“நம் கண்ணுடன் இணைந்தே” பல உணர்வின் எண்ணங்கள் வாழுகின்றது

“நம் கண்ணுடன் இணைந்தே” பல உணர்வின் எண்ணங்கள் வாழுகின்றது

 

ஒருவரைக் கெடுக்க வேண்டும் என்று எண்ணினால் “நாம் முதலிலே கெடுகின்றோம்…” கெடுமதியின் உணர்வைப் பாய்ச்சுகின்றோம்… பாய்ச்சும் உணர்வுகள் கேட்போருக்குள் பதிவாகின்றது.
1.பதிந்த உணர்வுகள் அவர்களையும் கெடுக்கின்றது அவர்களில் விளைந்த உணர்வுகள் வெளிப்படுகின்றது.
2.எங்கே வித்தாகி உருவானதோ மீண்டும் இன்னொரு உடலில் விளைந்த உணர்வின் சத்தாக நமக்குள் கவர்ந்து அவரும் கெடுவர் நாமும் கெடுவோம்.

ஒருவர் கெட வேண்டும் என்ற உணர்வைப் பதிவாக்கி அவரைப் பார்த்த பின் அவரை எப்படியும் வாழ்க்கையிலே கெடுக்க வேண்டும் துன்பத்தை ஊட்ட வேண்டும் என்ற உணர்வுகள் நமக்குள் தூண்டுகின்றது.

அவ்வாறு தூண்டி அந்த உணர்வுகள் நமக்குள் விளைகின்றது. இந்த உணர்வு எவர் கெட வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அவர் மீது பாய்ச்சுகின்றோம்.

மீண்டும் அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் அந்த உணர்வுகள் நமக்குள் வளர்கின்றது. பகைமைகளைத் தான் நாம் வளர்க்கின்றோம். விளைந்த உணர்வுகளைப் பிறருக்குப் பாய்ச்சுகின்றோம்.

அவர்களும் நினைவு கொண்டு இதைக் கவர்கின்றனர் இருவருமே கெடுகின்றனர். கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய். ஒருவரைக் கெடுக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது அந்தக் கெடும் உணர்வுகளை நமக்குள் வளர்க்கின்றோம். பிறரைக் கெடுக்கும் இச்சை வளர்கின்றது.

இதே போன்று
1.அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கி
2.நாம் பார்க்கும் அனைவரும் இருளை அகற்றி மெய்ப்பொருள் காண வேண்டும் என்று உணர்வுகளை உருவாக்கினால்
3.அருள் ஒளி என்ற உணர்வுகளை நமக்குள் உருவாக்குகின்றோம்… நாமும் அதுவாகின்றோம்.

ஆகவே… நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அரும்பெரும் சக்திகளைப் பெற வேண்டும்… நாம் பார்ப்போருக்கெல்லாம் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று எண்ணினால் நாம் அதுவாகின்றோம்.

அருளொளி பெற வேண்டும் என்ற உணர்வினை வித்தாக்குவோம். ஊழ்வினையாக உருவாக்குவோம். இந்த உணர்வின் துணை கொண்டு அனைவரும் நலம் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது நமக்குள் அனைவரது உணர்வுகளும் உண்டு.

அவர்கள் நலம் பெற வேண்டும் என்று நாம் எண்ணும் பொழுது அந்த உணர்வுகளும் நமக்குள் நலம் பெறுகின்றது. கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய். நம் கண்கள் கூறியது போன்று
1.ஒருவன் நலம் பெற வேண்டும் என்று எண்ணத்துடன் உற்றுப் பார்த்துப் பதிவாக்கிய பின்
2.அவரைப் பார்த்த பின் நன்மை செய்ய வேண்டும் என்று உணர்ச்சிகள் தூண்டுகின்றது.
3.அதன் வழி நன்மை செய்யும் உணர்வுகளை நுகர்கின்றோம்… நல்வழிப்படுத்தும் உணர்வினை இயக்கச் சக்தியாக மாற்றுகின்றோம்.

இதை உணர்த்துவதற்காகக் கண்ணனும் பலராமனும் ஒன்றெனெ இணைந்தவர்கள்… “சகோதரர்கள்” என்று காட்டுகின்றார்கள்.

சுவை மிக்க உணர்வுகளை எண்ணும் பொழுது சீதா ராமன் என்றும் இப்படி பல கோடிஸ் சரீரங்களைப் பெற்ற நிலையில். கண்கள் ஒன்றைக் காட்டி அந்த உணர்வை நுகர்ந்து அந்த எண்ணங்கள் வருகின்றது.

அந்த எண்ணத்தின் உணர்ச்சியால் நாம் எப்படி இயங்குகின்றோம்…? என்ற நிலைகளைத் தெளிவாகக் கூறுகின்றனர்.
1.நம் கண்ணுடன் இணைந்தே பல உணர்வின் எண்ணங்கள் வாழுகின்றது.
2.அதனால் தான் கண்ணனின் சகோதரன் பலராமன் உடன் பிறக்கவில்லை என்றாலும்
3.உணர்வின் தன்மை கொண்டு இணைந்து வாழும் சக்தி பெற்றவர்கள் என்று காட்டுகின்றார்கள்.

எண்ணங்களின் இயக்கங்களுக்குக் காவியங்களாகப் படைத்து நமக்குக் காட்டுகின்றார்கள்.

நமக்குள் இணைந்து வாழும் நிலைகள் அது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை… நண்பன் நலம் பெற வேண்டும் என்ற உணர்வினை எண்ணினால் அந்த கண்கள் உற்று நோக்குகின்றது உதவி செய்யச் சொல்கின்றது.

ஆகவே
1.எண்ணங்கள் வரும் பொழுது இந்தப் பார்வை அதைச் செய்கின்றது.
2.நண்பனைப் பார்த்த உடனே நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் வருகின்றது.
3.ஒன்றுடன் ஒன்று இணைந்து எவ்வாறு இயக்குகின்றது…? என்ற நிலையை அருள் ஞானிகள் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.
4.கண்ணன் வேறல்ல நம் எண்ணங்கள் வேறல்ல.

கண்கள் இல்லாத பொழுது பார்க்க வேண்டும் என்ற எண்ணங்கள் வருகின்றது. அந்த எண்ணங்கள் பல கோடிச் சரீரங்களில் வலுப் பெற்று உருவாகின்றது. உருவான உணர்வுகள் உடலுக்குள் தான் எண்ணி ஏங்கிய பின் வாசுதேவனுக்கும் தேவகிக்கும் சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறக்கின்றான்.

கம்சன் என்ற இருளை நீக்கிப் பொருள் காணும் நிலைகளைச் செயல்படுத்துகின்றது என்று இப்படித் தெளிவாகக் கூறுகின்றது நமது சாஸ்திரங்கள்.

உதாரணமாக… புழுக்கள் இரண்டு நாள் வாழும் அல்லது நான்கு நாளைக்கு இருக்கும். இப்படி மடிந்து மடிந்து… தான் பார்க்க வேண்டும் என்ற உணர்வைக் கூட்டிக் கூட்டி அந்த உணர்வின் தன்மை பெற்ற பின் தான்
1.வாசு… சுவாசித்த உயிரான தேவனுக்குத் தனக்குத் தேவையான உணர்வு என்ற நிலையில் அந்த எண்ணங்கள் உருவாக்கப்படும் பொழுது தான்
2.வாசுதேவனுக்கும் தேவகிக்கும் உடலான சிறைச்சாலைக்குள் கம்சனை வெல்ல
3.அந்த நாராயணன் ஒளிக்கதிராக இருக்கும் இந்த உணர்வின் தன்மை
4.”ஒளியை ஊட்டி… ஒளியை அறிவாக்கும்… அதை அறிந்திடும் உணர்வின் தன்மை” தனக்குள் காட்டுவதே கண்ணன்.

ஆக… கண்ணனாகப் பிறந்தான் நாராயணன்…. துவாரகா யுகத்தில் இருளை நீக்கிக் கண் ஒளி கொண்டு உணர்வின் அறிவாகத் தான் இயக்கும் சக்தி பெற்றான். அதே நாராயணன் நமக்குள் இருக்கிறான் என்ற நிலைகளில் காட்டுகின்றார்கள்.

இவ்வாறு
1.கண்கள் எண்ணத்தால் தோன்றியது
2.பின் பார்வையால் நுகரப்படும் பொழுது எண்ணங்கள் வருகின்றது
3.எண்ணத்தால் எதை நாம் எண்ணி ஏங்குகின்றோமோ கண் அதைக் காட்டுகின்றது.

இப்படி எண்ணங்கள் பல உண்டு. பல கோடிச் சரீரங்களைப் பெற்ற பின் பலராம் என்ற நிலையினை மனிதன் அடைகின்றான். இதை மனிதன் தான் உணர்கின்றான்.

மலைப் பகுதிகளில் குருநாதர் எனக்குக் காட்டிய இயற்கையின் பேருண்மைகள்

மலைப் பகுதிகளில் குருநாதர் எனக்குக் காட்டிய இயற்கையின் பேருண்மைகள்

 

அகஸ்தியனுடைய தாய் தந்தையர்கள் எத்தனையோ வகையான மிருகங்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் பச்சிலைகளைக் கண்டு எடுக்கின்றார்கள்.
1.அந்தப் பச்சிலைகள் எப்படி உருவானது…?
2.அதற்கு அந்த ஆற்றல் எவ்வாறு வந்தது…? என்பதனைக் குருநாதர் எனக்குக் காட்டுகின்றார்.

தொடர்ந்து மலைப்பகுதிகளுக்கு அழைத்துச் சென்றார். இரண்டு வருடம் அங்கே அலைந்து திரிந்தேன்.

அக்காலங்களில் ஒரு மிருகம் மற்றொன்றை எப்படிக் கொன்று புசித்தது…? அதைக் கொன்று புசித்த பின் அந்த மாமிசத்தை மற்றவைகள் உட்கொள்ள முடியாத நிலை ஆகிறது.

கழுகு காக்கைகள் மட்டுமே உட்கொள்கின்றது. ஆனால் சிறிது காலம் கழித்து அது அழுகிய மணம் வந்த பின்பு தான் அந்தக் கழுகுகள் பறந்து வந்து அதனை நுகர்ந்து உட்கொள்ள வருகின்றது.

ஆனால் அதே சமயம் இது மடிந்த பின் இது உடலில் இருந்து வரக்கூடிய ஆவியின் தன்மையை சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது… அலைகளாக மாறுகின்றது… பரவுகின்றது…!

அந்த உடலை (அழுகிய) உருவாக்கிய அணுக்கள் திறந்த வெளிக்கு வந்தபின் அதையே உணவாக உட்கொள்ளும் புழுக்களாக அதிலே உருவாகின்றது. புழுவாக உருப்பெற்றாலும் உட்கொண்டு இரை தீர்ந்தபின் அவைகளும் மடிந்து விடுகின்றது.

1.மடிந்த உயிரான்மாக்கள் வெளியே செல்கின்றது.
2.சென்றாலும் எந்தெந்த உயிரினங்களை இது அடித்து உணவாகப் புசித்ததோ அந்த உணர்வின் துணை கொண்டு
3.அந்தந்த மிருகங்களின் உடலில் பட்ட பின் ஈக்களாக உண்ணிகளாக உருவாகின்றது.
4.அதன் ரத்தத்தை உறிஞ்சி உணவாக உட்கொள்கின்றது.

இதையெல்லாம் காட்டுப் பகுதியில் வைத்து குருநாதர் காட்டுகின்றார்.

தாவர இனங்களை உணவாக உட்கொண்டு உடல் பெற்றுத் தான் வாழும் நிலையானாலும் அது மடிந்த பின் மற்றதைக் கொன்று குவிக்கும் புலியோ நரியோ நாயோ மற்ற உடலைப் புசிக்கும் உணர்வு கொண்ட நிலைகள் மடிந்த பின் இவை எல்லாம் என்ன ஆகின்றது…? என்பதனை காட்டுக்குள் அழைத்துச் சென்று பார்க்கும்படி செய்கின்றார்.

உடலில் இருந்து சென்ற ஆவிகளைச் சூரியனின் காந்த சக்தி எடுத்து அலைகளாக மாற்றுகின்றது. ஒரு ஆட்டின் உடல் பெற்ற பின் நரியின் உணர்வைக் கவர்ந்து கொண்ட பின் இதைக் கண்ட பின் ஆட்டின் உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகள் இதைக் கண்டு அஞ்சி ஓடுவதும் ஓடு பாதையில் இன்னொரு தாவர இன சத்தைச் சூரியனுடைய காந்த சக்தி எடுத்துக் கொண்டால் இதற்குள் ஊடுருவி சுழற்சியின் தன்மை அடைந்து ஒன்றுடன் ஒன்று மோதுகிறது.

மற்ற உயிரினங்களாகப் பெற்ற பின் இதனுடைய மணம் வெளிப்பட்ட பின் இது மூன்றும் இரண்டறக் கலக்கின்றது.

மோதலில் ஏற்படும் சக்தியைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து கொண்ட பின் தாவர இனத்தின் அடர்த்தி அதிகமாகி இதனுடன் இணைந்து விடுகின்றது. இணைந்த பின் ஒரு வித்தாகின்றது… நிலத்தில் பதிவாகின்றது.

வித்தான பின் புவியின் கால நிலைகள் கொண்டு மழை நீரோ மற்ற ஈரப்பசை கொண்ட காற்றலைகள் வரப்படும் பொழுது செடியாக முளைக்கின்றது. முளைத்து விட்டால்…
1.இது எதையெல்லாம் கொன்று புசித்ததோ அந்தச் செடி தன் அருகிலே வரக்கூடிய மிருகங்களை உயிரினங்களை
2.தன் கொடிகளைப் பாய்ச்சி அதனின் இரத்தத்தை உறிஞ்சி குடிக்கின்றது.

உயிரணு பெற்ற பின் மீண்டும் தாவர இனங்களுடன் இணைந்து தாவர இனச் செடியாக மாறினாலும்
1.நீரை உணவாக உட்கொள்ளும் நிலை இருப்பினும்
2.அதே சமயத்தில் இரத்தத்தை உறிஞ்சி உணர்வின் அணுக்களை வளர்த்துக் கொள்ளும் நிலைகள் பெறுகின்றது.

இப்படிப் பல மாற்றங்கள் ஏற்படுகின்றது… இது எவ்வாறு நடக்கிறது…? என்ற நிலையைக் காட்டுகின்றார் குருநாதர். இதையெல்லாம் அறிவதற்கு நான் சாதாரண உணவை உட்கொள்ளவே முடியாது.

சில பச்சிலைகளைக் கொடுத்து வாயிலே ஒதுக்கிக் கொள்ளும்படி சொல்வார். அதை மென்று கொண்டே இந்த உணர்வினைச் சுவாசிக்கும்படி செய்வார்.

நடந்து செல்லும் போது சில இடங்களில் ரொம்பக் களைப்பானால் நீரைக் குடிக்கும்படி சொல்வார், நீரைக் குடித்த பின் வயிறு உப்பிக் கொள்ளும்

சில இடங்களில் செடிகளின் இலைகளைத் தண்ணீரில் கசக்கிப் பிழிந்து விட்டால் நொங்கு போன்று ஆகிவிடும். அதை எடுத்து உணவாக உட்கொள்ளும்படி சொல்வார்.

இப்படி எல்லாம் பல தாவர இனங்களின் இயக்கங்கள் எவ்வாறு இருக்கின்றது…? என்பதைக் காட்டுவார்.

உயிரணு பெற்று அந்த உடலின் நிலைகளைச் சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து கொண்டால் ஒன்றுடன் ஒன்று மோதி அது மீண்டும் தாவர இனத்துடன் கலக்கப்படும் பொழுது எந்த உயிரினத்தில் இருந்து இந்தச் செடியுடன் கலந்ததோ அத்தகைய உயிரினங்கள் வரப்படும் பொழுது… இந்த இலைகள் அதனுடன் ஒட்டப்பட்டு இரத்தத்தைக் குடிக்கின்றது. இப்படிப் பல விதமான தாவர இனங்கள் உருபெறுகின்றது.

வேறு சில இடங்களுக்குச் சென்றால் அங்கே மனிதனையே பலியிட்டு உணர்வுகளைப் பிரித்து விட்டு அவருடைய உயிரை வெளியே எடுத்து இருப்பார்கள்.
1.அந்த உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வலைகள் தாவர இனத்தின் மணத்தை கண்டபின் ராட்சசத் தன்மை கொண்டு ஆவிகள் வேகமாக ஓடுகின்றது.
2.இன்றும் சில இடங்களில் இந்தச் சுழிக்காற்றுகளைப் பார்க்கலாம்.
3.சில குறித்த நேரங்கள் வரும்பொழுது உயிர் பலி இடப்பட்ட இந்த உணர்வுகள் அதைக் கண்ட பின்
4.மற்ற தாவர இனங்களில் சுழிக் காற்றாக அடித்து ரொம்ப வேகமாகத் தள்ளிக் கொண்டு இருக்கும்.

அதற்குள் யாராவது மனிதன் சிக்கினால் உயிருக்குள் பட்டபின் காக்காய் வலிப்பு போன்று வந்துவிடும். கர்ப்பிணி யாராவது நுகர்ந்து விட்டால் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குப் பாதிப்பாகி அதனுடைய உறுப்புகளைச் சீராக உருவாகாதபடி செயலிழக்கச் செய்துவிடும்.

இது எல்லாம் காட்டிற்குள் சென்ற பின்
1.இயற்கையின் நிலைகள் எவ்வாறு இயங்குகின்றது…?
2.அக்கால மக்கள் எப்படி வாழ்ந்தனர்…?
3.கடும் பூதங்களாகவும் ராட்சசர்களாகவும் எப்படி உருவானார்கள்…? என்று காட்டுகின்றார்.

இன்றும் சில பகுதிகளில் மனிதன் பக்தி கொண்டு மந்திர ஒலிகளைக் கேட்டுப் பதிவாக்கிக் கொண்ட பின் அவன் மடிந்தால் அந்த உயிரணுக்கள் எதனின் எல்லை கொண்டு இருப்பானோ அதன் பகுதிகளிலே அது சுழன்று கொண்டிருப்பதும் அந்த அலைகள் குவிவதும்… அங்கே செல்வோர் அஞ்சினால்… அந்த உணர்வை நுகர்ந்து அந்த உருவங்கள் தெரிவதும் அப்படிப் பல நிலைகள் உருவாகின்றது.

சில மலைப் பகுதிகளுக்குச் செல்லப்படும் பொழுது ராட்சச உருவம் கொண்டு மற்றவர்களைக் கொன்ற நிலையில்… அங்கே மற்றவர் படுத்திருக்கும் பொழுது அந்த உணர்வலைகள் அங்கே குவிகின்றது.

குவிந்தபின்
1.படுத்திருக்கும் உடலை எப்படிச் செயலற்றதாக அமுக்குகின்றது…?
2.அமுக்கிய பின் இரத்தத்தை எப்படி உறிஞ்சுகின்றது…?
3.அந்த உடலை விட்டு உயிர் பிரிந்த பின் அதன் நிலை கொண்டு அதுவும் காற்றலைகளுடன் கலந்து எவ்வாறு செயல்படுகிறது…? என்பதையும் குருநாதர் காட்டுகின்றார்.

தீமைகள் வளர்ந்து வளர்ந்து மனிதனின் நிலைகளில் அக்காலங்களில் இருந்து இக்காலங்கள் வரையிலும் இதைப் போன்று தான் நடந்து வருகின்றது.

இந்த உடலில் எடுத்துக் கொண்ட நிலைகள் கொண்டு சாகாக்கலையாக இந்தப் புவியில் தான் மீண்டும் மாறி மாறி உடல்கள் பெறுவதும் நரகலோகத்தைச் சந்தித்து மீண்டும் சொர்க்கலோகம் வருவதற்குப் பல காலமாகின்றது.

இதிலிருந்து மீள்வதற்கு அக்காலங்களில் முதல் மனிதனானவன் தாவர இன்ங்களைப் பயன்படுத்தியவர்களைப் பற்றி மகாபாரதத்திலோ இராமாயணத்திலோ புலஸ்தியர்கள் என்று சொல்வார்கள்.

புலஸ்தியர் என்றால் காட்டுவாசிகள்…! அன்று அடர்த்தியான காடுகளில் அவர்கள் இருந்தாலும் அதன் உணர்வின் தன்மை கொண்டு இந்த இடத்தில் வாழ்ந்த அவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள்…? என்ற நிலையும் காலங்கள் எவ்வாறு சென்றது…? என்பதையும் உண்மையின் உணர்வைச் சொல்லி வருகின்றனர்.

எவ்வழியில் எதனை நாம் செயல்படுத்த வேண்டும்…? என்ற நிலைகளில் பின் தெளிவாக அவர்கள் கூறிய நிலையில் எழுத்து வடிவுக்கு வரும் பொழுது இதனைக் கூறியுள்ளார்கள்.

ஆனால் எழுத்து வடிவிற்கு வரப்படும் பொழுது அரசன் அந்த எழுத்தின் அறிவைக் கொண்டு வரப்படும் பொழுது ஞானிகள் காட்டிய பேருண்மையின் தன்மைகள் காலத்தால் மறைந்தும் போய் விட்டது.

இப்படித்தான் மறைந்து… மறைந்து…
1.விஞ்ஞான அறிவுகள் வளர்ந்த பின் விஞ்ஞான வளர்ச்சி முதிர்ந்து
2.இன்று மனிதனையே சீர்குலைக்கும் உணர்வாக விளைய வைக்கும் இந்தக் காலத்தில்
3.விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உள்ளோம்.
4.இருந்தாலும் இனி நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை குருநாதர் அழைத்துச் சென்று உணர்த்துகின்றார்.

அஸ்ஸாம் பகுதிகளுக்கு அழைத்துச் செல்கின்றார். அங்கே காட்டு விலங்குகள் அதிகமாக இருக்கின்றது. அந்த மலைப்பாங்குகளில் எவ்வாறெல்லாம் தாவரங்கள் எப்படியெல்லாம் மாற்றம் அடைந்துள்ளது என்பதனைக் காட்டுகின்றார்.

குருநாதர் ஒரு பச்சிலையை எடுத்து நசுக்கி என்னிடம் கொடுத்தார்… இதை வைத்துக் கொள்…! என்று.

அது எதற்கு…? என்று எனக்குத் தெரியாது ஆனால் அதை வைத்துக் கொண்டு நடந்து செல்லும் பொழுது ஒரு யானைக் கூட்டமே அங்கே வருகின்றது.

கூட்டமாக வரக்கூடிய யானைகள் இந்த பச்சிலையின் வாசனையைக் கண்டபின் அது பிளிறுகின்றது… அஞ்சுகின்றது கத்துகின்றது… அருகிலேயே வராதபடி ஓடுகின்றது.

ஒரு காண்டாமிருகம் வருகின்றது. அது யானையைக் கூட ஒரு தட்டுத் தட்டி எறியக்கூடிய வலு பெற்றது. அது நடந்து வரப்படும் பொழுது
1.சந்தர்ப்பத்திலே ஒரு செடியிலே உராய்ந்து விடுகின்றது.
2.பட்டபின் இரத்தத்தை அந்தச் செடி உறிஞ்சி விடுகின்றது… அப்படியே கீழே விழுகின்றது.

முதலிலே ஒரு சில இதை நுகர்ந்து விடுகின்றது… அதனால் அந்தப் பக்கம் வருவதில்லை. ஆனால் காண்டாமிருகங்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுத் தாக்குதல் ஏற்பட்டுத் தப்பி ஓடும் வேகத்தில் வரும் போது… இந்தச் செடிகளிலே உராய்ந்த பின் இரத்தத்தை உறிஞ்சிய பின் கீழே விழுந்து விடுகின்றது. இதைக் குருநாதர் காட்டுகின்றார். காடுகளில் இத்தகைய செடி கொடிகள் சில இடங்களில் உண்டு.

கேன்சர் நோய் என்றால் மருத்துவத்திற்கு இன்று ஏதேதோ செய்கின்றோம்.
1.ஆனால் இத்தகைய செடிகளின் சத்தை உடலின் மேலே முலாமாக அரைத்துப் பூசினால்
2.கேன்சர் எந்தப் பாகமோ அதற்குள் ஊடுருவி அந்த நோயை அழித்து விடுகின்றது… அதோடு அந்தக் கேன்சர் நோய் தீர்ந்து விடுகின்றது.

டிபி போன்ற நோய்களுக்கும் இந்தத் தாவர இனங்களை மேலே முலாமாகப் பூசினால் சுவாசிக்கும் பொழுது அந்த டிபி அணுக்கள் மடிந்து விடுகின்றது… நோயும் நீங்கி விடுகின்றது.

எப்படி எல்லாம் இது செயல்படுகிறது…? என்பதனை அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்களைக் காத்துக் கொள்ளச் செயல்பட்டதையும் இன்று விஞ்ஞான அறிவால் எப்படிச் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்…? என்பதனையும் குருநாதர் காட்டுகின்றார்.

தன் உணவுக்காக வேண்டிக் கனிகளையும் மற்ற மிருகங்களையும் மற்ற உயிரினங்கள் கொன்று உணவாகப் புசித்தாலும் அத்தகைய மிருகங்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள அகஸ்தியன் என்று சொல்லும் அவருடைய தாய் தந்தையர்கள் இத்தகைய பச்சிலைகளின் இரகசியங்களை அறிந்து கொண்டார்கள்.
1.ஒருவர் அறிந்ததை மற்றவருக்குச் சொல்வதில்லை.
2.அதன் செயலாக்கங்களை அவரவர்கள் மட்டும் வலுவாக வைத்துக் கொள்கின்றார்கள்.

இன்றும் ஒரு சிலர் பச்சிலைகளுடைய இரகசியங்களைத் தெரிந்து கொண்டால்… வசதி உள்ளவராக இருப்பார். சில நோய்களுக்காக வேண்டி இதை ஒரு சாமியார் கொடுத்தார். நான் தான் அதைப் பயன்படுத்துவேன் என்று சொல்வார்கள்.

ஆஸ்மா நோயைப் போக்குவதற்காக வேண்டி யாரோ ஒருவர் ஆந்திராவில் சொன்னதை
1.ஒரு மீனை எடுத்து அதற்குள் மருந்தைப் போட்டு முழுதாக விழுங்கப்படும் பொழுது
2.அந்த உயிரணுவின் செல்கள் ஊடுருவி ஆஸ்மா நோய் உருவாக்கும் அணுக்களை அது விழுங்கி விடுகின்றது என்ற இரகசியத்தைச் சொன்னார்கள்.

இது குடும்பப் பாரம்பரியத்தில் உண்டு. முழுதாக அந்த மீனை விழுங்கிய பின் உடலுக்குள் சென்று ஜீவ அணுக்களாக மீண்டும் அணுக் கருக்களாக மாற்றுகின்றது.
1.அந்த ஆஸ்மாவை உருவாக்கும் சளி எங்கே இருக்கின்றதோ அதற்குள் அணுக்களாக வெடித்து
2.சளியை உருவாக்கும் அணுக்களை விழுங்கி விடுகின்றது…. ஆஸ்மா நோய் நீங்கி விடுகின்றது.

இப்படி எல்லாம் சில முறைகள் எவ்வாறெல்லாம் அது இயங்குகிறது…? என்பதையும் நமது குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

இதைப் போன்று அன்றைய காலங்களில் காடுகளில் வாழ்ந்தவர்கள் விலங்குகளையும் மற்ற உயிரினங்களையும் வேட்டையாடி வந்த நிலையில் அகஸ்தியனுடைய தாய் தந்தையர்கள் காட்டு விலங்குகளிடமிருந்து தப்பித்து வாழ்ந்தார்கள்.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முதல் மனிதன் அகஸ்தியனை… தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி இன்று எத்தனையோ நிலைகள் கொண்டு அவனைத் தான் நாம் போற்றுகின்றோம்.

அவனுடைய தாய் தந்தையர்கள் தான் பற்பல விதமான மூலிகைகளைப் பச்சிலைகளைத் தாங்கள் படுத்துறங்கும் குகைக்கு முன் போட்டுக் கொள்வதும் தங்கள் உடலிலே முலாமாக அரைத்துப் பூசிக் கொள்வதும் போன்ற நிலைகளில் இருந்தார்கள்.

காரணம் இந்த மணத்தை விஷ ஜந்துக்களோ மிருகங்களோ நுகர்ந்தால் அவைகளுக்கு ஒரு மயக்கம் போன்று வரும்… அதனால் இவர்கள் அருகிலே அவைகள் வருவதில்லை. தங்களைக் காத்துக் கொள்வதற்காக அவ்வாறு செயல்படுத்தினார்கள்.

இந்த மணம் அவர்களுடைய சுவாசத்தில் கலந்து இரத்தத்திலும் கலக்கின்றது. கர்ப்பம் ஆகும்போது கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கும் இது இணைகின்றது.

அகஸ்தியனுடைய தாய் தந்தையர் அந்தப் பச்சிலைகளின் மணங்களை நுகர நுகர இது எல்லாம் சந்தர்ப்பம் தான்.
1.கருவில் இருக்கக்கூடிய அகஸ்தியனுக்கு இந்த உணர்வுகள் கிடைக்கப் பெறுகின்றது.
2.நஞ்சை வென்றிடும் அணுக்களாக அவனுக்குள் உருப்பெறுகின்றது.
3.அதன் வழிப்படி அவன் உடலும் உருப்பெறுகின்றது
4.கருவிலேயே அத்தகைய ஆற்றல் பெற்றுப் பிறக்கின்றான்.
5.பிறந்த பின் இவன் அருகிலே விஷ ஜெந்துக்களோ மிருகங்களோ யானையோ மற்ற கொடூர மிருகங்களோ வருவதில்லை.
6.அவன் தான்… தன்னுடைய வளர்ச்சியில் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகின்றான்.

இதை எல்லாம் திரும்பத் திரும்பச் சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம். அதில் “சில விளக்க உரைகளைக் கூட்டி… இணைத்துத் தான்… ஒவ்வொரு தடவையும் கொடுப்பது…”

ஒவ்வொருவரும் தெளிந்த மனம் கொண்டு இந்த மனித வாழ்க்கையில் எவ்வாறு வாழ வேண்டும்…? என்ற உணர்வினை உங்களுக்குள் பதிவாக்கி விட்டால்
1.அந்த அருள் ஞானி ஒளியின் சிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அரும்பெரும் சக்திகளை
2.நீங்கள் பெற “இது உதவும்” என்பதற்கே மீண்டும் பல கோணங்களில் வெளிப்படுத்துகின்றேன்.
3.இதை நுகரச் செய்து… பதிவாக்கி மீண்டும் அதை நினைவாக்கப்படும் போது கடும் விஷத்தன்மையிலிருந்து உங்களை மீட்டுக் கொள்ள உங்கள் எண்ணம் உதவும்.

ஆகவே
1.எதனின் எண்ணத்தைப் பதிவு செய்கின்றீர்களோ
2.கண்ணின் நினைவு கொண்டு விண்ணை நோக்கி ஏங்கி நுகரும் போது அது வளர்ச்சி வரும் சக்தியாக அடைகின்றது.
3.அந்த வழியிலே நீங்கள் வளர வேண்டும்.
4.விஞ்ஞானப் பேரழிவிலிருந்து காக்கும் சக்தியாக வளர வேண்டும்
5.எப்பொழுது இந்த உடலை விட்டு அகந்றாலும் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்.

தீமை என்ற நிலையில் சிக்கி இன்னொரு உடலுக்குள் புகுந்து பிறப்பின் தன்மை அடையும் நிலையிலிருந்து விடுபட்டு இன்று நல்ல நினைவிருக்கும் பொழுதே அருள் ஒளியின் உணர்வை நமக்குள் சேர்த்துத் துருவ நட்சத்திரமாக இருக்கும் அதன் ஈர்ப்பு வட்டத்தில் சென்று பிறவி இல்லாப் பெரு நிலை அடைவதே நல்லது.

அருள் ஞானக் குழந்தைகள் உருவாகட்டும்… உலகைக் காத்திடும் சக்தியாக மலரட்டும்

அருள் ஞானக் குழந்தைகள் உருவாகட்டும்… உலகைக் காத்திடும் சக்தியாக மலரட்டும்

 

அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று வேண்டினால் நமக்குள் பகைமை உணர்வுகள் வராது தடுக்கப்படுகின்றது. அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வுகளை எண்ணி எடுத்தால் அது நமக்குப் பாதுகாப்பாகவும்… நமக்குள் நன்மை செய்யும் சக்தியாகவும் மாறும்.

அதே சமயத்தில் உலகுடன் ஒத்து வாழ வேண்டும்… உலக ஞானம் பெற வேண்டும்… அருள் ஞானம் பெற வேண்டும்.

அன்று தாய் கருவிலே உருப்பெற்ற அகஸ்தியன்…
1.அவனின் தாய் சந்தர்ப்பத்தால் விஷத்தை வென்றிடும் உணர்வுகள் பெற்று அந்த உணர்வின் சக்தியைத் தான் நுகர்ந்தாலும்
2.அதன் வழி கொண்டு தாய் கருவிலே விளைந்த உணர்வின் துணை கொண்டு
3.அவன் பிறந்த பின் தன் தாய் தந்தையை இன்னொரு பிறவி இல்லா நிலைகள் அடையச் செய்தான்.

துருவ நட்சத்திரம் என்று சொல்கின்றோமே…
1.அகஸ்தியனுடைய தாய் தந்தையும் அகஸ்தியனின் மனைவியும் இவர்கள் நான்கு பேரும் பிரம்மமாக நின்று அன்னை தந்தை அரவணைப்புடன்
2.நஞ்சை வென்றிட்ட உணர்வினைத் தன்னுடன் அரவணைத்து ஒன்றிய நிலைகள் கொண்டு துருவ நட்சத்திரமாக உருப்பெற்று
3.அதனின் அரவணைப்பில் சப்தரிஷி மண்டலங்களாகத் தன் ஈர்ப்பு வட்டத்தில் வாழச் செய்து கொண்டுள்ளான் அன்று அகஸ்தியன்.

இதனை வழிப்படுத்தி கர்ப்பமுற்ற தாய் கருவில் வளரும் சிசுக்களுக்கு ஒவ்வொரு நாளும் மகரிஷிகள் உணர்வுகளைக் கருவில் இருக்கும் சிசு பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற்றால்
1.துருவ மகரிஷியின் ஆற்றல் அங்கே பெற்று
2.நஞ்சை வென்றிடும் உணவுகள் பெற்று உங்களையும் காக்கும் உணர்வாக வருகின்றான்.

நமக்குள் வளர்ந்த இனமாக இருப்பினும் “நாம் எண்ணிய உணர்வின் கருவின் உணர்வை அது ஒளியாக மாற்றுகின்றது…” நமக்குள் தெளிவாக்கும் உணர்வின் தன் மகனாகவும் வருகின்றது. நமக்கு அருள் ஞானத்தைப் போதிக்கும் அருள் ஞானக் குழந்தையாகவும் வளர்கின்றது.

மனிதனின் வாழ்க்கையில் கர்ப்பம் என்று அறிந்தாலே துருவ மகரிஷியின் உணர்வுகள் கருவில் வளரும் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் உலக ஞானம் பெற வேண்டும் உலகைக் காத்திடும் உத்தம ஞானியாக வேண்டும் என்ற உணர்வினை நாம் எடுத்துக் குழந்தை பிறக்கும் வரையிலும் இந்த உணர்வினை வலுக்கூட்டிச் செயல்படுத்த வேண்டும்.

குழந்தை பிறந்த பின் உலக ஞானத்தை அவன் அறியும் தன்மையும் உலகைக் காத்திடும் உணர்வுகளும் அவனுக்குள் விளையும். காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் அருள் ஞானிகள் உணர்வுகளைக் கருவில் வளரும் சிசுக்களுக்கு ஊட்டுதல் வேண்டும்.

எப்படி அகஸ்தியனின் தாய் தந்தையர் சந்தர்ப்பத்தால் விஷத்திலிருந்து விடுபடும் உணர்வுகளைத் தனக்குள் முலாமாகப் பூசும் போது… அவர்கள் நுகர்ந்த உணர்வுகள் கருவிலே வளரும் சிசுவுக்குள் இணைந்து… நஞ்சினை வென்றிடும் உணர்வு பெற்று அதன் வாழ்க்கையில் நஞ்சை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரம் பெற்றது போன்று…
1.நீங்களும் இந்த உணர்வின் தன்மையை அருள் ஒளி பெற வேண்டும் என்ற நினைவினைக் கூட்டி
2.அருள் ஞானக் குழந்தையாக உருவாக்கி உங்களைக் காத்திடவும்
3.இந்தப் புவியில் வாழும் மனித இனத்தைக் காத்திடும் உணர்வாக உங்களில் அருள் ஞானம் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
4.அருள் ஒளிச் சுடராக அருள் ஞானக் குழந்தைகள் உருவாகட்டும்… உலகைக் காத்திடும் சக்தியாக மலரட்டும்.

மனிதனின் வாழ்க்கையில் தன் தாயை மறந்தால் அவன் மனிதனே இல்லை

மனிதனின் வாழ்க்கையில் தன் தாயை மறந்தால் அவன் மனிதனே இல்லை

 

சிறு வயதிலே நாம் பல குறும்புத்தனங்கள் செய்கின்றோம்… தாய் என்ன செய்கின்றது…? தூக்கி நம்மை வெளியே எறிந்து விடுகின்றதா…? இல்லை.

அவன் எவ்வளவு குறும்புத்தனம் செய்தாலும்… எதை எதையோ சொல்லி அவனை அரவணைத்து “இந்தடாக் கண்ணு அதைச் சாப்பிடுடா இதைச் செய்யிடா…! என்னடா இப்படிச் செய்கின்றாய்…?” என்று குழந்தையைக் கெஞ்சிப் பராமரித்து வருகின்றது.

ஆனால் வளர்ந்த பின் தன் தாய் ஏதாவது சொன்னால்… தாயைப் பார்த்து “நீ அறிவு கெட்டதனமாகப் பேசுகின்றாய்…” என்று தாயைப் பேசுபவர்கள் தான் பலர் உள்ளார்கள். தாயை மறக்கும் நிலையே வருகின்றது.

1.தாயை மறந்திடாது எண்ணத்தில் கொண்டு வந்தால்
2.அந்த அருள் எப்பொழுதுமே உறுதுணையாக இருக்கும்.

ஒரு பித்துப் பிடித்த தாயாகவே இருந்தாலும் தன் குழந்தையை இன்னார் இந்த இடத்தில் அடித்து விட்டார்கள் என்று சொன்னால் போதும்.

பிள்ளை மீது கவனம் முழுமையாக இல்லை என்றாலும் “அடித்து விட்டார்கள்” என்று கேள்விப்பட்ட பின் உடனே பதறி அழுகும். ஆனால் அந்தப் பித்துப் பிடித்த தாயை ஒருவர் அடித்தால் அதனுடைய பிள்ளை இதைக் கேள்விப்பட்டு “கிரகம்…! அப்படித்தான் வேண்டும்” என்று சொல்லும்.

தாயைக் கவனித்துப் பார்ப்பார்களா…? என்றால் இல்லை. ஏனென்றால் இன்று மனிதனுடைய உணர்வுகள் அந்த வழிக்குச் சென்று விட்டது.

அன்று ஞானிகள் காட்டிய அருள் வழியில்
1.தாயை எந்த அளவிற்குப் போற்றித் துதிக்கின்றோமோ
2.அந்த உணர்வுகள் என்றும் உறுதுணையாக இருக்கும்.

நண்பனுக்குள் உதவி செய்வது போன்று பின் தாயின் உணர்வுகள் நமக்கு உதவுகிறது. தாயை எண்ணி ஏங்கினால் அந்த உணர்வுகள் நம்மைப் பாதுகாக்கும்.

ஒரு காரியமே நடக்கவில்லை என்றால்
1.அம்மா…! என்று ஏங்கித் தாயினுடைய அருளைப் பெற்று
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள். உடனடியாக அது கிடைக்கும்.

இதையெல்லாம் செயல் வடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

மனிதன் என்ற முழுமை பெற வேண்டும் என்றால் இந்த நிலை அடைய வேண்டும். அதற்காக வேண்டித் தான் அம்மா அப்பாவை நினைவுபடுத்தி அக்காலத்தில் வணங்கும்படி செய்தார்கள் “விநாயகர் ஆலயத்தில்…”

இதை வினையாக்க வேண்டும் அருள் உணர்வுகளை கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்.

நம் பாட்டன் பாட்டி… அந்தக் குல வழியில் தான் நாம் மனிதனாகப் பிறந்து இருக்கின்றோம். அவர்கள் உடலை விட்டுச் சென்றிருந்தால்
1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வங்களான முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
2.உடல் பெறும் உணர்வுகள் கரைந்து ஒளி பெறும் சரீரம் பெற வேண்டும். பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் ஈஸ்வரா என்று
3.காலை துருவ தியான நேரத்திலே அவர்களை எண்ணி விண் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

உடல் பெறும் உணர்வுகள் கரைந்த பின் ஒளியின் சரீரம் ஆகின்றார்கள். சப்தரிஷியுடன் ரிஷியாகின்றார்கள். அவர்கள் உணர்வு நமக்குள் இருக்கின்றது மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் உடனடியாக அந்தச் சக்தி இங்கே கிடைக்கும்.

இதை வளர்த்துக் கொண்டால் நாம் உடலை விட்டுப் பிரிந்தாலும் நம்முடைய உயிரான்மா அந்தச் சப்தரிஷி மண்டல எல்லைக்குச் செல்லும்.

“என்றோ நடந்தது…” என்றாலும் நீங்களும் அதைப் பெற முடியும்

“என்றோ நடந்தது…” என்றாலும் நீங்களும் அதைப் பெற முடியும்

 

ஆதியிலே… ஒவ்வொரு அணுக்களும் மோதி மேகமாகி மேகம் அடர்த்தியாகி எடையற்ற நிலைகளில் கூடுகின்றது. இப்படி ஒரு அடர்த்தியின் தன்மை அடைந்தபின் இந்த அணுக்கள் மேகக் கூட்டத்திற்குள் மோதுகின்றது.

மோதலான பின் நீராக வடிகின்றது. நீரான பின் பல விதமான உணர்வு கொண்ட அணுக்கள் அதனுடன் சிக்கி எடை கூடுகின்றது… நகர்ந்து ஓடத் தொடங்குகிறது.

ஓடும் நிலையில் உராய்கின்றது… வெப்பமாகின்றது… ஆவியாக மாறுகின்றது இந்த உணர்வுகள் இரண்டறச் சேர்த்து ஒரு பொருளாக உருவாகின்றது.

அதாவது… இயற்கை அதனுடைய சந்தர்ப்பத்தில் இதைக் கடந்த நிலைகள் கொண்டு ஒன்றின் தன்மை அடைந்த பின் ஓடும் வேகத்தில் சூடாகி ஆவியாகி இதற்குள் சிக்கிய உணர்வுகள் அணுத் தன்மையாகும் போது பரமாகிறது.

பரம் என்றால் எல்லை… ஒரு பொருளாகின்றது… ரூபம்…! அதற்குத் தான் “பரம்பொருள்” என்று காரணப் பெயரை வைக்கிறார்கள்.
1.இது எல்லாம் இயற்கை எப்படி விளைந்தது…? என்று அகஸ்தியன் மனிதனான பின் அணுவின் இயக்க ஆற்றலைக் கண்டுணர்ந்தவன் அவன்.
2.அவனுள் அவன் கண்டு… உண்மைகளை உணர்ந்து… உணர்வின் இயக்கம் எவ்வாறு…? என்ற நிலையைத் தெளிவாக்கினான்
3.அவனுள் விளைந்த இந்த உணர்வின் ஆற்றல் வெளிப்பட்டதை நமது சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது.

என்றோ நடந்தது…!

ஆனால் மனிதனான பின் தன்னை அறிந்து கொள்ளும் உணர்வால் அறிந்த அவன் (அகஸ்தியன்) அவனுள் விளைந்த உணர்வின் ஒலியலைகளைப் பரப்பப்படும் பொழுது சூரியனுடைய காந்தப் புலனறிவு கவர்ந்து வைத்துள்ளது நமது பூமியில்.

ஏனென்றால் திட்டியவர்களை எண்ணும் பொழுது உடனே உங்களுக்குக் கோபம் வருகிறது. வேதனைப்படும்படி ஒருவன் செய்வதைப் பார்த்தவுடன் பாவிப்பயல் இப்படிச் செய்கிறானே….! என்ற உணர்ச்சிகள் தூண்டுகின்றது… இது விளைகிறது.

இதைப் போல
1.இயற்கையின் உண்மையின் உணர்வுகளை அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வுகள் இந்தப் பூமியில் படர்ந்திருப்பதை
2.எமது குரு… அவன் அருளைப் பெறும் உணர்வினை எனக்குள் பதிவு செய்து
3.நினைவு கொண்டு அதனைப் பார்…! அதை நுகர்ந்து அறி…! உலகம் எப்படி உருவானது என்ற உண்மையை உன்னில் நீ காண்.
4.இந்த உணர்வின் தன்மையை உனக்குள் விளையச் செய்
5.இயற்கை எப்படி விளைந்தது…? நீ மனிதனானது எவ்வாறு…? மனிதனான பின் நீ எவ்வாறு செயல்பட வேண்டும்…?
6.உன்னுடைய வாழ்க்கையினுடைய கதி என்ன…? (ஏனென்றால்) இந்த மனிதனுக்குப் பின் உடல் இல்லை.

உயிர் ஒளியானது… உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றுதல் வேண்டும். அந்த அருளைப் பெற்றவன் அகஸ்தியன். அவன் மண்ணுலகை வென்றான்… விண்ணுலகை அடைந்தான்… வானுலகையும் அளந்தான்… அண்டத்தையும் அறிந்தான்…!

அந்தச் சக்திகள் எல்லாம் பிண்டத்திற்குள் எப்படி விளைந்தது…? என்ற நிலையை அவன் கண்டுணர்ந்ததனால் அவனுக்குப் பின் வந்தவரால் “அகஸ்தியன்” என்று காரணப் பெயராக வைக்கப்பட்டது.

1.ஆதியில் நமது பூமியோ சூரியனோ இல்லாத காலங்களிளிருந்து “அதையெல்லாம்” அவன் அறிந்து உணர்ந்தவன்.
2.அவனுள் விளைந்த இந்தச் சக்தியைப் பெற்றால் அவன் அடைந்த எல்லையை நீங்களும் அடைய முடியும்,

எண்ணவில்லை என்றால் “பதிவில்லை…” மீண்டும் நினைக்கவில்லை என்றால் “ஈர்ப்பு இல்லை”

எண்ணவில்லை என்றால் “பதிவில்லை…” மீண்டும் நினைக்கவில்லை என்றால் “ஈர்ப்பு இல்லை”

 

ஒருவர் திட்டி விட்டார்… என்னை இப்படித் திட்டுகின்றான்…! என்ற எண்ணத்தைப் பதிவு செய்து விட்டால் மீண்டும் என்ன செய்கின்றோம்…?

திட்டினான்… திட்டினான்… திட்டினான்… என்று அவனுடைய உணர்வுகள் நமக்குள் வளர்ச்சியாகி அவன் மீது வெறுப்பாகி இந்த உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்கும் இதற்கும் வெறுக்கும் தன்மை வந்து இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது… பல விதமான நோய்கள் உடலிலே உருவாகின்றது.

இதையெல்லாம் இயற்கை எவ்வாறு விளைகிறது…? என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கே உணர்த்துகின்றேன். பொறுமையாகக் கேளுங்கள்.

ஏனென்றால் விஞ்ஞான உலகில் இன்று அஞ்ஞான வாழ்க்கை வாழுகின்றோம். அண்டத்தையும் அளந்தறியும் சக்தியாகக் கம்ப்யூட்டர் என்று சாதனம் மூலமாகக் காணுகின்றார்கள். உடலின் இயக்கத்தையும் அறிகின்றான்.

எங்கோ காணா இடத்தில் இருப்பதையும் (கோள்கள்) இங்கிருந்து நுகருகின்றான். எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று நிலைகளில் இங்கே பதிவாக்கிப் பல ஆயிரம் மடங்கு பெருக்கி உந்து விசையால் விண்ணிலே ஏவுகின்றான்.

கோள் எங்கே இருக்கின்றதோ அதை இங்கே பதிவாக்கி அதை வைத்து இராக்கெட் என்ற சாதனத்தை விண்ணிலே பாய்ச்சப்படும் பொழுது
1.தன் இனமான உணர்வு கண்டபின் அந்தக் கோளுக்கே இவன் செலுத்திய இராக்கெட்டை அழைத்துச் செல்கின்றது…
2.அங்கிருப்பதையும் அறியும்படி செய்கிறது.

இவ்வாறு இருக்கும் இன்றைய விஞ்ஞானக் காலத்திலே பக்தி மார்க்கங்களில்… யாரோ செய்வார் சாமியார் செய்வார் எந்திரம் செய்யும் மந்திரம் செய்யும் ஜாதகம் செய்யும் யாகம் செய்யும் வேள்விகள் செய்யும் என்ற நிலைகளில் தான் அஞ்ஞான வாழ்க்கை வாழ்கின்றோம்.

நமக்குள் தீமை என்ற நிலை இருப்பினும் அதை நீக்கிட
1.அருள் மகரிஷிகள் உணர்வை நாம் நுகர்ந்தால் அதை நமது உயிர் ஓ என்று ஜீவ அணுவாக மாற்றுகிறது
2.அவ்வழியில் அதைத் திரும்ப எண்ணும் பொழுது நமக்குள் அந்த நன்மை செய்விக்கும் நம் உடலை நலம் பெறச் செய்யும் சக்தியாக வளரும்
3.நம் சொல்லைக் கேட்போருக்கும் நலம் பெறும் சக்தியாக மாறும் என்பதனைத் தெளிவாகக் கூறி இருப்பினும்
4.அதை நாம் யாரும் இதுவரையிலும் பின்பற்றவில்லை.

சாமியார் வந்துவிட்டால் சாமியாரிடம் தான் பெரிய சக்தி இருக்கிறது என்று அவரிடம் ஆசி வாங்கச் சென்று விடுகின்றோம். ஆனால்
1.சாமி சொன்ன இந்த உணர்வின் சக்தியைப் பதிவு செய்து அதை மீண்டும் நினைவு கொண்டால் அந்த உயர்ந்த குணத்தை நாம் பெற முடியும்.
2.தனக்குள் தீங்கு விளைவிக்கும் உணர்வுகளை மாற்றி அமைக்க முடியும்.
3.நம் சொல் பிறரைப் புனிதமாக்க உதவும் புனிதமாக்கும் உணர்வுகள் நமக்குள் விளையும் என்ற இந்தத் தன்னம்பிக்கை வர வேண்டும்.

இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது. அடிக்கடி நாம் ஒருவரைக் குறை கூறிக் கொண்டே இருந்தால் அடுத்து நாமும்… குறையான செயல்களைச் செயல்படுத்தும் அதுவாக மாறி விடுகின்றோம்.

அடிக்கடி ஒருவரை வேதனைப்படும்படி செய்தோம் என்றால் வேதனைப்படச் செய்யும் உணர்வுகள் நமக்குள் விளைந்து “ஐயோ எனக்கு மேல் வலிக்கின்றது… தலை வலிக்கிறது…” என்று வரும்.

இவர் நினைப்பார்…! நான் எல்லோருக்கும் நல்லதைத் தான் சொன்னேன். அவர் தவறு செய்வதைத் தானே நான் சொன்னேன் என்று…! ஆனால் தன்னை நியாயப்படுத்தி வேதனைப்படும்படி புண்படுத்தும்படி சொல்லைச் சொல்வார்.

இந்த உணர்வுகள் உடலுக்குள் விளைந்த பின்… கை வலிக்கின்றதே கால் வலிக்கின்றதே மேல் வலிக்கின்றது…! நான் எல்லோருக்கும் நல்லது தானே செய்தேன் ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றானே…! என்று பெரும் பகுதி பிறரைக் குறை கூறிப் பேசும் நிலைகளே நடக்கின்றது.

ஆனால் இவர்கள்
1.தெய்வத்திற்குப் பூமாலை சூட்டுவதும் அபிஷேகங்கள் செய்வதும் ஆராதனைகள் செய்வதும் இப்படிச் செய்தாலும்
2.பிறரிடம் சொல்லும் போதெல்லாம் தன்னைத்தான் எண்ணாது தவறுகளைச் செய்து கொண்டே அதை நுகர்வதும்
3.அப்படி நுகர்வதை உயிர் அந்த அணுவாக மாற்றி இவர் உடலாக மாற்றி அந்த உணர்வின் சக்தியாகத் தனக்குள் இயக்கும் என்பதை மறந்து விட்டார்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் இயற்கை எப்படி விளைந்தது…? கடவுள் ஒருவனா…? கடவுள் ஒருவன் இல்லை…!

வெப்பம் காந்தம் விஷம் மணம் அந்தச் சத்து இந்த ஐந்தும் சேர்ந்து இயக்கும் நிலைகளில் உருவாக்கும் சக்தி பெற்றது. கடவுள் ஒருவன் என்றால் எப்படி நியாயமாகும்…!

ஓரு செடியானாலும் அது தான். ஐந்து புலனறிவு கொண்டு தான் எதைக் கவர்ந்து கொண்டதோ அதன் நிலையில்
1.ஒன்றுக்குள் சென்று உள் நின்று இயக்குவதே கடவுள்.
2.ஒரு உயிரணு இதை நுகர்ந்தால் உருவாக்குவதை ஈசன் என்றும்
3.உருவான பொருளைப் பிரம்மம் என்றும் விஷ்ணுவின் மகன் பிரம்மா என்றும்
4.உயிரின் இயக்கம் ஈசன் என்றாலும் துடிப்புக்குள் ஏற்படும் வெப்பம் விஷ்ணு என்று சாஸ்திரங்கள் தெளிவாக நமக்கு இப்படி உணர்த்துகின்றன.

நான் (ஞானகுரு) இப்போது பேசுகிறேன் என்றால்…
1.இது எல்லாம் ஆதியில் விளைந்த அகஸ்தியன் தனக்குள் கண்டுணர்ந்த அவனுள் விளைந்த உணர்வுகள் தான்
2.வெளியிலே பரவி உள்ளது… அதைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது.
3.அதை நீங்களும் நுகரலாம்…!

இந்த உலகில் மனிதனாகப் பிறந்தோர் அனைவரும் அந்த உணர்வின் எண்ணத்தை ஏங்கிப் பதிவு செய்து கொண்ட பின் அது மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது அதைப் பெற முடியும்.

எம்முடைய உபதேசங்கள் அனைத்தையும் கேட்டுப் பதிவாக்க வேண்டும்

எம்முடைய உபதேசங்கள் அனைத்தையும் கேட்டுப் பதிவாக்க வேண்டும்

 

எம்முடைய அருள் உரைகளைக் கேட்கும் அனைவரும் நீங்கள் இதை ஆழமாகப் பதிவு செய்து உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி அந்த மெய்ஞானியின் உணர்வை உங்களுக்குள் வலுப்பெறச் செய்து
1.என்றும் அழியா பெருவீடு பெருநிலை என்று ஒளிச்சரீரம் பெற்று
2.நீங்கள் இந்த வாழ்க்கையிலே இருள் சூழ்ந்த நஞ்சினை நீக்கி ஒளி பெறும் உணர்வின் தன்மை உங்கள் உடலிலே வளர்த்து
3.அந்தச் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று நூல் வடிவிலே உங்களுக்கு நினைவு கூறுகின்றோம்.

உபதேச வாயிலாகக் கொடுத்ததை எழுத்து வடிவில் கொண்டு வரும் பொழுது சொல் வடிவிற்கும் எழுத்து வடிவிற்கும் சில குறைபாடுகள் இருப்பதினால் யாமே இதை எழுத முடியாததால் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவரை வைத்து இதை எழுதுவதினால்
1.சிறிது மாற்றங்கள் குறைகள் இருந்தாலும்
2.அதை மீண்டும் நீங்கள் தியானிக்கும் பொழுது இதனின் உணர்வுகளை நீங்கள் நிறைவு பெறும் சக்தியாகப் பெறுகின்றீர்கள்.

ஆகவே அந்தக் குறைகளை எண்ணாது மீண்டும் மீண்டும் இதைப் படிக்கும் பொழுது இடைவெளியில் விடப்பட்ட சிறு குறைகளையும் அதை நீக்கக்கூடிய சக்தியாக உங்கள் உணர்வுக்குள் தோன்றி அதில் நிறைவு செய்யும் நிலையை நீங்கள் அடைகின்றீர்கள்.

1.நீங்கள் படிக்கும் பொழுது எத்தகைய குறை வந்தாலும் மீண்டும் இதைத் திரும்பத் திரும்பப் படிப்பீர்கள் என்றால்
2.அந்த அருள் மகரிஷியின் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து
3.எழுத்து வடிவில் வரும் குறைபாடுகளை நீக்கிவிட்டு மூலப்பொருளை நீங்கள் அறிந்துணர்ந்து
4.உண்மையை உங்களுக்குள் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் நிலை வருகின்றது.

இந்த உணர்வோடு நீங்கள் படித்துப் பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் அந்த மகரிஷியின் அருள் சக்தியை சேர்த்துப் பாருங்கள்.

1.எழுத்து வடிவில் மாற்றங்கள் இருந்து உண்மைகள் மறைந்து இருந்தாலும்
2.அந்த உண்மைகளைத் தெளிந்திடும் சக்தியாக உங்களுக்குள் உணர்வதை நீங்கள் பார்க்கலாம்.

ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழிப்படி விண்ணின் ஆற்றலை நீங்கள் பெற்று இந்த மண்ணின் ஆற்றலுக்குள் இருந்த தீமைகளை அகற்றி இந்த உணர்வின் சக்தியை ஒளியாக மாற்றி விண்ணின் ஆற்றலை உங்களுக்குள் வளர்த்து என்றும் அழியா ஒளிச்சரீரமாக அதைப் பெறும் நிலையாக உங்களுக்குள் ஊட்டப்படுவது தான் இந்தத் தியானத்தின் அறவழிகள்.

ஆகவே இதைத் தெளிவாகத் தெரிந்து இதைக் கடைப்பிடித்து இந்த வாழ்க்கையில் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற்று அந்த உணர்வின் சக்தி ஒளியாக மாற்றும் சக்தி பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் உங்கள் நினைவலைகள் சென்று என்றுமே அந்த மகரிஷிகளின்ன் நினைவுடன் நீங்கள் இருக்க வேண்டும் என்று பிராத்திக்கின்றோம்.

தபோவனத்தில் இருந்து வெளிப்படுத்தப்பட்ட
1.அனைத்துப் புத்தகங்களையும் அனைத்து ஒலி நாடாக்களையும் அதில் வெளிப்பட்டுள்ள உபதேசங்களை நீங்கள் படித்து கேட்டு…
2.மேற்கூறியவாறு சக்தி பெற வேண்டும் என்று உங்களைச் சதா பிரார்த்திக்கின்றோம்.

கூட்டுத் தியானம் இருப்போம்… மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவோம். ஆத்ம சக்தி செய்வோம்… அன்றாட வாழ்க்கையில் வரும் நஞ்சினை வெல்வோம். மகரிஷிகளின் அருள் சக்தியால் இந்த மனித வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனைப் பெறுவோம்.

பொன்னான இந்த மனிதச் சரீரத்தில் மகரிஷிகளின் அருள் உணர்வுடன் வாழ்ந்து வளர்வோம்
1.நாம் பார்க்கும் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று சதா பிரார்த்திப்போம்.
2.நாம் பார்க்கும் எல்லோரும் நலம் பெற வேண்டும் வளம் பெற வேண்டும் என்று தியானிப்போம்.
3.தபோவன தியான மண்டபத்தில் நீங்கள் அமர்ந்து தியானித்தால் எல்லா மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.

நல்லதைக் காப்பதற்காக “அடுத்தவர்களிடம் நாம் வாதம் செய்ய வேண்டியதில்லை”

நல்லதைக் காப்பதற்காக “அடுத்தவர்களிடம் நாம் வாதம் செய்ய வேண்டியதில்லை”

 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் இருக்கிறது. அதை எல்லாம் மறந்து விட்டு
1.நாம் இப்படித் தான் நல்லதாக வர வேண்டும் என்ற நிலையில் அந்த மெய் ஞானிகளின் உணர்வைப் பாய்ச்சி
2.எல்லோரையும் மகிழ்ந்து வாழச் செய்வதற்குத்தான் கூட்டுத் தியானங்களை அமைத்திருக்கின்றோம் (ஞானகுரு)
3.ஆகவே தியானத்தை கடைப்பிடிப்போர் அனைவருமே வாரத்தில் ஒரு நாளாவது கண்டிப்பாகக் கூட்டுத் தியானம் இருக்க வேண்டும்.

கூட்டுத் தியானத்தில் எடுக்கின்ற சக்தியை வைத்துத் தான் அதிகாலை விழித்ததும் வீட்டிலே நீங்கள் தனித்து எடுத்தாலும் துருவ தியானத்தின் மூலமாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற ஏதுவாக இருக்கும்.

அதற்கடுத்து உங்கள் குலதெய்வங்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அவர்களைப் பிறவியில்லா நிலைகள் அடையச் செய்யத் தியானிக்க வேண்டும்.

இதை எல்லாம் உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் பக்குவப்படுத்தி வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு மட்டும் செய்துவிட்டு அப்படியே விட்டு விடக் கூடாது… அனுதினமும் செய்ய வேண்டும்.

வாழ்க்கையில் எப்போது குறையைக் காணுகின்றோமோ உடனே அது நமக்குள் வராதபடி தடுத்துப் பழக வேண்டும். “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

சந்தர்ப்பவசத்தால் பிறருடைய நிலைகளை நாம குறையாக எடுத்துக் கொண்டோம் என்றாலும் கூட மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து நமக்குள் துடைத்துக் கொண்டு
1.“நீங்கள் உண்மையை உணர்வீர்கள்…!” என்று மட்டும் சொன்னாலே போதும்.
2.வேறு ஒன்றும் சொல்ல வேண்டாம்… அந்தக் குறை நமக்குள் வராது.
3.அவர்கள் மீது அதிகமான வெறுப்பு உணர்வு கொண்டு ஜாஸ்தி பேச வேண்டியதில்லை.
4.சரி… எனக்கு வேண்டாம்… நீங்கள் சொன்னதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்…
5.நன்றாக இருப்பீர்கள்…! என்ற சொல்லிவிட்டு விலகிக் கொள்ள வேண்டும்.

நல்லதுக்காக நாம் அவர்களுடன் வாதம் செய்து கொண்டிருந்தால் நம்மை அறியாமலே பகைமை உணர்வுகளைத் தோற்றுவிக்கும்.
1.அவர்களை நினைக்கும் பொழுதெல்லாம் “என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள்…! என்ற சோர்வும் வேதனையும் நிச்சயம் வரும்.
2.அப்பொழுது அந்த வேதனையை எடுத்தால் சிந்திக்கும் தன்மை குறைகிறது.
3.இத்தகைய உணர்வுகளை எல்லாம் நம் உயிர் உருவாக்கிவிடும்.
4.அவர்களை நினைத்து வெறுப்பையும் வேதனையையும் நம்மை அறியாதபடியே நாம் வளர்த்துக் கொள்கிறோம்.

அந்த மாதிரி ஆகாதபடி அவர்கள் அறியாத இன்னல்களிலிருந்து விடுபட வேண்டும். மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும். அவர்கள் அருள் ஞானம் பெற வேண்டும் என்று இந்த நினைவை எடுத்துக் கொள்ள வேண்டும். நமக்குள் வெறுப்பு வராது.

இது நமக்குள் ஒரு பழக்கத்திற்கு வந்தாக வேண்டும். குருநாதர் காட்டிய வழியில் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கின்றோம் என்றால் மற்றவர்கள் மரியாதை கொடுக்கக்கூடிய அளவுக்கு நாம் வளர்ந்து காட்ட வேண்டும்.

“ஒரு தெய்வீகப் பண்புள்ளவர்கள்…!” என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்க வேண்டும். அப்படித் தோற்றுவிக்கும் நிலைகளுக்கு நாம் வளர வேண்டும். சேவை மனப்பான்மை வர வேண்டும்.

பிறருடைய தீமைகளை எண்ணாது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும். அவர்கள் தெளிந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று அருள் உணர்வை அவர்களுக்குப் பாய்ச்சிட வேண்டும்.
1.நம் சொல் பிறருடைய தீமைகளைப் போக்கக்கூடியதாக வர வேண்டும்.
2.அந்தளவுக்கு நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து விட்டு ஒரு மருந்தையோ மற்றதையோ நோய்வாய்ப்பட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தாலும் கூட அவர்களுக்கும் உதவியாக இருக்கும். கூடுமான வரையிலும் அவர்கள் நோய் நீங்கும்.

ஆனால் அதற்காக வேண்டி மருந்து குடிக்காமலே நல்லதாக வேண்டும் என்பதில்லை. உடனடி நிவாரணத்திற்கு அந்த மருந்து உதவும்.
1.ஆனால் அந்த மருந்திற்கு வீரியம் ஊட்ட
2.உங்கள் வாக்கு நிச்சயம் பயன்படும்.

ஏனென்றால் ஒரு கடுமையான வேதனைப்படுவோர் உடலில் நல்ல மருந்தினைக் கொடுத்தாலும் அவரின் வேதனை உச்சகட்டம் ஆகி விட்டால் மருந்து கொடுத்தாலும் அது ஏற்றுக் கொள்ளாது

அதற்காக வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நமக்குள் எடுத்து விட்டு அந்த உணர்வுடன் மருந்தை அவரை உட்கொள்ளும்படி செய்தால் உடனடியாக அது நல்லாகும்.

என்ன இருந்தாலும்
1.தூசியைத் துடைக்கின்ற மாதிரி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எடுத்து எடுத்து
2.உடனுக்குடன் நாம் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
3.அதே சமயத்தில் நமது நினைவாற்றல் முழுவதும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடனே இருக்க வேண்டும்.
4.தீமை செய்யும் எண்ணங்களை முறித்திட வேண்டும். நீக்கிட வேண்டும். அந்த உணர்வுகள் நமக்குள் வளரக் கூடாது.

கல்யாணராமா…! அதாவது எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு பிறருடைய தீமைகளை அகற்றிவிட்டு தம்முடன் இணைந்து வாழும் உணர்வை ஒவ்வொரு நிமிடமும் செயல்படுத்த வேண்டும்.

“ஆயுள் கால மெம்பர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முறை இது…”

கண்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய உயர்ந்த சக்தி

கண்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய உயர்ந்த சக்தி

 

இந்த உபதேசத்தைக் கேட்பவர்கள்…
1.உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உடல் நலத்தோடு இருக்க வேண்டும் என்று அந்தச் சக்தியை முதலிலே நாம் பெறுதல் வேண்டும்.
2.கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து ஒற்றுமையை உருவாக்குதல் வேண்டும்.

இந்த உணர்வின் சக்தி கொண்டு குழந்தைகளுக்குள் சில குறைபாடுகள் இருப்பினும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும் மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற வேண்டும் என்று குழந்தைகளுக்கு இந்த ஆசியை ஊட்டுங்கள்.

நம்முடைய நினைவுகள் அதுவாக இருக்க வேண்டும்.

கல்வியில் திறன் இல்லை என்றாலும்
1.மகரிஷிகளின் அருள் உணர்வு அவர்கள் பெற வேண்டும்
2.கல்வியில் சிறந்தவனாக வளர வேண்டும்
3.என்றும் அருள் வழியிலே வாழ வேண்டும் என்று எண்ணங்களைக் கூர்மையாக அவன் மேல் பாய்ச்சுங்கள்.

அதைப் போல குழந்தைகளும் எண்ணி ஏங்கி இதைப் பதிவாக்குங்கள்.

அம்மா அப்பா அருளால் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். கல்வியில் சிறந்த ஞானம் பெற வேண்டும் என்ற உணர்வை ஒன்று சேர்த்து இணையுங்கள்.

அப்படி இணைக்கக் கற்றுக் கொண்டால் இந்த உணர்வின் சக்தி நிச்சயம் குழந்தைகளுக்குள் ஞானமாக வளரும்… அந்த உணர்வின் தன்மை விளைகின்றது. குழந்தைகள் மீது இப்படித்தான் பாசம் வைக்க வேண்டும். கல்வியில் சிறந்த ஞானம் வரும்.

இன்று தெரிந்தோ தெரியாமலோ விஞ்ஞான அறிவில் சிக்குண்ட நாம் ரேடியோ டிவி இதைப் போன்ற நிலைகளில் பார்த்து கர்ப்பமுற்று இருக்கும் காலங்களில் பகைமை உணர்வுகளையும் மற்ற தீமைகளின் உணர்வுகளை அதிகமாகப் பார்க்கப்படும் பொழுது இதைப் பதிவாக்கி விட்டால்… பிறக்கும் குழந்தைகள் அதைத்தான் செய்யும்.

ஆனால் கர்ப்ப காலங்களில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அருள் உணர்வுகள் பெற வேண்டும் என்று யாம் உபதேசித்த உணர்வுப்படி
1.அகஸ்தியன் பெற்ற சக்திகளை எல்லாம் பெற வேண்டும் என்று இந்த உணர்வினைச் செலுத்தினால்
2.வியாசகன் எப்படி விண்ணுலக ஆற்றலைக் கண்டானோ இந்த உணர்வுகள் அனைத்தும்
3.கருவிலே வளரும் குழந்தை அதை அறியும் ஆற்றல் பெறும்.

அகஸ்தியன் எவ்வாறு வானஇயலையும் துருவத்தின் ஆற்றலையும் புவியியலையும் அறிந்தானோ கருவிலே வளரும் குழந்தைகள் அதைப் பெற வேண்டும் என்று விண்ணை நோக்கி ஏங்குங்கள் துருவ தியான நேரத்தில்.

அதன் உணர்வைத் தனக்குள் செலுத்துங்கள்… தன் கருவிலிருக்கும் குழந்தை பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

கண்ணின் நினைவை உள்ளுக்குள் செலுத்தப்படும் பொழுது இந்த உணர்வலைகள் கருவிலிருக்கும் குழந்தைக்குள்ளும் அது பாயும். நமக்குள் வளர்ச்சி கொண்டிருக்கும் அணுக்களுக்குள்ளும் இந்தச் சக்தி பெருகும்.

கண்ணின் பார்வை எங்கிருந்தாலும் அதைத்தான் “பரமாத்மா” என்று சொல்வது.
1.நாம் இந்த நினைவை… இந்தப் பிரபஞ்சத்திற்குள் எங்கே நினைவைச் செலுத்தினாலும்
2.அதை ஈர்க்கும் சக்தி நம் கண்களுக்கு உண்டு.

அதை ஈர்க்கும் சக்தி கொண்ட மனித உடலுக்குள் உங்களுக்குள் பதிவு செய்யப்படும் பொழுது அதைப் பெற வேண்டும் என்ற நினைவின் ஆற்றலைச் செலுத்துங்கள்.

எனக்கு குருநாதர் அதை கொடுத்ததால் தான்…
1.அந்த வலிமை கொண்டு பெறும் சக்தியும் அதை அறிந்திடும் உணர்வும் வளர்த்திடும் உணர்வும் பெற்றாலும்
2.உங்களுக்குள் நீங்களும் அதை பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் தான் உங்களுக்குள் இதைப் பதிவு செய்கிறேன்.

நீங்கள் அனைவரும் பெற்று உங்களைச் சார்ந்தவர்களையும் அதைப் பெறச் செய்து பகைமைகளையும் தீமைகளையும் அகற்றும் சக்திகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அதை நீங்கள் எல்லோரும் பெறுவீர்கள் என்று பிரார்த்திக்கின்றேன்.

“அன்னை தந்தையரின் அரவணைப்புடன் விண் சென்றவர்கள்” எண்ணிலடங்காதோர் சப்தரிஷி மண்டலத்தில் உண்டு

“அன்னை தந்தையரின் அரவணைப்புடன் விண் சென்றவர்கள்” எண்ணிலடங்காதோர் சப்தரிஷி மண்டலத்தில் உண்டு

 

அகஸ்தியன் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது பெற்ற ஆற்றல்களை எல்லாம்… அவனைச் சுற்றி இருந்த வட்டாரங்கள் அனைத்தும் இந்த அதிசயங்களைப் பார்க்கின்றது… பார்த்து ஆச்சரியப்படுகின்றார்கள்.
1.இவன் நுகர்ந்த உணர்வுகள் வெளிவரும் பொழுது “உற்றுப் பார்த்தபின்”
2.இந்த உணர்வின் தன்மை அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கும் இதைத் தெரிந்திடும் அறிவாக வருகின்றது.

இவனுக்குள் விளைந்த அலைகளைக் கூர்மையாக அதை உற்றுப் பார்க்கப்படும் பொழுது இவன் காணும் அதிசயங்களை மற்றவர்களுக்கும் அறியும் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் நிலை வருகிறது. அவைகள் இன்றும் உண்டு.

அகஸ்தியன் வாழ்ந்த இடங்களுக்கெல்லாம் பெரும்பகுதி நான் சுற்றுப்பயணம் செய்யும் பொழுது… 10 வருட காலம் காடு ,மேடெல்லாம் அலைந்தது.
1.அகஸ்தியர் எந்தப் பகுதிகளுக்கு எல்லாம் சென்றாரோ அந்தப் பகுதிகளுக்கு எல்லாம் என்னை அலையச் சொன்னார் குருநாதர்.
2.குருநாதர் பதித்த உணர்வினை ஆங்காங்கு சென்று அதைப் பதிவாக்கிய பின் எது உண்மை எது பொய் என்பதை அறியும் பருவத்தைக் கொடுத்தார்..
3.இன்றும் எல்லோரும் அதை நுகர முடியும்.
4.இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் நிச்சயம் அதை நுகர முடியும்.
5.நுகர்வதற்குத் தான் இந்த உபதேசமே கொடுக்கின்றேன்.

வானை நோக்கி அகத்தியன் உற்றுப் பார்க்கப்படும் பொழுது அவனுக்குள் சிறுகச் சிறுக அந்த ஆற்றல்கள் வளர்கின்றது.

மிருக இனங்களோ விஷ ஜந்துகளோ பூச்சிகளோ எல்லாமே இவனைக் கண்டு விலகி ஓடுகின்றது. கொசுக்களும் எரி பூச்சிகளும் ஓடுகின்றது… இவன் மேல் பட்டால் மடிந்து விடுகின்றது. குரு அருளால் இதையெல்லாம் என்னால் காண முடிந்தது… அறிந்து கொள்ள முடிந்தது.

நான் சொல்வதை எல்லாம் நீங்கள் கேட்டால் ஓம் நமச்சிவாய…!
1.திருப்பி இந்த உணர்வின் தன்மையை அதிகமாக நீங்கள் வளர்த்துக் கொண்டால் இந்த உண்மையின் உணர்வுகளை நீங்களும் அறியலாம்.
2.பிறருடைய தீமைகளைப் போக்கவும் உங்களால் முடியும்.

சாமி மட்டும் கெட்டிக்காரர் அல்ல. குரு கொடுத்தார்… அதை வளர்த்துக் கொண்டேன். குரு காட்டிய வழியில் உங்களுக்குள்ளும் இதை வளர்க்கச் சொல்கின்றோம்.

வளர்த்துக் கொண்டால் நீங்களும் அதைச் செயல்படுத்த முடியும் பிறருடைய தீமைகள் விடுபட வேண்டும் என்று நீங்கள் உங்களுக்குள் அந்தச் சக்திகளை வளர்த்தால் உங்களுக்குள் தீமையை நீக்கும் சக்தி வளர்கின்றது.

அகஸ்தியரும் அவர் மனைவியும் அவர்கள் இரு உணர்வும் ஒன்றாக இணைந்து… எந்தத் துருவத்தைக் கூர்மையாக உற்றுப் பார்த்து நுகந்தார்களோ… அந்த உணர்வின் வலிமை கொண்டு உடலை விட்டுச் சென்ற பின் அதே எல்லையை அடைகின்றார்கள்.. பூமிக்கு வரும் உணர்வினை ஒளிக்கதிராக மாற்றுகின்றார்கள். “இது ஓர் குடும்பம்…”

அகஸ்தியன் தாய் தந்தையர் அவன் உடலிலே இருந்தார்கள். அந்தச் சக்தி கொண்டு அதே ஒளியின் சரீரமாக இருக்கின்றார்.
1.இதைப் போன்று சென்றவர்கள் இவருடைய ஈர்ப்பு வட்டத்தில் சென்றவர்கள் இணைந்து
2.அன்னை தந்தையின் அரவணைப்பில் இருக்கும் இவனைப் போன்று சப்தரிஷி மண்டலங்களில் இருப்போர் பலரும் உண்டு.

அன்னை தந்தையை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்… உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் என்று சொன்னவர்கள்… அவர்கள் தனித்துச் சென்றாலும் அந்தக் கூட்டமைப்பில் அவருடைய ஈர்ப்பு வட்டத்தில் இன்றும் வளர்ந்து கொண்டும் உள்ளார்கள் அழியா ஒளிச்சரீரமாக.

சப்தரிஷி மண்டலங்களிலே பார்க்கலாம் எண்ணிலடங்காத நிலைகள்…!
1.நம் கண்ணுக்கு புலப்படாதது ஏராளம் உண்டு… டெலஸ்கோப்பை வைத்துப் பார்த்தாலும் ஒரு சில தான் தெரியும்.
2.அதைக் காட்டிலும் நுண்ணிய நிலைகள் அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில் சென்றவர்களும் அதன்பின் சென்றவர்களும் பலர் உண்டு.
3.அந்த எல்லையை அடைவதற்குத் தான் இதையெல்லாம் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம்.