உங்களுக்குத் தன்னம்பிக்கை கொடுக்கத்தான் மீண்டும் மீண்டும் உபதேசிக்கின்றேன்

உங்களுக்குத் தன்னம்பிக்கை கொடுக்கத்தான் மீண்டும் மீண்டும் உபதேசிக்கின்றேன்

 

நாம் செய்ய வேண்டிய அற்புதம் எதுவாக இருக்க வேண்டும்…?
1.நமது பார்வை பிறருடைய தீமைகளை நீக்க வேண்டும்
2.நமது பார்வை அவர்களுக்குள் ஞானத்தைத் தோற்றுவிக்க வேண்டும்.

இதை நாம் வளர்த்தோம் என்றால் என்றும் அழியா ஒளிச்சரீரம் பெற முடியும்.

அந்த மகரிஷிகள் அருள் ஒளி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். என்னைப் பார்ப்பவருக்கு மன மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என்று நாம் செயல்படுத்த வேண்டும்.

“மன மகிழ்ச்சி” கிடைக்க வேண்டும் என்றால் வேதனைப்படுவதைக் கண்டு மகிழ்ச்சி பெறுவதல்ல.
1.என் (நம்முடைய) சொல்லால் பேச்சால் செயலால் பார்வையால்…
2.நான் நல்லதானேன்… எங்களுக்கு நல்லதானது…! என்று அந்த மகிழ்ச்சி அவர்களுக்கு வர வேண்டும்.
3.உங்கள் பார்வை பிறரைப் புனிதப்படுத்தும் நிலையாக வர வேண்டும்.
4.உங்கள் உணர்வின் தன்மை தூய்மைப்படுத்தும் உணர்வின் ஆன்மாவாக மாற்ற வேண்டும்.

சப்தரிஷி மண்டலம் என்பது தீமை தனக்குள் வராதபடி ஒளியாக மாற்றிக் கொண்டது தான்.

நமது பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்கள் மற்ற பிற மண்டலங்களில் வருவதை ஒடுக்கி துகள்களாக பால்வெளி மண்டலங்களாக மாற்றுகின்றது.

அது தூசிகளாக மாறுவதைக் கோள்கள் எடுக்கின்றது. அதைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து துகள்களாக மாற்றுகின்றது… பின் அதனின் ஓட்டத்தில் தூசிகளாக மாறுகின்றது. அதனைச் சூரியன் ஒளிச் சுடராக மாற்றுகின்றது.

இதைப் போன்று தான்
1.மகரிஷிகளின் அருள் உணர்வை உங்களுக்குள் வலுக் கொண்டதாக மாற்றி…
2.பால்வெளி மண்டலங்களாக உங்களிடம் இருக்கும் எண்ணிலடங்காத குணங்களில் இணைத்து இணைத்து
3.எத்தகைய நிலையிலும் அது உங்களுக்குள் தூய்மைப்படுத்திடும் சக்தியாக நீங்கள் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடன் தான்
4.எமது குருநாதர் காட்டிய அருள் வழியினை உங்களுக்குக் காட்டுகின்றேன்.

ஆகவே… தீமையை அகற்றித் தூய்மை பெறும் உணர்வின் தன்மையை நீங்கள் விளைய வைத்து இந்த உடலை விட்டு அகன்றால் அழியாச் செல்வமான பேரருள் பேரொளியாக நீங்கள் நிச்சயம் வருவீர்கள் என்ற “தன்னம்பிக்கையைக் கொடுக்கத்தான் இதைச் செய்கின்றேன்…”

அருள் செல்வம் நீங்கள் பெறுவீர்கள்… அருள் ஞானம் பெறுவீர்கள்… இந்த அருள் உணர்வு உலகம் முழுவதும் பரவட்டும்.

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்றிடும் சக்தி பெற்று… வளர்த்துத் தான் இன்று மனிதனாக வந்துள்ளோம்

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்றிடும் சக்தி பெற்று… வளர்த்துத் தான் இன்று மனிதனாக வந்துள்ளோம்

 

இயற்கையின் நிலைகள் மாறுபட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில்… மனிதனாக உருப்பெற்ற பின் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிய துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நாம் நுகர்ந்து நமக்குள் அந்த உணர்வை வளர்த்துக் கொண்டால்… நாம் பிறவி இல்லா நிலை அடைய இது உதவும்.

1.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும்.
2.அந்த உணர்வினை நுகர்ந்து நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
3.துருவ மகரிஷியின் அருள் சக்தியை நாம் பெறுவதற்கு துருவ தியானம் இருந்து பழகுதல் வேண்டும்.

கஷ்டங்களையும் நஷ்டங்களையும் எப்போது பார்த்துணர்ந்தாலும் அடுத்த கணம் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்தச் சக்தி எங்கள் ரத்த நாளங்களிலே கலக்க வேண்டும் என்று இதைக் கலந்து… கேட்டறிந்த தீமை வலுப் பெறாதபடி தடுத்துப் பழகுதல் வேண்டும்.

அதற்குத்தான் ஆத்ம சக்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம். அதை வைத்துத் தீமைகள் வளராது தடுத்தல் வேண்டும்.

ஏனென்றால்
1.பல கோடிச் சரீரங்களில் தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வை நாம் நுகர்ந்து நுகர்ந்து நுகர்ந்து
2.அதன் வழியில் தான் மனிதனாக வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றோம்.

மனித உடலிலிருந்து வெளிப்படும் மணம் கார்த்திகேயா என்றும்… தீமை என்று தெரிந்த பின் அந்தத் தீமை புகாது தடுக்கும் நிலை தான் சேனாதிபதி ஆறாவது அறிவு என்றும்… முருகன் பிரம்மாவைச் சிறை பிடித்தான் என்றும் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வருவது “நஞ்சினை வென்றிடும் சக்தி…? என்று அதை அறிகின்றோம் கார்த்திகேயா. அதை நமக்குள் நுகர்ந்து உருவாக்கினால் தீமை புகாது அதனை அடக்கி… “ஒளியின் சிகரமாக மாற்றும் சக்தி வரும்…”

மனிதனான பின் பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்றிடும் உணர்வைச் சேர்த்துச் சேர்த்து அதன் அறிவாக அறிந்திடும் அறிவைச் சேர்த்துச் சேர்த்து இன்று நாம் அனைத்தையும் அறிந்திடும் ஆற்றலைப் பெற்றிருக்கிறோம்.
1.அந்த ஆறாவது அறிவைத் தான் கார்த்திகேயா என்றும்
2.சேனாதிபதி என்றும் தீமைகள் புகாது பாதுகாக்கும் நிலை என்றும்
3.பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்றும் காட்டியுள்ளார்கள்.

இத்தகைய நிலைகள் வளர்ச்சி பெற்று அதிலே முழுமை அடைந்தவன் தான் துருவ மகரிஷி… துருவ நட்சத்திரமாக உள்ளார். அதனின்றி வெளிப்படும் உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.

அதை உங்களுக்குள் பதிவாக்கி நீங்கள் அதை எடுக்கும் நிலைக்குத் தான் உபதேசித்து வருகிறோம்.
1.அதன் உணர்வை நீங்கள் ஏங்கிப் பெற்று ஊழ்வினை என்ற வித்தாக வைத்து
2.அதை மீண்டும் நினைவு கொண்டு அருள் ஒளி என்ற உணர்வினைத் தனக்குள் வளர்த்துப் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

அது உங்கள் எண்ணத்தில் தான் இருக்கின்றதே தவிர… யாரோ வந்து அந்தப் பிறவி இல்லாத நிலை நம்மை அடையச் செய்வார் என்று எண்ணுதல் வேண்டாம்.

நாம் விண்ணிலே செலுத்திய உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணந்ததை எப்படி உறுதிப்படுத்துவது…?

நாம் விண்ணிலே செலுத்திய உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணந்ததை எப்படி உறுதிப்படுத்துவது…?

 

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் முதலில் வலு ஏற்றிக் கொள்ள வேண்டும். வலு ஏற்றிக் கொண்ட பின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று நாம் விண்ணிலே உந்திச் செலுத்த வேண்டும். அவருடைய உணர்வு தான் நம் உடல்.

அங்கே சப்தரிஷி மண்டலத்தில் இணைந்த பின் நஞ்சைக் கரைத்த உணர்வுகளில் இந்த ஆன்மாக்கள் பட்டபின் உடல் பெறும் உணர்வுகள் கரைகின்றது.
1.உயிரும் உணர்வும்… நாம் எடுத்துப் பாய்ச்சிய உணர்வின் தன்மை கொண்டு
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளிச் சரீரம் பெறுகின்றார்கள்.

இருந்தாலும்… இதற்கு முன் நாம் செய்யத் தவறி விட்டோம். இன்னொரு உடலுக்குள் அவர்கள் புகுந்திருக்கலாம்.

காலை துருவ தியானத்தில் அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும். உடலை விட்டுப் பிரிந்து சென்ற குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று இந்த உணர்வுகளைக் கூட்ட கூட்ட
1.அவர்கள் எந்த உடலில் இருந்தாலும் நாம் செலுத்தும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அவருக்குள் சேர்க்கப்பட்டு
2.துரித நிலைகள் கொண்டு அவர்களுக்கு நலம் பெறும்.

ஏனென்றால்… இவர் உடலை விட்டுப் பிரியும் போது எந்த நோயின் தன்மை பெற்றாரோ இந்த உணர்வின் இயக்கமாகத் தான் புகுந்த உடலிலே செயல்படுத்தும்.

சார்புடையவர்கள் அந்த ஆன்மா விண் செல்ல வேண்டும் என்று எண்ணப்படும் பொழுது அவர் உணர்வு இங்கே இருப்பதால் வேறு உடலில் இருந்தாலும் இந்த உணர்வுகள் கலக்கப்பட்டுக் கொண்டே வரும்.

நாளடைவில் வெளிவந்த பின்… துருவ தியானத்தில் நாம் எண்ணி உந்திச் செலுத்தப்படும் பொழுது “எளிதில் அங்கே சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யும்…”

இதிலே அந்த ஆன்மாக்களை நாம் விண் செலுத்தியது… அதற்குண்டான உணர்வுகள் வரும்.
1.அங்கே சொர்க்கம் அடைந்த உணர்வினை உங்களுக்குத் தெளிவாக உணர்த்துவார்கள்.
2.”நான் சொர்க்கத்தில் இருக்கின்றேன்…” என்ற உணர்வினை கனாக்களில் வந்து சொல்வார்கள்… சிலருக்கு அது தெரியும்.

சொர்க்கம் அடையவில்லை என்றால் உடலை விட்டு வந்தபின் என்னை ஏன் நீ அனுப்பவில்லை…? என்று உங்களுக்குள் அந்த உணர்வினை ஊட்டி நினைவுபடுத்தும்.

ஏனென்றால் உடலின் உணர்வுக்குள் ஆசை என்ற உணர்வின் உணர்ச்சியால் நமக்குள் அறியச் செய்யும் உணர்வின் தன்மையும் உண்டு.

அதே போல்… உங்கள் முன்னோர்கள் யாராவது சப்தரிஷி மண்டலம் சென்று விட்டால் அவர் உணர்வு உங்களுக்குள் இருந்தால்
1.இன்னொரு உடலை விட்டு ஆன்மா வெளி வந்தபின்
2.என்னை ஏன் நீ அனுப்பவில்லை…? என்ற உணர்ச்சி உங்களுக்குள் இயக்கப்பட்டு
3.நினைவு கூர்ந்து அவர்களையும் விண்ணுக்குச் செலுத்த முடியும்

ஆனால் இதற்கு முன்னாடி நாம் அவர்களை எல்லாம் பேயாகத்தான் மாற்றி வைத்திருக்கின்றோமே தவிர நல்ல வழியில் செயல்படுத்தவில்லை.

இப்போது நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மறைந்த நிலைகளைக் காட்டி… விண் செலுத்தும் மார்க்கத்தினைத் தான் உங்களைச் செயல்படுத்தச் சொல்கிறோம்.

முன்னோர்களைக் கனியாக்கி… நாமும் கனியாகி… சந்ததியினரையும் கனியாக்கும் (ஒளியாக்கும்) முறை

முன்னோர்களைக் கனியாக்கி… நாமும் கனியாகி… சந்ததியினரையும் கனியாக்கும் (ஒளியாக்கும்) முறை

 

உங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்…!

சொந்த பந்தமாக இருந்தாலும்… தன் குடும்பத்தாராக இருந்தாலும்… அவர்கள் உடலை விட்டு ஆன்மா பிரிகிறது என்றால்… அடுத்த நிமிடமே “ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரை எண்ணி
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி
2.அந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்துங்கள்.

பின்…
1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வமான அந்த உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
2.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து… பெரு வீடு பெருநிலை என்ற நிலை அடைதல் வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால்… அவர்கள் உணர்வுகள் நமக்குள் இருப்பதால் இதை வலுப்படுத்தி இந்த வலுவின் துணை கொண்டு அந்த ஆன்மாவை… சூட்சம சரீரத்தை விண் செலுத்துதல் வேண்டும்.

அவ்வாறு விண் செலுத்தினால்…
1.நாம் மேல் நோக்கி விண் செலுத்திய அந்த உணர்வின் தன்மையை… நாம் மீண்டும் நுகரப்படும் பொழுது
2.இங்கே அந்த (முன்னோர்ளைப் பற்றிய) ஈர்ப்பின் சக்தியை… அந்த உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து கொள்கின்றது
3.அவ்வாறு அது கவர்வதனால்… உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மா நமக்குள் உட்புகாது தடுத்து நிறுத்துகின்றது.

ஏனென்றால்… அவர்கள் உணர்வுகள் நமக்குள் இருக்கும் நிலையில்
1.நாம் விண் செலுத்தத் தவறினால்… நம் ஆன்மாவில் வந்து விட்டால் “நம் சுவாசத்தின் வழி…” உடலுக்குள் நிச்சயம் சென்றுவிடும்.
2.ஆகவே இதன் வழி அடைத்துவிட்டு உணர்வினை ஒளியாக்குதல் வேண்டும்.

மாறாக… மேலே சொன்னபடி விண்ணுக்கு அனுப்பினால் அந்த உணர்வுகளைச் சூரியனுடைய காந்தப் புலனறிவு… அதை அங்கே தனக்குள் கவர்ந்து சென்றுவிடும்.

இந்த உடலிலே பெற்ற நோயின் உணர்வை… அந்த உணர்ச்சிகளை அங்கே கரைத்து விடும்.

ஆகவே உயிருடன் ஒன்றிய நிலைகளில்
1.”தான் வாழ வேண்டும்…” என்ற உணர்வின் தன்மை அங்கே ஒளியாகின்றது.
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை “அது உணவாக எடுத்து…” அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சுழலும்.

சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் வளர்ந்த கோள்கள் எப்படி அதனைச் சுழன்று வாழ்கின்றதோ இதைப் போல துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் வலுவாக்கி விட்டால்… அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் அடுத்து நம் மூதாதையரின் உயிரான்மாக்கள் அங்கே செல்கின்றது.

அதே போல… நண்பன் என்று நாம் பழகிய நிலைகள் அவர் சந்தர்ப்பத்தால் உடலை விட்டுப் பிரிந்து சென்றால் (இறந்தவர் யாராக இருந்தாலும்… நாம் கேள்விப்பட்டால்) அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெருவீடு பெருநிலை என்ற நிலை அடைய வேண்டும்… அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இப்படி…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கி வலு சேர்த்துக் கொண்டு
2.”இத்தகைய அடைப்பாக நாம் அமைத்துக் கொண்டு…” அந்த ஆன்மாக்கள் நமக்குள் புகாதபடி இங்கே தடுக்க வேண்டும்.

இதைத்தான் இராமாயணத்தில் வாலியை… இராமன் மறைந்திருந்து தாக்கினான்…! என்று சொல்வது. அதாவது… துருவ நட்சத்திரத்தின் சக்தியை வைத்து நமக்குள் அடைத்து விட்டால் “எந்த ஆன்மாவும் உள்ளே செல்லாது…”

இவ்வாறு நம் முன்னோர்களை விண் செலுத்தி விட்டால் துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலத்தின் சக்தியையும் நாம் எளிதில் பெற அது உதவுகின்றது.

அவர்கள் முதலிலே மனிதனாளர்கள்… அடுத்து நம்மை அவர்கள் தான் மனிதனாக உருவாக்கினார்கள்.

உதாரணமாக…
1.ஒரு விழுதின் தன்மை மரமாக வளரப்படும்போது… விழுது எப்படி அதைக் கனியாக்குகின்றதோ
2.இதைப் போன்று நாம் முன்னோர்களைக் கனியாக்க வேண்டும்
3.ஏனென்றால் கனியாக உருவாக்குவது அதன் விழுதுகளே…!
4.(மரம் – முன்னோர்கள்… விழுது – நாம்)
5.ஆகவே… நாம் இதை முறைப்படுத்திச் செய்தால் அவர்கள் கனியாகின்றார்கள்.

கனி என்பது… உயிர் ஒளி. குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்த உயிருடன் ஒன்றும் “அனைத்தும் ஒளியாக்கப்படும் பொழுது…” கனியாகின்றது…!

கனியின் தன்மை அடைந்த பின்… அதாவது விழுதுகளான நாம் அதை உருவாக்கப்படும் பொழுது
1.அந்தக் கனியின் தன்மையை நாம் விழுங்கும் பொழுது…
2.அது எப்படிக் கனியானதோ… அதை (அதே) முறைப்படுத்தி நாமும்…
3.நம் உணர்வுகள் (உயிருடன் ஒன்றுவது) கனியாகி… பிறவி இல்லா என்ற நிலை அடைகின்றது.

விண்ணுலகில் “ஒளிச் சரீரமாக வாழும் நிலை” எப்படிப்பட்டது…?

விண்ணுலகில் “ஒளிச் சரீரமாக வாழும் நிலை” எப்படிப்பட்டது…?

 

நமது பிரபஞ்சத்தில் 27 நட்சத்திரங்கள் உண்டு. ரேவதி நட்சத்திரத்திலிருந்தும் கார்த்திகை நட்சத்திரத்திலிருந்தும் துகள்கள் வரப்படும் பொழுது சூரியன் தன் உணவுக்காக அவைகளை எடுத்துக் கொள்கிறது. இடைமறித்து மற்ற கோள்கள் கவர்ந்து அதனின் மாற்றங்கள் ஆகின்றது.

கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தி அதிக வலிமை பெற்றது… ஆண்பால். ஆணைக் கண்டு பெண் எப்படி ஒதுங்கிச் செல்கின்றதோ அதைப்போல ஒதுங்கிச் செல்லும் நிலைகள் பெற்றது ரேவதி நட்சத்திரத்தின் நிலைகள்.

இருப்பினும்… இதன் உணர்வின் அழுத்தம் அதிகமான பின் ரேவதி நட்சத்திரத்தின் உணர்வலைகள் விலகிச் செல்கிறது. விலகிச் செல்லும் மார்க்கத்தில் வியாழன் கோளிலிருந்து வெளிப்படக்கூடிய ஆவியின் தன்மை ஊடுருவி விட்டால் சுழற்சியாகி… வேகம் அதிகமாகின்றது.

சுழற்சியின் வேகம் அதிகமாகும் பொழுது இதன் அருகிலே வந்த அந்தக் கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தியை இழுத்து இரண்டும் மோதி விடுகின்றது.

இப்படி மோதி விட்டால்
1.ஆண் பெண் என்ற உணர்வுகளில் ரேவதி நட்சத்திரத்தின் உண்ர்வுகள் அதிகமானால் பெண்பாலை உருவாக்கும் சக்தி வருகின்றது.
2.கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தி அதிகமானால் ஆண்பாலை உருவாக்கும் சக்தி பெறுகின்றது.
3.ஆகவே… ஆண் பெண் என்ற நிலைகள் கொண்டு தான் உயிரிலே இயக்குகின்றது.

அதைப் போல் இந்த அருள் வழியில் கணவன் மனைவி இருவரும் ஒத்த உணர்வு கொண்டு இயக்கினால் “எதனையும் வெல்லக்கூடிய சக்தி பெறுகின்றது…”
1.இங்கிருந்து நாம் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்த பின்
2.ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொன்று தான்…!

இதிலே தெளிவாக்கி உணர்வின் தன்மை இருளை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றும் சக்தி மனித உடலில் பெற்ற பின் ஆறாவது அறிவு ஏழாவது ஒளியாக மாறுகின்றது. அது தான் சிருஷ்டித்துக் கொண்டது என்று சொல்வது.

தீமைகளை… பகைமைகளை… நஞ்சினைத் தனக்குள் வராதபடி மாற்றியமைக்கும் திறன் மனித உடலில் பெற்றதனால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்ற பின் அதன் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்திற்குச் செல்கின்றோம்.
1.ஆனால் துருவ நட்சத்திரத்தின் இணைப்புடன் வாழ்ந்தால்
2.பூமியில் நண்பர்கள்… உறவினர்கள்… என்று இருந்தாலும் அதை அறிந்து கொள்ளும் நிலை இல்லை.
3.ஆனால் ஒன்று சேர்ந்து வாழும் இயக்கச் சக்தியாக மாறும்.
4.ஒன்றுடன் ஒன்று இணைந்து துருவ நட்சத்திரத்தில் உணர்வைக் கவர்ந்து வாழும் தன்மை வருகிறது.

நமது பிரபஞ்சம் பிற நிலைகளிலிருந்து எடுத்தாலும் சூரியன் எப்படி வளர்கின்றதோ இதைப் போலத் தான் சப்தரிஷி மண்டலங்களில் நாம் இருக்கப்படும் பொழுது “மனிதனுக்கு மனிதன்…” அறிந்திடும் நிலை வராது.

இருளை அகற்றிடும் வலிமை பெறும்… ஏழாவது ஒளி நிலை பெறும். அதை நாம் நுகர்ந்து உடலுக்குள் சேர்த்துக் கொண்டால் பகைமைகளை அகற்றிச் சிந்திக்கும் தன்மை பெறச் செய்யும்.

அதைத்தான் ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன் என்று சொல்வது. தான் சிருஷ்டித்து கொண்டது தான் ரிஷி.

கணவனும் மனைவியும் இருளை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றியது துருவ நட்சத்திரம். அதைப் பின்பற்றிய அனைவரும் ஆறாவது அறிவு ஏழாவது ஒளி… சப்தரிஷிகள் சிருஷ்டித்துக் கொண்டவர்கள்…! என்று பொருள்… உணர்வின் ஒளி அலைகள் கொண்டு.

வேப்ப மரத்தின் கசப்பை நாம் நுகர்ந்தால் ஓய்… வெளியே வருகின்றது. ரோஜாப் பூவின் மணத்தை நுகர்ந்தால் ஆகா..கா… என்று இணைந்து செயல்படும் உணர்வுகள் வருகின்றது.

அதைப் போல் நாம் ஒளிச் சரீரம் பெற்று விண்ணிலே வாழும் நிலைகளில்
1.அதற்கு மாறான உணர்வுகள் அங்கே சென்றால் இந்த உணர்வைப் பிரித்து விட்டுத் தன் உணர்வினை ஒளி என்று தான் உருவாக்கும்.
2.அங்கே பண்பும் அன்பும் ஒன்று சேர்த்து வாழும் தன்மை வரும்.
3.துருவ நட்சத்திரத்துடன் இணைத்து வாழும் உணர்வுகள் வரும் போது அதைப் பங்கிட்டு ஒளியின் தன்மை பெறும்.
4.விண் சென்ற பின் தன் நண்பன் என்று அறியாது.

ஆக அப்படி அறியக்கூடிய பருவம் வந்தால் மனித நிலைக்குத்தான் வரவேண்டும்.

விண் சென்ற நிலையில்… என்றுமே இருளை நீக்கி ஒளி என்ற உணர்வை ஊட்டி ஒன்றுபட்டு வாழும் தன்மை வரும். ஒளிக்குள் ஒளியாகும் பொழுது அகத்தின் ஒளியாகும் பொழுது இருளை வெல்லும் தன்மையும் நஞ்சை வெல்லும் தன்மையும் பெறுமே தவிர “அதற்குப் பின் இங்கே (பூமிக்குள்) வர முடியாது…”

என்றும் ஏகாந்த நிலையாக… எதுவுமே பகைமை இல்லாத நிலையும் பகைமையை மாற்றி அமைக்கும் சக்தியை இந்த மனித உடலில் பெற்றுத்தான் நாம் அங்கே செல்ல முடியும். இது தான் ஆறாவது அறிவு ஏழாவது ஒளி சப்தரிஷி – சிருஷ்டித்துக் கொண்டது.

கணவன் உயிராக இருந்தாலும் அதற்குள்ளும் பெண்பால் உணர்வுகள் உண்டு. மனைவி என்ற நிலையில் இருந்தாலும் அந்த உயிரில் ஆண்பால் என்ற உணர்வு உண்டு.

செடி கொடி கல்லானாலும் மலையானாலும் இதைப் போன்று நட்சத்திரத்தின் உணர்வுகள் எது கலவையானதோ அதற்குத்தக்க வளர்ச்சி இருக்கும்.

பெண்பால் உணர்வுகள் அதிகமானால் மலைகளில் வளர்ச்சி அதிகமாக இருப்பதும் ஆண்பால் உணர்வுகள் இருந்தால் வளர்ச்சி கம்மியாக இருப்பதும் உண்டு.

வெறும் ஆண்பால் என்ற உணர்வு வரப்படும் போது தன் இனத்தை விருத்தி செய்து வளர்க்க முடியாது.

அதே போல் பப்பாளி மரத்தில் ஆண்பால் என்ற உணர்வுகள் செல்லும் பொழுது தான் பெண் பப்பாளி தன் இனத்தை விருத்தி செய்யும் வித்துக்களை உருவாக்குகின்றது. ஆண்பால் என்ற அந்த பப்பாளி மரம் இல்லை என்றால் அந்த அமிலம் படவில்லை என்றால் பப்பாளி மரத்தின் வளர்ச்சி குன்றும்.

இது எல்லாம் இயற்கையின் நியதிகள்.

இதன் உணர்வு கொண்டு சப்தரிஷி மண்டலங்களாக மாற்றப்படும் பொழுது நம் உயிர் அங்கே பகைமை என்ற நிலை இல்லாது ஒருக்கிணைந்த நிலைகளில் வாழ முடியும்.

1.பகைமையற்ற நிலைகள் கொண்டு என்றும் ஒளியாக வாழ…
2.ஒன்று சேர்த்த இயக்கத்தை நமக்குள் உயிர் என்ற நிலை இருக்கும் போது
3.உடலுக்குள் இருக்கும் அணுக்களில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்க்கப்படும் பொழுது தனுசுகோடி.

புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் தீமைகளை நீக்கி நீக்கி வந்தது… கோடிக்கரை. ஆகவே அந்த உடல் பெறும் உணர்வுகள் சிவ தனுசு.

ஆனால் அதே சமயத்தில் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற்ற அந்த உணர்வினை நமக்குள் பெருக்கி விட்டால் தனுசுகோடி. தீமைகளை வென்று உணர்வின் தன்மை ஒன்றாக்கி
1.உயிரைப் போன்ற உணர்வு ஒன்றாக்கப்படும் பொழுது
2.”ஒன்றென்ற நிலைகள் இயக்குவது தான்… தனுசுகோடி…” என்று கூறப்படுகின்றது.

பகைமைகளை அகற்றி அருள் உணர்வைக் கூட்டி உயிருடன் ஒன்றி நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது… கணவன் மனைவியாக அதை உருவாக்கப்படும் போது சப்தரிஷி.

இருளை அகற்றி நல்ல உணர்வினைச் சேர்க்கும் தன்மை… அதாவது “விஷத்தை ஒளியாக மாற்றும் சக்தி பெற்றது…” என்பதனை நாம் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும்.

வைகுண்ட ஏகாதசி – சொர்க்க வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி – சொர்க்க வாசல் திறப்பு

 

“வைகுண்ட ஏகாதசி” என்ற நிலைகளைக் கொடுத்த ஞானிகள் பெருமாள் விஷ்ணு ஆலயங்களில் “சொர்க்கவாசல்” என்ற நிலைகளை உருவாக்கி மனிதர்கள் தம்மிடத்தில் உள்ள நல்ல குணங்களைக் காக்கும் நிலையைத் தெளிவாக்கினார்கள்.

அதாவது நமது மூக்கு நமக்கு முதல் வழி… நேர்வழி. நாம் நமது கண் கொண்டு பார்க்கும் உணர்வுகளைச் சுவாசிக்கின்றோம். நமது உயிர் நாம் சுவாசித்த உணர்வுகளை அதனின் உணர்வின் சக்தியாக நமது உடலில் அமைத்து விடுகின்றது.

1.நாம் எந்த குணத்தை எண்ணுகின்றோமோ அந்தக் குணத்தின் அணுவாக நமது உடலில் விளைந்து
2.பின் அந்த அணு அதனின் குணத்தின் சத்தைக் காற்றில் கலந்திருப்பதை
3.நம் சுவாசத்தின் வழிக்கூடி நுகர்ந்து… தன்னுள் கவர்ந்து தன்னை வளர்த்துக் கொள்கின்றது.

நாம் எந்த குணத்தை எடுத்தோமோ அந்தக் குணத்தை நாம் சுவாசிக்கும் பொழுது “அது உயிரில் மோதி…” அதனின் உணர்வின் சத்தை அறியச் செய்கின்றது… உணரச் செய்கின்றது.

ஆனால் அதனின் உணர்ச்சிகள் நமது உடலில் இயங்கி அதற்குத் தக்கவாறு நமது உடலை இயக்கிக் கொண்டுள்ளது என்ற நிலையை நமக்கு உணர்த்துவதற்காக ஞானிகள் “சொர்க்கவாசல்…” என்ற நிலைகளை ஆலயங்களில் ஏற்படுத்தினார்கள்.

நாம் வைகுண்ட ஏகாதசியன்று என்ன செய்கின்றோம்…?

இரவு முழுவதும் கண் முழித்திருந்து காலை 4.00 மணிக்கெல்லாம் சொர்க்கவாசல் திறப்பார்கள் என்று கோவிலுக்குச் செல்கிறோம்.

சொர்க்கவாசல் வழி சென்றால் சொர்க்கத்தை அடைவோம்…! என்ற எண்ணத்துடன்தான் நாம் செல்கின்றோம்.
1.இது எப்படி இருக்கிறது…? என்றால் ஏட்டில் சுரைக்காயை வரைந்து
2.அதைக் குழம்பில் போட்டுச் சமைத்துச் சாப்பிடுவது போன்று இருக்கின்றது.

இரவு உணவு உட்கொள்ளாது விடிய விடிய விழித்திருந்து 4.00 மணிக்கெல்லாம் ஆலயத்திற்குச் சென்று அங்கே சொர்க்கவாசலைத் திறந்ததும் கூட்டத்துடன் முண்டியடித்து மோதிக் கொண்டு சென்று அங்கே வைத்திருக்கும் சிலைக்கு அபிஷேகம் ஆராதனை அர்ச்சனைகள் செய்தால் அந்தத் தெய்வம் நமக்கு நல்லது செய்யும்… நம்மைச் சொர்க்கத்திற்கே அழைத்துச் செல்லும்…! என்று “சாங்கிய சாஸ்திரங்களை வைத்துத்தான்” நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நாம் பேருண்மையின் தன்மைகளைக் காண முடியாத நிலைகளில்தான் இருக்கின்றோம்.
1.பேருண்மைகளை யாம் உங்களுக்கு வெளிப்படையாக இப்பொழுது உபதேசித்தாலும்
2.“இது என்ன புதிதாக இருக்கின்றது…?” என்று புதிர் போட்டுக் கேள்வி கேட்டு
3.கேள்விக் குறியாகத்தான் யாம் உபதேசிக்கும் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்து கொள்கின்றீர்கள்.

யாம் உபதேசிப்பதைக் கேட்டாலும் புதிதாக இருக்கின்றது புதிராக இருக்கின்றது என்றும் இதனின் உணமையை உணர்ந்து கொண்டாலும்,
1.மற்றவர்கள் இதைப் பெற முடியுமா…? இதன்வழி பின்பற்றி நடப்பார்களா…? என்று
2.நாம் மற்றவர்களைப் பற்றித்தான் எண்ணத் தோன்றுகின்றதே தவிர
3.நாமும் பெறுவோம் நம்மைச் சார்ந்தவர்களையும் பெறச் செய்வோம் மற்ற அனைவரையும் பெறச் செய்வோம் என்ற
4.இந்த உணர்வுகள் நம்மிடத்தில் இன்னும் வளரவில்லை.

ஞானிகள் உருவாக்கிக் கொடுத்த பேருண்மையின் தன்மைகள் நம் மனதில் இருந்து மறைந்தே போய்விட்டது.

ஆனால் மகரிஷிகள் தமது உடல்களில் விளைவித்து வெளிப்படுத்திய உணர்வுகளைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து நமது பூமியில் படரச் செய்துள்ளது… அது அழியவில்லை.

அவர்கள் சப்தரிஷி மண்டலமாகவும் துருவ நட்சத்திரமாகவும் இருந்து ஒளிச்சரீரமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அவர்கள் இந்த[ப் பூமியில் மனிதர்களாக வாழ்ந்த காலங்களில் மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி தீமைகள் தம்மைச் சாராத நிலைகள் கொண்டு உணர்வுகளை ஒளியாக மாற்றியவர்கள்.

அவ்வாறு மாற்றிய உணர்வுகளை அவர்கள் தம் உடலில் விளைய வைத்து வெளிப்படுத்திய உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக இந்தப் பூமியில் படரச் செய்துள்ளது.

அவர்கள் மனிதச் சரீரத்தில் வாழ்ந்த காலத்தில் பிறவியில்லா நிலை பெறும் நிலையாகத் தமது உணர்வினை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றச் செய்து “வேகா நிலை” என்ற நிலையை அடைந்தார்கள்.

1.இந்தப் பேரண்டத்தில் எத்தகைய மாற்றங்கள் நடைபெற்றாலும் இவர்கள் உயிர் அழிவதில்லை
2.உடலில் இருந்து ஒளியாக மாற்றிய உணர்வுகளும் மாறுவதில்லை.
3.ஒளியின் சரீரமாக உயிருடன் ஒன்றி இன்றும் விண்ணின் ஆற்றலை தம்முள் ஒளியாக மாற்றிக் கொண்டேயுள்ளார்கள்.

இதன் நிலைகளை நாமும் பெற வேண்டும் எனும் நிலைக்காகத்தான் அன்று ஞானிகள் நமது உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களைச் சீராக பயன்படுத்தச் செய்து நமது வாழ்க்கையில் சொர்க்கத்தைப் பெறும் நிலையாகவும்… “சொர்க்கவாசலை எதன் வழி கொண்டு திறக்க வேண்டும்…?” என்பதையும் ஞானிகள் நமக்கு உணர்த்தினார்கள்.

ஆனால் யாரும் அதை பின்பற்றவில்லை. அபிஷேகம் ஆராதனை செய்தாலே போதும்…! என்ற நிலைக்குச் சென்று விட்டோம்.

மெய்யுணர்வை நமக்குள் நுகர்ந்து நம் உயிருக்குள் இந்த உணர்வினை அபிஷேகம் செய்து மகரிஷிகளின் அருள் உணர்வை நம் உடலுக்குள் பரவச் செய்து அதனை ஆராதனையாக்கி நம் உடலில் இருக்கும் நல்ல அணுக்களுக்கு அருள் ஞானிகளின் உணர்வை உணவாகக் கொடுத்து அதனின் நிலையை வளரச் செய்வதற்குத்தான் ஆலயங்களில் சொர்க்கவாசல் என்ற நிலைகளை உருவாக்கிக் கொடுத்தார்கள்.

நாம் ஒவ்வொரு ஆலயங்களுக்குச் செல்லும் பொழுதும் நேர் வாசல் மூலம் தான் செல்கின்றோம். ஆனால்
1.வைகுண்ட ஏகாதசி அன்று “சொர்க்கவாசல்” என்று மற்றொரு வாசல் (வடக்கு வாசல்) மூலம் உள்ளே வரும்படிச் செய்கின்றார்கள்.
2.நாம் ஏற்கனவே சுவாசித்த பாதையை விட்டு விட்டு
3.நம்மை இயக்கும் உயிரான ஈசனை மதிக்கும் நிலையாக… ஆலயங்களில் செல்லும்படிச் செய்கின்றார்கள்.
4.அந்த வாசல் (உயிர்) வழியாகச் சென்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெற வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று இதனின் உணர்வை நமக்குள் செலுத்த வேண்டும்.

பின் இந்த ஆலயம் வருவோர் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவர்கள் உடல் முழுவதும் படர்ந்து அவர்களது உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று ஆலயம் வருவோர் அனைவரையும் எண்ணும்படிச் செய்தார்கள் ஞானிகள்.

அவர்கள் உணர்த்திய உணர்வின்படி
1.மூக்கு வழி சுவாசிப்பதைக் காட்டிலும்
2.புருவ மத்தியில் நல்லுணர்வை ஈர்த்துப் பருகும் நிலையை நாம் பெற வேண்டும்
3.நமக்கு சொர்க்கவாசல் – புருவ மத்தி வழி… உயிர் வழி.

இப்படி நாம் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நமக்குள் உயிர் வழி சேர்த்துப் பழக வேண்டும்.

வைகுண்ட ஏகாதசி அன்று ஆலயங்களுக்குச் செல்லும் பொழுது இந்த ஆலயம் வருவோர் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் தெய்வ குணங்கள் பெற வேண்டும் தெய்வ நிலைகள் பெற வேண்டும் அவர்கள் குடும்பங்களில் அமைதி பெற வேண்டும் அருள் ஒளி படர வேண்டும் என்று நாமும் மற்றும் அனைவரும் எண்ணும் பொழுது நம்முள்ளும் மற்றும் ஆலயம் வருவோர் அனைவரிடத்திலும் நல்ல உணர்வுகள் விளைகின்றன.
1.அந்த உணர்வுகள் நம்முள் விளைந்து ஒளியின் சரீரம் பெறும் தகுதி நாம் அனைவரும் பெறுகின்றோம்
2.ஞானிகள் மகரிஷிகள் சென்ற சப்தரிஷி மண்டல எல்லையை நாம் அனைவரும் அடைகின்றோம்.

இது தான் வைகுண்ட ஏகாதசி…!

“உயிரைப் போன்றே…” உணர்வுகளை எப்படி ஒளியாக்குவது…?

“உயிரைப் போன்றே…” உணர்வுகளை எப்படி ஒளியாக்குவது…?

 

பாம்பினங்கள் தன் உணவிற்காக மற்றொன்றின் மீது விஷத்தினைப் பாய்ச்சி உணவாக எடுத்தாலும் மற்றதிலுள்ள விஷங்கள் இதனுடன் கலந்து அது பல வித வண்ணங்களாக உறையப்படும் பொழுது நாகரத்தினமாக மாறுகின்றது… அது கல் மயமாக மாறுகின்றது.

1.நமது உயிரின் துடிப்பு மின் மயமாக இருக்கின்றது
2.அதைப் போன்று நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் “உயிரைப் போன்று மின் மயமாக்க வேண்டும்…”

எப்படித் தேனீக்கள் ஒன்றாகச் சேர்த்துத் தேனை உருவாக்கி ஒரு கூட்டினை அமைத்துக் கொள்கின்றதோ இதைப் போன்று நமது உயிரும் இந்த உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் தேனைப் போன்று இணைந்து திடப் பொருளாகி விட்டால் அது கல்லாக மாறிவிடும்… வைரங்களாகிவிடும். கோள்களைப் போன்று பாறைகளாகிவிடும்.

மின் இயக்கத் துடிப்பாக அதன் உணர்வின் இயக்கம் வரும் பொழுது கோள்கள் தன் சுழற்சியில் நடு மையம் வெப்பமாகி அதன் உணர்வினை கவர்ந்து கொண்டு வருகின்றது.

ஆனால் உயிரணு தோன்றி நட்சத்திரமாக்கப்படும் பொழுது தேனீயைப் போன்று தன் உணர்வின் தன்மை ஒளியின் உணர்வுகளை ஒன்றாக எடுத்து ஒளிக்கதிர்களைப் பாய்ச்சிக் கொண்டே உள்ளது.

நாம் தேனை எடுத்து உணவாக உட்கொள்ளும் பொழுது எப்படி அது சுவை மிக்கதாக உள்ளதோ அதைப் போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நாம் நுகர்ந்து
1.நம் உடலில் உள்ள அணுக்களுக்கு அதை ஆகாரமாகச் சேர்த்து அதன் உணர்வினை வளர்ச்சி செய்யப்படும் பொழுது
2.இந்த உடலில் உள்ள விஷத்தை மாற்றி “இனிமை…” என்ற உணர்வை ஊட்டும்.

இந்த உணர்வினை வளர்த்துக் கொள்வதுதான் ஆறாவது அறிவின் தன்மை.

நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்த உணர்வுகள்தான் பரிணாம வளர்ச்சிக்கே காரணமாக இருந்தது. ஆனால் ஆறாவது அறிவான பின் நாம் தீமைகளை நீக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கி நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் ஜீவ அணுக்களை உயிரணுக்களாக மாற்றி… உலக இருளை நீக்கி ஒளி என்ற உணர்வின் அறிவாக ஒருங்கிணைந்து இயக்கும் தன்மை பெற வேண்டும்.

இந்த உயிர் உணர்வின் அறிவாக இந்த உடலை இயக்குகின்றது. ஆனால் இந்த உடலிலே உயிரைப் போலவே ஒளியின் உடலாக மாற்றிச் சென்றவர்கள் மகரிஷிகள்.
1.இந்தப் பிரபஞ்சத்தில் சூரியனே அழிந்தாலும் சூரியனிலிருந்து வெளிப்படும் விஷத்தன்மையைக் கூட
2.ஒளியாக மாற்றிக் கொள்ளும் திறன் பெற்றவர்கள் தான் மகரிஷிகள்.

2000 சூரிய குடும்பத்துடன் இணைந்து வாழ்கின்றது நமது சூரியன். இதைப் போன்று இந்த 2000 சூரிய குடும்பங்களும் அகண்ட அண்டத்தில் மற்ற கோள்களுடன் ஒன்றுடன் ஒன்று இணைந்தே வாழ்கின்றது.

ஒன்றில்லையேல் ஒன்று இல்லை… ஒன்று என்றுமே தனித்து இருந்ததே இல்லை.
1.விஷம் தாக்கும் பொழுதுதான் வெப்பம் உருவாகின்றது
2.வெப்பம் உருவாகும் பொழுதுதான் ஈர்க்கும் சக்தியாக இயக்கச் சக்தியாக மாறுகின்றது.

யாம் உபதேசிப்பதை ஒவ்வொரு நொடியும் கூர்ந்து கவனிக்கும் பொழுது நீங்கள் நுகர்ந்த உணர்வுகள் உங்கள் உடல் உறுப்புகளிலுள்ள ஜீவ அணுக்களின் முகப்பில்… உயிரில் மோதுவது போன்று அந்த அணுக்களும் இந்த உணர்வினைப் பெறும் தகுதி பெறுகின்றது.

அப்படி எல்லா அணுக்களிலும் சக்தி பெறச் செய்வதற்குத்தான் இந்த உபதேசம்.

எனக்கு எப்படி குருநாதர்… என் நினைவினை விண்ணுக்கு அழைத்துச் சென்றாரோ…? அதைப் போன்று
1.உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு
2.அதை ஈர்க்கும் அந்த அருள் சக்தியைப் பெறச் செய்கிறோம்.

இதை எல்லாம் ஏன் முன்பே எங்களுக்குச் சொல்லவில்லை…? என்று கேட்பீர்கள்.

விதையைப் போட்டு முளைத்து… அது வளர வளர அதன் நிலை வேறு விதமாக இருக்கும். அது வளர்ந்த பின்பு அதனுடைய வளர்ச்சியில் வரும் பொழுது எந்த வித்தோ அதைப் போன்று… பின்னாடி தான் உருவாகின்றது.

முதலில் ஏன் சொல்லவில்லை…? என்று கேட்டால்
1.செடி ஓரளவிற்கு வளர்ந்தபின் உரம் போட்டால் தாங்கும்.
2.ஆனால் செடி சிறிதாக இருக்கும் பொழுது உரம் போட்டால் கருகிவிடும்.
3.விஷத்தை ஒளியாக மாற்றும் இந்த உணர்வுகள் சரியான பருவம் வரவில்லை என்றால்
4.நீங்கள் வளரும் பருவத்தை மாற்றிக் கருக்கிவிடும்… செயலற்றதாக்கி விடும்.

ஆகவே… குருநாதர் எமக்கு எந்தெந்தப் பருவத்தில் எதெனெதன் சந்தர்ப்பங்களில் எப்படிக் கொடுத்தாரோ அதைப் போன்று உங்களுக்குள் மனப்பக்குவம் பெறும் நிலையும்… அந்த வளர்ச்சிக்குத் தகுந்தவாறு இந்த உணர்வினை வெளிப்படுத்துவது.

மனப்பக்குவமான பின் இந்த உணர்வுகள் உங்களுக்குள் விளைந்தால் உங்களுடன் பழகும் நண்பர்களுக்கும் “உங்களில் விளைந்த உணர்வுகள்…” நன்மை பயக்கும் சக்தியாக மாறும்.

“இனி வருவோர்க்கு…” உங்கள் மூலமாக அவர்களுக்கும் கிடைக்கும். ஏனென்றால் வளர்ச்சி பெற்ற பருவம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு, அது விளைகின்றது என்பதனை நாம் அறிதல் வேண்டும்.

நாம் இவ்வளவு காலம் 15 – 20 வருட காலமாகச் சாமியிடம் தொடர்பு கொண்டு இருந்தோமே நமக்கு இதெல்லாம் தெரியாமல் போயிற்றே…! என்று இருக்கலாம்.

1.உங்களில் விளைந்ததுதான் இனி வருவோர்க்கு அதன் உணர்வின் சக்தி கொண்டு அவர்கள் உடலில் விளையச் செய்கின்றோம்.
2.நீங்கள் குருவுடன் தொடர்பு கொண்ட… உங்களில் விளைந்த உணர்வுகள்தான்
3.பிந்தி வருவோர்க்கு இந்த உரமான சத்தும் கிடைக்கப் பெறுகின்றது என்பதனை உணர்தல் வேண்டும்.

மெய் ஞானிகள் மனிதரைத் தேடி வந்ததன் நோக்கம் என்ன…?

மெய் ஞானிகள் மனிதரைத் தேடி வந்ததன் நோக்கம் என்ன…?

 

அன்று மெய்ஞானிகள் விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெற்றபின்
1.அந்த அலையின் தொடரைத் தன்னுடன் கூடிய மக்களின்பால் அந்த உயர்ந்த சக்தியை அங்கேயும் பதியச் செய்து
2.அவர்கள் உடலிலே ஆரோக்கிய நிலைகளை வரச்செய்து அதன்பால் அவர்களிடம் நல்ல எண்ணங்களை வெளியிட்டபின்
3.அந்த உணர்வின் சத்தின் துணை கொண்டு தன்னை வளர்த்துக் கொண்டார்கள்.

எனென்றால் தனக்குக் குழந்தைகள் இல்லையென்றாலும் இந்தப் பூமியிலே இருப்போருடன் இணைந்து பலருடைய எண்ணங்களிலும் விண்ணின் சக்தியைப் பாய்ச்சச் செய்தனர்.

காரணம்… கடந்த கால மகரிஷிகள் எல்லோருமே உடலை விட்டுச் செல்லும்போது அவர்கள் விண் செல்லுவதற்குத்தான் இவ்வாறு செய்தார்கள்.

போகரோ வான்மீகியோ வியாசரோ அகஸ்தியனோ அவர்களைப் போன்று எண்ணிலடங்காத மகரிஷிகள் எல்லோருமே
1.தமக்குள் பெற்ற ஆற்றலைச் சாதாரண மக்களின் மத்தியிலே தன் உணர்வின் சொல்லாலே அங்கே பாய்ச்சப்பட்டு
2.அவர் உடல்களில் துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் உணர்வுகளை மாற்றி
3.நல்ல சொல்களை அவர்களிடமிருந்து வெளிப்படச் செய்து
4.அவர்கள்பால் அந்த நல்ல எண்ணங்களை ஈர்த்துக் கொண்டார்கள்.

இப்போது யாம் உங்களுக்கு ஒரு நன்மையைச் செய்கிறோம் என்று எண்ணும்போது அந்த நன்மையின்பால் எம்மைப் பார்க்கின்றீர்கள். இவரால் நல்லது நடந்தது என்று நீங்கள் எண்ணும் எண்ண அலைகள் ஒன்று சேர்த்துக் கலக்கிறது.
1.உங்களது உணர்வின் எண்ணம் எமக்குள் பதிவாகின்றது.
2.எமது எண்ணம் உங்களுக்குள் நல்லதை உருவாக்குகின்றது.

அப்படி நல்லதை உண்டாக்கப்படும் போது அந்த உணர்வு கொண்டு யாம் இந்த உடலை விட்டுச் சென்றாலும் நீங்கள் எல்லோரும் எண்ணும்போது யாம் விண் செல்ல முடிகின்றது.

இப்படித்தான்
1.அன்றைய மெய் ஞானிகள் ஒளிச் சரீரம் பெற்று விண் சென்றார்கள்.
2.ஆகவே நாம் அனைவரும் அவர்கள் சென்ற வழியிலேயே விண் செல்வோம்.

ஈரேழு லோகத்தையும் வென்றவன் விண் சென்றான்

ஈரேழு லோகத்தையும் வென்றவன் விண் சென்றான்

 

அகஸ்தியர் தன் தாய் கருவிலேயே நஞ்சினை வென்றிடும் ஆற்றல் பெற்று அகண்ட அண்டத்தையும் தன்னுள் நுகர்ந்து ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றார். அதன் அறிவைத்தான் செவி வழி ஓதி உங்கள் நினைவினை அங்கே அழைத்துச் செல்வது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வரிசைப்படுத்தி
1.அதனுடன் சுழன்று உங்கள் உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது
2.அகண்ட அண்டத்தில் வருவதையும் உங்கள் உணர்வுக்குள் அது பெறும் உணர்ச்சியின் நிலையை
3.அணுவாக மாற்றும் நிலையாக உருப்பெற்று விட்டால் தன்னிச்சையாக அது நுகரும் சக்தி பெறுகின்றது.
4.உங்களால் நினைத்த நேரத்தில் அகண்ட அண்டத்தினையும் அதன் செயலாக்கங்களையும் காண முடியும்.
5.அருள் ஞானியின் உணர்வைச் சேர்த்துப் பகைமை உணர்வு வராது “பேரின்ப உணர்வினை” உங்களுக்குள் உருவாக்க முடிகின்றது.

எமது அருள் குரு அருளால் கிடைத்தது. குரு அருள் பேரருளைக் கவர்ந்து அவர் உணர்வு என்னைப் பக்குவப்படுத்தியது போல் உங்களைப் பக்குவப்படுத்துகின்றேன்.

இதில் எவர் ஒருவர் தொடர்ந்து வருகின்றாரோ அவர் இவ்வாழ்க்கையைச் சீர்படுத்தி வாழவும்… அடுத்து என்றும் பிறவியில்லா நிலைகளை அடையவும் இது உதவுகின்றது.

1.குறுகிய காலமே இருக்கும் இந்த உடலுக்கு வலுவைச் சேர்ப்பதைக் காட்டிலும்
2.உயிருக்கு அருள் ஒளி என்ற வலுவை உருவாக்குதல் வேண்டும்.

இது தான் வாழ்வின் கடைசி எல்லை.

ஒளியின் உணர்வாக உருவாக்கப்பட்டது உயிர். ஆறாவது அறிவின் துணை கொண்டு “நம் அணுக்களை ஒளியின் உணர்வாக உருவாக்கக் கற்றுக் கொள்வதுதான்” பிரம்மாவைச் சிறை பிடித்தான் என்பது.

உயிர் நுகர்ந்ததை உருவாக்குகின்றது… அதே சமயத்தில்
1.அந்த உணர்வுகள் உடலுக்குள் அணுவாகும் பொழுது
2.உயிரைப் போன்றே ஆக்கப்படும் பொழுது நல்ல ஒளியின் உணர்வை உருவாக்குகின்றது.
3.இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்தால் ஒளியின் தன்மை கூடுகின்றது.

சற்றுச் சிந்தனை செய்து பாருங்கள். வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்து இது தவறு இது கெட்டது என்று உணர்வினை நுகர்ந்து நுகர்ந்து இதனைக் கலந்து கலந்து இந்த உடலினை உருவாக்கியது உயிர்.

1.அவனே நம்மை உருவாக்கினான்… ஈசனாக இருந்து உள் நின்று இயக்கிக் கொண்டு உள்ளான்,
2.கடவுள் என்ற நிலையில் நாம் எதனை நுகர்ந்தோமோ அவை நம்முள் நின்று அதனின் துணை கொண்டு அங்கே இயக்குகின்றது.
3.அவனல்லாது உணர்வுகள் இயங்குவதில்லை… அவன் தான் உருவாக்குகின்றான்.
4.ஆகவே அமைதி கொண்டிருக்கும் நேரத்தில் உணர்வின் தன்மையை ஒளியாக்க வேண்டும்.

நம் குருநாதர் என்னை அகண்ட அண்டத்திற்கே அழைத்துச் சென்றார். அவர் காட்டிய அருளின் நினைவைப் பதித்து
1.உங்கள் கண்ணின் நினைவை என்னிடத்தில் செலுத்தினாலும் நீங்களும் அண்டத்தில் மிதக்கின்றீர்கள்.
2.அதனின் உணர்வை நினைவை கொள்ளும் பொழுது அதன் அருளை நீங்களும் பெற முடியும்.

அண்டத்திலுள்ளது இந்த பிண்டத்திலும் உண்டு. அகண்ட அண்டத்தைத் தெளிவு படுத்தியவன் அகஸ்தியன்.

அவன் துருவனாகி துருவ நட்சத்திரமானான். அகண்ட அண்டத்தில் வருவதை ஒளியாக மாற்றுகின்றான். அதன் உணர்வின் தன்மை இந்தப் பிண்டத்திற்குள் (நமக்குள்) சேர்க்கப்படும் பொழுது அகண்ட அண்டத்தில் வருவதையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற முடியும்.

நீங்கள் சிறிதளவே இருப்பினும் இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள்ளும் பரவுகின்றது. இந்தப் பூமியிலும் பரவுகின்றது. அதன் உணர்வின் நினைவு கொண்டு கவருங்கள்.

சூரியனில் இருந்து வரக்கூடிய நிறங்கள் ஆறு… ஏழாவது ஒளி. இதைத்தான் சூரிய பகவான் வருகின்றான் என்று வேக ஓட்டத்தைக் காட்டி, ரதத்தைக் காட்டியது.

அந்த ஏழு கலர் ஓட்டத்தை நமக்குள் எடுத்தால் நம்மை அந்த உலகத்திற்கு இட்டுச் செல்லும். ஆகவே
1.மனிதனான ஆறாவது அறிவின் நிலைகள் வரும் போது ஏழாவது ஒளியின் நிலைகள் அடைதல் வேண்டும்.
2.இதுதான் “ஈரேழு லோகத்தை வென்றவன் விண் சென்றான்” என்பது.
3.அவன் தனி உலகமாக ஒளியின் உணர்வாக மாற்றுகின்றான். அவன் ஏகாந்த நிலைகள் பெறுகின்றான்.

சூரியனில் இருந்து வரக்கூடிய கலர்கள் ஆறு. ஒளி ஏழு. மனிதனின் அறிவு ஆறு. மற்றதைத் தெளிந்து உணர்ந்து ஒளியாக மாற்றுவது ஏழு.

காவியங்களில் ஈரேழு லோகத்தையும் தேடிப் பார்த்தேன் என்று சொல்கின்றனர். மனிதனுக்குள் உணர்வுக்குள் இந்த ஏழு லோகத்திற்குள் தேடி நாம் காணுதல் வேண்டும். மேலே ஏழு என்ற உணர்வுகள் மனிதனுக்குள் உண்டு. ஆக நமக்குள் தேடினால் உண்டு.

அகண்ட அண்டத்தின் நிலைகள் இந்தப் பிண்டத்தில் உண்டு. ஆகவே நாம் விண்ணின் ஒளியாக மாற்றும் உணர்வு பெற்று உயிர் என்ற நிலை பெற்று உணர்வின் ஏழாவது ஒளியாக மாற்றும் திறன் பெற்று இருப்பினும் இருள் சூழும் நிலைகளிலிருந்து மீள்தல் வேண்டும்.

ஒளியாக ஒன்றாக இருக்கின்றது. பல வர்ணங்கள் ஒளியின் நிலையை மறைத்திடும் பொழுது அந்த வர்ணத்தைத்தான் காட்டுகின்றது.
1.நமக்குள் எந்த குணத்தின் தன்மை வருகின்றதோ அந்த வர்ணத்தின் செயலாகத்தான்
2.இருள் சூழ்வதும் சிந்திப்பதும் சிந்தனையற்ற நிலைகளும் வருகின்றது.
3.ஆகவே பேரருள் என்ற உணர்வினை எடுத்து நமக்குள் பேரொளியாக மாற்ற வேண்டும்.

அந்த உணர்வின் தன்மையை உங்களில் உருவாக்கத்தான் இந்த நிலை.

யாரும் குற்றவாளியல்ல. குற்றத்தைச் செய்பவரும் அல்ல. சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வே நம்மை அந்த வழிக்கு அழைத்துச் செல்கின்றது. நுகர்ந்தது நமக்குள் விளையாது அருள் ஒளி என்ற உணர்வைக் கொண்டு இருளை நீக்கப் பழக வேண்டும்.

இதற்குத்தான்
1.அதிகாலை நேரத்தில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வலைகளை நீங்கள் நுகர்ந்து
2.இருளை மாய்த்து ஒளி என்ற உணர்வைப் பெற வேண்டும் என்று தியான நிலைகளிலேயே உபதேசத்தைக் கொடுத்து
3.உங்களை அகண்ட அண்டத்திற்கே அழைத்துச் சென்றது.

முதலில் “நம் முன்னோரை ரிஷியாக்க வேண்டும்”

நாம் ரிஷியாக வேண்டும் என்றால் முதலில் “நம் முன்னோரை ரிஷியாக்க வேண்டும்”

 

நாம் சிறு வயதினராக இருக்கும் பொழுது நமது முன்னோர்கள் நாம் அனைத்துத் துறையிலும் சிறந்து இருக்க வேண்டும் என எண்ணி நமக்குப் பல வகைகளிலும் பாசத்தைக் காட்டி நல் அறிவினை ஊட்டி வளர்க்கின்றனர்.

ஆனால் நமது முன்னோர்கள் நமக்கு எடுத்துச் சொல்லும் உயர்ந்த சிறந்த அறிவுரைகளை ஒதுக்கிவிட்டு மாற்றுக் கருத்துக்களில் நாட்டம் செலுத்தி அதன் வழி செல்லும் பொழுது “நமது முன்னோர்கள் வேதனை அடைகின்றனர்…”

1.“நாம் சொன்னபடி செய்யவில்லை… தவறான பாதையில் செல்லுகின்றானே… உருப்படுவானா…?” என்று
2.கோபமும் வேதனையும் கலந்த சொற்கள் அவர்களிடமிருந்து வெளிப்படுகின்றன.

நாம் எல்லா நிலைகளிலும் உயர்ந்து சிறப்புற வேண்டும் என்ற அவர்களுடைய பாச உணர்வுகளும் நம்மிடத்தில் பதிவாகின்றன.

அதே சமயத்தில் அவர்கள் சொல்லை மதிக்காது செயல்பட்ட நிலைகளில் அவர்கள் வெளிப்படுத்திய கோப உணர்வுகளும் நம்மிடத்தில் பதிவாகின்றன.

ஒரு செடி எதிர்மறையான சூழ்நிலையைச் சந்திக்கின்ற பொழுது தன்னுடைய வளர்ச்சியை இழக்கின்றது.

அது போன்றே நமது முன்னோர்கள் நம் மீது பற்று பாசத்துடன் இருந்தாலும் அவர்களுடைய அறிவுரைகளை மறுத்து இயங்குகின்ற பொழுது அவர்கள் கோப உணர்வு கொண்டு நம்மைப் பார்க்கும் பொழுதெல்லாம் சலிப்பு வேதனை வெறுப்பு கோபம் ஆத்திரம் போன்ற உணர்வுகள் அவர்களிடம் உருவாகின்றன.

இவ்வாறு நம் மீது பாசமாக இருக்கும் அவர்களின் உடலில்
1.பாசம் கோபம் ஆத்திரம் என உணர்வுகள் மாறி மாறி இயங்கி
2.உடலில் சீரற்ற நிலைகளை உருவாக்கி நோய்களை அவர்களிடத்தில் உண்டாக்கி விடுகின்றது.

மேலும் நம்மைப் பார்க்கும் பொழுதெல்லாம் கலக்கம் வேதனை சஞ்சலம் என்ற உணர்வுகளை அவர்கள் சுவாசிக்க நேர்ந்து…
1.அவர்களுடைய சரீரத்தில் இத்தகைய எண்ண அலைகளே அதிகமாக விளைகின்றது.
2.நல்ல உணர்வுகள் விளைவதே இல்லை.

உதாரணமாக நல்ல வயலைப் பண்படுத்தி நல்ல விதைகளை ஊன்றினாலும் அதனிடையே களைகள் உருவாகி ஓங்கி வளர்வது போன்றுதான்
1.பாச உணர்வுகள் உள்ள இடத்தில் சிறிதளவு வெறுப்பிற்கு இடமளிக்கும் பொழுது
2.அங்கே வெறுப்பான உணர்வுகளே அதிகமாகிப் பாச உணர்வுகளை மங்கச் செய்துவிடுகின்றன.

இவ்வாறு நம் குடும்ப வாழ்க்கையில் வேதனையுறச் செய்யும் சந்தர்ப்பங்களை அறிந்து அவற்றை விலக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
1.அருள் ஞானிகளின் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
2.எங்களை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் ஈஸ்வரா
3.நாங்கள் பார்ப்பவரெல்லாம் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா என்று நாம் எண்ணி
4.இந்த உணர்வின் சக்தியை நம்மிடத்தில் வளர்க்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் அன்னை தந்தை காட்டிய நல்வழி அனைத்தையும் நாங்கள் செயலாக்கி… அவர்கள் எண்ணிய நல் உணர்வுகள் எங்களுக்குள் விளைந்து… ஆக்கமான எண்ணங்கள் எங்களுக்குள் விளைந்து…
1.எங்கள் சொல்லிலும் செயலிலும் புனிதம் பெறும் தன்மையாகவும்
2.அவர்கள் காண்பித்த நல்வழியின் நிலைகள் எங்களுக்குள் ஓங்கி வளர வேண்டுமென நாம் தியானிக்க வேண்டும்.

எங்கள் குலதெய்வமான மூதாதையர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து என்றும் நிலையான ஒளிச்சரீரம் பெற வேண்டும் என்றும் சப்தரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நமது சரீரத்தில் உயிரில் இந்த உணர்வுகளைச் சேர்க்க வேண்டும்.

“நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்…” என்ற கீதையின் தத்துவப்படி நம் முன்னோர்கள் எதைப் பெற வேண்டும் என்று ஏங்குகின்றோமோ அதனை நாமும் பெறுகின்றோம்.

“நம்முடைய முன்னோர்கள் சப்தரிஷி மண்டலத்தின் ஒளிவட்டத்தில் கலந்து நிலையான ஒளிச்சரீரம் பெற வேண்டும்…” என்று உந்தித் தள்ளும் பொழுது
1.நமது முன்னோர்களும் ஒளிச்சரீரம் பெறுகின்றனர்.
2.அதனின் பயனாக நாமும் அடுத்து அங்கே செல்ல ஏதுவாகும்.

நம் உணர்வின் சக்தியை விண்ணை நோக்கிச் செலுத்தினோமானால்
1.நம் முன்னோர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்த உதவிய நம்முடைய நினைவுகள் துரித நிலையில் இயங்கி
2.மகா ஞானிகளின் உணர்வைத் துரித நிலையில் நாம் ஈர்க்கவும்
3.நம்மிடத்தில் வருகின்ற தீமைகளை அந்த விநாடியே அகற்றவும்
4.மெய்ஞானிகளின் உணர்வை நம்மிடத்தில் வளர்க்கவும்
5.அந்த உணர்வுகள் ஒளியின் சரீரமாக வளரவும் உதவி செய்கின்றன.

மேலும் ஒளி கண்டு இருள் விலகுவது போன்று… இருளுக்குள் இருக்கக்கூடிய பொருள் தெரிவது போன்று நமது வாழ்வில் “பொருளறிந்து செயல்படும் திறனைப் பெறுகின்றோம்…”

சப்தரிஷி என்பவர் யார்…?

ஆறாவது அறிவின் துணை கொண்டு தீயவுணர்வுகளை மாய்த்து நல் உணர்வுகளை வளர்க்கச் செய்யும் தன்மை வாய்ந்த ஏழாவது அறிவினைத் தன்னிடத்தில் பெற்றவர்களைச் சப்தரிஷி என்று நாம் அறிந்துணர வேண்டும்.

அத்தகைய தன்மை வாய்ந்த சப்தரிஷிகளின் சிறப்பை நம் முன்னோர்கள் பெற வேண்டும் என்று நாம் தியானிக்கும் பொழுது நாமும் அத்தகைய ரிஷியின் தன்மையைப் பெறுகின்றோம்.

சிறிது காலத்திற்காவது நமது முன்னோர்களை எண்ணித் தியானித்திடும் பொழுது
1.அவர்கள் சப்தரிஷித் தன்மை பெற்று விடுகின்றனர்.
2.அதைத் தொடர்ந்து நீங்களும் ரிஷித்தன்மையைப் பெறுகின்றீர்கள்.
3.நீங்கள் ரிஷியாக வேண்டும் என்றால் முதலில் “உங்கள் முன்னோரை ரிஷியாக்க வேண்டும்” என்பதை உணர வேண்டும்.

விஞ்ஞானி ஒரு இராக்கெட் மூலம் செயற்கைக் கோளை விண்வெளிக்கு அனுப்புகின்றார். பின் அந்தச் செயற்கைக் கோளின் துணைக் கொண்டு விண்ணின் நிலையைப் பூமியில் பெறுகிறார்.

அது போன்று நாம் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை நமது எண்ணத்தின் வலுக்கொண்டு விண்ணிற்கு அனுப்பும் பொழுது அந்த ஆன்மாக்கள் பெறும் ஆற்றலை நாம் பெற முடியும்.

அதே சமயத்தில்…
1.நம்முடைய முன்னோர்களின் நினைவு நாட்களைக் கொண்டாடி விட்டோம்.
2.அவர்களுடைய உயிராத்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று தியானித்து விட்டோம்.
3.அதன் மூலம் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றி விட்டோம் என்று கருதுவோமேயானால்
4.அதன் பிறகு நாம் வளர்வதே இல்லை.

பதிலாக…
1.நம்மிடத்தில் முன்னோர்களின் உயிராத்மாக்களை விண் செலுத்திய நினைவுகளும்
2.அவர்கள் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைய வேண்டும் என்ற ஏக்கமும்
3.நம்மிடம் என்றுமே… இருந்து கொண்டே இருக்க வேண்டும்…!