“மனதைக் குவித்தான்…” என்பதை மணலைக் குவித்தான் என்று திரிபு செய்து விட்டார்கள்
இன்றைய உலகில் ஒவ்வொரு மனிதனும் வேதனையும் வெறுப்பையும் அதிகமாக வெளிப்படுத்துகின்றான். அதே சமயத்தில் தொழிற்சாலைகளிலும் மற்ற இடங்களிலிருந்தும் விஷப் புகைகளையும் அதிக அளவில் ஒவ்வொரு நாளும் காற்று மண்டலத்திலே ஊட்டுகின்றனர்.
1.இவை அனைத்தும் மேகங்களில் கலந்து
2.விஷத் தன்மையான மழை நீராகப் பெய்து கொண்டுள்ளது.
ஆக… மனிதன் விட்ட வேதனை உணர்வுகள் மேகங்களில் கலந்து மழையாகப் பெய்த பின் அந்த நீருடன் கலந்த விஷமான உணர்வுகள் பயிரினங்களில் படப்படும் பொழுது
1.மழைக் காலங்களில் எல்லாம் விஷம் கொண்ட பூச்சிகளாகவும் புழுக்களாகவும் எண்ணிலடங்காத அளவில் உருவாகி
2.நாம் பயிரிட்ட செடி கொடிகளைக் கொன்று தின்னும் நிலைகள் வளர்கின்றது.
இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் நாம் ஒவ்வொருவரும் தியானத்தின் மூலம் அந்த அகஸ்திய மாமகரிஷியின் உணர்வுகளை எடுத்துக் கவர்ந்து “நம் மூச்சலைகள் மூலம்” அதை மேகங்களிலே கலக்கச் செய்ய வேண்டும்.
அகஸ்திய மாமகரிஷியின் அருள் உணர்வுகள் கலந்த மேகங்கள் மழை நீராகப் பொழிந்து பூமியில் படரப்படும் பொழுது
1.அது நல்ல அணுக்களாக உருவாகின்றது
2.அதன் மலங்கள் தாவரங்களில் சேர்க்கப்படும் பொழுது அருள் சக்தியாக வளர இது உதவும்.
ஏனென்றால் நீங்கள் விடும் மூச்சலைகள் வீணாகாது. மழை மேகங்களில் கலந்து மழை நீருடன் கலக்கப்படும் பொழுது அதிலிருந்து இந்த நாட்டில் வரும் தீமையின் உணர்வை மாற்றியமைக்கக்கூடிய சக்தியாக வரும்.
ஆகவே நாம் அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்வோம். பேரானந்தம் பெறுவோம்… பேரின்பத்தைப் பெறுவோம்… அனைவரையும் பேரானந்தம் பெறச் செய்வோம்…!
1.நமக்குள் இங்கே நம் மனதை ஒன்றாக்குவோம்.
2.பேரன்பைப் பெருக்குவோம் என்ற இந்த உணர்வுடன் இதை நாம் செயல்படுத்துவோம்.
இதை அன்றே வான்மீகி காட்டியுள்ளார்..! அவர் நமக்குக் காட்டிய இராமாயணம் என்பது சாதாரண காவியம் அல்ல. இராமன் மனதைக் குவித்து இராமலிங்கமாக்கிப் பூஜித்தான் என்று அவர் காட்டியதை 1.மனதை… என்று சொன்னதை “மணலை..” என்று மாற்றிவிட்டார்கள். 2.அன்றைய வாழ்க்கையின் எழுத்து வடிவுகள் வேறு 3.அதன் பின் வந்தோர் தவறின் பாதையில் நம்மை அழைத்துச் சென்று விட்டார்கள்.
நம் குருநாதர் ஈஸ்வரபட்டர் அதைத் தெளிவாக்கினார். ஆகவே மனதை ஒன்றாக்கினால் பேரன்பு அங்கே பெருகும்.
நம் வாழ்க்கையில்..
1.எல்லோரது நிலையும் மனதை ஒன்றாக்கப்படும் பொழுது பேரின்பப் பெருவாழ்வாக
2.என்றுமே பிறவி இல்லாத நிலையாக நாம் அடைய முடிகின்றது.
உலகில் இனி வரும் தீமைகளிலிருந்து விடுபட இதைத் தவிர வேறு வழி இல்லை..!
இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற சிந்தனையுடன் ஒவ்வொரு நிமிடமும் இருப்பதே “உண்மையான தியானம்…!”
நோயால் வேதனைப்படுவோரைப் பார்த்து நாம் உதவி செய்கிறோம். ஆனால் அந்த வேதனை என்பது வலிமை பெற்றது. நம் உடலுக்குள் சென்று விட்டால் அதே நோயை உருவாக்கும் தன்மை வந்துவிடுகிறது.
உடனே நாம் அதைச் சுத்தப்படுத்த வேண்டும் அல்லவா…!
ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று சுத்தப்படுத்திவிட்டு நம்முடைய எண்ணம் 1,துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி வேதனைப்பட்டவர் பெறவேண்டும் 2.அவர் நோயிலிருந்து விடுபட வேண்டும் அவர் உடல் நலம் பெறவேண்டும் என்று 3.இந்த உணர்வை உந்தித் தள்ள வேண்டும்.
ஒரு இரண்டு பேர் ரோட்டிலே சண்டை போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களை நாம் பார்க்கின்றோம்.
அடப்பாவிகளா..! இப்படிச் சண்டை போடுகிறார்களே…! என்று எண்ணினோம் என்றால் அந்த உணர்வு நமக்குள் வந்து நமக்குள்ளும் சண்டை போட ஆரம்பித்துவிடும். நம்மை அறியாமலே அந்த அணுக்கள் போர் முறை செய்யும்.
அப்பொழுது அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்…?
ஈஸ்வரா என்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று ஒரு இரண்டு நிமிடம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.
இப்படி எண்ணி நம் உடலுக்குள் அந்தச் சக்திகள் போன பிற்பாடு நம் ஆன்மாவை விட்டே அந்த உணர்வுகளைத் தள்ளிவிடும். அந்தச் சூரியனின் ஈர்ப்பு வட்டத்திற்குப் போகின்றது. நம் ஆன்மா தூய்மை ஆகிறது,
அடுத்து என்ன செய்ய வேண்டும்…?
சண்டை இட்டவர்கள் வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் அருள் சக்தி பெறவேண்டும். அவர்கள் ஒன்றுபட்டு வாழும் தன்மை பெறவேண்டும் என்று சொன்னால் 1.இந்த நல்ல உணர்வை நாம் நுகர்ந்து 2.புதிதாக அந்த நல்ல அணுவை உருவாக்குகிறோம் என்று அர்த்தம். 3.அவர்களின் தீமை உணர்வுகளை உருவாக்குவதில்லை.
இப்படி நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலேயும் வாழ்க்கையையே தியானமாக்க வேண்டும்.
இன்று நான் அரை மணி நேரம் தியானம் செய்தேன்… ஒரு மணி நேரம் உட்கார்ந்து தியானம் செய்தேன்… குண்டலினி சக்தியை ஏற்றினேன் என்று “எல்லாம் செய்தேன்…!” என்று சொன்னாலும் இந்த உணர்வுகளை எடுத்த பிற்பாடு 1.அடுத்தாற்போல் வேதனைப்படுவோரைப் பார்த்த பின்னாடி 2.அதை வேகமாக நம் உடல் “இழுக்கும்…” நோய் நிச்சயமாக வரும்…!
இதைப் போன்ற நிலைகளை மாற்ற “அவ்வப்பொழுது…” நாம் அந்த அருள் ஒளியைக் கூட்டி நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
இதைத்தான் “வாழ்க்கையே தியானம்…” என்பது.
தியானம் செய்… என்ற பின் “நான் தியானம் செய்கிறேன்..” என்று சொல்கிறார்கள். எல்லாம் தியானம் செய்து கொண்டு தான் இருப்போம். ஆனால் ஒருவன் என்னைத் திட்டினான் என்று சொன்னால் அந்த அருள் ஒளியைப் பெறுவதற்குப் பதில் “திட்டினான்..திட்டினான்…திட்டினான்…” என்று இந்தத் தியானத்தைச் செய்ய ஆரம்பிக்கின்றோம்.
நானும் தியானம் தான் இருக்கிறேன்.. எனக்கு ஒன்றும் சரியாக மாட்டேன் என்கிறது…! என்று தியானம் இருப்பவர்களிலேயும் சிலர் சொல்லிக் கொண்டிருப்பார்கள். 1.தன்னை அறியாது இயக்கக்கூடிய நிலைகளிலிருந்து விடுபடும் சக்தி இருந்தும் 2.அதைப் பயன்படுத்தாத நிலை ஆகிறது.
ஏனென்றல் நாம் ஒவ்வொரு நிமிடமும்… 1,இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற 2.அந்தச் சிந்தனையுடன் நாம் இருக்க வேண்டும்.
வாழ்க்கை என்பது என்ன…?
கடலில் படகில் செல்கிறோம் ஒரு எல்லையை அடைவதற்கு. அதிலே போகும் பொழுது எத்தனையோ அலைகள் மோதுகிறது. நாம் எல்லையைக் குறியாக வைத்துத்தான் அங்கே போகிறோம். அந்தத் துடுப்பைச் சீராகப் போட்டால் அங்கே செல்லலாம்.
இதைப் போல் தான் நம் வாழ்க்கையிலே பாச அலை அன்பு அலை வெறுப்பு அலை வேதனை அலை சலிப்பு அலை சங்கட அலை கோப அலை குரோத அலைகளில் எல்லாம் நாம் மூழ்கிக் கொண்டேயிருக்கின்றோம்.
இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?
அந்த அருள் ஒளி என்ற துடுப்பை எடுத்து அந்த அலைகளை எல்லாம் பிளந்து இந்த வாழ்க்கை என்ற பயணத்தைச் சீராகச் செலுத்திடல் வேண்டும். நம்முடைய எல்லை “அந்தத் துருவ நட்சத்திரம் தான்…!”
அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் வளர வேண்டும் என்றால் அடுத்து நாம் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று எண்ணி எடுக்க வேண்டும். இது வேகா நிலை.
இல்லை என்றால் சாகாக்கலையாக நாம் மீண்டும் வந்து விடுகின்றோம். நாம் இப்படி இருந்தேன் இப்படிச் செய்தேன் என்று இங்கே எண்ணிக் கொண்டிருந்தால் சாகாக்கலையாக வந்துவிடுகின்றது மறுபடியும் உடலின் தன்மைக்கே வந்துவிடுகின்றோம்.
தீயிலே குதித்தால் உயிர் வேகுவதில்லை. இதைப் போல் இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்தால் “நாம் என்றும் வேகுவதில்லை…”
இந்தச் சூரியனே அழிந்தாலும் இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அழியாது. அந்த நிலையை மனிதனாக ஆன பின் நாம் அனைவரும் பெறுதல் வேண்டும்.
அதை நீங்கள் எல்லோரும் பெறவேண்டும் அந்த அருள் சக்தியை நீங்கள் பெறவேண்டும் என்று தான் திரும்பத் திரும்பச் சொல்கிறோம்.
இருந்தாலும்… 1.இது என்னடா…? 2.சாமி அப்பொழுதும் சொன்னார்.. இப்பொழுதும் சொல்கிறார்…! என்று இதை விட்டுவிட்டீர்கள் என்றால் 3.இந்தக் கணக்கு உங்களுக்குத் தப்பாகப் போகும்.
இந்த உணர்வை நினைவைக் கூட்டி உணர்வுகளைத் திரும்பத் திரும்பச் சொல்லும் பொழுது தான் அதை நீங்கள் சுவாசிக்கின்றீர்கள்… உங்களுக்குள் அது கருவாகின்றது.
கோழி என்ன செய்கிறது..? அது சும்மா கேறிக் கொண்டே இருக்கும். எந்தச் சேவலோடு சேர்ந்ததோ அதை எண்ணிக் கேறியது என்றால் அதே மாதிரி நிறத்துடன் குஞ்சுகள் வரும்.
இதே மாதிரித்தான் என்னைத் திட்டினான்… இப்படிச் செய்தான்…! என்று சொல்லிக் கொண்டிருந்தால் அதே உணர்வு நமக்குள் கருவாகின்றது.
ஆனால் அந்த அருள் ஒளி பெறவேண்டும் என்ற உணர்வைத் திரும்பத் திரும்ப எடுத்தால் இது கருவாகும். வாழ்க்கையில் வரும் அந்த இருளை அகற்றும்.
அந்தச் சக்தி பெறவேண்டும் என்பது தான் “உண்மயான தியானம்…!”
இந்த வாழ்க்கையில் வாழும் நாம் நம் குழந்தையை எண்ணி.. நான் சம்பாரித்து வைத்திருக்கின்றேன்… அவன் எனக்குப் பின்னாடி அதை என்ன செய்யப் போகின்றானோ…? சொத்தை எல்லாம் காப்பாற்றுவானா..? என்ற நிலைகளில் எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்…?
அவன் உணர்வை நமக்குள் வளர்த்து நாம் மடிந்த பின் அவன் நினைவாகவே வெளி வந்தால் அவன் உடலுக்குள் தான் செல்வோம்.
அங்கே சென்ற பின் உடலுடன் இருக்கும் பொழுது நாம் எப்படிக் கலக்கப்பட்டோமோ இந்த உணர்வு அவனுக்குள் இயக்கப்பட்டு
1.நாம் தேடிச் சம்பாரித்த சொத்தையும் அவன் கலக்கத்துடன் அழித்திடும் நிலை தான் வருமே தவிர
2.அவனைக் காத்திடும் நிலை வருவதில்லை.
ஆகவே கடைசியில் நாம் என்ன ஆகின்றோம்..? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். குழந்தை மேல் இந்த மாதிரிப் பாசமாக இருந்தால் இப்படி ஒரு நிலை வந்துவிடுகின்றது.
ஆக அந்த உணர்வுக்குள் பட்ட பின் இந்த உடலில் எந்தெந்த நோய் வந்ததோ அந்த நோய் அங்கே விளையும். அந்த நோய் விளைந்த பின் அந்த உடலையும் வீழ்த்தி விடுகின்றது.
ஆனால் பத்தாவது நிலை என்றால் என்ன…?
முதலிலே சூரியன்…
இரண்டாவது உயிர் விஷ்ணு..
மூன்றாவது எண்ணங்கள் இராமன்…
நான்காவது கண்கள் கண்ணன்.
துவாராகயுகத்தில் கூர்மையாகப் பார்த்து உடலின் அமைப்பு அவதாரம் ஆகி இப்படிப் பல தீமைகளை நீக்கி நீக்கி அவதாரங்களாக மாற்றி தீமைகளை நீக்கிடும் தன்மை பெற்றவன்.
கண்கள் தோன்றிய பின் கூர்மையாகப் பார்க்கின்றது ஐந்தாவது நிலை இந்தக் கூர்மை அவதாரம்
ஆறாவது நிலை – வராகன் அந்த வலிமை மிக்க நற்சக்தி பெற்றுப் பன்றி என்ன செய்கிறது…?
1.சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நாற்றத்தைப் பிளக்கின்றது.
2.அதற்குள் மறைந்த நல்ல உணர்வுகளை நுகர்கின்றது.
3.பின் பன்றியின் உடலில் தொக்கியுள்ள நஞ்சினை நீக்கிவிட்டு நஞ்சினை நீக்கிடும் உணர்வுகள் விளைகின்றது.
4.அடுத்து மனிதனாகப் பிறக்கச் செய்கின்றது… பரசுராம்…! ஏழாவது நிலை. பல தீமைகளைச் சமப்படுத்தும் நிலை வருகின்றது.
பின் பலராம் (எட்டாவது நிலை) பலருடைய எண்ணங்களை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.
அடுத்து நரசிம்மா… (ஒன்பதாவது நிலை). தீமை என்ற நிலை வந்த பின் நம் உடலுக்கு:ள் புகாது தடுத்து நிறுத்தும் நிலை தான் நரசிம்மா.
தீமைகள் நமக்குள் புகாது நாம் தடுக்கவில்லை என்றால் அதனால் நாம் எண்ணும் வேதனை என்ற உணர்வுகள் உடலுக்குள் இரண்யனாகின்றது,
ஆக இரண்யனான பின்
1.மற்றதைக் கொல்லும் நிலைகளை நாம் மாற்றி விட்டால் கல்கி.
2.இந்த உயிர் ஒளியானது. அதே ஒளியின் உணர்வின் தன்மை அந்தப் பத்தாவது நிலை ஆகும் பொழுது தான் கல்கி.
3.இந்தப் பூமியின் ஈர்ப்பை விடுத்து அது விண்ணுலகம் செல்கிறது… பறந்து செல்கிறது…
4.தன்னை எதுவும் தடுக்காது குதிரை மீது சென்று வாளை வீசித் தப்பித்துச் செல்வதாக உருவ அமைப்பைக் கொடுத்து
5.அந்த அருவத்தின் சக்திகளை நாம் எப்படிப் பெறுவது…? என்று தெளிவாக்கியுள்ளார்கள் ஞானிகள்.
வான்வீதியில் தோன்றிய உயிர் மனிதனாக ஆன பின் இனிப் பிறவியில்லாத நிலைகள் அடைவதே கடைசி நிலை. அப்படி அடைந்தவன் தான் அகஸ்தியன் துருவ நட்சத்திரம்.
அந்தத் துருவ நட்சத்திரத்தை நாம் பற்றுடன் பற்றி இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றி நம் வாழ்க்கையில் அதைப் பற்றுடன் பற்றும் பொழுது அங்கே செல்கின்றோம்.
இப்படி நமக்குள்
1.மகிழ்ச்சி என்ற உணர்வு வரும் பொழுது சொர்க்கலோகம்…!
2.இதை உருவாக்குவது யார்..? உயிர்.
3.நமக்கு வாசல் எது…? உயிர்.
4.ஆகவே இது சொர்க்கவாசல்.
இந்த உடலிலே உணர்வை எல்லாம் ஒளியாக மாற்றினால் அந்த ஒளியின் தன்மை கொண்டு இந்த வாசல் வழி கொண்டு நாம் என்றும் ஏகாந்த நிலை என்ற ஏகாதசி… பத்தாவது நிலை எதுவுமே எதிர்ப்பில்லாத நிலைகள் கொண்டு ஒளியின் சரீரமாக நாம் பெற முடியும்.
மனிதன் அடைய வேண்டிய எல்லையை உணர்த்திடும் “ஞானிகளால் காட்டப்பட்ட விளையாட்டு…!”
நல்லதை எண்ணினால் நல்லது நடக்கும். ஆனால் தீமையின் உணர்வைத் தனக்குள் எடுத்துக் கொண்டால் அந்த நன்மைகள் வராது.
1.ஆகவே சொர்க்கவாசலை விட்டு நரக வாசலுக்கே சென்றுவிடும்.
2.நரகலோகத்திற்குச் சென்றால் மீண்டும் மனிதனாகப் பிறக்க எத்தனை காலமாகுமோ …? என்பதைத்தான்
3.ஒரு பரமபதப் படத்தை வைத்துக் காட்டுகின்றனர் ஞானிகள்
4.அதாவது சொர்க்கவாசல் என்று பரமபதத்தைக் காட்டி விளையாட்டு ரூபமாக நமக்கு உணர்த்துகின்றனர் ஞானிகள்.
பன்றி நாய் நரி நண்டு தேள் இவைகள் எல்லாம் அந்தப் படத்தில் கீழே காட்டப்பட்டிருக்கும். தாயங்களை உருட்டுவார்கள். அப்படி உருட்டும் பொழுது இதன் வழி கொண்டு சென்றால் அடுத்து ஒரு சிறிய ஏணி இருக்கும்… பெரிய ஏணியும் இருக்கும்.
சந்தர்ப்பத்தால் சிறிய ஏணியில் ஏறியபின் அடுத்து பல கட்டங்களைத் தாண்டிச் செல்கிறது. அங்கே சென்ற பின் அடுத்து அதன் அருகில்… “முகப்பிலேயே ஒரு விஷப் பாம்பு இருக்கின்றது…!”
தாயக்கட்டையை உருட்டினால் தாயம் விழுந்தால் கீழே வந்து விடுகின்றது. நம் வாழ்க்கையில் எதனின் உணர்வின் தன்மையைப் பெறுகின்றோமோ அது நம்மைக் கீழே கொண்டு வந்துவிடுகின்றது.
அதாவது ஒரு மனிதன் வேதனைப்படும் நிலைகளில் செயல்படுகின்றான் என்றால் அதை நாம் உற்றுப் பார்த்து நுகர்ந்து விட்டால்
1.நம் நல்ல எண்ணங்களை இயக்கிக் கொண்டிருக்கும் விஷம்
2.வேகமாகக் கொண்டு வந்து நம்மைக் கீழே இறக்கிவிடும் என்பதைத்தான்
3.அங்கே உதாரணமாகக் காட்டுகின்றார்கள் பாம்பைப் போட்டு..!
சொர்க்க வாசல் என்று சொல்லும் வைகுண்ட ஏகாதசி அன்று அந்த ஏகாந்த நிலை பெறச் செய்யும் அருள் ஞானத்தை நாம் பெற
1.இந்த வாழ்க்கையில் எத்தனை தடைகள் வருகின்றது…?
2.மீண்டும் மீண்டும் நாம் எப்படித் தேய்பிறையாகின்றோம்…?
3.அப்படி வரும் தடைகளிலிருந்து நாம் எப்படி மீள வேண்டும்..?
இதைத் தான் நமக்கு எடுத்துக் காட்டுகின்றார்கள் ஞானிகள்…!
அதை எல்லாம் தாண்டி அடுத்து மேலே வந்துவிட்டோம் என்ற மகிழ்ச்சி வந்துவிடுகிறது. “பரமபதம் ஏறப் போகின்றோம்…” என்றாலும் கடைசியில் அங்கே ஒரு பெரிய பாம்பு இருக்கும்.
1.மேலே வந்த பின் நான் வந்துவிட்டேன் என்று எண்ணுவார்கள்…!
2.ஒரு தாயம் முதலிலே விழுந்து விட்டால் நேரடியாகக் கீழே கொண்டு போகும்.
3.அதனுடைய முடிவு எங்கே முடிகிறது…?
4.கீழே பன்றியிடம் தான் விடுகின்றது… பன்றியிடம் வாலைப் போட்டுக் காட்டியிருப்பார்கள்.
பல கோடி உணர்வின் தன்மைகள் கொண்டு நாம் சென்றாலும் அதிலிருந்து விடுபடும் வல்லமை உண்டு. ஏனென்றால் இங்கே வந்தால் பன்றி என்ன செய்கிறது..?
1.சாக்கடையை நுகர்ந்து
2.அதற்குள் இருக்கும் தீமைகளைப் பிளந்து
3.நல்ல உணர்வுகளை நுகர்ந்து
4.அந்த நல்ல உணர்வின் வளர்ச்சி பெற்று “மனிதனாக” அது உருவாக்குகின்றது.
ஆகவே நாம் தீமைகளை அகற்றி ஒளியாக்கும் உணர்வின் தன்மைகளை நமக்குள் வளர்த்தல் வேண்டும். துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளியை எடுத்து ஒவ்வொரு நாளும் நமக்குள் வலுவாக்கிக் கொண்டே வருதல் வேண்டும்.
பல கோடி உணர்வுகளைச் சந்தித்தாலும் அதிலிலுள்ள தீமைகளை நீக்கிவிட்டு அருள் ஒளி பெறும் சக்தியாக நாம் வளர வேண்டும்.
1.இவ்வளவு விஷயங்களையும் அந்தப் பரமபதத்தின் மூலம்
2.அழகாக மனிதனுக்குச் சித்தரித்துக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.
நாம் நல்ல நிலையில் உயர்வதற்குண்டான “கால நேரம் வரட்டும்…!” என்று காத்திருக்க வேண்டுமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
தீபத்திற்கு ஓ…ம் என்ற ஒலியின் உருவ எழுத்தினை மேல் வைத்து ஐம்புலனின் ஐக்கிய ஒளியை ஐந்து முகங்களாக்கி தீபமேற்றி வணங்கிட நம் முன்னோர்ககள் வழிப்படுத்திச் சென்றார்கள். ஒவ்வொரு முறைகளுக்கும் தத்துவ மையம் கொண்டே சகல நிலைகளையும் உணர்த்தினார்கள் அன்றைய சித்தர்கள்.
இப்படிப் பல முறைகளை உணர்த்தியும் வாழ்க்கை என்ற சுழலிலிருந்து ஞானம் பெறவும் அதற்குகந்த ஜெப முறையை வழிப்படுத்தியதை எல்லாம்
1.“அதற்குகந்த காலங்கள் வரட்டும்…!”
2.இப்பொழுது வாழும் இந்த வாழ்க்கை நிறைவுக்குண்டான வழி செயல் முற்றுப் பெற்ற பிறகு தான்
3.ஞான வழிக்கு நம் ஜெப நிலை செல்ல வேண்டும் என்று கால நிலையைக் கடத்தி
4.அதற்குகந்த காலத்தை ஏற்கும் நாளை எண்ணியே வாழும் காலத்தையே கடத்திவிடுகின்றனர்.
பசிக்கு உண்ணுகின்றோம். ஆனால் அதற்குகந்த காலம் வரட்டும் என்று காத்திருப்பதில்லை பசிப்பவன்…! அதே போல் எந்தச் செயலில் இருந்தாலும் எந்தச் சூழ்நிலையில் சிக்குண்டிருந்தாலும்
1.நம் உடலிலிருந்து வெளிப்படும் கழிவை வெளிப்படுத்த
2.அதற்குரிய “காலம் வரட்டும்…” என்று பொறுத்திருக்க முடிகின்றதா…?
உடலில் உள்ள அமிலத்தை உண்டு… கழித்தே… வாழும் நாம் அந்த உடலுக்குகந்த உயர் குணமுடைய அமில ஞானத்தைப் பெறுவதற்காக மட்டும் கால நிலையையும் வயது வரம்பையும் நீட்டி… வரும் நாள்.. என்று எண்ணிக் கடத்தி வருகின்றோம்.
இதனை உணர்த்தத்தான் எண்ண நிலையை ஒருநிலைப்படுத்திச் சாந்த குணத்தின் சக்தி அமிலத்தை ஈர்க்கும் ஜெப நிலையைப் பெறுங்கள் என்று சொல்கிறோம்.
அன்பு ஆசை என்ற பிணைப்பான நிலைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு அதி அன்பினால் வரும் வினையையும்… அதி ஆசை கொண்ட பேராசைக் குணத்தையும் வழிப்படுத்திடாமல்
1.இந்தத் தீய குணத்தின் ஆணிவேரை முதலில் சமப்படுத்தும் பக்குவத்தை ஏற்று
2.நம் ஆத்ம ஜெபம் இருந்திடல் வேண்டும்.
ஆண்டவனின் அன்பைப் பெற “அன்பே தெய்வம்.. அன்பே சத்தியம்…!” என்ற அன்பு வெறிக்கு அடிமைப்பட்டாலும் நம் ஆத்ம நிலை உயருவது கடினம்.
நம் எண்ணமெல்லாம்…
1.இந்த உலகுடனும் கலந்துள்ள அலையில் உள்ள
2.நல் அலைகளை மட்டும் சேமிக்கும் பழக்கத்தைத்தான் மேற்கொள்ள வேண்டும்.
3.தீய அணுக்கள் என்று ஒதுக்கியும் வெறுத்தும்
4.”நான் நல்லவன்…” என்ற ஒரே வெறி கொண்ட நிலை பெற்றாலும்
5.நம் ஆத்ம நிலை வளருவது கடினம் தான்.
ஜெபம் பெறுங்கள்.. நல் உணர்வு பெறுங்கள்… என்றெல்லாம் வழிப்படுத்துகின்றோம். அந்த நிலையில் நம் எண்ணக் கலவை வழிப்படுத்திக் கொண்டு வரும் நிலையில்
1.நம்மை அறியாமல் பிறர் செய்யும்
2.அவர் எடுத்த அமில குணத்தை ஒத்த அலைகள் நம்மை மோதுண்ட நிலையில்
3.அதே சமயத்தில் மற்றொருவர் செய்யும் தவறை இவர் சுட்டிக் காட்டும் பொழுது
4.இவரின் நிலையான அமில மோதலின் நிலையால்
5.பல நாட்கள் நாம் நம்முடன் மோதுண்ட அலைகளை அடக்கிப் பழக்கப்பட்ட நிலையில்
6.மற்றோரின் சொல்லிலிருந்து வெளிப்படும் எந்தக் குண எதிர்நிலை மோதலும் நம்மைச் சாடி
7.”அதே உணர்வுடனே நம்மையும் பேசச் செய்யும்…!”
நாம் பெற்ற ஜெபத்தின் வலு என்ன ஆயிற்று…? எங்கே போனது…?
முதலில் நம் நிலையில் பிறரின் சொல் எண்ணத்தைக் கொண்ட அமிலத்திற்கு அடிபணியலாகாது. பல நாள் நமக்குகந்த குணமுடன் வாழ்ந்த நிலையில்
1.ஒருவர் வந்து மற்றொருவரின் மேல் சொல்லப்படும்
2.எந்நிலை கொண்ட சொல்லின் அமிலங்கள் நம்மிடம் சொல்லும் பொழுதும்
3.நாம் அவர் சொல்லும் நிலையை வைத்து… “நம் எண்ணத்தைச் சிதறவிடலாகாது…!” (இது முக்கியம்)
ஆத்ம ஞானம் பெறும் வழித் தொடரில் பல நிலைகள் உள்ளன.
ஒவ்வொரு தடவை நாம் சுவாச நிலை எடுத்து வெளிப்படுத்தும் நிலை கொண்டு “அதன் எண்ணத்தை ஒத்த அமிலத் தன்மை உராய்ந்து கொண்டே தான் உள்ளது…” என்பதனை உணர்ந்து நம் ஆத்ம ஞானம் இருந்திடல் வேண்டும்.
தன் ஆத்மாவுக்குகந்த உயர் ஞானத்தைப் பெற இன்றைய கலியில் உள்ள ஆத்மாக்களில் வழி பெறும் பக்குவம் இந்த நாகரீக உலகில் மிகவும் குறைந்து விட்டது. இன்று உணர்த்தப்படும் முறையும் ஏற்கப்படும் வடிவிலில்லை.
1.தன் உண்மை நிலையைத் தான் உணர்ந்தால்
2.தன் உயிராத்மாவின் நிலை உயரும்… ஒளிரும்…! என்ற வழித் தொடர் பெற்றே ஜெப நிலை கொண்டிடுங்கள்.
மரணம் அடைவதற்கு முன்னாடி சில பேர் சொல்லிவிட்டே போகிறார்கள்…! – நடந்த நிகழ்ச்சி
ஒரு சமயம் என் சொந்தக்காரர் ஒருவர் இருந்தார். அவருக்கு வயது 95. அப்பொழுது எனக்கு (ஞானகுரு) ஏழு வயது இருக்கும்.
எங்கள் வயலுக்குப் போக வேண்டும் என்று சொன்னால் ஒரு சுடுகாட்டைத் தாண்டித் தான் போக வேண்டும். குளம் எல்லாம் இருப்பதால் நான் அங்கே எங்கள் வயலுக்குத் தினமும் போய் வருவேன். அப்படி ஒரு பழக்கம் அந்த வயதில் எனக்கு இருந்தது.
என் சொந்தக்காரர் அந்தப் பெரியவர் 95 வயது என்ன செய்தார் தெரியுமா…? எல்லாச் சொந்தக்காரர்களுக்கும் தகவல் சொல்லிக் கூப்பிடுகின்றார்.
1.எனக்காக வேண்டி இனி என்ன செய்யப் போகிறீர்கள்…?
2.நான் சாவதற்கு இன்னும் பத்து நாள் தான் இருக்கிறது…! என்று சொல்கிறார். அப்படியே சொல்கிறார்…!
வந்தவர்களிடம் எல்லாம் நான் பத்து நாளில் போய்விடுவேன் டேய்… நீங்கள் எல்லோரும் நன்றாக இருங்கடா..!
ஒரு நாள் போய் விட்டது… இன்னும் ஒன்பது நாள் தான் இருக்கிறது. நீங்கள் என்னென்ன ருசியாக வேண்டுமோ சாப்பிடுங்கள். எல்லோருக்கும் சாப்பிடக் கொடுங்கள்…!
ஒவ்வொரு நாளும் இப்படியே சொல்லிக் கொண்டே இருந்தார்.
பத்தாவது நாளும் வந்தது.
1.இனி ஒரு மணி நேரம் இருக்கிறது…. அரை மணி நேரம் இருக்கிறது
2.கால் மணி நேரம் இருக்கிறது… பத்து நிமிடம் இருக்கிறது
3.இன்னும் ஒரு நிமிடம் இருக்கின்றது… சொல்லிக் கொண்டே போகிறது.
4.சொல்லிக் கொண்டே இருந்தார்… அப்படியே உயிர் பிரிந்தது…!
அவர் எந்த வழியில் எப்படி இருந்திருப்பார் பாருங்கள்…!
கடைசியில் அவரைச் சுடுகாட்டில் வைத்துத் தகனம் செய்கின்றார்கள் நான் அன்றைக்குத்தான் சுடுகாட்டில் எரிப்பதைப் பார்க்கின்றேன். அங்கே அவருடைய உடல் எரிந்து கொண்டிருக்கின்றது.
எரிந்து கொண்டிருந்த உடல் என்ன செய்தது…?
1.அவர் எடுத்துக் கொண்ட உணர்வினுடைய வேக நினைவுகள் எவ்வளவு வலுவாக இருந்ததோ
2.அந்தச் சரீரம் அப்படியே எழுந்து உட்கார்கிறது…!
தொப்….தொப்..! என்று போட்டு அடித்து மறுபடியும் கட்டையைப் போட்டு எரிக்கின்றார்கள். இதைப் பார்த்ததும் எனக்கு என்ன ஆனது…?
சுடுகாட்டில் அன்றைக்குத் தான் பேயைப் பார்த்த உணர்வு போல் பயந்து போய் விழுந்தடித்து ஓடத் தொடங்கினேன். ஏழு வயதில் எனக்கு அந்தப் பயம் வருகிறது. நடந்த நிகழ்ச்சி நேரிலேயே இதைப் பார்த்தது. ஆனால் செத்தது அவர்.
இந்த உணர்வுகள் அதை எல்லாம் நீக்கினாலும் கூட அந்த உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அந்த மாதிரி இயக்குகிறது. பார்த்த உண்மை நிலை இது…!
பக்தியின் நிலைகள் அன்று காட்டியிருந்தாலும்…
1.தாய் கருவிலே விளைந்த இந்த உணர்வுகள் மெய் ஒளியைப் பெற்று அங்கே அழைத்துச் செல்லும்.
2.அவர்களுக்குத்தான் இந்த மாதிரியான நினைவுகள் வரும்…!
உங்கள் ஒவ்வொருவருக்கும் (இன்னார் இன்னாருக்கு) இதெல்லாம் நான் செய்தேன். நீங்கள் இப்படிச் செய்து கொள்ளுங்கள்…! நான் உடலை விட்டுப் போகிறேன்…! என்று சொல்லிவிட்டே போகிறார்கள்.
இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.
உடலை விட்டு நாம் செல்லும் பொழுது யாருடன்… எப்படிச் செல்ல வேண்டும்…?
இன்றைய உலகில் நாம் தவறே செய்ய வேண்டாம்…! நாம் தவறு செய்யாமலே அந்தத் தவறுக்கு நாம் ஆளாகும் சந்தர்ப்பங்கள் வந்து விடுகின்றது.
அதற்கு மூலம் எது..?
நாம் நுகர்ந்த உணர்வுகள் தான்…!
அந்த உணர்வை இயக்குவது யார்…?
நம் உயிர் தான்…!
நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் உயிர் இயக்கப்படும் போது மனிதனை உருவாக்கிய அணுக்கள் எத்தனை பாடுபடுகின்றது..? எத்தனை வேதனைப்படுகின்றது…? இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டுமா இல்லையா…?
மனிதன் வாழ்வது கொஞ்சம் நாள் தான். நூறு வருடம் அல்லது நூற்று இருபது வருடம் அதற்கு மேல் யாரும் வாழ்கிறார்களா…? எப்படி இருந்தாலும் இந்த உடலை விட்டுப் போய்த் தான் ஆக வேண்டும்…?
அப்பொழுது யாருடன் செல்ல வேண்டும்..? நுகர்ந்த உணர்வுக்கொப்ப உயிருடன் தான் நாம் இப்பொழுது செல்கின்றோம்.
ஆனால்
1.வாழ்க்கையில் வந்த தீமைகளை எல்லாம் நீக்கி
2.நுகர்ந்த உணர்வின் தன்மைகளை ஒளியாக்கி
3.அந்தத் துருவ நட்சதிரத்தின் ஈர்ப்புக்குள் தான் நாம் சென்றாக வேண்டும்
ஏனென்றால் அன்று ஆண்ட அரசர்களால் இந்த உலகம் அழியும் தருணத்திற்கு வந்துவிட்டது. இன்றும் அதிக மோசமான நிலைகளில் போய்க் கொண்டு இருக்கின்றது
பணத்தைச் சம்பாதித்துக் கொண்டு வந்தாலும் அது வீடு வரைக்கும் வந்து சேருமா…? கையில் பணம் கொண்டு வருவது தெரிந்தாலே தட்டிப் பறிக்க எத்தனையோ வழிகளில் இன்று இருக்கின்றார்கள்.
சேர்த்த பணத்தை வீட்டில் மறைத்து வைத்து விட்டுப் போனால் தப்ப முடிகிறதா என்றால் அதுவும் இல்லை. சரி… பாங்க் லாக்கரில் வைத்தால் தப்ப முடிகிறதா..? என்றால் அதுவும் இன்று கேள்விக் குறி தான்…!
அந்த அளவுக்கு நிலைமை மோசமாக ஆகிவிட்டது
ஆக எல்லா ஆசைகளும் இருந்தாலும் செல்வத்தைப் பாதுகாத்து வைப்பதற்குள் போதும்…போதும்..! என்று ஆகி நிம்மதி இல்லாது வேதனைப்பட்டு நமக்குள் நோயாகவே வருகின்றது. இதிலிருந்து தப்ப முடியாத நிலைகள் தான் இன்று இருக்கின்றது.
1.ஆகையினால் செல்வத்தைக் காக்க என்று யாரை எண்ணி ஏங்குகின்றோமோ மீண்டும் இந்தப் பிறவிக்கே வந்துவிடுன்றோம்.
2.பிறரைக் காக்க வேதனைகளை எடுத்தாலும் மீண்டும் பிறவிக்குத் தான் வருகின்றோம்.
ஆனால் விஷத்தை எல்லாம் வென்று ஒளியாக மாற்றியவன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனது.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் ஓங்கி வளர்த்தோம் என்றால் “உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறுகிறது…!”
அப்பொழுது உயிர் அதை இயக்கி நம்மை அந்தத் துருவ நட்சத்திரத்திற்கே கொண்டு போய் நிறுத்தும். நாம் அழியாத ஒளியின் சரீரம் பெறுகின்றோம்.
ஏனென்றால் நமக்குள் எத்தனையோ “ஊழ்வினை” என்ற வித்துக்கள் உண்டு. முந்தி தெரியாது… இப்பொழுது அது எல்லாம் தெரிய வரும். அந்த வித்துக்களை எல்லாம் நாம் ஒளியாக மாற்றிக் கொண்டே வருதல் வேண்டும்.
இப்பொழுது இருக்கும் இந்த மனித உடலே நமக்குக் “கடைசி உடலாக” இருக்க வேண்டும்…!
நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் பல தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற வலுவான உணர்வுகளை எடுத்துத்தான் பரிணாம வளர்ச்சி அடைந்து இன்று மனிதனாக வந்திருக்கின்றோம்.
ஒரு முயல் என்ன செய்கிறது…? நாயிடமிருந்து தப்ப எண்ணுகிறது. அதே சமயத்தில் அந்த நாய் நரியிடமிருந்து தப்ப எண்ணுகிறது.
1.அப்பொழுது தப்ப வேண்டும் என்ற அந்த எண்ணங்களைச் சுவாசித்து
2.அந்த உணர்வின் தன்மை தன் உடலுக்குள் பெருக்கிக் கொள்கிறது.
3.இப்படித்தான் எல்லா உயிரினங்களும் வளர்ச்சி அடைந்து வந்தது.
ஒரு மான் சாந்தமானது. புலியோ கொடூரமானது. அந்தப் புலியிடமிருந்து மான் தான் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தை எடுக்கின்றது.
இப்படிச் சிறுகச் சிறுக எண்ணி அந்த உணர்வு பெற்ற பின் கடைசியில் என்ன நடக்கின்றது…? அதாவது பல கோடி உடல்களை எடுத்துப் பல தீமைகளிலிருந்து நீக்கிடும் அருள் சக்தி பெற்ற இந்த மனித உடலை உருவாக்கியது நம் உயிர்.
அதைத்தான் தீமைகளிலிருந்து விடுபடும் எண்ணத்தை உருவாக்கி வந்ததை “இராமேஸ்வரம்” என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.
இராமன் என்றால் எந்தச் சுவையை எடுக்கின்றோமோ அந்த எண்ணங்கள் வரும். அது தான் சீதாராமா என்பது. எதன் சுவையோ அதன் அந்த உணர்ச்சிகளின் எண்ணங்கள் வருகிறது,
ஆகவே இதைப் போல தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வுகள் எடுத்துக் “கோடிக்கரை” என்ற நிலையில் இருக்கின்றோம்.
1.அதாவது நாம் எத்தனையோ கோடி உடல்களைப் பெற்று
2.இன்று நாம் கடைசி உடலாக இருக்கின்றோம்.
கோடிக்கரை என்ற கடைசி உடலில் இருக்கப்படும் பொழுது இனிமேல் நாம் என்ன செய்ய வேண்டும்..?
தனுசு கோடி…! அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி மனித வாழ்க்கையில் வந்த இந்தத் தீமைகளை எல்லாம் நீக்கியவன். நாம் அகஸ்தியன் அடைந்த நிலையை அடைய வேண்டும்.
கோபப்படுவோரைப் பார்த்தவுடன் “ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் நினைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று நம்மைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சுத்தப்படுத்தி முடிந்தவுடனே என்ன செய்ய வேண்டும்…?
கோபமாகப் பேசிவர்களுக்குள் சாந்தமும் ஞானமும் விவேகமும் வர வேண்டும். நல்லது செய்யக்கூடிய அந்த உணர்வுகள் வர வேண்டும் என்று எண்ண வேண்டும்.
1.இப்படி நாம் எண்ணினால் அவன் கோபித்த உணர்வு நமக்குள் வருவதில்லை.
2.நமக்குள் நாம் சுத்தப்படுத்திக் கொள்கிறோம்.
ஒரு குழம்பை வைக்கும் பொழுது அதை எப்படி ருசியாக மாற்றுகின்றோமோ நம் உடலில் அந்தத் தீமைகள் புகாது… தீமைகள் வளர்ந்திடாது தடுத்துக் கொள்கிறோம்.
இல்லை என்றால் அந்தக் கோபப்படுவோரின் உணர்வைப் பதிவாக்கி விட்டால் அடுத்தாற்போல் வரப்படும் பொழுது… அவனைப் பார்த்தாலே “அவன் மோசமானவன்…” என்று நம்மைச் சொல்ல வைக்கும்.
யாராவது அவனைப் பற்றிச் சொன்னார்கள் என்றால் அல்லது அவர்களை நினைக்கும் பொழுதெல்லாம் இதே நிலை வரும். அந்த நேரத்தில் எல்லாம் நமக்குள் பல கெடுதலான நிலைகள் வந்துவிடுகின்றது.
பின் நோயாகின்றது… பரிணாம வளர்ச்சியில் வந்த இந்த மனித உடலை வீழ்த்தி விட்டுத் தேய் பிறையாகிக் கீழே செல்ல வைக்கின்றது.
அதைத் தடுப்பதற்காகத்தான் இதை எல்லாம் வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உங்களைப் பெறச் செய்கிறோம்.
யாம் (ஞானகுரு) உபதேசத்தின் வாயிலாகப் பதிவாக்கும் இந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நீங்கள் எப்பொழுது எண்ணினாலும் அந்தச் சக்தி கிடைக்கும்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைக்கப்படும் பொழுது
1.உங்கள் உடலில் உள்ல பல கோடி உணர்வுகளுக்குள்ளும் அது ஒன்றாகித் தனுசு கோடி ஆகின்றது.
2.அழியா ஒளிச் சரீரம் பெற ஏதுவாகின்றது.
முன்னோர்களின் ஆன்மாக்களுக்குச் சாப்பாடு செய்து வைத்துக் கூப்பிடுவதால் வரும் விளைவுகள்
சாதாரணமாக நாம் எல்லோருமே மந்திரங்களைச் சொல்லி பழக்கப்பட்டவர்கள் தான். இறந்த பிற்பாடு என்ன செய்கிறோம்…? சுட்ட சாம்பலை எடுத்துப் பாவத்தைப் போக்குவதற்காகக் வேண்டிக் கொண்டு போகிறோம்.
எங்கே…?
கங்கையில் கொண்டு பாவத்தைக் கரைத்து விட்டால் போய்விடும் என்று கரைப்போம். அடுத்து அந்த மந்திரத்தைச் சொல்லி மோட்சத்துக்கு அனுப்பிவிட்டதாக அங்கே சொல்வார்கள்.
வீட்டுக்கு வந்தவுடனே நாம் என்ன செய்கிறோம்…? எல்லோரும் எண்ணெய் தேய்த்துத் தலை முழுகி அப்புறம் புத்தாடைகளை உடுத்தி விநாயகர் கோவிலில் கொண்டு போய் மாவிளக்கு வைத்து நெய் தீபம் இட்டு தீபாரதனை காட்டுவோம். அப்படிக் காட்டினால் மோட்ச தீபம்.
அங்கே அப்படிச் செய்த பின் அமாவாசை அன்றைக்கு என்ன செய்கிறோம்…? அம்மா அப்பா உணர்வுகள் எல்லாம் நம் உடலில் இருக்கும். அவர்களை நாம் எண்ணுவோம். எப்படி…?
அவர்கள் பிரியமாகச் சாப்பிட்ட உணவுகளை எல்லாம் வைத்து நாம் கூப்பிடுவோம். எங்களுடன் இருந்தீர்கள். இதை எல்லாம் சாப்பிடுவீர்கள். உங்களுக்குப் பிடித்த துணிமணிகளை எலலம் வைத்திருக்கின்றோம் என்று சொல்லுவோம்.
இந்தச் சாப்பாடு வைத்த உடனே அவர்கள் உணர்வு நம்மிடம் இருப்பதால் இந்த உணர்வு ஆன்மா (மணம்) ஆனபின்.. அது இங்கே வரும். நாம் இங்கே இதைச் செய்வோம். ஆனால் குடுகுடுப்புக்காரன் என்ன செய்வான்…?
நம் வீட்டு வாசல் படியில் இருந்து மண் எடுத்துக் கொண்டு போவான். தலை முடியையும் எடுத்துக் கொள்வான்.
நமக்கு ஆகியவர்கள் ஆகாதவர்கள் என்று எந்தத் தெய்வத்தை எண்ணி மந்திரங்கள எல்லாம் சொன்னோமோ அதை எடுத்துக் கொள்வான்.
இது எல்லாவற்றையும் சேகரித்துக் கொண்டு சுடுகாட்டிற்குச் செல்வார்கள். எந்த இடத்தில் அவர்களைப் (நம் முன்னோர்களை) புதைத்தார்களோ அல்லது எரித்தார்களோ அந்த இடத்திற்குக் கொண்டு போவார்கள்.
நம் பாதம் பட்ட மண்… தலை முடி… துணி… (இதில் எல்லாம் நம் உணர்வின் எண்ணங்கள் உண்டு) இந்த மூன்றையும் வைத்து அந்த இடத்தில் சில மந்திரத்தைச் சொல்வார்கள்.
மந்திரங்களை ஜெபித்த பின் அந்த மண்னை எடுத்துக் கெடுதலான நிலைகளுக்கு அதை தூவி விடுவார்கள். ஆனால் நமக்குத் தெரியாது. மண்ணிலே பாதம் பட்ட பின் இந்த உணர்வின் தன்மை எந்த ஆவியோ அது இங்கே வந்து குவியும்.
அடுத்தாற்போல் என்ன செய்வான்…? நல்ல காலம் வருகிறது என்று குடுகுடுப்புகாரன் சொல்லுவான்.
1.இந்த உணர்வின் ஒலி/ஒளி கொண்டு நம் உணர்வின் அறிவை எடுத்து
2.நம் குடும்பத்திலே உள்ள நிலைகள் எல்லாம் எப்படி எப்படி இருக்கிறது…? என்று கட கட என்று சொல்லிக் கொண்டே வருவான்.
3.இது ஒரு வகை.
இது எல்லாம் அன்றைய அரசர்களுக்குத் தூது சென்ற நிலைகள். ஒரு குடும்பத்திலே இன்னென்ன நடக்கிறது என்ற உணர்வின் செயலாக்கங்களை இருந்த இடத்தில் இருந்து அரசனுக்குத் தூது செல்லும் முறை. அரசனால் உருவாக்கபட்ட “ஐந்தாம்படை” என்று அக்காலங்களில் வந்த நிலை.
நாடி சாஸ்திரமும் இதே நிலை தான். ஒரு அரசன் ஆன பின் மந்திரங்களை உருவாக்கித் தன் குடிமக்களுக்குத் தெய்வ பக்தி என்ற நிலையில் பதிவாக்கி விடுவார்கள்.
அத்தகைய மந்திரங்களை மக்கள் தங்களுக்குள் கவர நேர்கின்றது. இப்படிப் பல மந்திரங்களைத் தனக்குள் சேர்த்த பின் அந்தக் குடிமகன் அரச பக்தி என்ற நிலையில் இருப்பான்.
அரசன் சாகாக்கலையாக நாடி சாஸ்திரம் என்ற பெயரில் செயல்பட்டு மந்திரத்தைச் சொன்னான் என்றால் இந்த ஆன்மா அவனுக்குள் போகும். குடிமகனுக்குச் சொன்ன நிலையெல்லாம் சொல்லும். உருவாக்கும் சக்தியை எல்லாம் சொல்லும்.
அந்த நாடி சாஸ்திரத்தை வாசித்த பின் இவன் இன்னொரு கூட்டுக்குள் போவான். ஆசைப் பட்டு விடுவான் என்று அந்த நாடியில் எழுதி இருக்கும்.
இந்த உணர்வின் தொடர்பு கொண்டவன் இதை எத்தனை காலம் வைத்திருக்கலாம் என்ற இந்த நிலை எல்லாம் அதிலே வரும். அடுத்து இன்னாரிடம் கொடுத்து விடு…! என்று போட்டிருக்கும். ஆனால் அந்த மாதிரிக் கொடுக்க இன்று யாரும் இல்லை.
எனக்கு… அது தெரியும் இது தெரியும்..! என்று குடும்பச் சொத்தாக வைத்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட இவனுடைய ஆசை நிலை கலக்கப்படும் பொழுது அந்த அரசனும் வீழ்ச்சி அடைகின்றான்.
கூடு விட்டுக் கூடு பாயும் தன்மை இவனுக்குள் எடுத்துக் கடும் பேயாக மாறுகின்றான். ஆக மொத்தம் இந்த நாடி நாஸ்திரம் பார்த்த குடும்பம் எல்லாம் பாருங்கள். தொலைந்து போய்விடும். சொல்வது அர்த்தம் ஆகிறதா…?
1.அந்த அரசனுடைய நிலையில் அவன் சொன்ன மாதிரி மந்திர ஒலிகளைச் செலுத்தப்படும் போது
2.அரசனுக்கு வந்த ஆசைகள் எல்லாம் நம் உடலுக்குள்ளும் வரும்.. தப்ப முடியாது…!
ஆகவே இது சாகாக்கலை.
ஆனால் அந்தத் துருவ நட்சத்ததிரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் எடுத்து வளர்த்துக் கொண்டால் அது வேகா நிலை. இந்த அண்டத்தில் உள்ள எதுவுமே நம்மை வேக வைக்க முடியாது.
அந்த நிலையைப் பெறச் செய்வதற்கு தான் துருவ நட்சத்திரத்தைப் பற்றியும் சப்தரிஷி மண்டலங்களைப் பற்றியும் அந்த மாமகரிஷிகளைப் பற்றியும் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம்.
எந்தக் காரணம் கொண்டு நாம் சாங்கிய சாஸ்திரங்களுக்குப் போக வேண்டியதே இல்லை. இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்…!
உயிரணுவாகத் தோன்றி பல உடல்கள் பெற்று மனித உடல் பெறுவதை முதல் காண்டமாக ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
மனிதனாகப் பிறந்த பின் அடுத்துப் பல உணர்வுகள் எடுத்து அறுபது வயது ஆகும் பொழுது அது இரண்டாவது காண்டம்.
1.இரண்டாவது காண்டத்திற்குள் நாம் எடுத்து நுகர்ந்து கொண்ட உணர்வுகள் மாற்றம்…!
2.ஆக இரண்டு காண்டங்கள் கவர்வதே மனிதனுக்கு மிகவும் சிரமம்.
3.இடைப்பட்ட நேரங்களில் (அறுபது வருடத்தில்) நுகர்ந்த உணர்வுகள் எவ்வாறு மாறுகிறது..? என்ற இந்த நிலையைக் காவியங்களில் உணர்த்துகின்றனர்.
இராமாயணத்தில் பத்தாவது நிலை அடையும் தகுதி பெற்ற தசரதன்
1.தனக்குள் எடுத்துக் கொண்ட ஆசை தன் மகனுக்குக் பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்று விரும்பினாலும்
2.அந்த நல்லவனுக்குச் (இராமனுக்கு) செயல்படுத்த முடியவில்லை என்று வேதனை உணர்வுகள் ஆன பின் அவன் மடிகின்றான்.
இதை எல்லாம் மனிதன் தெளிந்து… அறிந்துணர்ந்து எப்படி வாழ வேண்டும்…? என்பதற்காகத்தான் காவியப் படைப்புகளை இப்படிக் கொடுத்துள்ளார்கள்.
ஏனென்றால் விஞ்ஞான உலகில் மாற்றங்கள் ஏற்படும் அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து விடுபட நம் குருநாதர் காட்டிய வழியில் அருள் வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும்.
அகஸ்தியனும் அவன் மனைவியும் இரண்டறக் கலந்து மனதைக் குவித்து இரு மனமும் ஒரு மனமாகி இரு உயிரும் ஒன்றென இணைந்து (இராமலிங்கமாக) அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சினை வென்று உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.
நம் சூரியனே அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அகண்ட அண்டத்தில் என்றுமே அழியாது வாழும் சக்தி பெறுகின்றது
இயற்கையின் உண்மையின் இயக்கங்கள் எவ்வாறு உருவானது என்ற நிலையை உணர்ந்து… தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றி… ஒளியின் சரீமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இருக்கும் அதனின்று வெளிப்படும் உணர்வை நாம் நுகர்ந்து நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.
அதாவது மூன்றாவது காண்டமாக…
1.அந்த அருள் மகரிஷிகளின் அருளுணர்வைத் தனக்குள் சேர்த்து
2.உடலை விட்டு உயிரான்மா பிரிந்தால் அடுத்துப் பிறவியில்லா நிலையை அடைய வேண்டும் என்று
3.ஞானிகள் தெளிவாக மூன்று காண்டங்களையும் காண்பித்துள்ளார்கள்.