April 2021 உபதேசம்

என்ன தியானம் செய்து… என்ன பலன் என்பார்கள்…!

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அடிக்கடி தியானிக்க வேண்டும் என்று உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்… நினைவுபடுத்துகிறோம்.

அதை வைத்துத் தீமைகள் புகாது பாதுகாத்துக் கொள்ள வேண்டியது உங்களுடைய பொறுப்புதான்…!

ஒரு பொருளுக்கு ஆசைப்படுகிறோம் கிடைக்கவில்லை. அதே போல் நமக்கு வேண்டியவர்களுக்கு உடலில் நோயாகி விட்டது. சரியாகவில்லையே…! என்ற நினைவைச் செலுத்தினால் வேதனை உணர்வு தான் வருகிறது. அத்தகைய நேரத்தில் நல்ல உணர்வு பெறும் தகுதியை இழந்து விடுகின்றோம்.

எத்தனையோ தியானம் இருந்தாலும் கூட இப்படி எல்லாம் வருகிறது என்று சில பேர் எண்ணுகின்றனர்.

1.அத்தனை தியானம் செய்தேன்… என் பிள்ளைக்கு உடல் நலம் இல்லாது போய்விட்டது…!
2.எவ்வளவு தியானம் செய்தேன்…? என்னிடம் சண்டைக்கு வருகின்றார்களே…! என்று
3.இந்த உணர்வை எடுத்து எடுத்து இப்படி மாற்றிக் கொண்டிருந்தால்
4.உணர்வுகள் அங்கே (தீமையின் பால்) சென்று விடும்… நினைவுகள் தீமையின் பக்கமே சென்றுவிடும்.

ஆகையினால் அது போன்று வராதபடி அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டுமென்று அதை வலுவாக்க வேண்டும். அருள் உணர்வை நம் உடலுக்குள் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.

ஏனென்றால் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ நிலைகளைப் பார்த்தாலும் நாம் நுகரப்படும் போது “தவறு செய்கிறார்கள்…” என்று உற்றுப் பார்க்கின்றோம்… அது பதிவாகிறது.

பதிவாகி விட்டால் பின் அது தன் உணவுக்காகக் கிளரும். அதை வைத்து அந்த உணர்வின் அணுக்கள் உடலுக்குள் பெருகிக் கொண்டே இருக்கும். தவறு செய்தவரின் உணர்வை உணவாக எடுத்துத் தான் அந்த அணுக்கள் தன் இனத்தைப் பெருக்கும்.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் எப்போது சங்கடம் சலிப்பு வெறுப்பு என்று வருகின்றதோ… அடுத்த கணமே அதை மாற்ற… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இதை கூட்டிக் கொண்டே வந்தால் அது குறைந்து கொண்டே வரும்.
1.அது குறையத்தான் செய்யும் தவிர முழுமையாக மாற்ற முடியாது
2.இதைப் (அருளை) பெருக்கினால் அது இதற்குள் அடங்கிவிடும்.

நல்ல குணங்கள் கொண்டு இருக்கும் பொழுது தீமை என்ற உணர்வுகள் அதிகமாகி விட்டால் அது நல்ல குணங்களை அடக்கி
வேதனை என்ற உணர்வும்…
வேதனைப்படும் சொல்லும்…
வேதனையான செயல்களும்…
வேதனையான பேச்சுகளும்…
வேதனையான மூச்சுகளையும் தான் செயல்படுத்தும்.

ஆனால் அந்த மகரிஷிகளின் அருளைப் பெற்று இதை மாற்றிடுவோம்… மாற்ற முடியும்… அவர்கள் நலம் பெறுவார்கள்…! என்ற எண்ணத்திற்கு நாம் வர வேண்டும்.

ஒரு நோயாளி அவருடைய கஷ்டத்தைச் சொன்னால் மகரிஷிகளின் அருள் சக்தியை அவர்கள் பெறுவார்கள்… நலம் பெறுவார்கள்…! என்று நாம் எண்ணி விட்டால் அந்த உணர்வுகள் நமக்குள் வராது.

ஆனால் அவர்களை உற்றுப் பார்த்து… சொல்வதைக் கேட்டறிந்து அவருடைய துயரத்தை எண்ணி நாம் எடுத்துக் கொண்டால் நமக்குள்ளும் அது விளைந்து அவர் சொன்ன கஷ்டங்கள் எல்லாம் நமக்குள்ளும் வரும்.
1.அவரை மாதிரித் தான் நமக்குள்ளும் இருக்கின்றது
2.அவரை மாதிரித் தான் நமக்கும் நோயாகி விட்டது…! என்று அவரின் உணர்வு வந்து
3.அதையே நாமும் வளர்த்துக் கொள்கிறோம்

உதாரணமாக ஒருவன் நம்மை ஏமாற்றினான் என்றால் “ஏமாற்றினான்… ஏமாற்றினான்…” என்று எண்ணி அதையே எடுத்துக் கொண்டே இருந்தோம் என்றால் நம்மை அறியாமலேயே நம் உடலுக்குள் நல்ல உணர்வுகள் வளர்வது நிச்சயம் தடைப்படும்.

இதைப் போன்ற தீமையான விளைவுகளிலிருந்து நாம் மாறுவதற்கு ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கூட்டுத் தியானத்தின் மூலம் எடுத்து வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

கோடிப் பணம் சம்பாதித்து விட்டோம் என்றால் “நிம்மதியாக இருந்து விடலாம்…” என்று நினைப்பார்கள்.

அவ்வாறு நிம்மதியாக இருக்கும் போது இவர் மிகவும் “நல்லவர்.. என் சொந்தக்காரர்…” என்று எல்லாம் சொல்லிக் கொண்டு நம்மைத் தேடி வருவார்கள்.

என் பையன் சேட்டை செய்கிறான் என்று சொல்வார்கள். பக்கத்தில் இருக்கும் வீட்டுக்காரன் சதா தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறான்… நீங்கள் தான் நிவர்த்தி செய்து தர வேண்டும் என்பார்கள்.

இவர் கேட்பார். உடனே அதே உணர்வு இங்கு வரும். இவர் மேலே பாசமாக இருந்து அதையெல்லாம் எடுத்துக் கொள்வார்.

முதலில் இவர் அமைதியாக இருந்தார். செல்வம் எல்லாம் தேடி வந்தது. சம்பாரித்தார்…, நன்றாக இருக்கின்றார்.

இவர் நன்றாக இருப்பதைப் பார்த்து மற்றவர்கள் வந்து அவரவர் கஷ்டங்களையும் எல்லாம் சொல்ல ஆரம்பிக்கின்றார்கள்.

ஏனென்றால் இவர் மற்றவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கிறார். அவர்களுக்கு வேண்டிய உதவியும் செய்தார். அப்புறம் என்ன நடக்கின்றது…?

உடலில் இல்லாத வலியெல்லாம் வரும். இடுப்பு வலிக்கிறது, மேல் வலிக்கின்றது… தலை வலிக்கின்றது… சர்க்கரைச் சத்து வந்து விட்டது… இரத்தக் கொதிப்பு வந்து விட்டது… என்பார்கள்.

ஏனென்றால் தன்னை நாடி வருபவர்கள் சொல்வதை எல்லாம் இவர் கேட்பார். நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை – இது இந்த மாதிரி வந்து விடும்.
1.நாம் சுவாசித்த உணர்வுகள் உயிரிலே படுவது நந்தீஸ்வரன்.
2.சிவனான இந்த உடலில் அந்தக் கணக்குள் கூடுகின்றது.

தவறே செய்யவில்லை. உதவி கேட்டு வருகின்றனர். அவர்கள் கஷ்டத்தைச் சொல்கிறார்கள்.

நல்ல மனதுடன் இவர் கேட்கிறார். நுகருகின்றார். உமிழ்நீராக மாறுகின்றது. சாப்பாட்டில் கலக்கிறது. நுரையீரலுக்குப் போகின்றது. கல்லீரலுக்குப் போகின்றது. கிட்னிக்குப் போகின்றது. இருதயத்திற்கு வருகின்றது.

1.பின்னர் இருதயம் படபடா.. படபடா… என்று வரும்.
2.அத்தனை பேருடைய கஷ்டத்தையெல்லாம் கேட்டு
3.அதற்குப் பஞ்சாயத்து செய்வதற்குப் போனார்.
4.இந்த உணர்வு படபடா… என்று வரும்.

கடைசியில் இந்த மாதிரி ஆனவுடனே “சீனி சாப்பிடாதே…, காரத்தைச் சாப்பிடாதே… உப்பைச் சாப்பிடாதே… எண்ணெயைச் சாப்பிடாதே…” என்று டாக்டர்கள் சிபாரிசு செய்வார்கள். ஆனால் அவர் தவறு செய்யவில்லை.

1.செல்வம் இருக்கிறது…
2.ஆனால் அமைதி இருக்கின்றதோ…?

பிறருடைய உணர்வுகள் இவ்வாறு நமக்குள் தோஷமாக வந்து விடுகின்றது.

இதே மாதிரி… சில குடும்பங்களில் பெண் குழந்தைகள் பிறக்கின்றது. பெண் குழந்தைகள் பிறந்த பிற்பாடு இன்றைக்கு இருக்கின்ற காலத்தில் தாய் தகப்பனுக்கு நிம்மதி இல்லை.

தாய் தகப்பனுக்கு நாம் என்ன கடமை செய்ய வேண்டும்…? அது தெரியவில்லை. தாயினுடைய உண்மையை உணர முடியவில்லை.

இன்றைக்குப் பெண்கள் பிறந்த குடும்பங்கள் எல்லாம் மிகவும் அல்லல்படுகின்றார்கள்.

கடவுளாக இருந்து நம்மை உருவாக்கிய தாய் நம் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கின்றார்கள்? நாம் அதை மதிக்கின்றோமா…!

அவர் நம் மீது அந்தப் பாசத்திற்குத் தகுந்தபடி
1.நாம் எண்ணியது நமக்குள் நடக்க வேண்டும்
2.நம் தாய் எண்ணியது எனக்குள் நடக்க வேண்டும் என்று சொன்னால்
3.அந்த சக்தி நமக்குள் உருவாகும்.

நாம் யாராவது இப்படி எண்ணுகின்றோமா…?

தான் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப “நான்… வாழ வேண்டும்” என்று
1.தாயை அதன் வழியே கொண்டு வர வேண்டும் என்று
2.நினைத்தோம் என்றால் அது தவறான வழி ஆகும்.
3.இப்படி நிறையப் பேர் உண்டு (மகனும் சரி பிள்ளையும் சரி)

தன் உணர்வின் ஆசைக்கு அந்த இணக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக
1.நம்மை ஈன்று மனிதனாக உருவாக்கிய அந்தக் கடவுளையே
2.நம்மைக் காப்பாற்றிய அந்தத் தெய்வத்தையே…
3.நமக்கு நல்லது சொன்ன குருவையே…
4.மனதை நோகும்படிச் செய்கின்றோம்.

இதையெல்லாம் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்றைய உலகில் ஒவ்வொரு வீட்டிலும் அமைதி இருக்கின்றதா…? சந்தோஷமாக வாழ்கிறேன் என்று சொல்ல முடிகிறதா…!

ஆகவே இப்படிப் பல வகைகளிலும் வரும் தோஷங்களெல்லாம் நமக்குள் சேர்ந்த பிற்பாடு உடலில் நோய் வந்துவிடுகின்றது, நம் நல்ல அணுக்களை எல்லாம் அது கொன்று சாப்பிடுகின்றது.

இதை யார் மாற்றுவது…? நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

அதே சமயத்தில் பெண் பிள்ளைகளைத் திருமணம் செய்து கொடுத்து முடிப்பதற்கு முன்னால் அந்தத் தாய் படுகின்ற அவஸ்தையோ
1.வயதாகிப் போகின்றதே… வயதாகிப் போகின்றதே… என்று எண்ணுவார்கள்
2.இன்ன வயதாகிப் போனால் அந்த வயதிற்குத் தகுந்த மாப்பிள்ளை கிடைப்பது கஷ்டமே என்று
3.தாய் எண்ணி எண்ணிப் பிள்ளைகளை நினைத்து நினைத்து வேதனைப்படுகிறது,

பிள்ளையைப் பார்க்கும் போதேல்லாம் இந்த வேதனை உண்டாகின்றது.

ஆனால் அவர்களுக்கு நல்ல மாப்பிள்ளை வர வேண்டும். நல்லது வர வேண்டும் என்று நினைக்கின்றதா…! என்றால் தாய் நினைக்கவில்லை.

ஆசை இருக்கிறது. வேதனை எடுத்து அதைத் தனக்குள் எடுத்து வேதனையான உணர்ச்சியைச் சொல்லி அந்தக் குழந்தையைப் பார்க்கும் போதெல்லாம் இந்த வேதனை வருகின்றது.

இவ்வாறு அந்த வேதனை விஷம் என்ற நிலைகள் பட்டால் நினைவென்ற நிலைகள் இழுக்கப்பட்டு
1.தாயை நினைத்து அந்த வேதனையை எடுக்கின்றோம்
2.அது அறியாமையாக வந்து இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றது.

குழந்தையை மட்டும் சொல்வதற்கு இல்லை.

தாயின் ஆசைகள் “இப்படி நடக்கின்றதே… நாளைக்கு என்ன ஆகப் போகின்றதோ…!” என்ற இந்த வேதனையைச் சுவாசிக்கின்றது,

குழந்தையை எண்ணி வேதனையை உருவாக்குகின்றது. இந்த உள் உணர்வின் தன்மை சொல்லாகப் போகும் போது என்ன செய்கின்றது…?

ஏனென்றால் ஒரு நெருப்பில் பாத்திரத்தை வைத்து பதார்த்தத்தைப் போடுகின்றோம். பல பொருட்களைச் சேர்த்து வேக வைக்கின்றோம். நாம் போடுகின்ற பொருளுக்குத் தக்கவாறு தான் அதிலே ருசி வருகின்றது.

ஏனென்றால் நம் உயிர் ஒரு நெருப்பு. நம் குழந்தை மேலே ஆசையாக இருக்கின்றோம். ஆனால் “சீக்கிரம் திருமணம் ஆகவில்லையே…” என்கிறபோது அது வேதனை.

அதில் கொஞ்சம் கொஞ்சமாகச் சரக்குகளைச் சேர்த்து இந்த வேதனை உணர்வை உருவாக்கி இந்த உணர்வின் தன்மை உமிழ் நீராக்கி நம் உடலுக்குள் வளர்த்து இந்த உணர்வைச் சொல்லாக்கி வெளியில் சொல்லப் போகும் போது என்ன செய்கின்றது…?

இந்தப் பிள்ளையைப் பார்க்கும் பொழுது எல்லாம் அந்த வெறுப்பு வருகிறது. “இப்படி ஆகின்றதே….” அந்த வேதனை வருகின்றது. வேதனையான உணர்வு வரப்போகும் பொழுது குழந்தைகளுக்கு என்னவாகும்…?

தாய் பார்க்கும் பொழுது இந்த மாதிரி இருக்கின்றதே என்று அவர்கள் வாயிலேயே தன் பிள்ளையிடம் சொல்லுகின்றது. அதை வாங்கி அவர்கள் வளர்த்துக் கொள்கிறார்கள்.

இன்னும் கொஞ்சம் மோசமாகின்றது.

நமது அறியாத நிலைகள் நமக்குள் எந்த நிலையைச் செய்கின்றது…? “இதெல்லாம் ஒரு தோஷம் தான்”.

இந்தத் தோஷங்களை நீக்கும் வழி என்ன…? என்பதைத்தான் சிவன் ஆலயத்தில் தெளிவாகக் காட்டுகின்றனர். சிவன் ஆலயத்தில் சிவனுக்கு முன்பு நந்தியை வைத்துக் காட்டியுள்ளார்கள்.

நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை. வாழ்க்கையில் பிறருடைய உணர்வுகள் நம்மை இயக்கும் பொழுதெல்லாம் குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்ற “இந்தக் கணக்கைக் கூட்டிக் கொண்டே வர வேண்டும்…”

பிறரையே எண்ணிக் கொண்டு வாழும் வாழ்க்கையும் நல்ல வாழ்க்கையில்லை – ஈஸ்வரபட்டர்

 

ஐம்புலனை அடக்குவது என்றால் என்ன…?

பார்த்தல்… சுவைத்தல்… கேட்டல்… நுகர்தல்… எண்ணல்… எனும் இந்த ஐம்புலன்களும் பெற்ற மனிதர்கள் எல்லோருமே தான் பெற்ற அருளை
1.பார்த்தவுடன் பதட்டப்படாமல்
2.பார்க்கும் நிலையில் ஒன்றை எடை போடாமல்
3.பார்த்த பொருள் ஒன்றைப் பார்த்தவுடன் வாங்க வேண்டும் என்றில்லாமல்
4.தான் பார்த்ததை ஒருநிலைப்படுத்தி
5.பார்த்த நிலைக்கு எதையும் முடிவு எடுக்காமல்
6.தான் பார்க்கும் அருளைப் பெற்ற “அந்த அருளின் சக்தியை” நல்வழியில் உபயோகப்படுத்த வேண்டும்.

இப்படித்தான் சுவைக்கும் கேட்பதற்கும் நுகர்வதற்கும் மன எண்ணத்திற்கும் எல்லாவற்றுக்குமே ஆண்டவன் அருளிய இத்தன்மை உள்ளது.

இத்தன்மை என்பது மனித ஜென்மங்கள் ஐம்புலனை அடக்கும் தன்மை மிருக ஜெந்துக்களுக்கு இல்லையப்பா…!

ஐம்புலனை அடக்கிடும் தன்மை பெற்ற மனிதனே தன் மன நிலையை அடக்கிடாமல்…
1.“வாழும் வரை சந்தோஷமாக வாழலாம்…” என்று இருக்கின்றார்கள்
2.வாழ்க்கையில் சந்தோஷம் என்பதே என்ன..? என்றே புரியாத மானிடர்கள்

ஆக இவ் ஐம்புலனை அடக்கி ஆளும் சக்தியையே அதி பேராசையினால் இவ் ஐம்புலனையும் அலைய விட்டு விடுகின்றார்கள்…! பேராசை நிலைக்கு அடிமைப்பட்டவன் தானப்பா இவ் ஐம்புலனையும் அலைய விட்ட ஒவ்வொரு மனிதனும்.

இந்த மனித ஜென்மங்களுக்கு ஆண்டவன் அருளிய “அரும் பெரும் பொக்கிஷமப்பா…” இந்த ஐம்புலனைப் படைத்தது.

மிருக உடலுக்குத் தன்னைக் காத்துக் கொள்ள… தன் உணவைத் தேட… ஆண்டவனால் ஒவ்வொரு மிருக இனத்திற்கும் ஒவ்வொரு காப்பு நிலை உள்ளதப்பா.

ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் என்ன செய்கின்றான்…?

ஒருவனை ஒருவன் ஏமாற்றி… ஒருவனுக்காக ஒருவன் ஒருவனை அழிக்கப் பல பில்லி சூனியங்கள் பல மந்திரங்கள் பல ஏவல்கள் எல்லாம் செய்கின்றனர்.

தன் எண்ணத்தையே பிறரையே அழிக்க உபயோகப்படுத்துகின்றனர்.
1.பிறரை அழிப்பது மட்டுமல்லாமல்
2.அந்நிலையே தன்னை வந்து தாக்குகிறது என்பதை அறியாமல்
3.தான் பெற்ற பாக்கியத்தை எல்லாமே சிதறவிட்டு வாழ்கிறார்கள் பல கோடி மக்கள்.

எவன் ஒருவன்…
1.பிறரையே எண்ணிக் கொண்டுள்ளானோ
2.அவன் வாழும் வாழ்க்கையும் நல்ல வாழ்க்கையில்லையப்பா…!

நீங்கள் கேட்கலாம்… தன்னையே பார்த்துக் கொண்டுள்ளவன் “சுயநலவாதியல்லவா” என்று…! நான் சொல்லும் சொல் அதுவல்லப்பா…!

நான் சொல்வதெல்லாம்…
1.உன்னை நீ உணர்ந்து
2.உன்னில் அந்த ஈஸ்வர சக்தியைப் பெற்று
3.உன் உழைப்பில் நீ உண்டு
4.உன்னைச் சார்ந்தோரின் நிலையை நீ பார்த்து
5.உன்னால் மற்றவர்களுக்குப் பயனை மட்டும் தான் அளிக்கும் நிலையில் நீ இருந்து
6.உன் வாழ்க்கையையே நீ அமைத்துக் கொண்டு
7.பிறரின் சொல்லுக்காக… அவச் சொல்லுக்காகப் பயப்படாமல்… பிறரின் புகழுக்காக ஏங்கிடாமல் மயங்கிடாமல்
8.உன்னையே நீ நம்பு…! என்பதன் பொருளைப் புரிந்து கொண்டு வாழும் வாழ்க்கையே பூரிப்புடன் வாழும் வாழ்க்கை…!

நாம் வாழும் வாழ்க்கை பிறருக்காக வாழ்வதல்ல. எவன் ஒருவன் பிறரைப் பார்த்துப் பொறாமைப்பட்டோ பிறரைப் புகழ்ந்தோ வாழும் வாழ்க்கையும் வாழ்க்கை அல்ல..!

மனித உடலில் மன நிலையில் கொதி நிலைதானப்பா..! அந்த மன நிலையையும் ஐம்புலனையும் ஒருநிலைப்படுத்தி மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டுமப்பா..! முடியுமப்பா…!

நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் மின்கதிர்களின் பேராற்றல்கள்

 

பூமிக்குள் வெப்பத்தின் தணல் ஆகும் போது ஆவியின் தன்மை அடைந்து ஆவி எடையற்றதாக மாறி மேலே செல்கின்றது.
1.வெப்பத்தினால் எடையற்ற தன்மை மாறினாலும் அதிலே மின்னல்கள் தாக்கப்படும்போது
2.இலகுவாக இருந்த மேகக் கூட்டத்திற்குள் சக்தி வாய்ந்த நட்சத்திரங்களின் உணர்வலைகள் பரவுகின்றது.

அந்த நட்சத்திரத்தின் உணர்வலைகள் படரப்படும் பொழுது அழுத்தத்தின் தன்மை ஒரு பக்கம் மோதி… மற்றொரு பக்கம் மோதும்போது மழையாகப் பெய்கின்றது.

இப்படி அந்த மேகக் கூட்டத்திற்குள்
1.ஆவியின் தன்மையும் ஒளிக்கற்றைகளும் இணைந்து மழையாகப் பெய்யும் பொழுது நீராக வருகின்றது.
2.அதனால் தான் மழை நீர் பெய்யும் பொழுது தாவர இனங்களுக்கு அது உரமூட்டும் உணரவின் சக்தியாகக் கிடைக்கின்றது.

மழை நீர் பெய்தாலே தாவர இனங்கள் அதிகமாகச் செழித்துக் கொழுத்து வளரத் தொடங்குகிறது. ஏனென்றால் “அந்த மின் கதிர்கள்… அதனுடைய இயக்கம் துடிப்பின் தன்மையைக் கூட்டுகின்றது…!”

பல கோடி உணர்வுகள் பெற்று நாம் மனிதனாக வளர்ச்சி அடைந்த நிலையில் அந்த மேகக் கூட்டத்தை எண்ணி அருள் மகரிஷிகளின் உணர்வின் சக்தி அதிலே படர வேண்டும் என்று அந்த உணர்வுகளைச் செலுத்த வேண்டும்.

இத்தகைய உணர்வுகள் கலந்த மழை நீராக நம் பூமியில் பெய்யும் பொழுது
1.அது தாவர இனங்களில் உள்ள தீமைகளை அகற்றவும்
2.மக்கள் வாழும் பகுதியில் மழையாகப் பெய்யும் பொழுது அருள் உணர்வின் அறிவாக எல்லோரையும் இயக்க இது உதவும்.

எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் பாய்ச்சும் இந்த அருள் சக்திகள் மழை நீர் வழியாகக் கலக்கப்பட்டு வாழ்க்கையில் நல்ல நிலை பெறச் செய்யும்.

ஒவ்வொரு உயிரும் கடவுள் ஈசன் என்றும்… அவனால் உருவாக்கப்பட்ட அந்த உடல்கள் ஆலயம் என்றும்… மனித உடலை உருவாக்கிய உயர்ந்த சக்திகள் அங்கே தெய்வங்களகக் கொலுவீற்றிருக்கிறது என்றும்… நாம் மேலே சொன்ன நிலைகளைச் செயல்படுத்தினால்
1.இது நம்மை அறியாமலே நமக்குள் நன்மை பயக்கும் சக்தியாகிறது…
2.அதே போல் நம்மை அறியாது அனைவருடைய நிலைகளும் நலம் பெறும் சக்தியாக விளைகின்றது.

எந்தப் பூமியில் பிறந்தோமோ அதுவே நமக்குத் தாயாகின்றது. அந்தத் தாயின் மடி மீது தான் நாம் அமர்ந்துள்ளோம். பூமித் தாயின் சக்தியைக் கூட்டி தீமை புகாது தூய்மைப்படுத்தும் உணர்வுகளை நாம் ஒவ்வொருவரும் செயல்படுத்தும் போதுதான் இந்தப் பூமியும் தூய்மையாகிறது.

நம் தாய்க்கு செய்யும் சேவையே இது தான்.
1.ஆகவே ஒவ்வொருவரும் இந்தப் பூமியான தாயைக் காக்கவும்
2.உயிரைக் காக்கவும் முயற்சி எடுங்கள்.

தாயால் உருவாக்கப்பட்ட “இந்த உடல்” நம்மை எத்தனையோ வகையில் பேணிக் காத்தது. ஆகவே தாயின் உணர்வே இந்த உடல். இந்த தாயான உடலைக் காக்க வேண்டும்… தாயின் உடலில் பெற்ற உணர்வுகள் தாயான நிலையில் காக்கப்பட வேண்டும் என்று இந்த உண்மையின் உணர்வைப் பெற்றால் மனிதன் தெளிவாகின்றான்.

மனிதன் தெளிவாகும் போதுதான் தெளிந்த உணர்வு கொண்ட உயிராகின்றது. உயிருடன் ஒன்றும் உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது.

அத்தகைய உயர்ந்த நிலையைப் பெற்று குரு காட்டிய அருள் வழியில் பேரின்பத்தைப் பெறுவோம்… பெரு வாழ்வு வாழ்வோம். பிறவியில்லா நிலை அடையும் நிலையாக… முழுமை பெறும் உணர்வை வளர்ப்போம். உலக மக்கள் அனைவரும் இந்த நிலை பெற தியானிப்போம்… தவமிருப்போம்.

உன்னை நான் பார்த்து… என்னில் உன்னைக் கண்டிட… உன்னையே நான் வணங்குகிறேன் ஈஸ்வரா – ஈஸ்வரபட்டர்

 

சாமியார்கள் என்றாலே வேஷதாரிகள்… ஏமாற்றுக்காரர்கள்… சூனியக்காரர்கள்… என்றும் தான் வாழும் வழிக்குத் சாமியார் என்ற வேடம் பூண்டு ஊரை ஏமாற்றுகிறார்கள் என்றும் உருவாக்கி விட்டார்கள்.
1.பல மதங்களைப் பரப்பி
2.பகவானைப் பணிவதற்குப் பல நிலைகளை மக்களுக்கு உணர்த்தி
3.பல கோடி ஜெபங்களை ஜெபித்து
4.ஆண்டவனை வணங்குவதையே மக்களின் மனதில் ஒருவித பயம் கலந்த உணர்வாக உண்டு பண்ணிவிட்டார்கள் இந்தப் பல வழிச் சாமியார்கள்.

இவர்களில் சிலர் பல மந்திரங்களை மக்களுக்குப் புரியாத பாஷையில் ஓதி ஒம குண்டங்களை வளர்த்து அந்த ஓம குண்டத்தில் பொன்.. வஸ்திரம்… பல வகைப் பதார்த்தங்கள்… இன்னும் பலவற்றைப் போட்டு ஓமங்கள் வளர்க்கின்றனர்.

எட்டுத் திக்கிலும் எட்டுப் பூசாரிகளை அமரச் செய்து அவ்வனைவரும் ஒன்று சேர்ந்து அந்த ஆண்டவனைக் கோடியார்ச்சனை என்ற பேரில் புரியாத மொழியில் ஓதுகிறார்கள்.

இந்த வழியில் யாகக் குண்டத்தை வளர்த்து மந்திரங்களை ஓதும் பொழுது தான்
1.அந்த ஆண்டவன் வருவானா அந்நிலைக்கு…?
2.யாருக்காக…? யாரின் நிலைக்காக…?

அத்தகைய சாமியார்கள் மக்களிடமிருந்து பொருள் பெறுவதற்காக யாகம் வளர்த்து மந்திரங்கள் ஜெபிக்கின்றனர். ஆக
1.பொருள் தருபவனுக்கு (மக்கள்) அந்தச் சாமியார்கள் செய்யும் பூஜையில் ஆண்டவன் வந்து அருள் தருவானாம்…!
2.ஆண்டவனுக்கு இவர்கள் (சாமியார்கள், பூசாரிகள்) தூதுவர்களாம்…!

பல ஆயிரம் செலவு செய்து யாக குண்டம் வளர்த்து அந்தப் பூசாரிகளுக்கு அன்னமளித்து பொருள் தந்து அந்த ஆண்டவனை வணங்கினால் இவன் செய்த பாவங்களும்.. இவன் எண்ணமும் மாறி.. அந்த ஆண்டவன் வந்து அருள் புரிவானாம்..!

1.ஊரை ஏமாற்றி
2.உள்ள நிலையைப் புரிந்திடாமல்
3.தன் புகழைப் பரப்பப் பூஜை செய்பவர்கள் தான் பெரும்பாலனவர்களாக உள்ளார்களப்பா…!
4.இவர்களின் நிலைக்கெல்லாம் இந்தப் பல வழிச் சாமியார்கள் பெரும் தூதுவர்களப்பா…!

செய்த பாவத்தைக் கழித்திட பூஜை செய்துவிட்டால் பாவம் தீர்ந்துவிடுமா…? அவர்கள் தான் அதைப் பாவம் என்றே எண்ணுவதில்லையே…!

புகழுக்காகத் தான் சம்பாதித்த செல்வத்தை “அந்த ஆண்டவன் வந்து காப்பாற்றித் தர வேண்டும்…” என்பதற்காக அந்த ஆண்டவன் பெயரைச் சொல்லிப் பல பூஜை செய்கிறார்கள் இந்தப் பாமர மக்கள். “பெரும்பாலான பூஜை முறையே… இப்படித்தானப்பா உலகெங்கிலும் உள்ளது…!”

இந்த மனிதர்களை மாற்றிடவும் நல்வழியில் அழைத்துச் செல்லவும் நல் வழியில் பல சாமியார்கள் (நல் வழிச் சாமியார்கள்) இன்றும் உள்ளார்கள்… அன்றும் இருந்தார்கள்…!

பல ஜெபங்களை ஜெபிக்கச் சொல்லி மக்களின் மனதினிலே நல்ல உணர்வுகளை ஆழமாகப் பதிய வைக்க நல் வழிச் சாமியார்கள் எல்லாம் நாட்டம் கொண்டு நடந்திட்டார்கள்.

இன்னும் சில இடங்களில் சில சாமியார்கள் அந்த ஆண்டவனின் சக்திக்குப் பல வகை நாமங்களைச் சூட்டி புவனேஸ்வரி பூஜை… சௌண்டேஸ்வரி பூஜை… காமாட்சியம்மன் பூஜை…! என்று இன்னும் பல நாமங்களைச் சூட்டி அந்தச் சக்தியின் நிலைக்கே பல யாகங்களை வளர்த்துப் புகை மண்டலங்களை எழுப்பி
1.தான் வாழ தன்னைச் சார்ந்தவர்கள் வாழ தன்னை நம்பி வருபவர்களை வாழ வைக்க
2.இப்படியும் பல நிலைகளைச் செய்கிறார்கள்.

நல்ல மணத்தைக் கொண்ட புகை மண்டலத்தை எழுப்பி அந்த ஆண்டவனை ஜெபிக்கும் பொழுது எந்நிலையில் நாம் ஜெபிக்கின்றோமோ அந்நிலையில் அவர் அவர்கள் ஜெபிக்கும் நிலைக்கு அந்தச் சக்தி நிலை வருகிறதப்பா…!

1.ஆண்டவனை வணங்கிட யாருக்கும் யாரும் தூது வேண்டாமப்பா…!
2.எல்லோருமே அவரவர்கள் நிலைக்குத் தகுந்தபடி அவன் அருளை எப்படியும் பெறலாமப்பா..!
3.அவனவன் எண்ணத்திலும் சுவாசத்திலும் தான் எல்லாமே இருக்கின்றதப்பா…!

ஓ…ம் என்ற நாதத்தில் உருளுகின்ற உலகினிலே
உதித்துள்ள உயிரணுவாக
உன்னையே… நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா…!
உன்னையே… நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா…!

உன்னை நான் பார்த்திடவே
என்னில் உன்னைக் கண்டிடவே
உன்னையே… நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா…!

உன் வழியில் சத்தியத்தை
உன் வழியில் தர்மத்தை
உன் வழியில் நியாயத்தை
உன்னை எண்ணும் இதயத்தில்
ஊன்றிடுவாய் ஈசனின் சக்தியே

ஓ…ம் என்ற நாதத்தில் உருளுகின்ற உலகினிலே
உதித்துள்ள உயிரணுவாக
உன்னையே… நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

விவசாயப் பண்ணைகளில் பல பல உணர்வினை இணைத்துப் புதுப் புது வித்தினை உருவாக்குகின்றார்கள். அவர்கள் கொடுத்த அந்த வீரிய வித்துக்களை வாங்கி நிலத்தில் ஊன்றுகின்றோம்.

அந்தப் பயிர்களைச் சீராக வளர்க்கும் பக்குவப்படுத்தும் முறைகளையும் உபாயத்தையும் அவர்களே கொடுக்கின்றார்கள். அவர்கள் சொன்ன வழியில் செயல்படுத்தும் போது பயிர் செழிப்பாக வளர்கின்றது. நல்ல மகசூலையும் கொடுக்கின்றது.

ஆனாலும் அந்தப் பயிர் இனங்களைப் பக்குவப்படுத்தி வளர்க்கும் போது இடைமறித்துக் களைகளும் முளைக்கின்றது.

களைகளை அகற்றவில்லை என்றால் எவ்வளவு உயர்ந்த தர வித்துகளாக நாம் விதைத்திருப்பினும் அதனுடைய செயலாக்கங்கள் இழக்கப்படுகின்றது. பயிரின் விளைச்சல் குன்றி மீண்டும் தரமான வித்துக்களை உருவாக்க முடியாது.

இதைப் போன்று தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் மெய் ஞானிகளின் அருள் வித்துக்களை உங்களுக்குள் அடிக்கடி உபதேசத்தின் மூலம் பதிவாக்குகின்றோம்… வளர்க்கும்படி செய்கிறோம்.
1.உங்களுக்குள் அருள் ஞான வித்தாக விளைய வைத்ததை
2.ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் பாதுகாத்தல் வேண்டும்.

ஏனென்றால் நம்முடைய இந்த மனித வாழ்க்கையில் பெரும் பகுதி உடலின் இச்சைகளுக்கே நம் எண்ணத்தைச் செலுத்தி வாழ்ந்து வருகின்றோம்.

இதை எதற்குச் சொல்கிறோம் என்றால் தியானம் இருக்கும் பொழுது எதை எல்லாம் நாம் எதிர்பார்க்கின்றோம்…! என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நான் செய்யும் இந்தத் தியானத்தின் மூலம்
1.என் உடல் நலம் பெற வேண்டும் என்றும்
2.எனக்குத் தொழில் வளம் பெருக வேண்டும் என்றும்
3.நான் எண்ணியது எல்லாம் இந்த உடலின் வாழ்க்கைக்கு நடக்க வேண்டும்…! என்றும் ஏங்குகின்றோம்.

அது கிடைக்கவில்லை என்றால் “என்னத்த… நான் தியானத்தைச் செய்தேன்…! தியானம் செய்து… செய்து எனக்கு என்ன கிடைத்தது…? ஒன்றும் நடக்கவில்லை…! என்று இந்தச் சோர்வான உணர்வினை எடுத்துக் கொள்கிறார்கள்.

அது மட்டுமல்ல…! அவர்கள் பெறவில்லை என்றாலும்… தியானம் செய்யும் அடுத்தவர்களிடமும் சென்று “இத்தனை காலமாக நீங்கள் தியானம் செய்கிறீர்கள் அல்லவா…! அதில் என்ன பெற்றீர்கள்…?” என்று இவர்களே கேட்கத் தொடங்குகின்றார்கள்.

தான் எதிர்பார்க்கும் நிலைகளுக்கு…
1.இந்த உடலின் இச்சையை வளர்ப்பதற்குத் தான் தியானம் இருக்கிறோம் என்ற எண்ணங்களில் இருக்கின்றோமே தவிர
2.இந்த மனித உடலை விட்டுக் கடந்தால் எங்கே செல்ல வேண்டும்…?
3.அதற்கு எந்தச் சக்தியைச் சேர்க்க வேண்டும்…? என்ற எண்ணமே இல்லை.

உடல் பெறும் உணர்வுகளை மாற்றி என்றுமே அழியாத ஒளி உடலை நாம் வளர்க்க வேண்டும் என்பதைத் தான் யாம் (ஞானகுரு) சொல்லிக் கொண்டு வருகின்றோம்.
1.இதை வளர்க்க வாழ்க்கையில் வரும் அனைத்துத் துன்பங்களும் அகலும்.
2.(சீராகக் கடைப்பிடிப்பவர்கள் இதை நிச்சயம் உணரலாம்)

அதை விடுத்து விட்டு சாமி (ஞானகுரு) சொல்கிறார். தியானத்தையும் செய்தோம். அப்படியானால் ஏன் இது நடக்கவில்லை…? என்பார்கள்.

இது ஏன் என்றால் இரண்டு ஆசை இருக்கும். எப்படி…?

அதாவது பிள்ளைக்கு நல்ல இடத்தில் கல்யாணம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்குண்டான நிலைகளைச் செய்து கல்யாணம் நடந்து முடிகின்றது.

திருமணம் முடிந்தாலும் யாம் உபதேசத்தின் வாயிலாகச் சொல்லி வந்த ஞானிகளின் அருள் உணர்வுகளை வாழ்க்கையில் நடக்க வேண்டிய அந்தப் பக்குவத்தை குழந்தைகளுக்கும் கண்டிப்பாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

அதைச் செய்வதில்லை…! பிள்ளை மேல் மிகுந்த பாசமாக இருந்து கொண்டு மருமகன் தன் பிள்ளையை ஏசி விட்டால் போதும்…!
1.நல் வழியில் நடக்கும் உணர்வுகளை ஊட்டுவதற்குப் பதில்
2.எதிர்ப்பு உணர்வு கொண்டு வெறுக்கும் உணர்வுகளையே வளர்க்க நேர்கின்றது.

அப்படி வளர்த்துக் கொண்ட பின் சாமி சொன்ன வழியில் நாம் தியானம் இருந்தோமே… இப்பொழுது என்ன ஆனது…? சாமி ஆசீர்வாதம் செய்து தானே திருமணம் நடத்தினார்…!

அப்படியானால் மகளுக்கும் மருமகனுக்கும் ஏன் ஒருவருக்கொருவர் சண்டை வருகிறது…? என்ற வினாக்களை எழுப்பி புவியின் ஈர்ப்பின் பற்றுதலுக்கே நாம் வந்து விடுகின்றோம்.

வெறுக்கும் உணர்வையும் தியானத்தின் உணர்வையும் இது இரண்டையும் இணைத்து “நல்லது நடக்கவில்லையே…!” என்ற இந்த உணர்வினை நாம் நுகரப்படும் போது ஓ…ம் நமச்சிவாய…! அதைத்தான் நமக்குள் உருவாக்கிக் கொள்கிறோம்.
1.எந்த வெறுப்பையும் கோபத்தையும் எண்ணி இந்த உணர்வை நுகர்ந்தோமோ
2.அந்த அணுவாக உருவாக்கிவிடுகின்றோம்.

இந்த உணர்வின் சத்தை வளர்த்து அதை உணவாக நம் உடலிலுள்ள அணுக்களுக்குக் கொடுக்கும் பொழுது அது அந்த இனத்தைத் தான் பெருக்கும்.

அப்புறம் நீங்கள் எங்கேதான் போனாலும் கூட உயர்ந்த சக்தியைப் பெறுவதற்கு மாறாக தன்னையே இழி நிலைச் சரீரம் பெறும் நிலைக்கே இழுத்துக் கொண்டு போகும்.

எண்ணியது நடக்கவில்லை எனறால் வேதனை என்ற உணர்வை நுகர்ந்து விஷத்தின் தன்மையைத் தான் வளர்க்க முடியும்.

முதலில் சாதாரணமாக இருக்கும் போது அந்த விஷம் வேறு. ஆனால் தியானமும் செய்துவிட்டு தான் எண்ணியபடி நல்லதைப் பெற முடியவில்லை என்ற ஆசையின் நிலைகளில் செல்லும் பொழுது கடும் வேதனையாகின்றது.

இத்தகைய உணர்வுகளை உருவாக்கப்படும் போது முதலில் இருந்ததைக் காட்டிலும் விஷத்தின் தன்மையை அதிகமாக வளர்த்து விஷப் பூச்சியாக நம்மை மாற்றும் தன்மையைத்தான் பெறுகின்றோம் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.

ஆகவே இந்த உடலின் இச்சைக்குள் தான் இந்தத் தியானத்தைக் கொண்டு வருகின்றோமே தவிர
1.இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல.
2.எத்தனை காலம் இந்த உடலில் நாம் வாழ்கின்றோம்…! வளர்கின்றோம்…? என்ற தெளிவான எண்ணங்கள் இல்லை.

உடலை விட்டுப் பிரிந்தால் இனிப் பிறவி இல்லா நிலைகள் அடைய வேண்டும் என்பதற்குத்தான் நாம் இதைச் செயல்படுத்துகின்றோம்.
1.இந்த உடலில் நீங்கள் கோடி சுகத்தைப் பெறுங்கள்
2.முதலில் டாக்டரை வைத்தாவது இந்த உடலில் உள்ள எல்லா நோயையும் நீக்கிக் கொள்ளுங்கள்…!
3.அப்புறம் எத்தனை காலம் இந்த உடல் வாழுகின்றது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
4.ஒரு சில காலத்திற்கே வாழுகின்றது. பின் இந்த உணர்வின் தன்மை முதிர்வாகி இறந்து விடுகின்றது.

இதை இல்லை என்று யாராவது மறுக்க முடியுமா…?

நம் ஆன்மாவில் தீமை உருவானால் அதை “முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும்”

உதாரணமாக நாம் வசிக்கும் இடத்தில் ஒரு வேப்பமரத்தின் வித்து கீழே விழுந்தால் அது முளைத்து வளர்ந்து மரமாகி விட்டால் பின் அதை வெட்டுவதற்கு அரிவாள் கோடாரி எல்லாமே தேவைப்படுகின்றது.

பந்தோபஸ்தாக அதை அப்புறப்படுத்துவதற்கு எத்தனையோ ஆள்களும் தேவைப்படுகின்றது. நம் வீட்டுப் பக்கம் விழுந்து சேதாரம் ஆகாதபடி அதையும் நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது. அப்போதுதான் அதை வெட்ட முடியும்.

இதைப் போன்றுதான்
1.நம் ஆன்மாவில் தீமை உருவானால் அதை முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும்
2.தீமைகளை நமக்குள் வளரவிடக் கூடாது.
3.அதற்காக வேண்டித் தான் தியானத்தின் மூலம் உங்களுக்கு உயர்ந்த சக்திகளைக் கொடுக்கின்றோம்.

நமக்கு முன் இருக்கும் இந்தக் காற்றிலே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி இருக்கின்றது. அதை எடுத்து வளர்த்துக் கொண்டால் உங்களைக் காக்கும் சக்தியாக அது நிச்சயம வரும்.

உதாரணமாக… ஜோசியக்காரன் நம்மிடம் ஏழரை நாட்டுச் சனி பிடித்திருக்கிறது. அதனால் பணம் விரயமாகும் தொழில் நஷ்டமாகும் எதிரிகள் அதிகமாக வருவார்கள் என்று சொல்வார்கள். அதைப் பதிவு செய்து விட்டால் ஜோசியக்காரன் சொன்னபடி தான் இங்கே உணர்வின் இயக்கம் ஆகின்றது.

அந்த அடிப்படையில் தொழில் செய்தால் அது நஷ்டமாகி விடுகிறது… இடைஞ்சல் தான் வருகின்றது.

ஒரு சிலர் (ஜாதகம் பார்ப்பவர்கள்) இதையே குறிப்பாகப் பார்த்து எடுத்துக் கொள்வார்கள். இந்த உணர்வுகள் வளர்ச்சியாகிச் சொன்னவுடனே அதைக் கேட்டவுடன் நமக்குள் பதிவாகின்றது. இதெல்லாம் வாக்குவன்மை தான்…!

ஜோசியக்காரன் சொன்னதை நுகர்ந்தால் உடலில் பதிவாகிறது.
1.நல்லது சொன்னால் ஓரளவுக்குப் பலிக்கலாம்
2.ஆனால் கெட்டதை அதிகமாகச் சொல்லி விட்டால் அது அதிகமாகிறது.
3.(பெரும் பகுதி ஜோசியக்காரர்கள் நல்லதை அதிகம் சொல்வதில்லை).

கெட்டதை எல்லாம் சொல்லிவிட்டுக் கடைசியில் சாங்கியத்தைச் செய்தால் நீக்கி விடலாம் என்று அதையும் சொல்வார்கள். அவன் சொன்னபடி காசைக் கொடுத்துத்தான் நீக்குவதற்குப் பார்க்கின்றோம்.

இருந்தாலும் அப்படி ஜாதகமும் ஜோதிடமும் பார்க்கும்போது
1.ஒரு விபரீத விளைவுகளைச் சொன்னார்கள் என்றால் அதனால் நாம் அதிர்ச்சி அடைந்து விடுகின்றோம்.
2.ஆக மொத்தம் காசு கொடுத்துத் தான் தீமைகளை நீக்க வேண்டும் என்ற நிலை வருகிறது.

ஆனால் நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ அதைத்தான் உயிர் இயக்குகின்றது. இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றிச் சென்ற அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து நம் உடலுக்குள் அதை ஏங்கிப் பெற்றால் உயிர் அதனின் கருவை உடலிலே உருவாக்குகின்றது.

அந்த மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து வளர்க்கத் தொடங்கினால் தீமையான உணர்வுகளை மாற்றி அமைக்கலாம். ஞானிகள் காட்டிய வழிகள் இது தான். பல சரக்குகளைப் போட்டு ஒரு குழம்பை எப்படிச் சுவையாக வைக்கின்றோமோ அதைப் போல் நல்லதாக மாற்ற முடியும்.

ஆறாவது அறிவின் துணை கொண்டு பல உயிரினங்களின் அணு செல்களை எடுத்துப் புது விதமாக பல பல உயிரினங்களை விஞ்ஞானி மாற்றியமைக்கின்றான். விஞ்ஞானிகள் செய்வதை எல்லாம் இன்று நாமும் பார்க்கின்றோம்.

அதைப் போன்று தான் அந்த அருள் உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டால் பகைமை உணர்வுகளையும் தீமையான உணர்வுகளையும் மாற்றிவிட முடியும்.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்றால் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ வெறுப்பு வேதனை கோபம் எல்லாம் நம்மை அறியாமலே வருகின்றது. அதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும். நம்மை நாம் அறிதல் வேண்டும்.

1.பிறிதொரு உணர்வு எப்படி இயக்குகின்றது…?
2.அந்தப் பிறிதொரு தீமையான உணர்வு நமக்குள் புகாது எப்படித் தடுக்க வேண்டும்…?
3.அதற்குண்டான உபாயங்களையும் சக்திகளையும் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உபதேசமாகக் கொடுக்கின்றோம்
4.அதை நீங்கள் எடுத்தால் நிச்சயம் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

மெய் ஞான விழிப்புப்படுத்தும் திறவுகோல் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இன்றைய உலகில் பல வகையான வாகனங்கள் உண்டு. ஒவ்வொன்றும் மனிதன் தனது எண்ண ஆற்றல் கொண்டு வேகமாகச் செல்லும் நிலைக்கு உருவாக்கப்பட்டது தான்.

ஆக அந்தந்த வாகனங்களின் கதிக்கொப்ப அது ஓடுவதைப் போன்று
1,மனித ஆற்றலின் உந்து விசையையும் அதிகப்படுத்தினால்
2.வேகம் கூட்டும் வாகனங்களின் ஆற்றலின் அறிவுத் திறன் வளர்ந்ததைப் போல்
3.மெய் ஞான வளர்ச்சியில் விருப்பப்பட்டுப் பயணிக்கும் பாதையே மனித சக்தியைக் கூட்டும் எண்ண ஆற்றல் ஆகும்.

உலகம் எப்படித் தன் ஈர்ப்புப் பிடிப்புடன் தன் வளர்ப்பின் செயலுடன் சுழன்று வருகிறதோ அதைப் போல்
1.நம் உயிராத்மாவை இந்தப் பூமியின் ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபட்டுச் செல்ல
2.தன் எண்ணத்தின் உந்து விசையால் நீரமிலக் காற்றில் விண்ணுலக ஒளி அமிலத்தைச் சுவாசத்தால் உடல் எடுக்க
3.நாம் மேற்கொள்ளும் தவத்தின் தனித்துவத்தால் தரணியின் மெய்யை உணர்ந்து
4.மெய் ஞான விழிப்பெய்த மூல நாடியாக மூச்சலையின் சக்திதனை மூலமாக்கிய மகரிஷிகளின் சக்திகளை
5.நாமும் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

உணர்வின் எண்ணத்தில் செழிப்பின் ஆசைதானப்பா மனிதச் செயலின் மூலாதாரமே. ஆனால் வித்தை காணும் ஆசை ஓட்டத்தில் “பேராசையின் எண்ணம் கொண்ட விளைவுதானப்பா…” இன்றைய மனித நிலை.

யுகங்கள் யுகங்களாக மகரிஷிகளின் தொடர்பலைகள் வளர்ச்சியின் செயலுற்று அவர்கள் வழி வகுத்துத் தந்த அந்த மெய்ஞான விழிப்பே மனிதனின் ஞானத்தின் வளர்ச்சிக்குச் செயலாற்றும் “திறவு கோல்” ஆகும்.

இன்றைய விஞ்ஞான கலியுகத்தில் மனித ஞானத்தை விழிப்புறச் செய்ய மெய் ஞானிகள் கொண்ட ரிஷிகளின் தொடர் அலையின் கருத்தின் கோர்வைகளை… அவகள் கண்ட உண்மைகளை இங்கே தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்துள்ளோம்.

செடி கொடிகள் எப்படித் தனக்கொத்ததை ஈர்த்து… வளர்ந்து… விளைந்த பின் பலன் தருவதைப் போல் நாமும் அந்த மாமகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நம்முடைய சுவாச அலையின் செயல் தன்மையைச் சீராக்கிடல் வேண்டும்.

1.இதைப் படித்துப் பதிவாக்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் தெய்வ சக்தி பெற்று
2.இந்தப் பூமியின் சுவாச கதியில் ஒளிச் சரீரமாக உங்கள் ஆத்ம உயிரை மெய் ஞான விழிப்புப்படுத்துங்கள்
3.விஞ்ஞானத்தால் உருவான நஞ்சினை அகற்றும் வல்லுநராக நீங்கள் மாறுங்கள்…
4.ஒளியான அண்டத்தையே உங்களால் படைக்க முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இந்த மனித வாழ்க்கையில் நாம் தவறே செய்ய வேண்டியதில்லை. ரோட்டில் போகும் பொழுது எத்தனையோ விதமான நிலைகளைப் பார்க்கின்றோம். விபத்துக்களையும் பார்க்க நேருகின்றது.

சந்தர்ப்பம் நமக்கு முன்னால் ஒருவர் போய்க் கொண்டிருப்பார். அதைப் பார்த்தபின் நம் கூட வரும் நண்பரிடம் சொல்லிக் கொண்டிருப்போம்.

“பார்… எப்படி ரோட்டின் குறுக்கே போய்க் கொண்டிருக்கின்றான்…? கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா…!” என்போம்.

ஆனால் இப்படியே சொல்லிக் கொண்டிருந்தாலும் கூட இந்த உணர்வின் நிலைகள் நம்மையும் இயக்கி நாமும் நடு ரோட்டில் போய்க் கொண்டிருப்போம்.

நாம் போவது நமக்கே தெரியாது. நம் பக்கத்தில் பஸ் வரும் பொழுது தான் நாம் உணர முடிகின்றது.

இந்த உணர்வின் அலைகளைப் “பின்னி வராதபடி” தடுத்துக் கொள்வதற்குண்டான ஆற்றல் நமக்கு அந்தச் சக்தி இல்லை.

ஏனென்றால் அந்த விஷத்தின் அலைகள் கொண்டு எதிலே செல்கின்றோமோ அதன் வழியில் நம்மை அறியாமலே அழைத்துச் சென்றுவிடும்.

விஞ்ஞான அறிவுப்படி நீங்கள் எதை எடுத்துக் கொண்டாலும் பௌதீக நிலைகளில் எடுத்துக் கொண்டாலும் உங்கள் வாழ்க்கையில் பார்க்கலாம்.

நமது வாழ்க்கையில் நம்மையறியாது புகுந்திருக்கும் நிலைகளிலும் நாம் தவறு செய்யாது நஞ்சு கொண்ட உணர்வுகள் படர்ந்து கொண்டிருக்கும் இன்றைய நிலைகளிலும்
1.பிறர் செய்யும் தவறுகளையோ
2.பிறர் செய்யும் குற்றங்களையோ
3.பிறர் படும் வேதனைகளையும் உற்றுப் பார்த்துப் பதிவு செய்து கொண்டால்
4.அதனதன் உடல்களிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் இங்கே வரத்தான் செய்யும்,
5.நம் முன் (ஆன்மாவாக) நிற்கத்தான் செய்யும்
6.சுவாசித்த உணர்வுகளை நம் உயிர் இயக்கி உணர்த்தத்தான் செய்யும்.
7.அது நமக்குள் தீமையின் விளைவாக விளையத்தான் செய்யும்.

இத்தகையை தீமையான விளைவுகளை மாற்றியமைக்கவில்லை என்றால் நம்முடைய நல்ல குணங்கள் வலுவிழந்து விடும். அப்பொழுது அதற்குத்தக்க தான் நாம் நியாயத்தைப் பேசுவோம்.

உலகம் கெட்டுவிட்டது. நல்லதுக்குக் காலமில்லை என்று நம் உணர்வுகளை இப்படி இயக்கிவிடும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

சூரியன் செடி கொடிகளின் சத்துக்களை எடுத்து இந்தக் காற்று மண்டலத்தில் வைத்துக் கொள்கிறது.

செடியில் விளைந்த வித்தைப் பூமியில் விதைத்தால் அந்த பூமியின் ஈர்ப்பின் துணை கொண்டு தன் தாய் செடியின் சத்தை நுகர்ந்து அதன் உணர்வுகொப்ப அதன் மணமும் குணங்களும் அதன் உணர்ச்சிக்குத்தக்க அந்தச் செடியின் ரூபமும் வருகிறது.

இந்தப் பூமியைப் போலத் தான் நம் உடல்.

சூரியன் எப்படி மற்ற தாவர இனங்களை வளர்க்கச் செயல்படுகின்றதோ அதுபோல நம் உயிரால் உருவாக்கும் நிலைகள் உடலிலே ஜீவ அணுக்களை உருவாக்குகின்றது.

எந்த உடலில் விளைந்த கோபமோ வெறுப்போ வேதனையோ அதனதன் எண்ணங்களாக வெளி வரும் போது இது பல பல வித்துக்களாக மாறும்.

1.கண் கொண்டு கூர்ந்து பார்க்கும் நமக்குள் போது பதிவாகிறது.
2.பதிவான நிலைகளை ஈர்க்கும் சக்தி பெறுகிறது நம் கண்ணின் காந்தப் புலனறிவு.
3.நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டு அந்த உணர்வின் தன்மை தன் உடலிலே அணுவாகப் பெருகத் தொடங்குகிறது.

உருவான அணு தன் இனமான உணர்வை ஈர்க்கும் சக்தி பெற்று அதைக் கவரத் தொடங்குகிறது. அந்த அணுவுக்குத் தேவையான உணர்வை எடுத்துக் கொடுத்து வளர்ப்பது நம் உயிர் தான்.

நுகர்ந்த உணர்வின் அந்தச் சத்துகள் நம் உடலிலே பெருகப் பெருகப் பெருக நம் உடலிலுள்ள மற்ற நல்ல குணங்கள் கொண்ட அணுக்களுக்கு இது இடைஞ்சலாக வரும்.

உதாரணமாக கருவுற்றிருக்கும் போது வெறுப்புணர்வு கொண்ட உணர்வுகளைத் தாய் கவர்ந்திருந்தால் சந்தோஷமாக அதை உணவாக உட்கொள்ளும். அந்த அணுக்கள் பெருகும்.

அதே சமயத்தில் இந்த உணர்வுகள் இரத்தத்தில் அதிகமான பின் மற்ற நல்ல அணுக்களுக்கு நல்ல உணர்வுகள் இரத்தத்தில் வரவில்லை என்றால் என்ன ஆகும்…? போர் முறை தான்…!
1.ஆக தாய் கருவில் பெற்ற நிலைகளே நமக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து
2.அதன் வழியிலேயே நாம் செயல்படுகின்றோம்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் தியானம் இருந்தோம் என்று சொல்லிவிட்டு எதிர்த்த வீட்டில் சண்டை போட்டார்களென்றால் அந்தச் சண்டையைக் கொஞ்ச நேரம் நம்மை அறியாமல் நுகர்ந்தால் போதும்.

சண்டை போடுவதை உற்றுப் பார்த்த உடனே
1.நம்மை அறியாமலேயே நமக்கு அந்த உணர்ச்சியின் வேகங்கள் வரும்.
2.உணர்ச்சிகளைத் தூண்டி அதே எண்ணங்கள் வரும். அந்தச் செயல்களும் வரும்.
3.நம் உடலிலுள்ள நல்ல அணுக்கள் இயங்க மறுக்கும்.
4.மறுக்கும் போது நம்மை அறியாமலே ஒரு விதமான இனம் புரியாத எரிச்சல் வரும்.

குழம்பில் காரம் அதிகமாகப் போட்டால் எப்படி இருக்கும்…? அதே போல இந்த உணர்ச்சிகள் நம் உடலில் வந்த உடனே அதே உணர்ச்சியின் எண்ணங்களால் நம் சிந்திக்கும் ஆற்றல் குறையும்.

பதிலுக்கு எப்படியும் எதையாவது சொல்ல வேண்டும் என்ற உணர்வைத் தூண்டும்.
1.அந்த உணர்வைத் தூண்டிய உடனே அவர்களோடு நாம் சண்டைக்குப் போனால்
2.சண்டையிட்டால் “இவருக்கு என்ன வந்தது…?” என்று நம்மிடம் கேட்பார்கள்.

அவர்கள் சண்டை போடும் போது நாம் பார்த்தோம். அதற்கு முன் அவர்கள் எதற்காகச் சண்டை போட்டுக் கொண்டார்கள்…? என்று நமக்குத் தெரியவில்லை.
1.ஆனாலும் சண்டையைப் பார்த்த உடனே அந்த உணர்வுகள் நம்மை இயக்குகிறது.
2.இயக்கினாலும் பொது வாழ்க்கையில் நாம் யார் யாரோ எப்படி எப்படியோ நாம் பழகத் தான் செய்கிறோம்.
3.ஆனால் நல்லதை நாம் பெறுகின்றோமா… வளர்க்கின்றோமா…?

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

“ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு பிரேக் (BRAKE) போட்ட மாதிரி சண்டை போடும் உணர்வை நமக்குள் புகாதபடி நிறுத்த வேண்டும்.

நிறுத்திய உடனே நம் உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் கொண்டு வந்து விட வேண்டும்.

இது கூடிவிட்டால் சண்டை போட்டவர்களின் உணர்வு நம்மை இயக்காது.

பின் மகரிஷிகளின் அருள் சக்தி சண்டையிட்டவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும். அவர்கள் பொருளறிந்து செயல்படும் அருள் சக்தி பெற வேண்டும். பகைமைகள் அகன்று ஒற்றுமை உணர்வுடன் வாழ வேண்டும் என்று இத்தகைய உணர்வுகளைப் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.

நடப்பதெல்லாம் நம் நன்மைக்குத் தான்..! என்பது வெறும் சொல் அல்ல – ஈஸ்வரபட்டர்

வாழ்க்கையில் வரும் மோதல்களில் இருந்து
1.சஞ்சலமற்ற… சமமான நிலை பெற்றிட வேண்டும் என்றால்…
2.எண்ணம் பரிசுத்தமாக நிலை பெற வேண்டும் என்றால்… எடுக்க வேண்டிய முயற்சி
3.நுண்மின் காந்த ஒளியைத் தியானத்தின் மூலம் ஈர்த்துக் கொள்வதே ஆகும்.

பஞ்சேந்திரியங்கள் கொண்டு உணர்ந்திடும் தன்மை போல் ஆத்ம வலுவின் தொடருக்கு மனத் திறன் பெறவேண்டும். மனத் திறன் என்றால் என்ன…?

1.மனச் செவி
2.மனச்சுவை
3.மனத்தால் மணம் நுகர்தல்
4.சகலமும் பேரின்பமாக ஆனந்தத்தில் என்னும் மனஸ்பரிச உணர்வு என்ற இவை அனைத்தும்
5.ஸ்தூல (திட) சரீரம் கொண்டு சூட்சம ஒளிச் சரீரம் பெற்றிடும் அகச் செயலில் வலுக் கொள்ளும் நிகழ்வுகளப்பா…!

அனைத்திற்கும் தியானமே மூல காரணம்.

மூல காரணம் எனும் ஊன் தன்மையாகச் சரீரம் முழுமைக்கும் மெய் ஒளி பரவி உயிரான்ம சக்தியாக லிங்க உடலாக வெளித் தோன்றாத் தன்மையாக “என்றும் நிலை பெற முடியும்…”

ஆகவே அந்த ஆதிசக்தியுடன் ஒன்றிடும் சக்தி பெற வலுவின் வலுவாகும் மூலச்சக்தியின் குணத் தன்மைகளை உணர்ந்து கொள்ளும் பொழுது இந்த மானிடப் பிறவி… “கிடைத்தற்கரிய பிறவியாக அமைகிறது…!”

ஜீவன் பெற்று எத்தனையோ பிறவிகள் பெற்றே வாழ்ந்திடும் உயிர்த் தொகைகளின் சுவாச அலைகள் ஒலி ஒளி அலைகளாகக் காற்றில் பரவிப் படர்ந்தே உலவிக் கொண்டே உள்ளது.

பகுத்தறியும் ஆற்றல் கொண்ட மனிதனின் பரபரப்பாக வாழும் வாழ்க்கைக் தொடர் என்ற இன்றைய கால கட்டத்தில்… தான் கொண்ட எண்ணங்களுக்கொப்ப காற்றிலே கலந்த அந்தச் சுவாச கதியை ஈர்த்து வினைச் செயலாகப் பற்பல வாழ்க்கை அனுபவங்களில் பெற்ற பயன் தான் என்னப்பா…?

1.சுவாசிக்கும் சுவாசமானது… சரீரத்தினுள் அமையப் பெற்றுள்ள முக்கிய நாடிகளில் ஓடி
2.சிரசில் அமைவுற்ற கட்டளைக் கேந்திர நாடிகளுடன் தொடர்பு கொண்டு
3.புறத் தொழில் கதிப்படும் உறுப்புகளாகிய கண் காது மூக்கு வாய் இவைகளில் ஓடி
4.அக்கினி கேந்திரமாகிய மூலாதாரம் எனப்படும் குதகுய்ய நாடிகளுடன் இணைந்து செயல்படும் செயலில்
5.அந்தந்த அவயங்களில் அமைவுற்ற காற்றுகள் தம் தம் செயலுக்கு உறுப்புகளின் நாடி வழியாக ஓடி
6.உடலுக்கு வெப்பத்தை உயிர் ஜீவனாக அளித்திடும் மூலாதார நாடிகளிலே
7.சரீர இயக்கத்தின் வினைச் செயல் மனிதன் கொண்ட எண்ண நிலைக்கொப்ப அனைத்துச் செயல்களும் நடைபெற்று ஓடிக் கொண்டுள்ளது.

செவிகளில் வலம் இடமாக ஓடிடும் நாடிகள் ஓர் ஓசையின் அலைகளால் மோதுண்டவுடன்
1.அந்த ஓசையின் பொருளை அந்தக் கணமே அறிந்து கொள்ளும் மிக நுண்ணிய கால அளவில்
2.சரீரத்தினுள் முக்கிய நாடிகளின் ஈர்ப்பின் செயலாக மூச்சலைகள் ஓடி
3.சிரசின் கட்டளைக் கேந்திரத்தில் பிடர்தல் (என்ற) ஓசைகள் மோதியவுடன் – செவியில் ஏற்படும் அதிர்வுகளில்
4.அறிந்து கொண்டிடும் அறிவாக மூலாதார அக்கினியின் தொடர்பு உண்டப்பா…!

வெப்பத்தாலோ மின்சாரத்தாலோ செயலுறும் இன்றைய இயந்திரங்கள் எதையும் ஒப்பிட முடியாத மனோசக்தித் திறன் தியானத்தின் மூலம் எடுக்கும் மிக மின் நுண் காந்த அலைகளால் செயல்படும் நிலை உணரத்தக்கது.

இந்தச் சரீர வாழ்க்கையில் எதிர் மோதல் ஏற்படும் கால கட்டங்களில் செவி நாடிகள் நம் ஆத்மாவின் பதிவுச் செயலுக்கு முக்கிய பங்கேற்கின்றன.

1.எண்ணங்களில் மோதல்களால் (உணர்வுகளால்)
2.கனம் கொண்ட சுவாச அலைகளைச் சுவாசமாக ஏற்க வேண்டிய சந்தர்ப்பங்களில் எல்லாம்
3.உடனுக்குடன் உயர் மின் நுண் காந்த அலைகளை ஈர்த்து
4.அனைத்துமே நமக்கு நன்மை அளித்திடும் செயலே…! என்ற மனதின் திடம் கொண்டு
5.“சுபம் சுபம் சுபம்…!” என்ற ஒலி நாதத்தை ஏற்படுத்தி
6.நம் ஆத்ம பதிவில் நல்மதியின் உயர் ஞான ஒளியாக
7.”ஆத்மாவின் மூலம்” வலுப் பெறவேண்டுமப்பா..!

ஏனென்றால் உயர் ஞானமாக ஆக்கப்படும் செயல் அனைத்தும் நன்மையே…!

சுபம்… சுபம்… சுபம்…!

உங்கள் பார்வை அனைவரது நோய்களையும் போக்கக்கூடிய சக்தியாக மலரட்டும்

இன்றைய விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கையாக வாழ்ந்து… விஞ்ஞான அறிவால் பூமியில் தீயவினைகள் பரவியிருக்கும் இந்த நேரத்தில்
1.மகரிஷிகளின் அருள் சக்தியை ஒவ்வொருவரும் பெற்று… அருள் ஞான வாழ்க்கை வாழ்ந்திடவும்
2.நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து பேரின்பப் பெரு வாழ்வு வாழ்ந்திடவும்
3.சர்வ பிணிகளையும் அகற்றும் சக்தி பெற்று சர்வ நஞ்சுகளையும் வென்றிடும் அருள் சக்தி பெற்று
4.உலக மக்கள் அனைவரையும் அருள் சக்தி பெறச் செய்யும் அருள் சக்தி நீங்கள் பெற
5.எமது அருளும் அகஸ்தியனின் அருளும் உறுதுணை செய்யும்.

உங்கள் பார்வையில் சர்வ பிணிகளையும் போக்கிடும் அருள் சக்தி பெறுவீர்கள். உங்களைப் பார்ப்போர் அனைவரையும் நலம் பெறச் செய்யும் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள்.

நீங்கள் பார்ப்போர் அனைவரும் அவர்கள் உடல் நலம் பெற்று மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெற்றிட… குரு அருளும் எமது அருளும் உறுதுணை செய்யும்.

மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் அனைவரும் வாழ்வோம் இருளை வென்றிடும் மெய்ப்பொருள் காண்போம். அருள் வாழ்க்கை வாழ்ந்து அருள் ஞானம் பெறுவோம். தெளிந்த மனத்துடன் வாழ்வோம். மலரைப் போல மனம் பெற்று மகிழ்ந்து வாழும் சக்தியுடன் வாழ்வோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரும் பெற்று மகிழ்ந்து வாழும் சக்தியாக நாம் பெறச் செய்வோம். உலக மக்கள் அனைவரும் நலம் பெற்று விஞ்ஞான அறிவால் விளைந்த சர்வ நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற நாம் தியானிப்போம்.

உலக மக்கள் அனைவரும் அருள் ஞானம் பெறும் சக்தியாக ஒன்றுபட்டு வாழ்ந்திடத் தியானிப்போம்.

1.இனி வரும் காலங்களில் மெய் வழி செல்லும் மெய் வழி பெறும் அருள் ஞான வாழ்க்கையாக நாம் வாழ்வோம்.
2.உலக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்திட நாம் தியானிப்போம்… தவம் இருப்போம்

உலக மக்கள் அனைவரும் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிடும் அருள் உணர்வு பெற நாம் தவம் இருப்போம். அருள் வழி வாழ்வோம்… அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்திடும் அருள் ஞானம் பெற நாம் தவம் இருப்போம்..!

நம் எண்ணங்களை ஒருநிலைப்படுத்துவதற்குத் தான் தியானம்…! – ஈஸ்வரபட்டர்

1.கண் கொண்டு பார்த்தல் (காட்சிகளும் காட்சிப் புலனறிவும்)
2.நாசி கொண்டு சுவாசித்தல் (சுவாச ஓட்ட வாசனைகளை அறிந்திடும் அறிவு)
3.வாய் கொண்டு சுவைத்தல் (சுவை குண அறிவு செயல்பாட்டில் உணர்தல்)
4.செவிப்புலனறிவு (ஓசைகளின் தன்மைகள் தெளிதல்)
5.தொடு புலனறிவு (ஸ்பரிசித்தலில் உணர்வு கொண்டு அறிந்து கொள்தல்) என்ற
6.இந்த ஐந்து பஞ்சேந்திரியங்கள் மனித உடலுக்குள் செயல்படுகின்றன.

அவைகள் செயல்படும் நிலையில் புறத்திலிருந்து வரும் மோதல்கள்… அந்த அமில குணத்தன்மைகளை அவயங்கள் தம் தம் செயலுக்குச் சரீரத்தின் கட்டளைக் கேந்திரமாகச் “சிரசின் உச்சிப் பகுதியில்…” செயல் கொண்டே உள்ளது.

ஆகவே அகச் செயலாகச் சுவாச ஓட்டங்களின் தொடருக்கு
1.நொடிக்கும் குறைவான கால ஓட்டமாகச் செயல் கொண்டு
2.சரீர இயக்கமே ஆத்ம ஒளியால் பகுத்தறிவு எனும் ஞான தீபமாகச் செயல் கொண்டு
3.அறிதல்… உணர்தல்… தெளிதல்… என்றிட்ட முத்தொடர் செயலில்
4.ஆக்கபூர்வமானவனாக நாம் ஆகுதலே மெய்ஞான விழிப்பு.

அந்த அகச் செயலில் எண்ணத்தின் கூர்மையை ஒரு நிலைப்படுத்தப்படும் பயிற்சி வழித் தொடர்பே தியானம் ஆகும்.

மனம் ஒருநிலைப்பட்டபின் தான் தியானம் என்றால் எப்பொழுதப்பா உன் மனதை ஒருநிலைப்படுத்தப் போகின்றாய்…?

தியானத்தில் அமர்ந்தவுடன் வந்து வந்து மோதிடும் “வாழ்க்கைச் சாகர எண்ண நிலைவோட்ட அலைகள்” படிப்படியாக விலகி மனதின்கண் அமைதி கொள்ளவே இந்த எளிய தியானத்தைக் கொடுக்கின்றோம்.

நாங்கள் “ஆத்ம பலம் பெற வேண்டும் ஈஸ்வரா…” என்றே புருவ மத்தியில் எண்ணித் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளியை ஈர்த்து எண்ணத்தின் வலுவைப் பெற்று விட்டால்
1.உயிராத்மாவின் பேரானந்த நிலையைச் சொல்லால் விளக்கிக் கூற முடியாது
2.“உணர்ந்தறியும் அனுபவ ஞான ஆனந்த நிலையே நித்திய சுபம்…!”

சொர்க்கத்தை அடைய வேண்டும் என்று முயற்சித்தவர்களில் “முழுமை அடையாதவர்கள் உணர்வு நம்மை இயக்கிவிடக் கூடாது”

இயற்கையின் நியதிகள் எவ்வாறு இயக்குகின்றது என்றும்… பிறப்பு இறப்பு என்ற இயற்கையின் சுழற்சியிலிருந்து மனிதன் எப்படி மீள வேண்டும் என்றும் எண்ணி இந்தப் பூமியில் முயற்சித்தவர்கள் எத்தனையோ பேர்…!

1.ஆனால் எத்தனையோ பேர் முயற்சி செய்தாலும் அதிலே முழுமையடையாது மடிந்தவர்கள் உண்டு
2.முழுமை பெறும் வழிக்குச் சென்று… முழுமை பெற்றவர்கள் “சிலரே” உண்டு.

பலர் முழுமை பெறாது தோல்வி அடைந்து… அந்த முழுமையற்ற நிலைகளாகக் குறை கொண்ட உணர்வுகளை உடலில் விளைய வைத்து அப்படி வெளிப்படுத்தப்பட்ட உணர்வின் அணுக்களும் இந்தக் காற்றிலே உண்டு.

அதே சமயத்தில் முழுமை பெற்று அழியாத நிலையில் எண்ணிலடங்காதோர் இன்றும் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் உள்ளார்கள்.

ஆனால் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்ற ஆவேச உணர்வுகள் மனிதனுக்குள் உருவாகி
1.அதற்காக “நான் திருமணமே செய்யமாட்டேன்…!” என்ற உணர்வின் வேக அழுத்தம் கொண்டு செயல்பட்டால்
2.திருமணம் ஆகாமலே வெறுக்கும் தன்மையே அந்த உடலிலே வளருகின்றது

அப்படி வெறுக்கும் தன்மை வரப்படும் பொழுது அவன் வளர்ச்சியின் தன்மை குன்றுகின்றது. மற்றொன்றை வளர்க்கும் தன்மையும் இழக்கப்படுகின்றது.
1.ஆண்மை என்ற உணர்வின் தன்மை வலுவாக உருவாக்கி
2.கரு என்ற உணர்வை உருவாக்காதபடி
3.வளர்ச்சி பெறும் உணர்வின் தன்மை தடைப்படுத்தி விடுகின்றது.
4.அதற்கு மேல் வளர முடியாத நிலையும் வருகின்றது.

இப்படிப்பட்ட வளர்ச்சி பெற்றவர்கள் சாமியாராகச் சென்றாலும் திருமணமாகிக் கணவன் மனைவி என்று ஒன்றிணைந்து செயல்படவில்லை என்றால் உடலில் விளையும் அணுக்கருத் தன்மை மாறுபட்டு அவரின் செயலாக்கங்களும் மாறுகின்றது.

திருமணமே செய்யமாட்டேன் என்ற இவரின் உணர்வைப் பின்பற்றி வரும் சீடர்களின் உணர்வுகளிலும் இது ஆழமாகப் பதிவாகின்றது. ஏனென்றால் “குரு போதிக்கின்றார்…” என்று அந்தக் குரு சென்ற பாதையில் அவர்களும் செல்லத் தொடங்குகின்றனர்.

இருந்தாலும் குரு என்பவர் கடைசியில் மடிந்தார் என்றால் சீடர்கள் என்று அவர் வளர்த்த நிலைகள் கொண்டு அவரின் உடலுக்குள் தான் குருவின் உயிரான்மா செல்கிறது.

1.குருவின் உணர்வுகளை எந்தச் சீடன் வளர்த்துக் கொண்டு
2.குரு பக்தி என்றும்… தனது குரு…! என்றும் நேசிக்கின்றானோ
3.குரு இறந்த பின் அவன் உடலுக்குள் தான் அவர் செல்ல முடிகிறது.

உடலுக்குள் வந்த பின் குரு கண்டுபிடித்த உணர்வுகள் எல்லாம் சீடனின் உடலுக்குள் இயங்கத் தொடங்குகின்றது. இப்படி அந்தச் சீடனின் உடலுக்குள் தான் இவர்கள் நுழைய முடிகின்றதே தவிர சொர்க்கம் அடையும் நிலை இல்லை.

சீடன் குரு மீது பற்று கொண்ட உணர்வும் குருவினுடைய உணர்வும் ஒன்றுபடும் நிலையில் அந்த உயிரான்மா வெளி வந்தால் அது இயக்கி அந்த உடலுக்குள் “சாகாக்கலை…” என்ற நிலையாகத் தான் மாறுகின்றது.

சீடனின் உடலுக்குள் புகுந்த பின் அவன் எடுக்கும் ஆசையின் உணர்வுகள் கொண்டு வேதனை என்ற உணர்வை அவன் வளர்த்து விட்டால் விஷமான உணர்வின் தன்மையையே உடலுக்குள் வந்த குருவும் வளர்க்க நேர்கின்றது.

ஆனால் வேதனை என்றால் கடும் விஷம். அவன் செய்தான்… இவன் செய்தான்..!. என்ற நிலையில் மாறுபட்டுச் செயல்படும் நிலையே இங்கே வருகின்றது.
1.அவர்களுடைய ஆசையின் நிலைகள் செயல்படும் போது
2.வளர்ச்சியின் பாதைக்குச் செல்ல முடியாதபடி தேய்பிறை என்ற நிலையை அடைகின்றனர்.

சொர்க்கம் அடைந்தார் என்று இவர்கள் பட்டத்தைக் கொடுக்கலாம்.
1.ஆனால் அந்த நிலையை இவர்கள் அடைவதில்லை என்பதை
2.குருநாதர் காட்டிற்குள் எம்மை (ஞானகுரு) அழைத்துச் சென்று சொர்க்கம் என்பது எது…? என்று தெளிவாகக் காட்டினார்.

தினசரி உறங்கப் போகும் முன் நாம் செய்ய வேண்டிய பயிற்சி – ஈஸ்வரபட்டர்

ஒவ்வொரு நொடியிலும் மனிதனுக்குள் ஓடும் பலதரப்பட்ட எண்ணத்தின் சுவாசங்கள் வீரியமாகச் செயல்படும் தன்மைக்கு… “சங்கிலித் தொடர் போல் அந்த எண்ண ஓட்டமே…” ஒவ்வொரு நாளும் கொள்ளப்படும் செயலாக நிகழ்கிறது. (இது எல்லோருக்கும் தெரிந்தது தான்… தெரியாதது இல்லை)

அவ்வாறு எடுக்கும் சுவாச ஓட்டத்தின் கனத்தினால் மீண்டும் மீண்டும் அந்தச் சுவாச ஓட்டத்தின் வீரியம் கொண்ட எண்ணத்தின் பதிவு நிலையாகச் செயல் கொள்கிறது.

அதுவே “விதியாகவும்” மாறுகிறது.

வாழ்க்கையில் அன்றாட அலுவல்களில் பலரைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளில் அவர்களைப் பற்றிய எண்ணங்களை இந்த ஜீவ பிம்பச் சரீரத்தின் காந்த ஈர்ப்பினால் உடலுக்குள் ஈர்த்துக் கொண்டே தான் உள்ளோம்.

அதிலே எந்தெந்தக் குணத் தன்மைகளை ஈர்த்து நமக்குள் பதிவு செய்கின்றோமோ அந்தப் பதிவு நிலைக்கொத்த குணத் தன்மைகளுக்குத் தக்க ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களில் மீண்டும் மீண்டும் அதை எண்ணியே வலுக்கூட்டி ஆத்மாவும் சரீரமும் பாதிப்பு ஏற்படுத்திக் கொள்ளும் நிலை ஆகிறது.

அன்றாடம் உடலில் உள்ள கழிவுகளை நீக்கிச் சரீரத்தைத் தூய்மைப்படுத்திடும் செயல் போன்று
1.நாம் எடுத்துக் கொண்ட எண்ணத்தின் தன்மைகள்… உணர்வுகள் மாற்றம் கொள்ளும் கால கட்டத்தில் எல்லாம்
2.எண்ணத்தை வானை நோக்கி உயர்வாகச் செலுத்தி
3.ஜீவ காந்தச் சரீரம் கொண்டு உயர் காந்த மின் அணுக்களை ஈர்த்துக் கொண்டு
4.சுவாச கதியில் உணர்வுகள் மாற்றம் கொள்ளும் செயலின் வீரியத்தை
5.தியானத்தில் ஈர்த்துக் கொள்ளும் நற்சுவாச அலையால் சமன்படுத்தி மனதின் திறத்தைக் காத்திடல் வேண்டும்.
6.அதனால் சரீரமும் பாதிப்படையாது… பல நன்மைகளும் ஏற்படுமப்பா…!

புலரும் காலைப் பொழுது முதற் கொண்டு இரவு உறங்கும் காலம் வரை சரீரத்தில் ஈர்த்துக் கொண்ட அணுக்களின் குணத் தன்மைகளில்…
1.ஈர்க்கப்பட்ட அந்த அணுக்கள் அனைத்தும்
2.உறங்கும் காலப் பொழுதில் மீண்டும் சுவாசத்தின் நிலையில் ஜீவன் கொண்டிடும் செயல் சூட்சமமாக நிகழப் பெறும்.

அதிலே நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. ஆனால் கெட்டது ஜீவன் பெறாது… அதனின் வினைச் செயலை மாற்றி… நல்லாக்கம் பெற்றே வலுவாக்கிடும் நிலையை “உறங்கும் முன் எடுக்கும் தியானத்தின் தொடரில் கொண்டு வர வேண்டும்…!” (இது மிகவும் முக்கியமானது).

1.எங்கள் உடலுக்குள் இருக்கும் அத்தனை உயிரணுக்களும்
2.ஒளி அணுக்களாகச் சக்தி பெற்றிட வேண்டும் ஈஸ்வரா…! என்ற எண்ணம் கொண்டு
3.உயர் மின் காந்த அணுக்களை ஈர்த்துப் பல முறை உடலுக்குள் செலுத்திக் கொள்ள வேண்டும். (படுக்கும் முன்)

காலையிலிருந்து இரவு வரை நம் சுவாசத்தில் ஈர்க்கப்பட்ட அந்த மாற்று நிலை கொண்ட உயிரணுக்களும்
1.இந்தச் சரீரத்தினுள் நற்சக்தி பெற்று
2.நல் அணுக்களாக மாற்றம் கொள்ள வேண்டும் என்ற
3.உயர்ந்த எண்ணம் கொண்டு ஆத்ம சுத்தி செய்து உறங்கினால்
4.இரவு முழுவதும் வலுக் கொண்டு ஓடும் இந்தத் தியான நினைவோட்டத்தால்
5.உயர் ஞானம் சித்திக்கும் செயலாக நல் நிலை பெற்றிட முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஒளிப் பிளம்பலைகளை நாம் ஒவ்வொரு நிமிடமும் சுவாசிக்க வேண்டும்

ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து இரவு வரையிலும் சதா எத்தனையோ தீமைகளையும் நன்மைகளையும் நுகர்ந்தறிந்து கொண்டே உள்ளோம்.

அது எல்லாம் நம் உடலுக்குள் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று நம் உடலாக மாறிக் கொண்டே உள்ளது.

அப்படி மாறிக் கொண்டே இருந்தாலும் அந்தத் தீமையான உணர்வுகளை நீக்கத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் எடுத்தேயாக வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று உடலுக்குள் செலுத்தினால்
1.தீமைகளை மாற்றிடும் சக்தியாக அது வலுப் பெற்று
2.நல்ல உணர்வுகளாக மாறி… தீமையிலிருந்து நம்மை விடுபடச் செய்யும் என்று
3.ஞானிகள் இதை நமக்குத் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

அதே சமயத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நாம் மட்டும் பெற்றால் பத்தாது.

நாம் பெற்ற சக்திகளையும் நாம் கண்ட உண்மை உணர்வுகளையும் தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டுமென்று கணவனும் தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும் இந்த இரு உணர்வும் ஒன்றி உருவாக்கினால்தான் ஒளியான அணுத் தன்மை அடைகின்றது,

இதை ஒவ்வொருவரும் பழகிக் கொண்டால் இன்றைய விஞ்ஞான உலகில் விஷத் தன்மைகள் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அது நம்மைப் பாதிக்காதவண்ணம் மாற்றிக் கொள்ள முடியும்.

1.27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் அந்தத் தூசிகள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது ஒளிப் பிளம்பலைகள் பரவுகின்றது.
2.அந்த ஒளிப் பிளம்பலைகள் பரவி வரும் போது துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தால்
3.அதிலிருந்து வரக்கூடிய அணுக்களைச் சுவாசித்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு அதைச் சேர்ப்பிக்கின்றது.

27 நட்சத்திரங்களும் ஒன்றுடன் ஒன்று மின்னலாகத் தாக்கி அது உணர்வலைகளாகப் பரப்பப்படும் போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துக் கொண்டால் ஒளிக் கற்றைகளாக உடலுக்குள் பரவும்.

ஏனென்றால்…
1.நட்சத்திரங்களிலிருந்து வரும் ஒளிக்கற்றைகள் பளீர்… பளீர்… என்று மின்னும்.
2.அந்த உணர்ச்சிகளை நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் ஏங்கிப் பெறும் போது நம் ஆன்மாவாக மாறுகிறது.
3.ஆன்மாவிலிருந்து சுவாசித்து உடலுக்குள் செலுத்தும் போது அந்த உணர்வின் அணுக்கள் ஒளியாக மாறும்.

ஆகவே உயிர் எப்படித் துடிக்கின்றதோ இதைப் போன்றுதான் இந்த உயிர் அணுவின் தன்மை இணைந்து இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது எந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்தோமோ அங்கே நம்மை அழைத்துச் சென்று ஆறாவது அறிவு கொண்ட நிலையில் ஏழாவது நிலையாக வளர்ச்சி பெற்று அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைய முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

பல கோடிச் சரீரங்களைக் கடந்து கடந்து இன்று நாம் மனிதனான பிறகு நம் உயிர் என்ன செய்கிறது…? ஆகாரத்துடன் கலந்து வரக்கூடிய நல்ல வாசனையுள்ள உணவில் கலந்துள்ள நஞ்சை மலமாக மாற்றி விடுகிறது.
1.நல்ல உணர்வை நம் உடலில் சேர்த்து
2.நல்ல உணர்வைப் பெறக்கூடிய அந்த உணர்வின் சத்தை நம் உடலாக மாற்றுகிறது.

அந்த நல்ல உணர்வின் சத்து வெளிப்படும் போது அந்த மணம் இந்த உடலுக்கு எது தேவையோ அந்த உணர்வின் தன்மையைத் தான் அது பெறும்.

இருந்தாலும் மனிதனாகப் பிறந்த நிலையில் குழந்தையிலிருந்து வளர்ச்சி அடையும் போது ஒவ்வொன்றாகப் பார்க்கிறோம். குழந்தைப் பருவத்திலே
1.தாய் மேலே வெறுப்பாக இருக்கிறது.
2.தன் கூடப் பிறந்தவர்களை உதைக்க வருகிறது.
3.விளையாடும் பொழுது எத்தனையோ முறை தடுக்கி விழுகிறது.

இதற்குக் காரணம் என்ன…? குழந்தை தாய் கருவிலே விளையப்படும் போது வந்த உணர்வுகள் தான் இவை.

தாய் கருவுற்றிருக்கும் சமயம் சந்தர்ப்பவசத்தால் வெறுப்பு கொண்டர்களையோ வேதனை கொண்டவர்களையோ மற்றவர்களைத் தாக்கும் உணர்வுகளையோ பார்க்க நேர்ந்தால் அல்லது பேசுவதைக் கேட்க நேர்ந்தால் வேடிக்கையாகப் பார்த்தாலும் அதைத் தாய் நுகருகிறது. அது இரத்தத்தில் கலக்கிறது.

கரு உருவான ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் இத்தகைய சமபவங்களை உற்றுப் பார்த்தால் இரத்தத்தின் வழியாக அது குழந்தையின் கருவிலே இணைந்து விடும். கருவிலேயே இத்தகைய நிலைகள் உருவாகிறது. குழந்தைக்கு அதுவே பூர்வ புண்ணியமாகிறது.

குழந்தை கருவிலே விளையும் போது அடுத்தவர்களைத் கிள்ளுவது.. தள்ளி விடுவது…! போன்றவற்றைக் கருவுற்ற தாய் பார்த்திருப்பார்கள். பிறந்த உடனே அந்தக் குழந்தையைப் பாருங்கள்.

குழந்தையின் பாஷையும் தோரணையும் அதனுடைய சத்தமும் மற்றவரை அடிப்பதும் வெறுப்பதும் அது வளர்ச்சியாகி வரும் போது அந்த வித்தியாசம் தெரியும்.

ஆனால் சில குழந்தைகளைத் தள்ளி விட்டாலும் அது பேசாமல் இருந்து விட்டு ஒதுங்கிப் போகும். அது அதனுடைய உணர்வுகள்.
1.அப்போது அந்த உணர்வுகொப்ப இயக்கம் இந்த உயிர் தான் இயக்குகிறது.
2.வேறு யாரும் இயக்கவில்லை.

நாம் எண்ணி நுகர்ந்த உணர்வை அணுவாக மாற்றி அந்த அணுவின் மலம் தான் நம் உடலாகிறது. நல்ல அணுக்களாக இருந்தால் நம் உடல் அழகாக இருக்கிறது. அமைதியாக இருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது.

ஒரு குழந்தை இன்னொரு குழந்தையைத் தள்ளி விடும் போது கருவுற்ற தாய் “பார்… சிறிய குழந்தையை இப்படித் தள்ளி விடுகிறது…! என்று நினைத்தால் கருவிலிருக்கும் குழந்தைக்கு அதே உணர்வுகள் தான் தோன்றுகின்றன.

அதற்குத் தள்ளி விடும் உணர்வுகள் வருகிறது. அது பிறந்தபின் குழந்தை பருவத்தில் அடுத்த குழந்தையைத் தள்ளி விடும்போது விழுந்த குழந்தையின் பெற்றோருக்குக் கோபம் வருகிறது.
1.கோபம் வந்தால் குழந்தைகளுக்குத் தெரிகிறதா என்றால் இல்லை.
2.ஆனாலும் தன் செயலைத் தான் அது செய்கிறது.

தன் குழந்தை தவறு செய்கிறதே…! என்று தாய் சப்தம் போட்டுக் கூப்பிட்டால் அந்தச் சப்தம் கேட்டு எதிர்த்துக் குழந்தை அழ ஆரம்பித்து விடும். ஆனால் தெரிவதில்லை,

எந்த உணர்வின் அணுவாக உருப்பெற்றதோ அந்த உணர்வின் உணர்ச்சிகள் அது இயங்கி அதையே உணவாக உட்கொண்டு அந்த அணுக்கள் பெருகும்.

நாம் குழந்தை என்று எண்ணுகிறோம். ஆனால் அதன் வளர்ச்சியில் நாளடைவில் தன் உடலுக்குள் பகைமை உணர்வு கொண்ட அணுக்களாக மாறி விடும். அதே சமயத்தில் அந்த உணர்வுகளைக் குழந்தை நுகர நுகர இரத்த நாளங்களில் அந்த உணர்ச்சியின் தன்மைகள் தான் வளரும்.

இதைப் போன்ற தீமைகளிலிருந்து நம் குழந்தைகளைக் காக்க வேண்டியது மிகவும் அவசியம்.

நாடிகளின் துடிப்பு மாறுபட்டு அதனால் நோய் எப்படி உருவாகிறது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

வாழ்க்கை நடைமுறையில் மனிதன் எடுக்கின்ற எண்ணத்தின் குணங்களாக
1.மோகம் (மயக்கம் – மருள்)
2.கோபம் (அவசரம் – ஆத்திரம் – ஆவேசம்)
3.காமம் (அதி ஆசைகள் – ஏக்கம்)
4.வெறி (மதம் – செருக்கு)
5.பொறாமை (வெறுப்பு – விரக்தி – குறுகிய மனம்)
6.அதி பயம் (கலக்கம்) போன்ற இந்த ஆறு குணங்களும் இடும்பச் சித்தன் காட்டிய தீதெண்ண குணங்கள்.

இந்தக் குண எண்ண ஓட்டங்களால் மனிதனின் நினைவுகள் அதிலே சிக்கப்பட்டு அந்தச் சுவாசமே “கனம் கொண்டதாக…” ஈர்க்கப்படுகின்றது.

அந்தக் கனமான சுவாசத்தின் அலைகள் சரீரத்தினுள் இரத்த ஓட்ட நாளங்களில் செயல் கொள்ளும் சுவாச நாடிகளின் வழியே ஓடி சுவாச நாடிகளின் முக்கிய கேந்திரங்களாக அந்தந்த இடங்களில் அமையப் பெற்ற மூலம்… மூலாதாரம்…. நாபி… இருதயம்… கண்டம்… நெற்றி… தலையின் உச்சிப் பகுதி… முதலிய அமைப்புகளிலும் ஓடுகின்றது.

1.சரீரத்தில் ஈர்க்கப்படும் இத்தகைய உணர்வுகள் இடும்ப குண வசமாக மனிதனுக்குள் வந்து
2.அந்தந்த எண்ணத்தின் தொடருக்கு நாடிகளில் ஓடிடும் மூச்சலைகள் இரத்த நாளங்களில் ஓடும் செயலில்
3.சரீர அவயங்களில் தன் தன் இயக்கத்தில் (நாடிகளில்) செயல்படும் நிலையே
4.அதி தீவிரச் செயல் நிகழ்வாகச் சரீர இயக்கத்தில் செயல்பட்டு
5.அந்தத் தீதெண்ண குணங்களின் கனம் மிக்க சுவாசத்தின் ஓட்டத்தினால் ஏற்படுவதே உடல் நோய்கள்.

(1). இருதய வலி:-
சுவாச ஓட்டம் சரீரத்திற்குள் சென்று வெளி வரும் செயலில் இருதயப் பகுதியில் இருந்து ஓடும் தாய் மூச்சு நாடி நாபிப் பகுதியில் நீரமிலச் சக்தியுடன் இணைந்து செயல்படுகின்ற செயலில் கோபத்தின் கனம் மிக்க சுவாச ஓட்டத்தால் என்ன ஆகிறது…?

அந்தத் தாய் மூச்சு தாக்கப்பட்டு அதனுடன் இணைந்த மார்பு நாடியின் செயலுக்கும் தடை ஏற்படுத்தும் பொழுது உண்டாவதே இருதய வலி.

(2). வாயு… பித்தம்… மன நோய்:-
குறுகிய மன நிலை… மருள்… பொறாமை… ஏக்கம்… உள்ளிட்ட கனம் கொண்ட சுவாசத்தின் தன்மையால் நீரமில சக்தி கொண்டிட்ட நாபி நாடியின் செயலுக்குத் தடை ஏற்படுகிறது.

அதே போல் இடுப்பு எலும்பும் கால் எலும்பும் இணையும் இடத்தில் ஓர் சூட்சம வாயு வெளிப்பட்டு மூல அக்கினியில் கலக்கின்றது.

1.மூல அக்கினியில் கலந்த அந்த வாயு
2.மூலத்திலிருந்து கிளம்பி மூல நாடியின் வழி ஓடி நாபி நாடியைத் தாக்கிடும் செயலில்
3.சரீரத்தில் வாயு பித்தம் மற்றும் மன நோய் ஏற்படும் நிலைகளை உண்டாக்கி விடுகிறது.

(3). உடல் உஷ்ணம்… தோல் வியாதி:-
மோகம்… செருக்கு… அதி ஆசைகள்… என்ற எண்ண ஓட்டத்தில் வரும் சுவாசத்தின் மூச்சலைகள் மூலாதாரம் மூலம் இந்த இரு நாடிகளில் தாக்கப்பட்டு அதி உஷ்ணம் தோல் வியாதிகள் மற்றும் உயிர் நிலையை ஜீரணிக்கச் செய்யும் இரத்தம் சிலந்தி நோய்களும் வரக் காரணமாகின்றது.

கண்ட நாடி பாதிக்கப்படும் பொழுது அறிவின் ஆற்றல் செயல்படாதபடி பிரமை பிடித்த நிலையும் ஊமைத் தன்மையும் மற்றும் காதுகேளாச் செயலும் ஏற்படுகிறது.

இந்த நோய்களும் இவைகளின் கிளைகளாகப் பல்கிப் பெருகும் ஏனைய நோய் நொடிகளும்
1.தான் எடுத்துக் கொண்ட குணத்தின் வீரியத் தன்மைகளால்
2.”மனிதன் தனக்குத் தானே விதித்துக் கொள்ளும் தண்டனைகள் தான்…!”

கண்டத்தின் செயலையும் தாண்டிச் சிரசின் பகுதியில் நெற்றியில் ஓடும் நாடிகள் பாதிக்கச் செய்யும் அதி தீவிரச் சிந்தனைகளாலும்… திடீரென ஏற்படும் அதிர்ச்சிகளின் செயலினால் உண்டாகும் பயத்தினாலும் மனிதனுடைய சித்தம் கலங்கிப் பித்தனாகவே (பைத்தியம்) மாற்றிவிடும்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல…!
1.நல் எண்ணக் குணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து
2.சுவாச நிலையைச் சீராக்கும் முயற்சியில் மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்து
3.உயரிய சுவாசமாக.. அருள் மணங்களாக.. அந்த மூச்சலைகளை நாடிகளின் கேந்திரங்களுக்குள் செலுத்தினால்
4.சரீர சுத்தி கிடைக்கும்… அதே போல் உயிரான்ம சக்தியும் சுயப்பிரகாச நிலை (ஒளி நிலை) அடையும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

புழுவிலிருந்து பாம்பாக தேளாக மற்ற எத்தனையோ விஷ ஜந்துகளாகப் படிப்படியாக உருவாகித் தான் இன்று நாம் மனிதனானோம்.
1.மனிதனான பின் மீண்டும் விஷமான உயிரினங்களாகப் பிறக்க வேண்டுமா…?
2.சற்று சிந்தியுங்கள்.

ஏனென்றால் ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு விதமான விஷம் உண்டு. உதாரணமாக ஒரு தேள் மனிதனைக் கொட்டி விட்டால் அந்த விஷம் சிரசில் ஏறி விடுகின்றது.

தேள் செத்த பிற்பாடு வந்த கொடுக்கை எடுத்து வந்து லேசாகக் குத்தினாலும் அது நமக்குள் கடும் விஷமாக மாறும்.

தேளின் கொடுக்கு விஷமாக இருந்தாலும் மற்ற விஷத் தன்மைகளை அது உணவாக உட்கொண்டதனால்தான் விஷத்தை அடக்கும் அந்தத் தேளின் உடலாக அது பெற்றிருக்கின்றது.

விஷம் கொண்ட உயிரினங்களை அது உணவாக உட்கொண்டாலும் அதை எல்லாம் இணைத்துத் தனக்குள் அடக்கி வைத்திருக்கிறது. ஆனாலும் அந்த விஷமான தேளை ஒரு கோழி கொத்தித் தின்கிறது.

அதே சமயத்தில் கோழி மண்ணுக்குள் இருக்கும் பல பொருள்களை அது கொத்தித் தின்னும் பொழுது
1.அந்த மண்ணைப் பிரித்தெடுக்க முடியவில்லை என்றாலும்
2.உட்கொண்ட பின் உணவுடன் கலந்து செல்லும் அந்த மண்ணைப் பிரித்தெடுக்கும் நிலையாக
3.ஈரல் (உறுப்பு) ஒன்று உருவாகின்றது கோழியின் கல்லீரலில்.

நாளடைவில் இந்த விஷத்தின் தன்மை அதனுடன் கலக்கக் கலக்க அதுவும் சிறுகச் சிறுகக் கரைந்து பல இனங்கள் சேர்த்து இந்த உடலுக்குள் வலு கொண்டதாக மாறுகின்றது.

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்றிடும் உணர்வு பெற்ற மனிதர்கள் இன்று கோழியை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். இந்த உணர்வுகள் மனிதனுக்குள் வளர்ச்சி அடைகின்றது.

1.விஷத்தைக் கோழி அடக்கியது போல்… .அதே உணர்ச்சியின் வீரிய உணர்வுகளை மனிதனுக்கும் ஊட்டுகின்றது.
2.ஆனால் அதில் உள்ள விஷத்தின் தன்மை எதுவோ அதனுடன் கலந்த உணர்வை விஷத்தை நுகரும் சக்தியும் மனிதனுக்குள் அதிகமாகக் கூடுகின்றது.
3.கோழியை அதிகமாகச் சாப்பிட்டுப் பழகினால் கோழியின் நினைவே வரும்.

கோழி தன் உடலை வளர்க்க விஷமான பூச்சிகளையோ உயிரினங்களையோ உணவாக எடுத்துச் சாப்பிடுகின்றது. ஆனால் நஞ்சை வென்று வந்த மனிதனோ கோழியை ருசித்து உணவாக உட்கொள்ளும் போது தான் நுகர்ந்த உணர்வுகள் அந்தக் கோழியின் ஞாபகமே வரும்.

அப்புறம் கோழியாகத் தான் பிறக்க நேரும். இன்று மனிதனாக இருந்தாலும் அப்புறம் கோழியாகத்தான் ஆக வேண்டும்.

ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் இந்தத் தியான வழியிலே வரப்படும் போதே இதைப்போன்ற உடல் இச்சைகளுக்கு எண்ணி “இது தான் நடக்க வேண்டும்…!” என்ற குறிக்கோளுடன் வந்தால் மீண்டும் சாதாரண வாழ்க்கையில் இருப்பது போன்று அந்த உணர்வுகளை வளர்த்துக் கீழே தான் போவோம்.

1.பெரும் பெரும் ஞானிகள் எல்லாம் மக்கள் மத்தியில் வந்து
2.தோல்வியைக் கண்டு வெறுப்படைந்துதான்
3.இத்தகைய (மனித) ஆன்மாக்களின் மீது பற்று இருந்தால் நம்மையும் இது இழுத்துக் கொண்டு போய்விடும் என்று
4.அவ்வாறு விலகிச் சென்ற ஞானிகள் ஏராளம்.

தீமையை அகற்றிடும் உணர்வை விளையச் செய்து அனைவரையும் ஞானியாக்க வேண்டும் என்ற இந்த எண்ணம் அந்த ஞானிகளுக்கு வரப்படும் போது தான் தகுந்த உபாயத்தைக் கொடுக்கின்றனர்.

அவருக்குள் உருபெற்ற இந்த நிலையை அவர் வெளிப்படுத்தும் பொழுது அந்த உணர்வை நுகர்வோருக்கெல்லாம் அது கிடைக்கின்றது. ஆனாலும் உடல் இச்சையுடன் இந்த உணர்வின் தன்மைகளை நுகர்ந்தால் அது எங்கே கொண்டு செல்கின்றது…?

1.உடல் மீது பற்றின் தன்மை வரப்படும் போது விண்ணின் ஆற்றலை மறக்கச் செய்கின்றது.
2.பின் நாம் எங்கே போகின்றோம்…? கீழே தான் போகின்றோம்…!
3.அப்பறம் தியானத்திற்கு வந்தால் என்ன ஆகும்….?

இதில் சிலர் நீங்கள் தியானத்தில் என்ன பார்த்தீர்கள்…? என்ன பார்த்தீர்கள்…! என்று இப்படித் தான் கேட்டுக் கொண்டு இருப்பார்கள்.

சாமி (ஞானகுரு) சொன்ன வழியில் தான் இவர் நடக்கிறார். அப்படி இருந்தும் இப்படித்தான் நடக்கின்றது… ஒன்றும் நல்லதாகவில்லை…! என்று இலேசாகத் தூண்டி விட்டால் போதும்…!

ஆமாம்…! என்று தலையாட்டி விட்டுத் தான் பெற்றுக் கொண்டிருக்கும் நல்லதைக் கெடுக்கத்தான் உதவும். ஆக அவரும் பெற முடியாது… இவரும் பெற முடியாது…!

ஏனென்றால் நான் (ஞானகுரு) இவர்களிடமிருந்து ஏதோ சக்தி பெறுவதாகத் தான் அர்த்தமாகின்றது.

எல்லோரும் மெய் ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும் மெய் ஞானிகளாக வளர வேண்டும் என்ற என்ற அந்த உயர்ந்த எண்ணம் தான் எனக்குள் அது உருபெறுகின்றது. அந்த ஆசையைத் தான் நான் பெறுகின்றேன்… அதே வழியினைத் தான் உங்களுக்கும் உணர்த்துகின்றேன்.

இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்திகளை நாம் பெற வேண்டியதன் அவசியம்

இன்று எந்தப் பயிரினங்களாக இருந்தாலும் “பூச்சிக் கொல்லி மருந்துகள்” தெளிக்கவில்லை என்றால் அது சரியாக விளையாது. நாம் உணவாக உட்கொள்ளும் உணவுகள் அனைத்திலுமே இந்த நஞ்சின் தன்மையே கலந்துள்ளது.

நம் உடலிலே சிறுகச் சிறுக இந்த நஞ்சின் தன்மை கலக்கப்படும் பொழுது
1.கை கால் குடைச்சலும் மற்ற நோய்களும் வரக் காரணமாகின்றது.
2.அதே சமயத்தில் நஞ்சு அதிகரிக்கும் போது சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.
3.சிந்திக்கும் தன்மை இழக்கும் போது தவறு செய்யும் இயல்புகள் அதிகமாகி விடுகின்றது… குற்ற இயல்புகளும் அதிகமாகி விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் தப்புவதற்கு என்ன செய்வது…? என்று நாம் சற்று சிந்தித்தல் வேண்டும். ஏனென்றால் இந்தக் காற்று மண்டலத்தில் விஞ்ஞான அறிவால் விஷத்தின் தன்மை அதிகளவில் பரப்பப்பட்டு விட்டது.

பூச்சிக்கொல்லி மருந்துகளால் உருவான பயிர் வகைகளை உணவாக உட்கொள்ளும் பொழுது நம் உடலில் அது வடிகட்டினாலும்
1.நம் ஆன்மாவில் கலந்தது
2.அதே விஷத்தின் தன்மைகளை இன்னொரு பக்கம் தூவினாலும்
3.அதை நமக்குள் இழுக்கும் சக்தியும் வருகின்றது.

ஆகையினால் அந்த விஷத்தின் தன்மை வரும் பொழுது நமக்குள் எத்தனையோ புதுவிதமான நோயாக மாறுகின்றது.

மாடு ஆடுகள் இவைகளெல்லாம் விஷத்தைத் தன் உடலாக மாற்றுகின்றது. நல்லதைக் கழிவாக மாற்றுகிறது.

ஆனால் பூச்சிகளைக் கொன்று விட்டு நல்ல உணவை உணவாக உட்கொள்ளலாம் என்று விஞ்ஞான அறிவு கொண்டு மருந்துகளைத் தூவிப் பயிர்களை உருவாக்குகின்றார்கள்.

அப்படி உருவாக்கினாலும் அந்த விஷத்தன்மை அதனுடன் கலந்து நம் உடலுக்குள்ளும் விஷத்தன்மைகளை ஊட்டி விடுகின்றது. இதைப் போன்று நம் உடலில் ஏற்படும் நிகழ்ச்சிகள் ஏராளமாக நடந்து கொண்டுள்ளது,

பயிரினங்களால் உருவாக்கப்பட்ட அந்த விஷத்தன்மை நம் உடலிலும் விளையத் தொடங்குகின்றது. அப்படி விளைந்த அந்த அணுக்கள் அதே உணர்ச்சிகளை ஊட்டி அந்த விஷத்தையே உணவாக உட்கொள்ளும் தன்மை வருகின்றது.

இதைப்போன்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்குத் தான் உங்களுக்கு அடிக்கடி அடிக்கடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஞாபகப்படுத்திக் கொண்டே வருகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து நம் உடலில் உள்ள எல்லா அணுக்களிலும் அதை வளர்த்துக் கொண்டால் “விஷத்தை வென்றிடும் சக்தி…” பெறுகின்றோம்.

ஏனென்றால் துருவ நட்சத்திரம் எதனையுமே ஒளியாக மாற்றும் திறன் கொண்டது.

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற நட்சத்திரங்கள் வெளியிடும் மின்னல்கள்… மின் கதிர்கள் வெளிப்படுவதை துருவ நட்சத்திரம் எடுத்து அதை ஒளியாக மாற்றுகின்றது.

அதாவது…
1.27 நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று எதிர் நிலையாகி மின்னல்களாகச் சீறிப் பரவுவதை
2.அதிலிருந்து வரும் அந்த ஒளிக்கற்றைகளை நம் உடலில் உள்ள அணுக்கள்
3.அதனுடைய சந்தர்ப்பம் அதைப் பெறத் தொடங்கி விட்டால் சிந்திக்கும் திறனும் அதிகமாகின்றது
4.தீமை என்ற உணர்வுகள் நமக்குள் புகாமல் தடுக்கும் சக்தியும் பெறுகின்றது.
5.அதன் மூலம் எத்தகைய நஞ்சை நாமும் ஒளியாக மாற்றிட முடியும்.
5.விஞ்ஞானத்தால் வந்த கடும் நஞ்சையும் நாம் ஒளியாக மாற்றிட முடியும்.

நெஞ்சுக் குழியில் நம்மை இயக்கும் தாய் மூச்சு நாடி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

உதாரணமாக கோப குணம் நமக்குள் உந்துகிறது என்றால் அப்பொழுது நாம் ஈர்த்துக் கொண்டிருக்கும் சுவாசமே “கனம் கொண்டதாக” மாறுகின்றது.

கோப குணத்தின் வீரியம் எத்தகையதோ அதற்கேற்றாற்போல் சரீர நாடிகளும் இயங்கி அந்தக் கோப குணத்தின் கார அலை நம் சரீரத்தைத் தாக்குகின்றது.

அப்படித் தாக்கும் நிலையில் ஆண் பெண் இருபாலருக்குமே
1.மார்புப் பகுதியின் மையத்தில் வயிற்றுப் பகுதியின் மேற்புறத்தில்
2.”சிறிய குழிவு..” போன்ற பகுதியினுள் ஓர் மூச்சு நாடி ஓடுகின்றது
3.அதுவே மிக முக்கிய நாடியப்பா…! –
4.தாய் மூச்சு நாடி…! என்பது அது தான்.

நாபி நாடியுடன் இணைந்து செயல்படும் அந்தத் தாய் மூச்சு நாடி தாக்கப்படும் காலத்தில்… அருகில் அமைந்துள்ள இரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும் செயலில் அதைத் தூண்டி… இருதயத்தின் தொடர்புடன் இணைந்து கொண்டு
1.அதற்குள் ஓடும் மூச்சுக் காற்றால்
2.எடுத்துக் கொண்ட குணத்தின் வீரிய உணர்வு தாக்கிடும் செயல் நிலையே இருதய நோய் (HEART ATTACK).

ஜீவ காந்தம் கொண்ட மனிதச் சரீரம்… உணர்வு கொண்டு இயங்கும் இயக்கத் தொடரில்… உடல் தனக்குத் தேவையானதைப் பெறும் (சுகமாக அனுபவிக்கும்) செயலில் எது…எது எப்பொழுது செயல்படுகிறது…? என்ற பாங்கில் அந்தந்தக் கால கட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் காரணமே “பசி… மோகம்.. தாகம்…” என்பதாகும்.

இவைகள் எல்லாம் நீங்கி அந்தத் தேவைகள் பூர்த்தி பெற்றாலும் ஈர்த்துக் கொண்டிருக்கும் உணர்வுகளின் குணங்களின் சுவாசத்தினால் நிகழ்வது என்ன…?

ஏனென்றால் அனைத்து குணங்களின் சுவையே நம் ஆத்மாவின் பதிவு நிலை ஆகின்றது. அப்படிப் பதிவானது அதே தொடரின் செயலில் கனம் கொண்ட சுவாசமாக மீண்டும் மீண்டும் ஈர்க்கப்படுகின்றது.

1.அத்தகைய வினைச் செயலின் பதிவாகக் களங்கமுறுவது ஆத்மாவும்… சுவாசமும்… செயல் கொள்ளும் ஜீவ சரீரமும் தான்…!
2.ஆக ஆத்ம சக்தியுடன் இணைந்து தான் சரீர சுத்தியும் செயல் கொள்ளுமப்பா…!

வாழ்க்கையில் பலதரப்பட்ட மோதலில் ஏற்படும் சந்தர்ப்பங்களில் நாம் எடுத்துக் கொள்ளும் குணங்களின் நல்லெண்ண நற்சுவாசச் செயலே ஆத்ம சுத்தி.

அன்றாட வாழ்க்கை நிலையில் எத்தனையோ பல காரியங்களை நாம் செயல்படுத்துகின்றோம். அப்பொழுது பலருடைய எண்ணங்களின் தொடர்புகள் சுவாசத்தின் ஈர்ப்பில் வந்து சேர்கிறது.

நண்பர்கள்.. உறவினர்கள்… மற்றைய அலுவல்களில் சந்திக்க நேரும் பொது ஜனத் தொடர்புகள்… ஆகியவற்றில் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடும் செயல்களில் எல்லாம்
1.பிறரது எண்ணங்களின் குணநலன்கள் நம் சுவாசத்தின் ஈர்ப்பினால் பெற்று
2.அந்தக் குணங்களின் அமில குணச் சுவை அணுக்கள் சரீரத்திலும் கலந்து
3.அதே குணங்களின் உணர்வலைகள் ஆத்மாவிலும் பதிவு நிலை பெறுகின்றது.

புவி ஈர்ப்பின் பிடிப்பில் சுவாச ஓட்டத்தில் ஈர்த்துக் கொள்ளும் சுவாசம் கனம் கொண்ட எண்ணத்தின் வீரியத்திற்கொப்பச் செயல்படும் நிலையில் ஆத்மாவில் பதிவு பெறும் மாற்று நிலைகளின் கழிவை நீக்கவே இந்தத் தியான முறையச் சுட்டிக் காட்டுகின்றோம்.

இந்தத் தியானத்தின் வழியாக
1.வாழ்க்கையில் உணர்வின் மோதல் ஏற்படும் கால கட்டங்களில் எல்லாம்
2.எண்ணத்தின் உணர்வில் உயர்வைக் கூட்டி…
3.ஒளியின் பிரகாசமாக இருக்கும் துருவ நட்சத்திரத்தை எண்ணி
4.அந்தப் பேரருள் பேரொளி உணர்வுகளை விண்ணிலிருந்து புருவ மத்தியில் ஈர்த்துக் கொண்டு
5.நம் ஜீவ காந்தச் சரீரம் கொண்ட அந்த கனமான சுவாச அலைகளைச் சமன்படுத்தி
6.உயர்வைக் கூட்டி நல்லாக்கம் பெறல் வேண்டும்…!

ஆகவே
1.நாம் செயல்படும் செயலில் கொள்ளும் நிதானமே…
2.நம் உயிர் ஆத்ம ஞான வளர்ப்பிற்குப் பிரதானம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இன்றைக்குத் தாயை உதறி விட்டு உதைக்கிறவர்கள் தான் நிறைய பேர் இருக்கின்றார்கள். பெரும்பகுதி தாய்மார்கள் படுகின்ற அவஸ்தை கொஞ்ச நஞ்சமில்லை.

பெண் குழந்தையாக இருந்தாலும் சரி… ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி…!

சொத்தைக் கொடுக்கவில்லை என்றால் நீ நாசமாகப்போ…! என்று தன் தாயைப் பிடித்து இழுத்துப் போட்டு உதைக்கின்ற தாயையும் (மகள்கள்) நான் பார்த்திருக்கிறேன்.

ஆண் வாரிசு இல்லை. அவளுக்கு மட்டும் கொடுக்கின்றாய்…! எனக்கும் கொடு…. என் வீட்டுக்காரர் கேட்கின்றார்,

எனக்குக் கொடுக்கின்றாயா இல்லையா…? என்று சொத்து முழுவதையும் வாங்கிக் கொண்டு… உனக்குச் சோறும் இல்லை… தண்ணீரும் இல்லை… நீ போ ரோட்டிலே…! என்று சொல்கின்ற தாய்மார்கள் நிறைய இருக்கின்றார்கள்.

இதையெல்லாம் அனுபவித்துப் பார்த்த பின் தான் உங்களுக்குச் சொல்கிறேன்.

மனிதர்களுடைய உணர்வுகள் எப்படி இருக்கிறது என்று அறிந்து கொள்வதற்காகக் குருநாதர் என்னை (ஞானகுரு) ஊர் ஊராகச் சுற்றச் சொல்லி அனுபவபூர்வமாகக் காட்டினார்…

1.அவர்கள் தவறு செய்யவில்லை…!
2.நுகர்ந்த உணர்வும் சந்தர்ப்பமும் அவர்களை எப்படிக் குற்றவாளியாக மாற்றுகின்றது.
3.அதிலிருந்து மீட்பதற்கு என்ன வழி…?
4.மனிதனான பின் நாம் எங்கே செல்ல வேண்டும்…! என்ற வினா எழுப்பினார் குருநாதர்.

இதைப் போன்ற சந்தர்ப்பத்தால் வந்த தீமைகளை வென்றவர்கள் மகரிஷிகள். அவர்கள் விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக ஒளியாக இருக்கின்றார்கள்.

1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பெறுவதற்கு மாறாக
2.இந்த உடலின் இச்சைக்காக வேண்டி வாழ்ந்து
3.இருள் சூழச் செய்யும் நிலைகளில் சிக்குண்டு
4.அதிலிருந்து மீள முடியாத நிலைகளில் இருக்கின்றோம்.

இதை நீ மக்களுக்கு “எடுத்துச் சொல்…!” என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஒவ்வொரு உயிரையும் நீ கடவுளாக எண்ணு. அந்த உடலை நீ கோவிலாக மதி. அவன் வீற்றிருக்கும் ஆலயம் புனிதம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நீ உன்னுடைய பயணத்தைத் தொடர் என்றார் குருநாதர்.

அவர் இட்ட கட்டளைப்படித்தான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன் அந்த மகரிஷிகளை எண்ணிப் பாருங்கள். தீமையிலிருந்து விடுபட முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.

மகரிஷிகளின் உணர்வை வளர்த்துக் கொண்டால் அது உங்களுக்குள் உண்மையின் உணர்வின் தன்மையை உணர்த்திக் காட்டும்.
1.பகைமை உணர்விலிருந்து உங்களை மீட்கும்.
2.மெய் ஒளி பெறும் அந்த மார்க்கத்தைக் காட்டும்.
3.உங்கள் பார்வையில் பல பிணிகளைப் போக்கும் அந்த அருள் சக்தியை ஊட்டும்.

அந்தச் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இவ்வளவு தெளிவாக உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று மகிழ்ந்து வாழ்ந்திடப் பிரார்த்திக்கிறேன்.

[su_heading size=”28″]22.04.2021 உபதேசம்[/su_heading]

மரண வாயிலில் வைத்து குருநாதர் எனக்குக் கொடுத்த சக்தி

 

ஒரு சமயம் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) கை கால் வராது போல் இருந்தார் என்று சொல்லி (தூக்கிக் கொண்டு தான்) ஐவர் மலைக்கு அழைத்துச் சென்றிருந்தேன் (ஞானகுரு).

அங்கே சென்ற பின் இரவிலே நீ என் பக்கத்திலேயே படுத்துக்கொள்…! என்றார், குருநாதர். பனிரெண்டு மணி இருக்கும். கை கால் வராமல் முடமாக இருந்தவர் எழுந்து நடக்கிறார்… சாதாரணமாக நடக்கின்றார்…!

அங்கு ஒரு பிள்ளையார் கோவில் இருக்கும். நடந்து போய் அங்கே உட்கார்ந்து கொண்டார். அவர் செய்வதை நான் முழித்துப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

அங்கே போனவுடன்… “தெலுங்கு ராஜ்ஜியம் இங்கே வாடா…” என்னை எவனோ தூக்கிக் கொண்டு வந்து இங்கே வைத்துவிட்டான்… வந்து தூக்குடா…! என்கிறார்.

இரவு நேரத்தில் அங்கே போய் என்ன செய்வது…? சருக்கலான பாறையில் உட்கார்ந்திருக்கிறார்.

அந்த இடத்தில் இருந்து கொண்டு என்னைக் காப்பாற்றுடா… என்னைக் காப்பாற்றுடா,.. என்கிறார். பார்த்தால் சறுக்கலான பாறையில் பிடிக்க முடியாத இடத்தில் இருக்கின்றார். (இன்னும் கூட அந்த வழுக்குப்பாறை அங்கே இருக்கின்றது)

நான் எப்படி சாமி வர முடியும்…? என்று கேட்டேன். பின் வேஷ்டியெல்லாம் கட்டி விட்டு இதைப் பிடித்து கொள்ளுங்கள் என்று சொன்னேன்.

ஆனால் அதைப் பிடித்துக் கொண்டு கீழே போய்க் கொண்டே இருக்கின்றார், நீ வந்து என்னைக் காப்பாற்றுடா, துண்டு… வேஷ்டி எல்லாம்… என்னைக் காப்பாற்றாது…! என்கிறார் குருநாதர்.

சாமி… வேஷ்டியையும் பிடித்துக் கொள்ளுங்கள், நானும் பிடித்துக் கொள்கிறேன் என்றாலும் பிடிக்க முடியவில்லை. அப்பொழுது நான் (ஞானகுரு) ஒரு பக்கம் இருந்தாலும் என்னை வழுக்கிவிட்டு இந்தப் பக்கம் கொண்டு போகின்றது..

குருநாதர் “என்னை காப்பாற்றுடா…” என்கிறார்.

சாமி, நான் கீழே போய்த்தான் காப்பாற்ற வேண்டும். கீழே விழுந்தால் நொறுங்கித் தூள் ஆகிப்போகும். அங்கு போய்த்தான் காப்பாற்ற வேண்டும் என்றேன்.

இது நடந்த நிகழ்ச்சி.

அப்பொழுதுதான் அதிகாலை விடிந்து சில நிலைகள் வருகின்றது. அங்கு கீழே ஒரு பஸ் போய்க் கொண்டிருந்தது. உடனே குருநாதர் “ஏறு சிங்… இறங்கு சிங்… என்று நீ பார்த்திருக்கிறாயாடா…?” என்றார்.

1.சாமி… இப்பொழுது நான் இறங்கு சிங்கில் கீழே போய்க் கொண்டு இருக்கிறேன்.
2.செத்த பிற்பாடு… உடலிருந்து உயிர் ஏறு சிங்காக மாறிவிடும்.
3.அதிலே வேண்டுமென்றால் போய்ப் பார்த்துக் கொள்ளலாம் சாமி என்றேன்.

ஏன்டா நான் சொல்கிறேன்… நீ எதிர்த்துப் பேசுகின்றாயா…? என்றார், குருநாதர்.

பார்த்தால் அந்த இடத்தில் வைத்துக் குருநாதர் பல நிலைகளில் பல அற்புதங்களைக் காட்டுகின்றார். இந்த உலக நிலைகளையும் மற்ற நிலைகளையும் எல்லாவற்றையும் காட்டுகின்றார்.

அப்பொழுது நீ இந்த உலகத்தைப் பாருடா…! என்கிறார்.

எங்கே சாமி பார்ப்பது…? இன்னும் கொஞ்ச நேரத்தில் கீழே போய் எல்லாம் அடங்கிவிடும் போல் இருக்கின்றது…! என்றேன் நான்.

நீ உலகத்தைப் பாருடா என்றால்… என்னடா நீ அடங்கிவிடும்…! என்று சொல்கின்றாய்…? என்று இப்படி வாதம் பண்ணிக் கொண்டே இருக்கின்றார் குருநாதர்.

அப்படியே பாறையில் நெஞ்சோடு தேய்த்து இரத்தம் வடிகின்றது. வழுக்குப் பாறையாக இருப்பதால் அப்படியே என்னைக் கீழே கொண்டு போகின்றது. இன்னும் கொஞ்ச நேரத்தில் போய்விடுவோம் (உயிர்) போலத் தெரிகின்றது.

நீ இதைப் பார்… உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்…! என்று என்னென்னமோ அதிசயங்களை எல்லாம் காட்டுகின்றார் குருநாதர்.

சாமி… இன்னும் கொஞ்சம் நேரத்தில் நீங்கள் சொல்வது எல்லாவற்றையும் போய்ப் பார்க்கப் போகின்றேன், அது வரைக்கும் கொஞ்சம் அமைதியாக இருங்கள்…! என்றேன்.

அதற்குப்பின்…
1.எத்தனையோ உணர்வுகளை ஊட்டுகிறார், உலக நிலைகளைக் காட்டுகின்றார்
2.இந்த மரண நிலைகளில் வைத்துத்தான் முழுமையான சக்தியைக் கொடுக்கிறார்
ஐவர் மலையில் வைத்துத்தான் அதைக் கொடுத்தார் நமது குருநாதர்.

அந்தக் காலை நேரத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். குருநாதர். அங்கிருந்து எழுந்து வந்து என்ன செய்தார்…?

1.சிவ தாண்டவம் ஆடுகிறார்
2.ஒரு பெரு விரலில் நின்று கொண்டு அப்படியே “கிறு…கிறு…கிறு” என்று பம்பரம் போல் சுற்றி அவ்வளவு அற்புதமாக ஆடுகிறார்.
3.எல்லா வேலைகளையும் செய்கின்றார், குருநாதர்.

நீ பல உண்மைகளை அறிவாய்… பல நிலைகளைப் பெறுவாய் என்று இந்த இடத்தில் வைத்து மரண வாயிலில் வைத்துத்தான் இந்த சக்திகளைக் கொடுக்கிறார்.

இந்த உலகம் எப்படி இருக்கிறது என்று நீ அறியும் தன்மை பெறுவாய், அதை எப்படிக் காக்க வேண்டும்…? என்று காட்டுகின்றார்.

யாராவது தவறு செய்தால் கூட என்னிடம் இருக்கும் சக்தியைக் கொண்டு ஒன்றும் செய்வதில்லை. ஆனால் அதைச் செய்தால் இந்தச் சக்தி விரயம் ஆகும்.
1.அந்த விரயம் ஆகும் நிலைக்குக் கொண்டு செல்லாமல்
2.உருவாக்கும் நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்று சொன்னார் குருநாதர்.

இப்படித்தான் ஏதேதோ செய்யும்படி பல நிலைகளைச் செய்து… அதை எல்லாம் சொல்வதற்கில்லை…! இப்படி எண்ணிலடங்காத நிலைகளைச் செய்துதான் எனக்கு இந்த வாக்குகளைக் கொடுத்தார் குருநாதர்.

நமது அகண்ட அண்டமும் பேரண்டமும் இந்த உணர்வின் தன்மை எப்படி இயங்குகிறது…? என்ற சில உண்மையின் தன்மைகளை எல்லாம் கொடுக்கிறார்.

நமது பிரபஞ்சமும் 27 நட்சத்திரங்களும் எப்படி எல்லாம் இயங்குகிறது…? என்பதை நேரடியாகப் பார்த்தால் எப்படி இருக்கும்…!
1.அந்த மரண வாயிலில் வைத்துத்தான் இந்த அற்புதங்களை
2.பார்க்காத காட்சிகளை எல்லாம் காட்டுகிறார் குருநாதர்.

பின் அந்த உணர்வின் தன்மை கொண்டு ஏறு சிங்… இறங்கு சிங்… என்று சொல்லி இந்த ஆட்டங்களைக் காட்டி அப்புறம் என்னை எழுப்பிவிடுகிறார் குருநாதர்.

அப்பொழுது, அந்த இடத்தில் மற்றவர்கள் பார்க்கும் போது கால் முடமாக இருப்பது போல இருக்கிறார். ஆனால் இங்கே நன்றாக நடனம் ஆடுகின்றார்.

மற்றவர்கள் அவரைப் பைத்தியம் என்றுதான் நினைத்தார்கள். அதனால் காலை முடக்கி கொன்டார். ஆனால், அந்த உண்மையின் தன்மையை எமக்குக் கொடுத்து இங்கு நடனம் ஆடுகிறார்.

1.குருநாதர் ரசமணி செய்வார்… தங்கத்தைச் செய்வார்
2.இந்தச் சரக்குகளைச் செய்தால் நாமும் தங்கம் செய்யலாம் என்ற வகையில்
3.குருநாதரிடம் ஆசைப்பட்டு அணுகியவர்கள் ஏராளமானோர்.

ஆனால் இதிலிருந்து ஒடுங்கப்பட்டு தனித்தன்மையாக, எனக்கு இந்த ஐவர்மலையில் வைத்துத்தான் அந்தச் சக்தியைக் கொடுத்தார்.

அவர் இருக்கும் பொழுதே பல காடுகள் பல மேடுகள் எல்லாம் அலைந்து பார்த்தேன். இந்த உண்மையெல்லாம் எமக்குத் தெளிவாகத் தெரிந்த்து இந்த ஐவர் மலையில் தான்.

ஏனென்றால் அந்த உண்மையின் உணர்வுகள் வந்த பின் குருநாதர் என்ன செய்வார்…?

என் கையை நீட்டச் சொல்வார். அங்கிருக்கும் மரங்களும் கற்களும் அப்படியே தூக்கிக் கொண்டு மேலே போகும். தூக்கி வீசுவது போன்ற சில சக்திகளைக் கொடுக்கின்றார்.

அப்பொழுது எனக்கு என்ன செய்கின்றது…?

1.மரத்தையே தூக்கி வீசும் பொழுது நம்மால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று ஒரு திமிர் ஏற்படுகின்றது.
2.எதிரி இருந்தால் அவனை வீழ்த்தக்கூடிய சக்தி நமக்கு இருக்கிறது என்று இப்படித்தான் எனக்குச் சிந்தனை வருகிறது.

ஆனால் அதை எப்படி நல்ல வழிக்குப் பயன்படுத்த வேண்டும் என்று அந்தந்தச் சமயங்களிலெல்லாம் குருநாதர் ஒவ்வொரு உணர்வின் நிலைகளையும் எனக்கு உபதேசித்தார்.

ஆகவே… எம்மை குருநாதர் எப்படிப் பண்படுத்தி வளர்த்துக் கொண்டு வந்தாரோ அதே போல மற்றவர்களையும் கொண்டு வர வேண்டும் என்று தான் விரும்புகின்றேன்.

1.இந்த உலகம் எப்படி இருக்கிறது…? என்ற நிலையும்
2.இந்த உடலுக்குப்பின் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலையும்
3.பிறவி இல்லா நிலைகள் எப்படி அடைய வேண்டும்…? என்ற உண்மைகளையும் எனக்கு உணர்த்தினார் குருநாதர்.

அப்பொழுது அந்த நிலையில்… எது எது உன்னைச் சந்திக்கும்…? அந்த ஆசையின் நிலைகள் உனக்குத் திரும்பும்…! அல்லது ஆசையின் நிலைகள் உனக்குள் திரும்பும் போது உன்னை எதிரி என்ற நிலையில் உன்னைத் தாக்கும் உணர்ச்சி வரும்.

அப்பொழுது, இந்தக் கடுமையான நிலைகளின் உணர்வை ஏற்றினால் உன்னையும் ஆட்கொண்டு உனது நல்ல குணங்களைக் கொல்லும்… மற்றவரையும் காக்க முடியாது.

இப்படிக் கடுமையான சோதனைகளைக் கொடுத்தார் குருநாதர். நான் போகும் பக்கம் எல்லாம் பல எதிர்ப்புகள் வரும். நாய் கூடக் கடிக்க வரும், அப்பொழுது என்னென்ன செய்வது…? என்று முதல் அனுபவத்தைக் கொடுத்தார்.

இப்படித்தான் இருபது வருடம் அனுபவம் பெற்று உங்களுக்குள் இந்தச் சக்தியைக் கொடுத்து உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள் என்கிறேன்.

நிறையச் சொல்லப் போனால் ஒவ்வொரு நேரத்திலும் நான் பட்ட அவஸ்தைகள் இன்னதென்று சொல்ல முடியாது. ஆகையால் இதைப் பேணிக் காத்து எல்லோருக்கும் இந்த உண்மையை உணரும் தன்மை பெறச் செய்ய வேண்டும். நீங்கள் எடுத்துக் கொண்ட மூச்சலைகள் பிறருடைய தீமைகளை அகற்றும் சக்தி பெற வேண்டும்.

என்னுடைய ஆசை… நீங்கள் அனைவரும் என்னைப் போல் (ஞானகுரு) பெரும் ஞானிகளாக மாற வேண்டும்.

பிறருடைய தீமைகளைப் போக்கும் மகான்களாகத் தான் நீங்கள் மாற வேண்டுமே தவிர இந்த உடலின் இச்சைக்கு மாறி விடாது உங்களைக் காத்து நல் வழியில் கொண்டு வருவதுதான் “என்னுடைய முழுமையான தியானம்….!”

நீங்கள் முழுமை பெற்றால்தான் இதைச் செயல்படுத்த முடியும்.

ஏனென்றால் அதைத்தான் இப்பொழுது மிகவும் வலுப்படுத்துகின்றேன். இந்தச் சக்தி பெற்ற நீங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையிலும் வழி காட்டுதல் வேண்டும்.

இப்பொழுது உபதேசித்த நிலைகள் கொண்டு
1.நுகர்ந்த உணர்வுகள் உங்களை எப்படி இயக்குகின்றது…?
2.அதிலிருந்து நீங்கள் எப்படி மீள வேண்டும் என்று உபாயத்தை
3.மற்றவருக்கு எடுத்துக் கூறி அந்தப் பதிவின் நிலைகளை அவர்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.

அந்தப் பதிவின் நிலைகள் அவர்களுக்குள் வளர்ந்தால்…
1.அந்த எண்ணத்தால் தீமையிலிருந்து அவர்கள் விடுபடுவதும்,
2.தீமை செய்தவர்கள் திருத்திக் கொள்வதும்
3.நன்மை செய்யும் உணர்வு உள்ள மக்களாக அவர்களை மாற்றும் திறன் நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்குத் தான்
4.யாம் இதைச் சொல்வது.

அந்த முழுமையின் தன்மைகளை நாம் எல்லோரும் அடைதல் வேண்டும். இது தான் நமது லட்சியமே…!

ஆகவே இந்த லட்சியத்தின் நிலைக்கு வரும்போது செல்வத்தை நாம் தேடிப் போக வேண்டாம். செல்வம் தன்னாலே வந்து சேரும். ஏனென்றால் செல்வத்தைக் குறிக்கோளாக வைத்தால் அதனுடைய ஆசையின் நிலைகள் “உடல் பற்று தான் வரும்..”

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்…
1.நீங்கள் எல்லோரும் அந்த அகஸ்தியனைப் போன்று
2.உலகைக் காக்கும் அருள் ஞானிகளாக வளர வேண்டும் என்று நான் பிரார்த்திக்கின்றேன்.

ஆத்ம சுத்தி செய்ய வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

அறுசுவை உணவுகள் உண்டிடும் காலத்தே உட்கொள்ளும் பொருள்களின் சுவைகள் அது காரமோ… புளிப்போ… உவர்ப்போ.. இனிப்போ.. துவர்ப்போ.. கையிப்போ..! எந்தச் சுவை ஆகினும் அந்தச் சுவைகளின் குணங்களின் கன பரிமாண அடர்வின் தொகுப்பில் திகட்டல் ஏற்பட்டால் என்ன செய்கிறோம்..?

உடனே நீரைத் தான் தேடிச் சென்று குடிக்கின்றோம்.

நீரை உட்கொண்டு அந்தச் சுவைகளைச் சமன்படுத்துதல் போல் ஜீவ காந்த சரீரம் கொண்டிடும் உணர்வில் கனமான சுவாச அலைகளை நீக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

1.அந்தச் சுவைகளுக்கெல்லாம் வீரியமான உயர்வெண்ண மின் காந்த அலைகளை
2.மகரிஷிகளை எண்ணி ஈர்த்திடும் செயலில்
3.நம் சுவாச ஓட்டம் அமைதி கொண்டு நம்முடைய உணர்வின் குணங்களும் சமன் கொள்ளும்
4.நம் சுவாசமும் நாடியும் சீராகும்.

சுலபமாகப் பெற்று உயர்ந்திடும் இந்தத் தியானத்தின் வழியில் செயல்படுத்தும் “மனத்தின் திறன்” என்பதெல்லாம் அவரவர்களின் எண்ணத்திற்கொப்பத்தான் கொள்ள முடிந்திடும்.

தான் கைக்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும்… காரியமாற்றும் நிலையிலும்…
1.தன் ஆத்ம உயர்வுக்காக வேண்டி
2.எண்ணிச் சுவாசித்திடும் பக்குவம் தானப்பா “ஆத்ம சுத்தி…” என்பது.

சரீர வாழ்க்கையில் சுவாச ஓட்டத்தின் செயலில் மனிதன் ஒவ்வொரு நிமிடத்திலும் எடுக்கும் உணர்வுகளின் வீரியத்தால் நமக்குள் மாற்றம் கொள்ளச் செய்யும் செயல்களாக பயம்… கோபம்… மோகம்… ஆவேசம்… ஆத்திரம்… பழி…. ஆகிய இந்தக் குணங்களின் மோதல்களால் முதலில் பாதிக்கப்படுவது சரீரம் தானப்பா…!

அது எப்படி என்றால்…
1.சுவாச ஓட்டங்கள் நாடிகளின் வழியாக ஓடிச் செயல்படும் செயலில்
2.சிறுகச் சிறுகக் கூட்டிக் கொள்ளும் அந்த உணர்வுகளின் வலுவினால்
3.இரத்த நாளங்கள் குழைவு கொண்டு
4.நரம்பு ஓட்டங்களில் தளர்வு பெற்று
5.எலும்புகளின் ஊண் ஒளி குறைவுபட்டுத் தளர்வுறும்.

பக்குவமாக அந்தக் குணங்களை விலக்கிக் கொண்டு நல் நிலை பெறுவதற்கே இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதமப்பா…! அதனால் சரீர சுத்தியும் கிடைக்குமப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

உங்களை நீங்கள் நம்புங்கள். உயர்ந்த ஆற்றலின் தன்மையை நாம் பெறுவோம் என்று உறுதி கொள்ளுங்கள்.
1.மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறுவோம்.
2.மனித வாழ்க்கையில் வந்த இருளை நீக்குவோம்.
3.எங்கள் எண்ணம் அனைத்தும் ஒளி நிலை பெறும்.
4.எங்கள் பேச்சும் மூச்சும் பிறர் துன்பத்தைப் போக்கும்.
5.எங்கள் மூச்சும் பேச்சும் எங்களுக்குள் இருக்கும் இருளை மாய்க்கும் என்ற இந்த உணர்வின் தன்மையை எடுத்துச் சுவாசியுங்கள்.

நிச்சயம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

நாளை வரும் விஞ்ஞான உணர்வின் தன்மைகள் உங்களைத் தாக்காது அந்த விஞ்ஞானத்தை உணர்வின் அலைகளை நீங்கள் ஆட்டிப்படைக்கலாம்.

இதை நீங்கள் பெற வேண்டும் என்று உங்களுக்குள் உங்களை ஆண்டு கொண்டிருக்கும் ஈசனான அந்த உயிரை வேண்டி யாம் சொன்ன இந்த உயர்ந்த உணர்வின் தன்மைகள் அனைத்தும் உங்கள் உடலுக்குள் விளைய வேண்டும் என்று யாம் பிரார்த்திக்கின்றோம்.

அந்த மெய் ஒலியின் அருள் ஒளிகள் உங்களுக்குள் அந்த ஈசனான உணர்வுக்குள் பட்டு அந்த உணர்வின் அலைகள் அங்கே மகிழ்ந்திடும் நிலைகள் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.

இதைப் போன்று உங்கள் உயிரான ஈசனிடம் நீங்களும் இதைப் போன்று வேண்டி உணர்ந்து அந்த மகரிஷியின் அருள் ஒளியைப் பெற வேண்டும் என்று உங்கள் உயிருக்குள் உங்கள் உடலுக்குள் நீங்களும் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்.

\[su_heading size=”28″]21.04.2021 உபதேசம்[/su_heading]

நாம் போற்ற வேண்டிய உண்மையான சக்தி…!

நம்மை எப்படி வாழ்த்திட வேண்டும்…? நாம் எப்படி வாழ்ந்திட வேண்டும்…? என்றும் பிறரை எப்படி வாழ்த்திட வேண்டும்,,,? பிறரை எப்படிப் போற்றிட வேண்டும்…? என்ற நிலைகளையும் நாம் அறிதல் வேண்டும்.

நம்மை ஏமாற்றுவதற்காகப் போற்றுவதும் உண்டு… எப்படியும் உயர்ந்த நிலைகளில் வளர வேண்டும்…! என்ற உண்மையின் நிலைகள் வாழ்த்துவது வேறு.
1.ஆனால் உங்களைப் போற்றித் துதித்துவிட்டு
2.அதன் மறைவில் தனக்குள் தன் வாழ்க்கைக்காகச் செயல்படுத்தி (ஏமாற்றி) போற்றக் கூடியவர்கள் பலர் உண்டு.

இதைப் போன்ற நிலைகள் அல்லாது “போற்றல்…” என்பது எப்படி இருக்க வேண்டும்…?

ஒருவருடைய உயர்ந்த நிலையைப் பார்க்கும் பொழுது அவர் உணர்வால் “நாம் அதைப் பற்றி…” நமக்குள் நாம் போற்றிக் கொள்ள வேண்டும்.

1.அவர் உயர்ந்தார்…! அந்த உணர்வின் தன்மைகளை நமக்குள் பெருமைப்படும் சக்தியாக நுகர்ந்தோம் என்றால்
2.“அவருக்குள் வளரும் உணர்வுகள்..” நமக்குள் நின்று நாமும் வளர்வோம்.

ஆனால் சிலர் மற்றவருக்கு எல்லா உதவியும் செய்வார்கள்.

அவரிடமிருந்து உதவி பெற்றுக் கொண்டவர்கள் வளர்ந்து விட்டால்..,
1.பார்…! அன்றைக்கு எல்லா உதவியும் செய்து அவனை வளர்த்து விட்டேன்
2.இன்றைக்கு அவன் என்னை மதிக்கின்றனா…? பார்…! என்று இப்படி இந்த உணர்வை மாற்றிவிடுவார்கள்.
3.செய்த நன்மையை மறைத்துத் தனக்குள் கௌரவம் என்ற நிலைகளில் செயல்படுவார்கள்.
4.“தன்னை மதிக்கவில்லையே…!” என்ற உணர்வு கொண்டு
5.தான் செய்த உணர்வை மாற்றிப் பகைமை உணர்வை வளர்த்துக் கொள்வர்கள்.

பின் என்ன ஆகும்…?

நல்ல நேரத்தில் செய்த நன்மையின் உணர்வை அழித்து நன்மையற்ற செய்கையைத்தான் செயல்படுத்தும் தன்மையாக வரும்.
1.செய்த நன்மையை நினைவு கொள்ளாது
2.செய்த நன்மையைக் குறைத்திடும் நிலையாக
3.நன்மைகளை மறைத்திடும் நிலையாகத்தான் நமக்குள் உருவாகின்றது.

ஆகவே இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் விடுபடவேண்டும். உங்களுடைய உணர்வுகள் எல்லாம் தெளிந்த மனம் கொண்டு பேரருள் பெறும் தகுதியைப் பெறவேண்டும்.

2004க்கு மேல் செல்லும் பொழுது கடும் விஷத் தன்மைகள் வளரத் தொடங்குகின்றது. அதிலே சிக்கிடாது அந்தப் பேரருள் என்ற உணர்வை உங்களுக்குள் சேர்த்து இருள் என்ற உணர்வுகளைக் கவர்ந்திடாது மெய் ஒளி என்ற உணர்வை உங்களுக்குள் வளர்த்து இருளை அகற்றிடும் வல்லமை உங்களிலே பெற வேண்டும் என்பதற்குத்தான் இதை உங்களுக்குத் தெளிவாக்குவது.

ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் இந்த உணர்வை ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
1.நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் கண்ட பேரண்டத்தின் உண்மைகளையும்
2.அவர் அறிந்த மெய் உணர்வுகள் அனைத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.

குருநாதர் பெற்ற உண்மையின் துணை கொண்டு இருளை அகற்றிடும் அருள் சக்தி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் தான் மீண்டும் மீண்டும் திரும்பச் சொல்லி உங்கள் நினைவாற்றலைப் பெருக்கச் செய்கின்றோம்.

“பல நாள் பெற்ற ஆத்ம சக்தியைக் காக்கும் நிலையில்தான்” நம் ஜெப நிலை இருக்க வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சாதாரணமாக ஒரு பானையில் தண்ணீரை ஊற்றி வைத்து விட்டோமானால சில நாட்களில் அந்நீர் வழுவழுப்புத் தன்மை கூடி பாசி பிடிக்கின்றது.

“அவ்வழுவழுப்பு நிலை” ஏற்பட்ட பிறகுதான் அடுத்த வளர்ச்சி நிலை ஒவ்வொன்றிலுமே வளருகின்றது. “பிசின்” போன்ற நிலை ஏற்பட்ட பிறகுதான் அதன் ஜீவத்தன்மை முதிர்வு நிலை கொள்கின்றது.

அதுவே ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி காய்ச்சும் பொழுது அப்பாத்திரத்திற்கு அடியில் மண் போன்று படிவங்கள் வெள்ளையாகப் படிந்து விடுகின்றது.

இதைப் போன்று…
1.மனித உணர்வில் எடுக்கப்படும் அலைத் தொடர்பின் உணர்வு
2.சரீரம் சமைக்கும் நிலை கொண்டு ஆத்ம அலையின் “படிவமாகி விடுகின்றது…”

ஆத்மாவின் வண்ணத் தன்மை கொண்டு பிரகாச நிலை ஒளி சக்திகளை இச்சரீர சமைப்பினால் மனிதன் பெற்றானானால் மனித சக்தியில் சித்து நிலை பெற முடியும்.

மகரிஷிகளின் உயர் காந்த அலையை… உணர்வின் எண்ணம் கொண்டு “விழி கொண்டு ஒளி பார்த்து இச்சரீரத்தின் உணர்வில் எடுக்கும் ஜெப முறையினால்…” மனித உணர்வின் சஞ்சலமற்ற சம உணர்வு வளர்ச்சியின் தியானத்தின் முறை அறிந்து… தன்னைத்தான் தான் உணரக்கூடிய வழி அறிந்தானானால்… தன் வாழ்க்கை செயலில் அமைதியையும் தன் ஆத்மாவின் உயர்வின் வழியையும் ஒவ்வொருவரும் பெறலாம்.

நம் தேவைக்குகந்த நெல்லைப் பயிரிடுகின்றோம். நிலத்தை உழுது பருவம் பார்த்துப் பயிரிட்டு அதற்குகந்த பாதுகாப்பு எல்லாம் செய்கின்றோம். பின் அதனுடைய பலனை நாம் கண்டு நெல்லை அறுத்து பக்குவமாய் சேமிக்கவும் முற்படுகின்றோம்.

ஆனால் அதை நாம் எடுத்துச் சேர்ப்பதற்குள் பெரிய மழை வந்தால் எல்லாம் அழிகின்றது. அதைப் போன்று…
1.தியானத்தின் மூலம் பல பக்குவமான முறைகளை இச்சரீரத்தில் வளர்த்துப் பலன் பெறும் பக்குவத்தில்
2.உணர்வில் மோதும் பலமான மாற்றத்தினால் பல நாள் செயலின் பலனை இழந்துவிடும் நிலை போன்று
3.சரீர உணர்வால் எண்ணத்தில் பலமாக மோதும் எதிர்ப்பைத் தாங்காமல்
4.தவறிவிடும் நிலை உணர்வின் எண்ணத்தில் மோதுவது உண்டு.

ஆகவே… நெல்லை அறுக்கின்றோம் என்றால் அந்த நேரத்தில் மழை வருகிறது என்றால் அதற்குண்டான வேகத்தைச் செலுத்திப் பெற்ற பலனைப் பாதுகாக்கத் துரிதம் கொள்கின்றோம் அல்லவா…!

அது போன்று… நம் வழிமுறையில் நல்லொழுக்கத் தொடரில் வளர்த்த வலுவை…
1.எதிர்ப்படும் மோதலிலிருந்து பாதுகாக்கும் துரிதமாக
2.எண்ணத்தின் துரிதத்தைத் தீயவைகளுடன் மோதாமல்
3.நல்லதைப் பாதுகாக்கும் உணர்வு ஜெபமாகத்தான் நாம் செயல்படுத்த வேண்டும்…! தன்னைத்தான் தான் உணரும் பக்குவத்திற்கு…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

 

ஆபீஸில் வேலைக்குப் போகிறவர்கள் – உட்கார்ந்து வேலை செய்பவர்கள் ஒரு ஐந்து நிமிஷம் வெளியில் மண் வெட்டி எடுத்து வெட்டினால் சோர்வடைந்து விடுகின்றார்கள்… களைப்படைந்து விடுகின்றார்கள்.

ஆனால் தன் உணவுக்காக வேண்டி விவசாயத்திற்காக உழைப்பவர்கள் கஷ்டப்பட்டு அவர்கள் கடுமையான வேலைகளைச் செய்கின்றார்கள்.

“இதைப் பெறவேண்டும்” என்று ஏங்கி அவர்கள் சுவாசிக்கும் உணர்வுகள் எல்லா நரம்புகளுக்கும் அந்த வலிமை ஊட்டும் உணர்வுகளாக அமைந்து அது உமிழ் நீராக மாறுகின்றது.

உமிழ் நீராக மாறி அவர்களுடைய உணவுக்குள் இந்த வீரிய உணர்வுகள் உருவாக்கப்பட்டு அவர்களுடைய இரத்த நாளங்களில் கலக்கப்படும்போது அந்த நல்ல அணுக்களுக்கு அந்த வீரியச் சத்து கிடைக்கின்றது.

அப்பொழுது அவருடைய உழைப்புகள் அவர் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மூன்று மணி நேரம் விடாது கடின உழைப்புகளைச் செய்கின்றனர். அவர் மூச்சு வாங்குவதில்லை.

நம்மால் இரண்டு நிமிடம் தொடர்ந்து வேலை செய்தால் பலவீனம் அடைகிறது.

ஆனால் அவர்களும் நம் முன்னாடி இந்தக் காற்று மண்டலத்தில் வரும் உணர்வுகளைச் சுவாசித்துத்தான் வளர்கின்றனர்.

அவர்களுடைய எண்ணமோ இந்த வேலையை நாம் செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் வலிமையான நிலையில் செயல் படுத்தப்படும்போது அந்த எண்ணத்தின் வலிமையை அவர் சுவாசித்து அவர் ஆகாரத்திற்குள் வலிமை கிடைக்கின்றது.

வசதியுள்ளவர்கள் வசதி குறையும் போது ஒரு சிலர் அந்த மாதிரி முடியாத நிலைகள் கொண்டு வயிற்றுப் பிழைப்புக்காக சோற்றுக்காக எப்படியோ இந்த மண்ணைத் தூக்கி சுமக்கலாம் என்ற எண்ணத்தில் வேலைக்குப் போவார்கள்

வசதி இருந்து வசதி குறைந்தபின் தான் வேலை செய்யப்படும் போது வலுவான எண்ணம் வருவதில்லை.

அப்பொழுது இந்த வலுவிழந்த உணர்வுகளைச் சுவாசிக்கும்போது நான்கு நாளைக்கு வேலை செய்தார்கள் என்றால் அவர்களுக்குக் கடுமையான நோய் வந்து விடுகின்றது.

வசதியுடன் வாழ்ந்து வசதியற்ற நிலைக்குப் போகும் போது இந்த நோய் வருகின்றது.

எப்படியும் நாம் தொழில் செய்து வாழ வேண்டும் என்று எண்ணுவோருக்கு இந்த உணர்வுகள் வருகின்றது. ஆகவே நாம் சுவாசிக்கும் உணர்வு எதுவோ அதற்குத் தக்க அந்த வலிமை கிடைக்கின்றது.

[su_heading size=”28″]20.04.2021 உபதேசம்[/su_heading]

சுவாச நிலை சீரானால் தான் உடல் நலமும் சீராகும் – ஈஸ்வரபட்டர்

 

மனிதனின் சரீரமானது எண்ணம் கொண்டு ஜீவ காந்த ஆற்றலின் கதியினால் இயங்கும் இயற்கைச் செயல்பாட்டில் சரீரம் நலிவுறும் காலங்களில் எல்லாம் அதைக் குணப்படுத்த நவீன மருத்துவ விற்பன்னர்கள் (DOCTORS) பல பல முறைகளைக் கையாளுகிறார்கள்.

நோயின் குணங்களை அறிந்து அந்த நோய் அகலச் செயல்படுத்தும் இன்றைய மருத்துவத்தில் நோய்வாய்ப்படுபவனின் சரீரம் மருத்துவர் கொடுக்கும் மருந்தின் குண அமிலத்தை ஏற்றுக் கொண்டு நோயை அகற்றிடச் செயல்படுகிறது.

ஆனால் நோயின் கடுமை வீரியம் கொண்டால் உட்கொள்ளும் மருந்தை ஏற்றுக் கொள்ளாத நிலையில் முதிர்வாகிச் சரீர அவயங்களில் பெரிய பாதிப்பு எற்படத் தொடங்கிவிடுகிறது.

இவைகளை மருத்துவர்கள் கண்டு கொண்டு அந்த நோயின் கடுமைக்கு ஏற்ப அறுவைச் சிகிச்சை முறைகளையும் (SURGERY) கற்ற அறிவின் ஞானம் கொண்டு செயல்படுத்துகிறார்கள்.

மருத்துவம் மனிதனை இன்றைக்குக் காத்துக் கொண்டிருப்பது இதைப் போன்ற வழிகளில் தான். ஆனால்
1.மனிதனுடைய சந்தர்ப்பத்தினால் அவன் எடுத்துக் கொண்ட குணங்களின் கடுமையால் தான் சுவாச ஈர்ப்புத் தன்மையே மாறுகிறது.
2.அதனால் சரீரத்தில் நலிவுகள் ஏற்படத் தொடங்குகிறது
3.இன்றைய மனிதனின் செயல்பாடுகள் இப்படிப்பட்ட விதி வழி செல்கின்றதப்பா…!

பூமி ஈர்த்துச் சமைக்கும் சுவாசத்தின் செயலில் நன்மை தீமை என்று கலந்தே காற்றினில் படர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் வாழ்க்கை மோதலில் மனிதன் தான் ஏற்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட எண்ணம் வலு நிலை பெற்று விடுவது “சுவாசத்தின் கதியினால் தான்…!”

சரீரத்திற்குள் அமைந்து வினைச் செயலாக இயங்கிக் கொண்டிருக்கும் முக்கியமான நாடிகள்: மூலாதார நாடி… நாபி நாடி… மார்பு நாடி… கண்ட நாடி… சிரசில் நெற்றிப் பகுதியில் சிவசக்தி நாடி… சிரசின் உச்சியில் ஈஸ்வர நாடி…. ஆகும்.

இவைகளுடன் சேர்ந்து சரீர அவயங்களில் புறத் தொழில் புரிந்திடும் செயலாகச் செயல்பட்டு ஓடிடும் நாடிகள் கண்… காது… நாசி… வாய்… கை கால் உறுப்புகள்.. ஒவ்வொன்றுமே சரீர வளர்ச்சிக்காக இயங்கினாலும்
1.அந்த வளர்ப்பின் முதிர்வாக…
2.கடைசியில் மனிதனின் சரீரத்தில் ஏற்படுகின்ற நோய் நொடிகள் அனைத்திற்கும் மூல காரணம் எது…?

உலக வாழ்க்கையில் மனிதன் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் செயல்படும் குணங்களில்
1.பயம் கோபம் மோகம் ஆத்திரம் அவசரம் வெறி வேதனை உள்ளிட்ட
2.பல்லாயிரம் கிளைகளாகக் கிளைத்திடும் அந்தக் குணங்களின் செயல்பாடே
3.சுவாசத்தின் கதியாக நாடிகளில் ஓடுகின்றது.
4.அந்தந்தக் குணங்களின் வீரியத்திற்கொப்ப இரத்த நாளங்களைத் தூண்டச் செய்து
5.மேலே சொல்லப்பட்ட அக… புற நாடிகளில் ஓடும் சீரான சுவாச ஓட்ட கதி முழுவதையுமே அது மாற்றி விடுகின்றது.

அதே சமயத்தில் சரீர உள் அவயங்கள் செயல்படும் செயலிலும் மாற்றத்தை ஏற்படுத்தி வேதனைகளை உண்டாக்குகின்றது. அந்த வேதனையின் உச்ச நிலையே நோயாக மாறுகின்றது.

நோயாக ஆன நிலையில் இயற்கையின் கதியை அதாவது சரீர இயக்கத்தின் இயல்பையே மாற்றிவிட்டு தான் பெறவேண்டிய உயர் நிலைக்கே விபரீதத்தை விளைவித்துக் கொள்கின்றான் மனிதன்…!

சுவாச நிலை சுவாச நிலை என்று பல முறை சொல்கிறோம். அந்தச் சுவாச நிலையைச் சரி செய்ய வேண்டுமா இல்லையா..?
1.சுவாச நிலையை மாற்றாதபடி
2.நாடிகளின் இயக்கங்களைச் சீராக்காதபடி
3.மருந்தை மட்டும் உட்கொண்டால் சரீர சுத்தி கிடைக்குமா…?

நம் உடலுக்குள் ஒரு அணுவின் இயக்கத்திற்கும் அதுவே கூட்டமைப்பாக இயக்கும் நிலைக்கும் உள்ள வித்தியாசம்

 

ஒரு கோபப்படுவோருடைய உணர்வைக் கண்ணுற்று நோக்கி நம் உடலிலேயே பதிவாக்கி மீண்டும் அதை நுகர்ந்து நம் உயிரிலே பட்டால் அது நம் உடலுக்குள் கோபத்தை உருவாக்கும் அணுவின் தன்மை அடைந்து விடுகின்றது.

நமக்குள் பதிவான உணர்வு கொண்டு மீண்டும் “அவன் கோபித்தான்” என்ற உணர்வை நுகர்ந்தால் இந்த உணர்வுகள் அந்த உணர்ச்சியைத் தூண்டுகின்றது. நுகர்ந்த உணர்வு நம் இரத்தநாளங்களில் அது பெருகத் தொடங்கி விடுகின்றது.

உதாரணமாக ஒரு நெல்லை வைத்து அதை நாம் சமைத்துச் சாப்பிட முடியாது. பல நெல்களை இணைத்துச் சமைத்தால்தான் அது சாதம் ஆகின்றது.

ஆகவே அதைப் போன்று
1.நாம் நுகர்ந்த அந்தக் கோபமான உணர்வு பல அணுக்களின் தன்மை அடையபபடும் பொழுது தான்
2.இரத்தக் கொதிப்பு என்ற உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

ஒரு அணுவின் தன்மை என்று இருந்தால் அது மற்ற உணர்வுடன் கலக்கப்படும் பொழுது இரத்தக் கொதிப்பு என்று வராது..
1.அது உணர்ச்சியை ஊட்டும் உணர்வு என்றுதான் அதற்குப் பெயர் வரும்.
2.மற்றவைகளுடன் சேர்த்து இந்த உணர்வின் தன்மை இயக்கம் கம்மியாகவே இருக்கும்.

ஒரு வேதனைப்படுவரைத் திரும்பத் திரும்ப எண்ணினால் அந்த எண்ணத்தின் கணக்கு அதிகரித்தால் அதற்குத் தக்க நோயாக வரும்.

இதை எல்லாம் உணர்த்துவதற்குத்தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று காட்டுகின்றார்கள்.

நாம் எந்தெந்தக் குணங்களை எல்லாம் சுவாசிக்கின்றோமோ அது நமக்குள் உள் சென்று அதனின் குணமாக உருவாகின்றது என்பதைத் தான் நந்தீஸ்வரன் என்று காரணப்பெயர் வைக்கின்றார்கள்.

ஏக்குணத்தின் தன்மை உணர்வின் தன்மை உருவாக்குகின்றதோ தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிடும்.

ஒரு அணுவின் தன்மை பெற்றபின் அந்த உணர்ச்சியைத் தூண்டி நம் உயிரின் நிலைகளுக்கு நினைவுபடுத்தி அதை மீண்டும் சுவாசிக்கச் செய்து நம் இரத்தநாளங்களில் கலந்து இந்த உணர்வின் தன்மை உணவாக எடுத்துக் கொள்ளும்… வஉட்லிலே அணுக்களாக விளையும்.

ஒரு நெல்லை நிலத்தில் ஊன்றினால் எப்படிப் பல நெல்களாக விளைந்து வருகின்றதோ இதைப்போல
1.நமக்குள் பதிவான ஒரு உணர்வின் (வித்தின்) தன்மை அது எதுவோ
2.அதற்குத் தக்கவாறு அந்தப் பல எண்ணங்களுடைய உணர்வுகளாக வருகின்றது
3.அந்த வித்தின் தன்மை விளைகின்றது

இப்படி நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் சிவன் ஆலயத்தில் சிவனுக்குக் கணக்கப்பிள்ளை

யார்..?

சுவாசித்த உணர்வுகளே நந்தீஸ்வரன். நாம் பார்த்த உணர்வுகள்… நாம் சுவாசித்து அந்த உணர்வின் தன்மை அதனின் கணக்கு அதிகமாகும் போது அது நந்தீஸ்வரன்.

உடல் சிவம்… சுவாசிப்பது நஸ்தீஸ்வரன்… உடலுக்குள் தொடர்ந்து இது செயல்படும் போது நந்தீஸ்வரன் கணக்குப்பிள்ளை.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியரை எண்ணி அவர் விட்ட மூச்சலைகளைச் சுவாசியுங்கள்

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து… எங்கள் உடலில் உள்ள உறுப்புகள் முழுவதும் படர்ந்து… எங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய எல்லா அணுக்களும் அகஸ்தியரின் அருள் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா…!

mantra 29

[su_heading size=”28″]19.04.2021 உபதேசம்[/su_heading]

விஞ்ஞானத்திற்கு அடிமைப்பட்டிருக்கும் இன்றைய உலகம் ஆன்மீக வழியின் மெய் ஞானத்தை உணரட்டும் – ஈஸ்வரபட்டர்

 

ஐந்து திருமுறைகள் பக்தியின் பரவசமாகக் கொண்ட நிலையை மாற்றி
1.ஆறாம் திருமுறையில் மெய்யொலியாக உண்மை ஞானமாக
2.ஆத்ம தரிசனம்… என்றும் ஜோதி தரிசனம்… என்றும் காட்டினார் இராமலிங்க அடிகள்.

மனிதன் தன் ஆத்ம அறிவைக் கூட்டிக் கொள்ள “மதி ஒளி” என்னும் சிந்திக்கும் திறன் ஆய்வில் கண்டும் கேட்டும் உணர்த்தும் என்பதில் “அறிவை அறிவால் அறிவர்…!” என்ற சூட்சமமாக “இராமலிங்கச் சித்தன்” வெளிப் போந்த மெய் அந்த ஞானத்தை மனித சமுதாயம் எந்த அளவிற்கு ஏற்றுக் கொண்டது…?

பக்தி கொண்டு பஜனை பாடவும்.. பரவசமாக அந்தச் சித்தன் உரையைப் பேச்சுக்கலை ஆற்றவும்… திருவிழாக்கள் என்ற பேரில் வாண வேடிக்கை வினோதங்கள் கவனத்தை ஈர்க்கவும்.. செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அந்தச் சித்தன் ஸ்தூல சரீரம் கொண்டு உலவிய கால கட்டங்களில் மனிதனின் போக்கு ஆராவாரம் கொள்ளும் செயல்களை விடுத்து மெய் ஞானம் கொண்டு உயர்ந்திடவே மெய்ப் பொருளைக் கொள்ளப்பா… கொள்…! என்று “ஏக்கமுடன் கூவியே அழைத்தான்…!”

ஆறாவது திருமறையை உணர்த்த வந்த செயலை ஒதுக்கித் தள்ளிய சமுதாய நிலையைக் கண்ட பின்…
1.கண்ட பின் “கடை விரித்தேன் கொள்வாரில்லை…!” என்றுரைத்து
2.“மீண்டும் பிறப்பில் வருவேன்… இந்த உலகின்கண் மற்றொரு பாகத்தில்…!” என்ற அந்தச் சித்தனின் சொல் வாய்மை
3.பிறப்பின் தொடரில் “நடைமுறைக்கு வந்துவிட்ட சூட்சமத்தைத்தான்…” இன்றைய மனிதன் அறிந்து கொண்டானா…?

போற்றி…போற்றி…! என்று போற்றிடவே துடிக்கின்ற மனிதனின் செயலில் மெய் ஞான விழிப்படையத் தடுக்கின்ற நிலையின் காரணமே தான் கொண்ட அதி ஆசை நிலை தானப்பா.

1.“பூசத்தில் ஜோதி கண்டேன்… பிறவிப்பயன் பெற்று விட்டேன்…!” என்று
2.தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டு புகழ்ந்திடும் வழிக்கன்றோ செல்கிறான் மனிதன்.

கண்டவன் விண்டிடுவானா…? பெற்றதின் பயனை…! ஏதோ மனதிற்கு ஒரு நிறைவு ஹன நேரத்திற்கு என்று உரைப்பவனே மீண்டும் உலக இயலில் அகப்பட்டே தத்தளிக்கின்றான்.
1.அருள் செல்வம் என்பது எதுவப்பா…?
2.இராமலிங்கம் காட்டிய ஜோதித் தத்துவம் எதுவப்பா…?

ஒரு புறம் சூரியன் மறு புறம் சந்திரன் காணுகின்ற கால கட்டத்தில் நடுவிலே ஜோதி காட்டியதே உயிராத்ம தரிசனம்…! “நான்” என்பதன் கருப்பொருளை உணர்த்தவே… உணர்ந்து கொள்ளவே காட்டப்பட்டது அந்தத் ஜோதித் தத்துவம்.

சூரியன்… சந்திரன்… ஜோதி விளக்கு… அனைத்தும் இருளகற்றும் ஒளிகள். இருளகற்றும் ஒளியை மனிதன் தன் ஐம்புலன்களில் ஒளி கொண்டு கண்டு உணர்வதுவே “கண் ஒளி கொண்டு தான்…!”

கண்ணொளி கொண்டு ஜோதி தரிசனம் காண்கின்றவன் – தான் காண்பது ஜோதியே என்று அறிந்து கொள்ளும் ஒளி… “அறிவின் ஒளியப்பா…!

1.அறிவின் ஒளி கொண்டு காண்கின்ற ஜோதியை
2.நான் ஜோதி தரிசனம் கண்டேன் என்று உரைத்ததில்
3.ஜோதி தரிசனத்தைக் கண்டு கொண்ட “நான்” என்பதே உயிராத்மாவாகிய ஜோதியப்பா…!

“நீ கண்டு கொள்ளடா… உன் ஆத்ம ஜோதியை…!” என்று கூறாமல் கூறிச் சொல்வித்த இராமலிங்க சித்தனாரின் உண்மை நிதர்சனம் என்றுமே மாறாத சத்தியத்தின் சக்தியப்பா…!

இன்றைய விஞ்ஞான உலகம் ஆத்ம சிந்தனையின் சக்தியை அறிந்து கொள்ள ஆவல் கொண்ட கலியின் கடைசிக் காலத்தில் “இராமலிங்க வள்ளல் சித்தன்” கொண்ட ஆத்மாவின் வலுவே
1.உலகின் ஒரு கண்டத்தில் செயல் கொண்டிருக்கும் உண்மையின் பொருள் கண்டு கொண்ட பின்பாவது
2.மனிதன் தன்னை உணர்ந்து கொள்ளும் செயலுக்கு ஊக்கமளித்திடச் செயல் கொள்ளட்டும்.

அழிவின் பாதையில் மனித சமுதாயத்தையே அழைத்துச் சென்று கொண்டிருக்கும் விஞ்ஞானமும் ஆத்மீக வழியின் மெய் ஞானத்தை உணரட்டும்… என் ஆசிகள்…! (ஈஸ்வரபட்டர்)

[su_heading size=”28″]18.04.2021 உபதேசம்[/su_heading]

இன்றைய உலக சூழ்நிலையில் எதை நம் விதியாக மாற்ற வேண்டும்…?

 

அன்றாட வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் ஒரு கடுமையான வேதனைப்படுவருடைய செயல்களை நாம் உற்று நோக்கினோம் என்றால் அது நமக்குள் “விதியாக” மாறுகின்றது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்… இன்றைய உலகில் அனைத்துமே விஞ்ஞான அறிவால் பெரும் வேதனைப்படும் உணர்வுகளையே நாம் நுகர்ந்து கொண்டிருக்கின்றோம்.

1.பத்திரிக்கை வாயிலாகவும் டி.வி. வாயிலாகவும் எங்கோ நடக்கும் சம்பவங்களை நாம் கேட்கின்றோம்… உடனுக்குடன் பார்க்கின்றோம்
2.அதையெல்லாம் பார்த்து… நுகர்ந்து… உணர்வால் அறிந்து கொண்டுதான் இருக்கின்றோம்.

அந்தக் கடுமையான உணர்வுகள் நமக்குள் பதிவாகி விட்டால் அதுவும் நமக்குள் “விதியாக” மாறி விடுகின்றது.

பலருடைய துன்பப்பட்ட உணர்வுகளையும் பலருடைய கொடுமைகளையும் நமக்குள் எடுக்கும் பொழுது அது எல்லாம் நமக்குள் வினையாக வித்தாகப் பதிவாகின்றது. இப்படி ஒரு வித்தாக மாறுவதைத்தான் “விதி” என்று சொல்வது.

1.அப்படிப் பதிவான வித்து தன் இனத்தைப் பெருக்க
2.மீண்டும் மீண்டும் அதே உணர்வைத் தான் கவரும்.
3.அதே துன்பத்தைத் தான் நமக்குள்ளும் செயல்படுத்தும்.

ஆனால் அந்த விதியை எவ்வாறு மாற்ற வேண்டும்…?

பத்திரிகையோ டி.வி.யோ பார்த்துப் படித்த பின்பு உடனே நாம் என்ன செய்ய வேண்டும்…?
1.அந்த வீரியத் தன்மை (கொடுமைகள்) நமக்குள் அது தனித்த நிலையில் வளராது தடுக்க
2.ஈஸ்வரா…! என்று நம் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
4.உடலுக்குள் பல முறை செலுத்த வேண்டும்… இந்த உணர்வினை நமக்குள் அதிகமாக நமக்குள் கலக்கச் செய்ய வேண்டும்.

அதற்குப் பின்… பத்திரிகையிலோ டி.வி.யிலோ படித்துப் பார்த்த (சம்பவங்கள்) அத்தகைய நிலைகள்…
1.நாளை நடப்பது எல்லாம் நல்லவைகளாக நடக்க வேண்டும்.
2.தீமைகளிலிருந்து மக்கள் விடுபட வேண்டும்
3.மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று இப்படி உணர்வை மாற்றி விட்டால்
4.இது நமக்குள் தீமைகளை வென்றிடும் “விதித் தன்மை” அடைகின்றது.

இதைத்தான் மதி கொண்டு விதியை மாற்றுதல்…! என்று சொல்வது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நாம் எண்ணி எடுத்தால் இது மதி…! அந்தப் பேரருளை நமக்குள் பெறச் செய்கின்றது. நம்மைப் பிறவியில்லா நிலை அடையச் செய்கின்றது

ஆகையினால் நாம் ஒவ்வொருவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற காலை துருவ தியானம் நல்ல பலனைத் தரும்.

குடும்பத்தினர் அனைவரும் ஒவ்வொரு நொடியிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.

இடும்பனான குணம் அகற்றி தெய்வீக குணத்தை நாம் வளர்க்க உயிரான்மா ஒளியாகும் – ஈஸ்வரபட்டர்

 

உடலில் உள்ள பஞ்சேந்திரியங்கள் அனைத்தையும் சுற்றி ஓடும் ஒளி நாதம் செயல் கொள்ளும் திறன் என்ற தொடரை அறியும் முன் இடும்பன் காட்டிய தத்துவ மூலத்தை அறிந்திடல் வேண்டும்.

உயிரான்மாவின் சக்தியைக் கெடுக்க முயலும் வினைச் செயலையும் அந்தக் கேட்டினால் ஏற்படும் விளைவாகச் சங்கடமான அலைகள் எப்படித் தாக்குகின்றது…? என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தீமைகள் தாக்கும் போது உயிரான்ம மூலக்கலப்பு (உயிர்ச் சக்தியும் ஆன்ம சக்தியும்) இணையாத் தன்மை கொண்டு பிரிவு என்கிற மனோபாவனையில் செயல்படும் தன்மை வருகின்றது.

அந்தத் தீதெண்ண குண சக்தியின் வலுவினால் ஆத்ம சக்தியின் வலுக்கூட்டும் தொடர்பையே நிறைவுறாத செயலுக்கு அது தன் செயலை நிகழ்த்தி விடுகின்றது.

1.தீவினைச் செயல்பாடு – உயிர் சக்தியைப் பரிபூரணமாக ஆட்கொண்டு விட்டால்
2.உயிர் சக்தியின் வீரிய வலுவை அது தன் வலுவாக்கி
3.இடும்பச் சித்தன் காட்டியபடி அந்தத் தீதெண்ண குணங்கள் வீரியம் கொள்ளும்.

அது தனக்கொத்த கிளைகளைப் பரப்பிக் கொண்டு ஆன்மா என்றிட்ட உயர் சக்தி இருக்குமிடம் தெரியாமல் அனைத்தையும் மறைத்துத் தான் பெற்று வலுவாக்கிய சங்கட அலைகளைப் பஞ்சேந்திரியங்கள் மூலம் செயல்படத் தொடங்கும்.

1.சக்கர வியூகம் செயல்படும் நிலையில்
2.எண்ண உணர்வின் வலு மூலம்,.. மெய் என்ற வட்டத்தை அடுத்து
3.வாய் என்ற சக்கர வட்டத்தை உடைத்துத் தன் குணச் செயலை நிகழ்த்தும்.
4.வாய் வழியாக அந்தச் சங்கடத்தையும் சோர்வையும் கோபத்தையும் வேதனையையும் சொல்லாக வெளிப்படுத்தச் செய்யும்.

அவ்வாறு வெளி வந்த சங்கட அலைகள் யாரை எண்ணிச் சொல்லப்படுகின்றதோ சொல்லப்பட்ட பொருளின் கருத்தில் நிலை பெற்றிருப்பவர்
1.அந்தச் சங்கட அலைகள் தன் உயிராத்மாவின் சக்தியை ஆட் கொண்டு உண்டு விடாமல் இருக்கும் பொருட்டு
2.தன் சரீரத்தில் உள்ள பஞ்சேந்திரியங்களை முதலில் வசப்படுத்திக் கொள்ள முனைதல் வேண்டும்.

பின் உள் நிகழ்வின் செயல்முறை தானாக வசமாகும்.

போகப் பெருமான் தன் அனுபவத்தின் இடர்பாட்டில் இடும்ப குணச் செயலை அறிந்து தன் உயிராத்ம சக்தியை எப்படிக் காத்துக் கொண்டாரோ அந்தப் பக்குவத்தை ஞானச் செல்வங்கள் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

வீட்டிலே நாம் வேலைக்கு அவசரமாகப் போக வேண்டும் என்று நினைப்போம். அந்த நேரத்தில் சந்தர்ப்பத்தில் மனைவிக்கு முடியாமல் இருக்கலாம்.

அப்பொழுது “இன்னும் எழுந்து… அவர்கள் ஒன்றும் செய்யவில்லை பார்…!” என்று கோபத்தை எடுத்தால் அவர் உடலில் முடியாமையை அறிய முடியாது.

அப்பொழுது உடனே நமக்குக் கோபம் வரும். அப்பொழுது, எதற்கு ஊட்டம் கொடுக்கிறோம்…?

எனெனில்
1.நம் உடலில் கோபத்தை ஊட்டும் அணுக்கள் உள்ளது
2.அதற்கு ஆகாரம் தேவை.
3.இந்தச் சந்தர்ப்பம் பார்த்து ஊடே புகுந்து கொள்ளும்.
4.நாம் சிந்திக்க முடியாத நிலையில் அது சாப்பாடு எடுக்கின்றது.

புலிக்குப் பத்து நாள் பட்டினி போட்டவுடன் ஒரு ஆளைக் கண்டவுடன் தாவும். மழை இல்லாமல் பூமிக்குள் பதிந்திருக்கும் செடி கொடிகள் மழை பெய்தவுடன் கிடு…கிடு…வென விதைக்காமலே முளைக்கின்றது. அதிலேயும் இந்த விஷ வித்துக்கள் தள…தள.. என்று முளைக்கும்.

நல்ல வித்துக்கள் போட்டால் சீக்கிரம் முளைக்கின்றதா…? இல்லை. அதற்கு வேண்டிய பக்குவ நிலையும் சூழ்நிலையும் உருவாக்கினால்தான் அது விளைகின்றது.

ஆகையால் நாம் என்ன செய்ய வேண்டும்…? அந்த ஞான வித்துக்களை வளர்த்துப் பழக வேண்டும். இது மனிதன் ஒருவனால்தான் சாத்தியமாகின்றது.

நாம் ரோட்டில் போகும் பொழுது பார்த்து நுகர்ந்த உணர்வுகள் அணுவாகி விட்டால் அதற்குச் சாப்பாடு தேவை. நம்மை அறியாமலேயே நுகர்ந்து அந்த வெறுப்பின் உணர்வுகளச் சுவாசிக்கச் செய்யும்.

இத்தகைய உணர்வுகளைச் சுவாசித்தவுடனே தொழில் செய்யப் போகும் பொழுது அங்கே வேலை செய்பவனைப் பார்க்கப்படும் பொழுதே அவன் மேல் வெறுப்பு வரும்.

நமக்காக வேலை செய்யும் பொழுது இந்த வெறுப்பின் உணர்வுகள் அவனுக்குள் சென்று தவறாக வேலை செய்வான்.

அதே சமயத்தில் இந்த உணர்வின் தன்மை கணக்கு எழுதப்படும் பொழுது என்ன செய்கிறது எனில் கணக்கைத் தவற விட்டுவிடுகிறது.
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை அறியாமலேயே
2.அதனுடைய உணர்வுக்காக அந்த உணர்ச்சிகளைத் தூண்டி அது வளர்கின்றது.
3.நல்ல குணங்களை நாம் நமக்குள் தேடித் தேடிப் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.
4.நல்ல குணத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடிகின்றதா…!

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…? அந்த உணர்வு தூண்டுகின்றது என்றால் நமக்குள் நம்மை எது இயக்குகின்றது…?

அவன் உடலில் பிறிதொரு உணர்வுகளைக் கேலி பண்ணிப் பழகியிருப்பான். அவன் முகத்தை நாம் பார்க்கவில்லை. நாம் பேசவில்லை. அவன் உடலைச் சுற்றி அந்த ஆன்மாவில் இருக்கும். உற்றுப் பார்த்தால் நமக்குள் பதிவாகி நுகரச் செய்கிறது.

அவனை அறியாமலேயே குற்றவாளியாகப் பார்க்கிறான். அப்பொழுது இதை எது செய்கிறது…? இந்த உணர்வின் அணுக்கள் உந்தப்படும் பொழுது அதைக் கவர்ந்து நம்மையறியாமலேயே சாப்பாடு எடுக்கின்றது.

நுகர்ந்தபின் என்ன செய்கின்றது…?

மாம்பழத்திலிருந்து வாசனை வருகிறது. நல்ல பழமாக இருந்தால்…. “ஆகா…!” என்கிறோம். அதிலே புளிப்பு கலந்தால் “அய்ய..” புளிப்பாக இருக்கிறது என்கிறோம்.

எதிலே வருகிறது…? காற்றின் நிலைகளிலிருந்து வருகிறது. அதனை உணர்ந்து நுகர்ந்தவுடனே பழம் இது என்று பார்க்கிறோம்.

ஒரு பூச்செடியிலிருந்து வரக்கூடிய மணத்தைப் பார்த்தவுடன், நன்றாக உள்ளது. பச்சிலையிலிருந்து வரும் மணத்தைக் கண்டு நமக்குப் பிடிக்கவில்லை என்றால் வாந்தி வரும்போல உள்ளது.

நம் உடலிலுள்ள அணுக்கள் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தால் வாந்தி வருகின்ற மாதிரி உள்ளது.

இதையெல்லாம் நுகர்ந்து நாம் இரத்தத்தில் கலந்தபின் நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கும் அந்தத் தீங்கு விளைகின்றது. அந்த அணுக்கள் வளர ஆரம்பிக்கும்.

நல்ல அணுக்கள் ஏற்க மறுக்கும் நிலை வருகின்றது. கெட்ட அணுக்கள் எடுக்கும் பொழுது அது வளர்கின்றது. அப்பொழுது நம்மையறியாமலேயே மயக்கம் வரும்.

அந்த நேரத்தில் நாம் இந்த ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

“ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும். எங்கள் ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று இங்கே புருவ மத்தியில் நிறுத்திவிட வேண்டும்.

எங்கள் உடலிலே அது பரவ வேண்டும் என்று எண்ணிவிட்டு யார் இந்த மாதிரி நடந்தனரோ அவர் பொருளறிந்து செயல்படும் சக்தியும் சிந்திக்கும் ஆற்றலும் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும். இவ்வாறு எண்ணினால்
1.அவன் செய்த செயலும்
2.நாம் எண்ணிப் பார்த்து நுகர்ந்தது
3.இரண்டும் உயிருக்குத்தான் வருகின்றது.

உயிர் ஒரு நெருப்பு. நெருப்பை வைத்து ஒரு பாத்திரத்திலே எந்த சரக்கைப் போடுகிறோமோ அதை இரண்டறக் கலந்து ஓர் கலவையாகின்றது.

ஆகையால் பிறிதொரு மனிதனுடைய உணர்வுகள் இங்கே உருவாகக் கூடாது.

[su_heading size=”28″]17.04.2021 உபதேசம்[/su_heading]

நாம் ஒளி உடல் பெற்றால் எண்ணங்கள் இருக்காது… உணர்வின் இயக்கம் மட்டும் தான் இருக்கும்

 

காவியங்களில் எடுத்துக் கொண்டால் மனித வாழ்க்கையின் கடைசியில் எமன் பாசக்கயிறை வீசி நம்மை அழைத்துக் கொண்டு போகின்றான்…! என்று காட்டியிருப்பார்கள்.

அழைத்துச் சென்ற பின் அவரவர்கள் செய்த தவறுக்குத் தண்டனையாக நரகத்திற்கு அனுப்புகின்றான் என்றும் சொல்கின்றார்கள். அதனின் உட்பொருளை ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் அறிதல் வேண்டும்.

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்று வந்த பின்பு தான் இன்று இந்த மனிதச் சரீரத்தையே நாம் பெற்றிருக்கின்றோம்.

இருந்தாலும் இப்பொழுது மனிதனாக வாழும் காலத்தில்…
1.“எனக்கு ஒருவன் துன்பம் கொடுத்தான்… தொல்லை கொடுக்கின்றான்…! என்ற எண்ணத்தை வலுவாக்கி விட்டால்
2.இந்த எண்ணமே நமக்கு எமனாக மாறுகின்றது.

எப்படி…?

ஒருவர் வேதனைப்படும் உணர்வுகளை அதிகமாகச் சுவாசித்து அந்த எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் இந்த வாழ்க்கையினுடைய இயல்பான நிலைகளை மறந்துவிடுகின்றோம்.

வேதனை… வேதனை… என்று பட்டு அந்த வேதனையான உணர்வு எங்கிருந்து… யாரால் வந்ததோ அவரையே எண்ணி அந்த உடலுக்குள் சென்று… அங்கேயே தண்டனையை அனுபவிக்கச் செய்கின்றது…!

ஏனென்றால் வேதனை என்றாலே விஷம். ஆக அந்த உடலுக்குள் சென்று மீண்டும் அதே விஷத் தன்மையை அங்கேயும் பெருக்கிக் கொண்டு அந்த உடலையும் வீழ்த்துகின்றது.

அடுத்து மனிதனல்லாத உயிரினங்களுக்குள் தான் செல்ல நேரும். இதைத் தான் நம் காவியங்களில் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

ஆனால் அதே சமயத்தில் இந்த மனிதனின் வாழ்க்கையில் எந்தெந்த ஆசைகள் இருந்ததோ அந்த ஆசைகளை அகற்ற
1.இதையெல்லாம் வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பதிவாக்கி
2.இந்த எண்ணங்களை நமக்குள் அதிகமாக வளர்த்துக் கொண்டால்
3.அந்த எண்ணம் இந்த மனித உடலுக்கு எமனாக மாறி
4.என்றும் பேரின்பப் பெரு வாழ்வாக வாழும் நிலைகளுக்கு நம்மை அரவணைத்து
5.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் கொண்டு சென்று விடுகின்றது.

அதுவே சொர்க்கவாசலாக அமைந்து அங்கே அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கின்றது.
1.அதற்கு அப்புறம் வேறு எண்ணங்கள் வருவதில்லை…
2.ஒளியான உணர்வுகள்தான் இயக்கும்.

தாவர இனங்கள் எப்படித் தன் உணர்வின் செயலால்… தன் அறிவால் இயக்குகின்றதோ… இதைப் போல மற்ற உயிரினங்களில் எண்ணங்களாக வருவதை அந்த உயர்ந்த ஒளியின் தன்மை பெறச் செய்து விட்டால் எண்ணங்கள் வருவதில்லை… உணர்வுகள் தான் இருக்கும்…!

ஒரு செடியின் சத்தை நாம் நுகர்ந்தால் அதற்குண்டான எண்ணங்கள் நமக்குள் எப்படி வருகின்றதோ இதைப் போலத்தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துக் கொண்டால்
1.இந்த மனித உடலில் உள்ள உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறுகிறது.
2.மாறியபின் அந்த உணர்வின் இயக்கமாக இயக்கத் தொடங்கும்…!

துருவ நட்சத்திரம் எத்தனை கோடி உணர்வுகளைச் சேர்த்துத் தன் உணர்வின் தன்மையை ஒளியாக மாறியதோ அதனின் உணர்வைக் கவர்ந்து உயிரின் துணை கொண்டு நமக்குள் இணைத்தால் ஒளியின் சரீரமாக ஆவோம்.

அப்போது எண்ணமே இல்லாது மற்றொன்றை இயக்கச் சக்தியாக மாற்றும். அத்தகைய பயிற்சியைத் தான் இதிலே கொடுக்கின்றோம் (ஞானகுரு).

“சக்கராயுதம்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

“இரத கஜ துரித பதாதி…” என்ற நால்வகைப் படைகளையும் வியூகம் என்ற மெய்யை வைத்து முதன்மைப் படைக் கேந்திரமாக எத்தன்மை காக்கப்பட வேண்டுமோ… அந்தச் செயலின் உயர் தனித்துவத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.

இருந்தாலும்… அதற்கு எதிர்மறையான சத்துரு குண எண்ணச் செயல் வீரியம் தன் ஆதிக்கத்தை நிலைப்படுத்த தன் எண்ணம் கொண்டு உடலில் இருக்கும் சகலத்தையும் தன் வசமாக்கிட எண்ண முயற்சிக்கும்.
1.அது தன் குண உயர்வையே பிரதானமாக்கி
2.தனக்கொத்த வலுவில் வலுக்கூட்டிக் கொண்டு
3.சக்கராயுத நடுநிலைத் தலைமையை (உயிர்+ஆத்மா) அடைந்துவிட முயற்சிக்கும்.

அதனால் எழும் போராட்டத்தைச் சுட்டிக் காட்டப்படும் பொழுது உயிரான்ம தத்துவ சரீர கதியில் அந்தத் தீமையின் உணர்வுகளின் செயலாக்கங்களை உணர்ந்து அறியும் கேந்திரங்களில் மெய் என்பது “முதல் வியூகம்…”

இந்தச் சரீர கதிக்கு ஆகார நிலைப்படுத்தும் செயல் வழி கேந்திரம் வாய்… மெய்யை வட்டமிட்ட இரண்டாவது சக்கராயுதம்…! இவை இரண்டையும் வட்டமிட்டுக் காக்கும் அடுத்த நிலை நாசி…!

நாசி என்று கூறும் பொழுது வியூக மையத்தில் காக்கப்படும் உயிரான்ம சக்தியைப் போல்
1.வட்டமிட்டுச் சுழலும் “காக்கும் சக்கர வியூகத்தின்” மையப் பகுதியை
2.காக்கப்பட வேண்டிய அந்த சுவாசத்தின் வீரிய குணத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த மூன்று தொடரையும் சுழன்றோடும் செயல்பாட்டில் “செவியும்” இது அனைத்தையும் சுற்றிச் சுழன்றோடும் “விழிப்பார்வை” செயல்படுத்தும் நிலையும் உள்ளது. ஆக செயல்படுத்தும் சக்தியாக முன்னிலையில் நிற்பது விழியின் தொடரே…!

சரீர இயக்கத்தில் உணர்த்திட்ட இந்த வழியின் முக்கியச் செயல்பாட்டில் “அடக்குதல்…” என்பதன் பொருள் என்ன…?

ஒவ்வொரு படைப் பிரிவையும் கட்டளையிட்டு அந்தக் கட்டளையின் கீழ் வழி முறைப்படுத்தி நடந்திடும் பக்குவம் ஒவ்வொன்றிலும்
1.முதன்மை பெறும் ஒவ்வொரு அணியின் படைத் தளபதியும்
2.தன் சக்தியின் செயலாற்றலினால் துரித கதி கொண்டு
3.செயல்படுத்தித் தயார்படுத்திக் கொள்ள வேண்டியது “தற்காப்பு…!”

இந்த உண்மையை அறிந்து ஒவ்வொரு படைப்பிரிவிலும் எண்ணம் கொண்டு செயல் கொள்ளும் படை வீரர்கள் அந்தக் கட்டளையின் உயர் சக்தியின் தன்மையை உணரும் பக்குவம் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் படைகளுக்குள் குழப்பம் நிலவி விட்டால் ஒவ்வொன்றும் தன் தன் எண்ணம் கொண்டு தன் இஷ்டம் போல் உலவிடும் செயல்பாட்டின் விபரீதம் ஆகி… பஞ்சேந்திரியத் தத்துவத்தில் “தீமையான செயல் தான்” வலுக் கொள்ள நேரும்.

அப்படிப்பட்ட குழப்பத்தின் நிகழ்வால் உடலுக்குள் ஒருமைப்பாடற்ற தன்மை உருவாகி உயிரான்ம சக்தியைத் தாக்கி அதை வலுவிழக்கச் செய்யும். மேலும் காக்கும் சக்கராயுதத்தையும்… அதாவது வியூகம் என்ற தொடர்புபடுத்திய பஞ்சேந்திரியச் செயல்களையும் கேடாக்கிவிடும்

1.குழப்பத்தின் வழியாகச் செயல்படும் தீதெண்ண அமில குண வீரிய சக்தி காந்த அமில ஈர்ப்பின் செயலால்
2.அது தன் வீரியம் கொண்டு பஞ்சேந்திரியங்கள் அடக்கும் முறைகளை உடைத்து… உள் நுழைந்து செயல் கொண்டு
3.உடலில் உள்ள உயர்ந்த சக்திகளையே அத்தகைய குணங்கள் உண்டுவிடும்.

உயிர் சக்தி வலுப் பெற எண்ணம் கொண்டு செயல்படுத்தும் நல்லாக்கச் செயல் நிகழ்வில்… தன் வீரியத்தைக் காத்துக் கொள்ளும் செயல்பாட்டிற்கு… முதலில் செயல்படுத்துவது ஒன்றுண்டு.

சரீரத்திற்குள் இயங்கி மற்றவைகளையும் இயக்கும் இந்தப் பஞ்சேந்திரியங்களை உயர் சக்தியின் மூல கேந்திரத்திற்கு… அதாவது
1.உயிர் சக்தியின் வசப்படி…
2.உணர்வுகளின் எண்ண ஓட்டம் செயல் கொண்டிடும் விதத்திற்கு
3.அவைகளை அடக்கி ஆளப் பழகுதல் வேண்டும்.

அப்படியானால் தன் சரீரத்தில் இருக்கும் கோடானு கோடி “அத்தனை உயிரணுக்களையும் வசமாக்கிட வேண்டும்…” என்றால் என்ன செய்ய வேண்டும்…?
உணர்தல்…
சுவைத்தல்…
நுகர்தல்…
செவிமடுத்துக் கேட்டல்…
விழியின் செயல் திறன்…
இவை அனைத்திலும் ஓர் பக்குவத்தைக் கைக்கொள்ள வேண்டும்.

உயிரான்ம சக்தி உணர்த்தும் கட்டளைகளை… எண்ணத்தின் வலுச் செயலாற்றல் கொண்டு நல்வினையாக்கமாக எண்ணிப் பெறப்படும் செயலில்
1.நிலையாக நின்றிடும் தனித்துவச் செயல் திறனை
2.நீங்கள் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எனது ஆசிகள் (ஈஸ்வரபட்டர்)

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒருவர் கஷ்டப்படுகின்றார் என்றால் மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர் நன்றாக ஆகவேண்டும் என்று வேண்டுங்கள். அந்த உடலிலிருந்து நல்லது கிடைக்கும், அந்த உணர்வின் தன்மையில் நல்லது நடக்கும்.

அதே சமயத்தில் உங்களுக்குப் பிடிக்காத நிலைகளில் இருக்கிறார்கள் என்று சொன்னால் விலகி நில்லுங்கள்.
1.அவர்கள் சங்கடத்தைப்பற்றி எண்ண வேண்டாம்
2.”விலகி நில்லுங்கள்”
3.அவர்களுக்கு “நல்ல நேரம் வரட்டும்…” என்று சொல்லிவிடுங்கள்.
4.அவர்கள் இம்சை கொடுக்கிறார்கள்… இம்சை கொடுக்கிறார்கள்… என்று எண்ண வேண்டாம்,

இதை நீங்கள் செய்து பழகி வாருங்கள்.

நான் எப்படி உங்களை வேண்டுகின்றேனோ அதைப்போல ஆத்ம சுத்தி செய்துவிட்டு நன்றாக ஆக வேண்டுமென்று நீங்கள் சொல்லிப் பாருங்கள்.

இது உங்களுக்கு நன்மையைத் தரும்.

உங்களை யாராவது திட்டிகொண்டே இருந்தால் உடனே சொல்லுங்கள்.
1.மகரிஷிகள் அருள் சக்தியால் அவர் அறியாமல் திட்டிக்கொண்டிருக்கும் எண்ணங்கள் மாறி
2.எல்லோருக்கும் நன்மை செய்யக்கூடிய எண்ணம் அவருக்கு வரவேண்டும்.

இவ்வாறு அவர் திட்டும் பொழுதெல்லாம் கேட்கும் பொழுதெல்லாம் இதைச் சொல்லிக்கொண்டே வாருங்கள்,
1.அவர் திட்டுவது உங்களுக்கு வராது.
2.நீங்கள் செய்வது அவருக்குப் போய்ச் சேரும்.

ஆனால் “இப்படித் திட்டுகிறானே…, இருக்கட்டும் பார்க்கிறேன்” என்று சொன்னால் ஆத்திரம் கொஞ்சம் கொஞ்சமாக நமக்குள் வந்து இரத்தக் கொதிப்பு கை கால் குடைச்சல் தலைவலி போன்று நமக்குள் வர ஆரம்பித்துவிடும்.

இதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

[su_heading size=”28″]16.04.2021 உபதேசம்[/su_heading]

ஆரம்பத்தில் யாம் அதிவேகமாக உபதேசம் கொடுத்ததன் நோக்கம் என்ன…?

 

சாமி (ஞானகுரு) நன்றாகச் சொல்கிறார்…! என்ற இந்த எண்ணங்களில் தான் இருக்கின்றோமே தவிர “அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்…” என்று நாம் இன்னும் தயாராகவில்லை.

எத்தனையோ வருடங்களாக எண்ணிலடங்காத உபதேசங்களை யாம் கொடுத்திருக்கின்றோம். ஆனால் இதைக் கேட்டுவிட்டு
1.சாமி எப்படிப் பேசுகின்றார் தெரியுமா…? என்று
2.இந்தப் பேச்சைத் தான் அளக்கின்றோம்.

ஆனால் உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு இருக்கின்றது…? என்று அடிக்கடி யாம் சொல்லி இருக்கின்றோம். இப்பொழுது தற்சமயத்தில் கொடுக்கும் உபதேசங்கள் எல்லாம் தெளிவாகச் சொல்கின்றோம்.

முந்தி எல்லாம் உபதேசம் செய்யும் போது எக்ஸ்பிரஸ் போன்று அதுபாட்டுக்குக் காற்றிலே போவது போன்று திடு…திடு… என்று ஓடிக் கொண்டிருக்கும்.

அதைக் கேட்பவர்கள் நன்றாக இருக்கிறது என்று சொல்வார்கள். உபதேசம் கேட்டு முடிந்தவுடன் “அற்புதமாக இருக்கின்றது என்றெல்லாம் தலையை ஆட்டுவார்கள்.

கடைசியில்… சாமி சொன்னது உங்களுக்கு அர்த்தமானதா…? என்று ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

முதலில் அதிவேகமாகச் சொன்னேன். இப்பொழுது ஒரு உணர்வின் இயக்கம் எவ்வாறு இயக்குகிறது…? என்று நிறுத்தி விளக்கமாகச் சொல்கிறேன்.

காரணம்…
1.அன்று குருநாதர் (ஈஸ்வரபட்டர்) கொடுத்த சக்திகளை
2.அந்த உணர்வுகளை எடுத்து மீண்டும் எனக்குள் வளர்த்து
3.அந்த உணர்வலைகளை இங்கே பரப்பச் செய்தேன்.

நீங்கள் நோட்டுப் புத்தகங்களில் குறிப்புகளை எழுதிக் கொள்வது போன்று தான் அந்த உணர்வலைகளை வெளியில் பரப்பினேன். கேட்பவர்களுக்குள்ளும் பதிவானது.

உதாரணமாக ஒருவர் பேசுவதை டேப் ரெக்கார்டரில் பதிவு செய்தபின் அதைக் குறைவான வேகத்தில் மீண்டும் சுழல விட்டால் தொண்டை கனமாகப் பேசுவது போன்று இருக்கும். ஆனால் அதை வேகமாகச் சுழல விட்டால் கீச்சு…பூச்சு… கீச்சு… பூச்சு… என்று சப்தமிடும்.

அதைப் போன்றுதான் ஆரம்பத்தில் யாம் சொல்லும் பொழுது கீச்சு…பூச்சு… கீச்சு… பூச்சு… என்று தான் இருக்கும். அர்த்தம் புரியாது. ஆரம்பத்தில் எனக்குக் கிடைத்த சக்திகளை அப்படித்தான் பதிவு செய்தேன்.

ஒருத்தர் எம்மிடம் கேட்கிறார் என்றால் அவரைக் கேட்கச் சொல்லிவிட்டு உடனே எல்லாவற்றையும் பேசி அவர்களுக்குள் பதிவு செய்து அந்த அலைகளைப் வெளியிலே பரப்பச் செய்வேன்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு விதமாகக் கேட்பார்கள். அந்தந்தக் காலகட்டத்தில் உடனே குருநாதர் பதிவு செய்ததை நினைவுபடுத்தி மீண்டும் எடுத்து அந்த அலைகளை இங்கே பரப்பிக் கொண்டே இருப்பேன்.

1.அப்படிப் பரப்பி வைத்த அலைகளை எடுத்துத் தான்
2.அதிலே எதை எதையெல்லாம் உங்களுக்குத் திரும்பச் சொல்ல வேண்டுமோ
3.இப்பொழுது எடுத்துச் சொல்லிக் கொண்டே வருகின்றேன்.
4.முந்தி சொன்னதைத்தான் இப்பொழுது சொல்லிக் கொண்டு வருகிறேன்.
5.ஆனால் முந்தி அர்த்தமாகாது. இப்பொழுது அதைத் தெளிவாக எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

அதே சமயத்தில் உங்களுக்குள் பதிவு செய்தது முந்தி அர்த்தமாகவில்லை என்றாலும்… சில நேரங்களில் சில சந்தர்ப்பங்களில் அதை இப்பொழுது நீங்கள் எண்ணும் பொழுது உங்களுக்குள் ஓரளவுக்கு அர்த்தமாகும். அந்தச் சக்தியைப் பெறக்கூடிய தகுதிக்கு வருகிறீர்கள்.

அதே சமயத்தில் உங்களுக்குள் பதிவு செய்ததை உங்கள் நண்பர்கள் மத்தியில் நீங்கள் சொல்லப்படும் போது அவர்களிடமும் இது பதிவாகி விட்டால் நான் (ஞானகுரு) பேசிய மெய் ஞானிகளின் உணர்வலைகளை அவர்களும் நுகர்ந்து… அந்த சக்தியைப் பெறும் தகுதி அவர்களும் பெறுகின்றார்கள்.

ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டு விட்டான் என்றால் என்ன செய்கிறோம்…?

நல்ல மனிதன் என்று பாசத்தால் பழகிய பின் அடுத்தவனிடம் சொல்லப்படும் நோயினால் ரொம்ப அவஸ்தைப்படுகிறான் என்று தான் சொல்கிறோம்.

1.நோயாளியை உற்றுப் பார்த்து அவர் கஷ்டப்படுவதை நுகர்ந்து
2.அடுத்து அடுத்து நண்பர்களிடம் சொல்லப்படும்போது அவர்களும் இதைக் கேட்டு வருத்தப்படுவார்கள்.

அதைப் போன்று தான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் வரும் சந்தர்ப்பத்தை எடுத்து உங்களுக்குள் ஞானத்தை உபதேசிக்கின்றேன். அதாவது
1.மறைந்த பொக்கிஷத்தை (அருள் ஞானம்) மீண்டும் நினைவுபடுத்தி அந்த அலைகளைப் பெருக்கி
2.அவ்வப்பொழுது அதற்குண்டான உணர்வைக் கூட்டி
3.உயர்ந்த ஞானத்தின் உணர்வுகளை வெளிப்பரப்பு…! என்று குருநாதர் சொன்னதால்
4.ஆரம்பத்தில் அதை நான் செய்தேன்.

அந்த அலைகள் இங்கே உங்களுக்கு முன்னாடி பரவி இருப்பதனால் உங்களுக்கு இப்பொழுது அர்த்தமாகும் அளவுக்குத் தெளிவாக விளக்கமாக வரும்.

அந்த விளக்கங்களை நீங்கள் மற்றவர்களுக்கும் “சாமி இப்படிச் சொன்னார்…” என்று சொன்னால் இலேசாகப் பதிவாகும். இதை அவர்களும் உணர்வார்கள்.

இப்படி இந்தக் காற்று மண்டலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக… மிக அடர்த்தியாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பரவும்.
1.எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் சந்தர்ப்பமாகவும் அது அமையும்.
2.எல்லோரும் ஞானத்தின் வழித் தொடரைப் பெறும் பாக்கியமாகவும் நிச்சயம் அமையும்.

சிறு மூளை வழி (பிடர் வழி) புருவ மத்தி வழி விண்ணின் ஆற்றலைப் பெறப் பழக வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

பரவெளியின் பூதியில் சூரிய மண்டலங்களின் சந்திப்பில்… யுகம் என்ற மறைபொருளாக விண்மீன்கள் விண் கோள்கள் அமையப் பெற்று ஓர் ஓட்ட கதியில் சுழன்று ஓடிக் கொண்டேயுள்ளது.

ஒவ்வொரு குடும்பமும் அந்தக் குடும்பத்தின் சுழல் ஓட்ட கதியில் சுற்றி வரும் சூரியனின் சக்தியில்
1.ஒன்றுடன் ஒன்று பிடர் வழி என்ற உந்தும் வீரிய குண சக்தியைக் கொண்டு
2.சக்தியை ஈர்த்துக் கொண்டும்… சக்தியை அளித்துக் கொண்டும்…
3.ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திக் கொண்டு வெளித் தள்ளும் சமைப்பு அமில குணத் தன்மைகளை ஒளி காந்தமாக வீசிக் கொண்டும்
4.தன்னைச் சுற்றி ஓடும் சுழற்சியின் சப்த நாதங்களை வளர்த்துக் கொண்டும்
5.தான் பெறும் சக்தியை ஈர்ப்பு நிலையில் குறைவுபடாத தன்மையாக வளர்த்துக் கொண்டும் உள்ளது.

அவ்வாறு ஓடுகின்ற ஓட்டக் கதியில் எல்லாம்… எந்த மண்டலமோ அந்த மண்டலம் தன் சக்தியின் வலுவைக் கொண்டு
1.தன் ஈர்ப்பு வட்டத்திற்குள் வரும்
2.தன் வலுவை விடக் குறைந்த சக்தி பெற்ற உருவாகும் கோள்களின் தொடரை
3.தான் ஈர்த்துத் தன்னை வளர்த்துக் கொள்ளும் ஓர் சூட்சமம் உள்ளது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் ஞான வழியில் முன்னேறி வரும் ஞானச் செல்வங்கள் (நீங்கள்) இந்தச் சரீரம் உள்ள பொழுதே வீரியச் சக்தியின் தொடரை வேகம் கொண்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

வேகம் என்பது என்ன..?

எண்ணத்தின் வலு கொண்டு…
1.மகரிஷிகள் பெற்ற ஒளி காந்த சக்தியின் உயிரான்மக் கலப்பின் முலாம் தனக்குள் வலுப் பெற்று விட்டால்
2.ஞானக் கண் திறக்கும் திறப்புச் செயல் வேகம் கொண்டுவிடும்.

அத்தகைய வேகம் கொண்டால் யுகங்கள் தன் சந்திப்பில் ஓர் நட்சத்திரத்தை உருவாக்குவது போல் உருவாக்கும் ஆக்கம் எந்தக் கோளமும் தன் ஈர்ப்பின் வலுச் செயலினால் மூலத்தையே தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொள்ள முடியும்.
1.சக்தியின் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தும் வீரிய மண்டலமாக
2.நீங்கள் ஒவ்வொருவரும் உருக்கோலம் கொள்ள வேண்டும்.

நீங்கள் என்ற சொல் உங்கள் அனைவரின் தொடருக்கு வலுக் கொள்ளும் செயலை… அதாவது “அழுத்தமாகச் சுட்டிக் காட்டும்” அமில குணம் கொண்ட வீரியச் செயலாக… நட்சத்திர அலைகளின் விசேஷ வீரிய குணத் தன்மைகளை அறிந்து கொள்ளும் “உயிரான்மா – ஜீவாத்மா தொடரில்”
1.சரீரத்தின் மூலம் அமைத்துக் கொள்ளும் பக்குவச் செயலாக
2.கரங்களில் வெளிப்படுத்தும் உணர்வு நரம்புகளின் வீரியச் செயல் கொண்டு மண்டலமாக உருவாக்கிடும் உருக்கோலம் கொள்ள
3.”பிடர் வழி” என்றிட்ட மன எண்ணச் செயலில்
4.பரணி நட்சத்திரத்தின் ஆதிக்கத்தை எலும்புகளின் வலுக்கொண்ட சேமிப்பாகக் கூட்டிக் கொண்டு
5.சரீரத்தில் உள்ள உயிரணுக்கள் உயிரின் ஒளி காந்தத்தை நாடி உயிர்ச் சக்தியினை வலுக்கூட்டப்படும் பொழுது
6.சரீரத்தின் கட்டளைக் கேந்திரமான (CONTROL PANEL) சிறுமூளையின் பாகம் திறக்கப்படும் ஞானக் கண் வழியாக
7.எண்ணத்தின் பிடர்வழி உந்தும் குண வீரிய எண்ணமாக ஆக்கப்படும் பொழுது
8.மண்டலத்தின் உருக்கோலத் தன்மைக்கு வித்திடும் வீரிய சக்தியாகப் பரிமளிக்கும்.

ஆக மகரிஷிகள் படைத்த “படைப்பின் படைப்பு” என்பது சூட்சம சரீரம் கொண்டு உயிரான்ம ஒளி காந்த சக்தியுடன் தன் நிகழ்வில் பெறப்படும் சக்திகளுடன் தான் ஒன்றி “ஞானக் கண் திறப்பின்” வழியாகத்தான் தன் வலுவை வீரியமாக்கிக் கொண்டனர்.

பூதியின் வீரிய நட்சத்திரமாகத் தனக்கென்று தன் ஆக்கத்தின் ஆக்கமான படைப்பின் படைப்பான ஒளி காந்த சக்தியைப் பெற்றுச் “சுய வீரிய சக்தி கொண்ட நட்சத்திரமாக உருக்கொண்டார்கள்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

“எனக்கு இப்படித் துரோகம் செய்தான் பாவி..,” என்று எண்ணினால் இந்த உணர்வைப் பெற்றால் அடுத்து அவன் உணர்வுக்குள் நம்மை இழுத்துச் சென்று அவனைக் கெடுத்து பாம்பாகவோ தேளாகவோ பிறக்கச் செய்யும் நம் உயிர்.

அவனையும் கெடுக்கும். ஆகவே, மீண்டும் இங்கே பிறவிக்கு இழுத்து வரும். இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் மீளவேண்டும் அல்லவா?

அதற்குத்தான் ஆலயங்களிள் பிரதோஷம் என்ற நிலைகளைக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

நமது வாழ்க்கையில் நாம் யாருமே தவறு செய்யவில்லை. நல்ல பண்பும் பரிவும் கொண்டு பிறருடைய துயரங்களைக் கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்தாலும் அவர்கள் செய்த பாவ நிலைகளும் தோஷ நிலைகளும் நமக்குள் வந்து சேர்ந்து விடுகின்றது.

பல தோஷங்கள் செய்திருப்பார், பல பாவ நிலைகள் செய்திருப்பார், பல கொடூர உணர்வுகளைப் பார்த்திருப்பார், அவர் உடலில் தோஷமாக ஒட்டி அந்த உணர்வின் தன்மை வரும்.

அவரை நாம் பார்த்தால் அதன் உணர்வுகள் நமக்குள் தோஷங்களாக மாறுகின்றது.

இந்தத் தோஷத்தை மாற்றுவதற்காக சாயங்காலம் ஈஸ்வரன் கோயிலில் போய் நந்தீஸ்வரனுக்குப் பூஜை செய்துவிட்டு “நீ ஈசனிடம் போய்ச் சொல்லப்பா..,” என்கிறார்கள்.

நான் எல்லோருக்கும் அவர்கள் கஷ்டப்படும்பொழுதெல்லாம் உதவி செய்தேன், அவர்களுக்கு உதவினேன், இவர்களுக்கு உதவினேன் என்று சொன்னால் அவன் போய்ச் சொல்லப் போவதில்லை.

ஒரு நோயாளியின் உணர்வைச் சூரியன் கவர்ந்து வருகின்றது. நோயாளியை நாம் உற்று நோக்கினால் அந்த உணர்வின் தன்மை அதே நிலையை நமக்குள் ஆக்குகின்றது. ஆகவே, தோஷங்கள் இங்கே சாடுகின்றது.

இத்தகைய தோஷத்தை எல்லாம் நீக்கியவன் அந்த அகஸ்தியன். அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமானான் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து உணர்வுகள் வெளிப்படுவதை சூரியன் கவர்ந்து வருகின்றது.

அதிகாலை 4 மணிக்கு எல்லாம் அது வெளிப்படுவதை நமது பூமி துருவப் பகுதியில் கவருகின்றது. நம் எண்ணத்தை காலை 4 மணியில் இருந்து 6 க்குள் துருவத்தின் வழியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நம்மை மனிதனாக உருவாக்கியதே தாய், தந்தை. அம்மா அப்பா அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுதல் வேண்டும்.

ஏனென்றால், தாய் நம்மை எப்போதும் காக்கும் உணர்வு பெற்றவள். நம்மை எப்பொழுதும் பாதுகாக்கும் நிலை பெற்றவள். தந்தையைக் காட்டிலும் தாயின் நினைவுகள் நமக்குள் அவர் உடலின் நிலைகள் உருவாக்கி நமக்கு உணவாகக் கொடுத்து நம்மை உருவாக்கி மனித உருவைச் சீராக்கிக் கொடுத்தவள்.

பிறந்தபின் தன் துன்பத்தைப் பாராது நம்மைக் காத்தவள் தாய். ஆகவே அந்தத் தாயின் உணர்வை நாம் எப்படி கொண்டுவர வேண்டும்?

நாம் சுவாசித்த உணர்வு நமக்குள் நந்தீஸ்வரன் ஆக இயக்குகின்றது.

தீமையின் நிலைகளைப் போக்க வேண்டும் என்று நாம் இச்சைப்பட்டால் நம் உயிர் அந்த உணர்வின் தன்மை நுகர்ந்து அதே உணர்வின் அணுவாக நமக்குள் உருவாக்குகின்றது.

அதைப் பெறச் செய்வதற்குத்தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணி இதைப் பல முறை எண்ணி அந்த உணர்வை நமக்குள் சேர்த்துக் கொள்தல் வேண்டும்.

அகஸ்திய மாமகரிஷியை எண்ணி அவன் பெற்ற உணர்வுகள் நாங்கள் பெறவேண்டும். அவன் சென்ற பாதையில் நாங்கள் செல்ல வேண்டும் என்று எடுக்க வேண்டும்.

ஏனென்றால் அவன் இதைப்போல தீமைகளை இந்த தோஷங்கள் எல்லாம் நீக்கி ஒளியின் தன்மை பெற்றவன். அதன் உணர்வை நாம் நுகர்ந்தால் நந்தீஸ்வரன்.

அந்தத் துருவ நட்சத்திரம் நமக்குள் உருவாகி அது ஈசனாக உருவாக்கி நம்முடைய உடலில் உள்ள தோஷங்களை நீக்க வல்லமை பெற்றது.

ஒருவர் கஷ்டப்படுகின்றார் என்றால் மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர் நன்றாக ஆகவேண்டும் என்று வேண்டுங்கள். அந்த உடலிலிருந்து நல்லது கிடைக்கும், அந்த உணர்வின் தன்மையில் நல்லது நடக்கும்.

அதே சமயத்தில் உங்களுக்குப் பிடிக்காத நிலைகளில் இருக்கிறார்கள் என்று சொன்னால் விலகி நில்லுங்கள்.
1.அவர்கள் சங்கடத்தைப்பற்றி எண்ண வேண்டாம்
2.”விலகி நில்லுங்கள்”
3.அவர்களுக்கு “நல்ல நேரம் வரட்டும்…” என்று சொல்லிவிடுங்கள்.
4.அவர்கள் இம்சை கொடுக்கிறார்கள்… இம்சை கொடுக்கிறார்கள்… என்று எண்ண வேண்டாம்,

இதை நீங்கள் செய்து பழகி வாருங்கள்.

நான் எப்படி உங்களை வேண்டுகின்றேனோ அதைப்போல ஆத்ம சுத்தி செய்துவிட்டு நன்றாக ஆக வேண்டுமென்று நீங்கள் சொல்லிப் பாருங்கள்.

இது உங்களுக்கு நன்மையைத் தரும்.

உங்களை யாராவது திட்டிகொண்டே இருந்தால் உடனே சொல்லுங்கள்.
1.மகரிஷிகள் அருள் சக்தியால் அவர் அறியாமல் திட்டிக்கொண்டிருக்கும் எண்ணங்கள் மாறி
2.எல்லோருக்கும் நன்மை செய்யக்கூடிய எண்ணம் அவருக்கு வரவேண்டும்.

இவ்வாறு அவர் திட்டும் பொழுதெல்லாம் கேட்கும் பொழுதெல்லாம் இதைச் சொல்லிக்கொண்டே வாருங்கள்,
1.அவர் திட்டுவது உங்களுக்கு வராது.
2.நீங்கள் செய்வது அவருக்குப் போய்ச் சேரும்.

ஆனால் “இப்படித் திட்டுகிறானே…, இருக்கட்டும் பார்க்கிறேன்” என்று சொன்னால் ஆத்திரம் கொஞ்சம் கொஞ்சமாக நமக்குள் வந்து இரத்தக் கொதிப்பு கை கால் குடைச்சல் தலைவலி போன்று நமக்குள் வர ஆரம்பித்துவிடும்.

இதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

எமது குருநாதர் அவர் இட்ட கட்டளை அனைவரது உயிரையும் கடவுளாக மதிக்கச் சொல்லி இருக்கிறார். உங்களிடமெல்லாம் வரம் கேட்கச் சொல்லியிருக்கிறார்.

அதே மாதிரி நீங்கள் ஒவ்வொருவரும் “மகரிஷிகளின் அருளால் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்” என்று வரம் கேளுங்கள். நீங்கள் ஆத்ம சுத்தி செய்யுங்கள்.

[su_heading size=”28″]15.04.2021 உபதேசம்[/su_heading]

மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணுவதே என்னுடைய பொழுது போக்கு – ஞானகுரு

 

அன்றாட வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் நாம் ஒரு கெட்டதைப் பார்த்து விட்டால் அது நமக்குள் பதிவாகி விடுகின்றது. ஏனென்றால் நாம் ரோட்டிலே போகின்ற போக்கிலே அந்தத் தவறு செய்பவர்களைப் பார்க்க நேர்கின்றது.

1.அந்த உணர்வுகள் நமக்குள் பட்டவுடனே நம்மை அறியாமலே வெறுப்பு வருகின்றது
2.அதைச் சுத்தப்படுத்த வேண்டும் அல்லவா…!

சுத்தப்படுத்தவில்லை என்றால் என்ன செய்யும்…? நம் உயிரிலே பட்ட பின் அந்த உணர்வுகளை உயிர் இயக்கிக் கொண்டே இருக்கும். நம்மை அறியாமல் ஆத்திரத்தையும் கோபத்தையும் தூண்டிக் கொண்டே இருக்கும்.

இதைப் போல ஒவ்வொரு நாளும் எத்தனையோ தீமையான உணர்வைப் பார்த்திருப்போம். அந்த அணுக்கள் நமக்குள் விளைந்திருக்கும். அதற்குச் சாப்பாடு தேவை.

அது தன்னுடைய உணர்வுகளை எடுத்து வளரப்படும் பொழுது
1.நம் உடலில் மேல் வலிக்கின்றது… கால் வலிக்கின்றது…
2.கழுத்து சுளுக்கி விட்டது… நரம்பு பிடித்துக் கொண்டது… சுண்டி விட்டது… என்றெல்லாம் சொல்வோம்.
3.நன்றாகத்தான் இருந்தோம்… இது எப்படி வந்தது…? என்று தெரியவில்லை என்போம்.

ஆனால் இவை எல்லாம் எந்த அடிப்படையில் வருகிறது என்றால்… மேலே சொன்ன மாதிரி சில நேரங்களில் நாம் பதிவு செய்த அந்தத் தீமையான உணர்வுகள் அது உடலுக்குள் வலுவாகப்படும் பொழுது நம் நல்ல அணுக்களை இயக்க விடாதபடி தடைப்படுகின்றது. அதனால் வேதனையும் வருகின்றது.

டாக்டரிடம் சென்று அவர் கொடுக்கும் அந்த மருந்தை வைத்துத் தான் இதை எல்லாம் போக்க முடிகிறது.

இருந்தாலும் தீமைகளைக் கண்ட உடனே அடுத்த கணமே அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று அதைச் சுத்தப்படுத்துகின்றோமா என்றால் அந்தப் பழக்கம் நம்மிடம் இல்லை.

அத்தகைய பழக்கம் வர வேண்டும் என்பதற்குத்தான்
1.குருநாதர் காட்டிய அருள் வழியில் உபதேச வாயிலாக அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியைக் கொடுக்கின்றோம்.
2.அதை எடுக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்துகின்றோம்.
3.அந்த மகரிஷியின் அருள் சக்தியை எடுக்க வேண்டும் என்று
4.பல வகைகளிலும் ஞானிகள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்கிறோம்.

ஆனால் உபதேசங்களைக் கேட்ட பின் எங்கள் சாமி… எங்கள் சாமி…! என்று போற்றுவதற்கு மட்டும் ஆள் நிறைய வந்து விடுகின்றது. உபதேச வாயிலாகக் கொடுக்கும் சக்தியை எண்ணித் தனக்குள் எடுப்பதில்லை.

1.ஞானகுரு சொன்ன வழியில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்தேன்….
2.என்னை நான் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது…! என்ற இந்தச் சொல் உங்களிடமிருந்து வர வேண்டும்.

காரணம் என்ன என்றால் கோபப்பட்டவர்கள்… சலிப்புப்பட்டவர்கள்… சஞ்சலப்பட்டவர்கள்… வெறுப்புப்பட்டவர்கள்… குரோதப்பட்டவர்கள்… தொல்லை கொடுப்பவர்கள்… என்று இத்தனையும் இதற்கு முன்… பதிவு செய்திருக்கிறீர்கள்.

இது எல்லாம் உடனடியாக நினனவுக்கு வந்து விடுகின்றது.

ஆனால் உங்களிடம் உயர்ந்த குணங்களைப் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு). அதை மீண்டும் எண்ணச் சொல்கின்றேன். நீங்கள் எண்ணுகிறீர்களா…! என்றால் இல்லை.

ஏனென்றால் இந்தக் கோபமும் வெறுப்பும் வேதனையும் குரோதமும் வலுக் கொண்டது. உங்களிடம் இருக்கும் நல்லதை எடுக்க விடாதபடி முன்னாடியே தடுத்து விடுகின்றது.

ஆகவே அதைச் சுத்தப்படுத்தினால் தான் அந்த அருள் ஞானத்தைப் பெற முடியும். சிறிது நாளைக்கு நீங்கள் இதை வளர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் ஆத்ம சுத்தி என்ற ஆயுதமாக எளிதாகக் கொடுத்து இருக்கின்றேன்.

குருநாதர் எனக்கு எத்தனையோ கடுமைக்கு அப்புறம் அந்தச் சக்தியைக் கொடுத்தார்.
1.உங்களுக்கு இலேசாக எடுத்துக் கொள்ளும்படி அந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளேன்.
2.சதா உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும்…! என்று அதைப் பாய்ச்சுவது தான் என்னுடைய பொழுது போக்காக இருக்கின்றது.

யார் யாருக்கெல்லாம் வாக்கு கொடுத்தேனோ… நல்லதாக வேண்டும் என்று சொன்னேனோ… அவர்களுக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று தவம் இருக்கின்றேன்.

முதலில் அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று நான் தியானிக்கின்றேன். எனக்குள் அதை வலுப் பெறச் செய்து கொள்கின்றேன்.

அதற்குப் பின் நான் வாக்குக் கொடுத்தவர்கள் அனைவருக்கும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.அவர்கள் நன்றாக இருக்க வேண்டும்.. உடல் நலமாக இருக்க வேண்டும்
3.அவர்கள் குடும்பத்தில் உள்ளோர் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்
4.அந்த அருள் ஞானம் பெற வேண்டும்… மகிழ்ந்து வாழ வேண்டும்
5.என்னைச் சந்தித்தவர்கள் எல்ல்லொரும் நன்றாக இருக்க வேண்டும் என்று
6.இப்படித்தான் என்னுடைய தவம் இருந்து கொண்டிருக்கின்றது. (ஞானகுரு).

விபூதி பூசுவதன் உண்மைப் பொருள் என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பிடர் வழி என்பதே எண்ணத்தின் உந்தும் குண அமிலச் சக்தியின் வீரியமாகச் செயல் கொள்ளும் பக்குவ கதிக்கு ஊக்கம் என்ற சொல் நாம முயற்சியை நல்லாக்கத்திற்குப் பயன்படுத்த வேண்டும். அதுவே நலம் பயக்கும்.

ஆனால் குணங்களின் செயல் மாற்றத்தால் ஏற்படும் செயலின் தன்மை சரீர கதியில் எதிர் மோதல் ஏற்படும் நிலையில் வள்ளுவன் சொன்ன வேதப்படி “ஆக்கத்தின் ஆக்கம் ஊக்கம் அதுவல்லது போக்கது இல்லாச் செயல்…” என்ற சொல்லிய உண்மையும் உண்டு.

1.ஆகவே குணங்களில் மாற்றம் கண்டால்
2.பிடருகின்ற வழிகளில் சக்தியும் குறைவுபட்டுப் போகும்…! என்ற உண்மையை உணர்ந்து
3.நல்லாக்கச் சூட்சம கதிக்கே ஞானச் செல்வங்கள் செயல் கொள்ள வேண்டும்.

பால்வெளியில் படர்ந்துள்ள கோடானு கோடி அமில குணச் சக்திகளில் மறைந்துள்ள மறை பொருள் வண்ண குண அமிலமும்… ஒலி நாதத்தின் அமில குணமும்… ஆதிசக்தியின் அமில குண நீர் சக்தியுடன் ஒன்றிச் செயல் கொள்ளும் பொழுது திடமாகின்றது.

“பால்வெளியில் படர்ந்துள்ள பரமாத்மா…” என்ற சூட்சமத்தில் உயிரணுக்கள் செயல் கொள்ளும் செயலின் நிலையால் ஒன்றுடன் ஒன்று குண அமில ஈர்ப்பில் கலந்து பிறிதொன்றை உருவாக்கிக் கொண்டே உள்ளது.
1.பிரம்மமாகச் சிருஷ்டியாகின்றது.
2.அதையே பிரம்மத்தின் உள் மறைந்துள்ள “அனித்தியமான சூடு…!” என்று காட்டப்பட்டுள்ளது.

ஏனென்றால் இந்தச் சரீரம் கொண்டு ஈர்ப்பு நிலை சக்தி பெற்று… “மூல சக்தியில் கலந்துவிடும் செயல்பாட்டின் இரகசியத்தை…!” ஒவ்வொரு உயிராத்மாவும் தன்னைத் தான் உணர்ந்து கொண்டு தன் வழியில் சக்தியை வலுக்கூட்டி அறிந்து கொள்ள வேண்டும்.

1.சரீர பிம்பத்தில் இரு கரங்களும் இணைக்கப்படும் பொழுது
2.அதன் அமைப்பே ஓர் வட்டச் சுழற்சியின் செயலாக முதலும் முடிவும் அற்ற நிலையில்
3.பால்வெளிப் பூதியில் உருவாக்கும் பிடர் சக்தியின் வழித் தொடரில்
4.பூதியை விபூதி என்ற காட்டிய தத்துவம் – உண்மையை உணர்ந்து கொள்ளத்தான்…!

ஆனால் அதில் விதிவிலக்கும் ஒன்றுண்டு. சூட்சமப்படுத்தப்பட்ட அந்தச் செயலைத் தவிர சரீரம் முழுக்க வேடமிட்டுக் கொள்ளும் இந்தக் கால கட்டத்தில் உண்மையின் பொருளை யார் உணர்ந்தார்கள்…?

(அதாவது ஆவியாக இருப்பது திடமாகிறது… திடமானது மீண்டும் ஆவியாக மாறுகிறது. முதலும் முடிவும் இல்லாது இது நடந்து கொண்டே உள்ளது. பூதி… விபூதி…! திடமான சரீரத்தில் விபூதியைப் பூசுவதன் உண்மை அது தான்…!)

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

“தாழ்ந்தவர்… உயர்ந்தவர்…!” என்று நாம் தான் வைத்துக்கொண்டமே தவிர தாழ்ந்தவர் என்றோ உயர்ந்தவர் என்றோ இயற்கைக்குக் கிடையாது.

தாழ்ந்ததை எண்ணும் போது தாழ்ந்ததைத் தான் உயிர் உருவாக்குகின்றது.
1.“தாழ்ந்தவர்கள்…!” என்று மற்றோரை நாம் எண்ணும் போது
2.அந்த உணர்வுகள் நம்மைத் தாழ்த்தப்பட்டவனாக ஆக்குகின்றது.
3.நம்மைத் தாழ்த்தப்படும் நிலையே வருகின்றது

எதன் வழியில்…?

நல்ல குணங்கள் இருப்பதால் தான் நாம் மனிதனாக உருவாகியுள்ளோம். ஆனால்
1.மற்றவர்களைப் பார்த்து அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று
2.அசுர உணர்வுகள் கொண்டு நாம் எண்ணுவோமென்றால்
3.அது நமக்குள் இருக்கும் நல்ல குணங்களைத் தாழ்த்தி விடுகின்றது.
4.நம்மைத் தாழ்த்தப்பட்டவனாக மாற்றுகின்றது என்பதனைத் தெளிவாகக் கூறினார் காந்திஜி.

ஒருவரைத் தாழ்த்தப்பட்டவர் என்று எண்ணப்படும்போது அந்தத் தாழ்த்தப்பட்ட உணர்வே நமக்குள் இருக்கும் நல்ல குணத்தைச் சுதந்திரமாக வாழ விடாதபடி நல்ல குணங்களை என் உடலிலே இயக்காதபடி இந்த மனித உடலை உருவாக்கிய உயிரையே தாழ்த்தப்படும் நிலைக்குக் கொண்டு செல்கிறது.

உயிரினங்களில் ஒன்றை ஒன்று தாக்கித் தன் உணர்வை வளர்த்துக் கொள்ளும் நிலை பெற்ற
1.அந்தத் தாழ்த்தப்பட்ட உணர்வுகள் நமக்குள் வரப்படும் போது
2.மனிதன் என்ற நல்ல நிலை இல்லாதபடி
3.நம் எண்ணமே நம்மைத் தாழ்த்தப்பட்ட உயிரினமாக மாற்றுகின்றது

ஆகவே தாழ்த்தப்பட்டவர் யார்…? அப்படிப்பட்டவர் எவர் இருக்கின்றார்கள்…? தாழ்த்தப்பட்டவராக நம்மை யார் உருவாக்குகின்றார்…?

நம்முடைய எண்ணம் தான்…! நாம் எண்ணியது எதுவோ நமது உயிர் அதை அணுவாக மாற்றி நம் உடலாக மாற்றிவிடுகின்றது.

எல்லோரையும் மகிழ்ச்சி பெறச் செய்யும் மனித உடல் பெற்ற பின் இத்தகைய பகைமை உணர்வு வந்த பின் நமக்குள் என்ன செய்கின்றது என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

பகைமை உள்ளவன் என்று நாம் எண்ணினால் அந்தப் பகைமை உணர்வே நமக்குள் வருகின்றது. “ஒரு தாழ்த்தப்பட்டவன்…” என்னை இப்படிப் பேசிவிட்டான் என்ற அந்த வெறி உணர்வுகள் நமக்குள் வருகின்றது.

என்னைத் தாழ்ந்தவன் என்று பேசக்கூடிய நிலைகள் வந்து விட்டதா…? என்று அந்த உடலுக்குள் வெறி உணர்வைத் தூற்றும் உணர்வு போகும் போது
1.இதைத்தான் அவர்களும் வளர்க்க முடிகின்றது.
2.அதைத்தான் நாமும் வளர்க்க முடிகின்றது.

மனிதனாக வாழ்கின்றோம் என்ற நிலைகளில் நாம் சுதந்திரமாக வாழ முடிகின்றதா…? இல்லை…!

நாம் எல்லோரும் அரவணைப்புடன் வாழ்ந்தால் நமக்குப் பரிபூரண சுதந்திரம் கிடைக்கின்றது என்று தான் காந்திஜி சொன்னார்.

ஒதுக்கப்பட்ட நிலையில் உள்ள கடும் நோயாளிகளையும் காந்திஜி சந்தித்தார். கைகள் உடல் எல்லாம் அழுகி அது அருவருப்பாக இருந்தாலும் அங்கே சென்றார்.

அவர்களைப் பார்த்துக் காந்திஜி இரக்கப்படவில்லை. இரக்கமும் ஈகையும் அங்கு கொண்டு வரவில்லை.
1.மாறாக அவர்கள் நலம் பெற வேண்டும் என்று தான் எண்ணினார்.
2.அவர்கள் உயர வேண்டும் என்ற உணர்வைத் தான் தனக்குள் வளர்த்துக்கொண்டார்.
3.அந்த நோயைப் பற்றி எண்ணவில்லை.

ஆரோக்கியமான உடலாக அவர்கள் பெற வேண்டும் என்ற உணர்வுகளிலே உயிரிலே எண்ணப்படும் போது அது கடவுளாக இயக்குகின்றது. அந்த உணர்வின் தன்மை கொண்டு அவர்கள் சுகமாக வேண்டும் என்று தான் காந்திஜி எண்ணினார்.

“அன்னை தெரஸா” என்பவரும் இதைப்போலத் தான் ஏழ்மைகளில் இருந்து மக்கள் விடுபட வேண்டும். இனங்கள் இல்லை. பேதங்கள் இல்லை என்று காந்திஜியின் வழியில் செயல்பட்டார்,

இனம் என்று இருப்பது நமக்குள் நோயின் தன்மை வரப்போகும் போது நமது நல்ல குணங்களைத் தாக்குகின்றது.

இத்தகைய நாம் இனங்களைப் பிரித்து குறை கூறும் போது அந்தக் குறையின் உணர்வு நமக்குள் வரும் போது நல்ல குணங்களைத் தாக்குகின்றது.

ஆகவே அந்த மெய் ஞானிகள் காட்டிய வழியில் நாம் இதை எல்லாம் மாற்றிப் பழக வேண்டும்.

[su_heading size=”28″]14.04.2021 உபதேசம்[/su_heading]

மலைப்பாம்பின் ரூபமாக வந்து குருநாதர் எனக்குக் கொடுத்த அனுபவம்

 

காட்டிற்குள் ஒரு சமயம் மலைப்பாம்பு ஒன்று வருகிறது நான் (ஞானகுரு) படுத்திருக்கிறேன். அது சுருண்டு…சுருண்டு சுருண்டு…சுருண்டு. புஸ்…புஸ்…புஸ்ஸென்று வருகின்றது.

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) தான் இதை ஏவிவிட்டாரா… அல்லது நிஜமாகவே வருகின்றதா…? என்று எனக்கு ஒரு சந்தேகம். இவ்வளவு சீறிக் கொண்டு வருகின்றதே…! நிஜமாகவே உருவாக்கி கொடுக்கின்றாரா…! என்ற எண்ணமும் வருகின்றது.

ஆனால் குருநாதர் அருகில் இல்லை… காட்டிற்குள் சென்று விட்டார். குருநாதர் என்ன ஏவல் செய்கிறார்…? என்றும் எனக்குத் தெரியவில்லை. நிஜமா… பொய்யா…? என்று தெரியவில்லை.

அந்தப் பாம்பு அதிபயங்கரமான நிலைகளில் சீறிப் பாய்ந்து கொண்டு வரும் பொழுது என் மேலே இருக்கக்கூடிய துண்டையும் அதிலே ஒரு கல்லை முடிந்து அதைத் தூக்கிக் கொடுக்கின்றேன்.

இது என்னுடைய யோசனை…! புஸ்…ஸ்ஸ்… என்று இழுக்கும் பொழுது அதைத் தூக்கி கொடுக்கின்றேன். வாயில் சிக்கிக் கொண்டது.

மனிதனுடைய வாசனை என்று தெரிந்து அந்தக் கல்லுடன் சேர்த்து அப்படியே விழுகின்றது. ஏனென்றால் துண்டைக் கையில்தான் எடுத்திருந்தேன். அதற்குள் கல் தான் இருக்கிறது என்று அதற்குத் தெரியாது.

அந்த நேரத்தில் எனக்குள் பல விதமான உணர்வுகள் சுழல்கின்றது.
1.ஒரு பக்கம் தைரியமும் வருகின்றது. ஒரு சில நேரங்களில் தப்ப முடியவில்லை.
2.ஆனாலும் இதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டுமே என்று சிந்திக்க ஆரம்பித்தேன்.

ஏனென்றால் அதற்கு முன்னாடி என் விரலை நீட்டினால் மரத்தையே வேருடன் சாய்க்கும் சக்தியை குருநாதர் கொடுத்திருந்தார்.

சரி…! என்னிடம் கொடுத்த சக்தியை வைத்து நான் ஏதாவது செய்கின்றேனா…? என்று தான் குருநாதர் பரிசோதிக்கிறார் என்ற இப்படி ஒரு சிந்தனை வந்தது.

1.எதுவானாலும் சரி… அப்பா நீயே பார்த்துக் கொள்…
2.எனக்கு ஒன்றும் தெரியாது.
3.என்னைப் பாம்பு விழுங்கினாலும் சரி… அல்லது கடித்தாலும் சரி…
4.நீயே பார்த்துக் கொள் என்று சொல்லி விட்டேன்… அவ்வளவுதான்…!

அந்த மலைப் பாம்பை அனுப்பி வைத்தது அவருடைய ஏவல்தான் என்று அப்புறம் நான் புரிந்து கொண்டேன். சிறிது நேரத்தில் அந்தப் பாம்பு மறைகின்றது.

குருநாதர் கெக்கெக்..கெக்க.. என்று சிரித்துக் கொண்டு வருகின்றார். என்னுடைய பயிற்சியில் நீ தப்பிவிட்டாய்…! என்கிறார்.

குருநாதர் இந்த மாதிரிப் பல பரிசோதனைகளை வைத்து அவர் எனக்குக் கொடுத்த சக்தியை நான் எப்படி உபயோகிக்கின்றேன்…? என்று பார்க்கின்றார்.

இது போன்ற பல இன்னல்களைப் பட்டேன்… காடு மேடெல்லாம் அலைந்தேன்… குருநாதர் காட்டிய அருள் வழியில் அவர் உணர்த்திய உண்மைகளை அறிந்தேன்… அந்தச் சக்தியை எனக்குள் பெருக்கினேன்.
இருந்தாலும் குருநாதர் எனக்குச் சொன்னது…
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதி
2.ஒவ்வொரு உடலையும் கோவிலாக மதி
3.அந்தக் கோவிலுக்குள் இருக்கும் நற்குணங்களை நீ உயர்ந்த நிலையில் எண்ணு…!

இவ்வாறு நீ எண்ணுவாய் என்றால் நான் (ஈஸ்வரபட்டர்) கொடுத்த சக்தி உனக்குள் நற்பயனை அடையும்…! என்று இப்படி இந்த மூன்று சுருக்க நிலையைச் சொன்னார்.

அந்த அடிப்படையில் தான் உங்களுக்குள் அருள் ஞானத்தைப் போதிக்கின்றேன்.

பேரின்ப இரகசிய ஆனந்த நிலை – ஈஸ்வரபட்டர்

 

வெயிலின் கடுமை நிறைந்திருக்கும் பாலையில் (பாலைவனம்) பூமியில் சூட்சம ஈர்ப்பின் கதி சுழலில் அந்த இடத்து நிலைத் தொடர்கள் ஈர்ப்பின் நிலைப்பில் நீர் சக்தி மறைந்துவிடும் என்பது இயற்கையே…!

ஆனாலும் பாலையின் கதியிலும் நீர் உள்ளே மறைந்திருக்கும் செயல் (சூட்சமம்) என்பது
1.வெயிலின் வெப்பம் எவ்வளவு தான் கடுமையாக இருந்தாலும்
2.பாலை நீர்த் தன்மை குளிர்ந்திருக்கும் செயலே “பாலைச் சூட்சமம்…!”

கோடையின் வெப்பத்தால் நீர் நிலையில் மேலே இருக்கும் நீர் வெம்மையுற்றாலும் அதன் உட்புற நீர் குளிர்மையாகத் தான் இருக்கும். அப்படி அந்த நீர் ஓரளவு குளிர்ந்திருக்கும் தன்மை போல் சரீர கதியிலும் உண்டு.

1.“பாலைச் சூட்சமம்” போல் வாழும் நீர் சக்தியின் தொடரே…!
2.நம் உயிரான்ம சக்தி சூட்சம சரீர கதியில் உடலில் வாழும் தத்துவம்…!
3.என்பதன் கருத்தை ஊன்றி… உணர்ந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

தத்துவத்தில் “வினோதம்…!” என்பதெல்லாம்…
1.சூட்சம கதித் தொடர் என்பதில் வெப்பம் என்று
2.பாலைவனத்தில் உஷ்ணம் தகிக்கும் தன்மை போல் சரீரமும் உணர்கின்றது.

வெப்பம் போல் ததித்துறும் செயல் உயிர் ஆன்ம இயக்கத்தில் சரீரத்தில் இருக்கும் அத்தனை உயிரணுக்களுக்கும் அதன் அதன் எண்ண ஓட்ட கதிக்குட்பட்டு வாழும் செயல் நிலைத் தொடரில்… சரீர கதிக்கு உண்டாக்கப்படும் வினைச் செயல்களால்
1.எந்த உயிரணுக்களின் எண்ண நிலை தாக்கப்படுகிறதோ
2.அந்தந்த உயிரணுக்களின் எண்ண அமில நிலைத் தொடர்பால்
3.உணர்வின் உந்துதல்களின் வழி பெறப்படும் நிலையே சரீர அவஸ்தை என்னும் உடல் துன்பம்.

எந்தெந்த இடங்கள் தாக்கப்படுகின்றதோ… அந்த இடத்திலுள்ள உயிரணுக்கள் அதனின் எண்ணம் வேதனையாக வெளிப்பட்டு… சரீரம் முழுவதற்கும் அந்த எண்ணம் “தொடர் போல் வியாபித்து…” ஒன்றுடன் ஒன்று அனைத்து உயிரணுக்களின் கதிக்கும் வேதனையை அனுபவிக்கும் செயலாக அமைந்து… “உயிர் ஆன்ம சக்திக்கே பாதிப்பு நிலை ஏற்படுகின்றது…”

ஆக நீரின் உட் தன்மை கோடையிலும் இயல்போடிருப்பதைப் போல் யாம் சொல்லும் தியானத்தின் வழி சூட்சம சக்திகளை எடுக்கும் நிலையில் உயிரானது ஆன்ம வடிவ சூட்சம ஜோதியில் வாழும் தன்மையாகச் செயல் கொள்ளும் திறனை அறிதல் வேண்டும்.

ஆகவே சரீர உயிரணுக்கள் அனைத்தும் ஒளி காந்த சக்தி பெற்று உயிர் ஆன்மத் தொடரில் ஒன்றி வாழும் தொடருக்கு நம் எண்ணங்கள் வருதல் வேண்டும்.

1.கண்ணன் வேய்குழலின் இன்னிசையில் பசுக்கள் எல்லாம் மயங்கின…! என்ற தத்துவச் செயலாக
2.நம் சரீர உயிரணுக்களை மயக்குறும் நாதமாக்க
3.உயிர் ஆன்ம சக்தி (நாம்) செயல்பட வேண்டும்.

ஆத்மச் சுடர் ரசமணியாக்கும் வான்மீகியார் தொடர் கொண்டு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் செயல்படும் நிலையை அனைத்து உயிரான்மாக்களும் பெறவேண்டும்.

மூல சுக்கிரன் தொடர்பு கொண்டு தனக்குள் அதைப் பெறப் பெற கண்ணன் இசைக்கும் இசையாகும் உயிர் சக்தி…
1.சரீர கதியில் அனைத்து உயிரணுக்களையும் தன் பால் ஈர்த்து
2.ஜோதித்துவத்தில் மூழ்க வைக்கும்.

அந்தப் பேரின்ப இரகசிய ஆனந்த நிலை என்பது என்ன…?

உயிரணுக்களை எண்ண மேய்ச்சலுக்கு விடும் பொழுது உணர்வுகள் ஒன்றி ஒடுங்கும் செயல் சரீரச் செயலில் தாக்கப்படும் வேதனையை அனுபவிக்காத தன்மை கொண்டு
1.உயிரில் ஆனந்த அமுதைப் பருகி
2.தன் வழியில் எண்ணச் செயல் விடுத்து அந்தப் பேரின்ப ரசம் பருகும்.
3.அந்தச் சூட்சம கதியைத்தான் ஈஸ்வரபட்டனாகிய யான் உணர்த்தி வருகின்றேன்.

பாலையாகச் சுடும் வினைச் செயலில் வாடையாகக் குளிர்ந்திருக்கும் எண்ண நினைவில் அச்சம் விலகிடும் பூரணத்துவத்தை ஒவ்வொருவரும் அடைதல் வேண்டும்.

தீவினைப் பயன் நீக்கும் செயலுக்கு எந்த ஒரு உயிரணுக்களும் சரீரம் தொட்டு வேதனயுறாமல்
1.உயிரான்மா காக்கப்படுவதைப் போல் காக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்து
2.சூட்சம உடல் வாழும் “தவ வாழ்வை” மேற்கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நாம் நுகர்ந்த உணர்வுகள் உடலுக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டி “ஒருவன் வேதனைப்படுகின்றான்…” என்ற உணர்வை அறிவித்தாலும் நம் உயிரில் மோதிய பின் அது அணுக் கருவாக உருவாகிவிடுகின்றது.

உதாரணமாகக் கோழி குருவி முட்டை இடும் உயிரினங்கள் அனைத்துமே கேறும். பல்லி கூட கேறும்.

அப்படிக் கேறுவது போல “அவன் வேதனைப்படுகின்றான்… வேதனைப்படுகின்றான்… வேதனைப்படுகின்றான்…” என்று எண்ணங்களை அதிகமாகக் கூட்டி நாம் திரும்பத் திரும்ப எண்ணும் போது எந்த மனிதனை எண்ணினோமோ அந்த உணர்வின் கருவாக உடலுக்குள் உருபெறத் தொடங்கிவிடுகின்றது.

அவர் உடலிலே நோய் உண்டாக எது காரணமாக இருந்ததோ அதே மாதிரி நம் உடலுக்குள் வரும். அது கருவான பின் நம் இரத்தங்களிலே சுழன்று வரும்.

1.பின் எந்தெந்தப் பாகங்களிலே தேங்கி நின்று விடுகின்றதோ
2.அந்தப் பாகத்திலே கருவாகி
3.முட்டையாகி வெடித்து அணுவாக வரும்.

கோழி அடைகாத்த பின் முட்டை பொரிந்து அந்தக் குஞ்சுகள் வெளி வருவது போல் வந்துவிடும். வெளி வந்த பின் அந்தக் குஞ்சுகள் எல்லாம் கத்தும். கத்தும் பொழுது தாய்க் கோழி கூப்பிட்டு மண்ணைக் கிளறி எடுத்து ஆகாரம் கொடுக்கும்.

இதைப் போன்று தான் நம் உடலுக்குள் ஒரு அணுவின் தன்மை முழுமை அடைந்து விட்டால்
1.அந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதும் பரவும்.
2.நம் சிறுமூளை பாகம் வந்து அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.
3.பின் நம் உயிர் அந்த உணர்ச்சியைப் புலனறிவு ஐந்திற்கும் கண் காது மூக்கு உடம்பு வாய் இவைகளுக்கு அனுப்பும்.
4.அதன் வழி கவரச் செய்யும் (சுவாசமாக)

எந்த மனித உடலில் இருந்து நோயின் உணர்வலைகள் வெளி வந்ததோ அதை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரப்பி வைத்துள்ளது.

நம் புலனறிவும் ஐந்தும் அந்த உணர்வலைகளைக் கவர்ந்து நம் உடலுக்குள் அனுப்பும். உடலுக்குள் போவதற்கு முன் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்ட பின் என்ன நடக்கின்றது…?
1.அந்த மனிதன் எப்படி வேதனைபட்டானோ
2.அந்தச் சங்கடமும் சோர்வான உணர்ச்சிகளையும் நம்மை அறியாமலே தோற்றுவிக்கும்.
3.நாம் இனம் புரியாதபடி வேதனைப்படுவோம்.

அவ்வாறு நாம் வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கும் போது ஒருவர் தொழிலின் நிமித்தமாக நம்மைத் தேடி வந்து “இன்ன குறை இருக்கிறது” என்று எடுத்துச் சொல்ல வருகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

அவர் சொல்வதை நம் செவிப்புலன்கள் ஏற்றுக் கொள்ளாது. இந்த வேதனைக்குரிய நினைவைத் தான் ஊட்டும்.

அதே சமயத்தில் ஒருவன் மகிழ்ச்சியான நிலையில் இருந்தால் நம் கண்ணின் பார்வைக்கும் அது ஏற்றுக் கொள்ளாது. நம் கண்ணின் பார்வைக்கும் அந்த வெறுப்பின் நிலையே ஊட்டும்.

நாம் ஒரு கணக்கையோ அல்லது ஒரு பொருளையோ உருவாக்க வேண்டும் என்றால் கவனமாகப் பார்த்துத் தான் செயல்படுத்த வேண்டும்.

அப்போது அந்த வேதனையின் உணர்வுகள் பார்வைக்கு வரும் போது அந்த உணர்ச்சிகள் உடலை இயக்கிய பின்
1.அதை வேலை செய்ய விடாதபடி அந்த வேதனை உணர்வுகள் நம் அங்கங்களைக் குறைத்து விடும்.
2.கை கால்களைக் குறைத்து விடும் – இந்த உடலுக்கு.

அப்போது நம் உடல் என்ன செய்கின்றது?

வேதனையால் உருவான அணுக்கள் உடலுக்குள் இருக்கிறதல்லவா…! அதற்கு இந்த வேதனை உணர்வலைகளை சாப்பாடாகக் கொண்டு கொடுக்கும்.
1.வேதனையான அணுக்கள் சந்தோஷப்படும்.
2.ஆனால் நம் உடலில் உள்ள நல்ல குணங்களால் உருவான அணுக்கள் வேதனைப்படும்.

கோழி தன் குஞ்சுகளுடன் மேய்ந்து கொண்டிருகின்றது என்று வைத்துக் கொள்வோம். ஒரு பருந்து வந்தால் உடனே கோழி என்ன செய்கின்றது…?

உடனே “கர்ர்ர்…ர்ர்…” என்று இரைச்சலை விடும். எல்லாக் குஞ்சுகளும் தாயின் இறக்கைக்குள் அடங்கிவிடும்.

இதே மாதிரித்தான் வேதனை என்ற உணர்வு வந்தவுடனே எல்லாமே அந்த உயிருடன் ஒன்றி அதனுடைய உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. பாதுகாப்பாக இருக்கின்றது.
1.வேதனையால் உருவான அணுக்கள் மீண்டும் அதனுடைய உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
2.உயிர் அதனின் ஆகாரத்தை எடுத்துக் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றது.
இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஏனென்றால் இப்படி நம் உடலுக்குள் நம்மை அறியாமலேயே வேதனை அணுக்கள் உருவாக்கினால் நாம் பார்த்த மனிதன் எப்படி வேதனைபட்டானோ அதே வேதனை அணுக்கள் நமக்குள் உருவாகி நாமும் வேதனைப்படுவோம்.

1.சாமியைக் கும்பிட்டாலும் சரி…
2.சாமியாரைப் பார்த்தாலும் சரி…
3.அர்ச்சனை செய்தாலும் சரி…
4.யாகங்கள் செய்தாலும் சரி… அதனால் பலன் இல்லை

யாகத்தின் பால் பற்றாகி அந்த எண்ணங்களைக் கொண்டு வரப்போகும் போது யாக எண்ணத்தின் அணுவின் கருவாக உருவாகின்றது.

அதை வளர்ந்து விட்டால் “யாகத்தைச் செய்ய வேண்டும்… செய்தால் தான் சரியாகும்…! என்று அதன் வழியே தான் நம்மைச் செய்யச் செய்கின்றது.

அங்கே கோவிலுக்குச் சென்று அரச்சனை செய்து பல விதமான கனிகளையும் மலர்களையும் நல்ல மணங்களையும் வைத்து அங்கே கொடுத்தாலும்
1.ஒரு நல்ல பதார்த்தத்தில் விஷம் என்ற நிலைகள் பட்டவுடனே
2.நல்ல பதார்த்தமும் விஷத்தின் இயக்கமாகதான் மாறுமே தவிர அதற்குச் சக்தி இல்லை.
3.நீங்கள் யாகங்கள் செய்தாலும் சரி… மற்ற நிலைகள் எதைச் செய்தாலும் சரி…
4.கஷ்டத்தைப் போக்குவதற்காகத் தெய்வத்தை வேண்டி “நான் விரதம் இருக்கின்றேன்…” என்று சொன்னாலும் சரி…
5.இன்னும் கொஞ்சம் விஷத்தைத் தான் வளர்க்கிறமே தவிர அந்த நோயை மாற்றாது.

[su_heading size=”28″]13.04.2021 உபதேசம்[/su_heading]

நான் (ஈஸ்வரபட்டர்) சொன்ன வழியினைக் கடைப்பிடித்தால் விண்ணின் ஆற்றல்கள் உங்களுக்குள் வ(ள)ரும்

 

அகஸ்தியன் தன்னுடைய கூர்மையான எண்ண வலு கொண்டு விண்ணுலகை உற்றுப் பார்த்து அதிலிருந்து வரும் பேராற்றல்களை எடுத்துத் தன் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் ஒளிக் கதிர்களாக மாற்றிக் கொண்டான்.

1.அதைத்தான் குருநாதர் எனக்குள்ளும் (ஞானகுரு) பதிவு செய்தார்…
2.எடுத்து அதை வளர்க்கும்படியும் செய்தார்.

நான் (ஈஸ்வரபட்டர்) சொன்ன வழியில் நீ இதைப் பெற்றால் உனக்குள் அந்த அகஸ்தியனின் ஆற்றல்கள் வளரும் என்றார்.

இதையே மற்ற மக்கள் மத்தியில் நீ பதிவு செய்யப்படும் பொழுது அவர்களும் அதே எண்ணம் கொண்டு எடுத்தால் அவர்களாலும் அதைப் பெருக்கிக் கொள்ள முடியும். இப்படி ஒரு கூட்டமைப்பின் நிலைகளை நீ உருவாக்க வேண்டும்… என்றார்.

1.எனது வலிமை கொண்டு… பல ஆயிரம் மடங்கு வலிமை கொண்டுதான்
2.எனக்குள் பெற்ற சக்தியை… உனக்குள் கொடுத்து… அதை எடுக்கச் செய்கின்றேன்
3.ஆனாலும் நீ ஒருவனே இதனுடைய பலனைப் பெற முடிகின்றது…!

ஆனால் பலரும் இந்தப் பலனை பெற வேண்டுமென்றால் நீ இதை எவ்வாறு செய்ய வேண்டும்…? என்று எனக்கு உபதேசித்து அருளினார்.

நீ கண்ட அந்த ஞான வித்தை ஒவ்வொரு உடல்களிலும் விதைக்கப்படும் பொழுது அது பதிந்து அந்த அருள் உணர்வுகள் அங்கே பெருகி விண்ணுலக ஆற்றலை அவர்கள் பெறும்படி செய்ய வேண்டும் என்றார்.

1.அவர்களுக்குள் அந்த வளர்ச்சி பெற வேண்டுமென்று
2.நீ எடுத்துக் கொண்ட சக்தியால் நீ தவம் இருக்க வேண்டும் என்று சொன்னார்.

நீ தியானிக்கின்றாய்… உனக்குள் விளைய வைத்தாய்…! ஒவ்வொரு உடலிலும் அது இணைந்து கொண்ட பின் அவர்கள் அவ்வழியில் அந்த சக்தி பெற வேண்டும் என்ற நிலையை என்னைத் தவம் இருக்கும்படி செய்கின்றார் குருநாதர்.

அவர் சொன்ன வழிப்படித் தான் இன்று வரையிலும் செய்து கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு) நீங்கள் எல்லாம் அருள் ஞானிகளாக ஆக வேண்டும் என்று…!

படைத்தல் காத்தல் அழித்தல் என்ற பிரம்ம ஞானம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

“நாபிக் கமலம் என்ற ஜோதி…” தன்னுள் கிளைத்து… எழுந்த மூலப் பொருளாக விளங்கும் தன்மையின் சூட்சமம்… அறிவின் துணை என்னும் சாமரத்தால் வீசப்படும் காற்றும்… காற்று என்று பொருள்பட அறிவை உபயோகிக்கும் பொழுது… சிந்திக்கத் தலைப்படும் பொழுதுதான் உயர் ஞானமாக எழும்.

அறிவின் நற்குணம் – சாந்தம் என்ற சாமரத்தால் வீசிப் பெறப்படும் காற்று… வீர குணத்தைக் கொண்டு எழும் ஜோதி…
1.மீண்டும் மீண்டும் இந்தக் குணங்களை எண்ணி வீசும் பொழுது வீசும் காற்றாகிய எண்ணச் செயலின் செயல்பாடு
2.வீர குணத்தின் விளை நிலமாக ஆக்கும் செயலுக்கு உறுதியாகி
3.படைப்பின் படைப்பாக தைரிய குணத்தால் சாந்த குணத்தால் எண்ணி எழும் செயலுக்கு வித்தாகப் “பிரம்ம ஞானம்” உதிக்கும்.

ஆகவே பிரம்ம சூத்திரமாகவே மாறும் செயல் நிலை என்பது “அடையும் வழி இது தான்…!” என எண்ணித் தெளிந்து… பின் கைக்கொள்ள வேண்டிய செயலாகச் சித்தன் காட்டிய வழியில் எல்லாம் உருவகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

1.மனித எண்ணத்திற்குள் எழும் மதமாகிய வீரியத்தை அடக்க அங்குசமும்
2.எண்ணமே உணர்வாகி அந்த உணர்வுகளின் வழி செல்லும் எண்ணமான செயல் காமத்தின் அடியாக எழும் மோகத்தை
3.அதே எண்ணச் செயல் உயர்வைக் கொண்டு வீழ்த்தும் நிலை கரும்பு வில்லும் கைக் கொண்டு
4.உயிர் ஆன்மப் பிணைப்பையே வலியுறுத்தப் பாசக்கயிறும்
5.தன் நிலை என்றென்றும் மணமாக எண்ணத்தில் நிலை பெறக் கையில் மலரைக் கொண்டு
6.சித்தன் காட்டிய தத்துவ செயலைக் கைக்கொள்ளும் ஞானி தன் சுவாச எண்ண ஓட்ட உயரிய நற்செயலால் அக்கினி ஜோதியாகி
7.நாபிக் கமலத் தாமரை மேல் அமரும் படைப்பின் படைப்பாக அமரலாம் என்பதே “பிரம்ம சூத்திரம்…!”

கர்ப்பமான தாயின் வயிற்றில் உருவாகியிருக்கும் கரு அதாவது அந்தச் சிசு ஆகாரம் எடுக்கும் வழி நாபிக் கொடி ஆகும். அது போல்
1.அமில நிலை ஆகார உயர்வின் சிறப்பாக நாம் எடுக்கும் சுவாசத் தியானத்தால்
2.கரு நிலையின் முதல் நிலையான நம் உயிர் தன்மையையே “ஜோதி ஸ்வரூபமாக்குதல்…” வேண்டும்.

படைப்பின் படைப்பாக இணைக்கும் உயர் தன்மை என்பது…
1.தாய் சக்தியும் அந்தத் தாய் சக்தியின் ஆன்மக் கலப்போ அல்லது
2.இல்லற வாழ்வில் சிவ சக்தி நிலையாக எண்ணத்தால் ஒன்றுபட்டு ஆத்ம ஐக்கிய நிலை பெறும் வழியோ
3.படைப்பின் படைப்பாவது மட்டுமல்லாது அது புரியும் தொழில் தன்மையாகக் “காத்தல்” என்பது
4.தான் முயன்று பெற்ற “உயரிய ஆன்ம சக்தியே” சூட்சமப் பொருள் ஆகும்

அழித்தல் என்பது
1.உயிர்ச் சக்தியின் செயலுக்கு உயர் நிலை எற்படுத்தாமல் மாறுபாடு ஏற்படுத்தப்படும் பொழுது
2.அந்தச் சிவமாகிய சக்தி அழிக்கின்றான்…! என்று பொருள் கண்டு தெளிந்து…
3.ஏனென்றால் அழிக்கப்பட வேண்டியது துர்க்குணங்களே..! என்று அதைச் சம்ஹரிக்கும் நிலையில்
4.உயிர்த் தன்மை ஆதி சக்திக்குள் கலக்கும் பொருளே “மறைத்தல்” என்றும்
5.படைப்பின் படைப்பான உருக்கோலமே… அன்பு நிலைக் குணமாக “அருளல்…” என்பதுவும்
6.இந்தப் பேருண்மையின் சாராம்சங்களை உணர்ந்து அந்த நிலையைப் பெறுதல் வேண்டும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நம் உடலுக்குள் எண்ணில் அடங்காத ஆன்மாக்கள் உண்டு. அது எதனெதன் நிலைகள் விளைந்ததோ அதனின் உணர்வலைகளைக் காற்றிலிருந்து ஈர்க்கும். (தன் உணவுக்காக)

உடலுக்கு முன் பரவி வரும் உணர்வுகளை அது கவர்ந்து இழுத்துத் தன் ஆன்மாவாகி உடலுக்குள் ஒரு அணுவின் கருவாக மாற்றிக் கொண்டு இருக்கும்.

தீயவர்களைப் பார்க்கப்படும் போது தீய உணர்வலைகளைக் கவரச் செய்து அதை உயிர் உணர்ச்சியால் நம்மை அறியச் செய்தாலும் உணர்வின் அணுவாக மாற்றி விடுகின்றது. அணுவின் தன்மை மலமாக மாற்றி உடலாக மாற்றுகின்றது.

உடலுக்குள் அது தேங்கி நின்று தன் உணர்வை (உணவை) எடுப்பதற்கு அந்த உணர்ச்சியைத் தூண்டும்.

உணர்ச்சிகளைத் தூண்டும் போது நமக்குள் இருக்கக்கூடிய காந்தப்புலனறிவு எங்கிருந்து தீமைகளை உருவாக்கியதோ அதைக் கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றி நம்மைச் சுவாசிக்கச் செய்யும்.

சுவாசித்தது உயிரிலே பட்டு அந்தத் தன் இனமான உணர்வுகளை நம் உடலுக்குள் பரப்பச் செய்து அதனைத் தனக்குள் சேமித்து வைத்துக் கொள்ளும்.

நாம் உணவாக உட்கொள்வது உடலுக்குள் சென்று அது சிறுகச் சிறுகக் கலந்து இரத்தமாகவும் உணர்வின் அணுக்களாகவும் மாற்றிக் கொண்டு உள்ளோமோ இதைப் போல தான் தனது சேமிப்பாக அது எடுத்து அந்த உணர்வின் தன்மை (அந்த அணு) வளர்க்கும்.
1.அதில் கொஞ்சம் குறைகின்றது என்றால்
2.(நமக்குப் பசிப்பது போல்) உடனே உணர்ச்சிகளைத் தூண்டும்.

உணர்ச்சிகளைத் தூண்டும் போது அதை எதனின் உணர்வின் தன்மை பட்டதோ அதே காந்தப்புலன் அருகில் இருக்கும் இந்த உணர்ச்சியின் வேகம் அதிகமாகும்.

அப்பொழுது இன்னொரு மனிதன் உடலில் விளைந்த தீமையான உணர்வை இது கவர நேரும்.

அவ்வாறு கவர்ந்தால் நமது ஆன்மாவாக இங்கே சேருகின்றது. சுவாசித்து உயிர் வழி கொண்டு தனக்குள் அதை எடுத்துக் கொள்கின்றது. இந்த இயற்கையின் நியதிகளே இது தான்.

அது எடுக்கப்படும் போது தன் ஆன்மாவில் (நம்முடைய காற்று மண்டலம்) சேமித்துக் கொள்ளும்.

சாப்பாடு சாப்பிட்டு வயிறு நிறைந்தவுடனே நாம் எப்படித் தூங்குகின்றமோ அதே போல உடலிலுள்ள அணுக்கள் அது அதனதன் உணவை எடுத்து உட் கொண்ட பின் அது உறங்கச் செல்லும்.

அதே சமயத்தில் விஷத் தன்மையான அணுக்கள் (வேதனை வெறுப்பு கோபம் ஆத்திரம்) வரப்படும் போது தன்னை அறியாமலே துடிப்பின் வேகம் அதிகமாகும். அப்போது நமக்குள் வேதனையின் தன்மைகளும் உருவாகும்.

இது இயற்கையின் சில நியதிகளில் நிலையானது.

நாம் எப்படிப் பசிக்கும் பொழுது உணவைத் தேடுகின்றோமோ உணவை உண்ட பின் உறங்குகின்றோமோ அதை போல் தான் நம் உடலில் உருவான அணுக்கள் இந்தக் காற்று மண்டலத்திலிருந்து அதனதன் உணர்வலைகளை உணவாக எடுத்து வளரும்.

நம்முடைய ஆன்மாவின் இயக்கங்களைப் பற்றி நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அதற்காகத்தான் இதை உணர்த்துகின்றோம்.

1.வெளியிருக்கும் காற்று மண்டலம் பரமாத்மா – பொதுவானது
2.நம்முடைய காற்று மண்டலம் ஆன்மா – உடலில் உள்ள அணுக்களுக்குச் செல்லும் (உணவு) உணர்வலைகள்
3.சுவாசம் – உணர்வலைகள் உடலுக்குள் கவரப்பட்டுப் போகும் பாதை
4.உயிர் – உயிரில் பட்ட பின் உணர்ச்சிகள் இயங்கி அணுக்களுக்குப் பிரித்துக் கொடுக்கின்றது

இப்படித்தான் சுவாசம் அமைகின்றது. சுவாசத்தின் வழி உடல் அணுக்கள் வாழ்வதும் உடலில் விளைந்ததிலிருந்து உயிர் தன் ஆற்றலைப் பெருக்கும் நிலையும் நடந்து கொண்டயிருக்கின்றது.

[su_heading size=”28″]12.04.2021 உபதேசம்[/su_heading]

அருள் சக்திகளை நீங்கள் பெறவேண்டும் என்று நான் தியானிக்கும் பொழுது நீங்கள் கதவைத் திறந்து வைத்தால் தானே அது உள்ளே புகும்…!

 

நீங்கள் கதவை அடைத்துவிட்டீர்கள் என்றால் எப்படி உள்ளே வர முடியும்…! கதவை அடைத்து எங்கேயோ சென்று விட்டீர்கள் என்றால் நான் (ஞானகுரு) உள்ளே வர முடியாதல்லவா…!

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று நான் அந்த அலைகளைப் பரப்பிக் கொண்டே இருக்கின்றேன். அதே எண்ணத்தை நீங்களும் எண்ணி அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கினால் எளிதில் பெற முடியும்.

1.ஏனென்றால் எனது வேலை கடவுளை நான் எங்கும் தேடவில்லை…!
2.உங்கள் உயிரைத்தான் குருநாதர் கடவுளாக வணங்கும்படி சொன்னார்.
3.அவன் அமைத்த கோட்டை தான் உங்கள் உடல் என்று சொன்னார்.

பல ஆயிரம் ஆண்டுகள் இதன் உணர்வைத் தேர்ந்தெடுத்து இந்த மனித உருவை உருவாக்கி உள்ளது உயிர். அதற்குள் இருக்கக்கூடிய உயர்ந்த குணங்களைத் தெய்வமாக மதித்து
1.இந்த மனிதனை உருவாக்கும் உணர்வுகள் அனைத்தும்
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும் என்று தான் நான் எண்ணுகின்றேன்.

உலக வாழ்க்கையில் உயர்ந்த குணங்கள் கொண்டு வாழ்ந்தாலும் ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கும் அந்தத் தீமைகளின் நிலையை நீக்குவதற்கு அருள் மகரிஷிகளின் உணர்வை எடுத்து ஆத்ம சுத்தி செய்து தூய்மைப்படுத்திக் கொண்டே வரவேண்டும்.

ஆனால் இப்போது தான் இதைச் செய்கின்றோம். இதற்கு முன் எடுத்துக் கொண்டது நமக்குள் எத்தனையோ கோடி உணர்வுகள் உண்டு…!

அதை எல்லாம் மாற்றி அமைக்க அவ்வப்போது அந்த மகரிஷியின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று நாம் எடுத்துக் கொண்டே வரவேண்டும்.

நீங்கள் சும்மா உட்கார்ந்து பாருங்கள்… அப்போது தெரியும் உங்கள் உடலில் என்னென்ன உணர்வுகள் எல்லாம் ஓடுகிறது என்று…!
1.நம்மிடம் வெறுப்பாகப் பேசியவர்கள்… சண்டை போட்டவர்கள் இடைஞ்சல் பண்ணியவர்கள் அவர்களைப் பற்றி எல்லாம் நினைவு வரிசையாக வரும்.
2.அதாவது நாம் எண்ணமாலே இது எல்லாம் நமக்குள் வரும்
3.நான் உதவி செய்கிறேன்… ஆனால் அவன் இடைஞ்சல் செய்கின்றான்
4.காசை வாங்கியவன் திரும்பக் கொடுக்கவில்லை
5.வீட்டில் இருப்பவர்களே என்னைக் கேவலமாகப் பேசினால் நான் என்ன செய்வது…? என்ற இந்தப் புலம்பல்கள் தன்னாலே வரும்.

ஏனென்றால் நமக்குள் பதிவு செய்த உணர்வுகளின் இயக்கம் இப்படித்தான் வரும்.

எத்தனை வகையான வித்துக்களைப் பூமியில் விதைக்கின்றோமோ அது எல்லாம் வளர்ந்தால் தன் தன் இனமாக வளர்ந்து அதனதன் மணங்கள் தான் வரும்.

உதாரணமாக ஒரு செண்டு நிலத்தில் விதைகளை விதைத்துப் பாருங்கள். அதில் எந்தப் பகுதியில் எந்தச் செடி சக்தி அதிகமாக முளைத்திருக்கின்றதோ அந்த வாசனை தான் அங்கே முன்னணியில் வரும்.

செடிகள் குறைந்திருந்தால் வாசனை குறைவாக இருக்கும். ஆனால் அந்த செடியின் வளர்ச்சி அதிகமாக இருந்தால் பக்கத்தில் இருக்கும் நல்ல செடிகளை வளரவிடாது. மற்றது வளர்வதற்கு வேண்டிய சத்தை எல்லாம் இது எடுத்துவிடும்… மற்றது வளராது.

அதை மாற்றுவதற்குத் தான் விவசாயத்தில் ஊடு பயிர் செய்யலாம் என்று சொல்வார்கள். என்னென்ன பயிர் வகைகளைச் சேர்த்தால் அதனுடன் உணர்வுகள் ஒன்று பட்டு ஊடு பயிர் போடும்போது இது நன்றாக வளரும் என்று சொல்வார்கள்

ஆனால் செடிகளில் ஏற்கனவே ஊடு பயிர் கலப்பில்லாத நிலைகள் வைத்தால் அந்தச் செடிகள் முளைக்காது. இதை விவசாயிகள் தெளிவாகத் தெரிந்து இருக்கலாம்.

பல தாவர இன சக்திகளை ஒருங்கிணைத்து அதை இணைத்துப் புதிதாக வித்தை உருவாக்குவார்கள். அப்படி உருவாக்கி விட்டால்… ஊடு பயிர்கள் போடப்படும் போது
1.இது எடுக்கும் சக்தி அதற்கும் இது எடுக்கும் சக்தி அதற்கும் எடுத்து இது இரண்டுமே தழைத்து ஓங்கும்.
2.அதாவது அதனுடைய சக்தி இதற்கு உரமாகவும் இதனுடைய சக்தி அதற்கு உரமாகவும்
3.இப்படி வளர்ந்து வரப்படும் பொழுதுதான் தாவரங்கள் செழித்து வளரும்.

நான் இதை எல்லாம் படித்துப் பேசவில்லை. குருநாதர் காட்டிய வழிப்படி இந்த உணர்வுகள் ஒவ்வொன்றும் எப்படி இணைக்கப்படுகின்றது..? விஞ்ஞான அறிவால் எப்படி இணைக்கிறார்கள்…? இயற்கை உணர்வு எப்படி இணைக்கின்றது…? இணைந்த நிலைகள் எப்படி வளர்கின்றது…? என்று உணர்ந்த உண்மைகளைத் தான் சொல்கிறேன்.

ஏனென்றால் ஆதியிலே முதல் மனிதனாகத் தோன்றிய அகஸ்தியன் தன்னைத் தான் அறிந்தவன்… தன்னை உணர்ந்தவன் தான்.

அணுவின் இயக்கத்தைத் தனக்குள் கண்டுணர்ந்து விண்ணின் ஆற்றலை நுகர்ந்து பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இது உருவாகி அது தனக்குள் கருவாகி அப்படி அவனுக்குள் விளைந்த உணர்வுகள் இன்றும் இந்தப் பூமியில் பரவி உள்ளது.

1.அவன் வாழ்ந்த காலங்களில் இந்தப் பகுதிகளில் (தென்னாட்டில்) நடந்து சென்ற நிலைகளில்
2.இந்தப் புவியில் படர்ந்துள்ள அவனின் சக்தியை எடுப்பதற்கு
3.உங்களுக்குள் அந்த மெய் ஞானியின் உணர்ச்சிகளைத் தூண்டப்படும்போது
4.அந்த உணர்வலைகளை எளிதில் நீங்கள் நுகர முடியும்.

வாடிய பயிர்களுக்கு எப்படி உரமிட்டுச் செழிக்கச் செய்கின்றோமோ அதைப் போன்று யாம் கொடுக்கும் இந்த உபதேச உணர்வுகள் உங்களுக்குள் சோர்வடைந்த… நலியச் செய்யும் உணர்வுகளை… அடக்கச் செய்யும்.

அகஸ்தியர் பெற்ற அருள் சக்திகளை நீங்கள் பெறுவதற்கு உணர்ச்சியைத் தூண்டி மெய் ஒளியைப் பெறும் உணர்வினை உங்களுக்குள் உருவாக்குவதற்குத் தான் இவ்வாறு உபதேசத்தைக் கொடுப்பது…!

சுயப்பிரகாச ஜோதி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பஞ்ச பூத அமிலத் தத்துவம் கொண்டு ஜீவ பிம்ப சரீரம் பெற்றிடும் “ஜீவன் என்ற உயிராத்ம சக்தி” மூல சக்தியாக வளர்ச்சி பெற்றுப் “பேரருள்” சக்தியில் கலந்திட வேண்டும்.

பேரருள் சக்தியாக ஆகிட சிவ சக்தி கலப்பாகச் சக்திகளை ஈர்த்துச் செயல் கொண்டிருக்கும் பூமியின் தொடர்பில்
1.ஜீவன் கொண்டே நாம் சகல சக்திகளையும் ஈர்த்து
2.மெய் ஞான சக்தியின் வளர்ப்பாக வளர்ச்சிப்படுத்திக் கொள்ள முடியும்.

சூட்சமமாக ஈர்ப்பின் தொடரில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் பூமியைப் போலவே
1.நாமும் நம் எண்ண வலுக் கொண்ட சுவாச ஈர்ப்பினால்
2.நம் சரீரத்திலேயே அனைத்துச் சக்திகளும் பெற்று
3.மனதின் திறன் என்ற “வைப்பாற்றல்” பெற்றிடலாம்.
(வைப்பாற்றல் என்றால் நாம் எண்ணிய நேரத்தில் எண்ணியபடி செயல்படுத்தும் தன்மை)

உயிரான்ம சக்தியைச் சூழ்ந்திருக்கும் பஞ்ச பூத சரீர சக்தி… ஓர் முகமாகச் சேமித்துக் கொண்டிடும் சக்தியே “மனோ சக்தி…!”

சரீர பிம்பத்தில் ஐந்து இடங்களில் பரவிக் கிடக்கும் அந்தச் சக்திகளை ஆற்றல்மிகு ஓர்மித்த வழி வகைகளின் செயலே நாம் காட்டும் இந்தத் தியானத்தின் மூலமாகச் சித்திக்கும்.

பஞ்ச பூதங்களை – “நமசிவாய” (சிவமயம்) தத்துவமாகக் காட்டப்பட்டதின் செயலையே மாற்று நிலைக்குக் கொண்டு சென்று விட்டார்கள்.

1.அந்தச் செயலை நீக்கிவிட்டு
2.பஞ்ச பூத ஆற்றல் சக்தியை வீரத்தில் விளைந்த சாந்தமாக உயிர் சக்திக்குள் கலந்து
3.”ஈஸ்வர ஜோதி” என்ற சுயப்பிரகாச ஜோதி நிலையைப் பெற்றிடலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இரண்டு பேர் காரசாரமாகச் சண்டை போடுகிறார்கள். அந்தச் சங்கடமான வார்த்தைகளை நீங்கள் கேட்டுவிட்டு வந்து வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டால் என்ன செய்யும்…?

எவ்வளவு வேதனைப் பட்டார்களோ… அந்த வேதனையான உணர்வுகள் அனைத்தும் சாப்பாடோடு கலந்து உள்ளே செல்கிறது.

மற்றவர்கள் சங்கடப்படுவதையும் துன்பப்படுவதையும் ஆத்திரப்படுவதையும் நீங்கள் வேடிக்கையாகத்தான் கேட்டீர்கள். கேட்டு விட்டு வந்து சாப்பிடும் போது அந்த உணர்வு உணவுடன் கலந்து ஜீரண உறுப்புகளுக்குள் போகிறது.
1.அந்த வேதனையான உணர்வு கலந்த உமிழ் நீரும்
2.நாம் சாப்பிட்ட ஆகாரம் இரண்டும் இரைப்பையில் போய் என்ன செய்யும்…?

கோழி குருவி இருக்கிறது இல்லையா…? கோழியாவது கொத்தித் தின்று தன் குஞ்சுகளைக் கூட்டிப் போகும். ஆனால் குருவி காகம் போன்ற பறவை இனங்கள் எங்காவது சென்று இரையை எடுத்து வரும்.

குஞ்சுகள் “ஆ…ஆ…” என்று வாயைத் திறக்கும். தாய் தான் எடுத்து வந்த அந்த இரையை அதன் வாயில் போடும். போட்டவுடன் குஞ்சுகள் வாயை மூடிக் கொள்ளும்.

இதே மாதிரித்தான்
1.நம் சிறுகுடல் அதன் பசியின் நிலைகளை உந்தியவுடனே
2.இரைப்பையிலிருந்து “ஆ…!” என்று வாயைத் திறக்கும்.
3.அந்த நேரத்துக்கு தகுந்த மாதிரி இரைப்பையிலிருந்து “சொத்…!” என்று உணவு கீழே விழும்.
4.“லபக்…” என்று மூடிக் கொள்ளும்.

அது மூடியவுடன் என்ன அதிலிருக்கும் இரசத்தை வடித்துக் கொள்ளும். அடுத்துக் கீழே பசி எடுக்கும் போது இதைக் கீழே தள்ளி விடும். அதைக் கழித்து எடுத்துக் கொள்ளும்.

இப்படி வழித்துக் கொண்டே வந்து அதிலிருக்கும் சத்தையெல்லாம் பிரித்துவிட்டு விஷத்தையெல்லாம் வடித்து வெளியே அனுப்பும்.

இப்படி நமக்குள் அந்த விஷத்தை வடிக்கக்கூடிய திறன் இருந்தாலும், நாம் வேதனை உணர்வோடு அந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்டோம் அல்லவா..!

சாப்பாட்டில் இருக்கக்கூடிய விஷத்தைத் தான் சிறு குடலுக்குப் பிரிக்கத் தெரியும். ஆனால் வேதனையான விஷயத்தை கேட்டறிந்து அது இரைப்பையோடு சேர்ந்து விட்டால் என்ன செய்யும்…?

சிறு குடல் சத்தைப் பிரிக்க இழுக்கும் பொழுது இரைப்பை திறக்கும். ஆனால் பிறர் கோபமாகப் பேசியத்தைப் பார்த்தவுடன் அது “ஆ..” என்று வாயைத் திறந்துவிடும். திரும்ப மூடாது…! ஏன்…?

மிளகாயை வாயில் போட்ட பின் வாயை மூடச் சொல்லுங்கள் பாப்போம்…! உங்களால் மூட முடியுமா என்று பாப்போம்…? “ஆ… ஆ…!” என்று வாயைத் திறந்து அலறிக் கொண்டே இருப்போம். மூட முடியாது. மூட மாட்டோம்.

அதைப் போன்று தான் எரிச்சலான உணர்ச்சிகள் சிறு குடலை விரித்து விட்டுவிடும். அப்போது “ஆ…ஆ..” என்று அலறும்…! உள்ளே “கட…புடா…!” என்று ஆகும்.

ஏனென்றால் சண்டை போடுவதைப் பார்த்துவிட்டு வருகிறீர்கள் இல்லையா…? ஒருவர் கோபமாகப் பேசுவார்.. ஒருவர் வேதனைப்படுவார்…! இரண்டும் இருக்கும்.

இதைப் பார்த்துவிட்டு வந்தவுடன் உங்கள் உடலிலுள்ள குடலில் இத்தகைய உணர்ச்சிகள் தோன்றுவதை நிச்சயம் பார்க்கலாம். நான் சொல்வதையெல்லாம் பாருங்கள் தெரியும்…!

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் நாம் யாரும் தவறு செய்யவில்லை. ஆனால் நம் புலனறிவால் உடலுக்குள் பதிவாகும் உணர்வுகள் கொண்டு நாம் சுவாசிக்கும் பொழுது
1.அந்தந்த உணர்வுகள் (குணங்கள்) உடலுக்குள் சென்று
2.என்னென்ன வேலை செய்கிறது…!
3.உடல் உறுப்புகளையும் அதை உருவாக்கிய அணுக்களையும் அது எப்படி இயக்குகிறது… மாற்றியமைக்கிறது…! என்பதை
4.நீங்கள் தெரிந்து கொள்வதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

[su_heading size=”28″]11.04.2021 உபதேசம்[/su_heading]

நல்லவர்களுக்குத் தான் துன்பம் அதிகம் வருகிறது என்றால் அதைத் தடுத்து நல்லதாக்க வேண்டுமல்லவா…?

 

நீங்கள் நல்லவராக இருக்கின்றீர்கள். ஒருவன் கடுமையான வேதனைப்படுகின்றான்… அவனை உற்றுப் பார்க்கின்றீர்கள். உங்கள் பாச உணர்வுகளில் இது கலக்கின்றது.

பார்த்தபின் இரக்கத்துடன் அவர்களுக்கு நல்ல உதவிகளைச் செய்கின்றீர்கள். அப்பொழுது உங்கள் நல்ல உணர்வுக்குள் அவரின் வேதனைகள் பாய்கிறது.

பாய்ந்த பின் என்ன நடக்கின்றது…?

பாலிலே பாதாமைப் போட்டு அதில் விஷத்தைக் கலந்து குடித்தால் என்ன ஆகும்…?

இதைப் போன்றுதான் பாச உணர்வோடு நீங்கள் பார்த்து இந்த உணர்வுடன் இன்று அவருக்கு உதவி செய்து இருக்கலாம்.
1.ஆனால் அந்த வேதனை சிறுகச் சிறுக உடலுக்குள் விளைந்தவுடனே
2.உங்களுக்குத் தலை வலி மேல் வலி எல்லாம் வரும்.

அது வந்தாலும் கூடப் பரவாயில்லை. ஆனால் என்ன ஆகின்றது…?

அந்த வேதனையான உணர்வுகள் உங்கள் ஆன்மாவில் இருக்கப்படும் பொழுது தொழிலின் நிமித்தம் நீங்கள் எதையாவது ஒரு பொருளைத் தேர்ந்தெடுக்கச் சென்றாலும் அந்த வேதனையுடன் பார்த்தவுடனே அதனின் தரத்தைப் பார்த்துச் சரக்கை வாங்க முடியாது.

1.அந்த வேதனைப்படும் நிலையும் சோர்வான நிலையும் கொண்டபின்
2.அதற்குத் தக்கவாறு தான் கலரும் தெரியும்… சரக்கும் தெரியும்.
3.அதை வாங்கிக் கொண்டு வந்து விடுகின்றோம்.

நாம் எடுத்துக் கொண்ட அந்த உணர்வுக்குத் தக்கவாறு வியாபாரத்திற்கு அதைக் கொண்டு வந்தாலும் “நமக்கு அது நல்ல சரக்காகத் தான் தெரியும். ஆனால் வியாபாரம் சரியாக ஆவதில்லை…!”

நாம் வைத்திருக்கின்ற சரக்கைப் பார்த்து… “என்ன இந்த மாதிரி ஒரு சரக்கை வைத்திருக்கிறீர்கள்…?” என்று கேட்பார்கள். இங்கே நமக்கு நல்ல சரக்காகத் தெரியும்… அது அடுத்தவர்களுக்கு மட்டமாக தெரியும்.

நாம் என்ன நினைப்போம்…?

பாருங்கள்… மட்டமான சரக்காக அங்கே வைத்திருக்கின்றார்கள் அங்கே கூட்டம் போகிறது… அதை வாங்கிச் செல்கிறார்கள். ஆனால் இங்கே நான் நல்ல சரக்கு வைத்து இருக்கின்றேன்… யாரும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள்…! என்போம்.

ஏனென்றால் இந்த உணர்வின் தன்மை எதுவோ… “கண்களில் இந்த அலைகள் வரும்…” கரு விழியை சாதாரணமாக நாம் பார்த்தால் இந்த வித்தியாசங்களை உணரலாம்.

ஒரே கண்கள்தான்…! இருந்தாலும்
1.சோகமாக இருக்கும்போது நம் கண் ஒளிகள் எப்படித் தெரிகின்றது…?
2.கோபமாக இருக்கும் பொழுது நம் கண்ணின் ஒளி அலைகள் எப்படித் தெரிகின்றது…?
3.சந்தோசமாக இருக்கும் பொழுது அந்த மகிழ்ச்சி நிலைகள் கொண்டு நம் கண்ணில் ஒளிகள் எப்படித் தெரிகிறது…? என்று
4.அந்தந்த உணர்வின் அலைகள் எந்த அலைக்குப் பாய்ச்சப்படுகிறது…? என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்…! தெரியாமல் இல்லை…!

ஆனால் இது போன்ற நிலைகள் இருக்கும் போது நாம் நம்முடைய நல்லதை எப்படிப் பாதுகாக்க வேண்டும்…? என்பதற்குத்தான் இதைச் சொல்வது.

நல்லதை எண்ணித் தான் நாம் செயல்படுகின்றோம். ஆனால் நல்லவர்களுக்கு தான் இத்தகைய துன்பங்களும் அதிகமாக வருகின்றது.

“காரணம்…” என்ன என்றால்
1.பாசத்தால் பரிவால் அன்பால் நாம் பிறருடைய கஷ்டங்களை எடுத்துக் கொள்கின்றோம்
2.ஆனால் அதைத் துடைக்கத் தெரிவதில்லை
3.உடலில் உள்ள எல்லா அணுக்களிலும் இந்தத் தீமைகள் சேர்ந்து விடுகின்றது.

அதனால் வியாபாரம் மந்தம் ஆகின்றது. சரக்கைத் தரமான நிலைகள் கொண்டு பாதுகாக்க முடியவில்லை. இப்படிச் சங்கடமாகிப் போய்விட்டால் அடுத்து என்ன நடக்கின்றது…?

நல்ல மனதுடன் இருக்கும் பொழுது முதலில் வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பார். ஆனால் இப்பொழுது சுத்தமாக வைத்திருக்க மாட்டார்… சுத்தமாக வைக்க வேண்டும் என்ற மனமே வராது. வீட்டில் இருண்ட நிலையாக இருக்கும்.

ஆகவே… பலருக்கு உதவி செய்திருக்கிறார். இருந்தாலும் அந்தச் சங்கடமான உணர்வுகள் இவருக்குள் வந்தது அழுக்காகி விட்டால் வீட்டைச் சுத்தப்படுத்துவததோ மற்ற பொருள்களைச் சீராக அடுக்கி வைப்பதோ அது எல்லாம் அங்கே இருக்காது.

காரணம் அவருடைய தவறு அல்ல…! இந்த உணர்வின் இயக்கங்கள் அதுவாகத்தான் மாற்றும்.

நாம் வேலை செய்கிறோம். அப்பொழுது அந்த நேரத்தில் ஏதாவது ஒரு பொருளைக் கையில் எடுத்தோம் என்றாலும் வேலை செய்து முடிந்த பின் கையைக் கழுவிக் கொள்கின்றோம். அதிகமான நேரம் கடுமையாக வேலை செய்து அதனால் உடலில் வியர்வையானல் குளிக்கின்றோம்.

ஆனால் அது போன்று நம் ஆன்மாவில் அழுக்கானால் தூய்மைப்படுத்துகின்றோமா…?
1.ஆன்மாவை உடனுக்குடன் தூய்மைப்படுத்த வேண்டும் என்பதற்குத்தான்
2.குருநாதர் காட்டிய வழியில் அந்த ஞானிகளின் அருள் சக்தியைக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).

குருவின் சக்தியைப் பெற வேண்டிய அவசியத்தையும் அதனின் இரகசியத்தையும் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆற்றின் ஆழம் தெரியாமல் கடந்து சென்றுவிட எண்ணுபவன் செயல் போல் இல்லாமல் இலட்சியத்தை அடைய வேண்டும் என்ற நோக்கில் “விழிப்பாக இரு…!”

பால்வெளி மண்டலத்தின் சக்திகளை ஈர்த்து வலுக் கொண்டு பால்வெளிச் சூட்சமத்தின் பூதியை அறிந்து கொள்ளும் முன்
1.மாமகரிஷிகளின் அருளாசி பெறுவது…
2.சக்தியின் வலுவை வலுவாக்கிக் கொள்வது…
3.புவியின் காந்த நீர் சக்தியை ஈர்த்துச் செயல் கொள்வது… என்ற
4.அந்தப் பாடத்தைப் படி… படி… படி…! என்று சொன்னதெல்லாம்
5.இந்தப் படி தான்… இந்த வழி தான்…! என்று அறிந்து கொள்ளுதலும்…
6.நீர் சக்தியை வென்று காட்டினேன்… அதனுடன் ஒன்றியும் காட்டினேன்..! என்ற அந்த அகத்தியரின் கூற்று தான்.

இதனுடைய சூட்சமம் புரிகிறதா…?

நாம் வாழும் இந்தப் பூமித் தாயின் தொடர்பில் சக்தி பெற்று வலுக் கொண்டு மனிதனாக வளர்ந்த செயலுக்கு “அன்று தாயின் பால் அருந்தினாய்…!”

இன்று சரீர வலுவின் வீரியத்தில் மண்டலங்களின் சுழற்சியினை (விண்ணுலகம்) அறியும் செயலுக்கு… எண்ண வலுவின் நேர் கோட்டில் அறிந்து கொள்ளும் செயலுக்கு…
1.பூமித்தாய் புவி காந்த நீர் பாலை அமுதாக்கி அளித்திடக் காத்துக் கொண்டிருக்கின்றாள்.
2.வளர்த்து வலுக் கொண்டு சுயப்பிரகாச தனிச் சக்திச் சுழல் மண்டலமாக ஆக்கிடும் உங்கள் செயலுக்கு நானும் ஊட்டிவிட்டேன்…!

அகத்தியர் கூறிய அந்தச் சூட்சமப் பொருளைக் கூறுகின்றேன்.

1.நம் சூரியக் குடும்பத்தில் சுழன்று ஓடும் கோளங்களில் “குரு” என்று சிறப்பித்த வியாழன் கோள்
2.ஆதிசக்தியின் நீர் சக்தி அமில முலாமைத் தன் சக்திக்கு வலுக் கொண்ட செயலின் இரகசியம்
3.தன் ஈர்ப்பின் சுழல் வட்டத்தில் நெருங்கி வரும் அத்தனை வளரும் சுழல் சக்திகளையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டு
4.அந்தச் சக்தியைத் தன்னுள் ஒன்றச் செய்து… தன் வலுவை வலுவாக்கி வீரியம் கொண்டே சுழன்று ஓடிடும் செயலில்
5.அந்த வியாழன் கோள் அலையை ஈர்த்திடும் பக்குவத்தை “ஞானச் செல்வங்கள்” பெறப் பழகிக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் அகத்திய மாமகரிஷி அந்தக் கோளின் அலையைத் தன் வீரிய அமில ஈர்ப்பைக் கொண்டு தன் அமில வீரிய முலாமுடன் ஒன்றச் செய்து தன் சக்தியையே வலுக் கொண்டதாக்கிக் கொண்டார்.

1.துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் என்ற தனித்துவமான மண்டலங்களாகச் செயல் கொண்ட செயலுக்கு
2.“ஜெபத்தின் வேகம்…!” என்று சொல்லிய சொல் நாதத்தின் குணத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

அலை வீசாக்கடல் என்ற பால்வெளி சூட்சமத்தில் இப்படித் தனக்கென ஓர் சுய அமைப்பு மண்டலத்தை உருக்கொள்ளும் செயலின் கதிக்கு ஒவ்வொருவரும் வளர்தல் வேண்டும்.

தன் உயிராத்ம சக்தியின் வலுவிற்கு வலுக் கொண்டிடும் ஜெப நிலையில்
1.ஓர்முகப்படுத்தப்பட்ட எண்ண அம்பு…
2.பிரம்மாண்டமாகப் படைப்பின் படைப்பாக எய்தி
3.பூதியில் உருவாக்கப்படும் தன் ஒளி காந்த வட்டத்திற்குள் “ஒளி தீபம்…” ஏற்றப்பட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

நம் உயிர் நெருப்பு. அதில் நாம் என்னென்ன உணர்வுகள் படுகின்றதோ (பொருளைப் போடுகின்றமோ) அதை எல்லாம் வேக வைக்கின்றது. அதை எல்லாம் எண்ணம் சொல் செயலாக இயக்கி நம் உடலாக மாற்றுகின்றது.

நாம் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பொருள்களைப் போட்டு நெருப்பை வைத்து வேக வைத்தால் என்ன செய்கின்றது…? நாம் போட்ட பொருள்களின் ருசியெல்லாம் வரும்.

ஆனால் கை தவறிப் போய் அதிலே உப்பு அதிகமாக விழுந்து விட்டால் என்ன நடக்கும்…?
1.முதலில் சரியாகத் தான் நாம் உப்புப் போட்டிருக்கின்றேன்.
2.இரண்டாவது தவறிப் போய்த் தான் விழுந்தது.
3.அதனால் ஒன்றும் செய்யாது…! என்று சொன்னால் உப்பு கரிக்காமல் இருக்குமோ…?
4.அது உப்பு கரிக்கத்தான் செய்யும்…!

அந்த மாதிரித்தான் நாம் என்ன செய்கின்றோம்…? பிறருடைய துன்பங்களைக் கேட்டு அறிந்து விடுகின்றோம். அவர்களுக்கு உதவிகளும் செய்து விடுகின்றோம்.

ஆனால் அதே சமயத்தில் அவர்கள் பட்ட துன்ப உணர்வுகளை நாம் கேட்டறியும் பொழுது அது நம் உடலில் விளைந்து விடுகின்றது.
1.அவர்கள் கஷ்டப்படுவதை எண்ணுகின்றோம்.
2.காது கொடுத்துக் கேட்கின்றோம்.
3.கண் அவர்களைப் பார்க்கின்றது. அவர்கள் சொல்லை என்ன செய்கின்றது…?
4.இழுக்கின்றது… எண்ணிச் சுவாசிக்க வைக்கின்றது.

நம் உயிரிலே பட்டவுடனே அவர்கள் சொல்கின்ற கஷ்டத்தை எல்லாம் இரக்கமாகக் கேட்டு அவர்களுடன் சேர்ந்து நாமும் அதை எடுத்துக் கொள்கிறோம். அப்போது நம் உடலும் சோர்வடைந்து விடுகின்றது.

நாம் வயலில் உழுகும் போது நெல்லிற்கு ஒரு மாதிரியாக உழுகிறோம். பருப்புக்கு வேறு வகையாக உழுகின்றோம். சோளத்திற்குப் போடும் பொழுது அதனுடைய பதங்கள் வேறாகச் செய்கின்றோம். ராகி விதைக்கும் போது ஒரு மாதிரியாகப் போடுகின்றோம். கம்பு விதைக்கும் போது ஒரு விதமாகப் போடுகின்றோம்.

அந்த மாதிரித்தான் மற்றவர்கள் கவலையாகச் சொல்லும் போது அது உடலுக்குள் வித்தாகப்போகும் போது நீங்களும் சோர்வாகின்றீர்கள். அந்த விதை முளைத்து விடுகின்றது.

அப்புறம் என்ன செய்கின்றது…?

ஆழமாகக் கவனித்தீர்கள் அல்லவா…! நீங்கள் சும்மா இருந்தாலும் கூட அப்புறம் உங்களுக்குத் தெரியாமலேயே என்ன செய்யும்…?

வயலில் ஒரு விதையை விதைத்தோம் என்றால் காற்றிலிருந்து தன் இனமான சக்தியை இழுத்துக் கொள்கின்றது. இழுத்து அது விளைகின்றது.

அது போன்று தான் உங்கள் எண்ணத்தில் அவர்கள் சொன்ன கஷ்டத்தை எடுத்துக் கொண்ட பின் விதையாக விளைந்து விடுகின்றது. அப்புறம் அடிக்கடி இந்தக் கஷ்டமான எண்ணம் வரும்.

உங்கள் உடலில் அந்த வாசனை தான் வரும். வேறு யாரிடம் பேசினாலும் இந்த உணர்வு கலந்து போய் அவர்கள் காதிலும் கேட்கின்றது. அவர்களையும் சோர்வடையச் செய்யும்.

சோர்வடைந்த பின் நமக்கு எப்படிப் பதில் சொல்வார்கள்…?

உதாரணமாக உங்கள் வியாபாரத்திற்காக வேண்டிக் கடன் வேண்டும் என்று கேட்டிருப்பீர்கள். வாங்கி நல்ல முறையில் வியாபாரம் செய்யலாம் என்று நினைப்பீர்கள்.

அல்லது வியாபாரத்தில் ஒருவருக்கு நீங்கள் கடனாகக் கொடுத்திருப்பீர்கள். கொடுத்த பணத்தைத் திரும்ப வாங்கலாம் என்று கேட்கப் போவீர்கள்.

அப்பொழுது நம்மிடம் கஷ்டம் என்று சொன்னவர்கள் உணர்வு இது முன்னாடி வந்துவிடுகின்றது. நீங்கள் கடன் கேட்கப் போகும் போது அல்லது வாங்கப் போகும் பொழுது இந்தக் கஷ்டமான உணர்வு தான் வரும்.

இந்தக் கஷ்டமான உணர்வுடன் நீங்கள் கேட்கப் போனீர்கள் என்றால் உங்களுக்கு எதிர்ப்பாகப் பேசுவார்கள்.
1.ஆனால் அவர்கள் அப்படிச் சொல்லவில்லை.
2.உங்கள் மனது அவரை அந்த மாதிரிச் சொல்ல வைக்கின்றது.

அதே மாதிரி திருமணத்திற்காக வேண்டி வந்து நான்கு தரம் பெண்ணைப் பார்த்து விட்டுப் போகிறார்கள். ஏனென்றால் அந்த நான்கு பேருமே ஜாதகத்தில் பொருத்தம் இல்லை என்று போய் விடுகிறார்கள். அதை மனதில் எடுத்துப் பதிய வைத்துக் கொள்கின்றோம்.

இப்படி நான்கு பேர் வந்து விட்டுப் போனவுடன் நாம் என்ன சொல்கிறோம்…? இந்தப் பிள்ளை நேரம் பார்…! பெண்ணைப் பார்க்க வேண்டும் என்று சொலிக் கொண்டு வந்து விட்டு… வந்துவிட்டுப் போகிறார்களே…! என்று இதைப் பதிவு செய்து கொள்கின்றீர்கள்.

அதற்கப்புறம் புதிதாக நல்ல நிலைகளில் யாராவது பெண்னைக் கேட்க வந்தால் என்ன நினைக்கின்றீர்கள்…? இவர்கள் வந்து என்ன சொல்லப் போகிறார்களோ…! இவர்களும் சும்மா வந்து விட்டுப் போய்விடுவார்களோ என்று எடுத்து வைத்துக் கொள்வீர்கள்.

கரெக்டா (சரியாக) அது முன்னாடி நிற்கும்.

அவர்கள் வருவார்கள். வந்து எல்லாம் பேசிக் கொண்டே இருப்பார்கள். பெண்ணைப் பற்றிச் சொல்லிக் கொண்டு இருக்கும் போது நாம் பதில் சொன்னால் நம்மைக் கூர்ந்து கவனிப்பார்கள்.

முதலில் நாம் எதை நினைத்தோமோ அதைச் சுவாசித்தவுடனே
1.அவர்களும் பெண்ணைப் பார்ப்பார்கள்…
2.சரி… நாங்கள் பிறகு சொல்கிறோம் என்று சொல்லி விட்டு
3.அடுத்து வரமாட்டார்கள்…! இது யார் செய்வது…?

நம் உடலிலிருந்து வந்த உணர்வின் மணம் தான் அவ்வாறு இயக்குகின்றது. ஆகவே
1.எதையெல்லாம் நாம் பதிவு செய்கின்றமோ
2.அதையெல்லாம் நம் உயிர் இயக்கிக்கொண்டு தான் இருக்கின்றது.
3.அதையெல்லாம் உடலாக ஆக்கிக்கொண்டு தான் இருக்கிறது
4.அதனதன் மணத்தைக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

[su_heading size=”28″]10.04.2021 உபதேசம்[/su_heading]

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ்வோம்

 

பரிணாம வளர்ச்சியில் ரூபங்கள் மாறி மாறி… இவை அனைத்தும் ஒருக்கச் சேர்த்துத் தான் நாம் இன்று மனிதனாக வளர்ச்சி பெற்று வந்துள்ளோம்.

பேரண்டத்தின் சக்தியும் இந்த உடலான பிண்டத்திற்குள் அமைந்துள்ளது என்று நம் குருநாதர் காட்டிய இந்த உண்மைகளை உணர்தல் வேண்டும்.

ஏனென்றால்…
1.பேரண்டத்தில் அணுக்களாக இயங்கிக் கொண்டிருந்தாலும்
2.நமது பூமிக்குள் அணுக்களாக இயங்கிக் கொண்டிருந்தாலும்
3.உயிர் அணுக்களாகத் தோன்றி… ஜீவ அணுக்கள் உருவாகி… அதனின் மலம் உடலாகி…
4.அந்த உணர்வின் துணை கொண்டு அனைத்தையும் அறிந்திடும் ஆற்றல் பெற்ற நாம்
5.மனிதனாக உருபெற்ற இந்தச் சந்தர்ப்பத்தை எதன் வழியில் பயன்படுத்த வேண்டும்…? என்பதை அறிதல் வேண்டும்.

துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலங்கள் வெளிப்படுத்தும் சக்திகள் அனைத்தையும் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து
1.நம் பூமியை நோக்கி துருவப் பகுதி வழியாக வந்து கொண்டும்
2.பூமிக்குள் பரவிக் கொண்டும் உள்ளது.
3.அதனை நாம் பருகும் சந்தர்ப்பம்தான் துருவ தியானம்.

அவ்வாறு வந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் ஆற்றலை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் மகரிஷிகள் என்பவரும் நம்மைப் பொன்று மனிதனாக உருப் பெற்று வளர்ந்து வந்தவர்கள் தான். மனிதனாக உருவாகி வளர்ச்சி பெற்ற நிலையில்
1.விண்ணின் ஆற்றலைப் பெற்றவர்கள் அனைவருமே வேகா நிலை அடைந்துள்ளார்கள்.
2.அவர்கள் தான் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் உள்ளார்கள்.
3.பேரண்டத்தில் எத்தகைய கடும் விஷங்கள் வந்தாலும் கொடூர நெருப்பானாலும் இவர்கள் மடிவதில்லை… என்றும் அழிவதில்லை.

அதைத்தான் பேரின்பப் பெரு வாழ்வு என்பது.

கார்த்திகேயா என்ற ஆறாவது அறிவு கொண்டு அனைத்தையும் அறிந்திடும் ஆற்றல் பெற்ற நாம் அதனின் துணை கொண்டு அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெறுவோம் என்றால் நாமும் ஏழாவது நிலையான அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.

இதற்கு முன் நாம் தெரிந்து கொள்ளவில்லை. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் நம்முடைய சந்தர்ப்பம் இப்பொழுது அறிய முடிந்தது.

ஆகவே இதைக் கேட்டுணர்ந்தவர் அனைவருக்கும்
1.தன்னை அறிதலும்… விண்ணை அறிதலும்… மண்ணுலகை அறிதலும்… என்ற நிலையில்
2.மெய் ஞானத்தின் உணர்வுகளை வளர்க்கும் சந்தர்ப்பம் வருகிறது.

அதனை அறியும் ஆற்றலும் வளர்க்கும் சந்தர்ப்பமும் நமக்குக் கிடைத்திருக்கிறது என்றால் அது நம்முடைய “பூர்வ புண்ணியம்” என்றே சொல்ல வேண்டும்.

“கிடைத்த இந்தப் பாக்கியத்தை நழுவ விடாது” குருநாதர் காட்டிய மெய் வழியை நாம் கடைப்பிடித்தல் வேண்டும். அவருடன் அரவணைப்பாக அந்த மகரிஷிகள் வாழும் எல்லையை அடைதல் வேண்டும்.

கமண்டலத்துடன் இருக்கும் அகஸ்தியனைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எண்ண ஓட்ட கதியையும் நீரோட்டச் சக்தியின் செயலையும் ஒன்றுபடுத்தி அதன் உட்பொருளை வெளிக்காட்டி எண்ணத்தினுள் சிந்திக்கும் கருப்பொருள் தத்துவத்தினால் எண்ணத்தின் வழிச் செயல் நீர் சக்தி பெறும் ஆரம்ப முறை ஞான வழி அமைத்தவர் தான் “அகஸ்திய மாமகரிஷி…!”

1.வானத்தில் கன பரிமாணம் கொண்ட நீர் சக்தி… இடி மின்னல் ஒரு புறமும்
2.மறுபுறம் ஆகாயத்தில் சரி பாதி இருக்கும் கோள்களையும் விண்மீன்களையும் காட்டி
3.எண்ண ஓட்ட கதியின் தத்துவத்தை எண்ணி எடுக்க வைத்த அந்த அகஸ்திய மாமகரிஷி தான்
4.நீர் சக்தியை (ஜீவன்) வென்றதாகவும்… பின் அதனுள்ளே தான் ஒன்றியதாகவும் கூறப்பட்டுள்ளது.

அகஸ்தியன் ஜீவ சக்தியைப் பெற்றது மிக மிக முக்கியமானது…!

அதாவது சரீரமாகிய திடமும் அந்தத் திடத்திற்குள் உள்ள நீர்ச் சக்தியும் நீரினுள் இருந்த பொழுது நீரோடு நீர் சேர்ந்து ஒருநிலைப்படுத்திட
1.தன் திடச் சரீர நிலை அணுக்கள் அனைத்தையுமே
2.நீரோட்ட நீர் சக்தியின் லேசான தன்மை போல் நீரோட்டச் சக்தியின் கதியையே தன்னுள் அடக்கி
3.நீர் மேல் உலவ… நீர் மேல் அமரும் செயலில்… ஓர் சூட்சமம் கூறப்பட்டது.

எண்ண ஓட்டச் செயல் சக்தியாகும் சூட்சமத்தை… அதனுள் ஏற்படுத்தப்படும் பதிவு… அல்லது ஈர்க்கப்படும் செயல் அனைத்தையும்…
1.ஒருமித்த கருத்தின் விளைச்சல்களாக (மகசூலாக) உருவாக்கிடும் நிலையாக
2.யாம் சொல்லும் தியானத்தின் வழித் தொடர் கொண்டு
3.அந்த எண்ண ஓட்டத்தின் கதியையே நற்கதியாக ஆக்கும்…
4.உயரிய ஞானம் பெறும் முறைகளாக வழியமைத்துக் கொள்ள வேண்டும்.

காற்றின் நீரே இளநீராகி… அதனுள் உள்ள விஷ அமில சக்தியே தேங்காய்க்குள் எண்ணையாக இருக்கும்
1.“மறைந்துள்ள அந்தத் தொடர்பை அறிந்து…”
2.அதையும் பயனுற வழிப்படுத்திக் கொள்ளும் செயலே ஞானம் என்பதாகும்..!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

விஞ்ஞானிகள் மனித உடலுக்குள் இயங்காத பழுதான உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி மாற்று உறுப்புகளைப் பொருத்துகின்றார்கள்… நம்மைக் காக்கின்றார்கள்.

மாற்று உறுப்புகளைப் பொருத்தினாலும் அவைகள் தொடர்ந்து சீராக இயங்க வேண்டுமென்றால் பல உணவுக் கட்டுப்பாடுகளையும்… மற்ற மருந்துகளையும் கொடுப்பார்கள்.

தண்ணீர் இவ்வள்வுதான் குடிக்க வேண்டும்… அதைச் சாப்பிடக் கூடாது,… இதைச் சாப்பிடக் கூடாது… எங்கே சென்றாலும் இந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் நீங்கள் பின்பற்ற வேண்டும்…! என்றும் சொல்வார்கள்.

அந்தக் கட்டுப்பாடுகளை நாம் பின்பற்றவில்லை என்றால் அந்த உறுப்பு கழன்று விடும், இயக்கம் மாறிவிடும். பின் வேதனையைத்தான் அனுபவிக்க வேண்டும்.

எவ்வளவு நாள் இதைப் போன்ற நிலையில் வாழ முடியும்…?

ஆனால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடலில் உள்ள உறுப்புகளுக்குள் செலுத்தி
1.நம் உறுப்புகளிலுள்ள தீமைகளை நீக்க முடியும்
2.அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரொளியைப் பெறும்படி நாம் செய்ய முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து சுவாசித்த அந்த உணர்வலைகளைக் கண்ணின் நினைவு கொண்டு உள் முகமாக உடலுக்குள் செலுத்தி நேரடியாக எந்த உறுப்போ அங்கேயே செலுத்த முடியும்.

அந்த உறுப்பை உருவாகிய அணுக்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று இணைத்தால் உடலை உருவாக்கிய அந்த நல்ல அணுக்கள் அனைத்தும் உற்சாகம் அடைந்து உறுப்பைச் சீராக இயங்கச் செய்யும்.

அந்த ஆற்றலைப் பெறத் துருவ தியானத்தை ஒவ்வொருவரும் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும்.

[su_heading size=”28″]09.04.2021 உபதேசம்[/su_heading]

உடலை விட்டு உயிர் வெளியே செல்வதன் முகாந்திரம் என்ன…?

 

இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் எதாவது ஒன்றை எண்ணி அதைப் பெற வேண்டுமென்று ஆசைப்படுகின்றோம். ஆக… உயிரால் ஈர்க்கப்பட்டு அத்தகைய அணுக்களாக உடலுக்குள் உருவாக்கப்பட்டது தான் தசரதச் சக்கரவர்த்தி என்று உயிருக்குக் காரணப் பெயரைச் சூட்டுகின்றார்கள்.

1.ஒருவரின் செயலைப் பார்த்து அவரின் உணர்வுகளை நுகர்ந்தோம் (சுவாசிக்கின்றோம்) என்றால்
2.அதனின் சக்தியாகத் தன்னுடன் அரவணைத்து இந்த உடல் உறுப்புகளை உருவாக்குகின்றது என்றும்
3.உணர்வுகள் எண்ணங்களாக இயக்கப்படுகின்றது என்றும் இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது.

நாம் நுகர்ந்த உணர்வுகள் எண்ணங்களாக எப்படி இயக்குகின்றது என்ற நிலையை வான்மீகி அன்றே இராமாயணக் காவியங்களில் கொடுத்துள்ளார்.

உதாரணமாக ஒரு கோபப்படுவோரைப் பார்த்து விட்டால் அந்தக் கோபத்தின் உணர்வை உயிர் அந்தச் சக்தியாகத் தனக்குள் அரவணைத்துக் கொள்கின்றது.

நாம் கோபம் என்று அறிகின்றோம். இருந்தாலும் நமக்குள் அந்தச் சக்தியாக அரவணைத்துக் கொள்கின்றது.
1.அதனால் விளைந்த கோபத்தை உருவாக்கும் அந்த அணுவின் தன்மை
2.அது தன் இனத்தைப் பெருக்கிக் கொண்டே இருக்கும்.

அப்பொழுது அந்தச் சக்தி தன் நிலைகளில் எப்படியும் (அடிக்கடி) கோப உணர்வுகளை வெளிப்படுத்திக் கோபத்துடன் பேசும் நிலையாக அதே வழியிலேயே தான் நாம் இருக்க நேரும்.

தனக்குள் வளர்ந்த அத்தகைய அணுக்கள் அந்தச் சமயத்தில் அது இயல்பாகத் அதனின் வளர்ச்சியையே நமக்குள் கூட்டும்.

இதை உணர்த்துவதற்குத் தான் இராமாயணக் காவியங்களில் நாம் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு சக்தியும் அது அது தன் இனத்தைப் பெருக்கும் என்ற நிலையாகத் தசரதச் சக்கரவர்த்தி தினமும் ஒரு மனைவியைக் கல்யாணம் செய்து கொண்டே இருந்தார் என்று காட்டுகின்றார்கள்.

நல்ல ஒழுக்கமும் குணசீலமும் கொண்டு நாம் இருந்தாலும்
1.நமக்குள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எடுத்துக் கொண்ட
2.அந்தந்த குணத்தால் பதிந்த நிலைகள் வரப்படும் பொழுது
3.அதன் இனப்பெருக்கங்கள் என்று வரும் பொழுது
4.அடுத்து அடுத்து நாம் நல்லதை எண்ணினாலும்…
5.உடலுக்குள் அந்த நல்ல குணத்தை கொண்டு ஆட்சி புரிய வேண்டும் என்று எண்ணினாலும் நம்மால் முடிவதில்லை

அப்பொழுது நல்லதைச் செயல்படுத்த முடியவில்லையே…! என்ற எண்ணமும் அதே சமயத்தில் தனக்குள் நுகர்ந்து கொண்ட சக்தியின் வலிமையால் நாம் அடிமைப்பட்டு “இந்த உயிரின் இயக்கம் அதன் கீழ் செல்கிறது…!”

நல்ல குணங்களை இந்த உடலில் இருந்து ஆட்சி புரிய முடியாத நிலை ஏற்பட்டு விட்டதே…! என்ற
1.அந்த வேதனை உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது இந்த நஞ்சு உடல் முழுவதும் பரவுகின்றது
2.இந்த நஞ்சின் தன்மை பெருகி… உடலில் உள்ள அணுக்கள் நஞ்சாக உருவான பின்
3.இதில் குடியிருக்க விரும்பாது இந்த உடலை விட்டு உயிரான்மா (உயிர்) பிரிந்து சென்று விடுகின்றது.

இப்படிச் செல்லும் உயிர் அடுத்து வேதனைப்படும் உயிரினங்களுக்குள் தான் நம்மை அழைத்துச் செல்லும்.

ஆகவே வேதனையிலிருந்து விடுபடும் ஆற்றலையும் தீமைகளிலிருந்து விடுபடும் ஆற்றலையும் பெற வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் அவ்வப்பொழுது எடுத்துத் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

அந்தச் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும். இதை வலுப்படுத்தினால் யாருடைய ஈர்ப்புக்குள்ளும் நாம் சிக்குவதில்லை… ஏகாந்த நிலை பெறுகின்றோம்..

உலக வாழ்க்கையின் ஓட்டத்தில் சிக்கிக் கொண்டால் ஞானத்தின் மகசூலைப் பெற முடியாது – ஈஸ்வரபட்டர்

 

உதாரணமாக கரும்பு பயிரிடும் ஒரு விவசாயி தான் பெறும் மகசூலை எத்தன்மை கொண்டு பாதுகாப்பாகப் பெறுவது…? என்பதிலும் நம் உயிரான்ம சக்தியின் வளர்ச்சிக்குச் “சூத்திரம்…” உள்ளது.

பூமியைப் பண்படுத்திச் செப்பனிட்டு உரமிட்டுக் காலமறிந்து கரும்பின் வித்தைப் பயிரிடும் செயலில் கரும்பு வளரத் தேவையான நீரைப் பாய்ச்சிப் பாதுகாப்பாக அந்த வித்தை வளர்த்திடும் தொடர் வேண்டும்.

தேவையான நீரை விட்டுக் கரும்பு வளர்ந்து வரும் காலகட்டத்தில் “சோகைகள்…” அகற்றப்பட்டுத் தூய்மைப்படுத்தப்படாவிட்டால்
1.சிறு உயிரினங்கள் அதனுள் வாசம் செய்து கரும்பின் சுவையைக் கெடுத்துவிடும்.
2.அதனால் நல்ல பலன் பெற முடியாது.

நீர் பாய்ச்சும் செயலிலும் இயற்கையாக அதி தீவிர மழை நீர் பெய்து விட்டால் அவை நிலத்தில் தங்கினால் கரும்பில் நீர் சக்தி கூடி விடும். சுவை குறைவுபடும். ஆகவே தேங்கிய நீரை உடனே அகற்ற வேண்டும்.

பக்குவ காலத்தில் கரும்பை அறுவடை செய்யாமல் நாட்கள் என்ற கணக்கின் தொடர் நீண்டு விட்டால் அந்தக் கரும்பின் சுவை சத்து ஈர்க்கப்பட்டு
1.கரும்பின் பூ என்ற தொடர் வளர்ச்சி ஆக்கும் செயலில்
2.வேண்டோடுதல் என்ற சொல் நாம குணத்திற்கொப்ப
3.அந்தக் கரும்பின் சுவை குணம் நீங்கிப் பலனில் மாற்றம் ஏற்படும்.

அதைப் போன்று தான்
1.மனம் என்ற வயலைப் பக்குவப்படுத்தும் ஞானி…
2.களைகளைக் களைந்து…
3.தன் செயலில் ஒழுக்கம் என்ற பாத்தியிட்டு…
4.நற்பண்பு என்ற ஜெப நீரைப் பாய்ச்சி…
5.ஞான வித்தாம் கரும்பினைப் பயிர் செய்திடும் பக்குவம்…
6.ஞானப் பயிர் காக்கப்பட வேண்டும் என்ற செயலுக்கு ஞான வித்தை ஈர்த்திடும் செயலே…
7.விவசாயி கரும்பின் பயிரைக் கண்ணும் கருத்துமாகப் பேணுகின்ற வழி முறை போல் இருந்திடல் வேண்டும்.

ஞானப் பயிர் வளர்த்திடும் மனதில் தேவையற்ற களைகள் அகற்றப்பட்டு நல்லொழுக்க நீர் என்ற ஜெபம் என்ற சக்தித் தொடரினால் “நேர் செய்யப்பட வேண்டும்…!”

அப்படிச் செயல்படுத்தினால் பயிர் தனக்குத் தேவையான ஆகாரத்தைப் பூமியிலிருந்து பெற்றுச் சமைத்து வளர்வதைப் போல் நாம் தியானத்தின் மூலம் ஈர்த்திடும் எண்ண ஜெப நீரால் ஞானப் பயிர் நல்லொழுக்க முறைச் செயலுக்கு வளர்ச்சி பெற்றிடும்.

உலக வாழ்க்கை முறை எதிர் மோதல் என்ற… கடும் மழைக் காலம் மிகுந்து விட்டாலும் விவசாயி பயிர் செய்யும் பூமியில் மழை நீர் தேங்கி அந்தப் பயிர் அழுகிப் போகாமல் நீரை நீக்கிட முற்பட்டும் ஓர் வழி அமைத்து வெளியேற்றுவது போல்
1.உலக இயல்பு என்ற மழை நீர் தேங்கி
2.ஞானப் பயிர் வளர்ப்பின் முறையில் மாறுபாடு ஆகாதபடி
3.நாம் சுட்டிக் காட்டும் தியான வழித் தொடரில் அந்தத் தீமைகள் அனைத்தும் நீக்கப் பெற்று
4.நல்லாக்கம் பெறும் முயற்சியாக விவசாயி தன் பயிரைக் காத்திடும் செயல் போல் அமைத்திடல் வேண்டும்.

சரீரத்தில் வந்து மோதும் எதிர் அலை மோதல் ஈர்ப்பின் செயல் உடலிலிருந்து கழிவுகள் நீக்கப்படா விட்டால் எதிர் மோதல் குணத் அமிலத் தன்மைகள் சரீரத்தில் தங்கிப் பிணியாக உடலில் மாறிவிடும்.

ஆக உயரிய ஞான வளர்ப்பின் பயனைப் பெறுவதிலும் தடங்கல் ஏற்படாத செயலுக்கு எதிர் மோதல் குணங்ள் எல்லாம் நீக்கப்பட வேண்டும்.

கரும்பின் கழிவு என்ற சோகைகள் அடர்ந்து வளர்ந்து விட்டால் அதனுள் வாசம் செய்யும் சிறு உயிரினங்கள் தன்மை போல்
1.வாழ்க்கையில் வரும் எதிர் நிலையான குணங்கள் செயல்பட்டு
2.அந்தச் சிறு உயிரினங்களால் கேடுகள் உண்டாகிக் கரும்பின் பயிர் இனிய குணச் சுவையை நீங்கிப் புளிப்பின் சுவையைப் பெறுவது போல்
3.ஞான வளர்ச்சியின் செயலில் ஆகாதபடி “அதி தீவிர எண்ண வலு என்ற பாதுகாப்பு அவசியம்…!”

ஒவ்வொருவரும் விவசாயி போல் ஞானப் பயிரைப் பாதுகாத்துக் கொள்வதன் அவசியத்தை உணர்தல் வேண்டும்.

அறுவடை செய்த கரும்பினைப் பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கரும்பின் சுவை குணத்தில் உண்டாக்கப்படும் பல்பொருள்கள் என்ற செயலுக்கு முன்பே கடும் மழையால் அறுவடை செய்யப்பட்ட பயிர் நீரினுள் மூழ்கிவிட்டால்… பயிர் காக்கப்படா விட்டால் பலனை எப்படிப் பெற முடியும்…?

விவசாயியினால் காக்க முடியாமல் போன பலனை… பாதுகாப்பற்ற செயலின் தன்மை கொண்டு கேட்பாரற்று நீரில் மூழ்கிவிட்ட பயிரினை… ஒரு வியாபாரி பொருளுக்காக விற்பதின் செயலினால் விவசாயி என்ன செய்ய முடியும்…?

ஏனென்றால் அந்தக் கரும்பின் புளிப்பின் சுவையை ஒவ்வொருவரும் சுவைத்திடும் பொழுது தான் பயிர் செய்த நிலத்தின் பலனை
1.சோர்வு என்ற சலிப்பு என்ற சங்கட அலை உந்தும் செயலினால்
2.தன் முயற்சியில் பாதுகாப்பற்ற செயலினால்
3.தன் பயிரைத் தானே விலை கொடுத்து வாங்கிடும் செயல் நிகழ்வுகளின் வேடிக்கைகளை என்னவென்பேன்…?

அதாவது ஞானப் பயிர் யாருக்கு உரியதோ அவரின் முயற்சி இன்மையினால்… உலக வாழ்க்கையில் சிக்கிக் கொண்டால் ஞானத்தின் மகசூலைப் பெற முடியாது.

எண்ணம் சொல் செயல் இந்த மூன்றின் செயல் குண நிகழ்வுகளின் மாற்றம்… எண்ணம் கொண்டு செயல்படுவதால் மனம் என்று கூறுவதெல்லாம் மன எண்ணச் செயல் நிகழ்வால் “மனமே பகை…!”

பகை என்ற தனித்துவம் ஞானத்தில் இல்லை என்ற செயல் உண்மை வாய்ந்தது. எதிர் மோதல் பகை என்ற குணங்கள் தாக்கினாலும் ஞானியின் ஈர்ப்பின் செயலில் உண்மையின் உயரிய உயர் ஞான எண்ண வலு பெற்றிருப்போன் அந்தப் பகை குண அமிலத் தன்மைகள் தன் ஞானத்தில் மோதினாலும் அனைத்தையும் அது துகள்களாக்கிவிடும்.

ஞானச் செல்வங்கள் பெற்றிடும் உயர் ஞான வளர்ப்பின் செயலுக்கு
1.எந்த வித எதிர் மோதல் குணங்களும் தாக்கிடாத வண்ணம்
2.பக்குவப்படுத்தப்பட்டுச் செயல்படும் நிகழ்வுகள் அனைத்தும்
3.மகரிஷிகளின் அருள் ஒளி என்ற எண்ண வலுத் தொடரில் நிலை பெற்று நின்று வளர்ப்பின் வளர்ப்பாக்கி
4.பேரண்டக் கோளத்தையே உருவாக்கிடும் செயல் சக்திக்கு… சக்தியின் முயற்சிக்கு… “என்றும் எனது ஆசிகள்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

சில பேர் சொல்வார்கள். எனக்காக வேண்டி நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்… எனக்கு நன்றாக வேண்டும் என்று நீங்கள் செய்யுங்கள்…! என்று அடுத்தவர்களிடம் சொல்வார்கள்.

நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று பிரார்த்தனையோ தியானமோ நான் செய்தால் உங்கள் தீமைகளோ வேதனைகளோ எனக்குள் வராது.

ஆனால் அந்தச் சக்தியைப் பெறவேண்டும் என்று
1.நீங்கள் எண்ணினால்தான்,
2.நீங்கள் மகரிஷிகளின் அருளை நுகர்ந்தால்தான்… கவர்ந்தால்தான்
3.உங்கள் உயிர் உங்களுக்குள் அந்த ஆற்றலைப் பெறச் செய்யும்.

நீங்கள் நுகர்ந்த உணர்வை “உயிர்” உங்கள் உடலுக்குள் அணுவாக உருவாக்கும் கருவாக்கிப் பின் அணுவாக்கி அது தன் இனத்தைப் பெருக்கும் நிலையில் அந்த ஆற்றல் உங்களுக்குள் பெருகும்.

ஏனென்றால் உங்கள் பசிக்கு நீங்கள்தான் சாப்பிட வேண்டுமே தவிர உங்களை எண்ணி நான் உண்வை உட்கொண்டால் எனக்குத்தான் சத்து சேரும். நீங்கள் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆகவே நான் எண்ணியது போன்று…
1.மகரிஷிகளின் அருள் சக்தி மற்றவர்கள் பெற வேண்டும் என்று நீங்களும் எண்ணினால்
2.பிறரின் தீமைகளோ துயரங்களோ உங்களுக்குள் வராது.

[su_heading size=”28″]08.04.2021 உபதேசம்[/su_heading]

விண்ணின் ஆற்றலைப் பெற வேண்டும் என்றால் அது எது…? என்று அறிந்து கொள்ளுங்கள்

 

உதாரணமாக எனக்கு இப்படிச் செய்தான்… செய்தான்…! என்று நமக்கு இடைஞ்சல் செய்தவன் மீது சிந்தனை வரும் பொழுது அந்த உணர்வுகள் கோபமோ வேதனையோ ஆத்திரமோ உடலுக்குள் வந்துவிடுகின்றது. அந்த இடத்தை நாம் வலுவாக்கிக் கொள்கின்றோம். தீய வினைகளாக அது வளர்கிறது.

ஆனால் நம் உடலில் வந்த அந்தத் தீமைகளை நீக்க…
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.நம் சிந்தனையை அதற்குள் செலுத்தினோம் என்றால்
3.அதனின் உணர்வுகள் வளர்ச்சியாகி இந்த மனித உடலையே ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.
4.இந்த உடலிலிருந்து தான் நாம் ஒளியாக மாற்ற முடியும்.

ஆனால் மாற்றத் தவறினால் அந்த உடலில் விளைந்த தீமையான உணர்வின் தன்மை இங்கே இழுத்து விட்டால் மனித ரூபத்தை மாற்றிவிடும்… மனிதனல்லாத உருவாகத் தான் பெற நேரும்.

ஆனால் அந்த அருள் மகரிஷிகளின் அருளை நமக்குள் பெறும் பொழுது ஒளியாக மாற்ற முடியும்.
1.மனித உணர்வைச் சுவாசித்தால் உருவம் மாறும் இங்கே…!
2.அருள் உணர்வைச் சுவாசித்தால் ஒளியின் தன்மையாக மாறும் அங்கே…!

நம் உயிர் ஒளியானது. மனிதனான பின் அறிவால் அறிந்து கொள்கின்றோம். இருந்தாலும் ஒளியின் உணர்வாக விளைந்திடும் அத்தகைய மகரிஷியின் அருள் சக்தியைப் பெற நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக நான் கோபமாக இருக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். மற்றவரும் என் கோபத்திற்குச் சாதகமாக இருந்தால் எனக்கு நல்லது.

அதே சமயத்தில் தவறு செய்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். அருகில் இருக்கும் என் நண்பனும் அந்தத் தவறுக்காக என்னுடன் ஒத்துழைத்தால் எனக்கு நல்லது.

1.அதுவே தவறு என்று என்னைச் சுட்டிக்காட்ட வந்தால் எனக்கு எதிரி ஆகின்றது…!
2..ஆகவே நல்லது என்பதை நல்லதாக எண்ண முடியாது
3.கேட்டது என்பதைக் கெட்டதாகவும் எண்ண முடியாது
4.நமக்கு ஒத்து வந்தால் நல்லது என்று எண்ணுகின்றோம்
5.நமக்கு ஒத்து வரவில்லை என்றால் கெட்டது என்று எண்ணுகிறோம்.

மிளகாய் காரமாகத்தான் இருக்கின்றது. அந்தக் காரத்தை அளவுடன் குழம்பிலோ மற்ற பொருள்களிலோ இணைத்தால் அது நல்லதாகின்றது.
1.காரத்தை அதிகமாகப் போட்டால் கெட்டதாகிறது
2.காரத்தைக் குறைத்தால் “சப்” என்றாகி விடுகிறது.

ஆகவே நல்லது நல்லதும் அல்ல… கெட்டது கெட்டதும் அல்ல…!

இதைப் போன்ற உணமைகளை உணர்ந்து கொண்ட பின் நமக்குள் எந்த உணர்வின் தன்மையை எடுக்க வேண்டும்…?

நம்மை அழியா ஒளியின் சரீரம் பெறச் செய்யும் அந்த நிலையான உணர்வுகளை எடுத்தால் அதுவே நமக்கு நல்லது.

நம் உயிரின் தன்மை ஒளியாக நின்று எதை எல்லாம் தனக்குள் அறிவிக்கின்றதோ அந்த உயிருடன் ஒன்றிய ஒளியாக மாற்றுவது தான் நமக்கு நல்லது.

விண்ணின் ஆற்றல் என்று சொல்கிறோம். பொதுவாக விண்ணின் ஆற்றலும் மகரிஷிகள் ஆற்றலும் வேறு.

1.விண்ணின் ஆற்றல் என்பது மற்ற கோள்களின் மண்டலங்களின் சக்தி பெற்றது
2.அந்த விண்ணின் ஆற்றலால் தான் மனித உடல் வருகின்றது

அதாவது நட்சத்திரங்களை வைத்துத் தான் ஒரு பிரபஞ்சத்தில் கோள்கள் சூரியன் எல்லாமே வளர்ச்சிக்கு வருகின்றது. அந்த விண்ணின் ஆற்றலைப் பெற்றுத் தான் மனிதனாக வளர்ந்து வந்திருக்கின்றோம்.

ஆனால் விண்ணின் ஆற்றலால் மனிதனான பின் சிருஷ்டித்துக் கொண்டதுதான் மகரிஷிகள். மனித உடல் பெற்ற பின் சிருஷ்டிக்கும் சக்தி பெற்ற அந்த மகரிஷிகளின் ஆற்றலால் தான் மனிதன் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக உருவாக்க முடியும்.

விண்ணில் இருக்கக்கூடிய மகரிஷிகள் அவர்கள் உணர்வின் தன்மை கொண்டு நாம் எதை உணர்த்தினோமோ “விண்…” என்று வரப்படும்போது சொல் விண்… என்று வரும்.

இங்கே மண்ணுலகிலிருந்து சென்று இன்றும் விண்ணிலே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மகரிஷிகள். ஆகவே அந்த விண்ணுலகத்திற்குத் தான் நாம் செல்ல வேண்டும்.

1.சூரியப் பிரபஞ்சத்திற்குள் இருக்கும் இந்தப் பூமி இதுவும் ஒரு விண்ணுலகம் தான்
2.ஆனால் மண்ணுலகைக் கடந்து விண்ணுலகம் சென்ற அந்த மகரிஷிகள் அருள் வட்டத்தில் நாம் இணைய வேண்டும்.

அது தான் யாம் (ஞானகுரு) சொல்லும் விண்ணுலகம்…!

சித்தன் போக்கு சிவன் போக்கு… ! – ஈஸ்வரபட்டர்

 

பூமியின் ஈர்ப்பில் பரவிப் படர்ந்து தன் செயலுக்கு வரும் உயிரணுக்கள் ஒன்றிலிருந்து ஒன்றாகப் பரிணாம வளர்ச்சியாக வளர்ச்சியின் முதிர்வில் பல நிலைகள் பெற்றுத்தான் இயற்கையின் கதியில் செயல்படுகின்றன.

படைப்பின் வித்தானது தன் இன வளர்ப்பிற்குத் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும் காத்தல் தொழிலுக்கு மண்ணின் தொடர்பில் நீரை உண்டு.. ஒளியை உண்டு.. காற்றையும் உண்டு… ஓர்மித்த ஈர்ப்பின் செயல் நிகழ்வுகளுக்குத் தன்னையே வளர்ச்சிப்படுத்திக் கொள்கிறது.

ஆகாரத்தை உண்டு வாழும் இந்த ஜீவ பிம்பச் சரீரத்திற்கும் அதே போன்ற செயல் உண்டு.

சிவன் உருவத்தில் முத்தலை சூலம் என்று காட்டப்பட்டதில் முத்தொடராகப் பல பொருள்கள் உண்டு.
1.கண்டத்தில் விஷம் – கழுத்தைச் சுற்றிப் பாம்பு என்பது
2.உயிரணுக்கள் உதித்திடும் செயல் அமில குணங்களாக விஷத்தின் எதிர் மோதல் தன்மைகளாக
3.பரவெளியில் உயிரணுக்களாக அசைந்திடும் தன்மைகளை உணர்த்தவே ஜீவனுள்ள பாம்பு.

அத்தகைய இருவினைச் செயல்கள் இயற்கையில் என்றுமே உண்டு. ஏனென்றால்
1.அமைதியாகத் தவழ்ந்திடும் காற்றே புயலாகவும் எழுகின்றது.
2.அமைதி காட்டும் நீரே கொந்தளிப்பாகவும் காணப்படுகின்றது.
3.நின்று எரியும் நெருப்பே உரத்து எழுந்து தாண்டவமாடுகின்றது.

இது எல்லாம் இயற்கையின் கதியில் செயலில் இரு தன்மைகள் என்று கூறப்பட்டாலும் “இரண்டும் ஒன்று தான்…!”

அவைகள் செயலுறும் காலத்தில் நிகழும் தன்மைகள் கொண்டே உணர்வாக அறிந்து கொள்ளும் பக்குவத்தில் “ஜோதி நிலையைக் காட்டவே..” சிவன் கையில் அக்கினி வைத்துக் காட்டப்பட்டுள்ளது.

ஒலியின் வேகத்தில் ஒளி பிறக்கின்றது. நாதமே ஒளியாகின்றது. நாதத்தில் கலக்கும் உஷ்ணமே காக்கும் செயலாகப் புரிகின்றது.

மான் மழு… புலித் தோல் ஆடை.. அபயஹஸ்தம்… குஞ்சிதபாதம் சுட்டும் நற்சுவாச நிலைகள்… பாதத்தின் அடியில் முயலகன்…! என்றிட்ட இவ்வகை விளக்கங்கள் எல்லாம் “ஜீவ பிம்பம் பெற்ற மனித ஆத்மாக்கள் பெற வேண்டிய.. கடைப்பிடிக்கக வேண்டிய வழிகளாக.. உண்மையை உணர்த்தும் தத்துவங்களே ஆகும்…!

“சிவ நடனம்…” காண வேண்டும் என்பதே…
1.ஆத்மார்த்தமாக…! இயற்கையுடன் ஒன்றிய உயர் ஞான வளர்ப்பில் இயற்கையுடன் கலந்தே
2.அதன் உள்ளிட்ட சக்தியாகச் சக்தி பெற்றிடவே போதனைகளை அளித்திடுகிறோம் இங்கே…!

அந்தச் சக்தியை யாரும் பெற்றுத் தருவதில்லை.

“சித்தன் போக்கு சிவன் போக்கு…!” என்பது இயற்கையுடன் ஒன்றி வாழும் வாழ்க்கையில் சிவ தத்துவமாகத் தன்னையே… “தன் உயிராத்மாவையே…” வழி நடத்தும் செயலுக்குத் தன்னை உணர்ந்து கொண்டது தான்.

ஒளியின் அமைதி பெற எனது (ஈஸ்வரபட்டர்) ஆசிகள்.

ஸ்வரூபம் சிவமாகவும் சக்தியின் ஸ்வரூபம் கலையாகவும் கண்டுணர்ந்த தன்மைகளில்… பூமியின் சுழற்சியும்.. பொருள் மறைவாக காந்த ஈர்ப்பின் செயலையும்… தன்னகத்தே தெளிந்து… சிவனாரின் உருக்கோலம் காட்டப்பட்டதில் ஜடாமகுட சிரசே… ஆகாய வெளியாகும்…!

ஆகாய கங்கை என்றால் என்ன…?

நீரமில சக்தி ஒன்றுடன் ஒன்று கனபரிமாணம் கொண்டு வானிலிருந்து பெய்திடும் நீராக வரும் நிலையில் “ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே…!” என்று இடி மின்னல் என்று சூட்சமமாக விளக்கப்பட்டுள்ளது.

(ஆனால் பூமியைச் சுற்றி ஓடும்… பூமியிலிருந்து குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் அமைந்திருக்கும் ஒரு புலத்தையே இன்றைய விஞ்ஞான உலகம் ஆகாய கங்கை என்று அழைக்கின்றது)

சிவன் நெற்றியில் பிறைச் சந்திரனைக் காட்டியது என்ன..?

பூமியின் சுழற்சியுடன் ஒட்டியே வலம் வந்து அண்ட இருளில் மறைந்தும் (அமாவாசை) பின் வெளிப்பட்டுச் சூரியனின் ஒளி காந்த சக்தியை ஈர்த்துத் தன் சமைப்பால் வெளிவிடும் “தண் ஒளிக் கிரகணங்கள்…” காட்டுகின்றது.

அது பூமியுடன் இணைவாகச் சுழன்று பார்வைக்கோண வளர் பிறையாகி… பின் பௌர்ணமியாகக் காணும் நிலையையே சிவனுக்குப் பிறைச் சந்திரனாகக் காட்டியது.

பரவெளியின் சக்தியை ஈர்த்துப் பூமி தன் சமைப்பாக வெளிவிடும் மூச்சலைகளில்
1.அதே நிகழ்வின் தொடர்வில் மீண்டும் மீண்டும் ஈர்த்திடும் செயலில்
2.காற்றின் சக்தியாகப் பரவெளி மோதலின் உராய்வும்
3.அதனுள் பிறந்திட்ட ஒலி நாதங்களையே சிவனாரின் கையில் “உடுக்கை” என்று காட்டியது.

பூமியின் துருவங்களில் ஈர்த்துப் படர்ந்திடும் பனித் துளிகள் (பனிப்பாறைகள்) அனைத்தையும் சதாசிவமாகக் காட்டி அறிவின் ஆற்றல் என்று சூட்சமமாக
1.மனித சரீரத்தின் நெற்றிப் பகுதியையே
2.சதாசிவன் மண்டலம் என்று தத்துவம் கூறப்பட்டது.

விழிப் பார்வையில் செயல்படும் நெற்றிப் பொட்டின் உள் நின்ற ஞான விழிப்பார்வை என்ற முத்தொடரையே முன் பாடங்களில் “புவியின் காந்த ஈர்ப்புக் கிணறுகள்..” என்று மறைபொருள் காட்டியுள்ளோமப்பா…!

முக்கண் என்று காட்டுவது
1.சிவனாரின் வடிவத்தில் பூமியை உணர்த்திடவும்
2.நாம் பெற்றிடும் உயர் சக்தியின் மெய் ஞான வளர்ப்பிற்கும்
3.அதே முக்கண் தெளிவா(க்)கும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இன்று விஞ்ஞான உலகில் சிறு குழந்தைக்குக் கூட விஞ்ஞான அறிவு ஊட்டப்படுகின்றது. ஆனால், இந்த விஞ்ஞானக் காலத்தில் இருந்து கொண்டு இன்னமும் சாமியாரைப் போய் பார்த்தால் நமக்கு எல்லாம் நடக்கும் என்றும்… சாமிக்குச் அபிஷேகம் செய்து அழுதால் வரும் என்ற நம்பிக்கையிலும் நாம் இன்னும் அழுது தொங்கிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்…?

சாமியையும் சாமியாரையும் பார்த்து விட்டால் கஷ்டத்திலிருந்து விடுபடலாம் என்ற இந்த எண்ணத்தில் தான் இருக்கின்றார்கள்.

என்னிடம் (ஞானகுரு) வருபவர்களைப் பாருங்கள்.

என் வீட்டில் ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லி அழுகின்றார்கள். கஷ்டமெல்லாம் நீங்க வேண்டும் என்று நல்ல வாக்குக் கொடுங்கள் கேட்பதற்கு ஆள் இல்லை.

ஒருவர் திட்டுவதைக் கேட்டுப் பதிவு செய்கின்றீர்கள். அவரை எண்ணும் போதெல்லாம் உங்கள் உணர்வு பலவீனம் அடைகின்றது.

இங்கே வந்தவுடனே எங்கள் வீட்டில் இருக்கின்ற கஷ்டமெல்லாம் நீங்க வேண்டும். குழந்தைக்கு நல்ல ஞானம் வர வேண்டும். என் வீட்டுக்காரர் என்னோடு ஒன்றி வாழ வேண்டும். எங்கள் குடும்பத்திற்கு அந்த அருள் சக்தி வேண்டும் என்று கேளுங்கள் என்று ஆயிரம் தடவை சொல்கிறேன்.

நான் இதைச் சொல்லிவிட்டு ஒரு அரை மணி நேரம் கழித்து திரும்பவும் என்ன சொல்கிறார்கள். எங்கள் வீட்டில் இன்னும் ஒற்றுமையே இல்லை என்று சொல்கிறார்கள்.

விதையைப் போட்டவுடன் செடி வந்துவிடுமா…? அதற்கு வேண்டிய பக்குவங்களை இப்படிச் செய்து கொள்ளுங்கள் என்று யாம் சொன்னால் அவர்களை நம்புவதில்லை.

சாமி அதைச் செய்து தருவார். நாம் சாமிக்கு அபிஷேகம் செய்தால் திருப்பித் தருவார்கள் அல்லவா. ஆக, இப்படிப்பட்ட எண்ணங்கள் கொண்டு தான் வருகின்றார்கள்.

ஆனால் நாம் எண்ணிய உணர்வைத் தான் நம் உயிர் இயக்குகின்றது. இந்த உணர்வின் தன்மையை நம் உடலாக ஆக்குகின்றது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்தக் காலத்தில் புலஸ்தியர் என்பவர்கள் இதைப் போன்ற நிலைகளை எல்லாம் தெரிந்து கொண்டவர்கள். அந்த மூதாதையர்கள் தெரிந்து கொண்டதால் அவர்கள் புலஸ்தியர்.

எந்தெந்தத் தாவர இனங்களை நுகர்கின்றோமோ நுகர்ந்தபின் அந்த எண்ணங்கள் வருகின்றது. அவ்வாறு எண்ணங்கள் வரப்படும்போது அந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.

அந்த உணர்ச்சிக்கொப்ப அவனுடைய செயல் ஆகின்றது. அந்த உணர்ச்சிகளின் தூண்டுதலுக்கு ஒப்ப உடலின் அமைப்பாகின்றது. இப்பொழுது வேதனை என்று ஆனபின் அந்த உணர்ச்சிகளைத் தூண்டியவுடனே என்ன செய்கின்றது?

“அம்மா… அப்பா…,” என்று உடல் சோர்வடைகின்றது. அப்பொழுது ஏதாவது பலமாகச் செய்ய முடிகின்றதா…? ஆனால் உடல் பலமாக இருக்கின்றது. வேதனை என்ற உணர்வான பின் உங்களுக்குள் எல்லாவற்றையும் இயக்குகின்றது. உங்களால் பலமாக எதாவது வேலை செய்ய முடிகின்றதா…?

என்னால் முடியவில்லை என்று மயக்கம் வருகின்றது. ஆனால், உங்கள் உடல் நல்லாயிருக்கும். ஒரு நிமிடத்தில் நுகர்ந்த நிலைகளால் இந்த நிலை ஏற்படுகின்றது.

உங்கள் பையன் மேல் ரொம்பப் பிரியமாக இருக்கின்றீர்கள் உங்கள் பையன் சேஷ்டை பண்ணி ரகளை பண்ணிவிட்டான் என்று உங்களிடம் சொல்கிறார்கள்.

உங்கள் பையன் இப்படியெல்லாம் தவறுகள் செய்து கொண்டிருக்கின்றான் என்று தெரிந்தவுடன் என்ன ஆகின்றது…? பையனை எண்ணி “இப்படிச் செய்கின்றானே… இப்படிச் செய்கின்றானே…” இப்படி என்று உங்களுக்கு மயக்கம் வருகின்றதா இல்லையா…?

மயக்கப்படச் செய்வது யார்…? நுகர்ந்த அந்த உணர்வுகள் உயிரிலே பட்டவுடன் உணர்ச்சிகள் இயக்கி அந்த நிலை அடையச் செய்கின்றது. இதைத்தான் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று காட்டினார்கள்.

நம் உயிர் ஈசனாக இருந்து இயக்கினாலும் நாம் நுகரும் உணர்வுகள் (நந்தி) நந்தீஸ்வரனாக நம்மை இயக்குகின்றது. இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதே நல்லது.

[su_heading size=”28″]07.04.2021 உபதேசம்[/su_heading]

தியான வழியினைக் கடைப்பிடிப்போர் குருவிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டிய சரியான வழி முறை

 

மந்திரம் செய்வோரையோ தந்திரம் செய்வோரையோ மற்ற மார்க்கங்களையோ எண்ணிக் கொண்டு… அவர் என்ன செய்கின்றார்…? இவர் என்ன செய்கின்றார்…? என்ற நிலைகளுக்கு ஆராய்ச்சிக்குச் செல்ல வேண்டாம்.

1.மகரிஷிகளின் அருள் உணர்வைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கே தேடி வருவோர்
2.அவர்களின் ஏக்கம் எதுவோ அது பதிவாகின்றது…
3.அவர்களுக்குள் அந்த அருள் சக்தி ஓங்கி வளரவும் செய்யும்.

ஆனால் மற்றதைப் பற்றி அறிய வேண்டும் என்று எண்ணினால் அந்த நோக்கம் அதிலே தான் இருக்கும். மற்றவரின் செயலைப் பற்றித் தெரிய வேண்டும் என்று விரும்பினால் அது தான் ஆழமாக அவர்களுக்குள் பதிவாகி இருக்கிறது என்று பொருள்.

அதன் மேல் எண்ணத்தைச் செலுத்தி அந்த விபரத்தைத் தெரிந்து கொண்டால் அது தான் வளரும்.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில்
1.கஷ்டமாக இருக்கிறது… கஷ்டமாக இருக்கிறது…! என்று சொல்லி அதையே கேட்டால் அந்தக் கஷ்டத்தைத் தான் வளர்க்க உதவும்.
2.ஆனால் கஷ்டத்தை நீக்க வேண்டும் என்று கேட்டால் கஷ்டத்தை நீக்கும் உணர்வுகள் உங்களுக்குள் விளையும்.

கேட்டுணர்வோர் உணர்வின் தன்மை எதுவோ அதற்கொப்பத்தான் அந்த உணர்வுகள் வளர்ச்சி அடையும்.

1.கஷ்டம் என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது என்று சொல்லிக் கொண்டே இருந்தால் “அது வந்துவிடும்…”
2.இந்த மனித வாழ்க்கையில் வரும் சிக்கல்களிலிருந்து… நான் மீள முடியுமா…? என்றால் “இது சந்தேகம்…”
3.மீள முடியாது…! என்று அந்த வலுவை இழந்து விட்டால் “மீள முடியும்” என்ற உணர்வுகள் உங்களுக்குள் வராது.

ஆகவே மீள வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக்கிக் கொண்டு யாம் கொடுக்கும் இந்த ஞானிகளின் வாக்கின் தன்மையை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்தால் எத்தகைய துன்பத்திலிருந்தும் நீங்களே விடுபட முடியும்.

அதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றோமோ அதுவாகின்றாய் என்று சொல்லப்பட்டது.

ஆனால் பெரும்பகுதியானோர் அவர்கள் தங்களுடைய கஷ்டங்களையும் துன்பங்களையுமே எண்ணி… இது எப்படி வந்தது…? எதனால் வந்தது…? என்று கேள்வி எழுப்பிக் கொண்டே உள்ளார்கள்

அன்றாட வாழ்க்கையில் நம்மை அறியாதபடியே துன்பங்களும் கஷ்டங்களும் எப்படி வருகின்றது…? என்பதை பல முறை உபதேசித்திருக்கின்றேன் (ஞானகுரு).

உபதேசங்களை எல்லாம் கேட்ட பின்னாடியும் மீண்டும் கஷ்டங்களையே எண்ணிக் கொண்டிருந்தால் யாம் சொல்வது அவர்களுக்குள் பதிவாகவில்லை…! என்று தான் பொருள் ஆகின்றது.

ஆனால் மேற் கொண்டு நாம் செல்ல வேண்டிய சரியான மார்க்கங்களை எண்ணி அதைக் கேட்டால் அது பதிவாகும்… நல்லதாகும்.

அதே சமயத்தில் இந்த அருள் உணர்வு எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் எண்ணுதல் வேண்டும். அதனின் உணர்வின் துணை கொண்டு தான் உங்கள் உடலுக்குள் ஞானிகளின் உணர்வு விளையும் பருவமும் வரும்.

ஆகவே எப்பொழுதுமே துன்பமோ துயரமோ நோயோ வேதனையோ எது வந்தாலும்…
1.இதிலிருந்து விடுபடுவது எப்படி…? என்று கேட்டால்
2.அந்த விடுபடும் உணர்வுகள் நிச்சயம் உங்களுக்குள் வளரும்.

சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா…!

எம்மிடம் (ஞானகுரு) கேட்டறிந்து கொள்ள வேண்டிய முறைகள் அது எப்படி…? என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்கிறேன்.

சரீரம் என்ற பாத்திரத்தில் உயிருக்கு வேண்டிய ஆகாரத்தைச் சமைக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

மனிதச் சரீரம் சகலத்தையும் ஈர்த்துச் சமைக்கும் திறன் பெற்றது.

உயர் சக்தியின் ஆகாரமான “ஆதி நீர் சக்தி என்ற குளிர்விப்புச் சக்தியே…” தியான வழித் தொடரில் வெப்ப நீர் சக்தியாக மாற்றப்படும் பொழுது… எண்ணத்தின் வலுவிற்கு எது இலட்சியமோ அதுவே பெறப்படும் ஆகாரமாகின்றது.

அந்த ஆகாரத்தைப் பெறும் மூல சக்தியின் சமைப்பின் முன் போடப்படும் உணவுப் பொருள் என்ற அமில குணங்களும் இந்தச் சரீரமாகிய பாத்திரத்தில் நிறைந்துள்ள ஆதி சக்தியின் நீர் அமிலம்
1.தியானம் என்ற அக்கினியில் குளிர்விப்பு நீர் சக்தி வெப்பச் சக்தியாகச் செயல்படும் செயலுக்கு
2.இந்தச் சரீரப் பாத்திரம் தன்னுள் ஈர்த்துச் செயல் கொள்ள வேண்டியது
3.சகல மகரிஷிகளின் அருள் சக்தியே ஆகும்.

விறகிற்குள் மறைந்திருக்கும் நெருப்பின் உணர்வு கொண்டு நல்லாக்கச் செயலை (புறத்திலே சமைக்கும் சமையல் போல்) உண்டாக்குவது போல்
1.மகரிஷிகளின் அருள் என்ற ஜோதித் தத்துவத்தில் இருந்து
2.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு வளர்க்க வேண்டும்.

அதாவது
1.விறகினுள் உறைந்துள்ள நெருப்பைப் பாத்திரம் ஈர்ப்பது போல்
2.பாத்திரத்தில் உள்ள குளிர்வு நீர் சக்தி அந்த வெப்பத்தை ஈர்ப்பது போல்
3.அந்த நீர்ச் சக்தியிலிருந்து எண்ண குண ஆகாரச் சமைப்பு
4.அந்த அருள் சக்தியின் தொடரை ஈர்த்துக் கொள்கிறது.

ஈர்த்துக் கொண்டாலும்… ஆகாரப் பக்குவம் பெற்றுவிட்ட தன்மையை அறிந்துணர்ந்து தெளிவுபடும் செயலுக்கு
1.மாற்று குண எதிர் மோதல் தன்மைகளை விலக்கிடவும் வேண்டும்.
2.சஞ்சல உணர்வுகளை நமக்குள் மோதவிடலாகாது.

பிறவிக்குக் காரணம் ஆசை தான்…! என்ற தொடரை புத்தன் வெளிப்படுத்தினாலும் வெளிப்படுத்தாச் சூட்சமம் புத்தன் அறிந்த அனுபவ ஞான ஆத்ம இரகசியம் “பேரின்பப் பிரம்ம ஐக்கிய லயம்…!” என்பது.

தியான வழித் தொடரில் நிலை நின்று தன் உயிராத்ம சக்தியை வலுக் கொண்ட தொடருக்குச் சகலத்தையும் ஈர்த்திடும் சித்தத்துவ ஆனந்த ஈஸ்வர அனுபூதியைத்தான் புத்தர் பெற்றார்.

ஒவ்வொருவரும் அந்த ஈஸ்வர அனுபூதியைப் பெற வேண்டுகின்றேன்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

சாதாரணமாக சர்க்கஸில் (GYMNASTICS) விளையாடுகிறார்கள் என்றால் சரியாக அந்த அளவுகோல் பிடித்து… பத்து பன்னிரண்டு என்று சுழலச் செய்கிறார்கள். தூக்கிப் போடுவார்கள். அவர்கள் சுவாசித்த அந்த உணர்வின் வேகத் துடிப்பிற்கொப்ப அதைச் செய்கின்றார்கள்.

நாமும் மனிதர்கள் தான்… அவர்களும் மனிதர்கள் தான். பல பல உணர்வுகளையும் அவர்கள் இயக்குகிறார்கள். பல அற்புதங்களைச் செய்கிறார்கள்.

அவர்களின் உடல் வலுவான நிலைகளில் இருந்தாலும்
1.சிறுகச் சிறுக இந்த உணர்வின் எண்ணங்களைப் பாய்ச்சி
2.இதைச் செய்ய வேண்டும்…! என்ற மன உறுதி கொண்டு
3.வில்லைப் போல உடலை வளைக்கிறார்கள்.

ஆனால் ஒரேயடியாக வளைத்தால் ஒடிந்து போகும். “வளைய வேண்டும்…” என்ற அந்த உணர்வின் தன்மை சேர்த்து அந்த உணர்வின் அலைகளை அவர்களின் வலுக் கொண்டு செலுத்தப்படும் போது
1.எலும்பில் உள்ள நிலைகளும்
2.இவர்கள் எண்ணிக் கொண்ட உணர்வுகளும்
3.அதற்குத் தக்கவாறு ரப்பர் மாதிரி ஆகி விடுகிறது.

ஏனென்றால் நுகரும் உணர்வுகள் அந்த எழும்பிலுள்ள அணுக்களுக்கு “நாம் வளைய வேண்டும்…!” என்ற உணர்வு சேர்க்கப்படும் போது
1.அந்த அணுக்கள் புது மலத்தை உண்டாக்கும்.
2.அந்த வலுவான உணர்வுகள் சேர்க்கப்படும் போது வளையும் தன்மை வருகிறது.

இடுப்பு வலிமையாக இருக்கிறது. தாய் கர்ப்பமாக இருக்கும் போது வாயுவின் உணர்வின் உணர்ச்சிகள் மோதப்படும் போது அந்த எலும்பு பாகம் விரிந்து கொடுத்த பின்னாடிதான் குழந்தை வெளியே வருகிறது.

ஒரு இரும்புக் கம்பியையோ கண்ணாடி வளையலையோ வளைக்க வேண்டுமென்றால் நெருப்பு ஜுவாலையில் காட்டினால் வளைகிறது.

இதே மாதிரித் தான் எலும்பு பாகங்கள் விரிவடைந்து குழந்தை பெரிய குழந்தையாக இருந்தாலும் வெளிப்படுத்தும் உணர்வுகளுக்கு அது இடம் கொடுக்கிறது.
1.குழந்தை வெளி வந்த மறு கணம் அந்த எலும்புகள் சுருங்கி விடும்.
2.இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

எலி பார்த்தால் ரொம்ப சிறியது தான். அதனுடைய குட்டி வெளிப்படும்போது பார்த்தால் தெரியும்.

ஆகவே இதைப்போல ஒவ்வொன்றுக்கும் அந்த உணர்ச்சிக்கொப்ப எலும்புகளில் அந்த உணர்வின் அழுத்தம் வரப்படும் போது மோதலில் விரிவடைந்து குழந்தை எளிதாக வெளி வரும் தன்மை உண்டாகின்றது.

ஆனால் கருவில் உருவான சில குழந்தைகள் வெளி வராத நிலை ஏற்படுகின்றது. “குழந்தை திரும்பி விட்டது…!” என்பார்கள். அதனால் அந்த உணர்ச்சி பலவீனம் ஆகும் போது வாயுவின் உந்தல்கள் வரப்படும் போது அந்தக் குழந்தையின் பாகம் சரியாகச் சீர்படுவதில்லை. இயற்கையான முறையில் பிரசவமாவதில்லை.

ஏனென்றால் குழந்தையின் காலோ மற்றதோ முதலில் வெளி வந்தால் அதற்கு மூச்சுத் திணறலாகும். அதைச் சீர் செய்ய விஞ்ஞான அறிவு கொண்டு டாக்டர்கள் சில முயற்சிகளை எடுத்தாலும் கூட ஒன்றும் முடியவில்லை என்றால் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுக்கின்றார்கள்.

அதைப் போன்று தான் எலும்பின் பாகங்களில் அதிகமான மோதல்கள் ஏற்படும் போது சர்க்கஸில் விளையாடக் கூடியவர்களுக்கு அதற்குண்டான அமிலங்கள் சுரக்கப்பட்டு அந்த அணுக்களின் தன்மை பெருக்கப்பட்டு எலும்புகள் ரப்பர் மாதிரி வேலை செய்யும்.

ஆனால் நாம் வளைக்க முடியுமா…? அவர்கள் எடுக்கும் உணர்வை நாம் கூட்டினால் நமக்கும் அந்த நிலைகள் வரும். ஒரு நான்கு நாட்களுக்குச் செய்து பாருங்கள்.
1.அந்த உணர்வின் பாகங்கள் நரம்புகள் நீண்டு வருவதும்
2.அந்த ஆசிட் பவர் கூடுவதும்
3.அந்த அணுக்களுக்கு ஆகாரம் கிடைப்பதும்
4.அதனுடைய மலங்கள் விரிவாவதும் இதெல்லாம் வரும்.

ஏனென்றால் இயற்கையின் நியதிகள் இவைகளெல்லாம்.

டாக்டர்களுக்குப் படிப்பவர்கள் அவர்களுக்குக் கற்பிக்கும் போது அந்தக் கற்பனைக்கு உண்டான நிலைகளை அதைப் படித்துப் பாடம் செய்து இன்ன இன்னது தான் செய்கிறது…! என்று சொல்வார்கள்.

1.படித்த பாடத்தின் நிலைகள் அவர்களுக்குள் இருந்தாலும்
2.சுவாசித்ததன் உணர்வுகளால் தான் எலும்புகள் விரிவடைந்தது என்றும்
3.நுகரும் உணர்வுகள் மாறினால் அந்த இயக்கங்கள் மாறும் என்பதும் அவர்களுக்குத் தெரியாது.

இயற்கையில் உருவான நிலையிலிருந்து விளைந்தது என்ற நிலையில் அதிலுள்ள அமிலங்களை பிரித்து பார்த்து அந்த அமிலங்களை மாற்றுவதற்கு மாற்று உபாயமான செயல்களை (இயற்கையில் விளைந்த உணர்வுகளை) செயற்கையில் செய்கிறார்கள்.

ஆடு மாடுகளிலிருந்தும் மூளை போன்ற பாகங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு அதற்குள் இரசாயனங்களைச் சேர்த்து மற்றவர்களுக்கு மருந்தாக நேரடியாகவும் கொடுக்கிறார்கள்… மாத்திரையாகவும் கொடுக்கிறார்கள்.

இரத்தத்தில் கலக்கச் செய்து வலு கொண்ட நிலைகளாக மனித உடலில் உள்ள அணுக்களுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய பக்குவத்தை ஊட்டுகின்றார்கள். விஞ்ஞான அறிவு கொண்டு இப்படி எத்தனையோ நிலைகளை மாற்றலாம்.

பால் குறைவாக இருக்கக் கூடிய மாட்டிற்குப் பாலை அதிகமாகச் சுரக்கச் செய்ய மரபு அணுக்களை மாற்றி அமைக்கின்றார்கள். இன்னும் சொல்லப் போனால் குளோனிங் (CLONING) மூலம் உருவாக்கி கன்றுவாக இருக்கும் பொழுதே சில சக்திகளைக் கூட்டிப் பால் அதிகமாகச் சுரக்கும் தன்மையைக் கொண்டு வருகிறார்கள்.

ஆணையும் பெண்ணாக மாற்றுகின்றான். பெண்ணையும் ஆணாக மாற்றுகின்றான். விஞ்ஞான அறிவு கொண்டு புலிகளையும் மிருகங்களையும் கொடூரமான நிலைகளையும் பாம்புகளையும் கொடூரமாகக் கொன்று குவிக்கும் ஓநாய் இனங்களையும் அவைகளுக்குள் மற்ற மற்ற உணர்வுகளைச் சேர்த்து அதன் அறிவின் ஞானத்தை இயக்கும் சிறு மூளைகளுக்கே எட்டும் படிச் செய்கின்றான்.

அப்போது அந்தக் கொடிய மிருகங்கள் இவன் சொல்லும் உணர்வுகளை எடுத்து மனிதனுக்கொத்த நிலையில் இவன் சொல்வதைக் கேட்கும் நிலைக்குக் கொண்டு வருகின்றான்.

அந்த மிருகங்களைப் பிடிப்பதற்கு என்ன செய்கின்றான்…? எவன் மிருகத்தைப் பிடிக்கின்றானோ அவன் உடலை நக்கச் செய்கின்றான். அவ்வாறு நக்கி அந்த மணங்களை எடுத்துக் கொண்ட பின் இவன் உடலின் உணர்வுகள அந்த மிருகத்திற்குள் சேர்க்கப்பட்டு அடுத்து அது சாந்தமான நிலைகளில் வருகின்றது.

இப்படிச் சிறுகச் சிறுகச் சிறுகச் சேர்த்து விஞ்ஞான அறிவு கொண்டு அதை மாற்றி இவன் சொன்னபடி எல்லாம் கேட்க வைக்கின்றான். இவன் மணத்தை நுகர்ந்தவுடன் அது விட்டு விடும் நிலை வருகிறது.

சிறு பாம்பாக இருந்தாலும் சில வகையான உணவுகளைத் தன் வாயிலே போட்டு தன் உணர்வைக் கலந்து அதை மற்ற உயிரினங்களை தின்னச் செய்கின்றான்.

இவன் எண்ணத்திற்குண்டான நிலைகளைப் பரப்பி அதற்குத் தக்க ஆசிட்டைக் கலந்து கொடுத்து விடுகிறான். அதைச் சாப்பிட்டுப் பழகியதும் அந்த உயிரினங்கள் “இவன் வா…!” என்று கூப்பிட்டால் அப்படியே வரும். இதை எல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

[su_heading size=”28″]06.04.2021 உபதேசம்[/su_heading]

இந்த உடலுக்குப் பின் என்ன…? என்று நாம் போகும் மார்க்கங்களைத் தான் இனி பார்க்க வேண்டும்…!

 

நம் பூமி விண்வெளியிலிருந்து பல நிலைகளை எடுக்கும் பொழுது துருவப் பகுதியில் சில அலைகள் வரும் பொழுது குவித்து என்ன செய்யும்…? இன்னொரு பக்கம் போகும். பரவலாகக் கொண்டு வருவதற்கு இந்த மாதிரி ஆகும்.

தென் துருவப் பகுதியில் இதே மாதிரிச் சில அலைகள் வரும். அந்தப் பகுதிகளில் விமானம் சென்றால் கரைத்துவிடும். இதைப் போன்ற சில விபத்துகள் உண்டு.

ஆனால் பூமிக்குள் இருக்கும் இதையெல்லாம் நாம் ஆராய்ச்சிக்குக் கொண்டு செல்ல வேண்டியதில்லை.
1.இயற்கையின் நிலைகள் இப்படி இருக்கிறது என்று உணர்த்துவதற்காகவும்
2.சில உண்மைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் சொன்னது.

ஆனால் அது என்ன…? இது என்ன…? என்று இப்படி ஒவ்வொன்றையும் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தால் இந்தப் பூமியில்தான் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும்.

1.இதைக் கடந்து சென்ற அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நாம் பெற்றோம் என்றால்
2.நாம் அங்கே அந்தச் சப்தரிஷி மண்டலம் போகலாம்.

ஆனால் மனிதன் எதை வேண்டும் என்றாலும் அறிந்து கொள்ள முடியும்…! என்பதற்காகச் சொன்னோம்.

உதாரணமாக ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் இன்னென்ன மண் எல்லாம் சேர்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்கின்றோம். எல்லாம் சேர்த்த பிற்பாடு தவறு ஏற்படுகிறது. தவறைத் திருத்த வேண்டுமா இல்லையா…?

அது போல் தான் இந்த உடல் வாழ்க்கையில் புவியின் பிடிப்பிலிருந்து தப்பிப்பதற்கு என்ன வழி…? என்றால் அந்த மகரிஷிகள் அருள் வழி தான்,

ஆக அந்த மகரிஷிகளின் உணர்வுடன் நாம் ஒன்றிச் சென்றால் குறுகிய காலத்திற்குள் சப்தரிஷி மண்டலம் போகலாம்.
1.ஆனால் ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்தால்
2.இங்கே போய்… அங்கே போய்… முடிவில் அந்தச் சப்தரிஷி மண்டலம் அடைய முடியாது.

ஆனால் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகமாகும். ஆனால் அறிவின் தன்மை மழுங்கி விடும்.

நம் குருவின் (ஈஸ்வரபட்டர்) தன்மை எதுவாக இருக்கின்றது…? என்றறு உணர்தல் வேண்டும்
1.குரு இட்ட கட்டளையை மீறி…
2.நம் ஆசையின் நிலைகளைக் குருவாக்கி விட்டால்
3.இதன் நிலைகளைத் தான் பார்க்கச் செல்லும்.

இங்கே பார்க்க வேண்டியது தான்…! அதற்குள் காலம் கடந்துவிடும்…! அதற்குள் இந்த உடல் மடிந்துவிடும்… இந்த உடலுக்குள் சேர்த்த நிலைகள் நிலை இழந்துவிடும்…!

ஏனென்றால் இன்றைய விஞ்ஞான உலகில் நேரமில்லை. நஞ்சுகள் பரவிக் கொண்டிருக்கிறது.

இந்த உடல் நன்றாக இருக்கும் பொழுதே அருள் ஞான உணர்வுகளை விளைய வைத்துக் கொள்ளுங்கள்…! என்று திரும்பத் திரும்பச் சொல்கிறேன் (ஞானகுரு).

அதற்காக வேண்டித் தான்…
1.உங்கள் உணர்வுகளை எந்தெந்த அளவிற்கு அருள் ஞானிகள் காட்டிய அருள் வழிகளில் கொண்டு வர வேண்டுமோ
2.அதைச் செயல்படுத்தி உங்கள் நினைவின் ஆற்றலை அங்கே பெருக்கச் செய்கின்றோம்.

எந்த நேரத்தில்… எந்தச் சந்தர்ப்பத்தில் இனி எது வந்தாலும் “ஈஸ்வரா…!” என்று உயிரை எண்ணி அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று நினைவை அங்கே கொண்டு போக வேண்டும். அந்த உணர்வு நமக்குள் வலுப் பெற வேண்டும்.

அது இல்லையென்றால் வளர்க்க முடியாது. அதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி உங்களுக்குள் இந்த வலுவின் தன்மை கொண்டு வருவதற்குத்தான் தொடர்ந்து உபதேசிப்பது.

உருவத்தின் மீதே பற்று வருகிறது… ஞானிகள் சொன்ன அருவத்தை எண்ணுவார் இல்லை – ஈஸ்வரபட்டர்

 

ஆண்டாண்டு காலமாக மனித குல சமூக நெறி வாழ்க்கை அமைப்பில் ஒழுக்கவியலாக வரைமுறை மீறாச் செயலுக்கும் உயர்வெண்ணம் சிதறிடாத் தன்மை பெற்றிட வாழ்க்கை நெறிச் சட்டங்கள் மகரிஷிகளால் உணர்த்தப்பட்டதிலெல்லாம்
1.அறிவின் ஆற்றலும் வைராக்கிய சிந்தனையுமாகத் “தான் யார்…?”
2.இந்த ஜீவ பிம்ப சரீரம் பெற்றதன் நோக்கம் என்ன…? என்று
3.தன்னை உணரக்கூடிய வழி பிறந்து…
4.உயர் நிலை பெற வேண்டிய ஞானம் கொண்டு பெறும் மெய்ப் பொருளை
5.நாம் உணரத் தான் முடிந்திடும்.

மனோசக்தியின் ஆற்றலே இன்றைய விஞ்ஞானத்திற்கும் “புரியாத ஒரு புதிர் தான்…!”

அப்படியானால்… தன்னைத்தான் உணர்ந்து உயர் ஞான சிந்தனை கொண்டு மெய் ஞானத்தின் பொருளாக இயற்கைச் சக்திகளை அறிந்து கொண்டது எந்தச் சக்தியால்…?

1.உயிராத்ம சக்தி பலம் பெற்றிருந்தால்
2.அதை வெளிப்படுத்தும் செயல் தன்மை கொண்டாலே மனோசக்தி என்று பெயர் பெறுகின்றது.
3.ஆனால் இவைகளைக் கண்டு வியப்பு மேலிடுவதைத் தவிர ஆக்கச் சக்திக்கு அது ஒன்றும் பயன் இராது.

பிண்டமாகிய சரீரத்தைக் கொண்டே அண்டத்தை அறிந்து கொள்ளும் செயலில் பூமித்தாய் ஈர்த்திடும் சூரியனின் சக்திகளை சுவைத்து வளம் பெற்ற இயற்கையின் செயலைத் தன் சரீரத்தின் உள்ளேயும் அதே தொடர் நிகழ்வு பெறுகின்ற தன்மைகளை அறிந்து கொண்டாலும்
1.பரவெளியின் சூட்சமத்தில் சூரிய ஒளிக்கதிர் தன்மைக்குள்
2.இரு வித உயிரணுக்கள் (சிவசக்தி அணுக்கள்) கலந்து செயல்படும் செயலை
3.ஞான விழிப்பார்வை கொண்டு அறிந்து கொள்வதே “அரூபலிங்கம்…!”

அந்த உயிரணுக்கள் சரீரத்தில் செயல்படும் நிலைகளில் சரீரம் கொண்டு ஆண் பெண் உடல் கூறுகளாக உயிர் தொகைகளாக ஜீவாத்மாக்களாகின்றது.

அரூபலிங்கம் என்ற அந்தப் பால்வெளி சூட்சமத்தைச் சரீர செயலில் கண்டு தெளிந்து அந்த உயர் சக்திகளை வான இயல் தன்மைகளில் உண்மைப் பொருள் காட்டி ஸ்வரூபலிங்கமாகச் சமைத்துப் பேரின்பச் சக்திகளைப் பெற்று “உயர் ஞான வளர்ப்பாக உயர் நிலை பெறவே வழி வகைகளை ஞானிகள் காட்டினார்கள்…!”

அப்படிக் காட்டியிருந்தாலும்.. இன்றோ சிவலிங்க வடிவு (உடலின் ரூபங்கள்) என்றாலே சிற்றின்ப இரசனைக்கே எண்ணத்தைச் செலுத்தித் தன் நிலையையே மறக்கின்றான் மனிதன்…! எண்ணுகின்ற எண்ணம் அன்றோ செயல்படுகின்றது.

இயற்கையின் செயல்பாட்டை உயர் ஞானத்தால் அறிந்த ஞானிகள் பூமியின் சுழற்சியில்
1.ஆகாயம் காற்று நீர் நிலம் நெருப்பு என்ற பஞ்சபூதத் தன்மைகளில் ஓசை ஒளி என்ற செயல் நிகழ்வுகளையும்
2.ஞாயிறு கோள் திங்கள் கோள் பூமியின் தொடர்பு கொண்ட செயல்பாட்டையும்
3.உயிரணுக்களின் அசைவு நிலைகளையும்
4.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட செயல்பாட்டில்
5.தன் எண்ணத்தால் தெளிந்த அந்தப் பேரானந்தப் பெருநிலையை
6.”கூத்தாண்டவன்…!” என்ற உருவச் சமைப்பில் இயற்கையின் தத்துவத்தைக் காட்டினார்கள்.

சிவன் உருவமும்… உருவத்தின் ஆனந்த லயமும்… அலங்கரித்துக் காட்டிய தத்துவங்களும்…
1.“இயற்கையின் பால் ஒன்றச் செய்த தன்மைகளை உணர்ந்து கொண்டால்…”
2.மனித எண்ணத்திற்கு மரண பயமில்லை…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இந்த வாழ்க்கையில் எப்படித்தான் இருந்தாலும் எதாவது குறைபாடுகள் வரும். எவ்வளவு நல்லது செய்தாலும் கூட இந்த நிலை வரும்.

நம்மைச் சங்கடத்திலோ சலிப்பிலோ வெறுப்பிலோ ஆழ்த்தக்கூடிய நிலைகள் நமக்கு வந்தால்…
1.அந்த உணர்வுகள் எல்லாம் மூக்கின் வழியாகச் சென்று
2.புருவ மத்தியில் உயிரிலே பட்டுத்தான் அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.
3.ஆண்டென்னாவான (ANTENNA) நமது கண் தான் அதை எடுக்கின்றது.
4.அதன் அழி ஆன்மாவிலிருந்து சுவாசித்துக் கொண்டே இருக்கும்
5.அந்தக் கெட்ட அணுக்கள் தான் வளரும்… சிந்திக்கும் தன்மை போய்விடும்.

அந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும்…?

“ஈஸ்வரா…” என்று சொல்லி ஒரு பிரேக்…!

நம் கண்ணின் நினைவை உயிருடன் ஒட்டி ஈஸ்வரா…! என்று எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். அப்பொழுது அந்தச் சங்கட அலை மூக்கின் வழி உள்ளே போவதை இங்கே தடுக்கின்றது.

நெருப்பிலே ஒரு பொருள் பட்டால் தான் அந்த வாசனை தெரியும். அதே மாதிரி உயிரிலே பட்டால் தான் இயங்கும். ஆகவே
1.தீமை செய்யும் உணர்வுகள் உயிரிலே படாமல் அதை முதலில் தடுத்துப் பழக வேண்டும்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இதன் வழி (புருவ மத்தி) உள்ளுக்குள் இழுக்க வேண்டும்.
3.இது தான் பிராணயாமம் என்பது.

சூரியன் இழுத்துத் தான் எல்லாவற்றிற்கும் ஒளி அலைகளை அனுப்புகின்றது. அதாவது காற்றில் வரக்கூடிய அலைகளை அது எது எது வருகிறதோ… அதை எல்லாம் எடுத்து அந்தந்த அலைகளாக இயக்கச் செய்கின்றது

சூரியகலை என்கிறபோது நாம் என்ன செய்கின்றோம்…?

நம் ஆறாவது அறிவு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று சொல்லி “உயிர் வழி…” உள்ளுக்குள் நேரடியாகக் கொண்டு போகிறோம்.

அதே சமயத்தில் நம் ஆன்மாவில் இருப்பது சுவாசத்தின் மூலம் உள்ளே போகாதபடி தடைப்படுத்துகின்றோம்.

1.நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி எடுத்தோமோ அந்த உணர்வுகளை
2.உடலில் உள்ள எல்லா அணுக்களிலும் இணைத்து இயக்குவதுதான் பிராணயாமம்.
3.நல்ல அணுக்களை நமக்குள் உயர்த்த வேண்டும்… அதனால் தான் ஆறாவது அறிவு கார்த்திகேயா என்பது…!

ஆனால் இவர்கள் பிராணயாமத்தை எத்தனையோ அர்த்தங்களில் கொண்டு போகின்றார்கள்.

[su_heading size=”28″]05.04.2021 உபதேசம்[/su_heading]

போற்றலில் எந்தப் பலனும் இல்லை… ஏங்கிப் பெற்றால் தான் வளர்ச்சி கிடைக்கும்

 

அந்த அருள் ஞானிகளின் வித்தினை உரமாக இடப்பட்டு உயர்ந்த சக்தியினை அவர்கள் பெற்ற நிலையினை உங்களுக்குள் உபதேச வாயிலாக இணைத்துக் கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).
1.நான் இணைத்தாலும் நீங்கள் உங்கள் நினைவு கொண்டு
2.உபதேசங்களைக் கூர்ந்து கவனித்தால்தான் அது பதிவாகி முளைக்கும்.

நிலத்தில் விதைகளை மேலெழுந்தவாரியாகப் போட்டு விட்டால் எறும்புகள் தின்று விட்டுப் போய்விடும். அது போல் இங்கே கேட்ட உபதேசத்தை மேல் மட்டத்தில் ஆகா…! என்று போற்றி விட்டால் இது முளைக்காது.

போற்றலை விட்டுவிட்டு அதைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வினைக் கொண்டால் அது உங்களுக்குள் முளைக்கும்.
1.போற்றுதல் என்பது புறத்தால் தள்ளுவது…!
2.ஏங்குவது என்பது அகத்திற்குள் விளையச் செய்வது…!

இந்த இரண்டு நிலைகளில் உள்ளோரும் எந்த அளவுகோல் கொண்டு இதை ஏற்றுக் கொள்கின்றனரோ அதற்குத் தக்கவாறு வித்தின் தன்மை இணைந்து மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவரும் நிலையும் வருகின்றது.

ஆனால் இங்கே பெரும் பகுதி போற்றித் துதிப்போர் தான் பலரும் உண்டு. சாமியைப் (ஞானகுரு) பற்றிப் புகழ்ந்து பேசுவார்கள். ஆனால்
1.புகழ்ந்த நிலையில் கொண்டு ஏற்றுக் கொள்ளும் நிலை இழந்து
2.அருள் மகரிஷிகளின் சக்திகளைக் கவர்ந்திடும் நிலை அற்றுப் போய்விடும்.

அதுவே தனக்குள் கவர்ந்திடும் அந்த ஏக்க நிலை இருந்தால்தான் அது ஆழப் பதிந்து அதனின் துணை கொண்டு புவியின் ஈர்ப்பால் அது கவர்ந்து விடும்.

இந்த உடலின் ஈர்ப்புக்குள் நாம் பதிந்து கொண்ட உணர்வு எதுவோ அதைக் கவர்ந்து அதனின் நிலைகள் விளையச் செய்வதற்குத் தான் இந்த உபதேசமே…!

அந்த மகரிஷிகளின் உணர்வைச் சிறிது காலம் இணைத்துக் கொண்டே இருந்தால் அது தன்னிச்சையாக வளரும் தன்மை வரும். உடலை விட்டு நாம் அகன்ற பின் அந்த உணர்வின் வித்துக்கள் தீமையை அகற்றி மெய் உணர்வின் தன்மையாக என்றும் ஒளியின் நிலையாக நம்மை அடையச் செய்யும்.

இந்த உடலிலிருந்து தான் அதைச் செய்ய வேண்டும்.

உங்களுக்கு உபதேசித்ததை இரவு முழுவதும் எண்ணத்தால் எண்ணி
1.அந்த மகரிஷிகள் உணர்வைப் பெற வேண்டும்
2.அறியாது வந்த தீமைகள் விலக வேண்டும்
3.தூய்மைப்படுத்தும் உணர்வுகள் வளர வேண்டும் என்று
4.தியானத்தின் மூலம் ஒவ்வொரு நொடியிலும் நீங்கள் செயல்படுத்த வேண்டும்.

நாம் தொழில் செய்யும் பொழுது அல்லது மற்ற வேலைகள் செய்யும் பொழுதோ உடலில் பட்ட அழுக்கை உடனுக்குடன் எப்படித் தூய்மைப்படுத்திக் கொள்கின்றோமோ இதைப் போல மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதி கொண்டு எண்ணத்தால் நாம் இணைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அதனின் சக்தியை நாம் இப்படிக் கூட்டினால் தான் இது விளையும். அது அல்லாது
1.சாமி செய்வார்… சாமி தான் செய்வார்…! என்ற எண்ணத்தில் இருக்கக் கூடாது.
2.ஒரு தடவை எண்ணினேன் பதிவு செய்து கொண்டேன் என்ற எண்ணத்தில் விட்டுவிடக் கூடாது.
3.மீண்டும் மீண்டும் நம் எண்ணத்தால் அதைக் கவர்ந்து வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

ஏனென்றால் ஒரு வித்து செடியாக முளைத்த பின் தன் தாய்ச் செடியின் சத்தைக் கவர்ந்து இணைத்துக் கொண்டு அது தன்னிச்சையாக எப்படி எடுத்து வளர்கின்றதோ அதைப் போல
1.நமது உடலில் அந்த விளையும் பருவத்தை எட்டும் வரையிலும்
2.நம் எண்ணத்தால் மகரிஷிகளின் உணர்வை இணைத்துக் கொண்டே வர வேண்டும்
3.அந்த வித்திற்கு உணவை ஊட்டிக் கொண்டே இருக்க வேண்டும்

அது உருவாகித் தன் இனத்தைப் பெருக்கி விட்டால்… பின் உங்களுடைய எண்ணம் தேவையில்லை. அது தன்னிச்சையாக எடுத்து வளரும்…!

உடலில் வந்த தீமைகளை அகற்றி விட்டுத் தீமையை அகற்றிடும் உணர்வாக விளைந்து உடலை விட்டு வெளியே சென்றாலும் தூய்மையான ஒளியின் உணர்வாக இது விளையும். உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷிபத்தினி என்ற ஆத்ம ஐக்கியக் கலப்பு பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஒலியாகி… ஒளியாகி… நீராகி… உருவமானது தான் அண்டவெளியில் அனைத்துமே…!

சப்த நாத சுழலும் சக்தி (ஒலி)… உயிரணுவின் ஈர்ப்பில் எண்ணம் கொண்டு வளரும் செயல் நிலையில்… ஈர்த்தெடுக்கும் அனைத்துச் சப்த அலையின் குண விசேஷ ஆகார அமில நியதி என்ற வகையில்… தன் ஒளி சக்தியின் காந்தத்தைப் புடமேற்றிக் கொள்கிறது.

தனக்குள் புடமேற்றிய நிலையில் எண்ண வலுவாக்கும் சுழல் சக்தியாக எந்த அமிலத்தின் வீரியத்தைக் கொண்டு ஈர்த்ததோ அந்த நட்சத்திர அமில சக்தியின் நிறம் மணம் அனைத்தையும் காத்திடும்
1.ஆதி சக்தியின் நீரமிலத் தொடர்பில் எண்ணம் கொண்டு அத்தகைய உயிரணுக்கள் பிறப்பிற்கு வந்தாலும்
2.சரீரத்தைச் சுற்றியும் அந்தச் சப்த அலை நாதங்கள் சுழல் வட்டமாகச் சழன்று ஓடிக் கொண்டே இருக்கும்.

ஆத்மாவை உணரத் தலைப்படும் ஞானி… ஆத்மாவின் தொடர் சரீரமாக உருமாறும் பஞ்ச பூதங்கள் செயல் தன்மையில்… அந்தப் பஞ்ச பூத ஆரோக்கிய அமிலத்தை ஈர்த்திடும் பக்குவமாக… அமுதமாகச் செயல் கொள்ள சரீரம் ஈர்த்திடும் செயலுக்கு…. பரவெளியில் உயிரணுக்கள் உதித்திடும் சூட்சமமே… சரீரம் பெற்ற பிறகு…
1.ஆண் பெண் என்ற இரு சரீரத்தில் செயல்படும் விதம் – உயிரணுக்களின் செயல் தன்மை…
2.ஆணின் உடலிலிருந்து வருவதைச் சுக்கிலம் என்றும்
3.பெண்ணின் உடலிலிருந்து வருவதைச் சுரோனிதம் என்று கூறிய வகைகளில்
4.சிவ சக்தியின் கலப்பு ஆண் பெண் என்று பேதம் உள்ளது.

இருந்தாலும் உயிர் சக்தியின் வலுவிற்கு ஒவ்வொருவரும் உயிரான்ம இணைப்பின் செயலுக்கு வலுக்கூட்டிக் கொள்ளும் பஞ்சபூதத் தொடரில்
1.ஆண் சுக்கிலத்தையும் பெண் தன் சரீரத்தில் சுரோனிதத்தையும்
2.உயர் ஞான வளர்ப்பின் செயலுக்கு வலுக் கொள்ள வேண்டும்.

அதாவது சரீர கலப்பில் உயிர் தொகையை (குழந்தைகளை) உருவாக்குவது போல் எண்ண வலுவின் வீரிய சக்தியால்
1.ஆத்ம ஐக்கிய நிலையில் ஒத்த எண்ணம் கொண்டு
2.சிவசக்தி ஜோதிக் கலப்பாக மூலத்தில் படைப்பின் படைப்பு சக்தி கொண்டு
3.நமக்கென்று ஒரு மண்டலத்தையே சிருஷ்டிக்கலாம்.

சரீரம் கொண்ட நிலையில் காந்த ஒளி அலைகளை எண்ணம் கொண்டு பாய்ச்சி “நெற்றிக் கண்” என்ற ஞான விழிப்பார்வையால் அறிந்து ஈர்க்கும் தன் வளர்ச்சியின் வளர்ப்பிற்குத் தன்னைச் சுற்றி ஓடும் சப்த நாத அலைகளை ஈர்த்துச் செயல் கொண்டால் அதுவே தான் பெறும் சக்திக்கு உறுதுணையாகப் பாதுகாப்பு வளையமாக நம்மைக் காத்திடும்.

வளர்ச்சியின் நல் வினைச் செயலுக்கு எதை எண்ணி ஈர்க்கின்றோமோ…
1.அந்த எண்ணத்தின் ஜீவத் துடிப்பிற்கே வலுக்கொடுக்கும்
2.அதிதீவிர எண்ண வலுக்கூட்டும் அபூர்வ ஒலி ஈர்ப்பாக
3.உயர் ஞான ரிஷி பத்தினி சக்தியை ஈர்த்திடும் நிலைக்கு
4.அதே தொடரில் ஈர்க்கப்படும் அனைத்துச் சக்தியின் வழிமுறைக்கும்
5.இச்செயலின் தொடரில் வளப்படுத்திக் கொள்ள வேண்டும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒரு செடியிலிருந்து அதன் (மணம்) சத்தை வெளிப்படுத்தினால் சூரியன் கவர்ந்து அலைகளாக இந்தப் பூமியில் பரவச் செய்கின்றது. அதே செடியை நாம் கண் கொண்டு பார்த்து அது பற்றித் தெரிய வேண்டும் என்ற உணர்வுடன் நுகர்ந்தால் அந்த மணம் நம் உயிரிலே படுகிறது.

தெரியவில்லை என்றாலும் அதை நுகர்ந்து தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றோம்.
1.இதனுடைய குணம் என்ன…? மணம் என்ன…?
2.இது என்ன செய்யும்…?
3.நம்மை வேதனைப்படுத்துமா…? உடம்புக்கு நல்லதாகுமா…? என்று சிந்திக்கின்றோம்.

செடியின் சத்தைச் சூரியன் கவர்ந்து வைத்திருந்தாலும் அந்தச் செடியின் வாசனையை நுகர வேண்டுமென்றால் நமது கருவிழி ருக்மணி அந்தச் செடியை நமக்குள் பதிவாக்க வேண்டும்.

ஏனென்றால்
1.நாம் இயங்குகின்றோமா…? நம்மை மற்றது இயக்குகின்றதா…?
2.அல்லது நாம் ஒன்றைத் தவறு செய்கின்றோமா…?
3.அல்லது நம்மைத் தவறு செய்ய வைக்கின்றதா?
4.அப்படி தவறு செய்ய வைக்கின்றது நமது உயிரா…? நாம் நுகர்ந்த உணர்வா…? நமது உடலா…? என்பதனை எல்லாம்
5.நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இது எல்லாம் இந்த இயற்கையின் நியதிகள்.

உதாரணமாக வேப்ப இலை என்று வைத்துக் கொள்வோம். அந்தச் செடியின் சத்தை நுகர்ந்த பின் ஒரு கசப்பென்ற நிலைகள் வருகின்றது

அந்த உணர்வின் மணங்கள் நம் உயிரிலே பட்டுக் கசப்பின் உணர்ச்சிகளாக நம் உடலிலே படரும். அப்பொழுது என்ன செய்கின்றது…?

1.அந்த உணர்வுகள் பட்டதும் அந்த உணர்ச்சிகளாக நம்மைத் தூண்டும்
2.ஓய்ய்…ய்ய்ய்…! கசப்பை நுகர்ந்தால் ஓ…ய் என்று உமட்டலாக வரும்
3.அப்போது இயக்குவது யார்..? நாம் நுகர்ந்த உணர்வு இயக்குகின்றது
4.ஆனால் அந்த உணர்வை இயக்கிக் காட்டுவது யார்..? உயிர்
5.அந்த உணர்ச்சிகள் நம் உடலுடன் சேர்த்தவுடனே அதுதான் நம்மை இயக்குகின்றது… ஆண்டாள்…! (காரணப் பெயர்)

வேப்ப மரத்தைக் கூர்ந்து கண் கொண்டு பார்த்தால் அதைப் பதிவாக்குகின்றது நம் கண்ணின் கருவிழி.

அந்த மரத்திலிருந்து வரக்கூடிய உணர்வு என்ன…? என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றோம். அந்த ஆசையால் அது கவரும் சக்தி பெறுகின்றது.

அப்பொழுது அந்த உணர்வு உயிரிலே படுகின்றது. அது என்ன செடி…? நல்லது செய்யுமா… கெட்டது செய்யுமா…? என்று நாம் ஆராய்ச்சி செய்வோம்.

வாந்தி வரும்… என்று சொன்னால் அதை நீக்கி விடுகின்றோம்.

ஒருவருக்கு அம்மை வார்த்திருந்தது என்றால் இது விஷத் தாக்குதல். அதற்கு இந்த வேப்பிலையை முழுதாகப் போட்டு இரண்டு மஞ்சளைப் போட்டுக் கலக்கித் தெளித்தால் உடலில் அம்மை என்ற அந்த விஷக் கிருமிகளை மாற்றுகின்றது.

ஆனால் அதே வேப்பிலையை நாம் உணவாக உட்கொள்ளும்போது உமட்டல் வருகின்றது… வாந்தியாகி வெளியே தள்ளுகின்றது.

இருந்தாலும் அந்த வேப்பிலையை அதிகமாகச் சாப்பிட்டால் நம் உடலில் உஷ்ணம் வருகின்றது அதை அளவுடன் சாப்பிட்டால் அந்த வேப்பிலை நமக்குள் இருக்கும் பல கசப்பின் உணர்வுகளை நீக்குகின்றது.

1.அதனதன் சந்தர்ப்பத்திற்கு அது வேலை செய்கின்றது
2.இவை எல்லாம் இயற்கையின் நியதிகள்…!

[su_heading size=”28″]04.04.2021 உபதேசம்[/su_heading]

மலை போன்ற எண்ண உறுதி கொண்டு அசுர குண மாயைகளை மாய்த்தொழிக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

உலக எண்ண ஓட்டத்தில் நாம் செயல்படும் காலங்களில் கீழாம் அறிவு நிலையில் பூவி ஈர்ப்பின் சுவாச ஈர்ப்பில் சிக்குண்டு ஒவ்வொரு நாளும் நாம் அலைக்கழிக்கப்படுகின்றோம். (இதை இல்லை என்று யாரும் சொல்ல முடியாது)

அலைக்கழிக்கப்படுவதோடு மட்டுமல்லாது
1.நம்முடைய எண்ண வலு வீரியமும் கீழான அறிவு என்ற செயலுக்கே ஈர்க்கப்பட்டு
2.அந்தந்த இச்சையின் குணங்களை ஏற்படுத்திக் கொண்டு கலக்கமடையும் காலங்களாக
3.மீள வழியில்லாதபடி மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் கால சகடத்திலேயே (CYCLE) சுழன்று கொண்டிருக்கின்றோம்.

உண்மை உயர் ஞானத்தைப் பெற விழைவோனுக்கு இதைப் போன்ற பந்தக் கட்டுக்களைத் தகர்த்தெறிய ஞானிகளால் சூட்சமப்படுத்திக் காட்டப்பட்டதே “மத்தகமும் கோடும் (கோடாயுதமும்)…!”

1.தீதெண்ணச் சங்கட அலைகளை எல்லாம் தவிர்த்து
2.மனித எண்ணம் என்ற உறுதி… “மலை மேல் நின்று…!”
3.காரிருளாகக் காட்டிய அசுர குண மாயைகளை “கோடாயுதத்தைக் கொண்டு…” மாய்த்தொழிக்க வேண்டும்.

சிற்றறிவின் ஆசைகள் எல்லாம் அகன்று பேரின்ப சாயுஜ்யமாக (உயிருடன் கலக்கும் நிலை) மேலாம் அறிவின் ஞானமாகப் பரவெளி ஞானத்தில் கலந்திடும் செயலுக்குத் தத்துவமாகக் காட்டப்பட்டதே “நீல வண்ண ஒளி பெறும் ஆத்மாவின் மறைபொருள்…”

1.மத்தகம் என்றாலே முன் மூளைப்பகுதி இரண்டும் சிறு மூளைப் பகுதி ஒன்றாக
2.ஞான உணர்வின் எண்ணம் ஆட்கொண்ட காலத்தில்
3.நெற்றிப் பொட்டில் ஜோதித் தத்துவமாக அறிந்திட வேண்டிய செயல் ஆகும்.

நீலவண்ண ஆத்மா சூட்சமத்தில் கலந்திடவே பேரின்பப் பெருநிலையில் இணைந்து செயல் கொள்ளும் மேலெழும் சக்தியாகக் காட்டியதே கணங்களின் பதி… “கணபதி…”

1.பரவெளியில் படர்ந்துள்ள ஒளிகாந்த மின் நுண் அணுக்கள் (நடத்திடும்) எண்ணம் கொண்டு (நட்சத்திரங்களின் கதிரியக்கச் சக்திகள்)
2.ஒன்றுடன் ஒன்று இணையும் செயலில் உயிர் ஆத்மாவாக மேலும் எண்ண வலு கூட்டிக் கொள்ள ஈர்த்திடும் தொடரில்
3.அதன் எண்ணமே வீரியமாகச் செயல் கொள்ளும் பக்குவத்தில்
4.சரீரத்தில் ஆண் பெண் சங்கமத்தில் கருவாகத் தோன்றி வினையின் நாயகன் விநாயகன் என்ற சொல்லுக்கேற்ப
5.மேற்கொண்டு தான் ஈர்த்து உயிராத்மாவாகப் பின் கருவாக வந்து உதித்த செயலில்
6.அதே எண்ண வலுவின் ஈர்ப்பினால் மேன்மேலும் உயிரணுக்களைக் கூட்டிக் கொண்டு
7.கணங்களாகிய சரீர உயிரணுக்களுக்கு.. “உயிராத்மா” – பதி என்ற பொருள்பட கணபதி ஆகின்றது.

அதே நிலை மனிதச் சரீரத்திலும் உயர் ஞான அறிவு கொண்டு விளங்கிக் கொள்ளும் பக்குவத்தில் ஓ…ம் என்ற ஒலி நாதம் சொல் வடிவ சூட்சமாகச் சுட்டிக் காட்டினர் ஞானிகள்.

1.சிரசைக் காட்டி சிரசில் மேற் பகுதி அசையா நிலையும்
2.தாடை என்ற கீழ்ப் பகுதி அசையும் நிலையும்
3.ஓ…ம் என்ற பிரணவமாகிய யானைகள் கலந்தன..! என்று சூசகப்படுத்தி
4.வாயிலும் உள் நாக்கில் மேலெண்ண நடுப்பகுதியும் உச்சிக்குக் கீழும் ஒளியின் சுடர்ந்த நிலையைத் தெளிவுபடுத்திக் கூறியவற்றில்
5.கடைவாயின் பற்கள் விநாயக உருவத்தில் கொம்பு என்றெல்லாம் மறைமுகப்படுத்தியதற்குப் பொருள்கள் பல உண்டு.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்று உணர்ந்திடல் வேண்டும்.

மனிதனுடைய இந்த உலக வாழ்க்கையில் உடல் பற்றில் வரும் எத்தனையோ எண்ணங்களையும் உணர்வுகளையும்
1.வைராக்கிய சிந்தனை என்ற கொம்பாயுதம் கொண்டு
2.மத்தகத்தால் தகர்க்கப்பட்டால்
3.மெய் ஞானிகள் பெற்ற மேலாம் அறிவு நிச்சயம் சித்திக்கும்…! என்பதே பொருள்.

தீமைகளை நீக்கக் கண்ணன் காட்டும் திருட்டு வழி

 

இன்று மனிதனாக இருக்கும் நாம் நல்ல செழுமையாக இருந்தாலும் பிறருடைய துயர் துடைக்கக் கேட்டுணர்ந்த அந்தத் துயரமான உணர்வுகள் நமக்குள் வந்த பின் அந்த உணர்வுகள் நம் நல்ல உணர்வுடன் இரண்டறக் கலந்து விடுகின்றது.

பின் அது ஓங்கி வளர்ந்து விட்டால்
1.நம் உடலை… மகிழ்ச்சியாக வைத்திருந்த இந்த உடலின் சாரத்தை
2.அது செயல்படாது தடுத்து விடுகின்றது.
3.அதனால் உடல் நலிந்து… உணர்வுகள் குறைந்து… எண்ணங்கள் நலிந்து…
3.நம் வாழ்க்கையில் எதனையுமே வலுவான நிலையில் செய்ய முடியாத நிலைகளுக்குக் கொண்டு செல்கின்றது.

இதிலிருந்து நம்மைக் காத்திட… இத்தகைய நஞ்சிலிருந்து நாம் மீள்வதற்கு நமது குரு காட்டிய அருள் வழியில் நாம் ஆத்ம சுத்தி செய்வோம் என்றால் நம்மைக் காத்திட முடியும்.

அதற்காக வேண்டித்தான்,,,
1.அந்த அருள் ஞானிகள் கண்டுணர்ந்த இந்த உணர்வின் சாரத்தை
2.உங்களுக்குள் காத்திடும் எண்ண உணர்வுகளுக்குள் இணைத்து
3.அதை வலுப் பெறச் செய்யும் நிலைக்கு இதை யாம் (ஞானகுரு) உபதேசிப்பது.

மாமகரிஷி வியாசர் காட்டிய அருள் வழியில் கண்ணன் (நமது கண்கள்) காட்டிய நிலைகள் கொண்டு, “அதோ வருகின்றான் நாரதன்…!” என்று நாம் எண்ணும்போது புற நிலைகள் கொண்டு நமது ஆன்மாவைச் சுத்தப்படுத்திச் செயல்படுகின்றோம்.

1.நம் கண்ணின் நினைவலைகளை விண்ணை நோக்கிச் செலுத்தி…
2.இப்போது உங்களுக்கு உபதேசித்த உணர்வுகளின் வலுவின் துணை கொண்டு
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெற வேண்டும் என்று
4.கண்ணின் நினைவை உயிரோடு ஒன்றச் செய்ய வேண்டும்.

உயிரான கண் அகக்கண்… நம்முடய கண் புறக்கண். புறக்கண்ணால் அகக் கண்ணின் (உயிரின்) நினைவு கொண்டு அந்த ஆற்றல் மிக்க சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று நாம் ஏங்கினால் “சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கிவிடுவான்” என்பதாகும்.

நம் உடலான சிவத்திற்குள்…
1.உயிர் அகக்கண்ணாக இயக்கும் நிலையில்
2.புறக்கண்ணின் நினைவு கொண்டு நினைவினை உயிருடன் ஒன்றி,
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி
4.அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் ஜீவாத்மாக்கள் பெற வேண்டும் என்று
5.உள் நினைவில் கண்களை மூடி
6.நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து அணுக்களிலும் படர வேண்டும்” என்று செய்வதே கண்ணன் காட்டிய திருட்டு வழி.

கண்ணன் காட்டிய நிலைகள் கொண்டு இந்த உணர்வுகளை (மகரிஷிகளின் உணர்வுகளை) உள் செலுத்தும் போது அந்த ஞானிகளின் உணர்வுகள் “பிராணாயாமம்”

அந்த ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் ஜீவன் பெறச் செய்து அது வளர்ச்சியாகும் பொழுது
1.நாம் ஒரு பொருளைப் பாத்திரத்தில் போட்டு வேக வைக்கும் பொழுது
2.அதனின் சத்து கொதித்து அதனின் மணம் வெளி வருவதைப் போன்று
3.அந்த மணத்தின் வீரியத் தன்மை (ஞானிகளின் அருள் சக்தி) உள் நின்று வெளி வருவதை
4.நாம் வேதனைப்பட்ட உணர்வின் தன்மையை இது பிளக்கின்றது.

முதலிலே சொன்ன… பிறர் துயர் துடைக்க எடுத்துக் கொண்ட துயரமான உணர்வுகள் நம் உடலுக்குள் சேர்க்கும் முன் நம் ஆன்மாவாக மணமாக மாறுகின்றது.

அது மடி மேல் ஆன்மாவாக இருந்தாலும்
1.நாம் கண்ணின் நினைவு கொண்டு உயிருடன் ஒன்றி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும்
3.அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவாத்மாக்கள் பெற வேண்டும் என்று
4.கண்ணான கண்ணின் நினைவுகளை உள் செலுத்தப்படும்போது நாம் எண்ணிய உணர்வுகள் பிராணாயாமம்…!

அது ஜீவன் பெற்று அந்த மணத்தின் வீரியத் தன்மை உள் நின்று வெளி வருவதை மடி மீது நம் வேதனைப்பட்ட உணர்வின் தன்மையைப் பிளக்கின்றது.

இந்த முறைப்படி ஆத்ம சுத்தி செய்தால் எத்தகைய தீமைகளையும் நாம் பிளக்க முடியும். நாம் செய்த நன்மை நிலைத்திருக்கும். நமக்கும் உயர்வைத் தான் தரும்.

[su_heading size=”28″]03.04.2021 உபதேசம்[/su_heading]

“மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுக்கும் விண்ணின் ஆற்றலை” நாம் பெறப் பழகிக் கொள்ள வேண்டும்

 

நம்முடைய ஆறாவது அறிவு என்பது தெளிந்திடும்… அறிந்திடும்… சக்தி கொண்டது. அதனால் தான் “பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன்…” என்று ஞானிகள் காட்டுகின்றார்கள்.

அதாவது மனிதனாக ஆன பின் நாம் சிருஷ்டிக்கும் தன்மை பெற்றவர்கள். இருந்தாலும் இன்று நாம் எதை சிருஷ்டித்துக் கொண்டிருக்கின்றோம்.

மதம் காட்டிய அறநெறிகளை அதனின் உணர்வுகளைப் பதிவு செய்து கொண்டு அந்த உணர்வைத்தான் நாம் வளர்த்துக் கொள்கின்றோம். அதன் வழி கொண்டு சிருஷ்டிக்க முடிகின்றது. ஆக மொத்தம் நாம் கற்றுணர்ந்தது… நமக்குள் உள்ளது தான் இங்கே வரும்.

ஒரு வேப்பமரம் தன் கசப்பின் தன்மை வெளிப்படுத்தும் பொழுது
1.அந்தக் கசப்பான அந்த மணத்தின் தன்மை கொண்டு தான் தன்னை வளர்த்துக் கொள்கிறது
2.மற்றொரு மணத்தின் தன்மை அருகே வந்தால்தன் கசப்பின் உணர்வால் உந்தி வெளியே தள்ளுகின்றது

இதைப் போன்றுதான் நமக்குள் எந்தெந்த உணர்வின் தன்மையை இணைத்துக் கொள்கின்றோமோ அதற்கொப்ப பல உணர்வின் சத்துகள் சேர்த்து கசப்பின் உணர்வாக மாறி விட்டால் அதனின் செயலாக்கங்களாகவே மாறுகிறது.

மற்ற நல்ல உணர்வுகளோ ஞானத்தின் வழித் தொடரோ வந்தால் ஒதுக்கித் தள்ளுகின்றது. இதை எல்லாம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே தீமைகளை அகற்றிடும் உணர்வாக ஆறாவது அறிவு பெற்ற நாம் என்ன செய்ய வேண்டும்..?

1.தீமைகளை அகற்றிய அருள் ஞானியின் உணர்வினை நமக்குள் அதிகமாக்கி அந்தக் கணக்கைக் கூட்டவேண்டும்.
2.இந்தக் கணக்கு… கூட்டல் சரியாக இருந்தால் மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றும்.

இதிலே உங்களுக்குச் சிரமம் ஒன்றும் இல்லை…!

எத்தகைய நிலைகள் தீமைகள் வரினும்… அடுத்த நிமிடம் உங்களுக்குக் கொடுத்த அருள் சக்தியை உபயோகித்து அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று பல முறை எண்ணி எடுத்தல் வேண்டும்.

சித்திரபுத்திரன் (சித்திரம் + புத்திரன்) என்பது போன்று…
1.கண்ணிலே பார்த்துப் பதிவாக்கும் அந்த மகரிஷிகளின் உணர்வின் தன்மையை
2.உடலில் புத்திரனாக உருவாக்கிக் கொள்ளுங்கள்.
3.பாசத்தால் இதை வளர்த்து விடுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி வளர வேண்டும் என்று எண்ணும் பொழுது இந்தப் பாசத்தால் தீமைகளை அகற்றிடும் உணர்வாக உங்களுக்குள் விளையும்.

இந்தக் கணக்கின் பிரகாரம் உங்கள் உணர்வுகள் உயிருடன் ஒன்றிடும் நிலையாக
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எங்கிருந்து பெற்றீர்களோ
2.அவரின் அரவணைப்பில் தீமைகளை அகற்றிடும் அரும் பெரும் சக்தியாக
3.என்றுமே நிலை கொண்ட ஒளிச் சரீரமாக அது இயக்கத் தொடங்கும்.

இதைச் சாதாரணமாக நினைக்க வேண்டாம். குருநாதர் கோடி… கோடி… என்று சொல்லி எம்மை அடித்துத் தான் காட்டினார்.

1.என்னுடைய (ஞானகுரு) நினைவின் ஆற்றலை விண்ணிலே பாயும்படி செய்தார்.
2.பின் அந்த உணர்வு எவ்வாறு செயலாற்றுகிறது…? என்றும் காட்டினார்.

ஆக ஒரு சொல் தான்…! கோடி…கோடி கோடி…கோடி என்று குருநாதர் சொன்னார்…! அதற்கு நான்
1.“தெலுங்கில் கோடி என்றால் கோழி…!” என்று இடக்காகக் கேட்டதற்கு
2.இப்படியெல்லாம் பல உண்மைகளை உணர்த்தி அந்த விண்ணிலிருந்து பெறும் ஆற்றலை உணர்த்தினார்.

இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுக்கும் விண்ணின் ஆற்றலைப் பெறுதல் வேண்டும். மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே நாம் வாழ்தல் வேண்டும்.

மகேஸ்வரன் லலிதை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆகாரத்தை நாம் உண்ணும் நிலையில்… உண்ணும் ஆகாரங்களின் சுவை குணம் மணத்திற்கொப்ப கண்களால் பார்த்து எடுக்கும் சுவாசத்தின் எண்ணத்தால் ஜீரணத்தின் செயல்பாடு தொடங்கினாலும் “வாயின் கடைவாய்ப் பகுதியில் நடைபெறும் ஓர் சூட்சமம் உள்ளது…!”

ஓ…ம் என்ற வடிவத்தின் நாதமாக ஆகாயவெளி உயிரணுக்களின் கலப்பால் அந்த ஓங்கார நாதத்தையே ஒலி கொண்டு ஒளியாக்கும் தொடருக்கு வருதல் வேண்டும்.

மனிதச் சரீர அமைப்பில் சிரசையே ஓ…ம் என்ற வடிவமாகக் கண்ணுற்றுப் பார்க்கலாம். சிரசின் கீழ் தாடைப் பகுதி அசைவதிலும் ஓர் சூட்சமதைக் கண்டு கொண்டு வான இயல் தத்துவத்தையே எண்ணத்தால் உணர்ந்து தெளிந்தவர்கள் மெய் ஞானிகள்.

சிவசக்தியின் அணுக்கள் கலந்திடும் செயலில் கண்டப்பகுதியை (தொண்டை) ஆகாயம் என்றும் அங்கு கலந்திடும் அணுக்களுக்கு “{மஹேஸ்வரன் – லலிதை” என்று சூட்சமப்படுத்திக் காட்டினார்கள் ஞானிகள்.

அதாவது உணவாக உட்கொள்ளும் ஆகாரத்தையே அமில மூலங்களாக” மாற்றி… “பஞ்சேந்திரியங்கள் வழியாகச் செயல்படுத்திடும் நாடிகள் சரீரத்தின் கதியை இயக்குகிறது.

நாம் வழி காட்டிடும் தியானத்தின் தொடரில் உணர்வு (உணர்ச்சிகளாக) கொண்டு எடுத்திடும் ஒளிகாந்த சக்தியின் வீரியம் கொண்டு சரீரத்தில் சக்தியை ஈர்த்துப் பெற்று அதை விளைய வைத்து “நீல வண்ண ஒளி ஆத்மாவாக” ஒவ்வொருவரும் ஆக்கம் பெற வேண்டும்.

1.உடலுக்குள் பரப்பும் சக்திகள் அனைத்தும் மேலான அறிவெண்ணம் கொண்டு
2.உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் தியானமாக ஒன்று குவிக்கப்பட்டு
3.நீல வண்ண ஆத்மாவாக்கிடும் செயலுக்கு – “உந்திடும் விசைத் தன்மையாக”
4.கீழ் தாடைப் பகுதியினுள் அமைவு காட்டப்பட்ட மறை பொருளைத் தெளிவாக்கி விட்டால்
5.அங்கு செயல்படும் உண்மை தெளிவுறும்…!

நீலகண்டா…! என்று கழுத்தளவில் நிறுத்தி விஷத்தையே ஆக்கச் சக்தியாக மாற்றிடும் பக்குவ நிலை கிடைக்கும். அதை ஒளியின் அணுக்களாக உருவாக்கும் சூட்சமமும் புரியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

இன்று எலெக்ட்ரானிக் கடிகாரத்தின் மூலம் மணிகளைக் காட்டுகின்றார்கள். “அதில் உள்ள எலக்ட்ரானிக்” அதன் குறித்த நிலைகள் வரப்படும்போது அது வந்தவுடனே மணிகளையும் தேதிகளையும் மாற்றி மாற்றிக் காட்டுகின்றது.

1.ஆனால் அதில் சிறிது நீர் பட்டுவிட்டால் எல்லாம் மறைந்து விடுகின்றது.
2.எதிர்மறையான உணர்வுகளை அங்கே பதியச் செய்யும்போது அது தாறுமாறாக வேலை செய்துவிடும்.
3.அதில் உள்ள பேட்டரி சார்ஜ் கம்மியாகி விட்டாலோ தப்பான கணக்கைக் கொடுக்கின்றது.

இதைப் போலத்தான் நம் உயிரின் இயக்கமும்…!

நாம் எண்ணும் சோர்வு சங்கடம் வேதனை போன்ற எண்ண அலைகள் அதிகமாகச் சேர்த்த பின்…
1.நமது உயிர் அந்த உணர்வின் தன்மைகளை இயக்கப்படும்போது
2.இயக்கத்தின் துடிப்பு கம்மியாகின்றது.

அப்படிக் கம்மியாகும்போது உடலின் சுருக்க… அந்த உணர்வுகள் குறையத் தொடங்கி விடுகின்றது. அந்த நேரத்தில் சீரான நிலைகளிலே கணக்கைப் பார்க்க முடியாது. நம்முடைய சொல்லும் சீராகச் சொல்ல முடியாது.

ஏனென்றால் நமது உயிர் “எலெக்ட்ரிக்காக” இருந்து… நுகரும் உணர்வுகளை “எலக்ட்ரானிக்காக (உணர்ச்சிகளாக)” அது உற்பத்தி செய்து கொண்டே இருக்கும்.

1.அதில் எந்த உணர்வின் தன்மை அதிகரிக்கின்றதோ
2.அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் மாற்றி மாற்றிக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
3.அந்த உணர்வுகளில் மாற்றங்கள் எதுவோ கண் விழி கொண்டு கலர்கள் மாறும்.
4.வெளி வரும் சொற்கள் கொண்டு உணர்ச்சிகள் மாறும்.
5.அந்த உணர்வின் சத்து கொண்டு உடலில் நிறங்கள் மாறும்.

இந்தத் தியான வழியில் சீராக இருந்தால் நீங்கள் ஒருத்தரைப் பார்த்தவுடனே ஜோசியம் சொல்லி விடலாம். ஆனால் இதைத் தெரிந்து நீங்கள் ஜோசியம் சொல்லத் தொடங்கி விடாதீர்கள்.

ஏனென்றால் இதை “அங்கக்கலை…!” என்று சொல்வார்கள். பார்த்து ஒரு சொல்லைச் சொல்லி விட்டால் எலலா உண்மைகளும் வெளியில் வரும்.

உங்களிடம் நான் (ஞானகுரு) சில நேரம் கேள்விகளையும் கேட்பேன். அப்பொழுது பதிலாக உங்களிடம் இருந்து என்னென்ன வருகின்றது…? என்றும் பார்ப்பேன்.

அதைத் தெரிந்து கொண்ட பின் உங்களுக்கு என்ன நல்ல மாற்றங்களைக் கொடுப்பது…? என்ற நிலையில் சிலதுகளை இணைத்துக் கொடுப்பேன்.

அதாவது உங்கள் சொல்லுக்குள் வேறு ஏதாவது நாம் மாற்றிச் சொல்லும் பொழுது… இந்த உணர்வு வந்தவுடன் உங்களுக்குள் இருப்பதை எல்லாம் கக்கிக் கொண்டே இருப்பீர்கள்.

இந்த அலைகளை தொடர்ந்தவுடன் எந்த அருள் உணர்வை எதை எதை இணைத்து உங்களுக்குள் கலக்க வேண்டும் என்று சொல்லி யாம் கொடுக்கின்றோம்..
1.தமாஷாகச் சொல்வது போல் இருக்கும்…
2.ஆனால் அதற்குள் ரொம்ப விஷயம் இருக்கும்.

அதாவது உங்களுக்கு எந்த அறிவைக் கொடுக்க வேண்டும்…? என்ற வகையில் கொடுக்கின்றோம். ஆகையினால் இது “குரு வழி…!”

பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் படிக்கின்றார்கள் என்றால் வாத்தியாருக்கு ஒருத்தர் மேல் வெறுப்பாகி விட்டது என்றால் அந்த வெறுப்பின் தன்மையினால் அவர் பாடத்தைக் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்வார்.

வாத்தியார் அழுத்தமாகச் சொன்னவுடன் அந்த மாணவனுக்குப் பயத்தின் உணர்வு வந்தது…! என்றால் வாத்தியார் என்ன சொன்னாலும் இங்கே அவனுக்குள் பதிவாகாது. ஏனென்றால் அந்த உணர்வின் இயக்கத்தின் நிலைகள்.

1.அதே சமயத்தில் பார்வையின் நிலைகள் என்னவாகும்…? இருட்டாகும்… கலர் கறுப்பாகும்.
2.எந்த நல்லதையும் பார்க்க முடியாது.
3.இருள் சூழ்ந்த நிலையாகும். உடலுக்குள் அது நஞ்சாகும்.

ஏனென்றால் நல்ல பொருளுக்குள் நஞ்சு கலந்தால் எப்படியோ அது போல் நல்ல சிந்தனை வராது. விஷத்தின் தன்மை கொண்ட உணர்வாக மாறிவிடும்.

அச்சமயம் பதிவு செய்த நிலைகள் அது சீராக வராது. சொல்வது அர்த்தமாகின்றதல்லவா…!

இது எல்லாம் நமக்குள் மோதும் எதிர்மறையான இயக்கங்களால் வரும் போது ஏற்படும் நிலைகள் தான்…!

[su_heading size=”28″]02.04.2021 உபதேசம்[/su_heading]

இன்னொரு பிறவியை மீண்டும் சொந்தமாக்க வேண்டாம்…!

 

உங்களுக்கு எது சொந்தம்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்த மனித வாழ்க்கையில் எப்பொழுதுமே அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெருக்குங்கள். அதைச் சொந்தம் ஆக்குங்கள்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறருடைய குறைகளைச் சொந்தமாக்க வேண்டாம். அந்தச் சொந்தத்தைக் கொண்டாடவும் வேண்டாம்

ஏனென்றால் அதைக் கொண்டாடி விட்டால் பகைமையான உணர்வு கொண்டு எந்தக் கூட்டத்தில் நீங்கள் சேர்ந்தாலும் அதன் இனப்பெருக்கமாக மாறி விடுவீர்கள்.

நமக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தும் எதனை எடுக்கின்றோமோ உணர்வின் செல்கள் அனைத்தும் அதனதன் கூட்டமைப்பாக மாறும்.

உதாரணமாக மான் அதனுடைய இனக் கூட்டமைப்பாக இருந்தாலும் அதுவே மற்ற மானின் குணங்களுக்கு ஒப்ப இணைந்து கொண்டால் வகை வகையான மான்களாக வருகின்றது. அப்படி உருவான பின் அதனதன் கூட்டம் அதனுடன் சேர்ந்து கொள்கின்றது.

1.இதைப் போலத்தான் இந்த உடலுக்குள் எதனின் பெருக்கமாக எந்தெந்தக் குணத்தை அதிகமாக்கிக் கொண்டு வருகின்றோமோ
2.நம் உடலுக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தும் அந்த உணர்வின் தன்மையாக மாற்றி
3.அதனின் கூட்டமைப்பான நிலைகள் கொண்டு அந்தக் கூட்டங்கள் எங்கே வாழுகின்றதோ
4.அங்கே நம் உயிர் அழைத்துச் சென்றுவிடும்.

அதாவது நம் உயிரான்மா மற்றொரு கூட்டமைப்புக்குள் சென்று அதனின் உடலுக்குள் நுழைந்து ஆடாகவோ கோழியாகவோ மாடாகவோ புலியாகவோ பாம்பாகவோ மாற்றிவிடும்.

கேரளாவில் ஒடியன் மந்திரம் என்று உண்டு. அந்த மந்திரங்களை நூறு முறை ஆயிரம் முறை என்று சொல்வார்கள். ஆனால் வெறும் மந்திரம் என்று தான் அவர்களுக்குத் தெரியும்.

ஆனால் அந்தந்த உயிரினங்களில் பெருக்கக்கப்பட்ட உணர்வுகள் ஒலி அலைகளாக எடுக்கப்பட்டு இந்த உணர்வின் தன்மை எப்படி வருகின்றதோ இதைப் போல ஒரு மாட்டின் இறைச்சியின் உணர்வு கொண்டு அந்த உணர்வின் ஒலிகளைக் கூட்டப்படும் பொழுது அந்த உணர்வின் அலைகள் இங்கே ஆன்மாவில் பெருகும்…. அங்கே அந்த உடலுக்குள் செல்லும்.

மீண்டும் இதனை அகற்றும் உணர்வோடு இன்னொருவர் சொன்னார் என்றால் இந்தக் கூட்டை விட்டு மீண்டும் வெளியே வரும். மீண்டும் இன்னொரு கூட்டிற்குள் சென்று தனித் தன்மையாக அதனுள் சென்று அதுவாக இயக்கும். இதைப் பார்க்கலாம்…!

இதை எல்லாம் நான் (ஞானகுரு) தெரிந்தே சொல்கின்றேன். பாடப் புத்தகத்தில் பார்த்துப் படித்துச் சொல்லவில்லை.

குருநாதர் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தைகளைச் சொல்லிக் கொடுத்தார். அந்த உணர்வின் தன்மை பெருக்கப்படும் பொழுது அந்தந்த உடலுக்குள் செல்ல நேர்கின்றது.

மாட்டிற்குள்ளும் போகச் செய்தார் பாம்பிற்குள்ளும் போகச் செய்தார் யானைக்குள்ளும் போகச் செய்தார்.
1.இதை எல்லாம் எளிதில் சொல்லவில்லை. நேரடியாகக் கண்ட உண்மைகள் இது.
2.அப்படியே விட்டால் என்ன ஆகும்…? என் உயிரான்மா என்ன ஆகும்..!
3.ஏனென்றால் குருநாதர் என்னை எப்பொழுதுமே அவர் கைப் பிடித்து (கைவல்யம்) வைத்திருந்தார்.

இதைப் போல உணர்வுகளை இயக்கச் செய்து அதனின் உணர்வின் தன்மை கவர்ந்து கொண்டபின் உயிரான்மா உடலை விட்டுச் சென்ற பின்
1.எந்த நிலை பெறுகின்றது…? எதனின் உடலில் ஈர்க்கப்படுகின்றது…?
2.மனித உடலில் இதைப் பெருக்கிய பின் அந்த உடலுக்குள் போய் அதை எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையையும்
3.அதிலிருந்து மீண்டும் வெளி வர வேண்டும் என்றால் என்ன செய்வது…?
4.மனித உடலில் இதை எல்லாம் உருவாக்கப்படும் போது
5.இந்த உணர்வின் தன்மை கொண்டு அடுத்த பிறவி எப்படி வருகிறது…? என்றெல்லாம் நேரடியாகக் காட்டினார் குருநாதர்.

இந்த உடலுக்குப் பின் நாம் இனி பிறவி இல்லை என்ற நிலை அடைய வேண்டும். அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும். அதற்குத் தான் இதை எல்லாம் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

குருவாக வழி காட்டுபவன் எப்படி இருக்க வேண்டும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

“மெய்யை மெய்யால் உணர்தலும் ஒன்று…
அறிவை அறிவால் அறிதலே நன்று…!

1.கோடாயுதம் கொண்டு மத்தகத்தால் தகர்க்கப்பட
2.மேலாம் அறிவு சித்தித்தது…! என்பது
3.மெய்ப் பொருள் காணும் நிலை.

வழி வழியாக வந்த இந்தத் தத்துவங்கள் அனைத்தும் “குருவால் உபதேசிக்கப்பட வேண்டும்…!” என்று மறைபொருள் ஆக்கப்பட்டுவிட்டது.

குரு என்பவன் மெய்ப் பொருளின் உண்மையை நாடிக் கோபம் சுடு சொல் தவிர்த்து மெய் ஞானம் உரைத்தலே நன்று. ஆனால்
1.இனிய சொல்லால் வார்த்தைகள் ஆடி (ஏமாற்றும் நிலை)
2.நிலையற்ற பொருள் செல்வத்தை அடைவதிலும் அல்லது
3.அதை அளிப்பதற்கும் தான் ஒரு கருவியாகச் செயல்படும் எண்ணத்தையும் தவிர்த்திடல் வேண்டும்.

தான் பெற வேண்டியதைப் பெற்றே… உயர்த்திடும் வழியாகப் பேரருள் செல்வத்தைப் பெற்றிடவே… பூமியின் ஈர்ப்புப் பிடிப்பில் சிக்குண்டுவிடும் எண்ணச் செயல்களை எல்லாம் களைந்திடல் வேண்டும்.

குரு என்பவன்…
1.மெய்ப் பொருளை வாய்மையால் உபதேசிக்கும் நிலையில் நின்று
2.அறிவின் அமைதிக்கு வழி காட்டிட வேண்டுமப்பா…!

ஆனால் இன்றைய குருமார்கள் செல்வத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். எந்தச் செல்வத்தைக் கண்டுபிடிக்கப் போகின்றார்கள்…?

வாழ்க்கை நிலையில் அருள் செல்வம் பெற்று உயர் நிலை பெற வேண்டியவன்…
1.செல்வச் செழிப்பை எண்ணத்தில் கொண்டு…
2.அதி ஆசைக்குத் தன்னையே அடகு வைத்து…
3.உயர் ஞானத்தால் ஆத்ம பலம் பெற்றிட வழிகாட்ட வந்த உபதேசியின் (குரு) நிலை எல்லாம்
4.குறி சொல்பவனின் நிலை ஆகிவிட்டது…!

அந்த நிலை நமக்கு வேண்டாம். “நான் தான்…!” என்ற நிலையே உயர் ஞான வளர்ப்பிற்குத் தடைக்கல் ஆகிவிடும்.

அறிவை அறிவால் அறிவது என்பதே தத்துவப் பொருள் காட்டப்பட்ட உண்மையின் சாரங்களைக் கைக் கொள்ள வேண்டும் என்பதே…!

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

எத்தனையோ கோடி உணார்வுகள் சேர்த்துத் தான் ஒரு நாதமாகின்றது. ஆகவே அணுவின் தன்மை பல கோடி ஆனாலும் இந்த உணர்வின் தன்மைகள் இணைத்து இணைத்துப் பல கோடி ஆகின்றது கோடி…கோடி… என்று…

இந்தக் “கோடி” என்ற நிலைகள் வரப்படும் பொழுதுதான்
1.ஒரு சொல் எவ்வாறு வருகின்றது…?
2.அதனுடைய மணம் எவ்வாறு வருகின்றது…?
3.அதனுடைய குணம் எவ்வாறு இயக்குகின்றது…?

இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு செடியை எடுத்துக் கொண்டால்
1.அதனுடைய “மணம்” வேறு.
2.அதை நாம் சுவையாகச் சுவைக்கப்படும்போது “குணம்” வேறு.
3.அதுவே நம்முடைய எண்ணத்துடன் சேர்த்து “உணர்வாக” இயக்கும் நிலைகள் வேறு.
4.அதுவே உடலாக இயக்கி உணர்வாக வரும்போது “அமுங்கும்” நிலை வேறு.
5.ஒரு காரத்தின் உணர்வை எடுத்துக் கொண்டால் நமக்குள் “கோபமே” அதிகமாகச் சேரும்
6.அதே சமயத்தில் நம்மைப் பார்ப்போருக்கும் உடலில் “எரிச்சல்” வரும்.

இதைப் போல பல கோடி உணர்வின் தன்மை தனக்குள் வரும்போது ஒருத்தரைப் பார்த்தவுடனே வெறுப்பு வருகின்றது. அவருடைய மணத்தை நாம் சுவாசிக்கும்போது
1.அந்த உணர்வுகள் நம்மை அறியச் செய்கின்றது
2.இந்த உணர்வின் சத்து சொல்லாக வெளிப்படுகின்றது
3.”அயோக்கியன்” என்று… அந்த உணர்வின் சொல்லாக நாதங்களாக மாறும்.

அதாவது…
1.நாம் நுகர்ந்து பார்க்கும்போது “மணமாகின்றது…”
2.உயிரோடு ஒன்றி இயக்கப்படும்போது “உணர்வாகின்றது..”..
3.இது சொல்லுடன் இணைத்து வரப்படும்பொழுது சுருதி மாறுகின்றது.

இரண்டு பையன்கள் இருக்கின்றார்கள் என்றால் அதிலே இனிமையானவனைப் பார்க்கப்படும்பொழுது வாடா கண்ணு…! என்ற சொல் வருகிறது.

இன்னொருத்தன் மோசமான நிலைகளைப் பேசப்படும்போது அவனைப் பார்க்கும்போது ஒரு மாதிரியாக இருக்கும் அவனைப் பார்க்கும்பொழுது என்ன… என்னப்பா…?! என்போம்.

ஏனென்றால் அந்த உணர்வுகள் எதுவோ அதற்குத் தகுந்த “சுருதி” இங்கே வரும். நம்முடன் இணையும் சுருதிகள் எதுவோ அதற்குதகுந்த “நிறங்கள்” வரும். நிறங்கள் எதுவோ அதற்குதகுந்த “மணங்கள்” வரும். மணங்கள் எதுவோ அதற்கு தகுந்த “எண்ணங்கள்” வரும்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதல்லவா…?

கோபமாக அடிக்கடி பேசிப் பாருங்கள்…
1.அந்தக் கோபம் வருவோருக்கு அவர்கள் உடல் முதலில் “சிவப்பாக” இருக்கும்.
2.கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாகக் கோபம் கூடிக் கொண்டே வந்தது என்றால் உடல் “கருத்துவிடும்…”

அப்பொழுது அந்த மணமும் அந்தச் சுவையும் மாறும். எடுத்துக் கொண்ட உணர்வு அதிகமாகக் கோபித்து வரும்போது நிறம் மாறிக் கொண்டே வரும்.

அதைப் போல ஒரு கோபித்தவரை வேகமாகப் பார்க்கின்றீர்கள். அந்தக் கார உணர்வுகள் பட்டவுடன் கண் சிவந்து போகின்றது…. உடலில் நடுக்கமாகின்றது. அந்த உணர்வின் இயக்கம் அதுவாகின்றது.

அந்த மணத்தின் தன்மை… உமிழ் நீர் நாக்கில் சுவை மாறுகின்றது. கோவித்துவிட்டுப் போய் நல்ல சுவையான சாப்பாடைச் சாப்பிட்டோம் என்றால் இந்த கோபத்தின் உணர்வுகள் வரும். நல்ல சுவையை அறிய முடிவதில்லை.

கோபத்தால் நினைவுகள் வரும்பொழுது நல்லதை நாம் அறிய முடியாது… உணர்வால். ஏனென்றால் நாம் மணத்தால் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் எப்படி இயக்குகின்றது என்ற நிலையை தெரிந்து கொள்ள வேண்டும்.

மகிழ்ச்சியாகப் பேசும்போது பார்த்தால்… முகத்தில் “பளிச்…” என்று நிறம் மாறும். இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே சொல்கிறேன்.

[su_heading size=”28″]01.04.2021 உபதேசம்[/su_heading]

ஞானிகளின் உணர்வைப் பெறும் தகுதியை உங்களுக்கு எப்படி ஏற்படுத்திக் கொடுக்கின்றேன்…?

 

ஒரு தீமை செய்பவனைப் பார்த்துப் பதிவு செய்து கொண்டபின் “இப்படிச் செய்தான்… செய்தான்…” என்று தீமையின் உணர்வுகளை நமக்குள் பெருக்கும் பொழுது அந்த கணக்கின் அளவுகோல் கூடும் பொழுது நாமும் தீமை செய்யத் தொடங்கி விடுகின்றோம்,

தீமை செய்பவன் என்று அவனைச் சொல்கின்றோம்…! ஆனாலும் அவன் மீது இருக்கும் தீமையான எண்ணம் நமக்குள் அதிகமாக வரும் பொழுது தீமைகள் வளர்ந்து வளர்ந்து… தீமையின் கணக்கே கூடிக் கூடி தீமையின் விளைவே வருகின்றது.

தீமை செய்யும் நினைவுகள் வரும் பொழுது தீமையின் உடலாக மாறுகின்றது… அந்தத் தீமையின் நிலைகளினால் உடலில் நோயாக மாறுகின்றது.

அதனால் வரும் வேதனையின் தன்மை கூடினால் இதனின் கணக்கின் பிரகாரம் அந்தத் தீமையின் உணர்வுகளை வளர்த்துக் கொண்ட பின்…
1.எவனால் தீமையானதோ அவனின் இடத்தைத் தேடிக் கொள்கிறோம்
2.அங்கேயும் தீமையை உருவாக்குகின்றோம்
3.அவனுக்குள் சென்று அதையே முழுமையாக்குகின்றோம்
4.அந்த உடலையும் வீழ்த்துகின்றோம்…!

எவன் எவ்வாறு சொன்னானோ அவனை வீழ்த்தி… “நீ அவ்வழியே செல்…! நானும் என் வழியிலே செல்கின்றேன்…” என்று கீதையிலே நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் என்பது போல ஆகிவிடுகின்றோம்.

ஆக… எந்த நஞ்சின் தன்மை அளவுகோல் கணக்கு எந்த அளவு அதிகமாகின்றதோ இதைப் போல ஆன பின் தேளிடமோ பாம்பிடமோ நரியிடமோ நாயிடமோ இதைப் போன்ற உயிரினமாக நாம் உருவாக நேரிடும்.

1,நம் உயிரின் வேலை அது தான்.
2.ஏனென்றால் உயிர் நெருப்புக்குச் சமம் தான்
3.நெருப்பிலே எந்தப் பொருளைப் போட்டு நாம் கலக்கின்றோமோ
4.அதில் வேக வைத்த அந்தப் பொருளின் சுவையும் மணமும் தான் வரும்.

அது போல நம் உயிரின் தன்மை நாம் நுகரும் உணர்வின் தன்மை எதுவோ… அதை உயிரணுக்களாக மாற்றிப் படைத்து விடுகின்றது.

நாம் கண்ணால் பார்க்கும் பொழுது பதிவாகி உணர்வால் நுகரும் தன்மை வருகிறது. எதனின் உணர்வைத் தனக்குள் எடுக்கின்றோமோ இந்த உணர்வின் அலையாக உடலின் அமைப்புகள் வருகின்றது.

சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் என்று சொல்வது போல்… நாம் எதனின் நிலைகள் கொண்டு உற்று நோக்கி அதைப் பெற வேண்டும் என்று எண்ணுகின்றோமோ இந்த உணர்வின் சத்து நமக்குள் பதிவாகி உடலிலே விளைந்து அதனின் கணக்கின் பிரகாரம் அந்தக் கூட்டமைப்புக்குள் செல்வோம்.

1.ஆகவே அந்த மெய் ஞானியின் உணர்வு கொண்டு என்றும் பிறவா நிலை என்ற நிலையை அடைய
2.அவர்கள் அருளுடன் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் கூட்டி
3.அந்த ரிஷிகளுடன் இணைந்து இருப்பதே மேல்…!

மீண்டும் மீண்டும் சொல்கிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்…! உங்கள் வாழ்க்கையில் அடிக்கடி வரும் இடையூறுகளுக்கு மத்தியில் அந்த மகரிஷியின் அருள் உணர்வுகளை இணைத்து இணைத்துக் கொடுத்துக் கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).

பயிரினங்களில் வீரிய வித்தாக்கி அதிலே மகசூலைப் பெருக்க வேண்டும் என்றால் முதலில் ஒரு முறை உரத்தை இடுகின்றோம். அது எடுத்துக் கொண்ட பின் அடுத்த முறை அந்தத் தாவர இனத்தை மீண்டும் புதுப்பிக்கின்றோம்.

அதிலே வரும் வளர்ச்சிக்குத் தக்கவாறு இணைத்து இணைத்துத்தான் வித்தின் தன்மை வீரியமாகப் புதிதாக மாற்ற முடியும். ஒரு வித்தின் தன்மைக்குள் இணைத்து வளரும் பருவத்தில்

ஒரே தடவையில் நேரடியாகக் கொண்டு வர முடியாது.

அதனைப் பல முறைகள் கொண்டு இணைத்து இணைத்து… அது மாற்றுப் பொருளாக உருவாக்கி உருவாக்கி… அதன் பின் அதைச் சீரான வளர்ச்சிக்குக் கொண்டு வந்து ஒன்றிணந்து இயக்கும் நிலைக்குக் கொண்டு வர முடியும்.

ஏனென்றால்…
1.நமக்குள் வேதனைப்படும் உணர்வுகள் ஏராளம் ஏராளம்
2.பகைமையான உணர்வின் வித்துகளாக எடுத்துக் கொண்டது ஏராளம் ஏராளம்
3.தன்னைக் காத்துக் கொள்ளும் தன்மைக்கு கோபத்தின் தன்மை எடுத்துக் கொண்டதும் ஏராளம் ஏராளம்.

இதைப் போல நமக்குள் வித்துக்கள் அதிகமாகப் பெருக்கி இருக்கும் நேரத்தில் இது அனைத்தையும் ஒருங்கிணைத்து இதையெல்லாம் இணைத்து அரவணைத்து அதை அடக்கி உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிய அருள் ஞானிகள் உணர்வின் தன்மை கொண்டு இதைச் செயல்படுத்த முடியும்.

1.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் உங்களில் இணைந்து வரும் குணத்துடன்
2.அந்த ஞானிகளின் அருள் சக்திகளை இணைத்து இணைத்து
3.இந்த உணர்வின் தன்மை இரண்டு முறை மூன்று முறை என்று
4.தொடர்ந்து கொடுக்கும் இந்த உபதேச உணர்வுகளைப் பிணைத்துப் பிணைத்து
5.அந்த மகரிஷிகளின் அருள் ஆற்றலை எடுக்கும் தகுதியை
6.உங்களை எப்படியும் பெறச் செய்ய வேண்டும் என்று தான் இதைச் செய்து கொண்டிருக்கின்றோம் (ஞானகுரு).

அது அல்லாதபடி வெறுமனே பாடப் புத்தகங்களைப் படித்து விட்டு… “நன்றாக இருக்கிறது…!” என்ற நிலையில் தூக்கி எறிந்து விடுவது போன்று செய்து விட்டால் அதற்கு அடுத்து அந்த மகரிஷிகளின் நினைவு வராது.

ஆகவே அதைப் போன்று ஆகாதபடி… “எந்த ஞானிகளின் அருளாற்றலை இங்கே உங்களிலே பதிவு செய்கின்றோமோ…” இந்தப் பதிவின் நினைவாற்றல் தூண்டப்பட்டு அந்த மகரிஷிகளின் அருள் ஒளி ஓங்கி வளர வேண்டும் என்று உங்கள் மனதில் இதைப் பதிவு செய்து கொள்ளுங்கள்…!

அது உங்களை அங்கே அந்த ரிஷிகள் வாழும் இடத்திற்கு அழைத்துச் செல்லும்…!

உணவு உடலுக்குத் தேவை என்றாலும் அதனால் விளையும் குண நலன்களின் மாற்றங்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நாம் எடுத்த வினைக்கு நாயகன் இந்தச் சரீரம் என்றால் முழுமையின் பொருள் விளங்கிடுமா…? உருவத்தில் மனித உடலையும் யானையின் தலையையும் சித்தர்கள் காட்டியதன் சூட்சமப் பொருள் என்ன…?

மனித மனம் தீய குணத்தின் வசம் ஆட்படும் பொழுது எடுக்கும் எண்ணச் செயல் சோர்விற்குப் பின் உணர்வுகளின் உந்துதல் காமத்தின் வழி மோகமாகின்றது. அந்தச் சூட்சமப் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

1.விநாயகருக்குப் பெரிய வயிற்றினைக் காட்டி
2.சகல உலகமும் அதனுள்…! என்று தத்துவம் கூறினால் புதிர் விடுபடுமா…?

உணவாக உட்கொள்ளும் உணவின் அந்த அமில குணங்கள்
1.சலிப்பின் செயலுக்கு மனித மனத்தின் உணவின் மாறுபாட்டால்
2.பத்துத் தலைகள் கொண்ட உருவம் உதித்தது… என்பதுவே
3.”உணவினால் உண்டாக்கப்பட்ட மோக குணங்கள் தான்…”

அந்த மோகத்தின் செயலைச் சித்தரிக்கவே எலியை வாகனமாகக் காட்டினார்கள். பூமிக்குள் மறைந்து வாழும் எலியைப் போல்
1.மனித மனத்தில் புதைந்து கிடக்கும் காமமும்
2.உணவின் செயலால் உணர்வுகள் கிளர்ந்தெழுந்த மோகமும் உள்ளது என்ற உண்மையை உணர வேண்டும்.

வினையின் நாயகனே விநாயகர் என்று சொன்னதன் உட்பொருள் என்ன…?

எண்ணம் கொண்டு எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப உருவான இந்தச் சரீரமான நாயகனைக் கொண்டு தன் உயிராத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்பதே…!

பூமியின் ஈர்ப்பில் வாசனை கொண்டு எடுத்துக் கொண்ட எண்ணம் கொண்டு தன்னை அறியும் பக்குவ கதிக்காக வேண்டி
1.அன்று சித்தனால் வழியமைத்துக் காட்டிய
2.சூட்சம உருவகப்படுத்திக் காட்டப்பட்டதே விநாயக உருவம்.

இந்தச் சரீர பிம்பத்தில் இருக்கும் கோடானு கோடி உயிரணுக்களும் வினையின் நாயகன் செயலுக்குத் தியான ஈர்ப்பின் தொடரில் ஆட்கொள்ளப்பட்டுச் சக்தி ஈர்த்துச் சக்தி அளித்திடும் செயல் வழியின் உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்திடல் வேண்டும்.

அதை உணர்ந்தால் உலக வாசனைப் பிடிப்பில் வாழும் நாம் ஒலி கொண்டு ஒளி பெற்றிடும் நிலையில்
1.உயிர் குரு (நம் உயிராத்மா) தன் தனித்துவச் சக்தியைப் பெற்றுக் கொள்ள
2.கணங்களாகிய இந்தச் சரீரத்தில் உள்ள உயிரணுக்களுக்கு ஒளி சக்தியை ஊட்டி
3.அந்தக் கணங்களின் கூட்டத்தில் “பதியாக” ஓர் சிறப்பிடத்தை உயிராத்ம சக்தி பெற்று
4.தன் வலு ஈர்ப்பின் சக்தி கொண்டு வலுவின் வலு வீரியமாகத் தன்னை வளர்ச்சிப்படுத்திட முடியும்.

இப்படி ஒவ்வொரு உயிரும் ஆத்ம சக்தியின் கலப்பில் தன்னைத் தானே வளர்ச்சிப்படுத்திக் கொள்ளட முடிந்திடுமே அல்லாது “பிறிதொருவர் அளிப்பது அல்ல எந்த ஜெப சக்தியையுமே…!”

மகரிஷிகள் சூட்சமம் கொண்டு உணர்த்திட வருவதெல்லாம்…
1.தங்களின் வழித் தோன்றல்கள் வாழையடி வாழையாக வரும் உயிராத்மாக்கள்
2.”நன் நிலை பெற வேண்டும்…” என்ற பாச உணர்வினால் தானப்பா…!

இந்தச் சரீரத்தின் செயலில் அகத்தியர் அன்று காட்டினார் “வாதாபி ஜீரணம்…” என்று. வாதாபி ஜீரணம் என்றால் என்னப்பா…?

அறிந்து கொண்டிருக்கும்… அனைத்தையும் உணர்ந்து கொண்டிருக்கும் நிலையில்… அறியாத நிலையில் அசுர குணங்கள் மனிதனின் எண்ணத்தில் ஆட்கொள்ளும் பொழுது உடலில் சோர்வும் ஜீரண அவஸ்தையும் ஏற்படுகின்றது.

அதன் பின் அந்த அசுர குணங்களினால் இந்தச் சரீரம் கொண்டு செயல்படுத்திட முற்படும் மோக உணர்வுகளையும்… அந்த மோக உணர்வுகளைத் தூண்டிடும் உயிரணுக்களையும்… “ஞானாக்கினியான எண்ணம் கொண்டு சுட்டெரித்ததே வாதாபி ஜீரணம்…!”

பத்துத் தலைகள் என்று காட்டியதெல்லாம் மோகத்தின் கிளைகளே…!

“உணவின் மாறுபாடும்…” மோக உணர்வுகளைக் கூட்டும். அதைச் சுட்டிக் காட்டுவதே விநாயக உருவத்தில் சிவப்புத் திலகமிட்டுக் காட்டப்பட்டது.

எடுக்கும் எண்ண வலுவில் ஈர்த்து ஒளியைக் கூட்டிக் கொள்ளும் ஜெப நிலை பெற்றவன் மனிதச் சரீரம் கொண்டே உயிராத்ம சக்தியை உயர்த்திடல் வேண்டும் என்றால் “நாவின் சுவைக்கு…” அடிபணிந்திடாத பக்குவத்திற்கு வர வேண்டும்.

1.உணர்வுகள் கிளர்ந்திடும் மூலமே “வயிறு…” என்றும்
2.மோகத்தின் கிளர்தலின் மூலமும் அங்கு தான்… என்றும்
3.அந்த மோகத்தின் கிளைகள் வலுப் பெற்று விட்டால் அறிவின் ஆற்றல் சிதைந்து விடும்…! என்ற
4.அந்த உண்மையின் கருப்பொருளை உணர்த்திடவே ஞானக்கண் என்றும் செந்தூரத் திலகம் என்று காட்டினார்கள் சித்தர்கள்.

நாம் கொள்ள வேண்டிய உயர் ஞான வலுவைப் பெற்று விட்டால் உரப்புயலாக எழுந்த அந்த மோக குணங்கள் அனைத்தும் ஞான அக்கினியில் பொசுங்கிவிடும்.

“எண்ண வலு கொண்ட ஜெப சக்தி பெற்றவனால்…” உணவின் உயிரணுக்களையும் அதனின் மோக குணங்களையும் மாய்க்க முடியும்.
1.அவைகளையும் தன் சரீர ஒளி உயிரணுக்களுடன் ஒன்றச் செய்து
2.அவைகளுக்கும் சக்தி அளித்திட முடியும் என்பதன் பொருளை
3.ஆய்ந்து தெளிந்து செயல்பட வேண்டும் என்பதே இந்தப் பாடத்தின் சிறப்பு.

ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்

ஒரு மனிதனுக்குள் மனிதன் விளையச் செய்யும் உணர்வுகள் நமக்கு முன் இங்கே இந்தக் காற்று மண்டலத்தில் உண்டு.

ஒரு மனிதனுக்கு மனிதன் அதிகமாகப் பற்று இருக்கும் பொழுது அந்த மனிதன் இறந்து விட்டால் அதே பற்றுடன் வரும் பொழுது
1.புலனடங்கி நாம் தூங்கப்படும் பொழுது அந்த மனிதனின் உருவம் கிடைக்கும்.
2.அவன் செய்த நிலையும் நாம் கனாக்களாகப் பார்க்க முடியும்.

கனவுகளில் பல விதமான அற்புதங்களும் சில நடக்கின்றது. எப்படி…?

ஒரு மனிதன் ஆசைப்பட்டு இருக்கும் பொழுது அந்த உணர்வுகள் அதிகமாகி விட்டால் எதன் மேல் எப்படி ஆசைப்பட்டானோ இது இணைக்கப்பட்டு இந்த உணர்வுகள் நம் ஆன்மாவில் பெருக்கப்பட்டால்
1.நாம் புலனடங்கித் தூங்கப்படும் பொழுது உயிரிலே பட்டு
2.அதனின் உணர்வின் கலவையாக அந்த உணர்ச்சிகள் தூண்டுவதும்
3.எதனுடைய நிலைகளோ – நாம் ஆசைப்பட்ட உணர்வுகளும் ஒன்றாக இருக்கும் பொழுது
4.அந்த அலையின் உணர்வு ஆசைப்பட்ட உணர்வுகள் இங்கே வந்திருக்கப்படும் பொழுது
5.இது இரண்டும் கலந்து பார்க்காத ஆளின் உருவமும்
6.அதன் வழி நமக்குள் அந்த இன்பம் பெறுவதையும் சில கனவுகளில் பார்க்கலாம்.

ஆகவே நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நாம் புலனடங்கித் தூங்கினாலும் “உயிரிலே பட்டுத் தான்” இந்த உணர்வுகள் தனக்குள் வருகின்றது. கனவு என்று சொல்வது இது தான்.

நாம் எதைப் பதிவு செய்கின்றோமோ அந்தப் பதிவின் நிலைகள் கூட்டப்படும் பொழுது
1.உணர்வுகள் எது முந்தி வருகின்றதோ
2.அந்த உருவங்களும் நமக்குள் வருகின்றது.

ஒரு அச்சுறுத்தும் நிலையோ… பயம் காட்டும் நிலைகளையோ… விபரீத விளைவுகளையோ… இதுகள் எல்லாம் நாம் எண்ணி எடுத்துக் கொண்ட உணர்வுகள் உடலிலே பதிவான பின்
1.எதன் வழிகளில் அன்றைய வாழ்க்கையில்
2.நாம் எதை முன்னணியில் அதிகமாக வைக்கின்றோமோ அது நம் ஆன்மாவில் கூடப் பெற்று
3.புலனடங்கி இருக்கும் பொழுது நமக்குள் கனவுகளாக வருகின்றது என்பதனை நம் குருநாதர் தெளிவாகக் காட்டினார்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்று உணர்ந்து கொள்ளுங்கள்.

போகர் பல அற்புதங்கள் செய்தார் என்பார்கள். குருநாதரிடம் சில மருந்துகளை அரைத்து விஷ்ணுவிடம் வரம் வாங்கி முருகனுடைய சிலையைச் செய்தார் என்றெல்லாம் அன்று எழுத்து வடிவே இல்லாத பொழுது கற்பனைக் கதைகளைக் கட்டியிருப்பார்கள் பின் வந்தோர்கள்.

எழுத்து வடிவு வந்த பின் போகர் எழுதிய சக்கரங்கள் என்று போகர் சமாதியை வைத்திருப்பார்கள். இதைப் போன்றெல்லாம் அவர் பேரைச் சொல்லி ஒவ்வொன்றையும் மாற்றி உண்மையின் உணர்வுகளை அறிய முடியாதபடி காலத்தால் மாறிப் போய்விட்டது.

அன்று போகன் ஒரு மனிதன் எப்படி முழுமையானான்…? என்று கண்டுணர்ந்தான் என்பதை நம் குருநாதர் காட்டினார்.

விஷத்தின் தன்மை எப்படி இயக்கப்பட்டது…? அணுக்களால் கோள்களாகி நட்சத்திரமாகிச் சூரியனாகி சூரியனாக ஆன பின் கோள்களை உருவாக்கி நட்சத்திரங்களை உருவாக்கி ஒரு பிரபஞ்சமாகி முழுமை அடைந்த பின் தான் ஒரு உயிரணுவின் துடிப்பு ஆகின்றது. பிரபஞ்சம் முழுமை அடைந்த பின் தான் ஒரு அணுத் தன்மையாகி உயிரணுவின் தோற்றம் அடைகின்றது.

1.27 நட்சத்திரங்களின் உணர்வுகள் ஒவ்வொரு தாவர இனங்களிலும் மண்ணிலும் எப்படிக் கலக்கின்றது…?
2.அதே போல உயிரணு தோன்றிய பின் அதிலே எப்படிக் கலக்கப்படுகின்றது…?
3.அந்த உணர்வுகளை இந்த உயிரணு நுகர்ந்த பின் உணர்வுக்கொப்ப மீண்டும் அதை இயக்குகிறது…?
4.அந்த உணர்வுக்கொப்ப உடல்கள் எப்படி மாறுகிறது…? என்பதைத் போகன் கண்டுணர்ந்தார் என்று தெளிவாகக் கூறினார் நம் குருநாதர்.

Leave a Reply