சப்தரிஷி மண்டலத்துடன் இணையும் ஆற்றல்

சப்தரிஷி மண்டலத்துடன் இணையும் ஆற்றல்

 

அகஸ்தியனும் அவர் மனைவியும் இருவருமே நம் பூமியின் துருவத்தின் வழி வரும் உணர்வுகளை அது தாவர இனங்களாக மாறுவதற்கு முன் அதன் உணர்வின் ஒளி அலைகளை நுகர்ந்தறிகின்றனர்.

1.துருவத்தில் எண்ணத்தைச் செலுத்தி… பிரபஞ்சத்திலிருந்து வரும் உணர்வினைத் தனக்குள் பெற்று
2.தன் வளர்ச்சியின் முதுமையில் இருவரும் ஒன்றாக இணைந்து
3.அவருடைய தாய் தந்தையரின் உயிரான்மாக்களும் இவர்களுடன் இணைந்து
4.உடலை விட்டுச் சென்ற பின் “ஓர் குடும்பமாக… முதல் துருவ நட்சத்திரமாக அமைக்கப்படுகின்றது…!”

இருவரின் உயிரான்மாக்களும் அங்கே சென்றபின் இவர்கள் உடலுடன் இணைந்த தாய் தந்தை உயிரான்மாக்களும் துருவத்தைச் சென்றடைகின்றனர். அடைந்தபின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சேர்க்கப்படும் போது ஆறாவது அறிவின் தன்மை… ஏழாவது நிலைகள் அடைந்து “சப்தரிஷி மண்டலங்களாக அமையப்படுகின்றது…”

அவர்கள் முதலில் துருவ நட்சத்திரமாக ஆனபின் அவர் ஆற்றலின் துணை கொண்டு தாய் தந்தையர்களும் அவருடைய ஈர்ப்பு வட்டத்திலேயே சுழலத் தொடங்குகின்றார்கள்.

அதன் வளர்ச்சி கொண்டு அக்காலங்களில் துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகளை நுகர்ந்தவர்களும்… அதைப் பின்பற்றியோரும்… உடலை விட்டுப் பிரிந்த பின் அவர்கள் செய்தது போன்றே இவர்களும் சப்தரிஷி மண்டலங்களாக அமைந்து வளர்ச்சி பெற்று (முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களாக) வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால்…
1.இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் இவை அனைத்தும்… ஏன் நான்காயிரம் ஆண்டுகள் என்று கூடச் சொல்லலாம்
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணையும் சக்திகள் மனிதனில் குறைவாகி குறைவாகி குறைவாகித் தேய்பிறையாக ஆகி… இன்று மறைந்து விட்டது.
3.வான்மீகி வியாசகர் போன்றவர்கள் கடைசியாக விண் சென்றார்கள்.
4.அதற்குப்பின் ஒன்றொன்றாகக் குறையப்பட்டு… விண்ணுலகம் செல்லும் தன்மைகள் குறைந்து விட்டது.

அரசர்கள் என்ற நிலை முதலில் உருவானதும் அவர்கள் இட்ட சட்டங்களைத் தான் பின் வந்தோர் சிற்றரசர்கள் பேரரசர்கள் என்று உலகெங்கிலும் பரவத் தொடங்கியது.

மனித உடலின் இச்சைக்கும் சுகபோகங்களுக்கும் இது மாற்றப்பட்டு… அதற்குப் பின் விண்ணுலகம் செல்லும் ஆற்றலைப் பெறும் தகுதிகள் இழக்கப்பட்டு விட்டது.

மனிதனில் உயர்ந்த நிலை பெற்றவர்கள்…! என்று
1.அதிலே மந்திரங்களைச் சொல்லித் தன் வாழ்க்கையில் பெருக்குபவர்களை…
2.கடவுளாக எண்ணியும் ரிஷிகளாக எண்ணியும் திசைகள் மாற்றப்பட்டு
3.இன்றளவிலும் விண்ணுலகம் செல்லும் நிலைகள் மறைந்தே போய் விட்டது.

நமது குருநாதர் இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்தவர்…!

அன்று அகஸ்தியன் துருவ மகரிஷியாகி விண்ணுலகம் எவ்வாறு சென்றார்…? என்ற நிலைகளை அறியும் வாய்ப்புகள் பெற்ற பின்… அதன் வழி கொண்டு அவருக்குண்டான உணர்வின் துணை கொண்டு
1.விண் செல்லும் மார்க்கங்களை எனக்கு (ஞானகுரு) உபதேசித்து
2.எவ்வாறு விண் சென்றார்…? என்ற அந்த முறைகளையும் எனக்கு உபதேசித்தார்.

குருநாதர் உடலை விட்டுப் பிரியும் சமயம் உற்றுப் பார்க்கும்படி செய்தார் குருநாதர்…!
1.சப்தரிஷி மண்டலத்துடன் அவர் இணையும் ஆற்றலையும்
2.அவர் உடல் பெறும் உணர்வுகள் அங்கே எவ்வாறு கரைகின்றது…? என்பதையும் காட்டுகின்றார் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்.

இப்பொழுது தற்காலத்தில் (1971) விண் சென்றவர் தான் நம் குருநாதர்…!

அவர் உயிரான்மா எவ்வாறு விண் செல்கிறது…? என்று விண் செல்லும் மார்க்கங்களை உபதேசித்தார். அதற்கு என்ன உபாயங்களைச் செய்ய வேண்டும்…? என்றும் சொன்னார்.

அவரைப் பின் தொடரும் நிலையாக… இதை எப்படித் தனக்குள் பெருக்க வேண்டும்…? என்று அவர் காட்டிய அருள் வழிப்படி செய்கின்றேன்.

அன்று அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆன… அதன் வழிகளில் வெளிப்பட்ட உணர்வுகள் இங்கே உண்டு. அதைப் பின்பற்றியோர் சப்தரிஷி மண்டலங்களாக உருப்பெற்ற உணர்வுகளும் உண்டு

அதை எல்லாம் எப்படிப் பெற வேண்டும்…? என்று குரு உபதேசித்த வழிப்படி நுகர்ந்தறிந்து எனக்குள் விளையச் செய்தேன்.
1.அதன் உணர்வின் எண்ண அலைகளைப் பரப்பப்படும் பொழுது உங்கள் செவிப்புலனில் இது ஈர்க்கப்பட்டு
2.அதன் உணர்வின் துணை கொண்டு நீங்கள் அந்த விண்ணுலக ஆற்றலைப் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

மனிதனில் உயர்ந்து சென்ற அந்த மெய் ஞானிகள் தீமைகளை அகற்றிட்ட… அந்தத் தீமைகளை அகற்றும் உணர்வுகளை நுகரப்படும் போது தான்
1.நம் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறி
2.என்றென்றும் பிறவி இல்லை என்று அடையச் செய்யும் உணர்வுகள் இங்கே உருப்பெறுகிறது.

பிறவி இல்லா நிலை அடைவதற்குத் தான் இந்தத் தியானம்… சொத்துக்கும் சுகத்திற்கும் அல்ல…!

பிறவி இல்லா நிலை அடைவதற்குத் தான் இந்தத் தியானம்… சொத்துக்கும் சுகத்திற்கும் அல்ல…!

 

இன்று குடும்பத்தில் நம்முடைய பையனோ அல்லது நம்மைச் சார்ந்தவர்களோ நாம் எண்ணியபடி சரியாக வரவில்லை என்றால்
1.நம்மை அறியாமல் ஆவேசமான உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றது.
2.அப்பொழுது நமக்குள் பேய் மணமாக மாறுகிறது.

நல்லவர்களாக வளர்க்க முதலிலே நாம் ஆசைப்பட்டோம். ஆனால் “தவறு செய்கின்றார்கள்…” என்ற உணர்ச்சிகளை ஊட்டியபின் பேயைப் போல அவர்களைத் தாக்கவும் அறிவை இழக்கச் செய்யும் நிலைகள் வந்து விடுகிறது.

நாமும் நமக்குள் வளர்ந்த அறிவினை வளர்க்க முடியாதபடி தடைப்படுத்திவிடுகிறது.

உதாரணமாக… சந்திரன் பூரண நிலவாக இருப்பது… அடுத்து சிறுகச் சிறுகத் தேய்ந்து கடைசியில் அது எப்படி மறைந்து விடுகின்றதோ அது போன்று நமது வாழ்க்கையில் ஒவ்வொரு குணங்களையும் செயலற்றதாகவே மாற்றும் சந்தர்ப்பங்கள் ஆகி விடுகிறது.
1.அப்படிச் செயலற்றதாக மாறி விட்டால்
2.மீண்டும் நாம் பிறவிக்குத் தான் வருகின்றோம்.

ஆகவே இந்த முழுமையான உடலை… முழுமையான ஒளியாக மாற்றும் மனிதனின் ஆறாவது அறிவைச் சீராக பயன்படுத்தத் தான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்தத் தியான பயிற்சியை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

உண்மையின் உணர்வுகளை நாம் தெரிந்து… பூரண நிலவு போன்று நமது உயிர் என்றும் பூரண நிலை அடைந்திட வேண்டும். அதுவே கடைசி நிலை.

இதை இப்போது இழந்து விட்டால்…
1.இந்த உடலில் நாம் அனுபவிக்கும் துன்பத்தைக் காட்டிலும்
2.எத்தனையோ கோடித் துன்பங்களை அனுபவிக்க வேண்டி வந்து விடும்.

ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் ஆழமாகப் பதிவாக்கி… அதை ஒவ்வொரு நிமிடமும் எடுத்து நமக்குள் வளர்த்து… நமது நல்ல உணர்வுகளை உயர்வாக்கி… இந்த உடலுக்குப் பின் “பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்…”
1.அதற்குத்தான் யாம் சொல்லும் இந்தத் தியானமே தவிர…
2.சொத்து வேண்டும்… சுகம் வேண்டும் என்பதற்காக அல்ல…!

தேன் கூட்டில் தேனீக்கள் தேனைச் சேகரிப்பது போல் தான் உயிருடன் ஒன்றும் உணர்வுகளை நாம் ஒளியாக மாற்றுவதும்…!

தேன் கூட்டில் தேனீக்கள் தேனைச் சேகரிப்பது போல் தான் உயிருடன் ஒன்றும் உணர்வுகளை நாம் ஒளியாக மாற்றுவதும்…!

 

உயிர் ஒளியாக இருக்கின்றது… எல்லாவற்றையும் தெரியச் செய்கின்றது… தெரிவிக்கச் செய்கின்றது…! இந்த உயிரைப் போன்றே உடலில் உள்ள ஜீவணுக்களை உயிர் அணுக்களாக… “ஒளியான அணுக்களாக…” மாற்றிட வேண்டும். அது தான் நம் குருநாதர் நமக்குக் காட்டிய வழி.

1.தேனீக்கள் தேன் கூடுகளை உருவாக்கித் தன் இனங்களைப் பெருக்கி
2.அதில் சுவைமிக்க தேனாக எப்படி உருவாக்குகின்றதோ அதைப் போன்று
3.உயிரைப் போன்று உடலில் இருக்கக்கூடிய அணுக்களை நாம் ஒன்றாக்க வேண்டும்.
4.தேன் கூட்டைப் போல்தான் நம் உடலும் அமைப்பாக இருக்கின்றது
5.அதிலே அருள் ஒளியினைச் சேர்த்து உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக நாம் பெற முடியும்.

ஏனென்றால் அப்படி உருவானது தான் துருவ நட்சத்திரம்…! இந்தப் பூமியிலே வாழ்ந்தவர்கள் யாரெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தினைப் பின்பற்றிச் சென்றனரோ… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அவர்கள் இணைந்து… பிறவி இல்லா நிலையை அடைந்து அருள் வழியில் இன்றும் வாழுகின்றனர்.

சூரியனே கூட ஒரு காலம் அழியலாம். சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள கோள்களும் மறையலாம். ஆனால் சூரியக் குடும்பத்தில் உருவான உயிரணுக்களின் தன்மை மனிதனான பின்
1.உணர்வை ஒளியாக மாற்றிச் சென்ற துருவ நட்சத்திரமோ சப்தரிஷி மண்டலமோ
2.தன் ஆறாவது அறிவை ஏழாவது… ஒளியாக மாற்றியவர்கள் என்றுமே அழிவதில்லை.
3.பேரண்டத்தில் விஷத்தின் தன்மை கலந்தாலும் அதையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றவர்கள் தான் அவர்கள்.

அதாவது… ஒரு பாம்பினம் தன் வாழ்க்கையில் தன் உடலில் உருவான விஷத்தைப் பாய்ச்சிப் பாய்ச்சி… மற்ற உயிரின்ங்களின் உடல்களைத் தான் விழுங்கி விழுங்கி… அந்தந்த உடலின் விஷத்தையும் தன் உடலில் உருவான உருவான விஷத்தையும் (அனைத்தையும்) தனக்குள் அடிமையாக்கி… அந்த விஷமெல்லாம் ஒன்றாக ஆன பின் நாகரத்தினமாக அது மாறுகின்றது.

பாம்பு விஷத்தை நாகரத்தினமாக மாற்றுவது போல் தான் துருவ நட்சத்திரமும் விஷத்தை ஒளியாக மாற்றும் திறன் பெற்றது. ஆனால் அது கல்.. ஆனால் இது ஒளிக்கற்றைகளாக மின் கதிர்களாக மாற்றுகிறது.

இதை ஏன் சொல்கிறோம் என்றால் நம்முடைய மனித வாழ்க்கையிலும்… விஷத்தின் தன்மை சிறிதளவு நமக்குள் வந்தாலும் அறிந்து கொள்ள முடிகின்றது.
1.அப்போது உடனடியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் சேர்த்து அதை அடக்கி
2.அந்த விஷம் நமக்குள் அடங்கியே வாழும் உணர்வின் தன்மையாக நாம் மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

அப்படி மாறினால் துருவ நட்சத்திரம் அழியாத நிலைகள் கொண்டு வாழ்வது போல் நாமும் அழியா வாழ்க்கை வாழலாம். நம் உயிர் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு அழைத்துச் சென்று ஏகாந்த நிலை பெறச் செய்யும்.

ஏனென்றால் விஷத்தின் துடிப்பின் தாக்குதலால் தான் வெப்பமும் மற்ற எல்லா இயக்கங்களும் வருகிறது. ஆகவே…
1.எந்த விஷமும் உயிரை இருளச் செய்யாதபடி ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்றது
2.மனிதனின் ஆறாவது அறிவு… அது தான் கடைசி நிலை…!

இதனைத் தெளிவாக உணர்ந்து குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் செயல்படுத்துவோம்.

உலக மக்களை அருள் ஞானத்தின் பாதையில் அழைத்து வரும் அளவிற்கு “நீங்கள் தயாராக வேண்டும்”

உலக மக்களை அருள் ஞானத்தின் பாதையில் அழைத்து வரும் அளவிற்கு “நீங்கள் தயாராக வேண்டும்”

 

இந்த வாழ்க்கையில் உங்களை அறியாது வரும் தீமைகளிலிருந்து மீள வேண்டும் என்பதற்குத்தான் தியானம் செய்யும் முறைகளையும் ஆத்ம சுத்தி செய்யும் பயிற்சிகளையும் கொடுக்கின்றோம்.
1.இங்கே கொடுக்கப்படும் உபதேசங்களைத் திரும்பத் திரும்பப் படியுங்கள்
2.உங்களுக்குள் பதிய வைத்துக் கொள்ளுங்கள்
3.பொழுது போக்காகவே இதை வைத்துக் கொள்ளுங்கள்.

அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுடன் ஒன்றி வாழுங்கள். எல்லோரும் நலம் பெற வேண்டும் என்று ஏங்குங்கள். அவர்கள் நலமாக வாழ்வதைக் கண்டு நீங்கள் மகிழுங்கள்.

ஆகவே… இதைப் போன்ற மகிழ்ச்சியின் தன்மையை உங்களுக்குள் வளர்த்து இருள் சூழா நிலை கொண்டு அடுத்து இந்த உடலை விட்டு அகன்றால்
1.துருவ நட்சத்திரத்தினைப் பின்பற்றியவர்கள் சப்தரிஷி மண்டலமாக எப்படி ஆனார்களோ அதனுடன் நாம் அனைவரும் இணைவோம்.
2.இதை நாம் உறுதிப் படுத்திக்கொள்வோம்… நம்முடைய வாழ் நாள் அங்கே தான்.

இந்த மனித வாழ்க்கையில் நாம் சேமித்த செல்வம் எதுவுமே நம்முடன் வருவதில்லை… வரப் போவதுமில்லை. ஏன்…! நம் உடலே நம்முடன் வருவதில்லை.

உடலில் விளைய வைத்த உணர்வுகள் எதைக் கவர்ந்தோமோ அதன் வழி அங்கே தான் நம்மை அழைத்துச் செல்லும். நமக்குத் தீங்கு செய்தான் தீங்கு செய்தான் என்ற உணர்வை வளர்த்தோம் என்றால் மீண்டும் கீழே செல்கின்றோம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட்டு என்றுமே நாம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.

ஆகவே, நீங்கள் எல்லோரும் அந்த அருள் ஒளியைப் பெருக்குதல் வேண்டும். நோய்களைப் போக்கும் ஆற்றல் பெற வேண்டும். விஷத் தன்மைகள் நமக்குள் புகாது தடுத்துப் பழகுதல் வேண்டும்.
1.நமக்குள் பெருக்கிய இந்த ஆற்றல்களை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்தல் வேண்டும்.
2.மற்றவர்கள் அதை ஏங்கிப் பெறும் போது அவர்களின் தீமைகளைப் போக்கும் நிலைகளுக்கு “நீங்கள் தயாராகுதல் வேண்டும்…”

அதன் வழி நாம் செய்தோம் என்றால் இந்த உடலுக்குப் பின் அருள் ஒளிச் சுடரான அந்த மகரிஷிகளுடன் நாம் ஒன்றி வாழலாம்.

இந்த உடலின் ஆசைக்குப் பொருளுக்கும் புகழுக்கும் சென்றால் இந்தப் புவியின் ஈர்ப்புக்குள் வந்து மீண்டும் நரகலோகத்தைச் சந்திக்கும் நிலை வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து ஒவ்வொருவரும் விடுபட வேண்டும். நீங்கள் எல்லாம் “அருள் ஞானிகளாக உயர வேண்டும்…” என்பதே எமது தவம்.

என் ஒருவனால் ஒன்றும் செய்ய முடியாது…
1.மக்கள் எல்லோரையும் அருள் வழியில் ஞானத்தின் பாதையில் அழைத்து வரும் அளவிற்கு நீங்கள் தயாராக வேண்டும்.
2.நான் ஒருவனே சொல்லிக் கொண்டிருக்க முடியாது… நீங்கள் அந்த நிலைக்கு வாருங்கள்.

இந்த உலகமும் காற்று மண்டலமும் நச்சுத் தன்மையிலிருந்து விடுபட வேண்டும். மக்களை அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழப் பழக்க வேண்டும்.

உங்களால் முடியும்… நிச்சயம் நீங்கள் செய்வீர்கள்…!

மகரிஷிகளால் உருவாக்கப்பட்ட பேருண்மை இது…!

மகரிஷிகளால் உருவாக்கப்பட்ட பேருண்மை இது…!

 

மூதாதையர்கள்… நம் தாய் தந்தையர்கள்… உடலை விட்டுப் பிரிந்திருந்தாலும் அவருடைய உணர்வுகள் நம் உடலுக்குள்ளும் உண்டு.
1.இந்த உணர்வுகள் நமக்குள் இருப்பதனால் பரம்பரை நோய் பரம்பரைக் குணம் இது எல்லாமே வரும்
2.பரம்பரையினால் எங்கள் குடும்பத்தில் இது வந்தது என்று சொல்வார்கள்.

உதாரணமாக… காக்காய் வலிப்பு அல்லது சர்க்கரைச் சத்து அல்லது ஹார்ட் அட்டாக் போன்ற உபாதைகளினால் முன்னோர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் குடும்பத்தில் பரம்பரையாக இதே நோய் தொடர்ந்து அப்படியே வந்து கொண்டிருக்கும்… இரத்தக் கொதிப்பு இருந்தால் அதுவும் வரும்.

இத்தகைய பரம்பரை நோயை அழித்திட துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று
1.உடலுக்குள் மூதாதையர்களின் உணர்வுகள் இருக்கும் பொழுது
2.அதற்கு அருள் ஞான உணர்வை நாம் உணவாகக் கொடுக்க முடியும்.

இப்படிக் கொடுத்து… நம் உடலுக்குள் அருள் ஞான உணர்வைச் செலுத்தப்படும் பொழுது அவர்கள் அறியாது சேர்த்த தீமையின் விளைவுகள் நமக்குள் வராது தடுக்க முடியும்.

அதற்காகத்தான் உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கும்படிச் சொல்வது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்களை அங்கே சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து விட்டால் உடல் பெறும் உணர்வுகளைப் பாற்கடலில் கரைத்து விடுகின்றது.

1.பின் அந்த உயிர் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணையும் பொழுது
2.ஆறாவது நிலை ஏழாவது ஒளியின் உணர்வாக வளரத் தொடங்குகிறது – அது தான் “சப்தரிஷி” என்று சொல்வது.

அப்படிச் செய்த பின்பு… அவருடைய உணர்வு நம்முடன் இருப்பதால் நாம் அவர்களை எண்ணும் பொழுது நாம் நல்ல உணர்வுகளைப் பெற முடிகிறது.
1.அடுத்து நாம் உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும்
2.நம் மூதாதையர்கள் சப்தரிஷி மண்டலத்தில் இருப்பதால்
3.அதன் வழி நம்மையும் அங்கே அழைத்துச் செல்லும் நமது உயிர்.

ஆகவே துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் வலுவாகச் சேர்த்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையினுடைய சூட்சும சரீரத்தைத் துருவ நட்சத்திரத்துடன் இணையச் செய்து விட்டால் (தலையாயக் கடமையாக) “சப்தரிஷி மண்டலத்தின் ஒரு அங்கமாகச் சேர்ந்து விடுகின்றது…”

நம்மை வளர்ப்பதற்காக அவர் உடலில் பட்ட நஞ்சுகள் அனைத்தும் அங்கே கரைக்கப்படுகின்றது. ஒளியின் உணர்வாக உயிர் அங்கே வாழத் தொடங்குகிறது.

அவருடைய உணர்வு கொண்டு தான் நாம் மனிதனாக வளர்ந்தோம்
1.அந்த உணர்வின் துணை கொண்டு நாம் அவர்களை அங்கே உந்தித் தள்ளப்படும் பொழுது
2.இந்த உணர்வின் தொடர் கொண்டு ஒளியான உணர்வை எளிதில் நாம் பெற முடியும்.
3.நமக்குள் வரும் தீமைகளை மாற்றிக் கொள்ள முடியும்… அதைத்தான் நமது குருநாதர் சொன்னார்.

அவ்வாறு விண் செலுத்திய பின்… “48 நாள் இதைத் தொடர்ந்து செய்து வந்தால் நமக்குள் முழுமை பெறுகின்றது…!”

அந்த மூதாதையினுடைய நிலை எத்தனை நிலை இருந்தாலும் துருவ நட்சத்திரத்தோடு ஒன்றாக வேண்டும்… ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அங்கே அந்த ஒளி உடல் பெறும் பொழுது…
1.நம் உடலில் அவருடைய தீயவினைகள் பதிவானது (சங்கடப்பட்டது நோயால் அவதிப்பட்டது) அணுவாக இருப்பது அது கரைக்கப்படுகின்றது
2.பரம்பரை நோய்கள் நம்மிலிருந்து அகற்றப்படுகின்றது.

அவருடைய உணர்வுகளுக்கு நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இவ்வாறு உணவாகக் கொடுக்கப்படும் பொழுது இந்த உடலுக்குப் பின் நம்மையும் அங்கே அழைத்துச் செல்லும் – மூதாதையர்கள் இருக்கும் இடத்திற்கு…!

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்…
1.நம் முன்னோர்கள் முதலில் அவர்கள் மனிதனார்கள்
2.பாம்பாகவோ தேளாகவோ கொசுவாக நாம் இருக்கும் பொழுது
3.அவர்களைப் பாதுகாக்க நம்மை அடித்துக் கொன்றிருப்பார்கள்.
4.நமது உயிர் அவரது உடலின் ஈர்ப்பிற்குள் சென்றிருக்கும்.
5.அதே உயிர் தான் (தாய் தந்தை) நம்மை மனிதனாக உருவாக்கினார்கள்.

அதே சமயத்தில் அந்த அருள் உணர்வுகளை நாம் பெற்று அவர்களை ஒளி உடல் பெறச் செய்தால்… “அந்தத் தாய்ப் பாசம்…” அவர்கள் ஒளியின் உடலான பின் ஏழாவது நிலையாக நம்மையும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யும்.

மகரிஷிகளால் உருவாக்கப்பட்ட பேருண்மையின் உணர்வுகள் இது…!

பிறவி இல்லா நிலை அடைய இது தான் சுருக்கமான வழி…!

பிறவி இல்லா நிலை அடைய இது தான் சுருக்கமான வழி…!

 

உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணையச் செய்து உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து… அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

ஏனென்றால் விஷத்தை எல்லாம் முறித்தது துருவ நட்சத்திரம். அதன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ளது சப்தரிஷி மண்டலம்… ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றியவர்கள்… சப்தரிஷிகள்.

அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுக்குள் சென்றால்
1.மீண்டும் இன்னொரு உடல் பெறும் விஷத்தின் தன்மைகளைப் பிரித்து விடுகின்றது
2.உயிர் அதனுடைய காந்த அலைகளுடன் இயக்கப்படுகின்றது
3.அதிலே விளையும் உணர்வுகளை எடுத்து ஒளியாக மாற்றுகின்றது.

மனிதன் ஒருவன் தான் இதைச் செயல்படுத்த முடியும்…!

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்றால்… கோடிச் செல்வங்களை இன்று தேடி வைத்திருப்பினும் இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல. செல்வமும் நமக்குச் சொந்தமல்ல. “நமது உயிரே அழியாத செல்வம் ஆகின்றது…”

மனிதன் தீயிலே குதித்தால் இந்த உயிர் வேகுவது இல்லை. உணர்வுகள் மாறுகின்றது உணர்வுக்குத்தக்க அடுத்த உடலை உருவாக்கி விடுகின்றது… இது சாகக்கலை.

ஆனால் இந்த உயிர் எப்பொழுதுமே எதிலுமே வேகுவதில்லை. வேகா நிலையை நாம் பெற வேண்டும்.

பிரபஞ்சம் ஒரு காலம் அழியும்… நம்முடைய பிரபஞ்சம் அழியும் தருணமே வந்துவிட்டது. கதிரியக்கப் பொறிகள் எல்லாக் கோள்களிலும் பரவி விட்டது.

பூமியில் நிலநடுக்கங்கள் எப்படி வருகின்றதோ பாறைகள் உருகி எப்படிப் பிளக்கின்றதோ அதைப் போல் மற்ற கோள்களிலும் இந்த நிலை ஆகிவிட்டது.

விஞ்ஞான அறிவால் உருவாக்கப்பட்ட கதிரியக்கங்கள் கோளின் நடு மையத்தில் அடைந்து கொதிகலனாக மாறிக் கொண்டிருக்கிறது. எந்தக் கோள் எப்பொழுது சிதையும்…! என்று சொல்ல முடியாது.
1.இரண்டு கோள்கள் சிதைந்தாலே போதும்… நம் பிரபஞ்சத்தின் இயக்கமே மாறிவிடும்.
2.நம் பூமி சிதைய வேண்டியதே இல்லை. ஆனால் அதற்குத் தக்க இயக்கங்கள் மாறிவிடும்.
3.இதைப் போன்ற காலங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

அன்று பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் தென்னாட்டுடைய சிவனே போற்றி… எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று நாம் சொல்லும் அகஸ்தியன் நீள வடிவமாகச் சென்ற பூமியை அது சாயாதபடி சமப்படுத்தித் திருப்பினான்… அதைச் சீராக்கினான்.

இன்றோ மனிதனுடைய விஞ்ஞான அறிவால் பூமி உருகும் தன்மை வந்துவிட்டது… பிரபஞ்சமும் உருகும் தன்மை வந்துவிட்டது… கோள்களும் உருகும் தன்மை வந்து விட்டது.

அகஸ்தியன் துருவனாகி… துருவ நட்சத்திரமாக ஆன அந்தச் சக்தியை நாம் பெற வேண்டும். பெண்கள் கர்ப்பம் என்று தெரிந்தாலே அந்தப் பத்து மாதத்திலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கருவில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு குடும்பத்திலும் அவசியம் தியானிக்க வேண்டும்.

அகண்ட அண்டத்தில் வரும் விஷத் தன்மைகளையும் அகஸ்தியன் ஒளியாக மாற்றியது போன்று
1.கருவில் வளரும் இந்தக் குழந்தை ஒளியாக மாற்றும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்றும்
2.உலக இருளை அகற்றும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்றும் குடும்பத்தில் உள்ளோர் இதைச் செயல்படுத்துங்கள்.

அதிகாலை ஒரு பத்து நிமிடமாவது இதை எடுத்துச் செயல்படுத்துங்கள். அகஸ்தியனின் உணர்வுகள் அங்கே விளையும். குடும்பத்தில் உள்ள சாப அலைகள் தீய அலைகள் பாவ அலைகள் அனைத்தும் நீங்கும் ஒரு தெளிவான நிலையை உருவாக்க முடியும்.
1.ஆயிரக்கணக்கான அகஸ்தியர்களை நாம் உருவாக்குதல் வேண்டும்.
2.இப்படிச் செய்தால் தான் விஞ்ஞான அழிவில் இருந்து நாம் மீள முடியும்.

ஏனென்றால் விஞ்ஞானிகள் கடலில் உள்ள மணலில் இருந்து யுரேனியத்தைப் பிரித்து எடுத்து செயற்கையில் கதிரியக்கப் போறிகளை உண்டாக்கி இந்த பூமியில் அதிகமாகப் பரவச் செய்துவிட்டனர்.

இயற்கையாக 27 நட்சத்திரங்களிலிருந்து வரக்கூடிய துகள்கள் பூமிக்குள் பரவிக் காற்று மண்டலத்தில் மோதிய பின் தூசிகளாக மாறும்போது… விஞ்ஞானத்தில் உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகளில் அது மோதிய பின் எதிர்நிலையாக மாறிக் கடும் சூறாவளியாக உருவாகி… எல்லாவற்றையும் நாசம் அடையச் செய்து கொண்டிருக்கின்றது.

1.விஞ்ஞானத்தில் எவ்வளவு வளர்ச்சியாகி இருந்தாலும் இதை தவிர்க்க முடியாத… தடுக்க முடியாத நிலைகள் ஆகிக் கொண்டு இருக்கின்றது.
2.அமெரிக்காவில் இத்தகைய நிலைகள் அதிகமாகப் பரவிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

இதெல்லாம் விஞ்ஞான அறிவிற்கு அப்பாற்பட்ட நிலை. இருந்தாலும் நடந்த பின் என்ன… ஏது…? என்று கண்டுபிடிக்கலாம். ஆனால் மெய்ஞானிகள் இதையெல்லாம் அன்றே சொல்லி உள்ளார்கள்.

ஆக… இந்த மனித வாழ்க்கையில் நாம் குறுகிய காலம் தான் வாழ்கின்றோம். அதற்குள் நாம் எதைச் செயல்படுத்த வேண்டும்…? என்பதை உணர்ந்து
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
2.அதனின் வலு கூடினால் நாம் மேலே சொன்ன தீமையிலிருந்து விடுபட முடியும்.

எல்லோரும் அந்த அருள் பெற வேண்டும் என்ற உணர்வைக் கூட்டுங்கள். உங்களுக்குள் ஒற்றுமை ஏற்படும். எதைச் சொன்னாலும் செய்தாலும் இந்த உடலுக்குள் ஒற்றுமை வேண்டும். ஏனென்றால் மகாபாரதப் போர் எல்லா உடல்களிலும் நடந்து கொண்டிருக்கின்றது.

வாழ்க்கையில் அருளைப் பெறுங்கள்… இருளை அகற்றுங்கள்… மெய்ப் பொருளைக் காணுங்கள்.

காற்றிலே இருக்கிறது… எந்த அளவுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்துப் பெருக்குகின்றீர்களோ அதன் வலிமை கூடும்.

“பிறவி இல்லா நிலை அடைய இது தான் சுருக்கமான வழி…!

“மனித வாழ்க்கையை அப்புறப்படுத்திவிட்டு…” மெய் ஒளியைக் காண வேண்டும் என்று பித்தராகச் செயல்பட்டவர் தான் ஈஸ்வரபட்டர்

“மனித வாழ்க்கையை அப்புறப்படுத்திவிட்டு…” மெய் ஒளியைக் காண வேண்டும் என்று பித்தராகச் செயல்பட்டவர் தான் ஈஸ்வரபட்டர்

 

பேரண்டத்தின் பேருண்மைகளை அறிந்து கொள்ள… பக்தி என்ற மார்க்கத்தில் நல்ல ஒழுக்கத்தைக் கடைபிடித்து நல்லதன் நிலைகள் கொண்டு… மெய் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி அருள் உணர்வுகளைத் தனக்குள் கூட்டி… மெய் வழி செல்லும் மார்க்கங்களைச் சாதாரண மக்களுக்கும் கிடைக்கச் செய்யும் நன்னாள் தான் “மார்கழி மாதம் பௌர்ணமி…!”

ஏனென்றால்
1.இந்த மார்கழி மாதம் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்…
2.ஈஸ்வரபட்டராக இருக்கப்படும் பொழுது இந்த உடலில் இருந்து வெளிச் சென்று விண்ணுலகம் சென்றார்.

அவர் உடலுடன் இருக்கப்படும் பொழுது பேரண்டத்தின் பேருண்மையின் நிலைகளைச் சொல்லாக சொல்லி… எனக்குள் (ஞானகுரு) அதை உபதேசித்து உணர்த்தி… அவரின் ஆற்றல்மிக்க சக்தியைப் பதிவு செய்தார்.

குருநாதர் உங்களுக்குப் பதிவு செய்தார்… எங்களுக்கு நீங்கள் எப்படிப் பதிவு செய்கிறீர்கள் என்று நிறையப் பேர் கேட்கலாம்.

ஒரு மனிதன் நம்மைத் திட்டுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். அவன் நமக்குப் பின்புறமாக சுவருக்கு அப்பால் நின்று பேசிக் கொண்டிருந்தாலும்
1.என்ன…? நம்மைப் பற்றி குறை பேசுகிறார்களா…! என்று கூர்ந்து கவனித்தால் போதும்
2.அவன் திட்டியதெல்லாம் இங்கே பதிவாகின்றது.

பதிவான பின் என்ன செய்கின்றோம்…?

ஆகா… அவ்வளவு தூரத்திற்கு ஆகிவிட்டதா…? என்று அந்த உணர்வை ஏற்று அந்த உணர்வையே நாம் தியானிக்கிறோம்.

அதற்கடுத்து அவனுடன் சண்டை செய்வதற்கும் எப்படி எந்தெந்த வகையில் அவனுக்கு இடைஞ்சல் செய்ய வேண்டும் என்றும் செயல்படுத்துகின்றோம். சாதாரண நிலையில் இப்படித்தான் இருக்கின்றோம்.

1.இது எல்லாம் காந்தப்புலனின் நிலைகள்
2.நாம் எதன் மேல் கவனத்தைச் செலுத்துகின்றமோ அந்தக் கவனத்தின் உணர்வலைகள் அதற்குள் பதிவாகின்றது.

தெளிவாக இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்…!

குருநாதர் பித்தனைப் போன்று இருந்திருந்தாலும்… பல பல முறைகளிலே பல எண்ணங்களை எனக்குள் சொல்லும் பொழுது நான் முதலில் ஏற்றுக்கொள்ளாத நிலையில் தான் இருந்தேன்.

அவர் சொல்வது எனக்குப் புரியவில்லை. இப்போது நான் சொல்லும் பொழுது உங்களுக்குப் புரியவில்லை… புரியவில்லை… என்று சொல்கிறீர்கள் அல்லவா. சாமி… நீங்கள் சொல்கிறீர்கள்… எங்களால் திருப்பிச் சொல்ல முடியவில்லை…! என்று சொல்கின்றீர்கள்.

அதைப் போன்று தான் குருநாதர் அவர் உடலுடன் இருக்கும் போது எனக்கு உபதேசித்துக் கொண்டிருக்கும் போது நான் செவிகளில் கேட்டாலும்
1.ஒரு நிமிடத்தில் கன்னடத்தில் பேசுவார்
2.ஒரு நிமிடத்தில் மலையாளத்தில் பேசுவார்
3.ஒரு நிமிடத்தில் தமிழில் பேசுவார்
4.ஒரு நிமிடத்தில் தெலுங்கில் பேசுவார்
5.இந்த உலகில் எத்தனை பாஷைகள் இருக்கின்றதோ அத்தனை பாஷைகளிலும் ஒவ்வொரு வார்த்தையைச் சொல்வார்.

அதை நான் எப்படிப் புரிந்து கொள்வது…?

எல்லாம் சொல்லி விட்டு நான் என்ன சொன்னேன்…? என்று கேட்பார்.

“தெரியவில்லை” என்று சொன்னால் ஏன் தெரியவில்லை…? என்று கேட்பார். “தெரிகிறது” என்று சொன்னால் என்ன தெரிந்து கொண்டாய்…? என்று கேட்பார். இரண்டுக்கும் நான் விடை சொல்ல வேண்டும்.

இப்படித்தான் என்னைச் சிக்கலிலே மாட்டிப் பல இம்சைகளைக் கொடுத்துக் கொடுத்துத் தான் பல பல முறைகளைக் கையாண்டு
1.என்னுடைய கவனத்தை அவர்பால் திருப்பச் செய்து
2.அவர் என்ன சொல்கிறார் என்று உற்றுக் கவனிக்க செய்து
3.அவருடைய சொல்வாக்கின் நிலைகளைப் பதிவு செய்தார்.

அப்படிப் பதிவு செய்த அந்த உணர்வின் தன்மை கொண்டு அடுத்தாற்போல் அடித்து விடுவாரோ… திட்டி விடுவாரோ… பிடித்து விடுவாரோ…! என்ற
1.இந்த எண்ணத்தைக் கொண்டு தான் அவரைக் கூர்ந்து கவனித்து
2.அவருடைய சொல்லுக்குள் நான் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது
3.அந்த ஆற்றல் மிக்க நிலையை எனக்குள் பதிவு செய்தார்.

ஏனென்றால் அந்த அருள் ஞானி அவர் சொன்னது ஒன்றும் புரியவில்லை என்றாலும் நான் ஜெபமிருந்து வரம் வாங்கி அதை எடுக்கவில்லை.

அவர் உணர்வின் ஆற்றலை எனக்குள் பதிவு செய்த நிலைகள் கொண்டு அவர் சென்ற வழிகளிலேயே அதன் வழிகளில் பின்னாடி அதைப் பின்பற்றும் பொழுது தான் அந்த ஆற்றலின் சக்தியை நான் உணர முடிந்தது. இப்பொழுது அதை உங்களிடம் பரிமாறிக் கொள்ளவும் முடிகின்றது.

விண்ணுலக ஆற்றலையும் மண்ணுலகத்தின் தன்மையும் மண்ணுலகத்தில் விளைந்தது உயிரியலாக மனித உடலுக்குள் உயிர் நிலைகளில் இருந்து மனிதனுக்குள் விளைந்தது எவ்வாறு…? என்ற நிலையை உணர்த்தினார்.

அதை நான் பின்பற்றுவதற்கு எத்தனையோ முறைகளைக் கையாண்டார்.

குருநாதர் ஆற்றல் பெற்ற நிலைகளில் ஈஸ்வரபட்டர் என்ற நாமத்தில் செயல்பட்டார். ஆனாலும் பித்தரைப் போன்று தான் பல சரீரங்களில் இருந்துள்ளார்.

“பித்தன்…!” என்றால்
1.புறவாழ்க்கையின் நிலைகளை (அதாவது இன்று நாம் வாழும் வாழ்க்கை என்ற நிலைகளை) அப்புறப்படுத்திவிட்டு
2.மெய் ஒளியையே காண வேண்டும் என்ற உணர்வுடன் தான் அவர் கடந்த காலங்களில் செயல்பட்டுள்ளார்.

மெய் வழியில் செயல்பட வேண்டும் என்று அன்று எண்ணி இருந்தாலும் “அவர் எண்ணங்கள் அனைத்தும்” அவருக்குள் விளைவித்த அனைத்தையும் அக்காலத்தில் வாழ்ந்தோருக்கும் சரி… இக்காலத்தில் வாழ்வோருக்கும் சரி… அவர் எண்ண ஒளிகளைப் பதிவு செய்து அவரவர் எண்ணங்களிலே அதை விளைவிக்கும் ஆற்றலாகத் தான் வெளிப்படுத்திச் சென்றார்.

ஈஸ்வரபட்டர் என்ற நாமத்தில் இருக்கப்படும் பொழுது அவரை அணுகியவர்கள்… சந்தித்தவர்கள்… அனைவருமே
1.சொத்து வேண்டும்… சுகம் வேண்டும்… நோய் போக வேண்டும்,,, வைத்தியம் பார்த்து அதிலே சம்பாதிக்க வேண்டும்…
2.குருநாதரிடம் ஆசி வாங்கினால் வீடு வாங்கலாம் சொத்து வாங்கலாம் வயல்கள் வாங்கலாம் என்ற இந்த ஆசையில் தான் வந்தார்கள்.

ஆனால் நானோ அவரைப் பார்க்கும் போதும் சரி… அவர் என்னைக் கூப்பிட்டுச் சொல்லும் போதும் சரி… இவர் பெரிய மந்திரக்காரர் போல் இருக்கிறது… பித்துப் பிடித்திருக்கின்றார்…! என்ற எண்ணத்தில் அவரை பார்த்தாலே நான் விலகி ஓடிக்கொண்டு இருந்தேன்.

ஆனால் நகர்ந்து விலகிச் சென்றாலும்… “உன்னை விட்டேனா பார்…!” என்று விரட்டிக் கொண்டு வந்தார். தப்பித்து நான் விலகிச் சென்றாலும் கூட அவருடைய மெய் உணர்வின் தன்மையை பல சக்திகளை எனக்குள் பதிவு செய்தார்.

குருநாதர் மெய் ஒளியைக் கண்டு.. இந்த மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி அன்று தான்… அவர் விண் சென்றார்.

ஆகவே அவர் எனக்கு உணர்த்திய நிலைகள் கொண்டு
1.ஞானத்தைப் பெற வேண்டும் என்று உண்மையான நிலைகளில் வருபவருக்கு
2.அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் எல்லோருக்கும்… கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலே தான் இதை வெளிப்படுத்துகின்றேன் (ஞானகுரு).

இன்னொரு உடல் என்ற நிலையினைக் “கனவிலும் நினைக்க வேண்டாம்…”

இன்னொரு உடல் என்ற நிலையினைக் “கனவிலும் நினைக்க வேண்டாம்…”

 

இன்றைய உலக சூழ்நிலையில் எத்தகைய விஷத்தன்மைகள் வந்தாலும் அதை நீக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் உடல் உறுப்புகள் அனைத்திலும் கலக்கப்படும் பொழுது விஷத் தன்மைகள் அடங்குகிறது. நம் அறிவு தெளிவாகின்றது.

இதைப் போன்ற உணர்வுகள் வளர்ச்சி அடையப்படும்பொழுது நம் உடலிலுள்ள அணுக்கள் அத்தனையுமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுகின்றது.

உடலை விட்டுச் சென்றால் உயிரைப் போல் உணர்வின் தன்மை ஒளியாக மாறுகின்றது. எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றோமோ அதன் உணர்வு உண்டு நம் உயிர் அங்கே அழைத்துச் செல்கின்றது.

1.வேதனைப்படுவோர் உணர்வுகள் நமக்குள் அதிகமானால் அல்லது
2.மந்திரித்து ஒரு தாயத்தைக் கொடுத்தால் அதன் மேலேயே எண்ணம் வருகிறது
3.இதைப் போன்று அது எவரிடத்திலிருந்து வந்ததோ அங்கே இந்த ஆன்மா செல்கின்றது.

இதைப் போன்று தான் நமக்குள் எத்தனையோ தீங்குகள் விளைகிறது.

இத்தகைய தீங்கு விளைவிக்கும் நிலையில் இருந்து தப்பி இந்த விஞ்ஞான உலகில் நச்சுத்தன்மையாகப் பரவிக் கொண்டிருக்கும் தருணத்தில்
1.நாம் எந்த நிமிடம் இந்த உடலை விட்டுச் சென்றாலும் பிறவி இல்லாத நிலை அடைதல் வேண்டும்.
2.இன்னொரு உடல் என்ற நிலையினைக் கனவிலும் நினைக்க வேண்டாம்.

இந்த உடலிலிருந்தே ஒளியாக மாறுவது தான் மனிதனின் கடைசி நிலை.

உயிரணு தோன்றி பூமிக்குள் வந்து மனிதரான பின் விஜயதசமி. விஜயம் செய்த இந்த உயிர் பத்தாவது நிலை அடையும் தகுதி பெற்றது.

பத்தாவது நிலையை அடையச் செய்யும் தன்மையாக நம் ஆறாவது அறிவு கார்த்திகேயா என்று அதனின் துணை கொண்டு நமது வாழ்நாளில் ஒவ்வொரு நொடியிலும் இங்கே யாம் (ஞானகுரு) பதிவு செய்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் கொண்டு வரும் தீமைகளை மாற்றிட வேண்டும்.

கையிலே அழுக்குப்பட்டால் நன்னீரை விட்டு எப்படிக் கழுவுகின்றோமோ துணியில் பட்டால் அழுக்கைச் சோப்பைப் போட்டு எப்படி நீக்குகின்றோமோ உடலில் உள்ள அழுக்கிப் போக்க எப்படிக் குளிக்கின்றோமோ அதைப் போன்று ஒவ்வொரு நிமிடத்திலும் உயர்ந்த சக்தி கொண்ட துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தி நம் ஆன்மாவில் உள்ள தீமைகளை அழுக்குகளை நீக்கிடல் வேண்டும்.

உடலுக்குள் தீமை புகாது சுத்தப்படுத்தித் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெருக்கி
1.இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலை அடைய
2.உங்களுடைய முழுமையான எண்ணங்களும் அதில் வர வேண்டும்.

குடும்பத்தில் கணவன் மனைவியும்… அகஸ்தியனும் அவர் மனைவியும் அவர்கள் எப்படி ஒருவருக்கொருவர் ஒன்றி வாழ்ந்தனரோ அதே போன்று… தன் கணவன் உயர வேண்டும் தன் மனைவி உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணி இருவருமே எடுத்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் என் கணவர் பெற வேண்டும் என் மனைவி வரவேண்டும் என்று எடுத்தாலே இந்த உணர்வுகள் உங்களுக்குள் வளர்ச்சி அடைந்து பல தீமைகளை நீக்கும் சக்தியாகப் பெருகும்.

ஒவ்வொருவரும் இதை மனதில் வைத்துச் செயல்படுத்துங்கள்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற வலுவைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
2.ஏனென்றால் இது ஒரு பயிற்சி… தீமையை நீக்கும் உணர்வுகளைப் பயிற்சியாக இப்போது கொடுக்கின்றோம்.
3.அதை நீங்கள் வலுப்படுத்தி உங்கள் வாழ்க்கையில் செயல்படுத்துங்கள்.

இந்த உடலைக் கழட்டிவிட்டு விட வேண்டும்

இந்த உடலைக் கழட்டிவிட்டு விட வேண்டும்

 

இன்றைய சூழ்நிலையில்… வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து எடுத்துப் பழக வேண்டும். தனுஷ்கோடி…! அருள் உணர்வுகளைச் சேர்த்துக் கொள்கின்றோம்.

காரணம்… நாம் கோடிக்கரையில் (மனிதப் பிறவியின் கடைசியில்) இருக்கின்றோம். இதை விட்டுச் சென்றால்
1.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குச் செல்கின்றோம்
2.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெறுகின்றோம்.
3.“உடலைக் கழட்டிவிட்டு விடுகின்றோம்…!”

ஏனென்றால் இந்த உடலிலிருந்து மீண்டும் இன்னொரு உடல் பெறுவதற்குப் பதிலாக இந்த உடலில் இருக்கும் பொழுதே உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாற வேண்டும்.

இன்றைய உலகில்
1.விஞ்ஞான வழியில் எத்தனையோ கடும் விளைவுகள் வந்து கொண்டிருக்கின்றது
2.விஷமான உணர்வுகளும் பரவிக் கொண்டுள்ளது
3.”புதிய புதிய வைரஸ்களும்” அதிக அளவில் பரவிக் கொண்டே உள்ளது.

தீமையான உணர்வுகளை வளர்க்கும் சில குடும்பங்களிலோ ஊர்களிலோ இது அதிகமாகப் பரவுகின்றது. ஒருவருக்கொருவர் சண்டையிடுவதும்… வேதனைப்படுவதும்… மந்திர ஜாலங்களைச் செய்வதும்… மாயாஜாலங்கள் செய்து அது நடக்கவில்லை என்றால் சாப அலைகள் விடுவதும்… அதன் மூலம் சாபமிட்ட ஆன்மாக்கள் வெளியேறி… எல்லை கடந்து செல்லப்படப் போகும்போது அந்தத் தெருக்களிலே பல தொல்லைகளும் துயரங்களும் அங்கே வாழும் மக்களுக்கு ஏற்படுகின்றது.

அதிலிருந்தெல்லாம் மக்களை மீட்டிடும் சக்தியாக நாம் செயல்படுத்த வேண்டும். ஆகவே… எல்லோரும் அந்த அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானத்தைக் கடைபிடிப்போம்.
1.அவரவர்கள் வீட்டிலும் தெருவிலும் ஊரிலும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளைப் பரப்புவோம்.

ஒவ்வொரு உயிரும் கடவுள் என்றும் ஆண்டவன் என்றும் ஈசன் என்றும் அவன் வீற்றிருக்கும் ஆலயம் அந்த உடல் என்றும் நமது குருநாதர் காட்டிய வழியில் அதைத் தூய்மைப்படுத்துவோம். உடலான அந்த ஆலயத்தைச் சுத்தப்படுத்துவோம்.

மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களுக்கெல்லாம் அருள் உணர்வுகள் கிடைக்கப் பெற வேண்டும் என்று பரப்பி… மக்கள் அதைப் பெறும்படி செய்வோம்… அவர்களை மகிழ்ந்து வாழச் செய்வோம்.

அவர்கள் வெளிப்படுத்தும் மகிழ்ந்த உணர்வைக் கண்டு நாம் சந்தோஷப்பட வேண்டும். ஏனென்றால் அந்த மகிழ்ந்திடும் உணர்வு நமக்குக் கிடைக்கின்றது.

1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து அவர்கள் உடலை ஆலயமாக மதித்து
2.அவர்களுக்குள் அறியாது சேர்ந்த குறைகள் நீங்கி அருள் உணர்வுகள் பெருக வேண்டும் என்று எண்ணி
3.இந்த வழிப்படுத்தி நாம் வாழ்ந்தாலே போதுமானது… என்றுமே அந்த உயர்ந்த நிலையை நாம் பெற முடியும்.

கோடிக்கரையில் இருக்கும் நாம் தனுசுக்கோடியாக உணர்வுகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்த்து ஒளியின் உணர்வாக மாற வேண்டும். எதிலுமே இருள் என்ற நிலைகள் வராதபடி ஒளியாக மாற்றிடும் சக்தி பெற அந்த முயற்சியை நாம் எடுப்போம்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாக எடுத்து “ஒளிப்பிளம்பாக…” நாம் மாற வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாக எடுத்து “ஒளிப்பிளம்பாக…” நாம் மாற வேண்டும்

 

வாழும் பொழுது நம்மை அறியாது சில உடல் நோய்கள் வந்தாலும் தியானத்தின் மூலம் அதை நீக்கிக் கொள்ள முடிகிறது.
1.ஆனால் நோய்களை நீக்கினாலும் சிறிது காலமே இந்த உடலிலே வாழ்கின்றோம்.
2.எப்படியும் இந்த உடலை விட்டுச் சென்று தான் ஆக வேண்டும்
3.இந்த உடல் நமக்குச் சொந்தம் அல்ல…!

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

“எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்…” என்ற அந்த அருள் ஒளியை எடுத்துப் பாய்ச்ச வேண்டும் என்ற உணர்வுகளை நாம் வளர்த்துக் கொள்ளும் பொழுது “அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்கு சொந்தமாக்கிக் கொள்கின்றோம்…”

உணர்வுகள் நோய்வாய்ப்பட்டாலும் உடல் சுருங்கத் தான் செய்கின்றது. அருள் ஒளி பெற்ற பின் தீய உணர்வுகள் தீய அணுக்கள் குறையும் பொழுது அப்பொழுதும் உடல் சுருங்கத் தான் செய்யும்.
1.ஆனால் பேரருள் என்ற உணர்வுகள் உயிரிலே அந்த வழிப்பட்டு ஒன்று சேர்த்து இணைந்த பின்
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இருந்து அதைக் கவர்ந்து
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாக எடுத்து ஒளியின் பிளம்பாக மாறும்
4.நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

இதைத்தான் இராமன் நேரமாகிவிட்டது என்று மணலைக் குவித்துத் தியானிக்கின்றான் என்று இராமாயணத்தில் காட்டுகின்றார்கள்.

நம்முடைய தியானங்கள் அனைத்தும்… நம் எண்ணங்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்த்துப் பகைமை இல்லாத உணர்வுகளை வளர்த்து… உயிருடன் ஒன்றி… உடலில் இருக்கும் பொழுதே ஒளியின் உணர்வைச் சேர்த்து ஒளியின் சரீரமாக மாற்ற வேண்டும்.

இதுதான் கடைசி நிலை…!

குளவி புழுவின் மீது விஷத்தைப் பாய்ச்சிக் கொட்டியபின் புழு குளவியாக மாறுகின்றது. சில புழுக்கள் எதுவுமே செய்யவில்லை என்றாலும்
1.அந்த உடலில் இருந்து தன் உணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி… தான் சுவாசித்துப் புழு – பூச்சிகளாக மாறுகின்றது.
2.இந்தப் பூச்சிகள் வேறு இலையில் மீது பட்டால் அந்த உணர்வை எடுத்து வண்டாக மாறுகின்றது
3.இந்த வண்டுகள் மற்ற நிலைகள் பட்டபின் பலவிதமான உணர்வுகள் மாறி ஒரு உடலாக சேர்த்துக் கொண்ட உணர்வு மேல் ஒடுகள் மாறிப் போகின்றது.

இதைப் போன்று தான் நாம் அந்த அருள் உணர்வுகளை எடுக்கும் பொழுது இந்த உணர்வுகள் இங்கே விளைந்து… இந்த உடல் ஒளியாக மாறுகின்றது. அடுத்து நாம் பிறவிக்கு வருவதில்லை.

இதற்காக வேண்டித் தான் பல கோடி தவயோகிகள் எத்தனையோ வகைகளில் முயற்சி செய்து செயல்படுத்தி உள்ளார்கள். இருந்தாலும் மார்க்கங்கள் மாறிவிட்டது.

இமயமலைப் பக்கம் நான் (ஞானகுரு) செல்லும் பொழுது ஜீவ சமாதியாக எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். இமயமலைச் சாரல்களில் மண் இடுக்குகளில்… சந்துகளில் குகை மாறி அமைத்து… ஓ…ம் நமச்சிவாய… என்றும் ஓ…ம் நமோ நாராயணா… என்றும் இந்த ஒலிகள் வருகின்றது.
1.சிறையில் அடைத்தது போன்று குகைக்குள் இருக்கின்றார்கள்
2.வேறு எங்கும் செல்ல முடியவில்லை… உடல் என்ற இந்த கூட்டில் தான் அடங்கியுள்ளார்கள்

இதெல்லாம் குருநாதர் எமக்குக் காட்டிய பேருண்மைகள்…! ஆகவே இப்போது நல்ல நினைவு இருக்கும் போதே ஒளியின் உணர்வாக மாறுங்கள்.