பூமி உருவானது எப்படி…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

பூமி உருவானது எப்படி…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.எறும்பைக் காட்டிலும் சிறிய நுண்ணிய உயிரணு கொண்ட உயிராத்மா
2.அவ்வுயிரணுவுடன் மற்றோர் உயிராத்மாவின் சேர்க்கையில்
3.ஒன்றுடன் ஒன்று ஜீவ சக்தி பின்னிய நிலையில் இரண்டும் ஐக்கியப்பட்டு
4.தன் ஆவி நிலையுடன் பால்வெளி மண்டலத்தின் பல நிலைகள் கொண்ட… ஆவியான அமில சக்திகள்…
5.இவ்விரண்டு ஆத்மாவுடன் இதன் சேர்க்கையுடன் ஆவியாய் மோதுண்டு
6.இதன் ஈர்ப்பு நிலையுடன் இதன் வட்டத்திலேயே இவ்வாத்ம அமிலமுடன் “பல சக்தி நிலைகள் கூடி…”
7.இவ் ஆவியான அமிலமே உறைந்த நிலையில்… திடப்பொருளாய்ச் செயல்படுவதற்கு முன்
8.இவ்வாத்மாவின் ஈர்ப்பில் அமிலமுடன் பல சக்தி நிலைகள் கூடி
9.இவ்வாவியான அமிலமே உறைந்த நிலையில் திடப்பொருளாய்ச் செயல்படுவதற்கு முன்
10.இவ்வாத்மாவின் ஈர்ப்பில் அமிலமுடன் கலந்து வந்த உயிர்த் துடிப்பு கொண்ட
11.மற்ற உயிரணுக்கள் இவ் ஈர்ப்பு நிலையில் சிக்கி… இதன் வட்டத்திற்குள் வந்த பிறகு
12.இதன் ஆவி அமிலமும் இச் சுழற்சியில் காற்றும் நீரும் படும் நிலையில்
13.திடப் பொருளாய் கெட்டிப்பட்ட உயிர்த் துடிப்பு கொண்ட திடமாய் ஆகின்றது.

இதன் வளர்ச்சியே அமிலத்தின் ஈர்ப்பாக அதிகப்படுகின்றது. அமிலத்தை ஈர்க்கும் சக்தி இவ்விரண்டு ஆத்மாவின் உயிர்ச் சக்தியுடன் உட்சென்ற உயிரணுக்களின் பெருக்கமும் இச்சிறிய கோளமாய் உருப்பெற்ற இதன் ஈர்ப்பின் வட்டத்தில் இதற்கு உணவாய் இவ்வுயிரணுக்களின் சக்திதான் இது வளரும் நிலைக்கு உதவுகின்றது.

உயிரணுக்கள் இவ்வட்டத்திற்குள் வந்தவுடன்… அதன் சக்தியை உணவாய் ஈர்த்து அதன் சக்தியை உண்டு…
1.அதில் வெளிப்பட்ட கல்லிலிருந்தும் மண்ணிலிருந்தும்
2.அதன் உஷ்ண அலையின் வெக்கையில் இஜ் ஜீவராசிகள் தோன்றி சில தாவரங்களை உணவாக உண்டு
3.இவை கழித்த மலத்திலிருந்து பல உயிரணுக்கள் ஜீவன் கொண்ட நிலையில் தவளையாகவும்
4.மற்றும் சில நிலை கொண்ட ஜீவராசிகளும் தோன்றின.

ஒன்று உண்டு… அது வெளிப்படுத்தும் கழிவிலிருந்து பல உயிரணுக்கள் அதன் சுவாச நிலைக்கொப்ப பல ஆயிரம் ஆண்டுகள் ஒத்த நிலையின் வளர்ச்சியிலேயே வளர்ச்சி கொண்டே வந்தது.

இப்படி வளர்ந்தது தான் நம் ஜீவ பூமி.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply