நீல வண்ண குணத் தன்மை

நீல வண்ண குணத் தன்மை

 

போகம் என்பது உடலியலில் அனுபவித்தல் என்று பொருள்படும்.

உயிரணுக்கள் உயிரின் செயலுக்கு உணர்வுகளின் வழி அனுபவிக்கும் செயல் போகம் சிற்றின்ப போகம் என்றும்… பேரின்ப போகம் என்றும் வழி அமைத்து
1.சிற்றின்ப போகம் சந்ததியின் வளர்ச்சிக்காக மட்டும் என்றும்
2.அந்த வளர்ப்புப் பெற்று விட்டால் மனிதன் பேரின்பப் போகமாக்கும் தன்மைகளை வகைப்படுத்தி
3.உணர்வுகளின் சஞ்சலம் மாற்றியமைத்துப் பெறும் பேறே பேரின்ப போகம் என்று அறிந்ததே “போகநாதர் சொன்ன போகமாகும்…!”

நாம் எடுக்கும் தியானத்தின் பலத்தால் காயகல்ப நிலைக்கு உட்படுத்தித் தெய்வீக சக்திக்கு வழியமைத்து உயிரான்மா உயர்ந்த சக்தி பெறும் மார்க்கத்தைப் போகர் உணர்ந்தார்.

வானிலே சுழன்று கொண்டிருக்கும் விண்மீன்களின் அமில சக்திகளையும் நவக்கோள்கள் என்ற நவபாஷாண சக்திகளையும் நம் உயிராத்மா பெறுவதற்காக முருகன் சிலையை நிர்மாணித்தார்.

வானுலக ஆற்றலை… அந்த அமுதத்தைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் யார் யார் எல்லாம் “முருகா…” என்ற ஏக்கத்தில் வருகின்றார்களோ அந்த ஆன்மாக்களையும் தன்னுடைய ஈர்ப்பிலே வளர்ச்சிப்படுத்தி
1.புவியியல் தன்மையை வானியல் படுத்தி போகர் “போகமாமகரிஷி” ஆனார்.
2.பேரின்பப் போகமாகிய ஆனந்தப் பரவச பேரானந்தச் சூட்சம நிலை பெற வழி அமைத்தார்.
3.போகமாமகரிஷியின் அருளாசி வேண்டி வணங்குகின்றேன் ஈஸ்வரா…!

உயிரான்மாவின் தத்துவத்தில் உயிர் சக்தியின் தொடர்பு உச்சி முதல் உள்ளங்கால் வரை மேலிருந்து கீழுமாகவும் கீழிருந்து மேலுமாகவும் ஓடிடும் அமைப்பு உள்ளது.

உயிரணுக்கள் சரீரம் பெற்ற பின்பு உயிரோட்ட ஒளி சக்தி மனிதச் சரீரத்தில் மேலிருந்து கீழுமாக ஓடிடும் நிலையில் மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்க பேரருள் பேரொளி உணர்வுகளை நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் சுழலச் செய்யும் செயலினால்
1.ஞான விழிப்பார்வை கொண்டு உற்று நோக்கினால்
2.”ஆத்ம லிங்கம்…!” என்ற ஆத்மா புலப்படும். அதுவே “சிவஸ்வரூபம்…!”

விழி படம் எடுத்து நாசியின் சுவாசம் கொண்டு எண்ணத்தின் பிடர்தலில் (மெய் ஞானிகளின் வழியில்) அறிந்திடும் தொடரில் அறியும் செயலுக்கு நாம் வளர வேண்டும்.

ஞானத்தின் வளர்ப்பில் நல்லாக்கம் என்பது எது…?

1.எண்ணம்… சொல்… செயல்…! மூன்றிலும் நேர்கோடாகக் கடைப்பிடிக்கும் தத்துவத்திற்கு வர வேண்டும்.
2.தீவினையான எண்ணங்களை விடுத்துப் பரிசுத்தம் என்ற நிலையில் நல் வினைகளை வளர்க்கும்
3.திடமான – வைராக்கியச் சிந்தனை கொண்டிட்டால் அகத்தின் பொருளை நிச்சயம் அறியலாம்.

அகத்தினை அறிந்திடும் அருள் வழியில் தன்னுடைய சிந்தனையை வீரியமாக்கி…
1.நற்செயலுக்கு வழி அமைத்து…
2.அதைச் சொல்லால் வெளிப்படுத்தும் அன்பிலும்
3.அந்தச் சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் நடைமுறைப் பண்பிலும்
4.நிகழ்த்தும் செயலை எவன் ஒருவன் கைக் கொள்கின்றானோ
5.அவன் பரம்பொருள் என்ற சூட்சமத்தில் கலந்திடும் தகுதி பெறுகின்றான்.

நிறம், மணம், நீர் அமிலம் என்ற முத்தொடர் மூலத்திலிருந்து ஒன்றுடன் ஒன்று கலந்து கோடானு கோடி உயிரணுக்கள் செயல்படும் அமில குணத் தன்மைகளை பூமியிலிருந்து வானத்தைப் பார்க்கும் பொழுது காண முடிகிறது.

அதாவது இரவிலே இருள் என்ற கரிய வண்ணமும் (பேரண்ட இருள் பால்வெளி சூட்சமம்) சூரிய ஒளி பூமியின் ஈர்ப்பில் படர்ந்திடும் பகல் பொழுதில் நீல வண்ணக் குணத் தொடரிலும் பார்க்கலாம்.

ஆனால் அவைகளுக்கு அருகாமையில் நெருங்கிச் சென்று… உணர்வால் சுவாசத்தால் ஈர்த்தெடுத்து உணர்ந்திடும் பொழுது
1.உயிரணுக்கள் பெற்றிட்ட நீல வண்ண குணத் தன்மை உட்சென்று
2.உணர்ந்து அறியும் செயலில் தூய வெண்ணிற ஒளி தான் புலப்படும்.
3.மூல சக்தி செயலில் நடை பெறும் கிரியைகளை நாம் உணர்ந்து அறிதலே சிறப்பு.
4.அது தான் தனித்துவ சக்தி நிலை பெறும் “உயர் ஞான வளர்ப்பின் ஆக்கம் ஆகும்…!”

முன்னோர்களின் ஆன்மாக்களை “மிருக உடலின் ஈர்ப்புக்குள்” நாம் செல்ல விடக்கூடாது

முன்னோர்களின் ஆன்மாக்களை “மிருக உடலின் ஈர்ப்புக்குள்” நாம் செல்ல விடக்கூடாது

 

சப்தரிஷி மண்டலங்களையும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியையும் நாம் தியானித்து இந்த உடலில் வலுப்பெற்ற பின்
1.எந்த மூதாதைகளின் குல உணர்வுகள் நமக்குள் இருக்கின்றதோ
2.உடலை விட்டு பிரிந்து சென்ற அந்தச் சூட்சம சரீரம் ஆனவர்களை உந்தித் தள்ளி
3.சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்கச் செய்ய வேண்டும்.

மகரிஷிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கி உணர்வுகளை ஒளியாக மாற்றி உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து எப்படி ஒளியின் சரீரம் ஆனார்களோ… அதே போன்று மூதாதையர்களை அங்கு அனுப்பப்படும் பொழுது அந்த உயிராத்மாக்கள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்வதும்… ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாறி வாழத் தொடங்கும்.

விண்ணிலே அந்த உயிரான்மாக்களைச் செலுத்தப்படும் பொழுது அவர்கள் உணர்வின் அறிவே நமக்குள் உண்டு. நாம் எண்ணும் போதெல்லாம் அந்த விண்ணின் ஆற்றலை எளிதில் பெற்று… வாழ்க்கையில் வரும் துன்பங்களை நாம் அகற்றிக் கொள்ள முடியும்.

முதலில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் வலுவாக்கி அதன் துணை கொண்டு மூதாதையர்களை விண் செலுத்த வேண்டும்.

நம் முன்னோர்கள் எத்தனையோ துயரப்பட்டுத் தான் நம்மை வளர்த்தார்கள். அவர்களின் உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரைக்கப்படும் பொழுது உயிருடன் ஒன்றி ஒளியாக மாறுகின்றார்கள்… வேகாநிலை…!

உணற்வின் தன்மைகள் சாகாக்கலையாக இயக்கினால் அந்த விஷத்திற்குத்தக்க மீண்டும் உடலை அமைத்துவிடும். ஆகவே இதை மாற்றி விண் செலுத்த வேண்டும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் மூதாதையர்களைச் செலுத்தவும்… ஞானிகள் உணர்வுகளை வலுவாக்கி… தியானத்தின் வலுவின் துணையால்
1.அந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை
2.நம் பூமியின் துருவத்தின் எல்லை ஓரத்தில் இருந்து சுழன்று கொண்டிருக்கும்
3.துருவ நட்சத்திரத்துடன் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய ஏதுவாக இருக்கும்.

அதன் வழியில் இணைத்து விட்டால் உடல் பெறும் உணர்வுகள் கரைந்து விடுகின்றது. அவர்களும் சப்தரிஷிகளாக ஆகிவிடுகின்றார்கள்.

அவர் உயிர் பெற்று உணர்வின் தன்மை உடல் பெற்ற பின் அவர்களும் உயிருடன் ஒன்றிய உணர்வு ஒளியாக்கப்படும் பொழுது இந்த உணர்வினை நாம் எளிதில் பெற்று வாழ்க்கையில் வரும் துன்பங்களை நாம் அகற்ற முடியும்.

அத்தகைய தன்னம்பிக்கையை ஊட்டத்தான் இதிலே பல அனுபவங்களையும்…
1.உயிரான்மாக்களை எப்படி விண் செலுத்துவது…? என்று அனுபவ ரீதியிலே கொண்டு வந்ததனால்
2.உங்களில் இந்த உணர்வைக் கூட்டி… “ஆயிரக்கணக்கோர் இந்த உணர்வுடன் துணை கொள்ளும் பொழுது” எளிதில் விண் செலுத்த முடியும்.

ஆனால் இதற்கு முன் அதைச் செய்யத் தவறிவிட்டோம் இப்பொழுது இங்கே சொல்லும் முறைப்படி முன்னோர்களை விண் செலுத்தலாம்.

1.இன்னொரு உடலுக்குள் சென்றிருந்தாலும் அங்கே ஆவியாகத்தான் இருக்கும்
2.அந்த உடல் மடிந்த பின் அந்த உடலைக் கடந்து வெளியே வந்தால் மிருக உடலைப் பெற்று விடும்
3.மிருக உடல் பெற்றால் அவர்களை நாம் யாரும் மாற்ற முடியாது.

ஒரு உடலுக்குள் ஆவியின் நிலையாக இருக்கும் போது நாம் விண் செலுத்துவதற்காகப் பாய்ச்சும் உணர்வுகள் அவர்கள் சுவாசிக்கும் உணர்வுடன் கலக்கின்றது. (ஏனென்றால் சுவாசத்தில் கலந்து தான் அந்த ஆவியின் இயக்கமும் வருகிறது).

சுவாசித்த உணர்வு அவர்களுக்குள் செல்லப்படும் பொழுது இன்னொரு உடலுக்குள் ஆவியாக இருக்கும் முன்னோரின் ஆத்மாவிற்குள் இது சேர்க்கப்பட்டு உடல் பெறும் உணர்வை மாற்றி அமைக்கும் அமைப்புகள் வருகின்றது.

1.இப்படி அமைத்த பின் உடலை விட்டு அந்த ஆன்மா வெளியே வந்தால்
2.காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தினுடைய வலுவை நாம் சேர்த்துக் கொண்டு
3.உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று செயல்படுத்தினால்
4.அந்த ஆன்மாக்களை நாம் எளிதில் பிறவி இல்லா நிலை அடையச் செய்ய முடியும் (மிருக உடல் பெறுவதை மாற்றி அமைக்க முடியும்).

ஆனால் செய்யத் தவறினால் என்ன ஆகும்…?

அவர் வாழ்ந்த காலத்தில் அவர் பட்ட துயரமும் அவருடைய உணர்வின் எண்ணங்களும் நமக்குள் பதிவாகி இருக்கும். அவருடைய நினைவாற்றலும் நமக்கு அடிக்கடி வரும்… அவர் வாழ்ந்த காலத்தையும் நாம் எண்ணுவோம்.

1.அப்போது அவர் பட்ட வேதனை நமக்குள் உருவாகும்… பரம்பரை நோயாக உருவாகி விடும்.
2.நமக்குப் பின் வரும் சந்ததிகளுக்கும் இதே உணர்வு வந்துவிடும்.
3.ஆக… குல வழியில் ஒரு பக்கம் கெட்டது என்றால் அந்த கெட்ட உணர்வின் தன்மையே நமக்குள் வளர்த்து விடும்

இது போன்ற நிலையில் இருந்து எல்லாம் விடுபடுவதற்கு நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மூதாதையர்களை விண் செலுத்த முயற்சி எடுங்கள்.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தோறும் அதற்காகத்தான் இதை உபதேசிக்கப்பட்டு எல்லோருடைய உணர்வுகளையும் அங்கே குவிக்கச் செய்து உங்களுக்குள் வலு சேர்க்கின்றோம்.

அந்த உணர்வினைக் கொண்டு தியானித்து சப்தரிஷி மண்டல உணர்வுகளை ஏங்கிப் பெற்று “முன்னோர்கள் மூதாதையர்களின் ஆன்மாக்களை விண் செலுத்தப் பழகிக் கொள்ளுங்கள்…”

துருவ நட்சத்திரத்தின் பற்றை அதிகரித்துப் புவியின் பற்றைத் தகர்க்க வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் பற்றை அதிகரித்துப் புவியின் பற்றைத் தகர்க்க வேண்டும்

 

நாம் பார்த்து கேட்டு நுகர்ந்த தீமையின் உணர்வுகள் நம்மை இயக்காதபடி தடுக்க வேண்டும் என்றால் அடுத்த கணமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை துரிதமாக எடுத்து உடலுக்குள் செலுத்தினால் தீமைகள் புகாது தடுக்க உதவும்.

இதை எல்லாம் அதிகாலையில் நாம் அதிகமாகப் பெருக்கி வர வேண்டும்
1.அருள் உணர்வுகளை நமக்குள் சேர்க்கச் சேர்க்கச் சேர்க்க துருவ நட்சத்திரத்தின் பற்று நமக்குள் அதிகரிக்கிறது.
2.இந்தப் புவியின் பற்றை நாம் தகர்த்துக் கொண்டே வருகின்றோம்.
3.இந்த உடலுக்குப் பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு உயிர் நம்மை அழைத்துச் செல்கின்றது.

இந்த உயிர் உடலில் சேர்த்த தீமையின் உணர்வுகளை… துருவ நட்சத்திரத்தின் அருகில் இந்தத் தீமைகள் செல்லப்படும் பொழுது
1.உடலில் பெற்ற தீமையின் உணர்வுகளைக் கருக்கிவிட்டு இருளை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றது
2.எத்தகைய நஞ்சாக இருந்தாலும் அது மாற்றி விடுகின்றது.

பாம்பு விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை உணவாக உட்கொண்டாலும்… அந்த விஷம் அதற்குள் மீண்டும் சேமிக்கப்பட்டு நாகரத்தினமாக மாறுகின்றது.

அது போல் நமது வாழ்நாளில் அருள் மகரிஷிகளின் உணர்வுகளைச் சேர்க்கச் சேர்க்க… நம் உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாறுகின்றது.

மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் தான் இதைச் செயல்படுத்த முடியும்.

மிருகங்கள் தான் வாழ தன்னைக் காட்டிலும் வலுவான உணர்வுகளைச் சுவாசிக்கப்படும் பொழுது அந்த உணர்வை வளர்த்து… அந்த உடலுக்குப் பின் மாற்று உடலாகப் பரிணாம வளர்ச்சிக்கு வருகின்றது.

மனிதரான நாம் அன்பும் பரிவும் கொண்டிருப்பினும் பிறருடைய நோய்களைக் கேட்டறிந்து உதவி செய்தாலும் அந்த நோயின் வலிமை மிக சக்தி வாய்ந்தது… விஷம் கலந்தது.

அதை நாம் நுகர்ந்தால் அந்த விஷத்தின் உணர்வுகள் நம் நல்ல குணங்களுடன் கலந்து விடுகின்றது… பின் அந்த நல்ல குணங்களையும் வீழ்த்தி விடுகின்றது.

இத்தகைய உணர்வுகள் கலக்கக் கலக்க மனிதனை உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் நலிந்து அந்த அணுக்கள் மடியத் தொடங்கும்… உடல் உறுப்புகளும் குறையத் தொடங்கும்.

குறைந்த உணர்வின் தன்மை இந்த விஷத்தின் தன்மை பெருக்கப்படும் பொழுது உயிர் உடலை விட்டுச் செல்லும் பொழுது மனிதனல்லாத உருவை உருவாக்கிவிடும்.

ஆனால்
1.அருள் மகரிஷிகள் உணர்வைச் சேர்க்கச் சேர்க்க இந்த உடலை விட்டுச் செல்லும் ஆன்மா
2.எதன் வலுக் கொண்டதோ அதன் அருகில் அழைத்துச் செல்லும்.
3.அங்கே வெளிப்படும் தீமைகளைக் கருக்கிடும் உணர்வுகள் பட்ட பின்
4.இந்த மனித வாழ்க்கையில் நம் ஆன்மாவில் பட்ட தீமைகளைக் கருக்கி விட்டு
5.உயிரின் ஈர்ப்பு துருவ நட்சத்திரத்தின் பால் சென்று… பேரருள் பேரொளியாக அழியாத ஒளியின் சரீரமாகப் பெற முடியும்.

இந்த உயிர் தோன்றி மனிதனாக ஆன பின் தான் உயிர் முழுமை அடைகின்றது… ஒளியின் சரீரம் பெறுகின்றது. ஆகவே
1,நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்…
2.அந்த மகரிஷிகள் பெற்ற அழியா ஒளிச் சரீரத்தை நாமும் பெறுவோம்.

வாழ்க்கையில் வரும் இருளை அகற்றிப் பேரருள் பெற்று இல்லற வாழ்க்கையில் பேரின்பப் பெரு வாழ்வு என்று நீங்கள் வாழப் பிரார்த்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).

உடலை விட்டுப் பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய “கைம்மாறு”

 

உடலை விட்டுப் பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய “கைம்மாறு”

 

குடும்பத்தில் யாராவது உடலை விட்டுப் பிரிந்தால்… எனக்கு எல்லா உதவியும் செய்தார்… திடீரென்று போய்விட்டாரே…! என்று ரொம்பப் பாசத்துடன் எண்ணுகிறோம்.

என்னைக் காப்பாற்றினார்… எவ்வளவோ பணம் கொடுத்தார்… என்றெல்லாம் சொல்கின்றோம். சாகப் போகும் போது எனக்கு எவ்வளவு உதவி செய்தார்…? அவர் எத்தனையோ நேரத்தில் என்னை பக்குவப்படுத்தினார் இப்படி விட்டு விட்டுப் போய்விட்டாரே…! என்று வேதனையாக எண்ணுகிறோம்.

அந்த வேதனை கலந்த உணர்வுடன் எண்ணும் போது அவர் உடலில் விளைந்தது நமக்குள் உண்டு… உதவி செய்ததும் உண்டு…! வேதனைப்பட்டதும் உண்டு.

எல்லோருக்கும் உதவி செய்தார் என்று சொன்னாலும்…
1.கடைசியில் அவர் பட்ட கஷ்டத்தை எல்லாம் வாங்கி
2.மூட்டையைக் கட்டி நமக்குள்ளும் நோயாக மாற்றுகின்றோம்.

உடலுடன் இருக்கும் போது நன்மை செய்தார். எல்லோருடைய உணர்வையும் கேட்டு அந்த உடலில் நோயாக மாறியது… உடலை விட்டுப் பிரிகின்றார்.

பிரிந்த பின்… எனக்குப் பக்குவம் செய்தாயே இப்படி எல்லாம் விட்டு விட்டுச் செல்கின்றாயே…! பார்த்தால் மண்ணிலே விழுந்து புரள்வார்கள். அத்தகைய வேதனை உணர்வுகள் நுகர்ந்து கொண்ட பின் நமக்கும் அந்த நோய் வருகிறது.

அவர் உதவி செய்தார்…. ஆனால் விட்டு விட்டுப் போய்விட்டார்… என்று பாசமாக எண்ணப்படும் போது
1.அந்த ஆன்மாவைச் சும்மா விடுவதும் இல்லை.
2.அந்த ஆன்மாவை இழுத்து என்னுடனே வந்துவிடு… என் கஷ்டத்தை எல்லாம் நீயும் அனுபவி…! என்ற நிலையாகிவிடும்.

ஏப்படி…? அந்த ஆன்மா இங்கே வந்த பிற்பாடு என்ன செய்யும்…?

சில உடல்களில் ஆவிகள் வந்த பின் படுகின்ற அவஸ்தையைப் பார்க்கலாம். அதனுடைய உணர்வின் தன்மை உணர்த்தி உடலையும் பாழாக்கி… விஷத்தின் தன்மை இந்த உயிருக்குள் இருக்கும் அணுவிற்குள் சேர்ந்த பின்… அந்த ஆவி இந்த உடலை விட்டுச் சென்ற பிற்பாடு என்ன ஆகும்…?

அதாவது
1.நீ உதவி செய்தாய் அப்பா
2.நான் (உடலை விட்டுப் பிரிந்த உன்னை) எடுத்துக் கொண்டேன் அப்பா
3.என்னிடம் நீ வந்துவிடப்பா…
4.நான் செத்த பிற்பாடு (இந்த உடலிலிருந்து) நீ போய் விடப்பா…!

மொத்தமாக நம்முடைய வேதனை எல்லாம் சேர்த்து வெளியிலே போன உடனே அந்த ஆன்மா எந்த நிலை ஆகும்…?

புலி மற்ற மிருகங்களை வேதனைப்படுத்தித் தான் சாப்பிடுகின்றது நரி நாய் அவைகளும் வேதனைப்படுத்தித் தான் சாப்பிடுகின்றது பாம்பு விஷத்தைப் பாய்ச்சித் தன் உணவை அழுங்காமல் எடுத்துக் கொள்கின்றது இவை எல்லாமே நரக வேதனைப்படுத்தித் தான் சாப்பிடுகின்றன.

அது போல் இந்த வாழ்க்கையில் எந்த அளவிற்கு நரக வேதனையை எடுத்தோமோ… என்னை இப்படி எல்லாம் விட்டுவிட்டுச் செல்கின்றாயே…! என்று அந்தக் கடுகடுத்த நிலையில் துன்பத்தை எல்லாம் நினைத்து எண்ணினால்… அந்தத் துன்ப உணர்வுகள் எல்லாம் இங்கு வந்து சேரும்.

மொத்தமாகச் சேர்த்து இந்த உடலிலே எடுத்ததை வளர்த்துக் கொண்டு இந்த உடலை வீழ்த்தி விட்டுப் போய்விட்டு வா…! என்று செய்யும்.

எனக்கு நீ எல்லா உதவிகளையும் செய்து கொடுத்தாய்… நீ நாயாகப் பிற நரியாகப் பிற… புலியாகப் பிற…! என்று தான் “அவர் உதவி செய்ததற்குக் கைம்மாறாக நாம் செய்ய முடியும்…”.

1.நமக்கு எத்தனை உதவி செய்தார்…?
2.நமக்காக எத்தனை நன்மைகள் செய்தார்…?
3.நம்முடைய கஷ்டங்களை எப்படிக் கேட்டார்…? அந்த உணர்வு அறியாது வந்து எத்தனை வேதனைப்பட்டார்…?
4.நமக்கு உதவி செய்தவர் இனி எந்தக் காலத்திலும் அவர் பிறவி இல்லாத நிலை அடைந்து…
5.”துன்பமே இல்லாத பெரு வாழ்வாக வாழ வேண்டும்” என்று எத்தனை பேர் நீங்கள் எண்ணுகின்றீர்கள்… சொல்லுங்கள் பார்க்கலாம்…!

சாஸ்திரங்கள் அதைத் தான் கூறுகிறது.

ஆகவே உடலை விட்டுப் பிரிந்து சென்றவர்களுக்கு நாம் எதை எண்ணி எடுக்க வேண்டும்…?

நோயின் தன்மை கொண்டு உடலை விட்டுப் பிரிந்தாலும்
1.அந்த உயிரான்மாவை இங்கிருந்து நாம் உந்தித் தள்ளி துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் செலுத்தி…
2.உடலில் பெற்ற நஞ்சினைக் கரைத்து பிறவி இல்லா பெரு வாழ்வு வாழ்ந்து
3.என்றும் அங்கே மகரிஷிகளின் அருள் வட்டத்தில் பேரருள் பேரொளியாக வாழ வேண்டும் என்று செயல்படுத்த வேண்டும்.

இங்கே உடலில் வாழும் போது எங்களை எப்படி மகிழச் செய்தாயோ அதே போல்
1.என்றென்றும் எங்களை மகிழச் செய்யும் உணர்வாக “ஒளியாக மாறி”
2.எல்லோருக்கும் பேரன்பைக் கொடுக்க வேண்டுமென்று எண்ண வேண்டும்.

இப்படி எத்தனை பேர் எண்ணுகின்றோம்…? கொஞ்சம் சொல்லுங்கள் பார்க்கலாம்…!

நமக்கு உதவி செய்தார் என்று நல்லதை எண்ணுகிறோம். ஆனால் உதவி செய்தாயே… என்னை விட்டு விட்டுப் போகிறாயே…! என்று தான் சொல்கிறோம்.

எங்கே விட்டு விட்டுப் போவது…!

உன்னிடமே வந்து விடுகின்றேன்…! என்ற அந்த நிலையைத்தான் இங்கே உருவாக்குகின்றார்கள். இதை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் ஞானிகள் காட்டிய வழியில் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களைத் “தனக்குள் இழுக்காதபடி” விண் செலுத்தப் பழக வேண்டும்.

“துருவ நட்சத்திர ஈர்ப்பின் வட்டம்” நமக்குள் பெருக வேண்டும்

“துருவ நட்சத்திர ஈர்ப்பின் வட்டம்” நமக்குள் பெருக வேண்டும்

 

கொடூரமான புலி மற்ற சாந்தமான உயிரினங்களை அடித்துக் கொல்வது போல்… சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட நம் உடலின் உறுப்புகளையும்… அதை உருவாக்கிய அணுக்களையும் கொன்று புசித்துவிடும்..

இதிலிருந்து மீள்வதற்கு நம்முடன் வாழ்ந்து வளர்ந்த முன்னோர்கள் மூதாதையர்களின் ஆன்மாக்களை விண் செலுத்தி… அந்தப் பேரருள் உணர்வுகளை நம் உடலுக்குள் உள் செலுத்தித் தீமையான நிலைகளை மாற்றி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்.

கோடிச் செல்வம் தேடினாலும்… அந்தச் செல்வம் நம்முடன் வருவதில்லை. ஏன்…! இந்த உடலும் நம் கூட வருவதில்லை. ஆனால்
1.பேரருள் என்ற உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றப்படும் பொழுது
2.ஒளியின் உணர்வாக நாம் பிறவி இல்லாத நிலை அடையலாம்.
3.”இதை விரும்புவோர் தான் செயல்படுத்த முடியும்…”

உடல் இச்சை கொண்டால் பலன் இல்லை…!

அருள் உணர்வின் தன்மை இந்த உடலுக்குள் எடுத்து வளர்த்தால் தீமைகளை அகற்றிச் சிந்தித்து செயல்படும் தன்மையும்… தேடிய செல்வத்தைக் காத்திடும் நிலையும்… இந்த உடலைச் சீராக வைத்துக் கொள்ளும் நிலையும் வரும்.

“செல்வத்தை நாம் தேட வேண்டியதில்லை… அந்தச் செல்வமே நம்மிடம் வந்து சேரும்…” ஆனால் செல்வம் குவிகின்றது என்று செல்வத்தின் மீது ஆசை வைத்தால் நம் உணர்வின் தன்மைகள் அனைத்தும் உடலின் பற்றுக்கே வந்து விடுகின்றது.

ஞானத்தினை நாம் வளர்க்கும் பொழுது அருள் ஞானத்தின் வழிகளில் நாம் சென்று இருளை அகற்றி மெய்ப்பொருளைக் காண முடியும்

ஆகையினால் காலையில் ஐந்தரைலிருந்து ஆறரை மணிக்குள்
1.தினசரி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றுத் தீமைகளை நீக்கிப் பழகுதல் வேண்டும்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுவதை ஒரு வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நாள் முழுவதும்… மற்றும் அவ்வப்போது சேரும் தீமைகளை அகற்றிடும் சக்தியாக… துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெருக்கி அருள் வழியில் நாம் சிந்தித்துச் செயல்படும் தன்மையாக… இந்த இல்லற வாழ்க்கையில் தெளிந்த மனம் கொண்டு வாழ முடியும்.

வேதனை என்ற விஷமோ கோபம் என்று கார உணர்வோ பகைமையான உணர்வுகளோ சாபம் என்ற உணர்வுகளோ நம்மைத் தாக்கப்படும் பொழுதெல்லாம்… துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானித்து நம் உடலுக்குள் அதை உட்செலுத்தித் தீமைகளை அவ்வப்பொழுது மாற்றிக் கொண்டால் பகைமைகள் வளராது.

தீமை என்ற நிலையே நம் உடல் அணுக்கள் பெறாதபடி தடுத்துக் கொள்ள முடியும். துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் பெருக்கிப் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் உடலில் அணுக்களாக உருவாக்கிக் கொண்டால்… நம் சொல்லும் செயலும் புனிதம் பெறவும்… நம் உடலில் தெளிந்த நிலையும் உருவாகும்.

1.அந்தத் துருவ நட்சத்திர ஈர்ப்பின் வட்டம் நமக்குள் பெருகும் போது
2.உடலில் விளைந்த சூட்சும சரீரம் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து
3.நம்மைப் பிறவியில்லா நிலையை அடையச் செய்வது உறுதி.

மண்டலக் கணக்கு – 48 நாள்கள்

மண்டலக் கணக்கு – 48 நாள்கள்

 

மனிதர்கள் இந்த உடல் இச்சைக்குத் தான் செல்கின்றனரே தவிர “உயிரின் இச்சைக்கு” யாரும் செல்வதில்லை. ஆனால் அவனுடன் தான் நாம் ஒன்றி வாழுகின்றோம்.

எதை எடுக்கின்றோமோ அந்த உணர்வுக்கொப்ப உடலாகிறது. உடலாகும் போது “வேதனை.. வேதனை…” என்று எடுத்தால் வேதனைப்படும் நிலை தான் வருகிறது..

வேதனை அதிகமாகி விட்டாலோ அந்த வேதனைக்கொத்த உடலாக… அடுத்து உயிர் நம்மை மாற்றிவிடும். ஆகவே இது போன்ற நிலையிலிருந்து நாம் மீள வேண்டும்.

இந்த உண்மைகளை எல்லாம் இப்போது அறியக்கூடிய தகுதி பெற்றிருக்கிறோம் என்றால் அது யாரால்…?

நம்முடைய மூதாதையர்கள் முதலில் மனிதனாக உருவானார்கள். அவர்கள் வழியில் நம் தாய் தந்தை உடல் பெற்றார்கள். அவர்கள் வழியில் நாம் மனித சரீரத்தை இப்போது பெற்றுள்ளோம்.

ஏனென்றால் “மனிதன் ஒருவன் தான் இறந்த பிற்பாடு அவர்களை (முன்னோர்களை) விண் செலுத்த முடியும்…”

ஒருவருக்கொருவர் நாம் மனதில் நினைக்கின்றோம்… “எனக்குத் துரோகம் செய்தான் பாவி… எங்கிருந்தாலும் அவன் உருப்படுவானா…? என்று…!”

நாம் இப்படி எண்ணினால் அவன் அமெரிக்காவில் இருந்தாலும் கூட இந்த உணர்வு அங்கே சென்று அவனை இயக்குகின்றது… அவன் செய்யும் காரியத்தைக் கெடுக்கிறது.

அதே போன்றுதான் நம்முடைய மூதாதையரின் உணர்வுகள் நமக்குள் இருக்கின்றது. அதை வைத்து அவர்களை நாம் விண் செலுத்த முடியும்.

அருள் சக்திகளை இப்போது குரு வழியிலே நமக்குள் பெருக்குகின்றோம். அதற்குண்டான சக்தி கிடைக்கின்றது… காற்றிலே அந்த உணர்வுகள் உண்டு.

நம் முன்னோரின் ஆன்மாக்கள் இன்னொரு மனித உடலுக்குள் சென்று இருந்தாலும் கூட நாம் விண் செலுத்த முடியும். முன்னாடி செய்ய மறந்து விட்டோம். இப்பொழுதாவது நாம் செய்யப் பழக வேண்டும்.

உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று சொல்லி 48 நாட்களுக்குள் அனுப்பி விட்டால் அங்கே சென்று முழுமை அடைகின்றார்கள்… ரிஷியாகின்றார்கள்.

உதாரணமாக ஒருவருக்கொருவர் பிரியமாக இருக்கின்றார்கள் அதிலே ஓருவர் திடீரென்று இறந்து விட்டால் பற்றுடன் எண்ணும் போது அந்த உடலுக்குள் தான் போகும். அந்த உடலில் ஆவியாக இருக்கும்.

ஆனாலும் இறந்த ஆன்மா திடீரென்று உடலுக்குள் புகுந்த உடனே முதலில் தெரியாது. அதனால்தான் ஒரு மண்டலம் என்ற கணக்கை வைத்து ஞானிகள் நமக்குக் காட்டினார்கள்.

எது எது எந்தப் பொருளாக இருந்தாலும் “ஒரு மண்டலத்திற்குள் கருத்தன்மை அடைவது” மாறும் தன்மை வருகிறது. இதைத் தெரியப்படுத்துவதற்குத் தான் மண்டலக் கணக்கை ஞானிகள் கொடுத்தார்கள்.

உடலை விட்டுப் பிரிந்து சென்றார்கள் என்றால் அந்த ஒரு மண்டலத்திற்குள் (48 நாட்களுக்குள்) சப்தரிஷி மண்டல உணர்வை எடுத்து வளர்த்து இலேசாக அங்கே விண் செலுத்தி விடலாம்.

அங்கே சென்ற பின் உடல் பெறும் விஷத்தன்மைகள் எல்லாம் கரைந்து விடுகிறது. துருவ நட்சத்திரம் சமைத்துக் கொடுக்கும் உணர்வுகளை எடுத்து ஒளி உடலாகப் பெறுகிறது.

மனிதன் ஒருவன் தான் இதைச் செய்ய முடியும்…!

இதற்கு முன்னாடி நமக்குப் பழக்கம் இல்லை. இப்போது தெரிந்து கொண்டோம். அடிக்கடி இதைப் போன்று செய்து பழகினால் இன்றைய விஷ உலகில் அடிக்கடி வரும் தீமைகளை நீக்க முடியும்.

மூதாதையர்களை விண் செலுத்திய வலுக் கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் அதிகமாகப் பெருக்கிக் கொள்ள முடியும். இந்த உடலை விட்டு எப்பொழுது நாம் பிரிந்தாலும் நம்மையும் அது அங்கே இழுத்துச் சென்றுவிடும்.

மாறாக… “ஐய்யய்யோ இந்தக் காசை எல்லாம் என் பிள்ளை கண்டபடி செலவழிக்கின்றானே… நாளை அவன் என்ன செய்வான்…? என்று பிள்ளை மீது நினைவு அதிகமானா அந்த உடலுக்குள் தான் வர வேண்டும்

காசு சம்பாரித்துக் கொடுத்தேனே… நாளை என் பிள்ளை என்னை எங்கே ஏமாற்றப் போகின்றானோ…? என்று எண்ணினால் அவன் உடலில் புகுந்து விடுவோம். அங்கே பேயாகப் போய் அவனையும் வேதனைப்படுத்தத்தான் செய்யும்

ஆகவே எந்த நிமிடம்… எந்த நிலை… ஆனாலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கும் ஒரு பழக்கத்திற்கு வந்துவிட்டால் நம் உயிரின் இயக்கம் எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்… அங்கே கவர்ந்து சப்தரிஷி மண்டலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.

அந்த உணர்வுக்குத் தக்க இருளை நீக்குகின்றது உணர்வின் அறிவு எப்பொழுதுமே சந்தோஷமாகப் பேரானந்த நிலையாகப் பெற முடியும். அது தான் விஜய தசமி. உயிர் தோன்றி பத்தாவது நிலையாக முழுமை அடையும் சந்தர்ப்பம்… பிறவி இல்லா நிலை…!

ஒவ்வொரு மாதத்திலும் ஞானிகள் தெளிவான காரணங்களைக் காட்டி நம்மை நல்வழியில் வாழச் செய்ய வழிவகுத்துக் கொடுத்தார்கள். மக்களுடைய எண்ணங்கள் தடுமாறும் இந்தக் காலகட்டத்தில் குரு வழியில் இதை நாம் செயல்படுத்துவோம்.

கதவை (மனக் கதவு) மூடி கொள்கின்றீர்கள்.. நான் என்ன செய்வது…!

கதவை (மனக் கதவு) மூடி கொள்கின்றீர்கள்.. நான் என்ன செய்வது…!

 

வாழ்க்கையில் கடுமையான தீமைகள் வந்தால் அவைகளை எப்படி வெல்வது..? என்பதைக் காட்டுவதற்காக… குருநாதர் எம்மைக் (ஞானகுரு) காட்டிற்குள் அழைத்துச் சென்றார்.

“மின்னலைப் பாருடா…!” என்றார். அதனால் அப்போது எனக்கும் அவருக்கும் சண்டை கூட வந்தது.

மின்னலைப் பார்த்து என் கண்கள் பறிபோய்விட்டால் என்ன செய்வது… நான் பிள்ளை குட்டிக்காரன்… எங்கே செல்வது…? என்று மின்னலைப் பார்க்க மறுத்தேன்.

நான் சொன்னதைச் செய்கிறேன் என்று சொன்னாய் அல்லவா… மின்னலைப் பார்…! என்று கட்டாயப்படுத்தி என்னை நிர்பந்தப்படுத்துகின்றார்.

27 நட்சத்திரங்களின் உணர்வுகள் மின்னல்களாக வந்தாலும்
1.அதை அடக்க வல்லமை பெற்ற தாவர இனங்கள் உண்டு…
2.ஆனால் அந்தத் தாவர இனங்களைப் பற்றி எனக்கு என்ன தெரியும்…?
3.அவர் கையிலே அதை வைத்திருக்கின்றார்… மின்னலைப் பாருடா…! என்று சொல்கின்றார்…
4.நான் பார்க்க மாட்டேன் என்று சொல்கின்றேன்… இரண்டு பேருக்கும் தர்க்கம் வருகிறது

நான் பார்க்கின்றேன் அல்லவா… நீ(யும்) பாருடா…! என்று மீண்டும் சொல்கின்றார். பின் நான் பார்க்கும் பொழுது கண்களை அது ஒன்றும் செய்யவில்லை குளு…குளு… என்று இருந்தது எரிச்சலோ இருளடையச் செய்யும் நிலையோ… எதுவும் இல்லை.

அந்த ஒளிக்கற்றைகள் என் உடலுக்குள் செல்கின்றது…!

அவர் கையில் வைத்திருந்த பச்சிலையைத் தான் பார்க்க முடிந்தது… மீண்டும் நான் மின்னலைப் பார்த்து எடுக்க வேண்டும் என்றால் அது வேண்டும் அல்லவா…!

அப்போது தான் குருநாதர்
1.இந்த உணர்வை உனக்குள் பதிவு செய்கின்றேன்… நான் பதிவு செய்ததை மட்டும் எடு…
2.பச்சிலையைத் தேட வேண்டும் என்று நீ அதற்குச் சென்று விடாதே…! என்று சொல்கின்றார்.

ஏனென்றால் அப்படிச் சென்றால் உடலுக்குப் பிழைப்புக்குத் தேட ஆரம்பித்து விடுவாய். ஆகவே
1.நான் சொன்ன பதிவை உணர்வாக நினைவாக எடுத்து வளர்த்து அதை அருள் ஒளியாகப் பெருக்கி
2.மற்றவர்களுக்கு இருளைப் போக்கும் உபாயத்தைக் காட்டு…! என்று சொல்கிறார்

அகஸ்தியன் எத்தனையோ கோடி மின்னல்களை அவன் நுகர்ந்தவன்… தனக்குள் பேராற்றல்களைப் பெற்றவன்.

எப்படி…?

வியாழன் கோள் தன்னுடைய உபகோள்களை வைத்து 27 நட்சத்திரங்களுடைய சக்தியைக் கவர்ந்து ஒன்றாக்கி… உணர்வின் தன்மை தனக்குள் மற்றதுடன் இணைத்து “ஒளியாகும் தன்மையாக அது எப்படிப் பெறுகின்றதோ…” அதைப் போன்ற ஆற்றலை அகஸ்தியன் பெறுகின்றான்

இந்த உணர்வுகளை எல்லாம் அகஸ்தியன் தாய் கருவில் இருக்கும் பொழுதே பெறப்பட்டு… பல தாவர இனங்களின் சக்திகளை மணத்தால் நுகர்ந்து விஷத்தை ஒடுக்கும் தன்மையாகப் பெறுகின்றான்.
1.ஒளியின் மின் கதிர்களைத் தனக்குள் தாங்கும் சக்தியும்
2.மின் கதிர்கள் செல்லும் இடங்களை அறிந்துணரும் சக்தியும் பெறுகின்றான்.

இன்று எப்படி…
1.எலெக்ட்ரானிக் என்று நுண்ணிய அலைகள் கொண்டு ஆணையிட்டு இயந்திரங்களைத் தன்னிச்சையாக இயக்குகின்றார்களோ
2.செல்ஃபோன் கம்ப்யூட்டர் இவைகள் எல்லாம் வெகு தூரத்தில் இருக்கும் அலை வரிசைகளைக் கவர்ந்து இயங்குவது போன்று
3.அகண்ட நிலைகள் வருவதை எல்லாம் கவரக்கூடிய திறன் அகஸ்தியனுக்கு வருகின்றது
4.மின் கதிர்கள் எங்கெல்லாம் செல்கின்றதோ… எதை எதை நுகர்கின்றதோ
5.அந்த உணர்வின் அதிர்வுகளை எல்லாம் அகஸ்தியன் காண்கின்றான்.

அகஸ்தியன் பெற்றதையெல்லாம் “நீ உனக்குள் எப்படி உருவாக்கிக் கொள்ள முடியும்…” என்ற நிலையை உணர்த்தி அதை எனக்குள் வித்தாகப் பதிவு செய்தார் குருநாதர்.

உங்களுக்குள்ளும் அதை இப்போது வித்தாகப் பதிவு செய்கின்றேன் அந்த உண்மை நிலைகளை நீங்களும் பெற முடியும்.

இதை எல்லாம் எதற்காகப் பதிவாக்குகிறேன்…? இந்த உடலுக்குப் பின் என்ன வேண்டும்…? என்பதை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குத் தான்.… அது உங்கள் அபிப்ராயம் தான்…!

குருநாதர் அனைத்தையும் எனக்குக் காட்டினார். டிவி அலைகளும் மற்ற கம்ப்யூட்டர் உணர்வலைகளும் என்னவெல்லாம் செய்யும்…? (மேலே முதலில் சொன்னபடி) என்று காட்டினார்.

டி.வி. பெட்டியில் எந்த ஸ்டேசனைத் திருப்பி வைக்கின்றோமோ வீட்டில் இருந்த இடத்திலிருந்து படத்தைக் காண முடிகின்றது இன்ன இடத்தில் இருந்து வருகின்றது என்று தெரிந்து… அதைத் திருப்பி வைத்தால் உடனே அதை நாம் தெரிந்து கொள்ள முடிகின்றது… “எங்கிருந்தாலும் அதைக் காண முடிகின்றது…”

அதே போன்று தான்
1.நீங்கள் எங்கே… எந்த இடத்தில் இருந்தாலும்… அந்த இருந்த இடத்திலிருந்து
2.அகண்ட அண்டத்திற்கும் எண்ணத்தைப் பரப்பிய உணர்வின் ஒளிக் கற்றைகளை
3.குருநாதர் காட்டிய வழியில் உங்களுக்குள் நான் பாய்ச்சுவதை நீங்கள் எண்ணி அதை எடுக்க முடியும்.

நம்பிக்கை இருந்தால் நிச்சயம் எடுக்கலாம்…!

ஆனால் நம்மால் முடியுமா…? குருநாதர் சக்தி கொடுத்தார்… சாமி எல்லாவற்றையும் பார்த்தார்… நான் எப்படிப் பார்ப்பது…! என்று எண்ணத்திற்கு நீங்கள் செல்லக்கூடாது.

குருநாதர் பைத்தியக்காரராகத் தான் தெரிந்தார்… அகண்ட அண்டத்தில் உள்ள எல்லாவற்றையும் சொன்னார். நான் அதைப் பதிவு செய்தேன்… பார்த்தேன்… அறிந்தேன்…!

அதை எல்லோருக்கும் கிடைக்கச் செய்…! ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து… ஈசன் வீற்றிருக்கும் ஆலயத்தைச் சுத்தம் செய்… நீ அந்தச் சேவையைச் செய் என்றார் குருநாதர்.

அதைத்தான் இப்பொழுது செய்து கொண்டிருக்கிறேன். ஆனால்
1.நான் சேவை செய்ய வரும் பொழுது நீங்கள் கதவை இறுக்கி மூடிக்கொண்டால் நான் என்ன செய்ய முடியும்.
2.நீங்கள் கதவை (மனக் கதவு) மூடி கொள்கின்றீர்கள்.. நான் என்ன செய்வது…!

சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஞானிகள் காட்டிய வழியில் பஞ்சாயத்து செய்ய வேண்டிய முறை

ஞானிகள் காட்டிய வழியில் பஞ்சாயத்து செய்ய வேண்டிய முறை

 

இருளை அகற்றும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.
1.ஒரு கஷ்டமான நிலைகளைப் பார்த்தால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
2.உடனே இதைத்தான் நான் தியானிக்க வேண்டும்.

நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இரண்டு பேர் ஒருவருக்கொருவர் கோபத்துடன் சண்டையிடுவதைப் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அடுத்த கணம் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி… அவர்கள் சண்டையிடும் உணர்வுகள் உடலுக்குள் போகாதபடி தடுத்து நிறுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த அருள் சக்தியை உள்ளே செலுத்தி வலுவாக்க வேண்டும்.

சண்டை போட்டார்கள் அல்லவா… அவர்கள் இருவரும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்; மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழும் அந்தத் திறன் பெற வேண்டும்; என்று அவருடைய உணர்வுகளை நாம் நமக்குள் மாற்றி விட வேண்டும்.

அவர்களுக்கு இது கிடைக்க வேண்டும் என்று “நாம் எண்ணுகின்றோம்…” அவர்கள் அப்படி எண்ணினால் அவருக்கும் நல்லதாகும். ஆனால்
1.அவர்களிடம் போய்ப் புத்தி சொன்னால் கேட்பார்களா…? இல்லை
2.இரண்டு பேர் சண்டையிடுகின்றார்கள் என்றாலும் ஒருவரைப் பார்த்து “நீ கொஞ்சம் பொறுத்துப் போ…!” என்று நாம் சொன்னால்
3.நீ அவனுக்குச் சாதகமாகப் பேசுகின்றாய்… எனக்கு நீ உதவியாக இல்லை…! என்று சண்டைக்கு வருவார்கள்
4.இருவரில் யாரிடம் சொன்னாலும் இருவருமே இப்படித்தான் சொல்வார்கள்… சமாதானப்படுத்த முடியுமா…!
5.அவர்கள் உணர்வுக்குத் தக்க நாம் வரவில்லை என்றால் நம்மைக் குற்றவாளியாக்கி விடுவார்கள்.

ஆகையினால் அதை நாம் நுகர வேண்டியதில்லை. யாம் சொல்லிக் கொடுத்த முறைப்படி துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

அதைஸ் செய்து… சண்டையிட்ட அந்த இருவருமே மகரிஷிகளின் அருள் சக்தியால் சிந்தித்துச் செயல்படும் திறன் பெற வேண்டும்; ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற இந்த உணர்வுகளைச் சேர்த்துக் கொண்டே வந்தால் நமக்குள் அது தீமையைத் தடுக்கும் சக்தியாக மாறுகின்றது.

அடுத்து சாந்தமான பிற்பாடு நாம் என்ன செய்ய வேண்டும்…? அவர்களிடமிருந்து சமைத்த உணர்வு நம்மிடம் இருக்கிறது
1.நீங்கள் இந்த மாதிரிச் செய்தீர்கள் அதனால் தான் உங்களுக்குக் கஷ்டம் வந்தது
2.அதற்குப் பதிலாக மகரிஷிகளின் அருள் சக்திகளை இப்படி எண்ணி எடுத்துப் பாருங்கள் நன்றாகிவிடும்…! என்று சொல்லலாம்.

அவர்கள் அமைதியாக இருக்கும் போது நாம் சொல்வதைக் கேட்க வைத்து உண்மைகளைச் சொன்னால் அவர்கள் நல்லதை எடுப்பதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கின்றது.

அட என்ன…? நீதானப்பா முதலில் அவனிடம் சண்டை போட்டாய்…! என்று சொல்லக் கூடாது. சந்தர்ப்பத்தினால் உணர்ச்சி வசப்பட்டீர்கள்… சண்டையிட்டுக் கொண்டீர்கள்.. அதனால் அன்பை இப்படிக் கெடுத்துக் கொண்டீர்கள்…! சற்று சிந்தியுங்கள் என்று இந்த ஞானத்தோடு சொன்னால் ஏற்றுக் கொள்ளும் பருவம் அங்கே வருகின்றது.

ஈர்க்கும் சக்தி அங்கு இல்லை என்றால்…
1.என்னப்பா இப்படி எல்லாம் செய்கின்றாய் என்று புத்திமதி சொல்வது போல் சொன்னால்
2.எல்லாம் தெரிந்த மாதிரி… இவர் பெரிதாகச் சொல்ல வந்து விட்டார் என்பார்கள்.
3.சொன்னாலும் கேட்க மாட்டார்கள்… நமக்கு எதிர்ப்பதமாக வரும்.

ஆகவே அருள் உணர்வுகளை நாம் வளர்த்து அந்தப் பண்போடு சொல்லிப் பழகுதல் வேண்டும். எப்படி…? இருவரும் சண்டை இட்டீர்கள். அதனால் உடலில் நோயாக மாறியது… சிந்திக்கும் தன்மையும் இழக்கிறது. அதனால் இது போன்ற சந்தர்ப்பங்களில் பொறுப்பாக இருந்து இரண்டு பேரும் ஒன்று சேர்த்து வாழப் பழகிக் கொள்ளுங்கள்.

அதற்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை இருவருமே பெறுங்கள் உங்கள் உடலில் அதை வளர்த்துக் கொள்ளுங்கள் இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் அந்த தெளிந்த மனம் பெற வேண்டும் என்று இப்படிச் சொல்லிப் பழகுதல் வேண்டும்.

இது அவர்களுக்குள் ஏற்றுக் கொள்ளும் பருவமாக மாறுகின்றது… கொஞ்சமாவது கேட்பார்கள்… “கேட்டால் தானே உள்ளே செல்லும்…” சொல்வது அர்த்தமாகிறது அல்லவா.

இப்படிப்பட்ட உணர்வை நாம் சேர்த்துக் கொண்டால் அவர் சண்டையிட்ட உணர்வோ வெறுப்படைந்த உணர்வோ நமக்குள் வருவதில்லை. அவர்களும் ஒன்றுபட்டு வாழும் நிலைக்கு வருகின்றார்கள்… பகைமைகளை அகற்ற முடிகிறது.

இப்படித்தான் நாம் மாற்றிக் கொண்டு வர வேண்டும்… இதைச் செயல்படுத்த வேண்டும்

தியானம் என்பது…
1.அந்த ஞானிகளின் அருள் சக்தியை எடுத்துச் சமைத்து ஞானத்தின் உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது
2.தீமை நமக்குள் வராதபடி எல்லாம் தெளிந்த மனமாக வளர்கின்றது
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் விளைகின்றது.

கோடிக்கரையில் (கடைசி மனித உடல்) இருக்கும் நாம் இதையே செய்து கொண்டு வந்தால் தனுசு கோடி எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து ஒளியாக மாறுகின்றோம். இது தான் இராமேஸ்வரத்தின் தத்துவம்

இராமன் என்றால் எண்ணம்… நாம் நுகர்ந்தது எண்ணத்தால் உருவா(க்கு)கின்றது. எதை உருவாக்கினோமோ அதுவே ஈசனாக இயக்குகிறது. அது தான் இராமேஸ்வரம்.
1.எண்ணத்தால் உருவாக்கப்பட்டது இராமலிங்கம்…
2.உயிருடன் ஒன்றி ஒவ்வொருவரும் நாம் ஒளியாக மாற வேண்டும்…!

முன்னோர்களை விண் செலுத்துவதால் கிடைக்கும் பலன்

முன்னோர்களை விண் செலுத்துவதால் கிடைக்கும் பலன்

 

கேள்வி:-
தியானத்தின் மூலம் என் தந்தையை விண் செலுத்தினேன். அதனுடைய பலன் என் சகோதரர்களுக்குக் கிடைக்குமா…? ஆனால் அவர்கள் என்னைப் போன்று இந்தத் தியானத்தைச் செய்யவில்லை… அதிலே ஈடுபடவும் இல்லை

பதில்:-
இந்தத் தியான வழியினை நீங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றீர்கள் அந்தச் சக்தி உங்களுக்குள் கூடிக் கொண்டிருக்கிறது
1.உங்கள் தந்தையின் உணர்வுகள் தான் உங்கள் உடல்.
2.உடலை விட்டுப் பிரிந்து சென்ற தந்தையின் உயிரான்மாவை தியானத்தின் மூலம் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்கின்றீர்கள்.
3.அவர் உடல் பெற்ற நஞ்சுகள் அங்கே கரைக்கப்படுகின்றது
4.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவு ஏழாவது நிலையாக தந்தையின் உயிரான்மா சுற்றிக் கொண்டிருக்கின்றது.

ஆனால் தாய் இங்கே உடலுடன் இருக்கின்றார்கள். அவர்கள் பிரியும் போது இதே முறை கொண்டு தாயின் உயிரான்மாவையும் விண் செலுத்தினால் இரண்டு பேரும் ஒன்று சேர்த்து ஒரு உணர்வின் கருவாக உருவாகி என்றும் அழியா ஒளிச் சரீரமாக சப்தரிஷி மண்டலத்தில் இருப்பார்கள்.

அதே சமயத்தில் அவர் வாழ்ந்த காலங்களில் வெளிப்படுத்திய சில இருளான தன்மைகள் இருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறப்படும் பொழுது அந்தச் சக்தி எளிதில் கிடைக்கின்றது.

அதாவது…
1.தீமைகளை நீக்கக்கூடிய சக்தியான அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உங்களுக்குக் கிடைக்கின்றது.
2.எனக்குக் கிடைக்கின்றது… குடும்பத்தில் என்னுடன் பிறந்த சகோதரர்களுக்கு அது ஏன் கிடைக்காமல் போகும்…? என்று நீங்கள் கேட்கலாம்.

அவர்களுடைய உணர்வு இதன் மேல் பற்று இல்லை.

உதாரணமாக ரேடியோ டிவி அலைகளை ஒலி… ஒளிபரப்பு செய்யப்படும் பொழுது எந்த ஸ்டேஷனை… எந்த அலைவரிசையைத் திருப்பி வைக்கின்றோமோ… அதைத்தான் அது இழுத்துக் கொண்டு வரும். அதைத்தான் நாம் பார்க்க அல்லது கேட்க முடியும் ஏனென்றால் இந்தக் காற்றிலே எல்லாமே இருக்கின்றது.

அது போல் தந்தையை நீங்கள் தியானத்தின் வழியில் விண் செலுத்தும் போது… “விண் செலுத்திய வலுவான உணர்வு” உங்களுக்குள் இருக்கின்றது அப்பொழுது எளிதில் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்று உங்களுக்குள் வரக்கூடிய சிரமங்களைப் போக்கிக் கொள்ள முடிகிறது.

போக்கிக் கொண்ட பிற்பாடு உங்களுடன் பிறந்த சகோதரர்கள்… அவர்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… அவர்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்… மெய்ப்பொருள் காணும் அந்த திறன் பெற வேண்டும்… என்று “பிரார்த்திக்க வேண்டியது உங்களுடைய கடமை…!”

ஆனால்…
1.தியானிக்க வேண்டியதன் அவசியத்தைச் சொல்கிறோம்… சகோதரர்கள் கேட்கவில்லை என்று வேதனைப்பட்டால்
2.நீங்கள் இப்பொழுது எடுத்துக் கொண்டிருக்கக்கூடிய சக்தியையும் இழக்க நேரும்.

ஏனென்றால் விஷத்தின் தன்மை வரப்படும் போது சிந்திக்கும் தன்மை இங்கே இழக்கப்படுகின்றது. உங்களை அறியாமல் அவர்கள் நிலைக்குத் தான் செல்கிறீர்கள்.

சொல்வது அர்த்தம் ஆகின்றது அல்லவா…!

அவர்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… இந்த அருள் வழியில் வாழ வேண்டும் என்ற ஆசையை ஊட்டலாம் சகோதரர்களுக்கு…!
1.ஆனால் அவர்கள் பெறவில்லை… கடைப்பிடிக்கவில்லையே… என்று வருத்தப்பட வேண்டியதில்லை
2.அவர்கள் அதை பெற்று வளர வேண்டும் என்று நமக்குள் ஆசையைக் கூட்டுவதால் தவறில்லை.

இதைச் செய்யவில்லை என்கிற போது உங்கள் தந்தைக்கு எந்த நோய் வந்ததோ அது அவர்களுக்கு வரும். அது மட்டுமல்ல… அவர்கள் குழந்தைகளுக்கும் வரும்… பரம்பரை நோய் என்று…!

ஆனால் “நீங்கள் செய்யக்கூடிய தியானம்…” உங்களுக்கும் சரி… உங்கள் சார்புடையவர்களுக்கும் சரி… அந்தப் பரம்பரை நோய் வராதபடி தடுக்கும்.

முறைப்படி உங்கள் தாய் தந்தையரை விண் செலுத்தும் போது சப்தரிஷி மண்டலங்களின் சக்தி எளிதில் கிடைத்து அதன் மூலம்
1.சிந்திக்கக் கூடிய சக்தி உங்களுக்கு கிடைக்கும்.
2.தீமை என்றால் அதை முன் கூட்டியே உணர முடியும்.
3.தீமைகள் வராது தடுத்துக் கொள்ளக்கூடிய அந்த ஞானமும் உங்களுக்குள் வளரும்.

தாய் தந்தையரை விண் செலுத்தி அதன் தொடர்பு கொண்ட உணர்வுகள் உங்களுக்குள் வளரப்படும் பொழுது நாளடைவில்
1.உங்கள் குலதெய்வங்கள்… உடலை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் இருந்தாலும்
2.தொடர்ந்து விண் செலுத்தும் உணர்வுடன் நீங்கள் செயல்படும் போது
3.அதனுடன் ஈர்க்கப்பட்டு… “என்னையும் நீ விண் செலுத்து…” என்று கேட்கும் உணர்ச்சிகள் உங்களுக்குள் தோன்றும்… பார்க்கலாம்.
4.அவர்கள் விண் சென்றதையும் நீங்கள் உணரலாம்… அதைக் காட்சியாகவும் கூடக் காண முடியும்.

சென்று விட்டார்களா…! இல்லையா…? என்று நீங்கள் தனித்துப் பார்க்க வேண்டியது இல்லை. தொடர்ந்து இந்த உணர்வுகளைச் செயல்படுத்தி வந்தால் “நான் விண்ணிலே இருக்கின்றேன்…!” என்று உங்களுக்கு உணர்த்துவார்கள்.

ஆகவே இத்தகைய விண் செலுத்தும் மார்க்கம் எல்லோருக்கு,ம் கிடைக்க வேண்டும் என்று எண்ணுவது உங்களுடைய கடமை…! அதை நீங்கள் செயல்படுத்த வேண்டும். மற்றவர்கள் செய்யவில்லை என்ற எண்ணம் உங்களுக்குத் தேவையில்லை.

“உயிரைப் போன்றே ஒளியாக மாற வேண்டும்” என்று விரும்புபவர்களுக்கு…!

“உயிரைப் போன்றே ஒளியாக மாற வேண்டும்” என்று விரும்புபவர்களுக்கு…!

 

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நாம் ஆசைப்பட வேண்டும்.

“தினம் தினம்” நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறச் செய்வதை “ஒரு தலையாயக் கடமையாக நாம் வைத்துக் கொள்ள வேண்டும்…”

1.உடலுக்கு வேண்டிய உணவை எப்படி அவ்வப்போது உட்கொள்கின்றோமோ
2.அதைப் போன்று நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவ அணுக்களுக்கு
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் பெறச் செய்ய வேண்டும்.

27 நட்சத்திரங்களும் புவியின் ஈர்ப்பிற்குள் அதனதன் அலைகள் கவரப்படும் போது மின்னலாகப் பாய்கின்றது. சில நட்சத்திரங்களின் அலைகள் எந்தப் பகுதியில் அதிகமாகப் படர்கின்றதோ மண்ணுடன் கலந்து அந்தந்த நட்சத்திரங்களின் குணங்களுக்கொப்ப வைரங்களாக விளைகின்றது.

காற்றில் இருப்பதைப் புவி ஈர்ப்பின் தன்மை கொண்டு கவர்ந்து வைரங்களாக அது விளைகின்றது.

அது போன்றே துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளையும் பேரொளியையும்
1.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குச் சிறுகச் சிறுகச் சேர்க்க
2.உயிரைப் போன்றே ஜீவணுவாகி… (ஒளியான) உயிரணுவாக மாறிவிடும்.

கோடிக்கணக்கான ஜீவணுக்கள் நம் உடலில் இருப்பதை உயிரைப் போன்ற உயிரணுக்களாக…
1.ஒளியான அணுக்களாக மாற்றும்போது ஓர் ஒளியின் உடலாகவும்
2.எத்தகைய விஷத்தன்மைகளையும் ஒளியாக மாற்றிடும் திறன் நம் உயிர் பெறுகின்றது.

இதை நாம் அறிந்து கொள்தல் வேண்டும்.

நட்சத்திரங்களுடைய அலைகள் பூமிக்குள் கவரப்பட்டு அது மண்ணுக்குள் கருவுற்று வைரங்களாக விளைந்த பின் அது வெடித்துத் தனித் தன்மையாக வெளி வந்துவிடும்.

இதைப் போன்று தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்களுக்கு உணவாகக் கொடுத்தபின்… நாளுக்கு நாள் அது விளைந்து வெளிப்படும் பொழுது… அறிவின் வளர்ச்சி… அறிந்திடும் வளர்ச்சியாக இங்கே வருகின்றது. அதாவது…
1.ஒரு வெளிச்சத்தைக் கண்டபின் பொருள் தெரிவது போன்று
2.நமது ஜீவணுக்களின் துணை கொண்டு கண்ணின் வளர்ச்சி கொண்டு
3.அதன் உணர்வின் அறிவை அறிந்திடும் ஞானமாக வளர்கின்றது.

நட்சத்திரங்களின் துகள்கள் மின்னலாக மாறி பூமிக்குள் பட்ட பின் சிறுகச் சிறுக வைரமாக விளையப்படும் பொழுது ஒளியின் உடலாக அது பெறுகின்றது… நட்சத்திரங்கள் மின்னுவது போன்று…!

நமது உயிரும் மின்னணு போன்று தான் இயங்கிக் கொண்டே உள்ளது. அந்த உயிரின் இயக்கத்தைக் கொண்டு உடலில் உள்ள ஜீவணுக்களும் இயங்குகின்றது.

மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி ஆவதை அதற்குண்டான இணைப்புகளைக் கொடுத்து நம் வீட்டிற்குள் கொண்டு வருகிறோம். நமக்கு வேண்டிய உபகரணங்களை அந்த மின்சாரத்தால் (மின் அணுக்களால்) இயக்கி அதன் வழி அனைத்துப் பயன்பாடுகளையும் பெறுகின்றோம்.

அது போல் நம் உயிரும் சூரியனின் தொடர்பு கொண்டு தான் இயங்குகின்றது. ஒவ்வொரு ஊரிலும் சப்ஸ்டேஷனை (EB SUB-STATION) எப்படி நாம் வைத்திருக்கிறோமோ அதைப் போன்று நம் உயிரும் அந்த நிலை பெறுகின்றது.

அதாவது…
1.சூரியனின் துணை கொண்டு அந்த மின் கதிர்கள்
2.உயிர் வழி நம் உடல் அணுக்களை எல்லாம் இயக்குகின்றது.

இருப்பினும்… இது அனைத்தையும் அறிந்திடும் தன்மை கொண்டு வாழ்க்கையில் வரும் விஷத்தை எல்லாம் மனித உடலில் இருந்து வென்று உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற்றவன் “அகஸ்தியன்…”

அகஸ்தியன் துருவனாகி திருமணமாகி கணவன் மனைவி இருவரும் ஒரு மனமும் ஒரு மனமாகி… அருள் மணம் பெற்று… உயிரைப் போன்றே உயிர் அணுக்களை வளர்த்து… ஒளியின் உடலாக இருக்கும் அந்தத் “துருவ நட்சத்திரம்…” விஷத்தை ஒளியாக மாற்றிடும் தன்மை பெற்றது.

27 நட்சத்திரங்களும் கடும் விஷத் தன்மை கொண்டது அதனுடைய துகள்கள் பூமியிலே பட்டால் அதன் இனத்தின் தன்மை கொண்ட விஷங்கள் தனக்குள் வளர்ந்து வைரங்களாக விளைகிறது.

அந்த வைரத்தைத் தட்டி நாம் சாப்பிட்டால் மனிதனை உடனடியாகச் சுருட்டி விடும்… அவ்வளவு கடுமையான விஷம்…! ஆனாலும் அந்த விஷத்தின் உணர்வை ஒளியாக நாம் காண முடிகின்றது… வெளிச்சமாகத் தெரிகின்றது.

1.இன்றைக்கும்… விஷம் தான் உலகை இயக்குகின்றது
2.சூரியனும் விஷத்தின் தாக்குதலால் தான் வெப்பமாகி இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகின்றது
3.நமது உயிருக்குள்ளும் விஷத்தின் தாக்குதலாகி அதனால் துடிப்பின் தன்மை ஏற்பட்டு இயங்கிக் கொண்டுள்ளது
4.ஒவ்வொரு அணுக்களிலும் விஷத்தன்மை கலந்திருப்பதால் தான் அது இயக்க அணுக்களாகவும் ஜீவ அணுக்களாகவும் மாறிக் கொண்டுள்ளது

இதை எல்லாம் நாம் அறிதல் வேண்டும்.

உதாரணமாக
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எளிதில் யாரும் கவர முடியாது
2.குரு துணை இல்லாது அதை எடுப்பது மிகவும் கடினம்,

ஆனால்
1.அத்தகைய கடும் விஷத்தையும் தாங்கிக் கொள்ளக்கூடிய குருவை (ஈஸ்வரபட்டர்) நாம் பெற்றுள்ளோம்
2.விஷத்தை ஒளியாக மாற்றிக் கொள்ளும் பருவத்தை நமது குருநாதர் ஏற்படுத்தி உள்ளார்.
3.அதைத்தான்… அந்தக் கடும் விஷத்தையும் ஒளியாக மாற்றும் திறன் உங்களுக்கும் பெறச் செய்து கொண்டிருக்கிறோம் (ஞானகுரு)

ஒவ்வொரு நாளும் நாம் நுகரும் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் உயிரின் முகப்பில் ஈர்க்கப்பட்டு உடல் முழுவதும் எப்படிப் படர்கிறதோ இதே போல்
1.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய (அணுக்கள்) அந்த ஜீவணுக்களின் முகப்பின் இயக்கத்தில்
2.அதன் துணை கொண்டு இந்தத் துருவ நட்சத்திரத்தின் இயக்கத்தை ஈர்க்கச் செய்கின்றோம்.

குருநாதர் எனக்கு எப்படி அந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தாரோ அதே போல் உங்களில் இயக்கச் செய்யும் போது “நமது குருநாதராக” ஆகின்றார்.

ஏனென்றால் அவர் வழியில் நாம் தொடரப்படும் பொழுது “அதனுடைய தொடர்வரிசை” வருகின்றது குரு வழியில் இதைப் பெற்றால் ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றோம்.