கையை வைத்து உடல் வலிகளை நமக்கு நாமே போக்கிக் கொள்ளக்கூடிய பயிற்சி

கையை வைத்து உடல் வலிகளை நமக்கு நாமே போக்கிக் கொள்ளக்கூடிய பயிற்சி

 

உதாரணமாக காலில் மூட்டில் வலி இருக்கிறது… நடக்க முடியவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்…?

1.ஈஸ்வரா…! என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
2.கொஞ்ச நேரம் கையை அந்த மூட்டில் வைத்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.காலில் இருக்கக்கூடிய மூட்டு வலி நீங்க வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும்
4.அந்த வலி நீங்க வேண்டும்… நல்லதாக வேண்டும் என்று நினைத்துப் பாருங்கள்.

அந்த வலி குறைய ஆரம்பிக்கும்.

இதே போன்றுதான் இருதயத்திலோ மற்ற இடங்களிலோ வலி இருந்தால் இதே மாதிரி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அந்த உணர்வை எடுத்து “அங்கே கையை வைத்து… இந்த உணர்வுகளைப் பாய்ச்சுங்கள்…”

அங்கே சளி இருந்தாலும் இரண்டு கையையும் நெஞ்சிலே வைத்து அந்தச் சளி நீங்க வேண்டும் என்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று பாய்ச்சிப் பழகுங்கள்.

1.சொல்லிக் கொடுக்கின்றோம்… ஆனால் இதை நீங்கள் செய்ய வேண்டும்
2.ஒரு நாளைக்கு வைத்துவிட்டு அப்படியே விட்டு விடக்கூடாது தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும்.
3.(ஏனென்றால் முதலில் ஆர்வமாக கேட்பார்கள் பின்னாடி அதைச் செயல்படுத்துவதில்லை)

எங்கே வலி இருக்கின்றதோ அந்த இடத்திலே மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று நினைத்துக் கையை வைத்து அந்த வலி குறைய வேண்டும் என்று உணர்வுகளை
1.இதன் வழி பாய்ச்சி அந்த எண்ணத்தைக் கொண்டு வாருங்கள்
2.வலி குறைவதைக் காணலாம்…!

உதாரணமாக சங்கடமாக இருந்து ஒரு காயையோ அல்லது குழம்பையோ சமையல் செய்து பாருங்கள்… அது ருசி கெட்டுப் போகும். சந்தோஷமாக இருக்கும் பொழுது செய்து பாருங்கள்… நன்றாக இருக்கும்.

காரணம்,,, அன்றன்று உள்ள குணத்திற்குத் தக்க மாதிரித் தான் இதனுடைய செயல்கள் நடக்கும். நீங்கள் சலிப்போடு அரிசியை வேக வைத்துப் பாருங்கள்… சாதம் தண்ணீர் பட்டுப் போகும். இதெல்லாம் நீங்கள் பார்க்கலாம்.

சங்கடமாக இருந்து சமையல் செய்தால் அந்தக் காய்கறிகளை சல…சல… என்று ஆகிவிடும்… குழம்பின் ருசியே மாறிவிடும்.

யாம் (ஞானகுரு) சொல்லும் வழிகளில் நீங்கள் செயல்பட்டால் உங்கள் உடல் நலமாக உதவும். இந்த உடல் நமக்குச் சதமானது அல்ல…! அவ்வப்போது மனது அமைதி பெறுவதற்கு… மகரிஷிகளின் அருள் சக்தியால் உடல் வலி நீங்க வேண்டும் என்று இந்த எண்ணங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஐயோ… எனக்கு அங்கே வலிக்கிறது இங்கே வலிக்கிறது என்று அதைச் சொல்ல வேண்டியதில்லை.
1.எழுந்திருக்க முடியவில்லை நடக்க முடியவில்லை என்று சொல்லாதபடி
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… வலி நீங்க வேண்டும்
3.நான் எழுந்து நடக்க வேண்டும்… நடக்கக்கூடிய சக்தி பெற வேண்டும் என்று
4.வலி வரும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தியைச் சுவாசித்து நன்றாக வேண்டும் என்று எண்ணி
5.இதைக் கூட்டிக் கொண்டு வாருங்கள்… அந்த வலிகள் நீங்குகிறதா இல்லையா என்று நீங்கள் பாருங்கள்.

சாமி…! நீங்கள் சொன்ன தியானத்தைத் தான் நாங்கள் செய்கிறோம் என்று இப்படித்தான் எண்ணுகின்றார்களே தவிர “தியானம் என்றால் என்ன…?” என்று முதலில் அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா…!

நீங்கள் சொன்னீர்கள்… ஆனால் நடக்கவில்லை நடக்கவில்லை என்று அந்த இராகத்தைப் பாடக்கூடாது.
1.உடலின் இச்சைக்கு நாம் செல்லக்கூடாது.
2.அருளைப் பெருக்கும் பொழுது இந்த இருள் நிச்சயம் நீங்கும்.

கோப குணத்தின் வளர்ச்சி நம்மை எப்படிப் பாதிக்கும்…? என்று அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்

கோப குணத்தின் வளர்ச்சி நம்மை எப்படிப் பாதிக்கும்…? என்று அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்

 

அன்றாட வாழ்க்கையில் நம்மை அறியாது எத்தனையோ சந்தர்ப்பங்களில் கோபப்படும் நிலைகள் வருகின்றது. இது எல்லோருக்கும் தெரிந்தது தான். இருந்தாலும்…
1.அத்தகைய கோப உணர்வுகளை… அந்தக் கார உணர்ச்சிகளை…
2.நாம் அவ்வப்பொழுது மாற்றியமைக்கத் தவறினால்
3.அந்தக் கோபம் நமக்குள் விளையாதபடி தடுக்கத் தவறினால்
4.இந்த கார உணர்ச்சிகள் நம் இரத்தத்தில் “இயங்கத் தொடங்கி விடுகின்றது…”

நம் உயிர் எப்படி இயங்குகின்றதோ… இயக்குகின்றதோ… இதைப் போல அந்தக் கார உணர்ச்சிகள் “உயிரைப் போன்றே அணுவாக மாறுகின்றது…” இது அதிகமாக விளையத் தொடங்கினால் நம் உடலுக்குள் கார உணர்ச்சிகளைத் தூண்டும் அணுக்கள் அதிகமாகப் பெருகுகின்றது.

ஓரு நாற்பத்தி எட்டு நாட்கள் ஆனால்…
1.ஒரு கோழி எப்படி முட்டைகளை இடுகின்றதோ…
2.அதைப் போல் கார உணர்ச்சிகளால் உருவான அணுக்கள்
3.நம் உடலில் தன் இனத்தைப் பெருக்கிக் கொண்டே இருக்கும்.

இப்படி உருவான அந்த அணுக்கள் இரத்தத்தின் வழி செல்லப்படும் பொழுது நம் உறுப்புகளில் நுரையீரலோ கல்லீரலோ மண்ணீரலிலோ கிட்னியிலோ இருதயத்திலோ ஒட்டிவிட்டால் அங்கே அது அணுவாக உருவாகி அந்தந்த உறுப்புகளைப் பாழ்படுத்தத் தொடங்கி விடுகிறது.

காரணம்… நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த கார (கோப) உணர்வுகள் இரத்தத்தில் கலந்து கொண்ட பின்.. அந்த இரத்தம் உடல் முழுவதும் படர்கின்றது.

மிளகாயை வாயிலே போட்டால் எப்படி ஆ… என்று அலறுகின்றோமோ… அது போல் கார உணர்ச்சிகள் உடல் முழுவதற்கும் சென்று உறுப்புகளிலே பரவப்படும் பொழுது பார்க்கலாம்…! இரத்த நாளங்கள் விடைத்திருக்கும்.

கோபம் வரும் போதும் சரி… அல்லது ஒரு இரத்தக் கொதிப்பு உள்ளோர் உடலைப் பார்த்தாலும்… நாம் அதைத் தெரிந்து கொள்ளலாம்.

நாம் மிளகாயைத் தணித்துச் சாப்பிட்டால் ஆ…! என்று அலறச் செய்வது போன்று எல்லா உறுப்புகளை உருவாக்கிய அணுக்களையும் இந்த உணர்ச்சிகள் அலறச் செய்கிறது.

அந்தக் கோப உணர்ச்சிகள் சிறுநீரகத்திற்குச் செல்லப்படும் பொழுது அங்கே எரிச்சல் வரும். காரத்தைச் சுத்திகரிக்கும் நிலையை அது இழந்து விடுகின்றது.

பின் அந்த இரத்தம் நம் இருதயத்திற்கு வருகிறது… இருதயத்திற்கு வந்தபின் அங்கேயும் ஒரு விதமான எரிச்சல் வருகின்றது. எரிச்சலான உணர்வுகளை இருதயம் நம் மூளைக்கு அனுப்புகின்றது. மூளைக்குச் சென்ற பின்…
1.அந்த இரத்தங்களை மூளை பாகங்கள் இரசாயணங்களாக மாற்றி
2.ஒவ்வொரு நரம்பு மண்டலங்களுக்கும் அதை அனுப்புகின்றது.
3.இப்படிப் பரவப்படும் பொழுது கண்கள் சிவந்து விடுகிறது (கோப்படுவோரைப் பார்த்தால் கண்கள் சிவந்து இருக்கும்)

நல்ல உணர்வுகள் நாம் சுவாசித்தோம் என்றால் மூளை நல்ல உணர்வுகளாக நரம்புகளில் அனுப்புகிறது. கண்களிலே ஒரு குளிர்ச்சியும்… ஒரு மகிழ்ச்சியூட்டக்கூடிய உணர்வாகவும் அப்போது வருகிறது.

ஆனால் கார உணர்ச்சிகள் இயக்கமாக்கப்படும் பொழுது நரம்புகள் விடைத்து விடுகின்றது. இரத்தக் கொதிப்பு வந்தவரைப் பார்த்தாலே இனம் புரியாதபடி அவருடைய கண்ணின் பார்வையும் அவர் உடல் சிவப்பாக இருப்பதையும் பார்க்கலாம்

ஆனால் தவறு யார் செய்தது…?

1.கோபப்படுவோரை நாம் பார்க்காமல் இருக்க முடியாது…
2.கோபப்படுகிறார்…! என்றும் தெரியாமல் இருக்க முடியாது.
3.ஆனால் தெரிந்து கொண்ட பின் அதைத் தடுத்து நிறுத்தும் சக்தி நமக்கு உண்டு….
4.இருந்தாலும் நாம் அதைத் தடுக்கின்றோமா…?

ஆனால் மற்ற உயிரினங்களோ இது போன்ற நிலைகளைச் சந்தித்தால் அதிலிருந்து தப்பி ஓடும் சந்தர்ப்பங்கள் தான் உண்டு. ஆனால் மனிதனோ அதை நுகரும் நிலைகளில் தான் இருக்கின்றான்.

உதாரணமாக… ஒருவன் நமக்குக் கடுமையான தீமைகளைச் செய்கிறான் என்றால் “அவனைத் தாக்க வேண்டும்…” என்ற உணர்வு நமக்கு வருகின்றது. ஆனால் கொடூரமானவன்… அவன் நம்மைத் தாக்கி விடுவான் என்றால் “தப்பி ஓடும் உணர்வுகளே…” நமக்கு வருகின்றது.

நம்முடைய கண்கள் அவனுடைய கொடூரமான செயல்களிலிருந்து தப்புவிக்கும் வழியையும் காட்டுகின்றது. ஆனால் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறி விடுகின்றது.

உமிழ் நீராக மாறியது ஆகாரத்துடன் கலந்து காரமான உணர்ச்சிகளைத் தூண்டும் இரத்தமாக மாற்றி விடுகின்றது. ஆனால் நாம் தவறு செய்தோமா…? இல்லை.

இப்படி நம் உடலில் கார உணர்ச்சிகள் அதிகமாகி விட்டால்…
1.நம்முடைய மூளைப் பகுதிகளில் இருக்கக்கூடிய சிறு நுண்ணிய நரம்புகளில்
2.கார உணர்ச்சிகள் தாங்காது இரத்த நரம்புகள் விடைத்துவிடுகிறது.

அதே உணர்ச்சிகள் இரத்த நாளங்களில் ஊடுருவும் பொழுது மூளைகளில் ஏதாவது ஒரு பாகத்தில் இதனுடைய அழுத்தம் அதிகமானால் அது வெடித்து விடும்… உடலில் இரத்தக் கசிவாகி விடும்.

சிலருக்கு இரத்தம் கசிவானது என்று பார்க்கலாம் மூக்கு வழியாக இரத்தம் வந்தது… இறந்து விட்டார்…! என்று சொல்வார்கள். இது எல்லாம் இரத்தக் கொதிப்பால் மரணமடையக் கூடிய நிலைகள்.

ஆனால் அதே சமயத்தில் நம் இருதயத்தில் இதே கார உணர்ச்சிகள் தூண்டப்பட்டால் இருதயத்திற்குள் இயக்கும் அந்த நுண்ணிய பாகங்கள் தெறித்து விட்டால் “இரத்த இரத்தமாகக் கக்குவதைப் பார்க்கலாம்…” ஆனால் அவரும் இறந்து விடுகின்றார்.

இதைப் போன்று இந்தக் கார உணர்வுகளால் வரக்கூடியது நம்மை அறியாமலே உடலுக்குள் சேர்ந்து அந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது. ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

1.கோபப்படுவதைப் பார்த்தால் சாந்தப்படுத்தத் தான் நாம் செல்கின்றோம்.
2.அவன் உணர்வை நாம் கேட்டு அறிகின்றோம்… அதன் உணர்வு நம் உடலுக்குள் அணுக்களாக மாறுகின்றது.
3.நாம் என்ன சொல்லியும் அவன் கேட்கவில்லையே…! என்று அவனுடைய அதே உணர்ச்சிகள் நமக்குள் வந்து விடுகிறது.
4.நாம் தீங்கு செய்தோமா என்றால் இல்லை.
5.கோபப்படுபவனுக்கும் அதே நிலை… கோபப்படுவதைப் பார்த்தவருக்கும் இந்த நிலை
6.அதே சமயத்தில் அந்த கோபப்பட்டதைக் கேட்ட உடனே அதே கோப உணர்வு தான் வருகின்றது.

இப்படி மனித வாழ்க்கையில் வருவதை நாம் நீக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கி… நீக்கி மனிதனாக நாம் வளர்ச்சி அடைந்து வந்த நிலையில் நன்மை… தீமை… என்று அதை நுகர்ந்து அறிந்தாலும்…
1.அறிந்து கொண்ட அந்தத் தீமையின் உணர்வுகள் நமக்குள் வளர்ந்திடாது தடுக்கத் தவறினால்
2.நம் உடலில் அதனுடைய அழுத்தம் அதிகமாகிவிடும்

அதைத் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா…!

கோபப்படுபவனை உற்றுப் பார்த்து அவன் உணர்வை நாம் பதிவாக்கி விட்டால்… நம் சந்தர்ப்பம்… ஒரு காரியம் நடக்கவில்லை என்றால் நமக்குக் கோபம் வரும்.

ஒரு காரியத்தைச் செய்ய முயற்சிக்கிறோம்.
1.அப்போது நாம் போகும் பாதையில் இடையில் யாராவது குறுக்கே வந்தால் அல்லது நம்மை சந்திக்க வந்தால்
2.நான் போகின்றேன் இவன் சனியன் மாதிரி வந்து விட்டான்…! இந்தக் கோபம் வரும்.
3.கோபத்தை இப்படி அந்த உணர்வுகள் வளர்த்துக் கொண்டே வரும்.

பெண்களுக்கு இத்தகைய கோப உணர்ச்சிகள் தூண்டப்பட்டால் கார உணர்ச்சிகள் ஈர்க்கப்படும் பொழுது குழம்பு வைத்தால் மிளகாயை அதிகமாகப் போட்டு விடுவார்கள். குழம்பு காரம் ஆகிவிடும்

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ… அதற்குத் தக்கவாறு இப்படி எல்லாம் இயக்குகின்றது. இதை எல்லாம் நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

“டென்ஷன்” (TENSION) என்று சாதாரணமாகச் சொல்கிறோம்… அந்த நேரத்தில் உடலுக்குள் என்ன நடக்கிறது…?

“டென்ஷன்” (TENSION) என்று சாதாரணமாகச் சொல்கிறோம்… அந்த நேரத்தில் உடலுக்குள் என்ன நடக்கிறது…?

 

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! உயிரின் இயக்கத்தைப் பிரணவம் என்று சொல்கின்றோம். ஆனால் வெறுமென ஓ…ம்…! என்று சொல்வதல்ல. இயக்கத்தின் தன்மை அறிந்து கொள்வதற்கே ஓ…ம் என்று சொல்கின்றோம்.

நாம் எதை நுகர்கின்றோமோ… எதைப் பார்க்கின்றோமோ… அவை அனைத்தையும் உயிர் ஓ… என்று இயக்கி ம்… என்று நம் உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது.

எந்தக் குணத்தின் தன்மையை நாம் எண்ணுகின்றமோ…
1.அதனின் இயக்கமாக உணர்வின் எண்ணங்கள் வருகின்றது
2.அதன் உணர்வின் தன்மை கொண்டு உடல் இயங்குகிறது.

வேதனை என்ற உணர்வுகள் உயிரிலே படும் பொழுது அது குருக்ஷேத்திரப் போர். நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் கொண்டு நாம் ஒருவர் வேதனைப்படுகிறார் என்று பார்த்து நுகரப்படும் பொழுது உயிரிலே பட்டால் வேதனையின் வலு அதிகமாகிறது.

நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களை இது அடக்கி விடுகின்றது உயிருக்குள் குருக்ஷேத்திரப் போராக நடக்கின்றது.

ஆனாலும் வேதனைப்பட்ட உணர்வுகள் நம் இரத்தத்தில் கலந்து விட்டால்… இரத்தம் உடல் முழுவதும் செல்லப்படும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல உணர்வுகளால் ஆன நல்ல அணுக்களிலும் இது கலக்கின்றது.

அணுக்களின் மலம் தான் உடல் உறுப்புகளில் உள்ளது. அப்போது உடல் உறுப்புகளுக்குள் அந்த வேதனை என்ற உணர்வுகள் சென்றபின் மகாபாரதப் போராக மாறுகிறது.

வேதனை என்றாலே விஷம். அந்த விஷத்தின் தன்மை நுரையீரலுக்குச் சென்றால் அங்கே ஒரு வேதனை குடலுக்குள் சென்றால் குடல் வலி சிறுநீரகத்திற்குச் சென்றால் அங்கே வலி இருதயத்திற்குச் சென்றால் இருதய வலி கல்லீரலில் வலி… அதை உருவாக்கிய அணுக்களுக்கு வலி.

இதனால் சிறுநீரகம் சுத்தப்படுத்தும் தன்மையை அது இழக்கப்படும் பொழுது இருதயத்தில் அந்த அசுத்த இரத்தங்கள் செல்லப்படும் பொழுது இருதயம் சரியாக இயங்காதபடி அதையும் தடைப்படுத்துகிறது.

உடலில் உள்ள இரத்தத்தை நம் இருதயம் பம்ப் செய்து கொண்டே உள்ளது.
1.அதன் உணர்வை ஆவியாக அனுப்பி…
2.சிறு மூளை பாகங்களில் இந்த உணர்ச்சிகளை உந்தச் செய்யும் சக்தியாக வருகின்றது.

உதாரணமாக… ஒரு பெட்ரோல் இன்ஜினில் இன்ஜினுக்குள் அந்தப் பெட்ரோல் பம்ப் ஆகும் பொழுது அதனதன் உணர்வு கொண்டு செயல்பட்டு
1.அந்தப் பெட்ரோலை ஆவியாக மாற்றி
2.அதனுடைய அழுத்தங்கள் கொண்டு அந்த இயந்திரத்தை இயக்கச் செய்கின்றது.

நம் உடல் உறுப்புகளை இயக்கச் செய்வதற்கு…
1.எதன் உணர்வின் தன்மை நாம் சிறு மூளையில் படுகின்றதோ
2.அதனின் இயக்கத்திற்குத் தக்க அது இயங்கி
3.அந்த உணர்ச்சிகளை ஊட்டி நம்மை அறியச் செய்கின்றது.

நம் இருதயத்தில் அது சரியானபடி வடிகட்டப்பட்டுச் சுத்தப்படுத்தும் நிலை வரவில்லை என்றால்… அழுத்தம் அதிகமாகும் பொழுது ஒரு பக்கம் வலி.

அப்போது போகும் பாதையில் அடைப்பாகி விட்டால் இரத்தங்கள் தேங்கி விடுகின்றது. அதிகமாகத் தேங்கி விட்டால்…
1.இரத்தம் போகவில்லை என்றால் அழுத்தம் அதிகமாகி நெஞ்சு வலி வரும்.
2.மற்ற பாகங்களுக்கு இரத்தம் செல்லவில்லை என்றால் நெஞ்சு வலி வந்து விடுகின்றது.

நமது வாழ்க்கையில் நாம் அறியாமல் செயல்பட்டாலும் இதைப் போன்ற நிலைகள் ஏற்பட்டு விடுகிறது.

ஆகவே உடலில் வேதனை என்ற விஷத்தின் தன்மை அதிகரிக்கும் போது… கிட்னி இரத்தத்தைச் சரியாக சுத்திகரிக்கும் நிலையை இழந்து விடுகிறது.

அப்போது தெளிந்த இரத்தங்கள் செல்லாத பொழுது கிட்னியை உருவாக்கிய அணுக்கள் அது குறைவாகி விட்டால் மேலே எழுந்து செல்லப்படும் பொழுது இருதயத்தை உருவாக்கி அணுக்களும் பலவீனம் அடைகின்றது.

அது பலவீனம் அடைந்தால் மேலே இரத்தத்தைச் செலுத்தும் தன்மை குறைக்கப்படும் பொழுது தேங்கி நின்று வலியாகின்றது.
1.மேலே கொண்டு செல்லும் இயக்க உணர்வுகளுக்கு
2.இரத்தம் போக முடியவில்லை என்கிற பொழுது வெறும் வாயு தான் போகும்.

இது அடக்கும் தன்மை (கட்டாயப்படுத்தி) வரப்படும் பொழுது என்ன நடக்கிறது…?

சிறு மூளையில் உள்ள நுண்ணிய நிலைகளில் இந்த அழுத்தம் ஏற்பட்டால்
1.தலையிலே கிறுகிறுப்பு வருவதும் அத்தகைய இயற்கை நிலை வரும் பொழுது
2.நம் எண்ணங்களைச் செயல்படுத்த முடியாதபடி ஆகி விடுகின்றது.

ஒவ்வொரு நிமிடத்திலும் நம் வாழ்க்கையில் எதன் அழுத்தம் அதிகமோ அதற்குத் தக்கவாறு நம் உறுப்புகளின் இயக்கங்கள் மாறிக் கொண்டே வருகிறது.

இதை எல்லாம் சமப்படுத்த வேண்டுமா… இல்லையா…!

உடலில் வரும் வலியையும் வேதனையும் போக்க எண்ணத்தால் நாம் செய்ய வேண்டிய பயிற்சி

உடலில் வரும் வலியையும் வேதனையும் போக்க எண்ணத்தால் நாம் செய்ய வேண்டிய பயிற்சி

 

நம் உடலுக்குள் எத்தகைய விஷம் கொண்ட அணுக்கள் இருப்பினும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அங்கே செலுத்தச் செலுத்த அந்த அணுக்களை மாற்றி அமைத்து விடலாம்.

நம் உடலில் இடுப்பு வலியோ முதுகு வலியோ எலும்புகள் வலியோ அல்லது தசை மண்டலங்களில் வலியோ அதிலே வேதனைகள் வந்தால்
1.கண்ணின் நினைவு கொண்டு அந்த வலி இருக்கும் இடத்தில் எல்லாம்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைச் செலுத்தி வலி நீங்கி அங்கே நலமாகும் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ணிப் பழகுதல் வேண்டும்.

ஒரு சிலருக்கு இருதய வலி இருக்கலாம் சிலருக்கு குலை நோய் இருக்கலாம் சிலருக்கு வயிற்றுக்குள் நோய் இருக்கலாம் சிலருக்கு கர்ப்பப்பையில் வலி இருக்கலாம்.

அங்கங்கே வலி வருவதை நம்முடைய கண்ணால் தான் அதை உணர முடிகின்றது. அதன் தொடர் கொண்டு “இன்ன இடத்தில் இப்படி வலிக்கிறது…” என்பதை உணர முடிகின்றது.

ஆகவே நாம் கண்ணிலே துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து கர்ப்பப்பையில் குறைபாடுகள் இருந்தால் அங்கே நினைவைச் செலுத்தி அங்கே இருக்கக்கூடிய கட்டிகள் கரைய வேண்டும்… கர்ப்பப்பை சீராக வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

உதிரப்போக்குகள் நிற்காது இருந்தால்…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அந்தக் கர்ப்பப்பையை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரருள் பெற்று இந்தப் பை சீராக உருவாக வேண்டும்
3.உதிரப் போக்கு நீங்க வேண்டும் உடல் நலம் பெற வேண்டும் என்று
4.பெண்கள் ஒரு நாளைக்கு ஐந்து தடவையாவது செய்து செயல்படுத்த வேண்டும்.
5.அதிலே பலவீனமான நிலைகள் மாறும்.

கர்ப்பப்பையை உருவாக்கி அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் வீரிய உணர்வுகள் பெறும் பொழுது அதில் உருவான விஷமான அணுக்களின் தன்மை மாறும். நல்ல அணுக்களை அங்கே நாம் உருவாக்க முடியும்.

இப்படி நம் உடல் உறுப்புகளில் எந்தப் பாகத்தில் வலி வந்தாலும் இருதயமோ குடல் பாகங்களோ நுரையீரல் போன்ற உறுப்புகளில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று கண்ணின் நினைவை உறுப்புகளில் செலுத்திக் கொண்டே வரவேண்டும்.

அப்பொழுது அங்கே இருக்கக்கூடிய குறைபாடுகள் அகன்று நல்ல அணுக்களாக உருவாக்க முடியும்.

ஆனால் வலியோ வேதனையோ நோயோ வரக் காரணம் என்ன…?

நாம் நல்லவர்களாகத் தான் இருக்கின்றோம். இருந்தாலும் பிறருடைய வேதனைகளைக் கேட்டு நுகரும் பொழுது நம் உடல் உறுப்புகளுக்குள் அந்த வேதனை பரவி உடல் உறுப்புகளில் அதே வலியும் வேதனை உருவாகின்றது.
1.கண்ணால் பார்த்துக் கவர்ந்த நுகர்ந்த அந்த உணர்வுகள்
2.நம் இரத்தத்தில் கலக்கப்படும் போது இப்படித் தீமைகள் பரவி விடுகின்றது.

கார்த்திகேயா…! எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளக்கூடிய சக்தியாக நமது ஆறாவது அறிவு இருக்கிறது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

நமது ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கி
2.உயிரான ஈசனிடம் அதைப் பொருதப்படும் பொழுது
3.இந்த உணர்வின் இயக்கமாக உயிரிலேயும் வலுப் பெறுகின்றது.

ஏற்கனவே நாம் அறியாத நுகர்ந்த வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் சோர்வு வேதனை இவைகளை உள்புகாதபடி அகற்றி விடுகின்றது அல்லது மாற்றி விடுகின்றது.

இப்படி நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு நம் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை உணவாகக் கொடுத்து
1.கண்ணின் நினைவு கொண்டு அங்கே கட்டளை இடப்படும் போது இந்த உறுப்புகள் வலுப்பெறுகின்றது.
2.தீமையிலிருந்து விடுபடக்கூடிய சக்தியும் நோயிலிருந்து விடுபடக்கூடிய சக்தியும்
3.ஆரோக்கியமாக வாழும் நிலைகளும் நாம் பெறுகின்றோம்.

அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எல்லா அணுக்களிலும் சேர்க்கச் சேர்க்க துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து வாழும் அந்தத் தகுதியும் நாம் பெறுகின்றோம்.

இதே மாதிரி யாம் பயிற்சி கொடுத்த முறைப்படி செய்து பழகுங்கள்.

மனிதனுக்கு நோய் வருவது… சந்தர்ப்பத்தால் தான்…!

மனிதனுக்கு நோய் வருவது… சந்தர்ப்பத்தால் தான்…!

 

உடலுக்குள் ஒரு வேதனையாகி விட்டால் எம்மா… எப்பா… என்று சொல்வோம். ஆனால் நல்ல நிலைகள் இருக்கும் பொழுது “சம்பாரிக்க வேண்டும்…” என்று எண்ணுவோம். அது தடைப்பட்டால் வேதனை என்ற உணர்வுகள் வந்து விடுகின்றது.

வேதனை என்ற உணர்வு உடலில் விளையப்படும் பொழுது வேதனையை உருவாக்கும் அணுக்களாக உருவாகி விடுகின்றது. அது உருவான பின் அம்மா… அப்பா… என்று வேதனைப்படுகின்றோம்.

சம்பாரிக்க வேண்டும் என்ற நிலையில் தொழில் நிமித்தம் சென்றாலும் ஆசையின் நிலைகள் கொண்டு தன் பையன் சீராக அவன் செயல்பட வேண்டும் என்று எண்ணுவோம். அல்லது குழந்தை இல்லை என்றாலும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது…
1.தொழில் செய்யும் இடத்திலே தன்னிடம் வேலை செய்யும் ஒருவன் ஏதாவது அவன் செய்தான் என்றால்
2.வெறுப்பாகி… ஏன்டா…… இப்படிச் செய்கின்றாய்…? என்ற வேகமாகப் பேசுவோம்.
3.வெறுப்பைத் தான் அவனிடம் உருவாக்க முடியும்.

முதலாளி வேதனைப்படுகின்றார் நாம் உதவி செய்ய வேண்டும் என்று அவனும் எண்ணுகின்றான்.

ஆனால் முதலாளி சோர்வடைந்து… செயல்கள் குறைந்த நிலையில் நன்மை செய்ய வேண்டும் என்ற ஏக்கத்தில் இருக்கின்றார். அதே சமயத்தில் வேதனையுடன் இருக்கப்படும் பொழுது… தான் எண்ணியதை வேலை செய்பவன் செயலாக்கவில்லை என்று வெறுப்பான நிலையில் சொல்லப்படும் பொழுது தன்னை அறியாமல் “அவனுக்குள்ளும்…” வெறுப்பு அதிகரிக்கிறது.

பாலுக்குள் பாதாமைப் போட்டாலும்… இனிப்பைப் போட்டாலும்… அதற்குப் பின் விஷத்தைப் போட்டுவிட்டால் பாதாமிற்குச் சக்தி இல்லாமல் போய் விடுகிறது. குடிப்போரை மயங்க வைக்கத்தான் செய்யும்.

அதைப் போன்று நல்ல குணங்கள் இங்கே இருப்பினும் வெறுப்பு என்ற உணர்வுகள் அதிகரிக்கும் பொழுது நல்லது மடிந்து விடுகின்றது.
1.மீண்டும் தன் நினைவாற்றல் கொண்டு கடுமையாகச் சொல்லப்படும் பொழுது அவன் வேதனை உணர்வுகளை நுகரத் தொடங்குகின்றான்.
2.முதலாளிக்கும் தொழிலாளிக்கும் பகைமைகளை ஊட்டி விடுகின்றது.

இதிலிருந்து நாம் எப்பொழுது மீள்வது…? செயின் தொடர் போன்று ஒன்றிலிருந்து ஒன்று தொடர்ந்து வருகின்றது.
1.வேதனை வேதனை என்று எடுத்தால் “கேன்சர்”
2.வேதனை வெறுப்பு என்று வரப்படும் பொழுது நல்ல குணங்களைக் கொல்லும் “டி.பி.”
3.வேதனை வெறுப்பு என்ற நிலைகள் நல்ல சுவாசத்திற்குள் இணைந்தால் “ஆஸ்த்மா”
4.அந்த அணுக்களின் தன்மை பெருக்கி அதனின் மலத்தைக் கூட்டும் போது நாம் சுவாசிக்கும் நிலையில் அடைப்பு… “மூச்சுத் திணறல்”
5.வேதனையும் சலிப்பும் சஞ்சலமும் எடுக்கும் பொழுது நம் இரத்த நாளங்களில் கலந்து “உப்புச் சத்து” அதிகரிக்கின்றது.
6.அந்த உப்புச் சத்துகள் இரத்தத்தில் உறையப்படும் பொழுது இரத்தத்தின் வேகத் துடிப்பு கூடி “இரத்தக் கொதிப்பாகின்றது”
7.இரத்தங்கள் சீராகச் செல்லாதபடி அழுத்தத்தின் தன்மை கூடி… நகர்ந்து செல்லும் போது மற்ற உறுப்புகள் வேகமாகத் தனக்குள் ஈர்க்கும் சக்தி வரப்படும் போது அது முடியாத தன்மை வரும் பொழுது திணறல் “மயக்கம்…”
8.இப்படி மகிழ்ச்சி என்ற உணர்வின் தன்மை இழக்கப்படும் பொழுது நெகட்டிவ் பாசிட்டிவ் (+/-) – எதிர்மறையான விளைவுகள் வந்து விடுகிறது.

பாலில் வெண்ணெய் என்ற சத்து இருந்தாலும் பால் பிருத்து விட்டால் அதனின் செயல் இழக்கப்படுகின்றது… வெண்ணெயை எடுக்க முடியுமா…? முடியாது.

இதைப் போன்று தான் நமக்குள் இருக்கும் இரத்தங்களில் நல்ல குணத்தின் தன்மையைப் பிரித்து விடுகின்றது… நல்ல குணங்கள் மடிந்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகள் உருவாகாதபடி நம் உடலை நாம் எப்படிப் பண்படுத்த வேண்டும்…?
1.நம் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறச் செய்தல் வேண்டும்.

ஆறாவது அறிவு கொண்டவன் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான். நல்லதாக நாம் தான் மாற்ற வேண்டும். எப்படி…?

இயற்கை… சந்தர்ப்பம்…
1.நாம் நுகர்வதை எல்லாம் நமது உயிர் பிரம்மமாக உருவாக்குகின்றது.
2.தீமையை வென்ற அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் நுகர்ந்தால் அதனின் உணர்வை நமக்குள் உயிர் உருவாக்கிவிடும்.
3.சிந்திக்கும் திறனும் நம்மை அறியாது வரும் நோய்களை அகற்றும் அருள் சக்தியும் நாம் பெறுகின்றோம்.
4.அகஸ்தியன் தன் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த நஞ்சினை அடக்கும் நிலையாக அவன் எவ்வாறு பெற்றானோ…
5.அருள் ஒளி என்ற உணர்வை இணைத்து ஒளி பெறும் அணுக்களாக விளைந்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் எப்படிப் பெற்றானோ…
6.அதே போன்று நமது வாழ்க்கையில் அதைப் பெறுதல் வேண்டும்.

இறந்தவர்கள் உடலிலிருந்து நமக்கு வரக்கூடிய தொல்லைகள்

இறந்தவர்கள் உடலிலிருந்து நமக்கு வரக்கூடிய தொல்லைகள்

 

உடலை விட்டு இந்த உயிர் சென்று விட்டால் அடுத்த கணம் இந்த உடல் சவமாகி விடுகின்றது. இறந்த பிற்பாடு உடலை உருவாக்கிய அணுக்கள் உயிரணுக்களாக மாறி… புழுவாகி இந்த உடலையே சாப்பிடுகின்றது.

சாப்பிட்டு இந்த உடல் தசைகள் தீர்ந்த பிற்பாடு அதுவும் இறக்க நேருகின்றது. நம் உயிரணுவைப் (உயிர்) போல் அதுவும் உயிரணுக்களாக மாறுகின்றது.

உயிரணுக்களாக மாறிய பின் அந்த உயிர் என்ன செய்கின்றது…?

1.யார் யாருடன் பழகி அந்த உணர்வுகள் தசைகளோடு இணைந்ததோ
2.இது உயிரணுவான பின் அவர்கள் உடலுக்குள் சென்று
3.அந்த உணர்வுகளைத் தீண்டி அவர்களுக்குத் தொல்லை கொடுக்கும் உணர்வாகச் சேர்கின்றது.
4.உடல்களிலே பலவிதமான நோய்களை உருவாக்கும் தன்மை வருகின்றது.
5.தசைகளில் நோய் வருகின்றது… எலும்புகளிலே மற்றவைகளிலே நோயாக மாறுகின்றது.

அதாவது ஒருவர் இறந்த பிற்பாடு அவர் யார் யாருடன் நெருங்கிப் பழகினாரோ அந்தப் பழகியவர்கள் உடலில் இப்படிச் சேர்கின்றது.

ஆனால் உயிருடன் இருக்கும் பொழுது அவர்கள் உணர்வுகளைப் பதிவாக்கி நாம் கவர்ந்து கொண்ட பின் இதைச் சூரியன் எடுத்துக் கொண்டால் அந்த உடலில் இருந்து வரக்கூடிய சத்தை எல்லாம் அந்த உடலில் எந்த நோயாக மாறியதோ அதை எல்லாம் இங்கே உருவாக்குகின்றது.

இதுவே உயிரணுக்கள் வெளியே சென்ற பிற்பாடு
1.அந்த இறந்த உடலைச் சாப்பிட்டது போல இந்த உடலைச் (உயிருடன் இருப்பவர்கள்) சாப்பிடும் நிலைகளிலே
2.குஷ்டரோகமா மற்றும் அழுகிய நிலைகளோ படை பத்து போன்ற நோய்கள் வருகின்றது.

நான் ஒன்றுமே செய்யவில்லை… என் உடலில் படையாக வந்து விட்டது பத்து வந்துவிட்டது… ஒன்றும் செய்ய முடியவில்லை என்றெல்லாம் சொல்வார்கள்.

மனிதனுக்குள் தொடர்ந்த இந்த உணர்வின் அலைகள் இப்படி எல்லாம் மாற்றிக் கொண்டு போகின்றது. எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து வந்த பிற்பாடு மனிதனின் நிலைகள் இப்படி ஆகிறது.

இதை எல்லாம் மாற்றி அமைக்க நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரம் ஆன அதிலிருந்து வரக்கூடிய பேரருள் பேரொளியை அந்தச் சக்தி வாய்ந்த உணர்வுகளை நுகர வேண்டும்.

அதற்காக வேண்டித் தான்…
1.பல முறை உபதேசத்தைக் கொடுத்துப் பல விதமான உணர்ச்சிகளை நுகரச் செய்து
2.உங்கள் இரத்தங்களில் கலக்கச் செய்கிறோம்.

உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறச் செய்வதறகுத் தான் மணிக்கணக்கில் பேசுகின்றேன்.

ஒரு சிலர் அரை மணி நேரத்தில் சொல்லிவிட்டுச் சென்று விடுவார்கள். மூன்று மணி நேரம் பேசுகிறேன் என்றால் நீங்கள் சுவாசிக்கும் அந்த அருள் உணர்வுகள் உங்கள் இரத்தங்களிலே கலக்கப்படுகின்றது.

எந்த அளவிற்கு உற்றுப் பார்க்கின்றீர்களோ இரத்தத்தில் கலந்து அந்த அணுக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடுகின்றது. உற்றுப் பார்த்துப் பதிவான உணர்வு கொண்டு மீண்டும் அதை எண்ணி எடுத்தீர்கள் என்றால் நான் (ஞானகுரு) கொடுக்கும் அருள் ஞான வித்து உங்களுக்குள் விளையும்.

அது விளையத் தொடங்கினால் ஒவ்வொரு நொடிகளிலும் மகரிஷிகள் பெற்ற அந்த அரும் பெரும் சக்தியை நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.

வாழ்க்கை எப்படி இருக்கின்றது…? குடும்பத்தில் கணவன் மனைவி எப்படி ஒன்றி வாழ வேண்டும்…? என்று யாம் சொல்லப்படும் பொழுது அதை வைத்து… சர்வ தீமைகளிலிருந்தும் நீங்கள் விடுபட முடியும்.

தீமை நம்மை இயக்காதபடி கணவன் மனைவி ஒருவருக்கொருவர் காத்துக் கொள்ளவும் முடியும்.

வாயுப் பிடிப்பு… அல்சர்… இது எல்லாம் வரக் காரணம் என்ன…?

வாயுப் பிடிப்பு… அல்சர்… இது எல்லாம் வரக் காரணம் என்ன…?

 

நாம் நுகரும் உணர்வுகள் (சுவாசிப்பது) அனைத்தும் இரத்த நாளங்களில் தான் செல்கின்றது.

சூரியன் பல விதமான உணர்வுகளைக் கவர்ந்து அலைகளாக மாற்றி பூமியில் எப்படிப் பரவச் செய்கின்றதோ இதைப் போல நாம் எடுக்கும் ஒவ்வொரு உணர்வுகளும் இந்த இரத்த நாளங்களின் வழி கூடித் தான் எல்லா அணுக்களுக்கும் உணவாகப் போய்ச் சேர்கின்றது.

அப்போது உடலுக்குள் ஆங்காங்கு மோதலின் எதிர்நிலை வரப்படும் பொழுது வாயு உண்டாகிறது.

ஒரு வேப்பமரத்தினுடைய உணர்வும் ரோஜாப்பூவினுடைய உணர்வும் இரண்டும் கலந்து வரப்படும் பொழுது
1.வேப்பமரத்தின் மணத்தைக் கண்டு ரோஜாவின் மணம் அஞ்சி ஓடப்படும் பொழுது
2.இதற்கு முன்னாடி இதனுடைய அழுத்தம் தள்ளும் பொழுது ஒரு காற்று வரும்… நறுமணமாக இருக்கும்.
3.அதே போல இதைக் காட்டிலும் வலுவான நிலைகள் (விஷச் செடியின் மணம்) அங்கே இருக்கிறது என்றால் போகாது தடுக்கும்
3.”சுழி…” என்ற காற்றுகள் சுழலும்.

ஒரு எதிர்ப்பான உணர்வின் தன்மை வரப்படும் பொழுது இங்கே காற்று மண்டலத்தில் சுழிகள் எப்படி வருகின்றதோ இதைப் போல நாம் அணுக்களின் நிலைகளில் இரத்த நாளங்களில் செல்லப்படும் பொழுது மோதலின் தன்மை வரப்படும் பொழுது
1.எதிர்மறையான மோதல் வந்து
2.ஏ…வ்வ்வ்வ்…! என்று ஏப்பமாக வருவது இப்படித்தான்.

எதிர்நிலையான அணுக்களின் தன்மையும் அதே சமயத்தில் இந்த உணர்வும் இரத்த நாளங்களில் அதிகமாக ஊடுருவி அது செல்லும் பாகங்களில் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது வாயு அதிகமாக உருவாகின்றது.

அது அதிகமாக உருவாகி அழுத்தங்கள் அதிகமாக்கப்படும் போது நம் உடல் அசர்க்கையாகின்றது (சோர்வு). ஏனென்றால்
1.இந்த அணுக்கள் நுகர்ந்த உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதல் ஆக்கப்படும் பொழுது
2.இதற்குள் ஒன்றை ஒன்று வென்றிடும் உணர்வுகள் வரும்.

சில நேரங்களில் வாயு உபத்திரவம் ஆனால் முக்கியமான பாகங்களில் செல்லப்படும் பொழுது “பளீர்…ர்…” என்று ஒரு மின்னலாகும். நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் இந்த உணர்ச்சியின் தன்மை தூண்டப்படும் பொழுது இந்த உணர்வை நுகர்ந்து நம் இரத்த நாளங்களில் கலக்கின்றது.

அதேபோல ஒவ்வொரு உணர்வுகளும் நமக்குள் மாறிக் கொண்டே இருக்கின்றது.

வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கும் பொழுது நம் இரத்த நாளங்களைச் சோதித்தால் இதில் வித்தியாசமாக இருக்கும்.
1.மறு நாள் காலையில் பார்த்தோம் என்றால் சிவப்பு அணுக்களையே காணோமே…! என்ற நிலை வரும்
2.இதை மாற்றிடும் உணர்வின் தன்மை நுகர்ந்து விட்டால் சிவப்பணுக்களின் நிலைகள் பூராம் இழந்து விடுகின்றது.

ஒரு திரவகத்தை ஊற்றினால் எப்படியோ அது போல் விஷத்தன்மை கொண்ட இத்தகைய நிலைகளும் நொடிக்குள் நம் உடலுக்குள் மாற்றும் நிலை வந்துவிடும்.

நொடிக்குள் மாற்றம் வரப்படும் பொழுது…
1.நமக்குள் வளர்ச்சி பெற்ற அணுக்களுக்கு இதனின் உணர்வின் தன்மை அந்த வலு இல்லை என்றால்
2.அதனுடைய செயலாக்கங்களை இழக்கின்றது… சோர்வடைகின்றது.

உதாரணமாக… காற்று மண்டலத்தில் அனல் காற்று வீசினால் இங்கே தாவரங்கள் எப்படி வளரும்…? அது கருகுகின்றது. அனல் காற்று பூமியில் உள்ள ஈரசத்தை எல்லாம் எடுத்துக் கொண்டால் தாவர இனங்களுக்கு வேண்டிய ஈரம் இல்லை என்றால் மரம் வாடுகின்றது.

இதைப் போன்றுதான் நாம் நுகர்ந்த உணர்வுகள் போர் முறையாகி வெப்பமாகி ஈரச்சத்தை எல்லாம் ஆவியாக்கி விட்டால் உடலுக்குள் அடுத்து வாயு உருவாகிறது.

நம் உடலுக்குள் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுள்ளது. இதை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறர் வேதனைப்படுவதைப் பார்த்து நாம் ரசிக்கவே கூடாது

எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறர் வேதனைப்படுவதைப் பார்த்து நாம் ரசிக்கவே கூடாது

 

ஒரு சிலர் வேதனைப்படுபவரைக் கண்டு ரசித்துப் பார்ப்பார்கள்.
1.பார்க்கலாம்… அவனுக்கு அப்படித்தான் வேண்டும்… அப்படித் தான் வேண்டும்…! என்று
2.அந்த வேதனை உணர்வினை ரசித்துச் சுவாசித்தால்
3.விஷத்தை உருவாக்கும்… விஷத்தை உணவாக உட்கொள்ளும்… அணுவாக உருவாகத் தொடங்கிவிடுகிறது.

பொதுவாக ஒவ்வொரு உடலிலும் ஒவ்வொரு அணுக்களும் விஷத்தின் இயக்கமாகவே தான் இருக்கின்றது… நல்ல குணங்களும் சரி… மற்றதும் சரி.

ஆனால் வேதனைப்படுவோரைக் கண்டு ரசித்தோம் என்றால் இந்த விஷத்தினை உணவாகக் கவரும் அணுக்கருவாக உடலில் உருவாகிறது.

அந்த அணுக்கள் நம் இரத்தநாளங்களில் சுழலப்படும்போது உடலில் எந்த பாகத்தில் தேங்கி அணுக்களாகப் பெருகுகின்றதோ…
1.விஷத்தையே உணவாக உட்கொள்ளும் அணுவாகத் தன் வீரியத்தைக் காட்டுகின்றது,
2.முதலில் விழுதுகளை ஊன்றுகின்றது… பின் ஒவ்வொரு அணுக்களுக்கும் செல்லும் நிலையில்
3.உடல் முழுவதும் படர்கின்றது… “கேன்சராக” (புற்று நோயாக) மாறுகிறது.

மற்ற அணுக்கள் விஷத்தின் இயக்கத்திலேயே வருகின்றது. ஆனால் கேன்சர் அணுக்கள் தனக்குள் அந்த விஷத்தை வளர்த்து உடல் முழுவதும் பரப்பி உடலுக்குள் வரும் விஷத்தையே உணவாக உட்கொள்கிறது.

இப்படித்தான் கேன்சர் என்ற நோய் ஒவ்வொரு நிலைகளிலும் படர்ந்து உடலையே சீரழித்து விடுகிறது.

பார்க்கலாம் கேன்சர் வந்தவர்களுக்கு…!
1.உடலில் ஒரு பகுதியில் அதை அறுத்து அப்புறப்படுத்தி எடுத்தாலும்
2.அடுத்து அதனுடைய விழுதுகள் தொடர்ந்து மரக்கிளைகள் முளைப்பது போன்று
3.அது வேறு பக்கம் முளைத்துக் கொண்டே வரும்.

இன்று சில வகையான தாவரங்களைப் பார்த்தோமென்றால் அதனின் விழுது ஊன்றும் வழிகளிலேயே அந்த மரங்கள் செடி கொடிகள் விளையும். இதைப் போன்று தான் இந்த விஷத் தன்மை கொண்ட உணர்வுகள் இந்த உடலில் பரவுகிறது.

இதை எல்லாம் குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஆகவே வேதனைப்படுவோரைக் கண்டு நாம் ரசித்தோம் என்றால் அவனிடமிருந்து வெளிப்படும் உணர்வை நுகரப்படும் பொழுது அவன் எப்படி வேதனைப்படுகின்றானோ அந்த விஷத்தின் அணுக்கள் நமக்குள் வளர்ந்து அது அணுவாக விளைந்த பின் விஷத்திற்காக அந்த அணுக்கள் ஏங்கும்.

அப்போது வேதனைப்படும் உணர்வை மீண்டும் நுகரப்படும் பொழுது அது பெருகும். இடைமறித்து நம் உடலில் விழுகளைப் போட்ட பின் நம் உடலில் இருக்கும் மற்ற அணுக்களின் இயக்கச் சக்தி குறையும்.

இவ்வாறு ஆனபின் நல்ல உடலில் வீக்கங்கள் உருவாகும். வீக்கமாகும் போது உணவுக் குழாயில் வந்து விட்டால் உணவு உள்ளே போகாது அடைத்து விடுகின்றது.

பல்லிலே வந்தால் அங்கே விஷத்தின் தன்மை கூடி கடுமையான வலியாகிறது. இப்படி நரக வேதனையைத் தான் பட வேண்டி இருக்கின்றது.

ஆகவே வேதனைப்படுவோரைப் பார்த்து ரசித்தோம் என்றால் நிச்சயம் அவருக்குக் கேன்சர் நோய் வரும். இதைத் தெளிவாக்குகின்றார் குருநாதர்.

வேதனைப்படுவதைக் கண்டு ரசிக்காதே… வேதனைப்பட்டு அதன் வழியில் உருவாக்கும் அனைத்தும் அவர்களுக்குள் விஷமான அணுக்கள் உருவாக்கப்பட்டு நல்ல அணுக்களை மடியச் செய்து விடுகின்றது

கேன்சர் நோய் வராமல் தடுக்க வேண்டும் என்றால் நீ என்ன செய்ய வேண்டும்…? ஒவ்வொரு நொடியிலும் பிறர் தவறு செய்வதைக் கண்டு நீ மகிழ்ச்சி அடையாதே…! என்றார் குருநாதர்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எனக்குள் பெருக வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று முதலில் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

பின்…
1.அந்த வேதனைப்படுவோர் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…
2.அறியாமையிலிருந்து விடுபடவேண்டும்… இருள் நீக்கிப் பொருளறியும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணி விட்டால்
3.பிறர் வேதனைப்படுவதைக் கண்டு நாம் மகிழ்ச்சி பெற மாட்டோம்
4.அவருக்குள் வரும் தீமைகளை நுகர்ந்து அறிய மாட்டோம்.
5.வேதனைப்படுவதைக் கண்டு ரசிக்க மாட்டோம்…!

கேன்சர் நோய் வராது இப்படித் தடுக்க முடியும்.

நோய் நீக்கும் பயிற்சி

நோய் நீக்கும் பயிற்சி

 

எந்த நோயாக இருந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் ஈஸ்வரா… எங்கள் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா.. என்று புருவ மத்தியில் என்று எண்ணுங்கள்.
1.நம் உடலில் ஐந்து அல்லது ஆறு லிட்டர் தான் இரத்தம் உள்ளது
2.அந்த இரத்தைத்தை அடிக்கடி தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தாலே போதுமானது
3.இரத்தத்தில் தீமைகள் உருவாகாது தடுத்துக் கொள்ள முடியும்

தலையிலிருந்து கால் வரை மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஒரு சர்க்குலேசன் (CIRCULATION) போன்று 100 முறை 200 முறை எண்ணுங்கள். அலை அலையாகப் அருள் வட்டமாகப் படரச் செய்யுங்கள்.

1.என் உடல் நோய் நீங்க வேண்டும்.
2.எனக்கு நோய் இல்லை என்று எண்ணுங்கள்.
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி என் உடல் முழுவதும் படர்கின்றது.
4.என் உடலிலுள்ள வலி வேதனை நோய்கள் அனைத்தும் விலகுகின்றது என்று
5.இதை மட்டும் எண்ணித் தியானித்துப் பாருங்கள்.

உங்கள் வாழ்க்கையில் எத்தகைய கொடிய நிலைகளை நுகர்ந்தறிய நேர்ந்தாலும் அந்தக் கொடிய உணர்வுகள் உங்களுக்குள் வராது தடுக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலுவாக்க அதைத் தியானித்து உங்கள் உடலுக்குள் சேர்த்து உங்கள் உடலில் உள்ள அணுக்களை வலுவாக ஆக்க முடியும்,

மனிதன் ஒருவனால்தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத் தனக்குள் ஒளியான அணுக்களாக ஆக்க முடியும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி எடுத்து நம் உடலில் உள்ள இரத்தங்களில் கலக்கச் செய்ய வேண்டும். இரண்டு மூன்று தடவை பழகி விட்டால் அந்த அருள் சக்தி நமக்குள் கூடிக் கொண்டே வரும்.

அதைப் பற்றுடன் பற்றும் பொழுது அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் வாழ முடியும்.
1.நேற்று நன்றாக இருந்தேன்…
2.இன்று நேற்றைக் காட்டிலும் நன்றாக இருக்கின்றேன்…!
3.நாளை இன்னும் நன்றாக இருப்பேன்…! என்ற இந்த உணர்வை
4.அழுத்தமாக உங்களுக்குள் எடுத்துப் பாருங்கள்.

மன நலமும் உடல் நலமும் உங்களைத் தேடி வரும்…! எண்ணும் எண்ணமே இறைவன். நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்..!

உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களால் நிச்சயம் முடியும்…!

தாவர இனச் சத்திற்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தியை முகப்பில் வைத்துத் தான் அன்று சித்தர்கள் செயல்பட்டார்கள்

தாவர இனச் சத்திற்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தியை முகப்பில் வைத்துத் தான் அன்று சித்தர்கள் செயல்பட்டார்கள்

 

தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வைப் பெற்ற பின் நஞ்சினை மாற்றும் உடலின் அமைப்பு வருகிறது.

பன்றியின் உடலாக இருக்கும் போது நஞ்சை நீக்கும் உணர்வுகள் பெற்று… நல்ல மணத்தை நுகர வேண்டும் என்று பட்டது. அதன் உணர்வின் தன்மை வரும் போது கலியாகி மனிதனாக மாற்றியுள்ளது.

எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட பின் தீமையை நீக்கும் உணர்வு பெற்று மனிதனாக ஆன வலிமை கொண்டு
1.இன்று விஞ்ஞானியோ அல்லது வைத்தியரோ
2.இதைக் காட்டிலும் வலுவான உணர்வு கொண்டு விஷத்தை மாற்றுகின்றனர்.

“சாம வேதம்…” என்று சொன்னாலும் வேப்ப மரத்தின் உணர்வை எடுத்துக் கொண்டால் சாம. அதாவது…
1.வேம்பின் மணத்தை நாம் நுகரப்படும் போது ஓ…ய்… என்ற சப்தத்துடன் உமட்டல் வருகிறது.
2.கசப்பின் தன்மை அதிகரிக்கப்படும் போது மற்றதை விடாதபடி வாந்தி வருகிறது – இது சாம.
3.அந்த வாசனை வரப்படும் போது அந்த உணர்ச்சிகள் உந்தி வெளியே தள்ளுகிறது.

உணர்வின் தன்மை கவரப்பட்டு உறையும் நிலை வரும் போது கிரேதா. அதைக் கடந்து அதிலிருந்து வரக்கூடிய மணம் தான் சாம… இசை. அதை உயிரணு நுகரப்படும் போது “உணர்ச்சியின் எண்ணங்கள்…” வருகிறது.

ஆனால் தாவர இனங்களாக இருக்கும் போது அந்த மணத்தின் வலிமை கொண்டு மற்றதைத் தன் அருகில் விடாது பாதுகாத்துக் கொள்கிறது.

ஆகவே அதைப் போன்று மனிதனான பின் தீமைகள் நமக்குள் வராது தன்னைப் பாதுகாக்கும் நிலையாக அருள் உணர்வை எடுத்துச் சேர்த்தல் வேண்டும்.

சாம வேதத்தை முழுமையாகத் தெரிந்து கொண்டவர்கள்
1.இந்தச் செடி இதைச் செய்யும்… இந்தச் செடி இன்னதைச் செய்யும்… என்று மணத்தால் நுகர்ந்து
2.எந்தச் செடியின் மணத்தை அதிகரித்து மனித உடலில் தீமையை நீக்கியதோ
3.அதன் உணர்வின் குணத்திற்கொப்பத் தாவர இனத்தின் மணத்தைக் கூட்டி
4.மனிதனுக்கு வரும் நோய்களை நீக்கக் கற்றுக் கொண்டார்கள் கடந்த கால மனிதர்கள்.

நோய்களை நீக்கக் கற்றுக் கொண்டாலும் இதன் வலுவின் தன்மை கொண்டு மாற்றும் போது அன்றைய காலத்தில் இந்தச் சாம வேதம் என்று வரும் போது இதைக் கொடுப்பதற்கு முன்
1.அந்தத் தாவர இனச் சத்தைக் கையில் ஏந்தி
2.அதற்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துச் சேர்த்து
3.விஷத்தினை வென்றிடும் வலுவைக் கூட்டும் போது கலியை மாற்றிக் கல்கியாகக் கொண்டு வந்தனர்.

இப்படி அந்த ஞானிகள் கூட்டிய சாம வேதத்தின்படி அந்த அருள் மணத்தின் உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும். கலியாக மாறாமல் கல்கிக்குச் செல்ல வேண்டும்.