நம்மைக் காப்பதற்கும்… எதிர்காலச் சந்ததியினரைக் காப்பதற்கும் உண்டான வழி

நம்மைக் காப்பதற்கும்… எதிர்காலச் சந்ததியினரைக் காப்பதற்கும் உண்டான வழி

 

ஒரு தாய் கர்ப்பமுற்றிருக்கும் பொழுது… சர்க்கரைச் சத்து நோய் உள்ளவரை ஒன்றில் இருந்து தொண்ணூறு நாட்களுக்குள் உற்றுப் பார்த்தாலே போதும். இந்த உணர்வு தாயின் இரத்தத்தில் கலந்து கருவில் இருக்கும் குழந்தைக்குப் போய்ச் சேர்ந்துவிடும்.

இது தாய்க்கு அதிகமாகச் சேர்வதில்லை. ஆனால் இந்த உணர்வு கருவுக்குள் சென்ற பின் குழந்தைக்கு இணைத்து விடுகின்றது. குழந்தையாக இருக்கும் போததே அதற்கு சர்க்கரைச் சத்து நோய் வந்து விடுகிறது.

அந்தக் குழந்தை தவறு செய்ததா…? இல்லை.

எங்கள் குழந்தைக்குச் சர்க்கரைச் சத்து நோய் இருக்கிறது.. சரி செய்ய வேண்டும் என்று சொல்லி என்னிடம் தூக்கிக் கொண்டு வருகின்றார்கள்.

1.தாய் உற்றுப் பார்த்து எடுத்துக் கொண்ட உணர்வினால் தான் குழந்தைக்கு அது வந்தது
2.ஆகையினால் தாய் தான் எண்ணி அதை மாற்றி அமைக்க வேண்டும் என்று சொன்னேன்
3.மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தை பெற வேண்டும்
4.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் குழந்தை உடல் முழுவதும் படர்ந்து சர்க்கரைச் சத்து நீங்க வேண்டும் என்று
5.”குழந்தையின் கண்களைப் பார்த்து” அந்த உணர்வுகளைப் பாய்ச்சும்படி சொன்னேன்.

அப்படித்தான் அதைக் குறைக்க முடியும்… மருந்து கொடுத்து அல்ல. சிறிய வயதிலேயே இன்சுலின் இன்ஜெக்க்ஷன் போட்டுச் சர்க்கரை சத்தை மாற்றிக் கொண்டு வர வேண்டும் என்றால் முடியாது

காசு இருக்கிற வரைக்கும் செய்வார்கள். இன்சுலின் போட்டுக் குழந்தையைக் காக்க வேண்டும் என்று செய்தாலும் ஒரு நாளைக்கு இல்லை என்றால் மயக்கப்பட்டு அது கீழே விழுந்துவிடும்.

தாயின் கருவில் உருவாகக்கூடிய குழந்தைகளின் நிலை இன்று இப்படித்தான் இருக்கின்றது.

ஏனென்றால் வீட்டில் டிவி மற்ற எல்லாமே இருக்கின்றது. விளையாட்டுகளையும் கேளிக்கை நிகழ்ச்சிகளையும் எத்தனையோ அதிலே காட்டுகின்றார்கள்.

தாய் இதை எல்லாம் உற்றுப் பார்க்கும் போது பதிவாகி விடுகின்றது கருவிலே இது இணைந்து… குழந்தை பிறந்த பின் டிவி மற்ற சாதனங்களை சிறு வயதிலேயே அதைச் சீராக இயக்குவதும்… விளையாட்டுகளை ஆனந்தமாக விளையாண்டு ரசிப்பதும்… இதையெல்லாம் இன்று நாம் கண்கூடாகப் பார்க்கலாம்.
1.ஆனால் படிப்பையோ மற்ற நல்ல பழக்க வழக்கங்களையோ எளிதாகக் கொண்டு வர முடியவில்லை.
2.பெரும்பகுதி குழந்தைகள் டிவி மற்றும் அதைப் போன்ற சாதனங்களிலேயே இன்று நாட்டமாக இருப்பார்கள்.

காரணம்… தாய் கருவில் பதிவானது இப்படி வந்து விடுகின்றது. ஆனால் பார்த்தது வேடிக்கைதான்… குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அது அமைந்து அதன் வழியே அந்தக் குழந்தையை வழி நடத்துகின்றது

அதே போல் தான் காக்காய் வலிப்பு வந்த ஒரு குழந்தையை கருவுற்ற தாய் உற்றுப் பார்த்து நுகர்ந்தால் கருவில் இருக்கும் குழந்தைக்கும் அதே நோய் வருகின்றது.
1.வாழ்க்கையில் இது போன்று சுவாசிக்கும் உணர்வுகள் நம்மையும் பாதிக்கின்றது
2.எதிர்காலக் குழந்தைகளையும் பாதிக்கின்றது.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனோ தாய் கருவிலே நஞ்சை முறிக்கும் ஆற்றல் பெற்றான். அகண்ட அண்டத்திலிருந்து வரக்கூடிய உணர்வுகளை அறியும் ஆற்றலும்… அதில் இருக்கக்கூடிய நஞ்சுகளை வெல்லக்கூடிய சக்தியும் அவனுக்குப் பூர்வ புண்ணியமாகக் கிடைக்கிறது.
1.இது அவனுடைய சந்தர்ப்பம்… நஞ்சை வெல்லக்கூடிய சக்தி அவனுக்குக் கிடைக்கின்றது
2.மற்ற மனிதர்களைக் காட்டிலும் இவன் அறிவில் வளர்ச்சி கொண்டவனாக வருகின்றான்.

வான் வீதியை உற்று நோக்குகின்றான். 27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படக்கூடிய துகள்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது மின்னலாக மாறுகின்றது… அந்த ஒளிக்கற்றைகளை அவன் தனக்குள் நுகர்கின்றான்.

நம் பிரபஞ்சத்தைக் காட்டிலும் பிற மண்டலங்களிலிருந்து வரக்கூடிய சக்திகள் இந்தப் பூமிக்குள் வந்தால் அது கடுமையான விஷத்தன்மையாக இருப்பதால் பல தீங்குகளைச் செய்கின்றது என்பதனை அறிகின்றான்.

ஆனால் அவன் உடலிலே அந்தத் தீங்கை மாற்றும் சக்தி இருப்பதால் அதை எல்லாம் நுகர்ந்து… தன் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு இரத்தத்தின் வழி அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருக்குகின்றான்.
1.மின் கதிர்களை ஜீரணிக்கக் கூடிய சக்தி அவனுக்கு வருகின்றது… அது வளர்ச்சி அடைகிறது
2.உயிரைப் போன்றே உணர்வின் தன்மைகளை ஒளியாக மாற்றிடும் சக்தி கொஞ்சம் கொஞ்சமாக அவனுள் வளர்ச்சி அடையத் தொடங்குகிறது.

27 நட்சத்திரங்கள் 27 விதமான நிலைகள் மோதும் போது அந்த மின் கதிர்கள் வெளிப்படுவதை அகஸ்தியன் சுவாசிக்கின்றான்… அது அவனுக்குள் அடங்குகிறது.

புறத்திலிருந்து வருவதைச் சூரியன் தனக்குள் கவர்ந்து அதிலுள்ள விஷத்தை ஒடுக்கிப் பாதரசமாக மாற்றி உமிழ்த்தப்படும் போது… “இந்த உலகிற்கே ஒளி தருவது போல…” 27 நட்சத்திரங்களின் ஆற்றலை அகஸ்தியன் நுகரப்படும் போது… இந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியின் அறிவாக… அண்டத்தை அறியும் சக்தியாக அவனுக்குள் வந்து சேர்கின்றது

துருவத்தின் வழி இதையெல்லாம் அவன் உற்றுப் பார்த்துத் தனக்குள் அடக்கியதால் துருவன் என்ற காரணப் பெயரையும் வைக்கின்றார்கள். அந்த ஆற்றல்களை அவன் பெருக்கி வளர்ச்சியாகும் போது பதினாறாவது வயதில் அவனுக்குத் திருமணம் ஆகிறது..

செடி கொடியாக இருந்தாலும் கல் மண்ணாக இருந்தாலும் உயிராக இருந்தாலும் எல்லாமே “ஆண் நட்சத்திரம் பெண் நட்சத்திரம் என்ற இயக்கத் தொடர்கள் கொண்டது தான்” என்பதை உணர்கின்றான்.

தான் பெற்ற சக்திகளையும்… கண்ட பேருண்மைகளையும் மனைவிக்கு எடுத்துச் சொல்கிறான்… உணரும்படி செய்கிறான். அதன் வழி அவன் மனைவியும் நுகர்ந்தறிகிறது.

கணவன் மனைவியாக இருவருமே விண்ணின் ஆற்றலைத் தங்களுக்குள் வளர்த்து இரு உயிரும் ஒன்றாகி ஒளி உடலாகப் பெற்று துருவ நட்சத்திரமாக வாழ்கின்றார்கள்.

1.அந்த அகஸ்தியனைப் போன்று எல்லோரும் பேராற்றல்கள் பெற வேண்டும்…
2.அத்தகைய ஞானியாக நாம் உருவாக வேண்டும் என்பதற்குத் தான் இதை எல்லாம் உணர்த்துகின்றோம் (ஞானகுரு).

நதி மூலமும் அகஸ்தியன் தான்… ரிஷி மூலமும் அந்த அகஸ்தியன் தான்…!

நதி மூலமும் அகஸ்தியன் தான்… ரிஷி மூலமும் அந்த அகஸ்தியன் தான்…!

 

அகஸ்திய மாமகரிஷி அவர் வாழ்ந்த காலத்தில் இந்தப் பூமியில் உள்ள மலைப்பகுதிகளில் எல்லாம் சுழன்று வந்து பல பல ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற்றார்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டிய அருள் வழிப்படி
1.பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் கண்டறிந்த விண்ணின் ஆற்றல்மிக்க உணர்வின் தன்மையை
2.இங்கே பாபநாசம் மலைப் பகுதியில் நாம் அமர்ந்து மீண்டும் அந்த உணர்வின் ஒலிகளை எழுப்பப்படும் பொழுது
3.இங்கே மீண்டும் அது ஜீவன் பெறுகின்றது.

குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் அதை நினைவுபடுத்தும் போது அந்த உணர்ச்சியின் வேகம் அதைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்ச்சியை உங்களுக்குள் தூண்டும்படி செய்கிறோம்.

இங்கே படர்ந்துள்ள பதிந்துள்ள அந்த அகஸ்தியன் உணர்வுகளுடன்… குரு உணர்வுகளைக் கலந்து அதனுடன் இணைக்கச் செய்து தான் யாம் (ஞானகுரு) உபதேசிக்கின்றோம்.

எம்முடைய உபதேசத்தைக் கூர்ந்து கவனிக்கப்படும் போது
1.உங்கள் எண்ணங்கள் அந்த மகரிஷியின் உணர்வுகளை ஈர்க்கும் தன்மையாக
2.அதை நுகரும் நிலையும் கவரும் நிலையும் வருகின்றது.

அகஸ்திய மாமகரிஷி பெற்ற அந்த அருள் சக்திகளை ஊழ்வினையாக உங்களுக்குள் பதியச் செய்யும் நிலைக்குத்தான் இங்கே பாபநாசத்திற்கு அழைத்து வந்தது.

காரணம்…
1.அன்று அகஸ்தியன் அவன் தனக்குள் விளைய வைத்த சக்தி வாய்ந்த ஆற்றல்கள்
2.இந்த இடத்தில் (பாபநாசம் மலை) இருக்கும் பாறைகளுக்குள் காந்தப் புலனால் கவரப்பட்டுப் பதிவாகியுள்ளது.

அந்த மகா ஞானி பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அவன் உடலில் தாவர இனங்களின் சத்துக்களை நுகர்ந்தறிந்தான். அறிந்த நிலைகள் கொண்டு மற்ற தாவர இனங்களை அதனுடன் இணை சேர்த்து “மகா சக்தி வாய்ந்த தாவர இனங்களாக…” (புதிதாக) உருவாக்கினான்.

அதாவது இன்று விஞ்ஞானிகள் மற்ற மற்ற தாவர இன செல்களை இணைத்து எப்படிப் புதிய தாவர இனங்களை உருவாக்குகின்றார்களோ அது போன்ற சக்தி வாய்ந்த தாவர இனங்களின் சத்துக்களை இணைத்து “மிக மிக சக்தி வாய்ந்த தாவர இனங்களாக…” அகஸ்தியன் உருவாக்கினான்.

1.அந்தத் தாவர இனச் சத்துக்களை மனிதர்கள் நுகர்ந்தால்
2.அவர்கள் உடலில் அறியாது சேர்த்ததீய வினைகளை நீக்கிடும் ஆற்றல் மிக்க சக்தியாக ஆது பெருகுகின்றது.
3.அதற்கே அகஸ்தியன் அதை எல்லாம் உருவாக்கினான்.

பிற்காலத்தில் வந்தவர்கள் அனைவரும் அத்தகைய தாவரங்களைப் பயன்படுத்தி வேருடன் அறுத்து அழித்து விட்டார்கள். அவைகள் அதற்குப்பின் வளர்ச்சி இல்லாது அதை வளர்த்திடவும் அதைக் காத்திடவும் நிலையில்லாது சென்று விட்டது. அகஸ்தியனால் உருவாக்கப்பட்ட பல தாவர இனங்கள் காலத்தால் இப்படி அழிந்துவிட்டது.

இந்த மலைப்பாங்குகளில் அன்று அகஸ்தியன் தன் உணர்வின் ஆற்றலால்… அவன் எண்ணத்தால் சுவாசித்து… பல பல தாவர இனங்களின் சத்துக்களை அவன் இணை சேர்த்துச் சக்தி வாய்ந்ததாக மாற்றி அமைத்தான்.

இந்தப் பூமியில் அகஸ்தியன் சென்ற அனைத்து மலைப்பகுதிகளிலும்… இப்படிப் பதியச் செய்தான்.

வானில் மேகங்கள் கூடி வந்தாலும் மலைப் பாங்குகளில் வரும் பொழுது
1.அங்கே அகஸ்தியனின் உணர்வலைகள் பதிந்து இருப்பதனால்
2.தாவரங்கள் அந்த மேகங்களைக் கவர்ந்து அழைத்து வரப்படும் போது
3.பாறைகளுக்குள் அகஸ்தியனின் உணர்வுகள் பட்டதைக் கவர்ந்து “ஜீவ நீராக… ஜீவ நதியாக உருவாகின்றது…”

அப்படி உருவாகும் ஜீவித நீரால் அப்பகுதியில் மற்ற தாவர இனங்கள் புதிதாக ஜீவன் பெறும் நிலையும் வந்தது. அதே சமயத்தில் அகஸ்தியன் எந்தெந்தத் தாவர இனங்களை உருப்பெறச் செய்தானோ அதற்கு நீரே இல்லை என்றாலும் மேகங்களைக் கூடச் செய்து ஜீவித நீர் கிடைக்கும் அளவிற்கு ஆற்றல் கொண்டதாக அவன் உருவாக்கினான்.

1.வெறும் கற்பாறைகளாக இருந்தாலும் அந்தப் பாறைகள் மேகங்களைக் கவர்ந்து நீராக வடிக்கச் செய்கின்றது
2.தான் உருவாக்கிய அந்த உயர்ந்த சக்தி வாய்ந்த தாவர இனங்களை வளர்த்திடுவதற்காக
3.அவ்வாறு செய்தான் அன்றைய முதல் மெய் ஞானியான அகஸ்தியன்…!

காற்று மண்டலத்திலிருந்து நாம் நுகர வேண்டிய சில உன்னதமான சக்திகள்

காற்று மண்டலத்திலிருந்து நாம் நுகர வேண்டிய சில உன்னதமான சக்திகள்

 

அகஸ்தியன் தன் வாழ்நாளில் தீமைகளை நீக்கினான். தாய் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் அவன் கருவிலே பெற்றது கருவிலே பெற்ற உணர்வின் துணை கொண்டு தான் அருள் ஞானமே அவன் பெறுகின்றான்.

விஷத்தை முறிக்கும் ஆற்றலைப் பெற்றுப் பிறந்த பின் அவன் உடலில் இருந்து வரக்கூடிய மணத்தைக் கண்டு மற்ற உயிரினங்கள் அஞ்சி ஓடுகின்றது. இவன் தீமையிலிருந்து விடுபடுகின்றான்.

விஷத்தின் தன்மை முறிக்கும் சக்தி இவன் உடலில் இருப்பதனால் மின்னல்கள் தாக்கப்படும் பொழுது அந்த விஷங்கள் பிரிகின்றது. விஷங்களைப் பிரிக்கப்படும் பொழுது எப்படி ஒளிக் கற்றைகளை வெள்ளிக்கோள் எடுத்துக் கொள்கிறதோ அது போல்
1.மின்னலில் இருந்து வரக்கூடிய அந்த உணர்வின் ஒளிக் கற்றைகளை அகஸ்தியன் நுகர்கின்றான்
2.தன் உடலுக்குள் இருக்கும் அணுக்களில் அதைச் சேர்த்துக் கொள்கின்றான்.

ஏனென்றால் 27 நட்சத்திரங்களும் கடும் விஷத்தன்மை கொண்டதாக இருந்தாலும் மோதலில் விஷத்தைப் பிரித்து விட்டு ஒளியின் உணர்வாக வரப்படும் பொழுது அதனை அகஸ்தியன் நுகரும் தன்மை வருகிறது.
1.அப்படி நுகர்ந்த உணர்வுகள் தான்
2.அவன் உடலுக்குள் உயிரைப் போன்றே உணர்வின் தன்மை பெறுகிறது.

27 நட்சத்திரங்களும் ஆண் பெண் என்ற துடிப்பின் நிலைகள் வரும் பொழுது தான் உயிரின் தன்மை ஈர்க்கும் தன்மை வருகின்றது.

27 நட்சத்திரங்களின் சக்திகளை ஒன்றாக இணைத்திடும் உணர்வுகளைத் தெரிந்து கொண்ட பின் அதை நாம் எப்படி மாற்ற வேண்டும்…? ஒன்றாக உடலில் இணைக்க வேண்டும்…! என்று அறிந்து கொண்டவன் அகஸ்தியன்.

வியாழன் கோள் 27 நட்சத்திரங்களுடைய சக்திகளை ஒன்றாகச் சேர்த்து குருவாக இருந்து மற்றவைகளுடன் சேர்த்துக் கலவையாக மாற்றுகின்றது என்பதையும் அகஸ்தியன் அறிந்து கொள்கிறான்.

அதே சமயத்தில்
1.நம் உயிரும் வியாழனாக (குருவாக) இருக்கின்றது
2.ஆறாவது அறிவின் துணை கொண்டு நாம் எல்லாவற்றையும் ஒன்றாக்கிச் சேர்த்துக் கொண்டால் தனுஷ்கோடி
3.தீமைகளை நீக்கும் உணர்வினைச் சேர்த்து பகைமைகள் நமக்குள் வராதபடி உயிருடன் ஒன்றி ஒன்றாக்கப்படும் பொழுது
4.எல்லாம் ஒன்றாகச் சேர்க்கும் பொழுது “கோடி…!”
5.உயிர் ஒன்றாகின்றது… ஒளி என்ற உணர்வு ஆகின்றது.

இராமாயணத்தில் எண்ணத்தைக் கொண்டு (உணர்வுகள்) வாழ்க்கை எப்படி நடத்துகிறோம்…? என்று தான் காட்டப்பட்டுள்ளது. நமக்குள் எண்ணங்கள் எப்பொழுதும் உருவாகிக் கொண்டு தான் இருக்கின்றது. குருக்ஷேத்திரப் போராக உயிரிலே வழி நடத்திக் கொண்டுதான் இருக்கின்றது.

ஆகவே இந்த உடலுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளைத் தான் காவியங்களாகப் படைத்துச் சாஸ்திரங்களாகக் காட்டினார்கள் ஞானிகள்.
1.நாம் எதை எதைத் தவிர்க்க வேண்டும்…?
2.எதை எதை வளர்க்க வேண்டும்…? என்ற உண்மைகள் உணர்த்தப்பட்டது.

அகஸ்தியன் தாய் கருவில் சிசுவாக இருக்கப்படும் பொழுது பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் அவருடைய தாய் தந்தையர்கள் படுத்திருக்கும் இடங்களில் பரப்பி வைத்திருந்தனர். அந்த மணங்களை எல்லாம் தாய் நுகர்கின்றது… அப்போது விஷத்தை முறிக்கும் தன்மை வருகின்றது.

உதாரணமாக… ஒரு பச்சிலையைக் கையில் வைத்துக் கொண்டால் விஷம் கொண்ட நம்மைக் தேள் கொட்டுவதில்லை கீழே போட்டால் உடனே கொட்டிவிடும்.

ஒரு பச்சிலையைக் கையில வைத்துக் கொண்டால் விஷமான பாம்பும் நம்மைத் தீண்டாது. ஒரு பச்சிலையைக் கையில் வைத்துக் கொண்டால் தேனீக்களும் கொட்டாது.

இது போன்ற உண்மைகளைக் கண்டுணர்ந்த அகஸ்தியனுடைய தாய் தந்தையர் பல விஷ ஜந்துக்களிடமிருந்தும் தங்களைக் காத்துக் கொண்டார்கள்.

மின்னல் தாக்கப்படும் பொழுது அது உடலில் தாக்கப்பட்டால் கருக்கிவிடும். ஆக மொத்தம் அந்த மின்னலின் விஷத்தன்மையை அடக்குவதற்கும் அனுபவரீதியாகப் பச்சிலைகளைக் கண்டறிந்து இரவிலே படுத்துத் தூங்கும் பொழுது அதைப் பரப்பி வைத்துக் கொள்வார்கள்.

அதே சமயத்தில் வெளியிலே செல்லும் போது அந்த மின்னல்களில் இருந்து தப்புவதற்காக
1.பச்சிலைகளைக் குப்பிகளில் போட்டு உடலில் அணிகலன்களாகப் போட்டுக் கொள்வார்கள்.
2.சில கல்லின் (கற்கள்) தன்மை அரைக்கப்பட்டு விஷத்தின் தன்மை நீக்கும் அத்தகைய பாசிகளையும் கழுத்திலே போட்டுக் கொள்வார்கள்.
3.எங்கே சென்றாலும் மின்னல்கள் பாய்ந்தால் தன்னைத் தாக்காதபடி காத்துக் கொள்வதற்கு அக்காலங்களில் இப்படி எல்லாம் செயல்படுத்தினார்கள்.

குருநாதர் எம்மைக் (ஞானகுரு) காட்டிற்குள் அழைத்துச் செல்லப்படும் பொழுது அன்று வாழ்ந்த மனிதர்கள் இந்த உபாயங்களை எப்படித் தெரிந்து கொண்டார்கள்…? பச்சிலைகள அனுபவபூர்வமாக எப்படிப் பயன்படுத்தினார்கள் என்று காட்டுகின்றார்.

அகஸ்தியன் தாய் தந்தையர் வாழ்ந்த காலத்தில் அவர்கள் நுகர்ந்த உணர்வுகளும் அவர்கள் உடலில் விளைந்த உணர்வுகள் மணங்களாக வெளிப்பட்டது அனைத்தும் சூரியனால் கவரப்பட்டு இன்றும் இந்தப் பூமியில் உண்டு.
1.அதைப் பெறச் செய்வதற்கு குருநாதர் எனக்கு இப்படிக் கொண்டு வந்தார்
2.உங்களுக்குள்ளும் இதைப் பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதைப் பதிவாக்குகின்றேன்
3.பதிவானதை நினைவு கொண்டால் உங்கள் எண்ணம் இந்தக் காற்றிலிருந்து அந்த உயர்ந்த சக்திகளைப் பெறச் செய்யும்

அகஸ்தியன் செயல்பட்ட உணர்வுகள் ஏராளம் ஏராளம்…!”

அகஸ்தியன் செயல்பட்ட உணர்வுகள் ஏராளம் ஏராளம்…!”

 

அகஸ்தியன் தாய் கருவிலே சிசுவாக வளரும் பொழுதே தாயால் நுகரப்பட்ட நஞ்சினை வென்றிடும் உணர்வுகளை அவன் சுவாசிக்க நேர்கிறது… அவன் உடலுக்குள் அது இணைகின்றது.

இன்று விஞ்ஞானிகளும் கருவின் வித்துகளைப் பல உயிரினங்களிலிருந்து எடுத்து அதை மற்ற உடலில் இருக்கக்கூடிய ஜீன்களில் இணைத்துக் கருவுறச் செய்து உருமாறும் நிலைகளில் குணங்களில் மாற்றம் அடையும் செயல்களைச் செயல்படுத்துகின்றனர்.

1.அன்று மெய் ஞானிகள் தன் இனத்தினைப் பெருக்குவதற்காக
2.சொல்லின் தன்மையை செவி வழி ஓதி உணர்ச்சிகளை உணர்த்தப்படும் பொழுது
3.அதில் ஈர்க்கப்பட்ட உணர்வின் அறிவாக ஈர்க்கும் தன்மை கொண்டு
4.ஞானிகள் உடலில் அவர்கள் கண்டுணர்ந்த நினைவினை வானை நோக்கி ஏகி
5.கருவுற்ற தாயை அந்த உணர்வினை நுகரும்படி செய்து கருவில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு அதை உருவாக்கி
6.பெரும் பெரும் சக்தி கொண்ட ஞானிகளாக அக்காலங்களில் உருவாக்கினார்கள்.

இருந்தாலும் அந்தக் கால கட்டங்களில் அவரவர்கள் ஆசை கொண்டு “அரசன்…” என்ற நிலையில் அது மாற்றப்பட்டு மற்றொன்றை அடக்கி ஆளும் தன்மைகளாக மாறி விட்டது.

மற்றவரை அடக்கி ஆளும் பொழுது அவனுக்குள் அது அசுர உணர்வாகத் தோன்றப்பட்டு சாம்ராஜ்ய ஆசைகள் வருவதும் மற்றதை மாற்றி அமைக்கும் சக்தியாக வந்து விட்டது.

இப்படிப் பல பல மாற்றங்கள் ஏற்பட்டு
1.இன்றைய உலகில் விஞ்ஞான அறிவாக அதிகரித்து விட்டது
2.மெய் ஞான உணர்வுகள் அனைத்தும் அழிந்து விட்டது.
3.அஞ்ஞான வாழ்க்கை பெருகிவிட்டது… மனிதனுடைய சிந்தனைகளும் இழக்கும் தன்மை வந்து விட்டது.

இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் பண்டைய காலத்தில் வாழ்ந்த அந்த அகஸ்தியனின் அருள் சக்திகளைப் பெறுதல் வேண்டும்.

1.அகஸ்தியன் கண்டறிந்த உணர்வும் அவனில் விளைந்த உணர்வை நாம் நுகர்ந்து
2.நம் உடலில் உள்ள அணுக்களுக்கு அதைப் பெறச் செய்து
3.அவன் வளர்ச்சி பெற்றது போல நமது வாழ்க்கையில் நாமும் பெற்று
4.அவன் எண்ணும் (எண்ணிய) உணர்வுகளை நமக்குள் எடுத்து
5.நம் உடலில் இருக்கக்கூடிய இரத்த நாளங்களில் அதைப் பெருக்கி அந்த உணர்வின் அணுக்களாக மாற்றி
6.அவன் சிந்தித்த உணர்வுகளை அடிக்கடி நாமும் சிந்தித்து
7அவன் பெற்ற ஞானத்தையும் தீமைகளை அகற்றும் எண்ணங்களையும் நாம் பெற்று
8.அவன் வாழ்க்கையில் தெளிந்த மனம் கொண்டு மற்றவரைத் தெளியச் செய்தது போன்று நாமும் செயல்படுத்த வேண்டும்.

அவனுக்குள் எடுக்கும் உணர்வால் ஒன்றை அறிந்திடும் அறிவாகவும் அனைத்தையும் அரவணைத்துப் பண்பு கொண்டு கொண்டும் வாழ்ந்தவன் தான் அகஸ்தியன்.

அவன் வாழ்ந்து வந்த அக்காலங்களில் கொடூர மிருகங்களை இவன் உற்றுப் பார்த்தால் அது அடிபணிகிறது… இவனை ஒன்றுமே செய்வதில்லை.

காரணம்… இவனிடமிருந்து வெளிப்படும் உணர்வலைகள் அந்த மிருகங்களின் விஷத்தின் தன்மை ஒடுக்கும் பொழுது அதனுடைய உணர்வுகள் சாந்தமாகி விடுகின்றது.

“இவ்வாறு அவன் செயல்பட்ட உணர்வுகள் ஏராளம் ஏராளம்…!”

இளமையில் மூன்று வயது எட்டும் போது அவன் வெளியில் நடந்து செல்லும் பொழுது
1.மற்ற தாவர இனங்களின் மணத்தை நுகர்வதும்
2.அதனின் அறிவைத் தனக்குள் வளர்த்துக் கொள்வதும்
3.தன் எண்ணத்தால் மற்றொன்றை அறியும் ஞானமாக வளர்ச்சி பெறுவதும் போன்ற நிலைகள் வருகிறது.

அதை எல்லாம் நாமும் பெறுதல் வேண்டும். அகஸ்தியன் பிஞ்சு உள்ளத்தில் பெற்ற சக்திகளைப் பெற்று அவனைப் போன்ற மெய் ஞானியாக நாம் ஒவ்வொருவரும் உருவாக வேண்டும்.

“மின்னலுக்குள் இருக்கும்…” உயர்ந்த ஆற்றலை நாம் பெற வேண்டும்

“மின்னலுக்குள் இருக்கும்…” உயர்ந்த ஆற்றலை நாம் பெற வேண்டும்

 

அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற உயர்ந்த சக்திகள் கொண்டு தாவர இனங்களுடைய சக்திகளை அறியும் ஆற்றல் பெற்றான்.
1.தாவர இனங்களுடைய சக்திகளை நுகர்ந்து நுகர்ந்து தனக்குள் அதை எடுக்கும் பொழுது
2.இந்த தாவர இனங்களுக்கு ஜீவ நீராக ஊட்டும் மேகங்கள் கூடுவதை அறிகின்றான்
3.இவன் எண்ணத்தால் எண்ணினால் அவன் உணர்வுகள் மேகங்களை அழைத்து வருவதும்
4.அப்பகுதியில் அதிகமாக மழை பெய்வதும் போன்ற நிலை உருவாகிறது.

ஏனென்றால் அகஸ்தியன் விஷத்தின் தன்மை கொண்டு அதை ஒடுக்கிடும் தன்மை பெற்றவன். ஆதியிலே பொருள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி அடர்த்தியாகி ஆவியாகும் போது தான் மேகத்தின் தன்மை அடைகின்றது. மாறுபட்ட சத்துகள் கலந்ததும் நீராக வடிகிறது.

அந்த ஆற்றலைத் தான் அகஸ்தியனும் பெறுகின்றான். அந்த நீரின் தன்மை மற்ற தாவர இனங்களிலும் படுகின்றது இதைப் போன்ற உணர்வுகள் இவனுக்குள் படரப் படும் பொழுது
1.இவன் எங்கே அமர்ந்து சிறிது காலம் செயல்படுகின்றானோ
2.இவன் உடலில் இருந்து உணர்வுகள் அங்கே படரப்பட்டு
3.மேலே மேகங்கள் படர்ந்து செல்வதை அது கவர்ந்து நீராக மாற்றிடும் நிலை பெறுகிறது.

அதே போல் அகஸ்தியன் மின்னலை உற்றுப் பார்த்தான் என்றால்
1.இவன் உயிர் அதை மின் அணுக்களாக மாற்றுவதும்
2.நுகர்ந்ததை அடக்கி ஒளியின் உணர்வாகப் பெறும் தகுதியும் பெறுகின்றான்.

ஒரு சமயம் குருநாதர் காட்டிய வழியிலே நாசிக் என்ற இடத்திற்கு நான் (ஞானகுரு) செல்லப்படும் பொழுது அங்கே ஒருவனைச் சந்திக்கும்படி செய்தார். அவனுக்கு வயது பதினேழு இருக்கும்.

அவன் வேறொரு மனிதனைக் கோபமாக உற்றுப் பார்த்தால் போதும்…! கண்ணின் ஒளிகள் பாய்ந்து அங்கே ஓட்டையே போட்டு விடும். சுரீர்ர்ர்ர்…! என்று இந்த உணர்வுகள் பாயும். அவன் அலற வேண்டியது தான்.

அவனுக்கு இது எப்படி வந்தது…?

தாய் கருவிலே இவன் இருக்கப்படும் பொழுது தாய் மின்னலை எட்டிப் பார்த்தது. அப்போது அந்த மின்னலின் உணர்வுகள் கருவிலே இணைந்து விட்டது. ஆனால் தாய் தன் கண் பார்வையை இழந்துவிட்டது.
1.கருவில் இருக்கும் சிசுவிற்கு அந்த மின்னலின் ஒளிக் கற்றைகள்
2.இரத்தத்தின் வழி கூடி உடலிலே கலந்து அந்த உணர்வின் ஆற்றலைப் பெறுகின்றது.

தாய் கண் இழந்த பின் நெற்றியின் உணர்வு கொண்டு பார்க்கும் நிலையும் மின்னல்கள் தாக்கப்படும் பொழுது கர்ப்ப காலங்களில் இந்த உணர்வுகள் கருவிலே இணைந்து அது விளைந்து கொண்டே வருகின்றது.

குழந்தை பிறந்த பின் அவன் இளம் வயதிலே அதை அறியவில்லை பதினேழாவது வயதை அவன் எட்டப்படும் பொழுது
1.இவன் எண்ணத்தின் கோப உணர்வுகள் பொறிகள் கிளம்புவது போல வருகிறது.
2.ஒரு இரும்பை அவன் பார்த்தால் அது சூடாகும்… அப்படியே வளைக்கலாம்

அதாவது சிறிது நேரம் ஒரு இரும்பை அவனை உற்றுப் பார்க்கும்படி செய்தால் அது சூடாகிவிடும்… வளைத்து விடலாம். இந்த மாதிரி மின் கதிர்கள் அவன் கருவிலே விளயப்படும் பொழுது வந்த சக்தி.

(அவன் நீடித்த நாள் வாழவும் இல்லை சுற்றுப்பயணம் சுற்றி விட்டு இரண்டாவது தடவை நான் அங்கே வரும் பொழுது அவன் இல்லை).

அவன் உணர்வுகள் அந்த அறிவின் தன்மை கொண்டு வெளி வரப்படும் பொழுது மற்றது கெடுகிறது. ஆனால் முதலில் தெரியாது.
1.அடுத்தவனை இவன் உற்றுப் பார்த்தால் அவன் மயங்கி விழுந்து விடுவான்.
2.இவனால் தான் அப்படி ஆனது என்று ஒருவருக்கும் தெரியாது.

இப்படி அவனை அறியாமலே பல நிலைகள் வந்து விபத்துகள் ஆகிறது. பின்னாடி மற்றொருவர் கூறும் பொழுது தான் தெரிய முடியும்.

ஆக… ஒரு மனிதன் மீது மின்னல் பட்டால் அவன் எப்படிக் கருகி விடுவானோ அதே போன்று இவன் பார்வை பட்டால் அடுத்தவர்களை அது கறுக்கி விடுகின்றது.

அனுபவ ரீதியாக குருநாதர் எமக்குக் காட்டிய உண்மை நிலைகள்

மின்னலைப் பார்த்ததால் முதலில் தாய்க்குக் கண்கள் போனது ஆனால் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கோ அது வளர்ந்த பின் “ஈர்க்கும் சக்தி பெருகி அணு செல்களாக அது பெருகுகின்றது…”

மின்னலைப் பார்த்துவிட்டு அடுத்தவனைப் பார்த்தால் சுட்டுப் பொசுக்குகின்றது. அப்போது அவனைக் கண்டாலே மற்றவர்கள் அஞ்சி ஓடும் நிலைகள் வந்துவிட்டது.

அவனை வீட்டை விட்டு வெளியே செல்லாதபடி செய்துவிட்டார்கள் எல்லோருக்குமே பயம்… அவன் மீது கோபப்படவும் முடிவதில்லை.

ஆனால் அவனுக்கு எப்போது இந்த நிகழ்ச்சிகள் நடக்கிறது என்றால்
1.மின்னல் பாயும் பொழுது இழுத்து அந்த உணர்வுகள் பார்வைக்குள் வந்து
2.எக்கோ (ECHO) மறுபடியும் அந்த உணர்வுகள் இயக்குகின்றது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன்…
1.அவன் தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது மின்னலை அடக்கும் அந்தச் சக்தி கிடைக்கின்றது
2.பிறந்த பின் குழந்தை அவன் தரையில் மல்லாந்து படுத்திருக்கும் நிலையில்
3.இவனுக்குள் கதிரியக்கப் பொறிகளை அடக்கிடும் சக்தியும் வருகின்றது.
4.இந்த அணுக்கள் இவனுக்குள் பெருகிப் பெருகி வானுலகை உற்று நோக்கும் அறிவின் தன்மை வந்து வான இயல் ஆற்றலைப் பெறுகின்றான்.
5.அதன் மூலம் எதனையுமே வென்றிடும் சக்திகளும் ஒளியாக மாற்றிடும் ஆற்றலும் அவனுக்குள் பெறுகின்றது

ஆனால் அகஸ்தியன் சக்தி வாய்ந்த நிலைகள் இப்படிப் பெற்றதை மக்களுக்கு இந்த உண்மைகள் தெரியாதபடி…… கிடைக்க முடியாதபடி காலத்தால் அது மறைக்கப்பட்டு… அரசர்கள் தடைப்படுத்தி விட்டனர்.

அகஸ்தியன் உடலில் விளைந்த நஞ்சினை வென்றிடும் ஜீன்களை நாம் பெற வேண்டும்

அகஸ்தியன் உடலில் விளைந்த நஞ்சினை வென்றிடும் ஜீன்களை நாம் பெற வேண்டும்

 

விஞ்ஞான அறிவு கொண்டு பார்க்கலாம்… போல அணு ஜீன்களை எடுத்து அதைப் பல விதமாக மாற்றி அமைக்கின்றனர். ஒரு தாவர இனத்தில் உள்ள ஜீன்களை எடுத்து மற்ற தாவர இனங்களில் இணைத்துப் புதுப்புதுக் காய்கறிகளையும் கனிகளையும் உருவாக்குகின்றனர்.

1.இது போக நாம் அணியும் உடைகளின் நிறங்களுக்கு உண்டான சாயங்களையும் புதிதாக உருவாக்கக் கற்றுக் கொண்டார்கள்
2.எந்த வகையான நிறம் வேண்டுமோ அந்த நிறத்தைத் தாவரங்களின் வித்துக்களில் இணைத்து விட்டால்
3.அதிலே உருவாகும் பஞ்சு அந்த நிறத்திற்கு வந்து விடும் என்று…!

இவர்கள் நினைத்தனர்… கெமிக்கல் கலந்த சாயத்தின் தன்மை கொண்டு வரப்படும் பொழுது… அதில் இருக்கும் விஷத்தன்மைகள் நீரிலும் கலந்து ஆவியாகவும் சென்று காற்று மண்டலமும் நச்சுத்தன்மையாகின்றது… இதை மறைக்க இப்படி நேரடியாக வித்திலிருந்தே மாற்றி விடலாம் என்று…!

எதுவுமே விஷத்தின் தன்மை கொண்டு தான் மற்றதுக்குள் ஊடுருவச் செய்ய முடியும். வித்துக்குள் இந்த ஜீன்களை இணைக்கப்படும் பொழுது இதே விஷத்தின் தன்மை பெருக்கி அதனுடைய மலத்தின் தன்மை பஞ்சின் நிலையும் மாறுகிறது.

ஆனாலும்…
1.இப்படி உற்பத்தி செய்து அந்த உடைகளை நாம் மேலே ஆடையாக அணிந்தால்
2.உடலின் துடிப்பின் வெப்பத்தினால் அதில் துணியிலிருந்து வெளிப்படும் அலைகளால் உடலில் கடும் நோய்களாக வரத் தொடங்கும்.
3.ஆக… அதைச் சுவாசிக்கப்படும் பொழுது உடலுக்குள் விஷத்தின் தன்மை கொண்ட அணுக்களாக மாறும் என்பதை விஞ்ஞானிகள் மறந்து விட்டனர்.

எதைச் செயற்கையின் தன்மையில் கொண்டு வருகின்றோமோ இவை அனைத்தும் நமக்குள் பெரும் மாற்றங்களைத் தான் உண்டாக்கும்.

நிறங்களை மாற்ற வேண்டும்… உருவாக்க வேண்டும்… என்றால் விஷத்தின் தன்மை கொண்டு தான் அவைகள் இயங்குகின்றது. மனிதன் இப்படி எத்தனையோ நிலைகளில் அந்த இயற்கையின் நியதிகளை மாற்றிக்கொண்டு வருகின்றான்.

ஆகவே
1.இப்பொழுது நாம் எதை நுகர வேண்டும் எதை உடலுக்குள் அணுவாக மாற்ற வேண்டும் என்று
2.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உண்மைகளை உணர வேண்டும்.

அக்காலத்தில்… அகஸ்தியன் தாய் கருவிலே இருக்கப்படும்போது பல விஷத்தை வென்றிடும் ஆற்றல்களைப் பெற்றான். எப்படி…?

அவனுடைய தாய் தந்தையரோ காடுகளில் வாழப்படும் போது விஷ ஜந்துக்களும் கோடூர விலங்குகளும் அவர்களைத் தாக்கி விடாமல் இருக்க
1.விஷத்தை ஒடுக்கும் மூலிகைகளை அரைத்து அதை உடலில் முலாமாகப் பூசிக் கொண்டு
2.அந்த மணத்தால் தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்.

ஆனால் அவர்கள் கர்ப்பமுறும் காலத்தில் உடலிலிருந்து வெளிப்பட்ட மூலிகைகளின் மணங்கள் சுவாசத்தின் வழி உடலுக்குள் பரவி இரத்தத்தின் வழியாகக் கருவில் இருக்கக்கூடிய அந்தச் சிசுவிற்கும் அது கலந்து விடுகின்றது.

அதாவது முதலில் சொன்னபடி… வித்துகளில் எப்படி விஞ்ஞானிகள் செயற்கையாக ஜீன்களை இணைக்கின்றனரோ அது போல் அகஸ்தியனுக்கு நஞ்சினை வென்றிடும் சக்தி இயற்கையாகவே இப்படிக் கிடைக்கிறது.

ஆனால் விஞ்ஞானிகள் விஷத்தின் ஆற்றலைக் கலந்து ஒரே நிலையை பல நிலைகளாகப் புதிது புதிதாக மாற்றிக் கொண்டு வரும் போது ஒரே வித்தாக இருந்தாலும் அது கலந்த நிலையில் சாயங்களை (நிறங்களை) மாற்றுகின்றது. இருந்தாலும் அதிலே விஷத்தின் தன்மை ஓங்குகிறது.

இத்தகைய சாயத்தை வடித்துக் கொண்ட அந்த வித்துக்களையோ அந்தச் செடிகளையோ (பருத்திச் செடி) மாடுகள் உட்கொண்டால் அதுவும் விஷத்தன்மையாக மாறுகின்றது.

1.மாட்டின் உடலும் விஷமே இதுவும் விஷமே
2.இருந்தாலும் அதனுடைய குணங்கள் மாறுகின்றது
3.பால் கறக்கும் மாடுகளுக்கு இதை கொடுத்தாலும் பால் பச்சையாகக் கறக்கும்.
4.ஆனால் பின்னாடி தான் இதை அவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

தெரிந்த பின் இதை உரங்களாகக் காட்டுகளுக்கு போட முடியுமே தவிர அதே சமயத்தில் மற்ற உயிரினங்கள் அதை உணவாக உட்கொண்டால் அங்கேயும் வித்தியாசமாக மாறும்.

காளைகளுக்கு இதை கொடுத்தாலும் அதனுடைய உணர்வுகள் அமிலங்களாக மாற்றப்பட்டு அது தன் இனத்தை உருவாக்கும் இணை சேரும் காலங்களில் அது கன்றுகளாக உருவாகும் நிலை வரும் பொழுது “அந்த மாட்டின் கன்றுகளுக்கும் இது மாறத் தொடங்குகின்றது…!”

1.இப்படி ஒரு ஜெனரேஷன் மாற ஆரம்பித்தால்
2.அது மூன்றாவது நிலை நான்காவது நிலை என்று மாடுகளின் உருமாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும்.

இப்பொழுது நாம் சொல்கிறோம் அல்லவா…! கடந்த காலம் போய் இன்று விஞ்ஞான காலம் வந்துவிட்டது என்று. அது போன்று தான் ரூப மாற்றங்களும்.

விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தால் இயந்திரங்களிலும் புதுப்புது கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கின்றனர். ஆனால் ஏற்கனவே செய்தது பழமை ஆகி விடுகின்றது.

புதிதாகக் கண்டுபிடித்தது வேகத்துடிப்பு அதிகமாகவும் அதனுடைய செயலாக்கங்களும் அதிகமாக வருகிறது. விஷத்தின் சேமிப்பாக இப்படி மாறிக் கொண்டே போகின்றது. இது இன்றைய நிலை.

ஆனால் அக்காலங்களில் நஞ்சினை வென்றிடும் அணு ஜீன்கள் தாய் கருவில் இருக்கும் போது அகஸ்தியன் உடலில் விளைந்தது.

அவன் பிறந்த பின்
1.மற்ற விஷத்தின் தன்மைகள் தனக்குள் நாடாது…
2.அப்படியே வந்தாலும் அதை அடக்கி ஒளியின் உணர்வாக மாற்றும்
3.அறிவின் தெளிவாக இயக்கக்கூடிய சக்தியாக அவனுக்குள் வந்தது.

காரணம் தாய் நுகர்ந்த உணர்வுகள் பூர்வ புண்ணியமாக அமைந்து நஞ்சை வென்றிடும் சக்தியாக வருகின்றது பிறந்த பின்
1.நஞ்சினைக் காணுகின்றான்… அதனின் இயக்கத்தை அறிகின்றான்
2.நஞ்சினை அடக்கிடும் எண்ணங்கள் உருவாகி… அந்த யுக்தியின் தன்மைகள் பெருகுகின்றது.
3.அதன் வழி அந்த உணர்வை அவன் சுவாசிக்கின்றான் நஞ்சினை வென்றிடும் அணுக்கள் அவன் உடலில் அதிகரிக்கின்றது.

இப்படி வளர்ந்தவன் தான் அகஸ்தியன்…!

தாவர இனங்களுடைய சக்திகளை நுகர்ந்தான். விஷத்தின் தன்மை ஒடுக்கினான். சிந்தித்துச் செயல்படும் தன்மையாக அவனுக்குள் வருகின்றது.

பல விதமான தாவர இனங்களின் சக்திகளை எடுக்கும் பொழுது அதனுடைய உணர்வின் இயக்கம் தெளிந்திடும் உணர்வின் அறிவாக அவனுக்குள் வருகிறது. இது எல்லாம் அவன் இளம் வயதில் பெற்ற சக்திகள்.

1.நஞ்சினை வென்றிடும் சக்தியாக உடலில் இருந்து வரக்கூடிய மணத்தை நுகரப்படும் போது
2.அவன் உயிரிலே பட்டு அந்த உணர்வின் அறிவாக அவனை இயக்குவதும்
3.கண்ணுக்குள் இருக்கும் கருவிழி அதன் இனமான உணர்வினைத் தனக்குள் நுகர்ந்து
4.அந்த அறிவாகவே அவனை இயக்கத் தொடங்குகிறது.

அகஸ்தியனின் அருள் சக்திகளைப் பெறுவதற்குத் தான் மீண்டும் மீண்டும் அகஸ்தியனைப் பற்றி உங்களுக்கு எடுத்துச் சொல்வது.

அவன் பெற்ற நஞ்சினை வென்றிடும் ஆற்றல்களைப் பெறக்கூடிய தகுதியை நீங்கள் பெற்று… இனி வரக்கூடிய எத்தகைய கடுமையான நஞ்சாக இருந்தாலும் அதை மாற்றிட வேண்டும் என்று தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம் (ஞானகுரு).

அகஸ்தியனிடமிருந்து வெளிப்பட்ட ஒளிக் கதிர்கள்

அகஸ்தியனிடமிருந்து வெளிப்பட்ட ஒளிக் கதிர்கள்

 

அகஸ்தியன் மூன்று வயதுக்குள் இயற்கையின் உண்மை நிலைகளை அறியும் சக்தி பெறுகின்றான். உயிர் அணுக்களின் தோற்றங்களையும் அதனின் உண்மைகளையும் அறிகின்றான்.

விஷத்தின் தன்மையை அடக்கி… அந்த அருள் ஒளியின் தன்மை கொண்டு தான் எடுக்கும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றான்.

ஒரு மின்னட்டாம் பூச்சியை எடுத்துக் கொண்டால்… மற்ற பூச்சிகளைக் காட்டிலும் அது உணவாக உட்கொள்ளும் பொழுது…
1.பின் பாகம் உணர்வின் மூச்சலைகள் வரப்படும் பொழுது பளீர்…. பளீர்… என்று மின்னும்.
2.இது எடுத்துக் கொண்ட உணவுகள் மெர்குரியாக மாறுகின்றது
3.இது போன்றுதான் அகஸ்தியன் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஒளிக்கதிர்களைப் பாய்ச்சுகின்றது.

இதைக் கண்ட அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்கள் அகஸ்தியனை “மகரிஷி” என்ற நிலையிலும் ஒரு “தெய்வீகப் பிறவி” என்றும் “கடவுள்” என்றும் “உயர்ந்த சக்தி வாய்ந்தவன்” என்றும் அவனைப் பின் தொடர்ந்து செல்கின்றனர்.

காட்டுக்குள் அவன் செல்லப்படும் பொழுது விலங்குகளும் இவனைக் கண்டு அஞ்சி ஓடுகின்றது… விஷ ஜந்துக்களும் அஞ்சி ஓடுகின்றது.

இப்படிப் பெற்றவன் தான் ஐந்தாவது வயது வரப்படும் பொழுது பூமிக்குள் துருவத்தின் வழி வரும் சக்திகளை எல்லாம் நுகர்ந்தறிகின்றான். துருவத்தின் ஆற்றலைப் பெறுகின்றான்.

அப்போது அவனுக்குத் துருவன் என்று காரணப் பெயர் அக்காலத்தில் வைக்கின்றார்கள்… அகஸ்தியன் துருவன் ஆகின்றான்.

ஐந்தாவது வயதில் வானுலக இயக்க உண்மைகளையும் அவன் கவர்ந்து… அதை உணர்வைத் தனக்குள் எடுத்து இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள சக்திகளைப் பெறுகின்றான்.

பதினாறாவது வயது வரும் பொழுது அவனுக்குத் திருமணம் செய்து வைக்கின்றார்கள்.
1.தான் பெற்ற சக்திகள் அனைத்தும் தன் மனைவி பெற வேண்டும் என்றும்
2.கணவனால் பெற்ற அந்தச் சக்தி கணவனுக்கு அது மேலும் கிடைக்க வேண்டும் என்று மனைவி எண்ணுவதும்
3.இப்படி இருவருமே உணர்வுகள் ஒன்றாகி இரு உயிரும் ஒன்றாகி உணர்வினை ஒளியாக மாற்றும் தன்மை பெறுகின்றார்கள்.

எந்தத் துருவப் பகுதியைக் கூர்மையாகப் பார்த்து… எதை எல்லையாக வைத்தனரோ… அந்த எல்லையில் நிலை கொண்டு துருவ நட்சத்திரமாக இருக்கின்றனர்.

மனிதனில் தீமைகளை வென்று… பிறவியில்லா நிலை அடைந்து ஒளிச் சரீரம் பெற்ற… அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்களைப் பெறச் செய்வதற்குத் தான் பயிற்சி கொடுக்கின்றோம். அது தான் துருவ தியானம்…!
1.அந்தப் பயிற்சியின் பிரகாரம்…
2.யாரெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை முறைப்படுத்தி
3.தனக்குள் எடுத்து வளர்த்துக் கொள்கின்றனரோ அவர்கள் இந்த உடலில் பிறவி இல்லா நிலை அடைகின்றனர்.
4.மனிதனான பின் தான் அதைச் செயல்படுத்த முடியும்.

ஆகவே… நாம் சொந்தமாக்க வேண்டியது உயிருடன் ஒன்றி அருள் ஞானிகள் உணர்வை “அருள் செல்வமாக… ஒளிச் செல்வமாக…” நமக்குள் பெருக்கிப் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்.

“உபதேசம் நன்றாக இருக்கிறது…” என்று சொல்லிவிட்டுப் போனால் மெய்ப் பொருளைக் காணும் நிலையை இழக்க நேரும்

“உபதேசம் நன்றாக இருக்கிறது…” என்று சொல்லிவிட்டுப் போனால் மெய்ப் பொருளைக் காணும் நிலையை இழக்க நேரும்

 

அகஸ்தியன் உடலில் உருவான விண்ணுலக ஆற்றல்…
1.வானவியல் புவியியல் உயிரியல் அடிப்படையில் அவன் வளர்த்துக் கொண்ட உணர்வுகள்..
2.தன் இன மக்கள் அறிந்து கொள்வதற்காக அவன் வெளிப்படுத்திய அந்த உணர்வுகள் அனைத்தையும்
3.சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து இன்றும் அலைகளாகப் பரப்பி வைத்துள்ளது.

அகஸ்தியனைப் பின் தொடர்ந்து வந்தோர்… நுகர்ந்தவர்கள் இதை அறிய முடியும். அந்த விண்ணுலக ஆற்றலை அவர்களும் அறியும் தன்மை பெறுகின்றார்கள்.

அதன் வழியில் தான்
1.நமது குருநாதரும் பிரபஞ்சத்தின் ஆற்றலை அறிந்தார்… தனக்குள் பெற்றார்
2.தனக்குள் பெற்றதை எம்மையும் (ஞானகுரு) பெறச் செய்தார்..
3.சந்தர்ப்பத்தால் அவரைச் சந்திக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டது
4.தான் பெற்ற அந்த விண்ணுலக ஆற்றல் ஒவ்வொன்றையும் எனக்குள் ஞான வித்தாகப் பதியச் செய்தார்.
5.பதிந்ததை… நான் நினைவு கொண்டு அதைப் பெற வேண்டும் என்று ஏக்கத்தைத் தூண்டுகின்றார்
6.அவர் சொன்ன முறைப்படி விண்ணிலே என் நினைவைச் செலுத்தப்படும் பொழுது அவர் கண்ட உண்மைகளை நானும் காண முடிந்தது.
7.குருவின் தொடர் கொண்டு அந்த அறியும் ஆற்றலை நானும் பெற முடிகின்றது… அகஸ்தியன் உணர்வை நுகர முடிகின்றது
8.உலகம் எப்படி உருவானது…? என்ற நிலையை என்னில் அறிய முடிகின்றது.

அதில் விளைந்த உணர்வுகளை நீங்கள் பெற வேண்டும் என்று அதன் உணர்வுகளைத்தான் சொல்லாக இங்கே வெளிப்படுத்துகின்றேன்.
1.செவி வழி உணர்ச்சிகளைத் தூண்டி…
2.உங்கள் கண் பார்வையில் நுகரும் ஈர்ப்பாகக் கொண்டு வருகின்றேன்.
3.நீங்கள் நுகரப்படும் போது… உயிருடன் ஒன்றி உணர்வின் அலையை உங்களில் பரப்பச் செய்து
4.அதை உங்கள் உடலிலே ஊழ்வினை என்ற வித்தாக விதைக்கும் தன்மையாகப் பக்குவப்படுத்துகின்றேன்.
5.அந்த உணர்வுக்குள்ளிருந்து அருள் ஞானி கண்ட உணர்வை நீங்கள் வளர்க்க முடியும்.

ஏனென்றால் குருநாதர் எவ்வாறு எனக்குச் செய்தாரோ அதன் வழியில் தான் உங்களுக்கும் கிடைக்கச் செய்கின்றேன். பிரபஞ்சத்தின் இயக்கத்தை அகஸ்தியன் கண்டதை நீங்களும் நேரடியாகக் காண முடியும். பேரண்டத்தின் நிலைகளையும் உணர முடியும்.

உங்களுக்குள் உருப்பெரும் இந்த உணர்வின் தன்மை கொண்டு “உங்களை நீங்களும் உணர முடியும்…” ஏனென்றால் மனிதரான பின் கார்த்திகேயா…!

எல்லாவற்றையும் அறியும் ஆற்றல் பெற்றவன்… உருவாக்கத் தெரிந்து கொண்டவன் மனிதன். அதைத் தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்று சொல்வது. இதையெல்லாம் நம் காவியங்கள் தெளிவாக்குகின்றது.

1.அந்த அருள் ஞானி அகஸ்தியன் கண்ட… நமது குருநாதர் கண்ட அனைத்தையும்
2.நீங்கள் அறிதல் வேண்டும் என்ற நிலைக்கே இதை உருவாக்குகின்றேன்.

அருள் ஞானி அகஸ்தியன் பெற்ற பேருண்மைகள் உங்களுக்குள் வளர வளர மனித இச்சையின் ஆசைகள் உருவாகும் நிலையை அடக்குகின்றது… உங்களை அறியாது வரும் இருள் சூழும் நிலைகளை அடக்குகின்றது… தீமை விளைவிக்கும் நிலையை அது அடக்குகின்றது.

அதற்குத் தான் இந்த உபதேசம்…!

ஆகவே… மெய் ஞானிகள் உணர்வை இந்த உபதேச வாயிலாகக் கேட்கப்படும் பொழுது அதே உணர்வின் உணர்ச்சிகளைத் தூண்டி
1.அதனின் அறிவாக நீங்கள் நுகரும் தன்மை வருகிறது – நீங்கள் நினைவைச் செலுத்தினால்…!
2.ஆனால் இதையெல்லாம் கேட்டுணர்ந்து… “நன்றாக இருக்கின்றது…!” என்று மறந்து விட்டால் மெய்ப்பொருளைக் காணும் திறனை இழக்கின்றீர்கள்.

யாம் சொல்லும் இணக்கத்தின் உணர்வின் தன்மையைக் கூர்மையாகக் கவனித்து அந்த உணர்வைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் பதிவு செய்தால் மீண்டும் நினைவின் ஆற்றல் வருகின்றது.

அகஸ்தியன் வெளிப்படுத்திய உணர்வுகளை நுகர முடியும்… அதன் வழி கொண்டு தீமைகளை அகற்றும் திறனைப் பெறுகின்றீர்கள்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

நம் பெரு மூளையிலே உருவாகும் “தீமையை வடிகட்டும் அமிலம்”

நம் பெரு மூளையிலே உருவாகும் “தீமையை வடிகட்டும் அமிலம்”

 

எத்தகைய தீமைகள் வந்தாலும் அதை எதிர்த்துத் தாக்கும் சக்தி நமக்கு வேண்டும். இயற்கையாகவே நமக்கு அது உண்டு.

எப்படி…?

1.நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நிலையை அல்லது
2.நாம் சுவாசிக்கும் உணர்வுக்குள் வரும் தீமையை
3.”பெரு மூளை உருவாக்கும் திரவகத்தை” – சளி என்ற நிலையில் அதை முன் செலுத்தி
4.நாம் நுகரும் உணர்வுகளை வடிகட்டி மற்ற உணர்வுடன் கலக்கச் செய்து
5.தீமையிலிருந்து விடுபடும் சக்தியாக இயற்கையிலேயே பரிணாம வளர்ச்சியில் வந்த மனிதனுக்கு உண்டு.

ஆனால் மற்ற உயிரினங்களோ விஷத்தின் தன்மையைக் கவர்ந்து விஷமான அணுக்களை உருவாக்கும் சக்தியே பெறுகின்றது ஆனால் மனிதனுக்கு இந்த ஆற்றல் உண்டு.

பெரு மூளையிலிருந்து வரும் அந்த அமிலம் உடலுக்குள் எதிர்ப்படும் உணர்வுகளை அதை வடிகட்டிச் சளி வழியாக வெளியேற்றி விடுகின்றது

அதாவது
1.நமது மூக்கின் நேர் பகுதியில் நஞ்சு உள்புகாது தடுத்துக் கொள்ளும் சளி என்ற நிலை உருவாகிறது.
2.சுவாசத்தினை அதிலே வடிகட்டித் தான் உள்ளே அனுப்புகின்றது.

ஆனால் அப்படி வடிகட்டினாலும் சந்தர்ப்பத்தில் வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் அதையெல்லாம் அதிகமாக எடுக்கும் பொழுது இந்த உணர்வின் அழுத்தம் வடிகட்டும் நிலையைத் தடுத்து இது வலுப்பெற்று விடுகின்றது.

நாம் நுகர்ந்த அந்தத் தீமையின் உணர்வுகள் உமிழ் நீராக மாறி ஆகாரத்துடன் கலந்து அதற்குத் தக்க இரத்தமாக மாறி நம் இரத்த நாளங்களில் அது பெருகத் தொடங்கி விடுகின்றது.

அப்படிப் பெருகத் தொடங்கினால் பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கிடும் திறன் பெற்று வந்தாலும்… நம்மை அறியாது நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்து நம் உடலில் நல்ல உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் விஷத் தன்மையாகச் சேர்ந்து விடுகிறது.

1.அப்போது அந்த அணுக்கள் அனைத்தும் செயலிழந்து இந்த மனித உடலை உருக்குலையச் செய்து
2.உடலை விட்டுப் பிரிந்து செல்லும் பொழுது
3.எதனால் இந்த உடல் சுருங்கியதோ… எதன் உணர்ச்சிகளால் அது உருவானதோ… அதற்குத்தக்க உயிர் வெளியே சென்ற பின்
4.பரிணாம வளர்ச்சியில் தீமைகளை நீக்கி வளர்ந்து வந்த நிலையை மாற்றி
5.இன்று தீமைகளைச் சேர்த்திடும் தன்மை கொண்ட உடலாக மாற்றிவிடும் நமது உயிர்.

இதை எல்லாம் தெளிவாக அறிந்து கொண்ட ஞானி தான் அகஸ்தியன். அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி தன் உடலில் அப்படி வந்த நஞ்சினை மாற்றி… மாற்றி… உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிக் கொண்டான்.

அவன் ஒளியாக மாறக் காரணமானது “துருவத்திலிருந்து வரும் நிலை தான்…!”

1.விண்ணுலக ஆற்றலை பூமி அதன் வழியில் எவ்வாறு கவர்கிறது…? என்பதை உணர்ந்து
2.அந்த நஞ்சினை… துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் பெற்று அவனுக்குள் பெருக்கி
3.அதன் வலு அதிகமாகும் பொழுது இந்த நஞ்சினை வென்றிடும் ஆற்றல் பெற்றதனால்
4.மனித உடலை மாற்றியமைக்கும் சக்தி பெற்று ஒளியாக மாற்றுகின்றான் அகஸ்தியன்.

அவனுக்குத் திருமணம் ஆன பின் கணவன் மனைவி இரு உணர்வும் ஒன்றாகி இரு உயிரும் ஒன்றாக ஆன பின்…
1.விண்ணுலக ஆற்றலின் உணர்வின் தன்மையை உயிரைப் போல உணர்வின் அணுக்களை மாற்றி
2.எதிலிருந்து பூமி கவர்கின்றதோ அதை உற்று நோக்கி அதைத் தனக்குள் கவர்ந்து
3.விஷத்தைப் பிளந்து விஷத்தை ஒளியாக மாற்றிடும் ஆற்றலை இருவருமே பெறுகின்றனர்.

அதை நீங்களும் பெறக்கூடிய தகுதிக்குத் தான் இதைத் தெளிவாக உணர்த்துகின்றோம்.

நம்மைக் காக்க… ஊரைக் காக்க… நாட்டைக் காக்க… உலகைக் காக்க… ஞானிகள் தான் தேவைப்படுகிறார்கள்

நம்மைக் காக்க… ஊரைக் காக்க… நாட்டைக் காக்க… உலகைக் காக்க… ஞானிகள் தான் தேவைப்படுகிறார்கள்

 

அகஸ்தியன் ஒரு காலம் நமது பூமியைச் சமப்படுத்தி நேர்பாதையில் வைத்தான்.
1.அந்த அகஸ்தியனுடைய அருளை நாம் பெற்று
2.அருள் ஞானிகளை உருவாக்கி… அவர்களின் துணை கொண்டு
3.பூமிக்குள் நடக்கக்கூடிய பூகம்பங்களையும் நமது பிரபஞ்சத்தில் உள்ள மற்ற கோள்களில் ஏற்படும் பூகம்பங்களையும்
4.நமது சூரியனுக்குள் ஏற்படும் பூகம்பங்களையும் மாற்றி அமைக்க முடியும்.

அத்தகைய ஞானிகள் தான் இப்போது தேவை.

எல்லோரையும் அகஸ்தியன் அருளைப் பெறச் செய்து அந்த உணர்வுகளை வளர்க்கப்படும் பொழுது இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மைகளை நீக்க முடியும்.

நஞ்சை நீக்கிடும் ஆற்றல் இந்தக் காற்று மண்டலத்தில் பரவி… அதை நம் சூரியன் கவருமே என்றால்
1.சூரியனும் தெளிவாகும்
2.பிரபஞ்சத்தில் உள்ள கோள்களும் தெளிவாகும்
3.நாமும் தெளிவாக முடியும்…
4.உயிருடன் ஒன்றி ஒளியாக மாறி நாம் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

இந்த அகண்ட அண்டம் எத்தகைய நிலையில் இருப்பினும் எல்லாவற்றையும் சேர்த்து அதிலே ஒரு பிரபஞ்சமாக ஆனது. பிரபஞ்சத்தில் உயிரணுக்களாகத் தோன்றியது.

பிரபஞ்சத்தில் இருக்கும் உணர்வுகள் அணுவாக மாறியதை உயிரணுக்கள் கவர்ந்து உடலாக மாற்றியது. அதிலே பல கோடி உடல்களைக் கடந்து மனிதனாக ஆனது. இது எல்லாம் ஆதியிலே அகஸ்தியன் கண்டுணர்ந்தது.

1.மனிதனான பின் உயிரைப் போல உணர்வை ஒளியாக்கும்
2.அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் நிலைகளைத் தான் நம் குருநாதர் காட்டினார்.

அந்த மெய் ஞானி அகஸ்தியன் காட்டிய அருள் வழியில் சென்றால் மனிதன் முழுமை அடைந்து மனிதனுக்கு அடுத்த நிலையை நாம் அடைய முடியும்.

நாம் இந்த மனித உடலில் இருக்கும் போது உணவை அன்றாடம் எப்படி உட்கொள்கின்றோமோ அதைப் போன்று
1.நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்திற்கும்
2.அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும்
3.உயர்ந்த சொத்தாகக் கொடுத்தால் வேண்டும்.

விஞ்ஞான அறிவு கொண்டு சத்துள்ள ஆகாரத்தைக் கொடுத்து உடலை வளர்க்கின்றோம் ஆனால் நோய் என்று வந்து விட்டால் விஞ்ஞான அறிவு கொண்ட இரத்தத்தில் மருந்தினைச் சேர்த்து அந்தத் தீய அணுக்களை மாற்றுகின்றோம். இருந்தாலும் அது இந்த உடலுக்குத் தான்.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நம் கண்ணின் நினைவு கொண்டு இரத்தங்களில் கலக்கச் செய்து உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்திற்கும் கண் வழி துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பாய்ச்சி அந்த அருள் ஒளியைப் பெருக்கினால் அடுத்து நமக்குப் பிறவி இல்லை என்ற நிலையை அடைய முடியும்.

ஞானிகள் காட்டிய அருள் வழியில் இதை எளிதில் பெறலாம். ஆலயங்களில் இதைத் தான் காட்டப்பட்டுள்ளது. ஆகவே
1,இந்த உடலில் இருக்கப்படும் போதே நம் மனதை ஒன்றாகக் குவித்தல் வேண்டும்
2.அனைவரும் நலம் பெற வேண்டும் அனைவரும் இந்த அருள் ஒளி பெற வேண்டும்
3.அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்தால்
4.நமக்குள் பகை என்ற நிலையோ நோய் என்ற நிலையோ விபரீத விளைவுகளோ வராதபடி தடுத்துக் கொள்ள இது உதவும்.

ஆகவே வாழக்கூடிய இந்தக் குறுகிய காலங்களில் குரு காட்டிய அருள் வழியில் அருளைப் பெருக்குவோம் இருளை அகற்றுவோம்… ஆனந்த வாழ்க்கை வாழ்வோம்… என்றும் ஏகாந்த வாழ்க்கை என்று பிறவி இல்லா நிலை அடைவோம்.