ஐம்பெரும் பூதங்கள்

ஐம்பெரும் பூதங்கள்

 

தாவர இனங்களுக்கு ஐந்தறிவு… ஒரு அணுவிற்கு ஐந்தறிவு. ஒரு அணுவிற்குள்
1.”வெப்பம்: ஆக்கும் சக்தி
2.”காந்தம்” அணைக்கும் சக்தி
3.அந்த அறிவு அது தன்னுடன் எதையுமே இணைத்துக் கொள்ளும் சக்தி வருகின்றது.

வெப்பம் எப்பொருளைப் போட்டாலும் அது படைக்கும் சக்தி. காந்தம் தனக்குள் பட்ட… அல்லது எந்த சக்தியை எடுத்துக் கொள்கிறதோ வெப்பத்துடன் இணைக்கப்படும் பொழுது அதனின் சக்தியாக இயக்கும்.

1.”விஷம்…” எந்த உணர்வின் சத்து இதனுடன் கலக்கின்றதோ அது இயக்கச் சக்தி என்ற நிலையும்
2.எந்த மணத்தை இது நுகர்ந்ததோ அந்த மணத்தின் சக்தியாக அறிந்திடும் நிலை “ஞானம்” (மணம்) சரஸ்வதி.
3.புலனறிவு நான்கானாலும் இவை அனைத்தும் கூட்டாகச் சேர்த்து “உணர்வு”
4.அது இயக்கச் சக்தியாக மாறி ஐந்து அறிவுடன் இயக்குகின்றது.
5.மணத்தால் அறிந்து கொள்கிறது… உணர்வால் தன்னை வளர்த்துக் கொள்கின்றது.

ஆக ஓர் அணுவை எடுத்துக் கொண்டால் காயத்ரி இதனுடைய சுவை சீதா என்றும் அதனுடைய குணத்தை ஞானம் என்றும் பெயர் வைக்கிறார்கள் ஞானிகள்… அதனின் குணத்திற்கொப்ப எப்படி இயக்குகிறது…? என்ற நிலையை நாம் அறிந்து கொள்வதற்காக.
1.புலனறிவு ஐந்து என்றும் ஐந்து பூதங்கள் என்றும் வைக்கின்றார்கள்…
2.ஐந்து நிலைகள் அதைச் செய்யும்.

இதைத் தான் பேரண்டம் ஆகாசம் அது இது என்றெல்லாம் இவர்கள் சொல்கின்றார்களே தவிர அந்த ஆகாசம் எப்படி இதில் இயக்குகின்றது…? என்று தெளிவாக ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

இப்படி ஒவ்வொரு சத்தையும் எடுத்துக் கொண்டு கொண்டால் அந்த ஐந்து புலனறிவு கொண்டது தான் உயிரினங்கள் அனைத்தும். எந்த இலையின் சத்தை ஒரு புழு எடுத்துக் கொண்டதோ அந்த மணத்தின் நிலைகள் கொண்டு தான் அந்த அறிவு கொண்டே அதை எடுத்துக் கொள்ளும்.

ஆனால் மாடு எந்தெந்தத் தாவர இனங்களைச் சாப்பிட்டதோ அந்த உணர்வின் சத்தைக் கொண்டு அதனுடைய ஞானம் தான் வரும்… ஐந்து புலனறிவு தான்.

ஒரு பூனை எந்தெந்த மாமிசத்தைச் சாப்பிட்டுப் பழகியதோ அந்த மாமிசத்தின் உணர்வு கொண்டு தான் அதனுடைய ஐந்து புலனறிவு… வேறு எதையும் அது நாடாது.

ஐந்து புலனறிவு கொண்ட மற்ற உயிரினங்களாக இருந்தாலும் மனிதன் உடலில் வரப்படும் பொழுது ஆறாவது அறிவாகின்றது இயற்கையில் விளைந்த நஞ்சினைப் பிரித்து விடுகின்றது
1.அதாவது நம் உடலில் வரக்கூடிய மணம் கெட்டதை நீக்கி நல்லதை உருவாக்கும் நிலை பெறுகின்றது.
2.நஞ்சினை நீக்கிடும் உணர்வின் ஆற்றல் பெற்றது தான் இந்த ஆறாவது அறிவு.

இதைக் கொண்டு நாம் என்ன செய்கின்றோம்…?

பூமிக்கடியில் ஆழத்தில் இருக்கக்கூடிய பொருளையும் தோண்டி எடுக்கும் திறனைப் பெறுகின்றோம். அணுவைப் பிளந்து அதை அடக்கி ஆளவும் தெரிந்து கொள்கின்றோம்… அதை ஒளி சுடராக மாற்றவும் அதீத சக்தி கொண்டு அழித்திடவும் முடிகின்றது.

இது மனிதனின் ஆறாவது அறிவு நாம் எதையெல்லாம் செய்கின்றோமோ மாற்றி அமைக்கும் சக்தி அதுதான் முருகு. ஆறாவது அறிவு பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன்…!

“நம் உயிரை…” குருவாக மதித்து ஈசனாக மதித்து நாம் வாழ்தல் வேண்டும்

“நம் உயிரை…” குருவாக மதித்து ஈசனாக மதித்து நாம் வாழ்தல் வேண்டும்

 

“ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று சொல்லும் போதெல்லாம் உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி… உங்கள் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும் உங்கள் உயிரை குருவாக இருக்கிறது என்று எண்ணி உங்கள் உயிரை “குருவாக மதித்து… ஈசனாக மதித்து…” வாழ்தல் வேண்டும்.

ஆலயங்களில் ஈசனுக்கு எப்படி அடிபணிகின்றோமோ இதைப்போல
1.நம் உயிருக்குத் தீமை என்றோ தீமையான சொல் என்றோ இவையெல்லாம் நாம் நுகர்ந்தால்
2.நம் உயிரிலே பட்டு உயிரான ஈசனுக்குத் தீமையின் உணர்ச்சிகளை ஊட்டப்படும் பொழுது
3.ஈசனுக்கே தவறு செய்கின்றோம் என்ற பொருளாகின்றது.

அதே சமயத்தில் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் உயிரே குருவாக இருக்கின்றது. ஆகவே குருவுக்கு இன்னலோ சலிப்போ சங்கடமோ ஏற்படும் நிலைகளை நாம் செய்தல் ஆகாது.

ஆகவே நமது உயிரை ஈசனாகவும் குருவாகவும் மதித்து நடத்தல் வேண்டும்.

சஞ்சலத்தையோ சங்கடத்தையோ கோபத்தையோ குரோதத்தையோ பகைமையோ இதைப் போன்ற உணர்வுகளை நுகர்ந்தால்
1.உயிரான ஈசனை அசுத்தப்படுத்துகிறோம் என்று பொருள்.
2.உடலில் உள்ள அனைத்து குணங்களுக்கும் உயிர் உருவாக இருப்பதனால் “குருவுக்குத் துரோகம் செய்கிறோம்” என்று பொருள்.

ஏனென்றால் இதே உயிர் தான் பல கோடிச் சரீரங்களைக் கடந்து கடந்து ஒவ்வொரு சரீரத்திலும் தான் எடுத்துக் கொண்ட உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து… நுகர்ந்த உணர்வுகளை அதற்குத் தக்க உறுப்புகளை மாற்றி… உடல்களை மாற்றி… குணங்களை மாற்றி… மனிதனாகும் பொழுது இவையெல்லாம் தீமை என்று நினைத்துத் தீமையை அகற்றக் கூடிய வல்லமை பெற்றது “ஆறாவது அறிவு…”

நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சினை மலமாக மாற்றிடும் உணர்வினை உயிர் தான் உருவாக்கியது.

நஞ்சினை மலமாக மாற்றப்படும் பொழுது நஞ்சு என்ற நிலையோ தீமை என்ற நிலையோ நாம் நுகர்ந்தறிந்தால் அந்தத் தீமைகள் உயிரான ஈசனுக்குப் படும்பொழுது அந்த நஞ்சினையும் அந்த உணர்வுக்கொப்ப அது உருவாக்கிவிடும்.

1.ஆகவே ஈசனாக மதிக்கத் தெரிந்த நாம் தீமை என்ற உணர்வுகளை நுகராது
2.அவ்வப்பொழுது மகரிஷிகள் உணர்வுகளை எடுத்து மனத்தூய்மை செய்து கொள்ள வேண்டும்.

எல்லாம் அவனே…!

எல்லாம் அவனே…!

 

சுகம் துக்கம் சஞ்சலம் சாந்தம் சகலமும் கலந்த நிலை தான் ஒவ்வொரு மனித ஆத்மாவின் வாழ்க்கையிலும் நடைபெறுகின்றது. நாம் உண்ணும் உணவிலிருந்து மட்டும் நம் உடலுக்குகந்த அமிலத்தன்மை பெற்றுள்ளோம் என்பதல்ல.

ஒவ்வொரு மனிதனுக்கும் அம்மனித ஆத்மா பெற்ற நிலையில் இருந்தே… அவ் ஆத்மாவுக்குகந்த எண்ண சக்தியின் சுவாசத்திலிருந்துதான் அம்மனிதனின் உடல் உறுப்புகளும் அவ்வுடலின் பிம்பமும் அவ்வுடலின் வண்ணமும் அமைகின்றன.
1.எண்ணத்தைக் கொண்டு எடுக்கும் சுவாச நிலைக்கொப்பத் தான் உடலின் பிம்ப நிலையும்
2.அதற்குகந்த அமில சக்தியின் செயல் கொண்டு சேமித்த எண்ணத் தொடரின் நிலைகளும் அவ் உடல் பெறுகின்றது.

மேல் நோக்கிய சுவாசம் கொண்ட தாவர இனங்கள் அவற்றுக்குகந்த ஆகாரத்தைச் சுவாசமாய் மேல் நோக்கியே சூரிய வெப்பத்திலிருந்து இக்காற்றினில் கலந்துள்ள தனக்குகந்த ஆகாரத்தை ஈர்க்கும் தருவாயிலேயே ஒரு நிலை கொண்ட தனக்கு வேண்டிய ஆகாரத்தை மேல் நோக்கிச் சுவாசித்து ஆவியாக்கி ஈர்த்து அவ்ஆணிவேரின் நிலைக்குப் படர விட்டு பூமியில் வேரினுள் சேமித்துக் கொள்கின்றது.

மேல் நோக்கிய சுவாசம் பெற்ற தாவரங்களின் நிலைக்கொப்ப சக்தி நிலை ஜீவ ஆத்மாக்களுக்கு இல்லை.

நாம் உண்ணும் உணவில் இருந்து அவ்வுணவே அமிலமாகி, அவ்வமிலமே நம்மை வளர்க்கின்றது. நம் எண்ணமும் இவ் அமிலத்துடன் கலந்து செயல் கொள்கின்றது.

நம் மனித ஆத்மாவை நம் செயலுக்குகந்த நிலை கொள்ளும் பக்குவம் மேற்கொள்ள நமக்கு என்று நம் சக்தியை எவ்வெண்ணத்தின் சக்தியுடைய ஞானம் பெறும் நிலை எய்துகின்றோமோ அத்தொடர் பெற்றிட “நம் எண்ணத்தைச் சமமாக்கினாலன்றி” எந்நற்சக்தியின் வழித்தொடரை அடைவதும் சிரமம் கொள்கின்றது.

நம் ஆத்மாவை நாம் நற் ஜெப சக்தியின் வழி பெற்றிட நம் ஆத்மாவும் அப்பரமாத்மாவும் ஒன்றே என்ற நிலை எய்திட நாம் பக்குவ நிலை கொள்ளும் தருவாயில் நம் நிலையைக் கண்டு ஏளனம் செய்பவரின் எண்ணத்தையும் புகழ்பவரின் எண்ணத்தையும் நம் எண்ணத்துடன் மோதி விடலாகாது.

ஞானத்தின் வழித்தொடர் பெற்ற பின்…
1.சலிப்பு நிலையையும் சங்கட நிலையையும் பேராசை நிலையையும் நம்மை நாமே ஆட்படுத்திக் கொண்டிடலாகாது.
2.”பலருடன் கலந்து வாழ்ந்திட முடியவில்லையே” என்று ஏக்கப் பெருமூச்சம் நாம் சென்றிடும் சத்தியத்தின் வழிக்கு உகந்ததல்ல.

ஞானம் பெற்று நற் சக்தியை ஈர்த்தே சித்து நிலை பெறுவதற்கு
1.இவ்வெண்ணச் சிதறலை மாற்றியே சமமெய்திடும் முறை பெற்றே
2.நம் ஆத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே…! என்னும் உணர்வு பெற வேண்டும்.

இவ் வாழ்ந்திடும் குறுகிய காலத்திற்காக நம் ஆத்மாவுக்கு உகந்த சக்தியைப் பெறாமல் சிதறவிட்டு வாழ்ந்திடாமல் நம் ஆத்மாவிற்குத் தான் நல் ஞானத் தொடர் பெற்று சத்தியத்துடன் கலக்கப் போகின்றோமே என்ற “நான்” என்ற நினைப்பும் சத்திய நிலைக்கு உகந்ததல்ல.

அனைத்து ஆத்மாவுடன் கலந்தே மற்ற ஆத்மாவிடமிருந்து ஒதுங்கிய நிலை பெறாமல் நம் ஆத்மாவிற்கு நற்சக்தியை சேமித்திடல் வேண்டுமப்பா.
1.உண்ணும் உணவும் அவனே
2.உணரும் உணர்வும் அவனே
3.எண்ணக் கலவையும் அவனே.
4.எடுக்கும் ஞானமும் அவனே
5.ஞானத்தின் சத்தியமும் அவனே
6.இவ்வுடலும் நம் உணர்வும் இவ்வுலகமும் மற்ற எதுவுமே நமக்குச் சொந்தமல்ல என்பதனை உணர்ந்து
7.அனைத்திலும் அனைத்தாக உள்ள அவ்வனைத்தாண்டவனுடன் ஒன்றிடும் பக்குவத்தை நாம் பெற்று
8.நம் உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களையும் நல்லெண்ணம் பெறும் சக்தி ஆக்கிட நம் சக்தியை வளர விடல் வேண்டும்.

ஓம் ஈஸ்வரா குருதேவா…! – “என்னை நீ ஏற்றுக் கொள்…!”

ஓம் ஈஸ்வரா குருதேவா…! – “என்னை நீ ஏற்றுக் கொள்…!”

 

ஓம் ஈஸ்வரா என்றால் நமது உயிர் ‘ஓ’ என்று இயங்கிக் கொண்டே உள்ளது. நாம் நுகர்வது அனைத்தையும் ‘ஓ’ என்று ஜீவ அணுவாகக் “கருவாக” உருவாக்கிக் கொண்டே உள்ளது.

ஆகவே நாம் எதைக் கேட்கின்றோமோ… எதைப் பார்க்கின்றோமோ… எதை நுகர்கின்றோமோ… இவை அனைத்தையும் நாம் நுகரப் படும்போது நாம் அந்தந்தக் குணங்களை அறிய முடிகின்றது.

அதை எல்லாம்
1.நமது உயிரோ ஓ… என்று ஜீவ அணுவாக கருவாக மாற்றி விடுகின்றது.
2.அவ்வாறு கருவாக மாற்றி விட்டால் நம் ரத்த நாளங்களில் அது கலந்து விடுகின்றது
3.இதற்கு இந்திரலோகம் என்று காரணப்பெயர் வைத்துள்ளார்கள்.

ஏனென்றால் இந்திரலோகம் என்றால் இந்திரீகம்… “ஒரு அணுவின் கருவாக” உருவாக்கும் தன்மை பெற்றது ஆகவே இந்திரலோகம் என்று காரணப்பெயர் வைக்கின்றார்கள்.

அதே சமயம் நம் உடலுக்குள் அது இரத்த நாளங்களில் சுழன்று வரும் பொழுது
1.கோழி எவ்வாறு முட்டையை அடைகாத்துக் குஞ்சினை வெளிப்படுத்துகின்றதோ இதைப் போல
2.நாம் நுகர்ந்த உணர்வுகளை நம் உடலுக்குள் நமது உயிர் அடைகாக்கின்றது.
3.அதனுடைய பருவம் வரும் பொழுது அந்த முட்டையை விட்டு வெளி வருகின்றது.

நாம் எந்தக் குணத்தின் தன்மையை நுகர்ந்தறிந்தோமோ அந்த அணுவின் தன்மை வெளிப்படும்போது நமது உயிர் ஈசனாக இருந்து இயக்குவதனால் உயிரின் இயக்கத்தை ஈசன் என்றும்… இயக்கத்தால் ஏற்படும் வெப்பம் விஷ்ணு என்றும்… இயக்கத்தால் ஈர்க்கும் காந்தம் லட்சுமி என்றும்… அதனதன் சந்தர்ப்பத்திற்க்கொப்ப நாம் அறிந்துணர்வதற்கு இவ்வாறு காரணப்பெயர் வைத்து அழைக்கின்றார்கள்.

அதே சமயம் நாம் நுகரும் உணர்வுகள் கருத்தன்மை அடைவதனால் அதை இந்திரலோகம் என்று காரணப்பெயர் வைக்கின்றார்கள்.

1.அந்தக் கருமுட்டைக்குள் எந்தக் குணத்தின் தன்மை கொண்டு கருவானதோ அது அணுவாக மாறுகின்றது.
2.எந்த குணத்தின் தன்மையோ அதனுடைய அணுவாக உருவாக்கப்படும் போது அதனுடைய இயக்கம் ஈசனே.
3.அதில் துடிப்பின் நிலை வரும் பொழுது வெப்பம் விஷ்ணுவே
4.அதே சமயத்தில் ஈர்க்கும் காந்தம் வரும் பொழுது லட்சுமி.
5.எக் குணத்தின் தன்மை கொண்டு அந்த அணுவின் தன்மை பெற்றதோ அது பிரம்மம்.
6.அதனின்று வரக்கூடிய உணர்வின் மணங்கள் ஞானம் சரஸ்வதி.

ஆகவே எந்தக் குணத்தின் தன்மையால் அந்த அணு உருவானதோ ஆக அது பிரம்மமாக இருந்து தன் இனத்தை அது உருவாக்கும் என்று பொருள். பிரம்மா உருவாக்குகின்றான், விஷ்ணு வரம் கொடுக்கின்றான், சிவன் அரவணைக்கின்றான்.

ஆக நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் இந்த உடலுக்குள் அது அணுவின் மலமாகும் போது சிவலோகம் ஆகின்றது.

உயிர் உருவாக்கப்படும் பொழுது ஈஸ்வரலோகம். அணு கருவாகும் பொழுது இந்திரலோகம் அணுவாகும் போது பிரம்மலோகம் அது தன் இனத்தை உருவாக்கும் என்று பொருள்படும்படி காரணப்பெயர் வைத்து அழைக்கின்றார்கள். அதன் உணர்வின் மலம் உடலாகும் போது சிவலோகம்.

இதுதான் “ஓம் ஈஸ்வரா குருதேவா…! கருணைஸ்வரூபா… என்னை ஆட்கொண்டருள்வாய் குருதேவா…!”

நீ எப்படி ஒளியாக நின்று உணர்வின் தன்மை அணுவாக மாற்றுகின்றாயோ இதைப் போன்று
1.நீ உயிராக நின்று ஒளியாக இருப்பது போல் என் உணர்வின் தன்மை தெளிவான ஒளியான நிலைகளில் எனக்குள் உருவாக வேண்டும்.
2அந்தக் கருணை உன்னில் வர வேண்டும் என்பதைத்தான் நமது உயிரான ஈசனிடம் வேண்டிப் பாடுவது.

அது தான் “ஓம் ஈஸ்வரா…” எடுப்பது (சுவாசிப்பது) எல்லாவற்றையும் உருவாக்குகின்றாய் “கருணைஸ்வரூபா…”
1.என்னை கருணை கொண்டு ஏற்றுக் கொண்டு
2.நான் எடுக்கும் நல்ல எண்ணங்களை அந்த அணுவின் தன்மையாக உருவாக்குகின்றாய்
3.ஆகவே நீ என்னை ஏற்றுக் கொள்…! என்று தான் பொருள்.

ஓம் ஈஸ்வரா குருதேவா… கருணைஸ்வரூபா… என்னை ஆட்கொண்டு அருள்வாய் குருதேவா.

அப்படி என்றால் இந்த உடலுக்குள் அது உருவாக்கிவிட்டால், எந்தக் குணத்தின் தன்மை உருவாக்கியதோ இவை அனைத்திற்கும் நமது உயிரே குருவாக இருக்கின்றது…. ஈசனாகவும் இருக்கின்றது. குருவாகவும் இருக்கின்றது.

எல்லா நினைவையும் உன்னிடம் ஒப்படைத்து விட்டேன் ஈஸ்வரா…!

எல்லா நினைவையும் உன்னிடம் ஒப்படைத்து விட்டேன் ஈஸ்வரா…!

 

நான் இல்லை நீ இல்லா இவ்வுலகில் எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா.

இந்த உயிர் உடலில் இல்லை என்றால் நாம் இருக்க முடியுமா இந்த உயிர் இல்லை என்றால் இந்த உடலில் நாம் இல்லை. “உயிரின் இயக்கமாகத் தான் நாம் இருக்கின்றோம்…”

உயிர் பூமியிலே தோன்றி புழுவில் இருந்து பல கோடிச் சரீரங்களில் பட்சியாக பறவையாக மிருகமாக பாம்பாக தேளாக யானையாக புலியாக நரியாக நாயாக எத்தனையோ உடல்கள் பெற்ற நிலையில்
1.ஒவ்வொன்றிலும் தன்னைக் காத்துக் கொள்ள அதன் வழி கொண்டது… காத்திடும் உணர்வே விளைந்தது.
2.அந்தக் காத்திடும் உணர்வு கொண்டு மனிதனாக உருவாக்கியது உயிர்.

ஆகவே எத்தகைய தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்றும்
1.தீமையிலிருந்து விடுபடும் நிலையாக என் உடலாக எப்படி ஆக்கினாயோ
2.இந்தத் தீமையை நீக்கிய உணர்வின் நினைவெல்லாம் எனக்குள் வர வேண்டும்.

நான் எத்தனை துன்பங்களை பட்டேனோ… “துன்பங்களிலிருந்து விடுபடும் உணர்வைப் பெற்றேனோ” இதைப் போல எனது வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நுகரும் உணர்வுகள்
1.எனக்குள் துன்பத்தையும் துயரத்தையும் வேதனையும் வெறுப்பையும் ஊட்டாது
2.அந்த நினைவெல்லாம் எனக்குள் துன்பத்தை நீக்கிய உணர்வின் சக்தியாக நான் பெற வேண்டும்.

அதைத் தான் “எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா என்று சொல்வது…”

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் எத்தனையோ துன்பத்தைக் கடந்து என்னை மனிதனாக உருவாக்கினாயோ “அந்த நினைவெல்லாம் எனக்குள் வரவேண்டும்” என்று தான் நான் இல்லை நீ இல்லா இவ்வுலகில் எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய் என்று பாடலைப் பாடுவது.

அதாவது
1.தீமைகளை நீக்கிடும் இந்த உடலான நிலைகள் இருந்து அந்த நினைவெல்லாம்
2.தீமைகளை நீக்கிடும் அந்த அருள் சக்தியாக என்னிலே வளர வேண்டும் என்று நம் உயிரிடம் வேண்டுதல் வேண்டும்

உலகை எல்லாம் அறியக்கூடிய சக்தியை நீ எப்படிக் கொடுக்கின்றாயோ நான் நுகர்ந்த உணர்வை எனக்குள் அறிவிக்கின்றாயோ இதைப்போல
1.உன் உணர்வின் தன்மை எதுவோ உன் ஒளியின் தன்மை எதுவோ
2.என் உடலின் அணுக்களும் அவ்வழியே ஆக வேண்டும் என்று
3.எல்லா நினைவையும் உன்னிடம் ஒப்படைத்து விட்டேன் என்று உயிரிடம் வேண்டி கேட்கின்றோம்

நான் அதைச் செய்வேன். இதைச் செய்வேன் என்ற நிலையில் எண்ணம் கொண்டு உண்மைகளை உணராது பல எண்ணங்களில் தனது ஆசையைக் கூட்டினால் அதன் வழி வளரப்படும்பொழுது
1.எனக்குள் தீமை வராது தடுத்துக் கொள்ள ப
2.ல நினைவுகள் நமக்குள் வராதபடி நீயே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அதைத்தான் பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாத பரிபக்குவமான நிலைகளை நான் பெற எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா…! என்று நாம் வேண்டுகின்றோம்.

இவ்வாறு எண்ணும்பொழுது நமது உயிர் ஓம் நமச்சிவாய இத்தகைய நிலைகளை நமக்குள் உருவாக்கி விடுகின்றது.

நாம் பக்குவ நிலை பெற வேண்டும் என்று ஏங்கினால் அந்த உணர்வின் அணுவாக்கி அதன் உணர்வை உணவாக்கி அந்த உணர்வின் தன்மை நாம் நுகரப்படும் பொழுது
1.சிந்தித்துச் செயல்படும் திறனும்
2.தீமையிலிருந்து விடுபடும் உணர்வும்
3.நாம் பக்குவப்படும் நிலையும் நமக்குள் உருவாகின்றது.

ஆகவே தான் பரிபக்குவ நிலையை எனக்கருள் செய்வாய். ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டச் சொல்கிறோம்.

நாம் எண்ணும் உணர்வின் தன்மை ஓம் நமச்சிவாய என்று உடலாக்கினாலும் அதன் உணர்வின் தன்மை அணுவின் கருவாக அணுவாகும் போது… அது உணவுக்காக உந்தப்படும் பொழுது… அந்த நினைவு பக்குவப்படும் உணர்வின் எண்ணங்கள் எனக்குள் உருவாகி… அதன் வழி “என்னைக் காத்திடும் அந்த அருள் நிலை பெற வேண்டும் ஈஸ்வரா…” என்று நாம் எதை எண்ணுகின்றோமா அதை நமது உயிர் உருவாக்குகின்றது என்று நாம் அறிவதற்குத் தான் ஈசனிடம் இந்த உணர்வினை வேண்டுகின்றோம்.

நம் தியானமே “ஈசனின் நினைவுடன் இருந்திட்டால்” மற்றத் தீய சக்திகள் நம்மை எப்படித் தாக்கும்…?

நம் தியானமே “ஈசனின் நினைவுடன் இருந்திட்டால்” மற்றத் தீய சக்திகள் நம்மை எப்படித் தாக்கும்…?

 

பாம்பின் விஷத்தையும் போக்கிடலாம்.. மற்றத் தீய சக்திகளையும் நம்முள் அண்டவிடாமல் போக்கிடலாம்…! ஆனால்
1.நம்முள்ளே நாம் ஏற்றிக் கொண்ட இவ்வெண்ணத்தின் சுமையை
2.ஒருநிலைப்படுத்தி ஜெபம் பெறுவதுதான் நம் சக்திக்கும் மேம்பட்ட சக்தி.

இவ்வுலகச் சூழ்ச்சியிலிருந்தும் மற்றவர்களின் நிலையின் தாக்குதலில் இருந்தும் இன்றுள்ள இவ்விஷமான இவ்வுலக நிலையில் இருந்து மீண்டு செயல் கொள்ளுவது மிகவும் கடினம்.

1.ஆத்மீக நெறியின் வழிமுறைக்கு நம் வழி அமைந்த பிறகு
2.நாமேதான் நமக்குகந்த நெறி முறையை அமைத்துக் கொண்டு செயல்படல் வேண்டும்
3.அச்செயல் வழியில்தான் நம் சக்தி நிலையே கூடி வழி வந்திடும்.

இந்நிலையின் தொடர் நிலை வந்த பிறகு பிறரின் எண்ண நிலையை நம்முடன் மோதவிட்டு ஆத்மீக நெறி முறையில் செல்லுவதும் அழகல்ல. போற்றலும் தூற்றலும் ஒருநிலை போன்ற சம நெறியின் வழியாக்கிடல் வேண்டும்.

இவ்வண்ணத் தொடரின் வழி பெற்ற பிறகு ஞானத்தின் சக்தி நிலை கூடும் நிலையில் நம் உடலில் உள்ள முன்பு வாழ்ந்த வாழ்க்கையில் உள்ள தீய சக்திகளும் செயலற்றதாய் நற்சக்திகளின் நிலை வளர்ந்து விடும்.

ஆனால் வாழ்க்கையுடன் உள்ள நிலையில் ஏற்படும் சிக்கலை நம் எண்ணத்தில் ஏற்றி அந்நிலை கொண்ட கவலையை வளரவிடும் பொழுது நம் உடலில் உள்ள தீய சக்திகளுக்கு நாம் உரம் இட்ட நிலை போல் வளர்ந்திடும்.

1.நற்சக்தியின் நிலை கூடுவதற்குப் பல காலம் ஜெபம் பெற்று ஞானத் தொடரை வழி பெற்ற பிறகு
2.ஒரு சில நொடியில் இவ்வெண்ண மோதலினால் விரையப் படுத்திடலாகாது.

பக்திமானாய் சக்திமானாய் ஆண்டவனின் சக்தியாய் ஒளிர ஒரு நாளில் இரண்டு நாளில் அந்த ஞானத் தொடரும் சக்தித் தொடரும் வந்திடாது.

உயிரணுவாய் உயராத்மாவாய் பிறப்பெடுத்து நாம் நம் உடலுடன் சேமிக்கும் அமில சக்தி அனைத்துமே நற்சக்தியாய்க் கலந்து ஒளி பெறும் நிலையில்தான் நம் நிலையும் உயர்ந்திடும்.

இவ்வாத்மீக நெறிக்கு வழி பெற்றிட
1.தீய சக்திக்கு நாம் அடிபணியாமல் நம்மள் தீய சக்தியை விட்டகற்றினாலன்றி
2.நூறாண்டு காலம் அல்ல 100 கோடி ஆண்டானாலும் நம் ஆத்மாவை ஆண்டவனின் சக்தியின் சக்தியாய் ஒளிரச் செய்வது கடினமே.

சொத்தும் சுகமும் அல்ல சக்தியின் செல்வம். இவ் அல்ப ஆசைகளுக்கு நம் எண்ண சக்தியில் துறக்கும் நிலை பெற வேண்டும். துறவியாய் ஆண்டிக் கோலம் பூண்டு செல்வது துறவறம் அல்ல.

ஒன்றை எண்ணிய நிலையில்
1.அடைந்தே தீருவோம் என்ற பேராசையின் பிடியில் சிக்கிடாமல்
2.வாழ்க்கைக்குகந்த அன்புச் செல்வங்களைத் தன் நிறைவு பெற ஆசையுடன் செயல் கொள்ளுங்கள்.

உண்ணும் எவ்வுணவையும் அமுதாய் உண்டிடும் பக்குவ நிலையில் வாழ்ந்திடுங்கள். உண்ணும் உணவே ஒவ்வோர் உடலையும் எண்ண நிலைக்கொப்பை அமில சக்தியின் சேமிப்பையும் நம் உடல் பெறுகின்றது.

எண்ணத்தையே அமுதமாக்கி உண்டிடுங்கள்.

எவ்வுணவை உண்டாலும் அமிர்தமாய் நம் உடலில் செயல் கொள்ளும் வழிமுறையும் செயல் நிலையும் நாமாய் வழி வகுத்துத்தான் நம் ஆத்மா செயல் கொண்டிடும்.

நாம் வாழ்ந்திடும் இனி வரப் போகும் ஒவ்வொரு நொடியையுமே இவ்வழித் தொடரின் ஜெப சக்தியை வளரவிட்டே
1.நம்முள்… நம் ஆத்மாவாய் அவ் ஈஸ்வரனே குடி கொண்டுள்ளான் என்பதனை உணர்ந்து
2.நாம் எடுத்திடும் நாம் விட்டிடும் சுவாசமே அவ் ஈஸ்வரனின் ஜெபத்துடனே
3.ஓம் ஈஸ்வரா என்ற நிலையிலேயே எந் நிலையில் எச் செயலில் இருந்திட்டாலும்
4.நம் எண்ண ஜெபம் முழுவதுமே அவ் ஈசனின் நினைவுடன் இருந்திட்டால் மற்றத் தீய சக்தியின் நிலை நம்மை எப்படித் தாக்கும்…?
5.நம்மை அத்தீய சக்தியிலிருந்து காக்கத்தான் அவ் ஈசனே ஜெபம் கொண்டு நம்முள் உள்ளானே‌.
6.நம் ஆத்மாவே ஈசன் தான்
7.ஈசனின் சக்தி இல்லாமல் எச் சக்தியும் இல்லை.
8.ஈசனே குடி கொண்டுள்ள நம் ஆலய ஆத்மா கொண்ட நம் உடலை
9.ஈசனின் சக்தியாய் வாழ்ந்திடும் நெறிமுறையின் வழித்தொடர் கொண்டே வாழ்ந்திடுங்கள்.

ஆண்டவனைப் பற்றி முழுமையாக அறிந்திட “அந்த ஆண்டவனால் தான் முடியும்”

ஆண்டவனைப் பற்றி முழுமையாக அறிந்திட “அந்த ஆண்டவனால் தான் முடியும்”

 

கோவில் என்ற புண்ணிய ஸ்தலத்தை அரசனும் சென்று வணங்கினான்… ஆண்டியும் சென்று வணங்கினான்.

கோவில் என்னும் இடத்தைப் புனிதம் ஆக்கி… அந்த நிலை கொண்டு மனிதர்களின் எண்ணம் எல்லாம் ஒரே பக்தி நிலையாக… ஆண்டவன் என்ற அவ்வாண்டவனைத் துதிப்பதற்கு ஒரே நிலை கொண்டு செல்வதற்காக… அன்று சித்தர்களால் மனிதர்கள் நிலைக்கெல்லாம் புரிவதற்காக அமைத்து வைத்த புண்ணிய ஸ்தலங்கள் தான்… இன்று இந்நாட்டில “நாம் வாழும் நாட்டில் அமைந்துள்ள பல கோவில்கள்…”

கோவில் என்னும் இடத்திற்குச் செல்ல செல்வந்தன் செல்வம் இல்லாதவன் என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் எல்லோரும் ஒரே பக்தி நிலை கொண்டு வணங்குவதற்காகத் தான் பல சித்தர்கள் அக்கோவிலில் உருவ வழிபாடு வைத்துள்ளார்கள்.
1.நமக்கு மேல் ஒருவன் உள்ளான் அவன் நம்மைப் பார்த்துக் கொள்வான் என்று பல நிலைகளை மக்களுக்கு உணர்த்துவதற்காக
2.தன் நிலையில் பெரும் தவமிருந்து அச்சக்தியிலிருந்து சகல அருளையும் தான் பெற்று
3.கோவில் உள்ள இடத்தில் தானே கோவில் கொண்டு வரும் பக்தர்களின் எண்ணத்தை எல்லாம் தன் நிலையில் ஈர்த்து
4.அவரவர்கள் வேண்டும் நிலைக்கு உகந்த செயல்களை எல்லாம் செய்வது
5.அச்சகல அருள் பெற்ற மகரிஷிகளும் சப்தரிஷிகளும் ஞான ரிஷிகளும் தான்.

இந்த நாட்டில் தோன்றிய ரிஷிகளும் ஞானிகளும் அவர்கள் கோவில் கொண்ட இடத்திலேயே இன்றும் அமர்ந்து… அழியா உடலும் அழியா ஆத்மாவும் பெற்றுச் செய்யும் செயலினால் தான்… இத்தேசத்தில் இன்று மக்களின் மனதில் “ஒரு ஒற்றுமை நிலையும் தவறுக்குப் பயப்படும் நிலையும் இருந்து வருகின்றது…”

அக்கோவில் இல்லாத நிலையும் ஆண்டவன் இல்லாத நிலையும் இருந்திருந்தால் இன்றுள்ளளவும் பக்தியும் இன்று உள்ளளவும் நியாயமும் இருப்பதற்கு வழியில்லாமல் தான் நாமெல்லாம் இருந்திருப்போம்.

1.”நாம் செய்த பாக்கியம்” அன்று தோன்றிய நம்முடனே கலந்துள்ள நம்மையெல்லாம் காக்கும் தெய்வங்களாக
2.இன்றும் தெய்வத்தின் தெய்வமாக நம் ரிஷிகள் தாம் கலந்துள்ளனர்.

நம்மில் நாமே ஆண்டவனாக உள்ள பொழுது நமக்கு உயர்ந்தவர் நமக்குத் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு ஏற்படுத்தி ஏன் பார்க்க வேண்டும்…? என்று எண்ணம் கொள்ளலாம்.

உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதெல்லாம் பொருளினாலேயோ… ஜாதி மத வேறுபாட்டினாலேயோ வருவதல்ல.

நமக்கு மேல் உயர்ந்த எண்ணம் கொண்டு அவ்வீஸ்வரனின் சக்தியைப் பெற்று சகல நிலைக்கும் நம்முள் கலந்துள்ள நாம் எண்ணும் நிலைக்கெல்லாம் நம்முள் வந்து நமக்கு அருள் புரியும் நமக்கும் உயர்ந்த ஞானம் பெற்ற “அத்தேவர்களை வணங்குவது தான்” நம் ஆத்மாவிற்கு நாம் சாந்தி பெறும் நிலையாக இன்றுள்ளது.

ஆண்டவனின் ரூபத்தையும் ஆண்டவனின் நிலையையும் அறிந்து சொல்லவோ உருவம் பார்த்து உணர்ந்து சொல்லவோ யாராலும் முடிந்திடாது.

யாராலும் என்பது…
1.ஆண்டவன் என்பவன் எங்கிருக்கிறான்…? அச்சக்தியின் ரூபமென்ன…? சிவனின் ரூபம் என்ன…? என்று கண்டறிய
2.இன்று ஆண்டவன் என்ற ரூபம் கொண்டு நாம் வணங்கிடும் நமக்கு ரூபம் அளித்து இன்று பல நிலைகளை நமக்கு உணர்த்தி
3.நம்முள் எல்லாம் கலந்து சூட்சும நிலை கொண்டு வாழும் பல பெரியோர்களைக் கேட்டாலும்
4.எந்த ரிஷித் தன்மை பெற்றவர்களானாலும் எந்த ஞான நிலை பெற்றவரினாலும்
5.ஆண்டவன் என்ற ரூபத்தைக் கண்டறிய முடியாது… கேட்டறிய முடியாது.
6.சகலத்திலும் கலந்துள்ள அவ்வாண்டவன் என்பவனை அறிந்து காண “அவ்வாண்டவனால் தான் முடிந்திடும்…”

சக்தியின் அருள் பெற்று ஜீவ உடலுடன் வாழ்ந்திடும் எல்லோருமே… தன் நிலையில் அவரவர்கள் ஏற்கும் நிலை கொண்டு… அவரவர்களும் தன் நிலையை உயர்த்திக் கொள்ள உணர்ந்து கொள்ள… இவ் ஆத்மாவை அழியா நிலை கொண்டு
1.சித்தர்கள் ஞானிகள் பெற்ற நிலையைத் தான் பெற முடியுமே தவிர
2.ஆண்டவன் என்ற ரூபத்தையும் ஆண்டவனின் சொல்லையோ பார்த்தறிந்தவர் யார் உள்ளார்…?

ஆண்டவன் என்பவருக்கு ரூபமே இல்லை… இல்லை… இல்லை… என்று சொல்வதற்கும் நம் சக்தியில் பொருள் இல்லை. நம் எண்ணம் கொண்டு தான் நம் சுவாச நிலையின் அருளினால்… நாம் உயர்ந்து வாழ்ந்திட முடியும்.

நம் எண்ணத்திற்குத் தகுந்த சக்தியை ஈர்த்து எடுக்கத்தான் இப்பாட நிலைகளும் இவ்வாண்டவன் என்ற வழிபாடுகளும். எண்ணும்
1.எண்ணத்திற்கு உகந்த நிலையில் உள்ளவன் அவ்வாண்டவன்.
2.அச்சக்தி நிலையை ஈர்த்து நல்வாழ்க்கை வாழ்ந்து சகல அருளையும் பெற்றிடலாம்.

ஆசைகளை நிறைவேற்றத் தான் ஆண்டவனை எண்ணுகின்றோம்… “அவனுடைய அருளைப் பெற” ஆசைப்படுகின்றோமா…?

ஆசைகளை நிறைவேற்றத் தான் ஆண்டவனை எண்ணுகின்றோம்… “அவனுடைய அருளைப் பெற” ஆசைப்படுகின்றோமா…?

 

இன்றுள்ள உலக நிலை அனைத்திலுமே
1.தன் புகழ் உயர வேண்டும்
2.புகழ் உயரச் செல்வம் வேண்டும்
3.செல்வம் சம்பாதிக்க இவ்வுடல் எனும் கூடு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற
4.ஆசை நிலைக்காகத் தான் அநேகம் பேர் பல வழிகளில் ஆண்டவனை வணங்குவதுவே.

ஆண்டவனிடம் தன் ஆசைக்கும் தன் புகழுக்கும் வேண்டக்கூடாது என்பவர்களை எல்லாம் இன்றைய உலகம் “பெரும் பைத்தியமாக” எண்ணுகின்றது.

ஆண்டவன் எங்குள்ளான்…? என்ற கேள்விக்கும் இன்றைய உலகில் அறிந்து பார்க்கும் தன்மை இல்லையப்பா. ஆண்டவனிடம் வேண்டிக் கேட்காவிட்டால் இவ் உடலுக்கு ஆகாரம் வேண்டியதில்லையா…?

ஆண்டவன் தான் பசி என்ற பெரும் பசியை இவ் உடலுக்கு அளித்துள்ளானே. அப்பசியே அடக்க நாம் உண்டு வாழ்வதற்கு அவ்வாண்டவனை வேண்ட வேண்டாமா…? என்றெல்லாம் பல நிலைகளில் எண்ணுகிறார்கள்.
1.இவ்வெண்ணப் பசியை பேராசை கொண்ட பசியாக அலையவிட்டு
2.அதனால் வரும் பல இன்னல்களுக்கு நாம் அடிபணிகிறோம் என்பதை
3.நம் எண்ணப் பசியில் எண்ணிப் பார்த்தால் புரிந்துவிடும்.

இவ்வாத்ம பசியை யாரும் எண்ணுவதில்லை. இவ்வுடல் பசிக்குத் தான் இவ்வுலகமே இன்றுள்ளது இவ்வுடல் பசியினால் தான் வரும் நிலைகள் எல்லாமே நமக்கு நடப்பவை.

இவ் உடல் பசிக்கு நாம் எடுக்கும் உணவும் பிற நிலைகளும் நம் ஆத்மாவிற்கு எந்த நிலையில் ஏற்கிறது…? என்று எண்ணி இவ்வுடல் என்னும் பசியை “மனம் எனும் பசியால்” அடக்கி ஆண்டிட முடியுமப்பா.

இவ்வுலகில் உதித்த எல்லோருமே ரிஷிகளைப் போலவும் ஞானிகளைப் போலவும் இவ் உடலுக்கு உணவு உண்ணாமல்… உடல் பசியை அடக்கி ஆளுங்கள் என்று சொல்லவில்லையப்பா.

என் வழியில் இயற்கையில் நம் உடலின் தன்மையைத்தான் நம் உடல் எந்தெந்த நிலையை ஏற்கிறது…? எந்த நிலையில் உண்டு வாழ்ந்திடலாம்…? என்பதுதான் எல்லோரும் அறிந்ததுவே.

அன்ன ஆகாரம் இல்லாமல் வாழ்ந்திடுங்கள். என்று சொல்லவில்லை.
1.இவ்வுடல் என்னும் கூட்டை
2.”எண்ணம் என்ற ஏவலனால்” எந்த நிலைக்கும் வைத்திருக்க முடியுமப்பா.

உண்ணும் உணவிலிருந்து இவ்வுடலுக்கு எப்படிப் பல நிலைகள் கிடைக்கின்றதோ அதே போலத்தான் அவ்வாத்மாவிற்கும் கிடைக்கின்றது.

நாம் உண்டு உடுத்தி மகிழ்ந்து வாழ்ந்திடத் தான் வேண்டும் ஆனால் அந்நிலைக்காகப் பேராசை நிலை கொண்டு “தன் தேவைக்கு மேல் சேமித்து வைப்பவன் ஒவ்வொருவனும்… தனக்குத்தானே எதிரியாகின்றான்…”

இன்று இவ்வுலகில் பெருகி உள்ள மக்கள் நிலையில் அன்பும் ஆதரவும் காட்டி வாழும் நிலைமை மறைந்து விட்டது. தன் உடல் பசி ஒன்றுதான் ஓங்கி நிற்கிறது.

நல்ல உபதேசங்களைக் கேட்பதும் நல்லோர் வழி சொல்வதும் நம் ஆத்மாவிற்குச் செய்யும் நற்பணிகளை நாம் இன்று ஏற்று நடக்கவில்லை. நம் எண்ணங்கள் எல்லாம் இவ்வுடல் என்னும் பசியைத் தீர்த்துக் கொள்ளத்தான் ஆண்டவனை எண்ணுவதாகவே உள்ளது.

தன் எண்ணமும் செயலும் அமைதி கொண்டு தன் ஆத்மாவை அடக்கி ஆள்பவனுக்கு தன் நிலையில் பதட்டத்தை வளர விடாமல்… தான் என்ற எண்ணம் கொள்ளாமல்… நல்லுணர்வுடன் நம் வாழ்க்கையை நாம் அமைதியுடனும் அன்புடனும் நடத்திச் செல்லும் மனப்பக்குவம் பெற்று… நாம் வாழத்தான் “இன்று நாம் செய்யும் ஜெபமும் தியானமும் இவ்வுபதேசச் சொற்களும்…”

1.இவ் உடல் வேறு என் ஆத்மா வேறு
2.இவ்வுடலில் இவ்வாத்மா தங்கி இருப்பதுவே நாம் பெற்ற பாக்கியமாகக் கொண்டு
3.இவ்வுலக நிலையில் இவ்வியற்கையில் கலந்துள்ள உண்மைகளை அறிந்தே மகரிஷிகளின் சக்தி பெற்று வாழ்ந்திட வேண்டும்.

அச்சத்தி நிலை ஒரே நிலையில் தான் உள்ளது. நாம் எந்த நிலை கொண்டு ஏற்கின்றோமோ அந்த நிலைக்குத்தான் அச்சத்தி நிலை நம்முடன் வரும்.

இன்று வீசும் இக்காற்றையே நாம் எண்ணிப் பார்த்தால் நம் நிலைக்கு எல்லாம் விளங்கும்.
1.கொதிக்க வைத்த தண்ணீரை ஆற்றுவதும் இக்காற்றுதான்
2.அனல் கொண்டு எரியும் விறகை எரிய விடுவதும் அக்காற்று தான்.

ஒரே நிலை கொண்டு வீசும் காற்று தான் இவ்வனலையும் எரிக்க உதவுகின்றது. கொதிக்கும் நீரையும் குளிர வைக்கின்றது அச்சக்தி நிலையும் நம் நிலைக்கு அப்படித்தான் வருகிறது.

1.எந்த நிலை கொண்டு நாம் எங்கு செல்கின்றோமோ அந்த நிலை கொண்டு தான் அச்சக்தி நமக்கு உதவி புரிகின்றது
2.நம் எண்ணத்திற்கு உகந்தபடி தான் ஆண்டவனின் சக்தியையும் நாம் பெற முடியும்.

ஆனால் இவ்வுலகமே இவ் எண்ணம் என்ற பசி நிலையைக் கொண்டு தான் இன்று சுற்றி வருகின்றது

அன்பெனும் பொக்கிஷத்தை உயிராத்மாவிற்கு ஊட்டம் தந்து வாழ்ந்திடுங்கள்

அன்பெனும் பொக்கிஷத்தை உயிராத்மாவிற்கு ஊட்டம் தந்து வாழ்ந்திடுங்கள்

 

சக்தியின் அருளில் சக்தி பெற்ற சகல ஜீவராசிகளும் ஜீவன் பெறும் நிலையில் ஒரே நிலையில் தான் ஜீவன் மறுபிறப்பு எடுத்து அப்பிறப்பில் நிறைவு பெற்றிட வேண்டும் என்ற நிலையில் தான் பிறப்பெடுகின்றன… நல்ல ஜீவன்கள் எல்லாம்.
1.நல்ல ஜீவன்கள் எல்லாம் தாம் பிறவி எடுத்ததின் குறிக்கோள்…
2.தான் பிறப்பு எடுத்து அடுத்த பிறப்பு இல்லாத நிலையில் எடுக்கும் பிறப்பில் வாழ்ந்திட வேண்டுமென்ற ஆர்வம் கொண்டு பிறக்கின்றன.

ஒவ்வொரு ஆத்மாவும் தனக்கு வேண்டிய ஒரே ஆசையான அன்பு எனும் ஆசையைத்தான் நாடி ஏங்கி வாழ்கிறது.

எல்லா ஆத்மாக்களுமே அன்பை வேண்டித்தான் இவ்உடலுடனே வாழ்கின்றன. அவ் அன்பிற்காகத் தான் அவ்அன்பெனும் நிலை கிடைக்காத நிலையில்
1.எண்ணும் மனம் என்றும் நிறைவைப் பெற்றிடாமல்… பல தவறுகளும் பல இன்னல்களும் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் வந்து
2.அம்மனமென்னும் அன்பு கொண்ட ஒரே லோகத்தைப் பல லோகங்கள் ஆக்கி வாழ்ந்திடுகின்றார்கள் மனிதர்கள்.

பரலோகம் எமலோகம் நரகலோகம் பூலோகம் இப்படி பல லோகங்களைச் சொல்லும் லோகங்கள் எல்லாம் எந்த லோகங்களப்பா…?

மனம் என்னும் அன்பு லோகத்தை அவ் அன்பையே ஏங்கி அன்புக்காக வாழும் அவ்ஆத்ம லோகத்திற்கு நம்மைச் சுற்றியுள்ள பல லோகங்களைத் தான் நாம் அழிக்கின்றோம்.

அன்பு ஒன்றினால் மட்டுமே இவ்வுலகத்தை உன்னதமாக ஆக்கிட முடியுமப்பா. எந்த நிலை கொண்டும் இன்று இக்கலியின் நிலை கொண்டு
1.பல இன்னல்களுடன் வாழ்ந்திடும் இம்மனமென்னும் ஆத்மாவிற்கு
2.அன்பெனும் பொக்கிஷத்தை உயிராத்மாவிற்கு ஊட்டம் தந்து வாழ்ந்திடுங்கள்.

அன்பினால் நாம் பல நிலைகளை நம் உடலுக்கும் நம் மனதிற்கும் கொடுக்கப்படும் போது… “நம் ஆத்மா பூத்தொளிர் பெற்று வாழ்கிறது” என்ற உண்மையை அறிந்து ஒவ்வொருவரும் அன்பு கொண்டு வாழ்ந்திடுங்கள்.

ஆண்டவனை வணங்கிடும் முறையை நமக்கு நம் முன்னோர்கள் உணர்த்தியது என்ன…?

1.நம் மனம் என்ற பல சஞ்சலக் கூடு நிறைந்த இம்மனத்தை
2.அன்பு என்னும் நிலையில்தான் அவ்ஆத்மாவை அமைதிப்படுத்திட முடியும் என்பதற்காகத் தான் ஆண்டவன் என்னும் ரூபத்தை ஏற்படுத்தி
3.அவ்ஆண்டவனைப் பல ரூபத்தில் எண்ணி மகிழ்ந்து
4.நம் மனம் என்னும் நிலையைச் சஞ்சல நிலையிலிருந்து மீட்டிட
5.ஆண்டவன் என்னும் அன்பு ரூபத்தை நாம் அன்பு கொண்டு வணங்கிட நம் முன்னோர்கள் வழிகாட்டி வந்தார்கள்.

ஆண்டவன் என்னும் ரூபத்தில் நம் அன்பை எதில் மட்டும் செலுத்தி வணங்கிடலாம்…?

அன்பு கொண்டு நாம் வணங்குவது எல்லாமே ஆண்டவன் தான். எல்லா உயிரினங்களிலுமே அவ ஆண்டவன் உள்ளான்.

உன் அன்பை உயிரினங்கள் மட்டுமல்ல…
1.இவ்வானமும் பூமியும் மரம் செடி கொடிகள் மழை காற்று சூரியன் சந்திரன், நட்சத்திர மண்டலங்கள் இப்படி எந்நிலைகொண்டும்
2.உன் மனம் எனும் அன்பைச் செலுத்தி எண்ணி வணங்கிட்டாலே
3.எந்த ரூபத்திலும் உன் உயிராத்மாவிற்கு நீ சேர்க்கும் உன்னதப் பொக்கிஷம் கிட்டுகின்றது.

அவ்அன்பினால் மட்டும் தான் இவ் உயிராத்மாவிற்குக் குளிர்ந்த நிலையை நாம் அளிக்க முடியும்.

இவ் உடல் முழுவதுமே ஒருநிலை கொண்ட வெப்பத்துடன் தான் உள்ளது. ஆனால் இவ் உடலில் உள்ள நம் உயிரணு ஒன்று மட்டும் தான் குளிர்ந்த நிலையில் உள்ளது.

மனம் என்னும் நிலையை நாம் அமைதிப்படுத்தி அன்புடன் வாழும் பொழுது அவ் உயிராத்மா ஒரே நிலை கொண்டு அமைதியுடன் அன்பு கொண்ட நிலையில் ஆனந்த நிலையில் உள்ளது.

ஆனால்
1.இம்மனம் என்னும் நிலையை நாம் பல நிலை கொண்டு அலையவிடும் பொழுது
2.இவ் உடல் நிலையில் அதி உஷ்ண நிலை ஏற்பட்டு
3.உயிராத்மாவிற்குப் தீங்குகளைத் தான் நம்மால் சேர்த்திட முடிகின்றது.

நம்மில் பல பெரியோர் இவ்வன்பையே பல வழிகளில் நமக்கு உணர்த்திட அன்றிலிருந்து இன்று வரை போதித்துச் சென்றார்கள்.
1.அன்பிலார்க்கு இவ்வுலகமே இல்லை என்ற உண்மையை உணர்த்திச் சென்றார்கள்
2.அன்பே தான் கடவுள் என்றார்கள்.

இப்பொழுது வாழ்ந்திடும் மனிதர்களின் நிலையில் ஒரே குறிக்கோள் “தான் செல்வந்தனாகச் செழித்து வாழ்ந்திட வேண்டும்” என்ற குறிக்கோள்தான்.

அந்த நிலைக்காகத் தன்னைத்தானே தன் இனத்தை துவேஷிக்கும் நிலையில் மனிதன் தன்னைத்தானே ஏமாற்றி வாழ்கின்றான். அன்பிற்கு மேல் துவேஷத்தினால் தான் இன்று உலகமே உள்ளது. இந்நிலையில் இவ்வுலகில் கலந்துள்ள இக்காற்று மண்டலமே விஷமுடன் உள்ளது.

இனி வாழ்ந்திடும் வாழ்நாட்களை வீண் விரயம் செய்திடாமல்…
1.அன்பு கொண்ட வாழ் நாட்களாக வாழ்ந்து
2.அன்பு என்னும் பொக்கிஷத்தை ஆண்டு வாழ்ந்திடுங்கள் அன்புடனே.

எமது உபதேசங்களைப் பதிவாக்கி உங்கள் உயிரான ஈசனிடம் அதை அனுப்புங்கள்

எமது உபதேசங்களைப் பதிவாக்கி உங்கள் உயிரான ஈசனிடம் அதை அனுப்புங்கள்

 

இதற்கு முன் ஐதீகம் ஐதீகம் என்ற நிலையில் நம்மை அறியாமலே செயல்பட்ட சாங்கிய உணர்வுகளிலிருந்து… அதனின் விளைவுகளிலிருந்து விடுபட்டு
1.அருள் ஞானிகள் உணர்வுகளை நீங்கள் நேரடியாகப் பற்றி அதனின் உணர்வின் துணை கொண்டு
2.எந்த நிமிடமும் ஒளியின் சரீரமாகி அழியா சரீரமாகி வேக நிலையாக நிச்சயம் நாம் விண்ணுலகம் செல்ல முடியும்.

அந்த நிலைகள் பெறுவதற்குத் தான் இதை உபதேசிப்பது.

எமது உபதேசங்கள் அனைத்தும் புத்தகங்களாகவும் ஒலி நாடாக்களாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் காலத்தைப் போக்க ஒவ்வொரு நாளும் அதைப் படித்து கேட்டு சிறுகச் சிறுக உங்களை நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம்.

யாம் உபதேசித்த உணர்வுகளையும் அருள் மகரிஷிகள் காட்டிய அருள் நெறிகளையும் நிச்சயம் நீங்கள் பெற முடியும். உங்களை நீங்கள் நம்பிப் பழக வேண்டும்.

நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் படைக்கின்றது… உடலாக ஆக்குகின்றது… உணர்வின் இயக்கமாக உங்களைச் செயல்பட வைக்கின்றது.

ஆகவே… உயிரே கடவுள் என்று மதித்து எண்ணுங்கள் அவன் படைத்த ஆலயமான உங்கள் உடலை வணங்குங்கள் அதே சமயத்தில்
1.உங்கள் உடலுக்குள் இருக்கும் கோடிக்கணக்கான குணங்களை இந்த உயிரே தெய்வங்களாக அமைத்தது.
2.அந்த நல்ல குணத்தின் நன்மை கொண்டே இந்த மனித உருவை உருவாக்கியது
3.அவன் உருவாக்கிய அந்த நல்ல குணத்தைக் காக்க “அவனுடன் ஒன்றுவோம்…”

மெய் ஒளி கண்டுணர்ந்த மெய் ஞானியின் அருள் சக்திகளை நாம் பெறுவோம். அவன் வழியில் என்றென்றும் அழியா நிலைகளாக மனிதன் முழுமை என்ற நிலை அடைவோம்.

உபதேச வாயிலாக உங்களுக்குள் அருள் உணர்வுகள் பதிவாகின்றது பதிவானதை நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுகின்றீர்கள்.
1.ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த அருள் ஒளி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்…
3.துரித கதியில் நீங்கள் சக்திகளைப் பெற முடியும்.

குடும்பத்தில் சிக்கல்கள் இருந்தால்… மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பம் முழுவதும் படர்ந்து ஒற்றுமை ஏற்பட வேண்டும் தொழில் வளம் பெருக வேண்டும்… அனைவரும் மன பலம் மன வளம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

இந்தச் சக்தி உங்களுக்குள் செயலாக்கும்…
1.உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்த உங்கள் எண்ணமே உதவும்… அந்த வலிமை பெறுவீர்கள்.
2.சிக்கலைத் தீர்க்கும் ஞானமும் மன உறுதியும் கிடைக்கும் சிக்கலைத் தீர்க்கும் மனமும் வரும்.

அதே சமயத்தில் உடலில் வந்த நோய்களை நீக்க அருள் வாக்குகளைக் கொடுக்கின்றோம். நோய் நீக்கும் சக்திகளை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நோய்கள் நீங்க வேண்டும் என்று அது என்னென்ன நோயோ அதை நீங்க வேண்டுமென்று அடிக்கடி எண்ணும் பொழுது மகரிஷிகளின் அருள் சக்தியைப் பற்றுடன் பற்றுகின்றீர்கள்… அது அதிகமாக விளைகின்றது.

பாலிலே ஒரு துளி விஷம் பட்டால் நஞ்சாகி விடுகின்றது அதில் ஆயிரம் கூட பாலை விட்டால்… நஞ்சின் தன்மை குறைந்து பாலுக்கே அது ஊட்டசக்தி கொடுக்கின்றது.

இதைப் போன்று தான்
1.அருள் ஞானிகள் என்பவர்கள் பல ஆயிரமாயிரம் குடம் பாலைச் சம்பாதித்தவர்கள்… நஞ்சினை நீக்கும் சக்தி பெற்றவர்கள்.
2.ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் அதை ஆத்ம சுத்தி மூலம் எடுக்கப்படும் பொழுது
3.வாழ்க்கையில் வந்த நோய்களை நீக்க பல ஆயிரம் குடம் பாலின் சக்தியாக நமக்குள் சேர்க்கப்படுகின்றது.

ஆகவே நீங்கள் தியானத்தில் அந்த சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள். என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று தியானியுங்கள்… அனைவரும் உடல் நலம் பெற வேண்டும் என்று தியானியுங்கள்.

இது தான் வாழ்க்கையை தியானம் என்று சொல்வது. இதை நீங்கள் கடைப்பிடித்துப் பாருங்கள் அனைத்தும் நன்றாகும்.

இந்த உபதேசங்களை உங்களுக்குள் ஆழமாகக் கேட்டுப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்
1.அதை உங்கள் உயிரான ஈசனிடம் அனுப்புங்கள்
2.அவன் அந்த உணர்வுகளை வித்தாக விளையயச் செய்வான் அது உங்களுக்குள் விளைகின்றது.
3.விளைந்த நிலைகள் கொண்டு உங்களுக்கு ஆறுதலான மன பலமும் மனவளமும் பெறுவீர்கள்
4.மெய் ஞானிகள் அருள் வட்டத்தில் உங்களை அவனே அரவணைத்து அழைத்துச் செல்கின்றான்… தன்னுடன் அணைத்துக் கொள்கின்றான்.

இதைச் செயல்படுத்துங்கள்.