மழை நீர் உருவாகும் விதம்

மழை நீர் உருவாகும் விதம்

 

அகஸ்தியன் தாய் கருவிலிருக்கும் பொழுது நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற்றான்.

அவன் குழந்தையாகப் பிறந்த பின் அவன் உடலில் இருந்து வெளிப்படும் மணங்கள் நஞ்சு கொண்ட உயிரினங்கள் அவனை அணுகாது அவனைப் பாதுகாக்கும் நிலையாக அமைந்தது.
1.அத்தகைய மணம் உண்மையின் உணர்வின் தன்மையை இயக்கி அதன்வழி அவன் வளர்ந்து
2.வான் வீதியின் உணர்வுகளை நுகர்ந்து வளர்ச்சி பெற்றான்.

நஞ்சை வென்றிடும் சக்தியைத் தாயின் கருவிலே பெற்றான். அதன் வழி கொண்டு வான் வீதியிலிருந்து நுகர்ந்தான் என்றால்… எதை…?

நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிருந்து விஷத் தன்மையைத் தான் கவர்கின்றது. பால்வெளி மண்டலங்களாக மாற்றிக் கொள்கின்றது.

பால்வெளி மண்டலங்களாக மாற்றும் பொழுது தூசுகளாக வருகின்றது.
1.இந்தத் தூசிகள் சூரியன் அருகிலே வரப்படும் பொழுது மோதுகின்றது.
2.ஒன்றுடன் ஒன்று மோதி எதிர் நிலையாகி மின்கதிர்களாக மாறுகின்றது.

மின் கதிர்களாக மாறும் ஒளிக் கற்றைகளை வெள்ளிக் கோள் எடுத்துக் கொள்கின்றது. அதிலே விஷத்தின் தன்மை பிரிவதைக் கேதுக் கோள் அந்த விஷத்தினைத் தான் வலு கொண்டு கவர்ந்து கொள்கின்றது. அதே சமயத்தில் இணைத்த உணர்வின் தன்மையை ராகுக் கோள் தனக்குள் கவர்ந்து தன்னுடன் இணைத்துக் கொள்கிறது.

இதிலே வரும் ஓசை… சப்தத்தை செவ்வாய்க் கோள் எடுத்துக் கொள்கின்றது. இதிலே வரும் கழிவு ஆவித் தன்மை தனித்தன்மை அடைந்ததைச் சனிக்கோள் எடுத்துக் கொள்கின்றது.

சாதாரணமாக… நாம் சமையல் செய்யும் போது நாம் பல பொருள்களை எடுத்து வேக வைக்கின்றோம் அப்பொழுது அந்தச் சத்தெல்லாம் ஒன்றுடன் ஒன்று கலந்து விடுகின்றது.

ஆவித் தன்மைகள் மேலே செல்லுகின்றது. ஆவித் தன்மை அடைந்தபின் மேகக் கூட்டத்துடன் இணைந்து கொள்கின்றது.
1.அதில் நீர் என்ற நிலைகள் வந்தாலும் மேகக் கூட்டத்திற்குள் கலந்தபின்
2.அதன் உணர்வின் தன்மையை பல வர்ணங்களில் பல ஒளிக் கற்றைகள் மின்னல்கள் தாக்கப்படும் பொழுது
3.அதில் கலந்து கொண்ட உணர்வின் தன்மையுடன் மோதுகின்றது….
4.அப்பொழுது பளீர்…ர்ர் என்று மின்னல் ஆகிறது… மின் கதிர்கள் அதைக் கருக்குகின்றது.
5.கருக்கிய நிலைகள் கொண்டு ஆவித் தன்மை மேகம் சுத்தம் ஆகின்றது.
6.சுத்தமான பின் இதிலே பிரிந்த உப்புச் சத்தின் தன்மை கலக்கப்படும் பொழுது மழை நீராகப் பெய்கின்றது.

எத்தனையோ வகைகள் இப்படிச் செல்கின்றது.

ஆனால் மனிதனான பின் விஷம் கலந்த உணர்வின் தன்மை (தொழிற்சாலைகளிலிருந்து வருவது) ஆவியாக மாறப்படும் பொழுது வான் வீதியில் சென்று அது மேகக் கூட்டங்களாக மாறி மழை நீராக வரப்படும் பொழுது “கெமிக்கல் மழை…” என்று விஞ்ஞானத்தின் தன்மையால் ஏற்படுகின்றது.

“மின்னலைப் பார்…” என்றார் குருநாதர்

“மின்னலைப் பார்…” என்றார் குருநாதர்

குருநாதர் எம்மைப் பார்த்து “மின்னலைப் பார்…” என்று பல முறை கூறினார். ஆனால் யாம் மறுத்துக் கொண்டே இருந்தோம்.

சந்தர்ப்பத்தால் ஒரு முறை திடீரென்று எமக்கு முன்னால் மின்னல் ஒன்று பாய்ந்தது. “மின்னலைப் பார்த்தாயல்லவா… இதனால் உன் கண் என்ன ஆனது…?” என்று கேட்டார் குருநாதர்.
1.இது போன்ற சில உணர்வுகளை
2.நான் கொடுத்த சக்தியின் துணை கொண்டு உனக்குள் அடக்கி
3.வீரிய உணர்வு கொண்டு பாய்ச்சு…! என்றார்.

மின்னல் கடலில் தாக்கப்பட்டு மணலாக மாறினலும் ஒரு மீன் மின்னலின் உணர்வுகளால் தாக்கப்படும் பொழுது அது “எலக்ட்ரிக் மீனாக” மாறுகின்றது. அதனுடைய அறிவானது வெகு தூரத்தில் இருப்பதையும் அறியக்கூடிய சக்தி பெறுகின்றது.

1.கடலில் மின்னல் தாக்கப்படும் பொழுது மின்னலானது ஒரு மீனைத் தாக்கினால் அந்த மீன் இறந்தாலும்
2.மீண்டும் அது உருப்பெற்று புது விதமான மீனாக உருவாகி
3.வெகு தொலைவில் இருப்பதையும் அறிந்துணரக் கூடிய சக்தி பெறுகின்றது.
4.அப்படிப்பட்ட வளர்ச்சியின் தன்மையில் “டால்பின் மீன்” என்ற நிலைகள் உருவானது.

அதாவது “ஞானத்தைக் கொண்டு வளர்க்கும் சக்தி…” கடல் வாழ் நிலைகளில்தான் உருவானது என்று குருநாதர் எமக்குத் தெளிவுபடுத்தினார்.

இது போன்று
1.நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் ஒளிக்கற்றைகளை அகஸ்தியர் தமக்குள் சுவாசிக்கும் போது அதனின் வளர்ச்சியில்
2.நமது பிரபஞ்சத்தையும் நமது பிரபஞ்சம் பிற மண்டலங்களில் இருந்து தன் உணவை எடுப்பதையும் முழுமையாக அறிந்துணர்ந்தார்.

நமது குருநாதர் அருள் துணை கொண்டு அகஸ்தியர் கண்டுணர்ந்த உணர்வுகளை நாமும் கவர்ந்து நம் உடலை உருவாக்கிய அனைத்து அணுக்களுக்கும் உணவாகக் கொடுத்தால்
1.இந்தப் பிறவியில் அழியா ஒளிச்சரீரம் பெற முடியும்.
2.அகஸ்தியர் கண்ட அண்டத்தின் பேருண்மைகளையும் நாம் அனைவரும் அறிய முடியும்.

இதன் வழி பின்பற்றும் அனைவருக்கும் எமது அருளாசிகள்.

அகஸ்தியனின் புலன்

அகஸ்தியனின் புலன்

 

ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான். சந்தர்ப்பத்திலே அதைப் பார்க்கின்றோம். அந்த வேதனையை நாமும் நுகர நேர்கின்றது… நம்மையும் அது இயக்குகிறது.

அதே போன்றுதான் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற சந்தர்ப்பம் அகஸ்தியனின் தாய் தந்தையருக்குக் கிடைத்தது. எப்படி…?

1.மிருகங்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காகப் பச்சிலை மூலிகைகளைப் பயன்படுத்தினார்கள்.
2.அந்த மணங்களைச் சுவாசித்த பின் அந்தச் சந்தர்ப்பம் பல விஷத் தன்மை முறிக்கும் நிலை வந்தது.
3.அவர்கள் அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள்… ஏனென்றால் மிருகங்கள் தங்களைக் கொன்று விடும்… தன்னைக் காக்க வேண்டும் என்று.
4.அந்தச் சந்தர்ப்பத்தால் தீமைகளை வெல்லும் சக்தி பெற்றார்கள்.

நுகரும் உணர்வுகள் புலனறிவாக எப்படி இயக்குகிறது…? என்று “புலஸ்தியர்…” என்று அக்கால மக்களைச் சொல்வார்கள்.

இன்று விஞ்ஞானிகள் மெய் ஞானிகள் என்று சொல்கிறோம் அல்லவா. அது போல
1.புலனின் உணர்வுகளைத் தெரிந்து கொண்டவர்கள்… புலஸ்தியர்… பூமியின் முதல் மனிதர்கள்.
2.ஒரு தாவர இனத்தைத் தனக்குள் சேர்த்துக் கொண்டால் அதனின் அறிவு என்ன செய்கிறது…? என்ற உண்மையின் இயக்கத்தை அறிந்தவர்கள்.

அந்த ஆற்றல்களை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் காலை துருவ தியான நேரத்திலே அகஸ்தியன் துருவ நட்சத்திரமான அந்தச் சக்தியைத் தொடர்ந்து எடுக்கும்படி சொல்கின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து “உங்கள் உடலுக்குள் அது அணுவாகும் தத்துவத்தைத் தான்…” குரு வழியில் உபதேசிக்கின்றோம்.

எல்லா நேரமும் நாம் தியானம் செய்யலாம். இருந்தாலும் இந்த அதிகாலை நேரத்தில் உங்கள் எண்ணத்தை அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து அந்த உணர்வுகளைக் கலந்து உங்களுக்குள் அந்த உண்மையின் உணர்வை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அறிந்து கொள்ள ஏற்படுத்துகின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கின்றது…? நாம் ஏன் கோபப்படுகின்றோம்…? நாம் ஏன் வேதனைப்படுகின்றோம்…? நாம் ஏன் தீமை செய்கின்றோம்…? என்று சிந்திக்கும் ஆற்றல் கிடைக்கும்.

ஒருவன் தவறு செய்கிறேன் என்றால் அவனை நாம் குற்றவாளியாக ஆக்குவதற்கு மாறாக அவன் உணர்வை நாம் எடுத்தால் பல தடவை அதைக் கேட்டறிந்தால் சந்தர்ப்பம் நம்மையும் குற்றம் இழைக்கக்கூடிய நிலையாக… குற்றம் செய்பவனாக வளர்த்து விடுகின்றது.

நான் தவறே செய்ய மாட்டேன் என்பார்கள். ஆனால் தவறு செய்தவர்களை அடிக்கடி உற்று நோக்கினார்கள் என்றால் இவர்களும் அதைச் செய்ய ஆரம்பிப்பார்கள்.

1.எல்லாமே சந்தர்ப்பம் தான்.
2.ஆகவே நல்ல சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்த வேண்டும்.

பகைமையோ வெறுப்பையோ வேதனையோ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ கோபமோ வரும் பொழுது துருவ தியானத்தில் உங்களுக்குக் கொடுத்த சக்தியின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளை பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தித் தீமையை வலுவிழக்கச் செய்து அந்த உணர்வினை நமக்குள் வலுவாக்கிக் கொண்டே வர வேண்டும்.

தெளிந்து தெளிவான நிலைகள் கொண்டு வாழ்ந்து தீமைகளை அகற்றி வாழ்வதற்குத் தான் குருநாதர் சொன்ன வழியினைப் போதிக்கின்றோம்.

1.அகஸ்தியன் அருளை… அவன் எப்படிப் புலனின் நிலையை அறிந்தானோ
2.அந்த புலனின் தன்மையை நுகரச் செய்து உங்கள் நல்ல புலனாக அறிந்திடும் அறிவின் புலனாக
3.அகஸ்தியனின் புலனை… அவன் ஒளியான உணர்வின் புலனை உங்களுக்குள் செவி வழி கேட்கும் படிச் செய்து
4.உங்களை நுகரச் செய்து உங்கள் ஆகாரத்தின் வழி ரத்தத்தில் கலக்கச் செய்து கொண்டிருக்கின்றேன்.

இதை நீங்கள் தொடர்ந்து வளர்த்துக் கொண்டால் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து கல்கி என்ர நிலையை அடைய முடியும்.

ராமேஸ்வரம் – எண்ணத்தால் உருவாக்கப்பட்ட இந்த உடல்…! தனுசு கோடி – ஒவ்வொரு நிமிடமும் தீமை என்ற உணர்வுகளைத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கொண்டு மாற்றிக் கொண்டே வரவேண்டும்.

1.கோடிக்கணக்கான உணர்வுகள் நமக்குள் தோன்றுகிறது.
2.அதற்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கலந்து கொண்டே வந்தால் தனுசு கோடி.

எத்தனை கோடி உணர்வுகள் வந்தாலும் அதை ஒளியாக மாற்றிக் கொள்ளும் சக்தி பெற்றது துருவ நட்சத்திரம்.
1.அந்த ஆற்றலை நாமும் நிச்சயம் பெற முடியும்
2.அகஸ்தியனின் புலன் கொண்டு அந்த முழுமையை அடைய முடியும்.

உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் ஆவது தான் “சைவ சித்தாந்தத்தின் மூலம்…”

உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் ஆவது தான் “சைவ சித்தாந்தத்தின் மூலம்…”

 

சூரியனின் காந்த சக்தி எதனைத் தனக்குள் கவர்ந்து எடுத்துக் கொண்டதோ அதனின் உணர்வின் இயக்கமாக இயங்குவது காயத்ரி. அன்று ஏழு ரிஷிகள் இந்த உணர்வின் இயக்கங்களைப் பற்றி எழுதியிருந்தார்கள்.

அதற்குப் பின் வந்த வேதாந்தத்தின் நிலைகள் கொண்டு வேதத்தின் தன்மைகள் தாவர இனத்தின் உணர்வுகள் இயங்குவதை ரிக் வேதம் சாம வேதம் யஜுர் வேதம் அதர்வண வேதம் என்று பிரித்தார்கள்.

அதிலே ஒரு தாவர இனம் மற்றொன்றைப் புசிக்கும் பொழுது இந்த உணர்வின் மாற்றங்கள் ஆகும்பொழுது அது அதர்வண வேதம்.

அதையே உயிரினம் மற்றொன்றைக் கொன்று பூசிக்குமே என்றால் உதாரணமாக மானின் உணர்வுக்குள் புலியின் உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது… புலி கொன்று அதைச் செயலற்றதாக ஆக்குகின்றது. இது அதர்வண வேதம்.

வியாசகருக்கு அன்று எழுத்தறிவு இல்லை என்றாலும் வெளிப்படுத்திய உணர்வுகள் அது விரிவாக இல்லை.

1.வேதங்கள் என்பது சுருதியின் இயக்கங்களைக் கண்டுணர்ந்து எழுத்து வடிவில் கொண்டு வந்து
2.மீண்டும் அந்த உணர்வின் ஆற்றலாக இயக்கச் செய்வது தான் அது.

இப்படிப் பிரித்துக் கொடுத்த உணர்வின் இயக்கங்கள் தான் வேதங்கள். ஆக “சைவ சித்தாந்தம்…!” தாவர இனங்கள் எவ்வாறு வளர்ந்தது…? என்றும் உணர்வின் ஆற்றலால் எவ்வாறு நிலை கொண்டது…? என்பதை அகஸ்தியன் அன்று காட்டினான்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று அவன் காட்டிய உணர்வை எல்லோரும் அறிந்திடும் அறிவானாலும்
1.தன்னுடன் இணைந்திடும் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி மகிழ்ந்திடும் உணர்ச்சியைக் கூட்டி
2.அந்த உணர்வைப் பெருக்கி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொள்ளும் நிலைகள் தான் சைவ சித்தாந்தம்.
3.தீமைகள் வரும் பொழுது அதிலிருந்து அகன்றிடும் முறைகளைத் தெளிந்த நிலைகள் கொண்டு சைவ சித்தாந்தம் காட்டியது.

ஆனால் இதையெல்லாம் அன்றைய அரசர்கள் தான் ஆட்சி புரியும் காலத்தில் உண்மைகள் மறைக்கப்பட்டு… இந்த சித்தாந்தத்தில் உண்மை நிலைகளை வேதங்களாக மாற்றப்பட்டு… சுருதியின் தன்மைகளை எழுத்தின் நாதங்களை மாற்றப்பட்டு மாற்றிய நிலைகளைத் தான் இன்றும் நாம் பின்பற்றி வருகிறோம்.

அன்றைய அரசர்கள் ராமன் என்றும் கண்ணன் என்றும் சிவன் என்றும் ஈசன் என்றும் காளி என்றும் மாரி என்றும் மாற்றி
1.அதைத் தனது குலதெய்வங்கள் என்று சித்தாந்தங்கள் பிரிக்கப்பட்டு
2.அரசன் தன்னுடைய ஆட்சிக்காக குலதெய்வங்களாக உருவாக்கப்பட்டு அதனின் நிலையில் தான் ஆட்சி பீடங்கள் வழி நடத்தி வந்தது.

அரசனுக்குக் கீழ் குடிமக்கள் அவன் காட்டியதைப் பதிவு செய்து அந்த உணர்வின் இயக்கங்கள் தான் மதங்களாக அதற்குப் பின் இனங்களாகப் பிரிக்கப்பட்டது. அப்படிப் பிரித்த நிலைகள் கொண்டு ஒருவருக்கொருவர் கொன்றும் ரசிக்கும் உணர்வின் தன்மை வந்து விட்டது

அதாவது…
1.அதர்வண வேதத்தின் அடிப்படையில் எது பரவப்பட்டதோ எவ்வாறெல்லாம் அதைப் பெற முடியும்…?
2.தீமைகளை எவ்வாறு உருவாக்க முடியும்…? என்ற அடிப்படையில்
3.நாட்டு மக்களை எல்லாம் அழிவின் வழிக்குக் கொண்டு சென்றது தான்.

வேதங்கள் உலகம் முழுவதற்கும் உண்டு. அது இல்லாத மதம் இல்லை. மதத்தால் உருவாக்கப்பட்ட உணர்வின் நாதங்களும் அந்த சுருதிகளும் எவ்வாறு நமக்குள் இயக்குகின்றதோ…? அதன் செயலாக்கங்கள் தான் இன்றும் வழி தொடர்ந்து கொண்டுள்ளது.

இதையெல்லாம் உங்களுக்குத் தொட்டுக் காட்டியுள்ளேன். “சிலவற்றைச் சொல்லக்கூடாது…” என்பதற்குத் தான் அதை மறைத்து வெளிப்படுத்துகின்றேன்.

ஆனால்
1.உண்மைகளை உணர்ந்திட வேண்டும்… தெளிந்த நிலையில் மெய் வழியினைப் பெற வேண்டும் என்று எவர் எண்ணுகின்றார்களோ
2.அவர்களுக்கு இது கிடைக்கப் பெற்று… இருளைப் போக்கிப் பொருள் காணும் சக்தியாக விளையும்.

காரணம்… அதர்வண வேதத்தைப் பற்றிய உண்மைகளைச் சுட்டிக் காட்டி விட்டால் மற்றொன்றை அழித்துச் சுகபோகத்தின் அடிப்படைக்கே கொண்டு செல்லும்.

அன்று அரசர்கள் செய்த நிலைகள் தான் “இன்றும் உலகில் போர் முறையாக நடக்கின்றது…!” அதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.
1.அகஸ்தியன் காட்டிய பேருண்மையின் நிலைகளை
2.அந்த மூலத்தின் இயக்கங்கள் எவ்வாறு இயங்குகிறது…? என்பதை அறிந்து கொண்டால் “அதுவே போதுமானது…”

ஆதியிலே அகஸ்தியன் எவ்வாறு விண்ணுலகம் சென்றானோ அந்த வழியில் நாமும் செல்ல வேண்டும்

ஆதியிலே அகஸ்தியன் எவ்வாறு விண்ணுலகம் சென்றானோ அந்த வழியில் நாமும் செல்ல வேண்டும்

 

அன்னை தந்தையர் அருளாசி பெற வேண்டும் என்று அனு தினமும் நாம் எண்ணி அவர்களிடம் அதைப் பெற வேண்டும்.

1.பேரண்டமும் பேருலகமும் உன் அன்னை தந்தையர் தான் என்ற உணர்வு கொண்டு
2.இந்த இணைப்பின் பிணைப்பின் நிலைகள் வரப்படும் பொழுது தான் முழுமை அடைய முடியும் என்று
3.அதை முதலில் வினையாகச் சேர்க்கச் சொல்லி… நமக்குள் ஊழ்வினையாக
4.”அந்த வினைக்கு நாயகனாக நீ ஆக வேண்டும்…” என்று நாரதன் ஞானக் கனியைக் கொடுக்கின்றான் என்று ஞானிகள் அன்று காட்டினார்கள்.

நம் அன்னை தந்தையர் உடலை விட்டுப் பிரிந்து சென்று விட்டால் விநாயகரைப் பார்க்கப்படும் பொழுது எவ்வாறு எண்ண வேண்டும்…? என்ற நிலையையும் அன்று ஞானிகள் உணர்த்தி உள்ளார்கள்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற என் அன்னை தந்தையரின் உயிரான்மாக்கள் எங்கள் குலதெய்மான உயிரான்மாக்கள்
1.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் வட்டத்திலே இணைந்து
2.என்றும் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை அங்கே உந்தி
3.இன்னோரு உடல் பெறும் நிலைகளை மாற்றிப் பிறவாநிலை பெறச் செய்வதற்கு
4.அந்த இணைப்பின் தன்மையைக் கொண்டு வரச் சொன்னார்கள்.

இதை உணர்த்திய ஞானி விண்ணிலே இருக்கின்றான். அவன் உணர்வை நமக்குள் கூட்டி இந்த உணர்வினை நினைவுபடுத்தி இணைத்துக் கொண்டபின் இந்த உயிரான்மா பிறவா நிலை பெற வேண்டும் என்று முதலில் செயல்படுத்தும் முறையைச் சொன்னான்.
1.ஆகவே அந்த வினையை வினைக்கு நாயகனாக ஆக்கி அதனின் உணர்வு கொண்டு
2.”ஒளியின் சரீரமாக வினைக்கு நாயகனாக நீ ஆகு…” என்ற நிலையை உணர்த்தினார்கள்.

உடலை விட்டுச் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் ஒளிச் சரீரம் பெற வேண்டும். என்றும் பதினாறு என்ற நிலையை அடைய வேண்டும். குழந்தையாக வாழும் காலத்தில் எங்களுக்கு வழி காட்டியது போன்று
1.பொருளறிந்து செயல்படும் உணர்வின் சுடராக எங்கள் உணர்வுக்குள் நின்று
2.”எங்களுக்கு என்றென்றும் வழி காட்ட வேண்டும்…” என்று இப்படித்தான்… இந்த வினையை வினைக்கு நாயகனாக்க வேண்டும்.

மனித வாழ்வில் விண் சென்ற மெய் ஞானி எங்கே அடைந்தானோ எங்கள் அன்னை தந்தையர் அந்த எல்லையை முதலில் அடைய வேண்டும் என்று காட்டி… “அதற்குப் பின் தான் நாம் அங்கே செல்ல முடியும்…” என்பதையும் உணர்த்தினார்கள்.

அன்னை தந்தையர் முதலிலே மனிதனாக ஆனார்கள். அடுத்து நம்மை மனிதனாக உருவாக்கினார்கள். மனிதனான பின்
1.மனித நிலையிலிருந்து உணர்வினை ஒளியாக மாற்றித் தான் முதல் மனிதன் அகஸ்தியன் விண் சென்றான்.
2.அணுவின் ஆற்றலை அறிந்தான்… உணர்வின் தன்மை ஒளியாக மாற்றினான்.

அதே வினையைத் தன் அன்னை தந்தையருக்கு அது வினைக்கு நாயகனாக ஆக்க வேண்டும் என்று அவர்களையும் இணைத்தே விண் சென்றான்… ஒருக்கிணைந்து செயல்படும் தன்மையை அங்கே உருவாக்கினான்.

விநாயகரைக் காட்டப்படும் பொழுது அருகிலே அரச மரத்தையும் வைத்திருப்பார்கள். அந்த அரச மரம் விண்வெளியில் தன்னிச்சையாகத் தன் சத்தை எடுத்து வளர்கின்றது. அதே போல்…
1.மனிதன் நீ அரசைப் போல் என்றும் நிலையான நிலையில் நீ ஒங்கி வளர வேண்டும்.
2.அந்த மகரிஷிகளின் ஒளி வட்டத்தில் நீ இணைய வேண்டும் என்று உணர்த்துவதற்கு
3.சூட்சும நிலையில் நடப்பதை உருவத்தைக் காட்டிச் சொல்லின் உணர்வு கொண்டு வினையாகப் பதிவு செய்து
4.வினைக்கு நாயகனாகச் சுவாசித்து அதை உடலாக உனக்குள் சேர்த்துக் கொள் என்று காட்டினான்.

ஓ…ம் நமச்சிவாய சிவாய நம ஓ…ம் என்று மனிதன் எண்ணிய உணர்வுகள் இங்கே இயங்கினாலும் அதைச் சிவமாக்கி சிவத்தின் தன்மை ஒளியின் சுடராக என்றும் நிலையாக ஒளியின் சரீரம் பெற வேண்டும்.

அன்னை தந்தையரை நினைத்து நீ இதைச் செயல்படுத்த வேண்டும் என்று காட்டுகின்றார்கள். கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்.

1.அன்னை தந்தையர் அங்கே ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று எண்ணினால் தான் அது சரியாக இருக்கும்.
2.அவர்கள் முன் செல்கிறார்கள்… அவர்கள் வழியில் அடுத்து நாமும் ஒளிச் சரீரம் பெறுகின்றோம்.

அகஸ்தியனைப் போன்றே இந்தப் பூமியை மீண்டும் நாம் சமப்படுத்த வேண்டும்

அகஸ்தியனைப் போன்றே இந்தப் பூமியை மீண்டும் நாம் சமப்படுத்த வேண்டும்

 

சிவன் ஏனோ ஆலகால விஷத்தைக் கழுத்தில் நிறுத்திக் கொண்டான் என்று சொல்வார்கள். நம் பூமி தான் சிவம்… இதற்குள் உருவானது தான் அனைத்தும்.

சிவம் இல்லையேல் சக்தி இல்லை.
1.துருவத்தின் வழி விண்ணுலக ஆற்றலைப் பூமி நுகர்கின்றது
2.விஷத்தின் தன்மை பூராம் அங்கே அடக்குகின்றது.

வெப்பத்தின் தன்மை கொண்டு ஆவியாக மாறுகின்றது. இந்த உணர்வின் தன்மை மற்றொன்றுடன் சேர்க்கின்றது. சேர்த்து அங்கே திரளுகின்றது… வெண்ணை ஆகின்றது.

இப்படி விளைந்தது பூராம் எப்படி உருவங்களாக உருவானது என்று சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

அதாவது…
1.மேரு என்ற மலையை மத்தாக வைத்து அப்படி என்றால் பூமி சுற்றுகின்றது.
2.வாசுகி என்ற பாம்பைக் கயிறாக வைத்து என்றால் விஷத்தின் தாக்குதல்… அது தொடர்ந்து தாக்கும் போது தான் பூமியைச் சுழற்றுகின்றது.

துருவத்தின் வழி விண்ணுலக ஆற்றல்களை நுகரப்படும் பொழுது அது சிவம்… பார்வதி. அதன் வழி உள்ள வந்து அங்கே இணையும் பொழுது சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் (பனிப்பாறையாக உறையும் இடம்).

அந்த இடத்திலே சக்திகள் சேமிக்கப்படும் பொழுது நீளமாக வளர்ந்து கொண்டே வருகின்றது. இது வளர்ச்சியாகி அப்படியே சென்று விட்டால் தலை குப்புறக் கவிழ்ந்து விடும்.
1.அகஸ்தியனால் ஆரம்பத்தில் இது தடுக்கப்பட்டு மாற்றப்பட்டது
2.ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய காலகட்டத்திலே பல அகஸ்தியர்கள் தோன்றினால் தான் மீண்டும் உலக மாற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியும்.

அணுக்கதிரியக்கத்தைப் ஒரு பக்கத்திலே வெடிக்கச் செய்தால் பூமியின் ஈர்ப்பு வழி கூடி மேகங்கள் வரப்படும் போது காந்த ஈர்ப்பின் தன்மை தடுக்கப்பட்டால் பூமியை மாற்றலாம்.

ஆனால் இவர்கள் எடுத்த அணு விஷக் கதிரியக்கம் இங்கே பரவும். இதிலேயும் லாயக்கில்லை அதிலேயும் லாயக்கில்லை. கதிரியக்கங்களால் அடர்த்தியாக முடியும். சூரியனுடைய ஒளிக்கதிர்கள் மாற்றப்படும் பொழுது பூமியைத் திசை மாற்றலாம்.

ஆனால் அணுக்கதிரியக்கங்கள் இங்கே பரவினால் யார் வாழ முடியும்…? திசை திருப்பலாம்… விஷத் தன்மைகள் தான் பரவும்.

1.சூரியனின் தொடர் கொண்டு தன் எண்ணத்தால் அதை குறுக்காட்டப்படும் பொழுது அகஸ்தியன் அன்று திசை திருப்புகின்றான்.
2.அப்படித் திருப்பிய நிலைகள் தான் அங்கே ஒரு அண்டம் வருகின்றது… இது கரைகிறது.

இப்படி அவன் வளர்த்துக் கொண்டான்.

இன்னொரு காலம் இந்தப் பூமிக்குள் அது போல் வரும். அதிலே நாம் தப்பித்தால் நல்லது. தப்புவிக்க யாம் சொல்வது என்ன…?

அகஸ்தியன் அவன் தாய் கருவிலே எவ்வாறு வளர்ச்சி பெற்றானோ அதைப் போல் கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கும் அதே சக்தியை ஊட்ட வேண்டும்.

அந்தக் கருவிலே உருவான சிசுக்களுக்குள்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி விளைய வேண்டும்
2.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.சப்தரிஷி மண்டலங்களின் சக்தி விளைய வேண்டும்
4.உலக ஞானம் பெற வேண்டும் என்று கருவுற்ற தாய் ஊட்டினால்
5.அந்த சக்தி மீண்டும் வந்து அந்த அகஸ்தியன் பெற்ற ஆற்றலைப் பெறும் தகுதியாக வருகிறது.

அவர்களுக்கு இந்த உபதேசத்தை கொடுத்துக் கருவிலேயே பூர்வ புண்ணியமாகக் கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறோம்.

ஆக அகஸ்தியநின் ஆற்றலைப் பெறும்படி செய்து பூமியின் மாற்றங்களை நாம் சீர்படுத்திக் கொள்ள முடியும்.

கணவன் மனைவியாக இணைந்தால் தான் ரிஷித் தன்மை பெற முடியும்

கணவன் மனைவியாக இணைந்தால் தான் ரிஷித் தன்மை பெற முடியும்

 

27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களில் இருந்து வரக்கூடிய விஷமான சக்திகளைத் தனக்கு உணவாக எடுத்து அதை மாற்றி அமைத்துத் துகள்களாக அனுப்பப்படும் பொழுது ஒன்றுக்கொன்று எதிர்மறையானால் பூமிக்குள் வரும் போது மின்னல்களாகப் பாய்கின்றது.

கடலிலே தாக்கப்பட்டால் மணலாக மாறுகின்றது. அதே விஷத்தின் தன்மை மற்ற தாவரங்களில் எதிர்நிலையாகும் பொழுது அது கருகுகின்றது. இதன் உணர்வுகள் பூமியின் ஈர்ப்புக்குள் நடு மையம் சென்றால் அந்த உணர்வின் வேகத்தால் பாறைகள் உருகுகின்றது. பின் நிலநடுக்கம் ஆகின்றது. இது எல்லாம் மின்னலால் ஏற்படக்கூடிய நிலைகள்.

1.ஆனால் இத்தகைய நஞ்சையும் தாய் கருவிலே பெற்ற பச்சிலை மூலிகைகளின் சக்திகளால் அடக்கியவன் அகஸ்தியன்.
2.அவன் கண்ட உண்மையின் உணர்வின் தன்மை மின்னல்களில் இருந்து வரக்கூடிய ஆற்றல்கள் அவனுக்குள் தணிகின்றது.

மின்னல்கள் பிரபஞ்சத்தில் பாயும் பொழுது அதை வெள்ளிக் கோள் கவர்ந்து கொள்கின்றது.
1.அந்த உணர்வின் தன்மையை அகஸ்தியன் நுகர்ந்து உடலுக்குள் பெருக்கி
2.உயிரைப் போன்றே உணர்வின் அறிவை வளர்த்துக் கொள்கின்றான்.

மின்னல் கடலிலே தாக்கப்பட்டால் மணலாக மாறுகிறது. ஆனாலும் அந்த மின்னலின் வீரிய உணர்வுகள் பாயும் பொழுது… சந்தர்ப்பம் மீன்கள் அதன் அருகில் சென்றால் அந்த ஒளிக்கற்றைகள் அதற்குள் பாயப்பட்டு அது எலக்ட்ரிக் மீனாக மாறுகின்றது.

மின்னல் தாக்கும் பொழுது எப்படி ஒளிக்கற்றைகள் பரவுகின்றதோ மீன் இனங்களுக்குள் இது பட்டபின் அது நீருக்குள் உராய்ந்து செல்லும் பொழுது எலக்ட்ரிக் மீனாக மாறுகின்றது.
1.இயற்கையின் நிலைகள் இப்படி மாறுவது போல
2.அந்த அகஸ்தியன் பெற்ற அருளை நாம் நுகர்ந்தால் “நாமும் ஒளியாக முடியும்…”

அவன் துருவனானான். பின் பதினாறாவது வயதில் திருமணம் ஆகின்றது. தான் கண்ட உண்மைகளை எல்லாம் தன் மனைவிக்கு எடுத்துச் சொல்கின்றான். மனைவியும் அதையெல்லாம் தனக்குள் பதிவாக்குகின்றது.

பதிவான நிலைகள் கணவன் மேலும் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணுகின்றது. அகஸ்தியன் தான் கண்ட உண்மைகளை எல்லாம் தன் மனைவி பெற வேண்டும் என்று… இப்படி அந்த இரண்டு பேருமே இந்த உணர்வை வளர்த்து ஒரே உணர்வாக எண்ணப்படும் பொழுது ரிஷித்தன்மை பெறுகின்றார்கள்… துருவ மகரிஷியாகின்றார்கள்.

அந்த ரிஷி என்ற நிலை வரவேண்டும் என்றால் “கணவன் மனைவியாக இருந்தால் தான் முடியும்…”

செடி கொடிகளில் ஆண் பெண் என்ற நிலையில் இணைந்தால் தான் தன் இன வித்துக்களை உருவாக்க முடியும். உயிரினங்களிலும் ஆண் பெண் என்ற நிலைகள் இணைந்தால் தான் இனத்தின் தன்மை விருத்தி செய்ய முடியும்.

தீமைகளை எல்லாம் வென்றது துருவ நட்சத்திரம். அகஸ்தியன் எப்படித் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானானோ கணவன் மனைவி ஒன்றி ஒளி நிலை பெற்றார்களோ அதிலிருந்து வெளிப்படும் சக்திகளை சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது.

உங்களுக்குள் அதைத்தான் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். அதை எண்ணி நீங்கள் பெற்று உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
1.கண்களை மூடிப் புருவ மத்தியில் எண்ணி உயிரான ஈசனிடம் வேண்டித் தியானியுங்கள்.
2.உங்கள் புருவ மத்தியில் “மின் அணுக்கள் உருவாகும்…”
3.நுகர்ந்து உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது உடலுக்குள்ளும் ஒளியான உணர்வுகள் தோன்றும்.
4.உடலிலிருந்து வெளிச்சங்கள் வெளி வரும்… சிலருக்கு இது தெரியும்.
5.சிலருக்கு மகிழ்ச்சியான உணர்வுகளை ஊட்டும்.

அகஸ்தியன் அமர்ந்த இடங்களுக்கெல்லாம் குருநாதர் எம்மை அழைத்துச் சென்று காட்டினார்

அகஸ்தியன் அமர்ந்த இடங்களுக்கெல்லாம் குருநாதர் எம்மை அழைத்துச் சென்று காட்டினார்

 

சில மலைப் பகுதிகளுக்கெல்லாம் குருநாதர் எம்மை அழைத்துச் சென்று “அக்காலங்களில் அகஸ்தியன் அமர்ந்த பாறைகளை…”
1.பாபநாசத்தில் பெரும்பகுதி சுழன்ற இடங்களையும்
2.தலைக்காவிரியில் அகஸ்தியன் சுழற்சி வட்டம் ஜாஸ்தி… அந்த இடங்களையும்
3.இமயமலையில் அவன் சுழன்ற இடங்களையும் அகஸ்தியன் வந்து சென்ற இடங்களையும் குருநாதர் காட்டுகின்றார்.
4.வேகாக்கலை என்ற நிலைகள் கொண்டு அழிந்திடாத நிலைகளாக அவன் வெளிப்படுத்தியது இன்றும் அங்கே உண்டு.

ஆனால் சாகாக்கலை என்று மந்திர ஒலிகளால் செயல்பட்டவர்கள் உணர்வுகள் பூமிக்குள் படர்ந்திருந்தாலும் அது எல்லாம் அழிந்து விடுகின்றது. அதே சமயத்தில் சாகாக்கலையில் விஷத்தன்மையே படர்கின்றது என்று தெளிவாகக் காட்டுகின்றார்.

வேகாநிலை அடைந்த மகரிஷிகள்… உயிர் ஒளியின் துடிப்பாக எப்படி இருக்கின்றதோ…? அதைப் போல தன் உணர்வினை உயிரின் உணர்வின் தன்மைகள் கொண்டு இணைக்கும் சக்தியாக… நஞ்சினை அடக்கி ஒளியாக்குகின்றார்கள்.

வைரம் நஞ்சினை அடக்கி ஒளிச்சுடராக இருப்பது போன்று
1.உடலில் இருக்கும் உணர்வுகள் அனைத்தையும்
2.வாழ்க்கையில் வரும் நஞ்சான உணவுகள் நல்ல உணர்வுக்குள் கலந்தாலும்
3.அந்த ஞானி விண்ணுலக ஆற்றலை எடுத்து அதன் மேல் “அடுக்கடுக்காகப் பரப்பி…” நஞ்சினை ஒடுக்கி
4.இந்த உணர்வின் தன்மையை மேலோங்கச் செய்து இந்த உணர்வின் ஒளி அலையாகத் தன் உயிருடன் ஒன்றி
5.துருவத்தைக் கண்டுணர்ந்து… துருவம் நுகரும் நஞ்சினைத் தனக்குள் உணவாக உட்கொண்டு
6.அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் பரப்பி… அதனின் துணை கொண்டு ஒளியின் சிகரமாகி
7.அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்து… அந்தத் துருவத்தில் வரும் உணர்வையே ஒளியாக மாற்றி
8.எந்த துருவத்தின் வழியில் ஈர்ப்பாகச் சக்திகளை எடுத்தானோ பூமிக்குள் வரும்… அந்த நஞ்சினை மற்றது விளையாது
9.அதையே தனக்குள் ஒளியின் சிகரமாக மாற்றி அமைத்து இன்றும் சுழன்று கொண்டிருக்கின்றான்…
10.அகஸ்தியன் துருவ மகரிஷியாக… துருவ நட்சத்திரமாக என்று…! இதையெல்லாம் குருநாதர் உணர்த்திக் காட்டுகின்றார்.

அவனைப் பின்பற்றிவர்கள் விண்ணுலகில் சப்தரிஷி மண்டலங்களாகத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியாக எவ்வாறு சுழன்று கொண்டிருக்கிறார்கள்…? என்பதையும் காட்டுகின்றார்.

மனிதனின் நிலைகளில் முழுமை பெற்று “உயிருடன் ஒன்றி ஒளிச் சரீரமாக எவ்வாறு அங்கே சென்றடைந்தார்கள்…?” என்று உணர்த்திவிட்டு அவர்கள் சென்ற எல்லையை நாம் அனைவரும் அடைய வேண்டும் என்பதையும் குருநாதர் காட்டுகின்றார்.

அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற சக்திகள்

அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற சக்திகள்

 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி இன்றும் ஒளியின் சரீரமாகவே இருக்கின்றான். அவன் ஆரம்பத்திலே எடுத்துக் கொண்ட உணர்வு எது…?

அகஸ்தியனின் தாய்
1.கொடூர மிருகங்களிடம் இருந்தும் விஷ ஜெந்துக்களிடமிருந்தும் தன்னைப் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணி
2.பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் குகைகளில் பரப்பி வைத்துக் கொள்கின்றார்கள்.

அன்று வீடு வாசல் கிடையாது… குகைகளில் தான் வாழ்ந்து வந்தார்கள். யானைகள் போன்ற கொடூர மிருகங்கள் வந்து விடும்… தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகக் குகைகளில் படுத்துத் தூங்கியவர்கள்.

இப்பொழுதும் நாம் காணுகின்றோம் பாம்பாட்டி கையிலே ஒரு வேரை வைத்துக் கொள்கின்றான். படமெடுக்கும் பாம்பு அப்படியே நின்று விடுகின்றது.

தேனை எடுத்துப் பழகியவர்கள் கையிலே ஒரு பச்சிலையைத் தடவிக் கொண்டு செல்கின்றார்கள். சும்மா கையை விட்டுத் தாராளமாகத் தேனை எடுக்கின்றார்கள்.

ஆனால் நாம் கையை வைத்தால் “கொட்டு… கொட்டு…” என்று கொட்டி நம்மைக் கொன்றுவிடும்.

அந்தப் பச்சிலை மணம் கண்ட பின் தேனீக்கள் ஒடுங்குகின்றது. தேனை லேசாக எடுத்துக் கொண்டு வருகின்றார்கள். இந்தப் பச்சிலைகளுக்குச் சில கடுமையான விஷங்கள் ஒடுங்குகின்றது.

யானை மிரட்டி என்று ஒரு பச்சிலை இருக்கின்றது. அதைக் கையிலே தேய்த்துக் கொண்டு நாம் சென்றால் இந்த மணத்தை கண்டால் யானை பிளிறிக் கொண்டு ஓடும்.

காடுகளில் புலையர்கள் பச்சிலையின் நுணுக்கத்தைத் தெரிந்தவர்கள் கையிலே கசக்கிக் கொண்டு யானைக் கூட்டத்திற்குள் செல்வார்கள். இவர்களைக் கண்டாலே அது ஒதுங்கிவிடும்… அருகில் வராது.

புலி போன்ற மிருகங்களுக்கும் அதற்கென்று பச்சிலைகளை உபயோகித்தார்கள் என்றால் அதுவும் ஒன்றும் செய்வதில்லை… விலகிச் சென்று விடுகின்றது.

அகஸ்தியனின் தாய் தந்தையர் கணவன் மனைவியாக வாழ்ந்து வரும் காலங்களில் கர்ப்பமுறுகின்றார்கள்.
1.விஷத்தை முறிக்கும் மணங்களை இவர்கள் உடலில் பூசியது குகைகளில் பரப்பியது இவர்கள் சுவாசத்திலே நுகரப்பட்டு
2.கருவிலிருக்கக்கூடிய அகஸ்தியனுக்குள்ளும் இது பதிவாகின்றது.
3.விஷத்தை முறிக்கக் கூடிய சக்தி அந்தக் குழந்தைக்குத் தாய் கருவிலே வளரும் பொழுதே கிடைக்கின்றது.
4.அந்தப் பச்சிலைகளின் சக்தி அதற்குக் கிடைக்கின்றது.

அந்தச் சக்திகள் எல்லாம் விளைந்து தான் அகஸ்தியன் குழந்தையாகப் பிறக்கின்றான். அவன் பிறந்த பின் ஈயோ கொசுவோ தேளோ பாம்போ புலியோ நரியோ யானையோ இவன் மணத்தைக் கண்டால் அப்படியே பதும்பி விடுகின்றது. ஒன்றும் செய்வதில்லை.

இன்று விஞ்ஞான அறிவில் கூட சில நிலைகளைச் செயல்படுத்துகிறார்கள். காட்டு விலங்குகளுக்கு எதிர்மறையான இன்ஜெக்ஷனைத் தன் உடலில் போட்டுக் கொள்கின்றார்கள். போட்டுக் கொண்டு இவர்கள் காட்டிற்குள் தாராளமாகச் செல்கின்றார்கள்.

புலியோ யானையோ இவர்கள் அருகில் வருவதில்லை. ஏனென்றால் அதற்கு எதிர்மறையான மருந்தை உடலில் செலுத்திக் கொள்கின்றார்கள்.

சிலர் இது போன்ற அதிசயமான செயல்களைச் செய்வதாக டிவியில் காண்பிப்பார்கள். காட்டிற்குள் சென்று விஷப் பாம்புகளைக் கையில் சாதாரணமாக எடுத்துக் கொண்டு காண்பிப்பார்கள்.
1.நமக்குப் பார்த்தால் பயமாக இருக்கும்.
2.ஆனால் அந்த இன்ஜெக்ஷனைப் போட்டுக் கொண்டுதான் அதைக் கையில் எடுக்கின்றார்கள்.
3.இந்த வாசனையைக் கண்டு அது ஒன்றும் செய்வதில்லை.

விஞ்ஞான அறிவில் இன்று இதைச் செயல்படுத்துகின்றார்கள்.

நல்ல பாம்பு அல்லது அதைக் காட்டிலும் கடுமையான விஷம் கொண்ட பாம்புகளைக் கூடப் பிடித்து அதனுடைய விஷங்களைச் சேமித்து எடுக்கின்றார்கள்.

ஒரு விஷத்திற்கு ஒரு விஷம் ஆகாது அதை எடுத்து மற்ற மருந்துகளுடன் சேர்த்து நோயை நீக்கும் மருந்தாகப் பயன்படுத்துகின்றார்.

பாம்புகளிலேயே ஒரு பாம்புக்கு இன்னொரு பாம்புக்கும் ஆகாது… ஒன்று மற்றொன்று விழுங்கி விடும். ஆனால் இந்த விஷம் அதை ஒன்றும் செய்வதில்லை.

ஆனால் நல்ல பாம்பு தன் உடலில் தானே கொத்திக் கொண்டால் விஷம் பாய்ந்து அது மரணம் அடைந்து விடும். உடலின் உணர்வுகள் வேறு… உடலில் இருக்கக்கூடிய விஷங்கள் வேறு.

பாம்பினுடைய பற்களிலே இருக்கக்கூடிய விஷம் தனித் தன்மையாகி எதை உணவாக உட்கொள்ள வேண்டும் என்று அது விரும்புகிறதோ அந்த உயிரினத்தில் இந்த விஷத்தைப் பாய்ச்சுகின்றது.
1.அதைச் சாப்பிட்ட பின் அதற்குச் சீக்கிரம் ஜீரணம் ஆகின்றது.
2.அந்த விஷமே அதற்குப் பாதுகாப்பாகின்றது.
3.ஆனால் அந்தப் பாம்பு தன் உடலில் தானே கடித்துக் கொண்டால் மரணம் அடைந்து விடும்.

உடலுக்கும் விஷத்திற்கும் சம்பந்தமில்லை… உற்பத்தியாகும் விஷத்தை உணவாக உட்கொண்டால் ஒன்றும் செய்வதில்லை.

பாம்பின் விஷத்தை மனிதர்கள் சாப்பிடலாம். ஆனால் சாப்பிட்ட பின் யாரையாவது நகத்தால் கிள்ளினால் போதும். இந்த விஷம் அங்கே பாய்ந்து அவர் இறந்து விடுவார்.

பாம்பு விஷத்தைக் குடிக்கும் பொழுது உடலுக்குள் புண் இருக்குமானால் நாமும் இறந்து விடுவோம். ஏனென்றால்
1.ஜீரணிக்கக் கூடிய பாதையில் செல்லும் நிலைகள் வேறு…
2.நேரடியாக ரத்தத்தில் கலக்கும் நிலைகள் வேறு…!

நல்ல பாம்பு கடித்து விட்டது என்றால் டக்… என்று வாயிலே உறிஞ்சுவார்கள். உடலுக்குள் மேலே ஏறாதபடி உறிஞ்சித் துப்பி விடுவார்கள். ஆனால் வாயிலே அவர்களுக்குப் புண் இருந்தால் அவர்கள் மரணமடைந்து விடுவார்கள்.

ஆனால் விஷத்தை விழுங்கினாலும் ஒன்றும் செய்யாது. அதை ஜீரணிக்கக் கூடிய நிலையாக வந்து விடும். இயற்கையின் நிலைகள் இப்படி எத்தனையோ வித்தியாசமான நிலைகள் வருகின்றது.

1.இதை எல்லாம் எதற்குச் சொல்கிறோம் என்றால்
2.கருவிலேயே விஷத்தை முறித்திடும் சக்தியாக வந்தவன் தான் அந்த அகஸ்தியன்.

ஒரு தாய் இங்கே வந்திருந்தார். அந்த அம்மாவிற்கு இரண்டு குழந்தைகள். அவர் குடும்பத்திலே யாருக்கும் சர்க்கரை வியாதி கிடையாது. ஆனால் அவரின் சொந்தக்காரருக்குச் சர்க்கரை நோய் இருந்தது,

இரண்டாவது குழந்தை அதன் கருவில் இருக்கப்படும் பொழுது அந்தச் சர்க்கரை நோயாளிக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் அந்தத் தாய் செய்கின்றது.
1.பரிதாபப்பட்டு அந்த நோயாளியின் உணர்வுகளை இது நுகர்கின்றது.
2.நுகர்ந்த பின்… கருவிலிருக்கும் குழந்தைக்கு அந்த உணர்வுகள் இணைந்து
3.பிறந்த பின்பு பார்த்தால் சர்க்கரை நோய் வந்து விட்டது.

மூன்று வயதிலேயே சர்க்கரை நோயால் மிகவும் அவதிப்படுகின்றது. இரண்டு நேரம் இன்சுலின் ஊசி போட வேண்டும். போடவில்லை என்றால் ஒன்றும் ஆவதில்லை. திடீரென்று அந்தக் குழந்தைக்குப் பசி எடுக்கும்.

குழந்தை தவறு செய்ததா…? இல்லை. சர்க்கரைச் சத்து உள்ள நோயாளியைத் தாய் உற்றுப் பார்த்து நுகர்ந்தது. கருவிலே பூர்வ புண்ணியமாகக் குழந்தைக்கு அது சேர்கின்றது.

தாய்க்கு ஊழ்வினை என்ற பதிவாகிறது. என் பிள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே இப்படி ஆகிவிட்டதே என்று அது வேதனைப்படுகின்றது. பின் அதற்கும் அந்தச் சர்க்கரை நோய் வரும்.

தாய்க்கு முதலில் வரவில்லை… குழந்தைக்குத் தான் வந்தது. ஆனால் நாளடைவில் பையனுக்கு இப்படி இருக்கிறது என்று தனக்குள் எண்ணி அது வளர்ச்சியாகும் போது தாய்க்கும் அந்த நோய் வருகிறது.

சில குடும்பங்களில் இயற்கையில் இப்படி நடக்கும் பொழுது இது “பரம்பரை நோய்…” என்று சொல்வார்கள். வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் அதே எண்ணினால் எல்லோருக்கும் சாடத் தொடங்கி விடுகிறது.

இங்கே யார் தவறு செய்தது…?

1.கர்ப்பமாக இருக்கக்கூடிய தாய் எந்தெந்த உணர்வுகளை ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்கள் உற்று நோக்கி
2.தனக்குள் கூர்மையாகப் பதிவு செய்கின்றதோ அதற்கொப்பத்தான் குழந்தையினுடைய குணாதிசயங்களும் உடல் நலமும் மற்ற எல்லாமே…!
3.அதைத் தான் பூர்வ புண்ணியம் என்று சொல்வார்கள்.

வசிஷ்டரும் அருந்ததியும்

வசிஷ்டரும் அருந்ததியும்

 

அகஸ்தியன் அவன் வளர்ச்சியில் பதினாறு வருடங்கள் வளர்ச்சி பெறுகின்றான். பதினாறாவது வயதில் அக்கால மக்கள் அவனுக்குப் திருமணத்தைச் செய்து வைக்கின்றார்கள். திருமணத்தைச் செய்து வைக்கும் பொழுது கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாகி அதன் வழியில் அவர்கள் வாழ்கின்றார்கள்.

துருவன் தான் கண்ட உண்மைகளைத் தன் மனைவி பெற வேண்டும் என்று உணர்வுப் பூர்வமாகச் சொல்லுகின்றான்.

அவனுடைய மனைவி கேட்கின்றது. தனக்குள் பதிவு கொண்ட உணர்வின் துணை கொண்டு “விண்ணை நோக்கி ஏங்குகின்றது…” இவன் கண்ட பேருண்மைகளை அவளும் காணுகின்றாள்… அறிவுபூர்வமாக அறிகின்றாள்.

தன் கணவனால் பெற்ற சக்தியால் பேரின்பப் பேரானந்த நிலைகள் அடைகின்றாள்.

1.இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை உணரும் பருவமும்
2.அதை நுகர்ந்தறிந்து தனக்குள் மகிழ்வுறும் உணர்வாக வெளிப்படுத்துவதையும்
3.நஞ்சினை ஒடுக்கும் ஆற்றலாக… “தான் நுகரும் உணர்வு ஒளிக் கற்றைகளாகத் தன் உடலில் இருந்து வெளிப்படுவதையும்…” உணர்கின்றாள்.

இவ்வாறு தன் கணவனால் பெற்ற சக்தியால் இந்தப் பிரபஞ்சத்தை அறிந்திடும் உணர்வுகள் தனக்குள் வளரும் தன்மை பெற்று…
1.கணவன் அந்த உயர்ந்த நிலைகளை மேலும் மேலும் பெற வேண்டும் என்ற
2.ஏக்க உணர்வுகளைத் தனக்குள் வளர்த்துக் கொள்கின்றாள்.

துருவனோ தான் உபதேசித்த உணர்வுகளைத் தனக்குள் விளையச் செய்து அதன்வழி தனக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வுகளைக் கண்டு அவனும் பேரானந்தப் படுகின்றான். அப்பொழுது இரு மனமும் ஒன்றாகி “ஒருவரை ஒருவர் உயர்த்தி எண்ணும் நிலை வருகின்றது…”

ஒருவர் சொல்லை ஒருவர் உயர்த்தும் நிலை வரும் பொழுது தான் அதற்கு நளாயினி என்று காரணப் பெயரை வைக்கின்றார்கள். தன் கணவன் சொல்லைச் சிரமேல் கொண்டு அதன் வழி நடப்பதை நாமெல்லாம் புரிந்து கொள்வதற்காக நளாயினி என்று காரணப்பெயரை வைக்கின்றார்கள்.

தன் கணவன் சொன்ன சொல்லைத் தனக்குள் உயர்த்தி அந்த உணர்வின் சத்தைத் தனக்குள் வளர்த்து இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை உணர்வதோடு மட்டுமல்லாது அகண்ட உலகில் நட்சத்திரங்கள் எவ்வாறு உணவை உட்கொள்கின்றது…? என்பதை அறியும் பருவம் வருகின்றது.

அந்த நட்சத்திரங்கள் உணவாக உட்கொண்ட உணர்வுகள் நமது பிரபஞ்சத்தில் பரவும் பொழுது சூரியன் அதை உணவாக உட்கொள்வதையும் அதன்வழி அது வளர்ச்சி பெற்று வெளிப்படும் உணர்வுகளால் கோள்களும் அணுக்களும் எப்படி உருப்பெறுகின்றது…? என்ற நிலையையும் அவள் அறிகின்றாள்.

1.தான் கண்ட உண்மையைத் தன் கணவருடன் ஒன்றி அந்த உண்மையின் தன்மைகளைச் சொல்வதும்
2.இருவருமே ஒன்றிய நிலைகள் கொண்டு அதன்ன் வழியில்
3.அகஸ்தியன் தன் மனைவியை உயர்த்தி எண்ணுவதும்… மனைவி உயர்ந்த சக்தி பெறுகிறதென்றும் உணர்கின்றான்.

அந்த உணர்வுகள் அனைத்தும் அவர்கள் உடல்களில் விளையப்பட்டு இரு உயிரும் ஒன்றி வாழும் நிலை பெறுகின்றது. இரு உயிரும் எதைக் கவர்ந்ததோ அதைக் கருவாக உருவாக்கும் திறன் பெறுகின்றார்கள்.

துருவனின் உடலில் விளையும் உணர்வுகள் துருவ மகரிஷியின் மனைவியின் உடலிலும் விளைகின்றது.

அதற்கு அருந்ததி என்று, காரணப் பெயரை வைக்கின்றார்கள். தனக்குள் கவர்ந்து கொண்ட சக்தி அதனுடன் இணைந்து வாழ்ந்திடும் நிலையை அருந்ததி என்று பெயரை வைக்கின்றார்கள்.

வசிஸ்டரும் அருந்ததியும் என்றால் வசிஸ்டர் ஆண்பால் அருந்ததி தனக்குள் கவர்ந்து கொண்ட உணர்வுகள்.
1.இருவரும் ஒன்றாக இணைந்து அந்த உணர்வின் தன்மையை இரண்டறக் கலந்து ஒன்றாக
2.உயிருடன் இணைக்கும் பருவம் பெறுகின்றார்கள்.

உயிருக்குள் வெப்பம் என்ற நிலைகள் இருப்பினும் ஈர்க்கும் காந்தம் பெண்பால் அருந்ததி என்றும் தன்னுடன் இயக்கும் உணர்வுகளை வசிஸ்டர் என்றும் காரணப் பெயரை வைக்கின்றார்கள்.

இவ்வாறு வளர்ந்த உணர்வுகள் “சத்தியவான் சாவித்திரி…” உயிருடன் ஒன்றிய உணர்வாக மரணமில்லாப் பெரு வாழ்வு வாழும் தகுதி பெறுகின்றார்கள்.

இதைத்தான் நமது ஞானிகள் நாமெல்லாம் கண்டுணர்வதற்குச்
1.சந்தர்ப்பத்தால் ஏற்படும் இணைப்பும் அதனால் உருப்பெறும் சக்தியும்
2.அவைகளுக்குக் காரணப் பெயர்களை வைத்து அழைத்து அகஸ்தியன் தொடர்களை நாமும் கண்டுணரும்படிச் செய்கின்றார்கள்.

அவ்வழியில் வளர்ந்தவர்கள்தான் எதைக் கூர்மையாக எண்ணி அந்த உணர்வினை இருவரும் ஒன்றாக இணைந்துப் பெற்றனரோ… இணைந்து இன்று துருவ நட்சத்திரமாக வாழ்கின்றார்கள்.

துருவ நட்சத்திரமாக வாழ்ந்தாலும் அகண்ட உலகின் தன்மையைத் தன் உணர்வுக்குள் பெறும் தகுதியும் பெறுகின்றனர்.

நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து தனக்குள் வரும் நிலையைக் கவர்ந்து அது உமிழ்த்தும் உணர்வலைகள் பால்வெளி மண்டலங்களாகப் படர்கின்றது. அணுக்களின் தன்மைகள் சுழற்சியில் வரப்படும் பொழுது தூசிகளாக மாறுகின்றது.

இப்பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு பொருளைக் காற்று அழுத்ததால் அழுத்தப்படும் பொழுது அதை மிகவும் நுண்ணிய தூசிகளாக (பவுடர்) மாற்றுகின்றார்கள்.

அகஸ்தியரும் அவர் மனைவியும், துருவ நட்சத்திரமாகும் பொழுது
1.பிற மண்டலங்கள் அகண்ட உலகில் அது பெறும் உணர்வுகள் தூசுகளாக வருவதையும்… பிரபஞ்சத்தில் அது பரவுவதையும்
2.பிரபஞ்சத்தில் பரவுவதை நமது பூமி துருவப் பகுதியில் ஈர்க்கப்படும் பொழுது இடைமறித்து அந்த உணர்வின் தன்மையை
3.எப்படி, நமது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் துருவப் பகுதியில் இடைமறித்து அதைத் தனக்குள் எடுத்து வளர்க்கின்றதோ
4.அதைப் போன்றுநமது பூமியில் விளைந்த இவர்கள் இருவரும் ஒன்றானபின்
5.அதைக் கருவாக்கும் நிலைகள் பெற்று ஒளியின் சுடராக இன்றும் மாற்றிக் கொண்டே உள்ளார்கள்.

அகஸ்தியரும் அவர் மனைவியும் இருவரும் இந்தப் பிரபஞ்சத்தின் உணர்வை ஒளியின் அணுவாக மாற்றியது போன்று அக்காலங்களில் பெற்ற மற்ற மக்கள் ஆறாவது அறிவு ஏழாவது நிலைகள் பெற்றுத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள். “என்றும் பதினாறு” என்ற நிலையை அடைந்து விட்டார்கள்.

ஆகவே நாம் அனவரும்
1.இதே வழியில் அதை உற்று நோக்கி அந்த உணர்வினைக் கூர்மையாகப் பதிவு செய்து கொண்டால்
2.நாமும் அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து ஒளியின் சரீரமாவது திண்ணம். எமது அருளாசிகள்.