த நாதம் என்ன செய்யும்…?

நம் வாயினுள் ஒரு காரமான பொருளைப் போட்டவுடன் என்ன சொல்கின்றோம்…?

“உஷ்ஷ்.. ஆ..ஆ…” என்று அலறுவது போல இந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டவுடன் உணர்வுகள் உராய்ந்து “சாம…”

அதனின் உணர்வின் நாத இயக்கமாக இயக்கும். நாதமாக இயக்கப்படும் பொழுது “ஏண்டா… இப்படிச் செய்கின்றாய்.?” என்று சொல்லும் அந்தத் தாய்.

இதை அந்தப் பையனின் தந்தை பார்த்தார் என்றால் இந்த உணர்வின் தன்மை அவருக்குள் போய் “ஏண்டா… நீ இந்த மாதிரியெல்லாம் அம்மாவிடம் பேசுகின்றாய்…?” “அம்மா என்னடா உன்னைத் தவறாகச் சொன்னது?” என்பார்.

நீங்கள் எப்பொழுது பார்த்தாலும் என்னை “எதிரியாகத்தான்…” கருதுகின்றீர்கள் என்பான் பையன்.

அப்பொழுது எதிரியாகப் பதிவு செய்து கொள்கின்றீர்கள். அவன் எதைச் சொல்ல வந்தாலும் நல்லதை ஏற்றுக் கொள்ளாது.

இங்கே எதிரியின் தன்மை பகைமையாகும் பொழுது தாயும் தந்தையும் கடவுள் என்ற நிலைகளை மாற்றிவிடுகின்றது. “தன்னைக் காக்கும் தெய்வம்…” என்ற நிலைகளை இங்கே இழக்கச் செய்துவிடுகின்றது.

1.ஒரு சுவையான பதார்த்தத்தில் கார உணர்ச்சியின் தன்மை அதிமாகி விட்டால் அதைத் தூக்கியெறியும் நிலையே வரும்.
2.அதைப் போன்று தாய் என்ற நிலையோ தந்தை என்ற நிலையோ இங்கே செயலற்றதாக மாறிவிடுகின்றது.

ஏனென்றல் பொது வாழ்க்கையில் பிறர் செய்யும் தீமையான உணர்வின் தன்மை தனக்குள் வளர்க்கப்படும் பொழுது குரு விஷ்ணு குரு பிரம்மமாக மாறி குரு சாட்சாத் மஹேஸ்வரனாக அதனின் வளர்ச்சியின் தன்மை அடைகின்றது.

நாம் எண்ணிய உணர்வை கண் நமக்கு எப்படி வழி காட்டுகின்றது…?

தாய் மீது வெறுப்பாகி விட்டால் கண் அதைப் பார்த்தவுடன் அந்தத் தாய் சொன்ன நினைவின் அலைகளை இங்கே காற்றில் இருப்பதைக் கவர்கின்றது.

பார்ததபின் அந்த வெறுப்பின் உணர்வைச் சுவாசித்துத் தாய் நல்லதைச் சொன்னாலும் கேட்காதபடி “தலையைத் திருப்பிக் கொண்டு” போகும்.

“இதைச் செய்டா…” என்று தாய் சொல்லும்.

“ஊ…ஹ்ம்…” என்று தான் சொல்வான். அப்புறம் நான்தான் “சரி..,ரீ..,” என்று சொல்லிவிட்டேனே…! அப்புறம் ஏன் இன்னும் திரும்பச் சொல்கின்றாய்…? என்று தாயிடம் எதிர்த்தே பேசுவான் பையன்.

1.அவன் தவறு செய்யவில்லை
2.தனக்குள் வளரும் அந்த வித்தின் தன்மை “அது” அவனுக்குள் வளரத் தொடங்கிவிடுகின்றது.

அதே சமயம் தந்தையும் “தாய் என்னப்பா சொன்னது…” என்று பையனிடம் கேட்டால் பையன் என்னை எதிரியாகவே நீங்கள் கருதுகின்றீர்கள் என்று சொல்லித் தந்தையையும் வெறுக்கத் தொடங்குவான்.

ஏனென்றால் திரும்பத் திரும்பச் சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம். நம் உணர்வின் செயலாக்கங்கள் “உயிர் நம்மை எப்படியெல்லாம் இயக்குகின்றது…” என்பதைத் தெளிவாக நீங்கள் அறிதல் வேண்டும் என்பதற்கே சொல்கின்றேன்.

இந்தத் தத்துவத்தை நாம் புரிந்து கொண்டால் மகரிஷிகள் காட்டிய உண்மைகளை நாம் எளிதில் காணலாம்.

துன்புறுத்தும் உணர்வை விடுத்துவிட்டுக் காக்கும் உணர்வை வளர்த்தவர்களே மகான்கள்…!

 

காந்திஜியின் பிறந்த நாளை நாம் கொண்டாடுகின்றோம். மற்றவர்கள் அடிமைத்தனத்திலிருந்தும் பிறிதொரு தீமையின் விளைவுகளிலிருந்து நம்மை எல்லாம் மீட்டிய மகான் இந்த நாட்டிலே ஜெனித்த நாள் தான் அது.

ஞானிகள் கண்ட உணர்வினைத் தன்னிலே அவர் வளர்த்துக் கொண்டவர். சாந்தம் என்ற நிலைகள் கொண்டு பகைமையற்ற உணர்வுகளை வளர்த்து… பகைமைகளைத் தவிர்த்துத் தீமையில் இருந்து விடுபட்டு அதன் வழி கொண்டே சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தவர் மகாத்மா காந்திஜி என்பதனை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

அவர் வாழ்ந்த காலங்களில்
1.தன் உடலைப் பற்றி எண்ணாது
2.தனக்குள் வரும் சுகத்தை எண்ணாது
3.நமது நாடு… நமது மக்கள்… நமது என்றே… தன்னுடன் அரவணைத்து வாழும் நிலையாக
4.நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ளும் அந்த அருள் சக்தியை
5.வெறுமனே சொல்லால் அல்ல… செயலாலேயே அதைச் செயலாக்கிக் காட்டினார்.

உடலை விட்டு உயிர் பிரியும் போது கூட…
1.தன்னை ஒருவன் கொலை செய்தான் என்று எண்ணவில்லை
2.அந்த நேரத்திலும் அவனை எதிரியாகக் கருதவில்லை
3.தீயவன் என்றும் அவனைச் சொல்லவில்லை
4.அவனை அறியாது இயக்கும் தீய விளைவுகளிலிருந்து அவன் காக்கப்பட வேண்டும்
5.அவன் காப்பாற்றப்பட வேண்டும் என்று தான் ஜீவன் பிரியும் பொழுதும்
6.அத்தகைய நினைவு கொண்டுதான் தன் செயலாக்கங்களை வெளிப்படுத்தினார்.

அவர் எண்ணி வெளிப்படுத்திய அந்த உயர்ந்த உணர்வலைகள் அனைத்தும் நமக்கு முன் பரவிக் கொண்டுள்ளது. அதை எல்லாம் நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

மனிதனுக்குள் செயல்படும் உணர்வுகள் அனைத்தும் பண்புடன் இயக்கப்பட வேண்டும். சகோதர உணர்வுகள் உருப்பெற வேண்டும். ஒருவருக்கொருவர் ஒன்றி வாழ வேண்டும். மனிதர்கள் என்ற பண்பு கொண்டு இயங்க வேண்டும் என்று தான் மகான்கள் அனைவரும் கூறியுள்ளார்கள்.

அந்த மகான்கள் காட்டிய வழிப்படி நாம் நடந்தால் நாமும் உயர்ந்த நிலையை அடையலாம். உடலுக்குப் பின் பேரானந்த நிலையான அழியா ஒளிச் சரீரமும் பெறலாம்.

பலம் பொருந்தியவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் கூட மரண பயம் உள்ளது – ஈஸ்வரபட்டர்

 

காற்றலையில் புவி ஈர்ப்பின் பிடியில் வாழும் நாம்… நம் உணர்வில் உணர்வில் உந்தப்படும் எண்ணத்தில் உணர்வின் செயலைக் கொண்டு மட்டும் உடல் சேர்க்கை அமிலக்கூட்டு வளரவில்லை.

எறும்பு கொசு தேள் பாம்பு மூட்டை இதைப் போன்ற உயிரினங்கள் சந்தர்ப்பத்தால் நம்மை அவை கடிக்கும் பொழுது அவை சேமித்த விஷ நிலை கொண்ட அமில உணர்வானது அதன் கடி உணர்வை நாம் அறியும் பொழுது அதன் ஈர்ப்பு குண அமிலம் முழுவதையும் நம் உடல் பிம்ப உணர்வலையின் அமிலத்துடன் எடுத்துக் கொள்கின்றோம்.

வாழ்க்கையில் சில ஜீவராசிகளான இந்தப் பூச்சிகள் நம்மைக் கடிக்காமல் இருக்குமா…?

இவற்றின் ஈர்ப்பலையின் உணர்வின் அச்சம் நம் எண்ணமுடன் மோதும் பொழுது
1.அதனுடைய விஷம் நம் உடலில் ஏறிக் கடிக்கும் பொழுதும்… தாக்கும் பொழுதும்… நசுக்கும் பொழுதும்…
2.அதற்கு ஏற்படும் மரண பயம் நம் உடலிலும் ஏறிவிடுகின்றது.

எவ்வமில குண ஜெந்துவின் கடிபட்டதோ அதனுடைய உணர்வையும் நாம் பெற்று அவற்றின் விஷ உணர்வின் தீய அமிலங்களும் நம் உடலுக்குள் சேர்ந்து விடுகின்றது.

நம் உடல் அமிலத்துடன் அப்படிச் சேரும் பொழுது அதனுடைய வழித் தொடர் கொண்ட எண்ண குணத்தை இந்த உடலைக் கடிக்கும் சில ஜீவ ஜெந்துக்களின் நிலையை நாம் அடைகின்றோம்.

இதிலிருந்து தப்பும் முறை எப்படி..?

1.ஒவ்வொரு மனிதனுக்கும் எதிரி யார்…?
2.ஞானத்தை வளர்க்க விடாமல் இருப்பதும் எல்லா நிலைகளுக்கும் தடை ஏற்படுத்தும் எதிரி யார்,,,?
3.இந்த மனிதனுக்கு நற்குண வழிக்குச் செல்ல வழி காட்டும் நண்பன் யார்…?
4.அன்பான எதிர் அலையின் உணர்வை அடையவல்ல சக்தி நண்பன் யார்…?

எதிரியான நிலையை ஏற்படுத்துவதும் இந்த உடல் பிம்பக்கூடுதான்… நற்சக்தியின் ஞான அலையைப் பெறவல்ல தன்மையைச் செயல்படுத்தவல்ல நண்பனும் இந்த உடல் பிம்பக் கூடுதான்…!

ஆகவே தீய குணத்தின் எண்ணத்தை மேற்கொள்ளும் பொழுது தீய சக்தியின் நிலையை ஏற்படுத்துவதும் இந்த உடல் பிம்ப வீட்டினுள் வாழும் உணர்வின் எண்ணச் செயல் தான்.

நல்ல வழிக்கு வழி நடத்திச் செல்வதுவும் இந்த உணர்வின் எண்ணச் சக்தி கொண்ட நல் அலையின் சக்தியினால் தான்.

உணர்வில் எடுக்கும் எண்ணத்தின் செயல் எத்தன்மை கொண்டுள்ளதோ அத்தன்மை கொண்ட ஒவ்வொரு மனிதனையும் அந்தந்த நிலைக்கு உட்படுத்துவது இந்த உடல் என்ற பிம்பக்கூடு தான்.

விஞ்ஞானிகளும் பல மருத்துவர்களும் தற்கொலையின் செயலில் ஈடுபடுவதும் அவற்றின் வளர்ப்புத் தன்மையும் எதனால் ஏற்படுகின்றது…?

மருத்துவர்கள் சந்திக்கும் ஆத்மாக்களின் உணர்வில்…
1.பெரும்பகுதி எண்ணத்தின் வியாதியான “மரண பயம்…” கலந்தே வருவதால்
2.அத்தகையவர்களின் எண்ணத் தொடர்புடனே இவர்களின் வாழ் நாள் செல்ல நேர்கின்றது.
3.இப்படி அந்த அச்ச உணர்வின் பிடிக்கு இவர்களின் உணர்வலையும் செல்வதினால்
4.இதே சுழற்சி வட்டத்தால் இவர்கள் உணர்வுடன் இந்த மரண பயம் உந்தப்பட்டுவிடுகிறது.

அதனால் இவர்களின் உணர்வின் எண்ணமே இந்த மரண பய ஈர்ப்புப் பிடியில் சிக்குண்ட நிலையில் பலரின் செயல் இதே உணர்வுடன் செயல் கொள்கிறது…. தன்னால் அதைத் தாங்க முடியாது போகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

கரும்புச் சாற்றுக்குள் கெமிக்கலைப் போட்ட பின் அது கருப்பாக இருப்பது வெளுப்பாகின்றது. அழுக்குகள் அனைத்தும் பிரிந்து விடுகின்றது. சர்க்கரை வெண்மையாகின்றது.

கரும்புச் சாற்றில் உள்ள அழுக்குகளை அகற்றினாலும் அந்தச் சர்க்கரையில் கலந்துள்ள கெமிக்கலின் வீரியத் தன்மையை இவர்கள் பிரித்தெடுப்பதில்லை.

ஆகையினால் இந்தச் சர்க்கரையை நாம் சாப்பிடுவோம் என்றால் அதிலே கலந்த இந்த நஞ்சு நாம் உணவாக உட்கொள்வோர் அனைவருக்கும் குடல் புண் வருவதும் குடலில் ஜீரணிக்கும் சக்தியும் இழந்துவிடுகின்றது.

சர்க்கரை வெண்மையாக அழகாக இருக்கின்றது என்று நாம் பார்ப்போம். இது விலை பேசுவதற்கு உதவுகின்றது. ஆனால் அந்த சர்க்கரையில் கலந்த கெமிக்கலால் நம் உடலில் நோயாகின்றது.

1.அது அதிகமாகிவிட்டால் நஞ்சுகள் பரவி
2.நம் சிறுநீரகத்தில் இது நஞ்சாக (POISON) மாற்றி நஞ்சினை நீக்கிடும் நிலையைச் செயலற்றதாக ஆக்கிவிடுகின்றது (சிறுநீரகம் பழுதாகின்றது)
3.அதனால் உப்புச் சத்தோ அல்லது சர்க்கரைச் சத்தோ இது வந்துவிடுகின்றது.

இதனின் உணர்வுகள் வெப்பத்தின் தன்மை அதிகரித்துவிட்டால் நம் நுரையீரலுக்குள் ஊடுருவி அதில் உந்திச் செலுத்தும் (PUMPING) நிலைகளும்
1.இழுத்து விரியும் தன்மை குறைந்து
2.அதனால் கல்லீரல் வீக்கமாகிவிடுகின்றது.

தொடர்ந்து இவ்வாறு ஒவ்வொரு உறுப்பும் பாதிக்கப்படுவதால் வைத்தியம் வைத்தியம் என்று மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருக்கின்றது.

நாம் யாரும் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் இத்தகைய நிலை ஏற்படுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை மீட்டுவதற்காகத்தான் குருநாதர் எமக்கு உணர்த்திய மெய் உணர்வின் ஆற்றல்களை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

இன்றைய உலகில் தீமைகள் எவ்வாறு சாடுகின்றது என்பதை குருநாதர் எம்மை அறியச் செய்தார்.

அவர் உணர்த்தியதைக் கூர்ந்து கவனித்தேன். அதை நீக்கும் ஆற்றலையும் எம்மைப் பெறச் செய்தார்.

குருநாதர் எமக்குள் பதிவு செய்ததை மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது அவர் காட்டிய விண்ணின் ஆற்றலை என்னால் பெற முடிந்தது. அவர் சொன்ன வழியில் எனக்குள் வந்த தீமைகளை நீக்க முடிந்தது.

தீமைகளை நீக்கும் எண்ணங்களை வளர்த்து உங்களுக்குள் அருள் ஞான வித்தாகப் பதிவு செய்யும் போது நீங்களும் இதை எண்ணினால் உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்க இது உதவுகின்றது.

நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம் நல்லது செய்யும் உங்கள் உணர்வுக்குள் அறியாது புகும் இத்தகைய தீமைகள் அகற்றப்பட வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

உங்களை அறியாது வந்த தீமைகளில் சிக்குண்டு மீளாத நிலைகள் கொண்டு விஷத்தின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்பதற்குத்தான் இதைச் செய்கின்றேன்.

மகரிஷிகள் தமக்குள் தீமைகளை நீக்கிய நிலைகள் கொண்டு அவர்கள் ஒளியின் சுடராகப் பெற்ற ஆற்றல்மிக்க உணர்வுகள் இங்கே படர்ந்துள்ளது.

அந்த மகரிஷிகளை நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது அவர்கள் உடலிலே விளைந்த உணர்வுகளை நீங்கள் கவர முடியும். எத்தகைய நோயாக இருந்தாலும் குறைக்க முடியும்.

புற அழகு முக்கியமில்லை… அகத்தின் அழகு தான் மிகவும் முக்கியமானது – ஈஸ்வரபட்டர்

 

ஒலி கொண்டு… ஒளி கொண்டு… உருவான உணர்வு சக்தியில் இவ்வொலியின் உணர்வில் தான் உழல்கின்றது… உலகச் சுழற்சியும்… ஜீவ சக்தியும்… உயிர் அணுத் துடிப்புகள் யாவுமே…!

இவ்ஒலி ஈர்ப்பின் தாக்குதலுக்குகந்த உணர்வின் சுழற்சி ஈர்ப்புப் பிடியில் பிடிபட்டுள்ள வளர்ச்சி தான் ஒவ்வொரு வளர்ச்சியுமே.

1.இனிமையான இசைக்கு இவ்வுணர்வின் எண்ண ஈர்ப்பு செல்லும் பொழுது
2.இனிமையின் நாத ஒலி ஜீவ சக்தி ஒவ்வொன்றின் அலையிலும் மோதுண்டு
3.அதன் தொடர்பு கொண்ட வளர்ப்பு சக்தி ஒவ்வொன்றிலும் கூடுகின்றது.

அதிர்வு… இடி… மின்னல்… காட்டாற்று வெள்ளப் பெருக்கின் வேக ஒலி… இந்நிலை மோதும் பொழுது இவ்வுடலே அவ்வுடலின் “அச்ச உணர்வுடன்” செல்வது போன்ற உணர்வின் பயம் ஏற்படுகின்றது.

அருவியில் அமைதியாகச் சலசலப்புடன் அந்நீரின் ஒலி மோதலைக் கேட்கும் பொழுது அவ் இனிமையுடன் கூடி நம் உணர்வின் எண்ணமும் மயங்குகிறது.

மாலை நேரப் பட்சிகளின் அமைதியான ஒலி நம் உணர்வின் இனிமை உணர்வைக் கூட்டுகின்றது.

ஒலியின் ஈர்ப்பு எந்நிலை கொண்டு கால நிலையில் உணர்வின் மோதலில் மோதுகின்றதோ அதற்குகந்த வளர்ச்சி மனித உடலின் உணர்விற்கும் ஜீவராசிகள் தாவரங்கள் கனி வளங்கள் ஒவ்வொன்றின் வளர்ச்சிக்குமே இவ் ஒலியுடன் ஒலி கூடும் ஒலித் தன்மை கொண்டு வளர்ப்பு நிலை கூடுகின்றது.

இவ்வொலியின் செயற்கை அதிர்வில் சுற்றுப் புறத் தாவர இன வளர்ச்சிக்கும் நகர்ப்புறத்தைத் தாண்டி வரும் தாவரங்களின் வளர்ச்சிக்கும் மாறு கொண்ட வளர்ப்பு விகித நிலை இருக்கும்.

1.இவ் ஒலி உணர்வில் சேமிக்கும் அச்ச உணர்வின் ஈர்ப்பே
2.மனித உணர்வில் ஒவ்வொரு நொடிக்கும் இம்மரண பயம் என்ற பிடி ஈர்ப்பில் சிக்குண்டு வாழும் தன்மை
3.இன்றைய நாகரீக செயற்கைப் பிடி வாழ்க்கையில் உள்ளது.

இயற்கைச் சுழற்சியில் இயற்கையிலிருந்து மாறுபட்டு இப்பேராசைப் பிடியில் நாகரீகச் செயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியையும் இந்த மரண பயம் என்ற பிடியுடன் சிக்கித்தான் இன்று வாழும் நிலை உள்ளது ஜீவ சக்தி அனைத்திற்குமே.

உருவத்தில் பெருத்த யானையும் உணர்வில் மரண பயத்தை வளர்த்துக் கொண்டு
1.தன் இரு செவிக்குள்ளும் எறும்பும் பூச்சிகளும் ஏறாத வண்ணம்
2.தன்னைத்தானே செவியை விசிறிக் கொண்டே காத்து வாழுகின்றது.

இந்த எறும்பின் ஊர்தல் அதன் செவி மட்டத்தில் உள்ள ஜவ்வில் பட்டவுடன் ஏற்படும் இரைச்சல் அவ் யானையின் உணர்விற்கு மரண பயத்தின் அச்சத்தை ஏற்படுத்தி அந்த எறும்பின் ஊர்தல் செவிக்குள் பாய்ந்தவுடன் தன்னை அறியாமல் வெறி கொண்டு மிகவும் பதட்டம் ஏற்பட்டு அந்த உணர்வின் பிடியிலேயே சிக்குண்டு மாய்கின்றது, இன்னும் சில யானைகள் அவ்வுணர்வின் மதம் பிடித்துக் கொள்கிறது.

இவ்வுணர்வால் எடுக்கும் அச்சத்தால் விளையும் பயம் தான் இந்த மரண பய உணர்வு.

எண்ணத்தால் இவ்வுணர்வின் பிடியை மாற்றிக் கொண்டு… உயர் ஞான வழி ஈர்ப்பு வளர்ச்சிக்கு எண்ணம் செல்லும் வாழ்க்கை இருந்தால் இப்பிம்ப உடலில் ஏற்படும் அச்ச உணர்வின் நிலை மாறும்.

எச்சக்திக்கும் சக்தி பெற இந்த உடல் பிம்பம் தேவை. ஆனால்
1.இந்த உடல் பிம்ப உணர்வில் ஏற்படும் மாற்றங்களும் நலிவுத் தன்மையும்
2.இந்த உடல் பிம்பத்தைப் பேணி வளர்க்கும் ஈர்ப்பலையும்
3.இந்த உடல் பிம்பத்தின் சுகம் காணும் ஆரோக்கிய வாழ்க்கையின் ஆவல் உணர்வும்
4.பிம்ப உடலின் அழகின் ஆசையிலும் இவ்வுணர்வின் ஈர்ப்பை எண்ணம் செலுத்தி வாழும் வாழ்க்கையைக் காட்டிலும்
5.உணர்வின் எண்ணம் உயர்ந்த குணத்தின் ஈர்ப்பில் செல்லும் உணர்வால்
6.இந்தப் பிம்ப உணர்வும் ஆரோக்கிய அழகும் தானாக வளரும்.
7.அகத்தின் அழகை முகத்தில் காணலாம் என்பதின் பொருளும் அதுவே.

மரண பயம் என்ற அச்சத்தை விட்டு இந்த உடல் கூட்டின் அழகு ஆரோக்கியம் இவற்றைப் பேணிக் காக்கும் உணர்வு ஈர்ப்பை விட்டு
1.நல்ல ஞான வளர்ச்சி வாழ்க்கையுடன் நாம் வாழ்ந்தால்
2.அமைதி கொண்ட வாழ்க்கையும் ஆரோக்கிய உடல் நிலையும்
3.வாழ்க்கையில் செய்யப்படும் தொழில் நேர்மையும் அதற்குகந்த வருவாயும் இன்பமும் நமக்குக் கிட்டும்.

உணர்வின் சுழற்சி இந்த நிலையில் சுழன்றால் தான்… வளர்ச்சியின் ஆத்ம சொத்தை வளர்க்க முடியும்.

நம் உடலில் உள்ள கணையங்களுக்கு நாம் தியானிக்க வேண்டிய முறை

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கல்லீரல் மண்ணீரல் முழுவதும் படர்ந்து அதை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

கல்லீரல் மண்ணீரலை உருவாக்கிய அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று அந்த உணர்வைப் பாய்ச்சுங்கள்.
1.கல்லீரல் மண்ணீரல் வீக்கம் இருந்தால் தணிகின்றது
2.அசுத்தங்கள் இருந்தால் அகற்றப்படுகின்றது.

கல்லீரல் மண்ணீரலை உருவாக்கிய அணுக்களுக்கு இப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் வீரிய சக்தியை ஊட்டும் பொழுது இரத்தத்தைப் பரிசுத்தப்படுத்தவும் உணவாக வரும் நிலையில் அதிலுள்ள அசுத்தங்களை அகற்றி நல்ல உணர்வாக மாற்றும் திறனும் பெறுகின்றது.

கல்லீரல் மண்ணீரலைச் சீராக இயங்கச் செய்யும் அந்த ஆற்றல் நமக்கு இப்பொழுது கிடைக்கும்.

இரத்தத்தைச் சமப்படுத்தும் கணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.கணையங்களை உருவாக்கிய அணுக்கள் சீரானால்
2.உப்புச் சத்தைக் குறைக்க சர்க்கரைச் சத்தைக் குறைக்க இரத்த கொதிப்பை குறைக்க உதவும்.

எங்கள் கணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணும் போது அத்தகைய குறைபாடுகளைத் தூண்டும் அணுக்களை எல்லாம் வடிகட்டி நமக்குள் சமப்படுத்தும் நிலைகள் பெறும்.

தீமைகளைச் சமப்படுத்தி ஒன்றாக்கி நல்ல உணர்ச்சிகளை ஊட்டும் தன்மை நம் கணையங்கள் இப்பொழுது பெறுகின்றது.

சமையல் செய்யும்போது பல சரக்குகளைப் போடுகிறோம். எல்லாம் ஒன்றாகிச் சமமாக இருந்தால் சுவை கூடுகின்றது. குறைந்தால் சுவை குறைகிறது.

ஒரு காப்பியைப் போடுகின்றோம் என்றால் சமமான சூடாக இருந்தால் காப்பித்தூள் இனிப்பு எல்லாம் ஒன்றாக சேர்ந்து சுவையாக இருக்கும்.

சூட்டின் தன்மை குறைந்தால் போடக்கூடிய காப்பித்தூளையும் பாலையும் இனிப்பின் தன்மையும் ஒன்றாக்காதபடி சுவையைக் குறைத்து விடுகின்றது.

அதைப் போன்று தான் நம் உடலில் உள்ள கணையங்கள் சமமாக்கும் அந்தத் தெளிவான நிலைகள் பெற்றது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் “அருள் கணையங்களாக” மாற்றிக் கொள்ள முடியும்.

அந்தக் கணையங்கள் சீராக இயங்குவதை இப்பொழுத் நீங்கள் உணர முடியும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறும் பொழுது
1.கணையங்களை உருவாக்கிய அணுக்கள் ஒரு புத்துணர்ச்சி பெறும்.
2.சர்க்கரைச் சத்து உப்புச் சத்து போன்ற குறைபாடுகளை நாம் அகற்ற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

விஞ்ஞானிகள் அணுவைப் பிளந்து அணுவின் ஆற்றலைப் பெருக்கி அணு குண்டுகளையும் ஹைட்ரஜன் குண்டுகளையும் உருவாக்கி இன்று உலகையே அழிக்கும் நிலைகளுக்கு எல்லோரையும் பயமுறுத்திப் பெரும் அச்சுறுத்தலாக்கி விட்டனர்.

ஆனாலும் அந்த அணுவின் ஆற்றலைக் கொண்டு பலருக்கு நன்மை செய்யும் நிலைகளாக அதிக அளவு மின்சாரத்தை உருவாக்குவதற்கும் பயன்படுத்துகின்றார்கள்.

சிறிதளவே உள்ள யுரேனியத்தின் துணை கொண்டு பெரும் இயந்திரங்களையும் இயக்கி காந்தத்தின் தன்மையை அதிகமாக உற்பத்தி செய்யும் நிலைக்கு வந்துள்ளார்கள் இன்றைய விஞ்ஞானிகள்.

அன்று மெய்ஞானிகள் தான் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு
1.விண்ணுலக ஆற்றலைத் தன்னுள் அடக்கி
2.அதை உணவாக உட்கொண்டு தீமைகளை ஒடுக்கி
3.நஞ்சு தனக்குள் அடங்கி நிற்கும் நிலையாக
4.ஒளியின் சுடராக மாற்றி “வேகா நிலை” அடைந்துள்ளார்கள்.

ஒரு பாம்பினம் தான் உணவாக உட்கொள்ளும் மற்ற உயிரினங்களின் மீது நஞ்சினைப் பாய்ச்சுகின்றது.

அந்த நஞ்சினை உணவுடன் சேர்த்துப் “பல பல நஞ்சு கொண்ட உயிரனங்களை உட் கொண்டு” இதற்குள் மீண்டும் மீண்டும் அந்த நஞ்சு சேர்ந்து அந்த நஞ்சே உறையும் தன்மையாக “நாகரத்தினமாக” மாற்றுகின்றது.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் தன் உணர்வின் செயலால் அறிந்துணர்ந்திடும் ஆற்றல் கொண்டு நஞ்சினைத் தனக்குள் அடக்கி அடக்கி…, உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிடும் ஆற்றல் பெற்றான்.

1.நஞ்சினை ஒளியாக மாற்றி
2.உயிருடன் ஒன்றிய ஒளியின் ஒளி அலைகளாக
3.மின்னணுவின் இயக்கமாக நம் உடலில் இயக்குவது போல்
4.துருவ நட்சத்திரமாகச் சுழன்று கொண்டுள்ளான்.

உதாரணமாக வைரமோ நஞ்சின் தன்மை கொண்டது, அது தனக்குள் “பளீர்…” என்ற ஒளியைக் காட்டுகின்றது. ஒளியை மற்றவர்களுக்கு அறியச் செய்யும். ஆனால் அது “தானாக இயங்காது”.

அகஸ்தியனோ உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை கொண்டு விண்ணின் ஆற்றலை உணவாக உட்கொண்டு ஒளியின் சுடராக இன்றும் வளர்ந்து கொண்டேயுள்ளான்.

27 நட்சத்திரங்களும் கடும் விஷத் தன்மை கொண்டது. ஒரு விஷத் தன்மை கொண்ட நட்சத்திரத்தின் ஒளிக்கற்றை எதிலும் சிக்காது நேரடியாகப் புவிக்குள் சிக்கிவிட்டால் பதிவாகிவிடுகின்றது.

இந்த நட்சத்திரத்தின் உணர்வலைகள் எதெனெதன் தாவர இனங்களில் கலந்ததோ அவை அணுக்களாக வளரப்படும் பொழுது அதனின் கருவைக் கவர்ந்து கொள்கின்றது.

பின் தன் வலுவால் மண் இனங்களுக்குள் கருவாகக் கூட்டித் தான் பட்ட நிலைகள் கொண்டு வைரங்களாக ஒரு பாறையாக உருவாகின்றது.

அந்த பாறைக்குள் துடிப்பின் நிலைகள் எடுத்து தன் ஒளியின் கவசமாக மாற்றிக் கொள்கின்றது. தனது வளர்ச்சியில் உணர்வின் தன்மை கவர்ந்து விளைகின்றது,

ஒரு கடுகளவு ஆகும்போது இந்த உணர்வின் தன்மை பெருகப் பெருக மற்றதைப் பிளந்து இது வெளி வந்துவிடும்.

ஏனென்றால் இதனின் வளர்ச்சி சிறுகச் சிறுக ஆகி தனக்குள் பாறையின் நிலைகள் வெடித்து அது வெளி வந்துவிடும். அதற்கு மேல் வளர்ச்சி இல்லை.

ஒரு நஞ்சு கொண்ட பாம்பினத்தின் செயலும் இதுவே.

முதிர்ச்சி அடைந்தால் பாம்பின் உடலிலிருந்தும் இத்தகைய மாணிக்கக் கல்லை எடுக்கலாம்.

ஆனால் அன்று வாழ்ந்த அகஸ்தியனோ தான் கவர்ந்த உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றினான். “உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு” என்றுமே அழியாத நிலைகள் கொண்டு துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.

2000 சூரியக் குடும்பங்கள் ஒன்றாகச் சேர்த்து இணைத்து ஒரு பேரண்டமாகச் சுழன்று கொண்டிருக்கின்றது.

2000 சூரியக் குடும்பங்களிலிருந்து வெளிப்பட்டு வரும் உணர்வின் நிலைகள் நம் பிரபஞ்சத்திற்குள்ளும் வந்து கொண்டிருக்கின்றது. அதை இந்தப் பிரபஞ்சத்திலிருக்கும் நம் பூமியும் கவர்கின்றது.

இவ்வாறு 2000 சூரியக் குடும்பங்களிலிருந்து வருவதை நம் பூமி கவரும் அந்த எல்லையில் (அகஸ்தியன்) நின்று இதை நுகர்ந்து தான் உணவாக எடுத்து நஞ்சினையே ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளது “துருவ நட்சத்திரம்”.

நஞ்சினை ஒளியாக மாற்றிடும் உணர்வின் அலைகளாக அதிலிருந்து பரவிப் படர்ந்து கொண்டுள்ளது.

1.அகஸ்தியனைப் பின்பற்றிச் சென்றவர்கள் பல கோடி.
2.அவர்களைத்தான் முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்வது.

உயர்ந்த சக்தி பெற நமக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பவர்கள் யார்…?

 

அம்மா அப்பா அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்ற எண்ணத்துடன் தான் நாம் தியானம் செய்கின்றோம்.

அம்மா அப்பா அருளால் என்கிற பொழுது தாய் தந்தையரைப் பரிபூரணமாக எண்ண வேண்டும்.

ஏனென்றால் தாய் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்ற நிலையையே எண்ணி நம்மை வளர்த்தது. குழந்தையாகப் பிறந்த பின் அந்த அறியாப் பருவத்தில்
1.தெரியாமல் அசிங்கமான பொருளை தொடச் சென்றாலோ
2.நெருப்பு என்று அறியாமல் தொடச் சென்றாலோ
3.அதிலிருந்து காப்பாற்றக்கூடிய எண்ணமாக அவர்கள் உணர்வுகளைப் பதிவு செய்து நம்மைக் காக்கின்றார்கள்.

அதே போன்று கல்வியில் நாம் சிறந்து இருக்க வேண்டும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற எண்ணத்தையும் நமக்குள் பதிவு செய்கின்றார்கள்.

அவர்கள் பேசிய பேச்சுகள் அனைத்தையும் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து பூமியில் அலைகளாகப் பரவி வைத்துள்ளது. அதே சமயத்தில் அவர்கள் எண்ணிய எண்ணம் நமக்குள் பதிவாகி ஊழ் வினையாகவும் இருக்கின்றது.

நாம் என்ன குறும்புத்தனம் செய்திருந்தாலும் அதை எல்லாம் பொறுத்துக் கொண்டு
1.என் குழந்தை நன்றாக இருக்கவேண்டும்
2.அவன் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்று எண்ணிய
3.இந்த உணர்வுகள் அவர்கள் உடலிலும் ஆழமாகப் பதிந்து இருக்கின்றது.
4.அந்த உணர்வலைகள் பூமியிலும் படர்ந்து கொண்டிருக்கின்றது
5.அதே சமயத்தில் நமக்குள்ளும் அது பதிந்து இருக்கின்றது

இப்படிப் பதிந்துள்ளதைத் தான் நாம் அம்மா அப்பா அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுகின்றோம். இப்படி எண்ணினால் உடனே அந்தச் சக்திகளை இழுத்து நம் ஆன்மாவாக மாற்றுகிறது.

எப்படி…?

1.நம் உடலில் இருக்கக்கூடிய விலா எலும்பு பக்கம் இருக்கக்கூடிய காந்த சக்தி (மேக்னட்) அந்த அலைகளைக் குவித்துக் கொடுக்கின்றது.
2.அதைக் குவித்தவுடன் நமது உயிரான மேக்னட் இழுக்கின்றது.

உயிருக்குள் பட்ட உடனே நாம் எதை எண்ணினமோ அந்த உணர்வு ஓ…ம் பிரணவம் ஜீவன் உண்டாகின்றது. அது தான் ஓ… என்பது. அந்த உணர்வின் சத்து நம் உடலாக இணைந்து விடுகின்றது… ஓம் நமச்சிவாய.

நாம் எண்ணக்கூடியது அனைத்தும் நமக்குள் ஜீவனாகி அந்த சக்தி நம் உடலாகின்றது. ஏற்கனவே அம்மா அப்பா பதிவு செய்த இந்த உணர்வுகள் உடலில் இருப்பதால் அது உடலுடன் ஐக்கியமாகச் செய்கிறது.

நலம் பெற வேண்டும் என்று சொன்ன அவர்களின் உணர்வின் சக்தி நமக்குள் வலு கூடுகின்றது. அம்மா அப்பா அருளால் என்று எண்ணி அதைச் சொல்லும் பொழுது அந்தத் தகுதி நமக்குக் கிடைக்கின்றது.

அதே போன்று ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்கிற போது வாழ்க்கையில் எதையெல்லாம் நாம் எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் சக்தி ஓ… என்று பிரணவமாகி ம்… என்று உடலாக மாறுகிறது. நம் உடலில் இருக்கக்கூடிய அனைத்து எண்ணங்களுக்கும் நம் உயிரே குருவாக இருக்கின்றது.

1.நம் தாய் தந்தையர் நாம் நலம் பெறுவதற்காக எத்தனை உணர்வுகளை எடுத்தார்களோ
2.ஊழ் வினையாக நமக்குள் பதிவு செய்த அந்த உணர்வுகளை மீண்டும் நாம் எண்ணும் பொழுது
3.அந்த வலுவான சக்தியை நாம் பெறுகின்றோம்.

அதே போன்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற இந்த நோக்கத்தில்தான் நான் (ஞானகுரு) இப்பொழுது பேசுகின்றேன்.

அந்த மகரிஷிகளை எண்ணி குரு வழியில் அந்த சக்தி பெற வேண்டும் என்று நான் முதலில் எண்ணுகின்றேன். அது உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற இந்த நினைவுடனே பேசுகின்றேன்.

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று உயிரை எண்ணி… அம்மா அப்பாவை எண்ணி… அவர்கள் நாம் நலம் பெற வேண்டும் என்று சொன்ன அந்த உணர்வின் தன்மையை முன்னணியில் கொண்டு வந்து அவர்கள் அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

1.நாம் நன்மை பெற வேண்டும் என்று உளளப்பூர்வமாக அவர்களுக்குள்
2.இந்த உயர்ந்த எண்ணங்கள் கொண்டு வந்ததை நினைவுக்குக் கொண்டு வந்து ஜீவனூட்டி
3.அவர்கள் பெற்ற அருள் ஞான நிலை பெற வேண்டும் என்று எண்ணும்போது
4.நம் ஆன்மாவை அது வலுக் கொண்டதாக மாற்றுகின்றது

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ண உணர்வைக் கூட்டும்போதெல்லாம் அதை நாம் பருகுவதற்கு நம் அன்னை தந்தையின் அருள் உறுதுணையாக இருக்கும்.

அதற்கு தான் இதைச் சொல்லிக் கொடுப்பது.

இறக்காமல் இருக்க வரம் வேண்டுமா…? பிறக்காமல் இருக்க வரம் வேண்டுமா…? – ஈஸ்வரபட்டர்

 

“மரண பயம்…!” என்ற உணர்வு மனிதனுக்கு மட்டுமல்ல. ஜீவ பிம்பம் அனைத்திற்குமே உண்டு. பிறப்பில் நாம் எடுக்கும் சுவாச உணர்வின் அலைத் தொடரில் பிறந்த குழந்தைக்கும்… ஏன்… கருவில் இருக்கும் குழந்தைக்குமே… மரண பயம் என்ற அச்ச உணர்வு உண்டு.

பிறந்த குழந்தைக்கு அந்தக் குழந்தையின் உடலில் கடிக்கும் கொசுவினால் வலி ஏற்பட்டாலும்… உலுக்கும் தன்மை கொண்டு உலுக்கி விழுந்து சில குழந்தைகள் வீர்…! என்று அழவும் செய்யும். அதிர்வு நிலை ஏற்பட்டவுடன் இக்குழந்தைகள் அழுகும்.

கருவிலேயே மரண பயம் என்ற அச்ச உணர்வுடனேதான் கருவே உருவாகின்றது. அதன் வழியில் கரு வளர்ச்சியின் நிலை கூடி வருவதினால் இவ்வுணர்வின் அச்சம் மாறி “மரண பயத்தை எப்படி விட முடியும்…?”

1.மரண பயம் என்ற உணர்வின் பிடியில் வாழ்க்கை உள்ளதனால்தான்
2.மனித வாழ்க்கையில் சோர்வும் இன்னலும் கலகங்களும் கோபத் தன்மையும்
3.பொறாமை உணர்வும் போட்டி நிலைகளும் பேராசை நிலையும் புகழ் நிலையும் ஏற்படுகின்றன.

ஆனால்
1.”பிறவா வரம் வேண்டும் இறைவா…!” என்று இறை சக்தியை இறைஞ்சி
2.இன்னமுதுடன் இனிதிசை கொண்ட இல்லற இன்ப இல்வாழ்க்கை என்ற இனிய வழித் தொடரில்
3.ஈன்றெடுக்கும் இறைச் செல்வ மக்களுடன் இயற்கை வழி இனிய ஒளி இன்பம் பெற
4.பிறவா வரம் பெறும் இறை ஞானம் நிலையுடன்தான்…
5.வாழ்க்கை நிறைவு செல்வது “பிறவா வரம் பெறும் நிலை…!”

பிறவா வரம் பெறும் உணர்வு கொண்டு சேமிக்கும் உணர்வின் எண்ணத்தில் கூடும் அமிலச் சாற்றில்
1.மரண பயம் என்ற உணர்வுடன் வளரும் பருவக் காலமும் வளர்ந்த வாழ்க்கைக் காலமும்
2.மனிதனின் உணர்வில் இவ் அச்ச உணர்வினால் தான் இப்பேராசை புகழ் போட்டி பொறாமை எல்லாமே வருகிறது.

ஆறிலும் சாவு… நூறிலும் சாவு…! என்ற பயத்தையும் ஊட்டி… பின் பிறவா வரம் என்ற இயற்கை உணர்வுடன் நாம் ஒன்றிச் சென்றால் இல்லறம் இன்பம் கொள்ளுமா…! இயற்கை வாழ்க்கையும் நமக்குக் கூடுமா…? நாளை… நாளை…! என்ற உணர்வே மனிதனுக்கு உழன்று கொண்டு உள்ளது.

தாவரங்களைப் போன்றும் பூமிக்கடியில் வளரும் கனி வளங்களைப் போன்றும்…
1.பூமியின் ஈர்ப்புப் பிடியுடன் வளராமல்
2.எங்கும் சென்று எதனையும் செயலாற்றக்கூடிய நிலையில் நடந்தோடும் செயலைக் கொண்ட ஜீவ பிம்ப மனிதனுக்கு
3.இன்றைய நாகரீகச் சுழற்சிப் பிடிப்பு வாழ்க்கையில்
4.தன் ஜீவனுக்குப் பிறகு சேமிக்கும் பேராசை பொருள் செல்வச் செயலினால் தான்
5.இன்றைய ஜீவ சக்திகளின் மரண பய உணர்வு ஒவ்வொரு நொடிக்கும் அதிகப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் தான் உண்ணும்… உடுக்கும்… வசிக்கும்… வாழ்க்கைப் பிடியில் சிக்கி… தேவைக்கு மேல் அடையும் பேராசை குணத்தினால் தன் வாழ்க்கையையே மரண பயத்திற்கு அடகு வைத்து விட்டான் இன்றைய கலி மனிதன்.

அதிலிருந்து இஜ்ஜீவ பிம்ப உடலை மீட்டத் தெரியாத அச்ச உணர்வில் இருக்கும் வரை
1.உண்ணும் உணவையும் உணரும் காம இச்சையின் இன்பத்திலும்
2.செயற்கை வாழ்க்கை முறையிலும் தான் இன்பம் உள்ளது என்று ஏங்கியே வாழ்ந்து
3.இதன் தொடர் நிலையிலேயே நீடிக்க அதற்கு வேண்டிய பொருளை ஈட்டவும்
4.அதிலே தவறு ஏற்படும் பொழுது செய்த தவறை மறைக்கப் பிறிதொரு தவறின் நிலைக்குச் சென்று
5.பொருள் (சொத்து செல்வம்) என்ற சேர்க்கை இருந்தால் தான் எந்த இன்பத்தையும் அடையலாம்
6.எந்தச் செயலையும் செய்யக்கூடிய “வல்லுனரையும்” பணத்தால் சேவகம் (அடிமையாக்க) செய்ய வைக்க முடியும்..! என்ற குணமும்
7.முன்னேறிய இன்றைய அரசியல் ரீதியிலும் பொருள் என்ற பிடியில் புகழ் என்ற இன்பம் காணவும்… சென்று விட்டதால்
8.உயர்ந்த ஞான சக்தி கொண்ட ஞான வித்தகர்களின் ஞான போதனையே இவ்வாயிரம் ஆண்டு காலத்தில் அற்றுப்போய் விட்டது.

ஒவ்வொரு மனிதனும் தன் ஜீவ சக்திக்குத் தகுந்த தேவையின் செயல் கொண்டு வாழாமல்
1.உடல் குன்றி விட்டால்… நாளை என்ன செய்வோம்…?
2.செய்யும் தொழில் நசிந்து விட்டால்… நாளை என்ன செய்வோம்…? என்ற எண்ணத்துடனே வாழும் நிலை உள்ளது.

இன்று வாழும் சுக வாழ்க்கைக்காக வேண்டி “அன்றன்று சேமிக்கும் பொருளே பிரதானம்…!: என்ற எண்ணத்தின் பேராசைப்பிடியில் மரண பயம் என்ற அச்ச உணர்வுடனே உள்ளார்கள்.

ஆகவே…
1.பக்தி என்ற முறையில் ஆண்டவனை வணங்குவதிலிருந்தும்
2.எதிர்காலத்திற்காகச் சேமிக்க வேண்டிய பொருளின் சேர்க்கையிலிருந்தும்
3.மரண பயத்தைத் தன்னுள் ஏற்றிக் கொண்ட மனிதனுக்கு
4.எப்படியப்பா மரண பயத்தை விட்டு விட்டு
5.ஞான வளர்ச்சியையோ தெய்வ சக்தியையோ வளர்த்துக் கொள்ள முடியும்…? அல்லது பெற முடியும்…!

விஞ்ஞானத் துறையில் எடுத்துக் கொண்டாலும் அதிலே பல செயல்களை ஆராயும் மனிதர்கள் எல்லாம் தற்கொலை என்ற தன்னை மாய்த்துக் கொள்ளும் முடிவிற்கு ஏன் செல்கிறார்கள்…?

பிறவா வரம் பெறும் இனிய சக்தி கொண்ட ஞானிகள்… தன் உடலைப் பாதுகாக்க இந்த வாழ்க்கையில் உள்ள பொழுதே உடல் என்ற கூட்டின் முதுமை உணர்ந்து.. பிறவா சக்தி கொண்ட நிலையில் உடலைச் சமாதி நிலைப்படுத்திக் கொள்கின்றனர்.

அதனால் அவர்களுக்கு இந்த உணர்வின் மரண பயம் என்ற அச்ச உணர்வு இருப்பதில்லை. ஆனால் நமக்கு…?

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒரு வெளிச்சத்தைக் காட்டினால் அந்த வெளிச்சத்தினால் நாம் பல பொருள்களை “இது இன்னது தான்… இது இன்னது தான்…” என்று காண முடிகின்றது.

இதைப் போல அந்த அருள் மகரிஷிகள் தன் உணர்வின் ஆற்றல் மிக்க சக்தி கொண்டு அவர்கள்
1.“ஒளி கண்ட உணர்வின் தன்மை கொண்டு” எதனையும் பிளந்து
2.அதற்குள் இருக்கும் இருளைப் பிளந்து
3.அதற்குள் இருக்கும் உணர்வின் சத்தை உணர்ந்தவர்கள்.
4.தன் உணர்வுகள் அனைத்தையும் ஒளியின் சிகரமாக மாற்றினார்கள்.

ஒளியாக மாற்றிடும் ஆற்றல் கொண்டு விண்ணுலகிலிருந்து வரும் நஞ்சு கொண்ட உணர்வுகள் உருவாகி வருவதைப் “பலவீனமாக்கி…” அதனின் உணர்வையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றார்கள்.

அண்டத்தின் உணர்வை இந்த மண்ணுலகில் தோன்றிய இந்தப் பிண்டத்திற்குள் (இந்த உடலில்) மாற்றி இன்றும் விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் பெருக்கிக் கொண்டுள்ளார்கள்.

விண்ணுலக ஆற்றல் (அண்டத்தின் சத்து)
1.அது இங்கே மண்ணுலகில் கலந்து மாறி வருவதற்கு முன்பாக
2.அண்டத்தின் உணர்வை அடக்கி அதைக் கணங்களுக்கு அதிபதியாக்கி
3.இந்தப் பிண்டத்திற்குள் (தன் உடலுக்குள்) உருவாக்கினார்கள் அன்று மகரிஷிகள்.

அதனின் துணை கொண்டே உணர்வின் ஒளியாக ஒளியின் சரீரமாக “துருவ நட்சத்திரமாகவும்… சப்தரிஷி மண்டலமாகவும்…” இன்றும் (என்றும்) நிலைத்துள்ளார்கள்.

பூமியின் துருவப் பகுதியில் நிலை கொண்டு விண்ணின் ஆற்றல் புவியின் ஈர்ப்புக்குள் “நுழையும் தருவாயில்…” அதைத் தனக்குள் நுகர்ந்தறிந்து உணர்வின் ஆற்றலை ஒளியாக மாற்றிக் கொண்டேயுள்ளார்கள்.

இந்த மனித உடலில் இருப்பது போன்றே உயிருடன் ஒன்றிய உணர்வின் சத்தை ஒளியின் சிகரமாக மாற்றி “என்றும் பதினாறு” என்று அழியாத நிலைகளில் உள்ளார்கள்.

“அதனின்று வெளிப்படும் உணர்வின் ஆற்றல்” மற்ற அலைகளை அடக்கி ஒளியின் தன்மையில் பொருளைக் காணும் நிலையாக விளைந்திட்ட அந்த அருள் ஞானியின் உணர்வுகள் “நமக்கு முன்” சுழன்று கொண்டிருக்கின்றது.

இந்த உபதேசத்தின் வாயிலாக அதை நீங்கள் கேட்டுணரும்போது சக்தி வாய்ந்த “ஞான வித்தாக…” உங்கள் உங்கள் எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவாகின்றது.

அதனை நீங்கள் நினைவு கொள்ளும்போது நினைத்த மாத்திரத்தில் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற முடியும்.

தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றினால் செம்பையும் பித்தளையும் அது ஆவியாக மாற்றுகின்றது. தங்கம் பரிசுத்தம் அடைகின்றது.

அதைப் போன்று நீங்கள் எடுக்கும் அருள் உணர்வுகள் இந்த மனித வாழ்க்கையில் துயரத்தையும் துன்பத்தையும் வெறுப்பையும் உருவாக்கும் நிலைகளை அடக்கி
1.மெய் ஒளியின் உணர்வின் சரீரமாக “உடலை அது காத்து”
2.அதுவே “குருவாக…” நின்று உங்களை நல்வழிப்படுத்தும்.

இந்தப் பிண்டமான உடலுக்குள் இருந்து… அகஸ்தியனைப் போன்று “அகண்ட அண்டத்தை எட்டிடும்” உணர்வின் ஆற்றலைப் பெற முடியும்.

அதைப் பெற்று இந்தப் பிண்டத்திற்குள் விளைந்த நஞ்சை அகற்றி நஞ்சினை ஒடுக்கி ஒளியாக மாற்ற முடியும்.

செல்வத்தை நாடாதீர்கள்… அருளைப் பெருக்குங்கள்… இருளை அகற்றும் ஞானம் பெறுங்கள்

 

உதாரணமாக ஒருவர் வேதனைப்படுக்கிறார் என்றால் அதைப் பதிவாக்கிக் கொள்கின்றோம். திருப்பி எண்ணும் பொழுது அந்த வேதனை நமக்கும் வருகின்றது.

வேதனை வந்த பின் நம் தொழிலைச் சீராக செய்ய முடியவில்லை. வேதனையுடன் நடந்து சென்றால் பாதையில் உள்ள மேடு பள்ளம் தெரிவதில்லை.

இதைப் போல் ஒருவர் கோபிக்கின்றார். அதையும் பதிவு செய்கின்றோம். அப்போது கார உணர்ச்சிகள் தூண்டப்பட்டு அந்த உணர்ச்சிகள் நம்மைக் கோபக்காரனாக ஆக்கிவிடுகிறது. ஆகவே
1.நமது வாழ்க்கையில் எது எல்லாம் பதிவாகின்றதோ
2.அவையெல்லாம் மீண்டும் நம்மை இயக்கத் தொடங்கி விடுகின்றது.

இதைப் போன்றுதான்
1.அகஸ்தியன் எவ்வாறு இருளை அகற்றி உணர்வை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக ஆனானோ
2.அதன் உணர்வின் அலைகளை உங்களுக்குள் பதிவாக்கி
3.அதை நினைவு கொண்டு நீங்கள் பெறுவதற்குண்டான தகுதிகளை ஏற்படுத்துகின்றோம்.

இந்தத் தகுதியை ஏற்படுத்திய பின் எப்பொழுது உங்கள் வாழ்க்கையில் தொழிலில் நஷ்டமோ கஷ்டமோ நோயோ மற்ற எதுவாக இருந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உங்கள் உடலுக்குள் செலுத்திக் கொள்ள முடியும்.

உங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வைச் செலுத்தி விட்டால் அந்த அருள் உணர்வுகள் உங்கள் உடலுக்குள் “நாளுக்கு நாள்” வளர்ந்து கொண்டே வரும்.

இப்படி நம்முடைய வளர்ச்சியின் தன்மை அடைந்தால் இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை அடைய முடியும். “அதற்குத்தான் இந்த தியானமும் உபதேசம்…”

செல்வத்தை நாம் தேட வேண்டும் என்று சென்றால் இந்த வாழ்க்கைக்கு உதவும்.
1.ஆனால் அதையே பெற வேண்டும் என்று ஏக்கத்தைப் பெற்றால்…
2.செல்வத்தை தேடி நாம் சென்றால்
3.அது தவறு பிழை என்ற நிலைக்கே அழைத்துச் சென்றுவிடும்.

ஆனால் உயிர் வழி அருள் ஞானிகளின் உணர்வை வலுவாக்கி அவர்கள் பெற்ற உயர்ந்த உணர்வைப் பெற்றால் செல்வம் தன்னாலே தேடி வரும்

நீங்கள் தேடிச் செல்ல வேண்டியதில்லை அந்த அருள் செல்வம் உங்களை தேடி வரும். ஆகவே செல்வம் தான் நம்மைத் தேடி வர வேண்டும்.

ஆகவ இங்கே கொடுக்கப்படும் உபதேசத்தின் நிலையிலிருந்து செல்வத்தை நாடாதீர்கள். அருளைப் பெருக்குங்கள். இருளை அகற்றி அருள் ஞானச் செல்வத்தை ஊட்டுங்கள்.

1.என்றும் அந்த அருள் செல்வம் நமக்குள் இருந்து
2.அகச்செல்வம் அருளாகி இருளை நீக்கி மெய்ப்பொருள் காணும் உணர்வாக
3.ஒளி உடலாக மாற்றும் அந்தத் தகுதி பெற வேண்டும்.

ஆகவே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை பெற வேண்டும் என்று எப்பொழுது எண்ணினாலும் சிந்திக்கும் ஆற்றல் கொண்டு வாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொள்ளும் தன்மை வருகின்றது.

தீமையை நீக்கும் ஆற்றல் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் அமைதி கிடைக்கின்றது… சாந்தம் கிடைக்கின்றது… விவேகம் கிடைக்கின்றது.

நான் சொல்லி உங்களுக்குள் இதை எல்லாம் பதிவு செய்தாலும் “உங்கள் உணர்வுக்குள் விளைந்தால் தான் அது ஞானம் ஆகும்…”

காரணம் சொல்லும் உணர்வை வைத்து நினைவு கொண்டு எடுத்தாலும் அது கடினமாகும்.
1.நினைவைப் பதிவாக்கிப் பழக்கப்படுத்தி இந்த உணர்வை எடுத்துக் கொண்டால்
2.நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் உருவாக்கும்.
3.இருளை அகற்றி மெய்ப்பொருள் கண்டு பிறவியில்லா நிலையை அடையும் தகுதியை நீங்கள் பெறுவீர்கள்.
4.எனக்குக் குருநாதர் எப்படிச் செய்தாரோ அதைத் தான் நான் செய்து காட்டுகின்றேன்.

உங்கள் உயிர் கடவுள்… உடல் ஒரு கோவில்… மனிதனை உருவாக்கிய அரும்பெரும் சக்தியான தெய்வங்கள் உங்களுக்குள் கொலு வீற்றிருக்கின்றது.

அந்தத் தெய்வங்களைக் காக்க வேண்டும் என்று தான் குருநாதர் காட்டிய வழியில் உபதேசிக்கின்றோம்.

செயற்கரிய செயலைச் செய்யக்கூடிய சக்தி பெற்றவன் தான் மனிதன் – ஈஸ்வரபட்டர்

 

பாலில் சேர்க்கப்படும் பொருளைக் கொண்டு அதன் சுவையும் மணமும் நிறமும் எப்படி மாறுகின்றதோ அதைப் போன்று தான்
1.இந்த மனிதப் பிம்ப உடலில் சேர்க்கப்படும் உணர்வின் எண்ண சுவாச அமிலத்தால்
2.பிம்பக் கூட்டின் உருவ நிலையும்… குண நிலையும்… சொல் வடிவமும்… அமைகின்றதப்பா…!

நல் உணர்வு சுவாச முறையால்… நாம் எடுக்கும் ஜெப சக்தி காந்த மின் அலைச் சுவாசத்தால்…
1.உடல் பிம்பக் கூட்டில் உள்ள ஒவ்வொரு அணுக்களையும்
2.சக்திவாய்ந்த ஒளியில் வளப்படுத்த முடியும்.

இந்த உடல் பிம்ப ஜீவக் கூட்டிலிருந்து… ஜீவ சக்தியுடன் கூடிய இவ்வலை ஈர்ப்பின் குணத்தின் சக்தி கொண்டு தான்..
1.சகல சக்தியையும் அறியவல்ல ஆற்றலையும் செயல் முறையும்
2.என்றுமே அழியா வண்ணம் பல படைப்பைப் படைக்கவல்ல படைப்பின் சக்தியும்
3.இந்தப் பிம்பக் கூட்டிற்கு உண்டு

இந்தப் பிம்பக் கூட்டில் எடுக்கும் இச்சக்தியினால் எச்சக்தியையும் அடையலாம் என்று உணர்த்துகின்றீரே…! அப்படியானால் நீரிலும் நெருப்பிலும் குதிக்க முடியுமா…? என்ற வினா எழும்பலாம்.

கடும் உஷ்ண அலையைக் கக்கும் நெருப்புக் குண்டத்தில் இஜ்ஜீவ பிம்ப உடலுடன் அமர்ந்திருக்க முடியுமா..? என்றால் முடியுமப்பா…!

1.தான் எடுக்கும் உயர் சக்தி அலையின்… “ஒளியுடன் ஒளியாகும் ஒளி சக்தி பெற்றால்…”
2.தணல் விட்டு எரியும் நெருப்பில் அமர்ந்தாலும்
3.இந்த உடல் பிம்ப ஈர்ப்புச் சக்தியிலிருந்து வெளிப்படுத்தும் ஒளி அலையைப் பாய்ச்சினால்
4.அந்த நெருப்புக் கோளம் தான் அணையுமே தவிர இந்தப் பிம்ப உடலைப் பாதிக்காது.

இயற்கையின் சீற்றமுடன் விளையாடுவதற்கல்ல உயர் ஞான சக்தி. ஆனால் உள்ள சக்தியை உணர்த்துவதற்காக இதைச் சொல்கிறோம்.

ஆழ் கடலாக இருந்தாலும்… பூகம்பமோ… சூறாவளியாகவோ.. இருந்தாலும் ஒலியின் சக்தியுடன் ஒளிரும் சக்தி கொண்டு எந்த வகையான இயற்கையின் சீற்றத்திலிருந்தும் பிம்ப உடலையும் தப்ப வைக்க முடியும்.

திராவகத்தில் போடப்படும் மற்ற உலோகங்கள் கரைந்தாலும் தங்கத்தின் குணம் எப்படிக் கரைவதில்லையோ அதைப் போன்று
1.இந்த உணர்வால் எடுக்கும் எண்ணச் சுவாசத்தால்
2.ஒலி கொண்டு ஒளி பெற்றோமானால்
3.உயர் ஞான சக்தியை வழி கொண்ட எச்சக்தியாகவும் நாம் ஆக முடியும்.

பூமியின் ஜீவ சக்தியைக் கொண்டு வளர்த்த சக்தியின் தாதுப் பொருள்களில் பிரிந்த திரவக சக்தியிலிருந்து (பூமிக்கடியில் இருக்கும் எண்ணை – CRUDE OIL) ஒன்றைக் கொண்டு பலவாகப் பெட்ரோலியப் பொருள்களைப் பல வகையிலும் பிரித்து பல சாதனைகளைப் புரிகின்றோம் அல்லவா…!

அதைப் போன்று..
1.இந்த உணர்வின் சுவாசத்தால் எடுக்கும் இஜ்ஜீவ சக்தியைக் கொண்டு
2.இப்பேரண்டப் பெருநிலையின் வளரத் தக்க முறைதனையும்
3.ஒவ்வொரு மண்டலங்களிலிருந்தும் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்றோன்று உருவாகும் முறைதனையும்
4.அணுவுக்குள் அணுவாக ஊன்றி அணுச் செயல் தொடர்பனைத்தையும்
5.ஒலியையும் ஒளிக் காட்சிகளையும் மணத்தையும் சுவை குணத்தையும் அவை மாறும் செயற்கை வடிவையும்
6.இவ்வெண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் சுவாசத்தால் எடுக்கவும் உணரவும் நமக்குள் வளர்த்திடவும் முடியும்.

இந்த நிலையெல்லாம் பெறுவதற்கு மனித உணர்வில் ஊன்று கோலாக நிலைத்துள்ள “மரண பயம்” என்ற இந்த வித்தை முதலில் அகற்ற வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

யாம் உபதேசித்த உணர்வின் எண்ணம் கொண்டு கண்களை மூடி ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணித் தியானிக்கும் பொழுது அந்த மகரிஷிகளின் உணர்வின் ஈர்ப்பின் அலைகள் உங்களுக்குள் வரும்.

1.அந்த அலைகள் வரும் போது புருவ மத்தியில் “குறு…குறு…,” அந்த உணர்ச்சிகள் தெரியும்
2.சிலருக்கு ஒளி அலைகள் வருவதையும் பார்க்கலாம்.

தியானித்து முடிந்த பின் கண்களைத் திறந்து மகரிஷிகளின் அருள் சக்தி தியானத்தில் அமர்ந்துள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும், எல்லோரும் சேர்ந்து சொல்ல வேண்டும்.

இந்த உணர்வின் தன்மை ஏகோபித்த நிலைகள் வரப்படும் பொழுது இந்த உணர்வுகள் சக்தி வாய்ந்ததாக மாறி “செவிப்புலனறிவில்…” தாக்கப்படுகின்றது.

1.அந்த உணர்வின் நிலைகள் உந்தப்பட்டு
2.உணர்வின் தன்மைகள் சுவாசிக்கப்பட்டு
3.சுவாசித்த உணர்வுகள் தன் ஊழ்வினையாகப் பதிவாகின்றது.

அந்தப் பதிந்த வலுவின் தன்மையைச் சேர்ப்பிக்கும் நிலை தான் “தியானம்” என்பது.

ஒரு நூல் அது எத்தகைய நூலாக இருந்தாலும் அது பலவும் ஒன்றாகச் சேர்த்து ஒன்றாகும் பொழுது வலுப்பெறுவது போல் அனைவரும் சேர்த்து உணர்வின் ஒலி அலைகளைப் பரப்பபடும் பொழுது ஆற்றல்மிக்க சக்தியாகின்றது.

பல (100) இசைக்கருவிகளை ஒன்றாக இணைத்து அது இசையாக வெளிப்படுத்தும் பொழுது ஒரு காந்தப் புலன் அதற்குள் கவர்ந்து அனைவரும் சேர்ந்து அந்த அனைத்து வாத்தியங்களும் வாசித்த உணர்வுகள் ஒரு அணுவிற்குள் சிக்கி அந்த அணுவின் தொடர் வரிசை செல்லும் பொழுது அந்த நாதத்தின் இனிமையை நாம் நுகர முடிகின்றது.

இதைப் போலத்தான் வலு கொண்ட உணர்வின் எண்ணத்தின் துணை கொண்டு நாம் அனைவரும் அந்த ஞானிகளின் உணர்வைத் தனக்குள் ஏற்றி அதனைப் பருக வேண்டும் என்று ஏங்கித் தியானிக்கும் பொழுது அதைக் கவரும் ஆற்றல் நாம் பெற்றாலும் கவர்ந்த உணர்வுகள் நமக்குள் பங்கிட்ட நிலைகள் கொண்டு நமக்குள் வலுவாக ஏறுகின்றது.

1.ஆயிரக்கணக்கோர் கூடி உணர்வின் தன்மை இதைத் தூண்டச் செய்து கூட்டுத் தியானமாக அமைத்து
2.அதனின் வலுவைச் சேர்க்கும் “அருள் ஞான வித்தாகப் பதியச் செய்கின்றோம்”.
3.அனைவருக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்
4.அவர்கள் வாழ்க்கையில் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்.
5.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் வாழ்க்கையில் மன பலமும் மன வளமும் பெற வேண்டும்
6.தியானமிருக்கும் குடும்பங்களில் உள்ளோர் தொழில் வளமும் செல்வமும் செல்வாக்கும் பெற்று
7.செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வளர்ந்திட வேண்டும் என்று ஒவ்வொருவருமே இதை எண்ண வேண்டும்.

ஒருவர் சொல்ல எல்லோரும் இதைச் சொல்ல வேண்டும்.

இவ்வாறு அனைவரும் தனக்கென்று கேட்காது… “பிறரை வாழ்த்தும் நிலைகள் நாம் எண்ணும் பொழுது” அந்த மகா ஞானியின் உணர்வைப் பெறும் தகுதி பெறுகின்றோம்.

அதனின் துணை கொண்டு நாம் இந்தப் பூமியின் நிலையில் மனிதனின் ஈர்ப்புக்குச் சிக்காது விண் சென்ற அந்த உணர்வின் சக்தியை நமக்குள் அதைக் கவர முடியும். நமக்குள் வலுவாக ஏற்றிக் கொள்ள முடியும்.

சீரற்றுச் சென்று கொண்டிருக்கும் பூமியைத் “தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியனின் அருளால்” நிச்சயம் நாம் சமப்படுத்துவோம்

 

பண்டைய காலத்தில் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்தப் பூமியிலே விளைந்த மகரிஷிகள் இந்தப் பூமி சூரியனை விட்டு மாறிச் செல்லும் பொழுது அந்தச் சூரியனையே குறிக்கோளாகக் கொண்டு தன் பார்வையின் நிலைகளை நேரே செலுத்திப் பூமியைத் திருப்பி விட்டுள்ளார்கள்.

இந்தப் பூமி வட துருவமாக இருந்து அதன் வழியில் விண்வெளியின் ஆற்றலை இது கவர்ந்து பூமி வளர்ச்சி அடைந்து வந்தது.

அப்படி வந்தாலும் அதிகமாக இந்தத் துருவ நிலைகளில் அது தனக்குள் கவர்ந்து கொள்ளும் பொழுது
1.துருவத்தின் நிலைகள் எடை கூடி குடை சாயும் நிலைகளில்
2.இப்படிக் கவிழும் தன்மை வரும் பொழுது
3.துருவ மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும்.
4.இத்தகைய மாற்றங்கள் வரப்படும் பொழுது பூமியும் திசை திருப்பி வரும்.

இதனைத் தன் வலுவான எண்ணங்கள் கொண்டு பண்டைய கால மகரிஷிகள் இந்தப் பூமியைச் சீர்படுத்தி வந்தனர்.

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொல்லும் இந்த அகஸ்தியன் தனக்குள் எடுத்து கொண்ட வலுவின் திறமை கொண்டு இந்தப் பூமியினைச் சமப்படுத்தி சீராக ஓடச் செய்து தன் நினைவின் அலைகளை மாற்றிச் சென்றவன்.

இதைப் போன்று ஒவ்வொரு காலத்திலேயும் மகரிஷிகள் தோன்றி இதைச் சீர்படும் நிலைகளுக்குச் செய்தார்கள்.

இன்று விஞ்ஞான அறிவால் அணுகுண்டும் ஹைட்ரஜன் குண்டும் நாம் செயல்படுத்தும் நிலைகளிலிருந்து அது வெடித்து கதிரியக்கச் சக்தி பூமியின் நடுமையம் சென்றுவிட்டது.

அதனால் வெப்பங்கள் அதிகமாகி துருவப் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் கரைந்து நீர் நிலைகள் பெருகி நிலம் குறையும் நிலைக்கு வந்துவிட்டது விஞ்ஞான அறிவால்.

அன்று மெய்ஞானிகள் தன் உணர்வின் எண்ணம் கொண்டு பூமியைச் சீரான பாதையில் செலுத்தச் செய்து இந்தப் பூமியை மக்கள் வாழும் நிலைக்கு உருவாக்கினார்கள்.

பூமியில் பனிப்புயல்கள் அதிகமாகப் போகும் பொழுது அந்தப் பனிப்புயலை மாற்றுவதற்காகச் சூரியனின் வெப்பத் தணலை அதற்கு நேர் திசையாக மாற்றியமைத்தான். இந்த நாட்டின் நிலைகளை ஒழுங்குபடுத்தும் நிலையாக வந்தவன் அகஸ்தியன்.

அதனால் தான் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று அவனை நாம் போற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.

தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியன் தனது ஆற்றல்மிக்க இச்சக்தியைத் தான் கூர்மையான நிலைகள் கொண்டு சூரியனை நேர் பார்வையில் வைத்துத் தன் வலுவின் நிலைகள் கொண்டு பூமியைத் திசை மாற்றிச் சம நிலைப்படுத்தி இங்கே வாழும் மக்களைச் சீர்படுத்தும் நிலைகளுக்கு அவனின் ஆற்றலைப் பயன்படுத்தினான்.

இந்த வெப்பத்தின் தணல் அதிகமாகப்படும்பொழுது அதனின் வழியில் பூமியின் திசையைத் திருப்பும் பொழுது இந்தப் பூமி கவிழாதபடி அது சீரான நிலைகள் இயங்கி மக்கள் வாழும் நிலைகள் அடைகின்றது.

இவ்வாறு செய்தான் அன்று அகஸ்தியன்.

இன்றைய விஞ்ஞான உலகமோ ஒரு பகுதியில் நேர் வரிசையில் அணுகுண்டுகளை வெடிக்கச் செய்தால் இது சூரியனிலிருந்து வரக்கூடிய காந்தப் புயலின் தன்மையைத் தடுத்துப் பூமியைத் திசை மாற்றிவிடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்,

நாட்டுக்கு நாடு எதிர் நிலைகள் ஏற்படும் நிலைகள் இதனை மாற்றிடும் நிலையாகவும் இன்று உள்ளனர்.

1.நம் பூமியும் செயலிழக்கும் தன்மை வந்துவிட்டது.
2.விஞ்ஞானிகள் இந்தப் பூமியை மனிதர்கள் வாழ முடியாத நிலைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.

அன்று அகஸ்தியனோ இந்தப் பூமி குடை சாயும் நிலைகளிலிருந்து மக்களைக் காத்திடும் நிலையாகத் தன் உணர்வின் அலைகளைச் சூரியனை எதிர் நோக்கித் தன் ஆற்றல்மிக்க நிலைகள் கொண்டு பூமியைத் திசை மாற்றினான்.
1.நிலப்பரப்பை அதிகமாக்கினான்
2.பஞ்சமற்ற நிலைகள் தாவர இனங்கள் உருப்பெறச் செய்தான்
3.தாவர இனங்களை வளர்த்திடும் நிலங்களை அவன் பெருக்கச் செய்தான்.

இந்தப் பூமியில் வாழும் நாம் ஒவ்வொருவரும் அந்த மெய்ஞானியான அகஸ்தியனைப் போன்று விஞ்ஞான விளைவுகளிலிருந்து மீட்டு மனிதர்கள் வாழக் கூடிய பூமியாக மாற்ற வேண்டும் என்று உறுதி கொள்வோம்.

நம்மால் நிச்சயம் முடியும்.

உடலில் புழு உருவாவதும் தலையில் பேன்கள் உருவாவதும் எதனால்…? ஈஸ்வரபட்டர்

 

1.அணுவுக்குள் அணு வளர்க்கும் வளர் தன்மை எத்தகையது…?
2.அணு வளர்ப்பின் இயற்கைக் குணம் ஜீவ சக்தியுடன் எப்படி மாற்றம் கொள்கிறது…?

இயற்கை வளர்ப்பில் வளர்ந்த கனிகளில் சாதாரணமாக வாழைப்பழத்தின் பழுத்த நிலைக்குப் பிறகு அக்கனியைப் பூமியின் ஈர்ப்பில் அப்படியே விட்டு விட்டால் என்ன ஆகின்றது…?

1.அந்தக் கனியானது அழுகிய தருவாயில்
2.பூமியின் வெக்கை அதன் மேல் பட்டு பூமி மீண்டும் ஈர்த்து
3.அக்கனியின் சுவை அமிலமுடன் இந்த உஷ்ண அலை ஈர்ப்புப்பட்டு வெளி வரும் பொழுது
4.அதன் அழுகிய தன்மையில் பல அணுக்கள் தோன்றுகின்றன.

தோன்றிய உயிரணுக்கள் எவ் அமிலத்தில் எச்சுவை கொண்டு அவ்வணு வளர்ந்ததோ அதன் தொடர்பு கொண்ட அணு வளர்ச்சி உருவத் தொடர்கள் “புழுக்களாக…” வளர்கின்றன.

இதன் நிலையை உணர்த்துவது எதற்கு…?

மனித பிம்ப உடலுடன் இந்தப் பூமியின் ஈர்ப்புப் பிடியில் வாழும் நாம் இந்தப் பிம்பக் கூட்டின் சுவாச அலையில்
1.எப்படி வாழைக் கனியிலிருந்து அதன் வெக்கையில் பட்ட உயிரணு தோன்றியதோ அதைப் போன்று தான்
2.ஒவ்வொரு ஜீவ சக்தியிலும் உணர்வின் சுவாசம் எடுக்கும் நிலையில் ஏற்படும்
3.வெக்கை உயிரணுக்கள் தான் உடல் பிம்பக் கூட்டிலும் வளர்கின்றது.
4.எடுத்து வெளியிடும் சுவாசத்திலும் அதன் தொடர்பு கொண்ட அணுக்களின் வளர்ச்சி தான் வளர்கின்றது.

ஒவ்வொரு ஜீவ சக்தியின் தொடர்பிலும் அணுவுக்குள் அணு வளரும் தன்மையில் அந்தந்த இனக் கலவை உயிரணுக்கள் வளர்வதுடன் பிறிதொரு அமில உயிரணுக்களின் செயல் எப்படிக் கூடுகின்றது..?

மனிதனின் உடலில் வளரும் புழுக்களும் தலையில் வரும் பேன்களும் எப்படி உருவாகின்றன…?

அமைதியுடன் ஆரோக்கியமான சந்தோஷ வாழ்க்கையில் உள்ள மனிதர்களுக்கு அது அதிகம் வருவதில்லை.

ஆனால் சலிப்புப்பட்டு சோர்வுப்பட்டு சங்கடம் போன்ற வறுமையில் வாழும் இன்னல்படும் ஆத்மாக்களின் உணர்வில்
1.அவர்கள் எடுக்கும் இச்சுவாச அலையின் வெக்கையானது
2.ரோமக் கால்களில் வெளிப்படும் அமிலக் கசிவில்
3.உடல் வெக்கையின் உஷ்ண அலையின் விகிதத்தைக் கொண்டு
4.இச்சஞ்சலமான நிலையில் உள்ளவர்களின் அலைகளில் இந்தப் பேன் வளரும்.

உடல் உறுப்புகளில் இவ் உணர்வின் கசிவில் வெளியில் உள்ள தூசிகளோ சில அழுக்குகளோ படும் பொழுது என்ன மாதிரியான பாதிப்பு வருகின்றது…?

1.உடலில் ஏற்படும் வெக்கையினால் வெளிப்படும் வியர்வையின் அமிலத்தின் மேல்
2.காற்றலையில் உள்ள சில உயிரணுக்கள் படும் பொழுது
3.அவற்றின் வளர்ப்பாக அணுவுக்குள் அணு வளர்ந்து
4.அவை பெருகி ஏற்படுவது தான் உடல் உறுப்புகளில் ஏற்படும் சில கட்டிகளும் புண்களும்.

அவற்றின் கசிவு வளர்ப்பு அணுக்களினால் படரும் தொடர் நிலையை அவற்றை அழிக்கக்கூடிய சக்தி கொண்ட சில மருந்துகளால் வைத்தியத்தின் மூலம் மாற்றுகின்றார்கள்.

அணுவுக்குள் அணு வளரும் தன்மையில் இன்று விஞ்ஞான ரீதியில் தாவரங்களையும் மிருக இனங்களையும் சில கலப்புகளைச் சேர்த்து மாற்றி அமைக்கின்றார்கள்.

நாய் நரி இவற்றை மாற்றியதைப் போல் மனிதனுக்குச் சேவை செய்யக் கொரில்லாக்கள் போன்ற இன விருத்தியை குரங்கின் இனத்துடன் மனித அமிலத்தைச் சேர்த்து வளர்த்த மனிதர்களே இன்று அவை வளராவண்ணம் தடுத்தும் விட்டனர்.

இதை எல்லாம் உணர்த்தும் முறை எதற்கு…?

உடல் என்ற பிம்ப உணர்வு அமிலக்கூட்டில்…
1.பல கோடி ஆண்டுகளாக அணுவுக்குள் அணு தோன்றி உரு மாறி மாறி
2.ஒவ்வொன்றின் உருவச் சேமிப்பின் முலாமுடன்
3.இன்று வழித் தொடர் கொண்டு வளர்ந்து வாழ்ந்து கொண்டுள்ள நாம்
4.எச்சக்தியும் செயலாக்கக்கூடிய எண்ண ஆற்றலின் ஞான வளர்ச்சிக்கு
5.எண்ணத்தால் எடுக்கும் உணர்வலையின் நற்சுவாசத்தால்
6.இந்த உடல் அமிலத்தில் ஏற்கனவே உரு மாறி மாறி ஒவ்வொரு தொடர்பிலும் சேமித்த அமிலக்கூட்டில்
7.நற்சக்தியுடன் கூடி வந்த தீய குண அமிலத்தையும் உயர்ந்த சக்தியாகவும் ஆக்கிட முடியும்.

அணு தோன்றி… அணு வளர்ப்பின் வளர் தொடர் வள்ர்ப்பின் அணுக்கள் தான்… தொடர் அணு வளர்ச்சி நிலை…!
1.ஆகவே அணுவுக்குள் அணுவாக மகரிஷிகளின் உணர்வலைகளை ஊன்றி
2.உயர் உணர்வின் ஞானத்தில் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

சாதாரண வாழ்க்கையில் பட்ட கோபம் ஆத்திரம் சலிப்பு சஞ்சலம் பயம் சோர்வு போன்ற உணர்வாக இயக்கச் செய்யும் நிலைகள் நமக்குள் அடுத்து வேதனைப்படும் உடலாக உருவாக்குகின்றது.

ஆனால் ஞானியின் உணர்வை நமக்குள் சேர்த்தால் வேதனையை அடக்கி வேதனையை ஒடுக்கிடும் உணர்வாக விளைகின்றது.

நல்ல உணர்வுகள் கொண்டு நாம் வாழ்ந்து வரும்போது பிறரின் சிரமங்களையும் கஷ்டங்களையும் கண்டுணரும் பொழுது அதிலிருந்து அவர்கள் விடுபட நாம் எண்ணி ஏங்குகின்றோம். உதவியும் செய்கின்றோம்.

நல்ல உணர்வின் வலு கொண்டு அவர்களைக் காத்திட்டாலும் கேட்டுணர்ந்த உணர்வுகள் நம்மிடம் உள்ள நல்ல உணர்வுகளுடன் கலந்து அந்த நஞ்சான நிலைகள் உடலுக்குள் தீதான நிலைகளாக விளையத் தொடங்கிவிடுகின்றது.

பாலில் சத்துள்ள பாதாமைப் போட்டால் அதனின் சத்து உயர்ந்ததாக இருக்கின்றது. அதில் ஒரு துளி விஷம் பட்டுவிட்டால் அதை உணவாக உட்கொண்டால் நம் நினைவை இழக்கச் செய்துவிடும்.

நாம் எத்தனையோ காலம் காத்து வந்த மனித உணர்வுகள் அனைத்தும் செயலற்றதாக மாறிவிடுகின்றது. உடலையும் நலியச் செய்கின்றது. நஞ்சு கொண்ட நிலையாக மாறுகின்றது.
1.நஞ்சின் வலு ஜாஸ்தி.
2.அதே சமயத்தில் நஞ்சை வென்ற அருள் ஞானிகளின் வலு ஜாஸ்தி.

நஞ்சினை ஒடுக்கிட்ட அந்த அருள் ஞானிகளின் உணர்வைப் பருகும் மார்க்கம்தான் யாம் இப்பொழுது உபதேசிக்கும் இந்த நிலை.

அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறும் தகுதிக்கு குருநாதர் எமக்குக் காட்டிய அருள் வழிப்படி உங்களுக்கும் உபதேசித்து உணர்த்துகின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் எளிதில் பெறவேண்டும் என்றால் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்த வேண்டும்.

அவர்கள் இன்னொரு இருள் சூழ்ந்த உடல் பெறாது பூரண நிலாவாக இருப்பது போல் ஒளியின் சரீரம் பெற்று அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்திட வேண்டும் என்று நாம் உந்தித் தள்ள வேண்டும்.

அவர்கள் அங்கே சென்றடைந்தபின் சுலப நிலைகளில் அதைப் பெற முடியும். குலதெய்வங்களை ஒளிச் சரீரம் பெறச் செய்த உணர்வின் துணை கொண்டு நாம் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவோம்.

ஏனென்றால் இன்று சாதாரண எளிய மக்களாகத்தான் உள்ளோம். காவியங்களையோ கதைகளையோ முழுமையாக அறிந்தாரில்லை. காவியத் தொகுப்புகளை நாம் பார்த்ததில்லை.

தெய்வங்களின் நல் ஒழுக்கத்தைக் கற்றுணர்ந்தோர் தான் இருக்கின்றோம். “தெய்வத்திற்குப் படைத்தால் அந்தத் தெய்வம் நமக்குச் செய்யும்…” என்ற நம்பிக்கையில் தான் இருக்கின்றோம்.

தெய்வ நிலைகள் கொண்டோரிடம் மடாதிபதிகளோ அதைப் போன்ற மற்றவர்களிடமோ சென்று
1அவர்களிடம் ஆசி பெற அதிக அளவில் பணத்தையும் கொடுத்து
2.அவரிடம் வாக்கை வாங்கினால் அவர் நமக்கு நன்மை செய்வார் என்று
3.அவர்கள் பின்னாடி சென்று கொண்டிருக்கின்றோம்.

இப்படிப் பிறரை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நம்மை நாம் நம்புகின்றோமா…! நமக்குள் இருக்கும் ஆற்றலை அறிந்திருக்கின்றோமா…!

1.நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.நமக்குள் உயிராக இயக்கும் “நம் உயிரை நம்பி”
மகரிஷிகள் காட்டிய அருள் வழியினைப் பற்றுடன் பற்றி அருள் ஞான சக்தியைப் பெற முடியும் என்ற இந்தத் தன்னம்பிக்கை வர வேண்டும்.

நம்மையறியாது வரும் தீமைகளை நீக்கும் ஆற்றலை நாம் பெற முடியும் என்ற இந்த உணர்வின் வேட்கை ஆழமாகப் பதியச் செய்ய வேண்டும்.

தீமையை அகற்றிய அருள் மகரிஷிகளின் உணர்வின் ஏக்கம் கொண்டு இந்த வாழ்க்கை வாழ்ந்தால் நம்மை அறியாது வந்த தீமைகளை நிச்சயம் அகற்றிட முடியும்.

ஜாதகத்தில் சொல்லப்படும் நல்ல நேரம் கெட்ட நேரம் மனிதனுக்கு உகந்ததல்ல… அதிலே உண்மையும் இல்லை

 

துருவ நட்சத்திரத்தைப் பற்றி உபதேசம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
1.துருவத்தின் ஆற்றலைப் பெற்று ஒளியின் சரீரமாக இருப்பவன் அகஸ்தியன்.
2.இருளை நீக்கி மகிழ்ச்சி என்ற உணர்வை எடுத்து ஒளியாக மாறிவன் தான் அவன்.

அந்த அகஸ்தியன் பெற்ற உணர்வுகளை உங்களிடம் இப்பொழுது உபதேசிக்கப்படும் போது உங்களுக்குள் என்னென்ன வாசனைகள் எல்லாம் வருகிறது…? என்று பாருங்கள்.

ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்குத் தகுந்த மாதிரி
1.பச்சிலை வாசனைகள் வரும்… ரோஜாப்பூ மணம் வரும்
2.தீமை நீக்கிய… விஷத்தை நீக்கிய… மூலிகைகள் வாசனைகள் வரும்.

ஏனென்றால் அந்த அகஸ்தியனைப் பற்றிச் சொல்லப்படும் போது உங்கள் நினைவாற்றல் அவன்பால் செல்லும் போது காற்றிலிருக்கக்கூடிய பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் வெளிப்படுத்திய அந்த உணர்வலைகள் உங்களுக்குள் வந்து சேரும்.

சிலரால் அந்த மணத்தை அறிய முடியவில்லை என்றாலும் கூட அதை நுகரும்போது உணர்ச்சிகளால் அறிய முடியும். புது விதமான உணர்ச்சிகள் உங்கள் இரத்தத்தில் கலப்பதும் உடலில் ஊடுருவுவதையும் காணலாம்.

1.சிலர் மணத்தால் அறியலாம்
2.சிலர் உணர்வால் அறியலாம்
3.சிலர் உணர்ச்சிகளால் அறியலாம்

இது போன்ற அகஸ்தியனின் உணர்ச்சிகளை நம் உடலில் உள்ள இரத்தத்தில் உருவாக்கப்பட வேண்டும். அப்பொழுது அது இயக்கச் சக்தியாக மாறும். அதைப் பெற வேண்டும் என்ற உணர்வுகளும் மீண்டும் மீண்டும் வரும்.

உதாரணமாக ஜாதகக்காரனோ ஜோசியம் பார்ப்பவன் சொல்வதையோ நாம் கேட்டுப் பதிவாக்கி விட்டால் மீண்டும் அது தான் இயக்குகின்றது.

அதே போல் தீமையை நீக்கிய அந்த மெய் ஞானி தன் உணர்வை ஒளியாக மாற்றிய அந்த உணர்வுகளை நாம் பதிவாக்கி ஒவ்வொரு நிமிடமும் அதை மீண்டும் மீண்டும் எண்ணினால் அது நமக்குள் இயக்கத் தொடங்கும்.

கஷ்டத்தையோ நஷ்டத்தையோ பார்க்கும்போதெல்லாம் இது போல் எண்ணும் பழக்கம் வந்துவிட வேண்டும்.
1.கஷ்டத்தைக் கேட்டு முடிந்ததும் ஈஸ்வரா… என்று
2.நம் புருவ மத்தியில் எண்ணி உடனே அதை நிறுத்திவிட வேண்டும்.

மற்றவர்களிடம் “என்னிடம் கஷ்டத்தைச் சொல்லாதே…” என்று சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அப்படி வேகமாகச் சொல்லி விட்டால் இந்த உணர்வுகள் அவருக்குள் இயக்கப்பட்டு நமக்கு எதிர்மறையாக வரும்.

இவர் எதையோ செய்து கொண்டிருக்கின்றார்… ஏதாவது சொன்னால் கேட்க மாட்டார்…! இவருக்கு மட்டும் என்ன…? ஒரு காலத்தில் அவருக்குக் கஷ்டம் எதுவும் வராதா…? என்று நம்மைப் பற்றிக் கூடிப் பேசுவார்கள்.

இப்படி நான்கு பேர் கூடிப் பேசினால் அது நமக்குள் பகைமை ஊட்டும் உணர்வாக ஊடுருவி நம் நல்ல உணர்வுகளை மாற்றிவிடும். ஆகவே மற்றவர் கஷ்டத்தைச் சொன்னாலும் நம் செவியோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் வலிமையாக்கி உடலுக்குள் போகாமல் தடுக்க வேண்டும். அது தான் முக்கியம்.

பின்… அவர்களுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பாய்ச்சி
1.துருவ நட்சத்திரத்தின் அருள் ஒளியால் நீங்கள் உடல் நலம் பெறுவீர்கள்
2.உங்கள் வியாபாரம் செழிக்கும் உங்கள் வாழ்க்கையில் எல்லாம் நலமும் வளமும் பெறுவீர்கள் என்று
3.அவர்கள் உணர்வு நமக்குள் வராதபடி மாற்றியமைத்துச் சொல்லாகச் சொல்லப்படும் போது
4.அவர் கஷ்டத்தை நீக்கும் நிலை ஆகிவிடுகின்றது.

ஜோதிடம் சொல்பவன் உங்களுக்கு ஏழரை நாட்டான் பிடித்திருக்கின்றான் என்று சொன்னால் அதைப் பிடித்துக் கொள்கிறீர்கள்.

அதன் பின் நீங்கள் எந்தக் காரியத்திற்குச் சென்றாலும் “போகும் போதே இந்தச் சந்தேகம் வரும்…” வியாபாரம் செய்தால் நஷ்டம் ஆகி விடுமே…! என்ன செய்வது…? பணத்தை பேசாமல் வைத்துக் கொள்வோம்.

மாமன் மச்சானைப் பார்க்கக் கூடாது… நல்ல நண்பர்களாக இருந்தாலும் கூட ஏமாற்றி விடுவார்கள்… ஏழரை நாட்டான் பிடித்திருப்பதால் ஒதுங்கி நில்…! என்று இப்படிப்பட்ட பதிவு தான் நம்மை இயக்குகிறது.

தக்க நேரத்தில் உதவிக்கு வரக்கூடிய நல்ல நண்பனாக இருந்தாலும் கூட அதைப் பார்க்க விடாதபடி இப்படித் தடையாகி விடும்.

ஆக மொத்தம் ஜாதகக்காரர்கள் சொல்வதைப் பதிவாக்கி அந்த பதிவின் நிலைகளிலேயே தான் இயங்கி நாம் வாழ்கின்றோம். இது போன்ற சாஸ்திர நிலைகள் மனிதனுக்கு இல்லை.

1.ஞானிகள் காட்டிய அருள் உணர்வுகளை நமக்குள் பெறும் பொழுது தான் இருளை நாம் போக்க முடியும்.
2.வெறும் வான இயல் சாஸ்திரத்தைப் (ஜாதகம்) பார்த்து என்ன பலன்…?

மனிதனில் உயர்ந்த அந்த அகஸ்தியன் இருளை நீக்கி ஒளியாக இருக்கின்றான். பிரபஞ்சத்தின் ஆற்றலை அறிந்தான்… ஒளியாகப் பெருக்கும் உணர்வுகளை வளர்த்தான். பேரருளைப் பெற்றுப் பேரொளியாக மாறி இன்றும் ஒளியாக இருக்கின்றான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் வானிலிருந்து பருகினால் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற முடியும் அடக்க முடியும்… ஒளியாக ஆக்கவும் முடியும்.

ஆதியிலே… மண்டலங்கள் சுழன்று… வளர்ந்து… ஆவியாகி… குளிர்ந்து… மீண்டும் ஆவியாகி… அந்தந்த மண்டலங்கள் விடும் சுழற்சி ஈர்ப்பு வெக்கை உணர்வில்… தன் வளர்ப்பின் வளர்ப்பிற்குத் தன் சுவை ஈர்ப்பை வளர்த்துக் கொண்டே வந்தது.

அவை அவை எடுத்துச் சமைத்துக் கக்கிய… பல சுவை கொண்ட பல மண்டலங்களின் தொடர்பு கொண்டு… பல அலையின் ஈர்ப்பின்… தொடர் அலைச் சேர்க்கை… சுவை அமில குண ஈர்ப்பு நிலை ஏற்பட்ட பிறகு தான் “சூரிய குடும்பமாகவும் அதிலே பூமியாகவும்” மண்டலங்கள் வளர்ந்தன.

அவை எடுத்த சுவை குண சமைப்பு அமிலத் தொடரினால் பல பல வளர் மாற்றத்தின் கூட்டுக் கலவையில் சமைத்த சத்துத் தன்மையின் சக்தி குணம் இந்தப் பூமியில் படர்ந்து தாவர இன வளர்ச்சியானது.

பின் ஜீவ சக்தி வளரக்கூடிய காற்றமில வளர்ச்சி உற்பத்தி வளர்ப்பு நிலை கொண்ட பிறகுதான்… இந்தக் காற்றான ஆவி குணத்தின் ஜீவ சக்தி வளரக்கூடிய தன்மை வளர்ந்து… பலவில் பலவாக ஆனது.

ஜீவ வளர்ச்சியின் பல பல மாற்ற சுழற்சி ஈர்ப்பின் சுழல் வட்டத்தில் மோதுண்டு மோதுண்டு ஒவ்வொரு ஈர்ப்பு மாற்றத்திலும்… ஒவ்வொரு மாற்றத்தின் சக்தியும்… ஒவ்வொரு வளர்ச்சியாக அந்த உயிரணு கூட்டிக் கொண்ட பல சுவை அமில வளர்ப்புடன் வார்ப்பாகி ஜீவ பிம்ப நிலை கொள்கிறது.

இஜ்ஜீவ பிம்பத்தில்…
1.சுவைக்கும் நிலையும்
2.செயலாற்றக் கூடிய அங்க அவயங்களும்
3.ஒளி ஈர்த்துச் செயலாற்றும் திறமையும் பல வார்ப்பில் மாறி மாறி
4.ஒவ்வொரு நிலை கொண்டு மோதுண்ட சுழற்சி வழித் தொடரில் ஒலி ஒளியாகி
5.வழித் தொடர் கொண்டு உயர் சக்தி நிலை பூண்டு மனிதப் பிம்பக் கரு ஞானம் கூடியது.

சூரியனைச் சேர்த்து நாற்பத்தி எட்டு மண்டலங்களும் ஒன்றாக இயங்கித் தன் வளர்ப்பின் வளர்ப்பாக பல நட்சத்திரங்களை வளர்த்துச் செயலாகும் சக்தியில் உருவான உரு நிலை தந்த மனித ஞான பிம்பம் வளர்ந்ததப்பா…!

மண்டல ஈர்ப்பின் சுழற்சி கதியில் நேர்ப்பார்வையில் செயல் வழியில்
1.இயற்கைத் தன்மையில் சுழலும் சக்தியையே
2.இந்த மண்டலச் சந்திப்பு நிலைதனைத் திசை திருப்பும் நிலைதனை ஏற்படுத்துகின்றனர் சப்தரிஷிகள்.

இந்தப் பூமியில் உள்ள மனிதனைக் காட்டிலும் “ஞான சக்தியில் வளர்ந்த மனிதக் கரு உரு நிலை” இந்த நாற்பத்தி எட்டுக் மண்டலங்களில் இல்லா நிலை… மற்ற சூரியக் குடும்ப மண்டலங்களில் உண்டு.

இந்தப் பேரண்ட பெரு நிலையின் வளர்ப்பு செயல் எவை…? என்று எப்படி அறிய முடியும்…?

உயிரணு தோன்றி… ஈர்ப்பு நிலையில் சிக்குண்ட செயல் வழிக்கு… முடிவில்லா உருமாற்ற நிலை வளர்ப்புச் சுழற்சியின் முடிவே இல்லை.
1.வளர்ப்பின் வளர் நிலையை உயர் வளர்ப்பின் வளர்ப்பாக்கி
2.உன்னத வளர்ப்புகளை வளர்க்க ஆரம்ப உயிரணு தான் வித்தப்பா…!

இந்த மனித பிம்ப உடல் சேமித்த பதம் கொண்ட பக்குவ நிலைதானப்பா வளர்ப்பின் வளர்ப்பை வளர்க்கும் நிலை. இதை உணர்ந்து உயர் ஞான அலையின் வழி சென்றோமானால்… “உருவாகும் உருவ சக்திக்கே நாம் உருவம் தரலாம்…!”

மனிதப் படைப்பு என்பது முழு முதல் கடவுள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இன்று சில வீட்டிற்குள் பார்த்தால் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் கீரியும் பாம்பும் போல் தான் வாழ்கின்றனர். என்னுடைய உபதேசங்களையும் கேட்டுக் கொள்கின்றார்கள். ஆனால், அதைக் கடைப்பிடிப்பதில்லை.

கேட்டுப் பயன் என்ன இருக்கின்றது…? எதற்காக வேண்டி இதைக் கேட்கின்றோமோ அந்த ஞானத்தைப் பெறவேண்டும்.

1.எனக்குக் (ஞானகுரு) கூட்டம் தேவையில்லை.
2.அருள் ஞானம் பெறும் அருள் ஞானிகளின் அமைப்பு தான் எனக்குத் தேவை
3.அந்த அருள் ஞானத்தை வளர்ப்போர் தான் தேவை.

என்னைப் போற்றித் துதிப்போர் தேவையில்லை. என்னைப் போற்றிப் புகழ்வதில் பயனில்லை. ஆனால், அந்தப் போற்றல் எவ்வாறு இருக்க வேண்டும்…?

அந்த அருள் மகரிஷிகளின் அருள் ஞானத்தை நீங்கள் ஒவ்வொருவரும் கூட்டி அந்த உணர்வின் தன்மையால் உலகம் போற்றும் உத்தமர்களாக நீங்கள் வளர வேண்டும்.

அதுதான் என்னைப் போற்றுவதாகும்.

இல்லை என்றால் என்னைத் தூற்றுவதாகத்தான் ஆகுமே தவிர நமது குருநாதரையும் தூற்றுவதாகத்தான் வருமே தவிர இதில் பயனில்லை.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடும் அருள் சக்திகளை கணவன் மனைவி இரு பாலர்களும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

1.கணவன் மனைவிக்குள் நீங்கள் ஒன்றி வாழும் நிலைகள் பெற்று
2.குடும்பத்தில் வரும் இருள் சூழ்ந்த நிலைகளை எப்படி மாற்றிட வேண்டும் என்ற நிலைக்குக் கொண்டு வாருங்கள்.

அதிகாலையில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியினைப் பெற வேண்டும் என்று எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அலைகளை எளிதில் கவர முடியும்.

யாம் உங்களுக்குள் பதிவு செய்த எண்ணம் கொண்டு அதை நுகர்ந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்துங்கள்.

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று தியானியுங்கள்.
1.இருவரும் ஒன்று சேர்த்து இவ்வாறு எண்ணினால்
2.உங்கள் குடும்பத்தில் வரும் சிக்கல்களிலிருந்து விடுபடும் உபாயங்கள் அங்கே தோன்றும்.

இதனின் துணை கொண்டு நீங்கள் வாழ்ந்து வந்தால் இன்று இந்த நஞ்சு கலந்த உலக உணர்வுகளிலிருந்து மீட்டிடும் நிலைகள் உங்களுக்குக் கிடைக்கும்.

ஏனென்றால்…
1.உலகம் எங்கேயோ போய்க் கொண்டுள்ளது.
2.மனித உருவையே மாற்றிடும் அளவிற்கு இந்தக் காற்று மண்டலம் நச்சுத் தன்மையாக மாறி எங்கெங்கோ அழைத்துச் செல்கின்றது.

இதிலிருந்து மீள வேண்டும் அல்லவா…! அதற்குத் தான் இதைத் தெளிவாகவே உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

அழுக்குச் சட்டையை மாற்றித் தூய்மையான ஆடை அணிவது போல் அருள் ஞானியின் உணர்வை நம் ஆன்மாவாக்க வேண்டும்

 

உதாரணமாக நம் மீது தெரிந்தோ தெரியாமலோ சாக்கடையைப் பூசிக்கொண்டு இருந்தால் அந்த நேரத்தில் அடுத்தவர்கள் நம்மைப் பார்த்தால் யாராக இருந்தாலும் விலகித் தான் சென்று கொண்டிருப்பார்கள.

அதைப் போல் சங்கடத்தையும் வெறுப்பையும் எடுத்து அடுத்தவரிடம் அதே எண்ணத்துடன் பேசிக் கொண்டிருந்தால் நம் மீது அவர்களுக்கு “வெறுப்பு” தான் வரும்.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால்
1.அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் புத்தாடையாக அணியும் பழக்கத்திற்கு வரவேண்டும்…
2.அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நம் ஆன்மாவாக மாற்ற வேண்டும் அது தான் தீப வழி (தீபாவளி).

ஒருவர் மட்டும் செய்வதல்ல. எல்லோரும் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை எண்ணி எடுக்கும் பழக்கம் வரவேண்டும்.

அதிகாலை துருவ தியானத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எல்லோரும் கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் எண்ணி எடுக்க வேண்டும்.

அடுத்து வெளியில் எங்கே சென்றாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி எங்கள் தொழில் முழுவதும் படர வேண்டும்… நாங்கள் பார்க்கும் அனைவரும் பெற வேண்டும் என்று அவசியம் எண்ண வேண்டும்.

வைரத்தைப் போன்று சொல்லில் ஜொலிப்பும் செயலில் ஜொலிப்பும் வாழ்க்கையில் ஜொலிப்பும் நாங்கள் பெற வேண்டும்… எங்கள் வாடிக்கையாளர் அனைவரது வாழ்க்கையும் வைரத்தைப் போன்று ஜொலிக்க வேண்டும்… எங்கள் வியாபாரம் செழிக்க வேண்டும் என்று இப்படி எண்ணி நாம் செயல்பட வேண்டும்.

அன்றாட வாழ்க்கையில் அழுக்குத் துணியை மாற்றி விட்டு நல்ல உடையை மாற்றுக் கொள்கிறோம் அல்லவா. அது போல் நம் ஆன்மாவில் படும் அழுக்கைத் துடைக்கும் ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.

உதாரணமாக மான் இருக்கின்றது. புலியைப் பார்த்தபின் தப்ப எண்ணுகின்றது. ஆனால் புலியின் உணர்வை நுகர்ந்தபின் உடலை விட்டுச் சென்ற பின் அடுத்துப் புலியாகப் பிறக்கின்றது.

மான் என்ற அந்தச் சட்டையைக் கழட்டிவிட்டு புலியின் உணர்வை ஆடையாக மாற்றுகிறது… புலியாக மாறுகிறது.

அது போல் ஒவ்வொரு நிமிடமும்…
1.நமக்குள் அந்த அருள் சக்தியைப் பெருக்கினால் இருளை நீக்கும் அணுக்கள் உடலிலே விளைகின்றது.
2.அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று நாம் எண்ணி எடுக்க வேண்டும்.

மற்றவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று பார்த்தால் அதை நுகர்ந்தால் நம் உணர்வுகள் அழுக்காகி விடுகின்றது. சாக்கடை நம் ஆடையில் பட்டு விட்டால் உடனே அந்தச் சட்டையை கழட்டி விடுகின்றோம் அல்லவா.

அழுக்கான அந்தச் சட்டையைத் துவைக்காமல் மீண்டும் போடுவோமா…?

அதைப் போன்று தான் பிறிதொருவர் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தால் அடுத்த கணம்
1.அந்த மகரிஷிகளின் உணர்வை எடுத்துத் தூய்மைபபடுத்தி
2.சட்டையை மாற்றுவது போன்று உடனே அந்த அருள் ஒளியின் சுடராக நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

இப்படி மாற்றினாலும் கூட மீண்டும் அழுக்கு சேரத்தான் செய்யும்.
1.தினமும் எப்படி அழுக்குச் சட்டையை கழட்டிவிட்டுத் தூய்மையான ஆடையாக மாற்றிக் கொண்டிருக்கின்றோமோ
2.அதே போன்று நம் வாழ்க்கையில எத்தகைய தீமை வந்தாலும்
3.உடனுக்குடன் நாம் மாற்றிக் கொண்டே இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுவது தான் தீபாவளி வேதனைப்படுகிறேன் என்று தெரிகின்றது

உதாரணமாக வேதனைப்படுகிறார்கள் என்றும் தெரிகின்றது வேதனைப்படுத்துகிறார்கள் என்றும் தெரிகிறது.
1.வேதனைப்படுபவர்கள் வேதனைப்படுத்துபவர்கள் இரண்டு பேர் உணர்வையும் நாம் நுகர்கின்றோம்
2.வேதனைப்படுபவர் மீது நான் பிரியமாக இருந்தால் இப்படிச் செய்கிறான் பார்… என்று அவரின் வேதனையை நுகர்கின்றோம்
3.வேதனைப்படுத்துவோரைப் பார்த்தபின் உலகத்திற்கே தீங்கு விளைவிக்கின்றான் என்று
4.இந்த இரண்டையுமே நமக்குள் வளர்க்கின்றோம்.

இரண்டையும் நுகர்ந்து நம் எண்ணத்துடன் சேர்த்து உடலுக்குள் சேர்க்கும் பொழுது இது ஒரு பகுதியில் வளரும் அது ஒரு பகுதியில் வளரும்.

அவர்களுக்குள் அங்கே எப்படிப் பகைமையானதோ அதே போன்று பகைமை ஊட்டும் அணுக்களே நம் உடலில் விளையும். எதிரிகளைப் போன்று உடலுக்குள் அந்த இரண்டும் சண்டை போட ஆரம்பிக்கும்.

1.வீட்டிற்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் நிம்மதியாகச் சாப்பிட முடியுமா…? சமையல் செய்ய முடியுமா…?
2.வேறு எந்த வேலையையும் சீராகச் செய்ய முடியுமா…?
3.அந்த மாதிரி நம் உடலுக்குள் சண்டை நடக்கும்.

இப்படி எல்லாம் ஆனால் நமக்குள் வேதனையும் நோயும் வருகின்றது என்று தெரிகிறது. இத்தகைய இருளை எல்லாம் நீக்கியது அந்தத் துருவ நட்சத்திரம். அந்த உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

சனியின் சக்தி எப்படிப்பட்டது…? – ஈஸ்வரபட்டர்

 

சப்தரிஷி மண்டலம் ஏழு என்று உணர்த்துகின்றார்கள் புராணத்தில்… ரிஷி மண்டலத்தின் தொடர்பு நிலை என்ன…? வாரம் ஏழு நாட்களும் ஜாதகக்காரனுக்கு பன்னிரெண்டு ராசிகளும் உணர்த்திய முறை எல்லாம் எதுவப்பா…?

சனி மண்டலக் கோளமானது அது ஈர்த்து வெளிக் கக்கும் அலையின் செயலில் திடம் கொண்டு உருவாகின்றன 12 நட்சத்திரக் கோளங்கள். அதன் சுழற்சி ஈர்ப்பில் அந்தக் கோளத்தைச் சுற்றி வருகின்றது.

சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கோளங்களும் அவை ஓடும் சுழற்சி கதியில் வருட நிலைக்கொப்ப அந்தந்த மண்டலங்களின் நேர்பார்வை
1.சனியின் ஈர்ப்புப் பிடியில் சுழன்று வரும் பன்னிரெண்டு நட்சத்திர மண்டலங்களுடன் சந்திப்பு கூடும் பொழுது
2.சந்திக்கும் மண்டலத்தின் ஈர்ப்புப் பிடியில் சிக்கிக் கரைந்து விடுகின்றன இச்சனி வளர்த்த 12 நட்சத்திரங்களும்.

நம் பூமியின் ஈர்ப்பிற்கு வருடத்தில் இரண்டு முறை சந்திப்பு நேர்ப்பார்வையாக சனியின் பார்வை படுவதினால் வட மேற்கு தென் மேற்குக் காற்றுகள் வருகின்றன.

1.ஆகவே இந்த மழைக் காலங்களை உருவாக்கக்கூடிய வித்தை ஊன்றியவனே இந்தச் சனி தான்.
2.சனியின் நேர்ப்பார்வை சந்திப்பு பூமிக்கு இல்லையேல் கால நிலையில் பெய்யும் மழை இல்லை.

அதே போன்று சனியினால் உருவாகும் 12 நட்சத்திரங்களின் ஈர்ப்பு வட்டமானது இச்சுழற்சியில் ஈர்ப்பு மாறி நேர்கோட்டில் கரையக்கூடிய சந்திப்பு நிலையானது பூமியுடன் சந்திக்கும் நிலை ஏற்பட்டால் பூமியில் இப்பருவக் காலங்களில் ஏற்படும் “இயற்கையின் சீற்றம்” அதிகம் கொள்கிறது.

சனியினால் வளர்த்துப் பூமியின் ஈர்ப்பில் கரையும் நட்சத்திர மண்டலத்தின் விகிதத் தன்மையின் மாற்றங்கள் மற்ற மண்டலங்களின் சந்திப்புக் கால நிலைக்கொப்ப மாறுபடுகின்றது.
1.இதை வைத்துத் தான் சனியைப் போல் கொடுப்பாருமில்லை…
2.கெடுப்பாருமில்லை…! என்று உணர்த்தினார்கள்.

வருடத்தில் இரண்டு தடவை சந்திக்கும் சனியின் நேர்ப் பார்வையில் சனி வளர்த்த நட்சத்திர மண்டலத்தின் சந்திக்கும் நிலைக்கொப்ப பூமியின் ஈர்ப்பில் கரையப்படும் அந்த அமில நிலையானது பூமியின் ஈர்ப்பில் வளரும் நிலை கொண்டு தான் பூமியின் இயற்கைக் கால நிலைகள் உள்ளன இன்று.

இந்நிலையில் சப்தரிஷிகளின் நிலை என்ன…?

பல கோடி நட்சத்திர மண்டலங்கள் உண்டு. வளர்ந்து கொண்டேயுள்ள சுழன்று கொண்டே மிதந்து கொண்டேயுள்ள செயலில் தான் நாம் உள்ளோம்.

மிதப்பின் மிதப்பாக… உருளும் தன்மையில் உருவமாக.. ஞானத்தை வளர்க்கும் மனிதக் கரு உரு நிலை வளர.. ரிஷிகளினால் வளர்க்கப்படும் வளர்நிலை எந்நிலை கொண்டதாக உள்ளது இன்று…?

உருவாகும் சக்திக்கே உருவகம் தந்தவர்கள் நம் சப்தரிஷிகள் தானப்பா…!
1.இந்த மனிதக் கரு உரு ஞானத்தை வளர்க்க
2.அவர்கள் ஏற்படுத்திய வழிப்படுத்தும் செயலாகத் தானப்பா இன்று நாம் வாழ்கின்றோம்.
3.அவர்கள் ஓட்டிச் செல்லும் வாகனத்தில் அமர்ந்துள்ளவர்கள் தான் நாம்.

சூரியனை ஜீவனாக வைத்து நாற்பத்தி ஏழு மண்டலங்களை அங்கங்களாக வைத்து உருவாக்கிய வாகனத்தில் அமர்ந்துள்ள ஜீவ சக்தியை ஓட்டிச் செல்பவர்கள் சப்தரிஷிகள் தானப்பா…!

ஜீவ சக்தி உருவாகும் நிலை எப்படி…?

மிதந்து கொண்டேயுள்ள பல் சுவை கொண்ட நீரின் ஆவியானது திடம் கொண்டு கனமாகி.. ஈர்ப்பின் சழற்சியில் ஆரம்ப ஈர்ப்பு நிலைக்கொப்ப… மிதந்து கொண்டேயுள்ள நிலையிலிருந்து கனமாகி… “உந்தித் தள்ளும் ஈர்ப்பின் நிலை பெறுகின்றது…”

எச்சுவையை ஆரம்பத்தில் ஈர்த்து ஈர்ப்பிற்குச் சுழன்று தங்க இடம் கொள்ளாது பல சுவைகளை ஈர்த்து கனம் கொண்டு திடமாகி நகர்ந்து ஓடுகின்றது.

“தங்க இடம் கொள்ளாமல்…!” தன் சுழற்சியின் ஈர்ப்பில் சுழன்று வளர்ந்தது தான் சூரியன் சந்திரன் வியாழன் புதன் சனி மற்றெல்லா வளர்ந்த மண்டலங்களும்… மற்ற நாம் காணும் நட்சத்திர மண்டலங்களும்…!

இயற்கையின் செயலாக்கங்களையும் சப்தரிஷிகளின் செயலாக்கங்களையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே சிறுகச் சிறுக உங்களுக்குள் புகட்டி வருகின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

உதாரணமாக பூனை ஒரு எலியை உற்றுப் பார்க்கிறது. அதைத் தன் உணவுக்காகத் தாக்க வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.

பூனையின் உணர்வின் அழுத்தம் எலிக்குள் வரப்படும்போதுதான் அந்த எலியின் உணர்வின் இசைகள் மாறுகின்றது. எலியின் சுருதிகள் குறைகின்றது. எலி உடலுக்குள் (உயிர்) இருக்கும் வரையிலும் சோக கீதமாகின்றது.

அதை அடக்கி வெளி வந்தபின் இது பூனையின் ஒலியின் உணர்வுகளுடன் இசைக்கப்படும்போது இனிமை கொண்ட உணர்வாக அந்தப் அது பூனையின் உடலுக்குள் சென்று மகிழ்ந்திடும் உணர்வின் ஒலியாக அது பெறுகின்றது.

பூனை தன் இரைக்காகப் பார்த்த இந்த உணர்வுகள் எலியைத் தன் இரையாக்கப்படவில்லை என்றாலும் பூனையின் உணர்வுகள் எலிக்குள் நுகர்ந்தபின் “அதர்வண”.

அந்தப் பூனையின் வாசனை எலி உடலுக்குள் வந்தபின் இதை அடக்கி இந்த உணர்வின் தன்மை மாறுபடுகின்றது.

ஒரு பெட்டிக்குள் (ஒரு டப்பாவிற்குள்) போட்டபின் நீங்கள் இசைத்தால் எப்படி இருக்கும்..? சப்தம் வராது. இதனுடைய எதிரொலி அழிக்கப்பட்டு விடுகின்றது.

ஏனென்றால் எலியின் உணர்வுகளுக்குள் இந்த அச்சுறுத்தி வாழும் அந்தப் பூனையின் உணர்வலைகள் வலுப்பெற்றபின் இதற்கு எதிர்மறை ஆகின்றது. அப்பொழுது எலியின் வீரிய உணர்வுகள் தடைபடுகின்றது.

இவ்வாறு ஆன பின் எலி உடலிலிருந்து வெளிப்பட்ட இந்த உயிரான்மா வலுக்கொண்ட அந்தப் பூனையின் உணர்வுக்குள் ஈர்க்கப்பட்டு விடுகின்றது.

எலி பூனையின் உடலுக்குள் சென்று அது மகிழ்ச்சி பெறும் உணர்வின் அணுக்களாகி அதனின் ரூபத்தை உருவாக்குகின்றது அந்த உயிர். இது உபநிஷத்துக்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

அதற்காகத்தான் விநாயகர் அருகே வேம்பை வைத்துக் காட்டினார்கள் ஞானிகள். நம் வாழ்க்கையில் கசந்த உணர்வுகள் வந்தால் அது சோகக் கீதமாக நமக்குள் உருப்பெறும்.

அதனால் வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் உருப்பெற்று ஒவ்வொன்றும் இசைகள் மாறிவிடுகின்றது.

மகிழ்ந்திடும் நிலைகள் கொண்டு ஒன்றிணைத்த நிலை இல்லாதபடி வேதனைகள் வளர்ந்து மகிழ்ச்சி என்ற உணர்வுகள் தோன்றும்போது இனிமையற்ற நிலைகளில் உருவாக்கிவிடுகின்றது.

இவ்வாறு மனிதனின் நிலைகள் உருப்பெறப்பட்டு இசைகள் மாறப்பட்டு இசையில் மாறிய அணுக்கள் ஒன்றொன்றும் மாற்றப்பட்டு இந்த உணர்வுகள் திசை மாறிவிடுகின்றது.

திசை மாறினாலும் இந்த உணர்வுக்கொப்ப உயிர் அணுக்கள் மாற்றம் அடைந்துவிடுகிறது. அதன் வழி ஒருக்கிணைந்த நிலைகளாக விஷத்தின் தன்மைகளை அது பெற்றதால் இன்னொரு உடலுக்குள் போனாலும் அதையே நிர்ணயப்படுத்திக் கொள்கின்றது.

சோகமான வேதனையான விஷமான உணர்வின் இசை அதற்குள் நிரப்பப்பட்டு அந்த உணர்வுகள் உண்டாக்கப்பட்டு அந்த மனித உடலை விட்டு வெளியே வந்தால் எங்கே செல்லும்…?

இதிலே வளர்த்த இசையின் சுருதி எந்த உடலில் உள்ளதோ அதனின் ஈர்ப்பு வட்டத்திற்கு இந்த உயிர் அழைத்துச் சென்று அந்த மகிழ்ச்சி பெறும் இசையாக அதற்கொத்த நிலைகளில் உருமாற்றிவிடும். விஷமான உயிரினமாக மனிதனை மாற்றிவிடும்.

இது உபநிஷத்துக்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

துருவ மகரிஷி இத்தகைய நிலைகளை ஒடுக்கி மகிழ்ச்சி பெறும் உணர்வினை தனக்குள் வளர்த்து இன்றும் துருவ நட்சத்திரமாக வீற்றிருக்கின்றான்.

அது “ரிக்”. அதனின்று வரக்கூடிய மணத்தை நாம் “சாம” அந்த உணர்வின் தன்மை நமக்குள் பெருக்குதல் வேண்டும்.

இந்த மனித வாழ்க்கையில் கசந்த உணர்வுகள் அதிகரித்திருப்பினும் அதனால் விளைந்த அணுக்களின் தன்மை நமக்குள் கூடியுள்ளது. கூடியுள்ள கசந்த உணர்வினை நாம் அடக்குதல் வேண்டும்.

வேதனையான உணர்வின் தன்மை நமக்குள் கூடியிருந்தால் வேதனை கொண்ட உடலைப் பெற்று அந்த விஷமான சக்தியைத் தனக்குள் எடுத்து அதை உணவாக உட்கொள்ளும் உணர்வின் இசையாக மாறிவிடும் – சாம.

ஒரு மனிதனுக்குள் மனிதன் அந்த மனிதன் பற்றுக்கொண்டு வந்தால் அவன் உடலில் உள்ள நஞ்சினைச் சுவாசிப்பதற்கே அங்கே வளர்த்து அதனைச் சுவாசித்துத் தனக்குள் பெருக்கிக் கொள்ளும்.

பின் அந்த உடலை விட்டுச் சென்றுவிட்டால் விஷத்தை உணவாக உட்கொள்ளும் உடலின் ஈர்ப்புக்குள் சென்று தன் நிலையை (மனித) ரூபத்தை மாற்றிவிடும்.

இதைப் போன்ற நஞ்சின் தன்மையை அடக்கி ஒளியாக மாற்றியவர்கள் மகரிஷிகள். பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானான்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை சூரியனுடைய காந்தப்புலனறிவு அது கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. நம் பூமிக்குள் நமக்கு முன் பரவி வருகின்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வை நமக்குள் பதிவாக்கி நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நஞ்சினை ஒடுக்கிடும் வலுவைப் பெற வேண்டும்.

அதிகாலை 4:30 மணியிலிருந்து 6 மணிக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலிலுள்ள ஜீவாத்மா ஜீவணுக்கள் முழுவதும் பெற வேண்டுமென்று அந்த “உயர்ந்த இசையின் உணர்வை..,” நமக்குள் பெருக்குதல் வேண்டும்.

அந்த உணர்வின் தன்மையை நமக்குள் பெருக்கி விட்டால் அதனின் உணர்வுகள் பெருகி தீமையின் உணர்வுகள் கொண்ட இந்த உடலில் தீமைகளை அகற்றிடும் உணர்வுகள் வளரத் தொடங்கும்.

குறைகளையே சொல்லிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் அதிலிருந்து மீட்கும் மார்க்கங்களைச் பேசிப் பழக வேண்டும்

 

தீமையை அகற்றும் வல்லமையை ஒவ்வொருவரும் பெற வேண்டும்.
1.ஒவ்வொருவரும் நம் குருநாதரைப் போன்று ஆகவேண்டும்… குருநாதராக மாற வேண்டும்.
2.சாமி (ஞானகுரு) தான் பக்கத்திலிருந்து கொடுப்பார்… என்று எண்ணாதீர்கள்.

குருநாதர் கொடுத்த ஞான வித்தை உங்களிடம் விதைக்கின்றேன். நீங்கள் அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். “சாமி செய்வார்…” என்று எண்ணி அதை வளர்தது விடாதீர்கள்.

எல்லாவற்றையும் சாமி பார்த்துக் கொள்வார்… எல்லாமே சாமி செய்வார்… நாங்கள் வளர்ந்து விடுவோம்…! என்று எண்ணினால் அது எப்படி வளர முடியும்…?

எல்லாமே சாமி பார்த்துக் கொள்வார் என்று உங்களுக்குப் பதிலாக நான் சாப்பிட்டால்… நீங்கள் பட்டினியாக இருந்தால் யார் பார்ப்பது…?

1.நம்பிக்கை எப்படிச் செல்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
2.தன்னை நம்புவதில்லை… சாமியைத் (ஞானகுரு) தான் நம்புகிறார்கள்.

ஆனால் “சாமி சொன்ன அருளை நமக்குள் வளர்த்துக் கொண்டோம்…” என்றால்
1.அது எவ்வளவு பெரிய வேலை செய்யும்…? என்று உணர்ந்து கொள்ளுங்கள்.
2.யாம் சொல்லும் அருள் ஞானிகளைப் பற்றிய உபதேசங்களை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.
3.அப்போது தான் உங்களுக்குள் இது பெருகி விளையும்.

உதாரணமாக ஒருவரைப் பார்த்து “அவர் மோசமான ஆள்… ரொம்பவும் மோசமான ஆள்…!” என்று பேசிக் கொண்டே இருங்கள். உங்களுக்குள் அது அதிகமாக விளையும்… பார்க்கலாம் நீங்கள்.

வீட்டிற்குள் நுழைந்தால் சண்டை நிச்சயம் வரும்… உங்கள் வியாபாரம் மந்தமாகும்… இப்படிச் செய்கிறார் என்று யாருடனாவது வம்புக்கு இழுத்துக் கொண்டு போகும்.

ஆக எதைப் பேசுகின்றோம்…? குறைகளைத் தான் பேசுகின்றோம்.

1.அதை எல்லாம் நீக்குவதற்குண்டான மார்க்கங்களை நீங்கள் பேசிப் பாருங்கள்.
2.யாம் சொல்லும் இந்தப் பேருண்மைகளை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

குறை என்று தெரிகின்றது. அடுத்த கணம் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைத் தனக்குள் எடுத்து அவர்களும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அவர்களை அறியாது சேர்ந்த இருளை நீக்க வேண்டும்..! என்று இதனைக் கலந்து நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

குறை நமக்குள் வளரவே வளராது…! அவர்களுக்குள்ளும் வளராது தடுத்துவிடும்.

அருள் வழியில் இப்படி நடக்க வேண்டும் என்று இதனை எடுத்துச் சொல்லுங்கள். தீமைகள் பாதிக்காது என்றும் எடுத்துச் சொல்லுங்கள். இதை எல்லாம் தெளிவாகவே ஞானிகள் நமக்குக் கொடுக்கின்றார்கள்.

ஆனால் குறைகளைச் சொல்லிச் சொல்லி அதையே ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும் போது அது என்னையும் தாக்குகின்றது. என்னை நான் பாதுகாத்துக் கொள்ளவே பெரிய கோட்டை கட்ட வேண்டி இருக்கின்றது. அமைதியாக உட்கார வேண்டி இருக்கின்றது.

உங்களுக்குச் சக்தியும் கொடுத்து அதே சமயத்தில் நீங்கள் அறியாது ஏதாவது செய்தாலும் அந்தத் தீமை வராது காக்கக்கூடிய சக்தியாகவும் நான் இருக்கின்றேன்.

“குருநாதர் ஒளியாகி விட்டார்…” என்று அவரை விட்டுவிட்டு நான் தனியாக இருந்தால் என்ன ஆகும்…?
1.அவர் என்னைக் காப்பாற்றுவார் என்று சொன்னால்…
2.அவர் சொன்னபடி அந்த எண்ணத்தை எடுத்தால் என்னைக் காப்பாற்றும்.

கடையிலிருந்து சரக்குகளை வாங்கிக் கொண்டு வந்தாலும் அதை சமைத்து சாப்பிட்டால் தானே சரியாக இருக்கும். சமைக்காமல் சாப்பிட முடியுமா…?

ஆகவே அந்த அருள் ஒளியை எடுத்து நமக்குள் சமைக்க வேண்டும். உயர்ந்த சக்திகளை எடுத்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு ஆகாரமாகக் கொடுத்துப் பழக வேண்டும்.

குருநாதர் எனக்குக் கொடுத்த அதே வழியில் தான் உங்களுக்கும் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

உயர் சக்திகளை உருவாக்கி வளர்ப்பதற்கு எண்ணத்தால் எடுக்கும் ஞானச் சுழற்சி ஜீவன்கள் அவசியம் தேவை – ஈஸ்வரபட்டர்

 

1.வளர் சக்தியான உயர் ஞானம் மனித பிம்பத்திற்கு எப்படி வந்தது…?
2.சொல்லாற்றல் செயலாற்றல் என்று உரைக்கும் வழித் தொடர் ஞான வளர்ச்சி நிலை உருவானது எந்த நிலை கொண்டு..?
3.நாற்பத்தியேழு கோளங்களில் இல்லாத சக்தி இந்தப் பூமி வளர்த்த மனித ஞானத்திற்கு எப்படி வந்தது..?
4.ஜாதகம் பார்ப்பவரால் சனி மண்டலத்தைத் தருவான்… அழிப்பான்… என்று உணர்த்திய முறை எல்லாம் எப்படியப்பா வந்தது…?

சந்திரன் செவ்வாய் புதன் வியாழன் ராகு கேது சூரியன் இப்படி நாற்பத்தியேழு கோளங்களுக்கும் இல்லாத் தன்மை நம் பூமிக்கு உண்டு.

பார்க்கின்றான்.. கேட்கின்றான்… சுவைக்கின்றான்… நுகருகின்றான்… வாழுகின்றான் பல சக்தியையும் பெற்ற மனித பிம்பம் (மனிதர்கள்).

சுழற்சி கதியின் இயற்கை வளர்ச்சி செயல்தான் சூரியனே தவிர நினைத்த செயலைச் செயலாக்கும் எண்ண ஞான வளர்ச்சி சூரியனுக்கே இல்லை.
1.சூரியனுக்கே இல்லாத ஞான வளர்ச்சியின் செயல் மனிதனுக்கு எப்படி உருப்பெற்றது…?
2.இந்த நிலை கொண்ட மனித சக்தி எப்படி உருவானது…?

மிதந்து சுழன்று ஓடிக்கொண்டேயுள்ள சூரியனின் வளர்ச்சியின் அங்கங்கள் தான் சூரியக் குடும்பத்தின் நாற்பத்தியேழு மண்டலங்களும்… சூரியனைச் சேர்த்தால் நாற்பத்தியெட்டு.

இஜ்ஜீவ பிம்ப உடல் கோளத்தில் இயங்கும் அவயங்களைக் கொண்டு தான் (கை கால் ஐம்புலன்கள் மற்றும் உடலில் உள்ள உள் உறுப்புகள்) மனித பிம்ப ஆத்மாவின் வளர்ச்சி நிலை உள்ளது.

அதைப் போல் சூரியனின் அங்கங்களாக ஒன்றின் ஈர்ப்பின் துணை கொண்டு ஒவ்வொன்றின் வளர்ச்சியுமே அது வளர்க்கும் சக்தி கொண்ட உரத்தைச் சூரியன் பெறுகின்றது.

சூரியன் இயங்கிட… செயல்பட்டிட.. சூரியனின் அங்கங்களாக உள்ள நாற்பத்தியேழு மண்டலத்தின் துணை வேண்டும். அது இல்லையேல் சூரியனுக்குச் செயலில்லை.

மனிதனின் உடல் உறுப்பில் செயல்புரியும் அங்கமாக மனித இருதயத்திற்கு எந்தச் செயல் உள்ளதோ அந்தச் செயலைப் போன்ற நிலையைத் தரவல்ல மண்டலம் தான் சனி மண்டலம்.

சனியின் சக்தியினால் அது எடுத்து வெளிக்கக்கும் அமில ஈர்ப்பின் குளிர் தன்மையான ஆவி சக்தி சூரியனுக்கு இருதயம் போன்று செயல் கொள்கிறது.

மனித அங்கத்தின் செயலைப் போன்று ஒவ்வொரு மண்டலத்தின் செயலும் சூரியனைச் செயல்படுத்துகிறது.

ஆனால் ஜீவ ஆத்மாவான சூரியனின் அங்க அவயங்களான நாற்பத்தியேழு மண்டலங்களில் உருவத்தின் ஞானத்தின் சொல் எண்ண வலுவாற்றல் வளர் குழந்தையை வளர்ப்பது இந்தப் பூமி தான்.

நாற்பத்தியேழு மண்டலங்களின் அவயங்களை சூரிய பிம்ப ஜீவன் வளர்க்கும் வளர்ப்பு நிலை செயல் “இந்தப் பூமியில் வளர்த்த மனித பிம்ப வளர்ச்சியைக் கொண்டுதான் வளர்ந்திட முடியும்…!”

சப்தரிஷிகளின் சக்திச் செயலாக…
1.இந்தப் பூமிக்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே
2.வளர்ப்பின் வளர்ப்புக்கான இந்தப் பூமிக்குப் பல அலைத் தொடரின் ஈர்ப்பு சுழற்சியை ஏற்படுத்திய நிலை கொண்டு
3.எந்நிலையையும் உருவாக்கவல்ல தெய்வ சக்தியை உருவாக்கும்
4.மனித பிம்ப ஞானத்தை வளர்க்கச் செயல் கொண்டனர்.

ஏனென்றால் உருவாக்கும் உயர் சக்திக்கு எண்ணத்தால் எடுக்கும் ஞானச் சுழற்சி ஜீவன்கள் அவசியம் தேவை
1.இந்தப் பூமியின் சக்திக்கு இவ்வீர்ப்பு அலையின் சுழற்சியைச் சுழலச் செய்து
2.ஜீவ பிம்ப மனித ஞானத்தை வளர்க்க
3.சூரியனை மையப்படுத்தி இந்த நாற்பத்தியேழு மண்டலங்களிலிருந்து வெளிக்கக்கும் அலைத் தொடர்பைத் தான் எடுத்து
4.பல பிரளய மாற்றங்கள் தந்து இந்தப் பூமியில் மனிதக் கரு ஞானத்தை வளர்த்தான் சப்தரிஷி.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

உயிருடன் ஒன்றிடும் உணர்வினை ஒளியாக மாற்றி விண்ணின் ஆற்றலை உங்களுக்குள் வளர்த்து என்றும் அழியாத ஒளிச் சரீரமாக மாற்றும் நிலை நிலையே இப்பொழுது உபதேசிக்கும் தியானத்தின் அற வழிகள்.

ஆகவே… எமது உபதேசத்தைக் கேட்டுத் தியானமிருக்கும் அனைவருமே குடும்பத்திற்குள் ஒற்றுமையின் நிலையைப் பெருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இல்லை என்றால் பயனற்றது. ஆகவே பயனுள்ள நிலையாகப் பெருக்குதல் வேண்டும்.

1.ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களுக்குக் கொடுக்கும் சக்தி இவ்வளவு தான் என்று உங்களால் அளவிட முடியாது.
2.“அவ்வளவு உயர்ந்த சக்தியை..” குரு அருளால் உங்களுக்குள் பதியச் செய்திருக்கின்றோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் துணை கொண்டு பேரண்டத்தின் இயக்கத்தையே கவர்ந்து அந்த உணர்வின் தன்மை கொண்டு அறியாது வந்த இருளை மாய்த்திடும் சக்தியாக குரு உங்களுக்குக் கொடுக்கும் உணர்வைத்தான் ஆழமாகப் பதியச் செய்கின்றோம்.

இதை நீங்கள் அமர்ந்து எளிதாகக் கேட்கின்றீர்கள்… படிக்கின்றீர்கள். நான் காடு மேடெல்லாம் அலைந்துதான் அதைப் பெற்றேன். பெற்ற உணர்வின் தன்மையை வளர்த்துக் கொண்டதை நீங்கள் எல்லோரும் பெறவேண்டும்.

உங்களை அறியாது சேர்ந்த இருளிலிருந்து உங்களை நீங்கள் மீட்டிட வேண்டும். அந்த எண்ணத்தின் வலு கொண்டே உங்களை நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும்.
1.எவரும் உங்களைக் காக்க முடியாது
2.“காத்திடுவேன்…. என்று சொல்வதெல்லாம்… பிரமையே…!”

இந்த மனித வாழ்க்கையில் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி
1.விண்ணின் ஆற்றல் நீங்கள் பெற்று
2.இந்த மண்ணின் ஆற்றலுக்குள் இருக்கும் தீமைகளை அகற்றுங்கள்.

ஒவ்வொரு நாளும் இதைத் தெளிவாகத் தெளிந்து இந்த வாழ்க்கையில் குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அதே உணர்வின் சக்தியாக, ஒளியாக மாறும் சக்தி பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் உங்கள் நினைவலைகள் இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.

நம் உடலில் உள்ள இரத்தத்தை அடிக்கடி தூய்மைப்படுத்திக் கொண்டே வர வேண்டும்

 

அந்த ஒளியின் சுடராக எல்லோரும் ஆக வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோம். இந்த உணர்வுகள் சூரியனால் கவரப்பட்டுப் பரமான இந்தப் பூமியில் பரமாத்மாவாகப் பரவுகின்றது.

நம் கண் கருவிழி பதிவாக்கியதைக் மீண்டும் நினைவாக்கப்படும் போது கருவிழியுடன் சேர்ந்த காந்தப் புலனறிவு அதனைப் பரமாத்மாவில் இருந்து கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றிக் கொள்கின்றது.

1.நம் ஆன்மாவாக மாற்றி இங்கே சேர்த்தபின்
2.உணர்ச்சியைத் தூண்டுவதற்கொப்ப உயிர் அதை உள்ளே இழுத்து
3.உடலுக்குள் இருக்கும் அதனதன் அணுக்களுக்கு உணவு கொடுக்கின்றது.
4.உடலில் இருக்கும் ஜீவன்மாக்களுக்குச் சேருகின்றது.

இரத்தத்தின் வழி கொண்டு உடல் முழுவதும் அந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சுகின்றது. ஜீவான்மாக்களுக்குள் அப்பொழுது செல்கின்றது.

அதனால்தான் இராமன் முதலில் குகனைத் தன் சகோதரன் ஆக்கிக் கொள்கின்றான் என்று இராமாயணத்தில் காட்டுகின்றனர்.

குகன் என்பவன் ஆற்றிலே படகை ஓட்டிச் செல்கின்றான். அதாவது நம் உடலில் இருக்கும் இரத்தங்கள்தான் ஆறாகவும் ஓடையாகவும் ஓடுகின்றது.

இந்த உடலான குகைக்குள் அருள் ஒளியின் சுடரை எடுத்துப் பெருக்கப்படும் பொழுது பகைமையற்ற உணர்வாக நம் உடலில் இருக்கக்கூடிய எல்லா உறுப்புகளுக்கும் இந்த இரத்தத்தின் வழியாகச் செல்கிறது.

1.இந்த உணர்வுகள் தன்மை நம் உடலுக்குள் நட்பின் தன்மையை உருவாக்குகின்றது
2.அதற்காக வேண்டித் தான் இராமன் குகனை நட்பாக்கிக் கொள்கின்றான்.

சீதா…! என்று நம் இரத்தத்தில் உயர்ந்த குணங்களை எடுத்து வளர்த்துக் கொண்டால் நம் உடலுக்குள் எல்லாவற்றிலுமே நல்லதைச் செய்யும் என்பதுதான் பொருள்.

காடு வனாந்தரங்களுக்குள் சென்றாலும் பகைமையற்ற உணர்வை நமக்குள் வளர்க்கும் தன்மை வருகின்றது. ஆகவே அடிக்கடி நம் இரத்தநாளங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எதைக் கொண்டு…?

அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் இரத்தநாளங்களில் அது கலக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய எல்லா இடங்களுக்கும் அந்த இரத்தம் செல்கின்றது.

1.உடல் உறுப்புகளுக்குள் எங்கெங்கெல்லாம் தீங்கு விளைவிக்கும் தன்மைகள் வருகின்றதோ அதை எல்லாம் இது அடக்குகின்றது.
2.நம் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்களைத் தூய்மைப்படுத்த இந்த முறையைக் கையாள வேண்டும்.

அந்த மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து அடிக்கடி நம் இரத்தத்தைப் பரிசுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். எதிர்மறையான உணர்வின் இயக்கங்கள் வராது சமப்படுத்தும் சக்தியாக வரும்.

மன அமைதியும் சாந்தமும் ஞானமும் கிடைக்கும்…!

சிவசக்தி இல்லை என்றால் வளர்க்கும் சக்தியே இல்லை – ஈஸ்வரபட்டர்

 

இந்த மனித பிம்ப உடல் ஞான ஆத்மாவுக்குத்தான் சொல்லாற்றலும் செயல் திறமையும் பகுத்தறியும் எண்ண வளர்ச்சியும் கொண்ட நிலை உள்ளதனால்
1.இந்நிலையை வளர்க்கும் முறை
2.ஆத்ம தியானம் பெறும் முறை ஒன்றினால் தான் முடியும்.

அனைத்து அண்ட கோடிகளையும் வளர்க்கும் அறியும் நிலை கொண்ட சக்தி இந்தப் பிம்ப உடலுக்குத்தான் உண்டு. இருந்தாலும் இந்தப் பிம்ப உடலிலும் “தனித்த ஆத்ம தியானத்தால்” உயர் ஞானக் கூட்டினைப் பெருக்க முடியாது.

ஆண் பிம்ப உடலுக்கு அமிலப் படைப்பைப் படைக்கத்தான் முடியும். ஆண் விடும் சுவாச அலையினால் மரம் செடி கொடிகள் தாவர இன வர்க்கத்தையும் மலைகள் உலோகப் பொருள்கள் இந்நிலை போன்ற சில பிம்பப் படைப்பாகத்தான் ஆண் வர்க்கச் சுவாச அலையில் உருப்பெறும் உரு நிலையுள்ளது.

இந்த உரு நிலைக்கு ஜீவன் தரக்கூடிய சக்திக் கூட்டு அலைகள் பெண்மையின் சுவாசக் கூட்டிற்கு உண்டு. பெண்ணினத்தின் சுவாச அலையிலிருந்துதான் புழு பூச்சி வண்டினங்கள் யாவையுமே ஜீவன் கொள்கின்றது.
1.நம் பூமியின் பிம்பமே “சிவ” பிம்பம் தான்
2.இந்த சிவ பிம்பனுக்கு ஈர்ப்புக் குணம் தந்தவள் “சக்தி” சுழற்சி தான்,
3.அமிலப் படைப்பு ஆணினம்
4.சக்தி ஈர்ப்பு பெண்ணினம்.

வளர்க்கும் முதல் இன அமில இனம்… ஆதி முதல்வனே… விநாயகனே… என்று உணர்த்திய “சிவ சக்தி” என்ற உரு நிலைக்கு உருவ வளர்ப்பின் வளர் நிலையின் ஆதி நிலையான சிவன் சக்தி என்ற ஆண் பெண் நிலையான அமிலக் கூட்டமைப்பு தான்.

அந்த ஈர்ப்பு சுழற்சியில் வளர்ப்பின் வளர்ப்பிற்கு நீர் நெருப்பு காற்று இவற்றை வளர்க்கும் முதல் நிலையான விநாயக குண நிலைக்கு வளர்ப்பின் வளர் நிலை சுழற்சியில்… வளரும் ஜீவ சக்திக்கு முருகன் என்ற குணப்படைப்பும்… முருகனுக்குத் துணை சக்தியான ஆசை குண தெய்வானையும்… தேவைக்கும் மேல் பேராசை வளர்ப்பு நிலை தான் வள்ளி குணம்.

முருகனுக்குப் பிள்ளையைக் காட்டவில்லை புராணம்…!

பூமியின் இயற்கை உண்மை உற்பத்தி முறையத்தான் சிவ சக்தியாக்கி ஆதிமுதல்வனாக விநாயகனைக் காட்டி சிவ சக்தி என்ற இந்தப் பூமியானது தன் வளர்ப்பின் வளர்ப்பிற்கு ஆவியாகி… பிம்பமாகி… நீர் நிலம் காற்றை எப்படி முதலாக வளர்த்ததோ அதனை விநாயகனாக உணர்த்தினார்கள்.

முருகன் என்ற பல குண நிலைகளை ஜீவ பிம்ப உடலாக்கி ஆசை என்ற அன்பைக் காட்ட தெய்வானையை உணர்த்தி இன்று வாழக்கூடிய நிலையான பேராசை வள்ளியை உணர்த்திச் சென்றான் அச்சித்தன்.

பூமி மட்டுமல்ல… உருவாகும் ஜீவ சக்தி அனைத்துமே ஒவ்வொன்றுமே
பிம்பம் சிவன்…
சக்தி ஈர்ப்பு…
வளர்ப்பு விநாயகன்…
பொருள் முருகன்…
தேவை தெய்வானை…
தேவைக்கு மேல் உணரும் பேராசை வள்ளியம்மை தான்…!

படைப்பின் உண்மை நிலை இது…!

படரும் வழி முறை இந்நிலை படைப்பான
1.அமிலத்தை ஆண் இனச் சுவாசம் படைக்கின்றது
2.ஜீவ சக்தியின் அலையைப் பெண் இனம் வளர்க்கின்றது.
3.படைப்பில்லையேல் ஜீவ பிம்பத்திற்கு உயிர்த் துடிப்பு இல்லை…
4.உயிர்த் துடிப்பிற்கு பிம்ப உடல் இல்லையேல் செயலில்லை.

உருவாகும் உயிர்க் கருவிற்கு அமில பிம்பத்தைத் தருவது ஆண் இனம். சக்தி ஈர்ப்பு ஜீவன் தருவது பெண் இனம். ஆணின் வித்து அமில வித்துத் தான். பெண்ணின் வித்து ஜீவத் துடிப்பு வித்து.

அமிலப் படைப்பைப் பெண்ணினம் ஏற்று ஜீவ சக்திக் கருவை வளர்க்கின்றது “தாயினம்…”

ஜீவ சக்திகளின் உண்மைப் படைப்பு எப்படி உள்ளதோ அதை ஒத்துத்தான் ஆதம தியானம் பெறும் வாழ்க்கை முறைக்கும் பெண்மையின் சக்தியின் ஈர்ப்பை ஆண் இனச் செயலில் பதிக்கும் நிலையில் தான் ஞான வளர்ச்சியும் அமைதியும் வழி கூட முடியும்.

1.சக்தித் தொடர்பு… சிவ பிம்பம் இணைந்து… வாழ்க்கையைப் போல் வளர்ந்தால் தான் உயர் சக்தி பெற முடியும்.
2.சிவ சக்தி இல்லையேல் வளர் சக்தி இல்லை…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இது வரையிலும் உபதேசித்த உணர்வின் தன்மை கொண்டு “நான் பேசுகின்றேன்..,” என்று யாரும் எண்ண வேண்டாம்.
1.மகரிஷிகளின் உணர்வின் அலைகளே
2.இந்த “உணர்வின் ஒலிகளை..,” எழுப்பிக் கொண்டுள்ளது.

இன்று நாடக்களில் காந்த ஊசியை (COMPUTER DRIVES WITH LASER) வைத்துப் பதிவு செய்து கொண்ட பின் அதை இயக்கும்போது பதிவானது திரும்பவும் ஒலிக்கின்றது.

அதைப் போன்று தான் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் உணர்வுகள் எனக்குள் பதிந்தது. பதிந்த உணர்வின் அலைகளே உபதேசமாக இங்கே வெளி வருகின்றது.

“அவர்…” எனக்குள் இருந்து கொண்டு பேசவில்லை.

சிலர் என்ன நினைக்கின்றார்கள் என்றால் என் உடலுக்குள் வந்து “அவர் பேசுகின்றார்..” என்று. அவர் இந்த நரகலோகத்திற்குள்ளேயா வருவார்..,?

வர மாட்டார்.

அவர் தனக்குள் பெற்று வளர்த்துக் கொண்ட உயர்ந்த உணர்வுகளை எனக்குள் பதிவாக்கினார். அந்தப் பதிவைத்தான் நினைவாக்கி அந்த உணர்வின் தன்மை நீங்கள் பெற வேண்டும் என்று இதைச் செய்கின்றேன்.

அவரிடம், “எல்லாம் சரி…” என்று சொல்லிவிட்டு காசுக்காக வேண்டும் என்று எண்ணி இருந்தேன் என்றால் இந்த உடலுக்குக் காசைத் தேட வேண்டும் என்ற உடலின் இச்சைதான் எனக்கு வந்திருக்கும்.

அருள் ஞானத்தை நான் பெற்றிருக்க முடியாது. அந்த ஆற்றல்களைப் பெறக்கூடிய தகுதியையும் இழந்திருப்பேன்.

ஆக… காடு மேடெல்லாம் பல காலம் என்னை அலையச் செய்தார் குருநாதர். அங்கே பல அனுபவங்களைப் பெறும்படி செய்தார். பேரண்டத்தின் பேருண்மைகளை எல்லாம் எனக்குள் காட்டினார்.

1.அப்பொழுது… நான் அவரை உற்று நோக்கிக் கூர்ந்து கவனித்த அந்த உணர்வுகளே எனக்குள் அழமாகப் பதிவானது.
2.அதைத்தான் உங்களிடம் சிறுகச் சிறுக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

குருநாதர் தன் உடலை விட்டு அகன்றபின் ஒளியின் நிலைகள் பெற வேண்டும் என்றார்.

ஒளியின் நிலைகள் பெறும் உணர்வை நாடாக்களில் (MEMORY DEVICE) பதிவு செய்வது போல் என் உடலுக்குள் அதை ஊழ்வினையாகப் பதிவு செய்தார்.

பதிந்த உணர்வை நான் திரும்ப எண்ணும் பொழுது வினைக்கு நாயகனாக அது இயக்குகின்றது.
1.அதன் மூலம் “நானும் பெறுகின்றேன்… உங்களையும் பெறச் செய்கின்றேன்…”
2.இது தான் இதில் உள்ள நிலை.

அவ்வாறு பதிந்த நிலைகள் கொண்டு எனக்குள் கண்டுணர்ந்த உணர்வுகள் தான் இசையாக மாறுகின்றது. ஆனால் அவ்வாறு பெற்ற அருள் ஞானத்தை எனக்குள் அடக்கி வைத்துக் கொண்டால் நான் நுகரும் தன்மை இல்லை.

குருநாதர் காட்டிய அருள் வழியில் “ஒன்று… இரண்டு… மூன்று…” என்று படிப் படியாகத் தொடச் சொன்னார்.

அவர் எந்த இசையில் படித்தாரோ அந்த உணர்வின் தன்மை இங்கே இயக்கப்படும் பொழுது நானும் அதைப் பெறுகின்றேன். உங்களுக்கும் கிடைக்கச் செய்யும் சந்தர்ப்பதை ஏற்படுத்துகின்றேன். இவ்வளவு தான்.

யார் ஒருவர் இதைப் பெற்று மகிழ்கின்றீர்களோ அந்தப் பேரானந்தத்தை நுகரும் ஆனந்த நிலைகள் உங்களுக்குள் வளரும். அதைத்தான் செய்யச் சொன்னார் குருநாதர்.

August 2021 உபதேசம்

இயற்கையின் சக்தி எப்படிப்பட்டது…? ஞானிகள் அதைப் பயன்படுத்திய விதம் எப்படி…?

 

இரண்யன் தனக்கு எதிலேயும் தனக்கு இறப்பு வரக்கூடாது என்றுதான் வரம் கேட்டான்.
1.ஆகையினால் அவனைக் கொல்லவில்லை.
2.ஆனால் தீமைகளையும் பகைமைகளையும் உள்ளே போகாதபடி தள்ளி விடுகின்றது… (நரசிம்மா) தீமைகளை வளர்க்கவில்லை.

நன்றாக இதைக் கவனித்துப் பாருங்கள். காவியத்தை ஞானிகள் எப்படிப் படைத்துள்ளார்கள்…? தெளிவாக நமக்கு எப்படிக் காட்டி இருக்கிறார்கள்…? என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

விஷ்ணு அவனைக் கொன்றானா… இல்லை…! மடி மீது வைத்து இங்கே உள்ளே வராதபடி தடுத்து விட்டான். “இரண்யனைப் பிளந்தான்…” என்றால் தனக்குள் இருக்கக்கூடிய பல விதமான தீமை செய்யும் உணர்வுகளை விலக்கித் தள்ளி விடுகின்றது.

1.அருள் உணர்வுகள் எதை நாம் அரவணைத்தோமோ அதை உயிருடன் சேர்த்துக் கொள்கிறது.
2.அந்த அறிவின் தன்மை நமக்குள் பெருகுகின்றது.

அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து ஒவ்வொரு நாளும் நாம் வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

அதிகாலை ஆறு மணிக்கெல்லாம் நாம் ஈர்க்க மறுத்த தீமைகளைச் சூரியன் கவர்ந்து மேலே கொண்டு சென்றுவிடுகிறது

ஏனென்றால் நம் கண்ணின் நினைவு உயிருடன் ஒன்றி அங்கே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செல்கின்றது. அந்த உணர்வின் தன்மை நமக்குள் வரும் பொழுது பகைமை உணர்வுகளை எல்லாம் அகற்றி விடுகின்றது.

வைரத்தைப் போன்று சொல்லில் ஜொலிப்பும் செயலில் ஜொலிப்பும் வாழ்க்கையில் ஜொலிக்கும் நாங்கள் எல்லோரும் பெற வேண்டும். எங்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் என்று எல்லோரும் எண்ண வேண்டும்.

அப்படி எண்ணும் பொழுது அந்தப் பகைமைகளையும் அசுர குணங்களையும் தள்ளிவிட்டு விடுகின்றது. நாம் யாரும் அதை ஈர்க்கவில்லை என்கிற போது சூரியன் காலையில் ஆறு மணிக்கெல்லாம் கவர்ந்து மேலே இழுத்துச் சென்று விடுகின்றது.

அது இறப்பதில்லை… அதனால் தான் எனக்கு எதிலுமே இறப்பில்லை என்று இரண்யன் கேட்டான் என்று சொல்வது. ஆக… வெளியிலே வந்தபின் நாராயணன் (சூரியன்) அவனைக் கவர்ந்து கொள்கின்றான்.

காரணம் அவன் கொடுத்த வரம் தானே அது.
1.இந்த விஷம் இல்லையென்றால் அந்த்ச் சூரியனே இயங்காது.
2.ஒவ்வொரு அணுவிலும் இந்த விஷம் இல்லை என்றால் அதனின் உணர்ச்சிகள் இயங்காது… எந்தக் குணமும் அது இயங்காது.

எல்லாவற்றையும் இயக்குவதற்கு நானே தான் மூலம்… அதே சமயத்தில் அதை அடக்குவதற்கும் நானே தான் மூலம்… “என்னால்தான்…” என்று இரண்யன் சொல்கின்றான்.

விஷத்திற்கு வலு கூட்டக் கூடாது என்று தான் அந்த அசுர சக்திகளைக் கண்ணன் வீழ்த்தினான் என்று தீப ஒளித் திருநாளாகக் காட்டுகின்றார்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரை நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும். அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நம் ஆன்மாவில் புத்தாடையாக அணிய வேண்டும்.

ஒளியை எடுத்த பின் வேதனைப்படுத்தும் உணர்வுகள் உள்ளே செல்லாதபடி நீக்கி விடுகிறோம். நமக்குள் அதை வளர விடுவதிலலை.

1.விஷ்ணு இதைச் செய்கிறான்… இரண்யனோ அங்கே நாராயணனிடம் சேர்ந்து விடுகின்றான்.
2.அவன் கேட்டபடி வரப்படி அவனைக் கொல்லவில்லை… அழிக்கவில்லை.
3.ஆனாலும் அந்த தீமையை வளர்க்க விடாதபடி தள்ளி விடுகின்றான் – நரசிம்மா…!

துருவ நட்சத்திரம் ஆகும்போது தனது பங்காக ஒளியாக மாற்றுகின்றது. பாசிட்டிவ் நெகட்டிவ் பாசிடிவ்…! சுழற்சியின் மோதலில் தான் ஒளியே வருகிறது சூரியனுக்கு. அதே உணர்வின் தன்மை தனக்குள் எடுக்கும் போது ஒளியாக மாற்றுகின்றது.

விஷம் இல்லை என்றால் அந்த உணர்ச்சியின் ஒளி அலைகள் பரவாது. இருளுக்குள் அடங்கி ஒளியாகப் பரவும். காரணம்…
1.ஒரு பொருளுக்குள் அந்த விஷத்தின் தன்மை இல்லை என்றால்
2.அந்தப் பொருளின் சக்தியை ஒளியாகக் காட்டாது… அந்த அறிவால் இயக்காது.
3.எந்தப் பொருளில் விஷம் கலக்கிறதோ அந்தப் பொருளின் மணத்தை வீரியமாக அதனின் உணர்ச்சியை ஊட்டுகிறது.

இதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் அந்த ஞானிகள் கண்ட மூலங்களை உங்களுக்குப் பிரித்துக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).

மேல் நோக்கிய சுவாசத்தின் முக்கியத்துவம் – ஈஸ்வரபட்டர்

 

மனிதனுக்கும்… மற்றெல்லா மிருகங்களுக்கும்… பட்சிகள் யாவைக்குமே… இயற்கையின் ஒளி ஈர்ப்பு… தனக்கு முன்னாடி உள்ளதை ஊடுருவிப் பார்க்கும் தன்மையில் தான் அமையப் பெற்றுள்ளது.

ஒரே சுழற்சி கதியில் தான் ஈர்ப்பின் சுழற்சி ஓட்டமே சுழன்று ஓடுகின்றது.
1.முன்னோக்கிச் செல்லும் சுழற்சி கதியில்தான் வாகனங்களையும் மனிதன் அமைக்கின்றான்
2.மேல் நோக்கிய கதியில் தான் தெய்வ சக்தியை எண்ணி வணங்குகின்றான் மனிதன்.

ஆனால் மேல் நோக்கிச் சுவாசம் ஈர்த்து பூமி கக்கும் பூமி எடுத்து வெளிப்படுத்தும் ஈர்ப்பின் சுவாசத்தை
1.ஜீவராசிகள் தன்னுடைய சுவாச ஈர்ப்பிற்கு
2.கீழ் நோக்கிய சுவாசமாகத் தான் எடுத்துப் பூமியின் பிடியில் சிக்கி
3.பூமியின் ஈர்ப்புடன் ஈர்ப்பாகவே இந்தப் பூமி வளர்த்த வளர்ப்பெல்லாம் உள்ளன.

ஆரம்பக் கதியில் எந்த உயிரணு எந்த அலைத் தொடர் அமிலக் கூட்டின் உருவகத் தன்மை எடுத்து ஆவியாகிப் பிம்பமாகி ஒவ்வொரு பிம்ப மாற்றத்திலும் வழிப்படுத்திக் கொண்ட உணர்வெண்ணக் கூட்டு அமில ஈர்ப்பின் பிடி…
1.இந்தப் பூமியின் சுவாசப் பிடியின் தொடர்பு ஈர்ப்புப் பிடியிலே சிக்குண்ட தன்மையில்
2.கீழ் நோக்கிய சுவாச ஈர்ப்புடன் வாழும் தன்மையிலேயே உள்ளது.

இதையே பகுத்தறியக்கூடிய ஞான வளர்ச்சி கொண்ட மனிதன் தன் ஜீவ பிம்ப உடலின் எண்ண சக்தியை நற்குண வழித் தொடரில் மேல் நோக்கிய சுவாச அலையை ஈர்த்தெடுக்ககூடிய ஜெபம் கொண்ட சக்தி பெற்றால்… அதனால் ஏற்படும் வளர்ச்சி நிலை என்ன…?

ஏனென்றால் இந்தப் பூமியின் ஈர்ப்பில் சிக்குண்டு வாழும் நிலையில் “நற்குண ஜெப முறையினால்…” இந்த உடல் முழுமைக்கும் படர்ந்துள்ள அனைத்து அணுக்களுக்கும் மேல் நோக்கிய சுவாச அலை ஈர்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

மேல் நோக்கிய சுவாசத்தால்…
1.உடலின் அணுக்களுக்கு எல்லாம் ஊடுருவும் உயர் காந்த சக்தியின் செயல் ஏற்பட்ட பிறகு
2.இந்த ஜீவ பிம்ப உடலில் இருந்தே இவ்வெண்ணத்தை ஒளியின் அலையாக
3.தனித்த ஒரு ஜோதி உணர்வாகச் செயல்படுத்த முடியும்.

கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் எதைச் சேர்த்தாலும் அதுவும் எரிந்து பஸ்பமாகத்தான் செய்யும்.. ஒளியாகத்தான் காட்டும். அதைப் போல் இவ்வுணர்வால் எடுக்கும் எண்ண ஜெப முறையின் வழியினால் உயிரான்மாவைப் பேரொளியாக ஆக்கிட முடியும்.

1.சூரியனின் ஒளி.. கண்ணாடியில் பட்டு மறு பக்கம் ஊடுருவுவதைப் போல் இல்லாமல்
2.அதே சூரியனின் ஒளி… பாதரசம் பூசிய கண்ணாடியின் மேல் படும் பொழுது
3.இவ்வொளியை ஈர்த்து இரசக் கண்ணாடி வெளிப்படுத்தும் ஒளியைப் போல்
4.இந்த உடல் பிம்பக்கூட்டிற்கு நற்குண அமில இரசத்தைப் பூசி ஜெபம் கொண்டோமானால்
4.வள்ளலார் உணர்த்திய அருட்பெரும் ஜோதி என்ற நிலையான தனிப் பெரும் கருணை கொண்ட அவர் உணர்த்திய முறையான
5.நம் ஆத்மாவை ஜோதியாக… அருட்பெரும் ஜோதியாக.. ஆக்கிடல் வேண்டும்.

பூமியின் ஈர்ப்புச் சுவாசப் பிடியில் உள்ள நிலையில் ஜீவன் பிரிந்தால் இதே சுழற்சி ஓட்டத்தில் மீண்டும் மீண்டும் சிக்குண்டு சுழலும் தன்மை தான் பெற்றிட முடியும்.

அவ்வாறு பூமியின் பிடியுடன் மேன்மேலும் சிக்கிப் பல அமில குணங்களின் மாற்றத்திலும் இவ்வுடல் பிம்ப உயிரணுக்கள் எவையுமே எவ் வீர்ப்புப் பிடிக்கும் செல்லாமல் மற்ற ஜென்மத் தொடர் வழிக்கும் செல்லாதபடி நம் ஜெப நிலை இருந்திடல் வேண்டும்.

ஆகவே நம் உயிர் ஆத்ம ஜோதியை அருட்பெரும் ஜோதியாக… தனிப் பெரும் கருணை கொண்ட எச்செயலையும் உருவாக்கும் தன்மைக்கு… உயிர் ஆத்மாவின் உயர் ஆத்ம ஜோதியை நாம் வளர்க்க முடியும்… வளர்க்க வேண்டும்..!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒரு வீணையை வாசிக்கும் பொழுது காதிலே கேட்டவுடன் அந்த இனிமையான நாதம் நம்மை மயக்கச் செய்கின்றது. ஆனால் அதிலே நாதங்கள் பேதங்களாகிவிட்டால் உடனே நம் உடலில் ஒரு விதமான வெறுப்பு ஏற்படுகின்றது.

ஏனென்றால் அந்த நாதங்களை ஒழுங்குபடுத்தி வாசிக்கும் பொழுது நம்முடைய உடல்கள் அசைகின்றது. அதன் மேல் மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

வீணையில் நாதத்தின் சுருதிகள் மாறும் பொழுது செவியில் கேட்டவுடன் அந்த உணர்ச்சியின் தூண்டுதலால் அதன் மீது வெறுப்பாகி எழுந்தும் போகச் செய்கின்றது.

உட்கார்ந்து கேட்க முடிவதில்லை.

இதைப் போல் நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் சந்தர்ப்பத்தால் வெறுப்பான உணர்வுகளானவுடன் நம் உயிரான ஈசனிடத்தில் பட்டு அந்த வேகமான உணர்வுகள் உடலுக்குள் போனவுடன் நல்ல குணங்களெல்லாம் பதறுகின்றது.

இத்தனை குணங்களையும் தாங்கியிருக்கும் உடல் “பட..பட…” என்று துடிக்கின்றது. பயமோ ஆத்திரமோ வந்துவிட்டால் துடிக்கின்றது.

அந்த எரிச்சலான குணம் வெறுப்பாகப் பேசுவதைக் கேட்டு வெறுப்பாக நாம் சொன்னாலும் அந்த உணர்வுகள் உயிரிலே படுகின்றது.

நம் உயிரான ஈசனிடத்தில் அந்த மணம் பட்டவுடன் அவனுக்கு எரிச்சலாகின்றது. எரிச்சலான உணர்வு வரும் பொழுது
1.கண்கள் கோவைப் பழம் போன்று சிவக்கின்றது.
2.காதும் விடைத்துவிடுகின்றது.
3.வாயிற்குள் பார்த்தால் எரிச்சல் “ஆ…” என்கிற நிலை வருகின்றது.
4.உடலுக்குள்ளும் எரிச்சல்.

இந்த உணர்வின் அலைகள் நமக்குள் பாயும் பொழுது நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களில் பட்டவுடன் தசைகள் எல்லாம் ஆட ஆரம்பித்துவிடுகின்றது.

நம் உடல் சிவம். நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்கள் அனைத்தும் நல்லதைச் செய்யும் தெய்வமாக எண்ணுகின்றோம்.

நாம் எந்தக் குணத்தின் தன்மை கொண்டு சுவாசிக்கின்றோமோ அந்த உணர்வின் சுருதிக்கொப்ப நம் “நாடி நரம்புகள்” அப்படியே துடிக்க ஆரம்பித்துவிடுகின்றது.

நாம் எரிச்சலாக இருக்கும் பொழுது நம் உடல் இப்படியெல்லாம் மாறுகின்றது. ஒரு இடத்தில் நிலை கொள்ள விடுவதில்லை.

ஆத்திரம் வந்தவுடன் “ருத்ர தாண்டவம்” ஆரம்பித்துவிடுகின்றது.

நம் நரம்புகள் துடிக்க ஆரம்பித்துவிடுகின்றது. நம் உடலான சிவன் ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்துவிடுகின்றது.

நாம் அல்ல.

கோப உணர்ச்சிகள் வந்தவுடன் ஈசனிடத்தில் பட்டவுடன் இந்த உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

கோப உணர்வுகள் நம் நல்ல குணங்களில் பட்டவுடன் அது பதறுகின்றது. நல்ல குணங்களைத் தாங்கியுள்ள இந்த உடலான சிவம் என்ன செய்கின்றது…?
1.அது தானாகவே அசைய ஆரம்பிக்கின்றது.
2.நீங்கள் கட்டுப்படுத்தினாலும் அது முடிவதில்லை.

இதுவெல்லாம் சந்தர்ப்பத்தினால் நிகழக் கூடியது. மனிதனாக இருக்கக்கூடியவர்கள் நாம் இதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

பிறர் தவறு செய்யும் பொழுது “நீ குறைகளைச் செய்கிறாய்…” என்று சொல்கிறோம். ஆனால் அந்தக் குறையான உணர்வு வரப்படும் பொழுது
1.அந்தக் குறை நம் உடலை ஆட்டிப்படைக்காதபடி
2.நமக்கு ஆத்திரம் வராதபடி தடுத்து நிறுத்த வேண்டும்.

குறையான உணர்வுகளை நாம் எங்கே காணுகின்றோமோ யார் மீது காணுகின்றோமோ எந்த வழிகளில் காணுகின்றோமோ அந்த நேரத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்துவிட்டு அதைப் பார்த்தீர்கள் என்றால் அதன் வீரியம் நம்மைப் பாதிக்காது.

ஆத்ம சுத்தி செய்துவிட்டு நாளை அவர்கள் செய்வது நல்லதாக இருக்க வேண்டும். நல்ல எண்ணங்கள் அவர்களுக்குள் உதயமாக வேண்டும் என்று இந்த உணர்வை அவர்களுக்குப் பாய்ச்சிடல் வேண்டும்.

இதன் மூலம் நமக்கும் நல்லதாகின்றது. நாம் பாய்ச்சி உணர்வுகளை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள் என்றால் அவர்களுக்கும் நல்லதாகும்.

உடலில் உருவாகும் அணுக்களுக்கு உயிர் சாப்பாடு கொடுப்பதை ஏன்… என்று நாம் கேட்க முடியுமா…?

 

உதாரணமாக ஒரு நோயாளியைப் பார்க்கின்றோம்… அவ வேதனைப்படுகின்றார் என்று கண் பார்க்கின்றது. நண்பராக இருக்கும் போது நம் இரக்க மனம் அவருக்கு உதவி செய்கின்றது.
1.இரக்கம் என்பது வலு குறைவு.
2.ஈகையோ உதவி செய்யச் செல்கிறது.

ஆனால் இதிலே விஷம் (வேதனை என்பது விஷம்) பட்டால் என்ன ஆகும்..?

உதவி செய்த அந்த நல்ல குணங்களுக்குள் அது பதிந்து இணைந்து விடுகின்றது. அந்த உணர்வின் தன்மை அணுவாக உருவாகத் தொடங்குகின்றது.

அந்த நண்பரைத் திரும்பத் திரும்ப எண்ணினோம் என்றால் முதலிலே அது கருவாகின்றது. கருவான பின் அதற்குச் சாப்பாடு தேவை.

அவர் உடலிலிருந்து வரும் உணர்வை எடுத்து அது வளரத் தொடங்குகிறது. ஏனென்றால் அணுவாக ஆகிவிட்டால் இந்த வேலையைச் செய்யும்.

பொதுவாக ஒரு செடியில் விளைந்த வித்து நிலத்தின் மீது (மேலெழுந்தவாரியாக) விழுந்து விட்டால் முளைக்காது. மழை பெய்தாலும் பதிவானால் தான் முளைக்கும். அப்படியே முளைத்தாலும் மேலே இருந்தது என்றால் கருகிவிடும்.

அதைப் போன்று தான் நாம் எடுத்துக் கொண்ட அந்த நோயாளியின் வேதனையான
1.உணர்வு இரத்தத்திலே சுற்றுகின்றது… பதிவாகின்றது
2.எந்த உறுப்பின் பாகம் சுழல்கின்றதோ அந்த நேரத்தில் அவனைப் பற்றி நினைத்தோம் என்றால்
3.அந்த உறுப்பில் போய் ஒட்டிக் கொள்கின்றது

ஒட்டியவுடன் துடிப்பின் நிலைகள் வரும். பட…பட… என்று அடிக்கும். அந்த அணு என்ன செய்கிறது…? முட்டையை உடைத்துக் கொண்டு குஞ்சு வெளி வந்துவிடும். வெளியிலே வந்த பின் அது கத்த ஆரம்பிக்கும்.

உதாரணமாக குஞ்சுகள் வந்த பின் தாய்க் கோழி என்ன செய்கின்றது…? குக்குக்கூ… என்று கத்தி அதற்கு இரையைக் கொடுக்கின்றது. குஞ்சுகள் பின்னாடியே போகின்றது.

அது போல் தான்
1.நாம் எடுத்துக் கொண்ட இந்த உணர்வுகள் குஞ்சாக ஆகிவிட்டது என்றால் சிறு மூளைக்கு எட்டுகிறது அந்த உணர்ச்சிகள்
2.உடனே கண் காது மூக்கு இவைகளுக்கு ஆணையிடுகிறது.
3.ஆணையிட்டவுடன் காற்றிலிருந்து அந்தச் சக்திகளை இழுக்கிறது.

சுவாசித்த பின் இதே உயிர் அதற்கு அதைச் சாப்பாடாகக் கொடுக்கின்றது. “ஏன் சாப்பாடு போடுகிறாய்…?” என்று உயிரிடம் கேட்க முடியுமா…?

ஆறாவது அறிவால் தான் அதை எல்லாம் தடுக்க முடியும். ஆறாவது அறிவால் தீமைகள் வளராதவண்ணம் தடுத்து அதை அடக்கிப் பழக வேண்டும்.

அதைத்தான் அங்குசபாசவா என்று காட்டுகின்றார்கள். ஆறாவது அறிவு பெற்றவன் எதையுமே அடக்க வல்லமை கொண்டவன்.
1.மிகப் பெரிய யானை இருந்தாலும் சிறிய அங்குசத்தை வைத்து அடக்கி விடுகிறார்கள்
2.அதைப் போன்று அருள் ஒளியின் தன்மையை நாம் எடுத்துக் கொண்ட பின்
3.எவ்வளவு பெரிய தீமை வந்தாலும் இந்த அருள் ஒளியைப் பாய்ச்சியவுடன் அது அடங்குகிறது.

காவியத்தில் இப்படித்தான் நமக்குக் கொடுத்திருக்கின்றார்கள் ஞானிகள். ஆனால் என்னென்னமோ நாம் கதைகளை எழுதி வைத்திருக்கின்றோம்.

ஒரு சிலையை வைத்துக் காட்டி மனிதனின் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து விடுபட இவ்வளவு விரிவுரையைக் கொடுத்திருக்கின்றார்கள் ஞானிகள்.

உலகெங்கிலும் உள்ள இன்றைய தெய்வ பக்தி நிலை – ஈஸ்வரபட்டர்

 

பூண்டின் செடி வித்தான ஆரம்ப வளர்ச்சி நிலையில்… அதன் கிளைத் தொடர் அச்செடி வளர்வதற்குகந்த ஜீவ சக்தி இருக்கும் வரை… அப்பூமியின் சுற்றளவில் ஆரம்பப் பூண்டுக் கிழங்கின் வளர்ச்சிக் காலம் முடிவுற்றாலும்… அதன் தொடர் வளர்ச்சிக் கிளைப் பூண்டுகள் எவ்வித்தின் ஆரம்பத்தில் வளர்ச்சி கொண்டு வளரப் பெற்றதோ… அதன் குண ஜீவ சக்தியும்… தன் வளர்ச்சிக்குகந்த நிலப்பரப்பு உள்ளவரை வளர்ந்து கொண்டே தான் இருக்கும்.

அதைப் போல் இம்மனிதக் கரு எண்ணத்தில் சக்தி கொண்ட ஆத்மாக்களின் வளர்ச்சியினால் பல ஆயிரம் காலங்களுக்கு முன் அவர்கள் உணர்ந்து வெளிப்படுத்திச் சென்ற உண்மை நிலைகளின் படர் தன்மை வழித் தொடர் அலைத் தன்மையில் இன்றளவும் இந்தப் பூமியில் பல தெய்வங்களை வணங்கக்கூடிய முறையாக வழி பெற்று விட்டது.

1.பல குணங்களை உணர்ந்த சித்தர்களினால்
2.நல் வழிப்படுத்தப்பட்ட சக்தி வாய்ந்த அலைத் தொடரின் உருவங்களாகப் படைக்கப்பட்டவை
3.எல்லாமே இன்று கால நிலையின் மாற்றத்தினால் மாறி விட்டது.

ஆக மனித எண்ணத்தின் உணர்வலைகள் பல கூறுகளில் மாறு கொண்டு… மாறு கொண்டு… சுழற்சி பெற்ற வழிதனில்
1.உண்மைச் சக்தியின் தெய்வ நிலை
2.வெறி கொண்ட பக்தி முறையாக இன்றுள்ள சுழற்சி நிலையில் உள்ளது.

இந்தியாவில் இந்த நிலை என்றால் மற்ற இடங்களில் ஜாதி வெறியற்ற நிலையின் இனமாற்றம் என்ற வெறி உணர்வின் ஈர்ப்பில் தெய்வ சக்தியின் அன்பு பாச பிணைப்பின் வழித் தொடர் செல்ல முடியா உணர்வு எண்ணங்கள் தான் உலகெங்கிலும் அங்குள்ளன.

ஆனால் மனித எண்ண உணர்வால் எடுக்கும் சக்தியினால் எச்சக்தியும் பெறவல்ல ஆற்றல் மனித பிம்பக் கூட்டிற்கு உண்டு.

விஞ்ஞானத்தின் தொடர்பினால் ஒன்றின் சேர்க்கை கொண்டு அறியக் கூடிய செயல் வன்மையினால் பலவற்றையும் உணரும் மனிதன் இவ்வுடல் பிம்பக் கூட்டைக் கொண்டு எந்நிலையையும் உணரவும் செயலாற்றவும் முடியும்.

ஆவி நிலையின் சுழற்சி ஈர்ப்பில் மனித உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்கள் படர் கொண்ட சுழற்சியில் இந்தப் பூமியின் ஈர்ப்புடன் ஒன்றியே மனிதன் எடுக்கும் எண்ணமுடனும் உணர்வுடனும் சுழன்று கொண்டுள்ள நிலையில் இந்த மனிதப் பிம்பக் கூட்டின் எண்ணத்திற்கொப்ப இவ்வாவி ஈர்ப்பின் அலைத் தொடரில் சிக்குண்ட மனிதர்களும் வாழ்கின்றனர்.

காற்றுடன் கலந்துள்ள படர் தொடரில் பல சக்திகளின் சுழற்சியின் மத்தியில் தான் மனிதனும் வாழ்கின்றான்.
1.எண்ணத்தின் சுவாச நிலைக்கொப்ப எல்லாம்
2.எண்ணிய நிலை கொண்ட அலைத் தொடர் வருகின்றது.

பயம்… சந்தோஷம்.. மற்ற எந்த நிலைகள் கொண்ட எவ்வெண்ணத் தொடராக இருந்தாலும் அந்நிலையான சுவாச நிலையின் அலைத் தொடர் பிம்பக் கூட்டின் சுழற்சியுடன் எண்ணத்தில் எண்ணும் நிலைக்கொப்ப எல்லாமே உடலுடன் சேமித்துக் கொண்டே தான் உள்ளது.

1.பக்தி மார்க்கமானாலும் யோக சக்தி மார்க்கமானாலும்
2.விஞ்ஞான அஞ்ஞான எஞ்ஞானமானாலும்
3.எண்ணத்தில் எண்ணும் வழித் தொடர் கூட்டு அமிலச் சேர்க்கையை
4.உடல் என்ற பிம்பங்கள் சேமித்துக் கொண்டேயுள்ளது.

எவ்வெண்ணத்தை உயர்த்தி… அதன் வழித் தொடர் கொண்ட குணத் தன்மையில் இவ்வெண்ண சுவாசம் உள்ளதுவோ… அவ்வழித் தொடர் கொண்ட அலையின் அமில குணத்தின் வீரியத் தன்மை தான் மனிதக் கூட்டின் பிம்பக் கலவையில் நிறைந்திருக்கும்.

நாம் எதை நமக்குள் நிறைத்திட வேண்டும் என்பதை உணர்ந்து இந்த மானிடப் பிறவியில் முழுமை அடைந்து ஞானைத்தின் முதிர்வு என்னும் நிலையை எய்திடல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

வேதனை என்பது நஞ்சு.

நாம் வேதனைப்பட்டோம் என்றால் அது அதிகரிக்கப்படும் பொழுது பய உணர்வுடன் அது கலந்து நம் உடலில் உள்ள பித்த சுரப்பிகள் அனைத்தும் அதிகரித்துவிடும். அதிகமான பித்தத்தைச் சுரக்கும்.

உதாரணமாக பாம்பு அதனின் தலை சிறிதாக இருப்பினும் ஒரு தவளையையோ மற்ற பெரிய உயிரினங்களையோ பிடித்து விட்டால் தன் உடலில் உருவாகும் கடுமையான விஷத்தின் தன்மையை அதன் மீது பாய்ச்சுகின்றது.

விஷத்தைப் பாய்ச்சி அந்த உயிரினங்களைப் பலவீனப்படுத்தி இதனின் சத்து அதனின் உணர்வின் இயக்கத்திற்குள் சென்ற பின் அது கரையும் தன்மை அடைகின்றது.

அதைப் போல் மனிதர்களாக இருக்கும் நமக்குள் இருக்கும் பித்த சுரப்பிகள் நாம் உணவாக உட்கொள்வதைக் கரைக்கும் நிலைகள் – அது ஒரு “நஞ்சு தான்”.

அது எதன் அளவு உமிழ்த்துகின்றதோ நாம் சாப்பிடும் உணவுடன் கலக்கப்படும் பொழுது அது கரைத்துவிடுகின்றது.

அடிக்கடி கடினமான உணவுப் பதார்த்தங்களை நாம் உணவாக உட்கொள்வோம் என்றால் பித்த சுரப்பிகள் அதிகமாக இயக்கப்பட்டு நாம் சாப்பிட்ட கடினப் பொருளைச் சீக்கிரம் கரையச் செய்துவிடுகின்றது.

ஆனால் அடுத்த சமயம் இந்தக் கடினப்பொருள் இல்லை என்றால்
1.அது உமிழ்த்திய வேகத்தில்
2.நஞ்சின் தன்மையால் பித்த சுரப்பிகள் அதிகமாகச் சுர்ந்தால்
3.நம் உடலுக்குள் அரிப்பும் பசியின் தன்மை கொடூரமானாலும்
4.உணவை உட்கொள்ள முடியாதபடி தடைப்படும்.

நஞ்சின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது நம் உடலில் உள்ள உணர்வின் “செல்கள் சீராக இயங்காது”. சீராக இயங்கவில்லை என்றால் நாம் உணவாக உட்கொள்ளும் உணவின் நிலைகள் சுவையை அறிய முடியாத நிலைகள் ஏற்படுகின்றது.

சுவையை அறியவில்லை என்றால் தனக்குள் உணவாக உட்கொண்ட சத்துகளை உள்ளே ஈர்க்கும் இந்த உணர்வின் தன்மை அது தடைப்படுகின்றது.

பித்தத்தின் தன்மை கசப்பின் தன்மை அடையப்படும் பொழுது இந்த உணர்வை உள்ளே எடுத்துக் கொள்ளாதபடி இது உமிழ்த்தி வெளியேற்றும் சக்தியாக மாறிவிடுகின்றது.

உதாரணமாக ஒருவர் பலகாரம் சுடுகிறார் என்றால் அவர் தண்ணீரைத் தெளிப்பார். எண்ணெய் எந்த அளவிற்குக் காய்ந்திருக்கின்றது என்று அவர் பரீட்சித்துப் பார்ப்பார்.

இதில் எழும் அந்த நாதத்தின் ஒலி கொண்டு கண்டு கொள்கின்றார். சூடு சரியாக இருந்தால் வடையைத் தட்டி அதில் போடும் பொழுது சட்டியில் வடை சீராக வேகின்றது. ருசியாகவும் இருக்கின்றது.

தண்ணீரைத் தெளிக்கும் பொழுது வரும் நாதத்தைக் கேட்டு அந்த உள் நாதத்தை அறியாதபடி நாம் வடையைத் தட்டிப் போட்டால்
1.சூடு சரியாக இல்லை எண்ணெய் சீராகக் காயவில்லை என்றால்
2.இந்த எண்ணெயின் தன்மை லேசாக இருக்கும் பொழுது மாவிற்குள் ஊடுருவிவிடும்
3.சுவையை மாற்றிவிடும் ருசி இருக்காது.

ஆகவே அந்தச் சூட்டிற்குத் தக்கவாறுதான் வடையைச் சுவை கொண்டதாக மாற்றுகின்றது. இது எல்லோருக்கும் தெரிந்தது தான் தெரியாதது ஒன்றும் இல்லை.

இதைப் போன்று தான் நாம் சுவாசிக்கும் உணர்வுகளும் எண்ணங்களும்
1.நமது உணர்வின் தன்மை
2.”இயக்கச் சக்தி…” அது எந்த அளவோ
3.அதற்குத்தக்க உணர்வை “ஜீரணிக்கும் சக்தி” வருகின்றது.

பித்தத்தின் அளவுகோல் அதிகரித்தால் அந்த உணர்வின் சத்து நமக்குள் மற்ற உறுப்புகளை இயக்கும் தன்மை குறையும். அதனின் தன்மை கொண்டு நாம் உணவாக உட்கொள்ளும் நிலையும் மறைகின்றது.

நாம் நினைக்கின்றோம்… சும்மா தானே இருந்தோம். கோபப்பட்டவர்கள் வேதனைப்பட்டவர்கள் வேதனைப்படுத்துபவர்களை “வேடிக்கைதானே பார்த்தோம்…” என்று எண்ணுகின்றோம்.

அந்தக் கோபித்த உணர்வின் செயல்களும் வேதனைப்படுத்திய வேதனைப்பட்ட உணர்வின் செயல்களும் நம் உடலில் எவ்வாறு விளைகின்றது…? நம் உடலுக்குள் அந்த உணர்வின் சத்துகள் சேர்ந்தபின் உடலின் இயக்கம் எப்படி இருக்கும்…? என்ற நிலைகளைத் தத்துவ ஞானிகள் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.

இவ்வாறு
1.நமக்குள் நம்மை அறியாமல் சேரும்
2.தீமையான உணர்வின் சத்துக்களை மாற்றவில்லை என்றால் அவைகளைச் சமப்படுத்தவில்லை என்றால்
3.சீராக இயக்கும் உறுப்புகளின் இயக்கம் மாறி
4.நஞ்சைச் (பித்தத்தை) சேகரிக்கும் உறுப்புகளாக மாற்றி உடலில் நோயாகிவிடும்.

மருத்துவரிடம் சென்றால் அவர் இதை மாற்ற இன்னும் விஷத் தன்மை கொண்ட மருந்துகளைக் கொடுப்பார். அதை எடுத்து மீண்டும் நமக்குள் நஞ்சைத்தான் சேர்க்க முடியுமே தவிர நஞ்சைப் பிரிக்கும் தன்மை வராது.

கடைசியில் நமது வாழ்க்கையில் தெளிந்திடும் நிலைகள் கொண்டு தெரிந்து செயல்படும் மனித உணர்வுகள் அனைத்தும் மறைந்துவிடுகின்றது.

இதை மாற்ற வேண்டும் என்றால் நஞ்சை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நம் இரத்தங்களில் கலக்கச் செய்ய வேண்டும்.

உடல் நலத்துடன் மன பலத்துடன் மகிழ்ச்சியாக நாம் வாழ முடியும். செய்து பாருங்கள். அகஸ்தியனைப் போன்ற மெய் ஞானியாக ஆக முடியும்.

மனிதனுக்குள் இயங்கும் 1008 குணங்களைத் தான் 1008 தெய்வங்களாகப் படைத்தார்கள் ஞானிகள் – ஈஸ்வரபட்டர்

 

சுவை தரும் இயற்கைக் கனிகள் தன்மையில் இனிப்பின் சுவையே ஒவ்வொன்றுக்கும் மாறுபாடு உள்ளது.

மிளகாய்க்கும் மிளகிற்கும் வெங்காயத்திற்கும் இஞ்சி போன்றவற்றின் கார குணமானது ஒன்றுக்கொன்று மாறுபட்ட காரம் கொண்டது.

அதே போல் அதை ஒவ்வொன்றையும் உண்ணும் பொழுதும் உடல் நிலைக்கு ஒவ்வொரு நிலையான “உஷ்ண கதியும்” ஏற்படுத்தவல்ல குண நிலையும் அவைகளுக்கு உள்ளது.

புளிப்பு சம்பந்தப்பட்டதை எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொன்றின் புளிப்புச் சுவையும் அதற்குகந்த உடல் தன்மைக்கு அதனுடைய குணச் செயலும் ஏற்படுகின்றது.

இதைப் போன்றே உணர்வின் எண்ணங்களும்
1.ஒவ்வொரு மனித பிம்பத்தின் உணர்வு எண்ண நிலைக்கொப்பத்தான்
2.அப்பிம்ப உடலில் இருந்து செயல் கொள்ளும் ஆத்ம உணர்வின் சேமித
2.குணச் சக்தியின் அமிலக்கூட்டு உருவாகியுள்ளது.

இந்திய பூமியில் தான் மனித குணங்கள் கொண்ட பல நிலையான விக்கிரகங்களை அமைத்து வணங்குகின்றனர்.

மற்றவர்கள் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்…” என்று ஒரே ஆண்டவனை வணங்கும் பொழுது இங்கே பல நிலையான விக்கிரக ஆராதனையும் மாறு கொண்ட பூஜை முறைகளையும் வழிப்படுத்தியதன் உண்மை நிலை என்ன…?

இது எல்லாம் அன்று ஒவ்வொரு சித்தனாலும் தான் எடுத்த சக்திகளை அந்தந்த மனிதக் கூட்டின் அமில ஈர்ப்பின் நிலைக்கொப்ப ஒன்றின் சக்தியினால் பிறிதொன்றின் வழித் தொடர் கூட்டி வழிப்படுத்தித் தந்த முறை வழியில் வந்தது தான்…!
1.குண நிலைகளின் உருவத்தை உருவகக் கல்லாகச் செதுக்கி வைத்து
2.கல்லின் உருவத்தில் குணங்களையும் அதனின் இயக்கங்களையும் உணர்த்தினான்.

விஞ்ஞான முறைப்படி இன்று பாடநிலைகளைப் பல வகையில் கல்வி கற்பவர்களுக்குக் கொடுப்பது போல் அன்றைய சித்தர்கள் சிற்பங்கள் மூலமாகப் பாமர மக்களுக்கும் புரியும் வண்ணமாக உணர்த்தினார்கள்.

1.குண மாற்றத்தின் சக்திதனை எடுத்து
2.அக்குணத்தின் விக்கிரகத்துடன் எண்ணத்தைச் செலுத்தி வணங்கும் நிலையில்
3.எக்குண தெய்வத்தை ஒருவன் வணங்குகின்றானோ
4.அக்குணத்தின் அடிப்படை சக்தியின் உணர்வை அவ்வாத்மாவும் ஏற்று
5.அவ்வழி சக்தித் தொடர் பெற வேண்டிய நிலைக்கொப்பத்தான்
6.பல உருவ வழிபாட்டினை உணர்த்திச் செயல்படுத்தி வந்தனர்.

ஆக சப்தரிஷிகளினால் இன்றளவும் அவ்வழிபாட்டின் தொடர் சுழற்சி வளர்ந்து கொண்டுள்ள உண்மை தான் “பல உருவ வழிபாட்டு முறை எல்லாம்…!”

உருவ வழிபாட்டின் மாறுபட்ட குண நிலை போன்றே மனித பிம்ப உடல் எண்ணத்திலும்… மாறு கொண்ட நற்குணங்களிலும் பல நிலைகள் உண்டு…. தீய குணங்களிலும் பல நிலைகள் உண்டு…!

இதைப் போன்றே சப்தரிஷிகளினால் செயல்படுத்தும் முறையிலும் அவரவர்கள் ஆரம்ப குணத் தன்மையில் அதிகமாகச் சேமித்த எண்ண உணர்வின் விகித நிலையின் வளர்ச்சித் தொடரிலே தான் இன்றளவும் தான் பெற்ற அலைத் தொடரின் வழித் தொடர் கொண்ட ஒளி அலையை உணர்வலையாக்கி பல தன்மைகளை மாற்றி மாற்றிச் செயல் கொள்கின்றனர்.

சப்தரிஷிகளினால் இந்தப் பூமியில் விதைத்த மனிதக் கருவின் வளர்ச்சியின் தொடரே இன்றைய இக்கலி மாறி கல்கி சுழற்சியில் மீண்டும் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் மாறப்படும் இந்த மனிதக் கரு உருவங்களும் மாறு கொண்ட தன்மையில் தான் உருவாகும்.

சப்தரிஷிகளின் சக்தி நிலை கூடக் கூட காலப் போக்கில் தீய நிலைகளை எல்லாம் மாற்றி உயர் சக்திகளை அவர்கள் வளர்த்துக் கொண்டு தான் இருப்பார்கள்.

1.இந்தத் தொடர் முறை மாற்றத்தின் வழிதனையும்
2.பல குண வழித் தொடர் ரிஷிகளின் தொடர் நிலையையும் நாம் எடுக்கும் ஜெபத் தொடரில்
3.ஒவ்வொருவர் எடுத்த தனித்த உயர் சக்தியின் வழித் தொடர் அலையை ஜெப முறையினால் நாமும் எடுக்க முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நம் குழந்தையைத் திருமணம் செய்து கொடுத்துவிடுகின்றோம். ஆனால் புகுந்த வீட்டில் பல தொல்லைகள் வருகின்றது.

தொல்லைப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது பிள்ளை மேல் உள்ள பாசத்தால் “பாவிகள்…! என் பிள்ளையை இப்படிச் செய்கிறார்களே…” என்று எண்ணி மிகுந்த வேதனைப்படுவோம்.

வேதனை அதிகமாகிக் கடைசியில் நோயாகி அதே ஏக்கத்திலேயே உடல விட்டுப் பிரியும் நிலை ஆகின்றது. பிரிந்த பின்
1.எந்தப் பிள்ளையைப் பாசத்தால் எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தோமோ
2.அந்த உடலுக்குள் தான் போவோம்
3.அங்கே சென்று இந்த உடலில் பட்ட வேதனையைப் பிள்ளை உடலிலும் உருவாக்கிவிடும்.

பின்… யார் யாரெல்லாம் பிள்ளைக்குத் துன்பம் கொடுத்தார்களோ அவர்களை வெறுக்கச் செய்து வெறுப்பின் நிலைகள் அதிகமாகி பிள்ளை உடலிலும் நோயை உருவாக்கும்.

இப்படி பாசத்தால் வளர்த்த பிள்ளைக்குள் சென்று சீரழிந்த நிலைகளாக நோயாக்கி… “குழந்தையையும் அழித்துவிடுகின்றோம்”.
1.பிள்ளை மேல் மிகுந்த பாசமாக இருக்கின்றோம் என்றாலும்
2.வேதனையுடன் செல்லும் பொழுது
3.பிள்ளையைக் காக்க முடியவில்லை.

இதைத்தான் மெய்ஞானிகள் “சித்திர புத்திரனின் கணக்கு” என்று காவியப் படைப்புகளில் காட்டியுள்ளார்கள்.

சித்திரம் என்பது நாம் கண்களால் பார்ப்பது எல்லாமே “சித்திரம்”.

ஒரு நல்ல படத்தைப் பார்த்தவுடன் மகிழ்கின்றோம். சரியில்லாத படத்தைப் பார்த்தவுடன் முகத்தைச் சுழிக்கின்றோம்…, வெறுக்கின்றோம்.

இதைப் போன்று தான் மற்றவர்களின் செயல்களை நாம் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது அவர்களைப் படமாகப் பதிவாக்குகின்றோம்.

அவர்கள் செய்வது தவறாக இருக்கும் பொழுது அவர்களையே மீண்டும் மீண்டும் எண்ணிச் சுவாசிக்கின்றோம். அப்பொழுது அந்த உணர்வுகள் நம் உடலுடன் சத்தாகும் பொழுது சித்திரம்…, “புத்திரனாக… அணுவாக… உருவாகிவிடுகின்றது”.

எந்தக் குணத்தை எண்ணி எண்ணிச் சுவாசித்தோமோ நம் உடலுக்குள் விளைந்து “குழந்தையாக… அந்தக் குணம்” என்னுடன் இயங்கத் தொடங்குகின்றது.

உடலுக்குள் அது விளைந்தபின் என் உயிராத்மாவில் போய்ச் சேர்கின்றது. உயிராத்மாவில் சேர்ந்தபின் அது சித்திர புத்திரனின் கணக்காகப் போய்விடுகின்றது.

ஆகவே பிள்ளை மேல் பாசமாக இருந்து “வேதனை…வேதனை…” என்று வளர்த்தால் அந்தக் கணக்கின் பிரகாரம் தன் உடலையும் வீழ்த்தி பிள்ளைக்குள் சென்று அந்த உடலையும் வீழ்த்தி கடைசியில் மனிதனல்லாத மாடோ மற்ற மிருக உடலாகவோ தான் பிறக்க நேரும்.

இதையெல்லாம்
1.உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மா
2.அணுவிற்குள் அணு சென்று (ஒரு உடலுக்குள் சென்று) அது எவ்வாறு செயல்பட்டது என்று
3.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நேரடியாகவே எமக்கு (ஞானகுரு) உணர்த்தினார்
4.என் கண்ணாலேயே பார்க்கச் செய்தார்.

இந்த மனித வாழ்க்கையில் நாம் எப்படி வாழ்கிறோம்…! என்பதைப் படம் பிடித்தது போல் குருநாதர் காட்டியதை யாம் பார்த்ததை உங்களிடம் வெளிப்படுத்துகின்றோம்.

இயற்கையின் உண்மை நிலைகளை குருநாதர் எமக்கு எப்படி உணர்த்தினாரோ அவர் காட்டிய அருள் வழிப்படியே உங்களுக்குள்ளும் உணர்த்துகின்றோம்.

மகரிஷிகளின் உணர்வை நம் உடலிலுள்ள அணுக்களுக்குப் பொன்னாடையாகப் போர்த்த வேண்டும்

 

ஆறாவது அறிவால் சிருஷ்டிக்கும் வலிமை பெற்றவர்கள் நாம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நமக்குள் கவர்ந்து நம்மை அறியாது வரும் அசுர சக்திகளை அடக்கி நல்ல சக்திகளாக மாற்றிடும் நிலையாக நாம் செயல்படுத்த வேண்டும்.

காலையிலிருந்து இரவு வரையிலும் ஒவொரு நாளும் தீமைகளை நீக்கும் நிலையாகத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் துணையாகப் பெற்று அசுர குணங்களை அழித்துத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஓங்கச் செய்திடல் வேண்டும். இரவில் தூங்கச் செல்லும் பொழுதெல்லாம் இதை மறவாது செய்ய வேண்டும்.

நம்முடைய நினைவின் எண்ணங்கள் அந்த அருள் வழி சென்று
1.நம் மனதைத் தூய்மைப்படுத்தவும்
2,நம் உடலைத் தூய்மைப்படுத்தவும்
3.நம் தொழிலைத் தூய்மைப்படுத்தவும்
4.அதனால் மகிழ்ந்திடும் நிலைகளையும் பெறுதல் வேண்டும்.

விவசாய நிலங்களைப் பண்படுத்தும் போது அந்த நிலம் பண்படுகிறது. அதே போல்
1.நம் மனதைப் பண்படுத்தும்போது வீடும் குடும்பமும் பண்படுகிறது
2.மனதைப் பண்படுத்தும் போது சகோதர உணர்வுகள் பண்படுகின்றது
3.மனதை பண்படுத்தும் போது மனிதனின் வாழ்க்கையும் பண்படுகிறது
4.பண்புடன் பழகும்… பண்புடன் வளர்ந்திடும் நிலையும் வளர்கிறது.

என்றுமே ஒளியின் சிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்றால் மகிழ்ந்து வாழும் சக்தி பெறுகின்றோம்.

என்றுமே இருளை நீக்கிப் பொருள் காணும் சக்தியாக நாம் வளர்வதே தீப ஒளித் திருநாள்.
1.அசுரனை நீக்கிய நாள் என்றும்
2.அசுர சக்திகளை நீக்கிடும் நாள் என்றும்
3.அத்தகைய அருள் சக்திகளை வளர்த்துக் கொள்ள வேண்டிய நாள் என்றும்
4.நாம் அதைப் பெற வேண்டும் என்று நினைவுபடுத்தும் நாள் தான் தீப ஒளித் திருநாள்.

அன்று எப்படிப் புத்தாடையாக மேலாடையைப் போர்த்துகின்றோமோ அதைப் போன்று தீமைகளை அகற்றிட்ட அருள் ஞானிகளின் உணர்வை நம் நல்ல குணத்துடன் இணைத்து இதைப் போர்த்திக் கொள்ள வேண்டும்.

ஆகவே நம் வாழ்க்கையில் தூய்மைப்படுத்தும் உணர்வான அருள் மகரிஷியின் அருள் சக்திகளை
1.தெளிந்த மனதுடன்… தெளிந்திடும் சக்தியாக நமக்குள் போர்த்தச் செய்வதே
2.இங்கே கொடுக்கப்படும் உபதேசமும்… யாம் கொடுக்கும் தியானப் பயிற்சியும்.

நம்மைத் தாக்கிக் கொண்டிருக்கும் அசுர குணங்களிலிருந்து மீளும் நந்நாள் தான் இது.

நமது வாழ்க்கையில் அறியாது சேர்ந்த பகைமை உணர்வுகளையும்… பாசத்தால் கேட்டறிந்த பிறரின் வேதனை உணர்வுகளையும்… சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட கொதித்தெழும் கோப உணர்வுகளையும்… அது போன்ற அசுர குணங்களை எல்லாம் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நீக்கும் நாள் தான் தீப ஒளித் திருநாள்.

1.நாம் அனைவரும் ஏகோபித்த நிலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று
2.அதனின் வலுவின் துணை கொண்டு அசுர குணங்கள் தாக்காது நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் எதிர் கொள்ளும் சோதனை எல்லாமே… “நம் உயர்வின் தேர்வு தான்…!” – ஈஸ்வரபட்டர்

 

ஆரம்பக் கல்விக்குக் குழந்தையை நாம் அனுப்பும் பொழுது சில குழந்தைகள் பள்ளி செல்லவே… பயம் கொண்டு அழுது… பிறகுதான் பள்ளிக்குச் செல்கிறது.

பள்ளியில் கல்வி போதனையை அந்தந்தக் காலங்களில் வைக்கும் தேர்வு
1.அக்குழந்தைக்கு அதன் எண்ண வளர்ச்சியின்
2.அறிவின் அடிப்படையில் தான் அதன் ஞானம் வளர்ந்திருக்கும்.
3.அதைக் கொண்டு தேர்வு எழுதும் பொழுது… அதற்குகந்த பயம்… அச்சம்… இருந்து கொண்டு தான் இருக்கும்.

வளர… வளர… அதற்குகந்த அறிவின் செயல் ஞானத்திற்கொப்ப முதிர்ச்சியுற்ற பிறகு ஆரம்பக் கல்வியானது மிக மிகச் சுலபமாகவும் குழந்தையின் கல்வி போலவும் வளர்ந்தவர்களுக்குத் தெரிகிறதல்லவா…!

அதைப் போன்று மனிதனின் குண அமிலத்தை நற்குணங்களின் வழித் தொடர் கொள்ள அன்பு பாசம் வீரம் ஞானம் ஆசை என்ற இந்த ஐந்து குணங்களைச் சாந்தமாக்கி நம் குண அமிலத்தையே நற்குண அமிலமாகச் செயல் கொள்தல் வேண்டும்.

அப்படிச் செயல் கொள்ளும் பொழுது நம் உணர்வின் அலைத் தொடர் உயர் சக்தியின் அமில ஈர்ப்பில் இவ்வெண்ணம் செலுத்தும் முறை கொண்டு
1.முருகனின் அழகுடையவன்
2.குணமுடையவன் இனிமை கொண்டவன்
3.மணமுள்ளவன் ஒளியானவன் ஒலியானவன் என்ற தத்துவ உயர் ஞான முருகனாக
4.நம் உணர்வின் எண்ணம் முருகனாகச் செயல் கொள்ளும் நிலைக்கு
5.வளரும் ஐம்புலன்களான நற்குணங்களை ஆறாம் புலனாக வழிப்படுத்தி நாம் முருகனாக உருவாக வேண்டும்.

ஆக… வளர்ந்த கல்வியில் உள்ளவனுக்குப் பள்ளிப் பாடத்தில் முதல் வகுப்புப் பாடம் எப்படி எளிதாக உள்ளதோ… ஒவ்வொரு வகுப்பாகப் பரீட்சையில் தேறிய உயர் கல்வியில் உள்ளவனுக்கு முதல் பாட நூலில் தேர்வு வைத்ததைப் போன்று…
1.வாழ்க்கையில் ஏற்படும் எந்த ஒரு இக்கட்டான செயலையும் வரும் இன்னலையும்
2.மாற்றியமைப்பது என்பது இந்த முருக குணம் கொண்டவனுக்கு மிக மிக எளிதாகிவிடும்.

நற்குணங்களின் வழித் தொடர் செயல் ஞான ஈர்ப்பிற்கு… நம் உணர்வைச் செலுத்தும் காலங்களில் ஏற்படும்… வாழ்க்கையில் எதிர் கொள்ளும் சோதனை எல்லாமே… “நம் உயர்வின் தேர்வு தான்…!”

இந்தத் தேர்வில் இருந்தெல்லாம் நாம் பெறும் மதிப்பெண் நிலைக்கொப்ப அடுத்த தேர்விற்கு நாம் உகந்தவர்கள் ஆகின்றோம் என்ற உணர்வின் எண்ணத்தில் சென்று கொண்டே நம் செயல் இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஆன வளர்ச்சி இருக்குங்கால் இந்நற்குணங்களின் செயலுடன் ஒன்றிய “முருகனின்… அழகனின் அழகென்ற பட்டத்தை..” நாம் பெற முடியும்… இனிமை என்ற உணர்வின் செயலுடன் நம் எண்ணத்தின் ஈர்ப்பு ஒலியின் ஒளியாகக் கலந்துவிடும்.

இச்சக்தி நிலை கொண்ட உருவம் தானப்பா முருகனேயன்றி தனித்தொரு சக்தி வந்து நற்குணங்களாக அவதரித்து நற்படைப்பைப் படைக்கவில்லை…!

ஆகவே…. இடும்பன் என்ற அரக்க குணத்தை வளரவிட்டு… வாழ்க்கையை இருள் என்ற அழுகையின் ஊடே சோர்வென்ற சக்திதனில் சுழலவிட்டு… உயிர் என்ற ஆத்மலிங்கத்தைச் சதா சர்வ காலமும் நிந்தித்துத் துவேஷித்து… உயர் சக்தியான உயிர் ஆத்மாவை மண்ணுடன் மண்ணாக புழுவாகப் பூச்சியாக சக்திதனில் சுழல விடாமல்…
1.உயர் வழித் தொடர் கொண்டு மனித பிம்பம் பெற்ற நாம்
2.உயர் அலைத் தொடரின் உணர்வின் வழித் தொடர் செல்ல
3.முருகனின் உருவாக நம்மை உருவாக்க வேண்டும்.

உணர்வின் இனிமையையும் உணர்வின் அழகையும் உணர்வின் மணத்தையும் உணர்வின் ஒலியையும் உணர்வின் ஒளியாக உயர் ஞானச் செயலின் ஈர்ப்பில் செயல் செல்ல… இந்த ஐம்புலன் என்ற நற்குணக் கூட்டைச் “சாந்தம்…!” என்ற சக்தி கொண்டு செயலாற்ற வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

உதாரணமாக ஆஸ்த்மா போன்ற நோய்கள் வந்தால் இன்று மருத்துவர்கள் அதற்குண்டான மருந்துகளைக் கொடுப்பார்கள், மூச்சுத் திணறல் எல்லாம் நிற்கும்.

முதலில் ஒரு மாத்திரை கொடுப்பார்கள். பல மாதம் கழித்து இரண்டு மாத்திரை சாப்பிடச் சொல்வார்கள். இந்த மருந்தின் வேகத்தால் அதிலிருக்கக்கூடிய நஞ்சு கட்டியாக இருக்கும் சளியை உடைக்கும் தன்மை வரும். ஆனால்
1.இப்படி மருந்தைக் கூட்டிக் கூட்டிக் கடைசியில்
2.அது எந்த மருந்துக்கும் கட்டுப்படாத நிலை ஆக்கிவிடும்.

இருந்தாலும் வாழக்கூடிய சிறிது காலத்திற்கு இந்த மருந்தின் உபகாரத்தில் நாம் வாழ முடிகின்றது. இரத்தத்தில் கலக்கப்படும் இந்த மருந்து அதில் இருக்கக்கூடிய வீரிய நஞ்சு நம்மைக் காப்பாற்றுகின்றது.

அப்படிக் காப்பாற்றினாலும் விஞ்ஞான அறிவால் கலந்த இந்த நஞ்சின் தன்மை நமக்குள் சிறுகச் சிறுகச் சேர்ந்து துரித நிலைகள் கொண்டு உடலில் விளைந்து உயிராத்மாவில் சேர்கின்றது.

உயிராத்மாவில் நஞ்சு சேர்ந்தால் மனிதன் மனிதனாகப் பிறக்காது அடுத்து நஞ்சின் உணர்வு கொண்ட உடலிலே நம்மை உயிர் உருவாக்கிவிடுகின்றது.

உதாரணமாக ஒரு வெள்ளாட்டை எடுத்துக் கொண்டால் எருக்கண் செடி மற்ற விஷச் செடிகளையும் அது உணவுக்காகச் சிறிது சிறிதாகக் கடித்துச் செல்கின்றது.

விஷச் செடிகளைக் கடித்தாலும் ஆட்டின் உடலில் இருக்கக்கூடிய உறுப்பின் தன்மைகளை அந்தச் செடியின் நஞ்சு ஒன்றும் செய்வதில்லை.

இதே போல ஒவ்வொரு தாவர இனச் சத்துக்குள்ளும் அதனதன் நிலைகளுக்குத் தக்க நஞ்சு இருக்கும்.
1.அந்த நஞ்சின் தன்மை கொண்டுதான்
2.ஒவ்வொரு தாவர இனமும் செழித்த நிலைகள் வளர்கின்றது.

பல பல தாவர இனச் சத்தை இணைத்து இதிலே மூன்று நஞ்சு கலந்த உணர்வின் சத்தை ஒருங்கிணைத்து நோயாக உள்ளவர்களுக்கு மருந்தாகக் கொடுக்கப்படும் பொழுது உணவுடன் கலந்து இந்த உணர்வுகள் உடலில் பரவி உடல் உபாதைகளை அகற்றுகின்றது.

அன்று மகரிஷிகள் தனக்குள் எடுத்துக் கொண்ட ஜெபப் பலனின் தன்மையை இந்தத் தாவர இனத்திற்குள் இருக்கக்கூடிய காந்தப் புலனில் இணைத்தார்கள்.

தான் எடுத்துக் கொண்ட தீமைகளை அகற்றும் வலிமையான உணர்வைப் பாய்ச்சி நோயுற்றவர்களுக்கு அதை மருந்தாகக் கொடுத்தார்கள்.

அது உள் செல்லும்போது உடலிலுள்ள நோய்களை அகற்றுகின்றது.

அதே சமயத்தில் ஞானத்தின் தொடர் கொண்டு தாவர இனத்தில் செலுத்திய மகரிஷியின் உணர்வுகள்
1.அந்த நோயாளியின் உடலில் படரப்படும் பொழுது
2.அவர் உடலில் உள்ள மற்ற தீமைகளை அகற்றும் ஞானமும் வருகின்றது.

ஏனென்றால் மெய் ஞானிகள் மனிதன் உடலில் உள்ள தீமைகள் நீங்க வேண்டும் என்ற எண்ணக் கருத்தினைத் தனக்குள் ஓங்கி வளர்த்து அதனின் நினைவு கொண்டு… “தான் உருவாக்கிய மருந்தினை” நோய்வாய்ப்பட்டவர்களுக்குக் கொடுத்தார்கள்.

மகரிஷிகளின் எண்ணத்தின் அலைகள் பதிந்த அந்த மருந்தினைக் கொடுக்கப்படும் பொழுது இவனின் உணர்வலைகள் அங்கே இருக்கும் தீமைகளை அகற்றுவதோடு மட்டுமல்லாதபடி அந்த மெய்ஞானியின் உணர்வைக் கவரும் தன்மையும் அங்கே வருகின்றது.

மெய் ஞானியின் உணர்வைக் கவரும் அந்த மனிதனுக்குள் தன் வாழ்க்கையில் அறியாது சேரும்
1.இருளை அகற்றும் ஞானங்கள் பெருகுகின்றது.
2.அவனும் ஞானியாக வளர்கின்றான்.

இவ்வாறு தான் ஒவ்வொரு ஞானியும் தனக்குள் பெற்ற மெய் ஞானத்தை ஒவ்வொரு சாதாரண மக்களும் பெறும் வண்ணம் செயல்படுத்தினார்கள். தன் இன மக்கள் உயர்ந்த நிலை பெறுவதற்காக ஆலயங்களையும் உருவாக்கினார்கள்.

ஆகவே… தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று போற்றித் துதிக்கும் அந்த அகஸ்தியனின் ஈர்ப்பு வட்டத்தில் அனைவரும் வாழ்ந்திட வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

“தனக்கு இறப்பே வரக்கூடாது…” என்று இரண்யன் வரம் வாங்கிக் கொண்டான் என்றால் அதனின் உட்பொருள் என்ன…?

 

நாம் ஒரு தீபத்தைப் பொருத்தினால் அந்த வெளிச்சம் தன் அருகில் இருக்கக்கூடிய பொருளை எல்லாம் அது காணச் செய்கின்றது.

இதைப் போன்றுதான் நமது உயிர் நமக்குள் ஒளியாக (வெளிச்சமாக) இருக்கின்றது. நாம் எதை எண்ணுகின்றோமோ அந்தக் குணத்தைத் தன் ஒளி கொண்டு அந்த உணரவின் குணத்தையும் மணத்தையும் நமக்குள் உணர்த்துகின்றது.. அறியச் செய்கிறது.

அதாவது
1.உணர்வின் வழியில் உணர்த்துகின்றது
2.மணத்தின் நிலைகள் அறியச் செய்கின்றது.

உயிர் நமக்குள் தீபமாக… சுடராக இருந்து நாம் எதை எண்ணுகின்றோமோ… அப்பொருளை நுகர்ந்த உணர்வின் துணை கொண்டு “அந்த உணர்ச்சியை ஊட்டி…”
1.உணர்வால் நம்மை அறியச் செய்கிறது
2,மணத்தால் தன் அறிவைக் காக்கச் செய்கின்றது.

இந்தப் பேருண்மையை நாம் அனைவரும் அறிதல் வேண்டும் என்ற நினைவுக்குக் கொண்டு வரும் நந்நாள்தான் தீப ஒளித் திருநாள்.

ஒரு அசுரன் இந்த உலகில் உள்ள மக்களை எல்லாம் கொன்று குவித்துக் கொண்டுள்ளான். கிருஷ்ண பரமாத்மா கண்ணனாக உலகத்தில் தோன்றி அந்த அசுரனை வதம் செய்து வென்றான் என்று ஒரு சாரார் சொல்கின்றார்கள்… சாஸ்திரங்களிலும் இது காட்டப்பட்டுள்ளது.

முருகன் வழியில் எடுத்துக் கண்டால் அசுர சக்திகளை அகற்றி சூரபத்மனைக் கொன்று குவித்தான் என்றும் காவியங்கள் உண்டு. ஆனால்
1.அந்தக் காவியங்களில் தப்பில்லை.
1.அதில் உள்ள மூலக் கருத்தினைத் தான் நாம் தவறாகக் கருத்தில் கொண்டு வாழ்ந்து செயல்பட்டுக் கொண்டுள்ளோம்.

காரணம் சூரியனை இயக்குவதும் அந்த விஷம் (நஞ்சு) தான். ..!

விஷத்தின் தாக்குதல் இல்லை என்றால் சுழற்சியின் வேகம் இல்லை. ஆனால் சுழற்சியின் வேகம் அதிகரிக்கும் போது நஞ்சினைப் பிளந்து ஒளியின் தன்மையாகப் பெறுகின்றது.

அதாவது…
1.சுழற்சியின் வேகம் அதிகரிக்கும் போது வெப்பம் அதிகமாகிறது
2.அந்த வெப்பத்தின் நிலைகள் தாங்காது நஞ்சு பிரிந்து விடுகிறது
3.இருந்தாலும் அந்த நஞ்சினால் தான் வெப்பமாக ஆனது.

அதே போலத் தான் நமது உயிரின் துடிப்பிற்கு காரணமே இந்த நஞ்சு தான். நஞ்சின் இயக்கம் இல்லை என்றால் உயிரின் இயக்கமும் இல்லை.

உதாரணமாக ஒரு ரோஜாப்பூ இருக்கிறதென்றால் அதிலிருந்து வெளிப்படும் மணத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.

அதை நாம் நுகர்ந்தால் நறுமணமாக இருக்கின்றது. ஆனாலும் அந்த மணத்தை வீசச் செய்வது உணர்த்துவது அதில் உள்ள விஷம் தான்.

சூரியனிலிருந்து வெளிப்படும் காந்தம் அல்ட்ரா வயலட் அந்த நஞ்சைக் கவர்ந்துதான் பூமிக்குள் வருகின்றது.
1.எதைக் காந்தம் இழுக்கின்றதோ அது மோதும் வேகத்தில் அங்கே வெப்பம் ஆகின்றது.
2.ஆனால் வெப்பமாகும் பொழுது இரண்டறக் கலக்கின்றது
3.கலந்த பின் அந்த விஷமே அதனின் மணத்தைப் பளீர்… என்று வீசச் செய்கின்றது

ஆகவே இந்த நஞ்சு இல்லை என்றால் உலகம் இல்லை என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

ஒருவனுக்கு கோபம் வருகிறது. கோபத்தால் அவன் தவறு செய்கிறான். நாம் பார்க்கின்றோம்… அவன் தவறு செய்கின்றான் என்ற உணர்ச்சியின் வேகத்தைக் கூட்டுகின்றது…!

தவறு என்று உணர்கின்றோம்… அப்பொழுது கோபம் வருகின்றது. கோபத்தின் உணர்வுகள் நமக்குள் விளைகின்றது. அவன் செய்தது தவறு என்று வரப்படும்போது
1.அங்கே இதே நஞ்சு தான் அவனைத் தவறு செய்ய வைக்கின்றது
2.அவனில் விளைந்த அந்தத் தவறை நாம் நுகரப்படும் பொழுது
3.நம் நல்ல குணத்தை இழக்கச் செய்து நம்மையும் தவறு செய்ய வைக்கின்றது.

அதனால்தான் இரண்யன்
1.எதிலேயுமே எனக்கு இறப்பு இல்லை…
2.என்னுடைய செயல்கள் எனக்கு வலு ஜாஸ்தி என்று சொல்கிறான்.

இதை எல்லாம் மகா ஞானிகள் இயற்கை எப்படி வளர்கிறது…? என்று தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.

சக்தியைப் பெண்ணாகக் காட்டியதன் உண்மைப் பொருள் என்ன..? – ஈஸ்வரபட்டர்

 

சப்தரிஷிகளாலும் சித்தர்களாலும் போற்றப்பட்டு வணங்கப்பட்ட உயர் சக்தியின் நிலைகள் எல்லாம் ஊன்றிப் பார்த்தால்
1.ஒவ்வொரு சப்தரிஷியும் தன் சக்தியால் வணங்கப்படும் தெய்வங்கள்
2.பெண்மை உருவங்களாகத் தான் இருக்கும்.

ஆகவே பராசக்தியையும் ஆதி சக்தியையும் பெண்மையின் சக்தியாக வணங்கும் நிலை என்ன…?

ஒவ்வொரு சப்தரிஷியின் உயர்ந்த சக்திக்கும் உண்மையை ஊன்றிப் பார்த்தால் அவர்களின் ஆரம்பகால தாம்பத்ய வாழ்க்கையின் உணர்வின் எண்ண மோதலின் ஒன்றுபட்ட உயர் சக்தியின் வழித் தொடர் பெண்மையின் சக்தி கொண்டு தான் ஆண் வலுப் பெற்று ரிஷியாக சப்தரிஷியாக உயர்ந்தான்.

1.ஜீவனற்ற… ஜீவனை வளர்க்கும் சக்தியற்ற நிலை…
2.அமில குண ஆண்மைக்கு வலுத் தந்த சக்தியே
3.இத் தாம்பத்ய எண்ண வலு பெண்மையின் ஜீவ வளர்ச்சி வாழ்க்கையின் கூட்டினால் தான்…!

இக்கலியிலும் ஆதாம் ஏவாள் என்று உணர்த்திய மனித இன வளர்ச்சியின் செயல் முறையும் இதன் உண்மை கொண்டு தான்.

அமிலமான சிவ உருவம் கொண்டு திருவள்ளுவருக்கு வாசுகி அம்மையாரின் உயர் ஞான ஈர்ப்புக் கரு அமில செயல் சக்தி கூடித் தான்
1.அவர் (வாசுகி) வளர்த்த ஞானக் கருவை இவர் உருவில் வெளிப்படுத்தி
2.இன்றளவும் வள்ளுவனையும் வாசுகியையும் போல் என்று
3.பெரியோர்களின் வாழ்த்தாக அமையப் பெற்ற வாழ்த்தின் சொல்லின் உண்மை இதுவே…!

பெண்மையின் கரு வளர்ச்சியினால் உயர் இன வளர்ச்சியின் வித்தை உருவாக்க முடிகின்றது. ஒரு சித்தர் தன் பாடலில் “பூவையரை அன்னையெனப் புகழ்ந்தாய் போற்றி…!” என்றும் உணர்த்தியுள்ளார்.

அதன் உட்பொருள் என்ன…? படைப்பின் படைப்பே
1.பூவையரை அன்னையாகக்கூடிய செயலுக்கு
2.இந்த மனிதக் கரு இன வளர்ச்சியைப் பெருக வைத்து
3.உயர் சக்தியை வளர்க்க செயலாக்க வழி தந்த படைப்பிற்கே
4.பூவையரை அன்னையாகும் வளர்ச்சியைத் தந்ததற்காகப் போற்றி வணங்கினார்.

அதே போல் மகாத்மா காந்திக்கு வலுத் தந்ததே அவரின் மனையாளான கஸ்தூரிபா காந்தியின் பக்தி மார்க்க வழி முறை தான்.

பூவையரின் சுவாச அலையே “கரு வளர்ச்சி” அலை. ஆண்களைக் காட்டிலும் பெண்களின் ஈர்ப்பலைக்கு வீரிய சக்தி உண்டு. ஆனால்
1.சிவனான அமிலமுடன் மோதுண்டு வெளிப்படும் சக்தியில் தான்
2.அச்சக்திக்கே சக்தி கிடைக்கின்றது.

மனித இன வாழ்க்கையின் எண்ணத்தின் உணர்வு நிலைக்கொப்ப ஒன்றுடன் ஒன்று இந்த எண்ணத்தின் செயல் இணையும் பொழுது தான் படைப்பு முழுமையாகின்றது.

பாவாகவும் ஊடையாகவும் நூற்பு நெய்யப்படும் துணியைப் போல் இரண்டு நிலைக்குள்ள எண்ணங்கள் ஒன்றாக இணைந்து மோதுண்டு இந்தத் தாம்பத்ய எண்ண உணர்வில் அமில பிம்ப சிவ ஊடைக்கு சக்தி ஈர்ப்புப் பாவாய் இந்தத் தாம்பத்ய நிலை அமைந்து
1.பெண்மையின் உயர் வழியைச் செயல் கொள்ளும் ஆண்மையின் நிலையில் தான்
2.இந்தப் பூமியின் உயர் ஞானங்களும் சித்து நிலைகளும் சப்தரிஷியின் நிலையும் உருவானதே…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

உதாரணமாக ஒருவர் தன் வாழ்க்கையில் வேதனை தாளாது நெருப்பை விட்டு எரித்துக் கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். எரிச்சல் தாங்காத நிலையில் உயிர் பிரிகின்றது.

அதே சமயத்தில் ஒருவர் ஒருவருக்குத் துன்பத்தை உருவாக்குவார். அதனால் துன்பப்படுபவரோ தன் குடும்பத்தில் எரிச்சலான நிலைகள் கொண்டு துடி துடிப்பார்.
1.“இப்படிச் செய்கிறார்களே… பாவிகள்” என்று எரிந்து விழுந்து
2.அவர்கள் உருப்படுவார்களா…! என்ற ஏக்கத்தில் பேசினால் போதும்.

இந்த எரிச்சலின் நிலைகள் கொண்டு ஏங்கப்படும் பொழுது தீயை வைத்து எரித்து இறந்து போன அந்த உயிரான்மா இவர் ஏக்கத்தில் இவருக்குள் வந்துவிடுகின்றது.

முதலில் தன்னைத் தான் எரித்துக் கொண்டது அந்த ஆன்மா.

இந்த உணர்வின் தன்மையை அடுத்தவர்கள் எண்ணும் பொழுது அந்த ஆன்மா இந்த உடலுக்குள் வந்துவிடுகின்றது. வந்தவுடன் இவர்கள் என்ன சொல்வார்கள்?

“ஐய்யய்யோ… எரிகிறதே…எரிகிறதே…” என்பார்கள். டாக்டரிடம் சென்று பரீட்சித்துப் பார்த்தால் ஒன்றும் இருக்காது.
1.இரத்தத்தில் சுழலும் இந்த ஆன்மாவை
2.அவர்களால் கண்டுபிடிக்க முடியாது.

ஆனால் இவர்கள் “எனக்கு எரிகிறது… இங்கே எரிகிறது… அங்கே எரிகிறது…” என்று சொல்வார்கள். அந்த உயிரான்மா இந்த உடலுக்குள் வந்தவுடன் எரிச்சலையூட்டி அதே எரிச்சலான நிலைகளை அங்கே செயல்படுத்துகின்றது.

நாம் எடுத்துக் கொண்ட எண்ணம் எமனாகும் பொழுது எமன் என்ன செய்கின்றான்? அங்கே “தீச்சட்டிக்குள் போட்டு வாட்டுகின்றான்…” என்று காட்டுகிறார்கள்.

தீச்சட்டிக்குள் போட்டு எரிச்சலாகும் பொழுது “ஐயோ அப்பா…!” என்றால் முடிகிறதா…? இந்த உடலில் எரிச்சலை எடுத்து “இப்படிப் பேசினார்களே…” என்று எரிந்து எடுத்துக் கொள்ளக்கூடிய எண்ணம் இங்கே எமனாக வருகின்றது.

இந்த உணர்வுகள் வந்தவுடன் சீக்கிரம் விளைந்து விடுகின்றது.

சித்திரபுத்திரன் என்ன செய்கின்றான்? கணக்குப் பிரகாரம் “நீ முடித்துக் கொள்…” என்று எமனிடம் ஒப்படைத்துவிடுகின்றான்.

சித்திர புத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான். நம்முடைய எண்ணம் தான் நம் அடுத்த உடலைச் சிருஷ்டிகின்றது.

நாம் எந்தெந்த குணத்தை எடுத்தோமோ அதற்குத் தகுந்த உடலைப் பெற்றுவிடுகின்றோம். மனித உடலோ அல்லது வேறொரு உடலோ பெறுகின்றோம்.

“என்ன வாழ்க்கை…!” என்று எண்ணித் தற்கொலை செய்து தன்னை எரித்து மாய்த்துக் கொண்டாலும் இன்னொரு உடலுக்குள் சென்று அங்கேயும் “எரிகிறதே…எரிகிறதே…” என்று எரியச் செய்யத்தான் முடியும்.

பின் அந்த உடலையும் மாய்த்து அடுத்து எரிச்சல் உணர்வு கொண்ட ஒரு மிருகமாகவோ எரிப்பூச்சியாகவோ பிறக்கும்.
1.அதை யார் தொட்டாலும் எரிச்சலாகும்.
2.ஆக மொத்தம் எல்லாவற்றையும் எரிக்கும் நிலைகள் தான் வருகின்றது.

இது தான் சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்பது. இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது நல்லது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் இயக்கம்

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய நிலைகளை யாம் (ஞானகுரு) மீண்டும் மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது
1.அதுவே அந்த உணர்வின் இயக்கமாக இங்கே என்னைப் பேச வைப்பதும்… பேசுவதும்…!
2.உணர்வலைகளை ஒலி பரப்புவதும்… அதை நீங்கள் கேட்டு உணர்வதும்
3.அந்த குரு அருள் உங்களுக்குள் பதிந்து கொண்டிருப்பதும்…!

நஞ்சு பரவிக் கொண்டிருக்கும் இன்றைய உலகில் யார் எதுவாக இருப்பினும் இந்த உடல் எவ்வாறு ஆனாலும் உடல் நமக்குச் சொந்தமல்ல… இந்தப் பூமியும் சொந்தமல்ல.

குரு காட்டிய வழியில் நாம் நடக்கும் போது விண்ணுலக ஆற்றல் நமக்குச் சொந்தம் ஆகின்றது… இந்தப் பூமியும் சொந்தமாகிறது… இந்த உடலும் நமக்கு இன்று சொந்தமாக இருக்கின்றது.

மனிதனான பின் சொந்தமாக்க வேண்டியது எது என்பதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

என்றுமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குச் சொந்தமாக்கி அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகி அவர் விண்ணுலகம் சென்றது போன்று நாமும் அந்த விண்ணுலக ஆற்றலைப் பெற்று ஒளியின் உணர்வாக மாற்றுவதே நமக்குச் சொந்தம்.

பேரின்பப் பெரு வாழ்வாக என்றும் அழியா ஒளிச் சரீரம் பெறுவதே நமது கடைசி நிலை. அதன் வழிகளில் குரு காட்டிய பேரன்பை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

இது அனைத்தும் நான் பேசுகிறேன் என்று எண்ண வேண்டாம். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குள் உரு செய்து பதிவாக்கினார். அவர் தனக்குள் எதைப் பெற்றாரோ அதைப் பெறும் பாக்கியத்தை எனக்கும் ஏற்படுத்தினார்.

அவர் காட்டிய உணர்வு வழி செல்லப்படும் பொழுது அந்த அருள் உணர்வினை உணர முடிகின்றது.
1.அதே உணர்வின் ஒலிகள் தான் இங்கே எழுப்பப்படுகின்றது
2.உணர்வின் அலைகள் உங்களுக்குள் படுகின்றது
3.அந்த அலையின் தன்மையை நீங்கள் ஈர்க்கின்றீர்கள்
4.குரு அருளின் உணர்வின் தன்மை உங்களுக்குள் பதிவாகின்றது
5.அந்தப் பதிவின் நிலைகள் உங்களுக்குள் குருவாகின்றது
6.குருவின் தன்மை நினைவாக்கப்படும் பொழுது அந்த அலையின் தொடர் கொண்டு
7.பேரின்பப் பெரு வாழ்வு வாழும் நிலையை நீங்களும் அடைகிறீர்கள்.

நீங்கள் அதை அடைய வேண்டும் என்று தான் எனது பிரார்த்தனையே. அந்த எண்ணத்துடன் தான் குருவை வேண்டுகின்றேன். அவரை வேண்டி அந்த உணர்வுகளை எடுக்கப்படும் போது நீங்களும் அதைப் பெற்றால் உங்களுக்குள் மகிழ்ச்சி தோன்றும்.

நீங்கள் மகிழ்ச்சியானால் எனக்கும் அந்தப் பேரின்ப வாழ்வு கிடைக்கும்.

ஆகவே குருநாதர் பெற்ற நிலைகளைத் தியானித்து அந்த அருள் உணர்வுகளை எனக்குள் சேமித்து நீங்கள் எல்லாம் அதைப் பெற வேண்டும் என்பதற்காக நான் (ஞானகுரு) சதா தவமிருக்கின்றேன்.

அந்த தவத்தின் பலனை நீங்கள் பெற்று
1.மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று நீங்கள் சொல்லும் பொழுது
2.அது எனக்கும் சொந்தம் ஆகின்றது உங்களுக்கும் சொந்தமாகிறது.
3.நாம் அனைவரும் அந்த மகரிஷிகள் வாழும் அருள் வட்டத்திற்குள் செல்வோம்.

அவர்களின் அருள் வட்டத்திற்குள் நாம் செல்ல வேண்டுமென்றால் நம் முன்னோர்களின் உயிரான்மாக்களை விண்ணில் செலுத்த வேண்டும்… செலுத்துவோம்…!

ஆண் ஆணாகவும் பெண் பெண்ணாகவும் தான் மீண்டும் மீண்டும் பிறப்பு எய்துகிறார்களா…? – ஈஸ்வரபட்டர்

 

தாய் தந்தையரின் அன்பில் உருவாக்கப்பட்டு அறிவின் ஞானமும் நல்லொழுக்க உயர் மகனாக வளர்க்கப்பட்ட தன் மகனுக்கு அவனது வளர்ச்சியின் வம்சம் வளர பெண்மையின் சக்தி கூடி தன் மகனின் வாழ்க்கையின் நிறைவில் தாய் தந்தையர் பூரிப்பு காண்கின்றனர்.

1.பெண்மை எது ஆண்மை எது..?
2.உயர் சக்தியின் தன்மை எது…?
3.படைப்பின் படைப்பில் முன் ஜென்மத் தொடர் அறியும் முறையில் ஆரம்ப வளர்ச்சி முறைதான் வளர்ந்ததா…?
4.பெண்ணாகப் பிறவி எடுத்து முற்பிறவி இப்பிறவி எப்பிறப்பிலும் பெண்ணாகவும்
5.ஆண் ஆணாகவும் தான் பிறவி எடுக்கின்றனரா…?
6.பிறவியின் தொடர் வழிப்படும் முறை என்ன…?

பின்னிப் பின்னி வரும் தொடர் வளர்ச்சி நிலையில் ஆவியாகிப் பிம்பமாகி… மீண்டும் ஆவியாகிப் பிம்பமாகும் வழித் தொடர்தான் இயற்கையின் நியதி.

ஓர் ஆத்மா பிறப்பெடுத்து அப்பிறவி மாறி ஆவியான நிலையில் அந்த ஆவியின் உணர்வு அமில குணத்தின் ஈர்ப்பு எண்ணம் ஆண் உணர்வுடன் ஆணின் ஈர்ப்பில் அந்த உயிர் ஆவி சிக்குகிறது என்று வைத்துக் கொள்வோம்.

ஆக அந்த ஆண்மைக்குகந்த அமிலத்துடன் கலக்கப் பெற்று அவ்வீர்ப்பின் வித்தாக ஜீவன் கொள்ளும் ஜீவக் கருவிற்கு ஆண் வித்தின் அமில ஈர்ப்பின் வீரிய குணமுடன் பெண்ணின் ஆவி உயிர் சென்றிருந்தாலும் சரி.. அல்லது ஆணின் ஜீவ பிம்பமுடன் உள்ளவரின் உயிர் சென்றிருந்தாலும் சரி…!

அந்த ஆண் மகனின் அவ்வமில வித்தின் ஜீவ சக்தி அதிகமாக வளர்க்கும் அமில வளர்ச்சி உதிரமுடன் உருவாகும் நிலையிருந்தால்
1.முன் ஜென்ம பெண் ஆவி உயிரே
2.இவ் ஆணின் ஈர்ப்பில் சிக்கி
3.ஆண் உயிர் வித்தாக பெண் அமிலச் சேர்க்கையில் ஜீவன் கொள்கின்றது.

வாழ்ந்த நாளில் மகன் மகள் சகோதரன் சகோதரி இப்படிப் பந்தபாசத்தில் உள்ளவரும் எண்ணத்தில் ஒரு நிலையான உணர்வு நிலையில் ஆண் சுவாசமுடன் ஆணின் உடலில் ஏறும் எவ்வுயிர் அணுவாக இருந்தாலும்
1.ஆண் பெண் என்ற நிலை மாறி இவ்வீர்ப்பிற்கு வந்த நிலையில்
2.ஆணின் உதிர அமில ஜீவ சக்தியின் வளர்ச்சிகொப்ப ஆணாகவும் பெண்ணாகவும்
3.ஜீவிதம் கொண்ட பிறப்பெடுக்க முடிகின்றது.

இந்நிலை கொண்டு தான் பெண்ணின் ஈர்ப்பிற்கு வரும் ஆண் பெண் என்ற எவ்வாவி உயிரணுவாக இருந்தாலும் இப்பெண்ணின் ஈர்ப்பின் வீரியம் கொண்ட உணர்வு எண்ணமுடன் அவ்வுடலின் ஈர்ப்பில் சிக்குண்டுள்ள அவ்வாவி உயிர் அணு என்ன செய்யும்…?

பெண் ஆண் என்ற தன் உணர்வு மாறி எந்தத் தாயின் ஈர்ப்பில் வளர்ச்சிக்கு வந்ததோ அதன் நிலையினால் பெண் ஆண் என்ற முந்தைய ஜென்ம முறை
1.ஒவ்வொரு ஜென்ம நிலையிலும் இவ்வீர்ப்பு ஜெனன உணர்வு நாளில்
2.இவ் ஆண் பெண்ணின் உணர்வு ஜீவித ஈர்ப்பு வளர்ச்சி அதிகம் கொண்டவர்களின் அமில நிலைக்கொப்ப
3.பெண் கருவாகவும் ஆண் கருவாகவும் அவதரிக்கும் நாளில்
4.ஆண் பெண்ணின் ஜீவ உயிரணு ஈர்ப்பின் விகித நிலைக்கொப்பத்தான்
5.அஜ்ஜீவன் ஆணாகவும் பெண்ணாகவும் உருவாகின்றது.

முந்தைய கால உணர்வு எண்ணமானது ஆவி உயிரணுவின் நிலையில் உருவாகும் ஜீவ சக்தி கரு வளர்ச்சி நாளில் தான் ஒவ்வொரு ஜென்மக் கருவும் ஆண் பெண் என்ற உருவ நிலை கொள்கின்றது.

ஆணின் உணர்வு எண்ண அமிலமும் பெண்ணின் உணர்வு எண்ண அமிலமும் மாறு கொள்கின்றது. பெண்ணின் உடலில் உருவாகும் ஜீவ சக்திக்கு உயிரணுக்களின் வளர்ச்சியை வளர்க்கும் ஈர்ப்புக் குண ஜீவ சக்தி அதிகமுண்டு.

எவ்வுடலின்… எவ்வமில ஜீவித உணர்வு உயிரணு வளர்க்கும் தன்மை அதிகமுள்ளதோ… அவ்வீர்ப்பின் நிலைக்கொப்ப பெண் ஆண் என்ற உருவ பிம்ப உணர்வு ஜீவ கரு உருவாகின்றது.

மனிதனின் ஜீவ கரு உயிரணுவின் வளர்ச்சித் தன்மை கொண்ட இனத் தாவரங்கள் சில உண்டு. மனிதனின் ஜீவ சக்திக்கு உகந்த சக்தி குணம் மாங்கனிக்கு உண்டு.

மாங்கனியின் கொட்டையை அம்மரத்தின் கனி எவ்வளவு சுவையாக இருந்தாலும் அம்மரத்தின் கொட்டைய நாம் பயிர் செய்தால் அம்மரம் விட்ட கொட்டையில் வளர்த்த மரத்தின் கனியின் சுவையை உண்டு பார்த்தால் “தாய் மரத்தின் கனிச் சுவை சேய் மரத்தின் கனிச் சுவைக்கு இருக்காது…”

தாய் மரத்தின் கொட்டையை எடுத்து வளர்க்க விட்டு அவ்வளர்த்த வித்துச் செடியுடன் தாய் மரத்தின் கிளையை ஒட்டுச் சேர்த்து ஒட்டு மரமாக வளரும் மாங்கனியின் சுவை தாய் மரத்தின் கனியைக் காட்டிலும் சேய் மரத்தின் தாய் மரத்துடன் ஒட்டுச் சேர்த்து வளர்த்த கனியின் சுவை தாய் மரத்தின் சுவையைக் காட்டிலும் நற்சுவையாக இருக்கும்.

ஒன்றின் துணை கொண்டு ஒன்றாக உருவாகும் உணர்வின் எண்ண ஈர்ப்பு நிலைக்கொப்பத்தான் ஆண் பெண் என்ற நிலை உருவாகி வளர்கின்றதப்பா…!

1.வளர்ப்பின் வளர்ப்பாகி…
2.ஆவியாகி பிம்பமாகி ஆவியாகும் செயல் சுழற்சியின்
3.ஈர்ப்பின் உணர்வு உயர் நிலை வளரும் நிலைக்கொப்பத்தான்
4.வளர்ச்சியின் தொடர் வளர்ச்சி… வளரும் ஈர்ப்புத் தன்மை உருவாகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

வாரத்தில் ஒரு நாளாவது கூட்டுத் தியானம் இருந்து மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஒருக்கிணைந்த வலுவின் எண்ணங்களைப் பாய்ச்சுதல் வேண்டும்.

அவ்வாறு பாய்ச்சப்படும் பொழுது எல்லோரும் ஏகோபித்த நிலைகளில் வெளிப்படுத்தும் இந்த உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து
1.அவைகளைச் சக்தி வாய்ந்த உணர்வலைகளாகப் பூமி முழுவதும் படரச் செய்கின்றது.
2.அப்படிப் பரவும் அருள் உணர்வுகள்
3.நம்மிலிருந்து வெளிப்பட்ட தீமைகளை விளைய வைக்கும் உணர்வலைகளைத் துரத்திச் சென்று
4.கடல் அலைகளில் மோதச் செய்கின்றது.
5.பின் கடலுக்குள் ஆழத்திற்குள் அமிழச் செய்துவிடுகின்றது.

இதற்குப் பெயர் தான் “விநாயகர் சதுர்த்தி”.

விநாயகர் சதுர்த்தி அன்று களி மண்ணால் விநாயகரைச் செய்து அதைப் பூஜித்துவிட்டு அதன் பின் கடலிலோ அல்லது ஆற்றிலோ கரைத்து விடுகின்றோம்.

இதைத்தான் நாம் ஐதீகம் என்ற நிலைகளில் இங்கே கொண்டாடுகின்றோம்.

நம் வாழ்க்கையில் நாம் பல பல நன்மைகள் செய்திருப்பினும் அதில் நம்மையறியாமலே வேதனை வெறுப்பு கோபம் ஆத்திரம் இதைப் போன்ற உணர்வுகள் நம் உடலுக்குள் விளைந்து விடுகின்றது.

நமக்குள் அவ்வாறு விளைந்ததை நமக்குள் வளராமல் தடுக்கும் நிலை தான் யாம் சொல்லும் இந்தக் கூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம்.

ஒருக்கிணைந்த நிலைகளில் “எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்” என்று எடுத்து நாம் வெளிப்படுத்தும் இந்த உணர்வலைகள் காற்று மண்டலத்தில் பரவும் பொழுது
1.தீமையான உணர்வுகளுக்கு இங்கே இடமில்லாது
2.அதனின் சக்தியை இழக்கச் செய்துவிடுகின்றோம்.
3.நமக்கு முன் படர்ந்திருக்கும் வெறுப்பு குரோதம் போன்ற தீமையை உருவாக்கும் உணர்வுகள் “துரத்தியடிக்கப்படுகின்றது”.

ஒரு ரோஜாப்பூவின் அருகில் வேப்ப மரத்தின் சக்தி வாய்ந்த உணர்வலைகள் வந்தாலும் ரோஜாப்பூ தன் மணத்தின் துணை கொண்டு அந்தக் கசப்பான உணர்வைத் தனக்குள் ஏற்றுக் கொள்ளாது ஒதுக்கித் தள்ளும்.

அதைப் போல் கூட்டுத் தியானத்தின் மூலம் வலுவான நிலைகள் கொண்டு எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தை அனைவரும் ஒருக்கிணைந்து வெளிப்படுத்த வேண்டும்.

நாம் வெளிப்படுத்தும் இந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரவச் செய்து தீமையான உணர்வலைகளைத் துரத்திச் சென்று கடலுக்கடியில் அமிழ்த்தி விடும்.

கடலில் ஏன் அவைகளை அமிழ்த்த வேண்டும்…?

1.கடலுக்குள் இருக்கும் ஹைட்ரஜன் – அதற்குள் ஈர்க்கும் காந்த சக்தி அதிகமாக உண்டு
2.கடலில் இருக்கும் நீருக்குக் கனம் ஜாஸ்தி.
3.இங்கே கிணற்று நீருக்கு எடை குறைவு.

ஆகவே கடல் நீருக்குள் இருக்கும் காந்தப் புலனின் ஆற்றல் அதிகம். கடலிலிருந்து தான் ஆதியிலே எல்லாமே உருப்பெற்றது.

அதனின்று வெளிப்பட்ட நிலை தான் அது ஆவியாக மாறி அதனின் துணை கொண்டு தாவர இனங்கள் அது விளைந்தாலும் அத்தகைய நிலைகளிலிருந்து வெளிப்பட்ட அந்த ஹைட்ரஜன்
1.நாம் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் சத்து உப்பாக மாறுகின்றது.
2.அது கனம் கொண்ட சத்தாக இருப்பினும் (இதை)
3.அதே இனம் தனக்குள் அதைக் கவர்ந்து கடலுக்குள் அமிழ்த்தி விடுகின்றது.

இதனால் பூமியிலிருக்கும் தீமை விளைவிக்கும் உணர்வுகள் குறைகின்றது.

தியானத்தின் மூலம் வலுவுக்கு வலு சேர்க்கும் முறை

அந்த மகரிஷிகள் கண்டுணர்ந்த மெய் உணர்வுகளைப் பெறவேண்டும் என்றால் கண்ணின் நினைவு கொண்டு நினைவாற்றலை மகரிஷிகளின் பால் கொண்டு சென்று அதைக் கவர்ந்து கொண்டால் தான் நம் உடலுக்குள் செலுத்தி அணுக்களாக உருவாகிக் கொண்டிருக்கும் கருவிற்குள் உபதேசிக்க முடியும்.

(கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்று சொல்வார்கள்)

இங்கே நான் (ஞானகுரு) உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தாலும்
1.உங்கள் நினைவலைகள் வேறு பக்கம் இருந்தால் இது பதிவாகாது.
2.எம்முடைய உபதேசத்தை நீங்கள் கேட்கும் அந்தச் சமயம் எந்த நினைவு கொண்டு வருகின்றீர்களோ…
3.கண்ணன் கண்கள் உங்களுக்கு அந்த உபதேசத்தைத்தான் கொடுப்பான்.

இப்படி எல்லாம் பல நினைவுகள் வருவதனால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னை என்ன செய்தார்…?

இவனைச் சும்மா விடக் கூடாது என்பதற்காகத்தான் எறும்புப் புற்றுக்குள்ளேயும் காட்டுக்குள்ளேயும் கொண்டு போய் பல இன்னல்களை ஏற்படுத்தினார்.

அப்பொழுது எனக்கு வீட்டு நினைவு எங்கே வருகிறது…? எப்படி வீட்டு நினைவு வரும்…?
வசமாகக் கொண்டு போய்ச் சிக்க வைத்துவிடுவார்.

காட்டுக்குள்ளே “செந்தேள்…!” ஒன்று இருக்கிறது. அது கொட்டியதென்றால் எப்படித் தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. மிளகாயைப் போட்டு அரைத்துத் தேய்த்தால் எப்படி இருக்கும் எரிச்சல்…! அதே போல இருக்கும்.

அதை என்னைக் கொட்ட வைத்தார். அது கொட்டினவுடனே, ஐய்யய்யோ… ஐய்யய்யோ என்று துடித்துக் கொண்டு இருப்பேன். கொஞ்ச நேரத்தில் பார்த்தால் “விண்… விண்…” என்று வலி இருக்கும்.

“ஈஸ்வரா…” என்று சொல்லுடா…! என்பார். ஆனால் ஈஸ்வரா…! என்று சொல்ல எனக்கு வராது. ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது ஐய்யய்யோ… ஐய்யய்யோ என்று தான் அலறிக் கொண்டு இருப்பேன்.

விஷம் எந்த அளவுக்கு ஏறியதோ அந்த அளவுக்கு நான் அலறும் பொழுது உன்னுடைய நல்ல குணங்கள் எல்லாம் எங்கேடா போனது…? என்று கேட்பார் குருநாதர்.

எல்லாருக்கும் நல்லது செய்தாய்…! நல்லது செய்த அந்த நல்ல குணங்கள் எல்லாம் எங்கே போனது…? இந்த விஷத்தைக் கண்டது அது ஓடி ஒளிந்து விட்டது அல்லவா…! என்று அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.

இதற்காகத்தான் இராமாயணத்தில் வாலியைக் காட்டுகின்றார்கள்.

ஆனால் வாலியை இராமன் மறைந்திருந்து தான் தாக்கினான். நேராகத் தாக்கவில்லை…!
ஏன்…?

நமக்குள் வேதனை வந்தாலும்… அது நம்மைத் தாக்கினாலும்.. நம்முடைய நினைவு அந்த வேதனையின் மீது இருக்கக்கூடாது.

உதாரணமாக ஒரு புலி வருகிறது என்று எண்ணிப் பாருங்கள்…! புலி வருகிறதா..!. என்று எண்ணிய உடனே கிடு…கிடு…வென நடுங்குவோம்.

நாம் இருக்கும் இந்தப் பக்கம் ஒரு போக்கிரி வருகிறான். பார்ப்பவரை எல்லாம் எல்லாம் அடிக்கிறான்… உதைக்கிறான் என்று சொன்னால் போதும்.

இங்கே நமக்குக் கிடு…கிடு…வென்று வரும்.

அப்பொழுது அந்த நேரத்தில் நம் வலு எல்லாம் எங்கே போகிறது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

”போக்கிரி…” என்று சொன்னவுடனே நம் வலு அனைத்தும் அவனிடத்தில் போகிறது. நம் நிலை எல்லாம் அங்கே போய்விடுகிறது.

வாலி என்ன செய்கிறான்…? அவனுக்கு நேராக நின்றால் (நம்முடைய) சம பலத்தை எடுத்துக் கொள்கிறான். இராமாயணத்தில் வான்மீகி மாமகரிஷி மிகவும் தெளிவாகவே இதைக் காட்டுகின்றார்.

நம்மிடம் இருக்கும் நல்ல குணத்தின் வலு இழந்தபின் அடுத்து நாம் எதை எடுக்க முடியும்… முடியாது.

1.அதற்காக வேண்டித் தான் நம் கண்கள் செல்லும் வழியில் (கண்ணன் சொல்லும் வழியில்)
2.புருவ மத்தியில் ஈஸ்வரா என்று நம் உயிரை எண்ணி
3.அவனை (போக்கிரியின் உணர்வை) நேரடியாகத் தாக்காதபடி
4.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
5.எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்… ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று உடலுக்குள் அந்த உபதேசத்தைச் செய்ய வேண்டும்.
மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் கூட்டிக் கொண்டு என்று நம் உடலில் இந்த வாசனையை அதிகமாகப் பரவச் செய்து கொள்ள வேண்டும்.

அப்பொழுது அவனை எண்ணும் பொழுது (முதலில்) நமக்கு எப்படி நடுக்கம் வருகின்றதோ… அதே மாதிரி
1.“அவன் நம்மை எண்ணும் பொழுது..”
2.மறைமுகமாக நாம் பரவச் செய்த மகரிஷிகளின் உணர்வை அவன் நுகர்ந்தால்
3.அது அவனுக்குள் போய் அவனிடத்தில் இருக்கும் அந்த வீரியத் தன்மையை குறைக்கும்… “தடுமாறச் செய்யும்….!”

ஏனென்றால் அவன் உணர்வைக் காட்டிலும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று நாம் இதை எண்ணும் பொழுது
1.நம்மைத் தாக்க வேண்டும் என்று எண்ணினால் நம்மைப் பார்த்ததும்
2.நம் நினைவுகள் அவனுக்குள் குபு…குபு… என்று போய் அவன் உணர்வு அனைத்தையும் மாற்றிவிடும்…!

செய்து பாருங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

அருள் ஞானிகள் துவைதம் அத்வைதம் வசிஷ்டாத்வைதம் என்று காட்டியுள்ளார்கள். அத்வைதம் என்பது மறைமுகமாக இருக்கக்கூடியது – கண்ணுக்குப் புலப்படாதது.

உதாரணமாக தன் இனமான மணத்தை (வாசனையை) செடி தனக்குள் உறைய வைத்துச் செடியாக உறைந்து விட்டால் துவைதம்.

இதில் மணம் அத்வைதம். உறைந்த செடி துவைதம்.

எந்தச் சத்தின் தன்மையை இது கவர்ந்து தனக்குள் எடுத்ததோ அது துவைதமாக உருவமாகின்றது. அதை நாம் நுகர்ந்தறிந்தால் இந்தச் செடி இன்னது தான் என்றும் அது இன்ன குணம் என்றும் அறிந்து கொள்ள முடிகின்றது.

வியாசர் துவைதம் அத்வைதம் வசிஷ்டாத்வைதம் இவைகளைப் பற்றித் தெளிவாகக் காட்டியுள்ளார்.

வசிஷ்டர் என்பது தனக்குள் கவர்ந்து கொள்ளும் சக்தி.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் தனக்குள் கவர்ந்து கொண்ட சக்தியின் தன்மை கொண்டு அது ரிஷியாக நின்று அதனின் உணர்வின் வலுவால் வளர்த்துக் கொண்டு நம்மை மனிதனாக உருவாக்கிய நிலை.

1.இவ்வாறு பல பல உடல்களாக மாறி மாறி வந்ததை
2.துவைதமாக மாற்றிதை வசிஷ்டாத்வைதம் துவைதம் என்று காட்டினார் வியாசர்.
3.எண்ணத்தால் நாம் எவ்வாறு உருவானோம்…? என்ற நிலையைக் காட்டுகின்றார்.
4.நம் உயிரை அரசனாகவும்
5.நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை மந்திரிகளாகவும்
6.நமக்குள் உணர்ச்சிகளைத் தூண்டி வலுகூட்டிக் கொள்ளும் நிலைகளைச் சேனாதிபதிகளாகவும்
7.இந்தச் சபையில் ஒவ்வொரு எண்ணங்களையும் எண்ணும்போது அதனின் உணர்வின் செயலாக உடலின் இயக்கமாவதைப் படைகளாகவும் காட்டினார்.

இராஜ நீதியை உருவாக்குவதற்கு எல்லாவற்றையும் தான் வசியப்படுத்தும் நிலைகள் கொண்டு வருவதை “இராஜரிஷி… வசிஷ்டர்…” பெயர் வைத்தார்.

வசிஷ்டரும் அருந்ததியும் என்றால் தனக்குள் கவர்ந்து தன் உணர்வின் சக்தியாகத் தனக்குள் இணைந்து செயல்படும் சக்தி.

தான் நுகர்ந்த உணர்வின் தன்மையைத் தனது சக்தியாக இயக்கி மற்றதைத் தன்னுடன் இணைத்து “அது செயல்படும் சக்தி…” என்று “வசிஷ்டாத்வைதம் துவைதம்” என்று உணர்த்தினார்.

ஆனால் வசிஷ்டர் என்பது அவர் ஒரு ரிஷி என்ற நிலைகளைத்தான் சொல்கின்றனர்.

சமஸ்கிருதத்தில் வசிஷ்டர் என்பது “வசி” தனக்குள் கவர்ந்திடும் சக்தி கொண்டது. அருந்ததி தான் நுகர்ந்த உணர்வு தன்னுடன் இணைந்து செயல்படும் சக்தி.

அருந்ததி – இரண்டும் இரண்டற இணைந்து அது செயல்படுவது போல் அருள் ஞானிகள் தீமைகளை அகற்றிய உணர்வை நமக்குள் எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

வீர குணத்துடன் தியானிக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

ஈர்ப்புத் தன்மையின் வளர்ச்சித் தொடரில் ஆணாகவோ பெண்ணாகவோ உருவாகி வளர்ந்து ஒவ்வொரு ஜென்மங்களும் எடுக்கும் கருவில் உருவ பிம்ப உணர்வு எண்ண வாழ்க்கை முறையில்
1.இவ்வெண்ணத்தை எப்படி வழி நடத்துகின்றோமோ – அவ்வழியின் நிலைக்கொப்ப குண நலன்கள்
2.பிம்ப உடலின் கூட்டு அமிலமுடன் ஜீவ சக்தியுடன் கூடிய சுவாசத்தால்
3.உடல் அமில விகித நிலையும் ஒவ்வொரு பிறவியிலும் மாறுடுகின்றது.

ஆனால் மனித எண்ண பிம்ப உடலில் தான் செயலாற்றும் திறமையும் சொல் வடிவ உணர்வலைகளும் உள்ளது.

இந்த உடல் அமிலக்கூட்டையே உணர்வின் எண்ணத்தால் தாக்கப்படும் எந்த ஒரு குண நிலையையும் சமமான நிலைப்படுத்திச் செயல்படக்கூடிய தன்மை இவ்வெண்ணத்தால் வழிப்படுத்தும் முறை கொண்டு செயல்படுத்த முடியும்.

வாழ்க்கையில் நம்மை எதிர்கொள்ளும் மனித பிம்பத்தை விட்டுப் பிரிந்த ஆவி நிலை கொண்டோரின் அலையிலிருந்து இவ்வுடல் பிம்ப எண்ணத்தில் ஈர்க்கப்படும் உணர்வு நிலையை
1.எண்ணத்தால் சமப்படுத்தும் நிலை பெற்றுவிட்டால்
2.இவ்வெண்ண பலத்தினால் எந்தச் செயலையும் செயலாக்க முடியும்.

வீரமான உணர்வுகளையும் அவ்வீரத்தின் உயர் ஆற்றலையும் கொண்டு
1.நம்மை வந்து மோதும் எந்தத் தீய செயலையும்
2.நாம் எடுக்கும் எண்ணத்தின் பார்வை கொண்டே நம்மை அவை வந்து தாக்காமல்
3.நம் உணர்வின் சுவாசம் பட்ட நிலையிலேயே அந்தத் தீய சக்தியைப் பார்வையாலேயே மாற்ற முடியும்.

எண்ணத்தால் எடுக்கும் ஜெபத்தின் வீரிய… வீரச் செயல்… தன்மை இருந்தால் அதே சமயத்தில் நம்முள் உள்ள அமிலக் கலவையின் கூட்டு
1.நற்குண வழித் தொடர் பெற்றிருக்குங்கால்
2.இவ்வீரிய வீர உணர்வாக எந்த நிலையையும் நாம் பெற முடியும்.

அன்பு பாசம் ஞானம் அனைத்தும் நமக்கு வேண்டியது தான்…!

ஆனால் அனைத்துச் சக்திகளையும் சாந்தமுடன் சுழலவிடும் ஜெபத்தினால் இவ்வாழ்க்கை என்ற நிறைவுக் குணத்துடன் மட்டும் தான் சுழல முடியும்.

ஆக… வீரத்தின்… வீர சக்தித் துடிப்பு உணர்வின் செயல் கொள்ளும் செயல் நிலையை… இவ்வுடல் என்ற அமிலக் கூட்டிலேயே வீரியம் கொள்ள வேண்டும்.

1.வீரத்தின் வீரிய செயல் குணத் துடிப்பு உணர்வால் உந்தப்படும் இவ்வெண்ணத்தின் ஈர்ப்பலையை
2.உயர்ந்த ஜெப சக்தியின் தொடர்பு கொண்டு
3.சித்தர்கள் சப்தரிஷிகள் ஆகியோரின் உணர்வுடன் ஒன்றப்படும் செயலினால்
4.இம்மனித பிம்ப உடல் சக்தி தான் தெய்வ சக்தியாகின்றது.

ஆவலும்… ஆவலுக்குகந்த ஆசை விரமும்… உணர்வால் ஜெபமுடன் கூடிய அறிவும்… ஞான வழித் தொடரில் செலுத்தி அவ்வழியினில் நாம் சென்றோமானால்
1.நாம் செல்லும் அந்த வேகம் கொண்டு
2.நம் சுழற்சியுடன் நம்மை வழி நடத்திச் செல்லும் குருவின் நிலைக்கே
3.நம் செயலைக் கொண்டு சுழற்சியின் சக்தி வேகம் அதிகம் கொள்ளும்.

அறியும் அறிவாற்றல் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டுமப்பா…!

இவ்வாழ்க்கை இன்பம் துன்பம் என்ற சுழற்சியின் கதியிலேயே எண்ணத்தைச் சமப்படுத்தி உண்டோம்… உறங்கினோம்… வாழ்ந்தோம்…! என்ற குறுகிய சுழற்சியில் இருக்கக் கூடாது.

எந்த நல்ல குணத்தின் சக்தியை நாம் பெற்றிருந்தாலும் அறிவோம்…! “ஹரிநாராயணா…” என்ற உண்மை நாமத்தின் வழித் தொடர் ஜெப நாமத்துடன் நம் செயல் சுழன்று கொண்டேயிருக்க வேண்டும்.

ஹரி ஓ…ம் (அறிவோம்) எதனையும் நாம் அறிந்து கொண்டேயிருப்போம். ஹரி நாராயணா… ஹரே… படைப்பின் படைப்பு நாராயணா…!
1.உன் படைப்பையே நான் அறிய
2.படைக்கப்பட்ட படைப்பையே அறிந்து படைக்க வருகின்றேன் என்ற
3.அறிவோம்…! என்ற வீர உணர்வு சுழற்சியின் செயல் வளர்ச்சியில்
4.ஞானச் செயல் வளர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்.

காலத்தின் மாற்றமும் உருவத்தின் மாற்றமும் மாறிக் கொண்டே தான் உள்ளது ஒவ்வொரு நொடிக்குமே.

இந்தச் சுழற்சியின் சுழற்சியாகச் சிக்குண்டு கிடைக்க முடியாத பாக்கியமாக மனித உருவத்தை எடுத்துள்ள நாம் இவ்வுருவத்தின் ஜீவத் துடிப்பு சக்தியைக் கொண்டு தான் எந்தச் சக்தியையும் பெற முடியும் என்ற உண்மையை உணர்ந்திடல் வேண்டும்.

இந்த உடல் பிம்ப உணர்வு எண்ணத்தையே
1.“வீரம்…” என்ற உயர் சக்தியின் வீரிய குணமாக… நம் குணத்தை ஜெபம் கொண்டு
2.மகரிஷிகளின்பால் நம் எண்ணத்தைச் செலுத்தி
3.நாம் எடுக்கும் தியானத்தால் பல உன்னத நிலைகளைப் பெறலாம்.

ஆறாவது அறிவிலிருந்து ஏழாவது அறிவுக்குத் தான் நாம் செல்ல வேண்டும்… ஐந்துக்கு அல்ல…!

 

தாவர இனங்களுக்கெல்லாம் ஐந்து புலனறிவு தான்.
1.அந்தச் செடி கொடிகளை வேக வைக்காமல் சாப்பிடும் எந்த உயிரினமானாலும் மிருகமானாலும்
2அந்த உணர்வின் சத்தாக அதற்குள் இயங்கி அது எண்ணமாகி
3.அதே ஐந்து புலனறிவாகத் தான் அதுவும் இயங்கும்.

ஒரு வேப்பமரம் கசப்பின் சத்தை அதைத் தன் உணர்வால் கவர்ந்து வளர்வது போல… ஒரு மாடோ மற்ற மிருகமோ எந்தச் செடியை அது நுகர்ந்து தன் உணர்வால் எடுத்துக் கொண்டதோ அதை நுகர்ந்து பார்த்து… தன் இனமான சத்தை அது வளர்ந்து அது உணவாக உட்கொள்ளும்.

அது உணவாக உட்கொண்டாலும் அது உடலில் கருவாகி அதனின் குட்டியாகப் படும்பொழுது இது எந்தெந்த உணர்வின் உணவை அது உட்கொண்டதோ அந்த உணர்வின் சத்து கருவிலே விளையும் அந்த கருவுக்குள் ஊன்றி அது ஈன்ற பின் இந்தத் தாய் அதற்குச் சொல்லிக் கொடுப்பதில்லை.

தன் உடலில் எத்தகைய உணர்வுகள் தாய் அதை உணவாக உட்கொண்டதோ அதனுடைய கன்றும் இது பிறந்த பின் அது வளர வளர இந்தத் தாய் எந்தெந்த ஆகாரத்தைச் சாப்பிட்டதோ அந்த ஆகாரத்தை இந்தக் கன்றும் சாப்பிட ஆரம்பிக்கும்.
1.அந்தத் தாய் வயிற்றிலே விளைந்த இந்தக் கருவின் உணர்வுகள் கொண்டுதான் இந்தக் கன்றும் உணவாக எடுக்கும்.
2.புதிதாக நாம் எதைப் போட்டாலும் அது எடுக்காது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் நாம் நல்லவைகளை எண்ணினாலும் அதற்குள் நஞ்சான அசுர உணர்வுகள் புகுந்து விடுகிறது.

நமக்குள் புகுந்து நரக வேதனையாகச் செயல்படுத்தும் இந்த அசுரனை நீக்கத்தான் “கண்ணன் அசுரனைக் கொல்ல உபாயத்தைக் கொடுத்தான்…” என்று காவியங்கள் காட்டுகின்றது.

காரணம்… யாரை உற்றுப் பார்த்து “நம்மை வேதனைப்படுத்துகிறார்…” என்று எண்ணுகிறோமோ அவருடைய வேதனைப்படுத்தும் உணர்வுகள் நமக்குள் வருகின்றது.

1.எந்த வேதனை அவர்கள் உடலில் வித்தாக (வினையாக) உருவானதோ
2.அவர் வெளிப்படுத்தும் உணர்வுகளை நாம் கேட்டறிந்து நுகரும் போது
3.நம் உடலிலே விளைந்தது நமக்குள் வித்தாக ஊன்றி விட்டால்
4.அவரை மீண்டும் மீண்டும் நினைக்கச் செய்து
5.நம்மை எப்படிக் கெட்டுப் போக வேண்டும் என்று எண்ணினாரோ எத்தகைய தவறு நிகழ வேண்டும் என்று எண்ணினாரோ
6.அந்த உணர்வுகள் அனைத்தும் நமக்குள் வந்து நம் நல்ல குணங்களைச் செயல்படுத்தாதபடி
7.நமக்குள் வேதனைப்படும் நிலையாக நரகலோகத்தை நமக்குள் பெருக்கிக் கொண்டே போகும்.

இப்படி அந்த அசுரன் (வேதனைப்படுத்தும் உணர்வு) நமக்குள் சென்றாலும்
1.நம் உயிரான விஷ்ணு அதற்கு வரம் கொடுப்பதும்… எண்ணியதை இயக்கச் சக்தியாகப் பிரணவமாக்கி ஜீவனாக்கச் செய்வதும்
2.அதன் வழியிலே பிரம்மமாகி (பிரம்மா) சிருஷ்டிப்பதும்
3.சிருஷ்டித்த உணர்வுகள் நம் உடலாகச் சிவமாக்குவதும்
4.நாம் எண்ணியது அனைத்தும் உருவாகும் இடமாக இந்தச் சிவலோகத்திற்குள் இந்திரலோகமாக
5.இதைச் சித்தரித்துத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையில் நாம் எத்தனையோ வேதனைகளைக் கடந்து அந்த வேதனையை நீக்கிடும் ஆற்றல் மிகுந்த சக்தியாகப் பெற்றுத் தான் வந்திருக்கின்றோம்.

எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அதை உருவாக்கும் ஆற்றல் பெற்றவன் என்று “மனிதனின் ஆறாவது அறிவைக் காட்டுகின்றார்கள் ஞானிகள்…”

1.அந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து
2.நாம் செய்யும் நன்மைக்குள் புகும் தீமையான உணர்வுகளை வேக வைத்து அதன் செயலாக்கங்களை வீழ்த்தி
3.நல்லதைக் காக்கும் சக்தியாகச் செயல்பட வேண்டும்
4.ஏழாவது நிலையான ஒளியாக மாற்ற வேண்டும் என்பதே ஞானிகள் நமக்கு உரைத்தது.

ஆண்டவன் நாமத்தை ஜெபித்து வருவதல்ல தெய்வ சக்தி – ஈஸ்வரபட்டர்

 

அறிவு மார்க்கம் பக்தி மார்க்கம் சித்து மார்க்கம் இப்படி ஒவ்வொரு வழியினரும் ஞானத்தை மனிதனுக்குகந்த மார்க்கமாகத்தான் உணர்த்துகின்றனர்… உணர்கின்றனர்.

ஞானம் என்பது மனிதனுக்கு மட்டும் தான் உண்டு. மிருகங்களுக்கு ஞானம் இல்லை…! என்கிறான் மனிதன். அறிவு மட்டும் மிருகத்திற்குண்டு. பகுத்தறியும் நிலை கொண்ட மனிதனுக்கு ஞானம் உண்டு என்று உணர்த்துகின்றான்.

1.அறிவு-கூர்மை
2.அறிதல்-தெரிந்து கொள்வோம் என்ற ஆர்வம்
3.அறிவோம்-அறிவின் ஆற்றலைச் செயல்படுத்தச் செல்லும் வழி.

எறும்பு அதற்குகந்த அறிவைக் கொண்டு ஞானத்தை எப்படிச் செயல்படுத்துகின்றது…? தனக்கு வேண்டிய ஆகாரத்தை அறிவைக் கொண்டு அறிகின்றது.

தன் செயலைக் கொண்டு அவ்வுணவைச் சேமிக்க மண்ணைப் பறித்து அவ்வுணவை அதில் சேமித்து பிறருக்குத் தெரியாவண்ணம் பாதுகாக்கின்றது.
1.அறிவைக் கொண்டு செயல்படுத்தி
2.தனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பாதுகாக்கும் எறும்பிற்கு ஞானமில்லையா…?

ஒவ்வொரு சிறு பிராணியும் தனக்குகந்த அறிவின் ஞானத்தைச் செயல் கொண்டுதான் ஜீவிக்கின்றது. மனிதனைக் காட்டிலும் அறிவும் ஞானமும் சில மிருகங்களிடம் உண்டு.

ஆனால் அதற்குகந்த அங்க அவயங்களும் சொல் வெளிப்படுத்தும் ஒலி பாஷையும் இல்லாததனால் உணர்வின் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தக்கூடிய பகுத்தறியும் ஞானம் இல்லை.

அறிவின் செயல் ஞானமுண்டு. உயர் ஞானத்தை உணர்வின் தன்மையை மாற்றியமைத்துச் சக்தி கொள்ளக்கூடிய ஞானத்தின் வளர்ச்சி அங்கில்லை.

இந்த ஞானத்தைச் செயலாக்கி ஒன்றுடன் ஒன்று சேர்த்து பிறிதொன்றின் கூட்டமைக்க மனிதனின் ஞானத்திற்குச் செயல் திறமை சொல்லாற்றல் இவை உண்டு.

இந்த ஞானத்தின் உயர் ஞானம் கொள்ளத்தான் பக்தி மார்க்கம்… சித்து மார்க்கம்… யோக மார்க்கம்…! என்றெல்லாம் இந்த மனித உடலின் உணர்வை எண்ணத்தால் ஒருநிலைப்படுத்தி ஜெபம் என்று வழிப்படுத்துகிறார்கள்.

ஒவ்வொருவரும் அறிந்த ஒவ்வொரு மந்திரச் சொற்களைச் சொல்லி உயர் ஞானத்தைப் பெற்று ஆண்டவனிடம் முக்தி பெறும் மார்க்கத்தை இவ்யோக சாதனையால் உணர்வைக் கட்டுப்படுத்தி சுவாசத்தை ஒவ்வொருவரும் தான்… தான்… அறிந்த மார்க்கங்களை உணர்த்துகின்றார்கள்.

1.பக்தியினால் ஞானம் கொண்டு
2.சக்தியினால் உணர்வை ஒரு நிலை கொண்டு
3.எண்ணத்தால் உயர் ஞானத்தின் அலையை நாம் செயல்படுத்த
4.நற்குணங்களின் அலைத்தொடரில் இந்த ஞானத்தைச் செலுத்தி அந்த ஞானச் செயலாக நாம் ஒன்றாகலாம்.

இயற்கையின் படைப்பில் உயிரணுத் தோன்றி உருவாய் உருவமாக உருக்கொண்டு இயற்கைச் சுவாச முறையை மாற்றியமைத்துச் சகல சித்து நிலை பெறுவதல்ல…! உயர்ந்த ஞான சக்தியின் வழித் தொடர் பெறுவதற்கு.

இந்த ஞானம் கோபத்தில் உள்ளவனுக்கும் துணை செல்கிறது… திருடனுக்கும் துணை செல்கிறது… வஞ்சகனுக்கும் துணை செல்கிறது.. பெரும் காமுகனுக்கும் துணை செல்கின்றது.

அவரவர்கள் அறியும் அறிவின் செயலைச் செய்விப்பதே ஞானம் தான்.
1.ஞானத்தைப் பகுத்தறியும் உயர் ஞானமாக்கி
2.உயரக்கூடிய நிலைக்கு உயர் ஞானமாக்கி “ஞானியாகுங்கள்…!”

நற்குணங்களின் படைப்பை ஞானத்தின் சாந்தம் கொண்டு “மனிதனும் தேவனாகலாம்…!” என்று சித்தர்கள் உணர்த்திய முறை இதுவே.

உணர்வின் எண்ணத்தை “ஆண்டவனின் நாமத்தை” ஜெபித்து வருவதல்ல தெய்வ சக்தி…!
1.உணர்வின் எண்ணத்தை நற்குணங்களின் அமிலமாக
2.நாம் வளர்க்கும் செயல் முறை ஞானம் தான் மனிதன் தெய்வமாகும் முறை.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

என் நினைவை எங்கெங்கோ அலையவிட்டு என் உடலின் உணர்வின் ஆசை இல்லாது என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு “ஈஸ்வரா….”

இந்த உடலின் உணர்வின் ஆசை எனக்குள் வளர்ந்திடாது
1.“உயிரான… உன்” ஒளியான நிலைகள் கொண்டு
2.அந்த உணர்வின் நினைவாக எனக்குள் என்றும் நீ இருந்துவிட வேண்டும் “ஈஸ்வரா…”
3.உன் நினைவாகவே நான் இருக்க நீ அருள் புரியவேண்டும் “ஈஸ்வரா…” என்று வேண்டினால்
4.நமக்குள் குருவாக இயங்கிக் கொண்டிருக்கும் ஈசனின் அருளை நிச்சயம் பெறுவோம்.

இதனின் துணை கொண்டு நாம் செல்வோம் என்றால் “நான்…!” என்பது ஏது..? அவனுடன் ஒன்றிய இயக்கமே நான் ஆகின்றது.

நான் தவறு செய்தாலும் நான் ஆகின்றது. அவனுடன் ஒன்றிய நிலைகள் தவறின் நிலைகள் நமக்குள் வேதனை தரும் பொழுது அவனுக்கும் வேதனை தருகின்றது. அப்பொழுது நமக்குள்ளும் வேதனையை உணர்த்துகின்றான்.

வேதனைகளிலிருந்து அகற்றிட
1.அவனின் ஒளி கொண்டு
2.இருளை அகற்றிடும்… இருளைப் போக்கிடும் நிலையாக…
3.ஒவ்வொரு உணர்வையும் “பிளந்து காட்டுகின்றான்”
4.உணர்வின் செயலை உணர்த்துகின்றான்.

நமக்குள் அறியாது வந்த “தீமைகளைப் பிளந்திடும் ஆற்றல் பெற்ற… அறிந்திடும் ஆற்றல் பெற்ற… அவனின் நினைவு” எப்பொழுதும் நமக்கு வந்து கொண்டேயிருக்க வேண்டும்.

அறிந்திடும் ஆற்றலைக் கொடுக்கும் உயிரின் துணை கொண்டு தீமைகளை அகற்றிடும் அறிவின் ஆற்றலை நமக்குள் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எங்கெங்கோ செல்லும் என் நினைவு எல்லாவற்றிலும் “நீ…” இருக்க வேண்டும் ஈஸ்வரா…! உன் நினைவாகவே நான் என்றும் இருந்திட அருள் புரிவாய் ஈஸ்வரா…!

நரகாசுரன் என்பவன் யார்…!

 

ஒருவருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணத்தை எண்ணும் பொழுது அதை நமது கண் கவர்ந்து ஆன்மாவாக மாற்றி சுவாசிக்கச் செய்து அது நம் உயிரிலே பட்டு இயக்கப்படும் பொழுது ஓ… என்று பிரணவமாக்கி ம்… என்று நம் உடலாக ஆகிறது.
1.அது தான் இந்திரன். இந்திரன் என்றால் விந்து என்று பொருள்.
2.அது நமக்குள் கருவாகி உருவாகும் சக்தியாக அது உருப்பெறுகிறது.

நாம் எண்ணியதைச் சுவாசிக்கப்படும் போது நமது உயிர் அதை இயக்குகின்றது. உயிருக்குள் எப்பொழுதும் துடிப்பு இருந்து கொண்டே இருக்கிறது. அதனால் வெப்பம் உருவாகிக் கொண்டே உள்ளது.

உயிர் ஈசன் என்றால் துடிப்பினால் ஏற்படும் வெப்பம் விஷ்ணு. ஆகவே அந்த இயக்கத்திற்குள் ஏற்படும் வெப்பம் (விஷ்ணு) சுவாசித்த உணர்வுக்கு வரம் கொடுத்து விட்டான் என்று பொருள்.

அசுரன் எனக்கு எதிலுமே இறப்பு வரக்கூடாது என்ற நிலையில் அவன் விஷ்ணுவிடம் வரம் வாங்கிக் கொண்டான். எதிலேயுமே இறப்பில்லாத நிலைகள் என்றால் அதனின் உட்பொருள் என்ன…?

ஒருவன் நல்ல செயல்களைச் செயல்படுத்துகின்றான். இருப்பினும் பிறிதொருவர் வேதனைப்படுவதைப் பார்க்க நேருகிறது. அவனின் கண்களான கண்ணன் “அவன் வேதனைப்படுகிறான்” என்ற உண்மையை உணர்த்துகின்றது.

ஆனால் கண் பார்த்து அவன் உடலிலிருந்து வரக்கூடிய வேதனையான உணர்வைச் சுவாசிக்கும்போது அந்த நேரத்தில் விஷ்ணுவான உயிர் வரம் கொடுத்து விடுகின்றான்.

வேதனைப்படுகிறார் என்ற நிலைகளில் வரம் கொடுத்த பின் அந்த வேதனை உடலுக்குள் போன பின் இந்த இந்திரலோகத்திற்குள் நல்ல செயல்கள் செயல்படுத்துவதை அது தடுக்கின்றது.

பால் நிறையச் சத்து உள்ளது தான். இருந்தாலும் அதில் சிறிதளவு விஷம் கலந்து விட்டால் குடிப்போரை மயங்கச் செய்கிறது. ஆக இந்த அசுரன் என்பது விஷம்.

1.ஒருவன் வேதனைப்படுவதைக் கண்கள் காட்டி
2.அதில் இருந்து காப்பாற்றும் உணர்வின் செயலைக் கண் நமக்குக் காட்டினாலும்
3.அந்த நல்ல செயல்களின் வழிகளிலேயே உள் புகுந்து அசுர சக்தி நமக்குள் வந்து விடுகின்றது.

ஒருவர் வேதனைப்படுவதை நாம் பார்த்து அதை நுகர்ந்து அவருக்கு உடனே உதவி செய்ய வேண்டும் என்று எண்ணினாலும் அந்த எண்ணத்தால் நம் உயிர் வரம் கொடுத்து விடுகின்றது விஷ்ணு.

அந்த வேதனை நம் உடலுக்குள் சென்றபின் அவர்கள் எத்தகைய வேதனைப்பட்டார்களோ அதே உணர்வுகளை நம் உடல் முழுவதற்கும் தூண்டச் செய்கின்றது.

1.வேதனைப்பட்டவர் அவர்…!
2.ஆனால் நாம் நன்மை செய்யப் போக அந்த நன்மையின் உணர்வுக்குள்
3.அவர் பட்ட வேதனை ஊடுருவி நமக்குள் வந்து நல்ல குணங்களைச் செயல்படுத்தாதபடி
4.நம் உடலான இந்திரலோகத்தில் அந்த அசுர சக்திகள் செயல்படுகின்றது

இதைப் போல் நாம் எந்தக் காரியங்களைச் செய்தாலும் அதிலே கெட்டதை நீக்க நாம் முயற்சிக்கின்றோம்… புற நிலையில்…!

ஆனாலும் “கெட்டது” என்று உணர்ந்து கொண்ட பின்
1.அந்த உணர்வின் சத்து நம் உடலுக்குள் சுவாசிக்கும் பொழுது
2.உயிரான விஷ்ணு வரம் கொடுத்து விடுகின்றான்.
3.உடலுக்குள் அந்த அசுர சக்தி செயல்பட ஆரம்பித்து விடுகின்றது.

நமது வாழ்க்கையில் நம்மை அறியாத நிலையில் அசுர சக்திகள் இப்படித் தான் புகுந்து விடுகிறது.

நல்லவர்கள் அனைவருமே பிறர் துயரப்படுவதை எண்ணி அவர்கள் துயரைத் துடைக்கத் தான் எண்ணுகின்றோம். ஆனால் அவர்கள் படும் துயரமான உணர்வுகள் வெளிப்படுவதை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.

துயரப்படுபவர்களைப் பார்த்து அவர்கள் உடலிலிருந்து வெளி வரும் துயரமான அந்த உணர்வலைகளைக் கண் கவர்ந்து ஆன்மாவாக மாற்றி உயிரான ஈசனிடம் அதை ஒப்படைக்கின்றது.

1.ஈசன் அதை நமக்குள் உணர்த்தும் போது அந்த நல்ல காரியங்களைச் செய்தாலும்
2.அதனுடன் தீய விளைவுகளும் நமக்குள் சேர்ந்து விடுகின்றது.
3.அந்த அசுரனை வீழ்த்தும் வழி இல்லாது அது வளர்ந்து விடுகிறது என்பதைத் தான் “நரகாசுரன்” என்று காட்டுகின்றார்கள்.

கோபத்தை வீரமாக்கி அதை ஞானம் கொண்டு சாந்தப்படுத்தி “வீரிய சக்தியாக…” மாற்ற வேண்டும்- ஈஸ்வரபட்டர்

 

1.வீரமான உணர்வலைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் முக்கியம்.
2.வீரத்தின் உணர்வாற்றல் சக்தி தான் மனிதனின் வாழ்க்கை அமையும் நிலைதனை.

இந்த வீரத்தை ஞானம் கொண்டு சாந்தப்படுத்தினால் மனித வாழ்க்கையின் வெற்றிக்கு இவ்வீரம் தான் வித்தப்பா…!

இவ்வுலக நடைமுறை அரசியல் தலைவர்களின் உண்மை நிலையினை ஊன்றிப் பார்த்தால் வீரத்தின் ஞான சாந்தநிலை புலப்படும்.

ஆனால் நம் உணர்வில் கலந்ததுள்ள வீரத்தை நாம் அதன் நிலையிலேயே செலுத்தி விட்டால் வீரத்தின் வீழ்ச்சியை விரைவில் அடைவோம்.
1.வீரத்தை ஞானத்தால் சாந்தமாக்கிச் செயல்படும் பொழுது
2.அந்த வீரத்தின் வீரிய சக்தியை வளர்த்துக் கொண்டேயிருக்கலாம்.

வீர்த்தைக் கோபத்தால் செலுத்தும் பொழுது நம் வீரத்தின் செயல் தெறித்துவிடும்… அதை நாம் உடனே அறியலாம்.

இஞ்ஞானத்தை எப்படி வழிப்படுத்துவது…?

திருடனுக்கும் ஞானம் உண்டு.. குருடனுக்கும் ஞானம் உண்டு… மிருகங்களுக்கும் ஞானம் உண்டு. பக்தி யோகம் எவ்வழிக்குச் செல்பவனுக்கும் ஞானம் உண்டு.

ஞானம் இல்லாவிட்டால் திருடன் எப்படிச் சாதுரியமாகப் பிறரை ஏமாற்றித் திருட முடியும்…?

திருடனும்…
1.தன் ஞானத்தைக் கொண்டு திருட வேண்டிய நிலைக்கு
2.பிறரை ஏமாற்ற அந்தச் சாந்தத்தைக் கற்றுத்தான்… பொறுமையுடன்…
3.தன் திருட்டைப் பிறர் அறியாவண்ணம் திருடிக் கொண்டு வர
4.மிகவும் சாதுரியமாகத் தன் ஞானத்தைச் சாந்தமாக்கித் தன் நிலையைச் சாந்தமாக்கிக் கொள்கின்றான்.

அதையே… ஏன் நாம் நல்வழியின் உணர்வுக்கு… ஞானத்தைச் சாந்தமாக்கி உயர் ஞானம் கொள்ள முடியாது…!

கண் ஒளியற்றவன் தன் ஞானத்தைச் சாந்தமாக்கி உணர்வின் எண்ணம் கொண்டே தன்னைக் காத்துக் கொள்கின்றான் அல்லவா…?

தான் வாழ வேண்டும் என்ற ஒரே ஆசை உள்ளவன் உணர்வை இச்சாந்தத்தின் பால் செலுத்தி ஞானம் கொண்டு கண் ஒளி உள்ளவர்களைக் காட்டிலும் அதிக ஆண்டுகள் ஜீவிக்கின்றான்.

மிருகத்திற்கு ஞானம் உண்டு. அந்த ஞானத்தை எப்படிச் செயல்படுத்துகின்றது…? எல்லா நிலைகளையும் மிருகம் உணர்ந்திருந்தாலும் அங்க அவயங்களும் சொல்லாற்றல் திறமையும் மனிதனை ஒத்த நிலை இல்லாததனால் அதன் ஞானத்தை எப்படிச் செயல்படுத்துகின்றது…?

1.ஒலியின் ஈர்ப்பை ஒளி கொண்டு
2.தன்னை வளர்க்கும் எஜமானரின் சொல் ஒலியை இவ்வொளியால் கவனித்து
3.தன் ஞானத்தை உடலுக்குள் பதியச் செய்து கொள்கின்றது.

சில குறிப்பிட்ட ஒலி அலைகளை… தன் மேல் விசுவாசம் கொண்டு பரிவுடன் செலுத்தும் வளர்ப்பவனின் ஒலியை…
1.தன் ஒலியால் ஈர்த்து எடுத்துப் பதிய வைத்துள்ள நிலைக்கொப்ப…
2.வளர்க்கப்பட்டவனின் ஒலி பாய்ச்சிய முறை கொண்டு
3.அதன் ஞானத்தின் செயல் இருக்கும்.

மனிதனின் வளர்ப்பில் உள்ள பிராணிகளுக்கு அந்தந்தப் பிராணிகளின் கூக்குரலின் நிலைக்கொப்ப இவன் ஒலியை அதன் ஒளியுடன் பாய்ச்சும் பொழுது அதன் ஈர்ப்பில் அதனுடைய ஞானம் வெளிப்படுகின்றது.

பக்தியின் நிலை ஞானம் எப்படிச் செயல்படுகின்றது..?

ஆண்டவனை வணங்கினால் அவன் அருள்வான் பல…! என்று தன் உடல் தேவைக்கும் செல்வத்திற்கும் வாழ்க்கையில் உழன்றுள்ள மற்ற நிலைகளுக்கும் ஆண்டவனை நினைத்து வணங்கும் ஞானம் எப்படிச் செயல் கொள்ளும்…?
1.அவரவர்களின் உணர்வுக்குகந்த
2.எதிர்பலனின் நிலையைத்தான் அவனவன் அடைய முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இன்று நாம் ஆலயங்களுக்குச் செல்லும்போது அர்ச்சனைக்குக் காசைக் கொடுத்துவிட்டு சாமியைப் பார்த்தவுடன் “அப்பனே… என் வீட்டில் இப்படியெல்லாம் இருக்கின்றது நான் உன்னை நினைக்காத நாள் கிடையாது..,” என்று வேதனையைத்தான் அங்கே எடுக்கின்றோம்.

பார்த்தால் கண்களிலிருந்து அழுகை… “கண்ணீராக” வந்து கொண்டிருக்கும்.

ஆனால் அங்கே ஞானிகள் காட்டிய நல்ல உணர்வுகளையும் நல்ல சக்திகளையும் தனக்குள் எடுப்பதில்லை. அதைப் பற்றி எண்ணுவதுமில்லை.

தன் வேதனையைச் சொல்லி ஏங்கிக் கொண்டிருக்கும் பொழுது பின்னாடி இருப்பவரும் இதே ஏக்கத்திலிருப்பார். அப்பொழுது சாமியைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இவர்களைத் தள்ளுவார்.

“ஏம்மா…! மாடு மாதிரித் தள்ளுகிறாய் என்பார். இதையெல்லாம் இன்று கோவில்களில் பார்க்கலாம்.

நீ தான்… எருமை மாதிரித் தள்ளுகிறாய்…! என்று அவரும் பதிலுக்குக் கூறுவார். சாமி கும்பிடுவதை விட்டுவிடுகிறார்கள். சண்டை போட ஆரம்பித்துவிடுவார்கள்.

இந்த உடலைக் கோவிலாக்கி நமக்குள் உள்ள குணத்தை உயர்ந்ததாக்குவதற்காகத் தான் தெய்வத்தை அங்கே வைத்தார்கள் ஞானிகள்.

அதை நாம் யாரும் பின்பற்றுவதில்லை.

இந்த உண்மைகளை எல்லாம் யாம் சொன்னால் “சாமியே இல்லை…” என்று இவர் சொல்கிறார் என்று எம்மைத் திட்டுவார்கள்.

கோவிலுக்குச் சென்றால் தேங்காய் பழம் வைத்து…, “தேங்யாய் உடைக்காமல் அது என்னங்க சாமி கும்பிடுகின்றது…!” என்பார்கள்.

உங்கள் வாழ்க்கையில் சங்கடம் சலிப்போடு இருக்கின்றீர்கள்.

என் குடும்பத்தில் பல கஷ்டங்கள்… எனக்குப் பல சிரமங்கள்… என்று இப்படிப் பல வேதனைகளைத்தான் சொல்ல வேண்டும் என்று விரும்புகின்றீர்களே தவிர இந்த வேதனைகளை நீக்க வேண்டும் என்று யாரும் எண்ணுவதில்லை.

ஏனென்றால் இந்த உணர்வுகள் என்ன செய்கிறது?

நம் நல்ல குணத்தை இந்தச் சங்கட உணர்வுகள் பேசவிடாது நம்மை மறைத்துக் கொண்டேயிருக்கும்.
1.நாம் தவறு செய்யவில்லை,
2.சங்கட உணர்வுகள் நம்மை அவ்வாறு இயக்குகின்றது.

அதை நீக்குவதற்கு அந்த அருள் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் சேர்த்துக் கொண்டு
1.“நாம் இப்படித்தான் இருக்க வேண்டும்…” என்று எண்ணிப் பாருங்கள்.
2.உங்கள் உயிர் இயக்குகின்றதா… இல்லையா…? என்று பாருங்கள்.
3.அதே உணர்வை உயிர் இயக்கும் பொழுது கண் அந்த வழியையே காட்டும்.
4.உடலும் மகிழ்ச்சியாக இருக்கும்.

உங்கள் சொல் பேச்சு மூச்சு எல்லோரயும் நல்லதாக்கும். அந்தக் கோவிலில் எந்தத் தெய்வத்தை வைத்திருக்கின்றார்களோ நீங்கள் அதுவாக மாறுகின்றீர்கள்.

உங்களிடம் இருக்கும் நல்ல குணத்தை தெய்வ குணமாக மாற்றுவதற்குத்தான் இப்படிச் சொன்னார்களே தவிர மற்றவர்களைத் தள்ளிப் போட்டுவிட்டு அந்தச் சாமியின் சக்தியைப் பெறவேண்டும் என்றால்
1.தள்ளிவிடும் குணம் தான் நமக்குள் வரும்.
2.நம்மிடமிருக்கும் நல்ல குணத்தைத் தள்ளியே விட்டுவிடும்.

நம் நல்ல குணத்தைக் காப்பதற்காகத்தான் கோவிலை ஞானிகள் கட்டி வைத்திருக்கின்றார்கள்.

1.அந்தத் தெய்வ குணத்தைப் பெறவேண்டும்
2.சாமி மேல் போட்டிருக்கும் மலரைப் பார்த்தவுடன் அந்த மலரைப் போன்ற மணம் பெறவேண்டும்
3.இந்தத் தெய்வ குணத்தை உணர்த்திய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
4.அந்தச் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
5.இந்த ஆலயத்திற்கு வரும் அனைவரும் இந்தச் சக்தி பெறவேண்டும்
6.அவர்கள் குடும்பங்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்.
7.அவர்கள் செய்யும் வியாபாரம் தொழில் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று
8.இப்படி வேண்டினால் நாம் அந்தத் தெய்வமாக ஆகலாம்.

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும் – ஈஸ்வரபட்டர்

 

உணர்வுடன் கூடிய எண்ணத்தால் ஞானத்தின் சக்தி கொண்டு… பக்தி என்ற முறைப்படுத்தி உயர் சக்தியை ஞான வழியின் ஜெபமாக்கி… நமக்கு மேல் உயர்ந்த சக்தி கொண்ட சப்தரிஷிகளின் அலையை நாம் எடுக்க எடுக்க… நற்சக்தியின் அமில குணங்கள் நமக்குள் வளர்ச்சியாகிப் பெருகும்.

அப்படிப் பெருகத் தொடங்கினால் உடலுடன் கூடிய உணர்வான
1.சோம்பல் ¬- தன் எண்ண பலத்தால் எத்தன்மையான சோர்வு வந்தாலும் எண்ணத்தின் நிலைக்கொப்ப “சோர்வை…” அகற்ற முடிகின்றது.

2,தூக்கம் ¬- “தூக்கத்தையும்…” நம் வேலையின் நேரத்திற்கொப்ப உணர்வால் எடுக்கும் எண்ணம் கொண்டு மாற்றி அமைக்க முடிகின்றது.

3.பசி – எண்ணத்தால் வேறு ஒரு செயலில் உள்ள பொழுது “பசியையும்…” மாற்ற முடிகிறது.

4.காம இச்சைகள் – உடல் “காம இச்சையையும்…” மனிதனால் இச்சைக்குகந்த நிலையில் செல்லாமல் ஒழுங்குமுறைப்படுத்திக் கொள்ள முடிகிறது.

5.உடல் கழிவுகளின் உந்தல்

6.உடலில் ஏற்பட்டுள்ள வியாதியின் வலிகள் – எண்ணத்தால் அவ்வலியையே மறக்கக்கூடிய தன்மை மனிதனுக்கு உண்டு.

இந்த ஆறு நிலைகளையும் உணர்வால் வெளிப்படும் நிலைதனை நம்மால் மாற்றி அமைக்க முடியும்.

அதே போல் உணர்வால் உந்தப்படும் உடலின் இச்சைகளையே ஒழுங்குநிலைப்படுத்தி
1.உணர்வின் தன்மையில் செல்லாமல்
2.ஞானத்தால் கால நிலை அனுசரித்து
3.உடல் பிம்ப உணர்வு உந்தலின் அலையையே
4.எண்ணத்தால் ஒழுங்குபடுத்துகின்றான் மனிதன்.

எண்ணத்தைக் கொண்டு எச்செயலையும் செய்விக்கும் மனிதனைப் போல் மிருகங்களின் நிலை இல்லை.

அதன் உடலில் ஏற்படும் உணர்வின் உந்தலானது ஞானத்தின் எண்ணம் கொண்டு மாற்றியமைக்கக்கூடிய பக்குவமும் செயல் திறனும் மிருகங்களுக்கு இல்லாததனால்தான் மனிதனை ஒத்த உணர்வை மாற்றியமைத்து “வாழ்க்கை” என்ற சமுதாயப் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.

ஆனால் மனிதன் தன் எண்ணத்திற்குகந்த வளர்ச்சி செயல் ஞானத்தைச் செய்விக்கின்றான். உணர்வை மாற்றி அமைக்கக்கூடிய எண்ணம் செயல் மற்ற இனங்களுக்கு இல்லை.

உணவைத் தேடி உண்டு கழித்து உறங்கி காம இச்சையின் இனப் பெருக்க உணர்வும் உடல் பிணியில் உண்டாகும் அவஸ்தையில் சர்வ சதா அவ்வலியின் தன்மையுடன் ஒன்றியும் உணர்வை மாற்றியமைக்க முடியாத நிலை தான் மற்ற இனங்களுக்குண்டு.

மனிதனின் ஞானம் எவ்வுணர்வையும் கால நிலை சூழ்நிலை இதன் வட்டத்தைக் கொண்டு ஒழுங்குமுறைப்படுத்தித் தன் ஞானத்தால் உணர்வின் எண்ணத்தையே செயல்படுத்தும் திறன் பெற்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

குடும்பத்தில் தன் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிள்ளையைப் பார்த்து நீ அங்கேயெல்லாம் போகிறாயாடா..? அவன் மோசமானவன்டா… அவனிடம் பழகாதடா…, அவன் எப்படிப்பட்டவன் தெரியுமாடா உனக்கு…? “ஏண்டா அப்படியெல்லாம் செய்கிறாய் என்று பிள்ளை மேல் உள்ள பாசத்தால் தாய் கேட்பார்கள்.

ஆனால் பிள்ளையோ அவன் மீது ரொம்பவும் சிநேகிதமாக இருப்பான். தன் தாயைப் பார்த்து நீ சும்மா… “நச்…நச்…, என்று எதையாவது சொல்லிக் கொண்டேயிருப்பாய்…” என்பான்.

பாசத்தினால் தாய் “நீ இப்படிச் செய்யாதடா.., நீ பழகுபவர்கள் நல்லவர்கள் இல்லை” என்று சொன்னால் பையன் உனக்கு எப்பொழுது பார்த்தாலும் “நான் செய்வது தப்பாகத்தான் தெரியும்” என்பான்.

“ஐயோ…! இப்படிச் சொல்கிறானே… இப்படிச் சொல்கிறானே… இப்படிச் சொல்கிறானே…” என்ற வேதனை தான் வரும்.

அடுத்து… வருபவர்களிடத்தில் எல்லாம் சொல்வார்கள். “பாருங்கள்…!” மற்ற பசங்களுடன் சேர்ந்து இப்படிச் செய்கின்றான். கெட்டுப் போகின்றான். அதை நான் கேட்டால் என்னையும் இப்படிப் பேசுகின்றான் என்பார்கள்.

வெளியிலிருந்து வரும்போது பையன் அதே கோபத்துடன் வருவான். “உன்னை உதைத்தால் தான் சரியாக இருக்கும்” என்பான்.

இதையெல்லாம் தாய் கேட்டு நான் வேதனைப்பட்டுக் கொண்டயிருக்கின்றேன் என்பார்கள்.

இப்படித்தான் நடக்கின்றது.

ஆனால் விநாயகரை எதற்காக வைத்துள்ளார்கள்?

நல் வாழ்க்கையில் நம்மை அறியாமலே இதைப் போன்ற தீமைகள் வினையாகச் சேர்த்து நம்மை அழித்துக் கொண்டிருக்கின்றது. இந்த வினைகளை நீக்க வேண்டும் என்பதற்காகத்தான் விநாயகரைத் தெருவுக்குத் தெரு வைத்துள்ளார்கள்.

விநயகரைப் பார்த்து அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் வினையாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
1.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பம் முழுவதும் படரவேண்டும்.
2.குடும்பத்திலுள்ளோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.
3.அந்த எண்ணத்தை இங்கே வீட்டில் பாய்ச்ச வேண்டும்.

பையனை எண்ணும் பொழுது திட்டியிருந்தாலும் அவனை அறியாத இருள்கள் நீங்க வேண்டும். அன்னை தந்தை என்ற நிலைகளில் அவன் மதித்து நடக்க வேண்டும். வசிஷ்டர் அருந்ததி போல எங்கள் குடும்பத்தில் ஒற்றுமை வளர வேண்டும்.
1.பையன் ஞானத்தில் வளர்ச்சி அடைய வேண்டும்.
2.அவன் எல்லோரும் போற்றும் நிலை பெறவேண்டும் என்று இப்படி எண்ணிப் பழகுதல் வேண்டும்.

பையனைப் பார்த்து தம்பி…! இப்படி எல்லாம் இருக்கின்றது. எல்லாம் அந்த ஆண்டவனின் செயல். “நீ அந்த விநாயகரிடம் சென்று இந்த முறைப்படி வேண்டு…” கோவிலுக்குச் சென்று இப்படி வணங்கு என்று சொல்லலாம்.

பையன் விநாயகரைப் பார்த்து எதை எண்ண வேண்டும்?

என் அன்னை தந்தையரின் அருளாசி நான் பெறவேண்டும். அவர்கள் அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.
1.என்னை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்.
2.என் குடும்பத்தில் பற்றுடன் வாழ்ந்திடும் சக்தி எனக்கு வரவேண்டும்
3.பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும் என்று
அவன் இப்படித் தெய்வமாகக் கும்பிட வேண்டும்.

ஆனால் அப்படி நாம் செய்கிறோமா…?

“கோவிலுக்குப் போடா…” என்று சொன்னவுடனே பையன் என்ன செய்வான். கோவிலை ஒரு சுற்று சுற்றிவிட்டு சாமிக்கு இவ்வளவு ரூபாய் காணிக்கை என்று போடுவான்.

அங்கே பூஜை செய்யும் பூசாரிக்குக் கூடக் கொஞ்சம் காசை வைத்தால் “வாங்க தம்பி..” என்பார். சாமி மேல் போட்டிருக்கும் மாலையை எடுத்து “இந்தாப்பா மாலை…” என்று கொடுப்பார்.

தன் தாயிடம் சொல்வான். நான் சாமியை வணங்காமலா இருக்கின்றேன். நான் மாலை கூட வாங்கியிருக்கின்றேன். நீ வாங்கிக் கொண்டுவா பார்க்கலாம் என்பான். இப்படிச் சொல்வதற்குத்தான் இருக்கின்றது.

காசைக் கொடுத்துவிட்டு விலைக்கு வாங்கும் சக்தியாகத்தான் இருக்கின்றதே தவிர ஞானிகள் காட்டிய நிலைகள் நம்மை அறியாமல் இருக்கும் இருளை நீக்கி எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்ற உணர்வை எடுத்தால் அது நல்லதாகும்.

நம்மிடம் நல்ல குணமும் கெட்ட குணமும் உண்டு.

1.அந்த ஞானிகள் சொன்ன முறைப்படி நல்ல சக்திகளை எடுத்து
2.நல்ல குணத்திற்கு வலு கொடுத்தால்
3.நாம் தெய்வமாக இருந்து “கெட்ட குணத்தை எல்லாம் ஒடுக்க முடியும்”.

தியானத்தில் உட்கார்ந்தவுடன் பார்த்தால் சிலர் என்ன சொல்வார்கள். “அவன் என்னை இப்படிப் பேசினான்.. இவன் அப்படிச் செய்தான்..” இப்படிப் பல எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு என்னால் உட்காரவே முடியவில்லை என்பார்கள்.

தியானம் என்பது என்ன…?

“எப்பொழுதெல்லாம் நம் உணர்வுகள் மாறுகின்றதோ…. அப்பொழுதெல்லாம்…” மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று இப்படி எண்ணி அந்த உயர்ந்த சக்திகளை நமக்குள் சேர்ப்பது தான் தியானம்.

உடலுக்குள் பல மாற்றங்களை உண்டாக்கி வலியோ வேதனையோ நோயோ எப்படி உருவாகிறது…? என்பதை நேரடியாகக் காட்டினார் குருநாதர்

 

ஈஸ்வரபட்டாய குருதேவர் எம்மை (ஞானகுரு) பதினான்கு வருடம் பல காடு மேடெல்லாம் அலையச் செய்தார். என்னை அறியாது எனக்குப் பல துன்பங்களை அங்கே ஊட்டினார்.

அந்தத் துன்பத்தை நான் நுகர்ந்து பார்க்கும் போது அது எல்லாம் எனக்குள் வந்து விடுகின்றது. அதை எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? என்று அனுபவபூர்வமாக நான் தெரிந்து கொள்வதற்காகவே அதை எல்லாம் கொடுத்தார்.

அதற்காக வேண்டி மூன்று லட்சம் பேரைச் சந்திக்கும்படியும் செய்தார். அதை நான் வேடிக்கை பார்க்கும் பொழுது ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணத்தில் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
1.ஒருவருக்கொருவர் சண்டை போடுவது… ஒருவருக்கொருவர் தகாத நிலையில் பேசுவது…
2.இது போன்ற எத்தனையோ உணர்வின் தன்மைகளை நுகர்ந்து பார்க்கப்படும் பொழுது
3.சுவாசித்தது உயிருடன் மோதும் பொழுது ஏற்கனவே நான் எடுத்துக் கொண்ட நல்ல குணங்களுக்குள் இது கலந்து
4.அந்த விஷத்தின் தன்மை எனக்குள் இருக்கும் நல்ல குணத்தைச் செயலாக்க விடாதபடி
5.என் எண்ணங்கள் எப்படி எல்லாம் மாறுபட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும்
6.என்னை அறியாமலே உடலுக்குள் பல கவலையும் பல சஞ்சலமும் ஏற்படச் செய்து
7.எவ்வளவு திடசாலியாக இருந்தாலும் பலவீனப்படுத்துவதையும் குருநாதர் காட்டினார்.

ஏனென்றால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டிருக்கும் போது அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வைக் கூர்மையாகக் கவனிக்கப்படும் பொழுது அந்த உணர்வின் அலைகள் இங்கே பதிவாகி விடுகின்றது.

அந்த அலைகள் உடலுக்குள் சுழன்று கொண்டிருக்கும் நிலையில் இரவில் படுத்திருக்கும் போது அந்த உணர்வுகள் தன்னை அறியாமலேயே சுவாசிக்கச் செய்து “பயப்படச் செய்வதையும்… தூங்கவிடாமல் எப்படிச் செய்கிறது…? என்பதையும்” நேரடியாக அனுபவபூர்வமாக குருநாதர் காணும்படி செய்தார்.

அங்கே பார்த்த உணர்வுகள் உடலுக்குள் அது எதுவாக இணைகின்றது…? அது மீண்டும் மீண்டும் தன்னிச்சையாக உணர்ச்சிகளை ஊட்டி உடலில் அணுக்களாக வளரச் செய்து நோய்களாக எப்படி உருவாகிறது…?

காரணம்…
1.ஒவ்வொரு நாளும் எந்தெந்தக் குணங்களை எடுக்கின்றோமோ…
2.அந்தக் குணங்களுக்குத் தக்கவாறு… ஒவ்வொரு உணர்வுக்குத் தக்கவாறு தான் உடலும் உடல் உறுப்புகளும் அமைந்தது.
3.ஈரல் கல்லீரல் மண்ணீரல் கிட்னி சிறுகுடல் பெருங்குடல் இருதய வால்வுகள் சிறு மூளை பெரு மூளை என்று
4.அந்தந்த உணர்வுக்குத் தக்கவாறு எதனெதனை அது சேர்த்ததோ
5.அந்த மிருதுத் தன்மைக்குத் தக்கவாறு தான் அதனுடைய செயல்களும் இருக்கின்றது.

அந்த உறுப்புகளின் இயக்கங்களையும் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் ஒலிகளுக்கொப்ப அது எப்படி இயங்குகிறது..? என்ற நிலையையும் உடலுக்குள்ளேயே வைத்துக் காட்டினார் குருநாதர்.

மருத்துவம் படிப்பவர்கள் படிப்பு (PRACTICAL) மூலமாகத் தெரிந்து கொள்வதற்காக பிறருடைய உடல்களை எப்படி எடுத்துப் பரீட்சித்துப் பார்ப்பார்களோ அதே போல
1.எத்தகைய உணர்வை நீ சுவாசிக்கின்றாய்…?
2.எடுக்கும் எண்ணங்கள் அனைத்தும் உடல் உறுப்புகளை எப்படித் தாக்குகின்றது…?
3.அந்த உணர்வின் வேகத் துடிப்பு இரத்தத்துடன் கலந்து சுழன்று வரப்படும் போது
4.ஒவ்வொரு உறுப்புகளிலும் இது எதிர்மாறாகும் போது அது எப்படி எரிச்சலாகின்றது…
5.அது எந்தெந்த வேதனையாக உருவாக்குகின்றது…? என்று காட்டினார்.

உடலிலே சர்க்கரைச் சத்து அதிகமாகி விட்டால் எந்த அளவிற்குச் சர்க்கரை அதிகமாக இருக்கின்றதோ அதற்குத் தகுந்த மாதிரி சிறு நீரின் கலர் மாறுகின்றது… பார்க்கலாம்…!

அதைப் போல் பிறருடைய செயல்களை நாம் வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருந்தாலும்… இந்த உணர்வுகள் அது சுவாசித்து உடலுக்குள் செல்லும் போது இரத்தமாக மாறி… உடலில் இருக்கக்கூடிய உறுப்புகளுக்குள் ஊடுருவி… இதற்கும் அதற்கும் எதிர்மறையாகும் போது
1.அந்த உறுப்புகள் எப்படிப் பின்னமாகின்றது…?
2.உனக்குள் வலி எப்படி வருகிறது…? என்ற நிலையையும்
3.என்னையே முன்னிறுத்தி என் உடலின் இயக்கங்களைப் பார்க்கச் சொல்கிறார்.

எக்ஸ்ரே படங்களிலும் மற்ற ஸ்கேன் படங்களிலும் பார்ப்பது போல் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தி அது எவ்வாறெல்லாம் உன் உடலில் விளைகிறது…? என்பதை குருநாதர் ஒவ்வொரு நிலைகளிலும் இதைக் காட்டினார்.

பின் அதை எல்லாம் மாற்றும் உபாயமாக மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்க வேண்டிய முறைகளையும் கொடுக்கின்றார். அதை எல்லாம் கண்டுணர்ந்த பின் தான் உங்களுக்குள் இதை உபதேசிக்கின்றேன்.

1.நீங்கள் சாதாரண நிலையில் இருந்தாலும்
2.சிறு குழந்தையாக இருந்தாலும் அல்லது படிக்காதவர்களாக இருந்தாலும்
3.யாம் உபதேசிப்பதைக் கூர்மையாகப் பதிவு செய்யப்படும் போது
4.குருநாதர் காட்டிய அருள் ஞானிகளின் சக்திகளை நீங்களும் பெற முடியும்.

அந்த மெய் ஞானிகள் தீமையை நீக்கும் ஆற்றல்களைப் பெற்று எவ்வாறு விண்ணுலகம் சென்றார்களோ அந்த உணர்வின் சத்தை உங்களுக்குள் நினைவு கூர்ந்து இங்கே உபதேசமாகக் கொடுக்கும் போது உற்றுக் கவனித்தால் அது உங்களுக்குள் பதிவாகிவிடுகின்றது.

அந்தப் பதிவை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அவர்கள் பெற்ற சக்தியை நீங்களும் பெற முடியும்… விண் செல்லவும் முடியும்…!

ஞானமும் சாந்தமும் விவேகமும் இருந்தால் தான் நாம் போகும் ஞான வழியில் முன்னேற்றம் காண முடியும் – ஈஸ்வரபட்டர்

 

உணர்வின் எண்ணத்தை உணர்த்தி வந்தேன். மனித உடலின் அமில குணங்களையும் குணத்தினால் விளையும் உணர்வு உடல் ஆரோக்கியம் இவற்றையும் சில குறிப்பிட்டுள்ளேன்.

அணுவுக்குள் அணுவாக அணுவின் அணுவுக்குள் உள்ள நாம்
1.நம் எண்ண வலிமையை எப்படி வழி நடத்துகின்றோம்…?
2.மனிதனின் நற்குண அமிலமான அன்பு பாசம் பரிவு ஞானம் வீரம் சாந்தம் இவற்றை நாம் எப்படிச் செயல்படுத்துகின்றோம்…?

நம் குழந்தையிடம் அன்பை மட்டும் செலுத்தி அன்பின் செயலால் வளர்க்கப்படும் குழந்தை அவ்வன்பையே தனக்குச் சாதகமாக எடுத்துக் கொள்ளும்.
1.அவ்வன்பிலேயே வளர்ந்த நிலை கொண்டு
2.தனக்குச் சாதகமான… தனக்கு வேண்டிய உணர்வு தேவையின் நிலையைத்தான்
3.நம்மிடம் எதிர்பார்த்துப் “பிடிவாதத்தில்” நிற்கும்.

இப்படி வெறும் அன்பினாலேயே வளர்க்கப்பட்ட குழந்தை… அது வளர்ந்த பிறகு நம்மிடம் இந்த உணர்வின் குணத்தைத்தான் எதிர்பார்க்கும்.

அன்பினால் மட்டும் எச்சக்தியையும் செயல்படுத்திட முடியுமா…? முடியாது. அவ்வன்பே கடும் விஷம் ஆகி எதிர்த்துத் தாக்கும்.

அன்பைக் கொண்டு செயல்படுத்தி அச்செயலே நமக்கு எதிராகும் தருணத்தில் நம் உணர்வில் கோபம் குடிகொள்ளும். இதனை எப்படிச் செலுத்துவது…?

1.அன்புடன் ஞானத்தைச் செலுத்தி
2.சாந்தமாக நாம் ஊட்டும் அன்பினாலேயே
3.அக்குழந்தையை உயர் ஞானக் குழந்தையாக நாம் வளர்க்க முடியும்.

பரிவும் இதே போன்றது தான்…! பரிவை ஒருவருக்குச் செலுத்தப்படும் பொழுது… பரிவுடன் கூடிய ஞானத்தால் சாந்தம் கொண்டு அப்பரிவைச் செலுத்தும் பொழுது பரிவினால் விளையக்கூடிய நற்பயனை நாம் காணலாம்.

ஆசையின் நிலையும் அப்படிப்பட்டது தான். ஆசையினால் உள்ளது தான் இந்த உலகமே..! உண்ண உடுக்க உணர எண்ண வாழ்க்கையின் ஆணிவேரே இவ்வாசை தான்.

ஆசை கொண்டு நாம் புதிதாக ஒரு தொழிலுக்கு வித்தூன்றி வளரச் செய்கின்றோம் என்றால்
1.அவ்வாசையின் வித்திற்கு ஞானம் என்ற முதல் போட்டு
2.சாந்தம் என்ற நீரை ஊற்றினால் தான்
3.அவ்வித்து வேரூன்றி வளர ஏதுவாகும்.

ஞானமில்லா வழியில் சாந்தம் கொள்ளாமல் ஆசை கொண்டு எதைச் செய்தாலும் அது வியாபாரமாக இருந்தாலும் சரி… வாழ்க்கை நடைமுறைச் செயலாக இருந்தாலும் சரி.. ஒரு வீட்டையே கட்டுகிறோம் என்றாலும் சரி… அது நிறைவு தராது.

ஆசைப்பட்டுத்தான் வீட்டைக் கட்ட நாம் முற்படுகின்றோம்.

ஆனாலும் வீட்டைக் கட்டி முடிக்கத் தன்னிடமுள்ளள பொருளாதாரச் சூழ்நிலை… மற்றும் அந்த வீட்டிற்குகந்த பொருள் கிடைக்கும் நிலை… இவற்றை எல்லாம் இந்த ஞானத்தால்
1.தன் ஆசையின் உருவத்தை ஞானம் கொண்டு
2.தன் ஆசையின் செயலை எந்த வடிவில் அமைக்க முடியும்…? என்ற ஞானம் அறிய “சாந்தம்” தேவை.

ஆசையை ஞானம் கொண்டு சாந்தப்படுத்தினால் நாம் அமைக்கும் வீடு நம் உணர்வின் ஆசைக்கு உகந்த நிலையில் அமையுமப்பா..!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

தினசரி மனித வாழ்க்கையில் எத்தனையோ சிரமங்கள் படுகின்றோம். கஷ்டப்படுகின்றோம் கோபப்படுகின்றோம் ஆத்திரப்படுகின்றோம்.

ஆக வீணாகக் கவலைப்பட்டோ சங்கடப்பட்டோ சலிப்படைந்தோ வெறுப்படைந்தோ வேதனைப்பட்டோ அதையே மீண்டும் மீண்டும் நமக்குள் வளர்த்தால் மனித உடலுக்குள் தீமைகள் அதிகமாகி அடுத்து மனித உருவல்லாத உடலாகத்தான் நம்மை உயிர் உருவாக்கும்.

ஜோதிடமோ ஜாதகமோ நல்ல நேரமும் கெட்ட நேரமும் உங்களுக்கு ஒன்றும் செய்யாது.

தீமையை நீக்க வேண்டும் என்று எப்பொழுது எண்ணுகின்றீர்களோ அந்த நேரமே உங்களுக்கு நல்லது.

1.தீமை என்ற உணர்வு வரும் பொழுது
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று “அந்த நேரத்தைப் பயன்படுத்தி”
3.எங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களும் அந்தச் சக்தி பெறவேண்டும் என்று எண்ணினால்
4.அந்த நேரம் தான் உங்களுக்கு நல்ல நேரமாகும்.

ஏனென்றால் மனிதன் எல்லாவற்றையும் உருவாக்கக்கூடியவன்.
1.நல்லதை உருவாக்கப்படும் பொழுது அந்த நல்ல நேரம் வருகின்றது.
2.நல்ல செயல்கள் வருகின்றது.
3.மன பலம் கிடைக்கின்றது. மன உறுதி கிடைக்கின்றது.

என்னை இப்படிச் செய்தானே… என்ற நிலைகளில் கோபமும் ஆத்திரமும் வரும் பொழுது அந்த நேரம் கெட்ட நேரம்.

“எனக்கு இப்படித் தீங்கு செய்தானே… நான் தொழில் செய்தேனே நஷ்டமாகி விட்டதே… என் பையன் சொன்னபடி கேட்கவில்லையே…,” இப்படி எல்லாம் எண்ணிக் கொண்டிருந்தால் இதெல்லாம் கெட்ட நேரம் தான்.

எனக்குத் தீங்கு செய்பவன் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று பொருளறிந்து செயல்பட வேண்டும். சிந்தித்து அவன் செயல்பட வேண்டும். நல்லது செய்யக்கூடிய உயர்ந்த எண்ணங்கள் வர வேண்டும்.

நான் செய்யும் தொழில்கள் அனைத்தும் சீராகி அதில் உற்பத்தியாகும் பொருள்களைப் பயன்படுத்துவோர் வாழ்க்கையில் நலமும் வளமும் பெறவேண்டும். என் வியாபாரம் விருத்தியாக வேண்டும் என்று இப்படி எண்ணினால் அதுவெல்லாம் நல்ல நேரமாகின்றது.

என் பையன் ஞானம் பெற்று நல்ல தெளிவானவனாக வர வேண்டும். அவன் அந்த அருள் சக்திகள் பெறவேண்டும் என்று எண்ணினால்
1.அவனுக்கு அது நல்ல நேரம்.
2.அவனைப் பற்றி இப்படி நாம் எண்ணினால் நமக்கும் அது நல்ல நேரமாக வருகின்றது.

புடமிட்டுப் பஸ்பமாக்கி எத்தகைய கடினமானதையும் கரையச் செய்யும் சித்தர்களின் ஆற்றல்

 

உதாரணமாக… ஒரு பெரும் பாறையாக இருக்கிறது என்றால் கடப்பாரையை வைத்தோ அல்லது உளியைக் கொண்டோ சம்மட்டியால் அடித்து நாம் அந்தப் பாறைகளைப் பிளக்கின்றோம். அவ்வளவு வலு இருக்கின்றது அந்த இரும்பிற்கு…!

ஆனால் மனித உணர்வுக்குள் அதே இரும்பின் சத்து அதிகமாகச் சேர்ந்து விட்டால் அந்த வலுவின் தன்மை அதிகமாகி…
1.இரும்பு எப்படி மற்றொன்றைப் பிளக்கின்றதோ
2.மனித உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல உணர்வின் சத்துகளைப் பிளக்கும்.
3.இடி மின்னல்களைப் போல உடலிலே வலியும் பல நோய்களும் ஏற்படுகின்றது.

ஏனென்றால் ஒவ்வொரு தாவர இனங்களுமே ஒவ்வொரு உலோகத்தின் தன்மையை அதிகமாகக் கொண்டு வளர்ந்து வந்தது தான்.

நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் அந்தத் தாவர இனச் சத்துக்களை நுகர்ந்து… உணவாக எடுத்து… அந்த உணர்வின் மணத்தால் மனிதனுடைய எண்ணங்கள் ஓங்கி வளர்ந்து… இன்று மனிதனாக நம்மை உருவாக்கி இருக்கின்றது

சந்தர்ப்பவசத்தால்…
1.இரும்பு சத்து அதிகமாகக் கொண்ட காய்கறிகளையோ அல்லது எண்ணத்தால் பல நிலைகளை அதைப் போன்று சுவாசிக்கும் பொழுதோ
2.அந்த இரும்பின் சக்தி நம் நல்ல குணங்களுக்குள் கலந்துவிட்டால் கடுமையான நோய்களாக வந்துவிடுகின்றது.

மனித உடலில் இப்படிப்பட்ட நோய்களாகித் தொல்லை கொடுக்கும் நிலைகளை “அதை எப்படி நீக்குவது…?” என்று அன்றைய சித்தர்கள் என்பவர்கள் சிந்திக்கின்றனர்.

அதற்குண்டான உபாயத்தை அவன் சிந்தித்து அதன் வழி தான் நுகர்ந்து எடுத்துக் கொண்ட நிலைகள் கொண்டு இதை நீக்க முடியும் என்ற உணர்வுகள் அது அவனுக்குள் வலு பெறுகிறது.

அப்படி வலுப் பெற்ற நிலைகள் கொண்டு பல தாவரங்களைப் பறித்து அந்த இரும்புடன் அதைக் கலந்து புடம் போடுகிறான். புடம் போடும் போது
1.இரும்புக்குள் இருக்கும் அந்தக் கடினமான பாறையை உடைக்கச் செய்யும் கடுமையான சத்தின் வலு இழந்து
2.அந்த இரும்பே கரைந்து போகும் நிலைகளை உருவாக்குகின்றான் சித்தன்.

அப்படி உருவாக்கிப் பஸ்பமாக்கிய அந்த உணர்வின் சத்தை ஒரு மனித உடலுக்குள் கொடுக்கப்படும் போது
1.உடலிலே கடினமான வேதனைகள் கொடுத்துக் கொண்டிருக்கும் அந்த சக்தி நீங்கி அதைக் கரைத்து விடுகின்றது
2.உடல் நலம் பெறும் சக்தியாக அது வருகின்றது.

ஒரு மனிதனின் உடலில் இப்படித் துன்பங்களை ஊட்டும் இந்த உணர்வின் சத்தைத் தன் எண்ணத்தால் இதையெல்லாம் கலந்து இதை நீக்க முடியும் என்று செயல்படுத்தியவர்கள் தான் அன்றைய சித்தர்கள்.

“புடமிட்டுப் பஸ்பமாக்கும் உணர்வுகள்” சித்தனின் உடலில் சக்தி வாய்ந்த உணர்வாக விளைகின்றது. அவர் கண்டறிந்த மருந்தோ மனித உடலில் இருக்கும் நோயை மாற்றுகின்றது.

அதே சமயத்தில் மனித உடலிலே சாடும் அந்தக் கடுமையான வேதனைகள் தனக்குள் வளரவிடாத நிலைகளிலே அந்தச் சித்தன் எடுத்துக் கொண்ட ஞானம் அவன் உடலிலே அணுக்களாகப் பெருகுகின்றது.

1.இப்படிக் கடின சக்திகளை வென்ற அந்த உணர்வின் ஆற்றல் அவன் உடலில் விளைந்து
2.எந்தக் கடினமான நிலைகள் வந்தாலும் அவனுடைய சிந்தனைகள் அனைத்தும்
3.அதை நிவர்த்திக்கும் உணர்வின் ஞானமாக அங்கே உருவாகின்றது.

“பரிதாபப்படுவதால்” நமக்கும் பிறருக்கும் நன்மை கிடைப்பதில்லை – ஈஸ்வரபட்டர்

 

இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் எடுக்கக்கூடிய உணர்வின் எண்ணச் சுவாசமானது பிறர் ஈர்ப்பில் பாவம் என்ற பரிதாபச் சுழற்சியில் தன் எண்ணத்தைச் செலுத்தாமல் இருத்தல் வேண்டும்.

1.தாயாக இருந்தாலும் தந்தையாக இருந்தாலும்
2.கணவன் மனைவி குழந்தைகள் என்று இருந்தாலும்
3.சகோதர பந்தபாசங்கள்… உயிர் காக்கும் நண்பனாக இருந்தாலும்
4.ஆண்டவனாக இருந்தாலும்…
5.அவர்கள் எடுக்கும் உணர்வின் எண்ணத்தை அவர்களுக்கு ஏற்படும் இன்னலைக் கண்டு உடல் நலக் குறைவு எதுவாக இருந்தாலும்
6.அவர்கள் மேல் பரிதாப எண்ணத்தைச் செலுத்தி அவர்கள் பரிதாப எண்ணத்தில் நாம் சிக்காமல்
7.சுயநலம் கொண்ட தன் நலமுடன் பிறரின் நலம் காண நம் உணர்வின் எண்ணச் செயல் பட்டு
8.அவர்கள் அலை நம் மேல் சாடாமல் நம் அலையின் சக்தியை அவர்கள் மேல் பாய்ச்சி
9.அவர்கள் நல்ல நிலை பெறவேண்டும்…! என்ற உயர்வான சக்தி அலையைத்தான் நம் எண்ணத்தில் எடுக்க வேண்டும்.

பரிதாபப்பட்டுச் செய்யும் தர்மம் பரிதாப அலை உணர்வை நம்மை அறியாமல் நம் எண்ணம் எடுப்பதினால் பரிதாப எண்ணத்திற்குரிய அலை குண அமிலமாக இவ்வுடல் பிம்ப அமிலம் அவர்கள் எடுத்த அலைத் தொடரின் ஈர்ப்பில் சிக்கிவிடுகின்றது.

ஆக நம் உணர்வுடன் அது கூடி நம் எண்ணமே அச்சுழற்சி அலையுடன் சென்று நாளாவட்டத்தில் அவ்வுணர்வின் பரிதாப நிலைக்கு நாமும் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டு விடுகிறது.

1.உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் செயலின் ஈர்ப்பானது உடனே நம்மைச் சாடும்.
2.இரத்தத் தொடர்பு கொண்டவர்களின் அலைத் தொடர் “இன்னும் வேகமாக…!” நம் உணர்வுடன் ஏறிவிடுகின்றது

வைத்தியர்கள் மற்றவர்களுக்குத் தன் உணர்வின் எண்ணத்தைச் செயல் கொண்டு செய்விக்கும் மருத்துவத்தினால் வியாதியஸ்தர்களின் ஈர்ப்பில் பெரும்பகுதி சிக்க மாட்டார்கள்.

அவர்கள் சொல்லும் அந்த வியாதிக்குத் தக்கவாறு தான் செய்ய வேண்டிய மருத்துவ ஞான அலையை உணர்ந்து அதன் வழியில் செய்யப்படும் மருத்துவத்தால் அவர்களுக்குக் குணமாக வேண்டும் என்ற செயலின் நிலைக்கொப்ப வைத்திய முறையைக் கடைப்பிடிக்க முடிகின்றது.

1.நோயாளிகளின் ஈர்ப்பில் சிக்காமல்
2.அவர்கள் படும் இன்னலின் பரிதாபம் கொள்ளாமல்
3.மருத்துவத்தால் மாற்றியமைக்கலாம் என்ற உணர்வுடன் செய்யப்படும் நிலைக்கொப்ப
4.பிறர் ஈர்ப்பும் இத்தகைய மருத்துவரைச் சாடுவதில்லை.

அப்படிப்பட்ட மருத்துவரால் செய்யப்படும் செயல் குணமும் நலம் பெற வழி கொள்கின்றது.

ஆனால் அதுவே தன் குழந்தை தன் தாய் தந்தையர் என்ற சுற்றத்தில் உள்ளவர்களின் நிலைக்காகச் செய்யப்படும் மருத்துவத்தில் பயம் கலந்த உணர்வு கூடி விடுகிறது.

அவ்வாறு கூடுவதனால்… உணர்வின் எண்ணம் பாசம் என்ற பரிதாப அலையை எடுக்கும் பொழுது தன்னுடைய செயலில் தடுமாற்றம் ஏற்படுகின்றது.

ஆகவே…
1“உணர்வின் எண்ண ஒலிக்கு உள்ள உண்மையை உணர்ந்து…!”
2.ஒவ்வொருவரும் பிறர் அலையின் ஈர்ப்பில் சிக்காமல்
3.சுயநலம் என்ற தன் நல வளர்ப்பால் பிறர் நலத்தை வளர்க்கக்கூடிய வளர்ப்பாக்குங்கள்.

உணர்வின் எண்ணம் உயர் ஞான சக்தியின் தொடர்புடன்… நமக்கு மேல் சக்தி கொண்ட நமக்குச் சித்தர்களினால் வழிப்படுத்திச் சென்ற சக்திகளின் தொடரை ஜெபம் கொண்டு “ஒவ்வொரு வழியிலும் உணர்த்தி வரும்… முன்னோர்களின் தொடர் அலையை எடுக்கப் பழகுங்கள்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

உதாரணமாக ஒருவர் நமக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டயிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரை உற்றுப் பார்க்கின்றோம். இதைக் கண்களில் உள்ள கருவிழி நம் எலும்புக்குள் பதிவாக்குகின்றது.

எப்படிச் செல் ஃபோன்களில் பதிவாக்கிய பின் மீண்டும் பதிவான அந்த நம்பர் இன்னார் என்று தெரிகின்றதோ இதைப் போல பதிவாக்கிவிட்டால் அவரை மீண்டும் மீண்டும் நினைவாக்கினால்
1.யார் பேசினார்களோ அவர்களின் நினைவு வருகின்றது.
2.அந்த அலைகளை எடுக்கின்றது.
3.அதை நுகர முடிகின்றது.
4.அதை அறிய முடிகின்றது.
5.நுகர்ந்த அலைகள் இரத்தத்தில் சேர்கின்றது. ஜீவ அணுவாக மாறுகின்றது.

பேசியவர் நமக்குள் கோபத்தையும் ஆத்திரத்தையும் வேதனையையும் தூண்டியிருந்தால் அந்தக் கெட்ட அணுக்கள் நமக்குள் உருவாகின்றது. தீமை செய்யும் தீமையை உருவாக்கும் ஜீவ அணுவை வளர்க்கின்றோம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் தப்புதல் வேண்டுமா இல்லையா…! நம்மை அறியாமல் நாம் தவறே செய்யாமல் வரும் தீமைகளை அகற்ற வேண்டும் அல்லவா.

அதற்காகத்தான் இதைப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்கள் உடல்களில் உள்ள அணுக்களுக்கு உங்கள் கண்ணின் நினைவு கொண்டு (செல்ஃபோனில் புதிதாகப் பதிவு செய்வது போல்) பதியச் செய்தல் வேண்டும்.

ஏனென்றால் கண்ணால் பதியச் செய்யும் பொழுது எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவாக்கிவிடுகின்றது. தீமைகள் வரும் சமயம் துருவ நட்சத்திரத்தை நினைவுக்குக் கொண்டு வந்தால் அது தீமைகளை அகற்றும்.

எப்படிச் செய்ய வேண்டும் என்ற தெளிவான சிந்தனையும் மன பலமும் ஞானமும் கிடைக்கும். தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழ இது உதவும்.

நீங்கள் எல்லாம் அத்தகைய ஆற்றல் பெறவேண்டும் என்பது தான் குருநாதர் எமக்கு இட்ட அருள் பணி.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெறவேண்டும்.
2.உங்களை அறியாது சேர்ந்த தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்
3.அந்த அருள் உணர்வு பெறவேண்டும் உலக ஞானம் பெறவேண்டும்
4.இந்த உடலைக் காக்கும் ஞானமும் உலகைக் காக்கும் அந்த அருள் ஞானம் பெறவேண்டும் என்று தான்
5.தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றேன்.

ஒருவர் நம் மீது வெறுப்பாகப் பேசினால் அந்த வெறுப்படைந்தவனின் உணர்வு இயக்குகின்றதோ அதைப் போல நீங்கள் அந்த அருள் ஞானம் பெறவேண்டும் என்று நான் எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் உங்களுக்குள் உணர்ச்சிகளைத் தூண்டிக் கொண்டேயிருக்கும்.

அந்த நேரத்தில் நீங்கள் உங்கள் சிந்தனையை இதைப் போன்று செலுத்தி எடுத்தால் நீங்கள் நன்மை பெறும் அருள் சக்திகளைப் பெறலாம்.

என்னமோ ஒரு உற்சாகமாக இருக்கின்றது என்று சொல்வீர்கள். அடுத்து இந்த நினைவு வந்தால் அதை எடுக்கலாம்.

நல்லதைச் செயல்படுத்த நமக்குக் காலதாமதம் ஆவது ஏன்…?

 

நம்மை அறியாமலே எத்தனையோ வேதனைகளை உருவாக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் அன்றாட வாழ்க்கையில் வருகிறது. அதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும்.

நம் உடலுக்குள் அவை புகாதபடி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொண்டால் வாழ்க்கையில் வரும் இருளை மாற்றுகின்றோம். அசுர சக்திகள் நம்மை அணுகாது மாய்க்கின்றோம்.

இது தான் தீப வழி… தீப ஒளித் திருநாள் என்பது.

இதைக் கணவன் மனைவி இருவருமே தனக்குள் வளர்க்கப்படும் போது தீயது வராதபடி தடுக்கவும் செய்கின்றது.

கருணைக் கிழங்கை வேக வைத்த பின் அதில் உள்ள விஷம் நீங்குவது போன்று… தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றியபின் செம்பும் வெள்ளியும் ஆவியாக மாறுவது போல்… தீமைகளை அகன்று செல்ல வைக்க வேண்டும்.
1.தீமைகள் என்பது அறிவதற்கு நமக்கு உதவியது.
2.ஆனாலும் அது அணுவாக நமக்குள் உருவாகி விடக் கூடாது.

உதாரணமாக வெள்ளியும் செம்பும் தங்கத்துடன் சேர்த்துச் சூட்டிலே காண்பித்தவுடன் உடனே அவைகள் உருகி நகையாக ஒட்டிக் கொள்கின்றது
1.ஆனால் தங்கம் உருக வெகு நேரமாகும்
2.இதைப் போன்றுதான் நல்ல குணம் உடனடியாக இயங்காது.

ஒரு பாலைக் குடித்தோம் என்றால் நாற்பத்தி எட்டு நாட்கள் கழித்துத் தான் உடலுக்குள் அதனின் சத்து கூடுகின்றது. ஒரு நல்லதைச் செய்ய வேண்டும் என்றால் மெதுவாகத்தான் பேசுகின்றோம். ஆனால் ஒரு கோபம் வருவது உடனே இயக்குகின்றது.

ஒருவர் ஏதாவது சொல்லி விட்டார் என்றால்
1.ஒரு நொடிக்குள் நாம் கோபப்பட்டுப் பேசி விடுகின்றோம்… உடனே அதை அழுத்தி விடலாம்
2.ஆனால் அடுத்துச் சாந்தமாக பேச வேண்டுமென்றால் வெகு நேரமாகிறது.

அதாவது சாந்தமாகச் சொல்லி ஒருவருக்கு அந்த அர்த்தத்தைப் புரிய வைக்க வேண்டுமென்றால் வெகு நேரமாகிறது.

சுருக்… என்று சொல்லி விட்டால் உடனே அங்கே கோபத்தை உண்டு பண்ணிவிடலாம்.
1.என்ன சொன்னாய்…?
2.பார்… உன்னை என்ன செய்கிறேன் என்று… உடனே எதிர்த்துப் பேச வந்துவிடும்.

ஆனால் அதற்குப் பதிலாக ஒரு நல்லதைச் சொல்வதற்குக் கேட்பதற்கு ரொம்ப நேரம் ஆகிவிடும்.

ஆகவே நமக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் அந்தச் சக்தியை நாம் தடைப்படுத்த வேண்டுமல்லவா. ஒரு நொடிக்குள் நம்மை உணர்ச்சிவசப்படச் செய்ததை மாற்ற
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.கணவன் மனைவியும் இருவரும் சேர்ந்து இந்த ஆத்ம சக்தியை
3.சிறிது நேரம் அதிகமாக எடுத்துக் கொண்டோம் என்றால் அதைச் சுத்தப்படுத்த உதவும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

எங்கெங்கேயோ போகிறோம்… என்னென்னெமோ செய்கின்றோம்…! ஆனால் இருந்த இடத்திலிருந்து நீங்கள் இந்த சக்திகளைப் பெற முடியும். அந்தச் சக்தி பெறக்கூடிய சந்தர்ப்பத்தைத் தான் இப்பொழுது ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.

உயிர் ஒளி பெற்றது… அது ஒளியாக இருப்பது போல்
1.உணர்வுகளை ஒளியாக மாற்றிச் சென்ற அந்த மெய் ஞானிகள் சென்ற பாதையில் நாம் சென்றோம் என்றால்
2.வாழ்க்கையில் வரக்கூடிய எத்தகைய இருளையும் நாம் மாற்றி விடலாம்.
3.அந்தத் தீப வழியாக அருள் உணர்வுகள் வரும்.

தொழிலும் சீராக இருக்கும் உங்கள் வாழ்க்கையும் சீராக இருக்கும். கணவன் மனைவி இதே மாதிரி செய்து பாருங்கள். சரியில்லை என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்… சரியாக வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.

சுயநலம் கொண்டு தான் படைக்கும் சக்தியே அனைத்தையும் படைக்கின்றது – ஈஸ்வரபட்டர்

 

1.தன்னலத்தை வளர்த்துத் தான் பிற நலத்தை வளர்க்க முடியுமே அன்றி
2.பிறர் நலத்தால் தன் நலம் என்றுமே வளராது.

உருவாகும் சக்திக்கே சுயநலம் தான் காரணம்…! ஜீவ சக்தி கொண்ட துடிப்பனைத்திற்குமே சுயநிலையுடன் கூடிய தன்னலம் கொண்ட சுய நலம் உண்டு.

சுயநலமில்லா எச்சக்தியும் வளர முடியாது. உணர்வின் எண்ணத்திற்கே சுயநலம் உண்டு.

சுயநலம் கொண்டு தான் முருகனைப் படைத்த போகனும் செயல் கொள்கின்றான். வெங்கடாசலபதியைப் படைத்த கொங்கணவனும் செயல்படுகின்றான்.

சூரியனாக உருளும் சூரிய தேவனின் சக்தியும் சுயநலம் கொண்டு தன் வளர்ப்பைத் தான் ஈர்த்துப் பிற மண்டலங்களுக்குச் சூரியனின் சக்தி செல்கிறது.

மிதந்து கொண்டேயுள்ள இப்பேரண்டத்தில் உருண்டோடுகின்ற மையப்புள்ளியாக தன் சுயநல வளர்ப்பின் சக்தி கொண்ட பெரிய மண்டலமான சூரிய மண்டலம் தன் வளர்ப்பின் சக்தி வளர சூரியனின் குடும்ப மண்டலமாக உள்ள நாற்பத்தியேழு மண்டலங்களையும் தன் ஈர்ப்பின் வட்டத்தின் சுழற்சியுடன் வளரவிட்டுக் கொள்கிறது.

வளர்ந்த மண்டலங்களின் அமில சுழற்சி கொண்ட அலையைச் சூரியன் தனக்குணவாக எடுத்துத் தன் வளர்ப்பில் தன்னைச் சார்ந்துள்ள பிற மண்டலங்களையும் வளர்க்கச் செய்கிறதேயன்றி சுயநலமின்றிப் பிற நலமாக எதுவும் செயல்படவில்லை.

சூரியனானாலும் சரி… வளர்ந்தோடும் மற்றெல்லா மண்டலங்களும் சரி… சப்தரிஷிகளானாலும் சரி… சப்தரிஷியின் தொடர் கொண்ட சகல ஜீவ உணர்வு உயிரணுக்களும் சரி… எல்லாமே சுயநலத்தின் தொடர் படைப்புத்தான்.

ஆதிசக்தியின் சக்தி என்கிறோம்…!
1.அச்சக்தியே ஆக்கல் காத்தல் மாற்றல் என்ற சுழற்சி சுயநலம் கொண்டு தான் படைக்கின்றான்
2.படைப்பின் பலன் காணுகின்றான்
3.மீண்டும் படைப்பின் படைப்பையே உருவாக்க படைத்ததை மாற்றி மாற்றி அழிக்கின்றான்.
4.உரு மாறி மாறி சக்தி நிலை செயல்பட்டால் தான் சக்தியின் சக்திக்கே சக்தி கூடுகின்றது,

ஒன்றான சக்திக்கு ஜீவன் ஏது…?

ஒன்று ஒன்றுடன் சேர்ந்து இரண்டு ஒன்றாகி… ஒன்றுடன் பிறிதொன்று சேர்ந்து இரண்டாகி.. ஒன்றாகி… இரண்டாகி… ஒன்றாகி…
1.சுயநலம் கொண்டு கருவாகும் சக்தி அலை இருந்தால் தான்
2.படைப்பின் பொருள் வளர்ந்து கொண்டே இருக்கும்.

சுயநலம் கொண்ட வாழ்க்கை தான் மனித வாழ்க்கை.

சுயநலம் கொண்டு பிறர் நலம் காணுங்கள். ஆக… தன் வளர்ச்சியைக் கொண்டு தான் பிற வளர்ச்சியை நிச்சயம் வளர்க்க முடியும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இன்று விஞ்ஞானிகள் விண்ணுலகில் நடக்கும் நிலைகளை அறிவதற்காக இராக்கெட்டுகள் மூலம் பல செயற்கைக் கோள்களை அனுப்புகின்றார்கள்.

ஒரு கம்ப்யூட்டரில் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்காக மாற்றி அதன் உணர்வின் அழுத்தத்தைக் கொடுத்தால் அந்தக் காலம் வரையில் அதனுடன் இணைக்கப்பட்ட இயந்திரங்களை இயக்கிக் காட்டுகின்றது.

செயற்கைக் கோளை வான் வீதியில் அனுப்பினாலும் தன் உணர்வின் தன்மை மற்றதை ஒதுக்கிவிட்டு அதில் பதிவு செய்த நிலைகளுக்கொப்ப எந்தக் கோளின் உணர்வு வலுவோ அங்கே அழைத்துச் செல்கின்றது.

அது கோளுக்குப் போகும் பாதையில் அதை இடைமறித்து அதனின் இடைவெளியில் என்ன வட்டங்கள் இருக்கிறது என்று அதை அறிந்து கொண்டு அதே உணர்ச்சியை ஊட்டியபின் இதில் என்னென்ன பிறக்கிறது என்ற நிலையை அங்கே இயந்திரத்தில் பதிவாக்கிக் கொள்கின்றார்கள்.

அங்கே பதிவாக்கிய உணர்வின் தன்மையை அதன் ஒளிக்கற்றைகளை நம் பூமியில் இருக்கக்கூடிய இயந்திரங்களில் பதிவாக்கி அதனின் நிலைகளை அறிந்து கொள்கின்றனர் விஞ்ஞானிகள்.

இதைப் போல் தான் ஞானிகள் – தான் உலக நிலைகள் அறியும் பொழுது
1.அகண்ட அண்டத்தின் நிலைகள்
2.இந்தப் பிண்டத்திற்குள் எப்படி இந்த உணர்வுகள் இணைந்திருக்கின்றது என்பதை உணர்ந்து
3.பிரபஞ்சத்தின் இயக்கத்தை அறிந்தனர்.

ஒவ்வொரு கோளும் உமிழ்த்தும் நிலைகளும் அது வெளி வரப்படும் பொழுது மற்றொன்றுடன் மோதி சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்டு ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது உணர்வின் அணுக்கள் எப்படி மாற்றமடைகின்றது என்று பார்க்கின்றனர்.

இதையெல்லாம் இன்று விஞ்ஞானிகள் பல நிலைகள் கண்டுணர்ந்தாலும்
1.இவர்கள் பதிவாக்கிய நிலைகள் அது பாதுகாப்பாக நம் பூமியில் வந்து சேராது.
2.காரணம் ஒளிக்கற்றைகளின் அழுத்தம் அதிகமாக இருக்கும் பொழுது
3.மற்றொரு நட்சத்திரத்தின் உணர்வு அதிக வீரியமானால் இதன் உணர்வுகள் ஊடுருவி
4.இந்த உணர்வின் தன்மை மாற்றிவிடும்.

இதை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் ஒவ்வொரு இடத்திலும் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஏனென்றால் இந்த இயற்கையின் உண்மையின் நிலைகளை அறிவதற்குத் தன் உடலுக்குள் இதைப் பதிவாக்கி அந்த உணர்வின் அறிவால் ஒன்றுடன் இணைத்து அந்த உணர்வின் அறிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மாறாக இயந்திரத்தின் துணை கொண்டு இவர்கள் செய்யும் நிலைகள் அந்த அளவுகோல்களுக்குள் மாறத்தான் செய்யும். அந்த உண்மையின் இயக்கத்தில் சிறிதளவாவது மாற்றம் இருக்கத்தான் செய்யும்.

அதை மீண்டும் இவர்கள் தெளிவாக்கிக் கொண்டு வருவதற்கு முன்னால் இந்த உலகமே ஒரு பெரிய மாற்றத்திற்குப் போய்விடும்.

இயந்திரத்தின் துணை கொண்டு தான் இவர்களால் பார்க்க முடியுமே தவிர மனிதனின் உணர்வின் தன்மையை இவர்களால் அறிவதற்கு முடியாது.

இயந்திரத்தை நம் பிரபஞ்சத்தின் கடைசி எல்லையையும் தாண்டி அடுத்த மண்டலங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று விஞ்ஞான அறிவு விரும்புகின்றது. ஆனால்
1.கண்ணின் நினைவினை வெகு தூரத்தில் பாய்ச்சி
2.மற்ற மண்டலத்தில் இருக்கும் உணர்வுகளைக் கவரும் ஆற்றல் பெற்று
3.அவ்வாறு இந்த உடலுக்குள் புகுந்த அந்த உணர்வின் வலு சேர்த்து
4.அகண்ட அண்டத்தின் உண்மைகளை அறியும் தன்மை பெற்றார்கள் “மகரிஷிகள்”.

இயந்திரத்தின் துணையால் இதைக் கண்டுணர வேண்டும் என்றால் வருடக் கணக்கில் வெளியே சுற்ற வேண்டும். பின் கண்டறிந்த உணர்வின் தன்மையை அவன் பதிவாக்குவதற்கு ஆயுள் பத்தாது.

ஒரு இராக்கெட்டை விண்ணிலே செலுத்தி மற்ற கோள்களை அது சுழன்று வருவதற்கே பல வருடங்கள் ஆகின்றது. செவ்வாய்க் கோளோ வியாழன் கோளோ சனிக் கோளோ செல்லப்படும் பொழுது பல வருடங்கள் ஆகின்றது. ஆனால்
1.மனிதன் தன் எண்ணத்தால் உணர்வின் நிலைகளை விண்ணிலே பாய்ச்சப்படும் பொழுது
2,அது ஊடுருவி
3,அடுத்த கணமே அதனுடன் இணைத்துக் கொள்ளும் தன்மை வரும்.

நாம் ஒரு விளக்கைப் போட்டால் அடுத்த கணமே துரித கதியில் அந்த விளக்கு எப்படி எரிகின்றதோ இதைப் போல நமக்குள் பதிவான உணர்வின் துணை கொண்டு அடுத்தவர்களுடன் தொடர்பு கொள்ளும் சக்தி மனிதனுக்கு உண்டு.

“சுவிட்சைப் போட்டவுடன்… விளக்கு எரிவது போல்…” வெகு தொலைவில் இருக்கும் பிற மண்டலங்களில் அதனின் உணர்வுகள் இணைந்து அறியும் தன்மை (நமக்கு) வரும்.

டெலிஃபோனை எடுத்துக் கொண்டால் இயந்திரத்தின் (சேடிலைட்) துணை கொண்டு அந்த உணர்வினை வெளியில் பரவி இருப்பதை இந்த உணர்வால் கவரப்படும் பொழுது “சிறிது நேரமாவது… தாமதமாகும்”.

ஆனால் இந்தத் தியானத்தை எடுத்துக் கொண்டவர்கள் நீங்கள் இங்கிருந்து மற்றொரு இடத்திலுள்ளவர் உடல் நலமாக வேண்டும் என்று ஃபோனில் தொடர்பு கொண்டாலும் சரி அது வேலை செய்யும்.

நீங்கள் இதே மாதிரிப் பிரார்த்தனை செய்துவிட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அவருக்குள் படர்ந்து உடலிலுள்ள பிணிகள் நீங்கி உங்கள் உறுப்புகள் சீராக இயங்கும். உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று சொல்லிப் பாருங்கள்.

அதை ஏற்றுக் கொண்ட உணர்வுடன் அவர்கள் வந்தால்
1.அந்த உடலிலுள்ள சர்வ பிணிகளையும் போக்கிடும் சக்தி உண்டு.
2,இதைப் போன்று தான் சர்வ நிலைகளும் மனிதர்களான நமக்கு உண்டு.
3.அதி சக்தி வாய்ந்த ஆற்றல்களைக் கவரக்கூடிய சக்தி நமக்கு உண்டு என்பதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

நம் குருநாதர் கொடுத்த சக்தியை நீங்கள் ஒவ்வொருவரும் இத்தகைய தன்மைகள் பெறவேண்டும்.

இந்த உண்மைகளை நீங்களும் அறியலாம்.

2000 சூரியக் குடும்பம் என்பது ஒரு அண்டம். அது ஒவ்வொன்றும் பிற அண்டத்திலிருந்து கவர்ந்து கொள்ளும். அனைத்துமே ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு தான் இன்று வாழ்கின்றது.

ஒன்றில்லாது ஒன்றில்லை. இதைப் போல இந்த உணர்வின் தன்மையை நாம் அறிந்துணரும் சக்தி எல்லோரும் பெற வேண்டும்.

ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் நம்மைப் போன்று மனிதர்கள் ஏராளம் உண்டு. ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் உணர்வுக்கொப்ப உருவங்களில் மாற்றம் உண்டு. மனித இனம் ஒன்று தான்.

1.நம் பிரபஞ்சத்தில் இன்று எப்படி விஞ்ஞான அறிவில் பெருகி இருக்கின்றதோ
2.இதைப் போல “மெய் ஞான அறிவில்” வளர்ச்சி பெற்றவர்களும் உண்டு.

என்னை (ஞானகுரு) எப்படி அகண்ட அண்டத்தையும் குருநாதர் அறியச் செய்தாரோ அதைப் போல நீங்களும் அறிந்துணர்ந்து உங்கள் உடலுக்குள் 2000 சூரியக் குடும்பத்தின் (பிரபஞ்சத்தின்) உணர்வுகள் எப்படி இருக்கின்றது என்பதைக் காணலாம்.

என்னால் காண முடிகின்றது. இதை நீங்களும் நுகரலாம். அறியலாம்.

ஆத்ம சுத்தியின் அதிசயமான ஆற்றல்கள்

 

ஜோசியரிடம் சென்று கேட்கின்றோம்.. மந்திரக்காரனிடம் கேட்கின்றோம்… என்னிடமும் (ஞானகுரு) வந்து கேட்கிறீர்கள் அல்லவா.

ஆனால் யாம் சொன்ன முறைப்படி
1.ஞானிகள் கொடுத்த வாக்கினைப் பயன்படுத்திப் பாருங்கள்.
2.கணவன் மனைவி உங்கள் இருவருடைய சக்திகளையும் ஒன்று சேர்க்கும்.

ஒரு உயிர் விண்ணிலே ஒளியாகத் தோன்றுகின்றது. சந்தர்ப்பத்தில் புவியின் ஈர்ப்புக்குள் வருகிறது. வந்த பின் என்ன செய்கிறது…?

உதாரணமாக நம் புவிக்குள் இருக்கும் மரங்கள் வெளிப்படுத்தும் சத்துகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்திருக்கிறது. அது எல்லாம் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை.

1.ஆனால் விண்ணிலிருந்து வந்த உயிர் இதிலே மோதி
2.இரண்டும் சேர்ந்து உறைந்த பின் கவர்ந்த சத்தை உயிர் உடலாக மாற்றுகின்றது
3.சக்தி சிவம் ஆகின்றது.

ஆண் பெண் இருவரும் சேரும் போது உருவாகுவதுதான் குழந்தைகள். அதைப் போல் இருவருடைய எண்ணங்களும் ஒன்று சேர்த்து உயர்ந்த எண்ணங்களை எண்ணி ஒருவருக்கொருவர் அந்த அருள் உணர்வைப் பரப்பிக் கொண்டால் அது வலுக் கொண்டதாக மாறுகிறது.

1.அப்படி வலுக் கொண்டதாக மாற்றி விட்டால் பிறிதொருவரின் எண்ணங்கள் நம்மைப் பாதிப்பதில்லை.
2.அவசியம் இதைச் செய்து பாருங்கள்.
3.இது இருவருக்குமே ஒரு பாதுகாப்புக் கவசமாக ஆகின்றது.

உதாரணமாக ஒரு இராக்கெட்டை ரஷ்யாவில் இருந்து விடுகின்றார்கள். அமெரிக்காவிலும் இராக்கெட்டை விடுகின்றார்கள்
1.ரஷ்யாவில் இராக்கெட் வெளியிலே கிளம்பிய உடனே
2.சூரியனுடைய காந்தப் புலனுக்குள் உராய்ந்த உடனே அமெரிக்காவில் இருப்பது இதை அறிந்து கொள்கின்றது
3.அது அந்த வேக அலையினை எடுத்துக் கொள்கிறது.

அதைப் போல கணவனும் மனைவியும் யாம் சொன்ன முறைப்படி இந்தத் தியானத்தை எடுத்து இருவரும் சேர்ந்து அந்த உயர்ந்த சக்தியினைப் பரப்பிக் கொண்டீர்கள் என்றால் பாதுகாப்பாக வரும்.

1.ஒரு சங்கடமான நிலையோ அல்லது
2.நீங்கள் போகும் பாதையில் ஒன்றைக் குறி வைத்துச் செல்லும் பொழுது ஏதாவது விபத்துகள் ஏற்படக்கூடிய நிலை இருந்தது என்றால்
3.கணவன் மனைவி உங்கள் எண்ணத்தை ஊடுருவி அங்கே பாய்ச்சும்போது இது உராய்ந்தவுடனே
4.அங்கே எதிர்ப்பு சக்தி இருந்தது என்றால் உடனே டக்… என்று கம்ப்யூட்டர் மாதிரி உங்களை அங்கே போக விடாதபடி தடுத்துவிடும்

ரேடாரை (RADAR) வைத்தவுடன் எப்படி அதிலே மற்ற நிலைகள் தெரிகின்றதோ அதே மாதிரித் தெரிய வரும். விபத்துக்களிலிருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ள இது உதவுகிறது.

கணவன் மனைவி இரண்டு பேரும் ஆத்ம சுத்தி செய்து விட்டு ஒரு காரியத்திற்குச் சென்றீர்கள் என்றால்
1.உங்களுக்குத் தீங்கு விளைவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் யாராவது வந்திருந்தாலும்…
2.இந்த உணர்வு அங்கே பட்டு அந்த நிமிஷத்தில் எண்ணத்தை மாற்றி விட்டு
3.உங்கள் பாதையில் நீங்கள் சீராகச் சென்று கொண்டிருப்பீர்கள்…
4.அவர்கள் எண்ணம் மாறிப் போகும்… அவர்களை ஏதாவது ஒரு பக்கம் திசை திருப்பும்
5.அல்லது உங்களை வேறு பக்கம் அழைத்துச் சென்றுவிடும்

இதை எல்லாம் உங்கள் அனுபவத்திலே பார்க்கலாம்.

உடல் ஆரோக்கியமும் ஞானமும் – ஈஸ்வரபட்டர்

 

நம் பூமி இல்லாவிட்டால் நாம் ஏது…? நம் பூமியையே வளர்க்கும் சூரியனின் சக்தி இல்லாவிட்டால் நம் பூமி தான் ஏது…?

சூரியனுக்குச் சக்தி தருவது சூரியனைச் சுற்றியுள்ள 47 மண்டங்கள் தாம். 47 மண்டலங்களின் துணையுடன் இயங்கும் சூரியன் தன் அலையைக் கொண்டு பிற மண்டலங்களின் அலையை எடுத்துத் தான் வளர்ந்து பிற மண்டலங்களையும் வாழ வைக்கின்றது.

சூரிய அலையை ஈர்க்கும் மண்டலமாக நம் பூமியின் ஜீவன் உள்ளது.
1.சூரிய மண்டலத்திலிருந்து வெளிப்படும் அலையைக் கொண்டு
2.நம் பூமி வெளிப்படுத்தும் அலையின் மோதலில் உருவான ஓ…ம் என்ற ஒலியின் சுழற்சி கொண்டு
3.உருண்டோடும் இவ்வுலக சுழற்சி ஓட்டத்தில் உருவான உயிர் ஜீவன்கள்
4.ஓமுக்குள் ஓமாய் ஓ…ம் என்ற நாதத்துடன் உருண்டோடும் பூமியில்
5.அந்நாதத்தால் உருவான ஜீவ நீரும் காற்றும் ஒளியும் கொண்டு ஜீவத் துடிப்பு பெற்று
5.இந்தப் பூமியின் ஈர்ப்பு ஜீவ உடல் கொண்ட உயிர் பிம்பங்களின் சுவாசத்தில் எடுக்கும் ஒலி தான் “ஓமுக்குள் ஓமாய் உள்ள ஒலி…!”

ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு தனித்தொரு நிலையில் எதுவும் இல்லாமல் இரண்டு ஒன்றாகி அவ்வொன்றுடன் பிறிதொன்று சேர்ந்து ஒன்றாகி உருளுகின்ற உயிர் ஜீவ சக்திக்குத் தனித்த சக்தி நிலை எது..?
1.தனித்த ஒன்றான நான் என்ற சக்திக்கு ஜீவனே இல்லை.
2.ஜீவனற்ற சக்தி தான் “நான்” என்ற சக்தி.

இதனை உணர்ந்து ஒவ்வொரு ஆத்மாவும் இவ்வுடல் பிம்பத்தில் ஏற்படும் எந்த ஒரு பிணியையும் உணர்வால் எடுக்கும் எண்ணத்தின் சக்தியை மகரிஷிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு நீக்கிட முடியும்.

“மேல் நோக்கிய சுவாசமாக…” இவ்வுடல் பிம்ப உணர்வு எண்ணம் கொண்டு உடல் பிம்பத்தில் நிறைந்துள்ள பன்னிரெண்டு வகையான குண அமிலத்தையும் ஆறு வகை குண அமிலத்தையும் நற்சக்திப்படுத்தும் நிலை கொண்டு செயல்படுத்திடல் வேண்டும்.

சலிப்பைச் சாந்தமாக்கி…
கோபத்தை வீரமாக்கி…
சங்கடத்தை அன்பாக்கி…
இப்படி உணர்வின் குணத்தால் உந்தப்பட்டு அவற்றினால் உடல் பிம்பத்த்தில் ஏற்கனவே ஏற்றிக் கொண்டுள்ள வியாதியின் தன்மையை மாற்றிட
1.நம் குண நலத்தை ஞான வழி பூண்டு மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளைக் கவர்ந்து
2.நம் உணர்வுடன் கூடிய எண்ணத்தால் உடல் பிம்ப ஆரோக்கியத்திற்கு அதை நம் உடலில் பாய வைத்துக் கொண்டு
3.உடல் ஆரோக்கியமும் ஞான வழி ஈர்ப்பையும் வழித் தொடர் ஜெபத்தையும் பெற்றிடலாம்.

இப்படி இந்தப் பூமியின் ஈர்ப்பு மண்டல சுழற்சியுடன் சிக்குண்டு வாழ் நாட்களை சலிப்பு சங்கடம் கோபம் வஞ்சனை குரோதம் காமம் வெறி என்ற உணர்வுகளிலிருந்து மாற்றிடும்
1.நற்குணத்தின் அமிலத்தின் வளர்ப்பின் ஞானத்தின் வளர்ச்சியால்
2.எந்த மண்டலத்திலும் செயல் கொள்ளும் நிலை பெற்ற உயிராத்மாவாக
3.நம் உயிராத்மாவை வளர்த்துக் கொள்ள முடியும்.

உடல் பிணியின் வேதனைப்பிடியிலிருந்து உணர்வின் எண்ணத்தைச் சுயநலம் மிக்க தன்னலம் கொண்டு செயல்பட்டால் தன்னலத்தின் வளர்ப்பால் பிற நலத்தை வளர்க்கலாம்.

1.உடல் என்ற பிம்பத்தை வைத்துத்தான் எந்த ஞானத்தையும் வளர்க்க முடியும்.
2.உடல் பிணிக்கு ஏற்ற மருந்து தேவை.
3.உணர்வின் பிடிக்கு உணர்வின் எண்ண நிலைக்கொப்ப சுழலவிடாமல்
4.உணர்வின் எண்ணத்திற்கு ஞானம் தேவை.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

சாதாரணமாக மற்றவர்களுடன் பேசும் பொழுது வாழ்க்கையின் முறைகளில் விருப்பு வெறுப்பு நமக்குள் தோன்றி அதனாலே அந்த மாதிரியான எண்ணங்கள் உமிழ்நீராக மாறி நம் உடலுக்குள் வித்தாக மாறி நோயாக மாறுகிறது.

ஒரு தடவை சஞ்சலப்படுகின்றோம் என்று சொன்னால் அந்தச் சஞ்சலப்படும் எண்ணங்கள் நமக்குள் பதிவாகி இப்படிப் பலவும் சேர்ந்து விடுகின்றது.

உதாரணமாக சில இடங்களில் பார்த்தோம் என்றால் பக்கத்து வீட்டுக்காரருக்கும் அவர்களுக்கும் ஆகாது.

பக்கத்து வீட்டுக்காரர் எனக்குப் பல வகைகளிலும் இடைஞ்சல் செய்கிறார். அதைப் பற்றிக் கேட்டால் தகராறு செய்கிறார் என்பார்கள்.

1.ஆக… அவர்கள் செய்யும் தகராறுகளைப் பற்றி எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் இவருக்குள் வந்துவிடுகின்றது.
2.அவர்களைப் பற்றி எண்ணினாலே அல்லது அவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் இனம் புரியாத வெறுப்பு வரும்.

வெறுப்பான உணர்வுடன் அவர்களிடம் பேசும் பொழுது அவர்களுக்கு இவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் இவர் மீது வெறுப்பு வரும். இதைத் தீர்க்கவே முடிவதில்லை.

ஆனால் இரண்டு பேரும் சண்டையிடுவதனால் என்ன இலாபம் அடைகிறார்கள்…!

இவர்கள் சங்கடமாகவும் ஆத்திரமாகவும் பேசி அந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது அந்த உணர்ச்சிகள் இங்கே உமிழ் நீராகி இவர்கள் உடலில் வியாதியாக மாற்றிக் கொள்கிறார்கள்.

எதிர்நிலைகளில் பேசுகின்றவர்களும் அதே போல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி உமிழ் நீராக மாறும் போது அவர்கள் உடலிலும் நோயாக மாற்றிக் கொள்கிறார்கள்.

1.இரண்டு பேருமே நல்லதைக் காக்க வேண்டும் என்று எண்ணுகின்றார்கள்.
2.ஆனால் இரண்டு பேரும் அவர்கள் உடலில் வியாதியைத்தான் சேர்த்துக் கொள்கின்றார்கள்.

நிலத்தில் ஒரு விஷச் செடியைப் பதியச் செய்தால் காற்றிலிருந்து அது தன் இனமான விஷத்தின் சத்தைக் கவர்ந்து வளர்கின்றது.

இதைப் போன்று தான் வெறுப்பான எண்ணங்களைப் பதிவு செய்யும் பொழுது அதே எண்ணங்களை எடுத்து இரண்டு பேரும் வளர்த்துக் கொண்டேயிருப்பார்கள்.

இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்…?

ஒருவருடைய சொல் நம்மைக் கடுமையாகப் பாதிக்கின்றது என்றால் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து
1.அதைத் தடுத்துக் கொள்ள வேண்டும்.
2.பின் நம் சொல் அவர்களுக்கு நல்லதாகப் படவேண்டும்.
3.எல்லோருக்கும் நல்லது செய்யக் கூடிய மனது வரவேண்டும் என்று எண்ணி
4.இந்த உணர்வலைகளைப் பாய்ச்ச வேண்டும்.

அவர்கள் நம் மேலே கோபமாகத் திட்டிக் கொண்டேயிருந்தாலும் கூட இந்த உணர்வுகள் அவர்களிடம் போய்ச் சேர்ந்து நாம் பாய்ச்சிய நல் உணர்வுகள் அதை நல்லதாக்கச் செய்யும்.

நமக்குள் அந்தச் சங்கடமான எண்ணங்கள் வந்து நம் உடலில் நோயாக மாற்றாது.

ஏனென்றால் நாம் சங்கடமாகப் பேசிக் கொண்டிருந்தால் நம் வியாபாரமோ தொழிலிலோ மந்தமாகிவிடுகின்றது. நம் குழந்தைகளிடமும் பக்குவமாக இருக்க முடியாது.

சமையல் செய்யும் பொழுது சங்கடமான எண்ணத்தைக் கொண்டிருந்தால் சுவையாகச் செய்யும் நிலைகளை மாற்றிவிடும்.

அதே சமயத்தில் ருசியாகச் சமைத்து வைத்திருந்தாலும் சங்கடமான எண்ணத்துடன் இருக்கும் பொழுது சாப்பிட்டால் ருசி இருக்காது. ஆகாரத்திலுள்ள சத்தைப் பிரிக்காது.

1.அப்பொழுது அது நம் உடலில் வியாதியாகவும் மாறிவிடுகின்றது.
2.அதை மாற்றுவதற்காகத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் “ஈஸ்வரா…” என்று ஏங்கித் தியானியுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று உடலுக்குள் செலுத்துங்கள். எங்கள் உடலில் அறியாது சேர்ந்த நோய்கள் நீங்க வேண்டும் “ஈஸ்வரா…” என்று எண்ணுதல் வேண்டும்.

இவ்வாறு எண்ணித் தியானம் செய்தீர்கள் என்றால்
1.உங்கள் வாயில் சுரக்கும் உமிழ் நீர் சுவையுள்ளதாகச் சுரக்கும்
2.நீங்கள் சாப்பிட்ட ஆகாரத்திலுள்ள சத்தினைச் சீராகப் பிரிக்கும்… உடல் நலம் பெறுவீர்கள்.

இப்படி உங்கள் உயிரான ஈசனிடம் நல்ல உணர்வுகளைப் பதிவு செய்யும் பொழுது அந்த குணத்தின் அடிப்படையிலேயே உங்கள் இயக்கம் அமைகின்றது.

இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.

உபதேசம் செய்வது அர்த்தமாகவில்லை…! என்று சொல்கிறார்கள்

 

சாமி (ஞானகுரு) இந்நேரம் வரை உபதேசம் செய்தார்…
1.எனக்கு அர்த்தம் தெரியவில்லையே…! என்று இருக்கவே வேண்டாம்.
2.”என்ன உபதேசிக்கிறார்…” என்று கேட்டுப் பதிவாக்கிக் கொண்டிருந்தால் மட்டும் போதும்.

ஒரு டேப்பிற்கு ஒன்றுமே தெரியாது. அதில் உள்ள நாடாவில் தான் முலாம் பூசப்பட்டு இருக்கின்றது. ஆனால் பேசுவது எல்லாம் அதிலே பதிவாகின்றது. வேறு எண்ணம் அதற்கு இல்லை.

உதாரணமாக சிறிய குழந்தைகளுக்கு “அங்கே செல்ல வேண்டும்… இங்கே போக வேண்டும்…” என்ற எண்ணங்கள் இல்லை.

ஒரு பாடல் நன்றாக இருக்கிறது என்றால் குழந்தை அதைச் சும்மா கவனித்துக் கொண்டே இருந்தால் போதும். அதே பாட்டை அதே மெட்டில் அந்தக் குழந்தை பாடத் தொடங்கும்

ஆனால் பெரியவர்கள் ஆயிரம் தடவை கேட்டாலும்… அந்தப் பாடலை அதே மெட்டைப் பாட முடிகிறதா…? என்றால் இல்லை. ஏனென்றால் பல எண்ணங்கள் நமக்குள் இருக்கின்றது.

பல ஆயிரம் புத்தகங்களைப் படித்துக் கொண்டு வந்து
1.நாம் இத்தனை புத்தகங்களைப் படித்து இருக்கின்றோம்… சாமி சொல்வது அர்த்தமில்லை…! என்று
2.படித்த நிலைக்கு ஒப்பிட்டுப் பார்த்தால் நான் சொல்வது உங்களுக்கு அர்த்தமாகாது.

ஆகவே அந்த மெய் ஒளியின் தன்மையை உங்களுக்குள் பதிவு செய்து… நாம் அந்த வழியில் பெற வேண்டுமென்று ஏக்கத்துடன் இருந்தால் இது பதிவாகும்.

அந்தப் பதிவான நிலைகள் கொண்டு மீண்டும் தியானத்தில் எண்ணி எடுத்தால்
1.படித்துக் கொண்டு வந்த அனைத்திற்கும் விடைகளை உங்கள் உள்ளத்திலிருந்து கொடுக்கும்
2.இந்த தியானத்தை முறைப்படி எடுத்தால் படித்தது அனைத்தையும் நீங்கள் அர்த்தம் தெரிந்து கொள்வீர்கள்.

காவியங்களைப் பற்றி எல்லாம் உங்களுக்குச் சிறுகச் சிறுகத் தான் பதிவு செய்து கொண்டு வருகின்றேன். சில நேரம் முழுவதும் சொல்கின்றேன்…. சில நேரம் சுருக்கமாகச் சொல்கிறேன்.

முழுவதும் சொன்னாலும் கிரகிக்கும் சக்தி உங்களிடம் இல்லை… கொஞ்சம் கொஞ்சமாகச் சொன்னாலும் கிரகிக்கும் சக்தி இல்லை.

இராமாயணமும் மகாபாரதமும் பல மொழிகளில் பாடல்களாகத் தான் எழுதி வைத்திருக்கின்றார்கள். திருவள்ளுவரும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

அவர்கள் சொல்வதெல்லாம் படித்துவிட்டு அர்த்தமாகிறது என்று எப்படிச் சொல்கிறார்கள்…! என்று தெரியவில்லை. அர்த்தம் தெரிந்து எல்லோருக்கும் தெரிவதில்லை.

குழந்தைப் பருவத்தில் ஒன்றாம் வகுப்பில் பாடம் படிக்கிறோம். தெரிந்து கொண்ட பாடத்தை அங்கே பள்ளியில் சொல்லிக் கொடுப்பதில்லை.

அந்த வகுப்பில் படித்த பின்பு அடுத்த வகுப்பிற்குச் என்றால் ஏற்கனவே தெரிந்த ஒன்றாவது வகுப்புப் பாடத்தை அவர்கள் சொல்லித் தருவதில்லை.

இப்படி ஒவ்வொரு வகுப்பிலும் கற்றுக் கொடுத்துத் தேர்ந்த பின்புதான் அடுத்த நிலைக்குப் போகின்றோம். இப்படி வரிசையாகப் போய்ப் பனிரெண்டாம் கிளாஸ் வரை போகின்றோம்.

அத்தனையும் படித்தாலும் அதற்குப் பின் இன்ஜினியருக்கு போகிறாயா…? மருத்துவத்திற்குப் போகிறாயா…? என்று கேட்கின்றார்கள். படித்ததற்குத் தகுந்த மாதிரித் தேர்வு வைத்து டாக்டராகவோ இன்ஜினியராகவோ செல்லலாம் என்று அங்கே பிரிக்கின்றார்கள்.

பிரித்த பிற்பாடு அப்புறம் படித்துத் தான் கல்லூரியில் தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர படிக்காமல் அதைத் தெரிந்து கொள்ள முடியாது.

1.நான் பல புத்தகங்களை ஏற்கனவே படித்திருக்கிறேன் என்று படித்த நிலையைச் சொல்லிக் கொண்டு
2.கல்லூரிப் பாடத்தைப் படிக்க வேண்டும் என்று இல்லாதபடி
3.“இச்ச்….” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டால் அந்தப் பாட நிலை ஏறாது.

கல்லூரரிப் படிப்பைச் சீராகப் படித்துப் பதிவாக்கி அந்த உணர்வின் சக்தியை நமக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அங்கே தேர்வாக முடியும்.

சிலர் நிறையப் படித்து விட்டு வந்து…
1.என்னமோ இந்தச் சாமி சொல்கிறார்…
2.வேண்டுமென்றால் கேட்டு விட்டுப் போவோம் என்ற நிலையில் இருக்கின்றனர்.
3.படித்த நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால் இப்படித்தான் வரும்.

ஏனென்றால் இந்த வாழ்க்கை… இந்த இயற்கை… எப்படி நிகழ்ந்து கொடுக்கிறது…? என்ற நிலையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அது தான் முக்கியம்.

ஆகவே…
1.நாம் “குழந்தை உள்ளங்களாக” இருந்து
2.அந்த மெய் ஒளியைப் பெற வேண்டும் என்று ஏக்கத்துடன் இருந்தால்
3.யாம் உபதேசிக்கும் அனைத்தும் நிச்சயம் உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகும்.

மனிதனைக் காக்கும் மருத்துவம் பொருளை ஈட்டும் நோக்கத்திலேயே வளர்ந்து விட்டது – ஈஸ்வரபட்டர்

 

உணர்வுடன் கூடிய எண்ணத்தால் வரக்கூடிய வியாதிகள் மனிதனுக்கு மட்டும் தான் உண்டு.

கை கால் உணர்விழந்து வாதப்பிடிப்பு நோய்கள் எப்படி வருகின்றன…?

1.கோப உணர்வை வளரவிட்டுப் படபடக்கும் உணர்வுடன்
2.சலிப்பு சோம்பல் என்ற சங்கடத்துடன் கோப உணர்வின் அலையை மீண்டும் மீண்டும் எடுத்து அதனை அடக்கி
3.தன் சந்தோஷ உணர்வைக் கூட்டிக் கொள்ள உந்தலை அடக்கி
4.மற்றொரு உணர்வின் ஈர்ப்பில் எண்ணத்தைச் செலுத்திச் செலுத்தி
5.கோபத்தினால் வரக்கூடிய விளைவுகளைக் கண்டு அஞ்சி
6.சந்தோஷத்தால் மாற்றியமைக்க முடியும் என்ற தன் எண்ணத்தை மாற்றியமைத்து
7.இன்பம் என்று எதனைச் செயல்படுத்த எண்ணுகின்றானோ
8.இவ்விரண்டு அலைகளும் இவன் உணர்ந்து எண்ணும் எண்ணத்தால் சுவாசமுடன் மோதுண்டு
9.சத்ரு மித்ரு நிலையாகி நரம்புகளின் இயக்கத் தன்மை குறைவாகி உணர்வின் ஈர்ப்பு நரம்புகள் பாதிக்கப்பட்டு
10.சிறு மூளை பெருமூளை நரம்புகள் சரிவர இரத்த ஓட்டங்கள் ஓடப் பெறாமல் சில அடைப்புகளாகி
11.அதனால் வரும் வியாதிகள் தானப்பா இந்த வாத நோய்கள் எல்லாம்.

தோல்களில் ஏற்படும் சர்ம வியாதிகள் எப்படி வருகின்றன…? கட்டிகளும் சில புண்களும் எப்படி வருகின்றன…? உடலில் உள்ள பாக்கித் தன்மை எல்லாம் சரி வர இருந்தாலும் சர்மங்களில் ஏற்படும் ஒரு சில வியாதிகள் எப்படி வருகின்றன…?

உடலில் உள்ள சிறு உறுப்பிற்கும் நகம் முதற் கொண்டு ரோமங்கள் வரை ஜீவ சக்தி இருந்தால் தான் சீராக வளர்கின்றது. உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் அதற்குகந்த அமில ஈர்ப்பை அந்தந்த உறுப்புகளே தனக்குகந்த ஆகாரத்தைத்தான் எடுத்து வளர்கின்றது.

நகத்தின் அமிலமும் பற்கள் ரோமம் எலும்பு சதை எல்லாமே அதனதன் குண அமில ஆகாரத்தைத் தன் ஈர்ப்பின் சுவாசத்தால் எடுத்துத் தான் வாழ்கின்றன.

இப்படி வாழும் நிலையில் சர்மங்களில் அந்தந்த இடங்களின் ஈர்ப்பு ஜீவ சக்தி பாதிக்கும் பொழுது அதற்குகந்த துடிப்பு உணர்வை எடுக்காத முறையில் ஏற்படுவது தான் உடலில் ஏற்படும் சில கொப்பளங்களும் நகங்களின் வெடிப்புத் தன்மையும்.

ஈறுகளில் ஏற்படும் விஷ அணுக்களின் தாக்குதலினால் பற்களில் வியாதியும் சில அமில பாதிப்பால் ரோம (தலை முடி) வளர்ச்சி குன்றி உதிர்வதும் ஏற்படுகின்றன.

மனித எண்ண உணர்வு நிலைக்கொப்ப வியாதிகள் வரும் பொழுது இன்றைய விஞ்ஞானத்தால் சில செயற்கை முறை கொண்ட மருத்துவத்தால் பல சாதனைகளைச் செய்கிறார்கள்.

டி,பி வியாதிக்கெல்லாம் அந்த வியாதிக் கிருமியை அழிக்க அதற்கு மேல் சக்தி கொண்ட சில மருந்துகளைச் செலுத்தி இவ்விஷ விரிய சக்தி உடலைப் பாதிக்காமல் இருக்க அதற்கு மாற்று மருந்தையும் அதனுடன் உட்கொள்ளச் செய்கின்றனர்.

1.உள்ள வியாதியை மற்றொரு சக்தியினால் அதனை மாற்றி…
2.மாற்றக்கூடிய அச்சக்திக்கு அதன் வீரிய குண படர்ப்பு உடலைப் பாதிக்காமல் இருக்க
3.மற்றொரு மருந்தையும் தந்து தான் விஞ்ஞான மருத்துவம் இன்றுள்ளது.

புற்று நோய்க்கெல்லாம் உறுப்புகளில் எந்தெந்தப் பாகத்தில் அதிகமாகத் தாக்கப்பட்டு அதனை ஆரம்ப காலத்தில் கண்டுணரும் முறை கொண்டு அந்தந்த உறுப்புகளை நீக்கி விடுகின்றனர்.

அதாவது உயிர் வாழக்கூடிய நிலை இருந்தால் கருப்பை மார்பகங்கள் குடல்கள் இவற்றின் நிலையில் புற்று நோய் தாக்கப்பட்ட இடங்களை நீக்கிச் செயல் கொள்கிறது மருத்துவ விஞ்ஞானம்.

நீக்கிவிட்டு உயிர் வாழ முடியாத பாகமாக இருந்தால் அத்தகைய தாக்குண்ட இடங்களில் உள்ள புற்று வியாதியை கதிரியக்கம் கொண்டு மின் அலையினால் அந்தந்தப் பாகங்களைச் செயலிழக்கச் செய்து செயல் கொள்ள வைக்கின்றார்கள்.

1.மின் அலையின் சாதனத்தால் உடல் மண்டல நரம்புகள் அனைத்தும் செயல் கொள்ளும் முறைகளையும்
2.உடல் உறுப்பின் உள் நிலைகளைக் காணக்கூடிய சாதனைகளையும் (X RAY, SCAN) இன்றைய விஞ்ஞானம் செய்கிறது.

இன்னும் பல விநோதக் கருவிகளை உருவாக்கி அதன் மூலம் உடல் முழுவதையுமே ஆராய்ந்து உயிர் காக்கும் செயல் ரூபம் அனைத்துமே
1.இன்று பொருளை ஈட்டும் வழியில் தான்…
2.விஞ்ஞான மருத்துவத்தில் வளர்ந்து கொண்டுள்ளதே தவிர
3.உணர்வின் எண்ணம் கொண்டு
4.நாம் எடுக்கும் சுவாசத்திற்கு வலுத் தந்து வளர்க்கும்
5.உன்னத சக்தியின் அலையை ஈர்ப்பார் யாரும் இல்லை…!

உடலில் தசைகளில் உருவான நோய்களை அகற்றினாலும் எண்ணத்தின் உணர்வால் உருவான “மூல வித்தை…” மாற்றியமைக்காது செய்யும் எந்த மருத்துவமும் முடிவில் பலன் அளிக்காது.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

குடும்பத்தில் நாம் பாசமாக இருக்கின்றோம்.

நம் பிள்ளை மீது பாசமாக எண்ணி அவர்கள் தவறான வழியில் சென்று விட்டாலோ… படிக்கவில்லை என்றாலோ…
1.இப்படிச் செய்கின்றானே எதிர்காலம் என்ன ஆகுமோ…! என்று எண்ணி எண்ணி வேதனையை எடுத்துக் கொண்டால்
2.நமக்குள் அதுவே பாசக் கயிறாக மாறுகின்றது.

வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது நமக்குள் அது சித்திர புத்திரன். நாம் எதைக் கண்ணுற்றுப் பார்க்கின்றோமோ அது “சித்திரமாகி” (படமாகி) அந்த உணர்வின் சத்து நம் உடலுக்குள் “புத்திரனாக” (அணுக்களாக) இணைந்துவிடுகின்றது.

அதையே திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது பாசக் கயிறாக மாறி வழித் தொடராகின்றது. எருமை எவ்வாறு சிந்தனையற்று ஆகின்றதோ அதைப் போல
1.பையன் சொன்னபடி கேட்கவில்லை என்ற வேதனை வரப்படும் பொழுது
2.அந்த உணர்வின் சத்தே நமக்குள் புத்திரனாகின்றது.

நாம் எண்ணியபடி ஒருவன் நடக்கவில்லை என்றால் அந்த வேதனையான உணர்வு எனக்குள் வரும் பொழுது சித்திரபுத்திரன்.

ஆகவே அவன் எனக்குத் “தீங்கு விளைவித்தான்… தீங்கு விளைவித்தான்…” என்ற எண்ணத்தை எடுத்துக் கொண்டால் அந்த உணர்வுகள் நமக்குள் பிள்ளையாக வந்து சித்திரபுத்திரன் கணக்குப் பிரகாரம் அடுத்து எமன் தண்டனை கொடுக்கின்றான்.

இங்கே எமன் என்பது நம்முடைய அந்த எண்ணம் தான்.

வேதனையான எண்ணங்களை நமக்குள் எடுக்கும் பொழுது…, கண்ணிலே பார்ப்பது “சித்திரம்” ஒரு உடலிலே விளைந்த உணர்வுகள் எனக்குள் அது “புத்திரனாகி” அந்த வேதனையாக வளர்கின்றது. அடிக்கடி நாம் எண்ணப்படும் பொழுது அது “பாசக்கயிறாக” மாறுகின்றது.

எருமை ரோட்டில் வரும் போது பஸ் வந்தாலும் அதைத் திரும்பிப் பார்ப்பதில்லை. “அடிபட்ட பின் தான்…” அதற்குத் தெரியும்.

இதே போல் நாம் சிந்தனையற்ற நிலைகள் வரும் பொழுது அதன் மீது தான் வருகின்றான் எமன். மனிதனான பின் சிந்தனையற்ற செயல்களைச் செய்யும் பொழுது
1.எதன் மேல் சிந்தனையற்று நம் பாசத்தை உந்துகின்றோமோ
2.அதனின் உணர்வு கொண்டு நம் சிந்தனை மந்தமாகி
3.நம் உடலை நம் எண்ணமே அழித்துவிடுகின்றது.

மார்க்கண்டேயன் எதைப் பற்றுகின்றான்…?

1.கீழே இருக்கக்கூடியது ஆவடை உடல். அதைப் பற்றவில்லை.
2.அந்த உயிரின் தன்மை இயக்கிய நிலைகள் கொண்டு தாவி அந்த லிங்கத்தைத்தான் ஆலிங்கனம் செய்கின்றான்.
3.அது ஜீவனுள்ளது.

உயிரின் தன்மை நமக்குள் வளர்ச்சி கொண்டிருப்பதை உயிரைப் பற்றுடன் பற்றி அதனுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு உணர்வின் தன்மையை “ஒளியாக மாற்றினான்” என்ற நிலையை அதிலே நிலைப்படுத்திக் காட்டினார்கள்.

மார்க்கண்டேயன் உயிரை எடுக்க எருமை என்ற வாகனம் மீது எமன் வருவதைக் காட்டுகின்றார்கள்.

ஆனால் உயிருடன் ஒன்றிய நிலைகள் வரப்படும் பொழுது இவனால் அவனைக் கவர முடியவில்லை என்று “சாதாரண மனிதனுக்கும் புரியும் வண்ணம்…” மிக மிகத் தெளிவாக விளக்கிக் காட்டியுள்ளார்கள்.

நம்முடைய எண்ணம் உயிருடன் ஒன்றிய நிலைகளில் இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது.
1.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு இருந்தால்
2.தீமைகளை அகற்றிடும் சக்தியாக வரும் என்று
3.விளக்க உரையாகக் காவியமாகத் தீட்டி உருவத்தை அமைத்து
4.சாதாரண மக்களும் புரிந்திடும் வண்ணம் கொடுத்துள்ளார்கள் தத்துவ ஞானிகள்.

அவ்வாறு வகுக்கப்பட்டிருந்தாலும் “நாம் புரிந்திருக்கின்றோமா…!” என்றால் இல்லை.

தெய்வத்திற்கு ஆராதனையும் அர்ச்சனையும் செய்தால் அந்தத் தெய்வம் செய்யும். மந்திரவாதியிடம் காசைக் கொடுத்தால் அவன் செய்வான். ஜோதிடக்காரனுக்குக் காசைக் கொடுத்துவிட்டு யாகம் செய்து பரிகாரம் செய்தால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று இந்த எண்ணத்திலேயே தான் இன்றும் வாழ்கின்றோம்.

நாம் காணும் கோள்களோ சூரியன்களோ கடுமையான கதிரியக்கங்களை உமிழ்த்தும் நட்சத்திரங்களோ எல்லாமே ஒரு கால கட்டத்தில் அழியக் கூடியதுதான்.

நட்சத்திரங்கள் சூரியனாக மாறலாம். சூரியனாக மாறிப் படைக்கும் தன்மை வந்தாலும் மிருக நிலைகளிலிருந்து மாறி நாம் மனிதனான பின் முதுமை அடைவது போல் சூரியனும் முதுமை அடைந்துவிடும்.

துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும் வேகா நிலை பெற்றது. துருவ நட்சத்திரமும் அதனின் ஈர்ப்பு வட்டத்திலிருக்கும் சப்தரிஷி மண்டலமும் என்றுமே அழியாதது. எந்த நஞ்சு கொண்ட உணர்வுகளும் அதை மாய்த்திட முடியாது.

அத்தகைய சக்தியைத் தான் உங்களைப் பெறும்படிச் செய்கின்றோம்.

முழு முதல் கடவுள்

 

மிருக நிலையிலிருந்து என்று மனிதனாக ஆனோமோ அன்றே “முழு முதற் கடவுள் என்று மனிதனைப் பாடியுள்ளார்கள்…” சிருஷ்டிக்கும் வன்மை கொண்டது தான் மனித உணர்வின் எண்ணம்.

அத்தகைய ஆற்றல் பெற்ற நாம்… நம் நினைவை இழந்து விடாதபடி இதன் எண்ணத்தைக் கொண்டு ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி நமக்குள் தியானத்தின் சக்தியைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

ஞானிகள் அருள் வாக்குடன் கலந்து அவர்களுடைய அருள் சக்தியை நம் உடலுக்குள் சேர்த்து
1.நம்மை அறியாது சுவாசித்த சலிப்பு சங்கடம் சஞ்சலம் கோபம் பயம் வேதனை இதைப் போன்ற குணங்கள்
2.நமக்குள் நோயாக உருவாக்கச் செய்யும்… சிந்தனைகளை குறைக்கச் செய்து கொண்டிருக்கும் இந்த நிலையை மாற்றி அமைக்க வேண்டும்.

ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி தியானத்தை மேற்கொண்டு இருளை நீக்கி ஒளியின் சரீரம் பெறுவோம். அதை நினைவுபடுத்தும் நாள் தான் தீப வழித் திருநாள்… தீப ஒளித் திருநாள்.

ஞானிகள் காட்டிய அந்த நிலையை நாம் எல்லோரும் அடைவோம்.

விண்ணிலே தோன்றியது தான் உயிர்.
1.அருள் ஒளியின் சுடராக தீப வழிப்படி விண்ணுக்குச் செல்லும் தகுதி பெற்ற நாம்
2.இந்த உடலில் இருக்கும் ஆறாவது அறிவின் துணை கொண்டு
3.அந்த மெய் ஒளியுடன் ஒளியாக… உயிருக்குள் உணர்வு அனைத்தையும் ஒளியாகச் சேர்த்து
4.அழியா ஒளிச் சரீரமாக அதனுடன் இணைந்து விஜயதசமி…
5.பத்தாவது அவதாரமான கல்கி என்ற நிலையை நாம் அடைதல் வேண்டும்.

ஆறாவது அறிவு கொண்ட நாம் “ஏழாவது நிலையான” ஒரு பொருளுடன் ஒரு பொருள் இணைக்கும் திறன் பெற்றவர்கள்.

ஒருவன் திட்டி விட்டால் தியான வலு கொண்டவர்கள் ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதனுடன் இணைக்கப்படும் பொழுது
1.அந்த இடைஞ்சல் செய்தவனின் உணர்வுகள் தனக்குள் இயக்காதபடி
2.அதைத் தடுத்து நிறுத்தச் செய்யும்… சிந்திக்கச் செய்யும்.

இவ்வாறு அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியைச் சேர்த்து நம் உடலுக்குள் விளையச் செய்யும் போது “எட்டாவது நிலை…” உடலுக்குள் விளைந்த பின் உயிருடன் அது சேரும் போது “ஒன்பதாவது நிலை” ஆகின்றது.

ஒருவன் நமக்கு இடைஞ்சல் செய்தான் என்று மீண்டும் மீண்டும் எண்ணும் பொழுது அவன் பேசிய பேச்செல்லாம் நாமும் பேசுவோம். அவருடைய பேச்சு நமக்குள் இயங்காத வண்ணம் தடைப்படுத்துவதற்குத் தான் ஞானியின் அருள் சக்தி இதனுடன் இணத்துச் சேர்க்க வேண்டும் என்று சொல்வது.

அந்த இருளான உணர்வுகளைத் தடைப்படுத்தி அந்த உணர்வை ஞானமாக்கி அந்த ஒளிச் சுடராக ஒளி பெறும் நிலைக்கு இட்டுச் செல்வதால் உயிர் ஒளியாக இருப்பது போன்று அந்த உணர்வின் தன்மை கொண்டு ஒளியாகி உடலை விட்டுச் சென்றபின் தசமி “பத்தாவது நிலை…” கல்கி.

1.உடலுடன் வாழும் போது செடி கொடி தாவரங்கள் விளைய வைத்ததைத் தான் உணவாக உட்கொள்கிறோம்.
2.ஆனால் இந்தப் பூமியிலிருந்து நாம் விண் சென்ற பின்
3.நம் சூரிய குடும்பமான பிரபஞ்சத்திற்கு வெளியே தான் நம் உயிராத்மா செல்கின்றது.

இந்தச் சூரிய குடும்பத்திற்குள் விளைந்த அனைத்தையும் ஒளியின் உணர்வாக எடுத்துக் கொண்டு பிரபஞ்சத்தின் ஈர்ப்பை விட்டு வெளியில் என்றும் பதினாறு என்று செல்லும் நிலையில்
1.மற்ற பேரண்டத்தில் இருவரும் சக்திகளை அந்த விஷத்தன்மையைத் தனக்குள் கவர்ந்து ஒளியாக்கி
2.எந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு வட்டத்திலிருந்து இதை எல்லாம் பெற்றோமோ
3.அந்த ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் உயர்ந்த சக்திகளை அனுப்பி
4.இந்த சூரிய குடும்பத்திற்கே ஒளி காட்டும் வழியாகவும்
5.பேரண்டத்திலிருந்து வரக்கூடிய உணர்வின் சக்திகளையும் ஒளியாக்கி
6.அந்தப் பேரண்டத்திற்கே வழி காட்டும் உணர்வின் ஒளி அலைகளாக நாம் வளர முடியும்.

அந்த தீபத்தின் வழி செல்வோமேயானால் இது தான் மனிதனின் கடைசி நிலை…! தீப வழி… தீப ஒளி (தீபாவளி).

ஆக உயிர் விண்ணிலே தோன்றினாலும் மீண்டும் விண்ணுக்கே ஒளியாகச் செல்கின்றது.

மருந்து என்பது நோயை நீக்கவா… அல்லது புதிய நோயை உருவாக்கவா…? – ஈஸ்வரபட்டர்

 

ஒவ்வொருவருக்கும் வரக்கூடிய வியாதியின் தன்மை கொண்ட குணநிலை ஒத்துத்தான் இருக்கும்.
1.குண நிலைக்கு ஒத்த வியாதி தான் மனிதனுக்கு வருகின்றது.
2.மனிதனுக்குத் தான் பலவிதமான புதுப்புது வியாதிகள் வளர்ந்து கொண்டே உள்ளன
3.மற்ற மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும் அந்த அளவுக்கு இல்லை
4.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வியாதிகள்.

தாவரங்களுக்கு ஒன்றை ஒத்த நிலையில் தான் அதனதன் வியாதி அணுப்பூச்சிகள் அவைகளைத் தாக்குகின்றன. மிருகங்களின் நிலையிலே மனித நிலைக்கு முற்றிலும் மாறு கொண்ட நிலையுள்ளது.

மிருகத்தின் உணர்வின் எண்ணம் ஒலியின் ஈர்ப்பைக் கொண்டு பழக்கப்பட்ட ஒன்றின் செயலில் செல்வதனால் ஏறக்குறைய தாவரங்களின் நிலைக்கொத்த
1.பருவக் காலங்களில் தாக்கக்கூடிய விஷ அணுக்களின் நோய்த் தன்மை
2.ஒன்றுக்கொன்று தொடர் கொண்ட “ஒட்டும் நிலையில்”
3.ஒன்றை ஒத்த வியாதியில் தான் மிருக இனம் தாக்கப்படுகின்றது.

மனிதனுக்கும் சில காலகட்டத்தில் சீதோஷ்ண நிலைக்கொப்பவும் பூமி இழுத்து வெளிப்படுத்தும் உஷ்ண அலையின் வெக்கைக்குகந்த நிலை கொண்டு அந்தந்தக் காலங்களில் வளரக்கூடிய விஷக்கிருமிகளின் நிலையினாலும் காற்றிலும் நீரிலும் தொக்கியுள்ள விஷக் கிருமியினால் சில நோய்கள் வருகின்றன.

ஜுரம் வாந்தி பேதி கண்களைக் தாக்ககூடிய சில நோய்க் கிருமிகளும் கால நிலையில் இயற்கைக்கொப்ப ஒன்றின் தொடர் கொண்டு ஒருவரைப் படர்ந்த நிலையில் ஒன்றைப் போல் பலருக்கும் (தொற்று நோய்) சில வியாதிகள் தாக்கப்படுவதுண்டு.

கால நிலைகள் மாறி… இயற்கையின் மாற்றத்தால்…
1.அவ்வணுக்களின் ஈர்ப்பு குண விஷங்களும் மாறும் தருவாயில்
2.விஷக் காய்ச்சல்கள் தொற்றிப் பலருக்கு ஒரே சமயத்தில் இந்த வியாதி வந்தாலும்
3.இவ்விஷக் கிருமியினால் தாக்கக்கூடிய வியாதிகள் தொடர் கொண்டு வளராமல்
4.சிறிது காலத்தில் அதன் குணம் மாறிவிடுகின்றது.

ஆனால்… “உணர்வால் எடுக்கும் எண்ணம் கொண்டு ஏற்படும் வியாதிகள்…!” அவரவர்களின் எண்ண நிலைக்கொப்ப உடலின் அணுவின் அணுவாக ஒன்றி வளர்ந்து இந்த உடல் அழியும் வரை அதன் குணப்பிடிப்பிலேயே தான் மனிதன் சிக்கி அந்த நோயினாலேயே மாளுகின்றான்.

அம்மை வியாதிகள் மலேரியா டைபாய்டு வாந்தி பேதி போன்றும் இன்னும் புதிய புதிய விஷத் தன்மை கொண்ட வியாதிகளும் அந்தந்தக் காலங்களில் ஏற்படும் சீதோஷ்ண நிலைக்கொப்பப் படரக்கூடிய விஷத் தன்மையின் பாதிப்பு சீதோஷ்ண நிலையின் மாற்றத்தைப் போலவே அந்தப் பாதிப்பின் தன்மை வருகிறது.

இந்தப் பூமியின் ஈர்ப்பில் வெளிப்படும் உஷ்ணத்தின் விஷ அணுக்கள் இந்தப் பூமியில் வாழும் ஜீவ ஜெந்துக்களின் நிலையிலும் அதன் நிலைக்கொப்ப பூமியின் ஈர்ப்புடன் ஒன்றிய ஜீவன்களுக்கும் சாடுகின்றது.

அவ்வலையின் விஷத்தின் தாக்குதல்… காற்றலையில் கிருமிகளாகப் படர்ந்துள்ள அந்த நிலையில்
1.தன் சுவாசத்தில் ஈர்ப்புடன் எடுப்பவர்க்கெல்லாம்
2.குறிப்பிட்ட காலத்தில் ஒரே தன்மை கொண்ட வியாதி தான் பலரைத் தாக்கும்.

அதன் பின் கால நிலையில் அதன் சக்தியின் வலுக் குன்றி மாற்றமும் கொண்டு விடுகின்றது.

இத்தன்மையான தாக்குதல்…
1.நீருடன் கூடிய ஜீவ சக்தி கொண்ட
2.உணர்வின் துடிப்பு கொண்ட எவரையும் தாக்கத்தான் செய்யும்.

தன் சக்தியையே தெய்வ சக்தியாக்கிச் சப்தரிஷியின் நிலையில் ஜீவன் கொண்டு உள்ளவனாக இருந்தாலும்… “கால நிலையின் மாற்றத்தில் ஏற்படும் சில விஷ அணுக் கிருமிகளின் தாக்குதல்…” சுவாசமுடனும்… நீருடனும்… தாக்கத்தான் செய்யும்.

இதிலிருந்து யாரும் தப்ப முடியாது…!

பூமியின் நிலையுடன் கூடிய கால மாற்றமாகும் பொழுது இவ்வணுவின் தன்மையும் மாறிவிடும். இவை இயற்கையின் உண்மையுடன் உருண்டுள்ள செயல் தொடர்பான குண நிலைகள் தாம்.

தாவரங்கள்… மிருகம்.. மனிதன்…! என்று இனம் பார்த்துத் தாக்காமல்
1.காற்றுடன் கலந்துள்ள நச்சுத் தன்மையின் செயல் வடிவங்கள் உண்டு
2.இதன் நிலையை மாற்றவோ அழிக்கவோ தப்பவோ முடியாதப்பா..!

ஏனென்றால் அதற்காக வேண்டி இயற்கைக்கு மாறாக நாம் சென்று செயற்கை வழியில் விஷமான மருந்துகளை அதிக அளவில் உட்கொள்ளும் பொழுது மற்ற நல்ல உறுப்புகளின் சீரான இயக்கத்தை அது பாதித்து விடுகிறது.

மேலும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்குப் பதிலாக மருந்தே வாழ்க்கையாகி விடுகிறது… மருந்தையே உணவாக உட்கொள்ளும் பழக்கத்திற்கு வந்துவிடுகின்றோம்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதே நல்லது.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நாம் சுவாசிக்கும் உணர்வின் தன்மை புருவ மத்தியிலிருக்கும் நம் உயிரிலே பட்டவுடன் அந்த நாதங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி அந்த உணர்வின் அலைகள் கொண்டு தான் நாம் பேசுகின்றோம். அந்த உணர்வின் நாதங்கள் தான் நம்மை (உடலை) இயக்குகின்றது.

நீரை வெப்பமாக்கிக் கொதிக்கச் செய்யும் பொழுது சப்தங்கள் வருகின்றது.

இதே போன்று நம் உயிரின் துடிப்பான வெப்பத்திற்குள் நாம் சுவாசிக்கும் உணர்வுகள் பட்டவுடன் இந்த உணர்வின் ஆற்றல் நாதங்களாக இயக்குகின்றது.

1.நாம் எத்தகைய குணத்தின் தன்மை கொண்டு சுவாசிக்கின்றோமோ
2.அது நமக்குள் நாத ஒலிகளாக எழுப்பி
3.அந்தத் தொனிக்குத் தக்கவாறு நம் உடலை இயக்குகின்றது.

ஒருவர் கோபமாகப் பேசுகின்றார் என்று காதிலே கேட்டவுடன் செவிப்புலன் இயக்கி அந்த உணர்ச்சிகள் தூண்டுகின்றன. அதே போன்று ஒரு மகிழ்ச்சியான சொல்களைச் சொல்லும் பொழுது செவிப்புலனில் ஈர்க்கப்பட்டவுடன் அந்த உணர்வுகள் நம்மை மகிழச் செய்கின்றன.

ஏனென்றால் அந்த உணர்வின் அலைகள் நமக்குள் அவ்வாறு இயக்குகின்றன.

“சப்தரிஷி” (சப்த+ரிஷி) – உயர்ந்த ஆற்றல்மிக்க நாதத்தின் நிலைகள் கொண்டு உள்ளடக்கி ஒளியின் சரீரமாகப் பெற்ற அதிலிருந்து வெளிப்பட்ட ஒரு அணுவின் தன்மை தான் “நாரதன்” என்று பெயர் வைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.

அவருக்கு வீணையைக் கையில் கொடுத்து மனிதனுடைய ரூபத்தைப் போட்டுக் காட்டினார்கள்.

சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரக்கூடிய அந்த ஒளியான அணு நாரதன் என்பது
1.அது எத்தகைய ஆற்றல் பெற்றதோ
2.அந்த உணர்வின் நிலைகள் கொண்டு விண்ணிலே மிதந்து கொண்டிருக்கும் “மெய் உணர்வு”.

சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் வியாசர் மீன் பிடிக்கச் செல்லும்போது புயலால் சிக்கப்பட்டுக் கடலில் வீழ்ந்து உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்.

அப்பொழுது தான் காக்கப்பட வேண்டும் என்று தன்னைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய உணர்வின் எண்ணத்துடன் துடித்துக் கொண்டிருக்கும் பொழுது அதே உணர்வு கொண்ட மீனின் (டால்பின்) உணர்ச்சிகள் தூண்டி இவன் எண்ணத்திற்குப் பக்கபலமாக இருந்து இவனைக் கரைசேர்க்கின்றது.

கரை சேர்க்கும்போது இவனுடைய எண்ணத்தின் துடிப்பின் நிலைகளும் மீன் இவனைக் காத்த உணர்வும் இந்த இரண்டு உணர்வுகளும் வியாசர் உணர்வுக்குள் சேர்த்தவுடனே
1.”பயம் கலந்த… தான் தப்பித்துவிட்டோம்…” என்ற ஆற்றல்மிக்க அந்த உணர்வின் சக்தி இவனுக்குள் கூடி
2.இந்த உணர்வலைகள் தன் புலனறிவான கண்ணுக்குள் பாய்ந்து
3.எந்த மீனைக் கொன்று புசித்தோமோ அந்த மீனே தன்னைக் காத்தது என்ற
4.அளவு கடந்த ஏக்கத்தின் தன்மை கொண்டு விண்ணை நோக்கி ஏகும் பொழுது
5.அந்த உணர்வின் ஆற்றலுக்குள் சிக்கியது தான்
6.சப்தரிஷி மண்டலங்களின் ஒளியான அணு (நாரதன்).

அது ஒரு சந்தர்ப்பம். அதற்கு முன் மீனவனுக்கு ஒன்றும் தெரியாது.

சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்பட்ட அந்த உணர்வுகள் இவர் உடலிலே புகப்பட்டு இந்த உணர்வுக்குள் ஈர்க்கப்பட்டு இவர் சுவாசித்த உணர்வின் தன்மை இவர் உயிரிலே படுகின்றது.

உயிரிலே படும் பொழுது சப்தரிஷி மண்டலமாக இயங்கிய அந்த உணர்வின் ஆற்றல் விண்ணுலகை எப்படித் தனக்குள் கண்டறிந்ததோ
1.அந்தப் பேருண்மையினுடைய தன்மைகள் அனைத்தும்
2.இந்த வியாசனான “ஒன்றும் தெரியாத” அந்த மீனவருடைய உடலில் தென்படுகின்றது.

இந்த உணர்வுகளின் சுவாசத்தாலேதான் பேரண்டத்தின் பெரு நிலையினுடைய நிலைகளை விண்ணுலகின் ஆற்றலை “நாராயணா…” என்றும் “விஷ்ணு…” என்றும் அழைத்தார்

பேரண்டத்தில் ஒன்றுடன் ஒன்று மோதி ஒன்றுக்குள் ஒன்று இணைந்து அந்த ஆற்றல் பெற்றது. வலுவானது வலுவற்ற அணுவிற்குள் மோதியவுடனே அது தனக்குள் கவர்ந்து சென்று தனது ஆற்றலைப் பெருக்கி இப்படித்தான் பிரபஞ்சமே வளர்ந்தது.

ஒன்றுக்குள் ஒன்று சென்று ஒன்றின் தன்மை வளர்ந்து அவ்வாறு வளர்ந்து வந்த அணுக்கள் தான் பேரண்டத்தின் இயக்க நிலைகள் என்பதை வியாசர் கண்டறிந்தார்.

இயற்கையில் ஒரு அணுவின் தோற்றமும் அந்த உயிரணுவின் தோற்றத்திற்குள் கண்ணனாகத் தோன்றி
1.அந்தக் கண் ஒவ்வொரு மனிதனுக்கும் கீதா உபதேசம்
2.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் எப்படிச் செய்கின்றது என்பதை
3.மகாபாரதம் என்றும் அதற்குள் கீதா உபதேசம் என்றும் வெளிப்படுத்தினார்.

வைகுண்ட ஏகாதசி அன்று உடலை விட்டுச் செல்லும் பொழுது குருநாதர் எம்மிடம் சொன்னது என்ன…?

 

பல அற்புதங்களை நான் செய்து காட்டினேன். அந்த அற்புதங்களிடத்தில் மயங்கியிருந்தோர் உண்டு. அதன் வழியில் என்னை அணுகியவர்கள் பலர்.

என்னிடமிருந்து அதைத் தெரிந்து கொள்ள எப்படி எல்லாம் வந்தார்கள் என்பதைத் தெரிந்து கொள் என்றார் குருநாதர்.

என்னிடம் எதை நாடி வந்தார்கள்…?

எனக்குச் சொத்து வேண்டும். சுகம் வேண்டும்…. உடல் நலம் வேண்டும் என்றும் எனக்கு “அந்த அருள் வேண்டும்… இந்த அருள் வேண்டும்…” என்று தான் கேட்டார்கள்.

1.மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.இந்த உலகம் நலமாக இருக்க வேண்டும்
3.உலக மக்கள் அவர்கள் குடும்பம் நலமாக இருக்க வேண்டும்.
4.பிறருடைய குடும்பங்களை நலம் பெறச் செய்யும் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
5.எங்கள் பேச்சால் மூச்சால் அனைவரின் துன்பங்கள் அகல வேண்டும். 6.நாங்கள் பார்ப்போர் குடும்பமெல்லாம் நலம் பெற வேண்டும் என்று “இதைப் பற்றிக் கேட்பார்… யாரும் இல்லை”.

அத்தகைய மனம் உள்ளோர் என்னை அணுகி வந்தார்கள்.
1.“தனக்காகத்தான்… கேட்டார்களே தவிர…
2.எல்லோரும் நலம் பெறவேண்டும்…” என்ற கேள்வியே அங்கே எழவில்லை.

ஆனால் அத்தகைய தன்மை பெற்றோர்களும் மற்ற எல்லோரும் அருள் ஞான சக்தி பெறவேண்டும் என்று நான் எண்ணினேன். நான் அதைப் பெற்றேன்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு வைகுண்ட ஏகாதசி அன்று நான் உடலை விட்டுச் செல்லப் போகின்றேன்.

ஆனால் நீ எதை எண்ணப் போகின்றாய்…? நீ எதைப் பெறப் போகின்றாய்…? நீ பெறவேண்டிய தகுதிகள் எது…? அதைப் பெறுவது எப்படி…? என்று பல வினாக்களளை எழுப்பி இதையெல்லாம் எமக்குள் தெளிவாக்கிக் காட்டினார்.

இந்த உடலை விட்டுச் சென்றபின் நீ என்னுடன் இணைந்து வர வேண்டும் என்றால் “நீ எதை எண்ண வேண்டும்…?” என்றும் சொன்னார்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி குரு பெறவேண்டும். அவர் அழியாத ஒளியின் சரீரம் பெற வேண்டும். அவர் பேரின்பப் பெரு வாழ்வு வாழ வேண்டும். பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும்.

இவ்வாறு அந்த அருள் வழி குரு பெற வேண்டும் என்று நீ எண்ணினால் அந்த குரு உனக்குள் ஒளியின் சரீரமாக ஆகின்றார்.

ஆகவே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அவ்வாறு ஆகின்றாய்…! என்று உணர்த்தினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

சர்க்கரைச் சத்து உப்புச் சத்து இரத்தக் கொதிப்பு போன்ற வியாதிகள் மனிதனுக்கு எப்படி வருகின்றன…? – ஈஸ்வரபட்டர் சொன்னது

 

உணர்வின் எண்ணத்தைக் கொண்டு எதனையும் மாற்றியமைக்கும் சக்தி மனிதனுக்குண்டு.

சர்க்கரை வியாதி மனிதனுக்கு எப்படி ஏற்படுகிறது…? சர்க்கரை வியாதியின் குண நலன் என்ன…?

சிறு வயது முதற் கொண்டு ஒரு நிலையான வாழ்க்கை வாழ்ந்துள்ள நிலையில்
1.அதிகமான சந்தோஷங்கள் ஏற்பட்ட காலங்களில் – சந்தோஷ அலையின் சுழற்சி வாழ்க்கையில்
2.அதன் தொடர் அலையில் ஏற்படும் சலிப்பு குணம் உந்தப்படுபவனின்
3.உடல் அமிலத்தின் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு எடுக்கும் சுவாசத்தால்
4.சர்க்கரைச் சத்து என்ற அமிலச் சுரப்பி உடலுக்கு வேண்டிய இரத்தச் சக்தியிலிருந்து
5.அதிகமான சத்து நிலைகள் சிறுநீரில் கலந்து விடுகின்றன.

மருத்துவத்தில் சில நிலைகளை (INSULIN) இந்த உடலில் செலுத்தி மருந்துகளை அந்தந்தக் காலங்களுக்கு உணவுடனும் மருந்துடன் கொடுத்துச் சமப்படுத்தலாமே தவிர பூரண குணம் கிடைப்பதில்லை.

வியாதியில் சிக்குண்ட மனித ஆத்மாவானது “ஆத்ம தியானம்” என்ற குண நிலையைச் சமமான நிலைப்படுத்தி நற்குணங்களின் ஈர்ப்பில் தன் எண்ணத்தைச் செலுத்தித் தான் எடுக்கும் ஞானத்தால் மெய் ஞானிகளின் உயர் அலையின் தொடரை உடலிலே சுவாசிக்கும் தியானத்தை மேற் கொண்டால் எந்த வியாதியையும் மாற்றி அமைக்கலாம்.

1.தான் வாழ்ந்த எண்ணச் சுழற்சியில் இருந்து கொண்டே
2.உண்ணும் உணவாலும் மருந்தாலும் மட்டும் எந்த வியாதியையும்
3.எந்த மகான் வந்தாலும்…
4.அகிலத்தையே ஆட்டுவித்த ஆட்டுவிக்கும் ஆதிசக்தியின் தொடர்பிருந்தாலும் நலம் காண முடியாது…!
5.உணர்வின் எண்ணத்தைச் சமப்படுத்தும் செயல் எண்ணம் இருந்தால் தான்
6.மனித ஆத்மாவின் உடல் பிணியும் தீரும்… உயர் ஞானமும் வளருமப்பா…!

ஏனென்றால் உணர்வால் எடுக்கும் எண்ணத்தைக் கொண்ட வியாதிகள் தானப்பா இந்த மனித உடலில் ஏற்படும் எல்லா வியாதிகளும்.

இரத்தக் கொதிப்பு எப்படி ஏற்படுகிறது…?

உணர்வின் எண்ணத்தை கோபத்தின் அலையில் எடுக்கும் சுவாசம் கொண்டு கோபத்தின் தன்மையை அதே ஈர்ப்பில் மீண்டும் மீண்டும் எடுத்து அதை வெளிப்படுத்திக் கோப அலையில் வாழ்பவனுக்கு
1.இரத்த நாளங்களின் துடிப்பு நிலை அதிகமாகி
2.உஷ்ணமான கனம் கொண்ட ஈர்ப்பின் சுவாசத்தால்
3.உணர்வின் கொதிப்பே இரத்தக் கொதிப்பாகின்றது.

சஞ்சலம் கொண்ட சலிப்புக் குணத்தின் ஈர்ப்பின் உணர்வின் எண்ணச் சுவாசம் தான் புற்று நோய்க்கும் எலும்புருக்கி நோய்க்கும் வித்தப்பா…!

காமாலையும் உப்புச் சத்தும் எப்படிக் கூடுகின்றன…?

தன் உடலின் உறுப்புக்களின் சுரப்பி நிலைகளுக்கொப்ப அவன் செய்யும் வேலைகளும் அவ்வுடல் நிலையின் சக்திக்கு மேல் உடல் உழைப்பும் உறங்கும் கால நிலையும் மாற்றியமைக்கப்பட்டால் இத்தகைய வியாதிகள் வரும்.

ஏனென்றால் கடினமான உழைப்பால் உடலிலிருந்து வெளிப்படும் வியர்வையிலிருந்து உடலிலுள்ள அமில உப்புக்கள் வெளிப்பட்டு விடுகிறது.

அந்த நிலையில் கொழுப்புச் சத்துக்கள் நிறைந்த ஆகாரங்கள் உண்ணும் பொழுது அந்த உடலின் தன்மையில் அவை ஏற்கப்படாமல் நுரையீரல் பாதிக்கப்பட்டு விடுகிறது.

ஆக… இரத்தத்தைச் சுத்தப்படுத்தக்கூடிய சில அவயங்களில் இவன் உண்ணும் உணவால் உடலில் ஏற்கனவே இருந்த சத்துக்கள் வெளிப்பட்டவுடன்
1.இந்தக் கனமான கொழுப்பு நிலை கொண்ட ஆகாரங்கள்
2.செயல்படாத நிலையில் தான் இம்மாதிரி வியாதிகள் வருகின்றன.

கோபத்தைத் தன்னுள் அடக்கி அடக்கி… பிறர் மத்தியில் தன்னைச் சாந்தமானவனாகக் காட்டுபவனின் உணர்வின் எண்ணம் கொண்டவனுக்கு… குடல் புண்களும் (அல்சர்) சில மூல வியாதிகளும் வருகிறதப்பா…!

கோபத்தைக் கட்டுப்படுத்துவதாக… அவன் எண்ணம் வெளியில் தெரியாத இவனது குணத்தின் செயலை… உள் அடக்கிக் கொள்வதால் குடல் புண் நோய்கள் எல்லாம் ஏற்படுகின்றன.

ஒவ்வொரு வியாதியும் ஏற்படுவது இந்தத் தொடர்ச்சியில் தான்.

அதே சமயத்தில்…
1.இவ்வலைத் தொடர் கொண்ட ஆவிகளின் தொடர்ச்சியும்
2.பலவீனமான உணர்வுடன் நாம் எடுக்கும் சுவாசத்தால் பலவீனம் கொண்ட தொடர்பலையின் ஈர்ப்பும்
3.அந்தக் குணம் கொண்ட ஆவிகளின் தொடரும் நம்முள் எறிக் கொள்கின்றன.

நற்குணங்களின் ஈர்ப்பில் நாம் எடுக்கும் சுவாசத்திற்கும் இந்தக் குணமுண்டு. நாம் எடுக்கும் எந்தத் தொடருக்கும் இந்தக் குணமுண்டு.

நல்லவையானாலும்… தீயவையானாலும்…
1.இந்தச் சுவாசத்தால் எடுக்கும் உணர்வின் எண்ணச் சுழற்சியில் தான் நாம் வாழ்கின்றோம்.
2.எண்ணத்தின் உணர்வின் குண நிலைக்கொப்ப ஈர்ப்புடனே நாம் சுழல்கிறோம்.

நம் சுவாச நிலையை ஞானிகளுடன் தொடர் கொண்டு உயர்வாக்கி விட்டால் இந்த வாழ்க்கையில் வரும் இடரினை அகற்றிடும் சக்தி பெற்று நோய் வராது தடுத்து அந்தச் சித்தர்களுடனும் சப்தரிஷிகளுடனும் ஐக்கியமாகலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது வேதனை வெறுப்பு சலிப்பு சங்கடம் கோபம் குரோதம் என்ற நிலைகளில் தாய் எத்தகைய உணர்வை எண்ணுகின்றதோ தாய் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் இரத்தத்துடன் கலந்து கருவிலிருக்கும் குழந்தைக்குப் பதிவாகிவிடுகின்றது.

அந்தக் குழந்தை பிறந்து வளர்ந்த பின் தாய் கருவிலிருக்கும் பொழுது வளர்ந்த உணர்வைத்தான் எடுக்கின்றது.

தாய் கருவுற்றிருக்கும்போது பிறர் மேல் பாசமும் பரிவும் அன்பும் கொண்டு மற்றவர் நோய்வாய்ப்பட்டதைக் கேட்டுணர்ந்து அவர்களுக்கு உதவி செய்தாலும் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் உடலுக்குள் சென்று இரத்தமாகத்தான் மாறுகின்றது.

கருவிலிருக்கும் சிசுவிற்குத் தாய் உடலில் இருக்கும் இரத்தம் தான் ஆகாரம்.

தாய் அந்தச் சந்தர்ப்பத்தில் நுகர்ந்த வேதனையின் உணர்வுகள் கருவில் இணையப்படும் போழுது பிறந்த பின் பார்த்தால் அது வளர்ச்சி வரும் பொழுது அந்தத் தலை வலி வந்தது மூளை வளர்ச்சி இல்லை கை கால் ஊனமானது என்றெல்லாம் பார்க்கலாம்.

ஏனென்றால் கருவுற்ற தாய் “ஒன்றிலிருந்து தொண்ணூறு நாளைக்குள்” ஊனமான நிலையில் உள்ள ஒருவர் மீது பரிதாபப்பட்டு உற்றுப் பார்த்தால் கருவிலிருக்கும் குழந்தைக்குப் பதிவாகிவிடுகின்றது.

குழ்ந்தை பிறந்த பின் பார்த்தால் அதே குறைபாடுடன் பிறக்கின்றது.

இன்று விஞ்ஞான அறிவு வளர்ந்த நிலைகள் கொண்டு ஸ்கேன் வைத்துப் பார்த்தோம் என்றால் கருவிலிருக்கும் குழந்தை ஊனமாக இருப்பதைப் பார்க்கலாம்.

இங்கே உள்ள ஒரு அன்பரின் வீட்டில் இது நடந்த நிகழ்ச்சி.

கல்யாணமாகி எல்லாம் சந்தோஷமாக இருந்தார்கள். கர்ப்பமான சந்தர்ப்பத்தில் வீட்டிலுள்ளோர் ஒருவருக்கொருவர் சங்கடமான நிலைகளில் வெறுப்பு கொண்டு சண்டை போடுகின்றார்கள். இந்த வீட்டிலும் வேதனை… அவர்கள் வீட்டிலும் வேதனை.

கர்ப்பமாக இருப்பதைக் கேள்விப்பட்டு நான் (ஞானகுரு) ஏற்கனவே சொல்லியிருந்தேன். கோபப்படாதீர்கள்… வேதனைப்படாதீர்கள்… சண்டை எதுவும் போட வேண்டாம்… “எல்லோரும் சந்தோஷமாக ஒற்றுமையாக இருங்கள்” என்று சொல்லியிருந்தேன்.

இருந்தாலும் அவர்கள் வீட்டில் நடக்கும் அந்த நிகழ்ச்சிகளை கர்ப்பமான தாய் உற்றுப் பார்த்துப் பதிவாக்குகின்றார்கள்.

வீட்டில் எதற்கெடுத்தாலும் கோபம்… சண்டை… வெறுப்பு… வேதனை…, என்று “எல்லாம்” நடக்கின்றது. சிறிது நாள் கழித்து ஸ்கேன் வைத்துப் பார்த்தால் கருவிலிருக்கும் குழந்தைக்குக் கை கால் “சரியாக உருவாகவில்லை”.

உடனே அபார்ஷன் செய்து அதை எடுத்துவிட்டார்கள்.

இந்த மாதிரி இயற்கையின் உண்மை நிலைகள் – நாம் நுகரும் உணர்வுகள் இரத்தத்துடன் கலந்து
1.உடலுக்குள் அணுக்கள் மாற்றத்திற்குக் காரணமாகின்றது.
2.இதையெல்லாம் தெரிந்து கொண்டபின் இந்த வாழ்க்கையில்
3.“நாம் எவ்வாறு செயல்பட வேண்டும்…?” என்று சற்றுச் சிந்தியுங்கள்.

நாம் வீட்டை அழகாகக் கட்டுகின்றோம். அதில் தூசியாகும் பொழுது துடைக்கின்றோம். ஒரு பாத்திரத்தையோ பொருளையோ அழகாக வைக்கின்றோம். தூசி விழுந்துவிட்டால் துடைக்கின்றோம்.

நம் வாழ்க்கையில் பிறர்படும் துயரங்களையோ வேதனைகளையோ நாம் பார்க்கப்படும் பொழுது அந்த வேதனை என்ற விஷங்கள் நம் உடலுக்குள் சென்றுவிட்டால் நல்ல குணங்களைச் செயலற்றதாக்குகின்றது. உடலை நலியச் செய்கின்றது.

அதைத் துடைக்க வேண்டுமல்லவா…! மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தினால் தான் நம் மனம் மகிழ்ச்சியாகும். உடலும் ஆரோக்கியமாகும். நம் செயல்கள் அனைத்தும் எல்லோருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.

“செல்வம் நம்மை என்றுமே காப்பதில்லை…” என்று சொல்வதன் உட்பொருள் என்ன…?

 

நாம் செல்வத்தைச் சம்பாதிக்கிறோம். செல்வங்களைச் சேமித்து வைத்த பின்… பையன் சொன்னபடி கேட்கவில்லையே…! நாளை இந்த சொத்தை எல்லாம் அவன் என்ன செய்வான்…! என்று பையன்பால் எண்ணம் வருகிறது.

இந்த உணர்வின் சத்து வளர்ந்தபின்…
1.எந்தப் பையனை எண்ணி இந்த உணர்வை அதிகமாக வளர்த்தோமோ
2.உடலை விட்டுப் பிரிந்த பின் உயிரான்மா நேராக அந்த உடலுக்குள் தான் செல்லும்.
3.பையன் உடலுக்குள் சென்றாலும் அவனைக் காக்காது அந்த உடலிலும் நோயாகி வேதனையைத் தான் அங்கே உருவாக்கும்.

அப்போது பையனும் எண்ணுவான்…! என் தந்தை சொன்னார்… நான் கேட்கவில்லையே… இப்படி ஆகிவிட்டதே…! என்று அந்த வேதனையை எண்ணுவான்.

இந்த உணர்வு தோன்றினாலும் விஷத்தன்மை வளர்ந்து அந்த உடலையும் மடியச் செய்து விடுகின்றது. ஆக… பையன் உடலுக்குள் சென்று விஷத்தின் தன்மை கவர்ந்து கொண்டபின் பையனை வீழ்த்தி விட்டு அவனைக் காக்காதபடி வெளிவந்து விடுகிறது தந்தையின் உயிரான்மா.

தொக்கி வைத்திருந்த பணம் அவன் நோயைப் போக்குவதற்குச் செலவழிப்பதற்குத் தான் சரியாக இருக்கும்.

1.அப்பா சம்பாதித்து வைத்திருந்தார். பையன் செலவழித்தான்…
2.கடைசியில் அனாதையாகப் போய் நோய்வாய்ப்பட்டுச் செத்தான்.
3.சொத்தெல்லாம் மறைந்துவிட்டது…! என்று மற்றவர்கள் சொல்வதை நாம் எத்தனையோ கேட்டிருக்கின்றோம்.

ஆகவே இந்தச் செல்வம் நம்முடன் என்றுமே வருவது இல்லை. செல்வத்தால் வந்த வினைகள் “தன் பையன் அதைக் காப்பான்..” என்று எண்ணினாலும் கடைசியில் இந்த நிலை ஆகிவிடுகின்றது.

இப்படி வேதனையை அதிகமாக வளர்த்துக் கொண்ட பின்… உடலில் அணுக்கள் மாறி… உயிர் அந்தக் கணக்கின் பிரகாரம் சிவனாக உடலாக மாற்றும் பண்பால்
1.அடுத்து விஷத்தையே உணவாக உட்கொண்டு வாழும் உயிரினமாக
2.பாம்பாகவோ புலியாகவோ உயிர் உருவாக்கிவிடும்.

இது போன்ற நிலைகள் உருவாகும் நிலையை நமக்கு உணர்த்துவதற்குத்தான் ஒவ்வொரு ஆலயங்களிலும் அங்கே ஒரு தெய்வ குணத்தை முன்னணியில் வைத்துக் காட்டியிருப்பார்கள்.

காளியம்மன்… மாரியம்மன் கோவிலுக்கு முன் அக்னி குண்டமும் அங்களேஸ்வரி கோயிலுக்கு முன் அக்னி குண்டத்தையும்… தீமை செய்யும் உணர்வின் குணங்களுக்கு எல்லாம் அதை வைத்துக் காட்டியிருப்பார்கள்.

அக்னி குண்டம் இறங்கும்படி சொல்வார்கள். அந்த அக்கினியில் இறங்குவதற்கு அல்ல.

இந்த மனித வாழ்க்கையில் தீமைகளைக் காணும்போதெல்லாம் “ஈஸ்வரா…!” என்று தன் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஏனென்றால் மகரிஷிகள் அனைவரும் இந்த வாழ்க்கையில் தீமைகளை வென்றவர்கள் அதை எல்லாம் சுட்டுப் பொசுக்கும் அக்கினியாக மாற்றிக் கொண்டவர்கள்.

1.அந்த அருளைப் பெற வேண்டும் என்று எண்ணி
2.அந்த உணர்வை நம் உடலான குண்டத்திற்குள் இறக்க வேண்டும்…
3.தீமைகளைச் சுட்டுப் பொசுக்க வேண்டும்.

இதை நினைவுபடுத்துவதற்குத் தான் சிலையை வைத்து
1.நாம் எண்ண வேண்டியது எப்படி…?
2.மனித வாழ்க்கையில் தீமை அகற்றுவது எப்படி…? என்ற நிலைகளைத் தெளிவாக்குகின்றனர் ஞானியர்.

ஆடிப்பெருக்கு என்ற நிலையில் கூடுதுறை என்ற மூன்றும் சேர்த்து நன்மையைப் பெருக்குவது போல் நமக்குள் அறியாது புகுந்த தீமைகளை அகற்ற அருள் ஞானத்தை நமக்குள் பெருக்கி அருள் வழியில் நாம் செயல்பட வேண்டும்.

உயிருடன் ஒன்றி தீமைகளை அடக்கி தனக்குள் அந்த அருள் ஒளியைக் கூட்டுதல் வேண்டும். ஆகவே அருள் மகரிஷிகளின் உணர்வை தியானிப்போம்.

அதைப் பெருக்கிக் கூட்டி அருள் சுடராக வளர அருள் ஞானத்தைப் பெருக்குவோம். உலகம் நலம் பெறத் தியானிப்போம்… தவமிருப்போம்.

இன்றுள்ள செயற்கை விஞ்ஞான மருத்துவ இயந்திர மனிதர்கள் – ஈஸ்வரபட்டர்

 

ஜீவ சக்தியுடன் கூடிய இந்த மனித உடலில் பல கோடி உயிரணுக்கள் உண்டு.

உடல் கூற்றை ஆராயும் மருத்துவ விஞ்ஞானிகள் மனிதனுக்கு ஏற்படும் வியாதியை அவன் உடலில் உள்ள இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் சிவப்பு அணுக்கள் மற்றும் எத்தனையோ நிலைகளில் உள்ள அணுக்களை ஆராய்ந்து காணுகின்றார்கள்.

அந்தந்த வியாதிக்குகந்த இரத்தத்தில் ஏற்படும் அணுத் தன்மையின் மாற்றத்தையும் எவ்வணுவின் நிலை உயர்ந்துள்ளதோ அவ்வுடலுக்குகந்த அணுத் தன்மையில் மனிதனின் வியாதிக்குகந்த மாற்றத்தையும் கண்டறிகின்றார்கள்.

1.நாம் “உணர்வின் குண அமிலம்” என்று உரைக்கின்றோம்.
2.அதையே விஞ்ஞான மருத்துவத்தில் “வைட்டமின்கள்” என்று உரைக்கின்றார்கள். (வைட்டமின் A B1 B2 B6 B12 C D K E)
3.இதுவல்லாமல் உடலில் உள்ள மாறு கொண்ட “விஷ அணுக்கள்” (VIRUS) உள்ளதையும் உணர்ந்து வெளிப்படுத்துகின்றார்கள்.

இந்நிலையில் சில அமிலங்களை அதில் செலுத்தி அணுக்களின் தன்மையை நுண்ணிய கருவிகளைக் கொண்டு கண்டுணர்ந்து
1.மனித உடலின் அணுக்களின் ஆராய்ச்சியின் விகித நிலைக்கொப்ப
2.மருத்துவ விஞ்ஞானம் மிக மிகத் துரித கதியில் முன்னேறி உள்ளது இன்று.

ஜீவன் பிரியக்கூடிய ஒரு மனிதனை மருத்துவ விஞ்ஞானத்தால் ஜீவிக்க வைக்கின்றான் மருத்துவன்.

ஆனால் மருத்துவ ரீதியிலும் விஞ்ஞான ரீதியிலும் நோய்க் கிருமிகளை ஆராய்ந்து அதற்குத் தகுந்த மாற்றுக் குணங்களை ஏற்றி அந்நோய்கள் பரவா நிலைக்காக
1.தன் செயலின் சக்தியையும்… பணத்தின் வலிமை கொண்டும்…
2.பல சாதனைகளை இயந்திரங்களின் நிலைக்கொப்ப
3.மனித உணர்வின் எண்ணங்களை விஞ்ஞான மருத்துவம் இழுத்துச் செல்கிறது.

ஆனால் இயற்கையின் குண அமில மாற்று நிலையை வழிப்படுத்தி
1.ஆத்ம தியானம் என்ற இயற்கையுடன் ஒன்றி
2.இயற்கைக் கோளமான மனிதக் கோளத்தின் வீரிய உயர் சக்தியின் ஞானத்தை
3.இயற்கை ஈர்ப்பின் குண அமிலத்துடன் ஒன்றச் செய்து
4.மண்டலங்களாக உருப்பெறும் இவ்வுடல் மண்டலங்களைச் செயலாக்கும் திறமைக்கு
5.இவ்வெண்ண ஈர்ப்பு உணர்வைச் செலுத்த முடியாதவர்களாகி விட்டனர்
6.இன்றுள்ள செயற்கை விஞ்ஞான மருத்துவ இயந்திர மனிதர்கள்.

இந்தப் பிம்ப ஜீவ மனித உடலில் பல கோடிக் கோடி உயிரணுக்கள் வாழ்கின்றது. சந்தர்ப்பத்தில் அதற்குள் பிணி ஏற்படுகிறது. அது எப்படி வந்தது…? என்று அறியும் நிலை இல்லை.

ஆக அந்த ஈர்ப்பிலேயே தொடர்ந்து செல்லும் நிலையில் அதே வியாதி நிலை சிக்குண்டு
1.அந்த ஆரம்ப வியாதி குணமாகாமல்…
2.அதன் சுழற்சியில் (குணமாகவில்லை என்ற வேதனையால்) உணர்வின் எண்ணத்தைக் கடினமாக்கிச் செலுத்தி
3.மேன்மேலும் அதன் ஈர்ப்பின் சுவாசத்தால் குறைவாக உள்ள இவ்வியாதியின் அணுவே
4.உடல் முழுமைக்கும் ஏற்றச் செய்து விடுகின்றனர்.

ஓர் நோயின் அணு பல அணுவையும் தன் குணத்தின் தொடரின் சுழற்சியினால் உடல் முழுவதற்கும் அந்த (அதன் குணச் செயல்) வியாதி தொற்றிக் கொண்டு விடுகிறது.

நோயாகி விட்டது… நோயாகி விட்டது… என்ற அதே சுழற்சி பயத்தினல்
1.அந்த உடலுக்குகந்த நல்ல அமிலங்கள் எல்லாம் மாற்றப்பட்டு
2.ஒன்றின் ஈர்ப்பு வியாதியுடன் ஒன்றி கடைசியில் பிரிவது தான் இஜ்ஜீவன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நம் வாழ்க்கையில் காலையில் எழுகின்றோம்.

எழுந்திருக்கும் பொழுதே எப்படியும் (உதாரணமாக) இந்தக் காரியத்தில் ஜெயிக்க வேண்டும் என்ற ஆர்வமும் கட்டாயமும் இருந்தால் உடனே உடல் நிலை எப்படி இருந்தாலும் அதைச் சரிக்கட்டி எப்படியோ அந்தக் காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கின்றோம். வெற்றியும் அடைகின்றோம்

ஆனால் அதிலே கொஞ்சம் சோர்வடைந்துவிட்டால் என்ன ஆகிறது…?

அது மிகவும் முக்கியமான காரியாமாக இருந்தாலும் கூட.. “கிடக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம்” என்று விட்டுவிடுகின்றோம்.

இதே மாதிரித்தான் மனிதனுடைய உணர்வுகளில் சில நேரங்களில் தொழிலோ அல்லது வியாபாரத்திலோ இந்த உணர்வுகள் நாம் அடுத்தடுத்து வேதனை வெறுப்பு சஞ்சலம் சங்கடம் என்ற உணர்வுகள் பட்டால்
1.நாம் தொழிலையே சீராகக் கவனிக்க முடியாது போய்விடுகின்றது.
2.அதனால் நஷ்டமும் ஏற்பட்டுவிடுகின்றது.
3.அடுத்து வேதனைப்படும் பொழுது நம் உடலில் நோயாகவும் மாறிவிடுகின்றது.

இதையெல்லாம் என்றைக்குத் துடைப்பது?

எத்தனையோ உடலில் தீமைகளை நீக்கி நீக்கி தீமைகளை நீக்கக்கூடிய உடலாக அமைத்து தீமையை நீக்கும் சக்தி ஆறாவது அறிவு பெற்றுள்ளோம். அதனின் அறிவாகத் தெரிந்து
1.தீமைகளை நீக்கி நல்லதை உருவாக்கக்கூடிய இந்த உடலைக் கொடுத்தும்
2.நாம் தவறு செய்தோம் என்றால் எங்கே போவோம்…?

அதற்காகத்தான் நம் குருநாதர் கூறிய அருள் வழியில் அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெற வேண்டும் என்று ஒரு பத்து நிமிடமாவது தியானிக்கச் சொல்வது.

ஏனென்றால் இன்று விஞ்ஞானம் எலெக்ட்ரானிக் முறைப்படி… ஒரு உணர்வின் அழுத்தத்தைக் கொண்டு தீமைகள் வராதபடி தடுக்கும் நிலையாக இதை நிரூபித்துக் காட்டுகின்றது.

அந்த எலெக்ட்ரானிக்கை வைத்து என்னென்னமோ வேலைகளைச் செய்கின்றார்கள். எலெக்ட்ரானிக் முறைப்படி சிறு சுவிட்சுகளைப் போட்டு வைத்துவிட்டால்
1.ஓரு பெரிய விமானத்தையே அது சீர்படுத்துகின்றது.
2.எதிர் நிலை வந்தால் விலகிச் செல்கிறது.
3.இந்த ஊர் வருகின்றது என்றால் (காற்றிலே அதை நுகர்ந்து) இன்ன ஊரில் அந்த இடத்தில் விபத்து வருகிறது
4.காற்றில் அலைகள் மாறுகின்றது என்றால் அது உடனே மாற்றியமைக்கின்றது.
5.அவ்வளவு பெரிய இயந்திரத்தைச் சீராக இயக்குகின்றார்கள்.

நூற்றுக்கணக்கானோரை ஏற்றிக் கொண்டு விமானம் சென்று கொண்டிருந்தாலும் அந்தச் சிறு எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் மூலமாக மாற்றியமைத்துக் கொள்கின்றனர்.

எதிரிலிருந்து வரக்கூடிய விமானத்திலிருந்தும் தப்பிக்கின்றது (விலகிச் செல்கிறது)

அதே சமயத்தில் விமானம் கீழே இறங்குவதற்காகச் செல்லப்படும் பொழுது எதிர் நிலையான நிலைகள் ஒரு உயரமான கோபுரமோ அல்லது ஏதாவது ஒரு வயரோ அல்லது மரங்களோ விமானம் போகும் பாதையில் வந்ததென்றால்
1.அதிலே மோதாதபடி தன்னாலே விமானத்தை மேலே பாதுகாப்பாக ஏற்றிக் கொடுக்கின்றது.
2.அந்த அளவிற்குச் செய்து வைத்துள்ளார்கள் இன்று விஞ்ஞானிகள்.

அதைப் போன்று தான் அகஸ்தியன் நஞ்சினை வென்று ஒளியின் சிகரமாக பிறவியில்லா நிலை அடைந்து துருவ நட்சத்திரமாக இருக்கின்றான். அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியை உயிரான ஈசனிடம் வேண்டி நமக்குள் அதை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

1.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வலைகளை நுகர நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
2.அந்த உணர்ச்சிகளை நமக்குள் கொண்டு வர வேண்டும்.
3.ஆக “எலெக்ட்ரிக் – எலெக்ட்ரானிக்” எதனுடைய உணர்வின் அழுத்தமோ அதற்குத்தக்கத் தான் அது வேலை செய்யும்.

இப்படிப் பழக்கிய பின்பு தீமைகள் வரும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்த உணர்வலைகளை இணைத்துக் கொண்டே வந்தால் தன்னிச்சையாகவே தீமைகளை முன் கூட்டியே அறிவிக்கச் செய்து அதிலிருந்து விலக்கி “நம்மைக் காத்திடும் நிலையாக” அது வழி நடத்தும்.

நாம் செய்யும் காரியங்கள் அனைத்தும் காரிய சித்தியாகும். மகிழ்ச்சியும் ஏற்படும். நம்முடைய செயல்கள் மற்றவரையும் நல்லதாக்கும்.

ஆசை ஒரு பக்கமும் எண்ணம் ஒரு பக்கமும் இருந்தால் ஏற்படும் விளைவுகள்

 

ரோட்டிலே நாம் செல்கின்றோம். ரோட்டிற்கு அந்தப் பக்கம் பார்க்கப்படும் பொழுது அங்கே ஒரு தங்க ஆபரணம் கிடைக்கின்றது.
1.உடனே ஆசை வருகின்றது… அதை எடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றுகின்றது.
2.அந்த ஆபரணத்தின் மீது தான் நமக்கு எண்ணம் வருகின்றது.
3.எதிர்த்து வண்டி வருகின்றதா…? குறுக்கே வேறு எதுவும் வருகிறதா…? என்று அப்பொழுது சிந்திப்பதில்லை.

ஆனால் அதை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செல்லப்படும் பொழுது எதிரே வரும் வாகனத்தைக் கவனிக்கவில்லை என்றால் அடித்து நொறுக்கி விடுகின்றது. பொருளை எங்கே எடுப்பது…?

இதைப் போலத்தான் மனித வாழ்க்கையில் இந்தத் தெய்வத்தை வணங்கினால் சக்தி கிடைக்கும் என்று அர்ச்சனையும் அபிஷேகமும் செய்கிறோம்.
1.செய்த பின் அதன் வழி நமக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தால்
2.நிச்சயம் நமக்குள் வரும் தீமைகளை அறிய முடியாது
3.அந்த ஆசை ஒன்று தான் வளரும்.

ஆலயங்களுக்குச் செல்லும் பொழுது இப்படிப்பட்ட எதிர்ப்பார்ப்புடன் சென்றால் ஆசை உருவாகும். ஆனால்
1.தீமைகளையும் துன்பங்களையும் அகற்றும் வழி வராது
2.சிந்தித்துச் செயல்படும் தன்மைகளும் வராது.

உதாரணமாக ஒரு தொழில் செய்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அதற்குப் பாதுகாப்பான எண்ணங்கள் தேவை. அது வளர வேண்டும்.

ஆனால் வெறும் ஆசையை மட்டும் வளர்த்து விட்டால் என்ன நடக்கிறது…?

அடுத்த கடையில் வியாபாரம் அதிகமாக நடந்தால் போதும்…! பார்… அவன் எப்படி எப்படியோ மோசமான பொருளை வைத்து வியாபாரம் செய்கின்றான். அதை வாங்க அங்கே கூட்டம் கூடுகின்றது. என்னிடம் யாரும் வாங்குவதில்லை…!

அவருக்கு வியாபாரம் ஆகிறது என்ற எண்ணத்தைத் தான் தனக்குள் வளர்க்கின்றோம். மேலும் எனக்கு இப்படி ஆகிறதே…! சமுதாயம் ஏமாந்து கொண்டிருக்கிறதே…! என்று இப்படித்தான் எண்ணுகின்றோம்.

ஆக… இதை வளர்த்துக் கொண்டபின் இதே உணர்வுகள் அந்த சிந்திக்கும் திறனை இழந்து விடுகின்றோம். அடுத்து நம் கடையின் விற்பனைக்காகத் துணிகளை வாங்கச் சென்றாலும் அல்லது ஒரு பொருளின் தரத்தைப் பார்த்தாலும் சிந்தனை இல்லாத இயக்கமாகவே வருகின்றது.

அந்த உணர்வுக்கு ஏற்ப
1.“விலை குறைவாக இருக்கிறது…” என்று
2.அதை வாங்கி விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என்று
3.அத்தகையை பொருளை வாங்கி வந்து விடுவோம்.

வாங்கி வைத்த பின்னாடி இது விற்குமா…! என்று அப்போது தெரியாது. இந்த உணர்வு வரப்படும் பொழுது வியாபாரம் ஆவதில்லை.

அதே சமயத்தில் ஒரு நல்ல சரக்கு என்று வாங்கிக் கொண்டு வந்து “தரமான பொருள்” என்று வைப்போம். இது விலை அதிகமாக இருக்கின்றதே… வாங்குவார்களா…? என்ற உணர்வு வந்துவிடுகிறது.

இதைத் தனக்குள் பதிவாக்கப்படும் பொழுது இந்தப் பொருளை ஒருவர் கேட்கிறார் என்றால் அதற்கு முன் இந்த மனம் (மேலே சொன்ன நினைவு) வந்துவிடும்.

சரக்கைப் பார்க்கப்படும் பொழுது நம் மனம் குறைந்த உணர்வு அவருக்குச் சாடி “இந்தச் சரக்கு வேண்டாம்…” என்று சொல்லிவிடுவார். இப்படி நம்முடைய மனமே அங்கே இப்படி இயக்கப்படுகின்றது.

இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

அந்த ஆலயம் வருவோர் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவர்கள் குடும்பங்கள் நலமாக இருக்க வேண்டும். நம்மிடம் பொருள் வாங்குவோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெறவேண்டும் என்று இந்த உணர்வின் தன்மையை நாம் “கூடுதுறை…” ஆக வளர்க்க வேண்டும்.

நமக்குள் இப்படிப்பட்ட உணர்வை வலுவாக்கும் சக்தியாக வளர்த்துக் கொண்டோம் என்றால் தீமைகளை அகற்ற முடியும். நம் சொல்லும் இனிமை பெறும்.

காரணம்… நாம் எண்ணும் எண்ணங்கள் எதுவோ அதை உயிர் ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி ம்… என்று உடலாக மாற்றிக் கொண்டே இருக்கின்றது.

1.ஞானிகள் காட்டிய வழிப்படி தீமையை நீக்கும் சக்தியை எண்ணி எடுத்தால்
2.அது நமக்குள் விளைந்து தீமையை அகற்றிடும் அரும் பெரும் சக்தியாக வளரும்.

ஆதிசக்தியின் குழந்தைதான் மனித உடலாக உருப்பெற்ற ஆதிமுதல்வன் என்ற விநாயகர் – ஈஸ்வரபட்டர்

 

உணர்வின் எண்ணத்தை “வழி அமைத்து… வழி செல்லுங்கள்…” என்று உணர்த்திய பின் நிலை என்ன…?

உணர்வுடன் கூடிய எண்ணத்தின் சுவாசத்தால் மனித எண்ணத்திற்குத் தன் உணர்வின் எண்ண நிலையை அறிந்து செயல்படுத்தக்கூடிய ஆற்றலும் திறமையும் உண்டு.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் உணர்வின் எண்ண நிலைக்கொப்ப குண நிலையில் மாற்றமுண்டு.
1.தன் உணர்வின் எண்ணத்தைத் தன்னிச்சையில் செயல்படுத்தும்
2.தனக்குகந்த உணர்வு எண்ணத்தின் நிலையில் செல்ல மனிதனுக்கு முடியும்.

ஆனால் சில மிருகங்களின் நிலைக்கு உணர்வுடன் கூடிய எண்ணத்தைச் செயல்படுத்தி வழி கொள்ளும் திறமையில்லை.

அதனுடைய “ஒலி ஈர்ப்பு ஒன்றி…” சுவாசத்துடன் மோதுண்டவுடன் ஒன்றின் குண உணர்வுகொப்பத்தான் அதன் எண்ணத்தின் செயலைக் கொண்டு அதன் இன வர்க்கங்களும் ஒரே உணர்வு எண்ண ஓட்டமாக… ஒன்றுடன் சார்ந்தே… அதன் இன மிருகங்களின் நிலையும் ஒத்துச் செல்லும்.

1.பறவைகள் யானைகள் ஆடு மாடுகள் நீரில் வாழும் சில உயிரினங்கள் இவை எல்லாம்
2.ஒன்றின் ஈர்ப்பின் ஒலி அலை மோதுண்டு
3.அதன் உணர்வின் எண்ணத்தைக் கொள்ளும் நிலை கொண்டு
4.ஒன்றெடுத்த அலைத் தொடர்பு கொண்டே
5.அதன் இனக்கூட்ட வர்க்கங்களும் அதன் பின்னேயே செல்லும்.
6.தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும்… தன் உணவை நாடிச் செல்லும் ஒன்றின் தொடரிலேயே
7.ஒவ்வொன்றின் நிலையும் தொடர்ந்து செல்லும் “கூட்டமாக…!”

மனிதனிலிருந்து மாறு கொண்டு ஒரே நிலையான எண்ண வேட்கைக்குகந்த அமில குண இன ஈர்ப்பின் வளர்ப்புத்தான் மற்ற இனங்கள்.

ஆனால் மனிதன்…
1.ஞான சக்தியால் செயலாக்கும் செயல் திறன் உணர்வின் எண்ணம் கொண்டு
2.மனித குண அமிலத்தையே அசுர குணம் நீக்கி
3.முருகக் குணக் கலவை உணர்வுடன் கூடிய எண்ணத்தை எடுக்க முறைப்படுத்திக் கொண்டால்
4.மனித மகசூலின் வித்தாக நம் நிலை உயருமப்பா…!

இவ்வுணர்வின் எண்ணத்தை உணர்ந்திடல் வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் தன் உடல் பிம்ப ஜீவ சக்தியின் உயிருடனே உணர்வின் எண்ணத்தை ஞானத்தின் ஈர்ப்புக் குணமுடன் ஒன்றிய அலைத் தொடரின் செயல் நிலை இருந்தால்தான் “செயல்படுத்தும் செயலான ஆதிசக்தியின் செயலுக்கே…” செயல் கூடுகின்றது.

ஆதிசக்தியின் சக்தி தான் அகிலத்தின் சக்தி. அண்டத்தையும் ஆதியையும் படைப்பவளும்… வளர்ப்பவளும்… மாற்றுபவளும்… அவளே…!

அப்படியிருக்க ஆதிமுதல்வன்… முதலாமவனே விநாயகனே… என்று விநாயகரை மூல முதல்வன் என்று “முதல் தெய்வம் விநாயகன்” என்று வணங்குகின்றோம்.

மூல முதல்வன் என்று சித்தர்கள் மூலமாகக் காட்டிய விநாயகனின் நாமத்தின் தெய்வ சக்தியென்ன…?

ஆதிசக்தியின் அமில சக்தியின் உருவாக… மூலவனாக… விநாயகனை
1.மனிதனின் உரு கரு வளரும் அமிலப் படைப்பின் உரு நிலையின் உருவிற்குத்தான் (மனித உடலை)
2.அந்த விநாயகரின் நாமத்தைச் சூட்டினார்கள்.

சித்தர்கள் உணர்த்திய ஒவ்வொரு செயலுக்கும் பொருள் உண்டு. ஆனால் காலப் போக்கில் உணர்ந்து வழிபடும் நிலை மாறிவிட்டது.

இன்றுள்ள கால நிலையில் உருண்டோடிய காலங்களுடன் நம் உணர்வின் எண்ணத்தை உருள விட்டு நம் சக்தியை அச்சுழற்சியிலேயே சுழன்று கொண்டுள்ளோம்.

ஆக… உண்மை எது என்று அறியும் நிலையை மாற்றி அறிந்துணரும் ஆக்கத்தின் வளர்ப்பு குணமுடன் இன்றுள்ள இக்கால நிலையில்
1.சமுதாயச் சுழற்சியில் சிக்குண்டு அதன் ஈர்ப்புடன் நம் சக்தியையும் கலக்க விட்டு
2.மிருக நிலையில் ஒன்றின் உணர்வின் எண்ணம் கொண்டு ஒன்றிச் செல்வதைப் போன்ற உணர்வுடன் நாம் சிக்காமல்
3.நம் உணர்வின் எண்ணத்தை உயர் ஞான அமிலமான
4.நற்குணங்களை வளர்த்துக் கொள்ளும் செயல் குண உணர்வாக நாம் உயர வேண்டும்.

உடல் என்ற பிம்பத்தை அழகுபடுத்த ஆடை தேவை. உயிர் என்ற ஆத்மாவை ஞானப்படுத்த வாழ்க்கை என்ற சமுதாய எண்ணம் தேவை. சமுதயாச் சுழற்சி எண்ணத்தால் ஆத்ம ஞானத்தை அழகுபடுத்துங்கள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

மகரிஷிகள் என்பது ஆறாவது அறிவின் தன்மை கொண்டு ஏழாவது ஒளியாகத் தனக்குள் சிருஷ்டித்துக் கொள்பவர்கள். உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியின் தன்மையாக மாற்றியவர்கள்.

தன் வாழ்க்கையில் அறியாது வந்த துன்பங்களை விலக்கி ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற்று அதைத் தூய்மைப்படுத்தி ஒளியாக மாற்றியவர்கள் தான் மகரிஷிகள்.

1.மகரிஷிகள் என்றால் எல்லாவற்றையும் சேர்த்து விண்ணுலகம் சென்றவர்கள்.
2.அனைத்தையும் படைக்கும் ஆற்றல் பெற்றவர்கள்.

பொதுவாக எல்லோரையும் மகரிஷி என்று அழைக்கின்றோம். மகரிஷிகள் எண்ணிலடங்காதோர் உண்டு. ஒவ்வொருடைய பேர்களையும் தனித்துச் சொல்லி எடுக்க முடியாது.

அந்த மகரிஷிகள் நல்ல உணர்வின் தன்மையை எவ்வாறு பெற்றார்களோ அது பொதுத் தன்மை. மனித உடலிலிருந்து விடுபட்டு பிறவியில்லா நிலை அடைந்து விண்ணுலகம் சென்றவர்கள் தான் மகரிஷிகள்.

இன்று மனிதனாக இருந்து கொண்டு மகரிஷிகள் என்று பெயர் வைப்பதல்ல. இதெல்லாம் புகழுக்கு என்று பெயரை வைத்துக் கொள்ளும் நிலை. மனிதர்களை… “மகரிஷிகள்” என்று சொல்ல முடியாது.

1.மகரிஷி என்பது “மகம்” ஒவ்வொரு உயிரையும் மகிழச் செய்பவர்கள்.
2.விண்ணுலக உணர்வின் ஆற்றலைத் தமக்குள் ஜீரணித்து
துன்பமோ கஷ்டமோ மற்றவை அனைத்துமே அதையும் கலந்து தமக்குள் எடுத்து அந்த உணர்வாலே
3.மற்றவர்களின் துன்பத்தைப் போக்கி மகிழ்ந்த உணர்வின் ஆற்றலைப் பெற்று
4.உயிராத்மா ஒளியாகி வெளியே சென்ற பின் தான் மகரிஷி என்ற பெயர் வருமே தவிர மனித உடலுக்கு வராது.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தின் கண்டுணர்ந்து உணர்த்திய விண்ணுலக உணர்வுகள் அனைத்தும் இன்றும் நம் பூமியில் பரவிப் படர்ந்துள்ளது.
1.அந்த அகஸ்தியரின் உணர்வை நுகர்ந்தவர்கள் அனைவருமே
2.”மகரிஷிகள்” ஆகின்றார்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று தனக்குள் வரும் நஞ்சினை அடக்கி ஆட்சி செய்யும் நிலை பெறுவோர் எவரோ அவர் மகரிஷியாகின்றார்.

ஆகையினால் தான் மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெறவேண்டும் என்று ஏங்க வேண்டும்.

எனக்குள் வந்த அசுத்தங்களை நீக்குவதற்காக குருநாதர் அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறச் செய்தார்.

அவர் பெற்ற அற்றலின் தன்மையைக் கண்டுணர்ந்து அதை உணர்வதற்கும் அவரின் உணர்வின் ஆற்றலையும் குரு அருளால் என்னால் பெற முடிந்தது.

அதைப் போன்றுதான் உங்களுக்கும் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்திகயைப் பதியச் செய்கின்றோம். நீங்கள் நினைக்கும் பொழுதெல்லாம் அவர் பெற்ற ஆற்றல் மிக்க சக்தியைப் பெறுவதற்காக இதைச் செய்கிறோம்.

கூடுதுறை…. சங்கமம்… பற்றிய விளக்கம்

 

நீர் ஓடும் இடங்களில் பார்க்கலாம். ஒரு பக்கம் செம்மண்ணாக இருக்கும். இன்னொரு பக்கம் வண்டல் மண்ணாக இருக்கும். இன்னொரு பக்கம் எந்த நிறமும் இல்லாது நன்னீராக இருக்கும்.

1.இந்த மூன்று நீரும் கூடுதுறை என்ற நிலையில் கலக்கப்படும் பொழுது
2.சிறிது தூரமே இதன் கலர்கள் அங்கே தெரியும்.
3.பின் அந்த மூன்றும் ஒன்றாகக் கலந்து சங்கமமாகி வேறு ஒரு நிலையாக மாறும்.

இதைப் போன்றுதான் நாம் ஒவ்வொரு நிமிடமும் சுவாசிக்கும் உணர்வுகள் அனைத்தும் “நமக்குள் கூடுதுறை போன்று ஆகி… உடலுக்குள் சங்கமம் ஆகின்றது…!
1.அதிலே எதனின் குண நிலை அதிகரிக்கின்றதோ
2.அதன் வழி கொண்டு தனக்குள் பெருகுகின்றது.

இதனை நாம் தெளிவாக்கிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

காரணம் நாம் அனறாடம் பலருடன் பழகுகிறோம். அவர்கள் தீமைகளையும் கஷ்ட நஷ்டங்களையும் பார்க்க நேர்கின்றது… நுகர நேர்கிறது. நுகர்ந்த பின் அவர்களுக்குப் பண்புடன் உதவி செய்கின்றோம்… பரிவுடன் அவர்களைக் கவனிக்கிறோம்.

ஆக அந்தப் பரிவும் பண்பும்
1.அவர் உடலிலிருந்து வரும் கஷ்டங்களையும் சங்கடங்களையும் நுகரச் செய்து
2.அவர் வேதனைப்படுகிறார் என்று உணர்த்துகின்றது
3.இருந்தாலும் அது நமக்குள் சங்கமம் ஆகி விடுகின்றது.

அவர்கள் மேல் உள்ள பற்று நமக்குள் சங்கமமாகி அவர்களைக் காக்க வேண்டும் என்ற நிலையில் அதே உணர்வு நம்மை இயக்கத் தொடங்கி விடுகின்றது.

அப்போது அவர்களைப் பாதுகாக்க நாம் முற்படுகிறோம். ஆனால் அந்த மனித உடலில் விஷத்தன்மையான உணர்வுகள் பட்டுத் தான் அவரைத் துடிக்கச் செய்கின்றது. அதனை நாம் நுகரப்படும் பொழுது அந்த வலிமை நமக்குள் வந்து நம் நல்ல அணுக்களைச் சீர்கெடச் செய்கின்றது.

அவர் எப்படி அம்மா… அப்பா… என்று அலறினாரோ அதே உணர்வு நமக்குள் சங்கமமான நிலைகள் கொண்டு அதன் வழியில் அதைப் பெருக்கத் தொடங்கி விடுகின்றது.

இப்படித்தான் மனித வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலேயே தீமைகள் வந்து சேர்கிறது.

1.பரிவுடன் பண்புடன் ஒருவரை நாம் காக்க வேண்டும் என்று செயல்படும் பொழுது
2.நுகர்ந்ததை உயிர் இயக்கி நம் உடலுக்குள் சங்கமமாக்கி விடுகின்றது
3.அதன் உணர்வின் அணுக்களாக நமக்குள் அதை வளர்க்கச் செய்கின்றது.

அது வளரும் பருவத்தில் அந்த உணர்ச்சிகளை உந்தப்படும் போது எந்த மனித உடலில் இருந்து அது வெளி வந்ததோ
1.நம் உடலில் வந்து அணுக்களாக உருவாகி அதற்கு இதை உணவாகக் கொடுக்கின்றது.
2.அது தன் இனத்தைப் பெருக்குகின்றது… அதன் உணர்வாக நம்மை இயக்குகின்றது.

இதனை நினைவுபடுத்துவது தான் ஆடிப்பெருக்கு. ஆகவே ஒவ்வொரு நிமிடமும் நம் வாழ்க்கையில் எதைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றோம் என்று சற்று சிந்திக்க வேண்டும்.

தீமையை வென்ற ஞானிகளின் உணர்வை நமக்குள் பெருக்கினால் அது கூடுதுறையாகி நமக்குள் அருள் ஒளியின் உணர்வுகள் சங்கமமாகும். தீமையை நீக்கும் சக்தியாக இப்படிப் பெருக்க வேண்டும்.

அதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.

விதியின் பயன்… விதியின் பயன்… என்று முன்னோர்கள் உணர்த்திய விதிச் செயலாகவே இன்று பூமி உள்ளது – ஈஸ்வரபட்டர்

 

இன்று இந்தப் பூமியில் மனிதனின் “தேவையின் வேகம்” விஞ்ஞானத்தின் அலையால் விஞ்ஞானத்துடனே ஓடிக் கொண்டுள்ளது.

உணர்வின் எண்ணச் சுழற்சியே விஞ்ஞானத்துடன் ஒன்றிய நிலையில்
1.தன் ஞானத்தை வளர்க்கக்கூடிய உணர்வு குண சித்து நிலையின் செயலுக்கு
2.நம் பூமியின் மனித ஆத்மாக்களின் ஈர்ப்பை எடுக்கக்கூடிய நிலையும்
3.சப்தரிஷிகளும் சித்தர்களும் அவர்கள் பெற்ற சக்திகளை மெய் ஞான விளைச்சலாக
4.இப்பூமியில் விளைய வைத்து அதன் மகசூலைப் பெருக்கச் செயல் கொள்கிறது.

ஆனால் இன்று இப்பூமியில் விஞ்ஞானத்தால் வாழ்ந்திட்ட செயற்கையின் செயல் குண உணர்வுடன் உள்ள நிலைகளை மெய் ஞானம் கொண்டு
1.எண்ணத்தால் மனித குணங்களைப் பக்தி ஞானம் என்ற உயர் குண உணர்வு எண்ண சுவாசம் எடுத்து
2.நல்ல உணர்வில் தான் (சப்தரிஷிகள்) பெற்ற சக்தி அலையைப் பயிர் செய்ய
3.அவ்வுணர்விற்கே மனித எண்ணங்களைத் திருப்ப முடியாமல் உள்ளது
4.விதியின் பயன்… விதியின் பயன்… என்று முன்னோர்கள் உணர்த்திய விதிச் செயலாகவே இந்தப் பூமி உள்ளது.

காந்த மின் அலையைப் பலவாகப் பல ரூபங்களில் பிரித்தெடுத்து விட்டான்… இன்னும் பிரித்து எடுக்கின்றான். உலகையே நிலை தடுமாற நிகழப் போகும் மாற்றத்தின் வித்தையும் ஊன்றிவிட்டான்.

இன்று இப்பூமியில் நடக்கும் சில இடங்களின் மாற்ற நிலைகளும்… போர்களும்…
1.இந்தப் பூமியின் காற்று மண்டலத்தையே முழுமையாக விஷமாக்கி விட்டது.
2.அதனால் உணவாக உட்கொள்ளும் பல பொருள்கள் விஷத் தன்மையில் கூடப் போகின்றன.

வரப் போகும் எதிர்கால முறை எல்லாமே விஞ்ஞான வளர்ச்சியில் பூமியின் இயற்கைச் சக்தியை உறிஞ்சி எடுத்ததனால் பூமியின் வலுக் குன்றி “தன் வலுவைத் தான் பெருக்க…” நிகழப் போகும் மாற்ற குணம் நெருங்கிவிட்டது.

சப்தரிஷிகளும் பல கோடிச் சித்தர்களும் தன் சக்தி உணர்வின் செயலைக் குன்றவிடாமல் வளர்த்துக் கொண்டிருந்தால் தான்
1.ஞானக் கரு உரு மனிதனை உண்டாக்கி
2.ஞானத்தால் வளரக்கூடிய சக்திகளின் வளர்ச்சிக்கே சக்தி கூடும்.

ஊரே உலகமே மாறு கொண்டு அழியும் தருவாயில் நம் உயிராத்மா மேலா…? நாம் மட்டும் இருந்தென்ன பயன்…? எல்லாமே விஷமாக உள்ள பொழுது ஜெப முறையில் எப்படித் தான் நாம் இருந்தாலும் விஷத்தின் சுழற்சியில் சிக்க்த்தானே வேண்டும்…! என்ற வினா எழும்பலாம்.

இம்மனித ஜீவ உடலில் உணர்வின் எண்ண அலையை நல்ல உரமான சக்தி உரத்தை இட்டு ஆத்ம பலம் என்னும் ஞான பலத்தைக் கூட்டி
1.ஒவ்வொரு அணுவையும் உணர்வின் எண்ணத்தால் ஒளியின் அணுவாக உணர்வாக்கி விட்டால்
2.விஷமுடன் நாம் இருந்தாலும் அந்த விஷம் நம் உடலில் பாயாது.

அதற்குகந்த பக்குவத்தைத்தான் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் இங்கே வெளிப்படுத்தும் தன்மையில் பக்குவப்படுத்திக் கொண்டே வருகின்றோம்.

1.ஓர் ஆத்மா சக்தி கொண்டு வந்தால்
2.அச்சக்தியைக் கொண்டு பல சக்தியை வளரச் செய்யத்தான்
3.இந்தத் தியானத்தின் மூலம் என்ற ஆத்ம பலம் கொள்ளுங்கள் என்று உணர்த்துகின்றோம்.

எல்லாம் போகும் பொழுது நாமிருந்து என்ன பயன்…? என்று எண்ணாமல் ஓர் ஏக்கர் நிலத்தில் பத்து மூடை நெல் வந்தால் எல்லாமே உணவாகி விட்டால் விதை நெல் வேண்டுமல்லவா…!

விதை நெல் இருந்தால் தான் மீண்டும் மீண்டும் பயிர் செய்ய முடியும். குண வம்சமே அழிந்து விட்டால் அதன் குண வளர்ச்சியின் விதை வேண்டாமா…?

அதைப் போல் உணர்வால் எடுக்கும் தியானம் கொண்டு ஆத்ம பலம் என்ற ஞான வளர்ச்சியின் வழிக்கு வாருங்கள்.

1.உற்றார் உறவினர் என்ற சுழற்சியில் உணர்வின் எண்ணத்தைப் பதியச் செய்து
2.அதே சுழற்சி வலையில் சிக்குண்டு சிதறாமல்
3.உணர்வின் எண்ணத்தை உயர் தியானத்தால் ஞானம் கொண்டு
2.ஒவ்வொரு ஜீவ பிம்ப உடல்களையும் உம் எண்ண உணர்வால்
3.நல் உணர்வின் அலையைப் பாய்ச்சி உம் உணர்விற்குப் பலம் கூட்டுங்கள்.

இந்தப் பூமியில் பயிராகியுள்ள “மனித மகசூலின் விதையாக நீங்கள் இருக்க…” உணர்வின் எண்ணத்தை ஒவ்வொருவரும் நற்குணத் தியானமாக வழியமைத்துக் கொள்வீர்களாக..!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

மாரியம்மன் கோவிலில் என்ன செய்கின்றார்கள்…? தீ மிதிக்கின்றார்கள். காளிம்மன் கோவிலில் என்ன செய்கின்றார்கள்…? தீ மிதிக்கின்றார்கள். அங்களேஸ்வரி கோவிலில் என்ன செய்கின்றார்கள்…? தீ மிதிக்கின்றார்கள்.

அந்தக் கோவிலில் குழந்தையை மடியில் வைத்து குடலையே உருவி மாலை போடுகின்றார்கள். அப்படி என்றால் என்ன அர்த்தம்…?

ஒருவர் உயர்ந்த நிலைகள் பெறுகின்றார். அவரைப் பார்த்து அங்கலாய்க்கின்றோம். எப்படியும் அவர்களைத் தொலைக்க வேண்டும் என்ற எண்ணம் வருகின்றது. அது தான் அங்களேஸ்வரி…!

அந்தக் கோவிலிலும் அக்னி குண்டம் இறங்குவார்கள். இந்தப் பக்கம் அரச மரம் இந்தப் பக்கம் வேப்ப மரம் வைத்திருக்கின்றது.

தீமை செய்வோரின் உணர்வை எப்பொழுது பார்க்கின்றோமோ “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்ற இந்த உணர்வைச் செலுத்தி இந்தக் குண்டத்தில் இறங்க வேண்டும்.

இப்படிச் சுட வேண்டும் என்று ஞானிகள் சொல்கிறார்கள்.

உதாரணமாக ஊருக்குள் பகைமை வந்துவிட்டது. உடனே மாரியம்மன் கோவிலில் என்ன செய்ய வேண்டும்…? அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும். எங்கள் தெரு முழுவதும் படர வேண்டும்… ஊர் முழுவதும் படரவேண்டும்… எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று அங்கே கோவிலில் எல்லோரும் எண்ண வேண்டும்.

அப்பொழுது அது மாரி (மாறி) நமக்குள் தாயாக வேதனை என்ற பகைமை என்ற நிலைகளை நீக்குகின்றோம்.

இந்த மாதிரி சக்தி கோவில்களில் அனைத்திலும் அக்னி குண்டம் இறங்குவார்கள். சிவன் கோவிலில் இறங்குகின்றார்களா…? விஷ்ணு கோவிலில் இறங்குகின்றார்களா…? இல்லை…! காரணம் என்ன…?

தீமையான உணர்வுகள் வரும் பொழுது அருள் மகரிஷிகளின் உணர்வை எடுத்து அங்கே சுட வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.

இதை உருவமாக்கி அருவத்தை எப்படிப் பெற வேண்டும் என்று காட்டியிருக்கின்றார்கள். அதை யாருமே செய்யவில்லை.

இன்று இதைச் சொன்னோம் என்றால் நான் ஏதோ புதிதாகச் சொல்வதாக நினைக்கின்றார்கள். அன்று இதையெல்லாம் ஞானிகள் எடுத்துக் காட்டினார்கள்.

மனிதன் எந்தெந்த உணர்வு எடுத்தால் என்னென்ன நோய் வரும் என்று காட்டியுள்ளார்கள். அது என்னவெல்லாம் செய்யும் என்றும் சொல்லியுள்ளார்கள்.

ஒரு புலியைப் போட்டுக் காண்பிக்கின்றார்கள் என்றால் கோபிக்கும் உணர்வைக் காட்டுகின்றார்கள். அந்தக் கோபமான உணர்வுகள் நமக்குள் வளர்ச்சியானால் நல்ல அணுக்களைக் கொல்கின்றது. இது இரத்தக் கொதிப்பாகின்றது.

ஒருவரைப் பார்த்து… பார்…! அவன் அப்படிச் செய்கின்றான்… இப்படியெல்லாம் செய்கிறான்…! என்று அங்கலாய்க்கின்றோம். நமக்குள் வளரும் நல்ல அணுக்களைக் கொல்கின்றோம். வளரவிடாமல் தடுக்கின்றது.

இதையெல்லாம் காவியமாக எழுதித் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள். உருவத்தைக் காட்டி அருவத்தின் எண்ணங்களை நீ எப்படி எடுக்க வேண்டும்…? என்று விளக்கமாகக் காட்டியுள்ளார்கள்.

மிளகாய் இருக்கின்றது… காரம். உப்பு இருக்கின்றது கையிப்பாக இருக்கின்றது அல்லவா. புளி இருக்கிறது முகத்தைச் சுளிக்கச் செய்கிறது. இதையெல்லாம் சேர்த்து கருணைக் கிழங்கு விஷமாக இருக்கின்றது அதை வேக வைத்து அந்த விஷத்தை நீக்குகின்றோம் ஆறாவது அறிவு கொண்டு.

நீக்கியபின் அதனுடன் புளியை இணைக்கின்றோம். விஷத்தை ஒடுக்குகின்றது. காரத்தை இணைத்தவுடன் உணர்ச்சியைத் தூண்டுகின்றது. உப்பைச் சேர்த்தவுடன் சுவையாகின்றது.

இதைப் போன்று தான்
1.கெட்டது கெட்டதுமல்ல நல்லது நல்லதுமல்ல.
2.பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்… நாம் உருவாக்கத் தெரிந்து கொண்டவர்கள்.

தீமை என்று எண்ணும் பொழுது தீமை என்ற எண்ணமே நமக்குள் உருவாகின்றது. ஆகவே அருள் ஞானிகளின் உணர்வைச் சேர்த்து இதைத் தடுக்க வேண்டும் என்பது தான் பரசுராம்.

ஒருவர் வேதனைப்படுகின்றார்கள். ஒருவர் கோபப்படுகின்றார்கள். அந்த உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது. அதை மாற்றவேண்டும்.

நமக்குள் வந்தவுடன் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று தூய்மைப்படுத்த வேண்டும்.

தீமைகளை அகற்றும் ஞானத்தின் பெருக்கு…!

 

ஆடி மாதங்களில் பெரும்பகுதி கேரளா கர்நாடகா உத்தரப்பிரதேசம் மத்தியப்பிரதேசம் இந்த பகுதிகள் எல்லாம் நல்ல மழை பெய்கின்றது… நீர் அங்கே பெருகுகின்றது.

1.அங்கே பெய்யும் மழை நீரின் அழுத்தம் அதிகரிக்கப்படும் பொழுது
2.அதிலிருந்து மோதும் காற்று அலைகள்
3.மழை இல்லாத இடங்களுக்குக் காற்றாகத் தள்ளி வருகின்றது.

அதாவது அங்கே மழை பெய்தாலும் இதனின் உணர்வின் காந்த அலைகள் ஈர்ப்பாகி இங்கே தள்ளிக் கொண்டு காற்றாக வருகிறது.

உதாரணமாக நாம் அடுப்பிலே பாத்திரத்தை வைத்து அதிலே பொருளைப் போட்டுக் கொதிக்க வைக்கும்போது ஆவியாக நகர்ந்து மேலே செல்வது போன்று…
1.சூரியனின் வெப்பத் தணலால் அந்த குளிர்ச்சியின் வேகம் அழுத்தத்தின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது
2.இந்த வெப்பத்தின் தன்மையால் காற்றின் சக்தி அதிகமாகப் படுகின்றது.

ஒரு கேஸ் (GAS) அதிக அழுத்தமானால் அது மூடியை எப்படித் தள்ளிக் கொண்டு செல்கின்றதோ இதைப்போல ஒரு பகுதியில் பெய்யும் மழை தனக்குள் வரும் வெப்பத்தின் தணலைக் கவர்ந்து அலைகளாக வரும் பொழுது வேகம் அதிகரிக்கின்றது. பெரும் காற்றாக வீசத் தொடங்குகிறது.

அது வரும் பாதையில் மற்ற தாவர இனங்கள் அதன் வித்துகள் அங்கே படர்ந்து இருப்பினும் அதை அடித்துச் சென்று மற்ற இடங்களில் அதைப் பெருக்கச் செய்கின்றது. இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

அங்கே ஒரு இடத்தில் மழை பெய்கின்றது அதிலிருந்து வரும் அழுத்தத்தின் தன்மை அங்கே நிலைப்பதில்லை… இங்கே வருகின்றது.
1.அது நீரைக் கவர்ந்து வந்த நேரத்தில்
2.வெப்பத்தின் தணல் தாக்கப்படும் போது காற்றின் அழுத்தம் அதிகரிக்கின்றது.

வேகத்தின் தொடர் அதிகரிக்கப்படும் பொழுது மற்ற தாவர இனங்களில் உள்ள வித்துகளைப் பரவச் செய்கின்றது. மற்றொரு பக்கம் விளைந்திடும் சத்தின் தன்மையை தாவர இனத்தில் இணையச் செய்யும் பொழுது அந்தத் தாவர இனங்களில் நஞ்சான அணுக்கள் உருவாவதை இது அப்புறப்படுத்துகின்றது.

ஆகவே இந்த ஆடிக் காற்று அது மிகவும் சிறந்தது.

எதைப் பெருக்குகின்றது…? தீமையை அகற்றும் சக்தியாகப் பெருகுகிறது. ஒரு பக்கம் பெய்யும் மழை நீரின் சத்தைத் தனக்குள் கவர்ந்து நீர் இல்லாத இடத்தில் அதைப் பெருக்கும் தன்மையை அடைகின்றது.
1.அங்கே நீரின் தன்மை பெருகுகின்றது
2.இங்கே காற்றின் தன்மை பெருகுகின்றது

அதனால் தீமைகளை அகற்றும் சக்தியும் மற்ற தாவர இனங்களில் மோதும் பொழுது அதில் இருக்கும் நஞ்சினை நீக்கும் வல்லமையும் பெறுகின்றது.

இது வழி தொடர்ந்து… ஒன்றின் பின் ஒன்று தொடராக… அது இணைந்திடும் சக்தியாக… அந்த இயல்பின் தன்மையாக… இயற்கையின் நிலையாக… ஒன்று ஒன்றுடன் இணைக்கப்படும் பொழுது இது செயல்படுகின்றது.

உதாரணமாக
1.நாம் கோபப்படுவோரைக் கண்டால் அந்தக் கோப உணர்வு நமக்குள் பெருகுகின்றது
2.ஒருவன் வேதனைப்படுகிறான் என்று அறிந்தால் அந்த வேதனையான சக்தி நமக்குள் பெருகுகின்றது
3.ஒருவன் நோயினால் அவதிப்படுகிறான் என்று அவனை உற்றுப் பார்த்தால் நமக்குள் வலியும் வேதனையும் பெருகுகின்றது.

இதைப் போன்றுதான் அருள் ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் பெருக்கிக் கொண்டால் அது நமக்குள் தீமையை நீக்கும் சக்தியாகப் பெருகும்.

அங்கே நீரின் சக்தியில் விளைந்து அதன் உணர்வின் தன்மை ஆவியாக மாறி இங்கே தீமைகளை அகற்றும் சக்தியாகப் பெருகி நல்ல வித்தின் தன்மை பெருகும் தன்மை வருகின்றது.

அதே போல்
1.அந்த மகரிஷியின் அருள் சக்தியை நமக்குள் பெருக்கித் தீமையை அகற்றும் சக்தியைப் பெருக்கி
3.அனைவருக்கும் இந்தத் தீமையை நீக்கும் சக்தியைப் பெருக்க வேண்டும்.

இதை நினைவுபடுத்தும் நாள் தான் ஆடிப்பெருக்கு…!

மனித பிம்பத்திற்குண்டான உண்மையான ஆற்றல் – ஈஸ்வரபட்டர்

 

தன் உணவைத் தான் எடுக்கப் போகன் செய்த செயல் முறைதான் “முருகா” என்ற சிலை.
1.ஒவ்வொரு சக்திக்கும் (அது) எந்தச் சக்தியாக இருந்தாலும்
2.தன் சக்தி வளர உணவு தேவை.

உணவை எடுக்க அவரவர்கள் உணர்த்திய முறை கொண்டு தான் போகனால் சீனாவில் பல மருத்துவங்களையும் வெடி குண்டுகளையும் முகம்மது நபியின் உடலை எடுத்து முஸ்லீம் நாடுகளில் தன் உணர்வைப் பதித்து உணர்வின் எண்ணமுடன் தன் உணவை எடுத்தார்.

இப்படி… தான் வளர தனக்குகந்த வளர்ச்சியில் ஆகாரமாகப் பல நிலைகளை உணர்வின் எண்ணமுடன் பதியச் செய்த முறை கொண்டு தான் அன்றிலிருந்து இன்று வரை பக்தி முறை தொடர் கொண்டுள்ளது.

பக்தியின் உண்மையான உணர்வின் எண்ணத்திற்கு அவர்களின் சக்தியைக் கொண்டு பக்திக்குகந்த பலனை அளித்துத் தனக்கு உணவை எடுக்கின்றார்.

கவிதைகளையும் பல காவியங்களையும் எழுத்தில் பதியச் செய்து பல சித்தர்கள் அதைப் படிப்பவர்களின் எண்ண உணர்வைத் தனக்குகந்த உணவாக எடுக்கின்றனர் இன்றும்…!

அன்றெழுதிய இராமாயணம் கீதை பைபிள் குரான் இவை எல்லாம் காலப் போக்கில் உருக்கள் மாறினாலும் அன்றெழுதிய உணர்வின் சக்தித் தொடரில் படிப்பவருக்கும்… எண்ணுபவர்க்கும்… அவ்வுணர்வின் சுழற்சியைக் கொண்டு…
1.இன்றளவும் அதனை எழுதியவருக்கு உணர்வின் எண்ணத்திற்கு
2.அவர்களுக்கு உணவு கிடைத்துக் கொண்டேயுள்ளது.

இந்தப் பூமியில் பல கோடிச் சித்தர்கள் பல உணர்வுகளில் இருந்தாலும் அவரவர்களின் வளர்ச்சிக் குணத்திற்கு உகந்தபடி எல்லாம்… தன் எண்ண உணர்வை என்றும் அழியாத் தொடரிலும்… சில சொல் ரூப மந்திரங்களிலும் பதியச் செய்துள்ளான் அந்தச் சித்தன்.

ஐயப்பனை எண்ணும் பொழுது ஒரு கோஷம். முருகனை எண்ணும் பொழுது வேறு ஒரு கோஷம். இப்படி இயேசு கிறிஸ்துவுக்கும் முகம்மது நபிக்கும் புத்தருக்கும் கொங்கணவருக்கும் அவர்கள் பதிய வைத்த இக்கோஷத்தால் இன்றளவும் தன் உணர்வுக்குகந்த உணவை எடுத்து தான் வாழ்ந்து… வளர்ந்து… பலவற்றையும் வாழ வைத்திருக்கின்றார்கள் “சக்தி கொண்ட சக்திகளை…!”

உணவில்லாமல் எதுவுமே வளர்வதில்லை…!

பிம்ப உடல் கொண்ட ஜீவத் துடிப்பு உருவங்களுக்குத் திடமான உணவு தேவை. ஆனால்
1.பிம்ப உடல் கொண்ட திட உணவை உட்கொள்ளும் இந்த மனித சக்தியில் இருந்து தான்
2.உணர்வின் எண்ண உணவையும் உட்கொள்ளும் சக்தி நிலை வளர்கின்றது.

தாவரங்கள் நீரையும் சில எருக்களையும் உணவாக உட்கொண்டாலும் உணர்வுடன் கூடிய எண்ண உணவெடுக்கும் முறை மனித ஞானத்திற்குத்தான் உண்டு. மனித ஞான உணர்வின் உயர் சக்தியில் ஊன்றியுள்ள உண்மைதனை உணரல் வேண்டும்.

மனித நிலையிலிருந்து மாறி மிருக நிலையிலும் மற்ற பட்சிகளின் புழு பூச்சிகளின் நிலையிலும் உணர்வின் எண்ண ஞான உணவெடுக்கச் சக்தியில்லை.

1.ஞானத்தின் உணவை எடுத்துச் சித்தன் என்ற செயலாகிச் சப்தரிஷியின் செயலாக்கி
2.ஆதி சக்தியின் சக்திக்கே துணை சக்தி கொள்ளும்
3.வடிவெடுக்கும் உருவங்கள் தானப்பா… இந்த மனித பிம்ப உடல்…!

பல கோடி ஆண்டுகளாகவே நற்சக்தியின் விதைகள் விதைக்கப்பட்டுப் பலனை எடுத்து மீண்டும் மீண்டும் பலன் கொண்டு… தான் எடுத்த உயர் ஞானத்தைக் கொண்டு பல ஞானங்களின் உணவு எடுத்துக் கருவாகி உருவாகி… தனியோரு மண்டலமாக உருவாகிச் சுழன்று கொண்டேயுள்ள சக்தியில் முதல் எது… கடைசி எது…?

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

“சரவணபவா… குகா…” தீமைகளைச் சரணமடையச் செய்யக்கூடிய சக்தியாக உடலான குகைக்குள் நின்று “கந்தா…” பலவற்றையும் அறிந்திடும் நிலை “கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்த கந்தவேளே…!” என்று இதை இராமலிங்க அடிகள் பாடியுள்ளார்,

கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்த கந்தவேளே… சண்முகத் தூயமணி. சண்முகம் என்றால் ஐந்தாவது அறிவின் தன்மை கொண்டு தான் நுகர்கின்றோம் ஆக புலனறிவு ஐந்து.
1.தூய்மையான உணர்வைத் தனக்குள் நுகர்ந்து
2.அந்தத் தெய்வமணியாக என்னை ஆக்க வேண்டும் என்று அவர் தெளிவாகப் பாடியுள்ளார்.
3.அவர் பாடியதை அர்த்தத்தை இன்னும் நாம் புரிந்து கொள்ளவில்லை.

சண்முகம் என்றால் ஐந்தாவது அறிவு. சண்முகம் என்றால் வேறு விதமாக எண்ணிக் கொள்கின்றார்கள்.

சண்முகத் தூயமணி – அதாவது புலனறிவு ஐந்து. சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பமும் காந்தமும் விஷமும் இந்த மூன்றின் உணர்வின் தன்மை கொண்டு
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வைக் கவர்ந்தால்
2.நான்காவாது நிலை கொண்டு இருளை நீக்கிடும்
3.அந்தத் தீமைகளை நீக்கிடும் சண்முகத் தூயமணி என்று
4.எனக்குள் தூய்மைப்படுத்தும் அந்த உணர்வை நான் பெற வேண்டும் என்று அதைப் பாடுகின்றார்.

இதை நாம் புரிந்து கொண்டால் அன்று இராமலிங்க அடிகள் எவ்வாறு பாடினார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அவர் பாடல்களைப் புகழ்ந்து பாடுகின்றோம். பாடலின் “மூலத்தை…” இன்னும் நாம் காணவில்லை.

ஆனால் அதைச் சொன்னால் நாம் தேடிக் கொண்டேயிருப்போம்.

உணர்வின் உணர்வின் இயக்கங்களைத் தெளிவாக இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நாம் தெளிந்திடல் வேண்டும்.

சண்முகத் தூயமணி – சண்முக… ஐந்தாவது அறிவின் துணையால்
1.உயர்ந்த உணர்வு கொண்டு
2.அந்த ஒளியின் உணர்வாக எனக்குள் உருவாக்குதல் வேண்டும் என்று அவர் பாடியுள்ளார்.

அதனின் மூலக்கருத்து இது தான்,

உண்முகச் சைவமணி – மற்றொன்றைக் கொல்லாதபடி அருள் ஒளி என்ற உணர்வின் தன்மை கொண்டு இந்தச் சைவம் என்ற நிலையில் செயல்படுத்த வேண்டும்.

நாம் (உடல்) அசைவம். துருவ நட்சத்திரம் சைவம் அது தனக்குள் அசையும் தன்மை இல்லாது இருக்கும் இருப்பிடத்திலே தனக்குள் அந்தச் சைவ மணியாக உருவாகின்றது.

இதனை நாம் பெறவேண்டும் என்று தான் அவர் பாடல்களிலே பாடினாரே தவிர நாம் பாடுவது போன்று அல்ல. அவர் பாடல்களை நமக்குகந்த நிலைகள் கொண்டு பாடுகின்றோம்.

ஆனால் மூலத்தின் நிலைகளை விடுத்துவிட்டோம்.

இப்படித்தான் ஞானிகள் கவி ரூபமாகப் பாடியதை நாம் பாடலை உள்முகமாக நுகர்ந்து
1.நம்முடைய அறிவுகள் எதுவோ
2.நம்முடைய ஆசைகள் எதுவோ அதனுடன் கலந்த பின்
3,அந்த உணர்வின் செயலாக மாறுகின்றது.

நாம் ஒரு நல்ல மருந்தினை வீரியம் ஊட்ட வேண்டும் என்றால் அதிலே விஷத்தின் தன்மை கலந்தால் அந்த மருந்திற்கு வீரியம் ஆகின்றது. அதன் வழி ஊடுருவிச் சென்று அந்த மருந்தின் வேகத்தைக் கூட்டித் தீமை செய்யும் அணுக்களை அது அடக்குகின்றது.

இதைப் போலத்தான் விஷத்தை அடக்கிய அருள் ஞானியின் உணர்வை நமக்குள் செலுத்தினால் “சண்முக..” அந்த உணர்வுகள் ஐந்தாவது நிலை கொண்டு அதைக் கவர்ந்து நமக்குள் நுகர்ந்தால்
1.அதைத் தூயமணியாக நமக்குள் உருவாக்கி
2.அதைச் சைவமணியாக
3.ஜீவ அணுவாக மாற்றாதபடி “சைவமாக” மாறிவிடுகின்றது.

அணு என்ற நிலைகள் வரும் பொழுது அது வேறு விதமாக மாறுகின்றது,

அந்த ஐந்தாவது அறிவினை அதைத் தூயமணியாக்கி அதை என்றும் சைவமணியாக இனிப் பிறவியில்லா நிலையாக அருள் ஒளி என்ற உணர்வின் தன்மையைத் தனக்குள் “அந்த நிலையான… ஒரு நிலையைப் பெற வேண்டும்”.

செடி கொடிகள் எப்படித் தன் உணர்வின் தன்மை ஒரு வித்தின் தன்மை அடைகின்றதோ இதே போல உணர்வைச் “சைவம்” ஆக்க வேண்டும்.

ஆனால் நமக்குள் (மனிதனுக்குள்) இருக்கும் உயிரணுக்கள் அசைவம்.

உணர்வின் தன்மை இரண்டறக் கலந்து ஒளியின் உணர்வை எப்படிச் செடி கொடிகள் மாற்றுகின்றதோ
1.வானுலகில் வரும் உணர்வினை ஒளியாக மாற்றி அதைச் சைவமாக
2.அசைவமல்லாதபடி சைவமாக அந்தத் துருவ நட்சத்திரம் அது வாழ்கின்றது.
3.பேரொளியின் தன்மையைத் தனக்குள் உருவாக்குகின்றது.

இதைத்தான் அன்று அவர் மனிதன் எவ்வாறு வாழ முடியும்…? எவ்வாறு வாழ வேண்டும்…? எந்த வாழ்க்கை வாழ வேண்டும்…? இந்தப் பிறவிக்குப் பின் நாம் எதைப் பெற வேண்டும்…? என்பதை உணர்த்தியுள்ளார்.

மெய் ஞான அறிவால் காணக்கூடியதற்கும் விஞ்ஞான அறிவால் காணக்கூடியதற்கும் உண்டான வித்தியாசம்

 

உங்களுக்குள் யாம் (ஞானகுரு) இப்போது ஆழமாகப் பதிவு செய்யும் மெய் ஞானிகளின் உணர்வினை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அதனை நீங்கள் பெருக்கிக் கொண்டால்
1.உங்கள் நினைவின் ஆற்றலைக் கொண்டு
2.விண்ணின் அதிர்வலைகளை நுகர்ந்தறிந்து
3.விஞ்ஞானிகள் கருவியின் துணை கொண்டு வான இயல் புவியியலில் அளந்தறியும் செயல்களை
4.அந்தக் கருவிகள் இல்லாமலே அதன் உணர்வலைகளை நீங்கள் அறிந்து
5.இத்தனை மணிக்கு இன்னது நடக்கும்…! என்று சொல்ல முடியும்.

அதே சமயத்தில் மெய் ஞானியின் உணர்வைத் தனக்குள் எடுத்து அந்த உணர்வின் எண்ண அலைகளைப் பாய்ச்சி
1.விண்ணிலிருந்து வரும் ஒரு கல்லோ பாறையோ (ASTEROIDS) பூமியிலே மோதாதபடி
2.அது திசை திரும்ப வேண்டும் என்று பலர் சேர்ந்து எண்ணினால்
3.இந்த ஒலி அலைகள் கொண்டு குறுக்காட்டி அவைகளைத் திசை மாற்றவும் உங்களால் முடியும்.

ஆனால் விஞ்ஞான அறிவு கொண்டோர் அணு ஆயுதங்களைத் எடுத்து அணு விசை கொண்டு இராக்கெட்டை விண்ணிலே செலுத்தி அந்தப் பாறைகளையோ கல்களிலோ செலுத்தி அவைகளை நொறுக்கலாம்.

1.நொறுக்கிய பின் அதிலே கலந்த நஞ்சு பிரபஞ்சத்தில் பரவி மீண்டும் நம் பூமிக்குள் தான் வரும்.
2.பூமியிலே மோதாது அதைத் தாக்க முடியும்… ஆனால் நம்மைக் (மனிதர்களை) காக்க முடியாது.

ஏனென்றால் இவர்கள் வெடிக்கும் தன்மை கொண்டு அது நொறுங்கிய பின் அந்த நஞ்சான உணர்வின் தன்மை நம் பூமியில் படரப்பட்டு நமக்குப் பாதுகாப்பாக இருக்கும் “ஓசோன்” என்ற திரையைக் கிழித்து அந்த நஞ்சின் தன்மைகளை இங்கே பெருக்கிவிடும்.

சாதாரணமாக… விண்ணிலிருந்து வரும் நஞ்சுகளை எல்லாம் ஒடுக்கும் தன்மையாக அது பெருகி வரும் போது தான் அது ஓசான் திரை. பூமிக்குள் ஒளியின் தன்மை பெருக்கி இங்கிருக்கும் மற்றதனைத்தையும் காக்கும் நிலைகளாக அந்த ஓசான் திரை இங்கே வருகிறது.

ஆனால் விஞ்ஞான அறிவின் செயலால் ஓட்டை விழுந்து விட்டால் நஞ்சு உள்ளே புகுந்துவிடும். விண் கற்களைத் (ASTEROIDS) தெறிக்கச் செய்தாலும் நம் பூமிக்குள் அது வருமே என்றால் நஞ்சினைத் தான் அது பரப்பச் செய்யும்.

உதாரணமாக நாம் ரோட்டிலே செல்கிறோம். ரோட்டிற்கு அந்தப் பக்கம் ஒரு பொருளின் தன்மை இருக்கின்றது. நாம் எடுக்கச் செல்ல வேண்டும் என்று விரும்புகின்றோம். அந்த ஆசையே துணிவாக அங்கே நம்மைச் செல்லச் செய்கிறது.

ஆனால் இடைமறித்து பஸ் வருகிறதா…? அல்லது வேறு என்ன வருகிறது…? என்று நாம் பார்த்துச் சென்றோம் என்றால் அந்த எல்லையை அடைய முடியும்.

அப்படித் திரும்பிப் பார்க்காது நாம் சென்றால் அந்தப் பொருளையும் பெற முடியாது… நமக்கும் ஆபத்தாகிவிடும். அதைப் போன்று தான்
1.மனிதன் இந்த விஞ்ஞான அறிவால் நாட்டைக் காக்க எண்ணினாலும்
2.அதனால் விளைந்த நஞ்சு நாட்டு மக்களை அழித்துவிடும்.

இன்று நாம் பார்க்கும் விஞ்ஞானத்தின் விளைவுகள் இது தான்.

ஞானிகளுக்கும் நமக்கும் இடையில் உள்ள திரையை அகற்றுவது எப்படி…? – ஈஸ்வரபட்டர்

 

படைப்பின் படைப்பனைத்திற்குமே ஒவ்வொன்றிற்கும் அதன் படைப்புக் குணம்… மணம் உண்டு. கல் மண் உலோகங்கள் அனைத்திற்குமே மணமுண்டு.

மணமில்லா உரு நிலை எதுவுமே பெறுவதில்லை.

நம் பூமிக்கு மட்டுமல்ல… பால்வெளி மண்டலத்திலும்… நட்சத்திர மண்டலங்களிலும்… வளர்ந்த பெரிய மண்டலங்கள் எதுவானாலும்… அதன் ஆரம்ப நிலை அமில ஈர்ப்பு ஜீவத் துடிப்பு மணமுடன் ஒலியாகி ஒளியாகி நீராகும் செயல் தான் கொள்கின்றது.

மணம் கொண்ட வழியிலேயே உணர்வும் பெறுகின்றது. மணத்துடன் கூடிய உணர்வால் தான் உணவையே உட்கொள்ள முடிகின்றது.

இந்நிலையை எதற்காக இங்கே உணர்த்துகின்றேன்…?

1.உன் ஜெப நிலையால் உன் உணர்வின் எண்ணத்தை
2.என் பால் (ஈஸ்வரபட்டர்) செலுத்தி எம் அலையின் தொடரை நீ பெற்றால்
3.உன் உணர்வின் உணவாக எம் அலை பாயும்.

ஒரு பருப்பில் பல பருப்புகள் விளைகின்றன. அதைப் போல்
1.எம் உணர்வை நீ எடுத்து
2.உன் உணர்விற்கு உணவாக ஊட்டம் கொடுத்து உன் வளர்ச்சியை நீ பெற்றால்
3.உனக்கும் எனக்கும் மத்தியில் உள்ள திரை விலகி
4.அனைத்தையும் காணும் “அபூர்வ சக்தியாக” ஞான சக்தியின் சித்து நிலை பெற முடியும்.

பருப்பு பருப்பாகவே இருந்தால் பல பருப்பைக் காண முடியுமா…? பயிர் செய்து பலன் பெற்று பலனின் பயிர் வளர் தொடர்பில்தான்… பருப்பென்ற பருப்பு குணப் பயிர் வளர்ப்பே வளர்ந்து கொண்டேயிருக்குமேயன்றி பயிர் செய்யாமல் பயிர் வளர் தொடர் எதுவும் காண முடியாது.

1.ஒன்றின் தொடர் ஒன்று வளர்கின்றது
2.ஒன்று என்றென்றும் வளர தன் வளர்ப்பிற்கு உணவு தேவை.
3.அதைப் போன்று நாங்கள் (மகரிஷிகள்) வளர உன்னை வளர்க்கின்றோம்.
4.நீ வளர நீயும் வளர்க்க வேண்டும் பிறரை…!

வளர்ப்பின் தொடர் வளர்ப்பு வளர்ந்து கொண்டேயிருந்தால் தான் எந்த ஒரு வளர்ச்சியும் வளர்ந்து கொண்டேயிருக்கும்.

1.பயிர் வளர்ப்பு மட்டுமல்ல….
2.ஜீவித வளர்ப்பு மட்டுமல்ல…
3.மண்டலங்களின் வளர்ப்பு மட்டுமல்ல…
4.ஞானிகளின் வளர்ப்பு மட்டுமல்ல…
5.அவ்வாதி சக்தியின் படைப்பின் சக்திக்கே… படைப்பின் படைப்பாகி…
6.பலவற்றின் படைப்பின் தொடர் படைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

வழித் தொடர் வெள்ளாமை ஒவ்வொன்றிலும் வளர்ந்து கொண்டேயிருந்தால் தான் அவ்வளர்ச்சியின் செயல் வளர்ந்து கொண்டேயிருக்கும்.

1.முற்றுப் பெற்று… முக்தி பெற்று… முடிவடையும் சக்தி எதுவுமே இல்லை.
2.முழு முதலாக வளர்வது தான் ஆதியின் அந்தச் சக்தி.

உடல் வளர உணவு தேவை. உணர்வின் எண்ணம் வளர ஞானத்தின் உணவு தேவை. உணர்வின் எண்ணத்தை ஞானம் என்ற உணவை உட்கொண்டு இவ்வுடல் என்ற பிம்ப ஜீவ சக்தி கொண்ட வடிவின் அணுவின் உயிரணுக்களுக்கு ஞானத்தை உணவாகக் கொடுத்து
1.ஞானத்தால் வளர்த்த உடல் அணுக்களைச் சித்து நிலை பெற்றிடவே
2.ஞானம் என்ற உணர்வெடுத்துச் “சித்தன்” என்று உருவாகுங்கள்.

இப்பொழுது புரிகிறதா போகன் அமைத்த முருகனின் சிலை எதற்கு என்று…?

தன் நிலை உயர தன் உணர்வு வளர முருகனைப் படைத்தான் போகன். முருகன் சிலையைப் படைத்து முருகா… என்ற நாத உணர்வு ஜீவ சக்தியை உணவாக உட்கொள்கின்றான் இன்றும் போகன்.

1.ஒவ்வொரு சித்தனும் இந்த ஞான பூமியில் தன் ஞானத்தை வளர்த்துக் கொள்ள
2.தன் வளர்ப்பின் வளர்ப்பு வளர வழிப்படுத்திய உண்மைகள் பல உண்டு.

போகரின் வழித் தொடர் முருகன் முருகனின் உருவத்தை காட்டி உணர்வின் எண்ண ஜீவ உணவை உட்கொள்கின்றான் போகன்.

முருகன் ஆலயம் செல்லும் பக்தர்களில் உணர்வால் உண்மை பக்தி பூண்ட ஆயிரம் பக்தர்கள் சென்றால்…
1.ஆயிரத்தில் ஒன்றிரண்டு பக்திமான்களாவது
2.ஞானத்தின் சக்தி பெறச் செல்வதுண்டல்லவா…!

தன் உணவாக நல் மணிகளைத் தான் உண்டு பல மணிகளைத் தருகின்றான் போகன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

அன்று அரச காலங்களில் ஒரு மனிதனுக்கு ஒரு தத்துவம் கிடைத்துவிட்டால் அந்த நாட்டிற்குள் வந்துவிட்டால் அது அந்த அரசனுக்கே உரிமையானது.

அவரை வரவேற்று அவருக்கு வேண்டியதைக் கொடுத்துச் செய்தியை வாங்கிக் கொள்கின்றார்கள். அந்தச் சரக்கு அனைத்தையும் அரசனுக்குத்தான் சொந்தமாக்குகின்றார்கள்.

அப்படி அவர் கொடுக்கவில்லை என்றால் மரண தண்டனை கொடுக்கின்றார்கள். அதற்கு அஞ்சித் தன்னிடம் உள்ளதை அரசனிடம் கொடுத்துவிடுகின்றார்கள்.

பண்டைய காலப் புலவர்களைப் பார்த்தால் தெரியும். ஒவ்வொரு அரச சபையிலும் அந்தப் புலவர்கள் உண்டு. அந்தப் புலவர்கள் அனைவரும்
1.அரசனைப் புகழ் பாடித்தான் வந்திருப்பார்கள்.
2.புகழ் பாடிப் பொருள் தேடுவார்கள்.

அந்தப் புகழ் பாடும் நிலைகளில் அரசருடைய மக்கள்களில் (தன் பிள்ளைகள்) இரு பிரிவு ஆகிவிட்டால் இவர்கள் எதிர் கவி பாட ஆரம்பிப்பார்கள்.

எதிர் கவி என்ற நிலைகளில் இதைப் போன்ற ஒரு மரணமடைந்த உணர்வுகள் இங்கு வந்தபின் கவியில் அந்தப் புலமை பாடும் பொழுது இந்த அரசன் இப்படித்தான் போவான் என்று சொல்வதை இவர்கள் “அறம்…” என்று சொல்வார்கள்.

ஆனால் இதெல்லாம் மனிதனுக்குள் விளைய வைத்த உணர்வுகள் இவன் உடலுக்குள் வந்து அந்தச் செயல்களை செய்கின்றது.

மகரிஷிகள் காட்டிய உண்மையின் நிலைகள் அரசன் கையில் சிக்கப்பட்டு அதை அவர்கள் தனக்குகந்ததாக மதங்களாகப் பிரித்துவிட்டனர்.

அதனால் அதிலுள்ள பேருண்மையின் நிலைகளை அறிய முடியாமல் போனது. மகரிஷிகள் காட்டிய பேருண்மையின் நிலைகளை நாம் அறிய முடியாமல் போனதற்கு மூலமே இது தான்.

இன்னும் ஒவ்வொரு மதமும் “கடவுளைத் தேடிக் கொண்டுதான்… உள்ளது”.

நாம் இந்தப் பணிகளைச் செய்தால் கடவுள் நமக்கு வேண்டியதைச் செய்வான். “கடவுள் எங்கேயோ இருக்கின்றான்…” என்ற எண்ணத்தில் அரசர்கள் மதத்தின் அடிப்படையில் காட்டிய நிலைகள் கொண்டாலும் தர்மம் நியதி என்று பதிவு செய்து கொள்கின்றார்கள்.

அவ்வாறு பதிவு செய்த உணர்வு கொண்டு அவர்கள் எண்ணி ஏங்கும் பொழுது “வேதனை கலந்த” உணர்வுகளையே சுவாசிக்கின்றார்கள். ஒரு நல்ல பதார்த்தத்தைச் செய்து அதில் விஷத்தைக் கலந்து உணவாக உட்கொண்டால் மயக்கமடையச் செய்யும்.

உயர்ந்த எண்ணங்களையும் பிறருக்குப் பண்புடன் செயல்படும் நிலைகளையும் எண்ணி வாழ்ந்தாலும் என்ன ஆகின்றது?

“உலகில் இப்படித் தீமைகள் நடக்கின்றதே…” என்ற வேதனையான உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது
1.அது இவர்கள் உடலில் தீமை செய்யும் அணுக்களாக உருவாகின்றது.
2.அப்பொழுது இவர்கள் எண்ணிய நல்ல எண்ணம் அவர்களையும் காக்கவில்லை.
3.அந்த நாட்டையும் காக்கவில்லை.

இத்தகைய உணர்வுகள் தான் இன்று காற்று மண்டலத்தில் அதிகமாகப் பரவி படர்ந்திருக்கின்றது என்ற நிலையைத் தெளிவாக்கினார் குருநாதர்.

உலகில் உள்ள அனைத்து நிலைகளிலும் இது வளர்ந்து வந்திருக்கின்றது. இது வளர்ந்து வளர்ந்து “பழி தீர்க்கும் உணர்வுகளாக” ஒவ்வொரு சாதாரண மனிதனுக்குள்ளும் உருவாகி இன்று உலகெங்கிலும் “தீவிரவாதம்” என்று பரவிவிட்டது.

இதைத்தான் அவனவன் ஆட்சி புரியும் நிலைகளில்… “அவனவன் செய்யும் செயலே சரி…” என்ற உணர்வுகளுக்குச் செல்லப்படும் பொழுது “கலி” உருவாக்குகின்றான் என்பது.

பதினெட்டாம் பெருக்கு

 

ஆற்றில் வெள்ளம் செல்கிறது என்றால் அந்த வெள்ள நீரை நாம் வயல்களிலே அப்படியே பாய்ச்சினால் பயிர் பச்சைகளை எல்லாம் அது அடித்துச் சென்றுவிடும்.

அதைப் போன்று இந்த வாழ்க்கையின் நிமித்தம்…
1.நாம் அதிக ஆசையின் உணர்வுகளைக் கொண்டு சென்றால்
2.வெள்ள நீர் செல்வது போல் மற்றது சிந்தனை இல்லாது ஒருநிலைப்படுத்திக் கொண்டு போகும்.
3.வேறு செயல்களைச் சீராகச் செயல்படுத்தவிடாது

ஆனால் அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் கொண்டு வரப்படும் போது நமக்குள் இருக்கும் தீமைகளை எல்லாம் அது அடித்துச் செல்லும்.

ஓர் வெளிச்சத்தைப் போட்டோம் என்றால் அங்கிருக்கும் இருளைப் போக்கிப் பொருள்களை எல்லாம் காணச் செய்யும்.

இதைப் போன்று தான் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் இணைப்போம் என்றால் அது நமக்குள் அது பெருகி நம்மை அறியாது சேர்ந்த இருளைப் போக்கிவிடும்.

ஆகவே மகரிஷிகளின் அருள் வெள்ளத்தை நமக்குள் பாய்ச்சி நம்மை அறியாது வந்த தீமையான வினைகளைப் போக்கி மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் பெருகச் செய்வதே “பதினெட்டாம் பெருக்கு…”

பதினெட்டு என்றால்…
1.உலகை அறியும் தன்மை பெற்றவன் மனிதன்… அந்த உயிரின் தன்மை பத்தாவது நிலை அடையும் தருணம் பெற்றது.
2.எட்டு என்பது அஷ்டதிக்கும் “எட்டி” அதை எல்லாம் உணரும் நிலையைத் தெரிந்தவன் மனிதன்.

அனைத்தையும் அறியச் செய்யும் மனிதனின் ஆறாவது அறிவால் மகரிஷிகளின் அருள் ஒளியைத் தனக்குள் பெருக்கி
1.அஷ்டதிக்கிலேயும் தன் ஒளியின் சுடரைப் பாய்ச்சி
2.எந்தத் திக்கில் எது வந்தாலும் அந்த இருளை மாய்க்கும் நிலைகள் பெற்றது.

அஷ்டதிக்கிலும் தீமை என்ற நிலையில் இருள் சூழ்ந்தாலும் சப்தரிஷி மண்டலம் ஒளியாகப் பெருக்கிக் காட்டுகிறது. துருவ நட்சத்திரமும் தன் அருகிலே வரும் இருளை எத்தகைய நஞ்சாக இருந்தாலும் அதை அடக்கி ஒளியாகத் தனக்குள் வீசுகின்றது.

இது தான் அந்த மகரிஷிகள் காட்டிய நிலைகள்.

புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் ஒன்றாக எடுத்துக் கொண்டால் மெய் ஞானம் எளிதில் கைகூடும் – ஈஸ்வரபட்டர்

 

நல் உபதேசத்தைக் கேட்பதும்… நல்ல நூலைப் படிப்பதும்… நம் உணர்வின் எண்ணமுடன் சுழன்று கொண்டே தான் இருக்கும்.

1.இஜ்ஜீவ உணர்வின் சக்தியைக் கொண்டு
2.இவ்வெண்ண நிலையை எதன்பால் திருப்புகின்றோமோ
3.அவ்வலைத் தொடரின் பதிவு ஒலிகள் அதனுடன் கூடிய நல் அலைகளை மீண்டும் பதியச் செய்ய
4.இவ்வெண்ணத்தால் எடுக்கும் தியானத்தால் இவ்வுணர்வு முழுவதுமே
5.நற்சக்தியின் அலையை நாம் பதிவு செய்து கொள்ள முடியும்.

கோவில் குளங்களுக்குச் செல்லும் பக்திமானுக்கு அவன் கனவிலும் நினைவிலும் இதே நிலைகள் தான் சுழன்று கொண்டிருக்கும்.

பல கோவில்களுக்குப் போவது போலவும் அங்குள்ள ஆண்டவனைத் தரிசிப்பது போல “கனவுகளிலும்…” அதே சமயத்தில் “நினைவான எண்ணத்தில்…” எக்கோயிலுக்குச் செல்லலாம்…? எந்த நூலைப் படிக்கலாம்…? எந்த ஞானியைத் தரிசிக்கலாம்…? என்ற உணர்வு அலைப்பிடிப்பில் தான் பக்திமானுடைய எண்ண உணர்வலை எடுக்கும் சுவாசம் கொண்ட அலை பதிந்திருக்கும்.

திருடனுக்கும் சரி… அவன் உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் சுவாசத்தைக் கொண்டு எவ்வலை ஓடுகின்றதோ…! அவ்வலையின் செயலுக்குகந்த எண்ணத்திற்கொப்பத்தான் அவன் நினைவும் கனவும் இருக்கும்.

விவசாயி ஆனாலும் சரி.. விஞ்ஞானி ஆனாலும் சரி… குடித்துத் தன் உணர்வை இழந்தவன் ஆனாலும் சரி…
1.எந்த ஒரு பழக்கப்பட்ட செயலுடன் கூடிய வாழ்க்கையுடன் வாழ்கின்றோமோ அதன் நிலைக்கொப்ப
2.உணர்வின் எண்ணத்திற்கொப்ப சுவாசத்தால் இவ்வுடலில் பதிவாகியுள்ள நிலைக்கொப்ப சுழற்சியில் தான்
3.ஒவ்வொரு மனித ஆத்மாவின் ஜீவ சக்தியின் அலைத் தொடரும் செயலும் வெளிப்படுகின்றன.

இச்சுழற்சியில் “அந்தந்தக் குண அமிலச் செயல் வட்டத்திற்குள்” மட்டும் உணர்வைச் செலுத்தி வாழ்பவனை அவனுள் பதிவாகியுள்ள குண அமிலத்திலிருந்து மீட்டுவது கடினம்…!

அதே சுழற்சியில் இருந்தாலும் ஆத்ம வளர்ச்சியை வளர்க்க முடியாது.

உணர்வுடன் கூடிய எண்ணத்தை நம்முள் “பல கோடி ஆண்டுகளாகப் பதிவாகி உள்ள குண அமிலத்துடன்…”
1.நற்சக்தியின் அமிலத்தை ஞானத்தால் நாம் எடுக்கும் ஜெபத்தைக் கொண்டு
2.நம்மைக் காட்டிலும் சக்தி வாய்ந்த சூட்சம நிலையில் உள்ள சப்தரிஷிகளுடன் தொடர்பு கொண்டு
3.உணர்வின் எண்ணமுடன் இழுக்கும் சுவாசத்தைக் கொண்டு உடல் முழுவதும் அதைப் பாய்ச்சி
4.ஏற்கனவே நாம் பல காலமாகச் சேமித்து வைத்துள்ள இக்குண அமிலத்துடன்
5.நற்சக்தியின் ஒலி அலை பாயப்பாய
6.மனிதச் சக்திக்குள் எச்சக்தியும் அறியக்கூடிய நிலை பெறலாம்.

நம்மைக் காட்டிலும் உயர்ந்த சக்தியைப் பெறும் வழித் தொடரை நாம் பெற்றோமானால் தான்
1.ஜீவனுடன் கூடிய இம்மனித உடல் பிம்பத்திலிருந்து எச்சக்தியையும்
2.இருந்த இடத்திலிருந்தே உணரவும் காணவும் மாற்றி அமைக்கவும் முடியும்.

ஆனால் நற்சக்தியின் பயனைப் பக்குவம் கொண்ட பத நிலையில் செயல்படுத்தக்கூடிய நிலையும் நாம் பெற வேண்டும்.

புகழ் கண்டு மயங்காதே…
புகழாரம் பாடாதே…
புகழ் தேடிச் செல்லாதே…!

இன்னல் கண்டு கலங்காதே…
இகழ்ச்சி கண்டு பதறாதே…
இகழ்ந்துரைக்க எண்ணாதே…!

நம் ஞானத்தின் வழித் தொடர் வெளிப்பட்டவுடன் நம்மை எதிர் நோக்கியுள்ள நிலைகள் தான் மேலே குறிப்பிட்டவை எல்லாம்.

1.இந்நிலையுடன் கூடிய உணர்வின் பிடியில் சிக்குண்டவர்கள்…
2.தன் வளர்ச்சியின் ஞானத்திலிருந்தே உயர முடியாத சுற்றலில்
3.இன்றளவும் பலர் சுற்றிக் கொண்டுள்ளார்கள்.

ஆகவே ஞானத்தின் வளர்ச்சிக்கு மகரிஷிகளின் தொடர்பிலேயே இருக்க வேண்டியது மிகவும் அவசியம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து அதிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

மனிதனான நாம் நாம் எதை எண்ணினாலும் அந்த உணர்வுகள் நமக்குள் இரத்தமாக மாறி “ஜீவ அணுவாக” மாறுகின்றது.

நாம் எந்த உணர்வின் தன்மையை நுகர்ந்தோமோ அது ஜீவ அணுக்களாக மாறும் போது அந்த அணுக்கள் அனைத்தும் அதன் உணர்வுப்படியே அது இயக்கும்.

1.தீங்கு செய்ததும் அணுவாக வருகின்றது. அதை எண்ணும்போது நமக்குத் தீமை விளைவிக்கின்றது.
2.நல்லது செய்ததும் அணுவாக வருகின்றது. அது நமக்கு நல்லது செய்கின்றது.

ஒருவன் வேதனைப்படும் உணர்வை நாம் நுகர்ந்தால் வேதனைப்படும் உணர்வை உருவாக்குகின்றது. அந்த உணர்வின் தன்மை அணுக்களாக நம் இரத்தத்தில் வளர்கின்றது.

உங்கள் கண்ணின் நினைவைக் கூர்மையாக இரத்த நாளங்களில் செலுத்தி ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்கள் இரத்தத்தில் “புதுவிதமான உணர்ச்சிகள்” வரும்.

இந்த வலிமை பெறும்போது
1.உங்கள் உடலுக்குள் தீமையை இழுக்கக்கூடிய
2.உங்கள் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் வெறுப்பு வேதனை சலிப்பு கோபம்
3.இது மாதிரி எத்தனையோ வகையான தீமையான உணர்வுகளை
4.உங்கள் உடலின் ஈர்ப்பை விட்டுத் தள்ளிவிடுகின்றது.
5.உங்கள் ஆன்மா சுத்தமாகின்றது.
6.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் ஆன்மாவில் வலிமை பெறுகின்றது

இப்படி இரத்தத்தில் உள்ள ஜீவ அணுக்களுக்கு நாம் கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செயல்படுத்தும் பொழுது அந்தத் தீமை என்ற நிலை உருவாகாதபடி தடுக்கின்றது.

“ஜீவ ஆன்மாக்கள்” என்றால் நாம் பிறர் மீது அன்பு கொண்டிருப்போம். அந்த அன்பு அதிகமாகிவிட்டால் இறந்தவரின் உயிர் நமது ஈர்ப்புக்குள் வந்து இரத்தத்தில் தான் தங்கும்.

ஆனால் அவர் உடலில் எந்த நோய்வாய்ப்பட்டார்களோ அந்த நிலையெல்லாம் நம் இரத்தத்தில் இருந்து உருவாக்கும். அந்த ஆன்மா இரத்தத்தில் இருந்தாலும் அதனால் ஒன்றும் செய்ய முடியாது.

அதன் உணர்வு எதுவோ அதைத்தான் இயக்கும். இத்தகைய ஆன்மா இருந்தால் சில நேரங்களில் நம்மை அறியாமலே (பிடிவாதமாக) இயக்கும்.

அவ்வாறு இயக்கும் அந்த ஆன்மா துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று உங்கள் நினைவைச் செலுத்துங்கள்.

அந்த ஆன்மாவிற்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெருக்கச் செய்தால் தீமையின் உணர்வைக் குறைக்கச் செய்து நமக்குள் நல்ல உணர்வின் தன்மை பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.

நாள் முழுவதற்கும் நாம் உடலிலே உழைக்கின்றோம். ஒரு பத்து நிமிஷம் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலிலுள்ள ஜீவாத்மாக்கள் பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நம் வாழ்க்கையில் நம்மையறியாமல் நாம் தவறு செய்யாமலே நம்முள் புகுந்து அது பல எண்ணங்களைத் திசை திருப்பும் அல்லது நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும்,

அல்லது பாசத்தாலே ஒருவருக்கு நன்மை செய்தாலும் அந்தப் பாசத்தின் உணர்வு கொண்டு ஒரு ஆத்மா நமக்குள் வந்து துன்பங்களை விளைய வைத்தாலும்
1.நாம் இந்தத் தியானத்தின் நிலைகள் கொண்டு அதை மாற்றியமைக்க முடியும்.
2.நாம் செய்த நன்மையின் தன்மையைக் காக்கவும் முடியும்.

அதே சமயம் அந்த உயிராத்மாக்களை விண் செலுத்த வேண்டும்.

அவ்வாறு விண் செலுத்தி விட்டால் பாசத்துடன் இருக்கக்கூடிய நிலைகள் நம் உடலிலே இருந்தாலும் அந்த இரு உணர்வின் தன்மை நம் உடலுக்குள் “ஆற்றல் மிக்கதாக” மாறும்.

இவ்வாறு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை “நம் இரத்தத்தில் கலக்கச் செய்யும் பழக்கம் வந்துவிட்டால்”
1.நம் உடலில் பிணிகள் இருந்தாலும் அல்லது வந்தாலும்
2.அதை அகற்றிடும் ஆற்றல்கள் பெற்று
3.”என்றுமே…” நாம் உடல் நலத்துடன் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ முடியும்.

படைப்பின் இரகசியம் என்ன…? படைப்பவனின் இயக்கம் என்ன…? ஈஸ்வரபட்டர்

 

பருப்பைப் பயிராக்கினால் பல பருப்பை அந்த ஒரு பருப்பு பலன் தருகிறது. ஒன்று வளர தன் வளர்ப்பின் பலன் தான் ஒவ்வொன்றும். சூரியன் தான் வளரப் மற்றதை வளர்க்கிறது.

1.ஒவ்வொரு இயற்கையின் ஜீவ வளர்ப்பும் தான் வளர
2.தன் வளர்ப்பில் பிற வளர்கிறதே தவிர
2.தன் வளர்ப்பில்லாமல் பிற வளர்ப்பு எச்சக்தியும் வளர்த்திக் காட்ட முடியாது.

தன் உணவைத் தான் எடுத்து தான் வளர்த்து தன் வளர்ப்பில் பிறவற்றையும் வளர்க்கச் செய்கிறது சூரியன். மற்ற மண்டலங்களின் ஈர்ப்பைத் தனக்கு உணவாக எடுத்துத் தான் வளர்ந்து தன் வளர்ச்சியின் பலனை வெளிப்படுத்தி அவ்வளர்ச்சியின் நிலையால் பிறவும் வளர்ந்து ஒன்றின் வளர்ப்பில் படர்கின்ற வளர்ப்பின் செயல் தான் எல்லாமே…!

தான் உட்கொண்டு தன் உணர்வை ஒவ்வொரு உயிரணுவும் ஜீவ சக்தி கொண்டு உணர்வால் எடுக்கும் முறை கொண்ட வழி கொண்ட தொடர் நிலைப்படி தான் சகல நிலைகளும் உள்ளன.

1.மிகவும் சக்தி வாய்ந்த அகில சக்தியான ஆதி சக்தியின் படைப்பிற்கே
2.தன் படைப்பின் உணவை உட்கொண்டு உட்கொண்டு
3.தன் படைப்பின் படைப்பில் பலவற்றையும் படைக்கின்றான்.

ஆக…
1.உயிரணு தோன்றி..
2.அவ்வுயிரணுவின் உயிர் தோன்றி..
3.உயிர் செயலின் வழித் தோன்றி…
4.உயர் ஞான சக்தியாகி…
5.சகலமும் காணும் சப்தரிஷியானாலும்…
6.“அந்தச் சப்தரிஷியின் உணர்வுக்கும்…!” தன் வளர்ப்பை வளர்க்க உணவு தேவை.

தான் உண்டு… தான் வாழ… பிறரையும் வாழ வைக்க முடியுமே அன்றி “பிறர் வாழ்ந்தால் தான் வாழ முடியும்…!” என்ற நிலை எதற்குமே இல்லை.

நட்சத்திர மண்டலங்களும்… வளர்ந்து விட்ட சகல மண்டலங்களும்… காற்றினில் கலந்துள்ள பல கோடி அமிலங்களின் ஜீவ சத்துக்களும்… நீரும்… ஒளியும்… அனைத்துமே… தன் உணவை உட்கொண்டு தான் வளர்ந்து கொண்டுள்ளளன.

1.உணர்வின் சுழற்சிக்கு உணவு தேவை
2.உணவில்லாமல் எந்த ஜீவத் துடிப்பும் உயிர் வாழ்வதில்லை.

ஜீவனுடன் கூடிய பிம்ப உடலுடைய மனிதன் “ஜீவ சக்தி கொண்ட நீரையும் திடப்பொருள் உணவையும்” உட்கொண்டு வாழ்கின்றான்.

மிருகங்களும் மனிதனை ஒத்த நிலையில் வாழ்கின்றன. தாவரங்களின் நிலை “ஈர்ப்பின் சுவாசமுடன் உணவை” உட்கொண்டு அவை வாழ்கின்றன.

உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்கள் உணர்வின் எண்ண நிலைக்கொப்ப தன் உணர்வு அழியாவண்ணம் நுகர்ந்து
1.தான் வாழ்ந்த காலத்தில் உண்டு வாழ்ந்த ஆகாரங்களின் வாசனையின் உணர்வை ஈர்த்து
2.தன் உணர்வுக்குகந்த உணவைக் காற்றிலிருந்து தன் சுற்றத்தாரின் உணர்வுடன் கலந்து
3.தன் உணவை உட்கொண்டுதான் ஆவி நிலையில் உள்ளவர்களும் வாழ்கின்றனர்.

ஆக..
1.ஜீவனற்ற பொருள்களுக்கு எதுவும் தேவையில்லை.
2.ஆனால் ஜீவனற்ற பொருளும் ஆவியாகக் கரைந்து பிறவற்றுக்கு ஆகாரமாகத்தான் செல்கிறது.
3.உணவில்லாமல் எந்த ஜீவ சக்தியும் வாழ்வதில்லை.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இன்றைய விஞ்ஞான அறிவால் உலகில் நச்சுத்தன்மைகள் வந்து கொண்டிருக்கின்றது.

ஏனென்றால் இனி “நாம் யார்…?” என்று ஒருவருக்கொருவர் அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத நிலை வரும் வாய்ப்புகள் இருக்கின்றது. (ஏற்கனவே 2004 டிசம்பரில் இப்படித்தான் நடந்தது)

1.அடையாளம் தெரிந்து கொள்ளக்கூடிய அளவிற்காவது நாம் தியானம் எடுத்தாக வேண்டும்.
2.இல்லை என்றால் நம்மை நாம் அறிய முடியாது. என் குழந்தை யார்…! என் பிள்ளை யார்…! என்பதை அறியவே முடியாது.

அத்தகைய சூழ்நிலை ஏற்கனவே வந்தாகிவிட்டது.

அணுக்கதிரியக்க நிலையும் கடும் விஷக் கதிரியக்கங்களும் கெமிக்கல் கலந்த குண்டுகளையும் நீரிலும் காற்றிலும் உணவுப் பொருள்களிலும் பல வகையிலும் தூவுகின்றனர்.

இதை போன்ற நிலை வரும் பொழுது மனிதனுடைய சிந்தனை இழக்கும் பொழுது
1.நீங்கள் யாரைத் தேடி எவரிடம் முறையிடப் போகின்றீர்கள்…?
2.எந்தக் கடவுள் உங்களைக் காப்பாற்றப் போகிறார்…? என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் உயிரே கடவுள். உங்கள் எண்ணமே இறைவனாகின்றது. இறையின் உணர்வு செயலாக்கப்படும் பொழுது
1.காக்கும் உணர்வு பெற்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வை
2.உங்கள் உடலுக்குள் இறையாக்குங்கள்
3.அந்த உணர்வைச் செயலாக்குங்கள்
4.வாழ்க்கையில் உங்கள் சிந்தனையைச் சீர்படுத்துங்கள்.
5.இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடையுங்கள்.

இதையெல்லாம் நீங்கள் தெளிந்து கொள்ளுங்கள்.

சும்மா சாமியைப் பார்த்தேன்… சாமியாரைப் பார்த்தேன்… கடவுளைக் கும்பிட்டேன்… அதைச் செய்தேன் இதைச் செய்தேன்…, என்று சொல்லலாம்… எந்தக் கடவுள்…!

நாம் எண்ணும் உணர்வுகள் நமக்குள் வரும் பொழுதுதான் கடவுளாகின்றது. உணர்வின் தன்மை இறையாகிவிட்டால் உணர்வைச் செயலாக்கும் பொழுது அந்தக் குணமே நமக்குள் தெய்வமாகச் செயல்படுத்துகின்றது.

நம் சாஸ்திரங்கள் இதைத் தெளிவாகக் கூறுகின்றது.

உங்கள் எண்ணம் தான் உங்களைக் காக்குமே தவிர…,
1.எண்ணத்தை வைத்துக் காக்கும் உணர்வை எண்ணினால்
2.”உயிர் காக்கின்றது…”
3.அது தான் வசிஷ்டர் பிரம்ம குரு.

வசிஷ்டர் தசரத சக்கரவர்த்திக்குப் பிரம்ம குரு. தீமையை நீக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரப்படும் பொழுது நம் உடலிலே “தீமையை நீக்கிடும் உணர்வுகள் பிரம்மமாகின்றது…”

அந்தச் சக்திக்குப் பெயர் அருந்ததி என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள். இதெல்லாம் நாம் தெரிந்து கொள்வதற்காக இப்படிப் பெயர் வைத்துள்ளார்கள் ஞானிகள்.

பத்தாவது நிலை அடையக்கூடிய நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறவேண்டும் என்று ஆசைப்பட்டால் அது நமக்குள் பிரம்ம குருவாகி “அருந்ததி…” தீமையை நீக்கிய அந்தச் சக்தி (அது) நமக்குள் உள் நின்று இயக்கும்.

அருந்ததி என்றால் எதன் உணர்வின் தன்மை பிரம்மமாகி நம் உடலாகின்றதோ இந்தப் பத்தாவது நிலை அடையும் அதனுடன் இணைந்து வாழும் சக்தி என்ற நிலைகளைத் தெளிவாக்கப்படுகின்றது.

இதை உங்கள் மனதில் வைத்து இந்த உடலுக்கு முக்கிய தத்துவம் கொடுக்காதபடி உங்கள் உயிருடன் ஒன்றியே வாழுங்கள்.

அதைப் போல ஒளியின் அறிவாக நமக்குள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அறிவை ஊட்டுங்கள். இருளை நீக்கும் அருளைப் பெருக்குங்கள்.

“மனிதனுடைய எண்ண வலு” தன்னையும் வாழ வைத்து… பிறரையும் வாழ வைக்கும் சக்தியாக வர வேண்டும்

 

ஒருவனைத் தொலைந்து போக வேண்டும் என்று சொன்னால் போதும். அதை அவர் கூர்ந்து கவனித்தால் ஊழ்வினை என்ற வித்தாக அவருக்குள் பதிவாகி விடுகின்றது.

என்னை இப்படிச் சொன்னான் என்ற நிலையில்…
1.அவனைப் பார்… நான் என்ன செய்கிறேன்…? என்று என்ற உணர்வுகள் அங்கே விளைந்து
2.அவன் நல்ல செயல்களை எல்லாம் ஒடுக்கிவிட்டு இவனைத் தாக்க வேண்டும் என்ற உணர்ச்சிகளே வந்துவிடும்.

அவருடைய உடலுக்குள் இருக்கும் நல்ல உணர்வையும் வளர்ப்பது இல்லை. இவன் சொன்ன நிலையை வேதனையாக எண்ணி
1.இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்ற உணர்வை அங்கே ஊட்டி
2.அவனுக்குள் இருக்கும் நல்ல உணர்வுகளை எல்லாம் இரண்டில் ஒன்று பார்த்துவிடும்.

ஒருவன் “தீங்கே விளைவிக்கின்றான்…” என்றால் இந்த மனித உடலுக்குள் விளைய வைத்த இந்த எண்ணம் அங்கே நுழைந்து விடுகின்றது.

பின்… இவன் உடலிலே விளைந்தது திருப்பி அங்கிருந்து வந்தவுடனே…
1.அவ்வளவு திமிரா…? இரு நான் பார்க்கின்றேன்… என்ற இந்தத் தீய உணர்வலைகளை விளைய வைத்து
2.இந்த உணர்வின் நிலைகள் உடலுக்குள் ஜீவான்மாவாக மாறுகின்றது.
3.சொல்லாக அது வரப்படும் பொழுது பரமாத்மாவாக மாறுகின்றது.

பரம் என்பது பூமி. சூரியனின் காந்த சக்தி சொன்ன உணர்வலைகளைக் கவர்ந்து இப்படிப் பரமாத்மாவாக மாற்றுகின்றது.

பரமாத்மாவாக மாற்றிய நிலையில் இது சிறுகச் சிறுக விளைந்து மழை பெய்யும் மேகத்திற்குள் கொண்டு சென்ற உடனே நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணத்தையும் அழிக்கின்றது.

தொலைந்து போகும் மழை இந்த நேரத்தில் தானா வர வேண்டும் என்று மழையைச் சொல்கின்றோம். இதைச் சாதாரணமாக வேடிக்கையாகச் சொல்லலாம். ஆனால் மழை பெய்வதைத் தடுக்கும் சக்தியாக அது மாறுகிறது.

ஏனென்றால் மனிதன் என்பவன் முழு முதற்கடவுள் என்று அதற்குத் தான் விநாயகனைப் போட்டுக் காட்டியுள்ளனர் ஞானிகள்.

1.யானையின் தலையைப் பொருத்தி மனித உடலைப் போட்டு
2.நாம் புழுவிலிருந்து மிருகமாகி மிருகத்திலிருந்து தன்னைக் காத்திடும் உணர்வின் எண்ண வலுவாகி
3.அந்த எண்ணத்தின் வலுக் கொண்டு மனித உருவை உருவாக்கியது நமது உயிர் என்ற நிலையை
4.எண்ண வலு கொண்டு எதையும் சாதிக்கும் அவ்வளவு வல்லமை பெற்ற இந்த நிலையை
5.அதனின் வலு துணை கொண்டு மனிதனைக் காட்டிலும் மிக சக்தி வாய்ந்த உணர்வை ஈர்த்து
6.நம் உடலுக்குள் இணைக்கும் சந்தர்ப்பம் மனித உடல் பெற்ற நிலையில் நம் ஆறாவது அறிவிற்கு உண்டு.

அதனின் துணை கொண்டு மெய் ஞானிகள் இந்த வாழ்க்கையில் வென்று சென்ற அந்த உணர்வை நாம் கவர்ந்து நம் உடலுக்குள் அதை இணைப்போம் என்றால் அந்தச் சந்தர்ப்பம் மனித வாழ்க்கையில் வரும் நஞ்சினை நீக்கும் நிலை வருகின்றது.

நஞ்சின நீக்கும் உணர்வின் ஆற்றலாக நாம் வெளிப்படுத்துவதை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பரமாத்மாவாக மாற்றிக் கொள்கின்றது.

நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஜீவாத்மாவாக விளைந்து அதனின் உணர்வு பெருக அந்த ஆற்றலின் வலிமை கொண்டு
1.நாம் எதைப் பரமாத்மாவில் கலக்கச் செய்தோமோ
2.அதிலே பெருகுவதை எடுத்துத் தனது ஆத்மாவாக மாற்றுகின்றது.

நாம் எண்ணிய உணர்வின் சத்து நம் உடலுக்குள் விளைந்து உயிராத்மாவில் விளைந்து ஒளியாக மாறுகிறது. நாம் ஒளி உடல் பெறுகின்றோம்.

ஞானிகளின் அருகாமை நமக்கு எப்போது கிடைக்கும்…?” – ஈஸ்வரபட்டர்

 

காட்சி:-
தியானத்தில் அமர்ந்து குருநாதரால் உபதேசிக்கப்படும் உபதேசத்தைக் கேட்பதற்கு முன் ஈஸ்வரபட்டரின் உருவமும் அவர் ஆசியும் கிடைத்தது.

ஒரு பக்கம் அவரும் மற்றொரு பக்கமும் நானும் அமர்ந்துள்ள நிலையில் அவருடன் தொடர்பு கொண்டதின் சக்தியினால் அவரிடமிருந்து நான் பெற்ற அருள் மொழிகள்… அவர் உணர்த்திய உண்மைகள் எல்லாம் தியானத்தின் மூலம் அவரிடமும் ஞானகுருவிடமும் தொடர்பு கொண்டிருந்தாலும்
1.அவர் உணர்த்தும் உபதேசங்களைக் கேட்டுக் கொண்டிருந்தாலும்
2.அவர் உபதேசித்த செயல் வடிவை என்னால் செயலில் காண முற்பட்டும் முன்னேறும் நிலை பெறவில்லை.

விளக்கம்:-
அவரிடம் தொடர்பு கொண்டவுடன்… என் எண்ணத்தில் “சகலத்தையும் அறியக்கூடிய உணர்வு எண்ணத் துடிப்புடன்” ஈஸ்வரபட்டரிடம் ஆசி கேட்டேன்.

உடனே தன் கையால் வாயை மூடிக் கொண்டார்…! எனக்கும் அவருக்கும் மத்தியில் மிகப் பெரிய நீளமான “திரைச் சீலை” ஓடியது.

திரைச் சிலைக்கு அப்பக்கம் மாமகரிஷி ஈஸ்வரபட்டரும் இந்தப் பக்கம் நானும் அமர்ந்துள்ள நிலையில் திரைச் சீலையின் இப்பக்கம் இருந்தே அவர் அமர்ந்திருப்பதுவும் பேசுவதும் கேட்கின்றது.

ஆனால் எனக்கும் அவருக்கும் மத்தியில் திரை…!

இந்தத் திரைக்குப் பொருள் என்ன…? என்று வினா எழுப்புகின்றார் குருநாதர்.

உடனே என் எண்ணத்தில் நான் இன்னும் பயந்த நிலையில் தான் இருக்கின்றேன்….! அவர் உணர்த்துவதை எடுத்துச் சொல்லும் பக்குவம் ஒன்று தான் உள்ளது. அவர் அருளும் ஞானத்தின் வழி செயல் அடைய முடியாததற்கு இந்தப் பயம் தான் திரையாக உள்ளதா…? என்று எண்ணியவுடன் தலையை மட்டும் அவர் ஆட்டுவதை உணர்ந்தேன்.

பிறகு தியானத்தில் ஒரு நொடிப் பொழுதில் என் நினைவு இவ்வுலகக் குடும்ப எண்ணங்களுடன் மோதுண்டது.
1.என் உறவினரில் ஒருவர் அறியாது பெருமை கொள்ளும் செயலின் எண்ணம் வந்தது
2.பிறகு பிறரிடம் நெருங்கிய அந்த உறவினரின் குறையை நான் எண்ணிப் பார்க்கும் பொழுது
3.இதை எப்படியும் குருநாதர் நிறைவுபடுத்தித் தந்து விடுவார்… என்ற எண்ண மோதலில்
4.குருவிடம் அப்பொழுது அதை எண்ணித் தியானிக்கவும் செய்தேன்.

இப்படி வரிசையாக எண்ணங்கள் சென்ற பின் இப்பொழுது உனக்கும் எனக்கும் மத்தியில் உள்ள திரை எதற்கென்று புரிந்ததா…? என்று குருநாதர் கேட்டார்.

உன் குடும்பச் சுழற்சியில் எந்த ஒரு நிலைக்கும்…
1.எண்ணத்தின் ஈர்ப்பை அவர்களிடம் செலுத்தி
2.அவர்களுடனே ஒன்றி
3.அவர்களுக்காக வேண்டுகிறாய்.

பந்தம் பாசம் அன்பு பரிவு அனைத்தும் வேண்டியது தான். “பற்றற்ற நிலை…” என்ற உபதேசத்தை என்னிடம் பெற்றவரும் நீ தான். ஆனால் உன் ஞானத்தால் பற்றற்ற நிலையின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மற்ற உறவினர்களைக் காட்டிலும் இரத்தத் தொடர்புடைய சொந்தங்களின் ஈர்ப்பு அதிவிரைவில் நம்மை வந்து சாடும்.

தியானத்தால் நல்வழிப்பட்டு ஞானத்தின் பால் நீ செல்ல வேண்டிய நிலையில்… பந்த பாசங்களின் உணர்வு எண்ணத்தை உன்னுள் அவர்களின் நிலையையெல்லாம் ஏற்றிக் கொண்டே வருகின்றாய்.
1.அவர்களுக்காக அதே சுழற்சி வாழ்க்கையிலேயே இருந்து
2.அவ்வெண்ணத்துடன் உன் எண்ணத்தைக் கலக்கவிடுவதனால்
3.உன் ஞான வளர்ச்சியும் வளர முடியாது.

பந்தபாசங்களை எல்லாம் நீ ஒதுக்கிவிட்டு ஞான வழிக்கு வா…! என்று உணர்த்தவில்லை.

அவர்களிடம் உள்ள குறையையும் நிறையையும் உண் எண்ணத்துடன் நீ ஏற்றிக் கொள்ள வேண்டியதில்லை.
1.அவர்களின் நிலைக்காக அவர்கள் எண்ணச் செயல் மோதும் பொழுதெல்லாம்
2.அவர்களுக்கு நல் உணர்வு தா ஈஸ்வரா…
3.அவர்கள் நிலை உயரட்டும்…! என்ற எண்ணத்துடன் இறைசக்தியின் அலையைச் செலுத்த வேண்டும்.

ஆகவே
1.அவர்கள் உணர்வலையுடன் நீ கலக்காமல்
2.நீ பெற்ற நற்சக்தியின் அலையைக் கொண்டு அவர்கள் உயர
3.உன் எண்ணத்தைச் செலுத்திடல் வேண்டும்.

பிறரின் எண்ணச் சுழற்சியில் “நீ சிக்காமல்…” உன் எண்ணச் சக்தியை இறை சக்தியின் செயலாக அவர்களிடம் செலுத்திவிடு…! என்று உபதேசம் அளித்தார் ஈஸ்வரபட்டர்.

இப்பொழுது தெரிகிறதா உனக்கும் எனக்கும் உள்ள திரை எதற்கென்று…? என்று மறுபடியும் வினா எழுப்பினார் குருநாதர்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மெய்ஞானிகளின் அருள் சக்திகளை யாம் பெறுவதற்குப் பல சம்வங்களை நிகழ்த்தினார். எமக்குப் பல சிரமங்களை ஏற்படுத்தி அதைக் கொடுத்தார்.

1.உங்கள் வாழ்க்கையில் எப்பொழுது சிரமங்கள் வருகின்றதோ
2.சந்தர்ப்பம் எது உங்களை இன்னலையும் மன பயத்தையும் கோபத்தையும் ஆத்திரத்தையும் விரக்தியையும் ஏற்படுத்துகின்றதோ
3.அப்பொழுது “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

மெய் ஞானிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் சேர்த்து அந்தத் துன்பத்தை விளைய வைக்கும் உணர்வின் ஆற்றலைத் தணியச் செய்யுங்கள்.

உங்கள் உடலில் வியாதியும் எண்ணத்திலே பல கலக்கமும் மன வேதனையும் மனக் குடைச்சலையும் ஏற்படுத்தும் இந்த உணர்வின் ஆற்றலை அது நம்மை ஆட்டிப்படைக்காதபடி நமக்குள் நல்லதாக மாற்றிடல் வேண்டும்.

கருணைக் கிழங்கை வேக வைத்துப் பல பொருள்களை அதனுடன் இணைத்துச் சுவையாக்கி நாம் உட்கொள்கின்றோம். அதன் மூலம் உடலுக்கு நாம் ஆரோக்கியமான நிலைகள் பெறுகின்றோம்.

அதைப் போன்று எத்தகைய துன்பங்கள் நமக்குள் வந்தாலும் அந்தத் துன்ப உணர்ச்சிகள் நமக்குள் தூண்டாவண்ணம் அதை அடக்கி
1.இன்பத்தின் சொல்லாலும்
2.இன்பத்தின் உணர்வுகளை நமக்குள் தூண்டி
3.விண்ணின் ஆற்றலை நாம் பெறும் தகுதியை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் இதைப் போன்று விண்ணின் ஆற்றலைக் கூட்டிக் கொள்ளும் நல்ல சந்தர்ப்பமாக மாற்றிக் கொள்ளலாம்.

அப்பொழுது அந்த மெய் ஞானிகளின் அருளாற்றல்கள் உங்களுக்குள் பெருகும். யாம் இப்பொழுது உபதேசிக்கும் உணர்வுகள் அனைத்தும் மெய் ஞானிகள் அவர்களுக்குள் விளைய வைத்து வெளிப்படுத்திய உணர்வுகள் தான்.

அந்த மெய்ஞானிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த இன்னல்களிலிருந்து தன்னை மீட்டிக் கொள்ள எத்தகைய உணர்வின் ஆற்றலைத் தனக்குள் கூட்டிக் கொண்டார்களோ அத்தகைய உணர்வின் தன்மையை
1.நீங்கள் சாதாரணமான நிலையில் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே
2.உங்களுக்குள் பதியச் செய்து விடுகின்றோம்.

“ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியிலிருக்கும் உங்கள் உயிரன ஈசனிடம் தொடர்பு கொள்ளுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று கண்ணின் நினைவினை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை உடல் முழுவதும் பாய்ச்சுங்கள்.

இது தான் தியானம் என்பது.

பூமி அடையப் போகும் நிலை – ஈஸ்வரபட்டர்

 

சூரியனின் ஒளி அலையின் தொடர்பின் பிம்ப நிலை கொண்டு சிவனாகவும் ஈர்ப்பு நிலை கொண்டு சக்தியாகவும் வளர்ப்பின் படைப்பைக் கொண்டு உருவான உலக சக்தியே சூரியனைக் காட்டிலும் சக்தி வாய்ந்த நிலை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய “சக்தி பூமி இது…!”

இக்கலியின் மாற்றத்திற்குப் பிறகு…
1.இப்பூமியில் இன்றுள்ள மனித ஆத்மாக்களின் நிலை மாறி உருவங்கள் மாறு கொண்டு
2.பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு பூமியின் ஈர்ப்பு ஓட்ட சக்தி
3.சூரியனைக் காட்டிலும் துரிதம் கொள்ளக்கூடிய நிலை கொள்ளப் போகின்றது.

உருவத்திலே சூரியனை விடச் சிறியதாக இருக்கும் காலத்திலேயே இதன் ஈர்ப்பு சக்தியினால் இதன் ஓட்ட நிலை துரிதம் கொண்டு… இன்றெப்படி சூரியனைச் சுற்றி சூரிய குடும்பமாக சூரியனைச் சேர்த்து நாற்பத்தி எட்டு மண்டலம் உள்ளதுவோ அதைப் போன்று “பூமியின் ஈர்ப்பில்…” சூரியனும் சுழலப் போகின்றது…!

சூரியனை மையம் கொண்டு இன்று சுழலும் நிலையே பூமியை மையம் கொண்டு சுழலக்கூடிய நிலை உருவாகப் போகின்றது.

உயர் படைப்பின் படைப்பில் பலவுண்டு…!

1.அப்படைப்பிலேயே வளர்ச்சி கொள்ளும் நிலை கொண்டு
2.படைப்பின் படைப்பைக் காட்டிலும் உயர் படைப்பாவது தான் சக்தி நிலையே அன்றி
3.படைப்பின் குறுகும் நிலையல்ல உயர் சக்தியின் நிலை.

இப்பூமியில் ஞானத்தின் சக்தி கொண்ட மனிதக்கரு வளர்ந்துய்யும் நிலை கொண்டு… சக்தியின் நிலையினால் மனிதனின் ஞான வலுவால் ஆத்ம பலம் கொள்ளும் நிலை பெற்ற நம்மைப் படைத்த அவ்வாதி சக்தியின் படைப்பின் வலுக் கொண்ட சப்தரிஷிகளின் படைப்புடன் மனித ஆத்மாவின் ஆத்ம ஞான வளர்ச்சியினால் பூமியின் நிலை வளர்ந்தது.

பூமியின் ஈர்ப்புச் சுற்றலின் ஓட்டம் துரிதம் கொண்டு சுழலும் தன்மையில் பூமியின் ஈர்ப்புடன் வாழக்கூடிய சக்தி நிலை மனித உரு நிலைக்கு ஒப்பாமலும்
1.பூமியை மையம் கொண்டு சுழலும் பூமியின் ஈர்ப்புக்கு வரும் பிறிதொரு மண்டலத்தில் (சந்திரன்)
2.மனிதக் கரு உருவம் வளரக்கூடிய நிலைக்கு இன்றெடுக்கும் ஆத்ம சக்தியின் பலத்தால் “மனித இனம் வளரும்…!”

நொடிக்கு நொடி மாறிக் கொண்டே சுழல்கின்ற அனைத்து நிலைகளிலும் இன்றுள்ள மனித ஆத்ம பிம்ப நிலைக்கொப்ப உருவம் தான் இருக்குமா…! என்றால் அதுவுமில்லை.

1.ஒன்றை ஒத்த நிலையில்… ஒன்றிலிருந்து மாறுபடும் உணர்வின் எண்ணமானது
2.ஆவி நிலை கொண்டு மீண்டும் மீண்டும் ஆவியாகிப் பிம்பமாகி ஆவியாகிப் பிம்பமாகும் தருணத்தில்
3.எந்த ஒரு குண அமிலத் தன்மையும் மாறிக் கொண்டேதான் இருக்கும்.

நம் பூமியின் இயற்கைத் தன்மையில் கனி வளங்களின் ஆரம்பக் குண அமில வளர்ப்பில் வளர்ந்த தாவரங்களின் வளர்ச்சி நிலையில் மனிதக் கரு வளர்ச்சியும் மற்ற ஜீவராசிகளின் நிலையும் பூமியின் அமிலப் படைப்புக்கந்த இன வளர்ச்சியின் நிலைத் தொடரே பெற்றோம்.

நம் பூமியின் தாதுப் பொருட்களில் அதிகமாக உள்ளது எது…? இரும்பு தான் மற்ற தாதுப் பொருட்களைக் காட்டிலும் இப்பூமியில் அதிகம்.

ஆனால் இப்பூமியின் ஈர்ப்பு சுழன்று வேகம் அதிகம் கொள்ளும் நிலையில்… பூமியின் ஈர்ப்புச் சுழற்சி துரித ஓட்டத்தினால்… பூமி இழுத்து வெளிக்கக்கும் சுவாச அலையினால்… பூமியின் ஈர்ப்பிற்கு மற்ற மண்டலங்களிலிருந்து வரக்கூடிய அமில குணத்தின் நிலையைக் கொண்டு…
1.இன்று இரும்பையே அதிகமாகக் கொண்டுள்ள இப்பூமியின் கனி வளத்தன்மையே
2.இரும்பு உள்ள நிலைக்கொப்ப தங்கம் வளரப் போகிறது… இது உண்மை..!
3.சூரியனின் நிலத் தன்மையில் தங்கத்தைக் காட்டிலும் சக்தி கொண்ட தாதுப் பொருள் உண்டு.

இரும்பைக் காட்டிலும் தங்கத்தின் குணம் உயர்ந்ததா…? இரும்பைக் காட்டிலும் தங்கம் எத்தன்மைக்கும் இளகி வரும் குண நிலை கொண்டது. தங்கத்தை நுண்ணிய இழைகளாகவும் உருவாக்க முடியும்.

இரும்பை அதி உஷ்ணப்படுத்தித்தான் அதற்கு உருவங்கள் அமைக்க முடியும். மிகவும் உறுதி கொண்ட திடப்பொருள் இரும்பு. ஆனால் இளகும் தாதுப் பொருள் தங்கம்.

இன்று பூமியின் இரும்பின் குண அமிலம் நிறைந்த தாதுப் பொருள் உள்ள நிலைக்கொப்ப இப்பூமியில் வளரும் ஜீவன்களின் அமில வளர்ச்சியும் அதன் குணத்திற்கொப்ப இருக்கிறது.

இன்று ஓடும் பூமியின் சுழற்சி ஓட்டத்தின் வேகம் கொள்ளும் நிலைக்கொப்ப பூமியின் தாதுப் பொருட்களின் நிலையும் மாறுகொள்ளும்.

இரும்பெல்லாம் தங்கமாகும் நிலை உருவாகப் போகிறது. இப்பூமியில் இனி வரப் போகும் கல்கி காலத்தில் எல்லா நிலைகளும் ஒவ்வொரு நொடிக்கும் மாறிக் கொண்டு தான் உள்ளன.

1.ஆவி பிம்பமாகி..
2.பிம்பம் ஆவியாகிச் சுழலும் நிலைக்கொப்ப “உருண்டு வளரும் நாம்”
3.சுழற்சியுடன் ஒன்றிய எண்ணத்தின் வழித் தொடரில் இருந்தோமானால்
4.சுழற்சியுடன் சுழன்று கொண்டே ஆவியாகிப் பிம்பமாகி மீண்டும் ஆவியாகும் அதே சுழற்சியிலிருந்து பிம்பமான
5.பல கோடி கோடி ஆண்டுகளுக்குப் பலவற்றையும் வளர்க்கும் படைப்பாண்டவன் ஆகலாம்… (எதன் வழியில்..?)
6.இவ்வெண்ணத்தை ஞானமாக்கி… “ஞானத்தால் ஜீவ ஆத்ம பலம் உய்யும் வழித் தொடர் கொண்டு…!”

ஒரு வருடத்தில் பெய்யும் மழை ஒரே நாளில் பெய்யக் காரணம் என்ன…?

ஆடி மாதக் காலங்களில் காற்று அதிகமாக அடிக்கிறது. காரணம்…
1.வறட்சியாக இருக்கும் பொழுது மனிதர்கள் நாம் நீரைத் தேடி அலைவது போல
2.முதலில் வெப்பத்தால் ஆன அணுக்கள் மேகம் ஆகும் பொழுது
3.சனிக்கோள் உமிழ்த்திய நிலைகள் வந்தவுடனே பெரும் ஆவி மண்டலமாக மாறும்.

நாம் அடுப்பில் பொருளை வைத்து வேக வைத்தால் எப்படி ஒவ்வொரு அணுக்களிலும் பட்டுப் புயல் போல (கொதிப்பாகி) மாறுகிறதோ அது போல் தான் பூமியில் காற்றலைகள் அதிகமாக வரும்…!

அதைத் தான் ஆடிப்பெருக்கு…! என்று சொல்வது.

ஒவ்வொன்றும் அசைந்து ஒவ்வொன்றுடன் இசைந்து இதனின் நிலைகள் மேகமாக மாறி ஆடி மாதம் மேகங்களாகக் கூடி மழை பெய்யும் நிலையாக வருகிறது.

அதாவது வெயில் காலம் முடிந்து மழைக்காக வேண்டி காய்ந்து கருவாடான நிலையில் அந்த வெப்பத்தின் தன்மை பூமிக்குள் அதிகமாகி அதில் இருக்கும் நீர் எல்லாம் ஆவியாக மாறி விண்ணைச் சென்றடைகின்றது.

மேலே மேகங்களாகச் சென்றடையப் படும்போது இன்றைய விஞ்ஞான உலகில் வெளிப்படுத்தும்
1.லேசர் ஒளிக் கற்றைகளும்
2.ரேடியோ அலைகளும் டிவி அலைகளும்
3.எலக்ட்ரானிக் அலைகளும் அதிக அளவில் பரவி அந்த அலைகளும் அதனுடன் கலக்கின்றது.
4.கலந்தபின் எதிர்நிலையாகி நஞ்சின் தன்மை அடைந்து மேகங்கள் நீராக வடியும் தன்மை குறைகின்றது.

ஆனால் அதே சமயத்தில் விஞ்ஞானத்தின் வீரிய அலைகள் கலந்தவுடனே நீர் மேகங்கள் அனைத்தும் ஒரு பக்கம் அஞ்சி ஒதுங்குகிறது.

இப்படி மற்ற பக்கம் ஒதுங்கினாலும்
1.இந்த நிலைகள் ஒன்றுக்கொன்று மோதி ஒன்றுக்குள் ஒன்று உராய்ந்து
2.அங்கே மழை கொட்டு கொட்டென்று கொட்டி கடும் சேதத்தை விளைவித்து
3.யாருக்கும் பயனற்றதாகப் பெய்து நாட்டைக் கெடுக்கின்றது.

பெரும்பகுதி இன்று உலகெங்கிலும் இதைப் பார்க்கலாம். மழை பெய்து ஒரு பக்கம் கெடும். இன்னொரு பக்கம் இந்த உணர்வலைகள் பட்டு மழையே சுத்தமாக இல்லாது கடும் வறட்சியாக இருக்கும்.

இன்றைய சூழ்நிலையில் விஞ்ஞான அறிவு பல வகையிலும் வளர்ச்சிக்கு வந்தாலும் அதனால் இத்தகைய கடுமையான விளைவுகள் ஏற்பட்டுக் கொண்டுள்ளது.

இது மட்டுமல்ல…! இன்று வாழும் மனிதர்களும் தன் வேக நிலைகள் கொண்டு வேலைக்கோ மற்ற அலுவல் காரணமாக வெளியிலே செல்கிறனர். வெண்மையான ஆடைகளையும் உடுத்திச் செல்கிறனர்.

அப்போது இரண்டு மழைத்துளி விழுந்து விட்டால் போதும்…
1.சனியன்… தொலைந்துபோன மழை இந்த நேரத்துக்கிறாக வரவேண்டும் என்று திட்டத் தொடங்குகின்றனர்.
2.தொலைந்து போகும் மழை என்ற உணர்வைத் தான் நமக்குள் படைத்து அதையே வெளிப்படுத்துகின்றோம்.

பூமியில் உருப்பெற்ற உருக்களிலே மனிதனின் எண்ணம் மிகவும் ஆற்றல் கொண்டது.

1.மழையைத் திட்டிய உணர்வுகள் விஷ வித்துக்களாக மாறி
2.இந்த உணர்வுகள் சிறுகச் சிறுகக் கூடி மழையைப் பொய்த்துப் போகும்படி செய்கிறது.

அல்லது அனைவருக்கும் பலனில்லாது கொட்டு கொட்டு என்று ஊரையே நாசமாக்கும் தன்மையாகப் பெய்கிறது.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் ஞானிகள் காட்டிய அருள் வழியினைக் கடைப்பிடிக்க வேண்டும். நம் பேச்சால் மூச்சால் பார்வையால் உலகைக் காக்கும் சக்தியாக நாம் வளர வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நீங்கள் உயர்ந்து வாழ்ந்திட தவமிருக்கின்றேன். எனக்கு (ஞானகுரு) வேறு வேலை ஒன்றும் இல்லை.

சதா துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியும் நீங்கள் பெற வேண்டும் என்ற அந்த அலைகளைப் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றேன்.

விஞ்ஞான அறிவால் எந்தெந்த வகையில் தீமைகள் விளைகின்றது…? அதிலிருந்து உலக மக்களை எவ்வாறு காத்திட வேண்டும்…? என்ற உணர்வினைச் செலுத்தி அந்த ஆற்றல்கள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

அனைவருக்கும் இந்தச் சக்திகள் கிடைக்க வேண்டும் என்று சதா எண்ணுவதே என்னுடைய தவமாகும்.

தியானம் செய்யும் நீங்களும் இதைப் போன்று உலக மக்கள் நலம் பெறத் தியானியுங்கள். உலக மக்கள் நலம் பெறத் தவமிருங்கள். அந்தப் பண்படும் உணர்வுகளை உங்களுக்குள் வளர்த்துப் பழக வேண்டும்.

அப்படிச் செய்தால்தான் விஞ்ஞான அறிவால் இனி வரும் பேரழிவிலிருந்து நம்மைக் காத்து மக்களையும் காக்க முடியும்.

தனக்குள் மோதுவதைச் சூரியன் தன் அரவணைப்புடன் தான் கவர்ந்து நஞ்சினைப் பிளந்து ஒளியின் சுடராக இந்த உலகத்தை இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது.

இதைப் போல நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நம் அனைவரது உணர்வுகளையும் ஏற்று அந்த நஞ்சினைப் பிளந்து நஞ்சினைப் பிளந்திடும் உணர்வலைகளைப் பரப்பிக் கொண்டுள்ளார்.

1.நாமெல்லாம் அருள் ஒளியின் சுடராகப் பெற்று பேரொளியாக வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை.
2.குருநாதரின் அருளை அனைவரும் பெறும் தகுதியை இந்த உபதேசத்தின் மூலமாக ஏற்படுத்துகின்றோம்.

அனைவரும் குரு அருளைப் பெற்று அவரின் துணை கொண்டு எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று மகிழ்ந்து வாழ்ந்திட எனது ஆசியும் அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

நீங்கள் அனைவரும் மகிழ்ந்து வாழ்வதைக் காண வேண்டும். அதில் பேரானந்த நிலைகளைப் பெற வேண்டும் என்று தான் குருநாதர் எமக்குச் சொன்னார். குரு இட்ட கட்டளைப்படித்தான் இதைச் செய்து கொண்டிருக்கின்றேன்.

ஞானிகளால் கொடுக்கப்பட்ட காவியங்களில் உள்ள மூலங்கள் சாதாரணமானதல்ல

 

ஒரு மனிதன் வேதனைப்படும் சொல்லைச் சொன்னான் என்றால்
1.அந்த வேதனையான உணர்வு நம்மைத் தாக்கி…
2.அதே வேதனையான சொல்லைத்தான் நாமும் திருப்பிச் சொல்லுவோம்…

ஒருவரை வேதனைப்படும்படி பேசினால்… அல்லது வேதனையுடன் ஒருவர் பேசினால்… இந்த வேதனை அவர்களைத் தாக்கப்படும் பொழுது அதே தாக்குதல் திரும்பி நம்மையும் தாக்கும்.

அதே சமயத்தில் அன்புடன் பண்புடன் மகிழ்ச்சியுடன் ஒருவர் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை எண்ணினால் இந்தச் சொல் அவரைப் அன்புடன் பண்புடன் வாழ்ந்திட வளர்ந்திட உதவும்.
1.அதே உணர்வின் இயக்கமாக நம்மையும் பண்புடன் வாழச் செய்திட
2.அந்த எதிர் பதிலாக அங்கிருந்து வரும்.

ஒருவர் கொடுமைக்காரர் என்று நாம் சொல்கிறோம். அவருடைய செயல் பிறருடைய நிலைகளைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கும் தன்மையாக வரும் போது அது வலிமை மிக்கது. அந்த வலிமை மிக்க நிலைகள் யார் கேட்டாலும் இந்த வலுவின் தன்மையே அங்கே வரும்

மேலே சொன்னது போன்று தான் அருள் மகரிஷிகளின் உணர்வின் ஆற்றல்களைக் “கல்யாணராமன்” என்று அழைக்கின்றார்கள்.

அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாக ஆன நிலையில்
1.தனது வாழ்க்கையில் வந்த கொடுமைகளையும் கொடூரச் செயல்களையும் கண்டுணர்ந்து
2.அதைத் தனக்குள் வளராது “தன்னுடன் அரவணைத்து” தன்னுடன் இணைந்து இயக்கும் சக்தியாக மாற்றுகின்றான்.
3.ஆக… தீமைகளை விளைவிக்காது நல்லதாக மாற்றிக் கொள்கின்றான்.

இராமன் கல்யாணராமனாக எப்பொழுது ஆகின்றான்…?

வில்லை வளைத்து அதிலே கணைகளை ஏற்றும்போது தான் பிறருக்குத் துன்பங்கள் விளைவிக்கிறது என்பதால் பிறருக்குத் தீமைகளை விளைவிக்கும் அந்த வில்லையே இராமன் ஒடித்துவிடுகின்றான்.

இதைப் போல நீங்களும்…
1.உங்கள் வாழ்க்கையில் பிறருக்குத் தீமைகளை ஏற்படுத்தும் அத்தகைய கொடிய எண்ணங்களை அகற்றி விட்டு
2.அருள் ஞான உணர்வின் தன்மையை அனைவரும் பெற வேண்டுமென்ற எண்ணங்களை வளர்த்துக் கொண்டால்
3.நீங்களும் கல்யாணராமன் தான்.

நம்முடைய எண்ணம் பிறரை அரவணைக்கும் சக்தியாக மாறும். அந்த அரவணைக்கும் சக்திகளை நாம் எப்பொழுது பெருக்குகின்றோமோ அப்போது நாமும் கல்யாணராமன் ஆகின்றோம்.

ஆகவே கல்யாணராமன் என்றால் யார்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் தோன்றியவர்களில் அகஸ்தியன் அணுவின் ஆற்றலைத் தனக்குள் அறிந்தான். பூமியின் துருவத்தை நுகர்ந்தறிந்தான். அதனின் இயக்கத்தை அறிந்து மனிதனுக்குள் தீமைகள் எப்படி உருவாகிறது…? என்றும் உணர்ந்து கொண்டான்.

1.அந்தத் தீமையான உணர்வின் தன்மையைத் தனக்குள் அடக்கி ஒளியின் சுடராக மாற்றி
2.இன்றும் இந்தப் பிரபஞ்சத்தில் வரும் எத்தகைய கடும் விஷமானாலும்
3.அவை அனைத்தையும் ஒளியாக மாற்றித் தனக்குள் அரவணைத்து
4.ஒளியின் சுடராக மாற்றி அங்கேயே (துருவத்திலேயே) வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.

உங்களுடைய வாழ்க்கையில் நீங்களும் அந்தத் துருவ மகரிஷிகளின் சக்தியை எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.

யாருடைய தீமைகளை நீங்கள் பார்த்தாலும் அந்தத் தீமைகள் நீங்கி அவர்கள் மகிழ்ந்து இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள். வெறுமனே அல்ல… அருள் சக்திகளைச் சேர்த்து…!

அருள் மகரிஷிகளின் உணர்வை எண்ணத்தால் நீங்கள் எண்ணி வலுவாக்கிக் கொண்ட பின் யார் தீமை செய்கின்றார்களோ அவர்களுக்குள்… அந்தத் தீமை செய்யும் உணர்வுக்குள்… அந்த மகரிஷிகளின் அருளைப் பாய்ச்சுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பார்ப்போர் அனைவரும் பெற வேண்டும்… அவர்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்… மெய்ப் பொருள் காணும் திறன் பெற வேண்டும் என்று எண்ணினால் அவர்களுக்குள் மகிழ்ச்சி பொங்கும் உணர்வாக வரும்.

அந்த மகிழ்ச்சி அங்கிருந்து வெளிப்படும் போது அந்த உணர்வினை நீங்கள் நுகர்ந்தால் அந்த அருள் வழி உங்களுக்குள் கிடைக்கின்றது இருள் நீக்கும் நிலைகள் பெருகுகின்றது. ஒருவருக்கொருவர் அரவணைக்கும் கல்யாணராமனாக நீங்கள் ஆகின்றீர்கள்.

நாம் அனைவருமே…
1.அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்ற உயர்ந்த நிலைகளை எண்ணி இதைப் பெருக்கி
2.ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அவர்கள் உயர வேண்டும் என்றும்
3.அவர் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்றும்
4.அவர் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்றும்
5.அவர் தொழில்கள் வளம் பெற வேண்டும் செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும் என்றும்
6.இந்த உணர்வுகளை எடுத்துக் கொண்டால் இது கல்யாணராமன் ஆகிவிடுகின்றது

சரியான குருவின் துணை கொண்டு தான் விண்ணின் ஆற்றலைப் பெற முடியும் – ஈஸ்வரபட்டர்

 

இவ்வுலகம் தோன்றி உருளும் உணர்வில் ஒவ்வொரு அணுவும் தோன்றி வளரவும் உணர்வின் ஈர்ப்பு அமிலம் கொண்டே உருவாகி உணர்வாகி வந்த நிலையை நம் சித்தர்கள் காட்டிய வழியில் இராமாவதாரத்தில்
1.தந்தையின் குணத்தை உயர்த்தியும்
2.தந்தைக்குப் பின் தான் தாயின் நிலை காட்டப்பட்டுள்ளது.
3.அதே போல் உலகின் தெய்வமான சிவசக்தி என்ற சிவனை முதலிலும்
4.சக்தியின் நிலையைப் பிறகும் தான் உணர்த்தினர்.

ஆனால் நாம் வணங்கும் தெய்வத்தில் தாயை முதலிலும் தந்தையைப் பிறகும் தான் உணர்த்திக் காட்டி வணங்குகிறோம். இதன் உண்மை என்ன…?

எல்லாமே ஆதிசக்தியின் படைப்புத்தான்…!

1.ஆதிசக்தியின் படைப்பில் – “ஆவியான சக்தி நிலை”
2.திடம் பெறும் நிலைக்குச் “சிவன்” என்ற நாமத்தைச் சூட்டி
3.திடப்பட்ட பிம்ப நிலையின் ஈர்ப்புத் துடிப்பிற்குச் “சக்தி” என்ற பெண்ணின் நாமத்தைச் சூட்டினர்.

சிவ பிம்ப ஈர்ப்பு சக்தி நிலையை நம் சித்தர்களினால் ஆவியான அமிலம் திடம் கொள்வதை சிவன் என்ற நாமம் சூட்டி அதன் ஈர்ப்பு நிலைக்குச் சக்தி என்ற பெண்பாலை உணர்த்தினார்கள்.

அவ்வீர்ப்பின் சுழற்சி அலைத் தொடர் வளர்ப்பின் நிலையில் வழி கொண்ட ஜீவ சக்தியின் படைப்பில் “தாய் தந்தை” என்ற உண்மை நிலை உருப்பெறுகின்றது.

1.படைப்பின் படைப்புத் தான் சிவ சக்தியின் படைப்பு.
2.படைக்கப்பட்டவனின் படைப்பு தான் அனைத்து ஜீவாத்மாக்களின் படைப்பெல்லாம்.
3.இந்நிலையில் சக்தி கொண்டு ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று வளர “ஜீவ சக்தி கொண்ட குரு நிலை தேவை…!”

இராமாயண மகாபாரதக் காவியங்களில் எல்லாம் குருவின் நிலையை ஆண்டவனுக்கு முதலில் காட்டிய நிலை என்ன..?

ஞான சக்தி பெற… ஆரம்பத் தொடர் நிலைக்கு நம்மைக் காட்டிலும் சக்தி கொண்ட குரு நிலை தேவை.
1.நீரான சக்தி ஈர்ப்பில் (மனித பிம்ப உடலில்) காந்த மின் அலையின் தொடர் நிலையை
2.நேராக நாம் பெறுவது என்பது கடினமாகின்றது.
3.நம்மை ஒத்த ஜீவ உடல் கொண்ட ஞான சக்தியின் வழி பெற்ற குரு அமைந்தால்
4.நம் எண்ணத்தை அவர்பால் செலுத்த
5.அவர் எடுக்கும் அலையின் நிலையிலிருந்து
6.நம் ஞானத்திற்குகந்த அலையினைத் திருப்பி அனுப்பிட முடியும்.

ஜீவனற்ற சக்தியின் தொடர்பைக் காட்டிலும் ஜீவனுடன் கூடிய குரு நிலை அமைந்து அவர்பால் நாம் செலுத்தும் எண்ண நிலைக்கொப்ப காந்த மின் அலையின் தொடரை நாம் ஆரம்பக் காலத்தில் எடுப்பதற்கு உதவி நிலை கிட்டுகிறது.

குருவின் உண்மை நிலை 2000, 3000 ஆண்டுகளுக்கு முன் இந்நிலை தான் இருந்தது. காலப் போக்கில் குருவானவர்களே தன் ஞானத்தின் வழியைப் பிறர்பால் செலுத்தி “அவர்கள் தன்னைக் காட்டிலும் உயர் நிலை கொண்டு விடுவார்கள்…!” என்ற எண்ண ஓட்டத்தினால் எல்லாமே மாறிவிட்டது.

அதுவமல்லாமல் சிலர் எடுத்துச் செயல்படுத்திய வழி நிலையை உணர்ந்தெடுக்கும் ஜீவாத்மாக்களும் செயல்படுத்தவில்லை.

மனித உரு கரு வளர்ந்த காலம் முதல் கொண்டே குரு சிஷ்யன் என்ற வழித்தொடர் இருந்து கொண்டு தான் இருந்தது, இன்றும் உண்டு. ஆனால் பக்தி நிலை கொண்டு பணிந்து வணங்கும் நிலை தான் உண்டே தவிர ஞானத்தின் நிலையின் ஈர்ப்பு வழித் தொடருக்கு குருவின் செயலை எடுப்பாரில்லை.
1.குருவின் தொடர்பால்…
2.தானே கிட்டும் என்ற நிலை தான் இன்றும் உள்ளது.

ஆனால் சக்தி வாய்ந்த சக்தியிலிருந்து தான் பல சக்திகள் உருப்பெறுகின்றன.
1.உருப்பெற்ற நிலையிலிருந்து மாறி மாறி வழித் தொடர் கொண்டு
2.உயர் சக்தியின் படைப்பில் தான் சக்தி வாய்ந்த சக்திக்கு மேல் சக்தி கொள்கின்றது இந்தச் சக்தி.

இது தான் உண்மை…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

குருநாதர் காட்டுப் பகுதியில் என்னை அழைத்துச் சென்று
1.தாவர இனங்கள் எவ்வாறு விளைகின்றது…?
2.இந்த உயிரணுக்கள் எவ்வாறு விளைகின்றது?
3.கோள்கள் தனக்குள் மற்ற சத்துக்களைக் கவர்ந்து எவ்வாறு அது வளர்கின்றது…? என்ற நிலைகளை
4.சாப்பாடு கூட இல்லாதபடி காட்டில் அமர்த்தி இதை அறியும்படிச் செய்தார்.

விஞ்ஞானிகளோ பல நிலைகள் கொண்டு இயந்திரத்தின் துணை கொண்டு கண்டு கொண்டே இருக்கின்றார்கள். இன்று முழுமையும் காணவில்லை.

அன்று மெய்ஞானிகள் தனக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வின் ஆற்றலின் துணை கொண்டு நம் குருநாதரும் அதை அறிந்து அதை நாம் அறியும் நிலைக்கு எமக்குள் அதைப் பதியச் செய்தார்.

அந்தப் பதிந்த உணர்வின் நினைவு கொண்டு விண்ணை நோக்கும் பொழுதுதான்
1.விண்ணிலே நடக்கும் அதிசயங்களை உணரும்படிச் செய்கின்றார்.
2.சில நேரங்களில் காட்சியாகவும் பெறும்படிச் செய்தார்.
3.அதையெல்லாம் கண்டேன், உணர்ந்தேன், தீமைகளை வென்றிடும் ஆற்றலை எனக்குள் வளர்த்துக் கொண்டேன்.

அப்படிக் கண்டுணர்ந்த உண்மையின் உணர்வுகளைத்தான் உங்களுக்குள் தொடர்ந்து உணர்த்திக் கொண்டே வருகின்றேன். நீங்களும் அதையெல்லாம் பெற்று தீமைகளை வென்றிடும் ஆற்றல்கள் பெறவேண்டும்.

உங்களால் முடியும்…!

இந்த மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து உங்களுக்குள் விளைந்த உணர்வுகள் பரவி கேட்டுணர்ந்தோர் உணர்வுகளிலும் தீமைகளை வென்றிடும் ஆற்றலாகப் பரவ வேண்டும்.

தீமைகளை வென்றிடும் உணர்வின் அணுக்கள் விளைந்திட வேண்டும் என்ற ஆசையில் தான் குருநாதர் காட்டிய வழிகளில் மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறவேண்டும் என்று அந்த அலைகளைப் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றேன்.

அதே போல் மகரிஷிகளின் ஆற்றலைப் பெறவேண்டும் என்று நீங்கள் தியானிக்கும் பொழுது தியானத்தில் உங்களுக்கு அந்தச் சக்தி நிச்சயம் கிடைக்கும்.

1.அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெறும் சந்தர்ப்பத்தை உங்களுக்குள் உருவாக்கும் நிலைக்குத் தான் இந்த உபதேசம்.
2.அருள் ஞான உணர்வினை நீங்கள் மகிழ்ந்து மகிழ்ச்சியுடன் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

ஆகவே… உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் கடுமையான நிலைகளைச் சந்திக்கின்றீர்களோ
1.அப்பொழுதெல்லாம் யாம் உபதேசித்த உணர்வின் தன்மையை நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது
2.அதிலிருந்து விடுபடும் ஆற்றல் பெறுவீர்கள்.
3.நம் உடலையும் நம் ஆன்மாவையும் பரிசுத்தப்படுத்த முடியும்.
4.உங்களில் விளைந்த ஆற்றல் மிக்க உணர்வுகளை இந்தப் பூமியிலே பரவச் செய்து இந்தப் பூமியையும் நாம் பரிசுத்தப்படுத்த முடியும்.

குரு காட்டிய உணர்வுகளைப் பதியச் செய்த இந்த நினைவாற்றலின் வலுக் கொண்டு துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் சக்திகளைப் பெற்று அவைகளின் துணை கொண்டு அனைவரையும் பெறச் செய்வோம்.

“பதினெட்டாம் பெருக்கு” என்றால் நாம் எதைப் பெருக்க வேண்டும்…?

 

இந்தப் பூமியில் மனிதனாகத் தோன்றிய நிலைகளில் தீமைகளை வென்ற அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் விண்ணிலே ஒளி வீசிக் கொண்டுள்ளான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்று விண் சென்றவர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் வரும் ஒளியான உணர்வலைள் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு நம் பூமியில் பெருகிக் கொண்டே உள்ளது.
1.அதனை யாரெல்லாம் நுகர்ந்து தனக்குள் பெருக்கிக் கொள்கின்றனரோ
2.அந்த அருள் ஞானத்தின் உணர்வுகள் அவர்களுக்குள் பெருகுகின்றது.

ஆனால் அதே சமயத்தில் அன்பால் பண்பால் பரிவால் பிறர்படும் துன்பங்களையோ துன்பப்படுத்தும் உணர்வுகளையோ உற்றுப் பார்த்து
1.அந்த உணர்வுகளைப் பதிவாக்கி விட்டால்
2.அந்த நினைவினைத் தனக்குள் கூட்டி விட்டால் அதுவே பெருகி
3.நமக்குள் தீமையின் விளைவுகளாகப் பெருகி… தீமையின் உணர்வாகவே பெருக்கிவிடும்.

ஆகவே அதனின்று தனித்து… அந்த அருள் ஞானிகளின் உணர்வைத் தனக்குள் பெருக்கி அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் விளைய வைக்கும் ஒரு பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.

பின்… யார் துன்பப்பட்டார்களோ அவர்கள் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பெற வேண்டும் என்ற உணர்வைப் பதித்து அவர்கள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இப்படி நாம் எண்ணினால் அந்த உணர்வுகள் அங்கே அருள் ஞானமாகப் பெருகத் தொடங்கும். அதன் மூலம் அவர் மகிழ்ச்சியான நிலைகள் கொண்டு வாழ்க்கை நடத்தப்படும் போது அதை நமக்குள் அந்த மகிழ்ச்சியைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

இது தான் ஆடி பதினெட்டு… பதினெட்டாம் பெருக்கு…!

ஆகவே… நாம் யாரைச் சந்தித்தாலும் யாருடன் பழகினாலும் சந்தர்ப்பத்தில் தீமைகள் வந்தால் அந்த தீமைகளைப் பெருக்காது அதை தடுக்க வேண்டும்.

எந்த ஒரு உணர்வின் தன்மையாக இருந்தாலும் ஒவ்வொன்றும் நகர்ந்து சென்றே இயக்குகின்றது ஒன்றொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அந்த இயற்கையின் சுழற்சி வட்டத்தில் சிக்கி ஒன்றுடன் ஒன்று இணைந்து அது பெருகுகின்றது

புயல் காற்று சுற்றும் பொழுது பல உணர்வின் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மற்ற தாவரங்களின் சத்தை தன்னுடன் இணைத்து அந்த உணர்வின் இயக்கமாக அது இயங்குகின்றது என்று பல முறை சொல்லி உள்ளேன் (ஞானகுரு).

ஆற்றிலே நீரோட்டம் இருக்கும்போது அது ஓடும் பாதை அனைத்திலும் அது தன் உணர்வின் சத்தை வளர்த்து செழிப்பை அதிகரிக்கச் செய்கின்றது.

நீர் இல்லை என்றால் தாவர இனங்களைப் பெருக்கும் நிலையும் இல்லை. அதே போல் நமக்குள் ஜீவ நீர் இல்லை என்றால் நமக்குள் உணர்வுகளைப் பெருக்கும் சக்தி இல்லை.

1.அருள் ஞானியின் உணர்வை நமக்குள் ஜீவ நீராக ஊற்றி
2.நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் அருள் ஞான சக்தியைப் பெருக்கி
3.அருள் ஒளியின் சிகரமாக நாம் மாற்றிடல் வேண்டும்.

அதனை நினைவு படுத்தும் நாள்தான் ஆடிப்பெருக்கு. அதைப் பதினெட்டாம் பெருக்கு என்றும் சொல்வார்கள்.

பல நிலைகளிலும்… பல எத்தனையோ கோணங்களில் நாம் திசை மாறி… திசை மாற்றி… இப்படிப் பல பல கோணங்களில் நாம் மாறிப் பரிணாம வளர்ச்சி அடைந்து… மனிதர்களாக வந்தவர்கள்தான் நாம்.

இந்தப் புவியின் ஈர்ப்பைக் கடந்து சென்று நாம் விண் வழி செல்ல வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் நன்னாளாகப் ஆடி பதினெட்டு என்று கூறுகின்றார்கள்.

பத்தாவது நிலையிலிருக்கும் உயிர் முழுமை அடைய வேண்டுமென்றால்
1.அஷ்டதிக்கு…! எட்டுத் திக்கில் இருந்து… பல முனைகளிலிருந்து வரும் தீமைகளை அகற்றி
2.அதை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொள்வதே “பதினெட்டாம் பெருக்கு” என்பது

நாம் இப்படிப் பெருக்கி விட்டால் எந்தத் திக்கிலிருந்து எந்த உணர்வு வந்தாலும் அதை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு பேரருள் பேரொளியாக மாறும் நிலைகள் வருகின்றது.

ஞானத்தின் உயர்வால் “மனிதன் தெய்வமாக முடியும்…!” – ஈஸ்வரபட்டர்

 

பேராசையின் உந்தலில் ஏற்பட்ட எண்ணத்தினால் பேராசைக்குகந்த நிலை பெறச் சூழ்ச்சி வலை பின்னப்பட்டு அச்சூழ்ச்சியின் இன்னலில் எற்பட்ட செயல்கள் எல்லாம் “இராமாயணக் காவியத்தில்” வடிக்கப்பட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது.

இப்பேராசை உணர்வெண்ண ஆசையின் செயல்முறை எப்படி எப்படி எந்தெந்தச் சுற்றலில் இருந்தெல்லாம் சிக்கி… ஒரு மனிதனை… நற்குணம் அடைய வேண்டும் என்ற உணர்வு குணத்தை ஒரு வட்டத்திற்குள் சுழலவிட்டு…
1.மனிதனுக்குகந்த பண்பு பாசம் பக்தி வீரம் அன்பு ஆசை இப்படி ஒவ்வொரு குணத்தையும்
2.தந்தையின் சொல் மந்திர சக்திக்கும்
3.தமையனின் பாசப் பிணைப்பையும்
4.அன்பின் உருவைக் காதலிலும்
5.வீரத்தை வில்லாக்கியும்
6.பண்பைப் பலதிலும் படைத்துப் பிணைக்கப்பட்ட இராமனை அவதாரப் படைப்புக் காவியனாக்கி
7.வழிப்படுத்திக் காட்டிய இராமாவதாரக் காலத்தில் அன்றிருந்த நிலையைக் கொண்டு
8.அக்காலத்திற்குகந்த வாழ்க்கையின் முன்னேற்ற ஞானத்தைக் கொண்டு
9.இராமனாகப் படைக்கப்பட்ட உருவின் நிலையில்
10.ஆண்டவனான வழி நிலை பெறுகின்ற செயலனைத்துமே அன்றே காவியத்தில் வடிக்கப்பட்டன.

ஆனால்… ஆண்டவனாகப் பிறந்தவனின் இன்னல் நிலையை உணர்த்தி… ஆண்டவனின் சக்தியைக் காட்ட வடிக்கப்பட்ட காவியமல்ல இராமனின் காவியம்.

பேராசையின் எதிர் நிலையில் சிக்குண்ட ஆத்மா… “தன் உணர்வின் எண்ணத்தில் தெய்வ சக்தி பெறவேண்டும் என்ற எண்ண சக்தி இருந்தால்…”
1.வாழ்க்கையில் செயல் எதிர் பிம்பம் எதுவானாலும்
2.தன் ஞானத்தின் உயர்வினால் வரும் இன்னலில் இருந்தெல்லாம் மீண்டு
3.”தெய்வமாகலாம்…!” என்று உணர்த்தப்பட்ட காவியம் தான் இராமனின் காவியம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

விநாயகர் சதுர்த்தி அன்று நாம் என்ன செய்ய வேண்டும்? சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உட் பொருள் என்ன…? என்று பார்ப்போம்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் சக்தி வாய்ந்த உணர்வினை சூரியனின் காந்தச் சக்தி கவர்ந்து அலைகளாகப் படர்ந்து வருகின்றது.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று எண்ணத்தால் பதிவு செய்திருந்தால் இந்த நினைவு கொண்டு காலை சூரிய உதய நேரத்தில் அதை எடுத்து நம் உடல் முழுவதும் படர வேண்டும் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று பல முறை உடலுக்குள் செலுத்தி நம் ஆன்மாவையும் ஜீவான்மாவையும் பரிசுத்தப்படுத்த வேண்டும்

பின் நம் வாழ்க்கையில் யார் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும். தொழில் செய்யும் இடங்களில் எங்களுடன் பணி புரிவோர் எங்கள் வாடிக்கையாளர்கள் அனவருக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அவர்கள் உடல் நலம் பெறவேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெறவேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியால் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் அருள் சக்தி பெறவேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

அவர்கள் அனைவரும் மலரைப் போன்ற மணம் பெறவேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தியால் மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெறவேண்டும் என்று சூரிய உதய நேரத்தில் நாம் அனைவரும் இந்தச் சக்தியைக் கவர்தல் வேண்டும்.

எல்லோரும் சேர்ந்து இவ்வாறு கவர்ந்தோம் என்றால் நமக்குள் அந்தச் சக்திவாய்ந்த நிலைகள் இணைந்து நமக்குள் நம்மையறியாமல் இயங்கிக் கொண்டிருக்கும் பகைமை உணர்வுகள் அனைத்தையும் செயலற்றதாக்கி விடுகின்றது.

இந்தப் பரமான பூமியில் பரவிக் கொண்டிருக்கும் தீமையை விளைவித்துக் கொண்டிருக்கும் உணர்வுகளை நமக்குள் இந்த ஆற்றல்மிக்க சக்தி இணைந்து கொண்ட பின் விலகிச் செல்லச் செய்துவிடுகின்றது.

எப்படி வேப்ப இலையின் சத்தை அந்த மணத்தைக் கண்டபின் ரோஜாப்பூவின் மணங்கள் நகர்ந்து ஓடுகின்றதோ, ரோஜாப்பூவின் நறுமணத்தைக் கண்டபின் பிற தீமைகள் நகர்ந்து ஓடுகின்றதோ இதைப் போன்றுதான் தீமையான உணர்வுகளை விலகச் செய்தல் வேண்டும்.

நம் வாழ்க்கையில் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்களுக்கெல்லாம் இந்த நிலைகள் பெறவேண்டும் என்று இந்தப் பகைமை உணர்வை சதுர்த்தி செய்து அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அப்பொழுது நாம அனைவரும் ஈர்க்க மறுக்கும் அந்தத் தீமைகளை விளையவைக்கும் உணர்வுகள் தாவர இனங்கள் இருக்கும் பக்கம் செல்வதில்லை.

அதே சமயம் சூரியனின் காந்தப் புலனறிவு வெளிவரும் பொழுது அதனின் ஈர்ப்பு வட்டத்தில் தீமை செய்யும் உணர்வுகள் சிக்கி, தாவர இனங்கள் வளரும் நிலைகளுக்கு அப்பால் அது சென்றுவிடுகின்றது.

பின், பூமியின் மைய வட்டத்திற்குத் தரை மார்க்கத்திற்கு வருவதில்லை. அவ்வாறு அது அலைகளாகச் செல்லும் பொழுது கடலின் ஈர்ப்பலைக்குள் சிக்கிவிடும்.

அதிலுள்ள ஹைட்ரஜன் அந்த வலுக் கொண்ட உணர்வின் அலைகள் கொண்டது, ஹைட்ரஜன் என்றால் தீமைகளை விளைய வைக்கும் உணர்வின் சத்து கொண்டது.

அதற்குள் உள்ள காந்தப் புலனறிவு அது தன் இனத்தை அதாவது நாம் அனைவரும் ஈர்க்க மறுத்த அந்தத் தீமையான அலைகளை அது கவர்ந்து கடலுக்குள் அமிழ்த்திவிடுகின்றது.

அதனால், இந்தப் பரமான பூமியும் பரிசுத்தமாகின்றது. நம் உடலுக்குள் இருக்கும் ஜீவ அணுக்களும் அது பரிசுத்த அணுக்களை விளையவைக்கும் தன்மை உருவாகின்றது.

நம் வாழ்க்கையில் ஒரு வருடம் முழுவதும் நாம் பிறருடைய குறைகளைக் கேட்டுணர்ந்தாலும் அந்த உணர்வுகள் நமக்குள் வளர்ந்த பின் அதை நம் உடலிலிருந்து கரைத்திடல் வேண்டும்.

அதற்காகத்தான் விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் உருவத்தை உருவாக்கி தான் வளர்ந்த நிலையை நினைவில் கொண்டு தீமைகளைக் கரைத்துவிடும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

சாஸ்திரங்களில் இது உண்மை.

எப்படிக் களிமண்ணில் செய்து நாம் கடலில் கொண்டு கரைக்கின்றோமோ இதே போல மனிதனின் உடலில் விளைந்த இந்தத் தீமைகளைக் கரைத்திடல் வேண்டும்.

பாலம் கட்ட அணில் இராமனுக்கு உதவி செய்தது என்பதன் உட்பொருள் என்ன…?

 

நாம் எந்தெந்தக் குணங்கள் கொண்டு எடுக்கின்றோமோ இவை அனைத்துமே இராமன் தான்.

இலங்கையைத் தாண்டுவதற்கு “ஒரு அணில் இராமனுக்கு உதவி செய்தது…” என்றும் அதனுடைய கடமையாக சிறு கல்களைப் போட்டுப் அந்தப் பாலத்தைக் கட்ட உதவியதாகக் காவியத்திலே காட்டியிருப்பார்கள்.

அதாவது புழுவிலிருந்து மனிதனாகப் பரிணாம வளர்ச்சியில் வந்த நிலையினை அவ்வாறு சூட்சமமாகக் காட்டுகின்றார்கள்.

நாம் ஒரு அணிலாக உருப்பெற்றிருந்த போது… “தன்னைத் தற்காத்துக் கொள்ளும் சக்தியாக” அந்த உடலிலிருக்கும் போது சேர்த்துக் கொண்ட அந்த வினைகள் தான் மனிதனாக வளர்வதற்குக் காரணமாக அமைந்தது.

அதே சமயத்தில்…
1.மெய் உணர்வின் தன்மையை அந்த மெய் ஒளியைப் பெறக்கூடிய தகுதிக்கும்
2.நல்ல சிந்தனையின் நிலைகள் வளர்வதற்கும்
3.அணிலின் உடலாக நாம் இருக்கும் போது பெற்ற நல்ல உணர்வின் சக்தியின் பங்கும்
4.அதிலே உண்டு என்று காட்டுவதற்குத் தான் காவியத்தில் அதைக் காட்டப்பட்டது.

சீதாவை இராவணனிடமிருந்து மீட்க இலங்கைக்குள் இராமன் போவதற்கு அணிலும் சிறு கல்களைப் போட்டுப் பாதை அமைத்துக் கொடுத்து உதவி செய்தது என்று அந்தக் குட்டிக் கதையின் மூலம் நமக்குத் தெளிவாக்கியுள்ளார்கள் ஞானிகள்.

இதைக் கவனத்தில் கொண்டால்
1.இராவணனிடமிருந்து சீதாவை மீட்டிக் கொள்ள அணில் உதவி செய்ததென்றால்
2.இந்த உடலான ஆக்கிரமிப்பு சக்திகளிலிருந்து தன்னை மீட்டிக் கொள்ள
3.அந்த அணிலின் உடலில் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வின் எண்ணங்களாக விளைந்து
4.உயிரின் தன்மை கொண்டு அந்த இராமன் என்று சொல்லுக்கு “ஒரு இயக்கப் பொருளுக்குள்…?
5.அந்த உணர்வின் சத்துக்கள் அது எப்படி உதவியது…? என்று தெளிவாகக் காட்டுகின்றனர்.

ஏனென்றால் பல கோடிச் சரீரங்களை எடுத்து நாம் மனிதனாக வந்தாலும் ஒவ்வொரு சரீரத்திலும் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வின் ஆற்றலை வளர்த்துத் தான் அது ஒரு குணமாக ஆனது.

குழம்பை வைக்கும் போது பல பொருள்களைப் போட்டு ஒரு சுவையாக அதை மாற்றிக் கொண்டு வருகின்றோம். அதைப் போன்று இந்த மனித உடல் பெறுவதற்கு 1008 குணங்களின் சக்தி தேவை.

சிந்திக்கும் தன்மை கொண்ட படைக்கும் சக்தியான மனிதனை உருவாக்கச் செய்வதும்… எடுத்துக் கொண்ட எண்ணத்தின் நிலைகள் கொண்டு நாம் பேசும் போது அந்த உணர்வின் தன்மையை அறிந்து கொள்ளக்கூடிய நிலைகளையும்… மற்றவர்களுக்குள் அது இயக்கக்கூடிய சக்தியாகப் பெற்றது என்றும் ஞானிகள் காட்டினார்கள்.

1.அதைத் தான் 1008 குணங்களாகப் பிரிக்கப்பட்டு – ஊன் உடம்பு ஆலயம் என்ற நிலையில்
2.நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் ஊனாக மாறி… உடம்பாக மாறி… இந்த உடம்பு தான் ஆலயம் என்றும்
3.நாம் எடுத்துக் கொண்ட குணங்கள் நமக்குள் சக்தியாக இயங்குவதை
4.ஒவ்வொரு குணத்திற்கும் ஒவ்வொரு பெயரை வைத்து 1008 தெய்வ சக்திகள் என்று வைத்தார்கள்.

இவை அனைத்தையும் உருவாக்கியது யார்…? நம் உயிர் தான். அவன் தான் கடவுள்.

வாலிப வயதில் எடுக்கும் வீரிய எண்ணம் மனிதனின் அடிப்படை குணத்தையே மாற்றும் – ஈஸ்வரபட்டர்

 

ஒரு சிட்டிகை உப்பெடுத்து நாக்கில் வைத்தவுடன் அதன் உவர்ப்புத் தெரிகிறது. அதே நாக்கு புளிப்பு துவர்ப்பு காரம் இவற்றின் சுவையையும் அறிகின்றது.

சுவையை உணர்வதைப் போல் மணத்தின் மாற்றத்தையும் முகர்ந்து உணர முடிகின்றது. ஒளியின் மாற்றத்தையும் கேட்டறிய முடிகின்றது.

இவ்வுலக சுழற்சி வாழ்க்கையுடன் ஒன்றிய வாழ்வின் அன்றாடச் செயலாக இவ்வுணர்வின் வட்ட ஈர்ப்பில் உழன்று வாழும் நாம் இவற்றை உணர… உருவ நிலை கொண்ட ஆரம்பச் செயலுக்கு நம் ஈர்ப்பைச் செலுத்திப் பார்த்தோம் என்றால்
1.ஒவ்வொரு உயிர்த் துடிப்பு நிலை கொண்ட உயிரணுக்கள் தோன்றிய நாள் தொட்டே
2.அவற்றின் வழி அலைத் தொடரினால் உருவாகிய உணர்வின் சேமிப்புக் காலத்தில்
3.பல கோடிக் காலங்களாக ஒவ்வொன்றின் தொடரும் சிறுகச் சிறுக ஒவ்வொரு வளர்ச்சி நிலை மாறி மாறி
4.இவ்வுணரும் பக்குவ நிலை அமிலக்கூட்டு உருவ மனிதனாக உருப்பெறும் காலத்தில்
5.பன்னிரெண்டு குண அமிலத்தைச் சேமித்ததன் மூலம்
6.மனித பிம்பச் சேமிப்பிற்குத் தேவையான வளர்ச்சி நிலை மனிதனாக ஆன பிறகு
7.சேமித்ததன் சக்தி இவ்வேழு பிம்ப உடல்களுக்கு ஜென்மம் எடுக்கக்கூடிய அமிலக் கூட்டு நிறைந்த பிறகுதான்
8.மனித பிம்ப உடலையே பெறுகிறது.

இவ்வாறு உருப் பெற்ற அனைத்தையும் உணரும் (SELF REALIZATION) உணர்வு… மனிதனின் உணர்வுடன் கூடிய எண்ண ஞானத்தைச் செலுத்தும் நிலைக்கொப்பத்தான் அமிலக்கூட்டை நிறைத்து (உடலிலே விளைய வைத்து)… மனித பிம்ப உடல் கொண்டவனின் அவரவரின் செயல் திறன் அமைகின்றது.

1.பிம்ப உடலின் பிறப்பிலேயே பிறப்பெடுத்து வளர்ந்து
2.வயது நிலையின் நிலைக்கொப்ப உருவ வளர்ச்சியின் மாற்றங்களும்
3.ஞான சக்தியின் உணர்வாற்றலும் செயல்படுகின்றன.

“உருவ வளர்ச்சி நிலை” குறிப்பிட்ட காலத்துடன் நின்று விடுகின்றது. ஆனால் உணர்வின் எண்ண ஈர்ப்பு ஞானத்திற்கு…
1.உடலின் வளர்ச்சிப் பருவம் எய்திய காலத்தில் எடுக்கும் எண்ண நிலைக்கொப்பத்தான்
2.ஒவ்வொரு மனிதனின் குண நிலை செயல்படுகிறது.

பருவ வளர்ச்சிக் காலத்தில் (ADOLESCENT AGE) மனித பிம்பத்தின் ஈர்ப்பின் அமில குணமே
1.மிகவும் வீரிய காந்த மின் அலையின் சக்தியை
2.மின்சாரத்தின் ஈர்ப்புப் பாய்ச்சலைப் போன்று பாயும்
3.அமில வளர்ச்சியின் சேமித குணமான அடிப்படை அமைகின்றது.

“அத்தருணத்தில் வெளிப்படுத்தும் முறை கொண்ட மனிதனாகத்தான்” மனித ஜென்ம காலம் வரை ஒவ்வொருவனின் குண நிலையும் அமைகின்றது.

இவ்வுணர்வலையின் ஈர்ப்பு சக்தி “துரித ஓட்டத்தில்… ஓடும் காலமிது…!”

அதனைச் செலுத்தும் முறை கொண்ட… மனித வாழ்க்கை முறை பெறும் காலத்தை… எச்சக்தியில் செயல்படுத்துகின்றனரோ…!
1.அதன் உணர்வு ஈர்ப்பு அமிலத்தின் சேமிப்பை – அத்தருணத்தில் தான்
2.குணத்தின் அடிப்படை உணர்வு சேமிதம் உள்ளது.

பல துறைகளில் முன்னேறுபவர்களுக்கும் “அக்காலத் தருணம் தான்” ஏற்றதாக அமைகின்றது. அதி உல்லாச காமுக வழித் தொடரில் செல்பவனும் இப்பருவ கால ஈர்ப்பில் எடுக்கும் எண்ணத்தின் வழித் தொடர் மனிதனாகத்தான் ஒவ்வொருவனும் வாழ்கின்றான்.

1.இதனை மாற்றி அமைக்கும் செயலாக
2.எச்சக்தியைக் கொண்டு செயல்படுத்துவது…! என்பதும் கடினம் தான்.

உணர்வின் எண்ணத்தின் வழித் தொடர் அமிலமுடன் வழி கொண்ட நாம் அவரவர்களின் நிலைக்குகந்த செயல் வழியை “நினைத்த மாத்திரத்தில் மாற்றிக் கொள்வது…!” என்பது கடினமாகிறது.

பிறரால்…
1.அவர்களின் நற்சக்தியைச் செயலாக்கித் தீயவர்களை நன்மை ஆக்குவது என்பதும்
2.தீயவன் நல்லவனைத் தீமைப்படுத்துவதற்கும்
3.அந்தந்தக் குண அமிலத்தின் நிலையிலிருந்து மாற்றுவது கடினம்.

உணர்வினால் எடுத்த அமிலத்தின் வளர்ச்சியின் குண மனிதன் அவன் அலைத் தொடரில்தான் இன்று வரை வாழ்ந்து வருகின்றான்.

இந்நிலையை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய முடியும்…?

1.மிகவும் சக்தி வாய்ந்த காந்த மின் அலையின் ஈர்ப்பை எடுத்து
2.அவர்களின் எண்ணமும் – நல்லுணர்வின் பால் சக்தி அலையின் ஈர்ப்புடன் “கலக்கப் பெற்றால் தான்…!”
3.எச்சக்தியின் அலையும் அவர்கள் உடலில் பாய்ந்து
4.அவர்களின் குண நிலையின் வழித் தொடரையே மாற்றியமைக்க முடியும்.

முந்தைய இராமாவதார கிருஷ்ணாவதாரக் காலங்களில் காவியங்களில் காட்டப்பட்ட போர்களில்… ஒருவருக்கொருவர் போர் செய்யும் பொழுது…
1.ஒருவர் வில்லிலிருந்து வரும் அம்புடன் எதிர்த்து வரும் அம்பும் மோதுண்ட பொழுது
2.ஒளி நிலை பெற்று ஒன்றுடன் ஒன்று ஊடுருவி எதிர்நிலை கொண்டு
3.அதனதன் நிலைக்கே திரும்பிச் சென்றதாகக் காவியக் கதைகளில் படித்திருப்பீர்கள்.
4.உண்மையைக் கதைப்படுத்தி மறைக்கப்பட்ட தத்துவங்கள் பல உண்டு அவற்றில்…!

வான்மீகி மகரிஷியால் இராமாயணக் காவியத்தில் எழுதப்பட்ட அந்த உண்மையின் ஒவ்வொரு சொல்லுக்கும் பல கருத்துக்கள் உண்டு. “இன்று வரை அதன் உண்மைப் பொருளை உணர்ந்தாரில்லை…!”

ஞானிகள் கொடுத்த காவியங்களில் உள்ள மூலங்களை அறிந்திட முற்படுங்கள்..! அருள் வழியில் நடந்திட அதிலே தக்க உபாயங்கள் உண்டு.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

காட்டுப் பகுதியில் தாவர இனங்கள் அதனதன் உணர்வு கொண்டு கூட்டமைப்பாக இருக்கின்றது. அதிலே தன் இன மரங்கள் அதிகமாக இருக்கும் நிலையில் அதனுடைய அலைவரிசை அதிகமாகின்றது.

அதிலே சிறு சிறு செடிகளாகவோ அல்லது அந்த மாற்று மரங்களின் தன்மை குறைவாக இருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம்.

அப்பொழுது அதிகமாக அடர்த்தியாக இருக்கும் மரங்கள் அது தனது உணர்வால் கவரப்படும் பொழுது அதன் அருகிலே இருக்கக்கூடிய அடர்த்தி குறைவான (மாற்று) மரங்களுக்கு அதன் உணர்வைக் கவரும் திறன் இழக்கப்படுகின்றது.

ஏனென்றால் அடர்த்தியின் தன்மை வரப்படும் பொழுது அந்த மரங்களுக்கு வரும் சத்தினை இது தடைப்படுத்தி இது மறைத்து விடுகின்றது.

ஆகவே அப்பொழுது அந்த மரம் மிகவும் சிரமப்பட்டுத்தான் வளர்ச்சி பெறுகின்றது.

இதைப் போன்ற நிலைகளைக் குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று ஒவ்வொரு மரங்கள் குறைவதும் அதனின் உணர்வின் வேகங்கள் எவ்வாறு வருகின்றது…? என்று அதை உணரும்படிச் செய்தார்.

நோய் வந்து விட்டால் நமக்கு வேதனை வருகின்றது. வேதனைப்படும் பொழுது அந்த நேரத்தில் நல்லதை யாராவது சொன்னாலும் கூட ஏற்றுக் கொள்ள மறுப்போம்.

1.வேதனைப்பட்டுள்ளோர்களுக்கு வேதனைப்படும் நிலைகளைச் சொல்லிக் கொண்டேயிருந்தால் ரசித்துக் கேட்பார்கள்.
2.அப்பொழுது அந்த நேரத்தில் அவர்களுடைய வேதனைகள் தெரியாது.

அவர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது
1.“இது நல்லது… அது அப்படி இருந்தது…” என்று உயர்ந்த குணங்களைப் பற்றி நீங்கள் சொன்னாலும்
2.அதற்கு எதிர்மறையாகி அதனுடைய நிலைகளை நாம் கேட்க மறுப்போம்.

ஏனென்றால் அந்த வேதனை உணர்வு நமக்குள் அதிகரிக்கப்படும் பொழுது நல்ல உணர்வுகளை நுகராதவண்ணம் தடைப்படுத்தி நமக்குள் தீமைகளையே விளைய வைக்கும்.

நமக்குள் தீமையை விளைவிக்கும் இத்தகையை நிலைகளிலிருந்து மனிதன் மீள வேண்டும்.

ஏகாதசி அன்று “விடிய விடிய முழித்திருப்பது…” என்றால் அதனுடைய தத்துவம் என்ன…?

பால் சத்தானது தான்… அதிலே விஷத்தைக் கலந்தால் என்ன செய்யும்…? குடிப்போரை மாய்த்துவிடும்.

இதைப் போல எவ்வளவு அழகான நிலைகளில் எவ்வளவு பரிமாணம் எடுத்துக் கொண்டாலும் வேதனை வேதனை என்ற நிலைகள் வந்தாலே அந்த அழகே போய்விடுகிறது.

பெரிய குடும்பமாக இருக்கின்றது… தொழில் செய்கின்றோம்… எல்லாச் செல்வங்களும் வந்துவிட்டது. பையன் மீது பிரியமாக இருக்கின்றோம்.

ஆனால் அவன் ஏதாவது தவறு செய்தாலோ… “இப்படிச் செய்கின்றானே… இப்படி இருக்கின்றானே…” என்று எண்ணும் பொழுது வேதனை.

வேதனை என்றாலே விஷம்…!

1.தொழில் செய்கின்றோம்… அதில் நஷ்டம் வந்தால் வேதனை.
2.ஒருவருக்கு உதவி செய்கின்றோம்… கேட்கவில்லை என்றால் வேதனை.

இப்படி இந்த விஷமான சத்துக்கள் நம் உடலில் இருக்கும் நல்ல குணங்களுக்குள் பட்டு விட்டது என்றால் நம் உடலிலே அது நோயாக மாறிவிடுகிறது.

எவ்வளவு உயர்ந்ததற்குக் கொண்டு போக வேண்டும் என்று எண்ணினோமோ அங்கே போகாதபடி
1.வேதனை என்ற நிலையைக் கொண்டு வந்து சிந்திக்கும் திறனை இழக்கச் செய்து
2.மனித உடலை இழக்கச் செய்து இழிநிலையான சரீரத்திற்குக் கொண்டு விட்டு விடுகின்றது.

அப்படி வந்தாலும் மீண்டும் அந்தக் கெட்டதை நீக்கி விட்டு நல்லதைப் பெறும் நிலைகள் வந்தால்தான் உயர்வு பெற முடியும் என்ற நிலைகளை வைகுண்ட ஏகாதசி அன்று இரவு முழுவதும் முழித்துக் கொண்டிருக்கும்படி ஞானிகள் அதைச் சாஸ்திரத்தில் காட்டுகிறார்கள்.

“விடிய விடிய முழித்திருப்பது…” என்றால் அதனுடைய தன்மை என்ன…?

ஒரு சூரியனின் தன்மையே என்றுமே விழித்த (பிரகாசமான) நிலை கொண்டது. அதைப் போன்று சப்தரிஷி மண்டலம் தனக்குள் என்றுமே அது ஒளி கொண்டது.

1.என்றைக்குமே விழித்த உணர்வு கொண்டு தான் பெற வேண்டுமென்று
2.விழித்திருந்தே பொருளறிந்து தனக்குள் செயல்படும் ஆற்றலைப் பெற வேண்டும் என்று
3.பரமபதத்தின் தத்துவத்தை “வைகுண்ட ஏகாதசி – சொர்க்கம்…” என்று காட்டி
4.உடலை விட்டுச் சென்றபின் நாம் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டுமென்று என்ற தெளிவைக் காட்டுகின்றார்கள்.

நம்மை அறியாது வரக்கூடிய விஷத்தை நீக்கக்கூடிய வழியையும் ஒவ்வொரு செயலைச் செய்யும் போது நாம் எப்படி விழித்திருக்க வேண்டும் என்றும்…?
1.இதை உணர்த்துவதற்கு ஏகாதசி அன்று விடிய விடிய முழித்திருந்து
2.அந்த நல்ல நிலைகளைப் பெறச் சொன்னார்கள்.

ஆனால் இன்றோ விடிய விடிய விழித்திருந்து காலையில் வந்தபின் அதைச் செய்வோமா…? இதைச் செய்வோமா…? என்று அந்த நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

ஐயோ பாவம்…! என்று இரக்கப்படலாமா…? – ஈஸ்வரபட்டர்

1.உணர்வின் எண்ணத்தை எந்த ஒரு செயலின் எண்ணத்திலும்… நம் எண்ண ஈர்ப்பிலும் செல்லாமல்
2.இவ்வுடலின் அமில குணத்தை நற்குணங்களின் அமில வளர்ச்சியுடன் வளரவிட்டாலும்
3.நம் எண்ணத்தின் உணர்வைச் சங்கடமும்… பரிதாபமும்… பச்சாதாபமும்… காட்டும் உணர்வலைக்குச் செலுத்திடலாகாது.

பரிதாபப்பட்டுப் பிறரின் எண்ணமுடனே நம் உணர்வின் எண்ணத்தையும் அவர்களின் உள்ள நிலைக்கு இரங்கி நாம் எடுக்கும் எண்ணச் சுவாசத்தால் நம் உணர்வும் அதே சுழற்சியில் சென்று விடுகிறது.

அப்பொழுது அவர்களின் உடல் அமிலக் கூட்டின் எண்ண அலையை நம் ஈர்ப்புக்குள்… “அவர்கள் பால் செலுத்தும் எண்ணத்தால்” எடுத்துக் கொள்கிறோம்.

நம் உணர்வுகள் “பாவம்…!” என்ற பரிதாபச் சுழற்சி வட்ட உணர்வு அமிலத்தை ஏற்பதினால்… நம்முள் உள்ள உயர் குண அமில சக்தியினைப் பிறர்பால் செலுத்தும் உணர்வின் எண்ணத்தால்
1.நம் நிலைக்கும்
2.நாம் செல்ல வேண்டிய வழிக்கும் தடை ஏற்படுத்துகிறது.

நற்சக்தியை… ஆண்டவன் என்ற நிலை அடைய… ஆண்டவன் பால் செல்ல எல்லா உயிர் ஆத்மாக்களிடமும் அன்பைச் செலுத்துங்கள்..! என்று இன்றைய கலியில் பல மகான்களாக ஞானத்தின் வழித் தொடரில் வந்த நாம் அறிந்த பலரும் கூறியுள்ளார்கள்.

இருப்பினும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களின் பிம்ப உடலில் பல இன்னல்களைப் பெற்று அதே செயலில் உடல் பிம்ப வலுக் குன்றியதனால் அவர்களின் வாழ்நாட்களில் பல சக்திகளைப் பெற்றிருந்தும் இவ்வுணர்வின் எண்ண செயல்முறை செலுத்தும் வழி முறை அறியாமல் பிறரின் எண்ண உணர்வு நிலையின் சுழற்சியில் சிக்கி விட்டனர்.

இராமகிருஷ்ண பரமகம்சரும் விவேகானந்தரும் ரமண மகரிஷியாகப் பலர் போற்ற இருந்தவரின் நிலையும் இன்னும் இவர்களைப் போல் ஞானத்தின் ஈர்ப்பில் வந்தவர்களும்
1.எண்ணத்தின் உணர்வைப் பிறர்பால் “பரிதாபம்” கொண்டு செலுத்தி
2.இவர்கள் செலுத்திய அன்பின் பரிதாப நிலையினாலேயே
3.அவர்களின் உணர்வு எண்ண அலையின் ஈர்ப்பு இவர்கள் உடலிலும் “சாடியது…”
4.அதனால் தான் ஞானத்தின் வழி பெற்றிருந்தும் உடல் பிம்பக் கூட்டைக் காக்க முடியவில்லை.
5.உடல் பிம்பக் கூட்டிற்கு மட்டுமல்ல… நாம் எடுக்கும் உணர்வின் எண்ண உயர் ஞானச் செயலுக்கும் “இவை எல்லாம் தடைக்கற்கள் தான்…!”

இம்மனித பிம்ப உடல் “உணர்வு எண்ண ஈர்ப்பிற்கு” மிகவும் சக்திவாய்ந்த நிலையுண்டு…!

எண்ணமுடன் எடுக்கும் சுவாச அலையில் காந்த மின் ஈர்ப்பு குண உயிரணுக்களாக இவ்வுடல் முழுமைக்கும் ஈர்த்தெடுத்து வெளிக் கக்கும் இவ்வலையின் ஈர்ப்பு நாம் எடுக்கும் எண்ணத்தில் ஈர்ப்புடன் மோதுகிறது.

இங்கு இப்பொழுது உணர்த்தும் முறை கொண்டு
1.பிறர்பால் அன்பு செலுத்திடலாகாதா..?
2.பிறரிடம் இரக்கம் காட்டிடலாகாதா..?
3.பிறருக்கு நம்மால் முடிந்த தான தர்மங்கள் அளித்திடலாகாதா..? என்று கேட்கலாம்…!

பிறர்பால் அன்பைச் செலுத்தாதீர்…!

“பிறருக்கு அன்பான குண நிலை பெறவேண்டும்…” என்ற
2.அன்பலையை அவர்கள் வளர்க்க
3.அவர்களுக்கு “நம் எண்ணத்தால் நல் நிலை பெறட்டும்…” என்று
4.இந்த உணர்வைச் செலுத்துங்கள் “அன்பாக்கி..!”

நம்மைச் சார்ந்தவரும் சரி… நாம் கண்டுணர்பவரும் சரி… அவர்கள் படும் துயரமுடன் நம் உணர்வையும் பரிதாபமாக்கி… நம்மையும் பரிதாபப்படுத்திக் கொண்டு..
1.அவர்கள் அலையுடன் நாம் ஒன்றாமல் – நம் சக்தி அலையைக் கொண்டு
2.அவர்களுக்கு நல் நிலை நடக்கட்டும்..! என்ற ஒளி அலையைப் பாய்ச்சுங்கள்.

அவர்கள் உயரவும்… உடல் நலம் பெறவும்.. நம் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு
1.”நல் நிலை” அவர்கள் பெற நம் உணர்வின் எண்ணம் செல்ல வேண்டுமேயன்றி
2.நம் உணர்வையும் எண்ணத்தையும் அவ்வுணர்வின்பால் செலுத்திடலாகாது.

அதே போல் தர்ம நிலைக்கும்… இரக்கத்தின் உணர்வால் ஒன்றி தர்மம் செய்யாமல் “பல துயரங்களில் அவர்கள் உள்ளார்கள்…” என்ற இரங்கிய தர்மம் தராமல்
1.நாம் தரும் தர்ம ஈகையினால் அவர்கள் பெற்று உயர வேண்டும் என்ற உயர்ந்த உணர்வுடன் எண்ணத்தைச் செலுத்தி
2.நாம் தரும் தர்மம்… பெறுபவரையும் உயரும் எண்ணத்திற்குச் செல்லும் முறையில்
3.நம் தர்ம முறையும் இருக்க வேண்டும்.

அப்படி இல்லை என்றால் நம் ஞானத்திற்கு…
1.பிறரின் ஈர்ப்பால்
2.அவர்களின் குண ஈர்ப்பின் எண்ணமுடன் நாம் ஒன்றியவுடன்
3.நம் நிலையும் மாறும். (இது முக்கியம்)

நாம் அறிந்த பல ஞானிகளும் அவர்கள் இரங்கிப் “பிறர்பால் செலுத்திய அன்பினாலேயே..” அவர்கள் ஞானமும் குறைந்தது.

யாம் சொல்லும் இத்தகையை பரிபக்குவ உணர்வைக் கொண்ட எண்ண ஜெபத்தில் எடுக்கும் நிலையைக் கொண்டுதான்
1.நம்முள் சேர்ந்துள்ள அமில குணத்தின் வளர்ச்சியினால்
2.சக்திவாய்ந்த ஒளி அலையின் காந்த மின் அலையின் ஈர்ப்பை
3.அந்த மெய் ஞானிகளிடமிருந்து பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

மோப்ப நாயை வைத்துக் காட்டுகின்றார்கள். “யார் வருகின்றார்..,?” என்று தன் மோப்பத்தால் அறிந்து கொள்கிறது. “தன்னைச் சார்ந்தவர்கள் வந்தால்…” ஒன்றும் செய்வதில்லை.

தன்னைச் சார்புடையோர் அல்லாது வரும் பொழுது அது பகைமை உணர்வுகளை நுகர்ந்து சீறிப் பாய்ந்து தாக்கும் நிலை வருகின்றது.

ஒரு மனிதனை அன்பு கொண்டு அரவணைக்கும் தன்மை வந்துவிட்டால் அந்த உணர்வின் தன்மை அவர் வரும் பொழுதே மோப்பத்தை வைத்து “என் நண்பன்..,” என்று சொல்வோம்.

அதே சமயத்தில்… தன் குழந்தை என்ற நிலையில் அவன் பண்பு கொண்டு வளர வேண்டும் என்றும் பண்பு கொண்டவனாக வர வேண்டும் என்று எண்ணுகிறோம்.

அப்பொழுது அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் பண்பு கொண்ட உணர்வை வளர்த்து நமக்குள் அந்தப் பண்பு கொண்ட அணுவின் தன்மையாக வளர்கின்றது.

1.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் அவனுக்குள் விளைய வேண்டும்.
2.அவனையறியாது இருள்கள் நீங்க வேண்டும்
3.மெய்ப்பொருள் காணும் தன்மை வேண்டும்
4.அறிந்துணர்ந்து செயல்படும் திறன் பெறவேண்டும் என்று எண்ணுவதே அந்தப் பண்பான நிலைகள்.

இத்தகைய உணர்வை வளர்த்து அவனிடம் சொல்லி அணுகும் பொழுது இந்த உணர்வை நுகர்ந்து பதிவாக்கிவிட்டால் அவன் மோப்பம் அந்தப் பண்புகளை நுகர்ந்து தனக்குள் இருக்கும் இருளை மாய்க்கின்றான்.

ஆனால் வெறி கொண்ட உணர்வின் தன்மையை வளர்த்துள்ளோம் என்று வைத்துக் கொள்வோம்.

அப்பொழுது நமக்குள் எந்தக் குணத்தின் தன்மையை அதிகமாக வைத்துக் கொள்கின்றோமோ அந்த வெறி கொண்ட உணர்வின் தன்மையாகத்தான் நாம் வெளிப்படுத்துவோம்.

அந்த உணர்வுகள் வெளிப்படும் பொழுது…
1.எவரின் உடலில் ஏற்கனவே இருளச் செய்ததோ
2.அந்த உணர்வுகள் இங்கே மோப்பத்தைக் காணும் பொழுதே
3.தன் மேல் வெறுப்படையும் தன்மையும் இருளச் செய்யும் நிலையும் வருகின்து.

இன்று கால பைரவர் என்று சொல்கிறோம். அதன் பொருள் என்ன…?

நாம் நுகர்ந்த உணர்வுகள் நாம் மோப்பத்தால் எடுக்கப்படும் பொழுது பைரவர் என்று சொல்லும் பொழுது அதனின் வலிமை கொண்டு அதைத் தீமை என்று உணரச் செய்கின்றது.

தன் உடலைக் காக்கத் தன் உணர்ச்சியைத் தூண்டுகின்றது. அதனை வீழ்த்தும் உணர்வுகளை இங்கே தூண்டுகின்றது.

ஆகவே தான் கால பைரவர் என்றும் அதற்கு நாயைக் காவலாக வைத்துள்ளார்கள். வெகு தொலைவில் வரும் உணர்வை நுகர்ந்தறிந்து தன் எஜமானனைக் காக்கும்.

தன் எண்ணத்தில் பிறர் மேல் வெறுப்பின் உணர்வுகள் உருவாக்கிவிட்டால் அது தன்னைக் காக்கும்.

உதாரணமாக… தந்தை வெறுப்பின் உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது அந்த உணர்வின் தன்மை குழந்தையின் உடலில் வரும் உணர்வுகளை இருளச் செய்துவிடும்.

இருண்டு விட்டால்
1.எந்த வெறுப்பின் தன்மை உருவாகியதோ மீண்டும் யாரிடம் (குழந்தையிடம்) இந்த உணர்வின் தன்மை வந்ததோ
2.அந்த உணர்வை நுகர்ந்து மீண்டும் தந்தைக்குள் இருண்டு போகும் நிலையே வருகின்றது.

ஆக… எவர் உடலிலிருந்து வெறுப்பின் தன்மை வந்ததோ அந்த உடலைக் காக்க விரும்புகின்றது.

இருப்பினும் இந்த உடலின் மோப்பம் கண்டு அந்தச் சமயம் நுகர்ந்தாலும் நுகர்ந்த உணர்வு பகைமை உணர்வாகித் தனக்குள் (தந்தைக்குள்) சின்னாபின்னமாக்கி விடுகின்றது.

உடலில் நோயாக மாறுகின்றது. வேதனைப்படும் நிலைகள் வருகின்றது.

ஆனால் இப்பொழுது நாம் என்ன செய்கின்றோம்….?

கால பைரவர் அவர் தீமைகளை வெல்லக் கூடியவர் என்று அவருக்குக் கொண்டு போய் அர்ச்சனை செய்து யாகங்கள் செய்கின்றோம்.

அர்ச்சனை செய்து யாகங்களைச் செய்து அந்த பைரவரை வசப்படுத்தினால் “நாம் விரும்பியதை.., நமக்குச் செய்வார்…” என்று இப்படி மனிதனின் வாழ்க்கையில் அஞ்ஞான வாழ்க்கை வாழும்படிச் செய்துள்ளார்கள்.

மதங்களை உருவாக்கி மதத்தில் இயற்றிய சட்டங்களை நமக்குள் உருவாக்கி அதனின் சாங்கிய நிலைகளை உருவாக்கும் பொழுது அதுவே நமக்குள் கடவுளாக நின்று செயல்படத் தொடங்கிவிடுகின்றது.

“மதத்தின் அடிப்படையில் நாம் செயல்படும் உணர்வுகளே…” நம்முள் அதிகமாகச் செயல்படும் பொழுது உள் நின்று அதன் வழியே நம்மை இயக்குகின்றது.

ஞானிகள் காட்டிய வழி முறைகள் இன்று மாறிவிட்டது.

நஞ்சை வெல்லக்கூடிய சக்தியை குருநாதர் எனக்கு எப்படிக் கொடுத்தார்…?

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நான் (ஞானகுரு) அனுபவம் பெறுவதற்காக வேண்டி
1.பல கஷ்டங்களையும் கொடுத்தார்.. கடுமையாகத் திட்டுவார்…!
2.கொச்சையாகப் பேசுவார். பொறுத்துக் கொள்ள முடியாது
3.காதிலேயே கேட்க முடியாது. அவ்வளவு மோசமாகப் பேசுவார்.
4.என்னை ஒவ்வொரு நொடியிலும் உதைப்பார்; இம்சிப்பார்; திட்டுவார்..! இத்தனையும் செய்வார்.

நன்றாக பேசிக் கொண்டே இருப்பார். திடீரென்று என்ன செய்கிறார் என்று எனக்கே தெரியாது. போய்க் கொண்டு இருக்கும் போதே இல்லாத கஷ்டத்தை எல்லாம் எனக்கு ஏற்படுத்தி வைப்பார்.

“இப்படிச் செய்து விட்டார்… பார்…!” என்று நான் திகைத்து நிற்பேன்.

அப்பறம் என்ன செய்வார்…?

இதை எடுத்து நீ பாருடா…! என்று சொல்வார்.
1.உன் உடலில் இப்போது என்ன செய்கின்றது…?
2.நான் இப்போது உன்னை என்ன செய்தேன்…?
3.நீ ஏன் அதைச் சுவாசித்தாய்?
4.அதை நீ “தடைப்படுத்து…!” என்று சொல்வார்.

எப்படி சாமி தடைபடுத்துவது…? என்றேன் நான்.

இதற்குத் தான் “குரு பலம்…!” வேண்டும் என்பது. ஆகவே “குரு” எது?

கோபமான எண்ணங்களை நீ பதிவு செய்து வைத்துக் கொள்கிறாய். அதைத் திருப்பி எண்ணும் போது குருவாக வந்து உன்னைக் கோபமாகச் சண்டை போட வைக்கின்றது. இது குரு பலம் தான்.

அதே மாதிரி உன்னைத் திட்டி வேதனைப்படுத்துகின்றார்கள். அதைப் பிடியாக வைத்துக் கொள்கிறாய். திருப்பி எண்ணியவுடனே அது குருவாக வருகின்றது.

உன்னை வேதனைப்படச் செய்து வேதனைப்படும் செயல்களைச் செய்ய வைக்கின்றது. உடலுக்குள்ளும் வேதனையாகின்றது. அது குருவாக நிற்கின்றது.

அப்படியென்றால் “நீ எதைக் குருவாக்க வேண்டும்…?” என்று வினா எழுப்புகிறார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

இந்த வேதனைகளையெல்லாம் நீக்கியவர்கள் அந்த “மகாமகரிஷிகள்…!”
1.அதை எடுத்து உனக்குள் குருவாக ஆக்கு.
2.அந்தக் குருவை நீ மதி
3.அந்தக் குரு உனக்குச் சகல நிலைகளையும் செய்யும்.

நான் இப்போது உன்னைக் கடுமையாகத் திட்டுகின்றேன். அதை நீ குருவாக எடுத்துக் கொண்டால்
1.என்னைப் “போடா சாமி…!” என்பாய்
2.என்னைப் “பைத்தியக்காரப் பயலே…!” என்று சொல்வாய்

“இப்படியே” குருநாதர் சொல்கின்றார்.

நான் உன்னைத் திட்டுகின்றேன் என்கிற போது “நான் திட்டியதைத்தான்” நீ எடுத்துக் கொள்கிறாய்.

ஆனால் உன்னிடம் இருக்கிற “கெட்டதெல்லாம் போக வேண்டும்…!” என்று நான் திட்டுகின்றேன்.
1.அதை நீ எடுத்து கொள்ள மாட்டாய்…!
2.பாவி…! என்னைப் பைத்தியக்காரத்தனமாகத் திட்டுகின்றார்… “இந்த மனிதன்..” என்று தான் நீ எண்ணுவாய்.

உனக்குள் மறைந்து சில நிலைகளைச் செய்கிறது அதை நீ நீக்கத் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா…!

என்னைத் திட்டுகின்றான் என்பதை மட்டும் வெளியில் வருவதை… உன் செவிப்புலன் இயக்குகின்றது. இந்த உணர்வு இயக்குகிறது.

ஆனால் அதே சமயத்தில் என் மீது இருக்கக்கூடிய பிரியத்தின் படி “என்னைப் பைத்தியக்காரன்” என்று நீ திட்டுகிறாய்… அது இயக்குகின்றது. உன் வெறுப்பைக் காட்டுகின்றாய்.
1.”இவ்வளவையும்…” என் அனுபவத்திற்குக் கொண்டு வருகின்றார்.
2.ஆனால் குருநாதர் பைத்தியக்காரராகத்தான் இருந்தார்.

இந்த உணர்வுகள் உனக்குள் வினையாக எப்படிச் சேர்கின்றது? அதை நீ எப்படி நிறுத்த வேண்டும்? இதற்காக வேண்டித்தானப்பா…! இதைச் சொல்கிறேன் என்பார் குருநாதர். அனுபவரீதியாகத்தான் எல்லாமே கொடுத்தார்.

எனக்கு குருநாதர் இப்படிக் கொடுத்தார். உங்களுக்கு அனுபவம் எதில் கொடுக்கின்றேன் என்றால்
1.ஒரு கஷ்டம் வரும் போது இதைப் பயன்படுத்திப் பாருங்கள்
2.உங்கள் “கஷ்டம் போகும்” என்று சொல்கிறேன்
3.இதை அனுபவரீதியில் நீங்கள் பார்க்க வேண்டும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

“டயானா என்ற பெண்மணி…” அது தான் வாழ்ந்த காலத்தில் எவ்வளவோ செலவழித்து ஆடைகளையும் அணிகலன்களையும் வாங்கும் அளவிற்குச் செல்வம் இருந்தது. செல்வாக்கும் தன்னிடம் இருந்தது.

அன்று இறந்த டயானாவின் ஆடைகளை எத்தனையோ கோடி விலைக்கு ஏலத்தில் இன்று விற்கிறார்கள். மற்றவர்களுக்கும் பல கோடிப் பணம் கொடுத்து அந்த ஆடையை வாங்க வேண்டும் என்ற ஆசையை அது ஊட்டுகின்றது.

1.அந்த ஆசையைத்தான் முதலிலே (டயானா) அது வளர்த்தது
2.ஆனால், “வாழ வேண்டும்..,” என்று எண்ணிய அவளுக்கு அங்கே “நொடிக்குள் மரணம் சம்பவித்தது”.
3.அதையும் நாம் நுகர்கின்றோம், அறிகின்றோம். “இருந்தாலும்… ஆசை நம்மை விட்டபாடில்லை.

“அவர் வளர்த்துக் கொண்ட ஆசையை” நமக்குள் பதித்துக் கொண்டபின் “ஏன்… நாமும் அவரைப் போல் வரக்கூடாது…” என்ற இந்த நிலை தான் வருகின்றது.

அதே வழியில்… “மெய்ஞானிகள்.. பிறவியில்லா நிலை அடைந்தனரே..,” அதை நாம் பெறலாம்.

1.நாம் ஏன் அந்தப் “பிறவியில்லா நிலை அடைய முடியாதா..,?” என்று
2.அவர்கள் வழி சென்று அருள் மகரிஷிகளின் உணர்வை வளர்த்தால் நாம் அதைப் பெறுகின்றோம்.

இல்லை என்றால் மீண்டும் இழிநிலை சரீரத்தைப் பெறுகின்றோம். பேய் மனம் கொண்டு மற்றொர்களைத் தாக்கிடும் நிலை உருவாகும்போது பேய் மனம் கொண்டு ஒன்றைத் தாக்கி அதை உணவாக ரசித்திடும் நிலைதான் வரும்.

இன்றைய உலகில் மனிதனுக்குள் அந்தப் “பேய் மனம்..,” தோன்றிவிட்டது அசுர உணர்வுகள் வளர்ந்து விட்டது.

மற்றவர்களைத் துன்புறுத்துவது, சித்திரவதை செய்வது, கொலை செய்வது, இதையெல்லாம் செய்து ரசிக்கும் தன்மைதான் வருகின்றதே தவிர மற்றவரைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் அடியோடு மறைந்துவிட்டது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட வேண்டும்.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தெளிவாக உணர்த்திய மெய் உணர்வுகளை உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.

அதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு அந்த அருள் உணர்வுகளைக் கவர்ந்து உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் இருளைப் போக்கிக் கொள்ளுங்கள்.

மெய்ப்பொருள் காணும் அருள் நெறி எனக்குள் வளர வேண்டும் என்று ஒவ்வொருவரும் உங்களுடைய உணர்வுகளை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறத் தயங்காதீர்கள்.

இந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் மற்றவர்களுடைய நிலைகளை எண்ணாதீர்கள்.

ஏனென்றால், “என்னைத் தவறாக நினைக்கின்றார்கள்.., கேவலமாகப் பேசுகின்றார்கள்..,” என்று அவர்களுடைய உணர்வுகளை உங்களுக்குள் வளர்த்துக் கொண்டால் அதன்வழி தான் நமக்குள் வரும்.

நாம் பார்க்கும் அனைவரும் உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்ற உணர்வினை ஊட்டுங்கள். அருள் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்ற உணர்வின் வலுவினை உங்களுக்குள் பெறுங்கள்.

மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ள முடியும் – ஈஸ்வரபட்டர்

உணர்வின் எண்ணத்தை நல் வழி அமிலமாக நமக்குள் வளர்க்கச் செய்து தன் ஞானத்தை மெய் ஞானிகளின் தொடர்பலையில் எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் சுவாசத்தால்
1.இவ்வுலகில் எந்தப் பாகத்திலும் உடல் உள்ளவர்களுடனும் சரி
2.உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களுடனும் சரி
3.சூட்சம நிலை கொண்ட சப்தரிஷிகளின் நிலையுடனும் சரி
4.இவ்வுணர்வின் எண்ணத்தை ஜெபம் கொண்டு தொடர்பு வைத்துக் கொள்ள முடியும்.

இது… ஆண்டவனாக வந்து நமக்கு அருள் புரிவதல்ல…!

“ஆண்டவன்” என்று நாம் உணரும் சக்திகளுடன் நம் எண்ண அலைகளைச் செலுத்தினோமானால் அவர்களின் தொடர் அலையின்
1.ஒலியையும் கேட்கலாம்…
2.உருவையும் காணலாம்.

ஆனால் ஆவி நிலையில்… “பல எண்ண அலையில்” உள்ளவர்களுக்கு என்ன ஆகிறது…?

அவர்களின் எண்ண வீரிய குண நிலைக்கொப்ப அவர்களின் உணர்வுடன் ஒத்த எண்ணமும் தன் எண்ணமும் ஒன்று போல் உள்ள நிலையில் “இவ்வுலகில் வாழ்ந்த பொழுது நிறைவேறா ஆசையுடன் சென்ற ஆவிகள்” (அதன் ஆசையை நிறைவேற்ற) இவர்களின் எண்ணத்தின் ஒத்த நிலை ஈர்ப்பு உள்ளதனால் இவர்கள் உடலில் அவைகள் ஏறிச் செயல்படத் தொடங்கிவிடுகிறது.

அப்படிச் செயல்பட்டாலும் அவ்வாவிகள் வளர்ந்த நிலையும் அவ்வாவிகள் வளர்த்துக் கொண்ட சக்தி அலையும் இவர்களின் உணர்வு ஞான சக்தி அலைக்கும் உகந்த செயல் வடிவ வளர்ச்சி ஓட்டத்தில் தான் “அதுவும்” அந்த உடல் உள்ளவரை தான் செயல்புரிய முடியும்.

1.ஆக… எந்த ஒரு செயல் ஞானம் கொண்ட நிலை கொண்டுள்ளனரோ
2.அதே வட்ட உணர்வு வளர்ப்பில் வாழ்ந்து
3.தன் வாழ்க்கையில் அவர்களின் ஆசையின் மேம்பாடு என்று உணரும் ஒவ்வொரு செயலிலும்
4.அதனின் வளர்ச்சி ஓட்டத்தில் உடலுடன் உள்ளவரையிலும் (இறக்கும் வரை) அந்த ஞானம் செயல்பட்டு
5.உடலை விட்டுப் பிரிந்த பிறகு மீண்டும் இதே உணர்வலை சுற்றலைக் கொண்டு
6.எத்துறையில் உயர்ந்து உழன்று உருப்பெற்று வாழ்ந்ததோ அதே சுழற்சி ஓட்டத்தில்
7.மீண்டும் மீண்டும் அந்நிலைக்குகந்த வளர்ச்சி ஈர்ப்பிற்குத்தான் செல்கிறது.

முன்னேறிய விஞ்ஞானம்… விஷய ஞானம்… இசை ஞானம்…! எதுவாக இருந்தாலும் சரி…
1.ஓர் சுழற்சி வட்ட ஞான ஓட்ட வளர்ச்சி சுழற்றலில் தான் சுழன்று கொண்டே இருக்க முடியுமேயன்றி
2.உயர் ஞானச் செயலுக்கு ஒளி ஞானத்திற்குச் செல்ல முடியாது (இது முக்கியம்)

எனவே ஞானத்தை வளர்க்க வேண்டும் என்ற சிந்தனையுடன்… உணர்வால் எடுக்கும் எண்ணம் கொண்டு உடலின் அமிலக் கூட்டை நற்சக்தியின் உணர்வலையின் செயலாக்கி நம் எண்ணத்தை அந்த ஞானிகளின் சித்தர்களின் சப்தரிஷிகளின் உணர்வு எண்ணமுடன் மோதவிட வேண்டும்.

அவர்களின் ஈர்ப்பலையின் சுழற்சி வட்டத்திற்குள்… அவர்களின் ஒளி ஞான ஈர்ப்பின் சக்தியுடன் சுழலவிட்டுச் செயல் கொள்ளும் ஜெப முறையை நாம் அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

அப்பொழுது உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் அந்தச் சுவாசத்தின் மூலம் சகல சித்தர்களின்… சப்தரிஷிகளின் ஒளி அலையுடன் நம் உணர்வலைகள் கலந்து அவர்கள் பெற்ற சக்தி அலையின் தொடரை நாமும் நிச்சயம் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இன்றைய விஞ்ஞான உலகில் பேரழிவு வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் பல முறை இந்த உபதேசத்தைக் கேட்கின்றார்கள், படிக்கின்றார்கள்.

கேட்டாலும் கூட “நாங்கள் அந்த அருள் சக்தி பெறவேண்டும்.., அந்த அருள் ஒளி எங்களுக்குள் வளர வேண்டும்” என்று எவரும் கேட்பதில்லை.

இந்த வாழ்க்கையில் வரும் “குறைகளையும்.., தன்னை ஏமாற்றியவர்களையும்.., ஏமாற்றப்பட்டதையும்தான்..,” எண்ணிக் கொண்டுள்ளார்கள்.

அதை எம்மிடமும் (ஞானகுரு) பாய்ச்சத் தொடங்கி விடுகின்றார்கள். நூற்றுக்கு ஒன்று இரண்டு தான் தப்பித் தவறி அந்த “அருள் ஞானம் பெற வேண்டும்…” என்ற நோக்கில் எம்மை அணுகுகின்றார்கள்.

குருநாதர் எமக்கு எவ்வளவு பெரிய சக்தி கொடுத்திருந்தாலும் நீங்கள் விடும் மூச்சலைகள் சங்கடத்தையும் வேதனையும் இங்கே என்னிடம் வெளிப்படுத்தினால் அதை ஜீரணிப்பதற்கே எனக்கு நேரம் போதாது போலிருக்கிறது.

இதிலிருந்து மீண்டுதான் நான் அந்த உயர்ந்த சக்தியை எடுக்க வேண்டும்.

நான் எந்த அளவிற்கு உபதேசித்து மக்கள் கூடுகின்றனரோ மக்கள் மத்தியிலே விளைந்த அவர்களுடைய வேதனையும் வெறுப்பு உணர்வுகளும் குறைகளும் குறையின் உணர்வுகளைத்தான் என் மேல் பாய்ச்சப்படுகின்றது.

“நான் உணர்த்திய மெய் உணர்வை எடுத்து வளர்க்கும் தன்மை… இன்னும் வளர்ச்சி அடையவில்லை…”

உடல் இச்சையின் உணர்வே வளர்கின்றது. “ஆயிரம் ஆண்டுகள் வாழ்கின்றோம்… வாழ்வோம்…!” என்ற நம்பிக்கையில் வாழ்வது போல் தெரிகின்றது.

இன்றைய நிலைகளில் விபத்துக்களும் விபரீதங்களும் தீவிரவாதச் செயல்களும் உலகெங்கிலும் நடந்து கொண்டிருக்கின்றது.

மத பேதம் இன பேதம் மொழி பேதம் என்று உலகில் பெரும் சக்தியாகப் பரவி மனிதனை மனிதன் இரக்கமற்றுக் கொன்று புசிக்கும் நிலையும் அதைக் கண்டு ரசித்து வாழும் நிலைகள் தான் அதிகரித்து வருகின்றது.

இந்த உணர்வுகளை நாம் நுகரப்படும்பொழுது நாம் பெறும் உயர்ந்த சக்தியும் பெற முடியாத நிலைகள் தடைப்படுகின்றது.

“சாமி செய்வார்… சாமியார் செய்வார்… ஜோதிடம் செய்யும்…” என்ற நம்பிக்கையில்தான் இன்னமும் இருக்கின்றோம். யாகத்தைச் செய்து பாவத்தைப் போக்கிவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் இன்னமும் இருக்கின்றோம்

நமது உயிர் “நெருப்பாக…” இருக்கின்றது. துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை உயிர் என்ற யாகத்தீயில் போட்டவுடன் அதனின் உணர்ச்சிகள் நமக்குள் வருகின்றது.

புற யாகத்தில் பல பொருள்களை யாகத்தீயில் போட்டவுடன் புகை வருகின்றது. அதை அடக்குவதற்கு நெய்யை ஊற்றுகின்றோம்.

அதைப் போன்று வேகமான உணர்வு வந்ததென்றால் அந்த நெடியான உணர்வு இயக்கும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை இயக்கினால் அந்த நெடியை அடக்கும். அந்த உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் மகிழ்ச்சியூட்டும்.

உங்களைத் தீமையான உணர்வுகள் இயக்கிவிடக் கூடாது. அந்தச் சந்தர்ப்பத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்தால் நெடியை அடக்கிவிடும்… தன்னிலை அடையலாம்.

இப்படி எந்த நேரத்திலும் நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துச் சர்வ தீமைகளிலிருந்தும் விடுபட முடியும்.

தியானம் செய்தால் தான் பலன்… தியானம் செய்து பலன் கிடைக்கவில்லை என்ற எண்ணத்திற்குப் போகக்கூடாது

யாம் கொடுக்கும் இந்த உபதேசத்தின் வாயிலாக உங்கள் உயிரையும் துருவ நட்சத்திரத்தையும் இணைக்கும்படி செய்கிறோம். துருவ நட்சத்திரத்துடன் நாம் தொடர்பு கொள்ள வேண்டும். துருவ தியானத்தின் மூலமாகவும் ஆத்ம சுத்தி மூலமாகவும் அந்த அருள் சக்திகளைப் பெறும்படி செய்கிறோம்.

இருந்தாலும்…
1.இத்தனை நாள் தியானம் செய்தேன்… என் தொழில் சீராக வில்லையே…
2.நான் இவ்வளவு தியானம் செய்கின்றேன்… என் குடும்பத்தில் இப்படி இருக்கிறதே…! என்று
3.இப்படித்தான் கலந்து கொண்டு போகின்றோம்.

ஆக பல கேள்விகளை எண்ணிக் கொண்டு “நான் தியானம் செய்தேன்… என் கஷ்டம் என்னை விட்டுப் போகவில்லையே…!” என்று மீண்டும் கலந்து கொண்டே வருகிறோம்.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்துள்ள நஞ்சை மலமாக மாற்றிய பின்பு அதே நஞ்சை மீண்டும் சாப்பாட்டுடன் கலந்து சாப்பிட்ட மாதிரித்தான் பெரும்பகுதியானவர்கள் இருக்கின்றார்கள்.
1.நஞ்சைக் கழிக்கின்றோம்.
2.ஆனால் மீண்டும் எண்ணத்தால் நஞ்சைச் சேர்க்கின்றோம்.

பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்த நிலையில் நம் உடல் தன்னிச்சையாக நஞ்சை நீக்குகின்றது. ஆனால் நாம் என்ன செய்கின்றோம்…?

வெறுப்பு சலிப்பு சங்கடம் சஞ்சலம் என்று இந்த வாழ்க்கையில் வருவதை எண்ணி மீண்டும் இந்த உடலில் நஞ்சாக அதை எல்லாம் சேர்த்துக் கொள்கிறோம். இந்த உடல் எத்தனை நஞ்சைத்தான் கழிக்கும்…?

சொல்வது அர்த்தம் ஆகிறதல்லவா…!

நல்ல உணவுடன் சேர்த்துச் சேர்த்துச் சேர்த்து நல்ல உணர்வுகள் எல்லாம் பாழாக்கிக் கொண்டிருக்கிறோம். இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

எத்தனையோ கோடிச் சரீரங்களிலிருந்து மனிதனாக ஆன நிலையில் நம் உடல் நஞ்சை மலமாக மாற்றுகின்றது. ஆனால் நாம் நல்ல உணர்வுகளை இன்று நஞ்சாக மாற்றுகின்றோம்.

ஏனென்றால் ஆசையின் நிமித்தம்… உடல் பற்று என்று வரப்படும் பொழுது
1.இது கிடைக்கவில்லையே… அது கிடைக்கவில்லையே…! எல்லாம் செய்தேனே…
2.என் பையனை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று நினைத்தேன்…
3.அவன் சொன்னபடி கேட்கவில்லையே…! காசையெல்லாம் செலவழித்து விட்டானே…! என்ற இந்த உணர்வுகளை வளர்த்து
2.வேதனையைக் கூட்டி நஞ்சாகச் சேர்த்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் மாற்றிவிடுகின்றோம்.

விஞ்ஞானிகள் சொல்கிற மாதிரி எத்தனை வகையான வேதனைகளை இணைத்தோமோ வைரஸ் என்ற கிருமியாகத் தான் நமக்குள் மாற்றுகிறோம்.

மூஷிகவாகனா…! நாம் சுவாசித்த உணர்வுகள் தான் வாகனமாக அமைகிறது. அதன் வழிப்படித் தான் இந்த வாழ்க்கை நடத்துகின்றது. அடிக்கடி கோபப்படுகிறோம் என்றால் நம்மைக் கோபக்காரராக மாற்றுகின்றது. கணங்களுக்கு அதிபதி ஆகி நம்மைக் கோபக்காரனாக மாற்றுகின்றது.

1.கோபக்காரனாக மாற்றினாலும் பரவாயில்லை.
2.கடைசியில் இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது.
3.எதன் வழியில் கோப உணர்வுகளை நாம் சேர்த்தோமோ அதன் வழி இந்த உடலை மாற்றுகின்றது.

இந்த இரத்தக் கொதிப்புடன் சாகிறவர்கள் எல்லாம் பெரும்பகுதி அடுத்துப் புலியாகத்தான் பிறப்பார்கள். வேறு எங்கும் போக முடியாது. அல்லது இன்னொரு மனித உடலுக்குள் சென்றாலும் அங்கேயும் இரத்தக்கொதிப்பாக மாற்றி அவனை வீழ்த்தி விட்டு வெளி வந்துவிடும்.

அதாவது கொஞ்ச நஞ்சம் தொக்கி இருந்தது என்றாலும் இன்னனொரு மனித உடலில் யார் கோபமாக இருக்கின்றார்களோ அந்த உடலுக்குள் சென்று அங்கேயும் கோபத்தை உண்டாக்கி எல்லாவற்றையும் முழுமையாக்கி உயிர் வெளியில் வந்த பிற்பாடு புலியின் ஈர்ப்புக்குள் சென்று புலியாகப் பிறக்கச் செய்யும்.

நாம் ஏதாவது ஒன்றை எண்ணுகின்றோம். அது நடக்கவில்லை என்றால் இப்படி ஆகிவிட்டதே… இப்படி ஆகிவிட்டதே… இப்படி ஆகிவிட்டதே…! என்று வேதனையைத் தான் அடைகிறோம்.

எந்தெந்த வேதனை உணர்வுகளை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அந்த வேதனைக்குத் தக்க அடுத்த உடலை உயிர் அமைத்துவிடும்.

கை கால் குடைச்சல் வரும் மூட்டு வாதம் கீழ் வாதம் வரும். இது எல்லாம் நமக்குள் சேர்த்துக் கொண்ட வினைகள் தான் இந்த வினைக்கு நாயகனாக நம்மை இயக்கிய தீரும்.

இப்படி ஆகிவிட்டால் அது சொன்னபடி தான் (நடக்க முடியவில்லை… அசைக்க முடியவில்லை… வலிக்கிறது) நாம் கேட்க வேண்டும் வேதனை அதிகமாகி உடலிலே அனைத்தையும் முழுமையாக்கிவிடும்.

ஆனால் இப்படி நோயாக ஆன பின்பும் கூட மருத்துவரிடம் சென்று நோயை நீக்கினாலும் ஆசை (உடல்) யாரை விட்டது…?

இவன் இப்படிச் செய்கின்றான்… அவனுக்குப் பணம் கொடுத்தேனே…! அவன் ஒன்றும் செய்யவில்லையே…! என்று வேதனை உணர்வை எடுத்து மீண்டும் உடலுக்குள் பல மாற்றங்கள் ஆகின்றது.

கடைசியில் எந்த மருந்து கொடுத்தாலும் அடுத்து ஒன்றுமே வேலை ஆகாது. இதையும் பார்க்கலாம்.

அதற்குத் தான் ஞானிகளைப் பற்றி இங்கே உணர்த்துகின்றோம்.
1.அந்த அருள் ஞானியின் உணர்வைச் சேர்த்துச் சேர்த்துச் சேர்த்து…
2.அதை வலுக் கூட்டினால் இந்த உணர்வின் தன்மை நம்மை வாழ வழிவகுக்கும்…. அமைதி பெறச் செய்யும்.
3.மன வலிமை கிடைக்கும்… சிந்திக்கும் ஆற்றல் கொடுக்கும்… சிந்தித்து செயல்படும் தன்மையும் வரும்

அந்த அருள் உணர்வைப் பெருக்கினால் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களை மாற்றும். உடலை விட்டுச் சென்றபின் அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.

ஆகவே மெய் உணர்வோடு நாம் ஒன்றிச் செல்வோம்.

இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்.. அதற்குத் தான் எமது உபதேசம்

குருநாதர் காட்டிய வழியில் பல அதிசயங்களைச் செயல்படுத்தலாம். எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் இது எல்லாம் எதற்கு உதவும்…?

1.இந்த உடலுக்குப்பின் என்ன…? என்பதை இங்கே உடைத்துச் சொல்கின்றேன் (ஞானகுரு).
2.பிறவியில்லா நிலை அடையும் அதற்குண்டான சக்தியை நாம் பெற வேண்டும். அது தான் முக்கியம்.

உடலை விட்டுப் பிரிந்தால் நாம் கொண்டு போவது என்ன இருக்கின்றது…? அந்த அருள் ஒளியின் தன்மையை நீங்கள் பெற வேண்டும். நீங்கள் தயாராக வேண்டும்… அதன் வழி தான் எல்லோரும் தயாராக முடியும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நீங்கள் வலுவாக்கிக் கொண்டே வர வேண்டும். அதை நீங்கள் வலுவாகப் பெற்றால்தான் மற்றவர்களுக்கும் அதைப் பாய்ச்ச முடியும்.

அவர்கள் இந்த உணர்வைப் பெற… ஒன்றன் பின் ஒன்றாக அவர்கள் மூலமாக… மற்ற எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய முடியும்.

ஒரு நோயாளியைப் பார்த்தபின் அவருடைய நோயைக் கேட்டறிகின்றோம். அதை விசாரித்த பின் அதே நோய் எப்படி வருகின்றதோ இதைப்போல
1.அருள் உணர்வைக் கேட்டபின்
2.அருள் உணர்வைப் பெற செய்யக் கூடிய தகுதி
3.நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

எல்லோரும் மகிழ வேண்டும் என்ற உணர்வை நான் எண்ணும் பொழுது அந்த மகிழ்ந்த உணர்வுகள் எனக்குள் விளைகின்றது. அதே போன்று நீங்களும் செயல்படுத்தி அந்த மகிழ்ச்சியான உணர்வுகள் உங்களுக்குள்ளும் தோற்றுவிக்க வேண்டும்.

யாரும் எதையும் கொண்டு போக முடியாது. இந்த அருள் ஒளியை… அந்த மகிழ்ச்சியைத்தான் கொண்டு போக முடியும்.

அந்த அரும் பெரும் சக்தியைக் காடுகளில் தவமிருந்து பல அருள் ஞானிகள் பெற்ற அந்தப் பேரின்பத்தை நீங்களும் பெற வேண்டும். இதை நீங்கள் எளிதில் பெற முடியும்.

ஆகவே எது பதிவோ அது மீண்டும் நினைவுக்கு வரும். அதன் வழி இந்த அருள் ஞானிகளின் உணர்வைப் பதிவாக்கி மீண்டும் நினைவு கொண்டால் இதை நீங்கள் வளர்க்க முடியும்.

உதாரணமாக ஒரு வித்தை உருவாக்குகின்றனர். எந்த வித்தை உருவாக்குகின்றார்களோ அதன் ஊன்றப்படும் போது அது விளைச்சலாகி பல வித்துகளாக வரும்.

அதைப் போன்று தான் இந்த ஞான வித்தை உங்களுக்குள் உருவாக்குகின்றேன். அதை நீங்கள் பெற வேண்டும்… வளர்க்க வேண்டும்.

ஆனால் தொழிலுக்கும் குடும்பத்திற்கும் இதைச் செய்தேன்… கஷ்டம் நஷ்டம்…! என்று சொல்வதை விடுத்து விட்டு
1.நாங்கள் அந்த அருள் சக்திகளைப் பெறுகிறோம்
2.அதை வைத்துச் சீர்டுத்துவோம் என்று இந்த உணர்வை வலுப் பெறுங்கள்.
3.இந்த வாழ்க்கையை உங்களால் செம்மைப்படுத்த முடியும்.

ஆசை ஒரு பக்கம்… எண்ணம் ஒரு பக்கமாகச் சென்றால் நிறைவேறுவது கஷ்டமாகி விடுகிறது.

அதே சமயத்தில் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பதிலும் ஒரு சிலர் குறை காணுவதிலேயே இருப்பார்கள். குறையை ஊன்றும் தன்மை தான் அவர்களுக்கு வருகின்றது.

குறையிலிருந்து மீட்க வேண்டும் என்ற உணர்வு வருவதில்லை அப்போது அந்த வளர்ச்சியும் குன்றுகின்றது.

இதைப் போன்ற நிலையெல்லாம் மாற்றி அருள் வழியில் நாம் வளர்த்துக் காட்டும் தன்மைக்கு வரவேண்டும். இருளைப் போக்கும் அருள் சக்திகளைப் பெற வேண்டும். அருள் வழியில் நாம் வாழ வேண்டும்.

இந்த உணர்வை நாம் வளர்த்தால் நிச்சயம் அந்த ஆற்றலைப் பெறுகின்றோம்.

1.குறை கூறுவது எளிது
2.குறையை நிவர்த்தி செய்வது மிக மிகக் கடினம்
3.அது நம்மை அடிமையாக்கக் கூடாது… அதை அடிமையாக்கி அந்த அருள் உணர்வைப் பெருக்குதல் வேண்டும்.

நம்மிடம் உள்ள அரிதான சக்திகளை அறிந்திருக்கின்றோமா…? ஈஸ்வரபட்டர்

இன்று விஞ்ஞானத்தில் ஒலிப் பதிவு செய்த நாடாக்களில் காந்த அலையை மின்சாரத்தினால் பாய்ச்சி அதனை ஒலிக்கச் செய்து கேட்கின்றனர்.

அதைப் போன்று இவ்வுடல் என்ற கூட்டு அமிலமுடன் உயிர் அணு தோன்றி ஜீவ உணர்வு எண்ண சக்தி வளர்ந்த நாள் தொட்டே பல கோடிச் சரீரங்களில்.. ஒவ்வொரு உயிர் ஜீவனின் உணர்வு எண்ண சுவாசத்தில் எடுத்த நினைவலைகள் அனைத்துமே நம் உடலில் பதிவாகியுள்ளது.
1.அப்படிப் பதிவான உணர்வெண்ண அலையில்
2.பல ஜென்மங்களில் எடுத்த எண்ண நினைவலைகளும் உண்டு.

அதன் குண நிலைத் தொடரில் தான் இன்றைய பிம்ப உடலின் உணர்வு நினைவு எண்ண ஓட்டங்கள் செயல்பட்டுக் கொண்டுள்ளது. அப்படிப் பதிவாகியுள்ள உடல் கூறு தான் இது.

ஆகவே…
1.இவ்வுடல் உணர்வு எண்ணமுடனே (அந்த ஓட்டத்திலேயே) நம் எண்ணத்தைச் செலுத்தினோமானால்
2.ஆத்ம சக்தி நல்லுணர்வின் வழித் தொடர் பெற முடியாமல்
3.அணைகட்டாமல் செல்லும் நீரைப் போல் தான் அதன் வேக நிலைக்கொப்ப செல்லும்.

உணர்வின் எண்ணம் கொண்டு நற்சக்தியின் ஞான ஒளி அலையை இவ்வுடலில் ஏற்கனவே பதிவாகியுள்ள பலவான உணர்வுகளில் கலக்கச் செய்திட வேண்டும் (இது முக்கியம்).

1.அத்தகைய எண்ணங்களையும் நினைவுகளையும்
2.நற்சக்தியின் நல் எண்ண குணத்தை வழிப்படுத்தக்கூடிய எண்ணத்தில் நம் வாழ்க்கை நடைமுறை இருந்திட்டால்
3.நாம் எச்சக்தியைப் பெற வேண்டும் என்று உணர்வின் எண்ணத்தைச் செலுத்துகின்றோமோ
4.அச்சக்தியின் எண்ணமுடன் நம் வாழ்க்கை செயல் இருந்திட்டால்
5.நம் ஆத்மாவும் நல் ஞானச் சக்தியின் வழித் தொடரைப் பெற முடியும்.

உடலில் மட்டுமல்லாமல் உடலை விட்டுப் பிரிந்தவர்களின் (இறந்தவர்களின்) எண்ண நினைவு சப்த அலைகள் “அந்தந்த உயிராத்மாவின் சுழற்சியுடன்” இக்காற்று மண்டலத்தில் சுழன்று கொண்டே அழியாமல் தான் உள்ளது.

இதனை உணர முடியுமா…?

இன்று நாம் பேசியதை நாடாக்களில் அமிலத்தைப் பூசி காந்த மின் அலையின் சக்தியினால் பதிவு செய்து பல காலங்களுக்கு அதனைக் கேட்க முடிகின்றது.

உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மாக்களின் தொடர்பலையையும் நாம் நம் எண்ணத்தால்… அவர்கள் பால் செலுத்தும் உணர்வு ஞானத்தால்… எந்த ஒரு உடலை விட்ட ஆத்மாக்களுடனும் தொடர்பு கொள்ள ஜீவ பிம்ப மனித உடல் கொண்டோரால் முடியும்.

இம்மனித ஞானத்தில் மட்டும் தான் முடியும் என்பதல்ல…!

நம்முடன் வாழ்ந்த ஜீவன் பிரிந்த ஆன்மாக்கள் அவர்கள் அவர்களால் விரும்பி வாழ்ந்த காலத்தில் அவர்களின் உடம்புடன் தரித்திருந்த பொருள்களில் காந்த மின் அலையின் சக்தியை சில அமிலங்களின் கலப்புக் கூட்டைப் பூசி அவர்கள் பேசிய அலையையும் எடுக்க எடுக்கலாம். அவர்களின் இன்றைய எண்ண ஒலியையும் எடுக்கலாம்.

இவ்வுடல் கூட்டிற்கு ஜீவ நீர் சக்தியினால் எச்சக்தியையும் செயலாக்கவல்ல ஆற்றலுண்டு. “சகல லோகங்களையும் காணவல்ல ஆத்மக் கூடு இது” (நம் ஆன்மா).

1.ஆனால் நம் உணர்வின் எண்ணமெல்லாம் “இவ்வாழ்க்கை” என்ற ஏக்கச் சலிப்பு நிலையுடனே இருப்பதாலும்
2.பெரும்பாலும் தன் சக்தி குண அமிலத்தையே கூட்டும் வழியிலிருந்து
3.குறைக்கும் ஈர்ப்பு ஓட்டமான ஓட்ட கதியில் செலுத்தி விடுவதாலும்
4.நம் ஆன்மாவுக்குண்டான சக்தியை அறியாமலேயே வாழ்கின்றோம்.

இவ்வுணர்வின் எண்ணத்தையே நாம் நல்லெண்ண குண அமில நிலையில் வளர்த்துக் கொண்டோமானால்… ஒவ்வொரு மனித ஆத்மாவும் எந்த ஒரு பேரின்ப நிலை பெற வேண்டும் என்று அன்றைய ஞானிகளும் சபதரிஷிகளும் உணர்த்தி உள்ளார்களோ… அதன் உணர்வெண்ண நினைவுப்படி அவர்கள் அடைந்த நிலையை நாமும் அடைய முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒவ்வொரு அணுவின் தன்மையும் எவ்வாறு செயலாக்குகிறது என்று குருநாதர் எனக்குத் தெளிவாக உணர்த்தினார்.

அவர் காட்டிய அருள் வழியில் எனக்கு எதையெல்லாம் போதித்து உணர்வினைப் பதிவு செய்தாரோ அவை அனைத்தையுமே உங்களிடம் தெளிவாகக் காட்டிக் கொண்டே வருகின்றேன்.

எனக்கு ஆறே மாதத்தில் எல்லாவற்றையும் காண்பித்தார் குருநாதர். அதே போல் ஆறு மாதத்தில் உங்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றால் “நீங்கள் எங்கே..?”

இந்த வாழ்க்கையில் “அது அப்படி இருக்கிறது.., இது இப்படி இருக்கின்றது..,” மனைவி இப்படிப் பேசுகின்றது கணவர் இப்படிப் பேசுகின்றார், பையன் இப்படிச் செய்து கொண்டிருக்கின்றான் வியாபாரத்தில் கொடுத்தவன் கொடுக்க மாட்டேன் என்கிறான் என்று பல உணர்வில் இருக்கின்றீர்கள்.

இந்த உணர்வை எடுத்துத் தியானத்திற்குச் சென்றால் “நீ தியானமிருந்தால் சாமியாராகப் போய்விடுவாய்..,” என்று மனைவியோ கணவரோ ஒருவரை ஒருவர் சொல்லத் தொடங்கிவிடுகின்றார்கள்.

உட்கார்ந்து தியானித்துக் கொண்டிருந்தால் “என் அப்பாவிற்குப் பைத்தியம் பிடித்துவிட்டது..,” என்று பையன் பேசுகின்றான் என்று சொல்பவர்களும் இருக்கின்றார்கள்.

“நீங்கள் இவ்வளவு தூரம் உபதேசிக்கின்றீர்கள். நானும் கேட்டேன்.., ஆனால், என்னால் முடியவில்லை..,” என்று இப்படித்தான் நம் வாழ்க்கை சென்று கொண்டிருக்கின்றது.

ஏனென்றால், கோவிலுக்குச் சென்று சாமிக்கு தேங்காய் பழம் உடைத்து அதற்கென்று அங்கிருக்கும் பூசாரிக்கு காசைக் கொடுத்து இரண்டு அபிஷேகத்தைச் செய்து நம் நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்தால் பாவமெல்லாம் போய்விடும் என்று செய்கின்றோம்.

நமக்காக வேண்டி காசைக் கொடுத்திருக்கின்றான். அதற்காக அங்கே ஒலிகளை எழுப்புகின்றார் பூசாரி.

அப்பொழுது அவர் செய்யும் அர்ச்சனை நேரடியாக ஆண்டவனுக்குப் போய் அவர் அதற்காக மனமிரங்கி வந்து நம் கஷ்டத்தை எல்லாம் போக்குவார் என்று இந்த நம்பிக்கையைத்தான் ஊட்டி வைத்திருக்கின்றார்கள்.

ஆனால், “நம்மை ஆள்பவன்… யார்…?” இதைத்தான் குருநாதர் காட்டினார்.

இந்த உடலுக்குள் பல கோடி உணர்வுகள் பல கோடிச் சரீரங்களை எடுத்து வந்தாலும் இதை ஆண்டு கொண்டிருப்பது நம் உயிரே ஆண்டவன்.

நாம் எண்ணும் எண்ணங்கள் அனைத்தும் இரையாகி, உணர்வின் செயலாக உடலாக்கி, அதனின் உணர்வின் செயலாகத்தான் நம்மை உயிர் இயக்குகின்றான் என்ற நிலையை “நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்..,” என்று கீதையில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் வாழ்ந்த காலத்தில் அவருடன் அணுகியவர்கள் அனைவரும் இந்த உடலின் இச்சைக்கும் ஏதோ சாம்ராஜ்யத்தை ஆளப்போவது போலவும் பலரும் “தவறான வழியில்” சென்று கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால், அவர் விண்ணுலகில் பேரானந்தப் பெருநிலையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அந்தக் குரு அருளைப் பெற நாம் முயற்சிக்க வேண்டும்.

நம் எண்ணத்திலும் பார்வையிலும் வரக்கூடிய தீமைகளைப் போக்க வேண்டும் என்பது தான் “அஷ்டமி நவமியின் தத்துவமே…”

1.கண் வழி தான் நாம் கவர்கின்றோம்… அது தான் பதிவாக்குகின்றது.
2.கண்ணின் காந்தப் புலன் கவர்வது நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.
3.இந்த உடலுடன் இணைந்தது எதுவோ அது பதிவான பின் உயிர் அந்த உணர்வின் தன்மையை இழுக்கின்றது.

அதாவது… நமக்குள் எத்தனையோ உணர்வுகள் அணுக்களாக இருப்பினும் கண் கொண்டு பதிவாகி உணர்வின் தன்மை நாம் எதை எண்ணுகின்றோமோ அதைக் காற்றிலிருந்து பிரித்து நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.

மாற்றியபின் சுவாசித்து உயிரால் தான் அது இயக்கப்படுகின்றது… நவமி.
1.எதன் உணர்ச்சிகளை எண்ணுகின்றோமோ அந்த எண்ணம் நவமி,
2.ஆனால் அதே சமயம் அஷ்டமி…! கண்களின் வழி நாம் நுகர்ந்தாலும் ஆன்மாவாகிறது… (தானாக) இயக்கும் சக்தி இல்லை.

நுகர்ந்து உயிரிலே பட்ட பின் அஷ்டமி என்றாலும் உயிருடன் ஒன்றிய பின் அந்த உணர்வின் அறிவாக நாம் தெரிந்து கொள்வது தான்.

அஷ்டமி இருள் சூழ்ந்த நிலைகள். அந்த இருளிலே எதையும் செய்யாதீர்கள் என்பார்கள். ஆக… அஷ்டமியிலும் நவமியிலும் நல்லது எதையும் செய்யாதீர்கள் என்பார்கள்.

எதன் உணர்வின் தன்மை சேர்த்து அந்த உணர்வை அறிகின்றோமோ அறிந்து கொண்ட உணர்வு அதை அறியச் செய்வது இந்தக் கண்கள் தான்.

1.அறிந்து கொள்ளும் அறிவின் தன்மை கொண்டு நாம் எந்த நல்லதை எண்ணுகின்றோமோ
2.அதன் அறிவாக நம் உயிர் இயக்கும் என்பதைத்தான் அஷ்டமி நவமி… எதன் தெளிவின் தன்மை வருகின்றதோ ஈர்க்கும்.

ஒருவர் வேதனைப்படுகிறார் என்று பார்க்கின்றோம். இந்த உணர்வின் தன்மை இது அஷ்டமி என்றாலும் அந்த உணர்வுகள் இருள் சூழ்கிறது.

1.வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் இப்படி இருள் சூழ்ந்தால்
2.அந்தத் தீமையை எண்ணாதே என்று தான் சாஸ்திரங்கள் கூறுகிறதே தவிர
3.இவர்கள் சொல்வது மாதிரி சாங்கிய சாஸ்திரம் அல்ல.

வேதனை என்ற உணர்வுகள் உயிரில் பட்ட பின் அது இருள் சூழ்ந்து விடுகின்றது. ஒன்பதாவது நிலையில் நவமி என்றாலும் வேதனை என்ற உணர்வுகள் தான் நமக்குள் எண்ணங்களாக வருகின்றது.

ஆகவே அந்த வேதனையை நவமிக் காலங்களில் எண்ணக்கூடாது என்று காட்டுகிறார்கள். அதே மாதிரித் தான் அஷ்டமி இருள் சூழ்ந்த நிலைகளை எடுக்கக்கூடாது என்று காட்டுகிறார்கள்.

1.அதாவது தீமை என்று தெரிந்து கொண்ட பின் அந்தத் தீமையை நீக்கும் உணர்வுகளை
2.நாம் நுகர்ந்தறிவதற்குத் தான் இந்தக் கண்களைக் காட்டுகின்றார்கள்.

அன்றைக்கு நாம் நல்லது செய்ய வேண்டும்… நல்லவர்களாக வேண்டும்… நல்ல பயன்களை அடைய வேண்டும்…! என்று இப்படி எண்ணினால் அதன் உணர்வின் தன்மையே நமக்குள் அறிவாக அது இயக்குகின்றது.

சாஸ்திரங்களிலும் வேத நூல்களிலும் மூலங்களை இப்படிக் கொடுத்துள்ளனர்.
1.ஆனால் அந்த மூலத்தை மற்றவர் யாரும் அறிந்து கொள்ளாத நிலைகளில்
2.அஷ்டமி நவமி என்ற அந்த இரண்டு நாளும் நல்லதையே எண்ணி விடாதே என்று மாற்றிவிட்டார்கள்.

ஒரு நல்ல காரியத்தை முழுமையாகச் செய்து சந்தோஷப்பட்டு அதை எண்ணினோம் என்றால் நம் உயிர் அதன் உணர்வின் உணர்ச்சியாக இயக்குகின்றது.

ஒருவர் வேதனைப்படுகிறார் என்று கண் கொண்டு பார்த்தால் அந்த வேதனையை நுகராதபடி எப்படி அவரை நல்லவராக்க வேண்டும் என்ற உணர்வின் தன்மை எடுக்க வேண்டும்.

தீமை வரும் நேரத்தில் எப்படி எண்ண வேண்டும் என்று தான் ஞானிகள் காட்டியுள்ளனர்.

இப்படி அந்த அஷ்டமி காலங்களிலும் நவமிக் காலங்களிலும் நாம் நல்ல காரியங்களைச் செய்து அந்த உணர்வின் தன்மை தெளிவாக்க வேண்டும் என்பதையே வேத பாட நூல்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உடலுக்குள் கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.

நம் உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று உள்முகமாக நம் உடலில் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் அந்தச் சக்தியைப் பாய்ச்ச வேண்டும்.

அதன் பின் எந்த நல்ல காரியமோ அது நடை பெற வேண்டும் என்ற எண்ணத்தைச் செலுத்தினால் அது நிச்சயம் நல்லதாகும்.

உணர்ச்சி வேகத்தை மனிதன் சமப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் – ஈஸ்வரபட்டர்

1.உணர்வையும்
2.எண்ணத்தையும்
3.ஒவ்வொருவரும் செலுத்தி வழிப்படுத்தும் முறை கொண்டு தான் “ஞான ஈர்ப்பு” வளரும்.

இவ்வுணர்வையும் எண்ணத்தையும் ஞானத்தில் செலுத்திட நற்குணங்களின் சக்தி அலை ஆறு வகையை உணர்த்தினோம். மனித குண அமிலங்கள் பன்னிரெண்டு இருந்தாலும் அதிலே அந்த ஆறு நற்குணங்களின் அமிலங்களின் சக்தி நிலை மனிதனுக்குள் பெருக வேண்டும்.

ஒவ்வொரு மனிதனின் குண அமிலத்தின் உணர்வு உந்தச் செய்யும் எண்ண ஓட்டம் உடலின் உணர்வைக் கொண்டே மீண்டும் மீண்டும் வரத்தான் செய்யும். அதனால் ஏற்படும் சலிப்பைச் சாந்தமாக்க வேண்டும்.

இவ்வுடல் பிம்ப உணர்வு கொண்டு வாழும் வாழ்க்கையில்
1.ஒவ்வொரு நிலையையும் காணும் பொழுதே
2.நாம் எடுக்கும் சுவாசத்தினால் அவ்வுணர்வலைகள் இவ்வுடலில் சாடத்தான் செய்யும்.
3.இன்று நாம் காணும் உணரும் எண்ணத்தால் மட்டும் நம் சுவாசம் அத்தகைய நிலையை ஈர்க்கும் நிலை ஏற்படுவதல்ல.

ஏன்… எப்படி…? எதனால்..?

ஜீவ பிம்ப உணர்வு (மனித) உடலில் “எல்லா உணர்வின் நிலையையும் உணரவல்ல ஈர்ப்பு குணங்கள்” இப்பிம்ப உடலின் அமில குணச் சேர்க்கை வடிவெடுத்த ஆரம்பக் காலத்திலிருந்தே…! பல ஜென்மங்களின் கூட்டுக் கலவை வளர்ப்பு அமிலங்கள் இந்த உடலில் உண்டு.

1.முந்தைய காலத்தில் நாம் எடுத்துக் கொண்ட உடலின் உணர்வலைகள்
2.இன்று… இப்பொழுது… நாம் எடுக்கும் நற்சக்தியின் அலையின் உணர்வினால் மட்டும் தடைப்படுத்திட முடியாவண்ணம்
3.நம் உடலின் கூட்டு உணர்வமில… முந்தைய சேமிப்பு அமிலத்தில் “உயர்ந்து நிற்கும் குணத் தொடர் உணர்வு” (முன் ஜென்மத் தொடர்)
4.அதன் ஈர்ப்பு வட்டத்திலிருந்து நம்மை மாறவிடாமல் தடைப்படுத்தும்.

இயற்கையின் உரு குண நிலையே இதன் அடிப்படை குண ஈர்ப்பு ஓட்டத்தில் தான் இவ்வுலகம் முழுமைக்கும் ஓடிக் கொண்டுள்ளது.

1.அதி மழை காலத்தில் அதன் வேகத்தைக் கொண்டு பெய்யும் மழை நீர்
2.அதே ஓட்டத்தில் சுழன்று அதி வேகமாக ஓடிக் கலக்கின்றது.
3.அதே நீர் தான் அமைதியாகவும் தெளிந்த நிலையிலும்
4.நாம் அணை கட்டி விடும் வேகத்தின் விகிதப்படி நிதானமாக ஓடுகின்றது.

உணர்வின் வேகத்தை மழை நீரானது மழை பெய்யும் வேகத்தைக் கொண்டு அதன் ஓட்ட நிலையில் விட்டு விட்டால் அதே வேகத்தில் பாய்வது போல் நம் உணர்வின் வேகத்தையும் அப்படியே விட்டால் அதனின் வேகத்திலேதான் பாயும்…!

ஆனால் மழை நீரை அணையைக் கட்டித் தேக்கி அந்நீரை நமக்கு வேண்டியபடி வெளிப்படுத்தும் விகிதம் கொண்ட ஓட்டத்தில் திறந்து விடும் பொழுது அதே நீர் அதற்கு உகந்த வேக நிலை ஓட்டத்தில் தான் அது ஓடும்.

ஆக.. இவ்வெண்ணத்தை நம் வாழ்க்கையில் நடத்திடும் எந்தச் செயலுக்கும் அச்செயலை ஈர்க்கவல்ல எண்ண ஓட்ட கதியில் விட்டு விட்டோமானால் என்ன ஆகும்…?

வாழ்க்கையில் நடந்திடும் எந்த ஒரு செயலையும் அணை கட்டி ஒழுங்குமுறைப்படுத்தி விடும் நீரைப் போல் இல்லாமல் விட்டு விட்டால்
1.மழை நீரின் வேகத்தைக் கொண்டு பாய்ந்தோடும் துரிதத்தைப் போலவும்
2.மழையின் தன்மை குறையக் குறைய மழை நின்ற பிறகும் அதன் செயல் நிலைக்கொப்பச் செல்லும்
3.நீரின் வேக நிலையைப் போலவும் தான் இவ்வெண்ண உணர்வும் செயல்படும்.
4.காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்ற பிறகு அது நிதானப்பட்டாலும் “வெள்ளத்தின் பாதிப்பு பாதிப்புத்தான்…!”

அதைப் போன்று நம் வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு நொடிக்கும் நாம் எடுக்கும் சுவாசத்தின் உணர்வு எண்ணம் கொண்டு பல மோதல்கள் வருகிறது.

ஏனென்றால் நம் பூமியின் காற்று மண்டலத்தில் இயற்கையின் அமில சக்திகளுடன் இம்மனித எண்ணத்தின் சுவாச அலையின் குண அமிலங்கள் நிறைந்தே சுழல்வதால்
1.நாம் எடுக்கும் சுவாசத்துடன் இக்காற்று மண்டல அமில சப்தங்கள்
2.நம் உணர்வு எண்ணத்தில் மோதிக் கொண்டே தான் உள்ளன.

ஒவ்வொரு நொடிக்கும் நம் சுவாச நிலைக்கொப்ப உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் சக்திகள் இவ்வுடல் பிம்ப அமில சப்த அலையுடன் பதிவாகிக் கொண்டே தான் உள்ளது… அதனின் இயக்கமும் இருந்து கொண்டே தான் உள்ளது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஆகவே எதிர் மோதலாகும் அந்தந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம்… நம் உணர்வையும் எண்ணத்தையும் சமப்படுத்திச் சீராக்கத் தான் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் அந்தச் சப்தரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும்படி சொல்கிறோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

எமது (ஞானகுரு) உபதேசத்தைக் கேட்டவர்களும் படிப்பவர்களும் அனைவரும் குறைந்தபட்சம் அவரவர்கள் குடும்பங்களிலும் அவர்கள் குடும்பப் பற்றுள்ள நிலைகளிலும்
1.தன் குடும்பத்தில் முதலிலே அன்பையும் பண்பினையும் பரிவினையும்
2.மகரிஷிகளின் அருளினையும் பெருக்கிக் கொள்ளுங்கள்.

அப்படிப் பெருக்க நேர்ந்தால் மற்றவர்கள் நம்மைப் பார்க்கும்போது நமது உணர்வுகள் அவர்களையும் நல்லவர்களாக மாற்றும்.

அதே சமயத்தில் நம் குடும்பத்தில் ஒற்றுமை என்ற நிலைகளில் செயல்பட்டால் நம் தெருவிலேயும் பண்பு கொண்ட நிலைகள் உருவாகும். நமது உணர்வுகள் அவர்களை மாற்றிட உதவும்.

மகரிஷிகளின் அருள் உணர்வுகளை அவர்களையும் நுகரச் செய்யலாம். அந்தப் பண்பையும் வளரச் செய்யலாம்.

நாம் இந்த உணர்வின் மூச்சலைகளை நீங்கள் பரவச் செய்யும்போது இது காற்றிலே கலக்கின்றது. நினைவுபடுத்தும்போது அவர்களுக்குள் இந்த உணர்வை ஊட்டும்போது அவர்களும் நுகர்கின்றனர். அவர்களையும் அறியாது இருளிலிருந்து மீளச் செய்ய முடிகின்றது.

ஆனால் நீங்கள் இதைத் தெரிந்து கொண்டாலும்
1.இதை அதிகமாகச் செய்து உங்கள் குடும்பத்தில் பற்றை இழந்து செயல்பட்டால்
2.நீங்கள் பார்ப்போரின் பேச்சுக்கும் செயலுக்கும் உங்களிலே இழுக்கான உணர்வைத் தேடும் நிலை வரும்.

இதனால் உங்கள் பண்பை அழித்திடும் நிலையும் பண்பை மற்றவரிடத்தில் வளராத தன்மையும்தான் வரும்.

இதைப் போன்ற நிலைகள் எப்பொழுது நம்மையறியாது இயக்குகின்றதோ உடனடியாகத் திருத்தி வாழும் தன்மையும் நம் உடலுக்குள் வளராது தடுக்கும் சக்தியும் பெற வேண்டும்.

அதைத் தடுப்பதற்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று பேரொளி என்ற உணர்வினை நாம் அறிந்திடும் ஆற்றலைப் பெருக்கி நமது உணர்வுகள் மற்றவரைத் தெளியச் செய்யும் உணர்வாக மாற்ற வேண்டும்.

ஆகவே வீட்டிற்குள் கணவனும் மனைவியும் ஒன்றி வாழ்ந்திடும் நிலையும் குடும்பத்தில் குழந்தையினுடைய நிலைகள் பற்றும் பாசத்துடன் வாழ்ந்திடும் நிலையும் முதலிலே உருவாக்கிப் பழகுங்கள்.

கணவன் மனைவி ஒன்று சேர்ந்து வாழ்ந்தாலே அது சொர்க்கலோகம்.
1.கணவன் உணர்வு மனைவியைக் காக்கும்,
2.மனைவியின் உணர்வு கணவனைக் காக்கும்.

யாம் சொல்லும் இந்த முறைப்படி தியானித்தால் எதிர்பாராத தீமைகள் வராது தடுக்கும் சக்தி உங்கள் இருவருக்கும் உண்டு.

உபதேசம் கொடுக்கும் போது அதைக் கேட்பவர்களுக்கு அடிக்கடி ஏன் தூக்கம் வருகிறது…?

கேள்வி:
சாமிகள் உபதேசத்தைக் கேட்கும் போதெல்லாம் சிலருக்குக் கிறக்க நிலைகள் ஏற்படுகிறது. தூக்கம் வருகிறது. அந்த நேரத்தில் சாமிகள் கூறும் உபதேசக் கருத்துகள் அவர்களுக்குள் பதிவாகிறதா என்பது பற்றிய விளக்கம் வேண்டும்.

ஞானகுருவின் பதில்:
உதாரணமாக நல்லதாக நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். நல்லதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றீர்கள். அந்த நேரத்தில் ஒருவர் வந்து வேதனைப்படும் சொல்லைச் சொன்னவுடனே என்ன ஆகிறது…?

நல்ல அணுக்கள் சோர்வடைகிறது அல்லவா…!

இதே மாதிரித் தான்
1.அந்த வேதனையை நீக்கிய ஞானிகளின் உணர்வை நுகரப்படும் போது
2.உண்மையிலே அதைப் பெற வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் போது வசிஷ்டர்… (கவர்ந்து கொண்ட சக்தி) உள்ளுக்குள் போகிறது.
3.இதற்கு முன்னாடி எத்தனையோ கஷ்டங்கள் சங்கடங்கள் எது எல்லாம் இருந்ததோ அதை அடக்கி இந்த உணர்வுகள் மேலோங்கும்.

நன்றாக இருக்கின்றீர்கள்.. ஒருவர் வந்து திடீரென்று வேதனையாகச் சொல்லப்படும் போது என்ன ஆகிறது…? நல்ல மனது எல்லாம் ஒடுங்கி விடுகிறது.

அந்த நல்ல மனதை “வேதனை” என்ற உணர்வு ஒடுங்கச் செய்கிறது. வேதனை நீக்கிய ஞானிகளின் உணர்வைக் கேட்கும் போது என்ன ஆகிறது…?

1.இந்த உணர்வு ஆன பின் உடல் ஆசை எல்லாம் மாற்றிவிடுகிறது.
2.ஒரே நினைவுடன் உங்களைத் துருவ நட்சத்திரத்திற்கு அழைத்துச் செல்கிறது.
3.அந்த உணர்வு உங்களுக்குத் தூங்குகிற மாதிரித் தெரியும்.

ஏனென்றால் மற்ற தீமைகளை எண்ணாதபடி ஒரே நினைவாக உங்கள் உடலில் உள்ள அணுக்கள் எல்லாம் அந்த உயர்ந்த சக்திகளைப் பெறுகிறது.

அப்படிப் பெருகிய நிலையில் உங்கள் எண்ணத்தை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அந்தப் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று சொன்னால் அங்கே கொண்டு போகிறது.

உங்களை மேலே தூக்குகிற மாதிரி இருக்கும்…!

இங்கே உபதேசம் கொடுத்துக் கொண்டிருக்கும் போது இந்தப் புவியின் கனம் இருக்காது. துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் போது உடல் எடை இல்லாது இருக்கும். சங்கடம் சலிப்பு என்ற நிலைகள் இருக்காது.

தூங்காமல் தூங்கும் காலம் எக்காலம்…? என்று சொல்வார்கள். ஆக தீமை என்ற உணர்வு வராதபடி… அந்த அருள் உணர்வுடன் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

1.தூக்கம் வருகிறது… மயக்கம் வருகிறது… சாமி சொல்வதைக் கேட்க முடியவில்லை.
2.சாமி சொல்கிறார்… பெரியவர் என்னமோ சொல்கிறார்… என்ற எண்ணத்தில் இருக்கக்கூடாது.

இதை எல்லாம் கேள்வியாகச் சாமியிடம் கேட்கலாமா…? என்று இருக்கக்கூடாது. கேட்டால் தான் தெளிவு வரும். மற்றவர்களுக்கும் தெளிவு வரும்.

ஏனென்றால் நாளைக்கு அந்த மெய் உலகம் வர வேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வு ஆதியிலே தோன்றிய அகஸ்தியன் எப்படி ஒளியாக ஆனானோ அந்த உணர்வுகள் பெருகும் காலம் வரும்.

காரணம்…
1.என்றைக்குமே ஒரு துன்பத்தின் நிலை அது எல்லை கடந்து வரப்படும் போது தான்
2.அதிலிருந்து மீண்டிடும் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெருக்க முடிகின்றது… வளர்க்கவும் முடிகின்றது.

இப்போழுது நான் சொல்வது உங்களுக்குச் சாதாரணமாகத் தெரியும்.
1.பின்னாடி போகப் போகப் போகத் தான்
2.இந்த அருள் உணர்வுகள் உலகம் முழுவதற்குமே தெரியக்கூடிய தன்மை வரும்.

ஏதோ நான்கு பேர்… பத்துப் பேர் வருகிறீர்கள்… நூறு பேர் வருகிறீர்கள் என்று லேசாக நினைக்கலாம். அந்த நூறு பேரால் இந்த உலகம் முழுவதற்குமே அருள் ஞானமாக மாற்றும் சக்திக்கு வரும்.

நீங்கள் அனைவருமே எதிர்காலத்தில் உலகை வெல்லக் கூடிய சக்தி பெற வேண்டும் என்பது தான் என்னுடைய (ஞானகுரு) பிரார்த்தனை எல்லாம்.

கிருஷ்ணன் வாயிலே காட்டிய அண்டசராசரத்தின் ஆற்றலை நாம் பெற வேண்டும் – ஈஸ்வரபட்டர்

பல நிலைகளால் பூமியின் நிலையே பூமியின் சுவாச நிலையே மாறு கொள்ளும் இத்தருவாயில் நம் உணர்வின் எண்ணத்தால் ஆத்ம பலத்தைக் கூட்டிக் கொண்டால் இவ்வுலக மாற்றத்தில் மடியப் போகும் உயிரினங்களின் வழித் தொடர் செல்லும் மிகவும் ஈன நிலையிலிருந்து மீள முடியும்.
1.இப்படி உயர் செயல் குணமுள்ளது
2.இன்றைய மனித உடல் உள்ளவர்களுக்கு…!

உடல் இல்லாதவர்கள் (உடலை விட்டுப் பிரிந்தவர்கள்) என்ன செய்வது…?

தன் உணர்வின் எண்ணத்தால் தான் எடுக்கும் ஜெபத்தால் தான் மட்டும் சக்தி பெறுவதோடு அல்லாமல் தன் உணர்வின் எண்ணத்தைப் பாய்ச்சி தான் வணங்கும் தன் முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்களையும் உயர் நிலைப்படுத்திட முடியும்.

எவ்வுடலில் இருந்து உடல் பெற்று வழி வந்துள்ளோமோ அவ்வுடலின் முன்னோர்களையும் தம் ஈர்ப்பு ஜெபத்தால் நாம் வணங்கி நாம் செல்லும் சப்தரிஷி மண்டலக் கூட்டுடன் சுழல விட்டுக் கொள்ள முடியும்.

ஏனென்றால் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகளுக்குத் தன் உணர்வினால் மனம் சுவை இவைகளைத்தான் எடுக்க முடியும். ஞானத்தை வளர்த்துக் கொள்ள உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களால் முடியாது.

அவர்களின் நிலை சிதறாமலும் மாறுபடாமலும் இருக்க உடலுடன் கூடிய ஜீவ பிம்ப உடல் மனிதனால்தான்
1.தன் எண்ண உணர்வில் அவர்களை நினைத்து வணங்கினால்
2.அவர்களின் உயிராத்மா வேறு ஈர்ப்பலைக்குச் செல்லாமல்
3.நாம் பாய்ச்சும் ஞானிகளின் எண்ண உணர்வு ஈர்ப்புக்குள் அவர்களின் நிலையும் சுழன்று கொண்டிருக்கும்.

ஏனென்றால் இன்று விஞ்ஞானத்தால் பூமியினுள் உள்ள நுண்ணிய காந்த அலையையும் காற்றில் கலந்துள்ள இவ்வலையையும் ஈர்த்தெடுத்து “எலெக்ட்ரானிக் காந்த மின் அலை ஈர்ப்புச் செயல் காண்பதினால்…”
1.மிகச் சக்தி வாய்ந்த உடலை விட்ட உயிராத்மாக்களுக்குக் கூட
2.ஈர்ப்புச் சிதறல் நிலை இன்றுள்ளது… உயர் நிலை பெறத் தடையாகி விட்டது.

இன்று விஞ்ஞானத்தில் இவ்வலையைப் பிரித்தெடுத்து பல செயல்களைச் செயற்கைக்கு உணர்த்துகின்றான்.

ஆனால் அதே காந்த நுண்ணிய மின் அலை ஈர்ப்பை ஈர்த்துத்தான் ஜீவன் கொள்கின்றது ஒவ்வொரு ஜீவனும். மனிதனின் உடல் பிம்பச் செயலே இக்காந்த நுண்ணிய மின் அலை ஓட்டம் தான்.

விஞ்ஞானத்தில் உலோகத்தின் இம்மின் அலை ஈர்ப்பைக் கொண்டு பல மண்டலங்களுக்கும் பல சாதனங்களைச் செலுத்தி உணர்ந்து வருகின்றான்.

1.இஜ்ஜீவ பிம்ப உடலிலேயே…
2.இவ்வுலகம் மட்டுமல்ல எவ்வுலகையும் சென்று காண வல்ல
3.அமிலப் படைப்பு ஈர்ப்பு காந்த மின் அலைகள் உண்டு.

இக்காந்த மின் அலையை எவ்வெண்ணத்தில் எவ்வுணர்வைக் கொண்டு பாய்ச்சுகின்றோமோ அதன் நிலையை நாம் அறிய முடியும். இவ்வுடலில் எல்லா உணர்வலையையும் ஈர்க்க வல்ல சக்தியுண்டு.

இதனை உணர்த்தத்தான் ஒவொரு கால கட்டத்திலும் கதை வடிவில் இராமனையும் கிருஷ்ணனையும் படைத்தான் அன்றைய ஞானி.

நற்குணங்களின் உருவமாய் இராமனின் கதையைப் படைத்தான். உலகமே இம்மனித பிம்ப ஈர்ப்பில் காண முடியும் என்பதனை உணர்த்த கிருஷ்ணனைப் படைத்துக் காட்டினான்.

கிருஷ்ணன் வாயைத் திறந்தால்… அண்ட சராசரங்களையும் கண்டதாகக் கதை உருக்காட்டினான் அன்றைய ஞானி.

இக்காற்றில் தான் பூமி ஈர்த்து வெளிக்கக்கும் அனைத்துச் சக்திகளும் உண்டு.
1.உணர்வுடன் உருவமுடன் உள்ள நாம்
2.இவ்வெண்ணச் சுவாசத்தால் இராமனின் குண அமிலத்தை ஈர்த்துக்
3.கிருஷ்ணனின் வாயில் கண்ட அண்ட சராசரங்களையும் காண முடியும்.

மனித பிம்ப உணர்வு எண்ணச் சுவாசத்தால் காந்த மின் நுண்ணிய அலை ஈர்ப்பை எச்செயலில் செலுத்தி நம் உணர்வு எண்ணச் சுவாசம் செல்கிறதோ அதன் செயலை நாம் செயலாக்க முடியும்.

நம்மைக் காட்டிலும் மிகச் சக்தி வாய்ந்த நம்மையே படைக்க வழி தந்த சப்தரிஷிகளின் தொடரில் இவ்வெண்ண உணர்வு சுவாச ஈர்ப்பிற்குச் செயலாக்க முடியும்.

1.முதலில் இராமனைப் போன்ற குணமாகுங்கள்
2.பிறகு கிருஷ்ணனின் காந்த நுண்ணிய மின் அலை உருவாகுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

கூட்டுத் தியானத்தில் நாம் என்ன செய்கிறோம்…?

அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். அனைவரும் தீமையை நீக்கிடும் அருள் சக்தி பெற்று வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எல்லோரும் ஒன்று சேர்ந்து உணர்வின் ஒலிகளை எழுப்புகிறோம்.

எல்லோரும் நலம் பெற வேண்டும் என்று வெளிப்படுத்தும் இந்த உணர்வின் ஒலிகள் உங்கள் கெவிக்குள் மோதி… வலிமையான சக்தியாக மாறுகிறது.

1.நீங்கள் இதை நுகரும்போது உங்கள் உயிர் அது எல்லாவற்றையும் சேர்த்து ஒரு வலிமையான அணுவாக மாற்றுகிறது.
2.அப்பொழுது தீமைகளை நீக்கும் வலிமை உங்களுக்குள் பெருகுகிறது.

உங்கள் வாழ்க்கையிலோ அல்லது குடும்பத்திலோ அங்கே குறைகளோ தீமைகளோ பகைமைகளோ வந்தாலும் கூட்டுத் தியானத்தில் பெறுகின்ற சக்தியை நீங்கள் எண்ணினால் அந்தச் சக்தி உங்களுக்கு எளிதில் கிடைக்கும்.

“தீமைகளை நீக்கும்” – “தீமைகளிலிருந்து மற்றவரையும் மீட்டிடச் செய்யும்” ஆற்றல் மிக்கவராக நீங்கள் வளர முடியும்.
1.ஆகவே கூட்டுத் தியானத்தில் கலந்து கொள்ளுங்கள்.
2.அதன் மூலம் உயர்ந்த சக்திகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

கூட்டுத் தியானத்தில் தொடர்ந்து கலந்து கொண்டு சீராகத் தியானித்தால் பின் உங்கள் அனுபவம் பேசும். தெரிந்து கொள்ளலாம் நீங்கள்.

“பதினெட்டாம் பெருக்கு” என்றால் நாம் எதைப் பெருக்க வேண்டும்…?

 

இந்தப் பூமியில் மனிதனாகத் தோன்றிய நிலைகளில் தீமைகளை வென்ற அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் விண்ணிலே ஒளி வீசிக் கொண்டுள்ளான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்று விண் சென்றவர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் வரும் ஒளியான உணர்வலைள் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு நம் பூமியில் பெருகிக் கொண்டே உள்ளது.
1.அதனை யாரெல்லாம் நுகர்ந்து தனக்குள் பெருக்கிக் கொள்கின்றனரோ
2.அந்த அருள் ஞானத்தின் உணர்வுகள் அவர்களுக்குள் பெருகுகின்றது.

ஆனால் அதே சமயத்தில் அன்பால் பண்பால் பரிவால் பிறர்படும் துன்பங்களையோ துன்பப்படுத்தும் உணர்வுகளையோ உற்றுப் பார்த்து
1.அந்த உணர்வுகளைப் பதிவாக்கி விட்டால்
2.அந்த நினைவினைத் தனக்குள் கூட்டி விட்டால் அதுவே பெருகி
3.நமக்குள் தீமையின் விளைவுகளாகப் பெருகி… தீமையின் உணர்வாகவே பெருக்கிவிடும்.

ஆகவே அதனின்று தனித்து… அந்த அருள் ஞானிகளின் உணர்வைத் தனக்குள் பெருக்கி அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் விளைய வைக்கும் ஒரு பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.

பின்… யார் துன்பப்பட்டார்களோ அவர்கள் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பெற வேண்டும் என்ற உணர்வைப் பதித்து அவர்கள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இப்படி நாம் எண்ணினால் அந்த உணர்வுகள் அங்கே அருள் ஞானமாகப் பெருகத் தொடங்கும். அதன் மூலம் அவர் மகிழ்ச்சியான நிலைகள் கொண்டு வாழ்க்கை நடத்தப்படும் போது அதை நமக்குள் அந்த மகிழ்ச்சியைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

இது தான் ஆடி பதினெட்டு… பதினெட்டாம் பெருக்கு…!

ஆகவே… நாம் யாரைச் சந்தித்தாலும் யாருடன் பழகினாலும் சந்தர்ப்பத்தில் தீமைகள் வந்தால் அந்த தீமைகளைப் பெருக்காது அதை தடுக்க வேண்டும்.

எந்த ஒரு உணர்வின் தன்மையாக இருந்தாலும் ஒவ்வொன்றும் நகர்ந்து சென்றே இயக்குகின்றது ஒன்றொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அந்த இயற்கையின் சுழற்சி வட்டத்தில் சிக்கி ஒன்றுடன் ஒன்று இணைந்து அது பெருகுகின்றது

புயல் காற்று சுற்றும் பொழுது பல உணர்வின் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மற்ற தாவரங்களின் சத்தை தன்னுடன் இணைத்து அந்த உணர்வின் இயக்கமாக அது இயங்குகின்றது என்று பல முறை சொல்லி உள்ளேன் (ஞானகுரு).

ஆற்றிலே நீரோட்டம் இருக்கும்போது அது ஓடும் பாதை அனைத்திலும் அது தன் உணர்வின் சத்தை வளர்த்து செழிப்பை அதிகரிக்கச் செய்கின்றது.

நீர் இல்லை என்றால் தாவர இனங்களைப் பெருக்கும் நிலையும் இல்லை. அதே போல் நமக்குள் ஜீவ நீர் இல்லை என்றால் நமக்குள் உணர்வுகளைப் பெருக்கும் சக்தி இல்லை.

1.அருள் ஞானியின் உணர்வை நமக்குள் ஜீவ நீராக ஊற்றி
2.நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் அருள் ஞான சக்தியைப் பெருக்கி
3.அருள் ஒளியின் சிகரமாக நாம் மாற்றிடல் வேண்டும்.

அதனை நினைவு படுத்தும் நாள்தான் ஆடிப்பெருக்கு. அதைப் பதினெட்டாம் பெருக்கு என்றும் சொல்வார்கள்.

பல நிலைகளிலும்… பல எத்தனையோ கோணங்களில் நாம் திசை மாறி… திசை மாற்றி… இப்படிப் பல பல கோணங்களில் நாம் மாறிப் பரிணாம வளர்ச்சி அடைந்து… மனிதர்களாக வந்தவர்கள்தான் நாம்.

இந்தப் புவியின் ஈர்ப்பைக் கடந்து சென்று நாம் விண் வழி செல்ல வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் நன்னாளாகப் ஆடி பதினெட்டு என்று கூறுகின்றார்கள்.

பத்தாவது நிலையிலிருக்கும் உயிர் முழுமை அடைய வேண்டுமென்றால்
1.அஷ்டதிக்கு…! எட்டுத் திக்கில் இருந்து… பல முனைகளிலிருந்து வரும் தீமைகளை அகற்றி
2.அதை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொள்வதே “பதினெட்டாம் பெருக்கு” என்பது

நாம் இப்படிப் பெருக்கி விட்டால் எந்தத் திக்கிலிருந்து எந்த உணர்வு வந்தாலும் அதை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு பேரருள் பேரொளியாக மாறும் நிலைகள் வருகின்றது.

ஞானத்தின் உயர்வால் “மனிதன் தெய்வமாக முடியும்…!” – ஈஸ்வரபட்டர்

 

பேராசையின் உந்தலில் ஏற்பட்ட எண்ணத்தினால் பேராசைக்குகந்த நிலை பெறச் சூழ்ச்சி வலை பின்னப்பட்டு அச்சூழ்ச்சியின் இன்னலில் எற்பட்ட செயல்கள் எல்லாம் “இராமாயணக் காவியத்தில்” வடிக்கப்பட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது.

இப்பேராசை உணர்வெண்ண ஆசையின் செயல்முறை எப்படி எப்படி எந்தெந்தச் சுற்றலில் இருந்தெல்லாம் சிக்கி… ஒரு மனிதனை… நற்குணம் அடைய வேண்டும் என்ற உணர்வு குணத்தை ஒரு வட்டத்திற்குள் சுழலவிட்டு…
1.மனிதனுக்குகந்த பண்பு பாசம் பக்தி வீரம் அன்பு ஆசை இப்படி ஒவ்வொரு குணத்தையும்
2.தந்தையின் சொல் மந்திர சக்திக்கும்
3.தமையனின் பாசப் பிணைப்பையும்
4.அன்பின் உருவைக் காதலிலும்
5.வீரத்தை வில்லாக்கியும்
6.பண்பைப் பலதிலும் படைத்துப் பிணைக்கப்பட்ட இராமனை அவதாரப் படைப்புக் காவியனாக்கி
7.வழிப்படுத்திக் காட்டிய இராமாவதாரக் காலத்தில் அன்றிருந்த நிலையைக் கொண்டு
8.அக்காலத்திற்குகந்த வாழ்க்கையின் முன்னேற்ற ஞானத்தைக் கொண்டு
9.இராமனாகப் படைக்கப்பட்ட உருவின் நிலையில்
10.ஆண்டவனான வழி நிலை பெறுகின்ற செயலனைத்துமே அன்றே காவியத்தில் வடிக்கப்பட்டன.

ஆனால்… ஆண்டவனாகப் பிறந்தவனின் இன்னல் நிலையை உணர்த்தி… ஆண்டவனின் சக்தியைக் காட்ட வடிக்கப்பட்ட காவியமல்ல இராமனின் காவியம்.

பேராசையின் எதிர் நிலையில் சிக்குண்ட ஆத்மா… “தன் உணர்வின் எண்ணத்தில் தெய்வ சக்தி பெறவேண்டும் என்ற எண்ண சக்தி இருந்தால்…”
1.வாழ்க்கையில் செயல் எதிர் பிம்பம் எதுவானாலும்
2.தன் ஞானத்தின் உயர்வினால் வரும் இன்னலில் இருந்தெல்லாம் மீண்டு
3.”தெய்வமாகலாம்…!” என்று உணர்த்தப்பட்ட காவியம் தான் இராமனின் காவியம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

விநாயகர் சதுர்த்தி அன்று நாம் என்ன செய்ய வேண்டும்? சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உட் பொருள் என்ன…? என்று பார்ப்போம்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் சக்தி வாய்ந்த உணர்வினை சூரியனின் காந்தச் சக்தி கவர்ந்து அலைகளாகப் படர்ந்து வருகின்றது.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று எண்ணத்தால் பதிவு செய்திருந்தால் இந்த நினைவு கொண்டு காலை சூரிய உதய நேரத்தில் அதை எடுத்து நம் உடல் முழுவதும் படர வேண்டும் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று பல முறை உடலுக்குள் செலுத்தி நம் ஆன்மாவையும் ஜீவான்மாவையும் பரிசுத்தப்படுத்த வேண்டும்

பின் நம் வாழ்க்கையில் யார் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும். தொழில் செய்யும் இடங்களில் எங்களுடன் பணி புரிவோர் எங்கள் வாடிக்கையாளர்கள் அனவருக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அவர்கள் உடல் நலம் பெறவேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெறவேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியால் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் அருள் சக்தி பெறவேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

அவர்கள் அனைவரும் மலரைப் போன்ற மணம் பெறவேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தியால் மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெறவேண்டும் என்று சூரிய உதய நேரத்தில் நாம் அனைவரும் இந்தச் சக்தியைக் கவர்தல் வேண்டும்.

எல்லோரும் சேர்ந்து இவ்வாறு கவர்ந்தோம் என்றால் நமக்குள் அந்தச் சக்திவாய்ந்த நிலைகள் இணைந்து நமக்குள் நம்மையறியாமல் இயங்கிக் கொண்டிருக்கும் பகைமை உணர்வுகள் அனைத்தையும் செயலற்றதாக்கி விடுகின்றது.

இந்தப் பரமான பூமியில் பரவிக் கொண்டிருக்கும் தீமையை விளைவித்துக் கொண்டிருக்கும் உணர்வுகளை நமக்குள் இந்த ஆற்றல்மிக்க சக்தி இணைந்து கொண்ட பின் விலகிச் செல்லச் செய்துவிடுகின்றது.

எப்படி வேப்ப இலையின் சத்தை அந்த மணத்தைக் கண்டபின் ரோஜாப்பூவின் மணங்கள் நகர்ந்து ஓடுகின்றதோ, ரோஜாப்பூவின் நறுமணத்தைக் கண்டபின் பிற தீமைகள் நகர்ந்து ஓடுகின்றதோ இதைப் போன்றுதான் தீமையான உணர்வுகளை விலகச் செய்தல் வேண்டும்.

நம் வாழ்க்கையில் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்களுக்கெல்லாம் இந்த நிலைகள் பெறவேண்டும் என்று இந்தப் பகைமை உணர்வை சதுர்த்தி செய்து அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அப்பொழுது நாம அனைவரும் ஈர்க்க மறுக்கும் அந்தத் தீமைகளை விளையவைக்கும் உணர்வுகள் தாவர இனங்கள் இருக்கும் பக்கம் செல்வதில்லை.

அதே சமயம் சூரியனின் காந்தப் புலனறிவு வெளிவரும் பொழுது அதனின் ஈர்ப்பு வட்டத்தில் தீமை செய்யும் உணர்வுகள் சிக்கி, தாவர இனங்கள் வளரும் நிலைகளுக்கு அப்பால் அது சென்றுவிடுகின்றது.

பின், பூமியின் மைய வட்டத்திற்குத் தரை மார்க்கத்திற்கு வருவதில்லை. அவ்வாறு அது அலைகளாகச் செல்லும் பொழுது கடலின் ஈர்ப்பலைக்குள் சிக்கிவிடும்.

அதிலுள்ள ஹைட்ரஜன் அந்த வலுக் கொண்ட உணர்வின் அலைகள் கொண்டது, ஹைட்ரஜன் என்றால் தீமைகளை விளைய வைக்கும் உணர்வின் சத்து கொண்டது.

அதற்குள் உள்ள காந்தப் புலனறிவு அது தன் இனத்தை அதாவது நாம் அனைவரும் ஈர்க்க மறுத்த அந்தத் தீமையான அலைகளை அது கவர்ந்து கடலுக்குள் அமிழ்த்திவிடுகின்றது.

அதனால், இந்தப் பரமான பூமியும் பரிசுத்தமாகின்றது. நம் உடலுக்குள் இருக்கும் ஜீவ அணுக்களும் அது பரிசுத்த அணுக்களை விளையவைக்கும் தன்மை உருவாகின்றது.

நம் வாழ்க்கையில் ஒரு வருடம் முழுவதும் நாம் பிறருடைய குறைகளைக் கேட்டுணர்ந்தாலும் அந்த உணர்வுகள் நமக்குள் வளர்ந்த பின் அதை நம் உடலிலிருந்து கரைத்திடல் வேண்டும்.

அதற்காகத்தான் விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் உருவத்தை உருவாக்கி தான் வளர்ந்த நிலையை நினைவில் கொண்டு தீமைகளைக் கரைத்துவிடும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

சாஸ்திரங்களில் இது உண்மை.

எப்படிக் களிமண்ணில் செய்து நாம் கடலில் கொண்டு கரைக்கின்றோமோ இதே போல மனிதனின் உடலில் விளைந்த இந்தத் தீமைகளைக் கரைத்திடல் வேண்டும்.

பாலம் கட்ட அணில் இராமனுக்கு உதவி செய்தது என்பதன் உட்பொருள் என்ன…?

 

நாம் எந்தெந்தக் குணங்கள் கொண்டு எடுக்கின்றோமோ இவை அனைத்துமே இராமன் தான்.

இலங்கையைத் தாண்டுவதற்கு “ஒரு அணில் இராமனுக்கு உதவி செய்தது…” என்றும் அதனுடைய கடமையாக சிறு கல்களைப் போட்டுப் அந்தப் பாலத்தைக் கட்ட உதவியதாகக் காவியத்திலே காட்டியிருப்பார்கள்.

அதாவது புழுவிலிருந்து மனிதனாகப் பரிணாம வளர்ச்சியில் வந்த நிலையினை அவ்வாறு சூட்சமமாகக் காட்டுகின்றார்கள்.

நாம் ஒரு அணிலாக உருப்பெற்றிருந்த போது… “தன்னைத் தற்காத்துக் கொள்ளும் சக்தியாக” அந்த உடலிலிருக்கும் போது சேர்த்துக் கொண்ட அந்த வினைகள் தான் மனிதனாக வளர்வதற்குக் காரணமாக அமைந்தது.

அதே சமயத்தில்…
1.மெய் உணர்வின் தன்மையை அந்த மெய் ஒளியைப் பெறக்கூடிய தகுதிக்கும்
2.நல்ல சிந்தனையின் நிலைகள் வளர்வதற்கும்
3.அணிலின் உடலாக நாம் இருக்கும் போது பெற்ற நல்ல உணர்வின் சக்தியின் பங்கும்
4.அதிலே உண்டு என்று காட்டுவதற்குத் தான் காவியத்தில் அதைக் காட்டப்பட்டது.

சீதாவை இராவணனிடமிருந்து மீட்க இலங்கைக்குள் இராமன் போவதற்கு அணிலும் சிறு கல்களைப் போட்டுப் பாதை அமைத்துக் கொடுத்து உதவி செய்தது என்று அந்தக் குட்டிக் கதையின் மூலம் நமக்குத் தெளிவாக்கியுள்ளார்கள் ஞானிகள்.

இதைக் கவனத்தில் கொண்டால்
1.இராவணனிடமிருந்து சீதாவை மீட்டிக் கொள்ள அணில் உதவி செய்ததென்றால்
2.இந்த உடலான ஆக்கிரமிப்பு சக்திகளிலிருந்து தன்னை மீட்டிக் கொள்ள
3.அந்த அணிலின் உடலில் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வின் எண்ணங்களாக விளைந்து
4.உயிரின் தன்மை கொண்டு அந்த இராமன் என்று சொல்லுக்கு “ஒரு இயக்கப் பொருளுக்குள்…?
5.அந்த உணர்வின் சத்துக்கள் அது எப்படி உதவியது…? என்று தெளிவாகக் காட்டுகின்றனர்.

ஏனென்றால் பல கோடிச் சரீரங்களை எடுத்து நாம் மனிதனாக வந்தாலும் ஒவ்வொரு சரீரத்திலும் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வின் ஆற்றலை வளர்த்துத் தான் அது ஒரு குணமாக ஆனது.

குழம்பை வைக்கும் போது பல பொருள்களைப் போட்டு ஒரு சுவையாக அதை மாற்றிக் கொண்டு வருகின்றோம். அதைப் போன்று இந்த மனித உடல் பெறுவதற்கு 1008 குணங்களின் சக்தி தேவை.

சிந்திக்கும் தன்மை கொண்ட படைக்கும் சக்தியான மனிதனை உருவாக்கச் செய்வதும்… எடுத்துக் கொண்ட எண்ணத்தின் நிலைகள் கொண்டு நாம் பேசும் போது அந்த உணர்வின் தன்மையை அறிந்து கொள்ளக்கூடிய நிலைகளையும்… மற்றவர்களுக்குள் அது இயக்கக்கூடிய சக்தியாகப் பெற்றது என்றும் ஞானிகள் காட்டினார்கள்.

1.அதைத் தான் 1008 குணங்களாகப் பிரிக்கப்பட்டு – ஊன் உடம்பு ஆலயம் என்ற நிலையில்
2.நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் ஊனாக மாறி… உடம்பாக மாறி… இந்த உடம்பு தான் ஆலயம் என்றும்
3.நாம் எடுத்துக் கொண்ட குணங்கள் நமக்குள் சக்தியாக இயங்குவதை
4.ஒவ்வொரு குணத்திற்கும் ஒவ்வொரு பெயரை வைத்து 1008 தெய்வ சக்திகள் என்று வைத்தார்கள்.

இவை அனைத்தையும் உருவாக்கியது யார்…? நம் உயிர் தான். அவன் தான் கடவுள்.

வாலிப வயதில் எடுக்கும் வீரிய எண்ணம் மனிதனின் அடிப்படை குணத்தையே மாற்றும் – ஈஸ்வரபட்டர்

 

ஒரு சிட்டிகை உப்பெடுத்து நாக்கில் வைத்தவுடன் அதன் உவர்ப்புத் தெரிகிறது. அதே நாக்கு புளிப்பு துவர்ப்பு காரம் இவற்றின் சுவையையும் அறிகின்றது.

சுவையை உணர்வதைப் போல் மணத்தின் மாற்றத்தையும் முகர்ந்து உணர முடிகின்றது. ஒளியின் மாற்றத்தையும் கேட்டறிய முடிகின்றது.

இவ்வுலக சுழற்சி வாழ்க்கையுடன் ஒன்றிய வாழ்வின் அன்றாடச் செயலாக இவ்வுணர்வின் வட்ட ஈர்ப்பில் உழன்று வாழும் நாம் இவற்றை உணர… உருவ நிலை கொண்ட ஆரம்பச் செயலுக்கு நம் ஈர்ப்பைச் செலுத்திப் பார்த்தோம் என்றால்
1.ஒவ்வொரு உயிர்த் துடிப்பு நிலை கொண்ட உயிரணுக்கள் தோன்றிய நாள் தொட்டே
2.அவற்றின் வழி அலைத் தொடரினால் உருவாகிய உணர்வின் சேமிப்புக் காலத்தில்
3.பல கோடிக் காலங்களாக ஒவ்வொன்றின் தொடரும் சிறுகச் சிறுக ஒவ்வொரு வளர்ச்சி நிலை மாறி மாறி
4.இவ்வுணரும் பக்குவ நிலை அமிலக்கூட்டு உருவ மனிதனாக உருப்பெறும் காலத்தில்
5.பன்னிரெண்டு குண அமிலத்தைச் சேமித்ததன் மூலம்
6.மனித பிம்பச் சேமிப்பிற்குத் தேவையான வளர்ச்சி நிலை மனிதனாக ஆன பிறகு
7.சேமித்ததன் சக்தி இவ்வேழு பிம்ப உடல்களுக்கு ஜென்மம் எடுக்கக்கூடிய அமிலக் கூட்டு நிறைந்த பிறகுதான்
8.மனித பிம்ப உடலையே பெறுகிறது.

இவ்வாறு உருப் பெற்ற அனைத்தையும் உணரும் (SELF REALIZATION) உணர்வு… மனிதனின் உணர்வுடன் கூடிய எண்ண ஞானத்தைச் செலுத்தும் நிலைக்கொப்பத்தான் அமிலக்கூட்டை நிறைத்து (உடலிலே விளைய வைத்து)… மனித பிம்ப உடல் கொண்டவனின் அவரவரின் செயல் திறன் அமைகின்றது.

1.பிம்ப உடலின் பிறப்பிலேயே பிறப்பெடுத்து வளர்ந்து
2.வயது நிலையின் நிலைக்கொப்ப உருவ வளர்ச்சியின் மாற்றங்களும்
3.ஞான சக்தியின் உணர்வாற்றலும் செயல்படுகின்றன.

“உருவ வளர்ச்சி நிலை” குறிப்பிட்ட காலத்துடன் நின்று விடுகின்றது. ஆனால் உணர்வின் எண்ண ஈர்ப்பு ஞானத்திற்கு…
1.உடலின் வளர்ச்சிப் பருவம் எய்திய காலத்தில் எடுக்கும் எண்ண நிலைக்கொப்பத்தான்
2.ஒவ்வொரு மனிதனின் குண நிலை செயல்படுகிறது.

பருவ வளர்ச்சிக் காலத்தில் (ADOLESCENT AGE) மனித பிம்பத்தின் ஈர்ப்பின் அமில குணமே
1.மிகவும் வீரிய காந்த மின் அலையின் சக்தியை
2.மின்சாரத்தின் ஈர்ப்புப் பாய்ச்சலைப் போன்று பாயும்
3.அமில வளர்ச்சியின் சேமித குணமான அடிப்படை அமைகின்றது.

“அத்தருணத்தில் வெளிப்படுத்தும் முறை கொண்ட மனிதனாகத்தான்” மனித ஜென்ம காலம் வரை ஒவ்வொருவனின் குண நிலையும் அமைகின்றது.

இவ்வுணர்வலையின் ஈர்ப்பு சக்தி “துரித ஓட்டத்தில்… ஓடும் காலமிது…!”

அதனைச் செலுத்தும் முறை கொண்ட… மனித வாழ்க்கை முறை பெறும் காலத்தை… எச்சக்தியில் செயல்படுத்துகின்றனரோ…!
1.அதன் உணர்வு ஈர்ப்பு அமிலத்தின் சேமிப்பை – அத்தருணத்தில் தான்
2.குணத்தின் அடிப்படை உணர்வு சேமிதம் உள்ளது.

பல துறைகளில் முன்னேறுபவர்களுக்கும் “அக்காலத் தருணம் தான்” ஏற்றதாக அமைகின்றது. அதி உல்லாச காமுக வழித் தொடரில் செல்பவனும் இப்பருவ கால ஈர்ப்பில் எடுக்கும் எண்ணத்தின் வழித் தொடர் மனிதனாகத்தான் ஒவ்வொருவனும் வாழ்கின்றான்.

1.இதனை மாற்றி அமைக்கும் செயலாக
2.எச்சக்தியைக் கொண்டு செயல்படுத்துவது…! என்பதும் கடினம் தான்.

உணர்வின் எண்ணத்தின் வழித் தொடர் அமிலமுடன் வழி கொண்ட நாம் அவரவர்களின் நிலைக்குகந்த செயல் வழியை “நினைத்த மாத்திரத்தில் மாற்றிக் கொள்வது…!” என்பது கடினமாகிறது.

பிறரால்…
1.அவர்களின் நற்சக்தியைச் செயலாக்கித் தீயவர்களை நன்மை ஆக்குவது என்பதும்
2.தீயவன் நல்லவனைத் தீமைப்படுத்துவதற்கும்
3.அந்தந்தக் குண அமிலத்தின் நிலையிலிருந்து மாற்றுவது கடினம்.

உணர்வினால் எடுத்த அமிலத்தின் வளர்ச்சியின் குண மனிதன் அவன் அலைத் தொடரில்தான் இன்று வரை வாழ்ந்து வருகின்றான்.

இந்நிலையை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய முடியும்…?

1.மிகவும் சக்தி வாய்ந்த காந்த மின் அலையின் ஈர்ப்பை எடுத்து
2.அவர்களின் எண்ணமும் – நல்லுணர்வின் பால் சக்தி அலையின் ஈர்ப்புடன் “கலக்கப் பெற்றால் தான்…!”
3.எச்சக்தியின் அலையும் அவர்கள் உடலில் பாய்ந்து
4.அவர்களின் குண நிலையின் வழித் தொடரையே மாற்றியமைக்க முடியும்.

முந்தைய இராமாவதார கிருஷ்ணாவதாரக் காலங்களில் காவியங்களில் காட்டப்பட்ட போர்களில்… ஒருவருக்கொருவர் போர் செய்யும் பொழுது…
1.ஒருவர் வில்லிலிருந்து வரும் அம்புடன் எதிர்த்து வரும் அம்பும் மோதுண்ட பொழுது
2.ஒளி நிலை பெற்று ஒன்றுடன் ஒன்று ஊடுருவி எதிர்நிலை கொண்டு
3.அதனதன் நிலைக்கே திரும்பிச் சென்றதாகக் காவியக் கதைகளில் படித்திருப்பீர்கள்.
4.உண்மையைக் கதைப்படுத்தி மறைக்கப்பட்ட தத்துவங்கள் பல உண்டு அவற்றில்…!

வான்மீகி மகரிஷியால் இராமாயணக் காவியத்தில் எழுதப்பட்ட அந்த உண்மையின் ஒவ்வொரு சொல்லுக்கும் பல கருத்துக்கள் உண்டு. “இன்று வரை அதன் உண்மைப் பொருளை உணர்ந்தாரில்லை…!”

ஞானிகள் கொடுத்த காவியங்களில் உள்ள மூலங்களை அறிந்திட முற்படுங்கள்..! அருள் வழியில் நடந்திட அதிலே தக்க உபாயங்கள் உண்டு.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

காட்டுப் பகுதியில் தாவர இனங்கள் அதனதன் உணர்வு கொண்டு கூட்டமைப்பாக இருக்கின்றது. அதிலே தன் இன மரங்கள் அதிகமாக இருக்கும் நிலையில் அதனுடைய அலைவரிசை அதிகமாகின்றது.

அதிலே சிறு சிறு செடிகளாகவோ அல்லது அந்த மாற்று மரங்களின் தன்மை குறைவாக இருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம்.

அப்பொழுது அதிகமாக அடர்த்தியாக இருக்கும் மரங்கள் அது தனது உணர்வால் கவரப்படும் பொழுது அதன் அருகிலே இருக்கக்கூடிய அடர்த்தி குறைவான (மாற்று) மரங்களுக்கு அதன் உணர்வைக் கவரும் திறன் இழக்கப்படுகின்றது.

ஏனென்றால் அடர்த்தியின் தன்மை வரப்படும் பொழுது அந்த மரங்களுக்கு வரும் சத்தினை இது தடைப்படுத்தி இது மறைத்து விடுகின்றது.

ஆகவே அப்பொழுது அந்த மரம் மிகவும் சிரமப்பட்டுத்தான் வளர்ச்சி பெறுகின்றது.

இதைப் போன்ற நிலைகளைக் குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று ஒவ்வொரு மரங்கள் குறைவதும் அதனின் உணர்வின் வேகங்கள் எவ்வாறு வருகின்றது…? என்று அதை உணரும்படிச் செய்தார்.

நோய் வந்து விட்டால் நமக்கு வேதனை வருகின்றது. வேதனைப்படும் பொழுது அந்த நேரத்தில் நல்லதை யாராவது சொன்னாலும் கூட ஏற்றுக் கொள்ள மறுப்போம்.

1.வேதனைப்பட்டுள்ளோர்களுக்கு வேதனைப்படும் நிலைகளைச் சொல்லிக் கொண்டேயிருந்தால் ரசித்துக் கேட்பார்கள்.
2.அப்பொழுது அந்த நேரத்தில் அவர்களுடைய வேதனைகள் தெரியாது.

அவர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது
1.“இது நல்லது… அது அப்படி இருந்தது…” என்று உயர்ந்த குணங்களைப் பற்றி நீங்கள் சொன்னாலும்
2.அதற்கு எதிர்மறையாகி அதனுடைய நிலைகளை நாம் கேட்க மறுப்போம்.

ஏனென்றால் அந்த வேதனை உணர்வு நமக்குள் அதிகரிக்கப்படும் பொழுது நல்ல உணர்வுகளை நுகராதவண்ணம் தடைப்படுத்தி நமக்குள் தீமைகளையே விளைய வைக்கும்.

நமக்குள் தீமையை விளைவிக்கும் இத்தகையை நிலைகளிலிருந்து மனிதன் மீள வேண்டும்.

ஏகாதசி அன்று “விடிய விடிய முழித்திருப்பது…” என்றால் அதனுடைய தத்துவம் என்ன…?

பால் சத்தானது தான்… அதிலே விஷத்தைக் கலந்தால் என்ன செய்யும்…? குடிப்போரை மாய்த்துவிடும்.

இதைப் போல எவ்வளவு அழகான நிலைகளில் எவ்வளவு பரிமாணம் எடுத்துக் கொண்டாலும் வேதனை வேதனை என்ற நிலைகள் வந்தாலே அந்த அழகே போய்விடுகிறது.

பெரிய குடும்பமாக இருக்கின்றது… தொழில் செய்கின்றோம்… எல்லாச் செல்வங்களும் வந்துவிட்டது. பையன் மீது பிரியமாக இருக்கின்றோம்.

ஆனால் அவன் ஏதாவது தவறு செய்தாலோ… “இப்படிச் செய்கின்றானே… இப்படி இருக்கின்றானே…” என்று எண்ணும் பொழுது வேதனை.

வேதனை என்றாலே விஷம்…!

1.தொழில் செய்கின்றோம்… அதில் நஷ்டம் வந்தால் வேதனை.
2.ஒருவருக்கு உதவி செய்கின்றோம்… கேட்கவில்லை என்றால் வேதனை.

இப்படி இந்த விஷமான சத்துக்கள் நம் உடலில் இருக்கும் நல்ல குணங்களுக்குள் பட்டு விட்டது என்றால் நம் உடலிலே அது நோயாக மாறிவிடுகிறது.

எவ்வளவு உயர்ந்ததற்குக் கொண்டு போக வேண்டும் என்று எண்ணினோமோ அங்கே போகாதபடி
1.வேதனை என்ற நிலையைக் கொண்டு வந்து சிந்திக்கும் திறனை இழக்கச் செய்து
2.மனித உடலை இழக்கச் செய்து இழிநிலையான சரீரத்திற்குக் கொண்டு விட்டு விடுகின்றது.

அப்படி வந்தாலும் மீண்டும் அந்தக் கெட்டதை நீக்கி விட்டு நல்லதைப் பெறும் நிலைகள் வந்தால்தான் உயர்வு பெற முடியும் என்ற நிலைகளை வைகுண்ட ஏகாதசி அன்று இரவு முழுவதும் முழித்துக் கொண்டிருக்கும்படி ஞானிகள் அதைச் சாஸ்திரத்தில் காட்டுகிறார்கள்.

“விடிய விடிய முழித்திருப்பது…” என்றால் அதனுடைய தன்மை என்ன…?

ஒரு சூரியனின் தன்மையே என்றுமே விழித்த (பிரகாசமான) நிலை கொண்டது. அதைப் போன்று சப்தரிஷி மண்டலம் தனக்குள் என்றுமே அது ஒளி கொண்டது.

1.என்றைக்குமே விழித்த உணர்வு கொண்டு தான் பெற வேண்டுமென்று
2.விழித்திருந்தே பொருளறிந்து தனக்குள் செயல்படும் ஆற்றலைப் பெற வேண்டும் என்று
3.பரமபதத்தின் தத்துவத்தை “வைகுண்ட ஏகாதசி – சொர்க்கம்…” என்று காட்டி
4.உடலை விட்டுச் சென்றபின் நாம் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டுமென்று என்ற தெளிவைக் காட்டுகின்றார்கள்.

நம்மை அறியாது வரக்கூடிய விஷத்தை நீக்கக்கூடிய வழியையும் ஒவ்வொரு செயலைச் செய்யும் போது நாம் எப்படி விழித்திருக்க வேண்டும் என்றும்…?
1.இதை உணர்த்துவதற்கு ஏகாதசி அன்று விடிய விடிய முழித்திருந்து
2.அந்த நல்ல நிலைகளைப் பெறச் சொன்னார்கள்.

ஆனால் இன்றோ விடிய விடிய விழித்திருந்து காலையில் வந்தபின் அதைச் செய்வோமா…? இதைச் செய்வோமா…? என்று அந்த நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

ஐயோ பாவம்…! என்று இரக்கப்படலாமா…? – ஈஸ்வரபட்டர்

1.உணர்வின் எண்ணத்தை எந்த ஒரு செயலின் எண்ணத்திலும்… நம் எண்ண ஈர்ப்பிலும் செல்லாமல்
2.இவ்வுடலின் அமில குணத்தை நற்குணங்களின் அமில வளர்ச்சியுடன் வளரவிட்டாலும்
3.நம் எண்ணத்தின் உணர்வைச் சங்கடமும்… பரிதாபமும்… பச்சாதாபமும்… காட்டும் உணர்வலைக்குச் செலுத்திடலாகாது.

பரிதாபப்பட்டுப் பிறரின் எண்ணமுடனே நம் உணர்வின் எண்ணத்தையும் அவர்களின் உள்ள நிலைக்கு இரங்கி நாம் எடுக்கும் எண்ணச் சுவாசத்தால் நம் உணர்வும் அதே சுழற்சியில் சென்று விடுகிறது.

அப்பொழுது அவர்களின் உடல் அமிலக் கூட்டின் எண்ண அலையை நம் ஈர்ப்புக்குள்… “அவர்கள் பால் செலுத்தும் எண்ணத்தால்” எடுத்துக் கொள்கிறோம்.

நம் உணர்வுகள் “பாவம்…!” என்ற பரிதாபச் சுழற்சி வட்ட உணர்வு அமிலத்தை ஏற்பதினால்… நம்முள் உள்ள உயர் குண அமில சக்தியினைப் பிறர்பால் செலுத்தும் உணர்வின் எண்ணத்தால்
1.நம் நிலைக்கும்
2.நாம் செல்ல வேண்டிய வழிக்கும் தடை ஏற்படுத்துகிறது.

நற்சக்தியை… ஆண்டவன் என்ற நிலை அடைய… ஆண்டவன் பால் செல்ல எல்லா உயிர் ஆத்மாக்களிடமும் அன்பைச் செலுத்துங்கள்..! என்று இன்றைய கலியில் பல மகான்களாக ஞானத்தின் வழித் தொடரில் வந்த நாம் அறிந்த பலரும் கூறியுள்ளார்கள்.

இருப்பினும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களின் பிம்ப உடலில் பல இன்னல்களைப் பெற்று அதே செயலில் உடல் பிம்ப வலுக் குன்றியதனால் அவர்களின் வாழ்நாட்களில் பல சக்திகளைப் பெற்றிருந்தும் இவ்வுணர்வின் எண்ண செயல்முறை செலுத்தும் வழி முறை அறியாமல் பிறரின் எண்ண உணர்வு நிலையின் சுழற்சியில் சிக்கி விட்டனர்.

இராமகிருஷ்ண பரமகம்சரும் விவேகானந்தரும் ரமண மகரிஷியாகப் பலர் போற்ற இருந்தவரின் நிலையும் இன்னும் இவர்களைப் போல் ஞானத்தின் ஈர்ப்பில் வந்தவர்களும்
1.எண்ணத்தின் உணர்வைப் பிறர்பால் “பரிதாபம்” கொண்டு செலுத்தி
2.இவர்கள் செலுத்திய அன்பின் பரிதாப நிலையினாலேயே
3.அவர்களின் உணர்வு எண்ண அலையின் ஈர்ப்பு இவர்கள் உடலிலும் “சாடியது…”
4.அதனால் தான் ஞானத்தின் வழி பெற்றிருந்தும் உடல் பிம்பக் கூட்டைக் காக்க முடியவில்லை.
5.உடல் பிம்பக் கூட்டிற்கு மட்டுமல்ல… நாம் எடுக்கும் உணர்வின் எண்ண உயர் ஞானச் செயலுக்கும் “இவை எல்லாம் தடைக்கற்கள் தான்…!”

இம்மனித பிம்ப உடல் “உணர்வு எண்ண ஈர்ப்பிற்கு” மிகவும் சக்திவாய்ந்த நிலையுண்டு…!

எண்ணமுடன் எடுக்கும் சுவாச அலையில் காந்த மின் ஈர்ப்பு குண உயிரணுக்களாக இவ்வுடல் முழுமைக்கும் ஈர்த்தெடுத்து வெளிக் கக்கும் இவ்வலையின் ஈர்ப்பு நாம் எடுக்கும் எண்ணத்தில் ஈர்ப்புடன் மோதுகிறது.

இங்கு இப்பொழுது உணர்த்தும் முறை கொண்டு
1.பிறர்பால் அன்பு செலுத்திடலாகாதா..?
2.பிறரிடம் இரக்கம் காட்டிடலாகாதா..?
3.பிறருக்கு நம்மால் முடிந்த தான தர்மங்கள் அளித்திடலாகாதா..? என்று கேட்கலாம்…!

பிறர்பால் அன்பைச் செலுத்தாதீர்…!

“பிறருக்கு அன்பான குண நிலை பெறவேண்டும்…” என்ற
2.அன்பலையை அவர்கள் வளர்க்க
3.அவர்களுக்கு “நம் எண்ணத்தால் நல் நிலை பெறட்டும்…” என்று
4.இந்த உணர்வைச் செலுத்துங்கள் “அன்பாக்கி..!”

நம்மைச் சார்ந்தவரும் சரி… நாம் கண்டுணர்பவரும் சரி… அவர்கள் படும் துயரமுடன் நம் உணர்வையும் பரிதாபமாக்கி… நம்மையும் பரிதாபப்படுத்திக் கொண்டு..
1.அவர்கள் அலையுடன் நாம் ஒன்றாமல் – நம் சக்தி அலையைக் கொண்டு
2.அவர்களுக்கு நல் நிலை நடக்கட்டும்..! என்ற ஒளி அலையைப் பாய்ச்சுங்கள்.

அவர்கள் உயரவும்… உடல் நலம் பெறவும்.. நம் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு
1.”நல் நிலை” அவர்கள் பெற நம் உணர்வின் எண்ணம் செல்ல வேண்டுமேயன்றி
2.நம் உணர்வையும் எண்ணத்தையும் அவ்வுணர்வின்பால் செலுத்திடலாகாது.

அதே போல் தர்ம நிலைக்கும்… இரக்கத்தின் உணர்வால் ஒன்றி தர்மம் செய்யாமல் “பல துயரங்களில் அவர்கள் உள்ளார்கள்…” என்ற இரங்கிய தர்மம் தராமல்
1.நாம் தரும் தர்ம ஈகையினால் அவர்கள் பெற்று உயர வேண்டும் என்ற உயர்ந்த உணர்வுடன் எண்ணத்தைச் செலுத்தி
2.நாம் தரும் தர்மம்… பெறுபவரையும் உயரும் எண்ணத்திற்குச் செல்லும் முறையில்
3.நம் தர்ம முறையும் இருக்க வேண்டும்.

அப்படி இல்லை என்றால் நம் ஞானத்திற்கு…
1.பிறரின் ஈர்ப்பால்
2.அவர்களின் குண ஈர்ப்பின் எண்ணமுடன் நாம் ஒன்றியவுடன்
3.நம் நிலையும் மாறும். (இது முக்கியம்)

நாம் அறிந்த பல ஞானிகளும் அவர்கள் இரங்கிப் “பிறர்பால் செலுத்திய அன்பினாலேயே..” அவர்கள் ஞானமும் குறைந்தது.

யாம் சொல்லும் இத்தகையை பரிபக்குவ உணர்வைக் கொண்ட எண்ண ஜெபத்தில் எடுக்கும் நிலையைக் கொண்டுதான்
1.நம்முள் சேர்ந்துள்ள அமில குணத்தின் வளர்ச்சியினால்
2.சக்திவாய்ந்த ஒளி அலையின் காந்த மின் அலையின் ஈர்ப்பை
3.அந்த மெய் ஞானிகளிடமிருந்து பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

மோப்ப நாயை வைத்துக் காட்டுகின்றார்கள். “யார் வருகின்றார்..,?” என்று தன் மோப்பத்தால் அறிந்து கொள்கிறது. “தன்னைச் சார்ந்தவர்கள் வந்தால்…” ஒன்றும் செய்வதில்லை.

தன்னைச் சார்புடையோர் அல்லாது வரும் பொழுது அது பகைமை உணர்வுகளை நுகர்ந்து சீறிப் பாய்ந்து தாக்கும் நிலை வருகின்றது.

ஒரு மனிதனை அன்பு கொண்டு அரவணைக்கும் தன்மை வந்துவிட்டால் அந்த உணர்வின் தன்மை அவர் வரும் பொழுதே மோப்பத்தை வைத்து “என் நண்பன்..,” என்று சொல்வோம்.

அதே சமயத்தில்… தன் குழந்தை என்ற நிலையில் அவன் பண்பு கொண்டு வளர வேண்டும் என்றும் பண்பு கொண்டவனாக வர வேண்டும் என்று எண்ணுகிறோம்.

அப்பொழுது அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் பண்பு கொண்ட உணர்வை வளர்த்து நமக்குள் அந்தப் பண்பு கொண்ட அணுவின் தன்மையாக வளர்கின்றது.

1.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் அவனுக்குள் விளைய வேண்டும்.
2.அவனையறியாது இருள்கள் நீங்க வேண்டும்
3.மெய்ப்பொருள் காணும் தன்மை வேண்டும்
4.அறிந்துணர்ந்து செயல்படும் திறன் பெறவேண்டும் என்று எண்ணுவதே அந்தப் பண்பான நிலைகள்.

இத்தகைய உணர்வை வளர்த்து அவனிடம் சொல்லி அணுகும் பொழுது இந்த உணர்வை நுகர்ந்து பதிவாக்கிவிட்டால் அவன் மோப்பம் அந்தப் பண்புகளை நுகர்ந்து தனக்குள் இருக்கும் இருளை மாய்க்கின்றான்.

ஆனால் வெறி கொண்ட உணர்வின் தன்மையை வளர்த்துள்ளோம் என்று வைத்துக் கொள்வோம்.

அப்பொழுது நமக்குள் எந்தக் குணத்தின் தன்மையை அதிகமாக வைத்துக் கொள்கின்றோமோ அந்த வெறி கொண்ட உணர்வின் தன்மையாகத்தான் நாம் வெளிப்படுத்துவோம்.

அந்த உணர்வுகள் வெளிப்படும் பொழுது…
1.எவரின் உடலில் ஏற்கனவே இருளச் செய்ததோ
2.அந்த உணர்வுகள் இங்கே மோப்பத்தைக் காணும் பொழுதே
3.தன் மேல் வெறுப்படையும் தன்மையும் இருளச் செய்யும் நிலையும் வருகின்து.

இன்று கால பைரவர் என்று சொல்கிறோம். அதன் பொருள் என்ன…?

நாம் நுகர்ந்த உணர்வுகள் நாம் மோப்பத்தால் எடுக்கப்படும் பொழுது பைரவர் என்று சொல்லும் பொழுது அதனின் வலிமை கொண்டு அதைத் தீமை என்று உணரச் செய்கின்றது.

தன் உடலைக் காக்கத் தன் உணர்ச்சியைத் தூண்டுகின்றது. அதனை வீழ்த்தும் உணர்வுகளை இங்கே தூண்டுகின்றது.

ஆகவே தான் கால பைரவர் என்றும் அதற்கு நாயைக் காவலாக வைத்துள்ளார்கள். வெகு தொலைவில் வரும் உணர்வை நுகர்ந்தறிந்து தன் எஜமானனைக் காக்கும்.

தன் எண்ணத்தில் பிறர் மேல் வெறுப்பின் உணர்வுகள் உருவாக்கிவிட்டால் அது தன்னைக் காக்கும்.

உதாரணமாக… தந்தை வெறுப்பின் உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது அந்த உணர்வின் தன்மை குழந்தையின் உடலில் வரும் உணர்வுகளை இருளச் செய்துவிடும்.

இருண்டு விட்டால்
1.எந்த வெறுப்பின் தன்மை உருவாகியதோ மீண்டும் யாரிடம் (குழந்தையிடம்) இந்த உணர்வின் தன்மை வந்ததோ
2.அந்த உணர்வை நுகர்ந்து மீண்டும் தந்தைக்குள் இருண்டு போகும் நிலையே வருகின்றது.

ஆக… எவர் உடலிலிருந்து வெறுப்பின் தன்மை வந்ததோ அந்த உடலைக் காக்க விரும்புகின்றது.

இருப்பினும் இந்த உடலின் மோப்பம் கண்டு அந்தச் சமயம் நுகர்ந்தாலும் நுகர்ந்த உணர்வு பகைமை உணர்வாகித் தனக்குள் (தந்தைக்குள்) சின்னாபின்னமாக்கி விடுகின்றது.

உடலில் நோயாக மாறுகின்றது. வேதனைப்படும் நிலைகள் வருகின்றது.

ஆனால் இப்பொழுது நாம் என்ன செய்கின்றோம்….?

கால பைரவர் அவர் தீமைகளை வெல்லக் கூடியவர் என்று அவருக்குக் கொண்டு போய் அர்ச்சனை செய்து யாகங்கள் செய்கின்றோம்.

அர்ச்சனை செய்து யாகங்களைச் செய்து அந்த பைரவரை வசப்படுத்தினால் “நாம் விரும்பியதை.., நமக்குச் செய்வார்…” என்று இப்படி மனிதனின் வாழ்க்கையில் அஞ்ஞான வாழ்க்கை வாழும்படிச் செய்துள்ளார்கள்.

மதங்களை உருவாக்கி மதத்தில் இயற்றிய சட்டங்களை நமக்குள் உருவாக்கி அதனின் சாங்கிய நிலைகளை உருவாக்கும் பொழுது அதுவே நமக்குள் கடவுளாக நின்று செயல்படத் தொடங்கிவிடுகின்றது.

“மதத்தின் அடிப்படையில் நாம் செயல்படும் உணர்வுகளே…” நம்முள் அதிகமாகச் செயல்படும் பொழுது உள் நின்று அதன் வழியே நம்மை இயக்குகின்றது.

ஞானிகள் காட்டிய வழி முறைகள் இன்று மாறிவிட்டது.

நஞ்சை வெல்லக்கூடிய சக்தியை குருநாதர் எனக்கு எப்படிக் கொடுத்தார்…?

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நான் (ஞானகுரு) அனுபவம் பெறுவதற்காக வேண்டி
1.பல கஷ்டங்களையும் கொடுத்தார்.. கடுமையாகத் திட்டுவார்…!
2.கொச்சையாகப் பேசுவார். பொறுத்துக் கொள்ள முடியாது
3.காதிலேயே கேட்க முடியாது. அவ்வளவு மோசமாகப் பேசுவார்.
4.என்னை ஒவ்வொரு நொடியிலும் உதைப்பார்; இம்சிப்பார்; திட்டுவார்..! இத்தனையும் செய்வார்.

நன்றாக பேசிக் கொண்டே இருப்பார். திடீரென்று என்ன செய்கிறார் என்று எனக்கே தெரியாது. போய்க் கொண்டு இருக்கும் போதே இல்லாத கஷ்டத்தை எல்லாம் எனக்கு ஏற்படுத்தி வைப்பார்.

“இப்படிச் செய்து விட்டார்… பார்…!” என்று நான் திகைத்து நிற்பேன்.

அப்பறம் என்ன செய்வார்…?

இதை எடுத்து நீ பாருடா…! என்று சொல்வார்.
1.உன் உடலில் இப்போது என்ன செய்கின்றது…?
2.நான் இப்போது உன்னை என்ன செய்தேன்…?
3.நீ ஏன் அதைச் சுவாசித்தாய்?
4.அதை நீ “தடைப்படுத்து…!” என்று சொல்வார்.

எப்படி சாமி தடைபடுத்துவது…? என்றேன் நான்.

இதற்குத் தான் “குரு பலம்…!” வேண்டும் என்பது. ஆகவே “குரு” எது?

கோபமான எண்ணங்களை நீ பதிவு செய்து வைத்துக் கொள்கிறாய். அதைத் திருப்பி எண்ணும் போது குருவாக வந்து உன்னைக் கோபமாகச் சண்டை போட வைக்கின்றது. இது குரு பலம் தான்.

அதே மாதிரி உன்னைத் திட்டி வேதனைப்படுத்துகின்றார்கள். அதைப் பிடியாக வைத்துக் கொள்கிறாய். திருப்பி எண்ணியவுடனே அது குருவாக வருகின்றது.

உன்னை வேதனைப்படச் செய்து வேதனைப்படும் செயல்களைச் செய்ய வைக்கின்றது. உடலுக்குள்ளும் வேதனையாகின்றது. அது குருவாக நிற்கின்றது.

அப்படியென்றால் “நீ எதைக் குருவாக்க வேண்டும்…?” என்று வினா எழுப்புகிறார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

இந்த வேதனைகளையெல்லாம் நீக்கியவர்கள் அந்த “மகாமகரிஷிகள்…!”
1.அதை எடுத்து உனக்குள் குருவாக ஆக்கு.
2.அந்தக் குருவை நீ மதி
3.அந்தக் குரு உனக்குச் சகல நிலைகளையும் செய்யும்.

நான் இப்போது உன்னைக் கடுமையாகத் திட்டுகின்றேன். அதை நீ குருவாக எடுத்துக் கொண்டால்
1.என்னைப் “போடா சாமி…!” என்பாய்
2.என்னைப் “பைத்தியக்காரப் பயலே…!” என்று சொல்வாய்

“இப்படியே” குருநாதர் சொல்கின்றார்.

நான் உன்னைத் திட்டுகின்றேன் என்கிற போது “நான் திட்டியதைத்தான்” நீ எடுத்துக் கொள்கிறாய்.

ஆனால் உன்னிடம் இருக்கிற “கெட்டதெல்லாம் போக வேண்டும்…!” என்று நான் திட்டுகின்றேன்.
1.அதை நீ எடுத்து கொள்ள மாட்டாய்…!
2.பாவி…! என்னைப் பைத்தியக்காரத்தனமாகத் திட்டுகின்றார்… “இந்த மனிதன்..” என்று தான் நீ எண்ணுவாய்.

உனக்குள் மறைந்து சில நிலைகளைச் செய்கிறது அதை நீ நீக்கத் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா…!

என்னைத் திட்டுகின்றான் என்பதை மட்டும் வெளியில் வருவதை… உன் செவிப்புலன் இயக்குகின்றது. இந்த உணர்வு இயக்குகிறது.

ஆனால் அதே சமயத்தில் என் மீது இருக்கக்கூடிய பிரியத்தின் படி “என்னைப் பைத்தியக்காரன்” என்று நீ திட்டுகிறாய்… அது இயக்குகின்றது. உன் வெறுப்பைக் காட்டுகின்றாய்.
1.”இவ்வளவையும்…” என் அனுபவத்திற்குக் கொண்டு வருகின்றார்.
2.ஆனால் குருநாதர் பைத்தியக்காரராகத்தான் இருந்தார்.

இந்த உணர்வுகள் உனக்குள் வினையாக எப்படிச் சேர்கின்றது? அதை நீ எப்படி நிறுத்த வேண்டும்? இதற்காக வேண்டித்தானப்பா…! இதைச் சொல்கிறேன் என்பார் குருநாதர். அனுபவரீதியாகத்தான் எல்லாமே கொடுத்தார்.

எனக்கு குருநாதர் இப்படிக் கொடுத்தார். உங்களுக்கு அனுபவம் எதில் கொடுக்கின்றேன் என்றால்
1.ஒரு கஷ்டம் வரும் போது இதைப் பயன்படுத்திப் பாருங்கள்
2.உங்கள் “கஷ்டம் போகும்” என்று சொல்கிறேன்
3.இதை அனுபவரீதியில் நீங்கள் பார்க்க வேண்டும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

“டயானா என்ற பெண்மணி…” அது தான் வாழ்ந்த காலத்தில் எவ்வளவோ செலவழித்து ஆடைகளையும் அணிகலன்களையும் வாங்கும் அளவிற்குச் செல்வம் இருந்தது. செல்வாக்கும் தன்னிடம் இருந்தது.

அன்று இறந்த டயானாவின் ஆடைகளை எத்தனையோ கோடி விலைக்கு ஏலத்தில் இன்று விற்கிறார்கள். மற்றவர்களுக்கும் பல கோடிப் பணம் கொடுத்து அந்த ஆடையை வாங்க வேண்டும் என்ற ஆசையை அது ஊட்டுகின்றது.

1.அந்த ஆசையைத்தான் முதலிலே (டயானா) அது வளர்த்தது
2.ஆனால், “வாழ வேண்டும்..,” என்று எண்ணிய அவளுக்கு அங்கே “நொடிக்குள் மரணம் சம்பவித்தது”.
3.அதையும் நாம் நுகர்கின்றோம், அறிகின்றோம். “இருந்தாலும்… ஆசை நம்மை விட்டபாடில்லை.

“அவர் வளர்த்துக் கொண்ட ஆசையை” நமக்குள் பதித்துக் கொண்டபின் “ஏன்… நாமும் அவரைப் போல் வரக்கூடாது…” என்ற இந்த நிலை தான் வருகின்றது.

அதே வழியில்… “மெய்ஞானிகள்.. பிறவியில்லா நிலை அடைந்தனரே..,” அதை நாம் பெறலாம்.

1.நாம் ஏன் அந்தப் “பிறவியில்லா நிலை அடைய முடியாதா..,?” என்று
2.அவர்கள் வழி சென்று அருள் மகரிஷிகளின் உணர்வை வளர்த்தால் நாம் அதைப் பெறுகின்றோம்.

இல்லை என்றால் மீண்டும் இழிநிலை சரீரத்தைப் பெறுகின்றோம். பேய் மனம் கொண்டு மற்றொர்களைத் தாக்கிடும் நிலை உருவாகும்போது பேய் மனம் கொண்டு ஒன்றைத் தாக்கி அதை உணவாக ரசித்திடும் நிலைதான் வரும்.

இன்றைய உலகில் மனிதனுக்குள் அந்தப் “பேய் மனம்..,” தோன்றிவிட்டது அசுர உணர்வுகள் வளர்ந்து விட்டது.

மற்றவர்களைத் துன்புறுத்துவது, சித்திரவதை செய்வது, கொலை செய்வது, இதையெல்லாம் செய்து ரசிக்கும் தன்மைதான் வருகின்றதே தவிர மற்றவரைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் அடியோடு மறைந்துவிட்டது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட வேண்டும்.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தெளிவாக உணர்த்திய மெய் உணர்வுகளை உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.

அதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு அந்த அருள் உணர்வுகளைக் கவர்ந்து உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் இருளைப் போக்கிக் கொள்ளுங்கள்.

மெய்ப்பொருள் காணும் அருள் நெறி எனக்குள் வளர வேண்டும் என்று ஒவ்வொருவரும் உங்களுடைய உணர்வுகளை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறத் தயங்காதீர்கள்.

இந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் மற்றவர்களுடைய நிலைகளை எண்ணாதீர்கள்.

ஏனென்றால், “என்னைத் தவறாக நினைக்கின்றார்கள்.., கேவலமாகப் பேசுகின்றார்கள்..,” என்று அவர்களுடைய உணர்வுகளை உங்களுக்குள் வளர்த்துக் கொண்டால் அதன்வழி தான் நமக்குள் வரும்.

நாம் பார்க்கும் அனைவரும் உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்ற உணர்வினை ஊட்டுங்கள். அருள் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்ற உணர்வின் வலுவினை உங்களுக்குள் பெறுங்கள்.

மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ள முடியும் – ஈஸ்வரபட்டர்

உணர்வின் எண்ணத்தை நல் வழி அமிலமாக நமக்குள் வளர்க்கச் செய்து தன் ஞானத்தை மெய் ஞானிகளின் தொடர்பலையில் எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் சுவாசத்தால்
1.இவ்வுலகில் எந்தப் பாகத்திலும் உடல் உள்ளவர்களுடனும் சரி
2.உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களுடனும் சரி
3.சூட்சம நிலை கொண்ட சப்தரிஷிகளின் நிலையுடனும் சரி
4.இவ்வுணர்வின் எண்ணத்தை ஜெபம் கொண்டு தொடர்பு வைத்துக் கொள்ள முடியும்.

இது… ஆண்டவனாக வந்து நமக்கு அருள் புரிவதல்ல…!

“ஆண்டவன்” என்று நாம் உணரும் சக்திகளுடன் நம் எண்ண அலைகளைச் செலுத்தினோமானால் அவர்களின் தொடர் அலையின்
1.ஒலியையும் கேட்கலாம்…
2.உருவையும் காணலாம்.

ஆனால் ஆவி நிலையில்… “பல எண்ண அலையில்” உள்ளவர்களுக்கு என்ன ஆகிறது…?

அவர்களின் எண்ண வீரிய குண நிலைக்கொப்ப அவர்களின் உணர்வுடன் ஒத்த எண்ணமும் தன் எண்ணமும் ஒன்று போல் உள்ள நிலையில் “இவ்வுலகில் வாழ்ந்த பொழுது நிறைவேறா ஆசையுடன் சென்ற ஆவிகள்” (அதன் ஆசையை நிறைவேற்ற) இவர்களின் எண்ணத்தின் ஒத்த நிலை ஈர்ப்பு உள்ளதனால் இவர்கள் உடலில் அவைகள் ஏறிச் செயல்படத் தொடங்கிவிடுகிறது.

அப்படிச் செயல்பட்டாலும் அவ்வாவிகள் வளர்ந்த நிலையும் அவ்வாவிகள் வளர்த்துக் கொண்ட சக்தி அலையும் இவர்களின் உணர்வு ஞான சக்தி அலைக்கும் உகந்த செயல் வடிவ வளர்ச்சி ஓட்டத்தில் தான் “அதுவும்” அந்த உடல் உள்ளவரை தான் செயல்புரிய முடியும்.

1.ஆக… எந்த ஒரு செயல் ஞானம் கொண்ட நிலை கொண்டுள்ளனரோ
2.அதே வட்ட உணர்வு வளர்ப்பில் வாழ்ந்து
3.தன் வாழ்க்கையில் அவர்களின் ஆசையின் மேம்பாடு என்று உணரும் ஒவ்வொரு செயலிலும்
4.அதனின் வளர்ச்சி ஓட்டத்தில் உடலுடன் உள்ளவரையிலும் (இறக்கும் வரை) அந்த ஞானம் செயல்பட்டு
5.உடலை விட்டுப் பிரிந்த பிறகு மீண்டும் இதே உணர்வலை சுற்றலைக் கொண்டு
6.எத்துறையில் உயர்ந்து உழன்று உருப்பெற்று வாழ்ந்ததோ அதே சுழற்சி ஓட்டத்தில்
7.மீண்டும் மீண்டும் அந்நிலைக்குகந்த வளர்ச்சி ஈர்ப்பிற்குத்தான் செல்கிறது.

முன்னேறிய விஞ்ஞானம்… விஷய ஞானம்… இசை ஞானம்…! எதுவாக இருந்தாலும் சரி…
1.ஓர் சுழற்சி வட்ட ஞான ஓட்ட வளர்ச்சி சுழற்றலில் தான் சுழன்று கொண்டே இருக்க முடியுமேயன்றி
2.உயர் ஞானச் செயலுக்கு ஒளி ஞானத்திற்குச் செல்ல முடியாது (இது முக்கியம்)

எனவே ஞானத்தை வளர்க்க வேண்டும் என்ற சிந்தனையுடன்… உணர்வால் எடுக்கும் எண்ணம் கொண்டு உடலின் அமிலக் கூட்டை நற்சக்தியின் உணர்வலையின் செயலாக்கி நம் எண்ணத்தை அந்த ஞானிகளின் சித்தர்களின் சப்தரிஷிகளின் உணர்வு எண்ணமுடன் மோதவிட வேண்டும்.

அவர்களின் ஈர்ப்பலையின் சுழற்சி வட்டத்திற்குள்… அவர்களின் ஒளி ஞான ஈர்ப்பின் சக்தியுடன் சுழலவிட்டுச் செயல் கொள்ளும் ஜெப முறையை நாம் அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

அப்பொழுது உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் அந்தச் சுவாசத்தின் மூலம் சகல சித்தர்களின்… சப்தரிஷிகளின் ஒளி அலையுடன் நம் உணர்வலைகள் கலந்து அவர்கள் பெற்ற சக்தி அலையின் தொடரை நாமும் நிச்சயம் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இன்றைய விஞ்ஞான உலகில் பேரழிவு வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் பல முறை இந்த உபதேசத்தைக் கேட்கின்றார்கள், படிக்கின்றார்கள்.

கேட்டாலும் கூட “நாங்கள் அந்த அருள் சக்தி பெறவேண்டும்.., அந்த அருள் ஒளி எங்களுக்குள் வளர வேண்டும்” என்று எவரும் கேட்பதில்லை.

இந்த வாழ்க்கையில் வரும் “குறைகளையும்.., தன்னை ஏமாற்றியவர்களையும்.., ஏமாற்றப்பட்டதையும்தான்..,” எண்ணிக் கொண்டுள்ளார்கள்.

அதை எம்மிடமும் (ஞானகுரு) பாய்ச்சத் தொடங்கி விடுகின்றார்கள். நூற்றுக்கு ஒன்று இரண்டு தான் தப்பித் தவறி அந்த “அருள் ஞானம் பெற வேண்டும்…” என்ற நோக்கில் எம்மை அணுகுகின்றார்கள்.

குருநாதர் எமக்கு எவ்வளவு பெரிய சக்தி கொடுத்திருந்தாலும் நீங்கள் விடும் மூச்சலைகள் சங்கடத்தையும் வேதனையும் இங்கே என்னிடம் வெளிப்படுத்தினால் அதை ஜீரணிப்பதற்கே எனக்கு நேரம் போதாது போலிருக்கிறது.

இதிலிருந்து மீண்டுதான் நான் அந்த உயர்ந்த சக்தியை எடுக்க வேண்டும்.

நான் எந்த அளவிற்கு உபதேசித்து மக்கள் கூடுகின்றனரோ மக்கள் மத்தியிலே விளைந்த அவர்களுடைய வேதனையும் வெறுப்பு உணர்வுகளும் குறைகளும் குறையின் உணர்வுகளைத்தான் என் மேல் பாய்ச்சப்படுகின்றது.

“நான் உணர்த்திய மெய் உணர்வை எடுத்து வளர்க்கும் தன்மை… இன்னும் வளர்ச்சி அடையவில்லை…”

உடல் இச்சையின் உணர்வே வளர்கின்றது. “ஆயிரம் ஆண்டுகள் வாழ்கின்றோம்… வாழ்வோம்…!” என்ற நம்பிக்கையில் வாழ்வது போல் தெரிகின்றது.

இன்றைய நிலைகளில் விபத்துக்களும் விபரீதங்களும் தீவிரவாதச் செயல்களும் உலகெங்கிலும் நடந்து கொண்டிருக்கின்றது.

மத பேதம் இன பேதம் மொழி பேதம் என்று உலகில் பெரும் சக்தியாகப் பரவி மனிதனை மனிதன் இரக்கமற்றுக் கொன்று புசிக்கும் நிலையும் அதைக் கண்டு ரசித்து வாழும் நிலைகள் தான் அதிகரித்து வருகின்றது.

இந்த உணர்வுகளை நாம் நுகரப்படும்பொழுது நாம் பெறும் உயர்ந்த சக்தியும் பெற முடியாத நிலைகள் தடைப்படுகின்றது.

“சாமி செய்வார்… சாமியார் செய்வார்… ஜோதிடம் செய்யும்…” என்ற நம்பிக்கையில்தான் இன்னமும் இருக்கின்றோம். யாகத்தைச் செய்து பாவத்தைப் போக்கிவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் இன்னமும் இருக்கின்றோம்

நமது உயிர் “நெருப்பாக…” இருக்கின்றது. துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை உயிர் என்ற யாகத்தீயில் போட்டவுடன் அதனின் உணர்ச்சிகள் நமக்குள் வருகின்றது.

புற யாகத்தில் பல பொருள்களை யாகத்தீயில் போட்டவுடன் புகை வருகின்றது. அதை அடக்குவதற்கு நெய்யை ஊற்றுகின்றோம்.

அதைப் போன்று வேகமான உணர்வு வந்ததென்றால் அந்த நெடியான உணர்வு இயக்கும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை இயக்கினால் அந்த நெடியை அடக்கும். அந்த உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் மகிழ்ச்சியூட்டும்.

உங்களைத் தீமையான உணர்வுகள் இயக்கிவிடக் கூடாது. அந்தச் சந்தர்ப்பத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்தால் நெடியை அடக்கிவிடும்… தன்னிலை அடையலாம்.

இப்படி எந்த நேரத்திலும் நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துச் சர்வ தீமைகளிலிருந்தும் விடுபட முடியும்.

July 2021 உபதேசம்

தியானத்தின் மூலம் பலனைப் பெற்றால் தான் யாம் கொடுக்கும் சக்தியை நீங்கள் உணர முடியும்

கேள்வி:
ஈஸ்வரபட்டர் உங்களுக்கு எல்லாச் சக்திகளும் கொடுத்தார்… நீங்கள் அதை எல்லாம் பெற்றீர்கள். ஆனால் எங்களுக்கு நீங்கள் ஒன்றும் கொடுக்கவில்லையே… உபதேசமாகத் தான் சொல்லிக் கொண்டே போகிறீர்கள்…!

யாருக்காவது நீங்கள் கொடுத்து அதைப் பார்த்துத் தெரிந்து கொண்டால் நாங்களும் ஆர்வமாகச் செய்வோம். இது எங்களுக்குச் சந்தேகமாகவும் ஒரு யோசனையாகவும் இருக்கிறது. கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் சாமி.

ஞானகுருவின் பதில்:
நீங்கள் சாப்பாடு போடுகிறீர்கள். “நன்றாகத்தான் இருக்கின்றது…” என்று நான் சொல்லிவிட்டால் மட்டும் போறுமா…?

நல்ல சுவையான சாப்பாடை நான் சாப்பிட்டால்தான் எனக்கு நல்லது. ஆகையினால் போடும் சாப்பாட்டைச் சரியான முறையில் சாப்பிட வேண்டும். அப்பொழுது தான் அந்த ருசியின் தன்மை தெரியும்

1.இன்னொருவர் சாப்பிட்டுவிட்டு “நன்றாகத் தான் இருந்தது” என்று சொல்கிறார்.
2.எப்படி இருந்தது…? என்று கேட்கும் போது நன்றாக இருந்தது… நன்றாக இருந்தது… என்றே சொன்னால்
3.அது எப்படி நன்றாக இருந்தது…? என்று திரும்பவும் கேட்டால் சொல்லத் தெரியாமல் இருக்கின்றோம்…!

உதாரணமாக… உடலில் ஒரு இடத்தில் புண்ணாகி விடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அது நம்மை வேதனைப்படுத்தினாலும் மருந்தைப் போட்டு குணப்படுத்த விரும்புகின்றோம்.

ஆனால் அப்போதும் சிறிது வேதனை இருக்கிறது. ஆற வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தால் புண்ணுக்கு அந்த மருந்தை போட்டுக் கொள்கிறோம்.

ஆனால் மருந்தைப் போட்டுக் கடுகடுப்பாகி விட்டால் என்ன…! இப்படி ஆகி விட்டதே…? என்று மருந்தைத் தூக்கி எறிந்து விட்டால் புண் ஆறுமா…?

இதைப் போன்று தான் மனித வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நிலையில் நமக்குள் எத்தனையோ விதமான வேதனைகளைத் தோற்றுவிக்கும்.
1.எத்தனை விதமான வேதனைகளைத் தோற்றுவித்தாலும்
2.அதை மாற்றியமைத்த அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை நாம் அடிக்கடி நுகர்தல் வேண்டும்.

அப்பொழுது அந்த வேதனையைப் போக்கும் சக்தி கிடைக்கின்றது

1.இப்பொழுது என்ன தான் நான் (ஞானகுரு) உங்களுக்கு உயர்ந்த சக்திகளைக் கொடுத்தாலும்
2.நீங்கள் எடுத்துக் கொள்ளும் முறையில்தான் அது இருக்கின்றது.

உங்களுக்குத் தெரியாமலே எவ்வளவோ மிக உயர்ந்த சக்தியைக் கொடுக்கிறேன். ஆனால் உங்களுக்கு அது தெரியாது.

ஆனால் அது எப்படி இருக்கிறது…? என்று உங்களிடம் சொல்ல ஆரம்பித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்…? “ஜீபூம்பா…” வேலையெல்லாம் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.

அப்படி நடந்ததுதான் முந்திய கால நிலைகள்.
1.எனக்கே சக்தி இருக்கின்றது…
2.சாமி தயவு என்ன வேண்டிக்கிடக்கிறது…? என்று
3.பிய்த்துக் கொண்டு போனவர்கள் தான் பெரும்பகுதியான நிலைகள்.

குருநாதர் மூலம் பெற்ற அரும் பெரும் சக்திகளை எல்லோருக்கும் தெரிய வைக்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த அற்புதமான நிலைகளைத் தெரிந்து கொண்டால் “உலகத்திற்கு எவ்வளவோ நன்மை பயக்கும்…” என்றும் நினைத்தேன்.

கடைசியில் எல்லோருக்கும் அது ஆசையைத் தூண்டி விடும் நிலையில் தான் முடிந்துவிட்டது. ஆக மொத்தம்
1.ஒருவருக்கு புரியக் கூடிய சக்தியைக் கொடுத்தாலும்
2.அடுத்தவர்கள் புரிந்து விடக் கூடாது என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.
3.எல்லாம் தெரிந்த பின் அவர்கள் குருவாகவே மாறிவிட்டார்கள்.

நான் கொடுப்பதை விட நீங்கள் எந்த அளவுக்கு அந்தச் சக்திகளை எடுக்கின்றீர்களோ… குரு காட்டிய நெறியைக் கடைப்பிடிக்கின்றீர்களோ… அதை மற்றவர்களுக்கு அப்படியே பெறச் செய்கிறீர்களோ… அதிலே நீங்கள் இந்தச் சக்திகளைக் காண முடியும்.

வியாழனின் ஞானரிஷியின் செயல் என்ன…? ஈஸ்வரபட்டர்

ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று வளர்கின்றது. வளர்ப்பின் படர்… பலவாகிப் பலவின் பல வளர்ந்தே உருவாகி… உருவாகி… உருண்டோடும் உரு குண வளர்ப்புச் செயலில்… தொடர் கொண்ட நிலையில் வளர்வது தான் அனைத்துமே.

ஒன்றிலிருந்து ஒன்று பிறந்து ஒவ்வொன்றாக வளரும் வளர்ச்சி கதியில் உருவாகி… உணர்வாகி… செயலாகி… செயலில் வழி பெறுவது பல.

1.இயற்கையின் உண்மை உணர்வில் உருண்டோடும் சக்திகள் எல்லாமே “அவன் படைப்பென்றாலும்”
2.அவன் படைப்பிலிருந்து நல் ஒளி படைப்புப் பெறுவது தான் “இறை ஞானம்..” என்பது.

பலவாக உள்ள இந்த உலகில் இயற்கைப் படைப்பில் மற்றெல்லா உயிரினங்களைக் காட்டிலும் மனித ஞானத்தை உயர்வாகச் செயலாக்கும் சக்தி உருவாகியுள்ளது.

1.இறை ஞானத்தின் சக்தியை உணர்ந்து வழி ஞானம் பெறவல்ல ஆற்றல் மனித குண ஞானத்திற்குத் தான் உண்டு.
2.உயர்த்துபவன்… உயர்ந்தவன்…! என்ற வமிசக் கோட்பாட்டை அறியும் ஞானம் மனிதனுக்குண்டு.

மனிதன் வாழ மற்ற இயற்கையும் துணை கொள்கின்றது. தீயது என்ற நிலை உள்ளதினால் தான் நல்லதைப் பிரித்துக் காண முடிகின்றது. நற்சக்தியின் செயலிலே சகல வளர்ப்பும் இருந்ததென்றால் ஞானத்தின் வளர்ப்பு நிலை பெறுவது எப்படி…?

1.சக்தியின் ஸ்வரூபத்தில் சகலமும் உண்டு.
2.சகலமும் இருந்தால் தான்… சகலத்திலும் இருந்து “உயர் உணர்வு எது…?” என்று செயல் கொள்ள முடியும்.

உயர் நிலை உணர்ந்து… உயர் ஞான இறை சக்தி அடைய… ஞானத்தை உணர்ந்து செயல் கொள்ளக்கூடிய நிலை “மனித உரு வளர்ச்சி கொண்ட வழித் தொடரில் தான் உண்டு…!” என்பதை உணர்ந்து இந்தப் பூமியில் மனித இன வளர்ச்சியை ஊக்குவித்தனர் சப்த ரிஷிகள்.

குருவாக இன்று நாம் சொல்லும் “வியாழனின் ஞான ரிஷி” தான் வியாழனின் மனிதக் கரு உரு நிலையிலிருந்து மனிதனின் அமில குண வளர்ச்சி சக்தியை அம்மண்டலத்தில் மனித இனங்கள் வாழ முடியாத வளர்ப்பு நிலை கொண்ட மண்டலமாக வியாழன் மாறும் தருவாயில் இங்கே பூமியில் மனிதக் கரு வளரக் காரணமானவர்.

அதாவது அந்தச் சூட்சம ஞானச் செயல்… மனித இனத்தின் சுழற்சி வட்டம் சப்தரிஷியினால் ஈர்த்தெடுக்கப்பட்டு மீண்டும் மனிதக் கரு உருவாகவும்… மண்டலமாக நம் பூமியின் சக்தி அலையை வளர்க்கவும் செய்து… இப்பூமியின் ஈர்ப்பிற்கு மனித இனக் கருவை வளர்க்க விட்டனர் அன்று சப்தரிஷிகள்.

1.இன வளர்ச்சியில் ஞானத்தை உணர்ந்த அவர்கள் செயல்
2.அந்தந்தக் கால நிலைக்கொப்ப அவர்கள் பதித்த வளர்ச்சியிலிருந்தே
3.தன் வளர்ச்சிக்குப் பலம் கூட்ட தன் வளர்ப்பில் பயிராக்கிய பயிரிலிருந்து
4.மீண்டும் பயிராக்க “விதையைத்தான்” இன்று அவர்கள் சேமிக்கின்றார்கள்.

சப்தரிஷி உருவான அமிலக் கூட்டு இன நிலைக்கொப்ப தன் குண உணவையே தான் எடுத்து தான் வளர்ந்து இவ்வின வளர்ச்சி மங்கா நிலைக்காகத்தான் “சப்தரிஷிகளின் செயல்” இன்றுள்ளது.

இறைவனின் படைப்புத்தான் ஒவ்வொன்றும். படைப்பின் படைப்பெல்லாம் அவனே தான். அவனின் படைப்பில் இறை ஞானம் பெறும் மனித ஞானம் கொள்வது தான் படைக்கப்பட்டவன் படைப்பின் பொருள் காணும் நிலை.

நாம் நம் வாழ்க்கையில் சாதாரண நிலையில் உணர்ந்து வாழ்ந்து ஜீவன் பிரிந்து செல்லும் நிலையில் உள்ள நிலையை அந்தந்தக் காலங்களில் சப்தரிஷிகள் பல உடல்களை ஏற்று பல ஞானிகளை உருவாக்கிச் சென்றார்கள்.

ஆனால் இன்று வளர்ந்து பெருகியுள்ள மனிதனின் குண வழித் தொடர் யாவையுமே விஞ்ஞானம் என்ற உடல் பிம்ப சுகம் காணும் செயல் ஞானமாக வளர்ந்து வேரூன்றி கிளை விட்டுப் படர்ந்து விட்டது.

1.இதனை மாற்றியமைத்து
2.உயர் ஞானமான ஆத்ம ஞானத்தை வளர்த்து
3.இறை ஞானம் என்ற மனித அமில குண சக்தி ஈர்ப்பு வளர்ச்சி தரும் சப்தரிஷியின் ஞானமுடன்
4.நம் உணர்வின் செயல் இன்றுள்ள கால கட்டத்தில் செல்ல வேண்டிய குறுகிய காலமிது…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

குடும்பத்தில் உறவினர்களோ அல்லது நண்பர்களோ உடலை விட்டுப் பிரிந்து சென்றால் என்ன செய்ய வேண்டும்…?

அந்த மாதிரி நேரங்களில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

1.நேற்றெல்லாம் நன்றாக இருந்தார்… எல்லோருக்கும் நல்லது செய்தார்
2.ஆனால் “இன்று இப்படிப் போய்விட்டாரே..,” என்று பாசத்துடன் அவர்களை எண்ணினால்
3.அந்த ஆன்மா உங்கள் உடலுக்குள் வந்துவிடும்.

நம் உடலுக்குள் வந்த பின் என்ன நடக்கும்…?

1.அவர்கள் உடலில் என்னென்ன நோய் இருந்ததோ என்னென்ன தீமைகள் இருந்ததோ அதுவெல்லாம் நமக்குள் வரும்.
2.அது நமக்குள் விளையத் தொடங்கும்
3.இதைத்தான் பரம்பரை நோய் என்பார்கள்.

இதைத் தடுக்க வேண்டுமல்லவா…!

ஆகவே இந்த மாதிரி செய்திகளைக் கேட்டவுடன் துருவ நட்சத்திரத்தை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று தியானிக்க வேண்டும்.

அந்தச் சக்தியை வலு ஏற்றிக் கொண்டு உடலை விட்டுப் பிரிந்த அந்த உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று உந்திச் செலுத்த வேண்டும்.

இவ்வாறு செய்யும்போது அவர்களும் விண் செல்கிறார்கள்.

அவர்களுடைய உணர்வுகள் நமக்குள் வந்து நோயாக மாற முடியாது. அவர்கள் பட்ட துயரங்களோ துன்பங்களோ நம்மை சாப அலைகளாக இயக்காது. நாமும் தீமையை நீக்கிடும் நிலை பெறுகிறோம்.

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்…!

தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் விண்ணிலிருந்து வரும் ஆற்றல் மிக்க சக்திகளை நாம் பெற்று இந்த வாழ்க்கையில் வரும் சர்வ தீமைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

இந்த உடலுக்குப்பின் நாமும் அவர்கள் சென்ற அதே வழியில் எளிதில் விண் சென்று சப்தரிஷி மண்டலத்துடன் இணைய முடியும்.

தூக்கத்தில் “திடுக்…” என்று பயந்து விட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்…?

தியானத்தைச் சீராகக் கடைப்பிடித்துத் தொடர்ந்து வளர்த்துக் கொண்டு வரும் ஒரு சிலருக்குத் தூக்கத்தில் “திடுக்” என்று முழிப்பு வரும். சிலர் பயந்துவிட்டேன் என்பார்கள். கறுப்பாக உருவம் தெரிந்தது.. அல்லது வெள்ளையாக ஆவி தெரிந்தது…! என்பார்கள்.

அது மட்டுமல்ல…
1.அந்த நேரத்தில் கை கால்களை என்னால் அசைக்க முடியவில்லை…
2.பேச முடியவில்லை… எழுந்திருக்கவும் முடியாது போல் தோன்றியது என்று சொல்வோரும் உண்டு.
3.இன்னும் சிலருக்கு உடல் முழுவதையும் அமுக்குவது போலவும் மூச்சுத் திணறல் போல இருந்தது…! என்றும் கூடச் சொல்வார்கள்.

இதுகள் எல்லாம் நாம் ஏற்கனவே நமக்குள் எடுத்துக் கொண்ட சில மனித உணர்வுகள் அது இறக்கப்படும் பொழுது நுகர்ந்த உணர்வுகள் ஆகும். நம்முடைய ஈர்ப்புக்குள் வந்த பின் அது இப்படி எல்லாம் தெரியும்.

ஏனென்றால் நாம் புலனடங்கித் தூங்கும் பொழுது நம் நினைவோட்டம் இல்லாத நேரத்தில்
1.அத்தகைய உணர்வுகள் தன் பசிக்குப் பகலில் உணவை எடுக்க முடியாதபடி வரும் பொழுதும்
2.நாம் எடுக்கும் தியானத்தின் சக்தியால் அது களைந்து நல்லதாக மாறும் சமயங்களிலும்
3.உயிரிலே மோதும் சமயம் அத்தகைய உருவங்களும் உணர்ச்சிகளும் நமக்குத் தெரிய வரும்.

இதைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை….!

அப்படித் தூக்கத்தில் முழிப்பு வந்து விட்டது என்றால் எழுந்து ஒரு ஐந்து நிமிடம் உட்கார்ந்து
1.புருவ மத்தியில் ஓ..ம் ஈஸ்வரா குருதேவா…! என்று மூன்று முறை சொல்லி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
3.அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று தியானிக்கலாம்.
4.இல்லை பாதி நினைவு இருந்தாலும் அப்படியே படுக்கையில் படுத்தபடியே திரும்பத் திரும்ப அதைச் சொல்லிச் செய்யலாம்.
5.மீண்டும் தூக்கம் தன்னாலே வந்து விடும்.

முக்கியமாகப் புருவ மத்தியில் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று
1.நம் உயிரை அழுத்தமாக எண்ணி
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை இழுத்துச் சுவாசித்து உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இந்த வலுக் கூடினால் எந்த ஆன்மாவின் இயக்கமும் நம் ஈர்ப்புக்குள் வராது. நம்மை இயக்காது. பயத்தின் உணர்ச்சியாக நம்மை இயக்காது. அந்த அச்சுறுத்தும் உணர்வுகளுக்கு நாம் எடுக்கும் அருள் சக்திகள் அச்சுறுத்தலாகிவிடும்.

சந்தேகமோ பலவீனமோ நமக்குள் வராது. நமக்குள் மன பலம் அதீதமாகக் கூடும்… தெளிந்த சிந்தனையும் வரும். பிற உணர்வுகளின் இயக்கங்களை முன் கூட்டியே அறியவும் முடியும்.

செய்து பாருங்கள்…!

வாழ்க்கையில் புயல் போன்று வரும் தீமைகளிலிருந்து மீளும் வழி

நாம் ஒரு கட்டிடத்தைக் கட்டுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். கட்டும் போது அங்கங்கே முட்டுகள் (பொய்க்கால்) கொடுத்துத்தான் கட்டுகின்றோம்.

கட்டிடம் வலுவாக நின்ற பின் சிமெண்ட் நன்றாகக் காய்ந்துவிட்டதா என்ற பதத்தைப் பார்த்த பின் அந்த முட்டுகளை எடுக்கின்றோம். அப்புறம் முட்டு இல்லாமல் கட்டிடம் தன்னாலே நிற்கின்றது.

ஆகவே முட்டு இல்லாமல் எந்தக் கட்டிடமும் கட்ட முடியாது.

ஆனால் கட்டிடம் சரியாகக் காய்வதற்கு முன்னனாடியே முட்டைத் தட்டி விட்டோம் என்றால் என்ன செய்யும்? கீழே விழுந்துவிடும்.

சிமெண்ட் பாலை ஊற்றிக் கட்டிடத்தைக் கட்டிவிட்டு அடுத்தாற்போல் உடனே அந்த முட்டுகளைத் தட்டிவிட்டோம் என்றால் நம்மைத் தான் போட்டு அமுக்கும்.

இந்த மாதிரித் தான் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு அணையாக‌ இருக்கக்கூடிய நல்ல உணர்வுகளைக் கழற்றி விட்டு விடக்கூடாது.

இப்போது மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்கிறோம் என்று சொன்னால்
1.யாம் வலுவாகக் கொடுக்கும் அந்த முட்டுகளை (உபதேச உணர்வுகளை)
2.அந்த ஞானிகளின் அருள் சக்திகளைத் தட்டிவிடக் கூடாது.

நான் எல்லாச் சக்திகளையும் பெற்றுவிட்டேன் என்கிற வகையில் கொடுக்கும் ஞானிகளின் உணர்வைக் கழற்றி விட்டு விட்டு எல்லாவற்றையும் நானே பார்த்துக் கொள்வேன் என்று சொன்னால் என்ன ஆகும்?

இப்படிக் கொஞ்ச பேர் இருக்கின்றனர்.

தீமைகளிலிருந்தோ அல்லது துன்பங்களிலிருந்தோ விடுபட மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில்
1.அதிலிருந்து (உடனடியாக) “தப்ப முடியவில்லையே…” என்ற வேகத்தில்
2.எடுத்துக் கொண்டிருக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளைத் தட்டிவிட்டு விடுகின்றார்கள்.

ஏனென்றால் இதையெல்லாம் அனுபவபூர்வமாகத் தெரிந்து நான் சொல்கின்றேன். குருநாதர் அனுபவத்தின் மூலமாகத் தான் பல ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறச் செய்தார்,

மனிதருடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் பாச அலைகள் துன்ப அலைகள் மற்ற உணர்வுகள் எப்படித் தாக்குகின்றது…? இதிலிருந்து எப்படி மீள வேண்டும் என்று குருநாதர் உணர்த்தினார்.

உதாரணமாகப் பெண் குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில் திருமணம் நடக்கவில்லை.. சிறிது கால தாமதம் ஆகிறது என்றால் எப்படி எண்ண வேண்டும்…?

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குழந்தை உடல் முழுவதும் படர்ந்து
1.குழந்தையின் எதிர் காலம் நன்றாக இருக்க வேண்டும்
2.எந்தக் குடும்பத்திற்குப் போனாலும் நன்றாக வாழ வேண்டும்
3.நல்ல மாப்பிள்ளையாக வர வேண்டும். நல்ல வரனாக வர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

“இந்த மாதிரிச் செய்யுங்கள்…!” என்று சொன்னால் எங்கள் பிள்ளைக்கு இப்படி நினைக்காமல் வேறு எப்படிங்கெ நினைப்போம்…! என்று எனக்கே திருப்பிச் சொல்கிறார்கள்.

நாங்கள் இப்படித்தான் நினைக்கின்றோம்…! ஆனால் எங்கெங்க மாப்பிள்ளை வருகின்றது…? என்று திருப்பி இதே ராகத்திலேயே சொல்லிக் கொண்டு போகிறார்கள்.

சற்று சிந்தித்துப் பாருங்கள். பாலில் சிறிதளவு நஞ்சை ஊற்றினால் எப்படி இருக்கும்..? அந்த விஷமான உணர்வு தான் அங்கே இயக்கும்.

இதைப் போல தான் மனிதனுடைய வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் மீளாத் துயரத்தில் சுழன்று கொண்டு இருக்கின்றோம்.

எவ்வளவோ உயர்ந்த சரக்குகள் இருந்தாலும் அதில் நஞ்சினை கலந்தால் அந்த நஞ்சின் செயலாக்கம் எவ்வாறு இருக்குமோ அதைப்போல
1.உயர்ந்த குணங்கள் கொண்டோர் அனைவரும்
2.எத்தனையோ புயல்களிலேயும் அலைகளிலேயும் வாழ்க்கையில் இன்னல்களில் சிக்கித் தவிக்கின்றனர்.

ஒரு புயல் அடித்தால் என்ன நடக்கின்றது? எல்லாவற்றையும் அழித்துச் செல்லுகின்றது. புயல் ஓய்ந்த பின் பார்த்தோம் என்றால் இயல்பாக இருக்கும் அனைத்தும் காணாமல் போய்விடுகிறது.

இதைப் போல மனிதனின் உடலில் இப்படி பெரும் புயல் வீச ஆரம்பித்தால் “என்ன வாழ்க்கை…?” என்ற நிலையில் அனைத்தும் இருள் சூழச் செய்து தற்கொலைக்கே அழைத்துச் செல்லுகின்றது.

நாம் ஆசையுடன் தான் வாழ்கின்றோம். ஆனால் வாழ்க்கையில் சந்தர்ப்பபேதத்தால் வரும் இன்னல்களுக்குள் புயலில் சிக்கியது போன்று ஆகிவிட்டால் என்னென்ன ஆசைகள் இருந்ததோ அனைத்தும் நொறுங்கி விடுகின்றது. ஆகவே
1.புயலைப் போன்று வரும் இன்னல்களை
2.தீமையாக இயக்கும் கடுமையான அலைகளை
3.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் பிளந்து
4.நம் பயணத்தின் பாதையை அழியா ஒளிச் சரீரம் நோக்கிச் செலுத்துவோம்
5.அருள் ஞானிகள் வாழும் சப்தரிஷி மண்டலத்தை நம் எல்லையாக வகுப்போம்.

தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்போருக்கு உடலுக்குப் பின் எங்கே போகிறோம் என்று தெரியும்… அடுத்தவருக்கும் உணர்த்தும்

இந்த உலகம் முழுவதற்குமே விஷத் தன்மை பரவிக் கொண்டிருக்கின்றது. அதிலிருந்து நாம் ஒவ்வொருவருமே மீள வேண்டும்.

சாக்கடைக்குள்
1.எப்படிப் பன்றி நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை நுகர்ந்ததோ
2.இதைப் போல் அதன் உணர்வை நுகர்ந்து மனிதனானதோ
3.மனிதனாக ஆன பின் இருளை வென்று உணர்வின் தன்மை ஒளியாக ஆனானோ
4.அதன் உணர்வை (துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம்) உங்களைப் பெறச் செய்கின்றோம்.

அதை உங்களைப் பெறச் செய்து அந்த உணர்வினை வலுவாக்கச் செய்கின்றோம். அந்த வலுக் கொண்ட பின் வராகன் எப்படி நாற்றத்தைப் பிளந்ததோ காற்று மண்டல விஷத் தன்மையைப் பிரித்து உடலுக்குப் பின் நீங்கள் அங்கே அந்தச் சப்தரிஷி மண்டலம் சென்றடைய முடியும்.

இந்த உடலிலே ஒவ்வொரு நிமிடமும் அதைப் பெற்றால்
1.அந்தக் கடைசிக் காலத் தன்மைகள் உங்களுக்குத் தெரியும்
2.அந்தத் தெரிந்த நிலைகள் கொண்டு எங்கே போகிறோம்…? என்ற நிலையும் தெரியும்.
3.வெளியிலே சென்ற பின் இந்த உணர்வுகள் எங்கே பதிவாகி இருக்கிறதோ அந்த விண் சென்ற நினைவை நிச்சயம் ஊட்டும்.

நாம் போன பிற்பாடு இது யாருக்குத் தெரியும்… இங்கே எவருக்குத் தெரியும் என்ற வகையில் சிலர் நினைக்கலாம்…!

இதெல்லாம் அந்த உணர்வின் இயக்கங்களை அறியும் பருவம் உண்டு. நான் (ஞானகுரு) எல்லாவற்றையும் அறிந்து கொண்டு தான் இருக்கின்றேன். நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்கிறேன்.

ஆக நாம் நினைவைக் கூட்டினால் தானே…!

வசிஷ்டர் – நாம் எதைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு எண்ணுகின்றோமோ நமக்குள் அது பிரம்மமாகின்றது. நம் எண்ணங்கள் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும் என்றும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்றும் ஒவ்வொரு நொடியும் விரும்பினால் அது வசிஷ்டர்.

அந்த உணர்வின் சக்தியை நமக்குள் பெறப்படும் போது அது பிரம்மமாகின்றது. பிரம்மகுருவின் மனைவி யார்…? அருந்ததி. அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம்முடன் இணையச் செய்யப்படும் போது தீமைகளை அகற்றும் சக்தியைப் பெறுகின்றோம்.

1.இந்த மனித வாழ்க்கையில் எத்தனை சங்கடங்கள் வந்தாலும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சேர்த்தீர்கள் என்றால் அது மறக்கும்
3.தீமைகள் சிறுக்கும்… சிந்தனைகள் வலுப் பெறும்… சிந்தித்துச் செயல்படும் தன்மை வரும்.

வராகன் எப்படித் தீமையை நீக்கியதோ அதே போல் ஒவ்வொரு சமயத்திலும் உங்களுக்குக் கொடுக்கும் சக்தியை நீங்கள் சீரான நிலைகளில் பயன்படுத்தினால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெருக்க முடியும். நஞ்சை நீக்க முடியும்.

இதை எல்லாம் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். வாழ்க்கையே தியானமாக்கச் சொல்வதற்கு இதற்குத் தான்…!

எல்லாவற்றையும் படைத்த இறைவன் அவனை வணங்குவதற்குத் தான் அதைப் படைத்தானா…! – ஈஸ்வரபட்டர்

புல்லைப் படைத்தான்… பூண்டைப் படைத்தான்… செடி கல் மண் நீர் அனைத்தையும் படைத்தான்… சகல ஜீவராசிகளையும் படைத்தான்… மனிதனையும் படைத்தான்…! இறைவன் படைப்புத் தான் எல்லாமே…!

1.மனிதனைப் படைத்த இறைவன்
2.மற்ற எல்லா நிலைகளைக் காட்டிலும் “மனிதனை” உயர் ஞானத்துடன் படைத்துள்ளான்
3.ஆனால் அவற்றை எல்லாம் படைத்த இறைவன் நம்மையும் படைத்து… அவ்விறைவனையும் வணங்கச் செய்கின்றானா..?

இயற்கையின் படைப்பில் படைப்புகள் அனைத்தும் அவன் படைப்பென்றால்
1.அவன் படைப்பில் “தீமைகளை எதற்குப் படைக்கின்றான்…?”
2.நல்லுணர்வையை படைத்து நற்சக்தியின் செயலையே அவன் பெற்றிருக்கலாம் அல்லவா…!

படைப்பில் ஏன் இறைவனுக்கு ஓரவஞ்சனைகள்…? நீங்கள் வணங்கும் ஆண்டவனுக்கு ஏன் படைப்பில் இப்படி மாற்றம்..?

தீயோனையும் நல்லவனாக்கலாம். தீய படைப்புகள் அனைத்துமே படைக்கப்படுவதற்கு முதலிலேயே நல்ல படைப்புகளாகப் படைத்திருக்கலாம் அல்லவா…!

1.கொடூர குணம் படைத்தவனும் நயவஞ்சகனும் இறைவனை வணங்கினால் இருள் நீங்கும்…!
2.இறைவன் ஒருவன் தான் அவர்களை மாற்ற முடியும்…! என்று
3.இறைவன் படைப்பையே… இறைவனிடம் வேண்டச் சொல்கிறான்
4.அப்படி என்றால் இறைவன் படைப்பில் “இனியவன்” என்பவன் யார்…?

ஆக… இறைவன் என்பவன் யார்…? அவன் எங்குள்ளான்…?

மனிதன் பிறப்பெடுத்து வாழும் காலத்திலேயே தன் பிறப்பை உயர்வாக உணர்ந்து தெய்வத்தின் படைப்பிலேயே உயர்ந்து நிற்கும் மனிதனுக்கு
1.எந்த இறைவனால் பலவும் படைக்கப்பட்டன என்று உணர்கின்றானோ
2.அவற்றின் துணை இல்லாவிட்டால் இவனால் வாழ முடியுமா..?

இயற்கையில் கலந்துள்ள தாவர இனங்களிலிருந்துதான் உணவை எடுக்கின்றான். நீரும் காற்றும் நிலமும் இவனை வளர்க்கிறது. இவன் உணர்வில் “தீயது” என்று உணர்த்தப்பட்ட ஒவ்வொன்றிலும் இருந்துதான் “நன்மை எது…?” என்று இவன் (மனிதன்) உணர்ந்து வாழ முடிகிறது.

1.படைக்கப்பட்ட இறைவனுக்கு எது சொந்தம்…?
2.அவன் படைப்பில் உருவான உரு அனைத்துமே “இப்படி இப்படித்தான் வளர வேண்டும்…” என்ற அவன் படைத்தானா…?
3.இறைவன் படைப்பு என்பது யாது…? உருவானது எந்நிலை கொண்டது…?
4.படைப்பில் பலவும் உள்ள பொழுது இறை ஞானம் என்று உயர்ந்து காண்பது எது…?
5.இன்றைய இவ்வுலகின் உண்மை நிலை என்ன…?
6.உலகை உருவாக்கி உருளச் செய்த உணர்வு உண்மை நிலை என்ன…?
7.இயற்கையின் படைப்புத்தான் எல்லாமே…! என்றாலும் படைப்பின் உரு நிலை எப்படிக் கொள்கிறது…?
8.இறை ஞானத்தின் உண்மையை உணர முடியுமா…?
9.உணர்ந்தோர் சொல்லும் நிலை உண்மைதானா…? என்ற எண்ணமும் எழலாம்.

மின்சாரத்தினால் நீங்கள் உபயோகிக்கும் சாதன முறைகளுக்கு எப்படி அந்த மின் விசை எந்தெந்த நிலையில் பாய்ச்சப்பட்டு அதற்குகந்த சக்தி வெளிப்படும் தன்மையில் மின் விசிறியும் மின் இயந்திர இழுவை நிலையும் ஒளி விளக்குகளும் செயல்படுகின்றனவோ அதைப் போன்று
1.ஒவ்வொரு மனிதனும் தன் உணர்வின் எண்ண ஞானத்தை
2.எச்சக்தி அலையின் ஈர்ப்பில் பதிய விடுகின்றானோ
3.அதற்குகந்த சாதனை செயல் ருப வழியில் தான் மனிதன் இன்றுள்ளான்.

இது தான் உண்மை…! இறைவன் தனியாக யாருக்கு என்றும் எதுவும் கொடுக்கவில்லை.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இப்பொழுது தியான வழிகளில் வளர்ந்த நீங்கள் நன்மையைத்தான் தேடுகின்றீர்கள். ஆனால் கூட்டாக தியானிக்கும் நிலையில் மற்றவர்கள் தொடர்ந்து வரவில்லை என்றால் என்ன செய்வீர்கள்…?

நல்லதைச் சொல்கிறோம்… ஆனால் அவர்கள் வரவில்லை என்று வேதனைப்படுவீர்கள். இத்தனை நாள் செய்தோம் என்ற நிலைகளை இதற்கு மாறாக வேதனையைத்தான் வளர்க்க முடிகின்றது.

அப்பொழுது எப்படிச் செய்யவேண்டும்…?

பாலிலே பாதாமைப் போட்டு அதிலே ஒரு துளி விஷத்தைப் போட்டால் என்ன செய்யும்…? குடிப்பவர்களுக்கு மயக்கம் வரத்தான் செய்யும்.

அதைப் போல நல்ல மனதில் வேதனையை நுகர நேர்ந்தால் அடுத்தவர்களிடம் சொன்னால் என்ன ஆகும்…?

உங்கள் மேல் வெறுப்புதான் வருமே தவிர அன்பின் தன்மை வராது. ஆகவே நாம் போகும் அருள் ஞானப் பாதையில் அனைவரையும் அரவணைக்கும் தன்மை தான் வரவேண்டும்.

நல்லதை எண்ணுகிறோம்… மற்றவர்களுக்கு இதைச் சொல்கிறோம், மற்றவர்கள் இதைப் பின்பற்றவில்லையே… இப்படி ஆகிவிட்டதே..” என்ற வேதனையுடன் அவர்களிடம் சொல்லும்போது ஏற்க மறுக்கும்.

“இவர் என்ன..? சும்மா இப்படியே சொல்லிக் கொண்டிருக்கிறார்..,” என்று உங்கள் மேல் வெறுப்புதான் வரும்.

உதாரணமாக நேருக்கு நேர் உங்கள் பையனிடம் இந்த மாதிரித் தப்பு செய்தாய் என்று சொன்னால் என்ன ஆகும்…?

அவன் கேட்க மாட்டான்.

அதற்குப் பதில் பையன் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும், அவன் நன்கு தெளிந்து வாழும் நிலை பெற வேண்டும், அருள் ஞானம் அவன் பெற வேண்டும் என்று கூட்டிக் கொண்டால் “தம்பி இதைப் பார்த்துச் செய்..” என்று சொல்லத் தோன்றும்.

இல்லை என்றால் என்ன செய்வோம்…? “டேய்.. என்னடா செய்தாய்…? இப்படியே நீ தப்புப் பண்ணிக் கொண்டேதான் வருகிறாய்” என்று சொல்லச் செய்யும்.

அப்பொழுது அதனுடைய அர்த்தம் என்ன ஆகிறது…?

இதைப் போல வரப்படும்போது… ஏன்…? இத்தனை பேர் இருக்கும்போது நீங்கள் இப்படியே போய்க் கொண்டிருக்கின்றீர்கள். சாமி (ஞானகுரு) என்ன சொன்னார்…? என்று இதையும் நாம் கலந்துவிடுகின்றோம்.

நல்ல சக்தியாக இருக்கின்றதே, இந்த மாதிரிச் செய்கின்றார்கள். நாங்கள் ஐம்பது பேர் தியானம் இருந்தோம், இப்படிப் போய்விட்டார்களே என்ற இந்த எண்ணத்தை எண்ணினால் என்ன செய்யும்…?

இப்படி எடுக்கும் இந்த உணர்வுகள் விஷத்தின் தன்மை அதிகமாகும்போது நாம் எடுக்கும் மார்க்கங்களைத் தவறவிட்டுப் பெற முடியாத நிலை ஆகிவிடும்.

உயர்ந்த பண்புகளில் வேதனை என்ற உணர்வுகள் கலக்கும்போது நம் உடலும் பலவீனம் அடைகின்றது.

கண்ணாடி நன்றாகத் தான் தெரிகின்றது. ஆனால், மேலே தூசி படிந்து விட்டால் என்ன ஆகும்…? சரியாகத் தெரியாது. அப்பொழுது அதில் படிந்திருக்கும் அழுக்கைத் துடைக்க வேண்டுமல்லவா…!

மற்றவர்கள் தியானத்தில் கலந்து கொள்ளவில்லை என்ற எண்ணத்திற்கே நாம் போக வேண்டியதில்லை.

1.தியானத்தில் கலந்து கொள்ளதாவர்களுக்கு ஞானம் வரவேண்டும்,
2.ஒன்றுபட்டு வாழும் தன்மைக்கு அவர்கள் வரவேண்டும்,
3.குரு வழியில் வாழ வேண்டும்… குரு வழியில் வரவேண்டும் என்று நீங்கள் எண்ணினால்
4.அந்த வேதனை உங்களுக்கு வராது.

அறியாத நிலைகளில் அவர்கள் இருந்தாலும் நாம் இந்த அருள் சக்திகளை எடுத்து அவர்களும் அறியும் பருவம் வரவேண்டும் என்ற உணர்வினைப் பாய்ச்ச வேண்டும்.

நிச்சயம் அவர்களும் வருவார்கள்.

பழனி மலை முருகனிடம் என்ன கேட்க வேண்டும்…? என்று சொன்னார் குருநாதர்

நான் (ஞானகுரு) வேலையை விட்டு நின்று… சரியான சாப்பாடு இல்லாது… நண்பர்களும் மற்றவர்களும் கேவலமாகப் பேசி மனம் மிகவும் சோர்ந்த நிலையில் படுத்திருக்கின்றேன். அந்த நேரத்தில் என்னை ஒரு உணர்வு இழுத்து பழனி மலைக்கு மீதாவது போய்ப் பார்க்கலாம் என்று இயக்குகிறது.

அங்கே போகத் தொடங்கியதும் குருநாதர் இங்கிருந்து குறுக்காட்டுகிறார்.

1.டேய்……. பணம் வேண்டும்… செல்வம் வேண்டும்… செல்வாக்கு வேண்டும்… சொல்வாக்கு வேண்டும்…
2.இந்த மூன்றும் வேண்டும்…! அது இல்லை என்றால் பிழைக்க முடியாது.
3.போகிறாய் அல்லவா… அவனிடம் கேளுடா…! என்று சப்தமிடுகிறார்.

யாரிடம்..?

இந்தப் பக்தியில் (ஆரம்பத்தில்) நான் இருப்பதால் “முருகனிடம் கேளுடா…!” என்கிறார் குருநாதர்.

ஏற்கனவே குரு பல உண்மைகளை எனக்கு உணர்த்தியிருக்கின்றார். உலகத்தில் இருக்கும் மந்திரவாதிககள் செயல்களிலிருந்து… மற்ற உலக நடப்புகள் அனைத்தையும் சொன்ன பிற்பாடு “நீ முருகனிடம் சென்று பணத்தைக் கேள்…” என்று சொன்னால் எப்படி இருக்கும்…!

அங்கே பசியுடன் தான் மேலே போகிறேன். ஒன்றுமே புரியவில்லை. என்ன செய்கிறோம் ஏது பண்ணுகிறோம் என்று தெரியாதபடி படி மேல் கிடு… கிடு… என்று ஏறிப் போகின்றேன்.

உள்ளே முருகன் சிலை இருக்கும் சந்நிதிக்கே சென்றுவிட்டேன். முன்னேப் பின்னே முருகனை நேரடியாகப் பார்த்ததில்லை. “சிரித்த முகமாக முருகனே வருகிறார்…!”

இதைத் தான் சொல்லியிருக்கிறார் போலிருக்கிறது குருநாதர்.. முருகன் வந்ததும் கேளுடா என்று… இந்த நினைவு வருகிறது. சிலையிலிருந்து அப்படியே முருகன் வருகிறது.

அந்த நேரத்தில் அங்கே கூட்டமும் இல்லை. யாரோ கொடுத்த மாலையை என் கழுத்தில் கொண்டு வந்து போடுகிறார்கள். ஏனென்றால் அங்கே தெரிந்தவர்கள் இருப்பதால் நான் டிக்கெட்டும் எடுக்கவில்லை உள்ளேயே போய்விட்டேன்.

மொத்தம் அங்கே இரண்டே பேர் தான் இருக்கிறோம். மாலை எனக்கு விழுகிறது. முருகன் சிரித்துக் கொண்டே வருகிறார்.

பார்த்ததும் குருநாதர் சொன்ன ஆசையெல்லாம் விட்டுவிட்டது. அங்கே முருகனிடம் என்ன கேட்கிறேன்…?

1.முருகனே காட்சி கொடுத்துவிட்டான் இனி நமக்கு வேறு என்ன வேண்டும்…?
2.எல்லாம் அவனே பார்த்துக் கொள்கிறான்…! என்ற இந்த எண்ணம் தான் வந்தது.

குருநாதர் இதற்கு முன்னாடி காட்டிய நிலை எல்லாம் இருக்கிறது அல்லவா. இவ்வளவு பெரிய சக்தி நமக்குக் கிடைக்கிறது என்று சொன்னால் முதலில் “நம் புத்தி சரியாக இருக்க வேண்டும்…”

கோபம் வந்து ஏதாவது செய்து விட்டால்… இவ்வளவு பெரிய சக்தியைத் தவறாகப் பயன்படுத்தினால் என்னென்ன கேடுகள் வரும் என்று குருநாதர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஒரு கையைக் நீட்டினால்
1.வேருடன் மரம் கீழே சாய்கிறது
2.காக்காயைக் காட்டினால் காகத்தின் இறக்கை பிய்ந்து விழுகிறது.
3.பாம்பைக் காட்டினால் பாம்பு அப்படியே ஒடுங்குகிறது
4.மாட்டைக் காட்டினால் அது செயலற்றதாகிறது
5.மனிதனைக் காட்டும் போது கை கால் நின்று போகிறது
6.ரோட்டில் போகிறவனைக் கை கால் வராது ஆக்குகிறது

இத்தனையும் செய்து காட்டியவுடன் இந்தப் பவர்கள் இருப்பதால் நீ எவருக்கும் பயப்பட வேண்டியதில்லை… என்று சொல்லி குருநாதர் என்னென்னமோ காட்டுகிறார். இதை எல்லாம் சொல்லிச் செய்து பார்க்கவும் சொல்கிறார்… முதலில்…!

அந்தச் சக்தி எல்லாம் வந்தவுடன் திமிரும் கூட ஏறுகிறது.

முருகனை இதற்கு முன்னாடிப் பார்த்ததில்லை அல்லவா…! முருகனின் காட்சி கிடைத்தவுடன் இந்த எண்ணம் எல்லாம் ஓடுகிறது.

மேலே சொன்ன சக்தியெல்லாம் அடுத்தவர் மீது பாய்ச்சிச் செயல்படுத்தினால் அவர்கள் வேதனைப்படுவார்கள். அவர்களின் வேதனை எல்லாம் உன்னிடம் வந்து சேரும்….
1.கடைசியில் ஒட்டு மொத்தமாக எல்லா வேதனையும் நீ அனுபவிக்க வேண்டும் என்று குருநாதர் சொல்கிறார்.
2.இவ்வளவு தெரிந்த பிற்பாடு இது நமக்கு எதற்கு…?

இது எல்லாம் உன்னைக் காப்பாற்றுவதற்கு உதவும் என்று சொல்லிக் கொடுத்துவிட்டு இதையும் சொல்லி எச்சரிக்கை செய்கிறார் குருநாதர்.

ஆரம்பத்தில் நாயெல்லாம் என்னைக் கடிக்க வரும். அந்த நேரத்தில் குருநாதர் சொன்னபடி விரலை நீட்டினால் வாயைக் கட்ட முடிகிறது.

இந்த உணர்வின் தன்மையை எண்ணும் போது அந்த நாய் எவ்வளவு வேதனைப்படுகிறதோ உன்னை எண்ணியே தான் அது வேதனைப்படும். கடைசியில் அது எதையும் சாப்பிட முடியாதபடி ஆனது போல் நீயும் சோறு சாப்பிட முடியாமல் நீயும் வேதனைப்படுவாய். இதையும் குருநாதர் காட்டி இருக்கின்றார்.

அப்புறம் நமக்கு எப்படி அது மேல் ஆசை வரும்…? சாட்சாத் முருகனே சிலையிலிருந்து எழுந்து வருகிறார் என்றால் எனக்கு எப்படி இருக்கும்…?

நான் என்ன செய்தேன்…!

செல்வம் செல்வாக்கு சொல்வாக்கு வேண்டும் என்று கேட்பதை விட்டுவிட்டேன்.
1.நான் நல்லவனாக இருக்க வேண்டும்
2.நான் பார்ப்பது எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும்
3.என்னை அறியாது ஏதாவது தீங்கான செயல் வந்தது என்றால்
4.அது வராது தடுக்க வேண்டும்… எனக்கு ஒன்றுமே தெரியாது.
5.நான் யாருக்காவது கெட்டதைச் சொல்லி விட்டேன் என்றால் அவர்களிடமிருந்து கெட்டது தான் போக வேண்டுமே தவிர
6.“என்னால் அவர்களுக்குக் கெட்டது ஆகிவிடக் கூடாது…!” என்று இதைக் கேட்டேன்.

அங்கிருந்து கீழே வந்த பின் பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் காத்துக் கொண்டிருக்கின்றார் குருநாதர். என் குடுமியைப் பிடித்தார். வாயில் வராத பேச்சுக்களைப் பேசினார். வார்த்தைகள் இன்னது தான் என்று இல்லாத அளவுக்குப் பேசுகின்றார். அடி… அடி… என்று அடிக்கின்றார். சட்டை எல்லாம் கிழித்து விட்டார்.

அங்கிருந்து சந்தோசமாகக் கீழே இறங்கி வந்தேன், அங்கே என்னென்னமோ காட்சி கிடைத்தது. இங்கே வந்தால் உதை விழுகிறது. குருநாதர் முகத்தையும் பல்லையும் கண்களையும் பார்த்தால் பயங்கரமாக இருக்கின்றார்.

இங்கே வாடா……. என்று சட்டையைப் பிடித்து இழுத்தார்.

நீ நல்லவன் தான்…! நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் உன்னிடம் பணம் இல்லை என்றால் ஒருவரும் மதிக்க மாட்டான். செல்வம் வேண்டும்… செல்வாக்கு வேண்டும்… சொல்வாக்கு வேண்டும்… இந்த மூன்றும் வேண்டும்…! இது இல்லை என்றால் மனிதனுக்கு வழி இல்லை என்று சொல்கிறார். அதையே மீண்டும் சொல்கிறார்.

1.குருநாதராக இருந்து முருகனையே காண்பித்துக் கொடுக்கின்றீர்கள்
2.இங்கே முருகனும் இருக்கின்றார்… நீங்களும் இருக்கின்றீர்கள்…!
3.எனக்கு வேறு என்ன வேண்டும்…? இதைக் காட்டிலும் வேறு என்ன சொத்து வேண்டியிருக்கிறது…?
4.நான் இப்படியே கேட்டேன்… வேண்டியதில்லை…! என்று சொன்னேன்.

இது நடந்த நிகழ்ச்சி.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

விஞ்ஞான அறிவு கொண்டு வெறும் அட்டையைக் (SWIPE CARD) கொடுக்கின்றார்கள். அந்த அட்டையை வைத்து அதற்குரிய சாவியைப் (PASSWORD) போடச் சொல்கிறார்கள்.

அந்த அட்டையில் என்ன இருக்கின்றதோ அந்தச் சாவியை (PASSWORD) அதிலே போட்டால் தான் அது திறக்கின்றது. இல்லை என்றால் திறக்கவே திறக்காது.

இதைப் போல பலவிதமான உணர்வின் தன்மைகளை அந்தப் பிளாஸ்டிக் அட்டையிலே (SWIPE CARD) கொடுத்து இந்தத் மாதிரி திறக்கும்படிச் செய்கின்றனர்.

இன்று அதை வைத்து எத்தனையோ விதமான பரிவர்த்தனைகளை நாம் செய்கின்றோம். அந்த அட்டையை வைத்து இருந்த இடத்திலிருந்து “உலகம் முழுவதற்கும்…!” நாம் செயல்படுத்துகின்றோம்.

உதாரணமாக நமக்குள் நண்பர்களாகப் பழகிய அல்லது அந்தக் குடும்பத்தில் உள்ளோருடன் பழகியவர்கள் நோய்வாய்ப்பட்டு இருந்தால் அதை என்ன…? ஏது…? என்று தெரிந்து கொள்ள விரும்புகின்றோம்.

அவர்கள் உணர்வு நமக்குள் பதிவு இருப்பதனால் அதே நினைவு கொண்டு நாம் எண்ணுவோம் என்றால்
1.அப்போது இந்தக் கதவு திறக்கப்படுகின்றது.
2.அவர் உடலில் இருந்த உணர்வுகள் நோய்கள் நினைத்தவர் உடலில் உருவாகின்றது.
3.அப்போது அந்த இருள் சூழ்ந்த நிலையே நமக்குள்ளும் வருகின்றது.

அதை மாற்ற வேண்டும் அல்லவா..!

அதற்காகத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் தீமைகளை எல்லாம் நீக்கி நஞ்சினை வென்று பேரொளியாக மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பற்றி உபதேச வாயிலாக இப்பொழுது இங்கே பதிவு செய்கின்றோம்.

இந்த உணர்வின் தன்மை நமக்குள் ஆழமாகப் பதிவான பின் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணினாலே நம் உடலுக்குள் அதனின்று வரும் பேரருள் பேரொளி உட்புகுந்து
1.நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் வரும் தீமைகளை எல்லாம் நீக்கி
2.நல் உணர்வுகளையும் நல்ல உணர்ச்சிகளையும் தோற்றுவித்து
3.நல்ல குணங்களுக்கு நம் மனம் இடம் கொடுக்கின்றது.
4.நம்மை மகிழ்ந்து வாழச் செய்கிறது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நோயுற்றவர்கள் பெற வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று அவர்களுக்குப் பாய்ச்சப்படும் பொழுது அவர்களும் நோயிலிருந்து விடுபடுகின்றார்கள்.

செய்வினை… ஏவல்… தோஷம்… மாந்திரீகம்… இவைகளில் சிக்கியவர்கள் மீளும் வழி என்ன…? ஈஸ்வரபட்டர்

மனிதன் நல் உணர்வு கொண்டு வாழ்ந்தாலும் சந்தர்ப்பத்தால் ஏற்படும் அவரின் பக்குவ முறை மாற்றத்தினால் ஏக்கம் சலிப்பு என்ற தொடர் குண ஆவேச எண்ணம் கொண்ட உணர்வலையில் சென்ற பின் உடலை விட்டு ஆவி பிரிந்தவுடன் அவர்கள் எங்கே செல்கிறார்கள்….?

பல எண்ண ஈர்ப்பில் சுழன்று ஆவி மிருக ஈர்ப்பிற்குச் சென்றும் மனிதனை ஒத்த அங்க அவயங்கள் அற்ற மிருக ஜீவிதத்திற்குச் செல்ல ஏதுவாகிறது.

உணர்வலையின் மாற்ற நிலை கொண்ட ஆத்ம பிம்பமே பல காலச் சேமிப்பு அமில ஈர்ப்பு உரு மாறி மனிதக் கருவிலிருந்து மிருகக் கரு நிலைக்குச் செல்லும் பொழுது
1.மாந்திரீக நிலைக்கு வசமாகிக் கொண்ட ஆவிகளின் உணர்வின் ஈர்ப்பும்
2.மாந்திரீகனின் ஆன்மா பிரிந்த பிறகு அவன் வசப்பட்ட ஆவிகளின் உணர்வு அமில சக்தி எந்நிலை பெறுகின்றது…?

மிருக ஜெந்துவிலேயே பல நிலை கொண்ட குண வளர்ச்சி ஜெந்துக்கள் உண்டு. மாந்திரீக வசப்பட்ட ஆவிகளின் ஈர்ப்பு மாந்திரீகன் வசப்படுத்தி வைத்துள்ள கால நிலை மாறுபட்டவுடன் இவ்வாவிகளுக்கும் சக்தி நிலை குறைந்து மீண்டும் பிறப்பு எடுக்க நாய்… குள்ள நரி… இவற்றின் ஈர்ப்பலை பிம்ப உடல் தான் பெற முடியும்.

நாய்க்கு உணர்வலைகள் அதிகம். மனிதனைக் காட்டிலும் நாய்க்கு மோப்பத்தால் ஈர்க்கும் நிலை துரிதப்படுகின்றது. சுவாச ஈர்ப்பின் நிலைக்கொப்பத்தான் செவி ஈர்ப்பும் கண் ஒளியும் அதற்கு உண்டு.

மாந்திரீகனால் வசப்படுத்திய ஆவிகள் மற்ற சாதாரண ஆவிகளைக் காட்டிலும் அதற்கு அதன் மாந்திரீக பூஜிப்பினால் ஈர்ப்பலை அதிகம் கொண்டுள்ளதினால் “நாயின் பிறப்பிற்குத் தான் செல்ல முடியும்…!”

ஆவிகளின் நிலையை உணர்த்தி வருகின்றேன். இதன் உண்மை நிலை என்ன…? ஆவிகள் உண்டா இல்லையா..? இதை உணர்வது எப்படி…? என்ற வினா எழும்பலாம்.

இன்று உலகின் பல பாகங்களில் மாந்திரீக முறையில் பல அதிசயங்கள் நடப்பதை “ஆண்டவனின் ரூபம்…” என்று காட்டி ஏமாற்றி லிங்கமும் வேலும் விபூதியும் வருகின்றதல்லவா…!

அதுவுமல்லாமல் சில பொருள்கள் தானாக ஆடுவதும்… சிலர் பல மொழிகளில் பேசுவதும்… இந்த ஆவிகளின் தொடர் தான்.

மாந்திரீகனால் வசப்படுத்தப்பட்ட ஆவிகள் அவன் சொல்படி செயல்படுகின்றன. இந்த ஆவிகளுக்கு விமோசனம் இல்லையா…? என்ற வினா எழும்பலாம்.

எல்லாமே ஆவி தான். மாந்திரீகனின் வசத்தில் சிக்குண்டு தன் நிலை உணராமல் செயல்பட்ட ஆவிகளுக்கும் உணர்வால் தன் நிலை பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

சித்தர்களினால் அமைக்கப்பட்ட சில கோவில்களில் உடலுடன் கூடிய ஜீவ சக்தி கொண்ட “பல சித்தர்கள்” உள்ளார்கள்.
1.அவர்கள் உடலில் ஏற்றிக் கொண்ட சக்தி வாய்ந்த நுண்ணிய மின் காந்த ஈர்ப்பு ஒளியினால் இன்றும் சித்தாகி
2.உடலின் உணர்வு கொண்டு கோவில்களில் அவர்களுக்கென்று சமாதி குகை அமைத்திருகின்றனர்.
3.நல் நிலை பெறவேண்டும் என்ற உணர்வு கொண்டுள்ள மாந்திரீகர் வசத்திலிருந்த ஆவிகளானாலும் சரி…
4.கொடூர வேட்கையில் ஜீவன் பிரிந்த ஆத்மாவாக இருந்தாலும் சரி…
5.ஜீவ சக்தி கொண்ட சித்தனிடம் தன் உணர்வின் எண்ணத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு – அவர்களின் ஆசி கிடைத்தால்
6.சித்தர்களின் ஜீவ உடல் ஈர்ப்பில் சென்று தன் உணர்வு ஈர்ப்பை மீண்டும் “நல் உணர்வு கொண்ட மனித இன வளர்ச்சியில் வரலாம்…”

துவாரகா யுகத்தில் கண்ணன் பிறக்கின்றான் – கண்கள் தோன்றுகிறது

பார்க்க வேண்டும்… பார்க்க வேண்டும்… என்று பல சரீரங்களில் எடுத்துக் கொண்ட உணர்வுகள் தான்
1.துவாரகா – உடலுக்குள் ஒளிக்கற்றைகள் பெருகி
2.சிறுகச் சிறுக மின் அணுவாக மாறி
3.அதன் உணர்வுகள் அணுக்களாகிக் கற்களாக மாறுகின்றது.

கற்களாகி உறையும் தன்மை வரும் போது “கருவிழி” என்ற உணர்வுகள் அது அணுத் தன்மை அடைந்து நரம்பு மண்டலத்தின் வழி கூடி ஒளிப்படலமாகப் பார்க்கும் தன்மை வருகின்றது.

ஆனால் இந்த ஒளிப் பிளம்பு கருவிழி மறைந்து விட்டால் ஒளிப்படலம் தெரியவே தெரியாது.

ஆனால் பார்க்கும் சக்தியாக அந்த அணுக் கருக்கள் எப்படி உருவானது..? கண்கள் எப்படி உருவானது..?

1.வாசு தேவன் நாம் சுவாசிப்பதை உருவாக்கக் கூடியவன் உயிர்.
2.தேவகி… நாம் பார்க்க வேண்டும் என்ற தேவைக்கு வரும் போது அது வருகிறது.

வாசுதேவனுக்கும் தேவகிக்கும் சிறைச்சாலைக்குள் பிறந்தான் கண்ணன் (கண்கள்) என்று நம் கண்கள் எப்படி உருவானது…? என்று இதைத்தான் நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகிறது.

அதே சமயத்தில் மனித உடல் பெற்ற பின் ஒவ்வொரு நாளும் நாளை என்ன செய்வது…? என்று கற்பனை செய்கின்றோம். அதன் உணர்வின் தன்மை வடிவமைக்கின்றோம். அந்த வடிவமைப்பின் தன்மை தனக்குள் பதிவாகின்றது.

ஆக துவாரகா…! அந்த உணர்ச்சியின் தன்மை என்ன செய்கிறது…?

1.புறத்தால் கண்களானாலும்… அகத்திற்குள் உணர்வின் தன்மை முதலில் படமாக்குகிறது (நாம் எண்ணிப் பார்க்கும் நிலைகள்)
2.படமாக்கிய பின் புறத்தின் தன்மை கொண்டு நாம் எழுதுகின்றோம்.
3.இந்த உடலுக்குள் பதிவாகவில்லை என்றால் எதையும் எழுதவே முடியாது.

ஆகவே உணர்வின் தன்மை பதிவாகும் போது பதிவின் நினைவுகளை நாம் நினைவாக்குகின்றோம். துவாரகா – இந்த உடலுக்குள் சிந்தனை செய்து அந்த உணர்வுகளை எடுத்துத் தான் அடுத்து நாம் செயல்படுத்த வேண்டும்.

இது எல்லாம் நம் வாழ்க்கையில் எது எப்படி இயக்குகிறது என்ற நிலையைத் தெரிந்து கொள்வதற்குத்தான் இதைக் கொடுக்கின்றோம். ஆகவே இதன் உணர்ச்சிகளை நாம் வடிவமைத்து அப்புறம் என்ன செய்கிறோம்…?

புறத்தால் எழுதப்படும் போது அதிலே குறை என்று வரும் போது திருத்துகின்றோம். உள்ளுக்குள் மனதானாலும் பதிவான பின் அதை எழுத்திலே கொண்டு வருகின்றோம். எழுத்து என்று வரும் போது தவறு வந்தால் திருத்திப் பழக வேண்டும்.

இதைப் போல் தான் துவாரகா யுகத்தில் தீமைகளிலிருந்து மீண்டிடும் சக்தியாகத் தன்னுடைய நிலைகள் வருகிறது… கண்களாகின்றது. (சிறைச்சாலைக்குள் இருக்கும் தன் அன்னை தந்தையரைத் தவறிலிருந்து மீட்கக் கண்கள் வருகிறது)

ஒரு படத்தை (சித்திரம்) பார்க்கின்றோம்… பிழை என்ற நிலை வருகிறது. ஒருவன் தவறு செய்கிறான் என்ற நிலைகளில் கண்கள் அதைப் பார்க்கின்றது. ஆனால் அவனின் அந்தத் தவறுகள் நமக்குள் பதிவாகக் கூடாது.

தவறு செய்பவன் உடல் கிரேதா. அவன் செய்யும் தவறை நாம் நுகரும் போது அந்தத் தீமை செய்யும் உணர்வு திரேதா யுகத்தில் நம் உடலுக்குள் செல்கிறது.

அப்போது அந்தந்த உணர்வின் உணர்ச்சிக்கொப்ப வைரஸ் (கிருமி) என்று சொல்கிறோமே அத்தகைய அணுக்கள் உருவாகின்றது.

அந்த அணுக்களின் உணர்வுக்கொப்ப அந்த உணர்ச்சியின் எண்ணங்கள் வருகிறது. அதன் மலத்தின் தன்மை கொண்டு இரத்தத்தில் வருகின்றது. தீமையின் விளைவாக நோயாகிறது.

ஆனால் அதை மாற்றி அமைக்கும் சக்தியாக அருள் மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து நம் இரத்தத்திலே கலக்கப்படும் போது நம் உடலில் உள்ள உறுப்புகளை அது சீராக்குகிறது. அப்போது அந்த ஞானிகளின் உணர்ச்சியின் எண்ணங்கள் நமக்குள் வரும்.

1.தீமை செய்வோன் அவன் திருந்தி வாழ வேண்டும்
2.தெளிந்து வாழ வேண்டும்
3.தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும்
4.அமைதி பெற வேண்டும் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று எண்ணி
5.இதன் உணர்வைக் கொண்டு நாம் தெளிவாக்க வேண்டும்.

இதை நீங்கள் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

ஆகவே கிரேதா திரேதா துவாரகா என்ற நிலையில் நம் உடலுக்குள் நடக்கும் ஒவ்வொரு நிலையையும் வேதங்களில் தெளிவாகக் கூறப்படுகின்றது. அதை நாம் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.

மனிதனின் சக்திகளை வெளிப்படுத்தச் செய்யும் ஒரு முக்கியமான அங்கம் தான் “கை” – ஈஸ்வரபட்டர்

நாசி சுவாசிக்கின்றது… கண் பார்க்கின்றது…!
1.கண் பார்க்கவும் செவி கேட்கவும்… வாயில் உமிழ் நீர் சுரக்கவும்…
2.உடலில் எல்லா நரம்பும்… அணுக்கள் துடிக்கவும் உணர்வுகள் உந்தவும்
3.எண்ண ஓட்ட நிலைகள் சர்வ சதா காலத்திலும் சுழன்றே
4.ஆத்ம பிம்பமுடன் ஜீவ உயிர் வாழுகின்றது.
5.உறக்கத்திலும் உணர்வுள்ளவனுக்கு எண்ணமுண்டு.

இவ்வெண்ணத்தின் ஓட்டம் எப்படி… எப்பாதையில் ஓடுகின்றதோ… அந்தப் பாதையின் உணர்வுடன் மீண்டும் மோதி அவ்வுணர்வின் சுவாசம் எடுத்து எண்ண ஓட்டத்தின் வழிப்படிச் செயலாக்க அங்க அவயங்களில் எச்சக்தியையும் செயல்படுத்திக் காட்டிடக் கையின் நிலை இல்லாவிட்டால் செயல் ரூபம் இந்த உலகில் எதுவுமே இல்லை.

செயலை வெளிப்படுத்தும் அவயம் தான் “கை…”

1.கையின் ஈர்ப்பிலே பிம்பத்தின் (உடலின்) சக்தி அனைத்தும் வெளிப்படுகிறது.
2.மற்ற அவயங்களின் சக்தியை வெளிப்படுத்துகின்றது.
3.ஞானத்தை உணர்த்துவதும் இக்கை தான்.

பலவாக உள்ள ஒன்றான பிம்ப உடலை… செயலை… எப்படி இந்தக் கை வளர்க்கின்றதோ அதைப் போன்று தான் பலவாக உள்ள உலக வாழ்க்கையில்… பக்தி கொண்டு தெய்வ நம்பிக்கையை வழி காட்டினான் நம் சித்தன்.

ஆத்ம பிம்ப மனிதச் சக்திக்கே செயலாக்கும் அங்கமாகக் கையைக் கொண்டு தான் செயல்முறை வெளிப்படுகிறது.

இந்த உடல் பிம்ப ஜீவன் பிரிந்த பிறகும் மீண்டும் மனிதக் கரு வளர்ச்சியில் வரும் சிசுக்கள் பிறந்து சில மாதங்கள் கருவின் வளர்ப்பிலேயே அவயங்களின் முக்கியமான கையை மூடிக் கொண்டே தான் பிறக்கும்.
1.கையை மூடிக் கொண்டு சுவாசம் எடுக்கும் பொழுது
2.உடலின் சக்திகள் விரயப்படாது.

மனித பிம்ப செயலை உணர்த்த வல்ல இக்கையின் ஈர்ப்பு குண அமிலம் மாறுபடாத ஈர்ப்புடனே தான் சிசு உற்பத்தியாகின்றது.

பிறந்த குழந்தையின் வளர்ச்சிக்கு கையின் அவயங்கள் செயல்படும் முறை கொண்டு தான் அக்குழந்தை வளரும் முறையை அறியலாம். பிறந்ததும் மற்ற அவயங்களின் உணர்வை அக்குழந்தை கையை ஆட்டித் தான் வெளிப்படுத்துகின்றது. சில நாட்களுக்குப் பின் காலை ஆட்டும்.

பிறந்த குழந்தைகள் சில பிறந்தவுடனே கையை ஆட்டிக் கொண்டிருக்கும். அக்கையை ஆட்டும் குழந்தையின் ஞானமும் அக்கை ஆட்டும் முறை கொண்டு ஞானத்தின் நிலையும் அறியலாம்.

மனிதனின் ஞானத்தைச் செயலாக்கும் கை என்ற உறுப்பு மனிதனுக்கு இல்லா விட்டால் மிருக நிலைக்கும் மனித நிலைக்கும் மாறுபாடில்லை.

மனிதனின் ஞானத்தை வெளிப்படுத்துவது கை. ஞான நல்லறிவு குறைந்த உடலை விட்டுச் சென்ற ஆத்மாக்களுக்கு அவ்வாத்மா மற்ற ஈர்ப்பலையில் சென்று மனிதக் கருவிற்கு வர முடியாத நிலை ஏற்படுகின்றது.

இன்று இந்தக் கலியின் மாற்ற காலத்தில் மனிதனின் ஞானம் குறைவுபட்டு கல்கியுக வளர்ச்சிக்கு ஞானத்தின் குறைவு கொண்ட மனித அமில குண பிம்ப உடல்கள் பெறும் ஆத்மாக்களுக்கு.. மீண்டும் இன்றுள்ள அங்க அவயப் பொலிவு இழந்தே… மிகவும் குறுகிய உடல் அமைப்பும் குரங்கினத்தின் அவயங்களை ஒத்த கை கால்களின் வளர்ச்சி பிம்பம் தான் ஏற்படும்.

மனிதர்களிலேயே இன்று சிலருக்கு அமில ஈர்ப்பு வளர்ச்சி அமையப்படாமல் கை கால்கள் சூப்பிய நிலையில் குறுகிய உடலமைப்பு கொண்டவர்களைப் பார்க்கின்றோம்.

மிகவும் அல்லல்பட்டு துன்புற்று ஜீவிதத்திற்கே கஷ்டப்படும் ஆத்மாக்களின் தாய்மார்கள் சிலருக்கு.. சிலருக்கென்ன…!
1.இந்நிலையில் உள்ள பல தாய்மார்களின் குழந்தைகள் இப்படித்தான் இன்றும் பிறக்கின்றன.
2.இதன் தொடர்ச்சி குண குழந்தைகள் தான் வரப்போகும் ஆண்டுகளில் அதிகமாகப் பிறக்கப் போகின்றன.

ஏனென்றால் எண்ணத்தில் வளர்ச்சி ஞானம் அற்று இம்மனித பிம்ப வாழ்க்கையில் அல்லலுறும் ஆத்மாக்கள் மலிந்து விட்டன. மனிதனான அமிலத்தை அழித்தவனே மனிதன் தான்.

ஞானமற்ற வாழ்க்கையைச் சலிப்புடனும் சங்கடமுடனும் ஏக்கமுடன் ஏங்கி வாழும் வாழ்க்கை முறை மாற வேண்டும்.

ஆண்டவனிடம் ஏங்கிக் கேட்கின்றான் மனிதன். ஏக்கத்தில் வளரும் சலிப்பு சங்கட குண மனிதனுக்கு ஞானத்தால் வெல்லும் நிலையற்றதாகி விடுகிறது.

இத்தகைய உணர்வுச் சுற்றல் குணங்கள் நிறைந்துள்ள இன்றைய இக்கலி மனிதனின் வளர்ச்சி இதே சுழற்சி ஓட்டத்தின் ஈர்ப்பு குண அமிலம் அவனுக்குள் கூடிக் கூடி… இதன் செயலில்தான் அடுத்த கல்கியுக இனக்கருவும் வளருமப்பா…!

வறுமையும் இன்னலும் அற்று மற்ற மேற்கத்திய தேசங்களிலுள்ள மனித ஆத்மாக்களில் பலரோ போதை நிலையின் அடிமையினால் எண்ண ஞானமற்ற நிலையில் வாழ்கின்றனர். அவர்களின் பிம்ப உடல் ஆத்மா பிரிந்து சென்ற பின் அந்நிலைக்கொப்ப வளர்ச்சி அமில குண கரு தோன்றி வரும்.

1.எண்ணத்தின் ஞானத்தை வெளிப்படுத்தும் சக்தி அவயமான கை தான்
2.மனித இனத்திற்கே மிகவும் முக்கியமானது… ஆனால்…
3.ஞானத்தின் வளர்ச்சி எடுக்காத பிறப்பற்ற உணர்வலையில் செல்லும் பொழுது
4.தான் பல ஜென்மங்களில் சேமித்த அமில குண சக்தியையே இழக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டு
5.மனிதக் கரு உருவ நிலை மாறு கொண்ட பிம்பத்திற்குச் சென்று
6.அங்க அவயங்களின் சக்தியை வெளிப்படுத்தும் செயலாக்கும் திறமையுடைய – “கை இல்லாமல் பிறப்பு வருகின்றது…!”

அதாவது “பிறப்பு…!” என்பது மற்ற ஜீவராசிகளின் “ஈர்ப்பலையின் பிறப்பு…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நாம் நல்ல சுத்தமான கையைக் கொண்டு அசுத்தமானப் பொருளை அப்புறப்படுத்துகின்றோம். அப்படி அப்புறப்படுத்தும்போது கையிலே அந்த அசுத்தம் ஒட்டிக் கொள்கின்றது. கையில் ஒட்டிக் கொண்டதைத் துடைக்க வேண்டுமல்லவா…?

சுத்தப்படுத்தாமல் அந்த அசுத்தமான கையுடனே உணவை உட்கொண்டால் என்னவாகும்…? நல்ல பொருளும் அசுத்தமாகும்… சுவையும் கெடும்.

இதைப் போலத்தான் இந்த வாழ்க்கையில் யாருக்கு எந்த நன்மை செய்தாலும் தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும்
1.அந்த அசுத்தத்தை நீக்க அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து, இதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்
2.இதை மறவாது செய்து பழக வேண்டும்.

பிறர் கஷ்டங்களோ துன்பங்களோ தவறுகளோ இதைப் பார்க்கப்படும்போது அறிகின்றோம். அடுத்த நிமிடம் அது நமக்குள் ஜீவனாகி வளரக்கூடாது.

1.நம் நல்ல குணங்கள் கொண்டு பார்க்கும்போதுதான் அதன் முகப்புகளிலே இது வட்டமிடத் தொடங்குகின்றது.
2.இந்த உணர்வைக் கவரும்போது தீமைகளைக் கவர்ந்துதான் அதைச் செயல்படும் தன்மை வரும்.
3.இது உள் நின்று அந்த அணுக்கள் வளர்ச்சி தன்மை வரும்.

இது உள் நின்று அந்த அணுக்கள் வளர்ச்சியாகி விட்டால் அந்தத் தீமையின் அணுவாகவே அது மாறிவிடும். நல்ல அணுவாக இருந்து தீமையின் அணுவாகி விட்டால் தனக்குள் இதனின் தன்மை நோயாக உருப்பெற்று விடுகின்றது.

இதை நாம் மாற்றுதல் வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை நம் இரத்தநாளங்களில் அதிக அளவில் ஜீவ அணுக்களாக உருப்பெறச் செய்ய வேண்டும்

 

உதாரணமாக கெமிக்கல் கலந்த நாடாவில் காந்தத்தின் தன்மை கொண்டு ஒலி அலைகளைப் பதிவு செய்கின்றோம். பாடல்களையும் பதிவாக்குகின்றோம்.

மீண்டும் வேறு ஒரு பட்டனைத் தட்டினால் காந்தப்புலனை ஈர்த்து நாம் எதைப் பாடிப் பதிவு செய்தோமோ அதன் உணர்வின் அலைகள் வருகின்றது.

இதைப் போன்ற உணர்வின் அலைகளை இயந்திரத்தின் துணை கொண்டு காற்றில் அலைகளாகப் பரப்புகின்றனர். இதனைச் சூரியனின் காந்தப்புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றிக் கொள்கின்றது.

அதனுடைய இயக்கத் தொடர் கொண்டு
1.ஒரு ஏரியலை வைத்துக் கவர்ந்து
2.டிரான்ஸிஸ்டருக்குள் செலுத்தி டிரான்ஸாக்சன் செய்து
3.ஒலி அலைகளை வடிகட்டி
4.உணர்வின் ஒலிகளைத் தனியாகப் பிரித்துக் கொடுக்கின்றது.

ரேடியோ மூலமாக இந்தச் சொற்களையோ அல்லது பாடல்களையோ நாம் கேட்கின்றோம்.

இது போன்றுதான் நமது உயிரின் காந்தப்புலனறிவு பிறருடைய நிலைகளை நுகரப்படும் பொழுது
1.இந்த உணர்வினை உயிர் அதனின் உணர்ச்சிகளை ஊட்டி
2.அதனின் உணர்வின் அறிவாக இயக்கவும்… அறியவும் செய்யச் செய்கின்றது.

ஆனால் அந்த உணர்வுகளை நாம் நுகர்ந்தால் உடலுக்குள் அதனின் அணுத்தன்மையாக மாற்றும் திறன் பெறுகின்றது.
1.அது கருவாக உருவாகி முட்டையாகி வெடித்து
2.அணுவின் தன்மை பெறும் நிலையாக
3.நம் இரத்தநாளங்களில் சேமித்து விடுகின்றது நமது உயிர்.

மனிதர்களான நாம் எதை நுகர்கின்றோமோ அது நமக்குள் இணைந்து அதன் வழி நம்மை எப்படி இயக்குகின்றது…? என்பதை அறியச் செய்தனர் மெய்ஞானிகள்.

1.மனிதர் தாம் தீமைகளிலிருந்து மீளும் மார்க்கமாக
2.தீமைகளை வென்றிடும் அருள் உணர்வுகளை நம் இரத்த நாளங்களிலே இணைக்கவும்
3.அருள் ஒளி பெற்று பிறவியில்லா நிலையைப் பெறச் செய்யவும்
4.மரணமில்லா பெருவாழ்வாக வாழச் செய்வதற்காகவும்
5.மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் வளர்க்கச் செய்வதற்கு
6.அருள் ஞானிகள் நமக்குத் தெளிவாகக் காண்பித்துள்ளார்கள்.

அருள் ஞானிகள் காண்பித்த அருள் ஞான உணர்வுகளைத் தம்முள் பதித்து அருள் ஞான உணர்வின் ஆற்றலலைத் தமக்குள் பெருக்கிக் கொண்டே வந்தால் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணையலாம்.

என்றும் பேரின்பப் பெரு வாழ்வாக… பேரானந்த நிலை பெற்று மகிழ்ந்து மகிழ்ந்து வாழ முடியும்.

“மனிதனின் எண்ண வலிமை” எப்படிப்பட்டது…? – ஈஸ்வரபட்டர்

 

காட்சி:-
வண்டியில் சக்கரம் சுழன்று… வண்டி ஓட அது உதவியாக வருகின்றது. ஆகவே வண்டி ஓட அந்தச் சக்கரம் தேவை தான். ஓடும் பொழுது அவ்வாச்சாணி முறிந்து சக்கரம் சுழன்று ஒரு பக்கம் உருண்டோடி விடுகின்றது… வண்டியின் குடை சாய்ந்து விடுகின்றது.

வண்டி ஓட அச்சாணி எப்படி முக்கியமோ அதைப் போன்று இந்த வாழ்க்கை என்ற வண்டி ஓடவும்… உடல் என்ற வண்டி ஓடவும்… அச்சாணி தேவை.

விளக்கம்:-
1.வாழ்க்கை வண்டிக்குப் “பொருளான அச்சாணி” வேண்டும்.
2.இந்த உடல் என்ற வண்டிக்கு இவ்வெண்ண “சுவாச அச்சாணி” வேண்டும்.
3.எண்ணத்தின் ஈர்ப்பில் நாம் எடுக்கும் செயலைக் கொண்டு தான் இப்பிம்ப உடலின் ஆரோக்கியத் தன்மையே உள்ளது.

“எண்ணத்தால் தான் அனைத்தும் நடக்கின்றது…” என்று உணர்த்துகின்றேன். ஆனால் இந்த உடலின் உணர்வு நிலை எதன் தன்மை கொண்டது…? என்று கேட்பீர்கள்.

உடலின் உணர்வினால் உணவையும் பசியையும் தாகத்தையும் உறக்கத்தையும் உடல் இச்சையையும் நாம் எண்ணத்தில் எடுப்பதற்கு முதலிலேயே “உணர்வின் உந்தலினால்…” நம் எண்ணத்தால் கொண்ட சுவாசத்தில் உணர்கின்றோம்.

இந்த உணர்வின் நிலை எப்படி ஏற்பட்டது…? எண்ணத்தால் இந்த உணர்வின் அலையை மாற்றி அமைக்க முடியும்.

ஆரம்பக் காலத்தில் இரண்டு வகை குண அமிலச் சேர்க்கையின் ஈர்ப்பில் ஜீவ சக்தி தோன்றியவுடன் அவ்வமில குணம் திடப்பட்டு வளர்ச்சியின் ஜீவ சக்தி உயிர் சக்தி ஏற்படுகிறது.

ஏற்பட்டவுடன் அதன் வளர்ச்சிக்குகந்த ஈர்ப்பின் உணர்வுக்கு மேன்மேலும் தன் உணவைச் சேமித்து… அதன் வட்ட வளர்ச்சி கூடக் கூட உணர்வின் தன்மையும்… உணர்வுக்குகந்த ஈர்ப்பு ஆகாரத்தையும்… சேமித்த இந்த உணர்விலிருந்து தான்… “உருவின் நிலையும் பெறுகின்றது ஜீவ ஆத்மாக்கள்…”

ஆரம்பக் காலத்தின் அமில குணச் சேர்க்கை என்று உணர்த்தியது இந்த உடல் பிம்பத்தைப் பெறத் தக்க அமில குணச் சேர்க்கைக் காலத்தைத்தான் குறிப்பிட்டேன்.

இப்படி இதன் வளர்ச்சி நிலை கூடிக் கூடிப் பல காலமாகச் சேமித்த இந்த உணர்வலையின் வழி சக்தியினால்தான் “எண்ண சக்தியே வலுப் பெற்று” ஜீவ ஆத்மாக்கள் வளர்ந்துள்ளன.

பல பல கோடி ஆண்டுகள் இந்த உணர்வின் அடிப்படை குண அமில ஈர்ப்பை வளர்த்துக் கொண்டு எண்ணியதைச் செயலாக்கும் மனித உரு பிம்ப ஜீவன்களுக்குத் தன் உணர்வின் அலையின் சக்தியும் இந்த எண்ண வளர்ச்சி ஏற்பட்ட ஜீவ உடல் கொண்ட பிறகு…
1.இயற்கையில் உடலில் தன் உணர்வை வெளிப்படுத்தும் செயல் அமிலங்களின் நிலை உள்ளன.
2.எண்ண வளர்ச்சி நிலை கொண்ட மனிதனால் மட்டும்
3.தன் எண்ணத்தால் உடலில் ஏற்படும் இயற்கை உணர்வு தன்மையையும் மாற்றி அமைக்க முடியும்.
4.இவ்வெண்ணத்தை நாம் செலுத்தும் நிலைக்குகந்த செயலினால்
5.இவ்வுணர்வலையையும் மாற்றி அமைக்க முடியும்.
6.இவ்வுடலுக்கு உணவும் தூக்கமும் இச்சையும் தேவையில்லையா…?
7.இதனை மாற்றியமைப்பதனால் உடல் பிம்ப நிலை எப்படி நிலைத்திருக்கும்..?

உடலுக்குத் தேவையான உணவும் உறக்கமும் வேண்டியது தான்.

ஆனால் இவ்வெண்ணத்தின் செயலினால் அதன் பால் அந்த உணர்வின் தன்மைக்குகந்த வழித் தொடரிலேயே நம் எண்ணத்தைச் செலுத்தி அதன் செயலுக்கே நாம் சென்றுவிட்டோம் என்றால் அதே உணர்வின் எண்ண ஈர்ப்பின் லயிப்பில் தான் நம் ஜீவித காலம் அனைத்தும் சென்றுவிடும்.

பலதரப்பட்ட குணமும் பலதரப்பட்ட சுவையும் விரும்பக்கூடிய ஆத்மாக்கள் உள்ளன. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகை சுவையும் உறங்கும் தன்மையும் இருந்திடும்.

அவனது குண நிலையும் சுவை நிலையும் அவனால் இந்த வாழ்க்கையில் மட்டும் எடுத்ததல்ல. ஆரம்ப அமில குண வளர்ச்சி காலத்திலேயே அவன் ஈர்த்து உணர்ந்த எண்ணத்தின் தொடர்பு தான் ஒவ்வொரு மனிதனுக்கும் இன்று வரை உள்ளது. உணர்ச்சியிலும் அவனது உடலின் இச்சையின் நிலையும் இவ்வாரம்பக் காலத்தின் வளர்ச்சியில் வந்தது தான்.

பசியும் தூக்கமும் ஆரம்பக் காலத்தில் குழந்தைப் பிராயத்திலிருந்தே அறிந்து உணர முடிகின்றது. ஆனால் வளர்ந்த பிறகு தான் உடல் இச்சையின் உணர்வு ஏற்படுகின்றது.

தாவரங்கள் அதன் வளர்ச்சியின் அமில குண சேர்க்கையின் சக்தி படிவத்தினால் அதன் பலனை வளர்ந்த பிறகு பூவாகி காயாகிக் கனியாகித் தருகின்றன.

அதைப் போன்று மனித வளர்ச்சியிலும் இவ்வளர்ச்சி முற்றலின் அமிலச் சேர்க்கையின் உணர்வின் நிலை குறிப்பிட்ட வயது வரம்பு சேர்க்கைக்குப் பிறகு வெளிப்படுகின்றது.

இந்த உணர்வின் வழித் தொடரினால் ஏற்படும் இந்நிலைகளை எண்ணத்தின் நிலைக்கொப்ப எப்படி ஒவ்வொரு மனிதனும் வழிப்படுத்தி வாழுகின்றான்…?

1.இந்த உடலின் தேவையான பசிக்கும் தூக்கத்திற்கும் இச்சைக்கும்
2.இவ்வெண்ணப் பழக்கத்தைச் செலுத்திய முறைப்படி அதன் தேவைகளை எல்லாம்
3.இவ்வெண்ணத்தின் பிடியில் அளவுடன் ஒரு நிலைப்படுத்த முடியும்.

தன் எண்ணத்தைக் கொண்டு இவ்வுணர்வின் இச்சைகளை எல்லாம் ஒரு நிலையில்… இவ்வுடலின் பிம்பத்திற்குத் தேவையான அளவுடன் செயல்படுத்தி வாழ்ந்து வரும் மனிதனின் வாழ்க்கை… அழகுடனும்… அமைதியுடனும்… மனிதன் மனிதனாக இருக்கவல்ல தன்மையுடனும் இருக்கும்.

இறந்தவர்களுக்குச் சாங்கியம் எப்படிச் செய்து கொண்டிருக்கின்றோம்…? அதனின் விளைவு என்ன…?

 

அம்மா அப்பா இறந்தால்… சுட்ட சாம்பலை எடுத்துக் கொண்டு போய்த் தண்ணீரில் கரைத்து… அதற்காக வேண்டி சில மந்திர ஒலிகளைச் சொல்லி சாங்கியத்தைச் செய்தால்… “மோட்சத்திற்கு அனுப்பி விடலாம்” என்று செய்கிறார்கள்.

காரியம் எல்லாம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடனே… எண்ணெய் தேய்த்துத் தலை முழுகிவிட்டு… மாவிளக்கைச் செய்து நெய் தீபம் இட்டு… அணையாது அதை விநாயகர் கோவிலில் கொண்டு போய் அர்ச்சனை செய்தால் மோட்சத்திற்குச் சென்றுவிடுகிறார்கள் என்கிறார்கள்.

மோட்சம் எங்கே என்று தெரியாதபடி மோட்சத்திற்கு அனுப்புகிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் மோட்சம் எங்கே இருக்கிறது…? அந்தச் சொர்க்கம் எங்கே இருக்கிறது…?

அப்பா அம்மாவின் உணர்வுகள் பூராம் பிள்ளைகள் உடலில் இருக்கிறது. வீட்டிலே அல்லது ரோட்டிலே நடந்து செல்வார்கள்…
1.பாதம் பட்ட மண் இருக்கும்… ஆபீஸில் வேலை செய்யும் இடத்திலும் அது இருக்கும்.
2.இவர்கள் அங்கே வேலை செய்யும் போது எப்பொழுது இவர்கள் தலை முடி கீழே உதிரும்…? என்று பார்ப்பார்கள்.
3.தலை முடி உதிர்ந்ததை எடுத்துக் கொள்வார்கள்
4.உடுத்திய சேலையில் இரண்டு மூன்று நூலை எடுத்துக் கொள்வார்கள்.
5.அவர்கள் நடந்து சென்ற பாதையில் வீட்டு வாசல் மண்ணைக் கூட்டி எடுத்துக் கொள்வார்கள்.

ஒருவருக்கொருவர் ஆகவில்லை என்றால் செய்வினை தோஷம் செய்பவர்கள் இந்த வேலையைச் செய்வார்கள்.

இதை எல்லாம் கொண்டு போய் அதற்குண்டான மந்திரம் தந்திரம் செய்பவர்களிடம் கொடுப்பார்கள். அதை வைத்து என்ன செய்வார்கள்…? அம்மா அப்பாவை (ஆன்மாகளை) அவர்கள் கூப்பிட்டு இழுத்துக் கொள்வார்கள்.

எப்படி…?

அமாவாசை அன்று சாப்பாட்டைப் போட்டு எங்கள் அப்பா அம்மாவிற்காக வேண்டி “நினைவு நாள் இருக்கிறோம்” என்று இங்கே கொண்டாடுவார்கள்.

1.கடவுள் பக்தியிலே எந்தெந்த மந்திரத்தைச் சொல்லி உச்சரித்து
2.நம் உடலுக்குள் வாழ் நாள் முழுவதும் அந்த மந்திரங்களை உருவாக்கியிருக்கின்றோமோ
3.எந்தத் தெய்வத்தின் மீது பக்தியை அதிகமாகச் செலுத்தியிருக்கின்றோமோ
4.அந்த உணர்வுகள் இறந்தவர் ஆன்மாவிலே பதிவாகியிருக்கும்.

மந்திரத்தைச் சொன்னால் கடவுள் காப்பாற்றுவார்…! என்று எண்ணித் தான் அதைப் பதிவாக்கியிருப்போம். இந்த உணர்வுகள் இங்கே இருக்கும்.

உடலை விட்டுப் போன பிற்பாடு நாம் இங்கே இறந்தவர்களுக்குச் சாங்கியம் செய்கிறோம். அவர்கள் உடலில் விளைந்த உணர்வுகள் கொண்டு தான் நாம் மனித உடலைப் பெற்றிருக்கின்றோம்.

இந்த உணர்வின் தன்மை எல்லாம் நம் பாதம் பட்ட மண்ணிலே பதிந்திருக்கும். அமாவாசை அன்று இங்கே சாப்பாட்டைப் போட்டு அவர்களை நினைவுக்குக் கொண்டு கூப்பிடுவோம். நம் ஈர்ப்புக்கு அந்த அலைகள் வரும்.

அங்கே மந்திரம் செய்பவர்கள் பாத மண்ணை வைத்து மந்திரத்தைச் சொன்னால்
1.அபபா அம்மாவின் ஆன்மா அவர்கள் கையில் குவியும்.
2.குவிந்த பின்னாடி வீட்டில் அம்மா அப்பா என்னென்ன செய்தார்கள்…?
3.எந்தெந்த வகையில் அவர்கள் சாபங்களில் சிக்கினார்கள்…?
4.எந்த நோயினால் செத்தார்கள்…? என்ற இந்த உணர்வெல்லாம் அங்கே அவர்களுக்குக் கிடைக்கும்.

இறந்த உடலில் இருந்தது எல்லாவற்றையும் அவர்கள் அறிந்து கொள்வார்கள். இறந்து 48 நாளுக்குள் இந்த மாதிரிச் செய்தால் அவர்கள் கைவல்யம் ஆகின்றது. அதற்குப் பின் அந்த ஆன்மாக்களை ஆட்டிப் படைக்கிற ஆள் தான் அவர்கள்…!

1.அம்மாவையும் அப்பாவையும் மோட்சத்திற்கு அனுப்பிவிட்டோம்…! என்று நாம் நினைக்க வேண்டியது தான்.
2.ஆனால் இங்கே மோட்சம் என்ற நிலை இப்படித்தான் இருக்கும்.

இங்கே மட்டுமல்ல… இந்த உலகில் மதங்களால் உருவாக்கப்பட்ட அனைத்திலுமே இந்த நிலை தான். அரசர்கள் அன்று உருவாக்கிய இது போன்ற தீமையான வழிகள் தான் இன்றும் வழி நடந்து கொண்டுள்ளது.

விநாயகர் தத்துவத்தில் காட்டிபடி விண்ணுலக ஆற்றலை எடுத்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களின் முகப்பிலே சப்தரிஷி மண்டல உணர்வை இணைத்து…
1.உடலுடன் இருப்பவர்கள் உந்தித் தள்ளினால் அவர்களை அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்யலாம்.
2.மீண்டும் பிறவி என்ற நிலைக்கு வராதபடி பேரின்பப் பெருவாழ்வு வாழச் செய்யலாம்.

அவர்கள் முதலிலே விண் செலுத்தினால் நாமும் அடுத்து அதே வழியில் விண் செல்ல முடியும். ஞானிகள் காட்டிய விண் செல்லும் மார்க்கம் இது தான்.

மனிதன் ஆண்டவனாக வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

திடப்பொருளைக் கரையச் செய்வதும் இந்தக் காற்று தான். ஆவி அமிலத்தைத் திடமாக்குவதும் இந்தக் காற்று தான். இந்தக் காற்றின் மோதலில் வரும் “ஒளியும்… நீரும் தான்…” நம் பூமியின் ஜீவன்.

காற்றடைத்த பந்தில் சிறு துவாரம் ஏற்பட்டு விட்டால் அதன் செயலில்லை. அதே போல்
1.இக்காற்றின் அமில ஈர்ப்பு பிம்ப ஜீவனில் ஆவி பிரிந்து விட்டால்
2.இந்த உடல் என்ற பிம்பத்திற்கும் ஜீவனில்லை.
3.இக்காற்று குண அமிலத்தில் தான் இந்த உலக சக்தியே நிறைந்துள்ளது.

காற்று மண்டலத்திற்கு மேல் உள்ள பால்வெளி மண்டலத்தில் அமில குணங்கள் நிறைந்திருந்தாலும்… நம் பூமியின் காற்று மண்டல ஜீவ அமில குண நிலை அங்கு இல்லை.

நம் பூமியின் சுழற்சி ஓட்டத்தினால் பூமியே தான் சுழற்சி ஓட்டத்தின் வேகத்தினால் காற்றையும்… ஒளியையும்… நீரையும் வளர்த்து… தனக்கு உணவாக எடுத்து மீண்டும் கழித்து… மீண்டும் மீண்டும் இதே வளர்ச்சி கதியில் ஒரு நிலை சுழற்சி ஓட்ட நிலையினால் கோடி கோடி ஆண்டுகளாக வாழ்கிறது.

பூமியின் மாற்றக் காலம் ஏற்படுவது எப்பொழுது…?

பூமி ஈர்த்து வெளிப்படுத்திய அமில ஒளி ஜீவ சக்தியினால் வளர்க்கப்பட்ட “மனிதனாலே தான்” பூமியின் நிலை மாறப் போகின்றது.

பூமியின் எண்ணச் சுவாச வளர்ச்சி நிலையின் பெருக்கத்தினால் பூமியின் நிலையே இப்படி உள்ள பொழுது அப்பூமியிலேயே பிறந்து வளர்ந்து வாழும் மனிதனின் நிலையில் இவ்வெண்ண நிலை உயர்வதுவும் தாழ்வதுவும் அவரவர்கள் எடுக்கும் எண்ண நிலைக்கொப்பத்தான்…!

பூமியின் ஈர்ப்பில் பலவாக உள்ள சக்தி நிலையில் பலதரப்பட்ட பல கோடி அமிலங்கள் நிறைந்திருந்தாலும் நம் பூமியின் படைப்பிலுள்ள அமில குணங்களின் ஆவிக்காற்று நம் சுவாசத்திற்கு அப்படியே வந்து மோதுவதில்லை.

ஒவ்வொரு நொடிக்கும் எண்ணமில்லாத மனிதன் எவருமில்லை. எண்ணத்தில் எடுப்பது தான் இச்சுவாசம்.
1.இச்சுவாசத்தில் எடுக்கும் நிலை கொண்ட மனிதனுக்கு…
2.“மனிதனின் எண்ணத்துடன் நிறைந்துள்ள குண அமில சுவாசம் தான்” அவன் ஈர்ப்புக்கு வருகின்றது.

1.மனிதன் தன் எண்ணத்தை “ஒரு நிலைப்படுத்தி” எடுக்கும் சுவாசத்தினால்
2.எத்தனை காலங்கள் ஆனாலும் “குறைவின்றி நல்வழி பெற்று”
3.பலவாக நிறைந்துள்ள அமில குணத்தைத் “தன் எண்ண மேம்பாட்டினால்”
4.ஒன்றின்பால் “நல் ஞானத்திற்குகந்த” செயலாக்கும் அமிலத்தின் வளர்ச்சியின் குணத்தைக் கொண்ட சுவாசத்தை எடுத்து
5.எடுக்கக்கூடிய காந்த மின் அலையின் ஈர்ப்பை “நல்ல சக்தியுடன்” மோதச் செய்தோமானால்
6.அச்சக்தியின் ஒளி ஈர்ப்பை “நுண்ணிய காந்த ஈர்ப்புத் தொடரினால்” நம் உடல் முழுவதுக்கும் பரவச் செய்து
7.இந்த உடலுக்குள் ஏற்கனவே பலவாக நிறைந்துள்ள “பல குண நிலை கொண்ட அமிலங்களையும்”
8.இவ்ஈர்ப்பின் நுண்ணிய அலையினால் “ஒரு நிலையான குண அமிலத்தை” இந்த உடல் முழுமைக்குமே நாம் பரவ விட்டால்
9.மனித வாழ்க்கையில் மோதிடும் பல நிலை கொண்ட குண நிலைக்கொத்த செயல் எதுவும் “நம் நிலையை மாற்றிட முடியாது…!”

அதே சமயத்தில் பல எண்ணச் செயல்கள் மோதினாலும் நாம் எடுக்கும் சுவாசத்தால்… அதன் குண நல ஈர்ப்பில் நாம் சிக்கிடாமல்…
1.ஏற்கனவே இந்த உடலில் நாம் நிறைத்துக் கொண்டுள்ள
2.ஒரு நிலையான அமில குணத்தின் நுண்ணிய அலையின் ஈர்ப்பு வளர்ச்சியில் பெற்ற
3.ஒளிச் சக்தியின் செயலே நமக்குள் நிறைந்து நிற்கும்.

மனித ஆத்மாவின் இவ்வெண்ண சுவாச சக்தியில் பெறத்தக்க நிலையினால் வளர்க்கும் நிலை உண்டு. தாவரங்களுக்கு அந்த நிலையில்லை.

ஒரு நிலையான எண்ண ஈர்ப்பில் தாவரம் வளர்ந்து வாழ்ந்தாலும் அதன் பலன் வெளிப்பட்ட பிறகு ஒவ்வொன்றின் வளர்ச்சி நிலைக்கொத்த காலக்கெடுவில் தான் தாவரங்களின் நிலை உண்டு.

1.எண்ணத்தின் மேம்பாட்டின் வழி நிலை கொண்ட மனிதன் தான்
2.தன் எண்ணத்தில் பலவாகப் படைக்கவல்ல ஆண்டவனின் ஆண்டவனாக முடியும்.

ஆனால் இந்த எண்ண மேம்பாட்டின் உணர்வு அறியாத இன்றைய மனிதன் தான் உழன்று கொண்டே… உருவை மாற்றி… “உருச்சிதைந்து வாழ்கின்றான்….!”

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

அநேகமாக இந்தத் தியானத்திலே கலந்து கொண்டவர்கள் அனைவருக்குமே இதில் யாரொருவர் எம்முடன் (ஞானகுரு) தொடர்பு கொண்டார்களோ அவர்களுக்கெல்லாம் காலை 4.30 மணியிலிருந்து 5.30க்குள் துருவ நட்சத்திரத்திலிருந்து துருவ மகரிஷி பெற்ற ஆற்றல்களைக் கிடைக்கச் செய்வதற்காக அந்த நேரத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

அந்த நேரத்தில் சிலருக்கு உணர்ச்சி வசப்படக்கூடிய நிலையில் அந்த முழிப்பும் வரும். புதுப் புது உணர்வுகள் தோன்றும். தூக்கம் விழிப்பு ஆகும்.

யாம் உபதேசித்த வழி கொண்டு அந்த முறைப்படி எண்ணி தியானமிருப்பவர்களுக்கும்… நல்ல வாக்குகளைப் பதிவாக்கி அந்த நினைவுடன் இருப்பவர்களுக்கும் இது கிடைக்கும்.

பல ஆயிரம் மைல்களுக்கு அந்தப் பக்கம் இராக்கெட்டில் பறக்கச் செய்து
1.அதில் ஒரு சிலிகனைப் பதிவு செய்து,
2.அதே உணர்வு கொண்ட கம்ப்யூட்டரின் துணை கொண்டு,
3.ஆண்டென்னா பவர் கொண்டு அங்கே இருக்கக்கூடிய அலைகளை இங்கிருந்தே இயக்குகின்றான்…
4.அங்கிருந்தும் இங்கே இயக்குகின்றான்… விஞ்ஞானி.

அதைப் போன்றுதான் நீங்கள் எந்த நல்லதைத் தேடி அந்த மெய் ஞானிகளின் ஆற்றல்மிக்க நிலைகளைப் பெற வேண்டும் என்று எண்ணி இப்பொழுது ஏங்குகின்றீர்களோ அந்த ஆற்றலை யாம் உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

பின் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலையும் துருவ மகரிஷியினுடைய உணர்வலைகளையும் எடுத்து அதை உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்காக வேண்டி யாம் தவமிருக்கின்றோம்.

பளிச்… பளிச்… என்று ஊசி குத்துவது போல் உடலில் வலி எதனால் வருகிறது…?

 

சாதாரணமாக ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தாலும் ஒரு தடவை கோபமாகப் பேசியிருப்போம். அந்த உணர்வு பட்டவுடனே பாவிப் பயல்… இப்படிப் பேசுகின்றானே…! என்று அந்த உணர்வுகள் அவரிடமிருந்து வெளிப்படும்…!

அப்போது
1.நாம் கேட்கும் போது நமக்குள் பதிவாகிறது… அணுவாகிறது.
2.எவ்வளவு வேதனைப்பட்டார்களோ அதனுடைய உணர்வின் அணுக்களை
3.அது தன் ஆகாரத்திற்காக எடுக்கப்படும் போது போது பளீர்… பளீர்… என்று நம் உடலில் மின்னும்.

நாம் நினைப்போம்… நாம் ஒன்றும் சொல்லவில்லையே. அவர்கள் தவறு செய்ததனால் தானே நாம் கோபித்தோம்…! என்போம்.

ஆனால் அதிலே உருவான அந்த வேதனையான உணர்வின் அணுக்கள் நமக்குள் இங்கே விளைந்த பின்
1.அந்த உணர்ச்சிகளைத் தூண்டி அது கிளர்ச்சிகளைச் செய்யும்.
2.அந்த நேரத்தில் பளீர்…ர்ர்.. என்று மின்னல் தாக்குகிற மாதிரி (ஊசி குத்துவது போல்) இருக்கும்.

காரணம் இந்த அணுவின் தனமை தனக்குள் ஆகாரத்திற்காகப் பளீர் என்று மின்னும். அதற்குப் பின்
1.நினைவு அந்த இடத்திற்கே வரும்.
2.நினைவு வரப்படும் போது உள்ளுக்குள் எடுத்து அந்த ஆகாரத்தை விஷத்தைப் பரப்பும்.

அதே போல் சந்தர்ப்பவசத்தால் நாம் அடிக்கடி வேதனைப்படுகின்றோம் என்றால் அந்த வேதனையின் அணுக்கள் டி.பி. நோயாக மாறுகிறது.

நல்ல உணர்வின் அணுக்களாக இருந்தால் அதனின் மலம் பட்டால் நம் எலும்புகள் சீராக இருக்கும். ஆனால் வேதனையால் உருவான அணுகக்ளின் மலம் பட்டால் எலும்புகளை அது அரிக்கத் தொடங்கும்.

நம் சுவாச நாளங்களில் இத்தகைய விஷமான அணுக்கள் பட்டால் நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட நுரையீரலை இது சாப்பிட ஆரம்பிக்கும். ஓட்டை ஓட்டையாக விழுந்துவிடும்.

இதைச் சாப்பிட ஆரம்பித்துவிட்டாலோ…
1.அதனுடைய கிளர்ச்சியைச் செய்த பின் அம்மம்மா…! என்போம்
2.அந்த வலி எடுக்கும் போது இப்படிக் கூடி
3.அந்த உணர்வைத் தூண்டி அது தன் சாப்பாடை எடுத்துக் கொள்ளும்.

அதாவது ஒரு பக்கத்தில் நம் உடலில் பளீர் என்று மின்னினால் அந்த உணர்வுக்காக அந்தக் கிளர்ச்சியைச் செய்கிறது என்று அர்த்தம்
1.கிளர்ச்சி செய்த பின் இந்த ஆன்மாவில் இழுக்கும்.
2.எந்த அணு கிளருகிறதோ அது தான் சாப்பாட்டுகளைக் கவரும்.
3.இது கிளர்ச்சிகளைத் தூண்டவில்லை என்றால் நமக்கு அந்த (வேதனை) நினைவு வராது.

ஆனால் கிளர்ச்சியைத் தூண்டும் போது கண்ணுக்கு நினைவு வரும்.
1.கண்ணில் உள்ள கருமணி இங்கே பதிவு செய்கிறது.
1.கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ “யாரைப் பார்த்து வேதனையைப் பதிவு செய்ததோ…”
3.அந்த மனித உடலிலிருந்து வந்ததை இது (மீண்டும்) எடுக்கும்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

நாம் ஒருவரைக் கோபித்துப் பேசினாலும் அல்லது ஒருவரைச் சாபமிட்டுப் பேசினாலும் அது வேறு.

ஆனால் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவரை நாம் இரக்க உணர்வுடன் பார்த்தாலும் அந்த உணர்வின் அணுக்கள் நமக்குள் வந்துவிட்டால் மேலே சொன்ன அதே கிளர்ச்சியைச் செய்யும்.

ஆக… நரக வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றான் என்ற நிலையில் அதை நாம் கண்ணுற்றுப் பார்க்கும் போது அதே உணர்வின் அணுக்கள் நமக்குள் விளையும்.
1.அப்பொழுது அதற்குச் சாப்பாடு வேண்டும்
2.இந்த உயிரின் மூலமாகத்தான் அது எடுத்துக் கொள்ளும்.

சூரியன் தன் ஒளிக்கதிர்களைப் பாய்ச்சப்படும் போது ஒரு செடியில் தாக்கி அந்தச் செடியை இயக்கச் செய்து அந்த உணர்வின் தன்மையை அதே காந்தத்தால் அதனின் உணர்வை இழுக்கச் செய்கிறது.

இருந்தாலும் செடி தன் மணத்தால் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது. இதைப் போல் நாம் அந்த உணர்வின் தன்மை தனக்குள் உருவான பின் அதே உணர்வின் தன்மை இங்கே கிளரும்.

1.ஸ்ஸ்…ஸ்ஸ்… அப்பா……! என்று இந்த நினைவு எண்ணியவுடனே கண்ணுக்குத் தான் வரும்.
2.நேராக அந்த அணுக்களுக்குச் சாப்பாடாகப் போய்ச் சேரும்.
3.எம்மா……! என்று நினையுங்கள்… இந்தச் சாப்பாடு போனவுடனே கொஞ்சம் அடங்கும்.

அந்த நேரத்தில் யாராவது சந்தோஷமாக நம்மிடம் வந்து சிரித்துக் கொண்டே ஏதாவது சொன்னால் கோபம் வரும். சொல்பவர்கள் மீது வெறுப்பு அதிகமாக வரும். நமக்குள் வேதனை அதிகமாகும்.

நாம் தவறு செய்ததனால் இது வரவில்லை.
1.நாம் தவறு செய்தவர்களைப் பார்க்கப்படும் போது
2.அந்த உணர்வின் அணுக்கள் உடலிலே விளையப்படும் போது
3.அதனின் உணர்வுக்கு இரைகளை எடுக்க கிளர்ச்சிகளைத் தூண்டுகிறது.
4.ஆன்மாவில் வந்த பின் உயிரிலே பட்ட பின் அந்த உணர்வின் சத்தை எடுக்கிறது.

இதை எல்லாம் தெரிந்து கொண்ட நிலையில் குருநாதர் காட்டிய வழியில் அவ்வப்போது ஆத்ம சுத்தி செய்தால் அதை எல்லாம் மாற்றி நல்ல அணுக்களாக நம் உடலில் விளையச் செய்ய முடியும். தீமை செய்யும் அணுக்களின் விளைச்சலைத் தடைப்படுத்தவும் முடியும்.

தூங்காமல் தூங்கும் (ஒளி) நிலை பெற வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

எண்ணம் தான் செயல்.. எண்ணம் தான் கடவுள்…! என்ற நிலையை பல இடங்களில் திரும்பத் திரும்பச் சொல்லியுள்ளேன்.

தாவரங்கள் எல்லாம் ஒரே நிலையில் அதற்குகந்த ஒரே அமில குணத்தை ஈர்த்து வளர்ந்து வாழ்கின்றது. வெங்காயம் அதன் அமில குணமான அதிகப்படியான ஈர்ப்பு அமில இரசத்தை உறிஞ்சி ஒரு வகையான காரத்தை வளர்க்கின்றது. அதன் ஆவி பட்டவுடன் நம் கண்ணீர் சுரக்கிறது.

மிளகாயின் நெடி எரிச்சலையும் இன்னும் சில வகை காய்களினால் நமைச்சலும் நாம் பயிராக்கி வளர்க்கும் தாவரம் அல்லாமல் இயற்கையுடன் வளரும் பல கோடி இன வளர்ச்சியும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு குண நிலை ஒத்த அமில சக்தி ஈர்ப்பில் வாழ்கின்றது.

ஒரு நிலையில் ஈர்த்து வளரும் தாவரங்களுக்கு மனிதனை ஒத்த செயல் உணவு முறைகள் வேண்டி இருப்பபதில்லை. ஆக.. உண்டு கழித்து உறங்கி வாழும் நிலை மனிதனுக்கு எப்படி ஏற்பட்டது…?

ஒன்றிலிருந்து மாறுபட்ட அமிலப் படைப்பில் பிம்பம் கொண்ட ஜீவராசிகளின் நிலையே ஒன்றுடன் ஒன்று கூடிக் கூடி வளர்ச்சி நிலை முற்றி… கனம் கொண்ட பிம்ப ஜீவ நிலை எற்பட்ட பிறகு ஒவ்வொன்றிலிருந்தும் சேமிக்கப்பட்ட குண நிலைகளுக்கொப்ப ஈர்ப்பு நிலை அமையப் பெறுகிறது.

அப்படிப் பெற்றதனால்… ஜீவ பிம்ப உடல் பெற்ற பிறகு
1.எண்ணத்தின் செயலினால் தன் தேவையை உணரும் நிலையும்
2.தன் தேவைக்குகந்த செயலாற்றும் திறமையும்
3.ஒன்றின் பலவாகக் கூட்டிக் கொண்ட பல அமிலங்களின் ஈர்ப்பு சக்தி கொண்ட ஜீவன்களுக்கு
4.தன் உணர்வின் எண்ண செயலுக்கெல்லாம் அதன் தேவையின் அடிப்படை உணவு தேவைப்படுகின்றது.

இதிலுள்ள உள் அர்த்தம் என்ன..?

1.இது நாள் வரை “எண்ணத்தின் செயல்” என்று உணர்த்தி வந்தேன்
2.இப்பொழுது “உணர்வின் எண்ணத் தேவை…” என்று உணர்த்துகின்றேன்.

நம் உடலுக்கு நீர் தேவைப்படும் பொழுது வாய் வறண்டு விட்ட பிறகு நீர் அருந்த எண்ணத்தைச் செலுத்துகின்றோம்.
1.உணர்வின் தேவையினால் எண்ணத்தைச் செலுத்தி
2.எண்ணத்தின் செயலால் நீரை அருந்துகின்றோம்.

அதே போன்று நம்மை அறியாமலே நாம் எந்தச் செயலில் இருந்தாலும்… அல்லது அதன் பால் எண்ணத்தைச் செலுத்தா விட்டாலும் நம்மை அறியாமல் நம் உடலில் உள்ள இவ்வெண்ணத்தின் மோதலின் செயல் நிலையினால்
1.நாள் முழுவதும் நம் செயல் இருக்கும் பொழுது
2.இந்த உடலின் உஷ்ண அலைகள் ஆவியாக கொட்டாவி வெளிப்பட்டு
3.உடல் உறுப்புகளுக்கு அமைதிப்படுத்தும் நிலையான உறக்கம் கொள்ள வேண்டியுள்ளது.

இப்படிப் “பல எண்ணத்தை எடுத்து… பல அமிலங்களின் செயல் தொடர்பில்…” வாழும் பிம்ப உடல்களுக்கு உணர்வின் எண்ண அலையும் வருகின்றது.

ஒரே நிலை கொண்ட தாவரங்களுக்கும்… மற்ற ஜீவன்களான ஜீவ சக்தி கொண்ட எல்லாக் கனிவளங்களுக்கும்… நம் பூமிக்கும்… மற்ற எல்லாவித மண்டலங்களுக்கும் ஜீவன் உள்ள பொழுது… தன் தேவை அறியும் உணர்வும்… உறங்கும் நிலையும் இல்லை…? ஏன்…?

ஜீவன்கள் உறங்கி விடுகின்றன. பூமியும் மற்ற கோளங்களும் தாவரங்களும் உறங்குவதில்லை.
1.ஒரு நிலை கொண்ட அமிலப் படைப்புகள்
2.இவ்வெண்ண சக்தியின் பலவற்றை மோதுண்டு வாழும் ஜீவன்களைப் போல உறங்குவதில்லை.

அவை உறங்கிவிட்டால் உறங்கும் ஜீவன்களுக்கு ஜீவத் துடிப்பு எங்கிருந்து வரும்…?

இயற்கையின் ஜீவப் படைப்பில் சுகம் கண்டு வாழும் நிலை பெற்ற ஜீவன்கள் தனக்குக் கிடைத்த இந்த அபரிதமான உண்மைச் சக்தியை
1.உண்டு… கழித்து… உறங்கி… மங்கச் செய்யும் வாழ்க்கையிலிருந்து
2.இதே அடிப்படை எண்ண குணத்தில் செல்லாமல்
3.ஒரு நிலை கொண்ட எண்ணச் சக்தி கொண்டு தான் ஞானத்தின் வளர்ச்சி பெறல் வேண்டும்
4.தூங்காமல் தூங்கும் நிலை…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

புகழ்ச்சி கண்டு நாம் ஏங்கினோம் என்றால் நமக்குள் அந்தப் புகழ்ச்சியின் மத்தியில் அவன் நம்மைக் கைவல்யம் பண்ணும் உணர்ச்சிகள் வரும்.

ஏனென்றால்
1.நமக்கு வேண்டிய நல்லவரைப் பொய்யனாக ஆக்குவான்
2.உங்கள் செயல்களை எல்லாம் போற்றுகிறேன் என்பான்
3.போற்றுகிறேன் என்று சொல்லிவிட்டு நல்லவரைத் திருடனாக்கி விடுவான்.

இவ்வளவு தூரம் நம்பிக்கையுடன் இருந்தவுடன் தப்பாகவே பண்ணுகிறான் என்ற உணர்வின் தன்மை எடுத்து இவன் இவனுக்குச் சாதகப்படுத்துகின்றான்.

இவனுடன் நல்லவனாக நடித்து நல்லவனை விலக்கி விட்டுவிடுவான். அவனை இவனிடமிருந்து பிரிக்கும்போது இவனுக்கு உதவி செய்யும் நிலைக்கு வருகின்றான்.

புகழ் கண்டு மயங்கினால் என்னவாகும்…? நமது குருநாதர் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார். “புகழ் கண்டு மயங்காதே… புகழ்ந்துரைக்க எண்ணாதே…”

ஒருவரை நாம் புகழ்ந்துரைக்க எண்ணினால் அவருடைய தவறுகளை மீண்டும் உயர்த்தத்தான் உதவ முடியுமே தவிர தவறைத் தவறு என்று சுட்டிக்காட்டும் தன்மைகள் அங்கே மறைந்து விடுகின்றது.

புகழாரம் பாடினால் என்னவாகும்…? இதைக் கண்டு மயங்கினால் என்ன நிலை ஆகும் என்பதற்குத்தான்,
1.புகழ் கண்டு மயங்காதே…
2.புகழ் தேடிச் செல்லாதே…
3.புகழாரம் பாடாதே…! என்ற மூன்று பதங்களும்
4.அதன் எதிர்மறையான உணர்வுகள் உன்னை எப்படி மாற்றும்…? என்று உணர்த்தினார் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

அதே போல்
1.இன்னல் கண்டு கலங்காதே…
2.இகழ்ச்சி கண்டு பதறாதே…
3.இகழ்ந்துரைக்க எண்ணாதே…!

ஒருவர் இகழ்ந்துரைக்கிறார், அதைக் கண்டவுடன்… “இப்படி ஆகிவிட்டதா…?” என்று நாம் செல்லும் பாதைகளுக்கு இது தடைப்படுத்துகின்றது.

அவன் கேவலமாகப் பேசுகிறான் என்ற உணர்வை எடுத்து நாம் பதறினால் என்ன செய்யும்…? அந்த இகழ்ச்சியின் உணர்வு எனக்குள் விளையும். இகழ்ச்சியின் உணர்வு எனக்குள் வரும்போது மற்றவர்களை இகழ்ந்துரைக்க எண்ண வைக்கும்.

அதன் வழியில் அவரை இகழ்ந்துரைக்க எண்ணினால்
1.அந்த இகழ்ந்துரைக்கும் உணர்வுகள் எனக்குள்ளும் வளருகின்றது.
2.இதே சொற்கள் அவரை இகழ்ந்து பேசும் உணர்வுகள் வந்ததென்றால்
3.அவருக்குள் பதிவாகி பதில் எனக்கே வரும்.

உயர்ந்த எண்ணங்களைப் பதிவாக்கும் நிலைகள் அங்கே தடைப்படும். அவர்கள் பெறாதவண்ணம் அங்கே தடைப்படுகின்றது. அந்த உயர்ந்த நிலைகள் வளரும் நிலைகள் எனக்குள் தடைப்படுகின்றது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

வலு கொண்டு சொல்வதற்கும்… சந்தேக உணர்வுடன் சொல்வதற்கும் உண்டான வித்தியாசங்கள்

 

எத்தனையோ கொடிய நிலைகளிலிருந்து மீண்டு “எல்லாவற்றிலிருந்தும் மீள வேண்டும் என்ற சக்தி பெற்றவன் தான் மனிதன்…!”

மற்ற உயிரினங்கள்… உதாரணமாக தவளையோ பாம்போ பதுங்கியிருந்து தான் தனக்கு வேண்டிய உணவைப் பிடிக்கிறது. தவளை தப்பித்துக் கொள்ள எண்ணுகிறது. பாம்போ அதைக் குறி வைத்து அப்படியே பார்க்கிறது… பாய்ந்து அதைப் பிடிக்கிறது.

1.தவளையின் தசைகள் பாம்பிற்கு இரையாகிறது
2.ஆனால் தவளையின் உயிரோ பாம்பின் உணர்வைக் கவர்ந்து
3.பாம்பின் கருவிற்குள் சென்று பாம்பாக அடுத்து உருவம் பெறுகிறது.

இதைப் போன்று தான் பரிணாம வளர்ச்சியில் ஒன்றை ஒன்று தாக்கித் தன்னை வளர்ச்சி பெறச் செய்கிறது.

இப்படி ஒவ்வொரு உடலிலேயும் தன்னைப் பாதுகாக்கும் உணர்வுகளை வளர்த்து… வளர்த்து… வளர்த்து… எல்லாவற்றையும் நாம் பாதுகாக்கும் நிலையாக மனிதனாக வளர்ந்து வந்திருக்கின்றோம்.

ஆனால் மனிதனாக ஆன பின் நாம் என்ன செய்கிறோம்…? எதிரியை வீழ்த்தி விட்டு நாம் நன்றாக வாழ வேண்டும் என்று தான் எண்ணி வாழ்கிறோம்.

கடையை வைத்து வியாபாரம் செய்கிறோம். அது நன்றாக இருக்க வேண்டும் என்றால் அடுத்த கடையை அதை எப்படி எப்படி எல்லாம் “சரியில்லை…” என்று சொல்ல வேண்டுமோ அதை எல்லாம் செய்வோம்.

1.நம்மை அறியாமலே அவர்கள் சரக்கை மோசம் என்று சொல்வோம். ஆனால் சரக்கு நன்றாக இருக்கும்.
2.அவர் மீது நமக்கு வெறுப்பு இருக்கும்… அதனால் சரக்கை மோசம் என்று தான் சொல்வோம்.

இங்கே இவ்வளவு உயர்ந்ததாகப் பேசினாலும்…
1.மனம் ஒத்திருந்தால் அவர் சரக்கு மட்டமாக இருந்தாலும் கூட…
2.பரவாயில்லை… அவர் சரக்கு நன்றாக இருக்கிறது…! என்று தான் சொல்வோம்.

இந்த உண்மையை எல்லாம் தெரிந்து கொண்ட பிற்பாடும் கூட இந்த உணர்வு வரும்.

காரணம்…
1.அவர் மீது பற்று இருக்கும் போது அவர் கொண்டு வந்த சரக்கையும் நல்லதாகக் காட்டிவிடும்.
2.ஆனால் அவர் மீது பற்று இல்லை என்றால் அவர் எடுத்துக் கொண்டு வந்த சரக்கையும் மட்டமாகக் காண்பிக்கும்.

இதே உணர்வை அங்கே அடுத்தவரிடமும் பதிவு செய்து விட்டோம் என்றால் அதே நோக்கத்தில் பார்த்தால் “நீங்கள் சொன்னது சரியாகப் போய்விட்டது…!” இந்த உணர்வுகள் தான் அங்கே வந்து பாயும்.

எதிரிக்கு இந்த உணர்வின் அலைகளை மாற்றப்படும் போது இந்த உணர்ச்சிகளை அது மாற்றும். இதன் மேல் பற்று கொண்ட உணர்வு கொண்டு “நம் வார்த்தையைக் கேட்டார்கள்” என்றால் அவர்களுக்கும் அது தான்.

உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற உணர்வை நீங்கள் பாய்ச்சும் போது அதை மற்றவர்கள்கள் பதிவு செய்து கொண்டார்கள் என்றால் அந்த உயர்ந்த நிலைக்கு அவர்களும் வருகிறார்கள்.

நாம் சொல்வதை…
1.சரியான நிலைகளில் இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா… ஏற்றுக் கொள்ள மாட்டார்களா…? என்று இதைக் கலந்து விட்டு
2.அடுத்து நீங்கள் சொன்னீர்கள் என்றால் அங்கே அதை ஏற்றுக் கொள்ளாத உணர்வே வரும்.

இத்தகைய உணர்வின் இயக்கங்களை எல்லாம் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குத் தான் சொல்வது (ஞானகுரு).

நம் உயிராத்மாவுக்கு ஒளி சக்தியை உணவாகக் கொடுக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

எச்சக்தியும் செயல்பட ஜீவத் துடிப்பு காந்த ஒளி அலை வேண்டும். இச்சக்தி நிலை… ஜீவன் தரவல்ல “நீரிலிருந்து” கிடைக்கின்றது.

நீர் எப்படிக் கிடைத்தது…?

இயந்திரங்களைச் செயலாக்க அவ்வியந்திரங்களுக்கு ஆகார திரவங்களைச் செலுத்தி (FUELS) இயக்கினாலும்
1.அதற்கு ஜீவ நீரைச் செலுத்திச் சுழல விட்டு (COOLING WATER) காந்த மின் அலையின் ஒளியைச் சுழல விட்டுத் தான்
2.அந்த ஒளிப் பொறியினால் இயந்திரங்களை இயக்குகின்றான் மனிதன்.

“காந்த மின் ஒளி” பிறக்கும் பொழுதே ஜீவன் தான் செயல்படுகின்றது. (முக்கியமானது) மின்சாரத்தை எடுக்கவும்… நீரிலிருந்து காந்த மின் அலையைப் பிரித்துத்தான் மின் அலையாக மனிதன் காண்கின்றான்.

இதில் உள்ள உண்மையை உணர்த்துவதன் நிலை என்ன…?

சூரியனிலிருந்து ஒளி அலைகள் வருகின்றது. உலகம் சுழன்று ஈர்த்து வெளிக் கக்கும் நிலையினால் ஒளியும்… இயற்கையும்… ஜீவ நீரும் பெறுகின்றோம்..! என்ற உண்மையை உணர்ந்து வாழும் மனிதன் இதிலுள்ள கருத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடிய “உண்மை இரகசியத்தை” அறியவில்லை.

சூரியனிலிருந்து வெளிப்படும் அமிலக் குண சக்தி நேராக நம் பூமியில் மட்டுமா வந்து படர்கிறது…? அப்படிப் படரும் ஒளி சக்தியானது பூமியின் மேல் செல்லச் செல்ல எந்த நிலையில் உள்ளது…?

இந்தப் பூமிக்குச் சீரான ஒளி அலை பெறக்கூடிய தன்மைக்கு நம் பூமிக்கு மனித ஆத்மாக்கள் கருத்தோன்றி வளர்ச்சி நிலை பெற உதவிய
1.வியாழனின் சக்தி அலையின் உதவி இல்லா விட்டால்
2.இன்றைய பூமியின் ஜீவத் துடிப்பான நீரின் அமிலத் தன்மையே இல்லை.

ஒலியும் ஒளியும் கலந்து ஆவியாகி… நீராகி.. நிலமாகி.. ஜீவ சக்தியைப் பெற்றுள்ள நம் பூமியின் ஜீவ குண நிலை பெறப் பல பல மண்டலங்களின் அமிலச் சக்தியும் துணை புரிகின்றது.

இஜ்ஜீவனுக்கு ஒளி அலைகளை ஈர்க்கும் தன்மையும் வேண்டும். காந்த மின் அலை (ELECTRO MAGNETIC WAVES) என்று பல நாட்களாக உணர்த்தி வருகின்றேன். இக்காந்த மின் அலைக்குத் துடிப்பு எங்கிருந்து வந்தது…?

காந்த மின் அலை எப்படி ஏற்பட்டது…?

ஒரு அமில குணம் படர்ந்த தன்மையில் மற்றொரு அமில குணம் அதிலே மோதும் பொழுது ஏற்படும் “ஒலியின் அதிர்வு ஈர்ப்பினால்…”
1.இக்காற்று மண்டலத்தில் படர்ந்துள்ள சூரியனின் குண அமில சக்தி மோதுண்டவுடன்
2.இழுக்கும் ஈர்ப்பு நிலை கொண்டு ஜீவ துடிப்பான ஆவி நீர் சுரந்து
3.இவ்விழுவையின் ஒளி ஏற்பட்ட பிறகு துடிப்பு நிலை கொள்கின்றது.

இத்துடிப்பின் ஈர்ப்பு கனம் கொண்டு பூமியின் ஈர்ப்பில் காற்று மண்டல முந்தைய பாடத்தில் உணர்த்தியதைப் போல்
1.இந்தப் பூமியின் சுழற்சி ஓட்டத்தில் வடிகட்டி ஈர்க்கும் நிலை என்று உணர்த்திய நிலையில் மோதுண்டு
2.இஜ்ஜீவ ஒளியைப் பூமி பெற்று
3.பூமியின் ஈர்ப்பில் உறிஞ்சி வெளிப்படுத்தும் ஒளி அலையைத் தான்
4.சூரியனின் ஒளி பிம்பமாக நாம் காண்கின்றோம்.

பனிரெண்டு மணி உச்சி வெயிலில்… நம் பூமி எந்த இடத்தில் சூரியனின் ஒளி அலையை எந்த டிகிரிக் கோணத்தில் பெறுகின்றதோ… அதன் நேர் கோட்டில் பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூர விகிதத்தில் “இதே அளவு உஷ்ண அலையும் வெளிச்சமும் இருக்காது…!”

விஞ்ஞானிகளும் இதைக் கண்டு ஆராயட்டும்…!

பூமியின் நிலைக்கும்… பூமிக்கு மேல் செல்லச் செல்ல குளிர்ந்த நிலை தான் அதிகமாகக் கூடியிருக்கும். பூமியின் சுழற்சி ஓட்டத்தில் தன்னைத் தானே பூமி சுழன்றோடும் சக்தி ஈர்ப்பினால் பூமியே தான் சூரியனின் ஒளி அலையைக் கிரகித்து ஒளி பெற்று ஓடுகின்றது.

விஞ்ஞானத்தில் திரவங்களைச் செலுத்தி வாகனங்களை எப்படி ஓட்டுகின்றார்களோ அதைப் போல் தான் நம் பூமியும் தன்னைத் தானே அமில குணத்தின் உணவை எடுத்து சூரியனின் சக்தி ஒளியை நுண்ணிய காந்த அலையாக ஈர்த்து வளர்த்து ஓடிக் கொண்டுள்ளது.

மற்ற ஒவ்வொரு மண்டலமும் இதன் இயற்கைக் கதியில் தான் செயல் கொள்ளுகிறதேயன்றி
1.அதனதன் ஈர்ப்பு இல்லா விட்டால் ஜீவன் இல்லை…!
2.சூரியனாக இருந்தாலும் சரி.. சூரியனுக்கே சக்தி தந்த வியாழனாக இருந்தாலும் சரி…
3.சூரியனைப் போன்று சூரியனைக் காட்டிலும் வளர்ந்த எக்கோளமாக இருந்தாலும் சரி…
அதனதன் ஈர்ப்பில் வளர்ச்சி கொண்டு வாழ்வது தான் ஒவ்வொரு நிலையும்.

இந்த உண்மையின் நிலையை மனித உணர்ந்திடல் வேண்டும்.

அறிவாற்றலில் செயல் கொள்ளும் மனிதன் தன் ஞானத்தின் ஈர்ப்பை… ஜீவத் துடிப்பு கொண்ட உயிராத்மாவின் ஈர்ப்புக்கு… தன் உயிராத்மாவிற்கு வேண்டிய நல்ல சக்தியாக… எவ்வமில குணம் உள்ளதுவோ… அதன் ஜீவ அலையை நுண்ணிய காந்த ஈர்ப்பை தான் எடுக்கும் சுவாசத்தினால் எடுத்துச் செயலாக்கிட முடியும்.

உடலுக்கு உணவு கொடுத்து வளர்த்தாலும் உடல் அழியக்கூடியது. ஆனால் உயிரான்மாவிற்கு உகந்த மின் காந்த ஒளியை நாம் பெற்றால் என்றுமே அழியாத நிலைகள் கொண்டு விண்ணிலே ஏகாந்தமாக வாழலாம்.

அப்படி வாழ்பவர்கள் தான் சப்தரிஷி மண்டலமும்… துருவ நட்சத்திரமும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

தியானமிருக்கிறேன்… எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை… தியானமிருக்கிறேன்… என் தொழில் நன்றாக நடக்கவில்லை என்று தவறான எண்ணத்திற்குக் கொண்டு செல்லாமல்
1.தியானமிருக்கிறேன்… “தொழில் நடக்கும்” என்ற எண்ணம் வரப்படும்போது
2.நீங்கள் தேட வேண்டியது இல்லை.

தியானத்தின் நிலைகள் நாம் எடுக்கின்றோமென்றால் இந்த உணர்வு தானாகவே வரும். நமக்கு வேண்டியது அது. அதை எடுக்கப்படும்போது இந்த உடல் பற்றின் நிலைகளில் மாற்றம் வரும். இது வேண்டும்.

தொழில் இல்லையென்றால் இந்த உடலின் நிலைகள் வளராது. இந்த உடல் இல்லையென்றால் ஞானமும் பெற முடியாது.

ஆகவே இதைப்போன்று நாளை நாம் இருப்பதற்கு அது வேண்டும். உங்களை நீங்கள் நம்ப வேண்டும். உங்களை இயக்கிக் கொண்டிருக்கும் ஈசனை மதித்து நடக்க வேண்டும். உங்களால் நிச்சயம் இது முடியும்.

இன்று சம்பாதித்து… நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்.
1.ஆனால் உங்களிடம் இருக்கக்கூடிய உயர்ந்த குணத்தை நான் திருடினால் என்னவாகும்…?
2.எனக்குள் உயர்ந்த குணம் வரும்.

ஆகவே திருடுவது எதுவாக இருக்க வேண்டும். அறிவின் தன்மை கொண்டு நாம் எதைத் திருட வேண்டும்…?
1.தீமைகளை அகற்றும் அருள் ஞானத்தை நாம் திருடுதல் வேண்டும்.
2.அந்த அருள் ஞானத்தை நுகர்ந்தால் நமக்குள் இருக்கும் தீமைகளை அகற்றும் சக்தி பெறுகின்றது.

திருடன் என்று சொல்லப்படும்போது இத்தனை வகையான நிலைகளை எடுத்துச் சொல்கின்றார், நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஏனென்றால் சாதாரணமாக அவரிடமிருந்து தப்பி வரமுடியாது. ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டால் 10 நாட்களுக்கு நம்மை இழுத்து “வாட்டு வாட்டு” என்று வாட்டிவிடுவார்.

நான் பேசுகிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்… ஞானிகளின் அருள் வாக்குகள் தான் இங்கே செயல்படுத்திக் கொண்டிருக்கிறது

 

நாம் எதை எண்ணுகின்றோமோ அது உயிரிலே பட்டதும் ஜீவன் பெறுகிறது… அது பிராணாயாமம். அந்த உணர்வின் சக்தி எனக்குள் பட்டவுடனே ஜீவன் பெறுகின்றது. இதற்குப் பெயர் பிராணாயாமம்.

ஆனால் ஒரு பக்கம் மூக்கை அடைத்துக் காற்றை இழுத்து உள்ளுக்குள் கொண்டு போய்ச் சேர்த்து மீண்டும் வெளிவிட்டால் இது பிராணாயாமம் என்று இவர்கள் கொண்டு போகிறார்கள்.

அன்று கீதையில் ஞானிகள் சொன்னது வேறு. இவர்கள் சொல்லும் நிலைகள் வேறு.

குண்டலினியைத் தட்டி எழுப்புவது என்று முதுகுத் தண்டில் இருக்கிறது என்று மூலாதாரத்தைத் தட்டி எழுப்புகிறார்கள்.
1.மூலம் என்பது உயிர்
2.ஆதாரம் என்பது உணர்வு.
3.நமக்குள் இருக்கும் நல்ல உணர்வைத் தட்டி எழுப்பி
4.மெய் உணர்வைத் தனக்குள் சேர்க்க வேண்டும் என்று அன்று சொன்னார்கள்.

இவர்கள் சொன்ன மாதிரி முதுகுத் தண்டில் தட்டி எழுப்பினால்… எவன் சொன்னானோ அவன் எண்ணத்தைக் கொண்டு இந்த ஆதாரத்தைத் தட்டியெழுப்பினால்… அவனுக்குள் வசப்படுத்துவது தான் இந்த முறை. இப்படித் தான் இவர்கள் செய்கின்றனர்.

மூலம் என்பது தன் உயிர். ஆதாரம் என்பது தனக்குள் இருக்கும் உணர்வைத் தட்டி எழுப்புவது தான் அது.

அன்று ஞானிகள் சொன்னதை எல்லாம் விட்டுவிட்டு இவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒரு பெயரை வைத்துக் கொண்டு செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

ஏனென்றால் பிறரைக் குறை கூறுகிறேன் (ஞானகுரு) என்று யாரும் எண்ண வேண்டாம். புத்தகங்களில் ஒருவர் பிராணாயாமம் செய்வது எப்படி…? என்று எழுதி வைக்கிறார் என்றால் அதைக் காட்டிலும் நான் ஒன்றைச் சேர்த்து புதிதாகக் கண்டு பிடித்துச் சொல்கிறேன் என்று இப்படி நிறைய வந்து விட்டது.

அன்று ஞானிகளால் கொடுக்கப்பட்ட உயர்ந்த தத்துவங்கள் எல்லாம் மறைக்கப்பட்டு விட்டது. அந்த உணர்வுகள் அழிக்கப்பட்டது.
1.இருந்தாலும் இன்றைய கடைசித் தருணத்தில் இது வெளிப்படுகின்றது…!
2.நான் (ஞானகுரு) வெளிப்படுத்துகிறேன் என்று யாரும் தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள்.
3.எனக்கு ஒன்றும் தெரியாது…
மூன்றாம் வகுப்பு தான் படித்திருக்கிறேன்.

ஏனென்றால் உங்களை மாதிரி புத்தகத்தைப் படிக்க எனக்குத் தெரியாது. அந்தத் திறனும் இல்லை. அந்த விளக்கமும் எனக்குத் தெரியாது.

இதை எல்லாம் காட்டிய அந்த மெய் ஞானிகளின் அருள் வாக்குகள் தான் இங்கே செயல்படுகின்றது.

நீங்கள் எல்லாம் அந்த அருளைப் பெற வேண்டும் எண்ணி வரப்படும் போது
1.உங்கள் பாக்கியத்தில் நான் எண்ணி எண்ணி எடுக்கப்படும் போது
2.அந்த ஞானத்தின் சக்தி முதலில் எனக்குள் விளைகிறது.

இந்த உணர்வின் தன்மை இங்கே வெளி வரப்படும் போது யார் இதைக் கேட்கின்றனரோ அவருக்குள்ளும் விளைகிறது.

ஒரு செடியின் மணம் அடுத்தடுத்து வித்தை ஊன்றும் போது அதற்குள் ஈர்க்கப்பட்டு மீண்டும் அதே செடியாக விளைவது போல் தான் அதே மணத்தின் தன்மை இங்கே விளைகிறது.

ஆகவே “நான் பேசுகிறேன்…” என்று யாரும் எண்ண வேண்டாம்… எனக்கு இது தெரியவும் தெரியாது. குருநாதர் காட்டிய வழிகள் கொண்டு அதை நான் எண்ணப்படும் போது அந்த உணர்வின் ஆற்றல் வருகிறது.

1.நீங்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.உங்களை அறியாத இருள் நீங்க வேண்டும்
3.மெய் ஒளி உங்களுக்குள் படர வேண்டும்
4.உங்கள் பேச்சும் மூச்சும் பிறரின் இருளை நீக்க வேண்டும்.
5.கேட்போர் உள்ளங்களை மகிழ்விக்க வேண்டும் என்று நான் எண்ணுகின்றேன்.
6.அந்த உணர்வின் தன்மை எனக்குள் படைக்கின்றது… என் குரு காட்டிய நெறிகள் கொண்டு.

அவர் சொன்ன வலு கொண்டு நான் அதைப் பெற முடிகின்றது. இந்த உணர்வின் வித்தை விளைவிக்கவும் முடிகிறது. அந்த வித்தை எல்லோருக்குள்ளும் படரச் செய்ய முடிகிறது. உங்கள் உள்ளத்திலே பதியச் செய்ய முடிகிறது.

இதையே நீங்கள் எண்ணும் போது அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள்ளும் விளைகிறது. அதன் மூலம் மற்றவருக்குள்ளும் அருள் ஞானத்தை விளையச் செய்ய முடியும். அருளானந்தம் பெற முடியும்.

ஆண்டவனுக்கு நாம் தர வேண்டிய காணிக்கை – ஈஸ்வரபட்டர்

 

நம் பூமியில் பல காலங்களாகவும் இன்றைய காலங்களிலும் பலர் பல உண்மை ஆராய்ச்சி நிலையில் பல சாதனைகளை வெளிப்படுத்திக் கொண்ட தான் வந்துள்ளார்கள்… அதே வழித் தொடரிலும் வாழ்கின்றனர்.

ஆனால்..
1.மனிதன் பல புதிய புதிய நுண்ணலை ஈர்ப்பால் பல செயல்களைச் செய்கின்றான் என்றாலும்
2.அந்த மனிதன் தன் ஆத்ம உயிரணுவிற்கு.. அந்த ஒளியின் பால் செல்வதற்குகந்த வழி ஆற்றல் பெறவில்லை.

பல மேதைகள் உண்டு…! ஆனாலும் அந்த மேதைகளினால் எதன் அடிப்படை ஆராய்ச்சி ஈர்ப்பில் தன் எண்ண ஞானத்தைச் செலுத்தி வழி பெறுகின்றனரோ… அதன் தொடர் ஞானம் ஒன்றின் பால் மட்டும் அவர்களின் ஈர்ப்பில் சுவாசம் உள்ளதனால்… அதன் சுழற்சி வட்டத்தில் மட்டும் தான் உள்ளனர்.

உடலை விட்டு ஜீவன் பிரிந்த பிறகும் அதே எண்ண செயலுக்காகப் பிறிதொரு ஜீவ ஆத்மாவுடன் தொடர்ச்சிப்படுத்திக் கொண்டும் அல்லது மீண்டும் ஒரு ஜென்மத்திற்கு வருகிறார்களேயன்றி தன் ஆத்ம ஜீவ உயிரணுவின் வளர்ச்சியில் ஒளி அலையுடன் கலக்கவிடும் நிலை எய்துவதில்லையப்பா.

இங்கே போதிக்கப்படும் நிலைகள் கொண்டு…
1.ஒவ்வொருவரும் எண்ணத்தால் எடுக்கும் சுவாசத்தில் நுண்ணிய ஈர்ப்பலையின் நினைவைச் செலுத்தி
2.சக்தி கொண்ட மகான்களின் ஒளியுடன் நம் எண்ண நுண்ணிய அலை பதியும் பொழுது
3.அதன் தொடரிலிருந்து அவர்களின் ஒளி அலையை நம் உயிராத்மா ஈர்க்கக்கூடிய வழித் தொடர் பெற்று
4.இந்த உடலில் உள்ள பல கோடி உயிரணுக்களும் அம்மகான்களின் தொடர் அலையுடன் கலக்கும் வழி நிலை பெற்றால்
5.இன்று இப்பிரபஞ்ச ஆதி சக்தியின் வளர்ச்சியில் வளர்ந்துள்ள பல கோடிக் கோளங்களின் வளர்ச்சி ஏற்படுத்திய
6.சப்தரிஷிகளின் ஒளி வட்டம் போல் நம் நிலையும் நிலைத்து நிற்கும்

எடுக்கும் எண்ணத்தைக் கொண்டு தான் ஒவ்வொரு வளர்ச்சியுமே. மனிதனுக்கு மட்டுமல்ல.. மற்ற எல்லா நிலைகளுக்குமே…!

1.மனிதனுக்கு எப்படித் தன் எண்ணத்தின் சுவாச ஈர்ப்பை இந்த உடல் பிம்பம் பலவாக உள்ள நரம்புகளில் ஈர்த்து
2.இந்த உடல் முழுமைக்குமே எண்ணத்தின் சக்தி பிம்பம் பரப்புகின்றதோ
3.அதைப் போன்று ஜீவன் கொண்ட தாவரங்களுக்கும் மற்ற மற்ற எல்லா இயற்கை வளங்களுக்குமே
4.இந்த ஈர்ப்பலையை உறிஞ்சக்கூடிய நரம்புகள் உண்டு.

அமிலத்தின் ஒளி சக்தியை ஈர்த்து ஜீவன் பெற்று துடிப்பு நிலை ஏற்படும் நிலையிலேயே “ஈர்க்கும் காந்த நரம்புகள்…!” வளர்ச்சி பெறுகின்றன.

ஆனால் மனிதச் சுவாச ஈர்ப்பினால் எந்த ஈர்ப்பின் நிலையில் மனிதன் உடல் பிம்பத்தில் நிறைந்துள்ள இரத்தத்தில் அவன் எடுக்கக்கூடிய எண்ணத்திற்கொப்ப எல்லாம் அவன் உடலில் உள்ள இரத்தத்தில் வளரும் ஜீவ அணுக்களின் நிலையும் கலந்து விடுகின்றது.

ஒரு நிலை கொண்ட சுவாசம் கொண்டவை தாவரங்கள்.
1.மனிதனையும் மற்ற மிருகத்தையும் ஒத்த இரத்த ஓட்டச் சுழற்சி இல்லாமல்
2.நரம்பின் ஈர்ப்பினாலேயே ஒரு நிலையில் காந்த சக்தியையே ஈர்க்க வல்லது தாவரம்.

பலவாக உள்ள எண்ணக் கலப்பில் பலவற்றையும் எண்ணி வாழும் மனிதன் தன் எண்ணத்தில் எடுக்கும் ஒவ்வொரு நிலையினாலும் அவன் பிம்ப உடலை அவனே பல நிலைகளுக்கு உட்படுத்திக் கொள்கின்றான்.

இந்த நிலையிலிருந்து எல்லாம் மீண்டு… பல நிலைகள் மோதிடும் நிலையை நம் எண்ணத்தில் பதிய விடாமல் “சமமான நிலையில்” நம் எண்ண ஈர்ப்பை வழிப்படுத்திடல் வேண்டும்.

ஆகவே வாழ்க்கைக்குகந்த செயலுடன் இந்த எண்ணத்தை ஒவ்வொரு ஆத்மாவும் தன் பிறப்பின் உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.

ஆண்டவனின் சக்தியில் அவதரித்த…
1.ஆண்டவன் என்ற உயிராத்மாவுடன் வாழும் நாம்
2.அந்த ஆண்டவனுக்கு உகந்த காணிக்கையாக நம்மை நாமே ஆண்டவனாக்கிக் கலப்பது தான்
3.மனித ஆத்மாவின் எண்ண வளர்ச்சியின் வழித் தொடர் இருந்திடல் வேண்டும்.

அது தான் ஆண்டவனுக்கு நாம் தரும் காணிக்கை.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நாம் எண்ணி எடுத்துக் கொண்ட ஒவ்வொரு குணமும் தன்னை வளர்த்துக் கொள்ள முந்துகின்றது. முந்தும் பொழுது…
1.தீமையை அகற்றும் சக்தியாக எடுத்தால் தீமைகளை அகற்றும்
2.நஞ்சான உணர்வை நமக்குள் எடுத்துக் கொண்டால் நஞ்சின் தன்மை நமக்குள் நல்ல குணங்களை அழிக்கும்.

இந்தப் பேருண்மையை அறிந்து கொள்வதற்குத்தான் கோலமாமகரிஷி எதை எதை எடுத்தார்…? வெறுத்தார்… அறிந்தார்… ஞானத்தால் உணர்ந்தார்…? என்ற நிலையை அறிய யாம் இங்கே கொல்லூரில் அவ்வளவு காலம் தங்கியிருந்து ஜெபமிருந்தோம்.

அங்கே தண்ணீர் கிடையாது… உணவு கிடையாது… ஒன்றும் கிடையாது. எம்மை இங்கே விட்டுவிட்டுச் சென்று விட்டார் குருநாதர். இங்கே பல நாட்கள் தங்கிவிட்டுப் பின்புதான் வெளியே வந்தோம். யாருக்கும் தெரியாது.

இவ்வாறு அறிந்து கொண்ட நிலைகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றோமென்றால்…
1.எமது வார்த்தையைக் கேட்பது பெரிதல்ல…
2.எம்மைப் பின்பற்றுவதும் பெரிதல்ல…!

ஆனால் நாம் முந்தைய நிலைகளில் பதிவு செய்த நிலைகள் நமக்குள் உண்டு. அதை நாம் அடக்க வேண்டும்.

நமது அன்பர் ஒருவர் ஆட்டோவை வேகமாக ஓட்டி வருகிறார். அப்பொழுது அது அவருக்குக் குஷியாகத் தெரிகிறது. ஆனால், தபோவனத்தின் கேட்டின் பக்கம் வரும்போது பிரேக் போட்டவுடன்… சரியான நேரத்தில் திருப்பாமல் விட்டதால் கவிழ்ந்து விட்டது. அவர் தப்பி விட்டார். வண்டியில் இருந்தவர் சிக்கிக் கொண்டார்.

இதற்கெல்லாம் காரணம்…
1.நமது உணர்வுகளில் வேகம் எதுவோ அதில் மகிழ்ச்சியைத் தூண்டும்.
2.அதனின் வேகச் செயலாக வேலை செய்யும்
3.ஆனால் இதன் விளைவை நமக்குள் எப்படி ஊட்டும் என்பதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் இதைச் சொல்கிறோம்.

இதே மாதிரிதான் நாம் ஆர்வமாகத் தியானம் செய்து கொண்டிருக்கிறோம். அப்படி ஆர்வமாக இருக்கும்போது முந்தைய நிலைகள் நமக்குள் இயக்கும்போது
1.என்னத்தைத் தியானம் எடுத்தோம்… இப்படி வருகிறதே…!
2.நாம் ஜெயிக்கவில்லை… நம்மால் முடியவில்லை போலும் என்று விரக்தி அடைந்துவிடுவார்கள்.

யாம் நீங்கள் பெறவேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டுகின்றோம். இந்த உணர்வின் தன்மை மனக்கட்டுப்பாடு இல்லாதபடி இயக்கி வருகிறது.

1.ஏற்கனவே பதிவு செய்த உணர்வுகள் குறுக்கே குறுக்கே வருகிறது.
2.நாம் செய்யும் தியானம் சரியாக இல்லையோ என்று எண்ணத் தூண்டும்.

இப்படி முந்தைய நிலைகளில் பதிவு செய்த நிலைகள் நமக்குள் உண்டு. அதை நாம் நிறுத்த வேண்டும். இந்த ஆறாவது அறிவிற்குள் அந்த மெய் ஞானிகளின் உணர்வைக் கவரும் திறமையாக வரவேண்டும். இதைப் படைக்க வேண்டும்.

இது தான் பிரம்மாவைச் சிறைபிடித்தான் முருகன்.

திருக்கடையூர் அமுதகணேஸ்வரரின் தத்துவம் என்ன…?

 

ஒளியைக் கண்டபின் இருள் எப்படி மறைகின்றதோ அதைப் போல் மெய் ஒளியின் தன்மையை அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் எடுக்கப்படும் போது இந்த மனித வாழ்க்கையில் சிந்தனையைக் குறைக்கச் செய்யும் உணர்வின் தன்மையை அது பிளக்கச் செய்துவிடும்.

இந்த உடலில் நாம் இருக்கப்படும் போது ஒவ்வொரு நொடியிலும் அதை எடுத்து வளர்க்கச் செய்து உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றுவது தான் நரசிம்ம அவதாரம்… அடுத்து கல்கி.
1.இந்த உடலை விட்டுச் சென்ற பின்
2.ஒளியின் சரீரமாக என்றும் நிலையான சரீரமாக அது வருகின்றது.

அதற்குத் தான் “மார்க்கண்டேயன்” கதையைக் காட்டினார்கள் ஞானிகள். என்றும் பதினாறு என்ற நிலையில்
1.எமனையே அவன் சிறைப்பிடித்தான்… எமனை வீழ்த்தினான்…! எமனை சம்ஹாரம் செய்தான் என்று
2.திருக்கடையூர் அமுதகணேஸ்வரர்…! ஆலயத்தில் காட்டியுள்ளார்கள்.
அதாவது… இந்த உயிர் பூமிக்குள் வந்த நிலைகளில்
1.சுவைமிக்க அமுதமாகக் கணேஸ்வரனாகத் தனக்குள் சேர்த்து
2.அந்த ஒளியின் சரீரமாக அசுத்தத்தை நீக்கி என்றும் பதினாறாக ஒளியின் தன்மையாக அது சேர்ந்தது.

அங்கே ஸ்தல விருட்சம் எது..?

பிஞ்சிளம் கொடி…! உயிரின் தன்மை கொண்டு அது எப்படி இளமைப் பருவமாக என்றும் பதினாறு என்ற நிலை அடைகின்றதோ அதைக் காட்டுகின்றனர்.

அந்தக் கொடியை எடுத்துக் கொண்டால் எல்லாவற்றிலும் பட்டு… அதை ஒட்டியே தழுவிப் படரும்.

கொடி ஒன்றை ஒன்று படர்ந்து அது எப்படித் தன் சத்தை எடுத்து வளர்கின்றதோ… அது படர்வது போல் நமக்குள் அந்த உணர்வின் சத்தாக…
1.எல்லோரின் உணர்வுகளையும்
2.அருள் ஞான வழியில் வளர்க்க வேண்டும்.
3.அது தான் யாம் (ஞானகுரு) சொல்லும் கூட்டுத் தியானம் என்பது.

நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டும் என்றால்… என்றும் பதினாறு என்ற நிலையை அடைய வேண்டும் என்றால் இந்தத் தியானத்தை எடுக்க வேண்டும்.

அதை விடுத்து விட்டு அந்தச் சாமி செய்யும்… இந்தச் சாமி செய்வார்… யாகம் செய்யும்… மந்திரம் செய்யும்… தந்திரம் செய்யும்… என்றால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

உங்களை நீங்கள் நம்புங்கள்.. உயிரைக் கடவுளாக மதியுங்கள். உடலை ஆலயத்தை மதித்து அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை உடலிலே விளையச் செய்யுங்கள். அதை எல்லோருக்கும் கிடைக்கச் செய்யுங்கள்…!

எண்ணத்தை ஒருநிலைப்படுத்தினால் “நுண்ணிய அலையின் ஈர்ப்ப்பைப் பெறலாம்” – ஈஸ்வரபட்டர் 

 

அமில குணமான பிம்ப சிவனுக்கு… அதன் வளர்ச்சிக்கு… ஜீவ குணமான காந்த ஒளி சக்தி ஈர்ப்பிற்கு வந்த பிறகு தான் அவ்வமில குணத்திற்கே ஜீவனும் அதன் வளர்ச்சி நிலையும் ஏற்படுகின்றது.

அமில பிம்பத் திடப்பொருள் இல்லாவிட்டால் காந்த ஒளி சக்திக்குச் சக்தியில்லை. அச்சக்தி நிலை படர்ந்து பிம்ப அமிலம் ஜீவன் பெறாவிட்டால் இதன் ஜீவ வளர்ச்சியும் இல்லை.

இதன் குண அடிப்படை தான் நாமும்… எல்லாமில் எல்லாமுமே…!

இதன் வழித் தொடர் கொண்டு வளர்ந்து வாழும் நாம்…
1.நமக்கு இந்த மனித உடல் பெறக்கூடிய ஆற்றல் பெற எத்தனை கோடி ஆண்டுகள் ஆகின்றன…? என்ற உண்மையை உணராமலும்
2.உயர்வின் வழிக்குச் செல்லாமலும் நம்மை நாமே அழித்து வாழ்கின்றோம்.

மாங்கனி அதன் முற்றிய நிலை பெற்றவுடன் அதன் வண்ணமும்… வண்ணத்திற்கேற்ப மணமும் உள்ள கனியின் சுவை இனிமை எப்படி உள்ளது..?

குறுகிய கால வளர்ச்சி முற்றலிலே
1.முற்றிய நன்கு பழுத்த மாங்கனியின் வண்ணத்தையும் மணத்தையும் கண்டவுடன்
2.”சுவை நிறைந்த கனி…!” என்று எண்ணி உண்ணத் துடிக்கின்றோம்.

இதன் நிலை போல் மனிதனின் வளர்ச்சி நிலை இருந்து விட்டால் மனிதனின் உடல் பிம்ப அழகும்.. எண்ண மணமும்… இனிமையும் குண தேவனின் சக்தியாக சுடர்விடுமப்பா…!

பிஞ்சில் மாங்கனி துவர்ப்பாகவும் புளிப்பாகவும் தான் உள்ளது. அதைப் போன்று ஆரம்ப வளர்ச்சியில் அறியா மனிதனாக இருந்தாலும் தன் அறிவாற்றலை ஞானத்தின் மேம்பாட்டில் முற்றிப் பழுத்து இனிமை கொள்ள வேண்டும்.

அமில ஈர்ப்பின் வழித் தொடரினால் நம் பூமியின் எண்ணற்ற சக்திகள் நிறைந்துள்ளன. பல வண்ணங்களையும் மணங்களையும் சுவைகளையும் ஆரம்ப காலத்திலேயே பூமி வளர்ச்சி கொண்டு வழி வரவில்லை.

ஒவ்வொன்றின் வழித் தொடர் அமில குணத்தின் ஈர்ப்பு சக்தியின் “சிவ சக்தி என்ற சிங்காரக் கலவை ஈர்ப்பில் தான்..” இன்று பூமியில் நிறைந்துள்ள இயற்கை வண்ணமும் சுவையும் மணமும் உள்ளன.

பல வண்ணங்கள் புஷ்பங்களுக்கு எப்படி வந்தது..? கனிகளுக்கு சுவை எப்படி வந்தது…?

படர்ந்த அமில பிம்பம் அதன் ஈர்ப்பில் காந்த ஒளி சக்தி பெற்றவுடன் “வண்ணத்துப் பூச்சி” என்ற பல வண்ணங்கள் நிறைந்த அப்பூச்சி ஜீவன் பெறுகிறது.

இப்பொழுது உணர்த்துவது பூமி தாவர வளர்ச்சி ஏற்பட்ட நாட்களில் ஆரம்பத்தில் வந்ததன் நிலை.

இந்த வண்ணத்துப் பூச்சி சில தாவரங்களின் மேல் தன் அமிலத்தை… அமிலம் என்பது தன் கழிவின் முட்டையை இட்டதினால்.. அதிலிருந்து அதன் அமில சுவாசம் படர்ந்த பிறகு வண்ணப் புஷ்பங்கள் கிடைத்தன.

1.அந்த வண்ணத்தின் பூவிலிருந்துதான் தேனீக்கள் ஜீவன் கொண்டன.
2.தன் ஜீவனுக்குகந்த ஆகாரமாக அந்தப் பூவிலிருந்தே தன் ஆகாரத்தை உறிஞ்சி எடுத்துத் தேனீக்கள் வளர்ந்தன.

தேனீக்கள் இல்லாவிட்டால் “சுவை நிறைந்த கனி…” எதுவுமே இல்லை…!

இப்படி உலக இயற்கையே ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டு… ஒன்றெடுத்த அமிலம் ஜீவன் கொண்டு… அதன் ஜீவன் மாற்றம் கொண்டு பிறிதொரு ஜீவனும் வளர்ந்து நம் பூமி ஓடிக் கொண்டுள்ளது. இந்த அமிலத்தின் நிலையிலிருந்து தான் எல்லா சக்திகளும் ஜீவன் பெறுகின்றன.

ஆயிரம் காலங்கள் ஒரு நிலை கொண்ட நுண்ணிய ஈர்ப்பு அலையின் சக்தியினால் நாகம் மாணிக்கக்கல்லைத் தன்னுள் வளர்த்துக் கொள்கின்றது.

மாணிக்கக் கல்லை வளர்த்துக் கொள்ள நாகம் எப்படி வழிப் பெற்றது…? மற்ற ஜீவன்களைக் காட்டிலும்
1.நாகத்தின் கண் ஒளி ஈர்ப்பு
2.நுண்ணிய மின் அலையை ஈர்க்கவல்ல செயல் கொண்டது.
3.நாகம் ஒரு பொருளைப் பார்த்தால் அப்பொருளின் பிம்பம் அதன் கண்ணிலே
4.பல மணி நேரத்திற்குப் புகைப்படத்தில் பதிந்துள்ளதைப் போல் பதிந்திருக்கும்.

சிங்கத்தின் நிலையும் ஏறக்குறைய நாகத்தின் ஈர்ப்பலைக்கு ஒத்தது தான். ஆனாலும் அதன் வளர்ச்சி நிலையில் நாகத்தைப் போன்று நுண்ணிய ஈர்ப்பின் பதிப்பு இல்லாமல் சிங்கத்தின் துடிப்பு ஆக்ரோஷத்தின் நிலையால் வளர்ச்சி பெறவில்லை. காந்த ஈர்ப்பின் ரசமணியின் அபரிதமான ஒளி ஈர்க்கும் கண்கள் சிங்கத்தின் கண்கள்.

இதனை எல்லாம் உணர்த்தும் முறை எதற்கு..?

நுண்ணிய ஈர்ப்பலையின் சக்தி அமிலங்கள் நிறைந்துள்ள பல பிராணிகள் மிருகங்கள் இருந்தாலும்… மனிதனை ஒத்த அறிவாற்றலும் அங்க அவயங்களும் பெறாததினால் அவற்றின் நிலை புரியாமல் சென்று விட்டது.

மனிதனுக்குச் செயலாற்றும் திறமை கொண்ட அங்க அவயங்களும் அறிவின் வளர்ச்சியும் உள்ள பொழுது இந்நுண்ணிய ஈர்ப்பலையை
1.சூரியனின் ஒளி அலையிலிருந்து – பலவாக நிறைந்துள்ள இந்தப் பூமியின் அமில குணத்தின் உதவியினால்
2.மனிதன் பல எண்ணத்தில் தன் ஜெபத்தைச் சிதறவிடாமல்
3.நுண்ணிய ஈர்ப்பலையை தன் எண்ண ஈர்ப்பில் செலுத்தும் பொழுது அவ்வெண்ண ஈர்ப்பே சுவாசமாக
4.காற்றில் உள்ள தன் எண்ணத்திற்குகந்த ஈர்ப்பு குண நுண்ணிய அமில சக்தியைத் தன் உடல் முழுமைக்கும் பரப்பச் செய்கின்றது.

இவ்வெண்ணத்தை “ஒரு நிலைப்படுத்துங்கள்…!” என்பதன் பொருள் இது தான்.

“ஒரு நிலை…” என்பது ஒன்றின் பால் உயர் ஞான எண்ணத்தைச் செலுத்தி
1.அந்த ஒளி அமில குணத்தை நுண்ணிய ஈர்ப்பாக
2.நம் சுவாசம் எடுக்கும் வழி நிலை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நமது வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலேயே… பிறருடைய தீமைகளை நாம் கண்டுணரும்போது
1.உணரத்தான் அதைப் பயன்படுத்த வேண்டும்.
2.உணர்ந்தபின் அதை நீக்கிவிடுதல் வேண்டும்.

அதாவது தெரிந்து கொள்ளப் பயன்படுத்த வேண்டும். ஆனால் தெரிந்த உணர்வுகளை உடலிலே இணைத்திடக் கூடாது. அதை நீக்கிடல் வேண்டும்.

தீமைகள் எதுவோ அவைகளை நீக்கி… நன்மையின் பயன் எதுவோ அதை ஆக்கப்பூர்வமான நிலைக்கு நாம் மாற்றிடல் வேண்டும்.

இன்று நாம் மனிதனாக இருக்கின்றோம். நாம் காரத்தைத் தனித்து உணவாக உட்கொண்டால், காரத்தின் உணர்வுகள் நமக்குள் சுவையற்றதாக மாற்றுகின்றது.

ஆனால் அதே சமயம் அந்தக் காரத்தை மற்றவைகளுடன் இணைக்கப்படும்போது சுவை மிக்கதாக மாற்றுகின்றது.

இதே போன்றுதான்
1.மனிதனின் வாழ்க்கையில் பிறரின் கசப்பான உணர்வுகள் வெளிப்படுவதைக் கேட்டுணர்ந்தாலும்
2.பிறரின் வாழ்க்கையில் கடும் நோயுற்று அவர்கள் படும் வேதனையைப் பார்த்து சொல்லால் கேட்டுணர்ந்தாலும்
3.உணர்ந்த அச்சக்தியை நம்மில் அது இயங்காது தடைப்படுத்த வேண்டும்.

உணரப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அடுத்த கணம் அதனுடைய தீயவினையாகச் செயல்படும் நிலையை மாற்றிடல் வேண்டும்.

கடவுளின் அவதாரத்தில் ஆமையை ஏன் போட்டார்கள்…? – கூர்மை அவதாரம்

 

கண் தெரிந்த பிற்பாடு ஒரு புழு என்ன செய்கின்றது…?

புழு பாறையின் மீது நகர்ந்து செல்கிறது. அந்தப் பாறையிலே வெயில் படுகின்றது. ஆனால் அதிலே முதலில் வெயில் இல்லை.

புழு அதன் மீது நகர்ந்து செல்லப்படும் போது கொஞ்சம் நேரமாகின்றது. ஆனால் அதற்குள் வெயிலின் கடுமையாகிப் பாறை சூடாகின்றது.

சூடாகும் போது தாங்க முடியாத நிலைகள் ஏற்படுகின்றது.

1.அந்த நேரத்தில் தன் கண் கொண்டு தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வு கொண்டு நாலாபுறமும் பார்க்கின்றது.
2.அப்போது அங்கே சுற்றி இருக்கும் செடிகளும் அதனின் நிழலும் புழுவிற்குத் தெரிகின்றது.

அதே சமயத்தில் அந்த வெயில் செடியிலே பட்டு அந்த மணம் வெளி வருகிறது. அதை இந்தப் புழு கண் கொண்டு கூர்மையாகப் பார்க்கின்றது.

அதிலிருந்து வரக்கூடிய அந்த மணத்தைக் புழுவின் கண்ணில் உள்ள காந்தப் புலனறிவு… சத்தியபாமா கவர்கின்றது.
1.அந்தச் செடியின் நிழலையும் மணத்தையும் சுவாசித்த பின் சத்தியபாமா உணர்த்துகின்றது.
2.அதாவது அங்கே நிழல் இருக்கின்றது என்ற நினைவை ஊட்டுகின்றது.

அந்த மணத்தின் தன்மை கொண்டு நிழல் இருக்கிறது என்று காட்டப்படும் போது மூஷிகவாகனா கூர்மையாகக் கவனித்து அதைச் சுவாசித்து அந்த உணர்வின் தன்மை எண்ணம் கொண்டு அந்த நிழலுக்கு இந்த உடலை அழைத்துச் செல்கிறது.

அப்படி அழைத்துச் சென்றாலும்
1.இங்கே அடித்த வெப்பமும்
2.இது ஏற்கனவே உணவாக உட்கொண்ட நிலையும்
3.அங்கே செடியின் நிழல் வேறு.

இருந்தாலும் அந்த நிழலுக்காக வேண்டி அதை எண்ணுகிறது தன்னைக் காக்க…!

ஆனால் அந்தச் செடியிலிருந்து வரக்கூடிய மணத்தை நுகர்ந்தது. இந்த உணர்வின் தன்மை அதற்குள் வினையாகச் சேர்கின்றது. மூஷிகவாகனா. ஆனால் தப்பித்து விட்டது.

செடியைக் கண் கொண்டு படம் எடுத்தது. அந்தச் செடியிலிருந்து உணர்வின் தன்மையைச் சத்தியபாமா உணர்த்துகின்றது. உள்ளுக்குள் போனவுடனே இந்த உடலுக்குள் உணர்வுகள் எதிர் நிலை ஆகிறது.

ஆனால் இந்த உடலைக் காத்துக் கொள்ளச் சென்றது. அதை நுகர்ந்து பார்த்த உணர்வின் சத்து உள்ளே சேர்ந்து விடுகிறது.

நாம் நல்லவராக இருக்கின்றோம். ஒருவர் கஷ்டப்பட்டால் என்ன செய்கிறோம்…? ஐயோ… பாவமே…! என்று அவர்கள் சொன்னதை எல்லாம் கேட்டு வைத்துக் கொள்கிறோம்.

அந்த வினை எல்லாம் இங்கே சேர்த்த பிற்பாடு மாரி…! மாரியம்மனை ஏன் வைத்திருக்கின்றார்கள்…? அந்தச் சக்தி என்ன செய்கிறது..?

கஷ்டப்படுவதைப் பார்த்து நாமும் அங்கே வேதனைப்பட்டோம் இங்கே நமக்குள்ளும் அதே வேதனையாக வந்துவிடுகிறது. அது தான் மாரி. (அங்கிருப்பது நமக்குள்ளும் மாறி வருகிறது)

அதே போல் தான் இந்தப் புழு அங்கே வேதனைப்பட்டது.
1.அதிலிருந்து தப்பித்துக் கொள்ளக் கூர்மையாக எண்ணியது.
2.அந்த உணர்வின் தன்மை அந்தச் சத்தைத் தனக்குள் எடுத்து மாரி…
3.இதற்குள் வந்து அது வினையாகச் சேர்கிறது.

முதலிலே தன் உணர்வுக்குள் வேதனையாகச் சேர்ந்தது. காரணம் அதனின் சத்து வெப்பம்… சூடு அதிகம். ஆனால் செடியின் மணத்தின் சத்தை “அந்த நிழலைப் படம் எடுத்தது…” இந்த உணர்வின் சத்து உடலில் விளைகின்றது. இதற்குள் எதிர்நிலையாகிறது.

ஒரு எலி வீட்டிற்குள் வங்கு போட்ட மாதிரி புழுவின் உடலில் அது வங்கு போடுகிறது. வங்கு போட்டு அந்த வினையின் சத்தாகச் சேர்த்து வினைக்கு நாயகனாக அடுத்த சரீரம் ஆமையாகப் பிறக்கிறது.

ஆமையை நெருப்பில் தூக்கிப் போட்டால் ஒன்றும் ஆகாது. அது சூட்டைத் தாங்கும் சக்தி கொண்டது. காரணம்
1.அந்த வெயிலின் கொடுமையான சக்தியை இதற்குள் தாங்கி
2.அதனின்று காத்துக் கொள்ள வேண்டும் என்று படமெடுத்து
3.அந்தத் தாவர இனச் சத்தை நுகர்ந்து இதனுடன் இணைத்து
4.அந்த உணர்வின் தன்மை கனத்த ஓடு கொண்ட ஆமையாகிறது.. அந்த ஓட்டிலே பார்த்தால் “வரி வரியாக” இருக்கும்.

பரிணாம வளர்ச்சியில் நாம் எப்படி வளர்ந்து வந்தோம் என்பதைக் காட்டுவதற்குத் தான் ஆமையைப் போட்டு ஞானிகள் காட்டியுள்ளார்கள். எதைக் கூர்மையாக உற்று நோக்கிப் பதிவாக்குகின்றோமோ அதற்குத் தக்க அடுத்த உடல் என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

ஆனால் கடவுளின் அவதாரத்தில் ஆமையை ஏன் போட்டார்கள்…? என்று கேட்டால் பதில் சொல்லத் தெரியாத நிலையில் தான் நாம் இருக்கின்றோம்.

“சிவசக்தி” ரூபத்தின் இரகசியம் – ஈஸ்வரபட்டர்

 

இன்னும் மனிதன்…
1.விதை முதலா…? செடி முதலா…?
2.கோழியிலிருந்து முட்டை வந்ததா…? முட்டையிலிருந்து கோழி வந்ததா…? என்ற தர்க்க வாதத்திலும்
3.புராணங்களில் படைத்த காவியங்களை அதன் மையக் கருவைப் பிரித்து உணரும் ஆற்றல் இல்லாதும் வாழ்கின்றனர்.

அறிவாற்றலும் செயல் அவயங்களும் வளர்த்துக் கொண்ட மனிதன் தன் வளர்ச்சியை உணராமலும்… வளர வேண்டும் என்ற நிலையற்றும்… இயற்கையின் உண்மை வளரும் வளர்ச்சியை அறியாமலும்… வாழ்கின்றான்.

குணத்திலும் பல நிலைகள் உண்டு. மனத்திலும் பல நிலைகள் உண்டு. ஒலியிலும் பல உண்டு. இதன் அடிப்படை வளர்ச்சி பல கோடிக் கோடி உண்டு.

நம் பூமியின் ஜீவ சக்தியே காற்றும்.. ஒலியும்… நீரும்… தான். இஜ்ஜீவ சக்தி இப்பூமியைச் சுற்றி இருக்கும் காற்று மண்டலத்திற்கு அப்பால் இல்லை.

இந்தப் பூமிக்கு ஜீவன் பூமியேதான் எடுத்துக் கொள்கின்றது. பால்வெளி மண்டலத்தில் அந்தந்த இடங்களில் உள்ள அமில குணங்களின் சுழற்சி கொண்ட சீதோஷ்ண நிலை படர்ந்துள்ளது.

நம் பூமியின் காற்று மண்டலத்திற்கப்பால் உள்ள பால்வெளி மண்டலத்திற்குச் சென்று விட்டால் நம் பூமியில் உள்ளதைப் போன்ற ஜீவ சக்தி மாறு கொள்கின்றது.

“ஜீவ சக்தி…” என்பது பூமியின் சுழற்சியில் பூமி ஈர்த்து வெளிக் கக்கும் ஆவியினால் – அந்தக் காற்று மண்டலத்தின் சுழற்சியில் பூமியின் சுழன்று ஓடும் ஓட்டத்தினால் இந்த ஜீவ சக்தி அமில குணம் கொண்டு ஓடுகின்றது.

பூமிக்குச் சொந்தமானது தான் பூமியைச் சுற்றிக் கொண்டுள்ள இந்தப் பத்துப் பதினைந்து மைல் நிலையில் உள்ள காற்று மண்டலம்.

முந்தைய வினா போன்று சக்தி பெரிதா… சிவன் பெரிதா…? என்ற வினாவும் மனிதரிடன் உண்டு. மனித ஆத்மாக்கள் உணராத முறையில்…
1.சில சித்தர்கள் தான் அறிந்ததை… உணர்ந்ததை… மறைமுகமாக்கி
2.சரி பாதி சிவனும்… சரி பாதி சக்தியுமாக…!
3.ஆண்டவனின் ரூபத்திற்கு மனித பிம்ப உருவைக் கல்லில் வடித்துக் காட்டினார்கள்.

எந்த ஒரு அமில பிம்பமும்… அமிலம் திடமாகி அந்தத் திடத்தில் எடுக்கும் ஒளி என்ற சக்தியினால் ஜீவன் கொண்டு…
1.அதன் சுழற்சியில் அமிலமும் கூடுகின்றது.
2.அமிலத்தின் வளர்ச்சியைக் கூட்டினால் அதன் ஈர்க்கும் சக்தி ஒளி அதிகப்படியாக வளர்ச்சிக்கு வருகின்றது.

நம் பூமியும் மற்ற எல்லா மண்டலங்களின் ஆரம்ப ஜீவன்… “சிவ சக்தி…” என் பிம்ப வளர்ச்சி கொண்டது தான்.
1.அமிலமான திடப் பொருள் தான் சிவனாகவும்
2.அமிலமுடன் ஈர்க்கப்பட்ட காந்த ஒளி நிலை தான் சக்தியாகவும் ஆனதப்பா…!

அமில பிம்ப சிவன் ஈர்க்கா விட்டால் சக்தியின் காந்த அலை பாய்ந்து அக்காந்த அலைக்கும் சக்தி இருக்காது. அதே போன்று அமில குண திட பிம்ப சிவத்தில் அச்சக்தி ஒளி பாயாவிட்டால் ஜீவன் பெற முடியாது.

இதன் வளர்ச்சி நிலை தான் எல்லாமில் எல்லாமாக வளர்ந்து… “வளர்ச்சி கொண்ட அண்ட சராசரங்களும் அனைத்து ஜீவ சக்திகளும்…” உருவாகி இயங்கிக் கொண்டுள்ளதப்பா…! இதில் சக்தி பெரிதா…! சிவன் பெரிதா…? என்ற கேள்விக்கு இடமில்லையப்பா…!

1.சக்தி இல்லாவிட்டால் சிவன் இல்லை.. சிவன் இல்லாவிட்டால் சக்தியும் இல்லை.
2.பிம்பம் தான் “சிவம்..” பிம்பத்தின் ஜீவன் தான் “சக்தி…”
3.சக்திக்கும் ஜீவனுக்கும் அப்பாற்பட்ட ஆதி சக்தியின் நிலையை உணர்ந்து வளர வேண்டுமப்பா..! (அனைத்திலுமே)

சிவன் ஆணுமல்ல… சக்தி பெண்ணுமல்ல…! ஒவ்வொரு ஜீவனிலும் சக்தியும் சிவனும் இருந்தால் தான் அஜ்ஜீவன் வாழ முடியும். சித்தர்களினால் மறைமுகமாக மறைத்து வெளிப்படுத்திய நிலை தான் இந்த ஜீவ சக்தி உருவ நிலை…!

விதை முதலில் வந்ததா..? செடி முதலில் வந்ததா…? என்ற வினாவிற்கு அறிவாற்றலின் மனிதன் தன் எண்ணத்தைச் செயல்படுத்தினால் ஆரம்ப வளர்ச்சியான செடியிலிருந்து விதை…! என்ற உண்மையை உணரலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

காலையிலிருந்து இரவு வரை நாம் பார்த்தது கேட்டது நுகர்ந்தது அனைத்தும் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று நம் உடலுக்குள் எத்தனையோ உணர்வுகளாக உருவாகிக் கொண்டே இருக்கின்றது. சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்ததில் தீமை செய்யும் உணர்வுகளும் உண்டு.

அப்படி உருவான அணுக்களுக்கு உணவு தேவை. நாம் நுகரப்படும் பொழுது அந்தந்த எண்ணத்தின் நினைவே வருகின்றது.

இதிலிருந்து நாம் எவ்வாறு மீள வேண்டும்…? என்பதற்காகத்தான் அதிகாலையில் துருவ தியானத்தின் மூலம் விண்ணிலிருந்து வரும் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று சொல்கிறோம்.

ஈஸ்வரா… என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி… அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும்… எங்கள் இரத்தநாளங்களில் அது கலக்க வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வை உடலுக்குள் செலுத்த வேண்டும்.

1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவர கண்ணின் நினைவு கொண்டு அங்கே செலுத்தும் பொழுது
2.நம் கண் ஈர்ப்பின் தன்மை இங்கே வருவதை (தீமை செய்யும் உணர்வுகளை) ஈர்ப்பதில்லை.
3.நினைவின் தன்மை விண்ணிலே செல்லும் பொழுது மேல் நோக்கிய சுவாசம் இங்கே உருவாகின்றது.

அதே சமயத்தில் அந்த அருள் சக்திகளை நம் உடலுக்குள் செலுத்தி அது வலு பெறும் பொழுது நமக்குள் இருக்கும் எத்தனையோ கொடிய உணர்வுகளை அது வலு இழக்கச் செய்கிறது.

கொடிய உணர்வுகள் என்றால்… பத்திரிக்கை வாயிலாகவோ டி.வி மூலமாகவோ பிறர் செய்த கொடிய செயல்களைப் பார்த்துப் படித்திருந்தாலும்.. வேடிக்கையாக அல்லது பொழுது போக்காக என்று எண்ணினாலும்… அது எல்லாம் நமக்குள் பதிவாகி விடும்.

அப்படிப் பதிவான உணர்வுகள் விளைந்த பின் நம் உடலில் உள்ள நல்ல அணுக்களைக் கொன்று புசித்திடும் நிலையாக வளர்ந்து விடும்.

1.அதை எல்லாம் மாற்றிடும் சக்தி நாம் பெற வேண்டும்
2.அந்தத் தீமைகள் நமக்குள் விளையாது தடுத்துப் பழக வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் பெற்றுப் பேரொளியாக மாறும் திறன் நாம் பெறவேண்டும்.

அந்த அருள் உணர்வின் தன்மையை நுகர்ந்து நமக்குள் அறியாது வந்து சேரும் தீய வினைகளையும் பகைமைகளையும் அகற்றிட வேண்டும்.

அதை அகற்றிடும் மார்க்கத்தைத்தான்… உடல் அழுக்கைப் போக்குவது போல்
1.தன் வாழ்க்கையில் கவர்ந்து வந்த தன் ஆன்மாவில் பட்ட அழுக்கைப் போக்க
2.அதிகாலை துருவ தியான நேரத்தில் அந்த அருள் ஒளியைப் பெருக்க
3.அந்த அழுக்கினை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து மேலே சென்று விடுகிறது.

நமக்குள் தெளிந்த மனம் வருகிறது. இதை மீண்டும் மீண்டும் நாம் நினைவில் கொண்டால் அந்த ஒளியான அணுக்கள் நமக்குள் பெருகுகின்றது.

எந்தச் சந்தர்ப்பத்திலும் தீமை என்று நுகர்ந்தாலே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலிலே வலுவாக்கிக் கொண்டு நமக்குள் அருள் ஞானத்தை வளர்க்கும் பேரருளைப் பெருக்கும் உணர்வுகளைப் பெறவேண்டும்.

அப்பொழுது தான் அந்தத் தீய உணர்வின் வித்து வளராது. அதற்குண்டான சத்து இல்லை என்பதால்…!

உதாரணமாக விவசாயத்தில் பயிர்களை வளர்க்கப்படும் பொழுது
1.அந்த இன வித்துக்களை மீண்டும் மீண்டும் ஊன்றவில்லை (மகசூல்) என்றால்
2.ஈர்க்கும் சக்தி இழந்தால் அந்தச் செடியின் சத்துகளே மறைந்துவிடும்
3.ஏனென்றால் சூரியன் அழைத்துச் சென்றுவிடும்.
4.பூமியிலே ஈர்க்கும் வன்மை இல்லை என்றால் அது கரைந்துவிடும்.
5.பின் அந்த இனத்தை உருவாக்கும் அந்த உணர்வின் தன்மையை இழந்துவிடும்.

முந்தைய காலங்களில் நெல் வகைகளில் “தலைவிரித்தான்” என்று ஒரு வகை உண்டு. அதற்குப் பெயர் தொப்பி என்றும் வைப்பார்கள். அந்த ரக அரிசியே காலத்தால் மறைந்தது. இணை சேர்த்து அது மாறியது.

அந்த வித்தே இன்று இல்லை… அதை வளர்த்த உணர்வின் சத்துகளை சூரியன் கவர்ந்து சென்று விட்டது. இப்பொழுது அத்தகைய நெல்லும் இல்லை.

இருந்தாலும் அத்தகைய வித்து ஒன்றை ஊன்றினாலும் அது இழுத்துக் கொண்டு போகிறது. விளையாது… மண்ணுடன் மடிந்தே விடும்.
1.இத்தகைய உணர்வின் சத்து தாவர இனங்களுக்கும் அதுவே
2.நம் உடலில் உள்ள உணர்வுகளுக்கும் அதுவே.

இது போன்று இந்த இயற்கையின் நிலைகளை நாம் உணர்ந்தறிந்து இந்த வாழ்க்கையில் நாம் எவ்வாறு வாழ வேண்டும்…? என்று உண்மையை உணர்த்துவது தான் விநாயகர் தத்துவம்.

வானிலே ஒளி நட்சத்திரமாக நாம் மாற வேண்டும் – ஈஸ்வரபட்டர் 

நம் பூமியின் ஈர்ப்பிற்கு சக்தி தரும் காந்த மின் அலையின் வளர்ச்சிக்கு ஊற்றாக அமையப் பெற்றது தான்
1.உலகின் மூன்று இடங்களில் உள்ள “காந்த மின் கிணறுகள்…!”
2.கடலுக்கடியில் ஒன்று.. பாலைவனத்தில் ஒன்று… மலைப் பகுதியில் ஒன்று…! என்று ஏற்கனவே சொல்லியுள்ளேன்
3.இக்காந்த மின் கிணறுகளின் ஈர்ப்பு அதிகப்பட்டுப் பட்டு வளர்ச்சிப்படுமேயானால்
4.நம் பூமிக்கு… பூமியின் ஈர்ப்பு சக்தி அதிகப்படும்.
5.அதனால் அதிகப்படியான ஜீவ இன வளர்ச்சிக்குகந்த சத்து அமில நிலையைத் தர வல்ல தாவரங்களின் இயற்கை வளம் பெருகியிருக்கும்.

நம் பூமியைக் காட்டிலும் வியாழனும் சூரியனும் வளர்ந்துள்ளது. அவைகள் நம் பூமியை விட அதிக ஈர்ப்புக் குணமுடையதாக வளர்ந்து மற்ற எல்லா மண்டலங்களுக்கும் அதன் சக்திக் குணத்தைத் தருகின்றது.

1.அந்த வியாழனைப் போன்று வளர்ந்து பெருக்கும் நிலை நம் பூமிக்கு இப்பொழுது குறைவுபட்டுள்ளது.
2.நம் பூமியும் கன விகிதத்தில் வளர்ந்து தான் வருகிறதேயன்றி
3.தன் ஈர்ப்பின் சக்தியை வளர்க்க முடியாத நிலை ஆகிவிட்டது.

காரணம் இன்றைய கலி மனிதன் தன் விஞ்ஞான செயற்கை மின் அலையைக் காண சூரியனின் சக்தி அலையை
1.நம் பூமி ஈர்க்கும்… பூமியின் இயற்கை வளர்ச்சியைத் தடைப்படுத்தி
2.அதைச் செயற்கை மின்சாரமாகக் கண்டு எடுத்து விட்டான்,

பூமியின் ஈர்ப்புக் காந்த சக்திக்குக் கிடைக்க வேண்டிய ஆகார நிலையை… அது எடுத்து… உண்டு… வளர்ந்து… பலன் காணும் முன்… இன்றைய கலி அறிவு மனிதனால் துரித நிலையில் மின்சாரம் கண்டு பூமியின் வளர்ச்சிக்கும் வருங்கால உயிரினங்களின் வளர்ச்சி நிலைக்கு மாற்றம் தரவல்லவனாகி விட்டான் “இன்றையக் கலி மனிதன் தான்…!”

இக்கலி மனிதனால்… “அவன் அறிவாற்றல்” என்ற மேம்பாட்டில் கண்ட “செயற்கையினால்…!” பல கோடி உயிரணுக்களின் சக்திக் கலவையாகக் கலந்து வாழ்ந்து… தான் வாழ்வதோடு மட்டுமல்லாமல்
1.வளர்ந்து கொண்டே சுழன்றோடும் இந்தப் பூமியின் நிலையைத் தன் செயலுக்காக
2.மின் அலையைப் பாழ்படுத்தியதனால் பூமியின் இயற்கையையே பாழ்படுத்திவிட்டான்.

இதனின் நிலையை மாற்றி நம் பூமி வளரத்தான்… இக்கலி மாறி கல்கியாக வருவதற்குத்தான் பல கோடிச் சித்தர்களும் சப்தரிஷிகளும் செயல் கொள்கின்றனர்.

இக்கலி மாறும் தருணத்திற்குள் இந்தப் பூமியின் அமிலக் குணத்துடன் ஒன்றி வாழ்ந்த மனித இனக் குண சக்தி இருந்தால் தான் மீண்டும் மீண்டும் மண்டல சக்திகளும்… எந்த ஒரு புதிய படைப்பு நிலையும் வளர்க்க முடியும்.

எண்ண சக்தியின் வளர்ச்சி நிலை கொண்ட அமில… குண ஜீவன்.. மனிதனிலிருந்து தான் இந்நிலை வளர முடியும் என்ற உண்மையில் தான் சப்தரிஷிகளும் அவர்களின் ஆசி பெற்ற சித்தர்களும் செயல்படுகின்றனரப்பா…!

கூரை அமைக்கத் தூணோ சுவரோ தேவை, அது போல் இம்மனித ஆத்மாக்களின் எண்ண வளர்ச்சியின் மேம்பாட்டில் தான் மண்டல வளர்ச்சி உண்டு… மற்றெல்லா வளர்ச்சியும் உண்டு.

இதன் நிலையை உணர்ந்து ஒவ்வொரு மனித ஆத்மாவும் இஜ்ஜீவ உடல் பிம்ப நிலையிலிருந்து தன் உயிரணுவான காந்த உயிர் சக்தியை நல்ல நிலையில் எடுக்கும் எண்ணம் கொண்டு இந்த உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களையும் வீரிய சக்தி பெறும் வழித் தொடர்படுத்திடல் வேண்டும்.

தான் எடுக்கும் ஜெப நிலையால் தன் உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களும் ஒளி பெற்று தானாக ஓர் உயிரணு ஆத்மாவுடன் பல கோடி அணுக்களும் ஒன்றுபட்டுச் செயல்படுமானால்
1.அதன் சக்தி ஜெபத்தினால் எடுக்கும் நுண் அலையின் தொடர்பைக் கொண்டு
2.பலவாகப் படர்ந்துள்ள சப்தரிஷிகளின் ஒளி அலையைப் பெற்று
3.அவர்களின் தொடர்பின் மூலம் பல செயல்களை இந்த உயிராத்மாவினால் வளர்க்க முடியும்.

ஏனென்றால் வாழ்க்கையின் பொருள் என்பது வாழும் காலங்களில் பிறர் போற்றித் துதித்து… “மடிந்த பிறகு…. புகழாஞ்சலி பெறுவதல்ல…!”

இம்மனிதப் பிம்ப வாழ்க்கையில் எடுக்கும் ஒளி அலையின் நிலையின் வளர்ச்சி தான் எல்லாவித இயற்கைக் குண வளர்ச்சி மண்டலங்களின் சக்தியும் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

இப்பொழுது வாழும் குறுகிய கால வாழ்க்கையில்
1.இந்தச் சந்தர்ப்பத்தைக் குறுகிய நிலைப் புகழுடன் மங்க விடாமல்
2.பேரண்டப் பெரு நிலை என்ற உயர்ந்த அண்டமாகும் சக்தி நிலையைப் பெறும் தகுதிக்குத் தான்
3.யாம் இங்கே தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும் பாட நிலையின் உண்மை நிலை.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் நாம் நல்லதைச் செய்தாலும் பிறருடைய கஷ்டங்களைக் கேட்டறிந்து தான் அவர்களுக்கு நாம் உதவிகளைச் (தர்மத்தை) செய்கின்றோம்.
ஆனால் அவர்கள் கஷ்டப்பட்ட உணர்வுகளோ வலிமை கொண்டது… நாம் நுகரும்போது அது வாலி (எதிர்நிலை) ஆகிவிடுகின்றது. நாம் நல்லதுதான் செய்கின்றோம். இருந்தாலும்…
1.மற்றவர்கள் துன்பப்பட்ட உணர்வுகள் நமக்குள் வந்த பின்
2.இரக்கம் ஈகை என்று நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை மடியச் செய்து விடுகின்றது.

பாவம்… அவர்களின் தரித்திரம் இப்படி இருக்கின்றது…! என்று ஏங்கி நாம் சுவாசித்ததை நம் உயிர் அந்த உணர்வால் உணரச் செய்கிறது. அந்த உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறுகின்றது.

அவர்கள் பட்ட வேதனையும் சோர்வான உணர்வுகளும் நமக்குள் உமிழ் நீராக மாறி… நாம் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்து விடுகின்றது.

சிறுகுடல் பெருங்குடல் உருவாக்கிய அணுக்களில் இந்த விஷத்தின் தன்மை பட்ட பின் அது ஜீரணிக்கும் சக்தியை இழந்து விடுகின்றது. சிறு குடல் பெருகுடலை உருவாக்கிய அணுக்கள் அந்த விஷத்தால் மயக்கம் அடைகின்றது.

உதாரணமாக ஒரு விஷத்தினை உட்கொண்டால் உடல் முழுவதும் படர்ந்து நம்மை எப்படி அது மயக்கம் அடையச் செய்கின்றதோ அதே போல்
1.நாம் சுவாசித்த மற்றவரின் வேதனையான உணர்வுகள் உமிழ் நீராக மாறி
2.சிறு குடலுக்குச் சென்ற பின் சாப்பிட்ட ஆகாரத்தை ஜீரணிக்கும் சக்தியை இழக்கச் செய்து விடுகின்றது.
3.மற்றவர்கள் பட்ட வேதனை எதுவோ அதன் உணர்வு நம்மை அன்றைய தினம் இந்த உபாதை (அஜீரணம்) அடையச் செய்கின்றது.

செல்வம் இருந்தது என்ற நிலையில் நல்ல சத்துள்ள ஆகாரத்தைத் தான் சாப்பிட்டோம். பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணினோம்… உதவியும் செய்து விட்டோம்.

ஆனால் உதவி செய்யும் போது நாம் கேட்டுணர்ந்த வேதனையான உணர்வுகளைச் சுவாசிக்கும்போது நமக்கு இந்த நிலை (உடலில் உபாதை) ஆகின்றது.

ஆனால் அவர்கள் பட்ட வேதனை நமக்குள் எப்படி வருகிறது…?

அவர்கள் உடலில் விளைந்த வேதனைப்படும் உணர்வுகள் வெளிப்படும் போது சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம் கவர்ந்து கொள்கிறது. அந்த வேதனையை இயக்கச் செய்யும் அணுவாக மாறுகின்றது.

நாம் அவர்களை உற்றுப் பார்க்கும் போது அந்த உணர்வு தான் நம்மை இயக்குகின்றது. இயக்கிய உணர்வுகளை நாம் நுகர்ந்தால் அது உமிழ் நீராக மாறி உடலில் கலக்கப்படுகின்றது.

1.வேதனை என்றாலே விஷம்.
2.ஆக விஷமான உமிழ் நீராக அது மாறி ஆகாரத்துடன் கலந்து அமிலமாகி இரத்தமாகின்றது.
3.அந்த வேதனையான உணர்வுகள் இரத்தத்தில் குடிகொண்டு
4.விஷத்தின் தன்மையை இயக்கும் ஒரு கருத்தன்மை அடைகின்றது.

இப்படி… மற்றவர்கள் உடலில் விளைந்த வேதனையின் உணர்வுகள் அணுக்களாக விளைந்து நம் உடலில் உள்ள நல்ல குணங்களைக் கொல்ல ஆரம்பித்து விடுகின்றது.

ஆனால் நாம் யாரும் தவறு செய்யவில்லை. இருந்தாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் இதைப் போன்று பல நிலைகள் வருகின்றது.

அதே போல் தொழிலுக்குச் செல்கின்றோம். அங்கே பிறர் செய்யும் தவறுகளைப் பார்க்கின்றோம்… பிறர் சொல்லும் குறைகளைக் கேட்கின்றோம். வெறுப்பு வேதனை போன்ற உணர்வுகளை நுகர்கின்றோம்… அறிகின்றோம்…!

குறைகளையும் தவறுகளை நீக்க அதற்கு வேண்டிய உபாயங்களைச் சொல்கின்றோம். உபாயங்களைச் சொல்லிவிட்டு வந்த பின் நம் உடலில் தீமை வருகின்றது…! எப்படி…?

குறைகளைச் சொல்வார்கள்… அது என்ன… ஏது…? என்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று விரும்புவோம். ஆனால் அவர்களோ சொல்லிக் கொண்டே இருப்பார்கள். கடைசியில் நம்மைச் சோர்வடையச் செய்து விடுவார்கள்.

1.அன்றைய தினம் இதை எல்லாம் கேட்டு
2.அதன் பின் வந்து ஆகாரத்தை உட்கொண்டால் சரியாகச் சாப்பிட முடியாது
3.அதே உணர்வின் இயக்க அணுவாக இரத்தத்தில் மாறுகின்றது.
4.இரத்தத்தில் இப்படி மாறிய பின் உடல் முழுவதும் படர்கின்றது.
5.நம் உடலில் கெட்ட அணுக்கள் சேர ஆரம்பிக்கிறது.

இப்படித்தான் நமக்குள் தீமைகள் வருகின்றது.

ஏனென்றால் நாம் எண்ணிய உணர்வுகளை நம் உயிர் ஓ..ம் நமச்சிவாய… ஓ..,ம் நமச்சிவாய…! என்று உடலாக (நமதாக – சிவமாக) ஆக்கிக் கொண்டேயுள்ளது.

நாம் எண்ணுவது அனைத்தையும் ஓ… என்று பிரணவமாக்கி ம்… என்று நம் உடலாக மாற்றிக் கொண்டே இருப்பது தான் உயிரின் வேலை.

சலிப்படைந்த சங்கடப்பட்ட உணர்வுகள் எல்லாம் நமக்குள் ஓ…ம் நமச்சிவாய என்று நம் உடலுக்குள் ஆனபின்… அவர் இப்படிப் பேசினார்… அதிலே குறைகள் இப்படி இருந்தது… நான் உதவி செய்தேன்…! என்று எல்லாம் முதலிலே சொல்வோம்.

ஆனால் கடைசியில் பார்த்தால் நமக்குள் உருவாகும் அணுக்கள் விளைந்த பின் நம் உடலிலும் அதே உணர்வின் இயக்கமாகி “சிவாய நம ஓ…ம் என்று அதே உணர்வின் சொல்லாக வரத் தொடங்கி விடுகின்றது.

1.ஆக… அவன் உடல் நலிந்தது நம்முடைய உடலும் நலியத் தொடங்குகிறது
2.அவன் உணர்வு குறைந்தது… நம்முடைய நல்ல குணமும் குறையத் தொடங்குகிறது.

இதை எல்லாம் மாற்ற வேண்டுமா இல்லையா…?

நம்மை அகஸ்தியராக மாற்றச் செய்யும் தியானம்

 

1. அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் தாய் தந்தையர் பெற அருள்வாய் ஈஸ்வரா
2. ஞானகுருவின் அருளால் விண்ணிலிருக்கும் அகஸ்தியனின் ஸ்டேசன் (அலைவரிசை) எங்களுக்குள் ஆழமாகப் பதிவாக வேண்டும் ஈஸ்வரா
3. தியானத்தில் எங்கள் நினைவின் ஆற்றல் “அகஸ்தியன் சென்ற பாதையிலேயே செல்ல” வேண்டும் ஈஸ்வரா
4. பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்… அகஸ்தியர் தாய் கருவிலே பெற்ற பல அற்புத சக்திகளையும் பச்சிலைகள் மணங்களையும் மூலிகைகளின் வாசனைகளையும் அருள் தாவர இனச் சத்துகளையும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
5. தாய் கருவிலிருக்கும் போது நஞ்சையே ஜீரணித்து அடக்கிடும் ஞான சக்தியாக விளைந்த அந்த அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
6. அகஸ்தியன் பிறந்த பின் தரையில் மல்லாந்து படுத்திருக்கும் போது விண்ணை நோக்கிப் பார்த்து எந்தெந்த உணர்வுகளை நுகர்ந்தாரோ… அதை எல்லாம் பெற வேண்டும் ஈஸ்வரா
7. அகஸ்தியன் பிஞ்சு உள்ளத்தில் பெற்ற பிரபஞ்சத்தின் ஆற்றலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
8. அகஸ்தியன் நுகர்ந்த பல கோடித் தாவர இனங்களின் சக்திகளை… அந்த அகஸ்தியரின் அருள் மணங்களை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
9. அகஸ்தியன் துருவனாகும் போது பெற்ற நஞ்சினை வென்ற அருள் ஞான சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
10. அகஸ்தியன் ஆதியிலே வெளிப்படுத்திய “உண்மையான சக்திகளை” நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
11. அகஸ்தியன் அவன் வாழ்ந்த காலத்தில் நஞ்சினை வென்று வெளிவிட்ட மூச்சலைகளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
12. அகஸ்தியன் தான் கண்டுணர்ந்தவைகளை தன் இன மக்கள் பெற வேண்டும் என்ற இச்சையில் வெளிப்படுத்திய உணர்வலைகளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
13. அகஸ்தியன் தான் கண்ட பேருண்மைகளைத் தன் இன மக்கள் அனைவரும் பெறுவதற்காகக் கூறிப் பதிய வைத்த குறிப்புகளை இந்த உலலில் வாழும் மக்கள் அனைவரும் பெற வேண்டும் ஈஸ்வரா
14. அகஸ்தியர் உணர்வுகள் அனைத்தும் எங்களுக்குள் பதிவாகி கருவாகி அணுவாகிட அருள்வாய் ஈஸ்வரா
15. அகஸ்தியன் பாதம் பட்ட இடங்களில் பதிந்துள்ள விண்ணின் ஆற்றல்களை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
16. வானஇயல் புவியியல் உயிரியல் மூன்றையும் அறிந்த அகஸ்தியரின் ஆற்றல் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
17. தன்னை அறிந்த… விண்ணை அறிந்த அகஸ்தியரின் ஆற்றலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
18. தன் எண்ணத்தை எங்கும் செலுத்தி எதனையும் அறிந்திடும் ஆற்றலை வளர்த்துக் கொண்ட அகஸ்திய மாமகரிஷியின் ஆற்றலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
19. அகஸ்தியன் நேரடியாகப் பார்த்துணர்ந்த பிரபஞ்சத்தின் இயக்கத்தை நாங்கள் காண வேண்டும் ஈஸ்வரா
20. எல்லாவற்றையும் வென்றிடும்… அடக்கிடும்… இயக்கிடும்… ஆற்றல் கொண்ட நட்சத்திரங்களின் ஒளிக் கற்றைகளை நுகர்ந்த அகஸ்தியரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
21. ஒளிக்கதிரில் நுண்ணிய அலைகளைப் பார்க்கும் ஆற்றலைப் பெற்ற அகஸ்தியரின் நுண்ணிய ஆற்றலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
22. மின்னலைப் போன்று எல்லாவற்றையும் ஊடுருவிச் செல்லும் அகஸ்தியருடைய நினைவாற்றல் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
23. அகண்ட அண்டத்தையும் தன் எண்ணத்தால் எட்டிப் பிடிக்கும் ஆற்றல் கொண்ட அகஸ்தியரின் அருளாற்றல் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
24. 27 நட்சத்திரங்களின் சக்தியை எடுத்து ஒளியாக மாற்றிய அகஸ்தியரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
25. விண்ணின் ஆற்றலைப் பஸ்பமாக்கிய அகஸ்தியரின் அருள் சக்தி நாங்கள் பெற்று என்றுமே அழியாத வேகா நிலை பெற அருள்வாய் ஈஸ்வரா
26. சர்வ ரோகங்களையும் சர்வ பிணிகளையும் சர்வ தோஷங்களையும் போக்கக் கூடிய அகஸ்தியரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
27. நஞ்சினை வென்றிடும் அகஸ்தியரின் அருள் உணர்வுகள் எங்கள் இரத்தங்களில் கலந்து அணுக்கருக்களாக உருவாகி நாங்கள் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
28. அகஸ்தியரும் அவர் மனைவியும் ஒன்றி வாழ்ந்த வாழ்க்கை நாங்கள் வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
29. பேரண்டத்தின் அகண்ட நிலைகளில் பேரானந்தப் பெரு நிலை கொண்டு வாழும் அகஸ்தியனைப் போன்று நாங்கள் வாழ வேண்டும் ஈஸ்வரா
30. நாங்கள் அனைவரும் அகஸ்தியரின் ஈர்ப்பு வட்டத்திலே என்றுமே இணைந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
31. பூமியைச் சமப்படுத்திய அகஸ்தியன் உணர்வுகளை நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா
32. உலகெங்கிலும் இருளை அகற்றிடும் உணர்வுகளாக விளைந்த அகஸ்தியரின் பேரருள் பேரொளி நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா
33. உலகைக் காக்கும் சக்தியாக… அகஸ்தியனுடைய வாக்கு எங்கள் அனைவருக்குள்ளும் பிரதிபலிக்க வேண்டும் ஈஸ்வரா
34. “அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக உருவான மரபணுவை” இந்த உலக மக்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா
35. நட்சத்திரங்களின் ஒளிக்கற்றைகளைச் சேர்த்து சேர்த்து உயிரைப் போன்று ஒளியாக மாற்றிய எத்தகைய நஞ்சையும் ஒளியாக மாற்றிடும் அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
36. அகஸ்தியர் உணர்வைக் கவர்ந்தவர்கள் அனைவரும் மகரிஷிகளாக ஆனது போன்று நாங்களும் மகரிஷிகளாக ஆக வேண்டும் ஈஸ்வரா.

உறுதி மொழி
1. நாங்கள் ஒவ்வொருவரும் அகஸ்தியரின் வளர்ப்பின் வளர்ப்பாகி… அகஸ்தியராக மாறுவோம்
2. இந்த பூமியில் உள்ள விஷத் தன்மைகளை அகற்றும் அருள் ஞானிகளாக நாங்கள் வளர்வோம்
3. அகஸ்தியரின் உணர்வைக் கொண்டு இந்த உலகில் இனி நல்ல மாற்றங்களைக் கொண்டு வருவோம்
4. உலகில் தற்பொழுது பரவி வரும் நஞ்சினை அகற்றிட அகஸ்தியனின் உணர்வைப் பரவச் செய்வோம்.

எண்ணம் எப்படித் தோன்றுகிறது…?

 

விநாயகர் தத்துவத்தில் முழு முதல் கடவுள் என்று காட்டியுள்ளார்கள் ஞானிகள். அதனின் உட்பொருள் என்ன..?

இந்த மனித உடலை நாம் என்று பெற்றோமோ… மிருக நிலையிலிருந்து மனிதனாக வளர்ச்சி அடைந்த நிலையை…
1.வினை எல்லாம் தீர்ப்பவனே விநாயகனே என்று
2.இந்த மனித உடலைக் காட்டினார்கள்.

முன் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக இந்த மனித உடலைப் பெற்ற நாம் தான் “முழு முதல் கடவுள்…” சிருஷ்டிக்கும் தன்மை பெற்றது நம்முடைய நிலைகள் என்ற இந்த நிலையை அன்று ஞானிகள் உணர்த்திச் சென்றார்கள்.

ஆகவே அதை நாம் பெறுவதற்கு நாம் என்னென்ன நிலைகள் செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொரு நொடிக்கும் நம் எண்ணத்தை நல்வழியில் நல்ல வினைகளைச் சேர்ப்பதாகச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.

எண்ணம் எங்கிருந்து தோன்றுகிறது..?

1.நாம் கண் கொண்டு பார்க்கப்படும் போது
2.ஒரு உணர்வை ஈர்த்து நமக்குள் செலுத்தப்படும் போது தான் அந்த எண்ணங்கள் தோன்றுகிறது.
3.அந்த எண்ணத்தின் உணர்வின் தன்மை நமக்குள் இயக்கப்படுகிறது… அதை மீண்டும் நுகர்கின்றோம்.

பின் எதை நாம் கூர்ந்து கவனித்தோமோ அது நமக்குள் பதிவாகிறது, மீண்டும் நினைவாகும் போது “அதே அலைகள்” எடுக்கின்றது. எண்ணமே இல்லாத நிலைகளில் அந்த எண்ணத்தை உருவாக்குகின்றது.

பள்ளியில் படிக்கச் செல்கிறோம். முதலில் அதைப் பற்றிய எண்ணமே அற்றவர்கள் தான். அங்கே சென்ற பின் பாட நூல்களைப் படிக்கின்றோம். படிப்பின் கவனைத்தைச் செலுத்தப்படும் போது அந்த எண்ணங்கள் உருவாகின்றது… தோன்றுகிறது

அந்த எண்ணத்தை மீண்டும் நாம் எண்ணும் போது அது வலிமை வருகின்றது. ஆனால் பாடத்தைப் படிக்கும் போது…
1.பாட நிலைகளிலே நினைவுகள் (சிந்தனை) வேறு விதமாக இருந்தால்
2.பதிவாகவில்லை என்றால் நமக்கு ஞாபக சக்தி இல்லை என்று பொருள்.

அடுத்து அதனின் ஞாபகம் வருவதில்லை. தானாகவும் வருவதில்லை… மீண்டும் எண்ணினாலும் நமக்குள் வருவதில்லை.

எதை நம் எண்ணத்தில் “கருத்தில் கொண்டு…” அதை நாம் எடுக்கின்றோமோ அது பதிவான பின்
1.மீண்டும் அந்த நினைவுகளை எடுக்கும் போது
2.அந்த அலைகளை நாம் சுவாசித்து
3.அந்த உணர்வின் தன்மையை அறியச் செய்யும்.

ஆனால் நாம் படித்துக் கொண்டிருக்கும் போது அங்கே பதிவாகவில்லை என்றால்… அந்த எண்ணம்… அதை நாம் திருப்பி எண்ணினாலும் வராது.

பள்ளியில் படிப்பவர்கள் சிலர் எனக்கு ஞாபக சக்தியே வரமாட்டேன் என்கிறது என்றெல்லாம் சொல்கிறார்கள் அல்லவா…!

இதே மாதிரித் தான் நாம் இந்த வாழ்க்கையில் நாம் நேரடியாகப் பார்க்கப்படும் போது
1.ஒருவரைப் பார்க்கின்றோம்… அவர்கள் செயலைப் பார்க்கின்றோம். அந்த உருவத்தின் தன்மை படமாகின்றது.
2.அவர் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வுகள் அலைகளாக மாறுகின்றது.
3.நம் கண் படமெடுக்கின்றது… அந்த உணர்வின் அலைகளை நமக்குள் ஈர்க்கின்றது.
4.நாம் சுவாசித்த பின் நம் உடலுக்குள் அந்த நினைவு பதிவாகின்றது.
5.அந்த அலையின் தொடர்கள் அதனுடைய நிலைகள் வித்தாக (வினை) ஊன்றுகின்றது.
6.அந்த வித்தின் நிலைகள் மீண்டும் அதை எண்ணப்படும் போது அந்தச் செயலின் தன்மைக்கு மீண்டும் நாம் இயக்கப்படுகின்றோம்.
7.ஆகவே நமக்குள் எந்த எண்ணங்களைப் பதிவு செய்கின்றோமோ அந்த எண்ணங்கள் தான் மீண்டும் நம்மை அதன் வழிக்கு இயக்குகிறது.

இப்படித் தான் மதங்கள் ஏற்படுத்தப்பட்ட நிலைகள் அனைத்தும்
“அது ஒவ்வொன்றும் இன்னென்னது…” என்று நமக்குள் எண்ணங்களாகப் பதிவு செய்து வைத்திருக்கின்றோம்.

அந்தப் பதிவின் நிலைகளிலேயே தான் நாம் நடக்கின்றோம். அதன் வழியில் இது கெட்டது… இது நல்லது… என்று அறிந்து நாம் நடக்கின்றோம்.

குருநாதர் காட்டிய அருள் வழியிலே உங்களுக்கு ஞானிகள் கண்ட மெய் உணர்வுகளை எல்லாம் திரும்பத் திரும்பப் பதிவு செய்து கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).

1.இதை நீங்கள் தொடர்ந்து பதிவு செய்து கொண்டே வந்தால்
2.உங்களை அந்த ஞானிகளின் எண்ணங்கள் இயக்கும்… ஞானியாகவும் ஆக்கச் செய்யும்.

மனிதப் பிறவி எடுத்தது ராட்டினம் போன்று சுழன்று கொண்டே இருப்பதற்கா…? – ஈஸ்வரபட்டர்

 

காட்சி:-
உணர்ச்சி மிகுந்த மனிதன் ஒருவன் உணர்ச்சி குறைந்த எருமையில் அமர்ந்து அதனை அடித்துத் துன்புறுத்தி வண்டியில் கட்டிப் பாறாங்கற்களை ஏற்றிச் செல்கின்றான் அவ்வண்டியில்…!

விளக்கம்:-
மனிதன் தன் செயலுக்காகப் பலவற்றையும் மிருகங்களையும் மற்ற செயலுக்குகந்த பொருள்களையும் உலோகங்களையும் தன் ஜீவித வாழ் நாட்களில் சுகம் காணச் செயல்படுத்துகின்றான்.

உணர்ச்சி குறைந்த எருமை இவனைக் காட்டிலும் இவனுக்கு உபயோகமாக இருக்கின்றது. அதனால் இவன் பலன் காண்கின்றான்.

உணர்ச்சி குறைந்த எருமை தான் உணர்ச்சி மிகுந்த மனிதனுக்குப் பயன்படுகின்றது. இதைப் போன்று மனிதன் இந்தப் பூமியில் உள்ள பிற இன வஸ்துக்களையும் உயிரினங்களையும் தனக்கு உகந்ததாகப் பயன்படுத்தி வாழ்கின்றான்

1.உலக சக்தியையே மனிதனுக்குச் சொந்தமாக்கி வாழுகின்றான்… இன்றைய மனிதன் தன் அறிவின் விஞ்ஞான வளர்ச்சியினால்…!
2.ஆனால்… தன்னை உணர்ந்து தனக்குள் உள்ள உண்மை சக்தியை உணராமல் வாழ்கின்றனப்பா ஒவ்வொரு மனிதனும் இக் கலியின் கடைசிக் காலத்தில்.

காட்சி:-
ஒரு மனிதன் ஆற்றங்கரையில் அமர்ந்து இரை வைத்துத் தூண்டில் போட்டு பெரிய மீனாகப் பிடித்துச் செல்கின்றான்.

விளக்கம்:-
இன்றைய உலக நிலையும் இதன் அடிப்படை குணத்தில் தான் மனித ஆத்மாக்களின் வளர்ச்சி எண்ண வாழ்க்கை நடந்து வருகிறது.

தன் சாதகம் காண மீணுக்கு உணவு வைத்து அதனைப் பிடித்துத் தான் மனிதன் உண்ணுகின்றான். அதைப் போன்று
1.தன் வசதியான சோம்பல் மிக்க வாழ்க்கையின் சாதனைக்கு
2.சூரியனிலிருந்து பூமி ஈர்க்கும் மின் அலையையும் பூமி ஈர்த்து வளர்ந்த கனி வளங்களையும்
3.அறிவின் மேம்பட்ட கலி மனிதன் உண்டு விடுகின்றான்.

இது நாள் வரை வெளிப்படுத்தாத சில நிலைகளையும் வெளிப்படுத்துகின்றேன்.

எரிமலையையும் பனி மலையையும் பாலைவனங்களையும் ஏன் ஆழ் கடலையும் கூடக் கண்டு ஆராய்ந்து வருகின்றார்கள்.

இருந்தாலும் நம் பூமியில் மூன்று இடங்களில் இது வரை மனிதன் சென்று ஆராயாத இடங்களில் அதிகமாக காந்த ஈர்ப்புக் கிணறுகள் உள்ளனவே. இவர்கள் ஆராய்ச்சியில் ஏன் அதன் நிலைக்குச் செல்லவில்லை…?

1.பூமத்தியின் ரேகையின் மையப் பகுதியில் இக்காந்த ஈர்ப்பு ஆழ் கிணறுகள் நிறைந்துள்ளன.
2.கடல் மட்டத்தில் கீழ் இவ்வீர்ப்பு மிக அதிகப்படியாக உள்ளன.
3.மனிதன் மட்டுமல்ல…! இயற்கைக்கு மாறி எந்த நிலைகளும் அங்கு சென்றால் அதன் ஈர்ப்பில் அப்படியே ஈர்த்துக் கொள்ளும்.

பூமியின் ஈர்ப்புக் காந்த அலைக்குச் சக்தி தருவது பூமத்திய ரேகையின் மையப் பகுதி தான், ஆராயும் நிலைக்குச் செல்வதாக இன்றைய விஞ்ஞானம் உள்ளது.

இவர்கள் செலுத்திச் செயல்படும் எக்கருவியையும் தன் ஈர்ப்புடன் அவை இழுத்துக் கொள்ளும்.
1.படர்ந்து மைல் கணக்கில் இல்லை… அந்தக் காந்த ஈர்ப்பு ஆழ் கிணறுகள்.
2.இந்தப் பூமியில் குறிப்பிட்ட மூன்று இடங்களில் ஐந்து ஆறு அடி விஸ்தீரணச் சுற்றளவு கொண்டதாக அது உள்ளது.

இவர்கள் ஆராய்ச்சியில் பிடிபடுவதும் கடினம்…! கடல் மட்டத்தில் ஒன்றும் மலை மேட்டில் ஒன்றும் பாலைவனத்தில் ஒன்றும் உள்ளது.

பூமத்திய ரேகையின் மையப் பகுதியிலும் கர்நாடக மாநிலத்தில் மலைப் பிரதேசத்திலும் சகார பாலைவனப் பிரதேசத்திலும் உள்ளது. அதன் பக்கங்கள் உள்ள இடங்களிலும் அதன் ஈர்ப்பின் செயல்கள் அந்தந்த இடங்களில் படர்ந்துள்ளது.

இதை எல்லாம் உணர்ந்து தன் உயிராத்மாவை வலுவாக்கி ஒளியாக்கி விண் சென்றவர்கள் அனைவரும் என்றுமே அழியாது வாழ்கிறார்கள்.

ஆனால் இந்த உடலுக்காக என்று வாழும் நிலையில் உள்ளவர்கள் உண்மையையும் உணராது… தன்னையும் உணராது… மீண்டும் மீண்டும் இதிலே சக்கரம் சுழல்வது போல் சுழன்று கொண்டுள்ளார்கள்.

மனிதப் பிறவி எடுத்தது சுழன்று கொண்டே இருப்பதற்கா…?

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

உங்கள் உடல் முழுவதும் தலையிலிருந்து கால் வரை அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்களை அறியாது சேர்ந்த தீய வினைகள் சாப வினைகள் பாவ வினைகள் அனைத்தும் அகன்று அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுகின்றீர்கள்.

உங்கள் உடலில் அறியாது சேர்ந்த நோய்கள் நீங்கி உடலில் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகள் உருவாகி அந்த அருள் ஞான சக்தி உங்களுக்குள் பெருகும்.

நோயற்ற வாழ்வு வாழும் அருள் ஞான சக்தி உங்களிலே விளையும். நோயுடன் வந்தோர் நோய்கள் நீங்குவதை இப்போது நீங்கள் உணரலாம். கை கால் குடைச்சலோ சர்க்கரைச் சத்தோ இரத்தக் கொதிப்போ வாத நோயோ மன நோயோ இவை அனைத்தும் அகலும்.

அருள் ஞான ஒளி உங்களிலே பெருகும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடல் முழுவதும் படர்ந்து உங்கள் உடலில் உள்ள சர்வ நோய்களும் நீங்கி மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் விளைந்து உங்கள் பேச்சால் மூச்சால் பிறரை மகிழச் செய்யும் உணர்வுகள் உங்களில் விளையும். உங்களை மகிழச் செய்யும் அணுக்கள் விளையும்.

அருள் ஒளி வளரும் மெய்ப் பொருள் காணும் திறன் பெறுவீர்கள். உங்கள் பார்வையால் உங்கள் நினைவால் உங்கள் சொல்லால் பிறருடைய துன்பங்களைப் போக்கும் ஆற்றல் பெறுகின்றீர்கள்.

பிறருடைய துன்பங்களைப் போக்கும் வலு பெற்றால் பிறருடைய துன்பங்கள் உங்களை அணுகாது தடைப்படுத்த முடியும் உங்கள் உணர்வால்…!

தியானமிருக்கும் அனைவரது உடலிலும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி படர்ந்து சர்வ ரோகங்களும் நீங்கி மகரிஷிகளின் அருள் சக்தி உங்களிலே படர்ந்து மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெறுவீர்கள்.

உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களை மகிழச் செய்யும் உணர்வாகப் படரும். சகோதர உணர்வுகள் விளைந்து மத பேதமின்றி இன பேதமின்றி மொழி பேதமின்றி மன பேதமின்றி வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுவீர்கள்.

அத்தகைய அருள் சக்திகள் கொண்ட உங்கள் மூச்சலைகள் காற்றிலே படர்ந்து உலக மக்களைக் காத்திடும் அருள் சக்தியாக உங்களுக்குள் விளைந்திட குருவைப் பிரார்த்திக்கின்றேன்.

1.அருள் மகரிஷிகளின் உணர்வு உங்களில் படர
2.மகிழ்ச்சி பெறும் உணர்வை வளர்த்திட
3.அந்த உணர்வுகளை உங்கள் உயிரான ஈசன் கவர்ந்து
4.அந்த உயர்ந்த உணர்வுகளை உங்கள் உடலான சிவமாக்கி மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாக உருவாகி
5.உங்களுக்குள் மகிழ்ச்சி பெறும் சொல்லாக உருவாக்கும் சீதா இராமனாக எண்ணங்கள் தோற்றுவிக்கவும்
6.அருள் ஒளி படர்ந்து உங்களுக்குள் நல்வினையாக விளைந்திடவும்
7.மகரிஷிகள் உணர்வுகள் அரணாக உங்கள் உடலுக்கு அமைந்து
8.இந்தப் பிறவியிலேயே பேரின்பப் பெரு வாழ்வு பெற்றிடவும்
9.எண்ணியதை உங்கள் உயிரான ஈசன் உருவாக்கி அதையே பிரம்மமாக்கிடவும்
10.உங்கள் உடலைச் சொர்க்க லோகமாக்கி உங்கள் உயிரைச் சொர்க்க வாசலாக அமைத்திடவும்
11.அந்த மாமகரிஷிகளின் அருளாசி படர்ந்து பேரின்பப் பெருவாழ்வு வாழ்ந்திடவும்
12.உங்கள் பார்வையிலேயே தீமைகளை அகற்றிடவும் மெய் ஒளியைப் பரப்பிடவும்
13.என்றுமே அழிவில்லா வாழ்க்கையாக வாழ்ந்திடவும்
14.மரணமில்லா பெருவாழ்வு வாழ்ந்திடும் அருள் ஒளி உங்களில் படர்ந்திடவும்
15.உங்கள் பேச்சால் மூச்சால் உலகைக் காத்திடும் உத்தம உணர்வுகள் வளர்ந்திடவும்
16.அருள் மகரிஷிகளின் உணர்வு உங்களுக்கு உறுதுணையாக இருந்திடவும்
17.மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் வளர்த்திட குரு அருள் உங்களுக்குள் எப்பொழுதும் உறுதுணையாக இருந்திடவும்
18.அந்த அருள் ஞான குரு வழியில் உங்கள் எண்ணங்கள் அருள் ஞானத்தை வளர்த்திடும் அருள் சக்தியாக விளைந்திடவும்
19.நான் (ஞானகுரு) பிரார்த்திக்கின்றேன்… தியானிக்கின்றேன்…!

இதைக் கேட்டுணர்ந்தோர் உடல்களில் கடும் நோய்கள் குறைந்திருப்பதையும் காணலாம்.

இதைப் போன்ற அருள் சக்திகளை வளர்த்துக் கொள்ள அதிகாலை துருவ தியானத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலிலே படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள சர்க்கரைச் சத்து நீங்க வேண்டும்… இரத்தக் கொதிப்பு நீங்க வேண்டும்… நல்ல இரத்தங்கள் உருவாக வேண்டும்… நல்ல ஞானங்கள் எங்களுக்குள் வளர வேண்டும்…. ஒரு பத்து நிமிடமாவது ஏங்கிப் பெறுங்கள்.

இப்போது கொடுக்கும் இந்த அருள் ஞான வித்துக்களை உங்கள் நினைவால் நீங்கள் மீண்டும் மீண்டும் எண்ணும்போது
1.உங்கள் உயிரே அந்த அணுக்களை வளர்த்து
2.உங்களை நலம் பெறும் சக்தியாக உடலில் வளர்த்து
3.மன பலம் மன நலம் பெறச் செய்து
4.அருள் ஒளி பெறும் அருள் ஞான வழியில் அழைத்துச் சென்று
5.என்றும் பேரின்பப் பெரு வாழ்வாக வாழும் உணர்வின் உடலாக மாற்றியமைக்கும் உங்கள் உயிர்…!

நேரம் காலத்திற்குத் தான் அடிமையாக உள்ளோம்… நம் எண்ணத்தால் எதையுமே நல்லதாக்க முடியும் என்று எண்ணுகிறோமா…!

 

நல்ல நேரம் பார்த்துத் தான் நாம் செயல்பட வேண்டும் என்று ஜாதகரீதியாக நம்மைக் கட்டுப்படச் செய்து விட்டார்கள். அதன்படித்தான் இன்று பெரும்பகுதியானவர்கள் வாழ்கிறார்கள்.

ஜாதகங்களை நாம் பார்க்கப்படும் போது
1.அதிலே நல்லது எதுவுமே நடக்காது
2.ஆனால் அவர்கள் சொல்லும் கெட்டது அனைத்துமே நடக்கும்.

உதாரணமாக… பால் சத்தானதாக இருந்தாலும் அதிலே விஷம் பட்டுவிட்டால் அந்த விஷத்தின் தன்மை குடிப்போரை உடனடியாக மாய்த்துவிடும்.

ஜாதகத்தில் நல்லது இருந்தாலும்… எவ்வளவு சக்தி வாய்ந்த நிலைகள் கொண்டவராக நாம் இருந்தாலும்…
1.ஒரு வேதனை வந்துவிட்டால் நல்லதைச் சிந்திக்கும் செயல் இழந்துவிடுகிறோம்…
2.அந்த வேதனையே நம்மை ஆட்கொண்டு விடுகிறது.

அது போல் தான்… ஜாதகத்தில் சில நிலைகள் கெடுதலைப் பற்றிச் சொல்லும் போது இத்தகைய ஏற்றத் தாழ்வுகள் வந்து கொண்டே இருக்கும். அந்த நல்லதும் கெட்டதும் கலந்து கொண்டே இருக்கும்.

நல்லதை அவர்கள் அதிகமாகச் சொல்லியிருந்தாலும்
1.ஒரு வக்கிரம் (புத்தி – திசை) வந்து உங்கள் நல்லதைச் செயல்படவிடாது தடுக்கின்றது
2.அது உங்களுக்குத் துன்பத்தை ஊட்டும் என்று சொல்வார்கள்.

இது மனதில் ஆழமாகப் பதிந்து விடும்.

எல்லாமே சரியாக இருக்கிறது. ஆனால் “ஏழரை நாட்டான் சனியன்” வந்து உங்களுக்குள் எல்லாவற்றையும் மடக்கிக் கொண்டிருக்கின்றான் என்று ஜாதகக்காரன் சொன்னால் போதும். “இந்தச் சனியனை” நாம் நன்றாகப் பதியச் செய்து கொள்கிறோம்.

அடுத்து எந்த நல்ல குணம் நமக்குள் வந்தாலும் அதற்குள் இந்த உணர்வை மீண்டும் மீண்டும் சேர்த்து… நாம் பேசும் போதெல்லாம் ஜாதகக்காரன் பதிவு செய்த உணர்வு… இந்த விஷத்தின் தன்மை கொண்டு இது முன்னணியிலே வந்துவிடும்.

அந்தச் சனியிலிருந்து மீட்டுவதற்காக வேண்டி இந்த ஆலயத்திற்குப் போ… அந்த ஆலயத்திற்குப் போ…! இவ்வளவு பணத்தை நீ செலவழி… யாகத்தை வளர்த்து மந்திரத்தை ஜெபித்தால் நல்லதாக இருக்கும்… என்று சொல்வார்கள்.

அதன் படி நாம் செய்வோம். அந்த எண்ணத்தைச் சிறிதளவு கட்டுப்படுத்தும்.

ஏனென்றால் ஏழரை நாட்டான் பிடித்துவிட்டான் என்று காதிலே கேட்டோம். அதைக் கட்டுப்படுத்துவதற்காக ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். அதனால் கொஞ்சம் குறைக்க முடிந்தது.

இது அல்லாதபடி இன்னொன்றும் சொல்வார்கள்…! உங்கள் இரண்டாவது பிள்ளைக்கு “ஒரு கண்டம் இருக்கிறது…! அவனைக் கொஞ்சம் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்…” என்று சொல்லி வைத்துவிடுவார்கள்.

இரண்டாவது பிள்ளைக்கு நான்காவது வயது வரப்படும் போது பஸ்ஸிலேயோ வாகனத்திலேயோ விபத்து இருக்கிறது என்று பதிவு செய்து விடுவார்கள். குழந்தை பிறந்த பிற்பாடு ஏழரை நாட்டான் சனியன் பிடித்ததனால் இப்படிச் சொல்வார்கள்.

அதற்கப்புறம் பார்த்தால் வியாபாரமோ தொழிலோ மற்ற காரியங்களோ எல்லாமே மந்தமாகிவிடும். பஸ்ஸிலே விபத்து வரும் என்ற நினைவு மனதிலே டுக்… டுக்… டுக்.. என்று ஓடிக் கொண்டே இருக்கும்.

பிள்ளை ரோட்டிலே விளையாடப் போனால் போதும்.
1.ஜோசியக்காரன் சொல்லியிருக்கின்றானே… என்ன ஆகுமோ…?
2.அவன் சொன்னது எப்பொழுது நடக்குமோ…? என்று பிள்ளைப் பாசத்தால் தாய் பதறும்.
3.துடுக்.. துடுக்… என்ற பயத்தால் தாயிடமிருந்து இந்த அலைகள் போனவுடனே அவனை ஞாபகமறதியாகச் செல்லச் செய்யும்.

ரோட்டிலே பஸ் போய்க் கொண்டிருக்கும்.
1.தாயின் எண்ணம் பாய்ந்து கவனம் இல்லாது அவன் ரோட்டைக் கடப்பான்… அடிபடுவான்.
2.நான் நினைத்தேன்… கரெக்டாக நடக்கிறது…! என்பார்கள்.

ஏழரை நாட்டான் சனி பிடித்தால் இப்படி நடக்கும் என்று சொன்னான் அல்லவா…! என்று அந்தக் கெட்டது இப்படித் தான் நடக்கும்.

இதுகள் எல்லாம் எங்கிருந்து உற்பத்தி ஆகிறது…? என்று நீங்கள் கவனித்துப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

அது மட்டுமல்ல…! எல்லாம் வக்கிரத்தில் இருக்கிறது அதனால் “உனக்குக் குழந்தை இல்லை…” என்று விஷத்தை ஊட்டிவிடுவார்கள். அதற்கு இன்னென்ன சாஸ்திரம் செய்தால் சரியாகும்…! என்பார்கள்.
1.”குழந்தை இல்லை” என்று இந்த உணர்வை ஊட்டிய பின்
2.அதையே எண்ணத்தில் வளர்த்தால்… பிறகு எங்கே போவது…?

அதை நிவர்த்தி செய்ய இந்தக் கோவிலுக்குப் போ… அங்கே போ… அதைச் செய்… இதைச் செய்… என்று எதை எதையோ சொல்லி அதைச் செய்தால் சரியாகும்…! என்று அவர்கள் சொன்னபடி சுற்றிக் கொண்டிருக்க வேண்டியது தான்.

காரணம் நம் எண்ணத்திற்குள் எதைப் பதிவு செய்கிறோமோ அந்த உணர்வின் தன்மை நமக்குள் வளர்த்து விடுகிறோம். அது தான் நம்மை இயக்குகிறது.

மனிதனுக்கு ஜாதகம் இல்லை.. நேரமும் இல்லை… காலமும் இல்லை…! இதை உணர்ந்து கொள்ளுங்கள்…!

ஆண்டவன் படைப்பை பிரித்துக் காண முடியாது – ஈஸ்வரபட்டர்

 

1.கடவுள் எல்லாவற்றிலும் உள்ளார்… எல்லாமாகவும் உள்ளார்..!
2.நல்ல சக்தி மட்டும் கடவுள் அல்ல. தீயவையும் கடவுளின் படைப்புதான்.
2.கடவுளின் பிம்பம் நன்மையிலும் தீமையிலும் கலந்தே உள்ளது.

நற்குணம் கொண்ட மனிதனும் கடவுளுக்குச் சொந்தம். தீய குணத்தில் உள்ளவனும் கடவுளின் படைப்பு தான்.
1.இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்தால்
2.தெய்வத்தின் சக்தியை மனித ஆன்மாக்கள் உணர்ந்து நடக்க ஏதுவாகும்.

எல்லாப் படைப்பும் தெய்வத்தின் படைப்பே…!

படைக்கப்பட்டவன்…
1.படைப்பின் பொருள் கண்டு மகிழ்ந்து
2.தன் பொருளான தான் படைத்ததன் பலன்தான்
3.தெய்வ சக்தியின் அருள் வளர்ச்சியும்.. நற்குண வளர்ச்சியும்…!
4.சப்தரிஷிகளின் நிலை பெற்றோரின் வளர்ச்சியினால் தன் படைப்பின் பலனைப் பெற்றான் – “படைத்தவன்”

மனிதன் உருவாக்கும் செயல்களில் இருந்து எப்படி தன் எண்ணத்திற்குகந்த நிலை பெற்றவுடன் மகிழ்ச்சி கொள்கின்றானோ அதைப் போன்ற மகிழ்ச்சிதான் தெய்வ சக்தியின் வளரும் நற்குண வளர்ச்சியும்…!

நன்மை தீமை கொண்டு தெய்வப் படைப்பு இல்லை. எல்லாமே தெய்வப் படைப்புத் தான். பல சுவையும் இயற்கையில் கலந்து தான் வளர்கின்றது. கசப்பின் சுவை இல்லாவிட்டால் இனிப்பை அறிய முடியாது.

மனித வாழ்க்கையில் ஏற்படும் சோதனை நாட்களை கசப்பாக எண்ணி… அக்கசப்பின் நிலையில் விரக்தி பூணும் மனிதனின் சுவாச அலையின் தொடரினால்… அதே சுழற்சியில் இருந்து சலிப்பின் உந்தலினால்.. பல மனித ஆத்மாக்கள் தன் நிலை உணராமல்… இக்கசப்பான நிலையிலிருந்து மீள முடியாத சிக்கலில் சிக்கி…
1.அதன் உணர்வு அலையின் உந்தலில் ஏற்படும் ஆவேச எண்ண நிலையிலிருந்து மீளாத மனிதன்தான்…
2.தீய வழிகளுக்கும் தீய செயலில் நிலைக்கும் தன் நிலை உணராமல் சென்று விடுகின்றான்.

தனக்கு ஏற்படும் இன்னலில் இருந்து கசப்பான வாழ்க்கையை இனிய செயலாக்குவது இம்மனிதனின் எண்ணம் தான்…! என்று உணர்ந்து
1.கசப்பைத் துவர்ப்பாக்கி
2.துவர்ப்பை இனிமையாக்கும் வாழ்க்கைச் செயலுக்குக் கொண்டு வரலாம்.

அதே சுழற்சி ஓட்டத்தில் செல்லும் மனிதன்… மீண்டும் சோதனையான கசப்பான நிலை தன் வாழ்க்கையில் ஏற்பட்டாலும் அதனை இனிமைப்படுத்திடும் வழித் தொடர் அறியத் தன் எண்ணத்தை அவ்வீர்ப்பின் நிலையுடன் தன் உணர்வு பெறுகின்றான்.

1.இனிமையிலிருந்து வருவதல்ல நல் உணர்வு எதுவுமே…! (இது மிகவும் முக்கியமானது)
2.சுவையான மாங்கனி பிஞ்சில் கசப்பாகவும்.. பிறகு வளர வளர
3.துவர்ப்பு புளிப்புமாகி பிறகு தான் முற்றிப் பழுத்து இனிப்பாகின்றது அல்லவா…!

உள்ளிருக்கும் துவர்ப்பான அக்கொட்டையுடன் ஆரம்ப ஈர்ப்புக் குணத்திலுள்ள அமிலப் படிவம் கொட்டையுடன் உள்ள பொழுதும் அத்துவர்ப்பான கொட்டையின் மேல் சுவையான மாங்கனி வளர்கின்றது அல்லவா…!

1.அதைப் போன்று கசப்பான வாழ் நாட்களை இனிமையாக்கப் பழகிடுங்கள்.
2.கசப்பிலிருந்து தான் இனிமை காண முடியும்.

பல சித்தர்களும் சப்தரிஷிகளும் மற்றும் இன்றைய காலங்களில் உள்ள நீங்கள் அறிந்த வளர்ச்சி கொண்ட எந்த மேதைகளையும் அவர்களின் வாழ்க்கையின் ஆரம்பக் காலங்களில் நடந்த உண்மை நிகழ்ச்சியின் உண்மையை ஆராய்ந்தோமானால் “இதன் நிலை புரியும்…!”

அரசனாக இருந்தாலும் மாமேதையாக இருந்தாலும் எந்த ஆண்டவனும் அவர்களுக்கு அந்தச் சக்தி தரவில்லை. அவரவர்கள் எடுக்கும் எண்ணச் சுவாசத்தினால் அவர்கள் அடையும் பெரு நிலை எல்லாம் இறைவனின் படைப்பு ஒன்றே…! இயற்கையின் சக்தியும் அதுவே…!

வளர்ந்த செயலில்தான் அதனதன் அடிப்படைக் குணமெல்லாம் உள்ளன. இக்குணத்தின் வழி பெற்றது தான் ஆண்டவன் கண்ட பொருள் மகசூலான சந்திரனும்.. சூரியனும்… நம் பூமியும்… நாமும்… எல்லாமே…!

1.நன்மை தீமை கொண்டு படைக்காத ஆண்டவன்
2.தன் படைப்பின் பலனான நல்லதுவும் தீயதுவும் சுழன்றுள்ள நிலையில்
3.தன் வளர்ச்சிக்குத் துணையாக நல்லவற்றைக் காண்கின்றான்.

இப்படி இருக்க ஆண்டவன் படைப்பை எப்படிப் பிரித்துக் காண்பது…?

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நம் குழந்தை நன்றாகப் படிக்க வேண்டும் என்று ஆர்வப்படுகின்றோம். ஆனால் குழந்தை விளையாடப் போகும்போது ஏதோ ஞாபக சக்திக் குறைவால் படிப்பு குறைவாகி விடுகின்றது.

படிக்க முடியவில்லை என்றால் அவனுக்கு எவ்வாறு ஊக்கம் கொடுக்க வேண்டும் என்பதற்கு மாறாக நாம் என்ன செய்கின்றோம்…?

அவன் நன்றாகப் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நிலையில் அவன் படிக்கவில்லை என்றால் உடனே அந்த இடத்தில் வேதனைப்படுகின்றோம்.

வேதனைப்படுத்துகின்றான் என்றால் “அவனுக்கு நல்லதை எடுத்து எப்படிச் சொல்வது…?” என்று புரியவில்லை. உனக்கு எவ்வளவு காசு செலவு செய்கின்றேன்…! நீ இப்படிச் செய்கின்றேயே…! என்று திட்ட ஆரம்பிக்கின்றோம்.

வேதனையாகச் சொல்லப்படும்போது அவனுக்குள் இது பதிவாகிறது. இந்த உணர்வு அங்கு என்ன செய்கின்றது…? அது ஓ…ம் நமச்சிவாய அவன் உடலாகின்றது.

அப்புறம் திட்ட ஆரம்பித்தால் அம்மாவைப் பார்க்கும் போதெல்லாம் “எப்பொழுது பார்த்தாலும் என்னை இப்படியே திட்டுகின்றார்கள்..” என்று இந்த உணர்வு படிக்கப்போகும் போதெல்லாம் அவனுக்கு இந்த நினைவு வரும்.

அடுத்தாற்படி புத்தகத்தை எடுத்தாலே அம்மா திட்டிய ஞாபகம் தான் வருமே தவிர பாடத்தின் நிலை வராது. இல்லையென்றால் அப்பா திட்டிய ஞாபகம் தான் வருமே தவிர பாடத்தின் நினைவு வராது.

அப்போது அது வாலியாகின்றது. வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்….?

குகையிலிருக்கும் வாலியை இராமன் கல்லைப் போட்டு மூடி அவன் வெளி வராது செய்கிறான் என்று காவியத்தில் காட்டியுள்ளார் வான்மீகி. வேதனை என்ற உணர்வு வந்த பின் நம்முடைய எண்ணங்களை எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும்…?

சந்தோஷமான நிலைகள் இருக்க வேண்டுமென்றால் அந்த குழந்தையின் மேல் இருக்கும் வேதனையை எடுத்த உடனே உள்ளுக்குள் போகாதபடி அதை மூடி விட வேண்டும்.

“ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அந்தச் சக்தி வாய்ந்த நிலைகளைத் தனக்குள் எடுக்க வேண்டும்.

குழந்தை எண்ணி வேதனைப்படுவதை நேர்முகமாகத் தள்ளிவிட்டுப் போக முடியாது. அதற்குத் தான் புருவ மத்தியில் அடைக்க வேண்டும் என்று சொல்வது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் வளர்த்த பின் என்ன செய்கின்றது…? இதோடு (வெளியிலே) நின்று விடுகின்றது.

அதாவது ரிஷியின் மகன் நாரதன்…! அங்கே உருவான உணர்வு உயிரிலே பட்டபின் சக்திவாய்ந்த நிலைகள் கொண்டு அந்தத் தீமைகளை நீக்கும்.

அப்பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… உடலில் உள்ள ஜீவாத்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உள்ளே கொண்டு வரவேண்டும்.

கண்ணன் என்ன செய்கின்றான்…? எல்லாரிடமும் போய்ச் சொல்வான்.

1.இந்திரலோகத்தைக் காட்டி இங்கிருக்கின்ற செய்தியை அங்கே சொல்கின்றான்
2.அங்கிருக்கின்ற செய்தியை இங்கே சொல்கின்றான்… எல்லாவற்றிற்கும் விளக்கம் கொடுக்கின்றான்
3.இந்தக் கண்களின் இயக்கங்கள் தான் அது…!

அதாவது நம் உடலுக்குள் அந்த கண்ணின் நினைவைச் செலுத்தி என் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று சொல்லி இந்த உணர்வைக் கொண்டு வந்து இங்கே அடைத்துவிட வேண்டும்.

ஆனால் வேதனையான உணர்வுகளை உள்ளே விட்டால் உடலிலுள்ள அணுக்கள் என்ன செய்யும்…? சாப்பாடு கிடைக்கின்றது என்றால் சும்மாவா இருக்கும்..? முந்திக் கொண்டு வரும்.

அப்பொழுது இந்த உணர்வு அதிகமாக இருந்தால் நம் உணர்ச்சிகள் அனைத்தும் நம் செயல்கள் அனைத்தும் வேதனையும் ஆத்திரமும் கோபமுமாக மாற்றிவிடுகின்றது.

அப்படி ஆகாமல் தடுக்க வேண்டும் என்று தான் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று எண்ணி இங்கே நிறுத்திவிட வேண்டும் என்று சொல்கிறோம்.

அது உடலுக்குள் வலுப்பெற்றபின் என்ன செய்கின்றது…?
1.கெட்ட அணுக்கள் இருக்கிறது அல்லவா…!
2.அதற்கு சாப்பாடு கிடைக்காது செய்கிறது
3.இழுக்கக்கூடிய சக்தி இல்லாது ஆக்குகிறது.

அது தான் கண்ணன் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு உபதேசித்தான் என்பது. அந்த உயர்ந்த உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்துக் கொண்ட பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உடலுக்குள் படைக்கும் சக்தியாக மாற்றுகின்றது.

மற்ற அணுக்களுக்கு அதனதன் சத்தை இழுக்கக்கூடிய சக்தி இல்லை. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உள்ளுக்கே வலுவாக எண்ணும்போது நம் ஆன்மாவில் இருக்கும் தீமை செய்யும் உணர்வுகளை படிப்படியாக சூரியன் எடுத்துக் கொள்கின்றது. தீமைகளைத் தள்ளி விடுகின்றது.

துணியில் அழுக்குப் பட்டால் சோப்பைப் போட்டு நுரையை ஏற்றி அந்த அழுக்கைத் தள்ளி விடுவதைப்போல் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலுக்குள் செலுத்தப்படும்போது இந்த உணர்வு வலிமை பெற… வலிமை பெற… குழந்தை மேல் வரக்கூடிய வேதனையான உணர்வை இங்கே தள்ளிவிடுகின்றது.

தள்ளிவிட்ட பின் என்ன செய்கின்றோம்…? இந்த இடத்தில் சிந்திக்க ஆரம்பிக்கின்றோம். அவனுக்கு நல்ல சொல்லையும் சொல்கிறோம்.

நீ படித்துக் கொண்டால் நல்லதப்பா… நீ படிக்கவில்லை என்றால் உன்னை நீ எப்படிப் பாதுகாத்துக் கொள்வாய்…? நீ படித்துத் தெரிந்து கொண்டால் உனக்கு நல்லது. நீ தான் உன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

எதிலே குறைவாக இருந்தாயோ அதை நீ இப்படிப் படித்தாய் என்றால் நன்றாக இருக்கும். நீ இப்படிப் படித்து பார்…! இந்த நிலையை இந்த உணர்வைச் சொல்லாகச் சொன்னால் இந்த உணர்வை குழந்தை நுகரும்போது ஓ…ம் நமச்சிவாய.

ஆக… தீமைகளை நீக்கி அந்த அருள் ஒளியை எடுக்கப்படும்போது அங்கே நாரதனாக வந்து சேர்ந்து நம் குழந்தைக்கு ஞானத்தைப் போதிக்கும் தன்மையாக வருகின்றது.

1.அவனைக் கல்வியில் சிறந்தவனாக்குகின்றோம்
2.நம் சொல் அவனை நல்வழிப்படுத்தும் செயலாக வரும்.

தவறாக யாராவது திட்டினால் பதிலுக்கு நாமும் திட்டிப் பேசுகிறோம்… ஆனால் உண்மையை நாம் உணர்த்த முடிகின்றதா…?

 

யாராவது கடுமையாக உங்களிடம் பேசிக் கொண்டே இருந்தால் வேறு ஒன்றுமே செய்ய வேண்டாம்.

“உம்…” கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருங்கள். திட்டிக் கொண்டே இருந்தால் ஆமாம்… ஆமாம்… என்று சொல்லுங்கள்.

ஒரு சிலர் ரொம்பவும் வசனம் பேசிக் கொண்டே இருப்பார்கள்… மோசமான பேச்சுகளையும்… வாயிலே வராத வார்த்தைகளை எல்லாமும் பேசுவார்கள். அவர்கள் சொல்லச் சொல்ல…
ஆமாம்…
ஆமாம்…
சரி…
ஆமாம்..
சரி…! என்றே சொல்லுங்கள்.

உனக்கு மூக்கு இருக்கிறதா… கண் இருக்கிறதா..? மூளை இருக்கிறதா…! என்று என்னென்னமோ பேசுவார்கள்.

அது அத்தனையும் நீயே வைத்துக் கொள்… கண் மூக்கு எல்லாவற்றையும் நீயே வைத்துக் கொள்… “போ……!” என்று சொல்லிவிடுங்கள்.

மயக்கப்பட்டு அப்படியே சொத்… என்று கீழே விழுவார்கள்.

1.நீங்கள் அவர்களைத் திட்டவே வேண்டாம்.
2.எல்லாவற்றையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்…
3.எனக்கு வேண்டாம்… நீங்களே அனுபவித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுங்கள்.

அவர்கள் பேசுவதைக் கேட்டு நீங்கள் வேதனைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அவர்கள் உடலில் உள்ள ஆவி இந்த மாதிரி வேலை செய்யும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் “ஆத்ம சுத்தி செய்து கொண்டே இருந்து விட்டு…” எல்லாவற்றையும் நீயே வைத்துக் கொள்…! என்று சொன்னவுடனே அந்த உடலில் இருக்கும் ஆவி அப்படியே மயக்கப்பட்டுக் கீழே விழுவதைப் பார்க்கலாம்.

இந்த வாக்கினைச் சொன்னவுடனே அது செயலிழக்கும். இப்படிச் சொல்லும் போது
1.அதற்கு நாம் ஒரு நன்மையைச் செய்கிறோம் என்று அர்த்தம்.
2.நாம் தீமை செய்யவில்லை… (சாபம் இடவில்லை)

நாம் வெளிப்படுத்தும் உணர்வுகள் அங்கே பட்டவுடன் அவர்கள் உடலில் அறியாமல் இருக்கக்கூடிய அந்த ஆவி சோர்வடைந்து கீழே விழுந்து எழுந்தால் அவர்கள் “சுய நினைவு” வரும். அப்பொழுது அவர்களை நாம் காக்கிறோம் என்று அர்த்தம்.

உங்களுக்கு இதை வாக்குடன் நான் (ஞானகுரு) சொல்லிக் கொடுக்கின்றேன்.

ஆனால் வழக்கமான நிலைகளில் “இப்படித் திட்டுகிறாரே… தாங்க முடியவில்லை… பொறுக்க முடியவில்லை…!” என்றால் அவர்கள் எண்ணத்தைத் தான் உங்களுக்குள் இழுத்துப் போட்டுக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஏனென்றால் விஷம் எதிலே வேண்டுமென்றாலும் ஊடுருவிச் செல்லும். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே அதிகமாகத் திட்டுகிறார்கள் என்றால் “நீயே அதை வைத்துக் கொள்…” என்று சொன்னவுடனே அந்த உடலில் இருக்கும் ஆவிக்கு இது பலவீனமாகும்… மயக்கமாகும்.

ஆனால் இவர்களுடைய நல்ல சிந்தனை நினைவுக்கு வரும். அந்த உணர்வின் தன்மை கொண்டு அவர்களையும் காக்கின்றோம்.

ஆனால் இந்த வாக்கின் தன்மை அங்கே இயக்கி அவர்கள் உடலில் வயிற்றால் போகும்… உண்மையை உணர்த்தும்.

இது நடந்த நிகழ்ச்சி. என்னுடைய (ஞானகுரு) பெரிய பிள்ளையை மைசூரிலே கட்டிக் கொடுத்திருந்தது. மாப்பிள்ளையின் தம்பியை வேறொரு இடத்தில் கல்யாணம் செய்திருந்தார்கள்.

அந்தக் குடும்பம் கொஞ்சம் போக்கிரித்தனமாக ரௌடித்தனம் செய்யக் கூடியவர்கள். யார்… என்ன… ஏது…? என்று ஒரு முறை இல்லாமல் பேசிக் கொண்டிருப்பார்கள்.

என் பிள்ளையை ரொம்பவௌம் விரட்டிக் கொண்டே இருந்தார்கள். வாயிலே வராத வார்த்தையைப் பேசித் திட்டிக் கொண்டிருந்தார்கள்.

மாமனாரை ஏமாற்றிச் சொத்தை எல்லாம் அபகரித்துக் கொண்டாய்…! என்று எது ஏதோ சொல்லிப் பேசினார்கள். ஆனால் இவர்களோ கஷ்டப்பட்டுச் சம்பாரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இதை எல்லாம் கேட்டுத் தாங்காதபடி என் பிள்ளை என்னிடம் “ஓ…” என்று அழுது கொண்டு வந்து இந்த விஷயங்களை எல்லாம் சொன்னது.

பின் நான் மேலே சொன்னபடி சொல்லி “இந்த மாதிரிச் சொல்லம்மா…” என்று அனுப்பினேன்.
1.திட்டுவதை எல்லாம் உம்… கொடுத்துக் கேள்… சந்தோஷமாகக் கேள்…
2.கடைசியில் இப்பொழுது சொன்னதை எல்லாம் நீயே வைத்துக் கொள் என்று சொல்லிவிடம்மா…! என்று சொன்னேன்.

அதே மாதிரி இங்கிருந்து போனவுடனே நீ நாசமாகப் போவாய்… உனக்குப் பேதியாகும்… நீ அப்படிப் போவாய்… இப்படிப் போவாய்… என்று அங்கே அந்த அம்மா திட்டிக் கொண்டே இருந்திருக்கின்றார்கள்.

என் பிள்ளை அவர்கள் திட்டத் திட்ட சிரித்துக் கொண்டே இருந்தது. எல்லாவற்றையும் நீயே வைத்துக் கொள்…! என்று சொல்லிவிட்டதும் அங்கே தாங்காது பேதியாகி விட்டது. உடல் எல்லாம் வலி ஆகியது. எழுந்திரிக்க முடியவில்லை.

ஆஸ்பத்திரிக்குச் சென்று எல்லாம் ஆனதும்… “கொஞ்சம் விபூதி இருந்தால் கொடு…” என்று அந்த அம்மா என் பிள்ளையிடம் கேட்கிறது.
1.நான் சொன்னதை நானே வாங்கிக் கொள்ள வேண்டும் என்று சொன்னதும் எனக்கு இப்படி ஆகிவிட்டது
2.இனிமேல் நான் யாரையும் இந்த மாதிரித் திட்ட மாட்டேன்… தப்பாகப் பேச மாட்டேன்…! என்று சொன்னது.

பிறகு என்னிடமும் தேடி வந்தார்கள். உங்கள் பிள்ளையை எல்லாப் பேச்சும் பேசினேன். நான் எதை எல்லாம் சொல்லி அவர்களைத் திட்டினேனோ அது எனக்கே வந்து விட்டது. நீங்கள் விபூதி கொடுங்கள்… எனக்கு ஆசீர்வாதம் கொடுங்கள்…! என்று கேட்டார்கள்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இந்த மாதிரி நல்ல வாக்கினைக் கொடுத்தால்… அங்கே நன்மை ஏற்படும். அவர்களும் உண்மையை அறியும் தன்மை வரும்.

பேசியதை அனைத்தையும் நீயே வைத்துக் கொள் என்று சொன்னவுடனே
1.அந்த உணர்வுகள் எல்லாம் அவர்களுக்குள்ளேயே சுழன்று
2.தானே அதை அறியப்படும் போது குற்றத்தை உணர்ந்து கொள்வார்கள்.

இதன்படி நடந்தால் யாம் கொடுக்கும் இந்த உயர்ந்த வாக்கின் வன்மை உங்களுக்குள் கூடுகிறது. அதே சமயத்தில் மற்றவர்களும் அறியாமையிலிருந்து விடுபட இது உதவுகிறது.

மனிதன் பெற வேண்டிய உயர் சக்தியை எடுக்க விடாது மறைக்கப்பட்ட நிலை தான்…! இன்று நடப்பில் உள்ளது – ஈஸ்வரபட்டர்

 

நாம் எடுக்கும் தியானத்தின் மூலம் பலவாக உள்ள நினைவின் ஓட்டத்தை ஒரு நிலைப்படுத்திப் பல நிலை கொண்ட அமில குணத்தையெல்லாம் ஒரு வழிக்கு வர பழக்கப்படுத்தித் “திசை திருப்பும் ஞான வழி பெறுதல் வேண்டும்…!”

அப்படிப் பெற்றால்…
1.தான் எடுக்கும் சுவாச ஈர்ப்பினால் எந்த ஒரு நற்சக்தியின் பால் தன் எண்ணத்தைச் செலுத்துகின்றோமோ
2.அதே நினைவில் சுவாசம் எடுத்து… அதன் வழித் தொடர் நினைவில்…
3.அத்தொடரில் உள்ள உண்மையின் வளர்ச்சியை நிச்சயமாகப் பெற முடியும்.

ஞானத்தின் பால் செலுத்தப்படும் இந்த ஈர்ப்பு குண நலம் அமையப் பெறும் வழித் தொடரில் சென்றால் “எந்த ஒரு நுண்ணிய அலைத் தொடரையும்…” வளர்ச்சி ஞானத்தினால் பெற முடியும்.

அத்தகைய நுண்ணிய அலைத் தொடரிலிருந்து…
1.நம் உடலிலுள்ள அனைத்து அணுக்களுடனும் இந்த நுண்ணிய ஈர்ப்பு அலையின் சக்தி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டு
2.இப்பிம்ப உடலிலிருந்து உயிர் ஜீவ சக்தியைத் தனித்துப் பிரித்துச் சென்று எல்லாவற்றையும் அறிய முடியும்.

அதாவது…
1.ஒவ்வொரு அமில குணங்களின் சேர்க்கையையும் அதன் வட்டத்திலிருந்து உயிர் பெறும் ஜீவ நிலையையும்
2.ஒன்றுடன் ஒன்று கலவைப் பட்டு வளரும் நிலையையும்
3.இப்பூமியில் உள்ள கனி வளங்களின் நிலை அறியவும்
4.கனி வளத்திலிருந்து கசிந்து உருகி வரும் திரவ நிலைகளை அறியவும்
5.இப்ப்பூமியின் பூமத்திய ரேகையில் உள்ள உண்மை நிலைகளையும் அறிய முடியும்.

விஞ்ஞான சாதனை கொண்டு செயற்கை மின் அலையின் தொடரினால் செயற்கை மின் அலையிலிருந்து விஞ்ஞானத்தில் கண்டறியும் ஆற்றலைக் காட்டிலும்
1.இஜ்ஜீவ மின் அலையின் சக்தியை வளர்த்துக் கொள்ளும் மனிதனால்
2.தன் உயிராத்மாவை எந்த இடத்திற்கும் சென்று..
3.பூமியின் மேல் மட்டத்தில் உள்ள நிலைகளை அறிவது போல்
4.இந்தப் பூமியின் உட்கோளங்களில் வளர்ந்து வரும் நிலைகளையும் அறியலாம்.

அது மட்டுமல்ல…!

இந்தப் பூமியின் காற்று மண்டலத்தையும் காற்று மண்டலத்திற்கு அப்பால் உள்ள பால்வெளி மண்டலத்தையும் இந்த நுண்ணிய அலையின் சக்தியை வளர்த்துக் கொண்ட மனிதனால் காண முடியும்.

இந்த உடல் அப்படியே ஒரு இடத்தில் இருந்தாலும்… விட்டுச் சென்ற உடலில் அனைத்து உயிரணுக்களும் இந்த நுண்ணிய மின் அலையின் சக்தியின் ஈர்ப்புடன் இயங்கிடும்.

உடலில் உள்ள தசைகளும் மற்ற எல்லா உறுப்புகளும் அதே நிலையில்… அதாவது…
1.உண்டு கழிக்க வேண்டும் என்ற நிலை இல்லாமல்
2.சுவாசம் எடுத்துச் சுவாசம் விட்டு இருக்கக்கூடிய நிலையும் இல்லாமல்
3.இந்த உடல் பிம்பம் எந்த வகைப் பின்னமும் படாமல் அதே நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும்.

இதை எல்லோராலும் பெற முடியும்…!

ஆனால்
1.மந்திரமும்… மாயமும்…
2.தெய்வீகப் பெரும் சக்தி என்றும்…
3.சாதாரண மனிதனால் முடியாத நிலை என்றும்
4.மனிதன் பெற வேண்டிய உயர் சக்தியை மனிதன் எடுக்க முடியாமல்…
5.எட்டாத நிலைப்படுத்தி மறைக்கப்பட்டு விட்ட நிலை தான்…! இன்று நடப்பில் உள்ளது.

செயற்கையின் மின் அலையை விஞ்ஞானப்படுத்திச் செயலாக்கும் மனிதனால்… தன் அலையின் தொடர்பிலிருந்தே அச்சூரியனின் ஒளி அலையின் ஈர்ப்பினால்… தன் உயிராத்மாவால்… எந்த ஒரு நுண்ணிய அலையின் வளர்ச்சியையும் ஜீவ உடல் கொண்டு மனிதனால் எடுக்க முடியும். இது சாத்தியமே…!

மனித உடலில் பல கோடிக் கோடி உயிரணுக்கள் ஜீவ சக்தியுடன் இயங்கும் பொழுது…
1.உயிராத்மாவின் நிலையுடன் நிறைந்துள்ள பல கோடி உயிரணுக்களும்
2.இந்த அலையின் ஈர்ப்பை எடுக்கும் நிலையினால்
3.மனிதனின் சக்தித் திறன் பலவாக உயரும்.

ஆனால் உடலை விட்டுச் சென்ற ஆவி ஆத்மாக்களுக்கு ஜீவ அணுக்களின் ஜீவ சக்தி இல்லாததினால் மனித ஞானத்தில் செயல்படும் திறனில்லாமல் ஆவி உலக வாழ்க்கை இருந்துவிடுகின்றது.

ஜீவ சக்தியில் ஈர்க்கப்படும் ஞானங்களும் இந்த உயர் மின் அலையின் தொடர்பும் ஜீவனற்ற ஆவி ஆத்மாக்களுக்கு முடியாதப்பா…!

சூரியனின் மின் அலையின் சுவாசத்தை ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுத்து வாழும் நம் வாழ்க்கை அலையில் நாம் உண்டு… கழித்து.. உறங்கி.. நமக்குக் கிடைத்த பல காலமாக நாம் வளர்த்து வந்த இந்த ஜீவ உடல் வாழ்க்கையில் பெற்ற உன்னத சக்தியை அறியாமல்… விரயப்படுத்தித்தான் வாழ்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

பிற மண்டலங்களிலிருந்து வருவதை 27 நட்சத்திரங்கள் நவக்கோள்கள் கவர்ந்து வெளிப்படுத்துவதை சூரியன் கவர்ந்து தன் சுழற்சி வேகத்தால் அந்த அணுக்களில் உள்ள விஷத்தினைப் (அல்ட்ரா வயலட்) பிரித்து விடுகின்றது.

மனிதனுடைய ஆறாவது அறிவோ நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்த நஞ்சினை மலமாக மாற்றி அதை நீக்கிவிடுகின்றது.

இந்த மனித வாழ்க்கையில் எத்தனையோ பேருடன் நாம் பழகுகின்றோம்… பார்க்கின்றோம். ஆனால் சந்தர்ப்பத்தால் அவர்கள் படும் வேதனைகளைப் பார்த்தாலும் அந்த வேதனையான உணர்வுகள் நம் நல்ல எண்ணங்களில் இணைந்திடாது ஆறாவது அறிவு கொண்டு அதைத் தடுக்க வேண்டும்.

1.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
2.அந்த அருள் உணர்வினை நம் நல்ல அறிவில் இணைத்து நல்ல அறிவு மங்கிடாது
3.எதனையுமே தெளிவாக்கிடும்… அந்த அறிந்திடும் தெளிந்திடும் அந்த அறிவை நாம் வளர்த்திடல் வேண்டும்.

ஆனால் வேதனை கொண்ட நிலைகள் கொண்டு விஷத்தின் தன்மையை இதிலே கலந்து விட்டால் இங்கே மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை உங்களால் நுகர முடியாது. நுகர்ந்தாலும் அதை வைத்து உங்கள் வேதனைகளை நிவர்த்தி செய்ய முடியாது.

1.அதாவது பிறிதொரு மனிதன் வேதனைப்பட்ட உணர்வு நம் நல்ல அறிவை மறைக்கும் போது
2.இன்னொரு சாதாரண மனிதன் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து அதை மாற்ற முடியாது.

மாற்ற வேண்டும் என்றால் “வேதனை என்ற நஞ்சினை நீக்கி… அதை ஒளியாக மாற்றிடும்…” அந்த மகரிஷிகளின் உணர்வை நீங்கள் ஏங்கிப் பெற்று உடலுக்குள் இணைக்க வேண்டும்.

மீண்டும் இதைத் தெளிவாக்குகின்றேன்…!

உங்கள் வாழ்க்கையில் நல்லது செய்வதாக எண்ணி ஒரு வேதனைப்படும் மனிதனை உற்றுப் பார்த்து நுகர்ந்து அவர்களுக்கு நீங்கள் நல்லது செய்கின்றீர்கள்… உதவி செய்கின்றீர்கள்…!

ஆனால் உங்களிடமிருக்கும் நல்லது செய்யும் எண்ணத்திற்குள் அவரின் வேதனைப்பட்ட அந்த விஷமான உணர்வு இணைந்து உங்கள் நல்ல அறிவை மறக்கச் செய்கின்றது… மறைத்து விடுகின்றது. இதுதான் சிறு திரை – “சித்திரை…” என்பது.

அந்தச் சிறு திரையை உடனே நீக்க வேண்டும். அதை நீக்க வேண்டும் என்பதற்குத்தான் ஞானிகளின் உணர்வைப் பதிவாக்குகின்றோம்.

உங்கள் நினைவாற்றலை அங்கே ஞானிகளின் பால் ஒன்றச் செய்து இங்கே நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும்போதே அந்தத் துருவ மகரிஷியின் உணர்வுகளை உங்களுக்குள் இணைக்கின்றோம். உங்கள் நல்ல அறிவைக் காக்க இது உதவும்…!


நாம் பணிய வைக்க வேண்டியது எதை…?

 

ஓ…ம் ஈஸ்வரா என்று சொல்லும் போது பிரணவம்… நாம் எண்ணியதை உயிர் ஜீவன் பெறச் செய்கின்றது. அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்றும் அது எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும் என்று உயிரிடம் வேண்டுங்கள்.

கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருங்கள்.
1.நீங்கள் பெற வேண்டும் என்று நான் (ஞானகுரு) கொடுக்கும் இந்த உணர்வு
2.அந்த உயர்வின் தன்மையைப் பெறக்கூடிய தகுதியைப் பெறச் செய்யும்.

இந்நேரம் வரை உபதேசித்த அந்த ஆற்றல் மிக்க சக்தியை “நீங்கள் எண்ணும் போதெல்லாம் எண்ணியவுடனே அதைக் கிடைக்கச் செய்து…” உங்களுக்குள் துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் அந்த உணர்வுகள் அனைத்தையும் தாழ் பணியச் செய்வதே “எமது ஆசி” (ஞானகுரு).

ஆகையினால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று மேல் நோக்கி நினைவினைச் செலுத்தி உயிரிடம் வேண்டித் தியானியுங்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.

எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்… எங்கள் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும்… நாங்கள் பார்ப்போருக்கெல்லாம் நல்லதாக இருக்க வேண்டும்…! என்று இதே மாதிரி நான் சொன்னதை நீங்கள் எண்ணி எடுத்துப் பாருங்கள்.

உங்களுக்குள் துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் உணர்வுகள் அனைத்தும்
1.அது தாள் பணிந்து… உங்களுக்குள் அது ஒத்துழைத்து… உயர்வான எண்ணங்களுக்கு வழி காட்டியாக அது அமையட்டும்.
2.எதுவும் கெட்டதல்ல… உங்களுக்கு அது வலுவூட்டும்… வழி காட்டியாகவும் அது இருக்கும்
3.கெட்டது என்று அது தான் காட்டுகின்றது… அதை நீக்கிவிட்டு நாம் செல்ல வேண்டும்.

கெட்டது என்று வழி காட்டினாலும் அந்த உணர்வின் தன்மை அது எனக்குள் சேர்ந்து விடுகிறது. ஆனால் வழி காட்டிய நிலைகள்
1.எனக்குள் பணிந்து அந்த நல் வழி காட்டியாக இருக்க வேண்டும்.
2.அந்த நல் வழி காட்டிய விஷம் என்னை ஆட்கொள்ளக் கூடாது.

மெய் ஒளி பெறும் அந்தத் தகுதி கொண்டு நாம் அதைப் பெற வேண்டும் என்பதற்குத் தான் ஆசி வாங்குவது. ஆகையினால் இதை மீண்டும் மீண்டும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

1.அரசனுக்குக் கீழ்படிதல் என்பது கௌரவத்திற்காகத் தான்…!
2.ஒரு பெரியவரைக் கண்டால் அடிபணிதல் வேறு.
3.ஆனால் நமக்குள் துன்பங்களைப் பணியச் செய்வது என்பது வேறு.

ஆகவே மெய் ஒளி வளர்ந்து நமக்குள் தீமை செய்து கொண்டிருக்கும் அந்த உணர்வின் தன்மையைத் தாழ் பணியச் செய்ய வேண்டும் என்பதே ஆசீர்வாதமாகக் கொடுக்கும் அருள் வாக்கின் தன்மைகள்.

நீங்கள் ஒவ்வொருவரும் மெய் ஒளி பெறவேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன் (ஞானகுரு).

“தியானத்தில் சக்தி பெறுகிறோம்…” என்பதை நாம் எப்படி அறிவது…? – ஈஸ்வரபட்டர்

 

தியானத்தின் முறை கொண்டு நம் எண்ணம் ஞானத்தின் ஈர்ப்பு நிலைக்கு வழி பெறும் காலங்களில் வளர்ச்சி நிலை எப்படி இருக்கும்…?

குழந்தைப் பிராயத்தில் குழந்தையின் உடல் மற்றும் அங்க அவயங்கள் உறுப்புகள் எல்லாம் மிருதுத் தன்மையுடன் இருக்கின்றது. பிறகு வளர வளர உடல் உறுப்புகளும் தசை நார்களும் வலுப் பெற்று வளர்கின்றது.

அதைப் போன்று நம் ஆரம்பத் தியானத்தில் நம் எண்ண நிலை எல்லாம் வளர்ச்சி பெற்று.. ஒரு நிலை பெற்று… பக்குவம் எய்தி… அதன் ஈர்ப்பின் வழித் தொடருக்குப் பிறகு பல நிலைகளை நாம் காணலாம்.

நம் எண்ணத்தினாலேயே நாம் எடுக்கும் சுவாசத்தினால்…
1.பல மணங்களை உணரும் பக்குவமும்
2.பல சுவையின் ஈர்ப்பில் உண்ட களிப்பு நிலையும்
3.பல ஒளி அலைகளைக் கண்டுணர்ந்து மகிழும் நிலையும்
4.நம்மின் உருவின் உருவ நிலையைக் காணும் நிலையும்
5.இந்த உலகின் சுழற்சி ஓசையான “ஓ…ம்” என்ற ஒலி ஈர்ப்பின் அலைதனை ஈர்த்துக் கேட்கும் வழித் தொடரின் நிலையும்
6.இதன் வளர்ச்சியில் பல சித்தர்களின் நிலையுடன் தொடர் கொள்ளும் நிலையும்
7.இப்படி ஒன்றின் வளர்ச்சி கொண்டு ஒன்றின் மேம்பாட்டில் தியானத்தின் ஈர்ப்பு வளர்ச்சி நிலை பெற்ற பிறகு
8.சித்தன் நிலையை நாம் அடைய முடியும்.

புகைப்படம் எடுப்பவன் ஓர் பிம்பத்தைப் பலவாக மறு பிம்பங்களை எப்படி எடுத்துத் தருகின்றான்…? ஒரே பிம்பத்தை நிலைக் கண்ணாடியைப் பல கோணத்தில் வைத்துக் காணும் பொழுது நம் பிம்பத்தைப் பலவாகக் (எண்ணிக்கையில்) காணுகின்றோம்.

இதைப் போல் சித்து நிலை பெற்றவர்கள் இந்த உடல் என்னும் கூட்டை…
1.இந்த உடலில் உள்ள உயிரணுவை ஜீவ உயிரை இந்த உடலிலிருந்து பிரித்து
2.இந்த உடலுக்குகந்த பிம்ப உடலின் பிம்பத் தன்மையையும்
3.இந்தக் காற்றிலுள்ள அமில சக்தியை அந்த ஜீவனுடன் கூட்டிக் கொண்டு பல இடத்தில் ஒரே சமயத்தில் செயல் புரிகின்றனர்.

இருந்த நிலையிலிருந்தே ஜீவ உயிரணுவுடன் எந்த மண்டலத்திற்கும் எந்த இடங்களுக்கும் நினைத்த மாத்திரத்தில் சென்றறிந்து வருவதோடு மட்டுமல்லாமல் பல சக்தி அமிலங்களையும் எடுத்து வருகின்றனர்.

விட்டுச் சென்ற உடல் கூட்டின் அவயங்களெல்லாம் அந்த ஜீவ உயிர் இல்லாமலே உடலில் உள்ள பல கோடி உயிரணுக்களுக்கும் அந்த உயிரைப் போன்று அனைத்து அணுக்களும் தாமாகச் சுவாசமெடுத்து இயங்கக்கூடிய சக்தி பெற்று விடுகின்றன.

எல்லா உயிரணுக்களுமே அந்த உடலின் ஜீவனைப் போன்று தானாக இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் அந்த உடல் பிம்பத்திற்குச் செயலாற்றவோ… எண்ணத்தின் ஈர்ப்பின் நிலையோ… அந்த ஜீவ உயிர் வரும் வரை இருக்காது.

“கூடு விட்டுக் கூடு பாயும் நிலை…!” என்று உணர்த்துகிறார்களே அன்றி உண்மைச் சித்தன் இந்த உயிர் ஜீவனுக்கு எத்தனை பிம்ப நிழலையும் அவனால் எடுக்க முடியும்.

அமில குணத்தைச் சேர்ந்த புகைப்படத்தை நம்புகின்றான் மனிதன். பாதரசத்தின் துணையுடன் நிலைக் கண்ணாடியில் தன் உருவத்தை நம்புகின்றான்.

அதே நிலை நம் கண்ணின் கருமணியிலும் உள்ளது… நீரிலும் உள்ளது. தெளிந்த நீரில் நம் பிம்பத்தைக் காண்கின்றோம்.

அதைப் போன்று தான் சித்தனுக்கு உடல் விட்டுப் பிரிந்த தன் உயிர் ஜீவனுடன் எந்நிழல் பிம்பத்தையும் இந்தக் காற்றுடன் கலந்துள்ள அமில குணத்திலிருந்து பிரித்தெடுத்து ஒரே இடத்திலிருந்து பல இடங்களுக்கும் செல்கின்றான்.

இந்த நிலையை உணர்த்தினால் மனிதன் உடலிலிருந்து உயிரை எப்படிப் பிரித்தெடுப்பது…? என்று வினா எழுப்புவான்.

ஒவ்வொரு மனிதனும் தான் எடுக்கும் சுவாச அலையின் ஈர்ப்பினால்
1.உடலின் அனைத்து அணுக்களும் தன் வசப்பட்டு
2.ஒவ்வொரு அணுவும் உயிர் ஜீவனின் சக்தி கொண்ட நிலை பெற்று
3.வாழ்க்கையில் எந்த ஒரு நிலையிலும் மற்ற ஈர்ப்பின் நிலைக்கு அடிமைப்படாமல்
4.எந்த எண்ணமும் தன் எண்ணமாக எண்ணும் முறை பெற்று
5.தியான வளர்ச்சியுடன் எடுக்கும் சுவாச அலையின் ஈர்ப்பில் ஒவ்வொரு நிலையும் வழித் தொடர் பெற்ற பிறகு
6.அந்தச் சித்தனின் நிலை பெறத் தக்க உயிர் ஜீவனின் எப்பிம்பமும் காணும் நிலையை எய்தலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நாம் பிறருடைய தீமைகளைப் பார்க்கும்போது நம் நல்ல உணர்வுகளை அந்த விஷத் தன்மையான உணர்வுகள் மறைத்து விடுகின்றது. (ஒரு திரை போல்)

அப்படி மறைத்ததைச் சுத்தப்படுத்த வேண்டும் என்றால்
1.அந்த மகரிஷிகளின் உணர்வை நாம் கவர்ந்து
2.அவ்வப்போது நம்மை மறைக்கும் அந்தச் சிறு சிறு திரைகளை அகற்றிட வேண்டும்.
3.அன்றன்று அறிவின் தன்மை கொண்டு நாம் தெளிவாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

எதன் துணை கொண்டு…?

அதற்குத்தான் இப்போது இடைமறித்து… இடைமறித்து உங்களுக்குள் ஞானிகளைப் பற்றித் திரும்பத் திரும்ப உபதேசிகின்றேன். மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் என்றால் உங்களுடைய உணர்வின் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டு அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுடன் இணைக்கச் செய்கின்றேன் (ஞானகுரு).

1.உங்கள் ஒவ்வொரு அறிவிலும் (உணர்விலும்) இணைத்த பின்
2.தீமைகளைக் கவராது “அந்தந்த அறிவு” அது தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும்.

அத்தகைய நிலைகளை உருவாக்கினால்தான்… இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளும் காற்று மண்டலத்தில் இருக்கும் நச்சுத் தன்மைகளும்… பிற மனிதன் செய்யும் தவறான உணர்வும்… விஞ்ஞான அறிவால் ஏற்படும் தீமைகளும் நமக்குள் புகாது… நம்மை இயக்காது… தடுக்க முடியும்.

பகுத்தறிவு கொண்டு படித்திடும் விஞ்ஞான அறிவை எழுத்து வடிவில் உற்றுப் பார்த்து அதன் உணர்வை நாம் கவர்ந்து நமக்குள் பதிவு செய்து கொண்டாலும்… இங்கே பூமியிலே பரவிக் கொண்டிருக்கும் உணர்வுகளை நாம் கவர்ந்தாலும்… அது எல்லாம் நம் ஆன்மாவில் இணைந்து கொண்டே உள்ளது.

அதாவது… எப்படி இந்தப் பிரபஞ்சத்தில் தீமைகள் படர்ந்துள்ளதோ அது நம் பூமியான இந்த பரமாத்மாவில் (காற்றிலே) வளர்ந்துள்ளதோ இதைப் போல நம் ஆன்மாவிலும் இது உண்டு.

அதே சமயத்தில் நம் உடலுக்குள் எண்ணிலடங்காத அணுக்கள் ஜீவான்மாக்களாக வாழுகின்றது. ஆகவே இந்தப் பூமியில் எந்த அளவுக்குத் தீமைகள் பரவி உள்ளதோ அந்தத் தீமையின் உணர்வுகளை நம் எண்ணத்தால் (நம் சந்தர்ப்பம்) பதிவாக்கி இருந்தால் அந்தத் தீமையின் அணுக்கள் உடலுக்குள்ளும் விளையும். அந்த அணுக்கள் தீமைகளைத் தான் விளைவித்துக் கொண்டே இருக்கும்.

ஏனென்றால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் இதற்கு முன் நாம் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் எலும்புக்குள் ஊனாக இருக்கின்றது.

அந்த எலும்புக்குள் ஊனாக இருக்கப்படும் பொழுது அதனின் வளர்ச்சி
1.ஒரு மனிதனைக் கண் கொண்டு பார்க்கும்போது அவர் தவறு செய்கின்றார் என்று பதிவாக்கி விட்டால்
2.மீண்டும் அதே நினைவு கொண்டு கண்ணுக்கு வரப்படும்போது
3.எந்த மனித உடலிலிருந்து தவறு செய்யும் உணர்வுகள் அலைகள் வந்ததோ
4.அந்த உருவத்தை நமக்குள் நுகரச் செய்து அதே கோபத்தின் உணர்வுகளையோ அல்லது
5.அவனைக் கண்டு அஞ்சியிருந்தால் அந்த அச்சத்தையோ நமக்குள் செயலாக்குகின்றது.

நமக்குள் பதிவு செய்த இந்த வித்து… “ஊழ்வினை” என்ற நிலையில் வினைக்கு நாயகனாக அந்த உணர்வின் இயக்கமாக்கி நம்மை அதன் வழிகளில் வளர்த்துக் கொண்டுள்ளது.

அதைப் போன்ற தீமைகளை (வினைகளை) மாற்றுவதற்குத்தான் திரும்ப திரும்பச் சொல்லி உங்கள் உணர்வின் ஈர்ப்புகளை ஞானிகளின் பால் கொண்டு வரச் செய்கிறோம்.

குருநாதர் எனக்கு இராஜதந்திரமாகக் கொடுத்த சக்தி

 

எத்தனையோ பேர் எத்தனையோ விதமான கஷ்டங்களில் இங்கே வந்திருப்பீர்கள். குடும்பத்தில் கஷ்டமாக இருக்கும்… பிள்ளை சொன்னபடி கேட்காதிருக்கும்… நோய் வந்து கஷ்டமாக இருக்கும்… உதவி செய்தும் கஷ்டமாக இருந்திருக்கும்… தொழிலில் நஷ்டம் இருந்திருக்கும்… வியாபாரத்தில் மந்தமாக இருக்கும்… இப்படி எத்தனையோ சிக்கல் இருக்கும்.

இந்த எண்ணம் உள்ள அத்தனை பேருக்குமே
1.எந்தெந்த எண்ணத்தில் நீங்கள் வந்தீர்களோ அந்தந்த எண்ணங்கள் மாறி
2.உங்களுக்கு உயர்வான சக்தி கிடைக்க வேண்டும் என்று தான்
3.அருள் உபதேசத்தைக் கொடுத்து இந்த உணர்வை உங்களுக்குள் ஊடுருவச் செய்து
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்கிறோம் (ஞானகுரு).

உங்கள் உடலில் உள்ள எல்லாக் குணங்களிலும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியையும் 27 நட்சத்திரங்களின் உணர்வுகளையும் ஈர்க்கும்படித் தூண்டி… இந்த உணர்வின் தன்மை கொண்டு காந்த சக்தியைப் பெறச் செய்து… எல்லோருடைய உள்ளங்களிலும் மகிழ்ச்சி பெறச் செய்கிறோம்.

உதாரணமாக… குழம்பிலே புளிப்பு உப்பு காரம் துவர்ப்பு எல்லாம் போட்டு ஒரு ருசியாக எப்படிக் கொண்டு வருகின்றோமோ இதே போல் எல்லோருடைய உணர்வுகளிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கும்படி செய்து கொண்டிருக்கின்றோம்.

ஞானிகளைப் பற்றி உபதேசித்து அந்த உணர்ச்சியைத் தூண்டச் செய்யும்போது அந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கிறது.

அப்படிக் கவர்ந்த உணர்வுகளை உங்கள் செவிகளில் படும்படி செய்து உங்கள் உடலுக்குள் இருக்கும் குணங்களுக்குள் இது ஆழமாக ஊடுருவச் செய்து “1008 குணங்களிலும்…” பதியச் செய்கின்றோம்.

1.ஏனென்றால் எனக்கு குருநாதர் எப்படி இராஜதந்திரமாக உள்ளுக்குள் நுழைய வைத்தாரோ
2.அதைப் போல் தான் உங்களுக்குள் இந்த உணர்ச்சிகளைத் தூண்டி… உணர்வின் தன்மையைத் தட்டி எழுப்பி
3.உங்களுக்குள் துன்பத்தை ஊட்டி கொண்டிருக்கும் வேதனைகள் நீங்குவதற்கு இதைச் செய்கிறோம்.

அந்த உணர்வின் தொடரை நீங்கள் மீண்டும் இதே போல் எண்ணி எடுத்தீர்கள் என்றால் காற்றிலிருந்து அந்த மகரிஷிகளின் அருள் ஒளிகளைப் பெற முடியும். உங்கள் துன்பத்தைப் போக்கிக் கொள்ளலாம்.

1.குருநாதர் எனக்குத் துன்பத்தைக் கொடுத்து அந்த ஆற்றலைத் தெரிய வைத்தார்.
2.உங்களுக்குத் துன்பம் வரப்போகும் போது இந்த முறையைக் கையாண்டால் அதனின் இயக்கத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
3.தியானத்தில் இந்தச் சக்தியை எடுத்ததால் இந்தத் துன்பம் போனது…! என்று நீங்கள் அறியலாம்.

ஆக… கஷ்டம் இல்லாமல் நீங்கள் பெறுகின்றீர்கள். “சாமி இலேசாகச் சொல்கிறார்…” என்று அலட்சியமாக இதை விட்டுவிடாதீர்கள். காரணம்…
1.வாக்கினால் யாம் சொல்லும் போது
2.இதை எண்ணி எடுப்பவர்களுக்குச் சீக்கிரம் நல்லதாகிறது.

நீ உருப்படுவாயா…? என்று ஒருவர் நம்மைச் சொன்னால் நீ அப்படியா சொல்கிறாய்… என்று அதே வார்த்தையை நாம் எடுத்துக் கொண்டால் என்ன ஆகிறது…!

நம் வியாபாரத்தில் மந்தம்… கை கால் குடைச்சல்… தலை வலி,,, மேல் வலி என்று உங்களை இப்படிக் கீழே கொண்டு போகிறது.

அதே போல் துன்பத்தைத் துடைப்பதற்குச் “சாமி சொன்னாரே…” என்று நினைத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்தீர்கள் என்றால் இந்தக் காற்றிலிருந்து வரும் அந்தச் சக்தி உதவி செய்யும்.

உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து அந்த ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் சேர வேண்டும் என்று உங்களைப் பிரார்த்திக்கும் போது…
1.சில நேரங்களில் விண்…விண்.. என்று
2.உங்கள் நெற்றியிலோ உடலிலோ இந்த உணர்வுகள் ஏற்படும்.
3.எம்முடைய வாக்கினைப் பதிவு செய்தவர்களுக்கு நிச்சயம் இந்த உள் உணர்வுகள் வரும்.

உங்கள் உடலில் இருக்கும் துன்பங்கள் நீங்க வேண்டும் என்பது தான் என் பிரார்த்தனை. உங்கள் உயிரான ஈசனைத் தான் நான் பிரார்த்தனை செய்கிறேன். உயிர் தான் இந்த உடலை உருவாக்கிய ஆற்றல்மிக்க சக்தி.

இப்படி ஆயிரக்கணக்கானவர்களை நான் பிரார்த்திக்கும் போது அந்த “ஆயிரம் பேரின் சக்தியும்…” எனக்குக் கிடைக்கிறது. குருநாதர் எனக்குக் காட்டிய வழி இது தான்.

ஆகவே பல உணர்வின் தன்மையை எடுத்துச் சூரியன் எப்படி ஒளியாக மாறுகிறதோ அதே மாதிரி நீங்களும் இதைச் செய்து பாருங்கள். உங்களுக்குள்ளும் அந்த அரும் பெரும் சக்தி கூடும். ஆற்றல்மிக்க மெய் ஞானியாக வளர்வீர்கள்.

“பயம்” என்ற அச்ச உணர்வுக்கு இடம் தராத சுவாச அலையுடன் ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

முற்றும் துறந்தவன் முனிவன்…! பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்தால்தான் தெய்வத்தின் ஒளி… மோட்சம் அவனுக்குக் கிட்டும்…! என்ற சொல் நடை முறையில் உள்ளது.

1.முற்றும் துறந்தவன் தான் முனிவன்…! என்றால் அது எதன் அடிப்படை கொண்டு பகர்ந்த பொருள்..?
2.முந்தைய நாட்களில் நம் முன்னோர்களால் வெளியிடப்பட்ட கருத்துக்களின் உண்மைக் கோவையை உணர்ந்தோமா நாம்…?

முற்றும் துறந்த நிலை என்பது வாழ்க்கையில் பற்று… பாசம்… கடமை… இவற்றிலிருந்து விலகித் “தன் நலம் காணத் துறவறம் பூண்டு மெய் அருள் பெறும் நிலை…!” அல்ல.

ஒவ்வொரு ஆத்மாவுக்குள்ளும் நிறைந்துள்ள பல கோடி அணுக்களின் எண்ணத்தின் வளர்ச்சியில் வாழ்ந்திடும் மனிதன்
1.தன் எண்ணத்திற்குள் உந்தப்படும் உணர்ச்சியிலிருந்து
2.அந்த உந்தலுக்கு அடிபடிணியாமல்… “அந்த உந்தலைத் துறக்க வேண்டும்…!”

பயம்… என்ற உணர்வினால் உருளப்படும் கோளம் இந்த மனிதக் கோளம்.

மனிதனின் எண்ணமே முற்பிறவியில் பிறப்பாசை கொண்டு இந்தப் பிறப்பில் கருவிற்கு வருவதனால் பயம் என்ற அச்ச உணர்வு குழந்தைப் பிராயம் முதல் கொண்டே மனித ஆத்மாவுக்கு வருகின்றது.

மனிதனைக் காட்டிலும் அதிகமான இந்தப் பயம் என்ற அச்ச உணர்வு மிருகங்களுக்கும் பட்சிகளுக்கும் அதிகமாக உண்டு. தற்காத்துக் கொள்ளும் சுவாச அலையின் சக்தியும் அதிகமாக உண்டு.

“மனிதனிலிருந்து வந்த மிருகத்திற்கு” அந்த உணர்வின் அலை அதிகமாக… ஒவ்வொரு பிறவியும் எடுத்து மிருகப் பிறவிக்கு வந்த பிறகு அதன் சுவாச அலையின் ஜீவன் கொண்ட உடல் அமைப்பு வளரத் தக்க நிலையிலேயே…
1.இந்தத் தற்காத்துக் கொள்ளும் அமிலத்தின் சக்தி குணம் வீரியப்பட்டு
2.இயற்கையாக அதனுடைய உருவத்திலேயே சில உணர்வுடன் மிருக ஜெந்துக்களும் பறவைகளும் பிறப்பெடுத்து வருகின்றன.

மனிதனின் நிலையுடன் அதிகப்படியான எண்ண அலையின் மோதலினால்
1.தன் எண்ணத்திற்குகந்த… தன் உடலில் ஏற்றிக் கொண்டுள்ள…
2.பல உயிராத்மாக்களின் (ஆவிகளின்) நிலையும் கலந்துள்ளன.

அதுவும் அல்லாமல் ஒவ்வொரு தாய் தந்தையரின் ஆண் பெண் உடலுடன் பிறப்பிற்கு வரக்கூடிய பல உயிரணுக்கள் கர்ப்பம் தரிக்கும் நாட்களுக்கு முதலிலேயே ஏறிவிடுகின்றன.

இப்படிப் பல உயிரணுக்கள் நம் (மனிதனின்) ஆத்மாவுக்குள் உடலில் கலந்துள்ள நிலையில் இந்தப் பயம் என்ற உணர்வின் நிலை அதிகப்பட்டு விடுகிறது.

மனிதனின் உணர்வின் எண்ணத்தைக் காட்டிலும்… மனிதனின் உடலில் உள்ள அணுக்களும் உயிராத்ம அணுக்களும்…
1.தன் செயலுக்கந்த நிலை அந்த உடலில் ஏற்படாத குணம் கண்டவுடன்
2.தன் விடுதலையை எண்ணி அதனுடைய எண்ண வேகங்கள் வரும் பொழுது
3.அதனுடைய உந்தலுக்கு மனிதன் ஆட்பட்டு விடுகின்றான்.

மனிதனுக்குப் பயம் என்ற உணர்வு அற்ற நிலை ஏற்பட்ட பிறகுதான் முனிவன் என்ற நிலையை எய்துகின்றான். மனித ஆத்மாவில் “பயம்” என்ற அச்ச உணர்வுக்கு இடம் தராத சுவாச அலையுடன் ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும்.

1.எந்நிலை கொண்ட இக்கட்டான சூழ்நிலை ஏற்படும் தன்மையிலும்…
2.இந்த மரண பயம் ஏற்படாவிட்டால் அந்த இடத்தில் தெளிவின் வழி கிடைக்கும்.

ஒர் அறையில் ஜீவன் பிரிந்த உடலுடன் நாம் தனித்திருந்தாலும் பயம் என்ற உணர்வை அண்டவிடாமல்… “அதை ஒரு ஜீவனற்ற வஸ்து… பொருள்…!” போன்று நம் எண்ண நிலை இருந்திடல் வேண்டும்.

ஒவ்வொரு மனித ஆத்மாவின் உடலும் உயிரணுக்களும் உயிர் ஆத்ம அணுக்களும் பல உள்ள பொழுது மனிதனுக்கு
1.இந்த மரண பயம் என்ற பயம் ஏற்படாவிட்டால்
2.மனிதனுக்குள் உள்ள இந்த ஆத்மாவே
3.ஓர் மனிதனின் செயலைப் பல கோடி மனிதர்கள் செய்யத்தக்க உணர்வு சக்திகளை
4.மனிதனின் உடலில் உள்ள உயிரணுக்களே உதவி செய்யும்.

தன் நிலை பெற வேண்டும் என்பதின் உட்பொருளின் உண்மை நிலை…
1.தன் நிலை பெறும் மனிதனின் எண்ணத்திற்கு
2.தன் நிலைக்கொப்ப அனைத்து உயிரணுக்களும் ஒன்று போல் சக்தியை
3.அந்த (அவனின்) வலுவின் வலுவுடன் கூட்டச் செய்யும்.

பல நினைவுடைய மனித ஆத்மாவின் உடலில் உள்ள உயிரணுக்களும் அதனதன் நினைவின் வளர்ச்சியின் செயலுக்குத் தான் “பல நினைவுடன்…” உள்ள மனிதனுக்கு உதவி புரியும்.

மிருகங்களைக் காட்டிலும் மனிதனின் எண்ணம் வளர்ச்சி பெற முடியும் என்ற அடிப்படையில் தான்
1.சம நிலை கொள்ளும் மனிதனுக்கும் சாந்த குணம் கொண்ட
2.பசுவைப் போன்ற சில பிராணிகளுக்கும் அதனின் சூலில் ஒவ்வொரு சிசு பிறக்கின்றது.

ஆனால் பல பல எண்ணங்கள் கொண்ட உணர்வின் இயக்கத்தால் மனிதனுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளும் அதற்கு மேற்பட்ட மூன்று நான்கு ஐந்து என்ற எண்ணிக்கையில் குழந்தைகளும் உருவாகக் காரணமாகின்றது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

“சித்ரா பௌர்ணமி…” அது எப்படி ஒளியாக இருக்கின்றதோ அதைப் போல் நம் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிட வேண்டும்.

ஆனால் பௌர்ணமி அன்று முழுமையாகப் பிரகாசித்தாலும் அதற்கடுத்து நாள் மற்ற கோள்களின் தன்மைகள் சூரியனிலிருந்து வரக்கூடிய ஒளிக்கதிர்களை மறைத்தால் அந்த நிழல் பட்டு ஒளி மங்கத் தொடங்குகின்றது.

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்று அறிந்திடும் அறிவாக கார்த்திகேயா என்று நாம் அறிவின் தெளிவாக இன்று இருக்கின்றோம்.

ஆனால் ஒரு மனிதன் வேதனைப்படும்படியான சொல்களைச் சொல்லும்போது அந்த உணர்வை நுகர்ந்தால் நம் நல்லறிவு இங்கே இருண்டு விடுகிறது.

நல்ல குணத்துடன் தான் நாம் இருக்கின்றோம். அந்த நல்ல குணம் கொண்டு தான் வேதனைப்படுபவரை உற்றுப் பார்க்கின்றோம்.
1.ஆனால் நாம் நுகரும் வேதனைப்படும் உணர்வுகள்
2.நல்ல அறிவை மேலே மூடுகின்றது திரை போன்று…!

ஏனென்றால் எந்தக் குணத்தை கொண்டு எண்ணுகின்றோமோ இந்த உணர்வின் தன்மை இங்கே உண்டு. அந்த உணர்வின் தன்மை கண்ணுக்குள் தான் காட்டுகின்றது. ஏனென்றால் முதலில் கண்கள் வழியாகத் தான் நமக்குள் எதுவுமே பதிவாகின்றது.

கண்ணால் பதிவாகும்போது…
1.“ஒரு தவறு” என்று இருந்தால் அந்த உணர்வின் தன்மையை நாம் நுகரும்போது எண்ணமாகின்றது.
2.அதாவது கண்களால் பதிவானது உயிரிலே நுகரும் போது அந்த எண்ணங்கள் வருகின்றது.
3.ஆனால் பதிவானதை எண்ணும்போது மீண்டும் கண்ணுக்கே வருகின்றது (சொல்வது அர்த்தமாகிறதல்லவா).

“எனக்கு நன்மை செய்தான்…” என்று எண்ணும்போது அந்த மனிதனின் நினைவு கண்ணுக்கு (திரைப்படம் போல்) வருகின்றது. அப்பொழுது மகிழ்ச்சியாக இயக்கச் செய்கின்றது.

அதே சமயத்தில் “தப்பு செய்திருக்கின்றான்…” என்றால் கண்ணிலே அவனைப் பார்த்தவுடனே… நமக்குள் பதிவான இந்த எண்ணங்கள் “இவன் எனக்கு துரோகம் செய்தான் பாவி…!” என்ற வெறுப்பின் உணர்வை ஊட்டுகின்றது.

1.அது தான் கண்ணால் பதிவு செய்வதும்
2.கண்ணால் பதிவானதை மீண்டும் எண்ணும் போது எண்ணத்தால் நம்மை இயக்குவது என்பது
3.(அதாவது அந்த எண்ணம் தான் நம்மை அடுத்து இயக்குகிறது)
4.எண்ணம் என்பது உணர்வுகள் உணர்ச்சிகள் தூண்டுவது.

ஆகவே புறத்தில் இருப்பதை நாம் நுகர்ந்த பின் இந்த உணர்வின் தன்மை நமக்குள் இயக்குகின்றது. இதைப் போன்ற நிலைகள் நமக்குள் தீமைகளாக உருவாகாதபடி துருவ தியானத்தில் எடுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு நிமிடமும் எடுத்து நீங்கள் சீராகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தரையில் அழுக்கு இருந்தால் துடைத்துவிடுகின்றோம் நம் உடல் மீது அழுக்கு இருந்தால் துடைத்து விடுகின்றோம். துணியில் அழுக்குப் பட்டால் துடைத்து விடுகின்றோம்.

ஆனால் நம் ஆன்மாவில் படும் அழுக்கினைத் துடைக்கின்றோமா…! அதைத் துடைத்துப் பழக வேண்டும். இல்லை என்றால்… அழுக்கு சேர்ந்தால்… நம் மனம் இருளாகிவிடும்.

முழு நிலாவாக இருக்கும் சந்திரன் அதற்கடுத்து மற்ற கோள்களின் மறைவு வர…வர வர…வர பௌர்ணமி சுருங்கிச் சுருங்கிக் கடைசியில் அது சிறிதாகி விடுகின்றது.

இதைப் போல் தான் நம்முடைய மனிதனின் வாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் குரோதம் பழி தீர்த்தல் பழி வாங்குதல் என்ற இந்த உணர்வுகள் வந்து விட்டால் நம் நல்ல குணங்கள் முழுமையாகத் தேய்ந்து விடுகின்றது.

ஆனால் உயிரின் உணர்வுடைய கடைசித் தொக்குகள் உண்டு. அதாவது உயிரணு விண்ணிலிருந்து பூமிக்குள் வந்து தாவர இனச் சத்தைக் கவர்ந்து ஆரம்பத்தில் எப்படிப் புழுவானதோ அதே போல நல்ல குணங்கள் தேய்ந்து விட்டால் உயிரின் தன்மையில் இருண்டுவிடும்.

1.அப்படி இருண்டு விட்டால் விஷம் என்ற நிலைகள் ஆகி
2.அந்த விஷத்தின் உணர்வின் துணை கொண்டே அடுத்த உடல் பெறும் தன்மை அடைந்து விடுகின்றது.

ஆகவே மனிதனாக இருக்கும் நாம் மீண்டும் தேய்பிறையாகக் கூடாது. அருள் ஒளி பெற்ற அருள் ஞானியின் உணர்வை நமக்குள் வளர்த்து இனி என்றுமே ஏகாந்த நிலை என்ற பிறவி இல்லா நிலை பெறுவதே இந்த மனித உடலின் முழுமை…!

நான் யார்…? நம் உடல் என்று அல்ல…! உயிரால் வளர்க்கப்பட்டது தான் மனிதனின் உடல்.

1.உயிருடன் (ஒன்றி) இருக்கப்படும்போது நான் என்று வருகின்றது.
2.நான் நானாக அந்த நானாக (உயிராக) வேண்டும்.
3.உயிரின் உணர்வுகள் நம்முடன் ஒன்றி அந்த உணர்வின் தன்மை இணைந்து வாழ்ந்தால்தான் “நான் நானாகின்றேன்…!”

குருவிடம் ஆசி பெறும் முறை

 

எதை எண்ணி ஏங்கி நீங்கள் வந்தீர்களோ அந்த ஏக்கத்திற்கொப்ப உயர்ந்த ஞானிகளின் அருள் உங்களுக்குள் படரும். துன்பத்தை விளைவிக்கும் நோயோ துன்பத்தை விளைவிக்கும் சொல்லோ அது எல்லாம் நீங்க வேண்டும் என்று தான் உங்களுக்கு நான் (ஞானகுரு) அருளாசி கொடுக்கின்றேன். அதே உணர்வுடன் நீங்கள் எண்ணி அதைப் பெற்றால் அந்த பலனைப் பெற முடியும்.

மாம்பழத்தைச் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் அதை வாங்கக் கடைக்கு அந்த உணர்வு உங்களை அழைத்துச் செல்கிறது.

அதே போல்
1.மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடலுக்குள் படர வேண்டும்
2.எங்கள் உடல் நோய் மன நோய் நீங்க வேண்டும்
3.எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்
4.எங்கள் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும் என்று ஏங்கினால்
5.நான் கொடுக்கும் அந்த அருள் சக்தி உங்களுக்கு எளிதில் கிடைக்கும்.

அதை விட்டுவிட்டு சாமி…..! என் துன்பம் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறதே… நீங்கள் தான் கடவுளாக இருக்கிறீர்கள்… என்று என் காலில் விழுந்தீர்கள் (அடிபணிந்தீர்கள்) என்றால்
1.உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்கிறீர்கள்
2.நான் உபதேசித்ததை வீணாக்குகிறீர்கள் என்று தான் அர்த்தம்.

பெரியவர் என்று எண்ணி சாமியை (ஞானகுரு) உயர்த்தி விட்டு உங்களைத் தாழ்த்தி விடாதீர்கள். உங்கள் உணர்வின் உணர்வின் எண்ணத்தை உயர்த்துங்கள்.
1.மகரிஷிகளின் உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் செலுத்துங்கள்.
2.உங்களை அறியாது ஆட்டிப் படைக்கும் அந்தச் சக்தியைத் தாழ் பணியச் செய்யுங்கள்.
3.இது தான் ஆசீர்வாதம்…! எனக்குக் குருநாதர் காட்டிய நிலைகள் அது தான்.

மெய் ஒளியின் தன்மையை நமக்குள் கூட்டி நம் எண்ணம் சொல் செயல் அனைத்தையும் புனிதம் பெறச் செய்ய வேண்டும்.

ஒருவர் தீயதின் நிலைகளினால் துன்பப்படுகின்றார் என்றால் நம் சொல் அந்தத் தீயதிலிருந்து அவரை மீட்டி உயர்வான நிலைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.

இந்த இயற்கையின் தன்மை நாம் எதை எடுக்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை அது நிச்சயம் வேலை செய்யும்.

ஆகையினால் இந்த உபதேசத்தைக் கேட்டுணர்ந்தவர்கள் பொறுமையும் பொறுப்பு கொண்டு “மற்றவர்களை முந்தி விட்டு நாம் முதலில் ஆசி பெற வேண்டும்…” என்ற எண்ணத்திற்கு வராமல் எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிறுத்தி வாருங்கள்.

எவ்வளவு நேரம் பொறுமையாக இருந்து…
1.மற்றவர்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ
2.அந்த அத்தனை ஆற்றலையும் நீங்கள் பெறுகின்றீர்கள்.
3.நீங்கள் இருந்த இடத்திலிருந்தே அந்தத் தகுதியை நீங்கள் பெறுகின்றீர்கள்.

அவசரப்பட்டோ… வேகமாக வீட்டுக்குப் போகவேண்டும் என்றோ… அந்த வேக உணர்வில் இல்லாதபடி இந்த அருளைப் பெற வேண்டும் என்று இந்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆகவே வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த அருள் உணர்வைப் பெறும் தகுதியைக் கூட்டி எல்லோரும் உயர்ந்த சக்தியைப் பெற வேண்டும் என்று எண்ணுவதே நல்லது.

ஏனென்றால்… பிறர் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணினால்
2.நாம் முதலில் நலமாகின்றோம்
3.அத்தகைய மெய் உணர்வுகள் நமக்குள் வளர்ந்து நம் சொல்லின் தன்மை நமக்கு நல்லதாகின்றது.

நம் சொல்லைப் பிறர் கேட்டாலும் அவர்கள் உள்ளங்களிலும் மகிழச் செய்கிறது. அந்த மகிழ்ச்சியின் தொடர் அவர் நம்முடன் இணைந்து செயல்படும் தன்மையும்
1.நாம் போகும் நிலைகளுக்குத் தடையின்றி வழிப்படுத்துவதற்கும்
2.தடையின்றி வியாபாரம் நடத்துவதற்கும்… நம் காரியங்களை நடத்துவதற்கும்
3.தடையற்ற நிலையில் நாம் என்றுமே மகிழ்ச்சியுடன் வாழ உதவியாகிறது.

ஆகையினால் ஆசீர்வாதம் வாங்கும் போது இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்குத் துன்பம் வந்தால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடல் நலமும் வளமும் பெற வேண்டும் எங்கள் சொல்லுக்குள் இனிமை பெறவேண்டும் எங்கள் செயல் எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணிப் பழக வேண்டும்.

வியாபாரத்திலேயோ குடும்பத்திலேயோ நல்லதை எண்ணி எங்கே போனாலும் இந்த முறைப்படி செய்யுங்கள்.
1.நான் (ஞானகுரு) கொடுக்கும் இந்த ஆசீர்வாதம் உங்களுக்குள் பின் தொடர்ந்து
2.எப்பொழுதுமே உங்களுக்கு உறுதுணையாக இருந்து உங்களைக் காக்கும்
3.உங்களுக்கு உயர்வினை ஊட்டும்… மெய் ஒளியை எட்டும் அந்தத் தகுதியையும் உருவாக்கிக் கொடுக்கும்.

பக்திக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மனிதன் தன் ஞானத்தின் வளர்ச்சிக்குக் கொடுக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

இந்த மனிதப் பிறப்பை எடுக்கவே நம் வாழ்க்கையில் காணும் முறைப்படி கர்ப்பத்தில் பத்து மாதம் இருந்து பிறப்பெடுத்து வாழ்ந்து மடிந்து மீண்டும் இதே நிலை என்ற உணர்வுகளும் இது நாள் தொட்டு மனித ஆத்மாவின் உயிர்ப் பிறப்பின் வளர்ச்சி நிலையின் தத்துவ நிலைகளும் உண்மையை உணர்த்தி மனிதனுக்கு நல் வழி காட்டவில்லை.

தாவர வர்க்கமாகி அத்தாவர குண ஈர்ப்பில் வளர்ந்த நிலையில் வளர்ந்த நிலை என்பது…
1.தாவரங்களிலேயே எண்ணிலடங்கா பல கோடி இன வளர்ச்சியுண்டு.
2.ஒன்றிலிருந்து மாறுபட்டு மாறுபட்டு மீண்டும் அந்தத் தாவர இனமே மற்றொன்றாகின்றது… வளர்ந்து கொண்டேயுள்ளது.

இந்தத் தாவரங்களில் பல அபூர்வ உன்னத அமிலக் குணத்தின் ஈர்ப்பில் அது வளர்ந்து வாழ்ந்து அது மடிந்த பிறகு மீண்டும் இம்மண்ணில் அத்தாவர இனத்துடன் இம்மண்ணின் ஈர்ப்புக் குணமும் சேர்ந்து மற்றொரு குணமும் பெறுகின்றது.

இது மடிந்த நிலையில் இதிலிருந்து வெளியாகும் ஆவி அமிலம் தன் இனத்துடன் இனமாகச் சேரும் பொழுது… ஒன்றின் மேல் ஒன்று பட்டு கன நிலை ஏற்பட்ட பிறகு… பூமியின் ஈர்ப்பில் அதற்கு மேல் கனத் தன்மை கொண்ட தன் இன உலோகமுடன் அது கலந்து விடுகின்றது.

இப்படியே பூமியின் காந்த ஈர்ப்பின் ஆவி நிலையான இவ்வெட்கையின் வளர்ச்சி தாவர நிலையிலிருந்து பிரிந்த அமில குணத்தில் சக்தி கொண்ட வலுவாக மனித வர்க்கங்கள் ஆரம்பக் கதியில் தோன்றியது.

அப்படித் தோன்றியிருந்தாலும்… இன்றைய மனிதன் ஒன்றிலிருந்து ஒன்றாக மனிதனிலிருந்து மனிதன் பிறக்கும் இன்றைய உலகில்…
1.தாவரங்களை எப்படி நாமாகப் பயிர் செய்து
2.அதன் மகசூலிலிருந்து மீண்டும் மீண்டும் அதன் மகசூலை எடுக்கின்றோமோ
3.அதன் நிலை போன்ற வழி நிலையில் மனிதக் கருக்கள் தோன்றி வந்தன. (மக்கள் தொகைப் பெருக்கம்)

இன்றைய நாளில் நாம் பயிர் செய்யும் நிலங்களில் பல காலங்களுக்கு ஒரே இனப் பயிரைப் பயிர் செய்யும் பொழுது அந்தப் பூமியின் ஈர்ப்பில் உள்ள சக்தி குறைந்து அந்த நிலத்தின் பலன் நிலை குறைவுபடுகிறது அல்லவா…!

அதைப் போன்று ஆரம்பக் கதியில் உயர்ந்த உயிரணுவாகப் பல சக்தி அமிலத்தைக் கூட்டிக் கூட்டி மனிதனாகிப் பிறப்பு மாறி மாறி… அவன் எடுக்கக்கூடிய எண்ணத்தின் ஈர்ப்பின் நிலையினால்
1.மனித அமில குணமுள்ள நாள் வரை மனிதக் கருவில் உதித்து வாழ்ந்து மனிதனாக உள்ள நிலையில்
2.மிருகக் குணத்தில் வாழும் மனிதன் நிச்சயம் அடுத்த பிறப்பில் மிருகமாகின்றான்.

மிருகமாகி… அதன் சுழற்சி வட்டத்தில் ஓடி மீண்டும் மிகவும் ஈன நிலையான புழு பூச்சியாகி… அந்த இனத்தின் சுவாச நிலையில் மீண்டும் பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் மனிதனாக வரக்கூடிய தன்மை ஒரு சாரருக்கும் மிருக நிலையிலிருந்து அதன் சுவாச குணத்தில் மனிதனாகும் சில அபூர்வ சக்திகளின் மனிதனாகும் வழித் தொடரும் சிலருக்கு உண்டு.

இதற்கெல்லாம் அப்பாற்பட்ட சக்தியான புதிய உயிரணுவே… அத்தாயின் கருவிற்குத் தோன்றக்கூடிய வாய்ப்பு நிலையும் பல உயிராத்மாக்களுக்கு வந்து வாய்க்கின்றன. இந்த நிலையைப் பெறுவது என்பது பல கோடியில் ஒன்றாகத் தான் இருக்குமே அன்றி எல்லா உயிரணுக்களும் அப்படி வளர்வதில்லை.

மனிதனாக உள்ள காலங்களில் ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு ஊர்… நாடு… தேசம்… என்ற நிலையிலும் அங்குள்ள மனிதர்களின் எண்ண வளர்ச்சியிலும் உடல் உருவம் அனைத்திலுமே அங்குள்ள பூமியின் ஈர்ப்பின் சுவாசத்தினால் மாறு கொள்கின்றனர்.

1.ஒரு சாரார் பிறந்து வளர்ந்து தன் ஜீவித வாழ்நாள் எல்லாம் கிடைக்கப் பெற்று அதே சுழற்சியில் மடிகின்றனர்.
2.இன்னும் சில சாரார் தன் ஜீவிதத்துடன் அறிவாற்றலின் வளர்ச்சி மேம்பாட்டில் பலவற்றை அறிய எண்ணி வாழ்கின்றனர்.
3.இன்னும் சில சாரார் தன் சக்தியின் அறிவைக் கொண்டு புதிய ஆற்றல் படைப்புகளை ஆராய்ந்து செயலாக்கிக் காட்டுகின்றனர்.

இப்படி மனித ஆத்மாக்களின் எண்ணமே அதன் எடுக்கும் வளர்ச்சியில் மேன்மை கொண்டு அந்த மேன்மையின் சக்தியை ஈர்க்கும் பக்குவத்தில் செலுத்தினால் தான் அது வளர்ச்சியின் பாதையாகின்றது,

ஏனென்றால்…
1.மனிதனின் உடலிலுள்ள உயர் காந்த அலையின் சக்தியான ஜீவ உயிர் உள்ளதினால்
2.நாம் எந்த சக்தியை ஈர்த்து எடுக்கின்றோமோ அதன் பலனை நம் உயிராத்மா ஈர்க்கக்கூடிய நிலை உண்டு.
3.ஆக.. காந்த மின் அலை கொண்ட உடலப்பா மனிதனின் ஜீவ உடல்.

விஞ்ஞானத்திற்குச் செயலாக்கக் காந்த மின் அலையுடன் உலோகங்களின் சக்தி அமிலத்தைப் பூசி அதிலிருந்து சூரியனின் ஒளி அலைகளில் வரும் மின் அலைகளைத் தன் ஆராய்ச்சிக்குகந்த நிலைக்கும் தான் செயலாக்கும் விஞ்ஞானக் கருவிகளின் நுட்ப வேலைகளுக்கும் எடுத்துக் கொள்கின்றனர்.

இன்றைய விஞ்ஞான மனிதன்…
1.சூரியனின் ஒளி அலையில் உள்ள சக்தி அலைகளைப் பிரித்தெடுத்து
2.அதன் தொடர் அலையிலிருந்து தான் பல விஞ்ஞானச் சாதனைகளைப் புரிகின்றான்.

இதை யாரும் மறுக்க முடியாது…!

அதே மின் அலையுடன் காந்த சக்தியின் ஈர்ப்பின் ஜீவ உயிராத்மாவான உடலைக் கொண்ட நாம்… நம் எண்ண அலையை எதெனெதன் பால் செலுத்தி அதீத ஈர்ப்பின் எண்ணத்தை நம் உயிராத்மா ஈர்க்கும் வழித் தொடர் பெற்றால் விஞ்ஞான சாதனையில் கண்டு மகிழும் அனைத்துச் சக்தியும் நம் உயிராத்மாவினால் காண முடியும். அந்தச் சக்தி நம் உயிருக்கு உண்டு.

இதன் வழித் தொடரில் தான் சித்து நிலையும்… சப்தரிஷியின் நிலையும் எற்பட்டதேயன்றி இன்றையக் காலத்தில் பிரித்து இருக்கும் பக்தி முறையின் நெறிப்பாட்டில் இல்லை.

1.மனிதனையும் தெய்வத்தையும் வேறுபடுத்திக் காட்டி
2.மனிதனின் எண்ணத்தையே குன்றச் செய்துவிட்டனர்…
3.தெய்வத்தின் பக்தி பூண்ட “அருள் நெறித் தொண்டர்கள் என்பவர்கள்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒருவருக்கு நாம் உதவி செய்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

நம்மால் அந்த உதவி பெற்ற மனிதனோ உதவி செய்ததற்குண்டான நன்றியைக் கடைசியில் (உடலை விட்டுப் பிரியும் போது) எண்ணுகின்றான். பிரமாதமாக… எனக்கு மகராசனாக உதவி செய்தார் என்று…!

அந்த உடலை விட்டு நீங்கும் போது… உதவி செய்தவரை எண்ணி அந்த உணர்வின் வலுக் கொண்டால் உதவி செய்த நம் உடலுக்குள் அந்த ஆன்மா வந்து விடுகின்றது.

நம் உடலுக்குள் வந்து விட்டால் அவன் பெற்ற துயரமோ துன்பமோ நோயோ அவை அனைத்தும் நம் உடலுக்குள் இயக்கத் தொடங்குகின்றது. நம்மையும் அது நலிவடையச் செய்துவிடும்.

இதைப்போன்ற நிலைகளை நாம் தடுக்க வேண்டுமென்றால்
1.அந்த மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

நாம் எண்ணத்தால் எண்ணுவது அனைத்தும் நமக்குள் ஜீவ அணுக்களாக மாறுகின்றது. நாம் பிறருக்கு உதவி செய்திருந்தால் பற்றுடன் அந்த ஆன்மா நமக்குள் ஜீவான்மாவாக வந்து அவர் படும் துயரத்தை நமக்குள் உருப் பெறச் செய்து விடுகின்றது.

இது போன்ற நிலைகளை அடக்க வேண்டும் என்றால்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து நமக்குள் வலுவாக்கிடல் வேண்டும்.
2.நம்மைப் பார்ப்பவர்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.மலரைப் போல் மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் அவர்கள் பெற வேண்டும்
4.அவர்கள் குடும்பத்தில் உள்ளோர் எல்லா நலமும் பெற வேண்டும்.
5.நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
6.அங்கே பணி செய்பவர்களெல்லாம் சகோதர உணர்வுகள் பெற வேண்டும்.
7.எங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
8.நாங்கள் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எண்ணி
9.நமக்குள் பகைமையற்ற உணர்வினை வளர்க்க வேண்டும்.

இது போன்ற நல் உணர்வுகளை நமக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும். அதைக் கணங்களுக்கு எல்லாம் அதிபதியாக்க வேண்டும். அதாவது பிறர் தீமையை அகற்றும் அந்த உணர்வின் எண்ணத்தைக் கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும். அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் அதிபதியாக்க வேண்டும்.

உயிர் இருக்கிறதா இல்லையா என்பதை அறிய மூச்சுக் காற்றைத் தான் பார்க்கிறோம்… அந்தக் காற்றின் சூட்சமம் என்ன…? – ஈஸ்வரபட்டர்

 

ஆதிசக்தியின் சக்திக் குழந்தைகளான எல்லாமின் எல்லாமாக இறை சக்தி நிறைந்துள்ளது. ஒவ்வொரு சாராரும் இறைவனை அவரவர்கள் ஒவ்வொரு வழி கொண்டு வணங்குகின்றனர்.

நாஸ்தீகம் பேசுபவர்கள் (கடவுள் இல்லை என்பவர்கள்) இறை சக்தியைக் காட்டச் சொல்கின்றனர். எல்லா ஜீவராசிகளும்.. எல்லாமும் இறைவன் தான்…! என்றாலும் இறைவனை நாம் காண முடிகின்றதா…?

காட்சி:-

முதுகில் அரிப்பெடுத்த ஒருவர் அரிப்பெடுத்த இடத்தைத் தன் கையால் கீற முடியாமல் மற்ற உபகரணத்தை எடுத்துக் கீறுவதைப் போன்றும்… முதுகைச் சுவற்றில் தேய்ப்பது போன்றும் காட்சி தருகின்றார்.

விளக்கம்:-

தன் முதுகு தான்… ஆனால் தன் முதுகைத் தானே சொறிவதற்கு முடிவதில்லை. அந்த இடத்தில் என்ன உள்ளது…? என்று பார்க்கவும் முடிவதில்லை.

ஆனால் தனக்குச் சொந்தமான முதுகு தான். அதில் ஏற்படும் நமைச்சலையும் உணர்ச்சிகளையும் உணர முடிகின்றது.

அதைப் போன்று ஒவ்வொரு உயிரினத்திலும் அவ்வுயிரணு தோன்றிடவே
1.ஆண்டவனின் சக்தி ஆவியாக… உயிர் கொண்டு இருந்து தான்
2.அனைத்து ஜீவன்களுமே வாழுகின்றன.
3.இப்படி இருக்க… ஆண்டவன் என்ற தனித்த பிம்பத்தைக் காட்டினால் தான் ஆண்டவன் என்று உணர முடியுமா…?

ஆகவே ஆண்டவனின் அருள் சக்திக்குகந்த செயல்படும் ஜீவன்களாகத் தான் ஒவ்வொரு ஜீவனும் ஜீவித்து வாழ்கின்றது.

இதை உணராமல்… தனக்கு எந்த அளவு சக்தி நிலை உள்ளதோ அந்த நிலையில் எடுக்கும் செயல் வாழ்க்கை தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும்… “அவன் எடுக்கும் சுவாச எண்ணம் கொண்டு செயல்படுகின்றது…”

1.நுண்ணிய சிறு கருவிகளை…
2.நுண்ணிய சிறு உறுப்பின் துணை கொண்டு தான் அதன் வேலைப்பாடு செய்ய முடிகின்றது.
3.கனம் கொண்ட பெரிய உறுப்புகளின் செயலுக்கு
4.அதன் செயலுக்குகந்த வலுவான சாதனப் பொருள் கொண்டு தான் அந்தப் பொருளை உருவாக்க முடிகின்றது.

அதைப் போன்றுதான் நாம் எடுக்கும் குறுகிய எண்ணத்தின் வளர்ச்சி கொண்ட சுவாசமாக இருந்தால்… அதன் தன்மைக்குகந்த குறுகிய ஞானம் கொண்ட வாழ்க்கை தான் நமக்கு அமையும்.

1.எண்ணத்தின் வலு…
2.எதன் அடிப்படையில் எதன் சக்தித் திறன் கூடுகின்றதோ
3.அதன் செயல் ஞானம் தான் நமக்கும் கிட்டும்.

எண்ணத்தின் உயர்வை இந்த உடல் என்ற ஆவியுடன் கூடிய ஆத்ம உயிர் இந்தப் பிம்பத்தில் உள்ள பொழுதே நம் சுவாச அலையை உயர்ந்த ஞான எண்ணமுடன் செலுத்தி எடுப்போமானால்… இப்பொழுதுள்ள ஜீவ சக்தி கொண்ட இந்த உடலில் எடுக்கும் ஞான அலையைக் காட்டிலும் “உயர்ந்த ஞான அலையை நாம் பெற முடியும்…”

இந்த மனிதப் பிறவியில் (உடலில்) இருக்கும் பொழுது தான் அதைச் செயல்படுத்த முடியும். ஆவி நிலையிலிருந்து பெற முடியாது.. மிருகங்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் அந்தத் தகுதி கிடையாது.

காட்சி:-

ஒரு பந்து நீரில் மிதந்து ஓடிக் கொண்டே உள்ளது. அந்தப் பந்தில் சிறு துவாரம் ஏற்பட்டவுடன் பந்தில் உள்ள காற்று பிரிந்து அந்தப் பந்தானது நீரின் உள் பாகத்திற்கு நிலத்திற்குச் சென்று விடுகிறது.

விளக்கம்:-

ஆக… இந்த உடல் என்ற காற்றடைத்த இந்தப் பந்து இந்த உடலில் உள்ள உயிர் ஆவி பிரிந்தவுடன்… நடக்கவோ நிற்கவோ முடியாமால் ஜீவனற்று… இந்தக் காற்று பிரிந்தவுடன் நிலத்துடன் கனத்து ஐக்கியப்பட்டு விடுகின்றது.

அதைப் போன்று இந்தக் காற்றின் அலை சக்தியை
1.நம் சுவாச நிலை கொண்டு நம் உடல் ஆத்மா மட்டும் வாழ்வதோடு அல்லாமல்
2.நம் எண்ணத்தின் ஆத்ம வலுவின் சக்தியும் வாழுகின்றது.
3.அதன் சக்தித் திறனை வழிப்படுத்தித் தருவது தான்
4.இங்கே ஈஸ்வரபட்டனாகிய யான் வெளிப்படுத்தும் இந்தத் தத்துவத்தின் உண்மை ஞான வழித் தொடர்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

உதாரணமாக இரண்டு பேர் கோபத்துடன் சண்டை போடுகின்றார்கள். அவர்களை நாம் பார்க்க நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்…?

அடுத்த கணமே ஈஸ்வரா… என்று நம் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் இரத்தநாளங்களில் கல்க்க வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் பெற வேண்டும் என்று
1.கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகளை நம் உடலில் திருப்பி விட வேண்டும்.

இப்படிச் செய்யும் போது அவர்கள் சண்டையிட்ட உணர்வுகளைச் சுவாசித்து நம் உடலுக்குள் அந்தக் கார உணர்வுகள் செல்வதைத் தடுத்து விடுகின்றோம்.

ஏனென்றால் அங்கே உற்றுப் பார்க்கும்போது இங்கே ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கி விடுகின்றது நம் கருவிழி.

ஆனால் துருவ நட்த்திரத்தின் சக்தியை எடுத்து
1.நம் கண்ணின் நினைவினை உள்ளே செலுத்தும் போது இங்கேயும் அடைத்து விடுகின்றது
2.நம் உயிரிலே மோதும் நிலையையும் தடுத்து விடுகின்றோம்.
3.இந்த உணர்ச்சிகள் உடலுக்குள் பரவும் போது அந்தக் கார உணர்ச்சிகள் அனாதையாகின்றது… உள்ளே புகாதபடி..!

இப்படி ஒரு சிறிது நேரம் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணிச் சுவாசித்தோம் என்றால் அந்தத் தீமையான உணர்வுகளைச் சூரியன் இழுத்துக் கவர்ந்து சென்று விடுகின்றது. நம் ஆன்மா சுத்தமாகின்றது.

சுத்தமான பின்… சண்டை போட்டவர்கள் இருவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். அவர்கள் ஒன்றுபட்டு வாழும் தன்மை பெற வேண்டும் என்று இப்படி நாம் எண்ணி அந்த உணர்வை அவர்களுக்குப் பாய்ச்ச வேண்டும்.

இப்படி எண்ணினால் நமக்குள் அந்தத் நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் இரத்தங்களில் கலந்து துருவ நம் உடலுக்குள் பரவுகின்றது. இரத்தத்தின் வழி எல்லா அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பாய்கிறது.

மகரிஷிகளுடன் நாம் அமர்ந்து தியானிக்க வேண்டிய முறை

 

1. நாங்கள் பெறக்கூடிய “அத்தனை உயர்ந்த சக்திகளும்” எங்கள் தாய் தந்தையருக்கு முதலில் கிடைக்க வேண்டும் ஈஸ்வரா
2. உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் முன்னோர்களின் உயிராத்மாக்கள் அனைத்தையும் நாங்கள் விண்ணிலே செலுத்தி… அவர்கள் அனைவரையும் பிறவி இல்லை என்ற நிலை அடையச் செய்து… “சப்தரிஷிகளாக” ஆக்கிப் பேரானந்த நிலை பெறச் செய்ய வேண்டும் ஈஸ்வரா
3. தாய் தந்தை அருளால் முன்னோர்களின் அருளால் ஞானகுருவின் அருள் சக்திகளை நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா
4. ஞானகுரு பதிவு செய்யும் உபதேசக் கருத்துக்களை ஒவ்வொரு நாளும் “திரும்பத் திரும்ப… திரும்பத் திரும்பக் கேட்டு” ஆழமாக எங்களுக்குள் பதிவு செய்து… உபதேசத்தில் சொன்னபடி நாங்கள் நடந்து… அதை வாழ்க்கையில் கடைப்பிடித்து… ஞானகுரு காட்டியபடி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை “காற்றிலிருந்து…” சுவாசிக்க வேண்டும் ஈஸ்வரா
5. ஞானகுரு காட்டிய அருள் வழியில் கணவன் மனைவி நாங்கள் ஒன்றி வாழ்ந்து “கணவனை உயர்த்தும் சக்தியாகவும்… மனைவியை உயர்த்தும் சக்தியாகவும்…” நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
6. எங்கள் குழந்தைகள் அனைவரையும் “அகஸ்தியரைப் போன்ற மெய் ஞானியாக வளர்க்கும் அருள் சக்தி” நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
7. நாங்கள் பார்க்கும் ஒவ்வொருவர் உயிரையும் கடவுளாக வணங்கி… உடலைக் கோவிலாக மதித்து… உடலுக்குள் இருக்கும் அனைத்து குணங்களையும் தெய்வமாக எண்ணி… அவர்கள் அனைவரையும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணையச் செய்து… மகிழ்ந்து வாழச் செய்யும் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
8. ஞானகுரு சொல்லும் முறைப்படி எங்கள் ஆறாவது அறிவைப் பயன்படுத்தி… ஒவ்வொரு நொடியிலும் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்து… “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் அடிக்கடி அடிக்கடி எண்ணி… உயிர் வழிச் சுவாசமாக விண்ணிலிருக்கும் “மகரிஷிகளுடன் தொடர்பு கொண்டு” அவர்கள் துணையால் துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியையும் எங்கள் உடலில் உள்ள எல்லா அணுக்களின் முகப்பிலும் இணைத்து… பேரருள் பேரொளியாகப் பெருக்கி… எங்களிடமிருந்து வெளிப்படும் மூச்சு பார்வை சொல் அனைத்துமே பேரருள் பேரொளியாக இந்தக் காற்று மண்டலம் முழுவதும் படர்ந்து… விஞ்ஞானத்தால் உருவான நச்சுத் தன்மைகளைக் கனியச் செய்து “நன்மை பயக்கும் சக்தியாக மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்…” ஈஸ்வரா
9. குறை காணும் எண்ணத்தை விடுத்துக் குறைகளை எங்கே கண்டாலும் அந்தக் “குறைகளை நிவர்த்திக்கும் சக்தியாக” எங்களுக்குள் வளர்ந்து அனைவரையும் அருள் ஞானம் பெறச் செய்யும் அருள் சக்தியாக நாங்கள் வளர்ந்திட வேண்டும் ஈஸ்வரா
10. ஞானகுரு காட்டிய அருள் வழியில் நாங்கள் வழி நடந்து… மற்றவர்களுக்கும் குரு காட்டும் அருள் வழியினைப் போதிக்கும் சக்தி பெற்றவர்களாக நாங்கள் வளர வேண்டும் ஈஸ்வரா
11. ஞானகுரு ஒலி நாடாவின் மூலம் கொடுத்த உபதேசங்களைப் பதிவாக்கி… அந்த அருள் வழியை நாங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து… “ஈஸ்வரபட்டரின் பரிபாஷைகளை உணர்ந்து…” ஞானகுரு அனுபவபூர்வமாக பெற்ற அத்தனை உண்மைகளையும் உணர்ந்து… “ஞானகுரு கொடுக்கும் நுண்ணிய உணர்வுகள் அனைத்தையும் அறியும் ஆற்றலும் பெற்று…” மற்றவர்களுக்கும் அதைக் கிடைக்கச் செய்யும் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
12. உலகில் நடக்கும் அசம்பாவிதங்களோ அதிர்ச்சியான நிகழ்ச்சிகளோ எங்களுக்குள் பதிவாகக் கூடாது ஈஸ்வரா… அறியாது அதை நாங்கள் கேட்கவோ பார்க்கவோ நேர்ந்தாலும் உடனடியாக நாங்கள் ஆத்ம சுத்தி செய்து… “அதை இயக்கவிடாது தடுக்கும் அருள் சக்தி” நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
13. எங்கள் பார்வையால் சொல்லால் செயலால் மூச்சால் பிறருடைய தீமைகள் அகன்று… நோய்கள் அகன்று… உலகில் படர்ந்து கொண்டிருக்கும் சர்வ நச்சுத் தன்மைகளையும் அகற்றச் செய்யும் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
14. ஞானகுரு காட்டும் நெறியில் உத்தமஞானியாக நாங்கள் வளர்ந்து ஊரையும் உலகையும் காக்கக்கூடிய சக்தியாக… உலகுக்கு எடுத்துக் காட்டாக வளர்ந்திட வேண்டும் ஈஸ்வரா
15. “ஞானகுருவின் அருள் எங்களுக்குள் வந்து…” உலக மக்கள் அனைவரையும் காக்கும் சக்தியாக நாங்கள் வளர வேண்டும் ஈஸ்வரா
16. கருவுற்ற தாயின் வயிற்றில் வளரும் சிசுக்களை எல்லாம் “உலக இருளை அகற்றும் ஞான சக்தி பெற்றவர்களாக… அகஸ்தியராக உருவாக்ககூடிய சக்தி…” நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
17. எந்த நேரம் எந்த நிமிடம் எங்கள் உடலை விட்டு உயிர் பிரிய நேர்ந்தாலும்… “யாருடைய ஈர்ப்பிலும் நாங்கள் சிக்காது…” ஏகாந்தமாக சப்தரிஷி மண்டல எல்லையை நாங்கள் அடைய வேண்டும் ஈஸ்வரா
18. மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சுவாசிப்போம்… எங்கள் மூச்சலைகளை “அருள் மணங்களாக” வெளிப்படுத்துவோம்… மகரிஷிகளின் அருள் சக்திகளைக் “கூட்டமைப்பாக” இந்தக் காற்று மண்டலம் முழுவதும் பரவச் செய்வோம். மகரிஷிகள் வேறல்ல… நாம் வேறல்ல… என்ற நிலையில் “அவர்களுடன் இணைந்து தியானிப்போம்… தவமிருப்போம்…”
19. இந்தப் பரமாத்மாவைத் தூய்மைப்படுத்தி… நம் ஆன்மாவைப் புனிதப்படுத்தி… உடலில் உள்ள அனைத்து ஜீவான்மாக்களையும் ஒளியாக்கி… நம் உயிராத்மாவைப் பேரருள் பேரொளியாக ஆக்குவோம். உலகில் உள்ள ஒவ்வொரு உயிராத்மாவையும் புனிதம் பெறச் செய்வோம்
20. உடலை விட்டுப் பிரிந்து சென்று… இந்தக் காற்று மண்டலத்தில் சுழன்று கொண்டுள்ள அத்தனை உயிரான்மாக்களையும்… “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் துணை கொண்டு உந்தித் தள்ளி…” சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்வோம்
21. ஒளியான பிரபஞ்சத்தை உருவாக்குவோம்… மெய் உலகைப் படைப்போம்…!

எம்முடைய உபதேசத்தைக் கேட்டுணர்ந்தவர்களிடம் யாம் எதிர்பார்ப்பது என்ன…? – ஞானகுரு

 

நீங்கள் எத்தனையோ கோவில்களுக்குப் போகின்றீர்கள். ஆனால் நான் (ஞானகுரு) சதா உங்களைத் தான் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றேன்.

1.உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணி
2.உங்கள் உடலை எல்லாம் கோவில்களாக எண்ணி
3.உங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய குணங்களை எல்லாம் தெய்வமாக எண்ணி
4.அந்தக் கோவிலில் மகிழ்ச்சி தோன்ற வேண்டும்.
5.அந்தக் கோவிலிலிருந்து வரக்கூடிய மூச்சு எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று தியானிக்கின்றேன்.

நான் பார்த்த கோவில்கள் அத்தனையுமே (எம்மைச் சந்தித்தவர்கள்) ஒவ்வொருவரையும் தியானம் செய்து அதிகாலை 4-30 மணிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்று உங்களைப் பிரார்த்திக்கின்றேன்.

அந்த நேரத்தில் உங்களைத் தட்டி எழுப்புவது போல் இருக்கும். இந்த உபதேசத்தைப் பதிவு செய்தோர் அனைவருக்கும் அந்த நேரத்தில் முழிப்பு வரும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கும்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் தவறு செய்யாமலே நமக்குள் தீங்கு விளைவிக்கும் அந்த நிலைகளை மாற்றி நல்லது செய்யும் அந்த ஆற்றலாகப் பெறச் செய்வதற்குத் தான் இந்தத் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

அதனாலே எல்லோரும் முழு நம்பிக்கையாக உங்களை நீங்கள் நம்புங்கள்.

சாமியை நம்புகிறீர்கள் சாமியாரை நம்புகிறீர்கள் ஜோதிடத்தை நம்புகிறீர்கள் மந்திரத்தை நம்புகிறீர்கள்.
1.ஆனால் உங்களிடம் அந்த உயர்ந்த சக்தி இருக்கிறது
2.உங்களுக்கு முன்னாடியே அத்தனை சக்தியும் இருக்கிறது.
3.அதை நினைத்தீர்கள் என்றால் அது கூடும்.
4.நல்லதைப் பெற முடியும் மெய் ஒளி பெற முடியும்.

மனிதன் ஒருவனுக்கு மட்டும் தான் இந்த நிலை. உங்களை நீங்கள் நம்புங்கள்.

1.சாமி சொன்னார் என்று சொல்லி
2.சாமி சொன்ன சக்தியை நாம் பெற வேண்டும் என்ற நிலைக்கு நீங்கள் வர வேண்டும்.

சாமி செய்து கொடுப்பார் என்பதல்ல. உங்களை நான் பிரார்த்திக்கின்றேன். உங்களுக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று உறுதுணையாக இருக்கின்றேன்.

சூரியனின் காந்த அலைகள் படுகிறது. பூமி அதைத் தனக்குள் எடுத்துக் கொண்டால் தான் பூமிக்குச் சக்தி கிடைக்கும். பிரபஞ்சத்தில் காற்றில் பல சக்திகள் படர்கிறது. பூமி போகும் பாதையில்… தான் ஈர்த்துக் கொண்டால் தான் அதை வளர்த்துக் கொள்ள முடியும்.

அதைப் போன்று தான்
1.அந்த மெய் ஞானிகள் அருள் ஒளி நீங்கள் பெற வேண்டும் என்று நான் பிரார்த்திகின்றேன்.
2.அந்த அருள் ஒளியை நீங்கள் ஈர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆகையினால் இங்கே சொல்லக்கூடியதெல்லாம் உங்களுக்குள் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று தகுதியை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றேன்.

இதைக் கேட்டுணர்ந்த ஒவ்வொருவரும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சுவாசித்தேன்… நான் நன்றாக இருக்கின்றேன்
2.எங்கள் குடும்பம் நலமாக இருக்கின்றது எங்கள் உடல் நலமாக இருக்கிறது
3.காற்றிலிருந்து அருள் சக்திகளை எடுக்க முடிகிறது
4.எங்கள் உடலில் உள்ள நோய்கள் அகன்றது என்ற
5.இத்தகைய சந்தோஷமான செய்திகளைச் சொல்ல வேண்டும்

ஆகவே “நாங்கள் நன்றாக இருக்கின்றோம்…!” என்று சொல்லும் போது தான் எனக்கு அது மகிழ்ச்சி. அதைக் கேட்க வேண்டும் என்று தான் நான் விரும்புகின்றேன். அந்த நிலையை நிச்சயம் நீங்கள் பெறுவீர்கள்.

வாழ்க்கையில் வரும் சோதனைகளைச் சாதனைகளாக மாற்றுபவன் ஞானியாகின்றான் – ஈஸ்வரபட்டர்

 

இதைப் படிப்போர் எங்களின் (மகரிஷிகளின்) செயல் நடப்பின் உண்மைகளை உணர்ந்து மனித ஆத்மாக்கள் அவரவர்கள் உணர்ந்து பக்குவம் பெறும் பாட முறைகளை உணர்த்திக் கொண்டே வந்துள்ளோம்.

பள்ளியில் பயிலும் மாணவனுக்கு…
1.அவன் ஆசிரியரின் போதனையை ஏற்கும் நிலை கொண்டு…
2.அவனுக்கு வைக்கும் தேர்வில் அவன் பெறும் மதிப்பெண்படித்தான்…
3.அவன் அறிவு நிலை கூடிய மதிப்பெண் பெறுகின்றான்.

அந்த மதிப்பெண் உயர்ந்திருந்தால் உயர் ஞானக் கல்விக்குச் செல்கிறான். அறிவு ஞானம் பெறாத மாணவனை உயர் வகுப்பிற்குத் தேர்ந்தெடுக்க மாட்டார்…! அந்த உபாத்தியாயர்.

அதைப் போல் ஆண்டவனின்… ஆண்டவன் என்பது…
1.உயர் சக்தி ஞான ரிஷியின் அருள் உலகளவுக்கும் பரப்பப்பட்டு
2.அந்த ஞானத்தின் பால் ஈர்ப்பு கொண்ட அவர்களின் பலனில் கண்டெடுத்துக் கொள்கின்றனர் சப்தரிஷிகள்.

அந்தப் பலம் பெற்ற ஆத்மாக்களின் செயலுக்கும் “பல தேர்வுகள் வைத்துப் பொறுக்கித்தான்…” அவர்களின் வட்டச் சுழற்சிக்கே செல்ல முடிகிறது.

கல்விக்கூடம் செல்லும் மாணவர்கள் எல்லொருமே பள்ளியில் இறுதிப் படிப்பு வரையும் செல்வதில்லை. சிலர் மேல் ஞானக்கல்வி பெறச் செல்ல முடியாமலும்… அந்தப் படிப்பை ஏற்க முடியாமல் பள்ளியிலிருந்து நின்று விடுகின்றார்கள் அல்லவா…!

அதைப் போன்று… இந்தச் சக்தி நிலையுணர்ந்து “பேரின்ப நிலை எய்திடல் வேண்டும்…!” என்ற செயலில் உள்ளவர்களும் தான் எடுக்கக்கூடிய முயற்சி ஜெபத்தில் பின்தங்கி விடுவதுண்டு…!

1.தங்கத்தைப் பழுக்கக் காய்ச்சித் தட்டத் தட்டத் தான் அதன் தரம் உயர்கின்றது
2.அது போல் எண்ணத்தில் ஏற்படும் பலவற்றிலிருந்தும்
3.ஒன்றான இறை ஞான சக்தியை ஈர்க்கும் நிலை பெற ஏற்படும் சோதனையில் எல்லாம்
4.எந்தச் சோதனையிலிருந்தும் நாம் மீண்டும் அந்த ஜெப நிலை பெறுகின்றோமோ…
5.“அது தானப்பா இறை ஞானம் பெறும் ஜெபம் முறை…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

விஞ்ஞான அறிவில் படித்துக் கொண்டவர்கள் இன்று எத்தனையோ வகையில் இப்பொழுது தனக்கு வேண்டிய உயிரணுக்களை மற்ற உடல்களில் இருந்த செல்களை எடுத்து மற்ற உடலில் சேர்த்து புதுப் புது ஆட்டினங்களையோ மாட்டினங்களையோ நாயினங்களையோ உருவாக்குகின்றார்கள்.

எத்தனையோ எண்ணிலடங்காத நாய்களைப் பூனை போல்… கரடி போல் உருவாக்கியிருக்கின்றனர். பூனை போல்… கரடி போல் உள்ள மற்ற உயிரினங்களிலிருந்து எடுத்து அதை ஒன்றாகக் சேர்த்து புதுப் புது நாய்களை உருவாக்குகின்றான்.

அதே போல் உணவுப் பொருள்களில் பார்த்தாலும் சாதாரண மனிதன் பல வகையான பொருள்களைச் சேர்த்துப் புதுப் புது பதார்த்தங்களை செய்கின்றான்.

மனிதனுக்குச் சுவையாக இருப்பதற்குப் புதுப் புது பதார்த்தங்களைச் செய்கின்றோம். எந்தப் பொருளை எதனுடன் போட்டால் எதன் சுவை வரும்…? என்ற நிலையில் மனிதன் கற்றுணர்ந்து அதன்படி சுவையான பதார்த்தங்களைச் செய்கின்றான்.

அன்றெல்லாம் ரொட்டி கடையில் மட்டும் தான் ரொட்டி தான் இருக்கும். இப்பொழுது வீட்டிலேயே கூட ரொட்டியோ மற்றதோ செய்யக்கூடிய அளவிற்குக் குடும்பங்களில் படித்ததை வைத்துச் செயல்படுத்தும் நிலை வருகின்றது.

இதைப்போல மனிதன் தன் எண்ணத்தால் புதுப் புதுப் பொருள்களை உருவாக்கும் அளவிற்குத் திறன் பெற்றுள்ளான் மனிதன்.

பெண்கள் வீட்டில் வகை வகையான குழம்புகளை வைக்கின்றார்கள். பருப்பை எடுத்து அளவாகப் போட்டு அதற்கு வேண்டிய சரக்குகளைப் போட்டுப் பக்குவப்படுத்திச் சுவையான உணவு வகைகளைச் சமைக்கின்றனர்.

அதே சரக்குகளை அதே அளவுகோல்படி இன்னொரு பெண்மணியிடம் கொடுத்து அதே மாதிரிச் சமைக்கச் சொன்னால் அதன் சுவை வித்தியாசமாகத் தான் இருக்கும்.

காரணம் அவர் உணர்வுகொப்ப அந்த சுவையைக் கூட்டிடும் உணர்வுகளை உருவாக்குகின்றது. இது ஒவ்வொரு குடும்பத்திலும் பார்க்கலாம்.

சில குடும்பங்களில் பார்த்தால் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். சுவையாக இருப்பதற்குக் காரணம்… அங்கிருக்கும் பெண்கள்
1.கூடுமான வரையிலும் நல்ல சுவைமிக்க உணர்வுகளைச் செயல்படுத்த வேண்டுமென்று
2.அந்த உணர்வை ஏற்றுக் கொண்டதனால்
3.அந்த உணர்வுகள் அந்தந்தப் பக்குவத்தை பெறப்படும் பொழுது
4.குழம்பைச் சுவையாக செய்கின்றார்கள்.

ஆனால் அதே சமயத்தில் குடும்பத்தில் கொஞ்சம் விரக்தியாக வரட்டும் அல்லது சண்டை போடட்டும்…! ஒருத்தருக்கொருத்தர் வெறுப்பான உணர்வு வரப்படும்போது அன்று குழம்பு வைப்பதைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

உதாரணமாக.. கோபமாக இருந்தால் காரத்தை அதிகமாகப் போட்டுவிடுவார்கள். சலிப்பு சஞ்சலம் அதிகமாக இருந்தால் இரண்டு உப்பை அதிகமாகப் போட்டுவிடுவார்கள்.

ஆனால் அதே சரக்குகளை வைத்து சுவையாக முதலில் செய்தவர்கள் தான். அந்த அளவுகோலும் இருக்கின்றது. ஆனால் இந்த உணர்ச்சிகள் அதற்குத்தக்க இந்த உடலை இயக்குவது எது…?

அவர்கள் சேர்த்துக் கொண்ட உணர்வுகள்தான்…! அவர்கள் தப்பு செய்யவில்லை.

குழம்பு வைத்த பிறகு பார்த்தோமென்றால் ஐய்யய்யோ… நான் சண்டை போடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த மாதிரி குழம்பு வைத்துவிட்டேன்…! என்பார்கள்.

அதே போல் பக்கத்து வீட்டுப் பையன் அடிக்கடி சத்தம் போட்டுக் கொண்டிருந்தான். பார்த்தவுடனே… இப்படியா அவர்கள் வீட்டில் சண்டை போடுவார்கள்…! என்று சலிப்படைந்தேன். அதை வேடிக்கை பார்த்துவிட்டு வந்தேன். இங்கே உப்பு அதிகமாகி விட்டது என்பார்கள்.

இதை எல்லாம் மாற்றுவது யார்…?

பிறர் செய்யும் சிந்தனையற்ற செயலின் உணர்வுகள் நம் உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சிகள் நம் உடலுக்குள் ஓடி அவரின் உணர்வுகளுக்குத் தக்கவாறு நாம் குழம்பு வைக்கின்றோம்.

அப்பொழுது யார் தப்பு செய்தது…? நாம் அந்த சந்தர்ப்பத்தில் நுகர்ந்தது தான் இயக்குகிறது.

கையிலே மண்ணை எடுத்து ஒரு வேலையாகப் பிசைந்து கொண்டிருக்கின்றீர்கள். கையை கழுவாமல் அப்படியே நீங்கள் அடுத்தாற்படி குழம்பை வைத்தீர்கள் என்றால் என்ன ஆகும்…?

இந்த மண்ணோடு காய்கறிகளைச் சேர்த்தோமென்றால் இந்த மண்ணும் சேர்த்து நர…முற… நர…முற… என்று இருக்கும். அப்படியானால் நம் கையைக் கழுவுகிறோம் அல்லவா…?

அதே சமயத்தில் வழு வழுவென்று இருக்கக்கூடிய பதார்த்தத்தைத் தொட்டு வேலை செய்கின்றோம். கை கழுவாமல் இருந்தால் அதே உணர்வின் தன்மை நாம் வைக்கும் குழம்பில் சேருமல்லவா…? அதை சுத்தப்படுத்திவிட்டு தானே வேலை செய்கின்றோம்.

இதே மாதிரித் தான்…
1.ஒரு கோபப்படும் உணர்வை நாம் கேட்கின்றோம்… உயிரிலே படுகின்றது
2.இந்த உணர்ச்சிகள் போனவுடனே நம் ஆன்மாவில் தூய்மை கெடுகின்றது
3.நம் உடலுக்குள் போனவுடன் அதே கோப உணர்ச்சிகளை இயக்குகின்றது
4.அப்பொழுது நாம் அதைச் சுத்தப்படுத்த வேண்டுமா இல்லையா?

அதற்கு என்ன ஆயுதம் வைத்துள்ளீர்கள்…?

ஏனென்றால் இதெல்லாம் மறைமுகமாக நல்லவர்களையும் கெட்டவர்களாக மாற்றுகின்றது நல்ல உடலையும் நோயாக மாற்றி விடுகின்றது.

பிறர் செய்யும் தவறுகளை நாம் பார்க்கப் பார்க்க அந்த உணர்வு நம் இரத்தத்தில் கலந்து நாம் தவறு செய்யவில்லை என்றாலும் தவறுள்ளவனாக மாற்றி விடுகின்றது.

அதனால்தான் விநாயகர் கையில் கொடுத்திருப்பது அங்குசபாசவா.

அதாவது உயிரணுவாகத் தோன்றி பரிணாம வளர்ச்சியில்
1.ஒவ்வொரு பிறவியிலும் தீமைகளில் இருந்து விடுபட வேண்டுமென்று
2.தன் கண்களால் கூர்மையாகப் பார்த்து அதன் வலிமையை நுகர்ந்து
3.எதிரியிடமிருந்து தப்பிக்க வேண்டுமென்று உணர்வுகள் சேர்த்துச் சேர்த்து
4.அதிலிருந்து விலக வேண்டும் என்ற உணர்வு அதிகமானபின் தன் உடலில் இது விளைந்து
5.இது இறந்தபின் எதன் வலுவான உணர்வு நுகர்ந்ததோ அந்த உணர்வுக்கொப்ப பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக வந்துள்ளோம்.

ஆனால் மனிதனான நிலையில் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அடக்கிட… ஒவ்வொரு நிமிடமும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்த்து… அதை அடக்கி ஒளியின் தன்மையாக மாற்ற வேண்டும் என்பதற்கே “அங்குசபாசவா” என்று ஞானிகள் காட்டினார்கள்.

குரு பலன்(ம்)… குரு பரன்(ம்)

 

கூட்டுத் தியானம் செய்கிறோம் என்றால் ஒவ்வொருவரும் எத்தனையோ எண்ணத்திலே தான் அதிலே வந்து கலந்து கொள்கின்றோம். ஒவ்வொருவரின் வீட்டிலும் எத்தனையோ கஷ்டங்கள் இருக்கிறது.

ஒரு குழம்பை வைக்கும் போது புளிப்பு காரம் உப்பு எல்லாவற்றையும் சேர்த்துத் தான் அதை ஒரு ருசியாகக் கொண்டு வருகின்றோம்.

அதே போல் கூட்டுத் தியானத்தில்
1.“எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்…” என்று
2.கூட்டமைப்பாக எண்ணி ஒரே குரலில் எழுப்பும் போது காந்த அலைகள் அது கவர்கிறது.
3.நாம் எல்லோரும் சேர்ந்து சொல்லும் போது அந்த உணர்வுகள் செவிகளில் படுகிறது
4.உணரச்சிகள் உந்தப்பட்டு எல்லோருடைய உணர்வுகளிலும் அது இணைகிறது.

27 நட்சத்திரங்களின் சக்தியையும் நவக்கோளின் சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியையும் இணைத்து அந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் பெற வேண்டும்… என்று அதன் மூலம் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்று இந்த உணர்வை ஈர்க்கச் செய்கிறோம்.

1.மனித உடலுக்குள் 1008 நல்ல குணங்கள் உண்டு
2.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஒரே குரலில் ஒலியை எழுப்பும் போது
3.அந்த நல்ல குணங்கள் அனைத்திலுமே இந்த உயர்ந்த உணர்வுகள் செருகப்படுகிறது.

அத்தகைய உணர்ச்சிகளைத் தூண்டச் செய்வதற்குத் தான் கூட்டுத் தியானம் இருக்கின்றோம். நம்மால் சம்பாரிக்க முடியாததை… அந்த அருள் சொத்தைக் கூட்டாக எண்ணித் தியானிக்கும் போது… கிடைக்கச் செய்ய முடிகிறது.

மிளகாயைக் குழம்பில் போட்டவுடன் அதிலே எப்படி ருசி வருகிறதோ அதைப் போல் சுவை கொண்ட உணர்வாக மாற்றிக் கொள்ள முடிகிறது.

வீட்டில் சங்கடமும் சலிப்பும் மற்றதுகளும் வந்தாலும் கூட… அந்த உணர்வை மறந்து விட்டு மெய் ஒளியைக் கலந்து “எல்லோரும் நலம் பெற வேண்டும்” என்ற உணர்வின் ஒலிகளை எழுப்பும் போது “சூரியனின் காந்தப் புலன் அது கவர்கிறது…”

பல வகையான சரக்குகளைப் போட்டுத் தான் குழம்பு வைக்கின்றோம். அவை ஒவ்வொன்றும் தனி சுவைதான். இருந்தாலும் எல்லாவற்றையும் போட்டு வேக வைத்து ஒன்றாகக் குழம்பாகும் போது அதிலிருந்து வெளி வரும் மணத்தைச் சூரியனின் காந்தம் அதைக் கவர்ந்து கொள்கிறது.

அதனின் மணத்தை நுகரும் போது அதனின் சுவையை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அந்த மணத்தின் குணத்தையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

அதைப் போன்று தான் நாம் படைக்கும் இந்த அருள் ஞானிகளின் சக்தியை…
1.எல்லோருக்குள்ளும் அந்தச் சக்தியைப் பரப்பச் செய்து
2.காந்தப் புலனின் நிலைகள் கொண்டு மோதச் செய்து
3.அதே உணர்வின் தன்மை ஈர்க்கச் செய்து
4.நமக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்கு இணைக்கச் செய்யும் முறை தான்
5.யாம் (ஞானகுரு) சொல்லும் இந்தக் கூட்டுத் தியானத்தின் நிலை.

அதாவது
1.பரவிக் கிடக்கக்கூடியது அனைத்தும் நமக்குள் குரு பரம்.
2.ஒவ்வொரு நிலைகளிலும் அதை எடுத்து விளைய வைத்த அந்தந்த உயிரின் நிலைகள் இது பரமாகி
3.தனக்குள் (அனைவருக்குள்ளும்) அருள் உணர்வாக அது சேரும் நிலை.

ஏனென்றால் இது குரு பலன் குரு பரன்…!

சப்தரிஷிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இன்று உடலுடன் ஜீவன் பெற்று வாழும் நிலையில் நம் உடலின் எடையை ஒரு பாரமாக… அதாவது சுமக்க முடியாமல் இருப்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுவதில்லை.

நாம் எடுக்கும் சுவாச அலையில் நம் உயிரணு என்ற இயந்திரத்தின் ஓட்டத்தினால் நம் உடலிலுள்ள பல கோடி உயிரணுக்களும் அந்தச் சுவாசத்தின் அலையை இந்தப் பூமியின் ஈர்ப்பில் காற்றாகக் கலந்து தான் வாழுகின்றோம்.

ஆனால் இப்பொழுதுள்ள நம் உடலின் எடையே ஜீவனற்ற உடலாக ஆன பின்பு அதன் கனம் கூடி விடுகிறது.

1.இந்தப் பூமியின் ஈர்ப்பு சக்தி குணத்துடன் ஜீவனற்ற பிம்பங்கள் உள்ள நிலையைப் போல்…
2.ஜீவன் பிரிந்த உடல்களும்… அந்த ஈர்ப்பின் அதிகப்படியான இழுவையுடன்…
3.“சுவாச அலையை எடுக்காத உடல் ஆனவுடன்…”
4.கனம் பொருந்திய ஈர்ப்புடன் அந்த உடல் ஐக்கியப்பட்டு விடுகிறது.

இந்தச் சுவாச அலையின் சக்தியினால் தான் ஜீவன் கொண்ட ஜீவன்களின் நிலைக்கும் ஜீவனற்ற பிம்பங்களின் நிலைக்கும் கனத்தில் (எடையில்) வேறுபாடு ஏற்படுகின்றது.

இருந்தாலும் ஜீவன் பிரிந்த உடல்கள் அந்த உடலிலுள்ள மற்ற ஜீவ அணுக்களின் ஈர்ப்பின் அமில குணத்தால் அந்த உடல் உயிர் பிரிந்த பிறகு அதன் உடல் பெருகுகிறதே…!

அதன் நிலை எப்படி…?

நாம் சில வகை உணவுப் பொருட்களை ஒன்றுடன் ஒன்று கலந்து அதில் நீரை ஊற்றி வைத்தால் அதிலிருந்து சில அமிலங்கள் வளர்ந்து புளிப்பு நிலை ஏற்படுகிறது அல்லவா…!

அது போல் இந்த ஜீவனற்ற உடலும் அந்தப் புளிப்பு நிலையான அமிலங்கள் ஏற்பட்ட பிறகு அதன் நீர் சக்தி வடிந்து இந்த உடல் பிம்பம் நாற்றத் தன்மை இழந்து இந்தப் பூமியுடன் அந்த உடலும் கலக்கின்றது.

அதன் பிறகுதான்… உடலிலுள்ள அந்த உடலுக்குச் சொந்தமான ஜீவ அணுவுடன் அந்த ஜீவ ஆத்மாவும் முதலிலேயே உடலை விட்டுப் பிரிந்த உயிருடனும் இந்தச் சப்த அலையுடனும் இவ்வாத்மாவும் கலந்து இவ்வாத்ம ஜீவன் அதற்குகந்த செயல் வட்டத்திற்குள் செல்கிறது.

1.உடலுடன் உள்ள பொழுது ஒரு நிலையும்…
2.உடலை விட்டு ஜீவன் பிரிந்த பிறகு ஒரு நிலையும்
3.அவ்வுடல் பிம்பமே மாறி அவ்வாத்மா ஜீவனுடன் சேர்ந்த பிறகு ஒரு நிலையும்
4.இப்படி மூன்று நிலைகளில் மனிதனின் நிலைகள் உள்ளன.

ஆனால் சப்தரிஷிகளும் சித்தர்களும் இந்த உடல் என்ற பிம்பத்தையே பிரித்துக் கூட்டும் செயலுடையதாக்குகின்றார்கள். அவர்கள் எடுத்த எண்ணத்தின் சுவாச ஜெபத்தால் இக்காற்றில் உள்ள அமில குணங்களையே பிரித்துக் கூட்டி வழிப்படுத்திச் செயல்படும் முறையைச் செயல்படுத்துபவரே நம் சப்தரிஷிகள்.

காற்றாகவும் நீராகவும் ஒளியாகவும் ஐக்கியப்பட்டுள்ள நம் சப்தரிஷிகளின் செயலினால் தான் இன்று இந்தப் பூமியின் ஆன்மாக்கள் பிறந்து வாழச் செயலாக்கி வருகின்றார்கள்.

நம் பூமி மட்டும் தான் சுழன்று ஓடுகிறதா…? மற்ற மண்டலங்கள் இல்லயா…? என்ற வினா எழும்பலாம். ஜீவன் கொண்ட ஜீவாதாரமுடன் வாழும் பூமி நம் பூமி.

அதற்குகந்த அமில சக்தியைக் கூட்டி வழிப்படுத்தியவர்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளாகப் பெற்ற தவத்தின் வலிமை நிலையில்
1.இந்தப் பூமியின் அமிலங்கள் கூடப் பெற்று… அந்தக் கூட்டின் வளர்ப்பில் மனித பிம்பங்கள் வளரச் செய்து
2.அந்த மனித பிம்பங்களுக்கு அறிவாற்றலின் வழியைப் பல வழிகளில் வளரச் செய்து
3.மனிதர்களின் ஞானத்தின் வளர்ச்சிக் கூட்டின் வலு சக்தியைத் தன் வலுவுக்கு அதிகப்படி எடுத்து
4.மேன்மேலும் இந்தக் காற்று மண்டலத்திலுள்ள இப்பேரண்டம் பெரு நிலை என்ற
5.பரந்த நிலையைக் கூட்டிப் பிம்பம் செய்கிறார்கள் நம் சப்தரிஷிகள்.

மண் மண்ணாக உள்ள பொழுது அதன் பிம்பத்தைக் காண முடிகிறதா…? மண்ணை எடுத்துக் குயவன் பானையும் சட்டியும் பல பொருள்களாக்கிக் காட்டினால்தான் அம்மண்ணின் பிம்பத்தை நாம் காணுகின்றோம்.

1.ஆதி சக்தியின் அருள் தான் குயவனும் மண்ணும்.
2.அந்தக் குயவன் மண்ணைத் தோண்டி எடுத்துத்தான் செய்து பொருளாகக் காட்டுகின்றான்.

அதைப் போன்று…
1.பூமியைப் பொருளாக்கி மனித சக்தி படைத்துத் தன் சக்திக்குகந்த பொருளான ஞானப் பொருட்களை
2.சப்தரிஷிகள் ஞானியாகவும் சித்தனாகவும் பொருள்படுத்தி எடுத்துக் கொள்கின்றான்.

சப்தரிஷியின் பொருளான நம் பூமியின் தொழிற்சாலையில்… அந்தத் தொழிலுக்குகந்த மூலப் பொருளின் தரம் குறைந்ததனால்
1.மேலும் தரமான பொருளைப் போட்டு கல்கியைக் காண
2.சப்தரிஷிகளின் செயல்கள் இன்று நடந்து வருகின்றன.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஆரஞ்சுப் பழம் நன்றாக இருக்கின்றது. நன்றாக இருப்பது கொஞ்சம் கெட்டுப் போய்விட்டால் என்ன ஆகிறது…? அதிலே புழு வருகின்றது. எங்கிருந்து அந்தப் புழு வந்தது…?

கெட்டுப் போகப் போகும்போது காற்றில் இருக்கக்கூடிய கெட்ட அலைகளை இழுத்து அது புழுவாக மாறுகின்றது. நன்றாகக் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.

அதே போல் நன்றாக இருக்கின்ற ஆரஞ்சுப் பழம் ஒரு பக்கத்தில் அடிபட்டு அழுகினால் போதும். உடனடியாக புழு வந்துவிடும்.

அதே மாதிரி “வேதனை வேதனை…” என்று நீங்கள் சுவாசித்த உணர்வுகள் உடலில் உள்ள இரத்தத்துடன் கலந்தவுடன் என்ன செய்கின்றது…?

இந்த உணர்வு மாறி இரத்தமாகப் போகும் போது அந்த வேதனைப்படக்கூடிய அணுவாக மாறும். அது தான் இந்திரலோகம். அணுவான பிற்பாடு என்ன செய்கின்றது…?

பழத்தில் அழுகிய உணர்வை எப்படி அந்த அணு சாப்பிட்டவுடனே புழுவாக எப்படி மாறுகிறதோ அதே போல் உங்கள் உடலில் வேதனையான அணுவாக மாறுகிறது. கெட்டதைச் சாப்பிடுகின்றது.

நல்ல பழமாக இருக்கும் பொழுது அதில் புழுக்கள் வருமா…? வராது.

இதே மாதிரி அந்த வேதனையான உணர்வுகள் உங்கள் உடலில் வந்து இரத்தத்தில் கலந்து அது பிரம்மமாக மாறுகின்றது. அப்பொழுது உங்கள் உடலில் என்ன செய்யும்…?
1.அந்த வேதனையின் உணர்ச்சிகளைத் தூண்டும்
2.அந்த அழுகிய உணர்வை எடுத்துத் தான் உங்கள் உடலில் ஒவ்வொரு உறுப்புகளுக்குப் போகும் இந்த இரத்தம்.

மற்ற உறுப்புக்குள் போனவுடன் எங்கெங்கே நல்ல அணுக்கள் இருக்கின்றதோ அந்த உறுப்புகள் கெட்டு அதிலே போய் இந்த அணு தங்க ஆரம்பித்துவிடும்.

நமக்குள் கெட்டது எப்படி உருவாகிறது என்று இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

ஏனென்றால் இன்னும் சாமியையும் சாமியாரையும் நம்பிப் போய்க் கொண்டிருப்பதைத் தான் விரும்புகின்றோம். ஆனால் அந்த நல்ல சக்திகள் உங்களுக்குள் இருக்கின்றது… உங்களை நீங்கள் நம்பிப் பழகுங்கள் என்பதைத் தான் அடிக்கடி உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன் (ஞானகுரு).

ஆகவே எந்தப் பழமாக இருந்தாலும் கொஞ்சம் அடிபட்டு விட்டால் புழு வந்துவிடும்.

இதே மாதிரி நீங்கள் நல்ல நிலையில் இருக்கப்படும்போது
1.ஒருவன் கஷ்டப்பட்டான் என்றால் அந்த உணர்வைக் கேட்கின்றீர்கள்.
2.ஒருவன் சாபமிட்டான் என்றால் அந்த உணர்வைக் கேட்கின்றீர்கள்.

அப்பொழுது அந்த உமிழ் நீர் அங்கே இரத்தமாக மாறினால் அவன் எதையெல்லாம் கேட்டுப் போக வேண்டும் என்று சொன்னானோ… நீ நாசமாகப் போவாய்… உனக்குக் கை கால் முடமாகிப் போகும்… நீ நோயால் சாவாய்…! என்று சொன்னால்…
1.இதே உணர்வுகள் அது இரத்தத்துடன் கலந்து உடல் முழுவதும் படர்கிறது.
2.கலந்த பின் அங்கே போய் என்ன செய்கின்றது…?
3.பதிவானது கருவாகி முட்டை ஆகிவிடுகின்றது… ஒவ்வொரு உறுப்புகளிலும் கூடுகிறது.

உதாரணமாக தேனீ என்ன செய்கிறது…? தேன் எடுக்கச் செல்கிறது. பூக்களில் அமர்கிறது. சில நேரங்களில் அதிலே முட்டையும் இடுகின்றது.

அதே போல் தட்டான் பூச்சி இருக்கின்றது. அது பூவில் இருக்கும் அமுதைச் சாப்பிடுகின்றது. அந்தப் பூ மேலே முட்டையிடுகின்றது.. கொஞ்ச நாள் கழித்து இதனுடைய முட்டை வெடித்துப் பட்டாம் பூச்சியாக மாறுகின்றது. அந்தப் பூ எந்த நிறத்தில் இருக்கின்றதோ அதே மாதிரி வரும்.

அதே மாதிரி அடுத்தவர் உடலிலே எப்படி நோயானதோ அதே போல் ஒரு மனிதன் எப்படிச் சாபமிட்டானோ அதே உணர்வுகள் நம் இரத்தத்திலே கலந்து உடலில் சுற்ற ஆரம்பிக்கின்றது.

1.அது நம்முடைய எல்லா உறுப்புகளுக்கும் போய் வரும்
2.போகின்ற நேரத்தில் இந்த முட்டை ஒன்று ஒதுங்கினால் போதும்.
3.அந்த உறுப்பில் உள்ளதை எடுத்து வளர்ந்து அங்கே அணுவாக விளைகின்றது.
4.அந்த உறுப்பினுடைய நிலைகளையே சாப்பிடக்கூடிய நிலைகள் வந்து விடுகிறது
5.தன் இனத்தை அங்கே பெருக்கத் தொடங்கி விடுகின்றது.

நுரையீரலில் அந்த மாதிரித் தங்கி விட்டால் நுரையீரல் ரிப்பேர் கல்லீரலில் தங்கி விட்டால் கல்லீரலில் ரிப்பேர் மண்ணீரலில் தங்கி விட்டால் மண்ணீரலில் ரிப்பேர்.

இது எல்லாம் வந்த பிற்பாடு டாக்டர்கள் இந்த உறுப்பு கெட்டுவிட்டது… இன்ன நோய் இருக்கிறது…! என்று சொல்வார்கள்.

அகஸ்தியன் இதைப் போன்ற பல உண்மைகளை அன்றே கண்டுணர்ந்தான்…தான் வாழ்க்கையில் வந்த தீமைகளை எல்லாம் நீக்கினான்… துருவ நட்சத்திரமாகப் போனான்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற்றால் நாமும் தீமைகளை நீக்க முடியும்.
2.அவனைப் போன்றே அழியா ஒளி உடல் பெறலாம்

அதைத் தான்… அந்த அகஸ்தியன் உணர்வை முழுமையாகக் கண்டுணர்ந்த நமது குருநாதர் “நம் டாக்டர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்” என்னிடம் (ஞானகுரு) என்ன சொன்னார்…?

டேய்…! சாபமிட்டவனை நீ பார்த்தால்…
1.அந்த உணர்வுகள் உன் ஆகாரத்தின் வழியாக உடலுக்குள் போகும்.
2.அந்தக் கருவாகும் அது அணுவாகும்… அது இரத்தத்தில் சுற்றும். தெல்லாம் உனக்குள் நோயாகும்…
3.எப்படி அந்தத் தட்டான் பூச்சி பூவிலே முட்டையிட்டவுடனே அதற்குத் தகுந்த மாதிரி பூச்சிகள் வளர்கின்றதோ
4.அதே மாதிரி இந்த உறுப்பை உட்கொள்ளும் அணுவாக மாறிவிடும்…! என்று சொல்லி
5.இதையெல்லாம் நேரடியாக எனக்குக் காண்பித்தார்… மக்களுக்கு இதை எடுத்துச் சொல்…! என்றார்.

அதைத் தான் இங்கே செய்து கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).

மிக மிக சக்தி வாய்ந்த ஆற்றலை குருநாதர் எனக்குக் கொடுத்த விதம் – ஞானகுரு

 

வாடிய மரத்திற்கு உரம் போட்டு அதைச் செழித்து வளரச் செய்கிற மாதிரித் தான் குருநாதர் எனக்கு (ஞானகுரு) சக்தி கொடுத்தார்.

காட்டிற்குள் அழைத்துச் சென்று தான் பல அனுபவங்களைக் கொடுத்தார்.
1.காட்டிலே இடைஞ்சல்கள் வரும் போது அந்த ஞானிகளின் சக்திகளை நீ சேர்த்துக் கொண்டால் அந்தக் கெடுதல் நீங்கும்.
2.நான் சொல்லும் முறைப்படி எடுத்தால் அந்தத் தீமை நீங்கும்

வரும் துன்பங்களிலிருந்து விடுபடும் சக்தியை உனக்குள் பதிய வைக்க வேண்டும் அல்லவா… அதற்காகத் தான் “இதை எல்லாம் செய்கிறேன்” என்று சொல்வார்.

ஏனென்றால் குருநாதர் என்னைத் திட்டுவார்… உதைப்பார்… எல்லாம் செய்வார். ஏண்டா நமக்கு இப்படித் தொல்லை கொடுக்கிறார்…? என்று அவர் மீது வெறுப்பு வரும். அவரை விட்டு ஓடிப் போகலாமா…! என்ற எண்ணம் தான் வரும்.

எங்கேடா நீ தப்பப் போகிறாய் என்பார்…! இப்படி எல்லாம் பல கஷ்டங்களைக் கொடுத்துத் தான் எனக்கு உண்மைகளை உணர்த்தினார் குருநாதர்.

ஒரு பாறை வழுக்கலாக இருக்கும். கவனம் இல்லை என்றால் விழுந்து பல் எல்லாம் போய்விடும். அங்கே ஒரு பொருளைக் காட்டுவார். போய் எடுக்கச் சொல்வார்.

காட்டிலேயும் மலைகளிலேயும் இப்படிப் பல அனுபவங்களைக் கொடுத்தார்.

ஒரு சமயம் இமயமலைக்குச் செல்லும் போது அங்கே பனியாக இருக்கிறது. கிடு… கிடு… என்று நடுக்கமாக இருக்கிறது. வெறும் கோவணத் துணியைக் கட்டிக் கொண்டு அங்கே போகச் சொல்கிறார்.

அங்கே போனால் எல்லாம் “பாதை” மாதிரித் தெரியும். மரத்தின் மீது பனி… கட்டியாக உறைந்திருக்கும். ஏமாந்து கையையோ காலையோ வைத்தோம் என்றால் “டபக்…” என்று படுபாதாளத்திற்குப் போய்விடுவோம்.

போடா…! என்பார். அதையும் காட்டுவார்… இதையும் செய்யச் சொல்வார். ஆனால்…
1.இந்த இடத்தில் உன்னைக் காப்பாற்ற வலு வேண்டுமல்லவா…
2.அந்த வலுவை எப்படி எடுக்க வேண்டும்…? என்று சொல்வார்.
3.நான் சொன்னபடி நினைக்கவில்லை என்றால் கீழே போய்விடுவாய்
4.நான் சொன்ன உணர்வை எடுத்தால் உன்னைக் காப்பாற்றிக் கொள்வாய்…! என்பார்.

ஆபத்து வரும் நேரத்தில் இந்த மாதிரி எல்லாம் செய்ய வேண்டும் என்பார் குருநாதர்.

அவர் சொன்னபடி போகும் போது ஒரு இடத்தில் மேலே மரத்தின் மீது பனி இருக்கிறது. அந்தப் பக்கம் திடு… திடு… திடு… திடு… என்று பனி உடைந்து கீழே விழுந்து கொண்டுள்ளது (AVALANCHE).

அங்கே காலை வைத்தவுடன் பொரு…பொரு… என்று இருந்தது “டபக்” என்று ஒரு கால் இறங்கிவிட்டது. கால் உள்ளே இறங்கிய பின் எந்த எண்ணம் வருகிறது…? ஐய்யய்யோ… செத்துப் போய்விடுவோமே…! என்ற எண்ணம் தான் வருகிறது.

1.நான் என்னடா சொன்னேன்…?
2.நீ என்னடா பண்ணுகின்றாய்…! என்று குருநாதர் கேட்கிறார்.

ஏனென்றால் அந்த உணர்வு என்ன செய்கிறது…? குருநாதர் கொடுத்த அந்தச் சக்தியைப் பயன்படுத்த முடியவில்லை.

மனிதன் நாம் இந்தப் “புவியின் ஈர்ப்பில்” இருக்கும் போது நமக்குள் உணர்வு இது தான் உடனடியாக வருகிறது. நல்லதை நினைக்க முடியவில்லை.

இதை எல்லாம் நீங்களும் கேட்கின்றீர்கள். தியானத்தில் உட்கார்ந்து ஈஸ்வரா…! என்று எண்ணினால்
1.மனதை ஒரு நிலைப்படுத்த முடியவில்லை
2.எண்ணத்தை நிலை நிறுத்த முடியவில்லை என்று சொல்வீர்கள்.

அப்படி எல்லாம் ஒன்றும் நிறுத்த முடியாது. ஏனென்றால் பல அலைகள் ஓடிக் கொண்டிருக்கும்.

இங்கே யாம் உபதேசிக்கும் உணர்வின் அலைகளைக் கேட்டால் உங்களுக்குள் நல்லதாகும். இதை உங்களுக்குள் ஆழமாகப் பதிய வைத்து நீங்கள் மீண்டும் எண்ணி “அந்த உயர்ந்த சக்தியை…” மகரிஷிகளின் ஆற்றலை எடுக்கப் பழக வேண்டும்.

உங்களுக்குள் எப்பொழுது மனம் கெடுகின்றதோ அந்த நேரத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அந்த நல்ல உணர்வுகள் எனக்குள் வளர வேண்டும்… என்று அதை எண்ணி உங்கள் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இப்படி ஒவ்வொரு நேரத்திலும்…
1.குருநாதர் எனக்குக் காட்டியது போல்
2.நீங்களும் ஆத்ம சுத்தி செய்வதில் தான் எல்லாமே இருக்கிறது.

சொத்தையும் சுகத்தையும் அனுபவித்து வாழ்ந்தவர்கள் இன்று எங்கே இருக்கிறார்கள்…? – ஈஸ்வரபட்டர்

 

இந்த உலகில் உள்ள பொருள் பொக்கிஷங்கள் அன்றாண்ட அரசர்களாலும் முன்னோர்களாலும் சில முக்கியமான கோவில்களிலும்… அகழிகளிலும்… சுரங்கப் பாதைகளிலும்…. மற்றும் சில பெயர் குறிப்பிட வேண்டாத சிலைகளுக்குள்ளும்… பீடங்களுக்குள்ளும்… பல பொருள்களை மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

அப்படி வைத்தவர்கள்…
1.தன் ஆத்மா இன்றளவும் உயர முடியாமல்
2.தான் பதுக்கி வைத்த அந்த பொருள் என்ற பேராசைப் பொக்கிஷ சுழற்சியில்
3.அந்த ஆவிகள் இன்றளவும் அங்கேயே சுழன்று வாழ்கின்றன.

நம் எண்ணத்தினால் அதனை அடைய வேண்டும் என்ற தெய்வ சக்தியுடன் செயல்பட்டுச் சித்து நிலை கொண்டு அறிந்திடலாம். அதை எடுக்கவும் செய்திடலாம்.

ஆனால் அதனால் அடையக்கூடிய பொருள் என்ன…?

1.பிம்பப் பொருளை அடைந்தால் நாம் பெற வேண்டிய ஞானப் பொருளின் வழித் தொடர் அற்றுப் போய்…
2.மேன்மேலும் இந்தப் பேராசையின் சுழற்சியில் சுற்றிக் கொண்டே வாழ்ந்து..
3.இதே நிலையில் பொருளைப் பதுக்கியவனின் ஆன்மா போல் சுழலத் தான் முடியும்.
4.“நல்ல நிலை அடையும் வழி இல்லை…!”

இந்தப் பொருள் மட்டுமல்லாமல் இந்தப் பூமிக்கடியில் இயற்கை வளமுடன் வளர்ந்திட்ட பல அபூர்வ கனி வளங்கள்… படிவக் குவியல்கள்… எங்கெங்கு உள்ளன…? என்பதனை எல்லாம் நாம் அடையும் சித்து நிலையால் உணரலாம்.

அதன் நிலையை வெளிப்படுத்தி இந்த உலக ஆன்மாக்களை மேன்மேலும் இந்தப் பேராசையின் செயற்கைச் செயலுக்குத்தான் அது முன்னோடியாக நிற்குமேயன்றி…
1.எப்பொருளை அடைய வேண்டும்…? என்ற
2.பரம்பொருளின் நிலை பெற வழியாகாது.

சித்தர்களின் சப்தரிஷிகளின் செயலால் தான் இந்த உலக ஆத்மாக்கள் இன்று வரையிலும் வாழ முடிகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

பல கோடி உயிரணுக்களைக் கொண்ட இந்த உடலின் பிம்பத்திற்கு
1.இந்த உயிர் என்ற பொக்கிஷத்தினைப் போன்ற
2.பலவாக உள்ள உலகத்தில் ஒன்றாகிய தெய்வச் சக்தியைப் பெறும் பொக்கிஷத்தை நாம் பெறும் ஞான அருளைப் பெற வேண்டும்.

ஆகவே உலகத்திலுள்ள “பொருள் பொக்கிஷத்தை..” நாடி நாம் செல்லக்கூடாது.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

கண்ணின் கரு விழிக்குப் பின் இருக்கும் நரம்பு மண்டலம் வழி கொண்டு நம் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்திற்கும் கண் இணைக்கப்பட்டிருக்கிறது.

வேதனையான உணர்வுகள் நம் கண் வழியாகச் சென்று நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் இந்த வேதனை உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.

தூண்டிய பின் அதனின் வலுவின் தன்மை கொண்டு அந்த வேதனைப்பட்ட உணர்வுகள் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை நுகரச் செய்து அந்த வேதனையான உணர்ச்சி கொண்டு எண்ணம் சொல் செயல் என்று இயங்கத் தொடங்குகிறது.

அதே சமயத்தில் சுவாசித்தது வேதனையான உமிழ் நீராக மாறி சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்துவிடுகிறது. அதனால் சிறு குடல் பெரும் குடலை உருவாக்கிய அணுக்கள் மயக்கமடைகிறது.

சிறு குடல் பெரும் குடல் பலவீனம் அடைந்தால் நாம் உணவாக உட்கொண்ட இந்த உணவுகள் நஞ்சாக மாறி நஞ்சின் தன்மை கொண்ட இரத்தமாக மாற்றுகின்றது.

அப்படி நஞ்சாக மாறும் போது நம் உடல் உறுப்புகளுக்குள்ளும் இரத்தத்தின் வழி விஷத் தன்மை பரவி நம் உடலில் பல விதமான நோய்கள் வரக் காரணமாகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபடுவதற்கு நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நம் உடலில் உள்ள அணுக்களை உற்சாகப்படுத்த துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும்படி செய்கின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினைப் பெறவேண்டும் என்ற ஆசையுடன் நாம் அதே கண்கள் வழியாக ஏங்கிக் கவரப்படும் போது
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நம் கண் வழி உள்ள நரம்பு மண்டலம் வழியாக
2.உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் பாய்ந்து உற்சாகமூட்டும் வீரியத் தன்மையாக அடைகின்றது.
3.அதே சமயத்தில் சுவாசித்த உணர்வுகள் உயிரிலே பட்டு அந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக இயங்கி
4.அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறி நம் சிறு குடல் பெரும் குடல்களில் கலந்து உற்சாகம் அடையச் செய்கிறது
5.சாப்பிட்ட ஆகாரத்தை நல்ல இரத்தமாக மாற்றும் சக்தி பெறுகின்றது.

பின் அந்தச் சக்திகள் அனைத்தும் நம் உடல்களில் உள்ள உறுப்புகள் அனைத்திற்குமே கல்லீரல் மண்ணீரல் நுரையீரல் கணையங்கள் கிட்னி இருதயம் இந்த நல்ல இரத்தங்கள் செல்லப்படும் அவைகளும் உற்சாகம் அடைந்து தீமையை நீக்கும் வலிமையான உணர்வைப் பெறுகின்றது.

குருநாதரின் உயிராத்மா ஒளியாக மாறியதையும் அதிலிருந்து பளீர்… பளீர்… என்று ஒளிக்கற்றைகள் பரவுவதையும் காட்டினார்

 

நம் குருநாதர் வைகுண்ட ஏகாதசி அன்று தான் உடலை விட்டுப் பிரிந்து தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றி விண் சென்றார்.

1.அதாவது இந்த உடலிலிருந்தே உயிராத்மா எப்படி ஒளியாக மாறி வெளியிலே செல்கிறது…?
2.வெளியிலே சென்ற பின் மற்ற மனிதர்களின் உணர்வுகள் எப்படி எல்லாம் கவர்கிறது…?
3.அப்படிக் கவரும் போது குருநாதரின் உயிராத்மா சுழற்சியின் நிலைகள் என்ன செய்கிறது…?
4.தன்னை அணுக விடாதபடி எப்படி விலகிச் செல்கிறது…? என்று அதை எனக்குக் (ஞானகுரு) காட்டி உணர்த்தவும் செய்தார்.

வெறும் துண்டு தான் குருநாதர் கட்டி இருப்பார். பெரும்பகுதி டிச்சிலேயே (DITCH) தான் படுத்திருப்பார். குளிர் காலம் என்று நல்ல ஒரு வேஷ்டியை எடுத்துக் கொடுத்தோம் என்றால் அதைக் கிழித்துக் காலிலேயும் கையிலேயும் கட்டிக் கொண்டு பாருடா… எவனோ கிழித்து விட்டான்…! என்பார்.

என்ன சாமி இப்படிச் சொல்கிறீர்கள்…! என்று கேட்டால் கிழித்து விட்டுப் போய்விட்டான் நான் என்ன செய்வது…? என்பார். படுத்திருந்தேன் கிழித்து விட்டான்…! என்பார்.

அவர் அசூசையைப் பற்றி நினைக்கவில்லை. இந்த உடலுக்குள் இருக்கக்கூடிய மெய் ஒளியைப் பற்றித் தான் சிந்தித்தார்.

பைத்தியம் போன்ற அவரின் செயல்களைக் காணும் போதெல்லாம் ஐயோ.. இவரிடம் சிக்கிக் கொண்டோமே… பெரிய தொல்லையாக இருக்கின்றதே…! என்று தான் எண்ணினேன்.

1.உடலை விட்டுப் போன பிற்பாடு பளீர்… பளீர்… என்று ஒளியின் தன்மை கொண்டு
2.மற்றதைத் தள்ளிக் கொண்டு அவருடைய ஆன்மா விண்ணுக்குப் போகிறது.
3.அப்படிப் போனாலும் இந்தப் பூமியின் பிடிப்பலைகளில் இந்த உயிராத்மா என்ன செய்கிறது பார்…? என்று
4,எல்லாவற்றையுமே எனக்கு முதலில் சொல்லிக் கொடுத்துவிட்டார்.

அன்றைக்கு ஞானிகளும் மகரிஷிகளும் எந்தெந்த நிலைகளில் செயல்பட்டார்கள்…? என்று அதையும் காட்டினார் குருநாதர்.

அதாவது உயிராத்மா வெளியிலே போனாலும்… தன் வலுவின் தன்மை கொண்டு பூமியின் ஈர்ப்புக்குள் வராது தடுத்தாலும்… அந்த உணர்வுக்கொத்த விழுதாக இருந்து பூமியிலிருந்து உயிராத்மாவை உந்தித் தள்ள வேண்டும்.
1.அதற்காக வேண்டித் தான் அவ்வளவு பெரிய ஆற்றல் பெற்றாலும்
2.சாதாரண மனிதரைத் தேடி ஞானிகள் வருகின்றனர்.

அவனுக்குள் வரும் இருளான துன்பத்தை நீக்கி விட்டு உடலிலே மகிழ்ச்சியை ஊட்டி… அவனிடமிருந்து வரும் நல்ல மூச்சைத் தனக்குள் சேர்த்துக் கொள்கின்றனர்.

ஒருவர் துன்பப்படுகின்றார் என்றால் இவன் (ஞானி) கஷ்டப்பட்டு பச்சிலைகளையும் மூலிகைகளையும் எடுத்து அவனுக்குக் கொடுத்து நோய்களை நீக்கி அவன் சந்தோஷப்பட வேண்டும் என்று செய்தார்கள்.

அன்று இதற்கெல்லாம் காசும் வாங்கவில்லை… ஒன்றும் வாங்கவில்லை.

ஒருவன் துன்பப்படுகின்றான் என்றால்
1.உடனே அவனுக்குள் நிவராணமாகும் அந்த உயர்ந்த சக்தியைப் பாய்ச்சி
2.அந்தத் துன்பமான உணர்வுகளை நீக்கி விட்டு மெய் ஒளியின் சுடராகப் பெருக்கச் செய்து
3.அவனுக்குள் மகிழ்ச்சியான எண்ணங்களைத் தோற்றுவிக்கச் செய்து
4.மருந்தைக் கொடுத்து நோயை நீக்கி அன்று சந்தோஷப்படுத்தினார்கள்.

இந்த மகான் நல்லது செய்தார் என்ற எண்ணத்தை ஏங்க வைத்து அதை ரசித்துத் தனக்குள் எடுத்து விண் சென்றார்கள்.

இன்று சகஜ வாழ்க்கையில் துன்பப்பட்டவரைப் பார்த்தோம் என்றால்
1.நாம் பாசத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நமக்குள் வேதனையின் தன்மை இங்கே வருகிறது.
2.ஒரு அசுரத்தனமான உணர்வு கொண்டு “அவன் கிடக்கட்டும்…” என்று எண்ணினால் அந்த உணர்வுகள் இவனுக்குள் விளைந்து அதே முரட்டுத் தனமான நிலைகள் கொண்டு சிக்கி அடிபடுகின்றான்.

ஆனால் அந்த மெய் ஞானியோ துன்பப்பட்டவனுக்குள் இருக்கும் விஷத்தின் தன்மையை நீக்கி… மகிழ்ச்சி ஊட்டும் உணர்வின் தன்மை அவனுக்குள் விளைய வைத்து… அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி… அந்த உணர்வின் நிலையாகத் தனக்குள் வளர்த்துக் கொண்டவன்.

ஏனென்றால் எந்த விஷமாக இருந்தாலும் அதைத் தனக்குள் அடக்கி ஒளியின் தன்மையாக மாற்றும் ஆற்றல் பெற்றவர்கள் தான் ஞானிகள்.
1.அவர்கள் தங்களுக்குள் விளைய வைத்த அந்த அரும் பெரும் சக்திகளைத் தான்
2.இங்கே உங்களுக்குக் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

பூமி வெப்பமாகி எண்ணிலடங்காத மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது – ஈஸ்வரபட்டர்

 

ஆவியாகி… நீராகி… பிம்பமாகி.. மீண்டும் ஆவியாகி… நீராகி.. பிம்பமாகி…! முடிவில்லா மூன்று நிலைகளின் வட்டம் தான் இன்றுள்ள நிலை.

அன்று சித்தர்களினால் பண்டைய இராமாயணக் காவியங்களிலும் இன்னும் பல புராணங்களிலும் உள்ள உள் கருத்தை ஊன்றி நாம் அறிந்தோமானால் கதையாகப் படைக்கப்பட்டு உள் ஞானத்தின் சத்தை எடுத்து ஆய்ந்து பார்த்தோம் என்றால் “அதன் வடிகாலிலிருந்து பல உண்மைகளை நாம் அறியலாம்…”

இந்த உலகில் வட துருவ தென் துருவ நீர் நிலையினால் தான் இந்த உலகமே சுழன்று ஓடிக் கொண்டுள்ளது… வளர்ந்து கொண்டுள்ளது.

இந்தப் பூமியில் உள்ள விஷ அமில குணங்களைத் தன்னுள் ஈர்த்து இன்றைய மனிதனுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் வாழ வைக்கக்கூடிய திசை தான் வடதிசையும் தென் திசையும்.
1.ஆனால் வட திசையை எதற்கும் ஆகாததாகச் சகுணம் பார்க்கின்றான்
2.தீயவை தீயவையுமல்ல… நல்லவை எல்லாம் நல்லவையுமல்ல…!

“சிவன் விஷத்தை உண்டு…” தன் கழுத்திற்குக் கீழ் அது செல்லாமல்… தன் கழுத்திலேயே பாம்பாக வைத்துள்ளார்…! என்ற தத்துவத்தின் உண்மை என்னப்பா…?
1.வட துருவம் விஷக் காற்றுக்களை ஈர்த்து வைத்துக் கொண்டு மற்ற பாகங்களில் அதைப் பரவாமல்
2.விஷ குண அமிலத்தையே நன்மையாகச் செயல்புரிகிறது வட துருவ தென் துருவ திசைகள்.

வட துருவத்தையே ஈஸ்வரனாக்கிப் பாற்கடலில் பள்ளி கொண்டு அவரின் செயல் சிலாக்கிய முறைகளை எல்லாம் தத்துவக் கதைகளில் பிம்பத்தை உணர்த்திப் பிம்ப நாம காவியம் படைத்தார்கள் நம் முன்னோர்கள்.

நம் பூமியில் இந்தக் கோடிக்கணக்கான ஆண்டு சுழற்சி வட்டத்தில் பூமியின் சத்துப் பலனை இதற்கு முன்னாடி நம் பூமி பெற்றது. ஆனால் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் அறிவின் வளர்ச்சி கொண்ட மனிதனால் நம் பூமியின் நிலையே பட்டுப் போன மரத்தைப் போல் உள்ளது.
1.பல ஆண்டுகள் பலன் தந்து தன் சக்தி வலுவிழந்து நிற்கும்
2.பட்டுப் போன மரத்தைப் போன்ற நிலையில் தான் நம் பூமியின் உள் ஜீவ நிலை உள்ளது.

பலனை எல்லாம் தந்தது. அந்தப் பலனை நாம் பலவாகப் பிரித்து எடுத்துவிட்டோம். பின் இன்றைய நிலை எப்படியப்பா இருக்கும்..?

நம் பூமியின் வட துருவ தென் துருவ திசைகளிலும் அதிகப்படியான விஷத் தன்மையின் நிலையினால் அதை வடிகட்டி இது நாள் வரை நம் பூமிக்குச் சுத்தமாக்கித் தந்த காற்றின் நிலையே இன்று மாறி விட்டது.

வட துருவமும் தென் துருவமும் எப்படிக் விஷக் காற்றைத் தன்னுள் எடுத்துச் சுத்தப்படுத்தித் தருகிறது என்பீர்…?

மாம்பழத்திலும் இன்னும் சில வகைப் பழங்களில் அதன் உள் கொட்டை எப்படிக் கசப்பாகவும் பழங்கள் இனிப்பாகவும் உள்ளன…?

அதைப் போல் நம் பூமியின் இயற்கையே இந்தக் கரியமில வாயுவான விஷ அமிலக் காற்றைச் சுத்தப்படுத்தி வெளிப்படுத்தும் மையக் கோளங்களாக இந்த வட துருவ தென் துருவ நிலையுள்ளது. அதன் அமிலப் படிவமே மீண்டும் உறைந்து பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

மாற்றங்களின் வழித் தொடரிலும் நம் பூமியின் விஷ அமில குணத்திலும் அதிகப்படியான வளர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதினால் வட துருவ தென் துருவ செயல் நிலையிலும் “இந்த விஷத் தன்மை அதிகப்பட்டு விட்டது…!”

எதுவுமே… அதனதன் வளர்ச்சி நிலைக்கொப்ப தன் இயற்கையுடன் தானாக வளர்ந்து “ஒரு நிலையான வழி முறையுடன் வழி நடந்தால் தான்…” அதன் நிலையில் ஒன்று போல் இருக்க முடியும்.

குழந்தைப் பருவத்தில் அந்தந்த வயதுக்குகந்த அறிவு ஞான வளர்ச்சியை எப்படி வளர்த்துக் கொண்டு எந்த அறிவு செயல் முறை மனிதனாக வழி பெற்று அவன் வாழ்கின்றானோ அதன் தொடர் வாழ்க்கை தான் அவனால் வாழ முடியும்.

1.எண்ணத்திற்கு மேல் செயலை ஏற்றினால் செயல் முறையில் நிறைவைக் காண முடியுமா…?
2.அதிகப்படியான எண்ணச் சுமையை ஏற்றப்படும் பொழுது பைத்தியம் தான் பிடிக்கும் அந்த மனிதனுக்கு…!
3.அதைப் போன்ற நிலை தான் நம் பூமியில் வட துருவ தென் துருவ திசைகளுக்கு ஏற்பட்டுள்ளது.

அதனின் விளைவுகள் தான் சீதோஷ்ண நிலை மாற்றம்… பருவ நிலை மாற்றம்… அதிக வெயில் அதிக மழை அதிகக் குளிர்… எல்லாமே.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

உதாரணமாக நம் நண்பரின் கஷ்டத்தை நாம் கேட்டு அறிகின்றோம். அவர் பட்ட கஷ்ட உணர்வு நம் உயிரிலே பட்டவுடனே நாமும் சோர்வடைகின்றோம்.

ஐயோ.. பாவம்…! நல்ல மனிதன்… உனக்கும் இப்படிக் கஷ்டம் வந்துவிட்டதா…? என்று கேட்டு அவருக்கு உதவியும் செய்கின்றோம். அப்போது உதவி செய்யும் போது நம் நல்ல மனதில் அவருடைய கஷ்டமான உணர்வுகள் கலந்து விடுகின்றது.

தங்கத்தை நகையாகச் செய்ய வேண்டும் என்றால் செம்பையும் வெள்ளியையும் கலப்பார்கள். அதைப் போன்று அவருடைய கஷ்டம் கலந்தாலும் வாழ்க்கையில் உதவி செய்து விட்டோம்.

வாழ்க்கையில் நாம் ஒருவருக்கு உதவி செய்தால் தான் நாளைக்கு அவரும் உதவி செய்வார். அப்பொழுது
1.இந்த வாழ்க்கை என்ற செயினிற்கு (தொடருக்கு)
2.அவரோடு தொடர்பு கொண்டு அந்த அன்பை நீங்கள் வளர்க்கின்றீர்கள்.

கஷ்டத்தைக் கேட்டு உதவி செய்து வீட்டிற்குள் வருகின்றீர்கள். பேரப் பிள்ளையைத் தூக்கிக் கொஞ்சியதும் அந்தக் குழந்தை வீர்… வீர்… என்று கத்துகின்றது.

குழந்தை கத்தியவுடன் மருமகளைக் கூப்பிட்டு… நீ பிள்ளையைக் கவனிக்கும் முறை இது தானா…? ஏன் உன் பிள்ளையை இப்படி அழுகச் செய்கிறாய்…? என்று கேட்போம்.

இல்லையே…! இது வரை குழந்தை நன்றாகத் தான் இருந்தது. இப்பொழுது நீங்கள் வந்தவுடன் தான் அழுகின்றது…! என்று மருமகள் சொல்கிறது.

அதற்கு நாம் என்ன சொல்வோம்..? அப்படியானால் நான் தான் தப்பு செய்தேனா…? என்று அங்கே சண்டை வருகிறது.

ஏனென்றால்…
1.அங்கே நம் நண்பருடைய கஷ்ட நஷ்டத்தைக் கேட்டோம்
2.அதை நாம் சுத்தப்படுத்தவில்லை
3.அது இங்கேயும் வந்து வரிசையில் அடிக்கின்றது.

கேட்டறிந்த கஷ்டத்தையும் வெறுப்பையும் வேதனையையும் துடைக்க வேண்டுமல்லவா…?

அதற்காகத்தான் விநாயகரை (தெருவுக்குத் தெரு) வைத்துக் காட்டினார்கள் நம் ஞானிகள். நண்பருடைய இன்னல்களைக் கேட்டறிந்தோம்… உதவியும் செய்துவிட்டோம்… ஆனால் அந்த இன்னலான உணர்வு நம் உடலில் அது சேரக் கூடாது.

நம் உடலில் சேரக் கூடாது என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா…! என்று நம் உயிரைப் புருவ மத்தியில் எண்ண வேண்டும். நாம் எண்ணுவதை எல்லாம் அவன் தான் நமக்குள் உற்பத்தி (உடலாக) செய்கின்றான்.

ஆகவே அவனைத் தான் அந்த நேரத்தில் எண்ண வேண்டும். ஈஸ்வரா…! அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
1.விநாயகரைப் பார்த்து இந்த முறையில் கும்பிட்டுப் பழகினால் தான்
2.நாம் எண்ணியவுடன் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கும்
3.நம்மை அறியாது உட்புகந்த கஷ்டங்களையும் இன்னல்களையும் அடக்கும்…
4.நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் சக்தியாக வளரும்.

ஆனால்… இரண்டு தோப்புக்கரணம் போடுகிறேன்… உனக்கு இரண்டு அருகம்புல்லை வைக்கின்றேன்…! எனக்கு நல்லது செய்…! என்று விநாயகரிடம் கேட்டால் இந்த எண்ணம் தான் வரும்.

ஆகையினால் ஈஸ்வரா.. என்று நம் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா பெற வேண்டும் என்று கண்களைத் திறந்து நினைவை வானை நோக்கிச் செலுத்தி மீண்டும் கண்ணின் நினைவை உடல் முழுவதும் பாய்ச்ச வேண்டும்.

இதைத்தான் கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்று சொல்வது…!

கண்ணில் பார்த்தவுடன்…
1.ஒருவன் தப்பு செய்கின்றான் என்று நம் கண் காட்டுகிறது.
2.அது மட்டுமல்ல… தவறு செய்த உணர்வை நம் கண் இழுத்து
3.அவன் தப்பு செய்கின்றான் என்று கண் தான் நமக்குள் தெரிய வைக்கின்றது… இல்லையா…?

அப்பொழுது நாம் நண்பரின் கஷ்டத்தைத் தெரிந்து கொண்டோம் என்று கண் உணர்த்திய பின் உடனே என்ன செய்ய வேண்டும்…?

அதே கண்ணின் நினைவை கொண்டு… உயிரான ஈசனைப் புருவ மத்தியில் எண்ணி… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று வானை நோக்கி அந்தச் சக்தியைச் சுவாசித்துத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதன் பின் நண்பரைப் பார்த்து மகரிஷிகளின் அருள் சக்தி நீ பெறுவாய். உன் சிரமம் எல்லாம் நீங்கிப் போகும். நீ நன்றாக இருப்பாய்…! என்று
1.நம்மை முதலில் தூய்மைப்படுத்திவிட்டு அந்த வலு கொண்டு
2.நீ நன்றாக இருப்பாய்…! என்று நண்பரிடம் வாக்கினைப் பதிவு செய்ய வேண்டும்.

அந்த வலிமையான மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எடுக்கப் பழகுவதற்குத்தான் விநாயகரை வைத்தனர். ஒவ்வொரு நாளும் காலையில் அங்கே நம் மூதாதையர்களின் உயிரான்மாக்களை பிறவா நிலை பெறச் செய்ய வேண்டும் என்று உந்தித் தள்ளும்படி செய்தார்கள் ஞானிகள்.

1.முன்னோர்களை முதலில் அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்யும் நல் வினையை உன் உடலில் சேர்க்க வேண்டும்
2.அப்பொழுதுதான் நீ விண்ணிற்குச் செல்வாய்… மனிதன் என்ற நிலையில் நீ முழுமை பெறுவாய்…! என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

சகஜ மார்க்கம்

 

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்பது உங்கள் உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் குருவாக இருப்பது உங்கள் உயிரே.

நாம் எண்ணியது அனைத்தையும் நமக்குள் ஊழ்வினையாகப் பதியச் செய்து… மீண்டும் நினைக்கும் போது “அது குருவாக இருந்து” நமக்குள் அந்த ஒவ்வொரு குணமும் செயல்படுகின்றது.

உதாரணமாக குழந்தை மேல் பாசமாக இருக்கின்றேன். அது உயிரிலே பட்ட பின் ஓ… என்று பிரணவமாகிறது. அடுத்து அது ம்… என்று உடலாகிறது.

மீண்டும் அதே குணத்தை நான் எண்ணும் போது அந்தப் பாசத்தால் அவனுக்குச் செய்ய வேண்டிய “குரு நிலையாக” அவனுக்கு வழி காட்டுகிறது.
1.இப்படித்தான் நாம் எண்ணிய குணங்கள் எதுவோ அது குருவாக நமக்குள் இயங்குகிறது.
2.ஆனால் நாம் எதைக் குருவாக ஆக்க வேண்டும்…?

மெய் ஞானிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி அந்த அரும் பெரும் சக்தியாக அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

அந்த உணர்வின் சக்தியைத் தான் இங்கே உபதேசிக்கின்றோம். நீங்கள் கூர்ந்து கவனிக்கும் போது உங்கள் எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவாகிறது.

1.பதிவாக்கியதை நீங்கள் மீண்டும் நினைவு கூறும் போது
2.அந்த ஞானிகள் உணர்வு குருவாக நின்று உங்கள் வாழ்க்கையில் வரும் இடையூறுகளை நீக்கி
3.மெய்ப் பொருள் காணும் நிலையாகப் பெறச் செய்யும்.

ஆகவே…
1.உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் இடையூறு வருகின்றதோ
2.அந்த நேரத்தை எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் ஆற்றலாக
3.அந்தத் தகுதியாக நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

அத்தகைய தகுதியைப் பெறச் செய்ய வேண்டும் என்பதற்குத் தான் அதைக் குருவாக உங்களை ஏங்கச் செய்வது. “சகஜ மார்க்கம்” என்பது இது தான்.

1.ஞானிகளின் உணர்வைக் கண் புலனறிவால் ஏகி அதனின் உணர்வைப் பருகி
2.அந்த விண்ணுலக ஆற்றலைப் பெற்றவர்கள் உணர்வை நமக்குள் எடுக்கப்படும் போது
3.அவர்கள் உணர்வைக் கவர்ந்து கொள்ள முடியும்.

உதாரணமாக ஒரு உயர்ந்த வித்தை நிலத்தில் ஊன்றி அதற்கு நீரை ஊற்றினால் பூமியின் ஈர்ப்புத் துணை கொண்டு காற்றிலிருக்கும் தன் இனச் சக்தியை எடுத்து நல்ல வித்தினைக் கொடுக்கின்றது.

அதைப் போன்று தான் அருள் ஞானிகளின் வித்தை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அது ஜீவன் பெற உங்கள் நினைவை மீண்டும் கூட்டினால் அந்த உணர்வின் சத்தை காற்றிலிருந்து கவர முடியும்.

அவ்வாறு கவர்ந்து அதனின் உணர்வைத் தனக்குள் வளர்த்து வரும் நஞ்சு கொண்ட உணர்வின் அணுவைப் பிளந்து உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி மெய் ஒளி காணும் மெய் சரீரத்தைக் காண முடியும்.

அதைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்தில் தான் இதை நான் (ஞானகுரு) உபதேசிக்கின்றேன்.
1.நிச்சயம் நீங்கள் பெறுவீர்கள்.
2.உங்கள் மூச்சு இருள் சூழ்ந்த நிலைகளை நீக்கும்.

உங்கள் உணர்வுகள் அனைத்தும் நலமும் வளமும் பெற்று உங்கள் சொல்லைக் கேட்டுணர்ந்தோர் அனைவரையும் இருளை நீக்கி மெய்ப் பொருளைக் காணும் உணர்வுகளாக வளர்ச்சி பெறும்.

அதற்காக வேண்டித் தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று நான் (ஞானகுரு) எண்ணுகின்றேன்… தியானிக்கின்றேன். அந்த உணர்வின் தன்மை எனக்குள் ஊழ்வினையாகப் பதிவாகிறது.

அதை மீண்டும் நான் நினைக்கும் போது
1.உங்களுக்கு என்னென்ன உதவி செய்ய வேண்டும்…?
2.நீங்கள் எப்படி மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற வேண்டும்…?
3.உங்களை அறியாது சேர்ந்த இருளை எப்படி நீக்க வேண்டும்…? என்ற
4.அந்த குரு வழிப்படி உங்களுக்கு உபதேசிக்க வேண்டி வருகிறது.

இது எனக்குள் குருவாக வந்து என்னை இப்படி இயக்குகிறது. குருநாதர் அருள் வழிப்படி இதை உபதேசிக்கின்றேன்.

ஞான வழியில் நாம் சீராகச் செல்ல வேண்டும் என்றால் மகரிஷிகளின் அருள் சக்தி மிகவும் அவசியம் – ஈஸ்வரபட்டர்

 

ஓர் மனிதன் தன் சுவாசத்தினால் எடுக்கும் எண்ணத்தின் அலையை ஒத்துத்தான் அவனது அறிவாற்றல்… குணமும்… உடல் உறுப்பும்… உருவமும்… எல்லாமே இருந்திடும்.
1.அதை எல்லாம் எந்த ஒரு தனி மனிதனுக்கும்
2.ஆண்டவனாக வழி அமைத்துத் தருவதில்லை…! (இது முக்கியம்)

எல்லாமும் ஒன்றாக… ஒன்றிலே எல்லாமும் உள்ள பொழுது.. எதன் அடிப்படைச் சக்தியை எவ்வாத்ம எண்ணம் ஈர்த்து வாழ்கின்றதோ… அதன் தொடர்ச்சி நிலைக்குகந்த அளவு… அறிவாற்றலும் வாழ்க்கை நிலையும் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அமைகின்றது.

ஒருவர் அதிக சுறுசுறுப்புடனும் செயலாற்றும் திறமையுடனும் நல் நிலையில் வாழும் பொழுது அவர் எடுத்துக் கொள்ளும் எண்ண சுவாசத்தின் வளர்ச்சி அமிலத் தன்மையினால்தான் அந்த மனிதன் உயர்கின்றான். அவன் எடுக்கும் நிலைக்கொப்ப ஆவிகளின் (பிற ஆன்மாக்கள்) தொடர்பும் ஏற்படுகின்றது.

மின் அலை எப்படி எந்தெந்த விகித நிலைக்கொப்ப பாய்ச்சப்படுகின்றதோ அதன் நிலைக்கொப்ப ஒளியைத் தரக்கூடிய நிலையையும் எந்தெந்த இயந்திரங்களுக்கு எந்தெந்த விகிதத்தில் மின் அலை பரப்பப்படுகின்றதோ அதன் சக்தி ஓட்டத்தைத் தான் அந்த இயந்திரம் எடுத்து ஓடுகிறது.

அதைப் போல்…
1.எதன் அடிப்படையில்… எதன் விகித நிலைக்கொப்ப..
2.ஒவ்வொரு ஆத்மாவின் எண்ணச் சுவாசமும் உள்ளதோ..
3.அதன் சக்தி நிலையைத்தான் அவன் பெற முடியும்.

அதன் செயலில் தான் அவன் வாழ்க்கையும் அமைகிறதேயன்றி பல கோவில் ஸ்தலங்களுக்குச் சென்று ஆண்டவனை வணங்கி வந்து “பூஜித்துச் சக்தி பெறுவதல்ல…!”

எண்ணத்தின் ஈர்ப்பை உயர்வாக்கி எடுக்கும் சுவாச குண அமிலத்தினால் பலவாக உள்ள இந்தக் காற்றின் அமிலத்திலிருந்து “நமக்குகந்த அமிலத்தை நாமாக எடுத்துக் கொள்ளலாம்…”

இதன் வளர்ச்சியில் நமது எண்ணமும் சுவாசமும் இருக்குமானால் அதன் நிலையில் நாம் எடுக்கும் ஜெப முறையில் நம் எண்ண ஈர்ப்பை நமக்கு மேல் சக்தி வாய்ந்த சித்தர்களின் பால் நம் எண்ணத்தைச் செலுத்திடல் வேண்டும்.

அப்படிச் சித்தர்கள் பால் தொடர்பு கொண்டு எடுக்கும் சுவாச அலையின் தொடர்பினால்… இந்த உடலுடன் மனித உலக வாழ்க்கையில் வாழும் நாம்
1.பிம்பப் பொருளைக் கண்டு பொருளாக வாழும் இந்த வாழ்க்கையிலிருந்து பெற முடியாத “ஞானத்தை”
2.நம் ஈர்ப்பின் ஜெப எண்ணத்தை சித்தர்பால் செலுத்தி
3.அவர்களின் தொடர்பலையின் சக்தி குண அமிலங்களை நாம் பெறும்படி வழிப்படுத்திக் கொண்டால்
4.நம் ஞான வளர்ச்சியின் தொடரில் செல்லும் வழி முறைப் பாதையை அறிந்து கொள்ளலாம்.
அந்தப் பாதையை அறிந்து விட்டால் நாம் செல்ல வேண்டிய வழியில் எந்தத் தடங்கலும் இருக்காது.

பலவாக உள்ள உலக வாழ்க்கை எண்ணத்தில் நம் எண்ணத்தை ஒன்றாக்கி… “ஓ…ம்” என்ற ஒலியுடன் சித்தர்கள் பால் நம் எண்ண ஈர்ப்புச் சக்தியை நாம் தந்தோமானால் மெய் ஞானம் பெறும் வழி ஞானம் அறியலாம்.

ஞானத்தின் ஈர்ப்பில் கலந்தோமானால் பல உண்மையின் பொருளை உலகளவுக்கு உணர்த்தலாம்.

ஞானிகளும் சப்தரிஷிகளும் நம் வளர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்காவிட்டால் நம் பூமியில் மனித ஞானம் இன்று “ஞானமும் கண்டிருக்காது… விஞ்ஞானமும் கண்டிருக்காது…!”
1.இன்றைய காலகட்டத்தில் நம் சித்தர்களின் ஒளி சக்திகள்
2.இந்த உலகில் அதிகமாகச் செயல்பட்டுக் கொண்டுள்ளது.

ஆனால் மனித ஞானம் எல்லாமே ஞானத்தின் பால் செல்லும் வழிமுறையற்றுப் பேராசையின் பிடி ஞானத்தில் தன் வலுவான விந்தை காணத் துடிக்கிறது.

மனிதனின் பேராசையின் விபரீத எண்ணச் சுழல் காற்றுகள் பூமியின் சுழற்சியுடன் அதிகப்பட்டு… மோதி… உயிர்ப்பலிகள் அதிகமாகி…
1.ஆவியின் சூழ்ச்சியில்.. அல்லலுக்கந்த வாழ்க்கையில் வாழ்கின்றான் மனிதன் என்பதை
2.அறியாமல் தான் இன்றைய மனிதர்கள் வாழ்கின்றனர்…!

தனதாக உள்ளது எது…? என்பதும் இம் மனித ஞானத்திற்குப் புரியவில்லை. தனி மனிதன் யாரும் வாழவில்லை… “தனியாக” யாருமே எங்கேயுமே வாழ முடியாது.

காற்றையும் நீரையும் நிலத்தையும் தன்னுள் உள்ள பல கோடி அணுக்களையும் வாழ வைத்து… வாழும் மனிதன்…
1.தானாக வாழ்கின்றானா..? அந்தத் “தனது” என்ற பேராசைக்கார மனிதன்…?
2.ஒன்றின் துணையில்லாமல்…
3.ஒன்றுடன் ஒன்றில்லாமல் வாழவே முடியாத மனிதன்
4.”நான்…” என்ற நானாக… வாழ்கின்றானாம்..!

ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் ஆண்டவனின் ஸ்வரூபத்தை எண்ணி வாழ வேண்டுமப்பா….!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து வந்த நாம் புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வரையிலும் எத்தனையோ வேதனைப்பட்டுள்ளோம்.

அத்தகைய வேதனையிலிருந்து மீண்டிடும் உணர்வுகளைச் சுவாசித்துச் சுவாசித்து அதன் வளர்ச்சியாக இந்த மனித உடலாக உருவாக்கியது நம் உயிர் தான்.

அப்படி வேதனையிலிருந்து விடுபடும் உணர்வுகள் கார்த்திகேயா…!

அதாவது ஒவ்வொரு உடலிலும் எத்தனை தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வின் ஞானம் பெற்று
1.இந்த மனித உடலாகும் போது அதற்குத்தகுந்த உறுப்புகளை உருவாக்கி
2.தீமையிலிருந்து விடுபடும் வலுவான அந்தச் சக்தியாக
3.ஆறாவது அறிவாக வள்ளி மிகச் சக்தி வாய்ந்த நிலையாக மாறுகின்றது.
4.அதைத்தான் வள்ளி என்று பெண்பாலைக் காட்டுகின்றார்கள்.

இந்த வலிமைமிக்க சக்தி பெற்ற நிலையைத் தான் நம்மைக் காட்டிலும் ஞானிகளோ பெரியவர்களோ அவர்கள் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று மிக மிகச் சக்தி வாய்ந்ததாக அவர்கள் உடலில் வளர்த்துள்ளார்கள்.

அந்த மகான்கள் எல்லாம் தனக்குள் வந்த நோய்களையும் தீமைகளையும் வராதபடி வலு கொண்டு சமாளித்துக் கொண்டவர்கள்.

அந்தக் குடும்பப் பந்தம் இல்லாதபடி தீமையிலிருந்து விடுப்ட வேண்டும் என்று
1.அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு வலிமையான உணர்வுகளைச் சுவாசித்து
2.அவர் உடலிலே எந்தத் தீமையும் சாடாதபடி…
3.அதைத் தாக்கிடும் தாங்கிக் கொள்ளும் அந்த உணர்வினைப் பெற்றுள்ளார்கள்.

அப்படிப் பெற்றிருக்கும் போது… நம் கண்ணுக்கு முன்னாடி ஒரு மகானைப் பார்த்தோம் என்றால்
1.அந்த மகானின் அற்புத நிலைகள் நாமும் பெற வேண்டும்
2.அவரின் அருளாற்றல் பெறவேண்டும்
3.நமக்குள் இருள் வராதபடி தடுக்கும் அந்த அருள் சக்தி வேண்டும் என்று எத்தனை பேர் இப்படி எண்ணுகின்றோம்…?

நம் உடலில் ஒரு நோய் வந்ததென்றால் அந்த மகானை நினைத்து அழுவோம். நான் எல்லோருக்கும் நன்மை தானே செய்தேன்… என்னை ஏன் இப்படிச் சோதிக்கின்றாய்…? என்ற நிலையில் கோவிலுக்குச் சென்றாலும் இதைத்தான் நினைக்கின்றோம்.

ஏனென்றால் நன்மை செய்பவர்கள் எல்லாம் எப்படிச் செய்கின்றார்கள்…?

மற்றவர்கள் வேதனைப்படுவதை எல்லாம் கேட்டு அறிந்து அடப் பாவமே…! என்று சொல்லித் தான் நாம் உதவியே செய்கின்றோம்.

அவர் வேதனையை நாம் அதிகமாக நேசித்த பிற்பாடு அதன் ரூபமாக பண உதவியோ மற்றதையோ செய்கின்றோம். ஆனாலும் அவர் உடலிலிருந்து வேதனையை நாம் நுகர்கின்றோம்.

இப்படி நம்மை அறியாமலே நன்மை செய்யும் சமயங்கள் எல்லாம் அடுத்தவர்களின் வேதனைகளையோ அவர்களின் குடும்பக் கஷ்டங்களையோ நோய்வாய்ப்பட்டோரின் உணர்வுகளையோ எல்லாவற்றையும் நுகர்கின்றோம்.

இந்த உணர்வுகள் வலிமையாகி… நாம் நுகர்ந்த பின் நம் உடலில் வந்து சேருகிறது “காசு கொடுத்து விலைக்கு வாங்கிய மாதிரி…!”

ஆனாலும் இதைச் சுத்தப்படுத்த வேண்டுமல்லவா…! அதற்கு நாம் என்ன வைத்திருக்கின்றோம்…?

நம் பிரபஞ்சத்தின் மாற்றம்

 

மனிதர்களாக உருவான பின் வாழ்ந்து… கடைசியில் இறந்த பின் அந்த உடலைப் புதைத்தால் அது கரைந்து விடுகிறது… மற்றொன்றுக்கு இரையாகின்றது. (உடலை மண் தின்கிறது என்று சொல்வோம்).

1.இதைப் போல் தான் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள நம் சூரியன் தன் செயலை இழந்தால் கரைந்துவிடும்.
2.காரணம் நம் பிரபஞ்சத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களும் தனித் தனியாக ஒரு சூரியக் குடும்பமாக மாறும் தருணம் வந்துவிட்டது (உபதேசம் செய்த வருடம் 1992).

கார்த்திகை நட்சத்திரம் நம் சூரியனைப் போல் அதுவும் வளர்ச்சிக்கு வருகிறது. ரேவதி நட்சத்திரமும் அதே போல் சூரியனாக மாறுகிறது. அதே போல் இன்னும் இரண்டு மூன்று நட்சத்திரங்கள் சூரியனாக மாறிக் கொண்டிருக்கின்றது.

இப்படி மாறி விட்டால் நாம் வாழும் இந்தச் சூரியனுக்குக் கிடைக்கக்கூடிய ஆகாரத்தை அது பகிர்ந்து கொள்கிறது. இது முதுமை அடைகிறது.

ஆக இப்படி நம் பிரபஞ்சத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களில் சரி பகுதி தனித் தனி சூரியக் குடும்பமாக மாறி விட்டால்
1.நம் சூரியனுக்கு இரையில்லை.
2.இந்தச் சுழற்சியின் தன்மை இதனின் (சூரியனின்) ஈர்ப்பு வட்டம் குறையும்.

இந்த ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் நம் பூமியோ இதைப் போல் அந்த சுழலுக்குள் சிக்கி இதுவும் சுழற்சியான பின் அதற்குள் போய்க் கரைந்து விடும்… ஆவியாக மாறும்.

மற்ற இந்த 27 நட்சத்திரங்கள் இருக்கிறதல்லவா… இதிலே ஒவ்வொன்றும் சூரியக் குடும்பமாக மாறிப் போகும் உணர்வுகளுக்கு இது உணவாகிவிடும்.

இப்படித் தான் அகண்ட அண்டத்தில் உள்ள இந்த 2000 சூரியக் குடும்பங்களும் ஓர் குடும்பமாக மாறி வளர்ந்து வந்துள்ளது.

அதே சமயத்தில் நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் 27 சூரியக் குடும்பமாக மாறிவிட்டால் இது ஒரு வட்டமாகின்றது… பேரண்டம் ஆகிறது.

இதன் வளர்ச்சியில் இதைப் போல் மாறி மாறித் தன் பெருக்கத்தின் நிலைகள் கொண்டு 2000 சூரியக் குடும்பங்களாக வளரும்.

1.நான் (ஞானகுரு) வெறுமனே சொல்லவில்லை… படிக்காதவன் தான் சொல்கிறேன். படித்திருந்தால் தப்பாகத் தான் சொல்லியிருப்பேன்.
2.இந்தப் பிரபஞ்சத்தில் ஏற்படும் மாற்றம் பற்றி அன்றே குருநாதர் எமக்குக் காட்டினார்.

ஆகையினால் குருநாதர் கொடுத்த அந்த மெய் உணர்வின் தன்மைகளை நீங்கள் பெற்று அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நுகர்ந்து
1.அகண்ட அண்டத்தையும் அறியலாம்
2.இந்தப் பிண்டத்திற்குள் அதனின் ஆற்றலை எடுத்து வளர்க்கவும் செய்யலாம்.
3.இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலையையும் நீங்கள் அடையலாம்.

அதற்குத் தான் இதை எல்லாம் சொல்வது.

உயிருடன் ஒன்றி வாழ்ந்தால் பிறப்பின் பலனை அடையலாம் – ஈஸ்வரபட்டர்

 

சக்தியின் நிலை பலவற்றில் கலந்திருந்தாலும் அதன் “கூட்டு நிலை…” கொண்டு தான் ஒவ்வொன்றின் பிரகாசமும் ஜொலிக்கின்றது.

தனித்த பூக்களாக இருந்தாலும் அதை எல்லாம் ஒன்றாகக் கோர்த்து ஆரம் கட்டித்தான் ஆண்டவனுக்குச் சூட்டி மகிழ்கின்றோம்.
1.ஒன்றாக உள்ளதைப் பலவாகத் தருவதே இயற்கை…!
2.தாவர வளர்ச்சியின் நிலையிருந்துதான் முன்னோடி நிலை பெறுகின்றது.

தானாக வளரும் தாவரங்களும் சரி… நாமாகப் பயிர் செய்யும் தாவரங்களும் சரி… ஆரம்ப வளர்ச்சியில் அதற்கு வேண்டிய சக்தியை ஈர்த்துத் தன் சேமிப்புச் சக்தியின் பலன்களைத் தருகின்றன.

1.பூவையும் காய்களையும் கனிகளையும் சில தாவரங்கள் தருகின்றன.
2.பூவும் கனியும் அளிக்காத புல் பூண்டு இன வர்க்கங்கள் அதன் அமில குணங்கள் முற்றிய பிறகு
3.வேர்களின் அதனின் சக்தி குணத்தை அதிகப்படுத்திக் கனம் கொண்டு தான் சேமித்து
4.வளர்ச்சி நிலையை வளரந்த பிறகு வெளிப்படுத்துகின்றது.

“வளர்ச்சியின் முற்றலை…” ஒவ்வொரு தாவர இன வர்க்கமும் வெளிப்படுத்திய பிறகு தான் அதனின் உயிர் ஜீவ சக்தி மாறுபடுகிறது.

அதன் மாற்றத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்ட ஜீவ ஆத்மாக்களுக்கு ஆரம்ப காலத்திலேயே ஒன்றாகப் பல அமில குணத்தை ஈர்க்கும் நிலை பெற்றதனால் மனிதனும் மிருகமும் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் இன வர்க்கங்களும் தம் உடல் அவய அமைப்பில் பல நிலைக்கேற்ப அங்க அவயங்கள் ஒரே தன்மையில் ஈர்த்து வளரும் நிலை கொண்ட இன குணங்களுடைய ஜீவராசிகளாக வளர்ந்திருக்கின்றோம்.

தாவரங்கள் சக்தியை ஈர்த்துப் பிறகு பலன் தருகிறது. தாவரங்களுக்கு உண்டு கழிக்கும் நிலை இல்லை.

பலவும் ஒன்றாக ஈர்த்துப் பல அவயங்களை ஒன்றுபடுத்தி உருவ அமைப்பு கொண்ட ஜீவன்களுக்கு உண்டு கழித்து வாழும் அவயங்கள் எப்படி அளிக்கப்பட்டன…?

அளிக்கப்பட்டன…! என்பதைக் காட்டிலும் வளர்ச்சியில் முன்னேற்றம் கொண்ட ஜீவ ஜெந்துக்கள் தன் வளர்ச்சியில் உண்டு கழித்துப் பல கோடி உயிரணுக்களை வளர்த்து வாழும் நிலையில் பயன் பெறும் பக்குவ நிலை பெறுவது தான்…! அது.

அதாவது…
1.தன் அவயங்களில் உள்ள பல கோடி அணுக்களை வளர்த்து
2.ஒன்றாக அதைக் கூட்டிப் பேணிக் காக்கும் ஓர் உயிரணுவின் தெய்வ சக்தியில்
3.உயிர் சக்தியான மனித உயிரணுவின் ஞானத்தின் வளர்ச்சியைப் பழக்கப்படுத்திக் கொண்டு
4.ஞான வளர்ச்சிக்கு உகந்த தன்மையில் ஒவ்வொரு உயிரணுவும்
5.இதன் தொடருடன் ஐக்கியப்படும் வளர்ச்சி நிலையை ஏற்படுத்திக் கொள்வது தான் மனித ஜீவன் பெறும் பலன்.
6.ஆக ஜீவனாக உள்ள ஜீவனின் பலன்… இந்த ஞானம் பெறும் வழி ஞானம் தான்.

பலனற்ற நிலை பெறாத ஜீவ ஞானம் தான் அதனின் தொடரில் ஏற்படும் “மாற்று நிலைகளுக்குச் செயல்படச் சென்றுவிடுகிறது…”

மனிதனின் உடலிலுள்ள அனைத்து அணுக்களும் அதனதன் வளர்ச்சியில் வளர்ந்து கொண்டு இருந்தால் தான் அவயங்களில் உள்ள அனைத்து உறுப்புக்களும் ஆரோக்கியமான நிலையில் வளர்ந்து வாழ முடிகின்றது.

அணுக்களுக்கு உகந்த உணவை அதற்குகந்த ஈர்ப்பில் பெற்று வளர்ந்து வாழ்கின்றது.
1.எண்ணத்தின் நிலையை மாற்றிக் கொண்டு செயல்புரியும் நிலை பெற்று விட்டால்
2.ஈர்க்கும் குண நிலையும் அதன் வழித் தொடர் கொண்ட எந்தச் செயல் முறையும் தடைப்படத்தான் செய்யும்.

பலவாக உள்ள பூவை ஒன்றாக்கி ஆரம் கட்டி அதன் அழகை ஆண்டவனுக்கு அணிவித்து இன்பம் காணுவது போல்
1.நம் உடலில் பலவாக உள்ள அணுக்களை ஒன்றாக ஆரம் கட்டி
2.உயிராத்ம ஆண்டவனுக்கு ஞானம் சூட்டி… அழகாக்கி…
3.மனிதன் மகிழ வேண்டும்…! என்ற சித்தத்தைச் சிந்தையில் உணர்ந்தாலே
4.சிவபதம் முதலிய எப்பதமும் காணலாமப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

கூட்டுத் தியானங்களில் நாம் பதிவு செய்த வலுவான சக்தி துணை கொண்டு ஈஸ்வரா… என்று நம்மை இயக்கும் உயிரை எண்ணி ஏங்கி மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வினைச் சுவாசிக்க வேண்டும்.

அதன் மூலம் நம் உடலுக்குள் நம்மை அறியாது சேர்ந்த சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை போன்ற உணர்வின் சக்திகளை பலவீனப்படுத்தச் செய்ய வேண்டும்.

இல்லையென்றால் அது நம் உடலுக்குள் நோயாகி நல்ல குணங்களை செயல்படுத்தாது ஆக்கி விடும்.

1.இப்படி அடிக்கடி நாம் அந்த விண்ணை நோக்கி ஏகி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று ஆத்ம சுத்தி நாம் செய்து கொண்டால்
3.அன்றன்று அந்தந்த நிமிடங்களில் நமக்குள் நம்மை அறியாது ஏற்படும் தீமைகளை அகற்ற இது உதவும்.

அது மட்டுமல்லாமல்… நம்முடைய எண்ணங்கள் கூர்மையாக அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து நம் நினைவலைகள் அங்கே இணைக்க படுகின்றது.

இதனை நாம் வலுக் கூட்டக் கூட்ட… விண்ணின் ஆற்றலும் அந்த மகரிஷிகளின் தொடர்பும் நமக்குக் கிட்டுகின்றது.

நம்முடைய மூதாதையர்கள் எத்தனையோ வேதனைகளை அனுபவித்துத் தான் நம்மை வளர்த்து நமக்கு எத்தனையோ சுகங்களையும் கொடுத்துள்ளார்கள்.

இந்த வாழ்க்கையில் மனிதனாக உயர்ந்து வாழவும் வைத்துள்ளார்கள் செல்வங்களும் நமக்கு சேமித்து வைத்து உள்ளார்கள். செல்வங்களைச் சேமித்து வைத்தாலும் செல்வத்தைச் சேமிப்பதற்கு எவ்வளவோ வேதனைகள் பட்டு அனுபவித்தவர்கள் தான் நம் முன்னோர்கள்.

அந்த வேதனையின் உணர்வு வளர்ந்து மனித நினைவு இழந்து உணர்வின் சத்து அவர் உடலுக்குள் சேர்க்கப்படும்போது இன்னொரு மனிதனின் உடலுக்குள் அவர்கள் புகுந்தாலும்
1.அந்த ஆன்மா முதல் முதலில் சேர்த்துக் கொண்ட வேதனை உணர்வை அந்த உடலிலே உருவாக்கி அந்த உடலையும் வீழ்த்தி
2.நஞ்சின் உணர்வைத் தான் அந்த ஆத்மா வளர்த்துக் கொள்ளும்.

மீண்டும் இப்படி பல உடலுக்குள் போனாலும் அந்த நஞ்சைத் தான் வளர்த்து கொள்ள முடியுமே தவிர மனிதனின் உருவாக அந்தக் கருப்பெறும் தன்மையை இழக்கப்படுகின்றது.

பரிணாம வளர்ச்சியில் நாம் புழுவில் இருந்து மனிதனாக வளர்ச்சியில் வந்தது போல… மீண்டும் மனிதனிலிருந்து பரிணாம வளர்ச்சி தேய்பிறையாகி… பௌர்ணமிக்கு மறு நாள் தேய்வதுபோல மனிதனின் ஒளிச்சுடர் நாம் அறியும் நிலைகள் மங்கி… நாம் மீண்டும் பரிணாம வளர்ச்சியின் தொடர்ச்சியில் பாம்போ தேளோ பல்லியோ இது போன்ற விஷ ஜந்துக்களின் நிலையை அடையச் செய்து விடுகின்றது நமது உயிர்.

நம் முதாதையர்களின் உணர்வுகள் நம் உடலிலே உண்டு. அவர்களுடைய உணர்வுதான் நம் உடலை இத்தகைய நிலைகளுக்கு வளர்த்தது. நம்மை மனிதனாக உருவாக்கியது நம் முதாதையர்களுடைய எண்ணங்களே.

1.ஆகவே நம் வாழ்க்கையில் வரும் துன்பத்தைத் துடைக்க
2.அடிக்கடி விண்ணை நோக்கி மகரிஷிகளின் அருள் சக்தி பெறும்போது
3.நமக்குள் வலுப் பெறும் இச்சக்தியின் துணை கொண்டு
4.நம் முதாதையர்கள் குலதெய்வங்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்துடன் இணைக்கச் செய்ய வேண்டும்.

அப்படி இணைக்கச் செய்ய வேண்டுமென்றால் இப்போது நாம் இங்கே எப்படிக் கூட்டு தியானங்களில் செய்கின்றோமோ இதைப் போன்று குடும்ப கூட்டு தியானங்கள் செய்து அந்தந்தக் குடும்பத்திலிருந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை பிரிந்த நிமிடமே அவர்கள் இதைப்போல சப்தரிஷி மண்டலங்களில் இணைந்து பிறவா நிலை என்னும் ஒளி சரீரம் பெற வேண்டுமென்று ஐக்கிய உணர்வின் வலுக்கொண்டு அந்த ஆன்மாக்களை விண் செலுத்த வேண்டும். அதற்கு இந்தக் கூட்டுத் தியானம் உதவும்.

அந்த உணர்வின் சக்தியை நாம் வளர்த்துக் கொள்வதற்குத்தான் இந்தப் பௌர்ணமி தியானத்தையே வைத்துள்ளோம்.

நம் உயிருடன் ஒன்றி… ஞானகுருவுடன் ஒன்றி… ஈஸ்வரபட்டருடன் ஒன்றி… உணர்வை ஒளியாக மாற்றிடும் தியானப் பயிற்சி

 

ஓ…ம் ஈஸ்வரா…! என்று எண்ணும் போது புருவ மத்தியில் உயிரைப் பரிபூரணமாக எண்ண வேண்டும். குருதேவா என்கின்ற போது உடலுக்குள் இருக்கும் அனைத்து குணத்திற்கும் நம் உயிரே “குரு…” என்ற நிலைகளில் மதித்துப் பழக வேண்டும்

1. ஈசனாக இருப்பதும் உயிரே
2. விஷ்ணுவாக இருப்பதும் உயிரே
3. கடவுளாக இருப்பதும் நமது உயிரே
4. பிரம்மமாக இருப்பதும் உயிரே.
5. நாம் எண்ணியது எதுவோ அதைச் சிருஷ்டிப்பதும் நம் உயிரே,
6. எண்ணத்தால் கவர்ந்த உணர்வினைத் தன் ஆன்மாவாக மாற்றிக் கொள்வதும் “உயிரே”.
7. ஆன்மாவின் நிலைகள் அது உறையும்போது கடவுளாக உள் நின்று அதை உறையச் செய்யும் செயலாகச் செயல்படும் நிலைகளும் “உயிரே”.
8. நாம் எண்ணியது எதுவோ அதை உடலாக்குகின்றது நம் உயிர்
9. நாம் எண்ணியது எதுவோ அந்தச் சக்தியாக உள் நின்று மீண்டும் நம்மை இயக்குகின்றது.
10. நாம் எண்ணியதை ஆண்டு கொண்டிருப்பதும் ஆண்டவனாக இருப்பதும் நம் “உயிரே”.
11. நாம் எதை எண்ணுகின்றோமோ அதை வைத்து… அடுத்து…, “அவன் ஆட்சியும் நம்மை ஆளுவதும் அவனே”.

ஆகவே ஓம் ஈஸ்வரா குருதேவா என்கின்ற போது நம் உயிரின் இயக்கத்தைத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். மந்திரம் சொல்கிற மாதிரிச் சொல்ல வேண்டியதில்லை.

ஈஸ்வரா என்றாலே புருவ மத்தியில் நம் உயிரைத்தான் நினைவில் கொள்ள வேண்டும். ஈசன் எங்கேயோ இருந்து நம்மை இயக்குகின்றான் என்று வெளியிலே தேட வேண்டியதில்லை. வெளியிலே நினைவு செல்ல வேண்டியதில்லை.

குரு என்றால் உடலில் உள்ள அனைத்திற்கும் குருவே அவன் தான். ஏனென்றால் உயிர் ஒளியாகப் பெற்றவன். குரு ஒளியாக இருக்கின்றான். அந்த ஒளியின் நிலை பெற வேண்டும் என்ற ஆறாவது அறிவின் தன்மை கொண்டு எண்ணினால் குருவை நாம் மதிக்கின்றோம் என்று பொருள்.

உயிரின் உணர்வின் தன்மை கொண்டு அழியா ஒளிச் சரீரம் பெற்ற அருள் ஞானிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்றால் நாம் உயிரை அவசியம் மதித்துப் பழக வேண்டும். ஞானிகள் உணர்த்தியபடி அதை நாம் பின்பற்ற வேண்டும்.

இப்படி ஒவ்வொருவரும் அவரவர்கள் உயிரைப் புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி அந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா என்று திரும்பத் திரும்பச் சொல்வது. அதே போல் எண்ணியதை.., எண்ணியவாறு நடத்தித் தரும் “நாயகன்.., நம் உயிர் தான் என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

பேசுவதற்கு முன் “மைக்கைச் (MIC)” சரி செய்து வைத்துக் கொள்கின்றோம். அது சரியாக இருந்தால்தான் பேசுவதை அது கிரகித்து ஒலியைப் பெருக்கிக் காட்ட முடியும்.

இதைப் போலத்தான் “ஓ..ம் ஈஸ்வரா குருதேவா…” என்று புருவ மத்தியில் அடிக்கடி எண்ணினால் தான் நம் உயிரின் இயக்கம் உயிர் வழி சுவாசமாக அமையும்.

ஏனென்றால் இந்த உலகத் தொடர்பு கொண்ட மற்ற உணர்வுகள் நம் ஆன்மாவாக இருக்கப்படும் பொழுது அந்த நிலைகள் நமக்குள் இயங்காதவண்ணம் அதைத் தடுத்து நிறுத்தவும் நம்முடைய எண்ண ஏக்க அலைகள் ஞானிகளின் உணர்வுகளை எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்வதற்கும் ஓம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணினால் தான் அது மிகவும் ஏதுவாக இருக்கும்.

“எண்ணிலடங்காத உணர்வின் சுழற்சிகள்” நம் ஆன்மாவில் உண்டு. அதையெல்லாம் நம் சுவாசத்திற்குள் வராதபடி தடுத்துவிட்டு மெய் ஞானிகளின் உணர்வை உள் புகுத்துவதற்காகத்தான் நாம் எல்லோரும் சேர்ந்து ஒரே உணர்வாக ஓ..ம் ஈஸ்வரா… குருதேவா…” என்று சொல்கிறோம்.

விண்ணுலகில் உள்ள ஞானிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் உயிரிலே புருவ மத்தியிலே எண்ணும் போது அவர்கள் ஈர்ப்புக்குள் நாம் செல்கிறோம். அதைக் கவரும் ஆற்றலும் பெறுகின்றோம்.

ஆகவே புருவ மத்தியிலிருக்கும்… நம் உயிரை” எந்த அளவிற்கு அதிகமாக எண்ணுகின்றோமோ அந்த அளவிற்கு இயக்கச் சக்தியின் ஆற்றலைப் பெற்று எண்ணிய சக்தியைப் பெற முடியும். ஞானிகள் அவ்வாறு பெற்றுத்தான் இன்றும் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகி துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் உள்ளார்கள்.

விண்ணிலிருந்து வரும் ஆற்றல்மிக்க சக்திகளை நுகர்ந்து உயிர் வழி நாம் சுவாசித்தால் உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறும். ஒளியின் சரீரம் பெற முடியும். அகண்ட அண்டத்தில் என்றுமே அழியாத நிலைகள் கொண்டு மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளுடன் ஒன்றிட முடியும். சப்தரிஷி மண்டலத்தில் நாம் இணையலாம்.

1. நம் உயிரும் ஒரு நட்சத்திரம் தான். இருபத்தியேழு நட்சத்திரங்களின் எதிர் நிலையான மோதல்கள் தான் “இயக்கச் சக்திக்கே…” மூல காரணமாகும் என்று கண்டுணர்ந்து வெளிப்படுத்திய அகஸ்தியரின் அருள் சக்திகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
2. இருபத்தியேழு நட்சத்திரங்களின் விஷத்தன்மைகள் ஒன்றுக்கொன்று மோதும் நிலைகளில் வான மண்டலங்களின் இயக்கங்களையும் பூமிக்குள் வரும் போது பாறைகளாகவும் மண்களாகவும் வைரங்களாகவும் அதனதன் ஈர்ப்பால் என்னென்ன மாற்றங்கள் ஆகின்றது என்று அகஸ்தியன் கண்டுணர்ந்த அருள் சக்திகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
3. எங்களுக்குள் பதிவான ஞானகுரு உபதேசித்த அருள் உணர்வுகள் அனைத்தும் மீண்டும் மீண்டும் எங்களுக்குள் நினைவுக்கு வந்து எங்கள் நினைவாற்றல் விண்ணிலே.., மேல் நோக்கிச் சென்று மகரிஷிகளுடன் தொடர்பு கொண்டு அந்த மகரிஷிளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
4. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் தீமைகளை அகற்ற வேண்டும் என்ற வலுவான எண்ணம் எங்களுக்குள் ஓங்கி வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.
5. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வ்ழியில் எங்கள் உயிரை இயக்கி அதன் வழி மெய் ஞானிகளின் உணர்வுகளை ஜீவனாக்கி எங்கள் உணர்வுகள் அனைத்திடும் ஒளியாக மாறிட அருள்வாய் ஈஸ்வரா
6. புருவ மத்தி வழியாக அருள் உணர்வைப் பெறும் பாதையை உயிர் வழி சுவாசமாகக் காட்டிய ஞானகுருவின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
7. புறக்கண்ணால் பார்க்கும் அசுத்த உணர்வுகளைச் சுவாசிக்காதபடி அகக்கண்ணின் வழி கூடிய நினைவு கொண்டு கார்த்திகேயா என்ற நிலையில் தீமைகளை அகற்றி ஒளியாக மாற்றிடும் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
8. எங்கள் வாழ்க்கையில் கோபம் வரும்போதெல்லாம் மகரிஷிகளின் ஒளியை நாங்கள் பெற்று கோபத்தைத் தணித்து எங்களுக்குள் தெளிவு பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.
9. துன்பம் வரும் பொழுது “இப்படி ஆகின்றதே.., இப்படி ஆகிவிட்டதே..,” என்பதை எண்ணாமல் அந்தச் சமயத்தில் “அதிலிருந்து விடுபடும் உணர்வை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
10. 1வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெற்று துன்பத்திலிருந்து மீண்டிடும்.., “உபாயமும் ஞானமும்..,” தக்க தருணத்தில் எங்களுக்குள் உதயமாகிட அருள்வாய் ஈஸ்வரா
11. தீமைகள் என்று வரும் போது “உன் நினைவு தான்…” எங்களுக்கு வர வேண்டும் ஈஸ்வரா. அந்தச் சமயத்தில் தீமைகளை நாங்கள் நுகராது நல்ல வினைகளை நற்சக்திகளை மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் நுகரும் சக்தியாக வர வேண்டும் ஈஸ்வரா…!
12. மகரிஷிகள் காட்டிய அருள் வழிப்படி எங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளைக் குறைத்துப் பழக அருள்வாய் ஈஸ்வரா
13. இருளை அகற்றி ஒளியாக இருக்கும் உன் அருளைப் பெற என் நினைவுகள் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைக்கின்றேன் ஈஸ்வரா…!
14. ஞானகுரு கொடுக்கும் சக்தியின் துணை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஒளியான அணுக்கள் எங்கள் உடலிலே உற்பத்தியாகிட அருள்வாய் ஈஸ்வரா
15. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி புருவ மத்தியிலிருக்கும் “உயிருடன் ஒன்றி..,” அந்த வாசல் வழியாக அதாவது சொர்க்கவாசலாக இருக்கும் அதன் வழி விண்ணுலகம் செல்லும் ஆற்றலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
16. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்திய அந்த அருள் வழிப்படி இதை எல்லாம் நாங்கள் பின்பற்றி விஞ்ஞான உலகின் தீமைகளிலிருந்து விடுபட்டு இந்த மனித உடலிலேயே முழுமையான நிலைகள் அடைந்து உலகைக் காத்திடும் ஞானிகளாக நாங்கள் உருவாகிட அருள்வாய் ஈஸ்வரா.

ஆகவே அருள் உணர்வைப் பெருக்கினால் நமக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளை நாம் பார்க்க முடியும் பார்க்கும் சந்தர்ப்பம் கண்டிப்பாக வரும் என்றும் அந்த அகண்ட அண்டத்துடன் (2000 சூரியக் குடும்பம்) தொடர்பு கொண்ட உணர்வையும் நம்மால் உணர முடியும் என்றும் அதன் வழியில் நாம் எங்கே போக வேண்டும்…! என்ற உணர்வு வரும் என்பதையும் அதை வைத்து நாம் செல்ல வேண்டிய சப்தரிஷி மண்டல எல்லையை நிச்சயம் அடைய முடியும் என்றும் ஞானகுரு நமக்கு வழிகாட்டுகின்றார்கள். நாம் அதன் வழி செல்வோம்.

பூமிக்கடியிலிருந்து உறிஞ்சப் பெற்ற பல சக்திகளின் தன்மையினால் பூமியின் மையப் பகுதி வலு குறைந்து விட்டது – ஈஸ்வரபட்டர்

 

இவ்வுலகில் மனிதனின் எண்ண சக்தியில் அறிவு நிலையின் வளர்ச்சி குணத்தை ஞானத்தின் பால் செலுத்தும் வழி முறைப் பக்குவத்தை மாற்றிக் கொண்டதால் ஒரு சாரார் ஏற்படுத்திக் கொண்ட அறிவின் ஞான முதிர்ச்சியினால் தன் ஞானம் பெற்றதை விஞ்ஞானம் கண்டு வளர்த்திட்டான் அதன் வழி சக்திகளை.

இப்படி மனித ஞானத்தின் வளர்ச்சியையே விஞ்ஞானம் கொண்டு உணர்ந்து செயலாற்றும் பல நிலைகளை உணர்ந்துள்ளான் மனிதன்.
1.ஆனால் அம்மனித விஞ்ஞானத்தைத் தன் ஞானத்திற்கு எட்டும் பொருளாக மனிதர்கள் யாவரும் உணர்வதில்லை
2.பிறப்புடன் கூடிய “அபூர்வ சக்தியின் வழி பெற்றிட்டான் அந்த மனிதன்…!” என்று
3.போற்றிப் புகழ்ந்து அம்மயக்கத்தில் தான் அடிபணிந்து வாழ்கிறான்,
4.இதே நிலை எல்லா வட்ட நிலைகளிலும் (துறைகளிலும்) உண்டு.

பக்தி மார்க்கத்தில் சித்தன் நிலை கொண்டு செயலாற்றுபவனையும்
1.அவன் தாள் பணிந்து உயர்த்தி – தான் தாழும் செயல் வடிவாக உள்ளான் மனிதன்.
2.வாழ்ந்த வழி பெற்ற நிலையின் தொடரிலும்… பிறரின் புகழ் பாடி வணங்கும் முறையிலும் வாழ்ந்தால் நம் ஆத்ம பலம் வளம் பெறாது.

எந்தச் சக்தியாக இருந்தாலும் இந்தக் காற்றின் ஈர்ப்புக்குச் சொந்தப்பட்டது தான். அதே காற்றின் சுவாச அலையுடன் வாழும் நாம் நம் சக்தியைக் குறைத்து ஒன்றின் தொடர் நிலையில் வாழாமல் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் உகந்த ஞான ஒளியின் ஈர்ப்பை நமதாகப் பெறவேண்டும்.

அதி விரைவில் தன் ஞானத்தை ஒவ்வொருவரும் கூட்டிக் கொள்ளுங்கள். நம் பூமியின் ஓட்டப் பாதையில் சில மாற்றங்களாகி வழக்கமான பாதையிலிருந்து சிறிது மாற்றமுடன் ஓடிக் கொண்டுள்ளது.

ஆகாயத்தில் கோட்டை கட்டி (INTERNATIONAL SPACE STATION) விஞ்ஞான ரீதியில் செயல் முறைக்கு வந்துவிட்டார்கள் விஞ்ஞானிகள்.

அதே போல் இந்தப் பூமியின் ஈர்ப்பு மண்டலத்திற்கு மேல் சென்று விட்டால் அதே போல் மற்ற மண்டலங்களும்… ஏன் வளர்ச்சியுற்ற நட்சத்திர மண்டலத்தின் ஈர்ப்புக்குக் கூட இல்லாத நிலையில்… இங்குள்ள சுவாச நிலையை எடுத்துச் சென்று… அதற்குகந்த மருத்துவ நிலையில் அங்குள்ள அலையின் சுவாச நிலையை ஏற்கும் அமில குணத்தை… சிறுகச் சிறுக வழிப்படுத்தி மனித ஆத்மா சென்றாலும் அங்கேயும் வாழ முடியும்.

1.ஆனால் மனிதன் இன்று செய்யும் இந்த விஞ்ஞானமே
2.நூறு ஆண்டுகளுக்கு முந்திய மார்க்கத்தில் செயல்படுத்தி இருந்தான் என்றால் வெற்றி கண்டிருப்பான்.

இவன் செயல் முறை காலத்திற்குள் “உலக மாற்றமே நிகழப் போகும் நிலையில்… அந்தர வாழ்க்கையில்…!” அதன் நிலையை உணர்த்தப் போகின்றான்.

நூறு மாடிக் கட்டிடம் எழுப்பும் மனிதன் அந்த நூறு மாடிக் கட்டிடத்திற்கு உகந்த “அதே உயரத்திற்கு உகந்த அஸ்திவாரத்தையா…” பூமியில் போடுகின்றான்…?

இந்தப் பூமியில் வாழும் வளரும் பூமியிலிருந்து பிரித்து எடுத்த பொருள்களும்.. நாம் அமைத்த எல்லாமும்… பூமியின் ஈர்ப்பின் பிடிப்புடன் சுழன்று ஓடிடும் நிலையில்
1.சக்தி கொண்ட நிலை மாறு கொண்டதால் தான்
2.இன்று வலுவிழந்த சில கட்டிடங்களும் பாலங்களும் விழுவதின் உண்மையும்.

இந்தப் பூமியின் காற்று மண்டலத்தில் ஏற்கனவே விஷத் தன்மைகள் அதிகரித்து விட்டது. பூமிக்கடியிலிருந்து உறிஞ்சப் பெற்ற பல சக்திகளின் தன்மையினால் பூமியின் மையப் பகுதியும் வலு குறைந்து விட்டது.

மேன்மேலும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு உட்படுத்தி உயர் மின் அலைகளைக் கடலிலிருந்தும் காற்றிலிருந்தும் இந்த மனிதன் சுகம் காணப் பிரித்து எடுத்துக் கொண்டே இருப்பதால்
1.தன் குறுகிய கால சுகத்திற்காக இந்தப் பேரண்ட உலகையே வலுவிழக்கச் செய்து
2.மீண்டும் வலுப் பெற வைக்கப் போகின்றான்.

இதனின் உண்மை என்ன என்பது புரிந்ததா…?

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒருத்தர் உடலில் ஆவி (ஆன்மா) இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்போர் நாம் அவரிடம் பேசினால் அங்கே போகாதே… போகாதே…! என்று மற்றவர்களிடமும் சொல்லும்.

நாம் அவரிடம் பேசினால் போதும்… நம் உணர்வுகள் பட்டவுடனே… போகாதீர்கள்… போகாதீர்கள்…! என்று சொல்லும். காரணம்… அதற்கு ஆகாது.

அதே உணர்வை நாம் கேட்டோம் என்றால்…
1.மகரிஷிகளின் அருள்சக்தி அது பெற வேண்டும்
2.அது இருள் நீங்க வேண்டும்
3.பொருள் காணும் உணர்வு வளர வேண்டும் என்று எண்ணி
4.ஒரு பத்து தடவை செய்துவிட்டு உங்கள் பார்வையைச் செலுத்துங்கள்.

அப்புறம் தன்னாலே மயங்கி விழுந்தாலும் விழும்…. போய் விடும்….! ஏனென்றால் சில சாப அலைகள் ஒருவருக்கொருவர் பாய்ந்த உணர்வுகள் இப்படி வந்து விடுகின்றது.

அந்த மகரிஷிகள் தனக்குள் கோடி… கோடி… கோடி…! என்று பல கோடி உணர்வுகளைத் தனக்குள் ஒளியாக மாற்றியவர்கள். ஆகவே அந்த மகரிஷியின் உணர்வை நமக்குள் எடுத்து இதை அவருக்குள் புகுத்த வேண்டும்.

அப்படிப் புகுத்தினோம் என்றால் அவர்கள் உணர்வு நீங்கும். “புகுத்த வேண்டும்” என்ற உணர்வுகள் நமக்குள் வலுப் பெறும். இந்த அலைகள் படரும். நம் நினைவு அங்கே மகரிஷிகள் பால் போகும்.

ஆகவே…
1.அந்த விண்ணின் பற்றுடன் ஒவ்வொரு நிமிடத்திலேயும் இதைப்போல எண்ணி ஆத்ம சுத்தி செய்து
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
3.இந்த நினைவினை எடுத்து இங்கே கொண்டு வர வேண்டும்.

அதாவது… இங்கே பேசிக் கொண்டிருக்கிற மாதிரி இருக்கும். ஆனால் நினைவை அங்கே கொண்டு போக வேண்டும். எங்கே…?

பயிற்சி:
1.கண்ணின் நினைவினை விண்ணிலிருந்து சிந்தனையை எடுத்துப் பாருங்கள்.
2.அவர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கின்ற மாதிரி இருக்கும்
3.செவிகள் கேக்கும்…. இரண்டும் கலக்கும்…. அதை உணர்த்தாது…. வந்தாலும் அது நம்மை இயக்காது.
4.சரி…! என்று எதிர் பதில் சொல்லச் செய்யும்.

அவர்கள் பேச்சை நீங்கள் கேட்கும்போது நேராக மட்டும் அவர்களைக் கண்ணுற்று மட்டும் பார்க்காதீர்கள். (இது முக்கியம்)

சொல்வதை மட்டும் கேட்டுக் கொண்டே இருங்கள். அப்பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதனுடன் இணைத்தீர்கள் என்றால்
1.அது உங்களை இயக்காதபடி அப்புறம் உங்கள் சொல்லால் சொல்லும்போது அது இயங்கும்.
2.அவர்களை இயக்கி மாற்றிவிடும்….! ஏனென்றால் இந்தப் பதிவுகள் நமக்கு அதிகம் தேவைப்படும்.

தூங்காமல் தூங்கும் (ஒளி) நிலை பெற வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

எண்ணம் தான் செயல்.. எண்ணம் தான் கடவுள்…! என்ற நிலையை பல இடங்களில் திரும்பத் திரும்பச் சொல்லியுள்ளேன்.

தாவரங்கள் எல்லாம் ஒரே நிலையில் அதற்குகந்த ஒரே அமில குணத்தை ஈர்த்து வளர்ந்து வாழ்கின்றது. வெங்காயம் அதன் அமில குணமான அதிகப்படியான ஈர்ப்பு அமில இரசத்தை உறிஞ்சி ஒரு வகையான காரத்தை வளர்க்கின்றது. அதன் ஆவி பட்டவுடன் நம் கண்ணீர் சுரக்கிறது.

மிளகாயின் நெடி எரிச்சலையும் இன்னும் சில வகை காய்களினால் நமைச்சலும் நாம் பயிராக்கி வளர்க்கும் தாவரம் அல்லாமல் இயற்கையுடன் வளரும் பல கோடி இன வளர்ச்சியும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு குண நிலை ஒத்த அமில சக்தி ஈர்ப்பில் வாழ்கின்றது.

ஒரு நிலையில் ஈர்த்து வளரும் தாவரங்களுக்கு மனிதனை ஒத்த செயல் உணவு முறைகள் வேண்டி இருப்பபதில்லை. ஆக.. உண்டு கழித்து உறங்கி வாழும் நிலை மனிதனுக்கு எப்படி ஏற்பட்டது…?

ஒன்றிலிருந்து மாறுபட்ட அமிலப் படைப்பில் பிம்பம் கொண்ட ஜீவராசிகளின் நிலையே ஒன்றுடன் ஒன்று கூடிக் கூடி வளர்ச்சி நிலை முற்றி… கனம் கொண்ட பிம்ப ஜீவ நிலை எற்பட்ட பிறகு ஒவ்வொன்றிலிருந்தும் சேமிக்கப்பட்ட குண நிலைகளுக்கொப்ப ஈர்ப்பு நிலை அமையப் பெறுகிறது.

அப்படிப் பெற்றதனால்… ஜீவ பிம்ப உடல் பெற்ற பிறகு
1.எண்ணத்தின் செயலினால் தன் தேவையை உணரும் நிலையும்
2.தன் தேவைக்குகந்த செயலாற்றும் திறமையும்
3.ஒன்றின் பலவாகக் கூட்டிக் கொண்ட பல அமிலங்களின் ஈர்ப்பு சக்தி கொண்ட ஜீவன்களுக்கு
4.தன் உணர்வின் எண்ண செயலுக்கெல்லாம் அதன் தேவையின் அடிப்படை உணவு தேவைப்படுகின்றது.

இதிலுள்ள உள் அர்த்தம் என்ன..?

1.இது நாள் வரை “எண்ணத்தின் செயல்” என்று உணர்த்தி வந்தேன்
2.இப்பொழுது “உணர்வின் எண்ணத் தேவை…” என்று உணர்த்துகின்றேன்.

நம் உடலுக்கு நீர் தேவைப்படும் பொழுது வாய் வறண்டு விட்ட பிறகு நீர் அருந்த எண்ணத்தைச் செலுத்துகின்றோம்.
1.உணர்வின் தேவையினால் எண்ணத்தைச் செலுத்தி
2.எண்ணத்தின் செயலால் நீரை அருந்துகின்றோம்.

அதே போன்று நம்மை அறியாமலே நாம் எந்தச் செயலில் இருந்தாலும்… அல்லது அதன் பால் எண்ணத்தைச் செலுத்தா விட்டாலும் நம்மை அறியாமல் நம் உடலில் உள்ள இவ்வெண்ணத்தின் மோதலின் செயல் நிலையினால்
1.நாள் முழுவதும் நம் செயல் இருக்கும் பொழுது
2.இந்த உடலின் உஷ்ண அலைகள் ஆவியாக கொட்டாவி வெளிப்பட்டு
3.உடல் உறுப்புகளுக்கு அமைதிப்படுத்தும் நிலையான உறக்கம் கொள்ள வேண்டியுள்ளது.

இப்படிப் “பல எண்ணத்தை எடுத்து… பல அமிலங்களின் செயல் தொடர்பில்…” வாழும் பிம்ப உடல்களுக்கு உணர்வின் எண்ண அலையும் வருகின்றது.

ஒரே நிலை கொண்ட தாவரங்களுக்கும்… மற்ற ஜீவன்களான ஜீவ சக்தி கொண்ட எல்லாக் கனிவளங்களுக்கும்… நம் பூமிக்கும்… மற்ற எல்லாவித மண்டலங்களுக்கும் ஜீவன் உள்ள பொழுது… தன் தேவை அறியும் உணர்வும்… உறங்கும் நிலையும் இல்லை…? ஏன்…?

ஜீவன்கள் உறங்கி விடுகின்றன. பூமியும் மற்ற கோளங்களும் தாவரங்களும் உறங்குவதில்லை.
1.ஒரு நிலை கொண்ட அமிலப் படைப்புகள்
2.இவ்வெண்ண சக்தியின் பலவற்றை மோதுண்டு வாழும் ஜீவன்களைப் போல உறங்குவதில்லை.

அவை உறங்கிவிட்டால் உறங்கும் ஜீவன்களுக்கு ஜீவத் துடிப்பு எங்கிருந்து வரும்…?

இயற்கையின் ஜீவப் படைப்பில் சுகம் கண்டு வாழும் நிலை பெற்ற ஜீவன்கள் தனக்குக் கிடைத்த இந்த அபரிதமான உண்மைச் சக்தியை
1.உண்டு… கழித்து… உறங்கி… மங்கச் செய்யும் வாழ்க்கையிலிருந்து
2.இதே அடிப்படை எண்ண குணத்தில் செல்லாமல்
3.ஒரு நிலை கொண்ட எண்ணச் சக்தி கொண்டு தான் ஞானத்தின் வளர்ச்சி பெறல் வேண்டும்
4.தூங்காமல் தூங்கும் நிலை…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

புகழ்ச்சி கண்டு நாம் ஏங்கினோம் என்றால் நமக்குள் அந்தப் புகழ்ச்சியின் மத்தியில் அவன் நம்மைக் கைவல்யம் பண்ணும் உணர்ச்சிகள் வரும்.

ஏனென்றால்
1.நமக்கு வேண்டிய நல்லவரைப் பொய்யனாக ஆக்குவான்
2.உங்கள் செயல்களை எல்லாம் போற்றுகிறேன் என்பான்
3.போற்றுகிறேன் என்று சொல்லிவிட்டு நல்லவரைத் திருடனாக்கி விடுவான்.

இவ்வளவு தூரம் நம்பிக்கையுடன் இருந்தவுடன் தப்பாகவே பண்ணுகிறான் என்ற உணர்வின் தன்மை எடுத்து இவன் இவனுக்குச் சாதகப்படுத்துகின்றான்.

இவனுடன் நல்லவனாக நடித்து நல்லவனை விலக்கி விட்டுவிடுவான். அவனை இவனிடமிருந்து பிரிக்கும்போது இவனுக்கு உதவி செய்யும் நிலைக்கு வருகின்றான்.

புகழ் கண்டு மயங்கினால் என்னவாகும்…? நமது குருநாதர் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார். “புகழ் கண்டு மயங்காதே… புகழ்ந்துரைக்க எண்ணாதே…”

ஒருவரை நாம் புகழ்ந்துரைக்க எண்ணினால் அவருடைய தவறுகளை மீண்டும் உயர்த்தத்தான் உதவ முடியுமே தவிர தவறைத் தவறு என்று சுட்டிக்காட்டும் தன்மைகள் அங்கே மறைந்து விடுகின்றது.

புகழாரம் பாடினால் என்னவாகும்…? இதைக் கண்டு மயங்கினால் என்ன நிலை ஆகும் என்பதற்குத்தான்,
1.புகழ் கண்டு மயங்காதே…
2.புகழ் தேடிச் செல்லாதே…
3.புகழாரம் பாடாதே…! என்ற மூன்று பதங்களும்
4.அதன் எதிர்மறையான உணர்வுகள் உன்னை எப்படி மாற்றும்…? என்று உணர்த்தினார் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

அதே போல்
1.இன்னல் கண்டு கலங்காதே…
2.இகழ்ச்சி கண்டு பதறாதே…
3.இகழ்ந்துரைக்க எண்ணாதே…!

ஒருவர் இகழ்ந்துரைக்கிறார், அதைக் கண்டவுடன்… “இப்படி ஆகிவிட்டதா…?” என்று நாம் செல்லும் பாதைகளுக்கு இது தடைப்படுத்துகின்றது.

அவன் கேவலமாகப் பேசுகிறான் என்ற உணர்வை எடுத்து நாம் பதறினால் என்ன செய்யும்…? அந்த இகழ்ச்சியின் உணர்வு எனக்குள் விளையும். இகழ்ச்சியின் உணர்வு எனக்குள் வரும்போது மற்றவர்களை இகழ்ந்துரைக்க எண்ண வைக்கும்.

அதன் வழியில் அவரை இகழ்ந்துரைக்க எண்ணினால்
1.அந்த இகழ்ந்துரைக்கும் உணர்வுகள் எனக்குள்ளும் வளருகின்றது.
2.இதே சொற்கள் அவரை இகழ்ந்து பேசும் உணர்வுகள் வந்ததென்றால்
3.அவருக்குள் பதிவாகி பதில் எனக்கே வரும்.

உயர்ந்த எண்ணங்களைப் பதிவாக்கும் நிலைகள் அங்கே தடைப்படும். அவர்கள் பெறாதவண்ணம் அங்கே தடைப்படுகின்றது. அந்த உயர்ந்த நிலைகள் வளரும் நிலைகள் எனக்குள் தடைப்படுகின்றது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

வலு கொண்டு சொல்வதற்கும்… சந்தேக உணர்வுடன் சொல்வதற்கும் உண்டான வித்தியாசங்கள்

 

எத்தனையோ கொடிய நிலைகளிலிருந்து மீண்டு “எல்லாவற்றிலிருந்தும் மீள வேண்டும் என்ற சக்தி பெற்றவன் தான் மனிதன்…!”

மற்ற உயிரினங்கள்… உதாரணமாக தவளையோ பாம்போ பதுங்கியிருந்து தான் தனக்கு வேண்டிய உணவைப் பிடிக்கிறது. தவளை தப்பித்துக் கொள்ள எண்ணுகிறது. பாம்போ அதைக் குறி வைத்து அப்படியே பார்க்கிறது… பாய்ந்து அதைப் பிடிக்கிறது.

1.தவளையின் தசைகள் பாம்பிற்கு இரையாகிறது
2.ஆனால் தவளையின் உயிரோ பாம்பின் உணர்வைக் கவர்ந்து
3.பாம்பின் கருவிற்குள் சென்று பாம்பாக அடுத்து உருவம் பெறுகிறது.

இதைப் போன்று தான் பரிணாம வளர்ச்சியில் ஒன்றை ஒன்று தாக்கித் தன்னை வளர்ச்சி பெறச் செய்கிறது.

இப்படி ஒவ்வொரு உடலிலேயும் தன்னைப் பாதுகாக்கும் உணர்வுகளை வளர்த்து… வளர்த்து… வளர்த்து… எல்லாவற்றையும் நாம் பாதுகாக்கும் நிலையாக மனிதனாக வளர்ந்து வந்திருக்கின்றோம்.

ஆனால் மனிதனாக ஆன பின் நாம் என்ன செய்கிறோம்…? எதிரியை வீழ்த்தி விட்டு நாம் நன்றாக வாழ வேண்டும் என்று தான் எண்ணி வாழ்கிறோம்.

கடையை வைத்து வியாபாரம் செய்கிறோம். அது நன்றாக இருக்க வேண்டும் என்றால் அடுத்த கடையை அதை எப்படி எப்படி எல்லாம் “சரியில்லை…” என்று சொல்ல வேண்டுமோ அதை எல்லாம் செய்வோம்.

1.நம்மை அறியாமலே அவர்கள் சரக்கை மோசம் என்று சொல்வோம். ஆனால் சரக்கு நன்றாக இருக்கும்.
2.அவர் மீது நமக்கு வெறுப்பு இருக்கும்… அதனால் சரக்கை மோசம் என்று தான் சொல்வோம்.

இங்கே இவ்வளவு உயர்ந்ததாகப் பேசினாலும்…
1.மனம் ஒத்திருந்தால் அவர் சரக்கு மட்டமாக இருந்தாலும் கூட…
2.பரவாயில்லை… அவர் சரக்கு நன்றாக இருக்கிறது…! என்று தான் சொல்வோம்.

இந்த உண்மையை எல்லாம் தெரிந்து கொண்ட பிற்பாடும் கூட இந்த உணர்வு வரும்.

காரணம்…
1.அவர் மீது பற்று இருக்கும் போது அவர் கொண்டு வந்த சரக்கையும் நல்லதாகக் காட்டிவிடும்.
2.ஆனால் அவர் மீது பற்று இல்லை என்றால் அவர் எடுத்துக் கொண்டு வந்த சரக்கையும் மட்டமாகக் காண்பிக்கும்.

இதே உணர்வை அங்கே அடுத்தவரிடமும் பதிவு செய்து விட்டோம் என்றால் அதே நோக்கத்தில் பார்த்தால் “நீங்கள் சொன்னது சரியாகப் போய்விட்டது…!” இந்த உணர்வுகள் தான் அங்கே வந்து பாயும்.

எதிரிக்கு இந்த உணர்வின் அலைகளை மாற்றப்படும் போது இந்த உணர்ச்சிகளை அது மாற்றும். இதன் மேல் பற்று கொண்ட உணர்வு கொண்டு “நம் வார்த்தையைக் கேட்டார்கள்” என்றால் அவர்களுக்கும் அது தான்.

உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற உணர்வை நீங்கள் பாய்ச்சும் போது அதை மற்றவர்கள்கள் பதிவு செய்து கொண்டார்கள் என்றால் அந்த உயர்ந்த நிலைக்கு அவர்களும் வருகிறார்கள்.

நாம் சொல்வதை…
1.சரியான நிலைகளில் இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா… ஏற்றுக் கொள்ள மாட்டார்களா…? என்று இதைக் கலந்து விட்டு
2.அடுத்து நீங்கள் சொன்னீர்கள் என்றால் அங்கே அதை ஏற்றுக் கொள்ளாத உணர்வே வரும்.

இத்தகைய உணர்வின் இயக்கங்களை எல்லாம் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குத் தான் சொல்வது (ஞானகுரு).

நம் உயிராத்மாவுக்கு ஒளி சக்தியை உணவாகக் கொடுக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

எச்சக்தியும் செயல்பட ஜீவத் துடிப்பு காந்த ஒளி அலை வேண்டும். இச்சக்தி நிலை… ஜீவன் தரவல்ல “நீரிலிருந்து” கிடைக்கின்றது.

நீர் எப்படிக் கிடைத்தது…?

இயந்திரங்களைச் செயலாக்க அவ்வியந்திரங்களுக்கு ஆகார திரவங்களைச் செலுத்தி (FUELS) இயக்கினாலும்
1.அதற்கு ஜீவ நீரைச் செலுத்திச் சுழல விட்டு (COOLING WATER) காந்த மின் அலையின் ஒளியைச் சுழல விட்டுத் தான்
2.அந்த ஒளிப் பொறியினால் இயந்திரங்களை இயக்குகின்றான் மனிதன்.

“காந்த மின் ஒளி” பிறக்கும் பொழுதே ஜீவன் தான் செயல்படுகின்றது. (முக்கியமானது) மின்சாரத்தை எடுக்கவும்… நீரிலிருந்து காந்த மின் அலையைப் பிரித்துத்தான் மின் அலையாக மனிதன் காண்கின்றான்.

இதில் உள்ள உண்மையை உணர்த்துவதன் நிலை என்ன…?

சூரியனிலிருந்து ஒளி அலைகள் வருகின்றது. உலகம் சுழன்று ஈர்த்து வெளிக் கக்கும் நிலையினால் ஒளியும்… இயற்கையும்… ஜீவ நீரும் பெறுகின்றோம்..! என்ற உண்மையை உணர்ந்து வாழும் மனிதன் இதிலுள்ள கருத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடிய “உண்மை இரகசியத்தை” அறியவில்லை.

சூரியனிலிருந்து வெளிப்படும் அமிலக் குண சக்தி நேராக நம் பூமியில் மட்டுமா வந்து படர்கிறது…? அப்படிப் படரும் ஒளி சக்தியானது பூமியின் மேல் செல்லச் செல்ல எந்த நிலையில் உள்ளது…?

இந்தப் பூமிக்குச் சீரான ஒளி அலை பெறக்கூடிய தன்மைக்கு நம் பூமிக்கு மனித ஆத்மாக்கள் கருத்தோன்றி வளர்ச்சி நிலை பெற உதவிய
1.வியாழனின் சக்தி அலையின் உதவி இல்லா விட்டால்
2.இன்றைய பூமியின் ஜீவத் துடிப்பான நீரின் அமிலத் தன்மையே இல்லை.

ஒலியும் ஒளியும் கலந்து ஆவியாகி… நீராகி.. நிலமாகி.. ஜீவ சக்தியைப் பெற்றுள்ள நம் பூமியின் ஜீவ குண நிலை பெறப் பல பல மண்டலங்களின் அமிலச் சக்தியும் துணை புரிகின்றது.

இஜ்ஜீவனுக்கு ஒளி அலைகளை ஈர்க்கும் தன்மையும் வேண்டும். காந்த மின் அலை (ELECTRO MAGNETIC WAVES) என்று பல நாட்களாக உணர்த்தி வருகின்றேன். இக்காந்த மின் அலைக்குத் துடிப்பு எங்கிருந்து வந்தது…?

காந்த மின் அலை எப்படி ஏற்பட்டது…?

ஒரு அமில குணம் படர்ந்த தன்மையில் மற்றொரு அமில குணம் அதிலே மோதும் பொழுது ஏற்படும் “ஒலியின் அதிர்வு ஈர்ப்பினால்…”
1.இக்காற்று மண்டலத்தில் படர்ந்துள்ள சூரியனின் குண அமில சக்தி மோதுண்டவுடன்
2.இழுக்கும் ஈர்ப்பு நிலை கொண்டு ஜீவ துடிப்பான ஆவி நீர் சுரந்து
3.இவ்விழுவையின் ஒளி ஏற்பட்ட பிறகு துடிப்பு நிலை கொள்கின்றது.

இத்துடிப்பின் ஈர்ப்பு கனம் கொண்டு பூமியின் ஈர்ப்பில் காற்று மண்டல முந்தைய பாடத்தில் உணர்த்தியதைப் போல்
1.இந்தப் பூமியின் சுழற்சி ஓட்டத்தில் வடிகட்டி ஈர்க்கும் நிலை என்று உணர்த்திய நிலையில் மோதுண்டு
2.இஜ்ஜீவ ஒளியைப் பூமி பெற்று
3.பூமியின் ஈர்ப்பில் உறிஞ்சி வெளிப்படுத்தும் ஒளி அலையைத் தான்
4.சூரியனின் ஒளி பிம்பமாக நாம் காண்கின்றோம்.

பனிரெண்டு மணி உச்சி வெயிலில்… நம் பூமி எந்த இடத்தில் சூரியனின் ஒளி அலையை எந்த டிகிரிக் கோணத்தில் பெறுகின்றதோ… அதன் நேர் கோட்டில் பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூர விகிதத்தில் “இதே அளவு உஷ்ண அலையும் வெளிச்சமும் இருக்காது…!”

விஞ்ஞானிகளும் இதைக் கண்டு ஆராயட்டும்…!

பூமியின் நிலைக்கும்… பூமிக்கு மேல் செல்லச் செல்ல குளிர்ந்த நிலை தான் அதிகமாகக் கூடியிருக்கும். பூமியின் சுழற்சி ஓட்டத்தில் தன்னைத் தானே பூமி சுழன்றோடும் சக்தி ஈர்ப்பினால் பூமியே தான் சூரியனின் ஒளி அலையைக் கிரகித்து ஒளி பெற்று ஓடுகின்றது.

விஞ்ஞானத்தில் திரவங்களைச் செலுத்தி வாகனங்களை எப்படி ஓட்டுகின்றார்களோ அதைப் போல் தான் நம் பூமியும் தன்னைத் தானே அமில குணத்தின் உணவை எடுத்து சூரியனின் சக்தி ஒளியை நுண்ணிய காந்த அலையாக ஈர்த்து வளர்த்து ஓடிக் கொண்டுள்ளது.

மற்ற ஒவ்வொரு மண்டலமும் இதன் இயற்கைக் கதியில் தான் செயல் கொள்ளுகிறதேயன்றி
1.அதனதன் ஈர்ப்பு இல்லா விட்டால் ஜீவன் இல்லை…!
2.சூரியனாக இருந்தாலும் சரி.. சூரியனுக்கே சக்தி தந்த வியாழனாக இருந்தாலும் சரி…
3.சூரியனைப் போன்று சூரியனைக் காட்டிலும் வளர்ந்த எக்கோளமாக இருந்தாலும் சரி…
அதனதன் ஈர்ப்பில் வளர்ச்சி கொண்டு வாழ்வது தான் ஒவ்வொரு நிலையும்.

இந்த உண்மையின் நிலையை மனித உணர்ந்திடல் வேண்டும்.

அறிவாற்றலில் செயல் கொள்ளும் மனிதன் தன் ஞானத்தின் ஈர்ப்பை… ஜீவத் துடிப்பு கொண்ட உயிராத்மாவின் ஈர்ப்புக்கு… தன் உயிராத்மாவிற்கு வேண்டிய நல்ல சக்தியாக… எவ்வமில குணம் உள்ளதுவோ… அதன் ஜீவ அலையை நுண்ணிய காந்த ஈர்ப்பை தான் எடுக்கும் சுவாசத்தினால் எடுத்துச் செயலாக்கிட முடியும்.

உடலுக்கு உணவு கொடுத்து வளர்த்தாலும் உடல் அழியக்கூடியது. ஆனால் உயிரான்மாவிற்கு உகந்த மின் காந்த ஒளியை நாம் பெற்றால் என்றுமே அழியாத நிலைகள் கொண்டு விண்ணிலே ஏகாந்தமாக வாழலாம்.

அப்படி வாழ்பவர்கள் தான் சப்தரிஷி மண்டலமும்… துருவ நட்சத்திரமும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

தியானமிருக்கிறேன்… எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை… தியானமிருக்கிறேன்… என் தொழில் நன்றாக நடக்கவில்லை என்று தவறான எண்ணத்திற்குக் கொண்டு செல்லாமல்
1.தியானமிருக்கிறேன்… “தொழில் நடக்கும்” என்ற எண்ணம் வரப்படும்போது
2.நீங்கள் தேட வேண்டியது இல்லை.

தியானத்தின் நிலைகள் நாம் எடுக்கின்றோமென்றால் இந்த உணர்வு தானாகவே வரும். நமக்கு வேண்டியது அது. அதை எடுக்கப்படும்போது இந்த உடல் பற்றின் நிலைகளில் மாற்றம் வரும். இது வேண்டும்.

தொழில் இல்லையென்றால் இந்த உடலின் நிலைகள் வளராது. இந்த உடல் இல்லையென்றால் ஞானமும் பெற முடியாது.

ஆகவே இதைப்போன்று நாளை நாம் இருப்பதற்கு அது வேண்டும். உங்களை நீங்கள் நம்ப வேண்டும். உங்களை இயக்கிக் கொண்டிருக்கும் ஈசனை மதித்து நடக்க வேண்டும். உங்களால் நிச்சயம் இது முடியும்.

இன்று சம்பாதித்து… நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்.
1.ஆனால் உங்களிடம் இருக்கக்கூடிய உயர்ந்த குணத்தை நான் திருடினால் என்னவாகும்…?
2.எனக்குள் உயர்ந்த குணம் வரும்.

ஆகவே திருடுவது எதுவாக இருக்க வேண்டும். அறிவின் தன்மை கொண்டு நாம் எதைத் திருட வேண்டும்…?
1.தீமைகளை அகற்றும் அருள் ஞானத்தை நாம் திருடுதல் வேண்டும்.
2.அந்த அருள் ஞானத்தை நுகர்ந்தால் நமக்குள் இருக்கும் தீமைகளை அகற்றும் சக்தி பெறுகின்றது.

திருடன் என்று சொல்லப்படும்போது இத்தனை வகையான நிலைகளை எடுத்துச் சொல்கின்றார், நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஏனென்றால் சாதாரணமாக அவரிடமிருந்து தப்பி வரமுடியாது. ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டால் 10 நாட்களுக்கு நம்மை இழுத்து “வாட்டு வாட்டு” என்று வாட்டிவிடுவார்.

நான் பேசுகிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்… ஞானிகளின் அருள் வாக்குகள் தான் இங்கே செயல்படுத்திக் கொண்டிருக்கிறது

 

நாம் எதை எண்ணுகின்றோமோ அது உயிரிலே பட்டதும் ஜீவன் பெறுகிறது… அது பிராணாயாமம். அந்த உணர்வின் சக்தி எனக்குள் பட்டவுடனே ஜீவன் பெறுகின்றது. இதற்குப் பெயர் பிராணாயாமம்.

ஆனால் ஒரு பக்கம் மூக்கை அடைத்துக் காற்றை இழுத்து உள்ளுக்குள் கொண்டு போய்ச் சேர்த்து மீண்டும் வெளிவிட்டால் இது பிராணாயாமம் என்று இவர்கள் கொண்டு போகிறார்கள்.

அன்று கீதையில் ஞானிகள் சொன்னது வேறு. இவர்கள் சொல்லும் நிலைகள் வேறு.

குண்டலினியைத் தட்டி எழுப்புவது என்று முதுகுத் தண்டில் இருக்கிறது என்று மூலாதாரத்தைத் தட்டி எழுப்புகிறார்கள்.
1.மூலம் என்பது உயிர்
2.ஆதாரம் என்பது உணர்வு.
3.நமக்குள் இருக்கும் நல்ல உணர்வைத் தட்டி எழுப்பி
4.மெய் உணர்வைத் தனக்குள் சேர்க்க வேண்டும் என்று அன்று சொன்னார்கள்.

இவர்கள் சொன்ன மாதிரி முதுகுத் தண்டில் தட்டி எழுப்பினால்… எவன் சொன்னானோ அவன் எண்ணத்தைக் கொண்டு இந்த ஆதாரத்தைத் தட்டியெழுப்பினால்… அவனுக்குள் வசப்படுத்துவது தான் இந்த முறை. இப்படித் தான் இவர்கள் செய்கின்றனர்.

மூலம் என்பது தன் உயிர். ஆதாரம் என்பது தனக்குள் இருக்கும் உணர்வைத் தட்டி எழுப்புவது தான் அது.

அன்று ஞானிகள் சொன்னதை எல்லாம் விட்டுவிட்டு இவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒரு பெயரை வைத்துக் கொண்டு செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

ஏனென்றால் பிறரைக் குறை கூறுகிறேன் (ஞானகுரு) என்று யாரும் எண்ண வேண்டாம். புத்தகங்களில் ஒருவர் பிராணாயாமம் செய்வது எப்படி…? என்று எழுதி வைக்கிறார் என்றால் அதைக் காட்டிலும் நான் ஒன்றைச் சேர்த்து புதிதாகக் கண்டு பிடித்துச் சொல்கிறேன் என்று இப்படி நிறைய வந்து விட்டது.

அன்று ஞானிகளால் கொடுக்கப்பட்ட உயர்ந்த தத்துவங்கள் எல்லாம் மறைக்கப்பட்டு விட்டது. அந்த உணர்வுகள் அழிக்கப்பட்டது.
1.இருந்தாலும் இன்றைய கடைசித் தருணத்தில் இது வெளிப்படுகின்றது…!
2.நான் (ஞானகுரு) வெளிப்படுத்துகிறேன் என்று யாரும் தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள்.
3.எனக்கு ஒன்றும் தெரியாது…
மூன்றாம் வகுப்பு தான் படித்திருக்கிறேன்.

ஏனென்றால் உங்களை மாதிரி புத்தகத்தைப் படிக்க எனக்குத் தெரியாது. அந்தத் திறனும் இல்லை. அந்த விளக்கமும் எனக்குத் தெரியாது.

இதை எல்லாம் காட்டிய அந்த மெய் ஞானிகளின் அருள் வாக்குகள் தான் இங்கே செயல்படுகின்றது.

நீங்கள் எல்லாம் அந்த அருளைப் பெற வேண்டும் எண்ணி வரப்படும் போது
1.உங்கள் பாக்கியத்தில் நான் எண்ணி எண்ணி எடுக்கப்படும் போது
2.அந்த ஞானத்தின் சக்தி முதலில் எனக்குள் விளைகிறது.

இந்த உணர்வின் தன்மை இங்கே வெளி வரப்படும் போது யார் இதைக் கேட்கின்றனரோ அவருக்குள்ளும் விளைகிறது.

ஒரு செடியின் மணம் அடுத்தடுத்து வித்தை ஊன்றும் போது அதற்குள் ஈர்க்கப்பட்டு மீண்டும் அதே செடியாக விளைவது போல் தான் அதே மணத்தின் தன்மை இங்கே விளைகிறது.

ஆகவே “நான் பேசுகிறேன்…” என்று யாரும் எண்ண வேண்டாம்… எனக்கு இது தெரியவும் தெரியாது. குருநாதர் காட்டிய வழிகள் கொண்டு அதை நான் எண்ணப்படும் போது அந்த உணர்வின் ஆற்றல் வருகிறது.

1.நீங்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.உங்களை அறியாத இருள் நீங்க வேண்டும்
3.மெய் ஒளி உங்களுக்குள் படர வேண்டும்
4.உங்கள் பேச்சும் மூச்சும் பிறரின் இருளை நீக்க வேண்டும்.
5.கேட்போர் உள்ளங்களை மகிழ்விக்க வேண்டும் என்று நான் எண்ணுகின்றேன்.
6.அந்த உணர்வின் தன்மை எனக்குள் படைக்கின்றது… என் குரு காட்டிய நெறிகள் கொண்டு.

அவர் சொன்ன வலு கொண்டு நான் அதைப் பெற முடிகின்றது. இந்த உணர்வின் வித்தை விளைவிக்கவும் முடிகிறது. அந்த வித்தை எல்லோருக்குள்ளும் படரச் செய்ய முடிகிறது. உங்கள் உள்ளத்திலே பதியச் செய்ய முடிகிறது.

இதையே நீங்கள் எண்ணும் போது அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள்ளும் விளைகிறது. அதன் மூலம் மற்றவருக்குள்ளும் அருள் ஞானத்தை விளையச் செய்ய முடியும். அருளானந்தம் பெற முடியும்.

ஆண்டவனுக்கு நாம் தர வேண்டிய காணிக்கை – ஈஸ்வரபட்டர்

 

நம் பூமியில் பல காலங்களாகவும் இன்றைய காலங்களிலும் பலர் பல உண்மை ஆராய்ச்சி நிலையில் பல சாதனைகளை வெளிப்படுத்திக் கொண்ட தான் வந்துள்ளார்கள்… அதே வழித் தொடரிலும் வாழ்கின்றனர்.

ஆனால்..
1.மனிதன் பல புதிய புதிய நுண்ணலை ஈர்ப்பால் பல செயல்களைச் செய்கின்றான் என்றாலும்
2.அந்த மனிதன் தன் ஆத்ம உயிரணுவிற்கு.. அந்த ஒளியின் பால் செல்வதற்குகந்த வழி ஆற்றல் பெறவில்லை.

பல மேதைகள் உண்டு…! ஆனாலும் அந்த மேதைகளினால் எதன் அடிப்படை ஆராய்ச்சி ஈர்ப்பில் தன் எண்ண ஞானத்தைச் செலுத்தி வழி பெறுகின்றனரோ… அதன் தொடர் ஞானம் ஒன்றின் பால் மட்டும் அவர்களின் ஈர்ப்பில் சுவாசம் உள்ளதனால்… அதன் சுழற்சி வட்டத்தில் மட்டும் தான் உள்ளனர்.

உடலை விட்டு ஜீவன் பிரிந்த பிறகும் அதே எண்ண செயலுக்காகப் பிறிதொரு ஜீவ ஆத்மாவுடன் தொடர்ச்சிப்படுத்திக் கொண்டும் அல்லது மீண்டும் ஒரு ஜென்மத்திற்கு வருகிறார்களேயன்றி தன் ஆத்ம ஜீவ உயிரணுவின் வளர்ச்சியில் ஒளி அலையுடன் கலக்கவிடும் நிலை எய்துவதில்லையப்பா.

இங்கே போதிக்கப்படும் நிலைகள் கொண்டு…
1.ஒவ்வொருவரும் எண்ணத்தால் எடுக்கும் சுவாசத்தில் நுண்ணிய ஈர்ப்பலையின் நினைவைச் செலுத்தி
2.சக்தி கொண்ட மகான்களின் ஒளியுடன் நம் எண்ண நுண்ணிய அலை பதியும் பொழுது
3.அதன் தொடரிலிருந்து அவர்களின் ஒளி அலையை நம் உயிராத்மா ஈர்க்கக்கூடிய வழித் தொடர் பெற்று
4.இந்த உடலில் உள்ள பல கோடி உயிரணுக்களும் அம்மகான்களின் தொடர் அலையுடன் கலக்கும் வழி நிலை பெற்றால்
5.இன்று இப்பிரபஞ்ச ஆதி சக்தியின் வளர்ச்சியில் வளர்ந்துள்ள பல கோடிக் கோளங்களின் வளர்ச்சி ஏற்படுத்திய
6.சப்தரிஷிகளின் ஒளி வட்டம் போல் நம் நிலையும் நிலைத்து நிற்கும்

எடுக்கும் எண்ணத்தைக் கொண்டு தான் ஒவ்வொரு வளர்ச்சியுமே. மனிதனுக்கு மட்டுமல்ல.. மற்ற எல்லா நிலைகளுக்குமே…!

1.மனிதனுக்கு எப்படித் தன் எண்ணத்தின் சுவாச ஈர்ப்பை இந்த உடல் பிம்பம் பலவாக உள்ள நரம்புகளில் ஈர்த்து
2.இந்த உடல் முழுமைக்குமே எண்ணத்தின் சக்தி பிம்பம் பரப்புகின்றதோ
3.அதைப் போன்று ஜீவன் கொண்ட தாவரங்களுக்கும் மற்ற மற்ற எல்லா இயற்கை வளங்களுக்குமே
4.இந்த ஈர்ப்பலையை உறிஞ்சக்கூடிய நரம்புகள் உண்டு.

அமிலத்தின் ஒளி சக்தியை ஈர்த்து ஜீவன் பெற்று துடிப்பு நிலை ஏற்படும் நிலையிலேயே “ஈர்க்கும் காந்த நரம்புகள்…!” வளர்ச்சி பெறுகின்றன.

ஆனால் மனிதச் சுவாச ஈர்ப்பினால் எந்த ஈர்ப்பின் நிலையில் மனிதன் உடல் பிம்பத்தில் நிறைந்துள்ள இரத்தத்தில் அவன் எடுக்கக்கூடிய எண்ணத்திற்கொப்ப எல்லாம் அவன் உடலில் உள்ள இரத்தத்தில் வளரும் ஜீவ அணுக்களின் நிலையும் கலந்து விடுகின்றது.

ஒரு நிலை கொண்ட சுவாசம் கொண்டவை தாவரங்கள்.
1.மனிதனையும் மற்ற மிருகத்தையும் ஒத்த இரத்த ஓட்டச் சுழற்சி இல்லாமல்
2.நரம்பின் ஈர்ப்பினாலேயே ஒரு நிலையில் காந்த சக்தியையே ஈர்க்க வல்லது தாவரம்.

பலவாக உள்ள எண்ணக் கலப்பில் பலவற்றையும் எண்ணி வாழும் மனிதன் தன் எண்ணத்தில் எடுக்கும் ஒவ்வொரு நிலையினாலும் அவன் பிம்ப உடலை அவனே பல நிலைகளுக்கு உட்படுத்திக் கொள்கின்றான்.

இந்த நிலையிலிருந்து எல்லாம் மீண்டு… பல நிலைகள் மோதிடும் நிலையை நம் எண்ணத்தில் பதிய விடாமல் “சமமான நிலையில்” நம் எண்ண ஈர்ப்பை வழிப்படுத்திடல் வேண்டும்.

ஆகவே வாழ்க்கைக்குகந்த செயலுடன் இந்த எண்ணத்தை ஒவ்வொரு ஆத்மாவும் தன் பிறப்பின் உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.

ஆண்டவனின் சக்தியில் அவதரித்த…
1.ஆண்டவன் என்ற உயிராத்மாவுடன் வாழும் நாம்
2.அந்த ஆண்டவனுக்கு உகந்த காணிக்கையாக நம்மை நாமே ஆண்டவனாக்கிக் கலப்பது தான்
3.மனித ஆத்மாவின் எண்ண வளர்ச்சியின் வழித் தொடர் இருந்திடல் வேண்டும்.

அது தான் ஆண்டவனுக்கு நாம் தரும் காணிக்கை.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நாம் எண்ணி எடுத்துக் கொண்ட ஒவ்வொரு குணமும் தன்னை வளர்த்துக் கொள்ள முந்துகின்றது. முந்தும் பொழுது…
1.தீமையை அகற்றும் சக்தியாக எடுத்தால் தீமைகளை அகற்றும்
2.நஞ்சான உணர்வை நமக்குள் எடுத்துக் கொண்டால் நஞ்சின் தன்மை நமக்குள் நல்ல குணங்களை அழிக்கும்.

இந்தப் பேருண்மையை அறிந்து கொள்வதற்குத்தான் கோலமாமகரிஷி எதை எதை எடுத்தார்…? வெறுத்தார்… அறிந்தார்… ஞானத்தால் உணர்ந்தார்…? என்ற நிலையை அறிய யாம் இங்கே கொல்லூரில் அவ்வளவு காலம் தங்கியிருந்து ஜெபமிருந்தோம்.

அங்கே தண்ணீர் கிடையாது… உணவு கிடையாது… ஒன்றும் கிடையாது. எம்மை இங்கே விட்டுவிட்டுச் சென்று விட்டார் குருநாதர். இங்கே பல நாட்கள் தங்கிவிட்டுப் பின்புதான் வெளியே வந்தோம். யாருக்கும் தெரியாது.

இவ்வாறு அறிந்து கொண்ட நிலைகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றோமென்றால்…
1.எமது வார்த்தையைக் கேட்பது பெரிதல்ல…
2.எம்மைப் பின்பற்றுவதும் பெரிதல்ல…!

ஆனால் நாம் முந்தைய நிலைகளில் பதிவு செய்த நிலைகள் நமக்குள் உண்டு. அதை நாம் அடக்க வேண்டும்.

நமது அன்பர் ஒருவர் ஆட்டோவை வேகமாக ஓட்டி வருகிறார். அப்பொழுது அது அவருக்குக் குஷியாகத் தெரிகிறது. ஆனால், தபோவனத்தின் கேட்டின் பக்கம் வரும்போது பிரேக் போட்டவுடன்… சரியான நேரத்தில் திருப்பாமல் விட்டதால் கவிழ்ந்து விட்டது. அவர் தப்பி விட்டார். வண்டியில் இருந்தவர் சிக்கிக் கொண்டார்.

இதற்கெல்லாம் காரணம்…
1.நமது உணர்வுகளில் வேகம் எதுவோ அதில் மகிழ்ச்சியைத் தூண்டும்.
2.அதனின் வேகச் செயலாக வேலை செய்யும்
3.ஆனால் இதன் விளைவை நமக்குள் எப்படி ஊட்டும் என்பதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் இதைச் சொல்கிறோம்.

இதே மாதிரிதான் நாம் ஆர்வமாகத் தியானம் செய்து கொண்டிருக்கிறோம். அப்படி ஆர்வமாக இருக்கும்போது முந்தைய நிலைகள் நமக்குள் இயக்கும்போது
1.என்னத்தைத் தியானம் எடுத்தோம்… இப்படி வருகிறதே…!
2.நாம் ஜெயிக்கவில்லை… நம்மால் முடியவில்லை போலும் என்று விரக்தி அடைந்துவிடுவார்கள்.

யாம் நீங்கள் பெறவேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டுகின்றோம். இந்த உணர்வின் தன்மை மனக்கட்டுப்பாடு இல்லாதபடி இயக்கி வருகிறது.

1.ஏற்கனவே பதிவு செய்த உணர்வுகள் குறுக்கே குறுக்கே வருகிறது.
2.நாம் செய்யும் தியானம் சரியாக இல்லையோ என்று எண்ணத் தூண்டும்.

இப்படி முந்தைய நிலைகளில் பதிவு செய்த நிலைகள் நமக்குள் உண்டு. அதை நாம் நிறுத்த வேண்டும். இந்த ஆறாவது அறிவிற்குள் அந்த மெய் ஞானிகளின் உணர்வைக் கவரும் திறமையாக வரவேண்டும். இதைப் படைக்க வேண்டும்.

இது தான் பிரம்மாவைச் சிறைபிடித்தான் முருகன்.

திருக்கடையூர் அமுதகணேஸ்வரரின் தத்துவம் என்ன…?

 

ஒளியைக் கண்டபின் இருள் எப்படி மறைகின்றதோ அதைப் போல் மெய் ஒளியின் தன்மையை அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் எடுக்கப்படும் போது இந்த மனித வாழ்க்கையில் சிந்தனையைக் குறைக்கச் செய்யும் உணர்வின் தன்மையை அது பிளக்கச் செய்துவிடும்.

இந்த உடலில் நாம் இருக்கப்படும் போது ஒவ்வொரு நொடியிலும் அதை எடுத்து வளர்க்கச் செய்து உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றுவது தான் நரசிம்ம அவதாரம்… அடுத்து கல்கி.
1.இந்த உடலை விட்டுச் சென்ற பின்
2.ஒளியின் சரீரமாக என்றும் நிலையான சரீரமாக அது வருகின்றது.

அதற்குத் தான் “மார்க்கண்டேயன்” கதையைக் காட்டினார்கள் ஞானிகள். என்றும் பதினாறு என்ற நிலையில்
1.எமனையே அவன் சிறைப்பிடித்தான்… எமனை வீழ்த்தினான்…! எமனை சம்ஹாரம் செய்தான் என்று
2.திருக்கடையூர் அமுதகணேஸ்வரர்…! ஆலயத்தில் காட்டியுள்ளார்கள்.
அதாவது… இந்த உயிர் பூமிக்குள் வந்த நிலைகளில்
1.சுவைமிக்க அமுதமாகக் கணேஸ்வரனாகத் தனக்குள் சேர்த்து
2.அந்த ஒளியின் சரீரமாக அசுத்தத்தை நீக்கி என்றும் பதினாறாக ஒளியின் தன்மையாக அது சேர்ந்தது.

அங்கே ஸ்தல விருட்சம் எது..?

பிஞ்சிளம் கொடி…! உயிரின் தன்மை கொண்டு அது எப்படி இளமைப் பருவமாக என்றும் பதினாறு என்ற நிலை அடைகின்றதோ அதைக் காட்டுகின்றனர்.

அந்தக் கொடியை எடுத்துக் கொண்டால் எல்லாவற்றிலும் பட்டு… அதை ஒட்டியே தழுவிப் படரும்.

கொடி ஒன்றை ஒன்று படர்ந்து அது எப்படித் தன் சத்தை எடுத்து வளர்கின்றதோ… அது படர்வது போல் நமக்குள் அந்த உணர்வின் சத்தாக…
1.எல்லோரின் உணர்வுகளையும்
2.அருள் ஞான வழியில் வளர்க்க வேண்டும்.
3.அது தான் யாம் (ஞானகுரு) சொல்லும் கூட்டுத் தியானம் என்பது.

நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டும் என்றால்… என்றும் பதினாறு என்ற நிலையை அடைய வேண்டும் என்றால் இந்தத் தியானத்தை எடுக்க வேண்டும்.

அதை விடுத்து விட்டு அந்தச் சாமி செய்யும்… இந்தச் சாமி செய்வார்… யாகம் செய்யும்… மந்திரம் செய்யும்… தந்திரம் செய்யும்… என்றால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

உங்களை நீங்கள் நம்புங்கள்.. உயிரைக் கடவுளாக மதியுங்கள். உடலை ஆலயத்தை மதித்து அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை உடலிலே விளையச் செய்யுங்கள். அதை எல்லோருக்கும் கிடைக்கச் செய்யுங்கள்…!

எண்ணத்தை ஒருநிலைப்படுத்தினால் “நுண்ணிய அலையின் ஈர்ப்ப்பைப் பெறலாம்” – ஈஸ்வரபட்டர் 

 

அமில குணமான பிம்ப சிவனுக்கு… அதன் வளர்ச்சிக்கு… ஜீவ குணமான காந்த ஒளி சக்தி ஈர்ப்பிற்கு வந்த பிறகு தான் அவ்வமில குணத்திற்கே ஜீவனும் அதன் வளர்ச்சி நிலையும் ஏற்படுகின்றது.

அமில பிம்பத் திடப்பொருள் இல்லாவிட்டால் காந்த ஒளி சக்திக்குச் சக்தியில்லை. அச்சக்தி நிலை படர்ந்து பிம்ப அமிலம் ஜீவன் பெறாவிட்டால் இதன் ஜீவ வளர்ச்சியும் இல்லை.

இதன் குண அடிப்படை தான் நாமும்… எல்லாமில் எல்லாமுமே…!

இதன் வழித் தொடர் கொண்டு வளர்ந்து வாழும் நாம்…
1.நமக்கு இந்த மனித உடல் பெறக்கூடிய ஆற்றல் பெற எத்தனை கோடி ஆண்டுகள் ஆகின்றன…? என்ற உண்மையை உணராமலும்
2.உயர்வின் வழிக்குச் செல்லாமலும் நம்மை நாமே அழித்து வாழ்கின்றோம்.

மாங்கனி அதன் முற்றிய நிலை பெற்றவுடன் அதன் வண்ணமும்… வண்ணத்திற்கேற்ப மணமும் உள்ள கனியின் சுவை இனிமை எப்படி உள்ளது..?

குறுகிய கால வளர்ச்சி முற்றலிலே
1.முற்றிய நன்கு பழுத்த மாங்கனியின் வண்ணத்தையும் மணத்தையும் கண்டவுடன்
2.”சுவை நிறைந்த கனி…!” என்று எண்ணி உண்ணத் துடிக்கின்றோம்.

இதன் நிலை போல் மனிதனின் வளர்ச்சி நிலை இருந்து விட்டால் மனிதனின் உடல் பிம்ப அழகும்.. எண்ண மணமும்… இனிமையும் குண தேவனின் சக்தியாக சுடர்விடுமப்பா…!

பிஞ்சில் மாங்கனி துவர்ப்பாகவும் புளிப்பாகவும் தான் உள்ளது. அதைப் போன்று ஆரம்ப வளர்ச்சியில் அறியா மனிதனாக இருந்தாலும் தன் அறிவாற்றலை ஞானத்தின் மேம்பாட்டில் முற்றிப் பழுத்து இனிமை கொள்ள வேண்டும்.

அமில ஈர்ப்பின் வழித் தொடரினால் நம் பூமியின் எண்ணற்ற சக்திகள் நிறைந்துள்ளன. பல வண்ணங்களையும் மணங்களையும் சுவைகளையும் ஆரம்ப காலத்திலேயே பூமி வளர்ச்சி கொண்டு வழி வரவில்லை.

ஒவ்வொன்றின் வழித் தொடர் அமில குணத்தின் ஈர்ப்பு சக்தியின் “சிவ சக்தி என்ற சிங்காரக் கலவை ஈர்ப்பில் தான்..” இன்று பூமியில் நிறைந்துள்ள இயற்கை வண்ணமும் சுவையும் மணமும் உள்ளன.

பல வண்ணங்கள் புஷ்பங்களுக்கு எப்படி வந்தது..? கனிகளுக்கு சுவை எப்படி வந்தது…?

படர்ந்த அமில பிம்பம் அதன் ஈர்ப்பில் காந்த ஒளி சக்தி பெற்றவுடன் “வண்ணத்துப் பூச்சி” என்ற பல வண்ணங்கள் நிறைந்த அப்பூச்சி ஜீவன் பெறுகிறது.

இப்பொழுது உணர்த்துவது பூமி தாவர வளர்ச்சி ஏற்பட்ட நாட்களில் ஆரம்பத்தில் வந்ததன் நிலை.

இந்த வண்ணத்துப் பூச்சி சில தாவரங்களின் மேல் தன் அமிலத்தை… அமிலம் என்பது தன் கழிவின் முட்டையை இட்டதினால்.. அதிலிருந்து அதன் அமில சுவாசம் படர்ந்த பிறகு வண்ணப் புஷ்பங்கள் கிடைத்தன.

1.அந்த வண்ணத்தின் பூவிலிருந்துதான் தேனீக்கள் ஜீவன் கொண்டன.
2.தன் ஜீவனுக்குகந்த ஆகாரமாக அந்தப் பூவிலிருந்தே தன் ஆகாரத்தை உறிஞ்சி எடுத்துத் தேனீக்கள் வளர்ந்தன.

தேனீக்கள் இல்லாவிட்டால் “சுவை நிறைந்த கனி…” எதுவுமே இல்லை…!

இப்படி உலக இயற்கையே ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டு… ஒன்றெடுத்த அமிலம் ஜீவன் கொண்டு… அதன் ஜீவன் மாற்றம் கொண்டு பிறிதொரு ஜீவனும் வளர்ந்து நம் பூமி ஓடிக் கொண்டுள்ளது. இந்த அமிலத்தின் நிலையிலிருந்து தான் எல்லா சக்திகளும் ஜீவன் பெறுகின்றன.

ஆயிரம் காலங்கள் ஒரு நிலை கொண்ட நுண்ணிய ஈர்ப்பு அலையின் சக்தியினால் நாகம் மாணிக்கக்கல்லைத் தன்னுள் வளர்த்துக் கொள்கின்றது.

மாணிக்கக் கல்லை வளர்த்துக் கொள்ள நாகம் எப்படி வழிப் பெற்றது…? மற்ற ஜீவன்களைக் காட்டிலும்
1.நாகத்தின் கண் ஒளி ஈர்ப்பு
2.நுண்ணிய மின் அலையை ஈர்க்கவல்ல செயல் கொண்டது.
3.நாகம் ஒரு பொருளைப் பார்த்தால் அப்பொருளின் பிம்பம் அதன் கண்ணிலே
4.பல மணி நேரத்திற்குப் புகைப்படத்தில் பதிந்துள்ளதைப் போல் பதிந்திருக்கும்.

சிங்கத்தின் நிலையும் ஏறக்குறைய நாகத்தின் ஈர்ப்பலைக்கு ஒத்தது தான். ஆனாலும் அதன் வளர்ச்சி நிலையில் நாகத்தைப் போன்று நுண்ணிய ஈர்ப்பின் பதிப்பு இல்லாமல் சிங்கத்தின் துடிப்பு ஆக்ரோஷத்தின் நிலையால் வளர்ச்சி பெறவில்லை. காந்த ஈர்ப்பின் ரசமணியின் அபரிதமான ஒளி ஈர்க்கும் கண்கள் சிங்கத்தின் கண்கள்.

இதனை எல்லாம் உணர்த்தும் முறை எதற்கு..?

நுண்ணிய ஈர்ப்பலையின் சக்தி அமிலங்கள் நிறைந்துள்ள பல பிராணிகள் மிருகங்கள் இருந்தாலும்… மனிதனை ஒத்த அறிவாற்றலும் அங்க அவயங்களும் பெறாததினால் அவற்றின் நிலை புரியாமல் சென்று விட்டது.

மனிதனுக்குச் செயலாற்றும் திறமை கொண்ட அங்க அவயங்களும் அறிவின் வளர்ச்சியும் உள்ள பொழுது இந்நுண்ணிய ஈர்ப்பலையை
1.சூரியனின் ஒளி அலையிலிருந்து – பலவாக நிறைந்துள்ள இந்தப் பூமியின் அமில குணத்தின் உதவியினால்
2.மனிதன் பல எண்ணத்தில் தன் ஜெபத்தைச் சிதறவிடாமல்
3.நுண்ணிய ஈர்ப்பலையை தன் எண்ண ஈர்ப்பில் செலுத்தும் பொழுது அவ்வெண்ண ஈர்ப்பே சுவாசமாக
4.காற்றில் உள்ள தன் எண்ணத்திற்குகந்த ஈர்ப்பு குண நுண்ணிய அமில சக்தியைத் தன் உடல் முழுமைக்கும் பரப்பச் செய்கின்றது.

இவ்வெண்ணத்தை “ஒரு நிலைப்படுத்துங்கள்…!” என்பதன் பொருள் இது தான்.

“ஒரு நிலை…” என்பது ஒன்றின் பால் உயர் ஞான எண்ணத்தைச் செலுத்தி
1.அந்த ஒளி அமில குணத்தை நுண்ணிய ஈர்ப்பாக
2.நம் சுவாசம் எடுக்கும் வழி நிலை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நமது வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலேயே… பிறருடைய தீமைகளை நாம் கண்டுணரும்போது
1.உணரத்தான் அதைப் பயன்படுத்த வேண்டும்.
2.உணர்ந்தபின் அதை நீக்கிவிடுதல் வேண்டும்.

அதாவது தெரிந்து கொள்ளப் பயன்படுத்த வேண்டும். ஆனால் தெரிந்த உணர்வுகளை உடலிலே இணைத்திடக் கூடாது. அதை நீக்கிடல் வேண்டும்.

தீமைகள் எதுவோ அவைகளை நீக்கி… நன்மையின் பயன் எதுவோ அதை ஆக்கப்பூர்வமான நிலைக்கு நாம் மாற்றிடல் வேண்டும்.

இன்று நாம் மனிதனாக இருக்கின்றோம். நாம் காரத்தைத் தனித்து உணவாக உட்கொண்டால், காரத்தின் உணர்வுகள் நமக்குள் சுவையற்றதாக மாற்றுகின்றது.

ஆனால் அதே சமயம் அந்தக் காரத்தை மற்றவைகளுடன் இணைக்கப்படும்போது சுவை மிக்கதாக மாற்றுகின்றது.

இதே போன்றுதான்
1.மனிதனின் வாழ்க்கையில் பிறரின் கசப்பான உணர்வுகள் வெளிப்படுவதைக் கேட்டுணர்ந்தாலும்
2.பிறரின் வாழ்க்கையில் கடும் நோயுற்று அவர்கள் படும் வேதனையைப் பார்த்து சொல்லால் கேட்டுணர்ந்தாலும்
3.உணர்ந்த அச்சக்தியை நம்மில் அது இயங்காது தடைப்படுத்த வேண்டும்.

உணரப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அடுத்த கணம் அதனுடைய தீயவினையாகச் செயல்படும் நிலையை மாற்றிடல் வேண்டும்.

கடவுளின் அவதாரத்தில் ஆமையை ஏன் போட்டார்கள்…? – கூர்மை அவதாரம்

 

கண் தெரிந்த பிற்பாடு ஒரு புழு என்ன செய்கின்றது…?

புழு பாறையின் மீது நகர்ந்து செல்கிறது. அந்தப் பாறையிலே வெயில் படுகின்றது. ஆனால் அதிலே முதலில் வெயில் இல்லை.

புழு அதன் மீது நகர்ந்து செல்லப்படும் போது கொஞ்சம் நேரமாகின்றது. ஆனால் அதற்குள் வெயிலின் கடுமையாகிப் பாறை சூடாகின்றது.

சூடாகும் போது தாங்க முடியாத நிலைகள் ஏற்படுகின்றது.

1.அந்த நேரத்தில் தன் கண் கொண்டு தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வு கொண்டு நாலாபுறமும் பார்க்கின்றது.
2.அப்போது அங்கே சுற்றி இருக்கும் செடிகளும் அதனின் நிழலும் புழுவிற்குத் தெரிகின்றது.

அதே சமயத்தில் அந்த வெயில் செடியிலே பட்டு அந்த மணம் வெளி வருகிறது. அதை இந்தப் புழு கண் கொண்டு கூர்மையாகப் பார்க்கின்றது.

அதிலிருந்து வரக்கூடிய அந்த மணத்தைக் புழுவின் கண்ணில் உள்ள காந்தப் புலனறிவு… சத்தியபாமா கவர்கின்றது.
1.அந்தச் செடியின் நிழலையும் மணத்தையும் சுவாசித்த பின் சத்தியபாமா உணர்த்துகின்றது.
2.அதாவது அங்கே நிழல் இருக்கின்றது என்ற நினைவை ஊட்டுகின்றது.

அந்த மணத்தின் தன்மை கொண்டு நிழல் இருக்கிறது என்று காட்டப்படும் போது மூஷிகவாகனா கூர்மையாகக் கவனித்து அதைச் சுவாசித்து அந்த உணர்வின் தன்மை எண்ணம் கொண்டு அந்த நிழலுக்கு இந்த உடலை அழைத்துச் செல்கிறது.

அப்படி அழைத்துச் சென்றாலும்
1.இங்கே அடித்த வெப்பமும்
2.இது ஏற்கனவே உணவாக உட்கொண்ட நிலையும்
3.அங்கே செடியின் நிழல் வேறு.

இருந்தாலும் அந்த நிழலுக்காக வேண்டி அதை எண்ணுகிறது தன்னைக் காக்க…!

ஆனால் அந்தச் செடியிலிருந்து வரக்கூடிய மணத்தை நுகர்ந்தது. இந்த உணர்வின் தன்மை அதற்குள் வினையாகச் சேர்கின்றது. மூஷிகவாகனா. ஆனால் தப்பித்து விட்டது.

செடியைக் கண் கொண்டு படம் எடுத்தது. அந்தச் செடியிலிருந்து உணர்வின் தன்மையைச் சத்தியபாமா உணர்த்துகின்றது. உள்ளுக்குள் போனவுடனே இந்த உடலுக்குள் உணர்வுகள் எதிர் நிலை ஆகிறது.

ஆனால் இந்த உடலைக் காத்துக் கொள்ளச் சென்றது. அதை நுகர்ந்து பார்த்த உணர்வின் சத்து உள்ளே சேர்ந்து விடுகிறது.

நாம் நல்லவராக இருக்கின்றோம். ஒருவர் கஷ்டப்பட்டால் என்ன செய்கிறோம்…? ஐயோ… பாவமே…! என்று அவர்கள் சொன்னதை எல்லாம் கேட்டு வைத்துக் கொள்கிறோம்.

அந்த வினை எல்லாம் இங்கே சேர்த்த பிற்பாடு மாரி…! மாரியம்மனை ஏன் வைத்திருக்கின்றார்கள்…? அந்தச் சக்தி என்ன செய்கிறது..?

கஷ்டப்படுவதைப் பார்த்து நாமும் அங்கே வேதனைப்பட்டோம் இங்கே நமக்குள்ளும் அதே வேதனையாக வந்துவிடுகிறது. அது தான் மாரி. (அங்கிருப்பது நமக்குள்ளும் மாறி வருகிறது)

அதே போல் தான் இந்தப் புழு அங்கே வேதனைப்பட்டது.
1.அதிலிருந்து தப்பித்துக் கொள்ளக் கூர்மையாக எண்ணியது.
2.அந்த உணர்வின் தன்மை அந்தச் சத்தைத் தனக்குள் எடுத்து மாரி…
3.இதற்குள் வந்து அது வினையாகச் சேர்கிறது.

முதலிலே தன் உணர்வுக்குள் வேதனையாகச் சேர்ந்தது. காரணம் அதனின் சத்து வெப்பம்… சூடு அதிகம். ஆனால் செடியின் மணத்தின் சத்தை “அந்த நிழலைப் படம் எடுத்தது…” இந்த உணர்வின் சத்து உடலில் விளைகின்றது. இதற்குள் எதிர்நிலையாகிறது.

ஒரு எலி வீட்டிற்குள் வங்கு போட்ட மாதிரி புழுவின் உடலில் அது வங்கு போடுகிறது. வங்கு போட்டு அந்த வினையின் சத்தாகச் சேர்த்து வினைக்கு நாயகனாக அடுத்த சரீரம் ஆமையாகப் பிறக்கிறது.

ஆமையை நெருப்பில் தூக்கிப் போட்டால் ஒன்றும் ஆகாது. அது சூட்டைத் தாங்கும் சக்தி கொண்டது. காரணம்
1.அந்த வெயிலின் கொடுமையான சக்தியை இதற்குள் தாங்கி
2.அதனின்று காத்துக் கொள்ள வேண்டும் என்று படமெடுத்து
3.அந்தத் தாவர இனச் சத்தை நுகர்ந்து இதனுடன் இணைத்து
4.அந்த உணர்வின் தன்மை கனத்த ஓடு கொண்ட ஆமையாகிறது.. அந்த ஓட்டிலே பார்த்தால் “வரி வரியாக” இருக்கும்.

பரிணாம வளர்ச்சியில் நாம் எப்படி வளர்ந்து வந்தோம் என்பதைக் காட்டுவதற்குத் தான் ஆமையைப் போட்டு ஞானிகள் காட்டியுள்ளார்கள். எதைக் கூர்மையாக உற்று நோக்கிப் பதிவாக்குகின்றோமோ அதற்குத் தக்க அடுத்த உடல் என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

ஆனால் கடவுளின் அவதாரத்தில் ஆமையை ஏன் போட்டார்கள்…? என்று கேட்டால் பதில் சொல்லத் தெரியாத நிலையில் தான் நாம் இருக்கின்றோம்.

“சிவசக்தி” ரூபத்தின் இரகசியம் – ஈஸ்வரபட்டர்

 

இன்னும் மனிதன்…
1.விதை முதலா…? செடி முதலா…?
2.கோழியிலிருந்து முட்டை வந்ததா…? முட்டையிலிருந்து கோழி வந்ததா…? என்ற தர்க்க வாதத்திலும்
3.புராணங்களில் படைத்த காவியங்களை அதன் மையக் கருவைப் பிரித்து உணரும் ஆற்றல் இல்லாதும் வாழ்கின்றனர்.

அறிவாற்றலும் செயல் அவயங்களும் வளர்த்துக் கொண்ட மனிதன் தன் வளர்ச்சியை உணராமலும்… வளர வேண்டும் என்ற நிலையற்றும்… இயற்கையின் உண்மை வளரும் வளர்ச்சியை அறியாமலும்… வாழ்கின்றான்.

குணத்திலும் பல நிலைகள் உண்டு. மனத்திலும் பல நிலைகள் உண்டு. ஒலியிலும் பல உண்டு. இதன் அடிப்படை வளர்ச்சி பல கோடிக் கோடி உண்டு.

நம் பூமியின் ஜீவ சக்தியே காற்றும்.. ஒலியும்… நீரும்… தான். இஜ்ஜீவ சக்தி இப்பூமியைச் சுற்றி இருக்கும் காற்று மண்டலத்திற்கு அப்பால் இல்லை.

இந்தப் பூமிக்கு ஜீவன் பூமியேதான் எடுத்துக் கொள்கின்றது. பால்வெளி மண்டலத்தில் அந்தந்த இடங்களில் உள்ள அமில குணங்களின் சுழற்சி கொண்ட சீதோஷ்ண நிலை படர்ந்துள்ளது.

நம் பூமியின் காற்று மண்டலத்திற்கப்பால் உள்ள பால்வெளி மண்டலத்திற்குச் சென்று விட்டால் நம் பூமியில் உள்ளதைப் போன்ற ஜீவ சக்தி மாறு கொள்கின்றது.

“ஜீவ சக்தி…” என்பது பூமியின் சுழற்சியில் பூமி ஈர்த்து வெளிக் கக்கும் ஆவியினால் – அந்தக் காற்று மண்டலத்தின் சுழற்சியில் பூமியின் சுழன்று ஓடும் ஓட்டத்தினால் இந்த ஜீவ சக்தி அமில குணம் கொண்டு ஓடுகின்றது.

பூமிக்குச் சொந்தமானது தான் பூமியைச் சுற்றிக் கொண்டுள்ள இந்தப் பத்துப் பதினைந்து மைல் நிலையில் உள்ள காற்று மண்டலம்.

முந்தைய வினா போன்று சக்தி பெரிதா… சிவன் பெரிதா…? என்ற வினாவும் மனிதரிடன் உண்டு. மனித ஆத்மாக்கள் உணராத முறையில்…
1.சில சித்தர்கள் தான் அறிந்ததை… உணர்ந்ததை… மறைமுகமாக்கி
2.சரி பாதி சிவனும்… சரி பாதி சக்தியுமாக…!
3.ஆண்டவனின் ரூபத்திற்கு மனித பிம்ப உருவைக் கல்லில் வடித்துக் காட்டினார்கள்.

எந்த ஒரு அமில பிம்பமும்… அமிலம் திடமாகி அந்தத் திடத்தில் எடுக்கும் ஒளி என்ற சக்தியினால் ஜீவன் கொண்டு…
1.அதன் சுழற்சியில் அமிலமும் கூடுகின்றது.
2.அமிலத்தின் வளர்ச்சியைக் கூட்டினால் அதன் ஈர்க்கும் சக்தி ஒளி அதிகப்படியாக வளர்ச்சிக்கு வருகின்றது.

நம் பூமியும் மற்ற எல்லா மண்டலங்களின் ஆரம்ப ஜீவன்… “சிவ சக்தி…” என் பிம்ப வளர்ச்சி கொண்டது தான்.
1.அமிலமான திடப் பொருள் தான் சிவனாகவும்
2.அமிலமுடன் ஈர்க்கப்பட்ட காந்த ஒளி நிலை தான் சக்தியாகவும் ஆனதப்பா…!

அமில பிம்ப சிவன் ஈர்க்கா விட்டால் சக்தியின் காந்த அலை பாய்ந்து அக்காந்த அலைக்கும் சக்தி இருக்காது. அதே போன்று அமில குண திட பிம்ப சிவத்தில் அச்சக்தி ஒளி பாயாவிட்டால் ஜீவன் பெற முடியாது.

இதன் வளர்ச்சி நிலை தான் எல்லாமில் எல்லாமாக வளர்ந்து… “வளர்ச்சி கொண்ட அண்ட சராசரங்களும் அனைத்து ஜீவ சக்திகளும்…” உருவாகி இயங்கிக் கொண்டுள்ளதப்பா…! இதில் சக்தி பெரிதா…! சிவன் பெரிதா…? என்ற கேள்விக்கு இடமில்லையப்பா…!

1.சக்தி இல்லாவிட்டால் சிவன் இல்லை.. சிவன் இல்லாவிட்டால் சக்தியும் இல்லை.
2.பிம்பம் தான் “சிவம்..” பிம்பத்தின் ஜீவன் தான் “சக்தி…”
3.சக்திக்கும் ஜீவனுக்கும் அப்பாற்பட்ட ஆதி சக்தியின் நிலையை உணர்ந்து வளர வேண்டுமப்பா..! (அனைத்திலுமே)

சிவன் ஆணுமல்ல… சக்தி பெண்ணுமல்ல…! ஒவ்வொரு ஜீவனிலும் சக்தியும் சிவனும் இருந்தால் தான் அஜ்ஜீவன் வாழ முடியும். சித்தர்களினால் மறைமுகமாக மறைத்து வெளிப்படுத்திய நிலை தான் இந்த ஜீவ சக்தி உருவ நிலை…!

விதை முதலில் வந்ததா..? செடி முதலில் வந்ததா…? என்ற வினாவிற்கு அறிவாற்றலின் மனிதன் தன் எண்ணத்தைச் செயல்படுத்தினால் ஆரம்ப வளர்ச்சியான செடியிலிருந்து விதை…! என்ற உண்மையை உணரலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

காலையிலிருந்து இரவு வரை நாம் பார்த்தது கேட்டது நுகர்ந்தது அனைத்தும் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று நம் உடலுக்குள் எத்தனையோ உணர்வுகளாக உருவாகிக் கொண்டே இருக்கின்றது. சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்ததில் தீமை செய்யும் உணர்வுகளும் உண்டு.

அப்படி உருவான அணுக்களுக்கு உணவு தேவை. நாம் நுகரப்படும் பொழுது அந்தந்த எண்ணத்தின் நினைவே வருகின்றது.

இதிலிருந்து நாம் எவ்வாறு மீள வேண்டும்…? என்பதற்காகத்தான் அதிகாலையில் துருவ தியானத்தின் மூலம் விண்ணிலிருந்து வரும் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று சொல்கிறோம்.

ஈஸ்வரா… என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி… அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும்… எங்கள் இரத்தநாளங்களில் அது கலக்க வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வை உடலுக்குள் செலுத்த வேண்டும்.

1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவர கண்ணின் நினைவு கொண்டு அங்கே செலுத்தும் பொழுது
2.நம் கண் ஈர்ப்பின் தன்மை இங்கே வருவதை (தீமை செய்யும் உணர்வுகளை) ஈர்ப்பதில்லை.
3.நினைவின் தன்மை விண்ணிலே செல்லும் பொழுது மேல் நோக்கிய சுவாசம் இங்கே உருவாகின்றது.

அதே சமயத்தில் அந்த அருள் சக்திகளை நம் உடலுக்குள் செலுத்தி அது வலு பெறும் பொழுது நமக்குள் இருக்கும் எத்தனையோ கொடிய உணர்வுகளை அது வலு இழக்கச் செய்கிறது.

கொடிய உணர்வுகள் என்றால்… பத்திரிக்கை வாயிலாகவோ டி.வி மூலமாகவோ பிறர் செய்த கொடிய செயல்களைப் பார்த்துப் படித்திருந்தாலும்.. வேடிக்கையாக அல்லது பொழுது போக்காக என்று எண்ணினாலும்… அது எல்லாம் நமக்குள் பதிவாகி விடும்.

அப்படிப் பதிவான உணர்வுகள் விளைந்த பின் நம் உடலில் உள்ள நல்ல அணுக்களைக் கொன்று புசித்திடும் நிலையாக வளர்ந்து விடும்.

1.அதை எல்லாம் மாற்றிடும் சக்தி நாம் பெற வேண்டும்
2.அந்தத் தீமைகள் நமக்குள் விளையாது தடுத்துப் பழக வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் பெற்றுப் பேரொளியாக மாறும் திறன் நாம் பெறவேண்டும்.

அந்த அருள் உணர்வின் தன்மையை நுகர்ந்து நமக்குள் அறியாது வந்து சேரும் தீய வினைகளையும் பகைமைகளையும் அகற்றிட வேண்டும்.

அதை அகற்றிடும் மார்க்கத்தைத்தான்… உடல் அழுக்கைப் போக்குவது போல்
1.தன் வாழ்க்கையில் கவர்ந்து வந்த தன் ஆன்மாவில் பட்ட அழுக்கைப் போக்க
2.அதிகாலை துருவ தியான நேரத்தில் அந்த அருள் ஒளியைப் பெருக்க
3.அந்த அழுக்கினை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து மேலே சென்று விடுகிறது.

நமக்குள் தெளிந்த மனம் வருகிறது. இதை மீண்டும் மீண்டும் நாம் நினைவில் கொண்டால் அந்த ஒளியான அணுக்கள் நமக்குள் பெருகுகின்றது.

எந்தச் சந்தர்ப்பத்திலும் தீமை என்று நுகர்ந்தாலே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலிலே வலுவாக்கிக் கொண்டு நமக்குள் அருள் ஞானத்தை வளர்க்கும் பேரருளைப் பெருக்கும் உணர்வுகளைப் பெறவேண்டும்.

அப்பொழுது தான் அந்தத் தீய உணர்வின் வித்து வளராது. அதற்குண்டான சத்து இல்லை என்பதால்…!

உதாரணமாக விவசாயத்தில் பயிர்களை வளர்க்கப்படும் பொழுது
1.அந்த இன வித்துக்களை மீண்டும் மீண்டும் ஊன்றவில்லை (மகசூல்) என்றால்
2.ஈர்க்கும் சக்தி இழந்தால் அந்தச் செடியின் சத்துகளே மறைந்துவிடும்
3.ஏனென்றால் சூரியன் அழைத்துச் சென்றுவிடும்.
4.பூமியிலே ஈர்க்கும் வன்மை இல்லை என்றால் அது கரைந்துவிடும்.
5.பின் அந்த இனத்தை உருவாக்கும் அந்த உணர்வின் தன்மையை இழந்துவிடும்.

முந்தைய காலங்களில் நெல் வகைகளில் “தலைவிரித்தான்” என்று ஒரு வகை உண்டு. அதற்குப் பெயர் தொப்பி என்றும் வைப்பார்கள். அந்த ரக அரிசியே காலத்தால் மறைந்தது. இணை சேர்த்து அது மாறியது.

அந்த வித்தே இன்று இல்லை… அதை வளர்த்த உணர்வின் சத்துகளை சூரியன் கவர்ந்து சென்று விட்டது. இப்பொழுது அத்தகைய நெல்லும் இல்லை.

இருந்தாலும் அத்தகைய வித்து ஒன்றை ஊன்றினாலும் அது இழுத்துக் கொண்டு போகிறது. விளையாது… மண்ணுடன் மடிந்தே விடும்.
1.இத்தகைய உணர்வின் சத்து தாவர இனங்களுக்கும் அதுவே
2.நம் உடலில் உள்ள உணர்வுகளுக்கும் அதுவே.

இது போன்று இந்த இயற்கையின் நிலைகளை நாம் உணர்ந்தறிந்து இந்த வாழ்க்கையில் நாம் எவ்வாறு வாழ வேண்டும்…? என்று உண்மையை உணர்த்துவது தான் விநாயகர் தத்துவம்.

வானிலே ஒளி நட்சத்திரமாக நாம் மாற வேண்டும் – ஈஸ்வரபட்டர் 

நம் பூமியின் ஈர்ப்பிற்கு சக்தி தரும் காந்த மின் அலையின் வளர்ச்சிக்கு ஊற்றாக அமையப் பெற்றது தான்
1.உலகின் மூன்று இடங்களில் உள்ள “காந்த மின் கிணறுகள்…!”
2.கடலுக்கடியில் ஒன்று.. பாலைவனத்தில் ஒன்று… மலைப் பகுதியில் ஒன்று…! என்று ஏற்கனவே சொல்லியுள்ளேன்
3.இக்காந்த மின் கிணறுகளின் ஈர்ப்பு அதிகப்பட்டுப் பட்டு வளர்ச்சிப்படுமேயானால்
4.நம் பூமிக்கு… பூமியின் ஈர்ப்பு சக்தி அதிகப்படும்.
5.அதனால் அதிகப்படியான ஜீவ இன வளர்ச்சிக்குகந்த சத்து அமில நிலையைத் தர வல்ல தாவரங்களின் இயற்கை வளம் பெருகியிருக்கும்.

நம் பூமியைக் காட்டிலும் வியாழனும் சூரியனும் வளர்ந்துள்ளது. அவைகள் நம் பூமியை விட அதிக ஈர்ப்புக் குணமுடையதாக வளர்ந்து மற்ற எல்லா மண்டலங்களுக்கும் அதன் சக்திக் குணத்தைத் தருகின்றது.

1.அந்த வியாழனைப் போன்று வளர்ந்து பெருக்கும் நிலை நம் பூமிக்கு இப்பொழுது குறைவுபட்டுள்ளது.
2.நம் பூமியும் கன விகிதத்தில் வளர்ந்து தான் வருகிறதேயன்றி
3.தன் ஈர்ப்பின் சக்தியை வளர்க்க முடியாத நிலை ஆகிவிட்டது.

காரணம் இன்றைய கலி மனிதன் தன் விஞ்ஞான செயற்கை மின் அலையைக் காண சூரியனின் சக்தி அலையை
1.நம் பூமி ஈர்க்கும்… பூமியின் இயற்கை வளர்ச்சியைத் தடைப்படுத்தி
2.அதைச் செயற்கை மின்சாரமாகக் கண்டு எடுத்து விட்டான்,

பூமியின் ஈர்ப்புக் காந்த சக்திக்குக் கிடைக்க வேண்டிய ஆகார நிலையை… அது எடுத்து… உண்டு… வளர்ந்து… பலன் காணும் முன்… இன்றைய கலி அறிவு மனிதனால் துரித நிலையில் மின்சாரம் கண்டு பூமியின் வளர்ச்சிக்கும் வருங்கால உயிரினங்களின் வளர்ச்சி நிலைக்கு மாற்றம் தரவல்லவனாகி விட்டான் “இன்றையக் கலி மனிதன் தான்…!”

இக்கலி மனிதனால்… “அவன் அறிவாற்றல்” என்ற மேம்பாட்டில் கண்ட “செயற்கையினால்…!” பல கோடி உயிரணுக்களின் சக்திக் கலவையாகக் கலந்து வாழ்ந்து… தான் வாழ்வதோடு மட்டுமல்லாமல்
1.வளர்ந்து கொண்டே சுழன்றோடும் இந்தப் பூமியின் நிலையைத் தன் செயலுக்காக
2.மின் அலையைப் பாழ்படுத்தியதனால் பூமியின் இயற்கையையே பாழ்படுத்திவிட்டான்.

இதனின் நிலையை மாற்றி நம் பூமி வளரத்தான்… இக்கலி மாறி கல்கியாக வருவதற்குத்தான் பல கோடிச் சித்தர்களும் சப்தரிஷிகளும் செயல் கொள்கின்றனர்.

இக்கலி மாறும் தருணத்திற்குள் இந்தப் பூமியின் அமிலக் குணத்துடன் ஒன்றி வாழ்ந்த மனித இனக் குண சக்தி இருந்தால் தான் மீண்டும் மீண்டும் மண்டல சக்திகளும்… எந்த ஒரு புதிய படைப்பு நிலையும் வளர்க்க முடியும்.

எண்ண சக்தியின் வளர்ச்சி நிலை கொண்ட அமில… குண ஜீவன்.. மனிதனிலிருந்து தான் இந்நிலை வளர முடியும் என்ற உண்மையில் தான் சப்தரிஷிகளும் அவர்களின் ஆசி பெற்ற சித்தர்களும் செயல்படுகின்றனரப்பா…!

கூரை அமைக்கத் தூணோ சுவரோ தேவை, அது போல் இம்மனித ஆத்மாக்களின் எண்ண வளர்ச்சியின் மேம்பாட்டில் தான் மண்டல வளர்ச்சி உண்டு… மற்றெல்லா வளர்ச்சியும் உண்டு.

இதன் நிலையை உணர்ந்து ஒவ்வொரு மனித ஆத்மாவும் இஜ்ஜீவ உடல் பிம்ப நிலையிலிருந்து தன் உயிரணுவான காந்த உயிர் சக்தியை நல்ல நிலையில் எடுக்கும் எண்ணம் கொண்டு இந்த உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களையும் வீரிய சக்தி பெறும் வழித் தொடர்படுத்திடல் வேண்டும்.

தான் எடுக்கும் ஜெப நிலையால் தன் உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களும் ஒளி பெற்று தானாக ஓர் உயிரணு ஆத்மாவுடன் பல கோடி அணுக்களும் ஒன்றுபட்டுச் செயல்படுமானால்
1.அதன் சக்தி ஜெபத்தினால் எடுக்கும் நுண் அலையின் தொடர்பைக் கொண்டு
2.பலவாகப் படர்ந்துள்ள சப்தரிஷிகளின் ஒளி அலையைப் பெற்று
3.அவர்களின் தொடர்பின் மூலம் பல செயல்களை இந்த உயிராத்மாவினால் வளர்க்க முடியும்.

ஏனென்றால் வாழ்க்கையின் பொருள் என்பது வாழும் காலங்களில் பிறர் போற்றித் துதித்து… “மடிந்த பிறகு…. புகழாஞ்சலி பெறுவதல்ல…!”

இம்மனிதப் பிம்ப வாழ்க்கையில் எடுக்கும் ஒளி அலையின் நிலையின் வளர்ச்சி தான் எல்லாவித இயற்கைக் குண வளர்ச்சி மண்டலங்களின் சக்தியும் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

இப்பொழுது வாழும் குறுகிய கால வாழ்க்கையில்
1.இந்தச் சந்தர்ப்பத்தைக் குறுகிய நிலைப் புகழுடன் மங்க விடாமல்
2.பேரண்டப் பெரு நிலை என்ற உயர்ந்த அண்டமாகும் சக்தி நிலையைப் பெறும் தகுதிக்குத் தான்
3.யாம் இங்கே தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும் பாட நிலையின் உண்மை நிலை.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் நாம் நல்லதைச் செய்தாலும் பிறருடைய கஷ்டங்களைக் கேட்டறிந்து தான் அவர்களுக்கு நாம் உதவிகளைச் (தர்மத்தை) செய்கின்றோம்.
ஆனால் அவர்கள் கஷ்டப்பட்ட உணர்வுகளோ வலிமை கொண்டது… நாம் நுகரும்போது அது வாலி (எதிர்நிலை) ஆகிவிடுகின்றது. நாம் நல்லதுதான் செய்கின்றோம். இருந்தாலும்…
1.மற்றவர்கள் துன்பப்பட்ட உணர்வுகள் நமக்குள் வந்த பின்
2.இரக்கம் ஈகை என்று நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை மடியச் செய்து விடுகின்றது.

பாவம்… அவர்களின் தரித்திரம் இப்படி இருக்கின்றது…! என்று ஏங்கி நாம் சுவாசித்ததை நம் உயிர் அந்த உணர்வால் உணரச் செய்கிறது. அந்த உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறுகின்றது.

அவர்கள் பட்ட வேதனையும் சோர்வான உணர்வுகளும் நமக்குள் உமிழ் நீராக மாறி… நாம் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்து விடுகின்றது.

சிறுகுடல் பெருங்குடல் உருவாக்கிய அணுக்களில் இந்த விஷத்தின் தன்மை பட்ட பின் அது ஜீரணிக்கும் சக்தியை இழந்து விடுகின்றது. சிறு குடல் பெருகுடலை உருவாக்கிய அணுக்கள் அந்த விஷத்தால் மயக்கம் அடைகின்றது.

உதாரணமாக ஒரு விஷத்தினை உட்கொண்டால் உடல் முழுவதும் படர்ந்து நம்மை எப்படி அது மயக்கம் அடையச் செய்கின்றதோ அதே போல்
1.நாம் சுவாசித்த மற்றவரின் வேதனையான உணர்வுகள் உமிழ் நீராக மாறி
2.சிறு குடலுக்குச் சென்ற பின் சாப்பிட்ட ஆகாரத்தை ஜீரணிக்கும் சக்தியை இழக்கச் செய்து விடுகின்றது.
3.மற்றவர்கள் பட்ட வேதனை எதுவோ அதன் உணர்வு நம்மை அன்றைய தினம் இந்த உபாதை (அஜீரணம்) அடையச் செய்கின்றது.

செல்வம் இருந்தது என்ற நிலையில் நல்ல சத்துள்ள ஆகாரத்தைத் தான் சாப்பிட்டோம். பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணினோம்… உதவியும் செய்து விட்டோம்.

ஆனால் உதவி செய்யும் போது நாம் கேட்டுணர்ந்த வேதனையான உணர்வுகளைச் சுவாசிக்கும்போது நமக்கு இந்த நிலை (உடலில் உபாதை) ஆகின்றது.

ஆனால் அவர்கள் பட்ட வேதனை நமக்குள் எப்படி வருகிறது…?

அவர்கள் உடலில் விளைந்த வேதனைப்படும் உணர்வுகள் வெளிப்படும் போது சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம் கவர்ந்து கொள்கிறது. அந்த வேதனையை இயக்கச் செய்யும் அணுவாக மாறுகின்றது.

நாம் அவர்களை உற்றுப் பார்க்கும் போது அந்த உணர்வு தான் நம்மை இயக்குகின்றது. இயக்கிய உணர்வுகளை நாம் நுகர்ந்தால் அது உமிழ் நீராக மாறி உடலில் கலக்கப்படுகின்றது.

1.வேதனை என்றாலே விஷம்.
2.ஆக விஷமான உமிழ் நீராக அது மாறி ஆகாரத்துடன் கலந்து அமிலமாகி இரத்தமாகின்றது.
3.அந்த வேதனையான உணர்வுகள் இரத்தத்தில் குடிகொண்டு
4.விஷத்தின் தன்மையை இயக்கும் ஒரு கருத்தன்மை அடைகின்றது.

இப்படி… மற்றவர்கள் உடலில் விளைந்த வேதனையின் உணர்வுகள் அணுக்களாக விளைந்து நம் உடலில் உள்ள நல்ல குணங்களைக் கொல்ல ஆரம்பித்து விடுகின்றது.

ஆனால் நாம் யாரும் தவறு செய்யவில்லை. இருந்தாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் இதைப் போன்று பல நிலைகள் வருகின்றது.

அதே போல் தொழிலுக்குச் செல்கின்றோம். அங்கே பிறர் செய்யும் தவறுகளைப் பார்க்கின்றோம்… பிறர் சொல்லும் குறைகளைக் கேட்கின்றோம். வெறுப்பு வேதனை போன்ற உணர்வுகளை நுகர்கின்றோம்… அறிகின்றோம்…!

குறைகளையும் தவறுகளை நீக்க அதற்கு வேண்டிய உபாயங்களைச் சொல்கின்றோம். உபாயங்களைச் சொல்லிவிட்டு வந்த பின் நம் உடலில் தீமை வருகின்றது…! எப்படி…?

குறைகளைச் சொல்வார்கள்… அது என்ன… ஏது…? என்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று விரும்புவோம். ஆனால் அவர்களோ சொல்லிக் கொண்டே இருப்பார்கள். கடைசியில் நம்மைச் சோர்வடையச் செய்து விடுவார்கள்.

1.அன்றைய தினம் இதை எல்லாம் கேட்டு
2.அதன் பின் வந்து ஆகாரத்தை உட்கொண்டால் சரியாகச் சாப்பிட முடியாது
3.அதே உணர்வின் இயக்க அணுவாக இரத்தத்தில் மாறுகின்றது.
4.இரத்தத்தில் இப்படி மாறிய பின் உடல் முழுவதும் படர்கின்றது.
5.நம் உடலில் கெட்ட அணுக்கள் சேர ஆரம்பிக்கிறது.

இப்படித்தான் நமக்குள் தீமைகள் வருகின்றது.

ஏனென்றால் நாம் எண்ணிய உணர்வுகளை நம் உயிர் ஓ..ம் நமச்சிவாய… ஓ..,ம் நமச்சிவாய…! என்று உடலாக (நமதாக – சிவமாக) ஆக்கிக் கொண்டேயுள்ளது.

நாம் எண்ணுவது அனைத்தையும் ஓ… என்று பிரணவமாக்கி ம்… என்று நம் உடலாக மாற்றிக் கொண்டே இருப்பது தான் உயிரின் வேலை.

சலிப்படைந்த சங்கடப்பட்ட உணர்வுகள் எல்லாம் நமக்குள் ஓ…ம் நமச்சிவாய என்று நம் உடலுக்குள் ஆனபின்… அவர் இப்படிப் பேசினார்… அதிலே குறைகள் இப்படி இருந்தது… நான் உதவி செய்தேன்…! என்று எல்லாம் முதலிலே சொல்வோம்.

ஆனால் கடைசியில் பார்த்தால் நமக்குள் உருவாகும் அணுக்கள் விளைந்த பின் நம் உடலிலும் அதே உணர்வின் இயக்கமாகி “சிவாய நம ஓ…ம் என்று அதே உணர்வின் சொல்லாக வரத் தொடங்கி விடுகின்றது.

1.ஆக… அவன் உடல் நலிந்தது நம்முடைய உடலும் நலியத் தொடங்குகிறது
2.அவன் உணர்வு குறைந்தது… நம்முடைய நல்ல குணமும் குறையத் தொடங்குகிறது.

இதை எல்லாம் மாற்ற வேண்டுமா இல்லையா…?

நம்மை அகஸ்தியராக மாற்றச் செய்யும் தியானம்

 

1. அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் தாய் தந்தையர் பெற அருள்வாய் ஈஸ்வரா
2. ஞானகுருவின் அருளால் விண்ணிலிருக்கும் அகஸ்தியனின் ஸ்டேசன் (அலைவரிசை) எங்களுக்குள் ஆழமாகப் பதிவாக வேண்டும் ஈஸ்வரா
3. தியானத்தில் எங்கள் நினைவின் ஆற்றல் “அகஸ்தியன் சென்ற பாதையிலேயே செல்ல” வேண்டும் ஈஸ்வரா
4. பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்… அகஸ்தியர் தாய் கருவிலே பெற்ற பல அற்புத சக்திகளையும் பச்சிலைகள் மணங்களையும் மூலிகைகளின் வாசனைகளையும் அருள் தாவர இனச் சத்துகளையும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
5. தாய் கருவிலிருக்கும் போது நஞ்சையே ஜீரணித்து அடக்கிடும் ஞான சக்தியாக விளைந்த அந்த அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
6. அகஸ்தியன் பிறந்த பின் தரையில் மல்லாந்து படுத்திருக்கும் போது விண்ணை நோக்கிப் பார்த்து எந்தெந்த உணர்வுகளை நுகர்ந்தாரோ… அதை எல்லாம் பெற வேண்டும் ஈஸ்வரா
7. அகஸ்தியன் பிஞ்சு உள்ளத்தில் பெற்ற பிரபஞ்சத்தின் ஆற்றலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
8. அகஸ்தியன் நுகர்ந்த பல கோடித் தாவர இனங்களின் சக்திகளை… அந்த அகஸ்தியரின் அருள் மணங்களை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
9. அகஸ்தியன் துருவனாகும் போது பெற்ற நஞ்சினை வென்ற அருள் ஞான சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
10. அகஸ்தியன் ஆதியிலே வெளிப்படுத்திய “உண்மையான சக்திகளை” நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
11. அகஸ்தியன் அவன் வாழ்ந்த காலத்தில் நஞ்சினை வென்று வெளிவிட்ட மூச்சலைகளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
12. அகஸ்தியன் தான் கண்டுணர்ந்தவைகளை தன் இன மக்கள் பெற வேண்டும் என்ற இச்சையில் வெளிப்படுத்திய உணர்வலைகளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
13. அகஸ்தியன் தான் கண்ட பேருண்மைகளைத் தன் இன மக்கள் அனைவரும் பெறுவதற்காகக் கூறிப் பதிய வைத்த குறிப்புகளை இந்த உலலில் வாழும் மக்கள் அனைவரும் பெற வேண்டும் ஈஸ்வரா
14. அகஸ்தியர் உணர்வுகள் அனைத்தும் எங்களுக்குள் பதிவாகி கருவாகி அணுவாகிட அருள்வாய் ஈஸ்வரா
15. அகஸ்தியன் பாதம் பட்ட இடங்களில் பதிந்துள்ள விண்ணின் ஆற்றல்களை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
16. வானஇயல் புவியியல் உயிரியல் மூன்றையும் அறிந்த அகஸ்தியரின் ஆற்றல் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
17. தன்னை அறிந்த… விண்ணை அறிந்த அகஸ்தியரின் ஆற்றலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
18. தன் எண்ணத்தை எங்கும் செலுத்தி எதனையும் அறிந்திடும் ஆற்றலை வளர்த்துக் கொண்ட அகஸ்திய மாமகரிஷியின் ஆற்றலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
19. அகஸ்தியன் நேரடியாகப் பார்த்துணர்ந்த பிரபஞ்சத்தின் இயக்கத்தை நாங்கள் காண வேண்டும் ஈஸ்வரா
20. எல்லாவற்றையும் வென்றிடும்… அடக்கிடும்… இயக்கிடும்… ஆற்றல் கொண்ட நட்சத்திரங்களின் ஒளிக் கற்றைகளை நுகர்ந்த அகஸ்தியரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
21. ஒளிக்கதிரில் நுண்ணிய அலைகளைப் பார்க்கும் ஆற்றலைப் பெற்ற அகஸ்தியரின் நுண்ணிய ஆற்றலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
22. மின்னலைப் போன்று எல்லாவற்றையும் ஊடுருவிச் செல்லும் அகஸ்தியருடைய நினைவாற்றல் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
23. அகண்ட அண்டத்தையும் தன் எண்ணத்தால் எட்டிப் பிடிக்கும் ஆற்றல் கொண்ட அகஸ்தியரின் அருளாற்றல் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
24. 27 நட்சத்திரங்களின் சக்தியை எடுத்து ஒளியாக மாற்றிய அகஸ்தியரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
25. விண்ணின் ஆற்றலைப் பஸ்பமாக்கிய அகஸ்தியரின் அருள் சக்தி நாங்கள் பெற்று என்றுமே அழியாத வேகா நிலை பெற அருள்வாய் ஈஸ்வரா
26. சர்வ ரோகங்களையும் சர்வ பிணிகளையும் சர்வ தோஷங்களையும் போக்கக் கூடிய அகஸ்தியரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
27. நஞ்சினை வென்றிடும் அகஸ்தியரின் அருள் உணர்வுகள் எங்கள் இரத்தங்களில் கலந்து அணுக்கருக்களாக உருவாகி நாங்கள் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
28. அகஸ்தியரும் அவர் மனைவியும் ஒன்றி வாழ்ந்த வாழ்க்கை நாங்கள் வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
29. பேரண்டத்தின் அகண்ட நிலைகளில் பேரானந்தப் பெரு நிலை கொண்டு வாழும் அகஸ்தியனைப் போன்று நாங்கள் வாழ வேண்டும் ஈஸ்வரா
30. நாங்கள் அனைவரும் அகஸ்தியரின் ஈர்ப்பு வட்டத்திலே என்றுமே இணைந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
31. பூமியைச் சமப்படுத்திய அகஸ்தியன் உணர்வுகளை நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா
32. உலகெங்கிலும் இருளை அகற்றிடும் உணர்வுகளாக விளைந்த அகஸ்தியரின் பேரருள் பேரொளி நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா
33. உலகைக் காக்கும் சக்தியாக… அகஸ்தியனுடைய வாக்கு எங்கள் அனைவருக்குள்ளும் பிரதிபலிக்க வேண்டும் ஈஸ்வரா
34. “அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக உருவான மரபணுவை” இந்த உலக மக்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா
35. நட்சத்திரங்களின் ஒளிக்கற்றைகளைச் சேர்த்து சேர்த்து உயிரைப் போன்று ஒளியாக மாற்றிய எத்தகைய நஞ்சையும் ஒளியாக மாற்றிடும் அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
36. அகஸ்தியர் உணர்வைக் கவர்ந்தவர்கள் அனைவரும் மகரிஷிகளாக ஆனது போன்று நாங்களும் மகரிஷிகளாக ஆக வேண்டும் ஈஸ்வரா.

உறுதி மொழி
1. நாங்கள் ஒவ்வொருவரும் அகஸ்தியரின் வளர்ப்பின் வளர்ப்பாகி… அகஸ்தியராக மாறுவோம்
2. இந்த பூமியில் உள்ள விஷத் தன்மைகளை அகற்றும் அருள் ஞானிகளாக நாங்கள் வளர்வோம்
3. அகஸ்தியரின் உணர்வைக் கொண்டு இந்த உலகில் இனி நல்ல மாற்றங்களைக் கொண்டு வருவோம்
4. உலகில் தற்பொழுது பரவி வரும் நஞ்சினை அகற்றிட அகஸ்தியனின் உணர்வைப் பரவச் செய்வோம்.

எண்ணம் எப்படித் தோன்றுகிறது…?

 

விநாயகர் தத்துவத்தில் முழு முதல் கடவுள் என்று காட்டியுள்ளார்கள் ஞானிகள். அதனின் உட்பொருள் என்ன..?

இந்த மனித உடலை நாம் என்று பெற்றோமோ… மிருக நிலையிலிருந்து மனிதனாக வளர்ச்சி அடைந்த நிலையை…
1.வினை எல்லாம் தீர்ப்பவனே விநாயகனே என்று
2.இந்த மனித உடலைக் காட்டினார்கள்.

முன் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக இந்த மனித உடலைப் பெற்ற நாம் தான் “முழு முதல் கடவுள்…” சிருஷ்டிக்கும் தன்மை பெற்றது நம்முடைய நிலைகள் என்ற இந்த நிலையை அன்று ஞானிகள் உணர்த்திச் சென்றார்கள்.

ஆகவே அதை நாம் பெறுவதற்கு நாம் என்னென்ன நிலைகள் செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொரு நொடிக்கும் நம் எண்ணத்தை நல்வழியில் நல்ல வினைகளைச் சேர்ப்பதாகச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.

எண்ணம் எங்கிருந்து தோன்றுகிறது..?

1.நாம் கண் கொண்டு பார்க்கப்படும் போது
2.ஒரு உணர்வை ஈர்த்து நமக்குள் செலுத்தப்படும் போது தான் அந்த எண்ணங்கள் தோன்றுகிறது.
3.அந்த எண்ணத்தின் உணர்வின் தன்மை நமக்குள் இயக்கப்படுகிறது… அதை மீண்டும் நுகர்கின்றோம்.

பின் எதை நாம் கூர்ந்து கவனித்தோமோ அது நமக்குள் பதிவாகிறது, மீண்டும் நினைவாகும் போது “அதே அலைகள்” எடுக்கின்றது. எண்ணமே இல்லாத நிலைகளில் அந்த எண்ணத்தை உருவாக்குகின்றது.

பள்ளியில் படிக்கச் செல்கிறோம். முதலில் அதைப் பற்றிய எண்ணமே அற்றவர்கள் தான். அங்கே சென்ற பின் பாட நூல்களைப் படிக்கின்றோம். படிப்பின் கவனைத்தைச் செலுத்தப்படும் போது அந்த எண்ணங்கள் உருவாகின்றது… தோன்றுகிறது

அந்த எண்ணத்தை மீண்டும் நாம் எண்ணும் போது அது வலிமை வருகின்றது. ஆனால் பாடத்தைப் படிக்கும் போது…
1.பாட நிலைகளிலே நினைவுகள் (சிந்தனை) வேறு விதமாக இருந்தால்
2.பதிவாகவில்லை என்றால் நமக்கு ஞாபக சக்தி இல்லை என்று பொருள்.

அடுத்து அதனின் ஞாபகம் வருவதில்லை. தானாகவும் வருவதில்லை… மீண்டும் எண்ணினாலும் நமக்குள் வருவதில்லை.

எதை நம் எண்ணத்தில் “கருத்தில் கொண்டு…” அதை நாம் எடுக்கின்றோமோ அது பதிவான பின்
1.மீண்டும் அந்த நினைவுகளை எடுக்கும் போது
2.அந்த அலைகளை நாம் சுவாசித்து
3.அந்த உணர்வின் தன்மையை அறியச் செய்யும்.

ஆனால் நாம் படித்துக் கொண்டிருக்கும் போது அங்கே பதிவாகவில்லை என்றால்… அந்த எண்ணம்… அதை நாம் திருப்பி எண்ணினாலும் வராது.

பள்ளியில் படிப்பவர்கள் சிலர் எனக்கு ஞாபக சக்தியே வரமாட்டேன் என்கிறது என்றெல்லாம் சொல்கிறார்கள் அல்லவா…!

இதே மாதிரித் தான் நாம் இந்த வாழ்க்கையில் நாம் நேரடியாகப் பார்க்கப்படும் போது
1.ஒருவரைப் பார்க்கின்றோம்… அவர்கள் செயலைப் பார்க்கின்றோம். அந்த உருவத்தின் தன்மை படமாகின்றது.
2.அவர் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வுகள் அலைகளாக மாறுகின்றது.
3.நம் கண் படமெடுக்கின்றது… அந்த உணர்வின் அலைகளை நமக்குள் ஈர்க்கின்றது.
4.நாம் சுவாசித்த பின் நம் உடலுக்குள் அந்த நினைவு பதிவாகின்றது.
5.அந்த அலையின் தொடர்கள் அதனுடைய நிலைகள் வித்தாக (வினை) ஊன்றுகின்றது.
6.அந்த வித்தின் நிலைகள் மீண்டும் அதை எண்ணப்படும் போது அந்தச் செயலின் தன்மைக்கு மீண்டும் நாம் இயக்கப்படுகின்றோம்.
7.ஆகவே நமக்குள் எந்த எண்ணங்களைப் பதிவு செய்கின்றோமோ அந்த எண்ணங்கள் தான் மீண்டும் நம்மை அதன் வழிக்கு இயக்குகிறது.

இப்படித் தான் மதங்கள் ஏற்படுத்தப்பட்ட நிலைகள் அனைத்தும்
“அது ஒவ்வொன்றும் இன்னென்னது…” என்று நமக்குள் எண்ணங்களாகப் பதிவு செய்து வைத்திருக்கின்றோம்.

அந்தப் பதிவின் நிலைகளிலேயே தான் நாம் நடக்கின்றோம். அதன் வழியில் இது கெட்டது… இது நல்லது… என்று அறிந்து நாம் நடக்கின்றோம்.

குருநாதர் காட்டிய அருள் வழியிலே உங்களுக்கு ஞானிகள் கண்ட மெய் உணர்வுகளை எல்லாம் திரும்பத் திரும்பப் பதிவு செய்து கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).

1.இதை நீங்கள் தொடர்ந்து பதிவு செய்து கொண்டே வந்தால்
2.உங்களை அந்த ஞானிகளின் எண்ணங்கள் இயக்கும்… ஞானியாகவும் ஆக்கச் செய்யும்.

மனிதப் பிறவி எடுத்தது ராட்டினம் போன்று சுழன்று கொண்டே இருப்பதற்கா…? – ஈஸ்வரபட்டர்

 

காட்சி:-
உணர்ச்சி மிகுந்த மனிதன் ஒருவன் உணர்ச்சி குறைந்த எருமையில் அமர்ந்து அதனை அடித்துத் துன்புறுத்தி வண்டியில் கட்டிப் பாறாங்கற்களை ஏற்றிச் செல்கின்றான் அவ்வண்டியில்…!

விளக்கம்:-
மனிதன் தன் செயலுக்காகப் பலவற்றையும் மிருகங்களையும் மற்ற செயலுக்குகந்த பொருள்களையும் உலோகங்களையும் தன் ஜீவித வாழ் நாட்களில் சுகம் காணச் செயல்படுத்துகின்றான்.

உணர்ச்சி குறைந்த எருமை இவனைக் காட்டிலும் இவனுக்கு உபயோகமாக இருக்கின்றது. அதனால் இவன் பலன் காண்கின்றான்.

உணர்ச்சி குறைந்த எருமை தான் உணர்ச்சி மிகுந்த மனிதனுக்குப் பயன்படுகின்றது. இதைப் போன்று மனிதன் இந்தப் பூமியில் உள்ள பிற இன வஸ்துக்களையும் உயிரினங்களையும் தனக்கு உகந்ததாகப் பயன்படுத்தி வாழ்கின்றான்

1.உலக சக்தியையே மனிதனுக்குச் சொந்தமாக்கி வாழுகின்றான்… இன்றைய மனிதன் தன் அறிவின் விஞ்ஞான வளர்ச்சியினால்…!
2.ஆனால்… தன்னை உணர்ந்து தனக்குள் உள்ள உண்மை சக்தியை உணராமல் வாழ்கின்றனப்பா ஒவ்வொரு மனிதனும் இக் கலியின் கடைசிக் காலத்தில்.

காட்சி:-
ஒரு மனிதன் ஆற்றங்கரையில் அமர்ந்து இரை வைத்துத் தூண்டில் போட்டு பெரிய மீனாகப் பிடித்துச் செல்கின்றான்.

விளக்கம்:-
இன்றைய உலக நிலையும் இதன் அடிப்படை குணத்தில் தான் மனித ஆத்மாக்களின் வளர்ச்சி எண்ண வாழ்க்கை நடந்து வருகிறது.

தன் சாதகம் காண மீணுக்கு உணவு வைத்து அதனைப் பிடித்துத் தான் மனிதன் உண்ணுகின்றான். அதைப் போன்று
1.தன் வசதியான சோம்பல் மிக்க வாழ்க்கையின் சாதனைக்கு
2.சூரியனிலிருந்து பூமி ஈர்க்கும் மின் அலையையும் பூமி ஈர்த்து வளர்ந்த கனி வளங்களையும்
3.அறிவின் மேம்பட்ட கலி மனிதன் உண்டு விடுகின்றான்.

இது நாள் வரை வெளிப்படுத்தாத சில நிலைகளையும் வெளிப்படுத்துகின்றேன்.

எரிமலையையும் பனி மலையையும் பாலைவனங்களையும் ஏன் ஆழ் கடலையும் கூடக் கண்டு ஆராய்ந்து வருகின்றார்கள்.

இருந்தாலும் நம் பூமியில் மூன்று இடங்களில் இது வரை மனிதன் சென்று ஆராயாத இடங்களில் அதிகமாக காந்த ஈர்ப்புக் கிணறுகள் உள்ளனவே. இவர்கள் ஆராய்ச்சியில் ஏன் அதன் நிலைக்குச் செல்லவில்லை…?

1.பூமத்தியின் ரேகையின் மையப் பகுதியில் இக்காந்த ஈர்ப்பு ஆழ் கிணறுகள் நிறைந்துள்ளன.
2.கடல் மட்டத்தில் கீழ் இவ்வீர்ப்பு மிக அதிகப்படியாக உள்ளன.
3.மனிதன் மட்டுமல்ல…! இயற்கைக்கு மாறி எந்த நிலைகளும் அங்கு சென்றால் அதன் ஈர்ப்பில் அப்படியே ஈர்த்துக் கொள்ளும்.

பூமியின் ஈர்ப்புக் காந்த அலைக்குச் சக்தி தருவது பூமத்திய ரேகையின் மையப் பகுதி தான், ஆராயும் நிலைக்குச் செல்வதாக இன்றைய விஞ்ஞானம் உள்ளது.

இவர்கள் செலுத்திச் செயல்படும் எக்கருவியையும் தன் ஈர்ப்புடன் அவை இழுத்துக் கொள்ளும்.
1.படர்ந்து மைல் கணக்கில் இல்லை… அந்தக் காந்த ஈர்ப்பு ஆழ் கிணறுகள்.
2.இந்தப் பூமியில் குறிப்பிட்ட மூன்று இடங்களில் ஐந்து ஆறு அடி விஸ்தீரணச் சுற்றளவு கொண்டதாக அது உள்ளது.

இவர்கள் ஆராய்ச்சியில் பிடிபடுவதும் கடினம்…! கடல் மட்டத்தில் ஒன்றும் மலை மேட்டில் ஒன்றும் பாலைவனத்தில் ஒன்றும் உள்ளது.

பூமத்திய ரேகையின் மையப் பகுதியிலும் கர்நாடக மாநிலத்தில் மலைப் பிரதேசத்திலும் சகார பாலைவனப் பிரதேசத்திலும் உள்ளது. அதன் பக்கங்கள் உள்ள இடங்களிலும் அதன் ஈர்ப்பின் செயல்கள் அந்தந்த இடங்களில் படர்ந்துள்ளது.

இதை எல்லாம் உணர்ந்து தன் உயிராத்மாவை வலுவாக்கி ஒளியாக்கி விண் சென்றவர்கள் அனைவரும் என்றுமே அழியாது வாழ்கிறார்கள்.

ஆனால் இந்த உடலுக்காக என்று வாழும் நிலையில் உள்ளவர்கள் உண்மையையும் உணராது… தன்னையும் உணராது… மீண்டும் மீண்டும் இதிலே சக்கரம் சுழல்வது போல் சுழன்று கொண்டுள்ளார்கள்.

மனிதப் பிறவி எடுத்தது சுழன்று கொண்டே இருப்பதற்கா…?

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

உங்கள் உடல் முழுவதும் தலையிலிருந்து கால் வரை அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்களை அறியாது சேர்ந்த தீய வினைகள் சாப வினைகள் பாவ வினைகள் அனைத்தும் அகன்று அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுகின்றீர்கள்.

உங்கள் உடலில் அறியாது சேர்ந்த நோய்கள் நீங்கி உடலில் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகள் உருவாகி அந்த அருள் ஞான சக்தி உங்களுக்குள் பெருகும்.

நோயற்ற வாழ்வு வாழும் அருள் ஞான சக்தி உங்களிலே விளையும். நோயுடன் வந்தோர் நோய்கள் நீங்குவதை இப்போது நீங்கள் உணரலாம். கை கால் குடைச்சலோ சர்க்கரைச் சத்தோ இரத்தக் கொதிப்போ வாத நோயோ மன நோயோ இவை அனைத்தும் அகலும்.

அருள் ஞான ஒளி உங்களிலே பெருகும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடல் முழுவதும் படர்ந்து உங்கள் உடலில் உள்ள சர்வ நோய்களும் நீங்கி மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் விளைந்து உங்கள் பேச்சால் மூச்சால் பிறரை மகிழச் செய்யும் உணர்வுகள் உங்களில் விளையும். உங்களை மகிழச் செய்யும் அணுக்கள் விளையும்.

அருள் ஒளி வளரும் மெய்ப் பொருள் காணும் திறன் பெறுவீர்கள். உங்கள் பார்வையால் உங்கள் நினைவால் உங்கள் சொல்லால் பிறருடைய துன்பங்களைப் போக்கும் ஆற்றல் பெறுகின்றீர்கள்.

பிறருடைய துன்பங்களைப் போக்கும் வலு பெற்றால் பிறருடைய துன்பங்கள் உங்களை அணுகாது தடைப்படுத்த முடியும் உங்கள் உணர்வால்…!

தியானமிருக்கும் அனைவரது உடலிலும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி படர்ந்து சர்வ ரோகங்களும் நீங்கி மகரிஷிகளின் அருள் சக்தி உங்களிலே படர்ந்து மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெறுவீர்கள்.

உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களை மகிழச் செய்யும் உணர்வாகப் படரும். சகோதர உணர்வுகள் விளைந்து மத பேதமின்றி இன பேதமின்றி மொழி பேதமின்றி மன பேதமின்றி வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுவீர்கள்.

அத்தகைய அருள் சக்திகள் கொண்ட உங்கள் மூச்சலைகள் காற்றிலே படர்ந்து உலக மக்களைக் காத்திடும் அருள் சக்தியாக உங்களுக்குள் விளைந்திட குருவைப் பிரார்த்திக்கின்றேன்.

1.அருள் மகரிஷிகளின் உணர்வு உங்களில் படர
2.மகிழ்ச்சி பெறும் உணர்வை வளர்த்திட
3.அந்த உணர்வுகளை உங்கள் உயிரான ஈசன் கவர்ந்து
4.அந்த உயர்ந்த உணர்வுகளை உங்கள் உடலான சிவமாக்கி மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாக உருவாகி
5.உங்களுக்குள் மகிழ்ச்சி பெறும் சொல்லாக உருவாக்கும் சீதா இராமனாக எண்ணங்கள் தோற்றுவிக்கவும்
6.அருள் ஒளி படர்ந்து உங்களுக்குள் நல்வினையாக விளைந்திடவும்
7.மகரிஷிகள் உணர்வுகள் அரணாக உங்கள் உடலுக்கு அமைந்து
8.இந்தப் பிறவியிலேயே பேரின்பப் பெரு வாழ்வு பெற்றிடவும்
9.எண்ணியதை உங்கள் உயிரான ஈசன் உருவாக்கி அதையே பிரம்மமாக்கிடவும்
10.உங்கள் உடலைச் சொர்க்க லோகமாக்கி உங்கள் உயிரைச் சொர்க்க வாசலாக அமைத்திடவும்
11.அந்த மாமகரிஷிகளின் அருளாசி படர்ந்து பேரின்பப் பெருவாழ்வு வாழ்ந்திடவும்
12.உங்கள் பார்வையிலேயே தீமைகளை அகற்றிடவும் மெய் ஒளியைப் பரப்பிடவும்
13.என்றுமே அழிவில்லா வாழ்க்கையாக வாழ்ந்திடவும்
14.மரணமில்லா பெருவாழ்வு வாழ்ந்திடும் அருள் ஒளி உங்களில் படர்ந்திடவும்
15.உங்கள் பேச்சால் மூச்சால் உலகைக் காத்திடும் உத்தம உணர்வுகள் வளர்ந்திடவும்
16.அருள் மகரிஷிகளின் உணர்வு உங்களுக்கு உறுதுணையாக இருந்திடவும்
17.மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் வளர்த்திட குரு அருள் உங்களுக்குள் எப்பொழுதும் உறுதுணையாக இருந்திடவும்
18.அந்த அருள் ஞான குரு வழியில் உங்கள் எண்ணங்கள் அருள் ஞானத்தை வளர்த்திடும் அருள் சக்தியாக விளைந்திடவும்
19.நான் (ஞானகுரு) பிரார்த்திக்கின்றேன்… தியானிக்கின்றேன்…!

இதைக் கேட்டுணர்ந்தோர் உடல்களில் கடும் நோய்கள் குறைந்திருப்பதையும் காணலாம்.

இதைப் போன்ற அருள் சக்திகளை வளர்த்துக் கொள்ள அதிகாலை துருவ தியானத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலிலே படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள சர்க்கரைச் சத்து நீங்க வேண்டும்… இரத்தக் கொதிப்பு நீங்க வேண்டும்… நல்ல இரத்தங்கள் உருவாக வேண்டும்… நல்ல ஞானங்கள் எங்களுக்குள் வளர வேண்டும்…. ஒரு பத்து நிமிடமாவது ஏங்கிப் பெறுங்கள்.

இப்போது கொடுக்கும் இந்த அருள் ஞான வித்துக்களை உங்கள் நினைவால் நீங்கள் மீண்டும் மீண்டும் எண்ணும்போது
1.உங்கள் உயிரே அந்த அணுக்களை வளர்த்து
2.உங்களை நலம் பெறும் சக்தியாக உடலில் வளர்த்து
3.மன பலம் மன நலம் பெறச் செய்து
4.அருள் ஒளி பெறும் அருள் ஞான வழியில் அழைத்துச் சென்று
5.என்றும் பேரின்பப் பெரு வாழ்வாக வாழும் உணர்வின் உடலாக மாற்றியமைக்கும் உங்கள் உயிர்…!

நேரம் காலத்திற்குத் தான் அடிமையாக உள்ளோம்… நம் எண்ணத்தால் எதையுமே நல்லதாக்க முடியும் என்று எண்ணுகிறோமா…!

 

நல்ல நேரம் பார்த்துத் தான் நாம் செயல்பட வேண்டும் என்று ஜாதகரீதியாக நம்மைக் கட்டுப்படச் செய்து விட்டார்கள். அதன்படித்தான் இன்று பெரும்பகுதியானவர்கள் வாழ்கிறார்கள்.

ஜாதகங்களை நாம் பார்க்கப்படும் போது
1.அதிலே நல்லது எதுவுமே நடக்காது
2.ஆனால் அவர்கள் சொல்லும் கெட்டது அனைத்துமே நடக்கும்.

உதாரணமாக… பால் சத்தானதாக இருந்தாலும் அதிலே விஷம் பட்டுவிட்டால் அந்த விஷத்தின் தன்மை குடிப்போரை உடனடியாக மாய்த்துவிடும்.

ஜாதகத்தில் நல்லது இருந்தாலும்… எவ்வளவு சக்தி வாய்ந்த நிலைகள் கொண்டவராக நாம் இருந்தாலும்…
1.ஒரு வேதனை வந்துவிட்டால் நல்லதைச் சிந்திக்கும் செயல் இழந்துவிடுகிறோம்…
2.அந்த வேதனையே நம்மை ஆட்கொண்டு விடுகிறது.

அது போல் தான்… ஜாதகத்தில் சில நிலைகள் கெடுதலைப் பற்றிச் சொல்லும் போது இத்தகைய ஏற்றத் தாழ்வுகள் வந்து கொண்டே இருக்கும். அந்த நல்லதும் கெட்டதும் கலந்து கொண்டே இருக்கும்.

நல்லதை அவர்கள் அதிகமாகச் சொல்லியிருந்தாலும்
1.ஒரு வக்கிரம் (புத்தி – திசை) வந்து உங்கள் நல்லதைச் செயல்படவிடாது தடுக்கின்றது
2.அது உங்களுக்குத் துன்பத்தை ஊட்டும் என்று சொல்வார்கள்.

இது மனதில் ஆழமாகப் பதிந்து விடும்.

எல்லாமே சரியாக இருக்கிறது. ஆனால் “ஏழரை நாட்டான் சனியன்” வந்து உங்களுக்குள் எல்லாவற்றையும் மடக்கிக் கொண்டிருக்கின்றான் என்று ஜாதகக்காரன் சொன்னால் போதும். “இந்தச் சனியனை” நாம் நன்றாகப் பதியச் செய்து கொள்கிறோம்.

அடுத்து எந்த நல்ல குணம் நமக்குள் வந்தாலும் அதற்குள் இந்த உணர்வை மீண்டும் மீண்டும் சேர்த்து… நாம் பேசும் போதெல்லாம் ஜாதகக்காரன் பதிவு செய்த உணர்வு… இந்த விஷத்தின் தன்மை கொண்டு இது முன்னணியிலே வந்துவிடும்.

அந்தச் சனியிலிருந்து மீட்டுவதற்காக வேண்டி இந்த ஆலயத்திற்குப் போ… அந்த ஆலயத்திற்குப் போ…! இவ்வளவு பணத்தை நீ செலவழி… யாகத்தை வளர்த்து மந்திரத்தை ஜெபித்தால் நல்லதாக இருக்கும்… என்று சொல்வார்கள்.

அதன் படி நாம் செய்வோம். அந்த எண்ணத்தைச் சிறிதளவு கட்டுப்படுத்தும்.

ஏனென்றால் ஏழரை நாட்டான் பிடித்துவிட்டான் என்று காதிலே கேட்டோம். அதைக் கட்டுப்படுத்துவதற்காக ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். அதனால் கொஞ்சம் குறைக்க முடிந்தது.

இது அல்லாதபடி இன்னொன்றும் சொல்வார்கள்…! உங்கள் இரண்டாவது பிள்ளைக்கு “ஒரு கண்டம் இருக்கிறது…! அவனைக் கொஞ்சம் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்…” என்று சொல்லி வைத்துவிடுவார்கள்.

இரண்டாவது பிள்ளைக்கு நான்காவது வயது வரப்படும் போது பஸ்ஸிலேயோ வாகனத்திலேயோ விபத்து இருக்கிறது என்று பதிவு செய்து விடுவார்கள். குழந்தை பிறந்த பிற்பாடு ஏழரை நாட்டான் சனியன் பிடித்ததனால் இப்படிச் சொல்வார்கள்.

அதற்கப்புறம் பார்த்தால் வியாபாரமோ தொழிலோ மற்ற காரியங்களோ எல்லாமே மந்தமாகிவிடும். பஸ்ஸிலே விபத்து வரும் என்ற நினைவு மனதிலே டுக்… டுக்… டுக்.. என்று ஓடிக் கொண்டே இருக்கும்.

பிள்ளை ரோட்டிலே விளையாடப் போனால் போதும்.
1.ஜோசியக்காரன் சொல்லியிருக்கின்றானே… என்ன ஆகுமோ…?
2.அவன் சொன்னது எப்பொழுது நடக்குமோ…? என்று பிள்ளைப் பாசத்தால் தாய் பதறும்.
3.துடுக்.. துடுக்… என்ற பயத்தால் தாயிடமிருந்து இந்த அலைகள் போனவுடனே அவனை ஞாபகமறதியாகச் செல்லச் செய்யும்.

ரோட்டிலே பஸ் போய்க் கொண்டிருக்கும்.
1.தாயின் எண்ணம் பாய்ந்து கவனம் இல்லாது அவன் ரோட்டைக் கடப்பான்… அடிபடுவான்.
2.நான் நினைத்தேன்… கரெக்டாக நடக்கிறது…! என்பார்கள்.

ஏழரை நாட்டான் சனி பிடித்தால் இப்படி நடக்கும் என்று சொன்னான் அல்லவா…! என்று அந்தக் கெட்டது இப்படித் தான் நடக்கும்.

இதுகள் எல்லாம் எங்கிருந்து உற்பத்தி ஆகிறது…? என்று நீங்கள் கவனித்துப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

அது மட்டுமல்ல…! எல்லாம் வக்கிரத்தில் இருக்கிறது அதனால் “உனக்குக் குழந்தை இல்லை…” என்று விஷத்தை ஊட்டிவிடுவார்கள். அதற்கு இன்னென்ன சாஸ்திரம் செய்தால் சரியாகும்…! என்பார்கள்.
1.”குழந்தை இல்லை” என்று இந்த உணர்வை ஊட்டிய பின்
2.அதையே எண்ணத்தில் வளர்த்தால்… பிறகு எங்கே போவது…?

அதை நிவர்த்தி செய்ய இந்தக் கோவிலுக்குப் போ… அங்கே போ… அதைச் செய்… இதைச் செய்… என்று எதை எதையோ சொல்லி அதைச் செய்தால் சரியாகும்…! என்று அவர்கள் சொன்னபடி சுற்றிக் கொண்டிருக்க வேண்டியது தான்.

காரணம் நம் எண்ணத்திற்குள் எதைப் பதிவு செய்கிறோமோ அந்த உணர்வின் தன்மை நமக்குள் வளர்த்து விடுகிறோம். அது தான் நம்மை இயக்குகிறது.

மனிதனுக்கு ஜாதகம் இல்லை.. நேரமும் இல்லை… காலமும் இல்லை…! இதை உணர்ந்து கொள்ளுங்கள்…!

ஆண்டவன் படைப்பை பிரித்துக் காண முடியாது – ஈஸ்வரபட்டர்

 

1.கடவுள் எல்லாவற்றிலும் உள்ளார்… எல்லாமாகவும் உள்ளார்..!
2.நல்ல சக்தி மட்டும் கடவுள் அல்ல. தீயவையும் கடவுளின் படைப்புதான்.
2.கடவுளின் பிம்பம் நன்மையிலும் தீமையிலும் கலந்தே உள்ளது.

நற்குணம் கொண்ட மனிதனும் கடவுளுக்குச் சொந்தம். தீய குணத்தில் உள்ளவனும் கடவுளின் படைப்பு தான்.
1.இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்தால்
2.தெய்வத்தின் சக்தியை மனித ஆன்மாக்கள் உணர்ந்து நடக்க ஏதுவாகும்.

எல்லாப் படைப்பும் தெய்வத்தின் படைப்பே…!

படைக்கப்பட்டவன்…
1.படைப்பின் பொருள் கண்டு மகிழ்ந்து
2.தன் பொருளான தான் படைத்ததன் பலன்தான்
3.தெய்வ சக்தியின் அருள் வளர்ச்சியும்.. நற்குண வளர்ச்சியும்…!
4.சப்தரிஷிகளின் நிலை பெற்றோரின் வளர்ச்சியினால் தன் படைப்பின் பலனைப் பெற்றான் – “படைத்தவன்”

மனிதன் உருவாக்கும் செயல்களில் இருந்து எப்படி தன் எண்ணத்திற்குகந்த நிலை பெற்றவுடன் மகிழ்ச்சி கொள்கின்றானோ அதைப் போன்ற மகிழ்ச்சிதான் தெய்வ சக்தியின் வளரும் நற்குண வளர்ச்சியும்…!

நன்மை தீமை கொண்டு தெய்வப் படைப்பு இல்லை. எல்லாமே தெய்வப் படைப்புத் தான். பல சுவையும் இயற்கையில் கலந்து தான் வளர்கின்றது. கசப்பின் சுவை இல்லாவிட்டால் இனிப்பை அறிய முடியாது.

மனித வாழ்க்கையில் ஏற்படும் சோதனை நாட்களை கசப்பாக எண்ணி… அக்கசப்பின் நிலையில் விரக்தி பூணும் மனிதனின் சுவாச அலையின் தொடரினால்… அதே சுழற்சியில் இருந்து சலிப்பின் உந்தலினால்.. பல மனித ஆத்மாக்கள் தன் நிலை உணராமல்… இக்கசப்பான நிலையிலிருந்து மீள முடியாத சிக்கலில் சிக்கி…
1.அதன் உணர்வு அலையின் உந்தலில் ஏற்படும் ஆவேச எண்ண நிலையிலிருந்து மீளாத மனிதன்தான்…
2.தீய வழிகளுக்கும் தீய செயலில் நிலைக்கும் தன் நிலை உணராமல் சென்று விடுகின்றான்.

தனக்கு ஏற்படும் இன்னலில் இருந்து கசப்பான வாழ்க்கையை இனிய செயலாக்குவது இம்மனிதனின் எண்ணம் தான்…! என்று உணர்ந்து
1.கசப்பைத் துவர்ப்பாக்கி
2.துவர்ப்பை இனிமையாக்கும் வாழ்க்கைச் செயலுக்குக் கொண்டு வரலாம்.

அதே சுழற்சி ஓட்டத்தில் செல்லும் மனிதன்… மீண்டும் சோதனையான கசப்பான நிலை தன் வாழ்க்கையில் ஏற்பட்டாலும் அதனை இனிமைப்படுத்திடும் வழித் தொடர் அறியத் தன் எண்ணத்தை அவ்வீர்ப்பின் நிலையுடன் தன் உணர்வு பெறுகின்றான்.

1.இனிமையிலிருந்து வருவதல்ல நல் உணர்வு எதுவுமே…! (இது மிகவும் முக்கியமானது)
2.சுவையான மாங்கனி பிஞ்சில் கசப்பாகவும்.. பிறகு வளர வளர
3.துவர்ப்பு புளிப்புமாகி பிறகு தான் முற்றிப் பழுத்து இனிப்பாகின்றது அல்லவா…!

உள்ளிருக்கும் துவர்ப்பான அக்கொட்டையுடன் ஆரம்ப ஈர்ப்புக் குணத்திலுள்ள அமிலப் படிவம் கொட்டையுடன் உள்ள பொழுதும் அத்துவர்ப்பான கொட்டையின் மேல் சுவையான மாங்கனி வளர்கின்றது அல்லவா…!

1.அதைப் போன்று கசப்பான வாழ் நாட்களை இனிமையாக்கப் பழகிடுங்கள்.
2.கசப்பிலிருந்து தான் இனிமை காண முடியும்.

பல சித்தர்களும் சப்தரிஷிகளும் மற்றும் இன்றைய காலங்களில் உள்ள நீங்கள் அறிந்த வளர்ச்சி கொண்ட எந்த மேதைகளையும் அவர்களின் வாழ்க்கையின் ஆரம்பக் காலங்களில் நடந்த உண்மை நிகழ்ச்சியின் உண்மையை ஆராய்ந்தோமானால் “இதன் நிலை புரியும்…!”

அரசனாக இருந்தாலும் மாமேதையாக இருந்தாலும் எந்த ஆண்டவனும் அவர்களுக்கு அந்தச் சக்தி தரவில்லை. அவரவர்கள் எடுக்கும் எண்ணச் சுவாசத்தினால் அவர்கள் அடையும் பெரு நிலை எல்லாம் இறைவனின் படைப்பு ஒன்றே…! இயற்கையின் சக்தியும் அதுவே…!

வளர்ந்த செயலில்தான் அதனதன் அடிப்படைக் குணமெல்லாம் உள்ளன. இக்குணத்தின் வழி பெற்றது தான் ஆண்டவன் கண்ட பொருள் மகசூலான சந்திரனும்.. சூரியனும்… நம் பூமியும்… நாமும்… எல்லாமே…!

1.நன்மை தீமை கொண்டு படைக்காத ஆண்டவன்
2.தன் படைப்பின் பலனான நல்லதுவும் தீயதுவும் சுழன்றுள்ள நிலையில்
3.தன் வளர்ச்சிக்குத் துணையாக நல்லவற்றைக் காண்கின்றான்.

இப்படி இருக்க ஆண்டவன் படைப்பை எப்படிப் பிரித்துக் காண்பது…?

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நம் குழந்தை நன்றாகப் படிக்க வேண்டும் என்று ஆர்வப்படுகின்றோம். ஆனால் குழந்தை விளையாடப் போகும்போது ஏதோ ஞாபக சக்திக் குறைவால் படிப்பு குறைவாகி விடுகின்றது.

படிக்க முடியவில்லை என்றால் அவனுக்கு எவ்வாறு ஊக்கம் கொடுக்க வேண்டும் என்பதற்கு மாறாக நாம் என்ன செய்கின்றோம்…?

அவன் நன்றாகப் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நிலையில் அவன் படிக்கவில்லை என்றால் உடனே அந்த இடத்தில் வேதனைப்படுகின்றோம்.

வேதனைப்படுத்துகின்றான் என்றால் “அவனுக்கு நல்லதை எடுத்து எப்படிச் சொல்வது…?” என்று புரியவில்லை. உனக்கு எவ்வளவு காசு செலவு செய்கின்றேன்…! நீ இப்படிச் செய்கின்றேயே…! என்று திட்ட ஆரம்பிக்கின்றோம்.

வேதனையாகச் சொல்லப்படும்போது அவனுக்குள் இது பதிவாகிறது. இந்த உணர்வு அங்கு என்ன செய்கின்றது…? அது ஓ…ம் நமச்சிவாய அவன் உடலாகின்றது.

அப்புறம் திட்ட ஆரம்பித்தால் அம்மாவைப் பார்க்கும் போதெல்லாம் “எப்பொழுது பார்த்தாலும் என்னை இப்படியே திட்டுகின்றார்கள்..” என்று இந்த உணர்வு படிக்கப்போகும் போதெல்லாம் அவனுக்கு இந்த நினைவு வரும்.

அடுத்தாற்படி புத்தகத்தை எடுத்தாலே அம்மா திட்டிய ஞாபகம் தான் வருமே தவிர பாடத்தின் நிலை வராது. இல்லையென்றால் அப்பா திட்டிய ஞாபகம் தான் வருமே தவிர பாடத்தின் நினைவு வராது.

அப்போது அது வாலியாகின்றது. வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்….?

குகையிலிருக்கும் வாலியை இராமன் கல்லைப் போட்டு மூடி அவன் வெளி வராது செய்கிறான் என்று காவியத்தில் காட்டியுள்ளார் வான்மீகி. வேதனை என்ற உணர்வு வந்த பின் நம்முடைய எண்ணங்களை எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும்…?

சந்தோஷமான நிலைகள் இருக்க வேண்டுமென்றால் அந்த குழந்தையின் மேல் இருக்கும் வேதனையை எடுத்த உடனே உள்ளுக்குள் போகாதபடி அதை மூடி விட வேண்டும்.

“ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அந்தச் சக்தி வாய்ந்த நிலைகளைத் தனக்குள் எடுக்க வேண்டும்.

குழந்தை எண்ணி வேதனைப்படுவதை நேர்முகமாகத் தள்ளிவிட்டுப் போக முடியாது. அதற்குத் தான் புருவ மத்தியில் அடைக்க வேண்டும் என்று சொல்வது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் வளர்த்த பின் என்ன செய்கின்றது…? இதோடு (வெளியிலே) நின்று விடுகின்றது.

அதாவது ரிஷியின் மகன் நாரதன்…! அங்கே உருவான உணர்வு உயிரிலே பட்டபின் சக்திவாய்ந்த நிலைகள் கொண்டு அந்தத் தீமைகளை நீக்கும்.

அப்பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… உடலில் உள்ள ஜீவாத்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உள்ளே கொண்டு வரவேண்டும்.

கண்ணன் என்ன செய்கின்றான்…? எல்லாரிடமும் போய்ச் சொல்வான்.

1.இந்திரலோகத்தைக் காட்டி இங்கிருக்கின்ற செய்தியை அங்கே சொல்கின்றான்
2.அங்கிருக்கின்ற செய்தியை இங்கே சொல்கின்றான்… எல்லாவற்றிற்கும் விளக்கம் கொடுக்கின்றான்
3.இந்தக் கண்களின் இயக்கங்கள் தான் அது…!

அதாவது நம் உடலுக்குள் அந்த கண்ணின் நினைவைச் செலுத்தி என் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று சொல்லி இந்த உணர்வைக் கொண்டு வந்து இங்கே அடைத்துவிட வேண்டும்.

ஆனால் வேதனையான உணர்வுகளை உள்ளே விட்டால் உடலிலுள்ள அணுக்கள் என்ன செய்யும்…? சாப்பாடு கிடைக்கின்றது என்றால் சும்மாவா இருக்கும்..? முந்திக் கொண்டு வரும்.

அப்பொழுது இந்த உணர்வு அதிகமாக இருந்தால் நம் உணர்ச்சிகள் அனைத்தும் நம் செயல்கள் அனைத்தும் வேதனையும் ஆத்திரமும் கோபமுமாக மாற்றிவிடுகின்றது.

அப்படி ஆகாமல் தடுக்க வேண்டும் என்று தான் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று எண்ணி இங்கே நிறுத்திவிட வேண்டும் என்று சொல்கிறோம்.

அது உடலுக்குள் வலுப்பெற்றபின் என்ன செய்கின்றது…?
1.கெட்ட அணுக்கள் இருக்கிறது அல்லவா…!
2.அதற்கு சாப்பாடு கிடைக்காது செய்கிறது
3.இழுக்கக்கூடிய சக்தி இல்லாது ஆக்குகிறது.

அது தான் கண்ணன் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு உபதேசித்தான் என்பது. அந்த உயர்ந்த உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்துக் கொண்ட பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உடலுக்குள் படைக்கும் சக்தியாக மாற்றுகின்றது.

மற்ற அணுக்களுக்கு அதனதன் சத்தை இழுக்கக்கூடிய சக்தி இல்லை. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உள்ளுக்கே வலுவாக எண்ணும்போது நம் ஆன்மாவில் இருக்கும் தீமை செய்யும் உணர்வுகளை படிப்படியாக சூரியன் எடுத்துக் கொள்கின்றது. தீமைகளைத் தள்ளி விடுகின்றது.

துணியில் அழுக்குப் பட்டால் சோப்பைப் போட்டு நுரையை ஏற்றி அந்த அழுக்கைத் தள்ளி விடுவதைப்போல் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலுக்குள் செலுத்தப்படும்போது இந்த உணர்வு வலிமை பெற… வலிமை பெற… குழந்தை மேல் வரக்கூடிய வேதனையான உணர்வை இங்கே தள்ளிவிடுகின்றது.

தள்ளிவிட்ட பின் என்ன செய்கின்றோம்…? இந்த இடத்தில் சிந்திக்க ஆரம்பிக்கின்றோம். அவனுக்கு நல்ல சொல்லையும் சொல்கிறோம்.

நீ படித்துக் கொண்டால் நல்லதப்பா… நீ படிக்கவில்லை என்றால் உன்னை நீ எப்படிப் பாதுகாத்துக் கொள்வாய்…? நீ படித்துத் தெரிந்து கொண்டால் உனக்கு நல்லது. நீ தான் உன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

எதிலே குறைவாக இருந்தாயோ அதை நீ இப்படிப் படித்தாய் என்றால் நன்றாக இருக்கும். நீ இப்படிப் படித்து பார்…! இந்த நிலையை இந்த உணர்வைச் சொல்லாகச் சொன்னால் இந்த உணர்வை குழந்தை நுகரும்போது ஓ…ம் நமச்சிவாய.

ஆக… தீமைகளை நீக்கி அந்த அருள் ஒளியை எடுக்கப்படும்போது அங்கே நாரதனாக வந்து சேர்ந்து நம் குழந்தைக்கு ஞானத்தைப் போதிக்கும் தன்மையாக வருகின்றது.

1.அவனைக் கல்வியில் சிறந்தவனாக்குகின்றோம்
2.நம் சொல் அவனை நல்வழிப்படுத்தும் செயலாக வரும்.

தவறாக யாராவது திட்டினால் பதிலுக்கு நாமும் திட்டிப் பேசுகிறோம்… ஆனால் உண்மையை நாம் உணர்த்த முடிகின்றதா…?

 

யாராவது கடுமையாக உங்களிடம் பேசிக் கொண்டே இருந்தால் வேறு ஒன்றுமே செய்ய வேண்டாம்.

“உம்…” கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருங்கள். திட்டிக் கொண்டே இருந்தால் ஆமாம்… ஆமாம்… என்று சொல்லுங்கள்.

ஒரு சிலர் ரொம்பவும் வசனம் பேசிக் கொண்டே இருப்பார்கள்… மோசமான பேச்சுகளையும்… வாயிலே வராத வார்த்தைகளை எல்லாமும் பேசுவார்கள். அவர்கள் சொல்லச் சொல்ல…
ஆமாம்…
ஆமாம்…
சரி…
ஆமாம்..
சரி…! என்றே சொல்லுங்கள்.

உனக்கு மூக்கு இருக்கிறதா… கண் இருக்கிறதா..? மூளை இருக்கிறதா…! என்று என்னென்னமோ பேசுவார்கள்.

அது அத்தனையும் நீயே வைத்துக் கொள்… கண் மூக்கு எல்லாவற்றையும் நீயே வைத்துக் கொள்… “போ……!” என்று சொல்லிவிடுங்கள்.

மயக்கப்பட்டு அப்படியே சொத்… என்று கீழே விழுவார்கள்.

1.நீங்கள் அவர்களைத் திட்டவே வேண்டாம்.
2.எல்லாவற்றையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்…
3.எனக்கு வேண்டாம்… நீங்களே அனுபவித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுங்கள்.

அவர்கள் பேசுவதைக் கேட்டு நீங்கள் வேதனைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அவர்கள் உடலில் உள்ள ஆவி இந்த மாதிரி வேலை செய்யும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் “ஆத்ம சுத்தி செய்து கொண்டே இருந்து விட்டு…” எல்லாவற்றையும் நீயே வைத்துக் கொள்…! என்று சொன்னவுடனே அந்த உடலில் இருக்கும் ஆவி அப்படியே மயக்கப்பட்டுக் கீழே விழுவதைப் பார்க்கலாம்.

இந்த வாக்கினைச் சொன்னவுடனே அது செயலிழக்கும். இப்படிச் சொல்லும் போது
1.அதற்கு நாம் ஒரு நன்மையைச் செய்கிறோம் என்று அர்த்தம்.
2.நாம் தீமை செய்யவில்லை… (சாபம் இடவில்லை)

நாம் வெளிப்படுத்தும் உணர்வுகள் அங்கே பட்டவுடன் அவர்கள் உடலில் அறியாமல் இருக்கக்கூடிய அந்த ஆவி சோர்வடைந்து கீழே விழுந்து எழுந்தால் அவர்கள் “சுய நினைவு” வரும். அப்பொழுது அவர்களை நாம் காக்கிறோம் என்று அர்த்தம்.

உங்களுக்கு இதை வாக்குடன் நான் (ஞானகுரு) சொல்லிக் கொடுக்கின்றேன்.

ஆனால் வழக்கமான நிலைகளில் “இப்படித் திட்டுகிறாரே… தாங்க முடியவில்லை… பொறுக்க முடியவில்லை…!” என்றால் அவர்கள் எண்ணத்தைத் தான் உங்களுக்குள் இழுத்துப் போட்டுக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஏனென்றால் விஷம் எதிலே வேண்டுமென்றாலும் ஊடுருவிச் செல்லும். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே அதிகமாகத் திட்டுகிறார்கள் என்றால் “நீயே அதை வைத்துக் கொள்…” என்று சொன்னவுடனே அந்த உடலில் இருக்கும் ஆவிக்கு இது பலவீனமாகும்… மயக்கமாகும்.

ஆனால் இவர்களுடைய நல்ல சிந்தனை நினைவுக்கு வரும். அந்த உணர்வின் தன்மை கொண்டு அவர்களையும் காக்கின்றோம்.

ஆனால் இந்த வாக்கின் தன்மை அங்கே இயக்கி அவர்கள் உடலில் வயிற்றால் போகும்… உண்மையை உணர்த்தும்.

இது நடந்த நிகழ்ச்சி. என்னுடைய (ஞானகுரு) பெரிய பிள்ளையை மைசூரிலே கட்டிக் கொடுத்திருந்தது. மாப்பிள்ளையின் தம்பியை வேறொரு இடத்தில் கல்யாணம் செய்திருந்தார்கள்.

அந்தக் குடும்பம் கொஞ்சம் போக்கிரித்தனமாக ரௌடித்தனம் செய்யக் கூடியவர்கள். யார்… என்ன… ஏது…? என்று ஒரு முறை இல்லாமல் பேசிக் கொண்டிருப்பார்கள்.

என் பிள்ளையை ரொம்பவௌம் விரட்டிக் கொண்டே இருந்தார்கள். வாயிலே வராத வார்த்தையைப் பேசித் திட்டிக் கொண்டிருந்தார்கள்.

மாமனாரை ஏமாற்றிச் சொத்தை எல்லாம் அபகரித்துக் கொண்டாய்…! என்று எது ஏதோ சொல்லிப் பேசினார்கள். ஆனால் இவர்களோ கஷ்டப்பட்டுச் சம்பாரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இதை எல்லாம் கேட்டுத் தாங்காதபடி என் பிள்ளை என்னிடம் “ஓ…” என்று அழுது கொண்டு வந்து இந்த விஷயங்களை எல்லாம் சொன்னது.

பின் நான் மேலே சொன்னபடி சொல்லி “இந்த மாதிரிச் சொல்லம்மா…” என்று அனுப்பினேன்.
1.திட்டுவதை எல்லாம் உம்… கொடுத்துக் கேள்… சந்தோஷமாகக் கேள்…
2.கடைசியில் இப்பொழுது சொன்னதை எல்லாம் நீயே வைத்துக் கொள் என்று சொல்லிவிடம்மா…! என்று சொன்னேன்.

அதே மாதிரி இங்கிருந்து போனவுடனே நீ நாசமாகப் போவாய்… உனக்குப் பேதியாகும்… நீ அப்படிப் போவாய்… இப்படிப் போவாய்… என்று அங்கே அந்த அம்மா திட்டிக் கொண்டே இருந்திருக்கின்றார்கள்.

என் பிள்ளை அவர்கள் திட்டத் திட்ட சிரித்துக் கொண்டே இருந்தது. எல்லாவற்றையும் நீயே வைத்துக் கொள்…! என்று சொல்லிவிட்டதும் அங்கே தாங்காது பேதியாகி விட்டது. உடல் எல்லாம் வலி ஆகியது. எழுந்திரிக்க முடியவில்லை.

ஆஸ்பத்திரிக்குச் சென்று எல்லாம் ஆனதும்… “கொஞ்சம் விபூதி இருந்தால் கொடு…” என்று அந்த அம்மா என் பிள்ளையிடம் கேட்கிறது.
1.நான் சொன்னதை நானே வாங்கிக் கொள்ள வேண்டும் என்று சொன்னதும் எனக்கு இப்படி ஆகிவிட்டது
2.இனிமேல் நான் யாரையும் இந்த மாதிரித் திட்ட மாட்டேன்… தப்பாகப் பேச மாட்டேன்…! என்று சொன்னது.

பிறகு என்னிடமும் தேடி வந்தார்கள். உங்கள் பிள்ளையை எல்லாப் பேச்சும் பேசினேன். நான் எதை எல்லாம் சொல்லி அவர்களைத் திட்டினேனோ அது எனக்கே வந்து விட்டது. நீங்கள் விபூதி கொடுங்கள்… எனக்கு ஆசீர்வாதம் கொடுங்கள்…! என்று கேட்டார்கள்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இந்த மாதிரி நல்ல வாக்கினைக் கொடுத்தால்… அங்கே நன்மை ஏற்படும். அவர்களும் உண்மையை அறியும் தன்மை வரும்.

பேசியதை அனைத்தையும் நீயே வைத்துக் கொள் என்று சொன்னவுடனே
1.அந்த உணர்வுகள் எல்லாம் அவர்களுக்குள்ளேயே சுழன்று
2.தானே அதை அறியப்படும் போது குற்றத்தை உணர்ந்து கொள்வார்கள்.

இதன்படி நடந்தால் யாம் கொடுக்கும் இந்த உயர்ந்த வாக்கின் வன்மை உங்களுக்குள் கூடுகிறது. அதே சமயத்தில் மற்றவர்களும் அறியாமையிலிருந்து விடுபட இது உதவுகிறது.

மனிதன் பெற வேண்டிய உயர் சக்தியை எடுக்க விடாது மறைக்கப்பட்ட நிலை தான்…! இன்று நடப்பில் உள்ளது – ஈஸ்வரபட்டர்

 

நாம் எடுக்கும் தியானத்தின் மூலம் பலவாக உள்ள நினைவின் ஓட்டத்தை ஒரு நிலைப்படுத்திப் பல நிலை கொண்ட அமில குணத்தையெல்லாம் ஒரு வழிக்கு வர பழக்கப்படுத்தித் “திசை திருப்பும் ஞான வழி பெறுதல் வேண்டும்…!”

அப்படிப் பெற்றால்…
1.தான் எடுக்கும் சுவாச ஈர்ப்பினால் எந்த ஒரு நற்சக்தியின் பால் தன் எண்ணத்தைச் செலுத்துகின்றோமோ
2.அதே நினைவில் சுவாசம் எடுத்து… அதன் வழித் தொடர் நினைவில்…
3.அத்தொடரில் உள்ள உண்மையின் வளர்ச்சியை நிச்சயமாகப் பெற முடியும்.

ஞானத்தின் பால் செலுத்தப்படும் இந்த ஈர்ப்பு குண நலம் அமையப் பெறும் வழித் தொடரில் சென்றால் “எந்த ஒரு நுண்ணிய அலைத் தொடரையும்…” வளர்ச்சி ஞானத்தினால் பெற முடியும்.

அத்தகைய நுண்ணிய அலைத் தொடரிலிருந்து…
1.நம் உடலிலுள்ள அனைத்து அணுக்களுடனும் இந்த நுண்ணிய ஈர்ப்பு அலையின் சக்தி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டு
2.இப்பிம்ப உடலிலிருந்து உயிர் ஜீவ சக்தியைத் தனித்துப் பிரித்துச் சென்று எல்லாவற்றையும் அறிய முடியும்.

அதாவது…
1.ஒவ்வொரு அமில குணங்களின் சேர்க்கையையும் அதன் வட்டத்திலிருந்து உயிர் பெறும் ஜீவ நிலையையும்
2.ஒன்றுடன் ஒன்று கலவைப் பட்டு வளரும் நிலையையும்
3.இப்பூமியில் உள்ள கனி வளங்களின் நிலை அறியவும்
4.கனி வளத்திலிருந்து கசிந்து உருகி வரும் திரவ நிலைகளை அறியவும்
5.இப்ப்பூமியின் பூமத்திய ரேகையில் உள்ள உண்மை நிலைகளையும் அறிய முடியும்.

விஞ்ஞான சாதனை கொண்டு செயற்கை மின் அலையின் தொடரினால் செயற்கை மின் அலையிலிருந்து விஞ்ஞானத்தில் கண்டறியும் ஆற்றலைக் காட்டிலும்
1.இஜ்ஜீவ மின் அலையின் சக்தியை வளர்த்துக் கொள்ளும் மனிதனால்
2.தன் உயிராத்மாவை எந்த இடத்திற்கும் சென்று..
3.பூமியின் மேல் மட்டத்தில் உள்ள நிலைகளை அறிவது போல்
4.இந்தப் பூமியின் உட்கோளங்களில் வளர்ந்து வரும் நிலைகளையும் அறியலாம்.

அது மட்டுமல்ல…!

இந்தப் பூமியின் காற்று மண்டலத்தையும் காற்று மண்டலத்திற்கு அப்பால் உள்ள பால்வெளி மண்டலத்தையும் இந்த நுண்ணிய அலையின் சக்தியை வளர்த்துக் கொண்ட மனிதனால் காண முடியும்.

இந்த உடல் அப்படியே ஒரு இடத்தில் இருந்தாலும்… விட்டுச் சென்ற உடலில் அனைத்து உயிரணுக்களும் இந்த நுண்ணிய மின் அலையின் சக்தியின் ஈர்ப்புடன் இயங்கிடும்.

உடலில் உள்ள தசைகளும் மற்ற எல்லா உறுப்புகளும் அதே நிலையில்… அதாவது…
1.உண்டு கழிக்க வேண்டும் என்ற நிலை இல்லாமல்
2.சுவாசம் எடுத்துச் சுவாசம் விட்டு இருக்கக்கூடிய நிலையும் இல்லாமல்
3.இந்த உடல் பிம்பம் எந்த வகைப் பின்னமும் படாமல் அதே நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும்.

இதை எல்லோராலும் பெற முடியும்…!

ஆனால்
1.மந்திரமும்… மாயமும்…
2.தெய்வீகப் பெரும் சக்தி என்றும்…
3.சாதாரண மனிதனால் முடியாத நிலை என்றும்
4.மனிதன் பெற வேண்டிய உயர் சக்தியை மனிதன் எடுக்க முடியாமல்…
5.எட்டாத நிலைப்படுத்தி மறைக்கப்பட்டு விட்ட நிலை தான்…! இன்று நடப்பில் உள்ளது.

செயற்கையின் மின் அலையை விஞ்ஞானப்படுத்திச் செயலாக்கும் மனிதனால்… தன் அலையின் தொடர்பிலிருந்தே அச்சூரியனின் ஒளி அலையின் ஈர்ப்பினால்… தன் உயிராத்மாவால்… எந்த ஒரு நுண்ணிய அலையின் வளர்ச்சியையும் ஜீவ உடல் கொண்டு மனிதனால் எடுக்க முடியும். இது சாத்தியமே…!

மனித உடலில் பல கோடிக் கோடி உயிரணுக்கள் ஜீவ சக்தியுடன் இயங்கும் பொழுது…
1.உயிராத்மாவின் நிலையுடன் நிறைந்துள்ள பல கோடி உயிரணுக்களும்
2.இந்த அலையின் ஈர்ப்பை எடுக்கும் நிலையினால்
3.மனிதனின் சக்தித் திறன் பலவாக உயரும்.

ஆனால் உடலை விட்டுச் சென்ற ஆவி ஆத்மாக்களுக்கு ஜீவ அணுக்களின் ஜீவ சக்தி இல்லாததினால் மனித ஞானத்தில் செயல்படும் திறனில்லாமல் ஆவி உலக வாழ்க்கை இருந்துவிடுகின்றது.

ஜீவ சக்தியில் ஈர்க்கப்படும் ஞானங்களும் இந்த உயர் மின் அலையின் தொடர்பும் ஜீவனற்ற ஆவி ஆத்மாக்களுக்கு முடியாதப்பா…!

சூரியனின் மின் அலையின் சுவாசத்தை ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுத்து வாழும் நம் வாழ்க்கை அலையில் நாம் உண்டு… கழித்து.. உறங்கி.. நமக்குக் கிடைத்த பல காலமாக நாம் வளர்த்து வந்த இந்த ஜீவ உடல் வாழ்க்கையில் பெற்ற உன்னத சக்தியை அறியாமல்… விரயப்படுத்தித்தான் வாழ்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

பிற மண்டலங்களிலிருந்து வருவதை 27 நட்சத்திரங்கள் நவக்கோள்கள் கவர்ந்து வெளிப்படுத்துவதை சூரியன் கவர்ந்து தன் சுழற்சி வேகத்தால் அந்த அணுக்களில் உள்ள விஷத்தினைப் (அல்ட்ரா வயலட்) பிரித்து விடுகின்றது.

மனிதனுடைய ஆறாவது அறிவோ நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்த நஞ்சினை மலமாக மாற்றி அதை நீக்கிவிடுகின்றது.

இந்த மனித வாழ்க்கையில் எத்தனையோ பேருடன் நாம் பழகுகின்றோம்… பார்க்கின்றோம். ஆனால் சந்தர்ப்பத்தால் அவர்கள் படும் வேதனைகளைப் பார்த்தாலும் அந்த வேதனையான உணர்வுகள் நம் நல்ல எண்ணங்களில் இணைந்திடாது ஆறாவது அறிவு கொண்டு அதைத் தடுக்க வேண்டும்.

1.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
2.அந்த அருள் உணர்வினை நம் நல்ல அறிவில் இணைத்து நல்ல அறிவு மங்கிடாது
3.எதனையுமே தெளிவாக்கிடும்… அந்த அறிந்திடும் தெளிந்திடும் அந்த அறிவை நாம் வளர்த்திடல் வேண்டும்.

ஆனால் வேதனை கொண்ட நிலைகள் கொண்டு விஷத்தின் தன்மையை இதிலே கலந்து விட்டால் இங்கே மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை உங்களால் நுகர முடியாது. நுகர்ந்தாலும் அதை வைத்து உங்கள் வேதனைகளை நிவர்த்தி செய்ய முடியாது.

1.அதாவது பிறிதொரு மனிதன் வேதனைப்பட்ட உணர்வு நம் நல்ல அறிவை மறைக்கும் போது
2.இன்னொரு சாதாரண மனிதன் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து அதை மாற்ற முடியாது.

மாற்ற வேண்டும் என்றால் “வேதனை என்ற நஞ்சினை நீக்கி… அதை ஒளியாக மாற்றிடும்…” அந்த மகரிஷிகளின் உணர்வை நீங்கள் ஏங்கிப் பெற்று உடலுக்குள் இணைக்க வேண்டும்.

மீண்டும் இதைத் தெளிவாக்குகின்றேன்…!

உங்கள் வாழ்க்கையில் நல்லது செய்வதாக எண்ணி ஒரு வேதனைப்படும் மனிதனை உற்றுப் பார்த்து நுகர்ந்து அவர்களுக்கு நீங்கள் நல்லது செய்கின்றீர்கள்… உதவி செய்கின்றீர்கள்…!

ஆனால் உங்களிடமிருக்கும் நல்லது செய்யும் எண்ணத்திற்குள் அவரின் வேதனைப்பட்ட அந்த விஷமான உணர்வு இணைந்து உங்கள் நல்ல அறிவை மறக்கச் செய்கின்றது… மறைத்து விடுகின்றது. இதுதான் சிறு திரை – “சித்திரை…” என்பது.

அந்தச் சிறு திரையை உடனே நீக்க வேண்டும். அதை நீக்க வேண்டும் என்பதற்குத்தான் ஞானிகளின் உணர்வைப் பதிவாக்குகின்றோம்.

உங்கள் நினைவாற்றலை அங்கே ஞானிகளின் பால் ஒன்றச் செய்து இங்கே நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும்போதே அந்தத் துருவ மகரிஷியின் உணர்வுகளை உங்களுக்குள் இணைக்கின்றோம். உங்கள் நல்ல அறிவைக் காக்க இது உதவும்…!

June 2021 உபதேசம்

நாம் பணிய வைக்க வேண்டியது எதை…?

 

ஓ…ம் ஈஸ்வரா என்று சொல்லும் போது பிரணவம்… நாம் எண்ணியதை உயிர் ஜீவன் பெறச் செய்கின்றது. அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்றும் அது எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும் என்று உயிரிடம் வேண்டுங்கள்.

கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருங்கள்.
1.நீங்கள் பெற வேண்டும் என்று நான் (ஞானகுரு) கொடுக்கும் இந்த உணர்வு
2.அந்த உயர்வின் தன்மையைப் பெறக்கூடிய தகுதியைப் பெறச் செய்யும்.

இந்நேரம் வரை உபதேசித்த அந்த ஆற்றல் மிக்க சக்தியை “நீங்கள் எண்ணும் போதெல்லாம் எண்ணியவுடனே அதைக் கிடைக்கச் செய்து…” உங்களுக்குள் துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் அந்த உணர்வுகள் அனைத்தையும் தாழ் பணியச் செய்வதே “எமது ஆசி” (ஞானகுரு).

ஆகையினால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று மேல் நோக்கி நினைவினைச் செலுத்தி உயிரிடம் வேண்டித் தியானியுங்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.

எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்… எங்கள் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும்… நாங்கள் பார்ப்போருக்கெல்லாம் நல்லதாக இருக்க வேண்டும்…! என்று இதே மாதிரி நான் சொன்னதை நீங்கள் எண்ணி எடுத்துப் பாருங்கள்.

உங்களுக்குள் துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் உணர்வுகள் அனைத்தும்
1.அது தாள் பணிந்து… உங்களுக்குள் அது ஒத்துழைத்து… உயர்வான எண்ணங்களுக்கு வழி காட்டியாக அது அமையட்டும்.
2.எதுவும் கெட்டதல்ல… உங்களுக்கு அது வலுவூட்டும்… வழி காட்டியாகவும் அது இருக்கும்
3.கெட்டது என்று அது தான் காட்டுகின்றது… அதை நீக்கிவிட்டு நாம் செல்ல வேண்டும்.

கெட்டது என்று வழி காட்டினாலும் அந்த உணர்வின் தன்மை அது எனக்குள் சேர்ந்து விடுகிறது. ஆனால் வழி காட்டிய நிலைகள்
1.எனக்குள் பணிந்து அந்த நல் வழி காட்டியாக இருக்க வேண்டும்.
2.அந்த நல் வழி காட்டிய விஷம் என்னை ஆட்கொள்ளக் கூடாது.

மெய் ஒளி பெறும் அந்தத் தகுதி கொண்டு நாம் அதைப் பெற வேண்டும் என்பதற்குத் தான் ஆசி வாங்குவது. ஆகையினால் இதை மீண்டும் மீண்டும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

1.அரசனுக்குக் கீழ்படிதல் என்பது கௌரவத்திற்காகத் தான்…!
2.ஒரு பெரியவரைக் கண்டால் அடிபணிதல் வேறு.
3.ஆனால் நமக்குள் துன்பங்களைப் பணியச் செய்வது என்பது வேறு.

ஆகவே மெய் ஒளி வளர்ந்து நமக்குள் தீமை செய்து கொண்டிருக்கும் அந்த உணர்வின் தன்மையைத் தாழ் பணியச் செய்ய வேண்டும் என்பதே ஆசீர்வாதமாகக் கொடுக்கும் அருள் வாக்கின் தன்மைகள்.

நீங்கள் ஒவ்வொருவரும் மெய் ஒளி பெறவேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன் (ஞானகுரு).

“தியானத்தில் சக்தி பெறுகிறோம்…” என்பதை நாம் எப்படி அறிவது…? – ஈஸ்வரபட்டர்

 

தியானத்தின் முறை கொண்டு நம் எண்ணம் ஞானத்தின் ஈர்ப்பு நிலைக்கு வழி பெறும் காலங்களில் வளர்ச்சி நிலை எப்படி இருக்கும்…?

குழந்தைப் பிராயத்தில் குழந்தையின் உடல் மற்றும் அங்க அவயங்கள் உறுப்புகள் எல்லாம் மிருதுத் தன்மையுடன் இருக்கின்றது. பிறகு வளர வளர உடல் உறுப்புகளும் தசை நார்களும் வலுப் பெற்று வளர்கின்றது.

அதைப் போன்று நம் ஆரம்பத் தியானத்தில் நம் எண்ண நிலை எல்லாம் வளர்ச்சி பெற்று.. ஒரு நிலை பெற்று… பக்குவம் எய்தி… அதன் ஈர்ப்பின் வழித் தொடருக்குப் பிறகு பல நிலைகளை நாம் காணலாம்.

நம் எண்ணத்தினாலேயே நாம் எடுக்கும் சுவாசத்தினால்…
1.பல மணங்களை உணரும் பக்குவமும்
2.பல சுவையின் ஈர்ப்பில் உண்ட களிப்பு நிலையும்
3.பல ஒளி அலைகளைக் கண்டுணர்ந்து மகிழும் நிலையும்
4.நம்மின் உருவின் உருவ நிலையைக் காணும் நிலையும்
5.இந்த உலகின் சுழற்சி ஓசையான “ஓ…ம்” என்ற ஒலி ஈர்ப்பின் அலைதனை ஈர்த்துக் கேட்கும் வழித் தொடரின் நிலையும்
6.இதன் வளர்ச்சியில் பல சித்தர்களின் நிலையுடன் தொடர் கொள்ளும் நிலையும்
7.இப்படி ஒன்றின் வளர்ச்சி கொண்டு ஒன்றின் மேம்பாட்டில் தியானத்தின் ஈர்ப்பு வளர்ச்சி நிலை பெற்ற பிறகு
8.சித்தன் நிலையை நாம் அடைய முடியும்.

புகைப்படம் எடுப்பவன் ஓர் பிம்பத்தைப் பலவாக மறு பிம்பங்களை எப்படி எடுத்துத் தருகின்றான்…? ஒரே பிம்பத்தை நிலைக் கண்ணாடியைப் பல கோணத்தில் வைத்துக் காணும் பொழுது நம் பிம்பத்தைப் பலவாகக் (எண்ணிக்கையில்) காணுகின்றோம்.

இதைப் போல் சித்து நிலை பெற்றவர்கள் இந்த உடல் என்னும் கூட்டை…
1.இந்த உடலில் உள்ள உயிரணுவை ஜீவ உயிரை இந்த உடலிலிருந்து பிரித்து
2.இந்த உடலுக்குகந்த பிம்ப உடலின் பிம்பத் தன்மையையும்
3.இந்தக் காற்றிலுள்ள அமில சக்தியை அந்த ஜீவனுடன் கூட்டிக் கொண்டு பல இடத்தில் ஒரே சமயத்தில் செயல் புரிகின்றனர்.

இருந்த நிலையிலிருந்தே ஜீவ உயிரணுவுடன் எந்த மண்டலத்திற்கும் எந்த இடங்களுக்கும் நினைத்த மாத்திரத்தில் சென்றறிந்து வருவதோடு மட்டுமல்லாமல் பல சக்தி அமிலங்களையும் எடுத்து வருகின்றனர்.

விட்டுச் சென்ற உடல் கூட்டின் அவயங்களெல்லாம் அந்த ஜீவ உயிர் இல்லாமலே உடலில் உள்ள பல கோடி உயிரணுக்களுக்கும் அந்த உயிரைப் போன்று அனைத்து அணுக்களும் தாமாகச் சுவாசமெடுத்து இயங்கக்கூடிய சக்தி பெற்று விடுகின்றன.

எல்லா உயிரணுக்களுமே அந்த உடலின் ஜீவனைப் போன்று தானாக இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் அந்த உடல் பிம்பத்திற்குச் செயலாற்றவோ… எண்ணத்தின் ஈர்ப்பின் நிலையோ… அந்த ஜீவ உயிர் வரும் வரை இருக்காது.

“கூடு விட்டுக் கூடு பாயும் நிலை…!” என்று உணர்த்துகிறார்களே அன்றி உண்மைச் சித்தன் இந்த உயிர் ஜீவனுக்கு எத்தனை பிம்ப நிழலையும் அவனால் எடுக்க முடியும்.

அமில குணத்தைச் சேர்ந்த புகைப்படத்தை நம்புகின்றான் மனிதன். பாதரசத்தின் துணையுடன் நிலைக் கண்ணாடியில் தன் உருவத்தை நம்புகின்றான்.

அதே நிலை நம் கண்ணின் கருமணியிலும் உள்ளது… நீரிலும் உள்ளது. தெளிந்த நீரில் நம் பிம்பத்தைக் காண்கின்றோம்.

அதைப் போன்று தான் சித்தனுக்கு உடல் விட்டுப் பிரிந்த தன் உயிர் ஜீவனுடன் எந்நிழல் பிம்பத்தையும் இந்தக் காற்றுடன் கலந்துள்ள அமில குணத்திலிருந்து பிரித்தெடுத்து ஒரே இடத்திலிருந்து பல இடங்களுக்கும் செல்கின்றான்.

இந்த நிலையை உணர்த்தினால் மனிதன் உடலிலிருந்து உயிரை எப்படிப் பிரித்தெடுப்பது…? என்று வினா எழுப்புவான்.

ஒவ்வொரு மனிதனும் தான் எடுக்கும் சுவாச அலையின் ஈர்ப்பினால்
1.உடலின் அனைத்து அணுக்களும் தன் வசப்பட்டு
2.ஒவ்வொரு அணுவும் உயிர் ஜீவனின் சக்தி கொண்ட நிலை பெற்று
3.வாழ்க்கையில் எந்த ஒரு நிலையிலும் மற்ற ஈர்ப்பின் நிலைக்கு அடிமைப்படாமல்
4.எந்த எண்ணமும் தன் எண்ணமாக எண்ணும் முறை பெற்று
5.தியான வளர்ச்சியுடன் எடுக்கும் சுவாச அலையின் ஈர்ப்பில் ஒவ்வொரு நிலையும் வழித் தொடர் பெற்ற பிறகு
6.அந்தச் சித்தனின் நிலை பெறத் தக்க உயிர் ஜீவனின் எப்பிம்பமும் காணும் நிலையை எய்தலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நாம் பிறருடைய தீமைகளைப் பார்க்கும்போது நம் நல்ல உணர்வுகளை அந்த விஷத் தன்மையான உணர்வுகள் மறைத்து விடுகின்றது. (ஒரு திரை போல்)

அப்படி மறைத்ததைச் சுத்தப்படுத்த வேண்டும் என்றால்
1.அந்த மகரிஷிகளின் உணர்வை நாம் கவர்ந்து
2.அவ்வப்போது நம்மை மறைக்கும் அந்தச் சிறு சிறு திரைகளை அகற்றிட வேண்டும்.
3.அன்றன்று அறிவின் தன்மை கொண்டு நாம் தெளிவாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

எதன் துணை கொண்டு…?

அதற்குத்தான் இப்போது இடைமறித்து… இடைமறித்து உங்களுக்குள் ஞானிகளைப் பற்றித் திரும்பத் திரும்ப உபதேசிகின்றேன். மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் என்றால் உங்களுடைய உணர்வின் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டு அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுடன் இணைக்கச் செய்கின்றேன் (ஞானகுரு).

1.உங்கள் ஒவ்வொரு அறிவிலும் (உணர்விலும்) இணைத்த பின்
2.தீமைகளைக் கவராது “அந்தந்த அறிவு” அது தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும்.

அத்தகைய நிலைகளை உருவாக்கினால்தான்… இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளும் காற்று மண்டலத்தில் இருக்கும் நச்சுத் தன்மைகளும்… பிற மனிதன் செய்யும் தவறான உணர்வும்… விஞ்ஞான அறிவால் ஏற்படும் தீமைகளும் நமக்குள் புகாது… நம்மை இயக்காது… தடுக்க முடியும்.

பகுத்தறிவு கொண்டு படித்திடும் விஞ்ஞான அறிவை எழுத்து வடிவில் உற்றுப் பார்த்து அதன் உணர்வை நாம் கவர்ந்து நமக்குள் பதிவு செய்து கொண்டாலும்… இங்கே பூமியிலே பரவிக் கொண்டிருக்கும் உணர்வுகளை நாம் கவர்ந்தாலும்… அது எல்லாம் நம் ஆன்மாவில் இணைந்து கொண்டே உள்ளது.

அதாவது… எப்படி இந்தப் பிரபஞ்சத்தில் தீமைகள் படர்ந்துள்ளதோ அது நம் பூமியான இந்த பரமாத்மாவில் (காற்றிலே) வளர்ந்துள்ளதோ இதைப் போல நம் ஆன்மாவிலும் இது உண்டு.

அதே சமயத்தில் நம் உடலுக்குள் எண்ணிலடங்காத அணுக்கள் ஜீவான்மாக்களாக வாழுகின்றது. ஆகவே இந்தப் பூமியில் எந்த அளவுக்குத் தீமைகள் பரவி உள்ளதோ அந்தத் தீமையின் உணர்வுகளை நம் எண்ணத்தால் (நம் சந்தர்ப்பம்) பதிவாக்கி இருந்தால் அந்தத் தீமையின் அணுக்கள் உடலுக்குள்ளும் விளையும். அந்த அணுக்கள் தீமைகளைத் தான் விளைவித்துக் கொண்டே இருக்கும்.

ஏனென்றால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் இதற்கு முன் நாம் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் எலும்புக்குள் ஊனாக இருக்கின்றது.

அந்த எலும்புக்குள் ஊனாக இருக்கப்படும் பொழுது அதனின் வளர்ச்சி
1.ஒரு மனிதனைக் கண் கொண்டு பார்க்கும்போது அவர் தவறு செய்கின்றார் என்று பதிவாக்கி விட்டால்
2.மீண்டும் அதே நினைவு கொண்டு கண்ணுக்கு வரப்படும்போது
3.எந்த மனித உடலிலிருந்து தவறு செய்யும் உணர்வுகள் அலைகள் வந்ததோ
4.அந்த உருவத்தை நமக்குள் நுகரச் செய்து அதே கோபத்தின் உணர்வுகளையோ அல்லது
5.அவனைக் கண்டு அஞ்சியிருந்தால் அந்த அச்சத்தையோ நமக்குள் செயலாக்குகின்றது.

நமக்குள் பதிவு செய்த இந்த வித்து… “ஊழ்வினை” என்ற நிலையில் வினைக்கு நாயகனாக அந்த உணர்வின் இயக்கமாக்கி நம்மை அதன் வழிகளில் வளர்த்துக் கொண்டுள்ளது.

அதைப் போன்ற தீமைகளை (வினைகளை) மாற்றுவதற்குத்தான் திரும்ப திரும்பச் சொல்லி உங்கள் உணர்வின் ஈர்ப்புகளை ஞானிகளின் பால் கொண்டு வரச் செய்கிறோம்.

குருநாதர் எனக்கு இராஜதந்திரமாகக் கொடுத்த சக்தி

 

எத்தனையோ பேர் எத்தனையோ விதமான கஷ்டங்களில் இங்கே வந்திருப்பீர்கள். குடும்பத்தில் கஷ்டமாக இருக்கும்… பிள்ளை சொன்னபடி கேட்காதிருக்கும்… நோய் வந்து கஷ்டமாக இருக்கும்… உதவி செய்தும் கஷ்டமாக இருந்திருக்கும்… தொழிலில் நஷ்டம் இருந்திருக்கும்… வியாபாரத்தில் மந்தமாக இருக்கும்… இப்படி எத்தனையோ சிக்கல் இருக்கும்.

இந்த எண்ணம் உள்ள அத்தனை பேருக்குமே
1.எந்தெந்த எண்ணத்தில் நீங்கள் வந்தீர்களோ அந்தந்த எண்ணங்கள் மாறி
2.உங்களுக்கு உயர்வான சக்தி கிடைக்க வேண்டும் என்று தான்
3.அருள் உபதேசத்தைக் கொடுத்து இந்த உணர்வை உங்களுக்குள் ஊடுருவச் செய்து
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்கிறோம் (ஞானகுரு).

உங்கள் உடலில் உள்ள எல்லாக் குணங்களிலும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியையும் 27 நட்சத்திரங்களின் உணர்வுகளையும் ஈர்க்கும்படித் தூண்டி… இந்த உணர்வின் தன்மை கொண்டு காந்த சக்தியைப் பெறச் செய்து… எல்லோருடைய உள்ளங்களிலும் மகிழ்ச்சி பெறச் செய்கிறோம்.

உதாரணமாக… குழம்பிலே புளிப்பு உப்பு காரம் துவர்ப்பு எல்லாம் போட்டு ஒரு ருசியாக எப்படிக் கொண்டு வருகின்றோமோ இதே போல் எல்லோருடைய உணர்வுகளிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கும்படி செய்து கொண்டிருக்கின்றோம்.

ஞானிகளைப் பற்றி உபதேசித்து அந்த உணர்ச்சியைத் தூண்டச் செய்யும்போது அந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கிறது.

அப்படிக் கவர்ந்த உணர்வுகளை உங்கள் செவிகளில் படும்படி செய்து உங்கள் உடலுக்குள் இருக்கும் குணங்களுக்குள் இது ஆழமாக ஊடுருவச் செய்து “1008 குணங்களிலும்…” பதியச் செய்கின்றோம்.

1.ஏனென்றால் எனக்கு குருநாதர் எப்படி இராஜதந்திரமாக உள்ளுக்குள் நுழைய வைத்தாரோ
2.அதைப் போல் தான் உங்களுக்குள் இந்த உணர்ச்சிகளைத் தூண்டி… உணர்வின் தன்மையைத் தட்டி எழுப்பி
3.உங்களுக்குள் துன்பத்தை ஊட்டி கொண்டிருக்கும் வேதனைகள் நீங்குவதற்கு இதைச் செய்கிறோம்.

அந்த உணர்வின் தொடரை நீங்கள் மீண்டும் இதே போல் எண்ணி எடுத்தீர்கள் என்றால் காற்றிலிருந்து அந்த மகரிஷிகளின் அருள் ஒளிகளைப் பெற முடியும். உங்கள் துன்பத்தைப் போக்கிக் கொள்ளலாம்.

1.குருநாதர் எனக்குத் துன்பத்தைக் கொடுத்து அந்த ஆற்றலைத் தெரிய வைத்தார்.
2.உங்களுக்குத் துன்பம் வரப்போகும் போது இந்த முறையைக் கையாண்டால் அதனின் இயக்கத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
3.தியானத்தில் இந்தச் சக்தியை எடுத்ததால் இந்தத் துன்பம் போனது…! என்று நீங்கள் அறியலாம்.

ஆக… கஷ்டம் இல்லாமல் நீங்கள் பெறுகின்றீர்கள். “சாமி இலேசாகச் சொல்கிறார்…” என்று அலட்சியமாக இதை விட்டுவிடாதீர்கள். காரணம்…
1.வாக்கினால் யாம் சொல்லும் போது
2.இதை எண்ணி எடுப்பவர்களுக்குச் சீக்கிரம் நல்லதாகிறது.

நீ உருப்படுவாயா…? என்று ஒருவர் நம்மைச் சொன்னால் நீ அப்படியா சொல்கிறாய்… என்று அதே வார்த்தையை நாம் எடுத்துக் கொண்டால் என்ன ஆகிறது…!

நம் வியாபாரத்தில் மந்தம்… கை கால் குடைச்சல்… தலை வலி,,, மேல் வலி என்று உங்களை இப்படிக் கீழே கொண்டு போகிறது.

அதே போல் துன்பத்தைத் துடைப்பதற்குச் “சாமி சொன்னாரே…” என்று நினைத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்தீர்கள் என்றால் இந்தக் காற்றிலிருந்து வரும் அந்தச் சக்தி உதவி செய்யும்.

உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து அந்த ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் சேர வேண்டும் என்று உங்களைப் பிரார்த்திக்கும் போது…
1.சில நேரங்களில் விண்…விண்.. என்று
2.உங்கள் நெற்றியிலோ உடலிலோ இந்த உணர்வுகள் ஏற்படும்.
3.எம்முடைய வாக்கினைப் பதிவு செய்தவர்களுக்கு நிச்சயம் இந்த உள் உணர்வுகள் வரும்.

உங்கள் உடலில் இருக்கும் துன்பங்கள் நீங்க வேண்டும் என்பது தான் என் பிரார்த்தனை. உங்கள் உயிரான ஈசனைத் தான் நான் பிரார்த்தனை செய்கிறேன். உயிர் தான் இந்த உடலை உருவாக்கிய ஆற்றல்மிக்க சக்தி.

இப்படி ஆயிரக்கணக்கானவர்களை நான் பிரார்த்திக்கும் போது அந்த “ஆயிரம் பேரின் சக்தியும்…” எனக்குக் கிடைக்கிறது. குருநாதர் எனக்குக் காட்டிய வழி இது தான்.

ஆகவே பல உணர்வின் தன்மையை எடுத்துச் சூரியன் எப்படி ஒளியாக மாறுகிறதோ அதே மாதிரி நீங்களும் இதைச் செய்து பாருங்கள். உங்களுக்குள்ளும் அந்த அரும் பெரும் சக்தி கூடும். ஆற்றல்மிக்க மெய் ஞானியாக வளர்வீர்கள்.

“பயம்” என்ற அச்ச உணர்வுக்கு இடம் தராத சுவாச அலையுடன் ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

முற்றும் துறந்தவன் முனிவன்…! பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்தால்தான் தெய்வத்தின் ஒளி… மோட்சம் அவனுக்குக் கிட்டும்…! என்ற சொல் நடை முறையில் உள்ளது.

1.முற்றும் துறந்தவன் தான் முனிவன்…! என்றால் அது எதன் அடிப்படை கொண்டு பகர்ந்த பொருள்..?
2.முந்தைய நாட்களில் நம் முன்னோர்களால் வெளியிடப்பட்ட கருத்துக்களின் உண்மைக் கோவையை உணர்ந்தோமா நாம்…?

முற்றும் துறந்த நிலை என்பது வாழ்க்கையில் பற்று… பாசம்… கடமை… இவற்றிலிருந்து விலகித் “தன் நலம் காணத் துறவறம் பூண்டு மெய் அருள் பெறும் நிலை…!” அல்ல.

ஒவ்வொரு ஆத்மாவுக்குள்ளும் நிறைந்துள்ள பல கோடி அணுக்களின் எண்ணத்தின் வளர்ச்சியில் வாழ்ந்திடும் மனிதன்
1.தன் எண்ணத்திற்குள் உந்தப்படும் உணர்ச்சியிலிருந்து
2.அந்த உந்தலுக்கு அடிபடிணியாமல்… “அந்த உந்தலைத் துறக்க வேண்டும்…!”

பயம்… என்ற உணர்வினால் உருளப்படும் கோளம் இந்த மனிதக் கோளம்.

மனிதனின் எண்ணமே முற்பிறவியில் பிறப்பாசை கொண்டு இந்தப் பிறப்பில் கருவிற்கு வருவதனால் பயம் என்ற அச்ச உணர்வு குழந்தைப் பிராயம் முதல் கொண்டே மனித ஆத்மாவுக்கு வருகின்றது.

மனிதனைக் காட்டிலும் அதிகமான இந்தப் பயம் என்ற அச்ச உணர்வு மிருகங்களுக்கும் பட்சிகளுக்கும் அதிகமாக உண்டு. தற்காத்துக் கொள்ளும் சுவாச அலையின் சக்தியும் அதிகமாக உண்டு.

“மனிதனிலிருந்து வந்த மிருகத்திற்கு” அந்த உணர்வின் அலை அதிகமாக… ஒவ்வொரு பிறவியும் எடுத்து மிருகப் பிறவிக்கு வந்த பிறகு அதன் சுவாச அலையின் ஜீவன் கொண்ட உடல் அமைப்பு வளரத் தக்க நிலையிலேயே…
1.இந்தத் தற்காத்துக் கொள்ளும் அமிலத்தின் சக்தி குணம் வீரியப்பட்டு
2.இயற்கையாக அதனுடைய உருவத்திலேயே சில உணர்வுடன் மிருக ஜெந்துக்களும் பறவைகளும் பிறப்பெடுத்து வருகின்றன.

மனிதனின் நிலையுடன் அதிகப்படியான எண்ண அலையின் மோதலினால்
1.தன் எண்ணத்திற்குகந்த… தன் உடலில் ஏற்றிக் கொண்டுள்ள…
2.பல உயிராத்மாக்களின் (ஆவிகளின்) நிலையும் கலந்துள்ளன.

அதுவும் அல்லாமல் ஒவ்வொரு தாய் தந்தையரின் ஆண் பெண் உடலுடன் பிறப்பிற்கு வரக்கூடிய பல உயிரணுக்கள் கர்ப்பம் தரிக்கும் நாட்களுக்கு முதலிலேயே ஏறிவிடுகின்றன.

இப்படிப் பல உயிரணுக்கள் நம் (மனிதனின்) ஆத்மாவுக்குள் உடலில் கலந்துள்ள நிலையில் இந்தப் பயம் என்ற உணர்வின் நிலை அதிகப்பட்டு விடுகிறது.

மனிதனின் உணர்வின் எண்ணத்தைக் காட்டிலும்… மனிதனின் உடலில் உள்ள அணுக்களும் உயிராத்ம அணுக்களும்…
1.தன் செயலுக்கந்த நிலை அந்த உடலில் ஏற்படாத குணம் கண்டவுடன்
2.தன் விடுதலையை எண்ணி அதனுடைய எண்ண வேகங்கள் வரும் பொழுது
3.அதனுடைய உந்தலுக்கு மனிதன் ஆட்பட்டு விடுகின்றான்.

மனிதனுக்குப் பயம் என்ற உணர்வு அற்ற நிலை ஏற்பட்ட பிறகுதான் முனிவன் என்ற நிலையை எய்துகின்றான். மனித ஆத்மாவில் “பயம்” என்ற அச்ச உணர்வுக்கு இடம் தராத சுவாச அலையுடன் ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும்.

1.எந்நிலை கொண்ட இக்கட்டான சூழ்நிலை ஏற்படும் தன்மையிலும்…
2.இந்த மரண பயம் ஏற்படாவிட்டால் அந்த இடத்தில் தெளிவின் வழி கிடைக்கும்.

ஒர் அறையில் ஜீவன் பிரிந்த உடலுடன் நாம் தனித்திருந்தாலும் பயம் என்ற உணர்வை அண்டவிடாமல்… “அதை ஒரு ஜீவனற்ற வஸ்து… பொருள்…!” போன்று நம் எண்ண நிலை இருந்திடல் வேண்டும்.

ஒவ்வொரு மனித ஆத்மாவின் உடலும் உயிரணுக்களும் உயிர் ஆத்ம அணுக்களும் பல உள்ள பொழுது மனிதனுக்கு
1.இந்த மரண பயம் என்ற பயம் ஏற்படாவிட்டால்
2.மனிதனுக்குள் உள்ள இந்த ஆத்மாவே
3.ஓர் மனிதனின் செயலைப் பல கோடி மனிதர்கள் செய்யத்தக்க உணர்வு சக்திகளை
4.மனிதனின் உடலில் உள்ள உயிரணுக்களே உதவி செய்யும்.

தன் நிலை பெற வேண்டும் என்பதின் உட்பொருளின் உண்மை நிலை…
1.தன் நிலை பெறும் மனிதனின் எண்ணத்திற்கு
2.தன் நிலைக்கொப்ப அனைத்து உயிரணுக்களும் ஒன்று போல் சக்தியை
3.அந்த (அவனின்) வலுவின் வலுவுடன் கூட்டச் செய்யும்.

பல நினைவுடைய மனித ஆத்மாவின் உடலில் உள்ள உயிரணுக்களும் அதனதன் நினைவின் வளர்ச்சியின் செயலுக்குத் தான் “பல நினைவுடன்…” உள்ள மனிதனுக்கு உதவி புரியும்.

மிருகங்களைக் காட்டிலும் மனிதனின் எண்ணம் வளர்ச்சி பெற முடியும் என்ற அடிப்படையில் தான்
1.சம நிலை கொள்ளும் மனிதனுக்கும் சாந்த குணம் கொண்ட
2.பசுவைப் போன்ற சில பிராணிகளுக்கும் அதனின் சூலில் ஒவ்வொரு சிசு பிறக்கின்றது.

ஆனால் பல பல எண்ணங்கள் கொண்ட உணர்வின் இயக்கத்தால் மனிதனுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளும் அதற்கு மேற்பட்ட மூன்று நான்கு ஐந்து என்ற எண்ணிக்கையில் குழந்தைகளும் உருவாகக் காரணமாகின்றது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

“சித்ரா பௌர்ணமி…” அது எப்படி ஒளியாக இருக்கின்றதோ அதைப் போல் நம் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிட வேண்டும்.

ஆனால் பௌர்ணமி அன்று முழுமையாகப் பிரகாசித்தாலும் அதற்கடுத்து நாள் மற்ற கோள்களின் தன்மைகள் சூரியனிலிருந்து வரக்கூடிய ஒளிக்கதிர்களை மறைத்தால் அந்த நிழல் பட்டு ஒளி மங்கத் தொடங்குகின்றது.

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்று அறிந்திடும் அறிவாக கார்த்திகேயா என்று நாம் அறிவின் தெளிவாக இன்று இருக்கின்றோம்.

ஆனால் ஒரு மனிதன் வேதனைப்படும்படியான சொல்களைச் சொல்லும்போது அந்த உணர்வை நுகர்ந்தால் நம் நல்லறிவு இங்கே இருண்டு விடுகிறது.

நல்ல குணத்துடன் தான் நாம் இருக்கின்றோம். அந்த நல்ல குணம் கொண்டு தான் வேதனைப்படுபவரை உற்றுப் பார்க்கின்றோம்.
1.ஆனால் நாம் நுகரும் வேதனைப்படும் உணர்வுகள்
2.நல்ல அறிவை மேலே மூடுகின்றது திரை போன்று…!

ஏனென்றால் எந்தக் குணத்தை கொண்டு எண்ணுகின்றோமோ இந்த உணர்வின் தன்மை இங்கே உண்டு. அந்த உணர்வின் தன்மை கண்ணுக்குள் தான் காட்டுகின்றது. ஏனென்றால் முதலில் கண்கள் வழியாகத் தான் நமக்குள் எதுவுமே பதிவாகின்றது.

கண்ணால் பதிவாகும்போது…
1.“ஒரு தவறு” என்று இருந்தால் அந்த உணர்வின் தன்மையை நாம் நுகரும்போது எண்ணமாகின்றது.
2.அதாவது கண்களால் பதிவானது உயிரிலே நுகரும் போது அந்த எண்ணங்கள் வருகின்றது.
3.ஆனால் பதிவானதை எண்ணும்போது மீண்டும் கண்ணுக்கே வருகின்றது (சொல்வது அர்த்தமாகிறதல்லவா).

“எனக்கு நன்மை செய்தான்…” என்று எண்ணும்போது அந்த மனிதனின் நினைவு கண்ணுக்கு (திரைப்படம் போல்) வருகின்றது. அப்பொழுது மகிழ்ச்சியாக இயக்கச் செய்கின்றது.

அதே சமயத்தில் “தப்பு செய்திருக்கின்றான்…” என்றால் கண்ணிலே அவனைப் பார்த்தவுடனே… நமக்குள் பதிவான இந்த எண்ணங்கள் “இவன் எனக்கு துரோகம் செய்தான் பாவி…!” என்ற வெறுப்பின் உணர்வை ஊட்டுகின்றது.

1.அது தான் கண்ணால் பதிவு செய்வதும்
2.கண்ணால் பதிவானதை மீண்டும் எண்ணும் போது எண்ணத்தால் நம்மை இயக்குவது என்பது
3.(அதாவது அந்த எண்ணம் தான் நம்மை அடுத்து இயக்குகிறது)
4.எண்ணம் என்பது உணர்வுகள் உணர்ச்சிகள் தூண்டுவது.

ஆகவே புறத்தில் இருப்பதை நாம் நுகர்ந்த பின் இந்த உணர்வின் தன்மை நமக்குள் இயக்குகின்றது. இதைப் போன்ற நிலைகள் நமக்குள் தீமைகளாக உருவாகாதபடி துருவ தியானத்தில் எடுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு நிமிடமும் எடுத்து நீங்கள் சீராகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தரையில் அழுக்கு இருந்தால் துடைத்துவிடுகின்றோம் நம் உடல் மீது அழுக்கு இருந்தால் துடைத்து விடுகின்றோம். துணியில் அழுக்குப் பட்டால் துடைத்து விடுகின்றோம்.

ஆனால் நம் ஆன்மாவில் படும் அழுக்கினைத் துடைக்கின்றோமா…! அதைத் துடைத்துப் பழக வேண்டும். இல்லை என்றால்… அழுக்கு சேர்ந்தால்… நம் மனம் இருளாகிவிடும்.

முழு நிலாவாக இருக்கும் சந்திரன் அதற்கடுத்து மற்ற கோள்களின் மறைவு வர…வர வர…வர பௌர்ணமி சுருங்கிச் சுருங்கிக் கடைசியில் அது சிறிதாகி விடுகின்றது.

இதைப் போல் தான் நம்முடைய மனிதனின் வாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் குரோதம் பழி தீர்த்தல் பழி வாங்குதல் என்ற இந்த உணர்வுகள் வந்து விட்டால் நம் நல்ல குணங்கள் முழுமையாகத் தேய்ந்து விடுகின்றது.

ஆனால் உயிரின் உணர்வுடைய கடைசித் தொக்குகள் உண்டு. அதாவது உயிரணு விண்ணிலிருந்து பூமிக்குள் வந்து தாவர இனச் சத்தைக் கவர்ந்து ஆரம்பத்தில் எப்படிப் புழுவானதோ அதே போல நல்ல குணங்கள் தேய்ந்து விட்டால் உயிரின் தன்மையில் இருண்டுவிடும்.

1.அப்படி இருண்டு விட்டால் விஷம் என்ற நிலைகள் ஆகி
2.அந்த விஷத்தின் உணர்வின் துணை கொண்டே அடுத்த உடல் பெறும் தன்மை அடைந்து விடுகின்றது.

ஆகவே மனிதனாக இருக்கும் நாம் மீண்டும் தேய்பிறையாகக் கூடாது. அருள் ஒளி பெற்ற அருள் ஞானியின் உணர்வை நமக்குள் வளர்த்து இனி என்றுமே ஏகாந்த நிலை என்ற பிறவி இல்லா நிலை பெறுவதே இந்த மனித உடலின் முழுமை…!

நான் யார்…? நம் உடல் என்று அல்ல…! உயிரால் வளர்க்கப்பட்டது தான் மனிதனின் உடல்.

1.உயிருடன் (ஒன்றி) இருக்கப்படும்போது நான் என்று வருகின்றது.
2.நான் நானாக அந்த நானாக (உயிராக) வேண்டும்.
3.உயிரின் உணர்வுகள் நம்முடன் ஒன்றி அந்த உணர்வின் தன்மை இணைந்து வாழ்ந்தால்தான் “நான் நானாகின்றேன்…!”

குருவிடம் ஆசி பெறும் முறை

 

எதை எண்ணி ஏங்கி நீங்கள் வந்தீர்களோ அந்த ஏக்கத்திற்கொப்ப உயர்ந்த ஞானிகளின் அருள் உங்களுக்குள் படரும். துன்பத்தை விளைவிக்கும் நோயோ துன்பத்தை விளைவிக்கும் சொல்லோ அது எல்லாம் நீங்க வேண்டும் என்று தான் உங்களுக்கு நான் (ஞானகுரு) அருளாசி கொடுக்கின்றேன். அதே உணர்வுடன் நீங்கள் எண்ணி அதைப் பெற்றால் அந்த பலனைப் பெற முடியும்.

மாம்பழத்தைச் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் அதை வாங்கக் கடைக்கு அந்த உணர்வு உங்களை அழைத்துச் செல்கிறது.

அதே போல்
1.மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடலுக்குள் படர வேண்டும்
2.எங்கள் உடல் நோய் மன நோய் நீங்க வேண்டும்
3.எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்
4.எங்கள் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும் என்று ஏங்கினால்
5.நான் கொடுக்கும் அந்த அருள் சக்தி உங்களுக்கு எளிதில் கிடைக்கும்.

அதை விட்டுவிட்டு சாமி…..! என் துன்பம் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறதே… நீங்கள் தான் கடவுளாக இருக்கிறீர்கள்… என்று என் காலில் விழுந்தீர்கள் (அடிபணிந்தீர்கள்) என்றால்
1.உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்கிறீர்கள்
2.நான் உபதேசித்ததை வீணாக்குகிறீர்கள் என்று தான் அர்த்தம்.

பெரியவர் என்று எண்ணி சாமியை (ஞானகுரு) உயர்த்தி விட்டு உங்களைத் தாழ்த்தி விடாதீர்கள். உங்கள் உணர்வின் உணர்வின் எண்ணத்தை உயர்த்துங்கள்.
1.மகரிஷிகளின் உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் செலுத்துங்கள்.
2.உங்களை அறியாது ஆட்டிப் படைக்கும் அந்தச் சக்தியைத் தாழ் பணியச் செய்யுங்கள்.
3.இது தான் ஆசீர்வாதம்…! எனக்குக் குருநாதர் காட்டிய நிலைகள் அது தான்.

மெய் ஒளியின் தன்மையை நமக்குள் கூட்டி நம் எண்ணம் சொல் செயல் அனைத்தையும் புனிதம் பெறச் செய்ய வேண்டும்.

ஒருவர் தீயதின் நிலைகளினால் துன்பப்படுகின்றார் என்றால் நம் சொல் அந்தத் தீயதிலிருந்து அவரை மீட்டி உயர்வான நிலைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.

இந்த இயற்கையின் தன்மை நாம் எதை எடுக்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை அது நிச்சயம் வேலை செய்யும்.

ஆகையினால் இந்த உபதேசத்தைக் கேட்டுணர்ந்தவர்கள் பொறுமையும் பொறுப்பு கொண்டு “மற்றவர்களை முந்தி விட்டு நாம் முதலில் ஆசி பெற வேண்டும்…” என்ற எண்ணத்திற்கு வராமல் எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிறுத்தி வாருங்கள்.

எவ்வளவு நேரம் பொறுமையாக இருந்து…
1.மற்றவர்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ
2.அந்த அத்தனை ஆற்றலையும் நீங்கள் பெறுகின்றீர்கள்.
3.நீங்கள் இருந்த இடத்திலிருந்தே அந்தத் தகுதியை நீங்கள் பெறுகின்றீர்கள்.

அவசரப்பட்டோ… வேகமாக வீட்டுக்குப் போகவேண்டும் என்றோ… அந்த வேக உணர்வில் இல்லாதபடி இந்த அருளைப் பெற வேண்டும் என்று இந்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆகவே வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த அருள் உணர்வைப் பெறும் தகுதியைக் கூட்டி எல்லோரும் உயர்ந்த சக்தியைப் பெற வேண்டும் என்று எண்ணுவதே நல்லது.

ஏனென்றால்… பிறர் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணினால்
2.நாம் முதலில் நலமாகின்றோம்
3.அத்தகைய மெய் உணர்வுகள் நமக்குள் வளர்ந்து நம் சொல்லின் தன்மை நமக்கு நல்லதாகின்றது.

நம் சொல்லைப் பிறர் கேட்டாலும் அவர்கள் உள்ளங்களிலும் மகிழச் செய்கிறது. அந்த மகிழ்ச்சியின் தொடர் அவர் நம்முடன் இணைந்து செயல்படும் தன்மையும்
1.நாம் போகும் நிலைகளுக்குத் தடையின்றி வழிப்படுத்துவதற்கும்
2.தடையின்றி வியாபாரம் நடத்துவதற்கும்… நம் காரியங்களை நடத்துவதற்கும்
3.தடையற்ற நிலையில் நாம் என்றுமே மகிழ்ச்சியுடன் வாழ உதவியாகிறது.

ஆகையினால் ஆசீர்வாதம் வாங்கும் போது இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்குத் துன்பம் வந்தால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடல் நலமும் வளமும் பெற வேண்டும் எங்கள் சொல்லுக்குள் இனிமை பெறவேண்டும் எங்கள் செயல் எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணிப் பழக வேண்டும்.

வியாபாரத்திலேயோ குடும்பத்திலேயோ நல்லதை எண்ணி எங்கே போனாலும் இந்த முறைப்படி செய்யுங்கள்.
1.நான் (ஞானகுரு) கொடுக்கும் இந்த ஆசீர்வாதம் உங்களுக்குள் பின் தொடர்ந்து
2.எப்பொழுதுமே உங்களுக்கு உறுதுணையாக இருந்து உங்களைக் காக்கும்
3.உங்களுக்கு உயர்வினை ஊட்டும்… மெய் ஒளியை எட்டும் அந்தத் தகுதியையும் உருவாக்கிக் கொடுக்கும்.

பக்திக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மனிதன் தன் ஞானத்தின் வளர்ச்சிக்குக் கொடுக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

இந்த மனிதப் பிறப்பை எடுக்கவே நம் வாழ்க்கையில் காணும் முறைப்படி கர்ப்பத்தில் பத்து மாதம் இருந்து பிறப்பெடுத்து வாழ்ந்து மடிந்து மீண்டும் இதே நிலை என்ற உணர்வுகளும் இது நாள் தொட்டு மனித ஆத்மாவின் உயிர்ப் பிறப்பின் வளர்ச்சி நிலையின் தத்துவ நிலைகளும் உண்மையை உணர்த்தி மனிதனுக்கு நல் வழி காட்டவில்லை.

தாவர வர்க்கமாகி அத்தாவர குண ஈர்ப்பில் வளர்ந்த நிலையில் வளர்ந்த நிலை என்பது…
1.தாவரங்களிலேயே எண்ணிலடங்கா பல கோடி இன வளர்ச்சியுண்டு.
2.ஒன்றிலிருந்து மாறுபட்டு மாறுபட்டு மீண்டும் அந்தத் தாவர இனமே மற்றொன்றாகின்றது… வளர்ந்து கொண்டேயுள்ளது.

இந்தத் தாவரங்களில் பல அபூர்வ உன்னத அமிலக் குணத்தின் ஈர்ப்பில் அது வளர்ந்து வாழ்ந்து அது மடிந்த பிறகு மீண்டும் இம்மண்ணில் அத்தாவர இனத்துடன் இம்மண்ணின் ஈர்ப்புக் குணமும் சேர்ந்து மற்றொரு குணமும் பெறுகின்றது.

இது மடிந்த நிலையில் இதிலிருந்து வெளியாகும் ஆவி அமிலம் தன் இனத்துடன் இனமாகச் சேரும் பொழுது… ஒன்றின் மேல் ஒன்று பட்டு கன நிலை ஏற்பட்ட பிறகு… பூமியின் ஈர்ப்பில் அதற்கு மேல் கனத் தன்மை கொண்ட தன் இன உலோகமுடன் அது கலந்து விடுகின்றது.

இப்படியே பூமியின் காந்த ஈர்ப்பின் ஆவி நிலையான இவ்வெட்கையின் வளர்ச்சி தாவர நிலையிலிருந்து பிரிந்த அமில குணத்தில் சக்தி கொண்ட வலுவாக மனித வர்க்கங்கள் ஆரம்பக் கதியில் தோன்றியது.

அப்படித் தோன்றியிருந்தாலும்… இன்றைய மனிதன் ஒன்றிலிருந்து ஒன்றாக மனிதனிலிருந்து மனிதன் பிறக்கும் இன்றைய உலகில்…
1.தாவரங்களை எப்படி நாமாகப் பயிர் செய்து
2.அதன் மகசூலிலிருந்து மீண்டும் மீண்டும் அதன் மகசூலை எடுக்கின்றோமோ
3.அதன் நிலை போன்ற வழி நிலையில் மனிதக் கருக்கள் தோன்றி வந்தன. (மக்கள் தொகைப் பெருக்கம்)

இன்றைய நாளில் நாம் பயிர் செய்யும் நிலங்களில் பல காலங்களுக்கு ஒரே இனப் பயிரைப் பயிர் செய்யும் பொழுது அந்தப் பூமியின் ஈர்ப்பில் உள்ள சக்தி குறைந்து அந்த நிலத்தின் பலன் நிலை குறைவுபடுகிறது அல்லவா…!

அதைப் போன்று ஆரம்பக் கதியில் உயர்ந்த உயிரணுவாகப் பல சக்தி அமிலத்தைக் கூட்டிக் கூட்டி மனிதனாகிப் பிறப்பு மாறி மாறி… அவன் எடுக்கக்கூடிய எண்ணத்தின் ஈர்ப்பின் நிலையினால்
1.மனித அமில குணமுள்ள நாள் வரை மனிதக் கருவில் உதித்து வாழ்ந்து மனிதனாக உள்ள நிலையில்
2.மிருகக் குணத்தில் வாழும் மனிதன் நிச்சயம் அடுத்த பிறப்பில் மிருகமாகின்றான்.

மிருகமாகி… அதன் சுழற்சி வட்டத்தில் ஓடி மீண்டும் மிகவும் ஈன நிலையான புழு பூச்சியாகி… அந்த இனத்தின் சுவாச நிலையில் மீண்டும் பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் மனிதனாக வரக்கூடிய தன்மை ஒரு சாரருக்கும் மிருக நிலையிலிருந்து அதன் சுவாச குணத்தில் மனிதனாகும் சில அபூர்வ சக்திகளின் மனிதனாகும் வழித் தொடரும் சிலருக்கு உண்டு.

இதற்கெல்லாம் அப்பாற்பட்ட சக்தியான புதிய உயிரணுவே… அத்தாயின் கருவிற்குத் தோன்றக்கூடிய வாய்ப்பு நிலையும் பல உயிராத்மாக்களுக்கு வந்து வாய்க்கின்றன. இந்த நிலையைப் பெறுவது என்பது பல கோடியில் ஒன்றாகத் தான் இருக்குமே அன்றி எல்லா உயிரணுக்களும் அப்படி வளர்வதில்லை.

மனிதனாக உள்ள காலங்களில் ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு ஊர்… நாடு… தேசம்… என்ற நிலையிலும் அங்குள்ள மனிதர்களின் எண்ண வளர்ச்சியிலும் உடல் உருவம் அனைத்திலுமே அங்குள்ள பூமியின் ஈர்ப்பின் சுவாசத்தினால் மாறு கொள்கின்றனர்.

1.ஒரு சாரார் பிறந்து வளர்ந்து தன் ஜீவித வாழ்நாள் எல்லாம் கிடைக்கப் பெற்று அதே சுழற்சியில் மடிகின்றனர்.
2.இன்னும் சில சாரார் தன் ஜீவிதத்துடன் அறிவாற்றலின் வளர்ச்சி மேம்பாட்டில் பலவற்றை அறிய எண்ணி வாழ்கின்றனர்.
3.இன்னும் சில சாரார் தன் சக்தியின் அறிவைக் கொண்டு புதிய ஆற்றல் படைப்புகளை ஆராய்ந்து செயலாக்கிக் காட்டுகின்றனர்.

இப்படி மனித ஆத்மாக்களின் எண்ணமே அதன் எடுக்கும் வளர்ச்சியில் மேன்மை கொண்டு அந்த மேன்மையின் சக்தியை ஈர்க்கும் பக்குவத்தில் செலுத்தினால் தான் அது வளர்ச்சியின் பாதையாகின்றது,

ஏனென்றால்…
1.மனிதனின் உடலிலுள்ள உயர் காந்த அலையின் சக்தியான ஜீவ உயிர் உள்ளதினால்
2.நாம் எந்த சக்தியை ஈர்த்து எடுக்கின்றோமோ அதன் பலனை நம் உயிராத்மா ஈர்க்கக்கூடிய நிலை உண்டு.
3.ஆக.. காந்த மின் அலை கொண்ட உடலப்பா மனிதனின் ஜீவ உடல்.

விஞ்ஞானத்திற்குச் செயலாக்கக் காந்த மின் அலையுடன் உலோகங்களின் சக்தி அமிலத்தைப் பூசி அதிலிருந்து சூரியனின் ஒளி அலைகளில் வரும் மின் அலைகளைத் தன் ஆராய்ச்சிக்குகந்த நிலைக்கும் தான் செயலாக்கும் விஞ்ஞானக் கருவிகளின் நுட்ப வேலைகளுக்கும் எடுத்துக் கொள்கின்றனர்.

இன்றைய விஞ்ஞான மனிதன்…
1.சூரியனின் ஒளி அலையில் உள்ள சக்தி அலைகளைப் பிரித்தெடுத்து
2.அதன் தொடர் அலையிலிருந்து தான் பல விஞ்ஞானச் சாதனைகளைப் புரிகின்றான்.

இதை யாரும் மறுக்க முடியாது…!

அதே மின் அலையுடன் காந்த சக்தியின் ஈர்ப்பின் ஜீவ உயிராத்மாவான உடலைக் கொண்ட நாம்… நம் எண்ண அலையை எதெனெதன் பால் செலுத்தி அதீத ஈர்ப்பின் எண்ணத்தை நம் உயிராத்மா ஈர்க்கும் வழித் தொடர் பெற்றால் விஞ்ஞான சாதனையில் கண்டு மகிழும் அனைத்துச் சக்தியும் நம் உயிராத்மாவினால் காண முடியும். அந்தச் சக்தி நம் உயிருக்கு உண்டு.

இதன் வழித் தொடரில் தான் சித்து நிலையும்… சப்தரிஷியின் நிலையும் எற்பட்டதேயன்றி இன்றையக் காலத்தில் பிரித்து இருக்கும் பக்தி முறையின் நெறிப்பாட்டில் இல்லை.

1.மனிதனையும் தெய்வத்தையும் வேறுபடுத்திக் காட்டி
2.மனிதனின் எண்ணத்தையே குன்றச் செய்துவிட்டனர்…
3.தெய்வத்தின் பக்தி பூண்ட “அருள் நெறித் தொண்டர்கள் என்பவர்கள்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒருவருக்கு நாம் உதவி செய்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

நம்மால் அந்த உதவி பெற்ற மனிதனோ உதவி செய்ததற்குண்டான நன்றியைக் கடைசியில் (உடலை விட்டுப் பிரியும் போது) எண்ணுகின்றான். பிரமாதமாக… எனக்கு மகராசனாக உதவி செய்தார் என்று…!

அந்த உடலை விட்டு நீங்கும் போது… உதவி செய்தவரை எண்ணி அந்த உணர்வின் வலுக் கொண்டால் உதவி செய்த நம் உடலுக்குள் அந்த ஆன்மா வந்து விடுகின்றது.

நம் உடலுக்குள் வந்து விட்டால் அவன் பெற்ற துயரமோ துன்பமோ நோயோ அவை அனைத்தும் நம் உடலுக்குள் இயக்கத் தொடங்குகின்றது. நம்மையும் அது நலிவடையச் செய்துவிடும்.

இதைப்போன்ற நிலைகளை நாம் தடுக்க வேண்டுமென்றால்
1.அந்த மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

நாம் எண்ணத்தால் எண்ணுவது அனைத்தும் நமக்குள் ஜீவ அணுக்களாக மாறுகின்றது. நாம் பிறருக்கு உதவி செய்திருந்தால் பற்றுடன் அந்த ஆன்மா நமக்குள் ஜீவான்மாவாக வந்து அவர் படும் துயரத்தை நமக்குள் உருப் பெறச் செய்து விடுகின்றது.

இது போன்ற நிலைகளை அடக்க வேண்டும் என்றால்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து நமக்குள் வலுவாக்கிடல் வேண்டும்.
2.நம்மைப் பார்ப்பவர்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.மலரைப் போல் மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் அவர்கள் பெற வேண்டும்
4.அவர்கள் குடும்பத்தில் உள்ளோர் எல்லா நலமும் பெற வேண்டும்.
5.நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
6.அங்கே பணி செய்பவர்களெல்லாம் சகோதர உணர்வுகள் பெற வேண்டும்.
7.எங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
8.நாங்கள் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எண்ணி
9.நமக்குள் பகைமையற்ற உணர்வினை வளர்க்க வேண்டும்.

இது போன்ற நல் உணர்வுகளை நமக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும். அதைக் கணங்களுக்கு எல்லாம் அதிபதியாக்க வேண்டும். அதாவது பிறர் தீமையை அகற்றும் அந்த உணர்வின் எண்ணத்தைக் கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும். அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் அதிபதியாக்க வேண்டும்.

உயிர் இருக்கிறதா இல்லையா என்பதை அறிய மூச்சுக் காற்றைத் தான் பார்க்கிறோம்… அந்தக் காற்றின் சூட்சமம் என்ன…? – ஈஸ்வரபட்டர்

 

ஆதிசக்தியின் சக்திக் குழந்தைகளான எல்லாமின் எல்லாமாக இறை சக்தி நிறைந்துள்ளது. ஒவ்வொரு சாராரும் இறைவனை அவரவர்கள் ஒவ்வொரு வழி கொண்டு வணங்குகின்றனர்.

நாஸ்தீகம் பேசுபவர்கள் (கடவுள் இல்லை என்பவர்கள்) இறை சக்தியைக் காட்டச் சொல்கின்றனர். எல்லா ஜீவராசிகளும்.. எல்லாமும் இறைவன் தான்…! என்றாலும் இறைவனை நாம் காண முடிகின்றதா…?

காட்சி:-

முதுகில் அரிப்பெடுத்த ஒருவர் அரிப்பெடுத்த இடத்தைத் தன் கையால் கீற முடியாமல் மற்ற உபகரணத்தை எடுத்துக் கீறுவதைப் போன்றும்… முதுகைச் சுவற்றில் தேய்ப்பது போன்றும் காட்சி தருகின்றார்.

விளக்கம்:-

தன் முதுகு தான்… ஆனால் தன் முதுகைத் தானே சொறிவதற்கு முடிவதில்லை. அந்த இடத்தில் என்ன உள்ளது…? என்று பார்க்கவும் முடிவதில்லை.

ஆனால் தனக்குச் சொந்தமான முதுகு தான். அதில் ஏற்படும் நமைச்சலையும் உணர்ச்சிகளையும் உணர முடிகின்றது.

அதைப் போன்று ஒவ்வொரு உயிரினத்திலும் அவ்வுயிரணு தோன்றிடவே
1.ஆண்டவனின் சக்தி ஆவியாக… உயிர் கொண்டு இருந்து தான்
2.அனைத்து ஜீவன்களுமே வாழுகின்றன.
3.இப்படி இருக்க… ஆண்டவன் என்ற தனித்த பிம்பத்தைக் காட்டினால் தான் ஆண்டவன் என்று உணர முடியுமா…?

ஆகவே ஆண்டவனின் அருள் சக்திக்குகந்த செயல்படும் ஜீவன்களாகத் தான் ஒவ்வொரு ஜீவனும் ஜீவித்து வாழ்கின்றது.

இதை உணராமல்… தனக்கு எந்த அளவு சக்தி நிலை உள்ளதோ அந்த நிலையில் எடுக்கும் செயல் வாழ்க்கை தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும்… “அவன் எடுக்கும் சுவாச எண்ணம் கொண்டு செயல்படுகின்றது…”

1.நுண்ணிய சிறு கருவிகளை…
2.நுண்ணிய சிறு உறுப்பின் துணை கொண்டு தான் அதன் வேலைப்பாடு செய்ய முடிகின்றது.
3.கனம் கொண்ட பெரிய உறுப்புகளின் செயலுக்கு
4.அதன் செயலுக்குகந்த வலுவான சாதனப் பொருள் கொண்டு தான் அந்தப் பொருளை உருவாக்க முடிகின்றது.

அதைப் போன்றுதான் நாம் எடுக்கும் குறுகிய எண்ணத்தின் வளர்ச்சி கொண்ட சுவாசமாக இருந்தால்… அதன் தன்மைக்குகந்த குறுகிய ஞானம் கொண்ட வாழ்க்கை தான் நமக்கு அமையும்.

1.எண்ணத்தின் வலு…
2.எதன் அடிப்படையில் எதன் சக்தித் திறன் கூடுகின்றதோ
3.அதன் செயல் ஞானம் தான் நமக்கும் கிட்டும்.

எண்ணத்தின் உயர்வை இந்த உடல் என்ற ஆவியுடன் கூடிய ஆத்ம உயிர் இந்தப் பிம்பத்தில் உள்ள பொழுதே நம் சுவாச அலையை உயர்ந்த ஞான எண்ணமுடன் செலுத்தி எடுப்போமானால்… இப்பொழுதுள்ள ஜீவ சக்தி கொண்ட இந்த உடலில் எடுக்கும் ஞான அலையைக் காட்டிலும் “உயர்ந்த ஞான அலையை நாம் பெற முடியும்…”

இந்த மனிதப் பிறவியில் (உடலில்) இருக்கும் பொழுது தான் அதைச் செயல்படுத்த முடியும். ஆவி நிலையிலிருந்து பெற முடியாது.. மிருகங்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் அந்தத் தகுதி கிடையாது.

காட்சி:-

ஒரு பந்து நீரில் மிதந்து ஓடிக் கொண்டே உள்ளது. அந்தப் பந்தில் சிறு துவாரம் ஏற்பட்டவுடன் பந்தில் உள்ள காற்று பிரிந்து அந்தப் பந்தானது நீரின் உள் பாகத்திற்கு நிலத்திற்குச் சென்று விடுகிறது.

விளக்கம்:-

ஆக… இந்த உடல் என்ற காற்றடைத்த இந்தப் பந்து இந்த உடலில் உள்ள உயிர் ஆவி பிரிந்தவுடன்… நடக்கவோ நிற்கவோ முடியாமால் ஜீவனற்று… இந்தக் காற்று பிரிந்தவுடன் நிலத்துடன் கனத்து ஐக்கியப்பட்டு விடுகின்றது.

அதைப் போன்று இந்தக் காற்றின் அலை சக்தியை
1.நம் சுவாச நிலை கொண்டு நம் உடல் ஆத்மா மட்டும் வாழ்வதோடு அல்லாமல்
2.நம் எண்ணத்தின் ஆத்ம வலுவின் சக்தியும் வாழுகின்றது.
3.அதன் சக்தித் திறனை வழிப்படுத்தித் தருவது தான்
4.இங்கே ஈஸ்வரபட்டனாகிய யான் வெளிப்படுத்தும் இந்தத் தத்துவத்தின் உண்மை ஞான வழித் தொடர்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

உதாரணமாக இரண்டு பேர் கோபத்துடன் சண்டை போடுகின்றார்கள். அவர்களை நாம் பார்க்க நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்…?

அடுத்த கணமே ஈஸ்வரா… என்று நம் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் இரத்தநாளங்களில் கல்க்க வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் பெற வேண்டும் என்று
1.கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகளை நம் உடலில் திருப்பி விட வேண்டும்.

இப்படிச் செய்யும் போது அவர்கள் சண்டையிட்ட உணர்வுகளைச் சுவாசித்து நம் உடலுக்குள் அந்தக் கார உணர்வுகள் செல்வதைத் தடுத்து விடுகின்றோம்.

ஏனென்றால் அங்கே உற்றுப் பார்க்கும்போது இங்கே ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கி விடுகின்றது நம் கருவிழி.

ஆனால் துருவ நட்த்திரத்தின் சக்தியை எடுத்து
1.நம் கண்ணின் நினைவினை உள்ளே செலுத்தும் போது இங்கேயும் அடைத்து விடுகின்றது
2.நம் உயிரிலே மோதும் நிலையையும் தடுத்து விடுகின்றோம்.
3.இந்த உணர்ச்சிகள் உடலுக்குள் பரவும் போது அந்தக் கார உணர்ச்சிகள் அனாதையாகின்றது… உள்ளே புகாதபடி..!

இப்படி ஒரு சிறிது நேரம் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணிச் சுவாசித்தோம் என்றால் அந்தத் தீமையான உணர்வுகளைச் சூரியன் இழுத்துக் கவர்ந்து சென்று விடுகின்றது. நம் ஆன்மா சுத்தமாகின்றது.

சுத்தமான பின்… சண்டை போட்டவர்கள் இருவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். அவர்கள் ஒன்றுபட்டு வாழும் தன்மை பெற வேண்டும் என்று இப்படி நாம் எண்ணி அந்த உணர்வை அவர்களுக்குப் பாய்ச்ச வேண்டும்.

இப்படி எண்ணினால் நமக்குள் அந்தத் நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் இரத்தங்களில் கலந்து துருவ நம் உடலுக்குள் பரவுகின்றது. இரத்தத்தின் வழி எல்லா அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பாய்கிறது.

மகரிஷிகளுடன் நாம் அமர்ந்து தியானிக்க வேண்டிய முறை

 

1. நாங்கள் பெறக்கூடிய “அத்தனை உயர்ந்த சக்திகளும்” எங்கள் தாய் தந்தையருக்கு முதலில் கிடைக்க வேண்டும் ஈஸ்வரா
2. உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் முன்னோர்களின் உயிராத்மாக்கள் அனைத்தையும் நாங்கள் விண்ணிலே செலுத்தி… அவர்கள் அனைவரையும் பிறவி இல்லை என்ற நிலை அடையச் செய்து… “சப்தரிஷிகளாக” ஆக்கிப் பேரானந்த நிலை பெறச் செய்ய வேண்டும் ஈஸ்வரா
3. தாய் தந்தை அருளால் முன்னோர்களின் அருளால் ஞானகுருவின் அருள் சக்திகளை நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா
4. ஞானகுரு பதிவு செய்யும் உபதேசக் கருத்துக்களை ஒவ்வொரு நாளும் “திரும்பத் திரும்ப… திரும்பத் திரும்பக் கேட்டு” ஆழமாக எங்களுக்குள் பதிவு செய்து… உபதேசத்தில் சொன்னபடி நாங்கள் நடந்து… அதை வாழ்க்கையில் கடைப்பிடித்து… ஞானகுரு காட்டியபடி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை “காற்றிலிருந்து…” சுவாசிக்க வேண்டும் ஈஸ்வரா
5. ஞானகுரு காட்டிய அருள் வழியில் கணவன் மனைவி நாங்கள் ஒன்றி வாழ்ந்து “கணவனை உயர்த்தும் சக்தியாகவும்… மனைவியை உயர்த்தும் சக்தியாகவும்…” நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
6. எங்கள் குழந்தைகள் அனைவரையும் “அகஸ்தியரைப் போன்ற மெய் ஞானியாக வளர்க்கும் அருள் சக்தி” நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
7. நாங்கள் பார்க்கும் ஒவ்வொருவர் உயிரையும் கடவுளாக வணங்கி… உடலைக் கோவிலாக மதித்து… உடலுக்குள் இருக்கும் அனைத்து குணங்களையும் தெய்வமாக எண்ணி… அவர்கள் அனைவரையும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணையச் செய்து… மகிழ்ந்து வாழச் செய்யும் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
8. ஞானகுரு சொல்லும் முறைப்படி எங்கள் ஆறாவது அறிவைப் பயன்படுத்தி… ஒவ்வொரு நொடியிலும் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்து… “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் அடிக்கடி அடிக்கடி எண்ணி… உயிர் வழிச் சுவாசமாக விண்ணிலிருக்கும் “மகரிஷிகளுடன் தொடர்பு கொண்டு” அவர்கள் துணையால் துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியையும் எங்கள் உடலில் உள்ள எல்லா அணுக்களின் முகப்பிலும் இணைத்து… பேரருள் பேரொளியாகப் பெருக்கி… எங்களிடமிருந்து வெளிப்படும் மூச்சு பார்வை சொல் அனைத்துமே பேரருள் பேரொளியாக இந்தக் காற்று மண்டலம் முழுவதும் படர்ந்து… விஞ்ஞானத்தால் உருவான நச்சுத் தன்மைகளைக் கனியச் செய்து “நன்மை பயக்கும் சக்தியாக மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்…” ஈஸ்வரா
9. குறை காணும் எண்ணத்தை விடுத்துக் குறைகளை எங்கே கண்டாலும் அந்தக் “குறைகளை நிவர்த்திக்கும் சக்தியாக” எங்களுக்குள் வளர்ந்து அனைவரையும் அருள் ஞானம் பெறச் செய்யும் அருள் சக்தியாக நாங்கள் வளர்ந்திட வேண்டும் ஈஸ்வரா
10. ஞானகுரு காட்டிய அருள் வழியில் நாங்கள் வழி நடந்து… மற்றவர்களுக்கும் குரு காட்டும் அருள் வழியினைப் போதிக்கும் சக்தி பெற்றவர்களாக நாங்கள் வளர வேண்டும் ஈஸ்வரா
11. ஞானகுரு ஒலி நாடாவின் மூலம் கொடுத்த உபதேசங்களைப் பதிவாக்கி… அந்த அருள் வழியை நாங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து… “ஈஸ்வரபட்டரின் பரிபாஷைகளை உணர்ந்து…” ஞானகுரு அனுபவபூர்வமாக பெற்ற அத்தனை உண்மைகளையும் உணர்ந்து… “ஞானகுரு கொடுக்கும் நுண்ணிய உணர்வுகள் அனைத்தையும் அறியும் ஆற்றலும் பெற்று…” மற்றவர்களுக்கும் அதைக் கிடைக்கச் செய்யும் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
12. உலகில் நடக்கும் அசம்பாவிதங்களோ அதிர்ச்சியான நிகழ்ச்சிகளோ எங்களுக்குள் பதிவாகக் கூடாது ஈஸ்வரா… அறியாது அதை நாங்கள் கேட்கவோ பார்க்கவோ நேர்ந்தாலும் உடனடியாக நாங்கள் ஆத்ம சுத்தி செய்து… “அதை இயக்கவிடாது தடுக்கும் அருள் சக்தி” நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
13. எங்கள் பார்வையால் சொல்லால் செயலால் மூச்சால் பிறருடைய தீமைகள் அகன்று… நோய்கள் அகன்று… உலகில் படர்ந்து கொண்டிருக்கும் சர்வ நச்சுத் தன்மைகளையும் அகற்றச் செய்யும் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
14. ஞானகுரு காட்டும் நெறியில் உத்தமஞானியாக நாங்கள் வளர்ந்து ஊரையும் உலகையும் காக்கக்கூடிய சக்தியாக… உலகுக்கு எடுத்துக் காட்டாக வளர்ந்திட வேண்டும் ஈஸ்வரா
15. “ஞானகுருவின் அருள் எங்களுக்குள் வந்து…” உலக மக்கள் அனைவரையும் காக்கும் சக்தியாக நாங்கள் வளர வேண்டும் ஈஸ்வரா
16. கருவுற்ற தாயின் வயிற்றில் வளரும் சிசுக்களை எல்லாம் “உலக இருளை அகற்றும் ஞான சக்தி பெற்றவர்களாக… அகஸ்தியராக உருவாக்ககூடிய சக்தி…” நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
17. எந்த நேரம் எந்த நிமிடம் எங்கள் உடலை விட்டு உயிர் பிரிய நேர்ந்தாலும்… “யாருடைய ஈர்ப்பிலும் நாங்கள் சிக்காது…” ஏகாந்தமாக சப்தரிஷி மண்டல எல்லையை நாங்கள் அடைய வேண்டும் ஈஸ்வரா
18. மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சுவாசிப்போம்… எங்கள் மூச்சலைகளை “அருள் மணங்களாக” வெளிப்படுத்துவோம்… மகரிஷிகளின் அருள் சக்திகளைக் “கூட்டமைப்பாக” இந்தக் காற்று மண்டலம் முழுவதும் பரவச் செய்வோம். மகரிஷிகள் வேறல்ல… நாம் வேறல்ல… என்ற நிலையில் “அவர்களுடன் இணைந்து தியானிப்போம்… தவமிருப்போம்…”
19. இந்தப் பரமாத்மாவைத் தூய்மைப்படுத்தி… நம் ஆன்மாவைப் புனிதப்படுத்தி… உடலில் உள்ள அனைத்து ஜீவான்மாக்களையும் ஒளியாக்கி… நம் உயிராத்மாவைப் பேரருள் பேரொளியாக ஆக்குவோம். உலகில் உள்ள ஒவ்வொரு உயிராத்மாவையும் புனிதம் பெறச் செய்வோம்
20. உடலை விட்டுப் பிரிந்து சென்று… இந்தக் காற்று மண்டலத்தில் சுழன்று கொண்டுள்ள அத்தனை உயிரான்மாக்களையும்… “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் துணை கொண்டு உந்தித் தள்ளி…” சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்வோம்
21. ஒளியான பிரபஞ்சத்தை உருவாக்குவோம்… மெய் உலகைப் படைப்போம்…!

எம்முடைய உபதேசத்தைக் கேட்டுணர்ந்தவர்களிடம் யாம் எதிர்பார்ப்பது என்ன…? – ஞானகுரு

 

நீங்கள் எத்தனையோ கோவில்களுக்குப் போகின்றீர்கள். ஆனால் நான் (ஞானகுரு) சதா உங்களைத் தான் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றேன்.

1.உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணி
2.உங்கள் உடலை எல்லாம் கோவில்களாக எண்ணி
3.உங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய குணங்களை எல்லாம் தெய்வமாக எண்ணி
4.அந்தக் கோவிலில் மகிழ்ச்சி தோன்ற வேண்டும்.
5.அந்தக் கோவிலிலிருந்து வரக்கூடிய மூச்சு எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று தியானிக்கின்றேன்.

நான் பார்த்த கோவில்கள் அத்தனையுமே (எம்மைச் சந்தித்தவர்கள்) ஒவ்வொருவரையும் தியானம் செய்து அதிகாலை 4-30 மணிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்று உங்களைப் பிரார்த்திக்கின்றேன்.

அந்த நேரத்தில் உங்களைத் தட்டி எழுப்புவது போல் இருக்கும். இந்த உபதேசத்தைப் பதிவு செய்தோர் அனைவருக்கும் அந்த நேரத்தில் முழிப்பு வரும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கும்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் தவறு செய்யாமலே நமக்குள் தீங்கு விளைவிக்கும் அந்த நிலைகளை மாற்றி நல்லது செய்யும் அந்த ஆற்றலாகப் பெறச் செய்வதற்குத் தான் இந்தத் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

அதனாலே எல்லோரும் முழு நம்பிக்கையாக உங்களை நீங்கள் நம்புங்கள்.

சாமியை நம்புகிறீர்கள் சாமியாரை நம்புகிறீர்கள் ஜோதிடத்தை நம்புகிறீர்கள் மந்திரத்தை நம்புகிறீர்கள்.
1.ஆனால் உங்களிடம் அந்த உயர்ந்த சக்தி இருக்கிறது
2.உங்களுக்கு முன்னாடியே அத்தனை சக்தியும் இருக்கிறது.
3.அதை நினைத்தீர்கள் என்றால் அது கூடும்.
4.நல்லதைப் பெற முடியும் மெய் ஒளி பெற முடியும்.

மனிதன் ஒருவனுக்கு மட்டும் தான் இந்த நிலை. உங்களை நீங்கள் நம்புங்கள்.

1.சாமி சொன்னார் என்று சொல்லி
2.சாமி சொன்ன சக்தியை நாம் பெற வேண்டும் என்ற நிலைக்கு நீங்கள் வர வேண்டும்.

சாமி செய்து கொடுப்பார் என்பதல்ல. உங்களை நான் பிரார்த்திக்கின்றேன். உங்களுக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று உறுதுணையாக இருக்கின்றேன்.

சூரியனின் காந்த அலைகள் படுகிறது. பூமி அதைத் தனக்குள் எடுத்துக் கொண்டால் தான் பூமிக்குச் சக்தி கிடைக்கும். பிரபஞ்சத்தில் காற்றில் பல சக்திகள் படர்கிறது. பூமி போகும் பாதையில்… தான் ஈர்த்துக் கொண்டால் தான் அதை வளர்த்துக் கொள்ள முடியும்.

அதைப் போன்று தான்
1.அந்த மெய் ஞானிகள் அருள் ஒளி நீங்கள் பெற வேண்டும் என்று நான் பிரார்த்திகின்றேன்.
2.அந்த அருள் ஒளியை நீங்கள் ஈர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆகையினால் இங்கே சொல்லக்கூடியதெல்லாம் உங்களுக்குள் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று தகுதியை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றேன்.

இதைக் கேட்டுணர்ந்த ஒவ்வொருவரும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சுவாசித்தேன்… நான் நன்றாக இருக்கின்றேன்
2.எங்கள் குடும்பம் நலமாக இருக்கின்றது எங்கள் உடல் நலமாக இருக்கிறது
3.காற்றிலிருந்து அருள் சக்திகளை எடுக்க முடிகிறது
4.எங்கள் உடலில் உள்ள நோய்கள் அகன்றது என்ற
5.இத்தகைய சந்தோஷமான செய்திகளைச் சொல்ல வேண்டும்

ஆகவே “நாங்கள் நன்றாக இருக்கின்றோம்…!” என்று சொல்லும் போது தான் எனக்கு அது மகிழ்ச்சி. அதைக் கேட்க வேண்டும் என்று தான் நான் விரும்புகின்றேன். அந்த நிலையை நிச்சயம் நீங்கள் பெறுவீர்கள்.

வாழ்க்கையில் வரும் சோதனைகளைச் சாதனைகளாக மாற்றுபவன் ஞானியாகின்றான் – ஈஸ்வரபட்டர்

 

இதைப் படிப்போர் எங்களின் (மகரிஷிகளின்) செயல் நடப்பின் உண்மைகளை உணர்ந்து மனித ஆத்மாக்கள் அவரவர்கள் உணர்ந்து பக்குவம் பெறும் பாட முறைகளை உணர்த்திக் கொண்டே வந்துள்ளோம்.

பள்ளியில் பயிலும் மாணவனுக்கு…
1.அவன் ஆசிரியரின் போதனையை ஏற்கும் நிலை கொண்டு…
2.அவனுக்கு வைக்கும் தேர்வில் அவன் பெறும் மதிப்பெண்படித்தான்…
3.அவன் அறிவு நிலை கூடிய மதிப்பெண் பெறுகின்றான்.

அந்த மதிப்பெண் உயர்ந்திருந்தால் உயர் ஞானக் கல்விக்குச் செல்கிறான். அறிவு ஞானம் பெறாத மாணவனை உயர் வகுப்பிற்குத் தேர்ந்தெடுக்க மாட்டார்…! அந்த உபாத்தியாயர்.

அதைப் போல் ஆண்டவனின்… ஆண்டவன் என்பது…
1.உயர் சக்தி ஞான ரிஷியின் அருள் உலகளவுக்கும் பரப்பப்பட்டு
2.அந்த ஞானத்தின் பால் ஈர்ப்பு கொண்ட அவர்களின் பலனில் கண்டெடுத்துக் கொள்கின்றனர் சப்தரிஷிகள்.

அந்தப் பலம் பெற்ற ஆத்மாக்களின் செயலுக்கும் “பல தேர்வுகள் வைத்துப் பொறுக்கித்தான்…” அவர்களின் வட்டச் சுழற்சிக்கே செல்ல முடிகிறது.

கல்விக்கூடம் செல்லும் மாணவர்கள் எல்லொருமே பள்ளியில் இறுதிப் படிப்பு வரையும் செல்வதில்லை. சிலர் மேல் ஞானக்கல்வி பெறச் செல்ல முடியாமலும்… அந்தப் படிப்பை ஏற்க முடியாமல் பள்ளியிலிருந்து நின்று விடுகின்றார்கள் அல்லவா…!

அதைப் போன்று… இந்தச் சக்தி நிலையுணர்ந்து “பேரின்ப நிலை எய்திடல் வேண்டும்…!” என்ற செயலில் உள்ளவர்களும் தான் எடுக்கக்கூடிய முயற்சி ஜெபத்தில் பின்தங்கி விடுவதுண்டு…!

1.தங்கத்தைப் பழுக்கக் காய்ச்சித் தட்டத் தட்டத் தான் அதன் தரம் உயர்கின்றது
2.அது போல் எண்ணத்தில் ஏற்படும் பலவற்றிலிருந்தும்
3.ஒன்றான இறை ஞான சக்தியை ஈர்க்கும் நிலை பெற ஏற்படும் சோதனையில் எல்லாம்
4.எந்தச் சோதனையிலிருந்தும் நாம் மீண்டும் அந்த ஜெப நிலை பெறுகின்றோமோ…
5.“அது தானப்பா இறை ஞானம் பெறும் ஜெபம் முறை…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

விஞ்ஞான அறிவில் படித்துக் கொண்டவர்கள் இன்று எத்தனையோ வகையில் இப்பொழுது தனக்கு வேண்டிய உயிரணுக்களை மற்ற உடல்களில் இருந்த செல்களை எடுத்து மற்ற உடலில் சேர்த்து புதுப் புது ஆட்டினங்களையோ மாட்டினங்களையோ நாயினங்களையோ உருவாக்குகின்றார்கள்.

எத்தனையோ எண்ணிலடங்காத நாய்களைப் பூனை போல்… கரடி போல் உருவாக்கியிருக்கின்றனர். பூனை போல்… கரடி போல் உள்ள மற்ற உயிரினங்களிலிருந்து எடுத்து அதை ஒன்றாகக் சேர்த்து புதுப் புது நாய்களை உருவாக்குகின்றான்.

அதே போல் உணவுப் பொருள்களில் பார்த்தாலும் சாதாரண மனிதன் பல வகையான பொருள்களைச் சேர்த்துப் புதுப் புது பதார்த்தங்களை செய்கின்றான்.

மனிதனுக்குச் சுவையாக இருப்பதற்குப் புதுப் புது பதார்த்தங்களைச் செய்கின்றோம். எந்தப் பொருளை எதனுடன் போட்டால் எதன் சுவை வரும்…? என்ற நிலையில் மனிதன் கற்றுணர்ந்து அதன்படி சுவையான பதார்த்தங்களைச் செய்கின்றான்.

அன்றெல்லாம் ரொட்டி கடையில் மட்டும் தான் ரொட்டி தான் இருக்கும். இப்பொழுது வீட்டிலேயே கூட ரொட்டியோ மற்றதோ செய்யக்கூடிய அளவிற்குக் குடும்பங்களில் படித்ததை வைத்துச் செயல்படுத்தும் நிலை வருகின்றது.

இதைப்போல மனிதன் தன் எண்ணத்தால் புதுப் புதுப் பொருள்களை உருவாக்கும் அளவிற்குத் திறன் பெற்றுள்ளான் மனிதன்.

பெண்கள் வீட்டில் வகை வகையான குழம்புகளை வைக்கின்றார்கள். பருப்பை எடுத்து அளவாகப் போட்டு அதற்கு வேண்டிய சரக்குகளைப் போட்டுப் பக்குவப்படுத்திச் சுவையான உணவு வகைகளைச் சமைக்கின்றனர்.

அதே சரக்குகளை அதே அளவுகோல்படி இன்னொரு பெண்மணியிடம் கொடுத்து அதே மாதிரிச் சமைக்கச் சொன்னால் அதன் சுவை வித்தியாசமாகத் தான் இருக்கும்.

காரணம் அவர் உணர்வுகொப்ப அந்த சுவையைக் கூட்டிடும் உணர்வுகளை உருவாக்குகின்றது. இது ஒவ்வொரு குடும்பத்திலும் பார்க்கலாம்.

சில குடும்பங்களில் பார்த்தால் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். சுவையாக இருப்பதற்குக் காரணம்… அங்கிருக்கும் பெண்கள்
1.கூடுமான வரையிலும் நல்ல சுவைமிக்க உணர்வுகளைச் செயல்படுத்த வேண்டுமென்று
2.அந்த உணர்வை ஏற்றுக் கொண்டதனால்
3.அந்த உணர்வுகள் அந்தந்தப் பக்குவத்தை பெறப்படும் பொழுது
4.குழம்பைச் சுவையாக செய்கின்றார்கள்.

ஆனால் அதே சமயத்தில் குடும்பத்தில் கொஞ்சம் விரக்தியாக வரட்டும் அல்லது சண்டை போடட்டும்…! ஒருத்தருக்கொருத்தர் வெறுப்பான உணர்வு வரப்படும்போது அன்று குழம்பு வைப்பதைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

உதாரணமாக.. கோபமாக இருந்தால் காரத்தை அதிகமாகப் போட்டுவிடுவார்கள். சலிப்பு சஞ்சலம் அதிகமாக இருந்தால் இரண்டு உப்பை அதிகமாகப் போட்டுவிடுவார்கள்.

ஆனால் அதே சரக்குகளை வைத்து சுவையாக முதலில் செய்தவர்கள் தான். அந்த அளவுகோலும் இருக்கின்றது. ஆனால் இந்த உணர்ச்சிகள் அதற்குத்தக்க இந்த உடலை இயக்குவது எது…?

அவர்கள் சேர்த்துக் கொண்ட உணர்வுகள்தான்…! அவர்கள் தப்பு செய்யவில்லை.

குழம்பு வைத்த பிறகு பார்த்தோமென்றால் ஐய்யய்யோ… நான் சண்டை போடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த மாதிரி குழம்பு வைத்துவிட்டேன்…! என்பார்கள்.

அதே போல் பக்கத்து வீட்டுப் பையன் அடிக்கடி சத்தம் போட்டுக் கொண்டிருந்தான். பார்த்தவுடனே… இப்படியா அவர்கள் வீட்டில் சண்டை போடுவார்கள்…! என்று சலிப்படைந்தேன். அதை வேடிக்கை பார்த்துவிட்டு வந்தேன். இங்கே உப்பு அதிகமாகி விட்டது என்பார்கள்.

இதை எல்லாம் மாற்றுவது யார்…?

பிறர் செய்யும் சிந்தனையற்ற செயலின் உணர்வுகள் நம் உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சிகள் நம் உடலுக்குள் ஓடி அவரின் உணர்வுகளுக்குத் தக்கவாறு நாம் குழம்பு வைக்கின்றோம்.

அப்பொழுது யார் தப்பு செய்தது…? நாம் அந்த சந்தர்ப்பத்தில் நுகர்ந்தது தான் இயக்குகிறது.

கையிலே மண்ணை எடுத்து ஒரு வேலையாகப் பிசைந்து கொண்டிருக்கின்றீர்கள். கையை கழுவாமல் அப்படியே நீங்கள் அடுத்தாற்படி குழம்பை வைத்தீர்கள் என்றால் என்ன ஆகும்…?

இந்த மண்ணோடு காய்கறிகளைச் சேர்த்தோமென்றால் இந்த மண்ணும் சேர்த்து நர…முற… நர…முற… என்று இருக்கும். அப்படியானால் நம் கையைக் கழுவுகிறோம் அல்லவா…?

அதே சமயத்தில் வழு வழுவென்று இருக்கக்கூடிய பதார்த்தத்தைத் தொட்டு வேலை செய்கின்றோம். கை கழுவாமல் இருந்தால் அதே உணர்வின் தன்மை நாம் வைக்கும் குழம்பில் சேருமல்லவா…? அதை சுத்தப்படுத்திவிட்டு தானே வேலை செய்கின்றோம்.

இதே மாதிரித் தான்…
1.ஒரு கோபப்படும் உணர்வை நாம் கேட்கின்றோம்… உயிரிலே படுகின்றது
2.இந்த உணர்ச்சிகள் போனவுடனே நம் ஆன்மாவில் தூய்மை கெடுகின்றது
3.நம் உடலுக்குள் போனவுடன் அதே கோப உணர்ச்சிகளை இயக்குகின்றது
4.அப்பொழுது நாம் அதைச் சுத்தப்படுத்த வேண்டுமா இல்லையா?

அதற்கு என்ன ஆயுதம் வைத்துள்ளீர்கள்…?

ஏனென்றால் இதெல்லாம் மறைமுகமாக நல்லவர்களையும் கெட்டவர்களாக மாற்றுகின்றது நல்ல உடலையும் நோயாக மாற்றி விடுகின்றது.

பிறர் செய்யும் தவறுகளை நாம் பார்க்கப் பார்க்க அந்த உணர்வு நம் இரத்தத்தில் கலந்து நாம் தவறு செய்யவில்லை என்றாலும் தவறுள்ளவனாக மாற்றி விடுகின்றது.

அதனால்தான் விநாயகர் கையில் கொடுத்திருப்பது அங்குசபாசவா.

அதாவது உயிரணுவாகத் தோன்றி பரிணாம வளர்ச்சியில்
1.ஒவ்வொரு பிறவியிலும் தீமைகளில் இருந்து விடுபட வேண்டுமென்று
2.தன் கண்களால் கூர்மையாகப் பார்த்து அதன் வலிமையை நுகர்ந்து
3.எதிரியிடமிருந்து தப்பிக்க வேண்டுமென்று உணர்வுகள் சேர்த்துச் சேர்த்து
4.அதிலிருந்து விலக வேண்டும் என்ற உணர்வு அதிகமானபின் தன் உடலில் இது விளைந்து
5.இது இறந்தபின் எதன் வலுவான உணர்வு நுகர்ந்ததோ அந்த உணர்வுக்கொப்ப பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக வந்துள்ளோம்.

ஆனால் மனிதனான நிலையில் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அடக்கிட… ஒவ்வொரு நிமிடமும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்த்து… அதை அடக்கி ஒளியின் தன்மையாக மாற்ற வேண்டும் என்பதற்கே “அங்குசபாசவா” என்று ஞானிகள் காட்டினார்கள்.

குரு பலன்(ம்)… குரு பரன்(ம்)

 

கூட்டுத் தியானம் செய்கிறோம் என்றால் ஒவ்வொருவரும் எத்தனையோ எண்ணத்திலே தான் அதிலே வந்து கலந்து கொள்கின்றோம். ஒவ்வொருவரின் வீட்டிலும் எத்தனையோ கஷ்டங்கள் இருக்கிறது.

ஒரு குழம்பை வைக்கும் போது புளிப்பு காரம் உப்பு எல்லாவற்றையும் சேர்த்துத் தான் அதை ஒரு ருசியாகக் கொண்டு வருகின்றோம்.

அதே போல் கூட்டுத் தியானத்தில்
1.“எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்…” என்று
2.கூட்டமைப்பாக எண்ணி ஒரே குரலில் எழுப்பும் போது காந்த அலைகள் அது கவர்கிறது.
3.நாம் எல்லோரும் சேர்ந்து சொல்லும் போது அந்த உணர்வுகள் செவிகளில் படுகிறது
4.உணரச்சிகள் உந்தப்பட்டு எல்லோருடைய உணர்வுகளிலும் அது இணைகிறது.

27 நட்சத்திரங்களின் சக்தியையும் நவக்கோளின் சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியையும் இணைத்து அந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் பெற வேண்டும்… என்று அதன் மூலம் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்று இந்த உணர்வை ஈர்க்கச் செய்கிறோம்.

1.மனித உடலுக்குள் 1008 நல்ல குணங்கள் உண்டு
2.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஒரே குரலில் ஒலியை எழுப்பும் போது
3.அந்த நல்ல குணங்கள் அனைத்திலுமே இந்த உயர்ந்த உணர்வுகள் செருகப்படுகிறது.

அத்தகைய உணர்ச்சிகளைத் தூண்டச் செய்வதற்குத் தான் கூட்டுத் தியானம் இருக்கின்றோம். நம்மால் சம்பாரிக்க முடியாததை… அந்த அருள் சொத்தைக் கூட்டாக எண்ணித் தியானிக்கும் போது… கிடைக்கச் செய்ய முடிகிறது.

மிளகாயைக் குழம்பில் போட்டவுடன் அதிலே எப்படி ருசி வருகிறதோ அதைப் போல் சுவை கொண்ட உணர்வாக மாற்றிக் கொள்ள முடிகிறது.

வீட்டில் சங்கடமும் சலிப்பும் மற்றதுகளும் வந்தாலும் கூட… அந்த உணர்வை மறந்து விட்டு மெய் ஒளியைக் கலந்து “எல்லோரும் நலம் பெற வேண்டும்” என்ற உணர்வின் ஒலிகளை எழுப்பும் போது “சூரியனின் காந்தப் புலன் அது கவர்கிறது…”

பல வகையான சரக்குகளைப் போட்டுத் தான் குழம்பு வைக்கின்றோம். அவை ஒவ்வொன்றும் தனி சுவைதான். இருந்தாலும் எல்லாவற்றையும் போட்டு வேக வைத்து ஒன்றாகக் குழம்பாகும் போது அதிலிருந்து வெளி வரும் மணத்தைச் சூரியனின் காந்தம் அதைக் கவர்ந்து கொள்கிறது.

அதனின் மணத்தை நுகரும் போது அதனின் சுவையை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அந்த மணத்தின் குணத்தையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

அதைப் போன்று தான் நாம் படைக்கும் இந்த அருள் ஞானிகளின் சக்தியை…
1.எல்லோருக்குள்ளும் அந்தச் சக்தியைப் பரப்பச் செய்து
2.காந்தப் புலனின் நிலைகள் கொண்டு மோதச் செய்து
3.அதே உணர்வின் தன்மை ஈர்க்கச் செய்து
4.நமக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்கு இணைக்கச் செய்யும் முறை தான்
5.யாம் (ஞானகுரு) சொல்லும் இந்தக் கூட்டுத் தியானத்தின் நிலை.

அதாவது
1.பரவிக் கிடக்கக்கூடியது அனைத்தும் நமக்குள் குரு பரம்.
2.ஒவ்வொரு நிலைகளிலும் அதை எடுத்து விளைய வைத்த அந்தந்த உயிரின் நிலைகள் இது பரமாகி
3.தனக்குள் (அனைவருக்குள்ளும்) அருள் உணர்வாக அது சேரும் நிலை.

ஏனென்றால் இது குரு பலன் குரு பரன்…!

சப்தரிஷிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இன்று உடலுடன் ஜீவன் பெற்று வாழும் நிலையில் நம் உடலின் எடையை ஒரு பாரமாக… அதாவது சுமக்க முடியாமல் இருப்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுவதில்லை.

நாம் எடுக்கும் சுவாச அலையில் நம் உயிரணு என்ற இயந்திரத்தின் ஓட்டத்தினால் நம் உடலிலுள்ள பல கோடி உயிரணுக்களும் அந்தச் சுவாசத்தின் அலையை இந்தப் பூமியின் ஈர்ப்பில் காற்றாகக் கலந்து தான் வாழுகின்றோம்.

ஆனால் இப்பொழுதுள்ள நம் உடலின் எடையே ஜீவனற்ற உடலாக ஆன பின்பு அதன் கனம் கூடி விடுகிறது.

1.இந்தப் பூமியின் ஈர்ப்பு சக்தி குணத்துடன் ஜீவனற்ற பிம்பங்கள் உள்ள நிலையைப் போல்…
2.ஜீவன் பிரிந்த உடல்களும்… அந்த ஈர்ப்பின் அதிகப்படியான இழுவையுடன்…
3.“சுவாச அலையை எடுக்காத உடல் ஆனவுடன்…”
4.கனம் பொருந்திய ஈர்ப்புடன் அந்த உடல் ஐக்கியப்பட்டு விடுகிறது.

இந்தச் சுவாச அலையின் சக்தியினால் தான் ஜீவன் கொண்ட ஜீவன்களின் நிலைக்கும் ஜீவனற்ற பிம்பங்களின் நிலைக்கும் கனத்தில் (எடையில்) வேறுபாடு ஏற்படுகின்றது.

இருந்தாலும் ஜீவன் பிரிந்த உடல்கள் அந்த உடலிலுள்ள மற்ற ஜீவ அணுக்களின் ஈர்ப்பின் அமில குணத்தால் அந்த உடல் உயிர் பிரிந்த பிறகு அதன் உடல் பெருகுகிறதே…!

அதன் நிலை எப்படி…?

நாம் சில வகை உணவுப் பொருட்களை ஒன்றுடன் ஒன்று கலந்து அதில் நீரை ஊற்றி வைத்தால் அதிலிருந்து சில அமிலங்கள் வளர்ந்து புளிப்பு நிலை ஏற்படுகிறது அல்லவா…!

அது போல் இந்த ஜீவனற்ற உடலும் அந்தப் புளிப்பு நிலையான அமிலங்கள் ஏற்பட்ட பிறகு அதன் நீர் சக்தி வடிந்து இந்த உடல் பிம்பம் நாற்றத் தன்மை இழந்து இந்தப் பூமியுடன் அந்த உடலும் கலக்கின்றது.

அதன் பிறகுதான்… உடலிலுள்ள அந்த உடலுக்குச் சொந்தமான ஜீவ அணுவுடன் அந்த ஜீவ ஆத்மாவும் முதலிலேயே உடலை விட்டுப் பிரிந்த உயிருடனும் இந்தச் சப்த அலையுடனும் இவ்வாத்மாவும் கலந்து இவ்வாத்ம ஜீவன் அதற்குகந்த செயல் வட்டத்திற்குள் செல்கிறது.

1.உடலுடன் உள்ள பொழுது ஒரு நிலையும்…
2.உடலை விட்டு ஜீவன் பிரிந்த பிறகு ஒரு நிலையும்
3.அவ்வுடல் பிம்பமே மாறி அவ்வாத்மா ஜீவனுடன் சேர்ந்த பிறகு ஒரு நிலையும்
4.இப்படி மூன்று நிலைகளில் மனிதனின் நிலைகள் உள்ளன.

ஆனால் சப்தரிஷிகளும் சித்தர்களும் இந்த உடல் என்ற பிம்பத்தையே பிரித்துக் கூட்டும் செயலுடையதாக்குகின்றார்கள். அவர்கள் எடுத்த எண்ணத்தின் சுவாச ஜெபத்தால் இக்காற்றில் உள்ள அமில குணங்களையே பிரித்துக் கூட்டி வழிப்படுத்திச் செயல்படும் முறையைச் செயல்படுத்துபவரே நம் சப்தரிஷிகள்.

காற்றாகவும் நீராகவும் ஒளியாகவும் ஐக்கியப்பட்டுள்ள நம் சப்தரிஷிகளின் செயலினால் தான் இன்று இந்தப் பூமியின் ஆன்மாக்கள் பிறந்து வாழச் செயலாக்கி வருகின்றார்கள்.

நம் பூமி மட்டும் தான் சுழன்று ஓடுகிறதா…? மற்ற மண்டலங்கள் இல்லயா…? என்ற வினா எழும்பலாம். ஜீவன் கொண்ட ஜீவாதாரமுடன் வாழும் பூமி நம் பூமி.

அதற்குகந்த அமில சக்தியைக் கூட்டி வழிப்படுத்தியவர்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளாகப் பெற்ற தவத்தின் வலிமை நிலையில்
1.இந்தப் பூமியின் அமிலங்கள் கூடப் பெற்று… அந்தக் கூட்டின் வளர்ப்பில் மனித பிம்பங்கள் வளரச் செய்து
2.அந்த மனித பிம்பங்களுக்கு அறிவாற்றலின் வழியைப் பல வழிகளில் வளரச் செய்து
3.மனிதர்களின் ஞானத்தின் வளர்ச்சிக் கூட்டின் வலு சக்தியைத் தன் வலுவுக்கு அதிகப்படி எடுத்து
4.மேன்மேலும் இந்தக் காற்று மண்டலத்திலுள்ள இப்பேரண்டம் பெரு நிலை என்ற
5.பரந்த நிலையைக் கூட்டிப் பிம்பம் செய்கிறார்கள் நம் சப்தரிஷிகள்.

மண் மண்ணாக உள்ள பொழுது அதன் பிம்பத்தைக் காண முடிகிறதா…? மண்ணை எடுத்துக் குயவன் பானையும் சட்டியும் பல பொருள்களாக்கிக் காட்டினால்தான் அம்மண்ணின் பிம்பத்தை நாம் காணுகின்றோம்.

1.ஆதி சக்தியின் அருள் தான் குயவனும் மண்ணும்.
2.அந்தக் குயவன் மண்ணைத் தோண்டி எடுத்துத்தான் செய்து பொருளாகக் காட்டுகின்றான்.

அதைப் போன்று…
1.பூமியைப் பொருளாக்கி மனித சக்தி படைத்துத் தன் சக்திக்குகந்த பொருளான ஞானப் பொருட்களை
2.சப்தரிஷிகள் ஞானியாகவும் சித்தனாகவும் பொருள்படுத்தி எடுத்துக் கொள்கின்றான்.

சப்தரிஷியின் பொருளான நம் பூமியின் தொழிற்சாலையில்… அந்தத் தொழிலுக்குகந்த மூலப் பொருளின் தரம் குறைந்ததனால்
1.மேலும் தரமான பொருளைப் போட்டு கல்கியைக் காண
2.சப்தரிஷிகளின் செயல்கள் இன்று நடந்து வருகின்றன.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஆரஞ்சுப் பழம் நன்றாக இருக்கின்றது. நன்றாக இருப்பது கொஞ்சம் கெட்டுப் போய்விட்டால் என்ன ஆகிறது…? அதிலே புழு வருகின்றது. எங்கிருந்து அந்தப் புழு வந்தது…?

கெட்டுப் போகப் போகும்போது காற்றில் இருக்கக்கூடிய கெட்ட அலைகளை இழுத்து அது புழுவாக மாறுகின்றது. நன்றாகக் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.

அதே போல் நன்றாக இருக்கின்ற ஆரஞ்சுப் பழம் ஒரு பக்கத்தில் அடிபட்டு அழுகினால் போதும். உடனடியாக புழு வந்துவிடும்.

அதே மாதிரி “வேதனை வேதனை…” என்று நீங்கள் சுவாசித்த உணர்வுகள் உடலில் உள்ள இரத்தத்துடன் கலந்தவுடன் என்ன செய்கின்றது…?

இந்த உணர்வு மாறி இரத்தமாகப் போகும் போது அந்த வேதனைப்படக்கூடிய அணுவாக மாறும். அது தான் இந்திரலோகம். அணுவான பிற்பாடு என்ன செய்கின்றது…?

பழத்தில் அழுகிய உணர்வை எப்படி அந்த அணு சாப்பிட்டவுடனே புழுவாக எப்படி மாறுகிறதோ அதே போல் உங்கள் உடலில் வேதனையான அணுவாக மாறுகிறது. கெட்டதைச் சாப்பிடுகின்றது.

நல்ல பழமாக இருக்கும் பொழுது அதில் புழுக்கள் வருமா…? வராது.

இதே மாதிரி அந்த வேதனையான உணர்வுகள் உங்கள் உடலில் வந்து இரத்தத்தில் கலந்து அது பிரம்மமாக மாறுகின்றது. அப்பொழுது உங்கள் உடலில் என்ன செய்யும்…?
1.அந்த வேதனையின் உணர்ச்சிகளைத் தூண்டும்
2.அந்த அழுகிய உணர்வை எடுத்துத் தான் உங்கள் உடலில் ஒவ்வொரு உறுப்புகளுக்குப் போகும் இந்த இரத்தம்.

மற்ற உறுப்புக்குள் போனவுடன் எங்கெங்கே நல்ல அணுக்கள் இருக்கின்றதோ அந்த உறுப்புகள் கெட்டு அதிலே போய் இந்த அணு தங்க ஆரம்பித்துவிடும்.

நமக்குள் கெட்டது எப்படி உருவாகிறது என்று இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

ஏனென்றால் இன்னும் சாமியையும் சாமியாரையும் நம்பிப் போய்க் கொண்டிருப்பதைத் தான் விரும்புகின்றோம். ஆனால் அந்த நல்ல சக்திகள் உங்களுக்குள் இருக்கின்றது… உங்களை நீங்கள் நம்பிப் பழகுங்கள் என்பதைத் தான் அடிக்கடி உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன் (ஞானகுரு).

ஆகவே எந்தப் பழமாக இருந்தாலும் கொஞ்சம் அடிபட்டு விட்டால் புழு வந்துவிடும்.

இதே மாதிரி நீங்கள் நல்ல நிலையில் இருக்கப்படும்போது
1.ஒருவன் கஷ்டப்பட்டான் என்றால் அந்த உணர்வைக் கேட்கின்றீர்கள்.
2.ஒருவன் சாபமிட்டான் என்றால் அந்த உணர்வைக் கேட்கின்றீர்கள்.

அப்பொழுது அந்த உமிழ் நீர் அங்கே இரத்தமாக மாறினால் அவன் எதையெல்லாம் கேட்டுப் போக வேண்டும் என்று சொன்னானோ… நீ நாசமாகப் போவாய்… உனக்குக் கை கால் முடமாகிப் போகும்… நீ நோயால் சாவாய்…! என்று சொன்னால்…
1.இதே உணர்வுகள் அது இரத்தத்துடன் கலந்து உடல் முழுவதும் படர்கிறது.
2.கலந்த பின் அங்கே போய் என்ன செய்கின்றது…?
3.பதிவானது கருவாகி முட்டை ஆகிவிடுகின்றது… ஒவ்வொரு உறுப்புகளிலும் கூடுகிறது.

உதாரணமாக தேனீ என்ன செய்கிறது…? தேன் எடுக்கச் செல்கிறது. பூக்களில் அமர்கிறது. சில நேரங்களில் அதிலே முட்டையும் இடுகின்றது.

அதே போல் தட்டான் பூச்சி இருக்கின்றது. அது பூவில் இருக்கும் அமுதைச் சாப்பிடுகின்றது. அந்தப் பூ மேலே முட்டையிடுகின்றது.. கொஞ்ச நாள் கழித்து இதனுடைய முட்டை வெடித்துப் பட்டாம் பூச்சியாக மாறுகின்றது. அந்தப் பூ எந்த நிறத்தில் இருக்கின்றதோ அதே மாதிரி வரும்.

அதே மாதிரி அடுத்தவர் உடலிலே எப்படி நோயானதோ அதே போல் ஒரு மனிதன் எப்படிச் சாபமிட்டானோ அதே உணர்வுகள் நம் இரத்தத்திலே கலந்து உடலில் சுற்ற ஆரம்பிக்கின்றது.

1.அது நம்முடைய எல்லா உறுப்புகளுக்கும் போய் வரும்
2.போகின்ற நேரத்தில் இந்த முட்டை ஒன்று ஒதுங்கினால் போதும்.
3.அந்த உறுப்பில் உள்ளதை எடுத்து வளர்ந்து அங்கே அணுவாக விளைகின்றது.
4.அந்த உறுப்பினுடைய நிலைகளையே சாப்பிடக்கூடிய நிலைகள் வந்து விடுகிறது
5.தன் இனத்தை அங்கே பெருக்கத் தொடங்கி விடுகின்றது.

நுரையீரலில் அந்த மாதிரித் தங்கி விட்டால் நுரையீரல் ரிப்பேர் கல்லீரலில் தங்கி விட்டால் கல்லீரலில் ரிப்பேர் மண்ணீரலில் தங்கி விட்டால் மண்ணீரலில் ரிப்பேர்.

இது எல்லாம் வந்த பிற்பாடு டாக்டர்கள் இந்த உறுப்பு கெட்டுவிட்டது… இன்ன நோய் இருக்கிறது…! என்று சொல்வார்கள்.

அகஸ்தியன் இதைப் போன்ற பல உண்மைகளை அன்றே கண்டுணர்ந்தான்…தான் வாழ்க்கையில் வந்த தீமைகளை எல்லாம் நீக்கினான்… துருவ நட்சத்திரமாகப் போனான்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற்றால் நாமும் தீமைகளை நீக்க முடியும்.
2.அவனைப் போன்றே அழியா ஒளி உடல் பெறலாம்

அதைத் தான்… அந்த அகஸ்தியன் உணர்வை முழுமையாகக் கண்டுணர்ந்த நமது குருநாதர் “நம் டாக்டர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்” என்னிடம் (ஞானகுரு) என்ன சொன்னார்…?

டேய்…! சாபமிட்டவனை நீ பார்த்தால்…
1.அந்த உணர்வுகள் உன் ஆகாரத்தின் வழியாக உடலுக்குள் போகும்.
2.அந்தக் கருவாகும் அது அணுவாகும்… அது இரத்தத்தில் சுற்றும். தெல்லாம் உனக்குள் நோயாகும்…
3.எப்படி அந்தத் தட்டான் பூச்சி பூவிலே முட்டையிட்டவுடனே அதற்குத் தகுந்த மாதிரி பூச்சிகள் வளர்கின்றதோ
4.அதே மாதிரி இந்த உறுப்பை உட்கொள்ளும் அணுவாக மாறிவிடும்…! என்று சொல்லி
5.இதையெல்லாம் நேரடியாக எனக்குக் காண்பித்தார்… மக்களுக்கு இதை எடுத்துச் சொல்…! என்றார்.

அதைத் தான் இங்கே செய்து கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).

மிக மிக சக்தி வாய்ந்த ஆற்றலை குருநாதர் எனக்குக் கொடுத்த விதம் – ஞானகுரு

 

வாடிய மரத்திற்கு உரம் போட்டு அதைச் செழித்து வளரச் செய்கிற மாதிரித் தான் குருநாதர் எனக்கு (ஞானகுரு) சக்தி கொடுத்தார்.

காட்டிற்குள் அழைத்துச் சென்று தான் பல அனுபவங்களைக் கொடுத்தார்.
1.காட்டிலே இடைஞ்சல்கள் வரும் போது அந்த ஞானிகளின் சக்திகளை நீ சேர்த்துக் கொண்டால் அந்தக் கெடுதல் நீங்கும்.
2.நான் சொல்லும் முறைப்படி எடுத்தால் அந்தத் தீமை நீங்கும்

வரும் துன்பங்களிலிருந்து விடுபடும் சக்தியை உனக்குள் பதிய வைக்க வேண்டும் அல்லவா… அதற்காகத் தான் “இதை எல்லாம் செய்கிறேன்” என்று சொல்வார்.

ஏனென்றால் குருநாதர் என்னைத் திட்டுவார்… உதைப்பார்… எல்லாம் செய்வார். ஏண்டா நமக்கு இப்படித் தொல்லை கொடுக்கிறார்…? என்று அவர் மீது வெறுப்பு வரும். அவரை விட்டு ஓடிப் போகலாமா…! என்ற எண்ணம் தான் வரும்.

எங்கேடா நீ தப்பப் போகிறாய் என்பார்…! இப்படி எல்லாம் பல கஷ்டங்களைக் கொடுத்துத் தான் எனக்கு உண்மைகளை உணர்த்தினார் குருநாதர்.

ஒரு பாறை வழுக்கலாக இருக்கும். கவனம் இல்லை என்றால் விழுந்து பல் எல்லாம் போய்விடும். அங்கே ஒரு பொருளைக் காட்டுவார். போய் எடுக்கச் சொல்வார்.

காட்டிலேயும் மலைகளிலேயும் இப்படிப் பல அனுபவங்களைக் கொடுத்தார்.

ஒரு சமயம் இமயமலைக்குச் செல்லும் போது அங்கே பனியாக இருக்கிறது. கிடு… கிடு… என்று நடுக்கமாக இருக்கிறது. வெறும் கோவணத் துணியைக் கட்டிக் கொண்டு அங்கே போகச் சொல்கிறார்.

அங்கே போனால் எல்லாம் “பாதை” மாதிரித் தெரியும். மரத்தின் மீது பனி… கட்டியாக உறைந்திருக்கும். ஏமாந்து கையையோ காலையோ வைத்தோம் என்றால் “டபக்…” என்று படுபாதாளத்திற்குப் போய்விடுவோம்.

போடா…! என்பார். அதையும் காட்டுவார்… இதையும் செய்யச் சொல்வார். ஆனால்…
1.இந்த இடத்தில் உன்னைக் காப்பாற்ற வலு வேண்டுமல்லவா…
2.அந்த வலுவை எப்படி எடுக்க வேண்டும்…? என்று சொல்வார்.
3.நான் சொன்னபடி நினைக்கவில்லை என்றால் கீழே போய்விடுவாய்
4.நான் சொன்ன உணர்வை எடுத்தால் உன்னைக் காப்பாற்றிக் கொள்வாய்…! என்பார்.

ஆபத்து வரும் நேரத்தில் இந்த மாதிரி எல்லாம் செய்ய வேண்டும் என்பார் குருநாதர்.

அவர் சொன்னபடி போகும் போது ஒரு இடத்தில் மேலே மரத்தின் மீது பனி இருக்கிறது. அந்தப் பக்கம் திடு… திடு… திடு… திடு… என்று பனி உடைந்து கீழே விழுந்து கொண்டுள்ளது (AVALANCHE).

அங்கே காலை வைத்தவுடன் பொரு…பொரு… என்று இருந்தது “டபக்” என்று ஒரு கால் இறங்கிவிட்டது. கால் உள்ளே இறங்கிய பின் எந்த எண்ணம் வருகிறது…? ஐய்யய்யோ… செத்துப் போய்விடுவோமே…! என்ற எண்ணம் தான் வருகிறது.

1.நான் என்னடா சொன்னேன்…?
2.நீ என்னடா பண்ணுகின்றாய்…! என்று குருநாதர் கேட்கிறார்.

ஏனென்றால் அந்த உணர்வு என்ன செய்கிறது…? குருநாதர் கொடுத்த அந்தச் சக்தியைப் பயன்படுத்த முடியவில்லை.

மனிதன் நாம் இந்தப் “புவியின் ஈர்ப்பில்” இருக்கும் போது நமக்குள் உணர்வு இது தான் உடனடியாக வருகிறது. நல்லதை நினைக்க முடியவில்லை.

இதை எல்லாம் நீங்களும் கேட்கின்றீர்கள். தியானத்தில் உட்கார்ந்து ஈஸ்வரா…! என்று எண்ணினால்
1.மனதை ஒரு நிலைப்படுத்த முடியவில்லை
2.எண்ணத்தை நிலை நிறுத்த முடியவில்லை என்று சொல்வீர்கள்.

அப்படி எல்லாம் ஒன்றும் நிறுத்த முடியாது. ஏனென்றால் பல அலைகள் ஓடிக் கொண்டிருக்கும்.

இங்கே யாம் உபதேசிக்கும் உணர்வின் அலைகளைக் கேட்டால் உங்களுக்குள் நல்லதாகும். இதை உங்களுக்குள் ஆழமாகப் பதிய வைத்து நீங்கள் மீண்டும் எண்ணி “அந்த உயர்ந்த சக்தியை…” மகரிஷிகளின் ஆற்றலை எடுக்கப் பழக வேண்டும்.

உங்களுக்குள் எப்பொழுது மனம் கெடுகின்றதோ அந்த நேரத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அந்த நல்ல உணர்வுகள் எனக்குள் வளர வேண்டும்… என்று அதை எண்ணி உங்கள் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இப்படி ஒவ்வொரு நேரத்திலும்…
1.குருநாதர் எனக்குக் காட்டியது போல்
2.நீங்களும் ஆத்ம சுத்தி செய்வதில் தான் எல்லாமே இருக்கிறது.

சொத்தையும் சுகத்தையும் அனுபவித்து வாழ்ந்தவர்கள் இன்று எங்கே இருக்கிறார்கள்…? – ஈஸ்வரபட்டர்

 

இந்த உலகில் உள்ள பொருள் பொக்கிஷங்கள் அன்றாண்ட அரசர்களாலும் முன்னோர்களாலும் சில முக்கியமான கோவில்களிலும்… அகழிகளிலும்… சுரங்கப் பாதைகளிலும்…. மற்றும் சில பெயர் குறிப்பிட வேண்டாத சிலைகளுக்குள்ளும்… பீடங்களுக்குள்ளும்… பல பொருள்களை மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

அப்படி வைத்தவர்கள்…
1.தன் ஆத்மா இன்றளவும் உயர முடியாமல்
2.தான் பதுக்கி வைத்த அந்த பொருள் என்ற பேராசைப் பொக்கிஷ சுழற்சியில்
3.அந்த ஆவிகள் இன்றளவும் அங்கேயே சுழன்று வாழ்கின்றன.

நம் எண்ணத்தினால் அதனை அடைய வேண்டும் என்ற தெய்வ சக்தியுடன் செயல்பட்டுச் சித்து நிலை கொண்டு அறிந்திடலாம். அதை எடுக்கவும் செய்திடலாம்.

ஆனால் அதனால் அடையக்கூடிய பொருள் என்ன…?

1.பிம்பப் பொருளை அடைந்தால் நாம் பெற வேண்டிய ஞானப் பொருளின் வழித் தொடர் அற்றுப் போய்…
2.மேன்மேலும் இந்தப் பேராசையின் சுழற்சியில் சுற்றிக் கொண்டே வாழ்ந்து..
3.இதே நிலையில் பொருளைப் பதுக்கியவனின் ஆன்மா போல் சுழலத் தான் முடியும்.
4.“நல்ல நிலை அடையும் வழி இல்லை…!”

இந்தப் பொருள் மட்டுமல்லாமல் இந்தப் பூமிக்கடியில் இயற்கை வளமுடன் வளர்ந்திட்ட பல அபூர்வ கனி வளங்கள்… படிவக் குவியல்கள்… எங்கெங்கு உள்ளன…? என்பதனை எல்லாம் நாம் அடையும் சித்து நிலையால் உணரலாம்.

அதன் நிலையை வெளிப்படுத்தி இந்த உலக ஆன்மாக்களை மேன்மேலும் இந்தப் பேராசையின் செயற்கைச் செயலுக்குத்தான் அது முன்னோடியாக நிற்குமேயன்றி…
1.எப்பொருளை அடைய வேண்டும்…? என்ற
2.பரம்பொருளின் நிலை பெற வழியாகாது.

சித்தர்களின் சப்தரிஷிகளின் செயலால் தான் இந்த உலக ஆத்மாக்கள் இன்று வரையிலும் வாழ முடிகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

பல கோடி உயிரணுக்களைக் கொண்ட இந்த உடலின் பிம்பத்திற்கு
1.இந்த உயிர் என்ற பொக்கிஷத்தினைப் போன்ற
2.பலவாக உள்ள உலகத்தில் ஒன்றாகிய தெய்வச் சக்தியைப் பெறும் பொக்கிஷத்தை நாம் பெறும் ஞான அருளைப் பெற வேண்டும்.

ஆகவே உலகத்திலுள்ள “பொருள் பொக்கிஷத்தை..” நாடி நாம் செல்லக்கூடாது.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

கண்ணின் கரு விழிக்குப் பின் இருக்கும் நரம்பு மண்டலம் வழி கொண்டு நம் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்திற்கும் கண் இணைக்கப்பட்டிருக்கிறது.

வேதனையான உணர்வுகள் நம் கண் வழியாகச் சென்று நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் இந்த வேதனை உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.

தூண்டிய பின் அதனின் வலுவின் தன்மை கொண்டு அந்த வேதனைப்பட்ட உணர்வுகள் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை நுகரச் செய்து அந்த வேதனையான உணர்ச்சி கொண்டு எண்ணம் சொல் செயல் என்று இயங்கத் தொடங்குகிறது.

அதே சமயத்தில் சுவாசித்தது வேதனையான உமிழ் நீராக மாறி சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்துவிடுகிறது. அதனால் சிறு குடல் பெரும் குடலை உருவாக்கிய அணுக்கள் மயக்கமடைகிறது.

சிறு குடல் பெரும் குடல் பலவீனம் அடைந்தால் நாம் உணவாக உட்கொண்ட இந்த உணவுகள் நஞ்சாக மாறி நஞ்சின் தன்மை கொண்ட இரத்தமாக மாற்றுகின்றது.

அப்படி நஞ்சாக மாறும் போது நம் உடல் உறுப்புகளுக்குள்ளும் இரத்தத்தின் வழி விஷத் தன்மை பரவி நம் உடலில் பல விதமான நோய்கள் வரக் காரணமாகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபடுவதற்கு நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நம் உடலில் உள்ள அணுக்களை உற்சாகப்படுத்த துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும்படி செய்கின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினைப் பெறவேண்டும் என்ற ஆசையுடன் நாம் அதே கண்கள் வழியாக ஏங்கிக் கவரப்படும் போது
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நம் கண் வழி உள்ள நரம்பு மண்டலம் வழியாக
2.உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் பாய்ந்து உற்சாகமூட்டும் வீரியத் தன்மையாக அடைகின்றது.
3.அதே சமயத்தில் சுவாசித்த உணர்வுகள் உயிரிலே பட்டு அந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக இயங்கி
4.அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறி நம் சிறு குடல் பெரும் குடல்களில் கலந்து உற்சாகம் அடையச் செய்கிறது
5.சாப்பிட்ட ஆகாரத்தை நல்ல இரத்தமாக மாற்றும் சக்தி பெறுகின்றது.

பின் அந்தச் சக்திகள் அனைத்தும் நம் உடல்களில் உள்ள உறுப்புகள் அனைத்திற்குமே கல்லீரல் மண்ணீரல் நுரையீரல் கணையங்கள் கிட்னி இருதயம் இந்த நல்ல இரத்தங்கள் செல்லப்படும் அவைகளும் உற்சாகம் அடைந்து தீமையை நீக்கும் வலிமையான உணர்வைப் பெறுகின்றது.

குருநாதரின் உயிராத்மா ஒளியாக மாறியதையும் அதிலிருந்து பளீர்… பளீர்… என்று ஒளிக்கற்றைகள் பரவுவதையும் காட்டினார்

 

நம் குருநாதர் வைகுண்ட ஏகாதசி அன்று தான் உடலை விட்டுப் பிரிந்து தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றி விண் சென்றார்.

1.அதாவது இந்த உடலிலிருந்தே உயிராத்மா எப்படி ஒளியாக மாறி வெளியிலே செல்கிறது…?
2.வெளியிலே சென்ற பின் மற்ற மனிதர்களின் உணர்வுகள் எப்படி எல்லாம் கவர்கிறது…?
3.அப்படிக் கவரும் போது குருநாதரின் உயிராத்மா சுழற்சியின் நிலைகள் என்ன செய்கிறது…?
4.தன்னை அணுக விடாதபடி எப்படி விலகிச் செல்கிறது…? என்று அதை எனக்குக் (ஞானகுரு) காட்டி உணர்த்தவும் செய்தார்.

வெறும் துண்டு தான் குருநாதர் கட்டி இருப்பார். பெரும்பகுதி டிச்சிலேயே (DITCH) தான் படுத்திருப்பார். குளிர் காலம் என்று நல்ல ஒரு வேஷ்டியை எடுத்துக் கொடுத்தோம் என்றால் அதைக் கிழித்துக் காலிலேயும் கையிலேயும் கட்டிக் கொண்டு பாருடா… எவனோ கிழித்து விட்டான்…! என்பார்.

என்ன சாமி இப்படிச் சொல்கிறீர்கள்…! என்று கேட்டால் கிழித்து விட்டுப் போய்விட்டான் நான் என்ன செய்வது…? என்பார். படுத்திருந்தேன் கிழித்து விட்டான்…! என்பார்.

அவர் அசூசையைப் பற்றி நினைக்கவில்லை. இந்த உடலுக்குள் இருக்கக்கூடிய மெய் ஒளியைப் பற்றித் தான் சிந்தித்தார்.

பைத்தியம் போன்ற அவரின் செயல்களைக் காணும் போதெல்லாம் ஐயோ.. இவரிடம் சிக்கிக் கொண்டோமே… பெரிய தொல்லையாக இருக்கின்றதே…! என்று தான் எண்ணினேன்.

1.உடலை விட்டுப் போன பிற்பாடு பளீர்… பளீர்… என்று ஒளியின் தன்மை கொண்டு
2.மற்றதைத் தள்ளிக் கொண்டு அவருடைய ஆன்மா விண்ணுக்குப் போகிறது.
3.அப்படிப் போனாலும் இந்தப் பூமியின் பிடிப்பலைகளில் இந்த உயிராத்மா என்ன செய்கிறது பார்…? என்று
4,எல்லாவற்றையுமே எனக்கு முதலில் சொல்லிக் கொடுத்துவிட்டார்.

அன்றைக்கு ஞானிகளும் மகரிஷிகளும் எந்தெந்த நிலைகளில் செயல்பட்டார்கள்…? என்று அதையும் காட்டினார் குருநாதர்.

அதாவது உயிராத்மா வெளியிலே போனாலும்… தன் வலுவின் தன்மை கொண்டு பூமியின் ஈர்ப்புக்குள் வராது தடுத்தாலும்… அந்த உணர்வுக்கொத்த விழுதாக இருந்து பூமியிலிருந்து உயிராத்மாவை உந்தித் தள்ள வேண்டும்.
1.அதற்காக வேண்டித் தான் அவ்வளவு பெரிய ஆற்றல் பெற்றாலும்
2.சாதாரண மனிதரைத் தேடி ஞானிகள் வருகின்றனர்.

அவனுக்குள் வரும் இருளான துன்பத்தை நீக்கி விட்டு உடலிலே மகிழ்ச்சியை ஊட்டி… அவனிடமிருந்து வரும் நல்ல மூச்சைத் தனக்குள் சேர்த்துக் கொள்கின்றனர்.

ஒருவர் துன்பப்படுகின்றார் என்றால் இவன் (ஞானி) கஷ்டப்பட்டு பச்சிலைகளையும் மூலிகைகளையும் எடுத்து அவனுக்குக் கொடுத்து நோய்களை நீக்கி அவன் சந்தோஷப்பட வேண்டும் என்று செய்தார்கள்.

அன்று இதற்கெல்லாம் காசும் வாங்கவில்லை… ஒன்றும் வாங்கவில்லை.

ஒருவன் துன்பப்படுகின்றான் என்றால்
1.உடனே அவனுக்குள் நிவராணமாகும் அந்த உயர்ந்த சக்தியைப் பாய்ச்சி
2.அந்தத் துன்பமான உணர்வுகளை நீக்கி விட்டு மெய் ஒளியின் சுடராகப் பெருக்கச் செய்து
3.அவனுக்குள் மகிழ்ச்சியான எண்ணங்களைத் தோற்றுவிக்கச் செய்து
4.மருந்தைக் கொடுத்து நோயை நீக்கி அன்று சந்தோஷப்படுத்தினார்கள்.

இந்த மகான் நல்லது செய்தார் என்ற எண்ணத்தை ஏங்க வைத்து அதை ரசித்துத் தனக்குள் எடுத்து விண் சென்றார்கள்.

இன்று சகஜ வாழ்க்கையில் துன்பப்பட்டவரைப் பார்த்தோம் என்றால்
1.நாம் பாசத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நமக்குள் வேதனையின் தன்மை இங்கே வருகிறது.
2.ஒரு அசுரத்தனமான உணர்வு கொண்டு “அவன் கிடக்கட்டும்…” என்று எண்ணினால் அந்த உணர்வுகள் இவனுக்குள் விளைந்து அதே முரட்டுத் தனமான நிலைகள் கொண்டு சிக்கி அடிபடுகின்றான்.

ஆனால் அந்த மெய் ஞானியோ துன்பப்பட்டவனுக்குள் இருக்கும் விஷத்தின் தன்மையை நீக்கி… மகிழ்ச்சி ஊட்டும் உணர்வின் தன்மை அவனுக்குள் விளைய வைத்து… அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி… அந்த உணர்வின் நிலையாகத் தனக்குள் வளர்த்துக் கொண்டவன்.

ஏனென்றால் எந்த விஷமாக இருந்தாலும் அதைத் தனக்குள் அடக்கி ஒளியின் தன்மையாக மாற்றும் ஆற்றல் பெற்றவர்கள் தான் ஞானிகள்.
1.அவர்கள் தங்களுக்குள் விளைய வைத்த அந்த அரும் பெரும் சக்திகளைத் தான்
2.இங்கே உங்களுக்குக் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

பூமி வெப்பமாகி எண்ணிலடங்காத மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது – ஈஸ்வரபட்டர்

 

ஆவியாகி… நீராகி… பிம்பமாகி.. மீண்டும் ஆவியாகி… நீராகி.. பிம்பமாகி…! முடிவில்லா மூன்று நிலைகளின் வட்டம் தான் இன்றுள்ள நிலை.

அன்று சித்தர்களினால் பண்டைய இராமாயணக் காவியங்களிலும் இன்னும் பல புராணங்களிலும் உள்ள உள் கருத்தை ஊன்றி நாம் அறிந்தோமானால் கதையாகப் படைக்கப்பட்டு உள் ஞானத்தின் சத்தை எடுத்து ஆய்ந்து பார்த்தோம் என்றால் “அதன் வடிகாலிலிருந்து பல உண்மைகளை நாம் அறியலாம்…”

இந்த உலகில் வட துருவ தென் துருவ நீர் நிலையினால் தான் இந்த உலகமே சுழன்று ஓடிக் கொண்டுள்ளது… வளர்ந்து கொண்டுள்ளது.

இந்தப் பூமியில் உள்ள விஷ அமில குணங்களைத் தன்னுள் ஈர்த்து இன்றைய மனிதனுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் வாழ வைக்கக்கூடிய திசை தான் வடதிசையும் தென் திசையும்.
1.ஆனால் வட திசையை எதற்கும் ஆகாததாகச் சகுணம் பார்க்கின்றான்
2.தீயவை தீயவையுமல்ல… நல்லவை எல்லாம் நல்லவையுமல்ல…!

“சிவன் விஷத்தை உண்டு…” தன் கழுத்திற்குக் கீழ் அது செல்லாமல்… தன் கழுத்திலேயே பாம்பாக வைத்துள்ளார்…! என்ற தத்துவத்தின் உண்மை என்னப்பா…?
1.வட துருவம் விஷக் காற்றுக்களை ஈர்த்து வைத்துக் கொண்டு மற்ற பாகங்களில் அதைப் பரவாமல்
2.விஷ குண அமிலத்தையே நன்மையாகச் செயல்புரிகிறது வட துருவ தென் துருவ திசைகள்.

வட துருவத்தையே ஈஸ்வரனாக்கிப் பாற்கடலில் பள்ளி கொண்டு அவரின் செயல் சிலாக்கிய முறைகளை எல்லாம் தத்துவக் கதைகளில் பிம்பத்தை உணர்த்திப் பிம்ப நாம காவியம் படைத்தார்கள் நம் முன்னோர்கள்.

நம் பூமியில் இந்தக் கோடிக்கணக்கான ஆண்டு சுழற்சி வட்டத்தில் பூமியின் சத்துப் பலனை இதற்கு முன்னாடி நம் பூமி பெற்றது. ஆனால் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் அறிவின் வளர்ச்சி கொண்ட மனிதனால் நம் பூமியின் நிலையே பட்டுப் போன மரத்தைப் போல் உள்ளது.
1.பல ஆண்டுகள் பலன் தந்து தன் சக்தி வலுவிழந்து நிற்கும்
2.பட்டுப் போன மரத்தைப் போன்ற நிலையில் தான் நம் பூமியின் உள் ஜீவ நிலை உள்ளது.

பலனை எல்லாம் தந்தது. அந்தப் பலனை நாம் பலவாகப் பிரித்து எடுத்துவிட்டோம். பின் இன்றைய நிலை எப்படியப்பா இருக்கும்..?

நம் பூமியின் வட துருவ தென் துருவ திசைகளிலும் அதிகப்படியான விஷத் தன்மையின் நிலையினால் அதை வடிகட்டி இது நாள் வரை நம் பூமிக்குச் சுத்தமாக்கித் தந்த காற்றின் நிலையே இன்று மாறி விட்டது.

வட துருவமும் தென் துருவமும் எப்படிக் விஷக் காற்றைத் தன்னுள் எடுத்துச் சுத்தப்படுத்தித் தருகிறது என்பீர்…?

மாம்பழத்திலும் இன்னும் சில வகைப் பழங்களில் அதன் உள் கொட்டை எப்படிக் கசப்பாகவும் பழங்கள் இனிப்பாகவும் உள்ளன…?

அதைப் போல் நம் பூமியின் இயற்கையே இந்தக் கரியமில வாயுவான விஷ அமிலக் காற்றைச் சுத்தப்படுத்தி வெளிப்படுத்தும் மையக் கோளங்களாக இந்த வட துருவ தென் துருவ நிலையுள்ளது. அதன் அமிலப் படிவமே மீண்டும் உறைந்து பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

மாற்றங்களின் வழித் தொடரிலும் நம் பூமியின் விஷ அமில குணத்திலும் அதிகப்படியான வளர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதினால் வட துருவ தென் துருவ செயல் நிலையிலும் “இந்த விஷத் தன்மை அதிகப்பட்டு விட்டது…!”

எதுவுமே… அதனதன் வளர்ச்சி நிலைக்கொப்ப தன் இயற்கையுடன் தானாக வளர்ந்து “ஒரு நிலையான வழி முறையுடன் வழி நடந்தால் தான்…” அதன் நிலையில் ஒன்று போல் இருக்க முடியும்.

குழந்தைப் பருவத்தில் அந்தந்த வயதுக்குகந்த அறிவு ஞான வளர்ச்சியை எப்படி வளர்த்துக் கொண்டு எந்த அறிவு செயல் முறை மனிதனாக வழி பெற்று அவன் வாழ்கின்றானோ அதன் தொடர் வாழ்க்கை தான் அவனால் வாழ முடியும்.

1.எண்ணத்திற்கு மேல் செயலை ஏற்றினால் செயல் முறையில் நிறைவைக் காண முடியுமா…?
2.அதிகப்படியான எண்ணச் சுமையை ஏற்றப்படும் பொழுது பைத்தியம் தான் பிடிக்கும் அந்த மனிதனுக்கு…!
3.அதைப் போன்ற நிலை தான் நம் பூமியில் வட துருவ தென் துருவ திசைகளுக்கு ஏற்பட்டுள்ளது.

அதனின் விளைவுகள் தான் சீதோஷ்ண நிலை மாற்றம்… பருவ நிலை மாற்றம்… அதிக வெயில் அதிக மழை அதிகக் குளிர்… எல்லாமே.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

உதாரணமாக நம் நண்பரின் கஷ்டத்தை நாம் கேட்டு அறிகின்றோம். அவர் பட்ட கஷ்ட உணர்வு நம் உயிரிலே பட்டவுடனே நாமும் சோர்வடைகின்றோம்.

ஐயோ.. பாவம்…! நல்ல மனிதன்… உனக்கும் இப்படிக் கஷ்டம் வந்துவிட்டதா…? என்று கேட்டு அவருக்கு உதவியும் செய்கின்றோம். அப்போது உதவி செய்யும் போது நம் நல்ல மனதில் அவருடைய கஷ்டமான உணர்வுகள் கலந்து விடுகின்றது.

தங்கத்தை நகையாகச் செய்ய வேண்டும் என்றால் செம்பையும் வெள்ளியையும் கலப்பார்கள். அதைப் போன்று அவருடைய கஷ்டம் கலந்தாலும் வாழ்க்கையில் உதவி செய்து விட்டோம்.

வாழ்க்கையில் நாம் ஒருவருக்கு உதவி செய்தால் தான் நாளைக்கு அவரும் உதவி செய்வார். அப்பொழுது
1.இந்த வாழ்க்கை என்ற செயினிற்கு (தொடருக்கு)
2.அவரோடு தொடர்பு கொண்டு அந்த அன்பை நீங்கள் வளர்க்கின்றீர்கள்.

கஷ்டத்தைக் கேட்டு உதவி செய்து வீட்டிற்குள் வருகின்றீர்கள். பேரப் பிள்ளையைத் தூக்கிக் கொஞ்சியதும் அந்தக் குழந்தை வீர்… வீர்… என்று கத்துகின்றது.

குழந்தை கத்தியவுடன் மருமகளைக் கூப்பிட்டு… நீ பிள்ளையைக் கவனிக்கும் முறை இது தானா…? ஏன் உன் பிள்ளையை இப்படி அழுகச் செய்கிறாய்…? என்று கேட்போம்.

இல்லையே…! இது வரை குழந்தை நன்றாகத் தான் இருந்தது. இப்பொழுது நீங்கள் வந்தவுடன் தான் அழுகின்றது…! என்று மருமகள் சொல்கிறது.

அதற்கு நாம் என்ன சொல்வோம்..? அப்படியானால் நான் தான் தப்பு செய்தேனா…? என்று அங்கே சண்டை வருகிறது.

ஏனென்றால்…
1.அங்கே நம் நண்பருடைய கஷ்ட நஷ்டத்தைக் கேட்டோம்
2.அதை நாம் சுத்தப்படுத்தவில்லை
3.அது இங்கேயும் வந்து வரிசையில் அடிக்கின்றது.

கேட்டறிந்த கஷ்டத்தையும் வெறுப்பையும் வேதனையையும் துடைக்க வேண்டுமல்லவா…?

அதற்காகத்தான் விநாயகரை (தெருவுக்குத் தெரு) வைத்துக் காட்டினார்கள் நம் ஞானிகள். நண்பருடைய இன்னல்களைக் கேட்டறிந்தோம்… உதவியும் செய்துவிட்டோம்… ஆனால் அந்த இன்னலான உணர்வு நம் உடலில் அது சேரக் கூடாது.

நம் உடலில் சேரக் கூடாது என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா…! என்று நம் உயிரைப் புருவ மத்தியில் எண்ண வேண்டும். நாம் எண்ணுவதை எல்லாம் அவன் தான் நமக்குள் உற்பத்தி (உடலாக) செய்கின்றான்.

ஆகவே அவனைத் தான் அந்த நேரத்தில் எண்ண வேண்டும். ஈஸ்வரா…! அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
1.விநாயகரைப் பார்த்து இந்த முறையில் கும்பிட்டுப் பழகினால் தான்
2.நாம் எண்ணியவுடன் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கும்
3.நம்மை அறியாது உட்புகந்த கஷ்டங்களையும் இன்னல்களையும் அடக்கும்…
4.நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் சக்தியாக வளரும்.

ஆனால்… இரண்டு தோப்புக்கரணம் போடுகிறேன்… உனக்கு இரண்டு அருகம்புல்லை வைக்கின்றேன்…! எனக்கு நல்லது செய்…! என்று விநாயகரிடம் கேட்டால் இந்த எண்ணம் தான் வரும்.

ஆகையினால் ஈஸ்வரா.. என்று நம் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா பெற வேண்டும் என்று கண்களைத் திறந்து நினைவை வானை நோக்கிச் செலுத்தி மீண்டும் கண்ணின் நினைவை உடல் முழுவதும் பாய்ச்ச வேண்டும்.

இதைத்தான் கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்று சொல்வது…!

கண்ணில் பார்த்தவுடன்…
1.ஒருவன் தப்பு செய்கின்றான் என்று நம் கண் காட்டுகிறது.
2.அது மட்டுமல்ல… தவறு செய்த உணர்வை நம் கண் இழுத்து
3.அவன் தப்பு செய்கின்றான் என்று கண் தான் நமக்குள் தெரிய வைக்கின்றது… இல்லையா…?

அப்பொழுது நாம் நண்பரின் கஷ்டத்தைத் தெரிந்து கொண்டோம் என்று கண் உணர்த்திய பின் உடனே என்ன செய்ய வேண்டும்…?

அதே கண்ணின் நினைவை கொண்டு… உயிரான ஈசனைப் புருவ மத்தியில் எண்ணி… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று வானை நோக்கி அந்தச் சக்தியைச் சுவாசித்துத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதன் பின் நண்பரைப் பார்த்து மகரிஷிகளின் அருள் சக்தி நீ பெறுவாய். உன் சிரமம் எல்லாம் நீங்கிப் போகும். நீ நன்றாக இருப்பாய்…! என்று
1.நம்மை முதலில் தூய்மைப்படுத்திவிட்டு அந்த வலு கொண்டு
2.நீ நன்றாக இருப்பாய்…! என்று நண்பரிடம் வாக்கினைப் பதிவு செய்ய வேண்டும்.

அந்த வலிமையான மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எடுக்கப் பழகுவதற்குத்தான் விநாயகரை வைத்தனர். ஒவ்வொரு நாளும் காலையில் அங்கே நம் மூதாதையர்களின் உயிரான்மாக்களை பிறவா நிலை பெறச் செய்ய வேண்டும் என்று உந்தித் தள்ளும்படி செய்தார்கள் ஞானிகள்.

1.முன்னோர்களை முதலில் அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்யும் நல் வினையை உன் உடலில் சேர்க்க வேண்டும்
2.அப்பொழுதுதான் நீ விண்ணிற்குச் செல்வாய்… மனிதன் என்ற நிலையில் நீ முழுமை பெறுவாய்…! என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

சகஜ மார்க்கம்

 

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்பது உங்கள் உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் குருவாக இருப்பது உங்கள் உயிரே.

நாம் எண்ணியது அனைத்தையும் நமக்குள் ஊழ்வினையாகப் பதியச் செய்து… மீண்டும் நினைக்கும் போது “அது குருவாக இருந்து” நமக்குள் அந்த ஒவ்வொரு குணமும் செயல்படுகின்றது.

உதாரணமாக குழந்தை மேல் பாசமாக இருக்கின்றேன். அது உயிரிலே பட்ட பின் ஓ… என்று பிரணவமாகிறது. அடுத்து அது ம்… என்று உடலாகிறது.

மீண்டும் அதே குணத்தை நான் எண்ணும் போது அந்தப் பாசத்தால் அவனுக்குச் செய்ய வேண்டிய “குரு நிலையாக” அவனுக்கு வழி காட்டுகிறது.
1.இப்படித்தான் நாம் எண்ணிய குணங்கள் எதுவோ அது குருவாக நமக்குள் இயங்குகிறது.
2.ஆனால் நாம் எதைக் குருவாக ஆக்க வேண்டும்…?

மெய் ஞானிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி அந்த அரும் பெரும் சக்தியாக அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

அந்த உணர்வின் சக்தியைத் தான் இங்கே உபதேசிக்கின்றோம். நீங்கள் கூர்ந்து கவனிக்கும் போது உங்கள் எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவாகிறது.

1.பதிவாக்கியதை நீங்கள் மீண்டும் நினைவு கூறும் போது
2.அந்த ஞானிகள் உணர்வு குருவாக நின்று உங்கள் வாழ்க்கையில் வரும் இடையூறுகளை நீக்கி
3.மெய்ப் பொருள் காணும் நிலையாகப் பெறச் செய்யும்.

ஆகவே…
1.உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் இடையூறு வருகின்றதோ
2.அந்த நேரத்தை எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் ஆற்றலாக
3.அந்தத் தகுதியாக நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

அத்தகைய தகுதியைப் பெறச் செய்ய வேண்டும் என்பதற்குத் தான் அதைக் குருவாக உங்களை ஏங்கச் செய்வது. “சகஜ மார்க்கம்” என்பது இது தான்.

1.ஞானிகளின் உணர்வைக் கண் புலனறிவால் ஏகி அதனின் உணர்வைப் பருகி
2.அந்த விண்ணுலக ஆற்றலைப் பெற்றவர்கள் உணர்வை நமக்குள் எடுக்கப்படும் போது
3.அவர்கள் உணர்வைக் கவர்ந்து கொள்ள முடியும்.

உதாரணமாக ஒரு உயர்ந்த வித்தை நிலத்தில் ஊன்றி அதற்கு நீரை ஊற்றினால் பூமியின் ஈர்ப்புத் துணை கொண்டு காற்றிலிருக்கும் தன் இனச் சக்தியை எடுத்து நல்ல வித்தினைக் கொடுக்கின்றது.

அதைப் போன்று தான் அருள் ஞானிகளின் வித்தை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அது ஜீவன் பெற உங்கள் நினைவை மீண்டும் கூட்டினால் அந்த உணர்வின் சத்தை காற்றிலிருந்து கவர முடியும்.

அவ்வாறு கவர்ந்து அதனின் உணர்வைத் தனக்குள் வளர்த்து வரும் நஞ்சு கொண்ட உணர்வின் அணுவைப் பிளந்து உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி மெய் ஒளி காணும் மெய் சரீரத்தைக் காண முடியும்.

அதைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்தில் தான் இதை நான் (ஞானகுரு) உபதேசிக்கின்றேன்.
1.நிச்சயம் நீங்கள் பெறுவீர்கள்.
2.உங்கள் மூச்சு இருள் சூழ்ந்த நிலைகளை நீக்கும்.

உங்கள் உணர்வுகள் அனைத்தும் நலமும் வளமும் பெற்று உங்கள் சொல்லைக் கேட்டுணர்ந்தோர் அனைவரையும் இருளை நீக்கி மெய்ப் பொருளைக் காணும் உணர்வுகளாக வளர்ச்சி பெறும்.

அதற்காக வேண்டித் தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று நான் (ஞானகுரு) எண்ணுகின்றேன்… தியானிக்கின்றேன். அந்த உணர்வின் தன்மை எனக்குள் ஊழ்வினையாகப் பதிவாகிறது.

அதை மீண்டும் நான் நினைக்கும் போது
1.உங்களுக்கு என்னென்ன உதவி செய்ய வேண்டும்…?
2.நீங்கள் எப்படி மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற வேண்டும்…?
3.உங்களை அறியாது சேர்ந்த இருளை எப்படி நீக்க வேண்டும்…? என்ற
4.அந்த குரு வழிப்படி உங்களுக்கு உபதேசிக்க வேண்டி வருகிறது.

இது எனக்குள் குருவாக வந்து என்னை இப்படி இயக்குகிறது. குருநாதர் அருள் வழிப்படி இதை உபதேசிக்கின்றேன்.

ஞான வழியில் நாம் சீராகச் செல்ல வேண்டும் என்றால் மகரிஷிகளின் அருள் சக்தி மிகவும் அவசியம் – ஈஸ்வரபட்டர்

 

ஓர் மனிதன் தன் சுவாசத்தினால் எடுக்கும் எண்ணத்தின் அலையை ஒத்துத்தான் அவனது அறிவாற்றல்… குணமும்… உடல் உறுப்பும்… உருவமும்… எல்லாமே இருந்திடும்.
1.அதை எல்லாம் எந்த ஒரு தனி மனிதனுக்கும்
2.ஆண்டவனாக வழி அமைத்துத் தருவதில்லை…! (இது முக்கியம்)

எல்லாமும் ஒன்றாக… ஒன்றிலே எல்லாமும் உள்ள பொழுது.. எதன் அடிப்படைச் சக்தியை எவ்வாத்ம எண்ணம் ஈர்த்து வாழ்கின்றதோ… அதன் தொடர்ச்சி நிலைக்குகந்த அளவு… அறிவாற்றலும் வாழ்க்கை நிலையும் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அமைகின்றது.

ஒருவர் அதிக சுறுசுறுப்புடனும் செயலாற்றும் திறமையுடனும் நல் நிலையில் வாழும் பொழுது அவர் எடுத்துக் கொள்ளும் எண்ண சுவாசத்தின் வளர்ச்சி அமிலத் தன்மையினால்தான் அந்த மனிதன் உயர்கின்றான். அவன் எடுக்கும் நிலைக்கொப்ப ஆவிகளின் (பிற ஆன்மாக்கள்) தொடர்பும் ஏற்படுகின்றது.

மின் அலை எப்படி எந்தெந்த விகித நிலைக்கொப்ப பாய்ச்சப்படுகின்றதோ அதன் நிலைக்கொப்ப ஒளியைத் தரக்கூடிய நிலையையும் எந்தெந்த இயந்திரங்களுக்கு எந்தெந்த விகிதத்தில் மின் அலை பரப்பப்படுகின்றதோ அதன் சக்தி ஓட்டத்தைத் தான் அந்த இயந்திரம் எடுத்து ஓடுகிறது.

அதைப் போல்…
1.எதன் அடிப்படையில்… எதன் விகித நிலைக்கொப்ப..
2.ஒவ்வொரு ஆத்மாவின் எண்ணச் சுவாசமும் உள்ளதோ..
3.அதன் சக்தி நிலையைத்தான் அவன் பெற முடியும்.

அதன் செயலில் தான் அவன் வாழ்க்கையும் அமைகிறதேயன்றி பல கோவில் ஸ்தலங்களுக்குச் சென்று ஆண்டவனை வணங்கி வந்து “பூஜித்துச் சக்தி பெறுவதல்ல…!”

எண்ணத்தின் ஈர்ப்பை உயர்வாக்கி எடுக்கும் சுவாச குண அமிலத்தினால் பலவாக உள்ள இந்தக் காற்றின் அமிலத்திலிருந்து “நமக்குகந்த அமிலத்தை நாமாக எடுத்துக் கொள்ளலாம்…”

இதன் வளர்ச்சியில் நமது எண்ணமும் சுவாசமும் இருக்குமானால் அதன் நிலையில் நாம் எடுக்கும் ஜெப முறையில் நம் எண்ண ஈர்ப்பை நமக்கு மேல் சக்தி வாய்ந்த சித்தர்களின் பால் நம் எண்ணத்தைச் செலுத்திடல் வேண்டும்.

அப்படிச் சித்தர்கள் பால் தொடர்பு கொண்டு எடுக்கும் சுவாச அலையின் தொடர்பினால்… இந்த உடலுடன் மனித உலக வாழ்க்கையில் வாழும் நாம்
1.பிம்பப் பொருளைக் கண்டு பொருளாக வாழும் இந்த வாழ்க்கையிலிருந்து பெற முடியாத “ஞானத்தை”
2.நம் ஈர்ப்பின் ஜெப எண்ணத்தை சித்தர்பால் செலுத்தி
3.அவர்களின் தொடர்பலையின் சக்தி குண அமிலங்களை நாம் பெறும்படி வழிப்படுத்திக் கொண்டால்
4.நம் ஞான வளர்ச்சியின் தொடரில் செல்லும் வழி முறைப் பாதையை அறிந்து கொள்ளலாம்.
அந்தப் பாதையை அறிந்து விட்டால் நாம் செல்ல வேண்டிய வழியில் எந்தத் தடங்கலும் இருக்காது.

பலவாக உள்ள உலக வாழ்க்கை எண்ணத்தில் நம் எண்ணத்தை ஒன்றாக்கி… “ஓ…ம்” என்ற ஒலியுடன் சித்தர்கள் பால் நம் எண்ண ஈர்ப்புச் சக்தியை நாம் தந்தோமானால் மெய் ஞானம் பெறும் வழி ஞானம் அறியலாம்.

ஞானத்தின் ஈர்ப்பில் கலந்தோமானால் பல உண்மையின் பொருளை உலகளவுக்கு உணர்த்தலாம்.

ஞானிகளும் சப்தரிஷிகளும் நம் வளர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்காவிட்டால் நம் பூமியில் மனித ஞானம் இன்று “ஞானமும் கண்டிருக்காது… விஞ்ஞானமும் கண்டிருக்காது…!”
1.இன்றைய காலகட்டத்தில் நம் சித்தர்களின் ஒளி சக்திகள்
2.இந்த உலகில் அதிகமாகச் செயல்பட்டுக் கொண்டுள்ளது.

ஆனால் மனித ஞானம் எல்லாமே ஞானத்தின் பால் செல்லும் வழிமுறையற்றுப் பேராசையின் பிடி ஞானத்தில் தன் வலுவான விந்தை காணத் துடிக்கிறது.

மனிதனின் பேராசையின் விபரீத எண்ணச் சுழல் காற்றுகள் பூமியின் சுழற்சியுடன் அதிகப்பட்டு… மோதி… உயிர்ப்பலிகள் அதிகமாகி…
1.ஆவியின் சூழ்ச்சியில்.. அல்லலுக்கந்த வாழ்க்கையில் வாழ்கின்றான் மனிதன் என்பதை
2.அறியாமல் தான் இன்றைய மனிதர்கள் வாழ்கின்றனர்…!

தனதாக உள்ளது எது…? என்பதும் இம் மனித ஞானத்திற்குப் புரியவில்லை. தனி மனிதன் யாரும் வாழவில்லை… “தனியாக” யாருமே எங்கேயுமே வாழ முடியாது.

காற்றையும் நீரையும் நிலத்தையும் தன்னுள் உள்ள பல கோடி அணுக்களையும் வாழ வைத்து… வாழும் மனிதன்…
1.தானாக வாழ்கின்றானா..? அந்தத் “தனது” என்ற பேராசைக்கார மனிதன்…?
2.ஒன்றின் துணையில்லாமல்…
3.ஒன்றுடன் ஒன்றில்லாமல் வாழவே முடியாத மனிதன்
4.”நான்…” என்ற நானாக… வாழ்கின்றானாம்..!

ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் ஆண்டவனின் ஸ்வரூபத்தை எண்ணி வாழ வேண்டுமப்பா….!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து வந்த நாம் புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வரையிலும் எத்தனையோ வேதனைப்பட்டுள்ளோம்.

அத்தகைய வேதனையிலிருந்து மீண்டிடும் உணர்வுகளைச் சுவாசித்துச் சுவாசித்து அதன் வளர்ச்சியாக இந்த மனித உடலாக உருவாக்கியது நம் உயிர் தான்.

அப்படி வேதனையிலிருந்து விடுபடும் உணர்வுகள் கார்த்திகேயா…!

அதாவது ஒவ்வொரு உடலிலும் எத்தனை தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வின் ஞானம் பெற்று
1.இந்த மனித உடலாகும் போது அதற்குத்தகுந்த உறுப்புகளை உருவாக்கி
2.தீமையிலிருந்து விடுபடும் வலுவான அந்தச் சக்தியாக
3.ஆறாவது அறிவாக வள்ளி மிகச் சக்தி வாய்ந்த நிலையாக மாறுகின்றது.
4.அதைத்தான் வள்ளி என்று பெண்பாலைக் காட்டுகின்றார்கள்.

இந்த வலிமைமிக்க சக்தி பெற்ற நிலையைத் தான் நம்மைக் காட்டிலும் ஞானிகளோ பெரியவர்களோ அவர்கள் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று மிக மிகச் சக்தி வாய்ந்ததாக அவர்கள் உடலில் வளர்த்துள்ளார்கள்.

அந்த மகான்கள் எல்லாம் தனக்குள் வந்த நோய்களையும் தீமைகளையும் வராதபடி வலு கொண்டு சமாளித்துக் கொண்டவர்கள்.

அந்தக் குடும்பப் பந்தம் இல்லாதபடி தீமையிலிருந்து விடுப்ட வேண்டும் என்று
1.அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு வலிமையான உணர்வுகளைச் சுவாசித்து
2.அவர் உடலிலே எந்தத் தீமையும் சாடாதபடி…
3.அதைத் தாக்கிடும் தாங்கிக் கொள்ளும் அந்த உணர்வினைப் பெற்றுள்ளார்கள்.

அப்படிப் பெற்றிருக்கும் போது… நம் கண்ணுக்கு முன்னாடி ஒரு மகானைப் பார்த்தோம் என்றால்
1.அந்த மகானின் அற்புத நிலைகள் நாமும் பெற வேண்டும்
2.அவரின் அருளாற்றல் பெறவேண்டும்
3.நமக்குள் இருள் வராதபடி தடுக்கும் அந்த அருள் சக்தி வேண்டும் என்று எத்தனை பேர் இப்படி எண்ணுகின்றோம்…?

நம் உடலில் ஒரு நோய் வந்ததென்றால் அந்த மகானை நினைத்து அழுவோம். நான் எல்லோருக்கும் நன்மை தானே செய்தேன்… என்னை ஏன் இப்படிச் சோதிக்கின்றாய்…? என்ற நிலையில் கோவிலுக்குச் சென்றாலும் இதைத்தான் நினைக்கின்றோம்.

ஏனென்றால் நன்மை செய்பவர்கள் எல்லாம் எப்படிச் செய்கின்றார்கள்…?

மற்றவர்கள் வேதனைப்படுவதை எல்லாம் கேட்டு அறிந்து அடப் பாவமே…! என்று சொல்லித் தான் நாம் உதவியே செய்கின்றோம்.

அவர் வேதனையை நாம் அதிகமாக நேசித்த பிற்பாடு அதன் ரூபமாக பண உதவியோ மற்றதையோ செய்கின்றோம். ஆனாலும் அவர் உடலிலிருந்து வேதனையை நாம் நுகர்கின்றோம்.

இப்படி நம்மை அறியாமலே நன்மை செய்யும் சமயங்கள் எல்லாம் அடுத்தவர்களின் வேதனைகளையோ அவர்களின் குடும்பக் கஷ்டங்களையோ நோய்வாய்ப்பட்டோரின் உணர்வுகளையோ எல்லாவற்றையும் நுகர்கின்றோம்.

இந்த உணர்வுகள் வலிமையாகி… நாம் நுகர்ந்த பின் நம் உடலில் வந்து சேருகிறது “காசு கொடுத்து விலைக்கு வாங்கிய மாதிரி…!”

ஆனாலும் இதைச் சுத்தப்படுத்த வேண்டுமல்லவா…! அதற்கு நாம் என்ன வைத்திருக்கின்றோம்…?

நம் பிரபஞ்சத்தின் மாற்றம்

 

மனிதர்களாக உருவான பின் வாழ்ந்து… கடைசியில் இறந்த பின் அந்த உடலைப் புதைத்தால் அது கரைந்து விடுகிறது… மற்றொன்றுக்கு இரையாகின்றது. (உடலை மண் தின்கிறது என்று சொல்வோம்).

1.இதைப் போல் தான் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள நம் சூரியன் தன் செயலை இழந்தால் கரைந்துவிடும்.
2.காரணம் நம் பிரபஞ்சத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களும் தனித் தனியாக ஒரு சூரியக் குடும்பமாக மாறும் தருணம் வந்துவிட்டது (உபதேசம் செய்த வருடம் 1992).

கார்த்திகை நட்சத்திரம் நம் சூரியனைப் போல் அதுவும் வளர்ச்சிக்கு வருகிறது. ரேவதி நட்சத்திரமும் அதே போல் சூரியனாக மாறுகிறது. அதே போல் இன்னும் இரண்டு மூன்று நட்சத்திரங்கள் சூரியனாக மாறிக் கொண்டிருக்கின்றது.

இப்படி மாறி விட்டால் நாம் வாழும் இந்தச் சூரியனுக்குக் கிடைக்கக்கூடிய ஆகாரத்தை அது பகிர்ந்து கொள்கிறது. இது முதுமை அடைகிறது.

ஆக இப்படி நம் பிரபஞ்சத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களில் சரி பகுதி தனித் தனி சூரியக் குடும்பமாக மாறி விட்டால்
1.நம் சூரியனுக்கு இரையில்லை.
2.இந்தச் சுழற்சியின் தன்மை இதனின் (சூரியனின்) ஈர்ப்பு வட்டம் குறையும்.

இந்த ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் நம் பூமியோ இதைப் போல் அந்த சுழலுக்குள் சிக்கி இதுவும் சுழற்சியான பின் அதற்குள் போய்க் கரைந்து விடும்… ஆவியாக மாறும்.

மற்ற இந்த 27 நட்சத்திரங்கள் இருக்கிறதல்லவா… இதிலே ஒவ்வொன்றும் சூரியக் குடும்பமாக மாறிப் போகும் உணர்வுகளுக்கு இது உணவாகிவிடும்.

இப்படித் தான் அகண்ட அண்டத்தில் உள்ள இந்த 2000 சூரியக் குடும்பங்களும் ஓர் குடும்பமாக மாறி வளர்ந்து வந்துள்ளது.

அதே சமயத்தில் நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் 27 சூரியக் குடும்பமாக மாறிவிட்டால் இது ஒரு வட்டமாகின்றது… பேரண்டம் ஆகிறது.

இதன் வளர்ச்சியில் இதைப் போல் மாறி மாறித் தன் பெருக்கத்தின் நிலைகள் கொண்டு 2000 சூரியக் குடும்பங்களாக வளரும்.

1.நான் (ஞானகுரு) வெறுமனே சொல்லவில்லை… படிக்காதவன் தான் சொல்கிறேன். படித்திருந்தால் தப்பாகத் தான் சொல்லியிருப்பேன்.
2.இந்தப் பிரபஞ்சத்தில் ஏற்படும் மாற்றம் பற்றி அன்றே குருநாதர் எமக்குக் காட்டினார்.

ஆகையினால் குருநாதர் கொடுத்த அந்த மெய் உணர்வின் தன்மைகளை நீங்கள் பெற்று அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நுகர்ந்து
1.அகண்ட அண்டத்தையும் அறியலாம்
2.இந்தப் பிண்டத்திற்குள் அதனின் ஆற்றலை எடுத்து வளர்க்கவும் செய்யலாம்.
3.இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலையையும் நீங்கள் அடையலாம்.

அதற்குத் தான் இதை எல்லாம் சொல்வது.

உயிருடன் ஒன்றி வாழ்ந்தால் பிறப்பின் பலனை அடையலாம் – ஈஸ்வரபட்டர்

 

சக்தியின் நிலை பலவற்றில் கலந்திருந்தாலும் அதன் “கூட்டு நிலை…” கொண்டு தான் ஒவ்வொன்றின் பிரகாசமும் ஜொலிக்கின்றது.

தனித்த பூக்களாக இருந்தாலும் அதை எல்லாம் ஒன்றாகக் கோர்த்து ஆரம் கட்டித்தான் ஆண்டவனுக்குச் சூட்டி மகிழ்கின்றோம்.
1.ஒன்றாக உள்ளதைப் பலவாகத் தருவதே இயற்கை…!
2.தாவர வளர்ச்சியின் நிலையிருந்துதான் முன்னோடி நிலை பெறுகின்றது.

தானாக வளரும் தாவரங்களும் சரி… நாமாகப் பயிர் செய்யும் தாவரங்களும் சரி… ஆரம்ப வளர்ச்சியில் அதற்கு வேண்டிய சக்தியை ஈர்த்துத் தன் சேமிப்புச் சக்தியின் பலன்களைத் தருகின்றன.

1.பூவையும் காய்களையும் கனிகளையும் சில தாவரங்கள் தருகின்றன.
2.பூவும் கனியும் அளிக்காத புல் பூண்டு இன வர்க்கங்கள் அதன் அமில குணங்கள் முற்றிய பிறகு
3.வேர்களின் அதனின் சக்தி குணத்தை அதிகப்படுத்திக் கனம் கொண்டு தான் சேமித்து
4.வளர்ச்சி நிலையை வளரந்த பிறகு வெளிப்படுத்துகின்றது.

“வளர்ச்சியின் முற்றலை…” ஒவ்வொரு தாவர இன வர்க்கமும் வெளிப்படுத்திய பிறகு தான் அதனின் உயிர் ஜீவ சக்தி மாறுபடுகிறது.

அதன் மாற்றத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்ட ஜீவ ஆத்மாக்களுக்கு ஆரம்ப காலத்திலேயே ஒன்றாகப் பல அமில குணத்தை ஈர்க்கும் நிலை பெற்றதனால் மனிதனும் மிருகமும் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் இன வர்க்கங்களும் தம் உடல் அவய அமைப்பில் பல நிலைக்கேற்ப அங்க அவயங்கள் ஒரே தன்மையில் ஈர்த்து வளரும் நிலை கொண்ட இன குணங்களுடைய ஜீவராசிகளாக வளர்ந்திருக்கின்றோம்.

தாவரங்கள் சக்தியை ஈர்த்துப் பிறகு பலன் தருகிறது. தாவரங்களுக்கு உண்டு கழிக்கும் நிலை இல்லை.

பலவும் ஒன்றாக ஈர்த்துப் பல அவயங்களை ஒன்றுபடுத்தி உருவ அமைப்பு கொண்ட ஜீவன்களுக்கு உண்டு கழித்து வாழும் அவயங்கள் எப்படி அளிக்கப்பட்டன…?

அளிக்கப்பட்டன…! என்பதைக் காட்டிலும் வளர்ச்சியில் முன்னேற்றம் கொண்ட ஜீவ ஜெந்துக்கள் தன் வளர்ச்சியில் உண்டு கழித்துப் பல கோடி உயிரணுக்களை வளர்த்து வாழும் நிலையில் பயன் பெறும் பக்குவ நிலை பெறுவது தான்…! அது.

அதாவது…
1.தன் அவயங்களில் உள்ள பல கோடி அணுக்களை வளர்த்து
2.ஒன்றாக அதைக் கூட்டிப் பேணிக் காக்கும் ஓர் உயிரணுவின் தெய்வ சக்தியில்
3.உயிர் சக்தியான மனித உயிரணுவின் ஞானத்தின் வளர்ச்சியைப் பழக்கப்படுத்திக் கொண்டு
4.ஞான வளர்ச்சிக்கு உகந்த தன்மையில் ஒவ்வொரு உயிரணுவும்
5.இதன் தொடருடன் ஐக்கியப்படும் வளர்ச்சி நிலையை ஏற்படுத்திக் கொள்வது தான் மனித ஜீவன் பெறும் பலன்.
6.ஆக ஜீவனாக உள்ள ஜீவனின் பலன்… இந்த ஞானம் பெறும் வழி ஞானம் தான்.

பலனற்ற நிலை பெறாத ஜீவ ஞானம் தான் அதனின் தொடரில் ஏற்படும் “மாற்று நிலைகளுக்குச் செயல்படச் சென்றுவிடுகிறது…”

மனிதனின் உடலிலுள்ள அனைத்து அணுக்களும் அதனதன் வளர்ச்சியில் வளர்ந்து கொண்டு இருந்தால் தான் அவயங்களில் உள்ள அனைத்து உறுப்புக்களும் ஆரோக்கியமான நிலையில் வளர்ந்து வாழ முடிகின்றது.

அணுக்களுக்கு உகந்த உணவை அதற்குகந்த ஈர்ப்பில் பெற்று வளர்ந்து வாழ்கின்றது.
1.எண்ணத்தின் நிலையை மாற்றிக் கொண்டு செயல்புரியும் நிலை பெற்று விட்டால்
2.ஈர்க்கும் குண நிலையும் அதன் வழித் தொடர் கொண்ட எந்தச் செயல் முறையும் தடைப்படத்தான் செய்யும்.

பலவாக உள்ள பூவை ஒன்றாக்கி ஆரம் கட்டி அதன் அழகை ஆண்டவனுக்கு அணிவித்து இன்பம் காணுவது போல்
1.நம் உடலில் பலவாக உள்ள அணுக்களை ஒன்றாக ஆரம் கட்டி
2.உயிராத்ம ஆண்டவனுக்கு ஞானம் சூட்டி… அழகாக்கி…
3.மனிதன் மகிழ வேண்டும்…! என்ற சித்தத்தைச் சிந்தையில் உணர்ந்தாலே
4.சிவபதம் முதலிய எப்பதமும் காணலாமப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

கூட்டுத் தியானங்களில் நாம் பதிவு செய்த வலுவான சக்தி துணை கொண்டு ஈஸ்வரா… என்று நம்மை இயக்கும் உயிரை எண்ணி ஏங்கி மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வினைச் சுவாசிக்க வேண்டும்.

அதன் மூலம் நம் உடலுக்குள் நம்மை அறியாது சேர்ந்த சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை போன்ற உணர்வின் சக்திகளை பலவீனப்படுத்தச் செய்ய வேண்டும்.

இல்லையென்றால் அது நம் உடலுக்குள் நோயாகி நல்ல குணங்களை செயல்படுத்தாது ஆக்கி விடும்.

1.இப்படி அடிக்கடி நாம் அந்த விண்ணை நோக்கி ஏகி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று ஆத்ம சுத்தி நாம் செய்து கொண்டால்
3.அன்றன்று அந்தந்த நிமிடங்களில் நமக்குள் நம்மை அறியாது ஏற்படும் தீமைகளை அகற்ற இது உதவும்.

அது மட்டுமல்லாமல்… நம்முடைய எண்ணங்கள் கூர்மையாக அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து நம் நினைவலைகள் அங்கே இணைக்க படுகின்றது.

இதனை நாம் வலுக் கூட்டக் கூட்ட… விண்ணின் ஆற்றலும் அந்த மகரிஷிகளின் தொடர்பும் நமக்குக் கிட்டுகின்றது.

நம்முடைய மூதாதையர்கள் எத்தனையோ வேதனைகளை அனுபவித்துத் தான் நம்மை வளர்த்து நமக்கு எத்தனையோ சுகங்களையும் கொடுத்துள்ளார்கள்.

இந்த வாழ்க்கையில் மனிதனாக உயர்ந்து வாழவும் வைத்துள்ளார்கள் செல்வங்களும் நமக்கு சேமித்து வைத்து உள்ளார்கள். செல்வங்களைச் சேமித்து வைத்தாலும் செல்வத்தைச் சேமிப்பதற்கு எவ்வளவோ வேதனைகள் பட்டு அனுபவித்தவர்கள் தான் நம் முன்னோர்கள்.

அந்த வேதனையின் உணர்வு வளர்ந்து மனித நினைவு இழந்து உணர்வின் சத்து அவர் உடலுக்குள் சேர்க்கப்படும்போது இன்னொரு மனிதனின் உடலுக்குள் அவர்கள் புகுந்தாலும்
1.அந்த ஆன்மா முதல் முதலில் சேர்த்துக் கொண்ட வேதனை உணர்வை அந்த உடலிலே உருவாக்கி அந்த உடலையும் வீழ்த்தி
2.நஞ்சின் உணர்வைத் தான் அந்த ஆத்மா வளர்த்துக் கொள்ளும்.

மீண்டும் இப்படி பல உடலுக்குள் போனாலும் அந்த நஞ்சைத் தான் வளர்த்து கொள்ள முடியுமே தவிர மனிதனின் உருவாக அந்தக் கருப்பெறும் தன்மையை இழக்கப்படுகின்றது.

பரிணாம வளர்ச்சியில் நாம் புழுவில் இருந்து மனிதனாக வளர்ச்சியில் வந்தது போல… மீண்டும் மனிதனிலிருந்து பரிணாம வளர்ச்சி தேய்பிறையாகி… பௌர்ணமிக்கு மறு நாள் தேய்வதுபோல மனிதனின் ஒளிச்சுடர் நாம் அறியும் நிலைகள் மங்கி… நாம் மீண்டும் பரிணாம வளர்ச்சியின் தொடர்ச்சியில் பாம்போ தேளோ பல்லியோ இது போன்ற விஷ ஜந்துக்களின் நிலையை அடையச் செய்து விடுகின்றது நமது உயிர்.

நம் முதாதையர்களின் உணர்வுகள் நம் உடலிலே உண்டு. அவர்களுடைய உணர்வுதான் நம் உடலை இத்தகைய நிலைகளுக்கு வளர்த்தது. நம்மை மனிதனாக உருவாக்கியது நம் முதாதையர்களுடைய எண்ணங்களே.

1.ஆகவே நம் வாழ்க்கையில் வரும் துன்பத்தைத் துடைக்க
2.அடிக்கடி விண்ணை நோக்கி மகரிஷிகளின் அருள் சக்தி பெறும்போது
3.நமக்குள் வலுப் பெறும் இச்சக்தியின் துணை கொண்டு
4.நம் முதாதையர்கள் குலதெய்வங்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்துடன் இணைக்கச் செய்ய வேண்டும்.

அப்படி இணைக்கச் செய்ய வேண்டுமென்றால் இப்போது நாம் இங்கே எப்படிக் கூட்டு தியானங்களில் செய்கின்றோமோ இதைப் போன்று குடும்ப கூட்டு தியானங்கள் செய்து அந்தந்தக் குடும்பத்திலிருந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை பிரிந்த நிமிடமே அவர்கள் இதைப்போல சப்தரிஷி மண்டலங்களில் இணைந்து பிறவா நிலை என்னும் ஒளி சரீரம் பெற வேண்டுமென்று ஐக்கிய உணர்வின் வலுக்கொண்டு அந்த ஆன்மாக்களை விண் செலுத்த வேண்டும். அதற்கு இந்தக் கூட்டுத் தியானம் உதவும்.

அந்த உணர்வின் சக்தியை நாம் வளர்த்துக் கொள்வதற்குத்தான் இந்தப் பௌர்ணமி தியானத்தையே வைத்துள்ளோம்.

நம் உயிருடன் ஒன்றி… ஞானகுருவுடன் ஒன்றி… ஈஸ்வரபட்டருடன் ஒன்றி… உணர்வை ஒளியாக மாற்றிடும் தியானப் பயிற்சி

 

ஓ…ம் ஈஸ்வரா…! என்று எண்ணும் போது புருவ மத்தியில் உயிரைப் பரிபூரணமாக எண்ண வேண்டும். குருதேவா என்கின்ற போது உடலுக்குள் இருக்கும் அனைத்து குணத்திற்கும் நம் உயிரே “குரு…” என்ற நிலைகளில் மதித்துப் பழக வேண்டும்

1. ஈசனாக இருப்பதும் உயிரே
2. விஷ்ணுவாக இருப்பதும் உயிரே
3. கடவுளாக இருப்பதும் நமது உயிரே
4. பிரம்மமாக இருப்பதும் உயிரே.
5. நாம் எண்ணியது எதுவோ அதைச் சிருஷ்டிப்பதும் நம் உயிரே,
6. எண்ணத்தால் கவர்ந்த உணர்வினைத் தன் ஆன்மாவாக மாற்றிக் கொள்வதும் “உயிரே”.
7. ஆன்மாவின் நிலைகள் அது உறையும்போது கடவுளாக உள் நின்று அதை உறையச் செய்யும் செயலாகச் செயல்படும் நிலைகளும் “உயிரே”.
8. நாம் எண்ணியது எதுவோ அதை உடலாக்குகின்றது நம் உயிர்
9. நாம் எண்ணியது எதுவோ அந்தச் சக்தியாக உள் நின்று மீண்டும் நம்மை இயக்குகின்றது.
10. நாம் எண்ணியதை ஆண்டு கொண்டிருப்பதும் ஆண்டவனாக இருப்பதும் நம் “உயிரே”.
11. நாம் எதை எண்ணுகின்றோமோ அதை வைத்து… அடுத்து…, “அவன் ஆட்சியும் நம்மை ஆளுவதும் அவனே”.

ஆகவே ஓம் ஈஸ்வரா குருதேவா என்கின்ற போது நம் உயிரின் இயக்கத்தைத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். மந்திரம் சொல்கிற மாதிரிச் சொல்ல வேண்டியதில்லை.

ஈஸ்வரா என்றாலே புருவ மத்தியில் நம் உயிரைத்தான் நினைவில் கொள்ள வேண்டும். ஈசன் எங்கேயோ இருந்து நம்மை இயக்குகின்றான் என்று வெளியிலே தேட வேண்டியதில்லை. வெளியிலே நினைவு செல்ல வேண்டியதில்லை.

குரு என்றால் உடலில் உள்ள அனைத்திற்கும் குருவே அவன் தான். ஏனென்றால் உயிர் ஒளியாகப் பெற்றவன். குரு ஒளியாக இருக்கின்றான். அந்த ஒளியின் நிலை பெற வேண்டும் என்ற ஆறாவது அறிவின் தன்மை கொண்டு எண்ணினால் குருவை நாம் மதிக்கின்றோம் என்று பொருள்.

உயிரின் உணர்வின் தன்மை கொண்டு அழியா ஒளிச் சரீரம் பெற்ற அருள் ஞானிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்றால் நாம் உயிரை அவசியம் மதித்துப் பழக வேண்டும். ஞானிகள் உணர்த்தியபடி அதை நாம் பின்பற்ற வேண்டும்.

இப்படி ஒவ்வொருவரும் அவரவர்கள் உயிரைப் புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி அந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா என்று திரும்பத் திரும்பச் சொல்வது. அதே போல் எண்ணியதை.., எண்ணியவாறு நடத்தித் தரும் “நாயகன்.., நம் உயிர் தான் என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

பேசுவதற்கு முன் “மைக்கைச் (MIC)” சரி செய்து வைத்துக் கொள்கின்றோம். அது சரியாக இருந்தால்தான் பேசுவதை அது கிரகித்து ஒலியைப் பெருக்கிக் காட்ட முடியும்.

இதைப் போலத்தான் “ஓ..ம் ஈஸ்வரா குருதேவா…” என்று புருவ மத்தியில் அடிக்கடி எண்ணினால் தான் நம் உயிரின் இயக்கம் உயிர் வழி சுவாசமாக அமையும்.

ஏனென்றால் இந்த உலகத் தொடர்பு கொண்ட மற்ற உணர்வுகள் நம் ஆன்மாவாக இருக்கப்படும் பொழுது அந்த நிலைகள் நமக்குள் இயங்காதவண்ணம் அதைத் தடுத்து நிறுத்தவும் நம்முடைய எண்ண ஏக்க அலைகள் ஞானிகளின் உணர்வுகளை எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்வதற்கும் ஓம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணினால் தான் அது மிகவும் ஏதுவாக இருக்கும்.

“எண்ணிலடங்காத உணர்வின் சுழற்சிகள்” நம் ஆன்மாவில் உண்டு. அதையெல்லாம் நம் சுவாசத்திற்குள் வராதபடி தடுத்துவிட்டு மெய் ஞானிகளின் உணர்வை உள் புகுத்துவதற்காகத்தான் நாம் எல்லோரும் சேர்ந்து ஒரே உணர்வாக ஓ..ம் ஈஸ்வரா… குருதேவா…” என்று சொல்கிறோம்.

விண்ணுலகில் உள்ள ஞானிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் உயிரிலே புருவ மத்தியிலே எண்ணும் போது அவர்கள் ஈர்ப்புக்குள் நாம் செல்கிறோம். அதைக் கவரும் ஆற்றலும் பெறுகின்றோம்.

ஆகவே புருவ மத்தியிலிருக்கும்… நம் உயிரை” எந்த அளவிற்கு அதிகமாக எண்ணுகின்றோமோ அந்த அளவிற்கு இயக்கச் சக்தியின் ஆற்றலைப் பெற்று எண்ணிய சக்தியைப் பெற முடியும். ஞானிகள் அவ்வாறு பெற்றுத்தான் இன்றும் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகி துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் உள்ளார்கள்.

விண்ணிலிருந்து வரும் ஆற்றல்மிக்க சக்திகளை நுகர்ந்து உயிர் வழி நாம் சுவாசித்தால் உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறும். ஒளியின் சரீரம் பெற முடியும். அகண்ட அண்டத்தில் என்றுமே அழியாத நிலைகள் கொண்டு மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளுடன் ஒன்றிட முடியும். சப்தரிஷி மண்டலத்தில் நாம் இணையலாம்.

1. நம் உயிரும் ஒரு நட்சத்திரம் தான். இருபத்தியேழு நட்சத்திரங்களின் எதிர் நிலையான மோதல்கள் தான் “இயக்கச் சக்திக்கே…” மூல காரணமாகும் என்று கண்டுணர்ந்து வெளிப்படுத்திய அகஸ்தியரின் அருள் சக்திகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
2. இருபத்தியேழு நட்சத்திரங்களின் விஷத்தன்மைகள் ஒன்றுக்கொன்று மோதும் நிலைகளில் வான மண்டலங்களின் இயக்கங்களையும் பூமிக்குள் வரும் போது பாறைகளாகவும் மண்களாகவும் வைரங்களாகவும் அதனதன் ஈர்ப்பால் என்னென்ன மாற்றங்கள் ஆகின்றது என்று அகஸ்தியன் கண்டுணர்ந்த அருள் சக்திகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
3. எங்களுக்குள் பதிவான ஞானகுரு உபதேசித்த அருள் உணர்வுகள் அனைத்தும் மீண்டும் மீண்டும் எங்களுக்குள் நினைவுக்கு வந்து எங்கள் நினைவாற்றல் விண்ணிலே.., மேல் நோக்கிச் சென்று மகரிஷிகளுடன் தொடர்பு கொண்டு அந்த மகரிஷிளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
4. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் தீமைகளை அகற்ற வேண்டும் என்ற வலுவான எண்ணம் எங்களுக்குள் ஓங்கி வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.
5. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வ்ழியில் எங்கள் உயிரை இயக்கி அதன் வழி மெய் ஞானிகளின் உணர்வுகளை ஜீவனாக்கி எங்கள் உணர்வுகள் அனைத்திடும் ஒளியாக மாறிட அருள்வாய் ஈஸ்வரா
6. புருவ மத்தி வழியாக அருள் உணர்வைப் பெறும் பாதையை உயிர் வழி சுவாசமாகக் காட்டிய ஞானகுருவின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
7. புறக்கண்ணால் பார்க்கும் அசுத்த உணர்வுகளைச் சுவாசிக்காதபடி அகக்கண்ணின் வழி கூடிய நினைவு கொண்டு கார்த்திகேயா என்ற நிலையில் தீமைகளை அகற்றி ஒளியாக மாற்றிடும் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
8. எங்கள் வாழ்க்கையில் கோபம் வரும்போதெல்லாம் மகரிஷிகளின் ஒளியை நாங்கள் பெற்று கோபத்தைத் தணித்து எங்களுக்குள் தெளிவு பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.
9. துன்பம் வரும் பொழுது “இப்படி ஆகின்றதே.., இப்படி ஆகிவிட்டதே..,” என்பதை எண்ணாமல் அந்தச் சமயத்தில் “அதிலிருந்து விடுபடும் உணர்வை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
10. 1வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெற்று துன்பத்திலிருந்து மீண்டிடும்.., “உபாயமும் ஞானமும்..,” தக்க தருணத்தில் எங்களுக்குள் உதயமாகிட அருள்வாய் ஈஸ்வரா
11. தீமைகள் என்று வரும் போது “உன் நினைவு தான்…” எங்களுக்கு வர வேண்டும் ஈஸ்வரா. அந்தச் சமயத்தில் தீமைகளை நாங்கள் நுகராது நல்ல வினைகளை நற்சக்திகளை மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் நுகரும் சக்தியாக வர வேண்டும் ஈஸ்வரா…!
12. மகரிஷிகள் காட்டிய அருள் வழிப்படி எங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளைக் குறைத்துப் பழக அருள்வாய் ஈஸ்வரா
13. இருளை அகற்றி ஒளியாக இருக்கும் உன் அருளைப் பெற என் நினைவுகள் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைக்கின்றேன் ஈஸ்வரா…!
14. ஞானகுரு கொடுக்கும் சக்தியின் துணை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஒளியான அணுக்கள் எங்கள் உடலிலே உற்பத்தியாகிட அருள்வாய் ஈஸ்வரா
15. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி புருவ மத்தியிலிருக்கும் “உயிருடன் ஒன்றி..,” அந்த வாசல் வழியாக அதாவது சொர்க்கவாசலாக இருக்கும் அதன் வழி விண்ணுலகம் செல்லும் ஆற்றலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
16. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்திய அந்த அருள் வழிப்படி இதை எல்லாம் நாங்கள் பின்பற்றி விஞ்ஞான உலகின் தீமைகளிலிருந்து விடுபட்டு இந்த மனித உடலிலேயே முழுமையான நிலைகள் அடைந்து உலகைக் காத்திடும் ஞானிகளாக நாங்கள் உருவாகிட அருள்வாய் ஈஸ்வரா.

ஆகவே அருள் உணர்வைப் பெருக்கினால் நமக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளை நாம் பார்க்க முடியும் பார்க்கும் சந்தர்ப்பம் கண்டிப்பாக வரும் என்றும் அந்த அகண்ட அண்டத்துடன் (2000 சூரியக் குடும்பம்) தொடர்பு கொண்ட உணர்வையும் நம்மால் உணர முடியும் என்றும் அதன் வழியில் நாம் எங்கே போக வேண்டும்…! என்ற உணர்வு வரும் என்பதையும் அதை வைத்து நாம் செல்ல வேண்டிய சப்தரிஷி மண்டல எல்லையை நிச்சயம் அடைய முடியும் என்றும் ஞானகுரு நமக்கு வழிகாட்டுகின்றார்கள். நாம் அதன் வழி செல்வோம்.

பூமிக்கடியிலிருந்து உறிஞ்சப் பெற்ற பல சக்திகளின் தன்மையினால் பூமியின் மையப் பகுதி வலு குறைந்து விட்டது – ஈஸ்வரபட்டர்

 

இவ்வுலகில் மனிதனின் எண்ண சக்தியில் அறிவு நிலையின் வளர்ச்சி குணத்தை ஞானத்தின் பால் செலுத்தும் வழி முறைப் பக்குவத்தை மாற்றிக் கொண்டதால் ஒரு சாரார் ஏற்படுத்திக் கொண்ட அறிவின் ஞான முதிர்ச்சியினால் தன் ஞானம் பெற்றதை விஞ்ஞானம் கண்டு வளர்த்திட்டான் அதன் வழி சக்திகளை.

இப்படி மனித ஞானத்தின் வளர்ச்சியையே விஞ்ஞானம் கொண்டு உணர்ந்து செயலாற்றும் பல நிலைகளை உணர்ந்துள்ளான் மனிதன்.
1.ஆனால் அம்மனித விஞ்ஞானத்தைத் தன் ஞானத்திற்கு எட்டும் பொருளாக மனிதர்கள் யாவரும் உணர்வதில்லை
2.பிறப்புடன் கூடிய “அபூர்வ சக்தியின் வழி பெற்றிட்டான் அந்த மனிதன்…!” என்று
3.போற்றிப் புகழ்ந்து அம்மயக்கத்தில் தான் அடிபணிந்து வாழ்கிறான்,
4.இதே நிலை எல்லா வட்ட நிலைகளிலும் (துறைகளிலும்) உண்டு.

பக்தி மார்க்கத்தில் சித்தன் நிலை கொண்டு செயலாற்றுபவனையும்
1.அவன் தாள் பணிந்து உயர்த்தி – தான் தாழும் செயல் வடிவாக உள்ளான் மனிதன்.
2.வாழ்ந்த வழி பெற்ற நிலையின் தொடரிலும்… பிறரின் புகழ் பாடி வணங்கும் முறையிலும் வாழ்ந்தால் நம் ஆத்ம பலம் வளம் பெறாது.

எந்தச் சக்தியாக இருந்தாலும் இந்தக் காற்றின் ஈர்ப்புக்குச் சொந்தப்பட்டது தான். அதே காற்றின் சுவாச அலையுடன் வாழும் நாம் நம் சக்தியைக் குறைத்து ஒன்றின் தொடர் நிலையில் வாழாமல் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் உகந்த ஞான ஒளியின் ஈர்ப்பை நமதாகப் பெறவேண்டும்.

அதி விரைவில் தன் ஞானத்தை ஒவ்வொருவரும் கூட்டிக் கொள்ளுங்கள். நம் பூமியின் ஓட்டப் பாதையில் சில மாற்றங்களாகி வழக்கமான பாதையிலிருந்து சிறிது மாற்றமுடன் ஓடிக் கொண்டுள்ளது.

ஆகாயத்தில் கோட்டை கட்டி (INTERNATIONAL SPACE STATION) விஞ்ஞான ரீதியில் செயல் முறைக்கு வந்துவிட்டார்கள் விஞ்ஞானிகள்.

அதே போல் இந்தப் பூமியின் ஈர்ப்பு மண்டலத்திற்கு மேல் சென்று விட்டால் அதே போல் மற்ற மண்டலங்களும்… ஏன் வளர்ச்சியுற்ற நட்சத்திர மண்டலத்தின் ஈர்ப்புக்குக் கூட இல்லாத நிலையில்… இங்குள்ள சுவாச நிலையை எடுத்துச் சென்று… அதற்குகந்த மருத்துவ நிலையில் அங்குள்ள அலையின் சுவாச நிலையை ஏற்கும் அமில குணத்தை… சிறுகச் சிறுக வழிப்படுத்தி மனித ஆத்மா சென்றாலும் அங்கேயும் வாழ முடியும்.

1.ஆனால் மனிதன் இன்று செய்யும் இந்த விஞ்ஞானமே
2.நூறு ஆண்டுகளுக்கு முந்திய மார்க்கத்தில் செயல்படுத்தி இருந்தான் என்றால் வெற்றி கண்டிருப்பான்.

இவன் செயல் முறை காலத்திற்குள் “உலக மாற்றமே நிகழப் போகும் நிலையில்… அந்தர வாழ்க்கையில்…!” அதன் நிலையை உணர்த்தப் போகின்றான்.

நூறு மாடிக் கட்டிடம் எழுப்பும் மனிதன் அந்த நூறு மாடிக் கட்டிடத்திற்கு உகந்த “அதே உயரத்திற்கு உகந்த அஸ்திவாரத்தையா…” பூமியில் போடுகின்றான்…?

இந்தப் பூமியில் வாழும் வளரும் பூமியிலிருந்து பிரித்து எடுத்த பொருள்களும்.. நாம் அமைத்த எல்லாமும்… பூமியின் ஈர்ப்பின் பிடிப்புடன் சுழன்று ஓடிடும் நிலையில்
1.சக்தி கொண்ட நிலை மாறு கொண்டதால் தான்
2.இன்று வலுவிழந்த சில கட்டிடங்களும் பாலங்களும் விழுவதின் உண்மையும்.

இந்தப் பூமியின் காற்று மண்டலத்தில் ஏற்கனவே விஷத் தன்மைகள் அதிகரித்து விட்டது. பூமிக்கடியிலிருந்து உறிஞ்சப் பெற்ற பல சக்திகளின் தன்மையினால் பூமியின் மையப் பகுதியும் வலு குறைந்து விட்டது.

மேன்மேலும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு உட்படுத்தி உயர் மின் அலைகளைக் கடலிலிருந்தும் காற்றிலிருந்தும் இந்த மனிதன் சுகம் காணப் பிரித்து எடுத்துக் கொண்டே இருப்பதால்
1.தன் குறுகிய கால சுகத்திற்காக இந்தப் பேரண்ட உலகையே வலுவிழக்கச் செய்து
2.மீண்டும் வலுப் பெற வைக்கப் போகின்றான்.

இதனின் உண்மை என்ன என்பது புரிந்ததா…?

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒருத்தர் உடலில் ஆவி (ஆன்மா) இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்போர் நாம் அவரிடம் பேசினால் அங்கே போகாதே… போகாதே…! என்று மற்றவர்களிடமும் சொல்லும்.

நாம் அவரிடம் பேசினால் போதும்… நம் உணர்வுகள் பட்டவுடனே… போகாதீர்கள்… போகாதீர்கள்…! என்று சொல்லும். காரணம்… அதற்கு ஆகாது.

அதே உணர்வை நாம் கேட்டோம் என்றால்…
1.மகரிஷிகளின் அருள்சக்தி அது பெற வேண்டும்
2.அது இருள் நீங்க வேண்டும்
3.பொருள் காணும் உணர்வு வளர வேண்டும் என்று எண்ணி
4.ஒரு பத்து தடவை செய்துவிட்டு உங்கள் பார்வையைச் செலுத்துங்கள்.

அப்புறம் தன்னாலே மயங்கி விழுந்தாலும் விழும்…. போய் விடும்….! ஏனென்றால் சில சாப அலைகள் ஒருவருக்கொருவர் பாய்ந்த உணர்வுகள் இப்படி வந்து விடுகின்றது.

அந்த மகரிஷிகள் தனக்குள் கோடி… கோடி… கோடி…! என்று பல கோடி உணர்வுகளைத் தனக்குள் ஒளியாக மாற்றியவர்கள். ஆகவே அந்த மகரிஷியின் உணர்வை நமக்குள் எடுத்து இதை அவருக்குள் புகுத்த வேண்டும்.

அப்படிப் புகுத்தினோம் என்றால் அவர்கள் உணர்வு நீங்கும். “புகுத்த வேண்டும்” என்ற உணர்வுகள் நமக்குள் வலுப் பெறும். இந்த அலைகள் படரும். நம் நினைவு அங்கே மகரிஷிகள் பால் போகும்.

ஆகவே…
1.அந்த விண்ணின் பற்றுடன் ஒவ்வொரு நிமிடத்திலேயும் இதைப்போல எண்ணி ஆத்ம சுத்தி செய்து
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
3.இந்த நினைவினை எடுத்து இங்கே கொண்டு வர வேண்டும்.

அதாவது… இங்கே பேசிக் கொண்டிருக்கிற மாதிரி இருக்கும். ஆனால் நினைவை அங்கே கொண்டு போக வேண்டும். எங்கே…?

பயிற்சி:
1.கண்ணின் நினைவினை விண்ணிலிருந்து சிந்தனையை எடுத்துப் பாருங்கள்.
2.அவர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கின்ற மாதிரி இருக்கும்
3.செவிகள் கேக்கும்…. இரண்டும் கலக்கும்…. அதை உணர்த்தாது…. வந்தாலும் அது நம்மை இயக்காது.
4.சரி…! என்று எதிர் பதில் சொல்லச் செய்யும்.

அவர்கள் பேச்சை நீங்கள் கேட்கும்போது நேராக மட்டும் அவர்களைக் கண்ணுற்று மட்டும் பார்க்காதீர்கள். (இது முக்கியம்)

சொல்வதை மட்டும் கேட்டுக் கொண்டே இருங்கள். அப்பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதனுடன் இணைத்தீர்கள் என்றால்
1.அது உங்களை இயக்காதபடி அப்புறம் உங்கள் சொல்லால் சொல்லும்போது அது இயங்கும்.
2.அவர்களை இயக்கி மாற்றிவிடும்….! ஏனென்றால் இந்தப் பதிவுகள் நமக்கு அதிகம் தேவைப்படும்.

அன்றாடம் வரக்கூடிய தீய வினைகளைக் கரைத்தால் தான் குடும்ப ஒற்றுமையும் வரும்… சமுதாயமும் சீராகும்…!

 

பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ குழந்தைகளை அனுப்புகிறோம் என்றால் ஆயிரக் கணக்கில் பணம் கேட்கிறார்கள்… டாக்டருக்கோ இஞ்சினியருக்கோ என்றால் இலட்சக் கணக்கில் பணம் கேட்கிறார்கள்.

தாய் தந்தையர்கள் எப்படியோ அந்தப் பணத்தைக் கட்டிப் படிக்க வைத்து “பிள்ளைகள் எதிர்காலத்தில் நன்றாக இருக்க வேண்டும்…” என்ற நிலையில் வீடு வாசல் எல்லாம் வைத்துச் சம்பாரித்து வைத்திருந்தாலும் அதை ஒத்திக்குக் கொடுத்தோ அல்லது விற்றோ தன் பிள்ளைகளை வளர்க்க விரும்புகின்றார்கள்.

ஆனால் டாக்டருக்குப் படிக்கப் போகும் போது பெயிலாகி விட்டான் என்றால் ஐயோ… இவ்வளவு பணம் கொடுத்துப் படிக்க வைத்தேனே… இந்த மாதிரி ஆகி விட்டானே…! தாய் தந்தை வேதனைப்படுகிறார்கள்.

இருபது இலட்சம் ஐம்பது இலட்சம் கொடுத்து டாக்டர் படிப்புக்குச் சேர்த்த பின் தன் பையன் உயர்ந்தவனாக இருப்பான் எதிர்காலத்தில் நன்றாக இருப்பான் நன்றாகச் சம்பாரிப்பான் என்று தாய் தந்தையர் நினைக்கின்றார்கள்.

1.ஆனால் அவன் அங்கே கல்லூரியில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டுத்தனமாகச் சுற்றுவதும்
2.அங்கே எதாவது பிரச்சினை என்றால் ஸ்ட்ரைக் செய்வதும்
3.அங்கே நல்ல ஒழுக்கங்கள் இல்லாதபடி என்னென்ன கெட்ட பழக்கங்கள் வளர வேண்டுமோ
4.அதை எல்லாம் கற்றுக் கொண்டு வந்து விடுவான்.

பல இலட்சம் கொடுத்துப் படிக்கப் போவோர் நல்ல பழக்கங்கள் அங்கே பெரும்பகுதி இருப்பதில்லை. தன் விருபத்தின்படி அங்கே நடப்பதும் ஏம்ப்பா இப்படிச் செய்கிறாய்…? என்று தட்டிக் கேட்டால் உனக்கு என்ன தெரியும்…? அறிவு கெட்டதனமாகக் கேட்கிறாய்..? என்று தாய் தந்தையரைக் கேட்பதற்கு வந்துவிடுகின்றனர்.

இப்படித் தான் தாய் தந்தையரை ஏசவும் பேசவும் போன்ற நிலைகளுக்குப் பிள்ளைகள் ஆளாக்குகின்றனர். ஆனால் இதைக் கண்டு வேதனைப்பட்டு இறந்து போன பிற்பாடு அவர்கள் ஆன்மா எங்கே போகும்…?

விஷத்தின் தன்மை எல்லை கடந்து சென்று பாம்பாகவோ தேளாகவோ தான் பிறக்க நேரும்.

1.என் பையன் இப்படிச் செய்துவிட்டானே… பேசுகின்றானே…! என்ற
2.சாப அலைகளுடன் அந்த எண்ண அலைகளப் பரப்பினால்
3.பையன் டாக்டராக ஆனாலும் கைராசி டாக்டராக இருக்க முடியாது…
4.அவன் பார்க்கும் வைத்தியங்களும் சீராக வராது.. பின் ஒன்றும் செய்ய முடியாது.

ஏனென்றால் தாய் தந்தையரின் “அருள் வாக்கு” இல்லை என்றால் அதைத் தெளிவாகச் செயல்படுத்த முடியாது.

ஒரு இஞ்சினியருக்குப் படிக்க வைக்க எத்தனையோ இலஞ்சம் கொடுத்து அல்லும் பகலும் பாடுபட்டு பட்டினியாக இருந்து இஞ்சினியராகப் படிக்க வைத்த பின் பையன் எல்லாவற்றையும் கற்று உணர்ந்து கொள்வார்.

ஆனால் அதே சமயத்தில் தன் உணர்வின் தன்மையைச் சீராக்காதபடித் தன்னுடைய இஷ்டத்திற்குப் பல நிலைகளைச் செய்வார்.

அதைக் கண்டு தாய் தந்தையர் வேதனைப்படும் போது இந்தத் தீய வினைகள் இவருக்குள் சேர்ந்து அதே தீய வினையால அவர் நோய்வாய்ப்பட்டு இறக்கும் நிலை கூட வருகிறது.

1.தன் பையனை எண்ணி வேதனையைச் சேர்த்து உடல் உணர்வுகள் அனைத்திலும் நஞ்சு கலந்து
2.அடுத்து இன்னொரு உடலுக்குள் சென்றாலும் இந்த நஞ்சையே அங்கேயும் உருவாக்கி
3.புகுந்த உடலையும் நோயாக்கி அவரையும் விழுத்தாட்டி விடும்.

எந்தப் பையன் தாய் தந்தையருக்குத் துரோகம் செய்தானோ… சொன்னபடி கேட்கவில்லையோ… அதே எண்ணத்தில் போனால் பையன் உடலுக்குள் ஆன்மா போய்விடும்.

அல்லது… குடும்பத்தில் பையன் திருமணமாகிப் போனாலும்
1.“இப்படிச் செய்கின்றானே…” என்ற எண்ணத்தில் தாய் தந்தையர் ஆன்மா பிரிந்தால்
2.அந்த உணர்வுகள் பாய்ந்து… எவ்வளவு பொருள் ஈட்டினாலும் பையனை வாழ விடாத நிலைகள் ஆக்கிவிடும்.

அல்லது… பையன் திருமணமான பின் சம்பாரித்துச் செல்வச் செழிப்போடு இருந்தாலும் அவன் மனைவி கர்ப்பமுற்றிருக்கும் போது அவன் தாய் தந்தையர் எங்களை எப்படி எல்லாம் செய்தாய்…! இடைஞ்சல் செய்துவிட்டு இன்று இப்படி இருக்கின்றாயே…! என்று எண்ணினால் போதும்

1.கர்ப்பமுற்ற தாய்க்கு இந்த உணர்வுகள் சாடப்படும் போது
2.அந்தக் குழந்தைகளின் நிலை சூனியமாகிவிடும்… அறிவற்றதாகவும் வளர்வதைக் காணலாம்.

இதைப் போல் மனிதர்களுக்குள் ஒன்றுக்கொன்று சந்தர்ப்பபேதத்தால் ஏற்படும் நிலைகளால் பல தீய விளைவுகளாகி அவர்கள் எதிர்காலமே இருள் சூழ்ந்த நிலைகளாகி மனித நினைவே இழந்திடும் நிலை வருகிறது.

இதை எல்லாம் அகற்றுவதற்குத்தான் “விநாயகர் சதுர்த்தி” என்று வைத்தார்கள் ஞானிகள். பிள்ளைகளை நினைத்து அந்த மகரிஷியின் அருள் சக்தி அவர்கள் பெற்று “அருள் ஞானம் பெற வேண்டும்…” என்று தாய் தந்தையர் அன்றைக்கு எண்ண வேண்டும்.

தன் பிள்ளைகள் “இப்படி இருக்கிறார்களே… உன்னை நான் வணங்கினேனே…!” என்று இப்படி வேதனைகளை எண்ணினால் அந்த வேதனை தான் வளரும்.

ஆகையினாலே
1.பிள்ளைகள் அவர்கள் அறியாத இருள் நீங்க வேண்டும்.
2.மெய்ப் பொருள் காணும் நிலை பெற வேண்டும் என்று இந்த உணர்வைச் சொல்ல வேண்டும்.

பிள்ளைகளும் என்ன நினைக்க வேண்டும்…?

எங்கள் தாய் தந்தையரின் அருளால் அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். அம்மா அப்பா அருளாசி நாங்கள் பெற வேண்டும். அவர்கள் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் என்ற எண்ண வேண்டும்.

குடும்பத்தில் சந்தர்ப்பத்தால் மேலே சொன்ன பகைமைகள் உண்டானாலும்
1.விழாக்கள் போன்ற காலத்திலேயாவது எல்லோரையும் ஒன்றாக இணைத்து
2.உணர்வின் தன்மையைப் பக்குவப்படும் நிலைக்கு ஞானிகள் வைத்தார்கள்.

பொதுவாகச் சொன்னால் பிள்ளைகள் கேட்க மாட்டார்கள். அன்றைக்கு அந்த விழாக் காலத்தில் சாமி கும்பிடும் போதாவது இந்த மாதிரி எண்ணி அம்மா அப்பா அருளாசி கிடைக்க வேண்டும். அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும் போது அந்த அருள் உணர்வு வளர்கிறது.

அருள் உணர்வுகளைச் சேர்க்கும் பொழுது அறியாத இருள்கள் நீங்குகிறது. அம்மா அப்பா மேலிருக்கும் வெறுப்பின் தன்மை மறைகின்றது. தாய் தந்தையரின் நல்லாசிகளைக் கவரும் சக்தி வருகிறது.

1.நமக்குள் இருக்கும் பகைமை வெறுப்பு போன்ற உணர்வுகளை ஈர்க்கும் தன்மை குறைந்தவுடனே
2.யாரும் இங்கே இழுக்கும் சக்தி இல்லை என்றால் அது ஒதுங்கி நிற்கும்.

காலையில் ஆறு மணிக்கு எல்லாம் சூரிய ஒளி வருகிறது. வந்தவுடனே இழுத்துக் கொண்டு மேலே சூனிய மண்டலத்திற்குக் கொண்டு செல்கிறது. நம் பூமியில் அந்தச் சக்தி இருப்பதில்லை.
1.அப்போது நாம் எண்ணினாலும் புதிதாக உருவாவதில்லை.
2.இது கிடைக்காது. இது மயங்கி போகும்.
3.ஆக தீமையான வினைகளுக்குச் சாப்பாடு கொடுக்காமல் இருக்கும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தொடர்ந்து இந்த எண்ணங்களை எடுக்கப்படும் போது நமக்கு முன்னாடி இருக்கும் இந்தப் பரமாத்மாவும் சுத்தமாகின்றது.

நாம் சுவாசிக்கும் பொழுது நம் உடலிலுள்ள ஜீவான்மாக்களும் தீமைகளை நுகர்வதில்லை. அதுவும் சுத்தமாகின்றது. நம் உயிராத்மா ஒளியாக மாறுகின்றது.

1.களிமண்ணால் செய்த விநாயகரைத் தண்ணீரில் (கடலில்) கரைக்கச் சொன்னதன் உட்பொருளே
2.ஒவ்வொருவருக்குள்ளும் அறியாது சேர்ந்த தீய வினைகளைக் கரைப்பதற்குத்தான்…!

ஞானிகள் காட்டிய வழியில் சென்றால் தீய வினைகளைக் கரைக்கலாம்.

உடலுக்கு வலு கூட்டுவதா…? ஆத்மாவிற்கு வலுவைக் கூட்டுவதா…? – ஈஸ்வரபட்டர்

 

1.தன் உயிராத்மாவை நல் ஞானம் பெறும் வழி பெற்ற ஞானியின் செயலால் என்ன பயன்…? என்ற வினாவும்
2.உயிராத்மாவின் வலுவைக் கூட்டுவதனால் என்ன பயன்…? என்ற வினாவும் எழும்பலாம்.

ஆனால்… பயன் கண்டு இந்தச் சுழற்சி வாழ்க்கை வாழ்ந்து மட்டும் எந்தப் பயனை எந்த ஆத்மா (சாதாரண நிலையிலுள்ள ஆன்மா) கண்டது…?

ஆதி சக்தியின் பரம்பொருளின் உண்மையை அடைய… உணர… பல ஆத்மாக்களுக்கு ஆவல் உண்டு.

தன் உயிரணுவின் ஆத்ம பலத்தை நாம் கூட்டிக் கொண்டால் அந்தப் பரம்பொருளின் அலையில் உள்ள உயர்ந்த சக்தியின் ஈர்ப்பை நம் எண்ணத்தினால் ஜெபம் கொண்டு ஈர்க்கவல்ல முறை பெற்று நம் உயிராத்மாவிற்கு நல் உரத்தைச் சேமிக்கலாம்.

1.நம் எண்ணத்தைப் பல நிலைகளில் செயல்படுத்தி வாழ்ந்து
2.நம் உடலில் உள்ள பல கோடி உயிரணுக்களையும் அதனதன் எண்ண நிலைக்கொப்ப வாழ விடாமல்
3.அனைத்து உயிரணுக்களும் நம் உயிரணுவிற்கு… நாம் எண்ணும் ஒரு நிலை கொண்ட எண்ணத்தில் செயல்படும் வழி முறைக்குக் கூட்டி
4.வாழ்க்கையில் ஏற்படும் எந்த நிலைக்கொப்ப எந்த எண்ணத்தின் தொடரின் ஈர்ப்பிலும் நாம் சிக்காமல்
5.அதே சமயத்தில் அதிலிருந்து ஒதுங்கி சலிப்புற்றும் வாழாமல்
6.எவ்வட்டச் சுழற்சி எண்ணத்தையும் நாம் எண்ணியே அடிமைப்படாமல்
7.பரம்பொருளின் உண்மைச் சக்தியின் வீரிய குணத்தின் அலைத் தொடரில் ஐக்கியம் கொண்டே
8.அப்படி வாழக்கூடிய பக்குவத்தை நாம் பெறுவது தான் “நம் உயிராத்மாவின் பலத்தைக் கூட்டிக் கொள்ளும் நிலை என்பது…!”

நாகப் பாம்பு விஷத்தையே ஈர்க்கும் சுவாச குணமுடையதாக இருப்பதனால் அதன் எண்ண நிலை “எதன் நிலைக்கும்” மாறு கொள்வதில்லை.

விஷ ஜெந்துவாக நாம் காணுகின்றோம். ஆனால் அந்த விஷத்தையே அது உரமாக்கி… வைரமாக்கி… மாணிக்கமாகச் சேமித்து வளர்த்து… “ஒரு நிலையில் வாழ்கிறது…” அந்த நாகப் பாம்பு.

பல பல நினைவலைகள் உள்ளவன் தான் மனிதன். இருந்தாலும் அந்தப் பலவற்றில் ஒன்றான உயர் அமில ஞான குணத்தை எண்ணிடும் வழி முறையைப் பெறுதல் வேண்டும். அதைப் பெற்றுத் “தன் பலம் காணுங்கள்…” என்று உணர்த்துகின்றோம்.

இயற்கையில் உள்ள அனைத்து நிலைகளுமே அதனதன் வட்டத்தில் தான் ஒரு நிலையில் ஈர்த்து வளர்த்து வாழுகின்றன.

ஒன்றுடன் ஒன்று வளர்ச்சி பெற்று வளர்ந்துள்ள இயற்கையில் இஜ்ஜீவ ஜெந்துக்களின் நிலையில் தான் பல மாற்ற குணங்கள் உண்டு.

ஆனால்…
1.தன் நிலையுணர்ந்து மனிதன் வாழ்ந்தால்
2.உலக ஞானத்தையும் மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி என்று உணர்த்தும்
3.அந்தப் பரம்பொருளின் உண்மையையும் நிச்சயம் உணர முடியும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

சூரியன் மற்றொரு பிடிப்பில் இல்லாததை எல்லாம் தனக்குள் கவர்கின்றது. கவர்ந்து தன் அருகிலே கொண்டு சென்றால் அதைப் பஸ்பமாக்கி விடுகின்றது. மீண்டும் பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது.

உதாரணமாக நாம் ஒரு நோயாளியைப் பற்றி விசாரித்து அவர் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தறிந்தால் அது நமது ஆன்மாவில் நிற்கும். அதைச் சுவாசிக்கும் போது வேதனை என்ற உணர்ச்சிகளைத் தூண்டும். (ஆன்மாவிலிருப்பதைத்தான் நாம் சுவாசிக்க முடியும்)

அவர் நோயால் வேதனைப்படுகின்றார். ஆனால் அவரின் வேதனையான உணர்வை நுகர்ந்து நாமும் வேதனைப்படத் தொடங்குகின்றோம்.

அந்த வேதனை நமக்குள் உட்புகாது தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
1.ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி
2.புருவ மத்தியில் நிலை நிறுத்தி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள அணுக்கள் பெற வேண்டும் என்று
4.கண்ணின் நினைவு கொண்டு ஏங்கி எடுத்தால்
5.நமக்கு முன்னாடி இருக்கும் ஆன்மாவில் இருப்பதை இழுக்காது…
6.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கவரப்படுகின்றது
7.வேதனப்படும் உணர்வின் ஈர்ப்புத் தன்மை குறைந்ததனால் நாம் ஈர்க்காமல் விட்ட
8.நம் ஆன்மாவில் இருக்கும் அந்த வேதனைப்படுத்தும் உணர்வுகளை
9.சூரியன் காலையில் அழைத்துக் கொண்டு மேலே சென்றுவிடுகின்றது
10.நமது ஆன்மா தூய்மையாகின்றது… தீமையான அணுக்கள் வளராது தடுக்கின்றது
10.தீமையான அணுக்களுக்கு உணவு போகாமல் தடுக்கின்றது.

அதற்குப் பின் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்த நோயாளி உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி ஏங்கிவிட்டு அந்த நோயாளியைப் பார்த்து.. துருவ நட்சத்திரத்தின் பேரருளை நீ பெறுவாய்… உன் நோய் நீங்கிவிடும்… நீ நலமாவாய்…! என்று சொல்ல வேண்டும்.

இந்த முறைப்படி துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் புருவ மத்தி வழியாக எண்ணி எடுக்கும் போது
1.தீய அணுக்களுக்குப் போகும் வேதனையை உருவாக்கும் உணர்வுகள் தடைப்படுத்தப்படுகின்றது.
2.நம் ஆன்மாவிலிருந்து விலக்கித் தள்ளியதைச் சூரியன் காலை ஆறு மணிக்கெல்லாம் எடுத்துச் சென்று விடுகின்றது.

தீய அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காமல் தடைப்படுத்தப்படும் போது தீய அணுக்களின் வளர்ச்சி குறைந்துவிடும். பரமாத்மாவும் தூய்மை ஆகின்றது.

இவ்வாறு உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளைத் தடுத்து நிறுத்த…
1.நீங்கள் எண்ணும்போதெல்லாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்கின்றீர்கள்.
2.உங்கள் உயிர்… துருவ நட்சத்திரத்தின் சக்தியை உடலில் அணுக்களாக உருவாக்குகின்றது.
3.தீமைகளில் இருந்து நீங்கள் விடுபடும் ஆற்றலைப் பெறுகின்றீர்கள்.

இதைத்தான் ஆறாவது அறிவு… (முருகன்) “பிரம்மாவை சிறைப்பிடித்தான்…! என்று சொல்வது. நாம் சந்தர்ப்பத்தால் நுகரும் உணர்வுகளை நம் உயிர் பிரம்மமாக நின்று அந்த அணுவாக உருவாக்கிவிடுகின்றது.

ஆகவே ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமையை நீக்கிடும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்தோமென்றால்… நமக்குள் தீமையை நீக்கிடும் அத்தகைய நிலைகள் பெறுகின்றது.

தீமையை நீக்கிடும் ஒளியான அணுக்களை நமக்குள் பெருக்கினால் “துருவ நட்சத்திரம் எவ்வாறு ஒளியாக இருக்கின்றதோ…” அதைப்போல நாமும் பெற முடியும்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதனின்று வெளிப்படும் அரும்பெரும் சக்தி அதிகாலையில் இந்தப் பூமியில் பரவுகின்றது. ஆகவே கணவன் மனைவியும் காலை துருவ தியான நேரங்களில் இதைப் போன்று எடுத்துப் பழகுங்கள்.

அந்தக் காலை நேரத்தில் உங்கள் உணர்ச்சிகளை… உங்கள் எண்ணங்களை… துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி… அந்த உணர்வினை உங்கள் கண்களால் பதிவாக்கி நுகருங்கள்,

கண் வழி நுகர்ந்ததை உயிர் வழி சுவாசிக்கும் பொழுது உயிர் அந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்கள் உடல் முழுவதும் பரவச் செய்யும். அந்த நேரம் தான் பிரம்ம முகூர்த்தம் என்பது.

மகா ஞானிகளின் அருகாமையை உங்களுக்குக் கிடைக்கச் செய்கிறோம் – ஞானகுரு

 

சந்தர்ப்பவசத்தால் உடலில் சேர்த்துக் கொண்ட தீய உணர்வின் தன்மைகளால் மனிதனுக்குச் சில கடுமையான நோய்கள் வருகின்றது.

சாமியார்களோ அல்லது மந்திரவாதிகளோ மந்திரத்தால் மந்திரத்து சில வேலைகளைச் செய்து அந்த நோயினால் ஏற்பட்ட வலிகளை வேண்டும் என்றால் போக்கலாம். ஆனால் உடலில் விளைந்த நோய்களை மாற்ற முடியாது.

அதே போல் தான் டாக்டர்களால் மருந்து கொடுத்து வேதனைகளை நீக்கினாலும் உடலில் விளைந்த தீய விளைவுகளிலிருந்து மீள முடியாது. காரணம் மீள வேண்டும் என்று சொன்னாலும் உடலுடன்… உணர்வுடன்… அது கலந்திருக்கும்.

நோயிலிருந்து முழுமையாக விடுபட வேண்டும் என்றால்
1.நம் நினைவின் எண்ண அலைகளை விண்னை நோக்கிச் செலுத்தி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர வேண்டும்.

ஒரு பன்றி சாக்கடைக்குள் அது நாற்றமாக இருந்தாலும் அதைப் பிளந்துவிட்டு அதில் உள்ள நல்ல பருப்பினை (உணவுப் பொருளை) எப்படி எடுக்கின்றதோ அதைப் போல்
1.சாக்கடையாக இருக்கும் இன்றைய காற்று மண்டலத்திலிருந்து
2.அதற்குள் இருக்கும் அருள் ஞானிகளின் அருள் ஆற்றல் மிக்க சக்தியை நாம் எண்ணி எடுக்க வேண்டும்.
3.அதை எடுத்து நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

ஆகவே…
1.தீயதை நீக்கி நல்ல உணர்வை நமக்குள் ஆழமாகப் பதியச் செய்வதும்
2.நம்முடைய எண்ணங்கள் அனைத்தும் கூர்மையாக விண்ணை நோக்கிச் செல்வதும்
3.நம் வாழ்க்கையில் ஏற்படும் சில துன்பங்களை நீக்க இதைப் போல் செயல்படுத்துவதே “ஆத்ம சுத்தியும் தியானமும்…”

நீங்கள் எண்ணும் போது அந்த ஞானிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்வதற்கே இந்த உபதேசமும் கூட்டுத் தியானமும். கூட்டுத் தியானத்தில் மகரிஷிகள் உணர்த்திய இந்த ஆற்றல் மிக்க நினைவலைகளை உங்கள் உடலில் ஆழமாகப் பதியச் செய்கிறோம் (ஞானகுரு).

பதியச் செய்ததை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கும் போது இந்தக் காற்றிலிருக்கும் அந்தச் சக்தி கிடைக்கின்றது.

உங்கள் வீட்டில் இருக்கும் டி.வி.யில் சாதாரண ஆண்டென்னா மூலம் பக்கத்தில் (LOCAL) ஒளி பரப்பாவதை எடுக்க முடியும்.

அதே சமயத்தில் சேடிலைட்டில் அனுப்பக்கூடியதை… அமெரிக்காவில் ஒளி பரப்பு செய்கிறார்கள் என்றால் அதை எடுக்கச் சக்தி வாய்ந்த ஆண்டென்னா தேவைப்படுகிறது. அதைக் கொண்டு தான் அங்கிருந்து ஒளிபரப்பு செய்வதை இங்கே தெளிவாகக் காண முடிகின்றது.

அதைப் போன்று தான் அருள் ஞானிகளின் உணர்வலைகளை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள அந்த அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியை உங்கள் எண்ணத்தால் எண்ணி ஏங்க வைக்கின்றோம்.

இதைக் கேட்டுணரும் போது
1.இந்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலில் உள்ள எலும்புகளுக்குள் ஊழ்வினையாகப் பதிவாகின்றது.
2.அப்படிப் பதிவான நிலைகள் கொண்டு கூட்டாகத் தியானிக்கும் போது அந்தச் சக்திகளைப் பெற முடியும்.

சாதாரணமாக ஒரு நூலினை வைத்து ஒரு பொருளைக் கட்டித் தூக்கினால் நூல் அறுந்துவிடும். பல நூல்களை ஒன்றாகத் திரித்தால் தான் அந்தப் பொருளைத் தூக்க முடியும்.

அது போல் தான் தனிப்பட்ட மனிதன் ஒருவர் அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுக்க வேண்டும் என்றால் சாதாரணமாக அது முடியாது.

1.காரணம்… அவர்கள் பிறவா நிலை பெற்று விண்ணுலகம் சென்றவர்கள்
2.பிறப்பின் மேல் ஆசை வைத்த நாம் அந்த உணர்வை அணுகினால் அது நம்மை அறுத்துவிடும்… கிட்டத்திலே நெருங்கவிடாது.

இருப்பினும் அந்த அருள் ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ண உணர்வின் வேட்கையில் உங்கள் அனைவருக்குள்ளும் ஆழமாக அதைப் பதிவு செய்கின்றோம்.

இங்கே கூட்டுத் தியானத்தில் அதை உபதேசிக்கும் போது
1.அந்த அருள் ஞானிகளின் சக்தியைப் பெறக்கூடிய தகுதிக்கு
2.உங்கள் கவனங்கள் அனைத்தையும் ஒருக்கச் சேர்த்து ஊழ்வினையாகப் பதிவு செய்கின்றோம்.
3.எல்லோரும் சேர்ந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கும் போது வலுவாகிறது
4,அந்த வலு கொண்டு காற்றிலே மறைந்திருக்கும் அந்த அருள் ஞானிகளின் சக்தியை
5.நாம் அமர்ந்திருக்கும் (தியானிக்கும்) இடங்களுக்கு அழைத்து வருகின்றோம்.

ஆக பரவலாக அது வரும் நிலைகள் கொண்டு இங்கே குவியப்படும் போது… உங்களுக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று உங்களை எண்ணி நான் தியானிக்கின்றேன்.

அது சமயம் குரு துணை கொண்டு உங்களால் அந்த மகா ஞானிகளின் பேராற்றல்மிக்க சக்திகளை உங்களால் பெற முடிகிறது. உங்கள் உடலில் அது சக்திவாய்ந்ததாக மாறுகிறது.

துன்பமோ துயரமோ நோயோ எதுவாக இருந்தாலும் அது வலு இழக்கிறது. உங்கள் ஆன்மாவும் மனமும் தூய்மை ஆகிறது. உயிரான்மா ஒளியாக மாறுகிறது.

பிறவிக் கடனைக் கழிக்க முற்பட வேண்டுமே தவிர நித்திய கடனில் மூழ்கி விடக்கூடாது – ஈஸ்வரபட்டர்

 

இந்தக் காற்றிலும் நீரிலும் இருந்துதான் மின் அலையை விஞ்ஞானிகள் எடுக்கின்றார்கள்.
1.இந்த உலகில் தோன்றும் மின் அலைகளின் துளிகள் தான் உயிரணுக்கள் யாவையுமே.
2.உயிர்த் துடிப்பு ஏற்படவே அந்த மின் அலை இருந்தால் தான் செயல் கொள்ள முடியும்.

நீரைப் பாய்ச்சிச் சுழலவிட்டு மின் அலையை எடுத்து ஒளியையும் பல இயந்திரங்களை இயக்கவும் சாதன முறை கொண்டு செயலாக்குகின்றோம்.

இந்தப் பூமி பல மண்டலங்களிலிருந்து வரும் ஒளி அலைகளையும் அந்த மண்டலங்களின் இயற்கை குணத்தையும் ஒன்றுக்கொன்று ஈர்த்து எடுக்கிறதென்றால் காந்த அலையின் ஈர்ப்பினால் ஒவ்வொன்றும் சுழன்று செயல்படுகின்றது.

நம் பூமி சூரியனின் ஒளி அலையை ஈர்த்து வெளிப்பட்டு இந்த உலகச் சுழற்சி ஓட்டத்தில் ஓடியே செயல்படுவதுவும் ஒவ்வொரு உயிரணுவும் ஜீவ உடல்களும் வாழுகிறதென்றால் “காந்த மின் அலையின் சக்தி நிலையில் இருந்து தான் எல்லாமே செயல் கொள்கின்றன…”

1.மின்சாரத்தை விஞ்ஞானத்தில் மட்டும் காண்கின்றீர்.
2.இந்த உடலும் மற்ற எல்லாமே மின் அலையின் கூட்டுதான்.

மிகவும் சக்தி வாய்ந்த உயிரணுவின் ஆத்ம கூட்டை இந்த உடல் என்ற பிம்ப வாழ்க்கைக்குச் சொந்தப்படுத்தி இப்பந்தச் சுழற்சியிலேயே நம் சக்தியையும் செயலையும் விரயப்படுத்துகின்றோம்.

அது மட்டுமல்லாமல் பல சஞ்சலங்கள் கொண்ட ஆவேச உணர்ச்சியில் எல்லாம் நம் உயர் சக்தியை நம்மை அறியாமல் விரயப்படுத்துகின்றோம்.

பல கோடி கோடி உயிரணுக்களின் நிலை கொண்டு உயிர் வாழும்
1.நாம் இந்த வட்டச் சுழற்சியில் வாழ்க்கை என்ற நிலையிலும் நிறைவு பெறாத வாழ்க்கை வாழ்ந்து
2.மனிதனாக வாழ்ந்த வாழக்கூடிய செயலைப் பெற்ற நாம் இந்த எண்ணச் சுழற்சியிலும்
3.எதற்கும் பயன்படாத நித்தியக் கடனில் மூழ்கி வாழ்கின்றோம்.

கடமை கடமை என்று சொல்கிறோம்…! பிள்ளைகளைப் பெற்று அவர்களை வளர்த்து ஆளாக்கிக் கடைசியில் இறந்து போவது தான் கடமையா…? பின் அந்தப் பிள்ளைகளும் அவர்களுக்கென்று பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி அவர்களும் இறப்பது தான் கடமையா…? இது தான் நித்தியக் கடமையா…?

தாய் தந்தையர் என்ன பலனைப் பெற்றார்கள்..? பிள்ளைகள் என்ன பலனைப் பெற்றார்கள்…? வாழும் வாழ்க்கையில்… படைப்பின் படைப்பில் “பலன் எது…?”

மனிதனாக பிறந்த நிலையில் இந்தப் பிறவிக் கடனைத் தீர்க்க வேண்டுமா இல்லையா..?

தன் சக்தி நிலை கூடக் கூட ஆத்ம பலம் வலுவேறித் தன் உயிராத்மாவிற்கு வீரிய உரம் ஏற்றி தன் பலம் என்னும் உண்மை பலத்தை இந்த மனித ஆத்மாக்கள் பெறக்கூடிய நிலை பெறவேண்டும்.

“தன் பலம்” பெறத்தக்க வழி முறையை உணர்த்திக் கொண்டே வருகின்றோம்.
1.மண் மணலாகி…
2.மணல் உருண்டு வளர வளரச் சிறு கல்லாகி..
3.பாறையாகி.. மலையாகி… வாழவில்லையா…?

ஒன்றுடன் ஒன்று சக்தி நிலை கூடிக் கூடி வலுப் பெற்று வளர்ந்து கொண்டே தான் உள்ளது. மனிதனின் வளர்ந்த நிலை தான் எல்லாவற்றின் ஐக்கியமும்.

அறிவாற்றல் கொண்ட மனிதன் தன் ஞானத்தை இவ்வழித் தொடரில் உரம் பெற்று ஆத்ம பலம் பெறப் பெற… மனிதனின் உயிரணுவின் வளர்ச்சி வளரப் பெறுகிறது.

உயிரணுவாக… உயிராத்மாவாக… இந்தச் சுழற்சி வட்டத்தில் பிறந்து வாழும் நாம்… அந்த வளர்ச்சியின் பாதைக்குச் செல்ல வேண்டும்.

ஏனென்றால் ஒவ்வொரு இயற்கையும் பலவாக வளரும் பொழுது
1.இயற்கையின் உயர் சக்தியான மனிதன் தன் உயிராத்மாவிற்கு உரம் கூட்டி
2.அவ்வுயிராத்மாவ வளர்க்கக்கூடிய பக்குவ ஞானத்தைச் செயல் கொண்டு வளர்த்திட்டால்
3.இந்த மனிதனின் உண்மையின் உயர்ந்த பலம் கூடி உயர் நிலை பெறலாம்.

காற்றில் தான் சகலமும் கலந்துள்ளன. அக்காற்றிலுள்ள அமில குணத்தில் தனக்குகந்த சக்தியை ஒவ்வொரு இயற்கை குணங்களும் அதற்குகந்த அமிலத்தை ஈர்த்து வளர்க்கிறது.

அத்தகைய செயலைப் போல் மனிதனாக வாழும் நாமும் இந்த இயற்கையில் காற்றுடன் கலந்துள்ள அமில சக்தியில் பலவும் உள்ள பொழுது
1,நம் எண்ணத்தைக் கொண்டு நாம் எடுக்கும் சுவாசத்தினால்
2.நாம் எடுக்கக்கூடிய எண்ண நிலைக்கொப்ப அதன் செயல் கொண்ட அமில குணத்தின் சக்தியை நம் சுவாசம் ஈர்த்து
3.நம் உயிராத்மா பலம் கொள்ளும் நிலை வருகிறது.
4.அத்தகைய பலம் கொண்டால் அழியாத நிலைகள் கொண்டு எக்காலமும் வாழலாம் ஞானிகளைப் போல… மகரிஷிகளைப் போல…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இன்று நாம் உணவாக உட்கொள்ளும் உணவு வகைகளிலும் சரி… பயிர் செய்யும் பயிர்களிலும் சரி…
1.பல விதமான பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தூவப்படும் பொழுது
2.அது செடிகளில் பட்டு அதில் வரும் வித்துகளிலும் கலந்து வருகின்றது.
3.கலந்து வரும் நிலையில் அதைத்தான் உணவாக உட்கொள்கின்றோம்.

உணவாக உட்கொள்ளும் பொழுது அதுவும் நமக்குள் அணுவாக மாறுகின்றது. எந்த வித்திலே விஷம் கலந்ததோ அந்த விஷத்தையே நாமும் கலந்து நுகர நேருகின்றது.

அப்படி நுகரும் பொழுது விஷ அணுக்களின் தன்மை ஊடுருவி நம் உடலில் “கை கால் குடைச்சல்” போன்ற நோய்களை உருவாக்குகின்றது.

பூச்சிகளைக் கொல்லும் விஷம் கலந்த உணவுகளாக இருந்தாலும்
1.உணவு உட்கொள்ளும் பொழுது ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும்
3.அது இந்த உணவு முழுவதும் படர வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.
4.சாப்பிட உட்கார்ந்தவுடனேயே இந்த மாதிரி எண்ணும் ஒரு பழக்கம் வர வேண்டும்.
5.எனக்குள் உடல் நலம் பெறும் சக்தியாக வளர வேண்டும் என்ற உணர்வுடனே உணவை உட்கொண்டு பழகுங்கள்.

அந்த அருள் உணர்வுகள் நம் இரத்தங்களில் கலக்கப்படும் பொழுது நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சினை அகற்றிவிடுகின்றது.

இப்படிச் செய்யவில்லை என்றால் இந்த விஷத் தன்மை உடலில் அதிகமாகச் சேரச் சேர
1.உடலில் புதுவிதமான பல விதமான வருவதும்
2.சில நேரங்களில் சிந்தித்து நாம் பதில் சொல்லும் நிலைகள்
3.அதைச் சீராக சொல்ல முடியாத நிலையாக அதனுடைய நிலைகள் நம்மை மறைத்து விடும்.

இதைப் போன்ற நிலையிலிருந்தெல்லாம் நாம் தப்ப வேண்டும்.

நாம் வெளிவிடும் மூச்சலைகள் மூலம் இந்தக் காற்று மண்டலத்தைத் தூய்மையாக்க முடியும்

 

ஒவ்வொரு நாளும் நமக்குள் தீமை சாடாதபடி… அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்துச் சேர்த்து அந்த உணர்வை வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.

அதன் வழியில் நாம் இடும் மூச்சலைகள் அனைத்தும் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு இங்கே பூமியில் படரச் செய்யப்படும் போது
1.இன்றைய விஞ்ஞான அறிவால் வந்த தீமைகளை எல்லாம் அடக்க முடியும்…
2.நாம் வாழும் பகுதியிலிருந்து அவைகளை அகலச் செய்யவும் முடியும்.

அதே சமயத்தில் கடந்த காலத்தில் மனிதனுக்கு மனிதன் அரசின் நிலைகள் கொண்டு மத பேதம் இன பேதம் என்ற நிலைகளில் அழித்திட்ட உணர்வுகள் நம் முன் படர்ந்து கொண்டிருந்தாலும்
1.அதனைச் செயலற்றதாக்க…
2.யாம் கொடுக்கும் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தின் மூலம்
3.நீங்கள் ஒவ்வொருவரும் அந்த மகரிஷிகளின் உணர்வலைகளை மூச்சலைகளாக வெளியிடுவீர்கள் என்றால்
4.கடந்த காலத்தில் வெளியிட்ட மனிதனுக்கு மனிதன் பழி தீர்க்கும் உணர்வுகள் இங்கே நிற்காது… அவைகளும் நகர்ந்து சென்றுவிடும்.

மேலும் அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் சேர்க்கப்படும் போது… உங்களிடமிருந்து வெளிப்படும் அந்த உணர்வின் எண்ணங்கள் சூரியன் காந்த சக்தியால் கவரப்பட்டு… இந்தக் காற்று மண்டலத்தில் அது ஊடுருவி… அதனின் வலுவாற்றல் கொண்டு தீமையை விளைவிக்கும் தீய உணர்வின் தன்மைகளை எல்லாம் “கடலுக்கே துரத்தியடிக்க முடியும்…”

ஆகவே… தவறே செய்யவில்லை என்றாலும்… ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளாக இருந்தாலும்… மத வெறியால் அவர்களை அழித்திடும் நோக்கத்தில் இரக்கமற்ற செயலாகச் செயல்படும் அந்த உணர்வுகளை நீக்கிட அருள் ஞானிகளின் உணர்வை இந்த உலகம் முழுவதும் நீங்கள் பரவச் செய்யுங்கள்.

அப்படிப் பரவச் செய்தால் தீமையான உணர்வுகளை மற்றவர்கள் நுகரும் தன்மைக்கே இடம் கொடுக்காது “மனிதர்கள் வாழும் இடத்தை விட்டு நகர்ந்து செல்லச் செய்யலாம்…”

இவ்வாறு அதனின் செயலாக்கத்தைக் குறைத்து
1.மக்களுக்குள் அறியாது வரும் தீமையான உணர்வுகளை எண்ண விடாது தடுக்க
2.உங்கள் உணர்வுகள் பயன்பட வேண்டும் என்பதற்குத் தான்
2.இதை உங்களுக்குள் உபதேசிப்பதும்… தியானத்தால் வளர்க்கச் சொல்வதும் (ஞானகுரு).

ஏனென்றால் இதை உங்களுக்கு உபதேசித்த பின் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நீங்கள் பெற வேண்டும் என்று உங்களைத் தான் நான் சதா தியானிக்கின்றேன்.

நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானிக்கும் போது அந்த உணர்வுகள் துரித நிலைகள் கொண்டு கிடைக்கும்.

காரணம் அந்தச் சக்தி வாய்ந்த உணர்வின் அலையாக யாம் பதிவு செய்யும் போது…
1.உங்கள் நினைவின் ஆற்றலைக் கண்ணுக்குக் கொண்டு வந்து
2.மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று ஏங்கினால்
3.கண்ணுக்கு எட்டாத தூரத்தில் பல இலட்சம் மைல்களுக்கு அந்தப் பக்கம் இருந்தாலும்
4.துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளி வரும் அந்த உணர்வுகளை எளிதில் கவர முடியும்.

ஆண்டென்னாவின் பவரைக் கூட்டிக் கொண்டு விஞ்ஞான அறிவால் சேடிலைட் டி.வி. என்று தெளிவாக எப்படிக் காணுகின்றனரோ இதைப் போல் அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் செலுத்தி ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.

பதிவு செய்த அருள் ஞானியின் உணர்வை நினைவுக்குக் கொண்டு வந்து அருள் உணர்வுகளை நீங்கள் பெற்று வாழ்க்கையில் வரும் அறியாத இருளை நீக்கி விட்டு… மெய்ப் பொருள் காணும் நிலையைப் பெற வேண்டும்.

இதன் மூலம்… தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கையாக மகிழ்ந்து வாழும் ஆற்றலாகப் பெறுவீர்கள்… எப்படியும் அதை உங்களுக்குள் பெறச் செய்ய வேண்டும்… என்பதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம் (ஞானகுரு).

எப்படி இருந்தாலும் மடியத் தான் போகிறோம் என்ற எண்ணத்தில் மனிதனாகப் பிறந்த பலனை வீணாக்கிவிடாதீர்கள் – ஈஸ்வரபட்டர்

 

இந்த உலக மாற்றத்தினால் இந்த உலகிலுள்ள மனித ஆத்மாக்களின் உடல் அழிந்தாலும் அவர்களின் உயிரணுவும்… உயிராத்மாவும்… சப்த அலைகளும்… சகல எண்ணத்தில் விட்ட சுவாச அலைகளும்… பூமியின் சுழற்சியில் சுழன்றுள்ள நிலையில் மீண்டும் கல்கி பிறந்தால் இந்த எண்ண வளர்ச்சி எங்கே செல்லும்…?

இந்தப் பூமியின் காற்று மண்டலத்தில் கலந்துள்ள இந்த நிலைகள் எல்லாமே அடுத்த நிலைக்கு வர ஏதுவாகின்றதா…? என்ற வினா எழும்பலாம்..!

இதன் நிலையில் இக்கலி மாறி கல்கி வரும் தருணத்தில் சில நிலைகள் ஏற்படலாம்.

இப்பூமியில் இன்று வாழும் ஆத்மாக்களும்… பல கோடி ஜீவ ஜெந்துக்கள்… தாவரங்கள்.. இன்று பூமியில் வளர்ந்துள்ள கனி வளங்கள்… நீர் நிலைகள்.. மனித உடலை விட்டுப் பிரிந்து வாழும் அனைத்து உயிராத்மாக்கள் உயிரணுக்கள்… இது நாள் வரை நம் பூமியின் காற்று மண்டலத்தில் நிறைந்துள்ள சப்த அலைகள் அனைத்து நிலைகளுமே… இந்தப் பூமியின் மாற்றம் நிகழும் தருவாயில் பல நிலைகள் மாறி கலியில் இன்றளவும் வளர்ந்து விட்ட நிலையில் மாற்றம் காணப் போகிறோம்.

இந்தக் கலியில் மாறுகிறது என்றால்… இந்த உலக மாற்றத்தில் ஏற்படும் அதிர்வினால் சில ஒளி அலைகள் நம் பூமியின் காற்று மண்டலத்திற்கு மேல் அனைத்திற்கும் பொதுவான பால்வெளி மண்டலத்தில் கலந்து விடும் நிலை பெறுகின்றது.

இன்னும் பல சப்த அலைகள் இந்தப் பூமியின் ஈர்ப்பில் இந்த அதிர்வினால் மோதுண்டு இந்தப் பூமியுடன் கலக்கும் நிலை பெறுகின்றது.
1.பல பல மாற்ற நிலைகள் இந்தக் கலி மாறிக் கல்கியில் காணப் போகின்றீர்கள்.
2.இவ் ஈஸ்வரபட்டன் உணர்த்தும் நிலை பைத்தியமாகத் தோணலாம்.
3.இனிமேல் மனித ஆத்மாக்களின் எண்ண நிலை எல்லாம் தடுமாற்றம் கொள்ளப் போகிறது.

உலகின் பல திரையறியச் செயல்படும் கருவிகளும்… இந்தக் காற்றிலிருந்து ஈர்த்து ஓரிடத்திலிருந்து இன்னோரு இடத்திற்கு ஒலி அலைகளைப் பரப்பி வாழும் நிலைகளும்… மற்றும் மனிதனால் செயற்கைக் கோள்களை ஏவி விட்டு அதிலிருந்து உணரும் ஒளி அலைகளும்… ஒலி அலைகளும்,,, இன்று செயலாற்றும் முறைப்படிச் செயலாகாது.

இயந்திரத்தின் துணை கொண்டு காற்று மண்டலத்தில் இவர்கள் இன்று பிரித்து எடுக்கும் நிலையெல்லாம் செயல்படுத்தும் முறையில்
1.இன்றுள்ள நிலைக்கொப்ப செயலாக்க முடியாமல்
2.அதற்காக இன்னும் பல புதிய சாதன முறைகளை மனிதன் உருவாக்கப் பார்ப்பான்.

மீண்டும் இந்தக் காற்று மண்டலத்தின் விஷத் தன்மை கூடி… ஆவி உலகில் வாழும் ஆத்மாக்களின் வெறி உணர்வும் அதிகப்பட்டு… “எண்ணிலடங்கா விபரீத நிலைகள் ஏற்படும் தொடர்…” இனி வரப் போகும் காலத்தில் நிகழத் தான் போகின்றது.

மனித ஆத்மாக்களே…!
1.உங்களை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்…!
2.என்றிருந்தாலும் “மடியத்தான் போகின்றீர்கள்…!” என்று எண்ணம் கொள்ளாமல்
3.மனித ஆத்மாக்களால் தான்… நிகழப் போகும் சக்தியை மனிதன் உணர்ந்து செயல்படத்தான்… இங்கே பல நிலைகளைப் போதிக்கின்றோம்.
4.மனிதனாக அறிவு கொண்டு… அன்பு பட்டு… ஞானம் பெற்றிட வாருங்கள்.

இந்த மனித ஆத்மாவிற்குத்தான் அறிவாற்றலை வளர்க்கும் ஆற்றல் உண்டு. அறிவு நிலை கொண்ட மிருகங்கள் வாழ்ந்தாலும் மனிதனை ஒத்த ஞான சக்தி பெறும் தன்மையற்ற நிலையில் தான் மிருக இனம் உள்ளது.

தேவனாக வாழக்கூடிய மனிதன் தன் நிலை உணர்ந்தால் தேவனாகலாம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நமக்கு வேண்டிய ஒருவர் “கஷ்டம்” என்று நம்மிடம் வந்து சொல்லியிருப்பார். அந்த உணர்வை நாம் கேட்டுக் கொண்டேயிருந்தோம் என்றால் என்ன நடக்கின்றது…?

அவருக்குள் எந்த வகையான அணுக்கள் உருப்பெற்றுக் கஷ்டம் என்ற நிலை வந்ததோ அவரை எண்ணும் பொழுது நமக்கும் அதே கஷ்டமான உணர்வைத் தூண்டுகின்றது.

என் குடும்பத்தில் பல தொல்லைகள் வருகின்றது… எனக்கு வியாபாரம் மந்தமாக இருந்தது… அதிலே குறைபாடுகள் வந்தது… என் உடலிலே நோயாக மாறி விட்டது என்று அவர் சொல்லச் சொல்ல
1.நாம் அதைக் கேட்டால்
2.அதே உணர்வின் அணுக்கள் விளளைந்து விட்டால்
3.நம்மை அறியாமலே “கஷ்டமாக இருக்கின்றது: என்று சொல்ல வந்துவிடும்.
4.நம் வியாபாரத்திலும் அவருக்குண்டான நிலை நமக்கும் மாறிவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட அடுத்த கணமே ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணுங்கள். விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால் கண்ணின் நினைவைச் செலுத்துங்கள்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
2.அது எங்கள் இரத்தநாளங்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று
3.குறைந்தது ஒரு ஐந்து நிமிடமாவது எண்ண வேண்டும்.

இப்படி வலுப்படுத்திக் கொண்ட பின் கஷ்டம் என்று நம்மிடம் சொன்னவரைப் பார்த்து
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறுவீர்கள்
2.இனி உங்களுக்குக் “கஷ்டம் இல்லை…!” என்று சொல்லிப் பழகுங்கள்.

ஆகவே நம் வாழ்க்கையில் எத்தகைய நிலைகளைக் கேட்டாலும் பார்த்தாலும் அடுத்த கணம் இந்த முறைப்படித் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கஷ்டப்படுபவர்கள் சொல்லும் உணர்வை நாம் நுகர்ந்தால் நம் இரத்தநாளங்களில் கலக்கின்றது. ஆனால் அதிக நேரம் கேட்டுக் கொண்டிருந்தோம் என்றால் இது அதிகமாக நமக்குள் சேர்ந்துவிடும்.

ஒரு ஐந்து நிமிடமாவது அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெற்று அதை இரத்தங்களில் அதிகமாகக் கலக்கச் செய்தல் வேண்டும்.
1.அப்பொழுது இதனுடைய வலு அதைக் குறைக்கும்.
2.இதைத் தான் வாலியை இராமன் மறைந்திருந்து தாக்கி அவனை வீழ்த்தினான்…! என்று சொல்வது.

ஆகவே ஒருவர் சொல்லும் உணர்வின் தன்மையை நாம் அதிகமாகச் சேர்த்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது
1.நமக்குள் படும் உணர்வுகள்… அவர்கள் பட்ட வேதனையோ அவர்கள் பட்ட கஷ்டங்களோ
2.நமக்குள் வளராது தடுக்கும்.

இதைப் போன்று நம் வாழ்க்கையில் பழக வேண்டும்.

அடிக்கடி உணர்ச்சி வசப்படுபவர்களுக்குச் சர்க்கரை நோய் வரக் காரணம் என்ன…?

 

நமக்குத் தெரியாமலே நம் உடலில் கோபமும் வெறுப்பும் அதிகமாகச் சேர்ந்து விட்டது என்றால் எந்த வேலையைச் செய்தாலும் வெறுப்பாகவே வரும்.

கோபம் வரும் சமயங்களில்… குடும்பத்திலோ அல்லது தொழிலிலோ யாரைப் பார்த்தாலும்
1.ஏதாவது வேலை சொல்லிக் கொண்டிருக்கும்போது திருப்பிக் கேட்டால் உடனே கோபம் வரும்
2.இப்படி அடிக்கடி செய்தோம் என்றால் இரத்தக் கொதிப்பாக மாறும்.

அதே சமயத்தில் இந்தக் கோபமும் வெறுப்பும் வரப்படும் போது ஒருவர் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து… அவர்கள் சிரிப்பதைப் பார்த்தால் உடனே அது எதிர்நிலையாகும்.

எதைக் கண்டு இப்படிச் சிரிக்கிறார்கள்…? என்று அடிக்கடி அதைப் பார்த்து அவர்கள் சந்தோஷத்தைக் கண்டு வெறுத்தோம் என்றால் நம் உடலில் சர்க்கரைச் சத்து உண்டாகும். இந்த இனிப்பு பிரிந்துவிடும்.

1.அவர்கள் சந்தோஷமாக இருக்கின்றார்கள் என்ற அந்த உணர்வை எடுத்து
2.எதைக் கண்டு இப்படிச் சிரிக்கிறார்கள்…? என்று இந்த வெறுப்பு வரப்படும் போது
3.மற்ற உணர்வுகள் இங்கே சேர்த்தவுடனே சர்க்கரை பிரிந்துவிடும்.

பொதுவாக… நமக்குள் ஒரு மகிழ்ச்சியை ஊட்டுவதும் ஒரு இயக்கச் சக்தியாக இருக்கக்கூடியதற்கு அந்த (சந்தோஷம்) உணர்வு வந்து தான் சுவை கொடுக்கும்.

ஆனால் மேலே சொன்னபடி நாம் வெறுக்கும் போது
1.அந்தச் சுவை பிரிந்து சென்றால் சர்க்கரைச் சத்து வந்துவிடும்.
2.இந்தக் காரமும் அதுவும் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் இரண்டும் சண்டை போடும்.
3.சண்டை போடுவதற்கே நேரம் பத்தாது.

இது பெருகினால் உடலில் நிச்சயம் இரத்தக் கொதிப்பு வரும். சர்க்கரைச் சத்துடன் இந்த இரத்தக் கொதிப்பும் சேர்ந்தால் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதும் போது இருதயம் பலவீனமாகும்.

சண்டை போட்டோம் என்றால் இருதயத்தில் இரத்தம் செல்லும் வால்வுகள் வீக்கமாகி விடும். அப்புறம் அது எடுத்துத் தள்ள முடியாதபடி அந்த வால்வுகள் கெட்டுப் போகும்… இருதய சம்பந்தப்பட்ட நோய் வரும்.

நாம் தவறு செய்யாமலே இப்படி எல்லாம் வரும்.

பெண்கள் நிறையப் பேருக்கு இருதய வலி உண்டு…! நெஞ்சு வலி நெஞ்சு வலி என்று இருதயங்களில் இரத்த வால்வுகளில் பலவீனம் அடையப்படும் போது அது சரியாக வேலை செய்யாது.

1.டாக்டரிடம் சென்றால் உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் என்பார்
2.படி மேல் ஏறினால் மூச்சுத் திணறலாகும்… அது ஆகும்… இது ஆகும்…! என்று பயத்தை ஊட்டிவிடுவார்கள்.

இந்த எண்ணங்களைக் கொஞ்சம் வேகமாக எண்ணினால் “இப்படி ஆகிவிட்டதே… பிள்ளை குட்டிகள் இருக்கின்றதே… தொழில் இருக்கிறதே…! என்று வேதனையை வளர்த்துக் கொள்கிறோம். நாம் தவறு செய்யாமலே நமக்குள் இத்தகைய எண்ணங்கள் வந்து விடுகிறது.

டாக்டர்கள் உடலை முழுமையாகப் பரிசீலனை செய்த பின்பு… ஹார்ட் அட்டாக் வரலாம்… மூளையைப் பாதிக்கும்… கை கால் வராது…! என்றெலலம் அடுக்கிக் கொண்டே போவார்கள். இந்தெந்த மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும் இல்லை என்றால் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும் சொல்லிவிடுவார்கள்.

எல்லாவற்றையும் சொன்னவுடன் இன்னும் கொஞ்சம் வேகமாக அதை வளர்க்க ஆரம்பித்துவிடுவோம்.

உதாரணமாக இது எதுவுமே தெரியவில்லை… டாக்டரிடம் செல்லவில்லை என்று வைத்துக் கொள்வோம். உடலில் மேல் வலி..! கிறு…கிறு… இருக்கிறது என்று சொல்லி சுக்கையோ மிளகையோ எதையாவது எடுத்துச் சாப்பிட்டு விட்டு ஒரு சிலர் பேசாமல் இருப்பார்கள்.

ஆனால் டாக்டரிடம் சென்று இரத்தத்தை எடுத்துப் பரிசோதித்த பின் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது… படி மீது ஏறினால் இன்னும் பாதிக்கும் என்று சொன்னால் போதும்.

1.முதலில் சிறிதளவு அதிகமாக இருந்த இரத்த அழுத்தத்தை “இரண்டு பங்காக்கி விடும்…”
2.200… 250க்கு மேல் சென்றுவிடும்… அதற்குப் பின் அவர்கள் சொல்லும் மருத்துவத்தைச் செய்யாமல் இருக்க முடியாது.
3.நம் எண்ணங்கள் பலவீனம் அடைந்தால் இது எல்லாம் ஆகத்தான் செய்யும்.

இப்படித்தான் நம்மை அறியாமல் நம் ஆன்மாவில் எத்தனையோ அழுக்குகள் சேர்கிறது. இதை நாம் துடைக்க வேண்டுமல்லவா… துடைப்பதற்கு என்ன வழி வைத்திருக்கின்றோம்…?

ஆறாவது அறிவைக் காப்பாற்றிக் கொள்வதற்குத் தான் இங்கே உபதேச வாயிலாக அந்த ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பெறச் செய்கிறோம் (ஞானகுரு).

யாம் உபதேசிக்கும் இந்த அருள் ஞானிகள் உணர்வு உங்களுக்குள் பெருகப் பெருக மன பலமும் உடல் நலமும் பெறுவீர்கள். சிந்தித்துச் செயல்படும் அருள் ஞானமும் பெருகும். நோய் வராது தடுக்கவும் முடியும்.

உலக மாற்றத்திற்குக் காரணம் மனிதனா…? அல்லது இயற்கையா…! – ஈஸ்வரபட்டர்

 

வரப்போகும் இந்த உலக மாற்றத்தில் இந்தப் பூமியின் குணத்தில் மாற்றம் ஏற்படப் போகும் நிகழ்ச்சி மனித ஆத்மாவினால் நிகழ்கிறது…! என்ற குற்ற உணர்வை ஏன் காணல் வேண்டும்..?
1.இயற்கையின் உந்தலினால் மனித எண்ணமே செயற்கை காண வழிப்பட்டதற்கு
2.”மனிதனைக் குற்றம் காணலாமா…?” என்ற வினா எழும்பலாம்.

ஆனால் மனிதனால் ஏற்படுத்திக் கொண்ட இந்தத் தீய அமில குணத்தினால் தான் நம் பூமியின் இயற்கை பாழ்பட்டது.

மனிதனால் அரசர்கள் என்றும் தேவர்கள் என்றும் அசுரர்கள் என்றும்
1.மனித ஆத்மாவுக்குகந்த குணத்தைப் பிரித்துக் கண்டு
2.ஒருவனை உயர்த்தி… ஒருவனை அடிமை கொண்டு… வாழ்ந்த எண்ணத்தில்
3.போட்டி பொறாமைகள் ஏற்பட்டு… பேராசையில் அதிகப் பொருள் சேர்த்து
4.ஒருவனை அழிக்க ஒருவன் வாழ்ந்து வந்ததின் நிலையினால் குண அமிலங்களில் மாறுபட்டு
5.அணுகுண்டுகளையும் அணுக்கதிர்களையும் காற்று மண்டலத்தில் கலக்கவிட்டு
6.இயற்கையைப் பாழ்படுத்திய மனிதனால் தான் நம் பூமியின் நிலை நிலை தடுமாறப் போகிறது.

ஆக… இந்தக் கலியில் பூமியை நிலை தடுமாற வைப்பவனும் இம்மனிதன் தான். இந்தப் பூமி நிலைக்க கல்கியுகம் காணச் செயல்படுத்தப் போகிறவனும் இந்த மனிதன் தான்..!

மனிதன் மனித ஞானம் பெற்றால் மனிதனால் மனித ஆத்மாக்களைப் பலவாக நிறுத்த முடியும். நம் பூமியில் மனிதக் கரு வளர… நம் பூமியில் மனித ஆத்மாக்களை வளர்க்கும் தன்மை கொள்ள…
1.வியாழனிலிருந்து மீண்ட ஆன்மாக்கள் இருந்ததனால் தான்
2.நம் பூமி வளர்ந்த பிறகு நம் பூமியில் மனித ஆன்மாக்கள் வாழக்கூடிய கருவே வளர்ந்தது.

பல சப்தரிஷிகளும் அவர்களின் வழித் தொடர் பெற்ற பல நிலை கொண்டவர்கள் இருந்தாலும்… இந்தப் பூமியில் வாழ்ந்த மனித ஆத்மாக்களின் சக்தி நிலை உயர்ந்து தன் ஞானம் பெறும் ஆத்மாக்கள் வளர்ந்து வந்தாலும்… இந்தப் பூமியின் மாற்றக் காலத்தில் என்ன ஆகிறது…?

இந்த மனித வாழ்க்கையில் கொண்டுள்ள ஆசாபாசங்களிலும் நித்தியக் கடன்களிலும் மூழ்கியே… இந்தக் கலியின் மாற்றத்தில் வாழ்ந்திடும் மனித ஆத்மாக்கள்… கலி மாறும் தருணத்திலும் அதே சுழற்சி ஓட்டத்தில் இருந்து… “தான் இதிலிருந்து மீள முடியாமல் போகிறது…!”

அத்தகைய நிலையில்… மீண்டும் அறிவு ஞானம் கொள்ளும் மனிதக் கரு வளர்ந்து… அக்கருவின் செயலிலிருந்துதான் மனித உருவங்களே இந்தச் சூரியனைச் சுற்றியுள்ள 48 மண்டலங்களின் வளர்ச்சியில் மனித ஆத்மாக்கள் வாழும் நிலை வரும்…!
1.அதாவது வியாழனுக்குப் பின் நம் பூமியில் மனிதர்கள் வாழுவது போல்
2.இந்தப் பூமிக்கு அடுத்து மனிதர்கள் சந்திரனில் வாழும் நிலை ஏற்படலாம்…!

நம் சூரியனின் சுழற்சியில் பல மண்டலங்கள் ஓடினாலும் நம் பூமியின் நிலைக்கொப்ப மனித ஆத்மாக்கள் வாழக்கூடிய இச்சக்தி மண்டலத்தின் இந்தக் கலி மாறி கல்கியுகம் பெற்று நம் பூமி சுழலும் தருணத்தில்
1.இன்றைய நிலையில் வாழும் ஆத்மாக்களின் பல கோடி எண்ணங்களை மாற்றிச் செயல்புரிய
2.பல சக்தி நிலைகள் செயல் கொண்டு செயலாற்றித்தான் கல்கியுகம் வாழ முடியும்.

அதற்குத்தான் எம்மைப் போன்ற எண்ணிலடங்கா மகரிஷிகளின் செயல்கள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டுள்ளது.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

குருநாதர் சொர்க்கம் அடைந்த வைகுண்ட ஏகாதசி நாளில் அவர் நினைவின் தன்மை கொண்டு வரும் பொழுது
1.அவர் எப்படி எல்லாம் பேரன்பைப் பெற்றாரோ பேரொளியாக ஆனாரோ
2.அதைப் போல நாமும் ஆக வேண்டும்…! என்று ஆசைப்படுங்கள்.. இச்சா சக்தி…!

தீமையை நீக்கிய குருவின் உணர்வை… இச்சைப்பட்டு அதை நுகர்ந்தால் உயிரிலே பட்டு அது கிரியையாகும். அந்த உணர்ச்சிகள் உங்களுக்குள் செயலாக்குகின்றது.

பின் அந்தக் குருவின் ஞான வழிப்படி இச்சா சக்தி… கிரியா சக்தி… ஞான சக்தி. அந்த ஞானத்தின் வழி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.

சிறிது காலம் கொஞ்சம் பழகிக் கொண்டால் போதும்…!

உதாணமாக… சில விளையாட்டுகளை விளையாடுகின்றார்கள். கேரம் போர்ட் விளையாட்டில் அதற்கென்று ஒரு காயை வைத்துக் குறி பார்த்துத் தள்ளி மற்ற காய்களைத் தள்ளுகின்றார்கள்.

அது எல்லாம் அனுபவம் தான்…!

பழகாத நாம் அதைத் தட்டினால் எங்கேயோ போகின்றது. ஆனால் பழகியவர்கள் தட்டினால் ஒர் காயை வைத்து மூன்று நான்கு காயைக் கூடத் தள்ளிக் கொண்டு போகின்றது. ஏனென்றால் அவர்களுடைய அனுபவம் இது.

இதைப் போல்.. நம் அனுபவத்திலே எதைக் கொண்டு வர வேண்டும்…?

1.நாம் பல தவறுகள் செய்தாலும் அந்தத் தவறுகளைத் தள்ளி விட்டு
2.மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்து நல்ல ஞானத்தைப் பெருக்க வேண்டும்.

நம் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) சொன்ன வழியில் சிறிது காலம் அனுபவித்துப் பாருங்கள்.
1.சாமி செய்ய முடியாததை… சாமியார் செய்ய முடியாததை.. கடவுள் செய்ய முடியாததை..
2.“உங்களுக்குள் கடவுளாக நின்று..” தீமைகளை அகற்றும் அருள் சக்தியாக இது விளையும்.
3.அதே போல் ஜோதிடம் செய்யாததை… ஜாதகம் செய்யாததை…
4.இதை எல்லாம் இந்த உணர்வு உங்களுக்குள் செய்யும்.

பத்திரிக்கை… டி.வி… மற்ற சாதனங்கள் மூலம் வரும் சில செய்திகள் நம்மை எப்படிப் பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது…?

 

இன்று பத்திரிக்கைகளை எடுத்துப் படிக்கத் தொடங்கினாலே அச்ச உணர்வுகளைத் தோற்றுவிக்கும் செய்திகளையே பக்கத்திற்குப் பக்கம் பெரிய அளவில் படத்துடன் போட்டிருக்கின்றார்கள்.
1.அச்ச உணர்வுகளைத் தோற்றுவிக்கும் அத்தகைய செய்திகளைப் படிக்கும் பொழுது
2.அவைகள் எளிதில் நம்முள் பதிவாகி விடுகின்றது.

அதே போல் பொழுது போக்கிற்காக டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பழக்கம் பெண்கள் ஆண்கள் இருவருக்குமே உள்ளது.

அதிலே காட்டப்படும் சம்பவங்களில் விவரிக்கப்பட்டுள்ள கதாபாத்திரப் படைப்பின் வேதனை சலிப்பு சங்கடம் கோபம் குரோதம், அவசரம் ஆத்திரம் பயம் ஆகிய உணர்வுகளை அதே உணர்வுடன் நாம் ஒன்றிப் பார்க்க நேருகின்றது.
1.அவைகளை ஒன்றிப் பார்ப்பதால்
2.அந்த உணர்வுகள் அனைத்துமே நமக்குள் ஆழமாகப் பதிவாகிவிடுகின்றது.

சிறுகச் சிறுகச் சேரும் இந்த உணர்வுகளில் நாம் எந்த உணர்வின் தன்மையை அதிகமாகச் சேர்த்துக் கொண்டோமோ அதனின் செயலின் நிலைகளில் நம்மையும் செயல்பட வைக்கும்.

சில சானல்களில் காட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் (நேரலை) விதம் விதமாக புதுப் புது நிலைகளில் ஒளி பரப்பிக் கொண்டுள்ளார்கள். இதைக் குழந்தைகளும் பார்க்கும் சந்தர்ப்பம் வருகிறது. அதிலே தீமையின் உணர்வுகளும் பதிய நேர்கின்றது.

குழந்தைகளுக்கு வேறு எண்ணம் இல்லை. ஆர்வத்துடன் உற்று நோக்கும் பொழுது அந்தப் பிஞ்சு உள்ளங்களில் பதிவாகிவிடுகின்றது.

ஆனால் அவர்கள் வளர்ந்த பின்பு பதிந்த அத்தகைய உணர்வுகள் அனைத்தும் செயலாக்கத்திற்கு வருகின்றது. ஆகவே, இதனைத் தவிர்த்துக் கொண்டால் மிகவும் நலம் பயக்கும் செயலாக இருக்கும்.

இவ்வாறு பல வகையான தீமையின் உணர்வுகளை
1.நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ அன்றாடம் நமக்குள் ஆழமாகப் பதித்துக் கொள்கின்றோம்
2.பதிந்த உணர்வுகள் ஜீவ அணுக்களாக நமக்குள் நம்மிடத்தில் விளைந்து விடுகின்றன.

இதனால் நாம் வேறு வேளையில் ஈடுபட்டிருக்கும் சமயம் நமக்குப் பின்னால் ஏதாவது ஒரு பொருள் விழுந்த சப்தம் கேட்டால் உடனே திடுக்கிட்டுத் திரும்பிப் பார்ப்போம்.

என்னமோ… ஏதோ…! என்ற அச்ச உணர்வு நம்மை ஆட்கொள்ளும். பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருப்போம். நாம் செல்லும் பஸ்ஸின் ஓட்டுனர் கவனமாக வண்டியைச் செலுத்திக் கொண்டிருப்பார்.

திடீரென்று இடையில் ஒருவன் பஸ் வருவதை அறியாமல் புகுந்து விடுவான். இதனால் ஓட்டுனர் “சடார்..,” என்று பிரேக்கைப் பிடிப்பார்.

ஆனாலும், நம் மனதிலோ “என்ன ஆயிற்றோ..?” என்ற பயத்துடிப்பு உண்டாகின்றது.

நமக்கு முன் உள்ள காற்று மண்டலத்தில்…
1.விபத்துக்கு உட்பட்ட நிலைகளிலும் நோயால் இறந்தவர்களின் நிலைகளிலும்
2.எத்தனையோ வேதனையுடன் வெளிப்பட்ட அணுக்கள் பல வகைகள் உண்டு.

ஆகையினால் விபத்தைக் காணும் சம்வங்களில் நம்மையறியாமல் “என்ன ஆனது..?” என்று ஆர்வ மிகுதியால் கூர்ந்து கவனிப்போம். அப்பொழுது அந்த உணர்வின் அணுக்கள் நம்முள் புகுந்துவிடும்.

விபத்து நேரவிருந்த ஆள் தப்பிவிடுவான். ஆனால் அது சமயம் நாம் சுவாசித்த அச்ச உணர்வுகள் நம்மிடத்தில் பிரமையை உண்டாக்கிவிடும்.

அச்ச உணர்வுகளைப் படித்ததன் விளைவு அந்த அச்ச உணர்வுகள் நமக்குள் ஆழமாகப் பதிந்து விடுகின்றது. ஓட்டுனர் “கிரீச்..,” என்று பிரேக் போட்டவுடன் கண்களை அழுத்தமாக மூடிக் கொள்வோம்.

அங்கு என்ன நடந்தது…! என்று கூடப் பார்த்திருக்க மாட்டோம். ஏனென்றால் அந்த உணர்வின் வேகம் அறியும் தன்மையைக் கொடுப்பதில்லை.

இந்த உணர்வின் அலைகள் நமக்குள் இணைந்த பின் “அடிப்பட்டானே…!” என்று எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் நம் சுவாசத்தில் கலந்து நம்மைப் பித்தனைப் போன்று ஆக்கிவிடுகின்றது.

அதே நினைவில் இருந்தால் “ஐயோ… யாரோ வருகிறார்… கதவைத் தட்டுகிறார்… ஐயோ… மோதிவிட்டது, ஐயோ… கழுத்தை நெரிக்கிறார்” என்று உளற ஆரம்பித்துவிடுவோம்.

இதைப் போன்ற அச்ச உணர்வுகள் நம்மிடத்தில் அதிகமாக விளைய விளைய அடுத்து நாம் ரோட்டின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தாலும் “கிரீச்…” என்று சப்தம் கேட்டால் போதும் ஒதுங்குவதற்குப் பதில் வண்டியிலேயே விழுந்துவிடுவோம்.

ஏனென்றால் நாம் சுவாசித்த உணர்வுகள் நம்மையறியாமல் ஆபத்துக்கே அழைத்துச் செல்லும்.

1.எனவே பத்திரிக்கையை எடுத்துப் படித்தாலும் டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்த்தாலும்
2.அதில் உள்ள செய்திகள் நமக்குள் பதிந்து ஆபத்தை உண்டாக்காமல் நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்.

பத்திரிக்கைகளைப் படித்து முடித்தவுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தவுடன் உடனே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

கண்களை மூடித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை ஒரு பத்து நிமிடம் கண்களை மூடி உடல் முழுவதும் படரவிடுங்கள்.

1.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால்…
2.நம் நாட்டிலும் இந்த உலகிலும் இனி நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும்
3.எல்லோருக்கும் நன்மை தருபவைகளாக இருக்க வேண்டும் ஈஸ்வரா.. என்று
4.அடிக்கடி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

இதன் மூலம் நஞ்சான உணர்வுகள் நமக்குள் சேராமல் தடுத்து நம் ஆன்மாவைக் காத்துக் கொள்ள முடியும். பிறரின் நோய்களும் நம்மை அண்டாது.

உலக மாற்றத்திற்கு மிக முக்கியமான காரணம் – ஈஸ்வரபட்டர்

 

உலகிலுள்ள உண்மை இயற்கைத் தன்மைகளை மெய் ஞானம் கொண்டு விளக்குகிறோம்…! இதனை விஞ்ஞானத்தவர்களும் எடுத்து ஆராயலாம்.

நம் பூமியில் மட்டுமல்லாமல் அனைத்துக் கோளங்களுக்கும் பொதுவாக உள்ள பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள அமில குணங்கள்
1.அதனதன் நிலைக்கொப்ப அதனதன் இனத்துடன் சென்று எப்படி ஐக்கியப்படுகிறது…?
2.ஒவ்வொரு மண்டலமும் இயற்கைக் குணத்தில் எப்படியெல்லாம் வளர்ச்சி ஏற்படுத்திக் கொண்டது…?

மழை வரும் காலங்களில் இடியும் மின்னலும் ஏற்பட… ஏற்பட… ஒவ்வொரு பூமியின் வளர்ச்சித் தன்மையும் கூடுகிறது…! என்று அர்த்தம்.

1.இரண்டு அமில குணங்கள் மோதுண்டு வான மண்டலத்தில் சுழலும் தன்மையில்
2.அதன் மேல் மழை நீர் பட்டு இடி ஏற்பட்டு அந்த இடியின் ஈர்ப்பு பூமியில் பதிந்து
3.அதன் நிலையில் வளரும் காளான்களின் வளர்ச்சியிலிருந்து புதிய புதிய இன இயற்கை வளங்கள் வளருகின்றன.

எந்த நிலை கொண்டு…?

பூமியில் காளான் வளர்ந்த பிறகு ஒன்றிரண்டு நாளில் அதன் நிலை மாற்றம் கொள்கிறது. காளானிலிருந்து வெளிப்படும் அமிலத்தினால் அந்த நிலை காற்றாக பூமியில் படரும் பொழுது அதன் அமிலம் காற்றுடன் கலக்கப்பட்டு எந்தெந்த இடங்களில் அக்காற்றினில் அவ்வமிலம் படர்கின்றதோ எங்கெல்லாம் “புதிய இன வளர்ச்சி” ஏற்படும்.

மற்றும் இக்காளான் வகைகளிலேயே கணக்கிலடங்கா குண வகைகள் வளர்கின்றன மழைக் காலங்களில். பூமியில் மட்டுமல்ல. கடல்களிலும் நீர் நிலைகளிலும் பல வகைக் காளான்கள் மழைக் காலங்களில் ஏற்படுகின்றன.

மரங்களில் வளரும் காளான் ஒன்று இரண்டு நாளில் மடிந்து அந்த மரத்தின் மீது அக்காளான் செடி அழுகிய நிலையில் படர்ந்து விடுகிறது.
1.அந்த மரத்திலிருந்து வெளிப்படும் சுவாசக் காற்று அவ்வழுகிய காளான் மேல் பட்டு
2.அக்காளானிலிருந்து ஆவியான அமிலம் மற்றொன்றின் மேல் படும் பொழுது
3.வேறு வகையான இன வளர்ச்சி தோன்றக்கூடிய உண்மை இதன் தொடரில் தான் வருகிறது.
4.இப்படித்தான் இயற்கையின் வளர்ச்சியே உள்ளது.

நம் பூமியில் சூரியன் மேலிருந்து நம் பூமிக்கு வரும் ஒளி அலை ஒன்று போல் உள்ளதா..? என்று முந்தைய கால விஞ்ஞானத்திற்கும் இன்றைய விஞ்ஞானத்திற்கும் மாறுபட்ட கருத்துக்கள் ஏற்படுகின்றன.

உலகச் சுழற்சியில் ஏற்படும் இந்த ஒளி அலைகள் ஒன்று போல் சுழன்றாலும் பூமி எடுக்கும் விதத்தில் அதனதன் நிலைக்குகந்த ஒளி அலையைத்தான் இந்தப் பூமியினால் எடுக்க முடிகின்றது.

நம் பூமியில் சில இடங்களில் எரிமலை தோன்றுகிறது. சில இடங்களில் பனி மலைகள் உள்ளன. அந்த இடங்களில் உள்ள ஒளி அலைகளை பூமி எப்படி ஈர்க்கிறது…?

எரிமலையாகக் கக்கும் இந்த உஷ்ண பூமியில் அதற்குகந்த ஆகாரத்தை அது அதிகமாகத்தான் எடுத்துக் கொள்கிறது. இந்த ஒளி அலையின் மூலமாகத்தான் நம் பூமியின் ஜீவனே வாழ்கிறது. நம் பூமிக்கும் ஜீவனுண்டு… உணர்வுண்டு… உருவ சதைகளும் உண்டு.

நம் பூமியின் உள் நிலையை விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்கு அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. பூமியின் உள் நிலையில் உள்ள சக்திகளிலும் செயற்கையின் ரூபம் காண நாம் விரயப்படுத்தி வாழ்கிறோம்.

1.வரும் இடியை இடி தாங்கியினால் தடுக்கின்றோம்.
2.இடி இல்லாவிட்டால் இன வளர்ச்சிக்குகந்த இயற்கைத் தன்மையை நாம் பெற முடியாது.
3.இயற்கையின் தாவர வளர்ச்சி அதிகம் கொண்டால் தான் நாம் இந்தப் பூமியில் வாழ முடியும்.

மனித ஆத்மாக்கள் குறுகிய காலத்திலே செயற்கைக்கு மிகவும் அடிமைப்பட்டு
1.இயற்கையைச் செயற்கையில் கண்டு வாழ்ந்து
2.இந்தப் பூமியையே நிலை தடுமாற வைக்கின்றார்கள்.

பூமியிலிருந்து எடுக்கப்படும் கனிவளங்களைக் காட்டிலும் நம் பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் காந்த அமில சக்தியை மனிதனால் மின்சாரம் காண… காற்று அலையில் உள்ள சக்தியைக் காட்டிலும் “பூமியிலிருந்து” அதிக மின் அலைகளை எடுக்கின்றோம்.

இப்படி பூமியையே நம் செயற்கையின் சோம்பேறி நிலைக்காகக் கொண்டு போய் அதில் உள்ள பல சக்திகளையும் விரயப்படுத்துகின்றோம்.

ஆங்காங்கு உள்ள கனிவளங்களை எடுத்தாலும் வளரும் இயற்கை வளர்ந்து கொண்டே இருந்த நிலையும் இன்று செயற்கை விஞ்ஞானம் தடைப்படுத்தி விட்டது.

அதாவது… பல ஆயிரம் ஆண்டு காலங்களாகப் பூமியிலிருந்து தங்கம் வெள்ளி போன்ற உலோகங்களை எடுத்து வந்துள்ளார்கள். எடுக்க எடுக்க இவையும் வளர்ந்தன.

ஆனால் இந்தக் குறுகிய நூற்றாண்டுகளில்…
1.பெட்ரோலிய இனத் திரவத்தையும்
2.மின்சாரம் காண்பதற்காகக் காந்த அலையின் அணு சக்தியையும் நாம் உறிஞ்சி எடுத்ததனால்
3.பூமியில் வளர வேண்டிய கனி வளங்களுக்குகந்த ஆகாரமான இவ்வமில குணங்கள் எல்லாம் தடைப்பட்டவுடன்
4.அவைகளின் வளர்ச்சியும் சுத்தமாகக் குன்றிவிட்டது.

பொன் முட்டையிடும் வாத்தின் கதையைப் போல் ஆகிவிட்டது…!

வாத்து தானாகத் தினசரி இட்ட முட்டைகளைப் பேராசை கொண்டு ஒரு நாள் அந்த வாத்தை அறுத்துப் பார்த்த நிலையைப் போல் இந்தப் பூமியின் நிலையை மனிதர்கள் சிதறடித்துவிட்டனர்.

1.மனிதனின் எண்ண வளர்ச்சியிலும்… அறிவாற்றலிலும்… ஞானத்திலும் வேகமில்லை…!
2.ஆனால் நினைத்தவுடன் நினைத்தது நடக்க வேண்டும் என்ற
3.பேராசையின் வெறி… வேகம்… மனிதர்களிடம் மிகவும் துரிதப்பட்டதனால்
4.இயற்கையின் பொக்கிஷத்தை எல்லாமே அழித்து வாழ்கின்றோம்.

இதனின் விளைவைக் கூடிய சீக்கிரம் நீங்கள் உணர்வீர்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

பிறருடைய வேதனையான உணர்வைச் சுவாசித்தால் உடலுக்குள் வளராதபடி நாம் அதைப் பிரித்திடல் வேண்டும். பிரிக்கக்கூடிய சக்தி அந்தத் துருவ நட்சத்திரத்திற்கு உண்டு.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவாக்கி விட்டால் தீமைகள் வரும் பொழுதெல்லாம் அந்த நிமிடமே “ஈஸ்வரா…” என்று உணர்வினைச் செலுத்த வேண்டும்.

பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று ஏங்கிச் சுவாசிக்க வேண்டும். இப்படி நுகர்வது அனைத்துமே முதலில் நம் இரத்த நாளங்களுக்குள் தான் சேர்கின்றது.

தீமையான உணர்வின் வளர்ச்சி கொண்ட நிலையில் உறுப்புகள் செயலிழந்திருந்தாலும் இதைக் கண்ட பின் அந்த உணர்வுக்குள் கிளர்ந்து எழுகின்றது.

அறியாத நிலைகளில் நமக்குள் அப்படிப் பதிவான தீமைகள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் பொழுது அந்த எண்ணங்கள் வருகின்றது. அந்த எண்ணங்கள் வரப்படும் பொழுது உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
1.அப்பொழுது காற்றிலிருக்கும் தீமைகளை அதிகமாக நுகர நேருகின்றது.
2.அந்த உணர்ச்சிகளை நாம் எந்த அளவுக்கு நுகர்கின்றோமோ உடலும் மாறுபடுகின்றது… சொல்லும் செயலும் மாறுபடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டும் என்றால் அந்த “ஆத்ம சுத்தி…” என்ற ஆயுதத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.

ஏனென்றால் மண்ணிலே ஒரு நல்ல பொருள் விழுந்தால் உடனே நீரை விட்டு அதைக் கழுவிக் கொள்கின்றோம். இதைப் போல் பிறருடைய தீமையின் உணர்வுகள் நம் உடலில் இரத்தங்களில் கலந்தால் அதன் வீரியத்தைத் தணிக்க “ஈஸ்வரா…” என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொள்ளுங்கள்.

இங்கே உபதேசிக்கும் பொழுது
1.உங்கள் கண்கள் என்னை (ஞானகுரு) உற்றுப் பார்க்கின்றது.
2.உபதேசிக்கும் சொல்லின் உணர்வுகள் அந்தச் செவியிலே படும் பொழுது அந்த உணர்ச்சிகளை உருவாக்குகின்றது.
3.அந்த உணர்வின் தன்மை கொண்டு நினைவலைகளைப் பதிவாக்குகின்றது.
4.உங்கள் கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ வெளியிடும் அலைகளை ஆன்மாவாக மாற்றுகின்றது.
5.மாற்றிய உணர்வுகள் உயிரிலே படுகின்றது… இந்த உணர்ச்சிகளை உடலிலே பரவச் செய்கின்றது…. இரத்தநாளங்களில் கலக்கின்றது.

இந்த உணர்வைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது… இரத்த நாளங்களில் கலக்கக் கலக்க…
1.உங்கள் உடலில் தீமையை விளைவிக்கும் உணர்வுகளுக்கு
2.இந்த இரத்தநாளங்களின் வழியாக உயர்ந்த உணர்வுகள் போகும் பொழுது அதனுடைய தணிவுகள் ஏற்படுகின்றது.

நல்ல குணங்கள் இருக்கப்படும் பொழுது ஒரு வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தால் அது இரத்தத்தில் சுழலப்படும் பொழுது நல்ல அணுக்களுடைய நிலைகள் அதை நுகர மறுக்கின்றது.

அப்பொழுது இயக்கச் சக்தி குறைகின்றது…. உடல் சோர்வடைகின்றது. இப்படிச் சோர்வடையப்படும் பொழுது நல்லதை நினைக்கும் திறன் இழக்கப்படுகின்றது,

இப்படிச் சோர்வடையும் உணர்வுகள் அதிகரிக்க அதிகரிக்க அதன் உணர்வின் தன்மை நாளடைவில் அதிலே பழகி விட்டால் எது எடுத்தாலும் அந்தச் சோர்வு தான் வரும்.

மட்டன் சாப்பிடாதவர்கள் இரண்டு நாளைக்கு விட்டு விட்டால் பிறகு “கொஞ்சம் மட்டும் சாப்பிடலாம்…” என்ற உணர்வு தோன்றும். ஒரு காயை நான் சாப்பிட மாட்டேன் என்று சொல்வார்கள். பின் அதைச் சுவையாக்கி விட்டால் சரி… இப்பொழுது சாப்பிடலாம்…! என்பார்கள்.

இதைப் போன்று இந்த உணர்வுகள்…
1.எதனின் உணர்வை நாம் நுகர்கின்றோமோ அதன் உனர்வின் தன்மை
2.அங்கே அந்த உணர்ச்சிகளைத் தூண்டத்தான் செய்யும்.

ஆனால் இதைப் போன்ற நிலைகளை அதை அடக்குதல் வேண்டும் என்பதற்குத்தான் பல வித கோணங்களில் உங்களுக்கு இந்த உபதேசமே கொடுக்கின்றோம்.

பண்டைய காலத்தில் ரிஷிகள் காட்டிற்குச் சென்று தவம் செய்தார்கள் என்று சொல்வதன் உட்பொருள் என்ன…?

 

மனிதனுக்குள் இருக்கும் ஆறாவது அறிவின் தன்மை என்பது மிகவும் உயர்ந்த நிலைகள் கொண்டது.

அந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அன்று 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களும் சரி… மகரிஷிகளும் சரி… மனிதனுக்கு மனிதன் காத்திடும் நிலையாகவும்… உயர்ந்த பண்புகளை வளர்த்திடும் நிலையாகவும் இருந்தனர்.

பின் சிறுகச் சிறுக அரச குடும்பங்கள் என்று வரப்படும் போது மதங்களாகப் பிரிக்கப்பட்டு மற்ற மதத்தை வேதனைப்படச் செய்வதே அந்தந்த மதத்தின் வேலையாக இருந்தது.

1.ஏனென்றால் தன் மதத்தின் கடவுளைக் காத்துக் கொள்ள
2.மற்ற மதத்தவர்கள் ஏற்படுத்தும் கடவுளை… அவர்கள் முறையற்றுச் செய்கின்றனர் என்று
3.இவர்கள் அவர்களைச் சொல்வதும் அவர்கள் இவர்களைச் சொல்வதும்
4.வணங்கி வரும் அந்தத் தெய்வங்களை… “அவர்கள் கடவுளைச் சரியில்லை…” என்று ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்வதும்
5.உண்மையின் நிலைகள் அனைத்தும் இப்படி மறைக்கப்பட்டுக் காலத்தால் வேதனை என்ற உணர்வுகளே அதிகமாக வளர்ந்து
6.ஒவ்வொரு மனிதனையும் வேதனைப்படும் நிலைகளுக்கே கொண்டு சென்றனர்.

அரசனால் உருவாக்கப்பட்ட மதங்களும் இனங்களும் மக்களைக் காக்க என்று சொல்லிச் சட்டங்களை இயற்றினாலும் அரசன் தான் வாழ இத்தகைய நிலைகளை உருவாக்கி… மனித உடலில் நஞ்சு கலந்த உணர்வுகளையே வெளிப்படுத்தும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டான்.

அப்படி வெளிப்படுத்தப்பட்ட வேதனையான உணர்வுகள் அனைத்தையும் சூரியன் தன் காந்த சக்தியால் கவர்ந்து இந்தப் பூமியில் நஞ்சு கலந்த நிலையாக வளர்ந்து உலகெங்கிலும் பரவி விட்டது.

புழுவிலிருந்து மனிதனாகப் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்த நிலையில் மனிதனின் ஆறாவது அறிவு (முருகன் – கார்த்திகேயா) என்பது பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்ற நிலைகளில்… ஒவ்வொரு அறிவும் ஒவ்வொரு எண்ணமும் ஒவ்வொன்றையும் உருவாக்கும் ஆற்றல் பெற்றது.

1.அத்தகைய ஆற்றல் கொண்ட ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.தீய விளைவுகளை உருவாக்கும் செயலை மாற்றி
3.மனித உடலுக்குள் இருக்கக்கூடிய உணர்வின் தன்மைகளை எல்லாம் உயிருடன் ஒன்றச் செய்து
4.ஒளியாக மாற்றிச் செல்லும் வழிகளைத் தான் அன்றைய மெய் ஞானிகள் காட்டினார்கள்.

இருந்தாலும் பின் வந்த அரசர்கள் மெய் ஞானிகள் கொடுத்த தத்துவங்களை மக்களுக்குக் கிடைக்கச் செய்யவில்லை.
1.தன் குடிமக்கள் அந்த மெய் ஞானிகளைப் பின்பற்றிச் சென்றாலும்
2.அவர்களை எல்லாம் தனக்கு எதிரியானவன் என்று பறைசாற்றி
3.அவர்களை வாழவிடாது செய்து ஒதுக்கித் தள்ளி விட்டனர்.

அவ்வாறு ஒதுக்கப்பட்டவர்கள் நாட்டு மத்தியில் வாழ்வதற்குப் பதில் காட்டிற்குள் சென்று… தான் கண்டுணர்ந்த அந்த மெய் உணர்வின் தன்மை கொண்டு விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் பருகி… இந்த உடலையே ஒளியாக மாற்றி… அழியாத நிலைகள் கொண்டு விண் சென்றடைந்தவர்கள் சப்தரிஷி மண்டலங்களில் பல பேர் உண்டு.

அரசர்களால் துன்புறுத்தப்பட்ட மத நிலைகளிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள இவ்வாறு சென்றவர்கள் தான் பல பேர்.

சுவாச நிலைக்கொப்பத் தான் உடல் உஷ்ணமாக இருப்பதும் குளிர்ச்சியாக இருப்பதும் அமைகிறது – ஈஸ்வரபட்டர்

 

உடல் பொறுக்கும் சூட்டைக் காட்டிலும் நம் உடலுக்குள் உள்ள உள் உறுப்புகள் அதிகச் சூட்டை ஏற்கும் தன்மை கொண்டுள்ளன.

உடம்பின் மேல் நாம் சூடாக அருந்தும் பானத்தின் சூடு பட்டவுடன் உடம்பின் மேல் அங்கங்கள் அந்நிலைச் சூட்டைப் பொறுப்பதில்லை. ஆனால் உள் உறுப்புகள் அந்தச் சூட்டை ஏற்கின்றன.

1.ஒரே பிம்ப உடல் தான்…
2.ஆனால் ஒவ்வொரு அவயங்களின் நிலைக்கொப்ப உஷ்ணத் தன்மைகள் உள்ளன.
3.இவ் உடலிலிருந்து இச் சுவாசம் ஈர்த்து வெளிப்படுத்தும் உஷ்ண அலையின் நிலைக்கொப்ப நம் உடல் உறுப்பு உள்ளது.

தாவரங்களின் தன்மையிலும் இத்தகைய நிலையுள்ளது. நம் பூமியின் தன்மையிலும் இதுவே தான். பூமியில் உள் நிலை பூமியின் மேல் நிலையை காட்டிலும் சில இடங்களில் அந்த உஷ்ண நிலை மாறு கொள்கின்றது.

கோடை காலங்களில் பூமியைப் பறிக்கும் பொழுது அந்தப் பூமியின் உள் நிலை மேல் நிலையைக் காட்டிலும் உஷ்ணமாகவே உள்ளது. நாம் நினைக்கின்றோம்.. சூரியனின் வெக்கையினால் அந்தப் பூமியில் சூடு உள்ளதென்று.

1.பூமிக்கு உஷ்ணத்தை ஈர்ப்பதுவே
2.பூமியின் சுவாசத்தினால் தான்..!

உள் இழுத்து வெளிக்கக்கி இந்த உலகம் சுழன்று… சுழற்சியின் மோதலில் ஒளி அலையை ஈர்த்து வெளிக் கக்கும் நிலையில் அந்தந்தக் கால நிலைகளில் எந்தெந்த மண்டலங்களின் ஈர்ப்பலையின் சக்தி அதிகமாக ஈர்க்கப்படுகின்றதோ.. அதன் நிலைக்கொப்ப நம் பூமியின் கால நிலைகள் மாறுபடுகிறது.

அதே போல் உஷ்ண அலையின் தன்மையும் மாறு கொண்டே உள்ள நிலைக்கொப்ப மற்ற மண்டலங்களின் தன்மைகளும் மாறு கொண்டுள்ளன.

சனி மண்டலமானது மிகவும் குளிர்ந்த அமிலத் தன்மை கொண்ட மண்டலம். அந்த மண்டலத்தின் ஒளி அலையே நம் பூமியைப் போல் வெளிச்சமானதாக இல்லை.

வளர்ந்த மண்டலம் தான் சுழன்று ஓடிக் கொண்டேயுள்ளது. அதன் தன்மையே மிகவும் குளிர்ச்சி வாய்ந்த அமிலத்தை ஈர்த்து வெளிப்படுத்தி அதன் நிலைக்கொப்பப் பனி மண்டலமாக உருளுகின்றது.

சனி மண்டலத்தின் ஈர்ப்பலையின் காலங்களில் நம் பூமியின் வட துருவ தென் துருவ ஈர்ப்பின் நிலைக்கொப்பக் குளிர் காலங்கள் பூமியில் ஏற்படுகின்றன.

அதே போன்ற நிலை தான் நம் பூமியைக் காட்டிலும் அதிகமான உஷ்ணத்தை ஈர்த்து வெளிப்படுத்தும் ராகு கேது போன்ற சில மண்டலங்களின் தொடர்பினால் நம் பூமியில் கோடையில் ஏற்படும் உஷ்ண நிலை.

ஆகவே உஷ்ண நிலை என்பது…
1.சுவாசிக்கும் சுவாசத்திற்கொப்பவும்
2.வந்து மோதும் பிற உணர்வுகளுக்கொப்பவும் தான் என்பதை
3.நாம் அறிதல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

கோர்ட்டுகளில் கேஸ்கள் நடக்கும். பல பிரிவினைகள் நடக்கும். ஏமாற்றும் சக்தி கொண்டு… “மற்றவர்களை ஏமாற்றுபவர்கள்…” ஏராளம் அங்கே உண்டு.

இப்படி ஏராளமாக இருப்பினும் அவர்கள் நமக்குத் தீங்கு செய்யும் செயல்களை நாம் உற்றுப் பார்த்து நுகர்ந்தறியப்படும் பொழுது நமக்குள் விஷத்தின் தன்மையே கூடுகின்றது.

எனக்கு இப்படிச் செய்கிறார்களே…! என்று எண்ணும் பொழுது இந்த உணர்வுகள்…
1.மீண்டும் அவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பை உருவாக்கும் தன்மையை நமக்குள் வளர்க்கின்றது.
2.இதைப் போன்ற வெறுப்பு நமக்குள் வளரப்படும் பொழுது அதையே நினைத்துக் கொண்டு
3.அதைப் பற்றி யாரிடம் சொன்னாலும் ஒரு வெறுப்பான சொல்களையே சொல்வோம்.

ஆனால் அந்த வெறுப்பான சொல்களைச் சொல்லும் பொழுது வெறுக்கும் உணர்ச்சியைத் தூண்டி கேட்போர் உணர்வுக்குள்ளும் இது பதிவாகி அவர்களும் நமக்கு எதிரியாகத்தான் வருவார்கள்.

யாரை எண்ணி வெறுத்தோமோ… அவர்களுக்கும் இந்த உணர்வுகள் போகும். அங்கேயும் இது உருவாகும்… நமக்குள்ளும் அந்த வெறுப்பின் தன்மையே உருவாகும்.

இத்தகைய வெறுப்பு நமக்குள் உருவாகாதபடி தடைப்படுத்த வேண்டுமல்லவா…! அப்படித் தடைப்படுத்த வேண்டும் என்றால் நாம் உடனடியாக ஆத்ம சுத்தி செய்து பழக வேண்டும்.

“ஈஸ்வரா..!” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி அந்த வெறுப்பு வளராதபடி தடைப்படுத்த வேண்டும்.

பொதுவாக நாம் யாரை யாரை எல்லாம் நாம் பார்க்கின்றோமோ “அவர்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற பொது விதிப்படி…” நமக்குள் அவரைப் பற்றிப் பதிவான உணர்வுகளைத் தடைப்படுத்திவிட வேண்டும்.

பின் யார் நமக்கு தீங்கினைச் செய்தாரோ.. அவரை எண்ணி
1.என் பார்வை அவரை நலலவராக்க வேண்டும்
2.என்னைப் பார்க்கும் பொழுது அவர்களுக்குள் நல்ல எண்ணம் உதயமாக வேண்டும்
3.அவர்கள் தவறுகளை அவர்கள் உணரும் சக்தி பெறவேண்டும்
4.தவறான நிலைகளிலிருந்து விடுபடும் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்று
5.இத்தகைய உணர்வுகளை எடுத்து அவர்களுக்குப் பாய்ச்ச வேண்டும்.

அப்பொழுது நமக்குத் தீங்கு செய்யும் எண்ணங்கள் வரும் பொழுதெல்லாம் அவர்களும் இதை நுகர்வார்கள். தனக்குள் உணர்வின் ஒலி அலைகளை மாற்றுவார்கள்.

உதாரணமாக… இராக்கெட்டை விண்ணிலே செலுத்திய பின் இதற்கும் அதற்கும் நேரடித் தொடர்பு இல்லை என்றாலும்
1.இராக்கெட் பழுதானால் இங்கே தரையிலிருந்து லேசர் இயக்கமாக இயக்கி
2.அந்த இயந்திரத்தைப் பூமியிலிருந்தே சீர் செய்கிறார்கள்.

இதே போல ஒரு பழுதடைந்த மனதைச் சீர் செய்ய மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் பெருக்கி அவர்களுக்குப் பாய்ச்சி நம்மைக் காக்க முடியும்.

தொழில் நிமித்தங்களோ அல்லது குடும்ப நிலைகளிலோ அல்லது பற்று கொண்ட சொந்தத்தில் தொழில் நடத்தும் பொழுதோ சில வித்தியாசமான உணர்வுகள் வந்த பின் ஒருவருக்கொருவர் பகைமையாகின்றது.

பகைமையானபின்… அது நம்முடைய பொருள் தான் என்று தெரிந்தாலும் அந்தப் பகைமை உணர்வுகள் தான் அவர்களைச் செயல்படுத்தும்
1.பொருள் அவர்களுடையது…! என்று கொடுக்காத நிலை ஏற்பட்டு விடுகின்றது.
2அதாவது நம்முடைய பொருளை எடுத்துக் கொண்டு அது என்னுடையது தான்…! என்று சொல்வார்கள்.

இத்தகைய தன்மை தான் இன்று உலகில் பெரும்பகுதி நடக்கின்றது.

இதைப் போன்ற தீமைகள் நடக்கும் நிலைகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு நாளும் காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

உடல் அழுக்கைப் போக்க குளிக்கின்றோம். துணியில் உள்ள அழுக்கைப் போக்கச் சோப்பைப் போட்டுத் துவைக்கின்றோம்.

இதைப் போல் நம் ஆன்மாவில் பட்ட அழுக்கினைப் போக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்து
1.நாம் எந்த வெறுப்பினை அடைந்தோமோ அவர்களை எண்ணி
2.அவர்களுக்கு நல்ல அறிவு வர வேண்டும் என்று எண்ணினால்
3.அந்த உணர்வின் தன்மை நமக்குள் இருந்து அவர்கள் மீது வெறுப்பில்லாத நிலைகளை உருவாக்கும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் வட்டத்திலேயே என்றும் வாழும் ஒரு பக்குவத்திற்கு நாம் வர வேண்டும்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பெற்ற அந்த அனைத்து ஆற்றல்களையும் நீங்கள் பெறவேண்டும் என்பதற்குத்தான் இதை இப்பொழுது இங்கே உங்களுக்கு உபதேசிக்கின்றோம் (ஞானகுரு).

நமது குருநாதர் பல கோடி ஆண்டுகளுக்கு முன் அவருடைய உயிராத்மா விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக இணைந்தவர் அதன்வழி, நமது பூமியிலே அந்த உணர்வின் வித்துக்கள் பட்டு, மற்ற உயிர்களிலே அது விளைந்து பல வாறு பல உணர்வின் தன்மையை இங்கே பரப்பிய நிலைகள் கொண்டு அந்தந்த உணர்வுகள் பட்டு, அந்தந்த உடல்கள், அந்த உயிராத்மாக்கள் விண்ணிலே அவருடன் ஐக்கியமாகி அவருடன் விண்ணிலே பெரும் மண்டலங்களாக இதைப் போன்று எத்தனையோ ரிஷிகள் சேர்ந்து, அந்த நிலைகள் கொண்டு அவர்கள் சென்றுள்ளார்கள்.

குரு கவர்ந்த அந்த உணர்வின் சக்தி குரு பக்தி கொண்டு எவர் கவருகின்றாரோ அவர் நினைக்கும் பொழுதெல்லாம குரு, தான் நுகர்ந்த அந்த உணர்வின் சக்தி எளிதில் கிடைக்கும். எளிதில் செயல்படுத்த முடியும். தீமை என்ற நிலைகள், தனக்குள் புகாது தடுத்து நிறுத்த முடியும்.

1. இந்த உலகில் தீமைகள் மறைந்து உண்மைகள் வளரவேண்டும் என்ற அருள் வழி காட்டும் ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
2. பொன்னடி பொருளும் இந்தப் பூமியில் சுகமில்லை.. மின்னலைப் போல் மறையும் மனித வாழ்க்கையில் பேரருளையும் பேரொளியையும் சேர்ப்பதே அழியாச் சொத்து என்று உணர்த்திய ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
3. உயிரே கடவுள் என்று உணர்த்தி உயிருடன் ஒன்றி அவனுடன் இணைந்து அவனாக ஆகி… அவனாக நாம் ஆக வேண்டும்.. அந்த மெய் உலகை எல்லோரும் அடைய வேண்டும் என்று உணர்த்தும் ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
4. மகரிஷிகளின் அருள் சக்தியை சாமானிய மக்களும் பெறும் சந்தர்ப்பத்தை உருவாக்கிய ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
5. இல்லற வாழ்க்கையிலிருந்தே அவரவர்கள் வீட்டிற்குள் இருந்தே அண்டசராசரத்தின் ஆற்றல்களைப் பெறச் செய்யும் ஈஸ்வராய குருதேவரின் அருளாசி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
6. வரும் தடைகளை எல்லாம் நீக்கி நன்மைகள் செய்யக்கூடிய துணிவைக் கொடுத்து உலகையே காத்திட அருள் வழி காட்டும் ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
7. பரிபாஷைகள் மூலம் மெய் ஞானத்தை உணர்த்தும் சக்திகளையும் விண்ணுலக அதிசயங்களை உணர்த்தும் ஈஸ்வராய குருதேவரின் சூட்சம சக்திகளையும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
8. “பிறரை உயர்த்தித் தான் உயரும் நிலையையும்.. பிறரைக் காத்துத் தன்னைக் காக்கும் நிலையையும்… பிறரை வலுவாக்கித் தன்னை வலுவாக்கிக் கொள்ளும் நிலையையும்…” வழி காட்டும் ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
9. அருள் ஞானப் பசியைத் தீர்க்கும் ரிஷி பிண்டமான ஈஸ்வராய குருதேவரின் அருளாசி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
10. பல இலட்சம் ஆண்டுக்கு முன் ஆதியிலே தோன்றிய அகஸ்தியரிலிருந்து சமீபத்தில் வாழ்ந்து மெய் உணர்வுகளைப் பெற்று ஒளி சரீரம் பெற்ற திருமூலர் ஆதிசங்கரர் போன்ற எண்ணிலடங்காத மெய் ஞானிகள் வரை அவர்கள் வெளிப்படுத்திய ஒளியான உணர்வுகளைக் காற்றிலிருந்து நம்மை நுகரச் செய்யும் ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…!
11. நம்மையும் ஞானிகளாக ஆக்கி மெய் ஞானிகளுடன் ஒன்றி வாழ்ந்திட வழி காட்டும் ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
12. அகண்ட அண்டத்தின் உணர்வின் தன்மையை ஒளியாகக் கலந்து அதை ஆன்மாவாக வைத்திருக்கும் ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற்று எங்கள் ஆன்மாவும் பேரொளியாகிட அருள்வாய் ஈஸ்வரா.
13. சாக்கடை போன்று இருக்கும் இன்றைய நச்சான காற்று மண்டலத்தைப் பிளந்து மெய் உணர்வுகளை நுகரும் ஆற்றலைக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
14. உடலை விட்டு எந்த நேரம் யார் பிரிந்தாலும் அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலம் அடைவதே மனிதனுடைய கடைசி எல்லை என்று உணர்த்தும் ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
15. பிறரைக் காத்திட வேண்டும் என்று இந்தப் பூமியில் செயல்பட்ட மகான்களை எல்லாம் விண் செலுத்திய ஈஸ்வராய குருதேவரின் ஆற்றலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
16. பேரானந்தப் பெருநிலையாக விண்ணுலகில் வாழ்ந்து கொண்டு விண் செல்லும் ஆற்றலையும் விண் செலுத்தும் ஆற்றலையும் கொடுத்துக் கொண்டிருக்கும் ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
17. கோடி…கோடி…! என்ற நிலையில் ஒளியான உணர்வுகளைக் கொடுத்துக் கொண்டிருக்கும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…!
18. சூட்சம இரகசியங்கள் அனைத்தையும் வெளிப்படுத்தி தன்னைக் காட்டிலும் எல்லோரும் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்றும் தன்னை எல்லோரும் முந்திச் செல்ல வேண்டும் என்றும் ஆசி கூறும் ஈஸ்வராய குருதேவரின் தெய்வீகப் பண்புகளை நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா
19. நாமெல்லாம் கடவுளாக ஆகவேண்டும் என்று விரும்பி அதனைச் செயல்படுத்த இன்றைய கால கட்டத்தில் அருள் வழி காட்டிக் கொண்டிருக்கும் ஈஸ்வராய குருதேவரின் அருளாசி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

உடலை விட்டுப் பிரிந்தால் ஆவி உலகில் நாம் அல்லல்படக் கூடாது – ஈஸ்வரபட்டர்

 

தேவர்கள்… அசுரர்கள்.. மனிதர்கள்… என்று இனம் பிரித்துக் காட்டினார்கள் நம் முன்னோர்கள். தேவர் என்பவர் யார்…? அசுரர் என்பவர் யார்…? மனிதர் என்பவர் யார்…?

எந்தெந்த வளர்ச்சி செயல் புரிந்து… எந்தெந்த எண்ண ஓட்டத்தில் வாழ்கின்றார்களோ அதனை இனம் பிரித்துத் தேவனாகவும் அசுரனாகவும் மனிதனாகவும் காட்டினர்.

இன்று நம்மிலேயே இந்த மூன்று வகைக் குணத்தவர் உள்ளனர். அவரவர்களின் எண்ணப் பயனால் அமைவதுவே இந்தக் குண நிலை. மனித ஆத்மாவுக்கு மட்டுமல்ல. அனைத்து நிலைகளுக்கும் இது உண்டு என்று உணர்த்தியுள்ளேன்.

நம் பூமியின் ஒத்த நிலைகள் மற்ற மண்டலங்களுக்கு மாறுபாடு கொள்கின்றன. சூரியனின் ஒளி அலையை ஈர்த்து நம் பூமி வெளிக்கக்கும் உஷ்ண அலையின் சக்தி நிலைப்படி நம் பூமியின் சுழற்சி ஓட்டமும் இயற்கைத் தன்மையும் அமைந்துள்ளன.

அது அல்லாமல் பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட விகிதத் தூரத்தைக் கொண்டும் நம் பூமியின் நீர் நிலையின் தன்மை கொண்டும் நம் பூமிக்குத் தொடர்புடைய மண்டலங்களின் ஈர்ப்பு அலைகளின் வெளிக்கக்கும் அமில குணத்தைக் கொண்டும் நம் பூமியின் இன்றைய குண நிலை உள்ளது. இது போல் மற்ற மண்டலங்களின் தன்மைகளும் மாறுபடுகின்றன.

உஷ்ண அலையில் வாழும் நம் பூமியில் பிரிந்து வாழும்… பிரிந்து என்பது
1.இந்தப் பூமியில் வாழ்ந்த ஆன்மாக்கள்
2.இந்தப் பூமியின் சுழற்சி ஓட்டத்துடன் எந்த இடத்தில் எந்த எண்ணத்தில் தன் ஆத்மா பிரிந்ததுவோ
3.அதே எண்ண நிலைக்கொப்ப அந்த உஷ்ண அலையின் நிலையுடனே
4.இந்தப் பூமியின் சுழற்சியுடன் இந்தப் பூமியின் ஓட்டத்திலும் இந்தப் பூமியின் ஈர்ப்புடனும் அதன் சுழற்சி நிலை உள்ளது.

நம் பூமி ஓர் இடத்தில் நிற்பதில்லை. சுழன்றே ஓடிக் கொண்டுள்ளது. இந்தப் பூமியிலிருந்து பிரிந்த ஆத்மாக்களும் அதன் சுழற்சியிலேயே ஓடிக் கொண்டே சுழன்று கொண்டே வருகின்றன.

ஆத்மா பிரிந்த பிறகு மேலுலகம் சென்று விட்டான் என்கிறனர்.
1.மேல் உலகம் என்பது எந்த உலகம்…?
2.இந்தப் பூமிக்கும் மற்ற மண்டலங்களுக்கும் மேல்… கீழ்… என்ற நிலை உள்ளதுவா…?
3.சூரியனின் ஒளி அலைகள் பாயும் மத்திய பாகத்தை மேல் பாகம் என்றாலும் இரவிலே கீழ் பாகத்தில் வாழுகின்றோமா…?

சுழலும் சுழற்சி வட்டத்தில் கீழும் இல்லை… மேலும் இல்லை…!

இந்தப் பூமியின் காந்த ஈர்ப்பின் நிலையுடன் ஒட்டி… பூமியின் சுழற்சியுடன் நாம் எப்படி அதன் ஈர்ப்பில் வாழ்கின்றோமோ அதைப் போல் தான் இந்த உலகில் வாழ்ந்து பிரிந்த உயிராத்மாக்கள் இந்த உலகின் ஈர்ப்பின் வட்டத்திற்குள் காந்த அமில வட்டத்திற்குள்ளேயே நம்முடன் கலந்தே தான் அவர்களின் அமில வட்டக் குணங்களும் உள்ளன.

ஆவி பிரிந்து அந்த ஆத்மா ஆகாயத்தில் சென்று நிற்பதில்லை…!

நம் மூதாதையர்களினால் சொல்லப்பட்ட நடந்த கதைகளில் பேய் பிசாசு வந்ததாகவும்… அதன் பாதம் நிலத்தில் பதியவில்லை…! என்றும் பேய்க்கும் பிசாசிற்கும் பாதம் நிலத்தில் பாவாது…! என்றெல்லாம் கதைகளாகக் கேட்டிருப்பீர்.

இவைகள் எல்லாம் கதைகள் அல்ல…! உண்மை நிலையில் வெளிப்பட்ட சில அர்த்தம் கொண்ட செயல் முறைகள் தான்.

1.பிம்ப உடல் இல்லாததினால் அவற்றின் உடல் பூமியில் பதிவதை நாம் காண முடியாதேயன்றி
2.மனித ஆன்மாக்கள் எப்படிப் பூமியில் வாழ்கின்றனவோ அதைப் போல்
3.ஆவி ஆத்மாக்களும் இந்த ஈர்ப்பின் வட்டத்திற்குள்ளேயே இருக்க முடியும்… இருக்கின்றன…!

இந்த ஈர்ப்பின் வட்டத்தைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்றால் அதற்குகந்த ஞானம் பெற்றிருந்தால் தான்… அந்தப் பக்குவ வழியில் சூட்சமம் கொண்டோர்களினால் தான்… இந்தப் பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்கு மேலே (வெளியிலே) செல்ல முடியும்.

1.இந்தப் பூமியின் சக்தி அலையில் இருந்து நம் ஆத்ம நிலை மற்ற நிலைகளுக்குச் செல்ல வேண்டும் என்றால்
2.அதற்குகந்த பயிற்சித் திறன் நாம் பெற்றிருந்தால் அதன் செயலில் செல்ல முடியும்.

மனிதனிலிருந்து பிரிந்து சென்ற ஆத்மாக்களினால் இந்த ஈர்ப்பின் தன்மையிலிருந்து பறந்து எங்கே வேண்டுமானாலும் செல்ல முடியாது.

பூமி சுழன்று கொண்டே உள்ள பொழுது பூமி சுழலுவதும் ஓடுவதும் நமக்குத் தெரிகின்றதா..? இல்லை…! அதே போல் அதன் ஈர்ப்பில் ஐக்கியப்பட்டுள்ள நம்மைப் போன்ற நிலைதான் இந்தப் பூமியில் பிறந்து இந்தப் பிம்ப உடலை விட்டுச் சென்ற ஆத்மாக்கள் நிலையும் உள்ளது.

ஆக உடலை விட்டுப் பிரிந்த எந்த ஆன்மாவாக இருந்தாலும் இந்தப் பூமியின் பிடிப்பிலே இதனின் ஈர்ப்பு வட்டத்தில் தான் இருக்க முடியும். மீண்டும் மீண்டும் உடல் பெற்றுத் தான் ஆக வேண்டும்.

1.இதிலிருந்து தப்பி இந்தப் பூமியின் ஈர்ப்பைக் கடந்து சென்று பிறவியில்லா நிலை அடைய வேண்டும்
2.முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்லும் சப்தரிஷி மண்டலங்களுடன் நீங்கள் அனைவரும் இணைய வேண்டும் என்பதற்குத்தான்
3.இந்தப் பாடநிலைகளை விளக்கவுரைகளாகத் தொடர்ந்து கொடுக்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நாம் அனைவரும் நுகரும் சக்தி கொண்டவர்கள். சந்தர்ப்பத்தால் ஒருவருக்கொருவர் கடுமையான பகைமையாகி விட்டால் அதனால் வெறுப்படையும் நிலையே வருகின்றது.

அந்த வெறுப்புடன் “நாசமாகப் போடா…!” என்று சொல்லப்படும் பொழுது என்ன நடக்கின்றது…?

இது அவன் செவிகளில் படும் பொழுது
1.இந்த உணர்வுகள் அவன் தொழிலுக்குப் பாதகத்தை உண்டாக்கி
2.வாகனங்களில் செல்லும் பொழுது எதிர்பாராது விபத்துக்களையும் ஏற்படுத்துகின்றது.

ஆகவே… இன்றைய மனித வாழ்க்கையில் நாம் எவ்வளவு திறமைசாலியாக இருப்பினும்
1.பிறருடைய வேக உணர்வுகள் வந்து தாக்கி விட்டால்
2.நம்முடைய சிந்தனையைச் சீர்குலையச் செய்து விபத்துக்களுக்கே அழைத்துச் செல்கின்றது.

அல்லது அதே போல் சில விபரீதச் செயல்களையும் நம்மை அறியாமலே செயல்படுத்தத் தொடங்கி விடுகின்றது.

அந்தச் சாப அலைகள் பாய்ந்து விபரீதச் செயல்களைச் செயல்படுத்துவதோடு மட்டுமல்லாதபடி நம்மையே குற்றவாளியாக ஆக்கும் நிலையையும் உருவாக்கி விடுன்றது.

இதைப் போன்ற கொடுமைகளிலிருந்தெல்லாம் விடுபட காலை துருவ தியானத்தைச் சீராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை எடுத்து
2.உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் செருகேற்றிக் கொள்ளுங்கள்.

அப்படி வலுவாக்கிக் கொண்ட பின் இந்த வாழ்க்கையில் வந்த பிறருடைய தீமைகள் எதுவாக இருந்தாலும் அதைப் பதிவாக்கப்படும் பொழுது
1.அந்தத் தீமையான உணர்ச்சிகள் நமக்குள் தூண்டாது
2.நாம் நுகர்ந்த துருவ நட்சத்திரத்தின் சக்தி அதை அடக்கிவிடும்

நம்மை யார் யார் எல்லாம் கேலி செய்தார்களோ… அவர்கள் பால் எண்ணத்தைச் செலுத்தி
1.துருவ நட்சத்திரத்தின் சக்தி அவர்கள் பெறவேண்டும்
2.அவர்கள் அறியாமையிலிருந்து விடுபட வேண்டும்
3.எனக்குத் தீங்கு செய்யும் நிலையிலிருந்து விடுப்ட வேண்டும்
4.உண்மையின் உணர்வை அவர்கள் அறிய வேண்டும்
5.உண்மையின் செயலாக மாறவேண்டும்
6.உண்மையை உணர்த்தும் சக்தி அவர்கள் பெற வேண்டும்
7.உண்மையின் செயலிலேயே அவர்கள் வர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

இந்த உணர்வுகள் அவர்களுக்குள் பாய்ந்த பின் நம்மைப் பார்த்து எண்ணும் பொழுதும் சரி அல்லது சார்புடையோருக்கும் சரி
1.நம் பேரைச் சொன்னாலே இந்த உணர்வுகள் அவர்களுக்குள் ஊடுருவிச் சென்று
2.யார் தீங்கு செய்தார்களோ அவர்களுக்கெல்லாம் ஞானத்தை ஊட்டும்.
3.அதாவது… நாரதன் கலகப்பிரியனாகி.. அங்கே உண்மையை வெளிப்படுத்தி அதை உணர்த்தும் சக்திகளாக வருகின்றது.

காவியங்களில் இதைத் தெளிவாக்கியுள்ளார்கள் நம் ஞானிகள்.

ஆகவே நாரதன் (துருவ நட்சத்திரத்தின் ஒளி) என்ற இந்த உணர்வை வழிப்படுத்தினால்… நம்மை அறியாது புகுந்து…
1.நமக்குள் தீங்கு விளைவிக்கும் செயல்களிலிருந்து விடுபடும் உணர்ச்சிகளை ஊட்டி…
2.நம் எண்ணமே நமக்குள் தீமைகளை உருவாக்கும் நிலையிலிருந்து முழுமையாக விடுபடச் செய்யும்.

நாம் வாழும் உலகில் நஞ்சு பெருக் காரணமும் அதிலிருந்து விடுபடச் செய்யும் சரியான மார்க்கமும்

 

பாலில் நஞ்சு கலந்தால் அதைக் குடித்தால் நம் சிந்திக்கும் தன்மையை எப்படி இழக்கின்றோமோ… அதைப் போலத் தான் இன்றைய உலகில் நாம் உணவாக உட்கொள்ளும் உணவில் நஞ்சுகள் அதிகரித்துள்ளதால் நல்ல சிந்தனைகளும் குறைந்து கொண்டே வருகிறது.

காரணம்…
1.பூச்சிக் கொல்லி மருந்துகளையும் இரசாயண உரங்களையும் விவசாயப் பயிர்களில் சேர்த்துச் சேர்த்து
2.பெரும்பகுதியான வித்துகளில் அந்த நஞ்சு இணைந்தே உள்ளது
3.அது நம் உடலுடன் இணையும் போது நமக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்திலும் கலக்ககப்படுகின்றது…
4.அத்தகைய நஞ்சால் நம் சிந்தனை இழக்கப்படுகின்றது… நாம் சிந்தித்தாலும் கூட அது தெரிவதில்லை.

நாம் எண்ணும் கோபமோ வெறுப்போ வேதனையோ இவை எல்லாம் விஷத்தால் இயக்கப்படுவது. உடலில் விஷம் கூடக் கூட “அத்தகைய தீமை செய்யும் சிந்தனையும்… அதனுடைய ஞானமும் தான் அதிகமாகப் பெருகும்…”

உதாரணமாக ஒருவரை நாம் எதிர்பாராது திட்டி விடுகிறோம் அல்லது அவருக்குக் கோபம் வரும்படியாக பேசி விட்டோம் என்று வைத்துக் கொள்வோம்.

1.அதனால் அவர் மனது புண்பட்டிருந்தாலும் கூட
2.“தான் பேசியது நியாயம் தான்…” என்று வாதிக்கும் திறன் அந்த விஷத்திற்கு உண்டு.

அந்த விஷத்தின் வலுக் கொண்டு செயல்படுத்தும் போது நாம் திட்டியதால் அவர்கள் மனம் புண்பட்டுவிட்டது என்ற சிந்தனையற்ற நிலையும் உருவாக்கிவிடும்.

அவர்கள் தவறு செய்யவில்லை… சந்தர்ப்பவசத்தால் அவர்களைத் திட்டி விட்டோம்…! என்று எண்ணினாலும் அவர்களைத் திட்டியதால் வேதனைப்படுகின்றனர் என்று சிந்தித்து அதைச் சீர்படுத்த முடியாது.

இப்படி மனிதனின் வாழ்க்கையில் உயர்ந்த குணங்கள் எதுவாக இருந்தாலும் இது போன்ற விஷத் தன்மைகள் பெருகி சிந்தனையில்லாத செயல்களும் இன்று அதிக அளவில் பெருகிக் கொண்டே உள்ளது.

ஆனால்… நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்த நஞ்சினைப் பிரித்து விட்டு நல்ல உணர்வை உடலாக ஆக்கும் மணமாக மனித உடலில் ஆறாவது அறிவு இருக்கின்றது.

கடந்த காலங்களில் மனித வாழ்க்கையில் எத்தகைய வேதனையான நிலைகள் வந்தாலும் தன் ஆறாவது அறிவின் திறமை கொண்டு அந்த வேதனையை உருவாக்கிடும் செயல்களை நீக்கிடும் ஆற்றல்கள் உண்டு. அதிலே முதன்மை பெற்றவன் அகஸ்தியன்.

ஏனென்றால் மனிதனின் உணர்வுக்குள் ஆறாவது அறிவை ஏழாவதாக மாற்றுவது ஒளி.
1.ஒரு பொருளுக்குள் இருக்கும் நஞ்சினை நீக்கத் தெரிந்து கொள்வது…
2.தீயதை நீக்கி நல்லதை உருவாக்கும் ஆற்றல் பெற்றது நம் ஆறாவது அறிவு.

அதனை அடிப்படை ஆதாரமாக வைத்துப் பண்டைய காலத்தில் வாழ்ந்த அந்த மெய் ஞானி நஞ்சினை நீக்கி உணர்வினைத் தனக்குள் ஒளியாக மாற்றினான். ஆக அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அந்த மகரிஷியின் ஒளிச் சரீரத்திலிருந்து வெளிப்படும் மிகச் சக்தி வாய்ந்த உணர்வலைகளை சூரியன் காந்த சக்தி கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கிறது. நம் பூமி வட துருவத்தின் வழியாக அதைக் கவர்கிறது.

அப்படி வரும் வந்த உணர்வுகளைக் கவர்ந்தோர் அனைவரும் அந்த அகஸ்தியன் எவ்வாறு நஞ்சினை நீக்கினானோ… உணர்வை ஒளியாக மாற்றினானோ… அதைப் போல் ஒளியாக மாற்றிக் கொண்டு… முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்ற நிலையில் வேகா நிலை கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

1.ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக மாற்றி சப்தரிஷி என்ற நிலை அடைந்து
2.உயிருடன் ஒன்றிய நிலைகள் தனக்குள் ஒளியாகச் சிருஷ்டித்து ஏழாவது நிலையை அடைந்து சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.
அந்தத் துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வுகளும் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் உணர்வுகளும் நமக்கு முன் இன்றும் படர்ந்து கொண்டுள்ளது.

அதை நாம் பருகினால் இன்றைய உலகில் வரும் எத்தகைய தீமைகளிலிருந்தும் விடுபடலாம். அந்த மகரிஷிகளுடன் நாமும் ஐக்கியமாகலாம். அழியா நிலை பெறலாம்.

ஞானிகளின் உணர்வை எடுத்தால் “முடியாது…” என்ற சொல்லுக்கே இடமில்லாது செய்யலாம் – ஈஸ்வரபட்டர்

 

ஒரு சிறு தீப்பொறி காற்றலையில் அதன் நிலைக்குகந்த பொருளின் மீது படும் பொழுது “தீ..” பற்றிக் கொள்கின்றது.

அதன் தன்மைக்குகந்த பொருள்கள் எல்லாவற்றையும் எரித்து அதன் தன்மைக்குகந்த எரிபொருள் இருக்கும் வரை எரிந்து விட்டு அது தீர்ந்தவுடன் தன் நிலையில் சாம்பலாகிப் பூத்துவிடுகின்றது.

அத்தகைய எரியும் நெருப்பை நம்மால் அணைக்க முடிகிறதா..? நெருப்பிற்கு மேல் சக்தி கொண்ட நீரை அதன் மேல் பாய்ச்சித் தான் அதை அணைக்க முடியும்.

அதைப் போல்…
1.தீய சக்தியான இக்கடும் எண்ணக் கலவையின் இன்றைய மனித ஆத்மாக்கள் வாழும் நிலையில்
2.நம் ஜெப நிலைக்குகந்த ஒளி அலைகளை எடுத்து வளர்க்க வேண்டும் என்றால்
3.இந்த உலக மாயை எண்ணத்தினால் வாழும் நமக்கு அந்த மாமகரிஷிகள் வெளிப்படுத்தும் அருள் சக்திகளை எடுத்தால் தான்
4.உலக ஞானத்தை நாம் பெற முடியும்.

ஒன்றில்லாமல் ஒன்றில்லை…!

பக்தி கொண்டு வணங்கிப் பிறரின் உபதேசத்தினால் தான் நம் ஞானம் வளருமா…? ஆதிசக்தியின் சக்திக் குழந்தையான நம் சக்தியை பிறரை வணங்கி நாம் ஏன் ஏற்றம் பெற வேண்டும்…? நம் ஞானத்தை நாமே பெறலாகாதா…? என்ற வினா எழும்பலாம்.

அந்த மாமகரிஷிகள் பெற்ற அந்த உன்னத சக்தியின் ஒளி அலையின் சக்தியை நாம் பெற்றால் நாம் அடையக்கூடிய ஞான வழிக்குச் சில வழி முறைப் பாடங்களை “அவர்களின் துணையுடன்” நாம் பெற்றுச் செல்ல முடியும்.

புராணக் கதைகளில் கிருஷ்ணாவதாரத்திலும் இராமாவதாரத்திலும் சில நிலைகளில் சில நிலைகளைக் கதை ரூபமாகப் புரியாதவண்ணம் உணர்த்தியிருக்கின்றார்கள்.

கிருஷ்ணர் போர்க்களம் சென்றவுடன் அவரின் மேலிருந்து “ஒளிகள் பாய்ந்தவுடன்…” அனைத்து எதிரிப்படைகளும் நின்றதாக உணர்த்தியிருக்கின்றார்கள்.

இந்த நிலை சாத்தியப்படுமா…? ஆண்டவனே வந்து அவதரித்தால் இந்த நிலை நடக்கும். கிருஷ்ணர் வாயைத் திறந்து காட்டியவுடன் ஈரேழு உலகமும் கண்டதாக வர்ணிப்புக் கதையும் உண்டு,

கதை அல்ல…! காவியம் தான் என்றாலும்…
1அந்த நிலையின் சாத்தியக் கூற்றை ஒவ்வொரு ஆத்மாவினாலும் செய்து காட்டிட முடியும்… அதற்குகந்த ஞானம் பெற்றால்…!
2.”முடியாத நிலை” என்ற சொல்லுக்கே அர்த்தமற்ற குணத்தைக் காட்டலாம்.

பக்குவ ஞானம் பெற்று… பக்குவமான ஜெபத்தைக் கொண்டு… முதலில் அந்த நிலைக்குச் சென்ற மாமகரிஷிகளின் துணையுடன் இந்த உலக நிலையிலே எந்தச் செயலையும் நடத்திடவும்.. நிறுத்திடவும்… நம் ஞானத்தால் முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

தாய் கருவிலே உருவான ஒரு குழந்தைக்குக் கருவிலேயே நோயாக ஆகிவிட்டால் என்ன ஆகிறது…?

அவன் பிறந்த பின் சுற்றுப் புறச் சூழலில் உள்ளோரும் அந்தக் குழந்தையை உற்று நோக்கும் பொழுது
1.இவனில் விளைந்த நோயை அவர்களும் கொஞ்ச கொஞ்சமாகப் பங்கு போட்டுக் கொள்கிறார்கள்.
2.நுகர்ந்தவர்கள் உடலில் எல்லாம் அந்த நோய் சிறிது சிறிதாக வரும்.

நீங்கள் பார்க்கலாம்…!
1.சர்க்கரைச் சத்து தாய் வழியில் வந்தது… தந்தை வழியில் வந்தது…!
2.வாத நோய் தாய் வழியில் வந்தது… தந்தை வழியில் வந்தது…!
3.இரத்தக் கொதிப்பு தாய் வழியில் வந்தது… தந்தை வழியில் வந்தது…! என்று
4.இன்று சர்வ சாதரணமாகச் சொல்வார்கள்.

இது எல்லாம் இந்த உணர்வின் பேச்சின் தொடரைக் கேட்கும் பொழுது அது கருவுற்றிருக்கும் குழந்தைகளுக்கு இந்த உணர்வுகள் சேர்ந்து விடுகின்றது.

அதைப் போன்று தான் கோபத்தின் நிலையும்… அதிகமாகச் செல்வங்கள் சம்பாரிக்கும் பொழுதும்… குடும்பத்தில் பற்றுகள் குறையப்படும் பொழுதும்… என்னை மோசம் செய்தான் பாவி…! என்ற நிலைகள் வரும் பொழுதும்… இந்த உணர்வுகளை அவர்களும் நுகர்கின்றனர். அவர் சொல்வதை மற்றவரும் நுகர்கின்றனர்.

நுகர்ந்த பின் அங்கேயும் இதே மாதிரி நோய்கள் வரத் தொடங்குகிறது. இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

அது மட்டுமல்ல…
1.வேடிக்கையாகக் கூட இது போன்ற உணர்வுகளைப் பேசிப் பதிவாக்கக் கூடாது.
2.நம் எண்ணத்திற்கே இது வரக்கூடாது.

அருள் ஞானிகளின் உணர்வை எடுத்து அதிலிருந்து விடுபடும் சக்தியைத் தான் நாம் எண்ண வேண்டும். அதைத் தான் நாமும் பேச வேண்டும்.. வெளிப்படுத்த வேண்டும்.

குழந்தை பாதிக்கப்பட்டது உண்மை தானே…! என்று நாம் சொல்லலாம். ஆனால் அது நமக்குள் விளைந்தால் நம்மையும் அது பாதிக்கும்.

இதிலிருந்து விடுபடும் “ஞானிகள்… மகரிஷிகள் பாரம்பரியத்தையே” நாம் உருவாக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற நாம் தியானிக்க வேண்டிய சரியான முறை

 

ஆதியிலே அகஸ்தியன் நம் பூமியின் துருவத்தை நுகர்ந்து துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் ஜீரணிக்கும் சக்தி பெற்றவன். அதன் உணர்வே அவனுக்குள் ஒளியாக மாறும் நிலை பெறுகின்றது.

குருநாதர் அகஸ்தியனைப் பற்றி எனக்கு (ஞானகுரு) படிப்படியாக என்னென்ன சொன்னாரோ… அதே வழியில் தான் உங்களுக்கும் சொல்லிக் கொண்டு வருகின்றேன். தியானிக்கும் போது அந்தச் சக்திகளை நீங்கள் பெற ஏதுவாகும்.

1.வானுலக ஆற்றலை துருவத்தின் வழியாக நம் பூமி பெறுவதை அகஸ்தியன் இடைமறித்து அந்த உணர்வின் தன்மை நுகர்கின்றான்
2.துருவ மகரிஷி தனக்குள் நுகர்ந்து உருவாக்கிய அந்த உணர்வுகளைப் பெற வேண்டும்…
3.அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணி
4.பூமியின் துருவப் பகுதியின் வழியாக நினைவைச் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

நம் பூமி சுழல்வது தெரியும். பிரபஞ்சத்தில் உருவாகும் சக்திகள் நம் பூமி செல்லும் பாதையில் அது அணுக்களாக இருப்பதையும்… நம் பூமி அதை எவ்வாறு ஈர்க்கிறது…? என்பதும் உங்கள் கண்களுக்குப் புலப்படும்.

இந்த உணர்வின் தன்மைகளை எல்லாம்
1.கண்கள் வழி கொண்டு… நினைவின் ஆற்றலை உயிருடன் ஒன்றி
2.அந்த அகக்கண் ஒளி கொண்டு உங்கள் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

புறக்கண்களால் ஒரு பொருளைப் பார்க்கின்றோம். இருந்தாலும் அருள் ஞானியின் உணர்வுகளை குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் பதியச் செய்கின்றோம். பதியச் செய்வதை நீங்கள் உங்கள் உயிருடன் ஒன்றி அகக்கண்ணுடன் இணைத்து ஏங்கிப் பெறுதல் வேண்டும்.

1.பூமி துருவப் பகுதியின் வழி கவரும் இடத்தில் நினைவைச் செலுத்தும் போது
2.அந்த எல்லையிலிருந்து அடுத்து… வானுலகப் பகுதியிலிருந்து பூமி கவரும் சத்து எப்படிப் பூமிக்குள் வருகிறது…? என்ற நிலையும் காட்சியாக வரும்.

பூமி சுழலும் பாதையில்… மற்ற நட்சத்திரங்களும் கோள்களும் உமிழ்த்தும் அந்த உணர்வலைகள் ஒவ்வொரு பகுதிக்கும் அது பரவி வருவதையும்… அது மின்னிக் கொண்டு பல கலர்களாக மாறுவதையும்… நம் பூமியின் துருவ ஈர்ப்புக்குள் அது வருவதையும் உங்களால் நுகர முடியும்.

1.நுகரும் போது புது விதமான உணர்ச்சிகள் உங்கள் உடலிலே பரவும்
2.சில நொடிகளில் நெடி கலந்த நிலைகளும் சில நொடிகளில் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளும்
3.நறுமணம் கொண்ட நிலைகளும் உங்களுக்குள் வந்து கொண்டே இருக்கும்.

உணர்வுகள் உயிருடன் ஒன்றி உள் செல்லும் போது… உடலில் உள்ள குணங்கள் ஒவ்வொன்றிலும் மோதி… உடலுக்குள் பல அதிசயங்களும்… பல பல மகிழ்ச்சி பெறும் உணர்வுகளும்… ஆனந்த ஒளியும் உடலுக்குள் வெளிச்சம் வந்து கொண்டே இருக்கும்… மாறிக் கொண்டே இருக்கும்.

சாதாரண எண்ணையில் ஒரு திரியைப் போட்டு எரிக்கும் போது அதிலே எரிச்சல் கலந்த நிலை வருகிறது. ஒரு பெட்ரமாக்ஸ் லைட்டை எரிக்கும் போது… அது எண்ணையின் சத்தினை மாற்றிவிட்டு ஆவியின் தன்மை கொண்டு ஒளியாக மாற்றுகின்றது.

அதைப் போல் இந்நேரம் வரை உபதேசித்த உணர்வுகள்…
1.அந்தத் துருவ மகரிஷி உணர்வுகளுடன் உங்கள் உணர்வுகள் படப்பட்டு
2.எண்ணையின் வாசனையை மாற்றிவிட்டு குளிர்ந்த ஒளியாகக் காணுவது போல்
3.மகிழ்ச்சி பெறும் ஒளியின் சுடராக உங்கள் உடலுக்குள் பரவும்.

ஒவ்வொரு அணுக்களிலும் இது மோதி… அந்த ஞானியின் உணர்வுகள் ஒவ்வொன்றும் உடலுக்குள் “பளீர்… பளீர்…” என்று மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாக மாற்றிக் கொண்டே வரும்.

வெல்டிங் வைக்கும் போது பளீர்…பளீர்… என்று மின் ஒளிகள் வருகின்றது. அதே சமயத்தில் அதைக் கண்களால் பார்க்கும்போது அதிலே ஒரு எரிச்சல் கலந்ததாகவும் இருக்கும்.

1.ஆனால் பெட்ரமாக்ஸ் லைட்டை எரிக்கப்படும் போது அது கண்ணுக்கு எப்படிக் குளிர்ந்ததாகப் புலப்படுகின்றதோ
2.அதைப் போன்று உங்கள் உடலுக்குள் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் கலந்து
3.மகிழ்ச்சி பெறும் உணர்வின் அணுக்களாக உங்கள் உடலில் ஒளித் தன்மை பெறுவதைக் காணலாம்… உணரலாம்.

புருவ மத்தியில் ஈஸ்வரா…! என்று எண்ணி உயிருடன் ஒன்றி… கண்ணின் நினைவைத் துருவ மகரிஷியின் பால் செலுத்தி… அவரின் ஆற்றல்கள் அனைத்தும் எங்கள் உடலில் பரவ வேண்டும் என்ற உணர்வினைச் செலுத்துங்கள்.

அப்படிச் செலுத்தும் போது…
1.ஒரு ஒளி விளக்கைக் காட்டினால் அதன் மூலம் பொருள்களைக் காண்பது போன்று
2.உங்கள் உடலுக்குள் அந்த வெளிச்சங்கள் ஊடுருவுவதையும்
3.அந்த உணர்வலைகள் மோதும் போது மகிழ்ச்சி ஊட்டும் உணர்வுகள் உங்களிலே தோன்றுவதும்
4.ஒளி கண்டபின் இருள் மறைவது போன்று உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் இது இணையும்…
5.உட்பொருள் தெளிவாகும்…. ஆற்றல்மிக்க சக்தியாக வளரும்.

துருவ மகரிஷியின் உணர்வுகள் உங்கள் உயிருடன் மோதும் போது
1.மெர்க்குரி போன்று புருவ மத்தியில் வெளிச்சம் வரும்
2.இளம் நீலமாகப் புருவ மத்தியில் ஒளி அலைகள் வரும்.

இந்த உணர்வுகள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நினைவைச் செலுத்தும் போது உங்கள் உடலில் மகிழ்ச்சி பெறும் உணர்ச்சிகள் வரும்.

இதற்கு முன் உங்கள் உடலில் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த நோய்கள் அனைத்தும் நீங்க இது உதவும். துருவ மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலில் கலந்து மன பலம்… மன நலம்… பெறுவீர்கள்.

பண்டைய கால மனிதர்களின் உடல் வலுவோ மன வலுவோ இன்று இல்லை…! ஈஸ்வரபட்டர்

 

பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் இந்தச் சமீப நூற்றாண்டுகளில் மனிதனால் விஞ்ஞானம் கொண்டு செயற்கை யுகத்திற்கு வழி காட்டிய நாளில் உள்ள நமக்குப் பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களைக் காட்டிலும் இன்றைய இயற்கைத் தன்மையின் குண அமில வர்க்கத்திலுள்ள சக்தித் தன்மையே குறைந்து விட்டது.

இது எப்படிக் குறைந்தது…?

பால்வெளி மண்டலத்தில் சுழன்று ஓடும் நம் பூமி அதில் உள்ள காற்று மண்டலத் தன்மை சக்தி குறைந்ததென்றால் அது எப்படிச் சாத்தியப்படும்…?

சூரியனிலிருந்தும் நட்சத்திர மண்டலங்களிலிருந்தும் மற்ற கோளங்களிலிருந்தும் அனைத்து மண்டலங்களுக்கும் பொதுவான பால்வெளி மண்டலத்திலிருந்தும் சக்தித் தன்மை ஒவ்வொரு மண்டலங்களுக்கும் கூடிக் கொண்டுள்ளதா…?

பொது மண்டலம் பால்வெளி மண்டலம். நமக்கு ஒளி தரும் மண்டலம் சூரிய மண்டலம். சூரியனிலிருந்து
1.நம் பூமி எப்படி ஒளி பெறுகின்றது…?
2.நம் பூமியிலுள்ள உஷ்ண விகிதம் மற்ற சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரங்களில் உள்ளனவா…?

நம் பூமியின் சுழற்சியினால்
1.நம் பூமி சுவாசித்து வெளிக்கக்கும் அலையின் அமிலம்
2.சூரியனிலிருந்து வெளிப்படும் அமிலத்துடன் மோதும் நிலை கொண்டே
3.நம் பூமிக்கு உஷ்ண விகித நிலை செயல்படுகின்றது.

நம் பூமியின் காற்று மண்டலத்திற்கு மேல் ஐம்பது மைல் விகித தூர அளவில் ஒளி வட்டம் உள்ளதாக இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது. ஒளி வட்டம் உள்ளதனால் தான் நம் பூமிக்கு இந்த உஷ்ண அலை ஏற்படுகிறது.

இந்த உஷ்ண அலையான ஒளி வட்டத்திற்கு மேல் சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட வழி எல்லாம் பூமியின் உஷ்ணத் தன்மையைக் காட்டிலும் அங்கே குளிர்ந்த நிலை தான் உள்ளது.

சூரியனுக்கு அருகாமையில் 200, 300 மைல்களுக்கு இப்பாலும் நம் பூமிக்குக் காற்று மண்டலம் ஒளி வட்டம் கொண்ட உஷ்ண அலைகளின் நிலையின் தன்மைக்கு அப்பாலும் பால்வெளி மண்டலத்தின் பொதுவான குளிர்ந்த நிலை தான் சூரியனுக்கும் பூமிக்கும். அதைப் போல் ஒவ்வொரு மண்டலங்களுக்கும் இடைப்பட்ட பால்வெளி மண்டலம் உள்ளது.

ஒவ்வொரு மண்டலத்தின் அமில குணம் தொட்டு அந்த மண்டலம் ஈர்த்து வெளிப்படுத்தும் அமிலத்துடன் அமிலம் மோதும் நிலை கொண்டே உஷ்ண அலைகளும் அதன் குளிர் நிலைகளும் செயல் கொள்கிறது.

இப்படி இயற்கையில் வளர்ந்து ஓடும் நம் பூமியின் நிலையுடன் கூடிய காற்று மண்டலத்தில்
1.காற்று மண்டலத்திற்கு மேல் உள்ள ஒளி வட்டத்தின் ஈர்ப்பினால்
2.காற்று மண்டலத்தில் சேமித்துள்ள இயற்கைக் குணத்தை நம்மால் மாற்றப்படுவதனால் அதனின் நிலைகள் மாறிவிட்டன.

மாறினாலும் இந்தக் காற்றில் தானே எல்லாம் கலந்திருக்கிறது என்பீர்கள். இயற்கையாக மாறும் நிலையைச் “செயற்கையுடன் பிரித்துவிடுவதனால்..” அதன் சக்தியின் வலு குறைந்துவிடுகின்றது.

மலைகளிலும் மடுக்களிலும் இருந்து உற்பத்தியாகி வரும் நீரின் சுவைக்கும்
1.ஆறுகளில் நாம் சேமித்து வைத்து அதிலுள்ள மின்சாரத்தைப் பிரித்து எடுத்த பிறகு
2.அந்த நீரின் அமில குணத்தில் சில சக்திகள் குறைந்ததனால் சுவை குறைந்து விட்டது.

அதே சமயத்தில் அந்நீரினால் வளரும் பயிர்களுக்கு
1.நாம் எந்நிலையான அமிலத்தை அந்த நீரிலிருந்து பிரித்து எடுத்தோமோ
2.அதன் நிலைக்குகந்த உரங்களை இட்டால் தான் அந்தப் பயிர்கள் வளரும்.

இப்படி இயற்கையையே நாம் பல நிலைகளுக்காக மாற்றி அமைக்கும் பொழுது இந்த மண்டலத்தின் காற்று அலைகளில் உள்ள சக்தி நிலைகள் குறைந்து விட்டன. மனிதனின் எண்ண சுவாசமும் இதன் தொடர் அலையினால் மாற்றம் கொண்டு விட்டது.

இந்த நிலையிலிருந்தெல்லாம் நாம் நம் தியான நிலையை ஒருநிலைப்படுத்தி… ஞானத்தின் வழித் தொடர் பெற… நம்மையே அந்த ஞானமாக்கும் சக்தி செயலில் நம்முடைய ஜெப நிலை இருத்தல் வேண்டும்.

மின் அலையின் தொடரில் ஒளியைக் காண்கின்றோம். அதே மின் அலையினால் ஒலியைக் (வானொலி) கேட்கின்றோம். இவையும் இந்நீரிலிருந்தும் காற்றிலிருந்தும் தான் மனித விஞ்ஞானத்தினால் கண்டறியப் பெற்றோம்.

நம் சுவாசத்தில் எடுக்கும் காற்றலையின் உரு நினைவலையான எண்ணத்தை அந்த ஆண்டவன் மேல் பாய்ச்சி நாம் செயல்படுவோமேயானால்
1.நம் எண்ண நினைவலை எச்சித்தர்களின் நினைவில் பாய்ச்சப்படுகின்றதோ
2.அவர்கள் பெற்ற ஒளி அலைகளின் சக்திகள் நம் எண்ணமுடன் கலந்து
3.சித்தர்கள் ஞானிகள் மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் செயல்பட்டு நம் ஞானம் வளர்ந்து
4.அதன் தொடரினால் பல சக்தி நிலைகளை இந்த உடல் என்னும் கூட்டிலேயே நாம் கூட்டிக் கொள்ள முடியும்.

அதன் வழி கொண்டு நம்மால் பல உண்மைகளை இந்த உலகம் உணரச் செய்து இன்றுள்ள இந்த உலகின் ஆன்மாக்கள் வாழும் பயம் கொண்ட செயற்கையிலிருந்து மீள வைக்க முடியும்.

இன்றைய கால நிலையில் அங்கங்கு இயற்கை மாற்றங்களும்… விபத்துக்களும்.. போர்களும்… இவற்றால் ஏற்படும் உயிர்ப் பலியின் பீதியிலிருந்தும்… மனிதனால் செய்யப்பட்ட அணுகுண்டு அணுக் கதிர்வீச்சின் பயத்திலிருந்தும்…
1.மனித ஆன்மாக்களை மீட்டு அவர்களின் எண்ணத்தை மேலோங்கச் செய்தால்
2.நடக்கவிருக்கும் உலக மாற்றத்திலிருந்து மனித ஆன்மாக்களை மீளச் செய்யலாம்.

ஒன்று பலவாகி.. பல நூறாகி… நூறு பலவாகிச் செயல்படும் சக்தி அலையாக நாம் செயல்பட வேண்டிய ஞான அலையின் சக்தியை ஈர்க்கும் செயலை முறைப்படுத்திச் செயல்படுத்துங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

கையில் காசு இருந்தால் அடுத்தவர்களுக்குத் தாரளமாகக் கொடுத்து உதவி செய்கின்றோம்.
1.ஆனாலும் அவர்கள் சொல்லும் வேதனைகளை எல்லாம் நாம் நுகர்கின்றோம்.
2.இதைத் துடைக்கத் தெரியவில்லை… துடைக்க முற்படுவதும் இல்லை.

நான் எல்லாம் செய்தேன்… ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்…! என்ற நிலை தான் கடைசியில் வருகின்றது.

ஆலயங்களுக்குச் செல்லப்படும் பொழுது இல்லாதவருக்குத் தர்மம் இட்டால் அதைக் கண்டு தெய்வம் நம்மை மெச்சும்…! என்று எல்லாம் மதங்களுமே கூறுகின்றது.

ஆனால் அந்தத் தர்மத்தைச் செய்யும் பொழுது என்ன செய்கின்றோம்..?
1.அவன் பாவத்தின் எல்லையிலே இருக்கின்றான்..
2.பல தொல்லைகளுக்கு ஆளாகிய பின் அவனுக்கு இந்த உதவி கிடைத்தது… ஆ…ஹா…! என்று ஆசையில் நம்மைப் பார்க்கின்றான்.

அப்படி வெளிப்படும் அவனுடைய உணர்வுகளை நாம் பார்த்த பின் அவன் ஏங்கிப் பெறும் அந்த உணர்வை நாமும் பெறுகின்றோம்.

நாம் நல்லது தான் செய்தோம். ஆனாலும் அவனுடைய நிலைகள் இங்கேயும் வந்து விடுகின்றது. வந்த பின் “ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்” என்ற இந்த நிலைகளைத் தான் நாமும் சொல்வோம்.

ஆனால் நம்மை ஆளும் ஆண்டவன் யார்…? நம் உயிர் தான்.

பெரும் ஈகையுடனும் பண்புடனும் அந்த உணர்வுகளை எடுத்தோம். அவர்கள் கஷ்டப்பட்ட உணர்வுகள் எல்லாம் நமக்குள் வந்து விடுகின்றது.

ஒரு பலகாரத்தைச் சுடுகின்றோம். அதை மூடி வைக்கவில்லை என்றால் என்ன ஆகும்…? மண் தூசி இவை எல்லாம் விழுகுமா இல்லையா…?

1.நான் நன்றாகத் தானே பலகாரம் சுட்டேன்…!
2.சாப்பிடும் பொழுது நறு..மொறு நறு..மொறு…! என்று இருக்கின்றது என்று சொன்னால்
3.”மூடி வைக்கவில்லை…” என்றால் இந்த நிலை வரத் தானே செய்யும்…!

இதைப் போன்று தான் நமக்குள் பாதுகாப்பான நிலைகள் இல்லை என்றால் நம் ஆன்மா அசுத்தமாகி விடுகின்றது. அப்பொழுது மற்ற தீமை செய்யும் உணர்வுகள் உள் சென்று நமக்குள் கடும் விளைவுகளை உண்டாக்கும்.

ஆகவே நம் ஆன்மாவை அடிக்கடி தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றால் “நாம் என்ன செய்யவேண்டும்…?” என்று சற்று சிந்திக்க வேண்டும்.

தீமை நமக்குள் எப்போதும் உருவாகாதபடி “பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்…” என்ற நிலைக்கு நாம் வளர வேண்டும்

 

உதாரணமாக காரமான ஒரு பொருளைத் தனித்து உணவாக உட்கொள்ளும் போது அந்தக் காரத்தின் உணர்ச்சியே முன்னணியில் நிற்கும்.

ஆனால் அந்தக் காரத்தை அடக்க “சப்…” என்று இருக்கும் காரம் இல்லாத பொருள்களை அதனுடன் இணைத்து உட்கொண்டால் அந்தக் காரத்தின் தன்மை குறைந்து சுவைமிக்க நிலைகளாக உருவாகின்றது

இதைப் போன்று தான் நம் வாழ்க்கையில் வெறுப்போ வேதனையோ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ கோபமோ இத்தகைய உணர்வுகளை நாம் நுகர்ந்தறியப்படும் போது
1.உயிர் இருக்கும் ஈஸ்வரலோகத்தில் அது உருவாக்கப்படும் போது
2.அந்த உணர்ச்சிகள் தான் முன்னணியில் இயக்கும்.
3.மற்ற நல்ல குணங்களின் வலு குறைகிறது.

காரணம் மற்றவர்களுடைய குறைகளையும் துன்பங்களையும் கேட்டறிந்து நுகர்ந்து தான் உதவி செய்கிறோம். நுகரும் போது தான் உயிரும் அதை இயக்குகிறது.

இருந்தாலும் அதைக் கேட்டறிந்த நிமிடத்திலேயே…
1.அவர்கள் கஷ்டங்களைச் சொல்வதற்கு முன் “ஈஸ்வரா…!” என்று நம் உயிரான ஈசனிடமே கேட்டு
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கி
3.அந்த உணர்வை அப்பொழுதே உயிரிலே இணைக்கும் ஒரு பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.

குழம்பு வைக்கும் போது பல சரக்குகளைச் சேர்த்து அதைச் சுவைமிக்கதாக மாற்றுவது போல் நாம் கேட்டு… நுகர்ந்த மற்றவரின் உணர்வுக்குள் அந்த அருள் ஞானிகளின் உணர்வைக் கூட்டிவிட்டால் அதைத் தணித்து அருள் உணர்வின் அணுக்களாக மாற்ற முடியும்.

நல்ல குணங்கள் கொண்டு நாம் வாழ்ந்தாலும்… சந்தர்ப்பத்தில் ஒருவர் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தால் அந்த வேதனை நமக்குள் அதிகரிக்கப்படும் போது நல்ல குணத்தின் தன்மைகள் குறைந்து விடுகிறது.

1.அப்பொழுது அந்த நல்ல குணத்தின் தன்மையை அதிகமாக்க…
2.அதை வலிமை பெறச் செய்ய வேண்டும் என்றால்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரும் போது உயிரான ஈஸ்வரலோகத்தில் அதனின் உணர்வின் கருக்களாக மாறுகிறது. வேதனையை வலுவிழக்கச் செய்கிறது.

“பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்…” என்ற நிலையில் நம்முடைய ஆறாவது அறிவின் துணை கொண்டு
1.அருள் மகரிஷிகளின் அருள் உணர்வைக் கவர்ந்து அந்த உணர்வை நுகர்தல் வேண்டும்…
2.இரத்தத்தில் கலக்கச் செய்தல் வேண்டும்…
3.உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்குள்ளும் அதை இணைத்தல் வேண்டும்.

இப்படி… தீமையான உணர்வுகளைக் குறைத்து தீமைகளை அகற்றிட்ட வலிமையான மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கும் போது உயிரான ஈஸ்வரலோகத்தில் அந்தக் கருத்தன்மை உருவாக்கப்பட்டு… நம் உடலில் உள்ள இரத்தங்களில் கலக்கப்பட்டு… அது இந்திரலோகத்தில் தீமைகளை மாற்றிடும் வலிமை பெற்ற பிரம்மலோகமாக அதை மாற்றுகின்றது.

அத்தகைய நிலைகளை நாம் உருவாக்கி அந்த உணர்வின் தன்மை வலுப் பெறப்படும் போது வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி விடுகிறது.

உடலை விட்டு எப்பொழுது சென்றாலும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்திற்கு உயிர் நம்மை அழைத்துச் செல்கிறது…!
1.உடல் பெறும் விஷத் தன்மைகளை அங்கே கரைத்து விடுகின்றது.
2.ஒளியின் சரீரமாக… நம்மை ஒளியாக மாற்றுகின்றது.

ஒவ்வொரு மனிதனும் தெய்வ குணத்தைப் பெற்று ஆண்டவனாக வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

ஒரு நாள் தோன்றி மறு நாள் மடிகின்றது காளான். அதே போல் ஒவ்வொரு தாவர வர்க்கத்திற்கும் அது அது ஜீவிக்கும் கால நிலைகள் உண்டு. ஆலமரம் பல நூறு ஆண்டுகள் உள்ளது. வைரம் பாய்ந்த ஆயிரம் காலத்து மரங்களும் பல உள்ளன.

ஆனால் ஆயிரம் ஆண்டுகள் வாழும் மரம் உருவான ஆரம்பக் கால நிலையே காளானின் வழித் தொடர்ச்சி தான். இயற்கையின் தாவர இன முன்னோடி “காளான் தான்…!”

அவ்உயிரணு அவ்வமில வண்ணமுடன் இடியும் மின்னலும் தோன்றும் காலத்தில் ஒன்றுடன் ஒன்று இன வர்க்கங்கள் மோதும் நிலையில் அதற்கு மேல் இந்த மழை நீர் படும் பொழுது வெடிக்கும் தன்மை உருவாகிறது.

அப்படி வெடிக்கும் தருணத்தில்
1.இரண்டு வகை அமில குணத்தின் வெடிப்பில் தோன்றும் அமிலமானது இந்தப் பூமியில் மோதுண்டவுடன்
2.அதன் மேல் படும் ஒளி அலையின் ஈர்ப்பினால் உயிரணு தோன்றி தாவரம் வளர்ந்து
3.ஒவ்வொரு நிலை கொண்ட தாவர இன வர்க்கங்கள் மாறி மாறித் தோன்றுகிறது.

முதலில் காளான் தோன்றி அதன் ஆயுள் முடிந்தவுடன் அந்தக் காளானது அழுகிய நிலையில் பூமியில் படர பூமியிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலையின் வெக்கை அதன் மேல் பட்டு அதிலிருந்து வெளிப்படும் அமில குணத்தைக் கொண்டு மீண்டும் பூமியில் படர்கின்றது.

அதிலிருந்து வெளிப்படும் உயிரணுவின் இன வளர்ச்சி சிறிது மாற்றம் கொண்டு மீண்டும் அதிலிருந்து சில வளர்ச்சி நிலைகள் மாறுகிறது.

மாற்றம் ஏற்பட்டு இப்படியே பல இயற்கை வளங்கள் தோன்றி ஒன்றுடன் ஒன்று அமிலத் தன்மைகள் மாறி மாறி உருவாகிப் பல வழிகள்… பலவித உயிரணுக்களும் கனி வளங்களும் வளர்ந்து கொண்டே மாறி மாறி வாழ்ந்து கொண்டே சுழன்று ஓடிக் கொண்டே உள்ளன.

ஓடும் ஓட்டத்தில் வெளிப்படும் அமில குணத்தில் பல உயிரணுக்கள் அந்த மோதலில் வெளிப்படுகின்றன. “ஒன்றில்லாமல் ஒன்றில்லை…” என்பதன் பொருளும் இதுவே..!

1.எந்த அணுவும் உதிக்க வேண்டும் என்றால் “இந்த மோதல் தான்…” காரணம். (இது முக்கியம்)
2.அமில குணங்கள் மோதுண்டு அதன் மேல் படும் மழை நீரின் ஜீவனால் வெடிப்பு நிலைப்பட்டு உருவாகின்றது உயிரணு.
3.அதன் தொடர்ச்சி நிலை சேர்க்கை தான் ஜீவனின் சேர்க்கையினால் இந்த ஜீவ அணு தோன்றுகிறது.

ஆண் பெண் சேர்க்கையினால் இந்த இரண்டு குண நிலை கொண்ட அமிலத்துடன் ஜீவன் கொண்ட மற்றோர் எண்ண அமிலமான உயிராத்மா தனக்குகந்த அமில குணம் கொண்ட தாயின் தந்தையின் பிறப்பில் கருவுக்கு வருகின்றது.

பல வகையான அமில குணங்களின் சேர்க்கை கொண்டது… இவ்வுலகின் ஈர்ப்பு அமில குணம் ஒன்று தான். இவ் ஈர்ப்பு நிலைக்கொப்ப பல நிலைகளை நம் பூமி வளர்த்துக் கொள்கிறது. பூமி வெளிக்கக்கும் உஷ்ண அலையின் ஈர்ப்பில் பல குண நிலைகள் மாறு கொள்கின்றன.

பல வகையான அமில குணம் கொண்ட இந்தக் காற்றைத்தான் நாம் சுவாசிக்கின்றோம் என்றாலும்… “நம் எண்ண நிலைக்கொப்ப சுவாச அமிலம் தான்…” நம் சுவாச ஈர்ப்புக்கு வரும்.

1.வெங்காயச் செடி அதன் கார அமிலச் சுவாசத்தை ஈர்க்கின்றது.
2.மிளகாய்ச் செடி நெடி கலந்த கார அமிலத்தை ஈர்க்கின்றது.
3.கருணை சேனை இவற்றின் குண அமிலம் அரிக்கும் தன்மை உடைய அமில குணத்தை ஈர்த்து அவை வளர்கின்றன.

ஒவ்வொன்றிற்கும் அதனதன் நிலைக்கொப்ப ஒரே தன்மையுடைய அமிலத்தைத்தான் ஈர்த்துப் பழக்கப்பட்டு வளரும் தன்மையுடையது தாவர வர்க்கங்கள்.

ஆனால் பலவற்றையும் புசிக்கும் மனித ஆத்மா தான் உண்ணும் உணவின் உணர்வைத் தவிர “எண்ணும் எண்ணத்தின் அமில குணத்தையும்” அறியவல்ல ஆற்றல் கொண்டவன்.

உடம்பின் மேல் மிளகாயின் காரம் பட்டவுடன் “எரிகிறது..!” என்று அறிகின்றோம். வெங்காயத்தின் காரத்தினால் “கண்ணில் நீர் வடிகிறது…!” சேனை கருணை போன்ற கிழங்குகளில் அமில நீர் பட்டவுடன் அவ்விடம் “பிய்ப்பு எடுக்கின்றது…”

இந்நிலையான அமில குணத்தை நம் உடலும் உணர்வும் ஈர்க்கா விட்டால் அதன் தன்மையின் பாதிப்பை நாம் அறிவோமா…?

மிளகாயின் குணம் நெடி கலந்த குணம்… வெங்காயத்தின் குணம் அதற்குகந்த கார குணத்தினால் அதன் தன்மையை உணரப்படுகின்றோம்.

எல்லாமே இந்தக் காற்றின் ஈர்ப்பில் தன் ஈர்ப்புக்கொப்ப வளர்கிறது. இந்நிலைகளைப் போன்று தான் நம் மனித ஆத்மாவின் எண்ண நிலைக்கொப்ப “அமில குணங்களைச் சேமிக்கிறது…” என்பதை அறியவில்லை.

நம் எண்ண நிலைக்குகந்த ஈர்ப்பில் நாம் எடுக்கும் சுவாசத்தைக் கொண்ட நிலையுடனே எந்த எண்ணத்தில் எல்லாம் நாம் இருந்து கொண்டுள்ளோமோ… அதன் நிலைக்கொப்ப அமில குணங்கள் நம்முள் சேமிதம் கொண்டே வாழ்கின்றோம் நாம் எடுக்கும் சுவாசத்தினால்…!

“குண அமிலம்” என்பதன் நிலை புரிந்ததா…?

இந்தக் குண அமிலத்தின் நிலையை உணர்த்துவதன் உண்மை நிலை என்ன..?

ஒவ்வொரு மண்டலத்திற்கும் நட்சத்திர மண்டலத்திற்கும் பால்வெளி மண்டலங்களுக்கும் அதனதன் தன்மைக்குகந்த குண அமிலம் உண்டு. அதன் வளர்ச்சி வட்டத்திலே தான் இயற்கையின் அமில குணங்கள் செயல் கொண்டு வாழ்கின்றன.
1.இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட குண அமிலத்தைப் பெறவல்ல ஆற்றல்
2.அதாவது தனக்குகந்ததைப் பெறும் சக்தி மனித ஆன்மாவுக்கு உண்டு.

இயற்கை வளங்கள் ஒரு வகையான அமில குணத்தை ஈர்க்க வல்லது. ஆனால் மனித ஆத்மாவோ… எண்ண நிலைக்குகந்த அமில குணத்தை எல்லாம் ஈர்த்து ஈர்த்து வாழ்கின்றான்.

எண்ண நிலை கொண்ட மனிதனால் தனக்குகந்த அமில குணத்தை ஈர்க்கும் பக்குவம் பெற்றால்
1.இந்தக் குணங்களிலேயே சிறந்த குணமான
2.“ஆண்டவன்…” என்னும் நிலை கொண்ட குணத்தைப் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள். அவர்களுடைய செயலைப் பார்த்தவுடனே நமக்கும் கோபம் வருகிறது.

அப்படிக் கோபம் வரும் பொழுதெல்லாம்…
1.ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெறவேண்டும் என்று
2.புருவ மத்தியில் நிறுத்திடல் வேண்டும்.
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.

பின் சண்டை போடுபவர்கள் அவர்கள் அறியாது செயல்படும் நிலையிலிருந்து விடுபட்டுப் பொருள் கண்டுணர்ந்து செயல்பட்டுச் “சகோதர உணர்வுடன் ஒன்றுபட்டு வாழும் அந்த உணர்வுகள்” அவர்கள் பெற வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணினோம் என்றால்…
1.அவர்கள் சண்டையிட்ட உணர்வுகள் நமக்குள் அணுவாக உருவாகாது.
2.நம்முடைய உணர்வுகள் இதை மாற்றி நம்முடைய நல் எண்ணத்தின் தன்மையிலேயே கருவாக்குகின்றது.
3.அவர்களைப் போன்ற குரோத உணர்வுகளோ சண்டையிடும் உணர்வுகளோ நமக்குள் வராது.

ஆனால் ஆத்ம சுத்தி செய்யாது… அவர்கள் சண்டையிடும் உணர்வுகளை நுகர்ந்து அணுவாகி விட்டால் திடீரென்று அந்த உணர்ச்சிகள் நமக்குள் உந்தி நம்மை அறியாமலே கோபப்படச் செய்யும். “யாராக இருந்தாலும்… அவர்களிடம் சண்டைக்குப் போகச் சொல்லும்…!”

ஒருவன் தவறு செய்கிறான்… தவறு செய்கிறான்… என்று சொல்லிக் கொண்டே இருந்தால் அந்த (அவன்) உணர்வுகள் என்ன செய்யும்…? அந்தத் தவறு செய்த உணர்வுகள் எல்லாம் நம் உடலிலே விளைந்து நாமும் தவறு செய்பவராகப் போய்விடுவோம்.

ஒருவன் நம்மிடம் கோபிக்கின்றான்… கோபிக்கின்றான்… என்று சொல்லிக் கொண்டேயிருந்தால் அதே உணர்வுகள் நாமும் கோபிக்கும் தன்மை வந்துவிடும்.

அந்த அணுக்கள் பெருகப் பெருக அதற்கு அந்தச் சாப்பாடு தேவை. தன் உணர்ச்சிகளை உந்தி அதனுடைய உணவை எடுத்துக் கொண்டு தான் இருக்கும்.

நமக்குள் இப்படிப் பகைமை உணர்வுகளைச் சேர்க்கச்… சேர்க்க…
1.எப்படி நாம் வெளியிலே சண்டை போடுகிறோமோ இதைப் போல்
2.நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கும்
2.நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த (மேலே சொன்ன) கோபம் குரோதம் வேதனை போன்ற அணுக்க்ளுக்கும் போர் நடக்கும்.

இங்கே உடலுக்குள் பளீர்…ர்ர்ர்…! என்று மின்னும்.

கை காலில் மின்னும். இடுப்பிலே வலிக்கும். எந்தெந்த உறுப்புகளில் இந்த உணர்வுகள் போர் முறைக்கு வருகின்றதோ அங்கெல்லாம் பளீர்…ர்ர்… பளீர்…ர்ர்…! என்று மின்னும்.

ஆகவே நம் உடலில் வேதனையும் வலியும் எல்லாமே தோன்றும்…! அதை மாற்ற
1.ஓ…ம் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்துடன் தொடர் கொள்ளுங்கள்.
2.புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தை ஒரு நிமிடம் நிலை நிறுத்தி ஏங்குங்கள்.

பின் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று உள்ளே செலுத்துங்கள்.

உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தப் பேரருள் உணர்வை உணவாகக் கொடுத்து… தீமை செய்யும் அணுக்களை அடக்கி…
1.இணைந்து வாழும்…
2.இணைந்து வாழச் செய்யும் சக்தியாக… மாற்றிக் கொள்ளுங்கள்.
3.மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும் அணுக்களாக உருப்பெறச் செய்யுங்கள்.

இரத்தம் போகும் பாதையில் உள்ள அடைப்புகளை நீக்கும் தியானப் பயிற்சி

 

இருதய வலி (நெஞ்சு வலி) போன்ற உபாதைகள் வந்தால் இடுப்பிலே நான்கு விரலையும் பிடித்து சிறிது பின்னுக்கே சாய்ந்து சிறிது நேரம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற நினைவின் ஆற்றலைச் விண்ணிலிருந்து இழுத்துச் சுவாசியுங்கள். (ஆபரேஷன் செய்தவர்கள் செய்யக் கூடாது…)

1.மெதுவாக மூச்சை அடக்கி மறுபடியும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற அந்த மூச்சை எடுங்கள்.
2.இரண்டு நொடி உடலுக்குள் நிறுத்துங்கள். மறுபடியும் மெதுவாக விடுங்கள்.

காரணம் நம் சுவாச நாளங்களில் இரத்தங்கள் போகும் பாதையில் அடைப்புகள் இருக்கும்.
1.நாம் சுவாசிக்கும் நிலைகளில் புகையிலையோ அல்லது
2.பீடி சிகரெட் பிடிப்பவர்கள் புகை விடுவதை நுகர்ந்திருந்தாலோ
3.நாம் பிடிக்கவில்லை என்றாலும் அந்த மாதிரிப் பிடிக்கிறார்கள் என்று எண்ணினால் போதும்.
4.அது நம் சுவாசத்தின் வழியாகச் சுவாசப் பைக்குள் சென்று இரத்தங்கள் போகும் பாதைகளில் உறைந்து விடுகின்றது.

உறைந்து விட்டால் இருதத்திலிருந்து இரத்தம் ஒரு பகுதி வழியாகப் போகவில்லை என்றால் அடுத்த பகுதி வழியாகப் போகும்.

நுரையீரலுக்கோ மற்றதுக்கோ இரத்தம் பாயும் நிலைகளைத் தடைப்படுத்தும். இந்தப் பாதையும் அடைபட்டு விட்டால் இதே போல் அடுத்த பக்கமும் அடைபடும்.

மூன்று பாதைகளில் ஏதாவது ஒன்று வழியாகப் போனால் தான்.

இல்லை என்றால் அந்தப் பாதைகள் அடைபட்டு விட்டால் இருதயம் சீராக இயங்காதபடி இருதய அடைப்பு (ஹார்ட் அட்டாக்) வந்துவிடும். நெஞ்சு வலி அதிகமாகி மனிதனை மடியச் செய்துவிடும்.

இதைப் போன்ற நிலைகளை நாம் மாற்றி அமைக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இடுப்பிலே கையை வைத்து அந்தச் சுவாசத்தை மேலே சொன்னபடி அந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்த வேண்டும். அந்த அடைப்புகளை நீக்கிவிடும்.

ஒன்றும் செய்ய முடியவில்லை… மிகவும் தொல்லை கொடுக்கிறது என்றால் தியான வழியில் இருப்பவர்கள் ஒரு ஐந்தாறு பேர் சேர்ந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கூட்டமைப்பாக எண்ணுங்கள். அவருக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பாய்ச்சுங்கள்.

இங்கே கொடுத்த விபூதியையோ அல்லது தண்ணீரையோ தியானத்திற்கு முன்னாடி வைத்து அதற்குப் பின் அந்தத் தீர்த்தத்தை அவரை அருந்தச் செய்யுங்கள்.
1.அவர் உடலில் உள்ள இருதய வலி நீங்கி… இருதயம் சீராக இயங்கி உடல் நலம் பெறவேண்டும் என்று இந்த எண்ணத்தில் நீங்கள் கொடுங்கள்.
2.அவர் குடிக்கும் போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலில் படர வேண்டும் என்று உங்கள் பார்வையைச் செலுத்துங்கள்.

இதைப் போன்ற நிலைகள் எல்லாம் நீங்கள் சீர்படுத்த வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்று அவர்களுக்குள் இதைப் பாய்ச்சப்படும் போது இது நல்லதாகும்.

இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

மகரிஷிகளுடன் நாம் தொடர்பு கொள்ள வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

இந்தக் கலி முடிந்து அடுத்து வர இருக்கும் “கல்கி” மாற்றத்தின் சுழற்சியில் மீண்டும் மனிதர்கள் ஜீவனுக்கு வந்தாலும்
1.இந்த உலக மாற்றத்தின் பொழுது நம் உடலிலுள்ள ஆத்மா பிரியும் நிலை கொண்டு
2.அடுத்த பிறப்பிற்கு வரும் தொடரும் அதன் சுழற்சியிலே தான் செயல் கொள்ள முடிந்திடும்.

பிறப்பிற்கு வரும் நிலையில் முதல் கால கட்டத்தில் (கல்கி) வரும் தருவாயிலேயே “அறிவாற்றல் கொண்ட” எண்ணத்தின் நிலைக்கொப்பத் தாயின் கருவிற்கு வர முடியாது.

எல்லாமே மாறிய பிறகு புதிய உயிரணுக்கள் தோன்றும் தருவாயில் அந்த உயிரணுக்கள் ஜீவனின் வளர்ச்சி நிலை பல காலங்கள் தாவர இன வர்க்க வளர்ச்சியிலும் மற்ற கனி வளங்களின் வளர்ச்சி நிலையிலும் செயல் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அவை வளர்ந்து.. மடிந்து… அதிலிருந்து தோன்றும் உயிர்ப் பிராணி நிலை பெற்று மீண்டும் அதன் இன வர்க்க நிலை மாறி பல வளர்ச்சி நிலைகள் தானாக உயிர் பெறும் உயிரணுவிலிருந்து மாறிப் பல அமில குணத்தை ஈர்த்த உயிரணுக்களாக வேண்டும்.

அப்படி ஆன பிறகு உயிராத்மாவாகி அந்த உயிராத்மாக்களின் சேர்க்கைக் குணமுடன் மற்ற உயிரணுவின் பிறப்பு நிலை தோன்றிய பிறகுதான் ஜீவன் பெறும் நிலை கொள்கின்றது.

உயிரணுவிற்கும் உயிராத்மாவிற்கும் வேறுபாடு புரிகின்றதா…?

இந்தப் பூமியிலிருந்து வெளிப்படும் வெப்ப அலையின் அமில குணத்தின் ஈர்ப்பில் படர்ந்து இயற்கை வளங்களாக வளர்பவை எல்லாம் உயிரணுக்கள் கொண்ட நிலை.

உயிராத்மா என்பது… பிறப்பிற்கு வரும் இரண்டு ஜீவ உடல்களின் எண்ணக் கலவையின் சேர்க்கையில்… தன் நிலையை ஜீவிதம் கொள்ளும் ஆசையுடன் கர்ப்ப நிலைக்கு ஜீவன் கொள்வதெல்லாம் ஜீவ ஆத்மா பெறும் நிலை.

இப்படி இம் மாறும் கலியினால் நம் உயிரணு உருவிற்கு வரப் பல்லாயிரம் ஆண்டுகள் செல்லும் (இது முக்கியம்).

இந்த உலகச் சுழற்சியில்…
1.நம் எண்ணத்தை இவ்வுலகப் பிடியில் அடகு வைத்து விட்டால்
2.அதை மீட்பதற்கு பல ஆயிரம் காலங்கள் செல்லும்.

இவ்வெண்ண நிலையிலேயே பிரியும் ஆத்மாக்கள் தான் சேமித்த குண நிலையுடனே சுழன்று சுழன்று… மீண்டும் அறிவு நிலை கொண்ட ஞானம் பெறக்கூடிய உடல் பெறுவதற்குப் பல காலங்கள் சுழல வேண்டியதிலிருந்து மீட்டிட வேண்டும் என்பதற்குத் தான் இந்த உண்மைகளைப் புகட்டுகின்றேன்.

பரம்பொருளின் ஞானமான அச்சக்தி நிலை கொண்ட ஜோதி ஆத்மாக்களான அந்த மாமகரிஷிகளிடம் நம் எண்ணத்தைச் செலுத்தி அவர்கள் காட்டிய வழியில் நம் வாழ்க்கையை அமைத்திடல் வேண்டும்.

அந்தச் சப்தரிஷிகளின் எண்ண வட்டத்திற்குள் நாம் எடுக்கும் சுவாச அலைகள் பாயும் பொழுது அவர்கள் பெற்ற ஆற்றலை நாமும் பெற முடியும்.

மேன்மேலும் அந்தச் சக்தியை நாம் கூட்டிக் கொண்டால் இவ்வுலக மாற்றத்தின் பொழுது அவர்களின் நிலையுடன் நாம் ஐக்கியப்பட்டு அவர்களைப் போன்று நாமும் சப்தரிஷியாகலாம்.
1.இந்தப் பூமி மட்டுமல்ல… எந்தப் பூமியையும் நமதாக ஏற்று
2.அந்த ஒளி வட்டத்திற்குள் நம் ஒளி பிரகாசிக்கத்தான்
3.யாமறிந்த (ஈஸ்வரபட்டர்) உண்மைகளைப் பலரும் அறிந்து கொள்ளவும்
4.அப்பரம்பொருளின் ஞான சக்தியை வழிப்பெறும் வழி ஆற்றலைப் புகட்டுகின்றோம்.

இவ்வுயிரணு தோன்றி மாறி மாறி எடுக்கும் அமில குணத்தின் வளர்ச்சியினால் ஏற்படுவது தான் சிறு எறும்பு முதல் கொண்டு சூரியன் சந்திரன் அதற்கும் அப்பாற்பட்ட எல்லாமே…!

எந்த உயிரணுவும் மடிவதில்லை. எப்பரம்பொருளிடமும் ஒன்றி நிற்பதுவும் இல்லை.

உயிரணுவாக உலகாய் உருவம் கொண்டே வளர்ந்து கொண்டே கலந்துள்ளது தான் அப்பரம்பொருளான ஆதிசக்தியின் ஒளி சக்தி.
1.ஒன்றுடன் ஒன்று மாறி மாறி உருப்பெற்றே சுழன்றே ஓடும் சிக்கலில்
2.உயர் ஞானம் கொண்ட சப்தரிஷிகளின் ஞானம் பெறுவது தான் உயர் ஞானம்.

அந்த ஞான நிலை பெறும் வழித் தொடர் தான் இந்த மனித உடல் கொண்ட ஆத்ம ஞானம். மனித உடல் கொண்ட ஞானத்திலிருந்து தான் உயர் ஞானம் பெற முடியும்.

இந்த மனித உடல் கொண்ட அறிவு நிலை பெற பல உருமாற்றம் கொண்ட உருவ நிலையெல்லாம் பெற்றுப் பெற்றுத் தான் இந்த மனித உடலையே பெற்றிருக்கின்றோம்.

செயற்கையின் பிடியில்… கலியான இக்காலத்தில்… சோம்பேறி நிலை கொண்ட வாழ்க்கைக்கு அடிமைப்பட்டு மீளத் தெரியாமல் சிக்குண்டு வாழும் நாம்… இந்த மனித ஞானத்தைப் போற்றி நல் வழி பெறும் ஞானத்தைப் பெற்றிடுவோம்.

கண்ணாடியில் உள்ள தூசியைப் போக்கிட அழுக்குத் துணியால் தட்டினால் மீண்டும் இதன் அழுக்குத்தான் அதிகமாகப் படரும். சுத்தமான துணியை கொண்டு துடைத்தால் தான் அந்தக் கண்ணாடியில் உள்ள அழுக்கு நீங்கும்… ஏனென்றால்
1.அழுக்கை அழுக்கு கொண்டு அகற்ற முடியாது.
2.நம் அக அழுக்கைப் பக்தி என்ற பகவான் ஞானத்தைக் கொண்டு போக்கித் தான் நம் அழகை நாம் காண வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இந்த உடலை வளர்க்கத் தான் எல்லா உயிரினங்களும் முயற்சிக்கின்றது. ஏனென்றால் எது உருவானதோ அதற்கு அந்த உணவு தேவை. அது கொடுக்கவில்லை என்றால் அது சோர்வடையும்.

இப்படித்தான் வழக்கத்தில் இருந்து கொண்டே உள்ளது.

இருப்பினும்…
1.பரிணாம வளர்ச்சியில் தீமைகளை நீக்கி நீக்கி வளர்ச்சி அடைந்து வந்த நாம்
2.மீண்டும் வேதனை வெறுப்பு சலிப்பு சஞ்சலம் சங்கடம் இனம் புரியாத நிலைகளைச் சேர்த்துக் கொள்கின்றோம்.

நாம் படிப்படியாக வளர்ச்சிக்கு வந்து மனிதனாக வந்தோமோ அதே போல் தேய்பிறையாகும் பொழுது படிப்படியாக எடுத்துக் கொண்ட நிலைக்கொப்ப
1.நம் ரூபங்களை மாற்றிக் கொண்டேயிருக்கும் நம் உயிர்.
2.அது ஒன்று மட்டும் மாறுவதில்லை.

ஆக இந்த உடலில் உள்ள உணர்வுகள் மாறுகின்றது. இந்த உணர்வுக்கொப்ப அடுத்த சரீரம் அமைகின்றது.

வேதனையை நீக்கும் சக்தி பெற்ற மனித உடலாக வேதனையை நீக்கும் எல்லா ஞானமும் இருக்கின்றது. அவ்வப்பொழுது அந்த நொடியிலேயே தீமைகளையும் துயரங்களையும் நீக்கிக் கொண்டால் நமக்கு அந்த நோய் வராது.

அத்தகைய நோய் வந்தாலும் கூட… நாம் அதை மறக்க இந்த முறைப்படி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெறவேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று
4.இப்படி நாம் ஆத்ம சுத்தி செய்து மாற்றிக் கொண்டு வர முடியும்.

ஏனென்றால் அந்த வேதனையை மறக்க இதை நாம் எடுத்தால் அது மறைகின்றது. துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் சிறுகச் சிறுகப் பெருகுகின்றது.

விஷத்தின் தன்மையை நீக்கி… அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமாக ஆனது. மனிதனில் மிக உயர்ந்த நிலைகள் பெற்றது தான் அந்தத் துருவ நட்சத்திரம்.

ஒரு சமயம் சூரியனே அழியலாம். ஆனால் இந்தத் துருவ நட்சத்திரமும் அதன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலங்களும் என்றும் அழிவதில்லை. வருவதை எல்லாம் ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்கும்.

இந்த மனித உடலில் உயிரைப் போலவே இருளை நீக்கி உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிச் சென்றவன் அகஸ்தியன்.

நாம் எப்படிப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்தோமோ… அதே போல்
1.பரிணாம வளர்ச்சியில் வளர்ந்த அந்த அகஸ்தியனின் உணர்வை நாம் எடுத்தோம் என்றால்
2.அவன் ஒளியாக மாற்றிச் சென்ற பாதையில் வளர்ந்து செல்ல முடியும்.

வெறுப்பையும் கோபத்தையும் சங்கடத்தையும் சலிப்பையும் குரோதத்தையும் வளர்த்துக் கொண்டே வந்தால் நாம் மீண்டும் தேய்பிறையாகி இதை எல்லாம் நோயாகி தேடி வைத்த செல்வத்தையும் பாதுகாக்க முடியாதபடி செல்கின்றோம்.

1.ஆனால் செல்வமும் கூட இருக்கும்
2.இருந்தாலும் நன்றாகச் சாப்பிடக்கூட முடியவில்லையே என்ற இந்த வேதனை வந்துவிடுகின்றது.
3.ஆக நம் உடலில் முடியாது போய்விடுகின்றது.

இதை எல்லாம் கொஞ்சம் யோசனை செய்து… தியானம் ஏன் செய்ய வேண்டும்…? என்பதை நன்றாகப் புரிந்து கொண்டு செயல்படுங்கள்.

யாம் சொல்லும் இந்தத் தியானத்தின் மூலம் அடிக்கடி வரும் சலிப்பையோ சங்கடத்தையோ வெறுப்பையோ வேதனையையோ நமக்குள் நிலைத்திருக்காது அதைத் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இதற்கு முன்னாடி நமக்குள் மற்ற உணர்வுகள் விளைந்திருந்தாலும் அதனுடைய வலிமையும் அதிகம் தான்.

இருந்தாலும்… இப்பொழுது ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தின் மூலம்
1.உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும் நேரடியாகவே
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது
3.முந்தைய அணுக்களும் நல்ல அணுக்களாக மாற்றமடையும்.


அகஸ்தியன் குழந்தைப் பருவத்தில் பெற்ற ஆற்றல்கள்

 

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று சொல்லும் போதெல்லாம் கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வர வேண்டும்.
1.ஈஸ்வரா… என்று சொல்லும் போதெல்லாம் உயிரை எண்ணி
2.நாம் எதைப் பெற வேண்டும் என்று ஏங்குகின்றோமோ…
3.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு அதை ஏங்கிப் பெற வேண்டும்…
4.அப்படி ஏங்கினால் நல்ல முறையில் அது பதிவாகும்.

அகஸ்தியர் பிறந்த பின்… குழந்தைப் பருவத்தில் மல்லாந்து படுத்திருக்கும் போது விண்ணை நோக்கிப் பார்த்து எந்தெந்த உணர்வுகளை நுகர்ந்தாரோ… “அதை எல்லாம் பெற வேண்டும்…” என்று நீங்கள் ஏங்கித் தியானியுங்கள்.

அவர் கருவிலே இருக்கும் போது… தாய் தந்தையர்கள் எதை எதை எல்லாம் எண்ணிப் பெற்றனரோ அது அனைத்தும் அவருக்குள் வளர்ச்சி பெறுகிறது.

அவருடைய தாய் தந்தையர்கள் விஷமான அணுக்கள் தங்களை அணுகாதபடி பாதுகாத்துக் கொள்ள அவர்கள் உடலில் பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் அரைத்துப் பூசிக் கொண்டனர்.

1.அவர்கள் உடலிலிருந்து அந்த மணம் வெளிப்படும் போது
2.நுகர்ந்து தன் உணவுக்காகத் தேடி வரும் மற்ற உயிரினங்களோ கொசுவோ விஷ ஜெந்துக்களோ
3.அவை அனைத்தும் அவர்களை அணுகாது இருந்தது.

அவர்கள் சூரியனைக் கண் கூசாது உற்றுப் பார்க்கின்றனர். சூரியன் தன் முகப்பில் சுழற்சியின் வேகத்தால் மோதும் நிலைகள் கொண்டு விஷங்களைப் பிரித்து உயர்ந்த சக்திகளைத் தனக்குள் வளர்த்துக் கொண்டு ஒளிக் கதிர்களாக வீசுகிறது.

பிரிக்கப்பட்ட அந்த விஷத் தன்மைகளை சூரியனின் வெப்ப காந்தங்கள் கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் உடலிலே விஷ முலாம்களைப் பூசியதால் அதைக் காண்கிறார்கள்.

1.அவர்கள் கண் வழி பெறும் இந்த உணர்வுகள் உடல்களில் பதிவானாலும்
2.கருவில் வளரும் அகஸ்தியனுக்குத் தாய் ரூபத்தில் அது பதிவாகிறது.

இவ்வாறு வளர்ச்சி பெற்ற அந்தச் சிசுவோ பிறந்த பின் தாய் கண்ட உணர்வுகள் அனைத்தையும் மல்லாந்து படுத்திருக்கப்படும் போது அந்தச் சூரியனின் இயக்கங்களைப் பார்க்கின்றது.

நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படுவதை மற்ற கோள்கள் கவர்ந்து அலைகளாக அனுப்பப்படும் போது சூரியன் அதை எல்லாம் தனக்குள் கவர்ந்து முகப்பில் அந்த விஷத்தைப் பிரித்துவிட்டுத் தனக்குள் ஒளிக்கதிராக மாற்றி அமைக்கிறது.
1.பிறந்த குழந்தையும் அதைப் பார்க்கின்றது… ஆனால் சொல்ல முடியவில்லை.
2.தனக்குள் கவர்ந்து கொண்ட இந்த உணர்வுகளைச் சிரித்துக் கொண்டே பார்க்கின்றான் பல நிலைகளில்…!

அதே சமயத்தில் பிறந்த குழந்தை தனியாக இருந்தாலும் கொசுக்களோ விஷ வண்டுகளோ இவன் அருகில் வருவதில்லை.
1.இவன் உடலில் இருந்து வரக்கூடிய மணத்தை நுகரப்படும் போது அந்த வண்டுகளும் பூச்சிகளும் மயங்கி விழுகிறது.
2.விஷ ஜெந்துக்களோ மற்ற மிருகங்களோ அப்பால் விலகிச் சென்று விடுகிறது.
3.மயக்கத்திற்கு அஞ்சி எல்லாமே விலகி ஓடுகிறது.

குழந்தை உடலிலிருந்து நிகழ்த்தக் கூடிய இந்த நிலைகளை அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் பார்த்தபின் அவனைக் கடவுளின் பிள்ளை… கடவுளின் அவதாரம்…! என்றே எண்ணுகின்றனர்.

அந்த அகஸ்தியன் கண்ட உணர்வுடன் ஒன்றியே தான் உங்களை அங்கே அழைத்துச் செல்கிறேன் (ஞானகுரு). இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகும்.
1.இந்த நினைவுடன் மீண்டும் தியானிக்கும் போது அவர் கண்டதை…
2.நம் பூமியில் பதிந்துள்ள அந்த அகஸ்தியனின் உணர்வுகளை நுகர்ந்து அதைப் பார்க்க முடியும்
3.அகஸ்தியனின் அருள் ஆற்றல்களை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள இது உதவும்.

ஞான மார்க்கத்திற்கு வழி காட்டும் நிலையோ ஏற்கும் நிலையோ இன்று இல்லாது போய்விட்டது…! – ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இப்பொழுது மெய் ஞானத்தின் தத்துவத்தை யான் (ஈஸ்வரபட்டர்) தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

மாமரத்தில் மரம் முழுவதற்கும் எல்லாக் கிளைகளிலும் கனிகள் ஒன்றைப் போல் கிடைக்கப்படும் நிலையில் மனித ஆத்மாக்கள் ஒத்து வாழ்ந்த நிலை தான் முந்தைய காலங்களில் இருந்தது.

அது மாறி அரசன் என்ற ஒருவரின் கீழ் ஆதிக்கம் பெற்று குடிமக்களாக வழி வந்த வாழையின் நிலையில் ஒரு மரம் ஈனும் குலையில் பல பழங்கள் உள்ள நிலை போன்று வழி வந்தது.

அதுவும் மாறி இப்பொழுதைய நிலையோ பலா மரத்தை ஒத்த ஜாதியின் மரம் ஒன்று தான் அந்த மரத்தில் காய்க்கும் பலாப்பழத்தில் ஒவ்வொரு பழத்திற்குள்ளும் பல சுளைகள் அடக்கம் பெற்றுள்ள நிலை போல் ஜாதி என்ற ஐக்கியப் பிணைப்புடைய நிலையாக இருக்கின்றது.

அப்படி இருக்கும் இன்றைய காலகட்டத்தில் “மெய் ஞான விழிப்பு…” என்ற நிலையில் பேருண்மைகளைக் கூறினாலும் சுழன்று கொண்டேயுள்ள ரங்கராட்டினத்தை உடனே நிறுத்தும் பொழுது அது அப்படியே நிற்காது. ஓர் அசைவு பட்டுப் பின்னோக்கி முன் வந்து தான் அதை நிறுத்துவது போல் தான்
1.சுழன்று கொண்டுள்ள இந்தப் பிணைப்பான வழி முறை மாற்றத்திலிருந்து
2.நம் மனித ஆத்மாக்களை அவர்களின் எண்ணத் தொடரையே சிறுகச் சிறுக வழிப்படுத்தித்தான்
3.உண்மையின் ஸ்வரூபத்தை உணர்த்திக் காட்ட முடியும்.

ஆதிசங்கரரின் காலத்திற்குப் பிறகு… மனித ஆன்மாக்களை ஞான மார்க்கத்திற்கு வழிப்படுத்தும் யோக மார்க்கங்களும் பக்தி மார்க்கங்களும் மனிதனைத் தன் இச்சையில் வழிப்படுத்தும் நிலையிலேயே விட்டுவிட்டனர்.

பல மகான்கள் இந்த உலகிற்கு நல்வழி புகட்டப் பல வழிகளைச் செயல்படுத்தி வந்தாலும் ஈர்த்து எடுக்கும் பக்குவ குணமுள்ள மனித ஆன்மாக்களைச் செயலாக்குவது கடினப்பட்டுவிட்டது.

அதனால் தான் அந்த மகான்கள் தான் உணர்ந்த வழிகளை மட்டும் அனுபவக் கதையாக்கி கடைசியில் ஆண்டவன் என்றால் யார்…? என்று ஒரு ஞானத்தைப் புகட்டிவிட்டு இந்நிலை பெற மனித ஆன்மாக்கள் எந்த நிலை பெற வேண்டும் என்பதனை உணர்த்தாமல் சென்றுவிட்டனர்.

இவ்வளவு காலங்களுக்குப் பிறகு உம்மால் (ஈஸ்வரபட்டர்) உணர்த்தப்படும் நிலை என்ன…? என்ற வினா எழும்பலாம்.
1.இந்த நிலையை இப்பொழுது இங்கே உணர்த்துவது என்பது என் ஒருவனின் செயல் மட்டுமல்ல..!
2.இந்தப் பூமியில் அவதரித்து ஆண்டவனான சப்தரிஷிகள் பலரின் ஆவலை
3.இந்தப் பூமியின் ஆத்மாக்கள் உண்மை உணர்ந்து உயர போதனைகள் இங்கே அளிக்கப்படுகின்றன.

இதற்கும் வினா எழும்பலாம்… இப்பொழுது மட்டும் அது எப்படி என்று…?

1.எந்தச் சக்தி பரப்பப்பட்டதோ..
2.அந்த நிலையில் ஏற்றுக் கொண்ட நிலைப்பட்டவரினால்…
3.பலருக்கும் நிலைப்படுத்த இச்செயல் நடந்து வருகின்றது.

ஒவ்வொரு ஆத்மாவும் “தன்னுள் உள்ள ஜீவத் துடிப்பே தான் ஆண்டவன்…!” என்பதை உணர்ந்திடல் வேண்டும்.

அந்த ஜீவனுக்கு ஜீவன் தந்த காற்றும்.. ஒளியும்.. நீரும்… கொண்ட ஜீவ ஆண்டவன்களை ஜோதி கொண்டு வணங்கியே வழித் தொடர் பெறும் நடை முறைச் செயல்களை உணர்த்திடுவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எத்தனை கஷ்டப்பட்டிருப்பார்…? எத்தனை வேலைகளைச் செய்திருப்பார்…! அவருக்குள் விளைந்த உணர்வின் உணர்ச்சிகளைக் கவரும் ஞான வித்தாக எனக்குள் (ஞானகுரு) பதிவு செய்தார்.

அவர் வழியில் அதைச் செய்யப்படும் பொழுது அனுபவபூர்வமாகத்தான் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டேன். அதைத் தான் இப்பொழுது உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

துருவ நட்சத்திரத்தின் பேரளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள் என்றால் அது உங்களுக்குள் சென்று தீமையின் உணர்வுகளை அது கருக்கிவிடும்.

இதை உணர்த்துவதற்குத்தான் மாரியம்மன் கோவில்… காளியம்மன் கோவில்… அங்களேஸ்வரி கோவில்.. துஷ்ட தேவதைகள் ஆலயங்களில் எல்லாம் “அக்னி குண்டம்…” இறங்குவதற்கு வைத்திருப்பார்கள்.

கொடூரமான நிலைகளில் நாம்…
1.பயந்தோ
2.வெறுப்படைந்தோ
3.கோபப்பட்டுக் கொதித்தெழுந்தோ
4.அஞ்சி வேதனைப்பட்டோ நாம் சுவாசித்த உணர்வுகள் எல்லாம் நம் உடலுக்குள் அந்தச் சக்தியாக வளரப்படும் பொழுது
5.நம் நல்ல குணங்களை அது கொன்று கொண்டேயிருக்கும்.

அதனால் தான் காளிக்கு முன்னாடி புலியும் அங்களேஸ்வரி கோவிலில் ஒரு குழந்தையை மடியில் வைத்து தன் குழந்தையையே பிளந்து மாலையாகப் போட்டுக் கொண்டிருப்பதாகவும் காட்டியிருப்பார்கள்.

நல்ல குழந்தைகளைக் கருவுறும் இந்தத் தன்மையை அதாவது நல்ல அணுக்களாக உடலுக்குள் விளைவதைப் பிளந்து விடுவதை அப்படிக் காட்டுகின்றார்கள்.

சிலர்… மற்றவர்கள் நன்றாக இருப்பதைப் பார்த்து அங்கலாய்வார்கள்…! அவன் அப்படி வந்திருக்கின்றான்… இவன் இப்படி வந்திருக்கின்றான்.. என்ற இதைப் போன்ற உணர்வுகளை நுகரப்படும் பொழுது அது அங்களேஸ்வரி…!

அந்த அங்கலாய்ப்பு தான் வருகின்றதே தவிர…
1.நமக்குள் அந்த உயர்ந்த சக்திகளை
2.அவர்கள் வளர்ந்த முறையில் நாமும் வளர வேண்டும் என்ற இந்த எண்ணமே இங்கே வருவதில்லை.

அப்பொழுது நமக்குள் வளரும் அந்தச் சக்தியை நாமே பிளந்து அதனின் வளர்ச்சியைக் குன்றச் செய்து நாம் மாலையாகப் போடுவது போன்று ஆகின்றது. மாலை என்றால் நாம் வெளியிலே தான் போடுகின்றோம்.
1.இந்தத் தீமையை உருவாக்கும் உணர்வுகளைத்தான் நம்மால் வளர்க்க முடிகின்றதே தவிர
2.அந்த நல்லதைப் பெற முடியவில்லை.
3.அந்தத் தீமைகளை அகற்ற என்ன வேண்டும்…?

ஒரு தீமையைக் காண நேர்ந்தால்… உதாரணமாக ஒருவர் வேதனைப்படுகின்றார் பார்க்கின்றோம் அது மாறி அந்த வேதனையின் அணுக்கள் நம் உடலில் விளைகின்றது. ஏனென்றால் வேதனைப்படுவோரைக் கேட்டுணர்ந்த பின் தான் உதவி செய்கின்றோம்.

அந்த உணர்வை நாம் நுகர்ந்தால் அதே அணு நமக்குள் உருவாகின்றது. அந்த வேதனை அணுக்கள் உருவாகி விட்டால் அதே தன் தாயாக அந்த வேதனயை உருவாக்கும் அணுக்களைப் பெருக்குகின்றது.

அதைக் குறைக்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்குத்தான் விநாயகர் அருகில் அரச மரத்தை வைத்திருக்கின்றார்கள். பிரபஞ்சத்தில் ஏற்படும் நச்சுத் தன்மைகளை ஒடுக்கிய உணர்வை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக (அரசாக – அரச மரம்) இருக்கும் அதனின்று வரும் சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.

துருவ தியானத்தின் மூலம் உங்களுக்குக் கொடுக்கும் அந்தச் சக்தியின் துணை கொண்டு எப்பொழுது தீமைகளைப் பார்க்கின்றீர்களோ ஈஸ்வரா என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி உயிருடன் தொடர்பு கொள்ளுங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்றும் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று சிறிது நேரம் கண்களைத் திறந்து ஏங்கி நினைவை மறுபடியும் உங்கள் உயிருடன் ஒன்றுங்கள்.

அந்த அருள் சக்திகள் அனைத்தும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்களில் படர வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்துங்கள்.

அகஸ்தியன் நுகர்ந்த பல கோடித் தாவர இனங்களின் சக்திகளை நுகரப் பழகிக் கொள்ளுங்கள் (அகஸ்தியரின் அருள் மணங்கள்)

 

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்திய மாமகரிஷியை நினைவு கொள்ளுங்கள். அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற சக்திகளையும் அவன் பிறந்த பின் அவன் பெற்ற சக்திகளையும் பெற வேண்டும் என்று உங்கள் புருவ மத்தியில் எண்ணித் தியானியுங்கள்.

1.அகஸ்தியன் விண்ணின் ஆற்றலைத் தனக்குள் நுகர்ந்து
2.அந்த உணர்வின் அறிவாகத் தனக்குள் உருபெற்றதை
3.விண்ணிலிருந்து வந்த உணர்வலைகளைத் தனக்குள் வளர்ச்சி பெறச் செய்த அந்த முதல் நிலைகளை எண்ணி
4.அதைப் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியர் தாயின் கருவிலே பெற்ற சக்தி கொண்டு குழந்தைப் பருவத்தில் முதன் முதலில் விண்ணை நோக்கிப் பார்க்கும் போது சூரியனின் இயக்கத்தைப் பார்க்கின்றார்… கோள்களையும் நட்சத்திரங்களையும் பார்க்கின்றார்… அதை எல்லாம் தனக்குள் உணர்கின்றார்.

அன்று அந்த அகஸ்தியன் பார்த்த இந்தப் பிரபஞ்சத்தின் அதிசயங்களை நாமும் காண வேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் அந்தக் குழந்தைப் பருவத்தில் விண்ணின் ஆற்றலைக் கண்டு மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாக வெளிப்படுத்துகின்றான். அதை நீங்கள் நுகரும் போது
1.உங்கள் உடலிலே உள்ள அணுக்கள் அனைத்தும் ஒரு புத்துயிர் பெற்றது போன்று ஆகிறது
2.மகிழ்ச்சியான உணர்வுகள் உங்கள் உடல் முழுவதும் பரவும்
3.அதே சமயத்தில் அந்த அகஸ்தியனின் அருளாற்றல்கள் உங்கள் உடலில் ஊடுருவி
4.உங்கள் நெற்றியில் ஒளியின் சுடராகத் தெரிய வரும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அகஸ்தியன் உணர்வுகளைத் தனக்குள் விளையச் செய்து அந்த உனர்வின் அலையை எமக்குள் (ஞானகுரு) பாய்ச்சினார்.

அகஸ்தியன் பார்த்த விண்ணுலக ஆற்றலை எல்லாம் நம் குருநாதர் நுகர்ந்து இன்றும் அவர் ஒளியின் நிலையாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்,
1.அந்தக் குரு அருளின் துணையால்…
2.அகஸ்தியனின் உணர்வுகளை நீங்களும் பெறும் தகுதியை இப்பொழுது பெறுகின்றீர்கள்.
3.உங்கள் உடலுக்குள் அதை எல்லாம் உணரும் அறிவாகப் பதிவாகிறது.
4.அதனின் நினைவாக நீங்கள் எண்ணும் போதெல்லாம் அந்த மெய் ஞானிகளின் உணர்வைப் பெறும் தகுதியையும்… சக்தியும் பெறுகின்றீர்கள்.
5.உங்கள் புருவ மத்தியிலும் சரி… உடலுக்குள்ளும் சரி ஒளிக் கதிர்கள் பரவுவதை உங்களால் உணர முடியும்
6.நீங்கள் ஒளியின் சரீரம் ஆவது போன்று உணர்வீர்கள்.

அகஸ்தியன் குழந்தையாக இருக்கும் போது தன் தாய் தந்தையை உற்றுப் பார்க்கின்றான். தாய் தந்தையர் உடலில் அவர்கள் பூசிய அந்தப் பச்சிலை வாசனைகள் வருவதை அகஸ்தியன் நுகர்கின்றான்.
1.அதை இப்பொழுது நீங்களும் நுகர்ந்து இழுத்துச் சுவாசியுங்கள்.
2.உங்களுக்குள் அந்த மணங்கள் பரவி உங்கள் உடலில் உள்ள பிணிகளைப் போக்கச் செய்யும்.

அகஸ்தியன் அவன் நினைவைத் தன் தாய் தந்தையரின் பால் செலுத்தும் போது அவர்கள் உடலிலிருந்து வந்த மணங்களை நுகரும் போது அவன் மகிழ்ச்சியுற்ற உணர்வுகள் எவ்வாறோ அதைப் போன்று
1.உங்களுக்குள்ளும் அந்த மணங்கள் அனைத்தும் சென்று
2.உங்கள் உடலில் அறியாது சேர்ந்த கடும் தீமைகளை அடக்கும்
3.மகிழ்ச்சி ஊட்டும் உணர்வுகள் உங்கள் உடலில் பரவும்… அதைப் பார்க்கலாம்… உணரலாம்…!

நாம் மலைப் பகுதிகளில் செல்லும் போது ஆங்காங்கு இருக்கும் தாவர இனங்களின் மணங்களை நுகர்வது போன்று… அந்த அகஸ்தியன் சுவாசித்த அருள் மணங்கள் உங்கள் சுவாசத்தின் வழி உடலுக்குள் சென்று… “பல அற்புத மணங்களாக உங்கள் உடலிலே பரவும்…!” உங்கள் நினைவுகள் அனைத்தும் மகிழ்ச்சி பெறும்.

1.அண்டத்தின் அறிவைக் கண்டுணர்ந்து
2.அதன் அறிவின் தொடராக அகஸ்தியன் வெளிப்படுத்திய அந்த அறிந்துணரும் சக்திகளை அனைவரும் பெற்று
3.அகஸ்தியன் வழியில் அருள் ஞானம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா… என்று ஏங்கித் தியானியுங்கள்.

முதல் தடவையாக இந்த உணர்வுகள் உங்களுக்குள் கொடுக்கப்படுகிறது (ஞானகுரு). அகஸ்தியன் அருள் மணங்களை நுகர்ந்தால் எத்தகைய நஞ்சினையும் அடக்க முடியும்.

இன்றைய உலக மாற்றத்திலிருந்து நாம் தப்ப வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

இருட்டில் உள்ள பொழுது ஒரு வெளிச்சத்தைக் கண்டவுடன் மகிழ்கின்றோம். வெயிலில் உள்ள பொழுது நாம் நிழலுக்கு ஏங்குகின்றோம்.

ஆனால் இந்த நிலை பெற்ற பிறகு உண்மையின் நிலையிலேயே உள்ளோமா…? தன்னிச்சைப்படி இந்த வழித் தொடரின் வாழ்க்கையில் தான் உழன்று கொண்டுள்ளோம்.

அதே போல் நம் வாழ்க்கையில் பல நிலைகளை நம் உடலினுள் கூட்டிக் கொண்டுள்ளோம். இந்த நிலையை மாற்றி நம் ஒளியைக் காண முயல்கின்றோமா…?

கண்ணாடியின் தூசியை அகற்றித் தெளிவாக உருவைக் காணுகின்றோம்.
1.இந்த உடலில் உள்ள அசுத்த அலைகளையும் தீய எண்ணங்களையும் மாற்றி
2.நம்மின் உண்மை அழகைக் காண முயல்கின்றோமா…?

நம்மிடமுள்ள அசுத்த அலைகளை அகற்ற நாம் விழையாமல் “ஆண்டவன் வந்து தானாக அகற்றுவான்…! என்று ஆண்டவனை வேண்டி… அக அழகு காண முயல்கிறோம்…”

ஒரு செம்பில் உள்ள நீரில் அதற்கு மேன்மேலும் நல்ல நீர் ஊற்றும் பொழுது நல்ல நீரும் அசுத்த நீரும் கலந்து வெளிப்பட்ட பிறகு தானாக அனைத்தும் நல்ல நீராகி விடுகின்றது.

அதைப் போல் நமக்குள் உள்ள தீய அணுக்களை நாம் எடுக்கும் நல் உணர்வின் ஈர்ப்பினால்… மேன்மேலும் சேமிக்கப்படும் நல் உணர்வான அமில குணங்கள் அதிகப்படப்பட… இந்தத் தீய அணுக்கள் பல ரூபத்திலும் வெளிப்பட்டுவிடும்.

1.நம் உடலில் இரத்த நாளங்களில் ஆக்ரோஷமான ஆவி ஆத்மா ஏறியிருந்தாலும்
2.தீய அமில குணங்கள் வெளிப்படும் பொழுது
3.அதன் குண அமிலத்திற்குகந்த ஆகாரம் கிடைக்காத தன்மையில்
4.அதன் பாதிப்பான குணத் தூண்டுதலும் நம்மை ஒன்றும் செய்திடாது.

இந்த நிலையை உணர்த்தும் தத்துவ ஞானத்தை உணர்ந்து இந்த ஆத்மாக்கள் உயர்ந்தால் தான் சக்தி நிலை கூடும்.

உலக சக்தியும்… அண்டசராசரங்கள் என்று உணர்த்துகின்றனரே… அந்த அனைத்துச் சக்தியையும் உணர்த்த வல்ல சக்தி இந்த உலக ஆத்மாக்களுக்குத் தான் உண்டு.

மனித ஆத்மாவினால் முடியாத சக்தி எந்தச் சக்திக்கும் இல்லை…!

இதை உணர்த்தும் நிலை இந்த உலகம் நம் பூமியின் நிலை கூடிக் கொண்டேயுள்ளது. உலகச் சுழற்சியில் பல அமில சக்திகளை நம் உலகம் ஈர்த்துக் கொண்டே சுழன்றுள்ள நிலையில் உலகின் உள் நிலையில் உள்ள பல அமிலங்கள் வெளிப்பட்டு விட்டது.

1.இயற்கையாக வெளிப்பட்டது மட்டுமின்றி
2.மனிதனால் பூமியிலுள்ள பல பொக்கிஷத்தை ஈர்த்து எடுத்ததினால்
3.மேல் பாகம் கனத்தும் உள் நிலை வலுவிழந்தும் உள்ள நம் பூமியின் நிலை
4.இந்தக் குறுகிய காலப் போக்கில் தன் நிலையைத் தானாக ஒழுங்குபடுத்தும் நிலை வருகின்றது.

அப்பொழுது நம் நிலை எல்லாம் என்னவாகும்..?

அதனை உணர்ந்து இந்த உடல் என்ற கோளத்தை நம் நிலைக்குகந்த அமிலங்களைச் சேமித்து… நம் உயிராத்மாவிற்கு ஊட்டம் தந்து.. ஆத்ம ஞானம் பெறும் அறிவின் பொக்கிஷத்தின் வழித் தொடரை ஒவ்வொருவரும் உருவாக்குங்கள்… தப்ப முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நான் (ஞானகுரு) பேசுகிறேன் என்றால் காவிய நிலைகளிலிருந்து படித்துவிட்டுப் பேசவில்லை. குருநாதர் (ஈஸ்வரபட்டர்) காட்டி உணர்த்திய உணர்வின் நிலைகளிலிருந்தே குரு காட்டிய அருள் வழியில் இதை உபதேசிக்கின்றேன்.

1.உன்னுடைய நல்ல உணர்வின் தன்மை எப்படி மாறுபடுகிறது…?
2.அதனின் நிலை கொண்டு உடலின் நிலைகள் எவ்வாறு இயங்குகிறது..?
3.இதிலிருந்து நீ எப்படி மீள வேண்டும்…? என்ற நிலையைத்தான் காட்டுக்குள் அழைத்துச் சென்று காட்டினார்.

ஆரம்பத்தில் என் மனைவியை நோயிலிருந்து எழுப்பிவிட்டு ஒவ்வொரு உண்மையையும் நேரடியாகத் தான் செய்து காட்டினார்.

1.காட்டுக்குள் அச்சுறுத்தும் இடங்களிலேயும்…
2.பெரும்பகுதி என்னை சாக்கடை… நாற்றமான பொருள்கள் இருக்கக்கூடிய இடத்திலேயும்..
3.என்னைத் தனித்திருக்கும்படியான அச்சமடையைச் செய்யும் இடங்களிலும் தான் என்னைக் கொண்டு போய் வைப்பார் குருநாதர்.

அங்கே வைத்துத் தான் அவருடைய உபதேசங்களைக் கொடுப்பார் குருநாதர்.

மிருகங்கள் இருக்கக்கூடிய இடங்களைக் காட்டும் பொழுது அந்த அசுர உணர்வுகள் தாக்கப்படும் பொழுது உன் நினைவுகள் அங்கே அதன் வழி சென்றால் மெய்ப் பொருளை உன்னால் எப்படிக் காண முடியாமல் போகிறது..?

மெய் பொருளைக் காணும் நிலையில் நான் உனக்கு உபதேசித்தாலும்
1.நீ சுவாசித்த அச்ச உணர்வுகள் உனக்குள் அதை எப்படித் தடுக்கிறது…?
2.அப்பொழுது மெய்யை வளர்க்க நீ என்ன செய்ய வேண்டும்…?
3.அதை நீ எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்று தான் அங்கே வைத்துக் காட்டினார்.

அசுர சக்திகள் கொண்ட காட்டு மிருகங்கள் வாழும் இடங்களில் இந்த நினைவலைகளைப் போதிக்கும் பொழுது அவைகள் தன் உணவுக்காகத் தேடி வந்து.. தன்னைக் காத்திட.. தான் வாழ… அது என்ன செய்கிறது..? என்ற நிலையையும் காட்டுகின்றார்.

காட்டுக்குள் இருந்து நகருக்குள் வரும் பொழுது ஒரு சமயம் என்னைப் பொள்ளாச்சிக்குள் வரச் செய்தார் குருநாதர். பஸ் ஸ்டாண்டு அருகே வரும்போது வேகமாக வந்து கொண்டிருக்கும் பஸ்ஸுக்குக் குறுக்கே என்னை இழுத்துச் சென்றுவிட்டார்.

திடீரென்று அவர் விலகிக் கொண்டார். ஆனால்.. பஸ் நின்றுவிட்டது.

எப்படி “பிரேக்…” ஆனது..? என்று தெரியவில்லை. இல்லை என்றால் நாங்கள் இரண்டு பேரும் அங்கே சக்கரத்திலே நசுங்கியிருப்போம்.

அந்த மாதிரி இழுத்துக் கொண்டு போய் விபத்தில் அது எப்படி அந்த உணர்வுகள் இயக்குகின்றது…? என்று இயக்கிக் காட்டுகிறார்.

அதே சமயத்தில்…
1.ஒரு ரிமோட் கன்ட்ரோல் (REMOTE CONTROL) போல தன் சக்தியின் துணை கொண்டு
2.அது எப்படி பிரேக் போட வேண்டும்…? என்று என்னை பஸ்ஸுக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துத் தள்ளிவிட்டார் குருநாதர்.

அப்பொழுது பஸ்ஸில் பிரேக் எப்படி அணைக்கின்றது…? மனிதனின் உணர்வுகள் எண்ணங்களுக்கு அது எப்படி இருக்கின்றது…?

இயந்திரத்திற்குள் இருக்கக்கூடிய “மேக்னட்…!”
1.மனிதனின் உணர்வுகள் அவன் எண்ணி அங்கே பாய்ச்சப்படும் பொழுது
2.அதே உணர்வின் துணை கொண்டு இது எவ்வாறு பஸ்ஸை நிறுத்துகின்றது என்று இதை உணர்த்துகின்றார்.

ஏனென்றால் இதை எல்லாம் அனுபவபூர்வமாக எனக்குக் கொடுத்தார் குருநாதர்.

1.இதைப் போன்ற பல பல அனுபவங்கள் மூலமாகத் தீமைகளை நீக்கும் சக்திகளைப் பெற்று வளர்த்துத் தான்
2.உங்களுக்குச் சக்திவாய்ந்த ஆயுதமாக ஆத்ம சுத்தியை வாக்காகக் கொடுக்கின்றோம்
3.அதாவது வெறும் சொல்லாகச் சொல்லவில்லை…! “வாக்கு” என்ற சக்தியாகக் கொடுக்கின்றோம்

அகஸ்தியரின் ஆற்றலைப் பரிபூரணமாக பெறச் செய்யும் தியானப் பயிற்சி

 

அகஸ்தியர் அமர்ந்த இடத்தில் குரு காட்டிய நிலைகள் கொண்டு நான் (ஞானகுரு) அமர்ந்து தியானிக்கும் பொழுது அகஸ்தியன் கண்ட விண்வெளியின் ஆற்றலையும் மற்ற பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் அறிய முடிந்தது.

அன்று ஆதியிலே அகஸ்தியன் கண்டுணர்ந்த நிலைகளை அந்த மிக மிகச் சக்தி வாய்ந்த அந்த நிலைகளை குரு பலத்தால் நுகர்ந்தறிய முடிந்தது.

ஏனென்றால் மிக மிகச் சக்தி வாய்ந்த ஞானிகளினுடைய உணர்வின் சக்திகளை நாம் லகுவில் மதிப்பிட முடியாது. காரணம் சாதாரண மக்களின் பிடியில் சிக்காதபடி அவர்கள் விண் உலகம் சென்றவர்கள்.

விஷம் எப்படி மற்றொன்றை வீழ்த்துகின்றதோ அதைப் போல தீய விளைவுகளைச் சுட்டுப் பொசுக்கும் ஆற்றல் பெற்றவர்கள் தான் அந்த மெய் ஞானிகள்…!

அவர்களுடைய உணர்வை இந்தச் சாதாரண மனித வாழ்க்கையில் இருக்கும் நாம் பெற வேண்டும் என்றால் நம் நினைவலைகளைச் சுத்தமாக மாற்றிவிடும்… செயலற்ற நிலைகளாக ஆகிவிடும்….! நம்முடைய சாதாரண எண்ணத்தால் அதைக் கவர்ந்து இழுக்க முடியாது.

அரசர்கள் தங்கள் குழந்தைகளுக்கு விஷத்தை சிறுகச் சிறுகக் கொடுத்து அந்த விஷத்தின் தன்மையை உடல் முழுவதும் சேர்க்கச் செய்து அதன்பின் பெரும் கொண்ட விஷத்தைக் குடித்தாலும் தன் குழந்தைகளைப் பாதிக்காத வண்ணம் அன்று எப்படிச் செயல்படுத்தினார்களோ அதைப் போன்று தான் குருநாதரும் எனக்குள் அந்த மெய் ஞானிகளின் ஆற்றல்களை பெறும்படி செய்தார்.

முதலிலே அவர் உணர்த்தும் போது வேறோரு நிலையில் தான் எனக்குக் காட்டினார். பின்பு அதன் வழியில் சிறுகச் சிறுக என்னுடைய எண்ணத்தின் ஏக்கத்தை நிலைபடுத்தச் செய்து அகஸ்தியர் சென்ற இடங்களுக்கெல்லாம் மலைப் பிரகாரங்களில் சுற்ற வைத்தார்.

அகஸ்தியன் தனக்குள் விளைய வைத்த உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். இந்த ஸ்டேஷனை நீங்கள் வலுவாக்கிக் கொள்ளுங்கள்.

அகஸ்தியர் உணர்வைக் கவர்ந்தவர்கள் அனைவரும் இன்று மகரிஷிகள் ஆகிவிட்டார்கள் – நீங்களும் அவ்வாறு மகரிஷியாகலாம்.

1. அகஸ்தியர் தாய் கருவில் பெற்ற பல அற்புத சக்திகளையும் பச்சிலைகள் மூலிகைகளின் வாசனைகளையும் அருள் தாவர இனச் சத்துகளையும் நறுமணங்களையும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
2. தாய் கருவிலிருக்கும் போது நஞ்சையே ஜீரணித்து அடக்கிடும் சக்தியாக விளைந்த அகஸ்தியரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
3. அகஸ்தியன் பிறந்த பின் பிஞ்சு உள்ளத்தில் பெற்ற பிரபஞ்சத்தின் ஆற்றலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
4. அகஸ்தியன் தான் கண்டுணர்ந்தவைகளை தன் இன மக்கள் பெறவேண்டும் என்ற இச்சையில் வெளிப்படுத்திய மூச்சலைகளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
5. அகஸ்தியர் உணர்வுகள் அனைத்தும் எங்களுக்குள் பதிவாகி கருவாகி அணுவாகிட அருள்வாய் ஈஸ்வரா… அந்த அகஸ்தியன் சென்ற பாதையிலேயே நாங்கள் சென்றிட அருள்வாய் ஈஸ்வரா
6. வானஇயல் புவியியல் உயிரியல் மூன்றையும் அறிந்த அகஸ்தியரின் ஆற்றல் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
7. தன்னை அறிந்த… விண்ணை அறிந்த அகஸ்தியரின் ஆற்றலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
8. தன் எண்ணத்தை எங்கும் செலுத்தி எதனையும் அறிந்திடும் ஆற்றலை வளர்த்துக் கொண்ட அகஸ்திய மாமகரிஷியின் ஆற்றலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
9. எல்லாவற்றையும் வென்றிடும்… அடக்கிடும்… இயக்கிடும்… ஆற்றல் கொண்ட நட்சத்திரங்களின் ஒளிக் கற்றைகளை நுகர்ந்த அகஸ்தியரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
10. ஒளிக்கதிரில் நுண்ணிய அலைகளைப் பார்க்கும் ஆற்றலைப் பெற்ற அகஸ்தியரின் நுண்ணிய ஆற்றலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
11. மின்னலைப் போன்று எல்லாவற்றையும் ஊடுருவிச் செல்லும் அகஸ்தியருடைய நினைவாற்றல் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
12. அகண்ட அண்டத்தையும் தன் எண்ணத்தால் எட்டிப் பிடிக்கும் ஆற்றல் கொண்ட அகஸ்தியரின் அருளாற்றல் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
13. 27 நட்சத்திரங்களின் சக்தியை எடுத்து ஒளியாக மாற்றிய அகஸ்தியரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
14. விண்ணின் ஆற்றலைப் பஸ்பமாக்கிய அகஸ்தியரின் அருள் சக்தி நாங்கள் பெற்று என்றுமே அழியாத வேகா நிலை பெற அருள்வாய் ஈஸ்வரா
15. சர்வ ரோகங்களையும் சர்வ பிணிகளையும் சர்வ தோஷங்களையும் போக்கக் கூடிய அகஸ்தியரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
16. நஞ்சினை வென்றிடும் அகஸ்தியரின் அருள் உணர்வுகள் எங்கள் இரத்தங்களில் கலந்து அணுக்கருக்களாக உருவாகி நாங்கள் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
17. அகஸ்தியரும் அவர் மனைவியும் ஒன்றி வாழ்ந்த வாழ்க்கை நாங்கள் வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
18. நாங்கள் அனைவரும் அகஸ்தியரின் ஈர்ப்பு வட்டத்திலே என்றுமே இணைந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
19. நட்சத்திரங்களின் ஒளிக்கற்றைகளைச் சேர்த்து சேர்த்து உயிரைப் போன்று ஒளியாக மாற்றிய எத்தகைய நஞ்சையும் ஒளியாக மாற்றிடும் அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

இப்படி அகஸ்தியன்பால் கூர்மையாக நினைவாற்றல் செல்லும் பொழுது அவனின் உணர்வுகள் பதிவாவதும் அதை நுகரும் சக்தி பெறுவதும் உயிருடன் ஒன்றி உடலுக்குள் பரப்பும் சந்தர்ப்பம் உருவாகின்றது. இதன் மூலம் நாம் அனைவரும் ஒளி உடல் பெறுகின்றோம்.

நல்ல நேரத்தையும் காலத்தையும்… நாம் தான் உருவாக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

தீபத்திற்கு ஓ…ம் என்ற ஒலியின் உருவ எழுத்தினை மேல் வைத்து ஐம்புலனின் ஐக்கிய ஒளியை ஐந்து முகங்களாக்கி தீபமேற்றி வணங்கிட நம் முன்னோர்ககள் வழிப்படுத்திச் சென்றார்கள். ஒவ்வொரு முறைகளுக்கும் தத்துவ மையம் கொண்டே சகல நிலைகளையும் உணர்த்தினார்கள் அன்றைய சித்தர்கள்.

இப்படிப் பல முறைகளை உணர்த்தியும் வாழ்க்கை என்ற சுழலிலிருந்து ஞானம் பெறவும் அதற்குகந்த ஜெப முறையை வழிப்படுத்தியதை எல்லாம்
1.“அதற்குகந்த காலங்கள் வரட்டும்…!”
2.இப்பொழுது வாழும் இந்த வாழ்க்கை நிறைவுக்குண்டான வழி செயல் முற்றுப் பெற்ற பிறகு தான்
3.ஞான வழிக்கு நம் ஜெப நிலை செல்ல வேண்டும் என்று கால நிலையைக் கடத்தி
4.அதற்குகந்த காலத்தை ஏற்கும் நாளை எண்ணியே வாழும் காலத்தையே கடத்திவிடுகின்றனர்.

பசிக்கு உண்ணுகின்றோம். ஆனால் அதற்குகந்த காலம் வரட்டும் என்று காத்திருப்பதில்லை பசிப்பவன்…! அதே போல் எந்தச் செயலில் இருந்தாலும் எந்தச் சூழ்நிலையில் சிக்குண்டிருந்தாலும்
1.நம் உடலிலிருந்து வெளிப்படும் கழிவை வெளிப்படுத்த
2.அதற்குரிய “காலம் வரட்டும்…” என்று பொறுத்திருக்க முடிகின்றதா…?

உடலில் உள்ள அமிலத்தை உண்டு… கழித்தே… வாழும் நாம் அந்த உடலுக்குகந்த உயர் குணமுடைய அமில ஞானத்தைப் பெறுவதற்காக மட்டும் கால நிலையையும் வயது வரம்பையும் நீட்டி… வரும் நாள்.. என்று எண்ணிக் கடத்தி வருகின்றோம்.

இதனை உணர்த்தத்தான் எண்ண நிலையை ஒருநிலைப்படுத்திச் சாந்த குணத்தின் சக்தி அமிலத்தை ஈர்க்கும் ஜெப நிலையைப் பெறுங்கள் என்று சொல்கிறோம்.

அன்பு ஆசை என்ற பிணைப்பான நிலைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு அதி அன்பினால் வரும் வினையையும்… அதி ஆசை கொண்ட பேராசைக் குணத்தையும் வழிப்படுத்திடாமல்
1.இந்தத் தீய குணத்தின் ஆணிவேரை முதலில் சமப்படுத்தும் பக்குவத்தை ஏற்று
2.நம் ஆத்ம ஜெபம் இருந்திடல் வேண்டும்.

ஆண்டவனின் அன்பைப் பெற “அன்பே தெய்வம்.. அன்பே சத்தியம்…!” என்ற அன்பு வெறிக்கு அடிமைப்பட்டாலும் நம் ஆத்ம நிலை உயருவது கடினம்.

நம் எண்ணமெல்லாம்…
1.இந்த உலகுடன் கலந்துள்ள அலையில் உள்ள
2.நல் அலைகளை மட்டும் சேமிக்கும் பழக்கத்தைத்தான் மேற்கொள்ள வேண்டும்.
3.தீய அணுக்கள் என்று ஒதுக்கியும் வெறுத்தும்
4.”நான் நல்லவன்…” என்ற ஒரே வெறி கொண்ட நிலை பெற்றாலும்
5.நம் ஆத்ம நிலை வளருவது கடினம் தான்.

கலாச்சார அடிப்படையில் வந்த உணர்வுகளை விலக்கி ஞானிகளின் கலாச்சாரத்தினை நாம் கடைப்பிடிக்க வேண்டும். அதற்குத் தான் இதை எல்லாம் உணர்த்துகின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

வாழ்க்கையில் நாம் பிறருடைய நிலைகளைப் பார்க்கப்படும் பொழுது சந்தர்ப்பத்தால் ஏற்படக்கூடிய தவறான உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகிறது…? என்பதை நாம் அறிந்திட வேண்டும். (இது முக்கியம்)

அங்கிருந்து வந்தவுடனே… நீ மோசமான ஆள்..! இப்படிச் செய்தாய்… அப்படிச் செய்தாய்..! என்று ஒருவர் நம்மிடம் சொல்லும் பொழுது என்ன ஆகிறது…?

என்ன..? நம்மைப் பற்றி இப்படி எல்லாம் சொல்கிறான்…!
1.நான் ஒன்றுமே சொல்லவில்லை… ஆனாலும் இந்த மாதிரிச் சொல்கிறானே..! என்ற
2.இந்தக் கோப உணர்வுகள் வந்தவுடனே அவன் உணர்வுகள் நமக்குள் இயக்குகிறது.
3.இருடா… இரண்டிலே ஒன்று பார்க்கிறேன் பார்…! என்ற இந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து விடுகிறது.

ஆக… அவன் செய்யும் அல்லது சொல்லும் தவறான உணர்வை நாம் ஏற்றுக் கொள்ளப்படும் பொழுது
1.நமக்குள் (உடலுக்குள்) உள்ளே அது நின்று அணுவாக மாறி
2.அவன் நினைவை நமக்குள் கூட்டி
3.அந்த அணுக்கள் பெருக்கப்பட்டு
4.நம்மை எப்படிக் குற்றவாளி என்று முதலில் அவன் ஆக்கினானோ
5.அவனுடைய உணர்வுகள் நமக்குள் நின்று அதே குற்றவாளியாக ஆகிவிடுகின்றோம்.

அதாவது…
1.அவன் சொன்னபடி அவன் உணர்வை நாம் ஏங்கி எடுக்கும் பொழுது
2.நமக்குள் (தவறாக) அதுவாக மாறிவிடுகின்றது.

இதெல்லாம் எப்படி…? என்றால் இதைப் போன்ற நிலைகளை எல்லாம் இன்று கண்கூடாகப் பார்க்கலாம். இன்றைய அரசியலில் எப்படியெல்லாம் வேஷங்கள் போடுகிறார்கள் என்று…!
1..நேற்று வரையிலும் எதிரியாக வைத்துப் பேசுவார்கள்
2.ஆனால் இன்றைக்கு அதையே வித்தியாசமாக மாற்றுவார்கள்.

ஆகவே இதைப் போல உணர்வுகள் கலந்து கலந்து வாழ்க்கையிலே எத்தனையோ விதமான உணர்வுகள் அங்கே படுகின்றது.

எப்படி இருந்தாலும் அவர்கள் கலந்து கொண்ட உணர்வுகள் இந்த உடலின் இச்சைக்குத்தான்…! ஆக
1.இந்த நாட்டையும் காக்க முடியாது
2.வீட்டையும் காக்க முடியாது…
3.தன்னையும் காக்க முடியாது.

அரசியல் பேதம் கொண்டு பேருக்கும் புகழுக்கும் வேண்டும் என்றால் இவர்கள் ஆட்டம் ஆடலாம். இந்த உடலுக்குப் பின் என்ன ஆகிறது…! என்று இத்தனை நிலையும் அவருக்குப் புரியாத நிலைகளில் கடைசியில் மடிந்து விடுகின்றனர். பிறரிடத்தில் இடும் சாப அலைகளும் பாவ அலைகளும் அவருக்குள் ஊடுருவி இயக்கிவிடும்.

இன்று மனிதனாக இருப்பினும் பிறரை எளிதில் சிரமப்படச் செய்வோர் வேதனைப்படச் செய்வோர் அனைவரையுமே இந்த உடலுக்குப் பின் அசுர உணர்வு கொண்ட மிருகங்களாக இந்த உயிர் உருவாக்கிவிடும்…! என்ற நிலைகளை யாரும் மறந்திட வேண்டாம்.

ஒவ்வொரு நொடியிலேயும் பிறருக்குத் தீங்கு செய்யும் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால்
1.நாம் நுகர்ந்த உணர்வுகள்
2.நம் உடலுக்குள் நல்லவைகளைக் கொன்று குவிக்கும் தீய அணுக்களாக உருவாகி
3.மீண்டும் நம்மை நரகலோகத்தைச் சந்திக்கும் நிலைகளுக்கு அனுப்பி விடுகின்றது.

இதை எல்லாம் மாற்றிடத் தான் அந்த இயற்கையின் உண்மையின் உணர்வுகளை “அது எப்படி வளர்ந்தது…? எப்படி இயக்குகிறது…?” என்ற நிலைகளை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மெய் ஞானிகளின் உணர்வுகளை ஊழ்வினை என்ற ஞான வித்தாக உங்களுக்குள் மீண்டு மீண்டும் பதிவு செய்து கொண்டே வருகின்றோம் (ஞானகுரு).

தேடிய செல்வத்தை வைத்து வைத்தியம் பார்த்து உடலைக் காத்தாலும்… “உயிரான்மாவை ஒளியாக மாற்ற வேண்டும்”

 

உதாரணமாக நாம் வாழும் இந்த மனித வாழ்க்கைக் காலங்களில் வேதனை என்ற அணுக்கள் நம் உடலில் வளர்ச்சி அடைந்தால் கடுமையான நோய்களும் அதனால் மேலும் மேலும் வேதனை அதிகரிக்கின்றது.

1.தேடிய செல்வம் எத்தனையோ இருப்பினும்…
2.வைத்தியத்திற்குச் செலவழித்து உடலைப் பாதுகாத்தாலும்
3.உடலில் விளைந்த உணர்வுகள் கடைசி நிலை எதுவோ
4.அதன் வழி இந்த உயிர் அழைத்துச் சென்று வேறொரு உடலாக மாற்றிவிடும்.

ஆகவே இந்த உடலில் இருக்கும் பொழுதே துருவ நட்சத்திரத்தின் பேரருளை வளர்த்துப் பிறவி இல்லா நிலை அடைவதே கடைசி எல்லை என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் அதை எண்ணி எண்ணி வேதனைப்படுவதோ… அல்லது தன்னைச் சார்ந்தோர் வேதனைப்படுவதை அடிக்கடி நுகர்ந்தாலோ… அதை எல்லாம் தூய்மைப்படுத்தவில்லை என்றால் தீய அணுக்களாக மாறி உடலில் நோய்களாக மாறிவிடும்.

ஆகவே ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் இதைப் போன்ற கஷ்டங்களோ நஷ்டங்களோ அது எது வந்தாலும்… உடலுக்குள் அதை வளர விடாது தடுக்கும் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

தடுக்க வேண்டும் என்றால் கார்த்திகேயா… என்ற ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளை நுகர வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளைப் புருவ மத்தியில் இருக்கும் நம் உயிரில் அடிக்கடி இணைக்க வேண்டும்.

1.கண் வழியாக அந்த அரும் பெரும் சக்திகளைக் கவர்ந்தாலும்
2.கண்ணின் நினைவை உயிரிலே இணைக்கப்படும் போது
3.உயிர் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஈர்க்கும் திறன் வருகிறது
4.அப்பொழுது மூக்கின் வழி செல்லும் தீய உணர்வுகளை அது தடைப்படுத்துகின்றது.

அதற்குப்பின் கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைச் செலுத்தப்படும் போது அதுவும் வலுப் பெறுகிறது.
1.அப்பொழுது நம் உடலுக்கு முன் முகப்பில் உள்ள
2.விஷத் தன்மைகளைத் தூர ஒதுக்கிச் செல்ல… அங்கிருந்து வெளியே தள்ளி விடுகின்றது.
3.நமது ஆன்மா தூய்மை ஆகிறது.

அதே சமயத்தில் நம் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆன்மா… ஒரு வட்டம் உண்டு. அந்த ஜீவான்மாக்களும் அப்போது சுத்தமாகிறது.

இப்படி ஒரு பயிற்சி நமக்குள் வளர்ந்துவிட்டால்…
1.உயிரைப் போன்றே நாம் நுகரும் உணர்வின் தன்மைகளும்
2.ஒளியின் அறிவாக அந்த அணுக்கள் வளர்ச்சி பெறும் சக்தி பெறுகின்றது.

அதாவது… உயிருடன் இணைந்து ஒளி என்ற ஆறிவு எப்படி இருந்ததோ… அதன் அறிவின் தன்மை பெற்ற அணுக்களை இப்படிச் சிறுகச் சிறுக மாற்றி… இந்த உடலுக்குப் பின் நாம் ஒளியின் சரீரமாக மாறுவதே கடைசி நிலை.

அந்த நிலைக்கு வரும்போது..
1.நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தோமோ
2.அதனின் ஈர்ப்புக்கே உயிர் நம்மை அழைத்துச் சென்று விடும்.

பிறர் சொல் நம்மை எந்த வகையிலும் அப்படியே இயக்கக்கூடாது – ஈஸ்வரபட்டர்

 

தியான நிலை பெறுங்கள்.. நல் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்… என்றெல்லாம் வழிப்படுத்துகின்றோம். அந்த நிலையில் நம் எண்ணக் கலவை வழிப்படுத்திக் கொண்டு வரும் நிலையில்
1.நம்மை அறியாமல் பிறர் செய்யும்
2.அவர் எடுத்த அமில குணத்தை ஒத்த அலைகள் நம்மை மோதுண்ட நிலையில்
3.அதே சமயத்தில் மற்றொருவர் செய்யும் தவறை இவர் சுட்டிக் காட்டும் பொழுது
4.இவரின் நிலையான அமில மோதலின் நிலையால்
5.பல நாட்கள் நாம் நம்முடன் மோதுண்ட அலைகளை அடக்கிப் பழக்கப்பட்ட நிலையில்
6.மற்றோரின் சொல்லிலிருந்து வெளிப்படும் எந்தக் குண எதிர்நிலை மோதலும் நம்மைச் சாடி
7.”அதே உணர்வுடனே நம்மையும் பேசச் செய்யும்…!”

நாம் பெற்ற ஜெபத்தின் வலு என்ன ஆயிற்று…? எங்கே போனது…?

முதலில் நம் நிலையில் பிறரின் சொல் எண்ணத்தைக் கொண்ட அமிலத்திற்கு அடிபணியலாகாது. பல நாள் நமக்குகந்த குணமுடன் வாழ்ந்த நிலையில்
1.ஒருவர் வந்து மற்றொருவரின் மேல் சொல்லப்படும்
2.எந்த நிலை கொண்ட சொல்லின் அமிலங்கள் நம்மிடம் சொல்லும் பொழுதும்
3.நாம் அவர் சொல்லும் நிலையை வைத்து… “நம் எண்ணத்தைச் சிதறவிடலாகாது…!” (இது முக்கியம்)

ஆத்ம ஞானம் பெறும் வழித் தொடரில் பல நிலைகள் உள்ளன.

ஒவ்வொரு தடவை நாம் சுவாச நிலை எடுத்து வெளிப்படுத்தும் நிலை கொண்டு “அதன் எண்ணத்தை ஒத்த அமிலத் தன்மை உராய்ந்து கொண்டே தான் உள்ளது…” என்பதனை உணர்ந்து நம் ஆத்ம ஞானம் இருந்திடல் வேண்டும்.

தன் ஆத்மாவுக்குகந்த உயர் ஞானத்தைப் பெற இன்றைய கலியில் உள்ள ஆத்மாக்களில் வழி பெறும் பக்குவம் இந்த நாகரீக உலகில் மிகவும் குறைந்து விட்டது. இன்று உணர்த்தப்படும் முறையும் ஏற்கப்படும் வடிவிலில்லை.

1.தன் உண்மை நிலையைத் தான் உணர்ந்தால்
2.தன் உயிராத்மாவின் நிலை உயரும்… ஒளிரும்…! என்ற வழித் தொடர் பெற்றே ஜெப நிலை கொள்ளுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

உதாரணமாக வெளியிலே சண்டை போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். சண்டை போடுவதைப் பெண்கள் நீங்கள் வேடிக்கை பார்த்து விட்டு வந்து சமையல் செய்தால் என்ன ஆகும்…?

இந்தக் கார உணர்ச்சியால் இரண்டு மிளகாயை அதிகமாகப் போடச் சொல்லிவிடும். அப்புறம் அந்தக் குழம்பை ஊற்றிச் சாப்பிடும் பொழுது நாம் காரமாக இருக்கிறது என்று பேசாமல் அடக்கிச் சாப்பிட்டுக் கொள்கிறோம்.

தெரியாமல் மிளகாயைப் போட்டதால் குழம்பு அதிகமாகக் காரமாக இருக்கிறது என்று நம்மிடம் கேட்டவுடனே
1.அந்தக் கார உணர்ச்சி (சண்டையைப் பார்த்த உணர்வு) கொண்டு என்ன சொல்வீர்கள்…?
2.ஏதோ தவறிப் போனது என்று சொன்னாலும்…
3.என்றைக்கும் வைக்கிற மாதிரித்தானே இன்றும் வைத்தேன்
4.உங்களுக்குத் தான் எதை வாயிலே வைத்தாலும் இப்படிக் காரமாகத் தெரிகிறது..! என்று
4.கணவனிடம் சொன்னால் அங்கே வம்பு வந்தாயிற்று.

ஆனால் அதே சமயத்தில் சண்டை போடுபவரைக் கணவன் பார்த்துவிட்டு வந்தால் என்ன ஆகிறது…?

வீட்டில் வந்து சாப்பிட உட்காரும் பொழுது அந்த எரிச்சலான உணர்வு நாக்கிலே இருக்கும். முதலில் ஒரு வாய்ச் சாப்பாட்டை எடுத்து வைத்தவுடனே எரிச்சல் வரும். “என்ன நீ குழம்பை இப்படி வைத்திருக்கிறாய்…?” என்ற சண்டை வரும்.

இது எல்லாம் இந்த உணர்வுகள் நாம் நுகர்ந்ததற்கொப்ப எப்படி இயக்குகிறது…? என்ற நிலையை நாம் அறிந்து கொண்டால் போதும். ஏனென்றால்…
1.நம் வாழ்க்கையில் நம்மை அறியாமலே நுகர்ந்தது எப்படி இயங்குகிறது..?
2.அதை நாம் அதிகமாகத் திருப்பி எண்ணும் பொழுது அந்தத் தீய அணுக்கள் கொண்டு நமக்குள் எப்படித் தீமைகள் வருகின்றது….?
3.அவ்வப்பொழுது அதைத் துடைக்கத் தவறினால்
4.நம் உடலில் எத்தனை தீங்குகள் விளைகிறது…? என்பதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தத் தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்பவர்களுக்குக் கோபம் வருகிறது என்றால் உடனே அதை மாற்றிக் கொள்கிறீர்கள்.
1.மாற்றத் தெரிந்தவர்கள் இந்தக் கோபத்தை விடாதபடி
2.அதை எப்படி எப்படிச் சமாளிக்க வேண்டும்..? என்ற ஞானம் உடனே வந்துவிடுகிறது.

இல்லாவிட்டால் சில குடும்பங்களில் பார்த்தோம் என்றால் ஒரே சண்டையாக இருக்கும். அப்புறம் அந்த உணர்வு வந்த பிற்பாடு அடுத்து… அதைப் பஞ்சாயத்துச் செய்தார்கள் என்றாலும் அவர்களுக்கும் “சரி பாதி” இது போகும்.

உங்கள் பிழைப்பே எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான் இருக்கும்..! என்பார்கள்.

அவரும் அந்தச் சலிப்பாக எடுத்துவிட்டு கொஞ்ச நேரம் கழித்து வீட்டுக்குச் சென்றால் அங்கே அவர்கள் வீட்டிலும் இதே சண்டை வரும். இதே உணர்வுப்படி தான் வரும்.

பஞ்சாயத்துச் செய்யும் குடும்பங்களில் எல்லாம் நீங்கள் பார்க்கலாம்.

இந்த உணர்வுகளைத் தனக்குள் எடுத்து வீட்டில் இரண்டு தரம் இவர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால்
1.நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்
2.உன் பிழைப்பே இப்படித்தான் இருக்கிறது..! என்று சொல்லிச் சண்டை போடுவார்கள்.

ஏனென்றால் நுகர்ந்த அந்தத் தீமையின் உணர்வுகள் தான் நம்மை இயக்குகிறதே தவிர நாம் இயங்கவில்லை.

ஆகவே நம்மை எது இயக்குகிறது..? என்ற நிலைக்குத் தான் அந்தச் சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் கலக்கச் செய்கிறோம்.

இங்கே உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது உங்கள் எண்ணங்கள் கூர்மையாக இதைக் கவர்ந்து ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டால்
1.அதிகாலை துருவ தியானத்தில் அந்தச் சக்திகளைப் பெறுவதற்கு உங்களுக்கு ஏதுவாக இருக்கும்.
2.அப்பொழுது இந்தப் பதிவின் தன்மையை மீண்டும் எண்ணும் பொழுது அது உங்களுக்குக் கிடைக்கும்.

ஒருவர் வேதனைப்படுகின்றார் என்றால் கேட்டறிகின்றோம். அறிந்த பின் அடுத்து என்ன செய்ய வேண்டும்..?

அந்த உணர்வு தனித்து நம் உடலிலே விளைந்து விடக்கூடாது. மிளகாய் தனியாக இருக்கிறது. எடுத்துத் தனியாகச் சாப்பிட்டால் நம் வாயிலிருக்கும் எச்சில் எல்லாம் காணாமலே போய்விடும்.

ஆனால் அதே மிளகாயைக் குழம்பிலே சீராகப் போட்டு இணைத்தவுடனே அந்த உணர்ச்சிக்குத் தகுந்த மாதிரி எச்சில் உமிழ் நீர் அதிகமாகச் சுரக்கின்றது.

1.தனித்த மிளகாய் உமிழ் நீரைக் காணாது ஆக்குகிறது.
2.மற்ற பொருளுடன் சேர்க்கப்படும் பொழுது உமிழ் நீரைச் சுரக்கச் செய்து அந்தச் சுவையை ஊட்டுகிறது.

இப்படி வேதனைப்படுகிறாரே…! என்று அதை எண்ணி விட்டால் நாம் அதுவாக ஆகின்றோம். தனித்த மிளகாயைச் சுவைத்த உணர்வு போன்று தான் வரும்.

ஆகவே குழம்பிலே அதைப் போட்டு எப்படிச் சுவையாக மாற்றிக் கொள்கிறோமோ இதே போல் தீமையான உணர்வுகளை நுகர்ந்த பின் அதனின் வலிமை நமக்குள் போகாது துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துத் தடுத்துக் கொள்ளுங்கள்.

அதற்குத்தான் இந்தப் பயிற்சி..!

ல்ல குணங்களைப் பாதுகாக்கும் வலிமையான சக்தியை நாம் நேசிக்கின்றோமா…?

 

நாம் வேலை அதிகமாகச் செய்தால் குளிக்காமல் படுக்கப் போவதில்லை. துணியில் அழுக்குப்பட்டால் துவைக்காமல் அதைப் போடப் போவதில்லை. கையில் அழுக்குப்பட்டால் கழுவாமல் நாம் உணவு உட்கொள்ளப் போவதில்லை.

இதைப் போன்று தான் ஒவ்வொரு நிமிடத்திலும் பிறர்படும் தீமைகளைக் கேட்டால் நம் ஆன்மாவில் படும் அத்தகைய அழுக்கினைத் துடைக்க வேண்டும்.

1.ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணி
2.“மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்…” என்று
3.நம் கண்ணின் நினைவினை விண்ணிலே செலுத்தி அதைக் கவர்ந்து
4.உள்முகமாக உயிர் வழியாகக் கொண்டு வந்து ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்.
5.இப்படிச் செய்தால் இது நல்லதைச் சிந்திக்க இடம் கொடுக்கும்.

ஆனால் சிந்தனையற்ற செயலை ஒருவன் செய்கிறான்… நாம் பார்க்க்கின்றோம். அதனால் வரும் எதிர்ப்பு உணர்வையோ வேதனைப்படும் செயலையோ நாம் நுகர்ந்து விட்டால் அடுத்து ஒரு வேலையைச் செய்தால் என்ன ஆகும்…?

ஒரு கணக்கைப் பார்த்தோம் என்றால் கிடக்குது போ…! என்று இந்த உணர்வு தான் வரும்… சரியாக வராது. அந்த வேலையை வெறுக்கும் நிலை தான் வரும்.

அதே சமயத்தில் வெறுப்பால் அந்த வேலையைச் செய்யவில்லை என்றால் மேலதிகாரி வந்தவுடனே “ஏம்பா…? இந்த வேலையைச் செய்யவில்லை…!” என்று சொன்னவுடனே வேதனையான உணர்வு நமக்குள் வரும்.

காரணம்… சந்தர்ப்பம் இவ்வாறு இயக்குகிறது.

இதைப் போன்ற நிலைகளை
1.நாம் உடனுக்குடன் தூய்மைப்படுத்தினால் தான் சிந்தனையும் நிலைக்கும்
2.நம் செயல்களும் சீராக இருக்கும்.

ஆகவே இந்த வாழ்க்கையில் எந்தத் தீமைகளைக் கண்டுணர்ந்தாலும் அடுத்த கணமே ஈஸ்வரா… என்று இங்கே புருவ மத்தியில் வேண்ட வேண்டும்.
1.மனிதால் மட்டும் தான் இப்படி எண்ண முடியும்.
2.மற்ற உயிரினங்கள் எதிரிகளைப் பார்த்தால் அதனின்று தப்பிக் கொள்ளத் தான் எண்ணும்
3.விண்ணை நோக்கி எண்ணும் நிலை இல்லை.

உயிரினங்களில் தன்னைப் பாதுகாக்கும் உணர்ச்சிகள் வளர்ச்சியாகி வளர்ச்சியாகி… அதிலே விளைந்த உணர்வு தான் “ஒட்டு மொத்தமாக” நம்மை மனிதனாக உருவாக்கியுள்ளது நம் உயிர்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் எடுத்து இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை நாம் அகற்றுதல் வேண்டும்.

இதைத் தான் கார்த்திகேயா…! என்று சாஸ்திரப்படி காட்டுகிறார்கள். சாதாரண மக்களும் புரிந்து கொள்வதற்கு வள்ளி திருமணத்தையும் காட்டுகின்றனர்

ஏனென்றால் வள்ளியை முருகன் காதலிக்கின்றான்.
1.இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு
2.வலிமைமிக்க சக்தியான அந்தப் “பாதுகாக்கும் சக்தியை” தனக்குள் நேசிக்க வேண்டும்.

முருகு… மாற்றி அமைக்கும் உடல் பெற்றவர்கள் நாம்.
1.நம் ஆறாவது அறிவைத் தான் முருகன் என்றும்
2..தன்னைப் பாதுகாக்கும் அந்தச் சக்தியை நீ நேசிக்க வேண்டும் என்றும் காவியப் படைப்பு வருகின்றது.

நம்மைப் பாதுகாக்கும் உணர்வை நாம் நேசித்தோம் என்றால் மனிதனாக வளர்ந்த நிலையில் அந்த ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துகின்றோம் என்று பொருள்.

நம்மை ஏசுவோரையோ கேவலப்படுத்துவோரையோ நாம் எண்ணினோம் என்றால் அந்த உணர்வுகள் உடலுக்குள் அணுக்களாக விளைந்து நம் உடலை உருவாக்கிய நல்ல அணுக்களை அது தின்றுவிடும்.

வேதனைப்படும்படி ஒருவர் சொன்னார் என்றால் அந்த உணர்வின் சக்தி நமக்குள் வந்து நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை அது தின்றுவிடும். பார்க்கலாம் டி.பி. வந்தால் எலும்புகளை எல்லாம் அது தின்கிறது.

அதை எல்லாம் மாற்றுவதற்குத் தான் நம்மைப் பாதுகாக்கும் உணர்வினை எடுக்கும்படி காவியப் படைப்புகள் உணர்த்துகின்றது.

1.மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்தும் உணர்வுகளை நுகர்ந்தால் அது நம்மைப் பாதுகாக்கும் சக்தியாக வருகிறது.
2.அந்த அருள் உணர்வுகள் உடலுக்குள் சென்ற பின் உயிர் அதைத் தெய்வ ஆணையாக
3.நமக்குள் அந்தக் காத்திடும் தெய்வமாக… தெய்வச் செயலாக நம் உடலை இயக்கும்.

தீமைகளிலிருந்து விடுபடுகிறோம்.. அருள் சக்திகளையும் பெறுகின்றோம்… அது பெருகப் பெருக பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்கு அடுத்த நிலையான ஒளிச் சரீரமும் பெறுகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நீங்கள் நல்ல குணத்துடன் தான் இருக்கின்றீர்கள். ஆனால் சந்தர்ப்பத்தில் பகைமையாகி அதனால் வேதனையான உணர்வை நுகர்ந்த பின் உங்கள் மனதிற்குள் என்ன நடக்கிறது…?

உள்ளுக்குள் மனப் போராட்டமாகி (மனதிற்குள்) சண்டை போட்டுக் கொண்டு மேல் வலிக்கிறது… தலை வலிக்கிறது… என்று சொல்வீர்கள்.

அப்பொழுது உங்களுக்குச் சரியான சிந்தனை இல்லை. ஒரு வேலையின் நிமித்தமாக உங்கள் பையனைக் கூப்பிடுகின்றீர்கள். கூப்பிட்டதும் அவன் வரவில்லை என்றால் “கூப்பிடுகிறேன் பார்… உடனே வர மாட்டேன் என்கிறானே…!” என்ற இந்த உணர்வு தான் வரும்.

கடையில் உட்கார்ந்து வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றீர்கள். வியாபாரம் நன்றாக இருக்கும் இடத்தில் முதலில் சொன்ன மாதிரி மனதில் கொஞ்சம் வெறுப்பாகி விட்டால் என்ன நடக்கிறது…?

கடைப் பையனைக் கூப்பிட்டு இந்தச் சரக்கை எடுத்து வா… என்று சொன்னாலும் அவன் வரவில்லை என்றால் “நான் சொல்லிக் கொண்டேயிருக்கின்றேன்… உனக்கு என்ன காது கேட்கவில்லையா…?” என்று இப்படிக் கேட்டு இந்த வம்புக்குப் போவோம்.

அந்த உணர்வுகள் “தாங்கவில்லை” என்றால் “நாம் சொன்ன சரக்கை அவன் எடுத்துக் கொண்டு வரட்டும்…!” என்று பொறுமையாக இருக்க முடியாது. “தான் சொன்னதை அவன் ஏன் செய்யவில்லை…?” என்ற வேகம் தான் வரும்.

நாம் சொன்ன நேரத்தில் அவன் வேறு ஒரு சரக்கைக் கட்டிக் கொண்டிருப்பான். அதைப் பார்த்ததும் ஏம்பா…! நான் சொல்வதைக் கேட்கவில்லையா…? என்று அழுத்தமான சொல் வரும்.

ஏனென்றால் இந்த உணர்வுகளின் இயக்கங்கள் எப்படி…? என்ற நிலையை அறிந்து ஒவ்வொரு நொடியிலேயும் நாம் எதை எப்படிச் செய்ய வேண்டும்..? என்று தெளிவாக உணர்தல் வேண்டும்.

1.மாறுபட்ட எண்ணங்கள் நமக்குள் வரும் பொழுதெல்லாம்
2.நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று
3.உடலுக்குள் அதைச் செலுத்தி ஆத்ம சுத்தி செய்தால் “அவன் ரிஷியின் மகன் நாரதனாகின்றான்…!”

மனிதனின் வாழ்க்கையில் தீமைகளை அகற்றிடும் சக்தியாக அவன் உருவாக்கிக் கொண்டவன். அந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்தால் அது நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன். (சூரியன் என்றால் நாராயணன்)

அவன் (சூரியன்) எப்படி உலகை இரட்சிக்கின்றானோ அதே போல் சூரியன் கவர்ந்து வைத்திருக்கும் மகரிஷிகளின் உணர்வின் தன்மையைக் கவர்ந்தால்
1.இரட்சிக்கும் அலைகளாக அந்த உணர்வின் இசைகள் நம்மை நல் வழிக்கு மாற்றும்.
2.அதனால் தான் நாரதன் கையில் இசைக் கருவி இருக்கும்.
3.அது சுழன்று சீராகினால் இங்கே மகிழ்ச்சியின் தன்மை வந்து அறியாது வந்த இருளைப் போக்குகின்றது.

சரஸ்வதி கையில் என்ன இருக்கிறது…? வீணை. ஒவ்வொரு உணர்வின் மணமும் அந்த இசையை ஊட்டுகின்றது. எதனின் குணமோ அதனின் ஞானமாக அது இயக்கும். அந்த உணர்வினை ஒளியாக அது இயக்கும். உணர்வை அது ஊட்டும்… உணர்வை அது வளர்க்கும்…!

1.அதைத் தான் இங்கேயும் சுருதி ஏழு…. அங்கேயும் சுருதி ஏழு…! என்று போட்டுக் காட்டியிருப்பார்கள்.
2.ஆறாவது அறிவு ஏழாவது நிலை பெறுவது.
3.ஞானத்தின் தன்மை ஏழாவது நிலை அடைந்தவன் துருவ மகரிஷி… துருவ நட்சத்திரம்…!

இதை எல்லாம் கேட்டுக் கொண்டே இருந்து விட்டு சாமி (ஞானகுரு) நன்றாகச் சொன்னார் என்று விட்டுவிடாதீர்கள்…! சொன்ன முறைப்படி அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

அருளைப் பெருக்கி இருளை அகற்றும் சக்தியாக உங்களுக்குள் வளர்க்க வேண்டும். உங்கள் சொல்லைக் கேட்போர் வாழ்விலும் அவர்கள் இருள் நீங்க வேண்டும்.

என்றுமே அழியாத வாழ்க்கையாக நாம் எப்படி வாழ்வது…? – ஈஸ்வரபட்டர்

 

புண்ணிய ஸ்தலம் என்பது கோவில்கள் தான்…!

1.அந்தப் புண்ணிய ஸ்தலத்தில் உள்ள மூலவர் உருவினிலே
2.அந்த ஸ்தலத்தை நினைத்து எங்கிருந்தாலும் எவன் ஒருவன் வேண்டுகிறானோ
3.அந்த நிலைக்கு அவனுக்கு அருள் புரிகின்றான் அங்கே அமர்ந்துள்ள மகான்.

புண்ணியம் எய்தி… பிறந்த பயனை தன் ஜெப நிலையால் தன் நிலையை ஜோதி நிலையாக்கி… அவன் ஸ்தாபிதம் செய்த சிலையில்… தன் ஜீவனை அந்த சிலையின் ஜீவனாக்கி… எண்ணுபவர்களுக்கெல்லாம் அவ்வெண்ணத்தின் வழியினிலே வழியமைக்கின்றான் அந்த மகரிஷி ஜோதி நிலையில்…!

ஆண்டவன் என்பவன் யார்…? என்று பல முறை கேட்டுள்ளேன், ஆண்டவன் என்பது இப்பொழுது புரிந்ததா…?

1.இறப்பும் பிறப்பும் அவனவன் செய்த கர்ம பயனால் வருவது தான்…!
2.எமனும் வரவில்லை… காலதேவனும் வரவில்லை…! என்று முதலிலேயே சொல்லியுள்ளேன்.

அவனவன் பிறப்பையும் இறப்பையும் அவன் வழியில் உள்ள அவனுள்ளே உள்ள சக்தியின் பயனைப் பெற்றுத்தான் பிறக்கின்றான்… இறக்கின்றான்.

சுவாச நிலையில் தான் வியாதிகள் வருகிறது. அவன் வாழ்க்கை முறையில் உள்ள சுவாச நிலையும் அவனுக்கு வித்திட்டு வியாதியைப் பெருக்கச் செய்கிறது.

1.எண்ணத்தின் பயத்தினால் தான் வியாதி முற்றி
2.அச்சுவாச நிலை பெரும் மாறுபட்டு அந்த அழுகும் தன்மையுள்ள உடலில்
3.அவன் உடலில் உள்ள சிறு சிறு நல்ல அணுக்களும் அவனைக் காத்து வந்த நிலையை மாற்றி அந்த அணுக்களும் அழுகி
4.பெரும் வேதனையில் உள்ள அவன் விடும் சுவாச நிலை அவனையே அழிக்கின்றது பெரும் பயத்தினால்..!

அந்த நிலையில் அவனுள் இருக்கும் அவ்வுயிர் சலிப்புடன் அவன் உடலை விட்டு ஆவி உலகம் செல்கிறது. அந்த ஆவிகள் தான் பிறகும் (அடுத்த பிறவியாக) பிறக்கின்றது.

“எண்ணம் போல் வாழ்வு…!” என்றார்கள் பெரியவர்கள். எண்ணம் எல்லாம் அவன் விடும் சுவாச நிலையில் தான் சுற்றுகிறது.

பெரும் வேதனை உள்ள மனிதன்…
1.தன்னுள் இருக்கும் ஈசனை நினைத்து “ஈஸ்வர தியானம்” செய்து
2.தான் செய்த பாவ புண்ணியங்களை மறந்து எப்படியும் வாழ வேண்டும்
3.ஒரு நிலையில் வாழ வேண்டும்… உயர்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று
4.தன் எண்ணத்தினுள்ளேயே எண்ணிக் கொண்டு அவன் விடும் சுவாச நிலைக்கு அந்தச் சக்தியின் அருள் கிட்டுகிறது.

எண்ணத்தில் சலிப்பு வந்தவனுக்கு வாழ்ந்து என்ன பயன்…! என்ற நிலையில் அந்தச் சுவாசத்தை எடுத்துச் சுற்றுபவனுக்கு அந்த எண்ணமே தான் சுற்றுகிறது அவன் உடலில்.

அந்த எண்ணம் போல் தான் அவன் விடும் சுவாச நிலையில் சுற்றுகிறது அவன் எண்ணம். அந்நிலையே தான் அவனுக்கும் வருகிறது.

எண்ணத்தில்தான் குழந்தை பிறப்பிலிருந்து அதன் எல்லா நிலைகளிலுமே எண்ண வடிவில்தான் அதன் வாழ்க்கையே அமைகிறது.

முடிவில்லா இந்த உலகில்… முடிவில்லா உடலுடன்… “மூவுலகை ஆட்டி வைக்கும் அச்சக்தியைப் பெற்றிட…” இந்த உலகில் உதித்த ஒவ்வொரு உயிரும் காலம் சுற்றும் நிலை போல் அந்நிலை எய்திட முடியும்.

பல பிறவிகள் மாறுபட்டு ஆவி உலகில் படும் அவஸ்தையிலிருந்து விடுபட்டு… ஒவ்வொரு மனிதனும் வாழ்ந்திடலாம்… வாழ்ந்திடலாம்.. பல கோடி ஆண்டுகள் வாழ்ந்திடலாம்.

முடிவில்லா உலகைப் போலவே முடிவில்லாமல் வாழ்ந்திடலாம்…!

உங்களைக் காத்துக் கொள்ள “குரு அருளை… திரு அருளாகக் கொடுக்கின்றோம்…!”

 

நல்ல தண்ணீரை ஊற்ற ஊற்ற அழுக்குத் தண்ணீர் குறையும். அதே போல் தான் ஞானியின் உணர்வை நமக்குள் செலுத்தச் செலுத்த நம்மை அறியாது புகுந்த தீமைகள் அகன்று செல்லும்.

இப்படி அந்த ஞானிகளின் அருள் சக்தியைச் சேர்க்கும் பழக்கத்திற்கு நாம் ஒவ்வொருவரும் வரவேண்டும்.

ஒவ்வொரு சமயத்திலும் குருநாதர் எனக்கு (ஞானகுரு) எப்படி ஞானத்தைப் போதித்தாரோ… அதை அப்படியே உங்களுக்கும் போதிக்கின்றோம்.

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்தால்…
1.வாழ்க்கையில் அந்தந்தச் சந்தர்ப்பங்களில் அதுவே உங்களுக்கு வழி காட்டும்
2.அருள் ஞானத்தைப் பெறச் செய்யும்
3.இருளைப் பிளக்கச் செய்யும்… பொருளைக் காணச் செய்யும்.

அறியாது தவறு செய்கிறார்கள் என்றாலும் அதிலே உள்ள பொருளைக் காண முடியும். இருளைப் பிளந்து காட்டும்… உண்மையின் தன்மையை அறிய முடியும்.

அப்பொழுது அருள் ஞானத்தின் சக்திகள் நமக்குள் பெருகுகிறது. நம் ஆன்மாவை மறைத்துக் கொண்டிருக்கும் தீமைகளை அது பிளக்கிறது. பொருள் காணும் திறனை நாம் பெறுகின்றோம்.

சிறிது காலத்திற்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்துப் பாருங்கள். உங்கள் அனுபவம் பேசும்.

ஏனென்றால் காற்று மண்டலம் மிகவும் நச்சுத் தன்மையாக உள்ளது.

இருந்தாலும் அதை நாம் ஆழமாகப் பதிவு செய்து கொண்டால் அதைச் சீக்கிரம் நமக்குள் இழுக்கும். “ஐயோ… நச்சுத் தன்மையாக இருக்கிறது…” என்று அதைப் பதிவு செய்து விட்டால் அடுத்து அந்த நச்சுத் தன்மை தான் நமக்குள் வரும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி இங்கே படர வேண்டும்
2.எல்லோருக்கும் அந்த மகரிஷியின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்
3.அவர்கள் வாழ்க்கையில் உயர்வு கிடைக்க வேண்டும் என்ற
4.இந்த உணர்வை எண்ணி எடுத்துக் கவர்ந்து அதை இங்கே பரப்பினால் போதும்.

ஆனால்…
1.நச்சுத் தன்மை… நச்சுத் தன்மை… என்ற அந்த உணர்வையே நுகர்ந்து கொண்டிருந்தால்
2.அதை இழுக்கின்றது… நம் ஆன்மாவாக மாற்றுகின்றது… நம்மையும் நஞ்சாக மாற்றத் தொடங்குகிறது.

இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட்டு மெய்ப் பொருளைக் காணும் நிலைகளுக்கு நாம் வர வேண்டும். நம்மைக் காத்து மற்றவரையும் காக்கும் சக்தியாக அந்த ஞானத்தின் வழித் தொடரில் நாம் செயல்படுத்த வேண்டும்.

அதற்காக வேண்டித் தான் நமது குரு அருளைத் திரு அருளாக உங்களுக்குள் மாற்றும் நிலைகளுக்கு இதை உபதேசிக்கின்றோம் (ஞானகுரு).

உன்னால் தியானம் செய்ய முடியாது… அரச மரத்தைச் சுற்றினாலே நீ அருள் பெறுவாய் என்ற வேதத்தை உருவாக்கி விட்டனர் – ஈஸ்வரபட்டர்

 

நீ வணங்கும்
1.முருகா என்னும் போகரும்…
2.ஈஸ்வரா என்னும் ஈஸ்வரபட்டரும்…
3.வெங்கடாஜலபதி என்னும் பாலாஜி உருவில் வந்த பல கோடி நாமங்கள் பெற்றிட்ட கொங்கணவரும்…
4.கொங்கண மகாதேவரும்… சித்தர்களும் ஞானிகளும்…
5.உன் அறிவுக்கு எட்டாத இந்த உலகில் எல்லாப் பாகங்களிலும் தோன்றி இந்நிலையில் இருக்கும் சித்தாதி சித்தர்களும் ஞானாதி ஞானியர்களும்
6.ஞான ரிஷிகளும் சப்தரிஷிகளும் அருள் சக்தி பெற்று சூட்சம உலகில் ஒளியாக வாழுபவர்கள் தான்…!

அவர்களின் நல் உபதேசத்தைப் பெற்றவர்கள் மற்றவர்கள் நிலைக்குப் புரிந்திடச் செய்திடாமல் சில உபதேசங்களை மட்டுமே மனிதர்களுக்குப் புகட்டினர்.

1.உண்மையின் உயிர் இரகசியத்தை இந்த உலக மக்களுக்குப் புரிந்திடச் செய்யாமல்
2.ஒருவர் எழுதியதைப் பிறிதொருவர் மாற்றி எழுதி
3.தன் தன் ஜீவ வழிக்குப் பொருள் பெற்றிட
4.உலகத் தன்மையையே மறைத்துவிட்டார்கள்… மாற்றிவிட்டார்கள்.

தியானம் என்றாலே பெரும் கடினமானது… என்றும் எல்லோராலும் அதைப் பெற முடியாது… என்ற ஒரு கடினத் தன்மையை மனிதர்களின் மனதிலே ஊன்றச் செய்து விட்டனர்.

சாதாரண வாழ்க்கை வாழும் மனிதனால் அது சாத்தியமில்லை என்ற அளவுக்குக் கொண்டு சென்று விட்டார்கள்.

ஆண்டவன் என்றாலே “யார்…?” என்று புரியாத நிலையில் தெருவின் மூலைக்கும் ஆற்றுப் படுகையின் படிகளில் எல்லாம் அரச மரத்தை நட்டு
1.விநாயகர் என்ற உருவத்தைப் பதித்து
2.அரச மரத்தைச் சுற்றினாலே நீ அருள் பெறுவாய்…! என்ற வேதத்தை ஊன்றிவிட்டார்கள்.

கடவுள் என்றாலே கல் தான்…! கல் என்ன செய்யும்..? என்ற நிலையில் கடவுள் இல்லை…! என்று ஒரு சாரார் நம்பும்படிச் செய்து விட்டார்கள்.

ஆனால்
1.கடவுளைச் சென்று வேண்டுபவர்களும்
2.தன்னுள் தான் கடவுள் உள்ளான்…! என்பதை மறந்து விட்டனர்.

முருகனுக்கு இரண்டு மனைவிகள் மூத்தவள் வெள்ளை இளையவள் கருப்பு. முருகனுக்கே இரண்டு மனைவிகள் உள்ள பொழுது எனக்கு மட்டும் ஏன் தடை…! என்ற வாதங்களைப் பல ரூபத்தில் எழுப்பிக் கொண்டுதான் அந்தக் கடவுளையே வேண்டுகிறார்கள்.

தன்னுள் இருக்கும் கடவுளையே மறந்து அவன் முன்னோர்கள் கதை கட்டிய கடவுளைத் தான் வணங்குகிறார்கள்… தன் வழிக்கு உகந்தபடி…!

புரிகிறதா…?

முருகனின் மூவுலக அருளையே மறந்து.. அவன் உருவில் உள்ள ஆறு குணங்களையும் மறந்து… முருகனுக்குப் போகரின் வழியில் அளித்திட்ட உருவ அமைப்பையே எந்நிலைக்கு அந்த உருவை அப்போகர் நிறுவினார்…? என்ற நிலையையே மறந்து… தன் வழிக்குப் பல கதைகளைச் சொல்லித் தெருத் தெருவாக முருகன் கதையைப் பெரும் கூத்தாக்கிவிட்டார்கள்.

இக்கலியில் வந்த இக்கலியின் மனிதர்கள்… “இவர்கள் நிலையே இவர்களுக்குப் புரியவில்லை…!” அழியும் உடல்… அழியும் உடல்… என்கிறார்கள். அழியும் உடலல்ல இவ்வாண்டவன் அருளிட்ட இந்த உடல் எல்லாம்.

உலகத் தன்மை அழிவதில்லை. பல நிலைகளைத் தான் இந்த உலகம் பெறுகிறது. உலக நிலையில் மாறுபட்டு மாறுபட்டுச் சுற்றிக் கொண்டே வருகிறது உலகம்.
1.உலகம் என்றென்றும் அழிவதில்லை…
2.காலங்கள் தான் அழிகின்றன… கால நிலைகள் அழிகின்றன.

அழியாத இந்த உலகம் பல அவதாரங்களை மாற்றிக் கொண்டே முதலில் ஆரம்பித்த நிலைக்கே வருகிறது. பிறகும் பல அவதாரங்களை எடுத்துக் கொண்டே சுற்றிக் கொண்டு வருகிறது.

அச்சூரியன் நிலை என்று அஸ்தமிக்கின்றதோ அன்று தான் இந்த உலகம் அழியும்… உயிரணுக்களும் அழியும்… மனிதனும் அழிவான்…!

ஒவ்வொரு மனிதனும் சுவாச நிலை என்ன…? என்று புரிந்து கொண்டால்
1.இவ்வுயிருடனே என்றுமே அழியாத நிலையில் வாழலாம்.
2.அதற்குத்தான் இந்தப் பாட நிலைகள் எல்லாமே…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

தியானம் செய்து முடிந்த பிற்பாடு “நாம் தான் தியானம் செய்து விட்டோம் அல்லவா…!” என்று சாதாரணமாக இருக்கக் கூடாது.

வாழ்க்கையில் எந்த நேரமாக இருந்தாலும் சரி…
1.சங்கடமோ சலிப்போ கோபமோ வெறுப்போ தொழிலில் சோர்வோ இதைப் போல் வந்தால்
2.அது நம்மை இயக்காமல் உடனடியாகத் தடுக்க வேண்டும் (இது மிகவும் முக்கியமானது).

அம்மா அப்பாவை நினைத்து மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரை நினைத்து ஒரு நிமிடம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று கண்களில் ஏங்கிச் சுவாசிக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு நிமிடம் ஏங்கி உடலுக்குள் இந்த உணர்வைச் செலுத்த வேண்டும்.

இப்படி எடுத்துக் கொண்டால் பிறருடைய சங்கடமோ கோபமோ வெறுப்போ பிறருடைய நோயோ நமக்குள் வராதபடி சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.
1.எங்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்
2.எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்
3.நல்லது செய்யக்கூடிய எண்ணங்கள் எல்லோருக்குள்ளும் ஓங்கி வளர வேண்டும் என்று எண்ணி வந்தாலே போதும்.

இது தான் ஆத்ம சுத்தி…!

ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தின் மூலம் உங்கள் ஆன்மாவைச் சுத்தப்படுத்த “நீங்கள் எண்ணியவுடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்கும்…!”

எப்படி…?

1.ஒருவன் நம்மைத் திட்டினான் என்று நமக்குள் பதிவாக்கிய பின்
2.அவனை நினைக்கும் பொழுதெல்லாம் அந்தத் திட்டிய உணர்வுகள் வருகிறது அல்லவா…!
3.பாவி எனக்குத் துரோகம் செய்தான்..! என்று எண்ணிக் கொண்டிருந்தால் அன்றையக் காரியங்கள் கெடுகிறது.
4.நமக்கும் கெடுகிறது… அவனுக்கும் கெடுகிறது…!

ஆகவே இதைப் போன்ற நிலைகளில் சிந்தித்து நீங்கள் தெளிந்து அந்த அருளைப் பெற்றிடும் சந்தர்ப்பமாக மாற்றிக் கொண்டால் உங்கள் எண்ணம் உங்களுக்கு நிச்சயம் உதவி செய்யும்.

1.பிறருடைய தீமையான செயல்களைப் பார்த்து
2.இப்படிச் செய்கிறார்களே…! என்று எப்பொழுதும் எண்ணவே வேண்டாம்…!

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் இரத்தங்களிலே கலக்க வேண்டும் என்று எண்ணிவிட்டு
1.அவர்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

மாறாக “இப்படிச் செய்கிறார்களே…!” என்று எண்ணினால் அந்தத் தீமைகள் நமக்குள் வந்துவிடும். “நம் வாழ்க்கையும் அது கெடுக்கும்…!”

அது நமக்குள் வராதபடி இந்த மாதிரித் தடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் இப்படிச் செய்து பாருங்கள்.. பிறருடைய தீமைகள் நமக்குள் புகாது.

சண்டை போடுகிறார்கள் என்று பார்க்கின்றீர்களா…! உடனே இந்த மாதிரி சுத்தப்படுத்திவிட்டு அவர்களுக்குள் நல்ல உணர்வுகள் தோன்ற வேண்டும்.. இருவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்…! என்று எண்ணிவிட்டு வந்துவிடுங்கள்.

1.ஏன் இப்படிச் செய்கிறார்கள்…? என்று அதையே அழுத்தமாக எண்ணினால்
2.அவர்கள் உணர்வு நமக்குள் வந்து நமக்குள்ளும் சண்டை போடும் உணர்வுகளே விளையும்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

ஏனென்றால் இப்படித்தான் நம்மை அறியாமல் எத்தனையோ தீமைகள் வந்துவிடுகிறது. அதை மாற்றுவதற்கு இந்தப் பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையே தியானம்…!

எந்தத் தொழில் செய்தாலும் அல்லது வியாபாரம் செய்தாலும் ஆத்ம சுத்தி செய்துவிட்டு
1.சரக்கு வாங்குபவர்களுக்கு இந்த அருள் சக்திகள் கிடைக்க வேண்டும்
2.அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்
3.இங்கே நம் குடும்பத்திற்கு வருபவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்றும் எண்ணிப் பாருங்கள்.

உங்கள் தொழிலும் வியாபாரமும் பெருகும்… குடும்பத்தில் மகிழ்ச்சி என்றுமே இருக்கும்.

கெட்டதை அழுத்தமாகச் சொல்லாதபடி… “நல்லது பெற வேண்டும்” என்பதற்கே அந்த அழுத்தத்தைக் கூட்ட வேண்டும்

 

மனிதனின் வாழ்க்கையில் தீமைகளைப் பிளந்து தீமைகளை பிளந்திடும் உணர்வுகளைத் தனக்குள் எடுத்து நம் உணர்வின் அறிவால் தெளிந்திட்ட அந்த ஞானிகளின் உணர்வைச் சேர்க்க வேண்டும்.

அப்படிச் சேர்க்கப்படும்போது தீமையான உடலைப் பிளந்துவிட்டு தீமையைப் பிளந்திடும் உணர்வின் சக்தியாக ஒளியின் சரீரம் பெற முடியும்.
1.பரிணாம வளர்ச்சியில் நாம் வளர்ந்து வந்த முறை இது.
2.அதன் வழியில் நாம் எளிதில் விண் செல்ல முடியும்

அந்தச் சக்திகளைப் பெறுவதற்கு நமது குருநாதர் காட்டிய வழியில் ஞானிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கிறோம்.

1.எல்லோருக்கும் கிடைக்கும்படியாக ஒருக்கிணைந்து சக்தி பெறும் தகுதியையும் ஏற்படுத்துகின்றோம்.
2.இந்த முறைப்படி எல்லோரும் செய்யுங்கள்.
3.எல்லோரையும் காக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வாருங்கள்.

எந்தத் தீமையைக் கண்டாலும்…
1.”தீமை…” என்ற வார்த்தையைச் சொல்லாது (இது முக்கியம்)
2.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

தீமையிலிருந்து மீளவேண்டும் என்றாலும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அவர்கள் எதிர்காலம் சிறந்து இருக்க வேண்டும் என்று சொன்னால் போதும்…!

காரணம்… மற்றவர்கள் செய்யும் தீமைகளைத் தீமை தீமை என்று அதை நாம் பதிவு செய்து கொண்டால் அதன் பின் அந்த தீமையின் உணர்வே நமக்குள் விளைந்து இது முன்னாடி வந்து விடும்… நல்ல குணங்களுக்குள் இது கலந்துவிடும்.

1.ஆகையினால் இதை (தீமைகளை) மறந்து அருள் சக்திகளை எடுத்து
2.அதனின் உணர்வுகளைப் பாய்ச்சக் கற்றுக் கொள்ள வேண்டும்.
3.சிறிது நாளைக்கு இப்படிப் பழகிக் கொண்டால் அது தீமைகளை அகற்றும்… நமக்கு மிகவும் நல்லதாகும்.

குருநாதர் காட்டிய வழியில் நான் (ஞானகுரு) காடு மேடு எல்லாம் அலைந்து அதிலே கண்டறிந்ததைத் துணுக்குத் துணுக்காக உங்களுக்குள் சொல்லிக் கொண்டே வருகின்றேன். உயர்ந்த சக்திகளை நீங்கள் பெறுவதற்கு இணைத்து இணைத்துக் கொடுக்கின்றேன்.

நீங்கள் அதைப் பெறக்கூடிய தகுதி பெற்று எதிர்காலத்தில் எல்லோரையும் காக்கக்கூடிய உணர்வாக உங்களுக்குள் வளர்க்க வேண்டும்.

எங்கே… யாருடைய… கஷ்டங்களைப் பார்த்தாலும் உடனே மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் “தியானிக்க வேண்டும்…” மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற்று கஷ்டங்கள் நீங்கி அவர்கள் நலமும் வளமும் பெற வேண்டும் என்று “தவமிருக்க வேண்டும்…”

நாம் பார்க்கும் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று “நன்றாக இருக்க வேண்டும்… நன்றாக இருக்க வேண்டும்…!” என்ற இந்தத் தவத்தை எடுத்தால் நமக்கு நல்லதாகின்றது… அவர்களும் நலம் அடைகிறார்கள். இந்த முறையை நாம் கடைப்பிடிப்போம்.

இப்படி… இந்த வாழ்க்கையில் வரும் எதையுமே நாம் சரியாக்க வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.
1.கெட்டுப் போய்விட்டது… கெட்டுப் போய்விட்டது என்று சொல்லாதடி
2.நல்லதாக வேண்டும் நல்லதாக வேண்டும்…! என்றே எண்ணி எடுக்க வேண்டும்.

வியாபாரம் குறைவாக இருந்தாலும் எப்படியும் இதைச் சீர்படுத்த வேண்டும் என்ற உணர்விலே நாட்டத்தைச் செலுத்தினால் அதற்குண்டான வழி கிடைக்கும்… வியாபாரம் சீராகும்.

ஒருவருக்கு நோய் வந்து விட்டால் மகரிஷிகள் அருள் சக்தியால் சீக்கிரம் அவர் நலம் பெற வேண்டும்… குணமாக வேண்டும் என்று தான் எண்ண வேண்டும். நோயைப் பற்றி எண்ணி… அதனின் வலுவைக் கூட்டக் கூடாது.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை எல்லாம் ஒவ்வொரு நாளும் நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

1.நாம் யாரையோ குறை கூறுகின்றோம்
2.எவரையோ குறை கூறுகின்றோம் என்று இருக்கலாம்.

ஆனால் நுகர்ந்த உணர்வின் அறிவாக அந்தக் குறையான உணர்வுகள நம் உடலில் உயிர் உருவாக்கிவிடும்.

யாரைக் குறையாக எண்ணினோமோ அந்தக் குறை உணர்வின் அணுக்களாக மாறுகின்றது. அது நாளடைவில் நம் இரத்தத்தில் கருவின் முட்டையாக மாறுகின்றது.

அது முட்டையாக மாறி…
1.எந்தெந்த உணர்வுகளில் எந்தெந்த உறுப்புகளில் தேங்கி வெடித்து அணுவாக மாறுகின்றதோ
2.அதனின்றே உணர்வின் தன்மை இது இருப்பிடமாக வைத்து
3.அதன் துணை கொண்டு உணர்ச்சிகளைத் தூண்டி இந்த இரத்தநாளங்களின் வழியாக உயிருக்கு அனுப்புகின்றது.

உயிருக்குள் தூவப்படும் பொழுது நாம் யாரைக் குறையாக எண்ணினோமோ அவை அனைத்தையும் உணவாகக் கொடுத்து இந்த உடலின் உறுப்புகளைக் குறையாக மாற்றி நம்மை வேதனைப்படச் செய்யும்.

பின் அந்த வேதனையிலிருந்து நாம் தப்புவதே மிகவும் கடினம். ஆகவே தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.

ஒருவரைப் பற்றி அந்தக் குறையின் உணர்வு வரப்படும் பொழுது அவர் வாழ்க்கையிலேயும் ஒரு தொழில் செய்யும் பொழுதோ அல்லது மற்ற நிலைகளிலோ மேல் வலி… நோய்… மற்ற குறை… எல்லாமே இருக்கும். அவரில் விளைந்த உணர்வுகள் இங்கே இருக்கின்றது.

அவரைக் குறையாக எண்ணிக் கொண்டிருந்தால் அந்தக் குறையைத்தான் இதிலிருந்து நாம் நுகர முடியும். அவர் முதலில் நம்முடன் அன்பு கொண்டு பாசம் கொண்டு பழகியிருந்தால் அந்தக் குறைகளை வேகமாக இழுத்துவிடும்.

ரேடியோ டி.வி.க்களில் ஒலி, ஒளி அலைகளைப் பரப்பப்படும் பொழுது அதிலே எந்த ஸ்டேசனை வைக்கின்றோமோ அந்த ஸ்டேசனைத் தான் எடுக்கும்.

அதைப் போல் தான் ஒருவருடன் நாம் பழகப்படும் பொழுது அந்தப் பதிவின் துணை கொண்டு நமக்குள் அவருடைய உணர்வுகள் எளிதாக வந்துவிடும்.

சுவை மிக்க பாலாக இருந்தாலும் அதற்குள் விஷத்தைக் கலந்து விட்டால் குடித்தால் அந்தப் பாலுக்கு வலு ஏது…? அந்த விஷத்தின் தன்மை போல் தான் உணர்வின் எண்ணங்கள் தூவப்பட்டு அங்கே விஷத் தன்மையை வளர்த்துவிடும்.

இன்றைய செயல் நாளைய சரீரமாகிவிடும். அதைத் தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று தெளிவாக்குகின்றார்கள்.

நாம் எடுக்கும் உணர்வுகள் அணுவின் தன்மை அடைந்து விட்டால் தன் உணவின் தன்மையை அது எடுத்துத் தன் இனத்தின் தன்மையைப் பெருக்கப்படும் பொழுது அதன் உணர்வின் எண்ணங்கள் நமக்குள் அதிகரித்து நமக்குள் உருப்பெறும் உணர்வுகளை அது உருவாக்கி
1.நாம் எதை எண்ணினோமோ
2.அந்த எண்ணத்தின் வழியாகவே… அடுத்த சரீரத்தைப் பெறச் செய்யும்.

ஆகையினால் பிறரைப் பற்றிக் நாம் குறை கூறும் நிலையோ பிறருடைய நிலைகளை எடுத்து கொண்டால் “தான் உயர்ந்தவன்…!” (நல்லவன்) என்ற நிலைகள் இருப்பினும் அதை மாற்றிவிடும்.

அதாவது
1.பாதாம் உயர்ந்ததாக இருப்பினும்
2.அதை விஷத்தில் துவட்டி உணவாக உட்கொண்டால்
3.நம்மை மடியச் செய்துவிடும்… பாதாமிற்குச் சக்தியில்லை.
4.ஏனென்றால் விஷத்தின் தன்மையே ஆற்றல் கொண்டது.
5.ஒரு விஷத்தின் இயக்கமே உலகத்தின் இயக்கம்.

சூரியன் விஷத்தின் நிலையால் சுழற்சியின் வேகம் கூடினாலும் அதிலே உருவாகும் உணர்வுகள் நஞ்சினைப் பிரித்திடும் நிலை வருகின்றது.

சூரியன் தன் சுழற்சியால் ஏற்படும் உணர்வுகள் கொண்டு அந்த நஞ்சின் மேல் மோதப்பட்டு வெப்பத்தின் தணல் கூடப்படும் பொழுது விஷத்தைப் பிரித்து விடுகின்றது. (சூரியன் என்றால் நாராயணன்)

விஷத்தைப் பிரித்த பின் அது சிதறி ஓடினாலும் இந்த வெப்பத்தால் உருவான நிலைகள் “ஈர்க்கும் காந்தம்…” என்ற நிலைகள் வருகின்றது. அந்தக் காந்தத்திற்குப் பெயர் லட்சுமி.

காந்தமாகப்படும் பொழுது நகர்ந்து சென்று கோள்களின் விஷத் தன்மையைத் தனக்குள் (லட்சுமி) கவர்ந்து கொண்டாலும் விஷத்தை இந்தக் காந்தம் கவர்ந்து கொண்டால் அது “இலட்சுமணா…”. அது தான் ஒரு அணுவிற்குள் இருக்கும் இயக்கச் சக்தி…!

காந்தத்தால் கவர்ந்து கொண்ட நிலையாக இவ்வாறு ஒரு அணுவின் இயக்கமாகச் சூரியனிலிருந்து வெளிப்படுவதை (நாராயணன்) இந்த உலகத்தில் தன் ஒளியை அனுப்பிக் கொண்டேயிருக்கின்றது.

இப்பொழுது நான் (ஞானகுரு) பேசுகின்றேன் என்றால் சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்ப காந்தம் கவர்ந்து கொண்டால் சீதாலட்சுமியாக மாறுகின்றது.

விஷம் அந்தச் சத்தின் (நாம் பேசியதை) மணத்தை வெளிப்படுத்தும் பொழுது அது ஞானமாகின்றது. அந்த ஞானத்தின் வழி கொண்டு தான் அந்த அணுவின் இயக்கம் இருக்கும்.

எதன் வழி கொண்டு எதனில் உருவானதோ அதன் வழி கொண்ட ஈர்ப்புக்குள் சென்று அதை வளர்க்கும். சொல்வது அர்த்தமாகிறதல்லவா…! ஒரு அணுவிற்குள் இருக்கும் விஷத்தின் இயக்கத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

இதைப் போல் தான் நாம் எண்ணும் எண்ணங்கள் நம் இரத்த நாளங்களில் கலக்கின்றது.
1.வேதனை என்ற உணர்வுகளோ
2.ஒருவரை வேதனைப்படுத்த வேண்டும் என்ற உணர்வு கொண்டு தன்னை மறந்து அதைச் சொன்னோம் என்றால்
3.நாம் எண்ணியதை நம் உயிர் உருவாக்கி இரத்த நாளங்களில் சுழலச் செய்கின்றது.

அதே போல்..
1.பிறரைக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணங்களோ…
2.பிறரைத் துன்பப்படுத்த வேண்டும் என்ற எண்ணங்களோ…
3.பிறர் துன்பப்படுவதைக் கண்டு மகிழ வேண்டும் என்ற எண்ணங்களை எவர் எடுத்தாலும் சரி…
4.நானே பெரிய சக்தி பெற்றவனாக இருந்தாலும் அந்த விஷத்தை உருவாக்கும் உணர்வுகள் வரப்படும் பொழுது
5.எனக்குள் இருக்கும் நல்ல குணங்களை உருவாக்கிய அணுக்களுக்கு உணவு கிடைக்காது தடைப்படுத்தும் நிலைகளே வரும்.

நல்லவைகள் எதைச் செய்தாலும் விஷத்தின் ஈர்ப்புக்குள் சென்று அந்த அணுக்களும் (விஷத்தை) உட்கொள்ளா நிலைகள் மறுத்து அந்த அணுக்கள் சோர்வடையத் தொடங்கிவிடும்.

அது சோர்வடைந்து விஷத்தின் தன்மை ஆட்கொண்டால் அனைத்தும் விஷத் தன்மை கொண்டதாக மாறிவிடுகின்றது. விஷத் தன்மையாக மாறிய பின் நல்ல அணுக்கள் மடிந்து விட்டால் இந்த உடலை விட்டுச் சென்ற பின் விஷமான உயிரினங்களாகத் தான் பிறக்க நேரும்.

அதைப் போன்று ஆகாது தடுக்க வேண்டும் என்பதற்குத் தான்
1.விஷத்தை ஒடுக்கிய… நஞ்சினை வென்ற…
2.அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை
3.உங்களுக்குள் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டே இருக்கின்றோம்.

பதிவாக்கிக் கொள்ளுங்கள்.. மீண்டும் அதை நினைவுபடுத்தினால் அந்தச் சக்தி உங்களுக்கு உடனே கிடைக்கும்.

இதைப் படிப்பவர்கள் மகரிஷிகளுடனும் ஞானிகளுடனும் தொடர்பு கொள்ளுங்கள் – ஈஸ்வரபட்டர்

 

1.உன் ஜெப நிலையில் இப்பொழுது பல நிலைகளைக் கலக்கச் செய்துள்ளாய்.
2.உன் வாழ்க்கையில் நடப்பது தான் உன் நினைவில் வருகிறது.
3.அந்த நினைவுகளைத் தியானத்தில் அமரும் பொழுது மறக்க விடுவதில் என்னப்பா பலன்…?

தியான நிலையிலும் அந்த நிலையே தான் சுற்றுகிறது. இதற்கும் ஒரு வழி வேண்டும். இனி தியானத்தில் அமரும் பொழுது
1.வாழ்க்கையில் வரும் எல்லாச் சம்பவங்களையும்…!
2.உன் உடலில் உள்ள ஆத்மலிங்கத்திடம் (ஈசனிடம்) சமர்ப்பித்துவிடு…
3.ஆத்ம லிங்கத்தை உன் ஜெபத்தில் காண்பாய்.

பல சித்தர்களையும் ஞானிகளையும் ரிஷிகள் நிலையையும் செப்பிவிட்டேன். இன்றும் உள்ளார்கள்… அன்றும் இருந்தார்கள்.

பல வாக்குவாதங்களைப் பேசிய மனிதர்கள்… அந்த மனிதர்களின் அவச் சொல்லுக்குப் பயந்துதான் தீட்சண்ய வார்த்தைகளுக்குப் பயந்து தான் “விண்டார் கண்டதில்லை… கண்டார் விண்டதில்லை..!” என்று அந்த நிலையில் விட்டுவிட்டார்கள்.

இந்த உலகில் உள்ள சக்தியின் சொரூப நிலையைக் கண்டவர்கள் உண்மை நிலையைச் செப்பினால் எற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லையப்பா…! விதண்டவாதம் பேசிய நாடப்பா இது..!

தவயோகிகள் முனிவர்கள் பல நாள் தவமிருந்து பெற்ற பலனையே இன்றைய மனிதர்கள் உணர்ந்திடவில்லை.
1.தன்னுள்ளே அமிழ்த்திக் கொண்டு
2.ஜடப் பொருள் உருவில் தான் தியானித்துக் கொண்டுள்ளார்கள் (மந்திரங்களைச் சொல்லி)
3.இதனால் என்னப்பா பயன் இந்த மானிடருக்கு…?

போகரின் நிலையிலிருந்து முருகனின் வழியில் உணர்த்துகின்றார். முருகனின் வழியில் குணாதிசயங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.

ஆறுமுகா என்ற ரூபத்தில் அந்த நிலையில் அண்டி வருபவர்களுக்கு எல்லாம் ஆறுதலை அளிக்கின்றார். பிறந்த பிறப்பின் பயனை… பிறவி எடுத்த நாள் முதல் கொண்டே இந்தப் பூவுலகுக்கு அருள் மழையாகப் பொழிகின்றார். இந்தப் பூவுலகம் உள்ள வரை பூ மழையாகப் பூரித்தே பொழிவார்.

கொங்கணவரின் வழியில் எடுத்துக் கொண்டால் மனித உடலுக்குச் செல்வச் செழிப்பை அவர் நிலையிலிருந்து அளிக்கின்றார். செல்வத்தின் நாயகனப்பா அந்தக் கொங்கணவர்.

அவரின் நிலை… அவர் தியான முறை எல்லாமே… இந்த மனிதர்களுக்குப் பொருள் இருந்தால் பொங்கிச் சிரிப்பர் என்ற நிலைக்குத் தன் தியான நிலையையே அச்சக்தியின் சொரூபத்திலிருந்து தன் வழிக்குப் பல அருள்களை அருளியுள்ளார்.

நமக்குத் தெரியவில்லை என்றாலும் எண்ணிலடங்கா மகரிஷிகள் இன்றும் பூமியின் தொடர்பு கொண்டு மக்களை ஞானத்தின் பாதையில் வழி நடத்தச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
1.வாழும் காலத்தை வீணடிக்காது அவர்கள் அருள் சக்திகளைப் பெற்று
2.அவர்கள் துணையுடன் இந்தப் பிறவிக் கடலை நீந்தி விண்ணுலகம் செல்ல வேண்டும்.

இதுவே நம் பிறப்பின் இலட்சியமாக இருத்தல் வேண்டும்.

நாம் சேமிக்க வேண்டிய அழியாத சக்தி எது…? என்று இனி முடிவு செய்து கொள்ளுங்கள்…

 

நமக்கு இந்த உடல் சொந்தமா…? நாம் சேர்த்து வைத்த சொத்துக்கள் எல்லாம் நமக்குச் சொந்தமா…? ஆகவே இனி அழியாச் சொத்து எது…? என்பதை முடிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
2.இனி இருப்பதாவது நல்லதாக இருக்க வேண்டும்.
3.மற்றவர்களுக்கு ஒரு நல்ல அறிவும் ஞானமும் வர வேண்டும்
4.அவர்கள் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் எல்லாமே செய்கிறோம். ஆனால் இந்த உடலை விட்டு உயிரான ஈசன் போய்விட்டால் என்ன செய்கிறது…? உடல் நீசமாகிறது. முதலில் சிவம் என்று சொல்கிறோம். கடைசியில் இதைச் “சவம்” என்று தான் சொல்கிறோம்.

எவ்வளவு உயர்ந்த மனிதனாக இருந்தாலும் சவமாக ஆன பிற்பாடு…
1.ஆயிரம் மாலைகளைப் போடலாம்
2.அப்புறம் கொண்டு போய் அனாதையாகத் தள்ளிவிட்டுத் தான் வருகின்றோம்.

இந்த உடல் நிலைத்திருக்கிறதா…? இல்லை. உயிர் வெளியே சென்று விட்டால் இந்த உடலுக்கு மதிப்பு இருக்கிறதா…?

அப்படி என்றால் நாம் எதை மதிக்க வேண்டும்…?

நம் உயிரை நாம் மதித்தாக வேண்டும்…! அந்த மகரிஷிகளின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று வலுவாக்கிக் கொள்ள வேண்டும். அதை வலுவாக்கிய பின் இந்த உடலை விட்டு எப்பொழுது சென்றாலும்
1.நாம் எப்பொழுதும் அவனுடன் நிலையாக இருக்கலாம்.
2.அவனுடன் அவனாகவும்… “அவனாகவும்” நாம் வாழலாம்.
3.ஏனென்றால் உயிரால் உணர்வால் எடுத்துக் கொண்ட ஒளியின் நிலைகள் அது.

ஆனால் இப்பொழுதும் நாம் அவனுடன் அவனாகத் தான் வாழ்கிறோம். எப்படி…!

அன்றாட வாழ்க்கையில் நாம் எதை எதை எல்லாம் எடுக்கின்றோமோ “அந்த இம்சை எல்லாம்…” இந்த உடலில் இருக்கிறது. எம்மம்மா… ஐய்யய்யோ… அப்பப்பா…! இதுவும் அவனுடன் தான் வாழ்கிறோம்.

ஆகவே இருளை நீக்கிப் பொருள் காணும் உணர்வை உயிருடன் ஒன்றச் செய்யும் போது ஒளியின் சரீரமாகி நிலையான நிலைகள் பெறுகின்றோம்.

நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் ஒளியின் சரீரமாக என்றும் நிலையாக இருக்கலாம்.

அது தான் கல்கி…!

1.உயிர் ஒளியாகின்றது… பல நிலைகளை வெல்கிறது.
2.மனிதனாக ஆன பின் நரசிம்மா… தீமைகளைப் பிளக்கின்றது.
3.தீமைகளைப் பிளந்திடும் உணர்வுகளை விளைய வைக்கின்றது.
4.விளைந்த உணர்வுகள் உயிருடன் ஒன்றி என்றும் நிலைக்கின்றது – கல்கி.

ஆனால் கல்கி எங்கேயோ இருக்கின்றான் என்று நாம் நினைக்கின்றோம்.

நம் உயிர் தான் கல்கியாக… அதிலே உணர்வுகள் வளர்ந்தது போல் எதனை இணைக்கின்றோமோ அதன் நிலை கொண்டு அதுவாகிறது. கார்த்திகேயா (வெளிச்சம்) தெளிந்திடும் அறிவு வருகிறது.

இந்த உடலில் அதைப் பெற்ற பின் இன்பத்தின் உணர்வின் தன்மை கொண்டு அவனுடன் இணைக்கும் போது என்றும் பேரின்பப் பெரு நிலை அடைகின்றது.

இந்த வாழ்க்கையில் கஷ்டம்… நஷ்டம்… துன்பம்… எல்லாம் வரும்.
1.கஷ்டம் வந்தாலும் உயிரின் பிடிப்பை விட்டு விடக் கூடாது.
2.அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றி அதைச் செயல்படுத்த வேண்டும்.

எண்ணத்தை வைத்துத் தான் தியான நிலையையும் சுவாச நிலையையும் ஒருநிலைப்படுத்த முடியும் – ஈஸ்வரபட்டர்

 

தியான நிலை… சுவாச நிலை… வேண்டும் என்று கேட்கின்றாய். இப்பொழுது இங்கே கொடுக்கும் பாடங்கள் எல்லாம் என்னப்பா..?
1.சுவாச நிலையே தான் தியான நிலை.
2.தியான நிலையே தான் சுவாச நிலை.

பூஜையில் அமர்ந்து நீ விடும் சுவாச நிலையில் ஜெபித்திடும் ஜெபங்கள் தான் சுவாச நிலையும் தியான நிலையுமாப்பா…? இல்லையப்பா…!

உன் எண்ணத்திற்குப் பல காலம் பல வழியில் பல வழிகளை நானும் என் சிஷ்யனும் செப்பிவிட்டோம். இன்னும் வேண்டுகிறாய் தியான நிலைக்கும்… சுவாச நிலைக்கும்…!

1.நீ எண்ணும் எண்ணமே தான் தியான நிலையும்… சுவாச நிலையும்… பெரும் ஜெப நிலையும்…!
2.எண்ணும் எண்ணமே தான் உன் வாழ்க்கை நிலையும்… உன் உடல் நிலையும் புரிந்ததா…?

எண்ணும் எண்ணம் போல் வாழ்வு…! என்பார்கள். எண்ணும் எண்ணமே தான் வாழ்க்கையுடன் கலந்து வருகிறது.

உன் வாய் திறந்து சொல்லும் சொல்கள் தான் காற்றிலே சுற்றுகிறது என்று எண்ணுகிறாய். உன் மனதில் எண்ணும் சிறு எண்ணமும் உன் சுவாச நிலையில் தான் சுற்றுகிறது.

நீ எண்ணும் எண்ணமெல்லாம் உன் சுவாச நிலையில் வெளிப்படுகின்றது. நீ பிறவி எடுத்த நாள் முதல் கொண்டு நீ எண்ணிய எண்ணமும்… நீ சிரித்த… அழுத… பேசிய எல்லா ஓசைகளுமே உன்னைச் சுற்றியே தான் வந்து கொண்டிருக்கின்றது.

உன் கடந்த காலத்தை எண்ணிப் பார்…!

உன் நினைவில் நீ ஒன்று நினைத்ததும் நீ ஒன்று நடத்தியதும் ஞாபகத்தில் வந்திடும்.
1.நீ பேசிய பேச்சுக்கள் மட்டும் தான் சுற்றிக் கொண்டுள்ளது என்று எண்ணுகிறாய்
2.நீ நினைத்ததும் உன்னையே தான் சுற்றிக் கொண்டுள்ளது.

இந்தப் பிறவி மட்டுமல்ல…! ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த உலகம் தோன்றிய நாள் முதல் அவன் உயிரணுவின் சுவாச நிலை எல்லாமே அவன் உள்ளவரை சுற்றிக் கொண்டே தான் உள்ளது.

இந்த உலகம் சுற்றுவதே இச்சுவாச நிலையில் தான்.
1.மனிதனைச் சுற்றியுள்ள சுவாச நிலையில் மனிதன் வாழ்கின்றான்.
2.உலகைச் சுற்றியுள்ள சுவாச நிலையில் உலகம் உருள்கின்றது.

உன் சுவாச நிலையையும் ஜெப நிலையையும் எந்த நிலைக்கப்பா நான் அருள்வது…? நீ எண்ணும் எண்ணமே தான் சுவாச நிலை… ஜெப நிலை… பெரும் ஜோதி நிலை எல்லாமே…!

காலத்தைக் கடத்தி விட்டாய்…! இனி இருக்கும் காலத்தில் உன் எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி சுவாச நிலையையும் ஜெப நிலையையும் எய்திடப்பா…!

எண்ணும் எண்ணத்திலேயே மனிதன் வாழ… எண்ணம்தான் உயிர் ஜீவனப்பா…!
1.உன் உயிருக்கு ஏதப்பா ஆகாரம்…?
2.எண்ணும் எண்ணம் தான் அந்த உயிரின் ஜீவனப்பா…!
3.புரிகிறதா…! மிகவும் விளக்கமாகச் சொல்லியுள்ளேன்.

இதைப் புரிந்து கொண்டால் உன் எண்ண நிலையை உயர்த்தி மகரிஷிகளுடனும் சித்தர்களுடனும் நீ கலந்திடலாம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

யாம் (ஞானகுரு) பிரச்சாரம் செய்யவில்லை. உங்கள் ஒவ்வொருக்குள்ளும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பதியச் செய்து… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கூட்டச் செய்கின்றோம். அதற்குத்தான் இந்தத் தியானம்.

வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பமானாலும் சரி “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று ஏங்கி மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் ஜீவாத்மா பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உடலைத் தியானித்துக் கொள்ளுங்கள். இதற்குப் பெயர் “ஆத்ம சுத்தி”

1.உங்களை அறியாமலேயே உங்களைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும் நிலையை மாற்றுவதற்குத்தான்
2.ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கையில் கொடுக்கிறோம்.
3.ஏனென்றால் இது எல்லாம் வாக்குடன் கூடிக் கொடுக்கும் நிலைகள்.
4.நீங்கள் எல்லாம் கடும் ஜெபமிருந்து இந்தச் சக்தியைப் பெறுவதென்றால் அவ்வளவு சாதாரணமானதல்ல.

சரியான முறைகளில் இந்த ஆத்ம சுத்தி என்கிற எண்ண உணர்வின் எண்ண வாக்கை உங்களுக்குக் கொடுப்பதற்கு இந்த உணர்வின் தன்மையைக் கொல்லூரில் 16 வருடங்கள் எடுத்து வளர்த்து அந்த வாக்கின் ஒலியை உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.

இப்படிப் பதியச் செய்ததை
1.யாம் சொல்லும் இந்த முறைப்படி யார் ஒருவர் தியானத்தில் இருக்கின்றார்களோ
2.அவர்களுக்கு இந்த வாழ்க்கையிலே எத்தகைய துன்பமிருந்தாலும் நிச்சயம் நீங்கிவிடும்.

பெண்களாக இருக்கக்கூடியவர்கள் அனைவருமே சமையல் செய்யும் பொழுது ஆத்ம சுத்தி செய்து விட்டு அரிசியைப் போடும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் நாம் சமைக்கும் சாப்பாட்டை யார் புசித்தாலும் அவர்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டுமென்று எண்ணுங்கள். நீங்கள் அப்பொழுது சுவாசிக்கக் கூடிய உணர்வு உங்களை அறியாமலேயே உங்களைச் சுத்தப்படுத்தும்.

பெண்களுக்கு அடிக்கடி கவலையும் தொல்லைகளும் வருவதனால் அந்த உணர்வுகளால் அவர்களுக்குக் கை கால் குடைச்சலும் தலைவலியும் ஒற்றைத் தலைவலியும் அதிகமான நிலையில் வரும்.

காரணம் பெண்களுக்கு ஈர்ப்பு சக்தி ஜாஸ்தி.

1.அடிக்கடி கவலையும் மற்ற நிலைகளையும் எண்ணி எண்ணி
2.அவர்களை அறியாமலேயே இந்த உணர்வுகள் உடலில் சேர்ந்து கை கால் குடைச்சல் வந்துவிடுகின்றது.
3.அதுவே பின் நாட்களில் நோய்களாக வளர்ந்து நல்லதையே சிந்திக்க முடியாத நிலைகள் ஏற்படுகின்றது.

ஆகையினால் சமையல் செய்யும் பொழுதும் சமையல் செய்தபின் பரிமாறும் பொழுதும் இந்த நிலைகளைச் செய்து கொள்ளுங்கள். கணவன் மனைவியும் அவசியம் இந்த ஆத்ம சுத்தியைச் செய்யப் பழகிக் கொள்ளுங்கள்.

வீட்டை விட்டு வெளியே சென்றாலும் தொழிலில் போய் அமர்ந்தாலும் ஒரு சங்கடமான வார்த்தைகளைக் காதில் கேட்டாலும் அடுத்த நிமிடம் ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் ஒவ்வொரு நிமிடமும் சுத்தப்படுத்துவதற்கே இந்த ஆயுதத்தை யாம் கொடுக்கின்றோம்.

அருள் ஒளி கொண்டு அனைத்தையும் அரவணைத்துச் சென்றால் தான் பேரானந்தப் பெரு நிலை பெற முடியும்

 

ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோம். அதற்கு மத்தியிலே இடைப்பட்ட நிலைகள் வரப்படும் பொழுது ஒருவர் வந்து அவன் மோசமான ஆள்… உதவி செய்யாதீர்கள்…!” என்று நம்மிடம் சொல்கிறார்.

அப்போது நமக்கு வெறுப்பின் தன்மை வருகிறது.

ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணும் போது மற்றவர்கள் செய்ய வேண்டாம் என்று சொன்னால் நாம் எண்ணிய எண்ணங்களுக்கு அது எதிரியாகிறது. நமக்குள்ளே போர் வருகிறது.

சந்தர்ப்பத்தில் இதைப் போன்று தான் நமக்குள் அந்த எதிரியின் தன்மைகள் உருவாகி விடுகிறது. இப்படி உருவாகும் அந்தச் சக்திகள் எப்படிச் செயல்படுகிறது…? என்பதைத்தான் இராமாயணம் தெளிவாகக் காட்டுகிறது.

கைகேயி இராமன் மீது வெறுப்பு காட்டுகிறது… ஏனென்றால்
1.தன் பையன் ஆட்சி பீடத்தில் அமர வேண்டும் என்று தனக்குள் வளர்த்துக் கொண்ட அந்தச் சக்தி
2.இது தன்னிலே வளர்ந்த உணர்வு…. அந்த அணுக்கள் அதை எண்ணுகின்றது
3.அந்த உணர்வின் தன்மை இங்கே உருவாக்குகின்றது

தசரதனுடைய ஆசையோ இராமன் மீது இருக்கின்றது. அதே சமயத்தில் தனக்குள் இருக்கும் சக்தி (தசரதனுக்கு எண்ணிலடங்காத மனைவி) அதனுடைய பாசத்தால் ஓங்கி வளர்க்கப்படும் பொழுது அதிலிருந்து அவனால் மீள முடியவில்லை. அதாவது தசரதன் அவன் மனைவியின் நிலையை மீற முடியவில்லை.

அன்பு கொண்ட மனைவி கோசலை தியாகம் செய்கிறது…! மூத்த மகன் இராமன்… சீதாராமா ஒருத்திக்கு ஒருவன் என்ற நிலைகள் இருக்கின்றான்.

சுவைக்கொப்பத் தான் எண்ணங்கள் (சீதா என்றால் சுவை – இராமன் என்றால் எண்ணம்) என்று அவனுடைய எண்ண அலைகள் இருப்பினும் தூண்டிய உணர்ச்சிகள் தன் சகோதரனாக இலட்சுமணனாக இருக்கின்றான்.

நாம் எந்தக் குணத்தின் தன்மை கொண்டு எந்த உணர்வின் தன்மை எண்ணி எடுக்கின்றோமோ அதன் சக்தியாக இயக்குகிறது. ஆனால் அதிலே இந்த விஷத்தின் தன்மை கலந்தால் எதிலே இது கலக்கின்றதோ அந்த வேகத்தின் தன்மை கொண்டு உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.

இது எல்லாம்
1.ஒரு அணுவுக்குள் இருக்கும் நிலையும்… அது கவர்ந்து கொண்ட உணர்வின் சக்தியும்
2.அது எவ்வாறு இயக்குகிறது…? என்று தான் இராமாயணம் காட்டுகிறது.

இராமன் காட்டிற்குள் செல்கின்றான். அங்கே புலியும் இருக்கிறது கரடியும் இருக்கிறது. இருந்தாலும் அதைச் சீராக்கிக் கொண்டு வரும் நிலையாக இராமன் என்ன செய்கிறான்…?

1.இந்த உடலுக்குள் வரும் மற்ற ஆசைகளை விடுத்து அமைதியாகச் செல்கிறான்…
2.எல்லாவற்றையும் இவன் சகோதரனாக ஆக்குகின்றான் என்று காட்டுகிறார்கள்.

அதாவது இந்த மனித வாழ்க்கையில் அந்த அருள் உணர்வின் துணை கொண்டு அனைத்தையும் நம் உடலுக்குள் சகோதரனாக ஆக்க வேண்டும்…!
1.எதையுமே பகைமை ஆக்காது…
2.எதிரியாக உருவாக்காது…
3.இணைந்து வாழச் செய்யும் அரும் பெரும் சக்திகளை நாம் எடுக்க வேண்டும்
4.உடலுக்குள் அதை உருவாக்க வேண்டும் என்று இராமாயணம் காட்டுகிறது.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நீங்கள் நல்ல குணத்துடன் தான் இருக்கின்றீர்கள். ஆனால் சந்தர்ப்பத்தில் பகைமையாகி அதனால் வேதனையான உணர்வை நுகர்ந்த பின் உங்கள் மனதிற்குள் என்ன நடக்கிறது…?

உள்ளுக்குள் மனப் போராட்டமாகி (மனதிற்குள்) சண்டை போட்டுக் கொண்டு மேல் வலிக்கிறது… தலை வலிக்கிறது… என்று சொல்வீர்கள்.

அப்பொழுது உங்களுக்குச் சரியான சிந்தனை இல்லை. ஒரு வேலையின் நிமித்தமாக உங்கள் பையனைக் கூப்பிடுகின்றீர்கள். கூப்பிட்டதும் அவன் வரவில்லை என்றால் “கூப்பிடுகிறேன் பார்… உடனே வர மாட்டேன் என்கிறானே…!” என்ற இந்த உணர்வு தான் வரும்.

கடையில் உட்கார்ந்து வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றீர்கள். வியாபாரம் நன்றாக இருக்கும் இடத்தில் முதலில் சொன்ன மாதிரி மனதில் கொஞ்சம் வெறுப்பாகி விட்டால் என்ன நடக்கிறது…?

கடைப் பையனைக் கூப்பிட்டு இந்தச் சரக்கை எடுத்து வா என்று சொன்னாலும் அவன் வரவில்லை என்றால் “நான் சொல்லிக் கொண்டேயிருக்கின்றேன்… உனக்கு என்ன காது கேட்கவில்லையா…?” என்று இப்படிக் கேட்டு இந்த வம்புக்குப் போவோம்.

அந்த உணர்வுகள்… அங்கே தாங்கவில்லை என்றால் “நாம் சொன்ன சரக்கை அவன் எடுத்துக் கொண்டு வரட்டும்…!” என்று பொறுமையாக இருக்க முடியாது. “தான் சொன்னதை ஏன் அவன் செய்யவில்லை…?” என்ற வேகம் தான் வரும்.

நாம் சொன்ன நேரத்தில் அவன் வேறு ஒரு சரக்கைக் கட்டிக் கொண்டிருப்பான். அதைப் பார்த்ததும் ஏம்பா…! நான் சொல்வதைக் கேட்கவில்லையா…? என்று அழுத்தமான சொல் வரும்.

ஏனென்றால் இந்த உணர்வுகளின் இயக்கங்கள் எப்படி…? என்ற நிலையை அறிந்து ஒவ்வொரு நொடியிலேயும் நாம் எதை எப்படிச் செய்ய வேண்டும்..? என்று தெளிவாக உணர்தல் வேண்டும்.

1.மாறுபட்ட எண்ணங்கள் நமக்குள் வரும் பொழுதெல்லாம்
2.நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று
3.உடலுக்குள் அதைச் செலுத்தி ஆத்ம சுத்தி செய்தால் “அவன் ரிஷியின் மகன் நாரதனாகின்றான்…!”

மனிதனின் வாழ்க்கையில் தீமைகளை அகற்றிடும் சக்தியாக அவன் உருவாக்கிக் கொண்டவன். அந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்தால் அது நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன். (சூரியன் என்றால் நாராயணன்)

அவன் (சூரியன்) எப்படி உலகை இரட்சிக்கின்றானோ அதே போல் சூரியன் கவர்ந்து வைத்திருக்கும் மகரிஷிகளின் உணர்வின் தன்மையைக் கவர்ந்தால்
1.இரட்சிக்கும் அலைகளாக அந்த உணர்வின் இசைகள் நம்மை நல் வழிக்கு மாற்றும்.
2.அதனால் தான் நாரதன் கையில் இசைக் கருவி இருக்கும்.
3.அது சுழன்று சீராகினால் இங்கே மகிழ்ச்சியின் தன்மை வந்து அறியாது வந்த இருளைப் போக்குகின்றது.

சரஸ்வதி கையில் என்ன இருக்கிறது…? வீணை. ஒவ்வொரு உணர்வின் மணமும் அந்த இசையை ஊட்டுகின்றது. எதனின் குணமோ அதனின் ஞானமாக அது இயக்கும். அந்த உணர்வினை ஒளியாக அது இயக்கும். உணர்வை அது ஊட்டும்… உணர்வை அது வளர்க்கும்…!

1.அதைத் தான் இங்கேயும் சுருதி ஏழு…. அங்கேயும் சுருதி ஏழு…! என்று போட்டுக் காட்டியிருப்பார்கள்.
2.ஆறாவது அறிவு ஏழாவது நிலை பெறுவது.
3.ஆக ஞானத்தின் தன்மை ஏழாவது நிலை அடைந்தவன் துருவ மகரிஷி… துருவ நட்சத்திரம்…!

அதை நாம் ஒவ்வொரு நிமிடமும் எடுத்து வளர்க்க வேண்டும்.

நடந்ததைச் சொல்வார்கள்… நடக்கப் போவதை அவர்களால் சொல்ல முடியாது…! – ஈஸ்வரபட்டர்

 

பல சாமியார்கள்… பல வழிச் சாமியார்கள்…! இந்த உலகம் முழுவதுமே ஒவ்வொரு கொள்கையுடன் கடவுளின் அருளைப் பெற உள்ளார்கள் “சாமியார்கள்” என்ற பெயரில்.

அந்தச் சாமியார்களின் நிலை எல்லாம் ஆண்டவனை அடைவதற்கு.. ஆண்டவனை அடிபணிவதற்கு… ஆண்டவனைத் தான் அடிபணிந்து வணங்கி விட்டால்… “தானே ஆண்டவன்…” என்ற எண்ணத்தில் வாழ்கிறார்கள்.

பல வழிகளில் அவர்களுக்குப் பொருளும் புகழும் வருகிறது. பல ஜெபங்களைச் சொல்கிறார்கள். பல வழிகளில் மக்களை அடிபணிய வைக்கிறார்கள் ஆண்டவனை வணங்க…!

அவர்கள் நிலை எல்லாம் என்னப்பா…?

இந்த உலகம் முழுவதுமே இந்த நிலை உள்ளதப்பா…! இந்தச் சாமியார்கள் நிலையில் அவர்கள் பூஜிக்கும் பொழுது
1.உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில்லை.
2.கடவுளை வணங்குவதையே மக்களின் மனதில் பெரும் கஷ்டத்தை உண்டு பண்ணுகிறார்கள்.

அவர்கள் நிலையில் இருப்பதெல்லாம் கரு வித்தை என்ற ஆவி தான்..! அவர்கள் நினைத்து ஜெபமிருக்கும் பொழுது அந்த ஆவி காட்சி தருகிறது.

அந்த ஆவியின் உருவத்திற்குப் பல பூஜைகளும் பல உணவுகளும் அளித்துவிட்டு இவர்கள் நினைத்த நினைவுகளுக்கு வரும்படி அந்த ஆவிகளை இவர்கள் வசப்படுத்தி இவர்கள் என்ன எண்ணுகின்றார்களோ… என்ன வேண்டுகிறார்களோ… அவைகளை எல்லாம் அந்த ஆவிகள் எடுத்துச் செப்பி விடுகின்றன.

அவற்றை வைத்துத்தான் இவர்கள் தன்னிடம் வருபவர்களுக்கெல்லாம் அவர்கள் நிலையை உணர்த்தி அவர்கள் ரூபமாகப் பொருள் சம்பாதித்து வருகிறார்கள்.

1.நடந்த நிலையைத்தான் இந்த ஆவிகளால் செப்பிட முடிந்திடும்.
2.நடக்க இருப்பவைகளை அறிந்திட முடிந்திடாது அந்த ஆவிகளின் நிலைக்கு.
3.எந்த ஜோசியனும்… எந்தச் சாமியாரும்… நடக்க இருப்பவைகளைச் செப்பிட முடிந்திடாதப்பா…!

நடந்தவைகளை முழுமையாகச் சொல்லிவிடுவார்கள். அது எல்லாம் கரு வித்தை வேலை தான்..! பல கோவில்களில் அருள் வருவதெல்லாம் இந்த ஆவிகளின் நிலை தான். அருள் அல்லப்பா.. மருள் அது.

1.ஆண்டவனின் அருள் வருபவன் தன்னையும் தன் நிலையையும் மறந்து ஆடிட மாட்டான்.
2.பெரும் அமைதியில் அமர்ந்திருப்பான்.
3.நடக்க இருப்பவைகளை நல்ல முறையில் நடத்திட அருளைத் தான் செப்பிடுவான்.

மருள் வந்தவன் வேலை எல்லாம் குட்டிச் சாத்தான் வேலையப்பா. இந்தக் குட்டிச் சாத்தான் வேலையில் தான் இந்த உலகமே உள்ளதப்பா…! நாட்டை ஆள்பவனே வைத்துள்ளான் குட்டிச்சாத்தானை…!

இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே உரைக்கின்றேன்.

குரு காட்டிய அருள் வழியில் வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கியமான நெறிகள்

 

நமது குருவின் (ஈஸ்வரபட்டர்) அனுபவங்களையும் அவர் எனக்குக் கொடுத்த அனுபவங்களையும் தொடர்ந்து இந்த உபதேச வாயிலாகக் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.

குருனாதர் எனக்குச் சொன்னது…
1.ஒவ்வொரு உயிரைக் கடவுளாகவும்… அந்த உடலைக் கோவிலாகவும் மதித்து நீ செயல்பட்டாய் என்றால்
2.அப்பொழுது அவரிடமிருந்து வரும் பகைமை உனக்குள் மறைகிறது
3.அவர் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும் என்ற நினைவு வருகிறது.
4.அப்படி எண்ணும் போது உன் உடலான ஆலயத்தையும் பரிசுத்தப்படுத்திக் கொள்கிறாய் என்றார்.

குருநாதர் காட்டிய அந்த அருள் வழிப்படி… நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணினால் அது எனக்குள் நல்லதாகிறது.

ஆகவே… நமக்குள் உள்ள தீமைகள் போக வேண்டும் என்றால் யார் நமக்குத் தீமை செய்தார்களோ… “அவர்களுக்கு நல்லது செய்யக்கூடிய எண்ணங்கள் வர வேண்டும்…” என்று சொன்னால் அந்தத் தீமையின் உணர்வுகள் நமக்குள் வராது.

எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் அவர்களுக்கு வர வேண்டும். என்று சொன்னோம் என்றால் அவர்களைப் பற்றி வெறுப்பான உணர்வுகள் நம் உடலுக்குள் வளர்வதில்லை.

1.ஆனால் அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று சும்மா சொன்னால் அந்தக் கெட்டது தான் நல்லதாகும்.
2.அவர் செய்யக்கூடிய கெட்டதற்கு ஊக்கம் கொடுத்த மாதிரி ஆகும்.

ஆகையினால்… நல்லது செய்யக் கூடிய எண்ணங்கள் அவருக்குள் வர வேண்டும்… எல்லோருக்கும் பண்பும் பரிவும் காட்டக்கூடிய அருள் ஞானம் அவருக்குள் வர வேண்டும் என்று சொன்னால் அந்தக் கெட்டதை வளர விடுவதில்லை. ஆக அதை வெறுமனே சொல்ல முடியாது.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்று
2.நம் உடலில் அது படர வேண்டும் என்று இதைக் கலந்து
3.நம் எண்ணங்களுக்கு நல்ல வலு கொடுக்க வேண்டும்.

அந்த வலுவின் துணை கொண்டு அந்த அருள் உணர்வுகளை மற்றவருக்குப் பாய்ச்ச வேண்டும். இப்படிச் செய்தால் குடும்பத்தில் எத்தகைய சங்கடங்கள் வந்தாலும் மாற்றி விடலாம்.

திடீரென்று எதிர்பாராது விபத்துக்களோ மற்றதுகளோ உற்றுப் பார்த்தால்… “அடப் பாவமே… இப்படி ஆகிவிட்டதே…!” என்று எண்ணக்கூடாது.

உடனே ஈஸ்வரா… என்று சொல்லி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று நமக்குள் இந்த வலுவைக் கூட்ட வேண்டும்.

விபத்தில் ஆன்மா பிரிந்திருந்தால் அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து அவர் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை உந்தித் தள்ளி அங்கே விண்ணுக்குச் செலுத்த வேண்டும்.

உடலில் அடிபட்டிருந்தால் அவர்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று பூரண குணமாகி அவர்கள் சீக்கிரம் எழுந்து நடக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நாம் இப்படித் தான் நினைக்க வேண்டும்.

பொதுவாக நம் செயல்கள் அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் போகிறது.
1.ஆனால் மேலே சொன்னபடி எண்ணாமல் அவர்களின் வேதனையை எடுத்தால்
2.கிடு கிடு… என்று உடலில் நமக்கு நடுக்கமாகும்.
3.நம் நல்ல குணங்கள் செயல் இழந்து… அவர்கள் அடிபட்ட உணர்வுகள் இரண்யனாகி அதைக் கொல்லும்.

அதனால் தான் அத்தகைய நஞ்சான உணர்வுகளுக்கு இரண்யன் என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள்.

இந்த மனித வாழ்க்கையில் நாம் எப்படி வாழ வேண்டும்…? என்று தான் அதை எல்லாம் காவியங்களாகப் படைத்தனர். ஏனென்றால் இது இயற்கை.

அதை நாம் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வேண்டி இப்படிக் கருத்தினைத் தெளிவாக்கிக் கொண்டு வந்தார்கள் ஞானிகள்.

அந்த இரண்யனைப் பிளக்க வேண்டும் என்பதற்குத்தான் உங்களுக்கு ஆத்ம சுத்தி என்ற பயிற்சி கொடுக்கின்றோம். அதை எடுத்து உங்கள் நல்ல குணங்களைக் காத்து மற்றவருக்கும் அதே நல் உணர்வை ஊட்ட முடியும்.

ஈசனின் சக்தியைப் பெற வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

சாமியார் ஒருவன்… நானே கடவுள்…! நானே தெய்வம்…! என்கிறான். அவ்விடம் உள்ள கருவின் வேலை வரைக்கும் தான்… அவன் வேலை எல்லாம்…!

ஆண்டவனின் சக்தியை அறிந்திடாமல் “அவனே கடவுள்..” என்கிறான். ஆண்டவன் என்றால் யார் என்றே அவனுக்குத் தெரிந்திடாது. அந்தக் கருவையே ஆண்டவன் என்கிறான்.

பல பூஜைகள் செய்து வருபவர்களின் எண்ணத்தையும் அவர்களின் கடந்த கால நிலையையும் கண்டிடலாம். இதைப் போன்ற நிலையை வைத்துத்தான் பல ஜோசியங்கள் கோவில்களில் உடுக்கை அடித்துச் சாமி கேட்பது எல்லாமே…!

இவ்வாவிகள் அறிந்து வந்து சொல்வது தான் இவை எல்லாம். மை போட்டுக் கேட்கிறார்கள். ஆண்டவனிடம் பூ கேட்கிறார்கள் என்பதெல்லாம் என்னப்பா…? இவ்வாவிகளின் வேலை தான்.

அருளுடன் தெய்வ நம்பிக்கையும் தன் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகள் எல்லாமே இந்நிலைக்கு வருகிறது. இதைப் போல உள்ள ஆவிகள் அனைத்துமே உடலை விட்டுப் பிரிந்தவுடன் மறு ஜென்மம் எடுப்பதில்லை. ஆயிரத்தில் கோடியில் ஒன்று தான் உடனே மறு ஜென்மம் எய்துகிறது.

அவசரத்தினால் எடுக்கும் ஜென்மத்தினால் அங்ககீனமுடன் குறையாகப் பிறப்பது குறைப்பிரசவம் குறையுடன் பிறக்கும் குழந்தைகள் நிலை எல்லாமே இது தான்…!
1.முன் ஜென்மத்தில் விட்ட குறையை
2.ஆவி உலகில் இருந்து அறிந்திட “அவகாசம் இல்லாமல்” வந்து குறையுடன் பிறக்கின்றது.

ஆனால் நல்ல நிலையில் ஆவி உலகில் சுற்றும் மறு ஜென்மம் எடுக்கும் வரை உள்ள ஆவிகள் தன் நிலை உணர்ந்து தன் நிலைக்கு ஏற்ற இடமாகத்தான் பிறக்கும்.

குழந்தை பிறப்பதற்கு முதல் ஆவி உலகில் உள்ள வரை அவரவருக்கு முன் ஜென்மம் தெரியும் என்றேன்.
1.ஆவி உலகில் உள்ள பொழுது எந்த நிலையில் பிறக்கலாம்…? என்று தான் தெரியும்.
2.பிறந்த பின் தன் வாழ்க்கை நிலை எப்படி இருக்கும்…? என்பது தெரிந்திடாது.
3.பிறந்த பின் முன் ஜென்மமும் ஆவி உலகமும் அறிந்திட முடியாது. இப்பிறவிக்கு எல்லாமே மறைக்கப்படுகிறது.

இந்த நிலையில் தான் ஈசனின் சக்தியே விளையாடுகிறது.

பிறப்பு இறப்பு ஆவி உலகம் எல்லாம் அறிந்த மனிதனால் அந்த ஈசனின் சக்தியை மட்டும் அறிந்திட முடிவதில்லை. பல கோணங்களில் ஆண்டவன் என்று வணங்குகிறான்.

அந்த ஈசனின் சக்தியை உணர்ந்த மகா தவ முனிவர்களும் இந்த மனிதர்களுக்குப் புகட்டிடவில்லை. அந்தச் சக்தி நிலையைப் பற்றித் தெரிந்திருந்தாலும்
1.இக்கலியில் வந்த மனிதர்கள்
2.அதையும் தன் வழிக்கு உண்ணக் காசாக்கி இருப்பார்கள்.

அதனால் தான் முனிவர்கள் நிலையில் தன்னையே தன் உடலையே அச்சக்தியின் அருளுக்கு அடிபணிய வைத்து அச்சக்தியின் அருள் எப்படி உள்ளது…? எந்த நிலையில் அந்தச் சக்தியின் அருளைப் பெற்று மக்களுக்கு அருளிடலாம் என்று செயல்படுத்தினர். போகரின் நிலை எல்லாம் அப்படித் தான் வந்ததப்பா…!

உன் நிலையில் ஜெபமிருக்கின்றாய். அஜ்ஜெபத்தின் நிலையில் ஈசனின் சக்தியை உன் நிலைக்கு ஈர்த்திடப்பா…!

எப்படி ஈர்ப்பது என்கிறாய்…?

கண்ணில் இல்லையப்பா ஒளி எல்லாம்.
1.இவ்வெண்ணத்தில்… உன் உயிரில்.. புருவத்தின் மேல்…
2.நெற்றியில் இந்நிலையில் தான் ஒளியப்பா…!

கனவில் பார்க்கின்றாய் பல நிலைகளை.. கண்களை மூடிக் கொண்டு…! அந்நிலை எப்படித் தெரிகின்றது…? கடும் இருட்டில் பல பிராணிகள் பூனை எலியைப் பிடிக்கின்றது. எலி பூனையைக் கண்டு தப்பி ஓடுகின்றது. நாய்க்கும் நரிக்கும் பாம்புக்கும் எப்படியப்பா இருட்டில் கண் தெரிகின்றது…?

சூரிய ஒளியில் இருந்துதான் கண் தெரிகிறது… கண் பார்வையினால்… என்று எண்ணுகிறாய்…!

தவ யோக முனிவர்கள் எல்லாம் அவர்கள் அமர்ந்த இடத்திலிருந்தே அனைத்தையும் அறிந்திட்டார்களே…! அது எப்படியப்பா…? ஒவ்வொரு மனிதருக்கும் அவ் ஈசனின் சக்தியில் எல்லா அருளும் உண்டப்பா..!
1.அவரவர்கள் எடுத்து அவர்களின் நிலையை அறிந்திட்டால்
2,கண்ணும் வேண்டாம்… உண்ண உணவும் வேண்டாம்…!
3.அவ் ஈசனின் சக்தியையே தன் உடல் முழுவதும் ஈர்க்கச் செய்திடலாம் புரிந்ததா…?

ஒவ்வொருவரும் அவ் ஈசனின் சக்தியில் இருந்து பெற்றிருப்பதால் அவரவர்கள் வழியிலிருந்தே அருள் புரிகிறார்கள். இந்நிலை தான் கொங்கணவருக்கும் போகருக்கும் அகஸ்தியருக்கும் கோலமாமகரிஷிக்கும் ஐயப்பனுக்கும் இன்னும் பல மகரிஷிகளுக்கும்…!

1.ஆண்டவன் என்றால் இப்பொழுது யார் என்று புரிந்ததா…?
2.பல வழிச் சாமியார்களின் நிலையும் கோவில்களின் நிலையும் புரிகிறதா…?
3.ஞானிகள் சித்தர்கள் மகரிஷிகள் நிலையும் புரிகிறதா..?

இந்தப் பாட நிலையை வைத்து நான் யார்…? நீ யார் என்னும் நிலை புரிந்திருக்கும்.
1.உன்னையே நீ வணங்கு.
2.உன்னுள்ளே ஈசன் உள்ள பொழுது உன்னுள்ளே அவ் ஈசனின் சக்தியை ஈர்த்திடப்பா..!

இந்த நிலையில் அறிந்திடுவாய் எல்லாமே…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மெய்ஞானிகளின் அருள் சக்திகளை யாம் பெறுவதற்குப் பல சம்வங்களை நிகழ்த்தினார். எமக்குப் பல சிரமங்களை ஏற்படுத்தி அதைக் கொடுத்தார்.

1.உங்கள் வாழ்க்கையில் எப்பொழுது சிரமங்கள் வருகின்றதோ
2.சந்தர்ப்பம் எது உங்களை இன்னலையும் மன பயத்தையும் கோபத்தையும் ஆத்திரத்தையும் விரக்தியையும் ஏற்படுத்துகின்றதோ
3.அப்பொழுது “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

மெய் ஞானிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் சேர்த்து அந்தத் துன்பத்தை விளைய வைக்கும் உணர்வின் ஆற்றலைத் தணியச் செய்யுங்கள்.

உங்கள் உடலில் வியாதியும் எண்ணத்திலே பல கலக்கமும் மன வேதனையும் மனக் குடைச்சலையும் ஏற்படுத்தும் இந்த உணர்வின் ஆற்றலை அது நம்மை ஆட்டிப்படைக்காதபடி நமக்குள் நல்லதாக மாற்றிடல் வேண்டும்.

கருணைக் கிழங்கை வேக வைத்துப் பல பொருள்களை அதனுடன் இணைத்துச் சுவையாக்கி நாம் உட்கொள்கின்றோம். அதன் மூலம் உடலுக்கு நாம் ஆரோக்கியமான நிலைகள் பெறுகின்றோம்.

அதைப் போன்று எத்தகைய துன்பங்கள் நமக்குள் வந்தாலும் அந்தத் துன்ப உணர்ச்சிகள் நமக்குள் தூண்டாவண்ணம் அதை அடக்கி
1.இன்பத்தின் சொல்லாலும்
2.இன்பத்தின் உணர்வுகளை நமக்குள் தூண்டி
3.விண்ணின் ஆற்றலை நாம் பெறும் தகுதியை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் இதைப் போன்று விண்ணின் ஆற்றலைக் கூட்டிக் கொள்ளும் நல்ல சந்தர்ப்பமாக மாற்றிக் கொள்ளலாம்.

அப்பொழுது அந்த மெய் ஞானிகளின் அருளாற்றல்கள் உங்களுக்குள் பெருகும். யாம் இப்பொழுது உபதேசிக்கும் உணர்வுகள் அனைத்தும் மெய் ஞானிகள் அவர்களுக்குள் விளைய வைத்து வெளிப்படுத்திய உணர்வுகள் தான்.

அந்த மெய்ஞானிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த இன்னல்களிலிருந்து தன்னை மீட்டிக் கொள்ள எத்தகைய உணர்வின் ஆற்றலைத் தனக்குள் கூட்டிக் கொண்டார்களோ அத்தகைய உணர்வின் தன்மையை
1.நீங்கள் சாதாரணமான நிலையில் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே
2.உங்களுக்குள் பதியச் செய்து விடுகின்றோம்.

“ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியிலிருக்கும் உங்கள் உயிரன ஈசனிடம் தொடர்பு கொள்ளுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று கண்ணின் நினைவினை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை உடல் முழுவதும் பாய்ச்சுங்கள்.

வேண்டியவருக்கு ஒரு நியாயமும் வேண்டாதவருக்கு ஒரு நியாயமும் என்று தான் உணர்வுகள் இயக்குகிறது

 

வேண்டாதவரைப் பார்க்கும் பொழுது எதிரி என்ற நிலையில் அவர் செய்வது தப்பு என்று நினைக்கின்றோம்… அடுத்தவரிடத்திலும் அதைத் தான் சொல்வோம்.

அவன் நல்லதையே செய்தாலும் கூட…
1.அவனை எந்தக் குறிக்கோளுடன் நாம் முதலில் பதிவு செய்திருக்கின்றோமோ
2.பார்த்தவுடனே ஊரை “ஏமாற்றுவதற்கு என்னவோ… அதைச் செய்கின்றான்…” என்று சொல்கிறோம்.

அவன் நல்லதைச் செய்வான். அவன் செய்வதை நம் மனது ஏற்றுக் கொள்வதில்லை. அவனைப் பற்றிய தவறான உணர்வுகளையே நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.

அதே சமயம் நமக்கு வேண்டியவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தப்பு செய்து விட்டால்… அது எப்படியோ தெரியாமல் நடந்து விட்டது… “அவர் தப்பே செய்ய மாட்டார்…!” என்று தான் நாம் சொல்கிறோம்.

1.இங்கே பாசத்தால் தவறை மறைக்கின்றோம்… தப்பை வளர்க்கின்றோம்
2.அங்கே வெறுப்பால் நியாயத்தையே மறைக்கின்றோம்… ஆனால் தவறை வளர்க்கின்றோம்

இதைப் போன்று நம்மை அறியாது வரக்கூடிய உணர்வுகள் அந்தந்தச் சந்தர்ப்பத்தில் வந்து நமக்குள் இயக்குவதைத் தான் கூனி என்றும் சகுனி என்றும் காவியங்களில் காட்டுகிறார்கள்.

ஒருவர் மீது பற்று இல்லை என்றால் அந்த வெறுப்பின் தன்மை வரும் பொழுது கூனி… பழி தீர்க்கும் உணர்வு கொண்டு அது இணைத்து விடுகின்றது.

இவ்வாறு நமக்குள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வுகள் அவர்கள் நல்லது செய்திருந்தாலும் கூட…
1.என்ன பெரிதாகச் செய்து விட்டார்…!
2.ஏமாற்றுவதற்குத் தான் இதைச் செய்கிறார்..! என்ற இந்த உணர்வுகளை வளர்த்துக் கொள்கின்றோம்

இராமாயணத்தில் கூனி என்ன செய்கிறது…?

இராமன் உயர்ந்தவனாக இருந்தாலும் அது பிடிக்காதபடி அவனைப் பகைமையாக ஊட்டுவதற்கு சிற்றன்னையான கைகேயியிடம் அதை உருவாக்குகின்றது.

தசரதன் உன்னுடைய கணவன் தானே… அவனுக்குப் பிறந்த மகன் தானே பரதனும்…! அவனுக்கு ஏன் அந்த அரசில் உரிமை கிடையாது…? என்ற உணர்வை ஊட்டுகிறது.

இராமன் இருந்தால்தான் சாம்ராஜ்யத்தை ஆள முடியும். இங்கிருந்து அவனை அனுப்பி விட்டால் “பரதன் எளிதாக ஆட்சிக்கு வரலாம்…” என்று இந்த ஆசையின் உணர்வுகளைத் தூண்டுகிறது கூனி.

இராமனைப் பிடிக்கவில்லை… அதனால் பகைமையை ஊட்டி அவ்வாறு செயல்படுகிறது. ஏனென்றால்
1.நமக்குள் எதிரியான உணர்வுகள் சந்தர்ப்பத்தில் உடலுக்குள் அணுக்களாக விளைந்து விட்டால் அது எதைச் செய்கிறது..?
2.ஆசையினால் குற்றவாளிகளை எப்படி உருவாக்குகின்றது…? என்ற உணர்வைத்தான் இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது.

காவியங்களில் மகரிஷிகளால் காட்டப்பட்ட மூலக் கருத்துக்களை நாம் உணர்ந்து கொண்டால் இந்த வாழ்க்கையில் நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் எளிதில் விடுபட முடியும்.

பகைமைகளை அகற்றி ஒன்றி வாழும் உணர்வை நமக்குள் பெருக்கி உயிருடன் ஒன்றி என்றும் ஏகாந்தமாக வாழும் வழியைத் தான் காவியங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

தென்றலும் ஆண்டவன் தான்… சூறாவளியும் ஆண்டவன் தான்..! – ஈஸ்வரபட்டர்

 

ஆண்டவன் என்பவன் கருணைஸ்வரூபன் மட்டும் தானா…? ஆண்டவன் என்பவன் எங்குள்ளான்…? என்றெல்லாம் சொல்லியுள்ளேன். ஆண்டவனின் நிலை என்ன…?

இயற்கையில் கலந்துள்ள ஒளி… காற்று… தண்ணீர்… இந்நிலையில் கலந்துள்ளவன்தான் ஆண்டவன்… என்று நான் செப்பியுள்ளேன்.

அப்படி இருக்கும் பொழுது ஆண்டவனால் ஏனப்பா “ஒரே நிலையில்” ஒளி பாய்ச்சவும்… மழை பெய்யவும்… காற்று அடிக்கவும் முடியவில்லை…?
1.இடி இடித்து மழை பெய்கிறது… அதி மழையும் பெய்கிறது
2.பெரும் காற்றும் சூறாவளிக் காற்றும் வீசுகிறது
3.குளிர்ந்த ஒளியும் கடும் வெப்பமும் வருகிறது.

ஆண்டவனின் நிலையில் ஏனப்பா இவ்வளவு மாற்றங்கள்…?

கருணைஸ்வரூபா…! என்று ஆண்டவனை என் சிஷ்யன் (ஞானகுரு) பாடுகின்றான். “கருணைஸ்வரூபா…!” என்று பாடும் பொழுது அவன் மனமும் கருணையுடன் சுற்றுகின்றது.

1.கருணையுடன் வேண்டும் பொழுது
2.அந்தக் கருணை நிலை வேண்டுபவர்களின் மனதிலேயே வருகிறது.
3.எண்ணத்திலும் அந்த நிலையே அப்பொழுது சுற்றுகிறது.

அந்நிலையில் இயற்கைத் தன்மையில் கலந்துள்ள ஆண்டவனும் அதை வேண்டுபவர்களுக்கு அந்நிலையில் ஒளி பாய்ச்சி அருள் புரிகின்றான்.

1.அவன் நிலையிலேயே “கருணை நிலை வேண்டினால் தான்…” அந்நிலையே வருகிறது.
2.அந்நிலை இவன் நிலைக்குப் பெற முடிகிறது.

அந்நிலையில் பூஜை செய்வது தான் நீ வணங்கும் முருகனின் மூலமாக அருள் கொடுக்கும் போகரின் நிலை எல்லாம். பழனி ஸ்தலத்தின் நிலையும் அதுவே தான்…!

சில நிலையில் பூகம்பம் வந்து அடங்காத காற்றும் அடங்காத மழையும் அதி உஷ்ணமும் வரும் பொழுது கருணைஸ்வரூபமான ஆண்டவன் ஏனப்பா அந்நிலையை அளிக்கின்றான்…?

பழனி ஸ்தலத்தின் வழியைச் சொல்கிறேன். ஆனால் கல்கத்தா காளியின் நிலை என்ன..? தென்றல் காற்றப்பா போகர் பெற்ற நிலை. பெரும் சுழல் காற்றப்பா கல்கத்தா காளியின் நிலை.

1.போகரும் அந்த ஆண்டவனின் அருளைப் பெற்றுத்தான் முருகனாக அருள் புரிகின்றார்.
2.கல்கத்தா காளியும் ஆண்டவனின் அருளைப் பெற்றுத்தான் பெரும் ஆவேச நிலையில் அருள் புரிகின்றாள்.

கல்கத்தா காளியின் நிலை என்னப்பா…? காளி என்பவள் யாரப்பா…?

இடி மின்னலையும் பூகம்பத்தையும் தன்னுள் ஈர்த்துக் கொண்டு பெரும் ஆவேசத்துடன் அடங்காத நிலையில் அமர்ந்துள்ளவள் தான் கல்கத்தா காளியாக அமர்ந்துள்ள கடும் தவம் புரிந்த பெண் ஒருத்தியப்பா அவள்.

அக்காளியின் நிலை ஆவேச நிலையப்பா. அடங்காத ஆவேசமான நிலையப்பா…! ஆணவத்தையும் ஏமாற்றுத் தன்மையையும் எரிக்கும் குணம் உடையவள்.

நல்லோர்க்குக் கருணை புரிவதில் பெரும் நாட்டம் கொண்டவள். தவறும் நிலையைக் கண்டு விட்டால் எரிமலையும் பூகம்பமும் தானப்பா அவள்…!

அவன் தந்த ஒளியை அவனதாக்கி அவனுடன் ஐக்கியமாகுவது தான் மெய் ஒளி பெறும் ஆண்டவனின் சக்தி…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

எத்தகைய குறைகளைக் கண்டாலும் நமக்குள் உட்சென்று நம்மை வேதனைப்படச் செய்யும் செயல்களைத் தடுத்து நிறுத்த “ஆத்ம சுத்தி…” என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

அதை நீங்கள் பயன்படுத்துவதற்கு யாம் பனிரெண்டு வருட காலம் நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி காடு மேடெல்லாம் அலைந்து அந்த ஆற்றலைப் பெற்றோம்.

ஒரு மருந்தைத் தயார் செய்து நோய் போய்விடும் என்று வைத்தியர்கள் சொல்கின்றார்கள்.

வைத்தியத்தின் முறைகளில் நோய் நீங்கினால் அவருக்குப் பொருள் கிடைக்கும் என்ற நிலைகளில் வைத்தியர்கள் செய்கின்றார்கள்.

நமது குருநாதர் கொடுத்த நிலைகளோ துன்பங்கள் விளைய வைக்கும் நிலைகளிலிருந்து மீள்வதற்கு என்னைப் பனிரெண்டு வருட காலம் காடு மேடெல்லாம் அலையச் செய்தார்.

அவர் சொன்ன முறைப்படி அங்கே அலைந்தோம்.

1.தாவர இனத்தின் உணர்வின் சத்து எவ்வாறு வேலை செய்கின்றது…? என்ற நிலையும்
2.மனித சஞ்சாரமே இல்லாத நிலைகள் அங்கே அமைதி கொண்டிருக்கப்படும் பொழுது
3..மனித உணர்வின் எண்ணங்கள் எவ்வாறு செயலபடுகின்றது…? என்ற எண்ணத்தை எடுத்து
4.அதைப் மனித உடலில் விளைய வைத்துத் துன்பத்தை நீக்கிடும் ஆற்றலை ஞானியர்கள் எவ்வாறு பெற்றார்கள்…? என்ற நிலையை
5.எம்மைப் பெறச் செய்தார் குருநாதர்.

அதைப் பெறச் செய்தபின் எனக்கு அடிக்கடி துன்பங்களை விளைய வைத்து அந்தத் துன்பத்தை நீக்க… “நீ எப்படி எடுக்க வேண்டும்…” என்றும் உணர்த்தினார்.

அவர் காட்டிய வழிப்படி யாம் எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றலால்தான் எமக்குள் வரக்கூடிய துன்பத்தையும் எமக்குள் வரக்கூடிய வியாதியையும் நிவர்த்தி செய்ய முடிந்தது.

நமது குருநாதர் காட்டிய வழியின் தன்மையை எமக்குள் பதியச் செய்து கொண்டேன். அதை ஒவ்வொரு நேரத்திலும் எடுத்து அதிலே வளர்த்துக் கொண்ட “அந்த உணர்வின் எண்ண அலைகளைத்தான்” உபதேச முறைப்படி
1.ஒவ்வொரு உணர்வின் அலைகளுக்கும் (நன்மை தீமைகளை உருவாக்கும்)
2.நன்மையை உருவாக்கும் உணர்வுடன் கலந்து உபதேசிக்கப்பட்டு
3.இந்த உணர்வுகளை உங்களுக்குள் திணிக்கின்றேன்.
4.உங்கள் துன்பத்தைப் போக்க உங்களுக்குள் அந்த நல்ல உணர்வினைப் பதியச் செய்கின்றேன்.

துன்பத்தை ஊட்டும் உணர்வுகள் உங்களை ஆட்டிப்படைக்கும் உணர்வுகளைத் தூண்டச் செய்கின்றது.

நீங்கள் அந்த மனதின் நிலைகளை அடக்கி உங்களைக் காக்கக்கூடிய அந்தச் சக்தியை நீங்கள் பெறுவற்குத்தான் இதைச் சொல்கின்றோம்.

அந்தப் பனிரெண்டு வருட கால அனுபவத்தின் நிலையை யாம் சொல்லும் பொழுது அந்தத் துன்பத்தினுடைய நிலைகளை மெய்ஞானியின் அருள் ஒளியுடன் கலந்து திரும்ப உபதேசத்தின் வாயிலாக “வாக்கின் நிலைகள் கொண்டு…, உங்கள் உடலிலே பதியச் செய்கின்றோம்”.

அவ்வாறு பதியச் செய்த அந்த வித்தின் நிலைகளுக்கு மெய் ஞானிகளின் சக்தியைப் பெறுவதற்கு நீங்கள் எந்த நிமிடமானாலும் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரை எண்ணி எடுக்க முடியும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி மகரிஷிகளின் அருள் சக்தியை எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று உங்கள் உடலுக்குள் நினைத்துச் செயல்படுவீர்கள் என்றால் துன்பத்தைப் போக்கக் கூடிய மெய்ஞானியின் அருள் சக்தி உங்களுக்குள் ஊடுருவச் செய்கின்றது.

1.உங்களையறியாமல் ஆட்டிப்படைக்கும் மனக்குழப்பத்தை மனக்குடைச்சலை இது நிவர்த்தி செய்கின்றது
2.உங்கள் எண்ணத்திற்குள் தெளிவாக்கி உங்கள் வாழ்க்கையில் உங்கள் செயலையும் தெளிவுபடச் செய்ய இது உதவுகின்றது.
3.வியாபாரத்திலும் உங்களைத் தெளிவாக்கச் செய்கின்றது.
4.குடும்பத்திலும் உங்களைத் தெளிவாக்கச் செய்கின்றது.
5.குடும்பத்திலும் ஒற்றுமையாக்கச் செய்கின்றது.

ஒரு நீரின் கீழ் தெளிந்த நீராக இருந்தவுடன் கீழே இருக்கக் கூடிய பொருளை நாம் காணமுடிகின்றது. நீர் தெளிவாக இருந்தாலும் அதே நீரின் தன்மைகள் “அலைபாயும் பொழுது… தெளிவாகத் தெரிவதில்லை”.

நன்மையான நிலைகளை நாம் தெளிவாக்க முடியாத நிலைகளில் இருக்கும் அந்த நேரத்தில் மெய் ஞானியின் உணர்வின் அலைகளை நமக்குள் செலுத்தப்படும் பொழுது
1.பல உணர்வின் அலைகள்
2.அலைந்து கொண்டிருக்கும் நிலையை
3.அது நமக்குள் சமப்படுத்தி நிறுத்தும்.

வெளியிலிருக்கும் எதிரிகளைக் காட்டிலும் நமக்குள் உருவாகும் எதிரிகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

நாம் தவறே செய்யவில்லை என்றாலும் கூட அடுத்தவர்கள் நம் மீது ஏதாவது குறையாகச் சொல்லி விட்டால் அவர்கள் உணர்வுக்கொப்ப அது ஆழமாகப் பதிந்து விடுகின்றது.

நமக்குள் பதிவாகி விட்டால் “என்னை இப்படிச் சொன்னானே… செய்தானே…!” என்ற இந்த உணர்வுகள் நமக்குள் எதிரியை வளர்த்துக் கொண்டே இருக்கின்றது. அப்பொழுது
1.நம் நல்ல குணங்களுக்கு இரையே கொடுப்பதில்லை… அதை வளர்ப்பதும் இல்லை
2.நம் நல்ல குணங்களை ஒடுக்க நாமே காரணமாகின்றோம்

அந்த நல்லதைக் காப்பதற்காகச் சாதாரண நிலைகளில் கொடுக்கப்பட்டது தான் விநாயகர் தத்துவம். அன்று மெய் ஞானியான அகஸ்தியனால் இது உருவாக்கப்பட்டது.

அவன் தனக்குள் கண்டுணர்ந்ததைத் தன் இன மக்கள் அனைவரும் பெறுவதற்காக இந்த முறையை வகுத்துக் கொடுத்தான்.
1.துருவ நட்சத்திரமாக இருக்கும் அவனின் ஆற்றலை நாம் பருகினோம் என்றால்
2.எத்தகைய தீமைகளையும் அகற்ற முடியும்… ஒடுக்க முடியும்… அதைப் பழக்கப்படுத்த வேண்டும்.

உதாரணமாக ஒருவர் நம்மைத் திட்டி விடுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவரை உற்றுப் பார்த்த பின் நமது உயிர் அதை இழுத்து அந்த உணர்வின் தன்மையை உணர்ச்சிகளாக இயக்கிச் செயலுக்குக் கொண்டு வருகின்றது.

அடுத்து உடலுக்குள் அதை அணுவாகவும் இதே உயிர் தான் உருவாக்குகின்றது. எவ்வளவு வேதனைப்படும்படி அவன் சொன்னானோ அந்த வேதனையை உருவாக்கும் அணுவாக இங்கே விளைந்து விடுகின்றது.

இதைத்தான் உயிரான விஷ்ணு வரம் கொடுக்கின்றான் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. விஷ்ணுவுக்குப் பிறந்த குழந்தை (பிரம்மா) அந்த விஷத்தின் தன்மையாக உருவாகி விடுகின்றது.

ஆகவே பிரம்மா உருவாக்குகின்றான்… அது மீண்டும் தன் இனத்தை உருவாக்கும் தன்மை பெறுகின்றது. பிரம்மாவின் மனைவி சரஸ்வதி… அந்த ஞானமாக வேதனையாக இயக்கும்.

எந்த வேதனையை உருவாக்கும்படி முதலிலே சொன்னானோ அதனால் உருவான அந்த உணர்வுகள் பிரம்மமாகத் தன் இனத்தை மீண்டும் சிருஷ்டிக்கும் வன்மை பெற்றது.

1.வேதனைப்படச் செய்த அந்த அணு மீண்டும் அதே வேதனையை இங்கே உருவாக்குகிறது.
2.அந்த ஞானத்தின் வழிகளிலேயே அது செயல்படும் என்று
3.இவ்வளவு கருத்துடன் அந்த இயற்கையின் நிலைகளை நாம் கண்டுணர இதைக் கொடுத்திருக்கின்றார்கள் ஞானிகள்.

ஒரு விஷமான வித்து காற்றில் இருந்து தன் விஷமான உணர்வின் சத்தை நுகர்ந்து தான் அது விஷச் செடியாக வளர்கின்றது.

அதே போல் தான்
1.எந்த மனிதன் நம்மை வேதனைப்படச் செய்தானோ
2.அவனின்று வரும் இந்த உணர்வை அந்த அணு நமக்குள் அது கிளர்ந்து… சுவாசித்து
3.அதனின் மலத்தை உடலிலே இடும் பொழுது நம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் அந்த வேதனை தாங்காது
4.அதனுடய செயலைக் குறைக்கச் செய்கின்றது..
5.நம் உடலில் அது நோயாக வருகின்றது

ஆனால் நாம் என்ன நினைக்கின்றோம்…!

நம்மை வேதனைப்படச் செய்தான்… அவனைச் சும்மா விடுவேனா…? என்று கோபத்துடன் எண்ணும் போது இந்த விஷத் தன்மையான அணுக்கள் நமக்குள் பெருக ஆரம்பிக்கிறது.

மீண்டும் அவர்களை எண்ண… எண்ண… நமக்குள் நோயாகவே விளைகின்றது… எதிரியாகின்றது…!
1.எதிரிக்கு நாம் இடம் கொடுத்து விடுகிறோம்…
2.நம்மை நாம் மறந்து விட்டோம்…! என்ற நிலைதான் இங்கே வருகின்றது.

குருநாதர் ஒவ்வொரு நிமிடமும் இதை எல்லாம் எனக்கு (ஞானகுரு) அனுபவபூர்வமாகக் கொடுத்தார். அவர் கொடுத்த அதே வழியில் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்குள்ளும் அந்த ஞானிகளின் அருள் உணர்வைப் பதிவு செய்கின்றோம். ஆகவே அந்த மெய் ஞானியின் உணர்வைப் பெற நாம் தியானித்தல் வேண்டும்.

பிறர் நம்மை வேதனைப்படச் செய்தாலும் அடுத்த கணமே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அவனிடம் வேண்டி… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் பல முறை செலுத்துதல் வேண்டும்.

எத்தகைய நஞ்சான உணர்வும் நம் உடலுக்குள் உருவாகாதபடி நாம் தடுத்துக் கொள்ள வேண்டும்.

என் வழிக்கு நீங்கள் வாருங்கள் – ஈஸ்வரபட்டர்

 

ஒரு கொசு எப்படித் தனக்குகந்த ஆகாரம் உள்ள இடத்தில் சுற்றிக் கொண்டுள்ளதோ அப்படித்தானப்பா இந்த மனித மனங்களும் எண்ணங்களும் பிறவிப் பயனை வைத்து அடுத்த பிறவிக்கு வர முற்படுகிறது.

ஒரு அரசனின் வயிற்றில் அவதரிக்கின்றான் அரச குமாரன். தன் நிலைக்கு உகந்த இடமாகத்தான் ஆவி நிலையிலிருந்து அவதரிக்கின்றான் அந்தக் குமாரன்.

ஆனால் ஆயிரம் ஆயிரமாக அந்த அரசன் செல்வத்தைத் தேடி வைத்திருந்தாலும் இந்த அரச குமாரன் அந்தச் செல்வத்தை அவன் வழியில் அழித்துவிடுவதில்லையா…? அப்பொழுது அரசனும் ஆண்டியாகிவிடுகின்றான்.

ஆனால் ஏழ்மை நிலையில் பிறக்கும் சில குழந்தைகள் தன் ஏழ்மையை எண்ணிடாமல் எப்படியும் உயர்ந்த நிலை அடைந்திடலாம் என்று எண்ணும் பொழுது தன் எண்ணத்திலேயே செல்வ நிலைக்கும் உயருகிறது.
1.அந்த நிலையிலிருந்து உயரும் குழந்தையின் நிலைக்கும்
2.பூர்வ புண்ணிய நிலையிருந்தால் தான் உயர முடியும்.
3.எண்ணமே அப்பொழுது தான் தோன்றிட முடியும்.

உங்கள் எண்ணத்தில் சில சந்தேகங்கள் தோன்றியிருக்கும். ஏன் ஆவி நிலையில் இருந்து கொண்டே எல்லோரும் செல்வம் உள்ளவரின் வயிற்றில் அவதரிக்கலாமே….! என்று எண்ணலாம். இதிலே தானப்பா அந்த ஆண்டவனின் சக்தி உள்ளது.

உடலிலிருந்து ஆவி பிரியும் பொழுது அந்த ஆவியின் ஆசை நிலையை வைத்துத்தான் பிறக்கின்றது… “மறு பிறப்பு” என்றேன் முதலிலேயே.

அந்த ஆசை நிலை என்பது பல ரூபத்தில் உள்ளது. பணம் காசு மட்டுமல்ல…! பந்தபாசம் கோபதாபம் எல்லா நிலைகளிலுமே அந்த ஆசை நிலைகள் உள்ளன. ஆவி நிலையில் இருந்து கொண்டு அந்த ஏழ்மை நிலையை அறிந்து தான் அந்தக் குழந்தை பிறக்கின்றது.

தன் நிலையில் உயர்ந்திடலாம் என்ற எண்ணத்திலும் தன்னால் அந்தக் குடும்பத்தை உயர்த்திடலாம் என்ற நிலையிலும் எண்ணிப் பிறக்கிறது.
1.ஆனால் பிறந்தவுடன் தான் எல்லாமே மறைக்கப்படுகிறதே…!
2.அச்சக்தியின் நிலையிலிருந்து அங்கு தான் இருக்கிறதப்பா ஆண்டவனின் சக்தி.

அந்தச் சக்தி நிலையைப் பெறத்தான் சித்தர்கள் தவமிருந்து பல பேறுகளைப் பெற்றார்கள். ஆனாலும் அந்த ஆதி சக்தியின் அண்ட கோடிகளில் அடங்கி உள்ள அந்த முழுச் சக்தி நிலையையும் இன்னும் எந்தச் சித்தனாலும் பெற முடியவில்லையப்பா…!

சித்தர்கள் மகரிஷிகள் எல்லோருமே அந்தச் சக்தியின் நிலையைப் பெறத்தான் இன்னும் தவமிருந்து ஜெபமிருந்து கொண்டுள்ளார்கள்.

இப்பொழுது தான் நீங்கள் கடுகளவிலிருந்து மிளகளவு வந்துள்ளீர்கள்.
1.இன்னும் உலக நிலையையே என்ன…? என்று தெரிந்திடாமல் குடும்ப நிலையிலேயே கலங்கியுள்ளீர்கள்.
2.ஜெப நிலையைக் கூடிய விரைவில் உயர்த்திக் கொள்ளுங்கள்.
3.இந்தப் பாட நிலையிலிருந்து பலவும் பல வழியிலும் புரிய வைக்கின்றேன்.

நான் (ஈஸ்வரபட்டர்) பெற்ற ஜெப அருளிலிருந்து என் வழிக்குத் தெரிந்ததை உங்கள் வழிக்கும் புகட்டுகின்றேன். என் வழிக்கு நீங்களும் மேலும் வந்திடலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒரு பொருளுக்குள் ஒரு விஷம் பட்டால் அனைத்தையுமே நாசமாக்குகின்றது. இதைப் போன்று
1.நம் உணர்வுக்குள் சிறிதளவு வேதனையாகிவிட்டால்
2.நமக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் சேர்கிறது.

ஒரு குழந்தை தவறு செய்தால் “இப்படி ஆகிவிட்டதே” என்று வேதனையை எடுத்தீர்கள் என்றால் இது விஷம்.

இந்த விஷமான உணர்வு கொண்டு குழந்தையைப் பார்க்கப்படும் பொழுது விஷம் அதிகமாகக் கூடி அவன் புத்தியையே மட்டமாக்கும்.

இப்படிப் பண்ணிவிட்டாயே…? பாவி என்று சொல்லி இந்த விஷத்தின் தன்மை கொண்டு ஆக்கப்படும் பொழுது அவனிடம் இருக்கக்கூடிய அந்த வளர்ச்சியின் தன்மையை மட்டமாக்கி அங்கே விஷமாகி அவன் சிந்திக்கும் செயலையும் இழந்து விடுகின்றான்.

நமக்குள் என்ன சக்தி இருக்கின்றது…? என்று நினைத்துப் பார்த்தால், சிந்தித்துப் பார்த்தால் இந்தச் சொல் எதிலிருந்து வருகின்றது…? என்பது தெரியும்.

நாம் சுவாசித்த உணர்வின் தன்மைகள் உயிரில் பட்டு உணர்ச்சிகளாகின்றது.
1.நாம் பேசும் பொழுது அந்த உணர்வின் ஒலியாக மாறி
2.இந்த உணர்வுகள் மற்றொன்றுடன் கலக்கப்படும் பொழுது
3.அந்த உணர்ச்சிகளைத் தூண்டிச் சுவாசிக்கச் செய்து அங்கே விளைந்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் மீள்வதற்கு மெய் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி ஆத்ம சுத்தி செய்து நமக்குள் துனபங்கள் தாக்கும் துன்பங்களை உருவாக்கும் நிலையை மாற்ற வேண்டும்.

கருணைக் கிழங்கை வேகவைத்து விஷத்தின் தன்மையை நீக்குகின்றோம்.

எத்தனையோ விஷத்தன்மை கொண்ட எத்தனையோ உணர்வு கொண்ட காய்கறிகளை வேக வைத்து அதிலிருக்கக்கூடிய காரல்களை நீக்கிச் சுவை கொண்டதாக மாற்றிக் கொள்கின்றோம்.

இதைப் போன்று நம் மனித வாழ்க்கையில் எத்தகைய துன்பமான நிலைகள் வந்தாலும் அதைத் நமக்குச் சாதகப்படுத்துவதற்கு வேக வைத்துச் சுவையாக்கும் நிலையாக ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

அப்படிச் செய்தால் அது சுவைமிக்க சொல்லாக நமக்குள் சென்று சுவையான செயல்களைச் செய்யக் கூடிய உணர்வுகளாகத் திருப்பிப் பேசும்படி செய்யும்.

அப்பொழுது நம் சொல்லைக் கேட்பவர்களுக்கும் மகிழ்ச்சி ஊட்டும் நிலைகளாக மாற்றும் சக்தி கிடைக்கின்றது.

நம் உணர்வைச் சுவையற்றதாக ஆக்காதபடி சுவையான தன்மையாக நமக்குள் வளர்த்துக் கொள்ள முடியும்.

சிறிது காலம் யாம் சொல்வதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பக்குவப்படுத்திக் கொண்டால் அது தானாகவே பேசும்.

கோபம் வந்துவிட்டால் அடங்காத பையனை அடிக்கடி நினைத்தவுடன் கோபம் வருகின்றது. அதே மாதிரி அந்தப் பையன் நன்றாக ஆகவேண்டும் என்று தியானத்தில் எடுத்துக் கொண்டு
1.“நன்றாக ஆகவேண்டும் நன்றாக ஆகவேண்டும்” என்று
2.அடிக்கடி எண்ணினால் பையன் நல்லவனாக ஆகிவிடுகின்றான்.
3.தன்னாலே தன்னிச்சையாக வரும்.

இப்படிச் சொல்லிப் பழகிவிட்டால் அதே நிலைகள் வரும்.

ஒரு குழந்தை படிப்பிலே மட்டமாக இருக்கிறது. “படிப்பிலே இப்படி இருக்கிறானே…” என்று நாம் எண்ணும் பொழுதெல்லாம் மற்றவர்களிடத்தில் எல்லாம் சொல்வோம். நினைக்கும் பொழுதெல்லாம் இந்த வேதனைப்பட்டே நினைப்போம்.

இவ்வாறு நினைக்கும் பொழுது இந்த வேதனைகள் அவன் உடலிலே சேர்ந்து இதையேதான் உருவாக்கும்.

ஆகையினாலே இதையெல்லாம் நீங்கள் மனதிலே பக்குவப்படுத்தி இந்த நிலைகளெல்லாம் நீங்கவேண்டும் என்று ஆத்ம சுத்தியைச் செய்து வரும் தீமைகளைப் போக்கிக் கொள்ளுங்கள்.

“ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் உங்கள் உயிரிடம் நினைவைச் செலுத்துங்கள். ஓம் ஈஸ்வரா குருதேவா… உங்கள் அருளால் மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கியிருங்கள்.

மகரிஷிகள் வெளிப்படுத்திய சக்திகள் அனைத்தும் இங்கே சுழன்று கொண்டுள்ளது… அதைப் பெற நாம் முயற்சிக்க வேண்டும்

 

நாம் பார்க்கும் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அவர்கள் மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்… அவர்கள் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வை நாம் பாய்ச்சுதல் வேண்டும்.
1.இப்படிச் செய்தால் அது உண்மையான தவமாக மாறுகின்றது
2.ஒவ்வொரு குடும்பத்திலும் இந்த முறையைக் கையாண்டு பழக வேண்டும்.

வெளியிலே எல்லோருக்கும் சொல்லி விடலாம். தன் குடும்பம் என்று வரும் போது தான் இதிலே பெரிய சிக்கலே வரும்.

ஏனென்றால் அடிக்கடி சந்திக்கும் நிலையும்… வெறுப்பு உணர்வை வளர்த்துக் கொள்வதாலும்… உடனே அந்த உணர்வைத் தூண்டிக் கோபமாகப் பேசச் சொல்லும்.

ஆகவே…. முதலில் வாரத்தில் ஒரு நாளாவது நம் குடும்பத்தில் எல்லோரும் ஒருங்கிணைந்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எண்ணிக் கூட்டுக் குடும்ப தியானம் செய்ய வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியும் மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற வேண்டும். எங்கள் குடும்பம் ஒன்றுபட்டு வாழ வேண்டும். எங்கள் பார்வையால் அனைவரும் நலமாக இருக்க வேண்டும். பொருளறிந்து செயல்படும் திறன் அனைவரும் பெற வேண்டும் என்ற இந்த எண்ணத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இது வளர வளர குடும்பத்திலே மகிழ்ச்சி பெருகும். நம் பார்வையும் சொல்லும் உலக மக்களின் தீமைகளை அகற்றும். நாம் இவ்வாறு எடுத்துக் கொண்ட இந்த உணர்வுகள் நாம் வாழும் பூமியிலேயும் படருகின்றது.

எத்தனையோ லட்சம் ஆண்டுகளுக்கு முன்…
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு அலைகளாக அணுக்களாக இருப்பினும்
2.அதைப் பருகி தனக்குள் வளர்க்கும் நிலை இல்லை.

நம் குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு தான் இப்பொழுது அதைக் கவர்ந்து வளர்ப்பதற்குண்டான வழிகளை ஏற்படுத்துகின்றோம்.

அன்று அகஸ்தியனும் அவரைப் பின்பற்றிய வியாசரும் மற்ற ஏனைய ரிஷிகளும் எடுத்து அவர்கள் விளைய வைத்த ஒளியான உணர்வுகள் இங்கே மறைந்துள்ளது.

அதை நுகர்ந்து நமக்குள் விளைய வைத்துக் கொண்டால் மீண்டும் அதைப் பெருக்கும் நிலை வருகின்றது.
1.ஆனால் இதற்கு முன் அதைப் பெருக்கும் நிலை இல்லை
2.மகரிஷிகள் விண்ணிலே ஒளியின் சரீரமாக இருந்தாலும் அவர்கள் உமிழ்த்தும் உணர்வின் தன்மையை இங்கே பருகும் நிலை இல்லை

நாம் விண்ணை நோக்கி ஏங்கித் தியானித்து அந்த மகரிஷிகளின் அருளைப் பருகி எல்லோருக்குள்ளும் அது பெருக வேண்டும் என்று அந்த அலைகளை நாம் பரப்ப வேண்டும்.
1.முன்னாடி அந்த நிலை இல்லை
2.ஆனால் அதை இப்பொழுது நாம் உருவாக்குகின்றோம்

ஒவ்வொரு உணர்வுகளிலும் அதைப் பதிவு செய்யப்படும் பொழுது எத்தனையே லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு விளைய வைத்த அந்த அருள் உணர்வுகள் நமக்குள் விளைந்து
1.ஞானத்தையும் மெய்ப்பொருளைக் கண்டுணரும் உணர்வுகளும் நமக்குள் கருவாக உருப்பெறும்.
2.அதை குரு அருளால் உரு பெறச் செய்ய வேண்டும்
3.இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் அவசியம் இதைச் செயல்படுத்த வேண்டும்.

விட்ட குறைய இப்பொழுது முடிக்க வேண்டியதன் அவசியம் – ஈஸ்வரபட்டர்

 

எண்ணத்தில் வருவது தான் எல்லாமே…!

இந்தச் சொல்லைப் பாட நிலையின் முதலிலிருந்தே இன்று வரை சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

1.நாம் எந்தெந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ
2.அதற்குத் தக்கவாறான சுவாச நிலையில் வருவது தான் எல்லாமே என்று பல முறை செப்பியுள்ளேன்.

பூர்வ ஜென்மப் பயனை வைத்து… முதல் ஜென்மத்தில் விட்ட குறையை முடிக்க.. ஆவி நிலையிலிருந்து தன் நிலைக்கு ஒத்த சுவாச நிலையை ஈர்த்துத் தான் “குழந்தைகள் பிறக்கின்றது…” என்று கூறியுள்ளேன்.

ஆண்டவனின் அருளில் பூர்வ ஜென்மத்தின் பலனை அவரவர்கள் நிலைக்கு எடுத்துக் கொண்டால் தான் அந்தப் பலனையே பெற்றிட முடியுமப்பா…!

போன ஜென்மத்தில் நீ செய்த பயனாக… பூர்வ ஜென்மத்தின் பலனால் பல புண்ணியங்கள் செய்தும்.. அந்நிலைக்கு சூட்சம நிலைக்கு ஆண்டவன் என்னும் நிலையின் ரிஷியின் நிலைக்கே வரும் தன்மையைச் சிறிதளவு தவற விட்டதனால் தான் “இந்த ஜென்மமே எடுத்துள்ளாய்…!”

இந்த ஜென்மத்திலும் பிறவி நிலையிலேயே உன் எண்ணத்தை மாற்றிக் கொண்டிருந்தால் உன் நிலையும் வேறாகத் தான் இருந்திருக்குமப்பா…!

1.போன ஜென்மத்தில் நீ வைத்திருந்த ரிஷியின் தொடர்பினால்
2.இந்த ஜென்மத்திலும் உன்னை… உன் எண்ணத்தை… அவன் ஒரு நிலைப்படுத்தி வழி நடத்திச் செல்கின்றான்.

ஆகவே கால நிலையைத் தவற விட்டு விடாதே…!

இந்த ஜென்மத்தில் உன் எண்ணமெல்லாம் உயர் நிலையில் செல்வ நிலையில் இருந்ததனால் தான் உன் பூர்வ ஜென்மத்தின் பயனால் இந்த மெய் ஞானத்தைப் பெறும் பேற்றையே பெற்றாயப்பா…!

படிக்கும் ஒவ்வொருவருக்கும் புரிவதற்காக இந்த நிலையைப் புகட்டியுள்ளேன். பெற்ற சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடாதீர்கள்.
1.மகரிஷிகளுடன் ஐக்கியமாகுங்கள்.
2.அவர்கள் வாழும் சப்தரிஷி மண்டல எல்லையை அடைய முற்படுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

உதாரணமாக சாக்கடையைப் பூசி கொண்டு போகின்றோம் என்றால் அடுத்தவர்கள் நம்மைப் பார்த்துப் “போய்யா…!” என்று விலகித் தான் போய்க் கொண்டு இருப்பார்கள்.

(அது போல்) நீங்கள் சங்கடத்தையும் வெறுப்பையும் கோபத்தையும் ஆத்திரத்தையும் எடுத்துக் கொண்டு அடுத்தவர்களிடம் பேசினால் என்ன செய்யும்…?

நம் மீது அவர்களுக்குக் கண்டிப்பாக வெறுப்பு தான் வரும்.

அதற்குத்தான் ஞானிகள் தீபாவளி அன்று புத்தாடைகளை அணியும் நிலையைக் காட்டினார்கள்.
1.அந்த அருள் ஞானிகளின் உணர்வைப் புத்தாடையாக
2.ஒவ்வொரு சமயமும் நம் ஆன்மாவாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

அதிகாலையில் துருவ தியானம் இருந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எந்தக் காரியத்தைச் செய்தாலும்
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற நாங்கள் வேண்டும்.. எங்கள் குடும்பம் முழுவதும் படரவேண்டும்
2.எங்கள் தொழிம் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் வாழ்க்கை வைரத்தைப் போல ஜொலிக்க வேண்டும்.
4.எங்கள் செயல் வைரத்தைப் போல ஜொலிக்க வேண்டும்.
5.எங்கள் வாடிக்கையாளர்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரது வாழ்க்கையும் வைரத்தைப் போல ஜொலிக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அடிக்கடி இவ்வாறு எண்ணினால் இந்த உணர்வுகள் என்ன செய்கின்றது…?

கையிலோ உடலிலோ அதிகமாக அழுக்காகி விட்டால் அதை உடனுக்குடன் தூய்மைப்படுத்திக் கொள்கின்றோம்.

நாம் உடுத்தியிருக்கும் உடை அழுக்காகிவிட்டால் அந்த அழுக்குத் துணியைக் கழற்றி விட்டு வேறு நல்ல துணியைப் போடுகிறோம்.

அது போல் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் இணைத்து வரும் தீமைகளை எல்லாம் சட்டையை மாற்றுகிற மாதிரி மாற்ற வேண்டும்.

ஒரு மான் புலியைப் பார்க்கின்றது. பயத்தின் காரணமாகப் புலியின் உணர்வுகளை அதிகமாக அந்த விஷத்தின் தன்மையைத் தனக்குள் இழுக்கின்றது.
1.புலியின் உணர்வின் தன்மையை எடுத்துக் கொண்டே இருந்தால்
2.அடுத்து மான் புலியாகப் பிறக்கின்றது.
3.இந்தச் சட்டையைக் (மான்) கழற்றிப் போட்டு விட்டு (புலி) சட்டையை எடுத்துப் போட்டுக் கொள்கிறது.

ஒருவர் கஷ்டப்படுகிறார் என்று அவர்கள் துயரத்தைக் கேட்டறிந்து நாம் உதவி செய்தாலும் அவர்கள் பட்ட துயரம் நமக்குள் அழுக்காகப் படிந்து விடுகின்றது. நாம் கேட்டறிந்து நுகர்ந்த அந்தத் துயரத்தை நாம் நீக்குகின்றோமா…? ஆனால்
1.நாம் உடுத்தியிருக்கும் சட்டை மீது சாக்கடை விழுந்து விட்டது என்றால்
2.உடனே சட்டையைக் கழற்றிவிடுகின்றோம்
3.அடுத்து அந்தச் சட்டையைத் துவைக்காமல் மீண்டும் உடுத்துகின்றோமா…?

அப்போது அந்த மாதிரித் துயரப்படும் உணர்வுகளைக் கேட்டறிந்தபின் அருள் மகரிஷியின் உணர்வை நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று என்று சொல்லி
1.நம் சட்டையை மாற்றுகின்ற மாதிரி
2.உடனே அந்த அருள் ஒளிச் சுடரை மாற்ற வேண்டும்.

மகரிஷிகளின் கலாச்சாரத்தைக் கொண்டு வந்து உலகில் பரவிக் கொண்டிருக்கும் நச்சுத் தன்மையை அகற்றுங்கள்

 

உலகம் முழுவதும் நஞ்சாகப் பரவி இருக்கும் இந்த வேளையில்
1.எத்தனையோ இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மகரிஷிகள் பெற்ற உணர்வின் தன்மையை
2.அந்தக் கலாச்சாரத்தை இங்கே கொண்டு வர வேண்டும்.

சகோதர உணர்வுடன் வாழ வேண்டும்… எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்… என்ற அந்த மகரிஷிகளின் கலாச்சாரத்தை நாம் வளர்க்க வேண்டும்.

காரணம்… சிந்தனையற்ற நிலையில் மனிதன் இன்று அசுரனாகின்றான். அந்த அசுர சக்தியை மாற்றுவதற்கு நாம் நம் குருநாதர் காட்டிய நிலைகளில் அருள் மகரிஷிகளின் உணர்வை எடுத்துப் பரப்பியே ஆக வேண்டும்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..! என்று நாம் சொல்லும் அந்த அகஸ்தியன் நமது நாட்டில் ஆதியிலே தோன்றிய மனிதன் தான் முதன் முதலிலே விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் கண்டுணர்ந்தவன்.

அகஸ்தியன் தன் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி நம் பூமியின் வடக்குத் திசையில் துருவ நட்சத்திரமாக இன்றும் நிலை கொண்டுள்ளான்.

1.இருளைப் போக்கி ஒளியின் சிகரமாக என்றுமே வாழச் செய்யும் கலாச்சாரம்
2.தென்னாட்டிலே தான் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவானது
3.நம் தென்னாட்டில் மீண்டும் இது தழைக்கின்றது… வேறு எந்த நாட்டிலும் இல்லை.

தெற்கிலே உருவான அந்தக் கலாச்சார அடிப்படையில்தான் கருவில் வளரும் குழந்தைகளுக்கு அகஸ்தியன் உணர்வை இப்பொழுது உணர்த்துவதும் உணரச் செய்வதும்.

அத்தகைய சிசுக்கள் வளர்ந்தால் மெய்ப் பொருளின் ஆற்றலை நாமும் பெறலாம். அந்த உணர்வின் தன்மையை எடுத்து உலகம் முழுவதற்கும் பரவும்படிச் செய்யலாம். அதை நாம் வளர்த்தல் வேண்டும்.

தியானத்தில் இருப்பவர்கள் எந்தக் குடும்பத்துடன் தொடர்பு கொண்டாலும் அந்தக் குடும்பத்திலே கர்ப்பம் என்று தெரிந்தால் கருவிலிருக்கும் குழந்தைகள் அந்த அகஸ்தியன் உணர்வுகளைப் பெற்று ஞானக் குழந்தைகளாக வளர வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.குடும்பத்தை ஒற்றுமையாக்கும் சக்தி கருவிலேயே விளைய வேண்டும்
3.இருளைப் போக்கிடும் அருள் சக்தி பெற வேண்டும்
4.உலகம் ஒன்றி வாழும் அந்த உணர்வின் சக்தி இந்த கருவிலேயே விளைய வேண்டும் என்று எண்ணிச் சொல்லுங்கள்.

அகஸ்தியன் உணர்வைப் பெற்றுத் தென்னாட்டிலே வளரும் அத்தகைய குழந்தைகள் எந்த நாட்டவரையும் காத்திடும் சக்தியாக வளரும்.

விண்ணுலக ஆற்றலை அகஸ்தியன் என்று கண்டுணர்ந்தானோ அதைப் போல எந்நாட்டவரும் விண்ணுலகை ஆற்றலைப் பெறும் தன்மையும்… மண்ணுலகில் வரும் நஞ்சினை வெல்லும் சக்தியும் பின் வரும்.
1.நாம் முன் செல்கின்றோம்.
2.பின் வருவோருடைய நிலைகளும் அதன் வழி செல்லும்.

இனம் இனத்தைத் தான் வளர்க்கும். எதை எடுத்துக் கொண்டாலும் ஒரு செடி வளர்ந்தால் தன் இனத்தை வளர்க்கிறது. தன் இனத்தின் சக்தியைத் தன் வித்திற்கே கொடுக்கின்றது.

இதைப் போலத் தான் தீமையான வினைகள் மனிதனுக்குள் விளைய வைத்து விட்டால் அந்த உணர்வின் தன்மை தன் இனத்திற்கு அதை ஊட்டி அந்தத் தீமையின் விளைவையே மனிதனுக்குள் இயக்கச் செய்கின்றது “இன்றைய நிலைக்குக் காரணம் இது தான்…!”.

இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் மீள வேண்டும்… மக்களை மீட்டுதல் வேண்டும். சிறிது பேர் தான் இருக்கிறோம் என்று எண்ண வேண்டாம். இது வளர வளர பல லட்சங்கள் ஆகும்.. பல கோடிகளாகவும் உருவாக்க முடியும்.

இரவில் தூங்கச் செல்லும் போதும் சரி… காலையில் எழுந்தவுடனும் சரி… ஆத்ம சுத்தியை எடுத்து
1.உங்களால் முடிந்த மட்டும் இந்த உலகம் நலம் பெற வேண்டும் வளம் பெற வேண்டும்
2.அருள் வழியில் இப்படித்தான் இருக்க வேண்டும்… என்று தியானம் செய்யுங்கள்.
3.அதையே எழுத்தாக எழுதுங்கள்.

யாம் (ஞானகுரு) உபதேசித்த உணர்வுகளைக் கருத்தில் கொள்ளுங்கள். அதைக் கடைப்பிடித்து வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றுங்கள்.

எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று தவமிருங்கள். அந்த அருளை உலகெங்கிலும் பாய்ச்சுங்கள்.

சுவாசக்கண் மிகவும் முக்கியமானது – ஈஸ்வரபட்டர்

 

அகக்கண் மனக்கண் ஞானக்கண் இப்படி நம்முள்ளே மூன்று வகைத் தன்மைகள் உள்ள நிலைகளைக் கண்களாகக் காட்டினார் பலர் பல நிலைகளில்.

அகக்கண்ணும் மனக்கண்ணும் ஞானக்கண்ணும் இவை எல்லாமே சுவாசக் கண்ணிலிருந்து தான் வருகின்றன.

நம் உடலிலே பல கோடிக் கண்கள் உள்ளன. அக்கண்கள் வழியாகத்தான் இந்த உடலுக்குச் சூரியனிலிருந்து வரும் ஒளிக் கதிர்களை இந்தப் பூமித் தாய் தன்னுள் ஈர்த்து அதை நம்முள் ஈர்த்திடும் செயல் நடக்கின்றது.

1.அகக்கண் மனக்கண் ஞானக்கண் என்பவை
2.நம் மன நிலையை வைத்து ஒவ்வொருவரின் குண நிலையைச் சுட்டிக் காட்ட
3.இந்நிலையில் உள்ள குணக்கண்களுக்குப் பல முன்னோர்கள் இந்த நாமத்தைச் சூட்டினார்கள்.

இந்த மூன்று வகைக் குணக்கண்களுக்குமே முதற்கண் இந்தச் சுவாசக்கண் ஒன்று தான்.

அந்தச் சுவாசக் கண்ணினால் நம் உடலுக்கு நாம் எந்தெந்த நிலைகளை ஈர்க்கின்றோமோ அந்த நிலை கொண்டுதான் நம் வாழ்க்கை முறையில்… விழிப்பு நிலையில்… சுவாச நிலை கொண்டு ஈர்க்கும் தன்மையை வைத்து… நம் கனவில் வரும் நிலைகளும் ஒன்று சேர்ந்தே கலந்து வருகின்றது.

இந்த மூன்று வகைக் குணக்கண்களை வைத்து ஒவ்வொரு மனிதனின் நிலையையும் தெளிவாக அறிந்திட முடியும்.

இப்படி அகம் புறம் ஞானம் என்ற நிலைகளைக் கண்களாக்கி நம் நிலைக்கு வழி கொண்டு வர வழி வகுத்துத் தந்தனர் நம் முன்னோர்கள்.
1.அகத்தில் எண்ணிப் புறத்தில் வாழ்பவர்கள் தான் இன்று உள்ளார்கள்.
2.தான் பெற வேண்டிய ஞானத்தையே மறந்து விட்டார்கள்.

ஞானம் பெற வேண்டியதன் அவசியத்தைத் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்துகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நாம் வயலைப் பண்படுத்தி நல்ல விதைகளை விதைக்கின்றோம். பூமியில் பதிந்த அந்த விதை பூமியின் துணை கொண்டு
1.பூமியின் காந்த இயக்கத்தைக் கொண்டு (ஈர்ப்பு சக்தி)
2.அதற்கு பருவமான நிலைகள் வரும் போது
3.காற்றிலிருந்து தன் இனமான சக்தியை இழுத்து அது வளர்ந்து விளைகின்றது.

அதே சமயத்தில் நாம் விதைத்த பயிருடன் சேர்த்துக் களைகளும் முளைக்கும். எக்கச்க்கமாக வளரும். நாம் இதைக் கவனிக்காது விட்டு விட்டால் என்ன ஆகும்…?

பயிருக்கு இடும் உரம் மற்றும் தண்ணீரை இந்தக் களைகள் வேகமாக தனக்குச் சத்தாக எடுத்துக் கொள்ளும். விதைத்த நல்ல விதைகளின் பலன் ராசி இருக்காது.

அதைப் போல நல்ல குணங்கள் கொண்டு நீங்கள் பல நன்மைகளைச் செய்தாலும் என்ன நடக்கின்றது..?

நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாரிக்கின்றீர்கள். ஒருவர் சிரமப்படுகின்றார் என்றவுடன் தாராளமாக நூறு ரூபாய் எடுத்துக் கொடுக்கின்றீர்கள். அதைப் பார்த்தவுடன் அடுத்து நோகாமல் ஒரு வார்த்தை சொல்லி விடுவார்கள்.

இவர் லாபம் இல்லாமல் எதாவது செய்வாரா…? தேடி வந்து மற்றவர்களுக்கு உதவி செய்தாலும் “லாபம் இல்லாமல் இவர் எப்படிச் செய்வார்…!” என்று சொல்வார்கள்,

எங்கெங்கோ கொள்ளை அடித்து விட்டு அதைக் கொண்டு வந்து இங்கே கொடுக்கிறார்…! என்று இன்னொருவர் சொல்வார்.

அவர் சொன்ன உடனே நான் இவ்வளவு கஷ்டப்பட்டுச் செய்கிறேன், “என்னை இவ்வாறு சொல்கிறார்களே…” என்று வேகமாக எடுத்தால்
1.அவர் கெடுமதியான புத்திதான் நமக்குள் வந்து ஆத்திரத்தை கூட்டும்.
2.நாம் செய்த நல்லது அனைத்தும் பாலுக்குள் விஷம் பட்டது போல் ஆகி விடும்.

என்னை இப்படிச் செய்கிறார்களே… இப்படிச் சொல்கிறார்களே…! என்று வேதனை வந்துவிடும்.

இந்த வேதனையான நிலையில் இருக்கும் போது வியாபாரம் செய்தாலும் ஒருவருக்குச் சரக்கை எடுத்துக் கொடுக்கும் பொழுது அந்த வேதனை வந்துவிடும். வேதனையுடன் வியாபாரம் செய்யும் பொழுது அது மந்தமாகும்.

ஏனென்றால் அடுத்தவர் தன்னைப் பற்றிச் சொன்ன அந்தக் குறையைத் தான் தாங்க முடியாதபடி எடுத்து கொள்ளும் பொழுது அந்த வேதனையை அவ்வப்பொழுது சுத்தப்படுத்தவில்லை என்றால் அதைப் போன்ற களைகள் அடுத்தடுத்து முளைத்துக் கொண்டே வரும்.

அதிகமாக அந்தக் களைகள் முளைத்தவுடன் உடலில் கை கால் குடைச்சல் வந்துவிடும். காசைக் கொடுத்து டாக்டரிடம் சென்று அதை நீக்கலாம்.

வயல்களில் களைகளை எடுத்தாலும் மீண்டும் முளைக்கும். அதைப் போல இந்த உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து உடலில் அந்தக் களைகள் முளைக்க முளைக்க நல்ல குணங்களை அழித்து கொண்டே இருக்கும்.

மனித வாழ்க்கையிலே நீங்கள் எவ்வளவு நல்லவராக இருந்தாலும் அந்த ஒரு நொடிக்குள் பிறர் செய்யும் தவறைக் கூர்ந்து கவனித்தாலே போதும். அது நமக்குள் வந்து நமது நல்ல குணங்களை அழித்துவிடும்.

நாம் பாசமாக ஒருவருக்கு உதவி செய்கிறோம். இருந்தாலும் அவர் துன்பங்கள் அதிகமாகி நோயாகி இறந்து விட்டால்
1.என் கஷ்ட நேரத்திலெல்லாம்… “எனக்கு மகராசன் உதவி செய்தார்…!” என்று நம்மை எண்ணினால்
2.அந்த உயிராத்மா நமக்குள் தான் வந்து சேரும்.
3.அவர் பட்ட அந்தக் கஷ்டத்தையெல்லாம் சேர்த்துக் கொடுக்கும்.

நம்மை அறியாமல் வரும் இப்படிப்பட்ட துன்பங்களிலிருந்து மீட்ட வேண்டும் அல்லவா….!

இதிலிருந்து மீளுவதற்குத் தான் தீமைகள் (களைகள்) உங்களுக்குள் வளராது தடுப்பத்தற்குத்தான்
1.உங்கள் மனதைப் பண்படுத்தி பக்குவப்படுத்தி
2.ஞானிகளின் அருள் ஞான வித்தை இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

பதிவு செய்ததை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

நினைவுக்குக் கொண்டு வந்து அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அவ்வப்பொழுது புருவ மத்தியில் உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டித் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.

தீமைகள் வந்து மோதும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தியை வைத்து அதை இடைமறிக்க வேண்டும்

 

ஒவ்வொரு நிமிடத்திலும் இந்த உலகத்துடன் ஒத்துத் தான் வாழுகிறோம். இதிலே பிரிந்து வாழ முடியாது.

1.நன்மை தீமைகளைக் கேட்டுணர்ந்து தான் செயல்படுகின்றோம்.
2.தீமையை நுகர்ந்து தீமை என்று அறிந்து கொள்கின்றோம்… ஆனால் அந்தத் தீமை நமக்குள் விளையாது தடுக்க வேண்டும்.

உங்களுக்குக் கொடுத்த சக்தியின் துணை கொண்டு ஈஸ்வரா… என்று உயிரிடம் வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதை இணைத்து அந்தத் தீமையை நமக்குள் குறைத்துப் பழக வேண்டும்.

மிளகாயைத் தனியாகக் கடித்தால் காரமாகத் தான் இருக்கின்றது. விஷத்தைத் தனியாக உட்கொண்டால் மயக்கம் வருகிறது.

1.ஆனால் அந்த விஷமான சக்தியை ஒரு மருந்துடன் சேர்த்து
2.அதனின் கலவையைச் சிறுக்கப் போகும் போது அந்த உணர்வுகள் மருந்தை நன்மையாக்குகின்றது.
3.உடலுக்குள் வேகமாக மருந்தை எடுத்துச் சென்று நோயை நீக்குகிறது.

இதைப் போன்று தான் தீமைகளை நாம் பார்த்தாலும் அல்லது கேட்டுணர்ந்தாலும் நுகர்ந்த பின் அது நம்மை இயக்குகின்றது. அந்த நேரத்தில் “அதை இடைமறித்து” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இணைக்க வேண்டும். நமக்குள் அது அணுவாக மாறும்.

மகரிஷிகளின் அருள் சக்தியைக் கலந்த அணுவாக மாறும் போது நமக்குள் அது தீமையை அடக்கும் சக்தியாக உருப் பெறுகின்றது… அப்படி வலுப் பெறும் போது தீமைகளைப் பிளக்கின்றது.

பார்த்துணர்ந்த உணர்வுகள் (எதுவாக இருந்தாலும்) கண்ணின் கரு விழி நமக்குள் பதிவாக்குகின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ ஆன்மாவாக மாற்றி அந்த உண்மையைச் சொல்லும்.

ஏனென்றால்…
1.நம் கண்கள் அது வழி காட்டும்.
2.நம் உயிரோ அதை இயக்கிக் காட்டும்.
3.உடலோ தனக்குள் இணைத்துக் காட்டும்.
4.மீண்டும் அதனின் நினைவு வரப்படும் போது அந்த அலைகளே நமக்கு உணர்த்தும்.

இப்படி மற்ற தீமைகளை நாம் எப்படிப் பதிவு செய்கின்றோமோ அதே போன்று தான் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நாம் எடுத்துப் பதிவாக்க வேண்டும். உடலில் உள்ள எல்லாவற்றிலும் இதைக் கலக்க வேண்டும்.

இதற்கு முன்னாடி இந்த மாதிரி நமக்குத் தூய்மைப்படுத்தத் தெரியாது. ஆகையினால் எத்தனையோ உணர்வுகள் பதிவாகி இருக்கின்றது.

ஒரு எதிரி நமக்கு எப்பொழுதோ இடைஞ்சல் செய்திருப்பான். திடீரென்று அவனைப் பார்க்கும் சந்தர்ப்பம் வரும். பார்த்தவுடன் என்ன நடக்கிறது…?

1.அவனைப் பற்றிய பதிவு ஏற்கனவே நமக்குள் இருக்கிறது.
2.அந்த நினைவு வந்த பின் “அயோக்கியப் பயல்… போகின்றான் பார்…! என்ற எண்ணம் டக்… என்று அங்கே வரும்.

அந்தச் சமயத்தில் அவன் மீது வரும் வெறுப்போ கோபமோ பயமோ அந்தத் தவறின் உணர்வுகள் நமக்குள் விளையும். உடலில் ஏற்கனவே இதன் வழியில் ஏற்பட்ட அணுக்கள் தனக்கு வேண்டிய இரையை எடுக்கும்.

அதே போல் அடுத்தவர்கள் மற்றவர்களுடைய குறைகளைப் பற்றிப் பேசும் போது அதை நாம் கேட்க நேர்ந்தால் அவர்கள் செய்த தவறின் உணர்வை நினைக்கும் போது அந்தத் தவறின் உணர்வை இந்த அணு சாப்பிட்டு வளர ஆரம்பிக்கும்.

1.இப்படி எந்தெந்தச் சந்தர்ப்பத்தில் இது வளரத் தொடங்கினாலும்
2.நாம் அவ்வப்போது ஈஸ்வரா… என்று உயிரிடமே வேண்ட வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துத் தூய்மைப்படுத்த வேண்டும்.

ஏனென்றால் எதைப் பார்த்தோமோ அது ஆன்மாவாகி சுவாசித்து அந்த உணர்வுகள் உடலுக்குள் சென்று அணுவாக அது வளர்க்கப்பட்ட பின் அதற்கு இது உணவாகக் கொடுப்பது உயிரின் வேலை தான். நாம் எண்ணியதை ஜீவ அணுவாக மாற்றுவதும் உயிரின் வேலை தான்.

தாவர இனங்களுக்கு சூரியன் எப்படி அதனதன் சத்துகளைக் கொடுத்துச் செழித்து வளரச் செய்கிறதோ அதே மாதிரித் தான்
1.நம் உயிரும் சூரியனாக இருந்து உடலில் அணுக்களை உருவாக்குவதும்
2.அதற்கு வேண்டிய இரைகளைக் கொடுப்பதும்
3.அந்த நினைவைக் கவர்ந்து தனக்குள் அதைச் செயலாக்குவதும் போன்ற வேலையைச் செய்கிறது.

ஆனால் பல கோடிச் சரீரங்களில் தீமைகளை அகற்றிய உணர்வுகள் விளைந்து மனித உடலுக்குள் வரும் போது ஆறாவது அறிவாக வருகிறது… கார்த்திகேயா.

ஒவ்வொரு சரீரத்திலும் தனக்குள் அறிந்து உணர்ந்த உணர்வுக்கொப்ப அந்தந்த உடல்கள் மாற்றி இன்று மனித உடலாக உருவாக்கியது இந்த உயிர்.

நம் ஆறாவது அறிவால் எதனையும் அறிந்திடும் நிலைகள் வருகின்றது. ஆகவே அதை வைத்து இருளைப் போக்கிய அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்து நமக்குள் இணைக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை இணைக்க இணைக்கத் தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கூடும். அதற்காக வேண்டித் தான் திரும்பத் திரும்பச் சொல்லி உங்களுக்குள் அதை வளர்க்கச் செய்கின்றேன் (ஞானகுரு).

1.உங்கள் எண்ணங்களும் உணர்வுகளும் மாறும் போது அதைத் திருப்பி
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைக் கவரும் சக்தியாக மாற்ற வேண்டும்.

இரவு உறக்கத்தின் போது வரும் கனவுகள் பற்றிய உண்மை நிலைகள் – ஈஸ்வரபட்டர்

 

நாம் நினைவில் உள்ள பொழுது நடப்பதற்கும்… உறக்கத்தில் காணும் கனவிற்கும்.. என்னப்பா மாற்றம் உள்ளது…?

1.அதிகாலை கனவு பலிக்கும்…!
2.நினைவில் நிற்காத கனவினால் பலன் ஒன்றும் இல்லை…! என்றெல்லாம்
3.கனவின் சகுனங்களையும் பலர் பல விதத்தில் கனவின் உருவம் கண்டு சொல்கிறார்கள்.

நாம் உறக்கத்தில் இல்லாத பொழுது செய்யும் வேலைகளும்… நாம் பேசும் சொற்களும்.. நாம் படிப்பது… பார்ப்பது… இப்படிப் பல நிலைகளில் நம் எண்ணத்துடன் அச்சுவாச நிலை நாம் எடுக்கும் பொழுது நாம் நினைவில் வாழும் நிலையாக உள்ளது.

நாம் உறக்கத்தில் உள்ள பொழுது நம் எண்ணங்கள் உறங்கினாலும்
1.நாம் எடுக்கும் சுவாச நிலை கொண்டு
2.இந்த உலகில் கலந்துள்ள பல அணுக்களின் சுவாச நிலையும் நம் சுவாசத்தில் வந்து கொண்டே உள்ளது.

அந்த நிலையில் நம் ஆத்மா அச்சுவாச நிலையுடன் செயல்படும் பொழுது பல நிலைகளில் உள்ள சுவாசங்கள் நம் சுவாசத்துடன் கலப்பதால்
1.பல விபரீதக் கனவுகளும்
2.நாம் எண்ணியே பார்த்திடாத சில நிலை கொண்ட கனவுகளும்
3.சிதறுண்ட நிலையிலும்
4.நம் உணர்வையே நாம் உணர்ந்திடாத சில பயங்கர நிலையில் நம் உடல் சிதையுண்ட நிலையிலும் கனவுகளாக வருவதைக் காணுகின்றோம்.

இப்படிப்பட்ட கனவெல்லாம் எந்த நிலையில் இருந்து வருகின்றது…?

பல சிதறுண்ட கனவுகள் அடிக்கடி நம் கனவில் காண்பதனால் அவை நம் ஆத்மாவிற்குச் சில தீங்குகள் விளைவிக்கின்றன.

கனவில் வருபவை எல்லாமே இந்த உலகில் கலந்துள்ள பல கோடி அணுக்களில் மனிதர்கள் மிருகங்கள் பறவைகள் இப்படிப் பல உயிரணுக்களின் சுவாச நிலையின் உந்துதலினால்தான்
1.நம் எண்ணத்தை (தூக்கத்தில்) நாம் மறந்திருக்கும் பொழுது
2.நம் சுவாச நிலையிலும் அந்த உந்துதலுக்கு நாம் ஆளாகின்றோம்.

இறந்தவர்கள் கனவில் வருவதுவும் நம் சுவாச நிலையைக் கொண்டு தான்…! அவர்கள் ஜீவனுடன் இருந்த காலத்தில் அவர்கள் விட்ட சுவாச நிலையைக் கொண்டு நம் சுவாச நிலைக்கேற்ப ஈர்ப்பு நிலை கொண்டு தான் கனவுகளில் வருகிறார்கள்.

இப்படிக் காணும் கனவெல்லாம் நம் ஆத்மாவைப் பாதிக்காமல்… கனவிலேயே பல உண்மை நிலைகளைக் காணும் வண்ணம் “நம் சுவாச நிலையை ஒருநிலைப்படுத்தி…” ஒழுங்குபடுத்த வேண்டும்.

நாம் அன்றாடம் வாழும் வாழ்க்கை நிலையிலிருந்தே நம் சுவாச நிலைக்குப் பல உன்னத நிலையை எடுத்துக் கொண்டு வரும் பொழுது
1.எப்படி நம் உயிர் நிலைக்கு.. நம் ஆத்மாவிற்குத் தியானத்தின் மூலம் உரம் அளிக்கின்றோமோ
2.அதைப் போல் நாம் கனவில் காணும் நிலையில் நல்ல நிலையுடன் கூடிய கனவுகளாக
3.நம் சுவாச நிலை கொண்டு நம் உயிரணுவிற்கு உரம் தேடி வைக்க முடியும்.

நாம் உறங்கும் பொழுது பல எண்ணங்களை எண்ணிக் கொண்டே இருப்பதால் அப்படிப் பல எண்ணங்களை எண்ணும் பொழுதே நம் சுவாசநிலை கொண்டு அதற்கொத்த நிலைகளும் வந்து மோதத்தான் செய்யும்.

ஆகவே அத்தகையை எண்ணங்களுக்கு நாம் அடிமையாகாமல்
1.ஜெப நிலையிலேயே நாம் உறங்கும் பொழுது
2.நம் சுவாசமும் நம் உயிரணுவும் ஒரே நிலையில் அவ்வாண்டவனின் சக்தியை ஈர்க்கின்றது.

அந்த நிலையில் இருக்கும் பொழுது நமக்குப் பல அணுக்களின் நிலைகள் நம் சுவாசத்திற்கு வந்திடாமல் ஒரே அமைதி கொண்ட நிலையில் நாம் உறங்கி எழுந்திடலாம்.

கனவும் நினைவும் கலந்தது தான் இந்த வாழ்க்கையே…! விழிப்பில் உள்ள பொழுது தீய அணுக்கள்.. நல்ல அணுக்கள்… என்று நம் சுவாச நிலைக்கு எப்படி வருகின்றனவோ அதே போல் தான் கனவிலும் நடக்கின்றது.

நம் ஆத்மாவிற்கு இரண்டு நிலைகளுமே ஒரே நிலை கொண்ட உணர்வுகளைத்தான் ஈர்க்கின்றது.
1.இது எல்லாமே கனவான வாழ்க்கையின் – “கனவு…நினைவு…” என்று நாம் புரிந்து கொண்டு
2.எல்லாவற்றிலும் ஒரே நிலை கொண்ட அவ்வீசனின் சக்தியை ஒரே நிலையில் ஈர்த்து
3.நம் ஆத்மாவிற்கு நல்ல நிலையைத் தேடிக் கொள்வது ஒன்று தான்
4.நாம் எடுத்திடும் பெரும் முயற்சியாக இருக்க வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒரு ஆடு ஒரு நரியைப் பார்க்கிறது என்று வைத்துக் கொள்வோம். நரியோ வலிமையானது. நரியிலிருந்து வெளிப்படும் உணர்வினை ஆடு நுகர்ந்தால் ஆட்டின் உணர்வுகள் அனைத்தும் நரியின் உணர்வாக மாற்றப்படுகின்றது.

அந்த நரியை அடிக்கடி சந்தித்து அது இதைக் கொன்று புசிக்கும் அந்த உணர்வுகள் ஆட்டிடம் தோன்றினால் அந்த உணர்வின் தன்மை வரப்படும் போது ஆட்டின் உணர்வினை இது மறைத்து விடுகின்றது.
1. நரியின் உணர்வுகள் ஆட்டின் உணர்வுகளை மறைத்து
2.அதை மூடிக் கொள்கின்றது.

ஆட்டின் திரையை நீக்கிய பின் அந்த நரியின் உணர்வுகள் பெருத்து அந்த உணர்வின் தன்மை ஆட்டின் உடலில் வித்தாகி விடுகின்றது.

ஆட்டின் உடலை விட்டு (அந்தத் திரையை நீக்கி) உயிர் வெளி வந்தால் நரியின் உணர்வைக் கவர்ந்து அதன் உணர்வின் தன்மை கொண்டு நரியின் உடலுக்குள் புகுந்து நரியாகப் பிறக்கும் தன்மை வருகின்றது.

அதைத் தான் வேதங்கள் கூறுவது ரிக் சாம அதர்வண யஜூர் மீண்டும் சாம என்பது.

ஆட்டின் உடல் ரிக்.. அதாவது சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப ரிக் ஆகின்றது. ஒரு நரியும்… அது சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப அதுவும் ரிக் ஆகின்றது.

ஆட்டின் மணமோ சாந்தமானது. நரியின் உணர்வை நுகரப்படும் போது இந்த ஆட்டின் உணர்வை அது மறைத்து விடுகின்றது. ஆட்டின் உணர்வை மறைத்த பின் நரியின் உணர்வே வலு பெறுகின்றது.

உதாரணமாக பாலில் பாதாமைப் போடுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பாதாம் கலந்த பாலைச் சாப்பிட்டால் அது நம் உடலுக்குச் சத்து தான்.

ஆனால் அந்தப் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் பாதாமிலும் ஊடுருவி விடுகின்றது. பாதாமின் சத்தையும் இழக்கச் செய்கின்றது. இதைப் போல
1.ஆடு நரியின் உணர்வுகளைச் சுவாசிக்கும் போது
2.அதனுடைய விஷத் தன்மைகள் ஆட்டின் சாந்தமான உணர்வை ஆக்கிரமித்து
3.இது ஒரு திரையாக மாற்றிவிடுகின்றது.

இந்தத் திரை மறைவு ஆன பின் சாந்த உணர்வு கொண்ட ஆடாக இருந்தாலும் வலிமை பெறும் நரியின் தன்மையை ஆடு பெறுகின்றது.

உடலை விட்டு வெளி வந்தபின் ஆட்டின் உயிரான்மா நரியின் ஈர்ப்புக்குள் சென்று நரியாக உரு மாறுகின்றது. ஆட்டின் உடல் என்ற திரையை மாற்றிய பின் நரியாக உருபெறும் தன்மை வருகின்றது.

ஞானிகள் அதைத்தான் “சித்திரை…” என்று காட்டினார்கள்.

ஏனென்றால் நம் மனித வாழ்க்கையிலும் இதைப் போன்று எத்தனையோ கோடி உணர்வுகள் ஒவ்வொரு நாளும் சிறு சிறு திரைகளாக நம் நல்ல குணங்களை மறைத்து விடுகின்றது.

நம் நல்ல குணங்களை மறைக்கும்
1.அந்தச் சிறு சிறு திரைகளை நீக்கவில்லை என்றால்
2.ஆடு நரியாக ஆனது போல் நம் நல்ல குணங்கள் மாறி
3.சந்தர்ப்பத்தால் நுகர்ந்த தீமையான உணர்வுகளின் இயக்கமாக அது நம்மை மாற்றிவிடும்.
4.நம் நல்ல குணங்கள் மறையத் தொடங்கும்.

அதை நீக்கும் நிலையாகத்தான் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம்.

“ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் உள் முகமாகச் செலுத்துதல் வேண்டும்.

அவ்வாறு செலுத்தப்படும் பொழுது நம் ஆன்மாவில் சுழன்று கொண்டிருக்கும் தீமையான உணர்வலைகளைப் பிளந்து (சிறு திரைகளைக் கிழித்து) நம் ஈர்ப்பை விட்டு அகலச் செய்யும்.

நம் ஆன்மா தூய்மை அடையும். நம் நல்ல குணங்கள் வலிமை பெறும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுக்கும் சக்தியை நாம் பயன்படுத்த வேண்டிய நெறி

 

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) சக்தி கொடுத்தாலும்… நமக்குச் சும்மா கொடுக்கவில்லை. அவர் கொடுத்த பவரை என்னென்ன செய்யலாம்…? என்று கொடுத்திருக்கின்றார்.

நெருப்பை உபயோக்கின்றோம் என்றால்
1.வெளிச்சத்திற்குத் தீபமாக வைக்கின்றோம்…
2.சமையல் செய்யவும் அந்த நெருப்பை வைத்துக் கொள்கிறோம்…
3.அதே நெருப்பை வைத்து இரும்பையும் உருக்குகின்றோம்.

அதைப் போன்று தான் குருநாதர் கொடுத்த சக்தியை ஆக்கச் சக்தியாக மாற்றலாம்… அழிக்கும் சக்தியாகவும் மாற்றலாம். அந்த சக்தியின் உணர்வின் செயல்கள் எப்படி…? என்கிற வகையில்தான் குருநாதர் உணர்த்தினார்.

காரணம்… மனிதனுடைய ஆசையின் உணர்வுகள் பல நிலைகளிலும் தூண்டுகின்றது…
1.முதலில் இதை அழிக்கப் பழக வேண்டும்…
2.அந்த மெய் ஒளியை வளர்த்து பழக வேண்டும்

அதைக் காட்டுவதற்காகத் தான் பல இடங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று குரு அனுபவமாகக் கொடுத்தார். அதைத் தான் உங்களுக்கும் சொல்லிக் கொண்டு வருகிறேன்.

இந்த வாழ்க்கையில் எத்தனையோ சங்கடங்கள் வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒவ்வொரு நொடியிலேயும் நீங்கள் எண்ணி எடுக்க வேண்டும்.

கஷ்டமோ நஷ்டமோ அல்லது மற்றொருவர் தவறு செய்வதையோ அன்றாடம் நாம் பார்க்க நேர்கிறது… அதை நுகர்ந்து அறிகின்றோம்.

இருந்தாலும் அது எல்லாம் நம்மை இயக்காது தடுக்க அடுத்த கணமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். அந்தப் பவர் (சக்தி) உங்களுக்குக் கொடுத்திருக்கின்றோம்.

உதாரணமாக ஒருவர் கெடுதல் செய்கிறார் என்றால் அவர் குடும்பம் தொலைந்து போக வேண்டும்… என்று சொன்னால் அவர்கள் கெட்டுப் போய்விடுவார்கள்.

1.ஆனால் அந்தத் தொலைந்து போகும் உணர்வு முதலில் நம்மிடம் தான் விளைகின்றது.
2.அப்போது நம் நல்ல குணங்கள் கெடுகின்றது… அவனும் கெடுகின்றான்… நாமும் கெடுகின்றோம்.

அதற்குப் பதிலாக அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணி அந்த அருள் உணர்வின் தன்மையை இங்கே விளையச் செய்ய வேண்டும். அறியாது வரும் இருளை நீக்க வேண்டும்.

உதாரணமாக ஒரு போக்கிரி தவறு செய்கின்றான்… நமக்கு இடைஞ்சல் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.

நம்மிடம் சக்தி இருக்கிறது என்ற வகைகளில் அவனுக்கு ஏதாவது கெடுதல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கடும் ஆயுதமாக எடுத்து நாம் பயன்படுத்தும் பொழுது அது நம் நல்ல குணங்களை எல்லாம் அடக்கிவிடும்.

அவனை அடக்கும் உணர்வை எடுத்துத் தான் அங்கே பாய்ச்சுகின்றோம். அதனால் அவனுக்கு அந்தக் கெடுதல் வருகின்றது… ஆக இங்கே விளைந்து தான் அங்கே போகின்றது. நம்மிடம் முதலில் அது விளையாது தடுக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் உணர்வுகளை இங்கே வளர்த்து… அந்தத் தீமைகளை… அந்தக் களைகளை நீக்க வேண்டும்.
1.எப்பொழுதுமே அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று
2.இதைத்தான் பாடமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வீட்டிலே எல்லாம் செய்து கொண்டே வருவோம். குடும்பத்தில் ஒற்றுமையாகவும் இருப்போம். அதிலே ஒரே ஒரு பையன் நம் சொன்னபடி கேட்கவில்லை என்றால் அவனை எண்ணி வேதனைப்படுவோம்.

நாம் எடுக்கும் வேதனை உணர்வுகள் வீடு முழுவதும் பரவும். அப்படிப் பரவும் போது நம் எண்ணங்களும் மாறுபட்டு விடுகின்றது. அந்த நேரத்தில்
1.“சடார்… என்று அவன் தொலைந்து போக வேண்டும்…” என்ற எண்ணம் தான் வரும்
2.ஆனால் அவனிடம் இருக்கும் கெடுமதி தொலைய வேண்டும் என்ற எண்ணம் வராது.

நானே (ஞானகுரு) திடீரென்று உங்களிடம் கோபிக்கிறேன் என்றால் உங்களிடம் இருக்கும் கெட்ட புத்தி போக வேண்டும் என்று தான் கோபித்துச் சொல்வது.

சாதாரண வாழ்க்கையில் பார்த்தால் “தொலைந்து போகிறவன் இப்படிச் செய்கின்றானே…!” என்ற இந்த உணர்வு தான் இங்கே வரும்.

இப்படி நாம் எடுக்கும் இந்த எண்ணத்தில் “இரண்டு பிரிவாக” இருக்கின்றது.
1.கெட்டது தொலைய வேண்டும் என்று எண்ணினால் அது நல்லது
2.கெடுதல் செய்பவர்கள் தொலைந்து போக வேண்டும் என்று எண்ணினால் அது கெட்டதாகிறது.

ஆகவே… எந்த நேரம் எந்தச் சந்தர்ப்பத்தில் யார் மீது நமக்கு வெறுப்பு வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நாம் வலுவாக்க வேண்டும்.

அதை வலுவாக்கிக் கொண்ட பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடல்களில் படர்ந்து அவரின் தீமையான செயல்கள் மறைய வேண்டும்… அதிலிருந்து அவர்கள் காக்கப்பட வேண்டும்… என்று நாம் எண்ண வேண்டும்.

இப்படி நாம் தியானித்து அந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சும் போது
1.அவரின் தீமைகள் நமக்குள் வருவதில்லை
2.அதே சமயத்தில் அவரையும் நாம் தீமையிலிருந்து விடுபடச் செய்கின்றோம்.

இத்தகைய பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.

கெட்டதைச் செய்பவன் நல்ல நேரம் பார்ப்பதில்லை… நல்லதைச் செய்ய “நல்ல நேரம்” தேவையா…? – ஈஸ்வரபட்டர் 

 

ஆதியில் ஆண்டவனை எந்த ரூபத்தில் வணங்கினார்கள்..?

உதய காலத்தில் ஆற்றுப் படுகையிலும் குளங்கள் கடல் இப்படி உள்ள இடங்களில் நீரில் நின்று அந்தச் சூரியனின் சக்தியை சூரிய உதய காலத்தில் எண்ணி வணங்கினார்கள்.

அந்த நிலையில் வருண பகவான்… வாயு பகவான்… சூரிய பகவான்… என்று அந்தப் பகவானையே இந்நிலையில் கண்டு வணங்கி ஜெபித்தார்கள்.

1.காற்றும் மழையும் அவ்வொளியும் இல்லாவிட்டால் ஜீவனே இல்லை.
2.ஜீவனைத் தந்த சக்தி இந்த மூன்றுக்கும் தான் உள்ளது என்ற நிலையில்
3.இந்த மூன்றையுமே தெய்வமாக்கி வணங்கினார்கள்.

வணங்கினார்கள் என்ன…? அந்த நிலை கொண்டுதான் நாமும் வணங்க வேண்டும்.

அந்த நிலையிலிருந்து தான் நம் உயிர்ணுவிற்கு நம் ஆத்மாவிற்கே உயிர்த் துடிப்பு வந்தது. அந்நிலையில் அருள் பெற்ற நம் ஆத்மா அவற்றைத் தான் “ஆதி முதல் தெய்வமாக” வணங்கிப் போற்ற வேண்டும்.

ஆதியில் வந்த ஆண்டவனையே தன் விஞ்ஞான ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்ட மனிதனப்பா இன்றைய மனிதன்.

இன்றைய மனிதன் நம்பும் நிலை எல்லாம்.. அவன் போடும் கணக்குப்படி தேதியிலும்… கைரேகைகளிலும்… ஜாதகத்திலும்… பெரும் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

தன்னுள் இருக்கும் அந்த ஆண்டவனின் சக்தியை மறந்த நிலையில் தான் உள்ளார்கள். உலகம் முழுவதுமே நேரத்தையும் ஜாதகத்தையும் தான் நம்பி வாழ்கிறது.

நாளும் நட்சத்திரமும் தேதியும் இவன் வைத்த கணக்கு தான்…!

ஆதியில் வாழ்ந்த மனிதன் அந்தச் சூரியனின் சக்தி கொண்டு ஒளி நம் நிலத்தில் படும் நிலை கொண்டு “நேரமும் காலமும்” அறிந்து செயல்பட்டான்.

அன்று பல பெரியவர்கள் இந்த இந்த நாட்கள் மழை பெய்யும்.. வெயில் அதிகமாக இருக்கும்… என்றெல்லாம் தான் அந்த ஞானத்தை வைத்து மக்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

இன்றைய வளர்ந்த விஞ்ஞான மனிதன் தன் அறிவைக் கொண்டு பல செயல் ரூபங்களையும் பல உபயோக நிலை கொண்ட பல உன்னதப் பொருள்களையும் கண்டு கொண்டான்.

அவ்வாறு தான் கண்ட நிலையை ஒன்றுடன் ஒன்று பொருத்தி வாழ்பவன்
1.உத்தம நிலையில் வாழ்ந்திடாமல்
2.பேராசை நிலை கொண்டு அழிவு நிலைக்கு ஏனப்பா செல்ல வேண்டும்..?

இன்று மனித மனங்களில் சுவாச நிலையே ஒருவரைப் போற்றியும்… ஒருவரைத் தூற்றியுமே… வாழ்வதாக உள்ளது. நம் மனித ஜென்மத்தில் தான் இந்தப் போற்றலும் தூற்றலும்.

போற்றலுக்கும் தூற்றலுக்குமா நாம் பிறவி எடுத்தோம்…!

ஆண்டவன் சக்தியிலிருந்து மகத்தான உன்னத நிலையில் ஆறறிவு படைத்து மனிதனாகப் பிறவி எடுத்துள்ளோம். அந்த நிலைக்கு அந்த ஆண்டவனின் சக்தியை நாம் உபயோகப்படுத்தாமல் அவன் தந்த சக்தி கொண்டு நம்மை நாம் அழித்து வாழ்கின்றோம்.

அதற்காகத்தான் இச்சக்தியை ஆண்டவன் நமக்கு அளித்தானா…?

மிருக ஜெந்துக்கு ஐந்தறிவு படைத்தான் ஆண்டவன் என்கிறோம். அந்த மிருக ஜெந்து போற்றலுக்கும் தூற்றலுக்கும் ஏங்குவதில்லை. பொருளுக்கும் ஆடை ஆபரணங்களுக்கும் அவைகளிடம் ஆசை இல்லை.

1.அவைகளின் நிலை தான் மனிதன் சொல்வது போல் ஐந்து அறிவு ஆயிற்றே..!
2.அவைகளின் நிலைக்கு எப்படியப்பா இந்த நிலைகளைக் கண்டிட முடியும்…?

அம்மிருகத்தின் நிலையில் உள்ள உயர்ந்த குணம் ஒற்றுமையான குணம் அதன் அறிவுத் தன்மை இன்றைய ஆறறிவு படைத்த மனிதனுக்கு எங்கப்பா உள்ளது…?

மிருகங்களும் பறவைகளும் எந்தக் கடிகாரத்தை வைத்து எந்தத் தேதியை வைத்து நாளும் மணியும் கணக்கிட்டன…?

நாம் நினைக்கின்றோம்… மனிதனுக்குத் தான் எல்லா நிலையும் தெரியும் என்று…! பறவைகள் வாழும் பரிபக்குவமான வாழ்க்கை நிலையை மனிதர்கள் பார்த்து வாழ வேண்டுமப்பா…!

மிருகங்கள் நிலைக்கு என்ன தெரியும்…! நம்மைப் போல் அதற்குத்தான் ஆறறிவு இல்லையே…! என்கின்றான் மனிதன். அனால் இவன் பெற்ற பொக்கிஷத்தைத்தான் இவன் சிதற விடுகின்றான் என்பதை அறியவில்லை.

இது தான் இன்றைய உலக நிலை…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

சென்னை போன்ற பெரிய நகரங்களில் பார்த்தோம் என்றால் ஒரு பக்கம் கழிவு நீர் (சாக்கடை) போகும். ஒரு பக்கம் பைப்பில் நல்ல தண்ணீர் போகும்.

வீட்டுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள நல்ல தண்ணீர் பைப் துருப்பிடித்து சிறிதளவு ஓட்டை ஆகிவிட்டால் வீட்டுக்குள் வரும் நல்ல தண்ணீரில் சாக்கடை கலந்த நீராக வரும். கெட்ட வாசனை கலந்து வரும்.

நல்ல தண்ணீருக்குள் இப்படிக் கலந்து வந்து கிருமிகளாகி பிறகு புழுக்கள் எல்லாம் உண்டாகும்.
1.நல்ல தண்ணீர் பைப்புக்குள் சென்றாலும்
2.பக்கத்திலிருக்கும் சாக்கடையை இழுத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்துவிடுகின்றது.

இதைப் போன்று நாம் போகும்போது மற்றவர்களுடைய உணர்வு வரப்படும்போது நாம் அவைகளைக் கவர்ந்து தெரிந்துதான் போகின்றோம். அதனின் உணர்வை இழுத்துத்தான் நம்மை உணரச் செய்கின்றது.

உதாரணமாக நாம் நல்ல எண்ணம் கொண்டு வேலைக்குச் செல்கிறோம் என்றால் இந்த உணர்வும் சேர்த்துவிடுகின்றது. எது…?

ஒரு நல்ல காரியத்தை எண்ணிப் போகிறோம். ஒருவன் தவறென்ற உணர்வைச் செய்தால் அதையும் இழுத்து விடுகின்றது. அந்தச் சாக்கடையும் இதனுடன் கலந்துவிடுகின்றது.

நல்ல எண்ணத்துடன் நாம் செல்லும்போது ஒருவன் வெறுப்பாக இருந்திருப்பான்… கோபமாக இருந்திருப்பான்… வேதனையாக இருப்பான்…! இதையெல்லாம் நாம் வேடிக்கை பார்த்திருப்போம்.

இது என்ன செய்கின்றது…? இந்தப் பைப்பில் இழுத்து அதை இணைத்து விடுகின்றது.

இதன் வழியில் தான்…
1.நாம் நல்லதை எண்ணிச் செல்லும்போது அதனுடன் இந்த ஆன்மாவில் சேர்த்தவுடனே
2.பிறரின் தவறான உணர்வுகளை இழுத்து அதை உள்ளுக்குள் (நமக்குள்) கொண்டு போய்ச் சேர்க்கின்றது.

ஏனென்றால் நம் கண்ணின் உணர்வு நம் உணர்வு உயிரில் படுகின்றது. பட்ட பிற்பாடு உயிரில் வந்து மோதுகின்றது. அந்த நேரத்தில் நல்ல காரியத்தைப் பார்க்கப் போவதை விட்டுவிடுகிறோம். செய்தாலும் சரியாகச் செய்ய மாட்டோம்.

இந்த உணர்வுகள் வந்தவுடன்… சனியன்…! இதையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கின்றது. இப்படியெல்லாம் தப்புப் பண்ணுகிறார்கள்…! என்று சொல்லிக் கொண்டே ஆபீசுக்குப் போவோம்.

ஆபீசில் போய் உட்கார்ந்தவுடன் இந்த உணர்வு கலந்துவிடும். அப்பொழுது அந்த ஆபீசுக்குப் போவதற்கு முன்னாடி என்ன செய்ய வேண்டும்?

“ஈஸ்வரா..,” என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும், எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும், உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்திச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் பார்த்தவர்களை எண்ணி அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் என்று இது மாதிரி மாற்றியமைக்க வேண்டும். ஏனென்றால்
1.தீமைகள் புகாது அடைத்துவிட்டு
2.நல்லதாக வேண்டும் என்று மாற்றியமைத்து நல்லதை உள்ளுக்குள் கொண்டு போகவேண்டும்.

இந்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்தவுடனே தீய அணுக்கள் உருவாகாதபடி தடுக்கப்படுகின்றது. அதற்குத்தான் உங்களுக்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம்.

நன்றாகத் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். இதையெல்லாம் நீங்கள் தெளிந்து தெரிந்து அதன்படி நடக்கவும் உங்கள் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள மிகவும் உதவியாக இருக்கும்.

நான் கஷ்டப்பட்டேன்… அனுபவித்தேன்… சக்தியையும் கொடுக்கின்றேன். நீங்கள் பயன்படுத்தத் தெரியவில்லை என்றால் இந்த உபதேசத்தைக் கேட்டும் பலனில்லை.

ஆகவே இதைப் பயன்படுத்த முயற்சி எடுங்கள்.
1.அது நல்ல பலனைக் கொடுக்கும்.
2.உங்கள் எண்ணம் பரிசுத்தமாகும்.
3.நல்ல எண்ணங்களை உருவாக்கலாம்.
4.நல்ல சிந்தனைகளை உருவாக்கலாம்.

எந்த இடத்திற்குச் சென்றாலும் அங்கே செல்லும் முன் இதே போன்று ஆத்ம சுத்தி செய்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

1.என்னைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் நல்ல எண்ணம் வரவேண்டும்…
2.என் செயல் அனைத்தும் மற்றவர்கள் போற்றும் நிலைக்கு வரவேண்டும்… என்று
3.ஒரு ஐந்து நிமிடம் இந்த எண்ணத்தை எடுத்துச் சுவாசிக்க வேண்டும்.

வழி அறிந்து செயல்படக்கூடிய அருள் ஞானம் (TECHNIQUES) கொடுக்கின்றோம்

 

ஒவ்வொரு நிமிடத்திலும் அருள் உணர்வுகளை நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் வரிசைப்படுத்தி
1.எந்தெந்தச் சந்தர்ப்பத்தில் எது வருகிறது என்ற வகையிலும்
2,குருநாதர் எனக்குக் கொடுத்த சக்தியை இந்த உபதேச வாயிலாக உங்களுக்குள் பதியச் செய்கின்றேன் (ஞானகுரு).

சண்டை போட்டவர்கள் கஷ்டப்படுபவர்களை எல்லாம் பதிவு செய்து கொண்டால் அவர்களின் எண்ணங்கள் வந்து உங்களைத் துயரபப்டச் செய்கிறது… சங்கடப்படச் செய்கிறது… சோர்வடையச் செய்கிறது… வேதனை அடையச் செய்கிறது.

இதைப் போல் தான்…
1.குருநாதர் கொடுத்த உணர்வின் சத்து எனக்குள் பதிவானதை
2.அந்தந்தச் சந்தர்ப்பம் இணைக்கப்பட்டதையும் மாற்றப்பட்ட உணர்வுகளையும்
3.உங்களுக்குள் இணைத்துக் கொண்டே வருகின்றேன்.

சங்கடமான உணர்வு உங்களுக்கு வரும் பொழுதெல்லாம் நான் (ஞானகுரு) இணைக்கும் நல்லதாக மாற்றும் உணர்வுகள வைத்து மாற்றினீர்கள் என்றால் அவ்வப்பொழுது உங்களால் எந்தத் தீமையும் மாற்றிக் கொள்ள முடியும்.

அந்த நிலையை உருவாக்குவதற்குத் தான் இந்த உபதேச வாயிலாக அருள் உணர்வுகளை உங்களுக்குள் பாய்ச்சுவது.

எனக்கு ஒன்றும் தெரியவில்லையே… தெரியவில்லையே…! என்று எண்ண வேண்டியதில்லை. அடிக்கடி இந்த அருள் உணர்வுகளைப் பெற்றுப் பாருங்கள்.
1.இரவெல்லாம் உங்கள் எண்ணங்கள் சப்தரிஷி மண்டலங்களுடன் மிதப்பதை காணலாம்
2.அதனுடன் உங்கள் உணர்வுகள் தொடர்பு கொண்டு உங்கள் உடலிலே வளர்ச்சி ஆவதைப் பார்க்கலாம்.

ஆனால் வாழ்க்கையில் சங்கடமும் சலிப்பும் ஆகி யார் யார் மீது வெறுப்புடன் இருந்தீர்களோ அந்த நினைவுகள் சுற்றிக் கொண்டிருந்தால் இரவில் திடீரென்று முழிப்பு வரும்… எழுந்து உட்கார்வீர்கள்.

பகலிலே இந்த உணர்வு அதிகமாக வந்து விட்டால் நம் உணர்வுகள் இங்கேதான் சுற்றிக் கொண்டிருக்கும்… அதையும் பார்க்கலாம்.

அதே சமயத்தில் சில நேரங்களில் நாம் வலுவான எண்ணங்கள் எடுக்கும் பொழுது இந்த வலுவின் தன்மை கொண்டு பிறருடைய கஷ்டங்களையும் அறியச் செய்யும்.

ஆனால் நாம் போகும் பாதையில் அதை அறியச் செய்தாலும் அடுத்த நிமிடமே அந்த கனவு வந்து முழித்தவுடன்
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அந்தத் தீமையிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வை மாற்ற வேண்டும்
3.கனவு தான் என்று மட்டும் நினைத்து விடக்கூடாது

காரணம்… பகலிலே கேட்டுணர்ந்த உணர்வுகள் நமக்குள் வந்து இதை இயக்குகின்றது
1.நமக்குள் பதிவானால் தான் அது கவரும்
2.நாம் நுகர்ந்தால் தான் உயிர் அதை இயக்கும்.

இப்படிக் கண்ட அனுபவங்கள் உங்களுக்குள் வந்தால் தான் உங்களைக் காத்துக் கொள்ள அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் நினைவுக்கு வரும்.

உதாரணமாக ஒரு இயந்திரத்தை ஓட்டுகிறோம். சில நேரங்களில் அதில் பழுது வந்துவிடுகிறது.

அந்தப் பழுது எதனால்…? என்றும் எந்த இடத்திலே…? என்றும் அதை விபரம் தெரிந்தவர்கள் (TECHNICIAN) சீராக்கினால் அது மீண்டும் சரியாக ஓடும். ஆக தெரிந்தவர்கள் அதைச் செயல்படுத்துவார்கள்,

அப்படித் தெரிந்து கற்றுக் கொண்டவர்களிடம் நாமும் கற்றுக் கொண்டால் நாமும் அந்தப் பழுதைச் சீராக்க முடியும்.

அதைப் போன்று தான்
1.வாழ்க்கையில் வரும் இன்னல்களை அகற்றும் அரும் பெரும் சக்தியாக
2.தெரிந்து செயல்படக்கூடிய அந்த அருள் ஞானத்தைக் உங்களுக்குக் கொடுக்கின்றோம்..!

எமது அருளாசிகள்.

உயிருடன் ஒன்றினால் நிஜம்… இல்லை என்றால் கனவு தான்…! ஈஸ்வரபட்டர்

 

நாம் வாழும் வாழ்க்கை கனவான வாழ்க்கை…!

நாம் உறங்கும் பொழுது வருவது தான் கனவு… நாம் விழித்திருக்கும் பொழுது வாழ்வது “நினைவு..!” என்கின்றோம். கனவும் நினைவும் எல்லாமே ஒன்று தான்…!

1.இன்று நடப்பது நாளை கனவு தான்.
2.நாம் உறக்கத்தில் உள்ள பொழுதும் கனவு தான்.
3.சில நாட்கள் பொறுத்து எண்ணிப் பார்ப்பது எல்லாமே கனவு தான்,
4.முன் ஜென்ம வாழ்க்கையும் கனவு தான்.
5.இந்த ஜென்ம வாழ்க்கையும் கனவு தான்.
6.இனி நமக்கு நடப்பதுவும் கனவு தான்,

அவ் ஈஸ்வரனின் நினைவு ஒன்றே… அவ் ஈசனின் சக்தி ஒன்றே தான் ஒரே நிலை கொண்ட “என்றும் நிலைத்து நிற்கும் நினைவு…!”

கனவுக்கும் நினைவுக்கும் நாம் மாறுபட்டு எண்ணுகின்றோம்.

நடப்பது எல்லாமே கனவு தான் என்ற நினைவு எல்லோருக்கும் வந்தால் இன்றைய உலகில் பகவானைப் பல ரூபமாக்கி பல ஜாதியாக்கி இருக்க மாட்டார்கள்.

இன்று பல மதங்களின் நாமத்தைச் சூட்டி வட கலை… தென் கலை.. என்றெல்லாம் சொல்லி தன்னையே தான் தாழ்த்தி வாழ்கின்றான் மனிதன்.

இதிலிருந்து விடுபட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

உதாரணமாக நோயுடன் வேதனைப்படுகின்றார்கள். இங்கே என்னைப் பார்த்து அதை நீக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வருகிறார்கள்.

“அட பாவமே..,” என்று பரிதாபப்பட்டு நான் உதவி செய்கிறேன்.

ஆனால் அந்த இடத்தில் பரிபக்குவம் இல்லையென்றால் என்ன ஆகும்…? அந்த நோயின் தன்மையை நுகர்ந்தபின் அதைச் சுத்தப்படுத்தவில்லை என்றால் எனக்கும் அந்த நோய் வரும்.

அப்பொழுது அந்த நோய் வராமல் தடுக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்…? ஈஸ்வரா என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எடுத்து அதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவர் உடல் முழுவதும் படர வேண்டும், அவர் உடல் நலம் பெறவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்ச வேண்டும்.

அதை விட்டுவிட்டு “ஐயோ…” என்று அங்கே சொன்னால் பின் “ஐயோ…” என்று அந்த வேதனை இங்கே வந்துவிடும். அந்த உணர்வின் தன்மை அவர் பட்ட வேதனையைத்தான் நமக்குள் உருவாக்கும்.

அடுத்தவருக்கு இதைச் செய்கிறேன்… அதைச் செய்கிறேன் என்று உதவி செய்தாலும் அந்தப் பக்குவ நிலை தவறினால் என்ன ஆகும்…?

வடை சுடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். எண்ணெய் நன்றாகச் சூடாகும் முன் வடையைத் தட்டிப் போட்டால் என்ன ஆகும்…?

ஒரு வடையைப் போட்டால் வேகும், இரண்டாவது போட்டால் அவ்வளவுதான் வடை வேகாது. எண்ணெய் காணாமல் போகும், எண்ணையை வடை எடுத்துக் கொள்ளும். ருசி இருக்காது.

ஆகையினால் நமது வாழ்க்கையில் தீமை என்ற உணர்வுகளை நுகர்ந்தபின் அதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒருவன் தீய செயல்களைச் செய்கிறான். நமக்குள் அந்தத் தீமை வராதபடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எடுத்து அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

அடுத்து நாம் யாரிடம் சொன்னாலும் தீமை செய்பவன் குற்றங்களிலிருந்து மீள வேண்டும் என்று எண்ணத்தில்தான் நாம் நம் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்.

அதற்குப் பதில் பார்… நான் சொல்லிக் கொண்டேயிருக்கின்றேன்…! நீ மறுபடி மறுபடி தவறு செய்து கொண்டே இருக்கின்றாய்… என்று கோபமாகப் பேசும் நிலைகள் வரும்போது “அவரும் நம்மைத் திருப்பிப் பேசும் உணர்வுகள் வந்துவிடும்…!”

அங்கே பக்குவம் இழக்கப்படுகிறது. அங்கே நம்மைத் தான் குற்றவாளியாக்கும் நிலைகள் உருவாகின்றது.

ஏனென்றால் தீமை செய்பவர்களின் உணர்வுகள் நமக்குள் வந்து அதே சொல்லை நாம் சொல்லும்போது நம்மைக் குற்றவாளியாக்கிவிடும். அப்பொழுது அந்தப் பக்குவம் தவறினால் என்ன ஆகும்…?

அந்தத் தவறு செய்பவனின் நிலைகளில் உண்மைகளை எடுத்துச் சொல்ல முடியாது.

ஆகவே நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து ஆத்ம சுத்தி செய்து கொண்டு அந்த உணர்வுகளை அவருக்கும் பாய்ச்சி
1.அவர் உண்மையை உணர வேண்டும் என்று எண்ணிவிட்டு
2.பக்குவமாக நீ நடந்துகொள் என்று நாம் அவரிடம் சொன்னால்
3.அங்கே அந்தப் பரிபக்குவ நிலை வருகிறது.

அப்பொழுது அந்தத் தீமையை நமக்குள் விடாதபடி இப்படி வாழ்க்கையில் மாற்றிப் பழக வேண்டும். சொல்வது அர்த்தமாகிறதல்லவா.

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஒவ்வொருவரும் உங்கள் மனதைப் பக்குவப்படுத்த வேண்டும்.


சாதாரண வாழ்க்கையில் இருப்பது போல் இல்லாமல் ஒவ்வொரு நொடியும் நம் சுவாசம் உயிர் வழியாக இருக்க வேண்டும்

 

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று சொல்லும் பொழுது
1.நம் நினைவுகளை அவசியம் புருவ மத்திக்குக் கொண்டு போய்ப் பழக வேண்டும்.
2.அப்படிச் செய்தோம் என்றால் நம் உயிரே நமக்குக் குருவாக இருப்பதையும்
3.நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்கக் கூடிய ஈசனாக நம் உயிரே இருப்பதையும் உணர முடியும்.

இந்த அடிப்படையில் நாம் எண்ணும் பொழுது எதை எண்ணுகின்றோமோ நம் உடலுக்குள் அந்த உணர்வுகள் ஊடுருவுவதும் நமக்குத் தெளிவாகத் தெரிய வரும்.

சாதாரணமாக இந்த வாழ்க்கையின் நிலையில் மூக்கின் வழி வருவதைச் சுவாசிக்கின்றோம்… நம் கண்கள் உற்றுப் பார்க்கின்றது… அதன் வழி தான் வெளியிலிருந்து மற்ற உணர்வுகளை எல்லாம் எடுக்கின்றோம். அது நம் ஆன்மாவாக மாறுகின்றது.

ஆன்மாவிலிருந்து முக்கின் வழியாகச் சுவாசிக்கும் போது உயிரில் பட்டு அந்த உணர்வுகளைப் பின் (பின்னாடி தான்) அறிகின்றோம்.

அதற்காக வேண்டித் தான் ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று அடிக்கடி புருவ மத்தியில் எண்ணச் சொல்கிறோம்.
1.அப்படிச் சொல்லும் பொழுது உயிரை எண்ணி அவனுடன் ஒன்றிடும் நிலையாக ஒரு பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.
2.அடிக்கடி அதன் வழி கூடி அருள் உணர்வுகளை உள்ளே செலுத்த வேண்டும்.

வாழ்க்கையில் பயன்படுத்துவது கண் வழி கூடி எடுத்து அதை அறிந்து கொண்டாலும் கூட தீமையான உணர்வுகள் நமக்குள் வராதபடி
1.அடுத்த நிமிடம் ஈஸ்வரா… என்று இதை இடை மறித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
2.அந்த அருள் உணர்வோடு நாம் ஒன்றும் போது தீமைகளை அது பிளக்கிறது.

நாம் எவ்வளவு நல்லவர்களாக இருந்து எவ்வளவோ நல்லதைப் பேசினாலும் கூட அடுத்தவர்களிடம் பழகும் போது அவர்களிடம் ஒரு சில குறைபாடுகளோ… குடும்பக் கஷ்டங்களோ இருக்கும் அல்லது நோயோ இருக்கும்.

அவர்கள் நம்மிடம் பேசும் போது சொல்லிலே அது எல்லாம் கலந்து வரும். அவரை நாம் கண்ணிலே பார்க்கும் போது அது எல்லாம் நம் ஆன்மாவில் வரும். அப்பொழுது நாம் சுவாசித்து உயிரிலே பட்ட பின் அதை உணர முடிகின்றது.

அந்தக் கஷ்டத்துடன் அவர்கள் வரும்போது “எனக்கு இந்த மாதிரி இருக்கின்றது…” என்று சொல்லும் பொழுது இந்த உணர்வுகள் நம்முடன் கலக்கின்றது.

இருந்தாலும்… அந்த நேரத்தில் சுதாரித்து
1.ஈஸ்வரா… என்று இந்த உணர்வை வைத்து இடைமறித்து அதைப் பலவீனப்படுத்த வேண்டும்.
2.இந்த உணர்வை வலுப் பெறச் செய்யும் பொழுது அவரிடம் கேட்டறிந்த தீமைகளை மாற்றுகின்றது.

நம்மிடம் அவர் பலவீனமாகச் சொல்லும்போது மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலிலே படர வேண்டும்… அவர் உடல் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை வலுவாகப் பாய்ச்ச வேண்டும்

ஏனென்றால் ஒரு பாத்திரத்தில் பொருள்களை எடுத்துப் போட்டு அதைச் சமைத்து… அதற்கப்புறம் எடுத்துக் கொடுத்தால் அது ருசியாக இருக்கும். சமைக்காமல் கொடுத்தால் ருசி வராது.

அதைப் போன்று தான் அவர் கஷ்டம்…! என்று சொன்னபின்… அடடா கஷ்டமாக இருக்கின்றதா…! என்று நாம் சொன்னோம் என்றால்
1.அதைத் தான் திரும்பவும் நமக்குள் சமைத்து
2.அதையே தான் (கஷ்டம்) அவருக்கும் கொடுக்கின்றோம்.

இதிலே ரொம்பவும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

அடிக்கடி நாம் அந்த அருள் சக்தியை எடுத்துச் சமைத்து நமக்குள் நல்லதாக்கிக் கொண்டே வர வேண்டும். நாம் பார்க்கும்… பழகும் அனைவருக்கும்… அந்த மகரிஷிகளின் அருள் ஒளியையே இணைத்துப் பழக வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

பக்தி எதுவாக இருக்க வேண்டும்…? விரதம் எதுவாக இருக்க வேண்டும்…? எதன் வழி வாழ வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

ஆனால் பக்தியில் இன்று என்ன செய்கிறோம்…?

லஞ்சம் கொடுத்து சினிமா டிக்கெட் வாங்குகிற மாதிரி… ட்ரெயினில் இடம் பிடிக்கக் காசு கொடுப்பது போல… கோவிலில் பூசாரிக்குக் காசைக் கொடுத்து ஆண்டவனிடம் சொல்லுங்கள்… முருகனிடம் சொல்லுங்கள்… என்று அர்ச்சனைக்குக் காசு எல்லாமே கொடுக்கின்றோம்.

பிறகு பூசாரிக்குக் கொஞ்சம் காசு கொடுத்தால் அவர் இன்னும் சிறிது நேரம் அங்கே தீபத்தைக் காட்டுவார். அவரிடம் கொடுத்து அங்கே காண்பித்து ஆண்டவனிடம் வரம் வாங்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

ஞானிகள் சொன்னதோ…
1.நம் உடல் ஒரு ஆலயம்,
2.நம் உயிர் ஈசன்
3.நாம் எடுக்கும் உணர்வுகள் தெய்வமாக நின்று இயக்குகிறது.

ஆகவே நாம் இந்த ஆலயத்தை எப்படிச் சுத்தப்படுத்த வேண்டும்..? நம் உடலான சிவனுக்குச் செய்யும் சேவை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்…?

நல்ல உணர்வுகளை எடுத்து உடலான சிவனுக்கு இங்கே சேவை செய்ய வேண்டும். அதே போன்று உயிரான ஈசனுக்கும் நல்ல உணர்வுகளை எடுக்கும்போதுதான் இங்கே அபிஷேகம் ஆகிறது.

வேதனையோ கோபமோ இதைப் போன்ற உணர்வுகளை நாம் சுவாசிக்க நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்…?

அடுத்த கணமே “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை எடுத்து இங்கே பட்ட தீமைகளை நீக்கி தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
1.அந்த உணர்ச்சிகளை மாற்றி
2.அருள் உணர்வுகளை நம் உடலுக்குள் பரவச் செய்யவேண்டும்.

நம் மீது அழுக்குப் பட்டால் நல்ல தண்ணீரை விட்டுக் கழுவுகிறோமா இல்லையா…?

நாம் நுகரும் (சுவாசிக்கும்) உணர்வுகள் உயிரிலே படுகின்றதா இல்லையா…?

அந்த உணர்வுகள் தான் உணர்ச்சியாகி இயக்குகிறது என்று தெரிகிறது அல்லவா…?

அப்பொழுது தீமையான உணர்வு உயிரிலே பட்டவுடன் அதை நீக்க என்ன செய்ய வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற இந்த உணர்வைக் கொண்டு துடைக்க வேண்டும்.

ஆனால் ஞானிகள் நமக்கு நெறிப்படுத்திய இத்தகைய உண்மை நிலைகளைக் காட்டாமலே சுத்தமாகவே நமக்கு மறைத்து விட்டார்கள்.

குருவின் துணை இருந்தால் தான் எதுவுமே நிலைத்து இருக்கும் – ஈஸ்வரபட்டர்

 

நமக்கு முன்னே பல கோடிச் சித்தர்கள் வாழ்ந்தார்கள் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள். திருவள்ளுவர் தோன்றி திகட்டாத பொக்கிஷத்தை நமக்களித்தார்…! என்றெல்லாம் இன்றும் சொல்லி வருகின்றார்கள்.

திருவள்ளுவரும் போகரும் கொங்கணவரும் ஏனைய எத்தனையோ சித்தர்களும் ஞானிகளும் நம்மைப் பொல் மனிதனாகத்தான் பிறந்தார்கள்.
1.அவர்கள் எல்லாம் இன்றும் உலகம் போற்றும் நிலையில் தன் ஞானத்தை வளர்த்து
2.தன் நினைவில் அவ் ஈஸ்வரனையே ஈசனாக்கி வாழ்ந்து காட்டினார்கள்.

அந்த நிலைகளை எல்லாம் இன்றையக் கலியில் நாம் விஞ்ஞானம் என்னும் ரூபத்தில் நமக்கு ஆண்டவன் அளித்த சக்தியைக் கொண்டுவந்து வீண் விரயமாக்கி விட்டோம்.

1.அன்றிலிருந்து இன்று வரை மனிதப் பிறவியில் மாற்றமில்லை.
2.ஆனால் மனித எண்ணத்தில் தான் பல கோடி மாற்றங்கள் வந்துள்ளன.

இன்றுள்ள நிலையில் ஆண்டவனை ஜெபிக்கும் நிலையிலும் உண்மை நிலைகளைச் சொல்பவர்களை எள்ளி நகையாடும் நிலையில் தான் உள்ளார்கள்.

இந்தக் கலியில் வந்த பல மேதைகள் இராமகிருஷ்ண பரமகம்சர்… விவேகாநந்தர்…! அவர்கள் நமக்களித்த உண்மை நிலைகளையும் “கருத்தில் ஏற்றுக் கொள்ளும் நிலையை மாற்றி வாழ்கின்றோம்…!”

இன்று பிறவி எடுத்த நாமும் ஆசையின் உந்தலுக்கு அடிபணியாமல் வாழ்ந்திட்டால் அன்றையக் கால சித்தர்களைப் போல் வாழ்ந்து காட்ட முடியும்.

1.வளரும் முறையிலிருந்து தான் இந்த நிலை எல்லாமே வருகின்றது
2.வளர்ந்த பின் நாம் அதை ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் “தியான நிலை ஒன்று தான் உண்டப்பா…!”

ஒவ்வொருவருவரும் தன் நிலையிலேயே ஏற்றுக் கொள்வதையும் இப்பொழுது வெளியிடும் நிலையில் இல்லாமல் தனக்குத் தெரிந்த உண்மை நிலைகளையும் வெளியிடும் பொழுது அதில் தவறுகள் உள்ளனவா…! என்ற பயத்தில் மறைத்து வாழ்கிறார்கள்.

இந்நிலையைப் போக்க நம் நிலைக்கு நாம் இந்த வழிக்கு வந்தமைக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு குருவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அந்தக் குருவின் சக்தியிலிருந்து பல உண்மை நிலைகளைப் பெற முடியுமப்பா…! நீங்கள் இப்பொழுது போற்றிடும் திருவள்ளுவரின் நிலைக்கும் ஒரு மாபெரும் ரிஷி இருந்தார்.

இப்படி ஒவ்வொருவரின் நிலைக்கும் ஒவ்வொரு குருவின் நிலை கொண்டு தான் ஆரம்பப் பாடநிலை அறிந்திட முடியுமப்பா…!

அந்தக் குருவின் நிலை நாம் தியானத்தில் அமர்ந்து அந்தக் குருவை எண்ணி வணங்கிடும் காலத்தில் அவர் பெற்ற சக்தி நிலை கொண்டு நமக்குப் பல உன்னத நிலைகளை ஈர்த்து அளித்திட முடியும்.

1.இந்தக் கலி காலத்தில் ஒரு போகராகவோ திருவள்ளுவராகவோ…
2.நாம் ஏன் வாழ்ந்து காட்டிட முடியாது…?

அவர்களுக்கும் மேல் உயர்ந்த நிலையை அவர்களை எண்ணி ஜெபமிருக்கும் பொழுதே அவர்கள் நமக்களிக்கும் உன்னத நிலை பெற்று வாழ்ந்திடலாம்.

நம்மிடமுள்ள பயத்தைப் போக்கி “நாம் பிறவி எடுத்த பயனைப் பெற்றுக் காட்ட வேண்டும்…!” என்ற வைராக்கிய எண்ணம் கொண்டு வாழ்ந்திட வேண்டும்.

மாய ரூபங்கள் வேண்டாம்… ஒளியான உணர்வுகளுக்கு மட்டும் ஆசைப்படுங்கள்

 

தியானத்தில் உள்ளோர் ஒரு சிலர் எனக்குக் காட்சி கிடைத்தது… நல்லதானது…! என்றெல்லாம் சொல்வார்கள்.
1.காட்சி கொடுத்து நல்லதாகும் என்ற நிலை வந்தாலும்
2.அது சில நாளைக்குத் தான் இருக்கும்.

நானும் (ஞானகுரு) ஆரம்பத்தில் நிறைய இது போன்று காட்சி கொடுத்துக் கொண்டுதான் இருந்தேன். பிற்பாடு இதையெல்லாம் கூடாது என்பதற்காக வேண்டி நிறுத்தி விட்டேன்.

தியானத்தின் மூலம்..
1.அந்த மெய் ஒளியை நீங்கள் பெற வேண்டுமே தவிர
2.இந்த உடலில் விளைந்த உணர்வினை யாரும் தேடாதீர்கள்… நாடாதீர்கள்…!

நம் குருநாதர் காட்டிய வழிகள் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து இங்கே வளர்க்க வேண்டுமே தவிர அதைப் பார்க்க வேண்டும்… இதைப் பார்க்க வேண்டும்… என்று ஆசைப்படக் கூடாது.

இந்த உடல் மடியக் கூடியது தான். உடலில் உருவான நிலைகளில் அருளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்க்தில் அந்த மெய் ஞானிகள் பெற்ற ஒளி உணர்வுகளைப் பெற ஆசைப்பட வேண்டும்.

குருநாதர் வந்தார்… தெய்வங்களின் காட்சி கிடைத்தது என்ற நிலைக்குப் போய் விட்டோம் என்றால் மீண்டும் மீண்டும் இந்த உடலில் விளைந்த உணர்வுகள் தான் நமக்குள் வளரும். அதே தொடருக்குத் தான் நம்மையும் இழுக்கும். கடைசியில் இந்தப் புவியின் ஆசை தான் வரும்.

ஆகவே உருவங்களாகக் காட்சி கிடைத்தாலும்…
1.குருநாதர் காட்டிய வழியில் உடனே அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்
2.அந்த ஒளியான உணர்வுகள் உடலிலே விளைய வேண்டும் என்று
3.மெய் வழியில் சென்று அந்த வலுவைத் தான் கூட்ட வேண்டும்.

அப்படி இல்லாதபடி சாமி (ஞானகுரு) வந்தார்… காட்சி கொடுத்தார் எனக்கு நல்லதானது… காட்சி கொடுத்தார் உடல் நல்லாதனது…! என்று சொல்வதெல்லாம் உடல் இச்சைக்குத் தான் மாறும்.

அதைத்தான் யாம் வன்மையாக கண்டிப்பது. இந்த நிலையிலிருந்து எல்லாம் நாம் மாறுபட வேண்டும்.

1.மெய் ஒளியை நமக்குள் பெற வேண்டும்
2.நம்முடைய பார்வையால் பிறருடைய தீமைகள் நீங்க வேண்டும்
3.சாமி செய்தார் என்பதற்குப் பதில் சாமி பார்வை பட்டு பிறருடைய தீமைகள் எப்படிப் போனதோ
4.அதே போல் நம் பார்வையால் பிறருடைய தீமைகளை அகற்ற வேண்டும்
5.ஒளியான உணர்வுகள் பேரருள் பேரொளியாக வளர வேண்டும்
6.அத்தகைய சக்தியை நாம் பெற வேண்டும்… அது தான் முக்கியம்.

வாழும் வரை இப்படியே வாழலாம் என்ற எண்ணத்தில் தான் இன்று உள்ளார்கள் – ஈஸ்வரபட்டர்

 

இந்த மனிதப் பிறவி எடுக்க ஆண்டவனின் சக்தியில் பல நாள் தவமிருந்து நாம் பெற்றதே இப்பாக்கியம்.

ஆனால் நாம் எடுத்த மனிதப் பிறவியையே பெரும் பயத்துடனும் கலக்கத்துடனும் வாழ் நாட்களை வீணடித்துக் கொண்டு வாழ்கின்றோம்.

1.நாம் எடுத்த பிறப்பின் பயனைப் பெறுவது என்பது
2.நம் வாழ் நாட்களை வீண் விரயம் செய்யாமல் வாழ்ந்து காட்டுவது தான்…!

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு குணாதிசயத்தைப் பெற்றுள்ளான். மனிதப் பிறவி எப்பொழுது எடுத்துள்ளோமோ அப்பொழுதே அந்த ஆண்டவனின் “பரிபூரண சக்தி” பெற்றவர்களாகத்தான் தாயின் கருவுக்கே வந்து உதிக்கின்றோம்.

இந்த நல்ல நிலையில் வந்தவர்கள் எல்லாம் நல்ல நிலையில் வாழ்ந்திடாமல்
1.பெரும் பேராசை நிலை கொண்டு பல விஞ்ஞான ரூபங்கள் எடுத்து
2.கடைசியில் தன்னைத் தானே அழிக்கும் நிலைக்கு வந்துள்ளார்கள்
3.இன்றைய உலக நிலை இது தான்.

விஞ்ஞான ரூபத்தில் வந்த மனிதர்கள் எல்லாம் தன்னுள் இருக்கும் சக்தியை ஒவ்வொருவரும் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொண்டால் விஞ்ஞானத்தையே வெல்லும் மெய் ஞானத்தைக் கண்டிடலாம்.

கூடுவிட்டுக் கூடு பாய்கின்றார்கள் சித்தர்கள்… என்றெல்லாம் கதைகளாகவும் காலப்போக்கிற்காகவும் படிக்கின்றார்கள். ஆக இன்றைய மனிதர்களின் குண நிலையெல்லாம்… பெரும் உல்லாசத்தைக் காணும் குணமாகவே உள்ளது…!

கனவும் நினைவும் உள்ள காலமாக உள்ளதப்பா இந்தக் காலம்.
1.கருத்துடன் நமக்குப் பல பெரியோர்கள் போதித்த கருத்தையெல்லாம்
2.தன் உல்லாச வாழ்க்கைக்காக வியாபாரமாக்கத்தான் தெரிந்திருக்கின்றது
3.தன்னுள் இருக்கும் உண்மை நிலைகளை வீண் விரயமாக்கி வாழ்கிறார்கள்.

“வாழும் வரை வாழலாம்…!” என்ற எண்ணம் தான் மக்களின் மனதிலே பதிந்துள்ளது. இந்த உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகு “அழியாத ஆத்மா” எப்படியெல்லாம் வட்டமிட்டுக் கொண்டுள்ளது…? என்று யாருமே எண்ணிப் பார்ப்பதில்லை.
1.எண்ணிப் பார்ப்பதில்லை என்றால்
2.எண்ணத்தில் பயம் வருவதால் தான் எண்ணிப் பார்ப்பதில்லை…!

இன்றுள்ள நிலையில் நாம் நமக்குத் தெரிந்த ஒரே வழி… அச்சக்தியின் நிலை கொண்டு சகல ஜீவராசிகளையும் காத்து வாழ்ந்திட… அவ் ஈஸ்வர தியானம் இருப்பது ஒன்றே தான்.

அச்சக்தியின் நிலை கொண்டு ஒவ்வொருவரும் இந்த உலகில் உள்ள பல கோடி உண்மை நிலைகளைத் தன்னுள் ஈர்க்க முடியும்.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்…! என்று நம் முன்னோர்கள் சொல்லவில்லையா…! எந்நிலையையும் ஜெயம் கொண்டு வாழ்ந்து காட்டிட வேண்டுமப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

காரமான பொருள்களைத் தனியாக உட்கொள்ளும் போது அந்தக் காரத்தின் உணர்ச்சி தான் முன்னிலையில் நிக்கும். காரம்… காரம்… என்று தான் சொல்லிக் கொண்டேயிருப்போம்.

ஆனால் இந்தக் காரத்தை அடக்க “சப்…!” என்று இருக்கும்
1.மற்ற காரம் இல்லாத பொருள்களை இதனுடன் இணைக்கப்படும் போது
2.காரத்தின் தன்மை குறைந்து சுவை மிக்க நிலைகளாக உருவாகின்றது.

நமது வாழ்க்கையில் வெறுப்போ வேதனையோ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ கோபமோ இத்தகைய உணர்வுகளை நாம் நுகர்ந்தறியப்படும் போது உயிரான ஈஸ்வரலோகத்தில் அவை எல்லாம் உருவாக்கப்படுகின்றது.

ஏனென்றால்…
1.பிறருடைய துயரங்களையும் துன்பங்களையும் கேட்டறிந்து அவர்களுக்கு உதவிகள் செய்தாலும்
2.கேட்டறிந்த அந்த உணர்வுகளை நாமும் நுகர நேர்கின்றது.
3.அந்தத் துயரப்படும் உணர்வுகள் நமக்குள் வந்த பின் நம்மையும் துன்பப்படச் செய்கிறது
4.அப்பொழுது நாம் நுகர்ந்த அந்தத் துன்பமான உணர்வுகளை தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா…!

அடுத்த கணமே ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரிடம் கேட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வினை உடலுக்குள் சேர்த்துப் பழக வேண்டும்.

முதலில் சொன்ன மாதிரி தனிக் காரத்தை அடக்கப் பல நல்ல சரக்குகளைச் சேர்த்து அதைச் சுவைமிக்கதாக மாற்றுவது போன்று
1.நாம் கேட்டறிந்த துன்பமான துயரமான உணர்வின் தன்மையை அடக்க
2.வலுவான அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளைக் கூட்டி விட்டால்
3.நாம் நுகர்ந்த தீமைகளைத் தணியச் செய்து நல்ல உணர்வின் அணுக்களாக மாற்றும்.

நாம் நல்ல குணங்கள் கொண்டு இருக்கும் பொழுது ஒரு வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தால் அந்த வேதனைப்படும் உணர்வின் தன்மை அதிகரித்து நல்ல குணத்தின் வலிமையை அது குறைந்து விடுகின்றது.

ஆகவே நம்முடைய நல்ல குணத்தின் தன்மையை நாம் அதிகமாக வலு பெறச் செய்ய வேண்டும். அதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அவசியம் நாம் நுகர வேண்டும்.

அப்பொழுது உயிரான ஈஸ்வராலோகத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உருவாகத் தொடங்குகிறது.

“பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்…!” என்ற நிலையில் ஆறாவது அறிவால் அருள் மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து தீமை செய்யும் உணர்வுகள் நம் உடலில் உருவாகாதபடி அருள் உணர்வுகளை உருவாக்கிடல் வேண்டும்.

தீமை என்ற உணர்வுகளைக் குறைத்து தீமைகளை அகற்றிடும் வலிமை கொண்ட உணர்வின் அணுக்களாக எடுக்கும் போது
1.ஈஸ்வரலோகத்தில் அந்த உணர்வுகள் உருவாக்கப்பட்டு
2.நம் இரத்தங்களில் கலக்கச் செய்யப்படும் போது அது இந்திரலோகத்தில் கருத்தன்மை பெற்று
3.தீமைகளை மாற்றிடும் வலிமை பெற்ற பிரம்மலோகமாக… நல்லதைச் சிருஷ்டிக்கும் பிரம்மலோகமாக (உடலாக) மாறுகின்றது.

நன்மைகள் செய்யத் துணிவு வேண்டும் என்று நம் குருநாதர் சொன்னதன் உட்பொருள் என்ன…?

 

நாம் ஒன்றுமே செய்யவில்லை என்றாலும் கூட ஒரு சிலர் நம்மிடம் பகைமை கொண்டு பேசுவார்கள். நல்லதைச் செய்தாலும் கூட இந்த மாதிரி வரும்.

காரணம் என்ன என்றால்…
1.கெடுதல் செய்த உணர்வு கொண்ட ஆவி அவர் உடலிலே இருந்தால்
2.நீங்கள் நல்லது செய்வதைப் பார்த்தாலே அவருக்குப் பிடிக்காது.
3.எதிரி என்ற நிலைகளில் உங்களைக் கண்டாலே இல்லாததை எல்லாம் சொல்லும்.

ஒரு உடலுக்குள் இந்த மாதிரி ஆவி இருந்தாலே நாம் தியானம் செய்கிறோம் என்று சொன்னாலே போதும். நம்மைப் பார்த்ததும்…
1.என்னை ஏதோ செய்கின்றான்… இதைச் செய்கின்றான்.. அதைச் செய்கின்றான்…! என்று சொல்ல ஆரம்பிக்கும்
2.நாம் ஒன்றுமே செய்யவில்லையே… இப்படிச் சொல்கிறதே…! என்று நினைப்பீர்கள்.

அந்த உணர்வை நுகர்ந்தாலே “நான் ஒன்றுமே சொல்லவில்லை இந்த மாதிரித் தவறாகச் சொல்கிறான்… பாவிப்பயல்…!” என்ற இந்த அலைகளில் சிக்கிவிடுவோம்.

அந்த மாதிரி நேரத்தில் எல்லாம்…
1.உடனே மகரிஷியின் அருள் உணர்வை நமக்குள் எடுத்து வலுவாக்கிக் கொண்டு
2.அவருக்குள் இருக்கும் அந்த ஆவி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.அவருக்குள் இருந்து நன்மை செய்யும் செயல்கள் வர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

இதிலே நமக்கு அந்தத் துணிவு அவசியம் வேண்டும். அதனால் தான் நன்மைகள் பல செய்யத் துணிவு வேண்டும் என்று சொல்வது. அந்த இடத்திலே துணிவு இருந்தால் தான் அதைச் செய்ய முடியும்.

1.நமது குருநாதர் கொடுத்த நிலைகளை ஒவ்வொன்றையும் நீங்கள் வரிசைப்படுத்திப் பாருங்கள்
2.நன்மை செய்ய வேண்டும் நமக்குள் அது வளர வேண்டும் என்றால் அதற்குத் துணிவு வேண்டும்.

உடலில் ஆவி உள்ளவருக்கு அவர் கஷ்டப்படுகிறார் உதவி செய்ய வேண்டும் என்று நாம் சொன்னால் போதும்…!

ஐய்யய்யோ பாவிப் பயல்…! எனக்கு ஏதோ செய்கின்றான்… விஷம் வைக்கின்றான்… மருந்து வைக்கின்றான்…! என்று சொல்லும்… பார்க்கலாம் இதை எல்லாம்…!

அவர்கள் உடலில் இருக்கும் அந்த ஜீவான்மா (ஆவி) மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அந்த உடலிலிருந்து நன்மை செய்யும் நிலைக்கு வர வேண்டும் என்று நாம் எண்ணி எடுக்க வேண்டும்.

ஏனென்றால் இதையெல்லாம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் நல்லது செய்கின்றோம் என்றாலும் கூட அடுத்த வீட்டுக்காரர் நம்மைப் பற்றி இல்லாததை எல்லாம் சும்மா சொல்லிக் கொண்டே இருப்பார். காரணம் அவர் உடலில் ஒரு ஆன்மா இருக்கும்.

ஆக… ஆன்மா இல்லாதவர்களே இல்லை.

ஆனால் நம்மைக் கண்டவுடனே அதற்கு வெறுப்பாக இருக்கும்… உடலில் எரிச்சல் ஆகும்…! அப்படி நம்மை எரிச்சலுடன் பார்க்கும்போது நம் ஆன்மாவில் முன்னாடி அது அதிகமாகப் பெருகிவிடும். இது பெருகி விட்டால் அதைத்தான் நாம் சுவாசிப்போம். அந்த உணர்வுகள் தான் நம்மை இயக்கும்.

ஆனாலும் உயிரிலே பட்டபின் இந்த உணர்வை வெளிப்படுத்துவது நம் உயிரே தான். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்கள் வந்தாலும்
1.உடனே இடைமறித்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.இங்கே புருவ மத்திக்கு நினைவைக் கொண்டு வர வேண்டும்.
3.இப்படிப் பல முறை கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி உணர்வின் சக்தியை தனக்குள் எடுக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று மாற்றிக் கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில் எந்த உடலில் எப்படிப்பட்ட ஆன்மா இருந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். அந்த நன்மை செய்யும் சக்தியாக வளர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இதைச் செய்தால் அவர்கள் உணர்வு நம்மை எதிர்மறையான உணர்வுடன் இயக்காது. அதே சமயத்தில் அவர்களுக்குள்ளும் இந்த அருள் உணர்வுகள் சென்று ஊடுருவி இயக்கும். விலகிச் சென்றாலும் சென்று விடுவார்கள். நமக்குத் தொல்லை தர மாட்டார்கள்.

1.துணிவுடன் செய்து நமக்குள் இருக்கும் நல்ல குணத்தைக் காக்க வேண்டும்.
2.அவர்களுக்குள்ளும் இந்த அருள் உணர்வை நாம் பாய்ச்சும் போது
3.அங்கேயும் உண்மையை உணர்த்தும் சக்தியாக அவர்களை இயக்கும்.

செயற்கையில் உருவாக்கப்பட்ட நஞ்சை இயற்கையாலும் இன்று வடிகட்ட முடியவில்லை – ஈஸ்வரபட்டர்

 

இன்று உலகினிலே பல வகையான ஜீவராசிகள் உள்ளன. ஒவ்வொன்றும் தன் நிலைக்கு ஏற்பச் சுவாச நிலையை எடுக்கின்றது.
1.மனிதரின் சுவாச நிலை தான்
2.எல்லாத் தன்மையையுமே தன் சுவாசத்தில் ஈர்க்கும் நிலையில் உள்ளது.

மனிதனின் சுவாச நிலை அவன் ஒவ்வொரு எண்ணம் கொண்டும் எண்ணிடும் பொழுது அந்நிலையில் அவன் எடுக்கும் சுவாச நிலையைப் பொறுத்து அவன் வாழ்கின்றான்.

இவ்வுலகினிலே நாகப்பாம்பைப் போல்
1.நச்சுத் தன்மையுள்ள கொடிய விஷத்தைத் தன்னுள் ஈர்த்து எடுத்திடும் ஜீவராசிகள் இல்லாவிட்டால்
2.இந்தக் காற்றில் கலந்துள்ள கொடிய விஷங்கள் எல்லாம் பெரும் தீங்கைத் தான் விளைவித்திருக்கும்.

அவ் ஈசனின் சக்தியிலிருந்து நம் கண்ணிற்கும் நம் எண்ணத்திற்கும் தெரிந்திடாமல் பல வகை உண்மை நிலைகள் உள்ளன. எல்லாமே அவ்வீசனின் சக்தியில் வந்தவை தான்.

ஒவ்வொரு தாவரமும் ஒவ்வொரு நிலையில் உற்பத்தியாகி வளர்ந்திருக்கின்றன. தாவரங்கள் எல்லாம் அதனதன் சுவாச நிலை மேல் நோக்கி அந்தச் சூரியனின் சக்தியை நேராக ஈர்க்கும் நிலையில் உள்ளன.

பல வகைத் தாவரங்களிலும் பல வகை நல்ல உணவாகவும் மனிதருக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் அமையப் பெற்றுள்ளன.

நாம் எண்ணுகின்றோம். உபயோகமில்லாமல் இப்படி ஏன் பல வகைத் தாவரங்கள் உள்ளன என்று…? அச்சக்தியின் அருள் பெற்றுத் தான் அவையும் வளர்கின்றன… நல்ல கனி கொடுக்கும் தாவரங்களும் வளர்கின்றன.

அந்தக் கொடிய விஷமுள்ள தாவரங்கள் எல்லாம் இல்லாவிட்டால் இந்தக் காற்றிலிருந்து இன்னும் பல தீய நஞ்சு கலந்த அணுக்கள் தான் சுற்றிக் கொண்டிருக்கும்.
1.அந்த விஷ அணுக்களையே உண்டு உயிர் வாழும் தாவரங்கள் இருப்பதால் தான்
2.நம்மைச் சுற்றியுள்ள இந்தக் காற்றையே சுத்தமாக்கி நாம் சுவாச நிலைக்கு ஈர்த்துக் கொள்ள முடிகிறது.

இந்த உலகில் தோன்றியவை எதுவுமே வீணாகவும் உபயோகமற்றதாகவும் தோன்றவில்லை.
1.ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தன் சுவாச நிலையைக் கொண்டு தோன்றி
2.இந்த உன்னதமான உலகத்தைப் பல கோடி ஆண்டுகள் காத்து வருகின்றது.

இன்றைய உலகத்தில் விஞ்ஞானம் என்ற பெயரால் பல வினைகளைச் செய்து… தன்னையே தான் அழித்துக் கொள்ளும் இந்த மனிதரின் நிலைகள் எல்லாம்… இன்னும் ஜீவனுடன் உயிர் வாழ்கிறதென்றால் எந்த நிலையில்…?

நச்சுத் தன்மையைத் தானே உண்டு வாழும் நாகப் பாம்புகளும்… நச்சுடன் நச்சாக வளர்ந்து பெரும் விஷத் தன்மையுள்ள நாம் சொல்லும் செடி கொடிகளும் இல்லாவிட்டால்…
1.இன்று வீசும் காற்றே பெரும் விஷமுள்ளதாக வீசி
2.எந்த ஜீவராசிகளுமே உடலுடன் வாழ்ந்திட முடிந்திருக்காதப்பா…!

இந்த நச்சுத் தன்மை பாம்பிலும் தாவரங்களிலும் தான் உண்டு என்று இம்மனிதர்கள் எண்ணுகின்றார்கள். இவை எல்லாம் நமக்கு நன்மையைத்தான் அளிக்கின்றன.

இம்மனிதனாக வாழ்வதற்கு மாபெரும் தவமிருந்து நமக்கு அந்தச் சூரியனிலிருந்து பல ஜென்மங்கள் எடுத்து பெரும் வாழ்க்கையை வாழும் பாக்கியம் பெற்ற நாம் “நம் மனைதையே விஷமாக்கி வாழ்கின்றோம்…!”

இந்த மனித உடலைப் பெற்று வாழ்வதே நாம் செய்த பாக்கியம் தான். இந்தப் பாக்கியம் பெற்ற நாம் இந்த மனித உடல் உள்ள பொழுதே நாம் பிறவி எடுத்த பயனைப் புரிந்து “நம் மனதையே நல் மனதாக்கி வாழ்ந்திட வேண்டும்…!”

பிறவி எடுத்த புனிதத் தன்மையைப் போற்றிக் காத்து எவன் ஒருவன் வாழ்கின்றானோ… அவனெல்லாம் அச்சக்தியின் சக்தி பெற்ற… நம்முள் கலந்துள்ள பல தேவர்களின் தேவர்களைக் கண்டிடலாம்.

1.அந்தத் தேவர்களின் தேவர்களாகவும் நாம் ஐக்கியப்பட்டு
2.உடலை விட்டு நம் ஆத்மா செல்லும் நிலைக்குள் சகல நிலையையும் பெற்றிடும் பாக்கியம் பெறத்தான்
3.இந்தப் பாட நிலையெல்லாம் அளிக்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நாம் ஒரு வேலை செய்யும் பொழுது கையிலே அழுக்குப்படுகின்றது. ஆனால் அதைத் துடைத்துவிட்டுத் தான் உணவு உட்கொள்கின்றோம். அடுத்த காரியத்தைத் தொடர்கின்றோம்.

ஏனெனில் நாம் கையிலே அழுக்கானபின் தொழில் செய்தபின் அதைத் துடைக்காதபடி மற்றொரு இடத்தில் செயல்பட்டால் அதுவும் மாசு பட்டுவிடும்.

இதைப்போல ஒருவருடைய நிலைகள் நாம் பார்த்துக் கொண்ட பின் அவர்களைக் காப்பாற்றும் எண்ணம் கொண்டு காப்பாற்றினாலும் அதைத் துடைக்கும் நிலை நமக்கு வரவேண்டும். அதைத் துடைத்திடும் உணர்வு நமக்குள் உண்டு.

ஒரு குழந்தைக்குத் தலைவலி வந்து விட்டால் பச்சிலை இங்கிருக்கின்றது என்றால் நாம் எப்படி தேடிச் சென்று, கொண்டு வந்து அதைக் குழந்தைக்குக் கொடுக்கின்றோம். நம் ஆறாவது அறிவு இப்படி வேலை செய்கிறது.

இதைப் போலத் தான் தீமைகள் வரும் பொழுதெல்லாம் தன் உணர்வின் எண்ணத்தால் “மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும்…!” என்ற ஏக்க உணர்வு கொண்டு எண்ணி நமக்கு முன் சுழன்று கொண்டு இருக்கும் அருள் ஞானியின் உணர்வைத் தனக்குள் எடுத்துத் துடைத்துப் பழக வேண்டும்.

அந்த மெய் ஞானிகள் அனைவரும்
1.தன் வாழ்க்கையில் வந்த எதிர் நிலைகள் அனைத்தையும்
2.தனக்குள் தீமைகள் விளைவித்த அந்தச் சக்தியை அவர்கள் துடைத்துப் பழகி,
3.நஞ்சினை அடக்கி உணர்வினை ஒளியாக்கி,
4.ஒளியின் சிகரத்தால் பொருள் கண்டு உணரும் ஆற்றல் பெற்று
5.மற்ற எந்த சக்தியானாலும் தெரிந்திடும் ஆற்றல் பெற்று
6.தெரிந்து கொள்ளும் உணர்வின் தன்மையை வளர்த்து
7.தங்கள் உணர்வு அனைத்தையும் ஒளியாக மாற்றிச் சென்றவர்கள்.

இதைத்தான் ஏழாவது அறிவு சப்தரிஷி என்று சொல்வது. இதைச் சப்தரிஷி மண்டலம் என்று சொல்வார்கள்.

மனிதனாக வளர்ந்து அந்த மெய் ஞானி அவன் தெளிந்து நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி,
1.அவன் உடலிலே விளைய வைத்த ஆற்றல்களும்
2.அவன் உடலில் வெளிப்பரப்பிய மணமும் மூச்சலைகளும்
3.அவன் எண்ணத்தால் வெளியிட்ட உணர்வும் இந்தச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்துள்ளது.

இப்பொழுது உங்களுக்கு யாம் உபதேசிக்கும் பொழுது அவர்கள் உடலில் விளைய வைத்த மணங்களை நீங்கள் நுகர நேருகின்றது.

அந்த மணங்களை நீங்கள் நுகரும் பொழுது உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த வேதனைகளையும் மனக்கவலையையும் நீக்கிடும் சக்தியாக அமையும்.

நாம் சேமிக்க வேண்டிய அழியாத சக்தி எது…? என்று இனி முடிவு செய்து கொள்ளுங்கள்…

 

நமக்கு இந்த உடல் சொந்தமா…? நாம் சேர்த்து வைத்த சொத்துக்கள் எல்லாம் நமக்குச் சொந்தமா…? ஆகவே இனி அழியாச் சொத்து எது…? என்பதை முடிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
2.இனி இருப்பதாவது நல்லதாக இருக்க வேண்டும்.
3.மற்றவர்களுக்கு ஒரு நல்ல அறிவும் ஞானமும் வர வேண்டும்
4.அவர்கள் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் எல்லாமே செய்கிறோம். ஆனால் இந்த உடலை விட்டு உயிரான ஈசன் போய்விட்டால் என்ன செய்கிறது…? உடல் நீசமாகிறது. முதலில் சிவம் என்று சொல்கிறோம். கடைசியில் இதைச் “சவம்” என்று தான் சொல்கிறோம்.

எவ்வளவு உயர்ந்த மனிதனாக இருந்தாலும் சவமாக ஆன பிற்பாடு…
1.ஆயிரம் மாலைகளைப் போடலாம்
2.அப்புறம் கொண்டு போய் அனாதையாகத் தள்ளிவிட்டுத் தான் வருகின்றோம்.

இந்த உடல் நிலைத்திருக்கிறதா…? இல்லை. உயிர் வெளியே சென்று விட்டால் இந்த உடலுக்கு மதிப்பு இருக்கிறதா…?

அப்படி என்றால் நாம் எதை மதிக்க வேண்டும்…?

நம் உயிரை நாம் மதித்தாக வேண்டும்…! அந்த மகரிஷிகளின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று வலுவாக்கிக் கொள்ள வேண்டும். அதை வலுவாக்கிய பின் இந்த உடலை விட்டு எப்பொழுது சென்றாலும்
1.நாம் எப்பொழுதும் அவனுடன் நிலையாக இருக்கலாம்.
2.அவனுடன் அவனாகவும்… “அவனாகவும்” நாம் வாழலாம்.
3.ஏனென்றால் உயிரால் உணர்வால் எடுத்துக் கொண்ட ஒளியின் நிலைகள் அது.

ஆனால் இப்பொழுதும் நாம் அவனுடன் அவனாகத் தான் வாழ்கிறோம். எப்படி…!

அன்றாட வாழ்க்கையில் நாம் எதை எதை எல்லாம் எடுக்கின்றோமோ “அந்த இம்சை எல்லாம்…” இந்த உடலில் இருக்கிறது. எம்மம்மா… ஐய்யய்யோ… அப்பப்பா…! இதுவும் அவனுடன் தான் வாழ்கிறோம்.

ஆகவே இருளை நீக்கிப் பொருள் காணும் உணர்வை உயிருடன் ஒன்றச் செய்யும் போது ஒளியின் சரீரமாகி நிலையான நிலைகள் பெறுகின்றோம்.

நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் ஒளியின் சரீரமாக என்றும் நிலையாக இருக்கலாம்.

அது தான் கல்கி…!

1.உயிர் ஒளியாகின்றது… பல நிலைகளை வெல்கிறது.
2.மனிதனாக ஆன பின் நரசிம்மா… தீமைகளைப் பிளக்கின்றது.
3.தீமைகளைப் பிளந்திடும் உணர்வுகளை விளைய வைக்கின்றது.
4.விளைந்த உணர்வுகள் உயிருடன் ஒன்றி என்றும் நிலைக்கின்றது – கல்கி.

ஆனால் கல்கி எங்கேயோ இருக்கின்றான் என்று நாம் நினைக்கின்றோம்.

நம் உயிர் தான் கல்கியாக… அதிலே உணர்வுகள் வளர்ந்தது போல் எதனை இணைக்கின்றோமோ அதன் நிலை கொண்டு அதுவாகிறது. கார்த்திகேயா (வெளிச்சம்) தெளிந்திடும் அறிவு வருகிறது.

இந்த உடலில் அதைப் பெற்ற பின் இன்பத்தின் உணர்வின் தன்மை கொண்டு அவனுடன் இணைக்கும் போது என்றும் பேரின்பப் பெரு நிலை அடைகின்றது.

இந்த வாழ்க்கையில் கஷ்டம்… நஷ்டம்… துன்பம்… எல்லாம் வரும்.
1.கஷ்டம் வந்தாலும் உயிரின் பிடிப்பை விட்டு விடக் கூடாது.
2.அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றி அதைச் செயல்படுத்த வேண்டும்.

எண்ணத்தை வைத்துத் தான் தியான நிலையையும் சுவாச நிலையையும் ஒருநிலைப்படுத்த முடியும் – ஈஸ்வரபட்டர்

 

தியான நிலை… சுவாச நிலை… வேண்டும் என்று கேட்கின்றாய். இப்பொழுது இங்கே கொடுக்கும் பாடங்கள் எல்லாம் என்னப்பா..?
1.சுவாச நிலையே தான் தியான நிலை.
2.தியான நிலையே தான் சுவாச நிலை.

பூஜையில் அமர்ந்து நீ விடும் சுவாச நிலையில் ஜெபித்திடும் ஜெபங்கள் தான் சுவாச நிலையும் தியான நிலையுமாப்பா…? இல்லையப்பா…!

உன் எண்ணத்திற்குப் பல காலம் பல வழியில் பல வழிகளை நானும் என் சிஷ்யனும் செப்பிவிட்டோம். இன்னும் வேண்டுகிறாய் தியான நிலைக்கும்… சுவாச நிலைக்கும்…!

1.நீ எண்ணும் எண்ணமே தான் தியான நிலையும்… சுவாச நிலையும்… பெரும் ஜெப நிலையும்…!
2.எண்ணும் எண்ணமே தான் உன் வாழ்க்கை நிலையும்… உன் உடல் நிலையும் புரிந்ததா…?

எண்ணும் எண்ணம் போல் வாழ்வு…! என்பார்கள். எண்ணும் எண்ணமே தான் வாழ்க்கையுடன் கலந்து வருகிறது.

உன் வாய் திறந்து சொல்லும் சொல்கள் தான் காற்றிலே சுற்றுகிறது என்று எண்ணுகிறாய். உன் மனதில் எண்ணும் சிறு எண்ணமும் உன் சுவாச நிலையில் தான் சுற்றுகிறது.

நீ எண்ணும் எண்ணமெல்லாம் உன் சுவாச நிலையில் வெளிப்படுகின்றது. நீ பிறவி எடுத்த நாள் முதல் கொண்டு நீ எண்ணிய எண்ணமும்… நீ சிரித்த… அழுத… பேசிய எல்லா ஓசைகளுமே உன்னைச் சுற்றியே தான் வந்து கொண்டிருக்கின்றது.

உன் கடந்த காலத்தை எண்ணிப் பார்…!

உன் நினைவில் நீ ஒன்று நினைத்ததும் நீ ஒன்று நடத்தியதும் ஞாபகத்தில் வந்திடும்.
1.நீ பேசிய பேச்சுக்கள் மட்டும் தான் சுற்றிக் கொண்டுள்ளது என்று எண்ணுகிறாய்
2.நீ நினைத்ததும் உன்னையே தான் சுற்றிக் கொண்டுள்ளது.

இந்தப் பிறவி மட்டுமல்ல…! ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த உலகம் தோன்றிய நாள் முதல் அவன் உயிரணுவின் சுவாச நிலை எல்லாமே அவன் உள்ளவரை சுற்றிக் கொண்டே தான் உள்ளது.

இந்த உலகம் சுற்றுவதே இச்சுவாச நிலையில் தான்.
1.மனிதனைச் சுற்றியுள்ள சுவாச நிலையில் மனிதன் வாழ்கின்றான்.
2.உலகைச் சுற்றியுள்ள சுவாச நிலையில் உலகம் உருள்கின்றது.

உன் சுவாச நிலையையும் ஜெப நிலையையும் எந்த நிலைக்கப்பா நான் அருள்வது…? நீ எண்ணும் எண்ணமே தான் சுவாச நிலை… ஜெப நிலை… பெரும் ஜோதி நிலை எல்லாமே…!

காலத்தைக் கடத்தி விட்டாய்…! இனி இருக்கும் காலத்தில் உன் எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி சுவாச நிலையையும் ஜெப நிலையையும் எய்திடப்பா…!

எண்ணும் எண்ணத்திலேயே மனிதன் வாழ… எண்ணம்தான் உயிர் ஜீவனப்பா…!
1.உன் உயிருக்கு ஏதப்பா ஆகாரம்…?
2.எண்ணும் எண்ணம் தான் அந்த உயிரின் ஜீவனப்பா…!
3.புரிகிறதா…! மிகவும் விளக்கமாகச் சொல்லியுள்ளேன்.

இதைப் புரிந்து கொண்டால் உன் எண்ண நிலையை உயர்த்தி மகரிஷிகளுடனும் சித்தர்களுடனும் நீ கலந்திடலாம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

யாம் (ஞானகுரு) பிரச்சாரம் செய்யவில்லை. உங்கள் ஒவ்வொருக்குள்ளும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பதியச் செய்து… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கூட்டச் செய்கின்றோம். அதற்குத்தான் இந்தத் தியானம்.

வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பமானாலும் சரி “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று ஏங்கி மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் ஜீவாத்மா பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உடலைத் தியானித்துக் கொள்ளுங்கள். இதற்குப் பெயர் “ஆத்ம சுத்தி”

1.உங்களை அறியாமலேயே உங்களைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும் நிலையை மாற்றுவதற்குத்தான்
2.ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கையில் கொடுக்கிறோம்.
3.ஏனென்றால் இது எல்லாம் வாக்குடன் கூடிக் கொடுக்கும் நிலைகள்.
4.நீங்கள் எல்லாம் கடும் ஜெபமிருந்து இந்தச் சக்தியைப் பெறுவதென்றால் அவ்வளவு சாதாரணமானதல்ல.

சரியான முறைகளில் இந்த ஆத்ம சுத்தி என்கிற எண்ண உணர்வின் எண்ண வாக்கை உங்களுக்குக் கொடுப்பதற்கு இந்த உணர்வின் தன்மையைக் கொல்லூரில் 16 வருடங்கள் எடுத்து வளர்த்து அந்த வாக்கின் ஒலியை உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.

இப்படிப் பதியச் செய்ததை
1.யாம் சொல்லும் இந்த முறைப்படி யார் ஒருவர் தியானத்தில் இருக்கின்றார்களோ
2.அவர்களுக்கு இந்த வாழ்க்கையிலே எத்தகைய துன்பமிருந்தாலும் நிச்சயம் நீங்கிவிடும்.

பெண்களாக இருக்கக்கூடியவர்கள் அனைவருமே சமையல் செய்யும் பொழுது ஆத்ம சுத்தி செய்து விட்டு அரிசியைப் போடும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் நாம் சமைக்கும் சாப்பாட்டை யார் புசித்தாலும் அவர்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டுமென்று எண்ணுங்கள். நீங்கள் அப்பொழுது சுவாசிக்கக் கூடிய உணர்வு உங்களை அறியாமலேயே உங்களைச் சுத்தப்படுத்தும்.

பெண்களுக்கு அடிக்கடி கவலையும் தொல்லைகளும் வருவதனால் அந்த உணர்வுகளால் அவர்களுக்குக் கை கால் குடைச்சலும் தலைவலியும் ஒற்றைத் தலைவலியும் அதிகமான நிலையில் வரும்.

காரணம் பெண்களுக்கு ஈர்ப்பு சக்தி ஜாஸ்தி.

1.அடிக்கடி கவலையும் மற்ற நிலைகளையும் எண்ணி எண்ணி
2.அவர்களை அறியாமலேயே இந்த உணர்வுகள் உடலில் சேர்ந்து கை கால் குடைச்சல் வந்துவிடுகின்றது.
3.அதுவே பின் நாட்களில் நோய்களாக வளர்ந்து நல்லதையே சிந்திக்க முடியாத நிலைகள் ஏற்படுகின்றது.

ஆகையினால் சமையல் செய்யும் பொழுதும் சமையல் செய்தபின் பரிமாறும் பொழுதும் இந்த நிலைகளைச் செய்து கொள்ளுங்கள். கணவன் மனைவியும் அவசியம் இந்த ஆத்ம சுத்தியைச் செய்யப் பழகிக் கொள்ளுங்கள்.

வீட்டை விட்டு வெளியே சென்றாலும் தொழிலில் போய் அமர்ந்தாலும் ஒரு சங்கடமான வார்த்தைகளைக் காதில் கேட்டாலும் அடுத்த நிமிடம் ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் ஒவ்வொரு நிமிடமும் சுத்தப்படுத்துவதற்கே இந்த ஆயுதத்தை யாம் கொடுக்கின்றோம்.

May 2021 உபதேசம்

அருள் ஒளி கொண்டு அனைத்தையும் அரவணைத்துச் சென்றால் தான் பேரானந்தப் பெரு நிலை பெற முடியும்

 

ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோம். அதற்கு மத்தியிலே இடைப்பட்ட நிலைகள் வரப்படும் பொழுது ஒருவர் வந்து அவன் மோசமான ஆள்… உதவி செய்யாதீர்கள்…!” என்று நம்மிடம் சொல்கிறார்.

அப்போது நமக்கு வெறுப்பின் தன்மை வருகிறது.

ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணும் போது மற்றவர்கள் செய்ய வேண்டாம் என்று சொன்னால் நாம் எண்ணிய எண்ணங்களுக்கு அது எதிரியாகிறது. நமக்குள்ளே போர் வருகிறது.

சந்தர்ப்பத்தில் இதைப் போன்று தான் நமக்குள் அந்த எதிரியின் தன்மைகள் உருவாகி விடுகிறது. இப்படி உருவாகும் அந்தச் சக்திகள் எப்படிச் செயல்படுகிறது…? என்பதைத்தான் இராமாயணம் தெளிவாகக் காட்டுகிறது.

கைகேயி இராமன் மீது வெறுப்பு காட்டுகிறது… ஏனென்றால்
1.தன் பையன் ஆட்சி பீடத்தில் அமர வேண்டும் என்று தனக்குள் வளர்த்துக் கொண்ட அந்தச் சக்தி
2.இது தன்னிலே வளர்ந்த உணர்வு…. அந்த அணுக்கள் அதை எண்ணுகின்றது
3.அந்த உணர்வின் தன்மை இங்கே உருவாக்குகின்றது

தசரதனுடைய ஆசையோ இராமன் மீது இருக்கின்றது. அதே சமயத்தில் தனக்குள் இருக்கும் சக்தி (தசரதனுக்கு எண்ணிலடங்காத மனைவி) அதனுடைய பாசத்தால் ஓங்கி வளர்க்கப்படும் பொழுது அதிலிருந்து அவனால் மீள முடியவில்லை. அதாவது தசரதன் அவன் மனைவியின் நிலையை மீற முடியவில்லை.

அன்பு கொண்ட மனைவி கோசலை தியாகம் செய்கிறது…! மூத்த மகன் இராமன்… சீதாராமா ஒருத்திக்கு ஒருவன் என்ற நிலைகள் இருக்கின்றான்.

சுவைக்கொப்பத் தான் எண்ணங்கள் (சீதா என்றால் சுவை – இராமன் என்றால் எண்ணம்) என்று அவனுடைய எண்ண அலைகள் இருப்பினும் தூண்டிய உணர்ச்சிகள் தன் சகோதரனாக இலட்சுமணனாக இருக்கின்றான்.

நாம் எந்தக் குணத்தின் தன்மை கொண்டு எந்த உணர்வின் தன்மை எண்ணி எடுக்கின்றோமோ அதன் சக்தியாக இயக்குகிறது. ஆனால் அதிலே இந்த விஷத்தின் தன்மை கலந்தால் எதிலே இது கலக்கின்றதோ அந்த வேகத்தின் தன்மை கொண்டு உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.

இது எல்லாம்
1.ஒரு அணுவுக்குள் இருக்கும் நிலையும்… அது கவர்ந்து கொண்ட உணர்வின் சக்தியும்
2.அது எவ்வாறு இயக்குகிறது…? என்று தான் இராமாயணம் காட்டுகிறது.

இராமன் காட்டிற்குள் செல்கின்றான். அங்கே புலியும் இருக்கிறது கரடியும் இருக்கிறது. இருந்தாலும் அதைச் சீராக்கிக் கொண்டு வரும் நிலையாக இராமன் என்ன செய்கிறான்…?

1.இந்த உடலுக்குள் வரும் மற்ற ஆசைகளை விடுத்து அமைதியாகச் செல்கிறான்…
2.எல்லாவற்றையும் இவன் சகோதரனாக ஆக்குகின்றான் என்று காட்டுகிறார்கள்.

அதாவது இந்த மனித வாழ்க்கையில் அந்த அருள் உணர்வின் துணை கொண்டு அனைத்தையும் நம் உடலுக்குள் சகோதரனாக ஆக்க வேண்டும்…!
1.எதையுமே பகைமை ஆக்காது…
2.எதிரியாக உருவாக்காது…
3.இணைந்து வாழச் செய்யும் அரும் பெரும் சக்திகளை நாம் எடுக்க வேண்டும்
4.உடலுக்குள் அதை உருவாக்க வேண்டும் என்று இராமாயணம் காட்டுகிறது.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நீங்கள் நல்ல குணத்துடன் தான் இருக்கின்றீர்கள். ஆனால் சந்தர்ப்பத்தில் பகைமையாகி அதனால் வேதனையான உணர்வை நுகர்ந்த பின் உங்கள் மனதிற்குள் என்ன நடக்கிறது…?

உள்ளுக்குள் மனப் போராட்டமாகி (மனதிற்குள்) சண்டை போட்டுக் கொண்டு மேல் வலிக்கிறது… தலை வலிக்கிறது… என்று சொல்வீர்கள்.

அப்பொழுது உங்களுக்குச் சரியான சிந்தனை இல்லை. ஒரு வேலையின் நிமித்தமாக உங்கள் பையனைக் கூப்பிடுகின்றீர்கள். கூப்பிட்டதும் அவன் வரவில்லை என்றால் “கூப்பிடுகிறேன் பார்… உடனே வர மாட்டேன் என்கிறானே…!” என்ற இந்த உணர்வு தான் வரும்.

கடையில் உட்கார்ந்து வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றீர்கள். வியாபாரம் நன்றாக இருக்கும் இடத்தில் முதலில் சொன்ன மாதிரி மனதில் கொஞ்சம் வெறுப்பாகி விட்டால் என்ன நடக்கிறது…?

கடைப் பையனைக் கூப்பிட்டு இந்தச் சரக்கை எடுத்து வா என்று சொன்னாலும் அவன் வரவில்லை என்றால் “நான் சொல்லிக் கொண்டேயிருக்கின்றேன்… உனக்கு என்ன காது கேட்கவில்லையா…?” என்று இப்படிக் கேட்டு இந்த வம்புக்குப் போவோம்.

அந்த உணர்வுகள்… அங்கே தாங்கவில்லை என்றால் “நாம் சொன்ன சரக்கை அவன் எடுத்துக் கொண்டு வரட்டும்…!” என்று பொறுமையாக இருக்க முடியாது. “தான் சொன்னதை ஏன் அவன் செய்யவில்லை…?” என்ற வேகம் தான் வரும்.

நாம் சொன்ன நேரத்தில் அவன் வேறு ஒரு சரக்கைக் கட்டிக் கொண்டிருப்பான். அதைப் பார்த்ததும் ஏம்பா…! நான் சொல்வதைக் கேட்கவில்லையா…? என்று அழுத்தமான சொல் வரும்.

ஏனென்றால் இந்த உணர்வுகளின் இயக்கங்கள் எப்படி…? என்ற நிலையை அறிந்து ஒவ்வொரு நொடியிலேயும் நாம் எதை எப்படிச் செய்ய வேண்டும்..? என்று தெளிவாக உணர்தல் வேண்டும்.

1.மாறுபட்ட எண்ணங்கள் நமக்குள் வரும் பொழுதெல்லாம்
2.நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று
3.உடலுக்குள் அதைச் செலுத்தி ஆத்ம சுத்தி செய்தால் “அவன் ரிஷியின் மகன் நாரதனாகின்றான்…!”

மனிதனின் வாழ்க்கையில் தீமைகளை அகற்றிடும் சக்தியாக அவன் உருவாக்கிக் கொண்டவன். அந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்தால் அது நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன். (சூரியன் என்றால் நாராயணன்)

அவன் (சூரியன்) எப்படி உலகை இரட்சிக்கின்றானோ அதே போல் சூரியன் கவர்ந்து வைத்திருக்கும் மகரிஷிகளின் உணர்வின் தன்மையைக் கவர்ந்தால்
1.இரட்சிக்கும் அலைகளாக அந்த உணர்வின் இசைகள் நம்மை நல் வழிக்கு மாற்றும்.
2.அதனால் தான் நாரதன் கையில் இசைக் கருவி இருக்கும்.
3.அது சுழன்று சீராகினால் இங்கே மகிழ்ச்சியின் தன்மை வந்து அறியாது வந்த இருளைப் போக்குகின்றது.

சரஸ்வதி கையில் என்ன இருக்கிறது…? வீணை. ஒவ்வொரு உணர்வின் மணமும் அந்த இசையை ஊட்டுகின்றது. எதனின் குணமோ அதனின் ஞானமாக அது இயக்கும். அந்த உணர்வினை ஒளியாக அது இயக்கும். உணர்வை அது ஊட்டும்… உணர்வை அது வளர்க்கும்…!

1.அதைத் தான் இங்கேயும் சுருதி ஏழு…. அங்கேயும் சுருதி ஏழு…! என்று போட்டுக் காட்டியிருப்பார்கள்.
2.ஆறாவது அறிவு ஏழாவது நிலை பெறுவது.
3.ஆக ஞானத்தின் தன்மை ஏழாவது நிலை அடைந்தவன் துருவ மகரிஷி… துருவ நட்சத்திரம்…!

அதை நாம் ஒவ்வொரு நிமிடமும் எடுத்து வளர்க்க வேண்டும்.

நடந்ததைச் சொல்வார்கள்… நடக்கப் போவதை அவர்களால் சொல்ல முடியாது…! – ஈஸ்வரபட்டர்

 

பல சாமியார்கள்… பல வழிச் சாமியார்கள்…! இந்த உலகம் முழுவதுமே ஒவ்வொரு கொள்கையுடன் கடவுளின் அருளைப் பெற உள்ளார்கள் “சாமியார்கள்” என்ற பெயரில்.

அந்தச் சாமியார்களின் நிலை எல்லாம் ஆண்டவனை அடைவதற்கு.. ஆண்டவனை அடிபணிவதற்கு… ஆண்டவனைத் தான் அடிபணிந்து வணங்கி விட்டால்… “தானே ஆண்டவன்…” என்ற எண்ணத்தில் வாழ்கிறார்கள்.

பல வழிகளில் அவர்களுக்குப் பொருளும் புகழும் வருகிறது. பல ஜெபங்களைச் சொல்கிறார்கள். பல வழிகளில் மக்களை அடிபணிய வைக்கிறார்கள் ஆண்டவனை வணங்க…!

அவர்கள் நிலை எல்லாம் என்னப்பா…?

இந்த உலகம் முழுவதுமே இந்த நிலை உள்ளதப்பா…! இந்தச் சாமியார்கள் நிலையில் அவர்கள் பூஜிக்கும் பொழுது
1.உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில்லை.
2.கடவுளை வணங்குவதையே மக்களின் மனதில் பெரும் கஷ்டத்தை உண்டு பண்ணுகிறார்கள்.

அவர்கள் நிலையில் இருப்பதெல்லாம் கரு வித்தை என்ற ஆவி தான்..! அவர்கள் நினைத்து ஜெபமிருக்கும் பொழுது அந்த ஆவி காட்சி தருகிறது.

அந்த ஆவியின் உருவத்திற்குப் பல பூஜைகளும் பல உணவுகளும் அளித்துவிட்டு இவர்கள் நினைத்த நினைவுகளுக்கு வரும்படி அந்த ஆவிகளை இவர்கள் வசப்படுத்தி இவர்கள் என்ன எண்ணுகின்றார்களோ… என்ன வேண்டுகிறார்களோ… அவைகளை எல்லாம் அந்த ஆவிகள் எடுத்துச் செப்பி விடுகின்றன.

அவற்றை வைத்துத்தான் இவர்கள் தன்னிடம் வருபவர்களுக்கெல்லாம் அவர்கள் நிலையை உணர்த்தி அவர்கள் ரூபமாகப் பொருள் சம்பாதித்து வருகிறார்கள்.

1.நடந்த நிலையைத்தான் இந்த ஆவிகளால் செப்பிட முடிந்திடும்.
2.நடக்க இருப்பவைகளை அறிந்திட முடிந்திடாது அந்த ஆவிகளின் நிலைக்கு.
3.எந்த ஜோசியனும்… எந்தச் சாமியாரும்… நடக்க இருப்பவைகளைச் செப்பிட முடிந்திடாதப்பா…!

நடந்தவைகளை முழுமையாகச் சொல்லிவிடுவார்கள். அது எல்லாம் கரு வித்தை வேலை தான்..! பல கோவில்களில் அருள் வருவதெல்லாம் இந்த ஆவிகளின் நிலை தான். அருள் அல்லப்பா.. மருள் அது.

1.ஆண்டவனின் அருள் வருபவன் தன்னையும் தன் நிலையையும் மறந்து ஆடிட மாட்டான்.
2.பெரும் அமைதியில் அமர்ந்திருப்பான்.
3.நடக்க இருப்பவைகளை நல்ல முறையில் நடத்திட அருளைத் தான் செப்பிடுவான்.

மருள் வந்தவன் வேலை எல்லாம் குட்டிச் சாத்தான் வேலையப்பா. இந்தக் குட்டிச் சாத்தான் வேலையில் தான் இந்த உலகமே உள்ளதப்பா…! நாட்டை ஆள்பவனே வைத்துள்ளான் குட்டிச்சாத்தானை…!

இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே உரைக்கின்றேன்.

குரு காட்டிய அருள் வழியில் வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கியமான நெறிகள்

 

நமது குருவின் (ஈஸ்வரபட்டர்) அனுபவங்களையும் அவர் எனக்குக் கொடுத்த அனுபவங்களையும் தொடர்ந்து இந்த உபதேச வாயிலாகக் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.

குருனாதர் எனக்குச் சொன்னது…
1.ஒவ்வொரு உயிரைக் கடவுளாகவும்… அந்த உடலைக் கோவிலாகவும் மதித்து நீ செயல்பட்டாய் என்றால்
2.அப்பொழுது அவரிடமிருந்து வரும் பகைமை உனக்குள் மறைகிறது
3.அவர் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும் என்ற நினைவு வருகிறது.
4.அப்படி எண்ணும் போது உன் உடலான ஆலயத்தையும் பரிசுத்தப்படுத்திக் கொள்கிறாய் என்றார்.

குருநாதர் காட்டிய அந்த அருள் வழிப்படி… நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணினால் அது எனக்குள் நல்லதாகிறது.

ஆகவே… நமக்குள் உள்ள தீமைகள் போக வேண்டும் என்றால் யார் நமக்குத் தீமை செய்தார்களோ… “அவர்களுக்கு நல்லது செய்யக்கூடிய எண்ணங்கள் வர வேண்டும்…” என்று சொன்னால் அந்தத் தீமையின் உணர்வுகள் நமக்குள் வராது.

எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் அவர்களுக்கு வர வேண்டும். என்று சொன்னோம் என்றால் அவர்களைப் பற்றி வெறுப்பான உணர்வுகள் நம் உடலுக்குள் வளர்வதில்லை.

1.ஆனால் அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று சும்மா சொன்னால் அந்தக் கெட்டது தான் நல்லதாகும்.
2.அவர் செய்யக்கூடிய கெட்டதற்கு ஊக்கம் கொடுத்த மாதிரி ஆகும்.

ஆகையினால்… நல்லது செய்யக் கூடிய எண்ணங்கள் அவருக்குள் வர வேண்டும்… எல்லோருக்கும் பண்பும் பரிவும் காட்டக்கூடிய அருள் ஞானம் அவருக்குள் வர வேண்டும் என்று சொன்னால் அந்தக் கெட்டதை வளர விடுவதில்லை. ஆக அதை வெறுமனே சொல்ல முடியாது.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்று
2.நம் உடலில் அது படர வேண்டும் என்று இதைக் கலந்து
3.நம் எண்ணங்களுக்கு நல்ல வலு கொடுக்க வேண்டும்.

அந்த வலுவின் துணை கொண்டு அந்த அருள் உணர்வுகளை மற்றவருக்குப் பாய்ச்ச வேண்டும். இப்படிச் செய்தால் குடும்பத்தில் எத்தகைய சங்கடங்கள் வந்தாலும் மாற்றி விடலாம்.

திடீரென்று எதிர்பாராது விபத்துக்களோ மற்றதுகளோ உற்றுப் பார்த்தால்… “அடப் பாவமே… இப்படி ஆகிவிட்டதே…!” என்று எண்ணக்கூடாது.

உடனே ஈஸ்வரா… என்று சொல்லி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று நமக்குள் இந்த வலுவைக் கூட்ட வேண்டும்.

விபத்தில் ஆன்மா பிரிந்திருந்தால் அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து அவர் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை உந்தித் தள்ளி அங்கே விண்ணுக்குச் செலுத்த வேண்டும்.

உடலில் அடிபட்டிருந்தால் அவர்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று பூரண குணமாகி அவர்கள் சீக்கிரம் எழுந்து நடக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நாம் இப்படித் தான் நினைக்க வேண்டும்.

பொதுவாக நம் செயல்கள் அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் போகிறது.
1.ஆனால் மேலே சொன்னபடி எண்ணாமல் அவர்களின் வேதனையை எடுத்தால்
2.கிடு கிடு… என்று உடலில் நமக்கு நடுக்கமாகும்.
3.நம் நல்ல குணங்கள் செயல் இழந்து… அவர்கள் அடிபட்ட உணர்வுகள் இரண்யனாகி அதைக் கொல்லும்.

அதனால் தான் அத்தகைய நஞ்சான உணர்வுகளுக்கு இரண்யன் என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள்.

இந்த மனித வாழ்க்கையில் நாம் எப்படி வாழ வேண்டும்…? என்று தான் அதை எல்லாம் காவியங்களாகப் படைத்தனர். ஏனென்றால் இது இயற்கை.

அதை நாம் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வேண்டி இப்படிக் கருத்தினைத் தெளிவாக்கிக் கொண்டு வந்தார்கள் ஞானிகள்.

அந்த இரண்யனைப் பிளக்க வேண்டும் என்பதற்குத்தான் உங்களுக்கு ஆத்ம சுத்தி என்ற பயிற்சி கொடுக்கின்றோம். அதை எடுத்து உங்கள் நல்ல குணங்களைக் காத்து மற்றவருக்கும் அதே நல் உணர்வை ஊட்ட முடியும்.

ஈசனின் சக்தியைப் பெற வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

சாமியார் ஒருவன்… நானே கடவுள்…! நானே தெய்வம்…! என்கிறான். அவ்விடம் உள்ள கருவின் வேலை வரைக்கும் தான்… அவன் வேலை எல்லாம்…!

ஆண்டவனின் சக்தியை அறிந்திடாமல் “அவனே கடவுள்..” என்கிறான். ஆண்டவன் என்றால் யார் என்றே அவனுக்குத் தெரிந்திடாது. அந்தக் கருவையே ஆண்டவன் என்கிறான்.

பல பூஜைகள் செய்து வருபவர்களின் எண்ணத்தையும் அவர்களின் கடந்த கால நிலையையும் கண்டிடலாம். இதைப் போன்ற நிலையை வைத்துத்தான் பல ஜோசியங்கள் கோவில்களில் உடுக்கை அடித்துச் சாமி கேட்பது எல்லாமே…!

இவ்வாவிகள் அறிந்து வந்து சொல்வது தான் இவை எல்லாம். மை போட்டுக் கேட்கிறார்கள். ஆண்டவனிடம் பூ கேட்கிறார்கள் என்பதெல்லாம் என்னப்பா…? இவ்வாவிகளின் வேலை தான்.

அருளுடன் தெய்வ நம்பிக்கையும் தன் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகள் எல்லாமே இந்நிலைக்கு வருகிறது. இதைப் போல உள்ள ஆவிகள் அனைத்துமே உடலை விட்டுப் பிரிந்தவுடன் மறு ஜென்மம் எடுப்பதில்லை. ஆயிரத்தில் கோடியில் ஒன்று தான் உடனே மறு ஜென்மம் எய்துகிறது.

அவசரத்தினால் எடுக்கும் ஜென்மத்தினால் அங்ககீனமுடன் குறையாகப் பிறப்பது குறைப்பிரசவம் குறையுடன் பிறக்கும் குழந்தைகள் நிலை எல்லாமே இது தான்…!
1.முன் ஜென்மத்தில் விட்ட குறையை
2.ஆவி உலகில் இருந்து அறிந்திட “அவகாசம் இல்லாமல்” வந்து குறையுடன் பிறக்கின்றது.

ஆனால் நல்ல நிலையில் ஆவி உலகில் சுற்றும் மறு ஜென்மம் எடுக்கும் வரை உள்ள ஆவிகள் தன் நிலை உணர்ந்து தன் நிலைக்கு ஏற்ற இடமாகத்தான் பிறக்கும்.

குழந்தை பிறப்பதற்கு முதல் ஆவி உலகில் உள்ள வரை அவரவருக்கு முன் ஜென்மம் தெரியும் என்றேன்.
1.ஆவி உலகில் உள்ள பொழுது எந்த நிலையில் பிறக்கலாம்…? என்று தான் தெரியும்.
2.பிறந்த பின் தன் வாழ்க்கை நிலை எப்படி இருக்கும்…? என்பது தெரிந்திடாது.
3.பிறந்த பின் முன் ஜென்மமும் ஆவி உலகமும் அறிந்திட முடியாது. இப்பிறவிக்கு எல்லாமே மறைக்கப்படுகிறது.

இந்த நிலையில் தான் ஈசனின் சக்தியே விளையாடுகிறது.

பிறப்பு இறப்பு ஆவி உலகம் எல்லாம் அறிந்த மனிதனால் அந்த ஈசனின் சக்தியை மட்டும் அறிந்திட முடிவதில்லை. பல கோணங்களில் ஆண்டவன் என்று வணங்குகிறான்.

அந்த ஈசனின் சக்தியை உணர்ந்த மகா தவ முனிவர்களும் இந்த மனிதர்களுக்குப் புகட்டிடவில்லை. அந்தச் சக்தி நிலையைப் பற்றித் தெரிந்திருந்தாலும்
1.இக்கலியில் வந்த மனிதர்கள்
2.அதையும் தன் வழிக்கு உண்ணக் காசாக்கி இருப்பார்கள்.

அதனால் தான் முனிவர்கள் நிலையில் தன்னையே தன் உடலையே அச்சக்தியின் அருளுக்கு அடிபணிய வைத்து அச்சக்தியின் அருள் எப்படி உள்ளது…? எந்த நிலையில் அந்தச் சக்தியின் அருளைப் பெற்று மக்களுக்கு அருளிடலாம் என்று செயல்படுத்தினர். போகரின் நிலை எல்லாம் அப்படித் தான் வந்ததப்பா…!

உன் நிலையில் ஜெபமிருக்கின்றாய். அஜ்ஜெபத்தின் நிலையில் ஈசனின் சக்தியை உன் நிலைக்கு ஈர்த்திடப்பா…!

எப்படி ஈர்ப்பது என்கிறாய்…?

கண்ணில் இல்லையப்பா ஒளி எல்லாம்.
1.இவ்வெண்ணத்தில்… உன் உயிரில்.. புருவத்தின் மேல்…
2.நெற்றியில் இந்நிலையில் தான் ஒளியப்பா…!

கனவில் பார்க்கின்றாய் பல நிலைகளை.. கண்களை மூடிக் கொண்டு…! அந்நிலை எப்படித் தெரிகின்றது…? கடும் இருட்டில் பல பிராணிகள் பூனை எலியைப் பிடிக்கின்றது. எலி பூனையைக் கண்டு தப்பி ஓடுகின்றது. நாய்க்கும் நரிக்கும் பாம்புக்கும் எப்படியப்பா இருட்டில் கண் தெரிகின்றது…?

சூரிய ஒளியில் இருந்துதான் கண் தெரிகிறது… கண் பார்வையினால்… என்று எண்ணுகிறாய்…!

தவ யோக முனிவர்கள் எல்லாம் அவர்கள் அமர்ந்த இடத்திலிருந்தே அனைத்தையும் அறிந்திட்டார்களே…! அது எப்படியப்பா…? ஒவ்வொரு மனிதருக்கும் அவ் ஈசனின் சக்தியில் எல்லா அருளும் உண்டப்பா..!
1.அவரவர்கள் எடுத்து அவர்களின் நிலையை அறிந்திட்டால்
2,கண்ணும் வேண்டாம்… உண்ண உணவும் வேண்டாம்…!
3.அவ் ஈசனின் சக்தியையே தன் உடல் முழுவதும் ஈர்க்கச் செய்திடலாம் புரிந்ததா…?

ஒவ்வொருவரும் அவ் ஈசனின் சக்தியில் இருந்து பெற்றிருப்பதால் அவரவர்கள் வழியிலிருந்தே அருள் புரிகிறார்கள். இந்நிலை தான் கொங்கணவருக்கும் போகருக்கும் அகஸ்தியருக்கும் கோலமாமகரிஷிக்கும் ஐயப்பனுக்கும் இன்னும் பல மகரிஷிகளுக்கும்…!

1.ஆண்டவன் என்றால் இப்பொழுது யார் என்று புரிந்ததா…?
2.பல வழிச் சாமியார்களின் நிலையும் கோவில்களின் நிலையும் புரிகிறதா…?
3.ஞானிகள் சித்தர்கள் மகரிஷிகள் நிலையும் புரிகிறதா..?

இந்தப் பாட நிலையை வைத்து நான் யார்…? நீ யார் என்னும் நிலை புரிந்திருக்கும்.
1.உன்னையே நீ வணங்கு.
2.உன்னுள்ளே ஈசன் உள்ள பொழுது உன்னுள்ளே அவ் ஈசனின் சக்தியை ஈர்த்திடப்பா..!

இந்த நிலையில் அறிந்திடுவாய் எல்லாமே…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மெய்ஞானிகளின் அருள் சக்திகளை யாம் பெறுவதற்குப் பல சம்வங்களை நிகழ்த்தினார். எமக்குப் பல சிரமங்களை ஏற்படுத்தி அதைக் கொடுத்தார்.

1.உங்கள் வாழ்க்கையில் எப்பொழுது சிரமங்கள் வருகின்றதோ
2.சந்தர்ப்பம் எது உங்களை இன்னலையும் மன பயத்தையும் கோபத்தையும் ஆத்திரத்தையும் விரக்தியையும் ஏற்படுத்துகின்றதோ
3.அப்பொழுது “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

மெய் ஞானிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் சேர்த்து அந்தத் துன்பத்தை விளைய வைக்கும் உணர்வின் ஆற்றலைத் தணியச் செய்யுங்கள்.

உங்கள் உடலில் வியாதியும் எண்ணத்திலே பல கலக்கமும் மன வேதனையும் மனக் குடைச்சலையும் ஏற்படுத்தும் இந்த உணர்வின் ஆற்றலை அது நம்மை ஆட்டிப்படைக்காதபடி நமக்குள் நல்லதாக மாற்றிடல் வேண்டும்.

கருணைக் கிழங்கை வேக வைத்துப் பல பொருள்களை அதனுடன் இணைத்துச் சுவையாக்கி நாம் உட்கொள்கின்றோம். அதன் மூலம் உடலுக்கு நாம் ஆரோக்கியமான நிலைகள் பெறுகின்றோம்.

அதைப் போன்று எத்தகைய துன்பங்கள் நமக்குள் வந்தாலும் அந்தத் துன்ப உணர்ச்சிகள் நமக்குள் தூண்டாவண்ணம் அதை அடக்கி
1.இன்பத்தின் சொல்லாலும்
2.இன்பத்தின் உணர்வுகளை நமக்குள் தூண்டி
3.விண்ணின் ஆற்றலை நாம் பெறும் தகுதியை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் இதைப் போன்று விண்ணின் ஆற்றலைக் கூட்டிக் கொள்ளும் நல்ல சந்தர்ப்பமாக மாற்றிக் கொள்ளலாம்.

அப்பொழுது அந்த மெய் ஞானிகளின் அருளாற்றல்கள் உங்களுக்குள் பெருகும். யாம் இப்பொழுது உபதேசிக்கும் உணர்வுகள் அனைத்தும் மெய் ஞானிகள் அவர்களுக்குள் விளைய வைத்து வெளிப்படுத்திய உணர்வுகள் தான்.

அந்த மெய்ஞானிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த இன்னல்களிலிருந்து தன்னை மீட்டிக் கொள்ள எத்தகைய உணர்வின் ஆற்றலைத் தனக்குள் கூட்டிக் கொண்டார்களோ அத்தகைய உணர்வின் தன்மையை
1.நீங்கள் சாதாரணமான நிலையில் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே
2.உங்களுக்குள் பதியச் செய்து விடுகின்றோம்.

“ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியிலிருக்கும் உங்கள் உயிரன ஈசனிடம் தொடர்பு கொள்ளுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று கண்ணின் நினைவினை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை உடல் முழுவதும் பாய்ச்சுங்கள்.

வேண்டியவருக்கு ஒரு நியாயமும் வேண்டாதவருக்கு ஒரு நியாயமும் என்று தான் உணர்வுகள் இயக்குகிறது

 

வேண்டாதவரைப் பார்க்கும் பொழுது எதிரி என்ற நிலையில் அவர் செய்வது தப்பு என்று நினைக்கின்றோம்… அடுத்தவரிடத்திலும் அதைத் தான் சொல்வோம்.

அவன் நல்லதையே செய்தாலும் கூட…
1.அவனை எந்தக் குறிக்கோளுடன் நாம் முதலில் பதிவு செய்திருக்கின்றோமோ
2.பார்த்தவுடனே ஊரை “ஏமாற்றுவதற்கு என்னவோ… அதைச் செய்கின்றான்…” என்று சொல்கிறோம்.

அவன் நல்லதைச் செய்வான். அவன் செய்வதை நம் மனது ஏற்றுக் கொள்வதில்லை. அவனைப் பற்றிய தவறான உணர்வுகளையே நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.

அதே சமயம் நமக்கு வேண்டியவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தப்பு செய்து விட்டால்… அது எப்படியோ தெரியாமல் நடந்து விட்டது… “அவர் தப்பே செய்ய மாட்டார்…!” என்று தான் நாம் சொல்கிறோம்.

1.இங்கே பாசத்தால் தவறை மறைக்கின்றோம்… தப்பை வளர்க்கின்றோம்
2.அங்கே வெறுப்பால் நியாயத்தையே மறைக்கின்றோம்… ஆனால் தவறை வளர்க்கின்றோம்

இதைப் போன்று நம்மை அறியாது வரக்கூடிய உணர்வுகள் அந்தந்தச் சந்தர்ப்பத்தில் வந்து நமக்குள் இயக்குவதைத் தான் கூனி என்றும் சகுனி என்றும் காவியங்களில் காட்டுகிறார்கள்.

ஒருவர் மீது பற்று இல்லை என்றால் அந்த வெறுப்பின் தன்மை வரும் பொழுது கூனி… பழி தீர்க்கும் உணர்வு கொண்டு அது இணைத்து விடுகின்றது.

இவ்வாறு நமக்குள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வுகள் அவர்கள் நல்லது செய்திருந்தாலும் கூட…
1.என்ன பெரிதாகச் செய்து விட்டார்…!
2.ஏமாற்றுவதற்குத் தான் இதைச் செய்கிறார்..! என்ற இந்த உணர்வுகளை வளர்த்துக் கொள்கின்றோம்

இராமாயணத்தில் கூனி என்ன செய்கிறது…?

இராமன் உயர்ந்தவனாக இருந்தாலும் அது பிடிக்காதபடி அவனைப் பகைமையாக ஊட்டுவதற்கு சிற்றன்னையான கைகேயியிடம் அதை உருவாக்குகின்றது.

தசரதன் உன்னுடைய கணவன் தானே… அவனுக்குப் பிறந்த மகன் தானே பரதனும்…! அவனுக்கு ஏன் அந்த அரசில் உரிமை கிடையாது…? என்ற உணர்வை ஊட்டுகிறது.

இராமன் இருந்தால்தான் சாம்ராஜ்யத்தை ஆள முடியும். இங்கிருந்து அவனை அனுப்பி விட்டால் “பரதன் எளிதாக ஆட்சிக்கு வரலாம்…” என்று இந்த ஆசையின் உணர்வுகளைத் தூண்டுகிறது கூனி.

இராமனைப் பிடிக்கவில்லை… அதனால் பகைமையை ஊட்டி அவ்வாறு செயல்படுகிறது. ஏனென்றால்
1.நமக்குள் எதிரியான உணர்வுகள் சந்தர்ப்பத்தில் உடலுக்குள் அணுக்களாக விளைந்து விட்டால் அது எதைச் செய்கிறது..?
2.ஆசையினால் குற்றவாளிகளை எப்படி உருவாக்குகின்றது…? என்ற உணர்வைத்தான் இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது.

காவியங்களில் மகரிஷிகளால் காட்டப்பட்ட மூலக் கருத்துக்களை நாம் உணர்ந்து கொண்டால் இந்த வாழ்க்கையில் நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் எளிதில் விடுபட முடியும்.

பகைமைகளை அகற்றி ஒன்றி வாழும் உணர்வை நமக்குள் பெருக்கி உயிருடன் ஒன்றி என்றும் ஏகாந்தமாக வாழும் வழியைத் தான் காவியங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

தென்றலும் ஆண்டவன் தான்… சூறாவளியும் ஆண்டவன் தான்..! – ஈஸ்வரபட்டர்

 

ஆண்டவன் என்பவன் கருணைஸ்வரூபன் மட்டும் தானா…? ஆண்டவன் என்பவன் எங்குள்ளான்…? என்றெல்லாம் சொல்லியுள்ளேன். ஆண்டவனின் நிலை என்ன…?

இயற்கையில் கலந்துள்ள ஒளி… காற்று… தண்ணீர்… இந்நிலையில் கலந்துள்ளவன்தான் ஆண்டவன்… என்று நான் செப்பியுள்ளேன்.

அப்படி இருக்கும் பொழுது ஆண்டவனால் ஏனப்பா “ஒரே நிலையில்” ஒளி பாய்ச்சவும்… மழை பெய்யவும்… காற்று அடிக்கவும் முடியவில்லை…?
1.இடி இடித்து மழை பெய்கிறது… அதி மழையும் பெய்கிறது
2.பெரும் காற்றும் சூறாவளிக் காற்றும் வீசுகிறது
3.குளிர்ந்த ஒளியும் கடும் வெப்பமும் வருகிறது.

ஆண்டவனின் நிலையில் ஏனப்பா இவ்வளவு மாற்றங்கள்…?

கருணைஸ்வரூபா…! என்று ஆண்டவனை என் சிஷ்யன் (ஞானகுரு) பாடுகின்றான். “கருணைஸ்வரூபா…!” என்று பாடும் பொழுது அவன் மனமும் கருணையுடன் சுற்றுகின்றது.

1.கருணையுடன் வேண்டும் பொழுது
2.அந்தக் கருணை நிலை வேண்டுபவர்களின் மனதிலேயே வருகிறது.
3.எண்ணத்திலும் அந்த நிலையே அப்பொழுது சுற்றுகிறது.

அந்நிலையில் இயற்கைத் தன்மையில் கலந்துள்ள ஆண்டவனும் அதை வேண்டுபவர்களுக்கு அந்நிலையில் ஒளி பாய்ச்சி அருள் புரிகின்றான்.

1.அவன் நிலையிலேயே “கருணை நிலை வேண்டினால் தான்…” அந்நிலையே வருகிறது.
2.அந்நிலை இவன் நிலைக்குப் பெற முடிகிறது.

அந்நிலையில் பூஜை செய்வது தான் நீ வணங்கும் முருகனின் மூலமாக அருள் கொடுக்கும் போகரின் நிலை எல்லாம். பழனி ஸ்தலத்தின் நிலையும் அதுவே தான்…!

சில நிலையில் பூகம்பம் வந்து அடங்காத காற்றும் அடங்காத மழையும் அதி உஷ்ணமும் வரும் பொழுது கருணைஸ்வரூபமான ஆண்டவன் ஏனப்பா அந்நிலையை அளிக்கின்றான்…?

பழனி ஸ்தலத்தின் வழியைச் சொல்கிறேன். ஆனால் கல்கத்தா காளியின் நிலை என்ன..? தென்றல் காற்றப்பா போகர் பெற்ற நிலை. பெரும் சுழல் காற்றப்பா கல்கத்தா காளியின் நிலை.

1.போகரும் அந்த ஆண்டவனின் அருளைப் பெற்றுத்தான் முருகனாக அருள் புரிகின்றார்.
2.கல்கத்தா காளியும் ஆண்டவனின் அருளைப் பெற்றுத்தான் பெரும் ஆவேச நிலையில் அருள் புரிகின்றாள்.

கல்கத்தா காளியின் நிலை என்னப்பா…? காளி என்பவள் யாரப்பா…?

இடி மின்னலையும் பூகம்பத்தையும் தன்னுள் ஈர்த்துக் கொண்டு பெரும் ஆவேசத்துடன் அடங்காத நிலையில் அமர்ந்துள்ளவள் தான் கல்கத்தா காளியாக அமர்ந்துள்ள கடும் தவம் புரிந்த பெண் ஒருத்தியப்பா அவள்.

அக்காளியின் நிலை ஆவேச நிலையப்பா. அடங்காத ஆவேசமான நிலையப்பா…! ஆணவத்தையும் ஏமாற்றுத் தன்மையையும் எரிக்கும் குணம் உடையவள்.

நல்லோர்க்குக் கருணை புரிவதில் பெரும் நாட்டம் கொண்டவள். தவறும் நிலையைக் கண்டு விட்டால் எரிமலையும் பூகம்பமும் தானப்பா அவள்…!

அவன் தந்த ஒளியை அவனதாக்கி அவனுடன் ஐக்கியமாகுவது தான் மெய் ஒளி பெறும் ஆண்டவனின் சக்தி…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

எத்தகைய குறைகளைக் கண்டாலும் நமக்குள் உட்சென்று நம்மை வேதனைப்படச் செய்யும் செயல்களைத் தடுத்து நிறுத்த “ஆத்ம சுத்தி…” என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

அதை நீங்கள் பயன்படுத்துவதற்கு யாம் பனிரெண்டு வருட காலம் நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி காடு மேடெல்லாம் அலைந்து அந்த ஆற்றலைப் பெற்றோம்.

ஒரு மருந்தைத் தயார் செய்து நோய் போய்விடும் என்று வைத்தியர்கள் சொல்கின்றார்கள்.

வைத்தியத்தின் முறைகளில் நோய் நீங்கினால் அவருக்குப் பொருள் கிடைக்கும் என்ற நிலைகளில் வைத்தியர்கள் செய்கின்றார்கள்.

நமது குருநாதர் கொடுத்த நிலைகளோ துன்பங்கள் விளைய வைக்கும் நிலைகளிலிருந்து மீள்வதற்கு என்னைப் பனிரெண்டு வருட காலம் காடு மேடெல்லாம் அலையச் செய்தார்.

அவர் சொன்ன முறைப்படி அங்கே அலைந்தோம்.

1.தாவர இனத்தின் உணர்வின் சத்து எவ்வாறு வேலை செய்கின்றது…? என்ற நிலையும்
2.மனித சஞ்சாரமே இல்லாத நிலைகள் அங்கே அமைதி கொண்டிருக்கப்படும் பொழுது
3..மனித உணர்வின் எண்ணங்கள் எவ்வாறு செயலபடுகின்றது…? என்ற எண்ணத்தை எடுத்து
4.அதைப் மனித உடலில் விளைய வைத்துத் துன்பத்தை நீக்கிடும் ஆற்றலை ஞானியர்கள் எவ்வாறு பெற்றார்கள்…? என்ற நிலையை
5.எம்மைப் பெறச் செய்தார் குருநாதர்.

அதைப் பெறச் செய்தபின் எனக்கு அடிக்கடி துன்பங்களை விளைய வைத்து அந்தத் துன்பத்தை நீக்க… “நீ எப்படி எடுக்க வேண்டும்…” என்றும் உணர்த்தினார்.

அவர் காட்டிய வழிப்படி யாம் எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றலால்தான் எமக்குள் வரக்கூடிய துன்பத்தையும் எமக்குள் வரக்கூடிய வியாதியையும் நிவர்த்தி செய்ய முடிந்தது.

நமது குருநாதர் காட்டிய வழியின் தன்மையை எமக்குள் பதியச் செய்து கொண்டேன். அதை ஒவ்வொரு நேரத்திலும் எடுத்து அதிலே வளர்த்துக் கொண்ட “அந்த உணர்வின் எண்ண அலைகளைத்தான்” உபதேச முறைப்படி
1.ஒவ்வொரு உணர்வின் அலைகளுக்கும் (நன்மை தீமைகளை உருவாக்கும்)
2.நன்மையை உருவாக்கும் உணர்வுடன் கலந்து உபதேசிக்கப்பட்டு
3.இந்த உணர்வுகளை உங்களுக்குள் திணிக்கின்றேன்.
4.உங்கள் துன்பத்தைப் போக்க உங்களுக்குள் அந்த நல்ல உணர்வினைப் பதியச் செய்கின்றேன்.

துன்பத்தை ஊட்டும் உணர்வுகள் உங்களை ஆட்டிப்படைக்கும் உணர்வுகளைத் தூண்டச் செய்கின்றது.

நீங்கள் அந்த மனதின் நிலைகளை அடக்கி உங்களைக் காக்கக்கூடிய அந்தச் சக்தியை நீங்கள் பெறுவற்குத்தான் இதைச் சொல்கின்றோம்.

அந்தப் பனிரெண்டு வருட கால அனுபவத்தின் நிலையை யாம் சொல்லும் பொழுது அந்தத் துன்பத்தினுடைய நிலைகளை மெய்ஞானியின் அருள் ஒளியுடன் கலந்து திரும்ப உபதேசத்தின் வாயிலாக “வாக்கின் நிலைகள் கொண்டு…, உங்கள் உடலிலே பதியச் செய்கின்றோம்”.

அவ்வாறு பதியச் செய்த அந்த வித்தின் நிலைகளுக்கு மெய் ஞானிகளின் சக்தியைப் பெறுவதற்கு நீங்கள் எந்த நிமிடமானாலும் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரை எண்ணி எடுக்க முடியும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி மகரிஷிகளின் அருள் சக்தியை எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று உங்கள் உடலுக்குள் நினைத்துச் செயல்படுவீர்கள் என்றால் துன்பத்தைப் போக்கக் கூடிய மெய்ஞானியின் அருள் சக்தி உங்களுக்குள் ஊடுருவச் செய்கின்றது.

1.உங்களையறியாமல் ஆட்டிப்படைக்கும் மனக்குழப்பத்தை மனக்குடைச்சலை இது நிவர்த்தி செய்கின்றது
2.உங்கள் எண்ணத்திற்குள் தெளிவாக்கி உங்கள் வாழ்க்கையில் உங்கள் செயலையும் தெளிவுபடச் செய்ய இது உதவுகின்றது.
3.வியாபாரத்திலும் உங்களைத் தெளிவாக்கச் செய்கின்றது.
4.குடும்பத்திலும் உங்களைத் தெளிவாக்கச் செய்கின்றது.
5.குடும்பத்திலும் ஒற்றுமையாக்கச் செய்கின்றது.

ஒரு நீரின் கீழ் தெளிந்த நீராக இருந்தவுடன் கீழே இருக்கக் கூடிய பொருளை நாம் காணமுடிகின்றது. நீர் தெளிவாக இருந்தாலும் அதே நீரின் தன்மைகள் “அலைபாயும் பொழுது… தெளிவாகத் தெரிவதில்லை”.

நன்மையான நிலைகளை நாம் தெளிவாக்க முடியாத நிலைகளில் இருக்கும் அந்த நேரத்தில் மெய் ஞானியின் உணர்வின் அலைகளை நமக்குள் செலுத்தப்படும் பொழுது
1.பல உணர்வின் அலைகள்
2.அலைந்து கொண்டிருக்கும் நிலையை
3.அது நமக்குள் சமப்படுத்தி நிறுத்தும்.


வெளியிலிருக்கும் எதிரிகளைக் காட்டிலும் நமக்குள் உருவாகும் எதிரிகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

நாம் தவறே செய்யவில்லை என்றாலும் கூட அடுத்தவர்கள் நம் மீது ஏதாவது குறையாகச் சொல்லி விட்டால் அவர்கள் உணர்வுக்கொப்ப அது ஆழமாகப் பதிந்து விடுகின்றது.

நமக்குள் பதிவாகி விட்டால் “என்னை இப்படிச் சொன்னானே… செய்தானே…!” என்ற இந்த உணர்வுகள் நமக்குள் எதிரியை வளர்த்துக் கொண்டே இருக்கின்றது. அப்பொழுது
1.நம் நல்ல குணங்களுக்கு இரையே கொடுப்பதில்லை… அதை வளர்ப்பதும் இல்லை
2.நம் நல்ல குணங்களை ஒடுக்க நாமே காரணமாகின்றோம்

அந்த நல்லதைக் காப்பதற்காகச் சாதாரண நிலைகளில் கொடுக்கப்பட்டது தான் விநாயகர் தத்துவம். அன்று மெய் ஞானியான அகஸ்தியனால் இது உருவாக்கப்பட்டது.

அவன் தனக்குள் கண்டுணர்ந்ததைத் தன் இன மக்கள் அனைவரும் பெறுவதற்காக இந்த முறையை வகுத்துக் கொடுத்தான்.
1.துருவ நட்சத்திரமாக இருக்கும் அவனின் ஆற்றலை நாம் பருகினோம் என்றால்
2.எத்தகைய தீமைகளையும் அகற்ற முடியும்… ஒடுக்க முடியும்… அதைப் பழக்கப்படுத்த வேண்டும்.

உதாரணமாக ஒருவர் நம்மைத் திட்டி விடுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவரை உற்றுப் பார்த்த பின் நமது உயிர் அதை இழுத்து அந்த உணர்வின் தன்மையை உணர்ச்சிகளாக இயக்கிச் செயலுக்குக் கொண்டு வருகின்றது.

அடுத்து உடலுக்குள் அதை அணுவாகவும் இதே உயிர் தான் உருவாக்குகின்றது. எவ்வளவு வேதனைப்படும்படி அவன் சொன்னானோ அந்த வேதனையை உருவாக்கும் அணுவாக இங்கே விளைந்து விடுகின்றது.

இதைத்தான் உயிரான விஷ்ணு வரம் கொடுக்கின்றான் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. விஷ்ணுவுக்குப் பிறந்த குழந்தை (பிரம்மா) அந்த விஷத்தின் தன்மையாக உருவாகி விடுகின்றது.

ஆகவே பிரம்மா உருவாக்குகின்றான்… அது மீண்டும் தன் இனத்தை உருவாக்கும் தன்மை பெறுகின்றது. பிரம்மாவின் மனைவி சரஸ்வதி… அந்த ஞானமாக வேதனையாக இயக்கும்.

எந்த வேதனையை உருவாக்கும்படி முதலிலே சொன்னானோ அதனால் உருவான அந்த உணர்வுகள் பிரம்மமாகத் தன் இனத்தை மீண்டும் சிருஷ்டிக்கும் வன்மை பெற்றது.

1.வேதனைப்படச் செய்த அந்த அணு மீண்டும் அதே வேதனையை இங்கே உருவாக்குகிறது.
2.அந்த ஞானத்தின் வழிகளிலேயே அது செயல்படும் என்று
3.இவ்வளவு கருத்துடன் அந்த இயற்கையின் நிலைகளை நாம் கண்டுணர இதைக் கொடுத்திருக்கின்றார்கள் ஞானிகள்.

ஒரு விஷமான வித்து காற்றில் இருந்து தன் விஷமான உணர்வின் சத்தை நுகர்ந்து தான் அது விஷச் செடியாக வளர்கின்றது.

அதே போல் தான்
1.எந்த மனிதன் நம்மை வேதனைப்படச் செய்தானோ
2.அவனின்று வரும் இந்த உணர்வை அந்த அணு நமக்குள் அது கிளர்ந்து… சுவாசித்து
3.அதனின் மலத்தை உடலிலே இடும் பொழுது நம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் அந்த வேதனை தாங்காது
4.அதனுடய செயலைக் குறைக்கச் செய்கின்றது..
5.நம் உடலில் அது நோயாக வருகின்றது

ஆனால் நாம் என்ன நினைக்கின்றோம்…!

நம்மை வேதனைப்படச் செய்தான்… அவனைச் சும்மா விடுவேனா…? என்று கோபத்துடன் எண்ணும் போது இந்த விஷத் தன்மையான அணுக்கள் நமக்குள் பெருக ஆரம்பிக்கிறது.

மீண்டும் அவர்களை எண்ண… எண்ண… நமக்குள் நோயாகவே விளைகின்றது… எதிரியாகின்றது…!
1.எதிரிக்கு நாம் இடம் கொடுத்து விடுகிறோம்…
2.நம்மை நாம் மறந்து விட்டோம்…! என்ற நிலைதான் இங்கே வருகின்றது.

குருநாதர் ஒவ்வொரு நிமிடமும் இதை எல்லாம் எனக்கு (ஞானகுரு) அனுபவபூர்வமாகக் கொடுத்தார். அவர் கொடுத்த அதே வழியில் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்குள்ளும் அந்த ஞானிகளின் அருள் உணர்வைப் பதிவு செய்கின்றோம். ஆகவே அந்த மெய் ஞானியின் உணர்வைப் பெற நாம் தியானித்தல் வேண்டும்.

பிறர் நம்மை வேதனைப்படச் செய்தாலும் அடுத்த கணமே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அவனிடம் வேண்டி… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் பல முறை செலுத்துதல் வேண்டும்.

எத்தகைய நஞ்சான உணர்வும் நம் உடலுக்குள் உருவாகாதபடி நாம் தடுத்துக் கொள்ள வேண்டும்.

என் வழிக்கு நீங்கள் வாருங்கள் – ஈஸ்வரபட்டர்

 

ஒரு கொசு எப்படித் தனக்குகந்த ஆகாரம் உள்ள இடத்தில் சுற்றிக் கொண்டுள்ளதோ அப்படித்தானப்பா இந்த மனித மனங்களும் எண்ணங்களும் பிறவிப் பயனை வைத்து அடுத்த பிறவிக்கு வர முற்படுகிறது.

ஒரு அரசனின் வயிற்றில் அவதரிக்கின்றான் அரச குமாரன். தன் நிலைக்கு உகந்த இடமாகத்தான் ஆவி நிலையிலிருந்து அவதரிக்கின்றான் அந்தக் குமாரன்.

ஆனால் ஆயிரம் ஆயிரமாக அந்த அரசன் செல்வத்தைத் தேடி வைத்திருந்தாலும் இந்த அரச குமாரன் அந்தச் செல்வத்தை அவன் வழியில் அழித்துவிடுவதில்லையா…? அப்பொழுது அரசனும் ஆண்டியாகிவிடுகின்றான்.

ஆனால் ஏழ்மை நிலையில் பிறக்கும் சில குழந்தைகள் தன் ஏழ்மையை எண்ணிடாமல் எப்படியும் உயர்ந்த நிலை அடைந்திடலாம் என்று எண்ணும் பொழுது தன் எண்ணத்திலேயே செல்வ நிலைக்கும் உயருகிறது.
1.அந்த நிலையிலிருந்து உயரும் குழந்தையின் நிலைக்கும்
2.பூர்வ புண்ணிய நிலையிருந்தால் தான் உயர முடியும்.
3.எண்ணமே அப்பொழுது தான் தோன்றிட முடியும்.

உங்கள் எண்ணத்தில் சில சந்தேகங்கள் தோன்றியிருக்கும். ஏன் ஆவி நிலையில் இருந்து கொண்டே எல்லோரும் செல்வம் உள்ளவரின் வயிற்றில் அவதரிக்கலாமே….! என்று எண்ணலாம். இதிலே தானப்பா அந்த ஆண்டவனின் சக்தி உள்ளது.

உடலிலிருந்து ஆவி பிரியும் பொழுது அந்த ஆவியின் ஆசை நிலையை வைத்துத்தான் பிறக்கின்றது… “மறு பிறப்பு” என்றேன் முதலிலேயே.

அந்த ஆசை நிலை என்பது பல ரூபத்தில் உள்ளது. பணம் காசு மட்டுமல்ல…! பந்தபாசம் கோபதாபம் எல்லா நிலைகளிலுமே அந்த ஆசை நிலைகள் உள்ளன. ஆவி நிலையில் இருந்து கொண்டு அந்த ஏழ்மை நிலையை அறிந்து தான் அந்தக் குழந்தை பிறக்கின்றது.

தன் நிலையில் உயர்ந்திடலாம் என்ற எண்ணத்திலும் தன்னால் அந்தக் குடும்பத்தை உயர்த்திடலாம் என்ற நிலையிலும் எண்ணிப் பிறக்கிறது.
1.ஆனால் பிறந்தவுடன் தான் எல்லாமே மறைக்கப்படுகிறதே…!
2.அச்சக்தியின் நிலையிலிருந்து அங்கு தான் இருக்கிறதப்பா ஆண்டவனின் சக்தி.

அந்தச் சக்தி நிலையைப் பெறத்தான் சித்தர்கள் தவமிருந்து பல பேறுகளைப் பெற்றார்கள். ஆனாலும் அந்த ஆதி சக்தியின் அண்ட கோடிகளில் அடங்கி உள்ள அந்த முழுச் சக்தி நிலையையும் இன்னும் எந்தச் சித்தனாலும் பெற முடியவில்லையப்பா…!

சித்தர்கள் மகரிஷிகள் எல்லோருமே அந்தச் சக்தியின் நிலையைப் பெறத்தான் இன்னும் தவமிருந்து ஜெபமிருந்து கொண்டுள்ளார்கள்.

இப்பொழுது தான் நீங்கள் கடுகளவிலிருந்து மிளகளவு வந்துள்ளீர்கள்.
1.இன்னும் உலக நிலையையே என்ன…? என்று தெரிந்திடாமல் குடும்ப நிலையிலேயே கலங்கியுள்ளீர்கள்.
2.ஜெப நிலையைக் கூடிய விரைவில் உயர்த்திக் கொள்ளுங்கள்.
3.இந்தப் பாட நிலையிலிருந்து பலவும் பல வழியிலும் புரிய வைக்கின்றேன்.

நான் (ஈஸ்வரபட்டர்) பெற்ற ஜெப அருளிலிருந்து என் வழிக்குத் தெரிந்ததை உங்கள் வழிக்கும் புகட்டுகின்றேன். என் வழிக்கு நீங்களும் மேலும் வந்திடலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒரு பொருளுக்குள் ஒரு விஷம் பட்டால் அனைத்தையுமே நாசமாக்குகின்றது. இதைப் போன்று
1.நம் உணர்வுக்குள் சிறிதளவு வேதனையாகிவிட்டால்
2.நமக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் சேர்கிறது.

ஒரு குழந்தை தவறு செய்தால் “இப்படி ஆகிவிட்டதே” என்று வேதனையை எடுத்தீர்கள் என்றால் இது விஷம்.

இந்த விஷமான உணர்வு கொண்டு குழந்தையைப் பார்க்கப்படும் பொழுது விஷம் அதிகமாகக் கூடி அவன் புத்தியையே மட்டமாக்கும்.

இப்படிப் பண்ணிவிட்டாயே…? பாவி என்று சொல்லி இந்த விஷத்தின் தன்மை கொண்டு ஆக்கப்படும் பொழுது அவனிடம் இருக்கக்கூடிய அந்த வளர்ச்சியின் தன்மையை மட்டமாக்கி அங்கே விஷமாகி அவன் சிந்திக்கும் செயலையும் இழந்து விடுகின்றான்.

நமக்குள் என்ன சக்தி இருக்கின்றது…? என்று நினைத்துப் பார்த்தால், சிந்தித்துப் பார்த்தால் இந்தச் சொல் எதிலிருந்து வருகின்றது…? என்பது தெரியும்.

நாம் சுவாசித்த உணர்வின் தன்மைகள் உயிரில் பட்டு உணர்ச்சிகளாகின்றது.
1.நாம் பேசும் பொழுது அந்த உணர்வின் ஒலியாக மாறி
2.இந்த உணர்வுகள் மற்றொன்றுடன் கலக்கப்படும் பொழுது
3.அந்த உணர்ச்சிகளைத் தூண்டிச் சுவாசிக்கச் செய்து அங்கே விளைந்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் மீள்வதற்கு மெய் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி ஆத்ம சுத்தி செய்து நமக்குள் துனபங்கள் தாக்கும் துன்பங்களை உருவாக்கும் நிலையை மாற்ற வேண்டும்.

கருணைக் கிழங்கை வேகவைத்து விஷத்தின் தன்மையை நீக்குகின்றோம்.

எத்தனையோ விஷத்தன்மை கொண்ட எத்தனையோ உணர்வு கொண்ட காய்கறிகளை வேக வைத்து அதிலிருக்கக்கூடிய காரல்களை நீக்கிச் சுவை கொண்டதாக மாற்றிக் கொள்கின்றோம்.

இதைப் போன்று நம் மனித வாழ்க்கையில் எத்தகைய துன்பமான நிலைகள் வந்தாலும் அதைத் நமக்குச் சாதகப்படுத்துவதற்கு வேக வைத்துச் சுவையாக்கும் நிலையாக ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

அப்படிச் செய்தால் அது சுவைமிக்க சொல்லாக நமக்குள் சென்று சுவையான செயல்களைச் செய்யக் கூடிய உணர்வுகளாகத் திருப்பிப் பேசும்படி செய்யும்.

அப்பொழுது நம் சொல்லைக் கேட்பவர்களுக்கும் மகிழ்ச்சி ஊட்டும் நிலைகளாக மாற்றும் சக்தி கிடைக்கின்றது.

நம் உணர்வைச் சுவையற்றதாக ஆக்காதபடி சுவையான தன்மையாக நமக்குள் வளர்த்துக் கொள்ள முடியும்.

சிறிது காலம் யாம் சொல்வதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பக்குவப்படுத்திக் கொண்டால் அது தானாகவே பேசும்.

கோபம் வந்துவிட்டால் அடங்காத பையனை அடிக்கடி நினைத்தவுடன் கோபம் வருகின்றது. அதே மாதிரி அந்தப் பையன் நன்றாக ஆகவேண்டும் என்று தியானத்தில் எடுத்துக் கொண்டு
1.“நன்றாக ஆகவேண்டும் நன்றாக ஆகவேண்டும்” என்று
2.அடிக்கடி எண்ணினால் பையன் நல்லவனாக ஆகிவிடுகின்றான்.
3.தன்னாலே தன்னிச்சையாக வரும்.

இப்படிச் சொல்லிப் பழகிவிட்டால் அதே நிலைகள் வரும்.

ஒரு குழந்தை படிப்பிலே மட்டமாக இருக்கிறது. “படிப்பிலே இப்படி இருக்கிறானே…” என்று நாம் எண்ணும் பொழுதெல்லாம் மற்றவர்களிடத்தில் எல்லாம் சொல்வோம். நினைக்கும் பொழுதெல்லாம் இந்த வேதனைப்பட்டே நினைப்போம்.

இவ்வாறு நினைக்கும் பொழுது இந்த வேதனைகள் அவன் உடலிலே சேர்ந்து இதையேதான் உருவாக்கும்.

ஆகையினாலே இதையெல்லாம் நீங்கள் மனதிலே பக்குவப்படுத்தி இந்த நிலைகளெல்லாம் நீங்கவேண்டும் என்று ஆத்ம சுத்தியைச் செய்து வரும் தீமைகளைப் போக்கிக் கொள்ளுங்கள்.

“ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் உங்கள் உயிரிடம் நினைவைச் செலுத்துங்கள். ஓம் ஈஸ்வரா குருதேவா… உங்கள் அருளால் மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கியிருங்கள்.

மகரிஷிகள் வெளிப்படுத்திய சக்திகள் அனைத்தும் இங்கே சுழன்று கொண்டுள்ளது… அதைப் பெற நாம் முயற்சிக்க வேண்டும்

 

நாம் பார்க்கும் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அவர்கள் மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்… அவர்கள் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வை நாம் பாய்ச்சுதல் வேண்டும்.
1.இப்படிச் செய்தால் அது உண்மையான தவமாக மாறுகின்றது
2.ஒவ்வொரு குடும்பத்திலும் இந்த முறையைக் கையாண்டு பழக வேண்டும்.

வெளியிலே எல்லோருக்கும் சொல்லி விடலாம். தன் குடும்பம் என்று வரும் போது தான் இதிலே பெரிய சிக்கலே வரும்.

ஏனென்றால் அடிக்கடி சந்திக்கும் நிலையும்… வெறுப்பு உணர்வை வளர்த்துக் கொள்வதாலும்… உடனே அந்த உணர்வைத் தூண்டிக் கோபமாகப் பேசச் சொல்லும்.

ஆகவே…. முதலில் வாரத்தில் ஒரு நாளாவது நம் குடும்பத்தில் எல்லோரும் ஒருங்கிணைந்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எண்ணிக் கூட்டுக் குடும்ப தியானம் செய்ய வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியும் மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற வேண்டும். எங்கள் குடும்பம் ஒன்றுபட்டு வாழ வேண்டும். எங்கள் பார்வையால் அனைவரும் நலமாக இருக்க வேண்டும். பொருளறிந்து செயல்படும் திறன் அனைவரும் பெற வேண்டும் என்ற இந்த எண்ணத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இது வளர வளர குடும்பத்திலே மகிழ்ச்சி பெருகும். நம் பார்வையும் சொல்லும் உலக மக்களின் தீமைகளை அகற்றும். நாம் இவ்வாறு எடுத்துக் கொண்ட இந்த உணர்வுகள் நாம் வாழும் பூமியிலேயும் படருகின்றது.

எத்தனையோ லட்சம் ஆண்டுகளுக்கு முன்…
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு அலைகளாக அணுக்களாக இருப்பினும்
2.அதைப் பருகி தனக்குள் வளர்க்கும் நிலை இல்லை.

நம் குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு தான் இப்பொழுது அதைக் கவர்ந்து வளர்ப்பதற்குண்டான வழிகளை ஏற்படுத்துகின்றோம்.

அன்று அகஸ்தியனும் அவரைப் பின்பற்றிய வியாசரும் மற்ற ஏனைய ரிஷிகளும் எடுத்து அவர்கள் விளைய வைத்த ஒளியான உணர்வுகள் இங்கே மறைந்துள்ளது.

அதை நுகர்ந்து நமக்குள் விளைய வைத்துக் கொண்டால் மீண்டும் அதைப் பெருக்கும் நிலை வருகின்றது.
1.ஆனால் இதற்கு முன் அதைப் பெருக்கும் நிலை இல்லை
2.மகரிஷிகள் விண்ணிலே ஒளியின் சரீரமாக இருந்தாலும் அவர்கள் உமிழ்த்தும் உணர்வின் தன்மையை இங்கே பருகும் நிலை இல்லை

நாம் விண்ணை நோக்கி ஏங்கித் தியானித்து அந்த மகரிஷிகளின் அருளைப் பருகி எல்லோருக்குள்ளும் அது பெருக வேண்டும் என்று அந்த அலைகளை நாம் பரப்ப வேண்டும்.
1.முன்னாடி அந்த நிலை இல்லை
2.ஆனால் அதை இப்பொழுது நாம் உருவாக்குகின்றோம்

ஒவ்வொரு உணர்வுகளிலும் அதைப் பதிவு செய்யப்படும் பொழுது எத்தனையே லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு விளைய வைத்த அந்த அருள் உணர்வுகள் நமக்குள் விளைந்து
1.ஞானத்தையும் மெய்ப்பொருளைக் கண்டுணரும் உணர்வுகளும் நமக்குள் கருவாக உருப்பெறும்.
2.அதை குரு அருளால் உரு பெறச் செய்ய வேண்டும்
3.இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் அவசியம் இதைச் செயல்படுத்த வேண்டும்.

விட்ட குறைய இப்பொழுது முடிக்க வேண்டியதன் அவசியம் – ஈஸ்வரபட்டர்

 

எண்ணத்தில் வருவது தான் எல்லாமே…!

இந்தச் சொல்லைப் பாட நிலையின் முதலிலிருந்தே இன்று வரை சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

1.நாம் எந்தெந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ
2.அதற்குத் தக்கவாறான சுவாச நிலையில் வருவது தான் எல்லாமே என்று பல முறை செப்பியுள்ளேன்.

பூர்வ ஜென்மப் பயனை வைத்து… முதல் ஜென்மத்தில் விட்ட குறையை முடிக்க.. ஆவி நிலையிலிருந்து தன் நிலைக்கு ஒத்த சுவாச நிலையை ஈர்த்துத் தான் “குழந்தைகள் பிறக்கின்றது…” என்று கூறியுள்ளேன்.

ஆண்டவனின் அருளில் பூர்வ ஜென்மத்தின் பலனை அவரவர்கள் நிலைக்கு எடுத்துக் கொண்டால் தான் அந்தப் பலனையே பெற்றிட முடியுமப்பா…!

போன ஜென்மத்தில் நீ செய்த பயனாக… பூர்வ ஜென்மத்தின் பலனால் பல புண்ணியங்கள் செய்தும்.. அந்நிலைக்கு சூட்சம நிலைக்கு ஆண்டவன் என்னும் நிலையின் ரிஷியின் நிலைக்கே வரும் தன்மையைச் சிறிதளவு தவற விட்டதனால் தான் “இந்த ஜென்மமே எடுத்துள்ளாய்…!”

இந்த ஜென்மத்திலும் பிறவி நிலையிலேயே உன் எண்ணத்தை மாற்றிக் கொண்டிருந்தால் உன் நிலையும் வேறாகத் தான் இருந்திருக்குமப்பா…!

1.போன ஜென்மத்தில் நீ வைத்திருந்த ரிஷியின் தொடர்பினால்
2.இந்த ஜென்மத்திலும் உன்னை… உன் எண்ணத்தை… அவன் ஒரு நிலைப்படுத்தி வழி நடத்திச் செல்கின்றான்.

ஆகவே கால நிலையைத் தவற விட்டு விடாதே…!

இந்த ஜென்மத்தில் உன் எண்ணமெல்லாம் உயர் நிலையில் செல்வ நிலையில் இருந்ததனால் தான் உன் பூர்வ ஜென்மத்தின் பயனால் இந்த மெய் ஞானத்தைப் பெறும் பேற்றையே பெற்றாயப்பா…!

படிக்கும் ஒவ்வொருவருக்கும் புரிவதற்காக இந்த நிலையைப் புகட்டியுள்ளேன். பெற்ற சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடாதீர்கள்.
1.மகரிஷிகளுடன் ஐக்கியமாகுங்கள்.
2.அவர்கள் வாழும் சப்தரிஷி மண்டல எல்லையை அடைய முற்படுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

உதாரணமாக சாக்கடையைப் பூசி கொண்டு போகின்றோம் என்றால் அடுத்தவர்கள் நம்மைப் பார்த்துப் “போய்யா…!” என்று விலகித் தான் போய்க் கொண்டு இருப்பார்கள்.

(அது போல்) நீங்கள் சங்கடத்தையும் வெறுப்பையும் கோபத்தையும் ஆத்திரத்தையும் எடுத்துக் கொண்டு அடுத்தவர்களிடம் பேசினால் என்ன செய்யும்…?

நம் மீது அவர்களுக்குக் கண்டிப்பாக வெறுப்பு தான் வரும்.

அதற்குத்தான் ஞானிகள் தீபாவளி அன்று புத்தாடைகளை அணியும் நிலையைக் காட்டினார்கள்.
1.அந்த அருள் ஞானிகளின் உணர்வைப் புத்தாடையாக
2.ஒவ்வொரு சமயமும் நம் ஆன்மாவாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

அதிகாலையில் துருவ தியானம் இருந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எந்தக் காரியத்தைச் செய்தாலும்
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற நாங்கள் வேண்டும்.. எங்கள் குடும்பம் முழுவதும் படரவேண்டும்
2.எங்கள் தொழிம் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் வாழ்க்கை வைரத்தைப் போல ஜொலிக்க வேண்டும்.
4.எங்கள் செயல் வைரத்தைப் போல ஜொலிக்க வேண்டும்.
5.எங்கள் வாடிக்கையாளர்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரது வாழ்க்கையும் வைரத்தைப் போல ஜொலிக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அடிக்கடி இவ்வாறு எண்ணினால் இந்த உணர்வுகள் என்ன செய்கின்றது…?

கையிலோ உடலிலோ அதிகமாக அழுக்காகி விட்டால் அதை உடனுக்குடன் தூய்மைப்படுத்திக் கொள்கின்றோம்.

நாம் உடுத்தியிருக்கும் உடை அழுக்காகிவிட்டால் அந்த அழுக்குத் துணியைக் கழற்றி விட்டு வேறு நல்ல துணியைப் போடுகிறோம்.

அது போல் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் இணைத்து வரும் தீமைகளை எல்லாம் சட்டையை மாற்றுகிற மாதிரி மாற்ற வேண்டும்.

ஒரு மான் புலியைப் பார்க்கின்றது. பயத்தின் காரணமாகப் புலியின் உணர்வுகளை அதிகமாக அந்த விஷத்தின் தன்மையைத் தனக்குள் இழுக்கின்றது.
1.புலியின் உணர்வின் தன்மையை எடுத்துக் கொண்டே இருந்தால்
2.அடுத்து மான் புலியாகப் பிறக்கின்றது.
3.இந்தச் சட்டையைக் (மான்) கழற்றிப் போட்டு விட்டு (புலி) சட்டையை எடுத்துப் போட்டுக் கொள்கிறது.

ஒருவர் கஷ்டப்படுகிறார் என்று அவர்கள் துயரத்தைக் கேட்டறிந்து நாம் உதவி செய்தாலும் அவர்கள் பட்ட துயரம் நமக்குள் அழுக்காகப் படிந்து விடுகின்றது. நாம் கேட்டறிந்து நுகர்ந்த அந்தத் துயரத்தை நாம் நீக்குகின்றோமா…? ஆனால்
1.நாம் உடுத்தியிருக்கும் சட்டை மீது சாக்கடை விழுந்து விட்டது என்றால்
2.உடனே சட்டையைக் கழற்றிவிடுகின்றோம்
3.அடுத்து அந்தச் சட்டையைத் துவைக்காமல் மீண்டும் உடுத்துகின்றோமா…?

அப்போது அந்த மாதிரித் துயரப்படும் உணர்வுகளைக் கேட்டறிந்தபின் அருள் மகரிஷியின் உணர்வை நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று என்று சொல்லி
1.நம் சட்டையை மாற்றுகின்ற மாதிரி
2.உடனே அந்த அருள் ஒளிச் சுடரை மாற்ற வேண்டும்.

மகரிஷிகளின் கலாச்சாரத்தைக் கொண்டு வந்து உலகில் பரவிக் கொண்டிருக்கும் நச்சுத் தன்மையை அகற்றுங்கள்

 

உலகம் முழுவதும் நஞ்சாகப் பரவி இருக்கும் இந்த வேளையில்
1.எத்தனையோ இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மகரிஷிகள் பெற்ற உணர்வின் தன்மையை
2.அந்தக் கலாச்சாரத்தை இங்கே கொண்டு வர வேண்டும்.

சகோதர உணர்வுடன் வாழ வேண்டும்… எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்… என்ற அந்த மகரிஷிகளின் கலாச்சாரத்தை நாம் வளர்க்க வேண்டும்.

காரணம்… சிந்தனையற்ற நிலையில் மனிதன் இன்று அசுரனாகின்றான். அந்த அசுர சக்தியை மாற்றுவதற்கு நாம் நம் குருநாதர் காட்டிய நிலைகளில் அருள் மகரிஷிகளின் உணர்வை எடுத்துப் பரப்பியே ஆக வேண்டும்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..! என்று நாம் சொல்லும் அந்த அகஸ்தியன் நமது நாட்டில் ஆதியிலே தோன்றிய மனிதன் தான் முதன் முதலிலே விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் கண்டுணர்ந்தவன்.

அகஸ்தியன் தன் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி நம் பூமியின் வடக்குத் திசையில் துருவ நட்சத்திரமாக இன்றும் நிலை கொண்டுள்ளான்.

1.இருளைப் போக்கி ஒளியின் சிகரமாக என்றுமே வாழச் செய்யும் கலாச்சாரம்
2.தென்னாட்டிலே தான் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவானது
3.நம் தென்னாட்டில் மீண்டும் இது தழைக்கின்றது… வேறு எந்த நாட்டிலும் இல்லை.

தெற்கிலே உருவான அந்தக் கலாச்சார அடிப்படையில்தான் கருவில் வளரும் குழந்தைகளுக்கு அகஸ்தியன் உணர்வை இப்பொழுது உணர்த்துவதும் உணரச் செய்வதும்.

அத்தகைய சிசுக்கள் வளர்ந்தால் மெய்ப் பொருளின் ஆற்றலை நாமும் பெறலாம். அந்த உணர்வின் தன்மையை எடுத்து உலகம் முழுவதற்கும் பரவும்படிச் செய்யலாம். அதை நாம் வளர்த்தல் வேண்டும்.

தியானத்தில் இருப்பவர்கள் எந்தக் குடும்பத்துடன் தொடர்பு கொண்டாலும் அந்தக் குடும்பத்திலே கர்ப்பம் என்று தெரிந்தால் கருவிலிருக்கும் குழந்தைகள் அந்த அகஸ்தியன் உணர்வுகளைப் பெற்று ஞானக் குழந்தைகளாக வளர வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.குடும்பத்தை ஒற்றுமையாக்கும் சக்தி கருவிலேயே விளைய வேண்டும்
3.இருளைப் போக்கிடும் அருள் சக்தி பெற வேண்டும்
4.உலகம் ஒன்றி வாழும் அந்த உணர்வின் சக்தி இந்த கருவிலேயே விளைய வேண்டும் என்று எண்ணிச் சொல்லுங்கள்.

அகஸ்தியன் உணர்வைப் பெற்றுத் தென்னாட்டிலே வளரும் அத்தகைய குழந்தைகள் எந்த நாட்டவரையும் காத்திடும் சக்தியாக வளரும்.

விண்ணுலக ஆற்றலை அகஸ்தியன் என்று கண்டுணர்ந்தானோ அதைப் போல எந்நாட்டவரும் விண்ணுலகை ஆற்றலைப் பெறும் தன்மையும்… மண்ணுலகில் வரும் நஞ்சினை வெல்லும் சக்தியும் பின் வரும்.
1.நாம் முன் செல்கின்றோம்.
2.பின் வருவோருடைய நிலைகளும் அதன் வழி செல்லும்.

இனம் இனத்தைத் தான் வளர்க்கும். எதை எடுத்துக் கொண்டாலும் ஒரு செடி வளர்ந்தால் தன் இனத்தை வளர்க்கிறது. தன் இனத்தின் சக்தியைத் தன் வித்திற்கே கொடுக்கின்றது.

இதைப் போலத் தான் தீமையான வினைகள் மனிதனுக்குள் விளைய வைத்து விட்டால் அந்த உணர்வின் தன்மை தன் இனத்திற்கு அதை ஊட்டி அந்தத் தீமையின் விளைவையே மனிதனுக்குள் இயக்கச் செய்கின்றது “இன்றைய நிலைக்குக் காரணம் இது தான்…!”.

இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் மீள வேண்டும்… மக்களை மீட்டுதல் வேண்டும். சிறிது பேர் தான் இருக்கிறோம் என்று எண்ண வேண்டாம். இது வளர வளர பல லட்சங்கள் ஆகும்.. பல கோடிகளாகவும் உருவாக்க முடியும்.

இரவில் தூங்கச் செல்லும் போதும் சரி… காலையில் எழுந்தவுடனும் சரி… ஆத்ம சுத்தியை எடுத்து
1.உங்களால் முடிந்த மட்டும் இந்த உலகம் நலம் பெற வேண்டும் வளம் பெற வேண்டும்
2.அருள் வழியில் இப்படித்தான் இருக்க வேண்டும்… என்று தியானம் செய்யுங்கள்.
3.அதையே எழுத்தாக எழுதுங்கள்.

யாம் (ஞானகுரு) உபதேசித்த உணர்வுகளைக் கருத்தில் கொள்ளுங்கள். அதைக் கடைப்பிடித்து வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றுங்கள்.

எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று தவமிருங்கள். அந்த அருளை உலகெங்கிலும் பாய்ச்சுங்கள்.

சுவாசக்கண் மிகவும் முக்கியமானது – ஈஸ்வரபட்டர்

 

அகக்கண் மனக்கண் ஞானக்கண் இப்படி நம்முள்ளே மூன்று வகைத் தன்மைகள் உள்ள நிலைகளைக் கண்களாகக் காட்டினார் பலர் பல நிலைகளில்.

அகக்கண்ணும் மனக்கண்ணும் ஞானக்கண்ணும் இவை எல்லாமே சுவாசக் கண்ணிலிருந்து தான் வருகின்றன.

நம் உடலிலே பல கோடிக் கண்கள் உள்ளன. அக்கண்கள் வழியாகத்தான் இந்த உடலுக்குச் சூரியனிலிருந்து வரும் ஒளிக் கதிர்களை இந்தப் பூமித் தாய் தன்னுள் ஈர்த்து அதை நம்முள் ஈர்த்திடும் செயல் நடக்கின்றது.

1.அகக்கண் மனக்கண் ஞானக்கண் என்பவை
2.நம் மன நிலையை வைத்து ஒவ்வொருவரின் குண நிலையைச் சுட்டிக் காட்ட
3.இந்நிலையில் உள்ள குணக்கண்களுக்குப் பல முன்னோர்கள் இந்த நாமத்தைச் சூட்டினார்கள்.

இந்த மூன்று வகைக் குணக்கண்களுக்குமே முதற்கண் இந்தச் சுவாசக்கண் ஒன்று தான்.

அந்தச் சுவாசக் கண்ணினால் நம் உடலுக்கு நாம் எந்தெந்த நிலைகளை ஈர்க்கின்றோமோ அந்த நிலை கொண்டுதான் நம் வாழ்க்கை முறையில்… விழிப்பு நிலையில்… சுவாச நிலை கொண்டு ஈர்க்கும் தன்மையை வைத்து… நம் கனவில் வரும் நிலைகளும் ஒன்று சேர்ந்தே கலந்து வருகின்றது.

இந்த மூன்று வகைக் குணக்கண்களை வைத்து ஒவ்வொரு மனிதனின் நிலையையும் தெளிவாக அறிந்திட முடியும்.

இப்படி அகம் புறம் ஞானம் என்ற நிலைகளைக் கண்களாக்கி நம் நிலைக்கு வழி கொண்டு வர வழி வகுத்துத் தந்தனர் நம் முன்னோர்கள்.
1.அகத்தில் எண்ணிப் புறத்தில் வாழ்பவர்கள் தான் இன்று உள்ளார்கள்.
2.தான் பெற வேண்டிய ஞானத்தையே மறந்து விட்டார்கள்.

ஞானம் பெற வேண்டியதன் அவசியத்தைத் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்துகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நாம் வயலைப் பண்படுத்தி நல்ல விதைகளை விதைக்கின்றோம். பூமியில் பதிந்த அந்த விதை பூமியின் துணை கொண்டு
1.பூமியின் காந்த இயக்கத்தைக் கொண்டு (ஈர்ப்பு சக்தி)
2.அதற்கு பருவமான நிலைகள் வரும் போது
3.காற்றிலிருந்து தன் இனமான சக்தியை இழுத்து அது வளர்ந்து விளைகின்றது.

அதே சமயத்தில் நாம் விதைத்த பயிருடன் சேர்த்துக் களைகளும் முளைக்கும். எக்கச்க்கமாக வளரும். நாம் இதைக் கவனிக்காது விட்டு விட்டால் என்ன ஆகும்…?

பயிருக்கு இடும் உரம் மற்றும் தண்ணீரை இந்தக் களைகள் வேகமாக தனக்குச் சத்தாக எடுத்துக் கொள்ளும். விதைத்த நல்ல விதைகளின் பலன் ராசி இருக்காது.

அதைப் போல நல்ல குணங்கள் கொண்டு நீங்கள் பல நன்மைகளைச் செய்தாலும் என்ன நடக்கின்றது..?

நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாரிக்கின்றீர்கள். ஒருவர் சிரமப்படுகின்றார் என்றவுடன் தாராளமாக நூறு ரூபாய் எடுத்துக் கொடுக்கின்றீர்கள். அதைப் பார்த்தவுடன் அடுத்து நோகாமல் ஒரு வார்த்தை சொல்லி விடுவார்கள்.

இவர் லாபம் இல்லாமல் எதாவது செய்வாரா…? தேடி வந்து மற்றவர்களுக்கு உதவி செய்தாலும் “லாபம் இல்லாமல் இவர் எப்படிச் செய்வார்…!” என்று சொல்வார்கள்,

எங்கெங்கோ கொள்ளை அடித்து விட்டு அதைக் கொண்டு வந்து இங்கே கொடுக்கிறார்…! என்று இன்னொருவர் சொல்வார்.

அவர் சொன்ன உடனே நான் இவ்வளவு கஷ்டப்பட்டுச் செய்கிறேன், “என்னை இவ்வாறு சொல்கிறார்களே…” என்று வேகமாக எடுத்தால்
1.அவர் கெடுமதியான புத்திதான் நமக்குள் வந்து ஆத்திரத்தை கூட்டும்.
2.நாம் செய்த நல்லது அனைத்தும் பாலுக்குள் விஷம் பட்டது போல் ஆகி விடும்.

என்னை இப்படிச் செய்கிறார்களே… இப்படிச் சொல்கிறார்களே…! என்று வேதனை வந்துவிடும்.

இந்த வேதனையான நிலையில் இருக்கும் போது வியாபாரம் செய்தாலும் ஒருவருக்குச் சரக்கை எடுத்துக் கொடுக்கும் பொழுது அந்த வேதனை வந்துவிடும். வேதனையுடன் வியாபாரம் செய்யும் பொழுது அது மந்தமாகும்.

ஏனென்றால் அடுத்தவர் தன்னைப் பற்றிச் சொன்ன அந்தக் குறையைத் தான் தாங்க முடியாதபடி எடுத்து கொள்ளும் பொழுது அந்த வேதனையை அவ்வப்பொழுது சுத்தப்படுத்தவில்லை என்றால் அதைப் போன்ற களைகள் அடுத்தடுத்து முளைத்துக் கொண்டே வரும்.

அதிகமாக அந்தக் களைகள் முளைத்தவுடன் உடலில் கை கால் குடைச்சல் வந்துவிடும். காசைக் கொடுத்து டாக்டரிடம் சென்று அதை நீக்கலாம்.

வயல்களில் களைகளை எடுத்தாலும் மீண்டும் முளைக்கும். அதைப் போல இந்த உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து உடலில் அந்தக் களைகள் முளைக்க முளைக்க நல்ல குணங்களை அழித்து கொண்டே இருக்கும்.

மனித வாழ்க்கையிலே நீங்கள் எவ்வளவு நல்லவராக இருந்தாலும் அந்த ஒரு நொடிக்குள் பிறர் செய்யும் தவறைக் கூர்ந்து கவனித்தாலே போதும். அது நமக்குள் வந்து நமது நல்ல குணங்களை அழித்துவிடும்.

நாம் பாசமாக ஒருவருக்கு உதவி செய்கிறோம். இருந்தாலும் அவர் துன்பங்கள் அதிகமாகி நோயாகி இறந்து விட்டால்
1.என் கஷ்ட நேரத்திலெல்லாம்… “எனக்கு மகராசன் உதவி செய்தார்…!” என்று நம்மை எண்ணினால்
2.அந்த உயிராத்மா நமக்குள் தான் வந்து சேரும்.
3.அவர் பட்ட அந்தக் கஷ்டத்தையெல்லாம் சேர்த்துக் கொடுக்கும்.

நம்மை அறியாமல் வரும் இப்படிப்பட்ட துன்பங்களிலிருந்து மீட்ட வேண்டும் அல்லவா….!

இதிலிருந்து மீளுவதற்குத் தான் தீமைகள் (களைகள்) உங்களுக்குள் வளராது தடுப்பத்தற்குத்தான்
1.உங்கள் மனதைப் பண்படுத்தி பக்குவப்படுத்தி
2.ஞானிகளின் அருள் ஞான வித்தை இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

பதிவு செய்ததை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

நினைவுக்குக் கொண்டு வந்து அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அவ்வப்பொழுது புருவ மத்தியில் உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டித் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.

தீமைகள் வந்து மோதும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தியை வைத்து அதை இடைமறிக்க வேண்டும்

 

ஒவ்வொரு நிமிடத்திலும் இந்த உலகத்துடன் ஒத்துத் தான் வாழுகிறோம். இதிலே பிரிந்து வாழ முடியாது.

1.நன்மை தீமைகளைக் கேட்டுணர்ந்து தான் செயல்படுகின்றோம்.
2.தீமையை நுகர்ந்து தீமை என்று அறிந்து கொள்கின்றோம்… ஆனால் அந்தத் தீமை நமக்குள் விளையாது தடுக்க வேண்டும்.

உங்களுக்குக் கொடுத்த சக்தியின் துணை கொண்டு ஈஸ்வரா… என்று உயிரிடம் வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதை இணைத்து அந்தத் தீமையை நமக்குள் குறைத்துப் பழக வேண்டும்.

மிளகாயைத் தனியாகக் கடித்தால் காரமாகத் தான் இருக்கின்றது. விஷத்தைத் தனியாக உட்கொண்டால் மயக்கம் வருகிறது.

1.ஆனால் அந்த விஷமான சக்தியை ஒரு மருந்துடன் சேர்த்து
2.அதனின் கலவையைச் சிறுக்கப் போகும் போது அந்த உணர்வுகள் மருந்தை நன்மையாக்குகின்றது.
3.உடலுக்குள் வேகமாக மருந்தை எடுத்துச் சென்று நோயை நீக்குகிறது.

இதைப் போன்று தான் தீமைகளை நாம் பார்த்தாலும் அல்லது கேட்டுணர்ந்தாலும் நுகர்ந்த பின் அது நம்மை இயக்குகின்றது. அந்த நேரத்தில் “அதை இடைமறித்து” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இணைக்க வேண்டும். நமக்குள் அது அணுவாக மாறும்.

மகரிஷிகளின் அருள் சக்தியைக் கலந்த அணுவாக மாறும் போது நமக்குள் அது தீமையை அடக்கும் சக்தியாக உருப் பெறுகின்றது… அப்படி வலுப் பெறும் போது தீமைகளைப் பிளக்கின்றது.

பார்த்துணர்ந்த உணர்வுகள் (எதுவாக இருந்தாலும்) கண்ணின் கரு விழி நமக்குள் பதிவாக்குகின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ ஆன்மாவாக மாற்றி அந்த உண்மையைச் சொல்லும்.

ஏனென்றால்…
1.நம் கண்கள் அது வழி காட்டும்.
2.நம் உயிரோ அதை இயக்கிக் காட்டும்.
3.உடலோ தனக்குள் இணைத்துக் காட்டும்.
4.மீண்டும் அதனின் நினைவு வரப்படும் போது அந்த அலைகளே நமக்கு உணர்த்தும்.

இப்படி மற்ற தீமைகளை நாம் எப்படிப் பதிவு செய்கின்றோமோ அதே போன்று தான் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நாம் எடுத்துப் பதிவாக்க வேண்டும். உடலில் உள்ள எல்லாவற்றிலும் இதைக் கலக்க வேண்டும்.

இதற்கு முன்னாடி இந்த மாதிரி நமக்குத் தூய்மைப்படுத்தத் தெரியாது. ஆகையினால் எத்தனையோ உணர்வுகள் பதிவாகி இருக்கின்றது.

ஒரு எதிரி நமக்கு எப்பொழுதோ இடைஞ்சல் செய்திருப்பான். திடீரென்று அவனைப் பார்க்கும் சந்தர்ப்பம் வரும். பார்த்தவுடன் என்ன நடக்கிறது…?

1.அவனைப் பற்றிய பதிவு ஏற்கனவே நமக்குள் இருக்கிறது.
2.அந்த நினைவு வந்த பின் “அயோக்கியப் பயல்… போகின்றான் பார்…! என்ற எண்ணம் டக்… என்று அங்கே வரும்.

அந்தச் சமயத்தில் அவன் மீது வரும் வெறுப்போ கோபமோ பயமோ அந்தத் தவறின் உணர்வுகள் நமக்குள் விளையும். உடலில் ஏற்கனவே இதன் வழியில் ஏற்பட்ட அணுக்கள் தனக்கு வேண்டிய இரையை எடுக்கும்.

அதே போல் அடுத்தவர்கள் மற்றவர்களுடைய குறைகளைப் பற்றிப் பேசும் போது அதை நாம் கேட்க நேர்ந்தால் அவர்கள் செய்த தவறின் உணர்வை நினைக்கும் போது அந்தத் தவறின் உணர்வை இந்த அணு சாப்பிட்டு வளர ஆரம்பிக்கும்.

1.இப்படி எந்தெந்தச் சந்தர்ப்பத்தில் இது வளரத் தொடங்கினாலும்
2.நாம் அவ்வப்போது ஈஸ்வரா… என்று உயிரிடமே வேண்ட வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துத் தூய்மைப்படுத்த வேண்டும்.

ஏனென்றால் எதைப் பார்த்தோமோ அது ஆன்மாவாகி சுவாசித்து அந்த உணர்வுகள் உடலுக்குள் சென்று அணுவாக அது வளர்க்கப்பட்ட பின் அதற்கு இது உணவாகக் கொடுப்பது உயிரின் வேலை தான். நாம் எண்ணியதை ஜீவ அணுவாக மாற்றுவதும் உயிரின் வேலை தான்.

தாவர இனங்களுக்கு சூரியன் எப்படி அதனதன் சத்துகளைக் கொடுத்துச் செழித்து வளரச் செய்கிறதோ அதே மாதிரித் தான்
1.நம் உயிரும் சூரியனாக இருந்து உடலில் அணுக்களை உருவாக்குவதும்
2.அதற்கு வேண்டிய இரைகளைக் கொடுப்பதும்
3.அந்த நினைவைக் கவர்ந்து தனக்குள் அதைச் செயலாக்குவதும் போன்ற வேலையைச் செய்கிறது.

ஆனால் பல கோடிச் சரீரங்களில் தீமைகளை அகற்றிய உணர்வுகள் விளைந்து மனித உடலுக்குள் வரும் போது ஆறாவது அறிவாக வருகிறது… கார்த்திகேயா.

ஒவ்வொரு சரீரத்திலும் தனக்குள் அறிந்து உணர்ந்த உணர்வுக்கொப்ப அந்தந்த உடல்கள் மாற்றி இன்று மனித உடலாக உருவாக்கியது இந்த உயிர்.

நம் ஆறாவது அறிவால் எதனையும் அறிந்திடும் நிலைகள் வருகின்றது. ஆகவே அதை வைத்து இருளைப் போக்கிய அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்து நமக்குள் இணைக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை இணைக்க இணைக்கத் தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கூடும். அதற்காக வேண்டித் தான் திரும்பத் திரும்பச் சொல்லி உங்களுக்குள் அதை வளர்க்கச் செய்கின்றேன் (ஞானகுரு).

1.உங்கள் எண்ணங்களும் உணர்வுகளும் மாறும் போது அதைத் திருப்பி
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைக் கவரும் சக்தியாக மாற்ற வேண்டும்.

இரவு உறக்கத்தின் போது வரும் கனவுகள் பற்றிய உண்மை நிலைகள் – ஈஸ்வரபட்டர்

 

நாம் நினைவில் உள்ள பொழுது நடப்பதற்கும்… உறக்கத்தில் காணும் கனவிற்கும்.. என்னப்பா மாற்றம் உள்ளது…?

1.அதிகாலை கனவு பலிக்கும்…!
2.நினைவில் நிற்காத கனவினால் பலன் ஒன்றும் இல்லை…! என்றெல்லாம்
3.கனவின் சகுனங்களையும் பலர் பல விதத்தில் கனவின் உருவம் கண்டு சொல்கிறார்கள்.

நாம் உறக்கத்தில் இல்லாத பொழுது செய்யும் வேலைகளும்… நாம் பேசும் சொற்களும்.. நாம் படிப்பது… பார்ப்பது… இப்படிப் பல நிலைகளில் நம் எண்ணத்துடன் அச்சுவாச நிலை நாம் எடுக்கும் பொழுது நாம் நினைவில் வாழும் நிலையாக உள்ளது.

நாம் உறக்கத்தில் உள்ள பொழுது நம் எண்ணங்கள் உறங்கினாலும்
1.நாம் எடுக்கும் சுவாச நிலை கொண்டு
2.இந்த உலகில் கலந்துள்ள பல அணுக்களின் சுவாச நிலையும் நம் சுவாசத்தில் வந்து கொண்டே உள்ளது.

அந்த நிலையில் நம் ஆத்மா அச்சுவாச நிலையுடன் செயல்படும் பொழுது பல நிலைகளில் உள்ள சுவாசங்கள் நம் சுவாசத்துடன் கலப்பதால்
1.பல விபரீதக் கனவுகளும்
2.நாம் எண்ணியே பார்த்திடாத சில நிலை கொண்ட கனவுகளும்
3.சிதறுண்ட நிலையிலும்
4.நம் உணர்வையே நாம் உணர்ந்திடாத சில பயங்கர நிலையில் நம் உடல் சிதையுண்ட நிலையிலும் கனவுகளாக வருவதைக் காணுகின்றோம்.

இப்படிப்பட்ட கனவெல்லாம் எந்த நிலையில் இருந்து வருகின்றது…?

பல சிதறுண்ட கனவுகள் அடிக்கடி நம் கனவில் காண்பதனால் அவை நம் ஆத்மாவிற்குச் சில தீங்குகள் விளைவிக்கின்றன.

கனவில் வருபவை எல்லாமே இந்த உலகில் கலந்துள்ள பல கோடி அணுக்களில் மனிதர்கள் மிருகங்கள் பறவைகள் இப்படிப் பல உயிரணுக்களின் சுவாச நிலையின் உந்துதலினால்தான்
1.நம் எண்ணத்தை (தூக்கத்தில்) நாம் மறந்திருக்கும் பொழுது
2.நம் சுவாச நிலையிலும் அந்த உந்துதலுக்கு நாம் ஆளாகின்றோம்.

இறந்தவர்கள் கனவில் வருவதுவும் நம் சுவாச நிலையைக் கொண்டு தான்…! அவர்கள் ஜீவனுடன் இருந்த காலத்தில் அவர்கள் விட்ட சுவாச நிலையைக் கொண்டு நம் சுவாச நிலைக்கேற்ப ஈர்ப்பு நிலை கொண்டு தான் கனவுகளில் வருகிறார்கள்.

இப்படிக் காணும் கனவெல்லாம் நம் ஆத்மாவைப் பாதிக்காமல்… கனவிலேயே பல உண்மை நிலைகளைக் காணும் வண்ணம் “நம் சுவாச நிலையை ஒருநிலைப்படுத்தி…” ஒழுங்குபடுத்த வேண்டும்.

நாம் அன்றாடம் வாழும் வாழ்க்கை நிலையிலிருந்தே நம் சுவாச நிலைக்குப் பல உன்னத நிலையை எடுத்துக் கொண்டு வரும் பொழுது
1.எப்படி நம் உயிர் நிலைக்கு.. நம் ஆத்மாவிற்குத் தியானத்தின் மூலம் உரம் அளிக்கின்றோமோ
2.அதைப் போல் நாம் கனவில் காணும் நிலையில் நல்ல நிலையுடன் கூடிய கனவுகளாக
3.நம் சுவாச நிலை கொண்டு நம் உயிரணுவிற்கு உரம் தேடி வைக்க முடியும்.

நாம் உறங்கும் பொழுது பல எண்ணங்களை எண்ணிக் கொண்டே இருப்பதால் அப்படிப் பல எண்ணங்களை எண்ணும் பொழுதே நம் சுவாசநிலை கொண்டு அதற்கொத்த நிலைகளும் வந்து மோதத்தான் செய்யும்.

ஆகவே அத்தகையை எண்ணங்களுக்கு நாம் அடிமையாகாமல்
1.ஜெப நிலையிலேயே நாம் உறங்கும் பொழுது
2.நம் சுவாசமும் நம் உயிரணுவும் ஒரே நிலையில் அவ்வாண்டவனின் சக்தியை ஈர்க்கின்றது.

அந்த நிலையில் இருக்கும் பொழுது நமக்குப் பல அணுக்களின் நிலைகள் நம் சுவாசத்திற்கு வந்திடாமல் ஒரே அமைதி கொண்ட நிலையில் நாம் உறங்கி எழுந்திடலாம்.

கனவும் நினைவும் கலந்தது தான் இந்த வாழ்க்கையே…! விழிப்பில் உள்ள பொழுது தீய அணுக்கள்.. நல்ல அணுக்கள்… என்று நம் சுவாச நிலைக்கு எப்படி வருகின்றனவோ அதே போல் தான் கனவிலும் நடக்கின்றது.

நம் ஆத்மாவிற்கு இரண்டு நிலைகளுமே ஒரே நிலை கொண்ட உணர்வுகளைத்தான் ஈர்க்கின்றது.
1.இது எல்லாமே கனவான வாழ்க்கையின் – “கனவு…நினைவு…” என்று நாம் புரிந்து கொண்டு
2.எல்லாவற்றிலும் ஒரே நிலை கொண்ட அவ்வீசனின் சக்தியை ஒரே நிலையில் ஈர்த்து
3.நம் ஆத்மாவிற்கு நல்ல நிலையைத் தேடிக் கொள்வது ஒன்று தான்
4.நாம் எடுத்திடும் பெரும் முயற்சியாக இருக்க வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒரு ஆடு ஒரு நரியைப் பார்க்கிறது என்று வைத்துக் கொள்வோம். நரியோ வலிமையானது. நரியிலிருந்து வெளிப்படும் உணர்வினை ஆடு நுகர்ந்தால் ஆட்டின் உணர்வுகள் அனைத்தும் நரியின் உணர்வாக மாற்றப்படுகின்றது.

அந்த நரியை அடிக்கடி சந்தித்து அது இதைக் கொன்று புசிக்கும் அந்த உணர்வுகள் ஆட்டிடம் தோன்றினால் அந்த உணர்வின் தன்மை வரப்படும் போது ஆட்டின் உணர்வினை இது மறைத்து விடுகின்றது.
1. நரியின் உணர்வுகள் ஆட்டின் உணர்வுகளை மறைத்து
2.அதை மூடிக் கொள்கின்றது.

ஆட்டின் திரையை நீக்கிய பின் அந்த நரியின் உணர்வுகள் பெருத்து அந்த உணர்வின் தன்மை ஆட்டின் உடலில் வித்தாகி விடுகின்றது.

ஆட்டின் உடலை விட்டு (அந்தத் திரையை நீக்கி) உயிர் வெளி வந்தால் நரியின் உணர்வைக் கவர்ந்து அதன் உணர்வின் தன்மை கொண்டு நரியின் உடலுக்குள் புகுந்து நரியாகப் பிறக்கும் தன்மை வருகின்றது.

அதைத் தான் வேதங்கள் கூறுவது ரிக் சாம அதர்வண யஜூர் மீண்டும் சாம என்பது.

ஆட்டின் உடல் ரிக்.. அதாவது சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப ரிக் ஆகின்றது. ஒரு நரியும்… அது சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப அதுவும் ரிக் ஆகின்றது.

ஆட்டின் மணமோ சாந்தமானது. நரியின் உணர்வை நுகரப்படும் போது இந்த ஆட்டின் உணர்வை அது மறைத்து விடுகின்றது. ஆட்டின் உணர்வை மறைத்த பின் நரியின் உணர்வே வலு பெறுகின்றது.

உதாரணமாக பாலில் பாதாமைப் போடுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பாதாம் கலந்த பாலைச் சாப்பிட்டால் அது நம் உடலுக்குச் சத்து தான்.

ஆனால் அந்தப் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் பாதாமிலும் ஊடுருவி விடுகின்றது. பாதாமின் சத்தையும் இழக்கச் செய்கின்றது. இதைப் போல
1.ஆடு நரியின் உணர்வுகளைச் சுவாசிக்கும் போது
2.அதனுடைய விஷத் தன்மைகள் ஆட்டின் சாந்தமான உணர்வை ஆக்கிரமித்து
3.இது ஒரு திரையாக மாற்றிவிடுகின்றது.

இந்தத் திரை மறைவு ஆன பின் சாந்த உணர்வு கொண்ட ஆடாக இருந்தாலும் வலிமை பெறும் நரியின் தன்மையை ஆடு பெறுகின்றது.

உடலை விட்டு வெளி வந்தபின் ஆட்டின் உயிரான்மா நரியின் ஈர்ப்புக்குள் சென்று நரியாக உரு மாறுகின்றது. ஆட்டின் உடல் என்ற திரையை மாற்றிய பின் நரியாக உருபெறும் தன்மை வருகின்றது.

ஞானிகள் அதைத்தான் “சித்திரை…” என்று காட்டினார்கள்.

ஏனென்றால் நம் மனித வாழ்க்கையிலும் இதைப் போன்று எத்தனையோ கோடி உணர்வுகள் ஒவ்வொரு நாளும் சிறு சிறு திரைகளாக நம் நல்ல குணங்களை மறைத்து விடுகின்றது.

நம் நல்ல குணங்களை மறைக்கும்
1.அந்தச் சிறு சிறு திரைகளை நீக்கவில்லை என்றால்
2.ஆடு நரியாக ஆனது போல் நம் நல்ல குணங்கள் மாறி
3.சந்தர்ப்பத்தால் நுகர்ந்த தீமையான உணர்வுகளின் இயக்கமாக அது நம்மை மாற்றிவிடும்.
4.நம் நல்ல குணங்கள் மறையத் தொடங்கும்.

அதை நீக்கும் நிலையாகத்தான் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம்.

“ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் உள் முகமாகச் செலுத்துதல் வேண்டும்.

அவ்வாறு செலுத்தப்படும் பொழுது நம் ஆன்மாவில் சுழன்று கொண்டிருக்கும் தீமையான உணர்வலைகளைப் பிளந்து (சிறு திரைகளைக் கிழித்து) நம் ஈர்ப்பை விட்டு அகலச் செய்யும்.

நம் ஆன்மா தூய்மை அடையும். நம் நல்ல குணங்கள் வலிமை பெறும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுக்கும் சக்தியை நாம் பயன்படுத்த வேண்டிய நெறி

 

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) சக்தி கொடுத்தாலும்… நமக்குச் சும்மா கொடுக்கவில்லை. அவர் கொடுத்த பவரை என்னென்ன செய்யலாம்…? என்று கொடுத்திருக்கின்றார்.

நெருப்பை உபயோக்கின்றோம் என்றால்
1.வெளிச்சத்திற்குத் தீபமாக வைக்கின்றோம்…
2.சமையல் செய்யவும் அந்த நெருப்பை வைத்துக் கொள்கிறோம்…
3.அதே நெருப்பை வைத்து இரும்பையும் உருக்குகின்றோம்.

அதைப் போன்று தான் குருநாதர் கொடுத்த சக்தியை ஆக்கச் சக்தியாக மாற்றலாம்… அழிக்கும் சக்தியாகவும் மாற்றலாம். அந்த சக்தியின் உணர்வின் செயல்கள் எப்படி…? என்கிற வகையில்தான் குருநாதர் உணர்த்தினார்.

காரணம்… மனிதனுடைய ஆசையின் உணர்வுகள் பல நிலைகளிலும் தூண்டுகின்றது…
1.முதலில் இதை அழிக்கப் பழக வேண்டும்…
2.அந்த மெய் ஒளியை வளர்த்து பழக வேண்டும்

அதைக் காட்டுவதற்காகத் தான் பல இடங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று குரு அனுபவமாகக் கொடுத்தார். அதைத் தான் உங்களுக்கும் சொல்லிக் கொண்டு வருகிறேன்.

இந்த வாழ்க்கையில் எத்தனையோ சங்கடங்கள் வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒவ்வொரு நொடியிலேயும் நீங்கள் எண்ணி எடுக்க வேண்டும்.

கஷ்டமோ நஷ்டமோ அல்லது மற்றொருவர் தவறு செய்வதையோ அன்றாடம் நாம் பார்க்க நேர்கிறது… அதை நுகர்ந்து அறிகின்றோம்.

இருந்தாலும் அது எல்லாம் நம்மை இயக்காது தடுக்க அடுத்த கணமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். அந்தப் பவர் (சக்தி) உங்களுக்குக் கொடுத்திருக்கின்றோம்.

உதாரணமாக ஒருவர் கெடுதல் செய்கிறார் என்றால் அவர் குடும்பம் தொலைந்து போக வேண்டும்… என்று சொன்னால் அவர்கள் கெட்டுப் போய்விடுவார்கள்.

1.ஆனால் அந்தத் தொலைந்து போகும் உணர்வு முதலில் நம்மிடம் தான் விளைகின்றது.
2.அப்போது நம் நல்ல குணங்கள் கெடுகின்றது… அவனும் கெடுகின்றான்… நாமும் கெடுகின்றோம்.

அதற்குப் பதிலாக அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணி அந்த அருள் உணர்வின் தன்மையை இங்கே விளையச் செய்ய வேண்டும். அறியாது வரும் இருளை நீக்க வேண்டும்.

உதாரணமாக ஒரு போக்கிரி தவறு செய்கின்றான்… நமக்கு இடைஞ்சல் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.

நம்மிடம் சக்தி இருக்கிறது என்ற வகைகளில் அவனுக்கு ஏதாவது கெடுதல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கடும் ஆயுதமாக எடுத்து நாம் பயன்படுத்தும் பொழுது அது நம் நல்ல குணங்களை எல்லாம் அடக்கிவிடும்.

அவனை அடக்கும் உணர்வை எடுத்துத் தான் அங்கே பாய்ச்சுகின்றோம். அதனால் அவனுக்கு அந்தக் கெடுதல் வருகின்றது… ஆக இங்கே விளைந்து தான் அங்கே போகின்றது. நம்மிடம் முதலில் அது விளையாது தடுக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் உணர்வுகளை இங்கே வளர்த்து… அந்தத் தீமைகளை… அந்தக் களைகளை நீக்க வேண்டும்.
1.எப்பொழுதுமே அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று
2.இதைத்தான் பாடமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வீட்டிலே எல்லாம் செய்து கொண்டே வருவோம். குடும்பத்தில் ஒற்றுமையாகவும் இருப்போம். அதிலே ஒரே ஒரு பையன் நம் சொன்னபடி கேட்கவில்லை என்றால் அவனை எண்ணி வேதனைப்படுவோம்.

நாம் எடுக்கும் வேதனை உணர்வுகள் வீடு முழுவதும் பரவும். அப்படிப் பரவும் போது நம் எண்ணங்களும் மாறுபட்டு விடுகின்றது. அந்த நேரத்தில்
1.“சடார்… என்று அவன் தொலைந்து போக வேண்டும்…” என்ற எண்ணம் தான் வரும்
2.ஆனால் அவனிடம் இருக்கும் கெடுமதி தொலைய வேண்டும் என்ற எண்ணம் வராது.

நானே (ஞானகுரு) திடீரென்று உங்களிடம் கோபிக்கிறேன் என்றால் உங்களிடம் இருக்கும் கெட்ட புத்தி போக வேண்டும் என்று தான் கோபித்துச் சொல்வது.

சாதாரண வாழ்க்கையில் பார்த்தால் “தொலைந்து போகிறவன் இப்படிச் செய்கின்றானே…!” என்ற இந்த உணர்வு தான் இங்கே வரும்.

இப்படி நாம் எடுக்கும் இந்த எண்ணத்தில் “இரண்டு பிரிவாக” இருக்கின்றது.
1.கெட்டது தொலைய வேண்டும் என்று எண்ணினால் அது நல்லது
2.கெடுதல் செய்பவர்கள் தொலைந்து போக வேண்டும் என்று எண்ணினால் அது கெட்டதாகிறது.

ஆகவே… எந்த நேரம் எந்தச் சந்தர்ப்பத்தில் யார் மீது நமக்கு வெறுப்பு வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நாம் வலுவாக்க வேண்டும்.

அதை வலுவாக்கிக் கொண்ட பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடல்களில் படர்ந்து அவரின் தீமையான செயல்கள் மறைய வேண்டும்… அதிலிருந்து அவர்கள் காக்கப்பட வேண்டும்… என்று நாம் எண்ண வேண்டும்.

இப்படி நாம் தியானித்து அந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சும் போது
1.அவரின் தீமைகள் நமக்குள் வருவதில்லை
2.அதே சமயத்தில் அவரையும் நாம் தீமையிலிருந்து விடுபடச் செய்கின்றோம்.

இத்தகைய பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.

கெட்டதைச் செய்பவன் நல்ல நேரம் பார்ப்பதில்லை… நல்லதைச் செய்ய “நல்ல நேரம்” தேவையா…? – ஈஸ்வரபட்டர் 

 

ஆதியில் ஆண்டவனை எந்த ரூபத்தில் வணங்கினார்கள்..?

உதய காலத்தில் ஆற்றுப் படுகையிலும் குளங்கள் கடல் இப்படி உள்ள இடங்களில் நீரில் நின்று அந்தச் சூரியனின் சக்தியை சூரிய உதய காலத்தில் எண்ணி வணங்கினார்கள்.

அந்த நிலையில் வருண பகவான்… வாயு பகவான்… சூரிய பகவான்… என்று அந்தப் பகவானையே இந்நிலையில் கண்டு வணங்கி ஜெபித்தார்கள்.

1.காற்றும் மழையும் அவ்வொளியும் இல்லாவிட்டால் ஜீவனே இல்லை.
2.ஜீவனைத் தந்த சக்தி இந்த மூன்றுக்கும் தான் உள்ளது என்ற நிலையில்
3.இந்த மூன்றையுமே தெய்வமாக்கி வணங்கினார்கள்.

வணங்கினார்கள் என்ன…? அந்த நிலை கொண்டுதான் நாமும் வணங்க வேண்டும்.

அந்த நிலையிலிருந்து தான் நம் உயிர்ணுவிற்கு நம் ஆத்மாவிற்கே உயிர்த் துடிப்பு வந்தது. அந்நிலையில் அருள் பெற்ற நம் ஆத்மா அவற்றைத் தான் “ஆதி முதல் தெய்வமாக” வணங்கிப் போற்ற வேண்டும்.

ஆதியில் வந்த ஆண்டவனையே தன் விஞ்ஞான ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்ட மனிதனப்பா இன்றைய மனிதன்.

இன்றைய மனிதன் நம்பும் நிலை எல்லாம்.. அவன் போடும் கணக்குப்படி தேதியிலும்… கைரேகைகளிலும்… ஜாதகத்திலும்… பெரும் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

தன்னுள் இருக்கும் அந்த ஆண்டவனின் சக்தியை மறந்த நிலையில் தான் உள்ளார்கள். உலகம் முழுவதுமே நேரத்தையும் ஜாதகத்தையும் தான் நம்பி வாழ்கிறது.

நாளும் நட்சத்திரமும் தேதியும் இவன் வைத்த கணக்கு தான்…!

ஆதியில் வாழ்ந்த மனிதன் அந்தச் சூரியனின் சக்தி கொண்டு ஒளி நம் நிலத்தில் படும் நிலை கொண்டு “நேரமும் காலமும்” அறிந்து செயல்பட்டான்.

அன்று பல பெரியவர்கள் இந்த இந்த நாட்கள் மழை பெய்யும்.. வெயில் அதிகமாக இருக்கும்… என்றெல்லாம் தான் அந்த ஞானத்தை வைத்து மக்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

இன்றைய வளர்ந்த விஞ்ஞான மனிதன் தன் அறிவைக் கொண்டு பல செயல் ரூபங்களையும் பல உபயோக நிலை கொண்ட பல உன்னதப் பொருள்களையும் கண்டு கொண்டான்.

அவ்வாறு தான் கண்ட நிலையை ஒன்றுடன் ஒன்று பொருத்தி வாழ்பவன்
1.உத்தம நிலையில் வாழ்ந்திடாமல்
2.பேராசை நிலை கொண்டு அழிவு நிலைக்கு ஏனப்பா செல்ல வேண்டும்..?

இன்று மனித மனங்களில் சுவாச நிலையே ஒருவரைப் போற்றியும்… ஒருவரைத் தூற்றியுமே… வாழ்வதாக உள்ளது. நம் மனித ஜென்மத்தில் தான் இந்தப் போற்றலும் தூற்றலும்.

போற்றலுக்கும் தூற்றலுக்குமா நாம் பிறவி எடுத்தோம்…!

ஆண்டவன் சக்தியிலிருந்து மகத்தான உன்னத நிலையில் ஆறறிவு படைத்து மனிதனாகப் பிறவி எடுத்துள்ளோம். அந்த நிலைக்கு அந்த ஆண்டவனின் சக்தியை நாம் உபயோகப்படுத்தாமல் அவன் தந்த சக்தி கொண்டு நம்மை நாம் அழித்து வாழ்கின்றோம்.

அதற்காகத்தான் இச்சக்தியை ஆண்டவன் நமக்கு அளித்தானா…?

மிருக ஜெந்துக்கு ஐந்தறிவு படைத்தான் ஆண்டவன் என்கிறோம். அந்த மிருக ஜெந்து போற்றலுக்கும் தூற்றலுக்கும் ஏங்குவதில்லை. பொருளுக்கும் ஆடை ஆபரணங்களுக்கும் அவைகளிடம் ஆசை இல்லை.

1.அவைகளின் நிலை தான் மனிதன் சொல்வது போல் ஐந்து அறிவு ஆயிற்றே..!
2.அவைகளின் நிலைக்கு எப்படியப்பா இந்த நிலைகளைக் கண்டிட முடியும்…?

அம்மிருகத்தின் நிலையில் உள்ள உயர்ந்த குணம் ஒற்றுமையான குணம் அதன் அறிவுத் தன்மை இன்றைய ஆறறிவு படைத்த மனிதனுக்கு எங்கப்பா உள்ளது…?

மிருகங்களும் பறவைகளும் எந்தக் கடிகாரத்தை வைத்து எந்தத் தேதியை வைத்து நாளும் மணியும் கணக்கிட்டன…?

நாம் நினைக்கின்றோம்… மனிதனுக்குத் தான் எல்லா நிலையும் தெரியும் என்று…! பறவைகள் வாழும் பரிபக்குவமான வாழ்க்கை நிலையை மனிதர்கள் பார்த்து வாழ வேண்டுமப்பா…!

மிருகங்கள் நிலைக்கு என்ன தெரியும்…! நம்மைப் போல் அதற்குத்தான் ஆறறிவு இல்லையே…! என்கின்றான் மனிதன். அனால் இவன் பெற்ற பொக்கிஷத்தைத்தான் இவன் சிதற விடுகின்றான் என்பதை அறியவில்லை.

இது தான் இன்றைய உலக நிலை…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

சென்னை போன்ற பெரிய நகரங்களில் பார்த்தோம் என்றால் ஒரு பக்கம் கழிவு நீர் (சாக்கடை) போகும். ஒரு பக்கம் பைப்பில் நல்ல தண்ணீர் போகும்.

வீட்டுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள நல்ல தண்ணீர் பைப் துருப்பிடித்து சிறிதளவு ஓட்டை ஆகிவிட்டால் வீட்டுக்குள் வரும் நல்ல தண்ணீரில் சாக்கடை கலந்த நீராக வரும். கெட்ட வாசனை கலந்து வரும்.

நல்ல தண்ணீருக்குள் இப்படிக் கலந்து வந்து கிருமிகளாகி பிறகு புழுக்கள் எல்லாம் உண்டாகும்.
1.நல்ல தண்ணீர் பைப்புக்குள் சென்றாலும்
2.பக்கத்திலிருக்கும் சாக்கடையை இழுத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்துவிடுகின்றது.

இதைப் போன்று நாம் போகும்போது மற்றவர்களுடைய உணர்வு வரப்படும்போது நாம் அவைகளைக் கவர்ந்து தெரிந்துதான் போகின்றோம். அதனின் உணர்வை இழுத்துத்தான் நம்மை உணரச் செய்கின்றது.

உதாரணமாக நாம் நல்ல எண்ணம் கொண்டு வேலைக்குச் செல்கிறோம் என்றால் இந்த உணர்வும் சேர்த்துவிடுகின்றது. எது…?

ஒரு நல்ல காரியத்தை எண்ணிப் போகிறோம். ஒருவன் தவறென்ற உணர்வைச் செய்தால் அதையும் இழுத்து விடுகின்றது. அந்தச் சாக்கடையும் இதனுடன் கலந்துவிடுகின்றது.

நல்ல எண்ணத்துடன் நாம் செல்லும்போது ஒருவன் வெறுப்பாக இருந்திருப்பான்… கோபமாக இருந்திருப்பான்… வேதனையாக இருப்பான்…! இதையெல்லாம் நாம் வேடிக்கை பார்த்திருப்போம்.

இது என்ன செய்கின்றது…? இந்தப் பைப்பில் இழுத்து அதை இணைத்து விடுகின்றது.

இதன் வழியில் தான்…
1.நாம் நல்லதை எண்ணிச் செல்லும்போது அதனுடன் இந்த ஆன்மாவில் சேர்த்தவுடனே
2.பிறரின் தவறான உணர்வுகளை இழுத்து அதை உள்ளுக்குள் (நமக்குள்) கொண்டு போய்ச் சேர்க்கின்றது.

ஏனென்றால் நம் கண்ணின் உணர்வு நம் உணர்வு உயிரில் படுகின்றது. பட்ட பிற்பாடு உயிரில் வந்து மோதுகின்றது. அந்த நேரத்தில் நல்ல காரியத்தைப் பார்க்கப் போவதை விட்டுவிடுகிறோம். செய்தாலும் சரியாகச் செய்ய மாட்டோம்.

இந்த உணர்வுகள் வந்தவுடன்… சனியன்…! இதையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கின்றது. இப்படியெல்லாம் தப்புப் பண்ணுகிறார்கள்…! என்று சொல்லிக் கொண்டே ஆபீசுக்குப் போவோம்.

ஆபீசில் போய் உட்கார்ந்தவுடன் இந்த உணர்வு கலந்துவிடும். அப்பொழுது அந்த ஆபீசுக்குப் போவதற்கு முன்னாடி என்ன செய்ய வேண்டும்?

“ஈஸ்வரா..,” என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும், எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும், உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்திச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் பார்த்தவர்களை எண்ணி அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் என்று இது மாதிரி மாற்றியமைக்க வேண்டும். ஏனென்றால்
1.தீமைகள் புகாது அடைத்துவிட்டு
2.நல்லதாக வேண்டும் என்று மாற்றியமைத்து நல்லதை உள்ளுக்குள் கொண்டு போகவேண்டும்.

இந்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்தவுடனே தீய அணுக்கள் உருவாகாதபடி தடுக்கப்படுகின்றது. அதற்குத்தான் உங்களுக்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம்.

நன்றாகத் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். இதையெல்லாம் நீங்கள் தெளிந்து தெரிந்து அதன்படி நடக்கவும் உங்கள் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள மிகவும் உதவியாக இருக்கும்.

நான் கஷ்டப்பட்டேன்… அனுபவித்தேன்… சக்தியையும் கொடுக்கின்றேன். நீங்கள் பயன்படுத்தத் தெரியவில்லை என்றால் இந்த உபதேசத்தைக் கேட்டும் பலனில்லை.

ஆகவே இதைப் பயன்படுத்த முயற்சி எடுங்கள்.
1.அது நல்ல பலனைக் கொடுக்கும்.
2.உங்கள் எண்ணம் பரிசுத்தமாகும்.
3.நல்ல எண்ணங்களை உருவாக்கலாம்.
4.நல்ல சிந்தனைகளை உருவாக்கலாம்.

எந்த இடத்திற்குச் சென்றாலும் அங்கே செல்லும் முன் இதே போன்று ஆத்ம சுத்தி செய்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

1.என்னைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் நல்ல எண்ணம் வரவேண்டும்…
2.என் செயல் அனைத்தும் மற்றவர்கள் போற்றும் நிலைக்கு வரவேண்டும்… என்று
3.ஒரு ஐந்து நிமிடம் இந்த எண்ணத்தை எடுத்துச் சுவாசிக்க வேண்டும்.

வழி அறிந்து செயல்படக்கூடிய அருள் ஞானம் (TECHNIQUES) கொடுக்கின்றோம்

 

ஒவ்வொரு நிமிடத்திலும் அருள் உணர்வுகளை நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் வரிசைப்படுத்தி
1.எந்தெந்தச் சந்தர்ப்பத்தில் எது வருகிறது என்ற வகையிலும்
2,குருநாதர் எனக்குக் கொடுத்த சக்தியை இந்த உபதேச வாயிலாக உங்களுக்குள் பதியச் செய்கின்றேன் (ஞானகுரு).

சண்டை போட்டவர்கள் கஷ்டப்படுபவர்களை எல்லாம் பதிவு செய்து கொண்டால் அவர்களின் எண்ணங்கள் வந்து உங்களைத் துயரபப்டச் செய்கிறது… சங்கடப்படச் செய்கிறது… சோர்வடையச் செய்கிறது… வேதனை அடையச் செய்கிறது.

இதைப் போல் தான்…
1.குருநாதர் கொடுத்த உணர்வின் சத்து எனக்குள் பதிவானதை
2.அந்தந்தச் சந்தர்ப்பம் இணைக்கப்பட்டதையும் மாற்றப்பட்ட உணர்வுகளையும்
3.உங்களுக்குள் இணைத்துக் கொண்டே வருகின்றேன்.

சங்கடமான உணர்வு உங்களுக்கு வரும் பொழுதெல்லாம் நான் (ஞானகுரு) இணைக்கும் நல்லதாக மாற்றும் உணர்வுகள வைத்து மாற்றினீர்கள் என்றால் அவ்வப்பொழுது உங்களால் எந்தத் தீமையும் மாற்றிக் கொள்ள முடியும்.

அந்த நிலையை உருவாக்குவதற்குத் தான் இந்த உபதேச வாயிலாக அருள் உணர்வுகளை உங்களுக்குள் பாய்ச்சுவது.

எனக்கு ஒன்றும் தெரியவில்லையே… தெரியவில்லையே…! என்று எண்ண வேண்டியதில்லை. அடிக்கடி இந்த அருள் உணர்வுகளைப் பெற்றுப் பாருங்கள்.
1.இரவெல்லாம் உங்கள் எண்ணங்கள் சப்தரிஷி மண்டலங்களுடன் மிதப்பதை காணலாம்
2.அதனுடன் உங்கள் உணர்வுகள் தொடர்பு கொண்டு உங்கள் உடலிலே வளர்ச்சி ஆவதைப் பார்க்கலாம்.

ஆனால் வாழ்க்கையில் சங்கடமும் சலிப்பும் ஆகி யார் யார் மீது வெறுப்புடன் இருந்தீர்களோ அந்த நினைவுகள் சுற்றிக் கொண்டிருந்தால் இரவில் திடீரென்று முழிப்பு வரும்… எழுந்து உட்கார்வீர்கள்.

பகலிலே இந்த உணர்வு அதிகமாக வந்து விட்டால் நம் உணர்வுகள் இங்கேதான் சுற்றிக் கொண்டிருக்கும்… அதையும் பார்க்கலாம்.

அதே சமயத்தில் சில நேரங்களில் நாம் வலுவான எண்ணங்கள் எடுக்கும் பொழுது இந்த வலுவின் தன்மை கொண்டு பிறருடைய கஷ்டங்களையும் அறியச் செய்யும்.

ஆனால் நாம் போகும் பாதையில் அதை அறியச் செய்தாலும் அடுத்த நிமிடமே அந்த கனவு வந்து முழித்தவுடன்
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அந்தத் தீமையிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வை மாற்ற வேண்டும்
3.கனவு தான் என்று மட்டும் நினைத்து விடக்கூடாது

காரணம்… பகலிலே கேட்டுணர்ந்த உணர்வுகள் நமக்குள் வந்து இதை இயக்குகின்றது
1.நமக்குள் பதிவானால் தான் அது கவரும்
2.நாம் நுகர்ந்தால் தான் உயிர் அதை இயக்கும்.

இப்படிக் கண்ட அனுபவங்கள் உங்களுக்குள் வந்தால் தான் உங்களைக் காத்துக் கொள்ள அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் நினைவுக்கு வரும்.

உதாரணமாக ஒரு இயந்திரத்தை ஓட்டுகிறோம். சில நேரங்களில் அதில் பழுது வந்துவிடுகிறது.

அந்தப் பழுது எதனால்…? என்றும் எந்த இடத்திலே…? என்றும் அதை விபரம் தெரிந்தவர்கள் (TECHNICIAN) சீராக்கினால் அது மீண்டும் சரியாக ஓடும். ஆக தெரிந்தவர்கள் அதைச் செயல்படுத்துவார்கள்,

அப்படித் தெரிந்து கற்றுக் கொண்டவர்களிடம் நாமும் கற்றுக் கொண்டால் நாமும் அந்தப் பழுதைச் சீராக்க முடியும்.

அதைப் போன்று தான்
1.வாழ்க்கையில் வரும் இன்னல்களை அகற்றும் அரும் பெரும் சக்தியாக
2.தெரிந்து செயல்படக்கூடிய அந்த அருள் ஞானத்தைக் உங்களுக்குக் கொடுக்கின்றோம்..!

எமது அருளாசிகள்.

உயிருடன் ஒன்றினால் நிஜம்… இல்லை என்றால் கனவு தான்…! ஈஸ்வரபட்டர்

 

நாம் வாழும் வாழ்க்கை கனவான வாழ்க்கை…!

நாம் உறங்கும் பொழுது வருவது தான் கனவு… நாம் விழித்திருக்கும் பொழுது வாழ்வது “நினைவு..!” என்கின்றோம். கனவும் நினைவும் எல்லாமே ஒன்று தான்…!

1.இன்று நடப்பது நாளை கனவு தான்.
2.நாம் உறக்கத்தில் உள்ள பொழுதும் கனவு தான்.
3.சில நாட்கள் பொறுத்து எண்ணிப் பார்ப்பது எல்லாமே கனவு தான்,
4.முன் ஜென்ம வாழ்க்கையும் கனவு தான்.
5.இந்த ஜென்ம வாழ்க்கையும் கனவு தான்.
6.இனி நமக்கு நடப்பதுவும் கனவு தான்,

அவ் ஈஸ்வரனின் நினைவு ஒன்றே… அவ் ஈசனின் சக்தி ஒன்றே தான் ஒரே நிலை கொண்ட “என்றும் நிலைத்து நிற்கும் நினைவு…!”

கனவுக்கும் நினைவுக்கும் நாம் மாறுபட்டு எண்ணுகின்றோம்.

நடப்பது எல்லாமே கனவு தான் என்ற நினைவு எல்லோருக்கும் வந்தால் இன்றைய உலகில் பகவானைப் பல ரூபமாக்கி பல ஜாதியாக்கி இருக்க மாட்டார்கள்.

இன்று பல மதங்களின் நாமத்தைச் சூட்டி வட கலை… தென் கலை.. என்றெல்லாம் சொல்லி தன்னையே தான் தாழ்த்தி வாழ்கின்றான் மனிதன்.

இதிலிருந்து விடுபட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

உதாரணமாக நோயுடன் வேதனைப்படுகின்றார்கள். இங்கே என்னைப் பார்த்து அதை நீக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வருகிறார்கள்.

“அட பாவமே..,” என்று பரிதாபப்பட்டு நான் உதவி செய்கிறேன்.

ஆனால் அந்த இடத்தில் பரிபக்குவம் இல்லையென்றால் என்ன ஆகும்…? அந்த நோயின் தன்மையை நுகர்ந்தபின் அதைச் சுத்தப்படுத்தவில்லை என்றால் எனக்கும் அந்த நோய் வரும்.

அப்பொழுது அந்த நோய் வராமல் தடுக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்…? ஈஸ்வரா என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எடுத்து அதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவர் உடல் முழுவதும் படர வேண்டும், அவர் உடல் நலம் பெறவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்ச வேண்டும்.

அதை விட்டுவிட்டு “ஐயோ…” என்று அங்கே சொன்னால் பின் “ஐயோ…” என்று அந்த வேதனை இங்கே வந்துவிடும். அந்த உணர்வின் தன்மை அவர் பட்ட வேதனையைத்தான் நமக்குள் உருவாக்கும்.

அடுத்தவருக்கு இதைச் செய்கிறேன்… அதைச் செய்கிறேன் என்று உதவி செய்தாலும் அந்தப் பக்குவ நிலை தவறினால் என்ன ஆகும்…?

வடை சுடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். எண்ணெய் நன்றாகச் சூடாகும் முன் வடையைத் தட்டிப் போட்டால் என்ன ஆகும்…?

ஒரு வடையைப் போட்டால் வேகும், இரண்டாவது போட்டால் அவ்வளவுதான் வடை வேகாது. எண்ணெய் காணாமல் போகும், எண்ணையை வடை எடுத்துக் கொள்ளும். ருசி இருக்காது.

ஆகையினால் நமது வாழ்க்கையில் தீமை என்ற உணர்வுகளை நுகர்ந்தபின் அதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒருவன் தீய செயல்களைச் செய்கிறான். நமக்குள் அந்தத் தீமை வராதபடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எடுத்து அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

அடுத்து நாம் யாரிடம் சொன்னாலும் தீமை செய்பவன் குற்றங்களிலிருந்து மீள வேண்டும் என்று எண்ணத்தில்தான் நாம் நம் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்.

அதற்குப் பதில் பார்… நான் சொல்லிக் கொண்டேயிருக்கின்றேன்…! நீ மறுபடி மறுபடி தவறு செய்து கொண்டே இருக்கின்றாய்… என்று கோபமாகப் பேசும் நிலைகள் வரும்போது “அவரும் நம்மைத் திருப்பிப் பேசும் உணர்வுகள் வந்துவிடும்…!”

அங்கே பக்குவம் இழக்கப்படுகிறது. அங்கே நம்மைத் தான் குற்றவாளியாக்கும் நிலைகள் உருவாகின்றது.

ஏனென்றால் தீமை செய்பவர்களின் உணர்வுகள் நமக்குள் வந்து அதே சொல்லை நாம் சொல்லும்போது நம்மைக் குற்றவாளியாக்கிவிடும். அப்பொழுது அந்தப் பக்குவம் தவறினால் என்ன ஆகும்…?

அந்தத் தவறு செய்பவனின் நிலைகளில் உண்மைகளை எடுத்துச் சொல்ல முடியாது.

ஆகவே நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து ஆத்ம சுத்தி செய்து கொண்டு அந்த உணர்வுகளை அவருக்கும் பாய்ச்சி
1.அவர் உண்மையை உணர வேண்டும் என்று எண்ணிவிட்டு
2.பக்குவமாக நீ நடந்துகொள் என்று நாம் அவரிடம் சொன்னால்
3.அங்கே அந்தப் பரிபக்குவ நிலை வருகிறது.

அப்பொழுது அந்தத் தீமையை நமக்குள் விடாதபடி இப்படி வாழ்க்கையில் மாற்றிப் பழக வேண்டும். சொல்வது அர்த்தமாகிறதல்லவா.

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஒவ்வொருவரும் உங்கள் மனதைப் பக்குவப்படுத்த வேண்டும்.


சாதாரண வாழ்க்கையில் இருப்பது போல் இல்லாமல் ஒவ்வொரு நொடியும் நம் சுவாசம் உயிர் வழியாக இருக்க வேண்டும்

 

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று சொல்லும் பொழுது
1.நம் நினைவுகளை அவசியம் புருவ மத்திக்குக் கொண்டு போய்ப் பழக வேண்டும்.
2.அப்படிச் செய்தோம் என்றால் நம் உயிரே நமக்குக் குருவாக இருப்பதையும்
3.நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்கக் கூடிய ஈசனாக நம் உயிரே இருப்பதையும் உணர முடியும்.

இந்த அடிப்படையில் நாம் எண்ணும் பொழுது எதை எண்ணுகின்றோமோ நம் உடலுக்குள் அந்த உணர்வுகள் ஊடுருவுவதும் நமக்குத் தெளிவாகத் தெரிய வரும்.

சாதாரணமாக இந்த வாழ்க்கையின் நிலையில் மூக்கின் வழி வருவதைச் சுவாசிக்கின்றோம்… நம் கண்கள் உற்றுப் பார்க்கின்றது… அதன் வழி தான் வெளியிலிருந்து மற்ற உணர்வுகளை எல்லாம் எடுக்கின்றோம். அது நம் ஆன்மாவாக மாறுகின்றது.

ஆன்மாவிலிருந்து முக்கின் வழியாகச் சுவாசிக்கும் போது உயிரில் பட்டு அந்த உணர்வுகளைப் பின் (பின்னாடி தான்) அறிகின்றோம்.

அதற்காக வேண்டித் தான் ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று அடிக்கடி புருவ மத்தியில் எண்ணச் சொல்கிறோம்.
1.அப்படிச் சொல்லும் பொழுது உயிரை எண்ணி அவனுடன் ஒன்றிடும் நிலையாக ஒரு பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.
2.அடிக்கடி அதன் வழி கூடி அருள் உணர்வுகளை உள்ளே செலுத்த வேண்டும்.

வாழ்க்கையில் பயன்படுத்துவது கண் வழி கூடி எடுத்து அதை அறிந்து கொண்டாலும் கூட தீமையான உணர்வுகள் நமக்குள் வராதபடி
1.அடுத்த நிமிடம் ஈஸ்வரா… என்று இதை இடை மறித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
2.அந்த அருள் உணர்வோடு நாம் ஒன்றும் போது தீமைகளை அது பிளக்கிறது.

நாம் எவ்வளவு நல்லவர்களாக இருந்து எவ்வளவோ நல்லதைப் பேசினாலும் கூட அடுத்தவர்களிடம் பழகும் போது அவர்களிடம் ஒரு சில குறைபாடுகளோ… குடும்பக் கஷ்டங்களோ இருக்கும் அல்லது நோயோ இருக்கும்.

அவர்கள் நம்மிடம் பேசும் போது சொல்லிலே அது எல்லாம் கலந்து வரும். அவரை நாம் கண்ணிலே பார்க்கும் போது அது எல்லாம் நம் ஆன்மாவில் வரும். அப்பொழுது நாம் சுவாசித்து உயிரிலே பட்ட பின் அதை உணர முடிகின்றது.

அந்தக் கஷ்டத்துடன் அவர்கள் வரும்போது “எனக்கு இந்த மாதிரி இருக்கின்றது…” என்று சொல்லும் பொழுது இந்த உணர்வுகள் நம்முடன் கலக்கின்றது.

இருந்தாலும்… அந்த நேரத்தில் சுதாரித்து
1.ஈஸ்வரா… என்று இந்த உணர்வை வைத்து இடைமறித்து அதைப் பலவீனப்படுத்த வேண்டும்.
2.இந்த உணர்வை வலுப் பெறச் செய்யும் பொழுது அவரிடம் கேட்டறிந்த தீமைகளை மாற்றுகின்றது.

நம்மிடம் அவர் பலவீனமாகச் சொல்லும்போது மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலிலே படர வேண்டும்… அவர் உடல் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை வலுவாகப் பாய்ச்ச வேண்டும்

ஏனென்றால் ஒரு பாத்திரத்தில் பொருள்களை எடுத்துப் போட்டு அதைச் சமைத்து… அதற்கப்புறம் எடுத்துக் கொடுத்தால் அது ருசியாக இருக்கும். சமைக்காமல் கொடுத்தால் ருசி வராது.

அதைப் போன்று தான் அவர் கஷ்டம்…! என்று சொன்னபின்… அடடா கஷ்டமாக இருக்கின்றதா…! என்று நாம் சொன்னோம் என்றால்
1.அதைத் தான் திரும்பவும் நமக்குள் சமைத்து
2.அதையே தான் (கஷ்டம்) அவருக்கும் கொடுக்கின்றோம்.

இதிலே ரொம்பவும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

அடிக்கடி நாம் அந்த அருள் சக்தியை எடுத்துச் சமைத்து நமக்குள் நல்லதாக்கிக் கொண்டே வர வேண்டும். நாம் பார்க்கும்… பழகும் அனைவருக்கும்… அந்த மகரிஷிகளின் அருள் ஒளியையே இணைத்துப் பழக வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

பக்தி எதுவாக இருக்க வேண்டும்…? விரதம் எதுவாக இருக்க வேண்டும்…? எதன் வழி வாழ வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

ஆனால் பக்தியில் இன்று என்ன செய்கிறோம்…?

லஞ்சம் கொடுத்து சினிமா டிக்கெட் வாங்குகிற மாதிரி… ட்ரெயினில் இடம் பிடிக்கக் காசு கொடுப்பது போல… கோவிலில் பூசாரிக்குக் காசைக் கொடுத்து ஆண்டவனிடம் சொல்லுங்கள்… முருகனிடம் சொல்லுங்கள்… என்று அர்ச்சனைக்குக் காசு எல்லாமே கொடுக்கின்றோம்.

பிறகு பூசாரிக்குக் கொஞ்சம் காசு கொடுத்தால் அவர் இன்னும் சிறிது நேரம் அங்கே தீபத்தைக் காட்டுவார். அவரிடம் கொடுத்து அங்கே காண்பித்து ஆண்டவனிடம் வரம் வாங்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

ஞானிகள் சொன்னதோ…
1.நம் உடல் ஒரு ஆலயம்,
2.நம் உயிர் ஈசன்
3.நாம் எடுக்கும் உணர்வுகள் தெய்வமாக நின்று இயக்குகிறது.

ஆகவே நாம் இந்த ஆலயத்தை எப்படிச் சுத்தப்படுத்த வேண்டும்..? நம் உடலான சிவனுக்குச் செய்யும் சேவை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்…?

நல்ல உணர்வுகளை எடுத்து உடலான சிவனுக்கு இங்கே சேவை செய்ய வேண்டும். அதே போன்று உயிரான ஈசனுக்கும் நல்ல உணர்வுகளை எடுக்கும்போதுதான் இங்கே அபிஷேகம் ஆகிறது.

வேதனையோ கோபமோ இதைப் போன்ற உணர்வுகளை நாம் சுவாசிக்க நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்…?

அடுத்த கணமே “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை எடுத்து இங்கே பட்ட தீமைகளை நீக்கி தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
1.அந்த உணர்ச்சிகளை மாற்றி
2.அருள் உணர்வுகளை நம் உடலுக்குள் பரவச் செய்யவேண்டும்.

நம் மீது அழுக்குப் பட்டால் நல்ல தண்ணீரை விட்டுக் கழுவுகிறோமா இல்லையா…?

நாம் நுகரும் (சுவாசிக்கும்) உணர்வுகள் உயிரிலே படுகின்றதா இல்லையா…?

அந்த உணர்வுகள் தான் உணர்ச்சியாகி இயக்குகிறது என்று தெரிகிறது அல்லவா…?

அப்பொழுது தீமையான உணர்வு உயிரிலே பட்டவுடன் அதை நீக்க என்ன செய்ய வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற இந்த உணர்வைக் கொண்டு துடைக்க வேண்டும்.

ஆனால் ஞானிகள் நமக்கு நெறிப்படுத்திய இத்தகைய உண்மை நிலைகளைக் காட்டாமலே சுத்தமாகவே நமக்கு மறைத்து விட்டார்கள்.

குருவின் துணை இருந்தால் தான் எதுவுமே நிலைத்து இருக்கும் – ஈஸ்வரபட்டர்

 

நமக்கு முன்னே பல கோடிச் சித்தர்கள் வாழ்ந்தார்கள் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள். திருவள்ளுவர் தோன்றி திகட்டாத பொக்கிஷத்தை நமக்களித்தார்…! என்றெல்லாம் இன்றும் சொல்லி வருகின்றார்கள்.

திருவள்ளுவரும் போகரும் கொங்கணவரும் ஏனைய எத்தனையோ சித்தர்களும் ஞானிகளும் நம்மைப் பொல் மனிதனாகத்தான் பிறந்தார்கள்.
1.அவர்கள் எல்லாம் இன்றும் உலகம் போற்றும் நிலையில் தன் ஞானத்தை வளர்த்து
2.தன் நினைவில் அவ் ஈஸ்வரனையே ஈசனாக்கி வாழ்ந்து காட்டினார்கள்.

அந்த நிலைகளை எல்லாம் இன்றையக் கலியில் நாம் விஞ்ஞானம் என்னும் ரூபத்தில் நமக்கு ஆண்டவன் அளித்த சக்தியைக் கொண்டுவந்து வீண் விரயமாக்கி விட்டோம்.

1.அன்றிலிருந்து இன்று வரை மனிதப் பிறவியில் மாற்றமில்லை.
2.ஆனால் மனித எண்ணத்தில் தான் பல கோடி மாற்றங்கள் வந்துள்ளன.

இன்றுள்ள நிலையில் ஆண்டவனை ஜெபிக்கும் நிலையிலும் உண்மை நிலைகளைச் சொல்பவர்களை எள்ளி நகையாடும் நிலையில் தான் உள்ளார்கள்.

இந்தக் கலியில் வந்த பல மேதைகள் இராமகிருஷ்ண பரமகம்சர்… விவேகாநந்தர்…! அவர்கள் நமக்களித்த உண்மை நிலைகளையும் “கருத்தில் ஏற்றுக் கொள்ளும் நிலையை மாற்றி வாழ்கின்றோம்…!”

இன்று பிறவி எடுத்த நாமும் ஆசையின் உந்தலுக்கு அடிபணியாமல் வாழ்ந்திட்டால் அன்றையக் கால சித்தர்களைப் போல் வாழ்ந்து காட்ட முடியும்.

1.வளரும் முறையிலிருந்து தான் இந்த நிலை எல்லாமே வருகின்றது
2.வளர்ந்த பின் நாம் அதை ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் “தியான நிலை ஒன்று தான் உண்டப்பா…!”

ஒவ்வொருவருவரும் தன் நிலையிலேயே ஏற்றுக் கொள்வதையும் இப்பொழுது வெளியிடும் நிலையில் இல்லாமல் தனக்குத் தெரிந்த உண்மை நிலைகளையும் வெளியிடும் பொழுது அதில் தவறுகள் உள்ளனவா…! என்ற பயத்தில் மறைத்து வாழ்கிறார்கள்.

இந்நிலையைப் போக்க நம் நிலைக்கு நாம் இந்த வழிக்கு வந்தமைக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு குருவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அந்தக் குருவின் சக்தியிலிருந்து பல உண்மை நிலைகளைப் பெற முடியுமப்பா…! நீங்கள் இப்பொழுது போற்றிடும் திருவள்ளுவரின் நிலைக்கும் ஒரு மாபெரும் ரிஷி இருந்தார்.

இப்படி ஒவ்வொருவரின் நிலைக்கும் ஒவ்வொரு குருவின் நிலை கொண்டு தான் ஆரம்பப் பாடநிலை அறிந்திட முடியுமப்பா…!

அந்தக் குருவின் நிலை நாம் தியானத்தில் அமர்ந்து அந்தக் குருவை எண்ணி வணங்கிடும் காலத்தில் அவர் பெற்ற சக்தி நிலை கொண்டு நமக்குப் பல உன்னத நிலைகளை ஈர்த்து அளித்திட முடியும்.

1.இந்தக் கலி காலத்தில் ஒரு போகராகவோ திருவள்ளுவராகவோ…
2.நாம் ஏன் வாழ்ந்து காட்டிட முடியாது…?

அவர்களுக்கும் மேல் உயர்ந்த நிலையை அவர்களை எண்ணி ஜெபமிருக்கும் பொழுதே அவர்கள் நமக்களிக்கும் உன்னத நிலை பெற்று வாழ்ந்திடலாம்.

நம்மிடமுள்ள பயத்தைப் போக்கி “நாம் பிறவி எடுத்த பயனைப் பெற்றுக் காட்ட வேண்டும்…!” என்ற வைராக்கிய எண்ணம் கொண்டு வாழ்ந்திட வேண்டும்.

மாய ரூபங்கள் வேண்டாம்… ஒளியான உணர்வுகளுக்கு மட்டும் ஆசைப்படுங்கள்

 

தியானத்தில் உள்ளோர் ஒரு சிலர் எனக்குக் காட்சி கிடைத்தது… நல்லதானது…! என்றெல்லாம் சொல்வார்கள்.
1.காட்சி கொடுத்து நல்லதாகும் என்ற நிலை வந்தாலும்
2.அது சில நாளைக்குத் தான் இருக்கும்.

நானும் (ஞானகுரு) ஆரம்பத்தில் நிறைய இது போன்று காட்சி கொடுத்துக் கொண்டுதான் இருந்தேன். பிற்பாடு இதையெல்லாம் கூடாது என்பதற்காக வேண்டி நிறுத்தி விட்டேன்.

தியானத்தின் மூலம்..
1.அந்த மெய் ஒளியை நீங்கள் பெற வேண்டுமே தவிர
2.இந்த உடலில் விளைந்த உணர்வினை யாரும் தேடாதீர்கள்… நாடாதீர்கள்…!

நம் குருநாதர் காட்டிய வழிகள் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து இங்கே வளர்க்க வேண்டுமே தவிர அதைப் பார்க்க வேண்டும்… இதைப் பார்க்க வேண்டும்… என்று ஆசைப்படக் கூடாது.

இந்த உடல் மடியக் கூடியது தான். உடலில் உருவான நிலைகளில் அருளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்க்தில் அந்த மெய் ஞானிகள் பெற்ற ஒளி உணர்வுகளைப் பெற ஆசைப்பட வேண்டும்.

குருநாதர் வந்தார்… தெய்வங்களின் காட்சி கிடைத்தது என்ற நிலைக்குப் போய் விட்டோம் என்றால் மீண்டும் மீண்டும் இந்த உடலில் விளைந்த உணர்வுகள் தான் நமக்குள் வளரும். அதே தொடருக்குத் தான் நம்மையும் இழுக்கும். கடைசியில் இந்தப் புவியின் ஆசை தான் வரும்.

ஆகவே உருவங்களாகக் காட்சி கிடைத்தாலும்…
1.குருநாதர் காட்டிய வழியில் உடனே அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்
2.அந்த ஒளியான உணர்வுகள் உடலிலே விளைய வேண்டும் என்று
3.மெய் வழியில் சென்று அந்த வலுவைத் தான் கூட்ட வேண்டும்.

அப்படி இல்லாதபடி சாமி (ஞானகுரு) வந்தார்… காட்சி கொடுத்தார் எனக்கு நல்லதானது… காட்சி கொடுத்தார் உடல் நல்லாதனது…! என்று சொல்வதெல்லாம் உடல் இச்சைக்குத் தான் மாறும்.

அதைத்தான் யாம் வன்மையாக கண்டிப்பது. இந்த நிலையிலிருந்து எல்லாம் நாம் மாறுபட வேண்டும்.

1.மெய் ஒளியை நமக்குள் பெற வேண்டும்
2.நம்முடைய பார்வையால் பிறருடைய தீமைகள் நீங்க வேண்டும்
3.சாமி செய்தார் என்பதற்குப் பதில் சாமி பார்வை பட்டு பிறருடைய தீமைகள் எப்படிப் போனதோ
4.அதே போல் நம் பார்வையால் பிறருடைய தீமைகளை அகற்ற வேண்டும்
5.ஒளியான உணர்வுகள் பேரருள் பேரொளியாக வளர வேண்டும்
6.அத்தகைய சக்தியை நாம் பெற வேண்டும்… அது தான் முக்கியம்.

வாழும் வரை இப்படியே வாழலாம் என்ற எண்ணத்தில் தான் இன்று உள்ளார்கள் – ஈஸ்வரபட்டர்

 

இந்த மனிதப் பிறவி எடுக்க ஆண்டவனின் சக்தியில் பல நாள் தவமிருந்து நாம் பெற்றதே இப்பாக்கியம்.

ஆனால் நாம் எடுத்த மனிதப் பிறவியையே பெரும் பயத்துடனும் கலக்கத்துடனும் வாழ் நாட்களை வீணடித்துக் கொண்டு வாழ்கின்றோம்.

1.நாம் எடுத்த பிறப்பின் பயனைப் பெறுவது என்பது
2.நம் வாழ் நாட்களை வீண் விரயம் செய்யாமல் வாழ்ந்து காட்டுவது தான்…!

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு குணாதிசயத்தைப் பெற்றுள்ளான். மனிதப் பிறவி எப்பொழுது எடுத்துள்ளோமோ அப்பொழுதே அந்த ஆண்டவனின் “பரிபூரண சக்தி” பெற்றவர்களாகத்தான் தாயின் கருவுக்கே வந்து உதிக்கின்றோம்.

இந்த நல்ல நிலையில் வந்தவர்கள் எல்லாம் நல்ல நிலையில் வாழ்ந்திடாமல்
1.பெரும் பேராசை நிலை கொண்டு பல விஞ்ஞான ரூபங்கள் எடுத்து
2.கடைசியில் தன்னைத் தானே அழிக்கும் நிலைக்கு வந்துள்ளார்கள்
3.இன்றைய உலக நிலை இது தான்.

விஞ்ஞான ரூபத்தில் வந்த மனிதர்கள் எல்லாம் தன்னுள் இருக்கும் சக்தியை ஒவ்வொருவரும் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொண்டால் விஞ்ஞானத்தையே வெல்லும் மெய் ஞானத்தைக் கண்டிடலாம்.

கூடுவிட்டுக் கூடு பாய்கின்றார்கள் சித்தர்கள்… என்றெல்லாம் கதைகளாகவும் காலப்போக்கிற்காகவும் படிக்கின்றார்கள். ஆக இன்றைய மனிதர்களின் குண நிலையெல்லாம்… பெரும் உல்லாசத்தைக் காணும் குணமாகவே உள்ளது…!

கனவும் நினைவும் உள்ள காலமாக உள்ளதப்பா இந்தக் காலம்.
1.கருத்துடன் நமக்குப் பல பெரியோர்கள் போதித்த கருத்தையெல்லாம்
2.தன் உல்லாச வாழ்க்கைக்காக வியாபாரமாக்கத்தான் தெரிந்திருக்கின்றது
3.தன்னுள் இருக்கும் உண்மை நிலைகளை வீண் விரயமாக்கி வாழ்கிறார்கள்.

“வாழும் வரை வாழலாம்…!” என்ற எண்ணம் தான் மக்களின் மனதிலே பதிந்துள்ளது. இந்த உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகு “அழியாத ஆத்மா” எப்படியெல்லாம் வட்டமிட்டுக் கொண்டுள்ளது…? என்று யாருமே எண்ணிப் பார்ப்பதில்லை.
1.எண்ணிப் பார்ப்பதில்லை என்றால்
2.எண்ணத்தில் பயம் வருவதால் தான் எண்ணிப் பார்ப்பதில்லை…!

இன்றுள்ள நிலையில் நாம் நமக்குத் தெரிந்த ஒரே வழி… அச்சக்தியின் நிலை கொண்டு சகல ஜீவராசிகளையும் காத்து வாழ்ந்திட… அவ் ஈஸ்வர தியானம் இருப்பது ஒன்றே தான்.

அச்சக்தியின் நிலை கொண்டு ஒவ்வொருவரும் இந்த உலகில் உள்ள பல கோடி உண்மை நிலைகளைத் தன்னுள் ஈர்க்க முடியும்.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்…! என்று நம் முன்னோர்கள் சொல்லவில்லையா…! எந்நிலையையும் ஜெயம் கொண்டு வாழ்ந்து காட்டிட வேண்டுமப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

காரமான பொருள்களைத் தனியாக உட்கொள்ளும் போது அந்தக் காரத்தின் உணர்ச்சி தான் முன்னிலையில் நிக்கும். காரம்… காரம்… என்று தான் சொல்லிக் கொண்டேயிருப்போம்.

ஆனால் இந்தக் காரத்தை அடக்க “சப்…!” என்று இருக்கும்
1.மற்ற காரம் இல்லாத பொருள்களை இதனுடன் இணைக்கப்படும் போது
2.காரத்தின் தன்மை குறைந்து சுவை மிக்க நிலைகளாக உருவாகின்றது.

நமது வாழ்க்கையில் வெறுப்போ வேதனையோ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ கோபமோ இத்தகைய உணர்வுகளை நாம் நுகர்ந்தறியப்படும் போது உயிரான ஈஸ்வரலோகத்தில் அவை எல்லாம் உருவாக்கப்படுகின்றது.

ஏனென்றால்…
1.பிறருடைய துயரங்களையும் துன்பங்களையும் கேட்டறிந்து அவர்களுக்கு உதவிகள் செய்தாலும்
2.கேட்டறிந்த அந்த உணர்வுகளை நாமும் நுகர நேர்கின்றது.
3.அந்தத் துயரப்படும் உணர்வுகள் நமக்குள் வந்த பின் நம்மையும் துன்பப்படச் செய்கிறது
4.அப்பொழுது நாம் நுகர்ந்த அந்தத் துன்பமான உணர்வுகளை தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா…!

அடுத்த கணமே ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரிடம் கேட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வினை உடலுக்குள் சேர்த்துப் பழக வேண்டும்.

முதலில் சொன்ன மாதிரி தனிக் காரத்தை அடக்கப் பல நல்ல சரக்குகளைச் சேர்த்து அதைச் சுவைமிக்கதாக மாற்றுவது போன்று
1.நாம் கேட்டறிந்த துன்பமான துயரமான உணர்வின் தன்மையை அடக்க
2.வலுவான அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளைக் கூட்டி விட்டால்
3.நாம் நுகர்ந்த தீமைகளைத் தணியச் செய்து நல்ல உணர்வின் அணுக்களாக மாற்றும்.

நாம் நல்ல குணங்கள் கொண்டு இருக்கும் பொழுது ஒரு வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தால் அந்த வேதனைப்படும் உணர்வின் தன்மை அதிகரித்து நல்ல குணத்தின் வலிமையை அது குறைந்து விடுகின்றது.

ஆகவே நம்முடைய நல்ல குணத்தின் தன்மையை நாம் அதிகமாக வலு பெறச் செய்ய வேண்டும். அதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அவசியம் நாம் நுகர வேண்டும்.

அப்பொழுது உயிரான ஈஸ்வராலோகத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உருவாகத் தொடங்குகிறது.

“பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்…!” என்ற நிலையில் ஆறாவது அறிவால் அருள் மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து தீமை செய்யும் உணர்வுகள் நம் உடலில் உருவாகாதபடி அருள் உணர்வுகளை உருவாக்கிடல் வேண்டும்.

தீமை என்ற உணர்வுகளைக் குறைத்து தீமைகளை அகற்றிடும் வலிமை கொண்ட உணர்வின் அணுக்களாக எடுக்கும் போது
1.ஈஸ்வரலோகத்தில் அந்த உணர்வுகள் உருவாக்கப்பட்டு
2.நம் இரத்தங்களில் கலக்கச் செய்யப்படும் போது அது இந்திரலோகத்தில் கருத்தன்மை பெற்று
3.தீமைகளை மாற்றிடும் வலிமை பெற்ற பிரம்மலோகமாக… நல்லதைச் சிருஷ்டிக்கும் பிரம்மலோகமாக (உடலாக) மாறுகின்றது.

நன்மைகள் செய்யத் துணிவு வேண்டும் என்று நம் குருநாதர் சொன்னதன் உட்பொருள் என்ன…?

 

நாம் ஒன்றுமே செய்யவில்லை என்றாலும் கூட ஒரு சிலர் நம்மிடம் பகைமை கொண்டு பேசுவார்கள். நல்லதைச் செய்தாலும் கூட இந்த மாதிரி வரும்.

காரணம் என்ன என்றால்…
1.கெடுதல் செய்த உணர்வு கொண்ட ஆவி அவர் உடலிலே இருந்தால்
2.நீங்கள் நல்லது செய்வதைப் பார்த்தாலே அவருக்குப் பிடிக்காது.
3.எதிரி என்ற நிலைகளில் உங்களைக் கண்டாலே இல்லாததை எல்லாம் சொல்லும்.

ஒரு உடலுக்குள் இந்த மாதிரி ஆவி இருந்தாலே நாம் தியானம் செய்கிறோம் என்று சொன்னாலே போதும். நம்மைப் பார்த்ததும்…
1.என்னை ஏதோ செய்கின்றான்… இதைச் செய்கின்றான்.. அதைச் செய்கின்றான்…! என்று சொல்ல ஆரம்பிக்கும்
2.நாம் ஒன்றுமே செய்யவில்லையே… இப்படிச் சொல்கிறதே…! என்று நினைப்பீர்கள்.

அந்த உணர்வை நுகர்ந்தாலே “நான் ஒன்றுமே சொல்லவில்லை இந்த மாதிரித் தவறாகச் சொல்கிறான்… பாவிப்பயல்…!” என்ற இந்த அலைகளில் சிக்கிவிடுவோம்.

அந்த மாதிரி நேரத்தில் எல்லாம்…
1.உடனே மகரிஷியின் அருள் உணர்வை நமக்குள் எடுத்து வலுவாக்கிக் கொண்டு
2.அவருக்குள் இருக்கும் அந்த ஆவி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.அவருக்குள் இருந்து நன்மை செய்யும் செயல்கள் வர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

இதிலே நமக்கு அந்தத் துணிவு அவசியம் வேண்டும். அதனால் தான் நன்மைகள் பல செய்யத் துணிவு வேண்டும் என்று சொல்வது. அந்த இடத்திலே துணிவு இருந்தால் தான் அதைச் செய்ய முடியும்.

1.நமது குருநாதர் கொடுத்த நிலைகளை ஒவ்வொன்றையும் நீங்கள் வரிசைப்படுத்திப் பாருங்கள்
2.நன்மை செய்ய வேண்டும் நமக்குள் அது வளர வேண்டும் என்றால் அதற்குத் துணிவு வேண்டும்.

உடலில் ஆவி உள்ளவருக்கு அவர் கஷ்டப்படுகிறார் உதவி செய்ய வேண்டும் என்று நாம் சொன்னால் போதும்…!

ஐய்யய்யோ பாவிப் பயல்…! எனக்கு ஏதோ செய்கின்றான்… விஷம் வைக்கின்றான்… மருந்து வைக்கின்றான்…! என்று சொல்லும்… பார்க்கலாம் இதை எல்லாம்…!

அவர்கள் உடலில் இருக்கும் அந்த ஜீவான்மா (ஆவி) மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அந்த உடலிலிருந்து நன்மை செய்யும் நிலைக்கு வர வேண்டும் என்று நாம் எண்ணி எடுக்க வேண்டும்.

ஏனென்றால் இதையெல்லாம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் நல்லது செய்கின்றோம் என்றாலும் கூட அடுத்த வீட்டுக்காரர் நம்மைப் பற்றி இல்லாததை எல்லாம் சும்மா சொல்லிக் கொண்டே இருப்பார். காரணம் அவர் உடலில் ஒரு ஆன்மா இருக்கும்.

ஆக… ஆன்மா இல்லாதவர்களே இல்லை.

ஆனால் நம்மைக் கண்டவுடனே அதற்கு வெறுப்பாக இருக்கும்… உடலில் எரிச்சல் ஆகும்…! அப்படி நம்மை எரிச்சலுடன் பார்க்கும்போது நம் ஆன்மாவில் முன்னாடி அது அதிகமாகப் பெருகிவிடும். இது பெருகி விட்டால் அதைத்தான் நாம் சுவாசிப்போம். அந்த உணர்வுகள் தான் நம்மை இயக்கும்.

ஆனாலும் உயிரிலே பட்டபின் இந்த உணர்வை வெளிப்படுத்துவது நம் உயிரே தான். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்கள் வந்தாலும்
1.உடனே இடைமறித்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.இங்கே புருவ மத்திக்கு நினைவைக் கொண்டு வர வேண்டும்.
3.இப்படிப் பல முறை கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி உணர்வின் சக்தியை தனக்குள் எடுக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று மாற்றிக் கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில் எந்த உடலில் எப்படிப்பட்ட ஆன்மா இருந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். அந்த நன்மை செய்யும் சக்தியாக வளர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இதைச் செய்தால் அவர்கள் உணர்வு நம்மை எதிர்மறையான உணர்வுடன் இயக்காது. அதே சமயத்தில் அவர்களுக்குள்ளும் இந்த அருள் உணர்வுகள் சென்று ஊடுருவி இயக்கும். விலகிச் சென்றாலும் சென்று விடுவார்கள். நமக்குத் தொல்லை தர மாட்டார்கள்.

1.துணிவுடன் செய்து நமக்குள் இருக்கும் நல்ல குணத்தைக் காக்க வேண்டும்.
2.அவர்களுக்குள்ளும் இந்த அருள் உணர்வை நாம் பாய்ச்சும் போது
3.அங்கேயும் உண்மையை உணர்த்தும் சக்தியாக அவர்களை இயக்கும்.

செயற்கையில் உருவாக்கப்பட்ட நஞ்சை இயற்கையாலும் இன்று வடிகட்ட முடியவில்லை – ஈஸ்வரபட்டர்

 

இன்று உலகினிலே பல வகையான ஜீவராசிகள் உள்ளன. ஒவ்வொன்றும் தன் நிலைக்கு ஏற்பச் சுவாச நிலையை எடுக்கின்றது.
1.மனிதரின் சுவாச நிலை தான்
2.எல்லாத் தன்மையையுமே தன் சுவாசத்தில் ஈர்க்கும் நிலையில் உள்ளது.

மனிதனின் சுவாச நிலை அவன் ஒவ்வொரு எண்ணம் கொண்டும் எண்ணிடும் பொழுது அந்நிலையில் அவன் எடுக்கும் சுவாச நிலையைப் பொறுத்து அவன் வாழ்கின்றான்.

இவ்வுலகினிலே நாகப்பாம்பைப் போல்
1.நச்சுத் தன்மையுள்ள கொடிய விஷத்தைத் தன்னுள் ஈர்த்து எடுத்திடும் ஜீவராசிகள் இல்லாவிட்டால்
2.இந்தக் காற்றில் கலந்துள்ள கொடிய விஷங்கள் எல்லாம் பெரும் தீங்கைத் தான் விளைவித்திருக்கும்.

அவ் ஈசனின் சக்தியிலிருந்து நம் கண்ணிற்கும் நம் எண்ணத்திற்கும் தெரிந்திடாமல் பல வகை உண்மை நிலைகள் உள்ளன. எல்லாமே அவ்வீசனின் சக்தியில் வந்தவை தான்.

ஒவ்வொரு தாவரமும் ஒவ்வொரு நிலையில் உற்பத்தியாகி வளர்ந்திருக்கின்றன. தாவரங்கள் எல்லாம் அதனதன் சுவாச நிலை மேல் நோக்கி அந்தச் சூரியனின் சக்தியை நேராக ஈர்க்கும் நிலையில் உள்ளன.

பல வகைத் தாவரங்களிலும் பல வகை நல்ல உணவாகவும் மனிதருக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் அமையப் பெற்றுள்ளன.

நாம் எண்ணுகின்றோம். உபயோகமில்லாமல் இப்படி ஏன் பல வகைத் தாவரங்கள் உள்ளன என்று…? அச்சக்தியின் அருள் பெற்றுத் தான் அவையும் வளர்கின்றன… நல்ல கனி கொடுக்கும் தாவரங்களும் வளர்கின்றன.

அந்தக் கொடிய விஷமுள்ள தாவரங்கள் எல்லாம் இல்லாவிட்டால் இந்தக் காற்றிலிருந்து இன்னும் பல தீய நஞ்சு கலந்த அணுக்கள் தான் சுற்றிக் கொண்டிருக்கும்.
1.அந்த விஷ அணுக்களையே உண்டு உயிர் வாழும் தாவரங்கள் இருப்பதால் தான்
2.நம்மைச் சுற்றியுள்ள இந்தக் காற்றையே சுத்தமாக்கி நாம் சுவாச நிலைக்கு ஈர்த்துக் கொள்ள முடிகிறது.

இந்த உலகில் தோன்றியவை எதுவுமே வீணாகவும் உபயோகமற்றதாகவும் தோன்றவில்லை.
1.ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தன் சுவாச நிலையைக் கொண்டு தோன்றி
2.இந்த உன்னதமான உலகத்தைப் பல கோடி ஆண்டுகள் காத்து வருகின்றது.

இன்றைய உலகத்தில் விஞ்ஞானம் என்ற பெயரால் பல வினைகளைச் செய்து… தன்னையே தான் அழித்துக் கொள்ளும் இந்த மனிதரின் நிலைகள் எல்லாம்… இன்னும் ஜீவனுடன் உயிர் வாழ்கிறதென்றால் எந்த நிலையில்…?

நச்சுத் தன்மையைத் தானே உண்டு வாழும் நாகப் பாம்புகளும்… நச்சுடன் நச்சாக வளர்ந்து பெரும் விஷத் தன்மையுள்ள நாம் சொல்லும் செடி கொடிகளும் இல்லாவிட்டால்…
1.இன்று வீசும் காற்றே பெரும் விஷமுள்ளதாக வீசி
2.எந்த ஜீவராசிகளுமே உடலுடன் வாழ்ந்திட முடிந்திருக்காதப்பா…!

இந்த நச்சுத் தன்மை பாம்பிலும் தாவரங்களிலும் தான் உண்டு என்று இம்மனிதர்கள் எண்ணுகின்றார்கள். இவை எல்லாம் நமக்கு நன்மையைத்தான் அளிக்கின்றன.

இம்மனிதனாக வாழ்வதற்கு மாபெரும் தவமிருந்து நமக்கு அந்தச் சூரியனிலிருந்து பல ஜென்மங்கள் எடுத்து பெரும் வாழ்க்கையை வாழும் பாக்கியம் பெற்ற நாம் “நம் மனைதையே விஷமாக்கி வாழ்கின்றோம்…!”

இந்த மனித உடலைப் பெற்று வாழ்வதே நாம் செய்த பாக்கியம் தான். இந்தப் பாக்கியம் பெற்ற நாம் இந்த மனித உடல் உள்ள பொழுதே நாம் பிறவி எடுத்த பயனைப் புரிந்து “நம் மனதையே நல் மனதாக்கி வாழ்ந்திட வேண்டும்…!”

பிறவி எடுத்த புனிதத் தன்மையைப் போற்றிக் காத்து எவன் ஒருவன் வாழ்கின்றானோ… அவனெல்லாம் அச்சக்தியின் சக்தி பெற்ற… நம்முள் கலந்துள்ள பல தேவர்களின் தேவர்களைக் கண்டிடலாம்.

1.அந்தத் தேவர்களின் தேவர்களாகவும் நாம் ஐக்கியப்பட்டு
2.உடலை விட்டு நம் ஆத்மா செல்லும் நிலைக்குள் சகல நிலையையும் பெற்றிடும் பாக்கியம் பெறத்தான்
3.இந்தப் பாட நிலையெல்லாம் அளிக்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நாம் ஒரு வேலை செய்யும் பொழுது கையிலே அழுக்குப்படுகின்றது. ஆனால் அதைத் துடைத்துவிட்டுத் தான் உணவு உட்கொள்கின்றோம். அடுத்த காரியத்தைத் தொடர்கின்றோம்.

ஏனெனில் நாம் கையிலே அழுக்கானபின் தொழில் செய்தபின் அதைத் துடைக்காதபடி மற்றொரு இடத்தில் செயல்பட்டால் அதுவும் மாசு பட்டுவிடும்.

இதைப்போல ஒருவருடைய நிலைகள் நாம் பார்த்துக் கொண்ட பின் அவர்களைக் காப்பாற்றும் எண்ணம் கொண்டு காப்பாற்றினாலும் அதைத் துடைக்கும் நிலை நமக்கு வரவேண்டும். அதைத் துடைத்திடும் உணர்வு நமக்குள் உண்டு.

ஒரு குழந்தைக்குத் தலைவலி வந்து விட்டால் பச்சிலை இங்கிருக்கின்றது என்றால் நாம் எப்படி தேடிச் சென்று, கொண்டு வந்து அதைக் குழந்தைக்குக் கொடுக்கின்றோம். நம் ஆறாவது அறிவு இப்படி வேலை செய்கிறது.

இதைப் போலத் தான் தீமைகள் வரும் பொழுதெல்லாம் தன் உணர்வின் எண்ணத்தால் “மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும்…!” என்ற ஏக்க உணர்வு கொண்டு எண்ணி நமக்கு முன் சுழன்று கொண்டு இருக்கும் அருள் ஞானியின் உணர்வைத் தனக்குள் எடுத்துத் துடைத்துப் பழக வேண்டும்.

அந்த மெய் ஞானிகள் அனைவரும்
1.தன் வாழ்க்கையில் வந்த எதிர் நிலைகள் அனைத்தையும்
2.தனக்குள் தீமைகள் விளைவித்த அந்தச் சக்தியை அவர்கள் துடைத்துப் பழகி,
3.நஞ்சினை அடக்கி உணர்வினை ஒளியாக்கி,
4.ஒளியின் சிகரத்தால் பொருள் கண்டு உணரும் ஆற்றல் பெற்று
5.மற்ற எந்த சக்தியானாலும் தெரிந்திடும் ஆற்றல் பெற்று
6.தெரிந்து கொள்ளும் உணர்வின் தன்மையை வளர்த்து
7.தங்கள் உணர்வு அனைத்தையும் ஒளியாக மாற்றிச் சென்றவர்கள்.

இதைத்தான் ஏழாவது அறிவு சப்தரிஷி என்று சொல்வது. இதைச் சப்தரிஷி மண்டலம் என்று சொல்வார்கள்.

மனிதனாக வளர்ந்து அந்த மெய் ஞானி அவன் தெளிந்து நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி,
1.அவன் உடலிலே விளைய வைத்த ஆற்றல்களும்
2.அவன் உடலில் வெளிப்பரப்பிய மணமும் மூச்சலைகளும்
3.அவன் எண்ணத்தால் வெளியிட்ட உணர்வும் இந்தச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்துள்ளது.

இப்பொழுது உங்களுக்கு யாம் உபதேசிக்கும் பொழுது அவர்கள் உடலில் விளைய வைத்த மணங்களை நீங்கள் நுகர நேருகின்றது.

அந்த மணங்களை நீங்கள் நுகரும் பொழுது உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த வேதனைகளையும் மனக்கவலையையும் நீக்கிடும் சக்தியாக அமையும்.

நம் ஆன்மாவில் வரும் தீமைகளை உடனே கட் (CUT) பண்ணப் பழக வேண்டும் – ஞானகுரு

 

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா… என்று உயிரிடம் வேண்டி இதை ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் இணைத்துக் கொண்டே வரவேண்டும்.

இதை நினைப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகப்போகின்றது…!
1.எத்தகைய எதிர்மறையான உணர்வு வந்தாலும்
2.நம் ஆன்மாவில் வரும் அந்தத் தீமைகளைக் “கட்” பண்ணப் (CUT – நிறுத்தி) பழக வேண்டும்.

இதைத்தான் நரசிம்மன் வாசல்படி மீது அமர்ந்து மடி மீது வைத்து இரண்யனைப் பிளந்தான் என்று சாஸ்திரம் சொல்கிறது.
நரசிம்மன் என்றால் உயிர்…
வாசல்படி என்பது நம் மூக்கு..
மடி என்பது ஆன்மா…
இரண்யன் என்பது விஷமான (தீமையான) உணர்வு…!

நமது ஆறாவது அறிவு கார்த்திகேயனாக இருக்கின்றது. அந்த அறிவின் தன்மை கொண்டு ஒளியின் தன்மை பெற்ற மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் கொண்டு வரப்படும் பொழுது அறியாது உள் புகும் இருளை மாயக்கின்றது.

இந்த வழியில் நாம் செல்ல வேண்டும் என்று தான் எத்தனையோ காவியங்களையும் சாஸ்திரங்களையும் ஞானிகள் நமக்குக் கொடுத்துள்ளார்கள்.

ஆறாவது அறிவு கொண்டு அந்த அருள் ஒளியை எடுத்து உடலுக்குள் செலுத்தி அந்த உணர்வுகள் உள்ளே (நமக்குள்) வலுப்பெற்ற பின் தீமைகளை அகற்றுகின்றது.

முன் வழி கூடி நீக்க முடியுமா…? என்றால் முடியாது. அதாவது…
1.தீமைகளை அப்படியே நேருக்கு நேர் நாம் தள்ள முடியாது.
2.உயிர் வழியாக மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து உடலுக்குள் பெருக்கி வலுவாக்கி
3.அதிலே கொதித்து வரும் அந்த அலைகள் மூலம் ஆன்மாவிலிருக்கும் தீமைகளைப் பிளந்து தள்ள வேண்டும்.

எப்படித்தான் இருந்தாலும் ஒரு சங்கடமான எண்ணத்துடன் தியானத்தில் நீங்கள் உட்கார்ந்து பாருங்கள்.
1.உட்கார்ந்தால் எழுந்து போகச் சொல்லிக் கொண்டுதான் இருக்கும்…
2.உட்கார முடியாது… ஆட்டம் கட்டும்… எப்படியோ வரும்…
3.யார் யார் என்னென்ன சொன்னார்களோ அந்த நினைவு வந்து அவர்கள் மீதெல்லாம் வெறுப்பு அதிகமாக வரும்
4.கடைசியில் தியானத்தைச் செய்வதை விட்டுவிட்டு வெறுப்பான உணர்வுகள் கூடிய பின் எழுந்து விடுவோம்.

தியானத்தில் உட்கார்ந்து இருந்தீர்கள்…! என்ன இப்பொழுது எழுந்து விட்டீர்கள்…! என்று வீட்டிலே கேட்டால் அவர்களிடம் சண்டைக்குச் செல்ல ஆரம்பிப்போம்.

கணவனாக இருந்தாலும் மனைவியாக இருந்தாலும் கேட்டவர்கள் மீது கோபம் வந்து விடும். ஏனென்றால் வெறுப்பின் உணர்வுகள் அதிகமானபின் இத்தகைய சொல்தான் வரும்.

அடிக்கடி உங்களிடம் ஆத்ம சுத்தி செய்யச் சொல்வதன் நோக்கமே ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களுக்குள் இப்படி வரும் தீமைகளை வலு இழக்கச் செய்வதற்குத் தான்.

அவ்வாறு ஆத்ம சுத்தி செய்து கொண்டே வந்து
1.வரிசைப்படுத்தி எல்லா குணங்களிலும் எல்லா உணர்வுகளும்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை இணைத்துக் கொண்டே வரவேண்டும்.

அந்த அருள் ஒளியை நாம் உருவாக்கத் தெரிந்து கொண்டால் “பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்…” என்ற நிலைக்கு வருகின்றோம்.

ஆகவே கார்த்திகேயா…! நாம் அறிந்திடும் அறிவு பெற்றவர்கள். அருள் ஒளியின் தன்மை கொண்டு எதையுமே நல்லதாக உருவாக்கும் திறன் பெற்றவர்கள். நீங்கள் சீராகப் பயன்படுத்த வேண்டும் என்று தான் இதை உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).

எண்ணம் போல் தான் நம் வாழ்வு – ஈஸ்வரபட்டர்

 

1.நம் எண்ணத்தில் பல நினைவுகளைச் சிதறடித்துக் கொண்டு நாம் சுவாசம் எடுக்கும் பொழுது
2.அந்த நிலையே நம் எண்ணத்தையும் சுவாசத்தையும் மாற்றி அமைத்து
3.அதனால் பல அணுக்களின் உந்துதலுக்கு நாம் ஆளாகி
4.மீண்டும் மீண்டும் பல பல எண்ணங்களை எண்ணியே
5.நம் சுவாச நிலையைக் கெடுத்துக் கொள்கின்றோம்.

நாம் எந்த நிலையில்… எந்த நினைவில் இருக்கின்றோமோ… அந்நிலையில் எண்ணும் எண்ணத்தை வைத்து நாம் சுவாசம் எடுக்கும் பொழுது “அந்நிலையேதான்…” வாழ் நாட்களில் நம்முடன் கூடவே வருகின்றது.

1.ஆண்டவனை நினைத்துச் சுவாசம் விடும் பொழுது
2.அந்தச் சுவாச நிலை கொண்டு நம் உயிரணுவிற்குப் பெரும் உன்னத நிலை கிட்டுகின்றது.

ஆனால் அதை நாம் புரிந்திடாமல்…
1.நம் வாழ்க்கையையே…
2.நம்மையே நாம் அடிமையாக்கிக் கொள்கின்றோம்.
3.அசுத்த சுவாச நிலை என்பதன் பொருளும் இது தான்.

நம் எண்ணத்தைக் கொண்டு தான் நம் சுவாச நிலையில் பலவித நறுமணங்கள் பெற முடிகிறது. நல்ல மணமுடைய சுவாச நிலையில் உள்ள பொழுது நம் உயிர் நிலைக்குப் பெரும் ஊட்டம் கிடைக்கின்றது.

நாம் வாழ்வதுவும் மடிவதுவும் நம் எண்ணத்தைக் கொண்டு தான்…!

இதைப் புரிந்து கொண்டு அந்த நிலையில் இருந்து தான் பல கோடிச் சித்தர்கள் இன்றும் வாழ்கிறார்கள்.

1.வாழும் வாழ்க்கையில் நிறைவு பெற்று வாழும் பொழுது
2.அந்தச் சித்தர்களின் நிலையைப் போல இந்த மனித உடலைப் பெற்ற நாம் எல்லோருமே பல கோடி ஆண்டுகள் வாழ்ந்திடலாம்.

நம் உயிராத்மாவிற்கு உயர்ந்த நிலையைத் தேடிக் கொள்ளலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒரு விஷச் செடியின் அருகிலே இருக்கும் ரோஜாப்பூ தன் மணத்தின் வலிமை கொண்டு அந்த விஷச் செடியின் மணத்தைத் தனக்குள் அணுகாது தடுத்து நிறுத்தி விடுகிறது.

இதைப்போல தான் அருள் ஞானிகள் தீமையைத் தனக்குள் அணுக விடாது நறுமணத்தின் மகிழ்ச்சியின் நிலைகள் உணர்வாக ஒளிகளாக ஒளியாக மாற்றிக் கொண்டு இன்றும் விண்ணுலகில் சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அந்தச் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் அலைகள் நமக்கு முன் படர்ந்து கொண்டிருப்பதை நீங்கள் அடிக்கடி கவர்ந்து உங்கள் உடலுக்குள் சக்தி வாய்ந்த மணங்களாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

அப்பொழுது அந்த மணத்தின் உணர்வின் செயலாக நல்ல எண்ணங்கள் நம்மை இயக்கி நம் சொல்லின் தன்மை கேட்போருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கும். நாம் எடுத்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள்ளும் மகிழ்ச்சியை ஏற்படச் செய்யும்.

இத்தகைய நிலைகளை நாம் உருவாக்க உருவாக்க தீமைகளைக் கண்ணுற்றுப் பார்த்தாலும் ரிமோட் கண்ட்ரோல் (REMOTE CONTROL) போல
1.அந்தத் தீமைகள் நம்மை அணுகாது
2.அது அறிந்திடும் ஆற்றலாகத் தான் பயன்படும்
3.ஆக தீமைகள் நமக்குள் சேராது தடுக்கும் ஆற்றலைப் பெருகச் செய்யும்… உங்களை நம்புங்கள்…!

அந்த நல்ல சக்திகள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று சதா நான் (ஞானகுரு) தியானிக்கின்றேன். இந்த உபதேச உணர்வுகள் உங்களுக்குள் ஆழமாகப் பதிந்து அருள் ஞானியின் ஆற்றல் மிக்க சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றேன்.

அதனின் வலுவின் துணை கொண்டு உங்களுக்கு முன் படர்ந்து கொண்டிருக்கும் அருள் மகரிஷியின் உணர்வின் ஆற்றலை நீங்கள் நினைக்கும் போதெல்லாம் அதைப் பருக முடியும். ஆற்றல் மிக்க சக்தியாக வளர்த்துத் தீமைகள் அகற்றும் நிலையைப் பெற முடியும்.

ஒரு வித்தினை ஊன்றி விட்டால் அது தனது உணர்வின் வலுக் கொண்டு அந்தச் செடியின் சக்தி வளர்கின்றது. அதைப் போல ஒருவர் உங்களை ஏசிவிட்டால் அவர்களைத் திரும்பத் திரும்ப எண்ணும் போது கொதிப்பும் கோபமும் உங்களுக்குள் எழுகின்றது,

பின் உங்கள் நல்ல காரியங்களைச் செயல்படுத்த முடியாது அந்தக் கொதிப்பின் தன்மை கொண்டு உங்களுக்குள் நோயாகவும் விளைகின்றது. ஆகையினால் அந்த நோயை நீக்க அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் வித்தாகப் பதிவு செய்கின்றோம்.

உங்களுக்கு எத்தகைய துன்பங்கள் ஏற்பட்டாலும்… நோய்கள் வந்தாலும்… உங்கள் எண்ணத்தால் “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்களை அறியாது சேர்ந்த தீமைகள் நீங்க வேண்டும்
4.எங்கள் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும்
5.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் வீடு முழுவதும் படர வேண்டும்.
6.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் பெற்று மன பலம் மன வளம் பெற வேண்டும்.
7.எங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் வசிஷ்டரும் அருந்ததி போல ஒற்றுமையாக வாழ்ந்திடும் நிலைகள் வேண்டும்.
8.எங்கள் தொழில் வளம் பெருக வேண்டும்.
9.எங்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும்.
19.எங்கள் விவசாய நிலங்களில் பயிர்கள் நல்ல நிலைகள் விளைந்திட வேண்டும்.
11.எங்கள் விவசாய நிலங்களில் வேலை செய்வோர் அனைவரும் மன பலத்துடன் இருக்க வேண்டும்.
12.அவர்கள் பயிரிடும் பயிர்கள் வலுவான நிலைகள் கொண்டு வளர வேண்டும்.
13.அதிலே விளைந்ததை உணவாக உட்கொள்பவர்ளும் அதைப் பயன்படுத்தும் அனைவரும் மன பலத்துடன் உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்ற
14.இந்த உணர்வுகளை எல்லாம் எப்பொழுது நீங்கள் எடுக்கின்றீர்களோ
15.ஒவ்வொரு நொடியிலேயும் அந்த அருள் ஆற்றல் மிக்க மகரிஷியின் அருள் சக்தியை உங்களுக்குள் பற்றுடன் பற்றி வாழ்கின்றீர்கள்.

இந்தப் புவியில் ஏற்படும் தீமைகளை எல்லாம் பற்றற்றதாக மாற்றி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திட இது உதவுகிறது.

மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் உருவாக்கச் செய்வது தான் இந்தத் தியானப் பயிற்சியின் முக்கிய நோக்கம் – ஞானகுரு

 

அடிக்கடி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்த்து நம் உடலுக்குள் உருவாக்கிக் கொண்டே வர வேண்டும். அதைத் தான் “பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன்…” என்று சொல்வது.

சந்தர்ப்பத்தால் இணைவது எதுவாக இருந்தாலும் அது பிரம்மம் தான். ஆனால் அந்த மெய் ஞானியின் உணர்வை நமக்குள் இணைத்து அதை உருவாக்க தெரிந்து கொண்டால் கார்த்திகேயா…!

அதாவது புறத்திலே பார்க்கும் போது
1.தீமை என்று ஒன்றைத் தெரிந்து கொள்கின்றோம்…
2.அந்தத் தீமையை அகற்றத் தெரிந்து கொள்கின்றோம்…
3.ஆனால் தீமையை அகற்றும் மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் உருவாக்க வேண்டும்…
4.அது நம்மால் முடியும் என்ற நிலைக்கு வரவேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் இணைத்து இணைத்து தீமையை அகற்றும் சக்தியாக நமக்குள் உருவாக்கிக் கொண்டே வர வேண்டும். இது மிகவும் முக்கியமானது.

அதனால்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகிறாய்…! என்று தெளிவாகக் காட்டுகிறார்கள்.

சந்தர்ப்பத்தால் தீமைகளைக் கேட்க நேர்ந்தாலும்… அது நம் ஆன்மாவில் மோதி இயக்கினாலும்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று இதை இணைத்து உருவாக்க வேண்டும்.

1.பரிணாம வளர்ச்சியில் மற்ற உயிரினங்கள் எல்லாம் தன்னைக் காட்டிலும் வலுக்கொண்ட நிலைகளை எண்ணிப் பார்க்கின்றது.
2.அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற உணர்வினைத் தான் தனக்குள் உருப் பெறச் செய்கின்றது.

அதனுடைய சந்தர்ப்பம் இப்படி உருப்பெறும் பொழுது அது வளர்ச்சியாகி அந்த உடலை விட்டு அகன்ற பின் அந்த வலிமையான உடலுக்குள் சென்று பரிணாம வளர்ச்சி அடைகின்றது.

ஆனால் நாம் தீமை செய்வோரின் உணர்வை எடுத்துக் கொண்ட பின்… தீமை செய்வோரையே எண்ணி… அந்தத் தீமை நமக்குள் வலிமையாக வளர்ந்து விட்டால் அது நம்மைத் தேய் பிறையாக மாறுகின்றது.

அப்படித் தேய்பிறையாக மாறாதடி நாம் மாற்ற வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை மாற்றி நமக்குள் உருவாக்க வேண்டும்.

ஏனென்றால்…
1.நாம் எதை எண்ணி எடுக்கின்றோமோ அதன் வழி தான் நம் உயிர் அதை உருவாக்குகின்றது…
2.அணுவாக உருவாக்குகின்றது உணர்வின் சத்தைப் பதியச் செய்கின்றது.
3.அதையே மீண்டும் எண்ணும் பொழுது கடவுளாக நின்று அந்த வழியிலேயே நமக்குள் உருவாக்குகின்றது.

ஆகவே நாம் எண்ணியது எதுவோ உயிர் அது உருவாக்குகின்றது. உருவாக்கியதை… மீண்டும் அந்த எண்ணத்தை வலு சேர்க்கும் போது அந்த வளர்ச்சி நமக்குள் பெறுகின்றது. இது எல்லாவற்றுக்கும் பொதுவானது தான்.

அதே போல் தான் யாம் கொடுக்கும் அருள் உபதேசங்களை ஒரு தடவைப் பதிவாக்கி விட்டு அதற்குப் பின் அப்படியே விட்டு விட்டால் மீண்டும் அதற்கு உணவு கிடைக்க வேண்டுமல்லவா…!

1.நேற்று சாப்பிட்டால் இன்று ஏன் சாப்பிட வேண்டும் இன்று விட்டு விட்டால் என்ன ஆகும்…?
2.அது போல் தான் தியானம் இருந்தோம்… ஆத்ம சுத்தியும் செய்தோம்…
3.மீண்டும் மீண்டும் அதை எல்லாம் எதற்குச் செய்ய வேண்டும்…? என்று விட்டுவிட்டால்
4.சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் தீமை நமக்குள் வலுவாகி விடும்.
5.கொடுத்த சக்தியை வளர்ப்பது தடையாகிவிடும்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்குத்தான் மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து எமக்கு (ஞானகுரு) அனுபவமாகக் கொடுத்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

உங்களுக்கு மீண்டும் மீண்டும் அந்த அருள் ஞான உணர்வுகளை இங்கே ஊட்டிக் கொண்டிருப்பதன் நோக்கமே… உங்களை நீங்கள் காத்து… இந்த உலகையும் காத்திடும் அரும் பெரும் சக்திகளாக வளர வேண்டும் என்பதற்குத் தான்…!

பிறந்த நேரம் காலம் முக்கியம் இல்லை… இன்றைய வாழ்க்கையில் நல்லது பெற வேண்டியது தான் முக்கியம் – ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பிறவி எடுத்து நம் பிறவியில் நமக்கு வரும் குணாதிசயங்கள் எல்லாம் ஜாதகத்திலும் ஜோதிடத்திலும் சொல்வதைப் போல்
1.நாம் பிறக்கும் நாளைக் கொண்டோ…
2.பிறந்த நட்சத்திரத்தைக் கொண்டோ… வருவதல்ல..!

இந்தக் குண நிலைகளின் உண்மை நிலை ஒவ்வொரு மனிதனுக்கும் வருவது அவன் முதல் பிறவியில் செய்ததின் தொடர்ச்சி தான்… இந்தப் பிறப்பில் நாம் சாந்தமாக உள்ளதும்… கோப நிலையில் உள்ளதும்… மற்ற எல்லாமே…!

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குண நிலையில் வாழ்கின்றோம். எல்லோரும் ஒன்றாக நினைப்பது அந்த ஆண்டவனின் சக்தி ஒன்றைத்தான்.

குண நிலையில் பல மாற்றங்கள் இருந்தாலும் அந்த ஆண்டவனின் சக்தியை ஒரே நிலையில் எப்படி வணங்குகின்றோமோ அந்த நிலையிலேயே எல்லோரும் வாழ்ந்திடலாம்.

1.ஒருவர் கோபக்காரராக இருந்தால் அந்தக் கோப நிலை முதல் ஜென்மத்தின் தொடர்ச்சி தான்.
2.சாந்தமுள்ளவராக இருப்பதும் முன் ஜென்மத்தின் எண்ணத்தை வைத்துத்தான் அமைகிறது.

முன் ஜென்மத்தின் தொடரிலேயே இப்பொழுது பிறவிக்கு வந்தாலும் இந்த ஜென்மத்தில் நாம் வாழும் வாழ் நாட்களை வீண் விரயமாக்கிடாமல் வாழ வேண்டும்.

அந்த வினைப்பயன்கள் எல்லாம்
1.நாம் பிறந்த நேரம்…
2.நாம் செய்த பாவ புண்ணியங்கள்… என்று
3.தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

இப்பொழுது வாழ்ந்திடும் வாழ் நாட்களில் நம் எண்ணத்திலும்… நம் சுவாசத்திலும் அந்த மகரிஷிகள் ஞானிகளின் அருள் சக்திகளை எடுத்து வாழ்ந்து சுவாசத்தைச் சீராக்கி அருள் மணங்களை நம் சுவாச நிலைக்குக் கொண்டு வந்து வாழ்ந்திட வேண்டும்.

இந்தப் பிறவியில் இதை அதிகமாக வளர்க்கும் பொழுது நம்முடைய நாளைய சரீரம் அது ஒளியின் சரீரமாக அமையும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

 

நாம் காலையிலிருந்து இரவு வரை வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் என்ற உணர்வுகளைச் சுவாசிக்க நேருகிறது.
1.அது எல்லாம் நம் உயிரிலே பட்ட பின் உமிழ் நீராக மாறி
2.ஆகாரத்துடன் கலந்து கலந்து அது இரத்தமாக வருகின்றது.

அதனால் எதன் உணர்வு அதன் இயக்க உணர்வாக மாறியதோ உடலுக்குள் போனவுடனே அது கருத்தன்மை அடைந்து விடுகின்றது… முட்டையாகின்றது. அதிகமாகி விட்டால் அந்த முட்டை வெடித்த பிற்பாடு அணுவாகின்றது.

சாதாரணமாக ஒரு தட்டான் பூச்சி அது ஏதாவது ஒரு பூச்செடியில் போய் முட்டையிட்டால் அந்த பூவின் மணத்தை எடுத்துப் பூவின் நிறத்தில் பட்டாம் பூச்சியாக மாறுகின்றது.

இதைப் போன்று தான்…
1.நாம் வேதனை வெறுப்பு என்ற உணர்வை எடுத்துக் கருத்தன்மை அடைந்தால்
2.நல்ல அணுக்கள் வேதனை உருவாக்கும் முட்டைகளாக மாறிவிடும்.

இதை மாற்றியமைக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். அதைப் பலவீனப்படுத்த வேண்டும்.

அப்பொழுது அந்தக் கரு முட்டைக்குள் என்ன செய்யும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கருமுட்டைக்குள் பாய்ச்சப்படும்போது அதற்குத தக்கவாறு அந்தக் கருமுட்டைகள் அணுக்கள் மாற்றமடைகிறது. தீமையை நீக்கிடும் நிலை பெறுகின்றது.

ஆனால் அதே சமயத்தில் முட்டை அணுவாகி விட்டால் மாற்றாமல் விட்டு விட்டால் அதனுடைய இனத்தை அது பெருக்கி முட்டைகள் அதிகமாக இட்டுப் பெருக்க ஆரம்பித்துவிடும்.

வேதனை அணுக்கள் நமக்குள் பெருகி விட்டால்…
1.நல்ல அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காது தடைப்படுகின்றது.
2.உடல் உறுப்புக்களின் செயல்கள் குறைகின்றது. பின் நோயாகி விடுகின்றது.

வேதனை உணர்வுகளை அடிக்கடி நாம் எண்ணப்படும் போது ஆத்ம சுத்தி எடுத்தால் உடனுக்குடன் அந்த அணுக்களை மாற்றி நல்லதாக மாற்றிக் கொள்ள முடியும்.

இது ஒரு பழக்கத்திற்கு வந்தால் நாம் அந்த அகஸ்தியன் எப்படி அகண்ட அண்டத்தையும் அறிந்து உணர்வை ஒளியாக மாற்றினானோ அவன் பெற்றதையெல்லாம் நமக்குள் பெற்று நாமும் இந்த உடலுக்குப்பின் அவன் பிறவியில்லா நிலை அடைந்தது போல் அடைய முடியும்.

நமக்குச் சொந்தம் அதுதான். இந்த உடல் சொந்தம் நமக்கு வேண்டாம்.

மெய் ஞானிகள் மக்களுக்குக் கொடுத்த ஆலயத்தின் முக்கியமான தெய்வீகப் பண்பு

 

1.நாம் கவர்வது (சுவாசிப்பது) எல்லாம் மணமாக மாறுகின்றது.
2.அந்த மணத்தை நுகரும் பொழுது அது உணர்வாக ஆகின்றது
3.அந்த உணர்வின் தன்மை தான் இயக்கம் ஆகின்றது
4.அந்த உணர்வின் தன்மை தான் செயலாகின்றது
5.அந்த உணர்வின் தன்மை தான் உடலாகின்றது என்ற நிலையைத் தெளிவாக்குவதற்குத்தான்
6.ஆலயத்திலிலுள்ள தெய்வத்திற்குத் தங்க ஆபரணங்களையும் வைரக் கிரீடத்தையும் வைத்து
7.மலர் மாலைகளையும் பல ஔஷதங்களையும் வைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.

தெய்வத்திற்குத் தங்க ஆபரணங்களை மார்பில் அணிந்து காட்டி உள்ளார்கள் என்றால் அந்தத் தங்கம் எப்படி மங்காது இருக்கின்றதோ
1.அந்தத் தங்கத்தை போல என் மனம் மங்காது இருக்க வேண்டும்
2.இந்த ஆலயம் வருவோருக்கெல்லாம் அவர்கள் மனம் மங்காத நிலை பெற வேண்டும்
3.நாம் பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் மனம் மங்காத நிலையில் வரவேண்டும்…
4.தங்கத்தைப் போல அவர்கள் மனங்கள் வளர வேண்டும் என்று எல்லோரையும் எண்ணும்படி செய்கிறார்கள்.

ரோட்டில் செல்லும் பொழுது ஒருவன் அடிபட்டுக் கீழே விழுகின்றான். அடப் பாவமே யார் பெற்ற பிள்ளயோ…? என்று உற்றுப் பார்க்கின்றோம். வேதனையான உணர்வை நுகர்கின்றோம்.

ஆனால் அவன் அடிபட்டிருந்தாலும் அவனை எண்ணும் பொழுது நம்மை அறியாமலே “அவன் உடல் நலம் பெற வேண்டும்” என்று எண்ணத்தை நமக்குள் தோற்றுவிக்க வேண்டும்…
1.உடனடியாக நல்ல உணர்வை எடுக்க வேண்டும் என்பதற்குத்தான் ஆலயங்களை அமைத்தனர்…
2.உயர்ந்த பண்புகளையும் எண்ணி எடுக்கும்படி செய்தனர் ஞானிகள்.

ஆலயத்தில் கனிகளை வைத்துக் காட்டியிருக்கின்றார்கள். கனிகளைப் பார்த்த பின் அதனின் சுவையை எண்ணி… அதை உட்கொள்ள வேண்டும் என்று எப்படி விரும்புகிறோமோ அதே போன்று அந்தக் கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஆண்டவனுக்குச் சுவை கொண்ட பொங்கலையும் படைத்து வைத்திருக்கின்றார்கள். பலவற்றையும் சேர்த்துச் சமைத்துச் சுவைமிக்க நிலையாக அந்தப் பொங்கலை உருவாக்கியது போன்று
1.வாழ்க்கையில் வரும் அனைத்து உணர்வுகளும் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளாக நமக்குள் விளைய வேண்டும்
2.எங்கள் சொல்லைக் கேட்போர் அனைவரும் சுவை கொண்ட வாழ்க்கையாக வாழ வேண்டும் என்றும்.
3,இப்படி உயர்ந்த பண்புகளை எண்ணி எடுப்பதற்குத் தான் அங்கே பொங்கலை வைக்கும்படி காட்டுகின்றார்கள்.
4.பல பல சுவை கொண்ட பதார்த்தங்களையும் அங்கே வைக்கின்றார்கள்.

இது எல்லாம் துவைதம்… கண்ணுக்குப் புலப்படக் கூடியது. இதை வைத்துக் கண்ணுக்குப் புலப்படாத உயர்ந்த சக்திகளை எண்ணி எடுக்கும்படி செய்கிறார்கள் ஞானிகள்.

ஆகவே…
1.இபபடி ஆலயத்தில் ஞானிகளால் உருவாக்கப்பட்ட தெய்வீக நிலையை எண்ணி
2.நமக்குள் அந்தத் தெய்வ குணத்தை உருவாக்கக் கூடிய நிலையும்
3.நமக்குள் அதை உருபெறச் செய்யக்கூடிய நிலையையும்
4.நம் உடலுடன் இணைக்கக் கூடிய நிலையையும்
5.நம் சொல்லால் பிறருடைய நிலைகளை அருள் வழியில் இயக்கக்கூடிய சக்தியையும் பெறச் செய்வதற்குத்தான் ஆலயம்…!

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா…! (ஞானகுரு).

உயிர் விண்ணின் அங்கம்… உடல் மண்ணின் அங்கம்… மண்ணாகப் போகும் நிலையை விடுத்து உயிருடன் ஒன்றி ஜோதி நிலை பெறுவோம் – ஈஸ்வரபட்டர்

 

சூரியனின் சக்தியிலிருந்து ஒவ்வொரு நாளும் எண்ணிலடங்கா ஜீவ அணுக்கள் தோன்றித் தோன்றி மறைகின்றன.
1.ஒவொரு ஜீவராசியும் எந்த நிலை கொண்டு ஜீவன் பெற்றதோ
2.அந்நிலையில் அந்த ஜீவராசிகள் எண்ணம் ஈடேறியவுடன்
3.அதனுடைய ஜீவ உடலைப் பெற்ற நிலையும் மாறிவிடுகின்றது.

அதே போல் தான் பறவைகள் மிருகங்கள் மனிதர்கள் எல்லோருடைய நிலையும் உள்ளன.

மனிதர்களுக்கு… மனிதன் ஜீவன் பெற்ற நாளிலிருந்து தாயின் கருவில் எப்படிப் பத்து மாதங்கள் இருந்து பிறக்கின்றதோ அந்நிலை வைத்து மனிதனின் சராசரி ஆயுட்காலமும் உள்ளது.

யானையின் ஆயுட்காலம் கருவில் இருபது மாதங்கள் இருப்பதால் அதனுடைய சராசரி ஆயுட்காலமும் கூடி இருக்கின்றது.

இப்படி ஒவ்வொரு மிருகத்தின் நிலையும் கழுதைக்கு ஏழு ஆண்டுகள் கோழிக்கு இரண்டு ஆண்டுகள் நாய்க்கு பதினாறு ஆண்டுகள் இப்படிப் பறவைகள் நிலையிலும்
1.அவை அவை எத்தனை நாட்கள் அடைகாத்துக் குஞ்சு பொரிக்கின்றனவோ
2.அந்நிலை கொண்டு தான் அதனதன் ஆயுட்காலமும் உள்ளன.

உங்கள் எண்ணத்தில் மனிதர்கள் ஏன் ஆறு ஆண்டுகளும் வாழ்கிறார்கள்… அறுபது ஆண்டுகளும் வாழ்கின்றார்கள்…? என்று எண்ணக்கூடும்.

அற்ப ஆயுளில் ஜீவன் பிரிவதெல்லாம் அவரவர்கள் எண்ணத்தைக் கொண்டு தான்…!

ஆனால் இந்த மனித உடல்களுக்கு மட்டும் தான் அந்தச் சூரியனின் சக்தியிலிருந்து அழியா உடலையும் அழியா உயிரையும் உருவாக்கும் சக்தியாக அவ்வாண்டவனின் சக்தியில் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்நிலை பெற்ற நாம் எல்லோரும்
1.அந்த ஆண்டவனின் சக்தியை அந்த நிலையில் நாம் பேணிக் காத்து
2.இந்த உலகில் நாம் உதித்ததையே அழியாச் செல்வமாக்கி
3.நாம் சேர்த்திடும் ஒரே சொத்து… உன்னதமான சொத்து… நம் உயிராத்மாவுக்கு அளிப்பது தான்…!

அந்தச் சூரியனின் சக்தியிலிருந்து பல ஒளிக்கதிர்கள் நம் பூமியைத் தாக்கிப் பெற்ற செல்வங்கள் தான் இன்றைய உலகில் உள்ள எல்லாமுமே…!

அந்த இயற்கையிலிருந்து தான் செயற்கையையும் செய்கின்றோம். அந்தச் செயற்கை அழிந்தாலும் இயற்கையுடன் தான் கலக்கின்றது.

இந்தப் பூமியில் உள்ள
1.இயற்கைத் தன்மையும்…
2.செயற்கைத் தன்மையும்…
3.நம் உடல்..
4.நாம் சேர்த்த பொருள் எல்லாமுமே…
5.மண்ணுடன் மண்ணாகத் தான் ஆகின்றது.

அழியாச் செல்வமான நம் ஆத்மா மட்டும் தான் ஆண்டவனிடம் ஐக்கியமாக முடியும். ஆகவே
1.மண்ணுடன் மண்ணாகும் இந்த உடலுக்காகவும் பொருளுக்காகவும் வாழாமல்
2.வாழ்வாங்கு வாழச் செய்யும் உயிராத்மாவை ஆத்ம ஜோதியாக்குவோம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒருவர் தன் கஷ்டங்களை எல்லாம் நம்மிடம் சொல்கிறார். இரக்கப்பட்டுக் கேட்கிறோம். கஷ்டமான உணர்வுகளைச் சொல்லும் போது நம் கண்களோ அதைப் பதிவு செய்கிறது.

அதாவது அந்தக் கஷ்டமான உணர்வுகளைக் கவர்ந்து நமக்குள் வினையாகப் பதிவு செய்கின்றது.
1.அந்த வினைக்கு நாயகனாக அதனின் உணர்வின் மணத்தை நாம் நுகரப்படும் போது
2.அவரின் வேதனையான உணர்வுகள் நமது ஆன்மாவிற்குள் உரிமை கொண்டாட ஆரம்பித்து விடுகின்றது.
3.தெளிந்த மணம் கொண்ட நம் ஆன்மாவில் நஞ்சான உணர்வுகள் கலந்து கொண்டபின்
4.நாம் சிந்திக்கும் செயல் இழந்து அந்தப் பாச உணர்வால் நமக்குள் தீய வினைகள் விளைந்து விடுகிறது.

யார் வேதனைப்படுகின்றாரோ அவர்களுக்கு நாமும் வேதனையுடனே உபகாரம் செய்கின்றோம். உபகாரம் செய்தாலும்… நம் நல்ல குணத்திற்குள் இந்த வேதனையான உணர்வுகள் கலந்துவிடுகின்றது.

அதை நீக்க என்ன செய்ய வேண்டும்…?

வாழ்க்கையில் வரும் துன்பங்களை நீக்க அன்றைய மெய் ஞானிகள் தன் உணர்வின் ஆற்றலை மக்களுக்குத் தெள்ளத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள். அந்த வழியைத்தான் யாம் உபதேசிக்கின்றோம்.

நாம் நல்லதைக் காக்க வேண்டும் என்று தான் முதலிலே பிறர் கஷ்டப்பட்ட உணர்வுகளை நுகர்ந்தோம். அந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு நல்ல உணர்வின் தன்மையைக் காக்க முடிந்தது. நல்ல செயல்களை அறியவும் செய்யவும் முடிந்தது.

1.ஆனால் அந்த உணர்வுகள் நம் உயிரிலே மோதியபின் அது இயக்கி அந்த உணர்ச்சிகளை ஊட்டி
2.நம் உடலை இயக்கியபின் தான் தெரிகின்றது.

இந்த உணர்வின் சத்து (பிறர் துன்பப்பட்டது) நம் ஆன்மாவில் கலப்பதைச் சுத்தப்படுத்தவில்லை என்றால் அந்த அசுத்தமே நம் உடலில் சேர்ந்து விடுகின்றது. அதைத் துடைப்பதற்குத்தான் இந்த ஆத்ம சுத்தி என்ற முறை.

1.“ஓ…ம் ஈஸ்வரா…” என்று நமது உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று
3.இங்கே புருவ மத்தியில் நிறுத்திவிட வேண்டும்

அவரின் வேதனையான நஞ்சான உணர்வு சிறிது தான் உள்ளே போகும். பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று வலுக்கூட்ட வேண்டும்.

அவ்வாறு செய்யும் பொழுது நம் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் வேதனையான நஞ்சான உணர்வினை அது தள்ளிவிடும், நமது ஆத்மா பரிசுத்தமாகின்றது,

1.நமது கையில் அழுக்கு பட்டது என்றால் நாம் கையைக் கழுவுகின்றோம்.
2.அதைப் போன்றுதான் நம் ஆன்மாவில் அழுக்குப் பட்டவுடன் சுத்தப்படுத்த வேண்டும்.

அப்படிச் சுத்தப்படுத்துவதற்குத்தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறோம். அந்த உணர்வுகள் உடலில் சக்தி வாய்ந்ததாக ஆகும் பொழுது தீமைகளை அகற்றுகின்றது

பின் வேதனைப்பட்டவர் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று அந்த ஆற்றல்மிக்க சக்தியை நுகர்ந்து அவருக்குப் பாய்ச்ச வேண்டும்.

அடுத்து மகரிஷிகள் அருள் சக்தியால் நீங்கள் நலமடைவீர்கள்…! என்ற நல்ல வாக்கினை அங்கே பதிவு செய்ய வேண்டும்.

1,இப்படிச் செய்தால் அவருக்குள் விளைந்த தீமை செய்யும் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை
2.மாறாக நாம் எடுக்கும் உயர்ந்த சக்தி நமக்குள் ஆற்றல்மிக்கதாக மாறி மற்றவர்களையும் காத்திடும் சக்தியாக அங்கே செயல்படுகின்றது.

தீமை எந்த வழியாக நமக்குள் வருகிறது…? அதைத் தடுக்க நாம் போட வேண்டிய பாதுகாப்பு வேலி எது…?

 

உதாரணமாக ஒருவர் கடுமையான நிலைகளில் நோய்வாய்ப்பட்டு இருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அந்த நோயின் தன்மை கொண்டு உடலில் விளைந்த அந்த உணர்வுகளை…
1.அவர் சொல்வதைக் கேட்கும் பொழுது
2.நம் காதின் புலனறிவுக்குள் அவர் வேதனயாக இட்ட குரலின் உணர்வுகள் நம்மை இயக்கச் செய்கின்றது.
3.இந்த உணர்வுகள் நம் உடல் முழுவதும் பரவி கண்ணின் நினைவலைகளுக்கு வருகின்றது.

அப்பொழுது அது எந்தத் திசை…? என்று பார்க்கின்றது.

நமது கண் யார் வேதனையுடன் சொல்லுகின்றாரோ அவரைப் படம் எடுக்கின்றது. அப்படிப் படம் எடுத்த இந்த உணர்வுகள் ஊழ்வினையாக நம் எலும்புக்குள் பதிவாகின்றது.

1.ஒரு லேசர் (LASER) இயக்கத்தைப் பாய்ச்சி X-Ray படம் எடுப்பது போல
2.நமது கண்ணின் பார்வை லேசரைப் போன்று படம் எடுத்து
3.அந்த உணர்வின் காந்தப் புலன்கள் நமக்குள் ஊடுருவி உணர்வின் தன்மையை ஊழ்வினையாகப் பதிவு செய்கின்றது.

அதே சமயம் கண்ணின் நினைவலைகள் கொண்டு இயக்கப்படும் பொழுது அந்த உணர்வால் கண்ணுக்குள் இருக்கக்கூடிய புலனறிவும்… உடலுக்குள் இருக்கக்கூடிய புலனறிவும் இணைகின்றது.

அதைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தால் நுகர்ந்து பார்க்கச் செய்கின்றது. அது நமது ஆன்மாவாக மாறுகின்றது.

நமது ஆன்மா என்பது என்ன…?

நமது ஆன்மா என்பது, நம்மை சுற்றி இருக்கும் நம் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள காற்று மண்டலம்தான்.

இன்று ரேடியோ அலைகள் எப்படிப் படர்கின்றது…? எப்படி ஈர்க்கப்படுகின்றது…? எப்படி வேலை செய்கின்றது…? அதே மாதிரித்தான்
1.நம் ஆன்மாவில் நாம் எண்ணிய சுவாசித்த உணர்வலைகள்
2.பூமியைச் சுற்றி இருக்கும் காற்று மண்டலத்தைப் போன்று நம்மைச் சுற்றிக் கொண்டே இருக்கும்.

நம் கண்கள் வேதனைப்பட்டவரை எலும்புக்குள் பதிவாக்கியபின் “மேக்னட்” போன்று பதிவான உணர்வலைகள் இழுக்கப்பட்டு நம் ஈர்ப்பு வட்டத்திற்குள் (ஆன்மாவாக) வந்து சேரும்.

நமக்குள் ஆன்மாவாக மாறியபின் நம் உடலிலிருந்து நஞ்சினை நீக்கும் நமது நல்ல ஆன்மாவுக்குள் அவர்பட்ட வேதனையான நஞ்சு கலந்து விடுகின்றது.

ஆன்மாவில் வருவதைத்தான் நாம் மூக்கின் வழியாகச் சுவாசிக்கின்றோம்.
1.ஆகவே நஞ்சான உணர்வுகள் கலந்து கொண்டபின்
2.நாம் சுவாசிக்கும் பொழுது உயிருக்குள் பட்டவுடனே
3.பாலில் துளி விஷம் கலந்து குடிக்கும் பொழுது எப்படி மயக்கம் வருமோ
4.அதைப் போல நமக்கும் வேதனை உண்டாகின்றது.

அதாவது பரமாத்மாவிலிருந்து நமது ஆன்மாவாக மாறுகின்றது. எப்படி…?

அந்த நோய்வாய்ப்பட்டவர் வேதனை தாங்காது சொல்வதை அந்த வேதனையான மணம் வெளிப்படும் பொழுது அந்த மணத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கின்றது.

நமது பூமி ஒரு பரம்… அதாவது எல்லை. இந்த எல்லைக்குள் அவர் பேசிய வேதனையான குரலின் தன்மையை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து பரத்துக்கு ஆத்மாவாக… பரமாத்மாவாக (இந்தக் காற்று மண்டலத்தில்) மாற்றிவிடுகின்றது.

1.நாம் கண் கொண்டு அவரைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது
2.;அவர் சொல்லும் உணர்வுகளை அந்த உடலிலிருந்து வெளிப்படுவதை
3.நம் கண்ணுக்குள் இருக்கக்கூடிய காந்தப்புலன் இழுத்துப் பராமாத்மாவில் இருப்பதை நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.

இப்படி வந்தவுடன் நம் நல்ல ஆன்மாவில் தீமையான உணர்வு உரிமை கொண்டாட ஆரம்பிக்கின்றது. நம் நல்ல எண்ணத்தையும் நல்ல மனதையும் பலவீனப்படுத்துகின்றது.

அதை மாற்றத் தான் “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

ஆகவே தான்
1.நம்முடைய ஆன்மாவில் (நமக்குள்) தீமைகள் புகும் வழியைத் தெரிந்து கொண்டால்
2.அதை மாற்ற அடுத்த கணமே அருள் ஞானிகளின் நினைவாற்றலை நம் கண்ணான புலனறிவுக்குக் கொண்டு வந்து
3.அதைப் பதிவாக்கி… ஊழ்வினை என்ற வித்தாக்கி…
4.அதன் வழி கொண்டு நம் ஆன்மாவிலே மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெருக்க வேண்டும்.

இந்த முறைப்படி செய்தால் பிறிதொரு தீமை செய்யும் உணர்வு நம் ஆன்மாவிலிருப்பதை அது பிளந்து அதைச் செயலற்றதாக்கும். நம் ஆன்மா தூய்மை ஆகும்.

அருள் உணர்வுகள் “கவசம் போன்று…” நம்மைக் காக்கும் சக்தியாக வரும்.

அடுத்தவன் நிலையைக் கண்டு ஏங்குபவனும் அடுத்தவனின் புகழுக்காக வாழ்பவனும் தான் மிகுந்து உள்ளனர் – ஈஸ்வரபட்டர்

 

இந்த உலகினிலே ஜீவன் பெற்ற ஜீவாத்மாக்கள் எல்லாம்
1.தான் ஜீவன் பெற்ற நிலையை அறிந்து
2.ஜீவாதார உண்மையுடன் ஜீவித்து – இந்த ஜீவனை
3.நம் உடலில் ஜீவன் உள்ள பொழுதே நாம் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்
4.பல வழிகளையும் வழி முறைகளையும் மகரிஷிகள் நமக்களித்தார்கள்.

அந்த வழிகளை எல்லாம்… முறைகளை எல்லாம்… பல வழிகளில் மாற்றி விட்டார்கள். அவரவர்களுக்கு ஒரு மதம் என்ற நிலயில் ஒவ்வொரு வழியை ஏற்படுத்திக் கொண்டு விட்டார்கள்.

தன்னைச் சார்ந்தவர்களுக்கும் தன் சுற்றத்தார்களுக்கும் ஒவ்வொரு நிலையையும் ஏற்படுத்திக் கொண்டு பல சடங்குகள்… பல சாஸ்திரங்கள்… என்று பார்த்து நம் மூதாதையர்கள் காலத்திலிருந்தே நம் குடும்பத்தில் இந்நிலையில் தான் எல்லா நிலைகளும் நடந்து வருகின்றன…! என்று உண்டாக்கி விட்டார்கள்.

ஒவ்வொரு உண்மை நிலைகளையும் தன் தன் நிலைக்கேற்பத் தன் மதத்தின் வாயிலாக அதையே ஒரு வழக்கமாக்கிக் கொண்டு அதனால் வரும் எண்ணச் சிதறல்களைப் பற்றி எண்ணாமல்
1.ஒவ்வொருவரும் மதம் என்ற ரூபத்தையே கொண்டு வந்து
2.அதனுள் சிக்கிக் கொண்டு மதத்தையே “மதமாக்கி” வாழ்கிறார்கள்.

மதத்தினால் வந்திடும் நன்மைகள் என்னப்பா…? பல மதங்களை ஏற்படுத்திக் கொண்டு அம்மதங்களின் வாயிலாக ஆண்டவனின் சக்தியையே பிரித்துக் கொண்டார்கள்.
1.இவர்கள் பிரித்த நிலைக்கு வருவதல்ல அந்த ஆண்டவனின் சக்தி.
2.அச்சக்தியின் நிலை எல்லோருக்கும் பொதுவானதே.

அன்று ஆண்ட அரசர்கள் தன் நிலைக்கு அடிபணியப் பல மந்திரிகளையும்… அந்த மந்திரிகளுக்கு ஊழியம் செய்ய அதற்கொத்த சேவகர்களையும்.. இப்படியெல்லாம் ஏற்படுத்தித் தன் ஆட்சி நிலை நிலைத்திருக்கத் தன் நிலைக்கு உகந்தபடி அவரகள் செய்த நிலையில் இருந்து தான் “ஜாதி மதங்களே” இன்றைய உலகில் பெருகி உலவி வருகின்றன.

1.அவ் ஈசனின் சக்தியில் இஜ்ஜீவ ஆத்மாக்களை ஜாதி மதங்களாகப் பிரித்து அனுப்பவில்லையப்பா…!
2.எல்லா உயிரணுக்களும் அந்த ஆண்டவனின் சக்தி பெற்று ஒரே நிலையில் தான் உதிக்கின்றன.

இந்த நிலை இருக்கும் பொழுது ஜாதி மத வேறுபாடுகளை இவர்கள் உண்டு பண்ணி தன் தன் நிலைக்கு ஏற்ப… தான் வாழ… தன் சுற்றத்தார் வாழ… என்ற நிலையை எல்லாம் ஏற்படுத்தி மனித எண்ணத்தையே பெரும் கேள்விக்குறியாக ஆக்கிவிட்டார்களப்பா…!

1.எல்லோரும் ஓர் மதம்…
2.எல்லோரும் ஓர் குலம்…! என்ற
3.உண்மை நிலையை உணர்ந்து வாழ்பவர்கள் அரிதிலும் அரிது.

எந்த நிலை கொண்டு எப்படிப் புகட்டினாலும் உபதேசத்தை ஏற்றுக் கொள்பவர்கள் அரிதாக உள்ளார்களப்பா..!

1.அடுத்தவன் நிலையைக் கண்டு ஏங்குபவனும்
2.அடுத்தவனின் புகழுக்காக வாழ்பவனும் தான் இன்றைய நாட்டில் மிகுந்து உள்ளனரப்பா…!

தன் எண்ணத்தையும் சுவாசத்தையும் தான் பெற்ற ஜீவ சக்தியின் நிலையையும் பற்றி இனியும் புரிந்திடாமல்… அந்த நிலையிலேயே வாழ்ந்திடாமல்…
1.நம் எண்ணத்தைக் கொண்டு தான்..
2.நாம் விடும் சுவாச நிலையிலிருந்து தான்..
3.நம் நிலைகள் எல்லாமே நடக்கின்றன…! என்று உணர வேண்டுமப்பா…!

எண்ணத்தையும் சுவாசத்தையும் புரிந்து கொண்டு வாழ்பவர்கள் “அப்புருஷோத்தம ஜெபத்தை” ஏற்ற புனித ஆத்மாவாக என்றுமே இருந்திடலாம்.

நாம் ஈர்க்கும் ஒவ்வொரு சுவாச அலையும் நம் உடலுக்கும்.. நம் உணர்விற்கும்… நம் உயிர் நிலைக்கும்.. எப்படியெல்லாம் எந்தெந்த நிலை ஏற்படுத்தி நம் உடலும்.. உணர்வும்… உயிரும்… எந்த நிலையில் உள்ளன..? என்று நாம் ஜெபத்திலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

இன்றிருக்கும் ஜாதி மதத்திற்கு அடிமையாகாமல்… வழி முறையில் உள்ள பல சடங்குகளுக்கும் சாங்கியங்களுக்கும் நாம் அடிமையாகாமல்…
1.நம் எண்ணத்தையும் சுவாசத்தையும்
2.அவ்வீசனின் சக்திக்கே அடிபணியச் செய்தல் வேண்டுமப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

உதாரணமாக ஒருவர் கடுமையான நிலைகளில் நோய்வாய்ப்பட்டு இருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அந்த நோயின் தன்மை கொண்டு உடலில் விளைந்த அந்த உணர்வுகளை…
1.அவர் சொல்வதைக் கேட்கும் பொழுது
2.நம் காதின் புலனறிவுக்குள் அவர் வேதனயாக இட்ட குரலின் உணர்வுகள் நம்மை இயக்கச் செய்கின்றது.
3.இந்த உணர்வுகள் நம் உடல் முழுவதும் பரவி கண்ணின் நினைவலைகளுக்கு வருகின்றது.

அப்பொழுது அது எந்தத் திசை…? என்று பார்க்கின்றது.

நமது கண் யார் வேதனையுடன் சொல்லுகின்றாரோ அவரைப் படம் எடுக்கின்றது. அப்படிப் படம் எடுத்த இந்த உணர்வுகள் ஊழ்வினையாக நம் எலும்புக்குள் பதிவாகின்றது.

1.ஒரு லேசர் (LASER) இயக்கத்தைப் பாய்ச்சி X-Ray படம் எடுப்பது போல
2.நமது கண்ணின் பார்வை லேசரைப் போன்று படம் எடுத்து
3.அந்த உணர்வின் காந்தப் புலன்கள் நமக்குள் ஊடுருவி உணர்வின் தன்மையை ஊழ்வினையாகப் பதிவு செய்கின்றது.

அதே சமயம் கண்ணின் நினைவலைகள் கொண்டு இயக்கப்படும் பொழுது அந்த உணர்வால் கண்ணுக்குள் இருக்கக்கூடிய புலனறிவும்… உடலுக்குள் இருக்கக்கூடிய புலனறிவும் இணைகின்றது.

அதைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தால் நுகர்ந்து பார்க்கச் செய்கின்றது. அது நமது ஆன்மாவாக மாறுகின்றது.

நமது ஆன்மா என்பது என்ன…?

நமது ஆன்மா என்பது, நம்மை சுற்றி இருக்கும் நம் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள காற்று மண்டலம்தான்.

இன்று ரேடியோ அலைகள் எப்படிப் படர்கின்றது…? எப்படி ஈர்க்கப்படுகின்றது…? எப்படி வேலை செய்கின்றது…? அதே மாதிரித்தான்
1.நம் ஆன்மாவில் நாம் எண்ணிய சுவாசித்த உணர்வலைகள்
2.பூமியைச் சுற்றி இருக்கும் காற்று மண்டலத்தைப் போன்று நம்மைச் சுற்றிக் கொண்டே இருக்கும்.

நம் கண்கள் வேதனைப்பட்டவரை எலும்புக்குள் பதிவாக்கியபின் “மேக்னட்” போன்று பதிவான உணர்வலைகள் இழுக்கப்பட்டு நம் ஈர்ப்பு வட்டத்திற்குள் (ஆன்மாவாக) வந்து சேரும்.

நமக்குள் ஆன்மாவாக மாறியபின் நம் உடலிலிருந்து நஞ்சினை நீக்கும் நமது நல்ல ஆன்மாவுக்குள் அவர்பட்ட வேதனையான நஞ்சு கலந்து விடுகின்றது.

ஆன்மாவில் வருவதைத்தான் நாம் மூக்கின் வழியாகச் சுவாசிக்கின்றோம்.
1.ஆகவே நஞ்சான உணர்வுகள் கலந்து கொண்டபின்
2.நாம் சுவாசிக்கும் பொழுது உயிருக்குள் பட்டவுடனே
3.பாலில் துளி விஷம் கலந்து குடிக்கும் பொழுது எப்படி மயக்கம் வருமோ
4.அதைப் போல நமக்கும் வேதனை உண்டாகின்றது.

அதாவது பரமாத்மாவிலிருந்து நமது ஆன்மாவாக மாறுகின்றது. எப்படி…?

அந்த நோய்வாய்ப்பட்டவர் வேதனை தாங்காது சொல்வதை அந்த வேதனையான மணம் வெளிப்படும் பொழுது அந்த மணத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கின்றது.

நமது பூமி ஒரு பரம்… அதாவது எல்லை. இந்த எல்லைக்குள் அவர் பேசிய வேதனையான குரலின் தன்மையை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து பரத்துக்கு ஆத்மாவாக… பரமாத்மாவாக (இந்தக் காற்று மண்டலத்தில்) மாற்றிவிடுகின்றது.

1.நாம் கண் கொண்டு அவரைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது
2.;அவர் சொல்லும் உணர்வுகளை அந்த உடலிலிருந்து வெளிப்படுவதை
3.நம் கண்ணுக்குள் இருக்கக்கூடிய காந்தப்புலன் இழுத்துப் பராமாத்மாவில் இருப்பதை நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.

இப்படி வந்தவுடன் நம் நல்ல ஆன்மாவில் தீமையான உணர்வு உரிமை கொண்டாட ஆரம்பிக்கின்றது. நம் நல்ல எண்ணத்தையும் நல்ல மனதையும் பலவீனப்படுத்துகின்றது.

அதை மாற்றத் தான் “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

உடலில் உள்ள அணுக்களின் பசிக்கு… நம் உயிர் உணவைக் கொடுத்து அதை வளர்க்கும் விதம்

 

செடி கொடிகள் வெளிப்படுத்தும் சத்தினை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்திருக்கின்றது. செடியிலே விளைந்த வித்தை நிலத்தில் ஊன்றினால் நிலத்தின் தன்மை கொண்டு காற்றிலிருந்து தன் இனச் சத்தை எடுத்துத் தன் வித்தாக வளர்க்கும். அதற்கு ஈரப்பதம் இருந்தால் போதும்.

இது போன்று தான் நம் உடலுக்குள் பல குணங்களின் சத்துக்கள் இருக்கின்றது. அதிலே வேதனைப்படும் உணர்வின் அணுவாக வளர்ந்து விட்டால் உடனே அதனின் உணர்ச்சிகளைத் தூண்டும். இரத்த நாளங்கள் வழி தன் உணவை எடுக்கும்.

காற்று மண்டலத்தில் எப்படி அனைத்துச் சத்துக்களும் இருக்கின்றதோ அதிலிருந்து எடுத்து செடி கொடிகள் எடுத்து வளர்வது போல் தான் நம் உடலில் உருவான அணுவும் வளரும்.

1.அதாவது நம் உடலில் நுகரும் பொழுது (சுவாசிக்கும் போது) வெப்ப மண்டலங்கள் வரும்.
2.பின் 48 நாட்களில் சுவாசித்தது கருவாகி முட்டை ஆகிறது.
3.உடல் முழுவதும் சுற்றும்போது அந்தந்த உறுப்புகளில் போய் ஒட்டிக் கொள்ளும்.
4.முட்டை வெடித்து அணுவாக ஆனபின் தன் உணர்ச்சியைத் தூண்டும்
5.இரத்தத்தின் வழி கூடி சிறு மூளைக்கு (அந்த உணர்வு) வரும். ஏனென்றால் அதனுடைய பசிக்கு அந்தச் சாப்பாடு கேட்கும்.

இந்த உணர்வின் தன்மை பெற்ற பின் நம் உயிர் என்ன செய்யும்…?

1.நம் கண் காது மூக்கு நிலைகளுக்கு ஆணையிடும்.
2.எந்த மனித உடலில் இருந்தது தீமைகள் வந்ததோ அதை இழுக்கும்.
3.அதைச் சுவாசித்து உயிரிலே பட்ட பின் அந்த மனிதனின் எண்ணங்கள் நமக்கு வரும்.

பாவிப்பயல்…! அன்றைக்கு இப்படிச் செய்தான் என்று நாம் எண்ணும் பொழுது அதே உணர்வு நமக்குள் வந்து தீமை விளைவிக்கக் கூடிய சந்தர்ப்பமாக அமையும்.

இதை எல்லாம் நமக்குள் அனுபவபூர்வமாகப் பார்க்கலாம் இந்த எண்ணங்கள் எப்படிக் கிளர்ந்து எழுகிறது என்று…! ஆக இத்தகைய எண்ணங்கள் வந்து விட்டால் அந்த நேரத்தில் நம் வியாபாரங்கள் கெடும்.

நம் பையனாக இருந்தாலும் கூட… “இப்படிச் செய்கிறானே” என்று வேதனைப்படுகின்றோம். அது வேதனையை உருவாக்கும் அணுக்களாக விளைகின்றது… நம் உடலாக மாறுகிறது.

இப்படி எல்லாம் நினைத்துவிட்டு ஒரு காரியத்திற்குச் சென்றால் நல்லதாகாது. எந்த வேலையைச் செய்தாலும் நிச்சயம் எதிரியாகி விடும். ஏனென்றால் அந்த வேதனையான உணர்வு வரும் பொழுது நமக்குள் சரியாக இயங்காது.

தொழில் செய்யும் இடங்களில் பகைமை வந்து விடுகின்றது வியாபாரம் செய்தாலும் வேதனை உணர்வு வந்தபின் நாம் சொல்வதைக் கேட்டால் “சரக்கை வேண்டாம்…” என்று ஒதுக்கி விடுவார்கள்.

இது எல்லாம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சம்பவங்கள். இதை மாற்ற வேண்டும் அல்லவா…!

அதற்காகத்தான் துருவ தியானத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று காலையில் எண்ண வேண்டும்.

கணவன் மனைவிக்கு அந்தச் சக்தி பெற வேண்டும் என்றும் மனைவி தன் கணவனுக்கு அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதே போன்று நம் குடும்பத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையர்களின் உயிராத்மாக்கள்
1.சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டுமென்று கண்டிப்பாக எண்ண வேண்டும்.
2.காலை துருவ தியானத்தில் இதை எல்லாம் அவசியம் செய்ய வேண்டும்.

முன்னோர்கள் முதலில் அங்கே சென்று விட்டால் சப்தரிஷி மண்டலத்தில் இருந்து தன்னிச்சையாக (AUTOMATIC) நாம் அந்தச் சக்திகளைப் பெற முடியும். ஒவ்வொரு நிமிடமும் அதை வளர்க்க வேண்டும்.

அதிகாலையில் இந்தச் சக்திகளை அனுதினமும் எடுத்தோம் என்றால் பின் யாருடைய உதவியும் தேவையில்லை. அருள் உணர்வை வளர்த்த பின் நம்முடைய உயிரான்மா அங்கேதான் செல்லும்.

சகஜ வாழ்க்கையில் யாராவது நமக்குத் தீமை செய்தால் பாவிப்பயல் எனக்கு இப்படிச் செய்தானே…! என்று எண்ணுகின்றோம். அப்போது யாருடைய உதவியுமா கேட்கின்றது…? இல்லையே…!

நேராக அவனுடைய உடலுக்குள் தான் இந்த ஆன்மா செல்கின்றது இங்கே பட்ட வேதனையை அங்கே உருவாக்குகிறது. பழி தீர்க்கும் நிலையாகச் செயல்படுத்துகின்றது.

அதைப் போன்று தான் துருவ தியானத்தின் மூலம் எடுக்கும் துருவ நட்சத்ததிரத்தின் சக்தியை வலுவாக்கிக் கொண்டா நாம் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலே போய்த் தான் நிற்போம்…!

ஆகவே கணவன் மனைவி அவசியம் இந்த உயர்ந்த சக்திகளை எடுத்தே ஆகவேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நஞ்சினை வென்ற அகஸ்தியர் துருவனாகி துருவ மகரிஷியானர். கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று இரு மனமும் ஒரு மனமாகி ஒன்றுபட்டு வாழ்ந்து நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரியைப் போன்று ஒன்றிய நிலைகள் கொண்டு,.. இல்லற வாழ்க்கையில் இருளை நீக்கினார்கள்.

1.அவர்கள் வானுலக ஆற்றலைத் தம்முள் நுகர்ந்து
2.மின்னலின் அணுக்களைத் தமக்குள் அணுவாக மாற்றி
3.உயிருடன் ஒன்றி மின் அணுவாகத் தம் உடலின் தன்மையை மாற்றி
4.இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளனர்.

துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றிச் சென்றவர் ஆறாவது அறிவு பெற்றவர்கள் ஏழாவது நிலை கொண்டு இன்று சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளனர்.

தீமைகளிலிருந்து விடுபட்ட துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நாம் நுகர்ந்து பழகினால் ஒவ்வொரு நிமிடமும் தீமைகளை அகற்றிடும் வல்லமை பெற்றுத் தீமையற்ற நிலையாக வாழலாம்.

வேதனயான உணர்வை நாம் நுகர்ந்தால் அது நமது இரத்த நாளங்களில் கலந்து விடுகின்றது. நம்மை மனிதனாக உருவாக்கிய உடலின் அணுக்கள் விஷத்தின் தன்மை கொண்டபின் உடலின் அணுவின் தன்மை மாறுகின்றது.

உடலில் உள்ள அணுக்கள் விஷத்தின் தன்மையாக மாறும் பொழுது உடலில் வலி வருகின்றது. வலி வந்தால் உடல் நலிகின்றது, எண்ணம் குறைகின்றது.

எவ்வளவு செல்வம் தேடினாலும் எவ்வளவு செல்வம் சேமித்து வைத்தாலும் கடுமையான நோய்கள் வந்துவிட்டால் வாழ்க்கையில் வெறுப்பு தான் வருகின்றது.

வெறுப்பு உணர்வுகள் வரப்படும் பொழுது
1.உடலை வெறுக்கின்றோம்,
2.வேதனையை வளர்க்கின்றோம்.
3.இதனால் நாம் நிம்மதியற்ற நிலைகளில்தான் வாழ வேண்டி வரும்.

ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியில் அழுக்குப்பட்டு விட்டால், கண்ணாடியில் படிந்த அழுக்கைத் துடைத்தால்தான் நம்முடைய உருவத்தைக் காண முடியும்.

இது போன்று…
1.பிறருடைய தீமையின் உணர்வுகள் நமது ஆன்மாவில் பெருகி விட்டால்
2.நம்மை எது இயக்குகிறது என்று அறிய முடியாதபடி
3.நாம் பார்த்திருந்த உணர்வுகள் நமது உடலை இயக்கி
4.நம்மை நாம் அறிய முடியாத நிலைகள் ஆக்கி விடுகின்றது.

ஆகவே நம்மை நாம் எப்படி அறிய வேண்டும்…?

கண்ணாடியில் அழுக்குப் படிந்திருந்தால், நாம் எப்படிப் பார்த்தாலும் நமது முகம் தெரியாது. இது போன்றுதான் நமது ஆன்மாவில் அழுக்குப் படிந்து விட்டால் சிந்திக்கும் தன்மை இழக்கும் நிலை வருகின்றது.

1.கண்ணாடியில் படிந்த அழுக்கை நீக்கியவுடன் கண்ணாடியில் நமது உருவம் தெளிவாகத் தெரிவது போன்று
2.நமது ஆன்மாவில் கலந்த அழுக்கை நீக்கித் தூய்மைப்படுத்த வேண்டும்.

தூய்மைப்படுத்த வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று அடிக்கடி நாம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நம் உடலுக்குள் உணர்வின் தன்மையைச் செலுத்தப்படும்போது அறியாமல் புகுந்த வேதனைகள் நம் ஆன்மாவிலிருந்து நீங்கி நமது ஆன்மா தூய்மை பெறுகின்றது.

அப்பொழுது நமக்குள் தெளிவான நிலைகள் வரும்… சிந்திக்கும் தன்மை நமக்குள் வருகின்றது… தீமை அகற்றும் வல்லமை பெறுகின்றது… தீமைகள் புகாது தடுக்கவும் முடிகின்றது.

மகரிஷிகள் சுவாசிக்கும் விண்ணின் ஆற்றலை நாமும் விண்ணிலிருந்தே சுவாசிக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

சக்தியின் நிலை கொண்டு உயிர் பெற்ற உயிர் அணுக்கள் எல்லாமே தன் தன் உயிர் நிலை நிலைத்து நிற்க உணவை உட்கொள்கின்றன. மனிதர்களுக்கு அவரவர்கள் உண்ணும் உணவிலிருந்து சில உணர்வுகளும் உண்டாகின்றன.

நாம் உண்ணும் உணவெல்லாம் நம் உடலை வளர்க்கத்தான் என்ற நிலையில் உண்ணுகின்றோம். நாம் உண்ணும் உணவிலிருந்து மட்டும் தான் நம் உடலை நாம் காத்திட முடிகிறது என்றால்…
1.பல கோடிச் சித்தர்களும் பல தவசு முனிவர்களும் பல ரிஷிகளும்
2.பல நாள்கள் ஆகாரம் புசிக்காமலே ஜெப நிலையிலிருந்து இன்றும் இருந்து கொண்டுள்ளார்கள்.

அது எந்த நிலையப்பா…?

நாம் உண்ணும் உணவு நமக்குச் சக்தியளித்து சக்தி எல்லாம் நமது உடலில் ஈர்த்துப் பாக்கி நிலையில் உள்ளது கழிவாகிறது என்னும் நிலை தான் மனிதர்களுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் உள்ளது.

நம் உடல் ஒரு இயந்திரம் போல் உள்ளது என்று எண்ணுகின்றோம்.

நாம் உண்ணும் உணவின் நிலை என்ன என்றால் நாம் எந்த ஆகாரத்தைப் புசிக்கின்றோமோ அந்நிலையிலிருந்து அவ்வாகரத்தின் தன்மை “நம் சுவாச நிலைக்கு வந்துதான்” நாம் பிறகு சுவாசம் எடுக்கும் பொழுது நம் உடல் அந்த ஆகாரத்தை ஏற்கிறது.

சித்தர்கள் ஞானிகள் பெற்ற நிலை எல்லாம்
1.”அச்சுவாச நிலையிலிருந்தே” தன் உடலுக்கு வேண்டிய ஆகாரத்தை ஏற்று எடுக்கும் நிலையை
2.அச்சூரியனிலிருந்தே பூமிக்குக் கிடைத்திடும் அணுவின் சக்தி நிலை கொண்டு தன் சுவாச நிலைக்கு ஏற்றுக் கொள்கிறார்கள்.

மரம் செடி கொடிகளின் நிலை எல்லாம் மனிதருக்கும் மற்ற ஜீவராசிகளின் நிலைக்கும் உயர்ந்த நிலை பெற்ற நிலையப்பா…!

சூரிய சக்தியிலிருந்து ஒளிக் கதிர்கள் நம் பூமியைத் தாக்கி அதிலிருந்து தான் நாம் சுவாசிக்கின்றோம். மற்ற மிருகங்களின் நிலையும் மற்ற ஜீவனின் நிலையும் சூரியச் சக்தியின் ஒளிப் பிளம்பு பூமியில் பட்ட பிறகு தான் தன் சுவாச நிலைக்கு எடுத்துக் கொள்கிறது.
1.கீழ் நோக்கிய சுவாச நிலை கொண்டு தான்
2.இயற்கையில் எல்லோருமே ஜீவன் பெற்றுள்ளோம்.
3.பூமி ஈர்த்து வெளிக்கக்கும் நிலையைத் தான் நம் சுவாச நிலைக்கு எடுக்கின்றோம்.

மரம் செடி கொடிகளின் இலைகள் எல்லாம் அவ்ஈசனின் சக்தியைப் பெற்று அவ்ஈசனின் சக்தி என்பது சூரியனிலிருந்து வெளி வரும் ஒளிக் கதிர்களை நேராகவே தன் சுவாச நிலைக்கு ஈர்க்கின்றது.

அதிலிருந்து நாம் பெறும் புஷ்பங்களும் காய் கனிகளும் நாம் உண்ணும் பொழுது நம் உயிரணுவிற்கும் நம் உடலுக்கும் பெரும் ஆரோக்கிய நிலை தருகின்றன. மற்ற அணுக்களின் நிலை நம்மை வந்து தாக்குவதில்லை.

1.மற்ற ஜீவராசிகளைச் சமைத்து உண்ணும் பொழுது
2.அதை எவ்வளவு உஷ்ணத்தை ஏற்றிச் சமைத்தாலும்
3.அந்த அணுக்களின் நிலை நம்மை வந்து தாக்கத்தான் செய்யும்.

அந்த அணுக்களின் நிலையிலிருந்தெல்லாம் தப்பி… நாம் உண்ணும் உணவில் நல்ல நிலையை எடுத்துக் கொள்ள… அன்று வாழ்ந்த சித்தர்கள் நமக்குச் சொல்லிய பல வழிகள் மறைந்து விட்டன.

நாம் ஜெப நிலையிலிருந்து நல்ல உணர்வுடன் நாம் விடும் சுவாச நிலையிலிருந்து
1.அந்த ஈஸ்வர சக்தியை எடுத்துக் கொண்டால்
2.நம் நிலைக்கும் அச்சூரியனிலிருந்து வரும் சக்தி நிலைகள் பூமிக்கு வந்து தாக்கிடாமல்
3.பெரும் உன்னதமான நிலையில் நம் சுவாச நிலைக்கே அது வந்து
4.அழியாச் செல்வமான நம் உயிரணுவிற்கு… நம் ஆத்மாவிற்கு… சகல நிலையையும் பெற்றிடலாம்.

சித்தர்களும் ஞானிகளும் பல காலங்கள் ஆகாரம் புசித்திடாமல் இருந்த நிலைகள் எல்லாம் எப்படி…? என்று இப்பொழுது புரிந்ததா…!

தியான நிலையில் இருந்து கொண்டிருந்தால் இந்நிலையில் தியானம் பெற்றவர்கள் நிலை ஆயிரம் அணுகுண்டுகளை வெடித்தாலும் நம் சுவாச நிலைக்கு அவ்வணுகுண்டின் அழிக்கும் தன்மை என்றுமே வந்து தாக்கிடாது.

நம் கண்ணிற்குத் தெரியாமல் வாழும் பல கோடி ரிஷிகளின் நிலை எல்லாம் இது தானப்பா…!

நாம் நுகர்ந்தது (சுவாசிப்பது) உடலில் கரு முட்டையாகி அணுவாக எப்படி உருவாகிறது…? அணுவான பின் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் என்ன…?

 

உதாரணமாக நாம் வேதனைப்படுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். உயிரால் நுகரப்பட்டு அந்த உணர்வுகள் ஓ…ம் நமச்சிவாய.. ஓ…ம் நமச்சிவாய.. என்று நம் உடலாக (அணுக்களாக) உருவாகின்றது.

1.ஆனால் அந்த வேதனை என்ற உணர்வு அணுவாக (உடலாக) ஆவதற்கு முன்
2.வேதனையை நுகர்ந்த அடுத்த கணமே அதற்கு ஜீவன் கொடுக்காதபடி அணு உருவாகாதபடி தடுக்க வேண்டும்.

ஏனென்றால் வேதனைப்படுகிறார் என்று திரும்பத் திரும்ப எண்ணினால் அந்த உணர்வின் தன்மை இரத்தத்தில் கருவாகி விடுகின்றது.

அப்படிக் கருவாகி விட்டால் “ஒரு 48 நாட்கள்” ஆனால் நம் உடலில் இரத்தத்தில் சுற்றி வரும்போது வேதனை உருவாக்கும் அணுவாக உருவாகின்றது.

1.எந்த உறுப்பில் அது ஒட்டிக் கொள்கின்றதோ அங்கே அந்த அணு ஜீவன் பெற்ற நிலையில்
2.அதே இரத்தத்தின் வழியாகத்தான் தன் ஆகாரத்தை (வேதனையை) எடுக்கும்.

பூமியில் விளையும் ஒவ்வொரு தாவர இனச் சத்தையும் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்திருக்கின்றது.

ஒரு செடியில் விளைந்த வித்தை மண்ணிலே ஊனறினோம் என்றால் காற்றுடன் காற்றாகக் கலந்து வரும் சூரியன் கவர்ந்து வைத்துள்ள தன் இனமான உணர்வினை அது பிரித்தெடுத்துத் தான் அந்தச் செடி மீண்டும் விளையும்.

இன்று டி.வி. ரேடியோக்களில் ஒளி ஒலி அலைகளாக எண்ணிலடங்காத ஒளிபரப்புகளைச் செய்கிறார்கள். வீட்டிலிருக்கும் சாதனத்தை வைத்து
1.அந்தந்த அலை வரிசைகளில் வருவதைத் திருப்பி நமக்கு வேண்டிய ஸ்டேஷனை வைத்தால்
2.அதை மட்டும் கவர்ந்து நாம் பார்க்கின்றோம் அல்லது கேட்கின்றோம்
3.மற்ற அலைகள் வந்தாலும் அதைக் கவர்வதில்லை.

இதைப் போன்று தான் எந்த உணர்வின் தன்மையை நாம் எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் தன்மையைத் தனக்குள் எடுத்துக் கொள்கின்றது… அதை அந்த அணுக்கள் இழுத்தே கவர்கின்றது.

அதாவது…
1.எந்த எண்ணத்தை நாம் கவர்ந்தோமோ அந்த அணுவின் தன்மையாக
2.நமக்குள் ஒரு கரு முட்டையாக உருவாகின்றது.
3.இரத்தத்துடன் கலந்து சுழன்று வரும் பொழுது எந்த உறுப்பின் பாகத்தில் இது இணைந்து விடுகின்றதோ
4.அதனின் பருவமாகும் போது முட்டை வெடித்து அணுவாக மாறுகின்றது… கூட்டை விட்டு வெளியே வந்து விடுகின்றது.

உதாரணமாக நத்தை ஓட்டுடன் ஒட்டி இருந்து பாதுகாப்பாக இருப்பது போல
1.நாம் நுகர்ந்த உணர்வின் அணுக்கரு உடலின் உறுப்போடு ஒட்டி
2.எந்த உணர்வின் சத்தை அதை எடுத்ததோ இரத்தத்தில் வருவதை உறிஞ்சி
3.உணவாக எடுத்து வளர்ந்து தன் இனத்தைப் பெருக்கும்.

அந்த அணுவின் (வேதனை) மலம் தசையாகி உறுப்புகளில் சேர்க்கும் பொழுது ஏற்கனவே உருவான நல்ல அணுக்களால் உருவான உறுப்பைச் செயலிழக்கச் செய்யும்.

முதலில் உறுப்புகள் அழகாக இருக்கும். இந்த வேதனை என்ற உணர்வுகள் சேர்ந்து அதனின் அணு வெடித்து நுரையீரலிலோ அல்லது கல்லீரலிலோ இது போன்ற அணுக்கள் தேங்கி விட்டால் விஷத்தின் தன்மை பாய்ந்து விடும். பின் அந்த உறுப்புகளில் எல்லாம் வலி எடுக்க ஆரம்பிக்கும்.

இரத்தங்களை உடல் முழுவதும் பிரித்து அனுப்பும் இருதயத்தில் இது போன்ற வேதனை அணுக்கள் உருவானால் அது இரத்தம் போகும் பாதையே அடைத்துவிடும் (ஹார்ட் அட்டாக்).

நம் இதயத்தில் இயற்கையாகவே மூன்று பிரிவுகள் வழியாக இரத்தம் உடல் முழுவதும் செல்கிறது. மேலே சொன்ன வேதனையான அணுக்கள் இதயத்தில் உருவானால் அடைப்பாகி… இரண்டு பாதை வழியாகப் போகும். அதிலும் அடைப்பானால் ஒன்றின் வழியாகப் போகும்.

ஒன்றின் வழியாகப் போகும் போது திணறலாகும். அதுவும் அடைபட்டால் நின்றுவிடும்.

இது எல்லாம் நாம் சந்தர்ப்பத்தால் எடுக்கும் எண்ணங்கள் உணர்வுகளுக்குத் தக்க நம் உடலில் அணுக்கள் உருவாகி அதனால் ஏற்படும் விளைவுகள்.

இதை மாற்ற வேண்டும் என்றால்…
1.நம் குருநாதர் காட்டிய வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து
2.ஒவ்வொரு நிமிடமும் நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்.
3.தீமையான அணுக்கள் உடலுக்குள் உருவாகாத வண்ணம் தடைப்படுத்தியே ஆக வேண்டும்.

சித்தர்களால் மறைக்கப்பட்டுள்ள உண்மைகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பல கோடி உயிரணுக்கள் வந்து நம் உடலிலும் எண்ணத்திலும் கலக்கும் நிலையில் உள்ளதப்பா மனித உடல்.

1.பல கோடி அணுக்களின் ஈர்ப்பு நிலையில் இருந்து தப்பி
2.அழியாத செல்வமான நம் ஆத்ம ஜோதி நிலை கண்டிடத்தான்
3.இந்தத் தியான நிலை… சுவாச நிலை எல்லாமே…!

தியான நிலையில் உண்மை நிலையைப் புரிந்து ஒவ்வொருவரும் செயல்பட்டுப் பல கோடித் தீய உயிரணுக்களின் செயல்களுக்கு நாம் அடிமையாகாமல் அதிலிருந்தெல்லாம் நாம் தப்பி நம் சுவாச நிலையில் நம் எண்ணத்தில் அவ்வீசனின் சக்தியை ஊன்றச் செய்ய வேண்டுமப்பா…!

பல மகரிஷிகள் ஞானிகள் சித்தர்கள் எல்லாம் பெரும் ஞானப் பேராற்றல் நிலையை எய்தியது எப்படியப்பா..?
1.மற்ற அணுக்களின் சக்திகள்… உந்தல்கள்…!
2.தன் நிலைக்கு வந்து செயல்படாமல் மாற்றிக் கொண்டார்கள்.

அவர்கள் பல கோடி உண்மை இரகசியங்களை அறிந்து அன்றைய காலத்தில் அதை ஜாதக வடிவிலும்… கோவில்களிலும்… மருத்துவத்திலும்… பல உண்மை நிலைகளை எல்லாம் கண்டறிந்து பெரும் சூட்சமத்தில் இரகசியமாக வெளியிட்டார்கள். பல உண்மைகளை மறைத்தும் விட்டார்கள் அன்றையச் சித்தர்கள்…!

இந்நிலையில் பல உண்மைகளை அறிந்து தன் உயிராத்மாவை அழியாச் செல்வமாக்கி நான் என்றால் என்ன…? என்பதை அன்றே உணர்ந்தார்கள். பின் வரும் மக்களுக்காக எவ்வளவோ பெரும் நிலைகளை எல்லாம் கண்டுணர்ந்து
1.இன்றும் சூட்சம நிலையில் இருந்து கொண்டே
2.ஆண்டவன் ரூபத்தில் வந்து பல வழிகளில் உணர்த்துகிறார்கள்.

அழியாச் செல்வமான இந்த உயிராத்மாவை மனிதர்கள் எல்லோருமே என்ன…? என்று புரிந்து கொண்டு வாழ்ந்திட வேண்டுமப்பா…!

ஜெப நிலையில் அமர்வதையும்… தெய்வத்தை வணங்குவதையும்… பலர் பல நிலையில் பொருளுக்காக என்று செயல்படுத்தி உண்மை நிலையையே புரிந்து கொள்ளாமல் சிதறடித்து விட்டார்கள்.

நம் உயிராத்மாவை… உடலை விட்டுப் பிரிந்த பல ஆத்மா என்னும் அணுக்களின் நிலையில் இருந்து தப்பி ஒவ்வொருவரும் வாழ்ந்திட வேண்டும்… வாழ்ந்திட முடியும்…!

இந்த உடலில் இருந்தால்..
1.இனி எத்தனை காலங்கள் உடலுடன் வாழ முடியும்…! என்ற உண்மையைப் புரிந்து கொண்டு
2.தன் ஆத்மாவிற்குத்தான் அழியாச் செல்வத்தைச் சேமிக்க வேண்டும்.

இந்தச் சூரியனிலிருந்து நாம் பல கோடி நன்மைகளைப் பெற்று வருகின்றோம். சூரியன் எப்படிப் பல மண்டலங்களின் நிலை கொண்டு அச்சக்திகளைத் தன்னுள் ஈர்த்துப் பல நன்மைகளை அளிக்கின்றதோ அதே போல் அச்சக்தியின் அருள் பெற்ற நாம் எல்லோரும் சத்திய நிலையில் வாழ்ந்து சமுதாயத்தில் நல் நிலையில் வாழ்ந்திட வேண்டும்.

1.இந்தப் பிரபஞ்சத்தில் நாம் பிறருக்குச் சுமையாக வாழ்ந்திடாமல்
2.பிறரின் நன்மைக்காகப் பிறவி எடுத்த பயனைப் பெற்றிட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

அன்று மெய் ஞானிகள் வாழ்க்கையில் வரும் துன்பங்களை நீக்க தன் உணர்வின் ஆற்றலை மக்களுக்குத் தெள்ளத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள். அந்த வழியைத்தான் யாம் உபதேசிக்கின்றோம்.

தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றினால் எப்படி செம்பும், பித்தளையும், வெள்ளியும், ஆவியாகச் செல்கின்றதோ அதைப் போன்று நாம் ஆத்ம சுத்தி செய்து நமக்குள் வரும் தீமைகளை நீக்க முடியும்.

ஓ…ம் ஈஸ்வரா… என்று நம் உயிரை எண்ணி விண்ணை நோக்கி நாம் உணர்வைச் செலுத்த வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்க வேண்டும். விண்ணிலிருந்து சுவாசித்து அதை நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

நாம் நல்லதை எண்ணி வாழும் பொழுது ஒவ்வொரு நிமிடமும் சந்தர்ப்ப வசத்தால் நமக்குள் சங்கடமோ துன்பமோ பயமோ அவசரமோ ஆத்திரமோ இதைப் போன்ற உணர்ச்சிகளை நாம் நுகர நேருகின்றது.

இந்த உணர்வுகள் நம் உடலுக்குள் உமிழ் நீராகச் சேர்ந்து அந்த உணர்வின் அலைகள் நம் உடலுக்குள் அது சுழன்று வருவதற்குள் நாம் அடுத்த கணமே ஆத்ம சுத்தி செய்யும் பொழுது அதைப் பரிசுத்தப்படுத்தி நல்ல உணர்வுகளாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கருணைக்கிழங்கை வேக வைத்தவுடன் அதில் உள்ள விஷத்தின் தன்மைகள் மாறுகின்றது. இதைப் போன்று
1.கடினமான சொற்கள் நம்மை இயக்கவும் அறியவும் உதவினாலும்,
2.அது நம் உடலுக்குள் போய்த் தீங்கு செய்யாதபடி நாம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆனால் நாம் நல்லதைக் காக்க வேண்டும் என்று தான் அந்த உணர்வுகளை நுகர்ந்தோம். அந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு நல்ல உணர்வின் தன்மையைக் காக்க முடிந்தது. நல்ல செயல்களை அறியவும், செய்யவும் முடிந்தது.

1.ஆனால் அந்த உணர்வுகள் நம் உயிரிலே மோதியபின் அது இயக்கி அந்த உணர்ச்சிகளை ஊட்டி
2.நம் உடலை இயக்கியபின் தான் தெரிகின்றது.

இந்த உணர்வின் சத்து நம் உடலுக்குள் கலப்பதை அதைச் சுத்தப்படுத்தவில்லை என்றால் அந்த அசுத்தமே நம் உடலில் சேர்ந்து விடுகின்றது. அதைத் துடைப்பதற்குத்தான் இந்த ஆத்ம சுத்தி என்ற முறை.

வாரத்தில் ஒரு நாள் நாம் கூட்டுக் குடும்ப தியானம் செய்து நம் மூதாதைதையர்களை விண் செலுத்தினால்தான் சுலப நிலைகள் கொண்டு அந்த அருள் சக்திகளைப் பெற முடியும்.

இன்று விஞ்ஞானிகள் எப்படிப் பல நிலைகளையும் பொருத்தி அதனை இணைத்துச் செய்கின்றனரோ அதே போன்றுதான்
1.மெய் ஞானிகள் தன் உடலின் தன்மையில்
2.இயற்கையின் சக்தியைத் தனக்குள் தொடர்பு கொள்வதற்கு,
3.விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி
4.உணர்வின் எண்ணத்தைப் புலனறிவான தன் கண்ணுக்குள் செலுத்தி
5.கண்ணின் நினைவை விண்ணை நோக்கி ஏகி அதன் வழியிலே தனக்குள் சக்தியைப் பெருக்கிக் கொண்டார்கள்.

இப்படி அவர்கள் பெற்ற அந்த சக்திகளை நீங்கள் பெறுவற்காக வேண்டித்தான் அவர்கள் எந்த மார்க்கங்களிலே சென்றார்களோ அவ்வழிகளிலே உங்களையும் செல்லச் செய்வது.

இதில் ஒன்றும் கஷ்டமில்லை.

வாரத்தில் ஒரு நாள் வீட்டில் எல்லோரும் சேர்ந்து தியானம் செய்து, உங்களுக்குள் சக்தியைக் கூட்டிக் கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கக்கூடிய ஆற்றலை இந்த முறைப்படி செய்து கொண்டால் விண்ணுலகையும் அண்டத்தையும் நீங்கள் காணலாம்.

அந்த அண்டத்திற்குள் இருக்கக்கூடிய உணர்வின் தன்மையை நமக்குள் இழுத்து நம்மைத் துன்பப்படுத்தும் நிலைகளைக் குறைக்கலாம்.

உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

சர்க்கரைச் சத்து இரத்தக் கொதிப்பு உப்புச் சத்து மூச்சுத் திணறல் இது எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டது தான்…!

 

நாம் உணவாக உட்கொள்கிறோம் என்றால் அதில் உள்ள சத்துகள் எல்லாம் நம் உடலிலே முதலில் அமிலமாகத்தான் மாறும்.

விஷத்தன்மை கொண்ட நம் பித்த சுரபி…
1.அதனுடைய சுரப்புக்குத் தக்கவாறு சாப்பிடும் ஆகாரத்திற்குள் கலந்து
2.அந்த அமிலத்தன்மையை குளுக்கோஸாக மாற்றுகிறது.

குளுக்கோசாக மாற்றி வரப்படும் பொழுது இரத்தங்களிலே இருக்கக்கூடிய செல்கள்
1.இந்த உணர்வின் தன்மையைச் சுழலச் செய்து சுழலச் செய்து
2.அதைச் சிவப்பணுக்களாக மாற்றி விடுகின்றது.

அப்படி மாற்றும் தன்மை அங்கே இல்லை என்றால் விஷத்தின் தன்மையால் அந்தக் குளுக்கோஸ் சர்க்கரையாக மாற்றி விடுகின்றது. இப்படி அந்தக் குளுக்கோஸ் அதிகமானால் சர்க்கரைச் சத்து இரத்தத்திலே அதிகமாகிவிடும்.

காரணம்… அடிக்கடி வேதனையான உணர்வைச் சுவாசிக்கும் பொழுது அல்லது வேதனைப்படுவோரைப் பார்க்கும் பொழுது அல்லது வேதனையான உணர்வுகளை எடுக்கும் போது உடலில் விஷத் தன்மைகள் அதிகமாகிறது.

உதாரணமாக ஒருவர் செய்யும் தவறான செயலைப் பார்த்து நம்மால் அதைத் தாங்க முடியவில்லை என்றால் சோர்வான உணர்வைத்தான் நுகர்கின்றோம். அதை நுகரப்படும் பொழுது கோபமான உணர்வுகளைக் கலந்து நாம் சுவாசிக்க நேருகின்றது.

இது நமக்குள் கூடியபின் இந்த உணர்வு பிரிக்கப்பட்டு குளுக்கோஸை சிவப்பணுக்களாக மாற்றும் தன்மைக்கு மாறாக இதனுடைய உணர்வின் செல்கள் அழுத்த நிலைகள் கொண்டு இரத்தக் கொதிப்பு நோயாக மாறும்.

1.சர்க்கரைச் சத்து உள்ளவர்களுக்கு ரொம்பச் சீக்கிரம் இந்த இரத்தக் கொதிப்பும் வரும்.
2.காரணம் நுகர்ந்த உணர்வுக்கொப்ப (சோர்வு வேதனை கோபம்) அணுக்களின் தன்மை வீரியம் அடைகின்றது.

வைத்திய ரீதியில் எடுத்துக் கொண்டாலும் கூட இரத்தத்தைப் பரிசோதித்துத் தான் இரத்தக் கொதிப்பு இருக்கிறது… சர்க்கரைச் சத்து இருக்கின்றது என்பார்கள்.

அதே சமயத்தில் இந்த இரண்டும் மோதும் பொழுது சலிப்புத் தன்மை அடைந்து பிரிக்கப்படும் பொழுது… ஆஸ்த்மா போன்ற சளித் தன்மையும் அதிகமாகின்றது.

சர்க்கரை அதிகமாகும் போது சளி உருவாகி எல்லா இடத்திலும் அது உறைந்து அந்த அமிலங்கள் மாறுகின்றது. உடலுக்குள் ஒவ்வொன்றையும் இப்படி மாற்றுகின்றது.

பரிணாம வளர்ச்சியில் எத்தனையோ காலமாகப் பல சரீரங்கள் பெற்று இன்று மனிதனாக வளர்ந்து வந்திருந்தாலும்…
1.நாம் இன்று சந்திக்கும் சந்தர்ப்பங்கள் மூலம் உடலில் அணுத் தன்மைகள் மாறி
2.கடைசியில் வேதனை என்ற உணர்வே மிஞ்சுகின்றது…
3.மனிதனின் ரூபத்தையே மாற்றும் தன்மைக்கு வந்து விடுகின்றது.

ஆக அந்த வேதனை எதில் உருவாகிறது என்றால் சந்தர்ப்பத்தால் இணைத்த உணர்வு கொண்டு தான் நமக்குள் அது வருகின்றது.

ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தையே நல்லதாக மாற்றும் நிலைக்குத்தான் உபதேசங்கள் வாயிலாக அருள் ஞானத்தை உங்களுக்குள் வளர்க்கும் தன்மையாக இங்கே செயல்படுத்திக் கொண்டுள்ளோம் (ஞானகுரு).

உடலை விட்டுப் பிரிந்து செல்பவர்கள் கைலாசமோ வைகுண்டமோ சொர்க்கமோ அடைவதில்லை – ஈஸ்வரபட்டர்

 

மனிதர்கள் பிறந்து வளர்ந்து இந்த உலக வாழ்க்கையை விட்டு அந்தந்த உடலிலிருந்து ஆத்மா பிரிந்து சென்ற பிறகு
1.அந்த ஆத்மாக்கள் எந்த நிலையில் இருக்கின்றன…?
2.அவ்வாத்மாக்களின் நிலை என்ன..? என்ற உண்மை நிலையை
3.ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொள்ள வேண்டும்…! என்பதன் பொருளில் தான்
4.ஆத்மாவிற்கு முதலிடம் தந்து சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

இந்த உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்றவுடன் பரலோகத்திற்குச் செல்கிறது…! என்கிறார்கள். இப்பரந்த உலகிலே அந்த ஆத்மாக்கள் அபிலாஷையுடன் (ஆசாபாசத்துடன்) சென்றிருந்தால் பரந்த உலகில் சுற்றிக் கொண்டிருப்பதில்லை.

தன் ஆத்ம நிலை கொண்டு எந்த இடத்தில் அதன் ஆன்மா பிரிந்ததோ அந்த நிலையிலேயே
1.அந்த ஆத்மா பிரிந்து செல்வதற்கு முதலில் இருந்த உடல்
2.எந்த இடத்தில் எந்த நிலையில் வாழ்ந்ததோ அங்கேயே தான் சுற்றிக் கொண்டுள்ளது.

அதனுடைய ஆசைகளும் அதனுடைய எண்ணங்களும் செயல்படும் வரை அதற்குக் கால நிலைகள் இல்லை.
1.எவ்வளவு காலம் வேண்டுமாகிலும்
2.அதன் ஆசை முடியும் வரை
3.அங்கே தான் சுற்றிக் கொண்டு தான் இருக்கும்.

அந்த ஆத்மாவின் உருவம் என்பது அவ்வாத்ம ஜோதியின் நிலை அதாவது உருவமில்லாத அந்த உயிராத்மா எப்படி இருக்கும்…?

அது சிறிய அணுவாகத்தான் உள்ளது. அவ்வாத்மாவைச் சுற்றி அது வாழ்ந்த நாட்களில் அதன் சுவாச நிலையைக் கொண்டு அவை பேசிய பேச்சுக்களும் விட்ட சுவாச நிலையும் அதே நிலையில் தான் சுற்றிக் கொண்டேயுள்ளது.

இந்த உலகினிலே “பல கோடி ஆத்மாக்கள்” காற்றிலே பரந்து பரவியுள்ளன. ஒவ்வொரு ஆத்மாவும் ஒவ்வொரு நிலை கொண்டு சுற்றிக் கொண்டுள்ளது.

இன்றைய உலகில் வாழ்ந்திடும் மக்களில் நம் (உடலுடன் உள்ளவர்கள்) ஒவ்வொருவரின் சுவாச நிலை எப்படி உள்ளதோ அந்நிலைக்கு ஏற்ப
1.நாம் விடும் சுவாச நிலை கொண்டு
2.நாம் விடும் சுவாச நிலை என்று சொல்லும் பொழுது கோபம் மகிழ்ச்சி சாந்தம் இப்படிப் பல உணர்ச்சிகள் நமக்கு வரும் பொழுது
3.அத்தகைய உணர்ச்சிகளுக்கும் உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மாவின் ஆசைக்கும் ஒத்த நிலை வரும் பொழுது
4.மனிதர்கள் (நம்) உடலில் அந்த உயிராத்மாக்கள் புகுந்து தன் எண்ணத்தையும் தன் ஆசைகளையும் செயல்படுத்திக் கொள்கிறது.

ஆனால் அதே சமயம் உள்ளே புகும் உயிரான்மாக்கள் வெளியேறும் வழியே இல்லை. புகுந்த உடலை விட்டு எப்பொழுது அந்த உடலுக்குச் சொந்தமான உயிரான்மா பிரிகிறதோ அன்று தான் அந்த உடலில் உள்ள அனைத்து ஆன்மாக்களும் வெளியே வர முடியும்.

ஆகவே அந்த உயிரான்மாக்களின் செயல்களிலிருந்து தப்ப வேண்டும் என்றால்
1.தியான நிலை மிகவும் முக்கியமான ஒன்றப்பா…!
2.அதைத் தவிர வேறு வழி இல்லை.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

 

பிறர் செய்யும் தவறுகளைப் பார்த்து அதைத் தவறு என்று உணர்ந்தாலும்… ஆபத்து வரும் பொழுது ஆபத்து வருகின்றது என்ற உணர்ச்சிகள் தூண்டப்பட்டு நம் உடலைக் காத்தாலும்
1.சுவாசித்த உணர்வுகள் நமக்குள் மன வலுவைக் குலைக்கச் செய்யும்.
2.அதிலிருந்து நம்மை மீட்டுக் கொள்வதற்கு ஆற்றல் தேவை.

நீங்கள் அத்தகைய ஆற்றல் பெறும் நிலைக்காகத்தான் யாம் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை நமது குருநாதர் கொடுத்த அருள் வாக்கின் தன்மையை உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் கொடுக்கின்றோம்.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பல சந்தர்ப்பங்களில் எமக்குத் துன்பத்தை ஊட்டி அவர் கொடுத்த ஆற்றல்மிக்க சக்தியை யாம் சுவாசிக்க நேர்ந்தது.

துன்பத்தை நீக்கும் இந்த உணர்வின் தன்மை கொண்டு எப்படி ஒளியின் சரீரம் பெற வேண்டும்…? அதை எப்படிப் பெற முடியும்…? என்பதைப் பல அனுபவங்களின் வாயிலாகக் கொடுத்தார்.

குருநாதர் கொடுத்த ஆற்றல்மிக்க அந்தச் சக்திதான்….
1.யாம் (ஞானககுரு) 12 வருட கால அனுபவத்தில் வளர்த்த
2.பல இன்னல்களைப் போக்கும் துன்பங்களைத் துடைக்கும் ஆற்றல் மிக்க சக்தியான
3.வாக்காக இங்கே கொடுக்கும் ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்.

பல இன்னல்களைத் தாங்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி அந்த ஒவ்வொரு இன்னலையும் நீக்குவதற்குப் பேரண்டத்தின் ஆற்றலையும் ஞானிகளின் உணர்வலைகளையும் சுவாசித்து அதை உடலுக்குள் அணுக்களாக மாற்றுவதற்குத்தான் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதம் உங்களுக்குக் கொடுக்கப்படுகின்றது.

துன்பம் வரும் பொழுது…
1.ஓ…ம் ஈஸ்வரா… என்று உயிருடன் தொடர்பு கொண்டு
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வைச் சுவாசிக்க வேண்டும்.

அப்படிச் சுவாசிக்கும் பொழுது அந்த மெய் ஞானிகள் விளைய வைத்த ஞானத்தின அருள் ஒளிகள் நீங்கள் நினைத்த மாத்திரத்தில் சுலபத்தில் வரும்.

அத்தகைய தன்மைதான் யாம் கொடுக்கும் இந்த வாக்கு, இந்த ஆத்ம சுத்தி என்பது. இது துன்பங்களை நீக்கக் கூடிய கடுமையான ஆயுதம்.

இதை நீங்கள் எடுக்கும் பொழுது துன்பம் நீங்கும்… நோய்கள் நீங்கும்.. அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கூடும். இந்த மனித வாழ்க்கையில் நீங்கள் புனிதம் பெற முடியும்.

ஆகவே இதை அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.

கணவன் மனைவி அருள் ஒளியை இருவருக்குள்ளும் பெருக்க வேண்டியதன் முக்கியமான காரணம்

 

கணவன் மனைவி இணையாது… தனித்த நிலையில் தவத்தின் மூலம் ஆற்றல் மிக்க சக்திகளைப் பெற்றாலும் முனித் தன்மை என்பதே விஷத் தன்மை கொண்டது. ஒன்றை ஊடுருவிக் கொல்லும் சக்தி பெற்றது.

1.பெண் பால் என்ற நிலையில் இணைந்து வரப்படும் போது தான்
2.விஷத்தின் தன்மை ஒடுக்கி
3.ஒரு துடிப்பின் நிலையாக இயங்கி
4.அணுவின் சக்தி பெறக்கூடிய தகுதி பெறும்.

இதையெல்லாம் வாழ்க்கையில் சிந்தித்துப் பார்த்தால் தெரியும்.

ஏனென்றால் கணவன் மனைவி இரண்டு பேரும் அன்பாகப் பேசி… ஒரே எண்ணத்துடன் ஒரு வேலையைச் செய்ய வேண்டும் என்று எண்ணினால் எண்ணங்கள் கை கூடி அந்தக் காரியங்கள் சித்தியாகும்.

ஆனால் கணவன் ஒரு வேலையைச் செய்யப் போனால் இதை எதற்குச் செய்து கொண்டிருக்கிறார்…? என்று மனைவி இடைமறித்து அழுத்தமாகச் சொன்னால் போதும்.

அதற்கு அடுத்து கணவன் என்ன வேலை செய்தாலும் கூட இந்தக் குறை உணர்வுகளே அங்கே வளரும்.

ஆகவே குடும்பத்தில் வாழும் பெண்கள் சர்வ ஜாக்கிரதையாக ஒரு சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
1.பெண்பால் என்ற உணர்வு எதனில் கலக்கின்றதோ அதனின் உணர்வின் கலவை கொண்டு
2.அடுத்து கருத்தன்மை பெறக்கூடிய தகுதி பெற்று விடுகின்றது. (ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்).

இதைப் போன்ற நிலைகள் இந்த வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உண்டு. ஏனென்றால்…
பல கோடி உணர்வுகள்
பல குடும்பங்களில்
பல நிலைகள்
பல வித்தியாசமான நிலைகள் உண்டு.

கணவன் நல்லவனாக இருக்கலாம். இருந்தாலும் சந்தர்ப்பத்தில் அறியாமையினால் ஒரு வேதனைப்படும் செயலைச் செயல்படுத்தும்போது சங்கடமான உணர்வுகளைக் குடும்பத்தில் உருவாக்குகின்றது.

வேதனை என்ற விஷத்தன்மை வரும் பொழுது மனைவியை நினைக்கும் போதெல்லாம் அடிக்கடி வெறுப்பின் தன்மையும் வேதனைப்படும் தன்மையும் கணவனுக்கு வரும்.

பின் அடுத்து மனைவி நல்லதைச் சொன்னாலும் கணவன் அதை ஏற்றுக் கொள்ளும் பண்பு வருவதில்லை. அதே சமயத்தில் மனைவிக்கும் இந்த விஷத்தின் தன்மை கூடுகின்றது,

இப்படி விளைந்த உணர்வு பரவியபின் அந்தத் தவறின் உணர்வு அங்கேயும் விளைகின்றது.
1.இருவருமே இதே உணர்வின் தன்மை வளர்க்கப்படும் பொழுது இருவருக்குமே நோய் வருகின்றது.
2.கை கால் குடைச்சல் மேல் வலி தலை வலி என்று வரிசைப்படுத்தி வரும்.

இருவரும் ஒன்று சேர்த்து ஒரு பொருளைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு சரி… இதை வாங்கலாம்…! என்று எண்ணினாலும் வேதனை கலந்த உணர்வுடன் இருவருமே செல்லப்படும் பொழுது அந்தப் பொருளை வாங்கினாலும்… வாங்கிய பின் இரண்டு பேருக்கும் பகைமை வரும்.

1.அப்போது அந்தப் பொருளைப் பாதுகாக்கும் சக்தியை இருவருமே இழந்து விடுகின்றனர்.
2.இது எல்லாம் இயற்கையின் நியதிகளில் உணர்வுகளின் இயக்கம் தான்.

கணவன் மனைவி இருவருமே அருள் ஒளியைப் பெற்று அதைக் இருவருக்குள்ளும் கருவாக்கினால் மகிழ்ந்து வாழச் செய்யும். வெறுப்போ பகைமையோ வளராது… நோயாகவும் மாற்றாது.

அதற்காக வேண்டித் தான் அதிகாலை துருவ தியானத்தில் இருவருமே ஒன்று போல் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் கணவருக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும் என் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும் அவசியம் எண்ணித் தியானிக்க வேண்டும் என்று உங்களிடம் யாம் சொல்வது.

இந்தப் பழக்கத்திற்கு இருவருமே வந்து விட்டால் குடும்பத்தில் மன மகிழ்ச்சியும் செல்வமும் செல்வாக்கும் சொல்வாக்கும் தன்னாலே பெருகும்.

மிஷின் கண் (MACHINE GUN) போன்று ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கிறோம்

 

ஒரு உணர்வின் தன்மை ஒரு அணுவின் தன்மை சேர்க்கப்படும் போது அது எந்தெந்த குணத்தின் தன்மை அதிகமாகச் சேர்க்கின்றதோ அது ஆற்றல் பெறுகின்றது.

இதைப் போன்றுதான் இயற்கையின் உண்மையினுடைய நிலைகள்.

நாம் மெய் உணர்வின் தன்மையை அறிந்துணர்ந்தபின் அந்த மகரிஷிகள் அருள் வழியைக் காட்டியபின் இந்த உடலில் இருக்கப்படும் பொழுதே யாம் சொல்லும் நிலைகளைக் கடைப்பிடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் பிரச்சினைகளையும் சங்கடங்களையும் எதிர் கொள்கின்றீர்களோ அதையெல்லாம் உங்களுக்கு நன்மை பயக்கும் நேரமென்று எடுத்துக் கொள்ளுங்கள்.

எப்படி…?

என்னைத் திட்டிவிட்டானே… இரு நான் பார்க்கின்றேன்…!’ என்றால் அன்றைய நாள் துன்பத்தைக் கொடுக்கும் நாள்.

அவர்கள் சொன்னவுடன் அல்லது நம் பையனே அப்படிப் பேசி இருந்தாலும் கூட அந்த உணர்வுகள் ஆத்திர உணர்வுடன் வெளிப்படுத்தும் போது நமக்குக் கெட்ட நாள். நமக்குள் அந்த உணர்வின் தன்மையைக் கூட்டுகின்றது.

ஆகவே யாராவது திட்டினாலும், உணர்ச்சிவசப்பட்டு ஏசும் நிலை வந்தாலும்…
1.உடனே ‘’ஓ…ம் ஈஸ்வரா…’’ என்று உயிரை எண்ணுங்கள்
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.
4.அப்பொழுதே இது அடங்கும்.

ஒருவர் உணர்ச்சிவசப்பட்டுப் பேசி அந்த உணர்ச்சியைத் தூண்டும் நேரத்திலும் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொண்டால் அவர்களால் சங்கடமாக ஏற்படுத்திய உணர்வுகள் நம்மை ஆட்டிப்படைக்காதபடி அதை அடக்க இந்த ஆயுதம் உதவும்.

அடுத்து… யார் நமக்கு தவறு செய்தார்களோ அவர்களை எண்ணி.
1.மகரிஷிகளின் அருளால் அவர்கள் நாளை செய்வதெல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று ஆணையிடுங்கள்
2.அதே சமயத்தில் அவர்கள் தீமையான உணர்வுகள் உங்களுக்குள் வராது தடுக்கச் செய்யுங்கள்.

இதை நீங்கள் பயன்படுத்தி ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் அருள் ஒளிகளைச் சேர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

மனித வாழ்க்கை அது எந்த நிமிடம் என்று சொல்ல முடியாது. நாம் இப்பொழுது எந்த நிலைகளில் இருந்தாலும் மனிதருடன் வாழப்படும் பொழுது குறைகளைக் காணாமல் இருக்க முடியாது. இன்றைய விஞ்ஞான உலகத்தில் பல பல குறைகளைக் கண்டு கொண்டு தான் இருக்கிறோம்.

ஆனால் ஒவ்வொரு நிமிடமும் நாம் ஆத்ம சுத்தி செய்வதன் மூலம் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைச் சேர்த்து ஒவ்வொரு நிமிடமும் அந்த புனிதப் பயணமாக இந்த வாழ்க்கை இருக்க வேண்டும்.

உங்களிடம் யாம் (ஞானகுரு) எதற்காக இதைச் சொல்கிறோம்…?

நீங்களெல்லாம் மகிழ்ந்திருந்தால் தான்… மகிழ்ச்சியான சொல்களைச் சொன்னால்தான் எமக்கும் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

அதைப் போல நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு
1.யாராவது துன்புற்று உங்களிடம் வந்தாலும் உடனே அவர்களுக்கு நன்றாகிப் போகும்…! என்று சொல்லுங்கள்.
2.அவர்களுக்கு உடல் நலமாகிவிடும்.
3.உடல் நலம் பெற்றேன் என்று அந்த மகிழ்ச்சியான எண்ணங்களைச் சொல்லும்போது
4.அந்த நல்ல உணர்வுகளை உங்களுக்குச் சொந்தமாக்குங்கள்.

நான் எப்படி உங்களுக்கு நல்லதாக வேண்டும் என்று எண்ணுகின்றேனோ அதைப் போன்று நீங்கள் ஒவ்வொருவரும் ஆத்ம சுத்தி செய்து கொண்டு அந்த எண்ணத்தைப் பரப்புங்கள்.

நம்முடைய மூச்சு பிறருடைய துன்பங்களைப் போக்க உதவ வேண்டும். துன்பமான உணர்வுகளைக் காதிலே கேட்டு நம் உடலுக்குள் நின்று அந்தத் துன்பங்கள் நம்மை ஆட்டிப் படைத்துவிடக் கூடாது.

பிற துன்ப அலைகள் எல்லாம் அது விஷம். அது ஊடுருவி நம்மைக் கெடுக்கத் துரித நிலைகளில் செயல்படும். அதை மாற்றுவதற்கு மெய் ஞானிகளின் அருள் ஒளி நமக்குள் இருந்தால்தான் மாற்ற முடியும்.

1.மெய் ஞானிகளின் அருள் ஒளி நெருப்பு.
2.அந்த நிலையின் தன்மையை நாம் பெற வேண்டும்.
3.ஆனால் இதற்குக் குருவின் துணை வேண்டும்.

குருவின் இணைப்பு கொண்டு அன்று மகரிஷிகள் எவ்வழிகளில் எடுத்தார்களோ…
1.அந்த உணர்வின் ஆற்றலின் நிலைகள் கொண்டு
2.அதைப் பின்பற்றி நடப்போரின் நிலைகள் கொண்டுதான் அந்த சக்தியைப் பெற்றிட முடியும்.

நீங்கள் ஒவ்வொருவரும் இந்த மனித வாழ்க்கையில் புனிதம் பெறுவதற்கு எடுத்துக் கொள்ளும் ஆத்ம சுத்தி செய்து பயிற்சி உங்களுக்கு வெற்றியைத் தரும்.

உங்கள் குடும்பத்தில் யாருக்கு எந்தச் சிக்கல் வந்தாலும் இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள், எல்லாமே நல்லதாக வேண்டுமென்று எண்ணுங்கள்.

1.இதைப் போன்று சிறிது நாளைக்கு முயற்சி எடுத்துப் பாருங்கள்.
2.இந்த உண்மை நிலைகளை நீங்கள் உங்கள் உடலுக்குள்ளும், உணர்வுக்குள்ளும் பார்க்கலாம்.

பிறந்த குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்தை ஜாதகக்காரர்களால் சொல்ல முடியாது – ஈஸ்வரபட்டர்

 

இந்த உலகம் தோன்றிய நாள் முதல் இன்றைய நாள் வரை பல உண்மைகளை அறிந்து கொள்ள நாம் எல்லோருமே ஆர்வம் கொண்டுள்ளோம்.

1.பிற்கால வாழ்க்கையை எண்ணி
2.இனி நடக்கப் போகும் நிலை என்ன…? என்பதை அறிய எல்லோரும் விரும்புகின்றோம்.

இருந்தாலும் நம்முள் உள்ள பரமாத்மாவை மறந்து விட்டு “பரலோகத்திலுள்ள பரமாத்மா…!” என்று வேண்டி ஜாதகங்கள்… ஏட்டுச் சுவடிகள்.. என்று இப்படிப் பல வழிகளில் ஆரூடம் பார்த்து “அறிதல்” என்றெல்லாம் நம் காலத்தைச் சிதறவிட்டு விடுகின்றோம்.

சூரியனின் சக்தியிலிருந்து அந்தச் சூரியனைச் சுற்றியுள்ள பல மண்டலங்களின் நிலையை வைத்து அம்மண்டலங்களின் ஒளிக் கதிர்கள் சூரியனில் பட்டுச் சூரியனிலிருந்து நம் பூமிக்கு வந்திடும் ஒளியின் தன்மையை வைத்துப் பல நிலைகள் நடக்கின்றன.

அந்தச் சூரிய சக்தியின் பிம்பத்தில் பல மண்டலங்களின் ஒளி பட்டு “அது பூமிக்குக் கிடைக்கும் நேரத்தைத்தான்” அன்றைய சித்தர்கள் ஜாதகங்கள் என்ற நிலையில் கண்டனர்.

1.சந்திரனின் பார்வை… சூரியனின் பார்வை… என்றும்
2.கேது… இராகு… என்ற ஒவ்வொரு மண்டலங்களின் ஒளிக் கதிர்கள் சூரியன் மேல் படும் பொழுதும்
3.அந்த ஒளிக் கதிரின் தன்மை பூமியின் மேல் படும் காலத்தை வைத்துத்தான் சித்தர்கள் ஜாதகம் கணித்தார்கள்.

ஜென்ம நட்சத்திரம் என்கிறார்கள். எந்தக் குழந்தைக்கும் ஜென்ம நட்சத்திரத்தை இன்றைய ஜாதகக்காரர்களால் அறிய முடியாது. குழந்தை பிறந்த நேரத்தை வைத்து ஜென்ம நட்சத்திரம் குறிக்கின்றார்கள்.

அதுவல்ல ஜென்ம நட்சத்திரம்…!

1.அது தன் தாயின் வயிற்றில் “என்று உதயம் பெற்றதோ…” அந்த நேரம் தான் அதற்கு ஜென்ம நட்சத்திரம்.
2.அந்த நிலையைக் கணித்திட இன்றைய ஜாதகக்காரர்களால் முடியாது.

இராமர் இராம நவமி அன்று பிறந்தார்… என்றும் முருகன் பிறந்த நாளை வைகாசி விசாகம்…! என்றும் கணிக்கின்றார்கள் பாட நிலைப்படித்தான்…!

இராமர்… கிருஷ்ணர்… முருகன்… எல்லாம் பிறவி எடுக்கவில்லை. அவர்களின் குணாதிசயங்களை வைத்துத்தான் நம் சித்தர்கள் அவர்களுக்கு நாமங்கள் இட்டார்கள்.

அப்படி இருக்கும் பொழுது இராமர் பிறந்த நேரத்தையும் முருகன் பிறந்த நேரத்தையும் எப்படிக் கொண்டாடுகின்றார்கள்…? என்று நீங்கள் நினைக்கலாம்.

அன்றையச் சித்தர்கள் மற்ற மண்டலங்களின் ஒளிக்கதிர்கள் சூரியனில் பட்டு பூமியைத் தாக்கும் பொழுது…
1.என்றென்று அந்த நல்ல நிலை பெறும் நாளோ அந்த நாட்களின் குணா அம்சங்களை வைத்து
2.அந்த நாட்களை அந்த ஒளியிலிருந்து வரும் சக்தியின் நிலை கொண்டு
3.முருகருக்கும் இராமருக்கும் பிறந்த நாட்கள் என்று கணித்தார்கள்.

கணித்தார்கள் என்றால் அந்த நிலை பெறும் நேரத்தை நல்ல நேரமாக ஏற்று அந்த நிலையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் உகந்த நாள்…! என்று மக்களுக்கு ஏற்றுக் கொள்ளப் பல வழிகளைச் சொல்லிச் சென்றார்கள்.

ஆனால் அந்த உண்மைகளை எல்லாம் காலப்போக்கிலே சிதறடித்து விட்டார்கள்.

மற்ற மண்டலங்களின் ஒளி சூரியனில் எப்பொழுது கிடைக்கப் பெறுகிறது…? மற்ற மண்டலங்களில் உள்ள சக்தி சூரியன் மேல் பட்டு அதன் பின் அச்சூரியன் நமக்கு அளிக்கின்றது.

சந்திரனில் ஒளிக் கதிர்கள் இல்லா விட்டால் “இன்றைய வண்ணங்கள்… சுவைகள்…” இவை எவையுமே நாம் பெற்றிருக்க முடிந்திடாது.

அதைப் போல் தான் ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் நமக்குப் பலவித இயற்கைத் தன்மை வாய்ந்த சக்தியெல்லாம் கிடைக்கின்றது.

பெரும் பேறு வாய்ந்த சக்தியுள்ள பூமியப்பா…! இன்று நாம் வாழ்ந்திடும் பூமி. இந்தப் பூமித் தாயின் உயிரோட்ட உண்மைகளை உணர்ந்து கொண்டு உலகினிலே உதித்த நாம் எல்லோருமே உண்மையுடன்… “உன்னதமாக வாழ்ந்திட வேண்டுமப்பா…!”

ஒவ்வொருவரும் அவரவர்கள் கடந்த காலத்தை எண்ணிக் கலங்கிடாமல் நம்முள் உள்ள பரமாத்மாவின் நிலையை அறிந்து வாழ்ந்திடுங்கள்.

1.தவறின் நிலையை எல்லாம் மறந்துவிட்டு
2.இனி தவறில்லாத வாழ்க்கையை வாழ்ந்து
3.பிறந்த பயனை இக்கலியின் கடைசியில் கல்கியில் ஒவ்வொருவரும் ஒளி நிலை அடையத்தான் இதை உணர்த்துகின்றேன்.
4.என்னுடைய (ஈஸ்வரபட்டன்) ஆசிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

“ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று புருவ மத்தியில் உள்ள நம் உயிரான ஈசனை வணங்க வேண்டும். பின் தாய் தந்தையரை முதல் தெய்வங்களாக வணங்க வேண்டும்.

அடுத்து இந்த அருள் வழியில் நம்மை அழைத்துச் செல்லும், நமது ஞானகுரு சற்குரு அருளாசி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்க வேண்டும்.

பின் ஞானகுரு நம்மில் ஆழமாகப் பதிவு செய்துள்ள அருள் ஞானிகளின் அருள் உணர்வை எண்ணி ஏங்கிக் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி நினைவைத் துருவ நட்சத்திரத்தின்பால் விண்ணை நோக்கிச் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று வலுவாக எண்ணி ஏங்க வேண்டும்.

1.இவ்வாறு வலுக்கூட்டிய இந்த எண்ணத்தைத் துருவ நட்சத்திரத்தின் பால் ஊடுருவிச் செலுத்தி
2.நமது கண்களின் காந்தப் புலனறிவால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கவர்ந்து ஈர்த்து
3.உயிரில் அந்த அழுத்தம் பட வைத்து உயிர் வழி சுவாசிக்க வேண்டும்.

இந்தப் பதிவின் துணை கொண்டு மீண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எண்ணி ஏக்கமான நிலையில்
1.அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து
2.எங்கள் இரத்த நாளங்களில் கலந்து
3.எங்கள் உடலில் உள்ள ஜீவ ஆன்மா ஜீவ அணுக்கள் பெற்று
4.எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்த அருள் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா என எண்ணி
5.நம் உடலுக்குள் அலை அலையாகப் படரச் செய்யவேண்டும்.

இதுவே ஆத்ம சுத்தி…!

மனிதராகிய நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை முழுமையாக அறிந்து உணர வேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வை நன்கு ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ள வேண்டும்.

இதனைத் துருவ தியானத்தின் மூலமே பெற முடியும்.

1.அத்தகைய துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நமக்குள் ஆழமாகப் பதிவு செய்து
2.நம் உடலுக்குள் உள்ள அனைத்து அணுக்களுக்கும் உணவாகக் கொடுக்கும் பொழுது
3.எத்தகைய நஞ்சான உணர்வுகள் வந்தாலும் அதை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள்
4.ஒளியின் சுடராக மாற்றிவிடும்.

துருவ நட்சத்திரத்தின் இயல்பு அது…!

நன்றாக இருப்பவர் திடீரென்று இருதயம் அடைத்து… சிறு நீரகம் செயலிழந்து மரணம் அடைவதன் காரணம் என்ன…? (HEART ATTACK KIDNEY FAILURE)

 

வான் வீதியில் உருவானது “உயிரணு…” என்னென்ன குணங்களை நாம் எண்ணுகின்றோமோ அந்த “அணுக்களை…” நம் உடலில் சேர்த்துக் கொள்கிறோம்.

அது நம்முடன் சேர்ந்து வளர்ச்சி ஆகி அதனுடைய இனத்தைப் பெருக்கும் பொழுது அது “ஜீவ அணுவாக…” மாறுகின்றது.

வான் வீதியில் சூரியனிலிருந்து வெளி வரும் வெப்ப காந்தங்கள் கோள்களின் சத்தினை எடுத்துக் கொண்டால் அது வெறும் அணு தான்.
1.அந்த அணுவை நாம் சுவாசித்து நுகர்ந்த பின் உயிர் ஜீவ அணுவாக மாற்றுகின்றது.
2.ஜீவ அணுவாக மாறிய பின் ஜீவ ஆன்மாவாக ஆகின்றது.

ஒரு மனித உடலில் நோய்வாய்ப்பட்டது என்றால் அந்த உடலில் அது ஆன்மாவாக மாறுகின்றது. அந்த உடலில் விளைந்ததை நாம் கூர்மையாக உற்றுப் பார்த்தால் நோய்க்குக் காரணமான அணுக்களை நமக்குள் எடுத்துக் கொள்கின்றோம்… நம் உடலில் விஷத் தன்மையாக மாறுகின்றது.

அதே சமயத்தில் அண்ட நோய்வாய்ப்பட்டவர் உடலை விட்டுப் பிரிய நேர்ந்தால் அந்த உடலில் விளைந்த சக்தி நமக்குள் வந்து அந்த ஆன்மாவும் நமக்குள் வந்து விடுகின்றது.

நம் உடலுக்குள் வந்தவுடனே ஜீவ ஆன்மாவாக மாறுகின்றது. நமக்குள் வட்டமிடுகின்றது. நம் இரத்தத்தில் தான் அது சுழன்று கொண்டிருக்கும்.

ஆவி பிடித்தவர்களைப் பார்த்தோமென்றால் ஒரு வித வேகமான துடிப்புடன் இருப்பதைப் பார்க்கலாம். அந்த இரத்த ஓட்டங்களில் சுற்றிக் கொண்டு வருவதைப் பார்க்கலாம்.

1.இரத்தத்தில் சுற்றி வரும் பொழுது சிறு மூளை பாகம் வந்தால்
2.அந்த இறந்தவருடைய எண்ணங்களை வைத்து நம்மை இயக்கும்.
3.அங்கிருந்து (சிறு மூளை) விலகிச் சென்றால் மறுபடியும் சாந்தமாகி விடும்.

ஆனால் அது சிறு மூளையில் பட்டு இயக்கத் தொடங்கும் போது எண்ணங்கள் அது என்னென்ன எடுத்திருக்கின்றதோ அதை எல்லாம் பேசும். அதனுடைய உணர்வுக்குத் தகுந்த மாதிரி வேண்டாததை எல்லாம் கேட்கும்… வேண்டாததை எல்லாம் பேசும்.

ஆக இரத்த நாளங்களில் செயல்படுவது ஜீவான்மா. நமக்குள் இருந்து அதற்கு வேண்டியதை உற்பத்தி செய்து அதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும். அதனுடைய எண்ணங்கள் தோற்றுவிக்கப்படும் பொழுது தான் அதை நாம் சுவாசிக்கின்றோம்… உணர்வின் அணுக்களாக மாறுகின்றது.

ஆனால் ஜீவ அணுக்கள் என்பது நாம் சுவாசிக்கும் உணர்வின் தன்மை நம் தசைகளில் ஒரு சேர்கின்றது. அப்பொழுது ஒவ்வொன்றும் அடங்கி எந்தெந்த குணங்களை எடுத்தோமோ அந்த உணர்வை உடலில் இருந்து எடுக்கும்… வெளியிலிருந்து…!

செடிகளிலே வித்து விளைகின்றது. அதே மாதிரித் தான் மனித உடலில் அந்த எண்ணங்கள் உருவானால்… பதிவாகும் போது ஊழ்வினை என்ற வித்தாக உருவாகின்றது. பின் இந்த மனித உடலிலிருந்து அலைகளாகப் பாய்கின்றது.

நான் உபதேசிக்கிறேன் என்றால் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அணுக்களாக மாற்றுகின்றது. அதை நீங்கள் சுவாசித்து உங்களுக்குள் வரும் பொழுது விளைந்து ஜீவ அணுக்களாகிறது.

என்னுடைய ஜீவ அணுக்கள் அதிகமான பிற்பாடு நான் இறந்து விட்டால் உடலுக்குள் வந்தால் ஜீவாத்மாவாக வருகின்றது. அது இரத்தத்தில் தான் இருக்கும். இரத்தத்தில் சில மாற்றங்கள் எடுத்துத் தன் உணர்வுகளை எடுத்துச் செயல்படுத்தும்.

இது போல் வருவதைத் தான் பேய் பிடித்தது… ஆவி பிடித்தது… ராட்சஸ உணர்வு போல் வருகிறது… என்றெல்லாம் சொல்வார்கள்.

சில கொடூரமான தெய்வங்களை உருவாக்கிப் கொடூரமான பல்லுடன் காட்டியிருப்பார்கள். அது போன்ற தெய்வத்தையே வாழ் நாள் முழுவதும் வணங்கி அந்த அந்த அலைகளைப் பதிவாக்கி அவர்கள் இறந்து விட்டார்கள் என்றால் அடுத்த உடலுக்குள் சென்றால் அதே நினைவுடன் தான் வரும்.

அடுத்த உடலை அடக்கி ஆட்சி புரியும் தன்மை வரும். வாய் பேச விட மாட்டேன் என்கிறது என்றெல்லாம் சொல்வார்கள். அது போன்று எத்தனையோ உண்டு.

ஆனால் அந்த ஆன்மா அது நம் இரத்தத்தில் தான் இருக்கும். அணுக்கள் நம் உடலோடு ஒட்டி வரும். தீமையின் உணர்வுகளுக்கு வரப்படும் பொழுது இரத்தத்தில் தான் இந்த அணுக்கள் பெருகும்.

1.இரத்தத்தில் இத்தகைய அணுக்கள் பரவும் பொழுது தான்
2.சில நேரம் இருதயத்திற்கு வரும்பொழுது இருதயத் துடிப்பு குறைகிறது… அதை அடைக்கும் (ஹார்ட் அட்டாக்)
3.அதே சமயத்தில் இரத்தத்தின் வழி அந்த அணுக்கள் கிட்னிக்கு வந்தால் விஷத் தன்மை பாய்ந்து கிட்னி பழுதாகி விடும்.

பார்க்கலாம் சிலருக்குத் திடீரென்று அட்டாக் வந்தது… சிறுநீரகம் செயலிழந்து விட்டது மரணம் அடைந்தார் என்று…! அது எல்லாம் இத்தகைய ஆன்மாக்களின் நிலைகளால் தான்.

அவரவர்கள் எண்ணத்திலிருந்து தான் ஆண்டவனின் சக்தி செயல்படுகிறது – ஈஸ்வரபட்டர்

 

இன்றைய உலகில் உள்ள பெரும்பகுதியானோர் தன் உயிரின் உண்மை நிலையையும்… கடவுளின் நிலையையும்… தான் வாழும் வாழ்க்கை நிலையையும்… புரியாத நிலையில் தான் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

ஈஸ்வர சக்தி பெற்ற… பிறப்பிலிருந்து நல்லவர்… கெட்டவர்… என்ற பாகுபாடு இல்லாமல் அச்சக்தியில் இருந்து அவர்களுக்கு அளித்த மாபெரும் சந்தர்ப்பத்தை “நலமாக வாழ்ந்திடத்தான்” ஒவ்வொருவரும் பிறக்கின்றார்கள்.

பிறவி எடுத்த நிலையில் அவரவர்கள் வளர்ந்த நிலை… மண் வாக்கு… மன நிலை… சுவாச நிலையைக் கொண்டு வாழும் பொழுது “தன் சுவாச நிலையிலே தான்” அவர்களுடைய நிலை எல்லாமே நடக்கின்றன.

1.இன்றைய காலத்தில் மக்கள் ஆண்டவனை வணங்குவது என்பதே
2.தன் கஷ்டங்களுக்கு மீட்கும் வழியை வகுத்துத் தரத்தான் பல கோவில்களுக்குச் சென்று வணங்குகிறார்கள்.
3.பல காணிக்கைகளைக் கட்டி பல வேண்டுதல்களையும் செய்து
4.ஆண்டவனையும் இவர்கள் செய்யும் வியாபாரத்தில் பாகஸ்தனாக்கி
5.இவர்கள் செய்யும் பாவத்திற்கும் ஆண்டவனின் பெயரை உபயோகித்துக் கொள்கிறார்கள்.

நான் அள்ளி அள்ளி ஆண்டவனுக்கு அளித்தேன்… எல்லா ஆண்டவனுக்கும் பல நிலையில் பூஜை செய்கிறேன்… அந்த ஆண்டவனுக்குக் கண்ணில்லையா…? என்றெல்லாம்
1.இவர்களுக்குக் கஷ்டம் வரும் பொழுது
2.அந்த ஆண்டவனையே எதிரியாகவும் ஆக்கிவிடுகின்றார்கள்.

இவர்கள் எண்ணி ஏங்கும் பொருள் கிடைக்க வேண்டும் என்ற நிலையில் எந்தக் கோவிலுக்காவது சென்று வந்தால் அந்த நிலையிலிருந்து பொருள் வந்தவுடன் ஆண்டவனை… “எல்லாம் அவன் தான்…!” என்கிறார்கள்.

(ஆனால்) இவர்கள் மன நிலையில் இருந்து தான் அவ்வாண்டவனின் சக்தியே செயல்படுகிறது.

அந்தச் சூரிய சக்தியிலிருந்து இவர்கள் ஈர்க்கும் நிலையிலிருந்து தான் அவ்வாண்டவனின் சக்தி செயல்படுகிறது என்ற உண்மையை இதைப் படிக்கும் அனைவரும் உணர்ந்து
1.அவரவர்கள் எண்ணத்திலிருந்து தான்…
2.அவ்வாண்டவனின் சக்தி செயல்படுகிறது என்ற உண்மையை உணருங்கள்.

நம் சித்தர்கள் பல வழிகளில் பல உண்மைகளைச் செய்யுள்களின் (பாடல்கள்) வடிவில் மனிதர்களின் எண்ணத்திற்குப் பதியும்படி முதலிலேயே வெளியிட்டுள்ளார்கள்.

ஆட்டை வெட்டுபவனுக்கு… ஒவ்வொரு நாளும் பல ஆடுகளை அடித்து வியாபார நிலைக்கு அவன் அதை விற்கிறான். ஆட்டை வெட்டுபவனுக்குத் தான் பாவம்… உண்ணுபவனுக்கு அல்ல…! என்று எண்ணுகின்றோம்.

அவன் எதற்காக ஆட்டை அடிக்கின்றான்…?

அவன் எண்ணமெல்லாம் அவனுக்கு வேண்டிய பொருள் கிடைத்திடத்தான்…! அதைச் செய்கிறான். பாவ புண்ணியத்தை அவன் எண்ணத்தில் கொண்டு வருவதில்லை.

பாவ புண்ணியத்தை அவன் எண்ணி விட்டால் அவன் எண்ணத்திலேயே அது ஊன்றி.. அவன் அந்தத் தொழிலை ஒரு நாளும் செய்திட முடியாது.

பல தண்டனைகள் பெற்ற கைதிகளை ஒருவன் தூக்கிலிடுகின்றான். ஒரே நாளில் அவன் பலரைத் தூக்கிலிட்டாலும்.. அவனுக்கு அந்தப் பாவம் அண்டுவதில்லை.

அவன் பொருள் வாங்க அந்தப் பணியைச் செய்கிறான். தன் மேல் தவறை எண்ணும் பொழுது தான் அவனுக்கு அந்நிலை தோன்றிடும். அவன் தொழில் அது தான்; அவன் ஊதியத்தைப் பெறுகின்றான்; அவன் எண்ணமெல்லாம் அந்த ஊதியத்தின் மேல் தான் உள்ளது.

அவன் ஆத்மாவில் அவன் நல்ல நிலைகள் பெற்றிருந்தால் அவனை எந்தப் பாவ புண்ணியங்களும் அண்டுவதில்லை. அவன் நிலையும் உயர்ந்து நிற்கிறது.

1.பல பாவங்கள் செய்துவிட்டு
2.செய்த பாவங்களைத் தன் எண்ணத்திலேயே கலக்கவிட்டு
3.தன் சுவாச நிலையை மேலும் கடினமாக்கிக் கொண்டு
4.பல இன்னல்களுக்கு ஆளாகின்றார்கள் இன்றைய மனிதர்கள்.

இந்நிலையிலிருந்தெல்லாம் விடுபட்டு நம் உயிரணுவிற்கு ஊட்டம் தந்து அவ்வுயிரணுவிற்கு அழியாச் செல்வத்தைத் தேடத்தான் இந்தப் பாட நிலையை எடுத்து இயம்புகிறோம்.

1.உயிரணுவின் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளுங்கள்
2.இனி வாழும் நாட்களை நல்ல நிலையில் வாழ்ந்திடுங்கள் என்பதற்கே இதை வெளியிடுகின்றோம்,

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

உதாரணமாக சில வருடங்களுக்கு முன் ஒருவன் நமக்குக் கெடுதல் செய்திருப்பான். அதனால் நம் குடும்பமே நஷ்டம் அடைந்திருக்கும். இல்லாததைச் சொல்லி இருப்பான்.

அவனைப் பார்த்தவுடன் கஷ்டமான நிலைகள் நமக்குள் ஏற்கனவே பதிவானது இழுத்து நம் ஆன்மாவில் வந்துவிடும்.

அப்பொழுது அவனை வெறுக்கும் நிலைகள் நமக்குள் உருவாக ஆரம்பித்துவிடும். சிறிது நாள் அதற்குச் சாப்பாடு இல்லாமல் இருந்தது. சாப்பாடு கிடைத்ததும் வீரியம் அடைய ஆரம்பித்துவிடும்.

மண்ணுக்குள், எத்தனையோ வித்துகள் மறைந்து இருக்கின்றது. சிறிது காலம் மழை இல்லையென்றால், வறண்டு போய்விடுகின்றது. ஒரு நாள் மழை பெய்துவிட்டால், தளதளவென்று வெளியில் வரத் தொடங்கி விடுகின்றது.

இதைப் போன்றுதான் பகைமை உணர்வுகள் அவன் செய்த தவறான நிலைகள் நமக்குள் பதிவானாலும் அவனைப் பார்த்தவுடனே அந்த இனத்தைத் தனக்குள் கவர்ந்து அதனின் செயலாகத் தனக்குள் ஆகாரம் தேட ஆரம்பித்துவிடும்.

அப்பொழுது…
1.நாம் இவ்வளவு தியானம் எடுக்கின்றோம்
2.அவனைப் பார்த்தவுடனே ஏன் கோபம் வருகின்றது…! என்று நினைப்போம்.

இந்த உணர்வு இங்கு வந்தபின் இரவு தூங்கினால் கெட்ட கனவாக வரும். அந்த வெறுப்பின் உணர்வுகள் நமக்குள் வரும் பொழுது எப்படியெல்லாம் இருந்தோமோ நம் எண்ணத்திற்கு அவன் நினைவு வராது.

கெடுதல் செய்தவனைப் பார்த்து அந்த உணர்ச்சி நமக்குள் தூண்டப்பட்டாலும் அவன் உரு நமக்குள் நினைவிற்கு வராது.
1.அந்த நேரத்தில் மற்ற மனிதர்களிடத்தில் உருவான
2.கெடுதல் செய்த உணர்வின் தன்மை நமக்கு எதிரில் இருந்தால், அது வந்துவிடும்.

இரவில் தூங்கும் பொழுது யாரோ கெடுதல் செய்கின்ற மாதிரி இன்னொரு உரு நமக்குள் தெரியும். நாம் முன்பின் பார்த்திருக்க மாட்டோம். அந்த மனிதனின் உருவம் நமக்குள் தெரியும்.

அப்பொழுது நம்மை அறியாமலே இரவு வேளைகளில் தீமையின் உணர்வுகள் நம் தூக்கத்தைக் கெடுக்கும்.

நாம் இரவில் தூங்கும் பொழுது இந்த மாதிரி உணர்வுகள் வரும் பொழுதெல்லாம் “ஈஸ்வரா…” என்று உயிரை வேண்டி துருவ நட்சத்திரத்தின் உணர்வுடன் இணைத்து அதைப் பெற வேண்டும் என்று எண்ணி உடலுக்குள் பல முறை செலுத்த வேண்டும்.

அதைச் செலுத்தியவுடன் தன்னை அறியாமலே தூக்கம் வரும்.

1.எந்தெந்த வகையில் தீமைகள் வந்தாலும் இப்படி நாம் எடுத்துக் கொண்டால்தான நமக்குள் தூய்மைப்படுத்த முடியுமே தவிர
2.ஒரேடியாக ஜெபமிருந்து ஆண்டவன் அருளைப் பெறுவேன் என்று சொன்னால் நடக்காது.

ஒவ்வொரு நிமிடத்திலும் உணர்ச்சிகளைத் தூண்டிக் கொண்டே இருக்கும். அவ்வப்பொழுது அந்த அருள் ஞானிகளின் அருள் உணர்வை எடுத்து இணைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
1.அதை அடக்கிக் கொண்டே வரவேண்டும்.
2.இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை அடக்கிக் கொண்டே வரவேண்டும்.
3.அப்படி அடக்கிக் கொண்டே வந்தோமென்றால் அது அப்படியே உறைந்துவிடும்.
4.எல்லா உணர்வுகளிலும் அந்த மகரிஷிகளின் உணர்வைச் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

இப்படி மனிதன் அடக்கிய நிலைகள்தான் இந்த பூமியில் எத்தனையோ விதமான விஷங்கள் கோபங்கள், வெறுப்புகள் இவைகளை எல்லாம் அடக்கினான்.

அவ்வாறு அடக்கி அவனுடைய வாழ்க்கையில் செய்யும் முறைகள் இப்படி அந்த உணர்வைச் சேர்த்துக் கொண்டு வரும் பொழுது பேரானந்தப் பெரும் செல்வம் நமக்குக் கிடைக்கின்றது.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் இணைத்துப் பழக வேண்டும். இல்லையென்றால்… நான் எல்லாம் செய்கின்றேன்… ஆனால் உலகில் எங்கு திரும்பிப் பார்த்தாலும் இப்படித்தான் இருக்கும் என்று இதற்கு வலு கொடுத்து விடுகின்றோம்.

அப்பொழுது நாம் போகும் பாதையில் புவியின் ஈர்ப்பிற்கு வந்து விடுகின்றோம்.
1.எது எப்படி இருந்தாலும் எவ்வளவு கடுமையான நிலைகளை நாம் பார்த்துணர்ந்தாலும்
2.ஒவ்வொரு நொடியிலும் ஆத்ம சுத்தி என்ற நிலையை நம் ஆன்மாவில் கலக்கும் நிலையை
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்து, தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

இதுதான் ஆத்மசுத்தி என்பது. இதை முறைப்படி நம் வாழ்க்கையில் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

காற்று பலமாக அடிக்கும் பொழுது தூசி வருகின்றது. அதிகமாகத் தூசி வரும்போது ஒதுங்கிக் கொள்கின்றோம்.

இதே மாதிரி…
1.தீமையான உணர்வு வரும் பொழுது அந்த எண்ணத்தில் இருந்து விலகி நிற்க
2.அந்த மகரிஷிகளின் உணர்வை ஆதாரமாக வைத்து
3.இதிலிருந்து சிறிது நேரமாவது விலகி நிற்க வேண்டும்.

மனிதர்களான நாம் எந்தத் துன்பத்தையும் போக்க முடியும்

 

மனிதனாகத் தோன்றிய நாம் அனைவரும் பரசுராம்… சமப்படுத்தும் சக்தி பெற்றவர்கள். உதாரணமாக காய்கறிகளை நாம் வேக வைக்கின்றோம்… பல பொருள்களைச் சேர்த்துச் சுவையாக உருவாக்குகின்றோம்.

அதே போன்று பலராம்…! பலருடைய எண்ணங்களை நாம் கேட்டு நுகர்கின்றோம். ஆனாலும் அதிலே வரும் தீமைகள் விளையாது அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் கலக்கச் செய்ய வேண்டும்…. கலந்து விட்டால் தீமைகளை அது வேக வைத்துவிடும்.

மகரிஷிகள் என்பவர்கள் எத்தகையை நஞ்சையும் அடக்கி ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றவர்கள். அவர்களின் உணர்வுகளை எடுக்கப்படும் போது அந்த ஒளியான உணர்வுகள் உடலில் விளையத் தொடங்குகின்றது.

1.நம்மை அறியாது வரும் தீமைகளைத் தடைப்படுத்த இதை அவசியம் செயல்படுத்த வேண்டும்.
2.சிறிது நாள் பழகிக் கொண்டால் போதும். பிறகு நீங்கள் சொல்ல வேண்டாம்… அது தன்னாலே வரும்… சொல்ல வைக்கும்…!
3.இதற்கு முன்னாடி ஐய்யய்யோ… அம்மம்மா…! என்று சொல்வீர்கள்
4.இப்பொழுது ஈஸ்வரா… என்ற சொல் வரும். உயிரையும் நினைக்க வரும்
5.உயிரோடு ஒன்றி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இணைத்து விட்டால்
6.உங்களுக்குள் அது சக்திவாய்ந்ததாக உருவாகிறது.

ஆனால் ஈஸ்வரா… என்று வேதனை கலந்த உணர்வை எடுக்கக் கூடாது. அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதை இணைத்துப் பழக வேண்டும்.

1.இதன் படி செய்தால் எந்தத் துன்பத்தையும் நீக்க முடியும்.
2.உங்கள் சொல்லால் பிறருடைய துன்பத்தையும் போக்க முடியும்.
3.துன்பத்தை போக்கும் உணர்வுகள் உங்களிலே விளைகின்றது.

துன்பத்தைக் கண்டுணரும் பொழுது துன்பத்தை விளைவிக்கும் அணுக்கள் விளைகின்றது. அப்பொழுதெல்லாம் துன்பத்தை அகற்றிய அருள் மகரிஷிகளின் உணர்வை இணைத்தால் துன்பத்தை அடக்கும் சக்தியாக வருகின்றது.
1.கொஞ்சம் நாம் இதைப் பழகிக் கொள்ள வேண்டும்.
2.தியானம் என்பது இதுதான்…!

யாரோ செய்வார்… எவரோ செய்வார்… என்று எண்ணாதபடி தீமையை நீக்கிய அருள் உணர்வுகளை இப்படி வளர்த்துக் கொண்டால் நமது உயிரில் எதனை வலுப்படுத்திக் கொண்டோமோ அந்த மகரிஷிகள் வாழும் எல்லைக்கே நம்மை அழைத்துச் செல்லும்.

ஏனென்றால் கண்ணின் நினைவு கொண்டு எதனைக் கூர்மையாக எண்ணுகின்றோமோ அதன் வலிமை தான் நமக்குள் சேர்க்கின்றது.

வான மண்டலத்தை எண்ணும் பொழுது நினைவு மகரிஷிகள் பால்தான் செல்கின்றது. அந்த உணர்வின் தன்மை ஆகும் போது கூர்மை அவதாரம்.

கண்ணன் அர்ச்சுனனுக்குச் சாரதியாகச் செல்கின்றான் என்று காட்டுகின்றார்கள்.

ஒருவன் கடுமையாக வேதனைப்படுகிறான் என்று உற்றுப் பார்த்துப் பதிவாக்கினால் அந்த உணர்வுகள் சாரதியாக வருகின்றது. அந்த வேதனையான உணர்வுகளை நமக்குள் சேர்ப்பிக்கின்றது.

ஆனால் அதைத் தடுக்க அந்த அருள் ஞானிகளின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்தால் அது அர்ச்சுனனாகி வலிமை ஆகின்றது.

1.நம் கண்கள் அங்கே அந்த மகரிஷிகள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கின்றது.
2.வலுவாக எண்ணி நாம் எடுக்கும் இந்த உணர்வின் பிரகாரம்
3.உயிர் நம்மை அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்கு அழைத்துச் செல்லும்.

வேதனைப்பட்டே வாழ்வது நல்லதா… அல்லது அதிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணி வாழ்வது நல்லதா…? – ஈஸ்வரபட்டர்

 

எண்ணத்திலும் செயலிலும் வார்த்தையிலும் “உயர்வு… தாழ்வு…” என்ற எண்ணம் தான் மனிதர்களின் மனதிலே ஊன்றியுள்ளது.

உயர்வு எனும் பொழுது நம் உடலுக்கு… நம் உயிருக்கு.. அழியாச் செல்வம் என்ற உயர்ந்த நிலை நாம் பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் தான் நம் எண்ணத்தில் ஊன்றி நிலைத்திட வேண்டுமப்பா…!

1.உடல் வாழ்க்கையில் இந்த உலகிலே சேர்த்திடும் சொத்து சுகத்தைத்தான் நாம் எண்ணி வாழ்கின்றோம்.
2.அழியாச் செல்வத்தை நாம் எண்ணுவதில்லை.
3.தூல சரீரத்தைத்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்… சூட்சம சரீரத்தை எண்ணுவதில்லை.

மனிதர்களின் எண்ணமும் செயலும் இன்னும் ஒரு நிலைப்படாமல் இந்தச் சரீர நிலையை எண்ணிக் கொண்டே தான் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

1.வாழும் நாள் எல்லாம்…
2.மனித வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களுக்கு நாம் மனதைத் தந்து விட்டால்
3.நம் மன நிலையில் பல சோர்வுகளை அடைந்து பல தீய அணுக்களின் செயல்களுக்கு நாம் உட்பட்டு
4.நம்மையே… நம் சுவாச நிலையையே… கெடுத்துக் கொள்கின்றோம்.

தீய எண்ணத்தை வளரவிட்டு அதையே எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது அந்தத் தீய அணுக்களின் வேலை துரிதப்படுகின்றது.

அந்த நிலையில் நம் உயிரணுவிற்குப் பெரும் சோர்வைத்தான் நாம் அளிக்கின்றோம். அதையே வளர விட்டால் நம் சுவாச நிலையும் மாறுபட்டு… இன்னும் பல தீய அணுக்களைத்தான் நாம் மேலும் மேலும் பெறுகின்றோம்.

இதையெல்லாம் அறிந்து நம் உயிரணுவிற்கு நாம் பெறும் அழியாச் செல்வமான “ஆத்ம ஜோதி” என்ற நிலையைப் பெற ஈஸ்வர தியானங்கள் பெற்று அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் பல அரிய பொக்கிஷங்களை நம் உயிரணுவிற்குச் சேமித்து வைக்க வேண்டும்.

இந்த உடலில் உள்ள பொழுதே மனிதனாகப் பிறந்த இந்தப் பாக்கியத்தை
1.ஞானச் சரீரத்திற்கு… அந்த ஞான நிலை பெற…
2.நம் ஆத்மாவிற்கு அழியா நிலை பெற…
3.நம் எண்ணத்திலும் செயலிலும் நல்ல உணர்வுகளையே என்றும் நாம் சுவாச நிலையில் எடுத்துக் கொண்டால்
5.நம் உயிர் நிலை ஊட்டம் பெறுகின்றது,

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

வாழ்க்கையில் நமக்குத் துன்பம் என்ற நிலைகள் எப்போது வருகிறதோ…
1.அந்தத் துன்பத்தை மனதார நாம் ஏற்றுக் கொண்டு
2.இந்த இன்பத்திற்குண்டான வழியை அந்த மெய் ஞானியின் அருள் ஒளியை நாம் ஏற்றுக் கொண்டு
3.அந்தத் துன்பத்தை நீக்கும் முயற்சியை எடுப்பதற்கு
4.இந்தச் சந்தர்ப்பத்தை எடுத்துத் தியானமும் ஆத்ம சுத்தியும் உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

“ஓ…ம் ஈஸ்வரா…” என்று உயிரான ஈசனை எண்ணிப் புருவ மத்தியில் நினைவினைச் செலுத்தி விண்ணிலிருந்து நம் பூமிக்குள் வந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களிலே கலந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று உடலுக்குள் கண்ணின் நினைவினை ஒரு இரண்டு நிமிடமாவது செலுத்த வேண்டும்.

இதுவே ஆத்ம சுத்தி…!

ஆத்ம சுத்தியை இவ்வாறு எடுக்கப்படும் பொழுது வாழ்க்கையில் வரக்கூடிய துன்பத்தை நீக்கி மனிதனாகப் பெற்ற புனிதத் தன்மையை நாம் பெறுகின்றோம்.

சந்தர்ப்பவசத்தால் எல்லை கடந்த துன்பங்கள் வரப்படும் பொழுது நாம் ஏங்கியிருக்கக்கூடிய நிலைகள் நம்மை மறந்து… துன்பத்தை மறந்து… மெய் ஒளியின் தன்மை பெற வேண்டுமென்று தியானத்தின் வழி நாம் கூட்டும் இந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கப்படும்போது விண்ணின் ஆற்றலை நாம் பெறமுடியும்.

நாள் முழுவதும் உடலுக்காக வேண்டி நாம் பாடுபட்டு உழைத்தாலும் மெய் ஒளி பெறும் அந்தச் சந்தர்ப்பத்தை ஒவ்வொரு நாளும் ஒரு 15 நிமிடமாவது மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று தியானித்து அந்த ஆற்றல் மிக்க சக்தியைக் கூட்டிக் கொள்வோம்.

ஆகவே நமது வாழ்க்கையிலே நாம் சாதாரண மனிதனுக்குள் பழக்கப்பட்டுப் பழகி வரப்படும் பொழுது எதிர்பாராத சலிப்போ, சஞ்சலமோ, பயமோ, ஆத்திரமோ, கோபமோ, வேதனையோ இதைப் போன்ற உணர்ச்சிகள் தூண்டும் பொழுதெல்லாம் அடுத்த கணம் நாம் ஆத்ம சுத்தி செய்து நம் உடலில் வரக்கூடிய துன்பங்களைத் துடைக்க வேண்டும்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் அதிகமான துன்பம் ஏற்படும் சமயத்தில் ஆத்ம சுத்தி மூலம் விண்ணின் ஆற்றலை அதீதமாகப் பெற முடியும்.

ஒரே எண்ணத்தில் இருப்பதும்… தன்னை மறந்து இருப்பதும் தான் தியானம்…! என்று எண்ணுகின்றனர் – ஈஸ்வரபட்டர்

 

தியான நிலை என்றால் என்ன…? என்று தெரியாமலே பல தியான முறைகளை நாம் எல்லோருமே கையாளுகின்றோம்.
1.தியானத்தில் எப்படி அமர்வது…?
2.சுவாச நிலையை எப்படி ஒருநிலைப்படுத்துவது…?
3.தன்னை மறந்து அமரும் நிலை தான் தியான நிலை என்றும் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.
4.தியானத்தில் அமர்ந்த பின் எண்ணத்தில் சிதறல்கள் வரும் பொழுதெல்லாம் அந்த எண்ணத்திலேயே ஊன்றிடாமல் எப்படி இருப்பது…? என்ற எண்ணத்திலும் உள்ளார்கள் பலர்.

இப்படிப் பல நிலைகளைச் சொல்லி உள்ளதால் தனக்கு எது உகந்தது…? எதை எடுத்துக் கொள்ளலாம்…? என்ற எண்ணத்திலேயே இன்னும் பலர் இருக்கிறார்கள்.

வாழ்ந்திடும் காலம் எல்லாம்… வாழ்க்கை வாழ்ந்து விட்டு
1.தன் வயதான காலத்தில்தான் ஜெப நிலையில் இருக்க வேண்டும்…
2.என் மனம் இன்னும் ஒருநிலைப்படவில்லை…! என்றெல்லாம் இன்றையப் பெரியவர்கள் பலர் உள்ளார்கள்.

ஜெபம் என்றால் என்னப்பா…? ஜெபித்திடும் பொருள் என்னப்பா…?

என் (ஈஸ்வரபட்டர்) வழியில் ஜெபம் என்பதெல்லாம் நம் ஜெபத்துடனே கலந்து
1.நம் நினைவிலும்…
2.கனவிலும்…
3.எந்த நிலையிலும்..
4.எந்த நிலை எனும் பொழுது – நம் வாழ்க்கை நிலையிலும் நாம் செய்யும் வேலை நேரத்திலும்
5.நம்முடனே அந்த ஆண்டவன் உள்ளான் என்ற எண்ணத்தில்…
6.அதாவது அந்த எண்ணம் மட்டும் அல்ல… “இருக்கிறான்…!” என்ற எண்ணத்தில்
7.ஒரே நிலையில் நாம் எண்ணிக் கொண்டே இருந்தால் அதுதானப்பா நமக்குகந்த ஜெபம்.

பூஜை செய்வது… கோவிலுக்குச் செல்வது… இவை எல்லாம் நம் மனதை அமைதிப்படுத்த வேறு நிலையிலிருந்து நம் எண்ணத்தை அந்த ஆண்டவனையே நாம் எண்ணிக் கொண்டிருப்பதற்காகத்தான்…!

ஜெப நிலையில் நீங்கள் இருக்கும் பொழுது உங்கள் எண்ணத்தை ஈர்க்கும் நிலை அந்தச் சித்தர்களின் நிலைக்கு வருகிறதப்பா..! அந்நிலையில் அவர்களுடைய பரிபூரண ஆசிகளைப் பெறுகின்றீர்கள்.

ஜெப நிலையில் இருக்கும் பொழுது நாம் விடும் மூச்சும் நல் மூச்சாக வெளிப்படும். எண்ண அலைகள் மற்ற அணுக்களுடைய நிலைகள் உயர்ந்த அணுக்களுடைய நிலைகள் நம்முடைய மூச்சிலும் கலக்கப்படுகிறது. நல்ல அணுக்களாகக் கிடைக்கப் பெறுகின்றது.

அந்நிலையில் சிறுகச் சிறுக நாம் ஈர்க்கும் மூச்சில் நம்முடைய உயிரில் அது சேர்க்கப்படுகின்றது. அது சிறுகச் சிறுக அந்த உணர்வுகள் சேர்க்கப்பட்டவுடன் நம் உயிர் நிலை உயர்ந்த சக்திகளைப் பெறுகின்றது.

அந்நிலையில் உயர்ந்த சுவாச நிலைகள் நம் உயிரணுவிற்கு உயிருக்கு ஊட்டமாகக் கிடைக்கப் பெறுகின்றது.

இந்நிலையில் அந்த உயிருக்கு நாம் பெற்ற சக்தி அந்த ஆத்மாவிற்கு ஊட்டமளித்திருப்பதனால் எந்தத் தீய அணுக்களும் தீய சொற்களும் நம்மை வந்து அணுகாது.

1.நம் சுவாச நிலையிலேயே நம் ஜெப நிலையில் இவ்வருளைப் பெற்றிருப்பதனால்
2.ஆயிரம் அணுகுண்டுகளைப் போட்டாலும் அதலபாதாளத்தில் நம்மை அடைத்து வைத்திருந்தாலும்
3.சுவாச நிலையில் நாம் இந்நிலை பெற்றிருக்கும் பொழுது எந்தத் தீய சக்திகளும் நம்மை வந்து தாக்கிடாது.

இந்த நிலை பெறத்தான் இந்தப் பாட நிலை எல்லாமே…!

ஒவ்வொருவரும் இதில் உள்ள உண்மையை உணர்ந்து உருவமில்லா ஆண்டவனை எண்ணிக் கொண்டே பல கோடி ஜெபங்களை ஜெபித்துப் பல மந்திரங்களைச் சொல்லி கால நிலையைக் கடத்திடாமல்
1.ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று புருவ மத்தியில் உயிரான ஈசனை எண்ணி
2.விண்ணிலிருந்து வரும் மகரிஷிகளின் அருள் சக்திகளைத் தியானத்தின் மூலம் பெற்றுக் கொள்ளுங்கள்.

தியானத்தில் இருக்கும் பொழுது உங்கள் ஜெபத்தில் பல நறுமணங்கள் கூடும் உங்கள் ஜெபத்திற்கு அருளை அளித்திடுவார் அவ்வீஸ்வரர்.

நாம் நம் ஆத்மாவிற்கு நல்ல மணங்களை அளித்துத்தான் ஊட்ட நிலையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இயற்கையே மாற்றியமைத்துக் கொண்டு தனக்குள் இந்த உணர்வின் தன்மை வளர்த்துக் கொள்ளும் சக்தி இந்த மனிதனுக்குத்தான் உண்டு. நாம் எந்த மெய் உணர்வுகளை வளர்க்க வேண்டும் என்று எண்ணுகின்றோமோ… அதனின் நிலைகளில் நாம் வளர்ந்து விடலாம்.

நீங்கள் வளர வேண்டும் என்று எண்ணும் பொழுது நான் வளருகின்றேன். நீங்களும் இதைப் போன்று எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள்… நீங்கள் நிச்சயம் வளர்கிறீர்கள்.

இந்தத் தியானத்தின் மூலம் எடுத்துக் கொண்ட மகரிஷிகளின் உணர்வுகளை எல்லோருக்கும் பாய்ச்சப்படும் பொழுது நிச்சயம் நாம் அந்த நிலைகளைப் பெறுகின்றோம்.

நான் இப்படி நினைத்தேனே…! ஆனால் இன்று இப்படித் துன்பங்கள் வந்துவிட்டதே என்று இந்த உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது இல்லை.

நமக்கு உடல் முக்கியமாக வேண்டும். ஆனால் இந்த உடலுக்குள் இருக்கப்படும் பொழுதே நாம் எதைச் செய்ய வேண்டும்? எதை நாம் கழிக்க வேண்டும்? எதை நாம் கூட்டவேண்டும்? என்பது தான் முறை.

இந்த உடல் நமக்கு என்றும் சதமில்லை.

இந்த உடலை விட்டு உயிராத்மா சென்று விட்டால் இந்த உடலில் நாம் எந்த வினையைச் சேர்த்து கொண்டோமோ இந்த வினையின் உணர்வுகள் உயிருடன் ஒன்றி அதை இயக்கியே தீரும்.

உடல் மீது பற்று கொண்டால் வேதனையை உருவாக்கும். இந்த நிலையில் இருந்து நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

நாம் ஒவ்வொருவரும பத்தாவது நிலையான “கல்கி..” என்ற நிலையை அடைய வேண்டும்.

சூரியனை விட்டுப் பூமி விலகிச் சென்றால் பனிப் பாறைகளாகிவிடும். நாம் இதற்குள் சிக்கிவிடாதபடி இப்பொழுது இருக்கும் குறைந்த காலத்திலேயே நம்முடைய எண்ணத்தை அந்த மகரிஷிகளின் எண்ண உணர்வுடன் இணைக்கச் செய்ய வேண்டும்.

இந்த உடலை விட்டு நாம் சென்றால் அந்த விண்ணுலகம் சென்று என்றும் அழியா ஒளிச் சரீரமாக பெரு வீடு பெரு நிலையான அந்த நிலையை நாம் அடைய வேண்டும்.

அந்த எண்ணத்தை வலுவாக வைத்து இதை நீங்கள் செய்து பாருங்கள். உங்கள் வாழ்விலே தெய்வீக நிலையாக மலர முடியும்.

அருள் ஞானம் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் வருவோருக்கு ஞானிகளின் உரச்சத்தை ஏற்றிக் கொடுக்கின்றேன்

 

ஆரம்பத்தில் குருநாதர் காட்டிய வழியில் பாதரசத்தையும் பச்சிலை மூலிகைகளையும் வைத்துச் சில மணிகளைத் தயார் செய்தேன் (ஞானகுரு). அதை வைத்துச் சில சக்திகளை எடுக்கும்படியும் சொல்லியிருந்தேன்.

ஏனென்றால்… அந்த அருள் சக்திகளை எடுத்து உடலிலே ஒவ்வொரு மணியாக எடுத்து இறுக்கிக் கொண்டு வரவேண்டும்.
1.அப்படி வளர்த்துக் கொண்டால் நட்சத்திரமாக முழுமையடையும்.
2.ஆண் பெண் என்ற நிலையில் (கணவன் மனைவி) அருள் உணர்வுகளைச் சேர்க்க வேண்டும்.

இதை எல்லாம் தெளிவாக அறிவதற்குத் தான் காடுகளுக்கு அழைத்துச் சென்றார் குருநாதர்.

தாவரங்களின் இலைகளைப் பார்த்தோமென்றால் ஒரே செடியாகத் தான் தெரியும். ஆனாலும் அதிலே ஆண் செடி பெண் செடி என்று இருக்கும்
1.அதிலிருந்து ரசத்தை எடுக்க வேண்டும்… அதைச் சேர்த்தால்தான் இணையும்
2.இல்லாமல் போனால் அதைச் சேர்க்க முடியாது.
3.மருந்து வகைகளை எடுத்துக் கொண்டால் ஆண் செடி பெண் செடி என்று சேர்த்தால் தான் அந்தக் கரு உருவாகும்.
4.அப்படி உருவானால் தான் அது மருந்துக்கு (மருத்துவத்திற்கு) உதவும்.

அதைத்தான் சித்தர்கள் காப்பு கட்டி வைத்திருக்கிறார்கள் என்று சொல்வார்கள்… பல பொய்களைச் சொல்லி வைத்திருப்பார்.

மூகாம்பிகையில் நான் இருக்கும் பொழுது சில மணிகளைச் செய்து அங்கே கொடுத்துவிட்டு வந்தேன். இது எல்லாம் சூட்சும நிலைகள் கொண்டு அன்று செயல்படுத்தியது.

பல இடங்களுக்கும் சென்று குருநாதர் கொடுத்த சக்தியைச் சரியா… தவறா…? என்று அவர் சொன்ன முறைப்படுத்தித்தான் செயல்படுத்தியது.
1.இந்த உண்மைகளை எல்லாம் நீ தெரிந்து கொள்ள வேண்டும்.
2.இதைத் தெரிந்து கொள்ளாதபடி எங்கேயும் வெளி விடாதே…! என்று சொல்லி விட்டார்.

அதை எடுத்து எல்லா இடங்களும் சுற்றி அறிந்த பிற்பாடு அந்த ஞானிகளின் சக்திகளை ஒவ்வொருவருக்கும் எப்படிக் கிடைக்கச் செய்ய வேண்டும்…? என்று தெரிந்து கொண்டு அதன் வழிகளிலே இப்போது கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

என்னை மற்றவர்கள் போற்ற வேண்டும் என்றால் நான் எதை வேண்டுமானாலும் செய்யலாம். பார்த்தீர்கள் என்றால் அடேயப்பா… சாமி எவ்வளவு பெரியவர்…! என்று கூட்டங்கள் அதிகமாக வரும்.

ஆனால் அந்தக் கூட்டம் எதற்கு வரும்…?

இப்பொழுதும் சில கூட்டங்கள் வரத்தான் செய்கிறது அந்த கூட்டங்களை நான் கழித்துக் கொண்டுதான் இருக்கின்றேன்.
1.உண்மையான நிலைகள் ஞானத்தின் வழித்தொடரைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் வருபவர்கள் தங்கியிருப்பார்கள்
2.இந்த உடல் இச்சைக்கு என்று கேட்டு வருபவர்கள் கொஞ்சம் குறைத்தே தான் இருக்கும்

ஆனால் இந்த அருள் ஞான வழியில் வருபவர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஞானிகளின் உரச்சத்தை ஏற்றி வளர்த்துக் கொண்டே இருப்பேன்

முழுமையாக உடலுக்கு வேண்டும் என்றும் இந்த வாழ்க்கைக்குத் தான் வேண்டும் என்று வருபவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக நான் கழித்து விடுவேன்.

ஆனால் உடலை வைத்துத் தான் நாம் அந்த அருள் சக்திகளை எடுக்க வேண்டும். அருள் ஞானத்தைப் பெற வேண்டும்.

நீங்கள் வளர்ந்தீர்கள் என்றால் மற்றவர்களும் அதைப் பெறக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கின்றது நீங்கள் வளர்ந்தால் தானே…!
1.நான் ஒருவன் வளர்ந்து என்ன செய்ய முடியும்…?
2.என் ஒருவனால் ஒன்றும் செய்ய முடியாது…!

நான் நினைக்கலாம் யானையைச் செய்வேன்… பூனையைச் செய்வேன்… என்று. அப்படி எல்லாம் சொன்னால் அது வெறும் திமிர் தான். அப்படி ஒன்றும் செய்ய முடியாது.

ஒரு நெல்லை எடுத்து விதைத்துப் பல நெல்களாக உருவாக்கி அந்த அருள் உணர்வின் தன்மையை எடுத்துச் சமப்படுத்த வேண்டும். அந்த உணர்வின் வலுவைக் கொடுத்து எல்லோரையும் பெறச் செய்ய முடியும்.
1.குரு கொடுத்து அது தான்…!
2.அதைத்தான் உங்களையும் செய்யச் சொல்கின்றேன்.

நான் அதைச் செய்தேன்… என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டால் பிறகு நானும் அந்த வளர்ச்சிக்குப் போக முடியாது… தீர்ந்துவிடும். ஆகையினால் நான் வளர வேண்டும் என்றால் நீங்கள் வளர வேண்டும் என்று நான் நினைக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் எல்லோரும் பெற வேண்டும்… உங்கள் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும்… என்ற இந்த எண்ணம் என்றைக்கு நான் கொள்கின்றேனோ
நீங்களும் வளர்கிறீர்கள்…
நானும் வளர்கின்றேன்…
உலகத்தையும் வளர்க்க முடிகின்றது…
நானும் அந்த வளர்ச்சிக்குச் செல்ல முடிகின்றது.

கவலையிலிருந்து மீள வேண்டும் என்பது போல் அதி சந்தோஷத்திலிருந்தும் மீள வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

மனித உடலில்.. இந்த மனித ஜென்மத்தில்.. பல தவறுகளையும் பாவங்களையும் நடைமுறையில் நாம் எல்லோருமே செய்கின்றோம்.
1.அந்தத் தவறைத் தவறு என்று உணர்ந்து கொண்டு
2.“தவறு செய்யாதவர்கள்” யாருமே இருக்க முடியாதப்பா…!

அந்தத் தவறிலிருந்து விடுபட்டு தன் நிலை என்ன..? தான் யார்..? என்ற எண்ணத்துடன் பல நல்ல உணர்வுகளை நற்காரியங்களை எடுத்துக் கொண்டு
1.நம் எண்ணத்திலும் நம் சுவாசத்திலும் ஒரே எண்ணத்துடன் உயிரான ஈஸ்வரனை எண்ணும் பொழுது
2.நம் உயிர் நிலைக்கு.. நம் ஆத்மாவிற்கு.. அச்சக்திதான் ஒரு நிலையில் ஊட்டம் பெறுகிறது,

“அந்த நிலையிலேயே நாம் என்றும் இருந்து கொண்டிருந்தால்…” நம் வாழ்க்கை முறையில் பல இன்னல்களும் பல இன்பங்களும் வந்து மோதும் பொழுதும் நம் உயிர் நிலைக்கு… நம் ஆத்மாவிற்கு… இவை எல்லாம் ஒன்றும் செய்ய முடியாதப்பா..!

ஒரு மனிதனுக்குக் கஷ்டங்கள் கவலைகள் வந்திடும் பொழுது அவற்றிலிருந்து நாம் எப்படி மீண்டு… நம் எண்ணத்திலும் நம் சுவாசத்திலும் ஒரு நிலைப்படுத்திட வேண்டும் என்று சொல்கின்றோமோ அப்படித்தான் இன்பத்திலிருந்தும்… அதி சந்தோஷத்திலிருந்தும்… மீண்டு வர வேண்டுமப்பா…!

1.கவலையிலிருந்து மீண்டு வந்தால் எல்லாமே தீர்ந்தது…! என்று எண்ணிவிட வேண்டாமப்பா..!
2.நாம் எப்படிக் கவலையிலிருந்து மீள வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அதே போலத்தான்
3.அதி சந்தோஷத்தையும் நம்முள் ஏற்றுக் கொள்ளாமல் மீள வேண்டுமப்பா…!

இன்றைய மனிதர்கள் எல்லோருமே மனித வாழ்க்கையில் உள்ள கஷ்ட நஷ்டங்களில் கவலையிலிருந்து மீண்டு சந்தோஷ நிலைக்குச் செல்ல வேண்டும்…! என்று தான் விரும்புகின்றார்கள்.

1.இதிலிருந்து மீண்டு அதற்குச் செல்லும் பொழுது
2.அவ்வெண்ணமும் அந்தச் சுவாச நிலையும் மாறுபட்டு
3.நம் ஆத்ம நிலைக்கே அது பெரும் தீங்காகிறதப்பா…!

இந்த நிலையிலிருந்து மக்கள் மீண்டு ஒரு வழிக்குக் கொண்டு வரத்தான் அன்றைய ஞானிகளும் ரிஷிகளும் ஆண்டவனின் ரூபத்தை வைத்துப் பல நூல்களை வடித்தார்கள் “மனிதர்கள் மனதில் பதியும்படி…!”

மனிதர்கள் எண்ணத்தில் சுவாசத்தில் என்றுமே ஒருநிலைப்படுத்தி அவ்வுயிரணுவிற்கு ஊட்டம் சேர்த்துக் கொண்டால் அவர்கள் இருக்கும் ஜெப நிலையிலிருந்து பல உன்னத நிலைகளை அடையலாம்.
1.எண்ணத்திலும் சுவாசத்திலும் தானப்பா நம் ஆத்மாவிற்கு நாம் சேர்த்திடும் சொத்தெல்லாம் உள்ளதப்பா…!
2.பல ரிஷிகளும் ஞானிகளும் பெற்ற நிலையெல்லாம் அது தானப்பா…!

மனித வாழ்க்கையில் வந்திடும் பல இன்னல்கள் இன்பங்கள் எல்லாவற்றையும்
1.மனிதன் தன் எண்ணத்திலும் செயலிலும் எற்றுக் கொள்ளாமல்
2.பிறரின் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் தன் மனதைக் கலங்கவிடாமல் என்றும் ஒரே நிலையில் இருந்து
3.தன் எண்ணத்தில் வந்து மோதிடும் பல அபிலாஷைகளுக்கு அடிமையாகாமல் அதிலிருந்து மீண்டு
4.தன் சுவாச நிலையில் “ஒரு நிலை எய்தி வாழ்ந்திட வேண்டுமப்பா…!”

அது தான் நம் ஆத்மாவிற்கு நாம் சேமிக்கும் சொத்து…!

புள்ளி விபரம் வைத்துப் பல கணக்குகள் போட்டு நட்சத்திர மண்டலக் கணக்குகளை எல்லாம் மனிதர்களுக்குப் புகட்டிட விஞ்ஞானிகள் பல நாட்கள் தன் அறிவையும் நேரத்தையும் செலவழித்து மக்களுக்குப் புகட்டுகிறார்கள்.

இதிலெல்லாம் பெறும் இலாபம் என்னப்பா…! அதனால் மனித ஆத்மாவிற்குப் பயன் என்னப்பா…?

ஆத்மாவிற்கு எந்த நிலையை நாம் தேடிக் கொள்ள வேண்டும்…? என்ற எண்ணம் மனிதனுக்கு வந்துவிட்டால்
1.அவன் ஆத்ம நிலையில் இருந்து கொண்டே அறிந்திடலாம்
2.அகண்ட அண்டத்தில் உள்ள பல கோடி உண்மைகளை…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இங்கே கற்றுக் கொண்ட நிலைகள் நம் குடும்ப வாழ்க்கையிலும் சரி… நம் எதிரியாக இருந்தாலும் சரி… நம் சொல்லின் நிலைகள் அங்கே இனிமைப்படுத்த வேண்டும்.

மற்றவர்கள் காரமான நிலைகளில் பேசினாலும்
1.நாம் எடுத்துக் கொண்ட தியானத்தின் பலன்
2.பிறர் காரமாகப் பேசக்கூடிய உணர்வுகளைத் தடுத்து நிறுத்தும் ஆற்றலாகப் பெற வேண்டும்.

இதை ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குள் ஆற்றல் பெறுவதற்கு சதா நீங்கள் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை எடுத்து உங்கள் உயிரை ஈசனாக மதித்துப் பழகுங்கள்.

1.கோவிலிலே அந்த ஈசனுக்குப் பாலாபிஷகம் செய்வது போன்று
2.உங்கள் உயிரான ஈசனுக்கு அந்த மெய் ஞானியின் அருள் சக்தியான நிலைகளை
3.நீங்கள் சுவாசித்து அபிஷேகிக்க வேண்டும்.

அந்த மெய் ஞானிகளின் உணர்வின் மணங்கள் உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்காக உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து அந்த அபிஷேகத்தை யாம் செய்து கொண்டே இருக்கின்றோம் (ஞானகுரு).

ஆகையினாலே ஒவ்வொரு நிமிடமும் இந்த ஆத்ம சுத்தியைச் செய்து அங்கே உங்கள் உயிரான நிலைகளுக்கு அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைச் சுவாசித்து உங்களுக்குள் மகிச்சியை உருவாக்குங்கள்.

ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை நாம் எடுத்துப் பிறருக்குச் சொன்னாலும் அவர் உடலில் இருக்கக்கூடிய உயிரான ஈசனிடம் நாம் வெளிப்படுத்தும் இந்த உணர்வுகளை அவர்கள் சுவாசித்து ஒலிகள் மூலம் உயிரிலே பட்டு அந்த உணர்வுகள் தூண்டப்படுகின்றது.

நாம் பேசிய உணர்வுக்கொப்ப அந்த உணர்வின் நிலைகள் அந்த உடலை இயக்கச் செய்து நம்மைப் பக்குவப்படுத்துவதோ நம்மை சொல்லச் செய்வதோ இதைப் போன்ற நிலைகள் ஏற்படுகின்றது.

ஆகையினாலே இதையெல்லாம் கண்டுணர்ந்த நாம் ஒவ்வொரு நிமிடமும் இதைப் பாச அணைப்புடன் செயல்படுத்த வேண்டும்.

ஒரு குழந்தை தவறு செய்தாலும் பாசத்துடன் அணைத்துக் கொள்கின்றோம் அல்லவா…! உடலிலே வேதனையாகும் பொழுது நமக்குள் ஒரு அசுத்தம் பட்டு விட்டால் அசுத்தம் என்ற நிலைகளை எண்ணாதபடி அதைத் துடைக்க முற்படுகின்றோமல்லவா…!

அதைப் போன்று
1.பிறருடைய எண்ணங்களில் அசுத்த சொற்கள் வந்தாலும்
2.எண்ணத்தாலே துடைக்கும் பக்குவத்தை நாம் பெறுதல் வேண்டும்.

கதைகளிலும் காவியங்களிலும் வடித்த உருவம் தான் கடவுள்..! என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள் – ஈஸ்வரபட்டர்

 

இன்றைய மக்களுக்கு… நன்மை தீமைகளை வழி வகுத்துச் சென்றிட… புரியாத நிலைகளில் தான் இன்றைய மதங்களும் மக்களும் உள்ளார்கள்.

ஆதியில் இருந்து…
1.இம் மனித ஆரம்ப காலத்திலிருந்தே… உதயத்திலிருந்தே வந்த பல சித்தர்கள் கொடுத்த உண்மை நிலைகளை எல்லாம்
2.அவரவர்கள் நிலைக்குத் தகுந்தபடி பிரித்தும் சேர்த்தும் சிதற விட்டுவிட்டார்கள்.

பல உண்மை நிலைகளை மதம் என்ற அடிப்படையில் உலகில் பல பாகங்களில் பல சித்தர்களால் வெளியிட்டதை
1.அந்தந்த நிலையில் உள்ள மக்களுக்குப் புரியும்படியாக வெளியிட்டதை
2.காலத்தின் செயலால் ஒரே அடிப்படையில் ஒவ்வொருவரும் தன் நிலைக்குச் சாதகமாக்கிக் கொண்டார்கள்.

ஆனால் எல்லோரும் சொல்லும் அடிப்படைக் கருத்து நம் ஆத்மாவிற்கு நாம் சேமித்து வைத்திடும் நிலை என்ன…? என்ற ஒன்றே தான்.

அதை வைத்துத்தான் பலர் பல வழிகளில் பல கதைகளைக் கட்டி… உண்மை இரகசியத்தை எல்லாமே மக்களுக்கு உண்மையாகப் போதிக்காமல் கதை வடிவில் அதை வடித்து
1.கதையையே கடவுளாகக் காட்டி…
2.மக்களுக்குக் கடவுள் என்றாலே “கதையில் வடித்த உருவம் தான்…!” என்ற எண்ணம் வரும்படிச் செய்துவிட்டார்கள்.

எல்லா மக்களுமே தான் உயர வேண்டும்… உயர்ந்த வாழ்க்கை வாழ வேண்டும்… என்ற எண்ணத்தைக் கொண்டு தான் வாழ்கின்றார்கள். ஆனாலும் அவ்வாழ்க்கையில் வரும் பேராசை நிலையில் தான் பல பாவங்களுக்கு உட்படுகின்றார்கள்.

நல்வழியில் நடத்திச் சென்றிடத்தான் அன்றையச் சித்தர்கள் பல அரும்பாடுபட்டுத் தவமிருந்து தான் பெற்ற சக்தி நிலைகளை மக்களுக்கு உணர்த்தினார்கள்.

இராமாவதாரத்தில் வந்த வான்மீகி முனிவரால் எழுதப்பட்ட இராமாயணக் காவியத்தையே அதில் உள்ள உண்மைத் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டார்கள்.

அதில் உள்ள குணா அம்சங்களை ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு மனிதனுக்கும் எப்படிக் குணா அம்சங்கள் அமைகிறது…? என்ற தத்துவ உண்மைகளை உணர்த்திடாமல்
1.அந்தக் கதையையே தன் தன் நிலைக்கு உகந்தபடி மாற்றியும் மறுத்தும்
2.இது தான் உண்மை… இது எல்லாம் தவறு…! என்று சுட்டிக் காட்டும் நிலையில் அன்றே சிலர் திருத்திவிட்டார்கள்.

அன்று எழுதிய இராமரின் கதை தான் இன்றும் பல கோணங்களில் திரித்துச் சிதறடித்தாலும் அந்த இராமரின் கதையே தான் உலவிக் கொண்டுள்ளது.

இராமாயணத்தின் மகத்துவத்தை அதிலுள்ள உண்மை நிலைகளை உலகிலுள்ள மக்கள் எல்லோரும் புரிந்து கொண்டால் இன்று உலகில் நடந்திடும் இக்குழப்ப நிலைகளும்… மனிதனை மனிதன் ஏமாற்றி வாழும் நிலையும் இருந்திடாதப்பா…!

எல்லோரும் என்னும் பொழுது ஒரு நற்செயலைச் செய்பவரும் நல்ல காரியத்தைச் செய்பவர்களும் பல நல்ல நிலைகளை எல்லாம் இப்பொழுது மதங்களின் வழியில் தன் தன் மதத்திற்கு உகந்தபடி சிதறடித்து விட்டார்கள்.

1.ஒருவனே தேவன் ஒன்றே குலம்…
2.அத்தேவனில் இருந்து பிரிந்து வந்த பிம்பங்கள் தான்… நாம் எல்லோருமே…
3.எந்த மதத்திற்கும் யாரும் அடிமையில்லை…! என்ற சொல்லெல்லாம் இந்த மனிதனின் மனதிலும் ஏறவில்லை.

ஏட்டிற்கும் எழுத்திற்கும் தான் அது எல்லாம் இப்பொழுது உகந்ததாக உள்ளது.

ஆண்டவனையே… “தனக்கு மட்டும் தான் சொந்தம்…!” என்ற எண்ணத்தில் கோவில்களுக்குச் செல்பவர் தான் பலர் உள்ளனர் இன்றும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இந்த உடலில் இருக்கப்படும் பொழுதே மெய் ஒளியின் அருள் அந்த மகரிஷிகள் பெற்ற அருள் ஒளிகளைப் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

சாமியிடம் (ஞானகுரு) போனோம்… சாமி கொடுக்கவில்லை…! என்று குறையை எண்ணாதீர்கள். அந்த அருள் ஒளியை வளர்ப்போம்… அந்த அருள் ஒளியினுடைய நிலைகளில் ஒளி நிலை பெறுவோம். நாம் வாழ்க்கையில் வரக்கூடிய தீமையின் நிலைகளை நம் மூச்சாலே நம்மை அணுகாது பாதுகாப்போம் என்று உறுதி கொள்ளுங்கள்.

அந்த மெய் ஒளியின் நிலைகள் பெறப்படும் போது இருள் விலகும், அந்தப் பொருள் தெரியும். இருள் விலகிப் பொருள் காணும் போது வாழ்க்கையிலும் நீங்கள் பொருள் காணலாம்.

உடலில் எவ்வளவு வேதனைகள் துன்புறுத்தினாலும் அந்த இருளை மாய்க்க உங்களுக்கு யாம் கொடுப்பது ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்.

புலி நம்மைத் தாக்க வரும்போது அதை வேட்டையாடுவதற்கு அம்பைக் கொண்டு எவ்வாறு எய்கின்றோமோ அதே போன்று
1.உங்கள் உடலுக்குள் நின்று உங்களை வேட்டையாட நினைக்கும்
2.அந்தத் தீய விஷ உணர்வுகளையும் வேதனைப்படச் செய்யும் அந்த உணர்வின் தன்மைகளையும்
3.வேட்டையாடுவதற்குத்தான் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்.

ஓ…ம் ஈஸ்வரா…” என்று அந்த உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து உங்கள் உடலுக்குள் செலுத்தி ஆத்ம சுத்தி செய்து
1.உங்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும் வேதனைப்படுத்திக் கொண்டிருக்கும்
2.அந்த உணர்வின் தன்மைகளை அந்த மகரிஷியின் அருள் ஒளியாலே அடக்கச் செய்யுங்கள்.

அப்போதுதான் அவைகள் அடங்கும்.

வேதனையாக இருக்கின்றது என்ற நிலையை மறந்துவிட்டு அந்த மகரிஷிகளின் அருள் ஒளியாலே எனக்குள் இருக்கக் கூடிய துன்பங்கள் நீங்கும் என்ற உணர்வைச் சுவாசியுங்கள்.

அந்த உணர்வின் தன்மை மெய் ஞானியின் அருள் உணர்வு உங்களுக்குக் கிடைக்கும்போது, மெய் ஞானிகள் அவர்கள் உடலிலே எப்படித் தீமையை மாய்த்து மெய் ஒளியின் தன்மையைப் பெற்றார்களோ அந்தத் தீமையான உணர்வை மாய்க்க அருள் ஒளியின் தன்மையிலே சென்றால்தான் முடியும்.

நிறையப் பேர் சாமியிடம் சென்று வந்தோம்… தலை வலி போகவில்லை. சாமியிடம் சென்றால் என்ன கிடைக்கின்றது…? என்று எண்ணுவார்கள்.

அருள் வழியில் நன்றாக ஆகிவிட்டதென்றால் மீண்டும் வருவார்கள். அடுத்த முறை வந்து “சாமி…” என்று கேட்பார்கள். மூன்றாம் முறை வரும் போது என்ன செய்கிறார்கள்…?

நம் வாழ்க்கையில் அடிக்கடி அசுத்தங்கள் வந்து கொண்டே இருக்கும். அப்போது என்ன செய்கின்றோம்…?

அன்று நல்லதாக நடந்தது, இன்று யாம் சொன்ன வழிகளிலே தீமை நீக்கும் செயலாக நடந்தீர்களா…? என்று யாம் அவர்களிடம் கேட்டால், நேரம் இல்லைங்கே…! என்று சொல்கிறார்கள்.

இது போன்று நேரமில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் என்றால் அவர்கள்… ஒன்றும் கிடைக்கவில்லை என்ற நிலைக்குப் போய்க் கொண்டிருப்பார்கள்.

அந்த மாதிரியாக, நமது வாழ்க்கையினுடைய நிலைகள் பயனற்றதாகப் போய் விடாதபடி நாம் மெய் வழி காண்போம்.

வாழ்க்கையில் வரக்கூடிய துன்பத்தைப் போக்குவதற்குத்தான் இப்பொழுது யாம் உபதேசிப்பது. அந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்திற்குள் பல இரகசியங்கள் இருக்கின்றது.

இந்தத் தியானத்தின் நிலைகள் கொண்டு நமக்குள் ஆற்றல் பெற்றபின் யார் துன்பப்பட்டு வந்தாலும நாம் ஆத்ம சுத்தி செய்து கொண்டு அவர்கள் உடலில் இருக்கக் கூடிய தீமைகளை நீக்க அவர்களையும் அந்த ஆத்ம சுத்தி செய்யப் பழக்குங்கள்.

1.யாம் எப்படி உங்களை நல்லதாக்க வேண்டுமென்று விரும்பி
2.இந்த ஞானத்தின் வழி முறை கொண்டு உங்களுக்குள் சேர்க்கச் செய்கின்றோமோ
3.இதைப் போன்று நீங்களும் செயல்படுத்துங்கள்.

உங்கள் மூச்சாலும் பேச்சாலும் மற்றவர்களுடைய துன்பத்தைப் போக்கச் செய்யுங்கள். இதை உங்கள் அனுபவத்திலே நீங்கள் பார்க்கலாம். நீங்கள் உங்களை நம்புங்கள். நாம் எடுக்கும் தியானத்தின் மூலமாக ஆற்றல் மிக்க சக்தியைப் பெறமுடியும்.

யாரோ செய்து கொடுப்பார்… எவரோ செய்து கொடுப்பார்… என்று எண்ணாதபடி
1.நாம் இதைப் பெற முடியும் இந்த ஆற்றல் மிக்க சக்தி நம் உடலில் உண்டு
2.அந்த ஆற்றல் மிக்க சக்தியை நாம் பெற முடியும் என்ற நிலைக்கு நாம் வர வேண்டும்.

உயிருடன் தொடர் கொண்டு அந்த அலையின் வரிசையில் இங்கே பாய்ச்சப்படும் போது, ஒவ்வொன்றும் நல்லதாகும்.

1.நம்மால் முடியுமா…? என்ற பலவீனத்தை மட்டும் விட்டு விடுங்கள்.
2.எண்ணியதைப் படைக்கும் சக்தி உங்களை இயக்கிக் கொண்டிருக்கும்
3.உங்களை ஆண்டு கொண்டிருக்கும் இந்த உயிருக்கு உண்டு.

உயிரின் துணை கொண்டு அது எப்படி நம்மை ஒளியாக உருவாக்குகின்றதோ நம் உணர்வின் செயலை உருவாக்குகின்றதோ அதைப் போன்று நம் உணர்வுகள் அனைத்தும் அந்த ஈசனின் உணர்வின் ஒளி அலைகளாக மாறி அந்த உணர்வுகள் செயல்படும்.

ஆகவே… உயிர் நம்மை ஒளியாக இயக்கிக் கொண்டிருக்கும் அந்த உணர்வாக நாம் மாற்ற வேண்டும்… மாற வேண்டும்.

ஒன்றை ஒன்று விழுங்கித்தான் ஒன்றுக்குள் மறைந்து வருகின்றது. ஆனால் எல்லாவற்றிருக்கும் ஞானம் உண்டு. இன்றைக்குக் காற்றாக வருகிறதென்றால் இந்தக் காற்றும், போர் முறைகளிலேதான் வருகின்றது.

பல அணுக்களின் நிலைகள் கொண்டு நம் பூமிக்குள் விளைந்த நிலைகள் கொண்டு எதிர் நிலையான அலைகள் பட்டவுடன் ஒன்றுக்கொன்று போர் செய்துதான் சுழிக் காற்றும் வருகின்றது.

இவையெல்லாம் ஒன்றையொன்று வெல்லும் போது ஏற்படக் கூடிய மூச்சின் அலைகள்தான்.

ஆகையினாலே எல்லாமே இயற்கையின் செயல்தான். அனைத்தையுமே அறிந்துணரக்கூடிய ஆற்றல் மனிதனுக்கு உண்டு. மனிதனாக இருக்கக் கூடிய நாம் எதைக் கொண்டு எதை வெல்ல வேண்டும்…?

நாம் இருளை வென்று ஒளியாக்க வேண்டும். இது தான் கடைசி நிலை.

சாமியையே (ஞானகுரு) எண்ணிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் விளைய வைக்க வேண்டும்

 

இந்த மனித வாழ்க்கையில் நாம் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் சோர்வு வந்து விடுகின்றது. அதனால் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது… மாற்றங்கள் ஆகின்றது.

சிந்திக்கும் தன்மை குறைந்தால் அடுத்து நாம் எண்ணியபடி எதுவும் நடக்கவில்லை என்றால் விஷமாகின்றது. சோர்வு… சிந்தனை குறைவு… வேதனை என்ற இது மூன்றும் சேர்த்து ஒரு கருவின் தன்மையாகிறது. உயிர் அந்த அணுவாக உடலுக்குள் உருவாக்குகின்றது.

நான் நினைத்தேன் வரவில்லையே… என்ற எண்ணத்தில்
1.“சாமி (ஞானகுரு) சொன்னாரே…
2.கிடைக்கவில்லையே… கிடைக்கவில்லையே…! என்ற உணர்வைத் தான் மீண்டும் வளர்க்க முடியும்.
3.ஆக.. கீழான நிலைக்குத் தான் போக முடியும்.
3.வலு கொண்ட நிலையிலே சாமியை எண்ணுவீர்கள்
4.ஆனால் சாமி சொன்னதை (உபதேசம்) விட்டு விடுவீர்கள்.

வயலில் விவசாயம் செய்யும்போது களைகளைப் பிடுங்க வேண்டும் என்று சொன்னால் களையைப் பிடுங்குவதற்குப் பதில் முளைத்த நல்ல செடிகளைத் தட்டி விட்டால் என்ன செய்யும்…!

விவசாயத் துறையில் நல்ல வித்தைத் தான் கொடுக்கின்றார்கள்… பயிரிடுகின்றோம். ஆனாலும் வளர்ந்த பின் களைகளை எடுப்பதற்குப் பதில் களையுடன் சேர்த்து பயிரையும் பிடுங்கி விட்டால் பலனற்றுப் போகும்.

அதைப் போன்று தான்
1.நான் (ஞானகுரு) கொடுத்த அருள் ஞான வித்தை விளையை வைத்துத் தீமைகளை (களைகளை) நீக்குவதற்குப் பதில்
2.நான் கொடுத்த சக்தியையே வீழ்த்தி விடுகின்றார்கள்.

கொடுத்த சக்தியை இழக்கப்படும் பொழுது ஒரு காரியத்தை எண்ணிச் செய்தால் சோர்வடைந்து வேதனை என்ற நிலை உருவாகின்றது.

ஆனால் இதற்கு முன்… பல பிறவிகளிலும் புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வரையிலும் எப்படி வளர்ச்சியடைந்தோமோ தன்னைக் காட்டிலும் வலு கொண்ட உணர்வு கொண்டு மீள வேண்டும்… மீள வேண்டும்… என்ற உணர்வுகளைச் சேர்த்துத் தான் வளர்ந்து வந்துள்ளோம்.

பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து அதன் வழி இத்தனையும் கடந்து வந்த மனிதன் நாம்
1.மீண்டும் தன் இச்சையின் உணர்வு உண்டு நிறைவேறவில்லை என்றால்
2.சோர்வும் வேதனையும் அடைந்து அத்தகைய அணுவின் தன்மையாக வரப்படும் பொழுது
3.நம் நல்ல குணங்களை அடக்கிவிடுகிறது… அதர்வண…!

நல்ல குணங்களை அடக்கியபின் தீமை செய்யும் உணர்வின் அணுக்கள் விளைந்து (யஜூர்) விட்டால் மீண்டும் சாம…!

அதே தீமையான எண்ணம் இயக்கத் தொடங்குகிறது. அதை மாற்றுவதற்குத் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் அரும் பெரும் சக்தியை உங்களுக்குக் கொடுத்திருக்கின்றேன்.

தீமைளைளச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒரு இரண்டு நிமிடம் எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள்

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உயிரிடமே வேண்டுங்கள். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் இணைத்துக் கொள்ளுங்கள்.

இப்படிச் செய்து வாழ்க்கையில் வந்த வேதனைகளை அடக்கப்படும் பொழுது அதர்வண. தீமைகள் செயலற்றதாகின்றது.
1.துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்த அருள் ஒளியின் அணுக்களைப் பெருக்கினால் அப்பொழுது யஜுர்…
2.ஒளியான அணுக்களாக நமக்குள் ஒவ்வொரு நாளும் வளர்க்க வேண்டும்.

ஆயுளை நிர்ணையிப்பது யார்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.எந்த ஆண்டவனும்… எந்தக் கடவுளும்… நம் ஆயுளை நிர்ணயிக்கவில்லை.
2.அவனவன் எண்ணத்தில் வருவது தான் எல்லாமே…!

அவனவன் சுவாச நிலையைக் கொண்டு அவனவனுக்கு வரும் வியாதிக்கும் பிணிக்கும் வித்திட்டவன் ஆண்டவனா…?

இவன் உண்ணும் உணவிலும் சுவாச நிலையிலும் உடல் என்னும் கூட்டிற்கு “இவனே தேடிக் கொள்கின்றான் பல வினைகளை…!”

இவன் உடலில் வரும் வியாதியில் இவன் உடல் படும் அல்லலைக் கண்டு இந்த உடலிலிருந்து பிரிந்து செல்கிறது அந்த ஆத்மா.

எந்த நிலையிலும் இவன் அந்த ஆத்மாவை ஆண்டவனாக எண்ணி இந்த உடலில் தங்கி இருக்க வேண்டும் என்ற அவா வைத்து “ஆண்டவனே தான் இவ்வாத்மா…!” என்ற எண்ணம் தோன்றி வேண்டிக் கொண்டால் இந்த உடலை விட்டு இவ்வாத்மா எந்தக் காலத்திலும் பிரிந்து செல்லாது.

1.ஆத்மா என்னும் ஜோதி தான் எல்லா உயிரினத்திலும் உள்ளதப்பா..!
2.பெரும் சித்தர்களும் ரிஷிகளும் அவர்கள் உடலில் உள்ள ஆத்ம சக்தியைப் புரிந்து கொண்டு தானப்பா
3.அவர்கள் அந்த உன்னத நிலையைப் பெற்றார்கள்.

மனித உடலில் தான் அந்த உன்னத நிலையைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் உள்ளது. மனித உடலை மாற்றிக் கொண்டால் இன்னும் பல கோடி ஆண்டுகளாகுமப்பா அந்த ஆத்மா ஜோதியுடன் ஜோதியாகக் கலப்பதற்கு…!

ஒவ்வொரு மனிதனும் “தன்னுள் ஆண்டவன் இருக்கின்றான்…!” என்ற எண்ணமுடன் வாழ்ந்திட்டால் இன்றையக் கலியில் நடக்கும் கூத்துக்கள் எல்லாம் இருக்காதப்பா…!

ஆண்டவனின் சக்தியைக் கல்லிலும் மண்ணிலும் பார்த்துத்தான் வணங்குகிறார்கள்.
1.இவர்கள் வேண்டுவதெல்லாம்…
2.அக்கல்லின் உருவத்தில் இவர்களுக்கு ஆண்டவன் வந்து அருள் செய்ய வேண்டும்…! என்ற எண்ணம் தான்
3.இன்றும் அப்படித்தான் உள்ளது.

நம் ஆத்மாவில் உள்ள அருளை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமப்பா…! நம் ஆத்மாவின் மூலமாக நாம் ஜெப நிலையில் இருக்கும் பொழுது எல்லா நிலையையும் அறிந்து கொள்ளலாம்.

1.நாம் யார்…?
2.நம் ஆத்மாவின் நிலை என்ன…?
3.நம்முள் இருக்கும் ஈசனின் சக்தி என்ன…? என்ற எல்லா உண்மையுமே அறிந்து கொள்ளலாம்.

நாம் பாவம் செய்து விட்டோம்…! அதனால் நமக்கு இனி இந்த ஜென்மத்தில் என்ன பேறு கிடைக்கப் போகிறது…? என்ற எண்ணம் என்றுமே எண்ணிடலாகாதப்பா…!
1.தவறை எண்ணி வருந்தும் பொழுதே
2.நம் ஆத்மா நம் தவறுக்கு மன்னிப்பு அளிக்கின்றதப்பா…!

நம் ஆத்மாவின் நிலையேதான் ஆண்டவன் என்ற ஒரே எண்ணம் மக்களுக்கு வந்து தன் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டுமப்பா..! அழியும் யுகத்தில் அழியாச் செல்வம்… ஒரே செல்வம்… இவ்வாத்மா தானப்பா…!

கலியின் கடைசியில் கல்கியின் ஆரம்பமான நாளில் “கடைசிச் சந்தர்ப்பத்தை…” ஒவ்வொரு மனிதனும் பயன்படுத்திக் கொண்டு தன் ஆத்ம ஜோதியை அவ்வாண்டவனுடன் கலக்க விட்டு ஆண்டவனுடன் ஆண்டவனாக அச்சூட்சம உலகத்திற்கு அழைத்துச் செல்லத்தான் இந்தப் பாடங்கள் எல்லாமே…!

இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் இவ்வாத்மா என்னும் ஆண்டவனின் சக்தியைப் புரிந்து கொண்டு
1.ஆத்ம ஜோதியாகக் கலந்திட வேண்டும் என்பது தான்
2.இவ் ஈஸ்வரபட்டனாகிய உங்கள் குருவின் குருநாதனாகிய நான் அளித்திடும் “பொக்கிஷம்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நாம் கையிலே ஆயுதத்தை வைத்துக் கொண்டு… ‘’புலி வருகிறது, புலி வருகிறது’’ என்று சொன்னால் துப்பாக்கி எதற்கு வைத்திருக்கிறோம்…!

துப்பாக்கியைக் கையில் கொடுத்திருக்கிறோம். சுடுவதற்கும் சொல்லிக் கொடுக்கிறோம்.

ஐய்யய்யோ…! புலி வருகிறது புலி வருகிறது..! என்று துப்பாக்கியை வைத்துக் கொண்டு சுடாமல் இருந்தால் என்ன செய்யும்…? அது நம்மைத் தாக்கிவிடும்.

அதற்குத் தான் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளேன்.

சந்தர்ப்பத்தில் நீங்கள் பிறருடைய கஷ்டமான நிலைகளைக் கேட்டு அறியத்தான் வேண்டும். நீங்கள் அவர்களுக்கு உதவி செய்துதான் ஆக வேண்டும்.

உதவி செய்தாலும் அவர்கள் சொன்ன துன்பமான உணர்வுகள் உங்களுக்குள் ஆட்டிப் படைக்காதபடி ‘ஆத்ம சுத்தி’ என்ற இந்த ஆயுதத்தை எடுத்து ‘’ஈஸ்வரா…’’ என்று உங்கள் உயிரை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…’ என்று ஏங்குங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் படர்ந்து இரத்தங்களில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும்’ என்று ஏக்க உணர்வுடன் கண் திறந்து ஒரு நிமிடமும் கண்ணை மூடி ஒரு நிமிடமும் எடுத்துக் கொள்ளுங்கள்.

கண்ணைத் திறந்தபின் துன்பப்பட்டவர்களிடம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியால் உங்கள் துன்பங்கள் நீங்கும், நீங்கள் நலம் பெறுவீர்கள்’ என்று சொல்லி விட்டு அந்தப் பொருளைக் கொடுத்துப் பாருங்கள். அவர்களது கஷ்டம் உங்களுக்குள் வராமல் தடுக்க முடிகின்றது,

நாம் நகை வாங்கியபின் அடுத்த நகை செய்யும்போது அதில் உள்ள வெள்ளியையும் செம்பையும் எப்படிச் சுத்தப்படுத்திக் கொள்கிறோமோ அதே போல அடுத்த நிமிடமே கேட்டறிந்த பிறருடைய கஷ்டத்தைச் சுத்தப்படுத்திக் கொண்டு நமது மனதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதுதான் ‘தியானம்’ என்பது.

நமக்குள் தீயது சேராது தடுக்கும் இந்த ஆற்றல் மிக்க சக்தியின் துணை கொண்டு நமக்குள் தியானமிருக்க வேண்டும். நமக்குள் கெட்டது சேர விடாது, வைராக்கியமான நிலைகள் பெற வேண்டும். இது தான் தியானம் என்பது.

பக்தியில் நல்லதை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பார்கள், ஆனால் தியானம் என்பது நமக்குள் நல்லதைச் சேர்த்துக் கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்வது.

பக்தி என்பது நல்லதை நினைப்பது. ‘தியானம் என்பது உயர்ந்த ஞானிகளின் சக்தி கொண்டு, நமக்குள் நல்லதைக் காக்கச் செய்வது. இந்தச் சக்தி இல்லையேல் அதைச் செயல்படுத்த முடியாது.

நமக்கு முன்னால் சுழன்று கொண்டிருக்கும் அந்த ஞானிகளின் அருள் சக்தியை ஆத்ம சுத்தி என்ற நிலைகளில் வலுக் கொண்டு உங்களுக்குள் பெறச் செய்வதற்குத் தான் வாக்கின் நிலையாக உங்களுக்குள் கடும் ஆயுதமாகக் கொடுக்கின்றேன் (ஞானகுரு).

சீராக ஆத்ம சுத்தி செய்வோருக்குக் கிடைக்கும் பலன்கள்

 

அந்த மகரிஷிகளின் சக்திகளை எடுத்து நமக்குள் வலுவாக வளர்த்துக் கொண்டே வந்தோம் என்றால் அந்த உயர்ந்த சக்திகளின் இயக்கங்களை “அனுபவபூர்வமாக நமக்குள் பார்க்கலாம்…”

தீமை செய்யக் கூடியவர்கள் யாராவது… நமக்கு இடைஞ்சல் செய்ய வேண்டும் என்று எண்ணினாலும் கூட…
1.அது அவர்கள் உடலில்தான் வளரும். அவர்கள் உணர்வுகள் நம்மைப் பாதிக்காது.
2.எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்… தீமை செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள் என்றால்
3.அந்த எண்ணம் அவர்களைப் பாதிக்கும்… பாதிக்கும் போது தான் நினைப்பார்கள்.

இந்த மனிதனை நாம் என்னவெல்லாம் பேசினோம்… என்று நினைப்பார்கள். இதை நிச்சயம் அங்கே உணர்த்தும்…!

ஏனென்றால் இந்த உணர்வுகள் போனவுடன் நினைவலைகள் முன்னுக்குப் போகும்… நம்மைப் பற்றிய நினைவுகள் வரும்.
1.இந்த மனிதனை நாம் தொந்திரவு செய்து விட்டோம் என்ற எண்ணம் வரும்.
2.நிச்சயம் இந்தத் திருப்பம் வரும்.

இதே போன்று குடும்பங்களில் அடிக்கடி சில குறைபாடுகள் வந்தால் அந்தக் குறைகளுக்குக் காரணம் நாம் அல்ல. அந்த உணர்வுகள் தான் நம்மை இயக்குகின்றது.

அந்த நேரங்களில் எல்லாம் உடனடியாக ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் குடும்பம் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி எடுத்துப் பழக வேண்டும்.

காரணம் இன்றைக்கு மட்டும் வந்ததல்ல இது. தாய் கருவில் இருக்கும் போதே இந்த வினைகள் தொடர்ந்து வந்தது.

அதே போல் ரோட்டிலே சாதாரணமாகச் சென்றாலும் கூட அங்கே இரண்டு பேர் சண்டையிடுவார்கள்.. ஒருவருக்கொருவர் சாபமிட்டுப் பேசியிருப்பார்கள். சும்மா வேடிக்கையாக நாம் காதிலே கேட்டாலும் கூட அதுவும் நமக்குள் அந்தச் சாபம் பதிவாகி விடுகிறது.

ஆனால் நாம் தவறு செய்து அது நமக்குள் வரவில்லை.
1.இந்த மாதிரிச் சாப அலைகள் நம் உடலில் எத்தனையோ விதமாக எத்தனையோ வகைகளில் பதிவாகியிருக்கும்.
2.அது எல்லாம் மிக சக்தி வாய்ந்தது.

எப்படி இருந்தாலும் உதாரணமாக ஒரு கேமராவில் படம் பிடிக்கிறோம் என்றால் குறுக்கே யாராவது வந்தால் படத்தில் அதுவும் அதில் சேர்ந்து பதிவாகத் தான் செய்யும். எடுத்த படமும் ஆடி இருக்கும் (BLURRED).

கேசட்டில் ஒரு இசையைப் பதிவு செய்கிறோம் என்றாலும் இடையில் யாராவது சத்தம் போட்டால் அதுவும் சேர்ந்து பதிவாகத் தான் செய்யும்.

இதே மாதிரித் தான் நம் உடலில் ஊழ்வினை என்ற நிலைகள் கொண்டு எத்தனையோ எண்ணங்கள் அதனுடன் சேர்ந்து சேர்ந்து பதிவாகிக் கொண்டே தான் இருக்கிறது.

அந்த நேரத்தில் நாம் எண்ணும் பொழுது குறுக்கே பதிவான எண்ணங்களும் ஊடுருவி நமக்குத் தெரிய வரும். அதே சமயத்தில் அது நம் காரியங்களைத் தடைபடுத்தும் உணர்வாகவும் வந்து சேரும்.

ஒரு நல்ல காரியத்திற்காகச் சென்று கொண்டிருக்கின்றோம் என்று வைத்துக் கொண்டால் அவர்கள் சாபமிட்டுப் பேசியதும் இதிலே சேர்த்து (JOINED) இரண்டும் இணைந்து விடும்.

எப்படி எல்லாம் கெட்டுப் போக வேண்டும் நினைத்துச் சாபமிட்டார்களோ அந்த வேலையெல்லாம் நமக்குள்ளும் நடக்கும்.

1.இது எல்லாம் ஒரு உணர்வின் ஒலி அலைகள் நமக்குள் வரும் பொழுது
2.அந்த மணம் வந்து உயிரில் பட்டு அதற்குத் தக்க மணமாகி “நமக்கே எதிரியாக வரும்…!”

இதை எல்லாம் துடைப்பது யார்…?

காரணம் இயற்கையின் நிலைகள் வளர்ச்சி அடைந்தது பலராம். பலருடைய எண்ணங்களை அறியும் சக்தியாக அந்த எண்ணங்கள் இயக்குவதை நமக்கு உணர்த்துகின்றது.

அதிலே வரும் தீமைகளைத் தடுக்க வேண்டும் என்றால் நரசிம்மா…! எப்பொழுது தீமை என்று அங்கே உணர்கிறோமோ… அது நம்து உடலுக்குள் போகாதபடி அங்கேயே பிளக்க வேண்டும்.

பிளக்க வேண்டுமென்றால் உயிர் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும். தீமையான உணர்வுகள் புகாதபடி பிளந்து தள்ளிக் கொண்டே இருக்க வேண்டும்.

இதைத்தான் ஆத்ம சுத்தி என்று சொல்வது.

காவியத் தொகுப்புகள் இதை எல்லாம் தெளிவாக்குகின்றது. அதன் வழி நாம் செய்து பழக வேண்டும். சிறிது நாளைக்குச் செய்தாலே போதும். பின் தன்னிச்சையாக வேலை செய்யும்.

முந்திய பழக்கத்தில் எல்லாம்… யாராவது சொன்னால் அதிலேயே தான் நம் எண்ணத்தைச் செலுத்துவோம். ஆனால் இப்பொழுது
1.ஆத்ம சுத்தி செய்து வலுவாக்கிக் கொண்ட பின்
2.ஏதாவது இடைவெளியில் வந்து தடை செய்தாலும் கூட அதைக் கவனித்து மாற்ற முடியும்.

தீமை செய்யும் உணர்வுகள் குறுக்கிட்டால்…
1.உடனே அந்தத் தீமைகளைப் பிளக்க வேண்டும்
2.ஆத்ம சுத்தி செய்ய வேண்டும் என்ற இந்த உணர்வுகள் எல்லாம்
3.நமக்குள் தன்னிச்சையாகத் தோன்றும்.

ஒரு அழுக்குத் தண்ணீரில் சுத்தமான தண்ணீரை ஊற்ற ஊற்ற… அழுக்குத் தண்ணீர் எப்படிக் குறையுமோ அதைப் போன்று தான் ஆத்ம சுத்தி செய்யச் செய்ய… தூய்மைப்படுத்தும் சக்தியாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நமக்குள் பெருகுவதைக் காணலாம்.

ஆண்டவனிலிருந்து வந்த பிம்பங்கள் தான் அனைத்துமே என்று எண்ணினால்… “தான்” என்ற தனித்த அகங்காரம் வராது – ஈஸ்வரபட்டர்

 

உலகம் தோன்றியது முதலே வாழ்ந்திடும் ஜீவ அணுக்கள் எல்லாமே இந்த உலகம் என்று தோன்றியதோ… அன்றே ஆண்டவன் சக்தியில் அருளப் பெற்ற… அவ்வாண்டவன் சக்தியில் இருந்து உதித்த உயிரணுக்கள் தானப்பா…!

எறும்பிலிருந்து புழு பூச்சி மற்ற மிருகங்கள் பறவைகள் மரம் செடி கொடிகள் மனிதர்கள் யானை திமிங்கலம் நீரில் வாழ்பவை நிலத்தில் வாழ்பவை எல்லாமே எண்ணிலடங்கா வருடங்கள் முதல் கொண்டே அந்த ஆண்டவன் சக்தியில் ஆண்டவன் பிம்பத்தில் இருந்து உதித்த உயிரணுக்கள் தானப்பா…!

இந்த உயிர் அணுக்கள் எல்லாமே ஆண்டவன் தானப்பா…
1.எல்லா ஜீவராசிகளும் ஆண்டவன் தான்… ஆண்டவனிலிருந்து வந்த பிம்பங்கள் தான் என்று ஒருவரை ஒருவர் நினைத்துக் கொண்டால்
2.“தான்…!” என்ற அகங்காரமே தனித்து நில்லாதப்பா..!

ஜென்மங்களின் முறையைத்தான் பாட நிலையிலேயே அளித்துள்ளேன்.
1.நானும் ஆண்டவன் தான்… தன்னுள்ளும் ஆண்டவன் உள்ளான்.
2.தனக்கு எந்நிலை உள்ளதோ அந்நிலை தான் எல்லா ஜீவராசிகளிடமும் உள்ளது என்ற எண்ணம்
3.எல்லா மனிதர்களிடமும் தோன்றிவிட்டால் ஆண்டவனின் சக்தி என்ன…? என்று தெரிந்து கொள்ளலாம்
4.நம் ஆத்மாவிற்கு நாம் சேர்த்து வைக்க வேண்டிய சொத்து எது…? என்று புரிந்துவிடும்.

நம் மனித ஜென்மத்தில் நமக்கு அளிக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலிருந்து தான் நாம் நம் ஆத்மாவிற்கு அழியா நிலையைத் தேடி வைத்துக் கொள்ள முடியும்.

இந்த நிலையை நழுவ விட்டால்… நம் ஆத்மாவிற்கு இனி ஒரு சந்தர்ப்பம் “பல கோடி ஆண்டுகளானாலும்” கிடைப்பது அரிதிலும் அரிது என்பது புரிந்ததா…?

சந்தர்ப்பம் என்று சொன்னது… கல்கியில் ஆரம்பித்துக் கலியில் முடியும் காலத்திற்குப் பல கோடி ஆண்டுகள் ஆகின்றது. அந்தச் சந்தர்ப்பத்தில் மனித உடல் ஏழு ஜென்மங்கள் எடுக்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் அடுத்து கல்கி பிறந்து பல அவதாரங்கள் எடுத்துப் பிறிதொரு கலி வரும் வரை நம் ஆத்மா அல்லல்பட்டுக் கொண்டு பல உடல்களை எடுத்து மனித ஜென்மம் எடுத்துச் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

1.மனிதனுக்குத் தன் உடலில் உள்ள ஒரு உறுப்பு தான் இந்த உயிரும்…
2.தன் ஆயுள் உள்ளவரை தான் இந்த உயிர் இவ்வுடலில் இருக்கும்… என்ற எண்ணம் தான் எல்லோருக்குமே உள்ளது.

ஆனால் இந்த உடல் என்ற கூட்டில் அந்த ஆத்மா என்னும் ஆண்டவனின் சக்தி வந்து தான் இயக்குகிறது.
1.உயிர் எனும் ஆத்ம சக்தியே… ஆண்டவனின் சக்தியாக நமக்குள் இயங்குகிறது என்ற எண்ணம்… என்ற இந்த உண்மை…
2.ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

 

ஒருவர் தீமை செய்கிறார்… எல்லோரிடம் கடுமையாகவும் இருக்கிறார்… அதனால் மற்றவர்கள் வேதனைப் படுகிறார்கள் என்ற உணர்ச்சிகளை நாம் சுவாசித்தால் என்ன செய்கிறது…?

நமக்கும் அந்த எரிச்சலைத் தான் ஊட்டுகிறது. அப்பொழுது எரிச்சலான உணர்வு தான் நம்மை ஆட்சி புரிகிறது. நம்மை ஆளும் ஆண்டவன் அதைத்தான் ஆட்சி புரிகிறது. இயக்குகிறது.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…?

நீங்கள் சாந்தமாகவோ ஞானமாகவோ சொன்னால் அது அடங்குமோ…? என்றால் இல்லை…! ஏனென்றால் அது கடும் விஷம்.

விஷத்தில் கொண்டு போய் நல்ல பாலையும் நல்ல மணம் கொண்ட சுவை கொண்ட பொருள்களைப் போட்டால் மயக்கம் தான் வருமே தவிர சிந்திக்கும் தன்மை வராது.

நம் உடலிலுள்ள தீமைகளைக் கழிக்கக்கூடிய உணர்வு ஆறாவது அறிவு “கார்த்திகேயா…!” வாழ்க்கையில் தீமை வருகிறது என்று தெரிகிறது. அப்பொழுது அதை மாற்றியமைக்க நாம் என்ன செய்ய வேண்டும்…?

தீமை என்ற உணர்வுகள் நமக்குள் பதிந்தாலும் “ஈஸ்வரா” என்று நம் உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

விநாயகர் கையில் என்ன இருக்கிறது…? அங்குசம் இருக்கிறது. பெரிய யானையாக இருந்தாலும் ஒரு சிறு அங்குசத்தால் அதை அடக்க முடிகிறது. அதைப் போல நாம் அந்தத் தீமைகளை அடக்கிப் பழக வேண்டும்.

எப்படி…?

நம்முடைய நினைவைக் கண்ணுக்குக் கொண்டு வந்து கண்ணின் நினைவை ஈஸ்வரா…!” என்று உயிருடன் ஒன்ற வேண்டும். ஏனென்றால் கண் வழி கவர்ந்த உணர்வுகள் உயிருக்குள் பட்டபின் தான் அந்த உணர்வை உயிர் இயக்கச் சக்தியாக மாற்றுகிறது… உணர்ச்சிகளாக ஊட்டுகிறது.

நாம் சுவாசிக்கக்கூடியதை எல்லாம்
1.நம் உயிர் அகக்கண்ணாக இருந்து
2.உள் உணர்வாக உணர்த்துகிறது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலிலுள்ள இரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் படரவேண்டும் ஈஸ்வரா என்று வேண்டி
1.நம் கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தப்படும் போது
2.காற்றிலே பரவி வரும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நுகர முடிகிறது.

இப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நம் இரத்தத்தில் கலக்கச் செய்யும் பொழுது இரத்தங்களிலே கலந்த தீமையின் வீரியத் தன்மையைக் குறைக்கச் செய்கிறது. ஒவ்வொரு நிமிடமும் அந்த அருள் உணர்வுகளை நமக்குள் எடுத்துப் பழக வேண்டும்.

இப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் பரப்பப்படும் போது அந்த உணர்வுகள் இரத்தங்களில் கலந்து “ஆராதனையாகின்றது…!”

அப்படியென்றால் நாம் வெளிச்சத்தைக் காட்டுகிறோம் என்று அர்த்தம். அந்த உணர்வின் இயக்க ஒளியை உள்ளுக்குள் காட்டும் போது நமக்குள் வந்த இருள் சூழும் உணர்வின் தன்மைகளை அது அடக்குகிறது.

அதன் பின்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பார்க்கும் அனைவரும் பெற வேண்டும்.
2.அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.
3.மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் அவர்கள் பெற வேண்டும்.
4.அருள் உணர்வுகள் அவர்களுக்குள் விளைய வேண்டும் என்று இந்த உணர்வுகளை நாம் எடுத்தோமானால்
5.நம்மை ஆளும் ஆண்டவனுக்கு அது ஆராதனையாகின்றது.

கோவிலில் சாமிக்கு அபிஷேகம் செய்கிறார்கள் இல்லையா…! மலரையும் பன்னீரையும் விட்டு அபிஷேகம் செய்கிறார்கள். கனிகளையும் மற்ற பதார்த்ததையும் இணைத்துப் பஞ்சாமிர்தமாகவும் சிலைக்கு ஊற்றுவார்கள்.

ஏனென்றால் சாமி சிலைக்கு ஊற்றுவது முக்கியமல்ல…!

அருள் உணர்வுகளை நுகர்ந்து அந்த எண்ணங்களாக நம் உயிருக்குள் படரச் செய்யும் பொழுது அந்த உணர்வின் இயக்கமாக “மகிழ்ச்சி…!” என்ற உணர்வுகள் வரும்.

அதைத் தான் தான் நற்குணங்களின் உணர்வுகளைச் சுவாசமாக்கி நல்ல மணமாக நம்மை ஆளும் ஆண்டவனுக்கு ஆராதனை செய்வோம் என்று சொல்வது…!

இதை எல்லாம் சாதாரண மக்களுக்கும் தெரிய வைப்பதற்காகக் காவியங்கள் மூலம் ஞானிகள் தெளிவாக உணர்த்தியுள்ளார்கள்.

உங்களுக்குக் கொடுத்த சக்திகளை ஒவ்வொருவரும் விரயம் ஆக்காது பயன்படுத்துங்கள்

 

டி.வி. ரேடியோ அலைகளை ஒலி/ஒளிபரப்பு செய்யப்படும் பொழுது அந்தந்த ஸ்டேஷன்களிலிருந்து வருவதைத் திருப்பி வைத்து நாம் கேட்கின்றோம்.

அதே போல் தான் ஒரு வியாபாரமே செய்கின்றோம் என்றால் அதிலே நிறையப் பேரின் உணர்வுகளை நமக்குள் பதிவாக்கி வைத்திருக்கின்றோம்

1.அந்த ஸ்டேஷனைத் திறந்தால் நமக்குப் பணம் கொடுத்தவர்களைப் பற்றி நினைப்பு வராது
2.கொடுக்காமல் இழுத்தடிப்பவர்களின் நினைவு தான் அதிகமாக வரும்.
3.பாவிப் பயல்… இந்த மாதிரிச் செய்தான்… அதைச் செய்தான்… இதைச் செய்தான் என்ற ஸ்டேஷனைத் தான் நாம் அடிக்கடி திறந்து வைப்போம்.

அதற்குத் தகுந்தாற்போல் பக்கத்து வீட்டுக்காரர் ஏதாவது செய்திருந்தால் அவர்கள் மீது அந்த நினைவுகள் வரும்.

அடுத்து நம் சொந்த பந்தங்களில் யாராவது ஒரு வித்தியாசமாகச் செயல்பட்டிருந்தால்… குறைபாடுகள் இருந்தால் “நல்லது செய்தாலும் நமக்கு இடைஞ்சல் செய்கிறார்கள்…” என்று அதைப் பற்றிய சிந்தனைகள் வரும்.

இப்படிக் குறைகளைப் பேச ஆரம்பித்தால் அந்தக் குறை… இந்தக் குறை… என்று எல்லாக் குறைகளும் வரிசையில் வந்து கொண்டே இருக்கும். நல்லதை நினைக்கவே வராது…!

கடைசியில் குறையைப் பேசிப் பேசி… என்ன உலகம்… போ…! என்ற இந்த எண்ணம்தான் வரும். இந்த உணர்வின் இயக்க ஓட்டங்கள் இருந்தால் நன்றாகப் பேசிக் கொண்டிருக்கும்போதே
1.பாருங்கள்… இந்தப் பையன் மோசமானவன்…! என்று சொல்வோம்.
2.நாம் சொன்னதும் அடுத்து இன்னொருவர் ஆரம்பிப்பார்.
3.கடைசி எல்லாவற்றையும் மோசம்… மோசம்… என்ற சொல்லாக வரிசையில் வரும்.

ஏனென்றால் இந்த உணவின் தொடர் வரிசை இப்படித்தான் வரும்.

நம் வாழ்க்கையில் இது போன்று வர ஆரம்பிக்கும் போதே அடுத்த கணம்… துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று உயிரிடம் சொல்லி அவனிடம் வேண்டி அந்தழ் சக்திகளை எடுத்துப் பழக வேண்டும்.

ஏனென்றால் நம்மை உருவாக்கியது நமது உயிர் தான்.

1.தவறு செய்கிறார்கள் என்றால் நம் கண் அதை எடுத்துக் கொடுக்கின்றது
2.கண்ணின் கருவிழி ருக்மணி பதிவாக்குகின்றது.
3.கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் அந்த மனித உடலில் விளைந்த உணர்வினை இழுத்து நம்மிடம் கொடுக்கின்றது.
4..உயிரிலே பட்ட பின் தவறு செய்கின்றான் என்பதை உணர்த்துகின்றது.

உயிரான காந்தம் என்ன செய்கின்றது…?

ஒரு நாடாவில் விஞ்ஞான அறிவு கொண்டு இன்று பதிவு செய்கிறோம். பின் அந்த ஊசியின் பக்கம் சென்ற பின் அதை இழுத்துப் பேசுகின்றது.

முன்பெல்லாம் ஊசியில் உராய்ந்து கொண்டிருந்தது. இப்பொழுது லேசரை வைத்து முன்னாடி ஓட ஓட அதில் இருக்கும் உணர்வுகளை எடுத்து வெளிப்படுத்துகின்றது. உராய்வதில்லை… நாடாக்கள் தேய்வதில்லை. அந்த லேசர் தான் அந்த ஒலி/ஒளி அலைகளை எடுத்துக் கொடுக்கிறது.

இதைப் போன்றுதான் நாம் சுவாசித்த பின்…
1.நம் உயிர் லேசரைப் போன்று இயக்கி அந்த அலைகள் பாய்ந்த பின் உணர்வின் ஒலிகளை எழுப்புகின்றது.
2.உடல் முழுவதும் சர்க்குலேஷன் ஆகின்றது,

அப்பொழுது அதனதன் குணத்திற்கொப்ப உணர்வின் தன்மை வீரியம் அடைகின்றது. அது அது அந்த உணர்வுகளை எடுத்துத் தீமையான அணுக்கள் சாப்பிடுகிறது. அந்த வழிகளில் (உடலில்) அது தெம்பாகின்றது.

சொல்வது அர்த்தமாகிறதா…?

அந்த நேரத்தில் எந்த நல்லதை எடுத்தாலும் கிடைப்பதில்லை. நல்லது மடங்கப்படும் போது இங்கிருந்து ஈர்க்கும் சக்தி குறைந்து விடுகின்றது.

உடலுக்குள் நல்ல அணுக்கள் இருக்கின்றது. இது அடைபட்ட பின் நல்லது இழுக்கும் சக்தியோ பேசும் சக்தியோ இழந்து விடுகின்றது. இப்படி இருந்தால் அதற்குச் சாப்பாடு எப்படிக் கொடுப்பது…?

ஆகவே தான் அதைப் பிளந்து உங்களுக்கு உயர்ந்த சக்தியாகக் கொடுப்பதற்காக ஞானிகள் உணர்வை உங்களுக்குள் இந்த உபதேச வாயிலாகப் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு). சதா அந்த அலைகள் பாய்கிறது.

கொஞ்சம் உங்கள் நினைவுகளைக் கொடுத்தால்…
1.டக்… என்று அந்த அலைகளைப் பிளந்து ஞானிகள் உணர்வுகளை எடுக்க ஆரம்பிக்கும் (OPEN).
2.அப்பொழுது அந்த ஞானிகள் உணர்வுகள் ஊடுருவி உங்களுக்குள் சர்க்குலேஷன் வரப்படும்போது தீமைகளைத் துடைத்துவிடும்.
3.நல்ல சிந்தனைகளும் நல்ல நினைவாற்றலும் வரும்.

செய்து பாருங்கள்.

நல்லவர்களையும் நல்லவர்களாக வாழ விடுவதில்லை இன்றைய உலகம்… இதிலிருந்து மீள வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

நாம் உண்ணும் உணவை எல்லாம் நம் உடல்… உடலுக்கு ஏற்ற சத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றவற்றை எல்லாம் கழிவுப் பொருளாக ஆக்கிவிடுகின்றது.

1.நம் உடல் அமைப்பையே ஆண்டவன் இந்நிலையில் அளித்திருக்கும் பொழுது
2.நம் ஆத்மாவிற்கு நாம் இன்னும் எத்தனை பெரும் தெய்வீக நிலையை ஏற்றுத் தர வேண்டுமப்பா..!

நம்மைச் சுற்றிப் பல பல காரியங்களும்… நல்லெண்ணம் உடையவர்களும்… தீய எண்ணம் உடையவர்களும்… எல்லாம் தான் கலந்துள்ளன.

நம்முள் இருக்கும் பல கோடி அணுக்களின் உந்துதலுக்கு நாம் ஆளாகாமல் நம் சுவாச நிலையில் நம் ஆத்மாவுக்கு வேண்டிய நல்ல நிலையைத்தான் நாம் பெற வேண்டுமப்பா…!

நம் உடல் அமைப்பை ஆண்டவன் இந்நிலையில் அளித்திருக்கும் பொழுது நம் ஆத்மாவிற்கு நாம் தானப்பா பெரும் பொக்கிஷத்தைத் தேடி வைக்க வேண்டும்.

இன்றைய பெரும் பகுதி மனிதர்கள் உள்ளோன்று வைத்து வெளியிலே ஒன்று பேசுபவர்களாகவும்… பிறருக்காக… பிறர் மெச்சத் தான் வாழ வேண்டும்… என்ற எண்ணம் உடையவர்களாகவும் தான் நாம் பார்க்கின்றோமப்பா..!
1.பிறருக்காக வாழ்பவரும்
2.பிறர் பார்த்துப் புகழ வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்பவரும்
3.பிறரைத் துவேஷிப்பவரும்
4.பிறரைப் புகழ்பவரும் எல்லோருமே
5.தன் ஆத்மாவை மறந்து விடுகின்றார்களப்பா…!

இன்றைய உலகில் உள்ள நற்காரியங்கள் செய்பவர்களும் புகழ்ச்சிக்கு ஏங்கித்தான் செய்கிறார்களப்பா…!
1.புகழ்ச்சிக்கு ஏங்கிச் செய்யும் நற்காரியங்களும்
2.ஆத்மாவிற்கு ஒரு நன்மையும் செய்வதில்லையப்பா…!

பசித்து வருபவனுக்குப் பசி அறிந்து அன்னமிட்டாலும் இந்தக் காலத்தில் அதையும் ஏமாற்றிப் பிழைக்கத்தான் பார்க்கின்றார்களப்பா…! நல்லவர்களையும் நல்லவர்களாக வாழவிடுவதில்லையப்பா இன்றைய உலகம்.

இன்றைய உலகிலிருந்து மீண்டு வருவதுவே நம் ஆத்மாவிற்குத் தேடித் தரும் பொக்கிஷமப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

 

1.பல கோடிச் சரீரங்களில் நாம் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் அது “ஊனாகி…”
2.விலா எலும்புக்குள் பதிவாகும் பதிவின் வித்தாக பாதுகாப்பான நிலையில் அதை வைத்துள்ளது.
3.”ஊழ் வினை…!” என்று இதைத்தான் சொல்வது.

ஒருவன் ஏசுகின்றான்… பழி தீர்க்கின்றான்…! என்ற உணர்வினை நாம் கவர்ந்து கொண்டால் அது ஊழ்வினை என்ற வித்தாக நம் எலும்புக்குள் பதிவாகின்றது. (நிலத்திற்குள் எப்படிப் பதிவாகின்றதோ அது போல எலும்புக்குள் பதிவாகின்றது?

கூர்மையாக அவரை உற்று நோக்கும் பொழுது கண்களின் கரு விழியால் தான் விலா எலும்புக்குள் பதிவாகின்றது.

அந்த உணர்வின் தன்மையை நாம் நுகர்ந்தறிந்த பின் யாரை உற்றுப் பார்த்தோமோ மீண்டும் அதே கரு விழியால் அவரை எண்ணப்படும் போது அதே உணர்ச்சிகள் உந்துகின்றது.

கரு விழியுடன் சேர்ந்த காந்தப்புலன் அறிவு அவர் நம்மை ஏசிப் பேசிய உணர்வுகளைக் கவர்ந்து நுகரச் செய்கின்றது. உணர்ச்சியின் தன்மை கொண்டு நம்மை இயங்கச் செய்கின்றது.

அதே போன்று ஒருவன் நம்மை வேதனைப்படுத்தினான் என்று பதிவாக்கிக் கொண்டால் அவனை எண்ணும் போதெல்லாம் நம்மை அறியாமலேயே அந்த வேதனை உணர்ச்சிகள் தோன்றிக் கொண்டேயிருக்கும்.

அவனை மீண்டும் மீண்டும் எண்ணினால் அன்று செயல்படும் காரியங்கள் அனைத்தையும் சரியாகச் செய்ய முடியாதபடி நீங்களே (அந்த எண்ணம்) தடையாக ஆக்கி விடுகின்றீர்கள்.

நாம் நுகர்ந்த உணர்வு உடலுக்குள் இருந்து அவ்வாறு இயக்கத் தொடங்கிவிடுகின்றது. ஆகவே
1.எதிரி எங்கு இருக்கின்றான் என்றால்
2.நமக்குள்ளேயே உண்டு….!

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் மீள்தல் வேண்டும்.

இத்தகைய தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற ஏக்கத்தில் எவர் ஒருவர் அருள் ஞானத்தின் உணர்வைத் தனக்குள் பெருக்க வேண்டும் என்று நுகர்கின்றனரோ அவர்கள் அந்த ஆற்றலைப் பெறுகின்றார்கள்.

வாழ்க்கையில் தீமைகளைக் கண்டுணர்ந்தால் அஞ்சும் நிலையை மாற்றி விட்டுத் அந்தத் தீமைகளை நீங்கள் பதிவு செய்யாது மகரிஷியின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று ஓங்கி வளர்த்துக் கொள்ளுங்கள்.

பின்பு…
1.என் பார்வை மற்றவர்களை நல்லவராக்க வேண்டும்
2.நல்ல செயல்களை மற்றவர்கள் செயல்படுத்த வேண்டும் என்று
3.இந்த உணர்வினைக் கவர்ந்து விட்டால் மற்றவர்களின் தீமைகள் நமக்குள் வளராது.
4.அவ்வப்போது வரும் தீமைகளிலிருந்து விடுபட முடியும்.
5.உங்கள் நினைவாற்றல் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் வட்டத்தில் இணையச் செய்யும்.

நீங்கள் எண்ணும் போதெல்லாம் அந்த அருள் ஞானத்தைக் கொண்டு வாழ்க்கையில் வரும் துன்பங்களையும் கஷ்டங்களையும் போக்கிவிடலாம்.

மகரிஷிகளின் உணர்வலைகளைக் கவர்ந்து நம் உடலுக்குள் சக்கரம் போல் சுழலச் செய்ய வேண்டும்

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

புருவ மத்தி வழியாகத் தியானித்து நினைவுகள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பாலும் சப்தரிஷி மண்டலங்களின் பாலும் செலுத்தினால் அதனின்று வெளிப்படும் பேரருள் பேரொளியை நுகர்ந்து அறிய இது உதவும்.

இவ்வாறு செய்யும் பொழுது உங்கள் நினைவுகள் எல்லாம் வான மண்டலம் சென்றிருக்கும்.
1.ஒரு மத்தாப்பைக் கொளுத்திய பின் அதிலே பொறிகள் எப்படிக் கிளம்புகின்றதோ
2.இதே போல வான மண்டலத்தில் பல நிறங்கள் கொண்ட உணர்வலைகள் பரவிக் கொண்டிருப்பது
3.உங்கள் உணர்வுகளில் தோற்றமடைந்திருக்கும்… இந்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலுக்குள் படர்கிறது.

துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படுவது அனைத்தும் வைரத்தைப் போல இளம் நீல நிறமாக இருக்கும். சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வருவது அனைத்தும் பல வித வர்ணங்களில் இருக்கும்.

ஏனென்றால் ஒவ்வொரு மகரிஷியும் அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் பல வண்ணங்களில் இருக்கும். அந்த மத்தாப்பூ போல சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் உணர்வுகள் உங்களுக்குள் தெரிந்திருக்கும்.

தெரியவில்லை என்றாலும் கூட…
1.அந்த உணர்வின் அலைகள் சுழன்று கொண்டு வந்து உடலுக்குள் பாய்ந்து
2.உடலில் ஒரு சக்கரம் போல சுழன்று கொண்டு வந்திருப்பதையும் உணர்ந்திருக்கலாம்
3.ஏனென்றால் சுவாசித்தது உடல் முழுவதும் ஒரு ரவுண்டு அப்படி வரும்.

இந்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்திற்கும் உரம் போட்டது போல் ஆகிறது.

உதாரணமாக நாம் செடிகளுக்கு எப்படி உரம் போட்டு அதைச் செழித்து வளரச் செய்கிறோமோ அதே போல்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்
2.உடலில் உள்ள அணுக்களின் முகப்புகளில் பூராவும் போய்ச் சேரும்.

நமது வாழ்க்கையில் எத்தனை வகையான குணங்களை எடுத்துக் கொண்டோமோ அத்தனை வகையான அணுக்களும் உண்டு.

அதிலே நல்ல குணங்கள் கொண்ட அணுக்கள் இருப்பினும் பிறருடைய தீமைகளை உற்றுப் பார்த்து அதைக் கேள்விப்பட்டு என்ன… ஏது…? என்று அதை நுகர்ந்திருந்தோம் என்றால்
1.அந்த நல்ல குணங்களின் முகப்பில் இது அடைபட்டிருக்கும்
2.அப்பொழுது அந்த நல்ல குணங்கள் சீராகச் செயல்படாது.
3.அந்த நல்ல அணுக்கள் நலிந்து கொண்டே இருக்கும்.
4.அதே சமயத்தில் நல்ல குணங்கள் வளர்வதற்குண்டான அந்த ஈர்ப்பு சக்தியும் குறைந்தே இருக்கும்.

நல்ல அணுக்களின் வளர்ச்சி குன்றும் பொழுது நல்ல குணங்களால் வளர்க்கப்பட்ட நம் உடலில் சோர்வுத் தன்மை உண்டாகும்.

ஏனென்றால் அன்றாட வாழ்க்கையில் நாம் நல்லதை எண்ணி அதைச் செய்ய முற்படும் பொழுது பிறருடைய தீமைகளைக் கேட்டு அறிகின்றோம்.

நம் உயிரில் பட்ட பின் தீமை என்று அதை உணர்ந்தாலும் அந்த உணர்வுகள் உடலுக்குள் பரவப்படும் பொழுது எந்த நல்ல குணங்கள் கொண்டோமோ அதிலே முன்னோட்டமாக அடைபட்டு விடும். பின் அது நமக்குத் தீமை என்று அறிவித்தாலும் நல்லதை அடைத்துக் கொள்கிறது.

உதாரணமாக நாம் சமையல் செய்யும் போது மாவை எடுத்துப் பிசைகின்றோம். அது சுவை உள்ளது தான்.

இருந்தாலும் அதிலே மற்ற ஒரு பொருளைப் போட்டால்… காரமோ இனிப்போ அதில் எதைக் கலக்கின்றோமோ அதன் சுவை தான் முன்னணியில் இருக்கும்.

அதைப் போலத் தான் நம்முடைய நல்ல குணங்கள் கொண்ட அணுக்களில் தீமை செய்யும் உணர்வுகள் இணைந்து விட்டால் அது செயலற்றதாகிறது… நல்லதை எண்ண முடிவதில்லை.

அவ்வாறு ஆகாதபடி மாற்றுவதற்குத்தான்…
1.தீமைகளை அகற்றிய அருள் ஞானியின் உணர்வை
2.உங்கள் உடலுக்குள் சுழலச் செய்ய வேண்டும் என்று பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.

அந்த மெய் ஞானிகள் உணர்வுகள் சுழன்று வரப்படும் பொழுது செடிகளுக்கு உரம் போடுவது போன்று இந்த உணர்வின் தன்மை ஊடுருவிப் பாயும் தன்மை கொண்டு உடலில் ஊடுருவுகின்றது.

நல்ல குணங்களுக்குள் அருள் ஞானிகள் உணர்வுகள் ஊடுருவி அதனின் வலு பெறும் பொழுது நாம் கேட்டறிந்த தீமையின் நிலைகளைச் செயலிழக்கச் செய்து விடுகின்றது.

தியானிக்க வேண்டிய முறையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதை உணர்த்துகின்றோம்.

தன் ஆத்மாவைக் காக்கும் சொத்தை நாம் இன்று தேடுகின்றோமா…? ஈஸ்வரபட்டர்

 

மனிதனாகப் பிறந்து வளர்ந்து சகல சம்பத்தும் பெற்று சௌபாக்கியமுடன் வாழ வேண்டும்… சகல சுகங்களையும் அனுபவிக்க வேண்டும்…! என்ற எண்ணத்தில் தான் ஒவ்வொரு மனிதனும் வளரும் நிலையிலேயே எண்ணுகின்றான்.

1.அந்நிலையிலேயே பேராசை கொண்டும் எண்ணிவிடுகின்றான்.
2.அந்தப் பேராசையினால் வருவது தான் சகல கஷ்டங்களும் பிணிகளும் பீடைகளும்.
3.அவன் எண்ணத்திலேயே தான் அவனுக்கு எல்லாமே வருகிறது.

தான் வாழ வேண்டும்… தன் உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும்… வறுமை இல்லாத வாழ்க்கை வேண்டும்… தன்னை ஒட்டியுள்ள தன் சந்ததிகள் என்றும் இன்பமுடன் வாழ வேண்டும்…! என்ற எண்ணத்தில் தான் பல கஷ்டங்கள் பட்டு பல செல்வங்கள் சம்பாதித்து தான் இறந்த பிறகும் தான் குடும்பத்தார் நல்ல நிலையில் வாழ வேண்டும்…! என்று சொத்து சுகத்தைச் சேர்த்து விட்டுச் செல்கின்றான் மனிதன்,

1.ஆனால் தான் பிறந்து தன் ஆத்மாவிற்கு என்ன நிலையைத் தேடிக் கொள்கிறான்…?
2.தான் வேறு… தன் ஆத்மா வேறு…! என்ற எண்ணமே மனிதனுக்கு எழுவதில்லை.

தன் ஆத்மாவிற்கு நல்ல நிலை ஏற்படுத்திவிட்டால்… நல்ல நிலை என்பது இன்று தான் வாழும் வாழ்க்கையில் பல ஜெப நிலைகளைப் பெற்று இந்த உடல் வேறு ஆத்மா வேறு என்ற நிலை தெரிந்து இந்த உடலிலேயே தன் ஆத்மாவுக்குண்டான சகல சக்தியையும் தன் ஜெப நிலையில் ஏற்றச் செய்தால்
1.உடலை விட்டு ஆன்மா பிரிந்து சென்றாலும்
2.ஆவி நிலையில் அல்லல்படாமல் பெரும் “தெய்வீக நிலையை” அந்த ஆத்மா பெற்றுவிடும்.

இந்த உடலுடன் உள்ள பொழுதே அந்த ஆத்மாவிற்கு அந்தச் சக்தி நிலையை நாம் பெற்றுக் கொள்ள வேண்டுமப்பா…!

1.நம் எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் தானப்பா
2.நம் ஆத்மாவிற்கு நாம் வழங்கும் ஜெப நிலையை ஏற்றுக் கொள்ளும் தன்மை பெற முடிகின்றதப்பா..!

உடலுடன் உள்ள பொழுது எந்தக் கெட்ட அணுவும் அணுகாதபடி எந்தத் தீய சக்திகளும் அணுகாமல் எந்தத் தீய சக்திகளுக்கும் அடிபணிந்து அடிமையாகாமல்
1.தன் எண்ணத்தில் எவன் ஒருவன் உயர்ந்து நிற்கின்றானோ
2.அவனை எந்தத் தீய சக்திகளும் தீமையான அணுக்களும் வந்து அணுகிடாதப்பா…!

ஏனென்றால்..
1.நலிந்தோன் இதயத்திற்கு மேலும் மேலும் நலிந்த நிலை தான் வந்து அண்டிடும்.
2.நல்லோன் இதயத்திற்கு நல்ல நல்ல நிலைகள் தான் வந்து அணுகிடும் அப்பா…!

ஒருவன் எண்ணத்தில் எந்த நிலையில் இருக்கின்றானோ அந்த நிலையில் உள்ள அணுக்கள் தான் அவனை வந்து தாக்கிடும். (பூவின் வாசனை கருவாடு வாசனை கதை போல் தான்…!)

மனித உடலில் உள்ள பொழுதே இப்பொழுது நாம் உண்ணும் உணவும்.. உடுக்கும் உடையும்… வாழும் வாழ்க்கையும்… அன்றன்று மறைவது தான்..! என்ற எண்ணம் மக்களுக்குத் தோன்றி நாம் சேமிக்கும் சொத்தெல்லாம் நம் ஆத்மாவுக்கு எந்த நிலை…? என்று புரிந்து சேமித்து வைக்க வேண்டுமப்பா…!

1.நாம் வேறு நம் ஆத்மா வேறு.
2.அந்த ஆத்மாவில் ஆண்டவன் தான் கலந்துள்ளான்.
3.நம் உடலில் அந்த ஆத்மாவுடன் அவ்வாண்டவன் கலந்து குடியிருக்கின்றான் என்ற எண்ணம் மட்டும் ஒவ்வொருவர் மனதிலும் நிலைத்திருக்க வேண்டுமப்பா..!

காலம் அழிந்தாலும் நம் ஆன்மா அழிவதில்லை. இந்த உடலில் நாம் அந்த ஆத்மாவிற்கு எந்த நற்காரியத்தைச் சேர்த்து வைக்க முடியுமோ அந்த நற்பயனை நாம் சேமித்து வைத்திட வேண்டுமப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

பிரதோஷம் என்பது
1.பிறருடைய உணர்வுகள் வராதபடி
2.பிறருடைய சங்கடங்கள் வராதபடி
3.பிறருடைய ஆவிகள் வராதபடி
4.பிறருடைய பற்று வராதபடி இருப்பது தான் பிரதோஷம்.

ஆனால் இன்றைய மனித வாழ்க்கையில் ஏதாவது சாங்கியங்களைச் செய்தால் பிரதோஷம் நீங்கிவிடும் என்று செய்வார்கள். இதனால் பலன் ஏதும் இல்லை.

1.பிறருடைய உணர்வுகள் நமக்குச் சாராதபடி இருக்க வேண்டும் என்று சொன்னால்
2.அவர்களுடைய உணர்வுகளை நமக்குள் சேர்த்துப் பிரதோஷம் ஆக்குகின்றோம்.

பிரதோஷம் அன்றைக்குப் பழங்கள் எல்லாம் வைத்துச் சாமி கும்பிட்டு அர்ச்சனை செய்து அபிஷேகம் செய்து தோஷம் வராமல் தடுக்க வேண்டும் என்றால் இது முடியாது.

ஆக மொத்தம் பிறருடைய உணர்வுகளை நமக்குள் இயக்கவிடாது “பிறருடைய அந்தத் தோஷத்தைத் தடுக்க வேண்டும்…!” என்ற எண்ணமே வருவதில்லை. பிரதோஷம் என்றால் அன்றைக்கு மந்திரங்களைச் சொல்லி இன்னொரு தோஷத்தைத்தான் சேர்த்துக் கொள்கிறோம்.

ஏனென்றால்
1.எந்த மந்திரத்தைச் சொல்லிப் பதிவு செய்து உள்ளீர்களோ
2.பிரதோஷம் அன்றைக்கு எவ்வளவு மந்திரத்தைக் காதில் கேட்டீர்களோ
3.இந்த உணர்வின் தன்மை இங்கே வந்தபின் கடைசியில் இறந்தபின்
4.அதே மந்திரத்தைச் சொன்னால் நம் ஆன்மாவை இன்னொருவர் கைவல்யம் செய்து கொள்வதற்குப் பயன்படும்.

உதாரணமாக ஒரு நோயைப் போக்குவதற்காக என்று சொல்லி அந்த மந்திரத்தைப் பதிவு செய்து கொண்டு போனால் அதே உணர்வை எடுக்கும் போது
1.இறந்த பின் இந்த ஆன்மாவைக் கைவல்யம் செய்து கொண்டு
2.இன்னொரு உடலுக்குள் நோய் தீருவதற்காக
3.இந்த ஆவியை ஏவல் செய்வார்கள்… அதற்குத் தான் பயன்படும்.

மனிதன் உடலுக்குள் விளைவைதை இத்தனை மந்திர ஜாலம் செய்து பல வேலைகளைச் செய்யப் பயன்படுத்திக் கொள்வார்கள். இப்படி ஒரு மனிதனுக்குள் விளைந்தது தான் எத்தனையோ உணர்வுகள். அதைத்தான் கரையான் மந்திரம் என்பது.

கரையான் என்ன செய்கிறது…? கட்டைக்குள் கரையான் சென்ற பின் அதிலே அதன் மலம் பட்டபின் கட்டையே மண்ணாகப் போய்விடும். அந்த மாதிரி கட்டையைச் சீக்கிரம் நம்மால் கரைக்க முடியுமா..! என்றால் முடியாது.

இதைப் போன்ற உணர்வின் தன்மை வரும் போது வேதங்களில் (அதர்வண) மூலத்தின் மூல நிலைகள் உண்டு.
1.இந்த உணர்வின் தன்மை இரண்டும் உராயப்படும் போது
2.இறந்தபின் அதைப் பிரித்து இன்னொரு மனிதனுக்குள் பாய்ச்சிச் செலுத்தியபின்
3.அந்த உடலுக்குள் இருக்க வேண்டும் என்றால் இந்த உணர்வைக் கரைத்துவிடும்.
4.பின் ஆவியுடன் (காற்றுடன்) கலக்கும்.

மீண்டும் அதற்குண்டான எதிர்மறையான நிலை ஆனபின் பொருளாக வந்துவிடும். ஒரு டப்பாவுக்குள் சிறு துவாரம் (ஊசி அளவு) வைத்தால் அதன் வழியாக அதற்குள் வந்துவிடும். மீண்டும் மாற்றினால் அது ஆவியின் நிலையாக மாறும்.

இது எல்லாம் மனிதனுக்குள் உருவான நிலைகள்…!

இதே போல பல உயிரினங்களும் உண்டு. மந்திரங்களை எடுத்து அந்த உயிரினங்களைக் கேட்க வைத்துப் பின் அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்தபின் அதை வைத்துப பல தீமைகளை செய்பவரும் உண்டு.

“ஒடியர்கள்…!” என்று இருக்கின்றார்கள். இந்த அசுர உணர்வு கொண்டு பறந்து போகும் காக்காயை அவர்களின் ஒடிய மொழியில் சொன்னால் அதனின் இறக்கை பிய்ந்து துண்டாக விழும்.
1.அந்த ஒலி அதிர்வுகள் (ஒடியன் மந்திரம் என்பது) அங்கே அவ்வாறு மாற்றும்
2.எப்படி ஒரு மின்னல் தாக்குகின்றதோ அதைப் போல உணர்வின் இயக்கங்கள் கொண்டு செய்வார்கள்… இது எல்லாம் உண்டு…!

செய்வினை தோஷம் என்பதெல்லாம் உண்மை தான்..! ஒருவருக்கொருவர் குடும்பத்தைக் கெடுக்க வேண்டும் என்ற நிலையில் செய்வினை தோஷங்கள் செய்திருப்பார்கள்.

அதிலிருந்து முழுமையாக விடுபட வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தியானத்தின் மூலமாக “எடுத்து…எடுத்து….எடுத்து….” இந்தத் தோஷங்கள் உங்களுக்கு வராதபடி காக்க முடியும்.

1.துருவ நட்சத்திரத்தின் வலுவை உங்கள் ஆன்மாவில் பெருக்கி விட்டால்
2.எந்தத் தோஷங்களும் உங்களைத் தாக்காது
3,நீங்கள் எடுக்கும் அருள் உணர்வுகள் உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் தீமையை நீக்கும் சக்தியை நீங்களே பெறுகின்றீர்கள்.

நீங்கள் தீமையை நீக்கிப் பழகி விட்டால் அடுத்து யாராவது சங்கடத்தில் வருகின்றார்கள் என்றால்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தால் நல்லதாகிப் போகும். “உங்கள் குடும்பம் நல்லாகும்…!” என்று நீங்கள் இதைச் சொன்னால் உங்கள் சொல் அவர்களையும் நல்லதாக்கும்.

சித்தர்கள் கண்ட அரிய பொக்கிஷங்களை நாம் அறிய வேண்டியது மிகவும் அவசியம் – ஈஸ்வரபட்டர்

காலம் செல்லச் செல்ல இன்றைய விஞ்ஞானிகள் அறிவு வளர்ந்து பல வகை அற்புதச் செயல்களைக் கண்டுபிடித்து மக்களுக்குச் சொல்கின்றார்கள்… செயல்படுத்துகிறார்கள்.

ஆனாலும் இன்றைய உலகில் இக்கலியில் அறிவு வளர்ச்சி வர வர விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளால் “சோம்பேறி வாழ்க்கை வாழும் நிலையை உண்டாக்கி…” மனித மூளையையே மங்கச் செய்கிறார்கள் சில விஞ்ஞானிகள் எனும் பேர் பெற்ற விஞ்ஞானிகள்.

ஆதியில் சித்தர்கள் கண்டுபிடித்த ஞான நிலையிலிருந்து இந்த மண்ணில் விளையும் பொருள்களை வைத்துப் பல பல பொக்கிஷங்களைக் கண்டு உணர்த்தியுள்ளார்கள்.
1.அவற்றினால் மக்களுக்கு என்ன நன்மை…?
2.வைரம் அணிந்தால் என்ன நன்மை…?
3.தங்கத்தினால் என்ன நன்மை…?
4.நாம் பிறந்ததின் மகிமை என்ன…?
5.மண்பாண்டத்தில் சமைத்து உண்பதின் ஆரோக்கிய நிலை என்ன..? என்ற
6.பல வகை உண்மைகள் எல்லாம் ஆதியில் வந்த நிலை தானப்பா இன்றும் உள்ளது.

முதலிலேயே சொல்லியுள்ளேன் இந்தப் பூமித் தாயின் பொக்கிஷமெல்லாம் அந்தச் சூரிய சந்திர ஒளிக்கதிரிலிருந்து எப்படி வருகிறது என்பதை…!

அந்நிலை எல்லாம் ஆதியில் உள்ள சித்தர்கள் அறிந்து எடுத்துத்தான் மனிதர்களின் நன்மைக்காகச் வெளியிட்டார்கள்.

மக்களின் செயலுக்கு அந்த உண்மை நிலையை உணர்த்தி அவர்களாகவே அதை எடுத்துப் பக்குவ நிலை செய்து பயன்படுத்தப் பல உண்மை நிலையைப் பரவவிட்டார்கள் மக்களிடத்தில் அன்றையச் சித்தர்கள்.

வைரம் வைடூரியம் என்ற இன்னும் பல வகை நிறம் கொண்ட பல கோடிக்கணக்கான கற்களையும் அவை மனித உடலில் பட்டால்
1.எந்தெந்த உடலுக்கு அந்நிலையெல்லாம் அந்த உடல் ஏற்கின்றது என்ற நிலை எல்லாம்
2.அன்றையச் சித்தர்கள் கண்டுபிடித்து வெளியிட்ட உண்மையிலேதான் இன்றும் உள்ளார்கள் மக்கள்.

மனிதன் வளர்ச்சி அடைந்து உயர் நிலைக்காகக் கொடுக்கப்பட்ட அந்நிலையை
1.இப்பொழுது இன்றையச் செல்வத்திற்காகவும்
2.தம்முடைய டாம்பீக வாழ்க்கைக்காகவும் பயன்படுத்திப் பாழ் செய்து விட்டார்கள்.

இந்நிலையை அறிந்து தான் பல கோடிச் சித்தர்கள் பல உண்மைகளை மறைத்து விட்டார்கள் இன்றைய கலியின் பேராசை கொண்ட மக்களுக்கு.
1.பல வகை மூலிகைகளை வைத்து அன்றையச் சித்தர்கள் பயன்படுத்தியதையும்
2.அந்த மூலிகைகளை உபயோகிக்கும் நிலையை உணர்த்தாமலே மறைத்து விட்டார்கள்.

துருவ நட்சத்திர தியானத்தின் முக்கியத்துவம்

 

நம் குருநாதர் ஈஸ்வரபட்டர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் அனைவரும் பெறக்கூடிய சக்திக்குத்தான் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்குகின்றேன். பதிவாக்கினாலும் அதை மீண்டும் பெறுவதற்கு நினைவுபடுத்துகிறேன், ஏனென்றால் பல நிலைகள் உங்களை மூடி மறைக்கின்றது.

இப்பொழுது இந்த உபதேசத்தின் உணர்வுகளைப் படிக்கும் பொழுது உடனே அது வீரியம் பெறும். இங்கே நல்லதைச் சொல்லிக் கொண்டிருந்தாலும் அடுத்தாற்போல் ஒரு இரண்டு பேர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் என்ன சொல்வீர்கள்…!

1.பார்…! சாமி (ஞானகுரு) என்ன சொல்கிறார்…?
2.இங்கே இப்படிச் சண்டை போடுகிறார்கள்..! என்று நான் சொல்வதை உடனே விட்டுவிடுவீர்கள்…!
3.சண்டையிடுபவர்களின் உணர்வுகளை எடுத்துக் கொள்வீர்கள்.
4.அப்பொழுது அந்தத் தீய அணுக்களுக்குச் சாப்பாடு நிறையக் கொடுக்கின்றோம்.

ஏனென்றால் அதற்கு ஏற்கனவே வீரியம் அதிகம். ஆகவே அந்த அணுக்கள் நமக்குள் அதிகமாக இருக்கும் பொழுது அதை மாற்றும் சக்தியை எடுத்து… அதை வலுவாக எண்ணி… சண்டையிடுபவர்களின் உணர்வுகளை அடக்கச் செய்ய வேண்டும்.

அப்படி என்றால் அந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும்…?

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அவசியம் வளர்த்துக் கொள்ள வேண்டும் (துருவ தியானம்). அதை வைத்துத் தான் தீமைகளை அடக்க வேண்டும்.

சண்டை செய்கிறார்கள் என்றால் நாம் கண்ணில் பார்க்கின்றோம். அந்த மனிதர்களைப் பதிவாக்கிவிடுகின்றோம். தவ்று செய்கிறார்கள் என்று பார்க்கிறோம்… அந்த உணர்வை நுகர்கின்றோம்… அதே அணுவாக நம் உடலில் மாற்றிவிடுகின்றது.

இங்கே உபதேசத்தைக் கேட்கின்றீர்கள்.
1.ஆனால் நான் ஒருவன் தானே இங்கே சொல்கிறேன்.
2.அந்தப் பக்கம் நீங்கள் பார்த்தால் ஆயிரம் பேர் ஆயிரம் விதமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றார்கள் அல்லவா..!
3.அதைப் பார்த்ததும் அது தான் உங்களுகுள் பெருகுகின்றது. (நான் சொல்வது சிறுத்துவிடுகின்றது.

கோவிலுக்குப் போய்ச் சாமி கும்பிடுகின்றோம். அங்கே மற்றொருவரும் வந்து கும்பிடுகின்றார்.

நாம் கும்பிடும் பொழுது அவரைப் பார்த்தவுடன் அவர் பல தவறுகள் செய்பவர் என்று தெரிகிறது. அர்ச்சனை செய்து… அந்தப் பரிவட்டம் கட்டி… அபிஷேகம்… ஆராதனை…! என்று பல நிலைகள் அவருக்கு நடக்கின்றது.

1.எத்தனையோ கொலை செய்கின்றான்
2.அவனுக்குச் சாமி எல்லாம் கொடுக்கின்றது… உதவி செய்கின்றது பார்..!
3.கோவிலையே அந்த நேரத்தில் வெறுக்கின்றீர்கள்… இல்லையா…?

ஆக கோவிலுக்குப் போன இடத்தில் ஒரு தவறு செய்பவன் அபிஷேக ஆராதனை செய்து அவனுக்கு இவ்வளவு மரியாதை கிடைத்தவுடன் உங்களுடைய எண்ணம் எப்படி வருகிறது…?

மற்றவர்கள் செய்யும் தவறைப் பார்த்தவுடன் “என்றைக்குத் தான் இது நல்லதாகப் போகிறதோ…? தெரியவில்லையே…! என்று எண்ணுகின்றீர்கள். அப்பொழுது அந்த எண்ணத்திற்குத்தான் சக்தி கொடுக்கின்றீர்கள்.

அந்த நேரத்தில் நான் சொன்னதை நினைவுக்குக் கொண்டு வந்து அதை மாற்ற முடிகின்றதா…? என்றால் இல்லை..! அந்த உணர்வுகளே வருவதில்லை.

அதை எல்லாம் மாற்றுவதற்காக வேண்டித்தான் இந்தக் காலைத் துருவ தியானத்தை முக்கியமாக உங்களைச் செய்யச் சொல்கிறோம்.

1.ஈஸ்வரா…! புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும்…
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்…! என்று எண்ணி
4.சந்தர்ப்பத்தால் நுகர்ந்த கோபம் வெறுப்பு வேதனை போன்றவைகளை உடனே துடைத்துப் பழக வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி இந்த ஆலயம் முழுவதும் படர வேண்டும், இங்கே வருவோர் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும். அந்த மெய்ப் பொருள் காணும் சக்தி இந்த ஆலயம் முழுவதும் படர வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணினால் நமக்குள் அந்தச் சோர்வு வராது. மன பலம் கிடைக்கும். தீமைகளிலிருந்து விலகிச் செல்லும் ஆற்றலும் கிடைக்கும்.

எல்லாம் அவன் செயல்…! என்பதன் பொருள் – ஈஸ்வரபட்டர்

 

சூட்சம உலகத்திற்கு வருபவர்கள் எல்லாம் தியானத்தின் மூலம் அருளைப் பெற்று தியானத்தில் இருந்தால் மட்டும் தான் வருவார்கள் என்பதல்ல.

இந்த மானிட உலகில் பிறந்தவர்கள் தியான நிலையை அறியாமல்
1.தன் எண்ணத்திலும் செயலிலும் ஆண்டவன் அருளைப் பெற்று
2.அந்த ஆண்டவனுக்காக அஞ்சி தன் வாழ்க்கை முறையில் பல நற்காரியங்கள் செய்து
3.தன்னையே “தான்…” என்ற கர்வமில்லாமல் தன்னால் இந்த உலகிற்கு என்ன பயன்…? என்று புரிந்து கொண்டு வாழ்பவனும்
4.தன் நிலை என்ன…? என்றே, தனக்கே தெரியாமல் பல வகை இன்னல்பட்டு மக்களுக்காகப் பல நன்மைகளைச் செய்பவர்களும் உள்ளார்கள்.

அதே போல் பல புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகள் உள்ளார்கள். அந்த விஞ்ஞானிகள் எல்லாம் என்ன எண்ணுகிறார்கள்…?
1.தான் ஆண்டவனை நினைத்துத் தன் அறிவை உபயோகப்படுத்துவதாகவும்
2.அப்படிப்பட்ட தன் முயற்சியினால் தான் பல புதிய வார்ப்புகளையும் படைப்புகளையும் கண்டுபிடிப்பதாக…!

ஆனால் அதுவல்லப்பா அவர்கள் நிலை…!

இந்த மனித உடலில் உள்ள எல்லோருமே விஞ்ஞானியாகலாம்… மெய் ஞானியாகலாம்.. மகரிஷியாகவும் ஆகலாம்… பல கீழான நிலைக்கும் செல்லலாம்….!

அவனவன் ஆண்டவனை எண்ணும் நிலையில் அவன் அறிவை உபயோகப்படுத்தும் பொழுது அவன் நிலையில் சூட்சம உலகத்திற்குச் சென்ற ஆவி நிலையோ அல்லது அவன் நிலையில் விட்டுச் சென்ற விஞ்ஞானியோ அவன் உடலுக்குள் புகுந்து விடுகிறது.

அது புகுந்த பின் தான் ஒவ்வொரு விஞ்ஞானிக்கும் அவர்கள் பல வழிகளைக் காட்டுகின்றார்கள். ஆனால் அந்த விஞ்ஞானி என்பவன் தான் பெற்ற அருளைச் சிதறவிடாமல்
1.எந்த நிலையில் ஆண்டவனை எண்ணி ஒரு நிலையை ஆரம்பித்தானோ
2.அந்நிலை வரை அவன் நிலைக்கு அவன் உடலில் உள்ள அந்தச் சூட்சம அருள் பெற்ற அச்சித்தனின் அருள் செயல்படுகிறது.

என்றைக்கு அவன்… “தான்…!” என்ற எண்ணத்திற்கு வருகிறானோ அன்றே அவன் செயலும் அவன் எடுத்த முயற்சியும் வீணாகிறது.

“எல்லாமே அவன் செயல்…” என்று எண்ணுபவனுக்கு என்றுமே அவன் அருள் உண்டு. இந்த நிலையில் உள்ளவர்களும் உயர் நிலைக்கு வருகின்றார்கள் சூட்சம நிலைக்கு.

பல பாடகர்களைப் பார்த்திருப்பாய். அவர்கள் பாடலில் இனிமை எங்கிருந்து வருகிறது…? பல கை தேர்ந்த மருத்துவர்களைப் பார்த்திருப்பாய். அந்த மருத்துவர்களின் திறன் எங்கிருந்து வருகிறது..?

1.இந்த உலகில் உள்ள பல கோடானு கோடி நல்லோர்களின் உயிரான்மாக்கள்
2.மறு பிறவி எய்தாத நிலையில் பூமியிலே சுழன்று கொண்டுள்ளார்கள்.

இந்த உலகில் ஜீவித்த காலத்தில் உடலுடன் இருக்கும் காலத்தில் நடத்திச் சென்ற பாதையை அவ்வுலகுக்குச் சென்றும் சூட்சம உலகத்திலிருந்து தன் எண்ணத்திற்கு உகந்தபடி உதவியும் செய்கிறார்கள்.

எந்த நிலை கொண்டு…?

இந்த மானிட உலகில் உள்ள மனிதர்கள்த ஆண்டவனை நினைக்கும் பொழுது… எந்த வழிக்கு ஆண்டவனை நினைக்கின்றானோ… வேண்டுகின்றானோ… அந்த வழிக்கு அச்சூட்சம உலகத்தில் உள்ள பலரின் நிலைகள் செயல்பட்டுப் பல உதவிகளைச் செய்கின்றனர்.

இப்படிப்பட்ட அருள் பெற்றவர்கள் எல்லோருக்குமே
1.என்று அவர்களுக்குத் “தான்…” என்ற கர்வம் வருகின்றதோ
2.அன்றுடன் அதுவரை அவர்கள் பெற்ற பேறுகளும் மடிந்து விடுகின்றது.
3.அவர்களின் நிலைக்கு (மறைமுகமாக) உதவி செய்த அந்தச் சித்தர்களின் நிலையும் மறைகிறது.

ஆகவே சூட்சம உலகத்திற்குச் செல்பவர்கள் எல்லாம் தியனாத்திலிருந்து… தியான அருளினால் மட்டும் தான்… விண் செல்ல வேண்டும் என்பதல்ல.

இந்தப் பாட நிலையைப் புரிந்து கொண்டால் தியான நிலையில் இருப்பவருக்கு
1.இவ்வுலக நிலையில் உள்ள பொழுதே தான் யார்…? நான் என்பது யார்…? என்று புரியும் நிலை வந்துவிடும்.
2.தான் பிறவி எடுத்த பயனும் தன் நிலைக்குத் தன் உயிர் நிலைக்கு ஒரு நிலைப்படுத்த எடுக்கும் இந்த தியான நிலை அருள் புரிகின்றது.

நம்முடைய சுவாச நிலையும் தியான நிலையும் ஒன்றுபட்டால் இந்த உலக நிலையையும் பல கோடிச் சித்தர்களின் நிலையையும் அறிந்து பல மண்டலங்களின் நிலையும் அறிந்து கொள்ள முடியும்.

1.உயிர் அழியாத நிலைகள் கொண்டது…!
2.அதன் துணை கொண்டு தான் பிறவி எடுத்த பயனை அடைந்து
3.என்றுமே அதை இந்த உலக மக்களுக்காக உபயோகப்படுத்தலாம்.

நல்லவர்களையும் நல்லவர்களாக வாழ விடுவதில்லை இன்றைய உலகம்… இதிலிருந்து மீள வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

நாம் உண்ணும் உணவை எல்லாம் நம் உடல்… உடலுக்கு ஏற்ற சத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றவற்றை எல்லாம் கழிவுப் பொருளாக ஆக்கிவிடுகின்றது.

1.நம் உடல் அமைப்பையே ஆண்டவன் இந்நிலையில் அளித்திருக்கும் பொழுது
2.நம் ஆத்மாவிற்கு நாம் இன்னும் எத்தனை பெரும் தெய்வீக நிலையை ஏற்றுத் தர வேண்டுமப்பா..!

நம்மைச் சுற்றிப் பல பல காரியங்களும்… நல்லெண்ணம் உடையவர்களும்… தீய எண்ணம் உடையவர்களும்… எல்லாம் தான் கலந்துள்ளன.

நம்முள் இருக்கும் பல கோடி அணுக்களின் உந்துதலுக்கு நாம் ஆளாகாமல் நம் சுவாச நிலையில் நம் ஆத்மாவுக்கு வேண்டிய நல்ல நிலையைத்தான் நாம் பெற வேண்டுமப்பா…!

நம் உடல் அமைப்பை ஆண்டவன் இந்நிலையில் அளித்திருக்கும் பொழுது நம் ஆத்மாவிற்கு நாம் தானப்பா பெரும் பொக்கிஷத்தைத் தேடி வைக்க வேண்டும்.

இன்றைய பெரும் பகுதி மனிதர்கள் உள்ளோன்று வைத்து வெளியிலே ஒன்று பேசுபவர்களாகவும்… பிறருக்காக… பிறர் மெச்சத் தான் வாழ வேண்டும்… என்ற எண்ணம் உடையவர்களாகவும் தான் நாம் பார்க்கின்றோமப்பா..!
1.பிறருக்காக வாழ்பவரும்
2.பிறர் பார்த்துப் புகழ வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்பவரும்
3.பிறரைத் துவேஷிப்பவரும்
4.பிறரைப் புகழ்பவரும் எல்லோருமே
5.தன் ஆத்மாவை மறந்து விடுகின்றார்களப்பா…!

இன்றைய உலகில் உள்ள நற்காரியங்கள் செய்பவர்களும் புகழ்ச்சிக்கு ஏங்கித்தான் செய்கிறார்களப்பா…!
1.புகழ்ச்சிக்கு ஏங்கிச் செய்யும் நற்காரியங்களும்
2.ஆத்மாவிற்கு ஒரு நன்மையும் செய்வதில்லையப்பா…!

பசித்து வருபவனுக்குப் பசி அறிந்து அன்னமிட்டாலும் இந்தக் காலத்தில் அதையும் ஏமாற்றிப் பிழைக்கத்தான் பார்க்கின்றார்களப்பா…! நல்லவர்களையும் நல்லவர்களாக வாழவிடுவதில்லையப்பா இன்றைய உலகம்.

இன்றைய உலகிலிருந்து மீண்டு வருவதுவே நம் ஆத்மாவிற்குத் தேடித் தரும் பொக்கிஷமப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

 

1.பல கோடிச் சரீரங்களில் நாம் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் அது “ஊனாகி…”
2.விலா எலும்புக்குள் பதிவாகும் பதிவின் வித்தாக பாதுகாப்பான நிலையில் அதை வைத்துள்ளது.
3.”ஊழ் வினை…!” என்று இதைத்தான் சொல்வது.

ஒருவன் ஏசுகின்றான்… பழி தீர்க்கின்றான்…! என்ற உணர்வினை நாம் கவர்ந்து கொண்டால் அது ஊழ்வினை என்ற வித்தாக நம் எலும்புக்குள் பதிவாகின்றது. (நிலத்திற்குள் எப்படிப் பதிவாகின்றதோ அது போல எலும்புக்குள் பதிவாகின்றது?

கூர்மையாக அவரை உற்று நோக்கும் பொழுது கண்களின் கரு விழியால் தான் விலா எலும்புக்குள் பதிவாகின்றது.

அந்த உணர்வின் தன்மையை நாம் நுகர்ந்தறிந்த பின் யாரை உற்றுப் பார்த்தோமோ மீண்டும் அதே கரு விழியால் அவரை எண்ணப்படும் போது அதே உணர்ச்சிகள் உந்துகின்றது.

கரு விழியுடன் சேர்ந்த காந்தப்புலன் அறிவு அவர் நம்மை ஏசிப் பேசிய உணர்வுகளைக் கவர்ந்து நுகரச் செய்கின்றது. உணர்ச்சியின் தன்மை கொண்டு நம்மை இயங்கச் செய்கின்றது.

அதே போன்று ஒருவன் நம்மை வேதனைப்படுத்தினான் என்று பதிவாக்கிக் கொண்டால் அவனை எண்ணும் போதெல்லாம் நம்மை அறியாமலேயே அந்த வேதனை உணர்ச்சிகள் தோன்றிக் கொண்டேயிருக்கும்.

அவனை மீண்டும் மீண்டும் எண்ணினால் அன்று செயல்படும் காரியங்கள் அனைத்தையும் சரியாகச் செய்ய முடியாதபடி நீங்களே (அந்த எண்ணம்) தடையாக ஆக்கி விடுகின்றீர்கள்.

நாம் நுகர்ந்த உணர்வு உடலுக்குள் இருந்து அவ்வாறு இயக்கத் தொடங்கிவிடுகின்றது. ஆகவே
1.எதிரி எங்கு இருக்கின்றான் என்றால்
2.நமக்குள்ளேயே உண்டு….!

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் மீள்தல் வேண்டும்.

இத்தகைய தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற ஏக்கத்தில் எவர் ஒருவர் அருள் ஞானத்தின் உணர்வைத் தனக்குள் பெருக்க வேண்டும் என்று நுகர்கின்றனரோ அவர்கள் அந்த ஆற்றலைப் பெறுகின்றார்கள்.

வாழ்க்கையில் தீமைகளைக் கண்டுணர்ந்தால் அஞ்சும் நிலையை மாற்றி விட்டுத் அந்தத் தீமைகளை நீங்கள் பதிவு செய்யாது மகரிஷியின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று ஓங்கி வளர்த்துக் கொள்ளுங்கள்.

பின்பு…
1.என் பார்வை மற்றவர்களை நல்லவராக்க வேண்டும்
2.நல்ல செயல்களை மற்றவர்கள் செயல்படுத்த வேண்டும் என்று
3.இந்த உணர்வினைக் கவர்ந்து விட்டால் மற்றவர்களின் தீமைகள் நமக்குள் வளராது.
4.அவ்வப்போது வரும் தீமைகளிலிருந்து விடுபட முடியும்.
5.உங்கள் நினைவாற்றல் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் வட்டத்தில் இணையச் செய்யும்.

நீங்கள் எண்ணும் போதெல்லாம் அந்த அருள் ஞானத்தைக் கொண்டு வாழ்க்கையில் வரும் துன்பங்களையும் கஷ்டங்களையும் போக்கிவிடலாம்.

மகரிஷிகளின் உணர்வலைகளைக் கவர்ந்து நம் உடலுக்குள் சக்கரம் போல் சுழலச் செய்ய வேண்டும்

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

புருவ மத்தி வழியாகத் தியானித்து நினைவுகள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பாலும் சப்தரிஷி மண்டலங்களின் பாலும் செலுத்தினால் அதனின்று வெளிப்படும் பேரருள் பேரொளியை நுகர்ந்து அறிய இது உதவும்.

இவ்வாறு செய்யும் பொழுது உங்கள் நினைவுகள் எல்லாம் வான மண்டலம் சென்றிருக்கும்.
1.ஒரு மத்தாப்பைக் கொளுத்திய பின் அதிலே பொறிகள் எப்படிக் கிளம்புகின்றதோ
2.இதே போல வான மண்டலத்தில் பல நிறங்கள் கொண்ட உணர்வலைகள் பரவிக் கொண்டிருப்பது
3.உங்கள் உணர்வுகளில் தோற்றமடைந்திருக்கும்… இந்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலுக்குள் படர்கிறது.

துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படுவது அனைத்தும் வைரத்தைப் போல இளம் நீல நிறமாக இருக்கும். சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வருவது அனைத்தும் பல வித வர்ணங்களில் இருக்கும்.

ஏனென்றால் ஒவ்வொரு மகரிஷியும் அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் பல வண்ணங்களில் இருக்கும். அந்த மத்தாப்பூ போல சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் உணர்வுகள் உங்களுக்குள் தெரிந்திருக்கும்.

தெரியவில்லை என்றாலும் கூட…
1.அந்த உணர்வின் அலைகள் சுழன்று கொண்டு வந்து உடலுக்குள் பாய்ந்து
2.உடலில் ஒரு சக்கரம் போல சுழன்று கொண்டு வந்திருப்பதையும் உணர்ந்திருக்கலாம்
3.ஏனென்றால் சுவாசித்தது உடல் முழுவதும் ஒரு ரவுண்டு அப்படி வரும்.

இந்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்திற்கும் உரம் போட்டது போல் ஆகிறது.

உதாரணமாக நாம் செடிகளுக்கு எப்படி உரம் போட்டு அதைச் செழித்து வளரச் செய்கிறோமோ அதே போல்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்
2.உடலில் உள்ள அணுக்களின் முகப்புகளில் பூராவும் போய்ச் சேரும்.

நமது வாழ்க்கையில் எத்தனை வகையான குணங்களை எடுத்துக் கொண்டோமோ அத்தனை வகையான அணுக்களும் உண்டு.

அதிலே நல்ல குணங்கள் கொண்ட அணுக்கள் இருப்பினும் பிறருடைய தீமைகளை உற்றுப் பார்த்து அதைக் கேள்விப்பட்டு என்ன… ஏது…? என்று அதை நுகர்ந்திருந்தோம் என்றால்
1.அந்த நல்ல குணங்களின் முகப்பில் இது அடைபட்டிருக்கும்
2.அப்பொழுது அந்த நல்ல குணங்கள் சீராகச் செயல்படாது.
3.அந்த நல்ல அணுக்கள் நலிந்து கொண்டே இருக்கும்.
4.அதே சமயத்தில் நல்ல குணங்கள் வளர்வதற்குண்டான அந்த ஈர்ப்பு சக்தியும் குறைந்தே இருக்கும்.

நல்ல அணுக்களின் வளர்ச்சி குன்றும் பொழுது நல்ல குணங்களால் வளர்க்கப்பட்ட நம் உடலில் சோர்வுத் தன்மை உண்டாகும்.

ஏனென்றால் அன்றாட வாழ்க்கையில் நாம் நல்லதை எண்ணி அதைச் செய்ய முற்படும் பொழுது பிறருடைய தீமைகளைக் கேட்டு அறிகின்றோம்.

நம் உயிரில் பட்ட பின் தீமை என்று அதை உணர்ந்தாலும் அந்த உணர்வுகள் உடலுக்குள் பரவப்படும் பொழுது எந்த நல்ல குணங்கள் கொண்டோமோ அதிலே முன்னோட்டமாக அடைபட்டு விடும். பின் அது நமக்குத் தீமை என்று அறிவித்தாலும் நல்லதை அடைத்துக் கொள்கிறது.

உதாரணமாக நாம் சமையல் செய்யும் போது மாவை எடுத்துப் பிசைகின்றோம். அது சுவை உள்ளது தான்.

இருந்தாலும் அதிலே மற்ற ஒரு பொருளைப் போட்டால்… காரமோ இனிப்போ அதில் எதைக் கலக்கின்றோமோ அதன் சுவை தான் முன்னணியில் இருக்கும்.

அதைப் போலத் தான் நம்முடைய நல்ல குணங்கள் கொண்ட அணுக்களில் தீமை செய்யும் உணர்வுகள் இணைந்து விட்டால் அது செயலற்றதாகிறது… நல்லதை எண்ண முடிவதில்லை.

அவ்வாறு ஆகாதபடி மாற்றுவதற்குத்தான்…
1.தீமைகளை அகற்றிய அருள் ஞானியின் உணர்வை
2.உங்கள் உடலுக்குள் சுழலச் செய்ய வேண்டும் என்று பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.

அந்த மெய் ஞானிகள் உணர்வுகள் சுழன்று வரப்படும் பொழுது செடிகளுக்கு உரம் போடுவது போன்று இந்த உணர்வின் தன்மை ஊடுருவிப் பாயும் தன்மை கொண்டு உடலில் ஊடுருவுகின்றது.

நல்ல குணங்களுக்குள் அருள் ஞானிகள் உணர்வுகள் ஊடுருவி அதனின் வலு பெறும் பொழுது நாம் கேட்டறிந்த தீமையின் நிலைகளைச் செயலிழக்கச் செய்து விடுகின்றது.

தியானிக்க வேண்டிய முறையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதை உணர்த்துகின்றோம்.

தன் ஆத்மாவைக் காக்கும் சொத்தை நாம் இன்று தேடுகின்றோமா…? ஈஸ்வரபட்டர்

 

மனிதனாகப் பிறந்து வளர்ந்து சகல சம்பத்தும் பெற்று சௌபாக்கியமுடன் வாழ வேண்டும்… சகல சுகங்களையும் அனுபவிக்க வேண்டும்…! என்ற எண்ணத்தில் தான் ஒவ்வொரு மனிதனும் வளரும் நிலையிலேயே எண்ணுகின்றான்.

1.அந்நிலையிலேயே பேராசை கொண்டும் எண்ணிவிடுகின்றான்.
2.அந்தப் பேராசையினால் வருவது தான் சகல கஷ்டங்களும் பிணிகளும் பீடைகளும்.
3.அவன் எண்ணத்திலேயே தான் அவனுக்கு எல்லாமே வருகிறது.

தான் வாழ வேண்டும்… தன் உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும்… வறுமை இல்லாத வாழ்க்கை வேண்டும்… தன்னை ஒட்டியுள்ள தன் சந்ததிகள் என்றும் இன்பமுடன் வாழ வேண்டும்…! என்ற எண்ணத்தில் தான் பல கஷ்டங்கள் பட்டு பல செல்வங்கள் சம்பாதித்து தான் இறந்த பிறகும் தான் குடும்பத்தார் நல்ல நிலையில் வாழ வேண்டும்…! என்று சொத்து சுகத்தைச் சேர்த்து விட்டுச் செல்கின்றான் மனிதன்,

1.ஆனால் தான் பிறந்து தன் ஆத்மாவிற்கு என்ன நிலையைத் தேடிக் கொள்கிறான்…?
2.தான் வேறு… தன் ஆத்மா வேறு…! என்ற எண்ணமே மனிதனுக்கு எழுவதில்லை.

தன் ஆத்மாவிற்கு நல்ல நிலை ஏற்படுத்திவிட்டால்… நல்ல நிலை என்பது இன்று தான் வாழும் வாழ்க்கையில் பல ஜெப நிலைகளைப் பெற்று இந்த உடல் வேறு ஆத்மா வேறு என்ற நிலை தெரிந்து இந்த உடலிலேயே தன் ஆத்மாவுக்குண்டான சகல சக்தியையும் தன் ஜெப நிலையில் ஏற்றச் செய்தால்
1.உடலை விட்டு ஆன்மா பிரிந்து சென்றாலும்
2.ஆவி நிலையில் அல்லல்படாமல் பெரும் “தெய்வீக நிலையை” அந்த ஆத்மா பெற்றுவிடும்.

இந்த உடலுடன் உள்ள பொழுதே அந்த ஆத்மாவிற்கு அந்தச் சக்தி நிலையை நாம் பெற்றுக் கொள்ள வேண்டுமப்பா…!

1.நம் எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் தானப்பா
2.நம் ஆத்மாவிற்கு நாம் வழங்கும் ஜெப நிலையை ஏற்றுக் கொள்ளும் தன்மை பெற முடிகின்றதப்பா..!

உடலுடன் உள்ள பொழுது எந்தக் கெட்ட அணுவும் அணுகாதபடி எந்தத் தீய சக்திகளும் அணுகாமல் எந்தத் தீய சக்திகளுக்கும் அடிபணிந்து அடிமையாகாமல்
1.தன் எண்ணத்தில் எவன் ஒருவன் உயர்ந்து நிற்கின்றானோ
2.அவனை எந்தத் தீய சக்திகளும் தீமையான அணுக்களும் வந்து அணுகிடாதப்பா…!

ஏனென்றால்..
1.நலிந்தோன் இதயத்திற்கு மேலும் மேலும் நலிந்த நிலை தான் வந்து அண்டிடும்.
2.நல்லோன் இதயத்திற்கு நல்ல நல்ல நிலைகள் தான் வந்து அணுகிடும் அப்பா…!

ஒருவன் எண்ணத்தில் எந்த நிலையில் இருக்கின்றானோ அந்த நிலையில் உள்ள அணுக்கள் தான் அவனை வந்து தாக்கிடும். (பூவின் வாசனை கருவாடு வாசனை கதை போல் தான்…!)

மனித உடலில் உள்ள பொழுதே இப்பொழுது நாம் உண்ணும் உணவும்.. உடுக்கும் உடையும்… வாழும் வாழ்க்கையும்… அன்றன்று மறைவது தான்..! என்ற எண்ணம் மக்களுக்குத் தோன்றி நாம் சேமிக்கும் சொத்தெல்லாம் நம் ஆத்மாவுக்கு எந்த நிலை…? என்று புரிந்து சேமித்து வைக்க வேண்டுமப்பா…!

1.நாம் வேறு நம் ஆத்மா வேறு.
2.அந்த ஆத்மாவில் ஆண்டவன் தான் கலந்துள்ளான்.
3.நம் உடலில் அந்த ஆத்மாவுடன் அவ்வாண்டவன் கலந்து குடியிருக்கின்றான் என்ற எண்ணம் மட்டும் ஒவ்வொருவர் மனதிலும் நிலைத்திருக்க வேண்டுமப்பா..!

காலம் அழிந்தாலும் நம் ஆன்மா அழிவதில்லை. இந்த உடலில் நாம் அந்த ஆத்மாவிற்கு எந்த நற்காரியத்தைச் சேர்த்து வைக்க முடியுமோ அந்த நற்பயனை நாம் சேமித்து வைத்திட வேண்டுமப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

பிரதோஷம் என்பது
1.பிறருடைய உணர்வுகள் வராதபடி
2.பிறருடைய சங்கடங்கள் வராதபடி
3.பிறருடைய ஆவிகள் வராதபடி
4.பிறருடைய பற்று வராதபடி இருப்பது தான் பிரதோஷம்.

ஆனால் இன்றைய மனித வாழ்க்கையில் ஏதாவது சாங்கியங்களைச் செய்தால் பிரதோஷம் நீங்கிவிடும் என்று செய்வார்கள். இதனால் பலன் ஏதும் இல்லை.

1.பிறருடைய உணர்வுகள் நமக்குச் சாராதபடி இருக்க வேண்டும் என்று சொன்னால்
2.அவர்களுடைய உணர்வுகளை நமக்குள் சேர்த்துப் பிரதோஷம் ஆக்குகின்றோம்.

பிரதோஷம் அன்றைக்குப் பழங்கள் எல்லாம் வைத்துச் சாமி கும்பிட்டு அர்ச்சனை செய்து அபிஷேகம் செய்து தோஷம் வராமல் தடுக்க வேண்டும் என்றால் இது முடியாது.

ஆக மொத்தம் பிறருடைய உணர்வுகளை நமக்குள் இயக்கவிடாது “பிறருடைய அந்தத் தோஷத்தைத் தடுக்க வேண்டும்…!” என்ற எண்ணமே வருவதில்லை. பிரதோஷம் என்றால் அன்றைக்கு மந்திரங்களைச் சொல்லி இன்னொரு தோஷத்தைத்தான் சேர்த்துக் கொள்கிறோம்.

ஏனென்றால்
1.எந்த மந்திரத்தைச் சொல்லிப் பதிவு செய்து உள்ளீர்களோ
2.பிரதோஷம் அன்றைக்கு எவ்வளவு மந்திரத்தைக் காதில் கேட்டீர்களோ
3.இந்த உணர்வின் தன்மை இங்கே வந்தபின் கடைசியில் இறந்தபின்
4.அதே மந்திரத்தைச் சொன்னால் நம் ஆன்மாவை இன்னொருவர் கைவல்யம் செய்து கொள்வதற்குப் பயன்படும்.

உதாரணமாக ஒரு நோயைப் போக்குவதற்காக என்று சொல்லி அந்த மந்திரத்தைப் பதிவு செய்து கொண்டு போனால் அதே உணர்வை எடுக்கும் போது
1.இறந்த பின் இந்த ஆன்மாவைக் கைவல்யம் செய்து கொண்டு
2.இன்னொரு உடலுக்குள் நோய் தீருவதற்காக
3.இந்த ஆவியை ஏவல் செய்வார்கள்… அதற்குத் தான் பயன்படும்.

மனிதன் உடலுக்குள் விளைவைதை இத்தனை மந்திர ஜாலம் செய்து பல வேலைகளைச் செய்யப் பயன்படுத்திக் கொள்வார்கள். இப்படி ஒரு மனிதனுக்குள் விளைந்தது தான் எத்தனையோ உணர்வுகள். அதைத்தான் கரையான் மந்திரம் என்பது.

கரையான் என்ன செய்கிறது…? கட்டைக்குள் கரையான் சென்ற பின் அதிலே அதன் மலம் பட்டபின் கட்டையே மண்ணாகப் போய்விடும். அந்த மாதிரி கட்டையைச் சீக்கிரம் நம்மால் கரைக்க முடியுமா..! என்றால் முடியாது.

இதைப் போன்ற உணர்வின் தன்மை வரும் போது வேதங்களில் (அதர்வண) மூலத்தின் மூல நிலைகள் உண்டு.
1.இந்த உணர்வின் தன்மை இரண்டும் உராயப்படும் போது
2.இறந்தபின் அதைப் பிரித்து இன்னொரு மனிதனுக்குள் பாய்ச்சிச் செலுத்தியபின்
3.அந்த உடலுக்குள் இருக்க வேண்டும் என்றால் இந்த உணர்வைக் கரைத்துவிடும்.
4.பின் ஆவியுடன் (காற்றுடன்) கலக்கும்.

மீண்டும் அதற்குண்டான எதிர்மறையான நிலை ஆனபின் பொருளாக வந்துவிடும். ஒரு டப்பாவுக்குள் சிறு துவாரம் (ஊசி அளவு) வைத்தால் அதன் வழியாக அதற்குள் வந்துவிடும். மீண்டும் மாற்றினால் அது ஆவியின் நிலையாக மாறும்.

இது எல்லாம் மனிதனுக்குள் உருவான நிலைகள்…!

இதே போல பல உயிரினங்களும் உண்டு. மந்திரங்களை எடுத்து அந்த உயிரினங்களைக் கேட்க வைத்துப் பின் அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்தபின் அதை வைத்துப பல தீமைகளை செய்பவரும் உண்டு.

“ஒடியர்கள்…!” என்று இருக்கின்றார்கள். இந்த அசுர உணர்வு கொண்டு பறந்து போகும் காக்காயை அவர்களின் ஒடிய மொழியில் சொன்னால் அதனின் இறக்கை பிய்ந்து துண்டாக விழும்.
1.அந்த ஒலி அதிர்வுகள் (ஒடியன் மந்திரம் என்பது) அங்கே அவ்வாறு மாற்றும்
2.எப்படி ஒரு மின்னல் தாக்குகின்றதோ அதைப் போல உணர்வின் இயக்கங்கள் கொண்டு செய்வார்கள்… இது எல்லாம் உண்டு…!

செய்வினை தோஷம் என்பதெல்லாம் உண்மை தான்..! ஒருவருக்கொருவர் குடும்பத்தைக் கெடுக்க வேண்டும் என்ற நிலையில் செய்வினை தோஷங்கள் செய்திருப்பார்கள்.

அதிலிருந்து முழுமையாக விடுபட வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தியானத்தின் மூலமாக “எடுத்து…எடுத்து….எடுத்து….” இந்தத் தோஷங்கள் உங்களுக்கு வராதபடி காக்க முடியும்.

1.துருவ நட்சத்திரத்தின் வலுவை உங்கள் ஆன்மாவில் பெருக்கி விட்டால்
2.எந்தத் தோஷங்களும் உங்களைத் தாக்காது
3,நீங்கள் எடுக்கும் அருள் உணர்வுகள் உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் தீமையை நீக்கும் சக்தியை நீங்களே பெறுகின்றீர்கள்.

நீங்கள் தீமையை நீக்கிப் பழகி விட்டால் அடுத்து யாராவது சங்கடத்தில் வருகின்றார்கள் என்றால்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தால் நல்லதாகிப் போகும். “உங்கள் குடும்பம் நல்லாகும்…!” என்று நீங்கள் இதைச் சொன்னால் உங்கள் சொல் அவர்களையும் நல்லதாக்கும்.

சித்தர்கள் கண்ட அரிய பொக்கிஷங்களை நாம் அறிய வேண்டியது மிகவும் அவசியம் – ஈஸ்வரபட்டர்

காலம் செல்லச் செல்ல இன்றைய விஞ்ஞானிகள் அறிவு வளர்ந்து பல வகை அற்புதச் செயல்களைக் கண்டுபிடித்து மக்களுக்குச் சொல்கின்றார்கள்… செயல்படுத்துகிறார்கள்.

ஆனாலும் இன்றைய உலகில் இக்கலியில் அறிவு வளர்ச்சி வர வர விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளால் “சோம்பேறி வாழ்க்கை வாழும் நிலையை உண்டாக்கி…” மனித மூளையையே மங்கச் செய்கிறார்கள் சில விஞ்ஞானிகள் எனும் பேர் பெற்ற விஞ்ஞானிகள்.

ஆதியில் சித்தர்கள் கண்டுபிடித்த ஞான நிலையிலிருந்து இந்த மண்ணில் விளையும் பொருள்களை வைத்துப் பல பல பொக்கிஷங்களைக் கண்டு உணர்த்தியுள்ளார்கள்.
1.அவற்றினால் மக்களுக்கு என்ன நன்மை…?
2.வைரம் அணிந்தால் என்ன நன்மை…?
3.தங்கத்தினால் என்ன நன்மை…?
4.நாம் பிறந்ததின் மகிமை என்ன…?
5.மண்பாண்டத்தில் சமைத்து உண்பதின் ஆரோக்கிய நிலை என்ன..? என்ற
6.பல வகை உண்மைகள் எல்லாம் ஆதியில் வந்த நிலை தானப்பா இன்றும் உள்ளது.

முதலிலேயே சொல்லியுள்ளேன் இந்தப் பூமித் தாயின் பொக்கிஷமெல்லாம் அந்தச் சூரிய சந்திர ஒளிக்கதிரிலிருந்து எப்படி வருகிறது என்பதை…!

அந்நிலை எல்லாம் ஆதியில் உள்ள சித்தர்கள் அறிந்து எடுத்துத்தான் மனிதர்களின் நன்மைக்காகச் வெளியிட்டார்கள்.

மக்களின் செயலுக்கு அந்த உண்மை நிலையை உணர்த்தி அவர்களாகவே அதை எடுத்துப் பக்குவ நிலை செய்து பயன்படுத்தப் பல உண்மை நிலையைப் பரவவிட்டார்கள் மக்களிடத்தில் அன்றையச் சித்தர்கள்.

வைரம் வைடூரியம் என்ற இன்னும் பல வகை நிறம் கொண்ட பல கோடிக்கணக்கான கற்களையும் அவை மனித உடலில் பட்டால்
1.எந்தெந்த உடலுக்கு அந்நிலையெல்லாம் அந்த உடல் ஏற்கின்றது என்ற நிலை எல்லாம்
2.அன்றையச் சித்தர்கள் கண்டுபிடித்து வெளியிட்ட உண்மையிலேதான் இன்றும் உள்ளார்கள் மக்கள்.

மனிதன் வளர்ச்சி அடைந்து உயர் நிலைக்காகக் கொடுக்கப்பட்ட அந்நிலையை
1.இப்பொழுது இன்றையச் செல்வத்திற்காகவும்
2.தம்முடைய டாம்பீக வாழ்க்கைக்காகவும் பயன்படுத்திப் பாழ் செய்து விட்டார்கள்.

இந்நிலையை அறிந்து தான் பல கோடிச் சித்தர்கள் பல உண்மைகளை மறைத்து விட்டார்கள் இன்றைய கலியின் பேராசை கொண்ட மக்களுக்கு.
1.பல வகை மூலிகைகளை வைத்து அன்றையச் சித்தர்கள் பயன்படுத்தியதையும்
2.அந்த மூலிகைகளை உபயோகிக்கும் நிலையை உணர்த்தாமலே மறைத்து விட்டார்கள்.

துருவ நட்சத்திர தியானத்தின் முக்கியத்துவம்

 

நம் குருநாதர் ஈஸ்வரபட்டர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் அனைவரும் பெறக்கூடிய சக்திக்குத்தான் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்குகின்றேன். பதிவாக்கினாலும் அதை மீண்டும் பெறுவதற்கு நினைவுபடுத்துகிறேன், ஏனென்றால் பல நிலைகள் உங்களை மூடி மறைக்கின்றது.

இப்பொழுது இந்த உபதேசத்தின் உணர்வுகளைப் படிக்கும் பொழுது உடனே அது வீரியம் பெறும். இங்கே நல்லதைச் சொல்லிக் கொண்டிருந்தாலும் அடுத்தாற்போல் ஒரு இரண்டு பேர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் என்ன சொல்வீர்கள்…!

1.பார்…! சாமி (ஞானகுரு) என்ன சொல்கிறார்…?
2.இங்கே இப்படிச் சண்டை போடுகிறார்கள்..! என்று நான் சொல்வதை உடனே விட்டுவிடுவீர்கள்…!
3.சண்டையிடுபவர்களின் உணர்வுகளை எடுத்துக் கொள்வீர்கள்.
4.அப்பொழுது அந்தத் தீய அணுக்களுக்குச் சாப்பாடு நிறையக் கொடுக்கின்றோம்.

ஏனென்றால் அதற்கு ஏற்கனவே வீரியம் அதிகம். ஆகவே அந்த அணுக்கள் நமக்குள் அதிகமாக இருக்கும் பொழுது அதை மாற்றும் சக்தியை எடுத்து… அதை வலுவாக எண்ணி… சண்டையிடுபவர்களின் உணர்வுகளை அடக்கச் செய்ய வேண்டும்.

அப்படி என்றால் அந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும்…?

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அவசியம் வளர்த்துக் கொள்ள வேண்டும் (துருவ தியானம்). அதை வைத்துத் தான் தீமைகளை அடக்க வேண்டும்.

சண்டை செய்கிறார்கள் என்றால் நாம் கண்ணில் பார்க்கின்றோம். அந்த மனிதர்களைப் பதிவாக்கிவிடுகின்றோம். தவ்று செய்கிறார்கள் என்று பார்க்கிறோம்… அந்த உணர்வை நுகர்கின்றோம்… அதே அணுவாக நம் உடலில் மாற்றிவிடுகின்றது.

இங்கே உபதேசத்தைக் கேட்கின்றீர்கள்.
1.ஆனால் நான் ஒருவன் தானே இங்கே சொல்கிறேன்.
2.அந்தப் பக்கம் நீங்கள் பார்த்தால் ஆயிரம் பேர் ஆயிரம் விதமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றார்கள் அல்லவா..!
3.அதைப் பார்த்ததும் அது தான் உங்களுகுள் பெருகுகின்றது. (நான் சொல்வது சிறுத்துவிடுகின்றது.

கோவிலுக்குப் போய்ச் சாமி கும்பிடுகின்றோம். அங்கே மற்றொருவரும் வந்து கும்பிடுகின்றார்.

நாம் கும்பிடும் பொழுது அவரைப் பார்த்தவுடன் அவர் பல தவறுகள் செய்பவர் என்று தெரிகிறது. அர்ச்சனை செய்து… அந்தப் பரிவட்டம் கட்டி… அபிஷேகம்… ஆராதனை…! என்று பல நிலைகள் அவருக்கு நடக்கின்றது.

1.எத்தனையோ கொலை செய்கின்றான்
2.அவனுக்குச் சாமி எல்லாம் கொடுக்கின்றது… உதவி செய்கின்றது பார்..!
3.கோவிலையே அந்த நேரத்தில் வெறுக்கின்றீர்கள்… இல்லையா…?

ஆக கோவிலுக்குப் போன இடத்தில் ஒரு தவறு செய்பவன் அபிஷேக ஆராதனை செய்து அவனுக்கு இவ்வளவு மரியாதை கிடைத்தவுடன் உங்களுடைய எண்ணம் எப்படி வருகிறது…?

மற்றவர்கள் செய்யும் தவறைப் பார்த்தவுடன் “என்றைக்குத் தான் இது நல்லதாகப் போகிறதோ…? தெரியவில்லையே…! என்று எண்ணுகின்றீர்கள். அப்பொழுது அந்த எண்ணத்திற்குத்தான் சக்தி கொடுக்கின்றீர்கள்.

அந்த நேரத்தில் நான் சொன்னதை நினைவுக்குக் கொண்டு வந்து அதை மாற்ற முடிகின்றதா…? என்றால் இல்லை..! அந்த உணர்வுகளே வருவதில்லை.

அதை எல்லாம் மாற்றுவதற்காக வேண்டித்தான் இந்தக் காலைத் துருவ தியானத்தை முக்கியமாக உங்களைச் செய்யச் சொல்கிறோம்.

1.ஈஸ்வரா…! புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும்…
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்…! என்று எண்ணி
4.சந்தர்ப்பத்தால் நுகர்ந்த கோபம் வெறுப்பு வேதனை போன்றவைகளை உடனே துடைத்துப் பழக வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி இந்த ஆலயம் முழுவதும் படர வேண்டும், இங்கே வருவோர் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும். அந்த மெய்ப் பொருள் காணும் சக்தி இந்த ஆலயம் முழுவதும் படர வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணினால் நமக்குள் அந்தச் சோர்வு வராது. மன பலம் கிடைக்கும். தீமைகளிலிருந்து விலகிச் செல்லும் ஆற்றலும் கிடைக்கும்.

எல்லாம் அவன் செயல்…! என்பதன் பொருள் – ஈஸ்வரபட்டர்

 

சூட்சம உலகத்திற்கு வருபவர்கள் எல்லாம் தியானத்தின் மூலம் அருளைப் பெற்று தியானத்தில் இருந்தால் மட்டும் தான் வருவார்கள் என்பதல்ல.

இந்த மானிட உலகில் பிறந்தவர்கள் தியான நிலையை அறியாமல்
1.தன் எண்ணத்திலும் செயலிலும் ஆண்டவன் அருளைப் பெற்று
2.அந்த ஆண்டவனுக்காக அஞ்சி தன் வாழ்க்கை முறையில் பல நற்காரியங்கள் செய்து
3.தன்னையே “தான்…” என்ற கர்வமில்லாமல் தன்னால் இந்த உலகிற்கு என்ன பயன்…? என்று புரிந்து கொண்டு வாழ்பவனும்
4.தன் நிலை என்ன…? என்றே, தனக்கே தெரியாமல் பல வகை இன்னல்பட்டு மக்களுக்காகப் பல நன்மைகளைச் செய்பவர்களும் உள்ளார்கள்.

அதே போல் பல புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகள் உள்ளார்கள். அந்த விஞ்ஞானிகள் எல்லாம் என்ன எண்ணுகிறார்கள்…?
1.தான் ஆண்டவனை நினைத்துத் தன் அறிவை உபயோகப்படுத்துவதாகவும்
2.அப்படிப்பட்ட தன் முயற்சியினால் தான் பல புதிய வார்ப்புகளையும் படைப்புகளையும் கண்டுபிடிப்பதாக…!

ஆனால் அதுவல்லப்பா அவர்கள் நிலை…!

இந்த மனித உடலில் உள்ள எல்லோருமே விஞ்ஞானியாகலாம்… மெய் ஞானியாகலாம்.. மகரிஷியாகவும் ஆகலாம்… பல கீழான நிலைக்கும் செல்லலாம்….!

அவனவன் ஆண்டவனை எண்ணும் நிலையில் அவன் அறிவை உபயோகப்படுத்தும் பொழுது அவன் நிலையில் சூட்சம உலகத்திற்குச் சென்ற ஆவி நிலையோ அல்லது அவன் நிலையில் விட்டுச் சென்ற விஞ்ஞானியோ அவன் உடலுக்குள் புகுந்து விடுகிறது.

அது புகுந்த பின் தான் ஒவ்வொரு விஞ்ஞானிக்கும் அவர்கள் பல வழிகளைக் காட்டுகின்றார்கள். ஆனால் அந்த விஞ்ஞானி என்பவன் தான் பெற்ற அருளைச் சிதறவிடாமல்
1.எந்த நிலையில் ஆண்டவனை எண்ணி ஒரு நிலையை ஆரம்பித்தானோ
2.அந்நிலை வரை அவன் நிலைக்கு அவன் உடலில் உள்ள அந்தச் சூட்சம அருள் பெற்ற அச்சித்தனின் அருள் செயல்படுகிறது.

என்றைக்கு அவன்… “தான்…!” என்ற எண்ணத்திற்கு வருகிறானோ அன்றே அவன் செயலும் அவன் எடுத்த முயற்சியும் வீணாகிறது.

“எல்லாமே அவன் செயல்…” என்று எண்ணுபவனுக்கு என்றுமே அவன் அருள் உண்டு. இந்த நிலையில் உள்ளவர்களும் உயர் நிலைக்கு வருகின்றார்கள் சூட்சம நிலைக்கு.

பல பாடகர்களைப் பார்த்திருப்பாய். அவர்கள் பாடலில் இனிமை எங்கிருந்து வருகிறது…? பல கை தேர்ந்த மருத்துவர்களைப் பார்த்திருப்பாய். அந்த மருத்துவர்களின் திறன் எங்கிருந்து வருகிறது..?

1.இந்த உலகில் உள்ள பல கோடானு கோடி நல்லோர்களின் உயிரான்மாக்கள்
2.மறு பிறவி எய்தாத நிலையில் பூமியிலே சுழன்று கொண்டுள்ளார்கள்.

இந்த உலகில் ஜீவித்த காலத்தில் உடலுடன் இருக்கும் காலத்தில் நடத்திச் சென்ற பாதையை அவ்வுலகுக்குச் சென்றும் சூட்சம உலகத்திலிருந்து தன் எண்ணத்திற்கு உகந்தபடி உதவியும் செய்கிறார்கள்.

எந்த நிலை கொண்டு…?

இந்த மானிட உலகில் உள்ள மனிதர்கள்த ஆண்டவனை நினைக்கும் பொழுது… எந்த வழிக்கு ஆண்டவனை நினைக்கின்றானோ… வேண்டுகின்றானோ… அந்த வழிக்கு அச்சூட்சம உலகத்தில் உள்ள பலரின் நிலைகள் செயல்பட்டுப் பல உதவிகளைச் செய்கின்றனர்.

இப்படிப்பட்ட அருள் பெற்றவர்கள் எல்லோருக்குமே
1.என்று அவர்களுக்குத் “தான்…” என்ற கர்வம் வருகின்றதோ
2.அன்றுடன் அதுவரை அவர்கள் பெற்ற பேறுகளும் மடிந்து விடுகின்றது.
3.அவர்களின் நிலைக்கு (மறைமுகமாக) உதவி செய்த அந்தச் சித்தர்களின் நிலையும் மறைகிறது.

ஆகவே சூட்சம உலகத்திற்குச் செல்பவர்கள் எல்லாம் தியனாத்திலிருந்து… தியான அருளினால் மட்டும் தான்… விண் செல்ல வேண்டும் என்பதல்ல.

இந்தப் பாட நிலையைப் புரிந்து கொண்டால் தியான நிலையில் இருப்பவருக்கு
1.இவ்வுலக நிலையில் உள்ள பொழுதே தான் யார்…? நான் என்பது யார்…? என்று புரியும் நிலை வந்துவிடும்.
2.தான் பிறவி எடுத்த பயனும் தன் நிலைக்குத் தன் உயிர் நிலைக்கு ஒரு நிலைப்படுத்த எடுக்கும் இந்த தியான நிலை அருள் புரிகின்றது.

நம்முடைய சுவாச நிலையும் தியான நிலையும் ஒன்றுபட்டால் இந்த உலக நிலையையும் பல கோடிச் சித்தர்களின் நிலையையும் அறிந்து பல மண்டலங்களின் நிலையும் அறிந்து கொள்ள முடியும்.

1.உயிர் அழியாத நிலைகள் கொண்டது…!
2.அதன் துணை கொண்டு தான் பிறவி எடுத்த பயனை அடைந்து
3.என்றுமே அதை இந்த உலக மக்களுக்காக உபயோகப்படுத்தலாம்.

April 2021 உபதேசம்

என்ன தியானம் செய்து… என்ன பலன் என்பார்கள்…!

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அடிக்கடி தியானிக்க வேண்டும் என்று உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்… நினைவுபடுத்துகிறோம்.

அதை வைத்துத் தீமைகள் புகாது பாதுகாத்துக் கொள்ள வேண்டியது உங்களுடைய பொறுப்புதான்…!

ஒரு பொருளுக்கு ஆசைப்படுகிறோம் கிடைக்கவில்லை. அதே போல் நமக்கு வேண்டியவர்களுக்கு உடலில் நோயாகி விட்டது. சரியாகவில்லையே…! என்ற நினைவைச் செலுத்தினால் வேதனை உணர்வு தான் வருகிறது. அத்தகைய நேரத்தில் நல்ல உணர்வு பெறும் தகுதியை இழந்து விடுகின்றோம்.

எத்தனையோ தியானம் இருந்தாலும் கூட இப்படி எல்லாம் வருகிறது என்று சில பேர் எண்ணுகின்றனர்.

1.அத்தனை தியானம் செய்தேன்… என் பிள்ளைக்கு உடல் நலம் இல்லாது போய்விட்டது…!
2.எவ்வளவு தியானம் செய்தேன்…? என்னிடம் சண்டைக்கு வருகின்றார்களே…! என்று
3.இந்த உணர்வை எடுத்து எடுத்து இப்படி மாற்றிக் கொண்டிருந்தால்
4.உணர்வுகள் அங்கே (தீமையின் பால்) சென்று விடும்… நினைவுகள் தீமையின் பக்கமே சென்றுவிடும்.

ஆகையினால் அது போன்று வராதபடி அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டுமென்று அதை வலுவாக்க வேண்டும். அருள் உணர்வை நம் உடலுக்குள் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.

ஏனென்றால் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ நிலைகளைப் பார்த்தாலும் நாம் நுகரப்படும் போது “தவறு செய்கிறார்கள்…” என்று உற்றுப் பார்க்கின்றோம்… அது பதிவாகிறது.

பதிவாகி விட்டால் பின் அது தன் உணவுக்காகக் கிளரும். அதை வைத்து அந்த உணர்வின் அணுக்கள் உடலுக்குள் பெருகிக் கொண்டே இருக்கும். தவறு செய்தவரின் உணர்வை உணவாக எடுத்துத் தான் அந்த அணுக்கள் தன் இனத்தைப் பெருக்கும்.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் எப்போது சங்கடம் சலிப்பு வெறுப்பு என்று வருகின்றதோ… அடுத்த கணமே அதை மாற்ற… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இதை கூட்டிக் கொண்டே வந்தால் அது குறைந்து கொண்டே வரும்.
1.அது குறையத்தான் செய்யும் தவிர முழுமையாக மாற்ற முடியாது
2.இதைப் (அருளை) பெருக்கினால் அது இதற்குள் அடங்கிவிடும்.

நல்ல குணங்கள் கொண்டு இருக்கும் பொழுது தீமை என்ற உணர்வுகள் அதிகமாகி விட்டால் அது நல்ல குணங்களை அடக்கி
வேதனை என்ற உணர்வும்…
வேதனைப்படும் சொல்லும்…
வேதனையான செயல்களும்…
வேதனையான பேச்சுகளும்…
வேதனையான மூச்சுகளையும் தான் செயல்படுத்தும்.

ஆனால் அந்த மகரிஷிகளின் அருளைப் பெற்று இதை மாற்றிடுவோம்… மாற்ற முடியும்… அவர்கள் நலம் பெறுவார்கள்…! என்ற எண்ணத்திற்கு நாம் வர வேண்டும்.

ஒரு நோயாளி அவருடைய கஷ்டத்தைச் சொன்னால் மகரிஷிகளின் அருள் சக்தியை அவர்கள் பெறுவார்கள்… நலம் பெறுவார்கள்…! என்று நாம் எண்ணி விட்டால் அந்த உணர்வுகள் நமக்குள் வராது.

ஆனால் அவர்களை உற்றுப் பார்த்து… சொல்வதைக் கேட்டறிந்து அவருடைய துயரத்தை எண்ணி நாம் எடுத்துக் கொண்டால் நமக்குள்ளும் அது விளைந்து அவர் சொன்ன கஷ்டங்கள் எல்லாம் நமக்குள்ளும் வரும்.
1.அவரை மாதிரித் தான் நமக்குள்ளும் இருக்கின்றது
2.அவரை மாதிரித் தான் நமக்கும் நோயாகி விட்டது…! என்று அவரின் உணர்வு வந்து
3.அதையே நாமும் வளர்த்துக் கொள்கிறோம்

உதாரணமாக ஒருவன் நம்மை ஏமாற்றினான் என்றால் “ஏமாற்றினான்… ஏமாற்றினான்…” என்று எண்ணி அதையே எடுத்துக் கொண்டே இருந்தோம் என்றால் நம்மை அறியாமலேயே நம் உடலுக்குள் நல்ல உணர்வுகள் வளர்வது நிச்சயம் தடைப்படும்.

இதைப் போன்ற தீமையான விளைவுகளிலிருந்து நாம் மாறுவதற்கு ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கூட்டுத் தியானத்தின் மூலம் எடுத்து வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

கோடிப் பணம் சம்பாதித்து விட்டோம் என்றால் “நிம்மதியாக இருந்து விடலாம்…” என்று நினைப்பார்கள்.

அவ்வாறு நிம்மதியாக இருக்கும் போது இவர் மிகவும் “நல்லவர்.. என் சொந்தக்காரர்…” என்று எல்லாம் சொல்லிக் கொண்டு நம்மைத் தேடி வருவார்கள்.

என் பையன் சேட்டை செய்கிறான் என்று சொல்வார்கள். பக்கத்தில் இருக்கும் வீட்டுக்காரன் சதா தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறான்… நீங்கள் தான் நிவர்த்தி செய்து தர வேண்டும் என்பார்கள்.

இவர் கேட்பார். உடனே அதே உணர்வு இங்கு வரும். இவர் மேலே பாசமாக இருந்து அதையெல்லாம் எடுத்துக் கொள்வார்.

முதலில் இவர் அமைதியாக இருந்தார். செல்வம் எல்லாம் தேடி வந்தது. சம்பாரித்தார்…, நன்றாக இருக்கின்றார்.

இவர் நன்றாக இருப்பதைப் பார்த்து மற்றவர்கள் வந்து அவரவர் கஷ்டங்களையும் எல்லாம் சொல்ல ஆரம்பிக்கின்றார்கள்.

ஏனென்றால் இவர் மற்றவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கிறார். அவர்களுக்கு வேண்டிய உதவியும் செய்தார். அப்புறம் என்ன நடக்கின்றது…?

உடலில் இல்லாத வலியெல்லாம் வரும். இடுப்பு வலிக்கிறது, மேல் வலிக்கின்றது… தலை வலிக்கின்றது… சர்க்கரைச் சத்து வந்து விட்டது… இரத்தக் கொதிப்பு வந்து விட்டது… என்பார்கள்.

ஏனென்றால் தன்னை நாடி வருபவர்கள் சொல்வதை எல்லாம் இவர் கேட்பார். நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை – இது இந்த மாதிரி வந்து விடும்.
1.நாம் சுவாசித்த உணர்வுகள் உயிரிலே படுவது நந்தீஸ்வரன்.
2.சிவனான இந்த உடலில் அந்தக் கணக்குள் கூடுகின்றது.

தவறே செய்யவில்லை. உதவி கேட்டு வருகின்றனர். அவர்கள் கஷ்டத்தைச் சொல்கிறார்கள்.

நல்ல மனதுடன் இவர் கேட்கிறார். நுகருகின்றார். உமிழ்நீராக மாறுகின்றது. சாப்பாட்டில் கலக்கிறது. நுரையீரலுக்குப் போகின்றது. கல்லீரலுக்குப் போகின்றது. கிட்னிக்குப் போகின்றது. இருதயத்திற்கு வருகின்றது.

1.பின்னர் இருதயம் படபடா.. படபடா… என்று வரும்.
2.அத்தனை பேருடைய கஷ்டத்தையெல்லாம் கேட்டு
3.அதற்குப் பஞ்சாயத்து செய்வதற்குப் போனார்.
4.இந்த உணர்வு படபடா… என்று வரும்.

கடைசியில் இந்த மாதிரி ஆனவுடனே “சீனி சாப்பிடாதே…, காரத்தைச் சாப்பிடாதே… உப்பைச் சாப்பிடாதே… எண்ணெயைச் சாப்பிடாதே…” என்று டாக்டர்கள் சிபாரிசு செய்வார்கள். ஆனால் அவர் தவறு செய்யவில்லை.

1.செல்வம் இருக்கிறது…
2.ஆனால் அமைதி இருக்கின்றதோ…?

பிறருடைய உணர்வுகள் இவ்வாறு நமக்குள் தோஷமாக வந்து விடுகின்றது.

இதே மாதிரி… சில குடும்பங்களில் பெண் குழந்தைகள் பிறக்கின்றது. பெண் குழந்தைகள் பிறந்த பிற்பாடு இன்றைக்கு இருக்கின்ற காலத்தில் தாய் தகப்பனுக்கு நிம்மதி இல்லை.

தாய் தகப்பனுக்கு நாம் என்ன கடமை செய்ய வேண்டும்…? அது தெரியவில்லை. தாயினுடைய உண்மையை உணர முடியவில்லை.

இன்றைக்குப் பெண்கள் பிறந்த குடும்பங்கள் எல்லாம் மிகவும் அல்லல்படுகின்றார்கள்.

கடவுளாக இருந்து நம்மை உருவாக்கிய தாய் நம் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கின்றார்கள்? நாம் அதை மதிக்கின்றோமா…!

அவர் நம் மீது அந்தப் பாசத்திற்குத் தகுந்தபடி
1.நாம் எண்ணியது நமக்குள் நடக்க வேண்டும்
2.நம் தாய் எண்ணியது எனக்குள் நடக்க வேண்டும் என்று சொன்னால்
3.அந்த சக்தி நமக்குள் உருவாகும்.

நாம் யாராவது இப்படி எண்ணுகின்றோமா…?

தான் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப “நான்… வாழ வேண்டும்” என்று
1.தாயை அதன் வழியே கொண்டு வர வேண்டும் என்று
2.நினைத்தோம் என்றால் அது தவறான வழி ஆகும்.
3.இப்படி நிறையப் பேர் உண்டு (மகனும் சரி பிள்ளையும் சரி)

தன் உணர்வின் ஆசைக்கு அந்த இணக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக
1.நம்மை ஈன்று மனிதனாக உருவாக்கிய அந்தக் கடவுளையே
2.நம்மைக் காப்பாற்றிய அந்தத் தெய்வத்தையே…
3.நமக்கு நல்லது சொன்ன குருவையே…
4.மனதை நோகும்படிச் செய்கின்றோம்.

இதையெல்லாம் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்றைய உலகில் ஒவ்வொரு வீட்டிலும் அமைதி இருக்கின்றதா…? சந்தோஷமாக வாழ்கிறேன் என்று சொல்ல முடிகிறதா…!

ஆகவே இப்படிப் பல வகைகளிலும் வரும் தோஷங்களெல்லாம் நமக்குள் சேர்ந்த பிற்பாடு உடலில் நோய் வந்துவிடுகின்றது, நம் நல்ல அணுக்களை எல்லாம் அது கொன்று சாப்பிடுகின்றது.

இதை யார் மாற்றுவது…? நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

அதே சமயத்தில் பெண் பிள்ளைகளைத் திருமணம் செய்து கொடுத்து முடிப்பதற்கு முன்னால் அந்தத் தாய் படுகின்ற அவஸ்தையோ
1.வயதாகிப் போகின்றதே… வயதாகிப் போகின்றதே… என்று எண்ணுவார்கள்
2.இன்ன வயதாகிப் போனால் அந்த வயதிற்குத் தகுந்த மாப்பிள்ளை கிடைப்பது கஷ்டமே என்று
3.தாய் எண்ணி எண்ணிப் பிள்ளைகளை நினைத்து நினைத்து வேதனைப்படுகிறது,

பிள்ளையைப் பார்க்கும் போதேல்லாம் இந்த வேதனை உண்டாகின்றது.

ஆனால் அவர்களுக்கு நல்ல மாப்பிள்ளை வர வேண்டும். நல்லது வர வேண்டும் என்று நினைக்கின்றதா…! என்றால் தாய் நினைக்கவில்லை.

ஆசை இருக்கிறது. வேதனை எடுத்து அதைத் தனக்குள் எடுத்து வேதனையான உணர்ச்சியைச் சொல்லி அந்தக் குழந்தையைப் பார்க்கும் போதெல்லாம் இந்த வேதனை வருகின்றது.

இவ்வாறு அந்த வேதனை விஷம் என்ற நிலைகள் பட்டால் நினைவென்ற நிலைகள் இழுக்கப்பட்டு
1.தாயை நினைத்து அந்த வேதனையை எடுக்கின்றோம்
2.அது அறியாமையாக வந்து இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றது.

குழந்தையை மட்டும் சொல்வதற்கு இல்லை.

தாயின் ஆசைகள் “இப்படி நடக்கின்றதே… நாளைக்கு என்ன ஆகப் போகின்றதோ…!” என்ற இந்த வேதனையைச் சுவாசிக்கின்றது,

குழந்தையை எண்ணி வேதனையை உருவாக்குகின்றது. இந்த உள் உணர்வின் தன்மை சொல்லாகப் போகும் போது என்ன செய்கின்றது…?

ஏனென்றால் ஒரு நெருப்பில் பாத்திரத்தை வைத்து பதார்த்தத்தைப் போடுகின்றோம். பல பொருட்களைச் சேர்த்து வேக வைக்கின்றோம். நாம் போடுகின்ற பொருளுக்குத் தக்கவாறு தான் அதிலே ருசி வருகின்றது.

ஏனென்றால் நம் உயிர் ஒரு நெருப்பு. நம் குழந்தை மேலே ஆசையாக இருக்கின்றோம். ஆனால் “சீக்கிரம் திருமணம் ஆகவில்லையே…” என்கிறபோது அது வேதனை.

அதில் கொஞ்சம் கொஞ்சமாகச் சரக்குகளைச் சேர்த்து இந்த வேதனை உணர்வை உருவாக்கி இந்த உணர்வின் தன்மை உமிழ் நீராக்கி நம் உடலுக்குள் வளர்த்து இந்த உணர்வைச் சொல்லாக்கி வெளியில் சொல்லப் போகும் போது என்ன செய்கின்றது…?

இந்தப் பிள்ளையைப் பார்க்கும் பொழுது எல்லாம் அந்த வெறுப்பு வருகிறது. “இப்படி ஆகின்றதே….” அந்த வேதனை வருகின்றது. வேதனையான உணர்வு வரப்போகும் பொழுது குழந்தைகளுக்கு என்னவாகும்…?

தாய் பார்க்கும் பொழுது இந்த மாதிரி இருக்கின்றதே என்று அவர்கள் வாயிலேயே தன் பிள்ளையிடம் சொல்லுகின்றது. அதை வாங்கி அவர்கள் வளர்த்துக் கொள்கிறார்கள்.

இன்னும் கொஞ்சம் மோசமாகின்றது.

நமது அறியாத நிலைகள் நமக்குள் எந்த நிலையைச் செய்கின்றது…? “இதெல்லாம் ஒரு தோஷம் தான்”.

இந்தத் தோஷங்களை நீக்கும் வழி என்ன…? என்பதைத்தான் சிவன் ஆலயத்தில் தெளிவாகக் காட்டுகின்றனர். சிவன் ஆலயத்தில் சிவனுக்கு முன்பு நந்தியை வைத்துக் காட்டியுள்ளார்கள்.

நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை. வாழ்க்கையில் பிறருடைய உணர்வுகள் நம்மை இயக்கும் பொழுதெல்லாம் குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்ற “இந்தக் கணக்கைக் கூட்டிக் கொண்டே வர வேண்டும்…”

பிறரையே எண்ணிக் கொண்டு வாழும் வாழ்க்கையும் நல்ல வாழ்க்கையில்லை – ஈஸ்வரபட்டர்

 

ஐம்புலனை அடக்குவது என்றால் என்ன…?

பார்த்தல்… சுவைத்தல்… கேட்டல்… நுகர்தல்… எண்ணல்… எனும் இந்த ஐம்புலன்களும் பெற்ற மனிதர்கள் எல்லோருமே தான் பெற்ற அருளை
1.பார்த்தவுடன் பதட்டப்படாமல்
2.பார்க்கும் நிலையில் ஒன்றை எடை போடாமல்
3.பார்த்த பொருள் ஒன்றைப் பார்த்தவுடன் வாங்க வேண்டும் என்றில்லாமல்
4.தான் பார்த்ததை ஒருநிலைப்படுத்தி
5.பார்த்த நிலைக்கு எதையும் முடிவு எடுக்காமல்
6.தான் பார்க்கும் அருளைப் பெற்ற “அந்த அருளின் சக்தியை” நல்வழியில் உபயோகப்படுத்த வேண்டும்.

இப்படித்தான் சுவைக்கும் கேட்பதற்கும் நுகர்வதற்கும் மன எண்ணத்திற்கும் எல்லாவற்றுக்குமே ஆண்டவன் அருளிய இத்தன்மை உள்ளது.

இத்தன்மை என்பது மனித ஜென்மங்கள் ஐம்புலனை அடக்கும் தன்மை மிருக ஜெந்துக்களுக்கு இல்லையப்பா…!

ஐம்புலனை அடக்கிடும் தன்மை பெற்ற மனிதனே தன் மன நிலையை அடக்கிடாமல்…
1.“வாழும் வரை சந்தோஷமாக வாழலாம்…” என்று இருக்கின்றார்கள்
2.வாழ்க்கையில் சந்தோஷம் என்பதே என்ன..? என்றே புரியாத மானிடர்கள்

ஆக இவ் ஐம்புலனை அடக்கி ஆளும் சக்தியையே அதி பேராசையினால் இவ் ஐம்புலனையும் அலைய விட்டு விடுகின்றார்கள்…! பேராசை நிலைக்கு அடிமைப்பட்டவன் தானப்பா இவ் ஐம்புலனையும் அலைய விட்ட ஒவ்வொரு மனிதனும்.

இந்த மனித ஜென்மங்களுக்கு ஆண்டவன் அருளிய “அரும் பெரும் பொக்கிஷமப்பா…” இந்த ஐம்புலனைப் படைத்தது.

மிருக உடலுக்குத் தன்னைக் காத்துக் கொள்ள… தன் உணவைத் தேட… ஆண்டவனால் ஒவ்வொரு மிருக இனத்திற்கும் ஒவ்வொரு காப்பு நிலை உள்ளதப்பா.

ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் என்ன செய்கின்றான்…?

ஒருவனை ஒருவன் ஏமாற்றி… ஒருவனுக்காக ஒருவன் ஒருவனை அழிக்கப் பல பில்லி சூனியங்கள் பல மந்திரங்கள் பல ஏவல்கள் எல்லாம் செய்கின்றனர்.

தன் எண்ணத்தையே பிறரையே அழிக்க உபயோகப்படுத்துகின்றனர்.
1.பிறரை அழிப்பது மட்டுமல்லாமல்
2.அந்நிலையே தன்னை வந்து தாக்குகிறது என்பதை அறியாமல்
3.தான் பெற்ற பாக்கியத்தை எல்லாமே சிதறவிட்டு வாழ்கிறார்கள் பல கோடி மக்கள்.

எவன் ஒருவன்…
1.பிறரையே எண்ணிக் கொண்டுள்ளானோ
2.அவன் வாழும் வாழ்க்கையும் நல்ல வாழ்க்கையில்லையப்பா…!

நீங்கள் கேட்கலாம்… தன்னையே பார்த்துக் கொண்டுள்ளவன் “சுயநலவாதியல்லவா” என்று…! நான் சொல்லும் சொல் அதுவல்லப்பா…!

நான் சொல்வதெல்லாம்…
1.உன்னை நீ உணர்ந்து
2.உன்னில் அந்த ஈஸ்வர சக்தியைப் பெற்று
3.உன் உழைப்பில் நீ உண்டு
4.உன்னைச் சார்ந்தோரின் நிலையை நீ பார்த்து
5.உன்னால் மற்றவர்களுக்குப் பயனை மட்டும் தான் அளிக்கும் நிலையில் நீ இருந்து
6.உன் வாழ்க்கையையே நீ அமைத்துக் கொண்டு
7.பிறரின் சொல்லுக்காக… அவச் சொல்லுக்காகப் பயப்படாமல்… பிறரின் புகழுக்காக ஏங்கிடாமல் மயங்கிடாமல்
8.உன்னையே நீ நம்பு…! என்பதன் பொருளைப் புரிந்து கொண்டு வாழும் வாழ்க்கையே பூரிப்புடன் வாழும் வாழ்க்கை…!

நாம் வாழும் வாழ்க்கை பிறருக்காக வாழ்வதல்ல. எவன் ஒருவன் பிறரைப் பார்த்துப் பொறாமைப்பட்டோ பிறரைப் புகழ்ந்தோ வாழும் வாழ்க்கையும் வாழ்க்கை அல்ல..!

மனித உடலில் மன நிலையில் கொதி நிலைதானப்பா..! அந்த மன நிலையையும் ஐம்புலனையும் ஒருநிலைப்படுத்தி மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டுமப்பா..! முடியுமப்பா…!

நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் மின்கதிர்களின் பேராற்றல்கள்

 

பூமிக்குள் வெப்பத்தின் தணல் ஆகும் போது ஆவியின் தன்மை அடைந்து ஆவி எடையற்றதாக மாறி மேலே செல்கின்றது.
1.வெப்பத்தினால் எடையற்ற தன்மை மாறினாலும் அதிலே மின்னல்கள் தாக்கப்படும்போது
2.இலகுவாக இருந்த மேகக் கூட்டத்திற்குள் சக்தி வாய்ந்த நட்சத்திரங்களின் உணர்வலைகள் பரவுகின்றது.

அந்த நட்சத்திரத்தின் உணர்வலைகள் படரப்படும் பொழுது அழுத்தத்தின் தன்மை ஒரு பக்கம் மோதி… மற்றொரு பக்கம் மோதும்போது மழையாகப் பெய்கின்றது.

இப்படி அந்த மேகக் கூட்டத்திற்குள்
1.ஆவியின் தன்மையும் ஒளிக்கற்றைகளும் இணைந்து மழையாகப் பெய்யும் பொழுது நீராக வருகின்றது.
2.அதனால் தான் மழை நீர் பெய்யும் பொழுது தாவர இனங்களுக்கு அது உரமூட்டும் உணரவின் சக்தியாகக் கிடைக்கின்றது.

மழை நீர் பெய்தாலே தாவர இனங்கள் அதிகமாகச் செழித்துக் கொழுத்து வளரத் தொடங்குகிறது. ஏனென்றால் “அந்த மின் கதிர்கள்… அதனுடைய இயக்கம் துடிப்பின் தன்மையைக் கூட்டுகின்றது…!”

பல கோடி உணர்வுகள் பெற்று நாம் மனிதனாக வளர்ச்சி அடைந்த நிலையில் அந்த மேகக் கூட்டத்தை எண்ணி அருள் மகரிஷிகளின் உணர்வின் சக்தி அதிலே படர வேண்டும் என்று அந்த உணர்வுகளைச் செலுத்த வேண்டும்.

இத்தகைய உணர்வுகள் கலந்த மழை நீராக நம் பூமியில் பெய்யும் பொழுது
1.அது தாவர இனங்களில் உள்ள தீமைகளை அகற்றவும்
2.மக்கள் வாழும் பகுதியில் மழையாகப் பெய்யும் பொழுது அருள் உணர்வின் அறிவாக எல்லோரையும் இயக்க இது உதவும்.

எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் பாய்ச்சும் இந்த அருள் சக்திகள் மழை நீர் வழியாகக் கலக்கப்பட்டு வாழ்க்கையில் நல்ல நிலை பெறச் செய்யும்.

ஒவ்வொரு உயிரும் கடவுள் ஈசன் என்றும்… அவனால் உருவாக்கப்பட்ட அந்த உடல்கள் ஆலயம் என்றும்… மனித உடலை உருவாக்கிய உயர்ந்த சக்திகள் அங்கே தெய்வங்களகக் கொலுவீற்றிருக்கிறது என்றும்… நாம் மேலே சொன்ன நிலைகளைச் செயல்படுத்தினால்
1.இது நம்மை அறியாமலே நமக்குள் நன்மை பயக்கும் சக்தியாகிறது…
2.அதே போல் நம்மை அறியாது அனைவருடைய நிலைகளும் நலம் பெறும் சக்தியாக விளைகின்றது.

எந்தப் பூமியில் பிறந்தோமோ அதுவே நமக்குத் தாயாகின்றது. அந்தத் தாயின் மடி மீது தான் நாம் அமர்ந்துள்ளோம். பூமித் தாயின் சக்தியைக் கூட்டி தீமை புகாது தூய்மைப்படுத்தும் உணர்வுகளை நாம் ஒவ்வொருவரும் செயல்படுத்தும் போதுதான் இந்தப் பூமியும் தூய்மையாகிறது.

நம் தாய்க்கு செய்யும் சேவையே இது தான்.
1.ஆகவே ஒவ்வொருவரும் இந்தப் பூமியான தாயைக் காக்கவும்
2.உயிரைக் காக்கவும் முயற்சி எடுங்கள்.

தாயால் உருவாக்கப்பட்ட “இந்த உடல்” நம்மை எத்தனையோ வகையில் பேணிக் காத்தது. ஆகவே தாயின் உணர்வே இந்த உடல். இந்த தாயான உடலைக் காக்க வேண்டும்… தாயின் உடலில் பெற்ற உணர்வுகள் தாயான நிலையில் காக்கப்பட வேண்டும் என்று இந்த உண்மையின் உணர்வைப் பெற்றால் மனிதன் தெளிவாகின்றான்.

மனிதன் தெளிவாகும் போதுதான் தெளிந்த உணர்வு கொண்ட உயிராகின்றது. உயிருடன் ஒன்றும் உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது.

அத்தகைய உயர்ந்த நிலையைப் பெற்று குரு காட்டிய அருள் வழியில் பேரின்பத்தைப் பெறுவோம்… பெரு வாழ்வு வாழ்வோம். பிறவியில்லா நிலை அடையும் நிலையாக… முழுமை பெறும் உணர்வை வளர்ப்போம். உலக மக்கள் அனைவரும் இந்த நிலை பெற தியானிப்போம்… தவமிருப்போம்.

உன்னை நான் பார்த்து… என்னில் உன்னைக் கண்டிட… உன்னையே நான் வணங்குகிறேன் ஈஸ்வரா – ஈஸ்வரபட்டர்

 

சாமியார்கள் என்றாலே வேஷதாரிகள்… ஏமாற்றுக்காரர்கள்… சூனியக்காரர்கள்… என்றும் தான் வாழும் வழிக்குத் சாமியார் என்ற வேடம் பூண்டு ஊரை ஏமாற்றுகிறார்கள் என்றும் உருவாக்கி விட்டார்கள்.
1.பல மதங்களைப் பரப்பி
2.பகவானைப் பணிவதற்குப் பல நிலைகளை மக்களுக்கு உணர்த்தி
3.பல கோடி ஜெபங்களை ஜெபித்து
4.ஆண்டவனை வணங்குவதையே மக்களின் மனதில் ஒருவித பயம் கலந்த உணர்வாக உண்டு பண்ணிவிட்டார்கள் இந்தப் பல வழிச் சாமியார்கள்.

இவர்களில் சிலர் பல மந்திரங்களை மக்களுக்குப் புரியாத பாஷையில் ஓதி ஒம குண்டங்களை வளர்த்து அந்த ஓம குண்டத்தில் பொன்.. வஸ்திரம்… பல வகைப் பதார்த்தங்கள்… இன்னும் பலவற்றைப் போட்டு ஓமங்கள் வளர்க்கின்றனர்.

எட்டுத் திக்கிலும் எட்டுப் பூசாரிகளை அமரச் செய்து அவ்வனைவரும் ஒன்று சேர்ந்து அந்த ஆண்டவனைக் கோடியார்ச்சனை என்ற பேரில் புரியாத மொழியில் ஓதுகிறார்கள்.

இந்த வழியில் யாகக் குண்டத்தை வளர்த்து மந்திரங்களை ஓதும் பொழுது தான்
1.அந்த ஆண்டவன் வருவானா அந்நிலைக்கு…?
2.யாருக்காக…? யாரின் நிலைக்காக…?

அத்தகைய சாமியார்கள் மக்களிடமிருந்து பொருள் பெறுவதற்காக யாகம் வளர்த்து மந்திரங்கள் ஜெபிக்கின்றனர். ஆக
1.பொருள் தருபவனுக்கு (மக்கள்) அந்தச் சாமியார்கள் செய்யும் பூஜையில் ஆண்டவன் வந்து அருள் தருவானாம்…!
2.ஆண்டவனுக்கு இவர்கள் (சாமியார்கள், பூசாரிகள்) தூதுவர்களாம்…!

பல ஆயிரம் செலவு செய்து யாக குண்டம் வளர்த்து அந்தப் பூசாரிகளுக்கு அன்னமளித்து பொருள் தந்து அந்த ஆண்டவனை வணங்கினால் இவன் செய்த பாவங்களும்.. இவன் எண்ணமும் மாறி.. அந்த ஆண்டவன் வந்து அருள் புரிவானாம்..!

1.ஊரை ஏமாற்றி
2.உள்ள நிலையைப் புரிந்திடாமல்
3.தன் புகழைப் பரப்பப் பூஜை செய்பவர்கள் தான் பெரும்பாலனவர்களாக உள்ளார்களப்பா…!
4.இவர்களின் நிலைக்கெல்லாம் இந்தப் பல வழிச் சாமியார்கள் பெரும் தூதுவர்களப்பா…!

செய்த பாவத்தைக் கழித்திட பூஜை செய்துவிட்டால் பாவம் தீர்ந்துவிடுமா…? அவர்கள் தான் அதைப் பாவம் என்றே எண்ணுவதில்லையே…!

புகழுக்காகத் தான் சம்பாதித்த செல்வத்தை “அந்த ஆண்டவன் வந்து காப்பாற்றித் தர வேண்டும்…” என்பதற்காக அந்த ஆண்டவன் பெயரைச் சொல்லிப் பல பூஜை செய்கிறார்கள் இந்தப் பாமர மக்கள். “பெரும்பாலான பூஜை முறையே… இப்படித்தானப்பா உலகெங்கிலும் உள்ளது…!”

இந்த மனிதர்களை மாற்றிடவும் நல்வழியில் அழைத்துச் செல்லவும் நல் வழியில் பல சாமியார்கள் (நல் வழிச் சாமியார்கள்) இன்றும் உள்ளார்கள்… அன்றும் இருந்தார்கள்…!

பல ஜெபங்களை ஜெபிக்கச் சொல்லி மக்களின் மனதினிலே நல்ல உணர்வுகளை ஆழமாகப் பதிய வைக்க நல் வழிச் சாமியார்கள் எல்லாம் நாட்டம் கொண்டு நடந்திட்டார்கள்.

இன்னும் சில இடங்களில் சில சாமியார்கள் அந்த ஆண்டவனின் சக்திக்குப் பல வகை நாமங்களைச் சூட்டி புவனேஸ்வரி பூஜை… சௌண்டேஸ்வரி பூஜை… காமாட்சியம்மன் பூஜை…! என்று இன்னும் பல நாமங்களைச் சூட்டி அந்தச் சக்தியின் நிலைக்கே பல யாகங்களை வளர்த்துப் புகை மண்டலங்களை எழுப்பி
1.தான் வாழ தன்னைச் சார்ந்தவர்கள் வாழ தன்னை நம்பி வருபவர்களை வாழ வைக்க
2.இப்படியும் பல நிலைகளைச் செய்கிறார்கள்.

நல்ல மணத்தைக் கொண்ட புகை மண்டலத்தை எழுப்பி அந்த ஆண்டவனை ஜெபிக்கும் பொழுது எந்நிலையில் நாம் ஜெபிக்கின்றோமோ அந்நிலையில் அவர் அவர்கள் ஜெபிக்கும் நிலைக்கு அந்தச் சக்தி நிலை வருகிறதப்பா…!

1.ஆண்டவனை வணங்கிட யாருக்கும் யாரும் தூது வேண்டாமப்பா…!
2.எல்லோருமே அவரவர்கள் நிலைக்குத் தகுந்தபடி அவன் அருளை எப்படியும் பெறலாமப்பா..!
3.அவனவன் எண்ணத்திலும் சுவாசத்திலும் தான் எல்லாமே இருக்கின்றதப்பா…!

ஓ…ம் என்ற நாதத்தில் உருளுகின்ற உலகினிலே
உதித்துள்ள உயிரணுவாக
உன்னையே… நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா…!
உன்னையே… நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா…!

உன்னை நான் பார்த்திடவே
என்னில் உன்னைக் கண்டிடவே
உன்னையே… நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா…!

உன் வழியில் சத்தியத்தை
உன் வழியில் தர்மத்தை
உன் வழியில் நியாயத்தை
உன்னை எண்ணும் இதயத்தில்
ஊன்றிடுவாய் ஈசனின் சக்தியே

ஓ…ம் என்ற நாதத்தில் உருளுகின்ற உலகினிலே
உதித்துள்ள உயிரணுவாக
உன்னையே… நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

விவசாயப் பண்ணைகளில் பல பல உணர்வினை இணைத்துப் புதுப் புது வித்தினை உருவாக்குகின்றார்கள். அவர்கள் கொடுத்த அந்த வீரிய வித்துக்களை வாங்கி நிலத்தில் ஊன்றுகின்றோம்.

அந்தப் பயிர்களைச் சீராக வளர்க்கும் பக்குவப்படுத்தும் முறைகளையும் உபாயத்தையும் அவர்களே கொடுக்கின்றார்கள். அவர்கள் சொன்ன வழியில் செயல்படுத்தும் போது பயிர் செழிப்பாக வளர்கின்றது. நல்ல மகசூலையும் கொடுக்கின்றது.

ஆனாலும் அந்தப் பயிர் இனங்களைப் பக்குவப்படுத்தி வளர்க்கும் போது இடைமறித்துக் களைகளும் முளைக்கின்றது.

களைகளை அகற்றவில்லை என்றால் எவ்வளவு உயர்ந்த தர வித்துகளாக நாம் விதைத்திருப்பினும் அதனுடைய செயலாக்கங்கள் இழக்கப்படுகின்றது. பயிரின் விளைச்சல் குன்றி மீண்டும் தரமான வித்துக்களை உருவாக்க முடியாது.

இதைப் போன்று தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் மெய் ஞானிகளின் அருள் வித்துக்களை உங்களுக்குள் அடிக்கடி உபதேசத்தின் மூலம் பதிவாக்குகின்றோம்… வளர்க்கும்படி செய்கிறோம்.
1.உங்களுக்குள் அருள் ஞான வித்தாக விளைய வைத்ததை
2.ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் பாதுகாத்தல் வேண்டும்.

ஏனென்றால் நம்முடைய இந்த மனித வாழ்க்கையில் பெரும் பகுதி உடலின் இச்சைகளுக்கே நம் எண்ணத்தைச் செலுத்தி வாழ்ந்து வருகின்றோம்.

இதை எதற்குச் சொல்கிறோம் என்றால் தியானம் இருக்கும் பொழுது எதை எல்லாம் நாம் எதிர்பார்க்கின்றோம்…! என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நான் செய்யும் இந்தத் தியானத்தின் மூலம்
1.என் உடல் நலம் பெற வேண்டும் என்றும்
2.எனக்குத் தொழில் வளம் பெருக வேண்டும் என்றும்
3.நான் எண்ணியது எல்லாம் இந்த உடலின் வாழ்க்கைக்கு நடக்க வேண்டும்…! என்றும் ஏங்குகின்றோம்.

அது கிடைக்கவில்லை என்றால் “என்னத்த… நான் தியானத்தைச் செய்தேன்…! தியானம் செய்து… செய்து எனக்கு என்ன கிடைத்தது…? ஒன்றும் நடக்கவில்லை…! என்று இந்தச் சோர்வான உணர்வினை எடுத்துக் கொள்கிறார்கள்.

அது மட்டுமல்ல…! அவர்கள் பெறவில்லை என்றாலும்… தியானம் செய்யும் அடுத்தவர்களிடமும் சென்று “இத்தனை காலமாக நீங்கள் தியானம் செய்கிறீர்கள் அல்லவா…! அதில் என்ன பெற்றீர்கள்…?” என்று இவர்களே கேட்கத் தொடங்குகின்றார்கள்.

தான் எதிர்பார்க்கும் நிலைகளுக்கு…
1.இந்த உடலின் இச்சையை வளர்ப்பதற்குத் தான் தியானம் இருக்கிறோம் என்ற எண்ணங்களில் இருக்கின்றோமே தவிர
2.இந்த மனித உடலை விட்டுக் கடந்தால் எங்கே செல்ல வேண்டும்…?
3.அதற்கு எந்தச் சக்தியைச் சேர்க்க வேண்டும்…? என்ற எண்ணமே இல்லை.

உடல் பெறும் உணர்வுகளை மாற்றி என்றுமே அழியாத ஒளி உடலை நாம் வளர்க்க வேண்டும் என்பதைத் தான் யாம் (ஞானகுரு) சொல்லிக் கொண்டு வருகின்றோம்.
1.இதை வளர்க்க வாழ்க்கையில் வரும் அனைத்துத் துன்பங்களும் அகலும்.
2.(சீராகக் கடைப்பிடிப்பவர்கள் இதை நிச்சயம் உணரலாம்)

அதை விடுத்து விட்டு சாமி (ஞானகுரு) சொல்கிறார். தியானத்தையும் செய்தோம். அப்படியானால் ஏன் இது நடக்கவில்லை…? என்பார்கள்.

இது ஏன் என்றால் இரண்டு ஆசை இருக்கும். எப்படி…?

அதாவது பிள்ளைக்கு நல்ல இடத்தில் கல்யாணம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்குண்டான நிலைகளைச் செய்து கல்யாணம் நடந்து முடிகின்றது.

திருமணம் முடிந்தாலும் யாம் உபதேசத்தின் வாயிலாகச் சொல்லி வந்த ஞானிகளின் அருள் உணர்வுகளை வாழ்க்கையில் நடக்க வேண்டிய அந்தப் பக்குவத்தை குழந்தைகளுக்கும் கண்டிப்பாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

அதைச் செய்வதில்லை…! பிள்ளை மேல் மிகுந்த பாசமாக இருந்து கொண்டு மருமகன் தன் பிள்ளையை ஏசி விட்டால் போதும்…!
1.நல் வழியில் நடக்கும் உணர்வுகளை ஊட்டுவதற்குப் பதில்
2.எதிர்ப்பு உணர்வு கொண்டு வெறுக்கும் உணர்வுகளையே வளர்க்க நேர்கின்றது.

அப்படி வளர்த்துக் கொண்ட பின் சாமி சொன்ன வழியில் நாம் தியானம் இருந்தோமே… இப்பொழுது என்ன ஆனது…? சாமி ஆசீர்வாதம் செய்து தானே திருமணம் நடத்தினார்…!

அப்படியானால் மகளுக்கும் மருமகனுக்கும் ஏன் ஒருவருக்கொருவர் சண்டை வருகிறது…? என்ற வினாக்களை எழுப்பி புவியின் ஈர்ப்பின் பற்றுதலுக்கே நாம் வந்து விடுகின்றோம்.

வெறுக்கும் உணர்வையும் தியானத்தின் உணர்வையும் இது இரண்டையும் இணைத்து “நல்லது நடக்கவில்லையே…!” என்ற இந்த உணர்வினை நாம் நுகரப்படும் போது ஓ…ம் நமச்சிவாய…! அதைத்தான் நமக்குள் உருவாக்கிக் கொள்கிறோம்.
1.எந்த வெறுப்பையும் கோபத்தையும் எண்ணி இந்த உணர்வை நுகர்ந்தோமோ
2.அந்த அணுவாக உருவாக்கிவிடுகின்றோம்.

இந்த உணர்வின் சத்தை வளர்த்து அதை உணவாக நம் உடலிலுள்ள அணுக்களுக்குக் கொடுக்கும் பொழுது அது அந்த இனத்தைத் தான் பெருக்கும்.

அப்புறம் நீங்கள் எங்கேதான் போனாலும் கூட உயர்ந்த சக்தியைப் பெறுவதற்கு மாறாக தன்னையே இழி நிலைச் சரீரம் பெறும் நிலைக்கே இழுத்துக் கொண்டு போகும்.

எண்ணியது நடக்கவில்லை எனறால் வேதனை என்ற உணர்வை நுகர்ந்து விஷத்தின் தன்மையைத் தான் வளர்க்க முடியும்.

முதலில் சாதாரணமாக இருக்கும் போது அந்த விஷம் வேறு. ஆனால் தியானமும் செய்துவிட்டு தான் எண்ணியபடி நல்லதைப் பெற முடியவில்லை என்ற ஆசையின் நிலைகளில் செல்லும் பொழுது கடும் வேதனையாகின்றது.

இத்தகைய உணர்வுகளை உருவாக்கப்படும் போது முதலில் இருந்ததைக் காட்டிலும் விஷத்தின் தன்மையை அதிகமாக வளர்த்து விஷப் பூச்சியாக நம்மை மாற்றும் தன்மையைத்தான் பெறுகின்றோம் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.

ஆகவே இந்த உடலின் இச்சைக்குள் தான் இந்தத் தியானத்தைக் கொண்டு வருகின்றோமே தவிர
1.இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல.
2.எத்தனை காலம் இந்த உடலில் நாம் வாழ்கின்றோம்…! வளர்கின்றோம்…? என்ற தெளிவான எண்ணங்கள் இல்லை.

உடலை விட்டுப் பிரிந்தால் இனிப் பிறவி இல்லா நிலைகள் அடைய வேண்டும் என்பதற்குத்தான் நாம் இதைச் செயல்படுத்துகின்றோம்.
1.இந்த உடலில் நீங்கள் கோடி சுகத்தைப் பெறுங்கள்
2.முதலில் டாக்டரை வைத்தாவது இந்த உடலில் உள்ள எல்லா நோயையும் நீக்கிக் கொள்ளுங்கள்…!
3.அப்புறம் எத்தனை காலம் இந்த உடல் வாழுகின்றது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
4.ஒரு சில காலத்திற்கே வாழுகின்றது. பின் இந்த உணர்வின் தன்மை முதிர்வாகி இறந்து விடுகின்றது.

இதை இல்லை என்று யாராவது மறுக்க முடியுமா…?

நம் ஆன்மாவில் தீமை உருவானால் அதை “முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும்”

உதாரணமாக நாம் வசிக்கும் இடத்தில் ஒரு வேப்பமரத்தின் வித்து கீழே விழுந்தால் அது முளைத்து வளர்ந்து மரமாகி விட்டால் பின் அதை வெட்டுவதற்கு அரிவாள் கோடாரி எல்லாமே தேவைப்படுகின்றது.

பந்தோபஸ்தாக அதை அப்புறப்படுத்துவதற்கு எத்தனையோ ஆள்களும் தேவைப்படுகின்றது. நம் வீட்டுப் பக்கம் விழுந்து சேதாரம் ஆகாதபடி அதையும் நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது. அப்போதுதான் அதை வெட்ட முடியும்.

இதைப் போன்றுதான்
1.நம் ஆன்மாவில் தீமை உருவானால் அதை முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும்
2.தீமைகளை நமக்குள் வளரவிடக் கூடாது.
3.அதற்காக வேண்டித் தான் தியானத்தின் மூலம் உங்களுக்கு உயர்ந்த சக்திகளைக் கொடுக்கின்றோம்.

நமக்கு முன் இருக்கும் இந்தக் காற்றிலே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி இருக்கின்றது. அதை எடுத்து வளர்த்துக் கொண்டால் உங்களைக் காக்கும் சக்தியாக அது நிச்சயம வரும்.

உதாரணமாக… ஜோசியக்காரன் நம்மிடம் ஏழரை நாட்டுச் சனி பிடித்திருக்கிறது. அதனால் பணம் விரயமாகும் தொழில் நஷ்டமாகும் எதிரிகள் அதிகமாக வருவார்கள் என்று சொல்வார்கள். அதைப் பதிவு செய்து விட்டால் ஜோசியக்காரன் சொன்னபடி தான் இங்கே உணர்வின் இயக்கம் ஆகின்றது.

அந்த அடிப்படையில் தொழில் செய்தால் அது நஷ்டமாகி விடுகிறது… இடைஞ்சல் தான் வருகின்றது.

ஒரு சிலர் (ஜாதகம் பார்ப்பவர்கள்) இதையே குறிப்பாகப் பார்த்து எடுத்துக் கொள்வார்கள். இந்த உணர்வுகள் வளர்ச்சியாகிச் சொன்னவுடனே அதைக் கேட்டவுடன் நமக்குள் பதிவாகின்றது. இதெல்லாம் வாக்குவன்மை தான்…!

ஜோசியக்காரன் சொன்னதை நுகர்ந்தால் உடலில் பதிவாகிறது.
1.நல்லது சொன்னால் ஓரளவுக்குப் பலிக்கலாம்
2.ஆனால் கெட்டதை அதிகமாகச் சொல்லி விட்டால் அது அதிகமாகிறது.
3.(பெரும் பகுதி ஜோசியக்காரர்கள் நல்லதை அதிகம் சொல்வதில்லை).

கெட்டதை எல்லாம் சொல்லிவிட்டுக் கடைசியில் சாங்கியத்தைச் செய்தால் நீக்கி விடலாம் என்று அதையும் சொல்வார்கள். அவன் சொன்னபடி காசைக் கொடுத்துத்தான் நீக்குவதற்குப் பார்க்கின்றோம்.

இருந்தாலும் அப்படி ஜாதகமும் ஜோதிடமும் பார்க்கும்போது
1.ஒரு விபரீத விளைவுகளைச் சொன்னார்கள் என்றால் அதனால் நாம் அதிர்ச்சி அடைந்து விடுகின்றோம்.
2.ஆக மொத்தம் காசு கொடுத்துத் தான் தீமைகளை நீக்க வேண்டும் என்ற நிலை வருகிறது.

ஆனால் நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ அதைத்தான் உயிர் இயக்குகின்றது. இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றிச் சென்ற அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து நம் உடலுக்குள் அதை ஏங்கிப் பெற்றால் உயிர் அதனின் கருவை உடலிலே உருவாக்குகின்றது.

அந்த மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து வளர்க்கத் தொடங்கினால் தீமையான உணர்வுகளை மாற்றி அமைக்கலாம். ஞானிகள் காட்டிய வழிகள் இது தான். பல சரக்குகளைப் போட்டு ஒரு குழம்பை எப்படிச் சுவையாக வைக்கின்றோமோ அதைப் போல் நல்லதாக மாற்ற முடியும்.

ஆறாவது அறிவின் துணை கொண்டு பல உயிரினங்களின் அணு செல்களை எடுத்துப் புது விதமாக பல பல உயிரினங்களை விஞ்ஞானி மாற்றியமைக்கின்றான். விஞ்ஞானிகள் செய்வதை எல்லாம் இன்று நாமும் பார்க்கின்றோம்.

அதைப் போன்று தான் அந்த அருள் உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டால் பகைமை உணர்வுகளையும் தீமையான உணர்வுகளையும் மாற்றிவிட முடியும்.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்றால் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ வெறுப்பு வேதனை கோபம் எல்லாம் நம்மை அறியாமலே வருகின்றது. அதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும். நம்மை நாம் அறிதல் வேண்டும்.

1.பிறிதொரு உணர்வு எப்படி இயக்குகின்றது…?
2.அந்தப் பிறிதொரு தீமையான உணர்வு நமக்குள் புகாது எப்படித் தடுக்க வேண்டும்…?
3.அதற்குண்டான உபாயங்களையும் சக்திகளையும் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உபதேசமாகக் கொடுக்கின்றோம்
4.அதை நீங்கள் எடுத்தால் நிச்சயம் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

மெய் ஞான விழிப்புப்படுத்தும் திறவுகோல் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இன்றைய உலகில் பல வகையான வாகனங்கள் உண்டு. ஒவ்வொன்றும் மனிதன் தனது எண்ண ஆற்றல் கொண்டு வேகமாகச் செல்லும் நிலைக்கு உருவாக்கப்பட்டது தான்.

ஆக அந்தந்த வாகனங்களின் கதிக்கொப்ப அது ஓடுவதைப் போன்று
1,மனித ஆற்றலின் உந்து விசையையும் அதிகப்படுத்தினால்
2.வேகம் கூட்டும் வாகனங்களின் ஆற்றலின் அறிவுத் திறன் வளர்ந்ததைப் போல்
3.மெய் ஞான வளர்ச்சியில் விருப்பப்பட்டுப் பயணிக்கும் பாதையே மனித சக்தியைக் கூட்டும் எண்ண ஆற்றல் ஆகும்.

உலகம் எப்படித் தன் ஈர்ப்புப் பிடிப்புடன் தன் வளர்ப்பின் செயலுடன் சுழன்று வருகிறதோ அதைப் போல்
1.நம் உயிராத்மாவை இந்தப் பூமியின் ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபட்டுச் செல்ல
2.தன் எண்ணத்தின் உந்து விசையால் நீரமிலக் காற்றில் விண்ணுலக ஒளி அமிலத்தைச் சுவாசத்தால் உடல் எடுக்க
3.நாம் மேற்கொள்ளும் தவத்தின் தனித்துவத்தால் தரணியின் மெய்யை உணர்ந்து
4.மெய் ஞான விழிப்பெய்த மூல நாடியாக மூச்சலையின் சக்திதனை மூலமாக்கிய மகரிஷிகளின் சக்திகளை
5.நாமும் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

உணர்வின் எண்ணத்தில் செழிப்பின் ஆசைதானப்பா மனிதச் செயலின் மூலாதாரமே. ஆனால் வித்தை காணும் ஆசை ஓட்டத்தில் “பேராசையின் எண்ணம் கொண்ட விளைவுதானப்பா…” இன்றைய மனித நிலை.

யுகங்கள் யுகங்களாக மகரிஷிகளின் தொடர்பலைகள் வளர்ச்சியின் செயலுற்று அவர்கள் வழி வகுத்துத் தந்த அந்த மெய்ஞான விழிப்பே மனிதனின் ஞானத்தின் வளர்ச்சிக்குச் செயலாற்றும் “திறவு கோல்” ஆகும்.

இன்றைய விஞ்ஞான கலியுகத்தில் மனித ஞானத்தை விழிப்புறச் செய்ய மெய் ஞானிகள் கொண்ட ரிஷிகளின் தொடர் அலையின் கருத்தின் கோர்வைகளை… அவகள் கண்ட உண்மைகளை இங்கே தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்துள்ளோம்.

செடி கொடிகள் எப்படித் தனக்கொத்ததை ஈர்த்து… வளர்ந்து… விளைந்த பின் பலன் தருவதைப் போல் நாமும் அந்த மாமகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நம்முடைய சுவாச அலையின் செயல் தன்மையைச் சீராக்கிடல் வேண்டும்.

1.இதைப் படித்துப் பதிவாக்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் தெய்வ சக்தி பெற்று
2.இந்தப் பூமியின் சுவாச கதியில் ஒளிச் சரீரமாக உங்கள் ஆத்ம உயிரை மெய் ஞான விழிப்புப்படுத்துங்கள்
3.விஞ்ஞானத்தால் உருவான நஞ்சினை அகற்றும் வல்லுநராக நீங்கள் மாறுங்கள்…
4.ஒளியான அண்டத்தையே உங்களால் படைக்க முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இந்த மனித வாழ்க்கையில் நாம் தவறே செய்ய வேண்டியதில்லை. ரோட்டில் போகும் பொழுது எத்தனையோ விதமான நிலைகளைப் பார்க்கின்றோம். விபத்துக்களையும் பார்க்க நேருகின்றது.

சந்தர்ப்பம் நமக்கு முன்னால் ஒருவர் போய்க் கொண்டிருப்பார். அதைப் பார்த்தபின் நம் கூட வரும் நண்பரிடம் சொல்லிக் கொண்டிருப்போம்.

“பார்… எப்படி ரோட்டின் குறுக்கே போய்க் கொண்டிருக்கின்றான்…? கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா…!” என்போம்.

ஆனால் இப்படியே சொல்லிக் கொண்டிருந்தாலும் கூட இந்த உணர்வின் நிலைகள் நம்மையும் இயக்கி நாமும் நடு ரோட்டில் போய்க் கொண்டிருப்போம்.

நாம் போவது நமக்கே தெரியாது. நம் பக்கத்தில் பஸ் வரும் பொழுது தான் நாம் உணர முடிகின்றது.

இந்த உணர்வின் அலைகளைப் “பின்னி வராதபடி” தடுத்துக் கொள்வதற்குண்டான ஆற்றல் நமக்கு அந்தச் சக்தி இல்லை.

ஏனென்றால் அந்த விஷத்தின் அலைகள் கொண்டு எதிலே செல்கின்றோமோ அதன் வழியில் நம்மை அறியாமலே அழைத்துச் சென்றுவிடும்.

விஞ்ஞான அறிவுப்படி நீங்கள் எதை எடுத்துக் கொண்டாலும் பௌதீக நிலைகளில் எடுத்துக் கொண்டாலும் உங்கள் வாழ்க்கையில் பார்க்கலாம்.

நமது வாழ்க்கையில் நம்மையறியாது புகுந்திருக்கும் நிலைகளிலும் நாம் தவறு செய்யாது நஞ்சு கொண்ட உணர்வுகள் படர்ந்து கொண்டிருக்கும் இன்றைய நிலைகளிலும்
1.பிறர் செய்யும் தவறுகளையோ
2.பிறர் செய்யும் குற்றங்களையோ
3.பிறர் படும் வேதனைகளையும் உற்றுப் பார்த்துப் பதிவு செய்து கொண்டால்
4.அதனதன் உடல்களிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் இங்கே வரத்தான் செய்யும்,
5.நம் முன் (ஆன்மாவாக) நிற்கத்தான் செய்யும்
6.சுவாசித்த உணர்வுகளை நம் உயிர் இயக்கி உணர்த்தத்தான் செய்யும்.
7.அது நமக்குள் தீமையின் விளைவாக விளையத்தான் செய்யும்.

இத்தகையை தீமையான விளைவுகளை மாற்றியமைக்கவில்லை என்றால் நம்முடைய நல்ல குணங்கள் வலுவிழந்து விடும். அப்பொழுது அதற்குத்தக்க தான் நாம் நியாயத்தைப் பேசுவோம்.

உலகம் கெட்டுவிட்டது. நல்லதுக்குக் காலமில்லை என்று நம் உணர்வுகளை இப்படி இயக்கிவிடும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

சூரியன் செடி கொடிகளின் சத்துக்களை எடுத்து இந்தக் காற்று மண்டலத்தில் வைத்துக் கொள்கிறது.

செடியில் விளைந்த வித்தைப் பூமியில் விதைத்தால் அந்த பூமியின் ஈர்ப்பின் துணை கொண்டு தன் தாய் செடியின் சத்தை நுகர்ந்து அதன் உணர்வுகொப்ப அதன் மணமும் குணங்களும் அதன் உணர்ச்சிக்குத்தக்க அந்தச் செடியின் ரூபமும் வருகிறது.

இந்தப் பூமியைப் போலத் தான் நம் உடல்.

சூரியன் எப்படி மற்ற தாவர இனங்களை வளர்க்கச் செயல்படுகின்றதோ அதுபோல நம் உயிரால் உருவாக்கும் நிலைகள் உடலிலே ஜீவ அணுக்களை உருவாக்குகின்றது.

எந்த உடலில் விளைந்த கோபமோ வெறுப்போ வேதனையோ அதனதன் எண்ணங்களாக வெளி வரும் போது இது பல பல வித்துக்களாக மாறும்.

1.கண் கொண்டு கூர்ந்து பார்க்கும் நமக்குள் போது பதிவாகிறது.
2.பதிவான நிலைகளை ஈர்க்கும் சக்தி பெறுகிறது நம் கண்ணின் காந்தப் புலனறிவு.
3.நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டு அந்த உணர்வின் தன்மை தன் உடலிலே அணுவாகப் பெருகத் தொடங்குகிறது.

உருவான அணு தன் இனமான உணர்வை ஈர்க்கும் சக்தி பெற்று அதைக் கவரத் தொடங்குகிறது. அந்த அணுவுக்குத் தேவையான உணர்வை எடுத்துக் கொடுத்து வளர்ப்பது நம் உயிர் தான்.

நுகர்ந்த உணர்வின் அந்தச் சத்துகள் நம் உடலிலே பெருகப் பெருகப் பெருக நம் உடலிலுள்ள மற்ற நல்ல குணங்கள் கொண்ட அணுக்களுக்கு இது இடைஞ்சலாக வரும்.

உதாரணமாக கருவுற்றிருக்கும் போது வெறுப்புணர்வு கொண்ட உணர்வுகளைத் தாய் கவர்ந்திருந்தால் சந்தோஷமாக அதை உணவாக உட்கொள்ளும். அந்த அணுக்கள் பெருகும்.

அதே சமயத்தில் இந்த உணர்வுகள் இரத்தத்தில் அதிகமான பின் மற்ற நல்ல அணுக்களுக்கு நல்ல உணர்வுகள் இரத்தத்தில் வரவில்லை என்றால் என்ன ஆகும்…? போர் முறை தான்…!
1.ஆக தாய் கருவில் பெற்ற நிலைகளே நமக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து
2.அதன் வழியிலேயே நாம் செயல்படுகின்றோம்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் தியானம் இருந்தோம் என்று சொல்லிவிட்டு எதிர்த்த வீட்டில் சண்டை போட்டார்களென்றால் அந்தச் சண்டையைக் கொஞ்ச நேரம் நம்மை அறியாமல் நுகர்ந்தால் போதும்.

சண்டை போடுவதை உற்றுப் பார்த்த உடனே
1.நம்மை அறியாமலேயே நமக்கு அந்த உணர்ச்சியின் வேகங்கள் வரும்.
2.உணர்ச்சிகளைத் தூண்டி அதே எண்ணங்கள் வரும். அந்தச் செயல்களும் வரும்.
3.நம் உடலிலுள்ள நல்ல அணுக்கள் இயங்க மறுக்கும்.
4.மறுக்கும் போது நம்மை அறியாமலே ஒரு விதமான இனம் புரியாத எரிச்சல் வரும்.

குழம்பில் காரம் அதிகமாகப் போட்டால் எப்படி இருக்கும்…? அதே போல இந்த உணர்ச்சிகள் நம் உடலில் வந்த உடனே அதே உணர்ச்சியின் எண்ணங்களால் நம் சிந்திக்கும் ஆற்றல் குறையும்.

பதிலுக்கு எப்படியும் எதையாவது சொல்ல வேண்டும் என்ற உணர்வைத் தூண்டும்.
1.அந்த உணர்வைத் தூண்டிய உடனே அவர்களோடு நாம் சண்டைக்குப் போனால்
2.சண்டையிட்டால் “இவருக்கு என்ன வந்தது…?” என்று நம்மிடம் கேட்பார்கள்.

அவர்கள் சண்டை போடும் போது நாம் பார்த்தோம். அதற்கு முன் அவர்கள் எதற்காகச் சண்டை போட்டுக் கொண்டார்கள்…? என்று நமக்குத் தெரியவில்லை.
1.ஆனாலும் சண்டையைப் பார்த்த உடனே அந்த உணர்வுகள் நம்மை இயக்குகிறது.
2.இயக்கினாலும் பொது வாழ்க்கையில் நாம் யார் யாரோ எப்படி எப்படியோ நாம் பழகத் தான் செய்கிறோம்.
3.ஆனால் நல்லதை நாம் பெறுகின்றோமா… வளர்க்கின்றோமா…?

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

“ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு பிரேக் (BRAKE) போட்ட மாதிரி சண்டை போடும் உணர்வை நமக்குள் புகாதபடி நிறுத்த வேண்டும்.

நிறுத்திய உடனே நம் உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் கொண்டு வந்து விட வேண்டும்.

இது கூடிவிட்டால் சண்டை போட்டவர்களின் உணர்வு நம்மை இயக்காது.

பின் மகரிஷிகளின் அருள் சக்தி சண்டையிட்டவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும். அவர்கள் பொருளறிந்து செயல்படும் அருள் சக்தி பெற வேண்டும். பகைமைகள் அகன்று ஒற்றுமை உணர்வுடன் வாழ வேண்டும் என்று இத்தகைய உணர்வுகளைப் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.

நடப்பதெல்லாம் நம் நன்மைக்குத் தான்..! என்பது வெறும் சொல் அல்ல – ஈஸ்வரபட்டர்

வாழ்க்கையில் வரும் மோதல்களில் இருந்து
1.சஞ்சலமற்ற… சமமான நிலை பெற்றிட வேண்டும் என்றால்…
2.எண்ணம் பரிசுத்தமாக நிலை பெற வேண்டும் என்றால்… எடுக்க வேண்டிய முயற்சி
3.நுண்மின் காந்த ஒளியைத் தியானத்தின் மூலம் ஈர்த்துக் கொள்வதே ஆகும்.

பஞ்சேந்திரியங்கள் கொண்டு உணர்ந்திடும் தன்மை போல் ஆத்ம வலுவின் தொடருக்கு மனத் திறன் பெறவேண்டும். மனத் திறன் என்றால் என்ன…?

1.மனச் செவி
2.மனச்சுவை
3.மனத்தால் மணம் நுகர்தல்
4.சகலமும் பேரின்பமாக ஆனந்தத்தில் என்னும் மனஸ்பரிச உணர்வு என்ற இவை அனைத்தும்
5.ஸ்தூல (திட) சரீரம் கொண்டு சூட்சம ஒளிச் சரீரம் பெற்றிடும் அகச் செயலில் வலுக் கொள்ளும் நிகழ்வுகளப்பா…!

அனைத்திற்கும் தியானமே மூல காரணம்.

மூல காரணம் எனும் ஊன் தன்மையாகச் சரீரம் முழுமைக்கும் மெய் ஒளி பரவி உயிரான்ம சக்தியாக லிங்க உடலாக வெளித் தோன்றாத் தன்மையாக “என்றும் நிலை பெற முடியும்…”

ஆகவே அந்த ஆதிசக்தியுடன் ஒன்றிடும் சக்தி பெற வலுவின் வலுவாகும் மூலச்சக்தியின் குணத் தன்மைகளை உணர்ந்து கொள்ளும் பொழுது இந்த மானிடப் பிறவி… “கிடைத்தற்கரிய பிறவியாக அமைகிறது…!”

ஜீவன் பெற்று எத்தனையோ பிறவிகள் பெற்றே வாழ்ந்திடும் உயிர்த் தொகைகளின் சுவாச அலைகள் ஒலி ஒளி அலைகளாகக் காற்றில் பரவிப் படர்ந்தே உலவிக் கொண்டே உள்ளது.

பகுத்தறியும் ஆற்றல் கொண்ட மனிதனின் பரபரப்பாக வாழும் வாழ்க்கைக் தொடர் என்ற இன்றைய கால கட்டத்தில்… தான் கொண்ட எண்ணங்களுக்கொப்ப காற்றிலே கலந்த அந்தச் சுவாச கதியை ஈர்த்து வினைச் செயலாகப் பற்பல வாழ்க்கை அனுபவங்களில் பெற்ற பயன் தான் என்னப்பா…?

1.சுவாசிக்கும் சுவாசமானது… சரீரத்தினுள் அமையப் பெற்றுள்ள முக்கிய நாடிகளில் ஓடி
2.சிரசில் அமைவுற்ற கட்டளைக் கேந்திர நாடிகளுடன் தொடர்பு கொண்டு
3.புறத் தொழில் கதிப்படும் உறுப்புகளாகிய கண் காது மூக்கு வாய் இவைகளில் ஓடி
4.அக்கினி கேந்திரமாகிய மூலாதாரம் எனப்படும் குதகுய்ய நாடிகளுடன் இணைந்து செயல்படும் செயலில்
5.அந்தந்த அவயங்களில் அமைவுற்ற காற்றுகள் தம் தம் செயலுக்கு உறுப்புகளின் நாடி வழியாக ஓடி
6.உடலுக்கு வெப்பத்தை உயிர் ஜீவனாக அளித்திடும் மூலாதார நாடிகளிலே
7.சரீர இயக்கத்தின் வினைச் செயல் மனிதன் கொண்ட எண்ண நிலைக்கொப்ப அனைத்துச் செயல்களும் நடைபெற்று ஓடிக் கொண்டுள்ளது.

செவிகளில் வலம் இடமாக ஓடிடும் நாடிகள் ஓர் ஓசையின் அலைகளால் மோதுண்டவுடன்
1.அந்த ஓசையின் பொருளை அந்தக் கணமே அறிந்து கொள்ளும் மிக நுண்ணிய கால அளவில்
2.சரீரத்தினுள் முக்கிய நாடிகளின் ஈர்ப்பின் செயலாக மூச்சலைகள் ஓடி
3.சிரசின் கட்டளைக் கேந்திரத்தில் பிடர்தல் (என்ற) ஓசைகள் மோதியவுடன் – செவியில் ஏற்படும் அதிர்வுகளில்
4.அறிந்து கொண்டிடும் அறிவாக மூலாதார அக்கினியின் தொடர்பு உண்டப்பா…!

வெப்பத்தாலோ மின்சாரத்தாலோ செயலுறும் இன்றைய இயந்திரங்கள் எதையும் ஒப்பிட முடியாத மனோசக்தித் திறன் தியானத்தின் மூலம் எடுக்கும் மிக மின் நுண் காந்த அலைகளால் செயல்படும் நிலை உணரத்தக்கது.

இந்தச் சரீர வாழ்க்கையில் எதிர் மோதல் ஏற்படும் கால கட்டங்களில் செவி நாடிகள் நம் ஆத்மாவின் பதிவுச் செயலுக்கு முக்கிய பங்கேற்கின்றன.

1.எண்ணங்களில் மோதல்களால் (உணர்வுகளால்)
2.கனம் கொண்ட சுவாச அலைகளைச் சுவாசமாக ஏற்க வேண்டிய சந்தர்ப்பங்களில் எல்லாம்
3.உடனுக்குடன் உயர் மின் நுண் காந்த அலைகளை ஈர்த்து
4.அனைத்துமே நமக்கு நன்மை அளித்திடும் செயலே…! என்ற மனதின் திடம் கொண்டு
5.“சுபம் சுபம் சுபம்…!” என்ற ஒலி நாதத்தை ஏற்படுத்தி
6.நம் ஆத்ம பதிவில் நல்மதியின் உயர் ஞான ஒளியாக
7.”ஆத்மாவின் மூலம்” வலுப் பெறவேண்டுமப்பா..!

ஏனென்றால் உயர் ஞானமாக ஆக்கப்படும் செயல் அனைத்தும் நன்மையே…!

சுபம்… சுபம்… சுபம்…!

உங்கள் பார்வை அனைவரது நோய்களையும் போக்கக்கூடிய சக்தியாக மலரட்டும்

இன்றைய விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கையாக வாழ்ந்து… விஞ்ஞான அறிவால் பூமியில் தீயவினைகள் பரவியிருக்கும் இந்த நேரத்தில்
1.மகரிஷிகளின் அருள் சக்தியை ஒவ்வொருவரும் பெற்று… அருள் ஞான வாழ்க்கை வாழ்ந்திடவும்
2.நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து பேரின்பப் பெரு வாழ்வு வாழ்ந்திடவும்
3.சர்வ பிணிகளையும் அகற்றும் சக்தி பெற்று சர்வ நஞ்சுகளையும் வென்றிடும் அருள் சக்தி பெற்று
4.உலக மக்கள் அனைவரையும் அருள் சக்தி பெறச் செய்யும் அருள் சக்தி நீங்கள் பெற
5.எமது அருளும் அகஸ்தியனின் அருளும் உறுதுணை செய்யும்.

உங்கள் பார்வையில் சர்வ பிணிகளையும் போக்கிடும் அருள் சக்தி பெறுவீர்கள். உங்களைப் பார்ப்போர் அனைவரையும் நலம் பெறச் செய்யும் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள்.

நீங்கள் பார்ப்போர் அனைவரும் அவர்கள் உடல் நலம் பெற்று மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெற்றிட… குரு அருளும் எமது அருளும் உறுதுணை செய்யும்.

மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் அனைவரும் வாழ்வோம் இருளை வென்றிடும் மெய்ப்பொருள் காண்போம். அருள் வாழ்க்கை வாழ்ந்து அருள் ஞானம் பெறுவோம். தெளிந்த மனத்துடன் வாழ்வோம். மலரைப் போல மனம் பெற்று மகிழ்ந்து வாழும் சக்தியுடன் வாழ்வோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரும் பெற்று மகிழ்ந்து வாழும் சக்தியாக நாம் பெறச் செய்வோம். உலக மக்கள் அனைவரும் நலம் பெற்று விஞ்ஞான அறிவால் விளைந்த சர்வ நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற நாம் தியானிப்போம்.

உலக மக்கள் அனைவரும் அருள் ஞானம் பெறும் சக்தியாக ஒன்றுபட்டு வாழ்ந்திடத் தியானிப்போம்.

1.இனி வரும் காலங்களில் மெய் வழி செல்லும் மெய் வழி பெறும் அருள் ஞான வாழ்க்கையாக நாம் வாழ்வோம்.
2.உலக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்திட நாம் தியானிப்போம்… தவம் இருப்போம்

உலக மக்கள் அனைவரும் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிடும் அருள் உணர்வு பெற நாம் தவம் இருப்போம். அருள் வழி வாழ்வோம்… அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்திடும் அருள் ஞானம் பெற நாம் தவம் இருப்போம்..!

நம் எண்ணங்களை ஒருநிலைப்படுத்துவதற்குத் தான் தியானம்…! – ஈஸ்வரபட்டர்

1.கண் கொண்டு பார்த்தல் (காட்சிகளும் காட்சிப் புலனறிவும்)
2.நாசி கொண்டு சுவாசித்தல் (சுவாச ஓட்ட வாசனைகளை அறிந்திடும் அறிவு)
3.வாய் கொண்டு சுவைத்தல் (சுவை குண அறிவு செயல்பாட்டில் உணர்தல்)
4.செவிப்புலனறிவு (ஓசைகளின் தன்மைகள் தெளிதல்)
5.தொடு புலனறிவு (ஸ்பரிசித்தலில் உணர்வு கொண்டு அறிந்து கொள்தல்) என்ற
6.இந்த ஐந்து பஞ்சேந்திரியங்கள் மனித உடலுக்குள் செயல்படுகின்றன.

அவைகள் செயல்படும் நிலையில் புறத்திலிருந்து வரும் மோதல்கள்… அந்த அமில குணத்தன்மைகளை அவயங்கள் தம் தம் செயலுக்குச் சரீரத்தின் கட்டளைக் கேந்திரமாகச் “சிரசின் உச்சிப் பகுதியில்…” செயல் கொண்டே உள்ளது.

ஆகவே அகச் செயலாகச் சுவாச ஓட்டங்களின் தொடருக்கு
1.நொடிக்கும் குறைவான கால ஓட்டமாகச் செயல் கொண்டு
2.சரீர இயக்கமே ஆத்ம ஒளியால் பகுத்தறிவு எனும் ஞான தீபமாகச் செயல் கொண்டு
3.அறிதல்… உணர்தல்… தெளிதல்… என்றிட்ட முத்தொடர் செயலில்
4.ஆக்கபூர்வமானவனாக நாம் ஆகுதலே மெய்ஞான விழிப்பு.

அந்த அகச் செயலில் எண்ணத்தின் கூர்மையை ஒரு நிலைப்படுத்தப்படும் பயிற்சி வழித் தொடர்பே தியானம் ஆகும்.

மனம் ஒருநிலைப்பட்டபின் தான் தியானம் என்றால் எப்பொழுதப்பா உன் மனதை ஒருநிலைப்படுத்தப் போகின்றாய்…?

தியானத்தில் அமர்ந்தவுடன் வந்து வந்து மோதிடும் “வாழ்க்கைச் சாகர எண்ண நிலைவோட்ட அலைகள்” படிப்படியாக விலகி மனதின்கண் அமைதி கொள்ளவே இந்த எளிய தியானத்தைக் கொடுக்கின்றோம்.

நாங்கள் “ஆத்ம பலம் பெற வேண்டும் ஈஸ்வரா…” என்றே புருவ மத்தியில் எண்ணித் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளியை ஈர்த்து எண்ணத்தின் வலுவைப் பெற்று விட்டால்
1.உயிராத்மாவின் பேரானந்த நிலையைச் சொல்லால் விளக்கிக் கூற முடியாது
2.“உணர்ந்தறியும் அனுபவ ஞான ஆனந்த நிலையே நித்திய சுபம்…!”

சொர்க்கத்தை அடைய வேண்டும் என்று முயற்சித்தவர்களில் “முழுமை அடையாதவர்கள் உணர்வு நம்மை இயக்கிவிடக் கூடாது”

இயற்கையின் நியதிகள் எவ்வாறு இயக்குகின்றது என்றும்… பிறப்பு இறப்பு என்ற இயற்கையின் சுழற்சியிலிருந்து மனிதன் எப்படி மீள வேண்டும் என்றும் எண்ணி இந்தப் பூமியில் முயற்சித்தவர்கள் எத்தனையோ பேர்…!

1.ஆனால் எத்தனையோ பேர் முயற்சி செய்தாலும் அதிலே முழுமையடையாது மடிந்தவர்கள் உண்டு
2.முழுமை பெறும் வழிக்குச் சென்று… முழுமை பெற்றவர்கள் “சிலரே” உண்டு.

பலர் முழுமை பெறாது தோல்வி அடைந்து… அந்த முழுமையற்ற நிலைகளாகக் குறை கொண்ட உணர்வுகளை உடலில் விளைய வைத்து அப்படி வெளிப்படுத்தப்பட்ட உணர்வின் அணுக்களும் இந்தக் காற்றிலே உண்டு.

அதே சமயத்தில் முழுமை பெற்று அழியாத நிலையில் எண்ணிலடங்காதோர் இன்றும் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் உள்ளார்கள்.

ஆனால் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்ற ஆவேச உணர்வுகள் மனிதனுக்குள் உருவாகி
1.அதற்காக “நான் திருமணமே செய்யமாட்டேன்…!” என்ற உணர்வின் வேக அழுத்தம் கொண்டு செயல்பட்டால்
2.திருமணம் ஆகாமலே வெறுக்கும் தன்மையே அந்த உடலிலே வளருகின்றது

அப்படி வெறுக்கும் தன்மை வரப்படும் பொழுது அவன் வளர்ச்சியின் தன்மை குன்றுகின்றது. மற்றொன்றை வளர்க்கும் தன்மையும் இழக்கப்படுகின்றது.
1.ஆண்மை என்ற உணர்வின் தன்மை வலுவாக உருவாக்கி
2.கரு என்ற உணர்வை உருவாக்காதபடி
3.வளர்ச்சி பெறும் உணர்வின் தன்மை தடைப்படுத்தி விடுகின்றது.
4.அதற்கு மேல் வளர முடியாத நிலையும் வருகின்றது.

இப்படிப்பட்ட வளர்ச்சி பெற்றவர்கள் சாமியாராகச் சென்றாலும் திருமணமாகிக் கணவன் மனைவி என்று ஒன்றிணைந்து செயல்படவில்லை என்றால் உடலில் விளையும் அணுக்கருத் தன்மை மாறுபட்டு அவரின் செயலாக்கங்களும் மாறுகின்றது.

திருமணமே செய்யமாட்டேன் என்ற இவரின் உணர்வைப் பின்பற்றி வரும் சீடர்களின் உணர்வுகளிலும் இது ஆழமாகப் பதிவாகின்றது. ஏனென்றால் “குரு போதிக்கின்றார்…” என்று அந்தக் குரு சென்ற பாதையில் அவர்களும் செல்லத் தொடங்குகின்றனர்.

இருந்தாலும் குரு என்பவர் கடைசியில் மடிந்தார் என்றால் சீடர்கள் என்று அவர் வளர்த்த நிலைகள் கொண்டு அவரின் உடலுக்குள் தான் குருவின் உயிரான்மா செல்கிறது.

1.குருவின் உணர்வுகளை எந்தச் சீடன் வளர்த்துக் கொண்டு
2.குரு பக்தி என்றும்… தனது குரு…! என்றும் நேசிக்கின்றானோ
3.குரு இறந்த பின் அவன் உடலுக்குள் தான் அவர் செல்ல முடிகிறது.

உடலுக்குள் வந்த பின் குரு கண்டுபிடித்த உணர்வுகள் எல்லாம் சீடனின் உடலுக்குள் இயங்கத் தொடங்குகின்றது. இப்படி அந்தச் சீடனின் உடலுக்குள் தான் இவர்கள் நுழைய முடிகின்றதே தவிர சொர்க்கம் அடையும் நிலை இல்லை.

சீடன் குரு மீது பற்று கொண்ட உணர்வும் குருவினுடைய உணர்வும் ஒன்றுபடும் நிலையில் அந்த உயிரான்மா வெளி வந்தால் அது இயக்கி அந்த உடலுக்குள் “சாகாக்கலை…” என்ற நிலையாகத் தான் மாறுகின்றது.

சீடனின் உடலுக்குள் புகுந்த பின் அவன் எடுக்கும் ஆசையின் உணர்வுகள் கொண்டு வேதனை என்ற உணர்வை அவன் வளர்த்து விட்டால் விஷமான உணர்வின் தன்மையையே உடலுக்குள் வந்த குருவும் வளர்க்க நேர்கின்றது.

ஆனால் வேதனை என்றால் கடும் விஷம். அவன் செய்தான்… இவன் செய்தான்..!. என்ற நிலையில் மாறுபட்டுச் செயல்படும் நிலையே இங்கே வருகின்றது.
1.அவர்களுடைய ஆசையின் நிலைகள் செயல்படும் போது
2.வளர்ச்சியின் பாதைக்குச் செல்ல முடியாதபடி தேய்பிறை என்ற நிலையை அடைகின்றனர்.

சொர்க்கம் அடைந்தார் என்று இவர்கள் பட்டத்தைக் கொடுக்கலாம்.
1.ஆனால் அந்த நிலையை இவர்கள் அடைவதில்லை என்பதை
2.குருநாதர் காட்டிற்குள் எம்மை (ஞானகுரு) அழைத்துச் சென்று சொர்க்கம் என்பது எது…? என்று தெளிவாகக் காட்டினார்.

தினசரி உறங்கப் போகும் முன் நாம் செய்ய வேண்டிய பயிற்சி – ஈஸ்வரபட்டர்

ஒவ்வொரு நொடியிலும் மனிதனுக்குள் ஓடும் பலதரப்பட்ட எண்ணத்தின் சுவாசங்கள் வீரியமாகச் செயல்படும் தன்மைக்கு… “சங்கிலித் தொடர் போல் அந்த எண்ண ஓட்டமே…” ஒவ்வொரு நாளும் கொள்ளப்படும் செயலாக நிகழ்கிறது. (இது எல்லோருக்கும் தெரிந்தது தான்… தெரியாதது இல்லை)

அவ்வாறு எடுக்கும் சுவாச ஓட்டத்தின் கனத்தினால் மீண்டும் மீண்டும் அந்தச் சுவாச ஓட்டத்தின் வீரியம் கொண்ட எண்ணத்தின் பதிவு நிலையாகச் செயல் கொள்கிறது.

அதுவே “விதியாகவும்” மாறுகிறது.

வாழ்க்கையில் அன்றாட அலுவல்களில் பலரைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளில் அவர்களைப் பற்றிய எண்ணங்களை இந்த ஜீவ பிம்பச் சரீரத்தின் காந்த ஈர்ப்பினால் உடலுக்குள் ஈர்த்துக் கொண்டே தான் உள்ளோம்.

அதிலே எந்தெந்தக் குணத் தன்மைகளை ஈர்த்து நமக்குள் பதிவு செய்கின்றோமோ அந்தப் பதிவு நிலைக்கொத்த குணத் தன்மைகளுக்குத் தக்க ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களில் மீண்டும் மீண்டும் அதை எண்ணியே வலுக்கூட்டி ஆத்மாவும் சரீரமும் பாதிப்பு ஏற்படுத்திக் கொள்ளும் நிலை ஆகிறது.

அன்றாடம் உடலில் உள்ள கழிவுகளை நீக்கிச் சரீரத்தைத் தூய்மைப்படுத்திடும் செயல் போன்று
1.நாம் எடுத்துக் கொண்ட எண்ணத்தின் தன்மைகள்… உணர்வுகள் மாற்றம் கொள்ளும் கால கட்டத்தில் எல்லாம்
2.எண்ணத்தை வானை நோக்கி உயர்வாகச் செலுத்தி
3.ஜீவ காந்தச் சரீரம் கொண்டு உயர் காந்த மின் அணுக்களை ஈர்த்துக் கொண்டு
4.சுவாச கதியில் உணர்வுகள் மாற்றம் கொள்ளும் செயலின் வீரியத்தை
5.தியானத்தில் ஈர்த்துக் கொள்ளும் நற்சுவாச அலையால் சமன்படுத்தி மனதின் திறத்தைக் காத்திடல் வேண்டும்.
6.அதனால் சரீரமும் பாதிப்படையாது… பல நன்மைகளும் ஏற்படுமப்பா…!

புலரும் காலைப் பொழுது முதற் கொண்டு இரவு உறங்கும் காலம் வரை சரீரத்தில் ஈர்த்துக் கொண்ட அணுக்களின் குணத் தன்மைகளில்…
1.ஈர்க்கப்பட்ட அந்த அணுக்கள் அனைத்தும்
2.உறங்கும் காலப் பொழுதில் மீண்டும் சுவாசத்தின் நிலையில் ஜீவன் கொண்டிடும் செயல் சூட்சமமாக நிகழப் பெறும்.

அதிலே நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. ஆனால் கெட்டது ஜீவன் பெறாது… அதனின் வினைச் செயலை மாற்றி… நல்லாக்கம் பெற்றே வலுவாக்கிடும் நிலையை “உறங்கும் முன் எடுக்கும் தியானத்தின் தொடரில் கொண்டு வர வேண்டும்…!” (இது மிகவும் முக்கியமானது).

1.எங்கள் உடலுக்குள் இருக்கும் அத்தனை உயிரணுக்களும்
2.ஒளி அணுக்களாகச் சக்தி பெற்றிட வேண்டும் ஈஸ்வரா…! என்ற எண்ணம் கொண்டு
3.உயர் மின் காந்த அணுக்களை ஈர்த்துப் பல முறை உடலுக்குள் செலுத்திக் கொள்ள வேண்டும். (படுக்கும் முன்)

காலையிலிருந்து இரவு வரை நம் சுவாசத்தில் ஈர்க்கப்பட்ட அந்த மாற்று நிலை கொண்ட உயிரணுக்களும்
1.இந்தச் சரீரத்தினுள் நற்சக்தி பெற்று
2.நல் அணுக்களாக மாற்றம் கொள்ள வேண்டும் என்ற
3.உயர்ந்த எண்ணம் கொண்டு ஆத்ம சுத்தி செய்து உறங்கினால்
4.இரவு முழுவதும் வலுக் கொண்டு ஓடும் இந்தத் தியான நினைவோட்டத்தால்
5.உயர் ஞானம் சித்திக்கும் செயலாக நல் நிலை பெற்றிட முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஒளிப் பிளம்பலைகளை நாம் ஒவ்வொரு நிமிடமும் சுவாசிக்க வேண்டும்

ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து இரவு வரையிலும் சதா எத்தனையோ தீமைகளையும் நன்மைகளையும் நுகர்ந்தறிந்து கொண்டே உள்ளோம்.

அது எல்லாம் நம் உடலுக்குள் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று நம் உடலாக மாறிக் கொண்டே உள்ளது.

அப்படி மாறிக் கொண்டே இருந்தாலும் அந்தத் தீமையான உணர்வுகளை நீக்கத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் எடுத்தேயாக வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று உடலுக்குள் செலுத்தினால்
1.தீமைகளை மாற்றிடும் சக்தியாக அது வலுப் பெற்று
2.நல்ல உணர்வுகளாக மாறி… தீமையிலிருந்து நம்மை விடுபடச் செய்யும் என்று
3.ஞானிகள் இதை நமக்குத் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

அதே சமயத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நாம் மட்டும் பெற்றால் பத்தாது.

நாம் பெற்ற சக்திகளையும் நாம் கண்ட உண்மை உணர்வுகளையும் தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டுமென்று கணவனும் தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும் இந்த இரு உணர்வும் ஒன்றி உருவாக்கினால்தான் ஒளியான அணுத் தன்மை அடைகின்றது,

இதை ஒவ்வொருவரும் பழகிக் கொண்டால் இன்றைய விஞ்ஞான உலகில் விஷத் தன்மைகள் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அது நம்மைப் பாதிக்காதவண்ணம் மாற்றிக் கொள்ள முடியும்.

1.27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் அந்தத் தூசிகள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது ஒளிப் பிளம்பலைகள் பரவுகின்றது.
2.அந்த ஒளிப் பிளம்பலைகள் பரவி வரும் போது துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தால்
3.அதிலிருந்து வரக்கூடிய அணுக்களைச் சுவாசித்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு அதைச் சேர்ப்பிக்கின்றது.

27 நட்சத்திரங்களும் ஒன்றுடன் ஒன்று மின்னலாகத் தாக்கி அது உணர்வலைகளாகப் பரப்பப்படும் போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துக் கொண்டால் ஒளிக் கற்றைகளாக உடலுக்குள் பரவும்.

ஏனென்றால்…
1.நட்சத்திரங்களிலிருந்து வரும் ஒளிக்கற்றைகள் பளீர்… பளீர்… என்று மின்னும்.
2.அந்த உணர்ச்சிகளை நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் ஏங்கிப் பெறும் போது நம் ஆன்மாவாக மாறுகிறது.
3.ஆன்மாவிலிருந்து சுவாசித்து உடலுக்குள் செலுத்தும் போது அந்த உணர்வின் அணுக்கள் ஒளியாக மாறும்.

ஆகவே உயிர் எப்படித் துடிக்கின்றதோ இதைப் போன்றுதான் இந்த உயிர் அணுவின் தன்மை இணைந்து இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது எந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்தோமோ அங்கே நம்மை அழைத்துச் சென்று ஆறாவது அறிவு கொண்ட நிலையில் ஏழாவது நிலையாக வளர்ச்சி பெற்று அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைய முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

பல கோடிச் சரீரங்களைக் கடந்து கடந்து இன்று நாம் மனிதனான பிறகு நம் உயிர் என்ன செய்கிறது…? ஆகாரத்துடன் கலந்து வரக்கூடிய நல்ல வாசனையுள்ள உணவில் கலந்துள்ள நஞ்சை மலமாக மாற்றி விடுகிறது.
1.நல்ல உணர்வை நம் உடலில் சேர்த்து
2.நல்ல உணர்வைப் பெறக்கூடிய அந்த உணர்வின் சத்தை நம் உடலாக மாற்றுகிறது.

அந்த நல்ல உணர்வின் சத்து வெளிப்படும் போது அந்த மணம் இந்த உடலுக்கு எது தேவையோ அந்த உணர்வின் தன்மையைத் தான் அது பெறும்.

இருந்தாலும் மனிதனாகப் பிறந்த நிலையில் குழந்தையிலிருந்து வளர்ச்சி அடையும் போது ஒவ்வொன்றாகப் பார்க்கிறோம். குழந்தைப் பருவத்திலே
1.தாய் மேலே வெறுப்பாக இருக்கிறது.
2.தன் கூடப் பிறந்தவர்களை உதைக்க வருகிறது.
3.விளையாடும் பொழுது எத்தனையோ முறை தடுக்கி விழுகிறது.

இதற்குக் காரணம் என்ன…? குழந்தை தாய் கருவிலே விளையப்படும் போது வந்த உணர்வுகள் தான் இவை.

தாய் கருவுற்றிருக்கும் சமயம் சந்தர்ப்பவசத்தால் வெறுப்பு கொண்டர்களையோ வேதனை கொண்டவர்களையோ மற்றவர்களைத் தாக்கும் உணர்வுகளையோ பார்க்க நேர்ந்தால் அல்லது பேசுவதைக் கேட்க நேர்ந்தால் வேடிக்கையாகப் பார்த்தாலும் அதைத் தாய் நுகருகிறது. அது இரத்தத்தில் கலக்கிறது.

கரு உருவான ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் இத்தகைய சமபவங்களை உற்றுப் பார்த்தால் இரத்தத்தின் வழியாக அது குழந்தையின் கருவிலே இணைந்து விடும். கருவிலேயே இத்தகைய நிலைகள் உருவாகிறது. குழந்தைக்கு அதுவே பூர்வ புண்ணியமாகிறது.

குழந்தை கருவிலே விளையும் போது அடுத்தவர்களைத் கிள்ளுவது.. தள்ளி விடுவது…! போன்றவற்றைக் கருவுற்ற தாய் பார்த்திருப்பார்கள். பிறந்த உடனே அந்தக் குழந்தையைப் பாருங்கள்.

குழந்தையின் பாஷையும் தோரணையும் அதனுடைய சத்தமும் மற்றவரை அடிப்பதும் வெறுப்பதும் அது வளர்ச்சியாகி வரும் போது அந்த வித்தியாசம் தெரியும்.

ஆனால் சில குழந்தைகளைத் தள்ளி விட்டாலும் அது பேசாமல் இருந்து விட்டு ஒதுங்கிப் போகும். அது அதனுடைய உணர்வுகள்.
1.அப்போது அந்த உணர்வுகொப்ப இயக்கம் இந்த உயிர் தான் இயக்குகிறது.
2.வேறு யாரும் இயக்கவில்லை.

நாம் எண்ணி நுகர்ந்த உணர்வை அணுவாக மாற்றி அந்த அணுவின் மலம் தான் நம் உடலாகிறது. நல்ல அணுக்களாக இருந்தால் நம் உடல் அழகாக இருக்கிறது. அமைதியாக இருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது.

ஒரு குழந்தை இன்னொரு குழந்தையைத் தள்ளி விடும் போது கருவுற்ற தாய் “பார்… சிறிய குழந்தையை இப்படித் தள்ளி விடுகிறது…! என்று நினைத்தால் கருவிலிருக்கும் குழந்தைக்கு அதே உணர்வுகள் தான் தோன்றுகின்றன.

அதற்குத் தள்ளி விடும் உணர்வுகள் வருகிறது. அது பிறந்தபின் குழந்தை பருவத்தில் அடுத்த குழந்தையைத் தள்ளி விடும்போது விழுந்த குழந்தையின் பெற்றோருக்குக் கோபம் வருகிறது.
1.கோபம் வந்தால் குழந்தைகளுக்குத் தெரிகிறதா என்றால் இல்லை.
2.ஆனாலும் தன் செயலைத் தான் அது செய்கிறது.

தன் குழந்தை தவறு செய்கிறதே…! என்று தாய் சப்தம் போட்டுக் கூப்பிட்டால் அந்தச் சப்தம் கேட்டு எதிர்த்துக் குழந்தை அழ ஆரம்பித்து விடும். ஆனால் தெரிவதில்லை,

எந்த உணர்வின் அணுவாக உருப்பெற்றதோ அந்த உணர்வின் உணர்ச்சிகள் அது இயங்கி அதையே உணவாக உட்கொண்டு அந்த அணுக்கள் பெருகும்.

நாம் குழந்தை என்று எண்ணுகிறோம். ஆனால் அதன் வளர்ச்சியில் நாளடைவில் தன் உடலுக்குள் பகைமை உணர்வு கொண்ட அணுக்களாக மாறி விடும். அதே சமயத்தில் அந்த உணர்வுகளைக் குழந்தை நுகர நுகர இரத்த நாளங்களில் அந்த உணர்ச்சியின் தன்மைகள் தான் வளரும்.

இதைப் போன்ற தீமைகளிலிருந்து நம் குழந்தைகளைக் காக்க வேண்டியது மிகவும் அவசியம்.

நாடிகளின் துடிப்பு மாறுபட்டு அதனால் நோய் எப்படி உருவாகிறது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

வாழ்க்கை நடைமுறையில் மனிதன் எடுக்கின்ற எண்ணத்தின் குணங்களாக
1.மோகம் (மயக்கம் – மருள்)
2.கோபம் (அவசரம் – ஆத்திரம் – ஆவேசம்)
3.காமம் (அதி ஆசைகள் – ஏக்கம்)
4.வெறி (மதம் – செருக்கு)
5.பொறாமை (வெறுப்பு – விரக்தி – குறுகிய மனம்)
6.அதி பயம் (கலக்கம்) போன்ற இந்த ஆறு குணங்களும் இடும்பச் சித்தன் காட்டிய தீதெண்ண குணங்கள்.

இந்தக் குண எண்ண ஓட்டங்களால் மனிதனின் நினைவுகள் அதிலே சிக்கப்பட்டு அந்தச் சுவாசமே “கனம் கொண்டதாக…” ஈர்க்கப்படுகின்றது.

அந்தக் கனமான சுவாசத்தின் அலைகள் சரீரத்தினுள் இரத்த ஓட்ட நாளங்களில் செயல் கொள்ளும் சுவாச நாடிகளின் வழியே ஓடி சுவாச நாடிகளின் முக்கிய கேந்திரங்களாக அந்தந்த இடங்களில் அமையப் பெற்ற மூலம்… மூலாதாரம்…. நாபி… இருதயம்… கண்டம்… நெற்றி… தலையின் உச்சிப் பகுதி… முதலிய அமைப்புகளிலும் ஓடுகின்றது.

1.சரீரத்தில் ஈர்க்கப்படும் இத்தகைய உணர்வுகள் இடும்ப குண வசமாக மனிதனுக்குள் வந்து
2.அந்தந்த எண்ணத்தின் தொடருக்கு நாடிகளில் ஓடிடும் மூச்சலைகள் இரத்த நாளங்களில் ஓடும் செயலில்
3.சரீர அவயங்களில் தன் தன் இயக்கத்தில் (நாடிகளில்) செயல்படும் நிலையே
4.அதி தீவிரச் செயல் நிகழ்வாகச் சரீர இயக்கத்தில் செயல்பட்டு
5.அந்தத் தீதெண்ண குணங்களின் கனம் மிக்க சுவாசத்தின் ஓட்டத்தினால் ஏற்படுவதே உடல் நோய்கள்.

(1). இருதய வலி:-
சுவாச ஓட்டம் சரீரத்திற்குள் சென்று வெளி வரும் செயலில் இருதயப் பகுதியில் இருந்து ஓடும் தாய் மூச்சு நாடி நாபிப் பகுதியில் நீரமிலச் சக்தியுடன் இணைந்து செயல்படுகின்ற செயலில் கோபத்தின் கனம் மிக்க சுவாச ஓட்டத்தால் என்ன ஆகிறது…?

அந்தத் தாய் மூச்சு தாக்கப்பட்டு அதனுடன் இணைந்த மார்பு நாடியின் செயலுக்கும் தடை ஏற்படுத்தும் பொழுது உண்டாவதே இருதய வலி.

(2). வாயு… பித்தம்… மன நோய்:-
குறுகிய மன நிலை… மருள்… பொறாமை… ஏக்கம்… உள்ளிட்ட கனம் கொண்ட சுவாசத்தின் தன்மையால் நீரமில சக்தி கொண்டிட்ட நாபி நாடியின் செயலுக்குத் தடை ஏற்படுகிறது.

அதே போல் இடுப்பு எலும்பும் கால் எலும்பும் இணையும் இடத்தில் ஓர் சூட்சம வாயு வெளிப்பட்டு மூல அக்கினியில் கலக்கின்றது.

1.மூல அக்கினியில் கலந்த அந்த வாயு
2.மூலத்திலிருந்து கிளம்பி மூல நாடியின் வழி ஓடி நாபி நாடியைத் தாக்கிடும் செயலில்
3.சரீரத்தில் வாயு பித்தம் மற்றும் மன நோய் ஏற்படும் நிலைகளை உண்டாக்கி விடுகிறது.

(3). உடல் உஷ்ணம்… தோல் வியாதி:-
மோகம்… செருக்கு… அதி ஆசைகள்… என்ற எண்ண ஓட்டத்தில் வரும் சுவாசத்தின் மூச்சலைகள் மூலாதாரம் மூலம் இந்த இரு நாடிகளில் தாக்கப்பட்டு அதி உஷ்ணம் தோல் வியாதிகள் மற்றும் உயிர் நிலையை ஜீரணிக்கச் செய்யும் இரத்தம் சிலந்தி நோய்களும் வரக் காரணமாகின்றது.

கண்ட நாடி பாதிக்கப்படும் பொழுது அறிவின் ஆற்றல் செயல்படாதபடி பிரமை பிடித்த நிலையும் ஊமைத் தன்மையும் மற்றும் காதுகேளாச் செயலும் ஏற்படுகிறது.

இந்த நோய்களும் இவைகளின் கிளைகளாகப் பல்கிப் பெருகும் ஏனைய நோய் நொடிகளும்
1.தான் எடுத்துக் கொண்ட குணத்தின் வீரியத் தன்மைகளால்
2.”மனிதன் தனக்குத் தானே விதித்துக் கொள்ளும் தண்டனைகள் தான்…!”

கண்டத்தின் செயலையும் தாண்டிச் சிரசின் பகுதியில் நெற்றியில் ஓடும் நாடிகள் பாதிக்கச் செய்யும் அதி தீவிரச் சிந்தனைகளாலும்… திடீரென ஏற்படும் அதிர்ச்சிகளின் செயலினால் உண்டாகும் பயத்தினாலும் மனிதனுடைய சித்தம் கலங்கிப் பித்தனாகவே (பைத்தியம்) மாற்றிவிடும்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல…!
1.நல் எண்ணக் குணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து
2.சுவாச நிலையைச் சீராக்கும் முயற்சியில் மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்து
3.உயரிய சுவாசமாக.. அருள் மணங்களாக.. அந்த மூச்சலைகளை நாடிகளின் கேந்திரங்களுக்குள் செலுத்தினால்
4.சரீர சுத்தி கிடைக்கும்… அதே போல் உயிரான்ம சக்தியும் சுயப்பிரகாச நிலை (ஒளி நிலை) அடையும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

புழுவிலிருந்து பாம்பாக தேளாக மற்ற எத்தனையோ விஷ ஜந்துகளாகப் படிப்படியாக உருவாகித் தான் இன்று நாம் மனிதனானோம்.
1.மனிதனான பின் மீண்டும் விஷமான உயிரினங்களாகப் பிறக்க வேண்டுமா…?
2.சற்று சிந்தியுங்கள்.

ஏனென்றால் ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு விதமான விஷம் உண்டு. உதாரணமாக ஒரு தேள் மனிதனைக் கொட்டி விட்டால் அந்த விஷம் சிரசில் ஏறி விடுகின்றது.

தேள் செத்த பிற்பாடு வந்த கொடுக்கை எடுத்து வந்து லேசாகக் குத்தினாலும் அது நமக்குள் கடும் விஷமாக மாறும்.

தேளின் கொடுக்கு விஷமாக இருந்தாலும் மற்ற விஷத் தன்மைகளை அது உணவாக உட்கொண்டதனால்தான் விஷத்தை அடக்கும் அந்தத் தேளின் உடலாக அது பெற்றிருக்கின்றது.

விஷம் கொண்ட உயிரினங்களை அது உணவாக உட்கொண்டாலும் அதை எல்லாம் இணைத்துத் தனக்குள் அடக்கி வைத்திருக்கிறது. ஆனாலும் அந்த விஷமான தேளை ஒரு கோழி கொத்தித் தின்கிறது.

அதே சமயத்தில் கோழி மண்ணுக்குள் இருக்கும் பல பொருள்களை அது கொத்தித் தின்னும் பொழுது
1.அந்த மண்ணைப் பிரித்தெடுக்க முடியவில்லை என்றாலும்
2.உட்கொண்ட பின் உணவுடன் கலந்து செல்லும் அந்த மண்ணைப் பிரித்தெடுக்கும் நிலையாக
3.ஈரல் (உறுப்பு) ஒன்று உருவாகின்றது கோழியின் கல்லீரலில்.

நாளடைவில் இந்த விஷத்தின் தன்மை அதனுடன் கலக்கக் கலக்க அதுவும் சிறுகச் சிறுகக் கரைந்து பல இனங்கள் சேர்த்து இந்த உடலுக்குள் வலு கொண்டதாக மாறுகின்றது.

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்றிடும் உணர்வு பெற்ற மனிதர்கள் இன்று கோழியை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். இந்த உணர்வுகள் மனிதனுக்குள் வளர்ச்சி அடைகின்றது.

1.விஷத்தைக் கோழி அடக்கியது போல்… .அதே உணர்ச்சியின் வீரிய உணர்வுகளை மனிதனுக்கும் ஊட்டுகின்றது.
2.ஆனால் அதில் உள்ள விஷத்தின் தன்மை எதுவோ அதனுடன் கலந்த உணர்வை விஷத்தை நுகரும் சக்தியும் மனிதனுக்குள் அதிகமாகக் கூடுகின்றது.
3.கோழியை அதிகமாகச் சாப்பிட்டுப் பழகினால் கோழியின் நினைவே வரும்.

கோழி தன் உடலை வளர்க்க விஷமான பூச்சிகளையோ உயிரினங்களையோ உணவாக எடுத்துச் சாப்பிடுகின்றது. ஆனால் நஞ்சை வென்று வந்த மனிதனோ கோழியை ருசித்து உணவாக உட்கொள்ளும் போது தான் நுகர்ந்த உணர்வுகள் அந்தக் கோழியின் ஞாபகமே வரும்.

அப்புறம் கோழியாகத் தான் பிறக்க நேரும். இன்று மனிதனாக இருந்தாலும் அப்புறம் கோழியாகத்தான் ஆக வேண்டும்.

ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் இந்தத் தியான வழியிலே வரப்படும் போதே இதைப்போன்ற உடல் இச்சைகளுக்கு எண்ணி “இது தான் நடக்க வேண்டும்…!” என்ற குறிக்கோளுடன் வந்தால் மீண்டும் சாதாரண வாழ்க்கையில் இருப்பது போன்று அந்த உணர்வுகளை வளர்த்துக் கீழே தான் போவோம்.

1.பெரும் பெரும் ஞானிகள் எல்லாம் மக்கள் மத்தியில் வந்து
2.தோல்வியைக் கண்டு வெறுப்படைந்துதான்
3.இத்தகைய (மனித) ஆன்மாக்களின் மீது பற்று இருந்தால் நம்மையும் இது இழுத்துக் கொண்டு போய்விடும் என்று
4.அவ்வாறு விலகிச் சென்ற ஞானிகள் ஏராளம்.

தீமையை அகற்றிடும் உணர்வை விளையச் செய்து அனைவரையும் ஞானியாக்க வேண்டும் என்ற இந்த எண்ணம் அந்த ஞானிகளுக்கு வரப்படும் போது தான் தகுந்த உபாயத்தைக் கொடுக்கின்றனர்.

அவருக்குள் உருபெற்ற இந்த நிலையை அவர் வெளிப்படுத்தும் பொழுது அந்த உணர்வை நுகர்வோருக்கெல்லாம் அது கிடைக்கின்றது. ஆனாலும் உடல் இச்சையுடன் இந்த உணர்வின் தன்மைகளை நுகர்ந்தால் அது எங்கே கொண்டு செல்கின்றது…?

1.உடல் மீது பற்றின் தன்மை வரப்படும் போது விண்ணின் ஆற்றலை மறக்கச் செய்கின்றது.
2.பின் நாம் எங்கே போகின்றோம்…? கீழே தான் போகின்றோம்…!
3.அப்பறம் தியானத்திற்கு வந்தால் என்ன ஆகும்….?

இதில் சிலர் நீங்கள் தியானத்தில் என்ன பார்த்தீர்கள்…? என்ன பார்த்தீர்கள்…! என்று இப்படித் தான் கேட்டுக் கொண்டு இருப்பார்கள்.

சாமி (ஞானகுரு) சொன்ன வழியில் தான் இவர் நடக்கிறார். அப்படி இருந்தும் இப்படித்தான் நடக்கின்றது… ஒன்றும் நல்லதாகவில்லை…! என்று இலேசாகத் தூண்டி விட்டால் போதும்…!

ஆமாம்…! என்று தலையாட்டி விட்டுத் தான் பெற்றுக் கொண்டிருக்கும் நல்லதைக் கெடுக்கத்தான் உதவும். ஆக அவரும் பெற முடியாது… இவரும் பெற முடியாது…!

ஏனென்றால் நான் (ஞானகுரு) இவர்களிடமிருந்து ஏதோ சக்தி பெறுவதாகத் தான் அர்த்தமாகின்றது.

எல்லோரும் மெய் ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும் மெய் ஞானிகளாக வளர வேண்டும் என்ற என்ற அந்த உயர்ந்த எண்ணம் தான் எனக்குள் அது உருபெறுகின்றது. அந்த ஆசையைத் தான் நான் பெறுகின்றேன்… அதே வழியினைத் தான் உங்களுக்கும் உணர்த்துகின்றேன்.

இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்திகளை நாம் பெற வேண்டியதன் அவசியம்

இன்று எந்தப் பயிரினங்களாக இருந்தாலும் “பூச்சிக் கொல்லி மருந்துகள்” தெளிக்கவில்லை என்றால் அது சரியாக விளையாது. நாம் உணவாக உட்கொள்ளும் உணவுகள் அனைத்திலுமே இந்த நஞ்சின் தன்மையே கலந்துள்ளது.

நம் உடலிலே சிறுகச் சிறுக இந்த நஞ்சின் தன்மை கலக்கப்படும் பொழுது
1.கை கால் குடைச்சலும் மற்ற நோய்களும் வரக் காரணமாகின்றது.
2.அதே சமயத்தில் நஞ்சு அதிகரிக்கும் போது சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.
3.சிந்திக்கும் தன்மை இழக்கும் போது தவறு செய்யும் இயல்புகள் அதிகமாகி விடுகின்றது… குற்ற இயல்புகளும் அதிகமாகி விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் தப்புவதற்கு என்ன செய்வது…? என்று நாம் சற்று சிந்தித்தல் வேண்டும். ஏனென்றால் இந்தக் காற்று மண்டலத்தில் விஞ்ஞான அறிவால் விஷத்தின் தன்மை அதிகளவில் பரப்பப்பட்டு விட்டது.

பூச்சிக்கொல்லி மருந்துகளால் உருவான பயிர் வகைகளை உணவாக உட்கொள்ளும் பொழுது நம் உடலில் அது வடிகட்டினாலும்
1.நம் ஆன்மாவில் கலந்தது
2.அதே விஷத்தின் தன்மைகளை இன்னொரு பக்கம் தூவினாலும்
3.அதை நமக்குள் இழுக்கும் சக்தியும் வருகின்றது.

ஆகையினால் அந்த விஷத்தின் தன்மை வரும் பொழுது நமக்குள் எத்தனையோ புதுவிதமான நோயாக மாறுகின்றது.

மாடு ஆடுகள் இவைகளெல்லாம் விஷத்தைத் தன் உடலாக மாற்றுகின்றது. நல்லதைக் கழிவாக மாற்றுகிறது.

ஆனால் பூச்சிகளைக் கொன்று விட்டு நல்ல உணவை உணவாக உட்கொள்ளலாம் என்று விஞ்ஞான அறிவு கொண்டு மருந்துகளைத் தூவிப் பயிர்களை உருவாக்குகின்றார்கள்.

அப்படி உருவாக்கினாலும் அந்த விஷத்தன்மை அதனுடன் கலந்து நம் உடலுக்குள்ளும் விஷத்தன்மைகளை ஊட்டி விடுகின்றது. இதைப் போன்று நம் உடலில் ஏற்படும் நிகழ்ச்சிகள் ஏராளமாக நடந்து கொண்டுள்ளது,

பயிரினங்களால் உருவாக்கப்பட்ட அந்த விஷத்தன்மை நம் உடலிலும் விளையத் தொடங்குகின்றது. அப்படி விளைந்த அந்த அணுக்கள் அதே உணர்ச்சிகளை ஊட்டி அந்த விஷத்தையே உணவாக உட்கொள்ளும் தன்மை வருகின்றது.

இதைப்போன்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்குத் தான் உங்களுக்கு அடிக்கடி அடிக்கடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஞாபகப்படுத்திக் கொண்டே வருகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து நம் உடலில் உள்ள எல்லா அணுக்களிலும் அதை வளர்த்துக் கொண்டால் “விஷத்தை வென்றிடும் சக்தி…” பெறுகின்றோம்.

ஏனென்றால் துருவ நட்சத்திரம் எதனையுமே ஒளியாக மாற்றும் திறன் கொண்டது.

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற நட்சத்திரங்கள் வெளியிடும் மின்னல்கள்… மின் கதிர்கள் வெளிப்படுவதை துருவ நட்சத்திரம் எடுத்து அதை ஒளியாக மாற்றுகின்றது.

அதாவது…
1.27 நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று எதிர் நிலையாகி மின்னல்களாகச் சீறிப் பரவுவதை
2.அதிலிருந்து வரும் அந்த ஒளிக்கற்றைகளை நம் உடலில் உள்ள அணுக்கள்
3.அதனுடைய சந்தர்ப்பம் அதைப் பெறத் தொடங்கி விட்டால் சிந்திக்கும் திறனும் அதிகமாகின்றது
4.தீமை என்ற உணர்வுகள் நமக்குள் புகாமல் தடுக்கும் சக்தியும் பெறுகின்றது.
5.அதன் மூலம் எத்தகைய நஞ்சை நாமும் ஒளியாக மாற்றிட முடியும்.
5.விஞ்ஞானத்தால் வந்த கடும் நஞ்சையும் நாம் ஒளியாக மாற்றிட முடியும்.

நெஞ்சுக் குழியில் நம்மை இயக்கும் தாய் மூச்சு நாடி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

உதாரணமாக கோப குணம் நமக்குள் உந்துகிறது என்றால் அப்பொழுது நாம் ஈர்த்துக் கொண்டிருக்கும் சுவாசமே “கனம் கொண்டதாக” மாறுகின்றது.

கோப குணத்தின் வீரியம் எத்தகையதோ அதற்கேற்றாற்போல் சரீர நாடிகளும் இயங்கி அந்தக் கோப குணத்தின் கார அலை நம் சரீரத்தைத் தாக்குகின்றது.

அப்படித் தாக்கும் நிலையில் ஆண் பெண் இருபாலருக்குமே
1.மார்புப் பகுதியின் மையத்தில் வயிற்றுப் பகுதியின் மேற்புறத்தில்
2.”சிறிய குழிவு..” போன்ற பகுதியினுள் ஓர் மூச்சு நாடி ஓடுகின்றது
3.அதுவே மிக முக்கிய நாடியப்பா…! –
4.தாய் மூச்சு நாடி…! என்பது அது தான்.

நாபி நாடியுடன் இணைந்து செயல்படும் அந்தத் தாய் மூச்சு நாடி தாக்கப்படும் காலத்தில்… அருகில் அமைந்துள்ள இரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும் செயலில் அதைத் தூண்டி… இருதயத்தின் தொடர்புடன் இணைந்து கொண்டு
1.அதற்குள் ஓடும் மூச்சுக் காற்றால்
2.எடுத்துக் கொண்ட குணத்தின் வீரிய உணர்வு தாக்கிடும் செயல் நிலையே இருதய நோய் (HEART ATTACK).

ஜீவ காந்தம் கொண்ட மனிதச் சரீரம்… உணர்வு கொண்டு இயங்கும் இயக்கத் தொடரில்… உடல் தனக்குத் தேவையானதைப் பெறும் (சுகமாக அனுபவிக்கும்) செயலில் எது…எது எப்பொழுது செயல்படுகிறது…? என்ற பாங்கில் அந்தந்தக் கால கட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் காரணமே “பசி… மோகம்.. தாகம்…” என்பதாகும்.

இவைகள் எல்லாம் நீங்கி அந்தத் தேவைகள் பூர்த்தி பெற்றாலும் ஈர்த்துக் கொண்டிருக்கும் உணர்வுகளின் குணங்களின் சுவாசத்தினால் நிகழ்வது என்ன…?

ஏனென்றால் அனைத்து குணங்களின் சுவையே நம் ஆத்மாவின் பதிவு நிலை ஆகின்றது. அப்படிப் பதிவானது அதே தொடரின் செயலில் கனம் கொண்ட சுவாசமாக மீண்டும் மீண்டும் ஈர்க்கப்படுகின்றது.

1.அத்தகைய வினைச் செயலின் பதிவாகக் களங்கமுறுவது ஆத்மாவும்… சுவாசமும்… செயல் கொள்ளும் ஜீவ சரீரமும் தான்…!
2.ஆக ஆத்ம சக்தியுடன் இணைந்து தான் சரீர சுத்தியும் செயல் கொள்ளுமப்பா…!

வாழ்க்கையில் பலதரப்பட்ட மோதலில் ஏற்படும் சந்தர்ப்பங்களில் நாம் எடுத்துக் கொள்ளும் குணங்களின் நல்லெண்ண நற்சுவாசச் செயலே ஆத்ம சுத்தி.

அன்றாட வாழ்க்கை நிலையில் எத்தனையோ பல காரியங்களை நாம் செயல்படுத்துகின்றோம். அப்பொழுது பலருடைய எண்ணங்களின் தொடர்புகள் சுவாசத்தின் ஈர்ப்பில் வந்து சேர்கிறது.

நண்பர்கள்.. உறவினர்கள்… மற்றைய அலுவல்களில் சந்திக்க நேரும் பொது ஜனத் தொடர்புகள்… ஆகியவற்றில் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடும் செயல்களில் எல்லாம்
1.பிறரது எண்ணங்களின் குணநலன்கள் நம் சுவாசத்தின் ஈர்ப்பினால் பெற்று
2.அந்தக் குணங்களின் அமில குணச் சுவை அணுக்கள் சரீரத்திலும் கலந்து
3.அதே குணங்களின் உணர்வலைகள் ஆத்மாவிலும் பதிவு நிலை பெறுகின்றது.

புவி ஈர்ப்பின் பிடிப்பில் சுவாச ஓட்டத்தில் ஈர்த்துக் கொள்ளும் சுவாசம் கனம் கொண்ட எண்ணத்தின் வீரியத்திற்கொப்பச் செயல்படும் நிலையில் ஆத்மாவில் பதிவு பெறும் மாற்று நிலைகளின் கழிவை நீக்கவே இந்தத் தியான முறையச் சுட்டிக் காட்டுகின்றோம்.

இந்தத் தியானத்தின் வழியாக
1.வாழ்க்கையில் உணர்வின் மோதல் ஏற்படும் கால கட்டங்களில் எல்லாம்
2.எண்ணத்தின் உணர்வில் உயர்வைக் கூட்டி…
3.ஒளியின் பிரகாசமாக இருக்கும் துருவ நட்சத்திரத்தை எண்ணி
4.அந்தப் பேரருள் பேரொளி உணர்வுகளை விண்ணிலிருந்து புருவ மத்தியில் ஈர்த்துக் கொண்டு
5.நம் ஜீவ காந்தச் சரீரம் கொண்ட அந்த கனமான சுவாச அலைகளைச் சமன்படுத்தி
6.உயர்வைக் கூட்டி நல்லாக்கம் பெறல் வேண்டும்…!

ஆகவே
1.நாம் செயல்படும் செயலில் கொள்ளும் நிதானமே…
2.நம் உயிர் ஆத்ம ஞான வளர்ப்பிற்குப் பிரதானம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இன்றைக்குத் தாயை உதறி விட்டு உதைக்கிறவர்கள் தான் நிறைய பேர் இருக்கின்றார்கள். பெரும்பகுதி தாய்மார்கள் படுகின்ற அவஸ்தை கொஞ்ச நஞ்சமில்லை.

பெண் குழந்தையாக இருந்தாலும் சரி… ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி…!

சொத்தைக் கொடுக்கவில்லை என்றால் நீ நாசமாகப்போ…! என்று தன் தாயைப் பிடித்து இழுத்துப் போட்டு உதைக்கின்ற தாயையும் (மகள்கள்) நான் பார்த்திருக்கிறேன்.

ஆண் வாரிசு இல்லை. அவளுக்கு மட்டும் கொடுக்கின்றாய்…! எனக்கும் கொடு…. என் வீட்டுக்காரர் கேட்கின்றார்,

எனக்குக் கொடுக்கின்றாயா இல்லையா…? என்று சொத்து முழுவதையும் வாங்கிக் கொண்டு… உனக்குச் சோறும் இல்லை… தண்ணீரும் இல்லை… நீ போ ரோட்டிலே…! என்று சொல்கின்ற தாய்மார்கள் நிறைய இருக்கின்றார்கள்.

இதையெல்லாம் அனுபவித்துப் பார்த்த பின் தான் உங்களுக்குச் சொல்கிறேன்.

மனிதர்களுடைய உணர்வுகள் எப்படி இருக்கிறது என்று அறிந்து கொள்வதற்காகக் குருநாதர் என்னை (ஞானகுரு) ஊர் ஊராகச் சுற்றச் சொல்லி அனுபவபூர்வமாகக் காட்டினார்…

1.அவர்கள் தவறு செய்யவில்லை…!
2.நுகர்ந்த உணர்வும் சந்தர்ப்பமும் அவர்களை எப்படிக் குற்றவாளியாக மாற்றுகின்றது.
3.அதிலிருந்து மீட்பதற்கு என்ன வழி…?
4.மனிதனான பின் நாம் எங்கே செல்ல வேண்டும்…! என்ற வினா எழுப்பினார் குருநாதர்.

இதைப் போன்ற சந்தர்ப்பத்தால் வந்த தீமைகளை வென்றவர்கள் மகரிஷிகள். அவர்கள் விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக ஒளியாக இருக்கின்றார்கள்.

1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பெறுவதற்கு மாறாக
2.இந்த உடலின் இச்சைக்காக வேண்டி வாழ்ந்து
3.இருள் சூழச் செய்யும் நிலைகளில் சிக்குண்டு
4.அதிலிருந்து மீள முடியாத நிலைகளில் இருக்கின்றோம்.

இதை நீ மக்களுக்கு “எடுத்துச் சொல்…!” என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஒவ்வொரு உயிரையும் நீ கடவுளாக எண்ணு. அந்த உடலை நீ கோவிலாக மதி. அவன் வீற்றிருக்கும் ஆலயம் புனிதம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நீ உன்னுடைய பயணத்தைத் தொடர் என்றார் குருநாதர்.

அவர் இட்ட கட்டளைப்படித்தான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன் அந்த மகரிஷிகளை எண்ணிப் பாருங்கள். தீமையிலிருந்து விடுபட முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.

மகரிஷிகளின் உணர்வை வளர்த்துக் கொண்டால் அது உங்களுக்குள் உண்மையின் உணர்வின் தன்மையை உணர்த்திக் காட்டும்.
1.பகைமை உணர்விலிருந்து உங்களை மீட்கும்.
2.மெய் ஒளி பெறும் அந்த மார்க்கத்தைக் காட்டும்.
3.உங்கள் பார்வையில் பல பிணிகளைப் போக்கும் அந்த அருள் சக்தியை ஊட்டும்.

அந்தச் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இவ்வளவு தெளிவாக உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று மகிழ்ந்து வாழ்ந்திடப் பிரார்த்திக்கிறேன்.

22.04.2021 உபதேசம்

மரண வாயிலில் வைத்து குருநாதர் எனக்குக் கொடுத்த சக்தி

 

ஒரு சமயம் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) கை கால் வராது போல் இருந்தார் என்று சொல்லி (தூக்கிக் கொண்டு தான்) ஐவர் மலைக்கு அழைத்துச் சென்றிருந்தேன் (ஞானகுரு).

அங்கே சென்ற பின் இரவிலே நீ என் பக்கத்திலேயே படுத்துக்கொள்…! என்றார், குருநாதர். பனிரெண்டு மணி இருக்கும். கை கால் வராமல் முடமாக இருந்தவர் எழுந்து நடக்கிறார்… சாதாரணமாக நடக்கின்றார்…!

அங்கு ஒரு பிள்ளையார் கோவில் இருக்கும். நடந்து போய் அங்கே உட்கார்ந்து கொண்டார். அவர் செய்வதை நான் முழித்துப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

அங்கே போனவுடன்… “தெலுங்கு ராஜ்ஜியம் இங்கே வாடா…” என்னை எவனோ தூக்கிக் கொண்டு வந்து இங்கே வைத்துவிட்டான்… வந்து தூக்குடா…! என்கிறார்.

இரவு நேரத்தில் அங்கே போய் என்ன செய்வது…? சருக்கலான பாறையில் உட்கார்ந்திருக்கிறார்.

அந்த இடத்தில் இருந்து கொண்டு என்னைக் காப்பாற்றுடா… என்னைக் காப்பாற்றுடா,.. என்கிறார். பார்த்தால் சறுக்கலான பாறையில் பிடிக்க முடியாத இடத்தில் இருக்கின்றார். (இன்னும் கூட அந்த வழுக்குப்பாறை அங்கே இருக்கின்றது)

நான் எப்படி சாமி வர முடியும்…? என்று கேட்டேன். பின் வேஷ்டியெல்லாம் கட்டி விட்டு இதைப் பிடித்து கொள்ளுங்கள் என்று சொன்னேன்.

ஆனால் அதைப் பிடித்துக் கொண்டு கீழே போய்க் கொண்டே இருக்கின்றார், நீ வந்து என்னைக் காப்பாற்றுடா, துண்டு… வேஷ்டி எல்லாம்… என்னைக் காப்பாற்றாது…! என்கிறார் குருநாதர்.

சாமி… வேஷ்டியையும் பிடித்துக் கொள்ளுங்கள், நானும் பிடித்துக் கொள்கிறேன் என்றாலும் பிடிக்க முடியவில்லை. அப்பொழுது நான் (ஞானகுரு) ஒரு பக்கம் இருந்தாலும் என்னை வழுக்கிவிட்டு இந்தப் பக்கம் கொண்டு போகின்றது..

குருநாதர் “என்னை காப்பாற்றுடா…” என்கிறார்.

சாமி, நான் கீழே போய்த்தான் காப்பாற்ற வேண்டும். கீழே விழுந்தால் நொறுங்கித் தூள் ஆகிப்போகும். அங்கு போய்த்தான் காப்பாற்ற வேண்டும் என்றேன்.

இது நடந்த நிகழ்ச்சி.

அப்பொழுதுதான் அதிகாலை விடிந்து சில நிலைகள் வருகின்றது. அங்கு கீழே ஒரு பஸ் போய்க் கொண்டிருந்தது. உடனே குருநாதர் “ஏறு சிங்… இறங்கு சிங்… என்று நீ பார்த்திருக்கிறாயாடா…?” என்றார்.

1.சாமி… இப்பொழுது நான் இறங்கு சிங்கில் கீழே போய்க் கொண்டு இருக்கிறேன்.
2.செத்த பிற்பாடு… உடலிருந்து உயிர் ஏறு சிங்காக மாறிவிடும்.
3.அதிலே வேண்டுமென்றால் போய்ப் பார்த்துக் கொள்ளலாம் சாமி என்றேன்.

ஏன்டா நான் சொல்கிறேன்… நீ எதிர்த்துப் பேசுகின்றாயா…? என்றார், குருநாதர்.

பார்த்தால் அந்த இடத்தில் வைத்துக் குருநாதர் பல நிலைகளில் பல அற்புதங்களைக் காட்டுகின்றார். இந்த உலக நிலைகளையும் மற்ற நிலைகளையும் எல்லாவற்றையும் காட்டுகின்றார்.

அப்பொழுது நீ இந்த உலகத்தைப் பாருடா…! என்கிறார்.

எங்கே சாமி பார்ப்பது…? இன்னும் கொஞ்ச நேரத்தில் கீழே போய் எல்லாம் அடங்கிவிடும் போல் இருக்கின்றது…! என்றேன் நான்.

நீ உலகத்தைப் பாருடா என்றால்… என்னடா நீ அடங்கிவிடும்…! என்று சொல்கின்றாய்…? என்று இப்படி வாதம் பண்ணிக் கொண்டே இருக்கின்றார் குருநாதர்.

அப்படியே பாறையில் நெஞ்சோடு தேய்த்து இரத்தம் வடிகின்றது. வழுக்குப் பாறையாக இருப்பதால் அப்படியே என்னைக் கீழே கொண்டு போகின்றது. இன்னும் கொஞ்ச நேரத்தில் போய்விடுவோம் (உயிர்) போலத் தெரிகின்றது.

நீ இதைப் பார்… உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்…! என்று என்னென்னமோ அதிசயங்களை எல்லாம் காட்டுகின்றார் குருநாதர்.

சாமி… இன்னும் கொஞ்சம் நேரத்தில் நீங்கள் சொல்வது எல்லாவற்றையும் போய்ப் பார்க்கப் போகின்றேன், அது வரைக்கும் கொஞ்சம் அமைதியாக இருங்கள்…! என்றேன்.

அதற்குப்பின்…
1.எத்தனையோ உணர்வுகளை ஊட்டுகிறார், உலக நிலைகளைக் காட்டுகின்றார்
2.இந்த மரண நிலைகளில் வைத்துத்தான் முழுமையான சக்தியைக் கொடுக்கிறார்
ஐவர் மலையில் வைத்துத்தான் அதைக் கொடுத்தார் நமது குருநாதர்.

அந்தக் காலை நேரத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். குருநாதர். அங்கிருந்து எழுந்து வந்து என்ன செய்தார்…?

1.சிவ தாண்டவம் ஆடுகிறார்
2.ஒரு பெரு விரலில் நின்று கொண்டு அப்படியே “கிறு…கிறு…கிறு” என்று பம்பரம் போல் சுற்றி அவ்வளவு அற்புதமாக ஆடுகிறார்.
3.எல்லா வேலைகளையும் செய்கின்றார், குருநாதர்.

நீ பல உண்மைகளை அறிவாய்… பல நிலைகளைப் பெறுவாய் என்று இந்த இடத்தில் வைத்து மரண வாயிலில் வைத்துத்தான் இந்த சக்திகளைக் கொடுக்கிறார்.

இந்த உலகம் எப்படி இருக்கிறது என்று நீ அறியும் தன்மை பெறுவாய், அதை எப்படிக் காக்க வேண்டும்…? என்று காட்டுகின்றார்.

யாராவது தவறு செய்தால் கூட என்னிடம் இருக்கும் சக்தியைக் கொண்டு ஒன்றும் செய்வதில்லை. ஆனால் அதைச் செய்தால் இந்தச் சக்தி விரயம் ஆகும்.
1.அந்த விரயம் ஆகும் நிலைக்குக் கொண்டு செல்லாமல்
2.உருவாக்கும் நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்று சொன்னார் குருநாதர்.

இப்படித்தான் ஏதேதோ செய்யும்படி பல நிலைகளைச் செய்து… அதை எல்லாம் சொல்வதற்கில்லை…! இப்படி எண்ணிலடங்காத நிலைகளைச் செய்துதான் எனக்கு இந்த வாக்குகளைக் கொடுத்தார் குருநாதர்.

நமது அகண்ட அண்டமும் பேரண்டமும் இந்த உணர்வின் தன்மை எப்படி இயங்குகிறது…? என்ற சில உண்மையின் தன்மைகளை எல்லாம் கொடுக்கிறார்.

நமது பிரபஞ்சமும் 27 நட்சத்திரங்களும் எப்படி எல்லாம் இயங்குகிறது…? என்பதை நேரடியாகப் பார்த்தால் எப்படி இருக்கும்…!
1.அந்த மரண வாயிலில் வைத்துத்தான் இந்த அற்புதங்களை
2.பார்க்காத காட்சிகளை எல்லாம் காட்டுகிறார் குருநாதர்.

பின் அந்த உணர்வின் தன்மை கொண்டு ஏறு சிங்… இறங்கு சிங்… என்று சொல்லி இந்த ஆட்டங்களைக் காட்டி அப்புறம் என்னை எழுப்பிவிடுகிறார் குருநாதர்.

அப்பொழுது, அந்த இடத்தில் மற்றவர்கள் பார்க்கும் போது கால் முடமாக இருப்பது போல இருக்கிறார். ஆனால் இங்கே நன்றாக நடனம் ஆடுகின்றார்.

மற்றவர்கள் அவரைப் பைத்தியம் என்றுதான் நினைத்தார்கள். அதனால் காலை முடக்கி கொன்டார். ஆனால், அந்த உண்மையின் தன்மையை எமக்குக் கொடுத்து இங்கு நடனம் ஆடுகிறார்.

1.குருநாதர் ரசமணி செய்வார்… தங்கத்தைச் செய்வார்
2.இந்தச் சரக்குகளைச் செய்தால் நாமும் தங்கம் செய்யலாம் என்ற வகையில்
3.குருநாதரிடம் ஆசைப்பட்டு அணுகியவர்கள் ஏராளமானோர்.

ஆனால் இதிலிருந்து ஒடுங்கப்பட்டு தனித்தன்மையாக, எனக்கு இந்த ஐவர்மலையில் வைத்துத்தான் அந்தச் சக்தியைக் கொடுத்தார்.

அவர் இருக்கும் பொழுதே பல காடுகள் பல மேடுகள் எல்லாம் அலைந்து பார்த்தேன். இந்த உண்மையெல்லாம் எமக்குத் தெளிவாகத் தெரிந்த்து இந்த ஐவர் மலையில் தான்.

ஏனென்றால் அந்த உண்மையின் உணர்வுகள் வந்த பின் குருநாதர் என்ன செய்வார்…?

என் கையை நீட்டச் சொல்வார். அங்கிருக்கும் மரங்களும் கற்களும் அப்படியே தூக்கிக் கொண்டு மேலே போகும். தூக்கி வீசுவது போன்ற சில சக்திகளைக் கொடுக்கின்றார்.

அப்பொழுது எனக்கு என்ன செய்கின்றது…?

1.மரத்தையே தூக்கி வீசும் பொழுது நம்மால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று ஒரு திமிர் ஏற்படுகின்றது.
2.எதிரி இருந்தால் அவனை வீழ்த்தக்கூடிய சக்தி நமக்கு இருக்கிறது என்று இப்படித்தான் எனக்குச் சிந்தனை வருகிறது.

ஆனால் அதை எப்படி நல்ல வழிக்குப் பயன்படுத்த வேண்டும் என்று அந்தந்தச் சமயங்களிலெல்லாம் குருநாதர் ஒவ்வொரு உணர்வின் நிலைகளையும் எனக்கு உபதேசித்தார்.

ஆகவே… எம்மை குருநாதர் எப்படிப் பண்படுத்தி வளர்த்துக் கொண்டு வந்தாரோ அதே போல மற்றவர்களையும் கொண்டு வர வேண்டும் என்று தான் விரும்புகின்றேன்.

1.இந்த உலகம் எப்படி இருக்கிறது…? என்ற நிலையும்
2.இந்த உடலுக்குப்பின் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலையும்
3.பிறவி இல்லா நிலைகள் எப்படி அடைய வேண்டும்…? என்ற உண்மைகளையும் எனக்கு உணர்த்தினார் குருநாதர்.

அப்பொழுது அந்த நிலையில்… எது எது உன்னைச் சந்திக்கும்…? அந்த ஆசையின் நிலைகள் உனக்குத் திரும்பும்…! அல்லது ஆசையின் நிலைகள் உனக்குள் திரும்பும் போது உன்னை எதிரி என்ற நிலையில் உன்னைத் தாக்கும் உணர்ச்சி வரும்.

அப்பொழுது, இந்தக் கடுமையான நிலைகளின் உணர்வை ஏற்றினால் உன்னையும் ஆட்கொண்டு உனது நல்ல குணங்களைக் கொல்லும்… மற்றவரையும் காக்க முடியாது.

இப்படிக் கடுமையான சோதனைகளைக் கொடுத்தார் குருநாதர். நான் போகும் பக்கம் எல்லாம் பல எதிர்ப்புகள் வரும். நாய் கூடக் கடிக்க வரும், அப்பொழுது என்னென்ன செய்வது…? என்று முதல் அனுபவத்தைக் கொடுத்தார்.

இப்படித்தான் இருபது வருடம் அனுபவம் பெற்று உங்களுக்குள் இந்தச் சக்தியைக் கொடுத்து உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள் என்கிறேன்.

நிறையச் சொல்லப் போனால் ஒவ்வொரு நேரத்திலும் நான் பட்ட அவஸ்தைகள் இன்னதென்று சொல்ல முடியாது. ஆகையால் இதைப் பேணிக் காத்து எல்லோருக்கும் இந்த உண்மையை உணரும் தன்மை பெறச் செய்ய வேண்டும். நீங்கள் எடுத்துக் கொண்ட மூச்சலைகள் பிறருடைய தீமைகளை அகற்றும் சக்தி பெற வேண்டும்.

என்னுடைய ஆசை… நீங்கள் அனைவரும் என்னைப் போல் (ஞானகுரு) பெரும் ஞானிகளாக மாற வேண்டும்.

பிறருடைய தீமைகளைப் போக்கும் மகான்களாகத் தான் நீங்கள் மாற வேண்டுமே தவிர இந்த உடலின் இச்சைக்கு மாறி விடாது உங்களைக் காத்து நல் வழியில் கொண்டு வருவதுதான் “என்னுடைய முழுமையான தியானம்….!”

நீங்கள் முழுமை பெற்றால்தான் இதைச் செயல்படுத்த முடியும்.

ஏனென்றால் அதைத்தான் இப்பொழுது மிகவும் வலுப்படுத்துகின்றேன். இந்தச் சக்தி பெற்ற நீங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையிலும் வழி காட்டுதல் வேண்டும்.

இப்பொழுது உபதேசித்த நிலைகள் கொண்டு
1.நுகர்ந்த உணர்வுகள் உங்களை எப்படி இயக்குகின்றது…?
2.அதிலிருந்து நீங்கள் எப்படி மீள வேண்டும் என்று உபாயத்தை
3.மற்றவருக்கு எடுத்துக் கூறி அந்தப் பதிவின் நிலைகளை அவர்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.

அந்தப் பதிவின் நிலைகள் அவர்களுக்குள் வளர்ந்தால்…
1.அந்த எண்ணத்தால் தீமையிலிருந்து அவர்கள் விடுபடுவதும்,
2.தீமை செய்தவர்கள் திருத்திக் கொள்வதும்
3.நன்மை செய்யும் உணர்வு உள்ள மக்களாக அவர்களை மாற்றும் திறன் நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்குத் தான்
4.யாம் இதைச் சொல்வது.

அந்த முழுமையின் தன்மைகளை நாம் எல்லோரும் அடைதல் வேண்டும். இது தான் நமது லட்சியமே…!

ஆகவே இந்த லட்சியத்தின் நிலைக்கு வரும்போது செல்வத்தை நாம் தேடிப் போக வேண்டாம். செல்வம் தன்னாலே வந்து சேரும். ஏனென்றால் செல்வத்தைக் குறிக்கோளாக வைத்தால் அதனுடைய ஆசையின் நிலைகள் “உடல் பற்று தான் வரும்..”

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்…
1.நீங்கள் எல்லோரும் அந்த அகஸ்தியனைப் போன்று
2.உலகைக் காக்கும் அருள் ஞானிகளாக வளர வேண்டும் என்று நான் பிரார்த்திக்கின்றேன்.

ஆத்ம சுத்தி செய்ய வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

அறுசுவை உணவுகள் உண்டிடும் காலத்தே உட்கொள்ளும் பொருள்களின் சுவைகள் அது காரமோ… புளிப்போ… உவர்ப்போ.. இனிப்போ.. துவர்ப்போ.. கையிப்போ..! எந்தச் சுவை ஆகினும் அந்தச் சுவைகளின் குணங்களின் கன பரிமாண அடர்வின் தொகுப்பில் திகட்டல் ஏற்பட்டால் என்ன செய்கிறோம்..?

உடனே நீரைத் தான் தேடிச் சென்று குடிக்கின்றோம்.

நீரை உட்கொண்டு அந்தச் சுவைகளைச் சமன்படுத்துதல் போல் ஜீவ காந்த சரீரம் கொண்டிடும் உணர்வில் கனமான சுவாச அலைகளை நீக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

1.அந்தச் சுவைகளுக்கெல்லாம் வீரியமான உயர்வெண்ண மின் காந்த அலைகளை
2.மகரிஷிகளை எண்ணி ஈர்த்திடும் செயலில்
3.நம் சுவாச ஓட்டம் அமைதி கொண்டு நம்முடைய உணர்வின் குணங்களும் சமன் கொள்ளும்
4.நம் சுவாசமும் நாடியும் சீராகும்.

சுலபமாகப் பெற்று உயர்ந்திடும் இந்தத் தியானத்தின் வழியில் செயல்படுத்தும் “மனத்தின் திறன்” என்பதெல்லாம் அவரவர்களின் எண்ணத்திற்கொப்பத்தான் கொள்ள முடிந்திடும்.

தான் கைக்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும்… காரியமாற்றும் நிலையிலும்…
1.தன் ஆத்ம உயர்வுக்காக வேண்டி
2.எண்ணிச் சுவாசித்திடும் பக்குவம் தானப்பா “ஆத்ம சுத்தி…” என்பது.

சரீர வாழ்க்கையில் சுவாச ஓட்டத்தின் செயலில் மனிதன் ஒவ்வொரு நிமிடத்திலும் எடுக்கும் உணர்வுகளின் வீரியத்தால் நமக்குள் மாற்றம் கொள்ளச் செய்யும் செயல்களாக பயம்… கோபம்… மோகம்… ஆவேசம்… ஆத்திரம்… பழி…. ஆகிய இந்தக் குணங்களின் மோதல்களால் முதலில் பாதிக்கப்படுவது சரீரம் தானப்பா…!

அது எப்படி என்றால்…
1.சுவாச ஓட்டங்கள் நாடிகளின் வழியாக ஓடிச் செயல்படும் செயலில்
2.சிறுகச் சிறுகக் கூட்டிக் கொள்ளும் அந்த உணர்வுகளின் வலுவினால்
3.இரத்த நாளங்கள் குழைவு கொண்டு
4.நரம்பு ஓட்டங்களில் தளர்வு பெற்று
5.எலும்புகளின் ஊண் ஒளி குறைவுபட்டுத் தளர்வுறும்.

பக்குவமாக அந்தக் குணங்களை விலக்கிக் கொண்டு நல் நிலை பெறுவதற்கே இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதமப்பா…! அதனால் சரீர சுத்தியும் கிடைக்குமப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

உங்களை நீங்கள் நம்புங்கள். உயர்ந்த ஆற்றலின் தன்மையை நாம் பெறுவோம் என்று உறுதி கொள்ளுங்கள்.
1.மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறுவோம்.
2.மனித வாழ்க்கையில் வந்த இருளை நீக்குவோம்.
3.எங்கள் எண்ணம் அனைத்தும் ஒளி நிலை பெறும்.
4.எங்கள் பேச்சும் மூச்சும் பிறர் துன்பத்தைப் போக்கும்.
5.எங்கள் மூச்சும் பேச்சும் எங்களுக்குள் இருக்கும் இருளை மாய்க்கும் என்ற இந்த உணர்வின் தன்மையை எடுத்துச் சுவாசியுங்கள்.

நிச்சயம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

நாளை வரும் விஞ்ஞான உணர்வின் தன்மைகள் உங்களைத் தாக்காது அந்த விஞ்ஞானத்தை உணர்வின் அலைகளை நீங்கள் ஆட்டிப்படைக்கலாம்.

இதை நீங்கள் பெற வேண்டும் என்று உங்களுக்குள் உங்களை ஆண்டு கொண்டிருக்கும் ஈசனான அந்த உயிரை வேண்டி யாம் சொன்ன இந்த உயர்ந்த உணர்வின் தன்மைகள் அனைத்தும் உங்கள் உடலுக்குள் விளைய வேண்டும் என்று யாம் பிரார்த்திக்கின்றோம்.

அந்த மெய் ஒலியின் அருள் ஒளிகள் உங்களுக்குள் அந்த ஈசனான உணர்வுக்குள் பட்டு அந்த உணர்வின் அலைகள் அங்கே மகிழ்ந்திடும் நிலைகள் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.

இதைப் போன்று உங்கள் உயிரான ஈசனிடம் நீங்களும் இதைப் போன்று வேண்டி உணர்ந்து அந்த மகரிஷியின் அருள் ஒளியைப் பெற வேண்டும் என்று உங்கள் உயிருக்குள் உங்கள் உடலுக்குள் நீங்களும் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்.

\

21.04.2021 உபதேசம்

நாம் போற்ற வேண்டிய உண்மையான சக்தி…!

நம்மை எப்படி வாழ்த்திட வேண்டும்…? நாம் எப்படி வாழ்ந்திட வேண்டும்…? என்றும் பிறரை எப்படி வாழ்த்திட வேண்டும்,,,? பிறரை எப்படிப் போற்றிட வேண்டும்…? என்ற நிலைகளையும் நாம் அறிதல் வேண்டும்.

நம்மை ஏமாற்றுவதற்காகப் போற்றுவதும் உண்டு… எப்படியும் உயர்ந்த நிலைகளில் வளர வேண்டும்…! என்ற உண்மையின் நிலைகள் வாழ்த்துவது வேறு.
1.ஆனால் உங்களைப் போற்றித் துதித்துவிட்டு
2.அதன் மறைவில் தனக்குள் தன் வாழ்க்கைக்காகச் செயல்படுத்தி (ஏமாற்றி) போற்றக் கூடியவர்கள் பலர் உண்டு.

இதைப் போன்ற நிலைகள் அல்லாது “போற்றல்…” என்பது எப்படி இருக்க வேண்டும்…?

ஒருவருடைய உயர்ந்த நிலையைப் பார்க்கும் பொழுது அவர் உணர்வால் “நாம் அதைப் பற்றி…” நமக்குள் நாம் போற்றிக் கொள்ள வேண்டும்.

1.அவர் உயர்ந்தார்…! அந்த உணர்வின் தன்மைகளை நமக்குள் பெருமைப்படும் சக்தியாக நுகர்ந்தோம் என்றால்
2.“அவருக்குள் வளரும் உணர்வுகள்..” நமக்குள் நின்று நாமும் வளர்வோம்.

ஆனால் சிலர் மற்றவருக்கு எல்லா உதவியும் செய்வார்கள்.

அவரிடமிருந்து உதவி பெற்றுக் கொண்டவர்கள் வளர்ந்து விட்டால்..,
1.பார்…! அன்றைக்கு எல்லா உதவியும் செய்து அவனை வளர்த்து விட்டேன்
2.இன்றைக்கு அவன் என்னை மதிக்கின்றனா…? பார்…! என்று இப்படி இந்த உணர்வை மாற்றிவிடுவார்கள்.
3.செய்த நன்மையை மறைத்துத் தனக்குள் கௌரவம் என்ற நிலைகளில் செயல்படுவார்கள்.
4.“தன்னை மதிக்கவில்லையே…!” என்ற உணர்வு கொண்டு
5.தான் செய்த உணர்வை மாற்றிப் பகைமை உணர்வை வளர்த்துக் கொள்வர்கள்.

பின் என்ன ஆகும்…?

நல்ல நேரத்தில் செய்த நன்மையின் உணர்வை அழித்து நன்மையற்ற செய்கையைத்தான் செயல்படுத்தும் தன்மையாக வரும்.
1.செய்த நன்மையை நினைவு கொள்ளாது
2.செய்த நன்மையைக் குறைத்திடும் நிலையாக
3.நன்மைகளை மறைத்திடும் நிலையாகத்தான் நமக்குள் உருவாகின்றது.

ஆகவே இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் விடுபடவேண்டும். உங்களுடைய உணர்வுகள் எல்லாம் தெளிந்த மனம் கொண்டு பேரருள் பெறும் தகுதியைப் பெறவேண்டும்.

2004க்கு மேல் செல்லும் பொழுது கடும் விஷத் தன்மைகள் வளரத் தொடங்குகின்றது. அதிலே சிக்கிடாது அந்தப் பேரருள் என்ற உணர்வை உங்களுக்குள் சேர்த்து இருள் என்ற உணர்வுகளைக் கவர்ந்திடாது மெய் ஒளி என்ற உணர்வை உங்களுக்குள் வளர்த்து இருளை அகற்றிடும் வல்லமை உங்களிலே பெற வேண்டும் என்பதற்குத்தான் இதை உங்களுக்குத் தெளிவாக்குவது.

ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் இந்த உணர்வை ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
1.நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் கண்ட பேரண்டத்தின் உண்மைகளையும்
2.அவர் அறிந்த மெய் உணர்வுகள் அனைத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.

குருநாதர் பெற்ற உண்மையின் துணை கொண்டு இருளை அகற்றிடும் அருள் சக்தி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் தான் மீண்டும் மீண்டும் திரும்பச் சொல்லி உங்கள் நினைவாற்றலைப் பெருக்கச் செய்கின்றோம்.

“பல நாள் பெற்ற ஆத்ம சக்தியைக் காக்கும் நிலையில்தான்” நம் ஜெப நிலை இருக்க வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சாதாரணமாக ஒரு பானையில் தண்ணீரை ஊற்றி வைத்து விட்டோமானால சில நாட்களில் அந்நீர் வழுவழுப்புத் தன்மை கூடி பாசி பிடிக்கின்றது.

“அவ்வழுவழுப்பு நிலை” ஏற்பட்ட பிறகுதான் அடுத்த வளர்ச்சி நிலை ஒவ்வொன்றிலுமே வளருகின்றது. “பிசின்” போன்ற நிலை ஏற்பட்ட பிறகுதான் அதன் ஜீவத்தன்மை முதிர்வு நிலை கொள்கின்றது.

அதுவே ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி காய்ச்சும் பொழுது அப்பாத்திரத்திற்கு அடியில் மண் போன்று படிவங்கள் வெள்ளையாகப் படிந்து விடுகின்றது.

இதைப் போன்று…
1.மனித உணர்வில் எடுக்கப்படும் அலைத் தொடர்பின் உணர்வு
2.சரீரம் சமைக்கும் நிலை கொண்டு ஆத்ம அலையின் “படிவமாகி விடுகின்றது…”

ஆத்மாவின் வண்ணத் தன்மை கொண்டு பிரகாச நிலை ஒளி சக்திகளை இச்சரீர சமைப்பினால் மனிதன் பெற்றானானால் மனித சக்தியில் சித்து நிலை பெற முடியும்.

மகரிஷிகளின் உயர் காந்த அலையை… உணர்வின் எண்ணம் கொண்டு “விழி கொண்டு ஒளி பார்த்து இச்சரீரத்தின் உணர்வில் எடுக்கும் ஜெப முறையினால்…” மனித உணர்வின் சஞ்சலமற்ற சம உணர்வு வளர்ச்சியின் தியானத்தின் முறை அறிந்து… தன்னைத்தான் தான் உணரக்கூடிய வழி அறிந்தானானால்… தன் வாழ்க்கை செயலில் அமைதியையும் தன் ஆத்மாவின் உயர்வின் வழியையும் ஒவ்வொருவரும் பெறலாம்.

நம் தேவைக்குகந்த நெல்லைப் பயிரிடுகின்றோம். நிலத்தை உழுது பருவம் பார்த்துப் பயிரிட்டு அதற்குகந்த பாதுகாப்பு எல்லாம் செய்கின்றோம். பின் அதனுடைய பலனை நாம் கண்டு நெல்லை அறுத்து பக்குவமாய் சேமிக்கவும் முற்படுகின்றோம்.

ஆனால் அதை நாம் எடுத்துச் சேர்ப்பதற்குள் பெரிய மழை வந்தால் எல்லாம் அழிகின்றது. அதைப் போன்று…
1.தியானத்தின் மூலம் பல பக்குவமான முறைகளை இச்சரீரத்தில் வளர்த்துப் பலன் பெறும் பக்குவத்தில்
2.உணர்வில் மோதும் பலமான மாற்றத்தினால் பல நாள் செயலின் பலனை இழந்துவிடும் நிலை போன்று
3.சரீர உணர்வால் எண்ணத்தில் பலமாக மோதும் எதிர்ப்பைத் தாங்காமல்
4.தவறிவிடும் நிலை உணர்வின் எண்ணத்தில் மோதுவது உண்டு.

ஆகவே… நெல்லை அறுக்கின்றோம் என்றால் அந்த நேரத்தில் மழை வருகிறது என்றால் அதற்குண்டான வேகத்தைச் செலுத்திப் பெற்ற பலனைப் பாதுகாக்கத் துரிதம் கொள்கின்றோம் அல்லவா…!

அது போன்று… நம் வழிமுறையில் நல்லொழுக்கத் தொடரில் வளர்த்த வலுவை…
1.எதிர்ப்படும் மோதலிலிருந்து பாதுகாக்கும் துரிதமாக
2.எண்ணத்தின் துரிதத்தைத் தீயவைகளுடன் மோதாமல்
3.நல்லதைப் பாதுகாக்கும் உணர்வு ஜெபமாகத்தான் நாம் செயல்படுத்த வேண்டும்…! தன்னைத்தான் தான் உணரும் பக்குவத்திற்கு…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

 

ஆபீஸில் வேலைக்குப் போகிறவர்கள் – உட்கார்ந்து வேலை செய்பவர்கள் ஒரு ஐந்து நிமிஷம் வெளியில் மண் வெட்டி எடுத்து வெட்டினால் சோர்வடைந்து விடுகின்றார்கள்… களைப்படைந்து விடுகின்றார்கள்.

ஆனால் தன் உணவுக்காக வேண்டி விவசாயத்திற்காக உழைப்பவர்கள் கஷ்டப்பட்டு அவர்கள் கடுமையான வேலைகளைச் செய்கின்றார்கள்.

“இதைப் பெறவேண்டும்” என்று ஏங்கி அவர்கள் சுவாசிக்கும் உணர்வுகள் எல்லா நரம்புகளுக்கும் அந்த வலிமை ஊட்டும் உணர்வுகளாக அமைந்து அது உமிழ் நீராக மாறுகின்றது.

உமிழ் நீராக மாறி அவர்களுடைய உணவுக்குள் இந்த வீரிய உணர்வுகள் உருவாக்கப்பட்டு அவர்களுடைய இரத்த நாளங்களில் கலக்கப்படும்போது அந்த நல்ல அணுக்களுக்கு அந்த வீரியச் சத்து கிடைக்கின்றது.

அப்பொழுது அவருடைய உழைப்புகள் அவர் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மூன்று மணி நேரம் விடாது கடின உழைப்புகளைச் செய்கின்றனர். அவர் மூச்சு வாங்குவதில்லை.

நம்மால் இரண்டு நிமிடம் தொடர்ந்து வேலை செய்தால் பலவீனம் அடைகிறது.

ஆனால் அவர்களும் நம் முன்னாடி இந்தக் காற்று மண்டலத்தில் வரும் உணர்வுகளைச் சுவாசித்துத்தான் வளர்கின்றனர்.

அவர்களுடைய எண்ணமோ இந்த வேலையை நாம் செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் வலிமையான நிலையில் செயல் படுத்தப்படும்போது அந்த எண்ணத்தின் வலிமையை அவர் சுவாசித்து அவர் ஆகாரத்திற்குள் வலிமை கிடைக்கின்றது.

வசதியுள்ளவர்கள் வசதி குறையும் போது ஒரு சிலர் அந்த மாதிரி முடியாத நிலைகள் கொண்டு வயிற்றுப் பிழைப்புக்காக சோற்றுக்காக எப்படியோ இந்த மண்ணைத் தூக்கி சுமக்கலாம் என்ற எண்ணத்தில் வேலைக்குப் போவார்கள்

வசதி இருந்து வசதி குறைந்தபின் தான் வேலை செய்யப்படும் போது வலுவான எண்ணம் வருவதில்லை.

அப்பொழுது இந்த வலுவிழந்த உணர்வுகளைச் சுவாசிக்கும்போது நான்கு நாளைக்கு வேலை செய்தார்கள் என்றால் அவர்களுக்குக் கடுமையான நோய் வந்து விடுகின்றது.

வசதியுடன் வாழ்ந்து வசதியற்ற நிலைக்குப் போகும் போது இந்த நோய் வருகின்றது.

எப்படியும் நாம் தொழில் செய்து வாழ வேண்டும் என்று எண்ணுவோருக்கு இந்த உணர்வுகள் வருகின்றது. ஆகவே நாம் சுவாசிக்கும் உணர்வு எதுவோ அதற்குத் தக்க அந்த வலிமை கிடைக்கின்றது.

20.04.2021 உபதேசம்

சுவாச நிலை சீரானால் தான் உடல் நலமும் சீராகும் – ஈஸ்வரபட்டர்

 

மனிதனின் சரீரமானது எண்ணம் கொண்டு ஜீவ காந்த ஆற்றலின் கதியினால் இயங்கும் இயற்கைச் செயல்பாட்டில் சரீரம் நலிவுறும் காலங்களில் எல்லாம் அதைக் குணப்படுத்த நவீன மருத்துவ விற்பன்னர்கள் (DOCTORS) பல பல முறைகளைக் கையாளுகிறார்கள்.

நோயின் குணங்களை அறிந்து அந்த நோய் அகலச் செயல்படுத்தும் இன்றைய மருத்துவத்தில் நோய்வாய்ப்படுபவனின் சரீரம் மருத்துவர் கொடுக்கும் மருந்தின் குண அமிலத்தை ஏற்றுக் கொண்டு நோயை அகற்றிடச் செயல்படுகிறது.

ஆனால் நோயின் கடுமை வீரியம் கொண்டால் உட்கொள்ளும் மருந்தை ஏற்றுக் கொள்ளாத நிலையில் முதிர்வாகிச் சரீர அவயங்களில் பெரிய பாதிப்பு எற்படத் தொடங்கிவிடுகிறது.

இவைகளை மருத்துவர்கள் கண்டு கொண்டு அந்த நோயின் கடுமைக்கு ஏற்ப அறுவைச் சிகிச்சை முறைகளையும் (SURGERY) கற்ற அறிவின் ஞானம் கொண்டு செயல்படுத்துகிறார்கள்.

மருத்துவம் மனிதனை இன்றைக்குக் காத்துக் கொண்டிருப்பது இதைப் போன்ற வழிகளில் தான். ஆனால்
1.மனிதனுடைய சந்தர்ப்பத்தினால் அவன் எடுத்துக் கொண்ட குணங்களின் கடுமையால் தான் சுவாச ஈர்ப்புத் தன்மையே மாறுகிறது.
2.அதனால் சரீரத்தில் நலிவுகள் ஏற்படத் தொடங்குகிறது
3.இன்றைய மனிதனின் செயல்பாடுகள் இப்படிப்பட்ட விதி வழி செல்கின்றதப்பா…!

பூமி ஈர்த்துச் சமைக்கும் சுவாசத்தின் செயலில் நன்மை தீமை என்று கலந்தே காற்றினில் படர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் வாழ்க்கை மோதலில் மனிதன் தான் ஏற்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட எண்ணம் வலு நிலை பெற்று விடுவது “சுவாசத்தின் கதியினால் தான்…!”

சரீரத்திற்குள் அமைந்து வினைச் செயலாக இயங்கிக் கொண்டிருக்கும் முக்கியமான நாடிகள்: மூலாதார நாடி… நாபி நாடி… மார்பு நாடி… கண்ட நாடி… சிரசில் நெற்றிப் பகுதியில் சிவசக்தி நாடி… சிரசின் உச்சியில் ஈஸ்வர நாடி…. ஆகும்.

இவைகளுடன் சேர்ந்து சரீர அவயங்களில் புறத் தொழில் புரிந்திடும் செயலாகச் செயல்பட்டு ஓடிடும் நாடிகள் கண்… காது… நாசி… வாய்… கை கால் உறுப்புகள்.. ஒவ்வொன்றுமே சரீர வளர்ச்சிக்காக இயங்கினாலும்
1.அந்த வளர்ப்பின் முதிர்வாக…
2.கடைசியில் மனிதனின் சரீரத்தில் ஏற்படுகின்ற நோய் நொடிகள் அனைத்திற்கும் மூல காரணம் எது…?

உலக வாழ்க்கையில் மனிதன் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் செயல்படும் குணங்களில்
1.பயம் கோபம் மோகம் ஆத்திரம் அவசரம் வெறி வேதனை உள்ளிட்ட
2.பல்லாயிரம் கிளைகளாகக் கிளைத்திடும் அந்தக் குணங்களின் செயல்பாடே
3.சுவாசத்தின் கதியாக நாடிகளில் ஓடுகின்றது.
4.அந்தந்தக் குணங்களின் வீரியத்திற்கொப்ப இரத்த நாளங்களைத் தூண்டச் செய்து
5.மேலே சொல்லப்பட்ட அக… புற நாடிகளில் ஓடும் சீரான சுவாச ஓட்ட கதி முழுவதையுமே அது மாற்றி விடுகின்றது.

அதே சமயத்தில் சரீர உள் அவயங்கள் செயல்படும் செயலிலும் மாற்றத்தை ஏற்படுத்தி வேதனைகளை உண்டாக்குகின்றது. அந்த வேதனையின் உச்ச நிலையே நோயாக மாறுகின்றது.

நோயாக ஆன நிலையில் இயற்கையின் கதியை அதாவது சரீர இயக்கத்தின் இயல்பையே மாற்றிவிட்டு தான் பெறவேண்டிய உயர் நிலைக்கே விபரீதத்தை விளைவித்துக் கொள்கின்றான் மனிதன்…!

சுவாச நிலை சுவாச நிலை என்று பல முறை சொல்கிறோம். அந்தச் சுவாச நிலையைச் சரி செய்ய வேண்டுமா இல்லையா..?
1.சுவாச நிலையை மாற்றாதபடி
2.நாடிகளின் இயக்கங்களைச் சீராக்காதபடி
3.மருந்தை மட்டும் உட்கொண்டால் சரீர சுத்தி கிடைக்குமா…?

நம் உடலுக்குள் ஒரு அணுவின் இயக்கத்திற்கும் அதுவே கூட்டமைப்பாக இயக்கும் நிலைக்கும் உள்ள வித்தியாசம்

 

ஒரு கோபப்படுவோருடைய உணர்வைக் கண்ணுற்று நோக்கி நம் உடலிலேயே பதிவாக்கி மீண்டும் அதை நுகர்ந்து நம் உயிரிலே பட்டால் அது நம் உடலுக்குள் கோபத்தை உருவாக்கும் அணுவின் தன்மை அடைந்து விடுகின்றது.

நமக்குள் பதிவான உணர்வு கொண்டு மீண்டும் “அவன் கோபித்தான்” என்ற உணர்வை நுகர்ந்தால் இந்த உணர்வுகள் அந்த உணர்ச்சியைத் தூண்டுகின்றது. நுகர்ந்த உணர்வு நம் இரத்தநாளங்களில் அது பெருகத் தொடங்கி விடுகின்றது.

உதாரணமாக ஒரு நெல்லை வைத்து அதை நாம் சமைத்துச் சாப்பிட முடியாது. பல நெல்களை இணைத்துச் சமைத்தால்தான் அது சாதம் ஆகின்றது.

ஆகவே அதைப் போன்று
1.நாம் நுகர்ந்த அந்தக் கோபமான உணர்வு பல அணுக்களின் தன்மை அடையபபடும் பொழுது தான்
2.இரத்தக் கொதிப்பு என்ற உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

ஒரு அணுவின் தன்மை என்று இருந்தால் அது மற்ற உணர்வுடன் கலக்கப்படும் பொழுது இரத்தக் கொதிப்பு என்று வராது..
1.அது உணர்ச்சியை ஊட்டும் உணர்வு என்றுதான் அதற்குப் பெயர் வரும்.
2.மற்றவைகளுடன் சேர்த்து இந்த உணர்வின் தன்மை இயக்கம் கம்மியாகவே இருக்கும்.

ஒரு வேதனைப்படுவரைத் திரும்பத் திரும்ப எண்ணினால் அந்த எண்ணத்தின் கணக்கு அதிகரித்தால் அதற்குத் தக்க நோயாக வரும்.

இதை எல்லாம் உணர்த்துவதற்குத்தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று காட்டுகின்றார்கள்.

நாம் எந்தெந்தக் குணங்களை எல்லாம் சுவாசிக்கின்றோமோ அது நமக்குள் உள் சென்று அதனின் குணமாக உருவாகின்றது என்பதைத் தான் நந்தீஸ்வரன் என்று காரணப்பெயர் வைக்கின்றார்கள்.

ஏக்குணத்தின் தன்மை உணர்வின் தன்மை உருவாக்குகின்றதோ தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிடும்.

ஒரு அணுவின் தன்மை பெற்றபின் அந்த உணர்ச்சியைத் தூண்டி நம் உயிரின் நிலைகளுக்கு நினைவுபடுத்தி அதை மீண்டும் சுவாசிக்கச் செய்து நம் இரத்தநாளங்களில் கலந்து இந்த உணர்வின் தன்மை உணவாக எடுத்துக் கொள்ளும்… வஉட்லிலே அணுக்களாக விளையும்.

ஒரு நெல்லை நிலத்தில் ஊன்றினால் எப்படிப் பல நெல்களாக விளைந்து வருகின்றதோ இதைப்போல
1.நமக்குள் பதிவான ஒரு உணர்வின் (வித்தின்) தன்மை அது எதுவோ
2.அதற்குத் தக்கவாறு அந்தப் பல எண்ணங்களுடைய உணர்வுகளாக வருகின்றது
3.அந்த வித்தின் தன்மை விளைகின்றது

இப்படி நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் சிவன் ஆலயத்தில் சிவனுக்குக் கணக்கப்பிள்ளை

யார்..?

சுவாசித்த உணர்வுகளே நந்தீஸ்வரன். நாம் பார்த்த உணர்வுகள்… நாம் சுவாசித்து அந்த உணர்வின் தன்மை அதனின் கணக்கு அதிகமாகும் போது அது நந்தீஸ்வரன்.

உடல் சிவம்… சுவாசிப்பது நஸ்தீஸ்வரன்… உடலுக்குள் தொடர்ந்து இது செயல்படும் போது நந்தீஸ்வரன் கணக்குப்பிள்ளை.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியரை எண்ணி அவர் விட்ட மூச்சலைகளைச் சுவாசியுங்கள்

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து… எங்கள் உடலில் உள்ள உறுப்புகள் முழுவதும் படர்ந்து… எங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய எல்லா அணுக்களும் அகஸ்தியரின் அருள் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா…!

mantra 29

19.04.2021 உபதேசம்

விஞ்ஞானத்திற்கு அடிமைப்பட்டிருக்கும் இன்றைய உலகம் ஆன்மீக வழியின் மெய் ஞானத்தை உணரட்டும் – ஈஸ்வரபட்டர்

 

ஐந்து திருமுறைகள் பக்தியின் பரவசமாகக் கொண்ட நிலையை மாற்றி
1.ஆறாம் திருமுறையில் மெய்யொலியாக உண்மை ஞானமாக
2.ஆத்ம தரிசனம்… என்றும் ஜோதி தரிசனம்… என்றும் காட்டினார் இராமலிங்க அடிகள்.

மனிதன் தன் ஆத்ம அறிவைக் கூட்டிக் கொள்ள “மதி ஒளி” என்னும் சிந்திக்கும் திறன் ஆய்வில் கண்டும் கேட்டும் உணர்த்தும் என்பதில் “அறிவை அறிவால் அறிவர்…!” என்ற சூட்சமமாக “இராமலிங்கச் சித்தன்” வெளிப் போந்த மெய் அந்த ஞானத்தை மனித சமுதாயம் எந்த அளவிற்கு ஏற்றுக் கொண்டது…?

பக்தி கொண்டு பஜனை பாடவும்.. பரவசமாக அந்தச் சித்தன் உரையைப் பேச்சுக்கலை ஆற்றவும்… திருவிழாக்கள் என்ற பேரில் வாண வேடிக்கை வினோதங்கள் கவனத்தை ஈர்க்கவும்.. செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அந்தச் சித்தன் ஸ்தூல சரீரம் கொண்டு உலவிய கால கட்டங்களில் மனிதனின் போக்கு ஆராவாரம் கொள்ளும் செயல்களை விடுத்து மெய் ஞானம் கொண்டு உயர்ந்திடவே மெய்ப் பொருளைக் கொள்ளப்பா… கொள்…! என்று “ஏக்கமுடன் கூவியே அழைத்தான்…!”

ஆறாவது திருமறையை உணர்த்த வந்த செயலை ஒதுக்கித் தள்ளிய சமுதாய நிலையைக் கண்ட பின்…
1.கண்ட பின் “கடை விரித்தேன் கொள்வாரில்லை…!” என்றுரைத்து
2.“மீண்டும் பிறப்பில் வருவேன்… இந்த உலகின்கண் மற்றொரு பாகத்தில்…!” என்ற அந்தச் சித்தனின் சொல் வாய்மை
3.பிறப்பின் தொடரில் “நடைமுறைக்கு வந்துவிட்ட சூட்சமத்தைத்தான்…” இன்றைய மனிதன் அறிந்து கொண்டானா…?

போற்றி…போற்றி…! என்று போற்றிடவே துடிக்கின்ற மனிதனின் செயலில் மெய் ஞான விழிப்படையத் தடுக்கின்ற நிலையின் காரணமே தான் கொண்ட அதி ஆசை நிலை தானப்பா.

1.“பூசத்தில் ஜோதி கண்டேன்… பிறவிப்பயன் பெற்று விட்டேன்…!” என்று
2.தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டு புகழ்ந்திடும் வழிக்கன்றோ செல்கிறான் மனிதன்.

கண்டவன் விண்டிடுவானா…? பெற்றதின் பயனை…! ஏதோ மனதிற்கு ஒரு நிறைவு ஹன நேரத்திற்கு என்று உரைப்பவனே மீண்டும் உலக இயலில் அகப்பட்டே தத்தளிக்கின்றான்.
1.அருள் செல்வம் என்பது எதுவப்பா…?
2.இராமலிங்கம் காட்டிய ஜோதித் தத்துவம் எதுவப்பா…?

ஒரு புறம் சூரியன் மறு புறம் சந்திரன் காணுகின்ற கால கட்டத்தில் நடுவிலே ஜோதி காட்டியதே உயிராத்ம தரிசனம்…! “நான்” என்பதன் கருப்பொருளை உணர்த்தவே… உணர்ந்து கொள்ளவே காட்டப்பட்டது அந்தத் ஜோதித் தத்துவம்.

சூரியன்… சந்திரன்… ஜோதி விளக்கு… அனைத்தும் இருளகற்றும் ஒளிகள். இருளகற்றும் ஒளியை மனிதன் தன் ஐம்புலன்களில் ஒளி கொண்டு கண்டு உணர்வதுவே “கண் ஒளி கொண்டு தான்…!”

கண்ணொளி கொண்டு ஜோதி தரிசனம் காண்கின்றவன் – தான் காண்பது ஜோதியே என்று அறிந்து கொள்ளும் ஒளி… “அறிவின் ஒளியப்பா…!

1.அறிவின் ஒளி கொண்டு காண்கின்ற ஜோதியை
2.நான் ஜோதி தரிசனம் கண்டேன் என்று உரைத்ததில்
3.ஜோதி தரிசனத்தைக் கண்டு கொண்ட “நான்” என்பதே உயிராத்மாவாகிய ஜோதியப்பா…!

“நீ கண்டு கொள்ளடா… உன் ஆத்ம ஜோதியை…!” என்று கூறாமல் கூறிச் சொல்வித்த இராமலிங்க சித்தனாரின் உண்மை நிதர்சனம் என்றுமே மாறாத சத்தியத்தின் சக்தியப்பா…!

இன்றைய விஞ்ஞான உலகம் ஆத்ம சிந்தனையின் சக்தியை அறிந்து கொள்ள ஆவல் கொண்ட கலியின் கடைசிக் காலத்தில் “இராமலிங்க வள்ளல் சித்தன்” கொண்ட ஆத்மாவின் வலுவே
1.உலகின் ஒரு கண்டத்தில் செயல் கொண்டிருக்கும் உண்மையின் பொருள் கண்டு கொண்ட பின்பாவது
2.மனிதன் தன்னை உணர்ந்து கொள்ளும் செயலுக்கு ஊக்கமளித்திடச் செயல் கொள்ளட்டும்.

அழிவின் பாதையில் மனித சமுதாயத்தையே அழைத்துச் சென்று கொண்டிருக்கும் விஞ்ஞானமும் ஆத்மீக வழியின் மெய் ஞானத்தை உணரட்டும்… என் ஆசிகள்…! (ஈஸ்வரபட்டர்)

18.04.2021 உபதேசம்

இன்றைய உலக சூழ்நிலையில் எதை நம் விதியாக மாற்ற வேண்டும்…?

 

அன்றாட வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் ஒரு கடுமையான வேதனைப்படுவருடைய செயல்களை நாம் உற்று நோக்கினோம் என்றால் அது நமக்குள் “விதியாக” மாறுகின்றது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்… இன்றைய உலகில் அனைத்துமே விஞ்ஞான அறிவால் பெரும் வேதனைப்படும் உணர்வுகளையே நாம் நுகர்ந்து கொண்டிருக்கின்றோம்.

1.பத்திரிக்கை வாயிலாகவும் டி.வி. வாயிலாகவும் எங்கோ நடக்கும் சம்பவங்களை நாம் கேட்கின்றோம்… உடனுக்குடன் பார்க்கின்றோம்
2.அதையெல்லாம் பார்த்து… நுகர்ந்து… உணர்வால் அறிந்து கொண்டுதான் இருக்கின்றோம்.

அந்தக் கடுமையான உணர்வுகள் நமக்குள் பதிவாகி விட்டால் அதுவும் நமக்குள் “விதியாக” மாறி விடுகின்றது.

பலருடைய துன்பப்பட்ட உணர்வுகளையும் பலருடைய கொடுமைகளையும் நமக்குள் எடுக்கும் பொழுது அது எல்லாம் நமக்குள் வினையாக வித்தாகப் பதிவாகின்றது. இப்படி ஒரு வித்தாக மாறுவதைத்தான் “விதி” என்று சொல்வது.

1.அப்படிப் பதிவான வித்து தன் இனத்தைப் பெருக்க
2.மீண்டும் மீண்டும் அதே உணர்வைத் தான் கவரும்.
3.அதே துன்பத்தைத் தான் நமக்குள்ளும் செயல்படுத்தும்.

ஆனால் அந்த விதியை எவ்வாறு மாற்ற வேண்டும்…?

பத்திரிகையோ டி.வி.யோ பார்த்துப் படித்த பின்பு உடனே நாம் என்ன செய்ய வேண்டும்…?
1.அந்த வீரியத் தன்மை (கொடுமைகள்) நமக்குள் அது தனித்த நிலையில் வளராது தடுக்க
2.ஈஸ்வரா…! என்று நம் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
4.உடலுக்குள் பல முறை செலுத்த வேண்டும்… இந்த உணர்வினை நமக்குள் அதிகமாக நமக்குள் கலக்கச் செய்ய வேண்டும்.

அதற்குப் பின்… பத்திரிகையிலோ டி.வி.யிலோ படித்துப் பார்த்த (சம்பவங்கள்) அத்தகைய நிலைகள்…
1.நாளை நடப்பது எல்லாம் நல்லவைகளாக நடக்க வேண்டும்.
2.தீமைகளிலிருந்து மக்கள் விடுபட வேண்டும்
3.மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று இப்படி உணர்வை மாற்றி விட்டால்
4.இது நமக்குள் தீமைகளை வென்றிடும் “விதித் தன்மை” அடைகின்றது.

இதைத்தான் மதி கொண்டு விதியை மாற்றுதல்…! என்று சொல்வது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நாம் எண்ணி எடுத்தால் இது மதி…! அந்தப் பேரருளை நமக்குள் பெறச் செய்கின்றது. நம்மைப் பிறவியில்லா நிலை அடையச் செய்கின்றது

ஆகையினால் நாம் ஒவ்வொருவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற காலை துருவ தியானம் நல்ல பலனைத் தரும்.

குடும்பத்தினர் அனைவரும் ஒவ்வொரு நொடியிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.

இடும்பனான குணம் அகற்றி தெய்வீக குணத்தை நாம் வளர்க்க உயிரான்மா ஒளியாகும் – ஈஸ்வரபட்டர்

 

உடலில் உள்ள பஞ்சேந்திரியங்கள் அனைத்தையும் சுற்றி ஓடும் ஒளி நாதம் செயல் கொள்ளும் திறன் என்ற தொடரை அறியும் முன் இடும்பன் காட்டிய தத்துவ மூலத்தை அறிந்திடல் வேண்டும்.

உயிரான்மாவின் சக்தியைக் கெடுக்க முயலும் வினைச் செயலையும் அந்தக் கேட்டினால் ஏற்படும் விளைவாகச் சங்கடமான அலைகள் எப்படித் தாக்குகின்றது…? என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தீமைகள் தாக்கும் போது உயிரான்ம மூலக்கலப்பு (உயிர்ச் சக்தியும் ஆன்ம சக்தியும்) இணையாத் தன்மை கொண்டு பிரிவு என்கிற மனோபாவனையில் செயல்படும் தன்மை வருகின்றது.

அந்தத் தீதெண்ண குண சக்தியின் வலுவினால் ஆத்ம சக்தியின் வலுக்கூட்டும் தொடர்பையே நிறைவுறாத செயலுக்கு அது தன் செயலை நிகழ்த்தி விடுகின்றது.

1.தீவினைச் செயல்பாடு – உயிர் சக்தியைப் பரிபூரணமாக ஆட்கொண்டு விட்டால்
2.உயிர் சக்தியின் வீரிய வலுவை அது தன் வலுவாக்கி
3.இடும்பச் சித்தன் காட்டியபடி அந்தத் தீதெண்ண குணங்கள் வீரியம் கொள்ளும்.

அது தனக்கொத்த கிளைகளைப் பரப்பிக் கொண்டு ஆன்மா என்றிட்ட உயர் சக்தி இருக்குமிடம் தெரியாமல் அனைத்தையும் மறைத்துத் தான் பெற்று வலுவாக்கிய சங்கட அலைகளைப் பஞ்சேந்திரியங்கள் மூலம் செயல்படத் தொடங்கும்.

1.சக்கர வியூகம் செயல்படும் நிலையில்
2.எண்ண உணர்வின் வலு மூலம்,.. மெய் என்ற வட்டத்தை அடுத்து
3.வாய் என்ற சக்கர வட்டத்தை உடைத்துத் தன் குணச் செயலை நிகழ்த்தும்.
4.வாய் வழியாக அந்தச் சங்கடத்தையும் சோர்வையும் கோபத்தையும் வேதனையையும் சொல்லாக வெளிப்படுத்தச் செய்யும்.

அவ்வாறு வெளி வந்த சங்கட அலைகள் யாரை எண்ணிச் சொல்லப்படுகின்றதோ சொல்லப்பட்ட பொருளின் கருத்தில் நிலை பெற்றிருப்பவர்
1.அந்தச் சங்கட அலைகள் தன் உயிராத்மாவின் சக்தியை ஆட் கொண்டு உண்டு விடாமல் இருக்கும் பொருட்டு
2.தன் சரீரத்தில் உள்ள பஞ்சேந்திரியங்களை முதலில் வசப்படுத்திக் கொள்ள முனைதல் வேண்டும்.

பின் உள் நிகழ்வின் செயல்முறை தானாக வசமாகும்.

போகப் பெருமான் தன் அனுபவத்தின் இடர்பாட்டில் இடும்ப குணச் செயலை அறிந்து தன் உயிராத்ம சக்தியை எப்படிக் காத்துக் கொண்டாரோ அந்தப் பக்குவத்தை ஞானச் செல்வங்கள் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

வீட்டிலே நாம் வேலைக்கு அவசரமாகப் போக வேண்டும் என்று நினைப்போம். அந்த நேரத்தில் சந்தர்ப்பத்தில் மனைவிக்கு முடியாமல் இருக்கலாம்.

அப்பொழுது “இன்னும் எழுந்து… அவர்கள் ஒன்றும் செய்யவில்லை பார்…!” என்று கோபத்தை எடுத்தால் அவர் உடலில் முடியாமையை அறிய முடியாது.

அப்பொழுது உடனே நமக்குக் கோபம் வரும். அப்பொழுது, எதற்கு ஊட்டம் கொடுக்கிறோம்…?

எனெனில்
1.நம் உடலில் கோபத்தை ஊட்டும் அணுக்கள் உள்ளது
2.அதற்கு ஆகாரம் தேவை.
3.இந்தச் சந்தர்ப்பம் பார்த்து ஊடே புகுந்து கொள்ளும்.
4.நாம் சிந்திக்க முடியாத நிலையில் அது சாப்பாடு எடுக்கின்றது.

புலிக்குப் பத்து நாள் பட்டினி போட்டவுடன் ஒரு ஆளைக் கண்டவுடன் தாவும். மழை இல்லாமல் பூமிக்குள் பதிந்திருக்கும் செடி கொடிகள் மழை பெய்தவுடன் கிடு…கிடு…வென விதைக்காமலே முளைக்கின்றது. அதிலேயும் இந்த விஷ வித்துக்கள் தள…தள.. என்று முளைக்கும்.

நல்ல வித்துக்கள் போட்டால் சீக்கிரம் முளைக்கின்றதா…? இல்லை. அதற்கு வேண்டிய பக்குவ நிலையும் சூழ்நிலையும் உருவாக்கினால்தான் அது விளைகின்றது.

ஆகையால் நாம் என்ன செய்ய வேண்டும்…? அந்த ஞான வித்துக்களை வளர்த்துப் பழக வேண்டும். இது மனிதன் ஒருவனால்தான் சாத்தியமாகின்றது.

நாம் ரோட்டில் போகும் பொழுது பார்த்து நுகர்ந்த உணர்வுகள் அணுவாகி விட்டால் அதற்குச் சாப்பாடு தேவை. நம்மை அறியாமலேயே நுகர்ந்து அந்த வெறுப்பின் உணர்வுகளச் சுவாசிக்கச் செய்யும்.

இத்தகைய உணர்வுகளைச் சுவாசித்தவுடனே தொழில் செய்யப் போகும் பொழுது அங்கே வேலை செய்பவனைப் பார்க்கப்படும் பொழுதே அவன் மேல் வெறுப்பு வரும்.

நமக்காக வேலை செய்யும் பொழுது இந்த வெறுப்பின் உணர்வுகள் அவனுக்குள் சென்று தவறாக வேலை செய்வான்.

அதே சமயத்தில் இந்த உணர்வின் தன்மை கணக்கு எழுதப்படும் பொழுது என்ன செய்கிறது எனில் கணக்கைத் தவற விட்டுவிடுகிறது.
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை அறியாமலேயே
2.அதனுடைய உணர்வுக்காக அந்த உணர்ச்சிகளைத் தூண்டி அது வளர்கின்றது.
3.நல்ல குணங்களை நாம் நமக்குள் தேடித் தேடிப் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.
4.நல்ல குணத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடிகின்றதா…!

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…? அந்த உணர்வு தூண்டுகின்றது என்றால் நமக்குள் நம்மை எது இயக்குகின்றது…?

அவன் உடலில் பிறிதொரு உணர்வுகளைக் கேலி பண்ணிப் பழகியிருப்பான். அவன் முகத்தை நாம் பார்க்கவில்லை. நாம் பேசவில்லை. அவன் உடலைச் சுற்றி அந்த ஆன்மாவில் இருக்கும். உற்றுப் பார்த்தால் நமக்குள் பதிவாகி நுகரச் செய்கிறது.

அவனை அறியாமலேயே குற்றவாளியாகப் பார்க்கிறான். அப்பொழுது இதை எது செய்கிறது…? இந்த உணர்வின் அணுக்கள் உந்தப்படும் பொழுது அதைக் கவர்ந்து நம்மையறியாமலேயே சாப்பாடு எடுக்கின்றது.

நுகர்ந்தபின் என்ன செய்கின்றது…?

மாம்பழத்திலிருந்து வாசனை வருகிறது. நல்ல பழமாக இருந்தால்…. “ஆகா…!” என்கிறோம். அதிலே புளிப்பு கலந்தால் “அய்ய..” புளிப்பாக இருக்கிறது என்கிறோம்.

எதிலே வருகிறது…? காற்றின் நிலைகளிலிருந்து வருகிறது. அதனை உணர்ந்து நுகர்ந்தவுடனே பழம் இது என்று பார்க்கிறோம்.

ஒரு பூச்செடியிலிருந்து வரக்கூடிய மணத்தைப் பார்த்தவுடன், நன்றாக உள்ளது. பச்சிலையிலிருந்து வரும் மணத்தைக் கண்டு நமக்குப் பிடிக்கவில்லை என்றால் வாந்தி வரும்போல உள்ளது.

நம் உடலிலுள்ள அணுக்கள் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தால் வாந்தி வருகின்ற மாதிரி உள்ளது.

இதையெல்லாம் நுகர்ந்து நாம் இரத்தத்தில் கலந்தபின் நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கும் அந்தத் தீங்கு விளைகின்றது. அந்த அணுக்கள் வளர ஆரம்பிக்கும்.

நல்ல அணுக்கள் ஏற்க மறுக்கும் நிலை வருகின்றது. கெட்ட அணுக்கள் எடுக்கும் பொழுது அது வளர்கின்றது. அப்பொழுது நம்மையறியாமலேயே மயக்கம் வரும்.

அந்த நேரத்தில் நாம் இந்த ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

“ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும். எங்கள் ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று இங்கே புருவ மத்தியில் நிறுத்திவிட வேண்டும்.

எங்கள் உடலிலே அது பரவ வேண்டும் என்று எண்ணிவிட்டு யார் இந்த மாதிரி நடந்தனரோ அவர் பொருளறிந்து செயல்படும் சக்தியும் சிந்திக்கும் ஆற்றலும் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும். இவ்வாறு எண்ணினால்
1.அவன் செய்த செயலும்
2.நாம் எண்ணிப் பார்த்து நுகர்ந்தது
3.இரண்டும் உயிருக்குத்தான் வருகின்றது.

உயிர் ஒரு நெருப்பு. நெருப்பை வைத்து ஒரு பாத்திரத்திலே எந்த சரக்கைப் போடுகிறோமோ அதை இரண்டறக் கலந்து ஓர் கலவையாகின்றது.

ஆகையால் பிறிதொரு மனிதனுடைய உணர்வுகள் இங்கே உருவாகக் கூடாது.

17.04.2021 உபதேசம்

நாம் ஒளி உடல் பெற்றால் எண்ணங்கள் இருக்காது… உணர்வின் இயக்கம் மட்டும் தான் இருக்கும்

 

காவியங்களில் எடுத்துக் கொண்டால் மனித வாழ்க்கையின் கடைசியில் எமன் பாசக்கயிறை வீசி நம்மை அழைத்துக் கொண்டு போகின்றான்…! என்று காட்டியிருப்பார்கள்.

அழைத்துச் சென்ற பின் அவரவர்கள் செய்த தவறுக்குத் தண்டனையாக நரகத்திற்கு அனுப்புகின்றான் என்றும் சொல்கின்றார்கள். அதனின் உட்பொருளை ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் அறிதல் வேண்டும்.

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்று வந்த பின்பு தான் இன்று இந்த மனிதச் சரீரத்தையே நாம் பெற்றிருக்கின்றோம்.

இருந்தாலும் இப்பொழுது மனிதனாக வாழும் காலத்தில்…
1.“எனக்கு ஒருவன் துன்பம் கொடுத்தான்… தொல்லை கொடுக்கின்றான்…! என்ற எண்ணத்தை வலுவாக்கி விட்டால்
2.இந்த எண்ணமே நமக்கு எமனாக மாறுகின்றது.

எப்படி…?

ஒருவர் வேதனைப்படும் உணர்வுகளை அதிகமாகச் சுவாசித்து அந்த எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் இந்த வாழ்க்கையினுடைய இயல்பான நிலைகளை மறந்துவிடுகின்றோம்.

வேதனை… வேதனை… என்று பட்டு அந்த வேதனையான உணர்வு எங்கிருந்து… யாரால் வந்ததோ அவரையே எண்ணி அந்த உடலுக்குள் சென்று… அங்கேயே தண்டனையை அனுபவிக்கச் செய்கின்றது…!

ஏனென்றால் வேதனை என்றாலே விஷம். ஆக அந்த உடலுக்குள் சென்று மீண்டும் அதே விஷத் தன்மையை அங்கேயும் பெருக்கிக் கொண்டு அந்த உடலையும் வீழ்த்துகின்றது.

அடுத்து மனிதனல்லாத உயிரினங்களுக்குள் தான் செல்ல நேரும். இதைத் தான் நம் காவியங்களில் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

ஆனால் அதே சமயத்தில் இந்த மனிதனின் வாழ்க்கையில் எந்தெந்த ஆசைகள் இருந்ததோ அந்த ஆசைகளை அகற்ற
1.இதையெல்லாம் வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பதிவாக்கி
2.இந்த எண்ணங்களை நமக்குள் அதிகமாக வளர்த்துக் கொண்டால்
3.அந்த எண்ணம் இந்த மனித உடலுக்கு எமனாக மாறி
4.என்றும் பேரின்பப் பெரு வாழ்வாக வாழும் நிலைகளுக்கு நம்மை அரவணைத்து
5.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் கொண்டு சென்று விடுகின்றது.

அதுவே சொர்க்கவாசலாக அமைந்து அங்கே அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கின்றது.
1.அதற்கு அப்புறம் வேறு எண்ணங்கள் வருவதில்லை…
2.ஒளியான உணர்வுகள்தான் இயக்கும்.

தாவர இனங்கள் எப்படித் தன் உணர்வின் செயலால்… தன் அறிவால் இயக்குகின்றதோ… இதைப் போல மற்ற உயிரினங்களில் எண்ணங்களாக வருவதை அந்த உயர்ந்த ஒளியின் தன்மை பெறச் செய்து விட்டால் எண்ணங்கள் வருவதில்லை… உணர்வுகள் தான் இருக்கும்…!

ஒரு செடியின் சத்தை நாம் நுகர்ந்தால் அதற்குண்டான எண்ணங்கள் நமக்குள் எப்படி வருகின்றதோ இதைப் போலத்தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துக் கொண்டால்
1.இந்த மனித உடலில் உள்ள உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறுகிறது.
2.மாறியபின் அந்த உணர்வின் இயக்கமாக இயக்கத் தொடங்கும்…!

துருவ நட்சத்திரம் எத்தனை கோடி உணர்வுகளைச் சேர்த்துத் தன் உணர்வின் தன்மையை ஒளியாக மாறியதோ அதனின் உணர்வைக் கவர்ந்து உயிரின் துணை கொண்டு நமக்குள் இணைத்தால் ஒளியின் சரீரமாக ஆவோம்.

அப்போது எண்ணமே இல்லாது மற்றொன்றை இயக்கச் சக்தியாக மாற்றும். அத்தகைய பயிற்சியைத் தான் இதிலே கொடுக்கின்றோம் (ஞானகுரு).

“சக்கராயுதம்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

“இரத கஜ துரித பதாதி…” என்ற நால்வகைப் படைகளையும் வியூகம் என்ற மெய்யை வைத்து முதன்மைப் படைக் கேந்திரமாக எத்தன்மை காக்கப்பட வேண்டுமோ… அந்தச் செயலின் உயர் தனித்துவத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.

இருந்தாலும்… அதற்கு எதிர்மறையான சத்துரு குண எண்ணச் செயல் வீரியம் தன் ஆதிக்கத்தை நிலைப்படுத்த தன் எண்ணம் கொண்டு உடலில் இருக்கும் சகலத்தையும் தன் வசமாக்கிட எண்ண முயற்சிக்கும்.
1.அது தன் குண உயர்வையே பிரதானமாக்கி
2.தனக்கொத்த வலுவில் வலுக்கூட்டிக் கொண்டு
3.சக்கராயுத நடுநிலைத் தலைமையை (உயிர்+ஆத்மா) அடைந்துவிட முயற்சிக்கும்.

அதனால் எழும் போராட்டத்தைச் சுட்டிக் காட்டப்படும் பொழுது உயிரான்ம தத்துவ சரீர கதியில் அந்தத் தீமையின் உணர்வுகளின் செயலாக்கங்களை உணர்ந்து அறியும் கேந்திரங்களில் மெய் என்பது “முதல் வியூகம்…”

இந்தச் சரீர கதிக்கு ஆகார நிலைப்படுத்தும் செயல் வழி கேந்திரம் வாய்… மெய்யை வட்டமிட்ட இரண்டாவது சக்கராயுதம்…! இவை இரண்டையும் வட்டமிட்டுக் காக்கும் அடுத்த நிலை நாசி…!

நாசி என்று கூறும் பொழுது வியூக மையத்தில் காக்கப்படும் உயிரான்ம சக்தியைப் போல்
1.வட்டமிட்டுச் சுழலும் “காக்கும் சக்கர வியூகத்தின்” மையப் பகுதியை
2.காக்கப்பட வேண்டிய அந்த சுவாசத்தின் வீரிய குணத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த மூன்று தொடரையும் சுழன்றோடும் செயல்பாட்டில் “செவியும்” இது அனைத்தையும் சுற்றிச் சுழன்றோடும் “விழிப்பார்வை” செயல்படுத்தும் நிலையும் உள்ளது. ஆக செயல்படுத்தும் சக்தியாக முன்னிலையில் நிற்பது விழியின் தொடரே…!

சரீர இயக்கத்தில் உணர்த்திட்ட இந்த வழியின் முக்கியச் செயல்பாட்டில் “அடக்குதல்…” என்பதன் பொருள் என்ன…?

ஒவ்வொரு படைப் பிரிவையும் கட்டளையிட்டு அந்தக் கட்டளையின் கீழ் வழி முறைப்படுத்தி நடந்திடும் பக்குவம் ஒவ்வொன்றிலும்
1.முதன்மை பெறும் ஒவ்வொரு அணியின் படைத் தளபதியும்
2.தன் சக்தியின் செயலாற்றலினால் துரித கதி கொண்டு
3.செயல்படுத்தித் தயார்படுத்திக் கொள்ள வேண்டியது “தற்காப்பு…!”

இந்த உண்மையை அறிந்து ஒவ்வொரு படைப்பிரிவிலும் எண்ணம் கொண்டு செயல் கொள்ளும் படை வீரர்கள் அந்தக் கட்டளையின் உயர் சக்தியின் தன்மையை உணரும் பக்குவம் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் படைகளுக்குள் குழப்பம் நிலவி விட்டால் ஒவ்வொன்றும் தன் தன் எண்ணம் கொண்டு தன் இஷ்டம் போல் உலவிடும் செயல்பாட்டின் விபரீதம் ஆகி… பஞ்சேந்திரியத் தத்துவத்தில் “தீமையான செயல் தான்” வலுக் கொள்ள நேரும்.

அப்படிப்பட்ட குழப்பத்தின் நிகழ்வால் உடலுக்குள் ஒருமைப்பாடற்ற தன்மை உருவாகி உயிரான்ம சக்தியைத் தாக்கி அதை வலுவிழக்கச் செய்யும். மேலும் காக்கும் சக்கராயுதத்தையும்… அதாவது வியூகம் என்ற தொடர்புபடுத்திய பஞ்சேந்திரியச் செயல்களையும் கேடாக்கிவிடும்

1.குழப்பத்தின் வழியாகச் செயல்படும் தீதெண்ண அமில குண வீரிய சக்தி காந்த அமில ஈர்ப்பின் செயலால்
2.அது தன் வீரியம் கொண்டு பஞ்சேந்திரியங்கள் அடக்கும் முறைகளை உடைத்து… உள் நுழைந்து செயல் கொண்டு
3.உடலில் உள்ள உயர்ந்த சக்திகளையே அத்தகைய குணங்கள் உண்டுவிடும்.

உயிர் சக்தி வலுப் பெற எண்ணம் கொண்டு செயல்படுத்தும் நல்லாக்கச் செயல் நிகழ்வில்… தன் வீரியத்தைக் காத்துக் கொள்ளும் செயல்பாட்டிற்கு… முதலில் செயல்படுத்துவது ஒன்றுண்டு.

சரீரத்திற்குள் இயங்கி மற்றவைகளையும் இயக்கும் இந்தப் பஞ்சேந்திரியங்களை உயர் சக்தியின் மூல கேந்திரத்திற்கு… அதாவது
1.உயிர் சக்தியின் வசப்படி…
2.உணர்வுகளின் எண்ண ஓட்டம் செயல் கொண்டிடும் விதத்திற்கு
3.அவைகளை அடக்கி ஆளப் பழகுதல் வேண்டும்.

அப்படியானால் தன் சரீரத்தில் இருக்கும் கோடானு கோடி “அத்தனை உயிரணுக்களையும் வசமாக்கிட வேண்டும்…” என்றால் என்ன செய்ய வேண்டும்…?
உணர்தல்…
சுவைத்தல்…
நுகர்தல்…
செவிமடுத்துக் கேட்டல்…
விழியின் செயல் திறன்…
இவை அனைத்திலும் ஓர் பக்குவத்தைக் கைக்கொள்ள வேண்டும்.

உயிரான்ம சக்தி உணர்த்தும் கட்டளைகளை… எண்ணத்தின் வலுச் செயலாற்றல் கொண்டு நல்வினையாக்கமாக எண்ணிப் பெறப்படும் செயலில்
1.நிலையாக நின்றிடும் தனித்துவச் செயல் திறனை
2.நீங்கள் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எனது ஆசிகள் (ஈஸ்வரபட்டர்)

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒருவர் கஷ்டப்படுகின்றார் என்றால் மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர் நன்றாக ஆகவேண்டும் என்று வேண்டுங்கள். அந்த உடலிலிருந்து நல்லது கிடைக்கும், அந்த உணர்வின் தன்மையில் நல்லது நடக்கும்.

அதே சமயத்தில் உங்களுக்குப் பிடிக்காத நிலைகளில் இருக்கிறார்கள் என்று சொன்னால் விலகி நில்லுங்கள்.
1.அவர்கள் சங்கடத்தைப்பற்றி எண்ண வேண்டாம்
2.”விலகி நில்லுங்கள்”
3.அவர்களுக்கு “நல்ல நேரம் வரட்டும்…” என்று சொல்லிவிடுங்கள்.
4.அவர்கள் இம்சை கொடுக்கிறார்கள்… இம்சை கொடுக்கிறார்கள்… என்று எண்ண வேண்டாம்,

இதை நீங்கள் செய்து பழகி வாருங்கள்.

நான் எப்படி உங்களை வேண்டுகின்றேனோ அதைப்போல ஆத்ம சுத்தி செய்துவிட்டு நன்றாக ஆக வேண்டுமென்று நீங்கள் சொல்லிப் பாருங்கள்.

இது உங்களுக்கு நன்மையைத் தரும்.

உங்களை யாராவது திட்டிகொண்டே இருந்தால் உடனே சொல்லுங்கள்.
1.மகரிஷிகள் அருள் சக்தியால் அவர் அறியாமல் திட்டிக்கொண்டிருக்கும் எண்ணங்கள் மாறி
2.எல்லோருக்கும் நன்மை செய்யக்கூடிய எண்ணம் அவருக்கு வரவேண்டும்.

இவ்வாறு அவர் திட்டும் பொழுதெல்லாம் கேட்கும் பொழுதெல்லாம் இதைச் சொல்லிக்கொண்டே வாருங்கள்,
1.அவர் திட்டுவது உங்களுக்கு வராது.
2.நீங்கள் செய்வது அவருக்குப் போய்ச் சேரும்.

ஆனால் “இப்படித் திட்டுகிறானே…, இருக்கட்டும் பார்க்கிறேன்” என்று சொன்னால் ஆத்திரம் கொஞ்சம் கொஞ்சமாக நமக்குள் வந்து இரத்தக் கொதிப்பு கை கால் குடைச்சல் தலைவலி போன்று நமக்குள் வர ஆரம்பித்துவிடும்.

இதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

16.04.2021 உபதேசம்

ஆரம்பத்தில் யாம் அதிவேகமாக உபதேசம் கொடுத்ததன் நோக்கம் என்ன…?

 

சாமி (ஞானகுரு) நன்றாகச் சொல்கிறார்…! என்ற இந்த எண்ணங்களில் தான் இருக்கின்றோமே தவிர “அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்…” என்று நாம் இன்னும் தயாராகவில்லை.

எத்தனையோ வருடங்களாக எண்ணிலடங்காத உபதேசங்களை யாம் கொடுத்திருக்கின்றோம். ஆனால் இதைக் கேட்டுவிட்டு
1.சாமி எப்படிப் பேசுகின்றார் தெரியுமா…? என்று
2.இந்தப் பேச்சைத் தான் அளக்கின்றோம்.

ஆனால் உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு இருக்கின்றது…? என்று அடிக்கடி யாம் சொல்லி இருக்கின்றோம். இப்பொழுது தற்சமயத்தில் கொடுக்கும் உபதேசங்கள் எல்லாம் தெளிவாகச் சொல்கின்றோம்.

முந்தி எல்லாம் உபதேசம் செய்யும் போது எக்ஸ்பிரஸ் போன்று அதுபாட்டுக்குக் காற்றிலே போவது போன்று திடு…திடு… என்று ஓடிக் கொண்டிருக்கும்.

அதைக் கேட்பவர்கள் நன்றாக இருக்கிறது என்று சொல்வார்கள். உபதேசம் கேட்டு முடிந்தவுடன் “அற்புதமாக இருக்கின்றது என்றெல்லாம் தலையை ஆட்டுவார்கள்.

கடைசியில்… சாமி சொன்னது உங்களுக்கு அர்த்தமானதா…? என்று ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

முதலில் அதிவேகமாகச் சொன்னேன். இப்பொழுது ஒரு உணர்வின் இயக்கம் எவ்வாறு இயக்குகிறது…? என்று நிறுத்தி விளக்கமாகச் சொல்கிறேன்.

காரணம்…
1.அன்று குருநாதர் (ஈஸ்வரபட்டர்) கொடுத்த சக்திகளை
2.அந்த உணர்வுகளை எடுத்து மீண்டும் எனக்குள் வளர்த்து
3.அந்த உணர்வலைகளை இங்கே பரப்பச் செய்தேன்.

நீங்கள் நோட்டுப் புத்தகங்களில் குறிப்புகளை எழுதிக் கொள்வது போன்று தான் அந்த உணர்வலைகளை வெளியில் பரப்பினேன். கேட்பவர்களுக்குள்ளும் பதிவானது.

உதாரணமாக ஒருவர் பேசுவதை டேப் ரெக்கார்டரில் பதிவு செய்தபின் அதைக் குறைவான வேகத்தில் மீண்டும் சுழல விட்டால் தொண்டை கனமாகப் பேசுவது போன்று இருக்கும். ஆனால் அதை வேகமாகச் சுழல விட்டால் கீச்சு…பூச்சு… கீச்சு… பூச்சு… என்று சப்தமிடும்.

அதைப் போன்றுதான் ஆரம்பத்தில் யாம் சொல்லும் பொழுது கீச்சு…பூச்சு… கீச்சு… பூச்சு… என்று தான் இருக்கும். அர்த்தம் புரியாது. ஆரம்பத்தில் எனக்குக் கிடைத்த சக்திகளை அப்படித்தான் பதிவு செய்தேன்.

ஒருத்தர் எம்மிடம் கேட்கிறார் என்றால் அவரைக் கேட்கச் சொல்லிவிட்டு உடனே எல்லாவற்றையும் பேசி அவர்களுக்குள் பதிவு செய்து அந்த அலைகளைப் வெளியிலே பரப்பச் செய்வேன்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு விதமாகக் கேட்பார்கள். அந்தந்தக் காலகட்டத்தில் உடனே குருநாதர் பதிவு செய்ததை நினைவுபடுத்தி மீண்டும் எடுத்து அந்த அலைகளை இங்கே பரப்பிக் கொண்டே இருப்பேன்.

1.அப்படிப் பரப்பி வைத்த அலைகளை எடுத்துத் தான்
2.அதிலே எதை எதையெல்லாம் உங்களுக்குத் திரும்பச் சொல்ல வேண்டுமோ
3.இப்பொழுது எடுத்துச் சொல்லிக் கொண்டே வருகின்றேன்.
4.முந்தி சொன்னதைத்தான் இப்பொழுது சொல்லிக் கொண்டு வருகிறேன்.
5.ஆனால் முந்தி அர்த்தமாகாது. இப்பொழுது அதைத் தெளிவாக எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

அதே சமயத்தில் உங்களுக்குள் பதிவு செய்தது முந்தி அர்த்தமாகவில்லை என்றாலும்… சில நேரங்களில் சில சந்தர்ப்பங்களில் அதை இப்பொழுது நீங்கள் எண்ணும் பொழுது உங்களுக்குள் ஓரளவுக்கு அர்த்தமாகும். அந்தச் சக்தியைப் பெறக்கூடிய தகுதிக்கு வருகிறீர்கள்.

அதே சமயத்தில் உங்களுக்குள் பதிவு செய்ததை உங்கள் நண்பர்கள் மத்தியில் நீங்கள் சொல்லப்படும் போது அவர்களிடமும் இது பதிவாகி விட்டால் நான் (ஞானகுரு) பேசிய மெய் ஞானிகளின் உணர்வலைகளை அவர்களும் நுகர்ந்து… அந்த சக்தியைப் பெறும் தகுதி அவர்களும் பெறுகின்றார்கள்.

ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டு விட்டான் என்றால் என்ன செய்கிறோம்…?

நல்ல மனிதன் என்று பாசத்தால் பழகிய பின் அடுத்தவனிடம் சொல்லப்படும் நோயினால் ரொம்ப அவஸ்தைப்படுகிறான் என்று தான் சொல்கிறோம்.

1.நோயாளியை உற்றுப் பார்த்து அவர் கஷ்டப்படுவதை நுகர்ந்து
2.அடுத்து அடுத்து நண்பர்களிடம் சொல்லப்படும்போது அவர்களும் இதைக் கேட்டு வருத்தப்படுவார்கள்.

அதைப் போன்று தான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் வரும் சந்தர்ப்பத்தை எடுத்து உங்களுக்குள் ஞானத்தை உபதேசிக்கின்றேன். அதாவது
1.மறைந்த பொக்கிஷத்தை (அருள் ஞானம்) மீண்டும் நினைவுபடுத்தி அந்த அலைகளைப் பெருக்கி
2.அவ்வப்பொழுது அதற்குண்டான உணர்வைக் கூட்டி
3.உயர்ந்த ஞானத்தின் உணர்வுகளை வெளிப்பரப்பு…! என்று குருநாதர் சொன்னதால்
4.ஆரம்பத்தில் அதை நான் செய்தேன்.

அந்த அலைகள் இங்கே உங்களுக்கு முன்னாடி பரவி இருப்பதனால் உங்களுக்கு இப்பொழுது அர்த்தமாகும் அளவுக்குத் தெளிவாக விளக்கமாக வரும்.

அந்த விளக்கங்களை நீங்கள் மற்றவர்களுக்கும் “சாமி இப்படிச் சொன்னார்…” என்று சொன்னால் இலேசாகப் பதிவாகும். இதை அவர்களும் உணர்வார்கள்.

இப்படி இந்தக் காற்று மண்டலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக… மிக அடர்த்தியாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பரவும்.
1.எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் சந்தர்ப்பமாகவும் அது அமையும்.
2.எல்லோரும் ஞானத்தின் வழித் தொடரைப் பெறும் பாக்கியமாகவும் நிச்சயம் அமையும்.

சிறு மூளை வழி (பிடர் வழி) புருவ மத்தி வழி விண்ணின் ஆற்றலைப் பெறப் பழக வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

பரவெளியின் பூதியில் சூரிய மண்டலங்களின் சந்திப்பில்… யுகம் என்ற மறைபொருளாக விண்மீன்கள் விண் கோள்கள் அமையப் பெற்று ஓர் ஓட்ட கதியில் சுழன்று ஓடிக் கொண்டேயுள்ளது.

ஒவ்வொரு குடும்பமும் அந்தக் குடும்பத்தின் சுழல் ஓட்ட கதியில் சுற்றி வரும் சூரியனின் சக்தியில்
1.ஒன்றுடன் ஒன்று பிடர் வழி என்ற உந்தும் வீரிய குண சக்தியைக் கொண்டு
2.சக்தியை ஈர்த்துக் கொண்டும்… சக்தியை அளித்துக் கொண்டும்…
3.ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திக் கொண்டு வெளித் தள்ளும் சமைப்பு அமில குணத் தன்மைகளை ஒளி காந்தமாக வீசிக் கொண்டும்
4.தன்னைச் சுற்றி ஓடும் சுழற்சியின் சப்த நாதங்களை வளர்த்துக் கொண்டும்
5.தான் பெறும் சக்தியை ஈர்ப்பு நிலையில் குறைவுபடாத தன்மையாக வளர்த்துக் கொண்டும் உள்ளது.

அவ்வாறு ஓடுகின்ற ஓட்டக் கதியில் எல்லாம்… எந்த மண்டலமோ அந்த மண்டலம் தன் சக்தியின் வலுவைக் கொண்டு
1.தன் ஈர்ப்பு வட்டத்திற்குள் வரும்
2.தன் வலுவை விடக் குறைந்த சக்தி பெற்ற உருவாகும் கோள்களின் தொடரை
3.தான் ஈர்த்துத் தன்னை வளர்த்துக் கொள்ளும் ஓர் சூட்சமம் உள்ளது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் ஞான வழியில் முன்னேறி வரும் ஞானச் செல்வங்கள் (நீங்கள்) இந்தச் சரீரம் உள்ள பொழுதே வீரியச் சக்தியின் தொடரை வேகம் கொண்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

வேகம் என்பது என்ன..?

எண்ணத்தின் வலு கொண்டு…
1.மகரிஷிகள் பெற்ற ஒளி காந்த சக்தியின் உயிரான்மக் கலப்பின் முலாம் தனக்குள் வலுப் பெற்று விட்டால்
2.ஞானக் கண் திறக்கும் திறப்புச் செயல் வேகம் கொண்டுவிடும்.

அத்தகைய வேகம் கொண்டால் யுகங்கள் தன் சந்திப்பில் ஓர் நட்சத்திரத்தை உருவாக்குவது போல் உருவாக்கும் ஆக்கம் எந்தக் கோளமும் தன் ஈர்ப்பின் வலுச் செயலினால் மூலத்தையே தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொள்ள முடியும்.
1.சக்தியின் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தும் வீரிய மண்டலமாக
2.நீங்கள் ஒவ்வொருவரும் உருக்கோலம் கொள்ள வேண்டும்.

நீங்கள் என்ற சொல் உங்கள் அனைவரின் தொடருக்கு வலுக் கொள்ளும் செயலை… அதாவது “அழுத்தமாகச் சுட்டிக் காட்டும்” அமில குணம் கொண்ட வீரியச் செயலாக… நட்சத்திர அலைகளின் விசேஷ வீரிய குணத் தன்மைகளை அறிந்து கொள்ளும் “உயிரான்மா – ஜீவாத்மா தொடரில்”
1.சரீரத்தின் மூலம் அமைத்துக் கொள்ளும் பக்குவச் செயலாக
2.கரங்களில் வெளிப்படுத்தும் உணர்வு நரம்புகளின் வீரியச் செயல் கொண்டு மண்டலமாக உருவாக்கிடும் உருக்கோலம் கொள்ள
3.”பிடர் வழி” என்றிட்ட மன எண்ணச் செயலில்
4.பரணி நட்சத்திரத்தின் ஆதிக்கத்தை எலும்புகளின் வலுக்கொண்ட சேமிப்பாகக் கூட்டிக் கொண்டு
5.சரீரத்தில் உள்ள உயிரணுக்கள் உயிரின் ஒளி காந்தத்தை நாடி உயிர்ச் சக்தியினை வலுக்கூட்டப்படும் பொழுது
6.சரீரத்தின் கட்டளைக் கேந்திரமான (CONTROL PANEL) சிறுமூளையின் பாகம் திறக்கப்படும் ஞானக் கண் வழியாக
7.எண்ணத்தின் பிடர்வழி உந்தும் குண வீரிய எண்ணமாக ஆக்கப்படும் பொழுது
8.மண்டலத்தின் உருக்கோலத் தன்மைக்கு வித்திடும் வீரிய சக்தியாகப் பரிமளிக்கும்.

ஆக மகரிஷிகள் படைத்த “படைப்பின் படைப்பு” என்பது சூட்சம சரீரம் கொண்டு உயிரான்ம ஒளி காந்த சக்தியுடன் தன் நிகழ்வில் பெறப்படும் சக்திகளுடன் தான் ஒன்றி “ஞானக் கண் திறப்பின்” வழியாகத்தான் தன் வலுவை வீரியமாக்கிக் கொண்டனர்.

பூதியின் வீரிய நட்சத்திரமாகத் தனக்கென்று தன் ஆக்கத்தின் ஆக்கமான படைப்பின் படைப்பான ஒளி காந்த சக்தியைப் பெற்றுச் “சுய வீரிய சக்தி கொண்ட நட்சத்திரமாக உருக்கொண்டார்கள்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

“எனக்கு இப்படித் துரோகம் செய்தான் பாவி..,” என்று எண்ணினால் இந்த உணர்வைப் பெற்றால் அடுத்து அவன் உணர்வுக்குள் நம்மை இழுத்துச் சென்று அவனைக் கெடுத்து பாம்பாகவோ தேளாகவோ பிறக்கச் செய்யும் நம் உயிர்.

அவனையும் கெடுக்கும். ஆகவே, மீண்டும் இங்கே பிறவிக்கு இழுத்து வரும். இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் மீளவேண்டும் அல்லவா?

அதற்குத்தான் ஆலயங்களிள் பிரதோஷம் என்ற நிலைகளைக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

நமது வாழ்க்கையில் நாம் யாருமே தவறு செய்யவில்லை. நல்ல பண்பும் பரிவும் கொண்டு பிறருடைய துயரங்களைக் கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்தாலும் அவர்கள் செய்த பாவ நிலைகளும் தோஷ நிலைகளும் நமக்குள் வந்து சேர்ந்து விடுகின்றது.

பல தோஷங்கள் செய்திருப்பார், பல பாவ நிலைகள் செய்திருப்பார், பல கொடூர உணர்வுகளைப் பார்த்திருப்பார், அவர் உடலில் தோஷமாக ஒட்டி அந்த உணர்வின் தன்மை வரும்.

அவரை நாம் பார்த்தால் அதன் உணர்வுகள் நமக்குள் தோஷங்களாக மாறுகின்றது.

இந்தத் தோஷத்தை மாற்றுவதற்காக சாயங்காலம் ஈஸ்வரன் கோயிலில் போய் நந்தீஸ்வரனுக்குப் பூஜை செய்துவிட்டு “நீ ஈசனிடம் போய்ச் சொல்லப்பா..,” என்கிறார்கள்.

நான் எல்லோருக்கும் அவர்கள் கஷ்டப்படும்பொழுதெல்லாம் உதவி செய்தேன், அவர்களுக்கு உதவினேன், இவர்களுக்கு உதவினேன் என்று சொன்னால் அவன் போய்ச் சொல்லப் போவதில்லை.

ஒரு நோயாளியின் உணர்வைச் சூரியன் கவர்ந்து வருகின்றது. நோயாளியை நாம் உற்று நோக்கினால் அந்த உணர்வின் தன்மை அதே நிலையை நமக்குள் ஆக்குகின்றது. ஆகவே, தோஷங்கள் இங்கே சாடுகின்றது.

இத்தகைய தோஷத்தை எல்லாம் நீக்கியவன் அந்த அகஸ்தியன். அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமானான் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து உணர்வுகள் வெளிப்படுவதை சூரியன் கவர்ந்து வருகின்றது.

அதிகாலை 4 மணிக்கு எல்லாம் அது வெளிப்படுவதை நமது பூமி துருவப் பகுதியில் கவருகின்றது. நம் எண்ணத்தை காலை 4 மணியில் இருந்து 6 க்குள் துருவத்தின் வழியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நம்மை மனிதனாக உருவாக்கியதே தாய், தந்தை. அம்மா அப்பா அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுதல் வேண்டும்.

ஏனென்றால், தாய் நம்மை எப்போதும் காக்கும் உணர்வு பெற்றவள். நம்மை எப்பொழுதும் பாதுகாக்கும் நிலை பெற்றவள். தந்தையைக் காட்டிலும் தாயின் நினைவுகள் நமக்குள் அவர் உடலின் நிலைகள் உருவாக்கி நமக்கு உணவாகக் கொடுத்து நம்மை உருவாக்கி மனித உருவைச் சீராக்கிக் கொடுத்தவள்.

பிறந்தபின் தன் துன்பத்தைப் பாராது நம்மைக் காத்தவள் தாய். ஆகவே அந்தத் தாயின் உணர்வை நாம் எப்படி கொண்டுவர வேண்டும்?

நாம் சுவாசித்த உணர்வு நமக்குள் நந்தீஸ்வரன் ஆக இயக்குகின்றது.

தீமையின் நிலைகளைப் போக்க வேண்டும் என்று நாம் இச்சைப்பட்டால் நம் உயிர் அந்த உணர்வின் தன்மை நுகர்ந்து அதே உணர்வின் அணுவாக நமக்குள் உருவாக்குகின்றது.

அதைப் பெறச் செய்வதற்குத்தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணி இதைப் பல முறை எண்ணி அந்த உணர்வை நமக்குள் சேர்த்துக் கொள்தல் வேண்டும்.

அகஸ்திய மாமகரிஷியை எண்ணி அவன் பெற்ற உணர்வுகள் நாங்கள் பெறவேண்டும். அவன் சென்ற பாதையில் நாங்கள் செல்ல வேண்டும் என்று எடுக்க வேண்டும்.

ஏனென்றால் அவன் இதைப்போல தீமைகளை இந்த தோஷங்கள் எல்லாம் நீக்கி ஒளியின் தன்மை பெற்றவன். அதன் உணர்வை நாம் நுகர்ந்தால் நந்தீஸ்வரன்.

அந்தத் துருவ நட்சத்திரம் நமக்குள் உருவாகி அது ஈசனாக உருவாக்கி நம்முடைய உடலில் உள்ள தோஷங்களை நீக்க வல்லமை பெற்றது.

ஒருவர் கஷ்டப்படுகின்றார் என்றால் மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர் நன்றாக ஆகவேண்டும் என்று வேண்டுங்கள். அந்த உடலிலிருந்து நல்லது கிடைக்கும், அந்த உணர்வின் தன்மையில் நல்லது நடக்கும்.

அதே சமயத்தில் உங்களுக்குப் பிடிக்காத நிலைகளில் இருக்கிறார்கள் என்று சொன்னால் விலகி நில்லுங்கள்.
1.அவர்கள் சங்கடத்தைப்பற்றி எண்ண வேண்டாம்
2.”விலகி நில்லுங்கள்”
3.அவர்களுக்கு “நல்ல நேரம் வரட்டும்…” என்று சொல்லிவிடுங்கள்.
4.அவர்கள் இம்சை கொடுக்கிறார்கள்… இம்சை கொடுக்கிறார்கள்… என்று எண்ண வேண்டாம்,

இதை நீங்கள் செய்து பழகி வாருங்கள்.

நான் எப்படி உங்களை வேண்டுகின்றேனோ அதைப்போல ஆத்ம சுத்தி செய்துவிட்டு நன்றாக ஆக வேண்டுமென்று நீங்கள் சொல்லிப் பாருங்கள்.

இது உங்களுக்கு நன்மையைத் தரும்.

உங்களை யாராவது திட்டிகொண்டே இருந்தால் உடனே சொல்லுங்கள்.
1.மகரிஷிகள் அருள் சக்தியால் அவர் அறியாமல் திட்டிக்கொண்டிருக்கும் எண்ணங்கள் மாறி
2.எல்லோருக்கும் நன்மை செய்யக்கூடிய எண்ணம் அவருக்கு வரவேண்டும்.

இவ்வாறு அவர் திட்டும் பொழுதெல்லாம் கேட்கும் பொழுதெல்லாம் இதைச் சொல்லிக்கொண்டே வாருங்கள்,
1.அவர் திட்டுவது உங்களுக்கு வராது.
2.நீங்கள் செய்வது அவருக்குப் போய்ச் சேரும்.

ஆனால் “இப்படித் திட்டுகிறானே…, இருக்கட்டும் பார்க்கிறேன்” என்று சொன்னால் ஆத்திரம் கொஞ்சம் கொஞ்சமாக நமக்குள் வந்து இரத்தக் கொதிப்பு கை கால் குடைச்சல் தலைவலி போன்று நமக்குள் வர ஆரம்பித்துவிடும்.

இதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

எமது குருநாதர் அவர் இட்ட கட்டளை அனைவரது உயிரையும் கடவுளாக மதிக்கச் சொல்லி இருக்கிறார். உங்களிடமெல்லாம் வரம் கேட்கச் சொல்லியிருக்கிறார்.

அதே மாதிரி நீங்கள் ஒவ்வொருவரும் “மகரிஷிகளின் அருளால் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்” என்று வரம் கேளுங்கள். நீங்கள் ஆத்ம சுத்தி செய்யுங்கள்.

15.04.2021 உபதேசம்

மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணுவதே என்னுடைய பொழுது போக்கு – ஞானகுரு

 

அன்றாட வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் நாம் ஒரு கெட்டதைப் பார்த்து விட்டால் அது நமக்குள் பதிவாகி விடுகின்றது. ஏனென்றால் நாம் ரோட்டிலே போகின்ற போக்கிலே அந்தத் தவறு செய்பவர்களைப் பார்க்க நேர்கின்றது.

1.அந்த உணர்வுகள் நமக்குள் பட்டவுடனே நம்மை அறியாமலே வெறுப்பு வருகின்றது
2.அதைச் சுத்தப்படுத்த வேண்டும் அல்லவா…!

சுத்தப்படுத்தவில்லை என்றால் என்ன செய்யும்…? நம் உயிரிலே பட்ட பின் அந்த உணர்வுகளை உயிர் இயக்கிக் கொண்டே இருக்கும். நம்மை அறியாமல் ஆத்திரத்தையும் கோபத்தையும் தூண்டிக் கொண்டே இருக்கும்.

இதைப் போல ஒவ்வொரு நாளும் எத்தனையோ தீமையான உணர்வைப் பார்த்திருப்போம். அந்த அணுக்கள் நமக்குள் விளைந்திருக்கும். அதற்குச் சாப்பாடு தேவை.

அது தன்னுடைய உணர்வுகளை எடுத்து வளரப்படும் பொழுது
1.நம் உடலில் மேல் வலிக்கின்றது… கால் வலிக்கின்றது…
2.கழுத்து சுளுக்கி விட்டது… நரம்பு பிடித்துக் கொண்டது… சுண்டி விட்டது… என்றெல்லாம் சொல்வோம்.
3.நன்றாகத்தான் இருந்தோம்… இது எப்படி வந்தது…? என்று தெரியவில்லை என்போம்.

ஆனால் இவை எல்லாம் எந்த அடிப்படையில் வருகிறது என்றால்… மேலே சொன்ன மாதிரி சில நேரங்களில் நாம் பதிவு செய்த அந்தத் தீமையான உணர்வுகள் அது உடலுக்குள் வலுவாகப்படும் பொழுது நம் நல்ல அணுக்களை இயக்க விடாதபடி தடைப்படுகின்றது. அதனால் வேதனையும் வருகின்றது.

டாக்டரிடம் சென்று அவர் கொடுக்கும் அந்த மருந்தை வைத்துத் தான் இதை எல்லாம் போக்க முடிகிறது.

இருந்தாலும் தீமைகளைக் கண்ட உடனே அடுத்த கணமே அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று அதைச் சுத்தப்படுத்துகின்றோமா என்றால் அந்தப் பழக்கம் நம்மிடம் இல்லை.

அத்தகைய பழக்கம் வர வேண்டும் என்பதற்குத்தான்
1.குருநாதர் காட்டிய அருள் வழியில் உபதேச வாயிலாக அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியைக் கொடுக்கின்றோம்.
2.அதை எடுக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்துகின்றோம்.
3.அந்த மகரிஷியின் அருள் சக்தியை எடுக்க வேண்டும் என்று
4.பல வகைகளிலும் ஞானிகள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்கிறோம்.

ஆனால் உபதேசங்களைக் கேட்ட பின் எங்கள் சாமி… எங்கள் சாமி…! என்று போற்றுவதற்கு மட்டும் ஆள் நிறைய வந்து விடுகின்றது. உபதேச வாயிலாகக் கொடுக்கும் சக்தியை எண்ணித் தனக்குள் எடுப்பதில்லை.

1.ஞானகுரு சொன்ன வழியில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்தேன்….
2.என்னை நான் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது…! என்ற இந்தச் சொல் உங்களிடமிருந்து வர வேண்டும்.

காரணம் என்ன என்றால் கோபப்பட்டவர்கள்… சலிப்புப்பட்டவர்கள்… சஞ்சலப்பட்டவர்கள்… வெறுப்புப்பட்டவர்கள்… குரோதப்பட்டவர்கள்… தொல்லை கொடுப்பவர்கள்… என்று இத்தனையும் இதற்கு முன்… பதிவு செய்திருக்கிறீர்கள்.

இது எல்லாம் உடனடியாக நினனவுக்கு வந்து விடுகின்றது.

ஆனால் உங்களிடம் உயர்ந்த குணங்களைப் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு). அதை மீண்டும் எண்ணச் சொல்கின்றேன். நீங்கள் எண்ணுகிறீர்களா…! என்றால் இல்லை.

ஏனென்றால் இந்தக் கோபமும் வெறுப்பும் வேதனையும் குரோதமும் வலுக் கொண்டது. உங்களிடம் இருக்கும் நல்லதை எடுக்க விடாதபடி முன்னாடியே தடுத்து விடுகின்றது.

ஆகவே அதைச் சுத்தப்படுத்தினால் தான் அந்த அருள் ஞானத்தைப் பெற முடியும். சிறிது நாளைக்கு நீங்கள் இதை வளர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் ஆத்ம சுத்தி என்ற ஆயுதமாக எளிதாகக் கொடுத்து இருக்கின்றேன்.

குருநாதர் எனக்கு எத்தனையோ கடுமைக்கு அப்புறம் அந்தச் சக்தியைக் கொடுத்தார்.
1.உங்களுக்கு இலேசாக எடுத்துக் கொள்ளும்படி அந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளேன்.
2.சதா உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும்…! என்று அதைப் பாய்ச்சுவது தான் என்னுடைய பொழுது போக்காக இருக்கின்றது.

யார் யாருக்கெல்லாம் வாக்கு கொடுத்தேனோ… நல்லதாக வேண்டும் என்று சொன்னேனோ… அவர்களுக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று தவம் இருக்கின்றேன்.

முதலில் அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று நான் தியானிக்கின்றேன். எனக்குள் அதை வலுப் பெறச் செய்து கொள்கின்றேன்.

அதற்குப் பின் நான் வாக்குக் கொடுத்தவர்கள் அனைவருக்கும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.அவர்கள் நன்றாக இருக்க வேண்டும்.. உடல் நலமாக இருக்க வேண்டும்
3.அவர்கள் குடும்பத்தில் உள்ளோர் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்
4.அந்த அருள் ஞானம் பெற வேண்டும்… மகிழ்ந்து வாழ வேண்டும்
5.என்னைச் சந்தித்தவர்கள் எல்ல்லொரும் நன்றாக இருக்க வேண்டும் என்று
6.இப்படித்தான் என்னுடைய தவம் இருந்து கொண்டிருக்கின்றது. (ஞானகுரு).

விபூதி பூசுவதன் உண்மைப் பொருள் என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பிடர் வழி என்பதே எண்ணத்தின் உந்தும் குண அமிலச் சக்தியின் வீரியமாகச் செயல் கொள்ளும் பக்குவ கதிக்கு ஊக்கம் என்ற சொல் நாம முயற்சியை நல்லாக்கத்திற்குப் பயன்படுத்த வேண்டும். அதுவே நலம் பயக்கும்.

ஆனால் குணங்களின் செயல் மாற்றத்தால் ஏற்படும் செயலின் தன்மை சரீர கதியில் எதிர் மோதல் ஏற்படும் நிலையில் வள்ளுவன் சொன்ன வேதப்படி “ஆக்கத்தின் ஆக்கம் ஊக்கம் அதுவல்லது போக்கது இல்லாச் செயல்…” என்ற சொல்லிய உண்மையும் உண்டு.

1.ஆகவே குணங்களில் மாற்றம் கண்டால்
2.பிடருகின்ற வழிகளில் சக்தியும் குறைவுபட்டுப் போகும்…! என்ற உண்மையை உணர்ந்து
3.நல்லாக்கச் சூட்சம கதிக்கே ஞானச் செல்வங்கள் செயல் கொள்ள வேண்டும்.

பால்வெளியில் படர்ந்துள்ள கோடானு கோடி அமில குணச் சக்திகளில் மறைந்துள்ள மறை பொருள் வண்ண குண அமிலமும்… ஒலி நாதத்தின் அமில குணமும்… ஆதிசக்தியின் அமில குண நீர் சக்தியுடன் ஒன்றிச் செயல் கொள்ளும் பொழுது திடமாகின்றது.

“பால்வெளியில் படர்ந்துள்ள பரமாத்மா…” என்ற சூட்சமத்தில் உயிரணுக்கள் செயல் கொள்ளும் செயலின் நிலையால் ஒன்றுடன் ஒன்று குண அமில ஈர்ப்பில் கலந்து பிறிதொன்றை உருவாக்கிக் கொண்டே உள்ளது.
1.பிரம்மமாகச் சிருஷ்டியாகின்றது.
2.அதையே பிரம்மத்தின் உள் மறைந்துள்ள “அனித்தியமான சூடு…!” என்று காட்டப்பட்டுள்ளது.

ஏனென்றால் இந்தச் சரீரம் கொண்டு ஈர்ப்பு நிலை சக்தி பெற்று… “மூல சக்தியில் கலந்துவிடும் செயல்பாட்டின் இரகசியத்தை…!” ஒவ்வொரு உயிராத்மாவும் தன்னைத் தான் உணர்ந்து கொண்டு தன் வழியில் சக்தியை வலுக்கூட்டி அறிந்து கொள்ள வேண்டும்.

1.சரீர பிம்பத்தில் இரு கரங்களும் இணைக்கப்படும் பொழுது
2.அதன் அமைப்பே ஓர் வட்டச் சுழற்சியின் செயலாக முதலும் முடிவும் அற்ற நிலையில்
3.பால்வெளிப் பூதியில் உருவாக்கும் பிடர் சக்தியின் வழித் தொடரில்
4.பூதியை விபூதி என்ற காட்டிய தத்துவம் – உண்மையை உணர்ந்து கொள்ளத்தான்…!

ஆனால் அதில் விதிவிலக்கும் ஒன்றுண்டு. சூட்சமப்படுத்தப்பட்ட அந்தச் செயலைத் தவிர சரீரம் முழுக்க வேடமிட்டுக் கொள்ளும் இந்தக் கால கட்டத்தில் உண்மையின் பொருளை யார் உணர்ந்தார்கள்…?

(அதாவது ஆவியாக இருப்பது திடமாகிறது… திடமானது மீண்டும் ஆவியாக மாறுகிறது. முதலும் முடிவும் இல்லாது இது நடந்து கொண்டே உள்ளது. பூதி… விபூதி…! திடமான சரீரத்தில் விபூதியைப் பூசுவதன் உண்மை அது தான்…!)

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

“தாழ்ந்தவர்… உயர்ந்தவர்…!” என்று நாம் தான் வைத்துக்கொண்டமே தவிர தாழ்ந்தவர் என்றோ உயர்ந்தவர் என்றோ இயற்கைக்குக் கிடையாது.

தாழ்ந்ததை எண்ணும் போது தாழ்ந்ததைத் தான் உயிர் உருவாக்குகின்றது.
1.“தாழ்ந்தவர்கள்…!” என்று மற்றோரை நாம் எண்ணும் போது
2.அந்த உணர்வுகள் நம்மைத் தாழ்த்தப்பட்டவனாக ஆக்குகின்றது.
3.நம்மைத் தாழ்த்தப்படும் நிலையே வருகின்றது

எதன் வழியில்…?

நல்ல குணங்கள் இருப்பதால் தான் நாம் மனிதனாக உருவாகியுள்ளோம். ஆனால்
1.மற்றவர்களைப் பார்த்து அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று
2.அசுர உணர்வுகள் கொண்டு நாம் எண்ணுவோமென்றால்
3.அது நமக்குள் இருக்கும் நல்ல குணங்களைத் தாழ்த்தி விடுகின்றது.
4.நம்மைத் தாழ்த்தப்பட்டவனாக மாற்றுகின்றது என்பதனைத் தெளிவாகக் கூறினார் காந்திஜி.

ஒருவரைத் தாழ்த்தப்பட்டவர் என்று எண்ணப்படும்போது அந்தத் தாழ்த்தப்பட்ட உணர்வே நமக்குள் இருக்கும் நல்ல குணத்தைச் சுதந்திரமாக வாழ விடாதபடி நல்ல குணங்களை என் உடலிலே இயக்காதபடி இந்த மனித உடலை உருவாக்கிய உயிரையே தாழ்த்தப்படும் நிலைக்குக் கொண்டு செல்கிறது.

உயிரினங்களில் ஒன்றை ஒன்று தாக்கித் தன் உணர்வை வளர்த்துக் கொள்ளும் நிலை பெற்ற
1.அந்தத் தாழ்த்தப்பட்ட உணர்வுகள் நமக்குள் வரப்படும் போது
2.மனிதன் என்ற நல்ல நிலை இல்லாதபடி
3.நம் எண்ணமே நம்மைத் தாழ்த்தப்பட்ட உயிரினமாக மாற்றுகின்றது

ஆகவே தாழ்த்தப்பட்டவர் யார்…? அப்படிப்பட்டவர் எவர் இருக்கின்றார்கள்…? தாழ்த்தப்பட்டவராக நம்மை யார் உருவாக்குகின்றார்…?

நம்முடைய எண்ணம் தான்…! நாம் எண்ணியது எதுவோ நமது உயிர் அதை அணுவாக மாற்றி நம் உடலாக மாற்றிவிடுகின்றது.

எல்லோரையும் மகிழ்ச்சி பெறச் செய்யும் மனித உடல் பெற்ற பின் இத்தகைய பகைமை உணர்வு வந்த பின் நமக்குள் என்ன செய்கின்றது என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

பகைமை உள்ளவன் என்று நாம் எண்ணினால் அந்தப் பகைமை உணர்வே நமக்குள் வருகின்றது. “ஒரு தாழ்த்தப்பட்டவன்…” என்னை இப்படிப் பேசிவிட்டான் என்ற அந்த வெறி உணர்வுகள் நமக்குள் வருகின்றது.

என்னைத் தாழ்ந்தவன் என்று பேசக்கூடிய நிலைகள் வந்து விட்டதா…? என்று அந்த உடலுக்குள் வெறி உணர்வைத் தூற்றும் உணர்வு போகும் போது
1.இதைத்தான் அவர்களும் வளர்க்க முடிகின்றது.
2.அதைத்தான் நாமும் வளர்க்க முடிகின்றது.

மனிதனாக வாழ்கின்றோம் என்ற நிலைகளில் நாம் சுதந்திரமாக வாழ முடிகின்றதா…? இல்லை…!

நாம் எல்லோரும் அரவணைப்புடன் வாழ்ந்தால் நமக்குப் பரிபூரண சுதந்திரம் கிடைக்கின்றது என்று தான் காந்திஜி சொன்னார்.

ஒதுக்கப்பட்ட நிலையில் உள்ள கடும் நோயாளிகளையும் காந்திஜி சந்தித்தார். கைகள் உடல் எல்லாம் அழுகி அது அருவருப்பாக இருந்தாலும் அங்கே சென்றார்.

அவர்களைப் பார்த்துக் காந்திஜி இரக்கப்படவில்லை. இரக்கமும் ஈகையும் அங்கு கொண்டு வரவில்லை.
1.மாறாக அவர்கள் நலம் பெற வேண்டும் என்று தான் எண்ணினார்.
2.அவர்கள் உயர வேண்டும் என்ற உணர்வைத் தான் தனக்குள் வளர்த்துக்கொண்டார்.
3.அந்த நோயைப் பற்றி எண்ணவில்லை.

ஆரோக்கியமான உடலாக அவர்கள் பெற வேண்டும் என்ற உணர்வுகளிலே உயிரிலே எண்ணப்படும் போது அது கடவுளாக இயக்குகின்றது. அந்த உணர்வின் தன்மை கொண்டு அவர்கள் சுகமாக வேண்டும் என்று தான் காந்திஜி எண்ணினார்.

“அன்னை தெரஸா” என்பவரும் இதைப்போலத் தான் ஏழ்மைகளில் இருந்து மக்கள் விடுபட வேண்டும். இனங்கள் இல்லை. பேதங்கள் இல்லை என்று காந்திஜியின் வழியில் செயல்பட்டார்,

இனம் என்று இருப்பது நமக்குள் நோயின் தன்மை வரப்போகும் போது நமது நல்ல குணங்களைத் தாக்குகின்றது.

இத்தகைய நாம் இனங்களைப் பிரித்து குறை கூறும் போது அந்தக் குறையின் உணர்வு நமக்குள் வரும் போது நல்ல குணங்களைத் தாக்குகின்றது.

ஆகவே அந்த மெய் ஞானிகள் காட்டிய வழியில் நாம் இதை எல்லாம் மாற்றிப் பழக வேண்டும்.

14.04.2021 உபதேசம்

மலைப்பாம்பின் ரூபமாக வந்து குருநாதர் எனக்குக் கொடுத்த அனுபவம்

 

காட்டிற்குள் ஒரு சமயம் மலைப்பாம்பு ஒன்று வருகிறது நான் (ஞானகுரு) படுத்திருக்கிறேன். அது சுருண்டு…சுருண்டு சுருண்டு…சுருண்டு. புஸ்…புஸ்…புஸ்ஸென்று வருகின்றது.

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) தான் இதை ஏவிவிட்டாரா… அல்லது நிஜமாகவே வருகின்றதா…? என்று எனக்கு ஒரு சந்தேகம். இவ்வளவு சீறிக் கொண்டு வருகின்றதே…! நிஜமாகவே உருவாக்கி கொடுக்கின்றாரா…! என்ற எண்ணமும் வருகின்றது.

ஆனால் குருநாதர் அருகில் இல்லை… காட்டிற்குள் சென்று விட்டார். குருநாதர் என்ன ஏவல் செய்கிறார்…? என்றும் எனக்குத் தெரியவில்லை. நிஜமா… பொய்யா…? என்று தெரியவில்லை.

அந்தப் பாம்பு அதிபயங்கரமான நிலைகளில் சீறிப் பாய்ந்து கொண்டு வரும் பொழுது என் மேலே இருக்கக்கூடிய துண்டையும் அதிலே ஒரு கல்லை முடிந்து அதைத் தூக்கிக் கொடுக்கின்றேன்.

இது என்னுடைய யோசனை…! புஸ்…ஸ்ஸ்… என்று இழுக்கும் பொழுது அதைத் தூக்கி கொடுக்கின்றேன். வாயில் சிக்கிக் கொண்டது.

மனிதனுடைய வாசனை என்று தெரிந்து அந்தக் கல்லுடன் சேர்த்து அப்படியே விழுகின்றது. ஏனென்றால் துண்டைக் கையில்தான் எடுத்திருந்தேன். அதற்குள் கல் தான் இருக்கிறது என்று அதற்குத் தெரியாது.

அந்த நேரத்தில் எனக்குள் பல விதமான உணர்வுகள் சுழல்கின்றது.
1.ஒரு பக்கம் தைரியமும் வருகின்றது. ஒரு சில நேரங்களில் தப்ப முடியவில்லை.
2.ஆனாலும் இதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டுமே என்று சிந்திக்க ஆரம்பித்தேன்.

ஏனென்றால் அதற்கு முன்னாடி என் விரலை நீட்டினால் மரத்தையே வேருடன் சாய்க்கும் சக்தியை குருநாதர் கொடுத்திருந்தார்.

சரி…! என்னிடம் கொடுத்த சக்தியை வைத்து நான் ஏதாவது செய்கின்றேனா…? என்று தான் குருநாதர் பரிசோதிக்கிறார் என்ற இப்படி ஒரு சிந்தனை வந்தது.

1.எதுவானாலும் சரி… அப்பா நீயே பார்த்துக் கொள்…
2.எனக்கு ஒன்றும் தெரியாது.
3.என்னைப் பாம்பு விழுங்கினாலும் சரி… அல்லது கடித்தாலும் சரி…
4.நீயே பார்த்துக் கொள் என்று சொல்லி விட்டேன்… அவ்வளவுதான்…!

அந்த மலைப் பாம்பை அனுப்பி வைத்தது அவருடைய ஏவல்தான் என்று அப்புறம் நான் புரிந்து கொண்டேன். சிறிது நேரத்தில் அந்தப் பாம்பு மறைகின்றது.

குருநாதர் கெக்கெக்..கெக்க.. என்று சிரித்துக் கொண்டு வருகின்றார். என்னுடைய பயிற்சியில் நீ தப்பிவிட்டாய்…! என்கிறார்.

குருநாதர் இந்த மாதிரிப் பல பரிசோதனைகளை வைத்து அவர் எனக்குக் கொடுத்த சக்தியை நான் எப்படி உபயோகிக்கின்றேன்…? என்று பார்க்கின்றார்.

இது போன்ற பல இன்னல்களைப் பட்டேன்… காடு மேடெல்லாம் அலைந்தேன்… குருநாதர் காட்டிய அருள் வழியில் அவர் உணர்த்திய உண்மைகளை அறிந்தேன்… அந்தச் சக்தியை எனக்குள் பெருக்கினேன்.
இருந்தாலும் குருநாதர் எனக்குச் சொன்னது…
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதி
2.ஒவ்வொரு உடலையும் கோவிலாக மதி
3.அந்தக் கோவிலுக்குள் இருக்கும் நற்குணங்களை நீ உயர்ந்த நிலையில் எண்ணு…!

இவ்வாறு நீ எண்ணுவாய் என்றால் நான் (ஈஸ்வரபட்டர்) கொடுத்த சக்தி உனக்குள் நற்பயனை அடையும்…! என்று இப்படி இந்த மூன்று சுருக்க நிலையைச் சொன்னார்.

அந்த அடிப்படையில் தான் உங்களுக்குள் அருள் ஞானத்தைப் போதிக்கின்றேன்.

பேரின்ப இரகசிய ஆனந்த நிலை – ஈஸ்வரபட்டர்

 

வெயிலின் கடுமை நிறைந்திருக்கும் பாலையில் (பாலைவனம்) பூமியில் சூட்சம ஈர்ப்பின் கதி சுழலில் அந்த இடத்து நிலைத் தொடர்கள் ஈர்ப்பின் நிலைப்பில் நீர் சக்தி மறைந்துவிடும் என்பது இயற்கையே…!

ஆனாலும் பாலையின் கதியிலும் நீர் உள்ளே மறைந்திருக்கும் செயல் (சூட்சமம்) என்பது
1.வெயிலின் வெப்பம் எவ்வளவு தான் கடுமையாக இருந்தாலும்
2.பாலை நீர்த் தன்மை குளிர்ந்திருக்கும் செயலே “பாலைச் சூட்சமம்…!”

கோடையின் வெப்பத்தால் நீர் நிலையில் மேலே இருக்கும் நீர் வெம்மையுற்றாலும் அதன் உட்புற நீர் குளிர்மையாகத் தான் இருக்கும். அப்படி அந்த நீர் ஓரளவு குளிர்ந்திருக்கும் தன்மை போல் சரீர கதியிலும் உண்டு.

1.“பாலைச் சூட்சமம்” போல் வாழும் நீர் சக்தியின் தொடரே…!
2.நம் உயிரான்ம சக்தி சூட்சம சரீர கதியில் உடலில் வாழும் தத்துவம்…!
3.என்பதன் கருத்தை ஊன்றி… உணர்ந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

தத்துவத்தில் “வினோதம்…!” என்பதெல்லாம்…
1.சூட்சம கதித் தொடர் என்பதில் வெப்பம் என்று
2.பாலைவனத்தில் உஷ்ணம் தகிக்கும் தன்மை போல் சரீரமும் உணர்கின்றது.

வெப்பம் போல் ததித்துறும் செயல் உயிர் ஆன்ம இயக்கத்தில் சரீரத்தில் இருக்கும் அத்தனை உயிரணுக்களுக்கும் அதன் அதன் எண்ண ஓட்ட கதிக்குட்பட்டு வாழும் செயல் நிலைத் தொடரில்… சரீர கதிக்கு உண்டாக்கப்படும் வினைச் செயல்களால்
1.எந்த உயிரணுக்களின் எண்ண நிலை தாக்கப்படுகிறதோ
2.அந்தந்த உயிரணுக்களின் எண்ண அமில நிலைத் தொடர்பால்
3.உணர்வின் உந்துதல்களின் வழி பெறப்படும் நிலையே சரீர அவஸ்தை என்னும் உடல் துன்பம்.

எந்தெந்த இடங்கள் தாக்கப்படுகின்றதோ… அந்த இடத்திலுள்ள உயிரணுக்கள் அதனின் எண்ணம் வேதனையாக வெளிப்பட்டு… சரீரம் முழுவதற்கும் அந்த எண்ணம் “தொடர் போல் வியாபித்து…” ஒன்றுடன் ஒன்று அனைத்து உயிரணுக்களின் கதிக்கும் வேதனையை அனுபவிக்கும் செயலாக அமைந்து… “உயிர் ஆன்ம சக்திக்கே பாதிப்பு நிலை ஏற்படுகின்றது…”

ஆக நீரின் உட் தன்மை கோடையிலும் இயல்போடிருப்பதைப் போல் யாம் சொல்லும் தியானத்தின் வழி சூட்சம சக்திகளை எடுக்கும் நிலையில் உயிரானது ஆன்ம வடிவ சூட்சம ஜோதியில் வாழும் தன்மையாகச் செயல் கொள்ளும் திறனை அறிதல் வேண்டும்.

ஆகவே சரீர உயிரணுக்கள் அனைத்தும் ஒளி காந்த சக்தி பெற்று உயிர் ஆன்மத் தொடரில் ஒன்றி வாழும் தொடருக்கு நம் எண்ணங்கள் வருதல் வேண்டும்.

1.கண்ணன் வேய்குழலின் இன்னிசையில் பசுக்கள் எல்லாம் மயங்கின…! என்ற தத்துவச் செயலாக
2.நம் சரீர உயிரணுக்களை மயக்குறும் நாதமாக்க
3.உயிர் ஆன்ம சக்தி (நாம்) செயல்பட வேண்டும்.

ஆத்மச் சுடர் ரசமணியாக்கும் வான்மீகியார் தொடர் கொண்டு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் செயல்படும் நிலையை அனைத்து உயிரான்மாக்களும் பெறவேண்டும்.

மூல சுக்கிரன் தொடர்பு கொண்டு தனக்குள் அதைப் பெறப் பெற கண்ணன் இசைக்கும் இசையாகும் உயிர் சக்தி…
1.சரீர கதியில் அனைத்து உயிரணுக்களையும் தன் பால் ஈர்த்து
2.ஜோதித்துவத்தில் மூழ்க வைக்கும்.

அந்தப் பேரின்ப இரகசிய ஆனந்த நிலை என்பது என்ன…?

உயிரணுக்களை எண்ண மேய்ச்சலுக்கு விடும் பொழுது உணர்வுகள் ஒன்றி ஒடுங்கும் செயல் சரீரச் செயலில் தாக்கப்படும் வேதனையை அனுபவிக்காத தன்மை கொண்டு
1.உயிரில் ஆனந்த அமுதைப் பருகி
2.தன் வழியில் எண்ணச் செயல் விடுத்து அந்தப் பேரின்ப ரசம் பருகும்.
3.அந்தச் சூட்சம கதியைத்தான் ஈஸ்வரபட்டனாகிய யான் உணர்த்தி வருகின்றேன்.

பாலையாகச் சுடும் வினைச் செயலில் வாடையாகக் குளிர்ந்திருக்கும் எண்ண நினைவில் அச்சம் விலகிடும் பூரணத்துவத்தை ஒவ்வொருவரும் அடைதல் வேண்டும்.

தீவினைப் பயன் நீக்கும் செயலுக்கு எந்த ஒரு உயிரணுக்களும் சரீரம் தொட்டு வேதனயுறாமல்
1.உயிரான்மா காக்கப்படுவதைப் போல் காக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்து
2.சூட்சம உடல் வாழும் “தவ வாழ்வை” மேற்கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நாம் நுகர்ந்த உணர்வுகள் உடலுக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டி “ஒருவன் வேதனைப்படுகின்றான்…” என்ற உணர்வை அறிவித்தாலும் நம் உயிரில் மோதிய பின் அது அணுக் கருவாக உருவாகிவிடுகின்றது.

உதாரணமாகக் கோழி குருவி முட்டை இடும் உயிரினங்கள் அனைத்துமே கேறும். பல்லி கூட கேறும்.

அப்படிக் கேறுவது போல “அவன் வேதனைப்படுகின்றான்… வேதனைப்படுகின்றான்… வேதனைப்படுகின்றான்…” என்று எண்ணங்களை அதிகமாகக் கூட்டி நாம் திரும்பத் திரும்ப எண்ணும் போது எந்த மனிதனை எண்ணினோமோ அந்த உணர்வின் கருவாக உடலுக்குள் உருபெறத் தொடங்கிவிடுகின்றது.

அவர் உடலிலே நோய் உண்டாக எது காரணமாக இருந்ததோ அதே மாதிரி நம் உடலுக்குள் வரும். அது கருவான பின் நம் இரத்தங்களிலே சுழன்று வரும்.

1.பின் எந்தெந்தப் பாகங்களிலே தேங்கி நின்று விடுகின்றதோ
2.அந்தப் பாகத்திலே கருவாகி
3.முட்டையாகி வெடித்து அணுவாக வரும்.

கோழி அடைகாத்த பின் முட்டை பொரிந்து அந்தக் குஞ்சுகள் வெளி வருவது போல் வந்துவிடும். வெளி வந்த பின் அந்தக் குஞ்சுகள் எல்லாம் கத்தும். கத்தும் பொழுது தாய்க் கோழி கூப்பிட்டு மண்ணைக் கிளறி எடுத்து ஆகாரம் கொடுக்கும்.

இதைப் போன்று தான் நம் உடலுக்குள் ஒரு அணுவின் தன்மை முழுமை அடைந்து விட்டால்
1.அந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதும் பரவும்.
2.நம் சிறுமூளை பாகம் வந்து அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.
3.பின் நம் உயிர் அந்த உணர்ச்சியைப் புலனறிவு ஐந்திற்கும் கண் காது மூக்கு உடம்பு வாய் இவைகளுக்கு அனுப்பும்.
4.அதன் வழி கவரச் செய்யும் (சுவாசமாக)

எந்த மனித உடலில் இருந்து நோயின் உணர்வலைகள் வெளி வந்ததோ அதை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரப்பி வைத்துள்ளது.

நம் புலனறிவும் ஐந்தும் அந்த உணர்வலைகளைக் கவர்ந்து நம் உடலுக்குள் அனுப்பும். உடலுக்குள் போவதற்கு முன் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்ட பின் என்ன நடக்கின்றது…?
1.அந்த மனிதன் எப்படி வேதனைபட்டானோ
2.அந்தச் சங்கடமும் சோர்வான உணர்ச்சிகளையும் நம்மை அறியாமலே தோற்றுவிக்கும்.
3.நாம் இனம் புரியாதபடி வேதனைப்படுவோம்.

அவ்வாறு நாம் வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கும் போது ஒருவர் தொழிலின் நிமித்தமாக நம்மைத் தேடி வந்து “இன்ன குறை இருக்கிறது” என்று எடுத்துச் சொல்ல வருகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

அவர் சொல்வதை நம் செவிப்புலன்கள் ஏற்றுக் கொள்ளாது. இந்த வேதனைக்குரிய நினைவைத் தான் ஊட்டும்.

அதே சமயத்தில் ஒருவன் மகிழ்ச்சியான நிலையில் இருந்தால் நம் கண்ணின் பார்வைக்கும் அது ஏற்றுக் கொள்ளாது. நம் கண்ணின் பார்வைக்கும் அந்த வெறுப்பின் நிலையே ஊட்டும்.

நாம் ஒரு கணக்கையோ அல்லது ஒரு பொருளையோ உருவாக்க வேண்டும் என்றால் கவனமாகப் பார்த்துத் தான் செயல்படுத்த வேண்டும்.

அப்போது அந்த வேதனையின் உணர்வுகள் பார்வைக்கு வரும் போது அந்த உணர்ச்சிகள் உடலை இயக்கிய பின்
1.அதை வேலை செய்ய விடாதபடி அந்த வேதனை உணர்வுகள் நம் அங்கங்களைக் குறைத்து விடும்.
2.கை கால்களைக் குறைத்து விடும் – இந்த உடலுக்கு.

அப்போது நம் உடல் என்ன செய்கின்றது?

வேதனையால் உருவான அணுக்கள் உடலுக்குள் இருக்கிறதல்லவா…! அதற்கு இந்த வேதனை உணர்வலைகளை சாப்பாடாகக் கொண்டு கொடுக்கும்.
1.வேதனையான அணுக்கள் சந்தோஷப்படும்.
2.ஆனால் நம் உடலில் உள்ள நல்ல குணங்களால் உருவான அணுக்கள் வேதனைப்படும்.

கோழி தன் குஞ்சுகளுடன் மேய்ந்து கொண்டிருகின்றது என்று வைத்துக் கொள்வோம். ஒரு பருந்து வந்தால் உடனே கோழி என்ன செய்கின்றது…?

உடனே “கர்ர்ர்…ர்ர்…” என்று இரைச்சலை விடும். எல்லாக் குஞ்சுகளும் தாயின் இறக்கைக்குள் அடங்கிவிடும்.

இதே மாதிரித்தான் வேதனை என்ற உணர்வு வந்தவுடனே எல்லாமே அந்த உயிருடன் ஒன்றி அதனுடைய உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. பாதுகாப்பாக இருக்கின்றது.
1.வேதனையால் உருவான அணுக்கள் மீண்டும் அதனுடைய உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
2.உயிர் அதனின் ஆகாரத்தை எடுத்துக் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றது.
இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஏனென்றால் இப்படி நம் உடலுக்குள் நம்மை அறியாமலேயே வேதனை அணுக்கள் உருவாக்கினால் நாம் பார்த்த மனிதன் எப்படி வேதனைபட்டானோ அதே வேதனை அணுக்கள் நமக்குள் உருவாகி நாமும் வேதனைப்படுவோம்.

1.சாமியைக் கும்பிட்டாலும் சரி…
2.சாமியாரைப் பார்த்தாலும் சரி…
3.அர்ச்சனை செய்தாலும் சரி…
4.யாகங்கள் செய்தாலும் சரி… அதனால் பலன் இல்லை

யாகத்தின் பால் பற்றாகி அந்த எண்ணங்களைக் கொண்டு வரப்போகும் போது யாக எண்ணத்தின் அணுவின் கருவாக உருவாகின்றது.

அதை வளர்ந்து விட்டால் “யாகத்தைச் செய்ய வேண்டும்… செய்தால் தான் சரியாகும்…! என்று அதன் வழியே தான் நம்மைச் செய்யச் செய்கின்றது.

அங்கே கோவிலுக்குச் சென்று அரச்சனை செய்து பல விதமான கனிகளையும் மலர்களையும் நல்ல மணங்களையும் வைத்து அங்கே கொடுத்தாலும்
1.ஒரு நல்ல பதார்த்தத்தில் விஷம் என்ற நிலைகள் பட்டவுடனே
2.நல்ல பதார்த்தமும் விஷத்தின் இயக்கமாகதான் மாறுமே தவிர அதற்குச் சக்தி இல்லை.
3.நீங்கள் யாகங்கள் செய்தாலும் சரி… மற்ற நிலைகள் எதைச் செய்தாலும் சரி…
4.கஷ்டத்தைப் போக்குவதற்காகத் தெய்வத்தை வேண்டி “நான் விரதம் இருக்கின்றேன்…” என்று சொன்னாலும் சரி…
5.இன்னும் கொஞ்சம் விஷத்தைத் தான் வளர்க்கிறமே தவிர அந்த நோயை மாற்றாது.

13.04.2021 உபதேசம்

நான் (ஈஸ்வரபட்டர்) சொன்ன வழியினைக் கடைப்பிடித்தால் விண்ணின் ஆற்றல்கள் உங்களுக்குள் வ(ள)ரும்

 

அகஸ்தியன் தன்னுடைய கூர்மையான எண்ண வலு கொண்டு விண்ணுலகை உற்றுப் பார்த்து அதிலிருந்து வரும் பேராற்றல்களை எடுத்துத் தன் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் ஒளிக் கதிர்களாக மாற்றிக் கொண்டான்.

1.அதைத்தான் குருநாதர் எனக்குள்ளும் (ஞானகுரு) பதிவு செய்தார்…
2.எடுத்து அதை வளர்க்கும்படியும் செய்தார்.

நான் (ஈஸ்வரபட்டர்) சொன்ன வழியில் நீ இதைப் பெற்றால் உனக்குள் அந்த அகஸ்தியனின் ஆற்றல்கள் வளரும் என்றார்.

இதையே மற்ற மக்கள் மத்தியில் நீ பதிவு செய்யப்படும் பொழுது அவர்களும் அதே எண்ணம் கொண்டு எடுத்தால் அவர்களாலும் அதைப் பெருக்கிக் கொள்ள முடியும். இப்படி ஒரு கூட்டமைப்பின் நிலைகளை நீ உருவாக்க வேண்டும்… என்றார்.

1.எனது வலிமை கொண்டு… பல ஆயிரம் மடங்கு வலிமை கொண்டுதான்
2.எனக்குள் பெற்ற சக்தியை… உனக்குள் கொடுத்து… அதை எடுக்கச் செய்கின்றேன்
3.ஆனாலும் நீ ஒருவனே இதனுடைய பலனைப் பெற முடிகின்றது…!

ஆனால் பலரும் இந்தப் பலனை பெற வேண்டுமென்றால் நீ இதை எவ்வாறு செய்ய வேண்டும்…? என்று எனக்கு உபதேசித்து அருளினார்.

நீ கண்ட அந்த ஞான வித்தை ஒவ்வொரு உடல்களிலும் விதைக்கப்படும் பொழுது அது பதிந்து அந்த அருள் உணர்வுகள் அங்கே பெருகி விண்ணுலக ஆற்றலை அவர்கள் பெறும்படி செய்ய வேண்டும் என்றார்.

1.அவர்களுக்குள் அந்த வளர்ச்சி பெற வேண்டுமென்று
2.நீ எடுத்துக் கொண்ட சக்தியால் நீ தவம் இருக்க வேண்டும் என்று சொன்னார்.

நீ தியானிக்கின்றாய்… உனக்குள் விளைய வைத்தாய்…! ஒவ்வொரு உடலிலும் அது இணைந்து கொண்ட பின் அவர்கள் அவ்வழியில் அந்த சக்தி பெற வேண்டும் என்ற நிலையை என்னைத் தவம் இருக்கும்படி செய்கின்றார் குருநாதர்.

அவர் சொன்ன வழிப்படித் தான் இன்று வரையிலும் செய்து கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு) நீங்கள் எல்லாம் அருள் ஞானிகளாக ஆக வேண்டும் என்று…!

படைத்தல் காத்தல் அழித்தல் என்ற பிரம்ம ஞானம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

“நாபிக் கமலம் என்ற ஜோதி…” தன்னுள் கிளைத்து… எழுந்த மூலப் பொருளாக விளங்கும் தன்மையின் சூட்சமம்… அறிவின் துணை என்னும் சாமரத்தால் வீசப்படும் காற்றும்… காற்று என்று பொருள்பட அறிவை உபயோகிக்கும் பொழுது… சிந்திக்கத் தலைப்படும் பொழுதுதான் உயர் ஞானமாக எழும்.

அறிவின் நற்குணம் – சாந்தம் என்ற சாமரத்தால் வீசிப் பெறப்படும் காற்று… வீர குணத்தைக் கொண்டு எழும் ஜோதி…
1.மீண்டும் மீண்டும் இந்தக் குணங்களை எண்ணி வீசும் பொழுது வீசும் காற்றாகிய எண்ணச் செயலின் செயல்பாடு
2.வீர குணத்தின் விளை நிலமாக ஆக்கும் செயலுக்கு உறுதியாகி
3.படைப்பின் படைப்பாக தைரிய குணத்தால் சாந்த குணத்தால் எண்ணி எழும் செயலுக்கு வித்தாகப் “பிரம்ம ஞானம்” உதிக்கும்.

ஆகவே பிரம்ம சூத்திரமாகவே மாறும் செயல் நிலை என்பது “அடையும் வழி இது தான்…!” என எண்ணித் தெளிந்து… பின் கைக்கொள்ள வேண்டிய செயலாகச் சித்தன் காட்டிய வழியில் எல்லாம் உருவகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

1.மனித எண்ணத்திற்குள் எழும் மதமாகிய வீரியத்தை அடக்க அங்குசமும்
2.எண்ணமே உணர்வாகி அந்த உணர்வுகளின் வழி செல்லும் எண்ணமான செயல் காமத்தின் அடியாக எழும் மோகத்தை
3.அதே எண்ணச் செயல் உயர்வைக் கொண்டு வீழ்த்தும் நிலை கரும்பு வில்லும் கைக் கொண்டு
4.உயிர் ஆன்மப் பிணைப்பையே வலியுறுத்தப் பாசக்கயிறும்
5.தன் நிலை என்றென்றும் மணமாக எண்ணத்தில் நிலை பெறக் கையில் மலரைக் கொண்டு
6.சித்தன் காட்டிய தத்துவ செயலைக் கைக்கொள்ளும் ஞானி தன் சுவாச எண்ண ஓட்ட உயரிய நற்செயலால் அக்கினி ஜோதியாகி
7.நாபிக் கமலத் தாமரை மேல் அமரும் படைப்பின் படைப்பாக அமரலாம் என்பதே “பிரம்ம சூத்திரம்…!”

கர்ப்பமான தாயின் வயிற்றில் உருவாகியிருக்கும் கரு அதாவது அந்தச் சிசு ஆகாரம் எடுக்கும் வழி நாபிக் கொடி ஆகும். அது போல்
1.அமில நிலை ஆகார உயர்வின் சிறப்பாக நாம் எடுக்கும் சுவாசத் தியானத்தால்
2.கரு நிலையின் முதல் நிலையான நம் உயிர் தன்மையையே “ஜோதி ஸ்வரூபமாக்குதல்…” வேண்டும்.

படைப்பின் படைப்பாக இணைக்கும் உயர் தன்மை என்பது…
1.தாய் சக்தியும் அந்தத் தாய் சக்தியின் ஆன்மக் கலப்போ அல்லது
2.இல்லற வாழ்வில் சிவ சக்தி நிலையாக எண்ணத்தால் ஒன்றுபட்டு ஆத்ம ஐக்கிய நிலை பெறும் வழியோ
3.படைப்பின் படைப்பாவது மட்டுமல்லாது அது புரியும் தொழில் தன்மையாகக் “காத்தல்” என்பது
4.தான் முயன்று பெற்ற “உயரிய ஆன்ம சக்தியே” சூட்சமப் பொருள் ஆகும்

அழித்தல் என்பது
1.உயிர்ச் சக்தியின் செயலுக்கு உயர் நிலை எற்படுத்தாமல் மாறுபாடு ஏற்படுத்தப்படும் பொழுது
2.அந்தச் சிவமாகிய சக்தி அழிக்கின்றான்…! என்று பொருள் கண்டு தெளிந்து…
3.ஏனென்றால் அழிக்கப்பட வேண்டியது துர்க்குணங்களே..! என்று அதைச் சம்ஹரிக்கும் நிலையில்
4.உயிர்த் தன்மை ஆதி சக்திக்குள் கலக்கும் பொருளே “மறைத்தல்” என்றும்
5.படைப்பின் படைப்பான உருக்கோலமே… அன்பு நிலைக் குணமாக “அருளல்…” என்பதுவும்
6.இந்தப் பேருண்மையின் சாராம்சங்களை உணர்ந்து அந்த நிலையைப் பெறுதல் வேண்டும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நம் உடலுக்குள் எண்ணில் அடங்காத ஆன்மாக்கள் உண்டு. அது எதனெதன் நிலைகள் விளைந்ததோ அதனின் உணர்வலைகளைக் காற்றிலிருந்து ஈர்க்கும். (தன் உணவுக்காக)

உடலுக்கு முன் பரவி வரும் உணர்வுகளை அது கவர்ந்து இழுத்துத் தன் ஆன்மாவாகி உடலுக்குள் ஒரு அணுவின் கருவாக மாற்றிக் கொண்டு இருக்கும்.

தீயவர்களைப் பார்க்கப்படும் போது தீய உணர்வலைகளைக் கவரச் செய்து அதை உயிர் உணர்ச்சியால் நம்மை அறியச் செய்தாலும் உணர்வின் அணுவாக மாற்றி விடுகின்றது. அணுவின் தன்மை மலமாக மாற்றி உடலாக மாற்றுகின்றது.

உடலுக்குள் அது தேங்கி நின்று தன் உணர்வை (உணவை) எடுப்பதற்கு அந்த உணர்ச்சியைத் தூண்டும்.

உணர்ச்சிகளைத் தூண்டும் போது நமக்குள் இருக்கக்கூடிய காந்தப்புலனறிவு எங்கிருந்து தீமைகளை உருவாக்கியதோ அதைக் கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றி நம்மைச் சுவாசிக்கச் செய்யும்.

சுவாசித்தது உயிரிலே பட்டு அந்தத் தன் இனமான உணர்வுகளை நம் உடலுக்குள் பரப்பச் செய்து அதனைத் தனக்குள் சேமித்து வைத்துக் கொள்ளும்.

நாம் உணவாக உட்கொள்வது உடலுக்குள் சென்று அது சிறுகச் சிறுகக் கலந்து இரத்தமாகவும் உணர்வின் அணுக்களாகவும் மாற்றிக் கொண்டு உள்ளோமோ இதைப் போல தான் தனது சேமிப்பாக அது எடுத்து அந்த உணர்வின் தன்மை (அந்த அணு) வளர்க்கும்.
1.அதில் கொஞ்சம் குறைகின்றது என்றால்
2.(நமக்குப் பசிப்பது போல்) உடனே உணர்ச்சிகளைத் தூண்டும்.

உணர்ச்சிகளைத் தூண்டும் போது அதை எதனின் உணர்வின் தன்மை பட்டதோ அதே காந்தப்புலன் அருகில் இருக்கும் இந்த உணர்ச்சியின் வேகம் அதிகமாகும்.

அப்பொழுது இன்னொரு மனிதன் உடலில் விளைந்த தீமையான உணர்வை இது கவர நேரும்.

அவ்வாறு கவர்ந்தால் நமது ஆன்மாவாக இங்கே சேருகின்றது. சுவாசித்து உயிர் வழி கொண்டு தனக்குள் அதை எடுத்துக் கொள்கின்றது. இந்த இயற்கையின் நியதிகளே இது தான்.

அது எடுக்கப்படும் போது தன் ஆன்மாவில் (நம்முடைய காற்று மண்டலம்) சேமித்துக் கொள்ளும்.

சாப்பாடு சாப்பிட்டு வயிறு நிறைந்தவுடனே நாம் எப்படித் தூங்குகின்றமோ அதே போல உடலிலுள்ள அணுக்கள் அது அதனதன் உணவை எடுத்து உட் கொண்ட பின் அது உறங்கச் செல்லும்.

அதே சமயத்தில் விஷத் தன்மையான அணுக்கள் (வேதனை வெறுப்பு கோபம் ஆத்திரம்) வரப்படும் போது தன்னை அறியாமலே துடிப்பின் வேகம் அதிகமாகும். அப்போது நமக்குள் வேதனையின் தன்மைகளும் உருவாகும்.

இது இயற்கையின் சில நியதிகளில் நிலையானது.

நாம் எப்படிப் பசிக்கும் பொழுது உணவைத் தேடுகின்றோமோ உணவை உண்ட பின் உறங்குகின்றோமோ அதை போல் தான் நம் உடலில் உருவான அணுக்கள் இந்தக் காற்று மண்டலத்திலிருந்து அதனதன் உணர்வலைகளை உணவாக எடுத்து வளரும்.

நம்முடைய ஆன்மாவின் இயக்கங்களைப் பற்றி நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அதற்காகத்தான் இதை உணர்த்துகின்றோம்.

1.வெளியிருக்கும் காற்று மண்டலம் பரமாத்மா – பொதுவானது
2.நம்முடைய காற்று மண்டலம் ஆன்மா – உடலில் உள்ள அணுக்களுக்குச் செல்லும் (உணவு) உணர்வலைகள்
3.சுவாசம் – உணர்வலைகள் உடலுக்குள் கவரப்பட்டுப் போகும் பாதை
4.உயிர் – உயிரில் பட்ட பின் உணர்ச்சிகள் இயங்கி அணுக்களுக்குப் பிரித்துக் கொடுக்கின்றது

இப்படித்தான் சுவாசம் அமைகின்றது. சுவாசத்தின் வழி உடல் அணுக்கள் வாழ்வதும் உடலில் விளைந்ததிலிருந்து உயிர் தன் ஆற்றலைப் பெருக்கும் நிலையும் நடந்து கொண்டயிருக்கின்றது.

12.04.2021 உபதேசம்

அருள் சக்திகளை நீங்கள் பெறவேண்டும் என்று நான் தியானிக்கும் பொழுது நீங்கள் கதவைத் திறந்து வைத்தால் தானே அது உள்ளே புகும்…!

 

நீங்கள் கதவை அடைத்துவிட்டீர்கள் என்றால் எப்படி உள்ளே வர முடியும்…! கதவை அடைத்து எங்கேயோ சென்று விட்டீர்கள் என்றால் நான் (ஞானகுரு) உள்ளே வர முடியாதல்லவா…!

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று நான் அந்த அலைகளைப் பரப்பிக் கொண்டே இருக்கின்றேன். அதே எண்ணத்தை நீங்களும் எண்ணி அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கினால் எளிதில் பெற முடியும்.

1.ஏனென்றால் எனது வேலை கடவுளை நான் எங்கும் தேடவில்லை…!
2.உங்கள் உயிரைத்தான் குருநாதர் கடவுளாக வணங்கும்படி சொன்னார்.
3.அவன் அமைத்த கோட்டை தான் உங்கள் உடல் என்று சொன்னார்.

பல ஆயிரம் ஆண்டுகள் இதன் உணர்வைத் தேர்ந்தெடுத்து இந்த மனித உருவை உருவாக்கி உள்ளது உயிர். அதற்குள் இருக்கக்கூடிய உயர்ந்த குணங்களைத் தெய்வமாக மதித்து
1.இந்த மனிதனை உருவாக்கும் உணர்வுகள் அனைத்தும்
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும் என்று தான் நான் எண்ணுகின்றேன்.

உலக வாழ்க்கையில் உயர்ந்த குணங்கள் கொண்டு வாழ்ந்தாலும் ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கும் அந்தத் தீமைகளின் நிலையை நீக்குவதற்கு அருள் மகரிஷிகளின் உணர்வை எடுத்து ஆத்ம சுத்தி செய்து தூய்மைப்படுத்திக் கொண்டே வரவேண்டும்.

ஆனால் இப்போது தான் இதைச் செய்கின்றோம். இதற்கு முன் எடுத்துக் கொண்டது நமக்குள் எத்தனையோ கோடி உணர்வுகள் உண்டு…!

அதை எல்லாம் மாற்றி அமைக்க அவ்வப்போது அந்த மகரிஷியின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று நாம் எடுத்துக் கொண்டே வரவேண்டும்.

நீங்கள் சும்மா உட்கார்ந்து பாருங்கள்… அப்போது தெரியும் உங்கள் உடலில் என்னென்ன உணர்வுகள் எல்லாம் ஓடுகிறது என்று…!
1.நம்மிடம் வெறுப்பாகப் பேசியவர்கள்… சண்டை போட்டவர்கள் இடைஞ்சல் பண்ணியவர்கள் அவர்களைப் பற்றி எல்லாம் நினைவு வரிசையாக வரும்.
2.அதாவது நாம் எண்ணமாலே இது எல்லாம் நமக்குள் வரும்
3.நான் உதவி செய்கிறேன்… ஆனால் அவன் இடைஞ்சல் செய்கின்றான்
4.காசை வாங்கியவன் திரும்பக் கொடுக்கவில்லை
5.வீட்டில் இருப்பவர்களே என்னைக் கேவலமாகப் பேசினால் நான் என்ன செய்வது…? என்ற இந்தப் புலம்பல்கள் தன்னாலே வரும்.

ஏனென்றால் நமக்குள் பதிவு செய்த உணர்வுகளின் இயக்கம் இப்படித்தான் வரும்.

எத்தனை வகையான வித்துக்களைப் பூமியில் விதைக்கின்றோமோ அது எல்லாம் வளர்ந்தால் தன் தன் இனமாக வளர்ந்து அதனதன் மணங்கள் தான் வரும்.

உதாரணமாக ஒரு செண்டு நிலத்தில் விதைகளை விதைத்துப் பாருங்கள். அதில் எந்தப் பகுதியில் எந்தச் செடி சக்தி அதிகமாக முளைத்திருக்கின்றதோ அந்த வாசனை தான் அங்கே முன்னணியில் வரும்.

செடிகள் குறைந்திருந்தால் வாசனை குறைவாக இருக்கும். ஆனால் அந்த செடியின் வளர்ச்சி அதிகமாக இருந்தால் பக்கத்தில் இருக்கும் நல்ல செடிகளை வளரவிடாது. மற்றது வளர்வதற்கு வேண்டிய சத்தை எல்லாம் இது எடுத்துவிடும்… மற்றது வளராது.

அதை மாற்றுவதற்குத் தான் விவசாயத்தில் ஊடு பயிர் செய்யலாம் என்று சொல்வார்கள். என்னென்ன பயிர் வகைகளைச் சேர்த்தால் அதனுடன் உணர்வுகள் ஒன்று பட்டு ஊடு பயிர் போடும்போது இது நன்றாக வளரும் என்று சொல்வார்கள்

ஆனால் செடிகளில் ஏற்கனவே ஊடு பயிர் கலப்பில்லாத நிலைகள் வைத்தால் அந்தச் செடிகள் முளைக்காது. இதை விவசாயிகள் தெளிவாகத் தெரிந்து இருக்கலாம்.

பல தாவர இன சக்திகளை ஒருங்கிணைத்து அதை இணைத்துப் புதிதாக வித்தை உருவாக்குவார்கள். அப்படி உருவாக்கி விட்டால்… ஊடு பயிர்கள் போடப்படும் போது
1.இது எடுக்கும் சக்தி அதற்கும் இது எடுக்கும் சக்தி அதற்கும் எடுத்து இது இரண்டுமே தழைத்து ஓங்கும்.
2.அதாவது அதனுடைய சக்தி இதற்கு உரமாகவும் இதனுடைய சக்தி அதற்கு உரமாகவும்
3.இப்படி வளர்ந்து வரப்படும் பொழுதுதான் தாவரங்கள் செழித்து வளரும்.

நான் இதை எல்லாம் படித்துப் பேசவில்லை. குருநாதர் காட்டிய வழிப்படி இந்த உணர்வுகள் ஒவ்வொன்றும் எப்படி இணைக்கப்படுகின்றது..? விஞ்ஞான அறிவால் எப்படி இணைக்கிறார்கள்…? இயற்கை உணர்வு எப்படி இணைக்கின்றது…? இணைந்த நிலைகள் எப்படி வளர்கின்றது…? என்று உணர்ந்த உண்மைகளைத் தான் சொல்கிறேன்.

ஏனென்றால் ஆதியிலே முதல் மனிதனாகத் தோன்றிய அகஸ்தியன் தன்னைத் தான் அறிந்தவன்… தன்னை உணர்ந்தவன் தான்.

அணுவின் இயக்கத்தைத் தனக்குள் கண்டுணர்ந்து விண்ணின் ஆற்றலை நுகர்ந்து பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இது உருவாகி அது தனக்குள் கருவாகி அப்படி அவனுக்குள் விளைந்த உணர்வுகள் இன்றும் இந்தப் பூமியில் பரவி உள்ளது.

1.அவன் வாழ்ந்த காலங்களில் இந்தப் பகுதிகளில் (தென்னாட்டில்) நடந்து சென்ற நிலைகளில்
2.இந்தப் புவியில் படர்ந்துள்ள அவனின் சக்தியை எடுப்பதற்கு
3.உங்களுக்குள் அந்த மெய் ஞானியின் உணர்ச்சிகளைத் தூண்டப்படும்போது
4.அந்த உணர்வலைகளை எளிதில் நீங்கள் நுகர முடியும்.

வாடிய பயிர்களுக்கு எப்படி உரமிட்டுச் செழிக்கச் செய்கின்றோமோ அதைப் போன்று யாம் கொடுக்கும் இந்த உபதேச உணர்வுகள் உங்களுக்குள் சோர்வடைந்த… நலியச் செய்யும் உணர்வுகளை… அடக்கச் செய்யும்.

அகஸ்தியர் பெற்ற அருள் சக்திகளை நீங்கள் பெறுவதற்கு உணர்ச்சியைத் தூண்டி மெய் ஒளியைப் பெறும் உணர்வினை உங்களுக்குள் உருவாக்குவதற்குத் தான் இவ்வாறு உபதேசத்தைக் கொடுப்பது…!

சுயப்பிரகாச ஜோதி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பஞ்ச பூத அமிலத் தத்துவம் கொண்டு ஜீவ பிம்ப சரீரம் பெற்றிடும் “ஜீவன் என்ற உயிராத்ம சக்தி” மூல சக்தியாக வளர்ச்சி பெற்றுப் “பேரருள்” சக்தியில் கலந்திட வேண்டும்.

பேரருள் சக்தியாக ஆகிட சிவ சக்தி கலப்பாகச் சக்திகளை ஈர்த்துச் செயல் கொண்டிருக்கும் பூமியின் தொடர்பில்
1.ஜீவன் கொண்டே நாம் சகல சக்திகளையும் ஈர்த்து
2.மெய் ஞான சக்தியின் வளர்ப்பாக வளர்ச்சிப்படுத்திக் கொள்ள முடியும்.

சூட்சமமாக ஈர்ப்பின் தொடரில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் பூமியைப் போலவே
1.நாமும் நம் எண்ண வலுக் கொண்ட சுவாச ஈர்ப்பினால்
2.நம் சரீரத்திலேயே அனைத்துச் சக்திகளும் பெற்று
3.மனதின் திறன் என்ற “வைப்பாற்றல்” பெற்றிடலாம்.
(வைப்பாற்றல் என்றால் நாம் எண்ணிய நேரத்தில் எண்ணியபடி செயல்படுத்தும் தன்மை)

உயிரான்ம சக்தியைச் சூழ்ந்திருக்கும் பஞ்ச பூத சரீர சக்தி… ஓர் முகமாகச் சேமித்துக் கொண்டிடும் சக்தியே “மனோ சக்தி…!”

சரீர பிம்பத்தில் ஐந்து இடங்களில் பரவிக் கிடக்கும் அந்தச் சக்திகளை ஆற்றல்மிகு ஓர்மித்த வழி வகைகளின் செயலே நாம் காட்டும் இந்தத் தியானத்தின் மூலமாகச் சித்திக்கும்.

பஞ்ச பூதங்களை – “நமசிவாய” (சிவமயம்) தத்துவமாகக் காட்டப்பட்டதின் செயலையே மாற்று நிலைக்குக் கொண்டு சென்று விட்டார்கள்.

1.அந்தச் செயலை நீக்கிவிட்டு
2.பஞ்ச பூத ஆற்றல் சக்தியை வீரத்தில் விளைந்த சாந்தமாக உயிர் சக்திக்குள் கலந்து
3.”ஈஸ்வர ஜோதி” என்ற சுயப்பிரகாச ஜோதி நிலையைப் பெற்றிடலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இரண்டு பேர் காரசாரமாகச் சண்டை போடுகிறார்கள். அந்தச் சங்கடமான வார்த்தைகளை நீங்கள் கேட்டுவிட்டு வந்து வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டால் என்ன செய்யும்…?

எவ்வளவு வேதனைப் பட்டார்களோ… அந்த வேதனையான உணர்வுகள் அனைத்தும் சாப்பாடோடு கலந்து உள்ளே செல்கிறது.

மற்றவர்கள் சங்கடப்படுவதையும் துன்பப்படுவதையும் ஆத்திரப்படுவதையும் நீங்கள் வேடிக்கையாகத்தான் கேட்டீர்கள். கேட்டு விட்டு வந்து சாப்பிடும் போது அந்த உணர்வு உணவுடன் கலந்து ஜீரண உறுப்புகளுக்குள் போகிறது.
1.அந்த வேதனையான உணர்வு கலந்த உமிழ் நீரும்
2.நாம் சாப்பிட்ட ஆகாரம் இரண்டும் இரைப்பையில் போய் என்ன செய்யும்…?

கோழி குருவி இருக்கிறது இல்லையா…? கோழியாவது கொத்தித் தின்று தன் குஞ்சுகளைக் கூட்டிப் போகும். ஆனால் குருவி காகம் போன்ற பறவை இனங்கள் எங்காவது சென்று இரையை எடுத்து வரும்.

குஞ்சுகள் “ஆ…ஆ…” என்று வாயைத் திறக்கும். தாய் தான் எடுத்து வந்த அந்த இரையை அதன் வாயில் போடும். போட்டவுடன் குஞ்சுகள் வாயை மூடிக் கொள்ளும்.

இதே மாதிரித்தான்
1.நம் சிறுகுடல் அதன் பசியின் நிலைகளை உந்தியவுடனே
2.இரைப்பையிலிருந்து “ஆ…!” என்று வாயைத் திறக்கும்.
3.அந்த நேரத்துக்கு தகுந்த மாதிரி இரைப்பையிலிருந்து “சொத்…!” என்று உணவு கீழே விழும்.
4.“லபக்…” என்று மூடிக் கொள்ளும்.

அது மூடியவுடன் என்ன அதிலிருக்கும் இரசத்தை வடித்துக் கொள்ளும். அடுத்துக் கீழே பசி எடுக்கும் போது இதைக் கீழே தள்ளி விடும். அதைக் கழித்து எடுத்துக் கொள்ளும்.

இப்படி வழித்துக் கொண்டே வந்து அதிலிருக்கும் சத்தையெல்லாம் பிரித்துவிட்டு விஷத்தையெல்லாம் வடித்து வெளியே அனுப்பும்.

இப்படி நமக்குள் அந்த விஷத்தை வடிக்கக்கூடிய திறன் இருந்தாலும், நாம் வேதனை உணர்வோடு அந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்டோம் அல்லவா..!

சாப்பாட்டில் இருக்கக்கூடிய விஷத்தைத் தான் சிறு குடலுக்குப் பிரிக்கத் தெரியும். ஆனால் வேதனையான விஷயத்தை கேட்டறிந்து அது இரைப்பையோடு சேர்ந்து விட்டால் என்ன செய்யும்…?

சிறு குடல் சத்தைப் பிரிக்க இழுக்கும் பொழுது இரைப்பை திறக்கும். ஆனால் பிறர் கோபமாகப் பேசியத்தைப் பார்த்தவுடன் அது “ஆ..” என்று வாயைத் திறந்துவிடும். திரும்ப மூடாது…! ஏன்…?

மிளகாயை வாயில் போட்ட பின் வாயை மூடச் சொல்லுங்கள் பாப்போம்…! உங்களால் மூட முடியுமா என்று பாப்போம்…? “ஆ… ஆ…!” என்று வாயைத் திறந்து அலறிக் கொண்டே இருப்போம். மூட முடியாது. மூட மாட்டோம்.

அதைப் போன்று தான் எரிச்சலான உணர்ச்சிகள் சிறு குடலை விரித்து விட்டுவிடும். அப்போது “ஆ…ஆ..” என்று அலறும்…! உள்ளே “கட…புடா…!” என்று ஆகும்.

ஏனென்றால் சண்டை போடுவதைப் பார்த்துவிட்டு வருகிறீர்கள் இல்லையா…? ஒருவர் கோபமாகப் பேசுவார்.. ஒருவர் வேதனைப்படுவார்…! இரண்டும் இருக்கும்.

இதைப் பார்த்துவிட்டு வந்தவுடன் உங்கள் உடலிலுள்ள குடலில் இத்தகைய உணர்ச்சிகள் தோன்றுவதை நிச்சயம் பார்க்கலாம். நான் சொல்வதையெல்லாம் பாருங்கள் தெரியும்…!

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் நாம் யாரும் தவறு செய்யவில்லை. ஆனால் நம் புலனறிவால் உடலுக்குள் பதிவாகும் உணர்வுகள் கொண்டு நாம் சுவாசிக்கும் பொழுது
1.அந்தந்த உணர்வுகள் (குணங்கள்) உடலுக்குள் சென்று
2.என்னென்ன வேலை செய்கிறது…!
3.உடல் உறுப்புகளையும் அதை உருவாக்கிய அணுக்களையும் அது எப்படி இயக்குகிறது… மாற்றியமைக்கிறது…! என்பதை
4.நீங்கள் தெரிந்து கொள்வதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

11.04.2021 உபதேசம்

நல்லவர்களுக்குத் தான் துன்பம் அதிகம் வருகிறது என்றால் அதைத் தடுத்து நல்லதாக்க வேண்டுமல்லவா…?

 

நீங்கள் நல்லவராக இருக்கின்றீர்கள். ஒருவன் கடுமையான வேதனைப்படுகின்றான்… அவனை உற்றுப் பார்க்கின்றீர்கள். உங்கள் பாச உணர்வுகளில் இது கலக்கின்றது.

பார்த்தபின் இரக்கத்துடன் அவர்களுக்கு நல்ல உதவிகளைச் செய்கின்றீர்கள். அப்பொழுது உங்கள் நல்ல உணர்வுக்குள் அவரின் வேதனைகள் பாய்கிறது.

பாய்ந்த பின் என்ன நடக்கின்றது…?

பாலிலே பாதாமைப் போட்டு அதில் விஷத்தைக் கலந்து குடித்தால் என்ன ஆகும்…?

இதைப் போன்றுதான் பாச உணர்வோடு நீங்கள் பார்த்து இந்த உணர்வுடன் இன்று அவருக்கு உதவி செய்து இருக்கலாம்.
1.ஆனால் அந்த வேதனை சிறுகச் சிறுக உடலுக்குள் விளைந்தவுடனே
2.உங்களுக்குத் தலை வலி மேல் வலி எல்லாம் வரும்.

அது வந்தாலும் கூடப் பரவாயில்லை. ஆனால் என்ன ஆகின்றது…?

அந்த வேதனையான உணர்வுகள் உங்கள் ஆன்மாவில் இருக்கப்படும் பொழுது தொழிலின் நிமித்தம் நீங்கள் எதையாவது ஒரு பொருளைத் தேர்ந்தெடுக்கச் சென்றாலும் அந்த வேதனையுடன் பார்த்தவுடனே அதனின் தரத்தைப் பார்த்துச் சரக்கை வாங்க முடியாது.

1.அந்த வேதனைப்படும் நிலையும் சோர்வான நிலையும் கொண்டபின்
2.அதற்குத் தக்கவாறு தான் கலரும் தெரியும்… சரக்கும் தெரியும்.
3.அதை வாங்கிக் கொண்டு வந்து விடுகின்றோம்.

நாம் எடுத்துக் கொண்ட அந்த உணர்வுக்குத் தக்கவாறு வியாபாரத்திற்கு அதைக் கொண்டு வந்தாலும் “நமக்கு அது நல்ல சரக்காகத் தான் தெரியும். ஆனால் வியாபாரம் சரியாக ஆவதில்லை…!”

நாம் வைத்திருக்கின்ற சரக்கைப் பார்த்து… “என்ன இந்த மாதிரி ஒரு சரக்கை வைத்திருக்கிறீர்கள்…?” என்று கேட்பார்கள். இங்கே நமக்கு நல்ல சரக்காகத் தெரியும்… அது அடுத்தவர்களுக்கு மட்டமாக தெரியும்.

நாம் என்ன நினைப்போம்…?

பாருங்கள்… மட்டமான சரக்காக அங்கே வைத்திருக்கின்றார்கள் அங்கே கூட்டம் போகிறது… அதை வாங்கிச் செல்கிறார்கள். ஆனால் இங்கே நான் நல்ல சரக்கு வைத்து இருக்கின்றேன்… யாரும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள்…! என்போம்.

ஏனென்றால் இந்த உணர்வின் தன்மை எதுவோ… “கண்களில் இந்த அலைகள் வரும்…” கரு விழியை சாதாரணமாக நாம் பார்த்தால் இந்த வித்தியாசங்களை உணரலாம்.

ஒரே கண்கள்தான்…! இருந்தாலும்
1.சோகமாக இருக்கும்போது நம் கண் ஒளிகள் எப்படித் தெரிகின்றது…?
2.கோபமாக இருக்கும் பொழுது நம் கண்ணின் ஒளி அலைகள் எப்படித் தெரிகின்றது…?
3.சந்தோசமாக இருக்கும் பொழுது அந்த மகிழ்ச்சி நிலைகள் கொண்டு நம் கண்ணில் ஒளிகள் எப்படித் தெரிகிறது…? என்று
4.அந்தந்த உணர்வின் அலைகள் எந்த அலைக்குப் பாய்ச்சப்படுகிறது…? என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்…! தெரியாமல் இல்லை…!

ஆனால் இது போன்ற நிலைகள் இருக்கும் போது நாம் நம்முடைய நல்லதை எப்படிப் பாதுகாக்க வேண்டும்…? என்பதற்குத்தான் இதைச் சொல்வது.

நல்லதை எண்ணித் தான் நாம் செயல்படுகின்றோம். ஆனால் நல்லவர்களுக்கு தான் இத்தகைய துன்பங்களும் அதிகமாக வருகின்றது.

“காரணம்…” என்ன என்றால்
1.பாசத்தால் பரிவால் அன்பால் நாம் பிறருடைய கஷ்டங்களை எடுத்துக் கொள்கின்றோம்
2.ஆனால் அதைத் துடைக்கத் தெரிவதில்லை
3.உடலில் உள்ள எல்லா அணுக்களிலும் இந்தத் தீமைகள் சேர்ந்து விடுகின்றது.

அதனால் வியாபாரம் மந்தம் ஆகின்றது. சரக்கைத் தரமான நிலைகள் கொண்டு பாதுகாக்க முடியவில்லை. இப்படிச் சங்கடமாகிப் போய்விட்டால் அடுத்து என்ன நடக்கின்றது…?

நல்ல மனதுடன் இருக்கும் பொழுது முதலில் வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பார். ஆனால் இப்பொழுது சுத்தமாக வைத்திருக்க மாட்டார்… சுத்தமாக வைக்க வேண்டும் என்ற மனமே வராது. வீட்டில் இருண்ட நிலையாக இருக்கும்.

ஆகவே… பலருக்கு உதவி செய்திருக்கிறார். இருந்தாலும் அந்தச் சங்கடமான உணர்வுகள் இவருக்குள் வந்தது அழுக்காகி விட்டால் வீட்டைச் சுத்தப்படுத்துவததோ மற்ற பொருள்களைச் சீராக அடுக்கி வைப்பதோ அது எல்லாம் அங்கே இருக்காது.

காரணம் அவருடைய தவறு அல்ல…! இந்த உணர்வின் இயக்கங்கள் அதுவாகத்தான் மாற்றும்.

நாம் வேலை செய்கிறோம். அப்பொழுது அந்த நேரத்தில் ஏதாவது ஒரு பொருளைக் கையில் எடுத்தோம் என்றாலும் வேலை செய்து முடிந்த பின் கையைக் கழுவிக் கொள்கின்றோம். அதிகமான நேரம் கடுமையாக வேலை செய்து அதனால் உடலில் வியர்வையானல் குளிக்கின்றோம்.

ஆனால் அது போன்று நம் ஆன்மாவில் அழுக்கானால் தூய்மைப்படுத்துகின்றோமா…?
1.ஆன்மாவை உடனுக்குடன் தூய்மைப்படுத்த வேண்டும் என்பதற்குத்தான்
2.குருநாதர் காட்டிய வழியில் அந்த ஞானிகளின் அருள் சக்தியைக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).

குருவின் சக்தியைப் பெற வேண்டிய அவசியத்தையும் அதனின் இரகசியத்தையும் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆற்றின் ஆழம் தெரியாமல் கடந்து சென்றுவிட எண்ணுபவன் செயல் போல் இல்லாமல் இலட்சியத்தை அடைய வேண்டும் என்ற நோக்கில் “விழிப்பாக இரு…!”

பால்வெளி மண்டலத்தின் சக்திகளை ஈர்த்து வலுக் கொண்டு பால்வெளிச் சூட்சமத்தின் பூதியை அறிந்து கொள்ளும் முன்
1.மாமகரிஷிகளின் அருளாசி பெறுவது…
2.சக்தியின் வலுவை வலுவாக்கிக் கொள்வது…
3.புவியின் காந்த நீர் சக்தியை ஈர்த்துச் செயல் கொள்வது… என்ற
4.அந்தப் பாடத்தைப் படி… படி… படி…! என்று சொன்னதெல்லாம்
5.இந்தப் படி தான்… இந்த வழி தான்…! என்று அறிந்து கொள்ளுதலும்…
6.நீர் சக்தியை வென்று காட்டினேன்… அதனுடன் ஒன்றியும் காட்டினேன்..! என்ற அந்த அகத்தியரின் கூற்று தான்.

இதனுடைய சூட்சமம் புரிகிறதா…?

நாம் வாழும் இந்தப் பூமித் தாயின் தொடர்பில் சக்தி பெற்று வலுக் கொண்டு மனிதனாக வளர்ந்த செயலுக்கு “அன்று தாயின் பால் அருந்தினாய்…!”

இன்று சரீர வலுவின் வீரியத்தில் மண்டலங்களின் சுழற்சியினை (விண்ணுலகம்) அறியும் செயலுக்கு… எண்ண வலுவின் நேர் கோட்டில் அறிந்து கொள்ளும் செயலுக்கு…
1.பூமித்தாய் புவி காந்த நீர் பாலை அமுதாக்கி அளித்திடக் காத்துக் கொண்டிருக்கின்றாள்.
2.வளர்த்து வலுக் கொண்டு சுயப்பிரகாச தனிச் சக்திச் சுழல் மண்டலமாக ஆக்கிடும் உங்கள் செயலுக்கு நானும் ஊட்டிவிட்டேன்…!

அகத்தியர் கூறிய அந்தச் சூட்சமப் பொருளைக் கூறுகின்றேன்.

1.நம் சூரியக் குடும்பத்தில் சுழன்று ஓடும் கோளங்களில் “குரு” என்று சிறப்பித்த வியாழன் கோள்
2.ஆதிசக்தியின் நீர் சக்தி அமில முலாமைத் தன் சக்திக்கு வலுக் கொண்ட செயலின் இரகசியம்
3.தன் ஈர்ப்பின் சுழல் வட்டத்தில் நெருங்கி வரும் அத்தனை வளரும் சுழல் சக்திகளையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டு
4.அந்தச் சக்தியைத் தன்னுள் ஒன்றச் செய்து… தன் வலுவை வலுவாக்கி வீரியம் கொண்டே சுழன்று ஓடிடும் செயலில்
5.அந்த வியாழன் கோள் அலையை ஈர்த்திடும் பக்குவத்தை “ஞானச் செல்வங்கள்” பெறப் பழகிக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் அகத்திய மாமகரிஷி அந்தக் கோளின் அலையைத் தன் வீரிய அமில ஈர்ப்பைக் கொண்டு தன் அமில வீரிய முலாமுடன் ஒன்றச் செய்து தன் சக்தியையே வலுக் கொண்டதாக்கிக் கொண்டார்.

1.துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் என்ற தனித்துவமான மண்டலங்களாகச் செயல் கொண்ட செயலுக்கு
2.“ஜெபத்தின் வேகம்…!” என்று சொல்லிய சொல் நாதத்தின் குணத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

அலை வீசாக்கடல் என்ற பால்வெளி சூட்சமத்தில் இப்படித் தனக்கென ஓர் சுய அமைப்பு மண்டலத்தை உருக்கொள்ளும் செயலின் கதிக்கு ஒவ்வொருவரும் வளர்தல் வேண்டும்.

தன் உயிராத்ம சக்தியின் வலுவிற்கு வலுக் கொண்டிடும் ஜெப நிலையில்
1.ஓர்முகப்படுத்தப்பட்ட எண்ண அம்பு…
2.பிரம்மாண்டமாகப் படைப்பின் படைப்பாக எய்தி
3.பூதியில் உருவாக்கப்படும் தன் ஒளி காந்த வட்டத்திற்குள் “ஒளி தீபம்…” ஏற்றப்பட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நம் உயிர் நெருப்பு. அதில் நாம் என்னென்ன உணர்வுகள் படுகின்றதோ (பொருளைப் போடுகின்றமோ) அதை எல்லாம் வேக வைக்கின்றது. அதை எல்லாம் எண்ணம் சொல் செயலாக இயக்கி நம் உடலாக மாற்றுகின்றது.

நாம் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பொருள்களைப் போட்டு நெருப்பை வைத்து வேக வைத்தால் என்ன செய்கின்றது…? நாம் போட்ட பொருள்களின் ருசியெல்லாம் வரும்.

ஆனால் கை தவறிப் போய் அதிலே உப்பு அதிகமாக விழுந்து விட்டால் என்ன நடக்கும்…?
1.முதலில் சரியாகத் தான் நாம் உப்புப் போட்டிருக்கின்றேன்.
2.இரண்டாவது தவறிப் போய்த் தான் விழுந்தது.
3.அதனால் ஒன்றும் செய்யாது…! என்று சொன்னால் உப்பு கரிக்காமல் இருக்குமோ…?
4.அது உப்பு கரிக்கத்தான் செய்யும்…!

அந்த மாதிரித்தான் நாம் என்ன செய்கின்றோம்…? பிறருடைய துன்பங்களைக் கேட்டு அறிந்து விடுகின்றோம். அவர்களுக்கு உதவிகளும் செய்து விடுகின்றோம்.

ஆனால் அதே சமயத்தில் அவர்கள் பட்ட துன்ப உணர்வுகளை நாம் கேட்டறியும் பொழுது அது நம் உடலில் விளைந்து விடுகின்றது.
1.அவர்கள் கஷ்டப்படுவதை எண்ணுகின்றோம்.
2.காது கொடுத்துக் கேட்கின்றோம்.
3.கண் அவர்களைப் பார்க்கின்றது. அவர்கள் சொல்லை என்ன செய்கின்றது…?
4.இழுக்கின்றது… எண்ணிச் சுவாசிக்க வைக்கின்றது.

நம் உயிரிலே பட்டவுடனே அவர்கள் சொல்கின்ற கஷ்டத்தை எல்லாம் இரக்கமாகக் கேட்டு அவர்களுடன் சேர்ந்து நாமும் அதை எடுத்துக் கொள்கிறோம். அப்போது நம் உடலும் சோர்வடைந்து விடுகின்றது.

நாம் வயலில் உழுகும் போது நெல்லிற்கு ஒரு மாதிரியாக உழுகிறோம். பருப்புக்கு வேறு வகையாக உழுகின்றோம். சோளத்திற்குப் போடும் பொழுது அதனுடைய பதங்கள் வேறாகச் செய்கின்றோம். ராகி விதைக்கும் போது ஒரு மாதிரியாகப் போடுகின்றோம். கம்பு விதைக்கும் போது ஒரு விதமாகப் போடுகின்றோம்.

அந்த மாதிரித்தான் மற்றவர்கள் கவலையாகச் சொல்லும் போது அது உடலுக்குள் வித்தாகப்போகும் போது நீங்களும் சோர்வாகின்றீர்கள். அந்த விதை முளைத்து விடுகின்றது.

அப்புறம் என்ன செய்கின்றது…?

ஆழமாகக் கவனித்தீர்கள் அல்லவா…! நீங்கள் சும்மா இருந்தாலும் கூட அப்புறம் உங்களுக்குத் தெரியாமலேயே என்ன செய்யும்…?

வயலில் ஒரு விதையை விதைத்தோம் என்றால் காற்றிலிருந்து தன் இனமான சக்தியை இழுத்துக் கொள்கின்றது. இழுத்து அது விளைகின்றது.

அது போன்று தான் உங்கள் எண்ணத்தில் அவர்கள் சொன்ன கஷ்டத்தை எடுத்துக் கொண்ட பின் விதையாக விளைந்து விடுகின்றது. அப்புறம் அடிக்கடி இந்தக் கஷ்டமான எண்ணம் வரும்.

உங்கள் உடலில் அந்த வாசனை தான் வரும். வேறு யாரிடம் பேசினாலும் இந்த உணர்வு கலந்து போய் அவர்கள் காதிலும் கேட்கின்றது. அவர்களையும் சோர்வடையச் செய்யும்.

சோர்வடைந்த பின் நமக்கு எப்படிப் பதில் சொல்வார்கள்…?

உதாரணமாக உங்கள் வியாபாரத்திற்காக வேண்டிக் கடன் வேண்டும் என்று கேட்டிருப்பீர்கள். வாங்கி நல்ல முறையில் வியாபாரம் செய்யலாம் என்று நினைப்பீர்கள்.

அல்லது வியாபாரத்தில் ஒருவருக்கு நீங்கள் கடனாகக் கொடுத்திருப்பீர்கள். கொடுத்த பணத்தைத் திரும்ப வாங்கலாம் என்று கேட்கப் போவீர்கள்.

அப்பொழுது நம்மிடம் கஷ்டம் என்று சொன்னவர்கள் உணர்வு இது முன்னாடி வந்துவிடுகின்றது. நீங்கள் கடன் கேட்கப் போகும் போது அல்லது வாங்கப் போகும் பொழுது இந்தக் கஷ்டமான உணர்வு தான் வரும்.

இந்தக் கஷ்டமான உணர்வுடன் நீங்கள் கேட்கப் போனீர்கள் என்றால் உங்களுக்கு எதிர்ப்பாகப் பேசுவார்கள்.
1.ஆனால் அவர்கள் அப்படிச் சொல்லவில்லை.
2.உங்கள் மனது அவரை அந்த மாதிரிச் சொல்ல வைக்கின்றது.

அதே மாதிரி திருமணத்திற்காக வேண்டி வந்து நான்கு தரம் பெண்ணைப் பார்த்து விட்டுப் போகிறார்கள். ஏனென்றால் அந்த நான்கு பேருமே ஜாதகத்தில் பொருத்தம் இல்லை என்று போய் விடுகிறார்கள். அதை மனதில் எடுத்துப் பதிய வைத்துக் கொள்கின்றோம்.

இப்படி நான்கு பேர் வந்து விட்டுப் போனவுடன் நாம் என்ன சொல்கிறோம்…? இந்தப் பிள்ளை நேரம் பார்…! பெண்ணைப் பார்க்க வேண்டும் என்று சொலிக் கொண்டு வந்து விட்டு… வந்துவிட்டுப் போகிறார்களே…! என்று இதைப் பதிவு செய்து கொள்கின்றீர்கள்.

அதற்கப்புறம் புதிதாக நல்ல நிலைகளில் யாராவது பெண்னைக் கேட்க வந்தால் என்ன நினைக்கின்றீர்கள்…? இவர்கள் வந்து என்ன சொல்லப் போகிறார்களோ…! இவர்களும் சும்மா வந்து விட்டுப் போய்விடுவார்களோ என்று எடுத்து வைத்துக் கொள்வீர்கள்.

கரெக்டா (சரியாக) அது முன்னாடி நிற்கும்.

அவர்கள் வருவார்கள். வந்து எல்லாம் பேசிக் கொண்டே இருப்பார்கள். பெண்ணைப் பற்றிச் சொல்லிக் கொண்டு இருக்கும் போது நாம் பதில் சொன்னால் நம்மைக் கூர்ந்து கவனிப்பார்கள்.

முதலில் நாம் எதை நினைத்தோமோ அதைச் சுவாசித்தவுடனே
1.அவர்களும் பெண்ணைப் பார்ப்பார்கள்…
2.சரி… நாங்கள் பிறகு சொல்கிறோம் என்று சொல்லி விட்டு
3.அடுத்து வரமாட்டார்கள்…! இது யார் செய்வது…?

நம் உடலிலிருந்து வந்த உணர்வின் மணம் தான் அவ்வாறு இயக்குகின்றது. ஆகவே
1.எதையெல்லாம் நாம் பதிவு செய்கின்றமோ
2.அதையெல்லாம் நம் உயிர் இயக்கிக்கொண்டு தான் இருக்கின்றது.
3.அதையெல்லாம் உடலாக ஆக்கிக்கொண்டு தான் இருக்கிறது
4.அதனதன் மணத்தைக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

10.04.2021 உபதேசம்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ்வோம்

 

பரிணாம வளர்ச்சியில் ரூபங்கள் மாறி மாறி… இவை அனைத்தும் ஒருக்கச் சேர்த்துத் தான் நாம் இன்று மனிதனாக வளர்ச்சி பெற்று வந்துள்ளோம்.

பேரண்டத்தின் சக்தியும் இந்த உடலான பிண்டத்திற்குள் அமைந்துள்ளது என்று நம் குருநாதர் காட்டிய இந்த உண்மைகளை உணர்தல் வேண்டும்.

ஏனென்றால்…
1.பேரண்டத்தில் அணுக்களாக இயங்கிக் கொண்டிருந்தாலும்
2.நமது பூமிக்குள் அணுக்களாக இயங்கிக் கொண்டிருந்தாலும்
3.உயிர் அணுக்களாகத் தோன்றி… ஜீவ அணுக்கள் உருவாகி… அதனின் மலம் உடலாகி…
4.அந்த உணர்வின் துணை கொண்டு அனைத்தையும் அறிந்திடும் ஆற்றல் பெற்ற நாம்
5.மனிதனாக உருபெற்ற இந்தச் சந்தர்ப்பத்தை எதன் வழியில் பயன்படுத்த வேண்டும்…? என்பதை அறிதல் வேண்டும்.

துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலங்கள் வெளிப்படுத்தும் சக்திகள் அனைத்தையும் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து
1.நம் பூமியை நோக்கி துருவப் பகுதி வழியாக வந்து கொண்டும்
2.பூமிக்குள் பரவிக் கொண்டும் உள்ளது.
3.அதனை நாம் பருகும் சந்தர்ப்பம்தான் துருவ தியானம்.

அவ்வாறு வந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் ஆற்றலை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் மகரிஷிகள் என்பவரும் நம்மைப் பொன்று மனிதனாக உருப் பெற்று வளர்ந்து வந்தவர்கள் தான். மனிதனாக உருவாகி வளர்ச்சி பெற்ற நிலையில்
1.விண்ணின் ஆற்றலைப் பெற்றவர்கள் அனைவருமே வேகா நிலை அடைந்துள்ளார்கள்.
2.அவர்கள் தான் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் உள்ளார்கள்.
3.பேரண்டத்தில் எத்தகைய கடும் விஷங்கள் வந்தாலும் கொடூர நெருப்பானாலும் இவர்கள் மடிவதில்லை… என்றும் அழிவதில்லை.

அதைத்தான் பேரின்பப் பெரு வாழ்வு என்பது.

கார்த்திகேயா என்ற ஆறாவது அறிவு கொண்டு அனைத்தையும் அறிந்திடும் ஆற்றல் பெற்ற நாம் அதனின் துணை கொண்டு அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெறுவோம் என்றால் நாமும் ஏழாவது நிலையான அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.

இதற்கு முன் நாம் தெரிந்து கொள்ளவில்லை. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் நம்முடைய சந்தர்ப்பம் இப்பொழுது அறிய முடிந்தது.

ஆகவே இதைக் கேட்டுணர்ந்தவர் அனைவருக்கும்
1.தன்னை அறிதலும்… விண்ணை அறிதலும்… மண்ணுலகை அறிதலும்… என்ற நிலையில்
2.மெய் ஞானத்தின் உணர்வுகளை வளர்க்கும் சந்தர்ப்பம் வருகிறது.

அதனை அறியும் ஆற்றலும் வளர்க்கும் சந்தர்ப்பமும் நமக்குக் கிடைத்திருக்கிறது என்றால் அது நம்முடைய “பூர்வ புண்ணியம்” என்றே சொல்ல வேண்டும்.

“கிடைத்த இந்தப் பாக்கியத்தை நழுவ விடாது” குருநாதர் காட்டிய மெய் வழியை நாம் கடைப்பிடித்தல் வேண்டும். அவருடன் அரவணைப்பாக அந்த மகரிஷிகள் வாழும் எல்லையை அடைதல் வேண்டும்.

கமண்டலத்துடன் இருக்கும் அகஸ்தியனைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எண்ண ஓட்ட கதியையும் நீரோட்டச் சக்தியின் செயலையும் ஒன்றுபடுத்தி அதன் உட்பொருளை வெளிக்காட்டி எண்ணத்தினுள் சிந்திக்கும் கருப்பொருள் தத்துவத்தினால் எண்ணத்தின் வழிச் செயல் நீர் சக்தி பெறும் ஆரம்ப முறை ஞான வழி அமைத்தவர் தான் “அகஸ்திய மாமகரிஷி…!”

1.வானத்தில் கன பரிமாணம் கொண்ட நீர் சக்தி… இடி மின்னல் ஒரு புறமும்
2.மறுபுறம் ஆகாயத்தில் சரி பாதி இருக்கும் கோள்களையும் விண்மீன்களையும் காட்டி
3.எண்ண ஓட்ட கதியின் தத்துவத்தை எண்ணி எடுக்க வைத்த அந்த அகஸ்திய மாமகரிஷி தான்
4.நீர் சக்தியை (ஜீவன்) வென்றதாகவும்… பின் அதனுள்ளே தான் ஒன்றியதாகவும் கூறப்பட்டுள்ளது.

அகஸ்தியன் ஜீவ சக்தியைப் பெற்றது மிக மிக முக்கியமானது…!

அதாவது சரீரமாகிய திடமும் அந்தத் திடத்திற்குள் உள்ள நீர்ச் சக்தியும் நீரினுள் இருந்த பொழுது நீரோடு நீர் சேர்ந்து ஒருநிலைப்படுத்திட
1.தன் திடச் சரீர நிலை அணுக்கள் அனைத்தையுமே
2.நீரோட்ட நீர் சக்தியின் லேசான தன்மை போல் நீரோட்டச் சக்தியின் கதியையே தன்னுள் அடக்கி
3.நீர் மேல் உலவ… நீர் மேல் அமரும் செயலில்… ஓர் சூட்சமம் கூறப்பட்டது.

எண்ண ஓட்டச் செயல் சக்தியாகும் சூட்சமத்தை… அதனுள் ஏற்படுத்தப்படும் பதிவு… அல்லது ஈர்க்கப்படும் செயல் அனைத்தையும்…
1.ஒருமித்த கருத்தின் விளைச்சல்களாக (மகசூலாக) உருவாக்கிடும் நிலையாக
2.யாம் சொல்லும் தியானத்தின் வழித் தொடர் கொண்டு
3.அந்த எண்ண ஓட்டத்தின் கதியையே நற்கதியாக ஆக்கும்…
4.உயரிய ஞானம் பெறும் முறைகளாக வழியமைத்துக் கொள்ள வேண்டும்.

காற்றின் நீரே இளநீராகி… அதனுள் உள்ள விஷ அமில சக்தியே தேங்காய்க்குள் எண்ணையாக இருக்கும்
1.“மறைந்துள்ள அந்தத் தொடர்பை அறிந்து…”
2.அதையும் பயனுற வழிப்படுத்திக் கொள்ளும் செயலே ஞானம் என்பதாகும்..!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

விஞ்ஞானிகள் மனித உடலுக்குள் இயங்காத பழுதான உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி மாற்று உறுப்புகளைப் பொருத்துகின்றார்கள்… நம்மைக் காக்கின்றார்கள்.

மாற்று உறுப்புகளைப் பொருத்தினாலும் அவைகள் தொடர்ந்து சீராக இயங்க வேண்டுமென்றால் பல உணவுக் கட்டுப்பாடுகளையும்… மற்ற மருந்துகளையும் கொடுப்பார்கள்.

தண்ணீர் இவ்வள்வுதான் குடிக்க வேண்டும்… அதைச் சாப்பிடக் கூடாது,… இதைச் சாப்பிடக் கூடாது… எங்கே சென்றாலும் இந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் நீங்கள் பின்பற்ற வேண்டும்…! என்றும் சொல்வார்கள்.

அந்தக் கட்டுப்பாடுகளை நாம் பின்பற்றவில்லை என்றால் அந்த உறுப்பு கழன்று விடும், இயக்கம் மாறிவிடும். பின் வேதனையைத்தான் அனுபவிக்க வேண்டும்.

எவ்வளவு நாள் இதைப் போன்ற நிலையில் வாழ முடியும்…?

ஆனால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடலில் உள்ள உறுப்புகளுக்குள் செலுத்தி
1.நம் உறுப்புகளிலுள்ள தீமைகளை நீக்க முடியும்
2.அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரொளியைப் பெறும்படி நாம் செய்ய முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து சுவாசித்த அந்த உணர்வலைகளைக் கண்ணின் நினைவு கொண்டு உள் முகமாக உடலுக்குள் செலுத்தி நேரடியாக எந்த உறுப்போ அங்கேயே செலுத்த முடியும்.

அந்த உறுப்பை உருவாகிய அணுக்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று இணைத்தால் உடலை உருவாக்கிய அந்த நல்ல அணுக்கள் அனைத்தும் உற்சாகம் அடைந்து உறுப்பைச் சீராக இயங்கச் செய்யும்.

அந்த ஆற்றலைப் பெறத் துருவ தியானத்தை ஒவ்வொருவரும் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும்.

09.04.2021 உபதேசம்

உடலை விட்டு உயிர் வெளியே செல்வதன் முகாந்திரம் என்ன…?

 

இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் எதாவது ஒன்றை எண்ணி அதைப் பெற வேண்டுமென்று ஆசைப்படுகின்றோம். ஆக… உயிரால் ஈர்க்கப்பட்டு அத்தகைய அணுக்களாக உடலுக்குள் உருவாக்கப்பட்டது தான் தசரதச் சக்கரவர்த்தி என்று உயிருக்குக் காரணப் பெயரைச் சூட்டுகின்றார்கள்.

1.ஒருவரின் செயலைப் பார்த்து அவரின் உணர்வுகளை நுகர்ந்தோம் (சுவாசிக்கின்றோம்) என்றால்
2.அதனின் சக்தியாகத் தன்னுடன் அரவணைத்து இந்த உடல் உறுப்புகளை உருவாக்குகின்றது என்றும்
3.உணர்வுகள் எண்ணங்களாக இயக்கப்படுகின்றது என்றும் இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது.

நாம் நுகர்ந்த உணர்வுகள் எண்ணங்களாக எப்படி இயக்குகின்றது என்ற நிலையை வான்மீகி அன்றே இராமாயணக் காவியங்களில் கொடுத்துள்ளார்.

உதாரணமாக ஒரு கோபப்படுவோரைப் பார்த்து விட்டால் அந்தக் கோபத்தின் உணர்வை உயிர் அந்தச் சக்தியாகத் தனக்குள் அரவணைத்துக் கொள்கின்றது.

நாம் கோபம் என்று அறிகின்றோம். இருந்தாலும் நமக்குள் அந்தச் சக்தியாக அரவணைத்துக் கொள்கின்றது.
1.அதனால் விளைந்த கோபத்தை உருவாக்கும் அந்த அணுவின் தன்மை
2.அது தன் இனத்தைப் பெருக்கிக் கொண்டே இருக்கும்.

அப்பொழுது அந்தச் சக்தி தன் நிலைகளில் எப்படியும் (அடிக்கடி) கோப உணர்வுகளை வெளிப்படுத்திக் கோபத்துடன் பேசும் நிலையாக அதே வழியிலேயே தான் நாம் இருக்க நேரும்.

தனக்குள் வளர்ந்த அத்தகைய அணுக்கள் அந்தச் சமயத்தில் அது இயல்பாகத் அதனின் வளர்ச்சியையே நமக்குள் கூட்டும்.

இதை உணர்த்துவதற்குத் தான் இராமாயணக் காவியங்களில் நாம் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு சக்தியும் அது அது தன் இனத்தைப் பெருக்கும் என்ற நிலையாகத் தசரதச் சக்கரவர்த்தி தினமும் ஒரு மனைவியைக் கல்யாணம் செய்து கொண்டே இருந்தார் என்று காட்டுகின்றார்கள்.

நல்ல ஒழுக்கமும் குணசீலமும் கொண்டு நாம் இருந்தாலும்
1.நமக்குள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எடுத்துக் கொண்ட
2.அந்தந்த குணத்தால் பதிந்த நிலைகள் வரப்படும் பொழுது
3.அதன் இனப்பெருக்கங்கள் என்று வரும் பொழுது
4.அடுத்து அடுத்து நாம் நல்லதை எண்ணினாலும்…
5.உடலுக்குள் அந்த நல்ல குணத்தை கொண்டு ஆட்சி புரிய வேண்டும் என்று எண்ணினாலும் நம்மால் முடிவதில்லை

அப்பொழுது நல்லதைச் செயல்படுத்த முடியவில்லையே…! என்ற எண்ணமும் அதே சமயத்தில் தனக்குள் நுகர்ந்து கொண்ட சக்தியின் வலிமையால் நாம் அடிமைப்பட்டு “இந்த உயிரின் இயக்கம் அதன் கீழ் செல்கிறது…!”

நல்ல குணங்களை இந்த உடலில் இருந்து ஆட்சி புரிய முடியாத நிலை ஏற்பட்டு விட்டதே…! என்ற
1.அந்த வேதனை உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது இந்த நஞ்சு உடல் முழுவதும் பரவுகின்றது
2.இந்த நஞ்சின் தன்மை பெருகி… உடலில் உள்ள அணுக்கள் நஞ்சாக உருவான பின்
3.இதில் குடியிருக்க விரும்பாது இந்த உடலை விட்டு உயிரான்மா (உயிர்) பிரிந்து சென்று விடுகின்றது.

இப்படிச் செல்லும் உயிர் அடுத்து வேதனைப்படும் உயிரினங்களுக்குள் தான் நம்மை அழைத்துச் செல்லும்.

ஆகவே வேதனையிலிருந்து விடுபடும் ஆற்றலையும் தீமைகளிலிருந்து விடுபடும் ஆற்றலையும் பெற வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் அவ்வப்பொழுது எடுத்துத் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

அந்தச் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும். இதை வலுப்படுத்தினால் யாருடைய ஈர்ப்புக்குள்ளும் நாம் சிக்குவதில்லை… ஏகாந்த நிலை பெறுகின்றோம்..

உலக வாழ்க்கையின் ஓட்டத்தில் சிக்கிக் கொண்டால் ஞானத்தின் மகசூலைப் பெற முடியாது – ஈஸ்வரபட்டர்

 

உதாரணமாக கரும்பு பயிரிடும் ஒரு விவசாயி தான் பெறும் மகசூலை எத்தன்மை கொண்டு பாதுகாப்பாகப் பெறுவது…? என்பதிலும் நம் உயிரான்ம சக்தியின் வளர்ச்சிக்குச் “சூத்திரம்…” உள்ளது.

பூமியைப் பண்படுத்திச் செப்பனிட்டு உரமிட்டுக் காலமறிந்து கரும்பின் வித்தைப் பயிரிடும் செயலில் கரும்பு வளரத் தேவையான நீரைப் பாய்ச்சிப் பாதுகாப்பாக அந்த வித்தை வளர்த்திடும் தொடர் வேண்டும்.

தேவையான நீரை விட்டுக் கரும்பு வளர்ந்து வரும் காலகட்டத்தில் “சோகைகள்…” அகற்றப்பட்டுத் தூய்மைப்படுத்தப்படாவிட்டால்
1.சிறு உயிரினங்கள் அதனுள் வாசம் செய்து கரும்பின் சுவையைக் கெடுத்துவிடும்.
2.அதனால் நல்ல பலன் பெற முடியாது.

நீர் பாய்ச்சும் செயலிலும் இயற்கையாக அதி தீவிர மழை நீர் பெய்து விட்டால் அவை நிலத்தில் தங்கினால் கரும்பில் நீர் சக்தி கூடி விடும். சுவை குறைவுபடும். ஆகவே தேங்கிய நீரை உடனே அகற்ற வேண்டும்.

பக்குவ காலத்தில் கரும்பை அறுவடை செய்யாமல் நாட்கள் என்ற கணக்கின் தொடர் நீண்டு விட்டால் அந்தக் கரும்பின் சுவை சத்து ஈர்க்கப்பட்டு
1.கரும்பின் பூ என்ற தொடர் வளர்ச்சி ஆக்கும் செயலில்
2.வேண்டோடுதல் என்ற சொல் நாம குணத்திற்கொப்ப
3.அந்தக் கரும்பின் சுவை குணம் நீங்கிப் பலனில் மாற்றம் ஏற்படும்.

அதைப் போன்று தான்
1.மனம் என்ற வயலைப் பக்குவப்படுத்தும் ஞானி…
2.களைகளைக் களைந்து…
3.தன் செயலில் ஒழுக்கம் என்ற பாத்தியிட்டு…
4.நற்பண்பு என்ற ஜெப நீரைப் பாய்ச்சி…
5.ஞான வித்தாம் கரும்பினைப் பயிர் செய்திடும் பக்குவம்…
6.ஞானப் பயிர் காக்கப்பட வேண்டும் என்ற செயலுக்கு ஞான வித்தை ஈர்த்திடும் செயலே…
7.விவசாயி கரும்பின் பயிரைக் கண்ணும் கருத்துமாகப் பேணுகின்ற வழி முறை போல் இருந்திடல் வேண்டும்.

ஞானப் பயிர் வளர்த்திடும் மனதில் தேவையற்ற களைகள் அகற்றப்பட்டு நல்லொழுக்க நீர் என்ற ஜெபம் என்ற சக்தித் தொடரினால் “நேர் செய்யப்பட வேண்டும்…!”

அப்படிச் செயல்படுத்தினால் பயிர் தனக்குத் தேவையான ஆகாரத்தைப் பூமியிலிருந்து பெற்றுச் சமைத்து வளர்வதைப் போல் நாம் தியானத்தின் மூலம் ஈர்த்திடும் எண்ண ஜெப நீரால் ஞானப் பயிர் நல்லொழுக்க முறைச் செயலுக்கு வளர்ச்சி பெற்றிடும்.

உலக வாழ்க்கை முறை எதிர் மோதல் என்ற… கடும் மழைக் காலம் மிகுந்து விட்டாலும் விவசாயி பயிர் செய்யும் பூமியில் மழை நீர் தேங்கி அந்தப் பயிர் அழுகிப் போகாமல் நீரை நீக்கிட முற்பட்டும் ஓர் வழி அமைத்து வெளியேற்றுவது போல்
1.உலக இயல்பு என்ற மழை நீர் தேங்கி
2.ஞானப் பயிர் வளர்ப்பின் முறையில் மாறுபாடு ஆகாதபடி
3.நாம் சுட்டிக் காட்டும் தியான வழித் தொடரில் அந்தத் தீமைகள் அனைத்தும் நீக்கப் பெற்று
4.நல்லாக்கம் பெறும் முயற்சியாக விவசாயி தன் பயிரைக் காத்திடும் செயல் போல் அமைத்திடல் வேண்டும்.

சரீரத்தில் வந்து மோதும் எதிர் அலை மோதல் ஈர்ப்பின் செயல் உடலிலிருந்து கழிவுகள் நீக்கப்படா விட்டால் எதிர் மோதல் குணத் அமிலத் தன்மைகள் சரீரத்தில் தங்கிப் பிணியாக உடலில் மாறிவிடும்.

ஆக உயரிய ஞான வளர்ப்பின் பயனைப் பெறுவதிலும் தடங்கல் ஏற்படாத செயலுக்கு எதிர் மோதல் குணங்ள் எல்லாம் நீக்கப்பட வேண்டும்.

கரும்பின் கழிவு என்ற சோகைகள் அடர்ந்து வளர்ந்து விட்டால் அதனுள் வாசம் செய்யும் சிறு உயிரினங்கள் தன்மை போல்
1.வாழ்க்கையில் வரும் எதிர் நிலையான குணங்கள் செயல்பட்டு
2.அந்தச் சிறு உயிரினங்களால் கேடுகள் உண்டாகிக் கரும்பின் பயிர் இனிய குணச் சுவையை நீங்கிப் புளிப்பின் சுவையைப் பெறுவது போல்
3.ஞான வளர்ச்சியின் செயலில் ஆகாதபடி “அதி தீவிர எண்ண வலு என்ற பாதுகாப்பு அவசியம்…!”

ஒவ்வொருவரும் விவசாயி போல் ஞானப் பயிரைப் பாதுகாத்துக் கொள்வதன் அவசியத்தை உணர்தல் வேண்டும்.

அறுவடை செய்த கரும்பினைப் பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கரும்பின் சுவை குணத்தில் உண்டாக்கப்படும் பல்பொருள்கள் என்ற செயலுக்கு முன்பே கடும் மழையால் அறுவடை செய்யப்பட்ட பயிர் நீரினுள் மூழ்கிவிட்டால்… பயிர் காக்கப்படா விட்டால் பலனை எப்படிப் பெற முடியும்…?

விவசாயியினால் காக்க முடியாமல் போன பலனை… பாதுகாப்பற்ற செயலின் தன்மை கொண்டு கேட்பாரற்று நீரில் மூழ்கிவிட்ட பயிரினை… ஒரு வியாபாரி பொருளுக்காக விற்பதின் செயலினால் விவசாயி என்ன செய்ய முடியும்…?

ஏனென்றால் அந்தக் கரும்பின் புளிப்பின் சுவையை ஒவ்வொருவரும் சுவைத்திடும் பொழுது தான் பயிர் செய்த நிலத்தின் பலனை
1.சோர்வு என்ற சலிப்பு என்ற சங்கட அலை உந்தும் செயலினால்
2.தன் முயற்சியில் பாதுகாப்பற்ற செயலினால்
3.தன் பயிரைத் தானே விலை கொடுத்து வாங்கிடும் செயல் நிகழ்வுகளின் வேடிக்கைகளை என்னவென்பேன்…?

அதாவது ஞானப் பயிர் யாருக்கு உரியதோ அவரின் முயற்சி இன்மையினால்… உலக வாழ்க்கையில் சிக்கிக் கொண்டால் ஞானத்தின் மகசூலைப் பெற முடியாது.

எண்ணம் சொல் செயல் இந்த மூன்றின் செயல் குண நிகழ்வுகளின் மாற்றம்… எண்ணம் கொண்டு செயல்படுவதால் மனம் என்று கூறுவதெல்லாம் மன எண்ணச் செயல் நிகழ்வால் “மனமே பகை…!”

பகை என்ற தனித்துவம் ஞானத்தில் இல்லை என்ற செயல் உண்மை வாய்ந்தது. எதிர் மோதல் பகை என்ற குணங்கள் தாக்கினாலும் ஞானியின் ஈர்ப்பின் செயலில் உண்மையின் உயரிய உயர் ஞான எண்ண வலு பெற்றிருப்போன் அந்தப் பகை குண அமிலத் தன்மைகள் தன் ஞானத்தில் மோதினாலும் அனைத்தையும் அது துகள்களாக்கிவிடும்.

ஞானச் செல்வங்கள் பெற்றிடும் உயர் ஞான வளர்ப்பின் செயலுக்கு
1.எந்த வித எதிர் மோதல் குணங்களும் தாக்கிடாத வண்ணம்
2.பக்குவப்படுத்தப்பட்டுச் செயல்படும் நிகழ்வுகள் அனைத்தும்
3.மகரிஷிகளின் அருள் ஒளி என்ற எண்ண வலுத் தொடரில் நிலை பெற்று நின்று வளர்ப்பின் வளர்ப்பாக்கி
4.பேரண்டக் கோளத்தையே உருவாக்கிடும் செயல் சக்திக்கு… சக்தியின் முயற்சிக்கு… “என்றும் எனது ஆசிகள்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

சில பேர் சொல்வார்கள். எனக்காக வேண்டி நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்… எனக்கு நன்றாக வேண்டும் என்று நீங்கள் செய்யுங்கள்…! என்று அடுத்தவர்களிடம் சொல்வார்கள்.

நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று பிரார்த்தனையோ தியானமோ நான் செய்தால் உங்கள் தீமைகளோ வேதனைகளோ எனக்குள் வராது.

ஆனால் அந்தச் சக்தியைப் பெறவேண்டும் என்று
1.நீங்கள் எண்ணினால்தான்,
2.நீங்கள் மகரிஷிகளின் அருளை நுகர்ந்தால்தான்… கவர்ந்தால்தான்
3.உங்கள் உயிர் உங்களுக்குள் அந்த ஆற்றலைப் பெறச் செய்யும்.

நீங்கள் நுகர்ந்த உணர்வை “உயிர்” உங்கள் உடலுக்குள் அணுவாக உருவாக்கும் கருவாக்கிப் பின் அணுவாக்கி அது தன் இனத்தைப் பெருக்கும் நிலையில் அந்த ஆற்றல் உங்களுக்குள் பெருகும்.

ஏனென்றால் உங்கள் பசிக்கு நீங்கள்தான் சாப்பிட வேண்டுமே தவிர உங்களை எண்ணி நான் உண்வை உட்கொண்டால் எனக்குத்தான் சத்து சேரும். நீங்கள் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆகவே நான் எண்ணியது போன்று…
1.மகரிஷிகளின் அருள் சக்தி மற்றவர்கள் பெற வேண்டும் என்று நீங்களும் எண்ணினால்
2.பிறரின் தீமைகளோ துயரங்களோ உங்களுக்குள் வராது.

08.04.2021 உபதேசம்

விண்ணின் ஆற்றலைப் பெற வேண்டும் என்றால் அது எது…? என்று அறிந்து கொள்ளுங்கள்

 

உதாரணமாக எனக்கு இப்படிச் செய்தான்… செய்தான்…! என்று நமக்கு இடைஞ்சல் செய்தவன் மீது சிந்தனை வரும் பொழுது அந்த உணர்வுகள் கோபமோ வேதனையோ ஆத்திரமோ உடலுக்குள் வந்துவிடுகின்றது. அந்த இடத்தை நாம் வலுவாக்கிக் கொள்கின்றோம். தீய வினைகளாக அது வளர்கிறது.

ஆனால் நம் உடலில் வந்த அந்தத் தீமைகளை நீக்க…
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.நம் சிந்தனையை அதற்குள் செலுத்தினோம் என்றால்
3.அதனின் உணர்வுகள் வளர்ச்சியாகி இந்த மனித உடலையே ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.
4.இந்த உடலிலிருந்து தான் நாம் ஒளியாக மாற்ற முடியும்.

ஆனால் மாற்றத் தவறினால் அந்த உடலில் விளைந்த தீமையான உணர்வின் தன்மை இங்கே இழுத்து விட்டால் மனித ரூபத்தை மாற்றிவிடும்… மனிதனல்லாத உருவாகத் தான் பெற நேரும்.

ஆனால் அந்த அருள் மகரிஷிகளின் அருளை நமக்குள் பெறும் பொழுது ஒளியாக மாற்ற முடியும்.
1.மனித உணர்வைச் சுவாசித்தால் உருவம் மாறும் இங்கே…!
2.அருள் உணர்வைச் சுவாசித்தால் ஒளியின் தன்மையாக மாறும் அங்கே…!

நம் உயிர் ஒளியானது. மனிதனான பின் அறிவால் அறிந்து கொள்கின்றோம். இருந்தாலும் ஒளியின் உணர்வாக விளைந்திடும் அத்தகைய மகரிஷியின் அருள் சக்தியைப் பெற நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக நான் கோபமாக இருக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். மற்றவரும் என் கோபத்திற்குச் சாதகமாக இருந்தால் எனக்கு நல்லது.

அதே சமயத்தில் தவறு செய்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். அருகில் இருக்கும் என் நண்பனும் அந்தத் தவறுக்காக என்னுடன் ஒத்துழைத்தால் எனக்கு நல்லது.

1.அதுவே தவறு என்று என்னைச் சுட்டிக்காட்ட வந்தால் எனக்கு எதிரி ஆகின்றது…!
2..ஆகவே நல்லது என்பதை நல்லதாக எண்ண முடியாது
3.கேட்டது என்பதைக் கெட்டதாகவும் எண்ண முடியாது
4.நமக்கு ஒத்து வந்தால் நல்லது என்று எண்ணுகின்றோம்
5.நமக்கு ஒத்து வரவில்லை என்றால் கெட்டது என்று எண்ணுகிறோம்.

மிளகாய் காரமாகத்தான் இருக்கின்றது. அந்தக் காரத்தை அளவுடன் குழம்பிலோ மற்ற பொருள்களிலோ இணைத்தால் அது நல்லதாகின்றது.
1.காரத்தை அதிகமாகப் போட்டால் கெட்டதாகிறது
2.காரத்தைக் குறைத்தால் “சப்” என்றாகி விடுகிறது.

ஆகவே நல்லது நல்லதும் அல்ல… கெட்டது கெட்டதும் அல்ல…!

இதைப் போன்ற உணமைகளை உணர்ந்து கொண்ட பின் நமக்குள் எந்த உணர்வின் தன்மையை எடுக்க வேண்டும்…?

நம்மை அழியா ஒளியின் சரீரம் பெறச் செய்யும் அந்த நிலையான உணர்வுகளை எடுத்தால் அதுவே நமக்கு நல்லது.

நம் உயிரின் தன்மை ஒளியாக நின்று எதை எல்லாம் தனக்குள் அறிவிக்கின்றதோ அந்த உயிருடன் ஒன்றிய ஒளியாக மாற்றுவது தான் நமக்கு நல்லது.

விண்ணின் ஆற்றல் என்று சொல்கிறோம். பொதுவாக விண்ணின் ஆற்றலும் மகரிஷிகள் ஆற்றலும் வேறு.

1.விண்ணின் ஆற்றல் என்பது மற்ற கோள்களின் மண்டலங்களின் சக்தி பெற்றது
2.அந்த விண்ணின் ஆற்றலால் தான் மனித உடல் வருகின்றது

அதாவது நட்சத்திரங்களை வைத்துத் தான் ஒரு பிரபஞ்சத்தில் கோள்கள் சூரியன் எல்லாமே வளர்ச்சிக்கு வருகின்றது. அந்த விண்ணின் ஆற்றலைப் பெற்றுத் தான் மனிதனாக வளர்ந்து வந்திருக்கின்றோம்.

ஆனால் விண்ணின் ஆற்றலால் மனிதனான பின் சிருஷ்டித்துக் கொண்டதுதான் மகரிஷிகள். மனித உடல் பெற்ற பின் சிருஷ்டிக்கும் சக்தி பெற்ற அந்த மகரிஷிகளின் ஆற்றலால் தான் மனிதன் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக உருவாக்க முடியும்.

விண்ணில் இருக்கக்கூடிய மகரிஷிகள் அவர்கள் உணர்வின் தன்மை கொண்டு நாம் எதை உணர்த்தினோமோ “விண்…” என்று வரப்படும்போது சொல் விண்… என்று வரும்.

இங்கே மண்ணுலகிலிருந்து சென்று இன்றும் விண்ணிலே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மகரிஷிகள். ஆகவே அந்த விண்ணுலகத்திற்குத் தான் நாம் செல்ல வேண்டும்.

1.சூரியப் பிரபஞ்சத்திற்குள் இருக்கும் இந்தப் பூமி இதுவும் ஒரு விண்ணுலகம் தான்
2.ஆனால் மண்ணுலகைக் கடந்து விண்ணுலகம் சென்ற அந்த மகரிஷிகள் அருள் வட்டத்தில் நாம் இணைய வேண்டும்.

அது தான் யாம் (ஞானகுரு) சொல்லும் விண்ணுலகம்…!

சித்தன் போக்கு சிவன் போக்கு… ! – ஈஸ்வரபட்டர்

 

பூமியின் ஈர்ப்பில் பரவிப் படர்ந்து தன் செயலுக்கு வரும் உயிரணுக்கள் ஒன்றிலிருந்து ஒன்றாகப் பரிணாம வளர்ச்சியாக வளர்ச்சியின் முதிர்வில் பல நிலைகள் பெற்றுத்தான் இயற்கையின் கதியில் செயல்படுகின்றன.

படைப்பின் வித்தானது தன் இன வளர்ப்பிற்குத் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும் காத்தல் தொழிலுக்கு மண்ணின் தொடர்பில் நீரை உண்டு.. ஒளியை உண்டு.. காற்றையும் உண்டு… ஓர்மித்த ஈர்ப்பின் செயல் நிகழ்வுகளுக்குத் தன்னையே வளர்ச்சிப்படுத்திக் கொள்கிறது.

ஆகாரத்தை உண்டு வாழும் இந்த ஜீவ பிம்பச் சரீரத்திற்கும் அதே போன்ற செயல் உண்டு.

சிவன் உருவத்தில் முத்தலை சூலம் என்று காட்டப்பட்டதில் முத்தொடராகப் பல பொருள்கள் உண்டு.
1.கண்டத்தில் விஷம் – கழுத்தைச் சுற்றிப் பாம்பு என்பது
2.உயிரணுக்கள் உதித்திடும் செயல் அமில குணங்களாக விஷத்தின் எதிர் மோதல் தன்மைகளாக
3.பரவெளியில் உயிரணுக்களாக அசைந்திடும் தன்மைகளை உணர்த்தவே ஜீவனுள்ள பாம்பு.

அத்தகைய இருவினைச் செயல்கள் இயற்கையில் என்றுமே உண்டு. ஏனென்றால்
1.அமைதியாகத் தவழ்ந்திடும் காற்றே புயலாகவும் எழுகின்றது.
2.அமைதி காட்டும் நீரே கொந்தளிப்பாகவும் காணப்படுகின்றது.
3.நின்று எரியும் நெருப்பே உரத்து எழுந்து தாண்டவமாடுகின்றது.

இது எல்லாம் இயற்கையின் கதியில் செயலில் இரு தன்மைகள் என்று கூறப்பட்டாலும் “இரண்டும் ஒன்று தான்…!”

அவைகள் செயலுறும் காலத்தில் நிகழும் தன்மைகள் கொண்டே உணர்வாக அறிந்து கொள்ளும் பக்குவத்தில் “ஜோதி நிலையைக் காட்டவே..” சிவன் கையில் அக்கினி வைத்துக் காட்டப்பட்டுள்ளது.

ஒலியின் வேகத்தில் ஒளி பிறக்கின்றது. நாதமே ஒளியாகின்றது. நாதத்தில் கலக்கும் உஷ்ணமே காக்கும் செயலாகப் புரிகின்றது.

மான் மழு… புலித் தோல் ஆடை.. அபயஹஸ்தம்… குஞ்சிதபாதம் சுட்டும் நற்சுவாச நிலைகள்… பாதத்தின் அடியில் முயலகன்…! என்றிட்ட இவ்வகை விளக்கங்கள் எல்லாம் “ஜீவ பிம்பம் பெற்ற மனித ஆத்மாக்கள் பெற வேண்டிய.. கடைப்பிடிக்கக வேண்டிய வழிகளாக.. உண்மையை உணர்த்தும் தத்துவங்களே ஆகும்…!

“சிவ நடனம்…” காண வேண்டும் என்பதே…
1.ஆத்மார்த்தமாக…! இயற்கையுடன் ஒன்றிய உயர் ஞான வளர்ப்பில் இயற்கையுடன் கலந்தே
2.அதன் உள்ளிட்ட சக்தியாகச் சக்தி பெற்றிடவே போதனைகளை அளித்திடுகிறோம் இங்கே…!

அந்தச் சக்தியை யாரும் பெற்றுத் தருவதில்லை.

“சித்தன் போக்கு சிவன் போக்கு…!” என்பது இயற்கையுடன் ஒன்றி வாழும் வாழ்க்கையில் சிவ தத்துவமாகத் தன்னையே… “தன் உயிராத்மாவையே…” வழி நடத்தும் செயலுக்குத் தன்னை உணர்ந்து கொண்டது தான்.

ஒளியின் அமைதி பெற எனது (ஈஸ்வரபட்டர்) ஆசிகள்.

ஸ்வரூபம் சிவமாகவும் சக்தியின் ஸ்வரூபம் கலையாகவும் கண்டுணர்ந்த தன்மைகளில்… பூமியின் சுழற்சியும்.. பொருள் மறைவாக காந்த ஈர்ப்பின் செயலையும்… தன்னகத்தே தெளிந்து… சிவனாரின் உருக்கோலம் காட்டப்பட்டதில் ஜடாமகுட சிரசே… ஆகாய வெளியாகும்…!

ஆகாய கங்கை என்றால் என்ன…?

நீரமில சக்தி ஒன்றுடன் ஒன்று கனபரிமாணம் கொண்டு வானிலிருந்து பெய்திடும் நீராக வரும் நிலையில் “ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே…!” என்று இடி மின்னல் என்று சூட்சமமாக விளக்கப்பட்டுள்ளது.

(ஆனால் பூமியைச் சுற்றி ஓடும்… பூமியிலிருந்து குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் அமைந்திருக்கும் ஒரு புலத்தையே இன்றைய விஞ்ஞான உலகம் ஆகாய கங்கை என்று அழைக்கின்றது)

சிவன் நெற்றியில் பிறைச் சந்திரனைக் காட்டியது என்ன..?

பூமியின் சுழற்சியுடன் ஒட்டியே வலம் வந்து அண்ட இருளில் மறைந்தும் (அமாவாசை) பின் வெளிப்பட்டுச் சூரியனின் ஒளி காந்த சக்தியை ஈர்த்துத் தன் சமைப்பால் வெளிவிடும் “தண் ஒளிக் கிரகணங்கள்…” காட்டுகின்றது.

அது பூமியுடன் இணைவாகச் சுழன்று பார்வைக்கோண வளர் பிறையாகி… பின் பௌர்ணமியாகக் காணும் நிலையையே சிவனுக்குப் பிறைச் சந்திரனாகக் காட்டியது.

பரவெளியின் சக்தியை ஈர்த்துப் பூமி தன் சமைப்பாக வெளிவிடும் மூச்சலைகளில்
1.அதே நிகழ்வின் தொடர்வில் மீண்டும் மீண்டும் ஈர்த்திடும் செயலில்
2.காற்றின் சக்தியாகப் பரவெளி மோதலின் உராய்வும்
3.அதனுள் பிறந்திட்ட ஒலி நாதங்களையே சிவனாரின் கையில் “உடுக்கை” என்று காட்டியது.

பூமியின் துருவங்களில் ஈர்த்துப் படர்ந்திடும் பனித் துளிகள் (பனிப்பாறைகள்) அனைத்தையும் சதாசிவமாகக் காட்டி அறிவின் ஆற்றல் என்று சூட்சமமாக
1.மனித சரீரத்தின் நெற்றிப் பகுதியையே
2.சதாசிவன் மண்டலம் என்று தத்துவம் கூறப்பட்டது.

விழிப் பார்வையில் செயல்படும் நெற்றிப் பொட்டின் உள் நின்ற ஞான விழிப்பார்வை என்ற முத்தொடரையே முன் பாடங்களில் “புவியின் காந்த ஈர்ப்புக் கிணறுகள்..” என்று மறைபொருள் காட்டியுள்ளோமப்பா…!

முக்கண் என்று காட்டுவது
1.சிவனாரின் வடிவத்தில் பூமியை உணர்த்திடவும்
2.நாம் பெற்றிடும் உயர் சக்தியின் மெய் ஞான வளர்ப்பிற்கும்
3.அதே முக்கண் தெளிவா(க்)கும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இன்று விஞ்ஞான உலகில் சிறு குழந்தைக்குக் கூட விஞ்ஞான அறிவு ஊட்டப்படுகின்றது. ஆனால், இந்த விஞ்ஞானக் காலத்தில் இருந்து கொண்டு இன்னமும் சாமியாரைப் போய் பார்த்தால் நமக்கு எல்லாம் நடக்கும் என்றும்… சாமிக்குச் அபிஷேகம் செய்து அழுதால் வரும் என்ற நம்பிக்கையிலும் நாம் இன்னும் அழுது தொங்கிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்…?

சாமியையும் சாமியாரையும் பார்த்து விட்டால் கஷ்டத்திலிருந்து விடுபடலாம் என்ற இந்த எண்ணத்தில் தான் இருக்கின்றார்கள்.

என்னிடம் (ஞானகுரு) வருபவர்களைப் பாருங்கள்.

என் வீட்டில் ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லி அழுகின்றார்கள். கஷ்டமெல்லாம் நீங்க வேண்டும் என்று நல்ல வாக்குக் கொடுங்கள் கேட்பதற்கு ஆள் இல்லை.

ஒருவர் திட்டுவதைக் கேட்டுப் பதிவு செய்கின்றீர்கள். அவரை எண்ணும் போதெல்லாம் உங்கள் உணர்வு பலவீனம் அடைகின்றது.

இங்கே வந்தவுடனே எங்கள் வீட்டில் இருக்கின்ற கஷ்டமெல்லாம் நீங்க வேண்டும். குழந்தைக்கு நல்ல ஞானம் வர வேண்டும். என் வீட்டுக்காரர் என்னோடு ஒன்றி வாழ வேண்டும். எங்கள் குடும்பத்திற்கு அந்த அருள் சக்தி வேண்டும் என்று கேளுங்கள் என்று ஆயிரம் தடவை சொல்கிறேன்.

நான் இதைச் சொல்லிவிட்டு ஒரு அரை மணி நேரம் கழித்து திரும்பவும் என்ன சொல்கிறார்கள். எங்கள் வீட்டில் இன்னும் ஒற்றுமையே இல்லை என்று சொல்கிறார்கள்.

விதையைப் போட்டவுடன் செடி வந்துவிடுமா…? அதற்கு வேண்டிய பக்குவங்களை இப்படிச் செய்து கொள்ளுங்கள் என்று யாம் சொன்னால் அவர்களை நம்புவதில்லை.

சாமி அதைச் செய்து தருவார். நாம் சாமிக்கு அபிஷேகம் செய்தால் திருப்பித் தருவார்கள் அல்லவா. ஆக, இப்படிப்பட்ட எண்ணங்கள் கொண்டு தான் வருகின்றார்கள்.

ஆனால் நாம் எண்ணிய உணர்வைத் தான் நம் உயிர் இயக்குகின்றது. இந்த உணர்வின் தன்மையை நம் உடலாக ஆக்குகின்றது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்தக் காலத்தில் புலஸ்தியர் என்பவர்கள் இதைப் போன்ற நிலைகளை எல்லாம் தெரிந்து கொண்டவர்கள். அந்த மூதாதையர்கள் தெரிந்து கொண்டதால் அவர்கள் புலஸ்தியர்.

எந்தெந்தத் தாவர இனங்களை நுகர்கின்றோமோ நுகர்ந்தபின் அந்த எண்ணங்கள் வருகின்றது. அவ்வாறு எண்ணங்கள் வரப்படும்போது அந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.

அந்த உணர்ச்சிக்கொப்ப அவனுடைய செயல் ஆகின்றது. அந்த உணர்ச்சிகளின் தூண்டுதலுக்கு ஒப்ப உடலின் அமைப்பாகின்றது. இப்பொழுது வேதனை என்று ஆனபின் அந்த உணர்ச்சிகளைத் தூண்டியவுடனே என்ன செய்கின்றது?

“அம்மா… அப்பா…,” என்று உடல் சோர்வடைகின்றது. அப்பொழுது ஏதாவது பலமாகச் செய்ய முடிகின்றதா…? ஆனால் உடல் பலமாக இருக்கின்றது. வேதனை என்ற உணர்வான பின் உங்களுக்குள் எல்லாவற்றையும் இயக்குகின்றது. உங்களால் பலமாக எதாவது வேலை செய்ய முடிகின்றதா…?

என்னால் முடியவில்லை என்று மயக்கம் வருகின்றது. ஆனால், உங்கள் உடல் நல்லாயிருக்கும். ஒரு நிமிடத்தில் நுகர்ந்த நிலைகளால் இந்த நிலை ஏற்படுகின்றது.

உங்கள் பையன் மேல் ரொம்பப் பிரியமாக இருக்கின்றீர்கள் உங்கள் பையன் சேஷ்டை பண்ணி ரகளை பண்ணிவிட்டான் என்று உங்களிடம் சொல்கிறார்கள்.

உங்கள் பையன் இப்படியெல்லாம் தவறுகள் செய்து கொண்டிருக்கின்றான் என்று தெரிந்தவுடன் என்ன ஆகின்றது…? பையனை எண்ணி “இப்படிச் செய்கின்றானே… இப்படிச் செய்கின்றானே…” இப்படி என்று உங்களுக்கு மயக்கம் வருகின்றதா இல்லையா…?

மயக்கப்படச் செய்வது யார்…? நுகர்ந்த அந்த உணர்வுகள் உயிரிலே பட்டவுடன் உணர்ச்சிகள் இயக்கி அந்த நிலை அடையச் செய்கின்றது. இதைத்தான் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று காட்டினார்கள்.

நம் உயிர் ஈசனாக இருந்து இயக்கினாலும் நாம் நுகரும் உணர்வுகள் (நந்தி) நந்தீஸ்வரனாக நம்மை இயக்குகின்றது. இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதே நல்லது.

07.04.2021 உபதேசம்

தியான வழியினைக் கடைப்பிடிப்போர் குருவிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டிய சரியான வழி முறை

 

மந்திரம் செய்வோரையோ தந்திரம் செய்வோரையோ மற்ற மார்க்கங்களையோ எண்ணிக் கொண்டு… அவர் என்ன செய்கின்றார்…? இவர் என்ன செய்கின்றார்…? என்ற நிலைகளுக்கு ஆராய்ச்சிக்குச் செல்ல வேண்டாம்.

1.மகரிஷிகளின் அருள் உணர்வைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கே தேடி வருவோர்
2.அவர்களின் ஏக்கம் எதுவோ அது பதிவாகின்றது…
3.அவர்களுக்குள் அந்த அருள் சக்தி ஓங்கி வளரவும் செய்யும்.

ஆனால் மற்றதைப் பற்றி அறிய வேண்டும் என்று எண்ணினால் அந்த நோக்கம் அதிலே தான் இருக்கும். மற்றவரின் செயலைப் பற்றித் தெரிய வேண்டும் என்று விரும்பினால் அது தான் ஆழமாக அவர்களுக்குள் பதிவாகி இருக்கிறது என்று பொருள்.

அதன் மேல் எண்ணத்தைச் செலுத்தி அந்த விபரத்தைத் தெரிந்து கொண்டால் அது தான் வளரும்.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில்
1.கஷ்டமாக இருக்கிறது… கஷ்டமாக இருக்கிறது…! என்று சொல்லி அதையே கேட்டால் அந்தக் கஷ்டத்தைத் தான் வளர்க்க உதவும்.
2.ஆனால் கஷ்டத்தை நீக்க வேண்டும் என்று கேட்டால் கஷ்டத்தை நீக்கும் உணர்வுகள் உங்களுக்குள் விளையும்.

கேட்டுணர்வோர் உணர்வின் தன்மை எதுவோ அதற்கொப்பத்தான் அந்த உணர்வுகள் வளர்ச்சி அடையும்.

1.கஷ்டம் என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது என்று சொல்லிக் கொண்டே இருந்தால் “அது வந்துவிடும்…”
2.இந்த மனித வாழ்க்கையில் வரும் சிக்கல்களிலிருந்து… நான் மீள முடியுமா…? என்றால் “இது சந்தேகம்…”
3.மீள முடியாது…! என்று அந்த வலுவை இழந்து விட்டால் “மீள முடியும்” என்ற உணர்வுகள் உங்களுக்குள் வராது.

ஆகவே மீள வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக்கிக் கொண்டு யாம் கொடுக்கும் இந்த ஞானிகளின் வாக்கின் தன்மையை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்தால் எத்தகைய துன்பத்திலிருந்தும் நீங்களே விடுபட முடியும்.

அதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றோமோ அதுவாகின்றாய் என்று சொல்லப்பட்டது.

ஆனால் பெரும்பகுதியானோர் அவர்கள் தங்களுடைய கஷ்டங்களையும் துன்பங்களையுமே எண்ணி… இது எப்படி வந்தது…? எதனால் வந்தது…? என்று கேள்வி எழுப்பிக் கொண்டே உள்ளார்கள்

அன்றாட வாழ்க்கையில் நம்மை அறியாதபடியே துன்பங்களும் கஷ்டங்களும் எப்படி வருகின்றது…? என்பதை பல முறை உபதேசித்திருக்கின்றேன் (ஞானகுரு).

உபதேசங்களை எல்லாம் கேட்ட பின்னாடியும் மீண்டும் கஷ்டங்களையே எண்ணிக் கொண்டிருந்தால் யாம் சொல்வது அவர்களுக்குள் பதிவாகவில்லை…! என்று தான் பொருள் ஆகின்றது.

ஆனால் மேற் கொண்டு நாம் செல்ல வேண்டிய சரியான மார்க்கங்களை எண்ணி அதைக் கேட்டால் அது பதிவாகும்… நல்லதாகும்.

அதே சமயத்தில் இந்த அருள் உணர்வு எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் எண்ணுதல் வேண்டும். அதனின் உணர்வின் துணை கொண்டு தான் உங்கள் உடலுக்குள் ஞானிகளின் உணர்வு விளையும் பருவமும் வரும்.

ஆகவே எப்பொழுதுமே துன்பமோ துயரமோ நோயோ வேதனையோ எது வந்தாலும்…
1.இதிலிருந்து விடுபடுவது எப்படி…? என்று கேட்டால்
2.அந்த விடுபடும் உணர்வுகள் நிச்சயம் உங்களுக்குள் வளரும்.

சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா…!

எம்மிடம் (ஞானகுரு) கேட்டறிந்து கொள்ள வேண்டிய முறைகள் அது எப்படி…? என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்கிறேன்.

சரீரம் என்ற பாத்திரத்தில் உயிருக்கு வேண்டிய ஆகாரத்தைச் சமைக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

மனிதச் சரீரம் சகலத்தையும் ஈர்த்துச் சமைக்கும் திறன் பெற்றது.

உயர் சக்தியின் ஆகாரமான “ஆதி நீர் சக்தி என்ற குளிர்விப்புச் சக்தியே…” தியான வழித் தொடரில் வெப்ப நீர் சக்தியாக மாற்றப்படும் பொழுது… எண்ணத்தின் வலுவிற்கு எது இலட்சியமோ அதுவே பெறப்படும் ஆகாரமாகின்றது.

அந்த ஆகாரத்தைப் பெறும் மூல சக்தியின் சமைப்பின் முன் போடப்படும் உணவுப் பொருள் என்ற அமில குணங்களும் இந்தச் சரீரமாகிய பாத்திரத்தில் நிறைந்துள்ள ஆதி சக்தியின் நீர் அமிலம்
1.தியானம் என்ற அக்கினியில் குளிர்விப்பு நீர் சக்தி வெப்பச் சக்தியாகச் செயல்படும் செயலுக்கு
2.இந்தச் சரீரப் பாத்திரம் தன்னுள் ஈர்த்துச் செயல் கொள்ள வேண்டியது
3.சகல மகரிஷிகளின் அருள் சக்தியே ஆகும்.

விறகிற்குள் மறைந்திருக்கும் நெருப்பின் உணர்வு கொண்டு நல்லாக்கச் செயலை (புறத்திலே சமைக்கும் சமையல் போல்) உண்டாக்குவது போல்
1.மகரிஷிகளின் அருள் என்ற ஜோதித் தத்துவத்தில் இருந்து
2.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு வளர்க்க வேண்டும்.

அதாவது
1.விறகினுள் உறைந்துள்ள நெருப்பைப் பாத்திரம் ஈர்ப்பது போல்
2.பாத்திரத்தில் உள்ள குளிர்வு நீர் சக்தி அந்த வெப்பத்தை ஈர்ப்பது போல்
3.அந்த நீர்ச் சக்தியிலிருந்து எண்ண குண ஆகாரச் சமைப்பு
4.அந்த அருள் சக்தியின் தொடரை ஈர்த்துக் கொள்கிறது.

ஈர்த்துக் கொண்டாலும்… ஆகாரப் பக்குவம் பெற்றுவிட்ட தன்மையை அறிந்துணர்ந்து தெளிவுபடும் செயலுக்கு
1.மாற்று குண எதிர் மோதல் தன்மைகளை விலக்கிடவும் வேண்டும்.
2.சஞ்சல உணர்வுகளை நமக்குள் மோதவிடலாகாது.

பிறவிக்குக் காரணம் ஆசை தான்…! என்ற தொடரை புத்தன் வெளிப்படுத்தினாலும் வெளிப்படுத்தாச் சூட்சமம் புத்தன் அறிந்த அனுபவ ஞான ஆத்ம இரகசியம் “பேரின்பப் பிரம்ம ஐக்கிய லயம்…!” என்பது.

தியான வழித் தொடரில் நிலை நின்று தன் உயிராத்ம சக்தியை வலுக் கொண்ட தொடருக்குச் சகலத்தையும் ஈர்த்திடும் சித்தத்துவ ஆனந்த ஈஸ்வர அனுபூதியைத்தான் புத்தர் பெற்றார்.

ஒவ்வொருவரும் அந்த ஈஸ்வர அனுபூதியைப் பெற வேண்டுகின்றேன்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

சாதாரணமாக சர்க்கஸில் (GYMNASTICS) விளையாடுகிறார்கள் என்றால் சரியாக அந்த அளவுகோல் பிடித்து… பத்து பன்னிரண்டு என்று சுழலச் செய்கிறார்கள். தூக்கிப் போடுவார்கள். அவர்கள் சுவாசித்த அந்த உணர்வின் வேகத் துடிப்பிற்கொப்ப அதைச் செய்கின்றார்கள்.

நாமும் மனிதர்கள் தான்… அவர்களும் மனிதர்கள் தான். பல பல உணர்வுகளையும் அவர்கள் இயக்குகிறார்கள். பல அற்புதங்களைச் செய்கிறார்கள்.

அவர்களின் உடல் வலுவான நிலைகளில் இருந்தாலும்
1.சிறுகச் சிறுக இந்த உணர்வின் எண்ணங்களைப் பாய்ச்சி
2.இதைச் செய்ய வேண்டும்…! என்ற மன உறுதி கொண்டு
3.வில்லைப் போல உடலை வளைக்கிறார்கள்.

ஆனால் ஒரேயடியாக வளைத்தால் ஒடிந்து போகும். “வளைய வேண்டும்…” என்ற அந்த உணர்வின் தன்மை சேர்த்து அந்த உணர்வின் அலைகளை அவர்களின் வலுக் கொண்டு செலுத்தப்படும் போது
1.எலும்பில் உள்ள நிலைகளும்
2.இவர்கள் எண்ணிக் கொண்ட உணர்வுகளும்
3.அதற்குத் தக்கவாறு ரப்பர் மாதிரி ஆகி விடுகிறது.

ஏனென்றால் நுகரும் உணர்வுகள் அந்த எழும்பிலுள்ள அணுக்களுக்கு “நாம் வளைய வேண்டும்…!” என்ற உணர்வு சேர்க்கப்படும் போது
1.அந்த அணுக்கள் புது மலத்தை உண்டாக்கும்.
2.அந்த வலுவான உணர்வுகள் சேர்க்கப்படும் போது வளையும் தன்மை வருகிறது.

இடுப்பு வலிமையாக இருக்கிறது. தாய் கர்ப்பமாக இருக்கும் போது வாயுவின் உணர்வின் உணர்ச்சிகள் மோதப்படும் போது அந்த எலும்பு பாகம் விரிந்து கொடுத்த பின்னாடிதான் குழந்தை வெளியே வருகிறது.

ஒரு இரும்புக் கம்பியையோ கண்ணாடி வளையலையோ வளைக்க வேண்டுமென்றால் நெருப்பு ஜுவாலையில் காட்டினால் வளைகிறது.

இதே மாதிரித் தான் எலும்பு பாகங்கள் விரிவடைந்து குழந்தை பெரிய குழந்தையாக இருந்தாலும் வெளிப்படுத்தும் உணர்வுகளுக்கு அது இடம் கொடுக்கிறது.
1.குழந்தை வெளி வந்த மறு கணம் அந்த எலும்புகள் சுருங்கி விடும்.
2.இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

எலி பார்த்தால் ரொம்ப சிறியது தான். அதனுடைய குட்டி வெளிப்படும்போது பார்த்தால் தெரியும்.

ஆகவே இதைப்போல ஒவ்வொன்றுக்கும் அந்த உணர்ச்சிக்கொப்ப எலும்புகளில் அந்த உணர்வின் அழுத்தம் வரப்படும் போது மோதலில் விரிவடைந்து குழந்தை எளிதாக வெளி வரும் தன்மை உண்டாகின்றது.

ஆனால் கருவில் உருவான சில குழந்தைகள் வெளி வராத நிலை ஏற்படுகின்றது. “குழந்தை திரும்பி விட்டது…!” என்பார்கள். அதனால் அந்த உணர்ச்சி பலவீனம் ஆகும் போது வாயுவின் உந்தல்கள் வரப்படும் போது அந்தக் குழந்தையின் பாகம் சரியாகச் சீர்படுவதில்லை. இயற்கையான முறையில் பிரசவமாவதில்லை.

ஏனென்றால் குழந்தையின் காலோ மற்றதோ முதலில் வெளி வந்தால் அதற்கு மூச்சுத் திணறலாகும். அதைச் சீர் செய்ய விஞ்ஞான அறிவு கொண்டு டாக்டர்கள் சில முயற்சிகளை எடுத்தாலும் கூட ஒன்றும் முடியவில்லை என்றால் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுக்கின்றார்கள்.

அதைப் போன்று தான் எலும்பின் பாகங்களில் அதிகமான மோதல்கள் ஏற்படும் போது சர்க்கஸில் விளையாடக் கூடியவர்களுக்கு அதற்குண்டான அமிலங்கள் சுரக்கப்பட்டு அந்த அணுக்களின் தன்மை பெருக்கப்பட்டு எலும்புகள் ரப்பர் மாதிரி வேலை செய்யும்.

ஆனால் நாம் வளைக்க முடியுமா…? அவர்கள் எடுக்கும் உணர்வை நாம் கூட்டினால் நமக்கும் அந்த நிலைகள் வரும். ஒரு நான்கு நாட்களுக்குச் செய்து பாருங்கள்.
1.அந்த உணர்வின் பாகங்கள் நரம்புகள் நீண்டு வருவதும்
2.அந்த ஆசிட் பவர் கூடுவதும்
3.அந்த அணுக்களுக்கு ஆகாரம் கிடைப்பதும்
4.அதனுடைய மலங்கள் விரிவாவதும் இதெல்லாம் வரும்.

ஏனென்றால் இயற்கையின் நியதிகள் இவைகளெல்லாம்.

டாக்டர்களுக்குப் படிப்பவர்கள் அவர்களுக்குக் கற்பிக்கும் போது அந்தக் கற்பனைக்கு உண்டான நிலைகளை அதைப் படித்துப் பாடம் செய்து இன்ன இன்னது தான் செய்கிறது…! என்று சொல்வார்கள்.

1.படித்த பாடத்தின் நிலைகள் அவர்களுக்குள் இருந்தாலும்
2.சுவாசித்ததன் உணர்வுகளால் தான் எலும்புகள் விரிவடைந்தது என்றும்
3.நுகரும் உணர்வுகள் மாறினால் அந்த இயக்கங்கள் மாறும் என்பதும் அவர்களுக்குத் தெரியாது.

இயற்கையில் உருவான நிலையிலிருந்து விளைந்தது என்ற நிலையில் அதிலுள்ள அமிலங்களை பிரித்து பார்த்து அந்த அமிலங்களை மாற்றுவதற்கு மாற்று உபாயமான செயல்களை (இயற்கையில் விளைந்த உணர்வுகளை) செயற்கையில் செய்கிறார்கள்.

ஆடு மாடுகளிலிருந்தும் மூளை போன்ற பாகங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு அதற்குள் இரசாயனங்களைச் சேர்த்து மற்றவர்களுக்கு மருந்தாக நேரடியாகவும் கொடுக்கிறார்கள்… மாத்திரையாகவும் கொடுக்கிறார்கள்.

இரத்தத்தில் கலக்கச் செய்து வலு கொண்ட நிலைகளாக மனித உடலில் உள்ள அணுக்களுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய பக்குவத்தை ஊட்டுகின்றார்கள். விஞ்ஞான அறிவு கொண்டு இப்படி எத்தனையோ நிலைகளை மாற்றலாம்.

பால் குறைவாக இருக்கக் கூடிய மாட்டிற்குப் பாலை அதிகமாகச் சுரக்கச் செய்ய மரபு அணுக்களை மாற்றி அமைக்கின்றார்கள். இன்னும் சொல்லப் போனால் குளோனிங் (CLONING) மூலம் உருவாக்கி கன்றுவாக இருக்கும் பொழுதே சில சக்திகளைக் கூட்டிப் பால் அதிகமாகச் சுரக்கும் தன்மையைக் கொண்டு வருகிறார்கள்.

ஆணையும் பெண்ணாக மாற்றுகின்றான். பெண்ணையும் ஆணாக மாற்றுகின்றான். விஞ்ஞான அறிவு கொண்டு புலிகளையும் மிருகங்களையும் கொடூரமான நிலைகளையும் பாம்புகளையும் கொடூரமாகக் கொன்று குவிக்கும் ஓநாய் இனங்களையும் அவைகளுக்குள் மற்ற மற்ற உணர்வுகளைச் சேர்த்து அதன் அறிவின் ஞானத்தை இயக்கும் சிறு மூளைகளுக்கே எட்டும் படிச் செய்கின்றான்.

அப்போது அந்தக் கொடிய மிருகங்கள் இவன் சொல்லும் உணர்வுகளை எடுத்து மனிதனுக்கொத்த நிலையில் இவன் சொல்வதைக் கேட்கும் நிலைக்குக் கொண்டு வருகின்றான்.

அந்த மிருகங்களைப் பிடிப்பதற்கு என்ன செய்கின்றான்…? எவன் மிருகத்தைப் பிடிக்கின்றானோ அவன் உடலை நக்கச் செய்கின்றான். அவ்வாறு நக்கி அந்த மணங்களை எடுத்துக் கொண்ட பின் இவன் உடலின் உணர்வுகள அந்த மிருகத்திற்குள் சேர்க்கப்பட்டு அடுத்து அது சாந்தமான நிலைகளில் வருகின்றது.

இப்படிச் சிறுகச் சிறுகச் சிறுகச் சேர்த்து விஞ்ஞான அறிவு கொண்டு அதை மாற்றி இவன் சொன்னபடி எல்லாம் கேட்க வைக்கின்றான். இவன் மணத்தை நுகர்ந்தவுடன் அது விட்டு விடும் நிலை வருகிறது.

சிறு பாம்பாக இருந்தாலும் சில வகையான உணவுகளைத் தன் வாயிலே போட்டு தன் உணர்வைக் கலந்து அதை மற்ற உயிரினங்களை தின்னச் செய்கின்றான்.

இவன் எண்ணத்திற்குண்டான நிலைகளைப் பரப்பி அதற்குத் தக்க ஆசிட்டைக் கலந்து கொடுத்து விடுகிறான். அதைச் சாப்பிட்டுப் பழகியதும் அந்த உயிரினங்கள் “இவன் வா…!” என்று கூப்பிட்டால் அப்படியே வரும். இதை எல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

06.04.2021 உபதேசம்

இந்த உடலுக்குப் பின் என்ன…? என்று நாம் போகும் மார்க்கங்களைத் தான் இனி பார்க்க வேண்டும்…!

 

நம் பூமி விண்வெளியிலிருந்து பல நிலைகளை எடுக்கும் பொழுது துருவப் பகுதியில் சில அலைகள் வரும் பொழுது குவித்து என்ன செய்யும்…? இன்னொரு பக்கம் போகும். பரவலாகக் கொண்டு வருவதற்கு இந்த மாதிரி ஆகும்.

தென் துருவப் பகுதியில் இதே மாதிரிச் சில அலைகள் வரும். அந்தப் பகுதிகளில் விமானம் சென்றால் கரைத்துவிடும். இதைப் போன்ற சில விபத்துகள் உண்டு.

ஆனால் பூமிக்குள் இருக்கும் இதையெல்லாம் நாம் ஆராய்ச்சிக்குக் கொண்டு செல்ல வேண்டியதில்லை.
1.இயற்கையின் நிலைகள் இப்படி இருக்கிறது என்று உணர்த்துவதற்காகவும்
2.சில உண்மைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் சொன்னது.

ஆனால் அது என்ன…? இது என்ன…? என்று இப்படி ஒவ்வொன்றையும் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தால் இந்தப் பூமியில்தான் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும்.

1.இதைக் கடந்து சென்ற அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நாம் பெற்றோம் என்றால்
2.நாம் அங்கே அந்தச் சப்தரிஷி மண்டலம் போகலாம்.

ஆனால் மனிதன் எதை வேண்டும் என்றாலும் அறிந்து கொள்ள முடியும்…! என்பதற்காகச் சொன்னோம்.

உதாரணமாக ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் இன்னென்ன மண் எல்லாம் சேர்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்கின்றோம். எல்லாம் சேர்த்த பிற்பாடு தவறு ஏற்படுகிறது. தவறைத் திருத்த வேண்டுமா இல்லையா…?

அது போல் தான் இந்த உடல் வாழ்க்கையில் புவியின் பிடிப்பிலிருந்து தப்பிப்பதற்கு என்ன வழி…? என்றால் அந்த மகரிஷிகள் அருள் வழி தான்,

ஆக அந்த மகரிஷிகளின் உணர்வுடன் நாம் ஒன்றிச் சென்றால் குறுகிய காலத்திற்குள் சப்தரிஷி மண்டலம் போகலாம்.
1.ஆனால் ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்தால்
2.இங்கே போய்… அங்கே போய்… முடிவில் அந்தச் சப்தரிஷி மண்டலம் அடைய முடியாது.

ஆனால் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகமாகும். ஆனால் அறிவின் தன்மை மழுங்கி விடும்.

நம் குருவின் (ஈஸ்வரபட்டர்) தன்மை எதுவாக இருக்கின்றது…? என்றறு உணர்தல் வேண்டும்
1.குரு இட்ட கட்டளையை மீறி…
2.நம் ஆசையின் நிலைகளைக் குருவாக்கி விட்டால்
3.இதன் நிலைகளைத் தான் பார்க்கச் செல்லும்.

இங்கே பார்க்க வேண்டியது தான்…! அதற்குள் காலம் கடந்துவிடும்…! அதற்குள் இந்த உடல் மடிந்துவிடும்… இந்த உடலுக்குள் சேர்த்த நிலைகள் நிலை இழந்துவிடும்…!

ஏனென்றால் இன்றைய விஞ்ஞான உலகில் நேரமில்லை. நஞ்சுகள் பரவிக் கொண்டிருக்கிறது.

இந்த உடல் நன்றாக இருக்கும் பொழுதே அருள் ஞான உணர்வுகளை விளைய வைத்துக் கொள்ளுங்கள்…! என்று திரும்பத் திரும்பச் சொல்கிறேன் (ஞானகுரு).

அதற்காக வேண்டித் தான்…
1.உங்கள் உணர்வுகளை எந்தெந்த அளவிற்கு அருள் ஞானிகள் காட்டிய அருள் வழிகளில் கொண்டு வர வேண்டுமோ
2.அதைச் செயல்படுத்தி உங்கள் நினைவின் ஆற்றலை அங்கே பெருக்கச் செய்கின்றோம்.

எந்த நேரத்தில்… எந்தச் சந்தர்ப்பத்தில் இனி எது வந்தாலும் “ஈஸ்வரா…!” என்று உயிரை எண்ணி அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று நினைவை அங்கே கொண்டு போக வேண்டும். அந்த உணர்வு நமக்குள் வலுப் பெற வேண்டும்.

அது இல்லையென்றால் வளர்க்க முடியாது. அதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி உங்களுக்குள் இந்த வலுவின் தன்மை கொண்டு வருவதற்குத்தான் தொடர்ந்து உபதேசிப்பது.

உருவத்தின் மீதே பற்று வருகிறது… ஞானிகள் சொன்ன அருவத்தை எண்ணுவார் இல்லை – ஈஸ்வரபட்டர்

 

ஆண்டாண்டு காலமாக மனித குல சமூக நெறி வாழ்க்கை அமைப்பில் ஒழுக்கவியலாக வரைமுறை மீறாச் செயலுக்கும் உயர்வெண்ணம் சிதறிடாத் தன்மை பெற்றிட வாழ்க்கை நெறிச் சட்டங்கள் மகரிஷிகளால் உணர்த்தப்பட்டதிலெல்லாம்
1.அறிவின் ஆற்றலும் வைராக்கிய சிந்தனையுமாகத் “தான் யார்…?”
2.இந்த ஜீவ பிம்ப சரீரம் பெற்றதன் நோக்கம் என்ன…? என்று
3.தன்னை உணரக்கூடிய வழி பிறந்து…
4.உயர் நிலை பெற வேண்டிய ஞானம் கொண்டு பெறும் மெய்ப் பொருளை
5.நாம் உணரத் தான் முடிந்திடும்.

மனோசக்தியின் ஆற்றலே இன்றைய விஞ்ஞானத்திற்கும் “புரியாத ஒரு புதிர் தான்…!”

அப்படியானால்… தன்னைத்தான் உணர்ந்து உயர் ஞான சிந்தனை கொண்டு மெய் ஞானத்தின் பொருளாக இயற்கைச் சக்திகளை அறிந்து கொண்டது எந்தச் சக்தியால்…?

1.உயிராத்ம சக்தி பலம் பெற்றிருந்தால்
2.அதை வெளிப்படுத்தும் செயல் தன்மை கொண்டாலே மனோசக்தி என்று பெயர் பெறுகின்றது.
3.ஆனால் இவைகளைக் கண்டு வியப்பு மேலிடுவதைத் தவிர ஆக்கச் சக்திக்கு அது ஒன்றும் பயன் இராது.

பிண்டமாகிய சரீரத்தைக் கொண்டே அண்டத்தை அறிந்து கொள்ளும் செயலில் பூமித்தாய் ஈர்த்திடும் சூரியனின் சக்திகளை சுவைத்து வளம் பெற்ற இயற்கையின் செயலைத் தன் சரீரத்தின் உள்ளேயும் அதே தொடர் நிகழ்வு பெறுகின்ற தன்மைகளை அறிந்து கொண்டாலும்
1.பரவெளியின் சூட்சமத்தில் சூரிய ஒளிக்கதிர் தன்மைக்குள்
2.இரு வித உயிரணுக்கள் (சிவசக்தி அணுக்கள்) கலந்து செயல்படும் செயலை
3.ஞான விழிப்பார்வை கொண்டு அறிந்து கொள்வதே “அரூபலிங்கம்…!”

அந்த உயிரணுக்கள் சரீரத்தில் செயல்படும் நிலைகளில் சரீரம் கொண்டு ஆண் பெண் உடல் கூறுகளாக உயிர் தொகைகளாக ஜீவாத்மாக்களாகின்றது.

அரூபலிங்கம் என்ற அந்தப் பால்வெளி சூட்சமத்தைச் சரீர செயலில் கண்டு தெளிந்து அந்த உயர் சக்திகளை வான இயல் தன்மைகளில் உண்மைப் பொருள் காட்டி ஸ்வரூபலிங்கமாகச் சமைத்துப் பேரின்பச் சக்திகளைப் பெற்று “உயர் ஞான வளர்ப்பாக உயர் நிலை பெறவே வழி வகைகளை ஞானிகள் காட்டினார்கள்…!”

அப்படிக் காட்டியிருந்தாலும்.. இன்றோ சிவலிங்க வடிவு (உடலின் ரூபங்கள்) என்றாலே சிற்றின்ப இரசனைக்கே எண்ணத்தைச் செலுத்தித் தன் நிலையையே மறக்கின்றான் மனிதன்…! எண்ணுகின்ற எண்ணம் அன்றோ செயல்படுகின்றது.

இயற்கையின் செயல்பாட்டை உயர் ஞானத்தால் அறிந்த ஞானிகள் பூமியின் சுழற்சியில்
1.ஆகாயம் காற்று நீர் நிலம் நெருப்பு என்ற பஞ்சபூதத் தன்மைகளில் ஓசை ஒளி என்ற செயல் நிகழ்வுகளையும்
2.ஞாயிறு கோள் திங்கள் கோள் பூமியின் தொடர்பு கொண்ட செயல்பாட்டையும்
3.உயிரணுக்களின் அசைவு நிலைகளையும்
4.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட செயல்பாட்டில்
5.தன் எண்ணத்தால் தெளிந்த அந்தப் பேரானந்தப் பெருநிலையை
6.”கூத்தாண்டவன்…!” என்ற உருவச் சமைப்பில் இயற்கையின் தத்துவத்தைக் காட்டினார்கள்.

சிவன் உருவமும்… உருவத்தின் ஆனந்த லயமும்… அலங்கரித்துக் காட்டிய தத்துவங்களும்…
1.“இயற்கையின் பால் ஒன்றச் செய்த தன்மைகளை உணர்ந்து கொண்டால்…”
2.மனித எண்ணத்திற்கு மரண பயமில்லை…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இந்த வாழ்க்கையில் எப்படித்தான் இருந்தாலும் எதாவது குறைபாடுகள் வரும். எவ்வளவு நல்லது செய்தாலும் கூட இந்த நிலை வரும்.

நம்மைச் சங்கடத்திலோ சலிப்பிலோ வெறுப்பிலோ ஆழ்த்தக்கூடிய நிலைகள் நமக்கு வந்தால்…
1.அந்த உணர்வுகள் எல்லாம் மூக்கின் வழியாகச் சென்று
2.புருவ மத்தியில் உயிரிலே பட்டுத்தான் அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.
3.ஆண்டென்னாவான (ANTENNA) நமது கண் தான் அதை எடுக்கின்றது.
4.அதன் அழி ஆன்மாவிலிருந்து சுவாசித்துக் கொண்டே இருக்கும்
5.அந்தக் கெட்ட அணுக்கள் தான் வளரும்… சிந்திக்கும் தன்மை போய்விடும்.

அந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும்…?

“ஈஸ்வரா…” என்று சொல்லி ஒரு பிரேக்…!

நம் கண்ணின் நினைவை உயிருடன் ஒட்டி ஈஸ்வரா…! என்று எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். அப்பொழுது அந்தச் சங்கட அலை மூக்கின் வழி உள்ளே போவதை இங்கே தடுக்கின்றது.

நெருப்பிலே ஒரு பொருள் பட்டால் தான் அந்த வாசனை தெரியும். அதே மாதிரி உயிரிலே பட்டால் தான் இயங்கும். ஆகவே
1.தீமை செய்யும் உணர்வுகள் உயிரிலே படாமல் அதை முதலில் தடுத்துப் பழக வேண்டும்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இதன் வழி (புருவ மத்தி) உள்ளுக்குள் இழுக்க வேண்டும்.
3.இது தான் பிராணயாமம் என்பது.

சூரியன் இழுத்துத் தான் எல்லாவற்றிற்கும் ஒளி அலைகளை அனுப்புகின்றது. அதாவது காற்றில் வரக்கூடிய அலைகளை அது எது எது வருகிறதோ… அதை எல்லாம் எடுத்து அந்தந்த அலைகளாக இயக்கச் செய்கின்றது

சூரியகலை என்கிறபோது நாம் என்ன செய்கின்றோம்…?

நம் ஆறாவது அறிவு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று சொல்லி “உயிர் வழி…” உள்ளுக்குள் நேரடியாகக் கொண்டு போகிறோம்.

அதே சமயத்தில் நம் ஆன்மாவில் இருப்பது சுவாசத்தின் மூலம் உள்ளே போகாதபடி தடைப்படுத்துகின்றோம்.

1.நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி எடுத்தோமோ அந்த உணர்வுகளை
2.உடலில் உள்ள எல்லா அணுக்களிலும் இணைத்து இயக்குவதுதான் பிராணயாமம்.
3.நல்ல அணுக்களை நமக்குள் உயர்த்த வேண்டும்… அதனால் தான் ஆறாவது அறிவு கார்த்திகேயா என்பது…!

ஆனால் இவர்கள் பிராணயாமத்தை எத்தனையோ அர்த்தங்களில் கொண்டு போகின்றார்கள்.

05.04.2021 உபதேசம்

போற்றலில் எந்தப் பலனும் இல்லை… ஏங்கிப் பெற்றால் தான் வளர்ச்சி கிடைக்கும்

 

அந்த அருள் ஞானிகளின் வித்தினை உரமாக இடப்பட்டு உயர்ந்த சக்தியினை அவர்கள் பெற்ற நிலையினை உங்களுக்குள் உபதேச வாயிலாக இணைத்துக் கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).
1.நான் இணைத்தாலும் நீங்கள் உங்கள் நினைவு கொண்டு
2.உபதேசங்களைக் கூர்ந்து கவனித்தால்தான் அது பதிவாகி முளைக்கும்.

நிலத்தில் விதைகளை மேலெழுந்தவாரியாகப் போட்டு விட்டால் எறும்புகள் தின்று விட்டுப் போய்விடும். அது போல் இங்கே கேட்ட உபதேசத்தை மேல் மட்டத்தில் ஆகா…! என்று போற்றி விட்டால் இது முளைக்காது.

போற்றலை விட்டுவிட்டு அதைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வினைக் கொண்டால் அது உங்களுக்குள் முளைக்கும்.
1.போற்றுதல் என்பது புறத்தால் தள்ளுவது…!
2.ஏங்குவது என்பது அகத்திற்குள் விளையச் செய்வது…!

இந்த இரண்டு நிலைகளில் உள்ளோரும் எந்த அளவுகோல் கொண்டு இதை ஏற்றுக் கொள்கின்றனரோ அதற்குத் தக்கவாறு வித்தின் தன்மை இணைந்து மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவரும் நிலையும் வருகின்றது.

ஆனால் இங்கே பெரும் பகுதி போற்றித் துதிப்போர் தான் பலரும் உண்டு. சாமியைப் (ஞானகுரு) பற்றிப் புகழ்ந்து பேசுவார்கள். ஆனால்
1.புகழ்ந்த நிலையில் கொண்டு ஏற்றுக் கொள்ளும் நிலை இழந்து
2.அருள் மகரிஷிகளின் சக்திகளைக் கவர்ந்திடும் நிலை அற்றுப் போய்விடும்.

அதுவே தனக்குள் கவர்ந்திடும் அந்த ஏக்க நிலை இருந்தால்தான் அது ஆழப் பதிந்து அதனின் துணை கொண்டு புவியின் ஈர்ப்பால் அது கவர்ந்து விடும்.

இந்த உடலின் ஈர்ப்புக்குள் நாம் பதிந்து கொண்ட உணர்வு எதுவோ அதைக் கவர்ந்து அதனின் நிலைகள் விளையச் செய்வதற்குத் தான் இந்த உபதேசமே…!

அந்த மகரிஷிகளின் உணர்வைச் சிறிது காலம் இணைத்துக் கொண்டே இருந்தால் அது தன்னிச்சையாக வளரும் தன்மை வரும். உடலை விட்டு நாம் அகன்ற பின் அந்த உணர்வின் வித்துக்கள் தீமையை அகற்றி மெய் உணர்வின் தன்மையாக என்றும் ஒளியின் நிலையாக நம்மை அடையச் செய்யும்.

இந்த உடலிலிருந்து தான் அதைச் செய்ய வேண்டும்.

உங்களுக்கு உபதேசித்ததை இரவு முழுவதும் எண்ணத்தால் எண்ணி
1.அந்த மகரிஷிகள் உணர்வைப் பெற வேண்டும்
2.அறியாது வந்த தீமைகள் விலக வேண்டும்
3.தூய்மைப்படுத்தும் உணர்வுகள் வளர வேண்டும் என்று
4.தியானத்தின் மூலம் ஒவ்வொரு நொடியிலும் நீங்கள் செயல்படுத்த வேண்டும்.

நாம் தொழில் செய்யும் பொழுது அல்லது மற்ற வேலைகள் செய்யும் பொழுதோ உடலில் பட்ட அழுக்கை உடனுக்குடன் எப்படித் தூய்மைப்படுத்திக் கொள்கின்றோமோ இதைப் போல மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதி கொண்டு எண்ணத்தால் நாம் இணைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அதனின் சக்தியை நாம் இப்படிக் கூட்டினால் தான் இது விளையும். அது அல்லாது
1.சாமி செய்வார்… சாமி தான் செய்வார்…! என்ற எண்ணத்தில் இருக்கக் கூடாது.
2.ஒரு தடவை எண்ணினேன் பதிவு செய்து கொண்டேன் என்ற எண்ணத்தில் விட்டுவிடக் கூடாது.
3.மீண்டும் மீண்டும் நம் எண்ணத்தால் அதைக் கவர்ந்து வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

ஏனென்றால் ஒரு வித்து செடியாக முளைத்த பின் தன் தாய்ச் செடியின் சத்தைக் கவர்ந்து இணைத்துக் கொண்டு அது தன்னிச்சையாக எப்படி எடுத்து வளர்கின்றதோ அதைப் போல
1.நமது உடலில் அந்த விளையும் பருவத்தை எட்டும் வரையிலும்
2.நம் எண்ணத்தால் மகரிஷிகளின் உணர்வை இணைத்துக் கொண்டே வர வேண்டும்
3.அந்த வித்திற்கு உணவை ஊட்டிக் கொண்டே இருக்க வேண்டும்

அது உருவாகித் தன் இனத்தைப் பெருக்கி விட்டால்… பின் உங்களுடைய எண்ணம் தேவையில்லை. அது தன்னிச்சையாக எடுத்து வளரும்…!

உடலில் வந்த தீமைகளை அகற்றி விட்டுத் தீமையை அகற்றிடும் உணர்வாக விளைந்து உடலை விட்டு வெளியே சென்றாலும் தூய்மையான ஒளியின் உணர்வாக இது விளையும். உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷிபத்தினி என்ற ஆத்ம ஐக்கியக் கலப்பு பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஒலியாகி… ஒளியாகி… நீராகி… உருவமானது தான் அண்டவெளியில் அனைத்துமே…!

சப்த நாத சுழலும் சக்தி (ஒலி)… உயிரணுவின் ஈர்ப்பில் எண்ணம் கொண்டு வளரும் செயல் நிலையில்… ஈர்த்தெடுக்கும் அனைத்துச் சப்த அலையின் குண விசேஷ ஆகார அமில நியதி என்ற வகையில்… தன் ஒளி சக்தியின் காந்தத்தைப் புடமேற்றிக் கொள்கிறது.

தனக்குள் புடமேற்றிய நிலையில் எண்ண வலுவாக்கும் சுழல் சக்தியாக எந்த அமிலத்தின் வீரியத்தைக் கொண்டு ஈர்த்ததோ அந்த நட்சத்திர அமில சக்தியின் நிறம் மணம் அனைத்தையும் காத்திடும்
1.ஆதி சக்தியின் நீரமிலத் தொடர்பில் எண்ணம் கொண்டு அத்தகைய உயிரணுக்கள் பிறப்பிற்கு வந்தாலும்
2.சரீரத்தைச் சுற்றியும் அந்தச் சப்த அலை நாதங்கள் சுழல் வட்டமாகச் சழன்று ஓடிக் கொண்டே இருக்கும்.

ஆத்மாவை உணரத் தலைப்படும் ஞானி… ஆத்மாவின் தொடர் சரீரமாக உருமாறும் பஞ்ச பூதங்கள் செயல் தன்மையில்… அந்தப் பஞ்ச பூத ஆரோக்கிய அமிலத்தை ஈர்த்திடும் பக்குவமாக… அமுதமாகச் செயல் கொள்ள சரீரம் ஈர்த்திடும் செயலுக்கு…. பரவெளியில் உயிரணுக்கள் உதித்திடும் சூட்சமமே… சரீரம் பெற்ற பிறகு…
1.ஆண் பெண் என்ற இரு சரீரத்தில் செயல்படும் விதம் – உயிரணுக்களின் செயல் தன்மை…
2.ஆணின் உடலிலிருந்து வருவதைச் சுக்கிலம் என்றும்
3.பெண்ணின் உடலிலிருந்து வருவதைச் சுரோனிதம் என்று கூறிய வகைகளில்
4.சிவ சக்தியின் கலப்பு ஆண் பெண் என்று பேதம் உள்ளது.

இருந்தாலும் உயிர் சக்தியின் வலுவிற்கு ஒவ்வொருவரும் உயிரான்ம இணைப்பின் செயலுக்கு வலுக்கூட்டிக் கொள்ளும் பஞ்சபூதத் தொடரில்
1.ஆண் சுக்கிலத்தையும் பெண் தன் சரீரத்தில் சுரோனிதத்தையும்
2.உயர் ஞான வளர்ப்பின் செயலுக்கு வலுக் கொள்ள வேண்டும்.

அதாவது சரீர கலப்பில் உயிர் தொகையை (குழந்தைகளை) உருவாக்குவது போல் எண்ண வலுவின் வீரிய சக்தியால்
1.ஆத்ம ஐக்கிய நிலையில் ஒத்த எண்ணம் கொண்டு
2.சிவசக்தி ஜோதிக் கலப்பாக மூலத்தில் படைப்பின் படைப்பு சக்தி கொண்டு
3.நமக்கென்று ஒரு மண்டலத்தையே சிருஷ்டிக்கலாம்.

சரீரம் கொண்ட நிலையில் காந்த ஒளி அலைகளை எண்ணம் கொண்டு பாய்ச்சி “நெற்றிக் கண்” என்ற ஞான விழிப்பார்வையால் அறிந்து ஈர்க்கும் தன் வளர்ச்சியின் வளர்ப்பிற்குத் தன்னைச் சுற்றி ஓடும் சப்த நாத அலைகளை ஈர்த்துச் செயல் கொண்டால் அதுவே தான் பெறும் சக்திக்கு உறுதுணையாகப் பாதுகாப்பு வளையமாக நம்மைக் காத்திடும்.

வளர்ச்சியின் நல் வினைச் செயலுக்கு எதை எண்ணி ஈர்க்கின்றோமோ…
1.அந்த எண்ணத்தின் ஜீவத் துடிப்பிற்கே வலுக்கொடுக்கும்
2.அதிதீவிர எண்ண வலுக்கூட்டும் அபூர்வ ஒலி ஈர்ப்பாக
3.உயர் ஞான ரிஷி பத்தினி சக்தியை ஈர்த்திடும் நிலைக்கு
4.அதே தொடரில் ஈர்க்கப்படும் அனைத்துச் சக்தியின் வழிமுறைக்கும்
5.இச்செயலின் தொடரில் வளப்படுத்திக் கொள்ள வேண்டும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒரு செடியிலிருந்து அதன் (மணம்) சத்தை வெளிப்படுத்தினால் சூரியன் கவர்ந்து அலைகளாக இந்தப் பூமியில் பரவச் செய்கின்றது. அதே செடியை நாம் கண் கொண்டு பார்த்து அது பற்றித் தெரிய வேண்டும் என்ற உணர்வுடன் நுகர்ந்தால் அந்த மணம் நம் உயிரிலே படுகிறது.

தெரியவில்லை என்றாலும் அதை நுகர்ந்து தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றோம்.
1.இதனுடைய குணம் என்ன…? மணம் என்ன…?
2.இது என்ன செய்யும்…?
3.நம்மை வேதனைப்படுத்துமா…? உடம்புக்கு நல்லதாகுமா…? என்று சிந்திக்கின்றோம்.

செடியின் சத்தைச் சூரியன் கவர்ந்து வைத்திருந்தாலும் அந்தச் செடியின் வாசனையை நுகர வேண்டுமென்றால் நமது கருவிழி ருக்மணி அந்தச் செடியை நமக்குள் பதிவாக்க வேண்டும்.

ஏனென்றால்
1.நாம் இயங்குகின்றோமா…? நம்மை மற்றது இயக்குகின்றதா…?
2.அல்லது நாம் ஒன்றைத் தவறு செய்கின்றோமா…?
3.அல்லது நம்மைத் தவறு செய்ய வைக்கின்றதா?
4.அப்படி தவறு செய்ய வைக்கின்றது நமது உயிரா…? நாம் நுகர்ந்த உணர்வா…? நமது உடலா…? என்பதனை எல்லாம்
5.நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இது எல்லாம் இந்த இயற்கையின் நியதிகள்.

உதாரணமாக வேப்ப இலை என்று வைத்துக் கொள்வோம். அந்தச் செடியின் சத்தை நுகர்ந்த பின் ஒரு கசப்பென்ற நிலைகள் வருகின்றது

அந்த உணர்வின் மணங்கள் நம் உயிரிலே பட்டுக் கசப்பின் உணர்ச்சிகளாக நம் உடலிலே படரும். அப்பொழுது என்ன செய்கின்றது…?

1.அந்த உணர்வுகள் பட்டதும் அந்த உணர்ச்சிகளாக நம்மைத் தூண்டும்
2.ஓய்ய்…ய்ய்ய்…! கசப்பை நுகர்ந்தால் ஓ…ய் என்று உமட்டலாக வரும்
3.அப்போது இயக்குவது யார்..? நாம் நுகர்ந்த உணர்வு இயக்குகின்றது
4.ஆனால் அந்த உணர்வை இயக்கிக் காட்டுவது யார்..? உயிர்
5.அந்த உணர்ச்சிகள் நம் உடலுடன் சேர்த்தவுடனே அதுதான் நம்மை இயக்குகின்றது… ஆண்டாள்…! (காரணப் பெயர்)

வேப்ப மரத்தைக் கூர்ந்து கண் கொண்டு பார்த்தால் அதைப் பதிவாக்குகின்றது நம் கண்ணின் கருவிழி.

அந்த மரத்திலிருந்து வரக்கூடிய உணர்வு என்ன…? என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றோம். அந்த ஆசையால் அது கவரும் சக்தி பெறுகின்றது.

அப்பொழுது அந்த உணர்வு உயிரிலே படுகின்றது. அது என்ன செடி…? நல்லது செய்யுமா… கெட்டது செய்யுமா…? என்று நாம் ஆராய்ச்சி செய்வோம்.

வாந்தி வரும்… என்று சொன்னால் அதை நீக்கி விடுகின்றோம்.

ஒருவருக்கு அம்மை வார்த்திருந்தது என்றால் இது விஷத் தாக்குதல். அதற்கு இந்த வேப்பிலையை முழுதாகப் போட்டு இரண்டு மஞ்சளைப் போட்டுக் கலக்கித் தெளித்தால் உடலில் அம்மை என்ற அந்த விஷக் கிருமிகளை மாற்றுகின்றது.

ஆனால் அதே வேப்பிலையை நாம் உணவாக உட்கொள்ளும்போது உமட்டல் வருகின்றது… வாந்தியாகி வெளியே தள்ளுகின்றது.

இருந்தாலும் அந்த வேப்பிலையை அதிகமாகச் சாப்பிட்டால் நம் உடலில் உஷ்ணம் வருகின்றது அதை அளவுடன் சாப்பிட்டால் அந்த வேப்பிலை நமக்குள் இருக்கும் பல கசப்பின் உணர்வுகளை நீக்குகின்றது.

1.அதனதன் சந்தர்ப்பத்திற்கு அது வேலை செய்கின்றது
2.இவை எல்லாம் இயற்கையின் நியதிகள்…!

04.04.2021 உபதேசம்

மலை போன்ற எண்ண உறுதி கொண்டு அசுர குண மாயைகளை மாய்த்தொழிக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

உலக எண்ண ஓட்டத்தில் நாம் செயல்படும் காலங்களில் கீழாம் அறிவு நிலையில் பூவி ஈர்ப்பின் சுவாச ஈர்ப்பில் சிக்குண்டு ஒவ்வொரு நாளும் நாம் அலைக்கழிக்கப்படுகின்றோம். (இதை இல்லை என்று யாரும் சொல்ல முடியாது)

அலைக்கழிக்கப்படுவதோடு மட்டுமல்லாது
1.நம்முடைய எண்ண வலு வீரியமும் கீழான அறிவு என்ற செயலுக்கே ஈர்க்கப்பட்டு
2.அந்தந்த இச்சையின் குணங்களை ஏற்படுத்திக் கொண்டு கலக்கமடையும் காலங்களாக
3.மீள வழியில்லாதபடி மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் கால சகடத்திலேயே (CYCLE) சுழன்று கொண்டிருக்கின்றோம்.

உண்மை உயர் ஞானத்தைப் பெற விழைவோனுக்கு இதைப் போன்ற பந்தக் கட்டுக்களைத் தகர்த்தெறிய ஞானிகளால் சூட்சமப்படுத்திக் காட்டப்பட்டதே “மத்தகமும் கோடும் (கோடாயுதமும்)…!”

1.தீதெண்ணச் சங்கட அலைகளை எல்லாம் தவிர்த்து
2.மனித எண்ணம் என்ற உறுதி… “மலை மேல் நின்று…!”
3.காரிருளாகக் காட்டிய அசுர குண மாயைகளை “கோடாயுதத்தைக் கொண்டு…” மாய்த்தொழிக்க வேண்டும்.

சிற்றறிவின் ஆசைகள் எல்லாம் அகன்று பேரின்ப சாயுஜ்யமாக (உயிருடன் கலக்கும் நிலை) மேலாம் அறிவின் ஞானமாகப் பரவெளி ஞானத்தில் கலந்திடும் செயலுக்குத் தத்துவமாகக் காட்டப்பட்டதே “நீல வண்ண ஒளி பெறும் ஆத்மாவின் மறைபொருள்…”

1.மத்தகம் என்றாலே முன் மூளைப்பகுதி இரண்டும் சிறு மூளைப் பகுதி ஒன்றாக
2.ஞான உணர்வின் எண்ணம் ஆட்கொண்ட காலத்தில்
3.நெற்றிப் பொட்டில் ஜோதித் தத்துவமாக அறிந்திட வேண்டிய செயல் ஆகும்.

நீலவண்ண ஆத்மா சூட்சமத்தில் கலந்திடவே பேரின்பப் பெருநிலையில் இணைந்து செயல் கொள்ளும் மேலெழும் சக்தியாகக் காட்டியதே கணங்களின் பதி… “கணபதி…”

1.பரவெளியில் படர்ந்துள்ள ஒளிகாந்த மின் நுண் அணுக்கள் (நடத்திடும்) எண்ணம் கொண்டு (நட்சத்திரங்களின் கதிரியக்கச் சக்திகள்)
2.ஒன்றுடன் ஒன்று இணையும் செயலில் உயிர் ஆத்மாவாக மேலும் எண்ண வலு கூட்டிக் கொள்ள ஈர்த்திடும் தொடரில்
3.அதன் எண்ணமே வீரியமாகச் செயல் கொள்ளும் பக்குவத்தில்
4.சரீரத்தில் ஆண் பெண் சங்கமத்தில் கருவாகத் தோன்றி வினையின் நாயகன் விநாயகன் என்ற சொல்லுக்கேற்ப
5.மேற்கொண்டு தான் ஈர்த்து உயிராத்மாவாகப் பின் கருவாக வந்து உதித்த செயலில்
6.அதே எண்ண வலுவின் ஈர்ப்பினால் மேன்மேலும் உயிரணுக்களைக் கூட்டிக் கொண்டு
7.கணங்களாகிய சரீர உயிரணுக்களுக்கு.. “உயிராத்மா” – பதி என்ற பொருள்பட கணபதி ஆகின்றது.

அதே நிலை மனிதச் சரீரத்திலும் உயர் ஞான அறிவு கொண்டு விளங்கிக் கொள்ளும் பக்குவத்தில் ஓ…ம் என்ற ஒலி நாதம் சொல் வடிவ சூட்சமாகச் சுட்டிக் காட்டினர் ஞானிகள்.

1.சிரசைக் காட்டி சிரசில் மேற் பகுதி அசையா நிலையும்
2.தாடை என்ற கீழ்ப் பகுதி அசையும் நிலையும்
3.ஓ…ம் என்ற பிரணவமாகிய யானைகள் கலந்தன..! என்று சூசகப்படுத்தி
4.வாயிலும் உள் நாக்கில் மேலெண்ண நடுப்பகுதியும் உச்சிக்குக் கீழும் ஒளியின் சுடர்ந்த நிலையைத் தெளிவுபடுத்திக் கூறியவற்றில்
5.கடைவாயின் பற்கள் விநாயக உருவத்தில் கொம்பு என்றெல்லாம் மறைமுகப்படுத்தியதற்குப் பொருள்கள் பல உண்டு.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்று உணர்ந்திடல் வேண்டும்.

மனிதனுடைய இந்த உலக வாழ்க்கையில் உடல் பற்றில் வரும் எத்தனையோ எண்ணங்களையும் உணர்வுகளையும்
1.வைராக்கிய சிந்தனை என்ற கொம்பாயுதம் கொண்டு
2.மத்தகத்தால் தகர்க்கப்பட்டால்
3.மெய் ஞானிகள் பெற்ற மேலாம் அறிவு நிச்சயம் சித்திக்கும்…! என்பதே பொருள்.

தீமைகளை நீக்கக் கண்ணன் காட்டும் திருட்டு வழி

 

இன்று மனிதனாக இருக்கும் நாம் நல்ல செழுமையாக இருந்தாலும் பிறருடைய துயர் துடைக்கக் கேட்டுணர்ந்த அந்தத் துயரமான உணர்வுகள் நமக்குள் வந்த பின் அந்த உணர்வுகள் நம் நல்ல உணர்வுடன் இரண்டறக் கலந்து விடுகின்றது.

பின் அது ஓங்கி வளர்ந்து விட்டால்
1.நம் உடலை… மகிழ்ச்சியாக வைத்திருந்த இந்த உடலின் சாரத்தை
2.அது செயல்படாது தடுத்து விடுகின்றது.
3.அதனால் உடல் நலிந்து… உணர்வுகள் குறைந்து… எண்ணங்கள் நலிந்து…
3.நம் வாழ்க்கையில் எதனையுமே வலுவான நிலையில் செய்ய முடியாத நிலைகளுக்குக் கொண்டு செல்கின்றது.

இதிலிருந்து நம்மைக் காத்திட… இத்தகைய நஞ்சிலிருந்து நாம் மீள்வதற்கு நமது குரு காட்டிய அருள் வழியில் நாம் ஆத்ம சுத்தி செய்வோம் என்றால் நம்மைக் காத்திட முடியும்.

அதற்காக வேண்டித்தான்,,,
1.அந்த அருள் ஞானிகள் கண்டுணர்ந்த இந்த உணர்வின் சாரத்தை
2.உங்களுக்குள் காத்திடும் எண்ண உணர்வுகளுக்குள் இணைத்து
3.அதை வலுப் பெறச் செய்யும் நிலைக்கு இதை யாம் (ஞானகுரு) உபதேசிப்பது.

மாமகரிஷி வியாசர் காட்டிய அருள் வழியில் கண்ணன் (நமது கண்கள்) காட்டிய நிலைகள் கொண்டு, “அதோ வருகின்றான் நாரதன்…!” என்று நாம் எண்ணும்போது புற நிலைகள் கொண்டு நமது ஆன்மாவைச் சுத்தப்படுத்திச் செயல்படுகின்றோம்.

1.நம் கண்ணின் நினைவலைகளை விண்ணை நோக்கிச் செலுத்தி…
2.இப்போது உங்களுக்கு உபதேசித்த உணர்வுகளின் வலுவின் துணை கொண்டு
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெற வேண்டும் என்று
4.கண்ணின் நினைவை உயிரோடு ஒன்றச் செய்ய வேண்டும்.

உயிரான கண் அகக்கண்… நம்முடய கண் புறக்கண். புறக்கண்ணால் அகக் கண்ணின் (உயிரின்) நினைவு கொண்டு அந்த ஆற்றல் மிக்க சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று நாம் ஏங்கினால் “சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கிவிடுவான்” என்பதாகும்.

நம் உடலான சிவத்திற்குள்…
1.உயிர் அகக்கண்ணாக இயக்கும் நிலையில்
2.புறக்கண்ணின் நினைவு கொண்டு நினைவினை உயிருடன் ஒன்றி,
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி
4.அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் ஜீவாத்மாக்கள் பெற வேண்டும் என்று
5.உள் நினைவில் கண்களை மூடி
6.நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து அணுக்களிலும் படர வேண்டும்” என்று செய்வதே கண்ணன் காட்டிய திருட்டு வழி.

கண்ணன் காட்டிய நிலைகள் கொண்டு இந்த உணர்வுகளை (மகரிஷிகளின் உணர்வுகளை) உள் செலுத்தும் போது அந்த ஞானிகளின் உணர்வுகள் “பிராணாயாமம்”

அந்த ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் ஜீவன் பெறச் செய்து அது வளர்ச்சியாகும் பொழுது
1.நாம் ஒரு பொருளைப் பாத்திரத்தில் போட்டு வேக வைக்கும் பொழுது
2.அதனின் சத்து கொதித்து அதனின் மணம் வெளி வருவதைப் போன்று
3.அந்த மணத்தின் வீரியத் தன்மை (ஞானிகளின் அருள் சக்தி) உள் நின்று வெளி வருவதை
4.நாம் வேதனைப்பட்ட உணர்வின் தன்மையை இது பிளக்கின்றது.

முதலிலே சொன்ன… பிறர் துயர் துடைக்க எடுத்துக் கொண்ட துயரமான உணர்வுகள் நம் உடலுக்குள் சேர்க்கும் முன் நம் ஆன்மாவாக மணமாக மாறுகின்றது.

அது மடி மேல் ஆன்மாவாக இருந்தாலும்
1.நாம் கண்ணின் நினைவு கொண்டு உயிருடன் ஒன்றி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும்
3.அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவாத்மாக்கள் பெற வேண்டும் என்று
4.கண்ணான கண்ணின் நினைவுகளை உள் செலுத்தப்படும்போது நாம் எண்ணிய உணர்வுகள் பிராணாயாமம்…!

அது ஜீவன் பெற்று அந்த மணத்தின் வீரியத் தன்மை உள் நின்று வெளி வருவதை மடி மீது நம் வேதனைப்பட்ட உணர்வின் தன்மையைப் பிளக்கின்றது.

இந்த முறைப்படி ஆத்ம சுத்தி செய்தால் எத்தகைய தீமைகளையும் நாம் பிளக்க முடியும். நாம் செய்த நன்மை நிலைத்திருக்கும். நமக்கும் உயர்வைத் தான் தரும்.

03.04.2021 உபதேசம்

“மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுக்கும் விண்ணின் ஆற்றலை” நாம் பெறப் பழகிக் கொள்ள வேண்டும்

 

நம்முடைய ஆறாவது அறிவு என்பது தெளிந்திடும்… அறிந்திடும்… சக்தி கொண்டது. அதனால் தான் “பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன்…” என்று ஞானிகள் காட்டுகின்றார்கள்.

அதாவது மனிதனாக ஆன பின் நாம் சிருஷ்டிக்கும் தன்மை பெற்றவர்கள். இருந்தாலும் இன்று நாம் எதை சிருஷ்டித்துக் கொண்டிருக்கின்றோம்.

மதம் காட்டிய அறநெறிகளை அதனின் உணர்வுகளைப் பதிவு செய்து கொண்டு அந்த உணர்வைத்தான் நாம் வளர்த்துக் கொள்கின்றோம். அதன் வழி கொண்டு சிருஷ்டிக்க முடிகின்றது. ஆக மொத்தம் நாம் கற்றுணர்ந்தது… நமக்குள் உள்ளது தான் இங்கே வரும்.

ஒரு வேப்பமரம் தன் கசப்பின் தன்மை வெளிப்படுத்தும் பொழுது
1.அந்தக் கசப்பான அந்த மணத்தின் தன்மை கொண்டு தான் தன்னை வளர்த்துக் கொள்கிறது
2.மற்றொரு மணத்தின் தன்மை அருகே வந்தால்தன் கசப்பின் உணர்வால் உந்தி வெளியே தள்ளுகின்றது

இதைப் போன்றுதான் நமக்குள் எந்தெந்த உணர்வின் தன்மையை இணைத்துக் கொள்கின்றோமோ அதற்கொப்ப பல உணர்வின் சத்துகள் சேர்த்து கசப்பின் உணர்வாக மாறி விட்டால் அதனின் செயலாக்கங்களாகவே மாறுகிறது.

மற்ற நல்ல உணர்வுகளோ ஞானத்தின் வழித் தொடரோ வந்தால் ஒதுக்கித் தள்ளுகின்றது. இதை எல்லாம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே தீமைகளை அகற்றிடும் உணர்வாக ஆறாவது அறிவு பெற்ற நாம் என்ன செய்ய வேண்டும்..?

1.தீமைகளை அகற்றிய அருள் ஞானியின் உணர்வினை நமக்குள் அதிகமாக்கி அந்தக் கணக்கைக் கூட்டவேண்டும்.
2.இந்தக் கணக்கு… கூட்டல் சரியாக இருந்தால் மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றும்.

இதிலே உங்களுக்குச் சிரமம் ஒன்றும் இல்லை…!

எத்தகைய நிலைகள் தீமைகள் வரினும்… அடுத்த நிமிடம் உங்களுக்குக் கொடுத்த அருள் சக்தியை உபயோகித்து அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று பல முறை எண்ணி எடுத்தல் வேண்டும்.

சித்திரபுத்திரன் (சித்திரம் + புத்திரன்) என்பது போன்று…
1.கண்ணிலே பார்த்துப் பதிவாக்கும் அந்த மகரிஷிகளின் உணர்வின் தன்மையை
2.உடலில் புத்திரனாக உருவாக்கிக் கொள்ளுங்கள்.
3.பாசத்தால் இதை வளர்த்து விடுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி வளர வேண்டும் என்று எண்ணும் பொழுது இந்தப் பாசத்தால் தீமைகளை அகற்றிடும் உணர்வாக உங்களுக்குள் விளையும்.

இந்தக் கணக்கின் பிரகாரம் உங்கள் உணர்வுகள் உயிருடன் ஒன்றிடும் நிலையாக
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எங்கிருந்து பெற்றீர்களோ
2.அவரின் அரவணைப்பில் தீமைகளை அகற்றிடும் அரும் பெரும் சக்தியாக
3.என்றுமே நிலை கொண்ட ஒளிச் சரீரமாக அது இயக்கத் தொடங்கும்.

இதைச் சாதாரணமாக நினைக்க வேண்டாம். குருநாதர் கோடி… கோடி… என்று சொல்லி எம்மை அடித்துத் தான் காட்டினார்.

1.என்னுடைய (ஞானகுரு) நினைவின் ஆற்றலை விண்ணிலே பாயும்படி செய்தார்.
2.பின் அந்த உணர்வு எவ்வாறு செயலாற்றுகிறது…? என்றும் காட்டினார்.

ஆக ஒரு சொல் தான்…! கோடி…கோடி கோடி…கோடி என்று குருநாதர் சொன்னார்…! அதற்கு நான்
1.“தெலுங்கில் கோடி என்றால் கோழி…!” என்று இடக்காகக் கேட்டதற்கு
2.இப்படியெல்லாம் பல உண்மைகளை உணர்த்தி அந்த விண்ணிலிருந்து பெறும் ஆற்றலை உணர்த்தினார்.

இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுக்கும் விண்ணின் ஆற்றலைப் பெறுதல் வேண்டும். மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே நாம் வாழ்தல் வேண்டும்.

மகேஸ்வரன் லலிதை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆகாரத்தை நாம் உண்ணும் நிலையில்… உண்ணும் ஆகாரங்களின் சுவை குணம் மணத்திற்கொப்ப கண்களால் பார்த்து எடுக்கும் சுவாசத்தின் எண்ணத்தால் ஜீரணத்தின் செயல்பாடு தொடங்கினாலும் “வாயின் கடைவாய்ப் பகுதியில் நடைபெறும் ஓர் சூட்சமம் உள்ளது…!”

ஓ…ம் என்ற வடிவத்தின் நாதமாக ஆகாயவெளி உயிரணுக்களின் கலப்பால் அந்த ஓங்கார நாதத்தையே ஒலி கொண்டு ஒளியாக்கும் தொடருக்கு வருதல் வேண்டும்.

மனிதச் சரீர அமைப்பில் சிரசையே ஓ…ம் என்ற வடிவமாகக் கண்ணுற்றுப் பார்க்கலாம். சிரசின் கீழ் தாடைப் பகுதி அசைவதிலும் ஓர் சூட்சமதைக் கண்டு கொண்டு வான இயல் தத்துவத்தையே எண்ணத்தால் உணர்ந்து தெளிந்தவர்கள் மெய் ஞானிகள்.

சிவசக்தியின் அணுக்கள் கலந்திடும் செயலில் கண்டப்பகுதியை (தொண்டை) ஆகாயம் என்றும் அங்கு கலந்திடும் அணுக்களுக்கு “{மஹேஸ்வரன் – லலிதை” என்று சூட்சமப்படுத்திக் காட்டினார்கள் ஞானிகள்.

அதாவது உணவாக உட்கொள்ளும் ஆகாரத்தையே அமில மூலங்களாக” மாற்றி… “பஞ்சேந்திரியங்கள் வழியாகச் செயல்படுத்திடும் நாடிகள் சரீரத்தின் கதியை இயக்குகிறது.

நாம் வழி காட்டிடும் தியானத்தின் தொடரில் உணர்வு (உணர்ச்சிகளாக) கொண்டு எடுத்திடும் ஒளிகாந்த சக்தியின் வீரியம் கொண்டு சரீரத்தில் சக்தியை ஈர்த்துப் பெற்று அதை விளைய வைத்து “நீல வண்ண ஒளி ஆத்மாவாக” ஒவ்வொருவரும் ஆக்கம் பெற வேண்டும்.

1.உடலுக்குள் பரப்பும் சக்திகள் அனைத்தும் மேலான அறிவெண்ணம் கொண்டு
2.உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் தியானமாக ஒன்று குவிக்கப்பட்டு
3.நீல வண்ண ஆத்மாவாக்கிடும் செயலுக்கு – “உந்திடும் விசைத் தன்மையாக”
4.கீழ் தாடைப் பகுதியினுள் அமைவு காட்டப்பட்ட மறை பொருளைத் தெளிவாக்கி விட்டால்
5.அங்கு செயல்படும் உண்மை தெளிவுறும்…!

நீலகண்டா…! என்று கழுத்தளவில் நிறுத்தி விஷத்தையே ஆக்கச் சக்தியாக மாற்றிடும் பக்குவ நிலை கிடைக்கும். அதை ஒளியின் அணுக்களாக உருவாக்கும் சூட்சமமும் புரியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இன்று எலெக்ட்ரானிக் கடிகாரத்தின் மூலம் மணிகளைக் காட்டுகின்றார்கள். “அதில் உள்ள எலக்ட்ரானிக்” அதன் குறித்த நிலைகள் வரப்படும்போது அது வந்தவுடனே மணிகளையும் தேதிகளையும் மாற்றி மாற்றிக் காட்டுகின்றது.

1.ஆனால் அதில் சிறிது நீர் பட்டுவிட்டால் எல்லாம் மறைந்து விடுகின்றது.
2.எதிர்மறையான உணர்வுகளை அங்கே பதியச் செய்யும்போது அது தாறுமாறாக வேலை செய்துவிடும்.
3.அதில் உள்ள பேட்டரி சார்ஜ் கம்மியாகி விட்டாலோ தப்பான கணக்கைக் கொடுக்கின்றது.

இதைப் போலத்தான் நம் உயிரின் இயக்கமும்…!

நாம் எண்ணும் சோர்வு சங்கடம் வேதனை போன்ற எண்ண அலைகள் அதிகமாகச் சேர்த்த பின்…
1.நமது உயிர் அந்த உணர்வின் தன்மைகளை இயக்கப்படும்போது
2.இயக்கத்தின் துடிப்பு கம்மியாகின்றது.

அப்படிக் கம்மியாகும்போது உடலின் சுருக்க… அந்த உணர்வுகள் குறையத் தொடங்கி விடுகின்றது. அந்த நேரத்தில் சீரான நிலைகளிலே கணக்கைப் பார்க்க முடியாது. நம்முடைய சொல்லும் சீராகச் சொல்ல முடியாது.

ஏனென்றால் நமது உயிர் “எலெக்ட்ரிக்காக” இருந்து… நுகரும் உணர்வுகளை “எலக்ட்ரானிக்காக (உணர்ச்சிகளாக)” அது உற்பத்தி செய்து கொண்டே இருக்கும்.

1.அதில் எந்த உணர்வின் தன்மை அதிகரிக்கின்றதோ
2.அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் மாற்றி மாற்றிக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
3.அந்த உணர்வுகளில் மாற்றங்கள் எதுவோ கண் விழி கொண்டு கலர்கள் மாறும்.
4.வெளி வரும் சொற்கள் கொண்டு உணர்ச்சிகள் மாறும்.
5.அந்த உணர்வின் சத்து கொண்டு உடலில் நிறங்கள் மாறும்.

இந்தத் தியான வழியில் சீராக இருந்தால் நீங்கள் ஒருத்தரைப் பார்த்தவுடனே ஜோசியம் சொல்லி விடலாம். ஆனால் இதைத் தெரிந்து நீங்கள் ஜோசியம் சொல்லத் தொடங்கி விடாதீர்கள்.

ஏனென்றால் இதை “அங்கக்கலை…!” என்று சொல்வார்கள். பார்த்து ஒரு சொல்லைச் சொல்லி விட்டால் எலலா உண்மைகளும் வெளியில் வரும்.

உங்களிடம் நான் (ஞானகுரு) சில நேரம் கேள்விகளையும் கேட்பேன். அப்பொழுது பதிலாக உங்களிடம் இருந்து என்னென்ன வருகின்றது…? என்றும் பார்ப்பேன்.

அதைத் தெரிந்து கொண்ட பின் உங்களுக்கு என்ன நல்ல மாற்றங்களைக் கொடுப்பது…? என்ற நிலையில் சிலதுகளை இணைத்துக் கொடுப்பேன்.

அதாவது உங்கள் சொல்லுக்குள் வேறு ஏதாவது நாம் மாற்றிச் சொல்லும் பொழுது… இந்த உணர்வு வந்தவுடன் உங்களுக்குள் இருப்பதை எல்லாம் கக்கிக் கொண்டே இருப்பீர்கள்.

இந்த அலைகளை தொடர்ந்தவுடன் எந்த அருள் உணர்வை எதை எதை இணைத்து உங்களுக்குள் கலக்க வேண்டும் என்று சொல்லி யாம் கொடுக்கின்றோம்..
1.தமாஷாகச் சொல்வது போல் இருக்கும்…
2.ஆனால் அதற்குள் ரொம்ப விஷயம் இருக்கும்.

அதாவது உங்களுக்கு எந்த அறிவைக் கொடுக்க வேண்டும்…? என்ற வகையில் கொடுக்கின்றோம். ஆகையினால் இது “குரு வழி…!”

பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் படிக்கின்றார்கள் என்றால் வாத்தியாருக்கு ஒருத்தர் மேல் வெறுப்பாகி விட்டது என்றால் அந்த வெறுப்பின் தன்மையினால் அவர் பாடத்தைக் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்வார்.

வாத்தியார் அழுத்தமாகச் சொன்னவுடன் அந்த மாணவனுக்குப் பயத்தின் உணர்வு வந்தது…! என்றால் வாத்தியார் என்ன சொன்னாலும் இங்கே அவனுக்குள் பதிவாகாது. ஏனென்றால் அந்த உணர்வின் இயக்கத்தின் நிலைகள்.

1.அதே சமயத்தில் பார்வையின் நிலைகள் என்னவாகும்…? இருட்டாகும்… கலர் கறுப்பாகும்.
2.எந்த நல்லதையும் பார்க்க முடியாது.
3.இருள் சூழ்ந்த நிலையாகும். உடலுக்குள் அது நஞ்சாகும்.

ஏனென்றால் நல்ல பொருளுக்குள் நஞ்சு கலந்தால் எப்படியோ அது போல் நல்ல சிந்தனை வராது. விஷத்தின் தன்மை கொண்ட உணர்வாக மாறிவிடும்.

அச்சமயம் பதிவு செய்த நிலைகள் அது சீராக வராது. சொல்வது அர்த்தமாகின்றதல்லவா…!

இது எல்லாம் நமக்குள் மோதும் எதிர்மறையான இயக்கங்களால் வரும் போது ஏற்படும் நிலைகள் தான்…!

02.04.2021 உபதேசம்

இன்னொரு பிறவியை மீண்டும் சொந்தமாக்க வேண்டாம்…!

 

உங்களுக்கு எது சொந்தம்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்த மனித வாழ்க்கையில் எப்பொழுதுமே அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெருக்குங்கள். அதைச் சொந்தம் ஆக்குங்கள்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறருடைய குறைகளைச் சொந்தமாக்க வேண்டாம். அந்தச் சொந்தத்தைக் கொண்டாடவும் வேண்டாம்

ஏனென்றால் அதைக் கொண்டாடி விட்டால் பகைமையான உணர்வு கொண்டு எந்தக் கூட்டத்தில் நீங்கள் சேர்ந்தாலும் அதன் இனப்பெருக்கமாக மாறி விடுவீர்கள்.

நமக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தும் எதனை எடுக்கின்றோமோ உணர்வின் செல்கள் அனைத்தும் அதனதன் கூட்டமைப்பாக மாறும்.

உதாரணமாக மான் அதனுடைய இனக் கூட்டமைப்பாக இருந்தாலும் அதுவே மற்ற மானின் குணங்களுக்கு ஒப்ப இணைந்து கொண்டால் வகை வகையான மான்களாக வருகின்றது. அப்படி உருவான பின் அதனதன் கூட்டம் அதனுடன் சேர்ந்து கொள்கின்றது.

1.இதைப் போலத்தான் இந்த உடலுக்குள் எதனின் பெருக்கமாக எந்தெந்தக் குணத்தை அதிகமாக்கிக் கொண்டு வருகின்றோமோ
2.நம் உடலுக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தும் அந்த உணர்வின் தன்மையாக மாற்றி
3.அதனின் கூட்டமைப்பான நிலைகள் கொண்டு அந்தக் கூட்டங்கள் எங்கே வாழுகின்றதோ
4.அங்கே நம் உயிர் அழைத்துச் சென்றுவிடும்.

அதாவது நம் உயிரான்மா மற்றொரு கூட்டமைப்புக்குள் சென்று அதனின் உடலுக்குள் நுழைந்து ஆடாகவோ கோழியாகவோ மாடாகவோ புலியாகவோ பாம்பாகவோ மாற்றிவிடும்.

கேரளாவில் ஒடியன் மந்திரம் என்று உண்டு. அந்த மந்திரங்களை நூறு முறை ஆயிரம் முறை என்று சொல்வார்கள். ஆனால் வெறும் மந்திரம் என்று தான் அவர்களுக்குத் தெரியும்.

ஆனால் அந்தந்த உயிரினங்களில் பெருக்கக்கப்பட்ட உணர்வுகள் ஒலி அலைகளாக எடுக்கப்பட்டு இந்த உணர்வின் தன்மை எப்படி வருகின்றதோ இதைப் போல ஒரு மாட்டின் இறைச்சியின் உணர்வு கொண்டு அந்த உணர்வின் ஒலிகளைக் கூட்டப்படும் பொழுது அந்த உணர்வின் அலைகள் இங்கே ஆன்மாவில் பெருகும்…. அங்கே அந்த உடலுக்குள் செல்லும்.

மீண்டும் இதனை அகற்றும் உணர்வோடு இன்னொருவர் சொன்னார் என்றால் இந்தக் கூட்டை விட்டு மீண்டும் வெளியே வரும். மீண்டும் இன்னொரு கூட்டிற்குள் சென்று தனித் தன்மையாக அதனுள் சென்று அதுவாக இயக்கும். இதைப் பார்க்கலாம்…!

இதை எல்லாம் நான் (ஞானகுரு) தெரிந்தே சொல்கின்றேன். பாடப் புத்தகத்தில் பார்த்துப் படித்துச் சொல்லவில்லை.

குருநாதர் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தைகளைச் சொல்லிக் கொடுத்தார். அந்த உணர்வின் தன்மை பெருக்கப்படும் பொழுது அந்தந்த உடலுக்குள் செல்ல நேர்கின்றது.

மாட்டிற்குள்ளும் போகச் செய்தார் பாம்பிற்குள்ளும் போகச் செய்தார் யானைக்குள்ளும் போகச் செய்தார்.
1.இதை எல்லாம் எளிதில் சொல்லவில்லை. நேரடியாகக் கண்ட உண்மைகள் இது.
2.அப்படியே விட்டால் என்ன ஆகும்…? என் உயிரான்மா என்ன ஆகும்..!
3.ஏனென்றால் குருநாதர் என்னை எப்பொழுதுமே அவர் கைப் பிடித்து (கைவல்யம்) வைத்திருந்தார்.

இதைப் போல உணர்வுகளை இயக்கச் செய்து அதனின் உணர்வின் தன்மை கவர்ந்து கொண்டபின் உயிரான்மா உடலை விட்டுச் சென்ற பின்
1.எந்த நிலை பெறுகின்றது…? எதனின் உடலில் ஈர்க்கப்படுகின்றது…?
2.மனித உடலில் இதைப் பெருக்கிய பின் அந்த உடலுக்குள் போய் அதை எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையையும்
3.அதிலிருந்து மீண்டும் வெளி வர வேண்டும் என்றால் என்ன செய்வது…?
4.மனித உடலில் இதை எல்லாம் உருவாக்கப்படும் போது
5.இந்த உணர்வின் தன்மை கொண்டு அடுத்த பிறவி எப்படி வருகிறது…? என்றெல்லாம் நேரடியாகக் காட்டினார் குருநாதர்.

இந்த உடலுக்குப் பின் நாம் இனி பிறவி இல்லை என்ற நிலை அடைய வேண்டும். அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும். அதற்குத் தான் இதை எல்லாம் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

குருவாக வழி காட்டுபவன் எப்படி இருக்க வேண்டும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

“மெய்யை மெய்யால் உணர்தலும் ஒன்று…
அறிவை அறிவால் அறிதலே நன்று…!

1.கோடாயுதம் கொண்டு மத்தகத்தால் தகர்க்கப்பட
2.மேலாம் அறிவு சித்தித்தது…! என்பது
3.மெய்ப் பொருள் காணும் நிலை.

வழி வழியாக வந்த இந்தத் தத்துவங்கள் அனைத்தும் “குருவால் உபதேசிக்கப்பட வேண்டும்…!” என்று மறைபொருள் ஆக்கப்பட்டுவிட்டது.

குரு என்பவன் மெய்ப் பொருளின் உண்மையை நாடிக் கோபம் சுடு சொல் தவிர்த்து மெய் ஞானம் உரைத்தலே நன்று. ஆனால்
1.இனிய சொல்லால் வார்த்தைகள் ஆடி (ஏமாற்றும் நிலை)
2.நிலையற்ற பொருள் செல்வத்தை அடைவதிலும் அல்லது
3.அதை அளிப்பதற்கும் தான் ஒரு கருவியாகச் செயல்படும் எண்ணத்தையும் தவிர்த்திடல் வேண்டும்.

தான் பெற வேண்டியதைப் பெற்றே… உயர்த்திடும் வழியாகப் பேரருள் செல்வத்தைப் பெற்றிடவே… பூமியின் ஈர்ப்புப் பிடிப்பில் சிக்குண்டுவிடும் எண்ணச் செயல்களை எல்லாம் களைந்திடல் வேண்டும்.

குரு என்பவன்…
1.மெய்ப் பொருளை வாய்மையால் உபதேசிக்கும் நிலையில் நின்று
2.அறிவின் அமைதிக்கு வழி காட்டிட வேண்டுமப்பா…!

ஆனால் இன்றைய குருமார்கள் செல்வத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். எந்தச் செல்வத்தைக் கண்டுபிடிக்கப் போகின்றார்கள்…?

வாழ்க்கை நிலையில் அருள் செல்வம் பெற்று உயர் நிலை பெற வேண்டியவன்…
1.செல்வச் செழிப்பை எண்ணத்தில் கொண்டு…
2.அதி ஆசைக்குத் தன்னையே அடகு வைத்து…
3.உயர் ஞானத்தால் ஆத்ம பலம் பெற்றிட வழிகாட்ட வந்த உபதேசியின் (குரு) நிலை எல்லாம்
4.குறி சொல்பவனின் நிலை ஆகிவிட்டது…!

அந்த நிலை நமக்கு வேண்டாம். “நான் தான்…!” என்ற நிலையே உயர் ஞான வளர்ப்பிற்குத் தடைக்கல் ஆகிவிடும்.

அறிவை அறிவால் அறிவது என்பதே தத்துவப் பொருள் காட்டப்பட்ட உண்மையின் சாரங்களைக் கைக் கொள்ள வேண்டும் என்பதே…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

எத்தனையோ கோடி உணார்வுகள் சேர்த்துத் தான் ஒரு நாதமாகின்றது. ஆகவே அணுவின் தன்மை பல கோடி ஆனாலும் இந்த உணர்வின் தன்மைகள் இணைத்து இணைத்துப் பல கோடி ஆகின்றது கோடி…கோடி… என்று…

இந்தக் “கோடி” என்ற நிலைகள் வரப்படும் பொழுதுதான்
1.ஒரு சொல் எவ்வாறு வருகின்றது…?
2.அதனுடைய மணம் எவ்வாறு வருகின்றது…?
3.அதனுடைய குணம் எவ்வாறு இயக்குகின்றது…?

இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு செடியை எடுத்துக் கொண்டால்
1.அதனுடைய “மணம்” வேறு.
2.அதை நாம் சுவையாகச் சுவைக்கப்படும்போது “குணம்” வேறு.
3.அதுவே நம்முடைய எண்ணத்துடன் சேர்த்து “உணர்வாக” இயக்கும் நிலைகள் வேறு.
4.அதுவே உடலாக இயக்கி உணர்வாக வரும்போது “அமுங்கும்” நிலை வேறு.
5.ஒரு காரத்தின் உணர்வை எடுத்துக் கொண்டால் நமக்குள் “கோபமே” அதிகமாகச் சேரும்
6.அதே சமயத்தில் நம்மைப் பார்ப்போருக்கும் உடலில் “எரிச்சல்” வரும்.

இதைப் போல பல கோடி உணர்வின் தன்மை தனக்குள் வரும்போது ஒருத்தரைப் பார்த்தவுடனே வெறுப்பு வருகின்றது. அவருடைய மணத்தை நாம் சுவாசிக்கும்போது
1.அந்த உணர்வுகள் நம்மை அறியச் செய்கின்றது
2.இந்த உணர்வின் சத்து சொல்லாக வெளிப்படுகின்றது
3.”அயோக்கியன்” என்று… அந்த உணர்வின் சொல்லாக நாதங்களாக மாறும்.

அதாவது…
1.நாம் நுகர்ந்து பார்க்கும்போது “மணமாகின்றது…”
2.உயிரோடு ஒன்றி இயக்கப்படும்போது “உணர்வாகின்றது..”..
3.இது சொல்லுடன் இணைத்து வரப்படும்பொழுது சுருதி மாறுகின்றது.

இரண்டு பையன்கள் இருக்கின்றார்கள் என்றால் அதிலே இனிமையானவனைப் பார்க்கப்படும்பொழுது வாடா கண்ணு…! என்ற சொல் வருகிறது.

இன்னொருத்தன் மோசமான நிலைகளைப் பேசப்படும்போது அவனைப் பார்க்கும்போது ஒரு மாதிரியாக இருக்கும் அவனைப் பார்க்கும்பொழுது என்ன… என்னப்பா…?! என்போம்.

ஏனென்றால் அந்த உணர்வுகள் எதுவோ அதற்குத் தகுந்த “சுருதி” இங்கே வரும். நம்முடன் இணையும் சுருதிகள் எதுவோ அதற்குதகுந்த “நிறங்கள்” வரும். நிறங்கள் எதுவோ அதற்குதகுந்த “மணங்கள்” வரும். மணங்கள் எதுவோ அதற்கு தகுந்த “எண்ணங்கள்” வரும்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதல்லவா…?

கோபமாக அடிக்கடி பேசிப் பாருங்கள்…
1.அந்தக் கோபம் வருவோருக்கு அவர்கள் உடல் முதலில் “சிவப்பாக” இருக்கும்.
2.கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாகக் கோபம் கூடிக் கொண்டே வந்தது என்றால் உடல் “கருத்துவிடும்…”

அப்பொழுது அந்த மணமும் அந்தச் சுவையும் மாறும். எடுத்துக் கொண்ட உணர்வு அதிகமாகக் கோபித்து வரும்போது நிறம் மாறிக் கொண்டே வரும்.

அதைப் போல ஒரு கோபித்தவரை வேகமாகப் பார்க்கின்றீர்கள். அந்தக் கார உணர்வுகள் பட்டவுடன் கண் சிவந்து போகின்றது…. உடலில் நடுக்கமாகின்றது. அந்த உணர்வின் இயக்கம் அதுவாகின்றது.

அந்த மணத்தின் தன்மை… உமிழ் நீர் நாக்கில் சுவை மாறுகின்றது. கோவித்துவிட்டுப் போய் நல்ல சுவையான சாப்பாடைச் சாப்பிட்டோம் என்றால் இந்த கோபத்தின் உணர்வுகள் வரும். நல்ல சுவையை அறிய முடிவதில்லை.

கோபத்தால் நினைவுகள் வரும்பொழுது நல்லதை நாம் அறிய முடியாது… உணர்வால். ஏனென்றால் நாம் மணத்தால் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் எப்படி இயக்குகின்றது என்ற நிலையை தெரிந்து கொள்ள வேண்டும்.

மகிழ்ச்சியாகப் பேசும்போது பார்த்தால்… முகத்தில் “பளிச்…” என்று நிறம் மாறும். இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே சொல்கிறேன்.

01.04.2021 உபதேசம்

ஞானிகளின் உணர்வைப் பெறும் தகுதியை உங்களுக்கு எப்படி ஏற்படுத்திக் கொடுக்கின்றேன்…?

 

ஒரு தீமை செய்பவனைப் பார்த்துப் பதிவு செய்து கொண்டபின் “இப்படிச் செய்தான்… செய்தான்…” என்று தீமையின் உணர்வுகளை நமக்குள் பெருக்கும் பொழுது அந்த கணக்கின் அளவுகோல் கூடும் பொழுது நாமும் தீமை செய்யத் தொடங்கி விடுகின்றோம்,

தீமை செய்பவன் என்று அவனைச் சொல்கின்றோம்…! ஆனாலும் அவன் மீது இருக்கும் தீமையான எண்ணம் நமக்குள் அதிகமாக வரும் பொழுது தீமைகள் வளர்ந்து வளர்ந்து… தீமையின் கணக்கே கூடிக் கூடி தீமையின் விளைவே வருகின்றது.

தீமை செய்யும் நினைவுகள் வரும் பொழுது தீமையின் உடலாக மாறுகின்றது… அந்தத் தீமையின் நிலைகளினால் உடலில் நோயாக மாறுகின்றது.

அதனால் வரும் வேதனையின் தன்மை கூடினால் இதனின் கணக்கின் பிரகாரம் அந்தத் தீமையின் உணர்வுகளை வளர்த்துக் கொண்ட பின்…
1.எவனால் தீமையானதோ அவனின் இடத்தைத் தேடிக் கொள்கிறோம்
2.அங்கேயும் தீமையை உருவாக்குகின்றோம்
3.அவனுக்குள் சென்று அதையே முழுமையாக்குகின்றோம்
4.அந்த உடலையும் வீழ்த்துகின்றோம்…!

எவன் எவ்வாறு சொன்னானோ அவனை வீழ்த்தி… “நீ அவ்வழியே செல்…! நானும் என் வழியிலே செல்கின்றேன்…” என்று கீதையிலே நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் என்பது போல ஆகிவிடுகின்றோம்.

ஆக… எந்த நஞ்சின் தன்மை அளவுகோல் கணக்கு எந்த அளவு அதிகமாகின்றதோ இதைப் போல ஆன பின் தேளிடமோ பாம்பிடமோ நரியிடமோ நாயிடமோ இதைப் போன்ற உயிரினமாக நாம் உருவாக நேரிடும்.

1,நம் உயிரின் வேலை அது தான்.
2.ஏனென்றால் உயிர் நெருப்புக்குச் சமம் தான்
3.நெருப்பிலே எந்தப் பொருளைப் போட்டு நாம் கலக்கின்றோமோ
4.அதில் வேக வைத்த அந்தப் பொருளின் சுவையும் மணமும் தான் வரும்.

அது போல நம் உயிரின் தன்மை நாம் நுகரும் உணர்வின் தன்மை எதுவோ… அதை உயிரணுக்களாக மாற்றிப் படைத்து விடுகின்றது.

நாம் கண்ணால் பார்க்கும் பொழுது பதிவாகி உணர்வால் நுகரும் தன்மை வருகிறது. எதனின் உணர்வைத் தனக்குள் எடுக்கின்றோமோ இந்த உணர்வின் அலையாக உடலின் அமைப்புகள் வருகின்றது.

சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் என்று சொல்வது போல்… நாம் எதனின் நிலைகள் கொண்டு உற்று நோக்கி அதைப் பெற வேண்டும் என்று எண்ணுகின்றோமோ இந்த உணர்வின் சத்து நமக்குள் பதிவாகி உடலிலே விளைந்து அதனின் கணக்கின் பிரகாரம் அந்தக் கூட்டமைப்புக்குள் செல்வோம்.

1.ஆகவே அந்த மெய் ஞானியின் உணர்வு கொண்டு என்றும் பிறவா நிலை என்ற நிலையை அடைய
2.அவர்கள் அருளுடன் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் கூட்டி
3.அந்த ரிஷிகளுடன் இணைந்து இருப்பதே மேல்…!

மீண்டும் மீண்டும் சொல்கிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்…! உங்கள் வாழ்க்கையில் அடிக்கடி வரும் இடையூறுகளுக்கு மத்தியில் அந்த மகரிஷியின் அருள் உணர்வுகளை இணைத்து இணைத்துக் கொடுத்துக் கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).

பயிரினங்களில் வீரிய வித்தாக்கி அதிலே மகசூலைப் பெருக்க வேண்டும் என்றால் முதலில் ஒரு முறை உரத்தை இடுகின்றோம். அது எடுத்துக் கொண்ட பின் அடுத்த முறை அந்தத் தாவர இனத்தை மீண்டும் புதுப்பிக்கின்றோம்.

அதிலே வரும் வளர்ச்சிக்குத் தக்கவாறு இணைத்து இணைத்துத்தான் வித்தின் தன்மை வீரியமாகப் புதிதாக மாற்ற முடியும். ஒரு வித்தின் தன்மைக்குள் இணைத்து வளரும் பருவத்தில்

ஒரே தடவையில் நேரடியாகக் கொண்டு வர முடியாது.

அதனைப் பல முறைகள் கொண்டு இணைத்து இணைத்து… அது மாற்றுப் பொருளாக உருவாக்கி உருவாக்கி… அதன் பின் அதைச் சீரான வளர்ச்சிக்குக் கொண்டு வந்து ஒன்றிணந்து இயக்கும் நிலைக்குக் கொண்டு வர முடியும்.

ஏனென்றால்…
1.நமக்குள் வேதனைப்படும் உணர்வுகள் ஏராளம் ஏராளம்
2.பகைமையான உணர்வின் வித்துகளாக எடுத்துக் கொண்டது ஏராளம் ஏராளம்
3.தன்னைக் காத்துக் கொள்ளும் தன்மைக்கு கோபத்தின் தன்மை எடுத்துக் கொண்டதும் ஏராளம் ஏராளம்.

இதைப் போல நமக்குள் வித்துக்கள் அதிகமாகப் பெருக்கி இருக்கும் நேரத்தில் இது அனைத்தையும் ஒருங்கிணைத்து இதையெல்லாம் இணைத்து அரவணைத்து அதை அடக்கி உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிய அருள் ஞானிகள் உணர்வின் தன்மை கொண்டு இதைச் செயல்படுத்த முடியும்.

1.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் உங்களில் இணைந்து வரும் குணத்துடன்
2.அந்த ஞானிகளின் அருள் சக்திகளை இணைத்து இணைத்து
3.இந்த உணர்வின் தன்மை இரண்டு முறை மூன்று முறை என்று
4.தொடர்ந்து கொடுக்கும் இந்த உபதேச உணர்வுகளைப் பிணைத்துப் பிணைத்து
5.அந்த மகரிஷிகளின் அருள் ஆற்றலை எடுக்கும் தகுதியை
6.உங்களை எப்படியும் பெறச் செய்ய வேண்டும் என்று தான் இதைச் செய்து கொண்டிருக்கின்றோம் (ஞானகுரு).

அது அல்லாதபடி வெறுமனே பாடப் புத்தகங்களைப் படித்து விட்டு… “நன்றாக இருக்கிறது…!” என்ற நிலையில் தூக்கி எறிந்து விடுவது போன்று செய்து விட்டால் அதற்கு அடுத்து அந்த மகரிஷிகளின் நினைவு வராது.

ஆகவே அதைப் போன்று ஆகாதபடி… “எந்த ஞானிகளின் அருளாற்றலை இங்கே உங்களிலே பதிவு செய்கின்றோமோ…” இந்தப் பதிவின் நினைவாற்றல் தூண்டப்பட்டு அந்த மகரிஷிகளின் அருள் ஒளி ஓங்கி வளர வேண்டும் என்று உங்கள் மனதில் இதைப் பதிவு செய்து கொள்ளுங்கள்…!

அது உங்களை அங்கே அந்த ரிஷிகள் வாழும் இடத்திற்கு அழைத்துச் செல்லும்…!

உணவு உடலுக்குத் தேவை என்றாலும் அதனால் விளையும் குண நலன்களின் மாற்றங்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நாம் எடுத்த வினைக்கு நாயகன் இந்தச் சரீரம் என்றால் முழுமையின் பொருள் விளங்கிடுமா…? உருவத்தில் மனித உடலையும் யானையின் தலையையும் சித்தர்கள் காட்டியதன் சூட்சமப் பொருள் என்ன…?

மனித மனம் தீய குணத்தின் வசம் ஆட்படும் பொழுது எடுக்கும் எண்ணச் செயல் சோர்விற்குப் பின் உணர்வுகளின் உந்துதல் காமத்தின் வழி மோகமாகின்றது. அந்தச் சூட்சமப் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

1.விநாயகருக்குப் பெரிய வயிற்றினைக் காட்டி
2.சகல உலகமும் அதனுள்…! என்று தத்துவம் கூறினால் புதிர் விடுபடுமா…?

உணவாக உட்கொள்ளும் உணவின் அந்த அமில குணங்கள்
1.சலிப்பின் செயலுக்கு மனித மனத்தின் உணவின் மாறுபாட்டால்
2.பத்துத் தலைகள் கொண்ட உருவம் உதித்தது… என்பதுவே
3.”உணவினால் உண்டாக்கப்பட்ட மோக குணங்கள் தான்…”

அந்த மோகத்தின் செயலைச் சித்தரிக்கவே எலியை வாகனமாகக் காட்டினார்கள். பூமிக்குள் மறைந்து வாழும் எலியைப் போல்
1.மனித மனத்தில் புதைந்து கிடக்கும் காமமும்
2.உணவின் செயலால் உணர்வுகள் கிளர்ந்தெழுந்த மோகமும் உள்ளது என்ற உண்மையை உணர வேண்டும்.

வினையின் நாயகனே விநாயகர் என்று சொன்னதன் உட்பொருள் என்ன…?

எண்ணம் கொண்டு எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப உருவான இந்தச் சரீரமான நாயகனைக் கொண்டு தன் உயிராத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்பதே…!

பூமியின் ஈர்ப்பில் வாசனை கொண்டு எடுத்துக் கொண்ட எண்ணம் கொண்டு தன்னை அறியும் பக்குவ கதிக்காக வேண்டி
1.அன்று சித்தனால் வழியமைத்துக் காட்டிய
2.சூட்சம உருவகப்படுத்திக் காட்டப்பட்டதே விநாயக உருவம்.

இந்தச் சரீர பிம்பத்தில் இருக்கும் கோடானு கோடி உயிரணுக்களும் வினையின் நாயகன் செயலுக்குத் தியான ஈர்ப்பின் தொடரில் ஆட்கொள்ளப்பட்டுச் சக்தி ஈர்த்துச் சக்தி அளித்திடும் செயல் வழியின் உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்திடல் வேண்டும்.

அதை உணர்ந்தால் உலக வாசனைப் பிடிப்பில் வாழும் நாம் ஒலி கொண்டு ஒளி பெற்றிடும் நிலையில்
1.உயிர் குரு (நம் உயிராத்மா) தன் தனித்துவச் சக்தியைப் பெற்றுக் கொள்ள
2.கணங்களாகிய இந்தச் சரீரத்தில் உள்ள உயிரணுக்களுக்கு ஒளி சக்தியை ஊட்டி
3.அந்தக் கணங்களின் கூட்டத்தில் “பதியாக” ஓர் சிறப்பிடத்தை உயிராத்ம சக்தி பெற்று
4.தன் வலு ஈர்ப்பின் சக்தி கொண்டு வலுவின் வலு வீரியமாகத் தன்னை வளர்ச்சிப்படுத்திட முடியும்.

இப்படி ஒவ்வொரு உயிரும் ஆத்ம சக்தியின் கலப்பில் தன்னைத் தானே வளர்ச்சிப்படுத்திக் கொள்ளட முடிந்திடுமே அல்லாது “பிறிதொருவர் அளிப்பது அல்ல எந்த ஜெப சக்தியையுமே…!”

மகரிஷிகள் சூட்சமம் கொண்டு உணர்த்திட வருவதெல்லாம்…
1.தங்களின் வழித் தோன்றல்கள் வாழையடி வாழையாக வரும் உயிராத்மாக்கள்
2.”நன் நிலை பெற வேண்டும்…” என்ற பாச உணர்வினால் தானப்பா…!

இந்தச் சரீரத்தின் செயலில் அகத்தியர் அன்று காட்டினார் “வாதாபி ஜீரணம்…” என்று. வாதாபி ஜீரணம் என்றால் என்னப்பா…?

அறிந்து கொண்டிருக்கும்… அனைத்தையும் உணர்ந்து கொண்டிருக்கும் நிலையில்… அறியாத நிலையில் அசுர குணங்கள் மனிதனின் எண்ணத்தில் ஆட்கொள்ளும் பொழுது உடலில் சோர்வும் ஜீரண அவஸ்தையும் ஏற்படுகின்றது.

அதன் பின் அந்த அசுர குணங்களினால் இந்தச் சரீரம் கொண்டு செயல்படுத்திட முற்படும் மோக உணர்வுகளையும்… அந்த மோக உணர்வுகளைத் தூண்டிடும் உயிரணுக்களையும்… “ஞானாக்கினியான எண்ணம் கொண்டு சுட்டெரித்ததே வாதாபி ஜீரணம்…!”

பத்துத் தலைகள் என்று காட்டியதெல்லாம் மோகத்தின் கிளைகளே…!

“உணவின் மாறுபாடும்…” மோக உணர்வுகளைக் கூட்டும். அதைச் சுட்டிக் காட்டுவதே விநாயக உருவத்தில் சிவப்புத் திலகமிட்டுக் காட்டப்பட்டது.

எடுக்கும் எண்ண வலுவில் ஈர்த்து ஒளியைக் கூட்டிக் கொள்ளும் ஜெப நிலை பெற்றவன் மனிதச் சரீரம் கொண்டே உயிராத்ம சக்தியை உயர்த்திடல் வேண்டும் என்றால் “நாவின் சுவைக்கு…” அடிபணிந்திடாத பக்குவத்திற்கு வர வேண்டும்.

1.உணர்வுகள் கிளர்ந்திடும் மூலமே “வயிறு…” என்றும்
2.மோகத்தின் கிளர்தலின் மூலமும் அங்கு தான்… என்றும்
3.அந்த மோகத்தின் கிளைகள் வலுப் பெற்று விட்டால் அறிவின் ஆற்றல் சிதைந்து விடும்…! என்ற
4.அந்த உண்மையின் கருப்பொருளை உணர்த்திடவே ஞானக்கண் என்றும் செந்தூரத் திலகம் என்று காட்டினார்கள் சித்தர்கள்.

நாம் கொள்ள வேண்டிய உயர் ஞான வலுவைப் பெற்று விட்டால் உரப்புயலாக எழுந்த அந்த மோக குணங்கள் அனைத்தும் ஞான அக்கினியில் பொசுங்கிவிடும்.

“எண்ண வலு கொண்ட ஜெப சக்தி பெற்றவனால்…” உணவின் உயிரணுக்களையும் அதனின் மோக குணங்களையும் மாய்க்க முடியும்.
1.அவைகளையும் தன் சரீர ஒளி உயிரணுக்களுடன் ஒன்றச் செய்து
2.அவைகளுக்கும் சக்தி அளித்திட முடியும் என்பதன் பொருளை
3.ஆய்ந்து தெளிந்து செயல்பட வேண்டும் என்பதே இந்தப் பாடத்தின் சிறப்பு.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒரு மனிதனுக்குள் மனிதன் விளையச் செய்யும் உணர்வுகள் நமக்கு முன் இங்கே இந்தக் காற்று மண்டலத்தில் உண்டு.

ஒரு மனிதனுக்கு மனிதன் அதிகமாகப் பற்று இருக்கும் பொழுது அந்த மனிதன் இறந்து விட்டால் அதே பற்றுடன் வரும் பொழுது
1.புலனடங்கி நாம் தூங்கப்படும் பொழுது அந்த மனிதனின் உருவம் கிடைக்கும்.
2.அவன் செய்த நிலையும் நாம் கனாக்களாகப் பார்க்க முடியும்.

கனவுகளில் பல விதமான அற்புதங்களும் சில நடக்கின்றது. எப்படி…?

ஒரு மனிதன் ஆசைப்பட்டு இருக்கும் பொழுது அந்த உணர்வுகள் அதிகமாகி விட்டால் எதன் மேல் எப்படி ஆசைப்பட்டானோ இது இணைக்கப்பட்டு இந்த உணர்வுகள் நம் ஆன்மாவில் பெருக்கப்பட்டால்
1.நாம் புலனடங்கித் தூங்கப்படும் பொழுது உயிரிலே பட்டு
2.அதனின் உணர்வின் கலவையாக அந்த உணர்ச்சிகள் தூண்டுவதும்
3.எதனுடைய நிலைகளோ – நாம் ஆசைப்பட்ட உணர்வுகளும் ஒன்றாக இருக்கும் பொழுது
4.அந்த அலையின் உணர்வு ஆசைப்பட்ட உணர்வுகள் இங்கே வந்திருக்கப்படும் பொழுது
5.இது இரண்டும் கலந்து பார்க்காத ஆளின் உருவமும்
6.அதன் வழி நமக்குள் அந்த இன்பம் பெறுவதையும் சில கனவுகளில் பார்க்கலாம்.

ஆகவே நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நாம் புலனடங்கித் தூங்கினாலும் “உயிரிலே பட்டுத் தான்” இந்த உணர்வுகள் தனக்குள் வருகின்றது. கனவு என்று சொல்வது இது தான்.

நாம் எதைப் பதிவு செய்கின்றோமோ அந்தப் பதிவின் நிலைகள் கூட்டப்படும் பொழுது
1.உணர்வுகள் எது முந்தி வருகின்றதோ
2.அந்த உருவங்களும் நமக்குள் வருகின்றது.

ஒரு அச்சுறுத்தும் நிலையோ… பயம் காட்டும் நிலைகளையோ… விபரீத விளைவுகளையோ… இதுகள் எல்லாம் நாம் எண்ணி எடுத்துக் கொண்ட உணர்வுகள் உடலிலே பதிவான பின்
1.எதன் வழிகளில் அன்றைய வாழ்க்கையில்
2.நாம் எதை முன்னணியில் அதிகமாக வைக்கின்றோமோ அது நம் ஆன்மாவில் கூடப் பெற்று
3.புலனடங்கி இருக்கும் பொழுது நமக்குள் கனவுகளாக வருகின்றது என்பதனை நம் குருநாதர் தெளிவாகக் காட்டினார்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்று உணர்ந்து கொள்ளுங்கள்.

போகர் பல அற்புதங்கள் செய்தார் என்பார்கள். குருநாதரிடம் சில மருந்துகளை அரைத்து விஷ்ணுவிடம் வரம் வாங்கி முருகனுடைய சிலையைச் செய்தார் என்றெல்லாம் அன்று எழுத்து வடிவே இல்லாத பொழுது கற்பனைக் கதைகளைக் கட்டியிருப்பார்கள் பின் வந்தோர்கள்.

எழுத்து வடிவு வந்த பின் போகர் எழுதிய சக்கரங்கள் என்று போகர் சமாதியை வைத்திருப்பார்கள். இதைப் போன்றெல்லாம் அவர் பேரைச் சொல்லி ஒவ்வொன்றையும் மாற்றி உண்மையின் உணர்வுகளை அறிய முடியாதபடி காலத்தால் மாறிப் போய்விட்டது.

அன்று போகன் ஒரு மனிதன் எப்படி முழுமையானான்…? என்று கண்டுணர்ந்தான் என்பதை நம் குருநாதர் காட்டினார்.

விஷத்தின் தன்மை எப்படி இயக்கப்பட்டது…? அணுக்களால் கோள்களாகி நட்சத்திரமாகிச் சூரியனாகி சூரியனாக ஆன பின் கோள்களை உருவாக்கி நட்சத்திரங்களை உருவாக்கி ஒரு பிரபஞ்சமாகி முழுமை அடைந்த பின் தான் ஒரு உயிரணுவின் துடிப்பு ஆகின்றது. பிரபஞ்சம் முழுமை அடைந்த பின் தான் ஒரு அணுத் தன்மையாகி உயிரணுவின் தோற்றம் அடைகின்றது.

1.27 நட்சத்திரங்களின் உணர்வுகள் ஒவ்வொரு தாவர இனங்களிலும் மண்ணிலும் எப்படிக் கலக்கின்றது…?
2.அதே போல உயிரணு தோன்றிய பின் அதிலே எப்படிக் கலக்கப்படுகின்றது…?
3.அந்த உணர்வுகளை இந்த உயிரணு நுகர்ந்த பின் உணர்வுக்கொப்ப மீண்டும் அதை இயக்குகிறது…?
4.அந்த உணர்வுக்கொப்ப உடல்கள் எப்படி மாறுகிறது…? என்பதைத் போகன் கண்டுணர்ந்தார் என்று தெளிவாகக் கூறினார் நம் குருநாதர்.