தான் விதைத்ததன் பலனைப் பொறுக்கி எடுக்கின்றாள் ஆதிசக்தி

தான் விதைத்ததன் பலனைப் பொறுக்கி எடுக்கின்றாள் ஆதிசக்தி

 

ஞானத்தின் சக்தி பெற்று சித்து நிலை பெற்றிடவே நம்முள் உள்ள அமில சக்தியை எல்லாம்… நம் நிலைக்குகந்த அமில குணத்தை இந்த ஞானத்தின் ஈர்ப்பிற்குச் செல்லும் குண அமிலமாக நாம் செயல்படுத்திட்டால்… எவ்வமிலத்தை நாம் எவ்வழித் தொடருக்கு அதிகப்படுத்தி அதன் ஈர்ப்பில் வளர விடுகின்றோமோ அதன் தன்மையின் ஆணைக்குட்பட்டு… மற்ற அமில குணங்களும் இதன் கட்டுப்பாட்டிற்கே அடங்கிச் செயல்படுத்திட வைத்திடலாம்.
1.அதனதன் குணம் என்றுமே மாறாது.
2.ஆனால் அதனை இதனின் கட்டுப்பாட்டிற்குள் அடக்கி வைத்திட முடியும்.

நல்ல அமிலத்தின் செயலைப் போன்றே தீய அமில குணத்தின் செயல் நிலையும் அதன் செயலிலேயே வழி கொண்டிடும்.
1.நமக்குள் உள்ள இப் பன்னிரண்டு வகை அமிலத்தையும் அதன் போக்கில் நாம் செல்ல விட்டிட்டால்
2.அதனதன் தொடரில் எதன் குணம் அதிகப்படுகின்றதோ அதற்குகந்த ஆவி குண அமிலங்களும்
3.இதன் ஈர்ப்பில் அந்த குணத்துக்குடைய இக்காற்றினில் சுற்றிக் கொண்டிருக்கும் உடலை விட்டுப் பிரிந்த
4.மனித ஆத்மா மிருக ஆத்மா என்ற பாகுபாடு இல்லாமல் இக்குண அமிலதத்துடன் வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.

இப்படிச் சேரும் ஆவி அமிலங்களில் சில சக்தி வாய்ந்த ஆவி அமிலங்கள் உடலில் ஏறிவிட்டால் அதன் செயல்நிலை அவ் உடலில் உள்ள உயிர் ஆத்மாவைக் காட்டிலும் இதன் தூண்டுதலின் வெறிக்கு உட்பட்டு மென்மேலும் இதன் நிலைக்கே தான் இழுத்துச் சென்று கொண்டே இருக்கும்.

பக்தி ஞானம் சித்து என்ற நல்லுணர்வு அமில சக்தியின் கூட்டு நிலையும் இப்படித்தான். சலிப்பு கோபம் வெறி குரோதம் இப்படிச் செயல்படும் நிலையின் அமில குணமும் அதன் ஈர்ப்பில் தான் இழுத்துச் செல்லும்‌.

இப்படி இத் தீய அணுவின் அமில குணத்திற்குக் கட்டுப்பட்ட ஆத்மாக்களை அத் தீய அமில சக்தி மென்மேலும் அதனை இழுத்துச் சென்று வஞ்சனை குரோதம் கொலை கொள்ளை இப்படிச் செல்லும் அமில உயிர் ஆத்மாக்கள் அதன் வெறி உணர்வினால் உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்றாலும் இவ்வெறி உணர்வு அடங்காமல் அதே நிலை கொண்ட உடல்களில் ஏறி தன் வெறிக்குகந்த செயலை மென்மேலும் தூண்டி மனித ஆத்மாவைப் பேயாக்கி விடுகின்றது.

இவ் வெறி கொண்ட ஆவி உலக ஆவி மனித ஜீவ உடல் கொண்ட அதே குணநிலையில் உள்ள ஆத்மாவின் உடலில் ஏறி… மென்மேலும் இவ்வெறி உணர்வு அதிகப்பட்டு… உடலில் உள்ள பொழுதே மாமிச உணவுகளை மிக அதிகமாக உண்டு… அதன் வெறியிலேயே உடல் பிரிந்து சென்றாலும் அவ்வாவிகள் தான் தன் வெறிக்குகந்த உணவைப் பெற இரத்தக் காட்டேறிகளாய் அவ் உதிரத்தின் சுவாசத்தை எடுக்க ஆவி உலகில் இருந்து கொண்டு வெறியாட்டம் நடத்துகின்றன.

இன்று உலகில் எல்லா பாகங்களிலுமே அதிகமாக விபத்துக்கள் ஏற்படுகின்றன என்றால் எந்த நிலையில்…?
1.இரத்தக்காட்டேறிகளாய் ஆவி உலகில் சூழ்ந்துள்ள இவ்வாத்மாக்களுக்கு அதற்குகந்த ஆகாரத்தை எடுக்கத்தான்
2.அவைகள் செய்யும் வெறிச் செயலினால் இன்றைய உலக ஆத்மாக்கள் மாளுகின்றன.

இம் மனிதனே தான் தெய்வமும் ஆகின்றான். இரத்தக்காட்டேறி ஆகவும் ஆகின்றான். எமனாகவும் செயல்படுகின்றான் தேவனாகவும் செயல்படுகின்றான். எண்ணும் எண்ணத்தைக் கொண்டு நல் அமிலத்தை ஈர்த்து வாழ்பவன் தெய்வமாகின்றான். தீய அமிலத்தை ஈர்த்து வாழ்பவன் பேயாகின்றான்.

1.நம்க்கு எல்லாம் மீறிய அப்பாற்பட்ட சக்தியான அவ்வாதி சக்தி
2.அவள் விதைத்த விதையில் வளரும் நிலை கொண்டு பலனைக் கண்டு அவளே நகைக்கின்றாள்.
3.எல்லா விதையும் ஒன்று போல் விதைத்து அவ்விதையின் பயனைக் கண்டு மென்மேலும் விதைத்துக் கொண்டே உள்ளாள்.
4.விதையின் நற்பயனைத் தன்னுள் எடுத்துக் கொண்டு வேண்டாத பயனை ஒரு காலகட்டத்தில் மாற்றி அமைத்து விடுகின்றாள்.
5.இக்கலியில் பொறுக்கி எடுக்கின்றாள் தான் விதைத்ததன் பயனை எல்லாம்
6.தனக்குகந்தது எது என்று அவளுக்குத் தெரியும்… மற்றவற்றைத் திரும்பவும் உழுது பயிருக்கு அனுப்புவாள்.
7.மாற்றி மாற்றிப் பலனை எடுத்துக் கொண்டேதான் இருக்கிறாள்.

இதனை உணர்ந்து இரத்தக்காட்டேறிகளாய் அலையும் ஈர்ப்பில் நாம் போய்ச் சிக்காமல் அன்பென்னும் பக்தி நெறியில் நம்முள் உள்ள அமில குணங்களை வழிநடத்தி அந்த ஞானத்தின் சித்தடைவோம்.

ஒவ்வொரு உயிரணுவும் “அது எடுக்கும் சுவாசம் கொண்டு நடப்பது தான் அனைத்துமே”

ஒவ்வொரு உயிரணுவும் “அது எடுக்கும் சுவாசம் கொண்டு நடப்பது தான் அனைத்துமே”

 

எல்லாவற்றுடனும் எல்லாமாய்க் கலந்துள்ள அவ் எம்பெருமானின் நிலையில்
1.ஏன்…! எல்லாச் செயலும் அவனால் நடக்கப் பெற்றுச் செயல் கொள்ளக் கூடாதா…?
2.இவ் ஏற்றத்தாழ்வும் எண்ண மாற்றமும் எதற்கப்பா…?
3.எல்லாமும் அவனே என்றிருக்க எண்ணிய நிலை ஏன் நடப்பதில்லை…?
4.எண்ணமும் அவனே செயலும் அவனே…! எண்ணமும் செயலும் அவனாய் இருக்க
5.“அவனே ஏன் செயல் கொள்ளலாகாது…?” என்ற எண்ணமும் நமக்குள்ளே.

அனைத்துமே பரம்பொருள்தான். அப்பரம்பொருளின் பொருளாய் உள்ள அனைத்திற்கும் ஏற்றத்தாழ்வு நிலை ஏன்…?

1.அன்பாயும் ஆசையுடனும் அறநெறியுடனும் வாழ்கின்றனர் ஒரு சிலர்.
2.வாழ்க்கையையே இன்னலில் மூழ்கவிட்டு நரகமாகவும் வாழ்கின்றனர் ஒரு சிலர்.

எல்லாரும் எல்லாமுமாய்க் கலந்துள்ள அப்பரம்பொருளுக்கு ஏன் இம்மாற்ற நிலை…?

பரம்பொருளினால் படைக்கப் பெற்ற எல்லாப் பரம்பொருளுமே அவன் படைப்பில் சக்தி பெறச் செய்கிறான். அப்பரம்பொருளின் சக்தியில் சக்தி பெற்று வழித்தொடர் பெறும் பரம் பொருள்கள் அப்பரம்பொருளிடமே ஐக்கியப்பட்டு அதன் தொடர்ச்சியில் பல பரம்பொருள்கள் சுழன்று கொண்டே செயல் கொள்கின்றன.

உயிரணுவாய் உதித்துப் பல மாற்றங்களில் அவ்வுயிரணு செயல்பட்டு அதன் தொடர்ச்சியில் இருந்து உயிர் ஜீவிதம் பெற்று… இஜ்ஜீவிதத்தின் தொடரினால் ஜீவ ஆத்மாவாய் ஜீவ சக்தியுற்று இவ் ஆத்மா நிலை பெற்று…
1.ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அவ்வாத்ம நிலையில் “ஏழு சந்தர்ப்பங்களில்தான்”
2.அவ்ஆத்மாவினால் நற் சக்தியான சூட்சுமம் கொள்ளும் வழித் தொடரை அடைய முடியும்.

உயிர் ஆத்மா பெற்ற நிலையிலிருந்து சேமிக்கும் அமிலத்தின் தொடர் இவ் ஏழு சந்தர்ப்பத்தைப் பெறும் வழித் தொடர் கொள்ளும் அமில சக்தியை இவ் ஏழு தொடரில் ஞானத்தொடர் வழியை அறிந்து… அத்தொடரையே தொடராக்கி சக்தி கொண்டிட்டால்… அந்நிலையில் சித்துநிலை பெற்று…
1.இவ்வாத்மாவைச் செயலாக்கும் சக்தியாய் மண்டல உருப்பெறும் நிலை கொண்டு…
2.ஒவ்வோர் உயிர் ஆத்மாவின் வட்டத்திலும் ஒவ்வொரு மண்டலமாகிடும் பக்குவம் பெற்று
3.மண்டலத்துடனே வளர்ச்சியுற்று அம்மண்டலமே உலகாய்ச் சுழன்று
4.பல உயிரணுக்களை ஈர்த்து வளர விட்டுச் செயல் கொண்டிட முடியும்.

இவ்வுலகில் மட்டுமல்ல பல கோடி மண்டலங்களும் இப்பால்வெளி மண்டலத்தில் படர்ந்துள்ள எண்ணிலடங்கா ஜீவசக்திகளும் அப்பரம்பொருளினால் படர விட்டவைதான்.

கொசுவாயும் சாக்கடைத் திரவமாயும் உள்ளவையும் அப்பரம்பொருளின் ஐக்கியம் தான். ஜோதியுடன் ஜோதியாய் எரிந்திடும் கற்பூரமும் அப்பரம்பொருளின் ஐக்கியம்தான்.

அப்பரம்பொருளான அவ் ஆதிசக்தி அனுப்பிடும் உயிரணுக்களில் “அவையவை எடுக்கும் சுவாச சக்தியைக் கொண்டுதான்” அவரவர்களுக்கு அமையும் வாழ்க்கை நிலையும் செயல்முறையும் வந்திடும்.

விருந்தில் போஜனம் படைக்கிறார்கள். பல பதார்த்தங்கள் இருந்தாலும் நம் எண்ண நிலைக்கொப்ப நம் சுவாசம் எதை ஈர்த்து நம் நாக்கு ருசிப் படுத்துகின்றதோ அவ்வுணவைத் தான் நம் எண்ணம் விரும்பிகிறது.

அதைப் போல்
1.நாம் எடுக்கும் அமில சக்திக்குகந்த சுவாசத்தைக் கொண்டு தான்
2.ஒவ்வோர் உயிராத்மாவிற்கும் அப்பரம்பொருளின் ஆசியும் கிட்டுகின்றது.

மண்டலமாயும் சுழல்வது உயிராத்மா தான்; புழுவாய் நெளிதுவும் இவ்வுயிராத்மா தான். பரமாத்மாவின் வழி பெற்று வந்த இவ்வுயிரணு எடுக்கும் சுவாசம் கொண்டு நடப்பது தான் அனைத்துமே.

யாருக்கு யாரும் மூத்தவருமல்ல… இளையவருமல்ல…!

யாருக்கு யாரும் மூத்தவருமல்ல… இளையவருமல்ல…!

 

ஒவ்வோர் உயிரணுவையும் தனதாக எண்ணி
1.அவ்வுயிர் ஆத்மாக்கள் படும் வியாதியின் சங்கடத்தை இவ்இறை பக்தி கொண்ட இறை ஆத்மாக்களினால் ஏற்கப் பொறுக்காமல்
2.அவ்வாத்மா வேறல்ல தனது ஆத்மா வேறல்ல என்ற நிலைப்படுத்தி
3.ஒவ்வொரு சிறு உயிரணுவும் அதன் துடிப்பில் வேதனை உறுவதை தன் உயிராத்மாவுடன் கலக்கவிட்டு…
4.தானே அவ்வேதனைக்கு உடையவனாகி அதை அகற்றிடல் வேண்டும்.
5.மற்ற உயிரணுக்கள் எல்லாமே இன்புறல் வேண்டும் என்று
6.இறை ஆத்மாவின் அன்பு கொண்ட பக்தி ஜெபம் பெற்றவர்கள் அவ்விறைவனாகவே செயல்படுகின்றனர்.

ஆனால்… அது செய்த பாவத்திற்கு அது அனுபவிக்கின்றது. நாம் ஏன் வேதனையுறல் வேண்டும்…? என்று சுயநலமிக்க ஆத்மாக்களினால் நற்செயலையே செய்து… நல்லொழுக்கமே கொண்டு வாழ்ந்து வழி வந்தாலும் மற்ற ஜீவ அணுக்களையும் தனதாக ஏற்காமல் செயல்படுபவன் “சுயநலமிக்கவன்” ஆகின்றான்.

எல்லா உயிரணுக்களுமே ஒன்றுதான் என்ற எண்ணம் கொண்ட உயிர் ஆத்மாக்கள்தான் ஞான ஒளி ஆகின்றார்களே அன்றி சுயநலமிக்க ஆத்மாக்களினால் பக்தி நிலை பெறுவது கடினம்.

சிறு எறும்பு நம்மை வந்து கடிக்கின்றது. அக்கடி நிலை பொறுக்காமல் அதை நசுக்கி எறிகின்றோம். அவ் எறும்பின் ஜீவன் பிரிந்து விடுகின்றது. அதன் உருவம் நசுக்கப்படுகின்றது என்று எண்ணுகின்றோம்.

அதன் ஜீவன் எங்கு செல்கின்றது…?

1.அதை நசுக்குபவரின் எண்ணத்திலேயே அவ்எறும்பு சேமித்த எண்ணத்தையும் அமிலத்தையும் அதை நசுக்குபவனே ஏற்றிக் கொள்கின்றான்.
2.பல உயிர்களை உணவாக்கி உண்ணுகின்றோம்
3.அதனால் அவைகளுக்கு இம் மனிதர்களின் கையினால் பாவ விமோசனம் கிடைத்து
4.நம் உடலிலேயே அவற்றின் சக்தியையெல்லாம் ஏற்றிக் கொள்கின்றோம் என்பதனை அறியாமல்
5.நம் நாவின் சுவைக்காக நம்மை அறியாமல் நாம் பலி படுகின்றோம்.

எல்லா உயிரணுக்களுக்குமே எண்ணம் உண்டு. இவ்வெண்ணத்தில் சேமித்த அமிலத்தின் நன்மை தீமை கொண்ட குண நிலையும் உண்டு. ஓர் உயிர் ஜெந்துவை அழித்து உண்ணும் நாம் அஜ்ஜெந்துவின் நிலையையும் “நம்முள் ஏற்றிக் கொள்கின்றோம்” என்பதனை உணரல் வேண்டும்.

முந்தைய பாடங்களில் உணர்த்தியுள்ளேன் மனிதர்களில் இருந்து தான் மிருக ஜெந்துவும் பறவைகளும் ஊர்வனவும் வருகின்றன என்று. மிருகங்கள் மற்றப் பறவைகளிலிருந்து மனித இனம் வருவதில்லையா…? என்று எண்ணிடலாம்.

இம்மனிதர்களால் மற்ற ஜெந்துக்களைப் புசிக்கும் நிலையில் அதன் சப்த அலையும் உயிரணுவும் அதன் உடலைப் புசித்தவனின் உடலுக்குள் ஏறிக் கொள்கின்றது.

அறிவு வளர்ச்சி நிலை கொண்ட மனித ஆத்மாவில் ஏறிக்கொள்ளும் மிருக ஜெந்திற்கு
1.அம்மனிதக் கூட்டில் இருந்து அம்மனித ஆத்மா பிரிந்த பிறகு
2.மனிதனின் உடலில் ஏறிய இஜ்ஜீவனுக்கும் மனித உருவாய்ப் பிறந்திடும் பக்குவ நிலை பெற்றுப் பிறப்பிற்கு வருகின்றது.
3.அஜ்ஜெந்திற்கு இம் மனிதனால் விமோசனம் கிடைக்கின்றது.
4.இம் மனிதனுக்குத்தான் மற்ற ஜீவனை உண்ட நிலையினால் அதன் குண நிலையின் வழித்தொடர் பெறுகின்றான்.

இந்நிலையை உணர்ந்து நாம் எல்லா ஜீவ ஆத்மாக்களிடமும் உயிரணுக்களிடமும்
1.அவை வேறல்ல நாம் வேறல்ல என்ற நிலையில் நம்மையே அவையாக்கி அவையே நாமாகி
2.அன்பெனும் நிலைதனை கனிவாகப் படர விடல் வேண்டும்.

இன்று அவை கொசுவாகவும் குருவியாகவும் ஆடாகவும் இருந்திடலாம். அவையும் நம்மைப் போல் ஜீவன் கொண்டவை தான். “எல்லா உயிரணுக்களையும் நமதாக எண்ணிக் கனிவு நிலையில் வழி நடந்திடுங்கள்…”

இவ்வுலகிற்கும் எண்ணமுண்டு ஜீவ காந்த அமில சக்தியுண்டு. இவ்வுலகினில் வாழும் அனைத்திற்குமே மனிதன் முதல் எறும்பு வரை உள்ள அனைத்து ஜீவராசிகளுக்குமே எண்ணமும் உண்டு அதற்குகந்த காந்த அமில சக்தியும் உண்டு.
1.யாருக்கு யாரும் மூத்தவருமல்ல இளையவருமல்ல.
2.எல்லாம் அப்பரம்பொருளின் ஐக்கியம் கொண்ட ஆத்மாக்கள் தான்.

“ஈஸ்வர நாமத்தை” ஜெபித்திட்டால் மட்டும் நம் ஜெபம் சக்தி பெறுவதில்லை

“ஈஸ்வர நாமத்தை” ஜெபித்திட்டால் மட்டும் நம் ஜெபம் சக்தி பெறுவதில்லை

 

இந்தப் போதனையின் வாயிலாக உலக மக்களுக்கு உணர்த்திடும் நிலையினால்
1.ஒவ்வோர் உயிராத்மாவும் விஷமாய்க் கலந்துள்ள காற்றின் சக்தியிலிருந்து உன்னத நிலை பெறல் வேண்டும்
2.நம் உயிர் ஆத்மாவிற்கு வேண்டிய அழியாச் சொத்தைச் சேமித்திடல் வேண்டும்.

நம் உயிராத்மாவை உன்னதப் பொக்கிஷமாக்கி அவ்வொளியுடனே ஒளியாய்க் கலந்திடல் வேண்டும். ஒவ்வோர் உயிர் ஆத்மாவும் இன்று வாழும் நிலையில் விஷத்தன்மை வாய்ந்த காற்று அலையில் சிக்குண்டு இப்பொழுது கிடைக்கப் பெற்றுள்ள இம்மனித உடல் வாழ்க்கையை, ஏக்கத்தினாலும், பேராசை வெறியினாலும், சலிப்பினாலும் ஆத்மா பிரிந்து சென்று, அவ்வெண்ண அலையுடனே, ஈன ஜெந்துவாய் அதன் ஈர்ப்பலையில் சிக்கி அதன் வட்டத்திற்குள் நம் உயிராத்மா சென்று வாழும் பிடியிலிருந்து மீண்டு செயல் கொள்ளல் வேண்டும் என்றால் நம் வாழ்க்கையைப் புனிதமாக்கி ஜெபம் கொண்டிடல் வேண்டும்.

1.ஈஸ்வர நாமத்தை ஜெபித்திட்டால் மட்டும் நம் ஜெபம் சக்தி பெறுவதில்லை
2.நம் வாழ்க்கையில் ஏற்படும் இன்னலில் இருந்தும் நாம் மீள வேண்டும்.

பக்தி என்ற நிலையில் நம் எண்ணத்தில் அப்பரந்தாமணையே எண்ணிப் பல நாள் பூஜித்து வணங்கி நாம் முக்தி எய்திட… அப்பரந்தாமனிடம் நம்மைச் சேர்ப்பிக்கும் பக்தி ஜெபத்தில் ஈடுபட்டு வழி வந்திடும் நிலையில்…
1.நம் வாழ்க்கையில் ஏற்படும் நம்மைச் சார்ந்தவரின் நிலையினாலும் மற்றவர்களின் நிலையினாலும்
2.நம் பூஜையில் குறுக்கிடும் நிலையோ அல்லது அவர்களினால் நம் ஜெபம் தடைபடுகின்றதே என்ற ஏக்கத்தினாலும்
3.நம் எண்ணத்தைச் செலுத்தினாலும் நம் ஜெபம் நமக்குக் கை கூடாது.

ஒவ்வோர் ஆத்மாவிற்கும் ஒவ்வொரு சக்தி நிலை உண்டு. அச்சக்தி நிலையை வெளிப்படுத்திடப் பக்குவ நிலை வேண்டும்.

உதாரணமாய் நம் இல்லத்தில் நாம் சமைக்கும் பதார்த்தத்தில் எப்பதார்த்தத்தை மையப்படுத்திச் சமைக்கின்றோமோ அதன் நிலையில் உப்போ புளிப்போ காரமோ எச்சுவை அதிகப்படுகின்றதோ அந்நாமம்தானே அப்பாதார்த்தம் பெறுகிறது. நீர் செய்த பதார்த்த நாமம் மாறி “ஒரே உப்பு” என்று நாமம் பெறுகிறது.

இப்பக்குவ நிலை மாறு கொண்டால் நம் உயிர் ஆத்மாவிற்கு “நாம் சேமிக்கும் சொத்து” நம் எண்ண நிலை மாறு கொண்ட ஏக்கத்தில் நம் உயிராத்மா பிரிந்து விஷமாய்க் கலந்துள்ள இக்காற்றினில் நம் ஆத்மா தத்தளிக்க… நாமே நம் ஆத்ம சக்தியைச் சிதற விடுகின்றோம்.

நாம் செய்யாத ஒரு செயலுக்கு மற்றவரினால் கடும் சொல்லோ எதிர்ப்பு நிலையோ ஏற்படும் தருவாயில்… நாம் சத்தியவானாய் உள்ளோம், நம்மை ஏன் வீண் இகழ்ச்சி செய்கின்றனர்…? ஆண்டவா… அவனைப் பார்த்துக்கொள். அவனைச் சும்மா விடலாகாது.

நம் சத்தியத்தை அவன் மீறி நம்மை துவேஷகக்கிறான் என்ற எண்ண நிலையில் நம் எண்ணத்தைச் செலுத்தி அவ்வாண்டவனை வணங்கி, அவன் செய்த பாவத்திற்கு… நாம் எண்ணும் நிலையிலேயே “நம்மையே நாம் தண்டனைப்படுத்திக் கொள்கின்றோம்…”

இவ்வுணர்வின் நிலையினால் நம் உடல் நிலையும் பாதித்து அதன் வழித்தொடரில் பல இன்னல்களை நாம் அடைகின்றோம்.

நம்மை ஏமாற்றி வஞ்சனைப்படுத்தி வாழ்கின்றாரே அந்நிலையைப் பார்த்து நாம் எப்படிச் சும்மா இருத்தல் முடியும் என்று எண்ணத்தில் சலிப்பு தோன்றலாம்.

நம்மை ஏமாற்றுவதாக நினைத்துக்கொண்டு ஏமாற்றுபவர்கள் எல்லாம்
1.நம்மை ஏமாற்றவில்லை.
2.அவர்களையே அவர்கள் ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

ஒருவரின் மேல் குரோதத்தை வளர்ப்பவனும் பொறாமை கொண்டு ஏக்கப் பெருமூச்சு விடுபவனும்
1.நம்மைப் பார்த்து பொறாமை கொள்ளவில்லை… ஏக்கப் பெருமூச்சு விடவில்லை.
2.அவனையே தான் அவன் பொறாமைப் படுத்துகின்றான், ஏக்கப்படுத்திக் கொள்கின்றான்.

அத்தகைய நிலையை நாம் உணர்ந்து கொண்டு… நம் எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி…
1.ஓம் ஈஸ்வரா…! எனக்கு நல்ல மனத்தைத் தா
2.அவனுக்கும் நல்லுணர்வு கொண்ட நற்சக்தியை வளரவிட்டு நல்லவனாய் ஆக்கிடுங்கள் என்ற ஜெபத்தைத்தான் நாம் பெற வேண்டும்.

அவர்கள் செய்யும் வினை அல்ல அது. அவர்களை ஆட்டி வைக்கும் துர் சக்திதான் அதுவேயன்றி “ஆண்டவனின் அருளில் உதித்த அனைத்து உயிராத்மாவுமே ஒன்றுதானப்பா….”

இக்காற்றினில் தான் அனைத்துமே கலந்துள்ளன. தீயவனாய் எவனும் பிறந்திடவில்லை. அவரவர்களின் வாழும் சூழ்நிலையினால் ஏற்படும் இத்தீய சக்தியின் பிடியிலிருந்து மீள முடியவில்லை.

இன்று வந்த நிலையல்ல இது. பல காலமாய் இம்மனித ஆத்மாக்களின் எண்ண வளர்ச்சியில் குரோத வெறி உணர்வினால் அரசர்கள் ஆண்ட காலத்தில், பேராசையில் அவர்கள் நாடு பிடிக்கப் போர் என்ற நிலையில் பல ஆத்மாக்களை இக்குரோத எண்ணத்தில் போர்க்களத்தில் உயிர் நீத்த ஆத்மாக்களின் நிலையின் வழித் தொடரினால் வந்த வினைதானேயன்றி “இன்று வாழும் நம் மனித ஆத்மாக்களினால் வந்த நிலையல்ல இந்நிலை…”

இதிலிருந்து மீளுவதற்குத் தான்
1.நம் ஆத்மாவை எப்படிச் செயல்படுத்திடல் வேண்டும்…? என்பதனை உணர்ந்து
2.நம் எண்ணத்தைக் கொண்டு நம் உயிராத்துமா அடையப் போகும் நிலைதனை உணர்ந்து
3.சத்தியத்தின் சக்திவானாய் சக்தி பெற்றிடல் வேண்டும்.

தீயவர்கள் என்று ஒதுங்கி வாழ்ந்திடல் ஆகாது. நாம் எடுக்கும் நல்லுணர்வின் ஜெபத்தினால் நம் எண்ணத்தின் சுவாசத்தைப் பல மைல்களுக்கு அப்பால் இருந்திட்டாலும் “அன்பான சுவாசத்தை அவர் எண்ணமுடன் நம் எண்ணம் கலக்கச் செய்து… அவரையே நம் எண்ணத்தினால் புனிதம் அடையச் செய்திடலாம்…”

நம் எண்ண சக்திக்கு உகந்த நிலைதனை நாம் உணர்ந்திடல் வேண்டும்.

பல மகான்களும் சப்தரிஷிகளும் இவ்வெண்ண சக்தியில் உயர்வு பெற்று மகான்கள் ஆனார்களேயன்றி, கடும் ஜெபத்தினாலோ விரதத்தினாலோ யாக குண்டங்கள் வளர்த்து பூஜித்ததினாலோ அம்மகான் நிலை பெறவில்லை.

எண்ணத்தில் உயர்ந்த ஞான சக்தி பெற்றவன் தான் ஞானியாகவும் சித்தன் ஆகவும் ரிஷியாகவும் ஆனானே அன்றி பக்தியைக் கொண்டு ஆண்டவனை வணங்கி பூஜித்து நற்சக்தியைப் பெறவில்லை.

1.அவரவர்களுக்குள் உள்ள ஆத்மாண்டவனே இவ்வெண்ணத்தினால் பூஜித்து புனிதப்படுத்தி பக்குவநிலை பெற வேண்டுமே அன்றி
2.பஜனை பாடிக் கோவிந்தனை அழைத்து எவ்வாண்டவனின் ஜெபத்தையும் பெற முடிந்திடாது.
3.ஒவ்வோர் ஊர்களுக்கும் சென்று மக்களுக்கெல்லாம் நல்லுணர்வு பெற அக்கோவிந்த ஜெபம் பாடினால் மட்டும் நல்லுணர்வு பெற முடிந்திடாது.
4.எண்ணத்தைத் தூய்மை கொண்டு வணங்கிடுபவன்… “தானே ஆண்டவன் ஆகலாமேயன்றி”
5.அவ்வாண்டவனின் சக்தியைப் பெற எப்பூஜையும் பஜனையும் வழி நடந்திடாது.

நம் சக்தியை எப்படி வளர்த்துக் கொள்கின்றோம்…? என்று பார்க்கத்தான் “படைத்தவன் நம்மை மனிதனாக உருவாக்கியுள்ளான்”

நம் சக்தியை எப்படி வளர்த்துக் கொள்கின்றோம்…? என்று பார்க்கத்தான் “படைத்தவன் நம்மை மனிதனாக உருவாக்கியுள்ளான்”

 

சூரியனிலிருந்து கிடைக்கப்பெறும் காந்த அமில சக்தியினால் மட்டும் நம் உலகிற்கு ஒளி பாய்வதில்லை. நம் உலகமும் அதன் ஈர்ப்பின் நிலைதனைப் பெறுதல் வேண்டும்.

அக்காந்த அலைகளை நம் பூமி ஈர்த்து அதன் வட்டத்திற்குள் சுழல விட்டு அச்சுழற்சியில் இருந்து சூரியனின் ஒளி அமிலத்தை மென்மேலும் ஈர்த்துச் செயல் கொள்ளாவிட்டால் நம் உலகிற்குச் சக்தி ஏது…?

சூரியனின் படைப்பில் சக்தியை அளித்தாலும் நம் பூமி ஈர்த்துச் செயல் கொள்ளாவிடில் நம் பூமிக்கு ஜீவன் இல்லை. அதைப்போல் ஒவ்வொரு உயிராத்மாவும் ஆண்டவன் படைப்பில் அதனதன் சுழற்சியில் ஏற்படுத்திக் கொண்ட அமில சக்தியின் வட்டத்தின் வளர்ச்சியில் வாழ்க்கை நிலை அமைகின்றது.

பல பிறப்புகளை ஏற்கும் நம் உயிராத்மா
1.ஒவ்வொரு பிறப்பிலும் சேமிக்கும் அமில சக்தியில் நற் சக்தியும் தீய சக்தியும் கலந்தே வழி வருகின்றோம்.
2.ஒவ்வொரு பிறப்பிலும் இந்நிலையின் ஒரு பிறப்பில் சேமித்த நற்பயனும் தீய பயனும் மற்றொரு பிறப்பில் ஏற்றத்தாழ்வு கொள்கின்றது.

இதன் நிலையில் தொடர்பு கொண்டு நாம் செய்திடும் நிலையல்ல இது.

நாம் வளர்ந்த எண்ண நிலை நம்முள் கலந்துள்ள தொடர்நிலை என்ற வழியிலேயே வழி பெற்றால்… நாமெல்லாம் இன்று மனித ஆத்மாக்களாய் வாழ்ந்திடும் இப்பொக்கிஷமான வாழ்க்கைதனை ஈன நிலைக்கு நாமே அடகு வைக்கின்றோம்.
1.அடகு என்றவுடன் திரும்பவும் பெறும் நிலைக்கல்லவா செப்புகின்றார் என்று உணருவீர்…?
2.ஆம்…! இன்று இக்கலியில் நம் உயிராத்மா கொண்ட இப்பொக்கிஷ வாழ்க்கையை அடகு வைத்துவிட்டால்
3.நாம் அதனைப் பெறும் காலம் பல நூறு கோடி ஆண்டுகள் ஆகலாம்.

பல காலமாய்ச் சேமித்து உயிர் ஆத்மாவாய் மனித உடல் கொண்ட எண்ண வளர்ச்சியில் அறிவுப் பொக்கிஷ வாழ்க்கைதனைப் பெற்ற நம் ஆத்மாவின் நிலைதனை உணர்ந்து… வாழ்க்கைதனில் ஏற்படும் சஞ்சலங்களுக்கு அடிபடாமல் நம்முடன் (நம் எண்ணமுடன்) மோதிடும் பல நிலைகளுக்கு நம் எண்ணத்தைச் சமநிலைப்படுத்தும் பக்குவ நிலை பெறல் வேண்டும்.

இம்மனித ஆத்மாக்களினால் மட்டும்தான் ஜீவசக்தியை ஒளி பெறும் சக்தி ஆக்கிடல் முடிந்திடும். மனித ஆத்மாவிலிருந்து ஒளி பெற்று… அஜ் ஜோதியுடன் ஐக்கியமாகி… அஜ் ஜோதியின் வட்டத்தை வளரவிட்டே மண்டலமாய் ஜீவன் கொண்டு வளர்ச்சி பெற்று… வளர்ச்சியின் உயிரணு தோன்றி அதன் வளர்ச்சியிலேயே அமில நிலை பல பெற்று மண்டலமாய் உருளும் சக்தியும், உயிராத்மாவாய் வாழும் நிலையும் அதன் தொடர்நிலை அனைத்துமே “இம் மனித ஆத்மாக்களுக்குத் தான் உண்டு…”

மண்டலமாய் சுழல்வதும் இவ்வாத்மாக்களே… கொசுவாய் கழிவின் சுவாசத்தை ஈர்த்து வாழ்வதும் இம்மனித உயிராத்மாவே…! இவ்வெண்ண சக்தியில் நிலைகொண்டு அமைவதுவே அனைத்துமே.

1.நாம் பிறப்பெடுத்து வாழ்வதெல்லாம் நம்மை அவன் அனுப்பி வைத்து
2.நம் சக்தியை எப்படி வளர்த்துக் கொள்கின்றோம்…? என்று பார்க்கத்தான்…! என்ற எண்ணமும் வேண்டும்.

அன்றைய நாளில் மனித ஆத்மாக்களைப் பக்தியின் நிலையில் தான் உயர்வு படுத்திட முடியும் என்ற தத்துவத்தை உணர்த்தி ஆலயத்தை அமைத்தார்களே அன்றி ஆலயத்திற்குச் சென்றால் தான் அவன் அருள் கிட்டும் என்ற நிலையல்ல.

எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி அவரவர்களுக்குகந்த அமில சக்தியையே ஒளி சக்தியாக்கி வழி பெறல் வேண்டும்.

1.ஆசையும் அன்பும் அளவுடனே இருந்திடட்டும்.
2.அதி ஆசைக்கும் அதி அன்பிற்கும் வழிப்பட்டால்தான் பேராசைக்குப் பிடிபடும் நிலையில் சலிப்பும் சஞ்சலமும் வெறுப்பும் கொண்டே
3.இதன் வழித் தொடரினால் ஏற்படும் கோபங்களும் அதிலிருந்து ஏற்படும் வைராக்கியத்தின் உறுதியும்
4.எச் சிரமப்பட்டாலும் அடைந்தே தீருவேன் என்ற வெறியின் உந்தலினால் நம்மையே நாம் சிதறவிட்டு வாழ்கின்றோம்.

அன்பும் ஆசையும் இல்லாவிட்டால் உலகமே இல்லை. நற்சக்தியின் பொக்கிஷ சக்தியே இவைதான். இவற்றிற்கே அடிமைப்பட்டுப் பேராசை நிலையில் செல்லும் எவையுமே அவ்வன்பிற்கும் ஆசைக்கும் எதிர்சக்திதான்.

எண்ணிலடங்கா இயற்கையின் பொக்கிஷ ஆதி மூலத்தை அறிந்திட ஆதி சக்தியின் சக்திக்குத் தான் முடியும்

எண்ணிலடங்கா இயற்கையின் பொக்கிஷ ஆதி மூலத்தை அறிந்திட ஆதி சக்தியின் சக்திக்குத் தான் முடியும்

 

ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று சிக்கிக் கொண்டு ஓடும் நிலையில் ஒவ்வொன்றிற்கும் அதற்குகந்த ஈர்ப்புத் தன்மையுடன் ஓடுகின்றது மண்டலங்கள்.

சூரியனை மையம் கொண்டு ஏழு பெரிய கோளங்கள் உள்ளன. இவ் ஏழின் ஈர்ப்பில் இவ் ஏழிற்கும் தாண்டிய நிலையில் இவ் ஏழிற்கும் சிறிய கோளங்கள் 48 மண்டலத்தில் சூரியனும் நாம் நம் பூமியைச் சேர்த்து ஏழு கோளமும் இவ் எட்டும் போக பாக்கி 40 கோளங்களும் இவ் ஏழின் ஈர்ப்புடன் சுழலுகின்றன.

ஒவ்வொன்றின் அமில சக்தியும் மாறு கொண்டுள்ளது. சூரியனை மையப்படுத்தி அதன் ஈர்ப்பின் வட்டத்துக்குள் வந்துள்ள மண்டலங்கள் தான் இந் நாற்பத்தி ஏழும்.

அவற்றிற்கு இச்சிறிய கோளங்களுக்கு நம் இன்றைய விஞ்ஞானிகள் நாமகரணம் சூட்டவில்லை. தெய்வீக அருள் நெறியில் சித்தர்களினால் உணரப் பெற்று அவர்கள் இட்ட நாமகரணங்கள் இவற்றுக்கு உண்டு.

ராகுவும் கேதுவும் சுக்கிரனும் சனியும் குருவும் இவர்கள் பிடியில் சிக்குண்ட மண்டலங்கள். மற்ற மண்டலங்களை நட்சத்திர மண்டலமாக்கி அதன் நாமகரணத்தைச் சூட்டினார்கள்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்…
1.நம் சித்தர்களால் இயற்றப்பட்ட எண்ணத்தில் பதிவு செய்த இக்கோளங்களின் நிலையே
2.பல நிலையில் உருமாறி வெளி உலகிற்குச் செப்பிடும் நிலையே அற்று விட்டது.
3.அக்காலத்தில் எழுத்து வடிவங்களோ கற்பாறையில் ஓலைகளில் உணர்த்தச் செய்யும் வழி முறையோ இல்லை.

சித்தர்களால் மனித ஆத்மாவுக்கு வளர்ச்சியூட்டி அவ்வளர்ச்சியின் தொடரில் இவ்வுலக மனித ஆத்மாக்கள் வளர்ந்த நிலையில் சிறுகச் சிறுகத்தான் இவ்வாத்மாக்களின் அறிவு வளர்ச்சியைப் பெருகச் செய்து அதன் வழித் தொடரில் எண்ணத்தைப் பதித்திடும் நிலை வந்தது.

அதற்குப் பிற்பட்ட பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தான் இப்பதிவு செய்யும் “எழுத்து நிலையே” உதயம் பெற்றுச் செயலாக்கிட முடிந்தது.

இந்நிலை வளர்வதற்குள் மனித ஆத்மாவின் அறிவு நிலை வளர்வதற்குள் மண்டலங்களின் வளர்ச்சி நிலை பெருகிவிட்டது.
1.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அன்றுணர்த்திய சித்தர்களின் சக்தி நிலைக்கும்
2.இன்றைய இயற்கையின் சக்தி நிலைக்குமே பெரும் மாற்றம் உள்ளது.

ஒவ்வொரு கோளமுமே அதன் ஈர்ப்பில் பல சக்திகளைச் சேர்த்துக் கொள்கின்றது. சில நாட்களில் சந்திர மண்டலத்திற்கு அருகாமையில் நட்சத்திர மண்டலங்களைக் காண்பீர்கள். ஒரு நாள் காணும் நிலை மற்றொரு நாளும் காண முடிந்திடாது.

அதன் ஈர்ப்பில் சிக்குண்டு அதன் செயலுடன் ஆவியான அமிலமாய்ச் செயல் கொண்டாலும் செயல் கொண்டிடும் இதன் ஓட்டத்தினால் இதன் வேக நிலை கொண்டு சந்திரனின் ஈர்ப்பில் சிக்காமலும் தப்பிவிடும்.

நம் பூமியே ஒவ்வொரு நாளும் பல நட்சத்திர மண்டலத்தைத் தன்னுள் ஈர்த்தே சுழன்று ஓடுகிறது.
1.சில நாட்களில் வானத்தில் எரி நட்சத்திரமாய் எரிந்து விழுவதைப் போல் காண்பீர்கள்.
2.சுழற்சியில் சிக்கி ஆவியான அமிலமாய் நம் பூமியின் ஈர்ப்பில் பல நட்சத்திர மண்டலங்கள் கலப்பதைப் போல்
3.ஒவ்வொரு மண்டலத்திலும் அதற்குகந்த அமில சக்தியுடைய மண்டலங்கள் கலக்கின்றன.

வளர்ச்சியும் பல கொள்கின்றன…! சில நாட்களில் வான மண்டலத்தில் நம் பார்வைக்கு மிக அதிகமான நட்சத்திர மண்டலங்கள் தெரிவதைக் காண்பீர்கள். சில நாட்களில்… “ஒன்றிரண்டு காண்பது கூட அரிதாக இருந்திடும்…”

இம்மண்டலங்களின் ஈர்ப்பிலும் நம் பூமி ஓடும் நிலையில் நாம் சந்திக்கும் நிலை கொண்டு நிகழ்பவைதான் இவையெல்லாம்.

எம்மண்டலமும் ஓரிடத்தில் இருந்து சுழல்வதில்லை.
1.ஓடிக்கொண்டே உள்ள நிலையில்
2.நம் பூமி காணும் நிலை கொண்டு தெரிபவை தான் இந் நட்சத்திர மண்டலங்கள் எல்லாம்.

நம் பூமி ஓடும் நிலையில் நம் பூமியின் ஈர்ப்புடனும் பூமியில் சிக்காமலும் நம் பூமியுடனே ஓடி வரும் நட்சத்திர மண்டலங்களும் பல உள்ளன. அங்கங்கு நம் பூமியின் ஓட்டத் துரித நிலையுடன் ஓட முடியாத குறுகிய ஓட்ட நிலை கொண்ட நட்சத்திர மண்டலங்களும் பல உள்ளன.

எண்ணிலடங்கா இயற்கையின் பொக்கிஷ ஆதி மூலத்தை அறிந்திட அவ்வாதி சக்தியின் சக்திக்குத் தானப்பா செயல் சக்தியுண்டு.

சக்தியின் செயல் வேண்டியே நாம் அறிந்தே “எழுத்தின் வடிவிற்கு வருவோம்…”

எழுத்தின் வடிவமைக்கும் அறிவு சக்தி வளர்ந்தே நம் ஆத்மாவின் சக்தியையே எச்சத்திக்கும் நம் சக்தியைச் செயல் ஆக்கிட முடியும் என்ற வளர்ப்பு எண்ணம் கொண்டு… நம் எண்ணத்தையே சகல சித்து நிலைகளை அறிந்திடும் பக்குவப்படுத்தியே நம் செயல் இருந்திட வேண்டும்.

1.நம் எண்ண சக்தியைச் செயலாக்கிட எந்நிலைக்கும் நம்மை அடிமைப்படுத்திடாமல்
2.இவ்வுலகில் இம்மனித ஆத்மாக்களினால் காலம் காலமாய் அடிமை கொண்ட ஜாதி வேறுபாட்டில் சிக்குண்டு இருந்திடாமலும்
3.ஆண்டவனை ரூபப்படுத்தி தான் வாழ பிறரை ஏமாற்றும் நிலையில் சிக்கிடாமலும்
4.எண்ணத்தையே சூதாக்கி பிறரை வஞ்சிக்கும் எண்ணக் கடலில் அமிழ்ந்திடாமலும்
5.நம் ஆத்ம பொக்கிஷத்தைப் பிற சூனிய நிலையில் மாட்டிக் கொள்ளாமலும் செயல் கொண்டு
6.எண்ணத்தையே ஜெபமாக்கித் தப்பும் வழியை நாம் அறிந்து வாழ்ந்திடல் வேண்டும்.

பூமியிலிருந்து சூரியனுக்குச் செல்லவும் முடியும்

பூமியிலிருந்து சூரியனுக்குச் செல்லவும் முடியும்

 

சூரிய மண்டலத்திற்குச் சென்றிட முடியாது. உஷ்ணக் கோளம் என்று விஞ்ஞானத்தில் உணர்த்துகின்றனர்.

சூரியனின் கோளம் பெரியது. அதில் நிறைந்துள்ள அமில சக்தியின் தன்மையும் எம் மோதும் அமிலத்தையும் தன்னுள் ஈர்க்கும் நிலை உடையது. உருவ நிலையிலும் வளர்ந்து கொண்டே சுழன்று ஓடும் பெரிய மண்டலமாம் நம் சூரிய மண்டலம்.

முந்தைய ஆராய்ச்சியில் சூரியன் மையம் கொண்டு ஒரே இடத்தில் சுழன்று கொண்டுள்ளதாகவும் அதனைச் சுற்றியுள்ள சூரியக் குழந்தைகள் தான் அதனைச் சுற்றி ஓடுவதாகவும் உணர்த்தினர்.

சூரியனின் யாம் அறிந்த உண்மை நிலை…
1.அது தன்னைத்தானே சுற்றி ஓடிக்கொண்டு அதன் ஈர்ப்பில் உள்ள இந்த 47 மண்டலங்களையும் தன்னுடனே தன் ஈர்ப்பில்
2.அது அது சுழன்று கொண்டும் ஓடிக்கொண்டே உள்ளன.
3.இவ்வண்டமும் மற்ற எல்லா அண்டங்களுமே ஓடிக்கொண்டே தான் உள்ளன. எதுவும் நிற்பதில்லை

ஒரு நிலையில். ஜீவன் பெற்று திடப்பொருள் கொண்ட பிறகுதான் ஓடும் நிலை ஒவ்வொன்றிற்கும் வருகின்றது.

இம்மனித மண்டலமே ஓடிக்கொண்டே தான் உள்ளது. பிம்ப உடல்தான் ஒரு நிலையில் எண்ணம் கொண்டு செயல் கொள்கின்றது. மனித மண்டலத்திற்குள்ள எல்லா அவயங்களுமே தன்னிச்சை நிலையில் செயல்பட்டுக் கொண்டேதான் உள்ளன.

இதே போல் ஜீவனுள்ள எல்லா ஜீவராசிகளும் மண், கல், நீர் அனைத்திற்கும் ஜீவத் துடிப்பின் ஓட்டம் இருந்து கொண்டே உள்ளது.

பல பல ஆராய்ச்சிகளைச் செய்விக்கின்றனர். மனிதனுக்கும் ஜீவராசிகளுக்கும் உயிர்த்துடிப்பு நிலையை உணருகின்றனர்.
1.ஆனால் கல்லிற்கும் மண்ணிற்கும் உயிர்த்துடிப்பும் ஜீவன் உண்டு.
2.ஜீவன் இல்லாவிட்டால் கல்லிற்கும் மண்ணிற்கும் வளர்ச்சி இல்லை.
3.அததற்குகந்த உஷ்ண அலையும் உண்டு.

மண்ணாய் உள்ள நிலையிலிருந்து மணலாகி, உருண்டு கல்லாகி, பெரும் பாறையாய் உருப் பெறுகிறது. அந்தந்தப் பூமியின் நிலைக்கொப்ப மண்ணின் நிறங்கள் மாற்றம் கொள்கிறது அல்லவா…?

நீர் நிலைகள் பாய்ந்து வரும் வேகத்தில் எவ்விடத்தில் அந்நதி உற்பத்தியாய் பாய்ந்து வந்தாலும் அந்தந்த நிலைக்கொப்ப பூமியின் மேல் படும்பொழுது இப்பூமியின் சுவை குணத்தை ஈர்த்தே ஓடுகிறது. இந்நீருக்கு ஜீவன் பூமியின் நிலையில் இருந்து பெற்ற ஓடுகிறது.

நம் பூமியிலேயே பல பாகத்தில் பல நிலைகள் உண்டு. ஒன்றின் கலப்புடன்தான் தொடர்நிலை கொண்ட அமில சக்தியை வளர்த்த நிலை கொண்டு வாழ்கின்றது நம் பூமியே.

1.நம் பூமியிலிருந்து வெளிப்படும் மணம் ரம்மியமான ஆனந்தமான மணமாய்ப் பரிமளித்த காலம் ஒன்றிருந்தது.
2.இன்று நம் பூமியின் மணமே மாறு கொண்டு விட்டது.
3.இந்நிலையில் விஷத்தன்மை பரவிடும் நிலையும் வந்துள்ளது.
4.பல காலம் வாழ்ந்த பெரியோர்கள் இம் மணத்தின் மாறுபட்ட நிலையை அறிவர்.

நம் பூமியில் உறையும் தன்மை உப்புக் கலந்ததாய் உள்ளதினால் கரையும் நிலையும் துரிதமாய்ச் செயல் கொள்கின்றது. நம் பூமியைக் காட்டிலும் சூரியனின் சக்தி மிகவும் அதிகம் கொண்டது.

சூரியனின் நிலைத்தன்மையை முன் பாடத்திலேயே உணர்த்தியுள்ளேன்.

1.இன்று சூரியனுக்குச் செல்லவும் முடியும்
2.சூட்சுமத்தில் மட்டுமல்ல விஞ்ஞானத்தாலும் சூரியனுக்குச் சென்றிடலாம்.

நம் பூமிக்கும் நம் பூமியைக் காட்டிலும் சிறிய மண்டலமான சந்திரனுக்கும் உஷ்ண அலையை ஆராய்ந்து நம் பூமியிலிருந்து காற்று மண்டலத்தைத் தாண்டி உஷ்ண அலைப் பகுதியைத் தாண்டி அதைப் போலவே சந்திரனுக்குச் செல்லும் ஏவுகணையை அனுப்பி உள்ளார்கள்‌‌.

நம் பூமியில் இருந்து இக்காற்று மண்டலத்தைத் தாண்டி உஷ்ண அலை மண்டலத்தைத் தாண்டி பிறகு இவர்களுக்கு வேறு செலவினங்கள் இல்லாமல் எவ்அலையை வைத்து சந்திரனின் உஷ்ண அலை வரை தானாகவே இவ் ஏவுகணை ஓடுகின்றது…?

1.இவ் உஷ்ண அலை மண்டலம் (சந்திரனுக்குச் சொந்தமானது) வந்த பிறகுதான்
2.இவர்கள் ஏவுகணையை இயக்கச் செய்யும் சாதனத்தின் ஜீவன் செயல்திறன் கொள்கின்றது.

பொதுவானது பால்வெளி மண்டலத்தின் உஷ்ண அலை. இந்நிலை இருக்க நம் பூமியிலிருந்து சந்திரனுக்கு ஏவுகணையை அனுப்பியவர்கள்… நம் சூரிய மண்டலத்திற்கு… நமக்கு அருகாமையில் உள்ள அந்த மண்டலத்திற்கு அருகில் சென்று இவர்கள் விஞ்ஞானத்தை ஏன் செயலாக்கவில்லை…?

சூரியன் நம் பூமியைக் காட்டிலும் இரண்டு மடங்கு சுழற்சி சக்தி கொண்டது. இங்கு ஒரு நாள் 24 மணி நேரம்; அங்கு 12 மணி நேர விகித நிலையில் தன்னைத்தானே சுழன்று ஓடுகிறது.

விகித நிலை என்பது கூட அதன் சுழலும் சக்தி கொண்டு யாம் அறிந்த நிலை தானே ஒழிய அதற்கு இரவு பகல் என்ற மாறுபட்ட நிலை இல்லை.

அதைச் சுற்றி ஓடும் 47 மண்டலங்களின் ஈர்ப்பின் சக்தியையும் தன்னுள் ஈர்த்து வெளிப்படுத்திச் சுழன்றிடும் நிலையில் அதன் உஷ்ண அலையின் (47 மண்டலங்களின்) நிலை பெற்றுச் சுழலுகின்றது.

இந்த 47 மண்டலமுமே சூரியனைச் சுற்றி வட்டமாய்த் துரித கதியில் ஓடவில்லை. இவற்றிலுமே ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று பங்கு பெற்று அச்சக்தியின் அமிலத் தொடர் அதற்குச் சென்றடைகிறது.

உதாரணமாய்:-
இங்கு இந்நிலையில் காட்டியுள்ள நிலைப்படுத்தி இம்மண்டலங்களின் தன்மை உள்ளது. இதற்கும் தாண்டிய நிலையில் இவ் ஆறு மண்டலம் அல்லாமல் 48 மண்டலத்திலேயே பாக்கியுள்ள மண்டலங்கள் இதற்கும் சிறியவை…. உஷ்ண அலைகளைக் குறைவாய் பெற்றுள்ள மண்டலங்கள்.

இவர்கள் நாமகரணத்தில் உள்ள சனி மண்டலத்திற்குக் குளிரும் நிலை அதிகம். உறையும் தன்மை கொண்ட அமிலத்தை வளர்த்துள்ள மண்டலம் சனி மண்டலம்.

சனியின் நிலையில் இவ்வமில சக்தி நிறைந்துள்ளதினால் அது சுழலும் நிலை கொண்டு அதன் பக்கத்திற்கு இப் பெரிய மண்டலம் செல்லும் காலங்களில் அதன் அமில நிலையின் சக்தி இவற்றிற்கு அதிகமாய்க் கிடைக்கின்றது.

நம் பூமியில் இக்கால நிலை மாற்றம் கொண்டு
1.கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் குளிர் அதிகமாய்க் கிடைக்கப் பெறுவதும்
2.நம் பூமி சனியின் கோளத்திற்கு அதன் ஈர்ப்பின் நிலையில் வரும் கால நிலையில்தான் இக்குளிர் அமில சக்தியும் நம் பூமிக்கும் கூடுகின்றது.

இதைப்போல் தான்
1.பங்குனி, சித்திரை மாதங்களில் கடும் வெயிலைக் காணுகின்றோம்.
2.சூரியனின் உஷ்ண அலையுடன் நமக்கு அருகாமையில் நம் பூமியின் ஈர்ப்பிற்கு ராகுவின் நிலைக்குச் செல்கின்றது.

ஒரு வருடத்திற்குள் சூரியனை மையப்படுத்தி ஓடிடும் நிலையில் நம் மண்டலத்துடன் ஈர்ப்பிற்கு வரும் இந்த 48 மண்டலங்களின் தொடர்பைக் கொண்டு நம் பூமிக்குக் காலநிலை உருவாகிறது.

அதைப் போன்றே ஒவ்வொரு மண்டலத்திற்குமே இக்கால நிலையும் செயல்படுகின்றது.

சூரியனை மையப்படுத்திச் சுழன்றோடும் 48 மண்டலங்களுக்கும் “தனித்தனித் தன்மையுண்டு”

சூரியனை மையப்படுத்திச் சுழன்றோடும் 48 மண்டலங்களுக்கும் “தனித்தனித் தன்மையுண்டு”

 

ஓடிக்கொண்டே உள்ள இம் மண்டலங்களின், ஒன்றின் ஈர்ப்பும் அதன் அமில சக்தியும் மற்றொன்றின் நிலைக்கு மோதுவதால் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு அவ் ஈர்ப்பின் சக்தி நிலை கூடுகின்றது.
1.அனைத்து மண்டலங்களுமே சுழன்றே ஓடிக்கொண்டுள்ளன
2.ஒன்றுக்கு உகந்த சக்தி மற்றொன்றுக்கில்லை
3.சூரியனை மையப்படுத்திச் சுழன்றோடும் இந்த 48 மண்டலங்களுக்கும் தனித்தனித் தன்மையுண்டு.

நம் பூமியில் இன்றுள்ள சப்த அலைகளும், சுவையும் மற்ற இயற்கையில் தோன்றிடும் தாவரம், கனிவளம் இப்படிப் பல நிலைகள் வேறு மண்டலங்களில் மாற்றம் கொண்டுள்ளன.

நம் பூமியின் சக்தி நிலை போன்ற அதிக சக்தி கொண்ட மண்டலம் சூரியனை மையப்படுத்திச் சுழன்றிடும் இந்த 48 மண்டலங்களுக்குமே இல்லை.

நம் பூமிக்கு வியாழனிலிருந்து இன்று எப்படி நீர் நிலைகள் வந்திடும் சக்தி கிடைத்தது…?
1.வியாழனிலிருந்து அதன் சுழலும் வேகமும், சூரியனின் சுழலும் வேகத்திற்கும்
2.இரண்டின் ஈர்ப்பில் ஏற்படும் நிலை அதன் நேர் நிலை கொண்ட நம் பூமிக்குக் கிடைக்கின்றது.
3.வியாழனின் நிலை இல்லாவிட்டால் நம் பூமிக்கு நீரில்லை.

இதே நிலைபோல் செவ்வாயின் சக்தி நம் பூமிக்கு எந்நிலையில் பாய்கின்றது…?

நம் பூமியிலிருந்து செவ்வாய் மண்டலமும், வியாழன் மண்டலமும் காணுவதற்கு நட்சத்திர மண்டலம் போல் இன்றும் தெரிந்து கொண்டுள்ளன.

பல கோடி நட்சத்திரங்களில் ஒன்றாய்க் காண்கிறோம். செவ்வாயில் நிறைந்துள்ள சக்தி நம் பூமிக்கு “சப்த அலைகளைப் பாய்ச்சும் சக்தி…”

உம் சப்தமே வெளிவராத நிலைக்கான காற்றில்லா அடைப்பில் இருந்தால் கேட்டிடுமா…? அதைப் போல் பூமிக்கும் மையமான சூரியனுக்கும் இடைப்பட்ட நிலையிலுள்ள செவ்வாயின் நிலையினால் செவ்வாயின் சக்தியையும் நேர்படுத்தி நம் பூமி பெறுகிறது.

அதே சமயம் சூரியனின் சக்தியினால் செவ்வாயின் சக்தியும் மோதுண்டு அதன் ஒளி அலையையும் நாம் பெறுகின்றோம்.

செவ்வாயின் சுழலும் தன்மை கொண்டு அதன் அமிலத் தன்மையும் சூரியன் ஈர்த்து வெளிப்படுத்தும் அமிலத் தன்மையும் கலவை பெறும் இடத்திலிருந்துதான் சப்த ஒலி பிறக்கின்றது.

இதே நிலை கொண்டு நம் பூமிக்குத் தொடர்பு கொண்ட சந்திரனின் ஈர்ப்பு நிலை அமில நிலை வேறு. சந்திரனின் நிலையில்லா விட்டால் “நாம் காணும் இவ்வண்ணங்களே இல்லை…”

பல சக்தியை நம் பூமி ஈர்த்து, நம் பூமியின் சக்தியைச் சந்திரன் பெறுவதினால் சந்திரனுக்கும் நம் பூமிக்கும் அதிகத் தொடர்பு உள்ளதினால் நம் பூமியின் நிலையைக் காட்டிலும் சந்திர மண்டலம் உருவில் சிறிதாகவும் அதே நிலையில் பல சக்திகளைத் தன்னுள் அடக்கிய வளரும் தருவாயில் உள்ள மண்டலம்.

இம் மாற்ற நிலையினால் சந்திரனுக்குச் சப்த அலையும் இன்று ஒரே நிலையில் இரவு பகல் என்ற மாறுபட்ட குண நிலை பெறாமல் சுழன்றிடும் சந்திர மண்டலத்தில் இந்நீர்நிலை சப்த ஒளியின் நிலையும் ஏற்பட்ட பிறகுதான் பல வளர்ச்சி நிலை ஏற்பட்டு… பல நட்சத்திர மண்டலங்களின் ஈர்ப்பு சக்தியையும் சந்திரன் பெற்ற பிறகு… அதன் வளர்ச்சியில் ஊரும் உயிரினங்கள் உள்ள சந்திரனின் தன்மையே… “ஜீவ உடல் கொண்ட உயிராத்மாக்கள் தோன்றிடும் காலம் வரும்…”

வரப்போகும் இக் கிரகண கால நிலைக்குப் பிறகு
1.நம் சூரிய கிரகமுடன் பல நிலைகள் மாற்றம் கொண்டு நடக்கப் போகின்றது
2.சூரிய கிரகணம், சூரிய கிரகணம் என்று பல முறை கிரகணம் பிடிக்கின்றது சூரியனை.
3.ஒவ்வொரு நிலையிலும் இதனால் சூரியனுக்கும் சூரியனை நேர் கொண்டு
4.எம்மண்டலத்தை எக்கிரகணம் தாண்டிச் செல்கின்றதோ அம்மண்டலத்திற்கும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

வட்டமிட்டுக் கொண்டே உள்ள இம்மண்டலங்களும் நட்சத்திர மண்டலங்களும் இப்பால்வெளி மண்டலத்தில் வளர்ச்சி கொண்டுள்ள சில நிலைகளும் ஒன்றைத் தாண்டி ஒன்று ஓடும் நிலைக்கும் “ஜீவன் வேண்டும்…”

அதே போல்
1.உஷ்ண அலைகளைக் கொண்ட நிலையில்தான் அது அதற்கு உயிர்த் துடிப்பே வருகின்றது
2.அதி உஷ்ணத்தை எதுவும் ஏற்பதில்லை… அதி குளிர்ச்சி… பனிக்கட்டி போன்ற நிலையிலும் தாவர வளர்ச்சி வளர்வதில்லை.

இன்று நம் பூமியின் நிலை எந்நிலையில் அது சூழலும் தன்மை கொண்டு, காற்று மண்டல வட்டத்திற்கு மேல் உஷ்ண அலைகளை நம் பூமி வெளிப்படுத்துகிறதோ… அந்நிலையில் தான் ஒவ்வொரு கோளங்களுக்கும், அதன் சுழற்சியில் காற்று மண்டலமும், அம்மண்டலம் கக்கும் உஷ்ண அலையும் செயல் கொள்கின்றது.

1.இம்மனித உடலுக்கும் ஒவ்வொரு ஜீவனுக்கும் அதனைச் சுற்றி சப்த அலை உண்டு
2.சப்த அலைக்குச் சிறிது தள்ளி உஷ்ண அலையும் உண்டு
3.எல்லா ஜீவன்களுக்குமே மனிதனின் உடல் வெப்பநிலையும் அம்மனிதனைச் சப்த அலையின் வெப்பக் காற்றும் ஒன்றாய்த் தான் இருந்திடும்.

தாவரங்களுக்கும் இந்நிலை உண்டு. இதைப்போல் இவ்வுலகம் மற்ற எல்லா மண்டலங்களுக்குமே இந்நிலை கொண்ட உஷ்ண அலைகள் உண்டு.

சந்திரனின் நிலை குளிர்ந்த நிலை என்று உணர்த்தினேன். ஒவ்வொன்றிற்கும் அதனதன் சுழலும் வேகம் கொண்டு இவ்வுஷ்ண அலைகள் மாறுபடுகின்றன.
1.இவ்வுஷ்ண அலை கக்கும் நிலையே எம் மண்டலத்திற்கும் ஓர் இடத்தில் இருக்கும் நிலை மற்றோரு இடத்தில் இருந்திடாது
2.எல்லா ஜீவராசிகள் தாவரங்களின் நிலைக்கும் இந்நிலை உண்டு.

உயிரினங்கள் வாழ… சந்திர மண்டலத்தில் நீர் உள்ளது

உயிரினங்கள் வாழ… சந்திர மண்டலத்தில் நீர் உள்ளது

 

விஞ்ஞானத்தில் தான்… அவர்களின் கண்டுபிடிப்பில் இருந்து சந்திர மண்டலத்தில் உயிரணு இல்லை… நீர் நிலையும் இல்லை. நீர் இருந்தால் அல்லவா உயிரினம் வாழ…? என்ற வினா எழுப்பப்பட்டது.

அதன் விடை.

1.காற்றுடன் நீர் இல்லாவிட்டால் அம்மண்டலத்தின் சுழற்சியில் ஒளி ஏது…?
2.உயிரணு இல்லாவிட்டால் மண்டலத்திற்கு வளர்ச்சி ஏது…?
3.அம்மண்டலமே உருப்பெற உயிரணுக்களை உண்டல்லவா அதன் கழிவை உஷ்ண அலையாய் வெளிப்படுத்தி
4.அதன் வழியில் தொடர் கொண்டு, வளர்ச்சி கொண்டு வளர்கின்றது.

பால்வெளி மண்டலத்தில் காற்றுமுண்டு நீருமுண்டு உயிரணுக்களும் உண்டு.
1.வானமாய்ப் பரந்துள்ள பால்வெளி மண்டலத்திற்கே ஜீவன் உண்டு என்ற நிலையில்
2.சந்திரனுக்கு ஏனப்பா நீரும் உயிரணுவும் இல்லை என்று விஞ்ஞானத்தில் செப்புகின்றனர்…?
3.காற்றுடன் கலந்துள்ள ஜீவனான நீர் இல்லாவிட்டால் அம் மண்டலத்திற்கு சுழற்சி ஏது…?
4.அதிலிருந்து பௌர்ணமி நிலவாய்க் காண்கின்றோமே அவ் ஒளியும் ஏது…?

நம் பூமியைப் போல் அடர்ந்த கடல் நிலைகள் நிறைந்த நீர் நிலை இல்லை. நீர் நிலையில் இருந்து வெளிப்படும் அமில சக்தியினால் இப்பூமி முழுவதுமே செயல் கொண்டு ஆங்காங்கு பெய்திடும் பருவ மழையினால் உண்டான நீர் நிலைகள், ஆறு, ஏரி, குளம், குட்டைகள் இப்படி உள்ள நீர் நிலைகளும் அங்கில்லை.

விஞ்ஞானத்தில், சந்திரனில் கண்டுபிடித்த நிலை போல் நம் சூரியனிலும் எந்நிலையில் நீர்நிலை உள்ளது…? என்று உணர்த்தினரா…?

இவ் வரப்போகும் மாற்றத்திலிருந்து, அடர்ந்த நீர்நிலைச் சக்தி சந்திரனுக்குக் கூடப் போகின்றது. நம் பூமியைப்போல் பருவ மழைகளைக் காணாத மண்டலம் அது. சந்திரனில் இன்றளவும் மழை பெய்ததில்லை.

சந்திரனில் நீர் இல்லாவிட்டால் சந்திரனிலிருந்து தோண்டி எடுத்து வந்தார்களே அக்கல் எப்படி வளர்ந்தது…?

பனியான நிலை என்றுமே சந்திரனுக்குண்டு… குளிர்த்த மண்டலம் அது. அதன் சுற்றலில் பனித்துளி போன்ற நீர் நிலைகள் படிந்து அதன் கசிவில் உறைந்து பிறகு அப்பனி நிலை தொடர்பு கொண்டு நசநசப்புத் தன்மையில் சுழன்று கொண்டுள்ள குளிர்ந்த மண்டலம்தான் சந்திரனின் இன்றைய நிலை.

நம் பூமியில் கிணறுகள் தோண்டி நீரை எடுப்பதைப் போல் சந்திரனுக்கு சக்தி நிலையில்லை. நீர்நிலை அடர்ந்து உள்ள மண்டலத்தில்தான் அம் மண்டலத்துடன் கூடிய எந்த இடத்திலும் நீரைக் கண்டிட முடியும்.
1.நம் பூமியிலிருந்து விண்கலத்தை ஏவி இம்மனித சுவாசத்தை அங்கு விட்டு வந்துள்ளானே…
2.அச்சுவாச நிலையின் வெக்கையில் தோன்றிடும் உயிரணுவிற்கு இப்பூமியில் இருந்து சென்ற சக்தி நிலைதானே வேண்டும்.

ஏற்கனவே இரண்டு பிரளயங்களை நம் பூமி சந்தித்துள்ளது

ஏற்கனவே இரண்டு பிரளயங்களை நம் பூமி சந்தித்துள்ளது

 

நம் பூமியில் முதல் பிரளயத்தில் ஏற்பட்ட நீர் நிலைகளின் வளர்ச்சி… நம் பூமி சேமித்து வளர்த்த அமில சக்தியின் ஈர்ப்பிலிருந்து “நாம் பெற்ற பொக்கிஷம்…”

முதல் பிரளய காலத்திற்கு முன் இன்று எப்படி சூரியனைக் கேது கிரகணம் பிடிக்கின்றதோ அதைப் போன்றே சூரியனுக்கும் நம் பூமிக்கும் இடைப்பட்ட நிலையில் “வியாழனின் கிரகணம்” பிடித்தது.

நம் பூமிக்கு மேல் வியாழன் மண்டலம் பெரியது. சூரியனின் நிலை மிகவும் பெரியது. இந்நிலையில் சூரியனை வியாழனின் கிரகணம் பிடித்தவுடன் சூரியனைத் தாண்டி வியாழன் செல்லும் நிலையில்
1.நம் பூமிக்கும் வியாழனுக்கும் இடைப்பட்ட நிலையில் பால்வெளி மண்டலத்தில்
2.வியாழனின் சக்தி நம் பூமியின் மேல் நேர் பார்வையில் பட்டவுடன் பால்வெளி மண்டலத்தில் உள்ள அமில சக்திகள் உறைந்து
3.வியாழனின் இயற்கைக் குணமான அதிக நீரைக் கொண்ட சக்தியுடைய அமில உப்பு
4.இப்பால்வெளி மண்டலத்தில் கலந்து வேகமாய்ப் படர்ந்து உறையும் தன்மை கொண்டு இவ்வியாழன் சூரிய கிரகணத்தைத் தாண்டிய நிலையில்
5.உப்புக் கலந்த உறைந்த அமில சக்தியானது சூரியனின் ஒளி பட்டவுடன் கரைந்து
6.நம் பூமிக்கு எப்பொழுதும் இருந்த இயற்கை நிலையுடன் அதிக சக்தி கொண்ட இவ்உப்புக் கலந்த அமில நிலை மோதுண்டவுடன்
7.நம் பூமியின் நிலை ஏற்காமல் பிரளய நிலை ஏற்பட்டு
8.அதன் சுழற்சி வட்டத்தில் சிக்கிக் கொண்ட நீர்நிலைகள்தான் நம் பூமிக்கு இரண்டு பக்கமும் வட துருவ தென் துருவ நீர்நிலைகள் அடர்ந்த கடல்களே.

அதன் தொடர்ச்சியில் இருந்து சுழன்ற நிலை கொண்டு நம் பூமி முதலில் சேமித்துப் பழக்கப்படுத்திய இயற்கைத் தன்மை மாறி… இத்தாவர வர்க்கங்களும் முதல் பிரளயத்திற்கும் பிறகு நீருடனே நீர்நிலைகள் உள்ள இடத்தில், நீருக்கடியில் ஆரம்ப காலத்தில் வளர ஆரம்பித்தன.

அதன் தொடர்ச்சியில் இருந்து ஏற்பட்ட இன வர்க்கங்கள் தான் “கொசுக்களைப் போன்று நுண்ணிய உடல்களைக் கொண்ட உயிரணுக்கள்” இந்நீர் நிலைகளில் தோன்றி நீர்நிலைகளின் மேல் படர்ந்து வந்த்து,

அதன் தொடர்ச்சியில் அதன் சுவாசத்தில் அதன் கழிவின் உஷ்ண நிலையிலிருந்து சிறு சிறு முட்டைகள் தோன்றி அதிலிருந்து எறும்பின் தலையை ஒத்த தலையுடைய “சிறு வால்” நீண்ட உயிரணுக்கள் வளர்ச்சி கொண்டன.

அந்நிலையின் தொடரிலிருந்து நீரிலிருந்து வளர்ந்த இவ்வுயிரணுவே… சிறு சிறு மாற்றம் கொண்ட நிலையில் ஜீவ உடல் கொண்ட உயிர்ப் பிராணி வர்க்கத்திற்கு வந்ததின் தொடர் நிலையில் இருந்து தான் பல நிலைகள் மாறி… பல ஆயிரம் கோடி ஆண்டுகள் அந்நிலையின் வளர்ச்சிக்குப் பிறகு “மற்றும் ஒரு பிரளயம் ஏற்பட்டது…”

அந்த மாற்றத்திற்குப் பிறகுதான் இவ்வளர்ச்சி நிலையில் உயிரணுவாய் ஜீவ உடல்களைக் கொண்ட ஜீவன்களின் நிலை அதன் வளர்ச்சியில் அது சேமித்த சக்தியின் நிலை கொண்டு அடுத்த பிரளயத்தில் அவ்வுயிரணுக்களே தோன்றிய நிலையில் தான்…
1.இம்மனித உடல் கொண்ட அறிவு வளர்ச்சியுற்ற ஆத்மாக்களின் வளர்ச்சி நிலை வந்தது.
2.இவ்விரண்டாவது பிரளயத்தினால் நம் உலகிற்கு எந்நிலை கொண்ட மாற்றம் வந்தது…?
3.இவ் இரண்டாவது பிரளயத்திற்கும் வியாழனிலிருந்து தான் நம் பூமிக்கு மனிதர்கள் வாழும் நிலையின் தொடர் வந்தது.

நம் பூமியில் இன்று எப்படி நமது நிலை உள்ளதோ அதைப் போன்றே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வியாழனிலும் நம்மை ஒத்த மனித இன வர்க்கமும் அடர்ந்த நீர் நிலைகளும் இருந்தன.

அறிவின் வளர்ச்சி கொண்ட மனித ஆத்மாக்களின் ஆசையின் நிலையினால்…
1.அன்று வியாழனில் ஏற்பட்ட பிரளயத்தினால் இன்று வியாழனில் மனித ஆத்மாக்கள் இல்லாத நிலை.
2.ஆனால் நம் பூமிக்கு வியாழனிலிருந்து தான் அதன் தொடர் சக்தியின் உருவிலிருந்துதான்
3.உயிர் ஆத்மாக்கள் தோன்றி இன்று இங்கு நாம் வாழும் நிலை உள்ளது.

இராமாவதார காலத்தில் இருந்து இக்கலி வரை ஏழு ஜென்மங்களில் இன்று மனிதராய் வாழ்பவரில் பலர் உள்ளனர். இக்கால நிலையிலேயே மனித உடல்களில் இருந்து மாறு கொண்ட மிருக வர்க்கத்திற்குப் பல ஆயிரம் ஆண்டுகளாகவே பல உயிர் ஆத்மாக்கள் சென்றுவிட்டன.

மிருக உடலில் இருந்தும் மாறிக் கொசுவாகவும், ஈ எறும்பு புழு பூச்சியாகவும் பல ஆத்மாக்களின் நிலை சென்றுவிட்டன.

இம்மண்டலத்தில் வந்து வாழக் குடியேறிய உயிராத்மாக்களுக்கு வந்த சக்தி ஏழு உடல்களை ஏற்கும் சக்தி தான் உண்டு. அதிலிருந்து மாறுபட்டுத் தோன்றிப் பல நிலைகள் கொண்ட உடல்களை ஏற்று எண்ணிலடங்கா உயிரணுக்கள் வாழ்கின்றன.

ஓர் உயிரணு தோன்றி அதன் வளர்ச்சியில் உயிராத்மாவாய் பல ஜென்மங்கள் மாறு கொண்டு பல நிலைகளைப் பெற்று வாழும் தருவாயில் ஒவ்வோர் உயிர் ஆத்மாவும் “பல உயிரணுக்களை உண்டு பண்ணியே தான் வாழ்கின்றது…”

எவ்வுயிரணுவும் உணவில்லாமல் வாழ்ந்திட முடியாது. அது எடுக்கும் ஆகாரத்தில் அதன் சக்தியை வளர்த்த பிறகு அது வெளிப்படுத்தும் மலத்திலிருந்து பல உயிரணுக்கள் தோன்றுகின்றன.
1.உண்டு கழித்து வாழ்ந்திடும் உயிராத்மாக்களினால் எண்ணிலடங்கா உயிரணுக்கள் தோன்றி
2.அவை அவை தோன்றிய நிலைக்கொப்பப் பல நிலைகளில் வளர்ச்சி கொள்கின்றன.