எண்ணத்தில் உதயம் (பொருளறிந்து செயல்படும் நிலை) வேண்டுமப்பா…!

எண்ணத்தில் உதயம் (பொருளறிந்து செயல்படும் நிலை) வேண்டுமப்பா…!

 

மண்ணினால் பாண்டங்கள் செய்கின்றான் கலைஞன். அந்தக் குயக்கலைஞன் பாண்டங்கள் வடித்திடும் பொழுது
1.தன்னுடைய ஆகாரத்திற்காகத்தான் அந்தத் தொழிலைச் செய்கின்றான் என்றாலும்
2.“மனக்கருவின் திருவை” (திருவை – பானை செய்யும் சக்கரம்) செய்தொழில் கலையாகச் சிறக்கச் செய்கின்றான்

(பானைகள்) குயக்கலங்கள் வடிவத்தில் சிறிதாக இருந்தாலும்… அந்த உருவம் தந்திடும் எண்ணத்தின் சிறப்பு… “எண்ணுவதால் கலத்திற்கும் சிறப்பு…!”

குயக்கலத்தின் சிறப்பை… செயலின் திறத்தை எண்ணுகின்ற மனம்… உயிர்த்தொகைகள் வடிவு எடுக்கின்ற எண்ணற்ற பிறவிகளில் மானிடப் பிறப்பே பகுத்தறியும் ஆற்றலின் வன்மையால் காணச் சிறப்பு எது…?

குரல் – உடல் என்றும்… குருமுனி என்றும் அழைக்கப் பெறுதலின் குரல் உடல் கொண்ட மனிதன் குருமுனிவன் ஆன விதம் என்ன…? குரல் உடல் பெற்ற சிறப்பு.

குயக்கலம் போல்…
1.குரல் உடல் பெற்றுக் கொண்டிட்ட மனிதன்… வளர்த்துக் கொண்டிட்ட விதம்
2.“காணாச் சிறப்பே கண்ணுறும்…” என்ற சொல்லுக்கொப்ப செய்தொழில் செய் திறத்தால் அமைவது என்னும் பாங்கில்
3.மெய்ஞானம் மெய்ஞான விழிப்பாகி… முகிழ்ந்த பின் மெய்ஞானச் சுடர் எனும் சுடர்தல் தன்மையாக
4.குரல் உடல் குருமுனியாகி… மாமகரிஷியாகி சப்தரிஷிகளுடன் கலந்து வாழ்ந்திடும் இயக்க நிலையை…
5.ஞானச் செல்வங்கள் அறிவால் அறிந்துணர்ந்து அதைப் பெற்று உயர்ந்திடவே அழைக்கின்றோம்.

சூரியன் தன் முகம் காட்டிய பின்பே உயிர்த்தொகைகள் உருக்காட்டுகின்றன (கண்ணுக்குப் புலப்படுவதாக) என்றால் என்னப்பா…?

சகல ஜீவன்களும்… ஜீவ ஆதார வித்துக்களும்… உயிரணுக்கள் தன்மையில் வளர்ந்த ஆத்மாக்களும்… ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு உயர்நிலை வளர்ப்பாக்கும் மெய் ஒலி… ஒளியின் கூட்டுறவாம் இயக்க சுருதி நாத லய மறைபொருள் தன்மைகள் என பல பல உரைத்தாலும்
1.இருளுக்குப் பின் ஒளி கண்டு இருளினில் மறைந்த பொருள்கள் புலப்பட்டு
2.கட்புலனாய்க் (நமக்குத் தெரியக்கூடியதாக) காணப்பட்டு உணர்கின்றோம்.

ஆக… எண்ணத்தில் உதயம் (பொருளறிந்து செயல்படும் நிலை) வேண்டுமப்பா…!

1.உணர்கின்ற தன்மையே (தன்னைத் தான் அறிதல்) மனத்தின் ஒளியாகும்
2.அந்த ஒளியினால் கருக்கொள்ளும் மனத்தின் திரு ஆத்ம முலாமாகச் சுடர்ந்திடவே…
3.மறைபொருள் தன்மைகளை (மறைக்கப்பட்ட… மறைந்து போன… உண்மைகளை) இங்கே உணர்த்துகின்றோம்.

குணங்களின் செயல் வளர்க்கின்ற தன்மைகளில் மனத்தின் கருவே வித்தாக… சகல ஜீவராசிகளும் உலகோதய நடைமுறை மனித மனத்தில் உண்டு.

ஆரம்ப நிலை கொண்டு எதையும் கணித்து விடாதே… “முடிவு இப்படித் தான் இருக்கும் என்று”

ஆரம்ப நிலை கொண்டு எதையும் கணித்து விடாதே… “முடிவு இப்படித் தான் இருக்கும் என்று”

 

சித்தன் காட்டிய சொல்லில்…
1.எதிலுமே அதனின் ஆரம்ப நிலை கொண்டு
2.”முடிவு இதுதான்…” என்று நாம் கணித்து விடக்கூடாது.

ஞான வளர்ச்சியின் பாதையில் இருப்போர்… சித்தர்கள் என்னும் நிலையைப் பெற… வாழ்வியல் அனுபவ ஞானம் பெறும் போது வெறுப்பு மிகுதியாக இருக்கும் காலங்களில் எல்லாம் தங்களைக் காத்துக் கொள்ள
1.உண்மைகளை உணர வேண்டும் என்று மறைபொருள் சூட்சும சூத்திரங்கள் கொண்டு
2.அந்த அறிவின் மயக்கத்தை நீக்க அவர்கள் கூறி வெளிப்படுத்திய பாடல்களில் சிறிது கடுமையும் உண்டு.

சிவசக்தி நிலை கலப்பாக மேன்மையுறும் செயல்களைத் தம்முள் கண்டு தெளிந்து… தங்களை வளர்த்துக் கொள்ளும் பக்குவத்தில்… மௌனத்தின் செயல்பாடாகச் சாந்த நிலையை ஏற்றிட… அதை “ஊக்குவிக்கும் செயல் சக்தியை…” சித்தர்கள் தமக்குள் எப்படி கூட்டிக் கொண்டார்களப்பா…?

1.“ஆரம்ப நிலை கொண்டு எதையும் கணித்து விடாதே…” என்று கூறுவதெல்லாம்
2.பிறர் பால் நாம் கொண்டிடும் எண்ணத்தின் உயர்வைக் கூட்டுவதற்குத் தான்.

மாமகரிஷி போகப்பெருமான் தன்னை வளர்த்து உயர்த்திக் கொள்வதற்காகத் தாய் சக்தியினைப் பெற்ற பேறைச் சொல்லால் விளக்கிட முடியுமா…?

தாய்மையின் சக்தியை விளக்குதல் என்பது என்றால் இந்த பூமியின் (புவனேஸ்வரி) உயர்வு நிலையைத் தான் முதலில் காட்டப்பட வேண்டும். பல முறையும் இதைக் கூறி வந்துள்ளேன்.

என் நிலையோ அந்த நிலை…? நன் நிலையே நமக்கு.

அம்மன் சக்திகள் அனைத்தும்… “ஆவியின் நிலைகள்…” என்று உரைத்திட்டால்… எந்த வகையில் தெளிந்திட்ட உண்மை அது…?

1.சகலமும் ஆவி தான்
2.இந்தப் பூமியும் ஆவி தான்
3.அண்ட சராசரங்களும் ஆவி தான்
4.”ஆவியான உன்னை…” (நீ) அறிந்து கொள்ள காட்டப்படும் நெறிமுறைகளில் தெளிவினைக் காட்டுவது எது…?

அம்மன் சக்திகளில் “பெயர் சொல்லி உலவக்கூடிய ஆவிகள்” – மை போட்டுக் குறி கூறுபவன் நிலையாக வளர்ந்து… அவைகளின் வளர்ச்சி நிலையைப் பற்றிச் சிறிது கோடிட்டுக் காட்டிடவும் முடிந்திடும்.

அது எல்லாம் மனிதனின் எண்ணத்தை வயப்படுத்தும் செயலுக்கே உபயோகப்பட்டுக் கொண்டுள்ளது. பத்திரிக்கை உலகையும்… மற்ற எத்தனையோ வெளி உலகத் தொடர்புகளையும் (MEDIA) விட்டுவிடவில்லை…. “வசியம் என்ற பேரில்” எல்லாவற்றையும் பீடித்திருக்கிறது.

மனித மனத்தினைத் தாக்கிடும் சக்தியாகச் செயலுறும் அவைகளின் பிடியிலிருந்து… தங்களைக் காத்துக் கொள்ள எண்ணம் கொள்வோர் அரிதாகிக் கொண்டே வருகின்றனரப்பா.

சத்தியம் என்பது உன்னுள் நிலைபெற்று இருத்தலே சாஸ்வதமானது.
1.எந்தச் சிறு சக்தியின் எதிர்ப்பின் நிலையும் தமக்குகந்த வேகத்தை காட்டும்
2.அந்த நிலை நமக்கு எதற்கு…?

“அம்மன் சக்திகள்” அக்கினி போல் சுடர்கின்றதப்பா. அருளாசி வேண்டுவது நம்மை வளர்த்துக் கொள்வதற்குத் தான்… புரிகிறதா…? அந்த நிலையில் நமது எண்ணம் உயர்வு அடைவதற்குத் தடைக்கல்லாக இருப்பது எது…? என்று உணர்ந்து கொண்டாயா…?

“சக்தி புராணம்” என்று கூறப்பட்டதே வான இயல்புகளைக் காட்டுவதற்குத். தான்.
1.”ஆகாய கங்கை” பாகீரதன் தவத்திற்கு எங்கிருந்தப்பா இறங்கி வந்தாள்…?
2.நாம் கூறுவது நம்முள் வளர்ச்சிப்படுத்திக் கொள்ள வேண்டிய “தாய் சக்தியின்” உயர்வைத் தான்.
3.எண்ணத்தின் உயர்வு உயர் ஞானம் என்றால்… அந்த மெய் ஞானம் விழிப்பாகி அது சுடராகப் பிரகாசிக்கும்
4.அமிர்தவர்ஷினியாக அது பெருகிடுமப்பா.

ஜோதித்துவ பொருளுக்கும் – உயிர் சக்தியின் தொடர்பிற்கும் மறைபொருள் உண்மையை நீ உணர்ந்து பார். சக்தியின் கலப்பாகப் பொருள் காட்டும் எந்த நிலையாக இருந்தாலும்
1.“அதிலே குறை காண்பது நம் நோக்கம் அல்ல….!”
2.நாம் கொண்ட உண்மையில் வளர்ந்து காட்டுவதே விவேகம்
3.வாய்ச்சொல் தவத்தைக் காட்டும்… மொழியின் உயர்வையும் காட்டும்.
4.ஆனால் நாவடக்கம் நம்முள் உயர்வைக் காட்டி தவத்தைக் கூட்டும்.

நாம் சமைக்கும் உணவின் ருசி “எப்படியெல்லாம் மாறுகிறது…?” என்று தெரிந்து கொள்ளுங்கள்

நாம் சமைக்கும் உணவின் ருசி “எப்படியெல்லாம் மாறுகிறது…?” என்று தெரிந்து கொள்ளுங்கள்

 

சமையல் செய்யும் பொழுது வெறுப்புடன் இருந்தார்கள் என்றால் அவர்களை அறியாமலேயே காரத்தை அதிகமாகப் போட்டு விடுவார்கள். இந்த உணர்வுக்குத் தக்க தான் பதார்த்தங்கள் சமைக்கப்படும். உணர்வின் எண்ணத்தால் இயக்கப்படும் நிலைகள் இது…!

ஆனால் உணர்வின் நிலைகள் நம்முடைய எண்ணங்கள் அதற்குள் பட்டவுடன்
1.பாத்திரத்திற்கு இதை ஈர்க்கும் சக்தி வந்து விடுகின்றத
2.அதற்குள் இருக்கக்கூடிய பொருள்கள் இழுக்கும் சக்தி பெறுகின்றது.

வேதனையுடன் இருந்து நீங்கள் சாப்பாட்டைச் சாப்பிட்டால் கசக்கத் தொடங்கும். காரணம் வேதனை என்ற உணர்வு நுகரப்படும் பொழுது பித்த சுரப்பிகள் அதிகமாகி அது விஷம் தோய்ந்ததாக மாறுகின்றது.

அப்படிச் சுரக்கப்படும் நிலையில் உணவுடன் இணைந்து விட்டால்
1.எவ்வளவு ருசியாக உணவு சமைக்கப்பட்டு இருந்தாலும் அது கசக்கத்தான் செய்யும்.
2.இவரின் உணர்வு பட்ட பின் காற்றிலிருக்கும் கசப்பு அதற்குள் கலக்கப்பட்டு உணவின் ருசியை மாற்றிவிடும்.

சில வீடுகளில் சமையல் நன்றாகச் செய்வார்கள். ஆனாலும் அங்கே கோபமாக வெறுப்பாக வேதனையாக இருப்பவர்கள் சமைத்தார்கள் என்றால் ருசி கெட்டுவிடும்.

இது நம்மை அறியாமலே மறைமுகமாக நடக்கும் சமாச்சாரம். இதையெல்லாம் எனக்குத் தெளிவாக காட்டுவதற்காக குருநாதர் காட்டிற்குள் என்னை அழைத்துச் சென்றார்.

சிறிது அரிசி… மோரில் ஊற வைத்த கத்திரிக்காய்… மோரில் ஊற வைத்த மிளகாய் அதனை எல்லாம் உப்பை கொஞ்சம் போட்டு எடுத்துக் கொள்ளச் சொன்னார். ஒரு சிறிய டப்பா தான். தீப்பெட்டி ஒன்றுதான்.

காட்டிற்குள் இருக்கும் குச்சிகளை எடுத்து அடுப்பு போல மூட்டி டப்பாவில் நீரை ஊற்றி ஒரு பிடி அரிசியை உள்ளே போட வேண்டியது தான். நன்றாகக் கொதித்து வரும் பொழுது இன்ன அளவுக்கு இத்தனை மிளகாய் இத்தனை கத்திரிக்காய் என்று போடச் சொல்வார். அதிகமாகப் போட்டு விட்டால் ருசி கேட்டுவிடும் என்பார்.

போட்டுக் கொதித்து வந்த பின் அந்தக் கஞ்சியைப் பசியோடு இருக்கும் பொழுது சாப்பிடும் போது நல்ல ருசி வருகின்றது. சிறிதளவு அரிசி தான்… ஆனால் இரண்டு பேருமே சாப்பிட முடிந்தது அதைக் குடித்த பின் பசியும் அடங்குகின்றது.

இதற்குப் பின் என்ன செய்கின்றார்…?

ஒரு வாரம் ஆனது.
1.பசியை உண்டாக்குகின்றார்… சாப்பிட வேண்டும் என்ற ஏக்கத்தை உருவாக்குகின்றார்
2.அந்த நேரத்தில் இந்தக் கஞ்சியைக் குடித்தால் கசக்கின்றது.
3.அந்த உணர்வுகள் அங்கே சென்றபின்… அதனுடன் கலந்து சுவை கேட்டு விடுகின்றது… குடிக்க முடியவில்லை.

எங்கிருந்து வந்தது…? போன வாரம் சாப்பிட்டாய் இன்று சுவை இல்லாத நிலைகள் அடைகின்றாய்…!. இதனின் காரணம் உன் உணர்வின் நினைவுக்குள் எடுக்கப்படும் போது அணுக்கள் தனக்குள் இணைத்து உயிருடன் பட்டு உடலுக்குள் சுழலப்படும் பொழுது அதனுடைய நினைவுகள் இப்படி இயக்கத் தொடங்குகிறது.
1.அந்த உணர்வின் அமிலங்கள் நாக்கில் சுரபிகள் சுரக்கின்றது
2.பொருளைச் சாப்பிட்டால் சுவையற்றதாக மாற்றுகின்றது.

இப்படி விளக்கம் கொடுக்கின்றார் குருநாதர்.

நீ தவறு செய்யவில்லை. எப்படி உன்னுடைய சந்தர்ப்பங்கள்…
1.நீ நுகர்வதையும் எண்ணங்கள் உருவாவதையும்… நுகரும் ஆற்றல் எப்படி வருகின்றது…?
2.நுகர்ந்த உணர்வுகள் உன் உடலில் எப்படிச் செயல்படுகிறது என்பதை அனுபவரீதியாகக் கொடுக்கின்றார்.

குருநாதரிடம் பெற்ற அனுபவங்களைத் தான் உங்களுக்கு அவ்வப்போது சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

மெய் ஞான சக்தியின் உருவகம்தான்… “உருவான சக்தி அனைத்தும்”

மெய் ஞான சக்தியின் உருவகம்தான்… “உருவான சக்தி அனைத்தும்”

 

நிழலுக்காகக் குடை தேடுகின்றோம்… வெய்யிலில் நிரந்தரக் குடில் அமைக்கின்றோம். வாழ்க்கையில். அதைப் போன்று தெய்வத்தின் சக்தி நிலையையும்…
1.அவசரக் காலங்களுக்குத் தெய்வம் வந்து காக்குமென்ற நம்பிக்கைக் குடையைத் தேடுகின்றோமே தவிர
2.நிரந்தரக் குடிலமைப்பைப் போல் ஆத்ம தெய்வத்தைத் தெய்வ சக்தியாக்கிக் கொள்வதில்லை.

“சொல்வாக்கு செல்வாக்கு சகல சக்திகளையும்” ஆத்ம ஞான வளர்ச்சியினால் வழிப்படுத்தும் ஆற்றல் எண்ணத்தின் உணர்வினால் வழியமைத்துக் கொள்ள முடியும்.

ஆலயத்தைக் காட்டி எண்ணத்தைக் குவித்து உயர வழி காட்டிய தொடர் நிலை இன்று, ஆலயமென்ற ஸ்தலத்தில்தான் ஆண்டவன் அருள் நிலையை அடையும் பொக்கிஷமாக உணர்வின் மோதலின் உந்தல் பல ஆயிரம் ஆண்டுகளாக மனித உணர்வின் பிறப்புடன் தொடர்பு கொண்டு பக்தி இயக்க அலைத் தொடர்பின் போற்றித் துதித்து “தன்னைத்தான் தாழ்த்தி… தெய்வத்தின் உயர்வைப் புகழ்ந்து வழித் தொடர் பிறப்பில் தான் வந்துள்ளோம்…”

வழித்தொடர் பிறப்பென்பது
1.பிறப்பெடுத்த ஆத்மா பிறப்பில் வளர்த்த எண்ண வேட்கையின் “அலை சக்தியின் இறப்பில்”
2.ஆவி ஆத்ம நிலையின் வேட்கை அலையின் எண்ணம் அதன் பிறப்பு வாழ்க்கையில் வளர்த்த வீரிய பதிவு நிலையின் பக்தி நிலை
3.பிறப்பில் வாழும் மனித ஆத்மாவின் அலை ஈர்ப்புடன் உணர்வின் எண்ணத்தில் மோதி… அத்தொடர்பில் வெளிப்படுத்தும் உண்மைதனை
4.மனிதன் இன்று தெய்வம் பேசுகின்றது முருகன் வந்து அருள் சொல்கின்றார் என்ற தெய்வங்களின் நாமத்தைக் கொண்டு வளர்ந்த அவர்கள்
5.வளர்த்த கவிநயப் போற்றல் கவிதைகளை வழித்தொடரில் உருப்போட்டு ஜெபித்து
6.பல கோடி கோடி ஒன்றின் தொடர்பில் ஒன்று உருண்டு உருண்டு வளரும் ஆதிசக்தியின் வளர்சக்தியின் வீரியத் தொடர்பினை
7.தன் ஞானத்தின் உயர்வு வழித் தொடரில் செலுத்தாமல் ஏட்டுப்படிப்பில் படிக்கும் போதனையின் அறிவு நிலையின் தொடர் வட்டத்தைப் போன்றுதான்
8.இன்றைய பக்தி முறையின் வழிபாட்டு நிலையும் உள்ளது.

ஒன்றுடன் ஒன்று கூட்டி அதன் மாற்று விகிதத்தில் மாறி வரும் உருப்பெறும் தொடர்பினால் பிறிதொரு நிலையை ஆராயும் தன்மை அடிப்படை ஞானத்தில் மனித எண்ணம் செல்ல வேண்டும்.

மிருகங்களின் தன்மையில் ஒளி பாய்ச்சி ஒலி ஈர்ப்பில்…
1,ஓர் ஆட்டின் தொடர்பில் ஆட்டு மந்தையே செல்வதைப்போன்ற நிலை தான்
2.இன்றைய மனிதனின் வழித்தொடரும் உள்ளது.

பல கோடி மனிதர்கள் உள்ளனர் என்றால்… ஒன்றுக்கொன்று மாறு கொண்டு சக்தி நிலை கொண்டுதான் உருப்பெற்றுள்ள மனித நிலை…
1.இவ்வெண்ணத்தின் உணர்வைச் செலுத்தக்கூடிய ஞானக்கூட்டுச் சேர்க்கையால்
2.ஒவ்வொரு மனிதனுமே தன்னுள்ளுள்ள சக்திப் படைப்பினை வளர்ப்பின் வளர்ப்பாய் வழித் தொடர்களாகப் படர்ந்துள்ள அமிலக்கூறின் சத்தெடுத்து
3.ஒவ்வொரு மனிதக் கோளத்திலும் அதைச் சமைத்து சமைப்பின் சுவையை ஆத்ம முலாம் சுவைத்து
4.ஆத்மாவின் உயர்வைக் கொண்டு அகில சக்தியின் உன்னத சக்தியாய்ப் பிரித்து உயர்வுப் படைப்புகளைப் படைக்கலாம்.

மனித எண்ண சக்தியின் வளர்ச்சி கொண்டு… எண்ணத்தின் ஞானத்தால் சாதிக்கவல்ல சக்தித் தன்மை உயர்வு தானப்பா “சூரிய சக்தியும் சகல வளர்ந்த சக்தி நிலைகளுமே…”

1.வாழ அமைக்கும் ஜீவாதார பாதுகாப்பு வேலிதான் உயர்வு என்ற உருவகக் கோபுரங்கள் கட்டி உழன்றுள்ள மனிதன்
2.உணர்வின் எண்ண ஞான சக்தியின் உருவகம்தான்… “உருவான சக்தி அனைத்தும்” என்றுணர்ந்து செயல்பட வேண்டுமப்பா.

ஜீவ ஆத்ம ஞான சக்தியின் ஜீவ வளர்ச்சி

ஜீவ ஆத்ம ஞான சக்தியின் ஜீவ வளர்ச்சி

 

நீங்கள் இருவரும் தியானத்தில் எடுத்த அலைத்தொடர்பு அவரவர்களின் உடல் அமிலச் சேர்க்கை உருவக எண்ணத்தின் சக்திக்குகந்த அலையின் தொடர் காட்சிகளை தியான முறையில் தினசரி பார்க்கவும்… பேசவும்… அவ்வழியைக் கொண்டு உங்கள் ஞானத்தை வளரவும் வழி தெரிகின்றது அல்லவா…!

இதன் தொடரைப் போன்றே அமில சக்தியின் வார்ப்பு ஜீவித உயிரணு தோன்றிய ஒவ்வொரு ஜீவ வளர்ச்சிக்கும் அவையவை பெற்ற சுவை, மணம் குணத்துக்குகந்த தனித்தன்மை உருவான உயர் குணங்கள் பல உண்டு.

பால்வெளி மண்டலத்தில் படர்ந்துள்ள பல கோடி அமில குணங்கள் அதனதன் சுழற்சி ஓட்டத்தில் அங்கங்கு உள்ள படர்ந்த அமில குணங்களுக்கொப்ப ஒன்றுடன் ஒன்று உராய்ந்து தன் தன் இன வளர்ச்சிக்கொப்ப வளர்ந்த மண்டலமாயும் அதனதன் ஈர்ப்பின் சுழற்சியில் சுழன்று கொண்டே வளர்ந்து கொண்டே மாறிக் கொண்டே வழி கொள்ளும் வளர்முறை உள்ளது.

மணலுண்டு நீருண்டு சுண்ணாம்பும் உண்டு மரம் மண் இவை யாவையும் இருந்தாலும்… அதனை நாம் நமக்கு வேண்டிய பக்குவச் செயலுக்காக சுண்ணாம்பையும் மணலையும் நீரையும் கொண்டு நமக்கு உகந்த இல்லங்கள் அமைத்துப் பாதுகாப்பு இடம் தேடி வாழுகிறோம் அல்லவா…!

அதைப் போன்று பால்வெளியில் நிறைந்துள்ள அமிலச் சுழற்சியில் தன்னிச்சையில் வளர்ந்து கொண்டே மாறிக் கொண்டே சுழலும் வழித் தொடரிலிருந்து எப்படி வீடமைக்கப் பல பொருட்களை வீட்டிற்கு வேண்டிய நிலைக்கு பக்குவப்படுத்தி வீட்டைக்கட்டி வாழுகின்றோமோ அதைப் போன்றுதான்
1.அமிலச் சுழற்சியின் உயர்வு நிலை சக்தி கொண்ட ஆத்ம நிலை கொண்டு
2.எண்ணத்தின் ஞானம் கொண்டு உயர்ந்த ரிஷிக் கோடிகளின் அமைப்புநிலை உருவகங்கள்தான்
3.ஆதிசக்தியின் சக்தி வழி வந்த… ரிஷி வழி மண்டல அமைப்பின்… ஜீவ ஆத்ம ஞான சக்தியின் ஜீவ வளர்ச்சி வளருகின்றது.

அதது எடுத்து வளர்ந்த நிலைக்கொப்ப வளர்ச்சியின் உயர்ந்த தன்மை கூடும் நிலை வழி பெற…
1.மனித ஞான உயர்வினால் மட்டும்தான்
2.உயர்வின் உருவகத்தையே உருவாக்கும் தன்மை உறுப்பெறும் என்பதனை உணர்த்தியுள்ளேன்.

உண்மையின் உன்னத சக்திதனை உணர்த்தினால் உருவாக்கிடலாம் உலக சிருஷ்டியையே…!

இப்பூமிக்கு மனிதக் கரு வர ஆண் பெண் என்ற இரண்டு ரிஷித்தன்மை கொண்ட ஆத்ம சுழற்சி பூமியான இப்பூமியின் நிலைக்கு சிவசக்தி என்ற ஆத்மக் கரு எங்கிருந்து வந்தது…?

இப்பூமியில் மட்டுமல்ல நம்மைக் காட்டிலும் உயர்ந்த ஞான சக்தி கொண்ட மனித ஆத்மாக்கள்… நம் சூரியக் குடும்பமல்லா (நாற்பத்தி எட்டு கோளங்கள்) மண்டலங்களில் ஜீவிக்கின்றனர்.
1.ஞானச் சித்து கொண்டு அவர்கள் நம் பூமியுடனும்
2.மற்றெல்லா பூமித் தொடருடனும் தொடர்பு கொண்டுள்ள நிலையில் செயல் கொண்டுள்ளனர்.

இன்று மனித ஆத்மாக்களின் பெருக்கத்திலுள்ள இப்பூமியின் எண்ண உணர்வு செயற்கையின் சுழற்சியில் சிக்காமலும்… விஞ்ஞானத்தை நம்பி வாழும் உருநிலை பெறாமலும் இருந்திருந்தால்… வளர்ந்துள்ள ஜீவ வளர்ச்சியின் சொல் செயல் ஞானம் கொண்ட வழித்தொடரினால் தன் ஞானம் உயரும் நிலை பெற்றிருந்ததென்றால்… இப்பூமி பெற்ற உன்னத உயர்ந்த சக்தியே மிகவும் உன்னத சக்தியாய் இன்னும் பல கோடி கோடி ஆண்டுகளுக்குச் சொல்லாற்றலும் செயலாற்றலும் கொண்ட மனிதர்களாக இருந்திருப்பார்கள்.

மிக உயர்ந்த குண சக்தியின் ஆனந்த அன்பு கொண்ட இனிமை வாழ்க்கையை வாழக்கூடிய தன்மையையே இன்றைய வாழ்க்கை முறை இன்னலின் பிடிப்பில் இறுக்கம் கொண்டு…
1.மனிதனை மனிதனே அழித்து… அழித்து என்பதன் பொருள் இல்லற வாழ்க்கையில் கூடி மனிதப் பிறப்புக்கு வரும் சிசுக்களை
2.சிசுவைக் கருவுக்கே வர விடாமல் பல காலமாய் அவை சேமித்த சக்தி நிலையையே கருவில் வந்து மறைக்கப்பட்ட தன்மையிலேயே
3.இம் மனிதனே மனிதக் கருவை அழித்து அதனை ஞானத்தில் வளர விடாமல் இழிநிலையான சுழற்சியில் அமிழ்த்தி விடுகின்றான்.

தான் படும் வாழ்க்கைச் சுழற்சியில் இன்பங்கள் தனக்குச் சொந்தமானதாகவும் துன்பங்கள் ஆண்டவனின் சோதனையாகவும் எண்ணத்தில் கொண்டு வாழும் வாழ்க்கை ஓட்ட அலையில்… எண்ணத்தில் ஏக்கமுடனும் பேராசை எதிர் நிலையிலும்தான்… “மக்களை நடத்திச் செல்லும் மத வழி போதனைகளும் அரசியல் சுழற்சிகளும் சுழன்றுள்ளன…”

தன் ஆத்ம ஞானத்தைக் கொண்டு “உலகத்தையே சிருஷ்டிக்கவல்ல ஆதி முதலாம் விநாயக சக்தி கொண்ட சொல் செயல் ஞானம் கொண்ட மனித ஆத்மாக்களை” இப்பூமி சரீர வாழ்க்கையிலிருந்தே அதை உருவாக்க முடியும்.
1.எப்படி ஆண் பெண் வாழ்க்கை இணைப்புச் செயற்கையில் உருவாகி… சரீரம் பெற்று வாழ்க்கை வழித்தொடருக்கு வந்தோமோ…
2.அதே தொடரில் ஆண் பெண் இணைப்பினால் கருநிலை உருவாகி… பூமி ஈர்ப்பு கரு வளர்க்கின்றோமோ அதைப் போன்றே
3.ஆண் பெண் என்ற இரண்டு ஆத்மாக்களும் தன் ஞான சக்தியினால் சித்து நிலை பெற்று ஒளி நிலைத் தன்மையுடன்
4.உடல் இயக்க உறவு நிலையில் கருத் தோன்றி வளர்வதைப் போல்
5.ஆத்ம இணைப்பில் ஒளி வட்டத்தின் ஆத்மச் சேர்க்கையில் இருந்து பிறக்கும் ஒளி நிலையைக் கொண்டு “ஞானவட்டமாய்”
6.அவ்வலைத் தொடரை எம் மண்டலத்திற்கு அனுப்புகின்றோமோ அம் மண்டலத்தில் எல்லாம் ஜீவச் சிசுவை வளர்க்கவும்
7.ஜீவசக்தியை வளர்க்கவல்ல வழிமுறை ஆத்ம சக்தியை ஆத்ம சேர்க்கையைக் கொண்டு
8.அன்று எப்படி இராமாயணக் காலத்தில் இராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் சூட்சுமத்தால்
9.லவ குசா என்ற குழந்தைகளின் படைப்பு நிலையை மறைக்கப்பட்ட நிலையில் உணர்த்தியதைப் போன்றும்
10.காந்தர்வன் கன்னி நீரில் வாழும் பொழுது
11.மேகக் கூட்டத்திலிருந்து விந்துக்கள் தோன்றி கன்னி கருத்தரித்து ஞான தெய்வக் குழந்தை பிறந்ததென்றும்,
12.கார்த்திகைப் பெண்கள் முருகனை வளர்த்தனர் என்று கதையில் சொல்லும் உண்மைதனை
13.ஒவ்வொரு மனிதனும் ஞானம் கொண்டு அதிலுள்ள சூட்சுமத்தை உணர்ந்தீர்களானால்
14.சிவசக்தி கருத்தரிக்கவில்லை, சிவன் உருவாக்கிய குழந்தை முருகன் என்று
15.மறைக்கப்பட்ட பல உண்மைகள் அவற்றில் அடங்கியுள்ளன.

என்றோ நடந்தவை அவை…! அவற்றின் சக்திதான் இன்று நாம் வாழ்வது என்ற எண்ண உலாத்தான் உள்ளதேயன்றி… “இன்று நடப்பவையும் அத்தன்மைதான்…”

ஜீவக் கரு எத்தனை கோடி கோடி ஆண்டுகள் எம்மண்டலத்தில் வளர்ந்து வாழ்ந்தாலும் இன்று உணர்த்திய இத்தொடரின் உண்மை போன்றுதான்
1.ஜீவ சக்தியின் ஆண் பெண் ஆத்ம சக்தியால்தான் ஜீவ ஆத்மாவில் பெறப்படும் சித்துத் தன்மையும்
2.ரிஷித் தன்மையும் கொண்ட ரிஷிபத்தினி… “ரிஷித்தன்மையைக் கொண்டுதான் உருவாகும் ஜீவனுக்கே ஜீவவித்து விருட்சகம்…”

எண்ணிலடங்கா விபரீத நிலைகள் ஏற்படும் தொடர் “இனி வரப்போகும் காலத்தில் நிகழத்தான் போகின்றது”

எண்ணிலடங்கா விபரீத நிலைகள் ஏற்படும் தொடர் “இனி வரப்போகும் காலத்தில் நிகழத்தான் போகின்றது”

 

இக்கலியில் பூமியின் நிலையையே நிலை தடுமாற வைப்பவனும் இம் மனிதன்தான். இப்பூமி நிலைக்க கல்கி யுகம் காணச் செயல்படுத்தப் போகிறவனும் இம்மனிதன் தான்.
1.மனிதன் மனித ஞானம் பெற்றால்
2.மனிதனால் மனித ஆத்மாக்களை உயர்ந்த நிலையில் நிறுத்த முடியும்.

இன்று நம் பூமியில் மனிதக் கரு வளர நம் பூமி மனித ஆத்மாக்களை வளர்க்கும் தன்மை கொள்ள “வியாழனிலிருந்து மீண்ட மனித ஆத்மாக்கள் இருந்ததினால் தான்” மீண்டும் நம் பூமி வளர்ந்த பிறகு நம் பூமியில் மனித ஆத்மாக்கள் வாழக்கூடிய கருவே வளர்ந்தது.

பல சப்தரிஷிகளும் அவர்களின் வழித்தொடர் பெற்ற பல நிலை கொண்டவர்கள் இருந்தாலும்… இப்பூமியில் வாழ்ந்த மனித ஆத்மாக்களின் சக்தி நிலை உயர்ந்து தன் ஞானம் பெறும் ஆத்மாக்கள் வளர்ந்து… இப்பூமியின் மாற்றக் காலத்தில் இம்மனித வாழ்க்கையில் கொண்டுள்ள ஆசாபாசங்களிலும் நித்தியக் கடன்களிலும் மூழ்கியே… இக்கலியின் மாற்றத்தில் வாழ்ந்திடும் மனித ஆத்மாக்கள் கலி மாறும் தருணத்திலும்… அதே சுழற்சி ஓட்டத்திலிருந்து… தான் இதிலிருந்து மீள முடியாமல் மீண்டும் அறிவு ஞானம் கொள்ளும் மனிதக் கரு வளர்ந்து… அக்கருவின் செயலில் இருந்து தான் மனித உருவங்களே… இச் சூரியனைச் சுற்றியுள்ள “48 மண்டலங்களின் வளர்ச்சியில் மனித ஆத்மாக்கள் வாழும் நிலை பெறும்…”

நம் சூரியனின் சுழற்சியில் பல மண்டலங்கள் ஓடினாலும் நம் பூமியின் நிலைக்கொப்ப மனித ஆத்மாக்கள் வாழக்கூடிய இச்சக்தி மண்டலத்தின் கலி மாறி கல்கி யுகம் பெற்று நம் பூமி சுழலும் தருணத்தில்
1.இன்றைய நிலையில் வாழும் ஆத்மாக்களின் பல கோடி எண்ணங்களை மாற்றிச் செயல் புரிய
2.பல சக்தி நிலைகள் செயல் கொண்டு செயலாற்றித்தான் கல்கி யுகம் வாழ முடியும்.

இவ்வுலக மாற்றத்தினால் இவ்வுலகில் உள்ள மனித ஆத்மாக்களின் உடல் அழிந்தாலும் அவர்களின் உயிரணுவும் உயிராத்மாவும் சப்த அலைகளும் சகல எண்ணத்தில் விட்ட சுவாச அலைகளும் பூமியின் சுழற்சியில் சுழன்றுள்ள நிலையில் மீண்டும் கலி பிறந்தால் இவ் எண்ண வளர்ச்சி எங்கு செல்லும்…?

இப்பூமியின் காற்று மண்டலத்தில் கலந்துள்ள இந்நிலைகள் எல்லாமே அடுத்த நிலைக்கு வர ஏதுவாகின்றதா? என்ற வினா எழும்பலாம். இதன் நிலையில் இக்கலி மாறி கல்கி வரும் தருணத்தில் சில நிலைகள் ஏற்படலாம், எந்நிலை கொண்டு…?

இப்பூமியின் மாற்றத்தினால் இப்பூமியில் இன்று வாழும் மனித ஆத்மாக்களும் பல கோடி ஜீவஜெந்துக்கள் தாவரங்கள் இன்று பூமியில் வளர்ந்துள்ள கனி வளங்கள் நீர் நிலைகள் மனித உடலை விட்டுப் பிரிந்து வாழும் அனைத்து உயிராத்மாக்கள் உயிரணுக்கள் இது நாள் வரை நம் பூமியின் காற்று மண்டலத்தில் நிறைந்துள்ள சப்த அலைகள் அனைத்து நிலைகளுமே இப்பூமியின் மாற்றம் நிகழும் தருவாயில் பல நிலைகள் மாறி கலியில் இன்றளவும் வளர்ந்து விட்ட நிலையில் மாற்றம் காணப் போகின்றோம்.

பல கோடி ஆண்டுகளாய் மாறாமல் சுழன்றுள்ள பலரின் சுவாச அலைகள் எல்லாம் இன்று நாம் எடுக்க முடியும்.
1.இராமாயண காலத்திலும் கிருஷ்ணாவதார காலத்திலும் மச்சாவதார காலத்திலும் மனித ஆத்மாக்கள் விட்ட சப்த அலையை
2.இக்காற்றிலிருந்து அதன் சுழற்சி வட்டத்தில் ஞானம் பெற்றோரினால் ஈர்த்து எடுக்க முடியும்.

ஆனால் இக்கலியின் மாற்றத்தினால் இந்நிலையும் மாறப் போகின்றது. எந்நிலையில்…?

இன்று இக்காற்று மண்டலத்தில் வாழ்ந்தவரின் சப்த அலைகள் அனைத்துமே உள்ளனவா…? என்ற வினா எழும்பலாம்.

இராமாயண காலத்தில் உள்ள நிலைகளைக் காவியமாய்ப் படைத்து இன்றளவும் அந்த இராமாயண கதை மனித ஆத்மாக்களிடம் கலந்துள்ள நிலையில் இச்சப்த அலையின் ஈர்ப்பும் அதன் நினைவு சக்தி சுழன்று உள்ள ஜீவ ஆத்மாக்கள் உள்ளவரை எச் சப்த அலையும் மாறாது.

பல கோடி ஆண்டுகளானாலும் அதன் தொடர் வட்டத்தில் செயல்படும் சப்த அலையின் நிலை சக்தி மாறாது.

இக்கலியில் மாறுகிறது என்றால் இவ்வுலக மாற்றத்தில் ஏற்படும் அதிர்வினால்
1.சில ஒளி அலைகள் நம் பூமியின் காற்று மண்டலத்திற்கு மேல்
2.அனைத்திற்கும் பொதுவான பால்வெளி மண்டலத்தில் கலந்து விடும் நிலை பெறுகின்றது.
3.இன்னும் பல சப்த அலைகள் இப்பூமியின் ஈர்ப்பில் இவ்வதிர்வினால் மோதுண்டு இப்பூமியுடன் கலக்கும் நிலை பெறுகின்றது.
4.பல பல மாற்ற நிலைகள் இக்கலி மாறிக் கல்கியில் காணப் போகின்றீர்கள்.
5.இவ் ஈஸ்வரப்பட்டன் உணர்த்தும் நிலை பைத்தியமாகத் தோணலாம்.
6.மனித ஆத்மாக்களின் எண்ண நிலை இன்னும் தடுமாற்றம் கொள்ளப் போகின்றது.

இன்று உலகின் பல திரையறியச் செயல்படும் கருவிகளும் இக்காற்றிலிருந்து ஈர்த்து ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஒலி அலைகளைப் பரப்பி வாழும் நிலையில்…
1.மனிதனால் செயற்கைக் கோள்களை ஏவி விட்டு அதிலிருந்து உணரும் ஒளி அலைகளும் ஒலி அலைகளும்
2.இவர்கள் இன்று செயலாற்றும் முறைப்படி செயலாகாது.

இயந்திரத்தைத் துணைகொண்டு காற்று மண்டலத்தில் இவர்கள் இன்று பிரித்து எடுக்கும் நிலையெல்லாம் செயல்படுத்தும் முறையில் இன்றுள்ள நிலைக்கொப்ப செயலாக்க முடியாமல் அதற்காக இன்னும் பல புதிய சாதன முறைகளை மனிதன் உருவாக்கப் பார்ப்பான்.

இக்காற்று மண்டலத்தின் விஷத்தன்மைகள் கூடி ஆவி உலகில் வாழும் ஆத்மாக்களின் வெறி உணர்வும் அதிகப்பட்டு… எண்ணிலடங்கா விபரீத நிலைகள் ஏற்படும் தொடர் “இனி வரப்போகும் காலத்தில் நிகழத்தான் போகின்றது…”

மனித ஆத்மாக்களே…! உங்களை நீங்கள் உணர்ந்து
1.என்றிருந்தாலும் மடியத்தான் போகின்றீர்கள் என்று எண்ணம் கொள்ளாமல்
2.மனித ஆத்மாக்களால்தான் நிகழப் போகும் சக்தியை மனிதன் உணர்ந்து செயல்படப் பல நிலைகளைப் போதிக்கின்றோம்.
3.மனிதனாய் அறிவு கொண்டு அன்பு பட்டு ஞானம் பெற்றிட வாருங்கள்.
4.இம்மனித ஆத்மாவிற்குத்தான் அறிவாற்றலை வளர்க்கும் ஆற்றல் உண்டு.

அறிவு நிலை கொண்ட மிருகங்கள் வாழ்ந்தாலும் மனிதனை ஒத்த ஞான சக்தி பெறும் தன்மையற்ற நிலையில் தான் மிருக இனம் உள்ளது. தேவனாய் வாழக்கூடிய மனிதன் தன் நிலை உணர்ந்தால் தேவனாகலாம்.

மற்றவர்கள் நிலையை… உயர்வு கொண்டும் தாழ்வு கொண்டும் எண்ணிடலாகாது

மற்றவர்கள் நிலையை… உயர்வு கொண்டும் தாழ்வு கொண்டும் எண்ணிடலாகாது

 

ஞான ஒளி பெறும் பக்குவத்திலும் ஒருவரைப் போல் ஒருவர் நிலை இருந்திடாது. ஒவ்வொரு உடல் அமில குண வளர்ச்சியைக் கொண்ட பக்குவ மேம்பாட்டில் வித்திடும் ஞான வளர்ச்சி தான் அதன் வழித் தொடர் பெறும்.

ஒன்றை ஒத்த விதை நெல்லை இரண்டு தோட்டக்காரர்கள் அவரவர்கள் ஊரில் பயிர் செய்தாலும் அம்மண் நீர் அங்குள்ள சீதோஷ்ண நிலை அதைப் பயிர் செய்யும் மனித ஆத்மாக்களின் எண்ண வளர்ச்சியின் வளர்ப்பு முறை இவை கொண்டுதான் அப்பயிர் வளர்ந்து பலன் தரும்.

ஒரு தோட்டத்தில் வளர்ந்த விதை நெல்லையே மாறு கொண்ட ஊரில் பயிர் செய்யும் பொழுது அதன் மகசூலும் சுவையும் வேறு கொண்டுதான் அமைகின்றது. அதைப் போல்
1.ஞானத்தின் ஈர்ப்பும் அதை ஈர்த்துச் செயலாக்கும் முறைப்படித் தான்
2.நம் ஞான ஒளியும் பிரகாசிக்கும்.

ஒருவர் நிலையை வைத்து மற்றவர்கள் நிலையை உயர்வு கொண்டும் தாழ்வு கொண்டும் எண்ணிடலாகாது.

எல்லோரும் (ஞானத்தின் வழித்தொடர் பெற்றவர்கள்) தான் பெற்ற ஞான வளர்ச்சியின் முக்தி நிலை கொண்ட பிறகு… தனித்தனி ஒளிகளாக வளர்ச்சி கொண்ட ஞான ஒளி எல்லாம்… சப்தரிஷிகள் போன்றோரின் நிலை பெற்ற பிறகும் அவரின் வளர்ச்சி நிலை பெற்ற அமில குணத்தின் வட்டச் செயலில் தான் செயல்படுகின்றார்.

1.எல்லோரும் பக்தி கொண்டு வணங்குவதும்… ஒன்றை வைத்து ஒன்று இல்லை
2.ஞான வளர்ச்சி பெறும் நிலையிலும்… ஒன்றை ஒத்த நிலையில் ஒன்று இல்லை.
3.சப்தரிஷியாய் நிலைக்கப் பெற்ற நிலையிலும் ஒன்றை ஒத்து ஒன்று இல்லை
4.மண்டலங்களாய் உருளும் மண்டலங்களும் ஒன்றை ஒத்து ஒன்று இல்லை.

ஆனால் ஒன்றின் சக்தி கொண்டு ஒன்றி வாழும் இவ்வெல்லாமில் எல்லாமுமே ஒன்றே சக்தியாக ஆதி சக்தி ஒன்றி உள்ளாள் என்பதனை உணர்ந்து…
1.எவ் ஆத்மாவையும் குறை கண்டும் சலித்தும் வாழாமல்
2.நம் நிலையில் ஏற்பட்டுள்ள அமில குணத்தின் சக்தியின் வீரிய நிலையை
3.எவ்வழியில் அதிகமாகப் பெற்று வழி பெற்றோமோ அதன் வளர்ச்சியில் ஞானத்தை வழிப்படுத்துங்கள்.

நம் முன்னோரின் கூற்றுப்படி விதைத்த விதைத்தானே முளைக்கும் என்பதனை உணர்ந்து ஞானத்தின் வழித்தொடர் பெறுங்கள்.

காட்சி;-
சில கனிகளைப் பறித்து அப்படியே உண்ணுகின்றோம். சில கனிகளைத் தோல் நீக்கப்பட்டு உண்ணுகின்றோம். பலாப்பழம் போன்ற கனிக்கு அதன் முள்ளை அகற்றி அதற்குள் இருக்கும் சதைப் பகுதிகளைப் பிரித்துச் சுவையான பலாச்சுளையை எடுத்து கொட்டை நீக்கித்தான் உண்ணுகின்றோம்.

நம் முன்னோர்களால் “முக்கனியின் சுவையை எடுத்து” என்ற சொல் நாமத்தின் அமுதிசையைக் கேட்டு மகிழ்ந்துள்ளோம். முக்கனியை வைத்து வணங்குகின்றோம்.

மாங்கனியை அப்படியே கடித்துச் சுவைத்து உண்டு அதன் கொட்டையை வீசிவிடுகின்றோம். வாழைப்பழத்தின் தோலை நீக்கி அதை அப்படியே சுவைக்கின்றோம். பலாச்சுளையை எடுக்கப் பல வேலைகளைச் செய்துதான் உண்ண முடிகின்றது.

இதன் உருவ நிலை என்ன…?

விளக்கம்;-
முக்கனிக்கும் சுவை உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்குவ நிலை கொண்டு தான் அதனை நாம் உண்ண முடிகின்றது.

அதைப்போல் நம் ஆத்ம ஞானத்தை இவ்வழித்தொடர் எல்லாம் பெறும் நிலைப்படுத்தி
1.மாங்கனியை ஒத்த பூஜை வழிபாட்டைப் பக்தியில் சுவைத்து மற்றவற்றைக் கொட்டையைப் போல் அகற்றி
2.நம் எண்ணத்தைச் சுற்றியுள்ள உலக நிலைகளை வாழைப்பழத்தின் தோலைப் போல் நீக்கி ஞான வழி போல் பழத்தை உண்டு
3.நம்முள் கலந்துள்ள பல அணுக்களின் முட்களை நீக்கிச் சதையான நிலையை எண்ணாமல் நம்முள்ள சுவையான சுளையைச் சுவைத்திட
4.கொட்டை என்ற எதிர்நிலையை நீக்கி சுவைத்திடல் வேண்டும் என்ற பக்குவத்தை உணர்த்த முக்கனியைப் படைத்தார்கள் ஞானிகள்.

தான் விதைத்ததன் பலனைப் பொறுக்கி எடுக்கின்றாள் ஆதிசக்தி

தான் விதைத்ததன் பலனைப் பொறுக்கி எடுக்கின்றாள் ஆதிசக்தி

 

ஞானத்தின் சக்தி பெற்று சித்து நிலை பெற்றிடவே நம்முள் உள்ள அமில சக்தியை எல்லாம்… நம் நிலைக்குகந்த அமில குணத்தை இந்த ஞானத்தின் ஈர்ப்பிற்குச் செல்லும் குண அமிலமாக நாம் செயல்படுத்திட்டால்… எவ்வமிலத்தை நாம் எவ்வழித் தொடருக்கு அதிகப்படுத்தி அதன் ஈர்ப்பில் வளர விடுகின்றோமோ அதன் தன்மையின் ஆணைக்குட்பட்டு… மற்ற அமில குணங்களும் இதன் கட்டுப்பாட்டிற்கே அடங்கிச் செயல்படுத்திட வைத்திடலாம்.
1.அதனதன் குணம் என்றுமே மாறாது.
2.ஆனால் அதனை இதனின் கட்டுப்பாட்டிற்குள் அடக்கி வைத்திட முடியும்.

நல்ல அமிலத்தின் செயலைப் போன்றே தீய அமில குணத்தின் செயல் நிலையும் அதன் செயலிலேயே வழி கொண்டிடும்.
1.நமக்குள் உள்ள இப் பன்னிரண்டு வகை அமிலத்தையும் அதன் போக்கில் நாம் செல்ல விட்டிட்டால்
2.அதனதன் தொடரில் எதன் குணம் அதிகப்படுகின்றதோ அதற்குகந்த ஆவி குண அமிலங்களும்
3.இதன் ஈர்ப்பில் அந்த குணத்துக்குடைய இக்காற்றினில் சுற்றிக் கொண்டிருக்கும் உடலை விட்டுப் பிரிந்த
4.மனித ஆத்மா மிருக ஆத்மா என்ற பாகுபாடு இல்லாமல் இக்குண அமிலதத்துடன் வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.

இப்படிச் சேரும் ஆவி அமிலங்களில் சில சக்தி வாய்ந்த ஆவி அமிலங்கள் உடலில் ஏறிவிட்டால் அதன் செயல்நிலை அவ் உடலில் உள்ள உயிர் ஆத்மாவைக் காட்டிலும் இதன் தூண்டுதலின் வெறிக்கு உட்பட்டு மென்மேலும் இதன் நிலைக்கே தான் இழுத்துச் சென்று கொண்டே இருக்கும்.

பக்தி ஞானம் சித்து என்ற நல்லுணர்வு அமில சக்தியின் கூட்டு நிலையும் இப்படித்தான். சலிப்பு கோபம் வெறி குரோதம் இப்படிச் செயல்படும் நிலையின் அமில குணமும் அதன் ஈர்ப்பில் தான் இழுத்துச் செல்லும்‌.

இப்படி இத் தீய அணுவின் அமில குணத்திற்குக் கட்டுப்பட்ட ஆத்மாக்களை அத் தீய அமில சக்தி மென்மேலும் அதனை இழுத்துச் சென்று வஞ்சனை குரோதம் கொலை கொள்ளை இப்படிச் செல்லும் அமில உயிர் ஆத்மாக்கள் அதன் வெறி உணர்வினால் உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்றாலும் இவ்வெறி உணர்வு அடங்காமல் அதே நிலை கொண்ட உடல்களில் ஏறி தன் வெறிக்குகந்த செயலை மென்மேலும் தூண்டி மனித ஆத்மாவைப் பேயாக்கி விடுகின்றது.

இவ் வெறி கொண்ட ஆவி உலக ஆவி மனித ஜீவ உடல் கொண்ட அதே குணநிலையில் உள்ள ஆத்மாவின் உடலில் ஏறி… மென்மேலும் இவ்வெறி உணர்வு அதிகப்பட்டு… உடலில் உள்ள பொழுதே மாமிச உணவுகளை மிக அதிகமாக உண்டு… அதன் வெறியிலேயே உடல் பிரிந்து சென்றாலும் அவ்வாவிகள் தான் தன் வெறிக்குகந்த உணவைப் பெற இரத்தக் காட்டேறிகளாய் அவ் உதிரத்தின் சுவாசத்தை எடுக்க ஆவி உலகில் இருந்து கொண்டு வெறியாட்டம் நடத்துகின்றன.

இன்று உலகில் எல்லா பாகங்களிலுமே அதிகமாக விபத்துக்கள் ஏற்படுகின்றன என்றால் எந்த நிலையில்…?
1.இரத்தக்காட்டேறிகளாய் ஆவி உலகில் சூழ்ந்துள்ள இவ்வாத்மாக்களுக்கு அதற்குகந்த ஆகாரத்தை எடுக்கத்தான்
2.அவைகள் செய்யும் வெறிச் செயலினால் இன்றைய உலக ஆத்மாக்கள் மாளுகின்றன.

இம் மனிதனே தான் தெய்வமும் ஆகின்றான். இரத்தக்காட்டேறி ஆகவும் ஆகின்றான். எமனாகவும் செயல்படுகின்றான் தேவனாகவும் செயல்படுகின்றான். எண்ணும் எண்ணத்தைக் கொண்டு நல் அமிலத்தை ஈர்த்து வாழ்பவன் தெய்வமாகின்றான். தீய அமிலத்தை ஈர்த்து வாழ்பவன் பேயாகின்றான்.

1.நம்க்கு எல்லாம் மீறிய அப்பாற்பட்ட சக்தியான அவ்வாதி சக்தி
2.அவள் விதைத்த விதையில் வளரும் நிலை கொண்டு பலனைக் கண்டு அவளே நகைக்கின்றாள்.
3.எல்லா விதையும் ஒன்று போல் விதைத்து அவ்விதையின் பயனைக் கண்டு மென்மேலும் விதைத்துக் கொண்டே உள்ளாள்.
4.விதையின் நற்பயனைத் தன்னுள் எடுத்துக் கொண்டு வேண்டாத பயனை ஒரு காலகட்டத்தில் மாற்றி அமைத்து விடுகின்றாள்.
5.இக்கலியில் பொறுக்கி எடுக்கின்றாள் தான் விதைத்ததன் பயனை எல்லாம்
6.தனக்குகந்தது எது என்று அவளுக்குத் தெரியும்… மற்றவற்றைத் திரும்பவும் உழுது பயிருக்கு அனுப்புவாள்.
7.மாற்றி மாற்றிப் பலனை எடுத்துக் கொண்டேதான் இருக்கிறாள்.

இதனை உணர்ந்து இரத்தக்காட்டேறிகளாய் அலையும் ஈர்ப்பில் நாம் போய்ச் சிக்காமல் அன்பென்னும் பக்தி நெறியில் நம்முள் உள்ள அமில குணங்களை வழிநடத்தி அந்த ஞானத்தின் சித்தடைவோம்.

ஒவ்வொரு உயிரணுவும் “அது எடுக்கும் சுவாசம் கொண்டு நடப்பது தான் அனைத்துமே”

ஒவ்வொரு உயிரணுவும் “அது எடுக்கும் சுவாசம் கொண்டு நடப்பது தான் அனைத்துமே”

 

எல்லாவற்றுடனும் எல்லாமாய்க் கலந்துள்ள அவ் எம்பெருமானின் நிலையில்
1.ஏன்…! எல்லாச் செயலும் அவனால் நடக்கப் பெற்றுச் செயல் கொள்ளக் கூடாதா…?
2.இவ் ஏற்றத்தாழ்வும் எண்ண மாற்றமும் எதற்கப்பா…?
3.எல்லாமும் அவனே என்றிருக்க எண்ணிய நிலை ஏன் நடப்பதில்லை…?
4.எண்ணமும் அவனே செயலும் அவனே…! எண்ணமும் செயலும் அவனாய் இருக்க
5.“அவனே ஏன் செயல் கொள்ளலாகாது…?” என்ற எண்ணமும் நமக்குள்ளே.

அனைத்துமே பரம்பொருள்தான். அப்பரம்பொருளின் பொருளாய் உள்ள அனைத்திற்கும் ஏற்றத்தாழ்வு நிலை ஏன்…?

1.அன்பாயும் ஆசையுடனும் அறநெறியுடனும் வாழ்கின்றனர் ஒரு சிலர்.
2.வாழ்க்கையையே இன்னலில் மூழ்கவிட்டு நரகமாகவும் வாழ்கின்றனர் ஒரு சிலர்.

எல்லாரும் எல்லாமுமாய்க் கலந்துள்ள அப்பரம்பொருளுக்கு ஏன் இம்மாற்ற நிலை…?

பரம்பொருளினால் படைக்கப் பெற்ற எல்லாப் பரம்பொருளுமே அவன் படைப்பில் சக்தி பெறச் செய்கிறான். அப்பரம்பொருளின் சக்தியில் சக்தி பெற்று வழித்தொடர் பெறும் பரம் பொருள்கள் அப்பரம்பொருளிடமே ஐக்கியப்பட்டு அதன் தொடர்ச்சியில் பல பரம்பொருள்கள் சுழன்று கொண்டே செயல் கொள்கின்றன.

உயிரணுவாய் உதித்துப் பல மாற்றங்களில் அவ்வுயிரணு செயல்பட்டு அதன் தொடர்ச்சியில் இருந்து உயிர் ஜீவிதம் பெற்று… இஜ்ஜீவிதத்தின் தொடரினால் ஜீவ ஆத்மாவாய் ஜீவ சக்தியுற்று இவ் ஆத்மா நிலை பெற்று…
1.ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அவ்வாத்ம நிலையில் “ஏழு சந்தர்ப்பங்களில்தான்”
2.அவ்ஆத்மாவினால் நற் சக்தியான சூட்சுமம் கொள்ளும் வழித் தொடரை அடைய முடியும்.

உயிர் ஆத்மா பெற்ற நிலையிலிருந்து சேமிக்கும் அமிலத்தின் தொடர் இவ் ஏழு சந்தர்ப்பத்தைப் பெறும் வழித் தொடர் கொள்ளும் அமில சக்தியை இவ் ஏழு தொடரில் ஞானத்தொடர் வழியை அறிந்து… அத்தொடரையே தொடராக்கி சக்தி கொண்டிட்டால்… அந்நிலையில் சித்துநிலை பெற்று…
1.இவ்வாத்மாவைச் செயலாக்கும் சக்தியாய் மண்டல உருப்பெறும் நிலை கொண்டு…
2.ஒவ்வோர் உயிர் ஆத்மாவின் வட்டத்திலும் ஒவ்வொரு மண்டலமாகிடும் பக்குவம் பெற்று
3.மண்டலத்துடனே வளர்ச்சியுற்று அம்மண்டலமே உலகாய்ச் சுழன்று
4.பல உயிரணுக்களை ஈர்த்து வளர விட்டுச் செயல் கொண்டிட முடியும்.

இவ்வுலகில் மட்டுமல்ல பல கோடி மண்டலங்களும் இப்பால்வெளி மண்டலத்தில் படர்ந்துள்ள எண்ணிலடங்கா ஜீவசக்திகளும் அப்பரம்பொருளினால் படர விட்டவைதான்.

கொசுவாயும் சாக்கடைத் திரவமாயும் உள்ளவையும் அப்பரம்பொருளின் ஐக்கியம் தான். ஜோதியுடன் ஜோதியாய் எரிந்திடும் கற்பூரமும் அப்பரம்பொருளின் ஐக்கியம்தான்.

அப்பரம்பொருளான அவ் ஆதிசக்தி அனுப்பிடும் உயிரணுக்களில் “அவையவை எடுக்கும் சுவாச சக்தியைக் கொண்டுதான்” அவரவர்களுக்கு அமையும் வாழ்க்கை நிலையும் செயல்முறையும் வந்திடும்.

விருந்தில் போஜனம் படைக்கிறார்கள். பல பதார்த்தங்கள் இருந்தாலும் நம் எண்ண நிலைக்கொப்ப நம் சுவாசம் எதை ஈர்த்து நம் நாக்கு ருசிப் படுத்துகின்றதோ அவ்வுணவைத் தான் நம் எண்ணம் விரும்பிகிறது.

அதைப் போல்
1.நாம் எடுக்கும் அமில சக்திக்குகந்த சுவாசத்தைக் கொண்டு தான்
2.ஒவ்வோர் உயிராத்மாவிற்கும் அப்பரம்பொருளின் ஆசியும் கிட்டுகின்றது.

மண்டலமாயும் சுழல்வது உயிராத்மா தான்; புழுவாய் நெளிதுவும் இவ்வுயிராத்மா தான். பரமாத்மாவின் வழி பெற்று வந்த இவ்வுயிரணு எடுக்கும் சுவாசம் கொண்டு நடப்பது தான் அனைத்துமே.

யாருக்கு யாரும் மூத்தவருமல்ல… இளையவருமல்ல…!

யாருக்கு யாரும் மூத்தவருமல்ல… இளையவருமல்ல…!

 

ஒவ்வோர் உயிரணுவையும் தனதாக எண்ணி
1.அவ்வுயிர் ஆத்மாக்கள் படும் வியாதியின் சங்கடத்தை இவ்இறை பக்தி கொண்ட இறை ஆத்மாக்களினால் ஏற்கப் பொறுக்காமல்
2.அவ்வாத்மா வேறல்ல தனது ஆத்மா வேறல்ல என்ற நிலைப்படுத்தி
3.ஒவ்வொரு சிறு உயிரணுவும் அதன் துடிப்பில் வேதனை உறுவதை தன் உயிராத்மாவுடன் கலக்கவிட்டு…
4.தானே அவ்வேதனைக்கு உடையவனாகி அதை அகற்றிடல் வேண்டும்.
5.மற்ற உயிரணுக்கள் எல்லாமே இன்புறல் வேண்டும் என்று
6.இறை ஆத்மாவின் அன்பு கொண்ட பக்தி ஜெபம் பெற்றவர்கள் அவ்விறைவனாகவே செயல்படுகின்றனர்.

ஆனால்… அது செய்த பாவத்திற்கு அது அனுபவிக்கின்றது. நாம் ஏன் வேதனையுறல் வேண்டும்…? என்று சுயநலமிக்க ஆத்மாக்களினால் நற்செயலையே செய்து… நல்லொழுக்கமே கொண்டு வாழ்ந்து வழி வந்தாலும் மற்ற ஜீவ அணுக்களையும் தனதாக ஏற்காமல் செயல்படுபவன் “சுயநலமிக்கவன்” ஆகின்றான்.

எல்லா உயிரணுக்களுமே ஒன்றுதான் என்ற எண்ணம் கொண்ட உயிர் ஆத்மாக்கள்தான் ஞான ஒளி ஆகின்றார்களே அன்றி சுயநலமிக்க ஆத்மாக்களினால் பக்தி நிலை பெறுவது கடினம்.

சிறு எறும்பு நம்மை வந்து கடிக்கின்றது. அக்கடி நிலை பொறுக்காமல் அதை நசுக்கி எறிகின்றோம். அவ் எறும்பின் ஜீவன் பிரிந்து விடுகின்றது. அதன் உருவம் நசுக்கப்படுகின்றது என்று எண்ணுகின்றோம்.

அதன் ஜீவன் எங்கு செல்கின்றது…?

1.அதை நசுக்குபவரின் எண்ணத்திலேயே அவ்எறும்பு சேமித்த எண்ணத்தையும் அமிலத்தையும் அதை நசுக்குபவனே ஏற்றிக் கொள்கின்றான்.
2.பல உயிர்களை உணவாக்கி உண்ணுகின்றோம்
3.அதனால் அவைகளுக்கு இம் மனிதர்களின் கையினால் பாவ விமோசனம் கிடைத்து
4.நம் உடலிலேயே அவற்றின் சக்தியையெல்லாம் ஏற்றிக் கொள்கின்றோம் என்பதனை அறியாமல்
5.நம் நாவின் சுவைக்காக நம்மை அறியாமல் நாம் பலி படுகின்றோம்.

எல்லா உயிரணுக்களுக்குமே எண்ணம் உண்டு. இவ்வெண்ணத்தில் சேமித்த அமிலத்தின் நன்மை தீமை கொண்ட குண நிலையும் உண்டு. ஓர் உயிர் ஜெந்துவை அழித்து உண்ணும் நாம் அஜ்ஜெந்துவின் நிலையையும் “நம்முள் ஏற்றிக் கொள்கின்றோம்” என்பதனை உணரல் வேண்டும்.

முந்தைய பாடங்களில் உணர்த்தியுள்ளேன் மனிதர்களில் இருந்து தான் மிருக ஜெந்துவும் பறவைகளும் ஊர்வனவும் வருகின்றன என்று. மிருகங்கள் மற்றப் பறவைகளிலிருந்து மனித இனம் வருவதில்லையா…? என்று எண்ணிடலாம்.

இம்மனிதர்களால் மற்ற ஜெந்துக்களைப் புசிக்கும் நிலையில் அதன் சப்த அலையும் உயிரணுவும் அதன் உடலைப் புசித்தவனின் உடலுக்குள் ஏறிக் கொள்கின்றது.

அறிவு வளர்ச்சி நிலை கொண்ட மனித ஆத்மாவில் ஏறிக்கொள்ளும் மிருக ஜெந்திற்கு
1.அம்மனிதக் கூட்டில் இருந்து அம்மனித ஆத்மா பிரிந்த பிறகு
2.மனிதனின் உடலில் ஏறிய இஜ்ஜீவனுக்கும் மனித உருவாய்ப் பிறந்திடும் பக்குவ நிலை பெற்றுப் பிறப்பிற்கு வருகின்றது.
3.அஜ்ஜெந்திற்கு இம் மனிதனால் விமோசனம் கிடைக்கின்றது.
4.இம் மனிதனுக்குத்தான் மற்ற ஜீவனை உண்ட நிலையினால் அதன் குண நிலையின் வழித்தொடர் பெறுகின்றான்.

இந்நிலையை உணர்ந்து நாம் எல்லா ஜீவ ஆத்மாக்களிடமும் உயிரணுக்களிடமும்
1.அவை வேறல்ல நாம் வேறல்ல என்ற நிலையில் நம்மையே அவையாக்கி அவையே நாமாகி
2.அன்பெனும் நிலைதனை கனிவாகப் படர விடல் வேண்டும்.

இன்று அவை கொசுவாகவும் குருவியாகவும் ஆடாகவும் இருந்திடலாம். அவையும் நம்மைப் போல் ஜீவன் கொண்டவை தான். “எல்லா உயிரணுக்களையும் நமதாக எண்ணிக் கனிவு நிலையில் வழி நடந்திடுங்கள்…”

இவ்வுலகிற்கும் எண்ணமுண்டு ஜீவ காந்த அமில சக்தியுண்டு. இவ்வுலகினில் வாழும் அனைத்திற்குமே மனிதன் முதல் எறும்பு வரை உள்ள அனைத்து ஜீவராசிகளுக்குமே எண்ணமும் உண்டு அதற்குகந்த காந்த அமில சக்தியும் உண்டு.
1.யாருக்கு யாரும் மூத்தவருமல்ல இளையவருமல்ல.
2.எல்லாம் அப்பரம்பொருளின் ஐக்கியம் கொண்ட ஆத்மாக்கள் தான்.