பல கோடிச் சரீரங்களில் “தப்புவதற்காக வளர்த்துக் கொண்ட எல்லா நினைவுகளும் நாங்கள் பெற வேண்டும்”

பல கோடிச் சரீரங்களில் “தப்புவதற்காக வளர்த்துக் கொண்ட எல்லா நினைவுகளும் நாங்கள் பெற வேண்டும்”

 

நான் இல்லை…! நீ இல்லா இவ்வுலகில் “எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா…!”

உயிர் இல்லையென்றால் இந்த உடலான உலகில் நாம் இருக்க முடியுமா…? முடியாது.

ஆரம்ப நிலைகளில் புழுவிலிருந்து நாம் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்திருக்கின்றோம்

புழுவாக இருக்கும் பொழுது குளவி கொட்டுகின்றது. குளவி கொட்டியபின் புழுவிற்கு வேதனை வருகின்றது.
1.வேதனை வந்தபின் குளவியின் மீதே நினைவு செல்கின்றது.
2.அப்படி நினைவு செல்லும்பொழுது குளவியின் உணர்ச்சிகள் என்ன செய்கிறது…?
3.புழு உடலை உருவாக்கிய அணுக்களுக்குள் ஊடுருவி புழுவைக் குளவியாக மாற்றுகின்றது.

வேதனைப்பட்டோம்… குளவியை நினைத்தோம் குளவியாக மாறுகிறது. வேதனையிலிருந்து தப்ப வேண்டும் என்று எண்ணினோம். விஷத்தையே பாய்ச்சி விஷத்தை உருவாக்குகிறது குளவி.

குளவி முதலில் தன் உமிழ் நீரால் மண்ணைப் பிசைகின்றது. அதை எடுத்துக் கொண்டு வந்து கூடாகக் கட்டுகின்றது தன் உடலில் இருந்து வரக்கூடிய விஷத்தைப் புழுவின் மீது பாய்ச்சுகின்றது.

இந்த விஷம் புழுவின் உடலுக்குள் செல்கின்றது… மயங்கிவிடுகிறது.. புழுவைக் கூட்டிற்குள் உள்ளே தள்ளி மூடி விடுகின்றது .கூட்டின் மீது அடிக்கடி அந்த குளவினுடைய ஞாபகத்தை ஊட்டுவதற்காக டுர்ர்ர்ர்… என்று ஒரு இரைச்சலிடுகிறது.
1.இந்த அதிர்வின் தன்மை என்ன செய்யும்…?
2.இழுக்கும் (ஈர்க்கும்) நினைவு வரும்.

விஷத்தின் தன்மையால் புழு துடித்த பின் உமிழ் நீரால் கூட்டிய கூட்டின் மீது அந்த ஒலிகள் பட்டபின… அந்த அதிர்வுகள் உள்ளே இயங்கிக் கொண்டே இருக்கின்றது.

இந்த உணர்வுக்கொப்ப புழுவின் அணுத்தன்மைகள் என்ன செய்கின்றது…? குளவியாக ரூபம் மாறுகின்றது.

ஆகவே…
1.எப்படிக் குளவி கொட்டியபின் சுரீர்ர்ர்… என்று குளவியை எண்ணி அந்த உணர்வினை இழுத்துக் குளவியாக நான் ஆனேனோ
2.மற்றதை இதைப்போல உருவாக்கும் சக்தி நான் பெற்றேனோ
3.இந்த நினைவுகள் எல்லாம் எனக்குள் வர வேண்டும்.

பாம்பு எலியைக் கண்ட பின் என்ன செய்கின்றது…? விஷத்தைப் பாய்ச்சுகின்றது… விஷத்தைப் பாய்ச்சியவுடன் எலி மயங்குகின்றது…. வேதனை தாளாது துடிக்கின்றது.

விஷத்தால் தாக்கப்பட்டால் நாம் துடிக்கின்றோம் அல்லவா. அது போல் துடிக்கும் வேகம் ஆன பின் விஷத்தின் தன்மை எலிக்குள் அதிகமாகின்றது. அப்போது அதனுடைய வலு இழக்கப்படுகின்றது.

எலி என்ன செய்கிறது…? எந்த விஷத்தால் தாக்கப்பட்டதோ “அதையே நினைவு கொள்கின்றது…” அந்த உணர்வின் இயக்கமாக எலியின் உயிர் நுகரப்படும் போது அந்த உணர்வின் துடிப்பாகிறது.

அதைத் தாங்காது இந்த உடலை விட்டு உயிர் வெளியே செல்கின்றது. பாம்பு “தன் விஷத்தின் தன்மையை” எலி உடலுக்குள் பாய்ச்சியதால் பாம்பின் உடல் எலியைத் தனக்குள் இழுக்கின்றது.

இழுத்துக் கொண்டபின் எலியின் உயிரான்மா உள்ளே புகுந்து விடுகின்றது. உள்ளே சென்ற பின் பாம்பை உருவாக்கிய உணர்வுகள் அதன் விஷம் எதுவோ அந்த விஷத்தின் தன்மை கொண்டு கருவாகி முட்டையாகிறது.

பாம்பு விஷத்தைப் பாய்ச்சி எலியை உணவாக உட்கொண்டது
1.பாம்பின் விஷம் எலியின் உடலுக்குள் இது இரையாகி
2.அந்த அணுக்கள் அந்த உணர்வின் தன்மை பாம்பாக உருவாகும் கருத்தன்மை அடைகின்றது.
3.அதனுடைய வலுப்பெற்ற பின் பாம்பு இழுத்துக் கொள்கிறது.
4.அதற்குள் சென்றவுடன் முட்டையாகின்றது… முட்டையான பின் பாம்பு அதை அடைகாக்கின்றது.
5.அதற்குத்தக்க அமிலங்கள் உற்பத்தியாகின்றது முழுமை அடைந்த பின் முட்டை வெளியே வருகின்றது.
6.முட்டை வெளியே வந்தபின் தன் உணர்வின் தன்மை கொண்டு அடைகாக்கிறது.

இந்தத் துடிப்பின் நிலைகள் எப்படி குளவி மண் கூட்டின் மீது இரைச்சலானதோ அந்த உணர்வின் அதிர்வைக் கொண்டு தனக்குள் இழுக்கச் செய்ததோ இதே உணர்வின் தன்மைகொண்டு அந்த முட்டை மீது பட்ட உடனே இந்த சூடு அதை இயக்கித் துடிப்பு ஆகிறது.

அந்தத் துடிப்பு ஆகும் பொழுது உணர்வின் நினைவு கொண்டு அதே பாம்பாக உருவாகின்றது.

மணத்தால் நுகர்ந்தறிந்து வாழக்கூடிய சக்தி பெற்றது தான் உயிரினங்கள். ஆகையினால் மணத்தால் நுகர்ந்தறிந்த உணர்வு கொண்டு பாம்பு தன்னைத் தாக்கும்போது அந்தப் பாம்பையே நினைக்கின்றது.

அதிலிருந்து தப்ப வேண்டும் என்ற எண்ணம் வருகின்றது. தப்புவதற்கு என்ன வழி…?
1.வேதனையாகி உடலை விட்டு உயிர் சென்ற பின் அதுவாக ஆன பின்
2.பாம்பின் மணத்தை நுகர்ந்து வலு பெற்ற பின் தப்பும் மார்க்கம் வருகிறது… பாம்பாக மாறுகிறது.

எலி பாம்பாக ஆன பின் அதே பாம்பைப் போன்று மற்றொன்றின் மீது விஷத்தைப் பாய்ச்சி உனவாக உட்கொள்ளும் நிலை வருகிறது.

இப்படித்தான் பரிணாம வளர்ச்சியில் நாம் ஒவ்வொரு சரீரத்தில் இருக்கும் போதும்…
1.தப்ப வேண்டும் தப்ப வேண்டும் என்று பல கோடிச் சக்தி வாய்ந்த உணர்வுகளை எடுத்து மனிதனாக வளர்ந்துள்ளோம் .
2.அப்படி அந்த பல கோடிச் சரீரங்களிலும் எடுத்துக் கொண்ட…
3.தான் தப்புவதற்காக வளர்த்துக் கொண்ட அந்த எல்லா நினைவுகளும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
4.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எங்களுக்கு தீமையிலிருந்து மீண்டிடும் சக்தியாக அது வரவேண்டும் என்பது தான் இதனுடைய பொருள்

கடவுள் காப்பாற்றுவார் என்று தான் நம்புகிறோம்… அந்தக் கடவுள் யார்…?

கடவுள் காப்பாற்றுவார் என்று தான் நம்புகிறோம்… அந்தக் கடவுள் யார்…?

 

இன்று தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாக ஆகிவிட்டார்கள். உலகெங்கிலும் எத்தனையோ வன்முறைகளும் தீவிரவாதங்களும் நாட்டுக்கு நாடு… ஊருக்கு ஊர்.. பெண்களாக இருந்தாலும் குழந்தைகளாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அவமதிக்கும் நிலைகள்… துன்புறுத்தும் நிலைகள் பெருகிவிட்டது.

அந்த மாதிரியான உலகத்தில் தான் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

மற்றவர்கள் அதைச் செயல்படுத்துகின்றார்கள் என்று நாம் பார்க்கின்றோம் அதைக் கண்டு பயப்படவும் செய்கின்றோம்.
1.ஆனால் நமக்கு அதே மாதிரி ஒரு இக்கட்டான நிலை வரப்படும் பொழுது
2.நாமும் பதிலுக்குச் செய்தால் என்ன…? என்ற எண்ணங்கள் வந்து விடுகிறது.

ஆகவே எது வளர்கின்றது…? நேற்று வரை நல்லவர்களாகத் தான் இருந்தார்கள் என்று நினைக்கின்றோம் ஆனால் இப்படிச் செய்வார்கள் என்று எங்களுக்குத் தெரியாதே…! நாங்கள் அப்படி நினைக்கவில்லையே…! என்பார்கள்.

காரணம் இந்த உணர்வின் தன்மை மாற்றி நாம் எதை எண்ணுகின்றோமோ அது தான் அங்கே ஆட்சி புரிகின்றது. அப்படியானால் நம்மை எது ஆட்சி புரிய வேண்டும்…?

நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

எது ஆட்சி புரிய வேண்டும்…?
1.இருளை அகற்றிய அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் நுகர்ந்து
2.தீமை புகாத நிலையில் அதைத் தடுத்து
3.அந்தத் தீமை புகாத நிலையே நமக்குள் ஆட்சி புரியும்படியாக நம் எண்ணங்கள் வர வேண்டும்.

அது தான் நம்மை ஆட்சி புரிய வேண்டும்.

எண்ணிய உணர்வின் தன்மை… எதை நாம் நுகர்ந்தோமோ உயிர் அதைத்தான் செயல்படுத்துகின்றது.

சாமி காப்பாற்றும்… சாமியார் காப்பாற்றுவார்… நடந்து சென்றால் ஐயப்பன் காப்பாற்றுவார்… முருகன் காப்பாற்றுவார்… என்று எண்ணினாலும் அங்கே கோவிலுக்கு செல்வோரையும் கொள்ளையடித்துக் கொண்டு செல்கின்றார்கள். அவர்களைக் காக்கின்றாரா…? இல்லையே.

முருகன் கோயிலுக்குச் செல்கின்றார்கள். அங்கே சென்றுவிட்டு வந்த பின் வீட்டிலே அவர்களிடம் கத்தியைக் காட்டிக் கொள்ளையடிக்கின்றார்கள். அப்போது சாமி அங்கு அவர்களைக் காப்பாற்றுகின்றதா…?

பாத யாத்திரை செல்பவர்கள் முருகா…! என்று சப்தமிட்டுக் கொண்டு அந்த எண்ணத்தில் செல்கின்றார்கள் பின்னாடி முன்னாடி வாகனங்கள் வந்தால் ஹாரன் கொடுத்தாலும் கூட கேட்காமல் இருக்கின்றார்கள்.

முருகா என்று சப்தமிடும் எண்ணத்தில் செல்லும் பொழுது கவனிக்காது பஸ்ஸில் அடிபட்டு இறக்கின்றார்கள். அப்பொழுது அங்கே என்ன நடக்கிறது…? முருகன் அப்பொழுது அந்த இடத்தில் சிந்தித்து போடா அந்தப் பக்கம் என்று இழுத்துக் கொண்டு செல்ல வேண்டும் அல்லவா. ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அங்கே செல்ல வேண்டும் அல்லவா.

எல்லாக் கோவில்களுக்கும் எத்தனையோ பக்தர்கள் சென்று வருகின்றார்கள். இருந்தாலும் அதிலே எத்தனை விபத்துகள் நடக்கின்றது…? ஏன் அவர்களைக் காப்பாற்றக் கூடாதா…?

காரணம்…
1.நம்முடைய எண்ணங்கள் எதை எடுத்து முன்னணில் வைத்துச் செயல்படுத்துகின்றோமோ
2.அதே ஆவேச உணர்வுடன் உடலை விட்டு பிரிந்து ஆவியாகச் சென்ற உணர்வுகள் இங்கே வருகிறது.

சம்பந்தப்பட்ட நண்பர்களோ குடும்பமோ சொந்தமோ
1.அவர்கள் வேதனைப்பட்ட உணர்வுடன் அது (ஆன்மாக்கள்) உள்ளே சென்ற பின்
2.உயிர் அதே உணர்வை இயக்கி அது போன்ற விபத்துகளுக்கு அழைத்துச் சென்று விடுகின்றது

அதனுடைய பின் விளைவுகள் குடும்பத்தில் உள்ள அனைவரையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விடுகின்றது.

அப்போது எது நடக்கிறது…!

ஆண்டவன் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று தான் எல்லோரும் எத்தனையோ நிலைகளைச் செயல்படுத்துகின்றனர் அந்தக் கடவுள் நம்மை காப்பாற்றுகின்றானா…? யார் அந்தக் கடவுள்…?

உண்மையின் உணர்வின் தன்மையினை எடுப்பதற்குத் தான் ஞானிகள் தெய்வச் சிலைகளை ஆலயத்தில் அமைத்தார்கள் சிலைக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்துவிட்டு “நீ காப்பாற்று…!” என்று சொன்னால் அது எப்படி காப்பாற்றும்…?

1.ஆலயத்தில் காட்டப்பட்ட தெய்வீக குணங்களை நாங்கள் பெற வேண்டும்
2.என் சொல் செயல் அனைவரையும் காக்க வேண்டும்…
3.அருள் உனர்வுகள் பெற வேண்டும்… இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்று
4.இத்தகைய தெய்வீக உணர்வை எடுத்தால் அது நம்மை காக்கும்.

சிலை காப்பாற்றாது… நாம் எடுக்கும் தெய்வீக எண்ணம் தான் நம்மைக் காப்பாற்றும்.

உயிரை நாம் பலமாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்

உயிரை நாம் பலமாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்

 

எத்தனையோ நிலைகளைக் கடந்து வந்த மனிதன் நாம்
1.உயிரை நாம் பலமாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
2.உயிரைச் சிக்கனெப் பிடித்து… அது எப்படி ஒளியாக இருக்கின்றதோ
3.அதே அறிவின் தன்மையாக நாம் பெற வேண்டும்.

ஆதியிலே தோன்றிய மனிதன் அகஸ்தியன் தன் உணர்வினை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து கோண்டிருக்கும் அந்த உணர்வை எடுத்து
1.நம் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக இரத்தங்களிலே கலக்கப்பட்டு
2.நம் உடலுக்குள் அதைச் சேர்க்கப் பழக்கப்படுத்த வேண்டும்.

இப்படிப் பழக்கப்படுத்திக் கொண்டால் நாளடைவில் இந்த உடலை விட்டுச் செல்லப்படும் பொழுது எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தோமோ உயிர் நம்மை அங்கே அழைத்துச் சென்று விடும்.

இதில் ஒன்றும் சிரமம் இல்லை.

காட்டிற்குள் போய்த் தவம் இருந்து தனித்து ஜெபம் இருந்து ஆண்டவனின் அருளைப் பெறப் போகின்றேன் என்று அங்கே சென்றால் என்ன நடக்கும்…?

காட்டுக்குள் அமர்ந்து எந்த ஜெபத்தின் தன்மை எடுக்கின்றானோ… அந்த உணர்வு… நம்மை ஆள்பவன் எவனோ அங்கே தான் சென்றடையும்.

இந்த உடலை விட்டுச் சென்ற பின் இன்னொரு உடலுக்குள் சென்று அதே உணர்வுகள் எவன் ஒருவன் பிரமை பிடித்து இதே மாதிரி ஆனானோ
1.வாக்கிலே ஒன்றை எடுத்துக் கொண்டு வரும் பொழுது அவன் ஒன்றைப் பார்த்தாலே போதும்.
2.இது வலுவானால் அவருடைய நிலைகள் சாபமாக… நீ தொலைந்து போடா என்று போக வைத்து விடும்.
3.இந்தப் உணர்வுகள் வலுவாகி அவனை இறக்க வைத்துவிடும்.

ஆக “இவர் பெரிய முனி” அப்பா என்று வரும் ஆனால் நல்ல நிலைகளில் வளரப்பா…! என்ற நிலைகளுக்கு வருவதில்லை.

கணவன் மனைவியாக ஒன்றிணைந்து நல்ல உணர்வினை இருவரும் சேர்த்து வளர்த்துப் பழகினால் நல்ல உணர்வுகள் வளரும்.

ஆனால் தெரியாத நிலைகள் கொண்டு தவமிருந்து நான் ஆண்டவனை அடையப் போகின்றேன் என்று… மனைவி இல்லாது இந்த உணர்வுகளை வளர்க்கப்படும் பொழுது “முனி” தான். அந்த முனி என்ற வீரியத் தன்மை மற்றதை அழிக்கச் செய்யும்.

ஏனென்றால் நாம் எண்ணிய உணர்வு எதுவோ நம்மை ஆள்வது நம் உயிர் தான். அது தான் ஆண்டவன். அவனிடம் எதைச் சேர்க்கின்றோமோ அதன் வழி தான் செல்கிறது.

ஆனால் கணவன் மனைவியாக ஒன்றி வாழ்ந்த அகஸ்தியன்… உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியாக மாற்றினான்… நஞ்சினை வென்றான்… நஞ்சையே ஒளியாக மாற்றினான்.

சூரியன் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் பாதரசமாக உருவானாலும் தன் அருகே வரக்கூடிய விஷத்தன்மையுடன் மோதப்படும் பொழுது அந்த நஞ்சு பிரிந்து சென்று ஒளியின் உணர்வாக வருகின்றது.

ஆக அந்த ஒளியின் உணர்வுக்குள் நஞ்சின் தன்மை கவர்ந்து விட்டால் அதை நுகர்ந்தால் நம்மை இருள் சூழச் செய்து விடும்.

அதாவது ஒளியாக மாற்றுகின்றது…. ஆனாலும் ஒரு விஷத் தன்மையைக் கவர்ந்தால் அதை மனிதன் நுகர்ந்தால் மற்றவருடைய உணர்வின் இயக்கத்தை இருளச் செய்கின்றது. ஏனென்றால் இதே சூரியன் தான்.

ஒரு பக்கம் விஷத் தன்மை பரவுகிறது என்றால் சூரியனுடைய காந்த சக்தி கலந்தால் அதனின் அலைகளாகப் படர்கிறது. அதை நாம் நுகர்ந்தால் நம் உடலில் உள்ள அணுக்களை இருளச் செய்து விடும்.

1.அந்த இருளை மாற்றிய உணர்வின் தன்மை ஒளியாகப் பெற்ற அனைத்திலும் உயர்ந்தது துருவ நட்சத்திரம்
2.அதை அனைவரும் பெற வேண்டும்.

மனிதனான பின் இந்த உடலுக்குப் பின் நாம் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும். ஆகவே ஒவ்வொருவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறுங்கள்.

“என்ன நடந்தாலும்” நம்முடைய நப்பாசை உடல் மீது தான் வருகிறது… உயிர் மீது வருகிறதா…?

“என்ன நடந்தாலும்” நம்முடைய நப்பாசை உடல் மீது தான் வருகிறது… உயிர் மீது வருகிறதா…?

இன்றைய உலகில் நாளுக்கு நாள்… நாளுக்கு நாள்… யுத்த மேகங்கள் கூடிக்கொண்டே வருகின்றது… பயங்கர விளைவுகள் வருகிறது.
1.நாம் நப்பாசை வைத்து இந்த உடல் இச்சை தான் பெறுகின்றோம்
2.உயிர் இச்சையை யாரும் கொள்ளவே இல்லை.

உடலுக்குப் பின் உயிரோடு சேர்ந்துதான் வாழப் போகின்றோம். மீண்டும் உடல் பெறும் உணர்வுகள் பெறப்படும் பொழுது… எந்த வேதனை கொண்டு நுகர்ந்து… வாழும் இந்த உடலில் நாம் தப்ப வேண்டும் என்று எண்ணினோமோ… வேதனைகள் அதிகரித்து…
1.இந்த உடலில் இருந்து தப்பி… அடுத்து இன்னொரு வேதனைப்படும் உடலுக்குள் தான் போக வேண்டி இருக்கும்
2.உயிர் அதைத்தான் பெறச் செய்யும் என்பதை நாம் மறந்தே இருக்கின்றோம்.

அக்காலங்களில் உலகம் முழுவதற்கும் உள்ள எல்லா இடங்களிலுமே அதிகாலையில் நான்கு மணிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்ற நிலையில் அந்தந்த மதங்களுக்குத் தக்க வேதங்களை ஓதி… மனித உடலில் பதியச் செய்து… அரசின் பற்றும்… நாட்டின் பற்றும் வந்தது.

இருந்தாலும் அப்படி வளர்த்துக் கொண்ட பின் அந்தந்த நாட்டின் அரசன் இறந்தால் அவன் பிள்ளைகளில் மாற்றம்.
1.பின் அதிலே பல பிரிவுகள் ஆகி ஒருத்தருக்கு ஒருத்தர் பகைமையாகி
2.முதலில் உருவான தத்துவங்களை மாற்றி அவரவருக்குத் தக்கவாறு மாற்றிக் கொண்டனர்.

இன்றைய நம் நாட்டு அரசியலில் எடுத்துக் கொண்டால் காங்கிரசிலிருந்து எத்தனை கட்சிகள் புதிதாக உருவாகி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கைகளை அதிலே சேர்த்து “ஆட்சியைப் பிடிக்க வேண்டும்… தான் அரசாள வேண்டும்” என்று தான் எண்ணினர்.

ஆனால் அன்று காந்திஜியின் சாந்த உணர்வுகள் அதிகரித்ததனால் தான் நம் நாடு விடுதலை அடைந்தது. அவர் வழி நடத்திய தத்துவம்
1.ஒரு மனிதனைக் கோபமாகத் தாக்குவது கோழை
2.ஆனால் நம்மைத் தாக்க வரும்பொழுது மன உறுதி கொண்டு அவருடைய நிலைகளைச் சீர்படுத்திக் காட்டுவது மன பலம்
3.”அமைதி கொண்டு நல் உணர்வை ஊட்டுவது தான் மன வலிமை” என்று தெளிவாகக் காட்டினார்.

அத்தகைய மன வலிமை கொண்டு மக்கள் அனைவரையும் ஊக்குவித்து எல்லோரும் ஒரே நிலையில் சுதந்திரம் பெற வேண்டும் என்ற உணர்ச்சியைத் தட்டியெழுப்பினார்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு வரும்போது பிரிட்டிஷ் ஆட்சி பணியும் தன்மை வந்தது. இலண்டன் சபையிலே காந்திஜியைப் பேசும்படியும் செய்தது… சுதந்திரத்தைக் கொடுத்தார்கள்.

உலகம் முழுவதும் அன்று பிரிட்டிஷ் ஆட்சியாக இருந்தாலும்… மக்களை அவர்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தாலும் காந்திஜியின் சாந்த வீரியமே உலகம் முழுவதற்கும் சுதந்திரத்தைக் கொடுக்கும்படி செய்தது.

ஆனால் அந்தச் சுதந்திரம் இன்று எப்படி இருக்கின்றது…?

அன்று பிரிட்டிஷ்… அரக்க உணர்வுகள் கொண்டு மக்களை அடக்கி ஆட்சி புரிந்தான்.
1.அதே உணர்வு வளர்ந்து ஒவ்வொரு மனிதனும் மற்றதை அடக்கி ஆட்சி புரிய வேண்டும் என்ற தன்மைக்கு
2.இன்று அரசியல் அமைப்புகள் உலகெங்கிலும் வந்துவிட்டது.

நாட்டு மக்களைக் காக்க வேண்டும் என்பதற்கு மாறாக… நல்ல பண்புகளை அறியாதபடி “தான் எடுத்துக் கொண்ட கொள்கைக்கு மாறாக யார் சென்றாலும் அவனைத் தொலைக்க வேண்டும்…” என்று வந்துவிட்டது.

இப்படிக் கொள்கைகள் வித்தியாசமாகி ஒருவருக்கொருவர் உண்மையை அறியும் தன்மைகள் இழக்கப்பட்டு
1.மக்கள் மத்தியில் குழப்பங்கள் உருவாகி
2.தான் எப்படிப் பிழைக்கப் போகின்றோம்… எப்படி வாழ போகிறோம்…? என்று
3.நம் நாடு மட்டுமல்ல… உலக ரீதியிலே இந்த விஷத்தன்மைகள் பரவி
4.மனித இனத்தையே முழுமையாக அழிக்கும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டது.

ஆகவே உலகம் அழியும் தருணம் வரும் பொழுது இந்தப் பிரபஞ்சத்தில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி துருவ நட்சத்திரமான அதன் உணர்வுகளை நாம் பெற்றால் தான் தப்ப முடியும்.

உயிர்ப் பற்றை வளர்த்தவர்கள் தான் உயிருடன் ஒன்றி அழியாத் தன்மை கொண்டு துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் உள்ளார்கள்.

நமது எல்லை அது தான்…!

உயிர் நமக்குக் கொடுக்கும் தீர்ப்பு

உயிர் நமக்குக் கொடுக்கும் தீர்ப்பு

 

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் பல உண்மைகளை உங்களுக்கு உபதேசத்தின் வாயிலாக உணர்த்தி உள்ளோம்

ஆக… எந்த நிலையிலும் உயிர் உடலை விட்டுத் தான் வெளியே செல்கின்றது ஆனால் உடலை விட்டுச் செல்லும் பொழுது
1.வாழும் காலத்தில் நாம் எதைச் சேர்த்துக் கொண்டமோ அதற்குத் தக்க தான்
2.அடுத்து மாற்று உடலை உயிர் உருவாக்குகின்றது… உணர்வுக்கொப்ப உடலை மாற்றுகின்றது

கோடிச் செல்வங்கள் வைத்திருப்பவரும் யாரும் நிம்மதியாக இருப்பதில்லை அவர்களும் வேதனை வெறுப்பு சலிப்பு சஞ்சலம் சங்கடம் இவைகளை எடுக்கத் தான் செய்கிறார்கள்.

அவர்கள் உடலில் கடுமையான நோய்களாக அது விளைந்து விடுகிறது. செல்வத்தால் அவர்கள் வாங்கிய பொருள்களை அனுபவிக்க முடியாத நிலை தான் வருகின்றது… அதைப் பயன்படுத்த முடியாத நிலையும் வருகின்றது.

ஆகவே எப்படி இருந்தாலும்
1.இந்த உடலில் சிறிது காலம் தான் வாழ முடியும்.
2.வாழும் காலத்தில் ஒவ்வொரு நொடிப் பொழுதையும் யாம் சொல்லும் தியானத்தை அதிலே நெறிப்படுத்திக் கொள்ளுங்கள்.

சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ கோபமோ விரோதமோ அவைகளை நுகர நேர்ந்தால் அது இயங்கிடாது தடைப்படுத்திக் கொள்ளுங்கள் அதற்குத்தான் அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யும்படி உங்களிடம் சொல்கின்றோம் (ஞானகுரு).

ஆத்ம சுத்தி உங்களைச் செய்யும்படி சொல்லி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உங்கள் உடல் உறுப்புகள் அனைத்திலும் பரவும்படி செய்து
2.அந்தச் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று நான் தியானித்து
3.உங்கள் உடலில் உள்ள அந்த அணுக்கள்… நீங்கள் எண்ணியதை ஈர்த்து அது வளரும் பருவம் பெறுவதற்கு
4.வளர்ச்சி பெறும் பருவத்தைச் செயல்படுத்துவதுதான் என்னுடைய (குருவின்) வேலை.

ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் புனிதம் பெற வேண்டும்… பரிசுத்தப்பட வேண்டும்… அசுத்தங்கள் அகற்றப்பட வேண்டும்… அருள் பெருக வேண்டும்… இருள் புகாத நிலைகள் வேண்டும்… என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்கள் உடலைக் கோவிலாக மதித்து உயிரை ஈசனாக மதித்து அந்தச் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று யாம் தியானித்துக் கொண்டிருக்கின்றோம்.

உங்கள் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்த வேண்டும். உயிர் எல்லாவற்றையும் உணர்த்தினாலும் எல்லாவற்றையும் உணர்த்தும் அறிவு இந்த ஆறாவாது அறிவுக்கு உண்டு.

உயிரைப் போன்றே உணர்வை ஒளியாக மாற்றிப் பிறவி இல்லாத நிலை அடையச் செய்வது தான் நமது குரு காட்டிய அருள் வழி.

நாம் எண்ணிய உணர்வுகள் உயிரால் இயக்கப்பட்டு அந்த உணர்வின் செயல்தான் நம்மை வழி நடத்துகிறது.
1.“மனிதனுடைய எண்ணம் தான் இதற்கு மூலமாகின்றது…”
2.எண்ணியதைத் தான் உயிர் இயக்குகின்றது… அந்த உணர்வை அணுவாக மாற்றுகின்றது
3.அதன் வழியே செயலும் நடந்து கொண்டிருக்கின்றது.

தனித்து… கடவுள் என்று ஒருவன் இல்லை…!

ஆகவே நாம் எண்ணும் உணர்வுகளில்
1.எந்தெந்தத் தீமைகளைச் செய்கிறோம் என்று அந்தக் கணக்கை உயிர் போட்டுக் கொண்டே இருக்கும்
2.அதே சமயத்தில் தீமைகள் எதையெல்லாம் நீக்கினோம்…? என்று அந்தக் கணக்கையும் உயிர் போட்டுக் கொண்டே இருக்கும்.

நமக்கு ஜட்ஜ்மெண்ட்…! தீர்ப்பு கூறுவது நமது உயிர்தான்

எதன் கணக்காக வருகின்றதோ…
1.நீ இவ்வளவு செய்தாய்… அதற்குண்டான உடலை இனி நீ பெறுவாய்
2.அதை நீ அனுபவித்துப் பார்…! என்று உயிர் தீர்ப்பு கூறி அதன் வழி அடுத்த வாழ்க்கை (ண்ஹம் வாழ்க்கை) தொடர்கின்றது.

ஆகவே உயிரை நாம் மதித்து பழகுதல் வேண்டும்.

ஏனென்றால் நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் இயக்குகின்றது அதைத்தான் உடலாக்குகின்றது அதைத்தான் ஆளுகின்றது அதை எண்ணும் பொழுது அதன் வழி வருகிறது

உடலான மணமே நமக்குள் எண்ணமாகி… அந்த எண்ணத்தின் உணர்ச்சியே வாழ்க்கையின் செயலாக மாறிக் கொண்டே இருக்கின்றது.

தீமைகளை நீக்கிடும் அருள் உணர்வை ஏங்கிப் பெற்று அதை வளர்த்துக் கொண்டால் இன்றைய உலகில் படர்ந்து கொண்டிருக்கும் விஷத்தன்மைகள் நமக்குள் கவராது தடுக்க முடியும்.

எந்தச் செயலைப் பார்த்தாலும் கேட்டாலும் நுகர்ந்தாலும் பிறரின் குறைகளை அறிய நேர்ந்தாலும் அந்தத் தீமைகள் தனக்குள் வளராதபடி மனத்தூய்மையாக்க ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஆத்ம சக்தி செய்து கொண்டே வர வேண்டும்.

வாழ்க்கையில் இந்தக் கணக்கு நமக்குள் கூடினால் நம் உயிர் அதற்குண்டான தீர்ப்பாக… நம்மைப் பிறவியில்லா நிலை அடையும்படி செய்யும்.

அதிலே சிறிது தவறினால் எந்த விஷத்தின் தன்மை கூடி… எதன் அடிப்படையாக நமக்குள் அது வளர்ந்ததோ… அதன் தீர்ப்பாக உயிர் மீண்டும் நம்மைப் பிறவிக்குக் கொண்டு வந்துவிடும்.

ஆனால் இன்றைய விஞ்ஞான உலகில் நாம் மீண்டும் மனிதனாக வருவதற்கு பல்லாயிரக் கணக்கான வருடங்கள் ஆகும். இதையெல்லாம் சிந்தனையில் வைத்துக் கொள்ள வேண்டும்

நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தையும்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் பெறச் செய்து
2.இந்தப் பிறவியில் வரக்கூடிய இருளை அகற்றி உயிருடன் ஒன்றி ஒளி உடலைப் பெறுவோம்.

ஆயிரக்கணக்கான உயிர்களை நான் பிரார்த்திக்கும் பொழுது அந்த ஆயிரம் பேருடைய சக்தி எனக்குக் கிடைக்கின்றது

ஆயிரக்கணக்கான உயிர்களை நான் பிரார்த்திக்கும் பொழுது அந்த ஆயிரம் பேருடைய சக்தி எனக்குக் கிடைக்கின்றது

 

ஞானிகள் உணர்வுகளை இராஜதந்திரமாக குருநாதர் எனக்குள் எப்படி நுழைய வைத்தாரோ அதைப் போன்று தான் உங்களுக்குள்ளும் உயர்ந்த உணர்வுகளை தூண்டச் செய்து அதைத் தட்டி எழுப்பிக் கொண்டுள்ளேன் (ஞானகுரு).

துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் உணர்வுகள் உங்கள் உடலில் இருந்து நீங்குவதற்கு மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறச் செய்ய யாம் உபதேசிக்கின்றோம்.

அந்த உபதேசித்த அருள் வழிப்படி நீங்கள் தியானம் எடுத்தீர்கள் என்றால் காற்றிலிருந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர்ந்து உங்கள் உடலுக்குள் வரும் தீமைகளைப் போக்க இது உதவும்.

குருநாதர் எனக்குத் துன்பத்தை கொடுத்து இதைத் தெரிய வைத்தார்.
1.உங்களுக்குள் துன்பம் வரும் பொழுதெல்லாம் யாம் சொன்ன முறைப்படி செய்தால் அதை நீக்கிக் கொள்ள முடியும்.
2.நீங்கள் சொன்னதை எடுத்ததனால் “என் துன்பம் போனது… நன்றாக இருக்கின்றேன்…” என்று உங்கள் அனுபவம் பேசும்
3.கஷ்டம் இல்லாது இந்த உயர்ந்த சக்திகளைப் பெறுகின்றீர்கள்
4.”சாமி இலேசாகச் சொல்கிறார்…” என்று அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.

வாக்கினால் யாம் சொல்லும் பொழுது உங்களுக்கு நல்லதாகின்றது அதே எண்ணத்துடன் நீங்கள் நினைத்து வந்தால் உங்களுக்குச் சீக்கிரம் நல்லதாகும்.

தொல்லை கொடுக்கின்றாய்… நீ எல்லாம் உருப்படுவாயா…? என்றால் என்னை அப்படியா சொல்கிறாய்…? என்று அவர்கள் வார்த்தையை வாங்கினால் நம் வியாபாரத்தில் மந்தம்… குடும்பத்தில் குழப்பம்… உடலில் கை கால் குடைச்சல் எல்லாம் ஆகி நம்மைக் கீழே கொண்டு செல்கின்றது.

அடுத்தவன் வார்த்தையை வாங்கிய மாதிரி
1.”சாமி சொன்னார்… அவர் வார்த்தையை (வாக்கினை) எடுப்போம்…” என்று நீங்கள் எண்ணி எடுத்தால்
2.உங்கள் துன்பத்தைத் துடைப்பதற்கு காற்றிலிருந்து இந்த உணர்வு உதவி செய்யும்.

உங்கள் துன்பங்கள் எல்லாம் நீங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய பிரார்த்தனை. உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து நல்ல உணர்வுகள் அங்கே விளைய வேண்டும் என்று யாம் பிரார்த்திக்கும் பொழுது சில நேரங்களில் உங்கள் புருவ மத்தியில் “விண்…விண்…” என்று அந்த உணர்வுகள் ஈர்ப்பதைப் பார்க்கலாம். உங்களை அறியாமலே அது ஈர்க்கும்.

காரணம் உங்கள் உயிரை ஈசனாக மதித்து இதைச் செயல்படுத்துகின்றேன் உங்கள் உடலை உருவாக்கியதற்கு மூலமே “அவன்தான்… அந்த ஆற்றல் மிகுந்த சக்திதான்…!”
1.ஆயிரக்கணக்கான உயிர்களை நான் பிரார்த்திக்கும் பொழுது ஆயிரம் பேருடைய சக்தி எனக்கும் கிடைக்கின்றது.
2.அதே சமயத்தில் ஆயிரம் பேர் தனித்துத் தனித்து எண்ணும் பொழுது ஒன்று ஒன்று.. அது நீங்கள்.
3.உங்களுக்குள் அந்த உயர்ந்த ஒளிகள் பெற வேண்டும் என்று நான் எண்ணும் போது
4.அந்த ஆயிரம் பேருடைய உணர்வு எனக்குள் வலுப்பெற்றுச் செயல்படும்.

பல கோள்களின் சக்திகளை எடுத்துத் தான் சூரியன் ஒளியாக மாறுகின்றது. அதே போன்று நீங்களும் செயல்படுத்திப் பாருங்கள்.

மற்றவர்கள் உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணும் பொழுது நீங்கள் வளர்கிறீர்கள்.

மற்றவர்கள் கெட வேண்டும்… கெட்டுப் போக வேண்டும் என்று எண்ணினால் முதலில் நீங்கள் தான் கெடுகின்றீர்கள். கெடுதலை உங்களுக்குள் விளைய வைத்த பின்பு தான் அடுத்தவர்களுக்குக் கெடுதலை உருவாக்க முடியும்.

இதைத் தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள் நாம் எதை எண்ணுகின்றோமோ அதை நம் உயிர் படைத்து விடுகின்றது.

மனப்போரை எல்லாம் “குருக்ஷேத்திரப் போராக” நாம் நடத்த வேண்டும்

மனப்போரை எல்லாம் “குருக்ஷேத்திரப் போராக” நாம் நடத்த வேண்டும்

 

ஞானிகள் மகரிஷிகள் அனைவருமே நெருப்புக்குச் சமமானவர்கள்… தீமையைச் சுட்டுப் பொசுக்கக் கூடிய சக்தி பெற்றவர்கள். அந்தச் சக்தி நமக்கு முன் இந்தக் காற்றிலே இருக்கின்றது.

நம்மை அறியாது வரக்கூடிய தீமைகளை நீக்குவதற்கு அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழியில்… மெய் ஒளி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… என்று எடுத்து நமக்குள் அந்தத் தீமைகளைப் பொசுக்கிப் பழகுதல் வேண்டும்.

குருக்ஷேத்திரப் போர்…! குரு…! இந்த உடலில் இருக்கக்கூடிய அனைத்திற்கும் உயிரே குருவாக இருக்கின்றது.

நான் பேசுகின்றேன்; நீங்கள் திட்டுகிறீர்கள்; மற்றதைப் பார்க்கின்றேன்; எல்லாவற்றையும் சுவாசித்து… உயிரான குருவிடம் சென்றுதான் அது வேலை செய்கின்றது… உயிர் அதை எல்லாம் பிரம்மமாகச் சிருஷ்டித்து விடுகின்றது.

உதாரணமாக… வேதனை வருகிறது என்றால் என்ன செய்ய வேண்டும்…?
1.வேதனை உருவாக்கக்கூடியதைக் காதிலே கேட்டு…
2.அந்த உணர்ச்சிகளைச் தூண்டி சுவாசித்து… உயிரான குருவிடம் சென்ற பின்… (அப்போது மனப் போராகிறது)
3.ஈஸ்வரா…..…! என்று உயிரை எண்ணி (மனப் போரை நாம் குருக்ஷேத்திரப் போராக்க வேண்டும்)
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
5.குருக்ஷேத்திரப் போரில் அவனிடம் (உயிரிடம்) ஒப்படைத்து விட்டால்
6.மற்றவர்கள் திட்டியது… கேலி பேசியது… வேதனைப்படச் செய்தது… உள்ளே புகாதபடி தடைப்படுத்தப்படுகிறது.

அதாவது குருவிடம் (உயிரிடம்) சொல்லி தனக்குள் கெட்டது புகாமல் தடுக்கச் செய்வதற்குத் தான் “குருக்ஷேத்திரப் போர்…” என்று நமக்குக் காண்பித்துள்ளார்கள்.

நம்மை ஒருவன் திட்டிக் கொண்டே இருக்கின்றான் என்று அதைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தால் போதும். சுவாசித்ததும் ஜிர்.. ஜிர்..ர்ர்.. ஜிர்.. என்று இயக்கிக் கொண்டிருக்கும் (நமக்குள் இரைச்சலாகிறது).

அந்த உணர்வுகள் உடலுக்குள் போகாதபடி தடுக்க வேண்டும் என்று சொன்னால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
1.ஈஸ்வரா…….! என்று ஓங்கி (சொல்லி) அந்த ஓங்காரம்… வானை நோக்கி ஏகி
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் இங்கே குருவிடம் (புருவ மத்தியில்) வந்து விடுகிறது.
3.அப்போது சாதாரண மனிதன் பேசிய (திட்டியதை) உணர்வைச் சுட்டுப் பொசுக்கி விடுகிறது.

இத்தகைய பேருண்மைகளைக் காட்டிய மெய் ஞானியின் உணர்வை எண்ணி அதைப் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று அவனிடம் வேண்ட வேண்டும்.

ஏனென்றால் அவன் தான் சிருஷ்டிக்கின்றான்…!

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும். என்னைத் திட்டியவர்களுக்கு என் சொல் நல்லதாகப் பட வேண்டும்… என் பார்வை அவர்களுக்கு நல்லதாக இருக்க வேண்டும்… என் சொல் அவர்களுக்கு இனிமை ஊட்ட வேண்டும்… என்னைப் பார்க்கும் பொழுது நல்ல எண்ணங்கள் வர வேண்டும்.

இப்படிச் செய்தால் குருக்ஷேத்திரப் போர்… தீமைகள் நமக்குள் வராதபடி தடுக்கப்படுகின்றது.

சிதம்பரத்தில்… திருமூலர் சொன்ன “திருமந்திரம்”

சிதம்பரத்தில்… திருமூலர் சொன்ன “திருமந்திரம்”

 

அர்ஜுனனுக்குக் கண்ணன் சாரதியாகச் செல்கின்றான்… கண்ணன் வழிகாட்டிச் செல்கின்றான்… என்றால் நம் கண்கள் நமக்கு எப்படி உபதேசம் சொல்கின்றது என்று காட்டுகிறார்கள்.

இங்கே மாடு வருகின்றது… மனிதன் வருகின்றான்… அவன் தவறாகப் பேசுகிறான்… என்றும் ஒரு காரை ஓட்டிச் செல்லும் பொழுது
1.ஒருவன் குறுக்கே வருகின்றான் வந்தால் மோதிவிடும் என்று கண்கள் தான் உபதேசிக்கின்றது.
2.வண்டியை நீ இப்படி ஓட்டு என்று அந்த உணர்வுடைய நிலைகளை அங்கங்களை கைகளை இயக்கச் செய்வது கண்கள் தான்…!

அதாவது…
1.நம் கண் பார்க்கின்றது… அந்த உணர்வினை இழுக்கின்றது… சுவாசிக்கச் செய்கின்றது.
2.அந்த உணர்வின் தன்மை கொண்டு “அங்கங்களை இயங்குகிறது…”

எடுத்துக் கொண்ட உணர்வுகள் கொண்டு நாம் இயங்கினாலும் “இந்த உணர்வுகள் வடிகட்டப்படுகிறது…”

இதைப் போன்று அவன் (கண்கள்) கொடுக்கும் உபதேசத்தின் தன்மை தன்னைக் காக்கும் உணர்வாக எடுக்கப்படும் பொழுது… தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வுகள் வருகின்றது.

அதே சமயம்… ஒருவனைத் தாக்கும் உணர்வை எடுக்கப்படும் பொழுது அந்தத் தாக்கும் உணர்வுஅவனைத் தாக்கும் நிலைகளுக்கு என்னை அழைத்துச் செல்கின்றது.

அவனை அழிக்க வேண்டும் என்ற நிலையில் சிந்திக்காது செயல்படும் உணர்வை எடுக்கப்படும் பொழுது அந்த வேதனையான உணர்வுகள் நம் நல்ல குணங்களை அழித்து விடுகின்றது.

கீதையில் நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்று காட்டுகிறார்கள். விநாயகர் தத்துவத்தில் நீ எதைச் சுவாசிக்கின்றாயோ அதுவே உனக்கு வாகனமாக அமைந்து நீ அதுவாக ஆகின்றாய் என்று காட்டுகிறார்கள். இதை ருத்ர தாண்டவம் என்று திருமூலர் காட்டியுள்ளார்.

1.நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு அங்கங்கள் எப்படித் துடிக்கின்றதோ
2.நாம் எடுத்துக் கொண்ட சுவாசத்தின் தன்மை அந்த அங்கங்களைப் பாசமாக அணைக்கின்றதோ
3.நாம் எடுத்துக் கொண்ட நிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணங்களுக்கு இந்த உணர்வின் தத்துவங்கள் எப்படியோ
4.அதை எல்லாம் நடனங்களாகக் காட்டி… அபிநயங்கள்…!
5.அதாவது… தான் எடுத்துக் கொண்ட உணர்வின் நிலைகளுக்கொப்ப அங்கங்களுடைய அசைவுகள்
6.அந்த நரம்பியல்கள் எப்படி நாதத்தின் நிலைகள் கொண்டு அது இயங்குகின்றது என்பதைத்தான் (ஏனென்றால் அங்கங்களை இயக்குவது நரம்புகள் தான்) ஒலி ஒளி என்ற நிலையில்
7.நாதத்தைப் பற்றி… அந்த நாதத்தின் இயக்கத்தின் தன்மையைத் திருமூலர் தெளிவாகக் காட்டியுள்ளார்.
8.ஒலி ஒளி அதற்குள் எத்தனையோ உட்பொருள்கள் அடங்கியுள்ளது.
9.ஒலியைப் பற்றி எத்தனையோ வியாக்கியானங்கள் செய்யலாம்…
10.ஆனால் நம் உயிருக்குள் ஒலி எப்படி இயங்குகின்றது…? என்று அந்த மெய் ஒலி(ளி)யைக் காட்டியது சிதம்பரம் என்ற ஸ்தலத்தில் தான்.

விண்ணிலே தோன்றிய அந்த உணர்வுக்குள் விஷத்தன்மை படும் பொழுது ஓங்காரமாகிப் (ஓ…ம்ம்ம்ம்) பல நிலைகள் ஆகி பல உணர்வின் தன்மை கொண்டு இயங்குகிறது.

ஒவ்வொரு தாவர இனத்திற்குள் இந்த உணர்வின் தன்மை பட்ட உடனே அந்த இலையின் ரூபங்கள் விரிவடைவதும்… உணர்வின் மணங்களை வெளிப்படுத்துவதும்…
1.சுவாசிக்கும் உணர்வின் தன்மை கொண்டு உயிரணுக்களின் இயக்கமும்
2.அது எடுத்துக் கொண்ட விளைவு கொண்டு உடலின் அமைப்பும்
3.ஒலி ஒளி என்ற நிலைகள் கொண்டு உருமாற்றமும்
4.அந்த உணர்வுக்குள் ஒலியின் மகிழ்ச்சியும்… ஒலியின் தன்மை கொண்டு “ஒளியாக நீ எவ்வாறு ஆவது…? என்று வெளிப்படுத்திய ஸ்தலம் தான் இது.

அந்த உட்பொருளை நாம் இன்னும் காண முடியாது தேடிக் கொண்டிருக்கின்றோம். புரியவில்லை என்று எண்ண வேண்டாம்…! நம்மை அறியாது ஆட்டிப்படைக்கும் சக்திகளிலிருந்து மீட்டிக் கொள்வதற்குத் தான் இதைச் சொல்கின்றோம் (ஞானகுரு)

ரோட்டிலே செல்லும் பொழுது எத்தனையோ உணர்வுகளைச் சுவாசிக்க நேர்கின்றது. காரணம் நமக்குள் 1008 குணங்கள் இருக்கின்றது பார்க்கப்படும் பொழுது இரக்க மனம் கொண்டு “ஐயோ இப்படி ஆகிவிட்டதே…!” என்று எத்தனையோ எண்ணுகின்றோம்.

மனிதரை உருவாக்கிய அந்த 1008 நல்ல குணங்களை வைத்துத் தான் அடுத்தவர்களிடம் நாம் என்ன ஏது என்று கேட்டறிகின்றோம். அப்போது
1.நல்ல குணத்துடன் அது சேர்ந்து வடித்து அந்த நல்ல குணமும் ரிப்பேர் ஆகிவிடுகின்றது.
2.அந்த நல்ல குணத்தை எண்ணும் போது அந்த வேதனை பயம் ஆத்திரம் கோபம் எல்லாமே வருகின்றது.

ஆனால் யாரும் தவறு செய்யவில்லை.

பிறருடைய குறைகளையோ அவர்கள் படும் துன்பங்களையோ தவறான செய்திகளையோ பார்க்கின்றோம். பத்திரிகை டிவிகளைப் பார்க்கின்றோம் உலகம் இப்படி இருக்கிறது…? நாளைக்கு என்ன ஆகுமோ…! என்று வர்ணனை செய்திருப்பார்கள்.

இங்கே திருடி விட்டார்கள் அங்கே கொன்று விட்டார்கள் அடித்து நொறுக்கொ விட்டார்கள் என்று எத்தனையோ சம்பவங்களை நாம் பார்க்க… படிக்க… கேட்க நேருகிறது. அந்த நேரத்தில் நல்ல குணங்கள் அனைத்தும் பதறுகின்றது… பதட்டமாகின்றது. நல்ல குணங்கள் எல்லாமே ரிப்பேர் ஆகி விடுகின்றது.

உதாரணமாக… ரேடியோ கேட்டுக் கொண்டிருக்கின்றோம் ஒரு மின்னல் தாக்குகின்றது. ஏரியில் வழி எடுக்கப்படும் பொழுது எர்த் ஆனவுடன் கரகரப்பாகி… கொர…கொர… என்று சத்தம் போடுகின்றது.

ஒலியை இழுத்துக் கொடுப்பது அங்கே ஓட்டையைப் போட்டு விடுகிறது அப்போது எதையுமே தெளிவாகக் கேட்க முடிவதில்லை.

1.ஒவ்வொரு ஸ்டேஷனிலிருந்து எடுத்து வடிகட்டி கொடுக்கக்கூடிய…
2.நுண்ணிய அலைகளில் பாய்ந்து வரக்கூடிய
3.அந்த அலைவரிசைகளைப் பிரித்து எடுத்துக் கொடுப்பதில் உள்ள இணைப்புகள் சூடாகி
4.அந்த இணைப்பு (பற்ற வைப்பு – SOLDERING) கழன்று விடும்… அதற்குப் பின் இது எடுத்துக் கொடுக்காது.

இதைப் போன்றுதான்
1.மனிதனுடைய உடலில் நுகர்ந்த உணர்வுகள்… மூளைக்குள் இந்த உணர்வின் தன்மை எடுக்கப்படும் பொழுது
2.குறையான உணர்வுகள் பட்டவுடனே பொறிகளை இழுக்கும் அந்த நிலைகள் நின்றுவிடும்.
3.என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று நம் உடலுக்குள் நல்லதை இயக்கக்கூடிய குணங்கள் ரிப்பேர் ஆகிவிடுகிறது.

உங்களால் அதைச் சரி செய்ய முடியவில்லை…! அப்போது
1.ரிப்பேரான குரலில் தான் பேச முடியும்
2.ரிப்பேர் ஆன நிலைகளைத் தான் சுவாசிக்க முடியும்
3.ரிப்பேரான நிலைகளைத் தான் எடுக்க முடியும்…!

அதிலிருந்து மீட்டுக் கொள்வதற்குத் தான் ஞானிகள் கோவிலைக் கட்டி வைத்துள்ளார்கள். அதாவது வாழ்க்கையின் இடைவெளியில் ரிப்பேரானால் அதில் மீட்டுவதற்கு அங்கே வழி காட்டுகின்றார்கள்.

உன் உடலில் இன்னென்னது இப்படி மறைந்திருக்கின்றது. ஆகையினால் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் என்று எண்ணு… மகரிஷிகளின் அருள் சக்தியை அதிலே போடு அபிஷேக ஆராதனைகளைப் போடு சுவையான இனிமையான மணங்கள் பெற வேண்டும் என்று எண்ணு. இதை உணர்த்திய அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணு…!
1.பொருளைக் காட்டி… அதைக் கண்ணில் உற்றுப் பார்க்கும்படி செய்து…
2.உயர்ந்த சக்திகளை எடுக்கும்படி சொல்கின்றார்கள்… காவியத்தையும் படைத்துள்ளார்கள்.

வழிபட வேண்டிய தெய்வத்தின் சக்தி

வழிபட வேண்டிய தெய்வத்தின் சக்தி

 

1.ஓம் ஈஸ்வரா – உயிர்…!
2.குருதேவா – இந்த உடலுக்குக் குருவாக நின்று இத்தனை பெரிய மனித உடலாக உருவாக்கியது
3.ஓ…ம் ஈஸ்வரா குருதேவா… என்று சொன்னால் யாரையோ குருநாதர் சொல்கிறார்… “கடவுளைச் சொல்கிறார்…” என்று சிலர் நினைப்பார்கள்.

நான் முருகனை வழிபடுகின்றேன்… இவர் என்ன ஈஸ்வரனைச் சொல்கின்றார். நான் எப்படி ஈஸ்வரனை வணங்குவது…? என்று சில பேர் நினைப்பார்கள்.

பெருமாளை நான் வழிபட்டுக் கொண்டிருக்கின்றேன். ஈஸ்வரன் என்று சொல்கிறார்கள்… நான் ஈசனை எப்படிக் கும்பிடுவது…?

பராசக்தியை நான் உபவாசம் இருந்து கொண்டிருக்கின்றேன் ஈஸ்வரனை எப்படிக் கும்பிடுவது…? என்று நிறையப் பேர் இருக்கின்றார்கள்.

ஐயப்பனை நாங்கள் வணங்குகிறோம், ஓம் ஈஸ்வரா என்று எப்படி நாங்கள் வணங்குவது…? ஐயப்பன் கோபித்துக் கொள்வாரோ…? என்று நினைப்பவர்களும் உண்டு.

ஐயப்பன் ஆனாலும் சரி பராசக்தி ஆனாலும் சரி காளி ஆனாலும் சரி மாரியம்மன் ஆனாலும் சரி… ஒவ்வொருவரும் அவரவர்கள் வணங்கிக் கொண்ட நிலைகள் தான்.

உதாரணமாக… நீங்கள் மிகவும் கஷ்டப்படுகின்றீர்கள். “ஐயோ இப்படி இருக்கின்றீர்களே…” என்று நான் கேட்டால் அந்த வேதனை எனக்குள் மாறி (மாரி) என்னை வேதனைப்படச் செய்கின்றது.

ஒரு பிள்ளை நோயால் கடும் வேதனைப்படுகின்றது…! அதை எண்ணி எடுத்தால்… அது மாறி… தாயாக (மாரித் தாயாக) எனக்குள் வருகிறது. இதை நினைவுபடுத்துவதற்குத் தான் திரும்பும் பக்கமெல்லாம் மாரியம்மனை வைத்துக் காட்டி உள்ளார்கள்.

அதை யாரும் நினைப்பதில்லை…!

மாரியாத்தா…!
1.என்னை இப்படி எல்லாம் பேசுகின்றார்களே என்று வேதனையாக நினைக்கின்றேன்… அந்த வேதனை எனக்குள் வருகின்றது…
2.அடுத்து அதற்குண்டான நோயும் வருகிறது… உன்னை நான் வேண்டினேனே எனக்கு இப்படி ஆகிவிட்டதே…!

அதே போன்று யாராவது திட்டி பேசிக் கொண்டிருந்தால் அதைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

அந்த வேகமான உணர்வு “பாவிகள்… இப்படிப் பேசுகிறார்கள் பார்…!” என்று எண்ணினால் போதும். உடலில் இடுப்பு கை கால் எல்லாம் வலிக்க ஆரம்பிக்கும்.

சண்டை போடுபவர்களைச் சிலர் அடிக்கடி உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் மறு நாள் பார்த்தால் இடுப்பு வலிக்கின்றது கை வலிக்கின்றது கழுத்து வலிக்கின்றது என்று சொல்வார்கள்.

தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பவர்களையும் தொல்லைப்படுபவர்களையும் இம்சைப்படுத்தியவர்களையும் இம்சைப்பட்டவர்களையும் உற்றுப் பார்த்து
1.பாவம் அவர்கள் சும்மா தான் இருந்தார்கள்
2.அவர்களைத் தொல்லைப்படுத்துகின்றார்கள்… இவர்கள் எல்லாம் உருப்படுவார்களா…? என்று எடுத்துக் கொண்டால்
3.அந்த உணர்வுகள் எல்லாம் உடலில் “வலியாக” வந்து சேர்ந்து விடுகிறது.

ஆக நல்லதை எண்ணினாலும் பிறர் செய்யும் குறைகளை எண்ணி “பாவிகள் உருப்படுவார்களா…” என்று வேதனையைத் தான் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள்.

கடைசியில் என்ன சொல்வார்கள்…? நான் ஊருக்கே நல்லது செய்கின்றேன்… என்னை ஆண்டவன் சோதிக்கிறான் பார்…! இடுப்பு வலிக்கிறது பிடரி வலிக்கிறது தலை வலிக்கிறது…!

ஏனென்றால் இது எல்லாம் நமக்குத் தெரியாமலேயே அந்த விஷமான உணர்வுகள் உடலுக்குள் சேர்ந்து விடுகிறது.

தன்னுடைய நண்பர் வந்தால் போதும். இத்தனையும் சொல்லி இப்படியானது அப்படியானது என்று அந்த உருப்படாத உணர்வுகளை எல்லாம் எடுத்து… “அதற்கெல்லாம் நிச்சயம் அவர்கள் அனுபவிப்பார்கள்…” என்று சொல்ல ஆரம்பிப்பார்கள்.

இந்த உணர்வு வேகமாக இழுத்து உடலுக்குள் வந்த பின் எல்லா விதமான வலியும் வந்துவிடும்
1.நல்லதைத்தான் நான் பேசுகின்றேன்… மாரியம்மனைக் கும்பிடாத நாளில்லை
2.ஆனால் எனக்கு இப்படி வந்து விட்டது…! என்பார்கள்.

இதற்குப் பெயர்தான் மாரி(றி). அதாவது
1.நீ எதை நினைக்கின்றாயோ (அழுத்தமாக) உனக்குள் அந்தச் சக்தி மாறி வலியாக வருகின்றது என்று
2.தெளிவாகவே ஞானிகள் நமக்கு ஒவ்வொரு இடத்திலும் இதை வைத்துக் காட்டியுள்ளார்கள்.

நல்லது பேசுவதாகத் தான் நாம் நினைத்துக் கொள்கின்றோமே தவிர நல்லதைக் காத்து அந்த நல்லதை வளர்க்கும் நிலை இல்லை.

பெண்கள் பெரும்பகுதி இப்படித்தான்.. எங்கள் வீட்டில் இப்படி… பக்கத்து வீட்டில் இப்படி… உறவினர்கள் வீட்டில் இப்படி…! என்று சங்கடப்பட்டது வேதனைப்பட்டது எல்லாம் திண்ணைப் பேச்சாக வந்துவிடும்.

அதிலிருந்து மீள முடியாத நிலையாகி பல விதமான குறைகளை வளர்த்து வேதனைகளைத் தான் வளர்த்துக் கொள்கின்றார்.

ஆனால் மாரியம்மனுக்கு அக்கினிச் சட்டியைப் போட்டுக் காண்பித்திருக்கின்றார்கள். ஏன்…?

உங்கள் மனது பாலைப் போன்று இருக்கின்றது. ஆனால் “ஐயோ… இப்படி இருக்கின்றதே…!” என்று வேதனைப்பட்டீர்கள். அப்போது விஷம் உள்ளே வந்து விட்டது. உங்களை அது ஆட்டிப் படைக்கின்றது. கை கால் குடைச்சல் எல்லாம் வருகிறது.

ஆனால் விஷத்தை நெருப்பிலே போட்டால் என்ன ஆகும்…? அது சாகும் (ஓடுங்கிவிடும்).

அதைப் போன்று தான் ஞானிகளும் மகரிஷிகளும் நஞ்சைப் பொசுக்கிப் பழகியவர்கள்… அவர்கள் நெருப்புக்கு ஒப்பானவர்கள். அந்தச் சக்திகள் அனைத்தும் காற்றில் இருக்கின்றது.

அதை எடுக்க வேண்டும் என்பதற்குத் தான் மாரியம்மன் கோவிலில் திறந்த வெளியில் அக்கினிச் சட்டியை வைத்துள்ளார்கள்.

அதை நாம் கண்ணுற்றுப் பார்த்தவுடனே எதை எண்ண வேண்டும்…?

நான் நல்லதைச் செய்தேன். ஆனாலும் அதற்குள்
1.என்னை அறியாது உட்புகுந்த தீமைகள் அகல வேண்டும்
2.அந்த மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும்
3.என் உடல் முழுவதும் அந்த சக்தி படர வேண்டும் என்று அதை எடுத்து
4.வேதனையைப் அதை பொசுக்க வேண்டும் என்று ஞானிகள் நமக்குக் காட்டி உள்ளார்கள்.

அந்தச் சக்தியைப் பெறச் செய்வதற்குத் தான் உயிர் வழி எடுப்பதற்கு ஓம் ஈஸ்வரா குருதேவா என்று எண்ணும்படி சொல்கின்றோம்.

ஆனால் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் போது “என்னை இப்படிப் பேசினாளே… தாயே நீயே கேள்…! அவள் உருப்படுவாளா…?” என்று கேட்கப்படும் பொழுது
1.நான் தான் முதலில் கெடுகின்றேன்… அது தெரிவதில்லை.
2.உருப்படுவாளா…? என்று சொல்லும் போது முதலில் நான் கெட்டுத் தான் என்னிடமிருந்து அந்தச் சொல் அங்கே போகின்றது
3.இங்கே கெடுக்கக்கூடிய சக்தியைப் படைத்த பிற்பாடு தான் அங்கே செல்கின்றது.

எதைச் சொன்னாலும் பேசினாலும் கேட்டாலும் நினைத்தாலும் படைக்கக் கூடிய பிரம்மமாக நமது உயிர் இருக்கின்றது. இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதனால் தான் ஞானிகள் காட்டிய வழியில் ஓம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி…
1.நெருப்பு என்ற நிலைகள் கொண்டு அதிலே உயர்ந்த சக்திகளைப் போட்டுப் படைக்க வேண்டும் என்று உணர்த்துகிறோம்
2.அந்த ஈசன் நமக்குள் தான் இருக்கின்றான் நெருப்பாக…! அவனுடன் ஒன்றி அவனாக நாம் ஆக வேண்டும்.

ஓ…ம் ஓ…ம் என்று சொல்கின்றோம்… ஏன்…? எதற்கு…?

ஓ…ம் ஓ…ம் என்று சொல்கின்றோம்… ஏன்…? எதற்கு…?

 

ஓம் ஈஸ்வரா குருதேவா என்று அடிக்கடி சொல்கின்றோம் ஏன் இப்படிச் சொல்ல வேண்டும்…? எதனால் இப்படிச் சொல்கின்றோம்…? என்று தெரிந்து கொள்வது நல்லது.

கோவிலுக்குச் செல்கின்றோம்… ஒவ்வொரு கோவிலிலும்… முன்னாடி “ஓ…ம்” போட்டு வைத்திருக்கின்றார்கள். நாம் கோவிலுக்குச் சென்றால் சாமி கும்பிடுகின்றோம்…! ஏன் கும்பிடுகிறோம்…? எப்படிக் கும்பிடுகின்றோம்…? கும்பிடுவதால் நமக்கு என்ன சக்தி கிடைக்கின்றது…? இதை யாரும் தெளிவாக நமக்குச் சொல்லவில்லை.

1.கஷ்டம் வந்தது என்றால் “அந்தத் தெய்வத்திடம் உன் குறைகளை எல்லாம் சொல்லிக் கேள்…”
2.மனம் உருகி நீ அழுது முறையிடும் பொழுது “தெய்வம் உனக்கு உதவி செய்யும்…” என்று தான் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

எல்லோரும் அந்த நிலையில் தான் அழுது கொண்டிருக்கிறோம்.

இப்போது நாம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்கின்றோம் ஈஸ்வரா என்றால் “ஈஸ்வரன் எங்கேயோ இருக்கின்றான்…” அங்கிருந்து அவன் சிருஷ்டிக்கின்றான்…! என்று தான் நாம் நினைக்கின்றோம்.

ஆனால் அந்த ஈஸ்வரன் யார்…?

ஓ…ம் என்பது என்ன…? ஓம் என்றால் பிரணவம்… ஜீவன் உள்ளது…! என்று இப்படித்தான் எல்லோரும் வாதிடுகின்றார்கள்.

உதாரணமாக ரோட்டில் செல்கின்றோம். ஒரு பையன் தவறிக் கீழே விழுந்து விடுகின்றான். நாம் பாசமாக இருக்கின்றோம் நல்ல குணத்தால் அவனைப் பார்க்கும் பொழுது
1.நம் கண் அவன் வேதனைப்படுவதைப் பார்க்கின்றது.
2.அதே சமயத்தில் அந்த வேதனையான உணர்வுகள் அவன் வெளிப்படுத்துவதைக் கண் இழுக்கிறது
3.இழுத்துச் சுவாசித்தவுடன் உயிரிலே பட்டு நமக்கும் வேதனை தெரிகின்றது.

அவன் கீழே விழுந்தான்… அடிபட்டு அவன் உடலில் வேதனையாகின்றது வேதனை தாங்காது அவன் அழுகின்றான். அவன் வெளிப்படுத்திய வேதனையான எண்ணங்களைச் சூரியனிலிருந்து வரக்கூடிய “வெப்ப காந்தங்கள்” அது தனக்குள் கவர்ந்து கொள்கின்றது.

“வேதனைப்படுகின்றானே…” என்று அவனைப் பார்த்தவுடனே அதே உணர்வலைகளை நம் கண் இழுத்து உணர்த்துகிறது.

உதாரணமாக இப்பொழுது நான் (ஞானகுரு) பேசிக் கொண்டிருக்கிறேன் என்றால்
1.இந்த மைக் நான் எதைப் பேசுகின்றேனோ அதை இழுத்துக் கவருகின்றது
2.அதே போன்று தான் அந்த அடிபட்ட பையன் வேதனையான உணர்வின் ஒலிகளை எழுப்பப்படும் பொழுது
3.நம் காதில் இருக்கக்கூடிய மைக் இழுக்கிறது… கண் அதைப் பார்க்கின்றது.
4.அந்த அலை பட்டாலும் கண் கருவிழி அதைக் படமாக்குகின்றது.
5.கண்ணில் இருக்கக்கூடிய காந்தம் அதை இழுக்கின்றது… இழுத்தவுடன் நாம் சுவாசிக்கின்றோம்.

நல்ல குணம் கொண்டு ரோட்டில் செல்கின்றோம் அப்பொழுது பையன் கீழே விழுகின்றான் பார்த்ததும் வேதனையான நிகழ்ச்சிகள் தெரிகின்றது.

அந்தச் சப்தத்தைக் காந்த அலைகள் கவர்ந்து கொள்கிறது. அந்த ஒலியை இழுத்து நாம் நுகரும்பொழுது நமக்குத் தெரிய வைக்கிறது.
1.சுவாசித்தவுடன் அந்த வேதனையான உணர்வு உயிரில் பட்டு
2.அது ஜீவன் பெறுகின்றது. அதற்குப் பெயர் தான் “ஓ…”

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடியிலே நெருப்பை வைத்தால் கொதித்து… “ததாபுதா…!” என்று சப்தம் இடுகின்றது. தண்ணீர் தான்… ஆனால் அது சப்தம் போடுகின்றது.

காரணம்
1.கொதிக்கும் பொழுது அதற்குள் இருக்கக்கூடிய காந்தமும் வெளியில் படர்ந்து கொண்டிருக்கும் காந்தமும் பட்டவுடன்
2.அதை இழுத்து இந்தச் சப்தத்தைப் போடுகின்றது… இது இயற்கை…!

இங்கே எப்படிச் சப்தமிடுகின்றதோ இது போன்றுதான் அந்த உணர்வுகள் சுவாசித்து நம் உயிரிலே பட்ட உடனே
1.அந்தப் பையன் வேதனைப்பட்டது… காந்த அலைகளால் கவரப்பட்டது
2.இங்கே பிரணவமாகி நமக்குள் ஜீவன் பெறுகின்றது.
3.நமக்கும் உடலில் வேதனையான உணர்ச்சிகளைத் தூண்டி உணர்த்துகின்றது.

அவன் அடிபட்டு வேதனையை “ஆ…!” என்று அலறி அந்த உணர்வுகளை வெளிப்படுத்துகின்றான். ஆனால் இந்த மூச்சலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது

நாம் கண்ணிலே பார்த்தாலும் அதை இழுத்துக் கவர்ந்து உயிரிலே பட்டபின் ஜீவன் பெற்று நமக்கும் அந்த வேதனையைத் தூண்டி “அடிபட்டு விட்டனே…!” என்று அவனைக் காப்பாற்றும்படி செய்கின்றது.

பாச உணர்வால் நாம் காப்பாற்றுவதற்குச் செயல்பட்டாலும் அவன் பட்ட வேதனை உணர்வுகள் நம் உயிரிலே பட்ட பின் இது ஓ…!

பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெருப்பைக் கூட்டி நீரைப் உற்றி அதில் எந்தச் சரக்கைப் போட்டு வேக வைக்கின்றமோ அது கொதித்து அந்த வாசனைகள் நீருடன் கலக்கிறது.

நாம் குழம்பு வைக்கும் பொழுது. பொருளை வேக வைத்தால் கரைந்து மற்றதோடு இணைகின்றது. இது போன்று
1.அவன் வேதனைப்பட்ட உணர்வுகளைச் சுவாசித்து உயிரிலே பட்ட பின்
2.அந்த உணர்வுகள் அது பிரிந்து விடுகிறது.
3.வேதனையின் சத்து உமிழ் நீராக மாறி ண்ஹம் உடலுக்குள் சேர்ந்து விடுகிறது.

இது “ஓ…ம்” அதாவது
1.கண்ணுக்குப் புலப்படாத அந்தச் சக்தி உயிரிலே பட்ட பின் ஜீவனாகி
2.உடலுடன் சேர்த்து இரண்டறக் கலக்கப்படும் பொழுது ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய…
3.அவருடைய வேதனை நமக்குள் வந்த பின் அந்தச் சக்தி… சிவமாக… உடலாக… மாறி விடுகின்றது
4.சக்தியாக நம் உடலில் சேர்ந்து இயக்க ஆரம்பிக்கின்றது.

ஆக நாம் சுவாசித்ததை உயிர் பிரம்மமாகச் சிருஷ்டித்து விடுகின்றது… உடலுடன் ஐக்கியமாகி விடுகின்றது. ஓ… என்பது பிரணவம் ம்… உடலுக்குள் சேர்த்து பிரம்மமாகி விடுகின்றது.

வேதனையை உருவாக்கும் சக்தியாக உடலுக்குள் விளைந்து… அது உயிருடன் சேர்ந்து விட்டால் நம்மை அறியாமலே அடுத்து வேதனைப்படும்படி செய்யும்.
1.எதை எடுத்தாலும் வேதனை… எதை எடுத்தாலும் வேதனை… என்று
2.அந்த வேதனையான உணர்வுகள் உடல் முழுவதும் படர்ந்து அதையே பேச வைக்கும்.

ஒவ்வொரு நொடிப்பொழுதும் நமக்குள் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளை… நம்மை நாம் அறிவதற்குத் தான் ஓ…ம் என்று அதைப் போட்டுக் காட்டியுள்ளார்கள்.

நாம் சுவாசிப்பது (சக்தி) உயிரிலே பட்ட பின் அது ஜீவன் பெற்று நம் உடலாக சிவமாக எவ்வாறு மாறுகிறது…? சிவத்திற்குள் சக்தியாக மீண்டும் எப்படி இயக்குகிறது…? அதனதன் செயலாக இயக்குவதை ஓ…ம் ஓ…ம் என்று எல்லா இடங்களிலும் போட்டு உணர்த்தி உள்ளார்கள் ஞானிகள்.