அதிகாலையில் துருவ தியானம் எப்படிச் செய்ய வேண்டும்…? “மேக்னடார் சக்தி…”

souls-cleaning

அதிகாலையில் துருவ தியானம் எப்படிச் செய்ய வேண்டும்…? “மேக்னடார் சக்தி…”

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும்.

நாங்கள் பார்க்கும் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும். இந்த மாதிரி எண்ணிச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பன்னிரண்டு மாதமும் இப்படிச் சுத்தப்படுத்துவதற்குண்டான வழியைத்தான் நம் ஞானிகள் சொல்லி இருக்கின்றார்கள். நாம் யாராவது இப்படி நினைக்கின்றமா…?

உதாரணமாக நாம் ஒரு நோயாளியைப் பார்க்கின்றோம் என்றால்
1.உடனே “ஈஸ்வரா…..!” என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் அவர் உடல் முழுவதும் படர வேண்டும்
4.அவர் உடல் சீக்கிரம் நலமாக வேண்டும் என்று அந்த இடத்தில்
5.இந்த மாதிரி எண்ணி உஷாராக இருக்க வேண்டும்

அதே மாதிரி என் பையன்.. “சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்… கேட்க மாட்டேன் என்கிறான்…! என்றும் என்னிடம் காசை வாங்கிச் சென்றவன்.. “திரும்பக் கொடுக்க மாட்டேன் என்கிறான்… கொடுக்க மாட்டேன் என்கிறான்…!” என்றும் இப்படி எண்ண வேண்டியதில்லை.

“நஷ்டம்…நஷ்டம்…” என்றால் நஷ்டமே தான் வந்து கொண்டு இருக்கும். “கஷ்டம்…கஷ்டம்..!” என்றால் வீட்டில் கஷ்டம் வந்து கொண்டு தான் இருக்கும்.

நம்மிடம் பணத்தை வாங்கிச் சென்றவனுக்கு நல்ல வருமானம் வர வேண்டும். திருப்பிக் கொடுக்கும் அந்தச் சக்தி அவனுக்கு வர வேண்டும் என்று அதிகாலையில் இதே மாதிரி எண்ணி உறுதிப்படுத்திப் பாருங்கள்.

அவனும் நன்றாக இருப்பான். நாமும் நன்றாக இருப்போம்.

எங்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும். எங்கள் வாடிக்கையாளர்கள் நலமாக இருக்க வேண்டும். வேலை செய்பவர்கள் நன்றாக இருக்க வேண்டும்.

என் பையன் நன்றாக கல்வியில் ஞானம் பெற வேண்டும். அவன் கருத்து அறிந்து செயல்படும் திறனும் எல்லோரும் போற்றும் நன்மை பெற வேண்டும். அவனுக்கு அந்த அருள் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

நம்மை அறியாத சந்தர்ப்பம் தான் தீயவைகள் நடக்கக் காரணமாகின்றது. தீமை என்ற உணர்வு நமக்குள் வராதபடி நிவர்த்தி செய்வதற்கு எத்தனையோ வகையான வழிகளை ஞானிகள் கொடுத்திருக்கின்றார்கள்.

நல்லது செய்ய இப்படிக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இது தான் “துருவ தியானம்” என்பது.

அதிகாலையில் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை நாம் கவரும் பொழுது
1.நம் ஆன்மாவில் இருக்கும் நம்மை அறியாது புகுந்த தீமையான உணர்வுகள்
2.அவைகள் வலு பெறாதபடி அனாதையாகி விடுகின்றது.
3.அனாதையான உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து மேலே கொண்டு சென்று கடலுக்கடியில் அமிழ்த்தி விடுகின்றது.
4.நம் ஆன்மா சுத்தமாகின்றது… ஜீவான்மா சுத்தமாகின்றது உயிரான்மா ஒளியாக மாறுகின்றது.
துருவ தியானம் என்றால் என்னமோ ஏதோ என்ற நிலையில் நாம் உட்கார்ந்து “இப்படித் தான் செய்ய வேண்டும்… அப்படித்தான் செய்ய வேண்டும்…! என்று நினைக்க வேண்டியதில்லை.

படுக்கையிலிருந்து எழுந்தவுடனே அப்படியே “டக்…” என்று உட்காருங்கள்.
1.”ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரை நினையுங்கள்.
2.அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் சக்தியால்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் பெற வேண்டும் என்று விண்ணிலே நினைவைச் செலுத்துங்கள்.

அப்படியே ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் ஏங்கி இருங்கள். மூன்றாவது நிமிடம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
1.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
3.எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா பெற வேண்டும் என்று எண்ணுங்கள்
4.உடலில் உள்ள அத்தனை அணுக்களுக்கும் இந்த நினைவு “மேக்னடார்… ஆகின்றது…!”

அதாவது எந்த ஸ்டேசனை நாம் திருப்பி வைக்கின்றமோ அதைத்தான் ரேடியோ டி.வி கவரும். அதைப் போல எங்கள் உடலில் உள்ள அனைத்திற்கும் அந்தச் சக்தியைக் கவரும் நினைவாற்றலைக் கொண்டு வருகின்றோம். (மேக்னடார் என்றால் கவரும் சக்தி)

அப்போது எல்லாம் அணுக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கவரும் பொழுது தீமை செய்யும் அணுக்களுக்குச் சாப்பாடு இல்லாமல் தடைப்படுத்தப்படுகின்றது. அவைகள் சோர்வடைந்து விடுகின்றது. தீமை செய்யும் அணுக்கள் ஜீவன் பெறுவதில்லை.

எப்படித்தான் இருந்தாலும்…..
1.இந்த உடல் நம்முடன் வருகின்றதா…?
சேர்த்த செல்வங்கள் நம்முடன் வருகின்றதா…? இல்லையே…!

இன்றைக்கு நாம் எந்த உணர்வைச் சேர்த்துக் கொண்டோமோ அந்த உணர்வுக்கொப்பத்தான் நம் உயிர் அடுத்த உடலை உருவாக்குகின்றது.

ஆகவே ஒவ்வொரு நிலையிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று எண்ணத்திலிருந்தால் அதனின் கணக்கு நமக்குள் ஜாஸ்தியாகக் கூடும்.

1.”நீ வாப்பா…!” என்று
2.அது நம்மை நேரே துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கே கூட்டிக் கொண்டு போகும்
3.உடலில் சேர்த்த நஞ்சையெல்லாம் கரைத்துவிடும்
4.பேரானந்தப் பெரு நிலை நாம் அடைவோம்…!

நூலாம்படைப் பூச்சி ஆயிரக்கணக்கில் தன் இனத்தைப் பெருக்குவது போல் ஒளியான அணுக்களை நமக்குள் எப்படி உருவாக்குவது…?

Spiritual lights - Third eye

நூலாம்படைப் பூச்சி ஆயிரக்கணக்கில் தன் இனத்தைப் பெருக்குவது போல் ஒளியான அணுக்களை நமக்குள் எப்படி உருவாக்குவது…? 

நூலாம்படைப் பூச்சி தன் உமிழ் நீரால் நூலம்படையை உருவாக்குகின்றது. அதற்குள் ஒரு ஈ சிக்கிவிட்டால் தன் ஊசி போன்ற மூக்கால் ஈ உடலுக்குள் தன் விஷத்தைப் பாய்ச்சி உடலை அமிலமாக மாற்றி அதை உணவாக உட்கொண்டு விடுகின்றது.
1.ஈ முழுமையாக இருக்கும்.
2.ஆனால் அதனுடைய தசைகள் இருக்காது.

அதே போல் வலைக்குள் சிக்கும் இன்னொரு ஈயை இந்த நூலாம்படைப் பூச்சி என்ன செய்கிறது? தனக்குள் விளைந்த விஷத்தின் தன்மையை அந்த ஈயின் உடலுக்குள் பாய்ச்சி விடுகின்றது.

பாய்ச்சிய பின் ஈயின் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் நூலாம்படைப் பூச்சியை உருவாக்கும் உணர்வின் அணுக்களாக மாறுகின்றது.
1.அப்படி மாறிய பின் அந்த ஈயின் ரூபங்கள் மறைந்து விடுகின்றது.
2.அந்த அணுக்கள் அனைத்தும் நூலாம்படைப் பூச்சிகளாக மாறி விடுகின்றது

அதாவது ஈயின் உடலில் இந்த நூலாம்படைப் பூச்சிகள் உருவாகி “பல ஆயிரம் நூலாம்படைப் பூச்சிகளாக…” வெளி வருகின்றது. (இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்)

ஒரு குளவி என்ன செய்கிறது? ஒரு புழுவின் மீது தன் விஷத்தைப் பாய்ச்சி கூட்டுக்குள் அடைத்துப் புழுவைத் தன் இனமாகக் குளவியாக மாற்றுகின்றது.

நூலாம்படைப் பூச்சி ஈக்குள் தன் விஷத்தைப் பாய்ச்சப்படும் போது அதிலிலுள்ள அணுக்கள் அனைத்தையும் ஜீவ அணுக்களாக மாற்றும் போது
1.நூலாம்படைப் பூச்சியின் உருவாகக் கொச கொச என்று
2.பல அணுக்களின் தன்மை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.

நூலம்படைப் பூச்சி தன் இனத்தை உருவாக்குவதற்கும் குளவி தன் இனத்தை உருவாக்குவதற்கும் உண்டான வித்தியாசத்தைக் காட்டுகின்றார் குருநாதர்.

நீங்கள் இதையெல்லாம் ஆர அமர்ந்து நிதானமாகக் கேட்கின்றீர்கள். ஆனால் நான் (ஞானகுரு) இதைத் தெரிந்து கொள்வதற்கு அந்தப் பூச்சியகள் கருவாகி உருவாகும் நிலையை அதை அறியும் வரையில் எனக்குச் சாப்பாடு கிடையாது.

ஒரு நிமிடம் வேறு பக்கம் என் நினைவு திரும்பினால் குருநாதர் என்ன செய்வார்…?
1.உன்னை எதற்காகக் கூப்பிட்டுக் கொண்டு வந்தேன்…?
2.நீ எங்கே பார்க்கின்றாய்…? என்பார்.

நூலாம்படைப் பூச்சி ஈக்குள் கூர்மையாகப் பாய்ச்சிய உணர்வின் தன்மையால் அது எப்படி உருமாறுகின்றது…? அதன் உணர்ச்சியின் தன்மை துடிப்பின் நிலைகள் எவ்வாறு வருகின்றது…?

உதாரணமாக விஞ்ஞான அறிவு கொண்டு ரேடியோ அலைகளையும் டி.வி. அலைகளையும் ஒலி/ஒளிபரப்புகின்றார்கள். வீட்டில் இருக்கும் ரேடியோ டி.வி இவைகளைத் திருப்பி வைக்கும் பொழுது
1.ஒலி/ஒளிபரப்பாகி வரும் அந்த அலைகளைக் கவர்ந்து
2.அந்த அலைகளுக்குத் தக்க உருவமாகவும் ஒலியாகவும் நமக்குக் காட்டுகின்றது.

அதைப்போல நூலாம்படைப் பூச்சி பாய்ச்சிய உணர்வலைகள் அந்த உயிரின் (ஈயின்) துடிப்பால் ஈர்க்கப்பட்டு அந்த உணர்வுகள் நூலாம்படையின் ரூபமாக மாற்றுகின்றது என்ற நிலையைத் தெளிவாக்குகின்றார் குருநாதர்.

இவை அனைத்தும் எந்த உயிரானாலும் எதன் நிலைகள் கொண்டாலும் ஆண் பெண் என்ற நிலைகளில் தான் இணைகின்றது.

ஒரு ஆண் நூலாம்படைப் பூச்சி தனக்குள் உருவாகும் உணர்வின் தன்மையை ஈயைத் தாக்கப்படும் போது ஒரு பெண் நூலாம்படைப் பூச்சியும் அதே போல அங்கே ஈக்குள் உமிழ் நீரைச் சுரக்கச் செய்கின்றது.

அப்படிச் சுரந்த பின்தான் ஈயின் உடலில் அமிலங்கள் மாறி அதன் ரூபமாக மாற்றுகின்றது. ஆண் பூச்சி மட்டும் அது தாக்குவதில்லை.

ஆனால் குளவியில் இருக்கக்கூடிய நிலையோ
1.உயிரின் இயக்கம் கொண்டு குளவி ஆண் என்ற நிலைகள் அடைந்த பின்
2,குளவிடமிருந்து சுரக்கும் உணர்வுகள் புழுவின் உடலுக்குள் சேர்க்கப்படும் போது
3.அது பெண் என்ற நிலைகள் அடைகின்றது.

அப்பொழுது புழு உடலுக்குள் உருவாகும் கருவின் தன்மையை குளவியின் ரூபமாக எவ்வாறு உருமாற்றுகின்றது..? என்று காட்டுகின்றார்.

நூலாம்படைப் பூச்சி ஆண் பெண் என்ற நிலைகள் அமைகின்றது. ஆனால் குளவி ஆண் பெண் என்ற நிலைகளில் வருவதில்லை. தன் விஷத்தின் தன்மையைப் புழு உடலில் பாய்ச்சப்படும் போது இந்த உடலிலுள்ள அணுக்களின் தன்மை பெண்பாலாக மாறிவிடுகின்றது.

இவ்வாறு ஒவ்வொரு இயற்கையின் செயல்கள் எப்படி உரு பெறுகின்றது…! உடல்கள் எப்படி மாறுகிறது…? என்ற நிலையைத் தெளிவாக்குகின்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

குளவி ஒரு புழுவைக் கொட்டி ஒரு புழுவாக மாற்றும் நிலையையும் நூலாம்படைப் பூச்சி ஒரு ஈயை பல நூற்றுக்கணக்கான நூலாம்படைப் பூச்சிகளாக மாற்றும் நிலைகளையும் குருநாதர் தெளிவாக்கினார்.

இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன். ஏனென்றால்
1.நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்குள்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பாய்ச்சி
3.நம் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தையும்
4.ஒளியான அணுக்களாக உருவாக்கி அழியா ஒளிச் சரீரம் நாம் பெற வேண்டும்.

தியானத்தில் நாம் பெற வேண்டிய “வலு…!”

Concentration - Meditate

தியானத்தில் நாம் பெற வேண்டிய “வலு…!”

நான் தியானம் செய்தேன். என் தொழில் இப்படிப் போய்விட்டது…! என் குடும்பத்தில் இப்படி நடந்து விட்டது…! என்றால் என்ன அர்த்தம்…?

இந்த உணர்வைக் கூட்டி மீண்டும் கீழே இழுத்து விடுகின்றீர்கள் என்று அர்த்தம்.

“வேதனை…” என்ற உணர்வைப் பெருக்கி எல்லாவற்றையும் செய்துவிட்டு “தியானம் செய்தால்… என்னத்திற்கு ஆகும்…?” என்று எண்ணினால் அது நமக்கல்ல.

தியானத்தைக் கூட்டி எல்லாம் நன்றாக இருக்க வேண்டும். அந்த உணர்வை நமக்குள் பெருக்க வேண்டும்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் சங்கடங்களையோ சிரமங்களையோ சலிப்பையோ வெறுப்பையோ பகைமையான உணர்வுகளை உங்களுக்குள் புகாதபடி தடுத்துப் பழக வேண்டும்.

கணவன் மனைவிக்குள் அந்தப் பேரானந்த நிலையை தான் என்றும் உருவாக வேண்டும். சந்தர்ப்பத்தில் கோபம் வரும். அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

1.ஏதோ ஒன்றல்லவா… “நம்மை இயக்குகின்றது..!” என்று உடனே சுதாரித்து
2.அதிலிருந்து விடுபட வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வைக் கவர்ந்து
1.ஆத்ம சுத்தி செய்யும் உணர்வு வந்து விட்டது என்றால்
2.“நான் செய்வது தான் ரைட்…!” என்ற எண்ணம் வராது.

பால் ருசியாகத் தான் இருக்கும். அதிலே பாதாமைப் போட்டால் இன்னும் ருசியாகத் தான் இருக்கும்.

ஆனால் ஒரு துளி காரம் பட்டால் என்ன செய்யும்…? அது விடாப்பிடியாகக் காரத்தின் உணர்ச்சிகளைத் தான் ஊட்டும். அதைப் போன்று தான்
1.நம் நல்ல மனதில் வெறுப்பின் உணர்வை ஊட்டினால்
2.அது விடாப்பிடியாக அந்த உணர்ச்சியைத் தான் ஊட்டும்.
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரோளி பெற வேண்டும் அதைத் தணித்து சுவையைக் கொண்டு வர வேண்டும்.

நாம் கடைசியில் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் நமது உயிர் உருவாக்குகின்றது.

தனுசு கோடி என்ற நிலையில் வாழ்க்கையில் வரும் தீமைகளை எல்லாம் மாற்றி அருள் ஒளியை நமக்குள் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.

தனுசு கோடி என்றால் எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக்குவது. பிறவியில்லா நிலை அடைவது.

உணர்வின் எண்ணங்களைப் பற்றி இராமயாணத்தில் தெளிவாகக் கொடுத்திருக்கின்றனர். அதை நாம் கடைப்பிடித்து இந்த வாழ்க்கையில் உடலுக்கு பின் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.

என்ன தான் நாம் ஒழுங்குபடுத்திச் செல்வத்தைத் தேடினாலும் நிற்கின்றதா…? இந்த உடலே நமக்குச் சொந்தமல்ல. இந்த உடலால் தேடிய செல்வம் எப்படி நிற்கும்..?

ஆகவே அந்தப் பேரருளை நாம் கூட்ட வேண்டும். எந்த அளவுக்குக் கூட்டுகின்றமோ இது அழியாச் செல்வமாக இருக்கும்.
1.என்றுமே ஏகாந்த நிலை பெறுவோம்.
2.அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்.
3.ஒவ்வொரு மகரிஷிகளும் இந்த நிலையில் தான் விண் சென்றார்கள்.

“தீமையை நீக்கும்” கூட்டமைப்பு தான் இப்பொழுது தேவை…!

combined-meditaion

“தீமையை நீக்கும்” கூட்டமைப்பு தான் இப்பொழுது தேவை…! 

நாம் எல்லோருமே எல்லாம் தெரிந்தவர்கள் அல்ல. நானும் (ஞானகுரு) எல்லாம் அறிந்தவன் இல்லை. நான் அறிந்து இதைப் பேசவும் இல்லை. நான் கல்வி கற்கவில்லை.

“கல்வி கற்காதவனுக்கு…!” இத்தகைய ஞானத்தின் உணர்வை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பாய்ச்சினார்.

அவர் பாய்ச்சிய நிலைகள் கொண்டு அந்த விண்ணின் ஆற்றலை நுகர முடிகின்றது. அதை உங்களுக்குள் தெளிவாகச் சொல்லவும் முடிகின்றது.

உங்கள் மனதினைப் பண்படுத்தி ஞானிகளின் அருள் ஆற்றல்மிக்க சக்தியை உங்களுக்குள் பதியச் செய்யவும் பதிவானதை நீங்கள் நினைவுபடுத்தி அருள் சக்திகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் இந்தப் பிரபஞ்சம் முதுமையடையும் நிலைக்கு வந்துவிட்டது.

இந்த நிலையிலிருந்து சிறிது பேரையாவது மீட்டுக் கொள்ளலாம்… மீட்டிட வேண்டும் என்ற நோக்குடன் தான் எல்லா மகரிஷிகளின் செயல்களும் செயலாகிக் கொண்டுள்ளது.

ஆகவே நமது குருநாதர் இந்த உலக மக்களை மீட்பதற்கு அந்த நல்லதை எண்ணி ஏங்கினார். மெய் ஞானியின் அருள் ஆற்றலை உனக்குள் வளர்த்து எல்லோருக்கும் பெறச் செய் என்றார்.

1.இங்கே வாழ்ந்து கொண்டிருக்கும்
2.வாழ எண்ணும் நல்லதை எண்ணும் அந்த நல்ல உள்ளங்களில்
3.அந்த மெய் உணர்வுகள் வளரவேண்டும் என்று நீ ஏங்கி ஒலிபரப்புச் செய் என்றார்.

அப்படி ஒலி பரப்பு செய்யும் போது அவர்களும் தமக்குள் துன்பத்தை நீக்கிட வேண்டும் என்று எண்ணி ஏங்கினால்
1.அவர்கள் விண்ணை நோக்கி எண்ணும் பொழுது
2.அந்த உணர்வின் ஆற்றலால் விண்ணின் ஆற்றல் அவர்களுக்குள் பெருகி
3.அவர்களை அறியாது வந்த துன்பங்களை நீக்கி
4.அந்த ஞானிகள் அருள் வட்டத்தில் செல்ல இது உதவியாக இருக்கும் என்று குருநாதர் சொன்னார்.

ஒவ்வொரு உள்ளத்திலும் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை விளையச் செய்ய வேண்டும் என்றார் குருநாதர்.

சிறு துளி பெருவெள்ளம் போன்று ஒரு நெல்லை விதைத்தால் அது விளைந்து நெல்கள் பலவாகி அந்தப் பல நெல்களையும் விளைவித்து எடுத்துக் கொண்டால் மலைபோல் குவிகின்றது.

அப்படி மலைபோல் குவிந்தால் அவரவர்கள் பசிக்கு அளவுக்குத் தககவாறு உணவாக எடுத்து உட்கொள்ள முடியும்.

நாம் எல்லோரும் இந்த உணர்வின் தன்மை பெறவேண்டும் என்றால் அந்தக் கூட்டமைப்பின் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

1.அதற்குத்தான் இந்தக் கூட்டமைப்பை உருவாக்கி (மகரிஷிகளுடன் பேசுங்கள்)
2.ஒவ்வொரு உள்ளத்திலும் அறிந்தோ அறியாமலோ சேர்ந்த
3.தீமையை விளைய வைக்கும் இந்த உணர்வினை மாற்றச் செயல்பட்டு வருகின்றோம்.

“தியானம்… தவம்… விண் செல்லும் மார்க்கம்…!”

Spiritual Meditation “தியானம்… தவம்… விண் செல்லும் மார்க்கம்…!”

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள் தியானம் என்றால் என்ன என்பதையும் தவத்தையும் விண் செல்லும் அந்தப் பாதையையும் எனக்கு (ஞானகுரு) அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.

அதை மீண்டும் மீண்டும் உங்களுக்குள் பதிவு செய்து ஞாபகப்படுத்துகின்றோம். மெய் ஞானிகள் சென்ற வழியில் நாம் விண் செல்ல வேண்டும்.

வாழ்க்கையில் எத்தகைய நிலைகளில் நம்மைப் பிறர் வேதனைப்படச் செய்தாலும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.அது எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி
4.இவ்வாறு உடலுக்குள் பல முறை செலுத்தல் வேண்டும்.

ஞானியின் உணர்வை நமக்குள் சேர்க்கப்படும் போது வேதனைப்படச் செய்த உணர்வுகளை அடக்கி அந்த விஷத்தை அடக்குகின்றது.

மெய் ஞானியின் உணர்வை நமக்குள் ஏங்கிப் பெறுவது தியானம்.

1.நாம் பார்ப்பவர்கள் எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.மலரைப் போல மணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும்
3.என்னைப் பார்க்கின்றவர்களுக்கு எல்லாம் அந்த நிலைகள் பெற வேண்டும்.

மெய் ஞானிகளின் உணர்வை எல்லோரும் பெறவேண்டும் என்று எண்ணினால் அது தவம்.

நம்மைப் பார்க்கின்றவர்களுக்கெல்லாம் அந்த நல்ல நிலைகள் ஏற்பட வேண்டும் என்ற இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால் நமது ஆன்மாவில் இது பெருகுகின்றது.

நமக்குள் அது பெருகும் பொழுது எந்த விஷத் தன்மையும் நமக்குள் வளராது.
1.மகரிஷிகளின் உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறும் போது
2.அதே உணர்வின் இயக்கமாக நம் உடலும் நினைவும்
3.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் தொடர்பு கொள்கின்றது.

சப்தரிஷி மண்டலத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட பின் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிராத்மாக்களை உந்தித் தள்ளி அங்கே இணைக்க வேண்டும்.

மூதாதையர்கள் குலதெய்வங்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தால் அவர்கள் முதலில் மகரிஷியாகின்றார்கள்.

அவர்களைப் பின் தொடர்ந்து நாமும் விண் செல்ல முடியும். நாமும் மகரிஷியாக முடியும்.

மகரிஷிகள் உணர்த்திய “தீமையை அடக்கியாளச் செய்யும் தியானம்”

Life meditation

மகரிஷிகள் உணர்த்திய “தீமையை அடக்கியாளச் செய்யும் தியானம்”

நாம் தங்க நகை செய்யும்போது அதிலே செம்பும் வெள்ளியும் இணைத்துத் தான் செய்கின்றோம். ஆனால் அடுத்த நகை செய்யும் போது திரவகத்தை ஊற்றிச் செம்பையும் பித்தளையையும் நீக்கித் தங்கத்தைப் பரிசுத்தமாக்குகின்றோம்.

இதைப் போன்று தான் நம் வாழ்க்கையில் நல்லதைச் செயல்படுத்த சந்தர்ப்பத்தால் பயம் கோபம் ஆத்திரம் அவசரம் சஞ்சலம் சோர்வு எரிச்சல் போன்ற எத்தனையோ உணர்வுகளைக் கவர்ந்துதான் நம் காரியத்தை முடிக்கின்றோம்.

நல்லதைச் செயல்படுத்தினாலும் அதனுடன் இரண்டறக் கலந்து வந்த பயம் கோபம் சஞ்சலம் போன்ற உணர்வுகளைச் சுத்தப்படுத்தாமல் விட்டு விட்டால்
1.அடுத்த காரியங்களை நாம் செய்யும் பொழுது
2.இந்த எரிச்சலும் கோபமும் வேதனையும் சேர்ந்தே வந்து விடுகின்றது.
3.சீராக நடக்காது அதுவே தடைப்படுத்திவிடுகின்றது.

இதை நிறுத்த வேண்டும் அல்லவா…!

ஆனால் மகரிஷிகள் தங்கள் வாழ்க்கையிலே தீமையை அகற்றிப் பழகியவர்கள். விண்ணின் ஆற்றலை எடுத்து ஒளியாக மாற்றும் திறன் கொண்டவர்கள்.

மகரிஷிகளின் உணர்வுகள் மிகவும் வலு பெற்ற சக்திகள் கொண்டது. குருநாதர் காட்டிய அருள் வழிகளில் அந்த உணர்வை நாம் நுகர்வதற்குண்டான தகுதியை ஏற்படுத்துவதே தியானம்.

எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்தின் தன்மை நாம் கொள்ளும் போது அதுவே சிறந்த தியானமாகின்றது.

அந்த உணர்வின் சக்திகளை நம் உடலுக்குள் செலுத்தப்படும் போது உடலை உருவாக்கிய நல்ல அணுக்களுக்கு உரமாகின்றது.

அப்பொழுது சந்தர்ப்பத்தால் நமக்குள் பிறரின் தீமையான உணர்வுகள் வந்தாலும் மகரிஷிகள் உணர்வை இதனுடன் இணைக்கப்படும் போது
1.அது (தீமையானது) அணுவாக வளர்வதற்கு முன்
2.அந்த அணுவையே நமக்குச் சாதகமான நிலையிலே மாற்றிவிடுகின்றோம்.

அதீமையை அடக்கும் உணர்வாக அணுவாக விளையச் செய்திடும் போது ஒவ்வொறு சந்தர்ப்பத்திலும் நமக்கு வலு கூடிக் கொண்டே வருகின்றது.

குற்றமாகச் சொல்லி விட்டான்… தவறாகப் பேசுகின்றான்…! அறிவு கெட்டதனமாக நடக்கின்றான்…! என்று இரண்டு தரம் நான்கு தரம் சொல்லி விட்டீர்கள் என்றால் அந்த உணர்வு வளர்ந்து விட்டது என்றால் நல்லது செய்த நிலைகள் வலு குறைந்து விடுகின்றது.

ஆனால் அடுத்த கணமே
1. மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.அந்த உணர்வுடன் இதை இணைத்து விட்டால்
3.அந்த அணு நாம் செல்லும் மெய் வழியில் இணைந்து விடும்.
4.அப்போது இது நமக்குள் நம்மைக் காக்கும் அந்த உணர்வின் அணுவாக விளையத் தொடங்கி விடுகின்றது.

காலையில் தியானம் செய்யும் முறை – பிரம்ம முகூர்த்தம்

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டம்

காலையில் தியானம் செய்யும் முறை – “பிரம்ம முகூர்த்தம்”

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிவரும் அரும்பெரும் சக்திகளைப் பெறுவதற்காக அதிகாலையில் 4 மணியிலிருந்து 6 மணிக்குள் துருவ தியானம் செய்ய வேண்டும்.

எழுந்து வசதியாக உட்கார்ந்து செய்யவும் செய்யலாம். படுக்கையில் விழிப்பு வந்தபின்
1.நேரடியாகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின்பால் தொடர்பு கொண்டு
2.புருவ மத்தியில் உயிரான ஈசனிடம் எண்ணத்தைச் செலுத்தி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெரொளி உடல் முழுவதற்கும் படரவேண்டும் என்று உள் முகமாகச் செலுத்த வேண்டும்.

உள் முகமாகச் செலுத்தச் செலுத்த நம் ஆன்மாவில் இருக்கும் தீமைகளை நீக்கிக் கொண்டு இருக்கும்.

காலையில் நீரை ஊற்றி நம் உடல் அழுக்கைப் போக்கக் குளிக்கின்றோமோ அதைப் போல ஆன்மாவில் பட்ட தீமைகளை நீக்க அந்த மகரிஷியின் அருள் சக்திகளை நம் உடலுக்குள் இப்படிச் செலுத்த வேண்டும்.
1.உடலுக்குள் வலு பெறச் செய்து தான்
2.ஆன்மாவில் உள்ள தீமைகளை நீக்க வேண்டும்.

வேதனையை உருவாக்கும் அணுக்கள் வலு பெற்றால் அதனின் உணர்வு நம் ஆன்மாவாகி நாம் சுவாசிக்கும் போது வேதனையின் எண்ணங்கள் தான் வரும்.

ஆகையினால் இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்தே ஆகவேண்டும். உங்களைக் காக்க இந்த எண்ணம் உங்களுக்கு உதவும்.

நான் சொல்வது கொஞ்சம் சிக்கலாகவும் தெரியும். கடினமாகவும் தெரியும். பதிய வைத்து விட்டால் சந்தர்ப்பம் வரும் போது நினைவிற்கு வரும்.

பள்ளிக்கூடத்தில் போய் நாம் பாடத்தைப் படித்தவுடனே எல்லாவற்றையும் தெரிந்து கொள்வது இல்லை. அதைத் திரும்பத் திரும்பப் படிக்கும் போது தான் அந்த நினைவாற்றல் நமக்குள் பெருகுகின்றது.

ஒரு தடவை பதியச் செய்து விட்டாலும்
1.அதைப் பெற வேண்டும் என்று எண்ணம் இருந்தால் தான்
2.திரும்பத் திரும்ப நாம் மனதில் பதிவு செய்வோம்.
3.அதை வளர்ப்போம்.

ஏனென்றால் இரண்டு சூடத்தையும் தேங்காயையும் பழத்தை விநாயகருக்குக் கொண்டு போய் வைத்து இரண்டு அருகம்புல்லையும் கொடுத்துவிட்டால் “அவன் பார்த்துக் கொள்வான்” என்கிற நினைவில் நாம் இருந்தவர்கள். அந்தப் பழக்கத்தில் இருந்ததால்
1.ஒரு நிமிடத்தில் எண்ணி
2.எங்கேயோ இருக்கக்கூடிய துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெறுகின்றோம் என்று
3.இப்படிச் சொல்கிற பொழுது இது கொஞ்சம் கடினமாக இருக்கின்றது.
4.ஆனால் அதைப் பெறக்கூடிய தகுதியை உங்களுக்கு கொடுக்கின்றோம்.

நல்ல வித்தைக் கொடுத்து அதை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோம். அதை நீங்கள் வளர்த்துக் கொள்ளும் நிலையில் தான் இருக்கின்றது.

இதற்கு முன்னாடி நாம் இதையெல்லாம் செய்யாமல் இருந்தாலும் கூட இப்பொழுது அந்த அருள் ஞானிகளின் ஞான வித்தைக் கொடுக்கின்றோம்.

அதை முறைப்படி பதிவு செய்து கொண்டீர்கள் என்றால் சரியாக நான்கு நான்கரை மணிக்கெல்லாம் அவசியம் விழிப்பு வரும்.

அந்த நேரத்தில் வேறு ஒன்றும் செய்ய வேண்டாம். எழுந்து உட்கார்வதற்கு உங்களுக்குச் சோம்பேறித்தனமாக இருந்தாலும்
1.உங்கள் எண்ணத்தை நேராகத் துருவ மகரிஷிக்கு அனுப்புங்கள்.
2.அந்த துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
3.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணுங்கள்.

காலையில் இந்தத் துருவ நட்சத்திரத்தின் நிலைகள் நமக்குள் ஒளிக் கதிராக வருகின்றது. அதை எண்ணி இந்த உணர்வை உங்கள் உடலுக்குள் வலு சேருங்கள்.

உங்கள் கண்ணின் நினைவை விண்ணிற்குச் செலுத்தித் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் நினைவை உயிருடன் ஒன்றி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்துங்கள்.

பத்து நிமிடத்திலிருந்து அரை மணி நேரமாவது செய்ய வேண்டும்.உள்ளுக்குள் செலுத்தச் செலுத்த ஆன்மா தூய்மை அடையும். உடல் நலம் பெறுவீர்கள்.

எந்த அளவுக்கு நன்னீரை விட்டுக் குளிக்கின்றீர்களோ இதைப் போல அருள் ஞானியின் உணர்வை உங்கள் உடலுக்குள் சேர்த்து உங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு செய்தால் பிரம்ம முகூர்த்தம் என்று சொல்வார்கள். அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சிருஷ்டியாக்கும் நேரம் என்று பொருள்.

யாம் சொல்லும் தியானத்திற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை…!

blessed meditation

யாம் சொல்லும் தியானத்திற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை…!

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் எல்லா மகரிஷிகளின் உணர்வுகளையும் உங்களுக்குள் பதிவு செய்கிறோம்.

சிலரை நீங்கள் பார்க்கலாம். அறியாத நிலைகளில் சில உணர்வுகள் அவர்களை இயக்கும். குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் உணர்வு கொண்டு அவர்களை அறியாது இயக்கக்கூடிய அந்த நிலைகளிலிருந்து மாற்றுதல் வேண்டும்.

யாரையும் நாம் குற்றவாளியாக ஆக்க வேண்டியதில்லை.

தியானத்தில் உங்களுக்குப் பவர் கொடுக்கிறோம். எல்லோருக்கும் செய்வதைக் காட்டிலும் தியானம் செய்யும் உங்களுக்கு அந்த பவரைக் கொடுக்கிறோம்.

பொது வாழ்க்கையின் நிலையில் உங்களை ஒரு கட்டுப்பாட்டிற்குள் நான் கொண்டு வரவில்லை. நான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்றோ இப்படித்தான் நடக்க வேண்டும் என்றோ நான் யாரையும் சொல்ல வரவில்லை.

தர்மத்தையும் நியாயத்தையும் ஞானிகளின் உணர்வுகளையும் அது எப்படி இயக்குகிறது என்ற நிலைகளையும் உங்களுக்குள் பதியச் செய்கிறேன். அதை நீங்கள் வளர்த்துக் காட்ட வேண்டும்.

“இது தான் சட்டம்…!” என்ற நிலைகள் வந்தால் அந்தக் கட்டுப்பாடு தளர்ந்து விடும். சில நாள் கூட நிற்காது. கட்டுப்பாடு எல்லாம் ஒரு திறை மறைவு தான்.

எதன் நிலைகள் எந்த நிலைகள் எதன் வழி வந்தாலும் ஒரு சட்டத்தை இயற்றி இப்படித்தான் வர வேண்டும் என்று கொண்டு வந்தால் அந்தக் கட்டுக் கோப்பு நிலைத்திருக்காது.

அருள் ஞானிகள் சென்ற பாதையை உபதேச வாயிலாகப் பதிவாக்குகின்றோம். அதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து அதன் வழிகளில் நீங்கள் இயங்கத் தொடங்கினால் அது இயங்கும். அப்படி இருந்தால் தான் எதையும் மாற்ற முடியும்.

ஞானிகளின் உண்மையின் நிலைகளைப் பதிவு செய்யப்படும்போது இதை நீங்கள் வளர்த்துக் கொண்டால் அது உங்களை உயர்த்திக் காட்டும். அருள் வழியில் மனதார ஏற்றுக் கொண்டால் போதும். அதனால்தான்
1.உங்கள் உயிர் எதை இயக்குகின்றது?
2.அது எப்படி உடலை உருவாக்குகிறது?
3.நாம் எண்ணிய எண்ணங்கள் எப்படி இயங்குகின்றது?
4.இதிலிருந்து நாம் எப்படி எதை உருவாக்க வேண்டும்? என்று தெளிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

தீமையை வென்ற அருள் ஞானியின் உணர்வை நமக்குள் உருவாக்க வேண்டும். அதை எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். இது முக்கியம்.

உங்களை யாம் எந்த்க் கட்டுப்பாட்டிற்குள்ள்ளும் வ்ரக் சொல்லவில்லை…, ஞானிகளின் கண்ட உண்மைகளை உணர்த்துகின்றோம் – அதை நீங்கள் வளர்த்துக் கொண்டால் போதும்…! – ஞானகுரு

காற்றை “வலுக் கட்டாயமாக…” இழுத்துப் பிராணாயாமம் செய்பவர்களின் நிலைகள்

Image

Pranayam

காற்றை “வலுக் கட்டாயமாக…” இழுத்துப் பிராணாயாமம் செய்பவர்களின் நிலைகள்

இந்தப் பிராணாயாமம் என்று சுவாசத்தை மூக்கின் வழி கொண்டு  வலுக் கட்டாயமாகச் சுவாசிப்பார்கள்.

நம் உடலுக்குள் வேகமாக சுவாசிக்கும் நிலையில் அந்த உறுப்புகள் துருத்தி போன்று விரிந்தும் கூடியும் வரும்.  அப்போது அதை அடக்கி இழுக்க வேண்டும் என்ற உணர்வினை  இந்த சுவாசப்பை இழுக்கப்படும் போது மூக்கு வழி கொண்டு சுவாசித்து உள் செலுத்துகின்றது.

இப்போது அதிகமாக இழுக்கும் போது அசுத்த உணர்வுகளைத் தான் நம் உறுப்புகளிலே செலுத்துகின்றது.

நம் சிரசில் இருக்கும் பெரு மூளையில் உருவாகும் ஒரு சளி நாம் சுவாசிக்கும் உணர்வுக்குள் வரும் அசுத்தத்தை நீக்கி அதை வடிகட்டி உள்ளே அனுப்புகின்றது.

கட்டாயப்படுத்ததி எடுக்கும் உள் சுவாசம் அதிகரிக்கும் போது வடிகட்டும் திறன் இழந்து விட்டால் நமது சுவாச நுரையீரல்களில் இவை அனைத்தும் அசுத்த நிலைகளாகின்றது.

அதே சமயம் விஷத்தன்மை கொண்ட வலுவும் பெறுகின்றது. இப்படிப் பல முறைகள் செய்து விட்டால் அந்த மனிதனுக்கு வீரிய சக்தியும் இருக்கும்.

பிராணாயாமம் செய்தவருக்குள் வாயுவின் தன்மை அதிகரித்து உடலில் உள்ள வாய்வு நரம்புகளில் ஊடுருவி “இங்கே குடு..குடு.., என்று ஓடுகின்றது.., அங்கே குடு..குடு… என்று ஓடுகின்றது…” என்றெல்லாம் சொல்வார்கள்.

இதுவெல்லாம் நாம் எண்ணியதை அதற்குத்தக்கவாறு நம் உயிர் உருவாக்குகின்றது.., உயிர்உருவாக்கத் தவறுவதில்லை.

அது தான் கீதையிலே, “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்”
என்று இந்தக் கண்ணின் நிலைகளைக் கீதாச்சாரத்தில் காட்டியிருப்பார்கள்.

ஒருவருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினால் நம் கண் அவரைப் பார்த்த பின் அரவணைக்கச் செய்கின்றது.

அதே சமயத்தில் இவரை எப்படியும் தொலைத்துக் கட்ட வேண்டும் என்று எண்ணி விட்டால் அதன் வழி கொண்டு இந்தக் கண் அவனைக் கண்டபின் உணர்ச்சியின் வேகங்கள் கூடி அவனை எவ்வழியில் மடக்குவது என்று உணர்வுகளை ஊட்டுகின்றது.

நாம் எண்ணியதை வழி காட்டுவது கண்ணே. கண்கள் வழி கூடி உற்றுப் பார்க்கப்படும் போது அந்த உணர்வைச் சுவாசித்து நம் உயிரிலே உராயப்பட்டு உணர்வின் தன்மை தனக்குள் இயக்குகின்றது.

கண்ணன் சங்க நாதம் ஊதிய பின் தான்… “குருக்ஷேத்திரப்போர்…!” என்று காவியங்களில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

1.எண்ணத்தின் தன்மை கொண்டு நாம் எண்ணும் போது
2.இந்த உணர்வின் தன்மை சுவாசித்து உயிரிலே படும் போது தான்
3.அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.
4.இவையெல்லாம் வேதங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எதுவும் குறை இல்லை.

கண்களின் துணை கொண்டு புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி விண்ணிலிருந்து வரும் மகரிஷிகளின் அருள் சக்திகளை எண்ணி ஏங்கித் தியானித்து

1.உயிர் வழியாக நமக்குள் சேர்ப்பதே
2.”ஞானிகள் சொன்ன பிராணாயாமம்…!”

 

கர்ப்பமான தாய் கடைப்பிடிக்க வேண்டிய தியானம்

Bal Krishna

“கர்ப்பமான தாய் கடைப்பிடிக்க வேண்டிய தியானம்”

கருவுற்ற தாய் சண்டை போடுபவர்களையோ நோயாளிகளையோ ஆஸ்துமா நோய் உள்ளவர்களையோ பார்த்தால் அடுத்த நிமிடம் அவர்களைப் பார்க்காத நிலைகள் கொண்டு கீழ்க்கண்டவாறு ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

1.“ஓம் ஈஸ்வரா”… என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.என் கருவில் இருக்கக் கூடிய குழந்தையும் அதைப் பெற வேண்டும் என்று வலு ஊட்டிக் கொள்ள வேண்டும்.

அடுத்து நாம் யாரைப் பார்த்தோமோ
1.அவர் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும்
2.அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று மாற்றிட வேண்டும்.
3.இவ்வாறு கர்ப்ப காலங்களில் தொடர்ந்து இருக்க வேண்டும்.

கருவுற்றிருக்கிறோம் என்று தெரிந்தபின் ஒன்றிலிருந்து 90 நாள் TVயோ சண்டை போடுபவர்களையோ உற்றுப் பார்க்கக் கூடாது.
1.ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் ஆஸ்துமா நோயாளிகளைப் பார்த்தால் அதை நுகர்ந்தால் கருவிலே வளரும் குழந்தைக்கு அந்த ஆஸ்துமா நோய் வந்துவிடும்.
2.அதே போல் கண் ஊனமுற்றவர்களைப் பார்த்து அடப் பாவமே… இப்படி ஆக விட்டதே…! என்று நினைத்தால் போதும். கருவிலே இருக்கும் குழந்தைக்கு கண் ஊனம் ஆகும்.
3.கால் ஊனமுற்றவர்களை கருவுற்ற 90 நாட்களில் பார்த்தால் கருவிலிருக்கும் குழந்தைக்குக் கால் ஊனமாகும்.

தியானம் செய்யக்கூடிய அன்பர் தன் மகளுக்குத் திருமணம் முடித்தார். பெண்ணிற்குத் தாயார் இல்லை. திருமணம் முடிந்த பிறகு தந்தை பற்றிய கவலை பெண்ணிற்கு வந்துவிட்டது.

கட்டிக் கொடுத்த வீட்டில் உள்ளவர்கள் “உன் அப்பா என்ன… அடிக்கடி  இங்கே வருகிறார்…!” என்று கேட்டதனால் சங்கடமாகிவிட்டது.

கருவுற்றதால் இந்த மாதிரி உணர்வுகள் எடுக்கக்கூடாது. மிகவும்  ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நான் (ஞானகுரு) ஏற்கனவே சொல்லியிருந்தேன்.

ஆனால் அந்தப் பெண் சங்கடப்பட்டு வேதனையான உணர்வுகளை எடுத்ததால் கருவில் இருக்கும் குழந்தைக்கு என்ன ஆகிவிட்டது. கை கால் கம்மியாகி விட்டது.

ஸ்கேன் எடுத்துப் பார்த்த போது “கை கால் இல்லாமல் இருக்கிறது…, பிறந்தபின் என்ன செய்வது…?” என்று அப்புறம் (Abortion) அபார்ஷன்  செய்து விட்டார்கள்.

கர்ப்பமான காலத்தில் இந்த மாதிரி எல்லாம் சங்கடப்படக் கூடாது. எப்படி இருக்க வேண்டும்…? என்றெல்லாம் நான் சொல்லி இருந்தேன்.

தன்னை அறியாமலே வேதனைப் பட்டு… வேதனைப் பட்டு… வேதனைப் பட்டு…, அந்தக் கருவின் வளர்ச்சி அவ்வாறு ஆகிவிட்டது.

கர்ப்ப காலத்தில் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்று அடிக்கடி எடுத்துப் பழக வேண்டும்.

“எந்தக் காரணத்தைக் கொண்டும்…” சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ வெறுப்போ வேதனையோ படாத நிலைகள் இருக்க வேண்டும்.

1.அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற வேண்டும்
2.கருவில் விளையும் குழந்தைக்கு அந்த நிலை பெற வேண்டும்
3.அகஸ்தியன் பெற்ற சக்திகள் அனைத்தும் இந்தக் கருவிலே வளரும் குழந்தை பெற வேண்டும்
4.அகஸ்தியன் துருவனான அந்த அரும் பெரும் சக்தியைக் குழந்தை பெற வேண்டும்
5.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்
6.இன்றைய விஞ்ஞான உலகில் பேரழிவிலிருந்து மீட்கும் அந்தச் சக்தி என் குழந்தை பெற வேண்டும் என்று இப்படித்தான் எண்ணுதல் வேண்டும்.

இந்த மாதிரி ஒன்றிலிருந்து தொண்ணூறு நாள் எண்ணினால் பிறக்கும் குழந்தை ஞானியாகத் தோன்றும். அதனின் பார்வையில் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

அந்தக் குழந்தையின் மூலமாக நாம் மகரிஷிகளின் அருள் சக்தியை எளிதில் பெற முடியும்.

ஆகவே கருவுற்ற தாய் அந்தப் பத்து மாதமும் ஞானத்தின் வழித் தொடரிலேயே இருத்தல் வேண்டும்.