ஞானிகள் காட்டிய வழியில் பஞ்சாயத்து செய்ய வேண்டிய முறை

ஞானிகள் காட்டிய வழியில் பஞ்சாயத்து செய்ய வேண்டிய முறை

 

இருளை அகற்றும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.
1.ஒரு கஷ்டமான நிலைகளைப் பார்த்தால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
2.உடனே இதைத்தான் நான் தியானிக்க வேண்டும்.

நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இரண்டு பேர் ஒருவருக்கொருவர் கோபத்துடன் சண்டையிடுவதைப் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அடுத்த கணம் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி… அவர்கள் சண்டையிடும் உணர்வுகள் உடலுக்குள் போகாதபடி தடுத்து நிறுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த அருள் சக்தியை உள்ளே செலுத்தி வலுவாக்க வேண்டும்.

சண்டை போட்டார்கள் அல்லவா… அவர்கள் இருவரும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்; மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழும் அந்தத் திறன் பெற வேண்டும்; என்று அவருடைய உணர்வுகளை நாம் நமக்குள் மாற்றி விட வேண்டும்.

அவர்களுக்கு இது கிடைக்க வேண்டும் என்று “நாம் எண்ணுகின்றோம்…” அவர்கள் அப்படி எண்ணினால் அவருக்கும் நல்லதாகும். ஆனால்
1.அவர்களிடம் போய்ப் புத்தி சொன்னால் கேட்பார்களா…? இல்லை
2.இரண்டு பேர் சண்டையிடுகின்றார்கள் என்றாலும் ஒருவரைப் பார்த்து “நீ கொஞ்சம் பொறுத்துப் போ…!” என்று நாம் சொன்னால்
3.நீ அவனுக்குச் சாதகமாகப் பேசுகின்றாய்… எனக்கு நீ உதவியாக இல்லை…! என்று சண்டைக்கு வருவார்கள்
4.இருவரில் யாரிடம் சொன்னாலும் இருவருமே இப்படித்தான் சொல்வார்கள்… சமாதானப்படுத்த முடியுமா…!
5.அவர்கள் உணர்வுக்குத் தக்க நாம் வரவில்லை என்றால் நம்மைக் குற்றவாளியாக்கி விடுவார்கள்.

ஆகையினால் அதை நாம் நுகர வேண்டியதில்லை. யாம் சொல்லிக் கொடுத்த முறைப்படி துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

அதைஸ் செய்து… சண்டையிட்ட அந்த இருவருமே மகரிஷிகளின் அருள் சக்தியால் சிந்தித்துச் செயல்படும் திறன் பெற வேண்டும்; ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற இந்த உணர்வுகளைச் சேர்த்துக் கொண்டே வந்தால் நமக்குள் அது தீமையைத் தடுக்கும் சக்தியாக மாறுகின்றது.

அடுத்து சாந்தமான பிற்பாடு நாம் என்ன செய்ய வேண்டும்…? அவர்களிடமிருந்து சமைத்த உணர்வு நம்மிடம் இருக்கிறது
1.நீங்கள் இந்த மாதிரிச் செய்தீர்கள் அதனால் தான் உங்களுக்குக் கஷ்டம் வந்தது
2.அதற்குப் பதிலாக மகரிஷிகளின் அருள் சக்திகளை இப்படி எண்ணி எடுத்துப் பாருங்கள் நன்றாகிவிடும்…! என்று சொல்லலாம்.

அவர்கள் அமைதியாக இருக்கும் போது நாம் சொல்வதைக் கேட்க வைத்து உண்மைகளைச் சொன்னால் அவர்கள் நல்லதை எடுப்பதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கின்றது.

அட என்ன…? நீதானப்பா முதலில் அவனிடம் சண்டை போட்டாய்…! என்று சொல்லக் கூடாது. சந்தர்ப்பத்தினால் உணர்ச்சி வசப்பட்டீர்கள்… சண்டையிட்டுக் கொண்டீர்கள்.. அதனால் அன்பை இப்படிக் கெடுத்துக் கொண்டீர்கள்…! சற்று சிந்தியுங்கள் என்று இந்த ஞானத்தோடு சொன்னால் ஏற்றுக் கொள்ளும் பருவம் அங்கே வருகின்றது.

ஈர்க்கும் சக்தி அங்கு இல்லை என்றால்…
1.என்னப்பா இப்படி எல்லாம் செய்கின்றாய் என்று புத்திமதி சொல்வது போல் சொன்னால்
2.எல்லாம் தெரிந்த மாதிரி… இவர் பெரிதாகச் சொல்ல வந்து விட்டார் என்பார்கள்.
3.சொன்னாலும் கேட்க மாட்டார்கள்… நமக்கு எதிர்ப்பதமாக வரும்.

ஆகவே அருள் உணர்வுகளை நாம் வளர்த்து அந்தப் பண்போடு சொல்லிப் பழகுதல் வேண்டும். எப்படி…? இருவரும் சண்டை இட்டீர்கள். அதனால் உடலில் நோயாக மாறியது… சிந்திக்கும் தன்மையும் இழக்கிறது. அதனால் இது போன்ற சந்தர்ப்பங்களில் பொறுப்பாக இருந்து இரண்டு பேரும் ஒன்று சேர்த்து வாழப் பழகிக் கொள்ளுங்கள்.

அதற்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை இருவருமே பெறுங்கள் உங்கள் உடலில் அதை வளர்த்துக் கொள்ளுங்கள் இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் அந்த தெளிந்த மனம் பெற வேண்டும் என்று இப்படிச் சொல்லிப் பழகுதல் வேண்டும்.

இது அவர்களுக்குள் ஏற்றுக் கொள்ளும் பருவமாக மாறுகின்றது… கொஞ்சமாவது கேட்பார்கள்… “கேட்டால் தானே உள்ளே செல்லும்…” சொல்வது அர்த்தமாகிறது அல்லவா.

இப்படிப்பட்ட உணர்வை நாம் சேர்த்துக் கொண்டால் அவர் சண்டையிட்ட உணர்வோ வெறுப்படைந்த உணர்வோ நமக்குள் வருவதில்லை. அவர்களும் ஒன்றுபட்டு வாழும் நிலைக்கு வருகின்றார்கள்… பகைமைகளை அகற்ற முடிகிறது.

இப்படித்தான் நாம் மாற்றிக் கொண்டு வர வேண்டும்… இதைச் செயல்படுத்த வேண்டும்

தியானம் என்பது…
1.அந்த ஞானிகளின் அருள் சக்தியை எடுத்துச் சமைத்து ஞானத்தின் உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது
2.தீமை நமக்குள் வராதபடி எல்லாம் தெளிந்த மனமாக வளர்கின்றது
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் விளைகின்றது.

கோடிக்கரையில் (கடைசி மனித உடல்) இருக்கும் நாம் இதையே செய்து கொண்டு வந்தால் தனுசு கோடி எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து ஒளியாக மாறுகின்றோம். இது தான் இராமேஸ்வரத்தின் தத்துவம்

இராமன் என்றால் எண்ணம்… நாம் நுகர்ந்தது எண்ணத்தால் உருவா(க்கு)கின்றது. எதை உருவாக்கினோமோ அதுவே ஈசனாக இயக்குகிறது. அது தான் இராமேஸ்வரம்.
1.எண்ணத்தால் உருவாக்கப்பட்டது இராமலிங்கம்…
2.உயிருடன் ஒன்றி ஒவ்வொருவரும் நாம் ஒளியாக மாற வேண்டும்…!

முன்னோர்களை விண் செலுத்துவதால் கிடைக்கும் பலன்

முன்னோர்களை விண் செலுத்துவதால் கிடைக்கும் பலன்

 

கேள்வி:-
தியானத்தின் மூலம் என் தந்தையை விண் செலுத்தினேன். அதனுடைய பலன் என் சகோதரர்களுக்குக் கிடைக்குமா…? ஆனால் அவர்கள் என்னைப் போன்று இந்தத் தியானத்தைச் செய்யவில்லை… அதிலே ஈடுபடவும் இல்லை

பதில்:-
இந்தத் தியான வழியினை நீங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றீர்கள் அந்தச் சக்தி உங்களுக்குள் கூடிக் கொண்டிருக்கிறது
1.உங்கள் தந்தையின் உணர்வுகள் தான் உங்கள் உடல்.
2.உடலை விட்டுப் பிரிந்து சென்ற தந்தையின் உயிரான்மாவை தியானத்தின் மூலம் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்கின்றீர்கள்.
3.அவர் உடல் பெற்ற நஞ்சுகள் அங்கே கரைக்கப்படுகின்றது
4.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவு ஏழாவது நிலையாக தந்தையின் உயிரான்மா சுற்றிக் கொண்டிருக்கின்றது.

ஆனால் தாய் இங்கே உடலுடன் இருக்கின்றார்கள். அவர்கள் பிரியும் போது இதே முறை கொண்டு தாயின் உயிரான்மாவையும் விண் செலுத்தினால் இரண்டு பேரும் ஒன்று சேர்த்து ஒரு உணர்வின் கருவாக உருவாகி என்றும் அழியா ஒளிச் சரீரமாக சப்தரிஷி மண்டலத்தில் இருப்பார்கள்.

அதே சமயத்தில் அவர் வாழ்ந்த காலங்களில் வெளிப்படுத்திய சில இருளான தன்மைகள் இருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறப்படும் பொழுது அந்தச் சக்தி எளிதில் கிடைக்கின்றது.

அதாவது…
1.தீமைகளை நீக்கக்கூடிய சக்தியான அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உங்களுக்குக் கிடைக்கின்றது.
2.எனக்குக் கிடைக்கின்றது… குடும்பத்தில் என்னுடன் பிறந்த சகோதரர்களுக்கு அது ஏன் கிடைக்காமல் போகும்…? என்று நீங்கள் கேட்கலாம்.

அவர்களுடைய உணர்வு இதன் மேல் பற்று இல்லை.

உதாரணமாக ரேடியோ டிவி அலைகளை ஒலி… ஒளிபரப்பு செய்யப்படும் பொழுது எந்த ஸ்டேஷனை… எந்த அலைவரிசையைத் திருப்பி வைக்கின்றோமோ… அதைத்தான் அது இழுத்துக் கொண்டு வரும். அதைத்தான் நாம் பார்க்க அல்லது கேட்க முடியும் ஏனென்றால் இந்தக் காற்றிலே எல்லாமே இருக்கின்றது.

அது போல் தந்தையை நீங்கள் தியானத்தின் வழியில் விண் செலுத்தும் போது… “விண் செலுத்திய வலுவான உணர்வு” உங்களுக்குள் இருக்கின்றது அப்பொழுது எளிதில் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்று உங்களுக்குள் வரக்கூடிய சிரமங்களைப் போக்கிக் கொள்ள முடிகிறது.

போக்கிக் கொண்ட பிற்பாடு உங்களுடன் பிறந்த சகோதரர்கள்… அவர்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… அவர்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்… மெய்ப்பொருள் காணும் அந்த திறன் பெற வேண்டும்… என்று “பிரார்த்திக்க வேண்டியது உங்களுடைய கடமை…!”

ஆனால்…
1.தியானிக்க வேண்டியதன் அவசியத்தைச் சொல்கிறோம்… சகோதரர்கள் கேட்கவில்லை என்று வேதனைப்பட்டால்
2.நீங்கள் இப்பொழுது எடுத்துக் கொண்டிருக்கக்கூடிய சக்தியையும் இழக்க நேரும்.

ஏனென்றால் விஷத்தின் தன்மை வரப்படும் போது சிந்திக்கும் தன்மை இங்கே இழக்கப்படுகின்றது. உங்களை அறியாமல் அவர்கள் நிலைக்குத் தான் செல்கிறீர்கள்.

சொல்வது அர்த்தம் ஆகின்றது அல்லவா…!

அவர்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… இந்த அருள் வழியில் வாழ வேண்டும் என்ற ஆசையை ஊட்டலாம் சகோதரர்களுக்கு…!
1.ஆனால் அவர்கள் பெறவில்லை… கடைப்பிடிக்கவில்லையே… என்று வருத்தப்பட வேண்டியதில்லை
2.அவர்கள் அதை பெற்று வளர வேண்டும் என்று நமக்குள் ஆசையைக் கூட்டுவதால் தவறில்லை.

இதைச் செய்யவில்லை என்கிற போது உங்கள் தந்தைக்கு எந்த நோய் வந்ததோ அது அவர்களுக்கு வரும். அது மட்டுமல்ல… அவர்கள் குழந்தைகளுக்கும் வரும்… பரம்பரை நோய் என்று…!

ஆனால் “நீங்கள் செய்யக்கூடிய தியானம்…” உங்களுக்கும் சரி… உங்கள் சார்புடையவர்களுக்கும் சரி… அந்தப் பரம்பரை நோய் வராதபடி தடுக்கும்.

முறைப்படி உங்கள் தாய் தந்தையரை விண் செலுத்தும் போது சப்தரிஷி மண்டலங்களின் சக்தி எளிதில் கிடைத்து அதன் மூலம்
1.சிந்திக்கக் கூடிய சக்தி உங்களுக்கு கிடைக்கும்.
2.தீமை என்றால் அதை முன் கூட்டியே உணர முடியும்.
3.தீமைகள் வராது தடுத்துக் கொள்ளக்கூடிய அந்த ஞானமும் உங்களுக்குள் வளரும்.

தாய் தந்தையரை விண் செலுத்தி அதன் தொடர்பு கொண்ட உணர்வுகள் உங்களுக்குள் வளரப்படும் பொழுது நாளடைவில்
1.உங்கள் குலதெய்வங்கள்… உடலை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் இருந்தாலும்
2.தொடர்ந்து விண் செலுத்தும் உணர்வுடன் நீங்கள் செயல்படும் போது
3.அதனுடன் ஈர்க்கப்பட்டு… “என்னையும் நீ விண் செலுத்து…” என்று கேட்கும் உணர்ச்சிகள் உங்களுக்குள் தோன்றும்… பார்க்கலாம்.
4.அவர்கள் விண் சென்றதையும் நீங்கள் உணரலாம்… அதைக் காட்சியாகவும் கூடக் காண முடியும்.

சென்று விட்டார்களா…! இல்லையா…? என்று நீங்கள் தனித்துப் பார்க்க வேண்டியது இல்லை. தொடர்ந்து இந்த உணர்வுகளைச் செயல்படுத்தி வந்தால் “நான் விண்ணிலே இருக்கின்றேன்…!” என்று உங்களுக்கு உணர்த்துவார்கள்.

ஆகவே இத்தகைய விண் செலுத்தும் மார்க்கம் எல்லோருக்கு,ம் கிடைக்க வேண்டும் என்று எண்ணுவது உங்களுடைய கடமை…! அதை நீங்கள் செயல்படுத்த வேண்டும். மற்றவர்கள் செய்யவில்லை என்ற எண்ணம் உங்களுக்குத் தேவையில்லை.

“உயிரைப் போன்றே ஒளியாக மாற வேண்டும்” என்று விரும்புபவர்களுக்கு…!

“உயிரைப் போன்றே ஒளியாக மாற வேண்டும்” என்று விரும்புபவர்களுக்கு…!

 

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நாம் ஆசைப்பட வேண்டும்.

“தினம் தினம்” நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறச் செய்வதை “ஒரு தலையாயக் கடமையாக நாம் வைத்துக் கொள்ள வேண்டும்…”

1.உடலுக்கு வேண்டிய உணவை எப்படி அவ்வப்போது உட்கொள்கின்றோமோ
2.அதைப் போன்று நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவ அணுக்களுக்கு
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் பெறச் செய்ய வேண்டும்.

27 நட்சத்திரங்களும் புவியின் ஈர்ப்பிற்குள் அதனதன் அலைகள் கவரப்படும் போது மின்னலாகப் பாய்கின்றது. சில நட்சத்திரங்களின் அலைகள் எந்தப் பகுதியில் அதிகமாகப் படர்கின்றதோ மண்ணுடன் கலந்து அந்தந்த நட்சத்திரங்களின் குணங்களுக்கொப்ப வைரங்களாக விளைகின்றது.

காற்றில் இருப்பதைப் புவி ஈர்ப்பின் தன்மை கொண்டு கவர்ந்து வைரங்களாக அது விளைகின்றது.

அது போன்றே துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளையும் பேரொளியையும்
1.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குச் சிறுகச் சிறுகச் சேர்க்க
2.உயிரைப் போன்றே ஜீவணுவாகி… (ஒளியான) உயிரணுவாக மாறிவிடும்.

கோடிக்கணக்கான ஜீவணுக்கள் நம் உடலில் இருப்பதை உயிரைப் போன்ற உயிரணுக்களாக…
1.ஒளியான அணுக்களாக மாற்றும்போது ஓர் ஒளியின் உடலாகவும்
2.எத்தகைய விஷத்தன்மைகளையும் ஒளியாக மாற்றிடும் திறன் நம் உயிர் பெறுகின்றது.

இதை நாம் அறிந்து கொள்தல் வேண்டும்.

நட்சத்திரங்களுடைய அலைகள் பூமிக்குள் கவரப்பட்டு அது மண்ணுக்குள் கருவுற்று வைரங்களாக விளைந்த பின் அது வெடித்துத் தனித் தன்மையாக வெளி வந்துவிடும்.

இதைப் போன்று தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்களுக்கு உணவாகக் கொடுத்தபின்… நாளுக்கு நாள் அது விளைந்து வெளிப்படும் பொழுது… அறிவின் வளர்ச்சி… அறிந்திடும் வளர்ச்சியாக இங்கே வருகின்றது. அதாவது…
1.ஒரு வெளிச்சத்தைக் கண்டபின் பொருள் தெரிவது போன்று
2.நமது ஜீவணுக்களின் துணை கொண்டு கண்ணின் வளர்ச்சி கொண்டு
3.அதன் உணர்வின் அறிவை அறிந்திடும் ஞானமாக வளர்கின்றது.

நட்சத்திரங்களின் துகள்கள் மின்னலாக மாறி பூமிக்குள் பட்ட பின் சிறுகச் சிறுக வைரமாக விளையப்படும் பொழுது ஒளியின் உடலாக அது பெறுகின்றது… நட்சத்திரங்கள் மின்னுவது போன்று…!

நமது உயிரும் மின்னணு போன்று தான் இயங்கிக் கொண்டே உள்ளது. அந்த உயிரின் இயக்கத்தைக் கொண்டு உடலில் உள்ள ஜீவணுக்களும் இயங்குகின்றது.

மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி ஆவதை அதற்குண்டான இணைப்புகளைக் கொடுத்து நம் வீட்டிற்குள் கொண்டு வருகிறோம். நமக்கு வேண்டிய உபகரணங்களை அந்த மின்சாரத்தால் (மின் அணுக்களால்) இயக்கி அதன் வழி அனைத்துப் பயன்பாடுகளையும் பெறுகின்றோம்.

அது போல் நம் உயிரும் சூரியனின் தொடர்பு கொண்டு தான் இயங்குகின்றது. ஒவ்வொரு ஊரிலும் சப்ஸ்டேஷனை (EB SUB-STATION) எப்படி நாம் வைத்திருக்கிறோமோ அதைப் போன்று நம் உயிரும் அந்த நிலை பெறுகின்றது.

அதாவது…
1.சூரியனின் துணை கொண்டு அந்த மின் கதிர்கள்
2.உயிர் வழி நம் உடல் அணுக்களை எல்லாம் இயக்குகின்றது.

இருப்பினும்… இது அனைத்தையும் அறிந்திடும் தன்மை கொண்டு வாழ்க்கையில் வரும் விஷத்தை எல்லாம் மனித உடலில் இருந்து வென்று உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற்றவன் “அகஸ்தியன்…”

அகஸ்தியன் துருவனாகி திருமணமாகி கணவன் மனைவி இருவரும் ஒரு மனமும் ஒரு மனமாகி… அருள் மணம் பெற்று… உயிரைப் போன்றே உயிர் அணுக்களை வளர்த்து… ஒளியின் உடலாக இருக்கும் அந்தத் “துருவ நட்சத்திரம்…” விஷத்தை ஒளியாக மாற்றிடும் தன்மை பெற்றது.

27 நட்சத்திரங்களும் கடும் விஷத் தன்மை கொண்டது அதனுடைய துகள்கள் பூமியிலே பட்டால் அதன் இனத்தின் தன்மை கொண்ட விஷங்கள் தனக்குள் வளர்ந்து வைரங்களாக விளைகிறது.

அந்த வைரத்தைத் தட்டி நாம் சாப்பிட்டால் மனிதனை உடனடியாகச் சுருட்டி விடும்… அவ்வளவு கடுமையான விஷம்…! ஆனாலும் அந்த விஷத்தின் உணர்வை ஒளியாக நாம் காண முடிகின்றது… வெளிச்சமாகத் தெரிகின்றது.

1.இன்றைக்கும்… விஷம் தான் உலகை இயக்குகின்றது
2.சூரியனும் விஷத்தின் தாக்குதலால் தான் வெப்பமாகி இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகின்றது
3.நமது உயிருக்குள்ளும் விஷத்தின் தாக்குதலாகி அதனால் துடிப்பின் தன்மை ஏற்பட்டு இயங்கிக் கொண்டுள்ளது
4.ஒவ்வொரு அணுக்களிலும் விஷத்தன்மை கலந்திருப்பதால் தான் அது இயக்க அணுக்களாகவும் ஜீவ அணுக்களாகவும் மாறிக் கொண்டுள்ளது

இதை எல்லாம் நாம் அறிதல் வேண்டும்.

உதாரணமாக
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எளிதில் யாரும் கவர முடியாது
2.குரு துணை இல்லாது அதை எடுப்பது மிகவும் கடினம்,

ஆனால்
1.அத்தகைய கடும் விஷத்தையும் தாங்கிக் கொள்ளக்கூடிய குருவை (ஈஸ்வரபட்டர்) நாம் பெற்றுள்ளோம்
2.விஷத்தை ஒளியாக மாற்றிக் கொள்ளும் பருவத்தை நமது குருநாதர் ஏற்படுத்தி உள்ளார்.
3.அதைத்தான்… அந்தக் கடும் விஷத்தையும் ஒளியாக மாற்றும் திறன் உங்களுக்கும் பெறச் செய்து கொண்டிருக்கிறோம் (ஞானகுரு)

ஒவ்வொரு நாளும் நாம் நுகரும் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் உயிரின் முகப்பில் ஈர்க்கப்பட்டு உடல் முழுவதும் எப்படிப் படர்கிறதோ இதே போல்
1.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய (அணுக்கள்) அந்த ஜீவணுக்களின் முகப்பின் இயக்கத்தில்
2.அதன் துணை கொண்டு இந்தத் துருவ நட்சத்திரத்தின் இயக்கத்தை ஈர்க்கச் செய்கின்றோம்.

குருநாதர் எனக்கு எப்படி அந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தாரோ அதே போல் உங்களில் இயக்கச் செய்யும் போது “நமது குருநாதராக” ஆகின்றார்.

ஏனென்றால் அவர் வழியில் நாம் தொடரப்படும் பொழுது “அதனுடைய தொடர்வரிசை” வருகின்றது குரு வழியில் இதைப் பெற்றால் ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றோம்.

குருநாதர் காட்டிய வழியில் எத்தனையோ மகான்களை விண் செலுத்தினோம் – ஞானகுரு

குருநாதர் காட்டிய வழியில் எத்தனையோ மகான்களை விண் செலுத்தினோம் – ஞானகுரு

 

போகருடைய தாயை ஒரு விஷம் கொண்ட பாம்பு தீண்டி விடுகின்றது. காளிங்கராயன் என்பவரை போகர் அப்போது அணுகுகின்றார்.

தன் தாயைக் காக்க வேண்டும் என்ற நிலையில் அவரிடம் பல பச்சிலை மூலிகைகளை அறிந்து அதை வைத்துத் தன் தாயை எழுப்புகின்றார். விஷத்தின் தன்மை எவ்வாறு ஒடுக்குவது…? என்று அவரிடம் பழகித் தெரிந்து கொள்கின்றார்.

விஷத்தை ஒடுக்கும் உணர்வினைத் தனக்குள் அதன் உணர்வின் அறிவாக தெளிந்த நிலையில் கொண்டு வருகின்றார். போகர். அதன் வரிசையில் தான் பல ஆற்றல்கள் அவருக்குள் பெருகத் தொடங்கியது.

1.நட்சத்திரங்கள் கோள்கள் இயக்கங்களையும் அறிகின்றான்… வான மண்டலத்தையும் அறியத் தொடங்குகின்றான்.
2.இதையெல்லாம் அறிந்த பின் அவன் இன்னொரு கூட்டிற்குள் (உடலுக்குள்) செல்லவில்லை
3.ஒளியின் தன்மையைப் பெருக்குகின்றான்…
4.ஒளியின் தன்மை ஆனாலும் உந்தித் தள்ளி விண்ணுக்கு அவனை அனுப்பும் வழி இல்லை.
5.ஏனென்றால் அதற்குண்டான முகப்பு வரவேண்டும்… இருந்தாலும் அந்த ஒளி அலைகள் வருகின்றது.

குருநாதர் போகரைப் பற்றிச் சொல்லும் பொழுது அவன் பெரிய திருடன்… வானத்தையே திருடி இருக்கின்றான்…! ஆனால் விண்ணுக்குப் போகும் வழியைத் திருடத் தெரியவில்லை…! நீயும் ஒரு திருடன் ஏன்று என்னிடம் (ஞானகுரு) சொல்கின்றார்.

அப்பொழுதுதான் இந்த உணர்வின் தன்மை எடுத்து
1.போகருக்கு நீ அந்த விண் செல்லும் பாதையின் உணர்வைச் செலுத்து
2.அந்த உயர்ந்த உணர்வுகளை… நினைவுகளை எடு
3.அவருடன் தொடர்பு கொள்… அந்த உணர்வின் துணை கொண்டு இந்த முகப்பைக் கூட்டு.
4.ஒளி நிலை பெற வேண்டும் என்று அந்த அருள் ஒளியை அவரிடம் இருந்து நீ பெறு
5.ஏனென்றால் உயர்ந்த சக்தி பெற்றவர்.. அந்த உணர்வின் துணை கொண்டு விண்ணுக்குச் செலுத்து என்றார் குருநாதர்..

இப்படித்தான் இராமலிங்க அடிகள்… காந்தியடிகள்… விவேகானந்தர் என்று இது போன்று ஏனைய எத்தனையோ மகான்களை விண் செலுத்தும்படி செய்தார் குருநாதர். “ஒன்று இரண்டு அல்ல…”

ஒவ்வொருவரும் தத்துவங்களைத் தனக்குள் வளர்த்துக் கொண்டாலும்
1.விண் செல்லும் பாதையை அந்த முகப்பின் தன்மை எவ்வாறு அவர்களுக்குச் சேர்க்க வேண்டும்
2.ஆன்மாக்களை எவ்வாறு விண் செலுத்த வேண்டும் என்று தெளிவாக கூறினார்.

இந்தப் பழக்கத்தை எல்லாம் ஏற்பபடுத்திய பின்பு தான் அவருக்கும் “தனக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும்” என்று குருநாதர் இந்த வேலையைச் செய்தார்.

ஏனென்றால்
1.அவர் (ஈஸ்வரபட்டர்) எத்தனையோ உடல்களைத் தாவியவர் தான்
2.தகுந்த உடல்கள் பெறவில்லை… அதற்குத் தகுந்த உணர்வுகள் கிடைக்கவில்லை
3.அவரவர்கள் இச்சைக்குத் தான் செல்கின்றார்கள்.
4.(குரு தன்மை அடைவதற்கு இப்படி எத்தனையோ நிலைகள் இருக்கின்றது).

அண்டத்தின் சக்தி இந்தப் பிண்டத்திற்குள் எப்படி இருக்கின்றதோ அதைப் பெறக்கூடிய தகுதியாகத் தான் முருகன் சிலையை வைத்தான் போகன். அது யாருக்கும் தெரியாது.

போகன் சிலையை மாற்ற வேண்டும்… வைக்க வேண்டும்… என்று பல பேர் வந்து கேட்டார்கள். அந்த மாதிரிச் செய்ய முடியாது. ஏதாவது மீறித் தொட்டீர்கள் என்றால் குடும்பம் எல்லாம் நாஸ்தி ஆகிவிடும்… தொடும் குடும்பம் எல்லாம் நாஸ்தியாகிவிடும் என்று சொன்னேன்.

உயர்ந்த சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சிலையை வைத்தான் போகன்.

ஆனால் தனித்த நிலைகள் கொண்டு சுயநலத்திற்காக வியாபாரத்திற்காக அந்தச் சிலையைப் பயன்படுத்தினால் அவன் யாரும் உருப்பட மாட்டான்.

ஏமாற்றும் நிலைகள் கொண்ட எவனும் இங்கே உருப்படியாக மாட்டான். மற்ற கோவில்களில் செய்வது வேறு… அங்கிருக்கக்கூடிய சிலைகள் வேறு. பழனி முருகன் சிலை அப்படிக் கிடையாது. அத்தனை பெரிய அணையை போகன் இங்கே போட்டு வைத்திருக்கின்றார்.

தவறு செய்ய முடியாது… தவறு செய்தான் என்றால் நொறுங்கிப் போவான். உணர்வின் தன்மை விஷமாகிவிடும். விஷத்தை உட்கொண்டால் எப்படி நினைவிழக்கச் செய்யுமோ… புழுவாக பூச்சியாக பாம்பாகத் தான் அடுத்து பிறக்க நேரும்.

யாருடைய தயவும் நமக்குத் தேவையில்லை…!

யாருடைய தயவும் நமக்குத் தேவையில்லை…!

 

மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் பெருக்கி வலு சேர்த்துக் கொண்ட பின் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைக்க வேண்டும்.

அவருடைய உணர்வுகள் நமக்குள் பதிவு உண்டு. நாம் எடுத்துக் கொண்ட ஞானிகள் உணர்வின் தன்மை கொண்டு அங்கே செல்ல வேண்டும் என்று
1.அவர்களை உந்திச் செலுத்தும் பொழுது
2.நேராக சப்தரிஷி மண்டலம் போய்ச் சேர்கின்றது.

சப்தரிஷிகள் என்பவர்கள் உடல் பெறும் உணர்வுகளை அவர்கள் கரைத்தவர்கள். அங்கே சென்றவுடன் நம் முன்னோர்கள் மீண்டும் உடல் பெறும் அந்த உணர்வுகளைச் சுட்டுப் பொசுக்கி விடுகின்றது… உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுகின்றது

கரைத்த பின் அறிவாக இருக்கும் அந்த ஒளி நிலைத்து நிற்கின்றது. அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்தில் அவர்கள் சுழலத் தொடங்குகின்றார்கள்.

அதே போன்று குடும்பத்தில் யார் உடலை விட்டுப் பிரிகின்றார்களோ கணவன் இறந்தால் கணவனை முதலில் அனுப்புகின்றோம்… மனைவி இறந்தால் மனைவியை முதலில் அனுப்புகின்றோம்.

சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து கணவன் முதலில் ஒளியாக ஆன பிற்பாடு மனைவி இங்கே இருக்கும் பொழுது
1.அதே உணர்வுடன் கணவன் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று
2.அடிக்கடி இதை எண்ணப்படும் பொழுது அடுத்து மனைவி உடலை விட்டுச் சென்றாலும் அங்கே சென்று விடும்.
3.அதாவது அந்த உணர்வை எண்ணினாலே ஆட்டோமேட்டிக்காக மனைவியின் ஆன்மா அங்கே சென்றடைந்து விடும்.

நாம் எல்லோரும் சேர்ந்து அந்த உணர்வை நமக்குள் பெருக்குவதற்குத் தான் இப்போது கூட்டாக உங்களுக்குப் பயிற்சி கொடுக்கின்றோம். செய்கிறோம்.
1.இந்தப் பதிவு இல்லை என்றால்
2.அங்கே நாம் யாரையும் அனுப்ப முடியாது.

மனைவி முதலில் பிரிந்தால் மனைவியின் ஆன்மாவைக் கணவன் உந்தி அங்கே சப்தரிஷி மண்டலத்தில் செலுத்திய பின் கணவன் இங்கே எண்ணியவுடன் ஆட்டோமேட்டிக்காக கணவனின் ஆன்மாவும் அங்கே சென்று விடுகின்றது.

யார் பிரிந்தாலும் முதலில் அவர்களை அங்கே அனுப்பி வைத்து விடுகின்றோம். உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரைத்து விடுகின்றோம்.
1.அங்கு இணைந்த பின் அவர்கள் உணர்வு இங்கே இருக்கின்றது.
2.அந்த ஒளியின் உணர்வை இங்கிருந்து நாம் பெருக்குகின்றோம்.
3.பெருக்கிக் கொண்டால் வேறு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை
4.உடலை விட்டுப் பிரிந்து சென்றால் சப்தரிஷி மண்டலம் தான் நாம் செல்வோம்.

நண்பர்களுக்குள் நன்மை செய்தான் என்று பாசமாக இருக்கின்றனர். ஆனால் சந்தர்ப்பத்தில் உடலை விட்டுப் பிரிய நேர்ந்தால்…
1.பாசத்தால் எண்ணி “நண்பா நான் போகின்றேன்…” என்று எண்ணினால் நண்பனுடைய உடலுக்குள் தான் அந்த ஆன்மா செல்லும்.
2.அந்த நண்பனும் நேற்று வரை என்னிடம் பேசிக் கொண்டிருந்தானே “இப்போது போய் விட்டானா…” என்று எண்ணும் பொழுது அந்த உடலுக்குள் தான் செல்லும்.

சொல்வது அர்த்தமாகிறது அல்லவா…!

ஆகவே… இதற்கு முன்பு மூதாதையர்களை விண் செலுத்தும் அந்தப் பழக்கத்தை நாம் விட்டு விட்டோம். இப்போது மீண்டும் அந்த ஞானிகள் கண்ட வழியினை “உங்களுக்குள் தொடரும்படி செய்கின்றோம்…”

மனிதனான பின் பிறவி இல்லா நிலை அடைந்தவர்கள் அக்காலத்தில் விண் சென்றவர்கள் தான் “முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள்” என்று சொல்வது. சப்தரிஷி மண்டலத்திற்குள் கண்ணுக்குப் புலப்படாது ஒளியாக எண்ணிலடங்காதோர் உள்ளார்கள்.

அவர்கள் பல கோடி ஆண்டுகள் ஆகித்தான் ஒளியின் சரீரமாக உள்ளார்கள் “என்றும் பதினாறு” என்று வாழுகின்றார்கள்.
1.இந்தச் சூரியக் குடும்பம் அழிந்தாலும் அவர்கள் பிற சூரிய குடும்பத்தில் இருந்து ஆற்றல்களைப் பெற்றதனால்
2.அதிலே நஞ்சாக வரும் உணர்வுகளை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றவர்கள்.
3.என்றும் பதினாறு என்று அகண்ட நிலையில் எங்கும் செல்லும் திறன் பெற்றவர்கள்
4.ஒரு எல்லையில் இருந்து தனக்குள் உருவாக்கிக் கொண்டவர்கள்.

எந்த எல்லையில் இருக்கின்றார்களோ… துருவத்தை எல்லையாக வைத்து சூரியனைச் சுற்றி மற்ற கோள்கள் வருவது போன்றது துருவ நட்சத்திரத்தினுடைய வட்டத்தில் அவர்கள் சுழன்று வருகின்றார்கள் சப்தரிஷி மண்டலங்களாக…! மனிதனாகப் பிறந்து வாழ்ந்தவர்கள் தனித்தன்மை கொண்டு வாய்ந்தவர்கள் தான் அகண்ட அண்டம் பேரண்டம் எத்தனையோ நிலைகள் கொண்டது.

அதிலே எத்தனையோ கோடி ஆண்டுகள் வரப்படும் பொழுது அணுவாகி கோலாகி நட்சத்திரமாகி சூரியனான பின் நட்சத்திரமாகிக் கோளின் தன்மை அடைந்தது பலர்.

இந்தக் குடும்பங்கள் அழிந்தாலும் அதற்குள் எத்தனை நிலையில் உள்ளது

ஒரு சூரிய குடும்பமே எத்தனை கோடி மைல்கள் எல்லை விஸ்தீரணம் கொண்டது. அதேபோன்று அடுத்த சூரிய குடும்பத்தை எடுத்தாலும் அது எத்தனை கோடி மைல்களுக்கு அப்பால் உள்ளது.

நாம் இந்த 2000 சூரியக் குடும்ப வட்டத்தில் தான் வாழுகின்றோம். ஒன்றுடன் ஒன்று துணை கொண்டு தான் சுழலுகின்றது. இது வேறு 2000 சூரியக் குடும்பத்திலிருந்து வரக்கூடிய சக்தியை எடுத்து தான் வாழுகின்றது.

இப்படி ஒவ்வொன்றிலும்
1.மனிதனாக உருப்பெற்றவன் ஒளியாக மாறிய பின் தனித்தன்மை வாய்ந்ததாகச் செல்லுகின்றது
2.இதற்கு அதற்கும் சம்பந்தமில்லாது செல்கின்றது… துருவத்தின் எல்லையில் தான் வாழ்கின்றார்கள்.

ஆகவே என்றும் 16 என்ற அந்த நிலையை நாம் அடைய வேண்டும் இல்லை என்றால் மீண்டும் தேய்பிறை தான்.

ஆகவே யாராக இருந்தாலும் நாம் பலருடைய ஆன்மாக்களை விண்ணுக்குச் செலுத்துகின்றோம்… மூதாதையர்களை அனுப்புகின்றோம்.
1.இவ்வாறு செய்து கொண்ட பின் நாம் இந்த உடலை விட்டுச் சென்றால்
2.யாருடைய தயவும் நமக்குத் தேவையில்லை நாம் அங்கேதான் செல்கின்றோம்.

தியானத்தில் அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… மூதாதையர்களின் உயிரான்மாக்கள் அங்கே இணைய வேண்டும் என்று இந்த உணர்வை நாம் வளர்க்க வளர்க்க
1.உடலை விட்டு நாம் சென்றால் அங்கே தான் உயிர் நம்மை அழைத்துச் செல்லுமே தவிர
2.புவியின் ஈர்ப்புக்குள் இருக்காது…!

இதை நாம் ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும். ஏனென்றால் ஒரு தொடர்பு வேண்டும். எல்லோரும் சேர்ந்து ஆன்மாக்களை அங்கே அனுப்புகின்றோம்.

எல்லோரும் சேர்ந்து சப்தரிஷி மண்டலத்துடன் ஐக்கியம் ஆகும் பொழுது நம் குருநாதர் காட்டியபடி ஒளியின் கூட்டமைப்பாகின்றது.

உயிரான்மா ஒளியாக மாறினால் “அகண்ட அண்டத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும்”

உயிரான்மா ஒளியாக மாறினால் “அகண்ட அண்டத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும்”

 

இன்று மனிதனாக இருக்கின்றோம்… இந்தச் சூரியக் குடும்பம் அழிந்துவிட்டால் அணுக்களாகத் தான் செல்வோம்… பிரபஞ்சத்தில் மிதப்போம். பின்
1.ஏதாவது ஒரு கோளுக்குள் இழுத்துக் கொண்டு போகும்
2.அங்கே அதற்குண்டான உணவு (சத்து) இருந்தால் புழுவாக பூச்சியாக அல்லது கிருமியாக வளர வேண்டி இருக்கும்
3.விஷத்தன்மையாகத்தான் மாற்றிக் கொண்டிருக்கும்.

தாவர இனங்கள் அழிந்து விட்டால் அதை விட்டு வெளியே சென்று விடும். மற்ற கோளுக்குள் செல்கின்றது. ஆனால் எந்த பிரபஞ்சத்திற்குள் செல்லும்…? என்று சொல்ல முடியாது.

எல்லாமே அகண்ட நிலையிலிருந்து வளர்ந்தது தான். ஆனால் சூரியன் செயலிழந்தால் பூமி நகர்ந்து ஓடிப் போய்விடும். இதிலிருந்து தப்புவதற்குத் தான் நம் குருநாதர் காட்டிய வழியில் இத்தனை வேலையும் செய்கின்றோம்.

காரணம் இன்று நம் பிரபஞ்சத்தைச் சேர்ந்த நட்சத்திரங்கள் தனக்கென்று தனித்துத் தனித்துச் சூரிய குடும்பங்களாக உருவாகிக் கொண்டிருக்கின்றது.

ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் வளர்ச்சி அடைந்தால் அவர்களுக்குத் திருமணம் ஆகி தனக்கென்று ஒரு குடும்பம் உருவாவது போல்
1.நட்சத்திரங்கள் தன் வளர்ச்சியில் சூரியனாகும் போது பிரிந்து சென்று விடும்.
2.பிரிந்து செல்லச் செல்ல நாளுக்கு நாள் நம் சூரியனும் செயல் இழக்கும்
3.சூரியனின் ஈர்ப்பில் உள்ள பூமி கரைந்து ஓடும்
4.இதில் உள்ள உயிரணுக்கள் மற்ற உயிரணுக்களுக்குக் குருவாக அமையும்.

பல கோடி ஆண்டுகளுக்கு முன் வியாழன் கோளில் இது போன்றுதான் பிரிக்கப்பட்டு நம் பிரபஞ்சத்திற்கு அது குருவாக வந்தது. அதிலே இன்னும் உயிரணுக்களின் தன்மைகள் நிறைய மாற்றங்கள் உண்டு. ஆனால் இப்போது உயிரினங்கள் அங்கே இல்லை.

அதிலிருந்து வரக்கூடிய உயிரணுக்கள் தான் சிறுகச் சிறுக பிரபஞ்சத்திற்குள் வந்து உயிரணுவாக மாறும் தகுதி கிடைக்கின்றது.
1.வியாழனில் கதிரியக்கப் பொறிகள் ஏற்படுவதால் தான் உயிரணுக்களே உண்டாகிறது.
2.அந்தக் கரு சேர்ந்த பிற்பாடு தான் உயிரணுக்களுக்கு மூலமாகிறது
3.இல்லை என்றால் உயிரணுக்கள் தோற்றமே இல்லை
(சில இதுகள் அதில் இருக்கின்றது… சுருக்கமாக உங்களுக்குச் சொல்லிப் பதிவு செய்கிறேன்).

ஆகவே… அண்டத்தில் இருக்கும் உணர்வுகள் அனைத்தும் நம் உடலான இந்தப் பிண்டத்திற்குள் இருக்கின்றது. மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற்று உயிருடன் ஒன்றி… நுகரும் உணர்வுகளை எல்லாம் ஒளியின் சுடராக நாம் மாற்றி விட்டால்
1.அகண்ட அண்டத்தில் எங்கு வேண்டுமென்றாலும் நாம் செல்ல முடியும்
2.”என்றும் பதினாறு” என்று இந்த வளர்ச்சி… வேகா நிலை அடைகின்றது… எதிலுமே நம் உயிரான்மா வேகாது.

நம் 2000 சூரியக் குடும்பத்தையும் முதலிலே வட்டமிடும். பின் இதைக் கடந்து மற்ற 1000, 2000, 3000 என்ற சூரியக் குடும்பங்களின் கூட்டமைப்பிற்குள் செல்லும்.

ஆரம்பத்தில் இருண்ட உலகமாக இருந்து அதிலிருந்து வளர்ச்சி பெற்று ஒளியின் சிகரமாக அண்டம் வளர்ந்தது,,, எத்தனையோ கோடி வருஷங்களாக வளர்ந்தது.

எல்லாமே ஒளியாக மாறி விட்டால் அதற்கப்புறம் “மனித இனங்களை ஒவ்வொன்றாகச் சீக்கிரமாக ஒளியாக மாற்றும் நிலை வரும்…” ஒளியின் சுடராக ஒளிக்குள் எல்லாமே இது மாறும். எப்படி எத்தனையோ ஆண்டுகள் வளர்ச்சியின் பாதையிலே வந்து கொண்டிருக்கிறது.

ஆதிமூலம் என்ற உயிர் “மனிதரான பின் முழு முதல் கடவுள்…!” இதை ஞானிகள் நமக்கு தெளிவாக்கி உள்ளனர். உலகில் உள்ள அனைத்துமே அடக்கி ஆளும் சக்தி பெற்றது
1.பிரபஞ்சத்தில் இருப்பதை அடக்கி ஆளும் தன்மையைப் பெற்று ஒளியின் சரீரமாக ஆகிவிட்டால் முழுமை பெறுகின்றது
2.மற்ற அகண்ட அண்டத்திலிருந்து வரும் எதையுமே தனக்குக் கீழ் கொண்டு வர முடியும்

அப்படி ஆனது தான் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும்.

உடலின் சேர்க்கை… உயிரின் சேர்க்கை…!

உடலின் சேர்க்கை… உயிரின் சேர்க்கை…!

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் நாமும் ஒரு மதம் தான்…!
1.பிறவா நிலை என்ற (மதம்)… இந்த உலகப் பற்றை விட்டு
2.இந்த உடலின் பற்றை விட்டு… உயிரின் பற்றுடன் சென்றவர்கள் ஞானிகள்
3.மனிதர்களான நாம் உடல் பற்று… உயிரின் இயக்கம்…! எண்ணத்தை உயிரில் உணர்வாக இழுக்கப்பட்டு “உடலின் சேர்க்கை…”

ஆனால் “உயிர் ஒளியால் உணரப்பட்ட…” உணர்வின் தன்மை ஒளியாக மாற்றப்படும் பொழுது
1.அதாவது “உயிருடன் ஒன்றிய சேர்க்கை… ஒளி…!”
2.அவ்வாறு ஓளியாக ஆனவர்கள் மகரிஷிகள்

அப்படி மகரிஷிகளான நிலைகளில் நமது குருநாதர் காட்டிய நெறியைப் பின்பற்றப்படும் பொழுது நாமும் அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள். ஏனென்றால் விண்ணுலக ஆற்றல் மண்ணுலகில் வந்து… மனிதனான பின் விண்ணின் ஆற்றலைத் தனக்குள் கண்டான்.

விஞ்ஞானி… மண்ணுக்குள் கண்டாலும் புவியின் ஈர்ப்பு நிலைகளை உணர்ந்தான். ஆனால் அதே சமயத்தில் இராக்கெட்டை ஏவும் போது இந்த பூமியின் ஈர்ப்பு நிலைகள் அற்று அதைப் போல பன்மடங்கு வேகத் துடிப்பாக மாற்றி உந்து விசையாக அனுப்புகின்றான்.

புவியின் ஈர்ப்பைக் கடந்து சென்றபின் அதனுடைய வேகத் துடிப்பு அதிகமாகின்றது. இந்த உணர்வின் தன்மை கொண்டு தானே மிதக்கும் நிலை வருகின்றது. எந்த வேகத் துடிப்பின் நிலைகள் கொண்டிருக்கின்றானோ அங்கே அதை நிலை கொள்ளவும் செய்கின்றான்.

இதைப் போலத்தான் அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலை அணுவின் ஆற்றலைக் கண்டுணர்ந்தான்.
1.குருநாதர் ஆரம்பத்தில் இதையெல்லாம் என்னுள் இணைத்தார்
2.நான் (ஞானகுரு) உங்களுக்குள் அதை இணைக்கின்றேன்.

அணுவின் ஆற்றலைத் தனக்குள் உணர்ந்து அணுவின் வளர்ச்சியின் தன்மையும் உணர்ந்து விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பருகி அதை வலு சேர்க்கின்றார் அகஸ்தியர்.

நமது பூமி விண்ணிலிருந்து வருவதைத் தனக்குள் ஈர்க்கும் போது அதை இடைமறித்து அந்த உணர்வை நுகர்ந்து அதனின் வலுவை பெறுகின்றான் அகஸ்தியன்.
1.அதனால்தான் அதிகாலையில் துருவ நட்சத்திரத்தைக் கொஞ்சம் உங்களை இடைமறிக்கும்படி சொல்லி
2.அதனின் ஆற்றலை உங்களுக்குள் சேர்க்கச் சொல்வது.

உங்களைக் காலையில் எப்படியும் அந்த நேரத்திற்குத் தட்டி எழுப்பி விடுவதும்… அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்வதும் அதற்குத் தான்…! குருநாதர் இட்ட கட்டளைப்படி அவரது ஆணைப்படி இதைச் செய்கிறேன்.

1.மெய் உணர்வின் ஒலிகளை நீ எழுப்பு.
2.அதன் வழியிலே அந்த ஒளியின் நிலையை நீ பெறு
3.அனைத்து நிலைகளும் எல்லோரும் பெற வேண்டும் என்று நீ பெருக்கு.
4.அனைவரையும் மெய்ப் பொருள் காணும் நிலையைப் பெறச் செய் என்று தான் என்னிடம் சொன்னார்.

குருநாதர் காட்டிய வழிப்படி அருள் ஞானத்தை எப்படிப் பெருக்குவது…? வரும் தீமைகளை எப்படி அடக்குவது…? என்ற நிலைக்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தையும் உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

நெல் விளைய வேண்டும் என்றால் உமியையா போடுவார்கள்…? இன்று ஒருவன் தவறு செய்கிறான் என்று தெரிந்தால் அந்தத் தவறுகளை நாம் செய்யக்கூடாது என்ற எண்ணங்களே நமக்குள் வர வேண்டும்.

ஏனென்றால் அவன் தவறு செய்கிறான் என்றால் அதை நுகரப்படும் போது அந்தக் குறைகள் நமக்குள் வந்தே தீரும். ஆனால் அதை நாம் நீக்குதல் வேண்டும்.

எப்படி…?

1.உமி இல்லை என்றால் அரிசி இல்லை
2.ஆக எதிலும்… எதனின் இயக்கத்திலும் அந்த விஷம் இல்லை என்றால் நல்ல உணர்வின் இயக்கம் இல்லை.
3.உணர்வின் இயக்கமாக விஷம் எல்லாவற்றிலும் கலந்துதான் வருகின்றது.

சூரியன் அல்ட்ரா வயலெட் என்ற நிலைகளில் நஞ்சை எப்படிப் பிரிக்கின்றதோ அதைப் போல் எத்தகைய நிலைகள் வந்தாலும் நாம் நுகர்ந்து அறியப்படும்போது
1.மகரிஷிகளின் உணர்வை அதனுடன் சேர்த்து
2.அந்த விஷத்தின் தன்மையை அடக்குதல் வேண்டும்.

அதற்குத் தான் உங்களுக்குப் பயிற்சி கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.

ஆறு அறிவு பெற்ற நாம் பத்தாவது அறிவுக்குச் செல்ல வேண்டும்

ஆறு அறிவு பெற்ற நாம் பத்தாவது அறிவுக்குச் செல்ல வேண்டும்

 

உங்களை யாராவது திட்டிக் கொண்டிருந்தாலோ அல்லது குற்றமாகப் பேசிக் கொண்டிருந்தாலோ உடனே ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

ஆனால் திட்டுகிறார் என்று…
1.என்னை இப்படிப் பேசுவதற்கு ஆகிவிட்டதா…?
2.நான் உன்னை அதற்கு மேல் பார்க்கிறேன்…! என்று எண்ணி எடுத்தால்
3.நமக்குள் ஜிர்…ர்ர்… என்று அந்த வேகம் வந்து விடுகிறது
4.அடுத்து கை கால் குடைச்சல் மேல் வலி எல்லாம் வந்து விடுகிறது

அவ்வாறு ஆகாதபடி தடுக்க நாம் உடனே ஆத்ம சுத்தி செய்யப் பழக வேண்டும். ஆத்ம சுத்தி செய்து கொண்ட பின் என் சொல் அவர்களுக்கு நல்லதாக இருக்க வேண்டும்… நாளை நல்லது செய்யக்கூடிய அந்த உயர்ந்த எண்ணங்கள் அவர்களுக்குள் தோன்ற வேண்டும் என்று அவர் திட்டிய உணர்வை நமக்குள் புகவிடாது தடுத்து… நல்ல உணர்வைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
1.அவர்கள் எத்தனை திட்டு திட்டினாலும் சரி…
2.நம்முடைய எண்ணங்கள் தான் அவர்களுக்குள் சென்று அவர்களை மாற்ற வேண்டும்.

ஆனால் மாறாக அவர்கள் திட்டியதைக் காதிலே கூர்ந்து கேட்டால் அவர்களை நினைத்துத் திட்டிக் கொண்டே இருப்போம்.

அந்த்த் திட்டை வாங்கி அவர் உணர்வை பெருக்கிக் கொண்டால் கடையில் வியாபாரத்திற்காக பொருளை எடுத்துக் கொடுத்தாலும் வியாபாரம் மந்தமாகிவிடும். ஒரு கைக்குழந்தையை சும்மா தூக்கினாலும் கூட அது விரா விரா… என்று கத்தும்.

நீங்கள் வயிறு நிறைய சாப்பிட்டிருந்தீர்கள் என்றால் வயிறு கடா புடா என்று நஞ்சாக மாறி மறு நாள் உடம்பெல்லாம் வலிக்க ஆரம்பிக்கும்.

நாள் முழுவதும் குடும்பத்திற்காக… உடலுக்காக… தொழிலுக்காக… நாம் உழைக்கின்றோம். நம் வீட்டைத் தூய்மைப்படுத்துகின்றோம். நாம் அணிந்திருக்கும் உடையில் அழுக்குப் பட்டாலோ அல்லது அசிங்கமானது பட்டாலோ அடுத்தவர்கள் பார்ப்பார்களே…! என்று சொல்லி உடனே சோப்பைப் போட்டுத் தூய்மைப்படுத்தி விடுகின்றோம்.

அது போல் தான் நாம் நல்ல எண்ணத்துடன் சென்றாலும் தீங்குகள் வருகின்றது… அது உடலுக்குள் சென்று இம்சை கொடுக்கின்றது
1.உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.ஆத்ம சுத்தி செய்து அதை மாற்றிக் கொள்வது கஷ்டமா…?

மகரிஷிகளின் அருள் சக்திகள் இந்தக் காற்றிலே நமக்கு முன் இருக்கின்றது. அதை எடுத்து தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

1.சிறிது நாள் அனுபவத்தில் பழக்கப்படுத்தி எடுத்து கொண்டாலே போதுமானது
2.எந்தத் துன்பம் வந்தாலும் அதை மாற்றிக் கொள்ள முடியும்.

செடி கொடி மரங்கள் வளர்ந்து வரும் போது தன் சத்தை இழந்திருக்கும் வேளையில் அதற்குண்டான உரத்தைப் போட்டுக் காற்றில் இருந்து அதனின் இனமான சத்தை எடுத்து எப்படி அதை வளர்க்கச் செய்கின்றோமோ அது போன்று தான்
1.இந்த உபதேசத்தின் வாயிலாக மெய் ஞானிகள் உணர்வுகளை உங்களுக்குள் யாம் (ஞானகுரு) உரமாகக் கொடுத்து
2.காற்றிலே படர்ந்துள்ள மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறச் செய்கிறோம்.

ஞானிகள் மகரிஷிகள் ஆகி ஒளியாக மாறி விண் சென்ற வழியில்… அதே பாதையிலே நீங்களும் ஒளிச் சரீரம் பெறலாம். அதைப் பெறக்கூடிய தகுதியைத் தான் இப்பொழுது உருவாக்குகின்றோம்.

யாரும் சாவதில்லை… உடல்கள் மாறுகின்றது சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப மறு உடல் எடுக்கின்றது… மறு உடலை இயக்குகின்றது.

உடல்கள் மாறினாலும் உயிருடன் ஒன்றியே இருக்கின்றோம். ஆனால் அவனுடன் சேர்ந்து நாம் ஒளியாக மாற வேண்டும்… அது தான் விஜயதசமி…!

விண்ணிலே உயிர் தோன்றிய பின் பூமிக்குள் விஜயம் செய்து பல உடல்கள் மாறி மனிதனாக வளர்ச்சி அடைந்த பிற்பாடு “ஆறாவது…” அறிவு என்ன செய்கிறது…?

உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சை மலமாகக் கழித்து விடுகிறது. கெட்டதை நீக்கி நல்லது செய்யக்கூடிய எண்ணத்தை ஊட்டுகின்றது.

அந்த நல்ல எண்ணத்தை எடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நமக்குள் இணைத்து விட்டால் “ஏழாவது…” நிலையான ரிஷி சிருஷ்டிக்கக்கூடிய தன்மை பெறலாம்.

“எட்டாவது…” நாம் நினைத்தாலும் எந்தத் திசையிலிருந்தும் கெட்டது வராதபடி நமக்குள் ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.

“ஒன்பதாவது…” தீமைகளைப் பிளந்துவிட்டு உயிருடன் உயிராகச் சேர்ந்து உடலை விட்டுச் செல்லும் நிலை.

உட்கொள்ளும் உணவில் மறைந்துள்ள விஷத்தை மனித உடல் மலமாக எப்படிக் கழிக்கின்றதோ இதே போன்று உடலை விட்டு வெளியே நாம் சென்ற பின்
1.எந்த நிலையும் நம் உயிராத்மாவைக் கவராதபடி விண் செல்வதே பத்தாவது நிலை
2.அழியா ஒளிச் சரீரம் பெறுவதே கல்கி – பத்து…!

“என்று இந்த மனித உடலைப் பெற்றோமோ…” அது முழு முதல் கடவுள். மனித உடல் சிருஷ்டிக்கக் கூடிய சக்தி பெற்றது என்று விநாயகர் தத்துவத்தில் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

விநாயகருக்குக் கொழுக்கட்டையை வைத்துக் காட்டியுள்ளார்கள். காரணம்… இயற்கையில் விளைந்த தாவர இனங்களை வேக வைத்து அதைச் சுவையாக மாற்றி உணவாக உட்கொள்ளும் சக்தி பெற்றுள்ளோம்.

அதே போல் வாழ்க்கையில் வரக்கூடிய இடையூறுகளை நீக்கிடும் நிலையாக
1.சுவை கொண்ட ஞானிகள் உணர்வுகளைச் சேர்த்து
2.சுவைமிக்க உடலாகவும்
3.சுவைமிக்க சொல்லாகவும்
4.சுவைமிக்க செயலாகவும்
5.சுவைமிக்க உயிராத்மாவாக மாற்றி
6.வைரம் விஷத்தை அடக்கி ஒளியின் தன்மையாகப் பேரொளியாக எப்படி ஒளி வீசுகின்றதோ
7.சூரியன் விஷத்தை ஒடுக்கி ஒளிச் சுடராக எப்படிப் பிரகாசிக்கின்றதோ
8.அதைப் போல் வருவது அனைத்தையும் நாம் ஒளியாக ஆக்க முடியும்.

அது தான் பத்தாவது நிலை…!

உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்கள் விண் செல்லும் நுணுக்கம்

உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்கள் விண் செல்லும் நுணுக்கம்

 

தியானம் இருந்து முடிந்த பின் உடலை விட்டுப் பிரிந்த நம்முடைய முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்… அவர்கள் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று… வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்த்து “உந்தித் தள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்…”

1.உங்கள் எண்ணங்கள் அனைத்தும் விண்ணை எட்டி அங்கிருந்து உயர்ந்த சக்திகளைப் பெறுவதற்கு
2.பௌர்ணமி அன்று சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றோம்.

காரணம்… அன்று சூரியனுடைய காந்த சக்தி சந்திரனில் முழுமையாகப் படுகின்றது
1.உங்கள் எண்ணங்களை மேல் நோக்கிச் செலுத்தச் செய்து
2.சந்திரனையும் பார்க்கச் செய்து… அந்தக் காந்தப் புலனுடன் இழுக்கச் செய்து
அதைத் தாண்டி இருக்கும் சப்தரிஷி மண்டலத்தைப் பார்க்கும்படி செய்கிறோம்
4.உங்கள் உணர்வின் எண்ண அலைகளை அங்கே பதியச் செய்கின்றோம்.

உங்கள் குடும்பத்தில் உடலைப் விட்டு பிரிந்தவர்கள் யாராக இருந்தாலும் சரி… “குலதெய்வங்களாக அவர்களை எண்ணி” அந்த உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று உந்தித் தள்ள வேண்டும்.

விஞ்ஞானிகள் இராக்கெட்டை உருவாக்கி அது நூறு டன் எடையாக இருந்தாலும் கூட விண்ணிலே செலுத்துகிறார்கள்.

அங்கேயும் ரேடார் (RADAR) வைக்கின்றனர் பூமியிலும் ரேடாரை வைக்கின்றார்கள். விண்ணில் இருப்பதையும் இங்கு இருப்பதையும் இழுத்து அதே சமயத்தில் லேசரையும் (LASER) கலந்து விண்ணிலே ஏவுகின்றார்கள்.

லேசர் என்றால் எதிலேயும் ஊடுருவி மற்றொன்றுடன் மோதி… அந்த அலை நிற்காமல் ஊடுருவிச் செல்லும் நிலைகள் பெற்றது.

இப்படிச் செய்து எல்லாம் இணைத்து கொண்ட பின் மனிதனுடைய பேச்சைச் சொல்லாலே… இடத்தைக் குறித்து… ஒலிகள் மூலமாகக் கம்ப்யூட்டரில் பதிவு செய்து… அந்த நாடாவிலே போட்ட பின் (COMMANDS) ரேடார் கவனித்துக் கொள்கிறது.

இராக்கெட்டைத் திசை திருப்ப வேண்டும் என்றால் இங்கிருந்து ஆணையிடுகின்றனர்.
1.மனிதனுடைய எண்ண ஒலிகளால் பதியச் செய்த நுண்ணிய அலைகள்
2.இயந்திரத்தில் பதிவு செய்ததன் துணை கொண்டு தொலைதூரத்தில் செல்லும் இராக்கெட்டைத் திசை திருப்புகின்றது.

கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.

மனிதனுடைய எண்ண ஒலியைப் பதிவு செய்து இயந்திரத்திற்குள் அதை அலை வரிசையை வைத்து இராக்கெட்டில் இணைக்கச் செய்து இயக்குகின்றார்.

அதே போன்று…
1.உங்கள் உடலுக்குள் இருக்கும் முன்னோரின் உணர்வுகளின் துணை கொண்டு
2.உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாக்களை விண்ணிலே உந்திச் செலுத்தப்படும் பொழுது
3.சப்தரிஷி மண்டல அலைகளுடன் கலக்கச் செய்கின்றது.

அந்த அலைகளுக்குள் (ஒளி கங்கையிலே – ஒளிக் கடல்)) இந்த ஆன்மாக்கள் பட்டவுடன்… புவியிலே மனித வாழ்க்கையில் “வாழ வேண்டும்” என்று எடுத்துக் கொண்ட வேதனை சலிப்பு சஞ்சலம் போன்ற உணர்வுகளை எல்லாம் கருக்கிப் பஸ்பமாக்கி விடுகிறது.

அதே சமயத்தில் உயிருடன் ஒன்றிய நிலைத்த அறிவாக ஒளியாக… ஞானிகளால் படைக்கப்பட்ட சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து… ஒளி உடலாக முன்னோர்கள் பெறுகின்றார்கள்.

அனைவருமே ஒருவருக்கொருவர் நாம் பேசிப் பழகி இருக்கின்றோம் குடும்பத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை கூட்டுக் குடும்ப தியானமிருந்து மேலே சொன்ன முறைப்படி விண் செலுத்த வேண்டும்.

அப்படி இல்லாதபடி அவர்களை எண்ணி ஏங்கி
1.எல்லாம் சம்பாதித்து வைத்தார்… போய்விட்டாரே…! என்று அழுவதும்
2.மிகவும் நல்லவராக இருந்தார்… போய்விட்டார்…! என்று ஏங்கி இழுத்து விட்டால் போதும்.
3.யார் அதிகமாக எண்ணி ஏங்கினாரோ அந்த உடலுக்குள் புகுந்துவிடும்

எந்த அளவுக்கு அவர் மேல் பாசம் கொண்டு பற்று கொண்டு எண்ணி எடுக்கின்றார்களோ… அந்த உடலில் புகுந்து “நான் வந்து விட்டேன்…” என்ற நிலையில்… உடலை விட்டுப் பிரியும் பொழுது கடைசிக் காலத்தில் அவர் உடலில்பட்ட வேதனை… நோய்… எல்லாவற்றையும் இங்கே உருவாக்கிவிடும்.

ஆகவே… அப்படி அழுக வேண்டும் என்றால் அழுது “இழுத்துக் கொள்ளுங்கள்…” இல்லை… நமது குருநாதர் சொன்ன முறைப்படி மோட்சத்திற்கு – சப்தரிஷி மண்டலத்திற்கு அனுப்ப வேண்டும் என்றால் “உந்தித் தள்ளுங்கள்…”

முன்னோர்கள் விண் சென்ற பிற்பாடு அவர்களின் துணை கொண்டு இந்த மனித வாழ்க்கையில் முழுமை பெற்றுப் பிறவியில்லா நிலை அடையலாம்.

உடலுக்குப் பின் நாம் சென்றடைய வேண்டிய இடமும்… அதற்குண்டான வழி முறையும்

உடலுக்குப் பின் நாம் சென்றடைய வேண்டிய இடமும்… அதற்குண்டான வழி முறையும்

 

மனித வாழ்க்கை என்று இருந்தாலும் இந்த உடலை விட்டு நமது ஆன்மா ஒரு நாள் பிரியத் தான் செய்யும். அது சமயம் என்ன செய்ய வேண்டும்…?

குருநாதர் காட்டிய வழியில் பௌர்ணமி தியானம் இருக்கும் போதெல்லாம் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அனைவரும் சேர்ந்து உந்தி விண்ணிலே செலுத்த வேண்டும்.

அப்போது
1.சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க உணர்வலைகள் இந்த உயிரான்மாவில் பட்டபின்
2.இன்னொரு உடல் பெறும் உணர்வின் சத்தை அது பஸ்பமாக்கிவிட்டு உணர்வின் ஒளி சுடராக அந்த உயிரான்மா வளரும்

எத்தனையோ மனிதர்களை விஞ்ஞான அறிவு கொண்டு இராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பி இருக்கின்றார்கள். ஆனால் அந்த இராக்கெட் விபத்தாகி வெடித்து விட்டால் இறந்த ஆன்மா அங்கே விண்ணிலே தான் மிதந்து கொண்டிருக்கும்.

அப்படி மிதந்தாலும் அங்கிருக்கக்கூடிய மற்ற கதிரியக்க சக்திகள் அதிலே படப்படும் பொழுது
1.அந்த உயிராத்மா அது உயர்ந்த நிலை பெற முடியாது ஒளிச் சரீரமும் பெற முடியாது
2.வானில் பிரபஞ்சத்தின் ஈர்ப்பு வட்டத்தில் மிதந்தாலும் அது செயலற்றதாகத் தான் மாறும்.

ஆனால் இங்கே ஒரு அமைப்பை ஏற்படுத்தி உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை நாம் இங்கிருந்து சப்தரிஷி மண்டலத்திற்குக் கூட்டமைப்பாக விண் செலுத்தும்படி செய்கின்றோம்.

அப்போது அந்தச் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்படக்கூடிய உணர்வலைகள் இந்த உயிர் ஆத்மாவிலே கலக்கப்படும் பொழுது இந்த உணர்வின் ஒளியாகச் செயல்படுகிறது.

விஞ்ஞான முறைப்படி மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி இருந்தாலும் விபத்தாகி இறந்தால் நச்சுத்தன்மை கொண்ட உயிரான்மாவாகத் தான் விளைகின்றது.

விண்ணிலே சுழன்று கொண்டிருந்தாலும் சந்தர்ப்பத்திலே மற்ற கோளின் ஈர்ப்புக்குள் வந்தால்
1.உடல் பெறும் தன்மையற்று விஷத்தின் ஆற்றல் கொண்ட குறுகிய உடல்களால
2.புழு போன்ற உயிரினங்களாகத் தான் உடல் பெற முடியும்.
3.அல்லது அப்படியே மனித உணர்வு கொண்ட உடல் பெற்றாலும் கூட
4.சிந்தனை இழந்து வேதனைப்பட்டு விஷத்தின் தன்மையைத் தான் வளர்த்துக் கொண்டே இருக்க முடியும்.

ஆனால் மெய் ஞானிகள் காட்டிய வழியில் நாம் செல்லப்படும் பொழுது சுலப நிலைகளில் விண் செல்ல முடியும்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.விண் செல்லும் பாதையை “எந்த மகரிஷி நமக்குக் காட்டினாரோ”
2.அவரின் உணர்வின் ஆற்றலை இங்கே தொடர்புகளாக உங்களுக்கு ஏற்படுத்தி
3.அதைத் தொடர் வரிசையாக உங்களுக்குள் பதிவு செய்து
4.அந்த ஆற்றலை ஓங்கி வளர்க்கும்படி செய்து இந்த உணர்வின் புலனறிவை
5.சப்தரிஷி மண்டலத்துடன் (உங்களை) இணைக்கச் செய்யப்படுகின்றது.

அவ்வாறு இணைத்துக் கொண்டோமானால் உடலை விட்டுப் பிரியும் போது அனைவரும் சேர்ந்து ஏக காலத்தில் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை “உந்தி அங்கே செலுத்தப்படும் பொழுது…” சுலப நிலைகள் அங்கே இணையச் செய்ய முடியும்… நாமும் அங்கே இணைய முடியும்.

இதைப் போல் உந்தச் செய்வதற்குத் தான் அன்று ஒவ்வொரு ஞானியும் சாதாரண மனிதனைத் தேடி வந்தார்கள்.

அந்த ஞானிகள் பூமியிலே வாழும் காலத்தில்… எவ்வளவு பெரிய ஆற்றல் மிக்க சக்திகளை அவர்கள் பெற்றிருந்தாலும்
1.மற்ற மனிதர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுடைய துன்பத்தைப் போக்க செய்து
2.அந்தப் பாச உணர்வின் சத்தைத் தனக்குள் எடுத்து… நல்ல உணர்வின் சத்தைத் தனக்குள் வளர்த்து
3.தன் மீது அந்த எண்ணத்தை வளர்க்கும்படி செய்து
4.தன் சிஷ்யர்கள் சிலரிடம் சொல்லி… இன்ன உணர்வு கொண்டு என்னை விண்ணிலே உந்திச் செலுத்து என்று
5.உந்திச் செலுத்தும்படி செய்து அவ்வாறு விண் சென்றவர்களே பலர்…!

அதனால் தான் ஒரு ஆன்மா உடலை விட்டு பிரிந்தது என்று நீங்கள் கேள்விப்பட்டால்
1.அவர்களை விண் செலுத்த வேண்டும் என்ற உணர்ச்சிகள் உந்தப்படுகின்றது
2.சப்தரிஷி மண்டல நினைவுகள் உங்களுக்குள் கொண்டு வரப்படுகின்றது.

அதைத் தான் பயிற்சியாக யாம் (ஞானகுரு- கொடுக்கின்றோம்.

அதாவது…
1.உடலை விட்டுப் பிரிந்த… எடையற்ற அந்த உயிரான்மாவை இயக்க வல்ல உணர்வின் ஆற்றலை
2.மனித உடலுக்குள் இருந்த நினைவின் அலைகளைக் கூட்டி… அந்த உணர்வுடன் தொடர்பு கொண்டு
3.சப்தரிஷி மண்டலத்திலே அங்கே செலுத்த முடியும்.

அத்தகைய விண் செல்லும் தொடர் வரிசையை நாம் ஏற்படுத்தினால்… நாமும் சரி… நமக்குப் பின் செல்பவர்களுக்கும் அதே நிலை இயக்கப்படுகின்றது

ஆனால் இதை அறியாதவர்கள் அல்லது இந்த முறைப்படி தியானம் செய்யாதவர்களை அங்கே விண் செலுத்த வேண்டும் என்றால்
1.உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாக்களை அவர்கள் தாய் தந்தையருடன் ஒன்று சேர்த்து
2.அந்த உணர்வுடன் இயக்கச் செய்து அவருடைய துணை கொண்டு அங்கே அனுப்ப முடியும்.
3.இந்த வழி தெரியாதவர்களை அப்படித் தான் விண் செலுத்த முடியும்.