நாம் வாழும் இந்தப் பூமியே நிலை தடுமாறும் காலம் வருகிறது

நாம் வாழும் இந்தப் பூமியே நிலை தடுமாறும் காலம் வருகிறது

 

இந்த உலகமே துரித நிலைகள் கொண்டு மனிதன் மிருகமாக மாறும் நிலை வருகின்றது… இல்லையென்றால் பூமியே நிலை தடுமாறும் நிலை வருகின்றது.

நிலை தடுமாறி விட்டால் அதை உணரப் போவதில்லை…!

ஆனால் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.இந்தத் தியானத்தில் வலுப்பெற்றால் அதையும் நாம் உணர முடியும்
2.அதிலிருந்து விடுபடும் ஞானமும் நமக்கு கிடைக்கும்.

ஆகவே இப்பொழுதிருந்தே அருள் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் அணுகுண்டுகளோ மற்ற ஆயுதங்களோ வெடித்தாலும் நம்மைப் பாதிக்காதபடி காத்துக் கொள்ள முடியும்.

எத்தனையோ விஷமான குண்டுகளை பூமிக்கு அடியிலே பாதுகாப்பாக வைத்துள்ளார்கள்… ஆனால் பெரும் பகுதி அது வெடிக்கும்…!

அப்படி வெடிக்கும் போது அதனால் ஏற்படும் அணுக் கதிரியக்கங்கள் மேக மண்டலங்களாக மாறி சூரியனுடைய ஒளிக் கதிர்கள் நம் பூமியிலே படாது தடைப்படுத்திவிடும்.
1.அத்தகைய சூழ்நிலை உருவாகி விட்டால் பூமி பனிப்பாறைகளாக மாறிவிடும்
2.பூமி இப்போது இருக்கும் திசை மாறி தலை குப்புறக் கவிழ்ந்துவிடும்.
3.நாமெல்லாம் கடலுக்குள் தான் போக நேரும்.

ஆனால் கடலுக்குள் சென்றபின் இந்த மனித உடலை இழந்து கடல் வாழ் நிலைகளாக… மீன் இனங்களாக உயிர் நம்மை மாற்றிவிடும்.

அதே சமயத்தில் பூமி பனிப்பாறையாக ஆனபின் எடை கூடி சூரியனை விட்டு நகர்ந்து சென்று சிதைவுண்டு… மற்ற ஏதாவது சூரிய குடும்பங்களுக்குள் ஈர்க்கப்படலாம்.

பத்து இருபது வருடங்களுக்கு முன்பே இன்னொரு சூரியக் குடும்பத்தில் இருந்து சிதைவுண்ட (பிரளயத்தில் சிக்கிய) ஒரு பூமி… தப்பித்து நம் சூரிய குடும்பத்திற்குள் வந்து கொண்டிருக்கிறது… என்று நான் சொன்னேன்.

நம் பிரபஞ்சத்தில் பனிப்பாறை அதிகமாக உள்ள வியாழன் கோளிலே அது விழுந்து சேதம் இல்லாது அங்கே அடங்கியது. நம் பூமியைப் போல உள்ள அதே உருவம் கொண்டது அது.

நம் பூமியிலே அது விழுந்திருந்தால் நாமெல்லாம் இன்று இருந்திருக்க முடியாது. விஞ்ஞானிகள் இதைக் கண்டு சொல்வதற்கு முன்னாடியே “நம் பிரபஞ்சத்திற்குள் வந்து கொண்டிருக்கிறது” என்று சொன்னேன்.

அப்போது அதை யாரும் லட்சியப்படுத்தவில்லை…!

நம் பிரபஞ்சத்தின் ஈர்ப்பிற்குள் வந்து சிதைந்து வியாழன் கோளிலே மோதியது என்று விஞ்ஞானிகளும் பின்னாடி சொன்னார்கள். இது போன்று
1.உலக நிலைகள் மாறிக் கொண்டிருக்கக்கூடிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
2.இந்த மனித உடலில் எவ்வளவு காலம் நாம் வாழப் போகின்றோம்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

காரணம்… எத்தனையோ கோடி இன்னல்களில் இருந்து தப்பித்தான் இந்த மனித உடலைப் பெற்றிருக்கின்றோம். நம் உயிர் இந்த உடலை உருவாக்கி உள்ளது.

ஆகவே… குறுகிய காலம் வாழும் நாம் அருள் உணர்வுகளை இப்போது வளர்த்துக் கொண்டால் இன்னொரு உடலின் ஈர்ப்புக்குள் செல்லாதபடி… உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக… வேகா நிலை பெற்றுத் துருவ நட்சத்திரத்தில் ஈர்ப்பு வட்டத்தில் “ஏகாந்த நிலையாக வாழ முடியும்…”

பகைமை என்பதே இல்லாது மகிழ்ச்சி என்ற நிலையில் என்றுமே அந்த அருள் வழியில் நாம் வாழ முடியும். இப்பொழுதிருந்தே இதைத் தயார் செய்து கொண்டால் தான் அந்த நிலை பெற முடியும்.

இறந்த பின் என்னவோ…? அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்…! என்று எண்ணினால் எந்த உணர்வுடன் கடைசியில் இறக்கின்றோமோ இன்னொரு உடலுக்குள் சென்று அங்கேயும் தீயதைத் தான் உருவாக்க முடியும்… மீண்டும் நரக வேதனையைத் தான் பட முடியும்.

இது போன்ற நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

யாம் சொல்லிக் கொடுக்கும் இந்தத் தியானத்தின் மூலம் உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய ஒவ்வொரு அணுவிலும் துருவ நட்சத்திரத்தின் வீரிய சக்தியை வலு ஏற்றப் பழகிக் கொள்ள வேண்டும்.

1.உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்பதே என்னுடைய முழுமையான பிரார்த்தனை…!

நீங்களும் அதையே எண்ணி ஏங்கினால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எளிதில் பெறலாம். வளர்க்கும் முறைப்படி இப்படி வளர்த்து விட்டால் பிறவி இல்லா நிலை அடைவது உறுதி…!

வாழ்க்கையில் பெறக் கூடாதது “மனிதனின் ஆசை…!”

வாழ்க்கையில் பெறக் கூடாதது “மனிதனின் ஆசை…!”

 

ஒருவன் தீமை செய்கிறான் என்று பதிய வைத்துக் கொண்டால் “அவன் தீமை செய்தான்… ஆகவே அவனை விடுவேனா பார்…?” என்று எண்ணினால் என்ன ஆகும்…?

இந்தக் கணக்கின் பிரகாரம் நாம் சிந்தனை இழந்த நிலையாகச் செயல்படுவோம்.

1.எந்த எண்ணத்தால் “அவனை அழித்திட வேண்டும்…” என்ற எண்ணம் ஓங்கி வளர்கின்றதோ
2.அதன் மேல் நாம் கொள்ளும் பாசம் அவனுக்குள் விளைந்த தீயவினைகள் நமக்குள் விளையத் தொடங்குகின்றது.

அதே சமயத்தில் ஒரு நோயாளியை நாம் உற்றுப் பார்த்துப் பதிவாக்கி விட்டால் பாசத்தால் “இப்படி வேதனைப்படுகின்றாரே…” என்று எண்ணினால் அவர் நோயின் உணர்வுகள் நமக்குள் வருகிறது.

அப்படி நோயாளியை உற்றுப் பார்த்த அந்தக் கணக்கின் பிரகாரம்
1.அவரையே நாம் எண்ணிக் கொண்டிருந்தால் அந்த நோயின் தன்மை நமக்குள் வளர்ந்து விடுகிறது.
2.அடுத்து நாமும் வேதனைப்படுவோம்.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் நாம் கண்ணுற்றுப் பார்க்கப்படும்போது
1.அவர்களைப் படமெடுத்து
2.அவர்களில் உருவான உணர்வுகள் அவருடைய நிலைகளை
3.“எவ்வளவு நேரம் எண்ணுகின்றோமோ… எவ்வளவு நேரம் அறிகின்றோமோ…?”
4.அந்தக் கணக்குகள் கூடிவிடும்.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் பெறப்படாதது… பெறக் கூடாதது… “மனிதனின் ஆசை…!”

சிவன் ஆலயத்தில் “நந்தீஸ்வரா…” என்று இது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

நந்தீஸ்வரன் என்றால் நாம் ஒவ்வோரு நொடியிலும் சுவாசிப்பதை உயிரான ஈசன் உருவாக்கும். நம் உடலுக்குள் போனவுடன் அதே குணத்தை உருவாக்கும்.

1.நாம் சுவாசிக்கும் உணர்வின் கணக்குகள்… நம் உடலுக்குள் கூடும் பொழுது
2.அதில் எது அதிகமோ அடுத்த நிலை அடைவாய்…! என்று தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

ஆகவே அந்த நந்தீஸ்வரன் எதுவாக இருக்க வேண்டும்…?

நம்மைப் போன்று இந்தப் பூமியில் வாழ்ந்தவர்கள் தன் மனித வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்களை வென்று நஞ்சினை ஒளியாக மாற்றினார்கள்.

உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை ஒளியின் சரீரமாகப் பெற்று கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து அந்த உணர்வின் தன்மை கொண்டு அவர்கள் விண்ணிலே துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று நந்தி (அணுகி) நமக்குள் சென்று அவன் எப்படித் தீமைகளை நீக்கினானோ… அதைப் போல நாமும் நமக்குள் தீமைகளை நீக்க வேண்டும்.

அப்படி நீக்குவதற்கு நாம் எப்படிச் சுவாசிக்க வேண்டும்…?

காலை 4 மணிக்கு இதை எடுத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலந்து… எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்த சக்தியைப் பெற வேண்டும் என்று
1.நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு இப்படிச் சாப்பாடு கொடுக்க வேண்டும்.
2.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அவரின் துணை கொண்டு அதனை நாம் பெறுதல் வேண்டும்.

ஆகவே நாம் பெற வேண்டியது இதைத் தான்…!

பற்றும் பாசமும் நம்முடன் வருவதில்லை என்றால் நாம் பற்ற வேண்டியது எதை…?

பற்றும் பாசமும் நம்முடன் வருவதில்லை என்றால் நாம் பற்ற வேண்டியது எதை…?

 

ஒரு நண்பன் மேல் பாசம் கொண்டு அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றேன். இந்த உணர்வு எனக்குள் பதிவாகின்றது. அதே நினைவுடன் கண் கொண்டு நண்பனைப் பார்த்த பின் மகிழ்ச்சியுடன் அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்கின்றேன்.

நண்பன் என்று வளர்ந்தாலும் காலப் போக்கில் அவன் என்னை மதிக்கும் தன்மை குறைந்து விட்டால் என்ன ஆகிறது…?

நான் நண்பனை மதிக்கின்றேன். ஆனால் நண்பனோ என்னைச் சரியாக மதிக்கவில்லை… சீராக எனக்கு உதவி செய்யவில்லை…! என்று
1.இந்த எதிர்பார்ப்புகள் அதிகாமன பின் நண்பனை வெறுக்கும் உணர்வுகள் வளர்கின்றது.
2.அன்று அத்தனை உதவி செய்தேன்… இன்று எனக்கு இப்படிச் செய்கிறான்… என்று அகம் கொள்ளுகின்றது
3.தன்னைக் காத்துக் கொள்ளும் நிலைகள் கொண்டு அவனைக் குற்றவாளியாக்குகின்றது
4.முதலில் உதவி செய்த பண்புகளை மாற்றிவிட்டு அவனுக்குத் தீங்கு செய்யும் நிலையையே உருவாக்கி விடுகின்றோம்.

ஆக…. நமக்குள் இருக்கும் 108 அகமதிகளும் (108 விதமான குணங்கள்) அகங்கார நிலைகளும் “தன்னைத் தன்னைக் காத்திடும் நிலையாகவே” அது வருகின்றது.

விவசாயப் பண்ணைகளில் ஒரு செடியில் அதனுடன் மற்ற செடிகளின் கருக்களைச் சேர்த்த பின் அதற்குத்தக்க செடிகளில் மாற்றங்கள் அடைகின்றது.

இதைப் போன்று விஞ்ஞான அறிவு கொண்டு உயிரினங்களில் உள்ள அணு செல்களை எடுத்து மற்ற மற்ற உயிரினங்களில் இணைக்கும் போது உயிரினங்களிலே உருமாற்றங்களைச் செயல்படுத்தும் தன்மை மனிதனுக்கு வருகின்றது.

தாவர இனங்களை மாற்றுவது போல் உயிரினங்களை மாற்றுவது போல் தான் நாம் நுகரும் உணர்வுகளைச் சீர்படுத்தவில்லை என்றால்
1.அது நம் நல்ல குணங்களைத் தீமையின் உணர்வுகளாக மாற்றிவிடும்
2.உடலின் அமைப்பை மாற்றிவிடும்… குணங்களை மாற்றிவிடும்
3.பின் இருள் சூழும் நிலைகள் கொண்டு பரிணாம வளர்ச்சியில் வளர்ந்ததற்கு மாறாக தேய்பிறையான நிலைகளுக்கு அழைத்துச் சென்று விடும்.

மனிதர்களான நாம் ஆறாவது அறிவு கொண்டு இன்று பல பொருள்களை இணைத்துச் சுவை மிக்கதாக உருவாக்கி உணவாக உட்கொள்கிறோம்.

அது போல… நமது வாழ்க்கையில் கேட்டுணர்ந்த உணர்வுகளையும் அதனதன் இயக்கத்திற்கு விடாதபடி நாம் சமப்படுத்த வேண்டும்.

நல்லது கெட்டது என்று தெரிந்தாலும் நுகர்ந்த உணர்வுக்கொப்பத் தான் தனக்குள் சமப்படுத்தும் நிலை வருகின்றது. நாம் எதை எண்ணுகின்றோமோ அதன் வழியே வழி பார்க்கின்றது

1.நண்பன் என்ற நிலையில் எண்ணங்கள் பாசத்துடன் வரும் பொழுது காக்கும் நிலைகளை உருவாக்குகின்றோம்
2.ஆனால் சிறிதளவு பகைமை என்று உணர்வுகள் வந்து விட்டால் அவனைத் தாக்க வேண்டும் அவனை அழித்துவிட வேண்டும் என்ற உணர்வே வருகின்றது

ஆகவே பற்றும் பாசமும் இந்த உலகில் நமக்குள் பல நன்மைகளையும் செய்கின்றது தீமைகளையும் செய்கின்றது.

ஆனால் பற்றும் பாசமும் நம்முடன் வருவதில்லை. அப்படி என்றால் நாம் பற்ற வேண்டியது எதை…?

அருள் மகரிஷிகளின் உணர்வுகளைத் தான்…!

பிறிதொன்று நம்மை இயக்காதபடி அருள் ஒளி என்ற நிலைகளில்
1.அகண்ட அண்டத்திலும் நஞ்சின் தன்மை தன்னைத் தாக்கிடாது
2.அதை ஒளியாக மாற்றிய அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து
3.பகைமை உணர்வுகள் எப்பொழுது உருப் பெறுகின்றதோ அதை அடக்குதல் வேண்டும்;.

மிளகாய் காரத்தின் தன்மை கொண்டது தான். மற்ற பொருளுடன் இணைக்கப்படும் பொழுது அந்தக் காரத்தின் உணர்ச்சிகள் தணிகின்றது. உப்பு கைப்பாக இருக்கின்றது… அதை மற்றவைகளுடன் சமப்படுத்தும் போது சுவையின் தன்மை கூடி மகிழ்ச்சி ஊட்டுகின்றது.

எனவே எதனை நாம் நுகர்ந்தாலும் அருள் ஒளியின் உணர்வை நமக்குள் சேர்த்து
1.அந்த அகங்காரத்தை எடுத்து விடாதபடி
2.அருள் ஞானத்தை நமக்குள் வளர்த்திடல் வேண்டும்.

அப்படி வளர்த்தோம் என்றால் நம்மை இருள் சூழாத நிலையும் ஒளியின் உணர்வாக மாற்றிடும் ஆற்றலையும் நாம் பெறுகின்றோம்.

ஒரு நொடிக்குள் ஏற்படப் போகும் மாற்றம்…

ஒரு நொடிக்குள் ஏற்படப் போகும் மாற்றம்…

 

விஞ்ஞான உலகில் வாழும் அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு மெய் ஞான வாழ்க்கையை நாம் தொடர்தல் வேண்டும்.

விஞ்ஞான வாழ்க்கையில் வரும் கடுமையான விஷத்தன்மைகளால் சூரியனின் இயக்கச்சக்தி எத்தனையோ மாற்றங்களைச் சந்தித்து வருகிறது.

1.வெயிலின் அழுத்தம் கடுமையாக… இன்று எப்படிச் சுட்டெரிக்கும் வெயிலாக வருகின்றதோ
2.சூரியனின் இயக்கம் ஒரு நொடிக்குள் கரண்ட்டை அதிகமாக உற்பத்தி செய்யும் நிலையாக
3.பூமிக்குள் நிலநடுக்கம் ஏற்படுவது போல் மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகள் சூரியனை அணுகும் நிலையாகி விட்டது.

ஒரு எலக்ட்ரிக் வயருடன் இன்னொரு எலக்ட்ரிக் வயர் உராய்ந்தால் அதிகமான மின்சாரம் பாய்ந்து பல்புகள் ஃப்யூஸ் ஆவது போல
1.ஒரு நொடிக்குள் சூரியனுக்குள் தாக்குதல் அதிகமாகி அதிகமான காந்தப்புலன்களை அது உமிழ்த்தி
2.அந்த உணர்வுகள் மனித உயிருக்குள் உராயப்பட்டு அதனின் உணர்வின் தொடராக அதிகமான உணர்ச்சிகளைத் தூண்டி
3.நம் உடலில் உள்ள அணுக்களில் கடுமையான மாற்றங்கள் மாற்றப்பட்டு
4.மனிதனே மனிதனல்லாத நிலைகள் செயல்படுத்தும் உணர்ச்சிகளைத் தூண்டி மனிதனைத் தாக்கிடும் நிலையாக வரும்.

ஒரு நொடி மாற்றத்தின் நிகழ்வுகளிலிருந்து உங்களைக் காக்கவும் உங்கள் சார்புடையவரைக் காக்கவும் இந்த உலகைக் காக்கவும் அருள் ஒளியின் உணர்வை தினமும் காலை துருவ தியானத்தில் கணவனும் மனைவியும் எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் நமக்கு உறுதுணையாக இருக்க
2.”நாம் அனைவரும் ஒன்று…” என்ற நிலைகளில் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற
3.எங்கிருந்தாலும் துருவ தியானத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தியானித்துப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் அழுத்தத்தை நாம் அதிகமாகக் கூட்டி அதை அடர்த்தியாக உலகெங்கிலும் பரவச் செய்து உலக மக்களையும் காக்க முடியும்… அவர்களையும் நாம் நல்லவர்களாக்க முடியும்.

உலக மக்களின் தீமையான உணர்வுகள் நமக்குள் இருந்தாலும் பகைமையான உணர்வை வளர்க்கும் தன்மையிலிருந்து நம்மை மீட்டிக் கொள்ள முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நமக்கு அருளிய அருள் வழிப்படி இந்த வாழ்க்கையில் வரும் பகைமைகளை மாற்றி நஞ்சினை வென்று… நஞ்சினை வென்றிடும் அருள் உணர்வின் தன்மையை நமக்குள் உருவாக்கிடல் வேண்டும்.

நம் ஆறாவது அறிவைக் கார்த்திகேயா என்றாலும்… தீமைகள் புகாது சேனாதிபதியாக அருள் ஒளியின் உணர்வை எடுத்துத் தீமைகளைத் தடுத்து நிறுத்தி அதனுடைய செயலாக்கங்களை மாற்றிடல் வேண்டும்.

ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி மெய் உணர்வின் வழிப்படி நாம் வாழ்ந்தோமென்றால் அடுத்து நமக்குப் பிறவி இல்லை. அதை அடைவது தான் மனிதனுடைய கடைசி எல்லை.

1.உயிர் தோன்றி உணர்வின் தன்மை மனிதனாக உருவாக்கிய நிலைகளில்
2.உயிருடன் ஒன்றிய உணர்வின் அறிவாக ஒளியாக மாறுதல் நாம் வேண்டும்.

எத்தகைய அழுக்குப் பட்டாலும் உடலை நாம் தூய்மைப்படுத்துகின்றோம். இந்த உடலிலே ஒரு திரவகமே பட்டு அதனால் தசைகள் வெந்தாலும் நாம் மருந்தைப் போட்டு அதை ஆற்றத் தொடங்குகிறோம்.

இதைப் போன்று
1.கடும் வேதனையான உணர்வுகளை நுகர்ந்தாலும் “அருள் மகரிஷிகள் உணர்வுகளை வைத்து அதை நீக்கிடல் வேண்டும்…”
2.இதுவே வாழ்க்கை என்ற நிலையில் அருள் வாழ்க்கை வாழ்வோம்
3.அருள் ஆற்றலை நாம் பெறுவோம்… அருள் ஆசையுடன் வாழ்வோம்.

இதைப் பேராசை என்று கூடச் சொல்லலாம்…!

அருள் வாழ்க்கை வாழ வேண்டும் என்ற இந்த ஆசை என்றுமே நமக்குள் நிலையானதாக இருக்க வேண்டும். அதன் வழி வளர்ச்சி அடைந்தால் “உடல்” என்ற ஆசையிலிருந்து விடுபடுகின்றோம்.

ஆனால் உடலுக்காக வாழும் போது “எண்ணியபடி நடக்கவில்லை…!” என்று நம்முடைய ஆசைகள் தடைபடும் பொழுது இது பேராசையாக மாறுகின்றது.
1.முதலில் ஒரு பத்தாயிரம் ரூபாய் இருந்தால் போதும் என்று நினைப்போம்
2.அது வந்த பின் அடுத்து ஒரு லட்சம் கிடைத்தால் போதும் என்று நினைப்போம்.
3.முதலில் ஒரு சிறிய வீட்டைக் கட்டி இருப்போம்
4.அடுத்து இதைக் காட்டிலும் விசாலமான வீட்டைக் கட்டினால் நலமாக இருக்கும் என்று ஆசையைக் கூட்டிக் கொண்டே இருப்போம்.
5.சிறிது தடைப்பட்டாலோ வேதனைகள் கூடிவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

ஆகவே இருளை அகற்றிடும் அருள் சக்தியைப் பெறுவோம்… மெய் ஞானிகளுடன் ஒன்றி வாழ்வோம்… மெய் ஞான வாழ்க்கை வாழ்வோம்

உயிருடன் ஒன்றி நாம் வாழ்வோம்… என்றும் பேரின்பம் பெறுவோம்… பெரு வாழ்க்கை வாழ்வோம். பிறவி இல்லா நிலை அடைவோம்… அருள் ஒளியாக என்றுமே நிலை கொள்வோம்.

1.சூரியனே அழிந்தாலும் அகண்ட அண்டத்தில் என்றுமே நாம் என்றும் பதினாறு என்ற நிலைகளில் ஏகாந்தமாக வாழலாம்
2.வைகுண்ட ஏகாதசி வைகுண்டம் என்றால் அகண்ட அண்டத்திலும் ஏகாந்த வாழ்க்கை வாழக்கூடிய தன்மை.

பகைமை உணர்வுகள் நமக்குள் வளராது அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற வாழ்க்கையை வாழத் தொடங்கினால் இதுவே வைகுண்ட ஏகாதசி…! என்றும் பகைமைகள் புகாத நிலையாக வருகின்றது.

ஆனால் விஷத்தின் தன்மை அதிகரித்து விட்டால் புவியின் ஈர்ப்புக்குள் நம்மைச் சிக்க வைத்துவிடும். இதிலிருந்து நாம் மீண்டு அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்வோம்… ஏகாந்த நிலை பெறுவோம்.

பேரின்பம் பெறுவோம்… ஏகாந்த நிலை பெறுவோம்…! என்று பிரார்த்தித்து நிறைவு செய்கின்றேன் (ஞானகுரு).

சூரியனிலிருந்து மீண்டும் மீண்டும் விஷமான கதிர்வீச்சுகள் (CME) வெளி வரக் காரணம் என்ன…?

சூரியனிலிருந்து மீண்டும் மீண்டும் விஷமான கதிர்வீச்சுகள் (CME) வெளி வரக் காரணம் என்ன…?

 

இன்று விஞ்ஞான அறிவால் கண்டுணர்ந்த நிலைகள் கொண்டு மற்ற நட்சத்திரங்களில் ஏற்படும் கதிரியக்கப் பொறிகளை அடக்கி அணு சக்தியாக (ஆயுதங்களாக) மாற்றுகின்றார்கள்.

அணு ஆயுதங்களை வெடிக்கச் செய்யும் பொழுது அது உலோகத்திற்குள் இருக்கும் ஒரு நட்சத்திரத்தின் சக்தியை அதாவது
1.அந்த உலோகத்தில் இருக்கும் அணுக் கதிரியக்கங்களில் இந்த இரண்டும் மோதிய பின்
2.அந்தக் கடினமான உலோகமே ஆவியாக மாறி விடுகின்றது

இது போன்ற நிலைகள் விஞ்ஞானத்தால் கவர்ந்த விண்ணுலக ஆற்றல்கள் பரவிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் சூரியனுடைய காந்தப் புலனறிவு அதைக் கவருகின்றது… கவர்ந்தபின் அதை ஜீரணிக்கும் சக்தியும் இழக்கின்றது.

நட்சத்திரங்கள் பிற மண்டலங்கள் வெளிப்படுத்தும் சக்திகளைக் கவர்ந்து தூசிகளாக மாறி வரும் நிலையில்… சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் அது வரப்படும் பொழுது தனக்குள் உருவாக்கப்பட்ட பாதரசத்தின் சக்தி கொண்டு எதிர்த்துத் தாக்கி நெருப்பாகி அதில் உள்ள விஷத்தைப் பிரிக்கின்றது. இது இயற்கை.

ஆனாலும் மனிதன் விஞ்ஞான அறிவால் கண்டுணர்ந்த நிலைகள் அணுக்கதிரியக்கங்களாக உருவாக்கப்பட்டு அதைப் பரவச் செய்யப்படும் பொழுது பூமியைக் கடந்து வெளி செல்கிறது. அதைச் சூரியனுடைய காந்தசக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.

இருந்தாலும் சூரியனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் அது செல்லப்படும் பொழுது கதிரியக்கப் பொறிகள் சூரியனுக்குள் ஊடுருவி விடுகின்றது… சூரியன் அதை ஜீரணிக்கும் சக்தி இழந்து விடுகின்றது
1.மனிதனால் உருவாக்கப்பட்ட இத்தகைய நிலைகள் சூரியனுக்குள் ஊடுருவப்படும் போது
2.நடு மையம் அடைந்தபின் கொதிகலனாக மாறுகின்றது.

ஆனால் சூரியனோ ஐஸ் பாறைகளால் உருவாக்கப்பட்டது. அந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது பாதரசங்களாக உருவாகும் குளிர்ந்த சாதனம் போன்று உண்டு. பாதரசத்தை எடுத்துக் கொண்டால் விறு விறு விறு என்று இருக்கும்.

ஆக… கதிரியக்கப் பொறிகளால் பாதரசத்தை உருவாக்கும் சூரியனுடைய நிலைகள் மாறி கொதிகலன்கள் ஆக மாறுகிறது.
1.இன்று பத்திரிக்கைகளிலும் டி.வி.க்களிலும் பார்க்கலாம்…
2.சூரியனின் கரும்புள்ளிகளிலிருந்து கடுமையான கதிர்வீச்சுகள் வெளி வருகிறது என்று – CORONAL MASS EJECTION “CME”)

கடல் நீருக்குள் இருக்கும் ஹைட்ரஜனை வைத்து விஞ்ஞான அறிவால் உருவாக்கப்பட்ட அணுகுண்டுகளை அடக்கி வைத்துள்ளார்கள் விஞ்ஞானிகள்.

அதே போல சூரியனும் தனக்குள் அடக்கும் சக்தி இருந்தாலும் அந்தச் சக்தி இழக்கும் தன்மை வந்து விட்டது. செயற்கையில் உருவாக்கப்பட்டது பெருகப் பெருக நாளடைவில்
1.அந்தக் கதிரியக்கப் பொறிகள் சூரியனையே மாற்றி அமைக்கும் சக்தியாக வந்து விட்டது.
2.அதே உணர்வுகள் ஊடுருவிய பின் நம் உலகத் தன்மையும் மாறுகின்றது.
3.தாவர இனங்கள் மரம் செடி கொடிகளில் இந்த உணர்வுகள் படரப்படும் மரங்கள் கருகும் தன்மை வருகின்றது… காடுகள் கருகுவதையும் பார்க்கலாம் (FOREST FIRE).

அதே சமயத்தில் இந்த உணர்வின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது மேகங்களில் ஊடுருவி மேகங்கள் மறைந்துள்ள அணுக் கதிரியக்கங்களைத் தன்னுள் இணைத்த பின் மேகக் கூட்டத்தை கலைத்திடும் நிலை வருகின்றது. இன்னொரு பக்கம் அது குவிந்து கடுமையான மழை பெய்து ஊரையே அழிக்கிறது (CLOUD BURST).

இதைப் போன்று இந்தக் கதிரியக்கங்கள் மழை நீரின் வழி வரப்படும் பொழுது மற்ற உலோகங்களில் கலக்கப்பட்டுத் தாவரங்களிலும் சேர்கின்றது.

உணவுப் பயிர்கள் வழி இது மனிதனின் உணர்வுக்குள் கலக்கப்படும் பொழுது மனிதனுடைய உடலில் உள்ல அணுக்களிலும் இது கலக்கப்படுகின்றது.

இப்படி வானுலக ஆற்றல் கதிரியக்கப் பொறிகளாக விஞ்ஞான அறிவில் வந்தபின் அணு ஆயுதங்கள் வெடித்தால் எல்லாமே அதன் தொடர் வரிசையில் கருகிவிடும்.

அதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால்
1.அருள் ஞானிகளின் உணர்வை எடுத்து அகஸ்தியன் உணர்வின் தன்மை கொண்டு
2.கதிரியக்கப் பொறிகளை வெடிக்காத வண்ணம் “நீர் நிலைகள் உருவாக வேண்டும்…” என்ற உணர்வினை
3.உங்கள் எண்ணத்தால் பாய்ச்சினால் அந்தச் சாதனங்கள் செயல் இழக்கப்படுகின்றது.

காரணம்… அந்த நீரின் வன்மையை
1.அகஸ்தியன் அவன் அமர்ந்த இடங்களில் மேகங்களைக் கூட்டச் செய்து நீராக வடியச்செய்து ஜீவ நதியாக ஓடும் நிலைகள் பெற்றது.
2.ஜீவனுள்ளதாக அனைத்தையும் உருவாக்கும் நிலைகள் ஆஅதியிலே அகஸ்தியனால் உருவாக்கப்பட்டது.

அகஸ்தியன் பெற்ற நீர் சக்தி மிக மிக முக்கியமானது

தாவர இனச் சத்தை உணர்வின் ஒளியாகத் தனக்குள் வளர்க்கப்பட்டவன்… தாய் கருவிலே அத்தகைய சக்தியைப் பெற்றவன். அந்த அகஸ்தியன் அவன் வெளிப்படுத்திய பேருண்மைகளை… இயற்கையின் தன்மைகளை மாற்றி விட்டார்கள்.

மறைந்த நிலைகளைத் தான் குருநாதர் காட்டிய வழியில் இங்கே வெளிப்படுத்துகின்றோம்.

ஞானிகளின் உணர்வை ஏன் பற்ற வேண்டும்…? மற்றவைகளைப் பற்றற்றதாக ஏன் மாற்ற வேண்டும்…? என்பதை அறிந்து கொள்ளுங்கள்

ஞானிகளின் உணர்வை ஏன் பற்ற வேண்டும்…? மற்றவைகளைப் பற்றற்றதாக ஏன் மாற்ற வேண்டும்…? என்பதை அறிந்து கொள்ளுங்கள்

 

ஒரு தெருவில் வளர்ந்த நாய் அடுத்த தெருப் பக்கம் வரும்போது அந்தத் தெருவில் இருக்கக்கூடிய நாய்கள் இதை விடுவதில்லை. பார்த்தோமென்றால் சண்டை போட்டுக் கொண்டே இருக்கும்.

காடுகளிலே வாழும் புலிகளை எடுத்துக் கொண்டாலும் ஒரு பக்கம் உருவான புலிகள் அடுத்த பக்கம் வாழும் புலிகள் இருக்கும் இடத்திற்குச் சென்றால் அங்கிருக்கும் புலிகள் எல்லாம் சேர்ந்து அதைக் கொல்லப் பார்க்கும்.

கூட்டமாக வாழும் மான் இனங்களும் ஒரு பகுதியில் உள்ளது அனைத்தும் இணைந்து வாழ்ந்தாலும் இன்னொரு பகுதிக்கு அவைகள் சென்றால் அங்கிருக்கும் மான்கள் எல்லாம் சேர்ந்து இதை எதிர்த்துத் தாக்கும் நிலை வருகின்றது.

ஏனென்றால்…
1.இங்கே வந்து விட்டால் தனக்குக் கிடைக்கும் உணவு பங்கு போய்விடுமே…! என்று தான்
2.இந்தப் போர் நிலை வருகின்றது… இயற்கையிலிருந்தே இந்த நிலை தான் வருகிறது.

இதைப் போன்றே மனிதனும் மாறுபட்டு வந்தான் என்ற நிலைகள் வரும் பொழுது அன்று வாழ்ந்த காட்டுவாசிகளும் அப்படித்தான் வாழ்ந்தார்கள்.

அதற்குப் பின் நாட்டுக்கு நாடு ஆளும் அரசர்கள் என்று வந்தாலும் அடுத்த நாட்டுக்காரன் இங்கே வந்தால் நம்மை அடிமைப்படுத்தி விடுவான் என்றும் இப்படி ஒருவருக்கொருவர் போர் செய்யும் நிலையும் அதன் வழியில் மற்றவரை அடிமைப்படுத்தும் தன்மை வந்தது.

இது வளர்ந்து வளர்ந்து உலகமெங்கும் இந்த உணர்வுகள் பரவி…
1.தன் இனத்தைத் தவிர மற்றது வந்தாலே
2.எதிர்த்துத் தாக்கும் நிலையே உள்ளது.

ஒருவன் தவறு செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அந்தத் தவறு செய்பவன் வெளிப்படுத்தும் உணர்வை ஒரு நல்ல மனிதன் நுகர்ந்தான் என்றால் அந்த உணர்ச்சியின் தன்மை அவனுக்குள் வருகிறது.

நல்ல மனிதன் அதை நுகரும்பொழுது “அவன் தவறு செய்கிறான்…” என்ற எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றது. தவறு செய்கிறான் என்று சுட்டிக் காட்டிச் சொன்னால் தவறு செய்தவனுக்கு நம்மைப் பற்றி இவன் தவறாகச் சொல்கிறான் என்ற பழி உணர்ச்சி வருகின்றது.

1.தவறு செய்கிறான் என்று சொன்னால்
2.என்னைப் பற்றித் தவறாகப் பேசுகிறார் என்று அவனை எதிரியாகப் பார்க்கின்றான்.
3.அவனுக்கு எப்படியும் தொல்லை கொடுக்க வேண்டும் என்ற உணர்வு தான் வருகின்றது.

இப்படித்தான் நாம் வெளிப்படுத்தும் உணர்வுகளை மற்றவர்கள் நுகர்ந்தால் அந்த நுகரந்த உணர்வு அவர்களை எப்படிச் செயல்படுத்துகிறது என்பதைப் பார்க்கலாம்.

நண்பர்களாகப் பழகுகின்றோம்… அன்பாகப் பழகுகிறோம் என்றும் என்று வைத்துக் கொள்வோம். நம்மிடம் பழகிய அந்த நண்பன் இன்னொரு பக்கம் தவறு செய்கிறான்.. பெரிய குற்றங்களை அவன் செய்து விட்டான்.

சம்பந்தப்பட்டவர்கள் ஏன் இப்படிச் செய்கிறாய்…? என்று கேட்கின்றார்கள். நண்பன் என்ற பற்று இருக்கும் போது
1.பாசத்தால் அவன் தவறை மறந்து
2.தவறு செய்ததை மற்றவர் கேட்கப்படும் பொழுது அவர்களைத் தாக்க ஆரம்பிக்கின்றோம்.

இது தான் இன்று இருக்கக்கூடிய உணர்வுகளின் இயக்கங்கள்.

காரணம்… பற்று எதன் மீது இருக்கின்றதா அவன் உணர்வும் இங்கே வந்து விடுகின்றது. அந்த உணர்வின் வழிப்படியே இவருடைய செயலும் மாறுகின்றது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டால் தான் ஞானிகள் காட்டிய பேருண்மைகளை நாம் உணர முடியும்… பகைமை இல்லாது துன்பம் இல்லாது உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.

விண்ணின் ஆற்றலைப் பெற வேண்டும் என்றால் அது எது…? என்று அறிந்து கொள்ளுங்கள்

விண்ணின் ஆற்றலைப் பெற வேண்டும் என்றால் அது எது…? என்று அறிந்து கொள்ளுங்கள்

 

உதாரணமாக எனக்கு இப்படிச் செய்தான்… செய்தான்…! என்று நமக்கு இடைஞ்சல் செய்தவன் மீது சிந்தனை வரும் பொழுது அந்த உணர்வுகள் கோபமோ வேதனையோ ஆத்திரமோ உடலுக்குள் வந்துவிடுகின்றது. அந்த இடத்தை நாம் வலுவாக்கிக் கொள்கின்றோம். தீய வினைகளாக அது வளர்கிறது.

ஆனால் நம் உடலில் வந்த அந்தத் தீமைகளை நீக்க…
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.நம் சிந்தனையை அதற்குள் செலுத்தினோம் என்றால்
3.அதனின் உணர்வுகள் வளர்ச்சியாகி இந்த மனித உடலையே ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.
4.இந்த உடலிலிருந்து தான் நாம் ஒளியாக மாற்ற முடியும்.

ஆனால் மாற்றத் தவறினால் அந்த உடலில் விளைந்த தீமையான உணர்வின் தன்மை இங்கே இழுத்து விட்டால் மனித ரூபத்தை மாற்றிவிடும்… மனிதனல்லாத உருவாகத் தான் பெற நேரும்.

ஆனால் அந்த அருள் மகரிஷிகளின் அருளை நமக்குள் பெறும் பொழுது ஒளியாக மாற்ற முடியும்.
1.மனித உணர்வைச் சுவாசித்தால் உருவம் மாறும் இங்கே…!
2.அருள் உணர்வைச் சுவாசித்தால் ஒளியின் தன்மையாக மாறும் அங்கே…!

நம் உயிர் ஒளியானது. மனிதனான பின் அறிவால் அறிந்து கொள்கின்றோம். இருந்தாலும் ஒளியின் உணர்வாக விளைந்திடும் அத்தகைய மகரிஷியின் அருள் சக்தியைப் பெற நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக நான் கோபமாக இருக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். மற்றவரும் என் கோபத்திற்குச் சாதகமாக இருந்தால் எனக்கு நல்லது.

அதே சமயத்தில் தவறு செய்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். அருகில் இருக்கும் என் நண்பனும் அந்தத் தவறுக்காக என்னுடன் ஒத்துழைத்தால் எனக்கு நல்லது.

1.அதுவே தவறு என்று என்னைச் சுட்டிக்காட்ட வந்தால் எனக்கு எதிரி ஆகின்றது…!
2..ஆகவே நல்லது என்பதை நல்லதாக எண்ண முடியாது
3.கேட்டது என்பதைக் கெட்டதாகவும் எண்ண முடியாது
4.நமக்கு ஒத்து வந்தால் நல்லது என்று எண்ணுகின்றோம்
5.நமக்கு ஒத்து வரவில்லை என்றால் கெட்டது என்று எண்ணுகிறோம்.

மிளகாய் காரமாகத்தான் இருக்கின்றது. அந்தக் காரத்தை அளவுடன் குழம்பிலோ மற்ற பொருள்களிலோ இணைத்தால் அது நல்லதாகின்றது.
1.காரத்தை அதிகமாகப் போட்டால் கெட்டதாகிறது
2.காரத்தைக் குறைத்தால் “சப்” என்றாகி விடுகிறது.

ஆகவே நல்லது நல்லதும் அல்ல… கெட்டது கெட்டதும் அல்ல…!

இதைப் போன்ற உணமைகளை உணர்ந்து கொண்ட பின் நமக்குள் எந்த உணர்வின் தன்மையை எடுக்க வேண்டும்…?

நம்மை அழியா ஒளியின் சரீரம் பெறச் செய்யும் அந்த நிலையான உணர்வுகளை எடுத்தால் அதுவே நமக்கு நல்லது.

நம் உயிரின் தன்மை ஒளியாக நின்று எதை எல்லாம் தனக்குள் அறிவிக்கின்றதோ அந்த உயிருடன் ஒன்றிய ஒளியாக மாற்றுவது தான் நமக்கு நல்லது.

விண்ணின் ஆற்றல் என்று சொல்கிறோம். பொதுவாக விண்ணின் ஆற்றலும் மகரிஷிகள் ஆற்றலும் வேறு.

1.விண்ணின் ஆற்றல் என்பது மற்ற கோள்களின் மண்டலங்களின் சக்தி பெற்றது
2.அந்த விண்ணின் ஆற்றலால் தான் மனித உடல் வருகின்றது

அதாவது நட்சத்திரங்களை வைத்துத் தான் ஒரு பிரபஞ்சத்தில் கோள்கள் சூரியன் எல்லாமே வளர்ச்சிக்கு வருகின்றது. அந்த விண்ணின் ஆற்றலைப் பெற்றுத் தான் மனிதனாக வளர்ந்து வந்திருக்கின்றோம்.

ஆனால் விண்ணின் ஆற்றலால் மனிதனான பின் சிருஷ்டித்துக் கொண்டதுதான் மகரிஷிகள். மனித உடல் பெற்ற பின் சிருஷ்டிக்கும் சக்தி பெற்ற அந்த மகரிஷிகளின் ஆற்றலால் தான் மனிதன் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக உருவாக்க முடியும்.

விண்ணில் இருக்கக்கூடிய மகரிஷிகள் அவர்கள் உணர்வின் தன்மை கொண்டு நாம் எதை உணர்த்தினோமோ “விண்…” என்று வரப்படும்போது சொல் விண்… என்று வரும்.

இங்கே மண்ணுலகிலிருந்து சென்று இன்றும் விண்ணிலே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மகரிஷிகள். ஆகவே அந்த விண்ணுலகத்திற்குத் தான் நாம் செல்ல வேண்டும்.

1.சூரியப் பிரபஞ்சத்திற்குள் இருக்கும் இந்தப் பூமி இதுவும் ஒரு விண்ணுலகம் தான்
2.ஆனால் மண்ணுலகைக் கடந்து விண்ணுலகம் சென்ற அந்த மகரிஷிகள் அருள் வட்டத்தில் நாம் இணைய வேண்டும்.

அது தான் யாம் (ஞானகுரு) சொல்லும் விண்ணுலகம்…!

இந்த உடலுக்குப் பின் என்ன…? என்று நாம் போகும் மார்க்கங்களைத் தான் இனி பார்க்க வேண்டும்…

இந்த உடலுக்குப் பின் என்ன…? என்று நாம் போகும் மார்க்கங்களைத் தான் இனி பார்க்க வேண்டும்…!

 

நம் பூமி விண்வெளியிலிருந்து பல நிலைகளை எடுக்கும் பொழுது துருவப் பகுதியில் சில அலைகள் வரும் பொழுது குவித்து என்ன செய்யும்…? இன்னொரு பக்கம் போகும். பரவலாகக் கொண்டு வருவதற்கு இந்த மாதிரி ஆகும்.

தென் துருவப் பகுதியில் இதே மாதிரிச் சில அலைகள் வரும். அந்தப் பகுதிகளில் விமானம் சென்றால் கரைத்துவிடும். இதைப் போன்ற சில விபத்துகள் உண்டு.

ஆனால் பூமிக்குள் இருக்கும் இதையெல்லாம் நாம் ஆராய்ச்சிக்குக் கொண்டு செல்ல வேண்டியதில்லை.
1.இயற்கையின் நிலைகள் இப்படி இருக்கிறது என்று உணர்த்துவதற்காகவும்
2.சில உண்மைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் சொன்னது.

ஆனால் அது என்ன…? இது என்ன…? என்று இப்படி ஒவ்வொன்றையும் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தால் இந்தப் பூமியில்தான் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும்.

1.இதைக் கடந்து சென்ற அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நாம் பெற்றோம் என்றால்
2.நாம் அங்கே அந்தச் சப்தரிஷி மண்டலம் போகலாம்.

ஆனால் மனிதன் எதை வேண்டும் என்றாலும் அறிந்து கொள்ள முடியும்…! என்பதற்காகச் சொன்னோம்.

உதாரணமாக ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் இன்னென்ன மண் எல்லாம் சேர்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்கின்றோம். எல்லாம் சேர்த்த பிற்பாடு தவறு ஏற்படுகிறது. தவறைத் திருத்த வேண்டுமா இல்லையா…?

அது போல் தான் இந்த உடல் வாழ்க்கையில் புவியின் பிடிப்பிலிருந்து தப்பிப்பதற்கு என்ன வழி…? என்றால் அந்த மகரிஷிகள் அருள் வழி தான்,

ஆக அந்த மகரிஷிகளின் உணர்வுடன் நாம் ஒன்றிச் சென்றால் குறுகிய காலத்திற்குள் சப்தரிஷி மண்டலம் போகலாம்.
1.ஆனால் ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்தால்
2.இங்கே போய்… அங்கே போய்… முடிவில் அந்தச் சப்தரிஷி மண்டலம் அடைய முடியாது.

ஆனால் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகமாகும். ஆனால் அறிவின் தன்மை மழுங்கி விடும்.

நம் குருவின் (ஈஸ்வரபட்டர்) தன்மை எதுவாக இருக்கின்றது…? என்றறு உணர்தல் வேண்டும்
1.குரு இட்ட கட்டளையை மீறி…
2.நம் ஆசையின் நிலைகளைக் குருவாக்கி விட்டால்
3.இதன் நிலைகளைத் தான் பார்க்கச் செல்லும்.

இங்கே பார்க்க வேண்டியது தான்…! அதற்குள் காலம் கடந்துவிடும்…! அதற்குள் இந்த உடல் மடிந்துவிடும்… இந்த உடலுக்குள் சேர்த்த நிலைகள் நிலை இழந்துவிடும்…!

ஏனென்றால் இன்றைய விஞ்ஞான உலகில் நேரமில்லை. நஞ்சுகள் பரவிக் கொண்டிருக்கிறது.

இந்த உடல் நன்றாக இருக்கும் பொழுதே அருள் ஞான உணர்வுகளை விளைய வைத்துக் கொள்ளுங்கள்…! என்று திரும்பத் திரும்பச் சொல்கிறேன் (ஞானகுரு).

அதற்காக வேண்டித் தான்…
1.உங்கள் உணர்வுகளை எந்தெந்த அளவிற்கு அருள் ஞானிகள் காட்டிய அருள் வழிகளில் கொண்டு வர வேண்டுமோ
2.அதைச் செயல்படுத்தி உங்கள் நினைவின் ஆற்றலை அங்கே பெருக்கச் செய்கின்றோம்.

எந்த நேரத்தில்… எந்தச் சந்தர்ப்பத்தில் இனி எது வந்தாலும் “ஈஸ்வரா…!” என்று உயிரை எண்ணி அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று நினைவை அங்கே கொண்டு போக வேண்டும். அந்த உணர்வு நமக்குள் வலுப் பெற வேண்டும்.

அது இல்லையென்றால் வளர்க்க முடியாது. அதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி உங்களுக்குள் இந்த வலுவின் தன்மை கொண்டு வருவதற்குத்தான் தொடர்ந்து உபதேசிப்பது.

இன்னொரு பிறவியை மீண்டும் சொந்தமாக்க வேண்டாம்…!

இன்னொரு பிறவியை மீண்டும் சொந்தமாக்க வேண்டாம்…!

 

உங்களுக்கு எது சொந்தம்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்த மனித வாழ்க்கையில் எப்பொழுதுமே அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெருக்குங்கள். அதைச் சொந்தம் ஆக்குங்கள்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறருடைய குறைகளைச் சொந்தமாக்க வேண்டாம். அந்தச் சொந்தத்தைக் கொண்டாடவும் வேண்டாம்

ஏனென்றால் அதைக் கொண்டாடி விட்டால் பகைமையான உணர்வு கொண்டு எந்தக் கூட்டத்தில் நீங்கள் சேர்ந்தாலும் அதன் இனப்பெருக்கமாக மாறி விடுவீர்கள்.

நமக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தும் எதனை எடுக்கின்றோமோ உணர்வின் செல்கள் அனைத்தும் அதனதன் கூட்டமைப்பாக மாறும்.

உதாரணமாக மான் அதனுடைய இனக் கூட்டமைப்பாக இருந்தாலும் அதுவே மற்ற மானின் குணங்களுக்கு ஒப்ப இணைந்து கொண்டால் வகை வகையான மான்களாக வருகின்றது. அப்படி உருவான பின் அதனதன் கூட்டம் அதனுடன் சேர்ந்து கொள்கின்றது.

1.இதைப் போலத்தான் இந்த உடலுக்குள் எதனின் பெருக்கமாக எந்தெந்தக் குணத்தை அதிகமாக்கிக் கொண்டு வருகின்றோமோ
2.நம் உடலுக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தும் அந்த உணர்வின் தன்மையாக மாற்றி
3.அதனின் கூட்டமைப்பான நிலைகள் கொண்டு அந்தக் கூட்டங்கள் எங்கே வாழுகின்றதோ
4.அங்கே நம் உயிர் அழைத்துச் சென்றுவிடும்.

அதாவது நம் உயிரான்மா மற்றொரு கூட்டமைப்புக்குள் சென்று அதனின் உடலுக்குள் நுழைந்து ஆடாகவோ கோழியாகவோ மாடாகவோ புலியாகவோ பாம்பாகவோ மாற்றிவிடும்.

கேரளாவில் ஒடியன் மந்திரம் என்று உண்டு. அந்த மந்திரங்களை நூறு முறை ஆயிரம் முறை என்று சொல்வார்கள். ஆனால் வெறும் மந்திரம் என்று தான் அவர்களுக்குத் தெரியும்.

ஆனால் அந்தந்த உயிரினங்களில் பெருக்கக்கப்பட்ட உணர்வுகள் ஒலி அலைகளாக எடுக்கப்பட்டு இந்த உணர்வின் தன்மை எப்படி வருகின்றதோ இதைப் போல ஒரு மாட்டின் இறைச்சியின் உணர்வு கொண்டு அந்த உணர்வின் ஒலிகளைக் கூட்டப்படும் பொழுது அந்த உணர்வின் அலைகள் இங்கே ஆன்மாவில் பெருகும்…. அங்கே அந்த உடலுக்குள் செல்லும்.

மீண்டும் இதனை அகற்றும் உணர்வோடு இன்னொருவர் சொன்னார் என்றால் இந்தக் கூட்டை விட்டு மீண்டும் வெளியே வரும். மீண்டும் இன்னொரு கூட்டிற்குள் சென்று தனித் தன்மையாக அதனுள் சென்று அதுவாக இயக்கும். இதைப் பார்க்கலாம்…!

இதை எல்லாம் நான் (ஞானகுரு) தெரிந்தே சொல்கின்றேன். பாடப் புத்தகத்தில் பார்த்துப் படித்துச் சொல்லவில்லை.

குருநாதர் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தைகளைச் சொல்லிக் கொடுத்தார். அந்த உணர்வின் தன்மை பெருக்கப்படும் பொழுது அந்தந்த உடலுக்குள் செல்ல நேர்கின்றது.

மாட்டிற்குள்ளும் போகச் செய்தார் பாம்பிற்குள்ளும் போகச் செய்தார் யானைக்குள்ளும் போகச் செய்தார்.
1.இதை எல்லாம் எளிதில் சொல்லவில்லை. நேரடியாகக் கண்ட உண்மைகள் இது.
2.அப்படியே விட்டால் என்ன ஆகும்…? என் உயிரான்மா என்ன ஆகும்..!
3.ஏனென்றால் குருநாதர் என்னை எப்பொழுதுமே அவர் கைப் பிடித்து (கைவல்யம்) வைத்திருந்தார்.

இதைப் போல உணர்வுகளை இயக்கச் செய்து அதனின் உணர்வின் தன்மை கவர்ந்து கொண்டபின் உயிரான்மா உடலை விட்டுச் சென்ற பின்
1.எந்த நிலை பெறுகின்றது…? எதனின் உடலில் ஈர்க்கப்படுகின்றது…?
2.மனித உடலில் இதைப் பெருக்கிய பின் அந்த உடலுக்குள் போய் அதை எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையையும்
3.அதிலிருந்து மீண்டும் வெளி வர வேண்டும் என்றால் என்ன செய்வது…?
4.மனித உடலில் இதை எல்லாம் உருவாக்கப்படும் போது
5.இந்த உணர்வின் தன்மை கொண்டு அடுத்த பிறவி எப்படி வருகிறது…? என்றெல்லாம் நேரடியாகக் காட்டினார் குருநாதர்.

இந்த உடலுக்குப் பின் நாம் இனி பிறவி இல்லை என்ற நிலை அடைய வேண்டும். அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும். அதற்குத் தான் இதை எல்லாம் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

இந்தப் பிரபஞ்சத்தின் முடிவு

இந்தப் பிரபஞ்சத்தின் முடிவு

 

நமது சூரியக் குடும்பத்தில் உள்ள 27 நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம் என்று இப்படி நான்கு ஐந்து நட்சத்திரங்கள் தனக்கென்று ஒரு பிரபஞ்சமாக அமைத்து விட்டது.

சூரியன் தனக்குள் கோள்களை வளர்த்து… நட்சத்திரங்களையும் வளர்த்து… தனித் தன்மையாக முதலில் எப்படி உருவானதோ அதைப் போல
1.இதிலே வளர்ச்சியடைந்த நட்சத்திரங்கள் அனைத்தும்
2.நம் சூரியனைப் போல ஒரு பிரபஞ்சமாக உருவாக்கி நகர்ந்து கொண்டே இருக்கின்றது.

குடும்பத்தில் உள்ள பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டால் ஒவ்வொருவரும் கல்யாணம் செய்து தனக்கென்று ஒரு குடும்பமாகிப் பிரிந்து செல்கிறார்கள் அல்லவா…!

அப்பொழுது அங்கிருக்கும் தாத்தா பாட்டி அம்மா அப்பா எல்லாம் ஒரு காலத்தில் காணாமல் போய் விடுகின்றார்கள். கொள்ளுப் பேரன் என்றெல்லாம் வந்த பிற்பாடு யாரையாவது பார்க்க முடிகின்றதா…! அல்லது அப்படியே இருந்தாலும் வயதானவர்களை அவர்கள் கவனிப்பதில்லை.

இதே மாதிரித் தான் இந்த நட்சத்திரங்கள் தனக்கென்று பிரபஞ்சத்தை உருவாக்கி விட்டால் இந்தச் சூரியனைக் கவனிப்பதில்லை. அது தன் வளர்ச்சியைப் பெருக்க ஆரம்பித்துவிடும்.

இந்த இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் சூரியனாக மாறும் பொழுது இது உருவாகக் காரணமாக இருந்த சூரியனுக்கு உணவு கிடைக்கவில்லை என்றால் அது அழிகின்றது.

உதாரணமாக நம் உடல் அழிந்த பின் பார்த்தோம் என்றால்… அந்த உடலை உருவாக்கிய அணுக்கள் அந்த உடலையே உணவாக உட்கொண்டு வெளி வந்துவிடுகின்றது.

1.ஆனால் நல்ல உடலாக இருக்கும் போது முதலில் வெறும் அணுக்களாகத் தான் இருந்தது
2.பின் உயிரணுக்களாக மாறும் தன்மை வருகின்றது.
3.உயிரணுக்களாக ஆன பின் அதனதன் உணர்வுகளை தன் இரைகளைத் தேடி அதன் வளர்ச்சி பெறுகின்றது.

மனிதன் இறந்தால் அந்த உடலிலே உருவாகும் அந்த உயிரணுக்கள் மற்ற உடலிலே சேர்த்து அதை உணவாக எடுத்து வளர்க்கும் தன்மை வருகின்றது.

அதைப் போலத் தான்…
1.சூரியன் அழிந்தால் அந்த உணர்வுகள்
2.புதிதாக உருவாகும் பிரபஞ்சங்களுக்கு உணவாகப் போய்ச் சேரும்.

சூரியன் அழிந்த பின் அந்த உணர்வின் சக்தி ஒரு புயல் போன்று இருக்கும். அதில் ஏதாவது ஒரு கோளோ அல்லது மற்ற பாறையோ அதில் சிக்கினால் அதை மீண்டும் ஆவியாக மாற்றித் தனது நிலைகளுக்குள் பரப்பும்.

அப்பொழுது இந்தப் புதிய பிரபஞ்சங்கள் ஒவ்வொன்றும் தனது ஈர்ப்பு வட்டத்தில் அதைக் கவர்ந்து அந்தந்தப் பிரபஞ்சத்திற்கு அது உணவாக ஊட்டுகின்றது.

குருநாதர் அவர் கண்ட அகண்ட அண்டத்தின் உண்மைகளை எல்லாம்
1.உன்னால் நுகர முடியும்… பார்க்க முடியும்… என்று தான் எனக்குச் சொன்னார்.
2.அவர் சொன்ன வழியில் இதை எல்லாம் நான் (ஞானகுரு) பார்த்துத் தான் சொல்கிறேன்.
3.நீங்களும் பார்க்க முடியும்.

எண்ணத்தின் வலுக் கொண்டு இந்த உணர்வின் தன்மைகளை உங்களுக்குள் பதிவாக்கும் பொழுது இது வளர்ச்சி அடைய அடைய நமது பிரபஞ்சமும் நமது பிரபஞ்சத்திற்கு மற்ற பிரபஞ்சத்திலிருந்து எப்படி உணவு கிடைக்கிறது…? என்பதையும் நீங்கள் அறிய முடியும்.

ஆனால் கல்வி அறிவு இல்லாதவன் தான் இத்தனையும் பேசுகிறேன். இருந்தாலும் படித்தவர்கள் நீங்கள் இதைக் குறித்து வைத்துக் கொண்டு நிச்சயம் எடுக்க முடியும்.

எனக்குக் குறித்து வைக்கக் கூட நேரமில்லை. குருநாதர் சொன்னதை மனதில் பதிய வைத்து அதைத்தான் உங்களிடம் இப்பொழுது சொல்கிறேன்.

நீங்கள் சொன்னதை இரண்டாவது தரம் திருப்பிச் சொல்ல வேண்டும் என்றால்
1.வாழ்க்கையில் வருவது எனக்கு நினைவு இல்லை
2.குருநாதர் கொடுத்த அந்தப் பேரருள் கொண்டு எனக்குள் அது பதிவான பின்
3.நினைவு கொண்டு எண்ணும் போது அந்த உணர்வை அறிய முடிகின்றது.

இந்த உணர்வின் தன்மை இப்பொழுது வெளிப்படும் பொழுது செவி வழி நீங்கள் கேட்ட பின் நுகர்ந்தறிந்து இந்த உணர்வின் தன்மை உங்கள் உடலுக்குள் கருவாக உருவாக்கி விடுகின்றது. கூர்ந்து கவனிக்கும் உணர்வுகள் ஊழ்வினை என்ற ஞான வித்தாக உங்களுக்குள் உருவாகின்றது.

இதை எல்லாம் நீங்கள் வளர்த்துக் கொண்டால் நான் எதையெல்லாம் பார்த்தேனோ…
1.அதையெல்லாம் நீங்களும் காட்சியாகக் காண முடியும்
2.தீமைகளை அகற்றும் அந்த வல்லமையும் நீங்கள் பெற முடியும்.

இந்த அருள் உணர்வுகளை உங்களுக்குள் பெருக்கினால் பிறவியில்லா நிலையையும் நீங்கள் அடைய முடியும்.